SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

``ஆந்திராவின் எஸ்.பி.பி-க்கு தெலங்கானாவில் எதற்கு சிலை - எதிர்க்கும் சமூக ஆர்வலர்; விவரம் என்ன?

தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் கொனேதம்மாபேட்டாவில் 1946 ஜூன் 4-ம் தேதி பிறந்த இவர், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மொழி உட்பட மொத்தம் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பிறந்த மாநிலமான ஆந்திராவில் மாநில அரசின் தெலுங்கு சினிமா விருதை 25 முறை வென்றிருக்கிறார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகளின் திரைத்துறை விருதுகளையும் வென்றிருக்கிறார். 6 முறை தேசிய விருது வென்றிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷன் (2011) ஆகிய விருதுகளைப் பெற்றார். எஸ்.ஜானகி, மற்றும் எஸ்.பி.பி 2020 செப்டம்பர் 25-ம் தேதி கொரோனா தொற்றால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதற்கடுத்த ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவித்து அவரைக் கௌரவித்தது. மேலும், தமிழக அரசு கடந்த ஆண்டு அவரின் நினைவு நாளில், அவர் இறுதி மூச்சுவரை வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' எனப் பெயர் மாற்றியது. இவ்வாறிருக்க, இந்திய சினிமா மற்றும் இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் தெலங்கானா அரசு அவருக்கு சிலை அமைத்திருக்கிறது. இந்தச் சிலையானது தெலங்கானாவின் பிரபல கலாச்சார மையமான ரவீந்திர பாரதி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலையை டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கவிருக்கிறார். இந்த நிலையில், தெலங்கானாவின் சமூக ஆர்வலர் பிரித்விராஜ் யாதவ் என்பவர் அரசின் இந்த முடிவை எதிர்த்திருக்கிறார். நேற்றைய தினம் (டிசம்பர் 2) ரவீந்திர பாரதி வளாகத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் நடிகருமான சுபாலேகா சுதாகரிடம் பிரித்விராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. రవీంద్రభారతిలో ఎస్పీ బాలసుబ్రహ్మణ్యం విగ్రహ ఏర్పాటుపై వివాదం 15న ఎస్పీ బాలు విగ్రహావిష్కరణకు ఏర్పాట్లు అభ్యంతరం వ్యక్తం చేస్తున్న తెలంగాణ ఉద్యమకారుడు పృథ్వీరాజ్ తెలంగాణలో ఏపీ వారి విగ్రహాలు ఎందుకంటూ అడ్డుకుంటున్న పృథ్వీరాజ్ తెలంగాణ ప్రముఖులు గద్దర్, అందెశ్రీ విగ్రహాలకు… pic.twitter.com/A16x3jnJUs — BIG TV Breaking News (@bigtvtelugu) December 2, 2025 ஆந்திராவைச் சேர்ந்த புகழ்பெற்ற நபருக்கு தெலங்கானா கலாச்சார மையத்தில் எதற்கு சிலை எனக் கேள்வியெழுப்பும் பிரித்விராஜ், கத்தார் (Gaddar) மற்றும் ஆண்டே ஸ்ரீ (Ande Sri) போன்ற தெலங்கானா முக்கிய ஆளுமைகளை அரசு கௌரவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் தனியார் ஊடகத்திடம், ``அவரது சிலை இங்கு நிறுவ வேண்டிய அவசியமில்லை. தெலங்கானாவில் பிறந்த பல முக்கிய நபர்கள் இருக்கின்றனர். அவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும். தெலங்கானா மாநில பாடலைப் பாடுமாறு அவரிடம் கேட்டபோது, ​​அவர் மறுத்துவிட்டார். எனவே, அவரின் சிலை இங்கு நிறுவப்பட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று பிரித்விராஜ் கூறியிருக்கிறார். இதனால், தெலங்கானாவில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

விகடன் 3 Dec 2025 9:10 pm

``ஆந்திராவின் எஸ்.பி.பி-க்கு தெலங்கானாவில் எதற்கு சிலை - எதிர்க்கும் சமூக ஆர்வலர்; விவரம் என்ன?

தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் கொனேதம்மாபேட்டாவில் 1946 ஜூன் 4-ம் தேதி பிறந்த இவர், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மொழி உட்பட மொத்தம் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பிறந்த மாநிலமான ஆந்திராவில் மாநில அரசின் தெலுங்கு சினிமா விருதை 25 முறை வென்றிருக்கிறார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகளின் திரைத்துறை விருதுகளையும் வென்றிருக்கிறார். 6 முறை தேசிய விருது வென்றிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷன் (2011) ஆகிய விருதுகளைப் பெற்றார். எஸ்.ஜானகி, மற்றும் எஸ்.பி.பி 2020 செப்டம்பர் 25-ம் தேதி கொரோனா தொற்றால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதற்கடுத்த ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவித்து அவரைக் கௌரவித்தது. மேலும், தமிழக அரசு கடந்த ஆண்டு அவரின் நினைவு நாளில், அவர் இறுதி மூச்சுவரை வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' எனப் பெயர் மாற்றியது. இவ்வாறிருக்க, இந்திய சினிமா மற்றும் இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் தெலங்கானா அரசு அவருக்கு சிலை அமைத்திருக்கிறது. இந்தச் சிலையானது தெலங்கானாவின் பிரபல கலாச்சார மையமான ரவீந்திர பாரதி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலையை டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கவிருக்கிறார். இந்த நிலையில், தெலங்கானாவின் சமூக ஆர்வலர் பிரித்விராஜ் யாதவ் என்பவர் அரசின் இந்த முடிவை எதிர்த்திருக்கிறார். நேற்றைய தினம் (டிசம்பர் 2) ரவீந்திர பாரதி வளாகத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் நடிகருமான சுபாலேகா சுதாகரிடம் பிரித்விராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. రవీంద్రభారతిలో ఎస్పీ బాలసుబ్రహ్మణ్యం విగ్రహ ఏర్పాటుపై వివాదం 15న ఎస్పీ బాలు విగ్రహావిష్కరణకు ఏర్పాట్లు అభ్యంతరం వ్యక్తం చేస్తున్న తెలంగాణ ఉద్యమకారుడు పృథ్వీరాజ్ తెలంగాణలో ఏపీ వారి విగ్రహాలు ఎందుకంటూ అడ్డుకుంటున్న పృథ్వీరాజ్ తెలంగాణ ప్రముఖులు గద్దర్, అందెశ్రీ విగ్రహాలకు… pic.twitter.com/A16x3jnJUs — BIG TV Breaking News (@bigtvtelugu) December 2, 2025 ஆந்திராவைச் சேர்ந்த புகழ்பெற்ற நபருக்கு தெலங்கானா கலாச்சார மையத்தில் எதற்கு சிலை எனக் கேள்வியெழுப்பும் பிரித்விராஜ், கத்தார் (Gaddar) மற்றும் ஆண்டே ஸ்ரீ (Ande Sri) போன்ற தெலங்கானா முக்கிய ஆளுமைகளை அரசு கௌரவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் தனியார் ஊடகத்திடம், ``அவரது சிலை இங்கு நிறுவ வேண்டிய அவசியமில்லை. தெலங்கானாவில் பிறந்த பல முக்கிய நபர்கள் இருக்கின்றனர். அவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும். தெலங்கானா மாநில பாடலைப் பாடுமாறு அவரிடம் கேட்டபோது, ​​அவர் மறுத்துவிட்டார். எனவே, அவரின் சிலை இங்கு நிறுவப்பட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று பிரித்விராஜ் கூறியிருக்கிறார். இதனால், தெலங்கானாவில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

