செய்த தவறை ஒத்து கொண்ட தங்கமயில் குடும்பம், கொந்தளித்த பாண்டியன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, தங்கமயில் செய்த துரோகத்திற்காக கொந்தளித்தார். சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தார். பின் பாண்டியன், தங்கமயிலின் அப்பா, அம்மாவிற்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வர சொன்னார். என்ன நடக்குமோ என்ற பயத்தில் தங்கமயில் அழுது கொண்டு இருந்தார். அந்த சமயம் பார்த்து சரவணன் அக்கா வீட்டிற்கு வந்தார். அவர் தங்கமயிலையும் அவருடைய குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார். பாண்டியன் மகள் குழலி, தங்கமயில் அவருடைய குடும்பத்தையும் […] The post செய்த தவறை ஒத்து கொண்ட தங்கமயில் குடும்பம், கொந்தளித்த பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Padayappa Movie Public Review | Rajinikanth 75th Birthday | Ramya Krishnan | K. S. Ravikumar
Padayappa Movie Public Review | Rajinikanth 75th Birthday | Ramya Krishnan | K. S. Ravikumar
சீரியல் நடிகை ராஜேஸ்வரி மறைவு; குடும்ப பிரச்னையில் விபரீத முடிவு? - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சிறகடிக்க ஆசை'. இந்தத் தொடரில் போலீஸ் அருணின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ராஜேஸ்வரி. இவர் `பாக்கியலட்சுமி', `பனிவிழும் மலர்வனம்' உட்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார். தவிர வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சிறகடிக்க ஆசை ராஜேஸ்வரி ராஜேஸ்வரி குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ராஜேஸ்வரி வெள்ளித்திரை, சின்னத்திரை எனத் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 பெரிய பிள்ளைகள் இருக்கிறார்கள். தன் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார் ராஜேஸ்வரி. இந்நிலையில் நேற்று அளவுக்கதிகமாக ரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அவரை மீட்டு சைதாப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி உயிரிழந்தார். ராஜேஸ்வரி அவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் ராஜேஸ்வரியின் மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். இரங்கல்கள் ராஜேஸ்வரி!
சீரியல் நடிகை ராஜேஸ்வரி மறைவு; குடும்ப பிரச்னையில் விபரீத முடிவு? - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சிறகடிக்க ஆசை'. இந்தத் தொடரில் போலீஸ் அருணின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ராஜேஸ்வரி. இவர் `பாக்கியலட்சுமி', `பனிவிழும் மலர்வனம்' உட்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார். தவிர வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சிறகடிக்க ஆசை ராஜேஸ்வரி ராஜேஸ்வரி குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ராஜேஸ்வரி வெள்ளித்திரை, சின்னத்திரை எனத் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 பெரிய பிள்ளைகள் இருக்கிறார்கள். தன் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார் ராஜேஸ்வரி. இந்நிலையில் நேற்று அளவுக்கதிகமாக ரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அவரை மீட்டு சைதாப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி உயிரிழந்தார். ராஜேஸ்வரி அவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் ராஜேஸ்வரியின் மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். இரங்கல்கள் ராஜேஸ்வரி!
BB Tamil 9 Day 67: கம்முவின் பெஸ்டி பாரு ; ஆதிரை - FJ ரொமான்ஸ் 2.O - 67-வது நாளில் நிகழ்ந்தது என்ன?
கோர்ட் டாஸ்க்கில் அனைத்துமே காதல் சேட்டைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளாகவே வருகின்றன. விதிவிலக்காக சுபிக்ஷாவின் ‘பாட்டு இம்சை’ பற்றிய வழக்கு ஆறுதலான காமெடியாக இருந்தது. தான் செய்த தவறுக்காக வீடு முழுக்க தண்டனை அனுபவிப்பது பற்றி பாருவிற்கு எந்தவொரு கவலையும் குற்றவுணர்ச்சியும் இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். Bigg Boss Tamil 9 - Day 67 Review பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 67 தான் சார்ந்திருக்கும் சமூகம் பற்றிய பிரச்சினைகளை பாடல் வழியாக சுபிக்ஷா வெளிப்படுத்துவது நல்ல விஷயம்தான். பிக் பாஸ் போன்ற பெரிய பிளாட்பார்மை பயன்படுத்துவது சிறந்த வழிதான். ஆனால் பொழுது பூராவும் ‘கடலோடி நான்’ என்று அந்தப் பிரச்சாரத்தையே மேற்கொள்வது சலிப்பூட்டி விடும். “சுபிக்ஷான்ற பொண்ணு யாருன்னு மக்களுக்கு தெரியாமப் போயிடும். உன் சமூகத்தை முன்னாடி வெச்சி நீ பின்னாடி ஒளிஞ்சுக்கற” என்று விக்ரம் எச்சரித்ததும் இதைத்தான். இருந்தாலும் சுபிக்ஷா அடங்கவில்லை. காலையிலேயே ‘ஏல ஏல வாள.. வந்தேன் கடலை ஆள’ என்று பாடத்துவங்க ‘இரும்மா. உன்னை கடல்லயே தூக்கிப் போடறோம்’ என்று விக்ரமும் வினோத்தும் சுபிக்ஷாவை தூக்கி நீச்சல் குளத்தில் தள்ளுவது போல் ஜாலியாக கலாட்டா செய்தார்கள். பின்னர் இதே விஷயத்தையே வழக்காடு மன்றத்திற்கும் கொண்டு வந்தார்கள். அடிப்படையில் இது செல்லத்தகாத வழக்கு என்று பிக் பாஸே தடுத்திருக்க வேண்டும். ஆனால் பிற வழக்குகள் சண்டையும் சச்சரவுமாக செல்வதால் இது மட்டும் காமெடியாக இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கலாம். பாட்டுப் பாடி இம்சை செய்யும் ‘கடலோடி’ சுபிக்ஷா - ஜாலியான வழக்கு சுபிக்ஷா பாட்டுப்பாடி இம்சை செய்கிறார் என்று வழக்கு தொடர்ந்திருந்த விக்ரம், காதில் கட்டு போட்டபடி வந்திருந்தார். விக்ரமின் வக்கீலான சபரி, சுபிக்ஷாவின் பாடலால் தனது கட்சிக்காரர் எப்படியெல்லாம் வேதனையை அனுபவித்தார் என்பதை நகைச்சுவையாக விவரித்தது சுவாரசியமான காட்சி. நீதிபதியாக அமர்ந்திருந்த வினோத் டைமிங்காக அடித்த கமெண்ட்டுகள் சிரிப்பலையை உண்டாக்கின. “கலையை என்கரேஜ் செய்ய விரும்பறோம்.. ஆனா..” என்று விக்ரம் ஆரம்பிக்க “அது பண்ண முடியாது கலை வெளியே போயிட்டாரு” என்று ஜாலியாக குறுக்கிட்டார் வினோத். Bigg Boss Tamil 9 - Day 67 Review விக்ரமின் காதில் ரத்தமே வந்து விட்டது என்பதற்கு சாட்சியாக பஞ்சை எவிடென்ஸ்-ஆக தர, ‘இதை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்புங்க’ என்று வினோத் சொன்னது காமெடி. சுபிக்ஷாவின் வக்கீலாக வந்த பாரு ‘ஏல ஏல வாள.. வந்தேன் கடல ஆள’ என்று பாடிக் காண்பிக்க “கட்டிப் போடுங்கம்மா அவங்க கால’ என்று டைமிங்கில் அடித்தார் வினோத். சுபிக்ஷா பாடுவதைக் கேட்டு கம்ருதீன் வலிப்பு வருவது போல் பாவனை செய்ய “அவரை ஆண்கள் பக்கம் உக்கார வைங்க. சரியாயிடும்” என்று பங்கம் செய்தார் வினோத். இறுதியில் சுபிக்ஷா பக்கம்தான் தீர்ப்பு வந்தது. என்னதான் இந்த வழக்கை ஜாலியாக கொண்டு சென்றாலும் ‘ஒரு சமூகத்தின் பிரச்சினை’ என்று வரும் போது சீரியஸாகத்தான் முடித்தாக வேண்டும். சுபிக்ஷா போன்ற பெண்கள் அடித்தட்டு சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருப்பார்கள் என்று தீர்ப்பு கூறி நல்லபடியாக முடித்தார்கள். ஆதிரை, FJ ரொமான்ஸ் - VERSION 2.O FJ -ஆதிரை ரொமன்ஸ் - பார்ட் 2 ஆரம்பித்து விட்டது. ‘என் இமேஜையே நாசம் பண்ணிட்டான்.. படு பாவிப்பய’ என்று கோர்ட்டில் ஆவேசப்பட்ட ஆதிரை, இப்போது மீண்டும் அவருடன் ரொமான்ஸை தொடர்கிறார். ‘நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான் மேடம். இவனை நம்பாதீங்க’ என்று கிண்டலடித்தாலும் அது செல்லமான கோபம் என்பதாகத் தெரிகிறது. ஆதிரையின் முன்பு அரோவிடம் ரொமான்ஸ் செய்வது போல விளையாடிக் கொண்டிருந்தார் FJ. “எனக்கு ஒரு காதல் மட்டும்தான் வேண்டும். ரெண்டு மூணு காதல் எல்லாம் வேண்டாம்” என்று காமெடி செய்தார் அரோரா. Bigg Boss Tamil 9 - Day 67 Review பொழுது பூராவும் சான்ட்ராவிற்கு மூக்கைச் சிந்துவதே டைம்பாஸாக இருக்கிறது. பிரஜன் போய் விட்டார் என்று ஒப்பாரி வைத்த சான்ட்ரா, இப்போது திவ்யாவை தனது கற்பனை எதிரியாக வரித்துக் கொண்டு பிலாக்கணம் பாடிக் கொண்டே இருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி பின்பாட்டு பாடி ஏற்றி விடுகிறார் பாரு. (அவருக்கு இதுதான் வேலை!). “பிரஜினும் நானும் அவளுக்காக நின்னோம். என்னை விடவும் பிரஜின் அவ கிட்ட க்ளோஸா இருந்தாரு. சிஸ்டர்.. சிஸ்டர்ன்னு எல்லா விஷயமும் பண்ணாரு. இப்ப என்னடான்னா.. அண்ணன் எப்படா சாவான்.. திண்ணை எப்ப காலியாவும்ன்ற மாதிரி பெட்டில துணி வைக்க அவசரப்படறா.. அவளுக்காக நின்ன நாங்க என்ன முட்டாள்களா?” என்று கண்ணீருடன் சான்ட்ரா ஒப்பாரி வைக்க “அப்படிச் சொல்லுக்கா” என்று ஒத்து ஊதினார் பாரு. இதற்குப் பதிலாக திவ்யாவிடமே சான்ட்ரா நேரடியாக பேசலாம். கம்முவும் பாருவும் பெஸ்டிக்கு மேலேயாம்.. யார் யாருக்கு அண்ணன்.. தங்கச்சி.. அல்லது பெஸ்டி என்கிற விளையாட்டு ஓடிக் கொண்டிருந்தது. கம்முவிற்கு எல்லோரும் சிஸ்டர்களாம். வியானா, அரோ, ரம்யாவெல்லாம் நண்பர்களாம். பாரு பெஸ்டியாம். (வௌங்கிடும்!). தன்னுடைய டர்ன் வரும் போது அமித், வினோத் போன்றவர்களை அண்ணா என்ற பாரு, கம்முவைப் பற்றி சொல்லும் பொது வெட்கம் தாங்காமல் இளித்த காட்சி கொடுமையாக இருந்தது. கம்மு பெஸ்டியாம். கூடவே சபரியும் லிஸ்டில் இருக்கிறார் என்பதை ஜாலியாக சொல்லி சிரித்தார் பாரு. (கம்முவிற்கு செக் பாயிண்ட் போல. எங்க கிட்டயும் சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்!) அடுத்த வழக்கு அரோரா போடுகிறார் என்றதுமே பாருவிற்கு பதட்டமும் ஆவலும் துவங்கி விட்டது. தன் மீதுதான் என்று நிச்சயமாகத் தெரியும். (குற்றமுள்ள நெஞ்சு!). ‘நாம சேட்டைக்கார குழந்தைகளா இருந்திருக்கோம்’ என்று கம்முவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார் பாரு. (இவன் இன்னும் திருந்தல மாமா மொமெண்ட்!) Bigg Boss Tamil 9 - Day 67 Review “அரோ கம்மு கூட உன்னதமான பிரெண்ட்ஷிப்ல இருக்காங்களாம். ஆனா அதைப் பார்த்து நீங்க பொசசிவ் ஆகி காழ்ப்புணர்ச்சில சில விஷயங்களை அவங்களுக்கு எதிரா செய்யறீங்களாம். அரோ வெளியே போகணும்னு துடியா துடிக்கறீங்களாம். இதுக்காக மத்தவங்களையும் பிரெயின் வாஷ் பண்ணி அரோவை நாமினேட் பண்ணச் சொல்றீங்களாம்” என்று வழக்கின் சாராம்சத்தை விக்ரம் படித்துக் காட்ட ‘அய்யோ நம்ம மைண்ட்ல இருக்கறதையெல்லாம் அப்படியே சொல்லியிருக்காங்களே’? என்று பாரு வாயை விட்டு விட்டார். (இந்த வாக்குமூலத்தை கோர்ட் வாதத்தின் போது சாட்சியாக பயன்படுத்தினார் விக்ரம்). பாரு மீது அரோ தொடர்ந்த வழக்கு - மழுப்ப முயன்ற பாரு அரோவின் தரப்பில் வக்கீலாக விக்ரம் ஆஜர் ஆனார். ஆனால் பாருவின் தரப்பில் கம்மு வக்கீலாக வந்தது காமெடி. வழக்கில் சம்பந்தப்பட்டவரே எப்படி வக்கீலாக முடியும்? (‘நீ கம்முவை சாட்சியா சேர்த்திருக்கணும்’ என்று பிறகு சான்ட்ரா சொன்னது சரியான கோணம்!). சாட்சியாக வந்த கம்மு “ரெண்டு பேர் கிட்டயும் அன்பு இருந்தது. ஆனா ஒரு பக்கம் ஓவர்ப்ளோ ஆயிடுச்சு. அது பாரு பக்கம்” என்று டாங்க்கில் தண்ணீர் நிரம்பி வழிந்தது போலவே சொன்னார். Bigg Boss Tamil 9 - Day 67 Review சாட்சியாக வந்த அரோ, “பொசசிவ் இருந்தா கூடவே வெறுப்பு வரும். பாரு என்னை வெறுக்கறாங்க. இதை ஹோஸ்ட் முன்னாடியே ஒத்துக்கிட்டாங்க. ‘நீ வெளில போகணும்’ன்னு என் கிட்டயே சொல்லியிருக்காங்க’ என்று பாரு மீது பகிரங்கமாக குற்றம் சாட்ட இதை வன்மையாக மறுத்தார் பாரு. “இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இது வன்மத்தின் வெளிப்பாடு. கம்மு கூட எனக்கு இருக்கிறது பிரெண்ட்ஷிப்பிற்கும் மேல. அரோ பிரெண்டா இருந்தா என்ன பண்ணனும்.. அவன் எதிர்க்கயே கட்டிப்பிடிச்சு என்னை வெறுப்பேத்தினாங்க. டிரையாங்கிள் லவ்வை ஸ்டாப் பண்ணலாம்ன்னு முதல்ல சொன்னதே நான்தான். இது பத்தி அரோ கிட்ட பேசினேன்” என்று டிபென்சிவ் மோடில் பேசினார் பாரு. “அரோவும் கம்முவும் ஆரம்பத்துல இருந்தே பிரெண்ட்ஸ். ஆனா நீங்க அப்புறமாத்தான் வந்தீங்க. எப்ப இந்த நட்பு அதுக்கும் மேல மாறுச்சு.. அவர் வெயிட்லிஃப்ட்டிங் பண்ணத ‘ஒரு மாதிரி’ பார்த்த போதா?” என்று சர்காஸமாக விக்ரம் கேட்டு விட “அது என்ன ஒரு மாதிரி.. என்னை என்ன மாதிரி இவர் பிரேம் பண்ண விரும்பறாரு.. ஒரு பெண் மீது அவதூறு செய்யறாங்க” என்றெல்லாம் விக்டிம் கார்டை தூக்கினார் பாரு. Bigg Boss Tamil 9 - Day 67 Review விக்ரமின் கேள்விக்கு விக்டிம் கார்டை கையில் எடுத்த பாரு அரோ கட்டிப் பிடித்தால் தனக்கு பொசசிவ் ஆகி கோபம் வருகிறது என்று சொல்கிற பாரு, அதே விஷயத்தைத்தான் தானும் செய்கிறார். அரோவை வெறுப்பேற்ற முன்பே செய்தார். சமீபத்தில் விக்ரமை வெறுப்பேற்றவும் செய்தார். “கம்முவை ஆசையா பார்த்தீங்களான்னுதான் கேட்டேன்?” என்று விக்ரம் கேட்டதற்கு விக்டிம் கார்டை தூக்குகிற இதே பாரு, கம்முவுடன் தொடர்ந்து செய்து வரும் ‘எல்லையில்லா ரொமான்ஸ் காட்சிகளை’ எப்படி நியாயப்படுத்துவார்? தனக்கு எதிராக வழக்கு நகரும் போது பதட்டமான எக்ஸ்பிரஷன்களை தந்து கொண்டிருந்த பாரு, கம்முவிற்கு சில சைகைகளை காட்டி சொல்ல முயன்றார். ‘பாருவிற்கு நேரம் கொடுத்தால் நிறைய கன்டென்ட் கிடைக்கும்’ என்று பிக் பாஸ் யோசித்தாரோ, என்னமோ பத்து நிமிட இடைவேளை கொடுத்தார். “கேஸ் நல்லாத்தான் போயிட்டிருக்கு. நீ சிரிச்சு கெடுத்துடாத. சீரியஸா பேசு. . வியானா கூட துஷார் பேசும் போது அரோவிற்கு பொசசிவ் வந்தது. இந்தப் பாயிண்ட்டை சொல்லு. என்ன பேபி.. புரியுதா?” என்று கம்முவிற்கு கட்டிப்பிடித்து அட்வைஸ் செய்தார் பாரு. ஆனால் காதை நோண்டிக் கொண்டே சீரியஸ்னஸ் இல்லாமல் தலையாட்டினார் கம்மு. குறுக்கு விசாரணையின் போது “கம்மு என் கிட்ட லிமிட்ல எல்லாம் பழக மாட்டார். பாரு பத்தி தப்பா பேசுவார். பாரு இல்லாதப்ப விளையாடுவார். பாரு பார்க்கறப்ப ஒதுங்கிடுவார்” என்று கம்முவைப் பற்றி சரியாக போட்டுக் கொடுத்தார் அரோ. Bigg Boss Tamil 9 - Day 67 Review ‘எனக்கும் கம்முவிற்கும் இடையில் எந்தக் காதலும் இல்லை. பிளாட்டோனிக் உறவு மட்டுமே’ என்று அரோ தெள்ளத் தெளிவாக கூறிய பிறகும் அதை திரிக்க முயன்றார் பாரு. Platonic என்றால் Non-romantic relationship என்பதை அறிந்திருக்கும் பாரு, அதை வெவ்வேறு வார்த்தைகளில் மழுப்ப முயன்றார். (காமமோ, காதலோ அற்ற, நட்பிற்கும் மேலான உறவிற்கு Platonic என்று பொருள்). சாட்சியாக வந்த ரம்யா, பாருவை சரியாக அம்பலப்படுத்தினார். “கம்மு கூட அரோ பழகறது எனக்குப் பிடிக்கலை. பொசசிவ் ஆகுது. அவ வெளியே போகணும். அதனால நாமினேட் பண்ணியிருக்கேன்” என்று தன்னிடம் பாரு சொன்னதை சாட்சியாக சொன்னார் ரம்யா. அரோரா பக்கம் வந்த தீர்ப்பு - நியாயம் வென்றது தீர்ப்பு நேரம். அரோரா பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்பதை சரியான தீர்ப்பாக சொன்னார் கனி. ஆனால் இன்னொரு நீதிபதியான சான்ட்ராவோ, இப்போது பாருவுடன் நட்புக்காலத்தில் இருப்பதால் பாரு பக்கம் தீர்ப்பு சொன்னது தவறானது. முரண்பட்ட தீர்ப்புகள் வந்ததால் மக்கள் மன்றத்தை நாடினார் பிக் பாஸ். இறுதியில் அரோரா பக்கம் நியாயம் வென்றது. அரோவிற்கு எதிராக பாரு என்னவெல்லாம் செய்தார் என்பதை வீட்டார் நன்கு அறிவார்கள். எனவே இந்த வழக்கில் அரோரா வென்றதும் பாரு தோற்றதும் சரியானது. Bigg Boss Tamil 9 - Day 67 Review வெளியே வந்த அரோராவிடம் “நான் உன் பக்கமும் பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுத்தேன் பாத்தியா?’ என்று இரண்டு பக்கமும் கோல் போட முயன்றார் கம்மு. “நீ ஒரு நலல லாயரா இருந்தே’ என்று சர்காஸமாக பாராட்டினார் அரோரா. சான்ட்ராவும் ரம்யாவும் கம்முவின் டபுள் ஸ்டாண்டர்ட் பற்றி பாருவிடம் போட்டுக் கொடுத்தார்கள். “கம்ருதீன் உன்னைப் பத்தி நிறைய தப்பா பேசியிருக்கான்’ என்று சான்ட்ரா சொல்ல, பாருவின் முகம் இறுகியது. ஆனால் டிராமா என்று வந்து விட்டால் முழுமையாகத்தானே ஆடியாக வேண்டும்? அடுத்த கணமே கம்முவுடன் ரொமான்ஸில் ஈடுபட பாரு தயங்கவில்லை. வேலை செய்யாமல் டபாய்க்கும் பாரு - கம்மு கிச்சன் மேடை சுத்தப்படுத்தாமல் இருந்ததை பாருவிடம் சுட்டிக் காட்டினார் அமித். ‘தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று முன்னர் ஒப்புக் கொண்ட பாருவும் கம்முவும் இப்போதோ பல்டி அடித்து ‘எல்லாத்தையும் செய்ய முடியாது’ என்று முரண்டு பிடிக்க அமித்திற்கு கோபம் வந்தது. “அப்படின்னா உங்களுக்கு குற்றவுணர்ச்சி கிடையாதுன்னு அர்த்தம்’ என்று விக்ரம் சொல்ல கம்முவிற்கு கோபம் வந்தது. “எங்களைக் கஷ்டப்படுத்தி குளிர்காயலாம்ன்னு நெனக்கறீ்ங்களா?” என்று சீன் போட ஆரம்பித்தார். Bigg Boss Tamil 9 - Day 67 Review ‘கம்ருதீனாவது சொன்னா வேலை செய்வான். ஆனா இந்த பாரு கிட்ட வேலை வாங்கறதுக்குள்ள.. நாமளே அதைச் செஞ்சிடலாம்’ என்று தலையில் அடித்துக் கொண்டார் அமித். தன்னுடைய உண்மையான நண்பன் அரோராதான் என்று கம்ருதீனின் மனச்சாட்சிக்கு நன்றாக தெரியும். என்றாலும் பாருவின் பக்கம் சாய்ந்ததற்கு உடல் கவர்ச்சிதான் காரணமாக இருக்க முடியும். இந்த சீசன் 9 ஷோ முடிந்தவுடன், கம்மு - பாரு ரொமான்ஸ் ஷோவும் தன்னிச்சையாக முடிந்து விடும் என்று தோன்றுகிறது.
``எனக்கு 31 வயசுக்கு மேல கல்யாணமே நடக்காதுனு ஜோதிடர் சொன்னதால'' -Actor வெண்ணிறாடை மூர்த்தி Emotional
எடப்பாடி, கனிமொழி முதல் அன்புமணி வரை; ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிரும் பிரபலங்கள்!
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள். ரஜினி இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு! என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! - இளைஞர் சொல்லும் காரணம் திமுக எம்.பி கனிமொழி: தமிழ்த் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவரும், 50 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவரும், எப்போதும் தனது எளிமையால் அதிர வைக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்: 75 வருடங்கள் சிறப்பான நினைவுகூறத்தக்க வாழ்க்கை. 50 வருட சினிமா புகழ். பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் நண்பா ரஜினிகாந்த். ரஜினி - கமல் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: தனது வெற்றிகரமான திரையுலக பயணத்தோடு,தூய ஆன்மீக பயணத்தையும் அரவணைத்து, உலகளவில் மூன்று தலைமுறை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன்; மூன்று தலைமுறைகளை ஆக்கிரமித்தவர்; திரையுலக வானில் நட்சத்திரமாக மிளிர்பவர்; 50 ஆண்டுகளாக மக்களின் இதயங்களில் ஆதர்ச நாயகனாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மேலும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று திரையுலகில் பல சாதனைகளைப் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ரஜினி அன்புமணி: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். Simran: ``இந்தக் கேள்வி கேட்டதற்கே நன்றி... ரஜினி சாருக்கு வாழ்த்துகள் - நடிகை சிம்ரன்
எடப்பாடி, கனிமொழி முதல் அன்புமணி வரை; ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிரும் பிரபலங்கள்!
