SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ்

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ் விஜய் தேவராகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரியில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இப்படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்​கின்​றனர்​.கிறிஸ்டோ சேவியர் இசையமைத்​துள்​ளார். ஆனந்த் சி.சந்​திரன் ஒளிப்​ப​திவு...

தஸ்தர் 26 Dec 2025 1:21 pm

‘Train’திரைப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’பாடல் வெளியானது. மேலும், Mysskin இசையில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்

‘Train’ திரைப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ பாடல் வெளியானது. மேலும், Mysskin இசையில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன்...

தஸ்தர் 26 Dec 2025 1:14 pm

BB Tamil 9 Day 81: பாரு அம்மா என்ட்ரி - கம்முவுக்கு சொன்ன அட்வைஸ்; பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம்

‘தாத்தா வராரு.. கதற விடப் போறாரு’ என்கிற பாட்டு மாதிரி பாருவின் அம்மா உள்ளே வந்தால் பூகம்பம் நிகழும் என்கிற மாதிரி பில்டப்பை பாருவே தந்திருந்தார். நான் முன்பே யூகித்தபடி எதுவுமே நடக்கவில்லை.  கம்முவின் குடும்பத்திற்கு அவரது நடவடிக்கை பிடிக்கவே இல்லை என்பதை பல்வேறு வழிகளில் அவர்கள் உணர்த்தியது சிறப்பு.  BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 81 கார்டன் ஏரியா கிறிஸ்துமஸ் விழாவிற்கான அலங்காரங்களைக் கொண்டிருந்தது. கடந்த சீசன் சவுந்தர்யா, சான்ட்டா தாத்தா வேடத்தில் வந்து நடனமாடி பரிசு தந்து சென்றார். (யார் இந்த சான்ட்டா என்கிற விளம்பர பில்டப் வேறு!) கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் அமித் வர, பிக் பாஸ் ப்ரீஸ் என்று சொல்ல மற்றவர்களை விடவும் பாருவிற்கு கூடுதல் உற்சாகம் ஏற்பட்டது. ஒரு சிறிய விளையாட்டைக் கூட கொடூரமாக நிகழ்த்துவதில் பாரு வல்லவர். மைக் இருப்பதைக் கூட கவனிக்காமல் தண்ணீரை ஆவேசமாக ஊற்றுவார். ஃப்ரீஸ் என்று பிக் பாஸ் சொன்னாலும் கேட்க மாட்டார். தான் செய்ய வந்ததை செய்தே முடிப்பேன் என்கிற ரிவேன்ஜ் மோடில் செயல்படுவார். (அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!) இந்தச் சமயத்திலும் அதே போல், அமித்தின் மீது தான் குடித்துக் கொண்டிருந்த காஃபியை ஊற்ற வந்தார் பாரு. “தண்ணி வேணா ஊத்து.. காஃபி வேணாம். மைக் இருக்கு..” என்று அமித் கதறினாலும் பாரு கேட்பதாக இல்லை. பாருவை பழிவாங்க வேண்டுமென்றால் பிக் பாஸிற்கு கூட உற்சாகம் வந்து விடுகிறது. எனவே அவர் ஃப்ரீஸ் என்று பாருவிற்கு உத்தரவிட, மற்ற போட்டியாளர்கள பாருவிற்கு சிறப்பான திருவிழா நடத்தி சிறப்பித்தார்கள்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாரு அம்மா என்ட்ரி - பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம் பாடல் ஒலிக்க பாருவின் அம்மா சரஸ்வதி என்ட்ரி. அம்மாவைப் பார்த்ததும் பாருவின் முகத்தில் அழுகை வெடித்தது. பழைய சீசனில், லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்ததும் நடந்த டிராமா போல ஏதாவது நிகழும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்.  BB Tamil 9 பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர்மாறாக நிதானமாக இருக்கிறார் பாரு அம்மா. “கண்ணு எப்படி இருக்கு?” என்று பாருவை விசாரித்தார். “அம்மா.. சிரிக்கறா.. பரவாயில்ல.. அப்படின்னா ஒண்ணுமில்ல.. எல்லாம் ஓகேதானே?” என்று பாரு பம்ம “ஓகேதானே.. அப்புறம் ஏன் பதர்றே?” என்று பாருவின் அம்மா மடக்கியது சிறப்பு.  ‘துணிவே சக்தி’ என்று மந்திர உச்சாடனம் போல பாருவின் அம்மா உரத்த குரலில் கணீர் என்று ஆசிர்வாதம் செய்ய ‘என்னா வாய்ஸ்.. என்னா ரேஞ்சு?” என்று வியந்தார் வினோத்.  பாருவின் அம்மா, கம்ருதீனை சந்திக்கும் போது என்ன நிகழும் என்பது அடுத்த எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும் ஒன்றும் நிகழவில்லை. ‘வாப்பா கம்ருதீன்.. நீ தொழில்ல நல்லா வரணும்.. படத்துல ஹீரோவை விட விழுமியத்துல ஹீரோவா வரணும்” என்று பாரு அம்மா சொன்னது சூசகமான அறிவுரை. “விழுமியன்னா என்னம்மா?” என்றார் கம்மு. (விழுமியம் என்றால் values - மனிதரின் உயர்ந்த பண்புகள்!)  “இந்த வீடு எனக்கு நிறைய கத்துக் குடுக்குது” என்று நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு கம்மு சொல்ல “எது நல்லது கெட்டதுன்னு உரசிப் பார்த்து தெரிஞ்சுக்கணும்” என்று இன்னொரு மறைமுக அட்வைஸ் தந்தார் பாருவின் அம்மா. (‘அவன் பொழுதன்னிக்கும் உரசர வேலையைத்தான் செய்யறான்’ என்று நல்லவேளையாக யாரும் சொல்லவில்லை!) ‘பாரு என்னுடைய பிரியமான எதிரி’ - விக்ரம் சர்காஸம் அமைதிப்படை அமாவாசை மாதிரி கம்மு அடிக்கடி பாரு அம்மா காலில் விழ “இதுவரைக்கும் ஏழு முறை விழுந்திருக்கான். இன்னமும் எத்தனை முறை விழப் போறான்னு பார்க்கணும்” என்று நக்கலடித்தார் விக்ரம். பிறகு “உங்க பொண்ணு பாருவை எனக்கு பிடிக்கும். பிரியமான எதிரி. ஆனா அவளை வேலை வாங்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. உங்க பொண்ணு ரேஞ்சுக்கு இங்க யாராலும் கேம் ஆட முடியாது” என்று பாரு அம்மாவிடம் சர்காஸ கிண்டல்களைத் தொடர்ந்தார் விக்ரம். (யம்மா.. ஒத்த ரோசா… பிள்ளைய நல்லா வளர்த்திருக்கீங்கம்மா!) BB Tamil 9 இன்னொரு பக்கம், காமிரா முன்பு பரிதாபமாக பேசிக் கொண்டிருந்தார் அரோரா. “என் ஃபேமில இருந்து யாரும் வரமாட்டாங்க. ரியாதான் எனக்கிருக்க ஒரே பிரெண்டு. அவளும் கோவிச்சுக்கிட்டு வர மாட்டா.. என் நாய்க்குட்டியையாவது பார்க்கணும்” என்று உருக்கமாக பேசிக் கொண்டிருந்த அரோவைப் பார்த்து பரிதாபமாக இருந்தது.  கார் விளம்பரத்தைத் தொடர்ந்து அரோவின் தோழி ரியா வந்து இறங்க அரோவிற்கு பயங்கர மகிழ்ச்சி. “ஆமாம்.. கோபமாத்தான் இருக்கேன்” என்று சிரித்தார் ரியா.  முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ரியா, அப்போதே வெளிப்படையான கேள்விகளை துடுக்குத்தனமாக கேட்பார். இப்போது விருந்தினராக வந்திருக்கிறார். எனவே கேட்கவே வேண்டாம். அரோவை அமர வைத்து சரமாரியாக குத்தினார்.  ‘இருக்கா.. இல்லையா.. தெளிவா சொல்லு’ - அரோவிடம் ரியா கறார்  “நீ துஷாரை லவ் பண்றியா.. இல்லையா.. ஓப்பனா சொல்லு..  எப்பப்பாரு துஷார்.. துஷார்.. ன்னு இம்சை பண்றே.. அது எதுவா வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். இப்ப அந்த விஷயத்தை உன் மூளைல இருந்து கழட்டி வெச்சிடு. உன்னை வெளியே அனுப்பணும்னு பாரு துடியா துடிக்கறா.. அதே மாதிரி உன் மனசுலயும் பழிவாங்கற உணர்ச்சி இருக்கு. ஆக்சுவலி பாருவிற்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும்.. அவதான் அந்த டிரையாங்கிளை முடிச்சு வெச்சா.. இப்பத்தான் நீ நல்லா விளையாட ஆரம்பிச்சிருக்கே. இப்படியே மெயின்டெயின் பண்ணு”... என்று அறிவுரை வழங்கினார் ரியா. “பாரு என்னை வெறுப்பேத்தறப்ப, வன்மத்தைக் கொட்டறப்ப மட்டும்தான் அவளை நாமினேட் பண்ணுவேன். அவ நல்லா கேம் ஆடும் போது பண்ண மாட்டேன்.. பாரு போக மாட்டான்னு தெரியும். எனக்கு இங்க செட் ஆக டைம் ஆயிடுது” என்று அரோ சமாளிக்க, “துஷார் கிட்ட மட்டும் ரெண்டே நாள்ல பிரெண்ட் ஆக முடிஞ்சதா?” என்று ரியா மடக்கியது சுவாரசியம்.  BB Tamil 9 “உனக்கு வெட்கம், மானம் ஏதாவது இருக்கா.. கம்ருதீன் உன்னை அப்படி வெச்சு செய்யறான்.. இன்னமும் அவன் கிட்ட போய் இளிச்சிட்டிருக்கே..” என்கிற மாதிரி ரியா கொதிக்க “துஷார் வெளியே போக நான்தான் காரணம்ன்னு அவன் சொன்னப்பவே எனக்கு விட்டுப் போச்சு. இப்பத்தான் அது ரிலையஸ் ஆச்சு” என்ற அரோவிடம் “பிக் பாஸ்ன்றது பெரிய வாய்ப்பு. சரியா ஆடு” என்று உபதேசத்தை முடித்துக் கொண்டார் ரியா.  பிறகு மற்ற போட்டியாளர்களுக்கு ரிப்போர்ட் தரும் போது “போன சீசன்ல இருந்து வெளியே வரவங்களை சபரி டிரோல் பண்ணுவான். இப்ப அவனையே இங்க காணலை” என்ற ரியா “அமித்.. பாரு கிட்ட இருந்து தள்ளியே இருங்க” என்று சொல்ல “என்னைப் பத்தி சொல்லாத.. ஸ்கிப் பண்ணிடு” என்று பம்மினார் பாரு. ரியா அதையும் மீறி சொல்லப் போக “நீ வெளியே வா… “ என்று ஜாலியாக மிரட்டினார் பாரு.  ‘என் கிட்ட நிறைய கருணை இருக்கு’ - பாரு சீரியஸ் காமெடி “கம்மு.. பார்வதிக்கு எப்பவும் ஒரு வன்மம் இருந்துட்டே இருக்கும். பிக் பாஸ்ல நூறு நாள் எப்படி இருக்கறதுன்னு தெளிவா பிளான் போட்டு வந்திருக்கா. யார் உள்ளே வந்தாலும் அவர்களை தனியாக ஓரங்கட்டி தன்னைப் பற்றி விசாரிப்பது பாருவின் வழக்கம். இப்போதும் அப்படியே ரியாவை ஓரங்கட்ட “நீங்க கரெக்ட்டா பிரெடிக்ட் பண்ணி ஆடுங்க. முதல்ல நல்லா இருந்துச்சு. அப்புறம் ரூட் மாறிடுச்சு.. ஒரு மாதிரியா இருக்கு. முதிர்ச்சியா கையாளுங்க” என்று மறைமுகமாக ரியா அட்வைஸ் செய்ய “கம்ரூதீனா?” என்று சுருக்கமாக கேட்டார் பாரு.  “உன் கிட்ட இருக்கற நல்ல பக்கம் எதுவுமே வெளில வரல. வெளில கெட்ட பெயர்தான் இருக்கு. நல்ல குணம் இருந்தாலும் கோபத்துல அது மறைஞ்சுடுது. யாரை வேண்டுமானாலும் கேமிற்காக தூக்கிப் போடுவீங்கன்ற மாதிரி தெரியுது. ரெண்டு பொண்ணுங்க ஒரு பையனுக்காக அடிச்சுக்கறது பார்க்க கேவலமா இருக்கு” என்று ரியா பொரிந்து தள்ள “என் கிட்ட நிறைய கருணை குணம் இருக்கு” என்று சமாளித்தார் பாரு. (ஏம்மா.. அந்த கருணைக்கிழங்கை ஒளிச்சியே வெச்சிட்டிருக்கீங்க?!) BB Tamil 9 ‘Am I being played by Kamruddin?’ என்று பாரு சுருக்கமாக கேட்பதின் மூலம் அவருக்கு கம்ருதீன் மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை என்பது தெரிகிறது. கம்ருதீனும் அதே மாதிரிதான் இருக்கிறார். “இவ எப்ப வேணா எனக்கு குல்லா போட்டுருவாடா” என்று நண்பர்களிடம் சொல்கிறார். இந்த மாதிரி காதலை வைத்துக் கொண்டு இருவரும் படுத்துகிற பாடு இருக்கே! கம்ருதீன் பற்றிய கேள்விக்கு “அது எனக்குத் தெரியாது” என்று சொல்லி எஸ்கேப் ஆனார் ரியா. ரியா விடைபெறும் போது “அவனைக் கேட்டதா சொல்லு” என்று அரோ காதில் ரகசியம் பேச “செருப்பு பிஞ்சிடும்” என்று சிரித்தார் ரியா. அந்த விசாரிப்பு துஷார் பற்றியதாக இருக்க வேண்டும். (அத்தனை சொல்லியும் திருந்தலையே மக்கா!) ‘வாங்க அக்கா.. ‘ கம்முவின் சகோதரியை பாசத்துடன் அழைத்த பாரு பாருவின் அம்மா உள்ளே இருக்கும் போதே கம்முவின் குடும்பத்தையும் சந்திக்க வைக்கும் சதித் திட்டத்தை சிறப்பாக தீட்டினார் பிக் பாஸ். தனது குடும்பம் உள்ளே வருவதை நெகிழ்வுடன் பார்த்தார். அப்போது வேறுவிதமான கம்முவைப் பார்க்க முடிந்தது. கம்முவின் சகோதரியை ‘வாங்க அக்கா’ என்று பாரு பாசத்துடன் அழைக்க “அக்கா?... நைஸ்..  தங்கச்சி” என்று சர்காஸமாக சிரித்தார், கம்முக்கா.  கம்முவின் சகோதரியும் நண்பனும் அமர்ந்திருக்க, பாரு வழக்கம் போல் எதையோ வாயை விட “அய்யோ.. நிறைய பேச முடியலையே.. சொல்லி அனுப்பிச்சாங்களே” என்று தவித்தார் கம்முவின் நண்பர்.  BB Tamil 9 “இத்தனை நாள் உனக்கு அக்கா ஞாபகம் வரலேல்ல.?” என்று குறும்பும் தீவிரமும் கலந்து விசாரித்தார் கம்முவின் அக்கா.  “பார்வதி என்னை அக்கான்னு கூப்பிடறா.. அப்படின்னா உனக்கு தங்கச்சிதானே?” என்று அவர் விசாரிக்க “ஆமாம்” என்று குறும்புடன் சிரித்தார் கம்மு. (அடப்பாவி உலக நடிப்புடா சாமி!) பிறகு தனியாக பேசும் போது “திவ்யா கூட ஏன் சண்டை போடறே?” என்று விசாரிக்கும் போது “அப்படியா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் கம்மு. (இன்னொரு அடப்பாவி!) “திவ்யாவும் பாருவும்தான் சண்டை போடறாங்க.. ஆனா அந்தக் கோபத்துலயும் அவங்க கிட்ட இருந்து தப்பான வார்த்தை வரதில்லை.. கவனிச்சியா.. சேரை தூக்கிப் போடற.. இது நம்ம வீடு இல்ல. இது வாழ்க்கையை தீர்மானிக்கற இடம் இல்ல. இந்த வாய்ப்புக்காக எத்தனை போ் வெயிட் பண்றாங்க.. சரியா பயன்படுத்திக்க. நீயும் சரியா பேசற. ஆனா பேசற விதம்தான் சரியில்ல” என்று கம்முவிற்கு சரமாரியாக அறிவுரை கிடைத்தது.  ‘இது குழந்தைங்க பார்க்கற ஷோ. ஒழுங்கா இருங்க” - எச்சரிக்கப்பட்ட பாரு - கம்மு கம்முவை தனியாக அழைத்துச் சென்ற நண்பர் “காமிரா இருக்கறதை மறந்துட்டியா.. ஒரு வரைமுறை இல்லையா.. ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாமா.. ஃபைனல் வரைக்கும் போகும் தகுதி இருக்கு. விட்றாத” என்று எச்சரித்தார். கம்முவின் அக்காவும் இதே அறிவுரையை “நம்ம வீட்லயும் குழந்தைங்க பார்க்கறாங்க” என்று சுட்டிக் காட்டியது சிறப்பு.  “அரோ.. உன்னை depend பண்ணி ஆடறா.. வெல் விஷரா அவ சொல்றதை எடுத்துக்காத. பாருவைக் கூட நம்பிடலாம் போல. ஆனா அரோ சரியான நேரம் பார்த்து பாயிண்ட் பாயிண்ட்டா பேசறா” என்று கம்முவிற்கு நண்பர் சொன்ன அட்வைஸ் சரியா என்று தெரியவில்லை. டிரையாங்கிள் ரொமான்ஸ் காரணமாக அரோவின் நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கம்முவிற்கு அரோ சொன்ன பல அறிவுரைகள் உண்மையானவை. ஆத்மார்த்தமான நட்பிலிருந்து எழுந்தவை.  BB Tamil 9 பிறகு பாருவையும் தனியாக அழைத்த கம்முவின் நண்பர் “நான் கம்முவோட அப்பாவா இருந்தா.. உங்க பக்கத்துலயே வந்திருக்க மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் பிரஜின்-சான்ட்ரா மாதிரி தம்பதி கிடையாது. இந்த ரிலேஷன்ஷிப் என்ன வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். ரெண்டு பேரும் தனியா கேம் ஆடுங்க. இது குழந்தைங்க பார்க்கற ஷோ” என்று சூசகமாகவும் சரியாகவும் அட்வைஸ் செய்தார்.  பாருவிற்கும் கம்ருதீனுக்கும் பரஸ்பரம் நம்பிக்கையில்லை. இந்த ஆட்டத்தின் சர்வவைவல் காரணமாக ‘காதல்’ என்கிற வஸ்துவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பிக் பாஸ் முடிந்தவுடன் இந்த ரொமான்ஸூம் முடிந்து விடும் என்பது இருவருக்குமே நன்றாகத் தெரியும். என்றாலும் வலிக்காத மாதிரி இவர்கள் ஆடும் நாடகம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.  பாருவின் அம்மா என்ன மாதிரியான அறிவுரையை தன் மகளுக்கு தந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

