தேவயானியை லவ் பண்றீங்களானு கேட்டப்போ இல்லைனு சொன்னீங்க! | Vikraman & Rajakumaran | Guru Sishyan
18 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த சக்ஸஸ் –சூப்பர் ஸ்டார் மகள் எமோஷனல்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித் லவ். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மதன் என்பவர் இயக்கி இருக்கிறார். அபிஷன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தது.அதேபோல் இவர் […] The post 18 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த சக்ஸஸ் – சூப்பர் ஸ்டார் மகள் எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .
காதலர் தினத்தை ஒட்டி வந்த ‘பூக்கி’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராகவும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தற்போது இவருடைய இசையில் உருவாகி இருக்கும் படம் பூக்கி. இந்த படத்தில் அஜய், தனுஷா, பாண்டியராஜன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ஹீரோ அஜய், ஹீரோயின் […] The post காதலர் தினத்தை ஒட்டி வந்த ‘பூக்கி’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
ரஹ்மான் டு சாய் பல்லவி: திரண்ட திரைநட்சத்திரங்கள்; தமிழ்நாடு அரசு விருது விழா - புகைப்படத் தொகுப்பு!
சசிகுமார் நடித்த ‘மை லார்ட்’படம் நீதி கிடைத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சசிகுமார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மை லார்ட். இந்த படத்தை இயக்குனர் ராஜூ முருகன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சைத்ரா அச்சர், குரு சோமசுந்தரம், ஆசா சரத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: […] The post சசிகுமார் நடித்த ‘மை லார்ட்’ படம் நீதி கிடைத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
பிப்ரவரி 14ம் தேதி முட்டாள்கள் தினமாக போகிறது- திருமணம் சர்ச்சைக்கு மிருணாள் கொடுத்த பதிலடி
சமீப காலமாகவே முன்னணி நடிகர், நடிகைகள் இடையே காதல், கல்யாணம் போன்ற கிசுகிசுக்கள் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதில் சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், சில விஷயங்கள் வதந்திகள். அதை விளம்பரத்திற்காகவே செய்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தனுஷ்-மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன் மிருணாள் படத்தினுடைய விழாவிற்காக சிறப்பு விருந்தினராக தனுஷ் வந்திருந்தார். உடனே இருவருக்கும் ஏதாவது கிசுகிசு இருக்கிறதா? என்று கூற […] The post பிப்ரவரி 14ம் தேதி முட்டாள்கள் தினமாக போகிறது- திருமணம் சர்ச்சைக்கு மிருணாள் கொடுத்த பதிலடி appeared first on Tamil Behind Talkies .
My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?
கோவில்பட்டி, மைப்பாறையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் முத்து சிற்பியும் (சசிகுமார்), அவரது மனைவி சுசிலாவும் (சைத்ரா) இறந்து போய்விட்டதாக அரசால் போலியான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்று, ஊடகத்தைத் தன் பக்கம் கவனிக்க வைக்கிறார் முத்துசிற்பி. அதனால், காவல் நிலையத்தில் வைத்து, அவரை அடித்து உதைக்கிறது போலீஸ். My Lord Review | மை லார்ட் விமர்சனம் இச்சூழலில், சென்னையில் மிகப்பெரிய அதிகாரமும், பணமும் படைத்த சுஜாதாவின் (ஆஷா சரத்) சிகிச்சைக்குச் சிறுநீரகம் தேவைப்பட, அதற்கு மருத்துவ ரீதியாக முத்து சிற்பியின் சிறுநீரகம் பொருந்துகிறது. அதனால், அவரிடமிருந்து சிறுநீரகத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக வாங்க கிருஷ்ணா (ராம்குமார் பிரசன்னா) என்பவர் முயல்கிறார். முத்து சிற்பி தம்பதிக்கு ஏன் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, முத்து சிற்பியின் சிறுநீரகம் வாங்கப்பட்டதா, உண்மையில் சுஜாதா யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது ராஜுமுருகன் இயக்கியிருக்கும் 'மை லார்ட்' திரைப்படம். My Lord: ஜாலியா பாட்டுக்குள்ள கெட்ட வார்த்தையை வச்சுட்டோம்! | Sasikumar, Rajumurugan, Yugabharathi பணமும் அதிகாரமுமற்று, அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் சாமானியனாகத் தோற்றத்திலும், உடல்மொழியிலும் கச்சிதம் கூட்டுகிறார் சசிகுமார். ஆனால், அப்பாவித்தனம், காதல், இயலாமை, கோபம் என மாறிக்கொண்டே இருக்கும் எமோஷன் முகத்தில் வழக்கமான சசிகுமாரே பெரும்பாலும் வந்து போவது மைனஸ்! பயமும், காதலும் ஒருசேரக் கலந்திருக்கும் முகத்தோடு, படத்தின் பதைபதைப்பைத் தாங்கி நிற்கும் சைத்ரா, உடல்மொழியாலேயே எமோஷனைக் கடத்தி படத்தின் சொத்தாக மாறியிருக்கிறார். பார்வையாலேயே கதாபாத்திரத்திற்கான கம்பீரத்தையும், மிடுக்கையும் கடத்தியிருக்கிறார் ஆஷா சரத். கொங்கு வட்டார வழக்கில் பேசி, ஆங்காங்கே வரும் காமெடி மீட்டரைக் குறைய விடாமல் பார்த்துக்கொள்ளும் ராம்குமார் பிரசன்னாவின் பங்களிப்பு பெரிய ப்ளஸ். My Lord Review | மை லார்ட் விமர்சனம் குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், வசுமித்ரா, அருள் எழிலன், கோபி நயினார் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் கரிசல் கிராமத்தின் வெக்கையும், அதன் இயல்பான எளிமையும் படத்தின் எதார்த்தத்திற்கு உரமூட்டுகின்றன. எமோஷன் காட்சிகளில் சத்யராஜ் நடராஜனின் பரபரப்பில்லாத படத்தொகுப்பு கைகொடுத்தாலும், மையக்கதையிலிருந்து கருத்துச்சாலைக்கு இண்டிகேட்டர் போடாமல் தாவியோடும் காட்சிகளுக்குக் கண்டிப்பு காட்டத் தவறுகிறார். My Lord: 'தனிமையில இருக்காதீங்க, நிறைய பேர்கிட்ட பேசுங்கன்னு.!'