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள். ரஜினி இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு! என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! - இளைஞர் சொல்லும் காரணம் திமுக எம்.பி கனிமொழி: தமிழ்த் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவரும், 50 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவரும், எப்போதும் தனது எளிமையால் அதிர வைக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்: 75 வருடங்கள் சிறப்பான நினைவுகூறத்தக்க வாழ்க்கை. 50 வருட சினிமா புகழ். பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் நண்பா ரஜினிகாந்த். ரஜினி - கமல் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: தனது வெற்றிகரமான திரையுலக பயணத்தோடு,தூய ஆன்மீக பயணத்தையும் அரவணைத்து, உலகளவில் மூன்று தலைமுறை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன்; மூன்று தலைமுறைகளை ஆக்கிரமித்தவர்; திரையுலக வானில் நட்சத்திரமாக மிளிர்பவர்; 50 ஆண்டுகளாக மக்களின் இதயங்களில் ஆதர்ச நாயகனாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மேலும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று திரையுலகில் பல சாதனைகளைப் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ரஜினி அன்புமணி: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். Simran: ``இந்தக் கேள்வி கேட்டதற்கே நன்றி... ரஜினி சாருக்கு வாழ்த்துகள் - நடிகை சிம்ரன்
தன் மாமியார் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த சாரதா –அடுத்து என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, முத்தமலர் சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து பார்த்து தன்னுடைய மாமியாரிடம் புலம்பி வேதனை பட்டுக்கொண்டிருந்தார். கங்காவுமே, குமரன் நம்மிடம் உண்மையை சொல்லவில்லையே என்றும் வேதனைப்பட்டார். பின் குமரனும் வெளிநாட்டில் இருப்பதால் அதேபோல் தவறு செய்து விடுவாரோ என்ற பயத்திலேயே இரவு முழுவதும் தூங்காமல் புலம்பி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் கங்கா கவலையில் இருப்பதை அறிந்த விஜய் அவரிடம் பேசி இருந்தார். அப்போது கங்கா, குமரனும் அந்த தவறு செய்திருப்பாரோ […] The post தன் மாமியார் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த சாரதா – அடுத்து என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
Simran: ``இந்தக் கேள்வி கேட்டதற்கே நன்றி... ரஜினி சாருக்கு வாழ்த்துகள் - நடிகை சிம்ரன்
சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதன் அடிப்படையில், 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தைவான் என 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்ஷா, 3 பி.ஹெச்.கே., என 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட உள்ளன. இந்த நிகழ்வின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகை சிம்ரன் கலந்துகொண்டு உரையாற்றினார். சிம்ரன் அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சிம்ரன், ``நாம் எல்லோரும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இந்த நிகழ்வுக்கு அதிகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதை வெறும் பிசினஸாக மட்டும் பார்க்காமல் கலையாக அணுக வேண்டும். எனக்கு சினிமாவை மிகவும் பிடிக்கும். என்றார். தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர், நடிகர் ரஜினிகாந்துக்கு 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நினைவுப் பரிசு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகை சிம்ரன், ``ரஜினி சாரின் 50 ஆண்டுக்கால திரை வாழ்க்கைக்கு என்னுடைய மிகப்பெரும் வாழ்த்துகள். நான் அவருடைய தீவிரமான ரசிகை. ரஜினி சார் குறித்து கேள்வி கேட்டதற்காகவே நன்றி. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, ரஜினிகாந்த் சாருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன். சிம்ரன் இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய டூரிஸ்ட் ஃபேமிலி படமும் திரையிடப்படுகிறது. இதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திரைப்படங்களில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக நான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கருதுகிறேன். எனக்கு ஆதரவளிக்கக்கூடிய என்னுடைய ரசிகர்களுக்கும், புரொடக்சன் டீமுக்கும், இந்த படத்தின் இயக்குநருக்கும் என்னுடைய நன்றிகள். என்றார். பூங்கொத்தோடு காத்திருக்கிறேன்! - ரஜினி ரசிகர் மன்ற தலைவியாக இருந்த பெண் நெகிழ்ச்சி
Simran: ``இந்தக் கேள்வி கேட்டதற்கே நன்றி... ரஜினி சாருக்கு வாழ்த்துகள் - நடிகை சிம்ரன்
சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதன் அடிப்படையில், 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தைவான் என 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்ஷா, 3 பி.ஹெச்.கே., என 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட உள்ளன. இந்த நிகழ்வின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகை சிம்ரன் கலந்துகொண்டு உரையாற்றினார். சிம்ரன் அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சிம்ரன், ``நாம் எல்லோரும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இந்த நிகழ்வுக்கு அதிகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதை வெறும் பிசினஸாக மட்டும் பார்க்காமல் கலையாக அணுக வேண்டும். எனக்கு சினிமாவை மிகவும் பிடிக்கும். என்றார். தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர், நடிகர் ரஜினிகாந்துக்கு 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நினைவுப் பரிசு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகை சிம்ரன், ``ரஜினி சாரின் 50 ஆண்டுக்கால திரை வாழ்க்கைக்கு என்னுடைய மிகப்பெரும் வாழ்த்துகள். நான் அவருடைய தீவிரமான ரசிகை. ரஜினி சார் குறித்து கேள்வி கேட்டதற்காகவே நன்றி. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, ரஜினிகாந்த் சாருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன். சிம்ரன் இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய டூரிஸ்ட் ஃபேமிலி படமும் திரையிடப்படுகிறது. இதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திரைப்படங்களில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக நான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கருதுகிறேன். எனக்கு ஆதரவளிக்கக்கூடிய என்னுடைய ரசிகர்களுக்கும், புரொடக்சன் டீமுக்கும், இந்த படத்தின் இயக்குநருக்கும் என்னுடைய நன்றிகள். என்றார். பூங்கொத்தோடு காத்திருக்கிறேன்! - ரஜினி ரசிகர் மன்ற தலைவியாக இருந்த பெண் நெகிழ்ச்சி
Rajini 75: ``பல தலைமுறைகளைக் கவர்ந்தவர் ரஜினிகாந்த் - பிரதமர் மோடியின் பிறந்த நாள் வாழ்த்து
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள். ரஜினி இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! - இளைஞரின் சொல்லும் காரணம்
Rajini 75: ``பல தலைமுறைகளைக் கவர்ந்தவர் ரஜினிகாந்த் - பிரதமர் மோடியின் பிறந்த நாள் வாழ்த்து
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள். ரஜினி இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! - இளைஞரின் சொல்லும் காரணம்
Rajini 75: ``ஆறிலிருந்து அறுபது வரை - நடிகர் ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள். தன் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், நடிகை ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட திரைப் பட்டாளங்கள் நடித்து வெளியான படையப்பா திரைப்படம் இன்று ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது. ரஜினி இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்! ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என வாழ்த்தியிருக்கிறார். என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! - இளைஞரின் சொல்லும் காரணம்
'The Carrom Queen' - திரைப்படமாகும் காசிமாவின் கேரம் சாம்பியன் கதை! வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா (17), அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்து தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார். சமீபத்தில் நடந்த 7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025-ல் குழுப்போட்டியில் தங்கப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று மீண்டும் சாதனை படைத்தார். The Carrom Queen படம் ``மகளுக்கு 1 கோடி பரிசு; தமிழ்நாடு அரசுக்கு நன்றி- நெகிழும் காசிமாவின் அப்பா இதுகுறித்து நெகிழ்ச்சியாகப் பேசிய காசிமா, 6 வயது முதல் பயிற்சி எடுத்து வருகிறேன். 7 வயதில் தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். எனது அப்பாதான் கோச்சிங் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயமும் எனக்கு கோச்சிங் கொடுக்கிறார். என் வீட்டின் சுவர், கண்ணாடி என எல்லா இடத்திலும் ‘I’m a world champion one day’ என எழுதி வைத்திருப்பேன்.“ என்றார். தமிழகமே காசிமாவைப் பாராட்டி, கொண்டாடியது. இப்போது காசிமாவின் கேரம் வெற்றிப் பயணத்தை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாகவிருக்கிறது. அப்படத்திற்கு 'தி கேரம் குயின் (The Carrom Queen)' என்று பெயரிடப்பட்டுள்ளது. The Carrom Queen படம் The Carrom Queen படம் The Carrom Queen படம் The Carrom Queen படம் நானும், கீர்த்தனாவும் ஒரே கிளப்பில் தான் பயிற்சி பெற்றோம் - கேரம் வீராங்கனை காசிமா ராண்டிய பூமேஷ், காளிவெங்கட், ரிஷி பிரகாஷ், அப்துல்லா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். முரளி இப்படத்தை இயக்குகிறார். 'Nihan Entertainments' இப்படத்தைத் தயாரிக்கிறது.
'The Carrom Queen' - திரைப்படமாகும் காசிமாவின் கேரம் சாம்பியன் கதை! வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா (17), அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்து தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார். சமீபத்தில் நடந்த 7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025-ல் குழுப்போட்டியில் தங்கப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று மீண்டும் சாதனை படைத்தார். The Carrom Queen படம் ``மகளுக்கு 1 கோடி பரிசு; தமிழ்நாடு அரசுக்கு நன்றி- நெகிழும் காசிமாவின் அப்பா இதுகுறித்து நெகிழ்ச்சியாகப் பேசிய காசிமா, 6 வயது முதல் பயிற்சி எடுத்து வருகிறேன். 7 வயதில் தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். எனது அப்பாதான் கோச்சிங் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயமும் எனக்கு கோச்சிங் கொடுக்கிறார். என் வீட்டின் சுவர், கண்ணாடி என எல்லா இடத்திலும் ‘I’m a world champion one day’ என எழுதி வைத்திருப்பேன்.“ என்றார். தமிழகமே காசிமாவைப் பாராட்டி, கொண்டாடியது. இப்போது காசிமாவின் கேரம் வெற்றிப் பயணத்தை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாகவிருக்கிறது. அப்படத்திற்கு 'தி கேரம் குயின் (The Carrom Queen)' என்று பெயரிடப்பட்டுள்ளது. The Carrom Queen படம் The Carrom Queen படம் The Carrom Queen படம் The Carrom Queen படம் நானும், கீர்த்தனாவும் ஒரே கிளப்பில் தான் பயிற்சி பெற்றோம் - கேரம் வீராங்கனை காசிமா ராண்டிய பூமேஷ், காளிவெங்கட், ரிஷி பிரகாஷ், அப்துல்லா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். முரளி இப்படத்தை இயக்குகிறார். 'Nihan Entertainments' இப்படத்தைத் தயாரிக்கிறது.
'OTT தளங்கள் ஏன் படங்களை வாங்குவதில்லை?' - ஆர்.கே.செல்வமணி கேள்வி!
'Zee5' தயாரிப்பில் வெளியாகும் புதிய வெப் சீரிஸான ’ஹார்ட்டிலே பேட்டரி’-யின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, Zee5 கெளஷிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். 'OTT தளங்கள் ஏன் படங்களை வாங்குவதில்லை?' என்ற விவாதங்கள் ஆர்.கே.செல்வமணி, Zee5 கெளஷிக் இடையே நடந்தது. ஆர்.கே.செல்வமணி புதிய தென்னிந்திய வெப் சீரிஸ்களை அறிவித்த ஜியோ ஹாட்ஸ்டார் | Photo Album இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி, இந்த வெப்சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் ஓடிடி தளம் என்பதால் இந்த மேடையில் மற்றொரு கோரிக்கையை முன்வைக்கிறேன். கடந்த காலங்களில் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர்களின் ஊதியத்தை ஓடிடி தளங்கள் 40 கோடி ரூபாய் வரை உயர்த்திவிட்டன. இப்போது ஓடிடி தளங்கள் திரைப்படத்தை வாங்குவதில்லை என முடிவு செய்துவிட்டன. இருப்பினும் அந்த குறிப்பிட்ட நடிகர்களோ தங்களுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளாமல் அப்படியே இருக்கின்றனர். இதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் ஓடிடி தளங்கள் இணைந்து பேசி நல்ல ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்று பேசினார். ஆர்.கே.செல்வமணி இதையடுத்துப் பேசிய Zee5 கெளஷிக், படத்தோட கதைதான் ரொம்ப முக்கியம். அதை சரியாகத் தேர்ந்தெடுத்து தயாரித்தால் படம் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். நல்ல படங்களை ஓடிடியில் போட்டால்தான் எங்களுடைய வாடிக்கையாளர்கள் எங்களை நம்பி சந்தா கட்டுவார்கள். நல்ல கதைகளை, நல்ல படங்களை மட்டுமே ஓடிடியில் வாங்குகிறோம். நல்ல கதைகளையே தயாரிக்கிறோம். அதைத் தவிர நாங்கள் ஏதும் செய்வதில்லை என்று பேசியிருக்கிறார்.
நான் இந்த படத்தில் நடிக்க காரணம் அந்த டாக்குமெண்டரி தான் –நடிகர் கார்த்தி ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் பிரபமான நடிகர்களில் ஒருவராக கார்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வா வாத்தியார். இது கார்த்தி உடைய 26வது படம். இந்த படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு கீர்த்தி செட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற 12-ஆம் தேதி […] The post நான் இந்த படத்தில் நடிக்க காரணம் அந்த டாக்குமெண்டரி தான் – நடிகர் கார்த்தி ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! - இளைஞரின் சொல்லும் காரணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தன்னை அறிவதுதான் எல்லா ஞானத்திற்கும் ஆரம்பம். அரிஸ்டாட்டில் டிக்கெட் கிழித்துப் பேருந்தில் நடத்துநராக வேலை செய்தபோதே தலையைக் கோதிவிட்டு டிக்கெட் கொடுக்கும் ஸ்டைலிலேயே மக்களைத் தன்வசப்படுத்தி, உங்கள் வாழ்வின் பயணத்தில் ஏறிய ரசிகர் கூட்டம் இன்றும் உங்கள் சினிமா என்ற பேருந்தில் ஏறிக்கொண்டே இருக்கிறார்கள். நம் வாழ்வில் இலக்கை நோக்கிப் பயணித்து, வாழ்வில் பல போராட்டங்களுக்குப் பின் அவரவர் கனவுகளில் வெற்றி அடைவது கடினம். ஆனால், “தான் யார்” என்று அறிந்துகொண்டு நம் தனித்துவத்தோடு போராடிப் பல ஆண்டுக் காலம் உலக மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுபவர்கள் சிலரே. அந்த சிலருள் ‘திரு. ரஜினிகாந்த்’ அவர்களும் ஒருவரே. Rajini 170 |ரஜினி பொது வாழ்வில் ஜெயித்தவர்கள் அனைவரும் மக்கள் மனதில் இடம் பெருவதில்லை. என் வீட்டில் மாமா பையன் 1வயதில் அவனை ஒரு இடத்தில் அமரச்செய்து அவனுக்கு உணவூட்டவோ, வீட்டு வேலைகளையோ செய்யவே முடியாது ஓடிக்கொண்டே இருப்பான் , ஒரு நாளில் இதுபோலவே ஓடிக்கொண்டே இருந்தான் தொலைக்காட்சியில் ‘ரஜினி’ அவர்களின் படம் ஓடியபோது சட்டென்று அமர்ந்து விட்டான் படம் முடிவது வரைக்கும் எங்கேயும் அவன் நகர வில்லை . பேசி ஒழுங்காக நடக்ககூட தெரியாத சிறு குழந்தை மனதில் புகும் சக்தி ‘ரஜினி’ அவர்களின் மாபெரும் சக்தி. பளிச்சென்று வெள்ளைத்தோல், வகிடெடுத்தத் தோற்றம் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி அடைய முடியும் என்ற இலக்கணத்தை மாற்றிய சிலருள் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. கனவை அடையவிடாமல் தடுக்கப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், நம் தோற்றத்தைப் பலவீனமாக நினைத்துக் கனவை நோக்கிப் பயணிக்காமலேயே துவண்டுபோய்க் கொண்டிருந்த சமூகத்தை, “ரஜினிகாந்த்” அவர்கள் தமது வெற்றியால், சாதிக்கத் துடிக்கும் மனிதனுக்கு உடல் நிறமோ, மற்ற எந்தக் குறையும் நம்மைத் தடுக்காது; திறமை ஒன்று மட்டும் இருந்தால் போதும், எவ்வளவு கடினமான இலக்கையும் அடையலாம் என்று நம்பிக்கை விதையை மக்கள் மனதில் விதைத்தவர். படையப்பா 2000ஆம் வருடங்களில் தொலைக்காட்சிப் பெட்டி எல்லா வீடுகளிலும் வாடகை கொடுக்காத குடும்ப உறுப்பினராய் குடிவரவில்லை. ஒரு தெருவில் சிலரது வீடுகளில் இருக்காது. தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் வீடுகளில், தொலைக்காட்சி இல்லாதவர்கள் வந்து அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பர், மனிதர்களுக்குள் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளையெல்லாம் மறக்கவைத்து என் பக்கத்து வீட்டு ‘ஆயிஷா’ என்பவரின் குடும்பத்தோடு உறவாக மாற்றியது “படையப்பா’ படம் தொலைக்காட்ச்சியில் போட்ட போதுதான், ‘ஆயிஷா’ அவர்கள் குடும்பத்தோடு உறவினராகவே மாறிப்போனோம், நான் ‘ஆயிஷா’ அவர்களை நான் பெரியம்மா என்றுதான் அழைப்பேன். என் பெரியம்மா ‘ஆயிஷா’ அவர்களின் மகள் என் அக்கா ‘பாத்திமா’ அவர்களின் திருமனத்தின் போது ஜாதி , மதமின்றி அவர்கள் குடும்பத்தோடு இனக்கமாக திருமனத்தில் இருந்தோம். என் தெருவிலிருந்த என் வயது சின்ன பசங்களோடு நட்பானது ‘படையப்பா’ படத்தை தொலைக்காட்சியில் போட்டபோதுதான். ஒரு தலைமுறை சமுதாயத்தை ஜாதி,மத வேறுபாடுகள் பார்க்காமல் உருவாக்கியது ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படத்தால் தான். ரஜினி, சிவராஜ்குமார் பல படங்களில் ரஜினி அவர்களின் கதாபாத்திரம் போராடி, நேர்மையாக வாழ்வில் வெல்பவராகவே இருப்பார். வெற்றிக்கு உழைப்பும், நேர்மையும் மட்டுமே மூலதனம் என்பதைத் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் கூறிக்கொண்டே இருக்கிறார். “வாழ்ந்தவர் கெட்டால்” என்பதுபோல் நன்றாக வாழ்ந்து வந்து, சில நேரங்களில் மொத்தமாக எல்லாவற்றையும் இழந்து நின்றாலும், புதிதாகப் போராடி வாழ்ந்த வாழ்க்கையைவிட மேலும் உயர முடியும். வாழ்க்கை நேர்கோடாகச் செல்லாது; கோணலான கடினமான பயணம்தான் வாழ்க்கையை நேராக்கும் என்பதன் சாட்சி ரஜினி அவர்களின் கதாபாத்திரங்கள். ரஜினி அவர்கள் மேடைகளில் பேசும்போது சில குட்டிக் கதைகள் கூறுவார். என்னை மிகவும் ஈர்த்த கதை : (தவளை ஒன்று மலை ஏறும்போது எல்லாரும் ஏதேதோ கூறுவர். ஆனால், அந்தத் தவளைக்குக் காது கேட்காது என்பதால், அது யார் சொன்னதையும் கேட்காமல் சென்று மலை ஏறிவிடும்.) அதுபோல், நம் கனவுப் பயணத்தில் காது கேட்காத தவளையாக மாற வேண்டும் என்ற தெளிவை உணர வைத்தவர் ‘ரஜினி’ அவர்களே.. டீன் ஏஜ் பருவம் அடையும் போது எனது ஐந்து விரல்களோடு ஆறாம் விரலாய் ‘சிகரட்டை’ சேர்க்க முயற்ச்சியில் இருந்த போது ‘ரஜினி’ அவர்கள் பெரும் உடல் சிகிச்சை மேற்க்கொண்டு , எந்த தீய பழக்கத்திலும் அடிமை ஆகாதீங்க’ என்று கூறிய ஒரு வார்த்தையால் என் வாழ்நாள் முழுதும் எந்த தீய பழக்கத்திற்க்கும் அடிமை ஆக கூடாது என்று சபதம் எடுத்தேன். பாட்ஷா என் மனதில் டீன் ஏஜில் ‘மது , சிகரட்’ போல் எதிர் பாலினர் மீதும் வசீகரம் ஏற்படும் இயற்கையாக , ‘பாட்ஷா’ படத்தில், ‘ரஜினி’ அவர்கள் ‘நக்மா’விடம் “பொன்னு, பெண்,புகழ் பின்னாடி நம்ம போக கூடாது அதுதான் நம்மள தேடி வரனும்” என்ற வசனம் தெளிவான வாழ்க்கை முறையை அந்த வசனம் தான் என்னை ஒழுக்காமாக வைத்துள்ளது.. வாழ்வில் நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் நம்மோடு நெருக்கமான இரத்த உறவுகள் நம்மை விட்டு பிரியும் போது நமக்கு ஏற்படும் வலி மிகவும் கொடியது. “ஆறிலிருந்து அறுபது வரை” படத்தில் “சந்தானம்” என்ற கதாப்பாத்திரம் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது ஒவ்வொரு தம்பிகளாக விலகுவர் ஆனால் ‘சந்தானம்’ கதாப்பாத்திரம் போராடி வெல்லும். நம் வாழ்வின் நெருக்கடியான நேரங்களில் யார் விட்டு நம்மை பிரிந்த்தாலும் நமக்கு நமது நம்பிக்கை போதும் என்ற விதையை என் சிறு வயதில் விதைத்தது “ஆறிலிருந்து அருபது வரை” ‘சந்தானம்’ கதாப்பாத்திரம். சிவாஜி - ரஜினி, விவேக், ஸ்ரேயா சில நேரங்களில் ‘ரஜினி’ அவர்களின் படத்தில் வரும் காட்சிகளை என் வாழ்க்கையில் விளையாட்டாக பின்பற்றி உள்ளேன் , எனக்கு இயல்பாக சுருட்டை முடி ஆனால் ‘ரஜினி’ அவர்களை போல் தலையை ஆட்டி ஆட்டி முன்னாடி முடியை இழுத்து விட முற்படுவேன் ஆனால் முன்னாடி முடி வரவே வராது எத்தனையோ முடித்திருத்தும் கடைகளில் சென்று “முன்னாடி ‘ரஜினி’ மாறி முடி ஆடனு அண்ணா’’ என்று கூறி வெட்டுவேன் முடி வெட்டி சில நாட்களில் சுருண்டு விடும் . ‘சிவாஜி’ படத்தில் வெள்ளையாக ‘ரஜினி’ அவர்கள் செய்த முயற்சி அனைத்தையும் நானும் செய்துள்ளேன் வேடிக்கையாக.. பல இளைஞர்களின் மனநிலையின் ஒரு சாட்சியாக நான் கூறுகிறேன் என் கனவை தைரியமாக பிறரிடம் சொல்ல , என் தாழ்வு மனப்பான்மையை அகற்ற , தன்னம்பிக்கை மேலோங்க, என் உடல் நிறம் பற்றிய கவலை ஒழிய காரணம் ‘ரஜினி’ அவர்கள்தான் … என் போல் என் இயாலாமையிலிருந்து வெளிவரக்காரணம் ‘ரஜினி’ அவர்கள்தான், இன்னமும் பல இளைஞர்கள் அவரவரின் இயாலாமையிலிருந்து வெளி வந்து வான் போல் உயர வேண்டும் அவர்களின் முன்னோடி ‘ரஜினியாகா’ இல்லாமல் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என் வாழ்வில் இயாலாமையிலிருந்து வெளி வந்த நண்பர்கள் ‘ரஜினி’ இல்லாமல் வேறு ஒருவர் பெயர் கூறினாலும் நான் மகிழ்வேன் ஏனென்றால் ‘சமத்துவம்’ நான் கற்றதும் ‘ரஜினி’ அவர்களால் தான்! தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்! கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com