விகடன் 3 Dec 2025 9:10 pm

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க நினைக்கும் சேது, தமிழ் என்ன சொல்ல போகிறார்? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, சூப்பராக இருக்கு கதை. நீதான் சொல்லிக் கொடுத்தாயா? சேது என்றெல்லாம் பேசி இருந்தார். உடனே ராஜாங்கம், நீ கொண்டுவந்த ஆதாரம் பத்தவில்லை. வேறு ஏதாவது இருந்தால் சொல்லு சேது. அப்பதான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்று சொன்னார். உடனே சேது, தன் கையில் இருந்த விஷ வண்டுவை காண்பித்தார். அதை பார்த்து எல்லோருமே பதறினார்கள். சாவித்திரி தாமரை அங்கிருந்து ஓடினார்கள். பின் சேது, அந்த வண்டை […] The post தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க நினைக்கும் சேது, தமிழ் என்ன சொல்ல போகிறார்? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 8:42 pm

‘குட் பேட் அக்லி’படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். ‘குட் பேக் அக்லி பட’த்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி,...

தஸ்தர் 3 Dec 2025 7:17 pm

போலீஸ் விசாரணையில் முத்துமலர் வைத்த செக், ஆடிப்போன காவிரி குடும்பம் –பரபரப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், முத்து மலர் குடும்பம் தங்குவதற்காக ரூமை ஏற்பாடு செய்து தர சொன்னார். இதை கேட்ட விஜயின் சித்தி, நான் சொல்லும் இடத்தை காட்டு என்று வேலைக்காரிடம் சொன்னார். மோசமாக இருக்கும் ரூமில் முத்துமலர் குடும்பத்தை தங்க சொன்னார். இதையெல்லாம் பார்த்து சிந்து பயங்கரமாக அழுதார். கோபத்தில் கிருஷ்ணா, இங்கு எப்படி தங்க முடியும்? என்றார். அதற்கு விஜயின் சித்தி, முத்துமலர் குடும்பத்தை திட்டி அவமானப்படுத்தி விட்டு சென்றார். வேறு […] The post போலீஸ் விசாரணையில் முத்துமலர் வைத்த செக், ஆடிப்போன காவிரி குடும்பம் – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 7:05 pm

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’ திரைப்படம், ஜனவரியில் வெளியாகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’ திரைப்படம், ஜனவரியில் வெளியாகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார். வரும் ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி...

தஸ்தர் 3 Dec 2025 5:39 pm

சந்தோஷ் நாராயணன் பண்ண வைரல் சேட்டை.. அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பாடல் வைரல்!

சந்தோஷ் நாராயணன் பண்ண வைரல் சேட்டை.. அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பாடல் வைரல்! அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும்...

தஸ்தர் 3 Dec 2025 5:28 pm

கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது! திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !! சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இளம் நடிகர் திரு வீர்,...

தஸ்தர் 3 Dec 2025 5:11 pm

கிரிஷை முத்துவீட்டில் விட்ட லட்சுமி, அண்ணாமலை சொன்ன வார்த்தை –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, தன்னுடைய ஆபிஸில் வேலை செய்யும் ஒருவர் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து விட்டதை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மீனாவின் அம்மா, தவறு செய்பவரை விட அதை மறைக்க துணையாக இருப்பவர் செய்வதும் தவறு தான் என்றெல்லாம் சொல்வதால் மீனாவிற்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. பின் மீனா, ரோகிணி வீட்டிற்கு போனார். அங்கு லட்சுமி, ரோகினி செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் மீனா, லட்சுமியை திட்டிவிட்டு […] The post கிரிஷை முத்துவீட்டில் விட்ட லட்சுமி, அண்ணாமலை சொன்ன வார்த்தை – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 5:07 pm

நடிகர் ரியோவின் ‘ராம் இன் லீலா’படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

நடிகர் ரியோவின் ‘ராம் இன் லீலா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’...

தஸ்தர் 3 Dec 2025 4:52 pm

Akhanda 2: ''தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது - சென்னையில் பாலைய்யா

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. 2021-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு. சம்யுக்தா மேனன், ஆதி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். Akhanda 2 இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 'அகண்டா 2: தாண்டவம்' படக்குழுவினர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். பிரசாத் லேபில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு, நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா உட்பட சிலர் வருகை தந்திருந்தார்கள். மேடையில் தமிழில் பேசிய பாலைய்யா, “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சொந்த வீட்டுக்கு வந்த மாதிரியான உணர்வு இப்போ எனக்கிருக்கு. நான் பொறந்தது இங்கதான். தமிழ்நாடு என்னுடைய ஜென்ம பூமி. தெலங்கானா என்னுடைய கர்ம பூமி. ஆந்திரா என்னுடைய ஆத்ம பூமி. என்னுடைய அப்பா என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையும் இங்கதான் வளர்ந்ததுனு உங்களுக்குத் தெரியும். Nandamuri Balakrishna மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் எங்க அப்பா மீது வைத்திருந்த அன்பு, பாசம் மறக்க முடியாதது. என்னுடைய அப்பாவும் தமிழ்நாட்டுக்கு அன்பு, பாசத்தைக் காட்டினார். அவர் எனக்கு குரு, தெய்வம் எல்லாமே. கோவிட் சமயத்துல 'அகண்டா' படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆச்சு. அந்த நேரத்துல இந்தப் படத்தை தியேட்டருக்கு வந்து மக்கள் பார்ப்பாங்களான்னு பயம் இருந்தது. ஆனா, மக்கள் வெளிவர்றதுக்கு இந்த மாதிரியான படம் வேணும்னு படக்குழுவினர் உணர்ந்தாங்க. அந்தப் படம் 2021-ல வெளியாகி பெரிய ஹிட் ஆச்சுனு சொல்லலாம். இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனுவுடனான என்னுடைய நான்காவது படம். ‘சிம்ஹா’, ‘லெஜெண்ட்’, ‘அகண்டா 1’ இப்போ ‘அகண்டா 2’ செய்திருக்கோம். இவை அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்கள். எனக்கும் அவருக்கும் இடையில நல்ல புரிதல் இருக்கு. அதனாலதான் பல்வேறு லொகேஷன்களில் இந்தப் படத்தை 130 நாள்ல எடுக்க முடிஞ்சது. Balaiyaa ஏதோ தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது. இந்த இரண்டாம் பாகத்தை சீக்வெல்னு சொல்ல முடியாது. இந்த ‘அகண்ட தாண்டவம்’ திரைப்படம் நம்முடைய கலாசாரத்தை உலகத்திற்கு எடுத்துரைக்கச் செய்யும் ஒரு யாகம். நம்முடைய சக்தியைத் தூண்டும் தாண்டவம். இந்தப் படத்தைப் பார்த்தால் எதிர்கால சந்ததியினருக்கு தெரிய வரும்.” என்று பேசினார்.