- மாரிசெல்வராஜ் அட்வைஸ் குறித்து பாலா ஷான் ரோல்டன் இசையில், எல்லாப் பாடல்களும் திரையோட்டத்தோடு வந்து, கரிசல் நிலத்தின் பருத்தியாகச் சுகம் கூட்டுகின்றன. காமெடி, எமோஷன், பரபரப்பு என எல்லா நிலத்திலும் தேவையான மகசூலை எடுத்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. பிரதான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, நேராகக் கதைக்குள் நுழைக்கிறது திரைக்கதை. காதலும், எளிமையும் மிகுந்த முத்து சிற்பி - சுசிலாவின் கதை விரிகிறது. சின்ன சின்ன கலாட்டா, அழகான காதல், வல்லாளாரின் போதனை என நகர்ந்து, படம் பேசும் சமூக அவலத்தைத் தொடுகிறது. ஆனாலும், எதார்த்தத்தை மீறி, துணைக் கதாபாத்திரங்கள் கருத்துச் சொல்லிக்கொண்டே இருப்பது துருத்தல். My Lord Review | மை லார்ட் விமர்சனம் கடும் வறுமையின் காரணமாக ஏழைகளிடம் சட்டவிரோதமாக சிறுநீரகம் வாங்கும் கும்பல், அவர்களுக்கே தெரியாமல் திருடும் கும்பல், அந்த வலைப்பின்னல்கள் செயல்படும் முறை, அரசின் கட்டமைப்பும் மாஃபியாக்களும் கைகோர்க்கும் இடம், ரேஷன் கார்டு வாங்கப் போராடும் அவலம் என இடைவேளை வரை அழுத்தமாகக் கதையின் மையத்தைப் பேசுகிறது திரைக்கதை. அவற்றைச் சுட்டிக்காட்டும் வசனங்களும் நெருப்பாகத் தெறிக்கின்றன. சில செயற்கைத்தனங்கள் எட்டிப் பார்த்தாலும், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பும் இடைவேளைக் காட்சி நச்! சங்காரம்: அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும்; படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு! - நெகிழும் சசிகுமார் மனைவியை மகிழ்விக்கக் கதாநாயகன் செய்யும் சேட்டைகள், அதனால் கிருஷ்ணன் படும் பாடு, ஆஸ்பத்திரியில் தம்பதிகள் செய்யும் கலாட்டா எனக் கதையிலிருந்து விலகியோடும் காமெடி காட்சிகள் இரண்டாம் பாதியின் பாதி வரை ஓடுகின்றன. அவற்றிலும் பாதியே க்ளிக் ஆகியிருக்கின்றன. மீண்டும் சிறுநீரகத் திருட்டிற்கு எதிரான சட்டப்போராட்டத்திற்குள் நுழையும் திரைக்கதை, தேவையான நிதானத்தையும் தெளிவையும் கொடுக்காமல் கடகடவென ஓடுகிறது. அதனால், அரசு vs சாமானியன் என்ற வீரியமான மையக்கதை தேவையான அழுத்தத்தைத் தராமல் போகிறது. மேலும், இவ்வளவு ஊடகப் புகழ்பெற்ற முத்து சிற்பியை ஏன் இத்தனை அபாயகரமான முயற்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள், தொடக்கத்தில் அப்பாவித்தனமாகவும் பிற்பாடு விவரம் தெரிந்த தைரியசாலியாகவும் எப்படி முத்து சிற்பி கதாபாத்திரம் மாறுகிறது போன்ற பிரதான லாஜிக் ஓட்டைகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. இவற்றைத் தாண்டி, உணர்வுபூர்வமான இறுதிக்காட்சி நேர்த்தியாகக் கைகூடி, மிதமான சிலிர்ப்பைத் தருகிறது. My Lord Review | மை லார்ட் விமர்சனம் சமகால சமூக அவலத்தைப் பேசும் மையக்கதை கவனிக்க வைத்தாலும், அதைத் தெளிவான திரைக்கதையில் திடமாகச் சொல்லியிருந்தால், இந்தச் சாமானியனின் தீர்ப்பு இன்னும் உரக்கக் கேட்டிருக்கும். 'பரியேறும் பெருமாள்' பார்த்துட்டு நானும் H.வினோத்தும் வெட்கப்பட்டோம், ஏன்னா.!- ராஜு முருகன்
My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?
கோவில்பட்டி, மைப்பாறையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் முத்து சிற்பியும் (சசிகுமார்), அவரது மனைவி சுசிலாவும் (சைத்ரா) இறந்து போய்விட்டதாக அரசால் போலியான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்று, ஊடகத்தைத் தன் பக்கம் கவனிக்க வைக்கிறார் முத்துசிற்பி. அதனால், காவல் நிலையத்தில் வைத்து, அவரை அடித்து உதைக்கிறது போலீஸ். My Lord Review | மை லார்ட் விமர்சனம் இச்சூழலில், சென்னையில் மிகப்பெரிய அதிகாரமும், பணமும் படைத்த சுஜாதாவின் (ஆஷா சரத்) சிகிச்சைக்குச் சிறுநீரகம் தேவைப்பட, அதற்கு மருத்துவ ரீதியாக முத்து சிற்பியின் சிறுநீரகம் பொருந்துகிறது. அதனால், அவரிடமிருந்து சிறுநீரகத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக வாங்க கிருஷ்ணா (ராம்குமார் பிரசன்னா) என்பவர் முயல்கிறார். முத்து சிற்பி தம்பதிக்கு ஏன் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, முத்து சிற்பியின் சிறுநீரகம் வாங்கப்பட்டதா, உண்மையில் சுஜாதா யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது ராஜுமுருகன் இயக்கியிருக்கும் 'மை லார்ட்' திரைப்படம். My Lord: ஜாலியா பாட்டுக்குள்ள கெட்ட வார்த்தையை வச்சுட்டோம்! | Sasikumar, Rajumurugan, Yugabharathi பணமும் அதிகாரமுமற்று, அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் சாமானியனாகத் தோற்றத்திலும், உடல்மொழியிலும் கச்சிதம் கூட்டுகிறார் சசிகுமார். ஆனால், அப்பாவித்தனம், காதல், இயலாமை, கோபம் என மாறிக்கொண்டே இருக்கும் எமோஷன் முகத்தில் வழக்கமான சசிகுமாரே பெரும்பாலும் வந்து போவது மைனஸ்! பயமும், காதலும் ஒருசேரக் கலந்திருக்கும் முகத்தோடு, படத்தின் பதைபதைப்பைத் தாங்கி நிற்கும் சைத்ரா, உடல்மொழியாலேயே எமோஷனைக் கடத்தி படத்தின் சொத்தாக மாறியிருக்கிறார். பார்வையாலேயே கதாபாத்திரத்திற்கான கம்பீரத்தையும், மிடுக்கையும் கடத்தியிருக்கிறார் ஆஷா சரத். கொங்கு வட்டார வழக்கில் பேசி, ஆங்காங்கே வரும் காமெடி மீட்டரைக் குறைய விடாமல் பார்த்துக்கொள்ளும் ராம்குமார் பிரசன்னாவின் பங்களிப்பு பெரிய ப்ளஸ். My Lord Review | மை லார்ட் விமர்சனம் குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், வசுமித்ரா, அருள் எழிலன், கோபி நயினார் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் கரிசல் கிராமத்தின் வெக்கையும், அதன் இயல்பான எளிமையும் படத்தின் எதார்த்தத்திற்கு உரமூட்டுகின்றன. எமோஷன் காட்சிகளில் சத்யராஜ் நடராஜனின் பரபரப்பில்லாத படத்தொகுப்பு கைகொடுத்தாலும், மையக்கதையிலிருந்து கருத்துச்சாலைக்கு இண்டிகேட்டர் போடாமல் தாவியோடும் காட்சிகளுக்குக் கண்டிப்பு காட்டத் தவறுகிறார். My Lord: 'தனிமையில இருக்காதீங்க, நிறைய பேர்கிட்ட பேசுங்கன்னு.!'