விகடன் 26 Dec 2025 12:58 pm

BB Tamil 9 Day 81: பாரு அம்மா என்ட்ரி - கம்முவுக்கு சொன்ன அட்வைஸ்; பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம்

‘தாத்தா வராரு.. கதற விடப் போறாரு’ என்கிற பாட்டு மாதிரி பாருவின் அம்மா உள்ளே வந்தால் பூகம்பம் நிகழும் என்கிற மாதிரி பில்டப்பை பாருவே தந்திருந்தார். நான் முன்பே யூகித்தபடி எதுவுமே நடக்கவில்லை.  கம்முவின் குடும்பத்திற்கு அவரது நடவடிக்கை பிடிக்கவே இல்லை என்பதை பல்வேறு வழிகளில் அவர்கள் உணர்த்தியது சிறப்பு.  BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 81 கார்டன் ஏரியா கிறிஸ்துமஸ் விழாவிற்கான அலங்காரங்களைக் கொண்டிருந்தது. கடந்த சீசன் சவுந்தர்யா, சான்ட்டா தாத்தா வேடத்தில் வந்து நடனமாடி பரிசு தந்து சென்றார். (யார் இந்த சான்ட்டா என்கிற விளம்பர பில்டப் வேறு!) கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் அமித் வர, பிக் பாஸ் ப்ரீஸ் என்று சொல்ல மற்றவர்களை விடவும் பாருவிற்கு கூடுதல் உற்சாகம் ஏற்பட்டது. ஒரு சிறிய விளையாட்டைக் கூட கொடூரமாக நிகழ்த்துவதில் பாரு வல்லவர். மைக் இருப்பதைக் கூட கவனிக்காமல் தண்ணீரை ஆவேசமாக ஊற்றுவார். ஃப்ரீஸ் என்று பிக் பாஸ் சொன்னாலும் கேட்க மாட்டார். தான் செய்ய வந்ததை செய்தே முடிப்பேன் என்கிற ரிவேன்ஜ் மோடில் செயல்படுவார். (அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!) இந்தச் சமயத்திலும் அதே போல், அமித்தின் மீது தான் குடித்துக் கொண்டிருந்த காஃபியை ஊற்ற வந்தார் பாரு. “தண்ணி வேணா ஊத்து.. காஃபி வேணாம். மைக் இருக்கு..” என்று அமித் கதறினாலும் பாரு கேட்பதாக இல்லை. பாருவை பழிவாங்க வேண்டுமென்றால் பிக் பாஸிற்கு கூட உற்சாகம் வந்து விடுகிறது. எனவே அவர் ஃப்ரீஸ் என்று பாருவிற்கு உத்தரவிட, மற்ற போட்டியாளர்கள பாருவிற்கு சிறப்பான திருவிழா நடத்தி சிறப்பித்தார்கள்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாரு அம்மா என்ட்ரி - பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம் பாடல் ஒலிக்க பாருவின் அம்மா சரஸ்வதி என்ட்ரி. அம்மாவைப் பார்த்ததும் பாருவின் முகத்தில் அழுகை வெடித்தது. பழைய சீசனில், லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்ததும் நடந்த டிராமா போல ஏதாவது நிகழும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்.  BB Tamil 9 பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர்மாறாக நிதானமாக இருக்கிறார் பாரு அம்மா. “கண்ணு எப்படி இருக்கு?” என்று பாருவை விசாரித்தார். “அம்மா.. சிரிக்கறா.. பரவாயில்ல.. அப்படின்னா ஒண்ணுமில்ல.. எல்லாம் ஓகேதானே?” என்று பாரு பம்ம “ஓகேதானே.. அப்புறம் ஏன் பதர்றே?” என்று பாருவின் அம்மா மடக்கியது சிறப்பு.  ‘துணிவே சக்தி’ என்று மந்திர உச்சாடனம் போல பாருவின் அம்மா உரத்த குரலில் கணீர் என்று ஆசிர்வாதம் செய்ய ‘என்னா வாய்ஸ்.. என்னா ரேஞ்சு?” என்று வியந்தார் வினோத்.  பாருவின் அம்மா, கம்ருதீனை சந்திக்கும் போது என்ன நிகழும் என்பது அடுத்த எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும் ஒன்றும் நிகழவில்லை. ‘வாப்பா கம்ருதீன்.. நீ தொழில்ல நல்லா வரணும்.. படத்துல ஹீரோவை விட விழுமியத்துல ஹீரோவா வரணும்” என்று பாரு அம்மா சொன்னது சூசகமான அறிவுரை. “விழுமியன்னா என்னம்மா?” என்றார் கம்மு. (விழுமியம் என்றால் values - மனிதரின் உயர்ந்த பண்புகள்!)  “இந்த வீடு எனக்கு நிறைய கத்துக் குடுக்குது” என்று நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு கம்மு சொல்ல “எது நல்லது கெட்டதுன்னு உரசிப் பார்த்து தெரிஞ்சுக்கணும்” என்று இன்னொரு மறைமுக அட்வைஸ் தந்தார் பாருவின் அம்மா. (‘அவன் பொழுதன்னிக்கும் உரசர வேலையைத்தான் செய்யறான்’ என்று நல்லவேளையாக யாரும் சொல்லவில்லை!) ‘பாரு என்னுடைய பிரியமான எதிரி’ - விக்ரம் சர்காஸம் அமைதிப்படை அமாவாசை மாதிரி கம்மு அடிக்கடி பாரு அம்மா காலில் விழ “இதுவரைக்கும் ஏழு முறை விழுந்திருக்கான். இன்னமும் எத்தனை முறை விழப் போறான்னு பார்க்கணும்” என்று நக்கலடித்தார் விக்ரம். பிறகு “உங்க பொண்ணு பாருவை எனக்கு பிடிக்கும். பிரியமான எதிரி. ஆனா அவளை வேலை வாங்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. உங்க பொண்ணு ரேஞ்சுக்கு இங்க யாராலும் கேம் ஆட முடியாது” என்று பாரு அம்மாவிடம் சர்காஸ கிண்டல்களைத் தொடர்ந்தார் விக்ரம். (யம்மா.. ஒத்த ரோசா… பிள்ளைய நல்லா வளர்த்திருக்கீங்கம்மா!) BB Tamil 9 இன்னொரு பக்கம், காமிரா முன்பு பரிதாபமாக பேசிக் கொண்டிருந்தார் அரோரா. “என் ஃபேமில இருந்து யாரும் வரமாட்டாங்க. ரியாதான் எனக்கிருக்க ஒரே பிரெண்டு. அவளும் கோவிச்சுக்கிட்டு வர மாட்டா.. என் நாய்க்குட்டியையாவது பார்க்கணும்” என்று உருக்கமாக பேசிக் கொண்டிருந்த அரோவைப் பார்த்து பரிதாபமாக இருந்தது.  கார் விளம்பரத்தைத் தொடர்ந்து அரோவின் தோழி ரியா வந்து இறங்க அரோவிற்கு பயங்கர மகிழ்ச்சி. “ஆமாம்.. கோபமாத்தான் இருக்கேன்” என்று சிரித்தார் ரியா.  முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ரியா, அப்போதே வெளிப்படையான கேள்விகளை துடுக்குத்தனமாக கேட்பார். இப்போது விருந்தினராக வந்திருக்கிறார். எனவே கேட்கவே வேண்டாம். அரோவை அமர வைத்து சரமாரியாக குத்தினார்.  ‘இருக்கா.. இல்லையா.. தெளிவா சொல்லு’ - அரோவிடம் ரியா கறார்  “நீ துஷாரை லவ் பண்றியா.. இல்லையா.. ஓப்பனா சொல்லு..  எப்பப்பாரு துஷார்.. துஷார்.. ன்னு இம்சை பண்றே.. அது எதுவா வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். இப்ப அந்த விஷயத்தை உன் மூளைல இருந்து கழட்டி வெச்சிடு. உன்னை வெளியே அனுப்பணும்னு பாரு துடியா துடிக்கறா.. அதே மாதிரி உன் மனசுலயும் பழிவாங்கற உணர்ச்சி இருக்கு. ஆக்சுவலி பாருவிற்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும்.. அவதான் அந்த டிரையாங்கிளை முடிச்சு வெச்சா.. இப்பத்தான் நீ நல்லா விளையாட ஆரம்பிச்சிருக்கே. இப்படியே மெயின்டெயின் பண்ணு”... என்று அறிவுரை வழங்கினார் ரியா. “பாரு என்னை வெறுப்பேத்தறப்ப, வன்மத்தைக் கொட்டறப்ப மட்டும்தான் அவளை நாமினேட் பண்ணுவேன். அவ நல்லா கேம் ஆடும் போது பண்ண மாட்டேன்.. பாரு போக மாட்டான்னு தெரியும். எனக்கு இங்க செட் ஆக டைம் ஆயிடுது” என்று அரோ சமாளிக்க, “துஷார் கிட்ட மட்டும் ரெண்டே நாள்ல பிரெண்ட் ஆக முடிஞ்சதா?” என்று ரியா மடக்கியது சுவாரசியம்.  BB Tamil 9 “உனக்கு வெட்கம், மானம் ஏதாவது இருக்கா.. கம்ருதீன் உன்னை அப்படி வெச்சு செய்யறான்.. இன்னமும் அவன் கிட்ட போய் இளிச்சிட்டிருக்கே..” என்கிற மாதிரி ரியா கொதிக்க “துஷார் வெளியே போக நான்தான் காரணம்ன்னு அவன் சொன்னப்பவே எனக்கு விட்டுப் போச்சு. இப்பத்தான் அது ரிலையஸ் ஆச்சு” என்ற அரோவிடம் “பிக் பாஸ்ன்றது பெரிய வாய்ப்பு. சரியா ஆடு” என்று உபதேசத்தை முடித்துக் கொண்டார் ரியா.  பிறகு மற்ற போட்டியாளர்களுக்கு ரிப்போர்ட் தரும் போது “போன சீசன்ல இருந்து வெளியே வரவங்களை சபரி டிரோல் பண்ணுவான். இப்ப அவனையே இங்க காணலை” என்ற ரியா “அமித்.. பாரு கிட்ட இருந்து தள்ளியே இருங்க” என்று சொல்ல “என்னைப் பத்தி சொல்லாத.. ஸ்கிப் பண்ணிடு” என்று பம்மினார் பாரு. ரியா அதையும் மீறி சொல்லப் போக “நீ வெளியே வா… “ என்று ஜாலியாக மிரட்டினார் பாரு.  ‘என் கிட்ட நிறைய கருணை இருக்கு’ - பாரு சீரியஸ் காமெடி “கம்மு.. பார்வதிக்கு எப்பவும் ஒரு வன்மம் இருந்துட்டே இருக்கும். பிக் பாஸ்ல நூறு நாள் எப்படி இருக்கறதுன்னு தெளிவா பிளான் போட்டு வந்திருக்கா. யார் உள்ளே வந்தாலும் அவர்களை தனியாக ஓரங்கட்டி தன்னைப் பற்றி விசாரிப்பது பாருவின் வழக்கம். இப்போதும் அப்படியே ரியாவை ஓரங்கட்ட “நீங்க கரெக்ட்டா பிரெடிக்ட் பண்ணி ஆடுங்க. முதல்ல நல்லா இருந்துச்சு. அப்புறம் ரூட் மாறிடுச்சு.. ஒரு மாதிரியா இருக்கு. முதிர்ச்சியா கையாளுங்க” என்று மறைமுகமாக ரியா அட்வைஸ் செய்ய “கம்ரூதீனா?” என்று சுருக்கமாக கேட்டார் பாரு.  “உன் கிட்ட இருக்கற நல்ல பக்கம் எதுவுமே வெளில வரல. வெளில கெட்ட பெயர்தான் இருக்கு. நல்ல குணம் இருந்தாலும் கோபத்துல அது மறைஞ்சுடுது. யாரை வேண்டுமானாலும் கேமிற்காக தூக்கிப் போடுவீங்கன்ற மாதிரி தெரியுது. ரெண்டு பொண்ணுங்க ஒரு பையனுக்காக அடிச்சுக்கறது பார்க்க கேவலமா இருக்கு” என்று ரியா பொரிந்து தள்ள “என் கிட்ட நிறைய கருணை குணம் இருக்கு” என்று சமாளித்தார் பாரு. (ஏம்மா.. அந்த கருணைக்கிழங்கை ஒளிச்சியே வெச்சிட்டிருக்கீங்க?!) BB Tamil 9 ‘Am I being played by Kamruddin?’ என்று பாரு சுருக்கமாக கேட்பதின் மூலம் அவருக்கு கம்ருதீன் மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை என்பது தெரிகிறது. கம்ருதீனும் அதே மாதிரிதான் இருக்கிறார். “இவ எப்ப வேணா எனக்கு குல்லா போட்டுருவாடா” என்று நண்பர்களிடம் சொல்கிறார். இந்த மாதிரி காதலை வைத்துக் கொண்டு இருவரும் படுத்துகிற பாடு இருக்கே! கம்ருதீன் பற்றிய கேள்விக்கு “அது எனக்குத் தெரியாது” என்று சொல்லி எஸ்கேப் ஆனார் ரியா. ரியா விடைபெறும் போது “அவனைக் கேட்டதா சொல்லு” என்று அரோ காதில் ரகசியம் பேச “செருப்பு பிஞ்சிடும்” என்று சிரித்தார் ரியா. அந்த விசாரிப்பு துஷார் பற்றியதாக இருக்க வேண்டும். (அத்தனை சொல்லியும் திருந்தலையே மக்கா!) ‘வாங்க அக்கா.. ‘ கம்முவின் சகோதரியை பாசத்துடன் அழைத்த பாரு பாருவின் அம்மா உள்ளே இருக்கும் போதே கம்முவின் குடும்பத்தையும் சந்திக்க வைக்கும் சதித் திட்டத்தை சிறப்பாக தீட்டினார் பிக் பாஸ். தனது குடும்பம் உள்ளே வருவதை நெகிழ்வுடன் பார்த்தார். அப்போது வேறுவிதமான கம்முவைப் பார்க்க முடிந்தது. கம்முவின் சகோதரியை ‘வாங்க அக்கா’ என்று பாரு பாசத்துடன் அழைக்க “அக்கா?... நைஸ்..  தங்கச்சி” என்று சர்காஸமாக சிரித்தார், கம்முக்கா.  கம்முவின் சகோதரியும் நண்பனும் அமர்ந்திருக்க, பாரு வழக்கம் போல் எதையோ வாயை விட “அய்யோ.. நிறைய பேச முடியலையே.. சொல்லி அனுப்பிச்சாங்களே” என்று தவித்தார் கம்முவின் நண்பர்.  BB Tamil 9 “இத்தனை நாள் உனக்கு அக்கா ஞாபகம் வரலேல்ல.?” என்று குறும்பும் தீவிரமும் கலந்து விசாரித்தார் கம்முவின் அக்கா.  “பார்வதி என்னை அக்கான்னு கூப்பிடறா.. அப்படின்னா உனக்கு தங்கச்சிதானே?” என்று அவர் விசாரிக்க “ஆமாம்” என்று குறும்புடன் சிரித்தார் கம்மு. (அடப்பாவி உலக நடிப்புடா சாமி!) பிறகு தனியாக பேசும் போது “திவ்யா கூட ஏன் சண்டை போடறே?” என்று விசாரிக்கும் போது “அப்படியா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் கம்மு. (இன்னொரு அடப்பாவி!) “திவ்யாவும் பாருவும்தான் சண்டை போடறாங்க.. ஆனா அந்தக் கோபத்துலயும் அவங்க கிட்ட இருந்து தப்பான வார்த்தை வரதில்லை.. கவனிச்சியா.. சேரை தூக்கிப் போடற.. இது நம்ம வீடு இல்ல. இது வாழ்க்கையை தீர்மானிக்கற இடம் இல்ல. இந்த வாய்ப்புக்காக எத்தனை போ் வெயிட் பண்றாங்க.. சரியா பயன்படுத்திக்க. நீயும் சரியா பேசற. ஆனா பேசற விதம்தான் சரியில்ல” என்று கம்முவிற்கு சரமாரியாக அறிவுரை கிடைத்தது.  ‘இது குழந்தைங்க பார்க்கற ஷோ. ஒழுங்கா இருங்க” - எச்சரிக்கப்பட்ட பாரு - கம்மு கம்முவை தனியாக அழைத்துச் சென்ற நண்பர் “காமிரா இருக்கறதை மறந்துட்டியா.. ஒரு வரைமுறை இல்லையா.. ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாமா.. ஃபைனல் வரைக்கும் போகும் தகுதி இருக்கு. விட்றாத” என்று எச்சரித்தார். கம்முவின் அக்காவும் இதே அறிவுரையை “நம்ம வீட்லயும் குழந்தைங்க பார்க்கறாங்க” என்று சுட்டிக் காட்டியது சிறப்பு.  “அரோ.. உன்னை depend பண்ணி ஆடறா.. வெல் விஷரா அவ சொல்றதை எடுத்துக்காத. பாருவைக் கூட நம்பிடலாம் போல. ஆனா அரோ சரியான நேரம் பார்த்து பாயிண்ட் பாயிண்ட்டா பேசறா” என்று கம்முவிற்கு நண்பர் சொன்ன அட்வைஸ் சரியா என்று தெரியவில்லை. டிரையாங்கிள் ரொமான்ஸ் காரணமாக அரோவின் நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கம்முவிற்கு அரோ சொன்ன பல அறிவுரைகள் உண்மையானவை. ஆத்மார்த்தமான நட்பிலிருந்து எழுந்தவை.  BB Tamil 9 பிறகு பாருவையும் தனியாக அழைத்த கம்முவின் நண்பர் “நான் கம்முவோட அப்பாவா இருந்தா.. உங்க பக்கத்துலயே வந்திருக்க மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் பிரஜின்-சான்ட்ரா மாதிரி தம்பதி கிடையாது. இந்த ரிலேஷன்ஷிப் என்ன வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். ரெண்டு பேரும் தனியா கேம் ஆடுங்க. இது குழந்தைங்க பார்க்கற ஷோ” என்று சூசகமாகவும் சரியாகவும் அட்வைஸ் செய்தார்.  பாருவிற்கும் கம்ருதீனுக்கும் பரஸ்பரம் நம்பிக்கையில்லை. இந்த ஆட்டத்தின் சர்வவைவல் காரணமாக ‘காதல்’ என்கிற வஸ்துவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பிக் பாஸ் முடிந்தவுடன் இந்த ரொமான்ஸூம் முடிந்து விடும் என்பது இருவருக்குமே நன்றாகத் தெரியும். என்றாலும் வலிக்காத மாதிரி இவர்கள் ஆடும் நாடகம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.  பாருவின் அம்மா என்ன மாதிரியான அறிவுரையை தன் மகளுக்கு தந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