விகடன் 3 Dec 2025 4:46 pm

Samantha: நிழல்போல நானும், நடைபோட நீயும்! - சமந்தா - ராஜ் திருமண தருணங்கள் | Photo Album

Samantha: 1st love முதல் செல்போனுடன் toxic relationship வரை.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா

விகடன் 3 Dec 2025 4:23 pm

மாணிக்கத்தை அவமானப்படுத்தும் சரவணன், தங்கமயிலுக்கு சப்போர்ட் செய்த பாண்டியன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, கதிர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, தன் அப்பாவின் மீது இருந்த கோபத்தில் பைக்கை கீழே தள்ளி விட்டு உள்ளே சென்று விட்டார். ஆனால் உண்மை தெரியாமல் முத்துவேல், கதிரை திட்டிவிட்டு அங்கு இருந்து சென்றார். அதற்குப்பின் வெளியே வந்த சரவணன் இடம் கதிர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கதிர், உங்களுக்கு என்னதான் பிரச்சனை? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்றார். சரவணன், நான் நிம்மதியாகவே […] The post மாணிக்கத்தை அவமானப்படுத்தும் சரவணன், தங்கமயிலுக்கு சப்போர்ட் செய்த பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 4:04 pm

BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் பார்வதி, ரம்யா, கம்ருதீன் மூவருக்கும் சண்டை நடக்கிறது. நான் சொல்லும்போது ஏன் யாருமே கேட்கல என பார்வதி கேட்க, இந்த விஷயத்தை நீ தான் சொன்ன, நான் சொன்னேன்னு யார்கிட்டையும் சொல்லவே இல்லையே என ரம்யா சொல்கிறார். இதனிடையே பார்வதிக்கு ஆதரவாக கம்ருதீன் பேச கம்ருதீனுக்கும், ரம்யாவுக்கும் வாக்குவாதம் ஆகிறது. என் கிட்ட பேசாத உன் கால்-ல கூட விழுறேன் என ரம்யா பார்வதியின் காலில் விழுந்து அழுகிறார். BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

விகடன் 3 Dec 2025 3:36 pm

Mellisai Song , Idhu Enna Maayam Video Song , Kishore , Subatra ,Dhirav , Srinisha Jayaseelan

Mellisai Song , Idhu Enna Maayam Video Song ,https://www.youtube.com/watch?v=hfZaoegXD4o Kishore , Subatra ,Dhirav , Srinisha Jayaseelan

தஸ்தர் 3 Dec 2025 3:30 pm

Mellisai Song , Idhu Enna Maayam Video Song , Kishore , Subatra ,Dhirav , Srinisha Jayaseelan

Mellisai Song , Idhu Enna Maayam Video Song ,https://www.youtube.com/watch?v=hfZaoegXD4o Kishore , Subatra ,Dhirav , Srinisha Jayaseelan

தஸ்தர் 3 Dec 2025 3:30 pm

போஸை வெளுத்து வாங்கிய ராஜாங்கம், காவியா எடுத்த அதிரடி முடிவு –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி கதறி அழுது ஒரு டிராமா செய்து, சேது எல்லாம் பொய் என்று சொல்லிவிட்டார். அதனால் ராஜாங்கத்திற்கு சேது சொல்வதில் நம்பிக்கையே இல்லை. பின் சேது, தான் அழைத்த வந்த ஆட்கள் மூலம் உண்மை சொன்னார். வைத்தியரின் மகள், நடந்ததை எல்லாம் சொன்னார். அதைக் கேட்டு ராஜாங்கம் ஷாக் ஆனார். ஈஸ்வரிக்கு கோபத்தில் நின்று கொண்டிருந்தார். போஸிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார். வைத்தியரின் […] The post போஸை வெளுத்து வாங்கிய ராஜாங்கம், காவியா எடுத்த அதிரடி முடிவு – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 3:12 pm

அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்! - 8 மணி நேர பணி குறித்து துல்கர் &ரானாவின் கருத்து என்ன?

சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்தார். இவருடைய கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் முக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் பேசி வருகிறார்கள். Deepika Padukone ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்காக அதன் ஆசிரியர் அனுபமா சோப்ரா, 2025-ம் ஆண்டின் முன்னணி தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ரவுண்ட் டேபிள் நேர்காணல் நடத்தியிருந்தார். அதில் நடிகர்கள் துல்கர் சல்மானும், ரானாவும் இந்த 8 மணி நேரப் பணி குறித்து அவர்களுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். அந்த நேர்காணலில் ரானா, சினிமா என்பது வேலை இல்லை. இது ஒரு லைஃப்ஸ்டைல். இதில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனித்தன்மைகளைக் கொண்டிருக்கும். அதைக் குறிப்பிட்ட நேர அட்டவணைக்குள் அடைக்க முடியாது. தொழிற்சாலையைப் போல அசெம்பிளி லைன் அணுகுமுறை கதை சொல்லலைப் பாழாக்கிவிடும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலையைச் செய்தால் தானாக சிறந்த காட்சி வந்துவிடும் என்று கிடையாது. தெலுங்கு சினிமாவில் இப்போது பல முன்னணி நடிகர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவதால் பட்ஜெட்டைக் கட்டுப்படுத்தவும், ஷூட்டிங்கை விரைவாக முடிக்கவும் முடிகிறது. பெரிய நட்சத்திரங்கள் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளையும் சொகுசையும் குறைப்பது அவர்களது பொறுப்பு என்றார். Rana Daggubati அவரைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான், மலையாள சினிமாவில் பட்ஜெட் சிறியதாக இருப்பதால் நீண்ட தொடர் ஷெட்யூல்களையே பின்பற்றியிருக்கிறோம். இடைவெளி அதிகம் இல்லாமல் விரைவாக ஷூட்டிங்கை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் தெலுங்கு படங்களில் பணிபுரியும் போது பெரிய பட்ஜெட், சிறந்த திட்டமிடல் இருப்பதால் பெரும்பாலும் மாலைக்குள்ளேயே பேக் அப் ஆகிவிடும். எல்லாம் ஒழுங்காக, கட்டமைக்கப்பட்ட விதத்தில் நடக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை என்பது எப்போதும் பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை. ஒரு நாளைக்கு சில மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்வது, மற்றொரு முழு நாள் ஷூட்டிங் செய்வதைவிட குறைவான பணமே செலவாகும். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:55 pm

அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்! - 8 மணி நேர பணி குறித்து துல்கர் &ரானாவின் கருத்து என்ன?

சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்தார். இவருடைய கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் முக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் பேசி வருகிறார்கள். Deepika Padukone ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்காக அதன் ஆசிரியர் அனுபமா சோப்ரா, 2025-ம் ஆண்டின் முன்னணி தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ரவுண்ட் டேபிள் நேர்காணல் நடத்தியிருந்தார். அதில் நடிகர்கள் துல்கர் சல்மானும், ரானாவும் இந்த 8 மணி நேரப் பணி குறித்து அவர்களுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். அந்த நேர்காணலில் ரானா, சினிமா என்பது வேலை இல்லை. இது ஒரு லைஃப்ஸ்டைல். இதில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனித்தன்மைகளைக் கொண்டிருக்கும். அதைக் குறிப்பிட்ட நேர அட்டவணைக்குள் அடைக்க முடியாது. தொழிற்சாலையைப் போல அசெம்பிளி லைன் அணுகுமுறை கதை சொல்லலைப் பாழாக்கிவிடும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலையைச் செய்தால் தானாக சிறந்த காட்சி வந்துவிடும் என்று கிடையாது. தெலுங்கு சினிமாவில் இப்போது பல முன்னணி நடிகர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவதால் பட்ஜெட்டைக் கட்டுப்படுத்தவும், ஷூட்டிங்கை விரைவாக முடிக்கவும் முடிகிறது. பெரிய நட்சத்திரங்கள் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளையும் சொகுசையும் குறைப்பது அவர்களது பொறுப்பு என்றார். Rana Daggubati அவரைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான், மலையாள சினிமாவில் பட்ஜெட் சிறியதாக இருப்பதால் நீண்ட தொடர் ஷெட்யூல்களையே பின்பற்றியிருக்கிறோம். இடைவெளி அதிகம் இல்லாமல் விரைவாக ஷூட்டிங்கை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் தெலுங்கு படங்களில் பணிபுரியும் போது பெரிய பட்ஜெட், சிறந்த திட்டமிடல் இருப்பதால் பெரும்பாலும் மாலைக்குள்ளேயே பேக் அப் ஆகிவிடும். எல்லாம் ஒழுங்காக, கட்டமைக்கப்பட்ட விதத்தில் நடக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை என்பது எப்போதும் பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை. ஒரு நாளைக்கு சில மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்வது, மற்றொரு முழு நாள் ஷூட்டிங் செய்வதைவிட குறைவான பணமே செலவாகும். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:55 pm