- மாரிசெல்வராஜ் அட்வைஸ் குறித்து பாலா ஷான் ரோல்டன் இசையில், எல்லாப் பாடல்களும் திரையோட்டத்தோடு வந்து, கரிசல் நிலத்தின் பருத்தியாகச் சுகம் கூட்டுகின்றன. காமெடி, எமோஷன், பரபரப்பு என எல்லா நிலத்திலும் தேவையான மகசூலை எடுத்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. பிரதான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, நேராகக் கதைக்குள் நுழைக்கிறது திரைக்கதை. காதலும், எளிமையும் மிகுந்த முத்து சிற்பி - சுசிலாவின் கதை விரிகிறது. சின்ன சின்ன கலாட்டா, அழகான காதல், வல்லாளாரின் போதனை என நகர்ந்து, படம் பேசும் சமூக அவலத்தைத் தொடுகிறது. ஆனாலும், எதார்த்தத்தை மீறி, துணைக் கதாபாத்திரங்கள் கருத்துச் சொல்லிக்கொண்டே இருப்பது துருத்தல். My Lord Review | மை லார்ட் விமர்சனம் கடும் வறுமையின் காரணமாக ஏழைகளிடம் சட்டவிரோதமாக சிறுநீரகம் வாங்கும் கும்பல், அவர்களுக்கே தெரியாமல் திருடும் கும்பல், அந்த வலைப்பின்னல்கள் செயல்படும் முறை, அரசின் கட்டமைப்பும் மாஃபியாக்களும் கைகோர்க்கும் இடம், ரேஷன் கார்டு வாங்கப் போராடும் அவலம் என இடைவேளை வரை அழுத்தமாகக் கதையின் மையத்தைப் பேசுகிறது திரைக்கதை. அவற்றைச் சுட்டிக்காட்டும் வசனங்களும் நெருப்பாகத் தெறிக்கின்றன. சில செயற்கைத்தனங்கள் எட்டிப் பார்த்தாலும், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பும் இடைவேளைக் காட்சி நச்! சங்காரம்: அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும்; படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு! - நெகிழும் சசிகுமார் மனைவியை மகிழ்விக்கக் கதாநாயகன் செய்யும் சேட்டைகள், அதனால் கிருஷ்ணன் படும் பாடு, ஆஸ்பத்திரியில் தம்பதிகள் செய்யும் கலாட்டா எனக் கதையிலிருந்து விலகியோடும் காமெடி காட்சிகள் இரண்டாம் பாதியின் பாதி வரை ஓடுகின்றன. அவற்றிலும் பாதியே க்ளிக் ஆகியிருக்கின்றன. மீண்டும் சிறுநீரகத் திருட்டிற்கு எதிரான சட்டப்போராட்டத்திற்குள் நுழையும் திரைக்கதை, தேவையான நிதானத்தையும் தெளிவையும் கொடுக்காமல் கடகடவென ஓடுகிறது. அதனால், அரசு vs சாமானியன் என்ற வீரியமான மையக்கதை தேவையான அழுத்தத்தைத் தராமல் போகிறது. மேலும், இவ்வளவு ஊடகப் புகழ்பெற்ற முத்து சிற்பியை ஏன் இத்தனை அபாயகரமான முயற்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள், தொடக்கத்தில் அப்பாவித்தனமாகவும் பிற்பாடு விவரம் தெரிந்த தைரியசாலியாகவும் எப்படி முத்து சிற்பி கதாபாத்திரம் மாறுகிறது போன்ற பிரதான லாஜிக் ஓட்டைகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. இவற்றைத் தாண்டி, உணர்வுபூர்வமான இறுதிக்காட்சி நேர்த்தியாகக் கைகூடி, மிதமான சிலிர்ப்பைத் தருகிறது. My Lord Review | மை லார்ட் விமர்சனம் சமகால சமூக அவலத்தைப் பேசும் மையக்கதை கவனிக்க வைத்தாலும், அதைத் தெளிவான திரைக்கதையில் திடமாகச் சொல்லியிருந்தால், இந்தச் சாமானியனின் தீர்ப்பு இன்னும் உரக்கக் கேட்டிருக்கும். 'பரியேறும் பெருமாள்' பார்த்துட்டு நானும் H.வினோத்தும் வெட்கப்பட்டோம், ஏன்னா.!- ராஜு முருகன்
மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ் டுடே, டியூட், டிராகன் போன்ற ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்திலும் நடித்துள்ளார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் பிரதீப் ரங்கநாதன் கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் ஒன்றில் கலந்து...
Balu Mahendra: அழியாத கோலங்கள் `டு'தலைமுறைகள் - பாலுமகேந்திரா திரைப்பயணம் ஒரு பார்வை!
பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும், இயக்குநராக 23 படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அவரின் நினைவு நாளான இன்று (பிப்.13) அவர் இயக்கிய சில படங்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம். * 1977-ல் 'கோகிலா' என்ற கன்னடப் படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இது அவருடைய முதல் படம். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மோகன், ஷோபா ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிறந்த ஒளிப்பதிவிற்கான முதல் தேசிய விருதினை பாலுமகேந்திராவுக்கு இந்தப் படம் பெற்று தந்திருக்கிறது. பாலுமகேந்திரா * 1979-ல் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்தப் படம் மூன்று இளைஞர்களின் வாழ்க்கை, பருவ வயதில் எப்படி இருக்கும் என்பதை அப்படியே சொன்ன படம். * 1980-ல் வெளியான படம் 'மூடுபனி'. மீண்டும் பிரதாப் போத்தன், ஷோபாவை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். பாலுமகேந்திராவுக்கு இளையராஜா இசையமைத்த முதல் படம் இது. * 1982-ல் மலையாளத்தில் வெளியான படம் 'ஓளங்கள்'. இது அவர் இயக்கிய முதல் மலையாளப் படம். பூர்ணிமா ஜெயராம், அம்பிகா, அமோல் பாலேகர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் ஜானகி பாடிய ‘தும்பி வா தும்பக்குளத்தில்’ பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் க்ளாஸ் ஹிட் அடித்தது. * 1982-ல் வெளியான படம் நிரீக்ஷனா. பானு சந்தர், அர்ச்சனா இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தெலுங்கில் சோதனை முயற்சியில் இறங்கி அங்கேயும் ஹிட் அடித்திருக்கிறார். * 1982-ல் 'மூன்றாம் பிறை' படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். நடிப்பிற்காக கமலுக்கும், ஒளிப்பதவிற்காக பாலுமகேந்திராவிற்கும் என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. கண்ணதாசனின் கடைசி பாடலான ‘கண்ணே கலைமானே!’ இன்றைக்கும் எவர் கீரின். மூன்றாம் பிறை * 1983-ல் வெளியான மலையாளப் படம் ‘ஓமக்குயில்’. ஒய்.ஜி மகேந்திரன், அருணா, பூர்ணிமா ஜெயராம் நடித்திருக்கின்றனர். கன்னடத்தில் வெளியான ‘கோகிலா’ படத்தின் ரீமேக் இது. * 1983-ல் இந்தியில் வெளியான படம் ‘சாத்மா’ கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் மூன்றாம் பிறை படத்தின் இந்தி ரீமேக். இளையராஜா இசையமைத்த முதல் இந்திப் படமும் இதுதான். * 1985-ல் வெளியான படம் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ ரஜினிகாந்த், மாதவி இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பாலுமகேந்திரா இயக்குநராக ரஜினியுடன் சேர்ந்த முதல் படம் இதுதான். * 1988-ல் வெளியான படம் ‘வீடு’. அர்ச்சனா பானுசந்தர் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படம். சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. பாலுமகேந்திரா , சசிகுமார் * 1989-ல் வெளியான படம் ‘சந்தியா ராகம்’. இந்தப் படத்தில் சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா நடித்திருக்கின்றனர். அவருக்கு இந்தப் படமும் தேசிய விருதை அள்ளிக்கொடுத்தது. ‘ எந்த சமரசமும் இல்லாமல் நான் நினைத்ததை இயக்கியிருக்கிறேன்’ என்று பாலுமகேந்திரா சொன்ன படம் இது. * 2013-ல் வெளியான படம் ‘தலைமுறைகள்’. பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பாலு மகேந்திராவின் கடைசிப் படம் இது. தமிழையும், இந்தத் தாத்தாவையும் மறக்கவே முடியாது!