பூங்கொத்தோடு காத்திருக்கிறேன்! - ரஜினி ரசிகர் மன்ற தலைவியாக இருந்த பெண் நெகிழ்ச்சி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே! சந்தர்ப்பங்கள் வரும்போது தடம் மாறாதே.!.. புரிய வைத்தத் திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறி'. ரஜினியின் ஆரம்ப காலப் படங்களில் மிகப்பெரிய ஆச்சரியக் குறியை உண்டாக்கிய படம். மௌன கவிதையான ரஜினியை ரசிக்கும் ரசிகையாக நான் மாறியது.. அப்போதிலிருந்துதான். ரஜினி தன் நீண்ட சினிமா கச்சேரிக்கான (அருமையான) முன்னுரை எழுதிய படங்களில் மிக முக்கியமான படம் மனிதனிடம் நியாயமாக இருக்க வேண்டிய எந்தக் குணமும் இல்லாத ஒருவன் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற, எல்லா நல்ல குணங்களும் அமையப்பெற்ற ஒருவன் வாழ்க்கையில் வளர்ச்சி குறித்து பெரிதாக கவலைப்படாமலிருக்க... இப்படி இரு துருவமாய் விளங்கும் இருவரையும் நட்பு இணைக்க, சூழ்நிலை பிரித்துப் போடுவதுதான் படத்தின் ஒன்லைன் . அறியாத வயசுல... நடிகர் ரஜினியை முதன்முதலாக படத்தில் பார்த்து பிரம்மித்தேன். கதாபாத்திரத்தை உள்வாங்கி மிக இயல்பா நடித்த அவர் மனதிற்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதை என்னன்னு சொல்றது!!? புவனா ஒரு கேள்விக்குறி இருப்பதிலேயே மிகவும் கஷ்டமான, சலிப்பான வேலைன்னா அது மனிதனாக இருப்பதுதான். ஆனா மனிதனாக மட்டுமல்ல, அழகான மனிதனாக அந்தப் படத்தில் வாழ்ந்து காட்டி மனதை கொள்ளை கொண்டதால்... படத்தை இன்னிக்கு வரைக்கும் மறக்க முடியவில்லை. கல்லூரிக் காலக்கட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவியா ஆனதற்கு இந்தப் படம் தான் முழு முதற்காரணம் ன்னு சொல்வேன். எல்லாப் படத்திலும் நல்லவனா இருக்கிற சிவக்குமார் இதுல கெட்டவன் ... எல்லாப் படத்திலும் கெட்டவனாக இருக்கிற ரஜினி இதுல நல்லவன்.. என்பது படத்துக்கு மிகப்பெரிய பலம். எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாத மிக நேர்த்தியான திரைக்கதை . படம் கருப்பு வெள்ளை தான் ஆனாலும் ஒளிப்பதிவு கொள்ளை அழகு . அப்பாவி காதலனாய் அன்பில் காதலிக்காக காத்து நின்று கனிவதாகட்டும் ... காதலியை இழந்து சிறகு உடைந்து நிற்கும் கையறு நிலை ஆகட்டும்... உயிர் காக்கும் நண்பனின் தவறுகளுக்கு தார்மீக துணையாக நின்றாலும் உள்ளே மனம் வெதும்புவதாகட்டும்... 'அண்ணே',' நாகராஜ் அண்ணே' என்று கரம் கூப்பி சிவக்குமாரிடம் தத்துவம் பேசுவதாகட்டும்.. (அண்ணே',' நாகராஜ் அண்ணே 'என்ற வசனம் பின்னாளில் கொடி கட்டி பறந்த ரஜினி யிசத்தின் துவக்கம் ன்னே சொல்லலாம்) சுமித்ராவிடம் ஏக்கமிகுந்த குரலில் தன் தாபங்களை வெளிப்படுத்தி தவிப்பினை உணர்த்துவதாகட்டும்... படம் முழுக்க ரஜினி 'கதகளி' ஆடுவார். கை விரல்களை அப்படி இப்படின்னு சொடுக்கி வசனம் பேசற ஸ்டைல் 'ச்சோ ஸ்வீட்' ஆரம்பத்தில் அன்புக்காக உருகும் காதலனாய்... காதலியை காப்பாற்ற இயலாத சாதாரண மனிதனாய்... சிவக்குமாரிடம் ஏற்படும் பாசத்தினால் அவர் செய்யும் பாவக்காரியங்களை எடுத்து கூறும் நல்லவனாய்.. அவருக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யும் நண்பனாய்... நடிப்பின் வெவ்வேறு பரிமாணங்களில் வெளுத்து வாங்குவார் ரஜினி இப்படியாக அந்தப் படத்தில் ஆரம்பித்த அவர் மீதான காதல் இன்னமும் தொடர்கிறது ... இனியும் தொடரும்... அவரின் தாடி (வேற லெவல் ) பொருத்தம். தன்காதலியின் நினைவுகள் இளமையின் உணர்வுகளை ஒரளவு கட்டுப்படுத்திவைத்திருப்பதையும், ,காலம் அதனை மறக்கடித்து உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுவதையும் சுமித்ராவிடம் சொல்லும் போது, ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும். அண்ணே நாகராஜ் அண்ணே...கடப்பாரையவே முழுங்கிட்டியண்ணே... அண்ணே இதை ஏப்பம் விட்டுட முடியாது. புவனா ஒரு கேள்விக்குறி ஒருகட்டத்துல வயித்தையேகிழிச்சுப்புட்டு பதம் பார்த்துரும். என்று ரஜினி சொல்லும் போது எல்லாம்.... விசில் சத்தத்தால் காது கிழிந்ததை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. (எனக்கு தெரிஞ்சவங்க யாராவது யாருக்கும் தெரியாதுன்னு தவறு செஞ்சா... இந்த வசனம் தான் என் மனசுக்குள்ள வரும்) சுமித்ராவும் ரஜினியும்கோயிலிருந்து வெளியே வர ,சிவகுமாரும் ஜெயாவும் கோயிலுக்குள் நுழைய ,கோயில்ல என்ன வேண்டுதல்ன்னு சிவக்குமாரின் மனைவி ஜெயா ரஜினியிடம் கேட்க? ரஜினி வேணும்ன்னே ' ஒரு பையன் தான் இருக்கான் அடுத்து ஒரு பெண் குழந்தை கொடு'ன்னு வேண்டி கொள்வதற்காக வந்தோம் ன்னு சொல்வார். அதுமட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மகனைப் போல் வளர்க்கும் பையனிடம், டேய் பாபு அங்கிளுக்கு 'டாடா 'சொல்லுடான்னு சிவகுமாரை பார்த்து சொல்லி நக்கல் அடிப்பார்பாருங்க சான்சே இல்லைங்க... அவருக்கே உரித்தான ஸ்டைல். இந்தக் காட்சிகளுக்கெல்லாம் தியேட்டரில் விசில் பறந்ததை மறக்க முடியாது. விழியிலே மலர்ந்தது ராஜா என்பார் மந்திரி என்பார் இரண்டு பாடல்களையும் ரஜினிக்காக எஸ்பிபி உருகி உருகிப் பாடி இருப்பார். (நன்றி எஸ் பி பி சார்,) ஆரம்ப கால ரஜினியை ரசிக்க இரண்டு கண்கள் போதாது படம் வெளியாகி 48 வருடங்கள்... ஆனால் என்ன... இன்றைக்கும் என்றைக்கும் ரஜினி தான் மாஸ். பக்கா மாஸ்.! அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா... உங்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதுதான் என் வாழ்வில் பொக்கிஷத் தருணம் . நிச்சயம் அந்த நாள் வரும்... பூங்கொத்தோடு காத்திருக்கிறேன் . பிரியமான ரசிகை ஆதிரை வேணுகோபால். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்! கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com
டான்ஸ் ஆடத் தெரியாதவர் என்று கிண்டல் செய்த நானே ரஜினி ரசிகை ஆன கதை! - பேரன்புக்கு சொந்தக்காரர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ரஜினிகாந்த் அவர்களின் அதிதீவிர, தீவிர, சாதாரண என்று அனைத்து விதமான ரசிகர்களும் என் உறவு, நட்பு வட்டங்களில் இருக்கிறார்கள். அதிதீவிர ரசிகர்கள், அதாவது ரசிகர் மன்றத்தில் இருப்பது, போஸ்டர் ஓட்டுவது, என்ற செயல்களில் ஈடுபடுபவர்கள். ரஜினியை விளையாட்டுக்கு கூட விட்டுக் கொடுக்காமல் அவரை ரசிப்பதும், நேசிப்பதும் என்றிருக்கும் தீவிர ரசிகர்கள். இதைத் தாண்டி ரஜினியின் நல்ல படங்களை, நகைச்சுவையை, ஸ்டைலை குறை நிறையுடன் ரசிப்பவர்கள். ரஜினிகாந்த் பள்ளி விடுமுறைக்கு துறையூரில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு செல்லும் போது தான் ரஜினி ரசிகர் மன்றம், தீவிர ரசிகர்கள், திரையரங்கு கொண்டாட்டங்கள், அவரின் பெயரைக் கூட உச்சரிக்காமல் எப்போதும் ‘தலைவர்’, ‘தலைவர்’ என்றே சொல்வது போன்றவை எல்லாம் எங்களுக்கு அறிமுகம். அண்ணன்களில் ஒருவர் வெகு தீவிரம். ரஜினியுடன் அவர் வெள்ளை உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் தான் சட்டமிட்டு வைத்திருப்பார்கள். துறையூரில் ரசிகர் மன்ற தலைவராகவும், மன்ற செயல்பாடுகளிலும் தீவிரமாக இருந்தவர். இன்னொரு அண்ணனும் தீவிரமான ரசிகர் தான். இவர்கள் மூலம்தான் ‘முதல் நாள் முதல் காட்சி’ கொண்டாட்டம் எல்லாம் தெரியவந்தது. அப்போது அவர்களை பெரியம்மாவுடன் சேர்ந்து நாங்களும் திட்டியதுண்டு. ‘படம் பார்ப்பதற்காக இப்படி போறீங்களே’, ‘ரசிகர் மன்ற வேலை தான் முக்கியமா’ என்றெல்லாம் பேசியிருக்கிறோம். ரஜினியின் நடிப்பு, நடனத்தை, ‘ரஜினிக்கு டான்ஸ் ஆடவே தெரியல’ அப்படினெல்லாம் விளையாட்டிற்கு கிண்டல் செய்தால், ‘எங்க தலைவர் கஷ்டப்பட்டு எதுவுமே செய்ய வேண்டாம். அவர் வந்து நின்னாலே போதும் எங்களுக்கு.. அவர் காலைக் காட்டும்போதே கைதட்டல் எப்படி இருக்கும்னு தெரியுமா உங்களுக்கு? தலைவரோட பவர் தெரியாம பேசுறீங்க… சின்ன பிள்ளைங்கன்றதனால சும்மா விடுறேன்… இல்லன்னா இப்படி பேசுறதுக்கு நடக்குறதே வேற’ என்றெல்லாம் வம்பு சண்டை நடந்திருக்கிறது. ரஜினிகாந்த் முதுநிலை படிப்பின் போது அறிமுகமான ஒரு தோழனும் அதிதீவிர ரஜினி ரசிகன். ‘எங்க ஊர்ல பட ரிலீஸின் போது தலைவருக்கு போஸ்டர் எல்லாம் ஒட்டுவேன் தெரியுமா?’ என்று சொல்லும் ரகம். இளநிலை படிப்பில் அறிமுகமான ஒரு உற்ற தோழியும் தீவிர ரஜினி ரசிகர். ரஜினியை எந்த நிமிடமும், எந்த விதத்திலும், விளையாட்டுக்கு கூட விட்டுக் கொடுக்காமல், மூச்சு விடாமல் பேசும் ரகம். கல்லூரி காலங்களில், அவ்வப்போது மற்ற தோழிகள் ரஜினியை கிண்டல் செய்து, அவரை லேசாகத் தூண்டி விட்டால் போதும், ரஜினியைப் பற்றிய தகவல்களும், பெருமையும் மழையென பொழியத் துவங்கிவிடும். வேலைப் பார்க்கும் நாட்களிலும் கூட, ஒரு முறை தொலைபேசியில் பேசும்பொழுது ஏதோ கிண்டல் செய்து விட்டேன். அவ்வளவுதான் ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்பது போல, ரஜினி சேனல் ஆன் ஆயிடுச்சு. இடைவெளியில்லாமல், ‘ஜப்பான்ல ரஜினி படம் எப்படி ஓடுச்சு தெரியுமா?’, ‘அந்த ஊர்ல எல்லாரும் எப்படி ரசிச்சாங்க தெரியுமா? மொழியே தெரியாம எப்படி அவரை கொண்டாடுறாங்க தெரியுமா?’ என்று அவ்வளவு புள்ளிவிவரங்கள். கூகுளுக்கே டேட்டா இங்கிருந்துதான் கொடுக்கணும் போலவே என்ற அளவிற்கு பேசியதை சிரித்துக் கொண்டே ரசித்திருக்கிறேன். அவரை ரசிப்பதும், ரசனை தாண்டிய நேசமும் என்று ஒரு தனி விதமான அன்பு, ஒரு உள்ளார்ந்த நேசம் அது. முத்து படத்தில் ரஜினி இவர்களை எல்லாம் பார்த்தும், இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டதிலும், ரஜினி படத்தை ஒரு முறையாவது முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்ற ஆசை என்னுள் துளிர் விட்டது. ‘சந்திரமுகி’ பட ரிலீஸின் போது சென்னையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ஆசையை தெரிந்த அந்த நண்பன் ‘ஃபர்ஸ்ட் டேக்கு டிக்கெட் வாங்கித் தரவா?’ என்று கேட்ட பொழுது தனியாக, அந்தக் கூட்ட நெரிசலில் செல்ல பயந்து வேண்டாம் என்று விட்டேன். பின் திருமணம் முடிந்ததும், என்னுடைய இந்த ஆசையை அறிந்த கணவர் (அவரும் ரஜினி ரசிகர் தான்) 2014, டிசம்பர் 12 ரஜினியின் பிறந்த நாள் அன்று ரிலீஸ் ஆன “லிங்கா” படத்திற்கு அழைத்துச் சென்றார். தம்பி மற்றும் அவன் நண்பனிடம், அவர்களும் வருகிறார்களா என்று கேட்டதற்கு, “முதல் காட்சியில் படமே பார்க்க முடியாது. முழுக்க கரகோஷம் இருந்துகிட்டே இருக்கும். டயலாக் கூட காதுல விழாது. படத்த ரசிக்கவே முடியாது. அதனால நாங்க நைட் ஷோ போகிறோம்” என்று சொல்லிட்டாங்க. இப்படியும் சில ரசிகர்கள். நமக்கு அந்த உற்சாகத்தையும், ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் பார்ப்பது தான் பிரதானம். அதனால் உற்சாகமாக நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகும் ஆவலில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கணவருடன் திருச்சி ‘கலையரங்கம்’ திரையரங்கிற்கு சென்றேன். திரையரங்கின் முன் கூடியிருந்த கூட்டமும், மேள சத்தமும், ஆட்டமும், பாட்டமும் சற்று மிரளச் செய்தாலும் கணவருடன் இருக்கும் தைரியத்தில் அந்த கொண்டாட்டங்களை ரசிக்கத் தொடங்கினேன். லிங்கா அப்போது வரை பெண்கள் யாரும் கண்ணில் படவில்லை. திரையரங்கில் எங்களை அழைத்து உள்ளே உட்கார வைத்து விட்டார்கள். உள்ளிருந்து ரசிகர் கொண்டாட்டத்தை, கண்ணாடித் தடுப்பின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. என் தோழி அப்போது அங்கு தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தினமுமே அழைத்து விடும் வழக்கத்தில் அன்றும் அழைக்க ‘நான் எங்கிருக்கிறேன்’ என்று சொன்னதைக் கேட்டு, ஒரே பரவசம். ‘நிஜமாவா சொல்ற’ ன்னு திரும்பத் திரும்ப கேட்டு ஆனந்தப்பட்டு ஒரே உற்சாகம் தான். திரையரங்கின் கடைசி வரிசையில் எங்களை அமர வைத்ததால் என்னால் ரசிகர்களின் முழு கொண்டாட்டத்தையும் ஓரளவு காண முடிந்தது. ரஜினி அறிமுகமாகும் பாடல் முழுவதும் எழுந்து ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தார்கள். நிறைய வயதானவர்களையும், அவர்களின் உற்சாகமான ஆர்ப்பரிப்பையும் காணும் போது ஆச்சரியமாக இருந்தது. அமர்ந்த நிலையில் திரையே தெரியாததால் எழுந்து நின்று ரசிகர்களின் கொண்டாட்டத்தை தான் அதிகம் வேடிக்கை பார்த்தேன். இடைவேளையின்போது இன்னும் சில பெண்கள் கண்ணில் பட்டார்கள். ‘ஹப்பா நம்ம மட்டும் இல்லை’ என்று ஒரு நிம்மதி. படம் முடிந்து வெளியில் வந்தால், யாரோ மைக்கை முன்னாடி நீட்டி கருத்தெல்லாம் கேட்டாங்க. வண்டியில் வீடு வந்து சேரும் வரை கூட பொறுக்க முடியாமல், உடனே என் தங்கைக்கு அழைத்து (தங்கையின் கணவரும் ரஜினி ரசிகரே), “ஹேய் நான் இப்போ எங்க போயிட்டு வரேன்னு சொல்லு பார்க்கலாம்” என் குரலின் உற்சாகத்தை உணர்ந்து அதுவும் உற்சாகமாக, “சொல்லு… சொல்லு.. நீயே சொல்லிடு” “ ‘லிங்கா’ படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாத்துட்டு வரேன்” “ஹேய்ய்ய்ய் நிஜமாவா? சூப்பர்.. ஹய்யோ.. இதுங்க(அண்ணன்கள்) கிட்ட சொன்னா திட்டுவாங்களே… நாங்க போனப்ப எங்களை எப்படி திட்டினீங்க… இப்ப நீங்களே போறீங்கன்னு பேசுவாங்களே.. (ஒரு காலத்தில், காலை வேளையிலேயே அண்ணன்கள் படம் பார்க்கப் போவதற்கு அவ்வளவு பேசியிருக்கிறோம்) சரி விடு பார்த்துக்கலாம்.. நீ சொல்லு எப்படி இருந்துச்சுனு” என்று சொல்ல அந்த உற்சாகத்தை விவரித்து கொண்டே வீடு போய் சேர்ந்தேன். லிங்கா மாலை நேர பத்திரிகையில் புகைப்படத்துடன், சொன்ன கருத்தும் வெளிவந்ததைப் பார்த்து என் தோழி, “பாத்தியா.. இதெல்லாம் உனக்கு யாரால கெடச்சது? எங்க தலைவரால.. இந்த பேப்பரைப் பத்திரமா வச்சுக்கோ” என்று சொல்லி படத்தைப் பற்றி ரசிகர்களைப் பற்றி கேட்டு என்று ஒரே உற்சாகம்தான். மாலை எங்கள் ‘அதிதீவிர ரசிகர்’ அண்ணனுக்கு முதலில் அழைத்தேன். இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன் என்று சொன்னவுடன், ஆச்சரியப்பட்டு விவரம் எல்லாம் கேட்டுவிட்டு, இதை உங்க அக்காவுக்கு(பெரிய அக்கா) கூப்பிட்டு சொல்லு என்று சொல்லி வச்சிட்டாங்க. உடனே எங்க அக்காவிற்கு அழைத்து உற்சாகமாக சொன்னால், அது அதிர்ச்சியாகிவிட்டது. “என்ன சொல்ற?? அந்த கூட்டத்துல எப்படி போயிட்டு வந்த? யாரு உனக்கு டிக்கட் வாங்கி குடுத்தா? உன் வீட்டுக்காரர் எப்படி உன்னை விட்டார்??” “ அவங்க தான் என்னை கூட்டிட்டு போனாங்க” “ஹய்யோ இந்தப் புள்ள அங்க உக்காந்துகிட்டு என்னென்ன வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கு… அவங்க வீட்டுக்காரர சொல்லணும்” என்று தன் போக்கில் புலம்பி “சாயந்திரம் தான் அண்ணன திட்டினேன்.. இப்ப நீயும் இந்த வேலை பார்த்து இருக்க..” “ஏன்? அவங்க வழக்கமா போறது தானே” “நேத்து பைக்ல போகும்போது கீழே விழுந்து காலில் கட்டு போட்டு இருக்கு. அதோட இன்னைக்கு பசங்களோட படம் பாக்க போயிருக்கு.. அதான்… அப்படி என்ன அந்த படத்த இன்னிக்கே பாக்கணும்னு திட்டினேன்..” ஓஹோ….. ‘உங்க அக்காவுக்கு கால் பண்ணு’ என்று சொன்னதன் பின்னணி இதுதானா என்று புரிந்து, மீண்டும் அவங்களுக்கு கால் செயதவுடனே, “என்ன வாங்கி முடிச்சிட்டியா?? நான் மட்டும் திட்டு வாங்கினா எப்படி?” என்று சொல்லி ஒரே சிரிப்பு. சந்தோஷமா திட்டு வாங்குறதுங்கறது இதுதான். ஆனால் அன்று என் அக்கா பயந்தது போல எந்த ஒரு கசப்பான அனுபவமும் ஏற்படவில்லை. பின், அடுத்த அண்ணனுக்கு அழைத்து “படம் பாத்திட்டியா” என்று கேட்க “இல்லப்பா.. நைட் ஷோ தான் போறேன்” என்று சோகமாக சொன்னது. “என்னாது……. படம் பாக்கலையா?? ஹா ஹா ஹா.. ரஜினி ரசிகருக்கு வந்த சோதனை…. ஆனா நான் பாத்துட்டேனே” “அடப்பாவி.. எப்படி?? எங்கள மட்டும் அப்படி திட்டுனீங்க” என்று தொடங்கி என் தங்கை சொன்ன அதே விதத்தில்… திட்டி முடித்தவுடன், “எப்படியோ உனக்கு முன்னாடி நான் பாத்துட்டனே” என்று சொல்லி அதை வம்பு இழுத்தது, என்று அந்த நாளின் நினைவுகள் மறக்க முடியாத சந்தோஷங்கள். பெரிய அண்ணன் அங்கு துறையூரில் மற்றவர்களிடமும் இதை சொல்லி, பேப்பரில் வந்த விஷயத்தையும் சொல்ல, அதில் வேறு ஒரு பஞ்சாயத்தாகிவிட்டது. அடுத்த சில தினங்களில் என் பெரியம்மாவை சந்தித்தபோது, “நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா? தெரு சனமே எங்கிட்ட வந்து கேக்குது.. ஆனா எனக்குத் தெரியவேயில்ல.. ஒரு ஃபோன் பண்ணுனியா நீ படம் பார்த்தேன்னு?” “அது பெரிம்மா… நான் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும்தான் கால் பண்ணினேன்” என்று சமாளித்ததெல்லாம் சந்தோஷ நினைவுகள். “கபாலி”, “காலா”, “எந்திரன் 2.0”, “ஜெயிலர்” போன்ற படங்களையும் முதல் காட்சி பார்த்தேன். ஒரு மாற்றம்.. இந்த படங்களுக்கு, என் மாமாப்பெண், அண்ணன் பெண், மாமாப்பையன்(தீவிர ரஜினி ரசிகர்), அவர் மனைவி என்று கூட்டமாக செல்லும் அளவிற்கு வந்து விட்டோம். ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்.. இப்போதெல்லாம் திரையரங்குகள் சில கண்டிப்பான விதிமுறைகளை பின்பற்றி (மது, புகையிலை, சிகரெட் தவிர்ப்பதை சோதனை செய்து அனுமதி அளிப்பது) பாதுகாப்பாக இருப்பதாலேயே பெண்களாலும் முதல் காட்சிக்கு செல்ல முடிகிறது. கபாலி முதல் முறை இவ்வாறு சேர்ந்து போக கிளம்பிய போது, என் மாமா அவர்கள், மாமாப்பெண்ணிடம், “யூ டூ (you too) பா” என்று சிறு அதிர்ச்சியுடன் கேட்டாங்களாம். (ஏன்னா…. எங்க மாமாப்பையன், காலையிலேயே படத்துக்கு போறதுக்கே திட்டுவாங்க..) இதற்கு என்ன பதில் சொல்லணும்? “எஸ் பா”, “நோ பா” இந்த மாதிரி ஏதோ ஒன்னு தான சொல்லணும். அதை விட்டுட்டு ஆப்ஷன்லயே இல்லாத பதிலான “சியாமியும் வருதுப்பா” அப்படின்னு சொன்னுச்சாம். அதை என்னிடம் சொல்லி ஒரே சிரிப்பு.. “நானும் படத்துக்கு வர்றத பத்தி உன்னைய மாமா கேட்டாங்களாப்பா?” என்று நான் கேட்டேன். “அப்படி சொல்லவும் தான், வேற எதுவும் சொல்லாம போயிட்டாங்க” ன்னு சொல்லி சிரித்ததெல்லாம் நினைவில் நிற்கும் சந்தோஷச் சித்திரம். நான் இந்த முதல் காட்சிகளில், படம் பார்த்ததைவிட, ரஜினியின் ரசிகர்களையே அதிகம் வியந்து பார்த்திருக்கிறேன். படத்துக்கு நடுவில் வரும் கமெண்ட்டுகள், இடைவேளையின் போது காதில் விழும் சிலாகிப்புகள், வயது கருதாமல் எழுந்து நின்று நடனமாடி, ஆர்ப்பரித்து, உற்சாக கூச்சலிட்டு கொண்டாடும் சந்தோஷங்கள், உள்ளார்ந்த உணர்ச்சிவசங்கள், என்று அந்த சந்தோஷங்ளை சிரிப்புடன் வெகுவாக ரசித்தேன். இப்பவே இப்படி இருக்கே… 80, 90 களில் வந்த படங்கள், “பாட்ஷா” படத்திற்கெல்லாம் எவ்வளவு கொண்டாட்டங்கள் இருந்திருக்கும் என்று தோன்றுவதுண்டு. எங்க பெரிய மாமா “நீயும் படம் பார்க்க போனியாமேப்பா?” என்று என்னிடம் கேட்ட போது, நான் இப்படித்தான் சொன்னேன்.. “அந்த கொண்டாட்டத்தை சந்தோஷ ஆர்ப்பரிப்பை நேர்ல பார்க்கணும் என்று எனக்கு ரொம்ப ஆசை மாமா.. அது ஒரு வித்தியாசமான அனுபவமா, நல்லா இருந்துச்சு.” அது வேற லெவல் வைப்ரேஷன் தான். இந்த ஆர்ப்பரிப்பிலிருந்தும், கொண்டாட்டங்களிலிருந்தும் ஒரு ஆற்றலை உருவாக்க முடியும் என்றால் அது மிகப் பெரிய சக்தியாக இருக்கும் என்று தோன்றியது. நடிகர் ரஜினிகாந்த் இன்றைய காலகட்டத்தில், வலிந்து உருவாக்கப்படும் கூட்டம், புகழ் மற்றும் கொண்டாட்டங்களை காணும் போது, தலைமுறைகள் தாண்டியும், எதிர்பார்ப்பில்லாத, யாரிடமும் நிரூபிக்கும் நிர்பந்தமில்லாத, பாசாங்கில்லாத, அரிதாரம் பூசாத, அலாதி அன்பு கொண்ட கோடானுகோடி ரசிகர்களைப் பெற, “என்ன தவம் செய்தாரோ? என்ன தவம் செய்தாரோ?” என்றே தோன்றுகிறது. உலகில் எத்தனைப் பேருக்கு, இப்படி அறிமுகமற்ற மக்களிடமிருந்து இவ்வளவு மட்டற்ற அன்பும், மாறாத நேசமும் கிடைத்திருக்கும்? “என்னோட ராசி நல்ல ராசி!! அது எப்போதும் பெரியவங்க ஆசி!!” ஆம்!! பெரியவர்களின் ஆசியும், எத்தனை உயரத்திற்கு சென்றாலும் மற்றவர்களிடம் நீங்கள் காட்டும் பணிவு கலந்த நேசத்திற்கும், முக்கியமாக, இந்தப் பேரன்பு மற்றும் புகழின் கணத்தை தலைக்கு ஏற்றாத தன்னடக்கத்திற்கும் “என்றுமே ராஜா நீ ரஜினி!!” தான். காலங்கள் தாண்டியும் நிலைக்கும் ரசிகர்களின் அன்பெனும் சாம்ராஜ்ஜியத்தின் “மன்னன்” தான்!! நீண்ட நீண்ட காலம் நீடு வாழ, வேண்டி, வாழ்த்தும் சாதாரண கடைக்கோடி ரசிகையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி சார்!! வாழ்க நலமுடன்!! வாழ்க வளமுடன்!! தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்! கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com
சரத்குமார்-சண்முகபாண்டியன் கூட்டணியில் உருவாகி உள்ள ‘கொம்பு சீவி’படத்தின் ட்ரைலர் இதோ
கேப்டன் விஜயகாந்தை யாராலும் மறக்க முடியாது. அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். மேலும், கேப்டன் மறைவு அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்து இருக்கிறது.இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். அதில் இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் தன் உள்ளார். இவர் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்து […] The post சரத்குமார்-சண்முகபாண்டியன் கூட்டணியில் உருவாகி உள்ள ‘கொம்பு சீவி’ படத்தின் ட்ரைலர் இதோ appeared first on Tamil Behind Talkies .
பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli Exclusive | Serial
பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli Exclusive | Serial
ஓசியில சேலை வாங்குறன்னு எப்படி சொல்லலாம், புகார் கொடுக்க போறேன் –ஆவேசத்தில் நடிகை கம்பம் மீனா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் பாக்கியாவின் தோழியாக நடித்திருந்தவர் கம்பம் மீனா. இவர் வட்டார மொழி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் கம்பம் மீனா. சின்ன கிராமத்திலிருந்து வந்த இவர் இன்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். இவர் முதன் முதலாக தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தான் நடிக்க தொடங்கினார். இதுவரை கிட்டத்தட்ட […] The post ஓசியில சேலை வாங்குறன்னு எப்படி சொல்லலாம், புகார் கொடுக்க போறேன் – ஆவேசத்தில் நடிகை கம்பம் மீனா appeared first on Tamil Behind Talkies .
“அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது”- ‘வா வாத்தியார்’பட விழாவில் கார்த்தி
“அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது”- ‘வா வாத்தியார்’ பட விழாவில் கார்த்தி கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், சில்பாமஞ்சுநாத், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். இது குறித்து படத்தின் இசை...
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’படத்தின் ஷூட்டிங் போட்டோஸ் வைரல்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் போட்டோஸ் வைரல். சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிக்க சிம்பு அட்வான்ஸ் தொகை வாங்கிய விவகாரத்தால், அரசன் படத்தின் ஷுட்டிங் ஆரம்பிப்பது தள்ளிப்போனது. இதனையடுத்து வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் ஐசரி கணேஷிடம் பேசி, சுமூக தீர்வு ஏற்பட்ட நிலையில், தற்போது ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியுள்ளது. முன்னதாக...