Angammal: அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு! - கீதா கைலாசம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள 'அங்கம்மாள்' படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கீதா கைலாசம் - சரண் சக்தி தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். டிசம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கீதா கைலாசம், “'அங்கம்மாள்' கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது. அவளுடைய மௌனத்திற்கும், பெருமைக்கும், இதயத்துடிப்புக்கும் முழுமையாக சரணடைய வேண்டியிருந்தது. கிராமத்தில் படமாக்கியதால் ஒவ்வொரு ஃபிரேமிலும் நான் நடிக்கும் முறையே மாறியது. இந்தக் கதையை இவ்வளவு உணர்திறனுடன் வடிவமைத்த இயக்குநர் விபினுக்கு நன்றி. ரிகர்சல் மூலம் அல்லாமல் அந்த கதாபாத்திரத்தை நான் உணர்ந்து நடிக்க அனுமதித்தார். சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது. கீதா கைலாசம் - பரணி இந்தப் படம் வெளியானதும் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சின்சியராக நடித்தோம். இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் புது அனுபவத்தையும் ஒரு தலைமுறையின் வலிமையையும் எடுத்து சொல்லும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:49 pm

Angammal: அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு! - கீதா கைலாசம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள 'அங்கம்மாள்' படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கீதா கைலாசம் - சரண் சக்தி தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். டிசம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கீதா கைலாசம், “'அங்கம்மாள்' கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது. அவளுடைய மௌனத்திற்கும், பெருமைக்கும், இதயத்துடிப்புக்கும் முழுமையாக சரணடைய வேண்டியிருந்தது. கிராமத்தில் படமாக்கியதால் ஒவ்வொரு ஃபிரேமிலும் நான் நடிக்கும் முறையே மாறியது. இந்தக் கதையை இவ்வளவு உணர்திறனுடன் வடிவமைத்த இயக்குநர் விபினுக்கு நன்றி. ரிகர்சல் மூலம் அல்லாமல் அந்த கதாபாத்திரத்தை நான் உணர்ந்து நடிக்க அனுமதித்தார். சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது. கீதா கைலாசம் - பரணி இந்தப் படம் வெளியானதும் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சின்சியராக நடித்தோம். இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் புது அனுபவத்தையும் ஒரு தலைமுறையின் வலிமையையும் எடுத்து சொல்லும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:49 pm

சோழனின் சாமர்த்திய பேச்சால் அந்தர் பல்டி அடித்த நிலா, காயத்ரி நிலை என்ன? அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் காயத்ரி, ஏன் போன் எடுக்கவில்லை. எதற்காக என்னை அவாய்ட் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு சேரனுக்கு ஷாக்காக இருந்தது. காயத்ரியை தனியாக அழைத்து சென்று சோழன் பேசி இருந்தார். அதற்குப்பின் பாண்டியன், சோழனை காயத்ரி காதலிக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். இதை கேட்டு சேரனுக்கு இன்னும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு பக்கம் சோழன், எனக்கும் உங்களுக்கும் செட்டாகாது. நான் உங்களை காதலிக்கவே இல்லை என்றார். […] The post சோழனின் சாமர்த்திய பேச்சால் அந்தர் பல்டி அடித்த நிலா, காயத்ரி நிலை என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 1:17 pm

BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கும், திவ்யா கணேஷிற்கும் சண்டை நடக்கிறது. ஒருத்தவுங்களை பேச விட்டு எல்லாரும் வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்தீங்க என திவ்யா சொல்ல தேவை இல்லாம பேசாத. நீ எல்லாம் என் கூட பேசவே கூடாது கிளம்பு என கம்ருதீன் கோபப்படுகிறார். மரியாதையா பேசு கம்ருதீன் என திவ்யா கத்துகிறார். கம்ருதீனை சமாதானம் செய்யும் பார்வதியை 'நீ பண்றது தப்பு' என காட்டமாக பேசுகிறார் திவ்யா.

விகடன் 3 Dec 2025 12:57 pm

BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கும், திவ்யா கணேஷிற்கும் சண்டை நடக்கிறது. ஒருத்தவுங்களை பேச விட்டு எல்லாரும் வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்தீங்க என திவ்யா சொல்ல தேவை இல்லாம பேசாத. நீ எல்லாம் என் கூட பேசவே கூடாது கிளம்பு என கம்ருதீன் கோபப்படுகிறார். மரியாதையா பேசு கம்ருதீன் என திவ்யா கத்துகிறார். கம்ருதீனை சமாதானம் செய்யும் பார்வதியை 'நீ பண்றது தப்பு' என காட்டமாக பேசுகிறார் திவ்யா.

விகடன் 3 Dec 2025 12:57 pm

BB Tamil 9 Day 58: தற்காலிக காதல்கள்; நெருங்கிய நட்பில் பிரஜின் - திவ்யா; நடந்தது என்ன?