சூர்யா சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட அருணாச்சலம்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் பூஜை ரூமில் வந்து பேப்பரை பிரித்துப் பார்க்க அதில் நந்தினி வரமாட்டாள் என எழுதி...
அண்ணாமலையை ஏமாற்றிய மனோஜ், ரோகினியை தூண்டி விடும் சிந்தாமணி –பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், நான் நிறைய கடன் வாங்கி இருக்கிறேன். அந்த ஆர்டர் வேண்டும் என்றார். இதனால் கொந்தளித்த விஜயா, மனோஜை அடித்தார். வீட்டில் உள்ள எல்லோருமே மனோஜ் கடன் வாங்கியதற்காக திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் மனோஜ்-விஜயா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜயா, உனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்று சொல். நான் சிந்தாமணியிடம் சொல்லி ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். இதை எல்லாம் கேட்ட மீனா, முத்துவிடம் சொன்னார். […] The post அண்ணாமலையை ஏமாற்றிய மனோஜ், ரோகினியை தூண்டி விடும் சிந்தாமணி – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை'நாயகன் ஜெயித்தாரா?
ஊட்டியில் வசித்து வரும் சாரு (கிருஷா குரூப்) பெற்றோர் அரவணைப்பின்றி சித்தியால் வளர்க்கப்படுகிறார். சித்தி ஏற்பாடு செய்யும் திருமணத்தில் துளியும் விருப்பமில்லாத சாரு, அங்கிருந்து எவரையாவது காதலித்து வெளியூருக்குத் தப்பி விட வேண்டும் எனத் திட்டமிடுகிறார். அப்படி தனது வீட்டின் அருகிலிருக்கும் ஒருவரைக் காதலிக்கத் தொடங்குகிறார் சாரு. ஆனால், தனது காதலைத் தெரியப்படுத்துவதற்கு முன்பே அவர் வீட்டைக் காலி செய்துவிட்டு சென்னைக்குப் புறப்பட்டுவிடுகிறார். Mylanji Review |மைலாஞ்சி விமர்சனம் அந்தச் சமயம், காட்டுயிர் புகைப்படக்காரராக இருக்கும் சூர்யா (ஸ்ரீராம் கார்த்திக்), ஓர் அரிய வகை பறவையைப் புகைப்படம் எடுப்பதற்கு ஊட்டிக்கு வருகிறார். அங்குச் சாருவுடன் சூர்யாவுக்கு நட்பு மலர்கிறது. நாளடைவில் அது காதலாகவும் வளர்கிறது. காதலைச் சொல்லிவிடலாம் எனச் சூர்யா நினைக்கையில், சென்னையில் இருக்கும் தன்னுடைய காதலுடன் சேர்த்து வைக்க அவரிடமே உதவி கேட்கிறார் சாரு. இறுதியில், சாருவின் காதல் என்ன ஆனது என்பதுதான் இந்த 'மைலாஞ்சி'யின் கதை. Sarvam Maya: `சர்வம் மாயா' டைட்டிலை சஜஸ்ட் பண்ணினது நிவின் பாலிதான்! - இயக்குநர் அகில் சத்யன் ஒருதலைக் காதலில் குமைவது, ஒரு கட்டத்திற்கு மேல் அக்காதலிலிருந்து விலகிச் செல்வது எனக் காதலோடு போராடும் கதாபாத்திரத்தில் வரும் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் செயற்கைத்தனமே ஆதிக்கம் செலுத்துகிறது. ஓரிரு இடங்களில் மட்டுமே கவனம் பெறும் நாயகி கிருஷா குரூப், தட்டுத் தடுமாறி ஜஸ்ட் பாஸ் வாங்குகிறார். ஆங்காங்கே காமெடி டிராக்கிற்காக வரும் சிங்கம் புலி, முனிஸ்காந்த் ஆகியோரும் வழக்கமான நடிப்பைத் தந்து நினைவில் தங்காமல் போகிறார்கள். Mylanji Review |மைலாஞ்சி விமர்சனம் ஊட்டியின் பனி பெய்யும் நிலத்தையும், அதன் பச்சை நிறங்களையும் தன்மை மாறாமல் படம்பிடித்து காதலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியூட்டுகிறார் ஒளிப்பதிவாளர் செழியன். திரை நேரம் சிறிதாக இருந்தாலும், நீண்ட நேரம் படம் பார்த்த உணர்வைத் தரும் வகையிலேயே படத்தைக் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத். ஆங்காங்கே, தாவி ஓடும் ஜம்ப் எடிட்களையும் கண்டும் காணாமல் போயிருக்கின்றன இவரின் கத்திரிகள். ஒலிக்கலவையிலும் சொதப்பல்கள் மட்டுமே மிஞ்சுகின்றன. பாடல்களில் இளையராஜா குரலில் வரும் 'உன்னை நான் விரும்பினேன்' பாடல் தென்றல் காற்றாய் வீசுகிறது. பின்னணி இசையில் இந்தக் காதல் கதையை மென்மையாகக் கரை சேர்க்கும் டச் இல்லாததும் ஏமாற்றமே! சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாயகன், காதலனுக்காகக் காத்திருக்கும் நாயகி, இவர்கள் இருவருக்குள் நிகழும் காதல் என்பதாகத் திரைக்கதையை விரித்திருக்கிறார் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அஜயன் பாலா. காதலைப் பற்றிய புரிதல் இல்லாமல் காதலில் விழும் நாயகி, காதலித்த பெண்ணை அவளுக்குப் பிடித்தவருடன் சேர்த்து வைக்கத் துடிக்கும் 'மிஸ்டர் நேர்மை' நாயகன் என வழக்கொழிந்த காதல் ஃபார்முலாக்கள் கொண்டே முதல் பாதி திரைக்கதை எழுப்பப்பட்டிருக்கிறது. Mylanji Review |மைலாஞ்சி விமர்சனம் இதில், ஆங்காங்கே காமெடிகளையும் வம்படியாகத் திணித்து முதல் அரை மணி நேரத்திற்குள்ளாகவே டீ கேட்க வைக்கும் அளவிற்கு நம்மைச் சோர்வாக்குகிறது திரைக்கதை. காதல் கரைசேரும் பயணத்திலும் பழைய காதலன் மீண்டும் வருவது, நாயகனுக்கு ஏற்படும் விபத்து என்பது போன்ற 80ஸ் காதல் காவியங்களின் வாசமே ஹெவியாக அடிக்கிறது! தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! அத்தனை கண்டிப்பாக இருக்கும் சித்தி திடீரென அடுத்தடுத்த விஷயங்களுக்கு மனமாறும் கதை, நாயகி, நாயகன் மீது காதல் வசப்படும் கதை என எதிலும் நம்பகத்தன்மையும், அழுத்தமான பின்கதையும் இல்லாமல் சரிவான மலைப்பாதையை நோக்கியே திரைக்கதையை நகர்த்தி நம்மைக் கண்ணயரவும் வைக்கிறது படக்குழு. டச் மொபைல், உயர்தர கேமராக்கள் வைத்திருக்கும் நாயகன் எனக் காட்டப்படும் கதையில், ஊட்டியில் வசிக்கும் பெண்ணுக்கு மெயில் பற்றிக்கூட அறியாத விஷயமெல்லாம் லாஜிக் மீறல்! Mylanji Review |மைலாஞ்சி விமர்சனம் திரையாக்கம், திரைக்கதை என எதிலும் கச்சிதமும் புதுமையும் காட்டாத இந்த `மைலாஞ்சி' அயர்ச்சியில் பார்வையாளர்களின் கண்களை மட்டுமே சிவக்க வைக்கிறது. Mylanji Movie Exclusive: “காதலை ஊஞ்சல் கட்டி ஆட வைத்திருக்கிறார் இளையராஜா!”