விகடன் 26 Dec 2025 12:58 pm

உண்மை தெரியாமல் நிலா மீது கோபப்படும் பல்லவன், ஆத்திரத்தில் பொங்கிய வானதி –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவால் பிடிக்கவே முடியவில்லை. பின் வீட்டில் யாரிடமும் நிலா உண்மை சொல்லாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் பல்லவன், தன்னுடைய அம்மா காணவில்லை என்று வீடு முழுவதும் தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. நடேசன் தான் இதெல்லாம் செய்திருப்பார் என்று தன்னுடைய அப்பாவிடம் கோபப்பட்டார். ஆனால், நடேசன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். நிலா எந்த உண்மையும் சொல்ல முடியாமல் பல்லவனை சமாதானம் செய்தார். பல்லவன், தன் அம்மா வீட்டை […] The post உண்மை தெரியாமல் நிலா மீது கோபப்படும் பல்லவன், ஆத்திரத்தில் பொங்கிய வானதி – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 12:49 pm

BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா, விக்ரம் ஆகியோரின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பீட் பாக்ஸை இதோட நிப்பாட்டு. நல்லாவே இல்ல, அதை பண்ணாத. பாரு, சாண்ட்ராவை நம்பாத. யாரை நீ ரொம்ப நம்புறியோ அவங்கதான் உனக்குக் கெடுதல் நினைப்பாங்க. BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள் விக்ரம்கிட்ட நீ எப்படி இருக்கியோ அதே மாதிரி வினோத் அண்ணா, கம்ருதீன் கிட்டயும் இரு. பாருவை எப்படி எதிர்த்து பேசுனியோ அதே மாதிரி பேசு. நீ ரொம்ப பயந்தவ மாதிரி இருக்க என்று சுபிக்ஷாவின் தம்பி அட்வைஸ் கொடுக்கிறார். BB Tamil 9 உன்னைய பத்தி யாராச்சும் பேசுனா. அவங்களை எதிர்த்து பேசு. கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க. சிங்கப்பெண்ணுங்கிற பேரு இந்த வீட்டில உனக்கு இல்லையேமா? என சுபிக்ஷவின் அப்பாவும் அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

விகடன் 26 Dec 2025 12:46 pm

விஜய் : எனக்கு இது One Last Chance - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜனநாயகன் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இசை வெளியீட்டு விழா நாளை ( டிச.27) மலேசியாவில் நடைபெற இருக்கிறது. 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (டிச. 26) செய்தியாளர்களைச் சந்தித்தது பேசிய அனிருத், 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா நாளைக்கு மலேசியாவில நடக்குது. இசையமைப்பாளர் அனிருத் ரொம்ப ஆர்வமா இருக்கேன். கிட்டதட்ட 80,000 பேர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறாங்க. பர்பாமன்ஸ் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். இது விஜய் சாரோட எனக்கு 'One Last Chance'. எங்க காம்பினேஷன்ல வந்த எல்லாப் பாட்டும் ஹிட் தான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 26 Dec 2025 11:31 am

விஜய் : எனக்கு இது One Last Chance - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜனநாயகன் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இசை வெளியீட்டு விழா நாளை ( டிச.27) மலேசியாவில் நடைபெற இருக்கிறது. 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (டிச. 26) செய்தியாளர்களைச் சந்தித்தது பேசிய அனிருத், 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா நாளைக்கு மலேசியாவில நடக்குது. இசையமைப்பாளர் அனிருத் ரொம்ப ஆர்வமா இருக்கேன். கிட்டதட்ட 80,000 பேர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறாங்க. பர்பாமன்ஸ் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். இது விஜய் சாரோட எனக்கு 'One Last Chance'. எங்க காம்பினேஷன்ல வந்த எல்லாப் பாட்டும் ஹிட் தான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 26 Dec 2025 11:31 am

விஜய் : எனக்கு இது One Last Chance - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜனநாயகன் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இசை வெளியீட்டு விழா நாளை ( டிச.27) மலேசியாவில் நடைபெற இருக்கிறது. 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (டிச. 26) செய்தியாளர்களைச் சந்தித்தது பேசிய அனிருத், 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா நாளைக்கு மலேசியாவில நடக்குது. இசையமைப்பாளர் அனிருத் ரொம்ப ஆர்வமா இருக்கேன். கிட்டதட்ட 80,000 பேர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறாங்க. பர்பாமன்ஸ் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். இது விஜய் சாரோட எனக்கு 'One Last Chance'. எங்க காம்பினேஷன்ல வந்த எல்லாப் பாட்டும் ஹிட் தான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 26 Dec 2025 11:31 am

தாத்தா எடுத்த அதிரடி முடிவால் வேதனைப்படும் காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் பாட்டி, அவன் ஆபீசிலும் கவனம் வைக்க மாட்டான். நீங்கள் இங்கிருந்து கொண்டு ஏன் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் சாரதாவிற்கு ரொம்பவே கஷ்டமாகிறது.இன்னொரு பக்கம் விஜய், காவிரி இருவரும் ஆபிஸ் பிரச்சனை எப்படி சரி செய்வது என்று தன்னுடைய ஆபீஸில் வேலை செய்பவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் விஜய், கஸ்டமர்ஸ் எல்லாம் சந்தித்து பேச வந்தார். ஆனால், யாருமே விஜய் சொல்வதை […] The post தாத்தா எடுத்த அதிரடி முடிவால் வேதனைப்படும் காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 11:05 am

BB Tamil 9: உன்னை எமோஷனலா டவுன் பண்ண பாக்குறாங்க - எச்சரிக்கும் விக்ரம் அம்மா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா, ஆகியோரின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் விக்ரம் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். விக்ரம் அம்மாவிடம், என்ன வேலை வாங்கிட்டே இருக்கான் ஆண்டி என பார்வதி சொல்கிறார். BB Tamil 9: வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல- கம்ருதீன் அக்கா அட்வைஸ் நீ வாக்குவாதம் பண்ற அந்த 2 நிமிஷத்துல அந்த வேலைய பண்ணிரலாமே பாரு. உன்னை மாதிரி ஒரு அக்கா விக்ரமுக்கு இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் விளையாடிருப்பான் என விக்ரம் அம்மா சொல்லி சிரிக்கிறார். BB Tamil 9 என்னால எப்படியெல்லாம் 100 சதவிகிதம் தரமுடியுமோ அப்படிலாம் நான் தந்திட்டுதான் இருக்கேன் என விக்ரம் சொல்ல, நீ அழுகிறதுதான் பார்க்க கஷ்டமா இருக்கு என விக்ரம் அப்பா எமோஷனலாகிறார். உன்னை எமோஷனலா டவுன் பண்ண பாக்குறாங்க என விக்ரம் அம்மா சொல்கிறார்.

விகடன் 26 Dec 2025 10:27 am

சுந்தரவல்லிக்கு பதிலடி கொடுத்த சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா அசோகன் மூவரும் உட்கார்ந்து அம்மா என்னை திட்டம் போட்டு இருப்பாங்க என்று பேசிக்கொண்டு இருக்க...

தஸ்தர் 26 Dec 2025 8:30 am

சுந்தரவல்லிக்கு பதிலடி கொடுத்த சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா அசோகன் மூவரும் உட்கார்ந்து அம்மா என்னை திட்டம் போட்டு இருப்பாங்க என்று பேசிக்கொண்டு இருக்க...

தஸ்தர் 26 Dec 2025 8:30 am

முத்து மீனா சொன்ன வார்த்தை, மனோஜ் எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா என்ன தப்பு செய்தா என்று அண்ணாமலை கேட்க பார்வதி வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் முத்து மீனா சொல்லி விடுகின்றனர் உடனே அண்ணாமலை இதெல்லாம் உனக்கு தேவையா விஜயா முத்து மீனா மேல வர பழி போடுற இது மாதிரி நீ பார்வதி மேல சொல்றது ரொம்ப தப்பு...

தஸ்தர் 26 Dec 2025 8:17 am

மாதவிடாய் தீட்டு கிடையாது, பெண்களுக்கு கொடுத்த கடவுள் வரம் –நடிகை அர்ச்சனா ஓபன் டாக்

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் அர்ச்சனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ராஜா ராணி 2 என்ற சீரியலில் வில்லியாக அர்ச்சனா இருந்தார். இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலின் மூலம் அர்ச்சனாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. இதை அடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் வைல்ட் கார்ட் […] The post மாதவிடாய் தீட்டு கிடையாது, பெண்களுக்கு கொடுத்த கடவுள் வரம் – நடிகை அர்ச்சனா ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 8:58 pm

கோலாகலமாக நடக்கும் சேது-தமிழ்செல்வியின் இரண்டாவது திருமண நாள் –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, எப்படியாவது காவியாமிடம் இருந்து பணத்தை எல்லாம் வாங்க வேண்டும். அதற்காக பொறுத்துக் கொண்டு இரு என்றார். இதனால் போஸ் கோபத்தை குறைத்துக் கொண்டார். பின் காவியாவிடம் சென்று போஸ் மன்னிப்பு கேட்டார். ஆனால், காவியா நம்பவில்லை. இருந்தாலும் போசை திட்டி விட்டு வேலைக்கு கிளம்ப சொன்னார். இன்னொரு பக்கம் கருப்பன்- சேது இருவரும் ஊரில் 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். பின் […] The post கோலாகலமாக நடக்கும் சேது-தமிழ்செல்வியின் இரண்டாவது திருமண நாள் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 8:18 pm

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வந்த ‘சிறை’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம் பிரபு. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சிறை. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் லலிதா குமார் தயாரித்திருக்கிறார்.கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு இன்று வெளியாகியிருக்கும் சிறை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ஹீரோ விக்ரம் பிரபு காவல் துறையில் அதிகாரியாக இருக்கிறார். சிறையில் உள்ள […] The post உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வந்த ‘சிறை’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 7:09 pm

அருண் விஜய்யின் இரட்டை வேடத்தில் வெளியாகி இருக்கும் ‘ரெட்ட தல’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெட்ட தல. இந்த படத்தில் சித்தி இதானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான்விஜய், பாலாஜி முருகதாஸ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை க்ரிஷ் திருக்குமரன் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு […] The post அருண் விஜய்யின் இரட்டை வேடத்தில் வெளியாகி இருக்கும் ‘ரெட்ட தல’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 6:15 pm

தலைவர் 173 அறிவிப்பு என்னாச்சு ? தாமதம் ஏன் ? யோசனையில் ரஜினிகாந்த் ?

தலைவர் 173 அறிவிப்பு என்னாச்சு ? தாமதம் ஏன் ? யோசனையில் ரஜினிகாந்த் ? சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து சில இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டார். அவ்வகையில் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சொன்ன கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருக்கிபேர் ரஜினி....

தஸ்தர் 25 Dec 2025 5:30 pm

தலைவர் 173 அறிவிப்பு என்னாச்சு ? தாமதம் ஏன் ? யோசனையில் ரஜினிகாந்த் ?

தலைவர் 173 அறிவிப்பு என்னாச்சு ? தாமதம் ஏன் ? யோசனையில் ரஜினிகாந்த் ? சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து சில இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டார். அவ்வகையில் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சொன்ன கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருக்கிபேர் ரஜினி....

தஸ்தர் 25 Dec 2025 5:30 pm

ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது

ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்கிடையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்தனர். சில முன்னணி இயக்குநர்களும் அவரை வைத்து படம் இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினர். குறிப்பாக சுதா கொங்கரா, மலையாள சினிமா இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்...

தஸ்தர் 25 Dec 2025 5:19 pm

மீனாவிடம் கடுமையாக பேசும் செந்தில், மனவேதனையில் சரவணன் செய்தது –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், பாண்டியன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அதை பார்த்த சக்திவேல், வேண்டும் என்று பாண்டியன் குடும்பத்தை கேவலப்படுத்தி தனக்கு தெரிந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார். பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் சரவணன், வாழ்க்கை நினைத்து கோமதி அழுது கொண்டிருந்தார். பின் கதிர்- ராஜி இருவருமே கோமதிக்கு ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலும் கோமதியின் மனது கேட்கவில்லை. தன் மகனின் வாழ்க்கை என்ன ஆகுமோ? […] The post மீனாவிடம் கடுமையாக பேசும் செந்தில், மனவேதனையில் சரவணன் செய்தது – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 5:16 pm

விரைவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’: இயக்குநர் பொன்ராம் தகவல்

விரைவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’: இயக்குநர் பொன்ராம் தகவல் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்து வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்த...

தஸ்தர் 25 Dec 2025 5:13 pm

‘சிறை’படத்தில் விக்ரம் பிரபுவின் அர்ப்பணிப்பு: இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் பேச்சு

‘சிறை’ படத்தில் விக்ரம் பிரபுவின் அர்ப்பணிப்பு: இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் பேச்சு விக்ரம் பிரபு, புதுமுகம் அக்‌ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள ‘சிறை’ படத்தை ‘டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக...

தஸ்தர் 25 Dec 2025 5:09 pm

காவிரி செய்த விஷயத்தால் பெருமூச்சு விடும் விஜய், அவமானத்தில் சாரதா –பரபரப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், தன்னுடைய தாத்தா பாட்டியிடம் எடுத்து சொல்லி புரிய வைத்தார். இது எல்லாம் கங்கா கேட்டு விட்டார். பின் இதைப்பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி கங்கா வருத்தப்பட்டார். சாரதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.அதற்குப்பின் விஜய் தலை வலிக்கிறது என்று சொல்வதால் காவேரி காபி போட்டு கொடுத்து தலையை பிடித்து விட்டார். காவேரி, என்னால் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை. சீக்கிரமாகவே சரி செய்து விடலாம் என்றார். கங்கா, சாரதா இருவருமே […] The post காவிரி செய்த விஷயத்தால் பெருமூச்சு விடும் விஜய், அவமானத்தில் சாரதா – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 4:05 pm

BB Tamil 9: வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல- கம்ருதீன் அக்கா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ் BB Tamil 9 இந்நிலையில் தற்போது கம்ருதீனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். அக்காவையே மறந்திட்டியே தம்பி. வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல. வரும்போது பாரு வாங்க அக்கான்னு சொன்னாங்க. சரிம்மா தங்கச்சின்னு சொன்னேன் என கம்ருதீன் அக்கா சிரித்துக்கொண்டே பேசுகிறார்.

விகடன் 25 Dec 2025 3:39 pm

BB Tamil 9: வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல- கம்ருதீன் அக்கா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ் BB Tamil 9 இந்நிலையில் தற்போது கம்ருதீனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். அக்காவையே மறந்திட்டியே தம்பி. வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல. வரும்போது பாரு வாங்க அக்கான்னு சொன்னாங்க. சரிம்மா தங்கச்சின்னு சொன்னேன் என கம்ருதீன் அக்கா சிரித்துக்கொண்டே பேசுகிறார்.

விகடன் 25 Dec 2025 3:39 pm

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு சில கட்டுப்பாடுகள்..!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. கே.வி.என் ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய...

தஸ்தர் 25 Dec 2025 3:04 pm

ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!

சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி). வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே 'உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும்' எனக் கூறி தடை போட்டுவிடுகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அந்தச் சமயத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள். உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன, உபேந்திராவின் உண்மையான முகம் என்ன என்பதுதான் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த 'ரெட்ட தல' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! ஸ்டைலான உடல்மொழி, காதலியின் பணத்தாசையை நினைத்து உடைந்து போகும் இடம், வில்லன் முகம் காட்டும் இடம் என இரட்டை வேடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய். ஆனால், அந்த அலட்டல் நடிப்பில் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய அருண் விஜய்யே தென்படுகிறார். அதீத நடிப்பையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பணத்தின் மீது பேராசை கொண்டவராக வரும் நாயகி சித்தி இத்நானி இந்த 'கிரே ஷேட்' பாத்திரத்தில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். வழக்கமான கதாபாத்திரத்தில் ஜான் விஜய், செயற்கையான உடல்மொழி, அதைவிடச் செயற்கையான வசன ஏற்ற இறக்கங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் என ஏமாற்றமே தருகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?! லாங் ஷாட்களாலும், ஆர்ப்பாட்டமில்லாமல் நம் ரசனையைக் கவரும் தனித்துவமான லைட்டிங்காலும் படத்திற்கு நல்லதொரு திரைமொழியை அமைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரிக்கோல் கட்களின் கூர்மையைக் கவனிக்கத் தவறியதனால் 2 மணி நேரத்திற்குள்ளிருந்தாலும் நீண்ட நேரம் பார்த்த அயர்ச்சியை உண்டாக்குகிறது படம். ஆக்ஷன் காட்சிகள் நல்லதொரு தரத்திலிருந்தாலும், அதனை வெளிச்சமிட்டுக் காட்ட வீரியமான காட்சிகள் இல்லாததால், தாக்கம் உண்டாக்காமல் மறைந்து போகின்றன. ரெட்ட தல விமர்சனம் | Retta thala review இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 'கண்ணம்மா' பாடலில் வைப் வால்யூமை ஏற்றியிருந்தாலும் படத்துக்கு அது அநாவசியமே! க்ளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசையில் மட்டும் சர்ப்ரைஸ் செய்பவர், மற்ற இடங்களிலும் பளிச்சிடும் புதுமை 'கீ' களை அழுத்தாதது மைனஸ்! இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இந்தச் சுவாரஸ்ய புள்ளியை வைத்து அடுத்தடுத்து கட்டமைக்கப்பட வேண்டிய பரபர தருணங்கள் திரைக்கதை பக்கங்களில் காணாமல் போனதுதான் ஏமாற்றமே!  Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது. ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்... ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்! ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் 'டாடா, பை பை' என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே இல்லாமல் போவது மற்றுமொரு பெரிய மைனஸ்! ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களைக் கொண்டு வந்திருக்கும் ஐடியாவுக்கு லைக்ஸ்... ஆனால், அதன் அதீத பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமே! நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த 'ரெட்ட தல'-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை. இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்! - அருண் விஜய் ஷேரிங்ஸ்

விகடன் 25 Dec 2025 2:56 pm

ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!

சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி). வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே 'உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும்' எனக் கூறி தடை போட்டுவிடுகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அந்தச் சமயத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள். உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன, உபேந்திராவின் உண்மையான முகம் என்ன என்பதுதான் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த 'ரெட்ட தல' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! ஸ்டைலான உடல்மொழி, காதலியின் பணத்தாசையை நினைத்து உடைந்து போகும் இடம், வில்லன் முகம் காட்டும் இடம் என இரட்டை வேடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய். ஆனால், அந்த அலட்டல் நடிப்பில் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய அருண் விஜய்யே தென்படுகிறார். அதீத நடிப்பையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பணத்தின் மீது பேராசை கொண்டவராக வரும் நாயகி சித்தி இத்நானி இந்த 'கிரே ஷேட்' பாத்திரத்தில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். வழக்கமான கதாபாத்திரத்தில் ஜான் விஜய், செயற்கையான உடல்மொழி, அதைவிடச் செயற்கையான வசன ஏற்ற இறக்கங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் என ஏமாற்றமே தருகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?! லாங் ஷாட்களாலும், ஆர்ப்பாட்டமில்லாமல் நம் ரசனையைக் கவரும் தனித்துவமான லைட்டிங்காலும் படத்திற்கு நல்லதொரு திரைமொழியை அமைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரிக்கோல் கட்களின் கூர்மையைக் கவனிக்கத் தவறியதனால் 2 மணி நேரத்திற்குள்ளிருந்தாலும் நீண்ட நேரம் பார்த்த அயர்ச்சியை உண்டாக்குகிறது படம். ஆக்ஷன் காட்சிகள் நல்லதொரு தரத்திலிருந்தாலும், அதனை வெளிச்சமிட்டுக் காட்ட வீரியமான காட்சிகள் இல்லாததால், தாக்கம் உண்டாக்காமல் மறைந்து போகின்றன. ரெட்ட தல விமர்சனம் | Retta thala review இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 'கண்ணம்மா' பாடலில் வைப் வால்யூமை ஏற்றியிருந்தாலும் படத்துக்கு அது அநாவசியமே! க்ளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசையில் மட்டும் சர்ப்ரைஸ் செய்பவர், மற்ற இடங்களிலும் பளிச்சிடும் புதுமை 'கீ' களை அழுத்தாதது மைனஸ்! இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இந்தச் சுவாரஸ்ய புள்ளியை வைத்து அடுத்தடுத்து கட்டமைக்கப்பட வேண்டிய பரபர தருணங்கள் திரைக்கதை பக்கங்களில் காணாமல் போனதுதான் ஏமாற்றமே!  Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது. ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்... ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்! ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் 'டாடா, பை பை' என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே இல்லாமல் போவது மற்றுமொரு பெரிய மைனஸ்! ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களைக் கொண்டு வந்திருக்கும் ஐடியாவுக்கு லைக்ஸ்... ஆனால், அதன் அதீத பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமே! நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த 'ரெட்ட தல'-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை. இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்! - அருண் விஜய் ஷேரிங்ஸ்

விகடன் 25 Dec 2025 2:56 pm

ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!

சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி). வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே 'உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும்' எனக் கூறி தடை போட்டுவிடுகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அந்தச் சமயத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள். உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன, உபேந்திராவின் உண்மையான முகம் என்ன என்பதுதான் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த 'ரெட்ட தல' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! ஸ்டைலான உடல்மொழி, காதலியின் பணத்தாசையை நினைத்து உடைந்து போகும் இடம், வில்லன் முகம் காட்டும் இடம் என இரட்டை வேடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய். ஆனால், அந்த அலட்டல் நடிப்பில் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய அருண் விஜய்யே தென்படுகிறார். அதீத நடிப்பையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பணத்தின் மீது பேராசை கொண்டவராக வரும் நாயகி சித்தி இத்நானி இந்த 'கிரே ஷேட்' பாத்திரத்தில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். வழக்கமான கதாபாத்திரத்தில் ஜான் விஜய், செயற்கையான உடல்மொழி, அதைவிடச் செயற்கையான வசன ஏற்ற இறக்கங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் என ஏமாற்றமே தருகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?! லாங் ஷாட்களாலும், ஆர்ப்பாட்டமில்லாமல் நம் ரசனையைக் கவரும் தனித்துவமான லைட்டிங்காலும் படத்திற்கு நல்லதொரு திரைமொழியை அமைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரிக்கோல் கட்களின் கூர்மையைக் கவனிக்கத் தவறியதனால் 2 மணி நேரத்திற்குள்ளிருந்தாலும் நீண்ட நேரம் பார்த்த அயர்ச்சியை உண்டாக்குகிறது படம். ஆக்ஷன் காட்சிகள் நல்லதொரு தரத்திலிருந்தாலும், அதனை வெளிச்சமிட்டுக் காட்ட வீரியமான காட்சிகள் இல்லாததால், தாக்கம் உண்டாக்காமல் மறைந்து போகின்றன. ரெட்ட தல விமர்சனம் | Retta thala review இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 'கண்ணம்மா' பாடலில் வைப் வால்யூமை ஏற்றியிருந்தாலும் படத்துக்கு அது அநாவசியமே! க்ளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசையில் மட்டும் சர்ப்ரைஸ் செய்பவர், மற்ற இடங்களிலும் பளிச்சிடும் புதுமை 'கீ' களை அழுத்தாதது மைனஸ்! இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இந்தச் சுவாரஸ்ய புள்ளியை வைத்து அடுத்தடுத்து கட்டமைக்கப்பட வேண்டிய பரபர தருணங்கள் திரைக்கதை பக்கங்களில் காணாமல் போனதுதான் ஏமாற்றமே!  Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது. ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்... ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்! ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் 'டாடா, பை பை' என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே இல்லாமல் போவது மற்றுமொரு பெரிய மைனஸ்! ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களைக் கொண்டு வந்திருக்கும் ஐடியாவுக்கு லைக்ஸ்... ஆனால், அதன் அதீத பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமே! நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த 'ரெட்ட தல'-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை. இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்! - அருண் விஜய் ஷேரிங்ஸ்

விகடன் 25 Dec 2025 2:56 pm

கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தை பகிர்ந்த சிஎம் ஸ்டாலின்..!

கிரிக்கெட்டில் நடிகர் சிலம்பரசனின் விக்கெட்டை எடுத்ததாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ் சினிமாவில் நடிப்பையும் தாண்டி அவர்கள் அவர்களது தனித்திறமையைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதல்வராக இருந்து வரும் ஸ்டாலின் அவர்களும் அவரது கிரிக்கெட் திறமை குறித்து பேசி உள்ளார். அடிக்கடி நட்சத்திர கிரிக்கெட் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அணிகளாகப் பிரிந்து விளையாடி வருவது வழக்கம். அப்போது சிஎம் ஸ்டாலின் அவர்களும் ஒரு அணியில் விளையாடியுள்ளார்....

தஸ்தர் 25 Dec 2025 2:52 pm

சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!

2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது. இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், அவர் குற்றவாளியானது எப்படி, இறுதியில் இருவருக்கும் என்ன நேர்கிறது என்பதே அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் 'சிறை' படத்தின் கதை. சிறை விமர்சனம் | Sirai Review தன் திறன் மீதான தன்னம்பிக்கை, சட்டத்தின் முன் நேர்மை, கோபத்தை அடக்கி வைக்கும் தருணம், பிறருக்காக மனமிறங்கும் தருணம் என முழுக்க முழுக்க முதிர்ச்சியான அணுகுமுறையைக் கோரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. படம் முழுவதும் பரிதாபத்தைக் கோரும் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார். Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி துயரம் தோய்ந்த முகம், மெல்லிய குரல் என ஒரே மாதிரியான உடல்மொழிதான் என்றாலும், அவற்றுக்குள் குற்றவுணர்வு, காதல், ஆற்றாமை, ஆக்ரோஷம் என அழுத்தமான பங்களிப்பைச் செய்து, தன் அறிமுகத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் அக்ஷய். வெல்கம் அக்ஷய்! பெரும்பாலும் கண்ணீரும் கம்பலையுமாகவே வந்தாலும், காதல், பிடிவாதம், மனவுறுதி, ஆக்ரோஷம் என உருமாறும் அக்கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து, தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் அனிஷ்மா அனில்குமார். ஆங்காங்கே அவர் பேச்சில் எட்டிப் பார்க்கும் மலையாள வாடையைத் தவிர்த்திருக்கலாம். சிறை விமர்சனம் | Sirai Review அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ், அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு, இஸ்மத் பானுவின் கணவராக நடித்தவர், காவலராக ஹரிஷங்கர் நாராயணன் எனத் துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் கதையின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் துணை நின்றிருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் வரும் மூணாறு ரமேஷ் தன் வசனத்தால் கிளாப்ஸ் அள்ளுகிறார். Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும் பாதி இரவு நேரக் காட்சிகள், பயணங்கள், துரத்தல்கள் என நகர்ந்தாலும், நேர்த்தியான ஒளியமைப்பால் உணர்வுகளையும், பதற்றத்தையும் ஒரு சேரக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். குறிப்பாக, தொடக்கத்தில் பேருந்துக்குள் நிகழும் சண்டையைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி! விறுவிறுப்பையும், பதைபதைப்பையும் நழுவவிடாமல், இழுத்துக் கட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். கதாபாத்திரங்களின் உணர்வுகளை மென்மையாகப் பேசுகின்றன ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள். பரபரப்பிற்கான வேகத்தையும், உணர்வுகளுக்கான இறுக்கத்தையும் கொண்டுவந்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. 2000களின் தொடக்கக் கால பேருந்துகள், அக்கால நீதிமன்றம், ஆயுதப்படை பயிற்சித்தளம் எனக் கதையுலகின் எதார்த்தத்திற்குக் கைகொடுத்திருக்கிறது வர்ஷினி சங்கரின் தயாரிப்பு வடிவமைப்பு. சிறை விமர்சனம் | Sirai Review முதல் ஒரு சில காட்சிகளிலேயே பரபரப்பைப் பற்ற வைத்து, திரைக்கதையின் விறுவிறு தன்மைக்கு தயார்ப்படுத்தி, பிரதான கதாபாத்திரத்தின் அகத்தையும் அறிமுகம் செய்கிறது படம். அதைத் தொடர்ந்து, யூகிக்கும்படியான பாதையிலேயே நகர்கிறது திரைக்கதை. எதிர்பார்த்த திருப்பங்களும், காட்சிகளும் அடுத்தடுத்து வந்தாலும், அக்காட்சிகளில் விரியும் கதாபாத்திரங்களும், அதன் வழியாகப் பின்னப்படும் பின்கதைகளும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு உணர்வுபூர்வமான கதைக்குள் காவல்துறையின் கட்டமைப்பு, அதன் படிநிலை, நீதித்துறையின் செயல்பாடுகள் போன்றவற்றையும் தெளிவாகவும், காட்சிகளோடு இயைந்த படியும் பேசுகிறது சுரேஷ் ராஜகுமாரி, தமிழ் ஆகியோரின் திரைக்கதை. இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாகி, வெவ்வேறு மனமாற்றங்களை அடையும் கதாபாத்திரங்கள், திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கின்றன. சிறை விமர்சனம் | Sirai Review முதல் காட்சியிலிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து இறுதிக்காட்சியில் வேறு நிலைப்பாட்டிற்கு மாறும் காவலர் கதிரவன், தன் நோக்கத்திற்காக மூர்க்கமான மனநிலையிலிருக்கும் அனிஷ்மா, அதே நோக்கத்திற்காகச் சாந்தமான மனநிலையிலிருக்கும் அக்ஷய் எனக் கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட விதம் பெரும் பலம். அதேநேரம், சில காட்சிகள் பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுகளிலும், பேசும் வசனங்களிலும் நம்பகத்தன்மை இல்லை. அதனால், அதுவரை எதார்த்த ரோட்டில் ஓடிய திரைக்கதை, அவ்விடங்களில் நாடகத்தன்மைக்கு வழிமாறுகின்றன. அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! இந்தியா முழுவதும் துன்பப்படும் விசாரணைக் கைதிகளின் நிலை, சமூகத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகும் சிறுபான்மையினர், காவல்துறையாலும் நீதித்துறையாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை ஏழைகள் எனப் பல அரசியல் அடுக்குகளை அழுத்தமாகப் பேசுகிறது படம். ஈழத்தமிழர்களுக்காகத் தன்னை மாய்த்துக்கொண்ட தமிழகத் தமிழர் அப்துல் ராவூஃப் பற்றிய மேற்கொள், சிறுபான்மையினரின் அன்றாட வழிப்பாட்டு முறைகளைக் கூட அந்நியமாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலையை விளக்கும் காட்சிகள் போன்றவை துருத்திக்கொண்டு நின்றாலும், அவை கதைக்கருவின் ஆன்மாவை அழுத்தமாகப் பேசுகின்றன. பிரதான கதாபாத்திரங்களின் மனவோட்டத்தின் வழியாக, பார்வையாளர்களையும் பதற வைக்கிறது இறுதிக்காட்சி. காவலர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை வைத்து, எளியவர்களுக்கு உதவச் சொல்லுகிறது இறுதிக்காட்சி. சிறை விமர்சனம் | Sirai Review ஆயுதப்படைகளின் அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது, அது எளிதில் சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றினாலும், காவல்துறைக்குள் ஏற்பட வேண்டிய சீர்திருத்தமாகவும், எளிய மக்களுக்கான நம்பிக்கை கீற்றாகவும் கவனிக்க வைக்கிறது. பரபரப்பு, எமோஷன் என இரண்டையும் கச்சிதமாகக் கொண்டுவந்து, திரையனுபவமாகவும், சமூக கருத்தாகவும் கவர்ந்து, நம் மனதைச் சிறைபிடிக்கிறது இந்த 'சிறை'. ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்: சாதிய பாகுபாட்டினைப் பேசும் நல்லதொரு எழுத்து; ஆனால், திரைமொழி?!

விகடன் 25 Dec 2025 2:02 pm

சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!