முதல் சீசனில் வந்த ‘நெக்லஸ்’ டாஸ்க்கை தூசு தட்டி மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்கள் reckless ஆக இல்லாமல் இருந்தால் சரிதான்.  முக்கோணக் காதல் பிரச்னையை தீர்ப்பதற்காக நடந்த வரலாற்றுச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இது ஜியாமென்ட்ரி பாக்ஸில்கூட அடக்கமுடியாத அளவிற்கு அறுங்கோணமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதுபோல. இப்போது அரோரா FJ-வுடன் நெருக்கமாகத் தொடங்கியிருக்கிறாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 58 பெர்முடா முக்கோண மர்மத்தின் ரகிசயத்தைக்கூட கண்டுபிடித்து முடியும்போல. ஒரு காதலின் முக்கோணச் சிக்கலை அவிழ்ப்பது அத்தனை எளிதல்ல. கமு்மு - அம்மு - பாருவின் சமாதான பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் தொடங்கியது.  BB Tamil 9 Day 58 “இந்த டிரையாங்கிள் பிரச்னையை இத்தோட நிறுத்திக்கலாம். எங்க லவ் ரொம்ப ஸ்ட்ராங்கு. நீதான் குறுக்க வர்ற” என்கிற மாதிரி பாரு சொல்ல, “அப்படின்னா கம்முவோட இன்னமும் நான் பிரெண்டா இருக்கறது நல்லாயிரு்ககாது. நீங்க அனுமதி கொடுக்கும்போது மட்டும் பேசணும்னு எனக்கு அவசியமில்ல.” என்று அரோரா சொல்ல “உன் கேமை நீ ஆடு... அவங்கவங்க அவங்க கேமை ஆடலாம்” என்று கம்மு எரிச்சலாக அரோரா கையெடுத்து கும்பிட்டு விட்டுச்சென்றார்.  கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள முயன்றால்.. பாரு, அரோரா ஆகிய இருவருக்குமே கம்மு என்கிற பொம்மை ஆடுவதற்குத் தேவைப்படுகிறது. இருவருக்குமே அதை விட்டுக்கொடுக்க மனமில்லை. வெளியுலகம் என்றால் சட்டென்று விலகிவிடலாம். ஆனால் பிக் பாஸ் என்கிற அடைபட்ட சூழலில் தனக்கேற்ற comfort zone-ஐ ஒருவர் தேடிக்கொள்வது இயல்பானது. ஆகவே இருவரும் போட்டியிடுகிறார்கள்.  ‘எனக்கு ஃபீலீங்க்ஸ் இருக்கு. பொசசிவ் ஆகுது. பிரெண்டா இருக்கட்டும். ஆனா என் கண் முன்னாடி வேணாம்” என்று நிபந்தனையிடுகிறார் பாரு. ‘அப்படிப்பட்ட பிரெண்ட்ஷிப்பே எனக்கு வேணாம்’ என்று உதறிச் செல்கிறார் அரோரா. அப்படிச் சென்றாலும் கலங்காமல் இருக்க அவரால் முடியவில்லை. துஷாரின் இடத்தை கம்முவின் மூலம் ரீபிளேஸ் செய்ய விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.  இப்படியாக இரண்டு பெண்கள் ஒரு பொம்மைக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க, கம்மு என்கிற பொம்மையோ ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என்று இரண்டு பக்கமும் கோல் அடிக்க நினைக்கிறது. ரொம்பவும் வற்புறுத்தினால் ‘ஆமாம்.. பாரு மேலதான் ஃபீலிங்க்ஸ்’ என்று அரோரா மீது கோபம் கொள்கிறது. BB Tamil 9 Day 58 பிக் பாஸ் வீட்டில் உருவாகும் தற்காலிக காதல்கள் பிக் பாஸ் வீட்டில் உருவாகிற லவ் டிராக் எல்லாம் அப்போதைய நேரத்திற்கு உருவாகும் தற்காலிக உணர்ச்சி என்பது உலகத்திற்கே தெரியும். அப்படி இருந்தும் கூட கவின் - லோஸ்லியா (3-ம் சீசன்) இருவருக்கு இடையே உண்டான காவியக்காதல் வெளியில் தொடர்ந்து திருமணத்தில் முடியும் என்று ஒரு கணம் நம்பினேன். இதுதான் நிலைமை. மீடியாவில் ஊறியுள்ள பாருவிற்கும் கம்முவிற்கும் இது நன்றாகத் தெரியும். என்றாலும் ‘எனக்கு ஃபீலிங்க்ஸ் அதிகம்' என்று பாரு வலியுறுத்துவது டிராமா என்றுதான் தோன்றுகிறது.  ‘என்னோட வளர்ச்சியைப் பத்தி அரோரா உண்மையாவே கவலைப்படறா. ‘நீ நல்ல நடிகன் ஆகணும்’ன்னு சொல்லி திறமையை வளர்த்துக்கச் சொல்றா. எனக்கு ரெட் கார்டு கிடைக்கும்ன்னு பேசிக்கிட்ட அரோரா அழுதா.. அவதான் எனக்கு உண்மையான பிரெண்டு. ஆனால் பாருவோ அவளைப் பத்திதான் கவலைப்படறா. வம்பு பேசறா’ என்று மிகத் தெளிவாக சொன்னவரும் இதே கம்ருதீன்தான். ஆனால் தனக்கு எது தேவை என்று வரும்போது பாருவின் பக்கம் சாய்கிறார். (கசாப்புக் கடைக்காரனைத்தான் ஆடு நம்பும் என்றொரு பழமொழி இருக்கிறது)  ‘அதே டெய்லர்.. அதே வாடகை.. எனக்கும் அதையேதான் சொன்னான்’ என்று அரேரராவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ஆதிரை. ‘வெண்மதி வெண்மதியே நில்லு’ என்று டைமிங்கான பாட்டை FJ தலைமையில் ஒரு குழு டைமிங்காக பாட தனியாகச் சென்று கண்கலங்கினார் அரோரா. காமிரா துஷார் படத்தை க்ளோசப்பில் காண்பித்தது.  சான்ட்ராவின் புரியாத கோபம் - எஸ்கேப் ஆன பிரஜன் நாள் 58. தல ரம்யா அறையில் கனி தூங்கிய விவகாரத்தை துண்டுக் காட்சியாக எதற்கோ காண்பித்தார்கள்.  பாருவும் வியானாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். “ஒரு பிரண்ட்ஷிப் எப்ப வேணா லவ்வா மாறலாம். அதுல தப்பில்லை. நீங்க பண்றது ரொம்ப வெளிப்படையா தெரியுது” என்று வியானா சொல்ல “நான் நிறைய விட்டுக் கொடுத்திருக்கேன். அவங்க ரெண்டு பேரும் நட்புச் செடியை நல்லாவே தண்ணி விட்டு வளர்க்கட்டும். ஆனா என் கண்ணு முன்னாடி வேணாம். நான் இந்த மாதிரி Evil ஆட்டமெல்லாம் ஆட மாட்டேன்” என்று தன் பொசசிவ்னஸிற்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்தார் பாரு.  BB Tamil 9 Day 58 இந்த லவ் டிராக் சிக்கல்தான் இப்படியென்றால், திருமண டிராக்கிலும் ஒரே பிரச்னைதான். சான்ட்ரா எதற்காக கோபமாக இருக்கிறார், அடிக்கடி தனிமையில் அமர்ந்து கொள்கிறார் என்கிற ரகசியத்தை அறிய முடியவில்லை.  “ஒருவேளை அவளுக்கு நான் ரெட் பேட்ஜ் கொடுத்துது காரணமா இருக்கலாம். தெரியல. அப்படியே விட்ரு. நான் சக போட்டியாளர்தான். இதையெல்லாம் விசாரிக்க முடியாது” என்று திவ்யாவிடம் ஜாக்கிரதையாகச் சொன்னார் பிரஜன். ஆனால் திவ்யாவோ “ அவ கிட்ட பேசவே பயமா இருக்குது. இருந்தாலும் போய்க் கேட்டுட்டு வரேன்’ என்று வம்படியாக கிளம்பிச் சென்றார்.  ‘ரெண்டு ரூவாதாண்டா கேட்டேன். அவன் என்ன கோபத்துல இருந்தானோ. தெரியல.. இவ்ளோ பெரிய கத்திய உருவிட்டான்’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி, திவ்யா அருகில் வந்ததுமே படபடவென பொறிய ஆரம்பித்துவிட்டார் சான்ட்ரா. “எனக்கு நூறு பிரச்னை இருக்கும். அதையெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியுமா.. எங்க அப்பா செத்த மாசம் இது. உனக்கு தெரியாம இருக்கலாம். அவருக்கு தெரியாதா.. இப்ப நான் என்ன பண்ணணும்..?” என்றெல்லாம் சான்ட்ரா எரிந்து விழ ‘தப்பிச்சோம்டா சாமி’ என்று எழுந்து வந்தார் திவ்யா.  பெண்களின் குறிப்பான மனைவிமார்களின் கோபத்திற்கான காரணத்தை அறிவது பிரம்ம சூத்திரம். காரணத்தை வெளிப்படையாகச் சொல்லியும் தொலைக்க மாட்டார்கள். விசாரிக்க அருகில் சென்றாலும் மேலே பாய்ந்து பிடுங்குவார்கள்.  ஆனால் பிரஜின் ரொம்பவும் அனுபவஸ்தராக இருக்கிறார். “இப்ப வேணாம் விட்ரு. பார்த்துக்கலாம். வண்டி தானா வரட்டும்’ என்று சாமர்த்தியமாக டீல் செய்கிறார்.  BB Tamil 9 Day 58 பிரஜனும் திவ்யாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் சான்ட்ராவிற்கு பொசசிவ் ஏற்படுகிறதா, அல்லது பிரஜன் சொன்னது மாதிரி ‘ரெட் பேட்ஜ்’தான் பிரச்னையா? சான்ட்ராவிற்கே வெளிச்சம்.  ‘பிரஜின் எவிக்ஷன்’ என்னும் போது ஊரையே கூட்டி அழுது அலப்பறை செய்த சான்ட்ரா, இப்போது கோபத்தையும் அதே அளவிற்கான மீட்டரில் காட்டுகிறார். எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரீம் என்றால் எப்படி? ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’ என்று டாஸ்க்கின்போது பிரஜின் சொல்ல “அப்புறம் உங்க  நிலைமை என்ன ஆகப் போகுதோ?’ என்று விசே கிண்டலடித்தது உண்மையாகிக் கொண்டிருக்கிறது.  ‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ - திவாகரைப் பிரிய மனமில்லாத பிக் பாஸ் வீக்லி டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ‘ஜமீன்தாரும் நெக்லஸூம்’ என்பது தலைப்பு. ஜமீன்தாரின் பெயர் ‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ வாம். திவாகர் வெளியே சென்றாலும்கூட இவர்கள்விட மாட்டார்கள் போலிருக்கிறது. ‘பாருங்க.. தமிழக மக்களே.. என் பெயராலதான் பிக் பாஸ் வண்டி ஓடுது’ என்று அவர் பெருமிதமாக இண்டர்வியூவில் சொல்லப்போகிறார்.  ‘ரெட்ரோ சினிமா’, ‘மாடர்ன் சினிமா’ என்று வீடு இரண்டு அணிகளாகப் பிரியும். ஜமீன்தார் தந்து விட்டுச் சென்றிருக்கும் நெக்லஸூகளை இரண்டு அணிகளும் பாதுகாக்க வேண்டும். நெக்லஸை தொலைக்கும் அணி ஒட்டுமொத்தமாக நாமினேஷன் ஆகும். வெற்றி பெறும் அணி நாமினேஷன் ப்ரீ பாஸ் வெல்லும்.  BB Tamil 9 Day 58 ஒவ்வொருவரின் சினிமா கேரக்டர்கள் தரப்பட்டன. ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதவாக விக்ரம், வசந்தமாளிகை சரோஜாதேவியாக ‘கனி’, இதே படத்தின் சிவாஜியாக ஆதிரை, திருவிளையாடல் தருமியாக சுபிக்ஷா, பிராமண வீட்டுப் பெண்ணாக அரோரா, கர்ணன் சிவாஜியாக அமித், ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியாக திவ்யா, இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கமாக பிரஜின், முதல் மரியாதை ராதா (?!) வாக வியானா, ரெமோ நர்ஸ் ஆக கம்ருதீன், நத்தக்கண்ணுவாக பாரு, (என்னடா பேரு இது?) டி.ஆர் ஆக வினோத், மதராசப் பட்டினம் எமி ஜாக்ஸனாக சான்ட்ரா, வல்லவன் சிம்புவாக FJ, குணா அபிராமியாக சபரி.  டி.ஆர் பாத்திரம் என்று அறிவிக்கப்பட்டதுமே அந்த மோடில் மாறி ரைமிங்கில் அலப்பறையைத் தொடங்கிவிட்டார் வினோத். தனக்கு தரப்பட்ட விக்கை மாட்டிக் கொண்டு ‘என்னடா.. இது ஓலைக்குடிசைக்குள்ள வாழற மாதிரி இருக்கு’ என்று சொன்னது நல்ல நகைச்சுவை. ‘சும்மாவே பேசுவான்.. இப்ப இந்த காரெக்டர் வேறயா?” என்று மற்றவர்கள் ஜாலியாக சலித்துக்கொண்டார்கள்.  ஒவ்வொருவரும் தங்களின் காரெக்ட்டரில் கோரஸாக கத்திக்கொண்டிருந்தார்கள். அப்போதும்கூட அரோராவும் பாருவும் தங்களின் ‘ஃபீலிங்’ சண்டையை ஜாடையாக நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். பாருவின் கணவர் பெயர் சக்திவேல் கம்ருதீனாம். காரெக்டர்லகூட ரொமான்ஸை சேர்க்கிற அளவிற்கு ஃபீலிங்க்ஸ் டெவலப் ஆகியிருக்கிறது. ‘சதி லீலாவதி’ கோவை சரளாவின் காரெக்டரை காப்பி செய்ய முயன்று கொண்டிருந்தார் பாரு.  காய்கறிகளை மேஜையில் அடுக்கி வைத்து, கண்ணைக் கட்டிக்கொண்டு கண்டுபிடிக்கிற டெய்லி டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். சான்ட்ராவிற்கும் அமித்திற்கும் நடந்த முதல் சுற்றில், பார்வதி கத்திக் கொண்டேயிருந்ததால் அமித் கோபம் அடைந்தார்.  ஒவ்வொருவருக்கும் சுவாரசியமான கேரக்டர்கள் தரப்பட்டிருக்கின்றன. இதை வைத்து டாஸ்க்கை சிறப்பாகச் செய்து நடிப்பு அரக்கனின் பெயரைக் காப்பாற்றுவார்களா?