தனுஷ் 56 படத்தின் கதைகளும் குறித்து தகவலை பகிர்ந்த மாரி செல்வராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார் இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் சமீபத்தில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்...
எங்க அப்பாவை பார்த்து இதுதான் சக்சஸா என்று கேட்டேன்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு.!!
வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரது தயாரிப்பில் தற்போது வித் லவ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனரான மதன் இயக்கியுள்ள இந்த படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அபிஷன் ஜீவன்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் மலையாள...
உண்மை தெரியாமல் வேதனையில் தவிக்கும் விஜய், சந்தோஷத்தில் காவிரி –விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரி பற்றி கேட்டுக்கொண்டு இருந்தார். உடனே கல்யாணி அழுது டிராமா செய்தார். சித்தப்பா, காவிரி இறந்து விட்டாள் என்று சொன்னார். இதைக் கேட்ட விஜய் உடைந்து போய் கதறி அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜய்க்கு ஆறுதல் சொன்னார்கள். பின் சித்தி, குழந்தையை கொண்டு வந்து விஜய் இடம் கொடுத்தார். குழந்தையை பார்த்து விஜய் எமோஷனலாக அழுதார். 5 வருடங்களுக்கு பிறகு காண்பிக்கிறார்கள். விஜய் தன்னுடைய மகளுக்கு காவிரி […] The post உண்மை தெரியாமல் வேதனையில் தவிக்கும் விஜய், சந்தோஷத்தில் காவிரி – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
Pookie: ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்- 'பூக்கி'படம் குறித்து விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி' (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். 'பூக்கி' (Pookie) படம் இன்று ( பிப்.13) வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய் ஆண்டனி, படத்தின் பெயர் 'பூக்கி' என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 'பூக்கி' அந்தக் காலத்தில் சாமி, நாதா, அத்தான் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இன்று அது 'பூக்கி'-யாக மாறியிருக்கிறது. பெரியவர்களும் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். ஜென்சி மாதிரியான படமாக இருந்தாலும் கலகலப்பாகவும், எமோஷனலாகவும் எல்லோருக்கும் புரிகின்ற, பிடிக்கின்ற மாதிரியான படமாக இருக்கும். எடிட் செய்த பிறகு இந்தப் படத்தை நிறைய முறை பார்த்தேன். ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதிருக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த நல்ல படமாக நிச்சயம் இந்தப் படம் இருக்கும் என்று பேசியிருக்கிறார்.
Pookie: ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்- 'பூக்கி'படம் குறித்து விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி' (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். 'பூக்கி' (Pookie) படம் இன்று ( பிப்.13) வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய் ஆண்டனி, படத்தின் பெயர் 'பூக்கி' என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 'பூக்கி' அந்தக் காலத்தில் சாமி, நாதா, அத்தான் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இன்று அது 'பூக்கி'-யாக மாறியிருக்கிறது. பெரியவர்களும் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். ஜென்சி மாதிரியான படமாக இருந்தாலும் கலகலப்பாகவும், எமோஷனலாகவும் எல்லோருக்கும் புரிகின்ற, பிடிக்கின்ற மாதிரியான படமாக இருக்கும். எடிட் செய்த பிறகு இந்தப் படத்தை நிறைய முறை பார்த்தேன். ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதிருக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த நல்ல படமாக நிச்சயம் இந்தப் படம் இருக்கும் என்று பேசியிருக்கிறார்.
கிருஷுக்கு வந்த காய்ச்சல்.. ரோகினிக்கு உதவிய சிந்தாமணி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனா அண்ணாமலை உட்கார்ந்து கொண்டிருக்க விஜயாவும் மனோஜம் வந்து உட்காருகின்றனர் அப்போது மனோஜ் அண்ணாமலை இடம் புதுசா ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ண போறேன்பா அதுக்கு நீங்க சைன் பண்ணனும் என்று சொல்ல முத்து எப்பவும் அம்மா கிட்ட தானே கையெழுத்து...