BB Tamil 9 Day 66: ``என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு - முறையிட்ட ஆதிரை
ஆதிரை தொடுத்த வழக்கில் ‘குத்தத்தை ஒப்புக்கறேங்கய்யா’ என்று எஃப்ஜே சொன்னது ஒரு சாமர்த்தியமான டிஃபென்ஸிவ் ஆக்ட். இதன் மூலம் அதிக குப்பைகள் கிளறப்படாது. பெயர் டேமேஜ் ஆகாது. பாரு தொடர்ந்த வழக்கில், தன் பெயர் டேமேஜ் ஆகக்கூடாது என்பதை விடவும் எஃப்ஜேவை பொதுவில் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்கிற பழிவாங்கல் மட்டும்தான் தெரிந்தது. BB Tamil 9 - Day 65 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 65 ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்கிற பாடலைப் போல கம்முவும் பாருவும் அவர்களாக திருந்தினால்தான். இவர்கள் செய்யும் தவறால் மற்றவர்களுக்கு தண்டனை கிடைத்தும் கூட அது குறித்த வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இவர்களுக்கு இல்லை. ‘எக்சர்சைஸ் செய்யும் போது மைக்கை கழற்றி வைக்கலாம்’ என்பதை சாக்காகக் கொண்டு இருவரும் ஜாக்கிங் போகும் போது பேசிக்கொண்டிருக்க அமித் அதைக் கண்டித்து எச்சரிக்கை தந்தார். “டீ, காஃபி சாப்பிட முடியலைன்னு விக்ரம் ரொம்ப அனத்தறான்” என்று கம்மு சொல்ல “அவன் யார் கேக்கறதுக்கு. அவன் கெடக்கறான் கிறுக்குப் பய. வா.. அவன் முன்னாடியே கட்டிப்பிடிச்சு வெறுப்பேத்துவோம்” என்று கெட்ட காரியம் செய்தார் பாரு. வருத்தமும் குற்றவுணர்வும் செய்கிற விஷயமா இது?! “நீங்க நல்லா வருவீங்க” என்று சந்தோஷமாக சாபம் கொடுத்தார் விக்ரம். “மத்தவங்களுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு கதறிட்டுத்தான் இருக்கேன்” என்று பாரு சமாளிக்க “உங்களைப் பார்த்தா அப்படி தெரியலையே?” என்று கிண்டலடித்தார் வியானா. ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?’ - பாரு கம்மு பிடிவாதம் பாரு - கம்மு செய்த தவறால் மற்றவர்களுக்கும் சேர்த்து புரோட்டீன் உணவுகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக ஒரு மீட்டிங் ஆரம்பித்தது. “இவங்க கிட்ட எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் நான் பார்க்கலை” என்று அமித் ஆரம்பிக்க “அது இல்லைன்னு எப்படி சொல்ல முடியும், அழுது காட்டணுமா?” என்று அசட்டுத்தனமாக எதிர்வாதம் வைத்தார் பாரு. அழ வேண்டாம். இனி மேலாவது கம்முவிடம் ரொமான்ஸ் ரகசியம் பேசாமலிருக்கலாம் அல்லவா? தங்ககளின் கிளுகிளுப்பால் மற்றவர்களுக்கு உணவு பறிபோவதைக் குறித்து எந்தவொரு வருத்தமும் அல்லாமல், அதை சாமர்த்தியமாக மறைக்க நினைக்கும் பாருவின் குணாதிசயம் முறைகேடானது. “சரி.. தலயா நான் ஒரு தண்டனை தரேன். நான் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசப் போறதில்ல. மத்தவங்களுக்கும் இது சம்மதமான்னு தெரியணும்” என்று அமித் சொன்னார். “எங்களை ஒதுக்கி வைக்கணும்னு பார்க்கறீங்களா?” என்று முரண்டு பிடித்தார் பாரு. இருவரும் தொடர்ந்து செய்யும் ரொமான்ஸ் அலப்பறைகளுக்கு தண்டனையாக மற்றவர்கள் இவர்களை புறக்கணிப்பது, அறுவைசிகிச்சை போல ஒரு சிறந்த தண்டனையாகத் தெரிந்தாலும் தார்மீக அடிப்படையில் தவறானது. BB Tamil 9 - Day 65 “ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கணும்னு எங்களுக்கு ஆசையில்லை. அப்படியாவது ஏதாவது இம்பாக்ட் கிரியேட் ஆகும்ன்னு பார்க்கறோம்” என்றார் விக்ரம். இந்த ஐடியாவைத் தந்தவரே இவர்தான். “யார் கூடவும் பேசாம இருக்கணும்ன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்ல” என்றார் சுபிக்ஷா. மெஜாரிட்டியான கருத்து ‘இந்த தண்டனை வேண்டாம்’ என்பதாக இருந்ததால் “சரி… வேற தண்டனை தரேன். வீட்டு வேலையாவது செய்வீங்களா?” என்று அமித் கேட்க “அய்யோ.. பாருவை சமையல்ல மட்டும் விட்றாதீங்க” என்று மற்றவர்கள் அலறினார்கள். பாத்ரூம் பணியையே சரியாக செய்யாமல் டபாய்க்கும் பாரு, கூடுதல் பணியை ஏற்றுக் கொள்வாரா என்ன? “வேணுமின்னே நிறைய பாத்திரங்களைப் போடுவாங்க” என்று கம்முவின் சொல்வதின் மூலம் தன்னைப்போலவே மற்றவர்களும் வன்மம் மிக்கவர்கள் என்று நினைக்கிறார். “அப்படின்னா நான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்” என்று அமித் அஹிம்சா முறையை கையில் எடுக்க, ஒருவழியாக பணிந்த பாருவும் கம்முவும் சமையல் தவிர இதர வீட்டு வேலைகளை செய்வதாக அரைமனதாக ஒப்புக் கொண்டார்கள். “எனக்கும் முட்டை வேணும்” என்கிற சுயநல காரணத்தைச் சொன்னார் கம்மு. FJ மீது ஆதிரை தொடுத்த வழக்கு - யார் பக்கம் தவறு? வழக்காடு மன்றம். FJ மீது ஆதிரை தொடுத்த வழக்கு. “எனக்கும் FJ-க்கு லவ் எல்லாம் இல்லை. பிரெண்ட்ஷிப் மாதிரி ஒண்ணு இருந்தது. அவ்வளவுதான். ஆனா நான் வெளியே போயிட்ட பிறகு ‘ஆதிரை என்னை வெச்சு லவ் கன்டென்ட் பண்ண டிரை பண்ணா.. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்’ன்னு FJ சொல்றாரு. ‘மென் கார்டு’ வெச்சு பிளே பண்றாரு. என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு. இதே மாதிரி இன்னொரு பொண்ணு கிட்டயும் பண்ணாரு. என் மேல சொல்லப்பட்டது பொய்ன்னு ப்ரூவ் பண்ணணும்” என்பதுதான் ஆதிரை தந்த வழக்கின் உள்ளடக்கம். ஒரு பார்வையாளராக இந்த விஷயத்தை பிளாஷ்பேக்கில் பார்த்தால் FJ-வும் ஆதிரையும் காதலர்கள் போலத்தான் நடந்து கொண்டார்கள். அவர்களின் சேட்டைகள் அப்படித்தான் இருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் FJ விலகி விட்டார். தன்னால் ஆதிரையின் ஆட்டம் கெடக்கூடாது என்கிற நல்லெண்ணமா, அல்லது தன்னுடைய பெயர் டேமேஜ் ஆகக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வா என்று தெரியவில்லை. BB Tamil 9 - Day 65 இரண்டாவதுதான் காரணம் என்றால், ஆதிரைக்குப் பின்னால் வியானாவிடமும் ஏறத்தாழ அதையேதான் செய்தார் FJ. இந்த நோக்கில் ஆதிரையின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது. எனில் ஆதிரையின் தரப்பில் குற்றமே இல்லையா? ‘இங்க எல்லோருக்குமே சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. அப்படியாகத்தான் FJவுடன் நான் பழகினேன். அது பிரெண்ட்ஷிப்பிற்கு மேல ஒண்ணு” என்கிறார் ஆதிரை. FJ செய்தது குற்றம் என்றால் அதற்கு இடம் தந்த ஆதிரையின் மீது கொஞ்சம் தவறு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு பெண் இப்படி வெளிப்படையாக வழக்கு தொடர முடிவு செய்கிறார் என்றால் அவருடைய தரப்பில் உண்மை இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்த விசாரணையின் மூலம் அவருடைய பெயரும் டேமேஜ் ஆகலாம். விக்ரமின் சாமர்த்தியமான வாதம் - எஸ்கேப் ஆன FJ இந்த வழக்கில் தீவிரமான வாதப் பிரதிவாதங்கள் நடந்தால் அது FJவிற்கு மிகவும் டேமேஜாக அமையும் என்பதை உணர்ந்த வக்கீல் விக்ரம், “நீ மன்னிப்பு கேட்டுடு.. ஆனா ஒரு கண்டிஷன். இந்த விஷயத்தை இனி ஆதிரை பேசக்கூடாது” என்று சாமர்த்தியமான பாயிண்ட்டை ஆலோசனை சொல்ல, அதற்கு FJ-வும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார். ஆனால் நீதிமன்றத்தில் தனது ஓப்பனிங் ஆர்க்யூமென்ட்டை ஆரம்பித்த விக்ரம் “இது தவறான புரிதலில் தொடுக்கப்பட்ட வழக்கு” என்று துவங்கியது சரியானதாகத் தெரியவில்லை. ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’ என்று முடிவு செய்த பிறகு எதற்கு டிஃபென்ஸிவ்? தனது தரப்பை கால் மணி நேரத்திற்கு ஆதிரை நீட்டி முழக்க “என்னம்மா லென்த்தா போயிட்டே இருக்கு” என்று சலித்துக் கொண்டார் நீதிபதி. என்னதான் ஆதிரை தனது குற்றச்சாட்டை நீட்டி முழக்கினாலும் ‘மாஸ்டர் ஒரு ஊத்தப்பம்’ என்கிற காமெடியாக ‘ஒப்புக்கறேன் எஜமான்’ என்று FJ சரண் அடைந்து விட்டார். BB Tamil 9 - Day 65 FJவை வேண்டுமென்றே தப்பிக்கவிட்டாரா அமித்? FJ-வை குறுக்கு விசாரணை செய்ய விரும்பினார் அரேரா. “மன்னிப்பு கேக்கறவங்க எதுக்கு இது தவறான புரிதல்ன்னு ஆரம்பத்துல சொனனாங்க?” என்று அரோ சரியான பாயிண்ட்டை முன் வைத்தார். “அதான் குற்றத்தை ஒத்துக்கிட்டாங்களே.. அப்புறம் எதுக்கு விசாரணை” என்ற அமித் வழக்கை முடித்து வைத்து விட்டார். இன்னொரு நீதிபதியான சுபிக்ஷாவிற்கு இதில் உடன்பாடில்லை. அமித் செய்தது சரியா என்றால், நடைமுறை நோக்கில் சரி என்றுதான் தோன்றுகிறது. ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு விசாரணையை இழுப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். ஆனால் பிக் பாஸ் கோர்ட் என்பது வேறு. இந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் சாட்சியங்களோடு நிகழும் போது FJ-வின் முகமூடி அம்பலமாகும் என்று கணக்கு போட்டு வைத்திருந்த ஆதிரை இதனால் எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்தார். பாருவும் அமித்திடம் தனது ஆட்சேபத்தைச் சொன்னார். BB Tamil 9 - Day 65 இந்த வழக்கில் ஆதிரை வென்றாலும் கூட அவருக்கு திருப்தியில்லை. “எப்படி சிம்பதி கிரியேட் பண்ணி சிம்ப்பிளா தப்பிச்சிட்டான் பார்த்தியா?” என்று மனம் புழுங்கினார். “இந்தப் பிரச்னையை இத்தோட முடிச்சிடுங்க” என்று அரோ பஞ்சாயத்திற்கு வர பிறகு வேறு ஒரு டிராமா நடந்தது. “கோர்ட்ல நிரூபிக்கறதுதான் என் நோக்கம்” என்ற ஆதிரையிடம் “இங்க கூட காமிரா இருக்கு.. வா பேசலாம்” என்று நியாயஸ்தன் போல பேசினார் FJ. ரம்யா வந்து சாட்சியம் சொன்ன பிறகு தடாலென்று பல்டி அடித்து ‘அம்மா சத்தியமா நான் அப்படிப் பண்ணலை’ என்று கெஞ்சுவதுபோல் அனுதாபம் தேடி, மீண்டும் ஆதிரையின் மீது சாய்ந்து கொண்டதும், அதற்கு அவரும் அனுமதித்ததும் என்ன மாதிரியான வழக்கு இது என்று புரியவில்லை. ஆதிரைக்கு உண்மையிலேயே FJ மீது கோபமிருந்தால் இந்தச் சமயத்தில் விலகியிருக்க வேண்டும். அவருக்கு உண்மையிலேயே FJ மீது கோபமா, அல்லது தான் சென்ற பிறகு வியானாவுடன் பழகியதால் ஏற்பட்ட பொசசிவ் கோபமா என்பது புரியவில்லை. FJ மீது பாரு தொடுத்த வழக்கு - உண்மையா, பழிவாங்கலா? அடுத்த வழக்கும் FJ மீதுதான். வழக்கு தொடுத்தவர் பாரு. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அமித்தையும் பாருவையும் இணைத்து FJ தவறாகப் பேசி விட்டாராம். இரண்டு, பாரு இந்த வீட்டில் லவ் கன்டென்ட் மட்டுமே செய்து கொண்டிருக்கிறாராம். இது செல்லாத வழக்கு என்பது வெளிப்படை. எப்படி பிக் பாஸ் அனுமதித்தார் என்று தெரியவில்லை. பாரு சம்பந்தப்பட்டது என்பதால் கச்சா முச்சா நடந்து நிறைய சண்டை நிகழும் என்று எதிர்பார்த்திருக்கலாம். “அமித் கூட பாரு டேட்டிங் போறாங்கன்னு சொன்னது ஒரு நார்மல் ஜோக். அப்ப பாரு கூட சிரிச்சாங்க. அப்புறம் வந்து ‘அந்த மாதிரி பேசாதீங்கன்னு என் கிட்ட தனியா சொன்னாங்க. அப்பவே நான் ஸாரி கேட்டுட்டேன்” என்று FJ சொல்ல “அமித் கிட்ட மன்னிப்பு கேட்ட FJ என் கிட்ட ஸாரி கேட்கவேயில்லை…. என்ற பாரு, BB Tamil 9 - Day 65 இன்னொரு சமயத்தில் ‘FJ என் கிட்ட ஸாரி கேட்ட அப்புறம்’ என்று மாற்றி மாற்றி பேசினார். வக்கீல் சபரி இதை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார். பாரு வழக்கில் இரண்டாவது காரணமான ‘லவ் கன்டென்ட்’ என்பதை ‘ஆமாம்.. நீ அப்படித்தான் பண்றே’ என்று தீர்மானமாக சொன்னார் FJ. ‘அப்படி பண்றது அவங்க இஷ்டம்’என்று நீதிபதி சொல்ல, பாருவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததில் அம்மணிக்கு ஒரே குஷி. தீர்ப்பு முடிந்ததும் பாருவிற்கும் FJ-விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ‘8th std பய’ என்கிற மாதிரி கிண்டலாகப் பேசினார் பாரு. “அவ என் கிட்ட இருந்து வார்த்தைகளை பிடுங்க முயற்சி பண்ணான். நான் தப்பிச்சிட்டேன்” என்று பிறகு சபரியிடம் சொல்லி மகிழ்ந்தார் பாரு. “என் கேஸ்ல எப்படி பண்ணான்.. ஆனா பாரு கேஸ்ல எப்படி பண்ணான் பத்தியா?” என்று இரண்டு வழக்குகளிலும் FJ நடந்து கொண்ட விதத்தை சரியாக சுட்டிக் காட்டினார் ஆதிரை. “உன் வாயாலதாண்டா கெடற” என்று FJ-வை கனி கண்டிக்க “முதல் கேஸ் மாதிரி ரெண்டாவது சீரியஸ் கிடையாது. ஜாலியா பேசினத அந்தம்மா சீரியஸா காட்டறாங்க’ என்றார் FJ. வழக்கு முடிந்தும், தீர்ப்பு சாதகமாக வந்தும் கூட பாருவால் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியவில்லை. FJவிடம் ஒரண்டை இழுத்துக் கொண்டே இருந்தார். “நான் அப்பவே தனியா ஸாரி கேட்டுட்டேன். ஆனா அதை நீ மறைச்சு.. கோர்ட்ல ஸாரி கேட்கணும்ன்னு பிடிவாதம் பிடிச்சே. லவ் கன்டென்ட் பண்றேன்னுதான் சொன்னேன். அது தப்புன்னு சொன்னேனா?” என்று பாருவிடம் மல்லுக்கட்டினார் FJ. BB Tamil 9 - Day 65 FJ வும் பாருவிற்கு நிகராக வாய் பேசுபவர் என்றாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை FJ-வை அவமானப்படுத்தவே பாரு வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது வெளிப்படை. அடுத்த வழக்கு, பாரு அவமதிப்பாக பேசி விட்டார் என்று அரோரா வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில் என்ன நடக்கும் என்பதை இன்று பார்க்கலாம்.
BB Tamil 9 Day 66: ``என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு - முறையிட்ட ஆதிரை
ஆதிரை தொடுத்த வழக்கில் ‘குத்தத்தை ஒப்புக்கறேங்கய்யா’ என்று எஃப்ஜே சொன்னது ஒரு சாமர்த்தியமான டிஃபென்ஸிவ் ஆக்ட். இதன் மூலம் அதிக குப்பைகள் கிளறப்படாது. பெயர் டேமேஜ் ஆகாது. பாரு தொடர்ந்த வழக்கில், தன் பெயர் டேமேஜ் ஆகக்கூடாது என்பதை விடவும் எஃப்ஜேவை பொதுவில் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்கிற பழிவாங்கல் மட்டும்தான் தெரிந்தது. BB Tamil 9 - Day 65 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 65 ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்கிற பாடலைப் போல கம்முவும் பாருவும் அவர்களாக திருந்தினால்தான். இவர்கள் செய்யும் தவறால் மற்றவர்களுக்கு தண்டனை கிடைத்தும் கூட அது குறித்த வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இவர்களுக்கு இல்லை. ‘எக்சர்சைஸ் செய்யும் போது மைக்கை கழற்றி வைக்கலாம்’ என்பதை சாக்காகக் கொண்டு இருவரும் ஜாக்கிங் போகும் போது பேசிக்கொண்டிருக்க அமித் அதைக் கண்டித்து எச்சரிக்கை தந்தார். “டீ, காஃபி சாப்பிட முடியலைன்னு விக்ரம் ரொம்ப அனத்தறான்” என்று கம்மு சொல்ல “அவன் யார் கேக்கறதுக்கு. அவன் கெடக்கறான் கிறுக்குப் பய. வா.. அவன் முன்னாடியே கட்டிப்பிடிச்சு வெறுப்பேத்துவோம்” என்று கெட்ட காரியம் செய்தார் பாரு. வருத்தமும் குற்றவுணர்வும் செய்கிற விஷயமா இது?! “நீங்க நல்லா வருவீங்க” என்று சந்தோஷமாக சாபம் கொடுத்தார் விக்ரம். “மத்தவங்களுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு கதறிட்டுத்தான் இருக்கேன்” என்று பாரு சமாளிக்க “உங்களைப் பார்த்தா அப்படி தெரியலையே?” என்று கிண்டலடித்தார் வியானா. ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?’ - பாரு கம்மு பிடிவாதம் பாரு - கம்மு செய்த தவறால் மற்றவர்களுக்கும் சேர்த்து புரோட்டீன் உணவுகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக ஒரு மீட்டிங் ஆரம்பித்தது. “இவங்க கிட்ட எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் நான் பார்க்கலை” என்று அமித் ஆரம்பிக்க “அது இல்லைன்னு எப்படி சொல்ல முடியும், அழுது காட்டணுமா?” என்று அசட்டுத்தனமாக எதிர்வாதம் வைத்தார் பாரு. அழ வேண்டாம். இனி மேலாவது கம்முவிடம் ரொமான்ஸ் ரகசியம் பேசாமலிருக்கலாம் அல்லவா? தங்ககளின் கிளுகிளுப்பால் மற்றவர்களுக்கு உணவு பறிபோவதைக் குறித்து எந்தவொரு வருத்தமும் அல்லாமல், அதை சாமர்த்தியமாக மறைக்க நினைக்கும் பாருவின் குணாதிசயம் முறைகேடானது. “சரி.. தலயா நான் ஒரு தண்டனை தரேன். நான் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசப் போறதில்ல. மத்தவங்களுக்கும் இது சம்மதமான்னு தெரியணும்” என்று அமித் சொன்னார். “எங்களை ஒதுக்கி வைக்கணும்னு பார்க்கறீங்களா?” என்று முரண்டு பிடித்தார் பாரு. இருவரும் தொடர்ந்து செய்யும் ரொமான்ஸ் அலப்பறைகளுக்கு தண்டனையாக மற்றவர்கள் இவர்களை புறக்கணிப்பது, அறுவைசிகிச்சை போல ஒரு சிறந்த தண்டனையாகத் தெரிந்தாலும் தார்மீக அடிப்படையில் தவறானது. BB Tamil 9 - Day 65 “ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கணும்னு எங்களுக்கு ஆசையில்லை. அப்படியாவது ஏதாவது இம்பாக்ட் கிரியேட் ஆகும்ன்னு பார்க்கறோம்” என்றார் விக்ரம். இந்த ஐடியாவைத் தந்தவரே இவர்தான். “யார் கூடவும் பேசாம இருக்கணும்ன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்ல” என்றார் சுபிக்ஷா. மெஜாரிட்டியான கருத்து ‘இந்த தண்டனை வேண்டாம்’ என்பதாக இருந்ததால் “சரி… வேற தண்டனை தரேன். வீட்டு வேலையாவது செய்வீங்களா?” என்று அமித் கேட்க “அய்யோ.. பாருவை சமையல்ல மட்டும் விட்றாதீங்க” என்று மற்றவர்கள் அலறினார்கள். பாத்ரூம் பணியையே சரியாக செய்யாமல் டபாய்க்கும் பாரு, கூடுதல் பணியை ஏற்றுக் கொள்வாரா என்ன? “வேணுமின்னே நிறைய பாத்திரங்களைப் போடுவாங்க” என்று கம்முவின் சொல்வதின் மூலம் தன்னைப்போலவே மற்றவர்களும் வன்மம் மிக்கவர்கள் என்று நினைக்கிறார். “அப்படின்னா நான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்” என்று அமித் அஹிம்சா முறையை கையில் எடுக்க, ஒருவழியாக பணிந்த பாருவும் கம்முவும் சமையல் தவிர இதர வீட்டு வேலைகளை செய்வதாக அரைமனதாக ஒப்புக் கொண்டார்கள். “எனக்கும் முட்டை வேணும்” என்கிற சுயநல காரணத்தைச் சொன்னார் கம்மு. FJ மீது ஆதிரை தொடுத்த வழக்கு - யார் பக்கம் தவறு? வழக்காடு மன்றம். FJ மீது ஆதிரை தொடுத்த வழக்கு. “எனக்கும் FJ-க்கு லவ் எல்லாம் இல்லை. பிரெண்ட்ஷிப் மாதிரி ஒண்ணு இருந்தது. அவ்வளவுதான். ஆனா நான் வெளியே போயிட்ட பிறகு ‘ஆதிரை என்னை வெச்சு லவ் கன்டென்ட் பண்ண டிரை பண்ணா.. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்’ன்னு FJ சொல்றாரு. ‘மென் கார்டு’ வெச்சு பிளே பண்றாரு. என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு. இதே மாதிரி இன்னொரு பொண்ணு கிட்டயும் பண்ணாரு. என் மேல சொல்லப்பட்டது பொய்ன்னு ப்ரூவ் பண்ணணும்” என்பதுதான் ஆதிரை தந்த வழக்கின் உள்ளடக்கம். ஒரு பார்வையாளராக இந்த விஷயத்தை பிளாஷ்பேக்கில் பார்த்தால் FJ-வும் ஆதிரையும் காதலர்கள் போலத்தான் நடந்து கொண்டார்கள். அவர்களின் சேட்டைகள் அப்படித்தான் இருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் FJ விலகி விட்டார். தன்னால் ஆதிரையின் ஆட்டம் கெடக்கூடாது என்கிற நல்லெண்ணமா, அல்லது தன்னுடைய பெயர் டேமேஜ் ஆகக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வா என்று தெரியவில்லை. BB Tamil 9 - Day 65 இரண்டாவதுதான் காரணம் என்றால், ஆதிரைக்குப் பின்னால் வியானாவிடமும் ஏறத்தாழ அதையேதான் செய்தார் FJ. இந்த நோக்கில் ஆதிரையின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது. எனில் ஆதிரையின் தரப்பில் குற்றமே இல்லையா? ‘இங்க எல்லோருக்குமே சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. அப்படியாகத்தான் FJவுடன் நான் பழகினேன். அது பிரெண்ட்ஷிப்பிற்கு மேல ஒண்ணு” என்கிறார் ஆதிரை. FJ செய்தது குற்றம் என்றால் அதற்கு இடம் தந்த ஆதிரையின் மீது கொஞ்சம் தவறு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு பெண் இப்படி வெளிப்படையாக வழக்கு தொடர முடிவு செய்கிறார் என்றால் அவருடைய தரப்பில் உண்மை இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்த விசாரணையின் மூலம் அவருடைய பெயரும் டேமேஜ் ஆகலாம். விக்ரமின் சாமர்த்தியமான வாதம் - எஸ்கேப் ஆன FJ இந்த வழக்கில் தீவிரமான வாதப் பிரதிவாதங்கள் நடந்தால் அது FJவிற்கு மிகவும் டேமேஜாக அமையும் என்பதை உணர்ந்த வக்கீல் விக்ரம், “நீ மன்னிப்பு கேட்டுடு.. ஆனா ஒரு கண்டிஷன். இந்த விஷயத்தை இனி ஆதிரை பேசக்கூடாது” என்று சாமர்த்தியமான பாயிண்ட்டை ஆலோசனை சொல்ல, அதற்கு FJ-வும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார். ஆனால் நீதிமன்றத்தில் தனது ஓப்பனிங் ஆர்க்யூமென்ட்டை ஆரம்பித்த விக்ரம் “இது தவறான புரிதலில் தொடுக்கப்பட்ட வழக்கு” என்று துவங்கியது சரியானதாகத் தெரியவில்லை. ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’ என்று முடிவு செய்த பிறகு எதற்கு டிஃபென்ஸிவ்? தனது தரப்பை கால் மணி நேரத்திற்கு ஆதிரை நீட்டி முழக்க “என்னம்மா லென்த்தா போயிட்டே இருக்கு” என்று சலித்துக் கொண்டார் நீதிபதி. என்னதான் ஆதிரை தனது குற்றச்சாட்டை நீட்டி முழக்கினாலும் ‘மாஸ்டர் ஒரு ஊத்தப்பம்’ என்கிற காமெடியாக ‘ஒப்புக்கறேன் எஜமான்’ என்று FJ சரண் அடைந்து விட்டார். BB Tamil 9 - Day 65 FJவை வேண்டுமென்றே தப்பிக்கவிட்டாரா அமித்? FJ-வை குறுக்கு விசாரணை செய்ய விரும்பினார் அரேரா. “மன்னிப்பு கேக்கறவங்க எதுக்கு இது தவறான புரிதல்ன்னு ஆரம்பத்துல சொனனாங்க?” என்று அரோ சரியான பாயிண்ட்டை முன் வைத்தார். “அதான் குற்றத்தை ஒத்துக்கிட்டாங்களே.. அப்புறம் எதுக்கு விசாரணை” என்ற அமித் வழக்கை முடித்து வைத்து விட்டார். இன்னொரு நீதிபதியான சுபிக்ஷாவிற்கு இதில் உடன்பாடில்லை. அமித் செய்தது சரியா என்றால், நடைமுறை நோக்கில் சரி என்றுதான் தோன்றுகிறது. ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு விசாரணையை இழுப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். ஆனால் பிக் பாஸ் கோர்ட் என்பது வேறு. இந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் சாட்சியங்களோடு நிகழும் போது FJ-வின் முகமூடி அம்பலமாகும் என்று கணக்கு போட்டு வைத்திருந்த ஆதிரை இதனால் எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்தார். பாருவும் அமித்திடம் தனது ஆட்சேபத்தைச் சொன்னார். BB Tamil 9 - Day 65 இந்த வழக்கில் ஆதிரை வென்றாலும் கூட அவருக்கு திருப்தியில்லை. “எப்படி சிம்பதி கிரியேட் பண்ணி சிம்ப்பிளா தப்பிச்சிட்டான் பார்த்தியா?” என்று மனம் புழுங்கினார். “இந்தப் பிரச்னையை இத்தோட முடிச்சிடுங்க” என்று அரோ பஞ்சாயத்திற்கு வர பிறகு வேறு ஒரு டிராமா நடந்தது. “கோர்ட்ல நிரூபிக்கறதுதான் என் நோக்கம்” என்ற ஆதிரையிடம் “இங்க கூட காமிரா இருக்கு.. வா பேசலாம்” என்று நியாயஸ்தன் போல பேசினார் FJ. ரம்யா வந்து சாட்சியம் சொன்ன பிறகு தடாலென்று பல்டி அடித்து ‘அம்மா சத்தியமா நான் அப்படிப் பண்ணலை’ என்று கெஞ்சுவதுபோல் அனுதாபம் தேடி, மீண்டும் ஆதிரையின் மீது சாய்ந்து கொண்டதும், அதற்கு அவரும் அனுமதித்ததும் என்ன மாதிரியான வழக்கு இது என்று புரியவில்லை. ஆதிரைக்கு உண்மையிலேயே FJ மீது கோபமிருந்தால் இந்தச் சமயத்தில் விலகியிருக்க வேண்டும். அவருக்கு உண்மையிலேயே FJ மீது கோபமா, அல்லது தான் சென்ற பிறகு வியானாவுடன் பழகியதால் ஏற்பட்ட பொசசிவ் கோபமா என்பது புரியவில்லை. FJ மீது பாரு தொடுத்த வழக்கு - உண்மையா, பழிவாங்கலா? அடுத்த வழக்கும் FJ மீதுதான். வழக்கு தொடுத்தவர் பாரு. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அமித்தையும் பாருவையும் இணைத்து FJ தவறாகப் பேசி விட்டாராம். இரண்டு, பாரு இந்த வீட்டில் லவ் கன்டென்ட் மட்டுமே செய்து கொண்டிருக்கிறாராம். இது செல்லாத வழக்கு என்பது வெளிப்படை. எப்படி பிக் பாஸ் அனுமதித்தார் என்று தெரியவில்லை. பாரு சம்பந்தப்பட்டது என்பதால் கச்சா முச்சா நடந்து நிறைய சண்டை நிகழும் என்று எதிர்பார்த்திருக்கலாம். “அமித் கூட பாரு டேட்டிங் போறாங்கன்னு சொன்னது ஒரு நார்மல் ஜோக். அப்ப பாரு கூட சிரிச்சாங்க. அப்புறம் வந்து ‘அந்த மாதிரி பேசாதீங்கன்னு என் கிட்ட தனியா சொன்னாங்க. அப்பவே நான் ஸாரி கேட்டுட்டேன்” என்று FJ சொல்ல “அமித் கிட்ட மன்னிப்பு கேட்ட FJ என் கிட்ட ஸாரி கேட்கவேயில்லை…. என்ற பாரு, BB Tamil 9 - Day 65 இன்னொரு சமயத்தில் ‘FJ என் கிட்ட ஸாரி கேட்ட அப்புறம்’ என்று மாற்றி மாற்றி பேசினார். வக்கீல் சபரி இதை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார். பாரு வழக்கில் இரண்டாவது காரணமான ‘லவ் கன்டென்ட்’ என்பதை ‘ஆமாம்.. நீ அப்படித்தான் பண்றே’ என்று தீர்மானமாக சொன்னார் FJ. ‘அப்படி பண்றது அவங்க இஷ்டம்’என்று நீதிபதி சொல்ல, பாருவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததில் அம்மணிக்கு ஒரே குஷி. தீர்ப்பு முடிந்ததும் பாருவிற்கும் FJ-விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ‘8th std பய’ என்கிற மாதிரி கிண்டலாகப் பேசினார் பாரு. “அவ என் கிட்ட இருந்து வார்த்தைகளை பிடுங்க முயற்சி பண்ணான். நான் தப்பிச்சிட்டேன்” என்று பிறகு சபரியிடம் சொல்லி மகிழ்ந்தார் பாரு. “என் கேஸ்ல எப்படி பண்ணான்.. ஆனா பாரு கேஸ்ல எப்படி பண்ணான் பத்தியா?” என்று இரண்டு வழக்குகளிலும் FJ நடந்து கொண்ட விதத்தை சரியாக சுட்டிக் காட்டினார் ஆதிரை. “உன் வாயாலதாண்டா கெடற” என்று FJ-வை கனி கண்டிக்க “முதல் கேஸ் மாதிரி ரெண்டாவது சீரியஸ் கிடையாது. ஜாலியா பேசினத அந்தம்மா சீரியஸா காட்டறாங்க’ என்றார் FJ. வழக்கு முடிந்தும், தீர்ப்பு சாதகமாக வந்தும் கூட பாருவால் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியவில்லை. FJவிடம் ஒரண்டை இழுத்துக் கொண்டே இருந்தார். “நான் அப்பவே தனியா ஸாரி கேட்டுட்டேன். ஆனா அதை நீ மறைச்சு.. கோர்ட்ல ஸாரி கேட்கணும்ன்னு பிடிவாதம் பிடிச்சே. லவ் கன்டென்ட் பண்றேன்னுதான் சொன்னேன். அது தப்புன்னு சொன்னேனா?” என்று பாருவிடம் மல்லுக்கட்டினார் FJ. BB Tamil 9 - Day 65 FJ வும் பாருவிற்கு நிகராக வாய் பேசுபவர் என்றாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை FJ-வை அவமானப்படுத்தவே பாரு வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது வெளிப்படை. அடுத்த வழக்கு, பாரு அவமதிப்பாக பேசி விட்டார் என்று அரோரா வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில் என்ன நடக்கும் என்பதை இன்று பார்க்கலாம்.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே லாபம்: ‘சூர்யா 47’ படக்குழுவினர் உற்சாகம்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே லாபம்: ‘சூர்யா 47’ படக்குழுவினர் உற்சாகம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியலாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 47’. இதனை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இதன் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் சூர்யா...