விகடன் 3 Dec 2025 11:51 am

BB Tamil 9 Day 58: தற்காலிக காதல்கள்; நெருங்கிய நட்பில் பிரஜின் - திவ்யா; நடந்தது என்ன?

முதல் சீசனில் வந்த ‘நெக்லஸ்’ டாஸ்க்கை தூசு தட்டி மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்கள் reckless ஆக இல்லாமல் இருந்தால் சரிதான்.  முக்கோணக் காதல் பிரச்னையை தீர்ப்பதற்காக நடந்த வரலாற்றுச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இது ஜியாமென்ட்ரி பாக்ஸில்கூட அடக்கமுடியாத அளவிற்கு அறுங்கோணமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதுபோல. இப்போது அரோரா FJ-வுடன் நெருக்கமாகத் தொடங்கியிருக்கிறாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 58 பெர்முடா முக்கோண மர்மத்தின் ரகிசயத்தைக்கூட கண்டுபிடித்து முடியும்போல. ஒரு காதலின் முக்கோணச் சிக்கலை அவிழ்ப்பது அத்தனை எளிதல்ல. கமு்மு - அம்மு - பாருவின் சமாதான பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் தொடங்கியது.  BB Tamil 9 Day 58 “இந்த டிரையாங்கிள் பிரச்னையை இத்தோட நிறுத்திக்கலாம். எங்க லவ் ரொம்ப ஸ்ட்ராங்கு. நீதான் குறுக்க வர்ற” என்கிற மாதிரி பாரு சொல்ல, “அப்படின்னா கம்முவோட இன்னமும் நான் பிரெண்டா இருக்கறது நல்லாயிரு்ககாது. நீங்க அனுமதி கொடுக்கும்போது மட்டும் பேசணும்னு எனக்கு அவசியமில்ல.” என்று அரோரா சொல்ல “உன் கேமை நீ ஆடு... அவங்கவங்க அவங்க கேமை ஆடலாம்” என்று கம்மு எரிச்சலாக அரோரா கையெடுத்து கும்பிட்டு விட்டுச்சென்றார்.  கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள முயன்றால்.. பாரு, அரோரா ஆகிய இருவருக்குமே கம்மு என்கிற பொம்மை ஆடுவதற்குத் தேவைப்படுகிறது. இருவருக்குமே அதை விட்டுக்கொடுக்க மனமில்லை. வெளியுலகம் என்றால் சட்டென்று விலகிவிடலாம். ஆனால் பிக் பாஸ் என்கிற அடைபட்ட சூழலில் தனக்கேற்ற comfort zone-ஐ ஒருவர் தேடிக்கொள்வது இயல்பானது. ஆகவே இருவரும் போட்டியிடுகிறார்கள்.  ‘எனக்கு ஃபீலீங்க்ஸ் இருக்கு. பொசசிவ் ஆகுது. பிரெண்டா இருக்கட்டும். ஆனா என் கண் முன்னாடி வேணாம்” என்று நிபந்தனையிடுகிறார் பாரு. ‘அப்படிப்பட்ட பிரெண்ட்ஷிப்பே எனக்கு வேணாம்’ என்று உதறிச் செல்கிறார் அரோரா. அப்படிச் சென்றாலும் கலங்காமல் இருக்க அவரால் முடியவில்லை. துஷாரின் இடத்தை கம்முவின் மூலம் ரீபிளேஸ் செய்ய விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.  இப்படியாக இரண்டு பெண்கள் ஒரு பொம்மைக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க, கம்மு என்கிற பொம்மையோ ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என்று இரண்டு பக்கமும் கோல் அடிக்க நினைக்கிறது. ரொம்பவும் வற்புறுத்தினால் ‘ஆமாம்.. பாரு மேலதான் ஃபீலிங்க்ஸ்’ என்று அரோரா மீது கோபம் கொள்கிறது. BB Tamil 9 Day 58 பிக் பாஸ் வீட்டில் உருவாகும் தற்காலிக காதல்கள் பிக் பாஸ் வீட்டில் உருவாகிற லவ் டிராக் எல்லாம் அப்போதைய நேரத்திற்கு உருவாகும் தற்காலிக உணர்ச்சி என்பது உலகத்திற்கே தெரியும். அப்படி இருந்தும் கூட கவின் - லோஸ்லியா (3-ம் சீசன்) இருவருக்கு இடையே உண்டான காவியக்காதல் வெளியில் தொடர்ந்து திருமணத்தில் முடியும் என்று ஒரு கணம் நம்பினேன். இதுதான் நிலைமை. மீடியாவில் ஊறியுள்ள பாருவிற்கும் கம்முவிற்கும் இது நன்றாகத் தெரியும். என்றாலும் ‘எனக்கு ஃபீலிங்க்ஸ் அதிகம்' என்று பாரு வலியுறுத்துவது டிராமா என்றுதான் தோன்றுகிறது.  ‘என்னோட வளர்ச்சியைப் பத்தி அரோரா உண்மையாவே கவலைப்படறா. ‘நீ நல்ல நடிகன் ஆகணும்’ன்னு சொல்லி திறமையை வளர்த்துக்கச் சொல்றா. எனக்கு ரெட் கார்டு கிடைக்கும்ன்னு பேசிக்கிட்ட அரோரா அழுதா.. அவதான் எனக்கு உண்மையான பிரெண்டு. ஆனால் பாருவோ அவளைப் பத்திதான் கவலைப்படறா. வம்பு பேசறா’ என்று மிகத் தெளிவாக சொன்னவரும் இதே கம்ருதீன்தான். ஆனால் தனக்கு எது தேவை என்று வரும்போது பாருவின் பக்கம் சாய்கிறார். (கசாப்புக் கடைக்காரனைத்தான் ஆடு நம்பும் என்றொரு பழமொழி இருக்கிறது)  ‘அதே டெய்லர்.. அதே வாடகை.. எனக்கும் அதையேதான் சொன்னான்’ என்று அரேரராவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ஆதிரை. ‘வெண்மதி வெண்மதியே நில்லு’ என்று டைமிங்கான பாட்டை FJ தலைமையில் ஒரு குழு டைமிங்காக பாட தனியாகச் சென்று கண்கலங்கினார் அரோரா. காமிரா துஷார் படத்தை க்ளோசப்பில் காண்பித்தது.  சான்ட்ராவின் புரியாத கோபம் - எஸ்கேப் ஆன பிரஜன் நாள் 58. தல ரம்யா அறையில் கனி தூங்கிய விவகாரத்தை துண்டுக் காட்சியாக எதற்கோ காண்பித்தார்கள்.  பாருவும் வியானாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். “ஒரு பிரண்ட்ஷிப் எப்ப வேணா லவ்வா மாறலாம். அதுல தப்பில்லை. நீங்க பண்றது ரொம்ப வெளிப்படையா தெரியுது” என்று வியானா சொல்ல “நான் நிறைய விட்டுக் கொடுத்திருக்கேன். அவங்க ரெண்டு பேரும் நட்புச் செடியை நல்லாவே தண்ணி விட்டு வளர்க்கட்டும். ஆனா என் கண்ணு முன்னாடி வேணாம். நான் இந்த மாதிரி Evil ஆட்டமெல்லாம் ஆட மாட்டேன்” என்று தன் பொசசிவ்னஸிற்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்தார் பாரு.  BB Tamil 9 Day 58 இந்த லவ் டிராக் சிக்கல்தான் இப்படியென்றால், திருமண டிராக்கிலும் ஒரே பிரச்னைதான். சான்ட்ரா எதற்காக கோபமாக இருக்கிறார், அடிக்கடி தனிமையில் அமர்ந்து கொள்கிறார் என்கிற ரகசியத்தை அறிய முடியவில்லை.  “ஒருவேளை அவளுக்கு நான் ரெட் பேட்ஜ் கொடுத்துது காரணமா இருக்கலாம். தெரியல. அப்படியே விட்ரு. நான் சக போட்டியாளர்தான். இதையெல்லாம் விசாரிக்க முடியாது” என்று திவ்யாவிடம் ஜாக்கிரதையாகச் சொன்னார் பிரஜன். ஆனால் திவ்யாவோ “ அவ கிட்ட பேசவே பயமா இருக்குது. இருந்தாலும் போய்க் கேட்டுட்டு வரேன்’ என்று வம்படியாக கிளம்பிச் சென்றார்.  ‘ரெண்டு ரூவாதாண்டா கேட்டேன். அவன் என்ன கோபத்துல இருந்தானோ. தெரியல.. இவ்ளோ பெரிய கத்திய உருவிட்டான்’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி, திவ்யா அருகில் வந்ததுமே படபடவென பொறிய ஆரம்பித்துவிட்டார் சான்ட்ரா. “எனக்கு நூறு பிரச்னை இருக்கும். அதையெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியுமா.. எங்க அப்பா செத்த மாசம் இது. உனக்கு தெரியாம இருக்கலாம். அவருக்கு தெரியாதா.. இப்ப நான் என்ன பண்ணணும்..?” என்றெல்லாம் சான்ட்ரா எரிந்து விழ ‘தப்பிச்சோம்டா சாமி’ என்று எழுந்து வந்தார் திவ்யா.  பெண்களின் குறிப்பான மனைவிமார்களின் கோபத்திற்கான காரணத்தை அறிவது பிரம்ம சூத்திரம். காரணத்தை வெளிப்படையாகச் சொல்லியும் தொலைக்க மாட்டார்கள். விசாரிக்க அருகில் சென்றாலும் மேலே பாய்ந்து பிடுங்குவார்கள்.  ஆனால் பிரஜின் ரொம்பவும் அனுபவஸ்தராக இருக்கிறார். “இப்ப வேணாம் விட்ரு. பார்த்துக்கலாம். வண்டி தானா வரட்டும்’ என்று சாமர்த்தியமாக டீல் செய்கிறார்.  BB Tamil 9 Day 58 பிரஜனும் திவ்யாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் சான்ட்ராவிற்கு பொசசிவ் ஏற்படுகிறதா, அல்லது பிரஜன் சொன்னது மாதிரி ‘ரெட் பேட்ஜ்’தான் பிரச்னையா? சான்ட்ராவிற்கே வெளிச்சம்.  ‘பிரஜின் எவிக்ஷன்’ என்னும் போது ஊரையே கூட்டி அழுது அலப்பறை செய்த சான்ட்ரா, இப்போது கோபத்தையும் அதே அளவிற்கான மீட்டரில் காட்டுகிறார். எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரீம் என்றால் எப்படி? ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’ என்று டாஸ்க்கின்போது பிரஜின் சொல்ல “அப்புறம் உங்க  நிலைமை என்ன ஆகப் போகுதோ?’ என்று விசே கிண்டலடித்தது உண்மையாகிக் கொண்டிருக்கிறது.  ‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ - திவாகரைப் பிரிய மனமில்லாத பிக் பாஸ் வீக்லி டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ‘ஜமீன்தாரும் நெக்லஸூம்’ என்பது தலைப்பு. ஜமீன்தாரின் பெயர் ‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ வாம். திவாகர் வெளியே சென்றாலும்கூட இவர்கள்விட மாட்டார்கள் போலிருக்கிறது. ‘பாருங்க.. தமிழக மக்களே.. என் பெயராலதான் பிக் பாஸ் வண்டி ஓடுது’ என்று அவர் பெருமிதமாக இண்டர்வியூவில் சொல்லப்போகிறார்.  ‘ரெட்ரோ சினிமா’, ‘மாடர்ன் சினிமா’ என்று வீடு இரண்டு அணிகளாகப் பிரியும். ஜமீன்தார் தந்து விட்டுச் சென்றிருக்கும் நெக்லஸூகளை இரண்டு அணிகளும் பாதுகாக்க வேண்டும். நெக்லஸை தொலைக்கும் அணி ஒட்டுமொத்தமாக நாமினேஷன் ஆகும். வெற்றி பெறும் அணி நாமினேஷன் ப்ரீ பாஸ் வெல்லும்.  BB Tamil 9 Day 58 ஒவ்வொருவரின் சினிமா கேரக்டர்கள் தரப்பட்டன. ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதவாக விக்ரம், வசந்தமாளிகை சரோஜாதேவியாக ‘கனி’, இதே படத்தின் சிவாஜியாக ஆதிரை, திருவிளையாடல் தருமியாக சுபிக்ஷா, பிராமண வீட்டுப் பெண்ணாக அரோரா, கர்ணன் சிவாஜியாக அமித், ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியாக திவ்யா, இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கமாக பிரஜின், முதல் மரியாதை ராதா (?!) வாக வியானா, ரெமோ நர்ஸ் ஆக கம்ருதீன், நத்தக்கண்ணுவாக பாரு, (என்னடா பேரு இது?) டி.ஆர் ஆக வினோத், மதராசப் பட்டினம் எமி ஜாக்ஸனாக சான்ட்ரா, வல்லவன் சிம்புவாக FJ, குணா அபிராமியாக சபரி.  டி.ஆர் பாத்திரம் என்று அறிவிக்கப்பட்டதுமே அந்த மோடில் மாறி ரைமிங்கில் அலப்பறையைத் தொடங்கிவிட்டார் வினோத். தனக்கு தரப்பட்ட விக்கை மாட்டிக் கொண்டு ‘என்னடா.. இது ஓலைக்குடிசைக்குள்ள வாழற மாதிரி இருக்கு’ என்று சொன்னது நல்ல நகைச்சுவை. ‘சும்மாவே பேசுவான்.. இப்ப இந்த காரெக்டர் வேறயா?” என்று மற்றவர்கள் ஜாலியாக சலித்துக்கொண்டார்கள்.  ஒவ்வொருவரும் தங்களின் காரெக்ட்டரில் கோரஸாக கத்திக்கொண்டிருந்தார்கள். அப்போதும்கூட அரோராவும் பாருவும் தங்களின் ‘ஃபீலிங்’ சண்டையை ஜாடையாக நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். பாருவின் கணவர் பெயர் சக்திவேல் கம்ருதீனாம். காரெக்டர்லகூட ரொமான்ஸை சேர்க்கிற அளவிற்கு ஃபீலிங்க்ஸ் டெவலப் ஆகியிருக்கிறது. ‘சதி லீலாவதி’ கோவை சரளாவின் காரெக்டரை காப்பி செய்ய முயன்று கொண்டிருந்தார் பாரு.  காய்கறிகளை மேஜையில் அடுக்கி வைத்து, கண்ணைக் கட்டிக்கொண்டு கண்டுபிடிக்கிற டெய்லி டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். சான்ட்ராவிற்கும் அமித்திற்கும் நடந்த முதல் சுற்றில், பார்வதி கத்திக் கொண்டேயிருந்ததால் அமித் கோபம் அடைந்தார்.  ஒவ்வொருவருக்கும் சுவாரசியமான கேரக்டர்கள் தரப்பட்டிருக்கின்றன. இதை வைத்து டாஸ்க்கை சிறப்பாகச் செய்து நடிப்பு அரக்கனின் பெயரைக் காப்பாற்றுவார்களா?