சதியால் அய்யனார் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல், உடைந்து போய் தவிக்கும் நடேசன் குடும்பம் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன்,ராகவ் ஏதாவது தொல்லை செய்யப் போகிறான். அங்கே வேலை செய்யனுமா என்றார். நிலா, எனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் முக்கியம். பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதுவும் ராகவிடம் சண்டை போட வேண்டாம் என்றார். அதற்குப்பின் வீட்டை சரி செய்யும் வேலையை சேரன், சோழன், பாண்டியன் மூவரும் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது போன் செய்த வானதியிடம் பாண்டியன் பாம்பு வந்த விஷயத்தைப் பற்றி சொன்னார். பொறாமையில் வானதி, நிலாவை திட்டினார். […] The post சதியால் அய்யனார் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல், உடைந்து போய் தவிக்கும் நடேசன் குடும்பம் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
காவிரிக்கு கிடைத்த புது வேலை, ஸ்கூலுக்கு போகும் விஜய் குழந்தை, இருவரும் சந்திப்பார்களா? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, காவிரியிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடலாம் என்றார். காங்கா, அதெல்லாம் வேண்டாம். உண்மை தெரிந்தால் காவிரியால் சந்தோஷமாக இருக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இன்னொரு பக்கம் விஜய், ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். வீட்டிற்கு வந்த விஜய், காவிரியை பற்றி கேட்டார். இருந்தாலும் பாட்டி எதுவும் சொல்லாமல் விஜயை கோயிலுக்கு அழைத்து சென்று பூஜை எல்லாம் செய்தார். மீண்டும் விஜய், காவிரி பற்றி கேட்டுக்கொண்டு இருந்தார். உடனே […] The post காவிரிக்கு கிடைத்த புது வேலை, ஸ்கூலுக்கு போகும் விஜய் குழந்தை, இருவரும் சந்திப்பார்களா? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
அஞ்சலியிடம் கடலை போடும் சரவணன், மீனாவை டார்ச்சல் செய்யும் செந்தில் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயிலை அவருடைய தங்கை வற்புறுத்தி சாப்பிட அழைத்து வந்தார்.பாக்கியம், மாமியார் வீட்டில் வாழத்துப்பில்லை. இங்க மூணு பேருக்கு சமைக்கவே வழியில்லை. இதில் இன்னொரு ஆளுக்கு சேர்த்து சமைக்கணுமா? ஒழுங்கு மரியாதையாக உன் மாமியார் வீட்டிற்கு போகும்வழியை பார் என்று மோசமாக பேசி விட்டார். இதனால் தங்கமயில் மனமுடைந்து சாப்பிடாமல் அங்கிருந்து சென்று விட்டார். பின் தன் கணவருக்கு வாய்ஸ் மெசேஜ் பேசி அனுப்பினார். கதிர்-ராஜி இருவரும் பீச்சில் […] The post அஞ்சலியிடம் கடலை போடும் சரவணன், மீனாவை டார்ச்சல் செய்யும் செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
இந்த படத்தில் தான் எல்லாமே தொடங்கியது –‘மௌனம் பேசியதே’ரீ ரிலீஸ் பற்றி நடிகை த்ரிஷா சொன்னது
சமீப காலமாகவே முன்னணி நடிகர்களின் படங்களை ரீ-ரிலீஸ் செய்வதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜயின் கில்லி, ரஜினியின் படையப்பா, அஜித்தின் மங்காத்தா போன்ற படங்களெல்லாம் ரீ-ரிலீஸ் செய்தும் மிக அளவில் வசூல் செய்திருந்தது. அந்த வகையில் தற்போது திரிஷா- சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படம் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் தான் மௌனம் பேசியதே. இந்த படத்தில் சூர்யா, திரிஷா, லைலா […] The post இந்த படத்தில் தான் எல்லாமே தொடங்கியது – ‘மௌனம் பேசியதே’ ரீ ரிலீஸ் பற்றி நடிகை த்ரிஷா சொன்னது appeared first on Tamil Behind Talkies .
Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' - மிருணாள் தாகூர் விளக்கம்
நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் 'India Today' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்து பேசியிருக்கிறார். யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. மிருணாள் தாகூர் - தனுஷ் ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி அவர்களுக்கு முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ஆம் தேதியாக மாறப்போகிறது. சிலர் அவர்களாகவே எதையாவது பதிவிட்டு மிருணாள் தாகூர் இதை சொன்னார் என சொல்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன. சரியான நேரத்தில் சரியான நபரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' - மிருணாள் தாகூர் விளக்கம்
நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் 'India Today' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்து பேசியிருக்கிறார். யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. மிருணாள் தாகூர் - தனுஷ் ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி அவர்களுக்கு முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ஆம் தேதியாக மாறப்போகிறது. சிலர் அவர்களாகவே எதையாவது பதிவிட்டு மிருணாள் தாகூர் இதை சொன்னார் என சொல்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன. சரியான நேரத்தில் சரியான நபரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
டிஆர்பி ரேட்டிங்க்காக கடுமையாக மோதிக்கொள்ளும் சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் –டாப் 5 லிஸ்ட்
டிஆர்பி ரேட்டிங்கில் 2026 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post டிஆர்பி ரேட்டிங்க்காக கடுமையாக மோதிக்கொள்ளும் சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் – டாப் 5 லிஸ்ட் appeared first on Tamil Behind Talkies .
With Love: `இதுதான் சக்ஸஸா'ன்னு கேட்டேன், அதுக்கு அப்பா என்ன பார்த்து..!- சௌந்தர்யா ரஜினிகாந்த்
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். கடந்த பிப்.6 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. With Love Movie ரஜினிகாந்த்தும் 'வித் லவ்' படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றிருக்கிறது. அதில் பேசியிருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த், ரொம்ப சந்தோஷமா இருக்கு. ப்ரிமியர் ஷோ முடிச்சிட்டு அப்பா- அம்மாவைப் பார்க்க போயஸ் வீட்டுக்கு நான் போனேன். உள்ள போனதும் ரெண்டு பேரும் எனக்கு ஒரு ஹக் கொடுத்தாங்க. என்னைப் பார்த்து சிரிச்சாங்க. அப்பாவைப் பார்த்து `இதுதான் சக்ஸஸா'ன்னு கேட்டேன். அப்பா சிரிச்சாங்க. அந்தச் சிரிப்பை நான் வாழ்க்கையில மறக்க மாட்டேன். கிட்டத்தட்ட 16-18 வருஷமா வேலை பார்த்திட்டு இருக்கேன். ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தக் குடும்பத்துனால தான் (வித் லவ் டீம்) சக்ஸஸ்-னா என்னென்னு தெரிஞ்சது. இதுதான் என் முதல் சக்ஸஸ் மீட். இதை தந்த 'வித் லவ்' டீம்முக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள் என நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
With Love: `இதுதான் சக்ஸஸா'ன்னு கேட்டேன், அதுக்கு அப்பா என்ன பார்த்து..!- சௌந்தர்யா ரஜினிகாந்த்
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். கடந்த பிப்.6 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. With Love Movie ரஜினிகாந்த்தும் 'வித் லவ்' படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றிருக்கிறது. அதில் பேசியிருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த், ரொம்ப சந்தோஷமா இருக்கு. ப்ரிமியர் ஷோ முடிச்சிட்டு அப்பா- அம்மாவைப் பார்க்க போயஸ் வீட்டுக்கு நான் போனேன். உள்ள போனதும் ரெண்டு பேரும் எனக்கு ஒரு ஹக் கொடுத்தாங்க. என்னைப் பார்த்து சிரிச்சாங்க. அப்பாவைப் பார்த்து `இதுதான் சக்ஸஸா'ன்னு கேட்டேன். அப்பா சிரிச்சாங்க. அந்தச் சிரிப்பை நான் வாழ்க்கையில மறக்க மாட்டேன். கிட்டத்தட்ட 16-18 வருஷமா வேலை பார்த்திட்டு இருக்கேன். ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தக் குடும்பத்துனால தான் (வித் லவ் டீம்) சக்ஸஸ்-னா என்னென்னு தெரிஞ்சது. இதுதான் என் முதல் சக்ஸஸ் மீட். இதை தந்த 'வித் லவ்' டீம்முக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள் என நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
ராஜா அப்படிப்பட்டவர் தான் என்பதை சத்தியம் செய்து சொல்வேன் –சாலமன் பாப்பையா விளக்க வீடியோ
பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் கடந்த 3ஆம் தேதி அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பில் அட்லாண்டா சென்றிருந்தார். அங்கு ராஜாவுக்கு தமிழ் உணவு தயாரித்து கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு நடந்த கலந்துரையாடலில் பேச்சாளர் ராஜா, ஜாதி குறித்து கேட்டதாகவும், அந்தப் பெண் ரொம்பவே வருத்தத்தில் இருந்ததாகவும் அவருடைய சகோதரர் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ராஜா மீது பல கண்டனங்கள் […] The post ராஜா அப்படிப்பட்டவர் தான் என்பதை சத்தியம் செய்து சொல்வேன் – சாலமன் பாப்பையா விளக்க வீடியோ appeared first on Tamil Behind Talkies .