வெங்கட் பிரபு படத்தில் SK-வின் நியூ கெட்டப் இதுதானா? –வைரலாகும் போட்டோ
வெங்கட் பிரபு படத்தில் SK-வின் நியூ கெட்டப் இதுதானா? – வைரலாகும் போட்டோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக வெங்கட்-எஸ்கே இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு அவருக்கு டீ-ஏஜிங் தோற்றத்தை வடிவமைக் கின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்...
சேரனுக்கு அடிபட்டு இருப்பதை பார்த்து தவிக்கும் சந்தா, அதிர்ச்சியில் பாண்டியன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லையே என்றார். நிலா, கண்டிப்பாக அவர்கள் தான். இந்த உண்மையை கண்டுபிடிக்கணும் என்றார். பின் சோழன், நான் செய்தது பெரிய தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று தான் செய்த தவறுக்கு வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன் போன் எடுக்கவில்லை என்று வானதி வீட்டிற்கு வந்து விட்டார். பின் நடந்ததை எல்லாம் பாண்டியன், பல்லவன் இருவரும் சொன்னார்கள். […] The post சேரனுக்கு அடிபட்டு இருப்பதை பார்த்து தவிக்கும் சந்தா, அதிர்ச்சியில் பாண்டியன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli Exclusive | Serial
கிரிஷை வெளியே துரத்த நடக்கும் சதி வேலை, முத்து சொன்ன வார்த்தையால் கொந்தளித்த மீனா –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, எதற்காக நீ இந்த வேலை செய்து கொண்டிருக்கிறாய். ஒழுங்கு மரியாதையாக எழுந்து வா என்று திட்டி இருந்தார். ஆனால் மனோஜ் எதுவும் பேசாமல் கிரிஷ் சாப்பாடு ஊட்டி விட்டார். அதற்குப் பின் மனோஜுடன் தூங்க கிரிஷ் ரூமிற்கு வந்தார். மனோஜ் ஆரம்பத்தில் மறுத்தாலும் கிறிஸ் அம்மாவின் ஆவி வந்துடுமோ என்ற பயத்தில் அங்கேயே கிரிஷை தூங்க சம்மதித்தார். இதை எல்லாம் பார்த்து ரோகினிக்கு சந்தோசமாக இருக்கிறது. க்ரிஷ், […] The post கிரிஷை வெளியே துரத்த நடக்கும் சதி வேலை, முத்து சொன்ன வார்த்தையால் கொந்தளித்த மீனா – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
தனம் பேசிய மொழியால் குழம்பி போய் இருக்கும் சேது, காவியாவிடம் கெஞ்சி கதறும் ஈஸ்வரி –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தான் கண்ட கனவை தனத்திடம் சொல்லி சந்தோஷப்பட்டார். தனம், சீக்கிரத்திலேயே நீங்களும் அக்காவும் சேர்வது வாழ்வீர்கள் என்று சொன்னார். அதற்குப்பின் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைப்பதை பற்றி பேசி இருந்தார். உடனே சேதுவை அழைத்த ராஜாங்கம், எனக்கு தமிழ்செல்வியை விவாகரத்து செய்யணுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. யோசித்து முடிவெடு என்றார். சேது, தமிழ்ச்செல்வியை ரொம்பவே காயப்படுத்தி விட்டேன். […] The post தனம் பேசிய மொழியால் குழம்பி போய் இருக்கும் சேது, காவியாவிடம் கெஞ்சி கதறும் ஈஸ்வரி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
29 : 'நான் கடவுள்'ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன், ஏன்னா.!- ஷான் ரோல்டன்
'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார். விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். '29' இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிச.10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஷான் ரோல்டன், என்னுடைய 29 வயதில் நான் எந்தப் படத்திற்கும் இசையமைக்கவில்லை. அந்த சமயத்தில் நான் மியூசிக்கை கொஞ்சநாள் விட்டுவிட்டேன். அந்த வருடத்தில் நான் இசையமைக்கவே இல்லை. யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன். நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன். ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது. வாழ்க்கையில் சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்திய வயது 29 தான். வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இருக்கிறது நல்லது என்று நான் உணர்ந்தேன். ஷான் ரோல்டன் நாம் வாழ்கையில் பெரிய ஆளாக ஆகாமல் இருந்தால் கூட பரவாயில்லை என்று எனக்கு தோன்றியதும் அந்த 29 வயதில் தான். அந்த 29 என்ற எண் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதனால் நான் இந்தப் படத்திற்கு பொருத்தமான ஒரு நபர் என்று நினைக்கிறேன். எங்கள் வேலையைப் பற்றி இனி இந்த படம் தான் பேச வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
29 : 'நான் கடவுள்'ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன், ஏன்னா.!- ஷான் ரோல்டன்
'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார். விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். '29' இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிச.10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஷான் ரோல்டன், என்னுடைய 29 வயதில் நான் எந்தப் படத்திற்கும் இசையமைக்கவில்லை. அந்த சமயத்தில் நான் மியூசிக்கை கொஞ்சநாள் விட்டுவிட்டேன். அந்த வருடத்தில் நான் இசையமைக்கவே இல்லை. யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன். நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன். ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது. வாழ்க்கையில் சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்திய வயது 29 தான். வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இருக்கிறது நல்லது என்று நான் உணர்ந்தேன். ஷான் ரோல்டன் நாம் வாழ்கையில் பெரிய ஆளாக ஆகாமல் இருந்தால் கூட பரவாயில்லை என்று எனக்கு தோன்றியதும் அந்த 29 வயதில் தான். அந்த 29 என்ற எண் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதனால் நான் இந்தப் படத்திற்கு பொருத்தமான ஒரு நபர் என்று நினைக்கிறேன். எங்கள் வேலையைப் பற்றி இனி இந்த படம் தான் பேச வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
``'ஓசி சேலை’னு என்னை எப்படி அவங்க பேசலாம்; புகார் தரலாம்னு இருக்கேன்!” – நடிகை கம்பம் மீனா
’பாக்கியலட்சுமி முதலான பல சீரியல்களில் நடித்தவர் நடிகை மீனா. கம்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கடந்த இரு தினங்களாக சுற்றி வருகிறது. அதாவது பொட்டிக் வைத்திருப்பவர்களிடம் நைசாகப் பேசி ஓசியில சேலை ஜாக்கெட் முதலானவை வாங்கி விட்டு அவர்களுக்கு புரமோஷனும் தராமல் ஏமாற்றி விடுவதாக அந்த வீடியோவில் ஒரு பெண் பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்ன மீனாவிடமே கேட்டோம். பாக்கியலட்சுமி குழுவினருடன் கம்பம் மீனா ‘’இன்ஸ்டா மூலம் பொட்டிக் வச்சிருக்கிற பலரும் அறிமுகம் ஆகுறாங்க. அப்படி அறிமுகமானவங்கதான் அந்தப் பெண். அவங்களுக்கு ஒரு புரமோஷன் செய்து தர்றப்ப நமக்கு அதுக்கான டிமாண்ட் கேக்கறது வழக்கம்தானே. அப்படிதான் நானும் பண்ணிட்டு வர்றேன். இந்தச் சூழல்ல சில மாதங்களுக்கு முன்னாடி அப்படிப் பேசி சில சேலைகள் பிளவுஸ் தர்றதாச் சம்மதிச்சாங்க. முதல்ல ஒரு செட் அனுப்பி வச்சாங்க. அனுப்பி வச்சதுக்கு நான் புரமோஷன் கொடுத்துட்டேன். ஆனா திரும்ப பேசின மாதிரி தர மறுத்தாங்க. அதனால நானும் அங்களுடனான தொடர்பையே விட்டுட்டேன். இந்தச் சூழல்ல திடீர்னு ஒரு வீடியோ போட்டு நான் ஓசியில சேலை கேக்குறேன்னு பேசியிருக்காங்க. வீடியோ வந்ததுமே அவங்களைத் தொடர்பு கொண்டு பேசினேன். போனை கட் பண்ணி விடுறாங்க. ஒரு பிசினஸ்னா ரெண்டு பேருக்கும் சமமா ஏதாவது டிமாண்ட் இருக்கிறது வழக்கமானதுதான். அப்படி இருக்கிறப்ப என்னை ரொம்பவே அசிங்கப்படுத்தி வீடியோ போட்டுட்டு இப்ப போனை எடுக்காம இருக்கிறதால அவங்க மீது புகார் தரலாம்கிற முடிவுக்கு வந்திருக்கேன்’’ என்கிறார் இவர்.
'வா வாத்தியார்'கதை எனக்கு முதல்ல புடிக்கல; கத்தி மேல் நடக்கிற மாதிரி இருந்துச்சு, ஆனா!- கார்த்தி
'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கார்த்தி- கீர்த்தி ஷெட்டி இப்படம் நாளை (டிச.12) தேதி வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரின் நேர்காணல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது. அதில் பேசியிருக்கும் கார்த்தி, ``இந்த படத்தோட கதையை கேட்டிட்டு முதல்ல எனக்கு புரியலன்னு சொல்லிட்டேன். நலன் குமாரசாமி ஷாக் ஆகிட்டாரு. திரும்ப வந்து கதையை சொன்னபோது அதே கதை எனக்கு எமோஷனலாக கனெக்ட்டாச்சு. என்ன பண்ணீங்கன்னு கேட்டடேன். ஒரு 4 சீன் உள்ளே வச்சேன். அவ்வளவுதான்னு சொன்னாரு. கதை எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு. கொரோனா காலக்கட்டத்தில வாய்ஸ் ரெக்கார்டிங் செய்து கதையை எனக்கு அனுப்பியிருந்தாரு. எனக்கு ஆர்வம் அதிகமா இருந்துச்சு. கார்த்தி- கீர்த்தி ஷெட்டி நலனுடன் ஒரு படம் பண்ணியே ஆகணும்னு நினைச்சேன். கதையை அவர் ரொம்ப ஈஸியா சொல்லிவிட்டாரு. நான் எத்தனை நாள் தூக்கம் இல்லாம இருந்தேன்னு எனக்கு தான் தெரியும். இந்த கதையைக் கேட்டு எல்லாரும் ஏன் பயப்படுகிறாங்க என நினைத்தேன். உட்கார்ந்து பேசும்போது தான் உண்மை தெரிஞ்சது. இந்த படத்தில நடிக்கும்போது ரொம்ப பயமா இருந்துச்சு. கத்தி மேல் நடக்கிற மாதிரி தான். கீழே விழுந்தா காலி செஞ்சிடுவாங்க. நான் ஒரு டாக்குமென்ட்ரி பார்த்தேன். அதில, உனக்கு ஒரு விஷயம் பயமாக இருந்தா அதில் இறங்கிடுன்னு சொல்லியிருந்தாங்க. அதை வச்சுதான் இந்த படத்தில நடிக்க களமிறங்கிட்டேன் என கார்த்தி பேசியிருக்கிறார். வா வாத்தியார்: ``நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல நின்னு எம்.ஜி.ஆரை பார்ப்போம்'' - கார்த்தி
'வா வாத்தியார்'கதை எனக்கு முதல்ல புடிக்கல; கத்தி மேல் நடக்கிற மாதிரி இருந்துச்சு, ஆனா!- கார்த்தி
'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கார்த்தி- கீர்த்தி ஷெட்டி இப்படம் நாளை (டிச.12) தேதி வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரின் நேர்காணல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது. அதில் பேசியிருக்கும் கார்த்தி, ``இந்த படத்தோட கதையை கேட்டிட்டு முதல்ல எனக்கு புரியலன்னு சொல்லிட்டேன். நலன் குமாரசாமி ஷாக் ஆகிட்டாரு. திரும்ப வந்து கதையை சொன்னபோது அதே கதை எனக்கு எமோஷனலாக கனெக்ட்டாச்சு. என்ன பண்ணீங்கன்னு கேட்டடேன். ஒரு 4 சீன் உள்ளே வச்சேன். அவ்வளவுதான்னு சொன்னாரு. கதை எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு. கொரோனா காலக்கட்டத்தில வாய்ஸ் ரெக்கார்டிங் செய்து கதையை எனக்கு அனுப்பியிருந்தாரு. எனக்கு ஆர்வம் அதிகமா இருந்துச்சு. கார்த்தி- கீர்த்தி ஷெட்டி நலனுடன் ஒரு படம் பண்ணியே ஆகணும்னு நினைச்சேன். கதையை அவர் ரொம்ப ஈஸியா சொல்லிவிட்டாரு. நான் எத்தனை நாள் தூக்கம் இல்லாம இருந்தேன்னு எனக்கு தான் தெரியும். இந்த கதையைக் கேட்டு எல்லாரும் ஏன் பயப்படுகிறாங்க என நினைத்தேன். உட்கார்ந்து பேசும்போது தான் உண்மை தெரிஞ்சது. இந்த படத்தில நடிக்கும்போது ரொம்ப பயமா இருந்துச்சு. கத்தி மேல் நடக்கிற மாதிரி தான். கீழே விழுந்தா காலி செஞ்சிடுவாங்க. நான் ஒரு டாக்குமென்ட்ரி பார்த்தேன். அதில, உனக்கு ஒரு விஷயம் பயமாக இருந்தா அதில் இறங்கிடுன்னு சொல்லியிருந்தாங்க. அதை வச்சுதான் இந்த படத்தில நடிக்க களமிறங்கிட்டேன் என கார்த்தி பேசியிருக்கிறார். வா வாத்தியார்: ``நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல நின்னு எம்.ஜி.ஆரை பார்ப்போம்'' - கார்த்தி
வா வாத்தியார்: ``நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல நின்னு எம்.ஜி.ஆரை பார்ப்போம்'' - கார்த்தி
'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கார்த்தி- கீர்த்தி ஷெட்டி இப்படம் நாளை (டிச.12) தேதி வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரின் நேர்காணல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது. அதில் பேசியிருக்கும் கார்த்தி, நான் எம்.ஜி.ஆர் சாரை நேர்ல பார்த்திருக்கேன். எங்க வீட்டுக்கு பின்னாலத்தான் அவருடைய ஆபிஸ் இருக்கும். ஈவினிங் அவர் காரு வரும்'னு தெரிஞ்சு நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல உட்கார்ந்திருப்போம். அவர் காரை விட்டு இறங்கும்போது மேலத்தான் பார்ப்பாரு. நாங்க கை காமிச்சா இரட்டை இலை மாதிரி கை காமிப்பாரு. எங்களைப் பார்த்து சிரிச்சிட்டு ஆபிஸ் உள்ள போவாரு. வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை தான் போட்ருப்பாரு. கார்த்தி- கீர்த்தி ஷெட்டி பார்க்கிறதுக்கு ரோஸ் கலர்-ல இருப்பாரு. இதுதான் அவரை நாங்க நேர்ல பார்த்த ஞாபகம். எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' படமெல்லாம் எல்லார் வீட்டிலையும் ஓடிக்கிட்டே இருக்கும். இன்னைக்கு வரைக்கும் மக்கள் அவரை பத்தி பேசிட்ருக்காங்க. மக்களை அவ்வளவு நேசிருக்காரு. மக்களை தேடி தேடி போய் உதவி செஞ்சிருக்காரு என எம்.ஜி.ஆர் குறித்து கார்த்தி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். வா வாத்தியார்: ``ஒரு மோட்டிவேஷ்னல் வீடியோ; இந்தப் படம் பண்ண அதுதான் காரணம் - நடிகர் கார்த்தி
வா வாத்தியார்: ``நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல நின்னு எம்.ஜி.ஆரை பார்ப்போம்'' - கார்த்தி
'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கார்த்தி- கீர்த்தி ஷெட்டி இப்படம் நாளை (டிச.12) தேதி வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரின் நேர்காணல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது. அதில் பேசியிருக்கும் கார்த்தி, நான் எம்.ஜி.ஆர் சாரை நேர்ல பார்த்திருக்கேன். எங்க வீட்டுக்கு பின்னாலத்தான் அவருடைய ஆபிஸ் இருக்கும். ஈவினிங் அவர் காரு வரும்'னு தெரிஞ்சு நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல உட்கார்ந்திருப்போம். அவர் காரை விட்டு இறங்கும்போது மேலத்தான் பார்ப்பாரு. நாங்க கை காமிச்சா இரட்டை இலை மாதிரி கை காமிப்பாரு. எங்களைப் பார்த்து சிரிச்சிட்டு ஆபிஸ் உள்ள போவாரு. வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை தான் போட்ருப்பாரு. கார்த்தி- கீர்த்தி ஷெட்டி பார்க்கிறதுக்கு ரோஸ் கலர்-ல இருப்பாரு. இதுதான் அவரை நாங்க நேர்ல பார்த்த ஞாபகம். எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' படமெல்லாம் எல்லார் வீட்டிலையும் ஓடிக்கிட்டே இருக்கும். இன்னைக்கு வரைக்கும் மக்கள் அவரை பத்தி பேசிட்ருக்காங்க. மக்களை அவ்வளவு நேசிருக்காரு. மக்களை தேடி தேடி போய் உதவி செஞ்சிருக்காரு என எம்.ஜி.ஆர் குறித்து கார்த்தி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். வா வாத்தியார்: ``ஒரு மோட்டிவேஷ்னல் வீடியோ; இந்தப் படம் பண்ண அதுதான் காரணம் - நடிகர் கார்த்தி
முத்துமலரை அசிங்கப்படுத்தி அனுப்பும் சாரதா, சிந்துவிற்கு விஜய் செய்த உதவி –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் செட்ரூமில் முத்துமலர், சிந்து இருப்பதை பார்த்த விஜய், இவர்களை எதற்கு இங்க தங்க வைத்தீர்கள்? கெஸ்ட் ரூமில் தங்க வையுங்கள். எல்லா ஏற்பாடும் செய்து கொடுங்கள். யார் என்ன சொன்னாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அனுப்பி வைத்தார். அதற்குப்பின் காவிரி, கால் வலிக்கிறது என்று சொல்வதால் விஜய் கால் அமுக்கி விட்டார். பின் இருவருமே தங்கள் குழந்தையுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். சாரதா, முத்தமலர் சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து […] The post முத்துமலரை அசிங்கப்படுத்தி அனுப்பும் சாரதா, சிந்துவிற்கு விஜய் செய்த உதவி – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க! - `அங்கம்மாள்’ ரகசியம் சொல்லும் பரணி
`நாடோடிகள்’ பரணிக்கு கடந்த வாரம் வெளிவந்த ‘அங்கம்மாள்’ திரைப்படம் திரைத்துறையில் அவருக்கு மற்றுமொரு பிரேக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தாயின் ஓரவஞ்சனையை தனது அகத்திற்குள் பூட்டி வைத்து இறுக்கமாகவே இருக்கும் சுடலையாக நடித்து பார்வையாளர்களின் க்ளாப்ஸ்களை அள்ளி வருகிறார். அவரைச் சந்தித்தோம். அங்கம்மாள் திரைப்படம் மக்களுக்கும் படம் ரொம்பவும் பிடிச்சு போயிருக்கு! “வணக்கம்ங்க, எனக்கு மறுபடியும் இந்தப் படம் பிரேக்னு சொல்லலாம். நான் என்னுடைய கரியர்ல நிறைய விஷயங்களை தவறவிட்டிருக்கேன். கிட்டத்தட்ட 12 படங்களை ஹீரோவாக நடிக்க வேண்டியது. ஆனா, அதை மிஸ் பண்ணிட்டேன். அதுபோல, 40-க்கும் மேற்பட்ட படங்கள்ல துணை கதாபாத்திரத்துல நடிக்க வேண்டியது. இதெல்லாம் சில விஷயங்களால மிஸ் ஆகிடுச்சு. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் என்னுடைய நண்பர்தான். அவர் மூலமாகதான் இயக்குநர் விபின் என்கிட்ட வந்தாரு. விபின் கதை சொல்லும்போது எனக்கு இதுல வசனங்கள் மிகக் குறைவுனு சொல்லித்தான் சொன்னாரு. ஆனா, நடிகராக முகபாவனைகள்ல கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டியது என்னுடைய வேலைனு புரிஞ்சுகிட்டு நடிக்க ஒத்துகிட்டேன். பல சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படத்துக்கு பெரும் பாராட்டுகள் கிடைச்சது. இப்போ திரையரங்குகள்ல வெளியானப் பிறகு மக்களுக்கும் படம் ரொம்பவும் பிடிச்சு போயிருக்கு.” என நெகிழ்ச்சியாக பேசத் தொடங்கியவரிடம் அடுத்தடுத்து வினாக்கள் தொடுத்து உரையாடினேன். ``இயல்பாகவே பரணி கலகலப்பான நபர்! ஆனால், ‘அங்கம்மாள்’ சுடலை இறுக்கமாவேதான் இருப்பார். இந்தக் கேரக்டரை நீங்க எப்படி புரிஞ்சுகிட்டீங்க?” ``சுடலைக்கு அம்மாவோட அரவணைப்பு இருக்காது. அம்மா நம்மகிட்ட ஓரவஞ்சனை காட்டுறாங்கனு மனசுக்குள்ள போட்டு அழுத்திக்கிற நபர். அந்த நேரத்துல அவனுடைய கோபத்தை வெளில காட்ட முடியாம இறுக்கமாக இருப்பான். ஊர்ல இருக்கிறவங்ககிட்ட அந்தக் கோபத்தைக் காமிப்பான். அதைத்தான் படத்துல அங்கம்மாளும் பவளத்துக்கிட்ட ஒரு முறை சொல்வாங்க. அதே சமயம் அவனுக்கு அம்மாவை மாதிரியே மனைவியும் அமைஞ்சிடும். அவனுக்குள்ள பல விஷயங்கள் ஓடிட்டு இருக்கும். அவனுக்குள்ள இருக்கிற விஷயங்களை பிரதிபலிக்கும் கருவியாகத்தான் நாதஸ்வரத்தை இயக்குநர் வச்சிருக்காரு. இப்படியான புரிதலை கதை சொல்லும்போதே இயக்குநர் என்கிட்ட சொல்லிட்டாரு. அதற்கேற்ப நானும் எங்கும் வழக்கமான பரணியாக இருந்திடக்கூடாதுனு தீர்க்கமாக முடிவு செய்திட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்லகூட என்னுடைய சக நடிகர்கள்கிட்ட நான் கலகலப்பாக பேசமாட்டேன். அந்தக் கதாபாத்திரமாகவே திரையில கணக்கச்சிதமாக தெரியணும்னு இறுக்கமாகத்தான் இருப்பேன். இப்போ இந்தப் படத்தின் மூலமாக வசனங்கள் இல்லாம நடிக்கவும் பயின்றிருக்கேன்.” Barani Interview - Angammal ``நாதஸ்வரம் வாசிக்க முறையாகக் கத்துக்கிட்டீங்கனு கேள்விப்பட்டோம்?!” ``அட ஆமாங்க! படம் சிங்க் சவுண்ட். அதனால எங்கும் ஏமாத்திட முடியாது. முதல்ல நானாக முயற்சி செய்யும்போது வெறும் காத்து மட்டும்தான் வந்துச்சு. அதனுடைய துளைகளை லாவகமாகப் பிடிக்கிறதுல தொடங்கி நிறைய விஷயம் அந்தக் கலையில இருக்கு. எனக்கு கத்துக் கொடுக்க திருநெல்வேலியில இருந்து வித்துவான் வந்தாரு. அவர்கிட்ட முழுமையாக நான்கு நாட்கள் பயிற்சி எடுத்தேன். இப்போ அந்தக் கலை மீது எனக்கு பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கு. இனிமேல், அந்தக் கலைஞர்களை நான் கரம் கூப்பிக் கும்பிடுவேன். நாம் அந்தக் கலைஞர்களைப் பத்தி இயல்பாக பேசி கடந்து போயிடுறோம். ஆனா, அப்படி கிடையாது. அவர்களுக்கான மரியாதையை நாம் கொடுத்தே ஆகணும்!” ``நீங்க நிஜ வாழ்க்கையில சந்திச்ச அங்கம்மாள்கள் பத்தியும், பவளங்கள் பத்தியும் பேசலாமா...” ``இருக்காதா பின்ன! எல்லோருடைய வீட்டிலும் ஒரு சுடலை இருப்பான். அதே சமயம் பவளமும் இருப்பான். காலையில இருந்து பயங்கரமாக உழைக்கிற ஒருவனுக்கு பெரிதளவுல கவனம் கிடைக்காது. அவங்களுக்குள்ள பெரிய வலிகள் இருக்கும். நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க!” Barani Interview - Angammal ``இயக்குநராகணும்னு கனவோட மதுரையில இருந்து சென்னைக்கு வந்திருக்கீங்க! உங்களை நடிகராக்கிய தருணம் எது?” ``என்னுடைய அத்தை ஷங்கர் சாரோட ஆபீஸ்ல ஆடிட்டராக இருந்தாங்க. அவங்ககிட்ட நிறைய கதைகள் சொல்லிட்டே இருப்பேன். அப்போ அவங்கதான் என்னை பாலாஜி சக்திவேல் சார் ஆபீஸுக்கு போகச் சொன்னாங்க. அங்க அவரிடம் கதை சொன்னப்போன என்னை அவர் பார்த்துட்டு நடிக்க வச்சாரு. அங்கிருந்துதான் நடிகர் பரணி உருவெடுத்தாப்ல! எனக்குள்ள அந்த நடிகர் இருந்தால் நல்லதுனு நானும் யோசிச்சேன். அப்படி ஆக்சிடெண்டல் நடிகராகத்தான் சினிமாவுக்குள்ள வந்தேன். அங்கிருந்து என்னுடைய கனி அண்ணன் பார்த்துட்டு ‘நாடோடிகள்’ படத்துக்கு கூப்பிட்டாரு. சொல்லப்போனால், ‘நாடோடிகள்’ படத்துல நான் நடிச்சிருக்கிற கதாபாத்திரத்துல கனி அண்ணன்தான் நடிக்க வேண்டியது. அவருடைய சட்டையை எனக்குப் போட்டு அழகு பார்த்த மனுஷன் அவர்! கனி அண்ணன் மாதிரியான குருநாதர்கள் அமைஞ்சதுதான் இப்போ சுடலை மாதிரியான அழுத்தமான கேரக்டர் செய்யுறதுக்கு முக்கியமான காரணம்.” ``உங்களுடைய கரியர்ல நீங்க நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டதாக சொன்னீங்க. அதுக்கு காரணம் என்ன?” ``சினிமாவுல தேதி கொடுக்க முடியாம குளறுபடிகள் நடந்தால் பிரச்னைதான்! நீங்க சரியாக இருந்தாலும் சரியான நபர் உங்கூட இல்லைனா அது சில சமயங்கள்ல தவறாக மாறக்கூடும். எனக்கு சின்ன வயசுலேயே பெரிய பெரிய வாய்ப்புகள் கிடைச்சது. என்னுடைய முதல் திரைப்பட இசை வெளியீட்டு விழா மேடையில மணி ரத்னம் சார், ஷங்கர் சார், பாரதிராஜா ஐயானு பல ஜாம்பவான்கள் இருந்தாங்க. அந்த நிகழ்ச்சியை பார்த்திபன் சார் தொகுத்து வழங்கியிருந்தாரு. சட்டென வளர்ச்சியைப் பார்த்தா அந்த மாதிரியான சரிவு வரத்தான் செய்யும். ஆனா, அப்படியான சமயங்கள்ல எனக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைச்சது.” Barani Interview - Angammal ``அப்படி எந்தெந்த படங்களை நீங்க தவறவிட்டீங்க?” ```‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துல நான்தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது. அதுக்கு அட்வான்ஸ்லாம் வாங்கிட்டேன். தேதி கொடுக்க முடியாமல் அந்தப் படத்தை நான் பண்ணல. பிறகு, ‘மைனா’ படத்திலும் நான்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டியது. ஆனா, இதுல எனக்கு வருத்தம் கிடையாது. எனக்கு முன்னாடி சினிமாவுக்கு நடிக்க வந்தவங்க செய்த படங்கள் அது. அது அவங்களுக்கான சாப்பாடு! ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துக்குப் பிறகு சேது அண்ணன் இன்னைக்கு இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்காரு. அவங்களோட உழைப்பை நாம ஒரு பாடமாகத்தான் எடுத்துக்கணும். பரணி எப்போதும் பாசிட்டிவ்தாங்க! இப்போ நல்ல வாய்ப்புகள் வருது. இனிமேல் நம்ம சரியாக தேதி கொடுக்கணும். நம்மளே நேரடியாக பேசிடணும்.” நாடோடிகள் ``‘நாடோடிகள்’ படத்தின் ‘சம்போ சிவ சம்போ’ பாடல்ல உங்களை அடிக்கிற காட்சியில உங்களுக்கு உண்மையாகவே அடிபட்டதாக கேள்விப்பட்டோம். இப்போதும் அதனுடைய வலிகள் இருக்குனு சொல்லியிருந்தீங்களே....” ``அந்தக் காட்சியில என்னை அடிக்க பைப்தான் பயன்படுத்தினாங்க. முதல்ல டம்மி பயன்படுத்தினோம். ஆனா, அது சரியாக வரல. நான் அப்போ எல்லாத்துக்கும் தயாராக இருந்தேன். அந்தக் காட்சி முடிஞ்சதும் நான் அப்படியே கீழ விழுந்துட்டேன். கனி அண்ணன் ஓடி வந்து என்னை பார்த்தாரு. அப்போ எனக்கு ஒண்ணுமில்ல. நாட்கள் போக போக என்னுடைய பின் தலை வலிக்க ஆரம்பிச்சது. அதெல்லாம் பெரிய விஷயம் கிடையாதுங்க. மெனக்கெடல் இல்லாம எதுவும் நமக்கு நிலைக்காது. சைட் எபெக்ட் இருந்தால் என்ன?! இன்னைக்கு அதை நினைவுல வச்சு பலரும் பேசுறாங்கள்ல, அது போதும்.”
நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க! - `அங்கம்மாள்’ ரகசியம் சொல்லும் பரணி
`நாடோடிகள்’ பரணிக்கு கடந்த வாரம் வெளிவந்த ‘அங்கம்மாள்’ திரைப்படம் திரைத்துறையில் அவருக்கு மற்றுமொரு பிரேக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தாயின் ஓரவஞ்சனையை தனது அகத்திற்குள் பூட்டி வைத்து இறுக்கமாகவே இருக்கும் சுடலையாக நடித்து பார்வையாளர்களின் க்ளாப்ஸ்களை அள்ளி வருகிறார். அவரைச் சந்தித்தோம். அங்கம்மாள் திரைப்படம் மக்களுக்கும் படம் ரொம்பவும் பிடிச்சு போயிருக்கு! “வணக்கம்ங்க, எனக்கு மறுபடியும் இந்தப் படம் பிரேக்னு சொல்லலாம். நான் என்னுடைய கரியர்ல நிறைய விஷயங்களை தவறவிட்டிருக்கேன். கிட்டத்தட்ட 12 படங்களை ஹீரோவாக நடிக்க வேண்டியது. ஆனா, அதை மிஸ் பண்ணிட்டேன். அதுபோல, 40-க்கும் மேற்பட்ட படங்கள்ல துணை கதாபாத்திரத்துல நடிக்க வேண்டியது. இதெல்லாம் சில விஷயங்களால மிஸ் ஆகிடுச்சு. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் என்னுடைய நண்பர்தான். அவர் மூலமாகதான் இயக்குநர் விபின் என்கிட்ட வந்தாரு. விபின் கதை சொல்லும்போது எனக்கு இதுல வசனங்கள் மிகக் குறைவுனு சொல்லித்தான் சொன்னாரு. ஆனா, நடிகராக முகபாவனைகள்ல கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டியது என்னுடைய வேலைனு புரிஞ்சுகிட்டு நடிக்க ஒத்துகிட்டேன். பல சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படத்துக்கு பெரும் பாராட்டுகள் கிடைச்சது. இப்போ திரையரங்குகள்ல வெளியானப் பிறகு மக்களுக்கும் படம் ரொம்பவும் பிடிச்சு போயிருக்கு.” என நெகிழ்ச்சியாக பேசத் தொடங்கியவரிடம் அடுத்தடுத்து வினாக்கள் தொடுத்து உரையாடினேன். ``இயல்பாகவே பரணி கலகலப்பான நபர்! ஆனால், ‘அங்கம்மாள்’ சுடலை இறுக்கமாவேதான் இருப்பார். இந்தக் கேரக்டரை நீங்க எப்படி புரிஞ்சுகிட்டீங்க?” ``சுடலைக்கு அம்மாவோட அரவணைப்பு இருக்காது. அம்மா நம்மகிட்ட ஓரவஞ்சனை காட்டுறாங்கனு மனசுக்குள்ள போட்டு அழுத்திக்கிற நபர். அந்த நேரத்துல அவனுடைய கோபத்தை வெளில காட்ட முடியாம இறுக்கமாக இருப்பான். ஊர்ல இருக்கிறவங்ககிட்ட அந்தக் கோபத்தைக் காமிப்பான். அதைத்தான் படத்துல அங்கம்மாளும் பவளத்துக்கிட்ட ஒரு முறை சொல்வாங்க. அதே சமயம் அவனுக்கு அம்மாவை மாதிரியே மனைவியும் அமைஞ்சிடும். அவனுக்குள்ள பல விஷயங்கள் ஓடிட்டு இருக்கும். அவனுக்குள்ள இருக்கிற விஷயங்களை பிரதிபலிக்கும் கருவியாகத்தான் நாதஸ்வரத்தை இயக்குநர் வச்சிருக்காரு. இப்படியான புரிதலை கதை சொல்லும்போதே இயக்குநர் என்கிட்ட சொல்லிட்டாரு. அதற்கேற்ப நானும் எங்கும் வழக்கமான பரணியாக இருந்திடக்கூடாதுனு தீர்க்கமாக முடிவு செய்திட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்லகூட என்னுடைய சக நடிகர்கள்கிட்ட நான் கலகலப்பாக பேசமாட்டேன். அந்தக் கதாபாத்திரமாகவே திரையில கணக்கச்சிதமாக தெரியணும்னு இறுக்கமாகத்தான் இருப்பேன். இப்போ இந்தப் படத்தின் மூலமாக வசனங்கள் இல்லாம நடிக்கவும் பயின்றிருக்கேன்.” Barani Interview - Angammal ``நாதஸ்வரம் வாசிக்க முறையாகக் கத்துக்கிட்டீங்கனு கேள்விப்பட்டோம்?!” ``அட ஆமாங்க! படம் சிங்க் சவுண்ட். அதனால எங்கும் ஏமாத்திட முடியாது. முதல்ல நானாக முயற்சி செய்யும்போது வெறும் காத்து மட்டும்தான் வந்துச்சு. அதனுடைய துளைகளை லாவகமாகப் பிடிக்கிறதுல தொடங்கி நிறைய விஷயம் அந்தக் கலையில இருக்கு. எனக்கு கத்துக் கொடுக்க திருநெல்வேலியில இருந்து வித்துவான் வந்தாரு. அவர்கிட்ட முழுமையாக நான்கு நாட்கள் பயிற்சி எடுத்தேன். இப்போ அந்தக் கலை மீது எனக்கு பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கு. இனிமேல், அந்தக் கலைஞர்களை நான் கரம் கூப்பிக் கும்பிடுவேன். நாம் அந்தக் கலைஞர்களைப் பத்தி இயல்பாக பேசி கடந்து போயிடுறோம். ஆனா, அப்படி கிடையாது. அவர்களுக்கான மரியாதையை நாம் கொடுத்தே ஆகணும்!” ``நீங்க நிஜ வாழ்க்கையில சந்திச்ச அங்கம்மாள்கள் பத்தியும், பவளங்கள் பத்தியும் பேசலாமா...” ``இருக்காதா பின்ன! எல்லோருடைய வீட்டிலும் ஒரு சுடலை இருப்பான். அதே சமயம் பவளமும் இருப்பான். காலையில இருந்து பயங்கரமாக உழைக்கிற ஒருவனுக்கு பெரிதளவுல கவனம் கிடைக்காது. அவங்களுக்குள்ள பெரிய வலிகள் இருக்கும். நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க!” Barani Interview - Angammal ``இயக்குநராகணும்னு கனவோட மதுரையில இருந்து சென்னைக்கு வந்திருக்கீங்க! உங்களை நடிகராக்கிய தருணம் எது?” ``என்னுடைய அத்தை ஷங்கர் சாரோட ஆபீஸ்ல ஆடிட்டராக இருந்தாங்க. அவங்ககிட்ட நிறைய கதைகள் சொல்லிட்டே இருப்பேன். அப்போ அவங்கதான் என்னை பாலாஜி சக்திவேல் சார் ஆபீஸுக்கு போகச் சொன்னாங்க. அங்க அவரிடம் கதை சொன்னப்போன என்னை அவர் பார்த்துட்டு நடிக்க வச்சாரு. அங்கிருந்துதான் நடிகர் பரணி உருவெடுத்தாப்ல! எனக்குள்ள அந்த நடிகர் இருந்தால் நல்லதுனு நானும் யோசிச்சேன். அப்படி ஆக்சிடெண்டல் நடிகராகத்தான் சினிமாவுக்குள்ள வந்தேன். அங்கிருந்து என்னுடைய கனி அண்ணன் பார்த்துட்டு ‘நாடோடிகள்’ படத்துக்கு கூப்பிட்டாரு. சொல்லப்போனால், ‘நாடோடிகள்’ படத்துல நான் நடிச்சிருக்கிற கதாபாத்திரத்துல கனி அண்ணன்தான் நடிக்க வேண்டியது. அவருடைய சட்டையை எனக்குப் போட்டு அழகு பார்த்த மனுஷன் அவர்! கனி அண்ணன் மாதிரியான குருநாதர்கள் அமைஞ்சதுதான் இப்போ சுடலை மாதிரியான அழுத்தமான கேரக்டர் செய்யுறதுக்கு முக்கியமான காரணம்.” ``உங்களுடைய கரியர்ல நீங்க நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டதாக சொன்னீங்க. அதுக்கு காரணம் என்ன?” ``சினிமாவுல தேதி கொடுக்க முடியாம குளறுபடிகள் நடந்தால் பிரச்னைதான்! நீங்க சரியாக இருந்தாலும் சரியான நபர் உங்கூட இல்லைனா அது சில சமயங்கள்ல தவறாக மாறக்கூடும். எனக்கு சின்ன வயசுலேயே பெரிய பெரிய வாய்ப்புகள் கிடைச்சது. என்னுடைய முதல் திரைப்பட இசை வெளியீட்டு விழா மேடையில மணி ரத்னம் சார், ஷங்கர் சார், பாரதிராஜா ஐயானு பல ஜாம்பவான்கள் இருந்தாங்க. அந்த நிகழ்ச்சியை பார்த்திபன் சார் தொகுத்து வழங்கியிருந்தாரு. சட்டென வளர்ச்சியைப் பார்த்தா அந்த மாதிரியான சரிவு வரத்தான் செய்யும். ஆனா, அப்படியான சமயங்கள்ல எனக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைச்சது.” Barani Interview - Angammal ``அப்படி எந்தெந்த படங்களை நீங்க தவறவிட்டீங்க?” ```‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துல நான்தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது. அதுக்கு அட்வான்ஸ்லாம் வாங்கிட்டேன். தேதி கொடுக்க முடியாமல் அந்தப் படத்தை நான் பண்ணல. பிறகு, ‘மைனா’ படத்திலும் நான்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டியது. ஆனா, இதுல எனக்கு வருத்தம் கிடையாது. எனக்கு முன்னாடி சினிமாவுக்கு நடிக்க வந்தவங்க செய்த படங்கள் அது. அது அவங்களுக்கான சாப்பாடு! ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துக்குப் பிறகு சேது அண்ணன் இன்னைக்கு இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்காரு. அவங்களோட உழைப்பை நாம ஒரு பாடமாகத்தான் எடுத்துக்கணும். பரணி எப்போதும் பாசிட்டிவ்தாங்க! இப்போ நல்ல வாய்ப்புகள் வருது. இனிமேல் நம்ம சரியாக தேதி கொடுக்கணும். நம்மளே நேரடியாக பேசிடணும்.” நாடோடிகள் ``‘நாடோடிகள்’ படத்தின் ‘சம்போ சிவ சம்போ’ பாடல்ல உங்களை அடிக்கிற காட்சியில உங்களுக்கு உண்மையாகவே அடிபட்டதாக கேள்விப்பட்டோம். இப்போதும் அதனுடைய வலிகள் இருக்குனு சொல்லியிருந்தீங்களே....” ``அந்தக் காட்சியில என்னை அடிக்க பைப்தான் பயன்படுத்தினாங்க. முதல்ல டம்மி பயன்படுத்தினோம். ஆனா, அது சரியாக வரல. நான் அப்போ எல்லாத்துக்கும் தயாராக இருந்தேன். அந்தக் காட்சி முடிஞ்சதும் நான் அப்படியே கீழ விழுந்துட்டேன். கனி அண்ணன் ஓடி வந்து என்னை பார்த்தாரு. அப்போ எனக்கு ஒண்ணுமில்ல. நாட்கள் போக போக என்னுடைய பின் தலை வலிக்க ஆரம்பிச்சது. அதெல்லாம் பெரிய விஷயம் கிடையாதுங்க. மெனக்கெடல் இல்லாம எதுவும் நமக்கு நிலைக்காது. சைட் எபெக்ட் இருந்தால் என்ன?! இன்னைக்கு அதை நினைவுல வச்சு பலரும் பேசுறாங்கள்ல, அது போதும்.”
BB Tamil 9: அரோராவைப் பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க- பார்வதியை சாடிய விக்ரம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 66 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக இருக்கிறார். மேலும் இந்த வாரம் 'வழக்காடு மன்றம்' டாஸ் பிக் பாஸ் வீட்டில் நடந்து வருகிறது. BB Tamil 9 இந்த டாஸ்க்கில் நேற்று (டிச.9) ஆதிரை மீது வழக்கு தொடுத்திருந்த வினோத் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து பார்வதி, FJ மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார். அதன் பிறகு ஆதிரை FJ மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் அரோரா பார்வதி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அரோராவிற்கு ஆதரவாக விக்கல்ஸ் விக்ரம் வாதாடுகிறார். வாதாடும் போது பேசிய விக்ரம், பாரு அரோரா மேல அவதூறு பரப்புறாங்க. BB Tamil 9 அரோராவை எப்படியாவது வெளியே அனுப்பணும்'னு கங்கணம் கட்டிட்டு இருக்காங்க. அரோராவை பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க பாரு. உங்க முகத்திரை அனைத்தும் தெரிந்துவிட்டது. நீங்க யாருன்னு எல்லோருக்கும் நல்லாவே தெரியும் என்று பார்வதியைக் கடுமையாக சாடியிருக்கிறார்.
Exclusive: திரும்ப ரெண்டு தடவை பிக்பாஸ் கூப்பிட்டாங்க ஆனா.. - பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி. பிக்பாஸ் சீசன் 7 ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர். 'சிறப்பாக விளையாடுகிறார்' என வெளியில் பரவலாகப் பேச்சு எழத் தொடங்கிய ஒரு நாளில் அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். காரணங்களாக 'அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்', 'இவர் இருந்தால் பெண் போட்டியாளர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது' என்பன போன்ற குற்றச் சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. பிரதீப் ஆண்டனி அதேநேரம் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் சரி, வெளியிலும் சரி, இவருக்கு ஆதரவான குரல்களும் எழுந்தன. சினிமாத் துறை சார்ந்த பிரபலங்கள் சிலரே இந்த விஷயத்தில் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த பிறகு சினிமா பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் கடந்தாண்டு இவருக்கு பூஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என அறிய அவரையே தொடர்பு கொண்டோம். எனக்கு இதுதான் கெட்ட வார்த்தை! ''சார் என் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டிருக்கேன், பிக் பாஸ், அது இதுன்னு ஏதாவது கேக்கத்தானே கூப்பிட்டீங்க' எனத் தயங்கியவரை கன்வின்ஸ் செய்து பேச வைத்தோம். ''பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிற வாய்ப்பு வந்தபோது அவ்வளவு சந்தோஷமா இருந்தது. அதுக்கு முன்னாடி அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்ட சிலர் ஷோ பத்தி அப்படி இப்படினு சொல்லியிருந்தாலும் அதைப் பெரிசா பொருட்படுத்தத் தோணலை. பிரதீப் 'எது ஒண்ணும் நம்ம கைக்குள்ளதானே இருக்கு. பார்த்துக்கலாம்'னு போனேன். அந்த வீட்டுல இருந்த வரை என் மனசுக்குத் தப்புனு தெரிஞ்ச எதையும் நான் அங்க செய்யலை. 'கெட்ட வார்த்தை பேசறான்'னு சொன்னாங்க. ஒரு சந்தர்ப்பத்துலயாவது கெட்ட வார்த்தை பேசாத ஒருத்தரைக் காட்டுங்க பார்க்கலாம். எல்லாருக்கும் ஒரே வாழ்க்கைச் சூழல் இருக்காது. சிலர் வளர்ற சூழல் அப்படி இருக்கும். என்னைப் பொறுத்தவரை 'நீ நாசமா போவ'னு யாரையாச்சும் சொன்னாதான் அது கெட்ட வார்த்தை. அந்த மாதிரியெல்லாம் நான் எப்பவும் யாரையும் பேசியதே இல்லை. அதுக்காக கெட்ட வார்த்தை பேசறதை நான் என்கரேஜ் செய்யலை. எல்லாருமே ஏதாவதொரு சூழல்ல கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தறவங்கதான். அதுவே ஒரு மெசேஜ்! 'இங்க இப்படியெல்லாம் பேசக் கூடாது'னு சொல்லி தண்டனை தந்திருக்கலாம். ஆனா வெளியில அனுப்பறதுக்கு இதையெல்லாம் காரணமா சொன்னதை நினைக்கிறப்பதான் சிரிப்பு வருது. பாத்ரூமை திறந்து வச்சுக்கிட்டே பயன்படுத்தறார்னு ஒரு விஷயத்தைச் சொன்னாங்க. நான் குளிக்கறப்ப பாத்ரூம்ல பாடிப் பழக்கப்பட்டவன். உள்ள ஒருத்தன் பாடிட்டிருக்காங்கிறதே அடுத்தவனுக்கு 'உள்ள ஆள் இருக்கு'ங்கிற மெசேஜ்தானே. பிரதீப், கவின் இதையெல்லாம் நான் சொல்லலாம்தான். ஆனா திடீர்னு 'நீங்க இருந்தா எங்களுக்குப் பாதுகாப்பில்லை'னு சில பெண்கள் சொல்றாங்கன்னு சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது. என்ன ரியாக்ட் செய்யறதுனு தெரியலை. தவிர, ஒருத்தன் மேல ஒரு புகார் வந்தா அவனையும் கூப்பிட்டு விளக்கம் கேட்டுதான் பிறகு முடிவெடுப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, எனக்கு என் தரப்பு பதிலைச் சொல்ல தேவையான அவகாசம் தரப்படலை. அதனால 'நடக்கறது நடக்கட்டும்'னு நடந்ததை ஏத்துகிட்டு வெளியில வந்துட்டேன்'' என்கிறார். ''நீங்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால் டைட்டில் வாங்கியிருக்க முடியுமென நினைத்தீர்களா? ''நிச்சயமா. எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. 'டைட்டில் வாங்கிடுவானோ'னு பீதியான சிலர் கூட்டுச் சேர்ந்து என் மீது ஏன் புகார் தந்திருக்கக்கூடாதுனு கூட பின்னாடி யோசிச்சேன். ஆனா இப்ப இதையெல்லாம் பேசி என்ன பிரயோஜனம்? எனக்கு இப்படியொரு புகாரின் பேரில் வெளியில அனுப்பியதுல ரொம்பவே வருத்தம்தான். ஆனா அதையெல்லாம் மறந்துட்டேன். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, என் மீது புகார் சொன்ன சில போட்டியாளர்கள் கூட நிகழ்ச்சி முடிந்த பிறகு என் கூட பேசினாங்க. இப்பக்கூட தொடர்புல இருக்காங்க. ஏன் அடுத்த ரெண்டு சீசன்ல வைல்டு கார்டு என்ட்ரி யில பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே கூப்பிட்டாங்களே, 'போதும்டா சாமி'ன்னு கையெடுத்து கும்பிட்டு அனுப்பிட்டேன்'' பிரதீப்- கமல் ''உங்க வீட்டில், நண்பர்கள் வட்டாரத்தில் என்ன சொன்னார்கள்? 'யாரும் எதுவும் சொல்லலை. அவங்களுக்கெல்லாம் என்னைப் பத்தித் தெரியும். ஒரு பொது தளத்துல பெண்கள் தொடர்பான புகாருக்கு ஆளாகி வெளியில வந்த பிறகுதான் எனக்கு கல்யாணமே நடந்துச்சுங்க. பிரதீப் சரி, இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க? 'கராத்தே பாபு' படத்துல வில்லனா நடிச்சிட்டு வர்றேன். சில புராஜெக்ட்டுகள்ல எழுத்தாளாரா ஒர்க் பண்றேன். டப்பிங் யூனியன்ல உறுப்பினரானது மூலமா டப்பிங் பேசறேன். கடவுள் ஆசிர்வாதத்துல ஏதோ போயிட்டிருக்கு'' வெளியில வந்த பிறகு பிக் பாஸ் பார்த்ததுண்டா? விஜய் சேதுபதி நடத்துகிற விதம் பிடிச்சிருக்கா? இந்த சீசன் பார்க்குறீங்களா? முந்தின சீசன் அப்பப்ப பார்த்தேன். விஜய் சேதுபதி அவரு ஸ்டைல்ல பண்றார். கமல் சார் பண்ணியது அவருடைய ஸ்டைல். அதனால ரெண்டையும் ஒப்பிடத் தேவையில்லை. இந்த சீசன் ஆரம்பத்துல இருந்தே பார்க்கலைங்க. அப்பப்ப ரீல்ஸ்,, புரொமோ வேணும்னா பார்த்திருப்பேன்''
Exclusive: திரும்ப ரெண்டு தடவை பிக்பாஸ் கூப்பிட்டாங்க ஆனா.. - பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி. பிக்பாஸ் சீசன் 7 ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர். 'சிறப்பாக விளையாடுகிறார்' என வெளியில் பரவலாகப் பேச்சு எழத் தொடங்கிய ஒரு நாளில் அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். காரணங்களாக 'அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்', 'இவர் இருந்தால் பெண் போட்டியாளர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது' என்பன போன்ற குற்றச் சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. பிரதீப் ஆண்டனி அதேநேரம் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் சரி, வெளியிலும் சரி, இவருக்கு ஆதரவான குரல்களும் எழுந்தன. சினிமாத் துறை சார்ந்த பிரபலங்கள் சிலரே இந்த விஷயத்தில் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த பிறகு சினிமா பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் கடந்தாண்டு இவருக்கு பூஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என அறிய அவரையே தொடர்பு கொண்டோம். எனக்கு இதுதான் கெட்ட வார்த்தை! ''சார் என் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டிருக்கேன், பிக் பாஸ், அது இதுன்னு ஏதாவது கேக்கத்தானே கூப்பிட்டீங்க' எனத் தயங்கியவரை கன்வின்ஸ் செய்து பேச வைத்தோம். ''பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிற வாய்ப்பு வந்தபோது அவ்வளவு சந்தோஷமா இருந்தது. அதுக்கு முன்னாடி அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்ட சிலர் ஷோ பத்தி அப்படி இப்படினு சொல்லியிருந்தாலும் அதைப் பெரிசா பொருட்படுத்தத் தோணலை. பிரதீப் 'எது ஒண்ணும் நம்ம கைக்குள்ளதானே இருக்கு. பார்த்துக்கலாம்'னு போனேன். அந்த வீட்டுல இருந்த வரை என் மனசுக்குத் தப்புனு தெரிஞ்ச எதையும் நான் அங்க செய்யலை. 'கெட்ட வார்த்தை பேசறான்'னு சொன்னாங்க. ஒரு சந்தர்ப்பத்துலயாவது கெட்ட வார்த்தை பேசாத ஒருத்தரைக் காட்டுங்க பார்க்கலாம். எல்லாருக்கும் ஒரே வாழ்க்கைச் சூழல் இருக்காது. சிலர் வளர்ற சூழல் அப்படி இருக்கும். என்னைப் பொறுத்தவரை 'நீ நாசமா போவ'னு யாரையாச்சும் சொன்னாதான் அது கெட்ட வார்த்தை. அந்த மாதிரியெல்லாம் நான் எப்பவும் யாரையும் பேசியதே இல்லை. அதுக்காக கெட்ட வார்த்தை பேசறதை நான் என்கரேஜ் செய்யலை. எல்லாருமே ஏதாவதொரு சூழல்ல கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தறவங்கதான். அதுவே ஒரு மெசேஜ்! 'இங்க இப்படியெல்லாம் பேசக் கூடாது'னு சொல்லி தண்டனை தந்திருக்கலாம். ஆனா வெளியில அனுப்பறதுக்கு இதையெல்லாம் காரணமா சொன்னதை நினைக்கிறப்பதான் சிரிப்பு வருது. பாத்ரூமை திறந்து வச்சுக்கிட்டே பயன்படுத்தறார்னு ஒரு விஷயத்தைச் சொன்னாங்க. நான் குளிக்கறப்ப பாத்ரூம்ல பாடிப் பழக்கப்பட்டவன். உள்ள ஒருத்தன் பாடிட்டிருக்காங்கிறதே அடுத்தவனுக்கு 'உள்ள ஆள் இருக்கு'ங்கிற மெசேஜ்தானே. பிரதீப், கவின் இதையெல்லாம் நான் சொல்லலாம்தான். ஆனா திடீர்னு 'நீங்க இருந்தா எங்களுக்குப் பாதுகாப்பில்லை'னு சில பெண்கள் சொல்றாங்கன்னு சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது. என்ன ரியாக்ட் செய்யறதுனு தெரியலை. தவிர, ஒருத்தன் மேல ஒரு புகார் வந்தா அவனையும் கூப்பிட்டு விளக்கம் கேட்டுதான் பிறகு முடிவெடுப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, எனக்கு என் தரப்பு பதிலைச் சொல்ல தேவையான அவகாசம் தரப்படலை. அதனால 'நடக்கறது நடக்கட்டும்'னு நடந்ததை ஏத்துகிட்டு வெளியில வந்துட்டேன்'' என்கிறார். ''நீங்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால் டைட்டில் வாங்கியிருக்க முடியுமென நினைத்தீர்களா? ''நிச்சயமா. எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. 'டைட்டில் வாங்கிடுவானோ'னு பீதியான சிலர் கூட்டுச் சேர்ந்து என் மீது ஏன் புகார் தந்திருக்கக்கூடாதுனு கூட பின்னாடி யோசிச்சேன். ஆனா இப்ப இதையெல்லாம் பேசி என்ன பிரயோஜனம்? எனக்கு இப்படியொரு புகாரின் பேரில் வெளியில அனுப்பியதுல ரொம்பவே வருத்தம்தான். ஆனா அதையெல்லாம் மறந்துட்டேன். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, என் மீது புகார் சொன்ன சில போட்டியாளர்கள் கூட நிகழ்ச்சி முடிந்த பிறகு என் கூட பேசினாங்க. இப்பக்கூட தொடர்புல இருக்காங்க. ஏன் அடுத்த ரெண்டு சீசன்ல வைல்டு கார்டு என்ட்ரி யில பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே கூப்பிட்டாங்களே, 'போதும்டா சாமி'ன்னு கையெடுத்து கும்பிட்டு அனுப்பிட்டேன்'' பிரதீப்- கமல் ''உங்க வீட்டில், நண்பர்கள் வட்டாரத்தில் என்ன சொன்னார்கள்? 'யாரும் எதுவும் சொல்லலை. அவங்களுக்கெல்லாம் என்னைப் பத்தித் தெரியும். ஒரு பொது தளத்துல பெண்கள் தொடர்பான புகாருக்கு ஆளாகி வெளியில வந்த பிறகுதான் எனக்கு கல்யாணமே நடந்துச்சுங்க. பிரதீப் சரி, இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க? 'கராத்தே பாபு' படத்துல வில்லனா நடிச்சிட்டு வர்றேன். சில புராஜெக்ட்டுகள்ல எழுத்தாளாரா ஒர்க் பண்றேன். டப்பிங் யூனியன்ல உறுப்பினரானது மூலமா டப்பிங் பேசறேன். கடவுள் ஆசிர்வாதத்துல ஏதோ போயிட்டிருக்கு'' வெளியில வந்த பிறகு பிக் பாஸ் பார்த்ததுண்டா? விஜய் சேதுபதி நடத்துகிற விதம் பிடிச்சிருக்கா? இந்த சீசன் பார்க்குறீங்களா? முந்தின சீசன் அப்பப்ப பார்த்தேன். விஜய் சேதுபதி அவரு ஸ்டைல்ல பண்றார். கமல் சார் பண்ணியது அவருடைய ஸ்டைல். அதனால ரெண்டையும் ஒப்பிடத் தேவையில்லை. இந்த சீசன் ஆரம்பத்துல இருந்தே பார்க்கலைங்க. அப்பப்ப ரீல்ஸ்,, புரொமோ வேணும்னா பார்த்திருப்பேன்''
பல்லவனின் அம்மாவை கண்டுபிடித்த சோழன், நிலா சொன்ன விஷயம் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நான் தெரியாமல் பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். காயத்ரியை அழைத்து கொண்டு வரவில்லை தானே என்று கேட்டார். அதற்கு நிலா, நாம் இருவரும் வெளியே போகலாம் வாருங்கள் என்று சொன்னார். பின் சேரன், நிலா சொன்னதால் தான் உன்னை அப்படி பேசினோம் என்றார். அதற்குப்பின் நிலா, சோழன் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, நான் பல்லவன் அம்மாவை பார்த்தேன். அவர்களைப் பற்றி விசாரியுங்கள் என்றார் […] The post பல்லவனின் அம்மாவை கண்டுபிடித்த சோழன், நிலா சொன்ன விஷயம் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
நான் ஜோதிடம் பார்க்க 1 Hr-க்கு 25,000 ரூபாய் வாங்குறது உண்மைதான் - 'வெண்ணிறாடை'மூர்த்தி Breaking
Rajini-ன் குணத்தை தெரிஞ்சுக்க இந்த ஒரு உதாரணம் போதும்!, Writer Kalaignanam | Vikatan Interview
29-வது வயசுல எனக்கு நடந்த ஸ்பெஷலான விஷயம் அது..! - கார்த்திக் சுப்புராஜ்
'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. youtube.com/watch?v=R8Jbk2doeaQ&feature=youtu.be இவ்விழாவில் பேசியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் ரத்னகுமார் இயக்கிய 'மேயாத மான்' திரைப்படம் எங்களுடைய 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் என்பதில் ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு வரைக்கும் ரொம்ப ஸ்பெஷலான படம் அது. அதுக்கு அப்புறம் இப்போ ரத்னகுமாரோட '29' படத்தை லோகாஷ் கனகராஜோட இணைந்து தயாரிக்கிறதுல ரொம்ப சந்தோஷம். இந்தப் படத்த தனுஷ் சார் கிட்ட சொன்னோம். அவர் கொஞ்சம் பிஸியாக இருந்ததால அது நடக்கல. தனுஷ் பண்ன வேண்டிய படத்த வேற யார வச்சு எடுக்குறதுனு யோசிச்சு இந்தப் படம் தள்ளி போய்கிட்டே இருந்துச்சு. 'ஜிகர்தண்டா 2' படத்துல விது செட்டானியாக பிரமாதமாக நடிச்சிருப்பார். அதபார்த்து விது மேல ஒரு நம்பிக்கை வந்துச்சு. அதனால இந்தப் படத்துல அவரையே நடிக்க வச்சோம். ரொம்ப நல்ல நடிச்சிருக்கார் படமும் ரொம்ப நல்ல வந்திருக்கு. 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி! இந்தப் படத்துல 29 வயசுல ஒருவர் படுகிற கஷ்டத்த, நடந்த நல்ல விஷயத்தப் பத்தி சொல்லுவாங்க. எனக்கு 29வது வயசு ரொம்ப ஸ்பெஷலானது. அப்போதான் 'பீட்சா' எடுத்தேன். முதல் படமே நல்ல வெற்றி. அதை என்னைக்கும் மறக்க முடியாது என்று பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்
29-வது வயசுல எனக்கு நடந்த ஸ்பெஷலான விஷயம் அது..! - கார்த்திக் சுப்புராஜ்
'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. youtube.com/watch?v=R8Jbk2doeaQ&feature=youtu.be இவ்விழாவில் பேசியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் ரத்னகுமார் இயக்கிய 'மேயாத மான்' திரைப்படம் எங்களுடைய 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் என்பதில் ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு வரைக்கும் ரொம்ப ஸ்பெஷலான படம் அது. அதுக்கு அப்புறம் இப்போ ரத்னகுமாரோட '29' படத்தை லோகாஷ் கனகராஜோட இணைந்து தயாரிக்கிறதுல ரொம்ப சந்தோஷம். இந்தப் படத்த தனுஷ் சார் கிட்ட சொன்னோம். அவர் கொஞ்சம் பிஸியாக இருந்ததால அது நடக்கல. தனுஷ் பண்ன வேண்டிய படத்த வேற யார வச்சு எடுக்குறதுனு யோசிச்சு இந்தப் படம் தள்ளி போய்கிட்டே இருந்துச்சு. 'ஜிகர்தண்டா 2' படத்துல விது செட்டானியாக பிரமாதமாக நடிச்சிருப்பார். அதபார்த்து விது மேல ஒரு நம்பிக்கை வந்துச்சு. அதனால இந்தப் படத்துல அவரையே நடிக்க வச்சோம். ரொம்ப நல்ல நடிச்சிருக்கார் படமும் ரொம்ப நல்ல வந்திருக்கு. 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி! இந்தப் படத்துல 29 வயசுல ஒருவர் படுகிற கஷ்டத்த, நடந்த நல்ல விஷயத்தப் பத்தி சொல்லுவாங்க. எனக்கு 29வது வயசு ரொம்ப ஸ்பெஷலானது. அப்போதான் 'பீட்சா' எடுத்தேன். முதல் படமே நல்ல வெற்றி. அதை என்னைக்கும் மறக்க முடியாது என்று பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்
என்னைப் பார்த்து 'மதன் கௌரியா?'என்று கேட்கிறார்கள் - இயக்குநர் ரத்ன குமார் கலகல பேச்சு!