2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது. இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், அவர் குற்றவாளியானது எப்படி, இறுதியில் இருவருக்கும் என்ன நேர்கிறது என்பதே அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் 'சிறை' படத்தின் கதை. சிறை விமர்சனம் | Sirai Review தன் திறன் மீதான தன்னம்பிக்கை, சட்டத்தின் முன் நேர்மை, கோபத்தை அடக்கி வைக்கும் தருணம், பிறருக்காக மனமிறங்கும் தருணம் என முழுக்க முழுக்க முதிர்ச்சியான அணுகுமுறையைக் கோரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. படம் முழுவதும் பரிதாபத்தைக் கோரும் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார். Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி துயரம் தோய்ந்த முகம், மெல்லிய குரல் என ஒரே மாதிரியான உடல்மொழிதான் என்றாலும், அவற்றுக்குள் குற்றவுணர்வு, காதல், ஆற்றாமை, ஆக்ரோஷம் என அழுத்தமான பங்களிப்பைச் செய்து, தன் அறிமுகத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் அக்ஷய். வெல்கம் அக்ஷய்! பெரும்பாலும் கண்ணீரும் கம்பலையுமாகவே வந்தாலும், காதல், பிடிவாதம், மனவுறுதி, ஆக்ரோஷம் என உருமாறும் அக்கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து, தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் அனிஷ்மா அனில்குமார். ஆங்காங்கே அவர் பேச்சில் எட்டிப் பார்க்கும் மலையாள வாடையைத் தவிர்த்திருக்கலாம். சிறை விமர்சனம் | Sirai Review அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ், அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு, இஸ்மத் பானுவின் கணவராக நடித்தவர், காவலராக ஹரிஷங்கர் நாராயணன் எனத் துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் கதையின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் துணை நின்றிருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் வரும் மூணாறு ரமேஷ் தன் வசனத்தால் கிளாப்ஸ் அள்ளுகிறார். Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும் பாதி இரவு நேரக் காட்சிகள், பயணங்கள், துரத்தல்கள் என நகர்ந்தாலும், நேர்த்தியான ஒளியமைப்பால் உணர்வுகளையும், பதற்றத்தையும் ஒரு சேரக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். குறிப்பாக, தொடக்கத்தில் பேருந்துக்குள் நிகழும் சண்டையைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி! விறுவிறுப்பையும், பதைபதைப்பையும் நழுவவிடாமல், இழுத்துக் கட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். கதாபாத்திரங்களின் உணர்வுகளை மென்மையாகப் பேசுகின்றன ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள். பரபரப்பிற்கான வேகத்தையும், உணர்வுகளுக்கான இறுக்கத்தையும் கொண்டுவந்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. 2000களின் தொடக்கக் கால பேருந்துகள், அக்கால நீதிமன்றம், ஆயுதப்படை பயிற்சித்தளம் எனக் கதையுலகின் எதார்த்தத்திற்குக் கைகொடுத்திருக்கிறது வர்ஷினி சங்கரின் தயாரிப்பு வடிவமைப்பு. சிறை விமர்சனம் | Sirai Review முதல் ஒரு சில காட்சிகளிலேயே பரபரப்பைப் பற்ற வைத்து, திரைக்கதையின் விறுவிறு தன்மைக்கு தயார்ப்படுத்தி, பிரதான கதாபாத்திரத்தின் அகத்தையும் அறிமுகம் செய்கிறது படம். அதைத் தொடர்ந்து, யூகிக்கும்படியான பாதையிலேயே நகர்கிறது திரைக்கதை. எதிர்பார்த்த திருப்பங்களும், காட்சிகளும் அடுத்தடுத்து வந்தாலும், அக்காட்சிகளில் விரியும் கதாபாத்திரங்களும், அதன் வழியாகப் பின்னப்படும் பின்கதைகளும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு உணர்வுபூர்வமான கதைக்குள் காவல்துறையின் கட்டமைப்பு, அதன் படிநிலை, நீதித்துறையின் செயல்பாடுகள் போன்றவற்றையும் தெளிவாகவும், காட்சிகளோடு இயைந்த படியும் பேசுகிறது சுரேஷ் ராஜகுமாரி, தமிழ் ஆகியோரின் திரைக்கதை. இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாகி, வெவ்வேறு மனமாற்றங்களை அடையும் கதாபாத்திரங்கள், திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கின்றன. சிறை விமர்சனம் | Sirai Review முதல் காட்சியிலிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து இறுதிக்காட்சியில் வேறு நிலைப்பாட்டிற்கு மாறும் காவலர் கதிரவன், தன் நோக்கத்திற்காக மூர்க்கமான மனநிலையிலிருக்கும் அனிஷ்மா, அதே நோக்கத்திற்காகச் சாந்தமான மனநிலையிலிருக்கும் அக்ஷய் எனக் கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட விதம் பெரும் பலம். அதேநேரம், சில காட்சிகள் பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுகளிலும், பேசும் வசனங்களிலும் நம்பகத்தன்மை இல்லை. அதனால், அதுவரை எதார்த்த ரோட்டில் ஓடிய திரைக்கதை, அவ்விடங்களில் நாடகத்தன்மைக்கு வழிமாறுகின்றன. அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! இந்தியா முழுவதும் துன்பப்படும் விசாரணைக் கைதிகளின் நிலை, சமூகத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகும் சிறுபான்மையினர், காவல்துறையாலும் நீதித்துறையாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை ஏழைகள் எனப் பல அரசியல் அடுக்குகளை அழுத்தமாகப் பேசுகிறது படம். ஈழத்தமிழர்களுக்காகத் தன்னை மாய்த்துக்கொண்ட தமிழகத் தமிழர் அப்துல் ராவூஃப் பற்றிய மேற்கொள், சிறுபான்மையினரின் அன்றாட வழிப்பாட்டு முறைகளைக் கூட அந்நியமாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலையை விளக்கும் காட்சிகள் போன்றவை துருத்திக்கொண்டு நின்றாலும், அவை கதைக்கருவின் ஆன்மாவை அழுத்தமாகப் பேசுகின்றன. பிரதான கதாபாத்திரங்களின் மனவோட்டத்தின் வழியாக, பார்வையாளர்களையும் பதற வைக்கிறது இறுதிக்காட்சி. காவலர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை வைத்து, எளியவர்களுக்கு உதவச் சொல்லுகிறது இறுதிக்காட்சி. சிறை விமர்சனம் | Sirai Review ஆயுதப்படைகளின் அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது, அது எளிதில் சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றினாலும், காவல்துறைக்குள் ஏற்பட வேண்டிய சீர்திருத்தமாகவும், எளிய மக்களுக்கான நம்பிக்கை கீற்றாகவும் கவனிக்க வைக்கிறது. பரபரப்பு, எமோஷன் என இரண்டையும் கச்சிதமாகக் கொண்டுவந்து, திரையனுபவமாகவும், சமூக கருத்தாகவும் கவர்ந்து, நம் மனதைச் சிறைபிடிக்கிறது இந்த 'சிறை'. ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்: சாதிய பாகுபாட்டினைப் பேசும் நல்லதொரு எழுத்து; ஆனால், திரைமொழி?!

விகடன் 25 Dec 2025 2:02 pm

சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!

2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது. இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், அவர் குற்றவாளியானது எப்படி, இறுதியில் இருவருக்கும் என்ன நேர்கிறது என்பதே அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் 'சிறை' படத்தின் கதை. சிறை விமர்சனம் | Sirai Review தன் திறன் மீதான தன்னம்பிக்கை, சட்டத்தின் முன் நேர்மை, கோபத்தை அடக்கி வைக்கும் தருணம், பிறருக்காக மனமிறங்கும் தருணம் என முழுக்க முழுக்க முதிர்ச்சியான அணுகுமுறையைக் கோரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. படம் முழுவதும் பரிதாபத்தைக் கோரும் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார். Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி துயரம் தோய்ந்த முகம், மெல்லிய குரல் என ஒரே மாதிரியான உடல்மொழிதான் என்றாலும், அவற்றுக்குள் குற்றவுணர்வு, காதல், ஆற்றாமை, ஆக்ரோஷம் என அழுத்தமான பங்களிப்பைச் செய்து, தன் அறிமுகத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் அக்ஷய். வெல்கம் அக்ஷய்! பெரும்பாலும் கண்ணீரும் கம்பலையுமாகவே வந்தாலும், காதல், பிடிவாதம், மனவுறுதி, ஆக்ரோஷம் என உருமாறும் அக்கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து, தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் அனிஷ்மா அனில்குமார். ஆங்காங்கே அவர் பேச்சில் எட்டிப் பார்க்கும் மலையாள வாடையைத் தவிர்த்திருக்கலாம். சிறை விமர்சனம் | Sirai Review அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ், அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு, இஸ்மத் பானுவின் கணவராக நடித்தவர், காவலராக ஹரிஷங்கர் நாராயணன் எனத் துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் கதையின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் துணை நின்றிருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் வரும் மூணாறு ரமேஷ் தன் வசனத்தால் கிளாப்ஸ் அள்ளுகிறார். Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும் பாதி இரவு நேரக் காட்சிகள், பயணங்கள், துரத்தல்கள் என நகர்ந்தாலும், நேர்த்தியான ஒளியமைப்பால் உணர்வுகளையும், பதற்றத்தையும் ஒரு சேரக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். குறிப்பாக, தொடக்கத்தில் பேருந்துக்குள் நிகழும் சண்டையைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி! விறுவிறுப்பையும், பதைபதைப்பையும் நழுவவிடாமல், இழுத்துக் கட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். கதாபாத்திரங்களின் உணர்வுகளை மென்மையாகப் பேசுகின்றன ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள். பரபரப்பிற்கான வேகத்தையும், உணர்வுகளுக்கான இறுக்கத்தையும் கொண்டுவந்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. 2000களின் தொடக்கக் கால பேருந்துகள், அக்கால நீதிமன்றம், ஆயுதப்படை பயிற்சித்தளம் எனக் கதையுலகின் எதார்த்தத்திற்குக் கைகொடுத்திருக்கிறது வர்ஷினி சங்கரின் தயாரிப்பு வடிவமைப்பு. சிறை விமர்சனம் | Sirai Review முதல் ஒரு சில காட்சிகளிலேயே பரபரப்பைப் பற்ற வைத்து, திரைக்கதையின் விறுவிறு தன்மைக்கு தயார்ப்படுத்தி, பிரதான கதாபாத்திரத்தின் அகத்தையும் அறிமுகம் செய்கிறது படம். அதைத் தொடர்ந்து, யூகிக்கும்படியான பாதையிலேயே நகர்கிறது திரைக்கதை. எதிர்பார்த்த திருப்பங்களும், காட்சிகளும் அடுத்தடுத்து வந்தாலும், அக்காட்சிகளில் விரியும் கதாபாத்திரங்களும், அதன் வழியாகப் பின்னப்படும் பின்கதைகளும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு உணர்வுபூர்வமான கதைக்குள் காவல்துறையின் கட்டமைப்பு, அதன் படிநிலை, நீதித்துறையின் செயல்பாடுகள் போன்றவற்றையும் தெளிவாகவும், காட்சிகளோடு இயைந்த படியும் பேசுகிறது சுரேஷ் ராஜகுமாரி, தமிழ் ஆகியோரின் திரைக்கதை. இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாகி, வெவ்வேறு மனமாற்றங்களை அடையும் கதாபாத்திரங்கள், திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கின்றன. சிறை விமர்சனம் | Sirai Review முதல் காட்சியிலிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து இறுதிக்காட்சியில் வேறு நிலைப்பாட்டிற்கு மாறும் காவலர் கதிரவன், தன் நோக்கத்திற்காக மூர்க்கமான மனநிலையிலிருக்கும் அனிஷ்மா, அதே நோக்கத்திற்காகச் சாந்தமான மனநிலையிலிருக்கும் அக்ஷய் எனக் கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட விதம் பெரும் பலம். அதேநேரம், சில காட்சிகள் பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுகளிலும், பேசும் வசனங்களிலும் நம்பகத்தன்மை இல்லை. அதனால், அதுவரை எதார்த்த ரோட்டில் ஓடிய திரைக்கதை, அவ்விடங்களில் நாடகத்தன்மைக்கு வழிமாறுகின்றன. அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! இந்தியா முழுவதும் துன்பப்படும் விசாரணைக் கைதிகளின் நிலை, சமூகத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகும் சிறுபான்மையினர், காவல்துறையாலும் நீதித்துறையாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை ஏழைகள் எனப் பல அரசியல் அடுக்குகளை அழுத்தமாகப் பேசுகிறது படம். ஈழத்தமிழர்களுக்காகத் தன்னை மாய்த்துக்கொண்ட தமிழகத் தமிழர் அப்துல் ராவூஃப் பற்றிய மேற்கொள், சிறுபான்மையினரின் அன்றாட வழிப்பாட்டு முறைகளைக் கூட அந்நியமாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலையை விளக்கும் காட்சிகள் போன்றவை துருத்திக்கொண்டு நின்றாலும், அவை கதைக்கருவின் ஆன்மாவை அழுத்தமாகப் பேசுகின்றன. பிரதான கதாபாத்திரங்களின் மனவோட்டத்தின் வழியாக, பார்வையாளர்களையும் பதற வைக்கிறது இறுதிக்காட்சி. காவலர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை வைத்து, எளியவர்களுக்கு உதவச் சொல்லுகிறது இறுதிக்காட்சி. சிறை விமர்சனம் | Sirai Review ஆயுதப்படைகளின் அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது, அது எளிதில் சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றினாலும், காவல்துறைக்குள் ஏற்பட வேண்டிய சீர்திருத்தமாகவும், எளிய மக்களுக்கான நம்பிக்கை கீற்றாகவும் கவனிக்க வைக்கிறது. பரபரப்பு, எமோஷன் என இரண்டையும் கச்சிதமாகக் கொண்டுவந்து, திரையனுபவமாகவும், சமூக கருத்தாகவும் கவர்ந்து, நம் மனதைச் சிறைபிடிக்கிறது இந்த 'சிறை'. ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்: சாதிய பாகுபாட்டினைப் பேசும் நல்லதொரு எழுத்து; ஆனால், திரைமொழி?!

விகடன் 25 Dec 2025 2:02 pm

சிறை: நல்ல படம் கொடுத்திருக்கோம் என நம்புறோம்” - நடிகர் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் இன்று (டிச. 25) திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். ‘சிறை’ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த பிறகு நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சிறை படத்தில்... எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இன்றைக்கு 'சிறை' படம் வெளியாகி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிறைய குடும்பங்கள் இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள். நிறைய பேர் எனக்கு அழைத்து பேசுகிறார்கள். ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறோம் என்று நம்புகிறோம். படத்துக்கு நல்ல வரவேற்பு வரத் தொடங்கியிருக்கிறது. எல்லோரும் படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்று பேசியிருக்கிறார். இயக்குநர் சுரேஷ் தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் சுரேஷ், இது விக்ரம் சாரின் 25-வது படம். 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழின் வாழ்க்கையில் நடந்த கதைதான் இந்தப் படம். எல்லோரும் இந்தப் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 25 Dec 2025 1:21 pm

BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது அரோராவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். துஷாரை நீ லவ் பண்றீயா, அப்புறம் ஏன் துஷார் துஷார்ன்னு பேசிட்டு இருக்க. ஒரே ஒரு கேள்வி தான். இருக்கா? இல்லையா?... இனிமேல் இந்த விஷயத்தை பத்தி வெளிய வந்து பேசிப்போம். இப்போதைக்கு மனசுல இருந்து இதை அழிச்சிரு என்று அரோராவின் நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்

விகடன் 25 Dec 2025 1:00 pm

BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது அரோராவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். துஷாரை நீ லவ் பண்றீயா, அப்புறம் ஏன் துஷார் துஷார்ன்னு பேசிட்டு இருக்க. ஒரே ஒரு கேள்வி தான். இருக்கா? இல்லையா?... இனிமேல் இந்த விஷயத்தை பத்தி வெளிய வந்து பேசிப்போம். இப்போதைக்கு மனசுல இருந்து இதை அழிச்சிரு என்று அரோராவின் நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்

விகடன் 25 Dec 2025 1:00 pm

பார்வதி எடுத்த முடிவு, விஜயாவை திட்டிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவுடனான உறவை பார்வதி முடித்துக் கொண்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதியின் மகனை வர வைத்து விட அவரும் பார்வதி இடம் தரக்குறைவாக பேசுகிறார் மறுபக்கம் முத்து மீனாவையும் வரவைத்து விட பார்வதி சிவனுடன் சேர்த்து வைத்து பேச ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்த பார்வதி மகனை கன்னத்தில் ஓங்கி வரைந்து விடுகிறார். என்னடா...

தஸ்தர் 25 Dec 2025 12:14 pm

பல்லவன் அம்மா செய்த திருட்டு வேலையை சொன்ன நிலா, அதிர்ச்சியில் சோழன் –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கோமலு, இதற்கு தான் இங்கு நான் இத்தன நாட்களாக வராமல் இருந்தேன். அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்றெல்லாம் நாடகமாடினார். இதெல்லாம் பார்த்து பல்லவனுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டில் தன்னுடைய அண்ணன்களிடம் நடந்ததை எல்லாம் பல்லவன் சொல்லி புலம்பினார். அதற்குப்பின் எல்லோரும் தூங்கி விட்டார்கள். கோமலு, அவருடைய கணவர் இருவருமே வீட்டிற்கு பின்பக்கம் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோமலு, பணத்தை சீக்கிரம் எடுத்துக் கொண்டு வருகிறேன். […] The post பல்லவன் அம்மா செய்த திருட்டு வேலையை சொன்ன நிலா, அதிர்ச்சியில் சோழன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 11:56 am

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியின் சமையலை பாராட்டி பேச கல்யாணம் இவங்க ரெண்டு பேரும் இதே சந்தோஷத்தோடு இருக்கணும் என்று...

தஸ்தர் 25 Dec 2025 11:34 am

BB Tamil 9 Day 80: “கேமைவிட கேரக்டர் முக்கியம்-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு - நடந்தது என்ன?

வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா. “இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந்தன.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 80 சான்ட்ராவும் அமித்தும் பேசிக் கொண்டிருக்க “பாருவை நம்பாதீங்க.. மாத்தி மாத்தி பேசறா” என்று சூசக குறிப்பு தந்தார் சான்ட்ரா. “அப்ப.. யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. பயமா இருக்கு” என்று அமித் சொல்ல “எனக்கும் அதே பிரச்சினைதான்” என்றார் சான்ட்ரா.  BB Tamil 9 நாள் 80. சான்ட்ராவும் பாருவும் கிச்சன் ஏரியாவில் சர்காஸமான சண்டையை புன்னகைத்துக் கொண்டே போட்டார்கள். “பூரிய ஒழுங்கா சுடுங்க” என்று அமித்தை வினோத் நோண்டப் போக, கடைசியில் ஸாரி கேட்கும் அளவிற்கு பூரி பிரச்சினை பெரிதாகியது.  “இந்தப் பக்கம் நான் வந்தாலே டென்ஷன் ஆகறாரு..” என்று வினோத் புகார் செய்ய “நானா நாக்கை மடிச்சு அடிக்க வந்தேன்?” என்று அமித் மல்லுக்கட்ட, கம்ரூதீன் வந்து சமாதானப்படுத்தினார். வினோத் இன்னமும் புலம்பிக் கொண்டேயிருக்க அந்த திசையை நோக்கி வேகமாக வந்தார் அமித். என்னவோ ஏதோ என்று பார்த்தால் சட்டென்று வினோத்தை கட்டிப்பிடித்து ‘ஸாரி.. நீ என் நண்பன்டா. உன்னைப் பத்தி தப்பா பேசுவனா,?” என்று ‘தேவா - சூர்யா’ வெள்ளைக் கொடியை பறக்க விட்ட அமித்தின் பெருந்தன்மைக்குப் பாராட்டு.  “ஒவ்வொருவருத்தருக்கு ஒரு மேனரிஸம் இருக்குமில்ல. அது மாதிரி நாக்கை மடிக்கறது என் பழக்கம்” என்று வினோத் சொல்ல “அதே மாதிரி அது பார்க்கறவங்களுக்கு ஒரு மாதிரி தெரியறதும் ஒரு பழக்கம்தானே” என்று சரியாக பாயிண்ட் பிடித்தார் பாரு.  BB Tamil 9 ‘சான்ட்ரா அப்பாவி இல்ல. பயங்கரமா கேம் ஆடறாங்க” - அமித் மனைவி அட்வைஸ் பாடல் ஒலிக்க அமித் குடும்பத்தினர் வருகை. “என்ன வளர்ந்துட்ட?” என்று மகளைப் பார்த்து ரசித்தார் அமித். வினோத்தைப் பார்த்த அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி, “ரொம்ப நன்றி. அமித்திற்கு அதிகம் பிரெண்ட்ஸ் கிடையாது. நீங்க நல்ல நண்பனா இருக்கீங்க” என்று உணர்ச்சிவசப்பட “இப்போதான் பயங்கரமா  சண்டை போட்டோம்” என்று உண்மையை உடைத்தார் வினோத்.  Soft sabari, daring divya, Vibrant vikram என்று ஒவ்வொரு போட்டியாளருக்கும் அடைமொழியை சூட்டினார் அமித்தின் மகள் வேதா (வீட்ல ஹோம் ஒர்க் பண்ண வெச்சு கூட்டி வந்திருப்பாங்க போல). பாருவிற்கு playful paaru-வாம். (ஆமாம். பாரு ரொம்பவே பிளேஃபுல்தான்!) BB Tamil 9 தன் கணவரை ஓரங்கட்டி அழைத்துச் சென்ற ஸ்ரீரஞ்சனி, பல உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த காட்சி சுவாரசியமானது.  “வந்த புதுசுல எல்லோர் கூடயும் பேசிட்டு இருந்தே. ஆனா இப்ப சிலர் கூட மட்டும் பேசற. எல்லோர் கூடயும் பழகு. அப்பத்தான் முழுசா ஒரு பார்வை கிடைக்கும். மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ல நீ இங்க வரலை. பாரு சாப்பாட்டை ஃபுல்லா கட்டிட்டு ‘எனக்கு சாப்பாடே இறங்கலை’ன்னு சொல்றா. “தப்பு செஞ்சா அப்படித்தான். சாப்பிடாதன்னு சொன்னே பார்த்தியா’.. அப்படி பேசு”... “இப்ப மைக் நழுவறது எனக்கே தெரியுது. அவங்களுக்குத் தெரியாதா.. நல்லாவே தெரியும். நீ ஏன் போய் ஸாப்ட்டா பேசற.. உன்னைப் பத்தி பின்னாடி பேசாதது வியானா மட்டும்” என்று ஸ்ரீரஞ்சனி சொல்ல “பாரு கூடவா என்னைப் பத்தி பேசறா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் அமித். “கோர்ட் டாஸ்க் பத்தி பேசினாங்க. பாருவிற்கு கேம் முக்கியம். அதுக்காக என்ன வேணா பண்ணுவா. சான்ட்ராவும் சும்மா இல்ல. அவங்க கேம் வேற. ஒரே வாரத்துல திரும்பி வந்துட்டாங்க. பிக் பாஸை கரைச்சுக் குடிச்சி வந்திருக்காங்க. சேச்சி வேற லெவல்.. பார்வதியையே கையாளத் தெரிஞ்சவ”  என்று படபடவென பொரிந்து தள்ளினார் ஸ்ரீரஞ்சனி. BB Tamil 9 ‘சீட்டிங் பார்வதி’ - அமித் மகளால் பட்டம் பெற்ற பாரு “பாரு எவ்விடம் அமித் அவ்விடம்ன்னு கனி சொல்றாங்க” என்று அமித் சந்தேகம் கேட்க, “நீ பண்றது அப்படித்தான் இருக்கு. பாரு கூடத்தான் உக்காந்து பேசிட்டிருக்க. அரோரா பயங்கர ஷார்ப். பாயிண்ட் பாயிண்ட்டா பேசுது. ‘என் ஃபேமிலி என்ன நெனப்பாங்க’-ன்றதையல்லாம் தூக்கிப் போட்டுட்டு கேம்ல ஃபோகஸ் பண்ணு” என்று உபதேசித்தார் ஸ்ரீரஞ்சனி. உள்ளே குழந்தையோடு போட்டியாளர்கள் விளையாட, அங்கும் தன் கோளாறை பாரு காட்ட ‘சீட்டிங் பாரு’ என்று அமித்தின் மகள் கிண்டலடிக்க, அந்தப் பட்டப் பெயரையே மற்றவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லி மகிழ்ந்ததில் பாரு காண்டானார். (இந்த அவமானம் உனக்குத் தேவையா?!) உள்ளே வந்த ஸ்ரீரஞ்சனி, ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றிய சுருக்கமான ரிப்போர்ட்டை தந்தார். சபரி ஜென்டில்மேனாம். சுபிக்ஷா தன் சமூகத்தைப் பற்றி பேசற விஷயம் நல்லா இருக்காம். விக்ரம் கேமை நல்லா ஆடறாராம். அரோரா பாயிண்ட்டா பேசறாங்களாம். திவ்யா ஆண் - பெண் சமத்துவ விஷயத்தை சரியா ஹாண்டில் பண்றாங்களாம். கனி ரொம்ப கனிவா இருக்காங்களாம். கம்மு கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்காம். நல்ல நட்பிற்கு அடையாளம் வினோத்தாம். சான்ட்ரா பொறுப்பா ஆடணுமாம். எந்தவொரு வெளியாள் வந்தாலும் தன்னைப் பற்றி வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை அறிய பாருவிற்கு ஆவல் பீறிட்டுக் கொண்டு வரும். இந்த முறையும் அதே போல் ஆவலாக காத்திருக்க “கேமிற்காக நீ எது வேணா பண்ற.. ஓகே… ஆனா அதையும் மீறி உன்னோட அடையாளமும் முக்கியம்” என்கிற மாதிரி ஸ்ரீரஞ்சனி சொல்ல பாருவின் மண்டைக்குள் நண்டு பிறாண்டத் துவங்கி விட்டது. இதைப் பற்றியே ஒவ்வொருவரிடமும் பிறகு விசாரித்து புலம்பிக் கொண்டிருந்தார்.  BB Tamil 9 “கேமை விட கேரக்டர் முக்கியம்’ - ஸ்ரீரஞ்சனி அட்வைஸால் அவஸ்தைப்பட்ட பாரு அமித்தின் குடும்பம் சென்ற பிறகு அவரிடம் வாயைப் பிடுங்குவதற்காக வந்து அமர்ந்தார் பாரு. “என்னைப் பத்தி ஸ்ரீரஞ்சனி ஒண்ணு சொன்னாங்க.. என் கேரக்டரும் முக்கியம்ன்னு. அது பத்தி ஏதாவது சொன்னாங்களா?” என்று போட்டு வாங்க முயல “அது பத்தி பேசல. என் கேம் பத்திதான் பேசினாங்க” என்று எஸ்கேப் ஆனார் அமித்.  அடுத்ததாக திவ்யாவின் குடும்பம் வந்தது. மற்றவர்களைப் போல உணர்ச்சிவசப்பட்டு அழுது தீர்க்காமல் மிக இயல்பாக அவர்களை வரவேற்று, பதட்டப்படாமல் டாஸ்க் முடித்து வந்து சந்தித்தார் திவ்யா. சைடு கேப்பில் லாரி ஓட்ட நினைத்த கம்மு “ஸாரி.. திவ்யாவைப் பத்தி தப்பா பேசியிருக்கேன்” என்று சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து எஸ்கேப் ஆக முயல “இருங்க ப்ரோ..அடுத்த ரவுண்டு வருவோம்” என்று ஜெர்க் தந்தார், திவ்யாவின் சகோ.  “நல்லா விளையாடற.. அப்படியே மெயின்டெயின் பண்ணு. மத்தவங்க டிரிக்கர் பண்ணத்தான் செய்வாங்க. அதுதான் கேம். தனியாவே இரு. வில்லங்கமான ஆட்கள் கூட சேராத” என்று திவ்யாவின் குடும்பம் உபதேசம் செய்ய “யார் அந்த வில்லங்கம்?” என்று திவ்யா சந்தேகமாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது.  திவ்யாவின் குடும்பம் உள்ளே வந்தது. திவ்யாவின் தந்தை நல்ல தமிழில் பேசி பாருவை அடிக்கடி வாரிக் கொண்டிருந்தார். “நம்ம ஊரு பக்கம்ல” என்று பாரு ஊர்ப்பாசத்தை காட்டினாலும் அவர் விடவில்லை. மறைமுக ஊமைக்குத்துக்கள் விழுந்தன. “மத்தவங்களை ஏத்தி விட்டுட்டு பின்னாடி நின்னு வேடிக்கை பார்க்கறது. பத்த வெச்சிட்டு தூரமா நின்று புகையுதான்னு பார்க்கறது” என்று திவ்யாவின் பெற்றோர் பாருவை சரமாரியாக கலாய்த்தார்கள். திகைப்பை மறைத்துக் கொண்டு சிரித்து சமாளித்தார் பாரு.  BB Tamil 9 திவ்யாவை மிக அவமதிப்பாக பேசியிருந்தாலும் கம்ருதீனை அவர்கள் அதிகம் கண்டிக்கவில்லை. “எங்க பொண்ணுன்னு மட்டுமில்ல. பொதுவாவே பெண்களை அவமரியாதையா பேசாதீங்க” என்று திவ்யாவின் தந்தை அறிவுறுத்த பணிவுடன் கேட்டுக் கொண்டார் கம்மு.  ‘சான்ட்ராவிடம் ஜாக்கிரதையா இரு’ - திவ்யா அம்மா அட்வைஸ் அவர்கள் சென்றதும் “எங்கப்பா துறுதுறுன்னு பேசுவார். எனக்கே ஜெர்க் ஆச்சு. அவர் ஏதாவது தப்பா பேசியிருந்தா ஸாரி” என்று பாருவிடம் மன்னிப்பு கேட்டார் திவ்யா. “எனக்கும் லைட்டா ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு.. ஆனா ஃபேமிலி..” என்று சமாளித்தார் பாரு. “அதெல்லாம் ஒண்ணும் தப்பா பேசல. கள்ளங்கபடம் இல்லாத மனுசன்” என்றார் வினோத்.  ‘கேமிற்காக என்ன வேணா பண்ணாலும் கேரக்டர் முக்கியம்’ என்று ஸ்ரீரஞ்சனி சொல்லிச் சென்றது, பாருவின் மண்டைக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது போல. அதைப் பற்றி சுபிக்ஷாவிடம் விசாரிக்க “முன்ன விட இப்ப மாறியிருக்கே” என்று அவர் சான்றிதழ் தந்தார். சுபிக்ஷாவும் இனிமே தனியாகத்தான் ஆடப் போகிறாராம். கப்பு முக்கியமாம்.  ‘வாள மீனக்கும் வெலாங்கு மீனுக்கும்’ பாட்டை வினோத் பாட, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்தார். பிரஜினின் உபதேசத்திற்குப் பின்னால் சான்ட்ராவிடம் மாற்றம் தெரிறது. மற்றவர்களுடன் பழகத் துவங்கியிருக்கிறார். இதை முன்பே செய்திருக்கலாம். முன்னது நடிப்பா அல்லது பின்னதா என்று தெரியவில்லை. BB Tamil 9 “ஒருத்தர் கிட்ட ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி மம்மி சொன்னாங்க” என்று அரோவிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் திவ்யா. “யாரது?” என்று அரோ ஆவலாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது. “இங்க எல்லோர்கிட்டயும்தான் ஜாக்கிரதையா இருக்கணும்.. இது ஒரு போட்டி” என்று தத்துவம் உதிர்த்தார் அரோ.  விருந்தினர்களின் உபதேசங்களும் ஏற்றி விடுதல்களும் போட்டியாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

விகடன் 25 Dec 2025 10:51 am

BB Tamil 9 Day 80: “கேமைவிட கேரக்டர் முக்கியம்-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு - நடந்தது என்ன?

வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா. “இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந்தன.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 80 சான்ட்ராவும் அமித்தும் பேசிக் கொண்டிருக்க “பாருவை நம்பாதீங்க.. மாத்தி மாத்தி பேசறா” என்று சூசக குறிப்பு தந்தார் சான்ட்ரா. “அப்ப.. யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. பயமா இருக்கு” என்று அமித் சொல்ல “எனக்கும் அதே பிரச்சினைதான்” என்றார் சான்ட்ரா.  BB Tamil 9 நாள் 80. சான்ட்ராவும் பாருவும் கிச்சன் ஏரியாவில் சர்காஸமான சண்டையை புன்னகைத்துக் கொண்டே போட்டார்கள். “பூரிய ஒழுங்கா சுடுங்க” என்று அமித்தை வினோத் நோண்டப் போக, கடைசியில் ஸாரி கேட்கும் அளவிற்கு பூரி பிரச்சினை பெரிதாகியது.  “இந்தப் பக்கம் நான் வந்தாலே டென்ஷன் ஆகறாரு..” என்று வினோத் புகார் செய்ய “நானா நாக்கை மடிச்சு அடிக்க வந்தேன்?” என்று அமித் மல்லுக்கட்ட, கம்ரூதீன் வந்து சமாதானப்படுத்தினார். வினோத் இன்னமும் புலம்பிக் கொண்டேயிருக்க அந்த திசையை நோக்கி வேகமாக வந்தார் அமித். என்னவோ ஏதோ என்று பார்த்தால் சட்டென்று வினோத்தை கட்டிப்பிடித்து ‘ஸாரி.. நீ என் நண்பன்டா. உன்னைப் பத்தி தப்பா பேசுவனா,?” என்று ‘தேவா - சூர்யா’ வெள்ளைக் கொடியை பறக்க விட்ட அமித்தின் பெருந்தன்மைக்குப் பாராட்டு.  “ஒவ்வொருவருத்தருக்கு ஒரு மேனரிஸம் இருக்குமில்ல. அது மாதிரி நாக்கை மடிக்கறது என் பழக்கம்” என்று வினோத் சொல்ல “அதே மாதிரி அது பார்க்கறவங்களுக்கு ஒரு மாதிரி தெரியறதும் ஒரு பழக்கம்தானே” என்று சரியாக பாயிண்ட் பிடித்தார் பாரு.  BB Tamil 9 ‘சான்ட்ரா அப்பாவி இல்ல. பயங்கரமா கேம் ஆடறாங்க” - அமித் மனைவி அட்வைஸ் பாடல் ஒலிக்க அமித் குடும்பத்தினர் வருகை. “என்ன வளர்ந்துட்ட?” என்று மகளைப் பார்த்து ரசித்தார் அமித். வினோத்தைப் பார்த்த அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி, “ரொம்ப நன்றி. அமித்திற்கு அதிகம் பிரெண்ட்ஸ் கிடையாது. நீங்க நல்ல நண்பனா இருக்கீங்க” என்று உணர்ச்சிவசப்பட “இப்போதான் பயங்கரமா  சண்டை போட்டோம்” என்று உண்மையை உடைத்தார் வினோத்.  Soft sabari, daring divya, Vibrant vikram என்று ஒவ்வொரு போட்டியாளருக்கும் அடைமொழியை சூட்டினார் அமித்தின் மகள் வேதா (வீட்ல ஹோம் ஒர்க் பண்ண வெச்சு கூட்டி வந்திருப்பாங்க போல). பாருவிற்கு playful paaru-வாம். (ஆமாம். பாரு ரொம்பவே பிளேஃபுல்தான்!) BB Tamil 9 தன் கணவரை ஓரங்கட்டி அழைத்துச் சென்ற ஸ்ரீரஞ்சனி, பல உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த காட்சி சுவாரசியமானது.  “வந்த புதுசுல எல்லோர் கூடயும் பேசிட்டு இருந்தே. ஆனா இப்ப சிலர் கூட மட்டும் பேசற. எல்லோர் கூடயும் பழகு. அப்பத்தான் முழுசா ஒரு பார்வை கிடைக்கும். மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ல நீ இங்க வரலை. பாரு சாப்பாட்டை ஃபுல்லா கட்டிட்டு ‘எனக்கு சாப்பாடே இறங்கலை’ன்னு சொல்றா. “தப்பு செஞ்சா அப்படித்தான். சாப்பிடாதன்னு சொன்னே பார்த்தியா’.. அப்படி பேசு”... “இப்ப மைக் நழுவறது எனக்கே தெரியுது. அவங்களுக்குத் தெரியாதா.. நல்லாவே தெரியும். நீ ஏன் போய் ஸாப்ட்டா பேசற.. உன்னைப் பத்தி பின்னாடி பேசாதது வியானா மட்டும்” என்று ஸ்ரீரஞ்சனி சொல்ல “பாரு கூடவா என்னைப் பத்தி பேசறா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் அமித். “கோர்ட் டாஸ்க் பத்தி பேசினாங்க. பாருவிற்கு கேம் முக்கியம். அதுக்காக என்ன வேணா பண்ணுவா. சான்ட்ராவும் சும்மா இல்ல. அவங்க கேம் வேற. ஒரே வாரத்துல திரும்பி வந்துட்டாங்க. பிக் பாஸை கரைச்சுக் குடிச்சி வந்திருக்காங்க. சேச்சி வேற லெவல்.. பார்வதியையே கையாளத் தெரிஞ்சவ”  என்று படபடவென பொரிந்து தள்ளினார் ஸ்ரீரஞ்சனி. BB Tamil 9 ‘சீட்டிங் பார்வதி’ - அமித் மகளால் பட்டம் பெற்ற பாரு “பாரு எவ்விடம் அமித் அவ்விடம்ன்னு கனி சொல்றாங்க” என்று அமித் சந்தேகம் கேட்க, “நீ பண்றது அப்படித்தான் இருக்கு. பாரு கூடத்தான் உக்காந்து பேசிட்டிருக்க. அரோரா பயங்கர ஷார்ப். பாயிண்ட் பாயிண்ட்டா பேசுது. ‘என் ஃபேமிலி என்ன நெனப்பாங்க’-ன்றதையல்லாம் தூக்கிப் போட்டுட்டு கேம்ல ஃபோகஸ் பண்ணு” என்று உபதேசித்தார் ஸ்ரீரஞ்சனி. உள்ளே குழந்தையோடு போட்டியாளர்கள் விளையாட, அங்கும் தன் கோளாறை பாரு காட்ட ‘சீட்டிங் பாரு’ என்று அமித்தின் மகள் கிண்டலடிக்க, அந்தப் பட்டப் பெயரையே மற்றவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லி மகிழ்ந்ததில் பாரு காண்டானார். (இந்த அவமானம் உனக்குத் தேவையா?!) உள்ளே வந்த ஸ்ரீரஞ்சனி, ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றிய சுருக்கமான ரிப்போர்ட்டை தந்தார். சபரி ஜென்டில்மேனாம். சுபிக்ஷா தன் சமூகத்தைப் பற்றி பேசற விஷயம் நல்லா இருக்காம். விக்ரம் கேமை நல்லா ஆடறாராம். அரோரா பாயிண்ட்டா பேசறாங்களாம். திவ்யா ஆண் - பெண் சமத்துவ விஷயத்தை சரியா ஹாண்டில் பண்றாங்களாம். கனி ரொம்ப கனிவா இருக்காங்களாம். கம்மு கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்காம். நல்ல நட்பிற்கு அடையாளம் வினோத்தாம். சான்ட்ரா பொறுப்பா ஆடணுமாம். எந்தவொரு வெளியாள் வந்தாலும் தன்னைப் பற்றி வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை அறிய பாருவிற்கு ஆவல் பீறிட்டுக் கொண்டு வரும். இந்த முறையும் அதே போல் ஆவலாக காத்திருக்க “கேமிற்காக நீ எது வேணா பண்ற.. ஓகே… ஆனா அதையும் மீறி உன்னோட அடையாளமும் முக்கியம்” என்கிற மாதிரி ஸ்ரீரஞ்சனி சொல்ல பாருவின் மண்டைக்குள் நண்டு பிறாண்டத் துவங்கி விட்டது. இதைப் பற்றியே ஒவ்வொருவரிடமும் பிறகு விசாரித்து புலம்பிக் கொண்டிருந்தார்.  BB Tamil 9 “கேமை விட கேரக்டர் முக்கியம்’ - ஸ்ரீரஞ்சனி அட்வைஸால் அவஸ்தைப்பட்ட பாரு அமித்தின் குடும்பம் சென்ற பிறகு அவரிடம் வாயைப் பிடுங்குவதற்காக வந்து அமர்ந்தார் பாரு. “என்னைப் பத்தி ஸ்ரீரஞ்சனி ஒண்ணு சொன்னாங்க.. என் கேரக்டரும் முக்கியம்ன்னு. அது பத்தி ஏதாவது சொன்னாங்களா?” என்று போட்டு வாங்க முயல “அது பத்தி பேசல. என் கேம் பத்திதான் பேசினாங்க” என்று எஸ்கேப் ஆனார் அமித்.  அடுத்ததாக திவ்யாவின் குடும்பம் வந்தது. மற்றவர்களைப் போல உணர்ச்சிவசப்பட்டு அழுது தீர்க்காமல் மிக இயல்பாக அவர்களை வரவேற்று, பதட்டப்படாமல் டாஸ்க் முடித்து வந்து சந்தித்தார் திவ்யா. சைடு கேப்பில் லாரி ஓட்ட நினைத்த கம்மு “ஸாரி.. திவ்யாவைப் பத்தி தப்பா பேசியிருக்கேன்” என்று சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து எஸ்கேப் ஆக முயல “இருங்க ப்ரோ..அடுத்த ரவுண்டு வருவோம்” என்று ஜெர்க் தந்தார், திவ்யாவின் சகோ.  “நல்லா விளையாடற.. அப்படியே மெயின்டெயின் பண்ணு. மத்தவங்க டிரிக்கர் பண்ணத்தான் செய்வாங்க. அதுதான் கேம். தனியாவே இரு. வில்லங்கமான ஆட்கள் கூட சேராத” என்று திவ்யாவின் குடும்பம் உபதேசம் செய்ய “யார் அந்த வில்லங்கம்?” என்று திவ்யா சந்தேகமாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது.  திவ்யாவின் குடும்பம் உள்ளே வந்தது. திவ்யாவின் தந்தை நல்ல தமிழில் பேசி பாருவை அடிக்கடி வாரிக் கொண்டிருந்தார். “நம்ம ஊரு பக்கம்ல” என்று பாரு ஊர்ப்பாசத்தை காட்டினாலும் அவர் விடவில்லை. மறைமுக ஊமைக்குத்துக்கள் விழுந்தன. “மத்தவங்களை ஏத்தி விட்டுட்டு பின்னாடி நின்னு வேடிக்கை பார்க்கறது. பத்த வெச்சிட்டு தூரமா நின்று புகையுதான்னு பார்க்கறது” என்று திவ்யாவின் பெற்றோர் பாருவை சரமாரியாக கலாய்த்தார்கள். திகைப்பை மறைத்துக் கொண்டு சிரித்து சமாளித்தார் பாரு.  BB Tamil 9 திவ்யாவை மிக அவமதிப்பாக பேசியிருந்தாலும் கம்ருதீனை அவர்கள் அதிகம் கண்டிக்கவில்லை. “எங்க பொண்ணுன்னு மட்டுமில்ல. பொதுவாவே பெண்களை அவமரியாதையா பேசாதீங்க” என்று திவ்யாவின் தந்தை அறிவுறுத்த பணிவுடன் கேட்டுக் கொண்டார் கம்மு.  ‘சான்ட்ராவிடம் ஜாக்கிரதையா இரு’ - திவ்யா அம்மா அட்வைஸ் அவர்கள் சென்றதும் “எங்கப்பா துறுதுறுன்னு பேசுவார். எனக்கே ஜெர்க் ஆச்சு. அவர் ஏதாவது தப்பா பேசியிருந்தா ஸாரி” என்று பாருவிடம் மன்னிப்பு கேட்டார் திவ்யா. “எனக்கும் லைட்டா ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு.. ஆனா ஃபேமிலி..” என்று சமாளித்தார் பாரு. “அதெல்லாம் ஒண்ணும் தப்பா பேசல. கள்ளங்கபடம் இல்லாத மனுசன்” என்றார் வினோத்.  ‘கேமிற்காக என்ன வேணா பண்ணாலும் கேரக்டர் முக்கியம்’ என்று ஸ்ரீரஞ்சனி சொல்லிச் சென்றது, பாருவின் மண்டைக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது போல. அதைப் பற்றி சுபிக்ஷாவிடம் விசாரிக்க “முன்ன விட இப்ப மாறியிருக்கே” என்று அவர் சான்றிதழ் தந்தார். சுபிக்ஷாவும் இனிமே தனியாகத்தான் ஆடப் போகிறாராம். கப்பு முக்கியமாம்.  ‘வாள மீனக்கும் வெலாங்கு மீனுக்கும்’ பாட்டை வினோத் பாட, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்தார். பிரஜினின் உபதேசத்திற்குப் பின்னால் சான்ட்ராவிடம் மாற்றம் தெரிறது. மற்றவர்களுடன் பழகத் துவங்கியிருக்கிறார். இதை முன்பே செய்திருக்கலாம். முன்னது நடிப்பா அல்லது பின்னதா என்று தெரியவில்லை. BB Tamil 9 “ஒருத்தர் கிட்ட ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி மம்மி சொன்னாங்க” என்று அரோவிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் திவ்யா. “யாரது?” என்று அரோ ஆவலாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது. “இங்க எல்லோர்கிட்டயும்தான் ஜாக்கிரதையா இருக்கணும்.. இது ஒரு போட்டி” என்று தத்துவம் உதிர்த்தார் அரோ.  விருந்தினர்களின் உபதேசங்களும் ஏற்றி விடுதல்களும் போட்டியாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

விகடன் 25 Dec 2025 10:51 am

விஜய் அஜித் குறித்த கேள்விக்கு நமிதா சொன்ன பதில்..!

இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க என நமிதா நச் பதில் கொடுத்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நமீதா. இவர் தமிழில் ஏய் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, இங்கிலீஷ் காரன், கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்ல,...

தஸ்தர் 25 Dec 2025 10:50 am

மனோஜ் செய்த வேலையால் ஆடிப்போன அண்ணாமலை, கோபத்தில் முத்து –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி,கிரிஷை மேனேஜர் தினேஷ் கடத்தின விஷயத்தை சொன்னார். பின் தன்னுடைய முழு விவரமும் தினேஷுக்கு தெரியும் என்ற உண்மையையெல்லாம் ரோகிணி சொன்னார். இதை கேட்ட மீனா, வீட்டில் எல்லோரிடமும் உண்மையை சொல் என்றார். ஆனால், ரோகினி முடியாது என்றார். மீனா, நீ மனோஜ் போன் நம்பரை கொடுத்து பணம் கேட்க சொல் என்று ஒரு ஐடியா சொன்னார். அதற்குப் பின் தினேஷ், மனோஜ்க்கு போன் செய்து கிரிஷை கடத்தின […] The post மனோஜ் செய்த வேலையால் ஆடிப்போன அண்ணாமலை, கோபத்தில் முத்து – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 10:20 am

ரஜினியின் ஜெயிலர் 2ல் நான் ரொம்ப நேரம் வருவேன் –நடிகர் சிவராஜ்குமார் ஓபன் டாக்

ஜெயிலர் 2 படம் பற்றி சிவராஜ்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட மொழியில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவராஜ் குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 45. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் உபேந்திரா நடித்திருக்கிறார். இந்த படத்தை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தான் இயக்கி இருக்கிறார். […] The post ரஜினியின் ஜெயிலர் 2ல் நான் ரொம்ப நேரம் வருவேன் – நடிகர் சிவராஜ்குமார் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Dec 2025 9:24 pm

விஜயால் தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு தான் –உண்மையை போட்டுடைத்த நடிகை நமீதா

விஜய் அரசியல் பற்றி நடிகை நமீதா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேனி அருகே போடி சாலையில் தனியார் நிறுவனத்தின் உடைய பிரியாணி கடை திறப்பு விழாவிற்கு நமீதா சென்று இருந்தார். இதை திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், மக்களவை உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருந்தார். மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். நடிகை நமீதாவை பார்க்க ஏராளமான […] The post விஜயால் தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு தான் – உண்மையை போட்டுடைத்த நடிகை நமீதா appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Dec 2025 8:55 pm

தன் குடும்பத்துடன் சந்தோத்தில் இருக்கும் பாண்டியன், கோபத்தில் கொந்தளிக்கும் வானதி –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவனின் அம்மாவிற்கு அவருடைய கணவர் ஃபோன் செய்து பணத்தைப் பற்றி கேட்டார். கொஞ்ச நேரம் கழித்து கோமலு கணவர் வீட்டிற்க்கே வந்து விட்டார். பின் கோமலு, அவருடைய கணவர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த நடேசன் கோபப்பட்டு கத்தினார். உடனே அங்கிருந்து கோமலு கணவர் தப்பித்து ஓடி விட்டார். பின் நடேசன், என்ன திட்டத்தோடு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். உண்மையை சொல் என்று பல்லவன் அம்மாவின் கழுத்தை […] The post தன் குடும்பத்துடன் சந்தோத்தில் இருக்கும் பாண்டியன், கோபத்தில் கொந்தளிக்கும் வானதி – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Dec 2025 7:39 pm

‘கூலி’ படத்தில் நடித்ததால் எனக்கு வருத்தமா? –நடிகர் உபேந்திரா சொன்ன நச் பதில்

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினி நடித்த படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் […] The post ‘கூலி’ படத்தில் நடித்ததால் எனக்கு வருத்தமா? – நடிகர் உபேந்திரா சொன்ன நச் பதில் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Dec 2025 6:52 pm

Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை - நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு

விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். Thalapathy Kacheri - Jananayagan எப்போதுமே விஜய் பட இசை வெளியீட்டு விழா என்றாலே சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். ஆனால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான பாஸ்கள் ஏற்கெனவே வழங்கி முடித்துவிட்டார்கள். சரியாக மதியம் 3 மணிக்கு இந்த மியூசிக் கான்சர்ட் தொடங்கிவிடும். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு நடைபெறும் என்கிறார்கள். நெறிமுறைகள்: 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கிடையாது. ஒரு முறை அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. கேமரா, கொடிகள், அவமதிப்பை ஏற்படுத்தும் சொற்களைப் பொறித்த சட்டைகள், ரேடியோ கம்யூனிகேஷன் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களை அரங்கத்திற்குள் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். அரங்கிற்குள் அரசியல் கட்சிகள் தொடர்பான எந்தப் பொருள்களையும் வைத்திருக்கக் கூடாது என தடை விதித்திருக்கிறார்கள். அரசியல் நிறக் குறியீடுகளைக் கொண்ட (சிவப்பு மற்றும் மஞ்சள்) பொருள்களைக் கொண்டு வருவதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். View this post on Instagram A post shared by Malik Streams Corporation (@malikstreams) அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட குடை, விசிறி, பதாகை, போஸ்டர் என எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். உணவு, தண்ணீர் என வெளியிலிருந்து எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்கு கொண்டு வர அனுமதி கிடையாது. அரங்கத்திற்கு உள்ளாகவே உணவு டிரக்குகளும், தண்ணீர் பாட்டில்களும் கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார்கள். Jana Nayagan: 'அழியாதது இந்த வாளின் கதையே' - வெளியான ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்!

விகடன் 24 Dec 2025 6:35 pm

Immortal – Teaser

தஸ்தர் 24 Dec 2025 6:35 pm

Thaai Kizhavi – Official Teaser

Thaai Kizhavi – Official Teaser , Radikaa Sarathkumar ,Sivakumar Murugesan , Nivas K Prasanna

தஸ்தர் 24 Dec 2025 6:32 pm

பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறும் விஜய், வலியில் துடிக்கும் காவிரி –விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்யின் கஸ்டமர் எல்லோருமே பேட்டியில் விஜய் கம்பெனியை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார்ர்கள். இதை டிவியில் பார்த்த தாத்தா, பாட்டி இருவரும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள். பின் பாட்டி, விஜய் இடம் பேசி பிரச்சினையை பார்க்க சொல்லுங்க என்றெல்லாம் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் நர்மதா, முத்துமலர் குடும்பம் இருக்கும் இடத்திற்கு சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது பசுபதி ஏமாற்றிய வேலை எல்லாம் நர்மதா சொன்னார். இதைக் கேட்டு கிருஷ்ணா, சிந்து […] The post பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறும் விஜய், வலியில் துடிக்கும் காவிரி – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Dec 2025 5:05 pm

ஸ்ரீலீலா கண்ணில் ஒரு தீப்பொறியை கண்டேன்..சுதா கொங்காரா பேச்சு.!!

ஸ்ரீ லீலா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் சுதா கொங்காரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரீலீலா குறித்து சுதா கொங்காரா புகழ்ந்து பேசி உள்ளார் ஸ்ரீலிலா ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்துடனும் தமிழை...