“இது ஒன்றும் தியேட்டர் கிடையாது”–ரசிகர்களிடம் அஜித் கோபம்
“இது ஒன்றும் தியேட்டர் கிடையாது” – ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அஜித் ரேஸிங் என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு அவருடைய அணி பல நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் கலந்துகொண்டது. சில போட்டிகளில் வெற்றியையும் பெற்றது. தற்போது அபுதாபியில் உள்ள யாஸ்...
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3-ந்தேதி தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இச்சூழலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் திருமணம் குறித்து சிம்பு தெரிவிக்கையில், ‘செல்போன் வந்த பிறகு மனிதனின் உணர்வுகள் மாறியிருக்கிறது. எவ்வளவு வேகத்தில் காதல் வருகிறதோ அதே வேகத்தில் பிரிவும் ஏற்படுகிறது. அனைத்தும் அதிவேகமாகி விட்டது....
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3-ந்தேதி தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இச்சூழலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் திருமணம் குறித்து சிம்பு தெரிவிக்கையில், ‘செல்போன் வந்த பிறகு மனிதனின் உணர்வுகள் மாறியிருக்கிறது. எவ்வளவு வேகத்தில் காதல் வருகிறதோ அதே வேகத்தில் பிரிவும் ஏற்படுகிறது. அனைத்தும் அதிவேகமாகி விட்டது....
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது சாதனையை பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் ‘பராசக்தி’ படம் மூலம் அறிமுகமானார் ஸ்ரீலீலா. இவரது தாய் மருத்துவர். இவரும் மருத்துவ படிப்பை மேற்கொண்டார். இந்நிலையில், சினிமா ஆசை வந்ததால் சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தார். அதற்காக நடனத்தில் தன்னை திறமைசாலியாக மாற்றிக் கொண்டார். அவ்வகையில், இளம் வயதிலேயே கல்வி, சினிமா,...
விஜய்யின் ‘ஜனநாயகன்’படம் எப்போது ரிலீஸ்?
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது தெரிந்ததே. இப்படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை ஜனநாயகன் படக்குழு அணுகி உள்ளது. இதையடுத்து, தனி நீதிபதி முன் உள்ள வழக்கை திரும்பப் பெற உள்ளதாக கூறி, பட தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், வழக்கு...
சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ராதிகா மற்றும் சிவகுமார் இருவரும் கலந்து கொண்டுள்ளனர் அப்போது பேசிய போது ராதிகா உயிரிலே கலந்தது படத்தின் போது சூர்யா அதிகமாக...
ரவிமோகன் வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு…பாடகி கெனிஷா
ரவிமோகன் வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு… பாடகி கெனிஷா ரவிமோகனின் நெருங்கிய தோழி கெனிஷா பிரான்சிஸ் தன் பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடியிருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து கெனிஷா கூறியிருப்பதாவது, ‘நான் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் தான் வளர்ந்தேன். என்னை தவறாக புரிந்து கொண்டார்கள். மதிப்பை எதிர்பார்த்ததற்கே நான் அதிகம் கேட்பதாக என்னை நம்ப வைத்தார்கள். நான் எனக்காக நிற்க முடிவு செய்தபோது இந்த...
சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,சூர்யா விட்ட சவால்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியை மிரட்டி அவர்கள் உட்கார வைக்க நந்தினி கண் முன்னே அந்த பொண்ணுக்கு இப்படி ஆவதால்...