'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. youtube.com/watch?v=R8Jbk2doeaQ&feature=youtu.be இதில் பேசியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், இப்போ நான் ரொம்ப பாசிட்டிவாக இருக்கிறேன் என எல்லாரும் சொல்றாங்க. அதுக்கு காரணம் வாழ்க்கையில நிறைய அடிவாங்குனதுதான். சினிமாவில் இயக்குநராக வேண்டுமென தனியார் ஐடி நிறுவன வேலையை விட்டு வந்தேன். என்னை இயக்குநராக பார்க்க 12 வருடம் ஆனது. எனக்கு 29 வயது இருக்கும் போதுதான் வீட்டிலும் கல்யாணம் செய்ய சொல்லி அழுத்தம் இருந்தது. முப்பது வயதை தொட்டுவிட்டால் ஜாதகத்தில் நிராகரித்து விடுவார்கள், வேலையிலும் நிராகரித்து விடுவார்கள், படங்களிலும் நிராகரித்துவிடுவார்கள். ஆனால் என்னுடைய 29 வது வயதில் நான் 'மது' என்னும் தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். பின்பு வேறொரு கதை எழுதி, 45 தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். அவர்கள் கட்டிப்பிடித்து பாராட்டுவார்கள். ஆனால் 'முதல் படமாக ஏன் இதை செய்ய வேண்டும். நீங்கள் இயக்கிய மது குறும்படத்தையே பண்ணலாமே' என சொல்வார்கள். 46வது நபராக கார்த்திக் சுப்புராஜும் அதைத்தான் சொன்னார். அவர்தான் என்னுடைய 'மது' குறும்படத்தை இன்னும் ஆறு குறும்படத்தோடு தியேட்டரில் ஸ்கிரீன் செய்தார். இயக்குநர் ரத்ன குமார் 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி! நிறைய பேர் என்னை பார்ப்பார்கள் கைகுலுக்கி 'நீங்கள் விஜய் அண்ணா ரசிகரா? நீங்கள் லோகேஷ் கனகராஜ் நண்பரா? இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் போட்டாக் கூட யோவ் மதன் கௌரியா?' என்று கேட்பார்கள். அப்போ எனக்காக யார் வந்து என்னை பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பேன். அதை மனதில் வைத்து இந்த '29' படத்தை எடுத்திருக்கிறேன். எனக்கான அடையாளத்தை இப்படத்தின் மூலம் பெறுவேன் என்று பேசியிருக்கிறார் ரத்னகுமார்.
புதுவித மொழியில் பேசும் தனம்-தமிழ்செல்வி, குழம்பி போகும் சேது –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தான் கண்ட கனவை தனத்திடம் சொல்லி சந்தோஷப்பட்டார். தனம், சீக்கிரத்திலேயே நீங்களும் அக்காவும் சேர்வது வாழ்வீர்கள் என்று சொன்னார். அதற்குப்பின் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைப்பதை பற்றி பேசி இருந்தார். உடனே சேதுவை அழைத்த ராஜாங்கம், எனக்கு தமிழ்செல்வியை விவாகரத்து செய்யணுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. யோசித்து முடிவெடு என்றார். சேது, தமிழ்ச்செல்வியை ரொம்பவே காயப்படுத்தி விட்டேன். […] The post புதுவித மொழியில் பேசும் தனம்-தமிழ்செல்வி, குழம்பி போகும் சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
புதிய தென்னிந்திய வெப் சீரிஸ்களை அறிவித்த ஜியோ ஹாட்ஸ்டார் | Photo Album
'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி!
முதலாளி ஆக நினைக்கும் பாண்டியன், கேலி, கிண்டல் செய்யும் வானதி –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நான் தெரியாமல் பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். காயத்ரியை அழைத்து கொண்டு வரவில்லை தானே என்று கேட்டார். அதற்கு நிலா, நாம் இருவரும் வெளியே போகலாம் வாருங்கள் என்று சொன்னார். பின் சேரன், நிலா சொன்னதால் தான் உன்னை அப்படி பேசினோம் என்றார். அதற்குப்பின் நிலா, சோழன் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, நான் பல்லவன் அம்மாவை பார்த்தேன். அவர்களைப் பற்றி விசாரியுங்கள் என்றார் […] The post முதலாளி ஆக நினைக்கும் பாண்டியன், கேலி, கிண்டல் செய்யும் வானதி – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
போட்டோக்களை டெலிட் செய்த நிவேதா பெத்துராஜ், இனி திருமணம் நடக்காதா?
தமிழ்சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக நிவேதா பெத்துராஜ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் சிறு வயதாக இருக்கும் போதே துபாய் சென்று அங்கேயே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இவர் மாடலிங்கில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு இவர் மீடியாவிற்குள் நுழைந்தார். பின் இவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நாள் கூத்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் […] The post போட்டோக்களை டெலிட் செய்த நிவேதா பெத்துராஜ், இனி திருமணம் நடக்காதா? appeared first on Tamil Behind Talkies .
கிரிஷை வைத்து விஜயா போடும் நாடகம், மீனா சொன்ன வார்த்தையால் ஆடிப்போன ரோகினி –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, நல்ல ஐடியா தந்தீர்கள். நான் எனக்கே பேய் பிடித்தது போல நடித்து மனோஜுடன் கிரிஸை பேச வைக்கிறேன் என்றார். அதற்கு மீனா, உண்மையை ஒழுங்கு மரியாதையாக வீட்டில் சொல் என்றெல்லாம் புலம்பி விட்டு அங்கிருந்து சென்றார். இன்னொரு பக்கம் நீத்து செய்த வேலையால் சுருதி- ரவிக்கிடையே வாக்குவாதம் நடந்தது. அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்து, கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது என்று […] The post கிரிஷை வைத்து விஜயா போடும் நாடகம், மீனா சொன்ன வார்த்தையால் ஆடிப்போன ரோகினி – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
29: தனுஷ் சாருக்குத்தான் இந்தக் கதையைச் சொல்லியிருந்தோம், ஆனா அவரு.!- கார்த்திக் சுப்புராஜ்
'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார். விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். '29' இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (டிச.10) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்திக் சுப்புராஜ், 'மேயாத மான்' எங்களுடைய முதல் தயாரிப்பு படம். ஸ்டோன் பெஞ்சில் 17 படம் எடுத்துவிட்டோம். ஆனாலும் 'மேயாத மான்' எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். 'மேயாத மான்', 'ஆடை' படம் எடுத்த பிறகு '29' படத்தின் கதையை எங்களிடம் ரத்னகுமார் சொன்னார். தனுஷ் சாருக்கு இந்த கதையை நாங்கள் சொல்லியிருந்தோம். ஆனால் அவர் நான் இப்போது ஆக்ஷன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். கரியரின் ஆரம்பத்தில் நான் நடிக்கின்ற மாதிரியான கதையாக இது இருக்கிறது. அதனால் இளம் நடிகர்களை வைத்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அதன் பிறகு ரத்னகுமாரும் வேறு படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார். கதைக்கு சரியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக சில வருடங்களை எடுத்துகொண்டோம். கார்த்திக் சுப்புராஜ் பிறகு விதுவை நடிக்க வைக்கலாம் என்று ரத்னகுமார் சொன்னார். 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'ரெட்ரோ' படங்களுக்கு முன்னால் விதுவை நடிக்க வைக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நான் ஓகே சொல்லியிருக்க மாட்டேன். அந்தப் படங்களில் விதுவின் நடிப்பைப் பார்த்ததால் ஓகே சொல்லிவிட்டேன். அதேபோல அயோத்தி படத்தில் ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பைப் பார்த்து ஓகே சொல்லிவிட்டேன். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜூடன் இணைந்து தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று பேசியிருக்கிறார்.
நிலா கேட்ட கேள்வியால் கொந்தளித்த நடேசன், வலியில் துடிக்கும் சேரன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், சேரன் இருவருமே சோழனை வெளியே விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பின் நிலா வந்தது அறிந்து சோழன் பதறி அடித்துக் கொண்டு காய்த்ரி வந்து இருக்கிறாளா? என்றார். ஆனால், காயத்ரி வரவில்லை. இருந்தாலுமே பயத்தில் சோழன் உள்ளே ரூமிற்குள் சென்று விட்டார். பின் சோழன் புலம்பியது எல்லாம் வீடியோவாக எடுத்து வைத்திருந்ததை பாண்டியன் நிலாவிடம் காண்பித்தார். அதை பார்த்து நிலாவிற்கு சிரித்தார். அதற்கு பின் நிலா, சோழனிடம் பேசுவதற்கு […] The post நிலா கேட்ட கேள்வியால் கொந்தளித்த நடேசன், வலியில் துடிக்கும் சேரன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: என்னை மன்னிச்சிடு- ஆதிரையிடம் மன்னிப்பு கேட்ட FJ
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்கிறார். மேலும் இந்த வாரம் 'வழக்காடு மன்றம்' டாஸ்க்கை ஹவுஸ் மேட்ஸ்க்கு பிக் பாஸ் கொடுத்திருக்கிறார். BB Tamil 9 இந்த டாஸ்க்கில் நேற்று (டிச.9) ஆதிரை மீது வழக்கு தொடுத்திருந்த வினோத் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், பார்வதி, FJ மீது வழக்கு தொடுத்திருந்தார். இதனால் FJக்கும், பார்வதிக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. நீ லவ் பண்ணிட்டு தான் இருக்க பார்வதி. அதுவும் மைக்கை மறைச்சு வச்சு லவ் பண்ணிட்டு இருக்க என FJ பார்வதியைப் பார்த்து சொன்னார். BB Tamil 9 இந்த டாஸ்க்கில FJ தோத்துட்டதால என்கிட்ட இருந்து வார்த்தையை வாங்க பார்க்குறாரு. நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன். அதை கேட்க FJ யாரு என சபரியிடம் பார்வதி சொல்லிக்கொண்டு இருந்தார். தற்போது மூன்றாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. இதில் ஆதிரை, FJ மீது வழக்கு தொடுத்திருக்கிறார். BB Tamil 9 என் கூட நெருக்கமா பழகினதுனால அவங்க கேம்மை இழக்குறாங்களோன்னு தோணுச்சு என FJ சொல்ல என்னை வச்சு ஒரு விக்டிம் கார்டு பிளே பண்ணாரோன்னு தோணுது. எனக்கு இதுக்கு ஒரு சொல்யூஷன் வேணும் என்று ஆதிரை கேட்கிறார். அதற்கு FJ என்னை மன்னிச்சிடு ஆதிரை என்று மன்னிப்பு கேட்கிறார்.
பாண்டியன் சொன்ன வார்த்தையால் கதிகலங்கிய தங்கமயில், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜியிடம், தங்கமயில் தன் பக்கம் இருக்கும் ஞாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார். அப்போது கோமதி, உன்னை மாதிரி ஒரு மோசக்காரியை நான் பார்த்ததே இல்லை. என் பிள்ளைகளுக்கு என்று ஒரு பிரச்சனை என்றால் நான் சும்மா விடமாட்டேன். நீ இவ்வளவு கேடுகெட்டவள்ளா? என்று தங்கமயிலை ரொம்ப மோசமாக பேசி திட்டி விட்டார். தங்கமயில் மேதனையில் இருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே தூங்கி விட்டார்கள். பாண்டியன், சரவணன் […] The post பாண்டியன் சொன்ன வார்த்தையால் கதிகலங்கிய தங்கமயில், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
`உங்க தம்பி கமல்சார்கூட இருக்காரே பரவால்லயா'ன்னு ஆனந்த் கேட்டார் - தவெகவில் சேர்ந்த நடிகர் ஜீவா ரவி
சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் புதுப்புது என்ட்ரிகள், இடப் பெயர்வுகள் என நாள்தோறும் சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை. அதிமுகவிலிருந்த கே ஏ செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அடுத்த சில தினங்களில் திமுகவில் இருந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைந்தார். சினிமா ஏரியாவில் இருந்தும் பலர் தங்கள் அபிமான கட்சிகளில் சேர்வது தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் நடிகர் ஜீவா ரவி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். கட்சியில் சேர்ந்துதுமே கே ஏ செங்கோட்டையனையும் சந்தித்திருக்கும் ரவியிடம் பேசினோம். ''பெரிய பின்னணி கொண்ட குடும்பம் எங்களோடது. சில வருடங்களாகவே ஏதாவது சர்வீஸ் பண்ணலாம்கிற ஒரு எண்ணம் மனசுக்குள் ஓடிக்கிட்டே இருந்தது. இருக்கிற ரெண்டு பெரிய கட்சியிலயும் சேர விருப்பமில்லை. vijay விஜய் சார்கூட 'கத்தி' உள்ளிட்ட சில படங்கள்ல நடிச்சிருக்கேன். என்னுடைய மகன் கல்யாணத்தை அவர்தான் தலமைமை தாங்கி நடத்தி வச்சார். அவர் அரசியலுக்கு வரப்போறார்ங்கிற பேச்சு வந்ததிலிருந்தே அவருடைய அரசியலை கவனிச்சிட்டே வந்தேன். அவருடைய அரசியல் என்ட்ரியை தமிழகமே வரவேற்கிறதுக்கான சாட்சிதான் கூடுகிற கூட்டம், சமீபகாலத்துல எந்தவொரு அரசியல் தலைவருக்கும் இப்படியொரு கூட்டம் கூடி நான் பார்த்ததே இல்லை. அவரைப் பார்க்க இளைஞர்கள், பெண்கள்னு எல்லாரும் திரண்டு வர்றாங்க. இந்தக் கூட்டமெல்லாம் சும்மா வேடிக்கை பார்க்க மட்டுமே வருதுன்னு யாரும் குறைச்சு எடைபோடக்கூடாது. தமிழக அரசியலையும் சினிமாவையம் பிரிக்கமுடியாது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதான்னு இங்க சாதிச்சவங்க பட்டியலை எடுத்துப்பார்த்தாலே சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் இடைப்பட்ட தொடர்பை தெரிஞ்சுக்கலாம். அதே வழியிலதான் விஜய்சாரும் வர்றார். அதனாலேயே அவருடைய கட்சியில சேர்ந்து செயல்படலாம்னு தோணுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி வேறொரு வேலையா தவெக பொதுச் செயலாளர் ஆனந்தைச் சந்திச்சேன். அப்பவே அவர் நீங்க நம்ம கட்சியில சேர்ந்து செயல்படலாமேன்னு சொன்னார். எனக்கும் சரின்னு படவே இப்ப கட்சியில சேர்ந்தாச்சு. ஆனா விஜய் சாரை இதுவரை சந்திக்கல. சீக்கிரமே சந்திக்க இருக்கேன்'' என்றவரிடம், செங்கோட்டையைனைச் சந்தித்தது குறித்துக் கேட்டோம். ''எங்களுடைய சொந்த ஊரும் கோபிசெட்டிபாளையம்தான். செங்கோட்டையன் அண்ணனை பல வருஷமா எங்க குடும்பத்துக்குத் தெரியும். அவரும் விஜய் சார் கூட பயணிக்கத் தொடங்கியிருக்கறதால மரியாதை நிமித்தமா அவரைச் சந்திச்சேன்' என்றார். செங்கோட்டையன் 'உங்க தம்பி மகேந்திரன் கமலுடன் இருக்கிறாரே' என்ற கேள்வியையும் கேட்டோம். ''தவெக பொதுச் செயலாளருமே எங்கிட்ட இதே கேள்வியைக் கேட்டார். 'கமல் சார்கூட தம்பி இருக்கறதால வீட்டுல ஏதாவது பிரச்னை வராதா'ன்னார். ''எங்க குடும்பத்தைப் பொறுத்தவரை எல்லாருக்கும் சுதந்திரம் இருக்கு. அவரவர் விருப்பு வெறுப்புகளை பரஸ்பரம் மதிக்கிறோம். அதேநேரம் அவை குடும்பத்தின் உள்ளே உறவைக் கெடுக்காதபடியும் பார்த்துக்கிடுறோம். எனக்குத் தெரிய மகேந்திரன் கமல் சாருடைய சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத்தான் கவனிக்கிறார். அரசியல் செயல்பாடுகள்ல இன்வால்வ் ஆக மாட்டார்னு நினைக்கிறேன். அதனால வீட்டுல சந்திக்கிறபோது, அவங்கவங்க கொள்கை, அரசியலையெல்லாம் பேசறதில்லை. அதனால என் விருப்பப்படி நான் விஜய் சாரை ஆதரிக்கிறேன். இதனால வீட்டுல அண்ணன் தம்பி இடையே பிரச்னையெல்லாம் வராதுங்க' என்கிறார்.
`உங்க தம்பி கமல்சார்கூட இருக்காரே பரவால்லயா'ன்னு ஆனந்த் கேட்டார் - தவெகவில் சேர்ந்த நடிகர் ஜீவா ரவி
சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் புதுப்புது என்ட்ரிகள், இடப் பெயர்வுகள் என நாள்தோறும் சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை. அதிமுகவிலிருந்த கே ஏ செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அடுத்த சில தினங்களில் திமுகவில் இருந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைந்தார். சினிமா ஏரியாவில் இருந்தும் பலர் தங்கள் அபிமான கட்சிகளில் சேர்வது தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் நடிகர் ஜீவா ரவி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். கட்சியில் சேர்ந்துதுமே கே ஏ செங்கோட்டையனையும் சந்தித்திருக்கும் ரவியிடம் பேசினோம். ''பெரிய பின்னணி கொண்ட குடும்பம் எங்களோடது. சில வருடங்களாகவே ஏதாவது சர்வீஸ் பண்ணலாம்கிற ஒரு எண்ணம் மனசுக்குள் ஓடிக்கிட்டே இருந்தது. இருக்கிற ரெண்டு பெரிய கட்சியிலயும் சேர விருப்பமில்லை. vijay விஜய் சார்கூட 'கத்தி' உள்ளிட்ட சில படங்கள்ல நடிச்சிருக்கேன். என்னுடைய மகன் கல்யாணத்தை அவர்தான் தலமைமை தாங்கி நடத்தி வச்சார். அவர் அரசியலுக்கு வரப்போறார்ங்கிற பேச்சு வந்ததிலிருந்தே அவருடைய அரசியலை கவனிச்சிட்டே வந்தேன். அவருடைய அரசியல் என்ட்ரியை தமிழகமே வரவேற்கிறதுக்கான சாட்சிதான் கூடுகிற கூட்டம், சமீபகாலத்துல எந்தவொரு அரசியல் தலைவருக்கும் இப்படியொரு கூட்டம் கூடி நான் பார்த்ததே இல்லை. அவரைப் பார்க்க இளைஞர்கள், பெண்கள்னு எல்லாரும் திரண்டு வர்றாங்க. இந்தக் கூட்டமெல்லாம் சும்மா வேடிக்கை பார்க்க மட்டுமே வருதுன்னு யாரும் குறைச்சு எடைபோடக்கூடாது. தமிழக அரசியலையும் சினிமாவையம் பிரிக்கமுடியாது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதான்னு இங்க சாதிச்சவங்க பட்டியலை எடுத்துப்பார்த்தாலே சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் இடைப்பட்ட தொடர்பை தெரிஞ்சுக்கலாம். அதே வழியிலதான் விஜய்சாரும் வர்றார். அதனாலேயே அவருடைய கட்சியில சேர்ந்து செயல்படலாம்னு தோணுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி வேறொரு வேலையா தவெக பொதுச் செயலாளர் ஆனந்தைச் சந்திச்சேன். அப்பவே அவர் நீங்க நம்ம கட்சியில சேர்ந்து செயல்படலாமேன்னு சொன்னார். எனக்கும் சரின்னு படவே இப்ப கட்சியில சேர்ந்தாச்சு. ஆனா விஜய் சாரை இதுவரை சந்திக்கல. சீக்கிரமே சந்திக்க இருக்கேன்'' என்றவரிடம், செங்கோட்டையைனைச் சந்தித்தது குறித்துக் கேட்டோம். ''எங்களுடைய சொந்த ஊரும் கோபிசெட்டிபாளையம்தான். செங்கோட்டையன் அண்ணனை பல வருஷமா எங்க குடும்பத்துக்குத் தெரியும். அவரும் விஜய் சார் கூட பயணிக்கத் தொடங்கியிருக்கறதால மரியாதை நிமித்தமா அவரைச் சந்திச்சேன்' என்றார். செங்கோட்டையன் 'உங்க தம்பி மகேந்திரன் கமலுடன் இருக்கிறாரே' என்ற கேள்வியையும் கேட்டோம். ''தவெக பொதுச் செயலாளருமே எங்கிட்ட இதே கேள்வியைக் கேட்டார். 'கமல் சார்கூட தம்பி இருக்கறதால வீட்டுல ஏதாவது பிரச்னை வராதா'ன்னார். ''எங்க குடும்பத்தைப் பொறுத்தவரை எல்லாருக்கும் சுதந்திரம் இருக்கு. அவரவர் விருப்பு வெறுப்புகளை பரஸ்பரம் மதிக்கிறோம். அதேநேரம் அவை குடும்பத்தின் உள்ளே உறவைக் கெடுக்காதபடியும் பார்த்துக்கிடுறோம். எனக்குத் தெரிய மகேந்திரன் கமல் சாருடைய சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத்தான் கவனிக்கிறார். அரசியல் செயல்பாடுகள்ல இன்வால்வ் ஆக மாட்டார்னு நினைக்கிறேன். அதனால வீட்டுல சந்திக்கிறபோது, அவங்கவங்க கொள்கை, அரசியலையெல்லாம் பேசறதில்லை. அதனால என் விருப்பப்படி நான் விஜய் சாரை ஆதரிக்கிறேன். இதனால வீட்டுல அண்ணன் தம்பி இடையே பிரச்னையெல்லாம் வராதுங்க' என்கிறார்.