தஸ்தர் 24 Dec 2025 4:58 pm

சர்வதேச தரத்தில் அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர் - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர் ரூபன்

இந்திய அனிமேஷன் துறையில் கவனம் ஈர்க்கும் படமாக சர்வதேச அரங்கைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது 'மிஷன் சான்டா : யோயோ டு த ரெஸ்யூ' (Mission Santa: Yoyo To The Rescue). குழந்தைகளைக் கவரும் சர்வதேச அளவிலான அனிமேஷன் படமான இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. அட்லியின் ஆஸ்தான எடிட்டரான ரூபன், இப்படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தை கவனிக்கிறார். 'தெறி', 'மெர்சல்' ஜவான்' எனப் பல படங்களின் எடிட்டர் இவர். பாலிவுட்டில் 'ஜவான்', 'பேபி ஜான்' படங்களில் ஸ்கோர் செய்ததால், அங்கே இப்போது ஷாருக்கானின் படம், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் என செம பிஸியாக இருக்கிறார். ரூபனிடம் 'மிஷன் சான்டா' குறித்து பேசினோம். எடிட்டர் ரூபன் ''இந்திய ஸ்டூடியோவில் உருவானதுதான் இந்தப் படம். இந்த படத்தின் முதல் வெளியீடு ஜெர்மனியில் நடக்குது. மிஷன் சான்டாவின் போஸ்டர்கள், டீசர்கள் பார்த்தவங்க வியக்குறாங்க. ஹாலிவுட்டின் டிஸ்னியின் தரத்திற்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்லயும் அனிமேஷன் உருவாகியிருக்கிறது சந்தோஷமா இருக்குது என்கிறார்கள். இது உண்மையும்கூட! இதில் எனது பங்களிப்பு புரொமோஷன், டிஸ்ட்ரிபியூஷன் பார்ட்னர் ஆக இருக்கேன். மிஷன் சான்டா யோயோ.. அனிமேஷன் படங்களின் எடிட்டிங் என்பது அதோட ஸ்டோரி போர்டுலேயே அதுவாகவே வந்துநின்னுடும். சர்வதேச அளவிலான ஒரு தரம்மிக்க படைப்பை உலகளவுல கொண்டு போகணும்னு விரும்பினோம். அதற்கான முயற்சிதான் இது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும்போது பல்வேறு மொழிகள்ல வெளிவரும். இந்திய மொழிகளுக்கு ஏற்றமாதிரி டப்பிங் மற்றும் அதற்கான வேலைகள் பர்ஃபெக்ட்டா பண்ணினால்தான் இந்தப் படம் கவனம் பெறும் என்பதால் டப்பிங்கிலும் தீவிரமாக உழைச்சிருக்காங்க. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீராம் (sriram), தமிழர். திருச்சியைச் சேர்ந்தவர். நட்பு ரீதியாக என்கிட்ட ஒரு உதவியைக் கேட்டார். அதனால என்னோட தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தின் மார்க்கெட்டிங்கை கவனிச்சிருக்கேன். குழந்தைகளுக்கான கதை இது என்பதால், விடுமுறைக்கு ரொம்ப பொருத்தமான கதையா இருக்கும். ரெண்டு வருஷம், நூற்றுக்கணக்கானோர் உழைப்பில் இந்தப் படம் உருவாகியிருக்குது. இந்த மாதிரி சர்வதேச படங்களை இந்தியாவுல பண்ணனும்னா, அதற்கு பல பிராசஸ் இருக்குது. அதெல்லாம் செய்து முடித்தால்தான் படத்தைக் கொண்டு வரமுடியும். நான் மற்ற படங்களின் புரொமோஷன்கள், டிரெய்லர்கள் அதிகம் ஒர்க் பண்றதால, என்கிட்ட 'மார்க்கெட்டிங்' பண்ணச்சொல்லி கேட்டாங்க. ரூபன் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் நம்ம ஊரைச் சேர்ந்தவங்க என்பதால், நானும் உதவி செய்ய தீர்மானிச்சேன். இந்த படம் நம்மளோட தொழில்நுட்பத் திறமையை வெளிநாட்டினருக்கு உயர்த்திக்காட்டும்'' எனச் சொல்லும் ரூபன், இப்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். டோலிவுட்டில் பாலகிருஷ்னாவின் 'டாக்கு மகாராஜ்' இயக்குநருடன் மீண்டும் கை கோக்கிறார். தவிர தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். தவிர, டிரெய்லர்கள், புரொமோஷன் தொடர்பான வேலைகளும் இன்னொரு பக்கம் ஜரூராக நடந்திட்டிருக்குது என உற்சாகமாகப் பேசுகிறார் ரூபன்.

விகடன் 24 Dec 2025 4:47 pm

சர்வதேச தரத்தில் அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர் - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர் ரூபன்

இந்திய அனிமேஷன் துறையில் கவனம் ஈர்க்கும் படமாக சர்வதேச அரங்கைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது 'மிஷன் சான்டா : யோயோ டு த ரெஸ்யூ' (Mission Santa: Yoyo To The Rescue). குழந்தைகளைக் கவரும் சர்வதேச அளவிலான அனிமேஷன் படமான இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. அட்லியின் ஆஸ்தான எடிட்டரான ரூபன், இப்படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தை கவனிக்கிறார். 'தெறி', 'மெர்சல்' ஜவான்' எனப் பல படங்களின் எடிட்டர் இவர். பாலிவுட்டில் 'ஜவான்', 'பேபி ஜான்' படங்களில் ஸ்கோர் செய்ததால், அங்கே இப்போது ஷாருக்கானின் படம், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் என செம பிஸியாக இருக்கிறார். ரூபனிடம் 'மிஷன் சான்டா' குறித்து பேசினோம். எடிட்டர் ரூபன் ''இந்திய ஸ்டூடியோவில் உருவானதுதான் இந்தப் படம். இந்த படத்தின் முதல் வெளியீடு ஜெர்மனியில் நடக்குது. மிஷன் சான்டாவின் போஸ்டர்கள், டீசர்கள் பார்த்தவங்க வியக்குறாங்க. ஹாலிவுட்டின் டிஸ்னியின் தரத்திற்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்லயும் அனிமேஷன் உருவாகியிருக்கிறது சந்தோஷமா இருக்குது என்கிறார்கள். இது உண்மையும்கூட! இதில் எனது பங்களிப்பு புரொமோஷன், டிஸ்ட்ரிபியூஷன் பார்ட்னர் ஆக இருக்கேன். மிஷன் சான்டா யோயோ.. அனிமேஷன் படங்களின் எடிட்டிங் என்பது அதோட ஸ்டோரி போர்டுலேயே அதுவாகவே வந்துநின்னுடும். சர்வதேச அளவிலான ஒரு தரம்மிக்க படைப்பை உலகளவுல கொண்டு போகணும்னு விரும்பினோம். அதற்கான முயற்சிதான் இது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும்போது பல்வேறு மொழிகள்ல வெளிவரும். இந்திய மொழிகளுக்கு ஏற்றமாதிரி டப்பிங் மற்றும் அதற்கான வேலைகள் பர்ஃபெக்ட்டா பண்ணினால்தான் இந்தப் படம் கவனம் பெறும் என்பதால் டப்பிங்கிலும் தீவிரமாக உழைச்சிருக்காங்க. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீராம் (sriram), தமிழர். திருச்சியைச் சேர்ந்தவர். நட்பு ரீதியாக என்கிட்ட ஒரு உதவியைக் கேட்டார். அதனால என்னோட தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தின் மார்க்கெட்டிங்கை கவனிச்சிருக்கேன். குழந்தைகளுக்கான கதை இது என்பதால், விடுமுறைக்கு ரொம்ப பொருத்தமான கதையா இருக்கும். ரெண்டு வருஷம், நூற்றுக்கணக்கானோர் உழைப்பில் இந்தப் படம் உருவாகியிருக்குது. இந்த மாதிரி சர்வதேச படங்களை இந்தியாவுல பண்ணனும்னா, அதற்கு பல பிராசஸ் இருக்குது. அதெல்லாம் செய்து முடித்தால்தான் படத்தைக் கொண்டு வரமுடியும். நான் மற்ற படங்களின் புரொமோஷன்கள், டிரெய்லர்கள் அதிகம் ஒர்க் பண்றதால, என்கிட்ட 'மார்க்கெட்டிங்' பண்ணச்சொல்லி கேட்டாங்க. ரூபன் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் நம்ம ஊரைச் சேர்ந்தவங்க என்பதால், நானும் உதவி செய்ய தீர்மானிச்சேன். இந்த படம் நம்மளோட தொழில்நுட்பத் திறமையை வெளிநாட்டினருக்கு உயர்த்திக்காட்டும்'' எனச் சொல்லும் ரூபன், இப்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். டோலிவுட்டில் பாலகிருஷ்னாவின் 'டாக்கு மகாராஜ்' இயக்குநருடன் மீண்டும் கை கோக்கிறார். தவிர தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். தவிர, டிரெய்லர்கள், புரொமோஷன் தொடர்பான வேலைகளும் இன்னொரு பக்கம் ஜரூராக நடந்திட்டிருக்குது என உற்சாகமாகப் பேசுகிறார் ரூபன்.

விகடன் 24 Dec 2025 4:47 pm

BB Tamil 9: வினோத் மேல பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்; ஆனா, நீ.!- காட்டமான அமித்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 79 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று (டிச. 23) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இன்று வெளியான முதல் இரண்டு புரொமோக்களில் அமித் குடும்பத்தில் இருந்தும், திவ்யா குடும்பத்தில் இருந்தும் வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் அமித், வினோத் இருவரும் சமையல் விஷயத்திற்காக வாக்குவாதம் செய்துகொள்கிறார்கள். BB Tamil 9: `பார்வதி அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க' - அமித் மனைவி ஸ்ரீரஞ்சனி ரொம்ப ஓவரா பண்ணாத அமித். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணேனா? என வினோத் காட்டமாக அமித்திடம் சண்டை போடுகிறார். நீ ரொம்ப ஓவரா பண்ணாத. என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டுதான் இருக்க. என்கிட்ட நாக்கு மடிச்சு பேசுற. BB Tamil 9 உன் மேல எவ்வளவு பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா நான் உன்னை தப்பா பேசுற மாதிரி நீ வெளிப்படுத்துற என்று அமித் வினோத்திடம் வாக்குவாதம் செய்கிறார்.

விகடன் 24 Dec 2025 4:15 pm

திருமண நாளுக்காக சேது கொடுத்த சர்பிரைஸ், தமிழ்செல்வி என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் நிறைய குடித்துவிட்டு காவியா ரூமிற்கு வந்து பிரச்சனை செய்து கொண்டிருந்தார். உடனே அங்கு வந்த ஈஸ்வரி, அமைதியாக இரு போஸ் என்றார். ஒரு கட்டத்தில் போஸ், இவ்வளவு நாள் நீ கண்டிஷன் போட்டாய். இனி நான் போடுகிறேன். நீ புடவை தான் கட்ட வேண்டும். வெளியே போகக்கூடாது. நான் சொல்லும் பேச்சை தான் கேட்க வேண்டும். இது என்னுடைய கேரக்டரே கிடையாது என்று எல்லா உண்மையும் சொன்னார். […] The post திருமண நாளுக்காக சேது கொடுத்த சர்பிரைஸ், தமிழ்செல்வி என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Dec 2025 3:36 pm

“ஜன நாயகன்” இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது –மலேசிய அரசு நிபந்தனை

“ஜன நாயகன்” இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது – மலேசிய அரசு நிபந்தனை விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் 27-ந்தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, மலேசியாவில் அந்நாட்டின் அரசு தரப்பில் இருந்து படக்குழுவிற்கு முக்கியமான நிபந்தனை ஒன்று போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வகையில், விழாவில் அரசியல் கருத்துக்கள் எதுவும்...

தஸ்தர் 24 Dec 2025 3:15 pm

விஜய் சேதுபதியின் ’டிரெயின்’ ரிலீஸ் எப்போது? –வெளியான முக்கிய தகவல்

விஜய் சேதுபதியின் ’டிரெயின்’ ரிலீஸ் எப்போது? – வெளியான முக்கிய தகவல் பிசாசு 2, ட்ரெய்ன் ஆகிய இரண்டு படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். ஆனால், இப்படங்கள் இன்னமும் ரிலீசாகாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெய்ன்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இப்படத்தின் டிஜிட்டல் விற்கப்படாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போன நிலையில், ஓடிடி சேல்ஸ் ஆவதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட...

தஸ்தர் 24 Dec 2025 3:10 pm

பெண்களின் ஆடை குறித்து பேசிய தெலுங்கு நடிகருக்கு கண்டனம் தெரிவித்த சின்மயி

பெண்களின் ஆடை குறித்து பேசிய தெலுங்கு நடிகருக்கு கண்டனம் தெரிவித்த சின்மயி தெலுங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘தண்டோரா’ படம் வருகிற 25-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்களின் ஆடை பற்றி சிவாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.அவர் பேசுகையில், ‘பெண்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், நீங்கள்தான் பிரச்சினையை சந்திக்க வேண்டி இருக்கும்.என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்குப்...

தஸ்தர் 24 Dec 2025 3:00 pm

சிறந்த நடிகர் விருது பாலாவின் கடிதமும், சசிகுமாரின் பதிலும்

சிறந்த நடிகர் விருது பாலாவின் கடிதமும், சசிகுமாரின் பதிலும் சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்காக சிறந்த நடிகர் என்ற விருதினை பெற்றார் சசிகுமார். இதற்காக இயக்குநர் பாலா சசிகுமாருக்கு கடிதமொன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், ‘சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் ’டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் இக்கடிதம். கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னைப்...

தஸ்தர் 24 Dec 2025 2:53 pm

தாய் என்றுகூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் பார்வதி மகன், அருணுக்கு கிடைத்த ரிவார்ட் –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, தனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து கிரிஷை தேட சொன்னார். அதற்கு பின் மேனேஜரிடம் இருந்து போன் வந்தது. ரூமிற்கு சென்று ரோகினி பேசினார். அப்போது மேனேஜர், கிரிசை தேடி அலைகிறாயா? உன் மகனை நான் தான் கடத்திருக்கிறேன். 2 லட்சம் பணம் தந்தால்தான் விடுவேன் என்றார். இதனால் ரோகிணி ரொம்பவே பயந்து விட்டார். அதற்குப்பின் மீனா, இது சிந்தாமணி வேலையாக இருக்குமா? என்றார். உடனே விஜயா, அதெல்லாம் […] The post தாய் என்றுகூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் பார்வதி மகன், அருணுக்கு கிடைத்த ரிவார்ட் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Dec 2025 2:33 pm

காதல் கொலைகளால் ஏற்படும் வலியை சொல்லும் ‘புகார்’

காதல் கொலைகளால் ஏற்படும் வலியை சொல்லும் ‘புகார்’ ஸ்ரீமதுராஜா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘புகார்’. இதை ‘ரூட்’ படத்தை இயக்கிய ஏ.சி.மணிகண்டன் இயக்குகிறார். கதாநாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். 2-வது ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்கிறார். மேலும் ஜனுஷ்கா, மணி செல்வம் உள்பட பலர் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகிறது. பிச்சைக்கனி, ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார். ‘இன்றைய சூழலில் காதலால் பல ஆணவக் கொலைகள் அரங்கேறுகின்றன. அந்தக்...

தஸ்தர் 24 Dec 2025 2:19 pm

BB 9: ஆரம்பிச்சு விட்டுட்டு எங்க புகையுதுன்னு பார்ப்பாங்க - பார்வதியை கலாய்த்த திவ்யாவின் அப்பா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 24) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி வந்திருந்தார். நீ இந்த வீட்டோட கவுன்சலர் இல்ல அமித். சாண்ட்ரா ரொம்ப சோகமா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்க, ஆனா அவங்க பிக் பாஸ் தமிழ், மலையாளம்'னு எல்லாத்தையும் பார்த்திட்டு வந்திருக்காங்க. BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி அவங்க கேம் சாதரணமாலாம் இல்ல. அரோராலாம் கணக்கு வச்சு விளையாடுறாங்க. யார் என்ன பேசுறாங்க, எப்படி பேசுறாங்க, அதை பத்தி எங்க பேசலாம்'னு ரொம்ப தெளிவா இருக்காங்க. BB Tamil 9 பார்வதியோட விசுவாசம் கேமுக்கு மட்டும்தான். அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு விளையாடு என்று அமித்துக்கு ஸ்ரீரஞ்சனி அட்வைஸ் கொடுத்தார். தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் திவ்யாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். இந்த வாரம் வீட்டு தலை பொறுப்பை சிறப்பா பண்ணிட்டு இருக்கீங்க என கம்ருதீனை திவ்யாவின் அப்பா பாராட்டுகிறார். உடனே பார்வதி, எல்லாப் பேரன்ட்ஸும் வர்றதுனால வீட்டு தலைய நாங்க பெருசா தொந்தரவு பண்ணல என்று சொல்கிறார். BB Tamil 9 அதற்கு திவ்யாவின் தந்தை, இதுதான் பாரு. பதில் சொல்ல வேண்டியது கம்ருதீன் அல்லவா? தாங்கள் இடையில் வருவது ஏன்? ஒரு விஷயத்தை ஆரம்பிச்சு விட்டிட்டு எங்க புகையுதுன்னு வந்து பார்ப்பாங்க என பார்வதியை கலாய்கிறார்.

விகடன் 24 Dec 2025 1:43 pm

வேதனையில் தவிக்கும் சரவணனுக்கு ஆறுதல் சொன்ன பழனி, பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்யா, எப்படியாவது உன்னை நான் அந்த வீட்டில் வாழ வைப்பேன் என்றார். அதற்கு தங்கமயில், மீனாவிற்கு விடாமல் போன் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மீனா போன் பேசி இருந்தார். அப்போது தங்கமயில், நான் உங்களுக்கு வேண்டாதவள் ஆகி விட்டேனா? என்னுடைய நிலைமையை யாரும் யோசிக்க இல்லையா என்றெல்லாம் அழுது புலம்பினார். ஆனால், மீனா எதுவுமே சொல்லாமல் போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் […] The post வேதனையில் தவிக்கும் சரவணனுக்கு ஆறுதல் சொன்ன பழனி, பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Dec 2025 1:38 pm

விஜயா சொன்ன வார்த்தை, பார்வதியின் மகன் கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு என்னாச்சு என்று தெரியாமல் வீட்டில் அனைவரும் பதட்டமாக இருக்க ரோகிணி கிச்சனுக்கு சென்று அழ மீனா ஆறுதல் சொல்லுகிறார் மறுபக்கம் விஜயா அவனோட பாட்டிய ஆள வச்சி பணத்துக்காக கூட இது மாதிரி பண்ணி இருப்பாங்க என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். கொஞ்ச நேரத்தில் க்ரிஷ் வந்தவுடன் வீட்டில்...

தஸ்தர் 24 Dec 2025 12:30 pm

விஜயா சொன்ன வார்த்தை, பார்வதியின் மகன் கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு என்னாச்சு என்று தெரியாமல் வீட்டில் அனைவரும் பதட்டமாக இருக்க ரோகிணி கிச்சனுக்கு சென்று அழ மீனா ஆறுதல் சொல்லுகிறார் மறுபக்கம் விஜயா அவனோட பாட்டிய ஆள வச்சி பணத்துக்காக கூட இது மாதிரி பண்ணி இருப்பாங்க என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். கொஞ்ச நேரத்தில் க்ரிஷ் வந்தவுடன் வீட்டில்...

தஸ்தர் 24 Dec 2025 12:30 pm