சிந்தாமணி வலையில் சிக்கிய மனோஜ்-விஜயா, உண்மை முத்துவுக்கு தெரிய வருமா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நீதிபதி, மனோஜ் தரப்பில் கொண்டு வந்த ஆதாரங்கள் எதுவும் செல்லாதது. அடுத்து இவர்கள் இருவரையும் கவுன்சிலிங் அனுப்பி வையுங்கள் என்றார். வக்கிலுமே மனோஜை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். ரோகினி, தயவு செய்து என்னை மன்னித்து வாழவிடுங்கள் என்றார். விஜயா, அது உன் கனவில் கூட நடக்காது என்றார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அதன் பின் வீட்டிற்கு வந்த விஜயா, மனோஜை திட்டிக் கொண்டிருந்தார். அண்ணாமலை, ரோகினி […] The post சிந்தாமணி வலையில் சிக்கிய மனோஜ்-விஜயா, உண்மை முத்துவுக்கு தெரிய வருமா? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது - 'மௌனம் பேசியதே'குறித்து நெகிழும் த்ரிஷா
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது. சில தினங்களுக்கு முன்பு 'மௌனம் பேசியதே' ரீ-ரிலிஸ் குறித்து சூர்யா லைலா வீடியோ வெளியிட்டிருந்தனர். மௌனம் பேசியதே தற்போது த்ரிஷா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே' பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகப்போகிறது. கண்டிப்பாக எல்லோரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாவதால் இந்தப் படம் ஸ்பெஷலாக இருக்கிறது. எப்போதுமே இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலான படம் தான். ஏனென்றால் இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது. என்னுடைய முதல் வருட சினிமாவில் அமீர் சாருடன் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படத்தின் (கருப்பு) ரிலீஸும் சூர்யாவுடன் தான் நடக்கிறது. த்ரிஷா லைலாவுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். படத்தைப் பாருங்கள். என்ஜாய் பண்ணுங்கள் என்று நெகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது - 'மௌனம் பேசியதே'குறித்து நெகிழும் த்ரிஷா
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது. சில தினங்களுக்கு முன்பு 'மௌனம் பேசியதே' ரீ-ரிலிஸ் குறித்து சூர்யா லைலா வீடியோ வெளியிட்டிருந்தனர். மௌனம் பேசியதே தற்போது த்ரிஷா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே' பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகப்போகிறது. கண்டிப்பாக எல்லோரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாவதால் இந்தப் படம் ஸ்பெஷலாக இருக்கிறது. எப்போதுமே இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலான படம் தான். ஏனென்றால் இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது. என்னுடைய முதல் வருட சினிமாவில் அமீர் சாருடன் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படத்தின் (கருப்பு) ரிலீஸும் சூர்யாவுடன் தான் நடக்கிறது. த்ரிஷா லைலாவுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். படத்தைப் பாருங்கள். என்ஜாய் பண்ணுங்கள் என்று நெகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
தாமரைக்கு காமேஷ் கொடுத்த வாக்குறுதி, ஜெனிக்கு நடக்கும் அவசர கல்யாணம் –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாமியிடம் கேட்ட குறியில் உண்மை சொல்லக்கூடாது என்பதுதான் வந்தது. இதனால் இருவரும் வீட்டில் உண்மையை மறைத்தார்கள். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து தலைவர் சொன்னது போல எந்த பிரச்சனையிலும் வம்பிழும் மாட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். குறிப்பாக ஈஸ்வரி, சாவித்திரி இருவருக்கும் வார்னிங் கொடுத்தார். அதற்குப் பின் சேது, தமிழ் இருவரும் சந்தோஷமாக தங்களுடைய ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ்- சேது வளைகாப்பு சிறப்பாக முடிந்ததால் […] The post தாமரைக்கு காமேஷ் கொடுத்த வாக்குறுதி, ஜெனிக்கு நடக்கும் அவசர கல்யாணம் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
தனி தனியாக தங்கள் வாழ்க்கை பாதையில் செல்லும் விஜய்-காவிரி, விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் கண் விழித்தவுடன் காவிரியும் குழந்தையும் பற்றி தான் விசாரித்தார்கள். பாட்டி கல்யாணி உண்மையை சொல்லாமல் காவிரி நன்றாக இருந்தார். அப்புறமாக பார்க்கலாம் என்று சமாளித்து விட்டார். இன்னொரு பக்கம் காவேரி சென்று கொண்டிருக்கும் போது தன்னுடைய அப்பாவை பற்றியும் சென்னைக்கு வந்ததைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். சாரதாவால் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார். சாரதா, காவிரியிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடலாம் என்றார். காங்கா, அதெல்லாம் வேண்டாம். […] The post தனி தனியாக தங்கள் வாழ்க்கை பாதையில் செல்லும் விஜய்-காவிரி, விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
நடேசன் குடும்பத்தின் மீது கொடுத்த போலீஸ் புகார், வெடிக்கும் கலவரம் –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலாவை டார்சல் செய்தால் அவ்வளவு தான் என்று ராகவை அடித்தார். ராகவ், போலீஸ் அழைக்கிறேன் என்றார். சோழன் கோபப்பட்டு ராகவை வெளுத்து வாங்கினார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சோழன், நிலாவிடம் பேசி இருந்தார். நிலா மீண்டும் ராகவ் சொன்ன விஷயத்தை பற்றி எமோஷனலாக பேசி இருந்தார். சோழன், நான் கோபத்தில் ராகவை அடித்து விட்டேன் என்றார். இதை கேட்டு நிலா சந்தோஷப்பட்டார். சேரன், நான் தெரியாமல் செய்துவிட்டேன் […] The post நடேசன் குடும்பத்தின் மீது கொடுத்த போலீஸ் புகார், வெடிக்கும் கலவரம் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
சிந்தாமணி போட்ட திட்டம்.. வக்கீலை சந்தித்த முத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
பணத்திற்காக சிந்தாமணி விஜயாவிடம் பத்திரத்தை கேட்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தோஷ் மற்றும் ஜீவா இருவரும் தடுத்தும் ரோகினி ஷோரூமுக்கு வர மனோஜ் இவரை எதுக்கு உள்ள விட்டீங்க என்று கேட்கிறார் என்ன மனோஜ் பேசிகிட்டு இருக்க என்று கேட்க ஆர்டர் கொடுத்தவர்களுக்கு பணம் அனுப்புறேன்னு சொல்லி அந்த கறிக்கடைக்காரனுக்கு பணத்தை அனுப்பி எல்லாரும்...
Sony Vizha: சீரியல் ரசிகர்களுக்கு குட்நியூஸ்; உதயமாகும் 'சோனி விழா'புதிய சேனல்; அடுத்த ப்ளான் என்ன?
சீரியல் மற்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு இனிப்பான ஒரு செய்தி இது. சன், விஜய், ஜீ தமிழுக்குப் போட்டியாக இன்னொரு புதிய சேனல் விரைவில் உதயமாகவிருக்கிறது ஆம், பிரபல சோனி குழுமம் தமிழுக்கு வரவிருக்கிறது. சின்னத்திரை ஏரியாவில் கடந்த சில தினங்களாக இது குறித்த பேச்சுகள் உலா வர, விபரம் அறிந்த சிலரிடம் பேசினோம். 'பொழுதுபோக்குத் துறையில் சர்வதேச அளவுல சோனி ரொம்பவே பிரபலம். 'கன்டென்ட் கிங்'னு கூடச் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்னால் தமிழின் ஜீ தமிழ் சேனலை சோனி குழுமம் வாங்கப் போறதா பேச்சு அடிபட்டது நினைவிருக்கலாம். அதுக்கான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் கூட நிகழ்ந்ததாகச் சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததோ தெரியலை, கடைசியில அந்த முயற்சி நடக்கலை. இந்தப் பின்னணியிலதான் வட இந்தியாவுல ஏற்கனவே இருக்கிற சோனி குழுமம் தென்னிந்தியாவுல கால் பதிக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கு. அதுவும் தமிழ்ல இருந்தே தொடங்குறாங்க. முதல் கட்ட வேலைகள் கூட தொடங்கிட்டதாகவே தெரியுது. தற்சமயம் சேனலுக்கு 'சோனி விழா' எனப் பெயர் சூட்டியிருக்கறதா சொல்றாங்க. Television ஜி.இ.சி எனப்படும் பொழுதுபோக்கை முதன்மையாகக் கொண்ட சேனல்தான் முதல் படி. சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பாகவிருக்கின்றன. இதன் மூலம் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் என ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து செய்திச் சேனல்கள் உள்ளிட்ட பிற ஏரியாவிலும் தடம் பதிக்கும் ஐடியாவும் சோனிக்கு இருக்கிறதாம்'' என்கிறார்கள் இவர்கள். TV Update: 'ஜனநாயகன்' பேக்கேஜ்? மிரளும் சேனல், மீண்டும் சேர்ந்து நடிக்கும் சீனியர் ஜோடி!

23 C