வேலையை விட்டு தூக்கிய ராஜாங்கம், தமிழ்செல்வி சொன்ன வார்த்தை –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தமிழ் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது சேதுவின் கனவில் தமிழ் டாக்டர் ஆகிவிட்டார். சேது ராஜாங்கம் இடத்திற்கு வந்து விட்டார். பின் தன் மகன் வளர்ந்து பெரியாளாகியிருந்தார். மகள் கல்லூரி படித்தார். பின் சேது- தமிழ் இருவரும் சந்தோசமாக பாட்டு பாடி இருந்தார்கள். இதையெல்லாம் சேது கனவில் பாடுவது போல் நிஜத்திலும் பாடி சந்தோசப்பட்டார். இதை பார்த்த தனம், சேதுவை எழுப்பினார். சேது, தான் கண்ட கனவை […] The post வேலையை விட்டு தூக்கிய ராஜாங்கம், தமிழ்செல்வி சொன்ன வார்த்தை – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன்; அதை கேட்க FJ யாரு?- காட்டமான பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்கிறார். மேலும் இந்த வாரம் 'வழக்காடு மன்றம்' டாஸ்க்கை ஹவுஸ் மேட்ஸ்க்கு பிக் பாஸ் கொடுத்திருக்கிறார். BB Tamil 9 இந்த டாஸ்க்கில் நேற்று (டிச.9) ஆதிரை மீது வழக்கு தொடுத்திருந்த வினோத் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில், பார்வதி, FJ மீது வழக்குத் தொடுத்திருக்கிறார். இதனால் FJக்கும், பார்வதிக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. நீ லவ் பண்ணிட்டு தான் இருக்க பார்வதி. அதுவும் மைக்கை மறைச்சு வச்சு லவ் பண்ணிட்டு இருக்க என FJ பார்வதியைப் பார்த்து சொல்கிறார். BB Tamil 9 இந்த டாஸ்க்கில FJ தோத்திட்டதுனால என்கிட்ட இருந்து வார்த்தைய வாங்க பார்க்குறாரு. நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன். அதை கேட்க FJ யாரு என சபரியிடம் பார்வதி சொல்லிக்கொண்டு இருக்கிறார். BB Tamil 9: என்னையும், FJ-வையும் ஏன் சேர்த்து வச்சு பேசுறீங்க- வினோத்திடம் சண்டைப்போடும் ஆதிரை
BB Tamil 9 Day 65: கம்மு - பாரு ரொமான்ஸ்; ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை; ரணகளமான கோர்ட் டாஸ்க்
திவாகர் வெளியேற்றத்துக்கு வினோத் காரணமா? கோர்ட்டில் வந்த முதல் கேஸ் இது. வினோத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. என்றாலும் திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத்தும் ஒருவகையில் காரணமாக இருந்தார். எத்தனை முறை எச்சரித்தும் மைக்கை ஆஃப் செய்து விட்டு ரகசியம் பேசும் பாருவையும் கம்முவையும் வெளியே அனுப்பி சுதந்திரமாக இருக்க வடலாம். அடித்துக்கொண்டு ஒரே நாளில் பிரிவார்கள். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 64 இரவு. பாருவும் கம்முவும் மைக்கை தள்ளி வைத்து தங்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ரொம்பவும் கிளுகிளுப்பாக ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். கரடி போல பிக் பாஸ் குறுக்கே வந்து எச்சரித்தார். புதிய வீட்டுத் தலயான அமித் ஆக்டிவ்வாக இருந்தார். அரோ தூங்காமல் இருக்க கதை சொல்லப்போகிறாராம். ரயிலில் சமோசா விற்பவரைப்போல ‘பாட்டரி.. பாட்டரி’ என்று சொல்லி திவ்யாவை சிரிக்க வைத்தார். ‘சிறந்த வீட்டுத் தல’ என்கிற பெயரை இவராவது பெறுவாரா? பாரு பாத்ரூமை சரியாக சுத்தம் செய்யவில்லை என்கிற புகார் எழுந்தது. வியானா இதைப் பற்றி விசாரிக்கும்போது மழுப்பலாக பதிலளித்தார் பாரு. சமையலும் தெரியாது. சுத்தமும் தெரியாது. ரொமான்ஸூம் வம்பும் மட்டும் தெரியும். இப்படியொரு போட்டியாளர். “உனக்கு பெண் ரசிகைகள் அதிகமாமே.. வெளியே போனா லைன்ல நிப்பாங்க” என்று கம்முவை ஜாலியாக வம்பிழுத்துக்கொண்டார் ரம்யா. கம்முவின் அலப்பறைகளைக் கண்டிக்காமல் விசேவும் இப்போதெல்லாம் ஏற்றிவிடுவதால் தன்னை ரொமான்டிக் ஹீரோவாகவே கம்மு நினைத்துக்கொள்கிறார். ‘ஆமாம்.. வெளியேபோய் நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணனும்’ என்று கம்மு சொல்ல “அப்ப பாருவை ஏமாத்திடுவியா?” என்று ரம்யா சிரித்துக்கொண்டே கேட்க “அவதான் என்னை ஏமாத்திடுவா” என்றார் கம்மு. ஆக இருவருக்குமே இது பிக் பாஸ் கன்டென்ட் காதல் என்கிற திட்டத்துடன்தான் பழகி வருகிறார்கள் என்பது வெளிப்படை. கம்மு, எஃப்ஜே போன்றவர்கள் எல்லாம் ரெண்டு மூணு ரொமான்ஸ் செய்து அலப்பறை செய்து கொண்டிருக்க, சபரியோ வெங்காயத்துடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார். பாவம். இதில் அலைபாயுதே மாதவன் வசனம் வேறு. கம்மு - பாரு ரொமான்ஸ் காரணமாக ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை பாருவும் கம்முவும் மீண்டும் மைக்கை தளர்த்திவிட்டு ரொமான்ஸ் ரகசியம் பேச பிக் பாஸிற்கு சரியான கோபம் வந்திருக்கும். சற்று நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு சாப்பிடும் நேரத்தில் ஓர் அறிவிப்பு செய்தார். “தொடர்ந்து எச்சரிக்கை தரப்பட்டும் பாரு, கம்ருதீன் மைக்கை கழற்றிவைத்துப் பேசுவதால் வீட்டிலுள்ள எல்லோருக்கும் தண்டனை தரப்படும். அதன்படி பால், டீ, முட்டை, சீஸ் என்று அனைத்துப் பொருட்களும் அகற்றப்படும்’ என்றார். சாப்பிடுவதற்காக தட்டில் வைக்கப்பட்டிருந்த முட்டையைக்கூட தூக்கியது டூ மச். பாரு இந்தியில் ரகசியம் பேசியிருப்பார் போலிருக்கிறது. எனவே அந்த மொழியிலேயே பிக் பாஸ் விசாரித்தது சுவாரசியமான குறும்பு. பாருவாவது ‘ஸாரி பிக் பாஸ்.. ஸாரி மக்களே’ என்று பாவனையாகவாவது மன்னிப்புக்கேட்டார். ஆனால் கம்முவோ ‘ஸ்லோவாத்தான் பேசினோம்’ என்று சமாளிக்க அதையும் நக்கலடித்தார் பிக் பாஸ். தவறு செய்தவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வீட்டுக்கு தண்டனை கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் கில்ட்டியாக ஃபீல் செய்வார்கள் என்பது பிக் பாஸின் கணக்காக இருக்கலாம். (பாருவிடம் அந்தப் பிரச்னையெல்லாம் இல்லை!) ‘தவறு செய்யாத எங்களுக்கு ஏன் தண்டனை?” என்று மற்றவர்களுக்கு இவர்கள் இருவரின் மீது கோபம் வரலாம் என்பதும் பிக் பாஸின் பிளான். “இப்ப வைங்க நாமிஷேனை. யாருன்னு காட்டறோம்” என்று எஃப்ஜே சொன்னது நல்ல கமென்ட். “அப்படி பார்க்காதீர்கள் குழந்தைகளா..’ என்று சமாளித்துக் கொண்டிருந்தார் பாரு. “பாருவிற்கும் கம்முவிற்கும் பெரிய அப்ளாஸ் கொடுங்க. நீங்க மன்னிப்பு கேட்கத் தேவையில்ல. செயல்ல காட்டுங்க” என்று சர்காஸமாக பாராட்டினார் விக்ரம். ரணகளமாக ஆரம்பித்த கோர்ட் டாஸ்க் அடுத்ததாக வீக்லி டாஸ்க். இந்த வாரம் ‘வழக்காடு மன்றம்’. ஒருவர் மூன்று வழக்குகள் தொடுக்கலாம். தகுதியான வழக்கு நீதிமன்றத்திற்கு வரும். முதல் வழக்கை ஆதிரைமீது போட்டார் வினோத். ‘திவாகர் வெளியேற, தான் காரணம் என்று ஆதிரை சொல்வது தவறு’ என்பது வழக்கின் உள்ளடக்கம். வினோத்திற்கு விக்ரமும் ஆதிரைக்கு அரோவும் வழக்கறிஞர். போலவே நீதிபதிகள் அமித் மற்றும் திவ்யா. வினோத் வழக்கில் திவ்யாவை நீதிபதியாக ஆதிரை தோ்வு செய்தது நல்ல செக் பாயின்ட். வினோத்திற்கும் திவ்யாவிற்கும் ஏழாம் பொருத்தம். வினோத்தின் வக்கீலான விக்ரம் (வித்யாபதி என்று என்னை அழையுங்கள்) ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போலவே நீதிமன்றத்தில் நடந்து கொண்டது பாராட்டத்தக்கது. ஆதிரையின் வக்கீல் அரோவோ ‘வெச்சு செஞ்சாங்க’ என்று கொச்சையாகப் பேசிவிட்டு சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தார். “மக்கள் பார்த்துட்டு இருப்பாங்க. பார்த்து ஆடு” என்று வினோத்திற்கு அட்வைஸ் தந்தார் கம்மு. (இந்த உபதேசத்தை யாரு சொல்றது பாருங்க!) வழக்கு எண்.1: வினோத் Vs ஆதிரை - திவாகர் வெளியேற்றத்திற்கு வினோத் காரணமா? “வீக்கெண்ட்ல விசே என்ன பேசினாரு. கலை போனதுக்கு அவரேதான் காரணம். அதுபோல திவாகர் போனதுக்கு அவரேதான் காரணமே ஒழிய, எனது கட்சிக்காரர் வினோத் காரணமில்லை” என்று ஓப்பனிங் ஆர்க்யூமென்ட்டை வைத்தார் விக்ரம். “வினோத்திற்கு தாழ்வு மனப்பான்மை. வீட்டிலுள்ள நட்புக்களை வைத்து தப்பிக்க நினைக்கிறார்” என்று பலவீனமாக எதிர் வாதம் செய்தார் அரோ. சாட்சியாக வந்த கனி “தம்பி போன்ற எஃப்ஜேவையும் என்னையும் வைத்து திவாகர் தவறாக பேசினார். இது போன்ற பேச்சுக்கள்தான் அவரது எவிக்ஷனுக்குக் காரணம்” என்று சொல்லியது சரியான பாயின்ட். ஆதிரைக்கு சாட்சியாக வந்த வியானா “தனது நண்பர்களுடன் இணைந்து திவாகரை எப்போதும் கலாய்த்தார் வினோத்” என்று பலவீனமாக சாட்சி சொன்னார். ராஜா டாஸ்க்கின் போது திவாகர் சொன்ன கொச்சையான வசவும் சாட்சியாக காட்டப்பட்டது. “ஆனால் அப்படி பேசியதற்கு யார் காரணம்... வினோத்தான் இந்தச் சண்டையை ஆரம்பித்து வைத்தார்” என்று திறமையாகப் பேசினார் அரோ. ஆதிரைக்கு சாட்சி சொல்ல வந்த கம்ரூதீனும் சொதப்பி “நானும் திவாகரை கலாய்ச்சிருக்கேன்” என்று பல்டி அடித்தார். பிக் பாஸ் வீட்டில் பொடுகுத் தொல்லை ஓவர்போல. சான்ட்ரா எப்போதும் தலையைச் சொறிகிறார். இப்போது நீதிபதி திவ்யாவும் தலையைச் சொறிந்தார். (ஒருவேளை வழக்கு வாதம் குழப்பிவிட்டதோ?!)” ‘வெளியே போங்க - பாருவைக் கண்டித்த நீதிபதிகள் வினோத்திற்கு சாதகமாக வழக்கு சென்று கொண்டிருந்ததால் கடுப்பான பாரு குறுக்கே பேச “வெளிய போங்க” என்று நீதிபதிகளால் கண்டிக்கப்பட்டார். தனது வழக்கமான முக சேஷ்டைகளை செய்தார் பாரு. இதுபோன்ற எக்ஸ்பிரஷன்களை ஒரு வீடியோவாக தொகுத்தால் நல்ல காமெடியாக இருக்கும். ‘திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத் காரணமில்லை” என்று அமித் தெள்ளத் தெளிவாக தீர்ப்பளிக்க, திவ்யாவோ “வினோத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது” என்று குழப்பமாகத் தீர்ப்பளித்தார். அதாவது திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத் ஒரு காரணமாக இருந்தார் என்பதைச் சொல்லமுடியாமல் ஒரு மாதிரி குன்சாக சொன்னார்போல. இரு நீதிபதிகள் இடையே மாறுபட்ட தீர்ப்பு வந்ததால், மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார் பிக் பாஸ். அதன்படி வினோத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு வினோத் கெத்தாக நின்றதால் ‘என்ன பாடி லேங்வேஜ் இது?’ என்று எதிர் அணியினர் ஆட்சேபித்தார்கள். வயசான நீதிபதி போலவே அமித் நடந்துசென்றது சிறப்பான பாடி லேங்வேஜ். ஆதிரை அணி பேசும்போது டவாலியான எஃப்ஜே சும்மா இருந்ததாகவும், வினோத் அணி பேசும்போது சத்தம்போட்டு கண்டித்ததாகவும் வினோத் குற்றம் சாட்ட “என்னையும் அவனையும் சம்பந்தப்படுத்திப் பேசாதீங்க” என்று ஆதிரை ஆட்சேபிக்க ஒரு சண்டை ஆரம்பித்தது. வினோத்தின் மானரிஸம் தவறாக இருக்கிறது - குற்றம்சாட்டும் பெண்கள் நாக்கை தடவுவதுபோல வினோத் செய்யும் மானரிஸமும் எரிச்சலூட்டுவதாக புகார் எழ, ‘அது என் பழக்கம். அதுல கூடவா தப்பு கண்டுபிடிப்பீங்க?” என்று ஆவேசப்பட்டார் வினோத். “முதல்ல எதிராளி பேசறத பொறுமையா கேளுங்க. அதுக்குள்ள அவசரப்பட்டு பதட்டப்படாதீங்க” என்று வினோத்திற்கு இப்போதுதான் அட்வைஸ் செய்திருந்தார் விசே. ஆனால் மனிதரின் சுபாவம் மாறவில்லை. “அதான் உனக்கு சாதகமா தீர்ப்பு வந்துடுச்சே.. அப்புறம் ஏன் இப்படி பண்றே. உனக்கு ஃபேன்ஸ் அதிகம். போக மாட்டே” என்று வினோத்தை தனியாக அழைத்து வந்து ஆறுதல் சொன்னார் கம்மு. (கம்முவும் தனக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்கிற மிதப்பில் இருக்கிறார் போல!). “என்னை சாட்சி சொல்லக் கூப்பிட்டிருந்தா கேஸ் அப்படியே மாறியிருக்கும்” என்று அலட்டினார் பாரு. “பாருவை இப்பத்தான் பக்கத்துல இருந்து பார்த்தேன். அப்படி ஒண்ணு சொல்றாங்க. இப்படி ஒண்ணு சொல்றாங்க..இப்படி மாத்தி மாத்தி பேசிட்டு அதைப் பத்தி ஒண்ணுமே இல்லாம சிரிக்கறாங்க” என்று வியானா சொல்ல, அதற்கு விக்ரம் சொன்னதுதான் ஹைலைட். “பிக் பாஸூக்கு அளவெடுத்து செஞ்ச ஆளு பாரு”. இந்த வழக்காடு மன்றத்தில் அடுத்த வழக்கை எஃப்ஜே மீது தொடுத்திருக்கிறார் பாரு. என்னென்ன கலவரங்கள் நிகழப் போகிறதோ?!
BB Tamil 9 Day 65: கம்மு - பாரு ரொமான்ஸ்; ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை; ரணகளமான கோர்ட் டாஸ்க்
திவாகர் வெளியேற்றத்துக்கு வினோத் காரணமா? கோர்ட்டில் வந்த முதல் கேஸ் இது. வினோத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. என்றாலும் திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத்தும் ஒருவகையில் காரணமாக இருந்தார். எத்தனை முறை எச்சரித்தும் மைக்கை ஆஃப் செய்து விட்டு ரகசியம் பேசும் பாருவையும் கம்முவையும் வெளியே அனுப்பி சுதந்திரமாக இருக்க வடலாம். அடித்துக்கொண்டு ஒரே நாளில் பிரிவார்கள். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 64 இரவு. பாருவும் கம்முவும் மைக்கை தள்ளி வைத்து தங்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ரொம்பவும் கிளுகிளுப்பாக ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். கரடி போல பிக் பாஸ் குறுக்கே வந்து எச்சரித்தார். புதிய வீட்டுத் தலயான அமித் ஆக்டிவ்வாக இருந்தார். அரோ தூங்காமல் இருக்க கதை சொல்லப்போகிறாராம். ரயிலில் சமோசா விற்பவரைப்போல ‘பாட்டரி.. பாட்டரி’ என்று சொல்லி திவ்யாவை சிரிக்க வைத்தார். ‘சிறந்த வீட்டுத் தல’ என்கிற பெயரை இவராவது பெறுவாரா? பாரு பாத்ரூமை சரியாக சுத்தம் செய்யவில்லை என்கிற புகார் எழுந்தது. வியானா இதைப் பற்றி விசாரிக்கும்போது மழுப்பலாக பதிலளித்தார் பாரு. சமையலும் தெரியாது. சுத்தமும் தெரியாது. ரொமான்ஸூம் வம்பும் மட்டும் தெரியும். இப்படியொரு போட்டியாளர். “உனக்கு பெண் ரசிகைகள் அதிகமாமே.. வெளியே போனா லைன்ல நிப்பாங்க” என்று கம்முவை ஜாலியாக வம்பிழுத்துக்கொண்டார் ரம்யா. கம்முவின் அலப்பறைகளைக் கண்டிக்காமல் விசேவும் இப்போதெல்லாம் ஏற்றிவிடுவதால் தன்னை ரொமான்டிக் ஹீரோவாகவே கம்மு நினைத்துக்கொள்கிறார். ‘ஆமாம்.. வெளியேபோய் நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணனும்’ என்று கம்மு சொல்ல “அப்ப பாருவை ஏமாத்திடுவியா?” என்று ரம்யா சிரித்துக்கொண்டே கேட்க “அவதான் என்னை ஏமாத்திடுவா” என்றார் கம்மு. ஆக இருவருக்குமே இது பிக் பாஸ் கன்டென்ட் காதல் என்கிற திட்டத்துடன்தான் பழகி வருகிறார்கள் என்பது வெளிப்படை. கம்மு, எஃப்ஜே போன்றவர்கள் எல்லாம் ரெண்டு மூணு ரொமான்ஸ் செய்து அலப்பறை செய்து கொண்டிருக்க, சபரியோ வெங்காயத்துடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார். பாவம். இதில் அலைபாயுதே மாதவன் வசனம் வேறு. கம்மு - பாரு ரொமான்ஸ் காரணமாக ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை பாருவும் கம்முவும் மீண்டும் மைக்கை தளர்த்திவிட்டு ரொமான்ஸ் ரகசியம் பேச பிக் பாஸிற்கு சரியான கோபம் வந்திருக்கும். சற்று நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு சாப்பிடும் நேரத்தில் ஓர் அறிவிப்பு செய்தார். “தொடர்ந்து எச்சரிக்கை தரப்பட்டும் பாரு, கம்ருதீன் மைக்கை கழற்றிவைத்துப் பேசுவதால் வீட்டிலுள்ள எல்லோருக்கும் தண்டனை தரப்படும். அதன்படி பால், டீ, முட்டை, சீஸ் என்று அனைத்துப் பொருட்களும் அகற்றப்படும்’ என்றார். சாப்பிடுவதற்காக தட்டில் வைக்கப்பட்டிருந்த முட்டையைக்கூட தூக்கியது டூ மச். பாரு இந்தியில் ரகசியம் பேசியிருப்பார் போலிருக்கிறது. எனவே அந்த மொழியிலேயே பிக் பாஸ் விசாரித்தது சுவாரசியமான குறும்பு. பாருவாவது ‘ஸாரி பிக் பாஸ்.. ஸாரி மக்களே’ என்று பாவனையாகவாவது மன்னிப்புக்கேட்டார். ஆனால் கம்முவோ ‘ஸ்லோவாத்தான் பேசினோம்’ என்று சமாளிக்க அதையும் நக்கலடித்தார் பிக் பாஸ். தவறு செய்தவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வீட்டுக்கு தண்டனை கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் கில்ட்டியாக ஃபீல் செய்வார்கள் என்பது பிக் பாஸின் கணக்காக இருக்கலாம். (பாருவிடம் அந்தப் பிரச்னையெல்லாம் இல்லை!) ‘தவறு செய்யாத எங்களுக்கு ஏன் தண்டனை?” என்று மற்றவர்களுக்கு இவர்கள் இருவரின் மீது கோபம் வரலாம் என்பதும் பிக் பாஸின் பிளான். “இப்ப வைங்க நாமிஷேனை. யாருன்னு காட்டறோம்” என்று எஃப்ஜே சொன்னது நல்ல கமென்ட். “அப்படி பார்க்காதீர்கள் குழந்தைகளா..’ என்று சமாளித்துக் கொண்டிருந்தார் பாரு. “பாருவிற்கும் கம்முவிற்கும் பெரிய அப்ளாஸ் கொடுங்க. நீங்க மன்னிப்பு கேட்கத் தேவையில்ல. செயல்ல காட்டுங்க” என்று சர்காஸமாக பாராட்டினார் விக்ரம். ரணகளமாக ஆரம்பித்த கோர்ட் டாஸ்க் அடுத்ததாக வீக்லி டாஸ்க். இந்த வாரம் ‘வழக்காடு மன்றம்’. ஒருவர் மூன்று வழக்குகள் தொடுக்கலாம். தகுதியான வழக்கு நீதிமன்றத்திற்கு வரும். முதல் வழக்கை ஆதிரைமீது போட்டார் வினோத். ‘திவாகர் வெளியேற, தான் காரணம் என்று ஆதிரை சொல்வது தவறு’ என்பது வழக்கின் உள்ளடக்கம். வினோத்திற்கு விக்ரமும் ஆதிரைக்கு அரோவும் வழக்கறிஞர். போலவே நீதிபதிகள் அமித் மற்றும் திவ்யா. வினோத் வழக்கில் திவ்யாவை நீதிபதியாக ஆதிரை தோ்வு செய்தது நல்ல செக் பாயின்ட். வினோத்திற்கும் திவ்யாவிற்கும் ஏழாம் பொருத்தம். வினோத்தின் வக்கீலான விக்ரம் (வித்யாபதி என்று என்னை அழையுங்கள்) ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போலவே நீதிமன்றத்தில் நடந்து கொண்டது பாராட்டத்தக்கது. ஆதிரையின் வக்கீல் அரோவோ ‘வெச்சு செஞ்சாங்க’ என்று கொச்சையாகப் பேசிவிட்டு சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தார். “மக்கள் பார்த்துட்டு இருப்பாங்க. பார்த்து ஆடு” என்று வினோத்திற்கு அட்வைஸ் தந்தார் கம்மு. (இந்த உபதேசத்தை யாரு சொல்றது பாருங்க!) வழக்கு எண்.1: வினோத் Vs ஆதிரை - திவாகர் வெளியேற்றத்திற்கு வினோத் காரணமா? “வீக்கெண்ட்ல விசே என்ன பேசினாரு. கலை போனதுக்கு அவரேதான் காரணம். அதுபோல திவாகர் போனதுக்கு அவரேதான் காரணமே ஒழிய, எனது கட்சிக்காரர் வினோத் காரணமில்லை” என்று ஓப்பனிங் ஆர்க்யூமென்ட்டை வைத்தார் விக்ரம். “வினோத்திற்கு தாழ்வு மனப்பான்மை. வீட்டிலுள்ள நட்புக்களை வைத்து தப்பிக்க நினைக்கிறார்” என்று பலவீனமாக எதிர் வாதம் செய்தார் அரோ. சாட்சியாக வந்த கனி “தம்பி போன்ற எஃப்ஜேவையும் என்னையும் வைத்து திவாகர் தவறாக பேசினார். இது போன்ற பேச்சுக்கள்தான் அவரது எவிக்ஷனுக்குக் காரணம்” என்று சொல்லியது சரியான பாயின்ட். ஆதிரைக்கு சாட்சியாக வந்த வியானா “தனது நண்பர்களுடன் இணைந்து திவாகரை எப்போதும் கலாய்த்தார் வினோத்” என்று பலவீனமாக சாட்சி சொன்னார். ராஜா டாஸ்க்கின் போது திவாகர் சொன்ன கொச்சையான வசவும் சாட்சியாக காட்டப்பட்டது. “ஆனால் அப்படி பேசியதற்கு யார் காரணம்... வினோத்தான் இந்தச் சண்டையை ஆரம்பித்து வைத்தார்” என்று திறமையாகப் பேசினார் அரோ. ஆதிரைக்கு சாட்சி சொல்ல வந்த கம்ரூதீனும் சொதப்பி “நானும் திவாகரை கலாய்ச்சிருக்கேன்” என்று பல்டி அடித்தார். பிக் பாஸ் வீட்டில் பொடுகுத் தொல்லை ஓவர்போல. சான்ட்ரா எப்போதும் தலையைச் சொறிகிறார். இப்போது நீதிபதி திவ்யாவும் தலையைச் சொறிந்தார். (ஒருவேளை வழக்கு வாதம் குழப்பிவிட்டதோ?!)” ‘வெளியே போங்க - பாருவைக் கண்டித்த நீதிபதிகள் வினோத்திற்கு சாதகமாக வழக்கு சென்று கொண்டிருந்ததால் கடுப்பான பாரு குறுக்கே பேச “வெளிய போங்க” என்று நீதிபதிகளால் கண்டிக்கப்பட்டார். தனது வழக்கமான முக சேஷ்டைகளை செய்தார் பாரு. இதுபோன்ற எக்ஸ்பிரஷன்களை ஒரு வீடியோவாக தொகுத்தால் நல்ல காமெடியாக இருக்கும். ‘திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத் காரணமில்லை” என்று அமித் தெள்ளத் தெளிவாக தீர்ப்பளிக்க, திவ்யாவோ “வினோத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது” என்று குழப்பமாகத் தீர்ப்பளித்தார். அதாவது திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத் ஒரு காரணமாக இருந்தார் என்பதைச் சொல்லமுடியாமல் ஒரு மாதிரி குன்சாக சொன்னார்போல. இரு நீதிபதிகள் இடையே மாறுபட்ட தீர்ப்பு வந்ததால், மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார் பிக் பாஸ். அதன்படி வினோத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு வினோத் கெத்தாக நின்றதால் ‘என்ன பாடி லேங்வேஜ் இது?’ என்று எதிர் அணியினர் ஆட்சேபித்தார்கள். வயசான நீதிபதி போலவே அமித் நடந்துசென்றது சிறப்பான பாடி லேங்வேஜ். ஆதிரை அணி பேசும்போது டவாலியான எஃப்ஜே சும்மா இருந்ததாகவும், வினோத் அணி பேசும்போது சத்தம்போட்டு கண்டித்ததாகவும் வினோத் குற்றம் சாட்ட “என்னையும் அவனையும் சம்பந்தப்படுத்திப் பேசாதீங்க” என்று ஆதிரை ஆட்சேபிக்க ஒரு சண்டை ஆரம்பித்தது. வினோத்தின் மானரிஸம் தவறாக இருக்கிறது - குற்றம்சாட்டும் பெண்கள் நாக்கை தடவுவதுபோல வினோத் செய்யும் மானரிஸமும் எரிச்சலூட்டுவதாக புகார் எழ, ‘அது என் பழக்கம். அதுல கூடவா தப்பு கண்டுபிடிப்பீங்க?” என்று ஆவேசப்பட்டார் வினோத். “முதல்ல எதிராளி பேசறத பொறுமையா கேளுங்க. அதுக்குள்ள அவசரப்பட்டு பதட்டப்படாதீங்க” என்று வினோத்திற்கு இப்போதுதான் அட்வைஸ் செய்திருந்தார் விசே. ஆனால் மனிதரின் சுபாவம் மாறவில்லை. “அதான் உனக்கு சாதகமா தீர்ப்பு வந்துடுச்சே.. அப்புறம் ஏன் இப்படி பண்றே. உனக்கு ஃபேன்ஸ் அதிகம். போக மாட்டே” என்று வினோத்தை தனியாக அழைத்து வந்து ஆறுதல் சொன்னார் கம்மு. (கம்முவும் தனக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்கிற மிதப்பில் இருக்கிறார் போல!). “என்னை சாட்சி சொல்லக் கூப்பிட்டிருந்தா கேஸ் அப்படியே மாறியிருக்கும்” என்று அலட்டினார் பாரு. “பாருவை இப்பத்தான் பக்கத்துல இருந்து பார்த்தேன். அப்படி ஒண்ணு சொல்றாங்க. இப்படி ஒண்ணு சொல்றாங்க..இப்படி மாத்தி மாத்தி பேசிட்டு அதைப் பத்தி ஒண்ணுமே இல்லாம சிரிக்கறாங்க” என்று வியானா சொல்ல, அதற்கு விக்ரம் சொன்னதுதான் ஹைலைட். “பிக் பாஸூக்கு அளவெடுத்து செஞ்ச ஆளு பாரு”. இந்த வழக்காடு மன்றத்தில் அடுத்த வழக்கை எஃப்ஜே மீது தொடுத்திருக்கிறார் பாரு. என்னென்ன கலவரங்கள் நிகழப் போகிறதோ?!

28 C