விகடன் 3 Dec 2025 11:51 am

BB Tamil 9: திவாகர் வெளிய போனதுக்கு இவர்தான் காரணம் - மோதிக்கொள்ளும் ஆதிரை - வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாட்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில் ஆதிரைக்கும், வினோத்திற்கும் வாக்குவாதம் நடக்கிறது. சபரியிடம் வினோத் பேசிக்கொண்டிருக்கும்போது, ஏய் யாரை சொல்ற என ஆதிரை, வினோத்தைக் கேட்க, யாரை இப்போ ஏய்ன்னு சொல்ற? அப்படி சொல்லாத அது தப்பு என வினோத் சண்டை போடுகிறார். நாக்கைக் கடிச்சு அதட்டாம பேசுங்க வினோத். எல்லாத்தையும் இந்த வீட்டில பண்ணிட்டு பண்ணலன்னு சொல்றீங்க. வாட்டர் மெலன் (திவாகர்) வெளியே போனதுக்கு இவரும் ஒரு காரணம்தான் என ஆதிரை சொல்கிறார். வினோத் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம். BB Tamil 9: இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்- அரோராவிடம் பேசும் பார்வதி

விகடன் 3 Dec 2025 11:17 am

BB Tamil 9: திவாகர் வெளிய போனதுக்கு இவர்தான் காரணம் - மோதிக்கொள்ளும் ஆதிரை - வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாட்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில் ஆதிரைக்கும், வினோத்திற்கும் வாக்குவாதம் நடக்கிறது. சபரியிடம் வினோத் பேசிக்கொண்டிருக்கும்போது, ஏய் யாரை சொல்ற என ஆதிரை, வினோத்தைக் கேட்க, யாரை இப்போ ஏய்ன்னு சொல்ற? அப்படி சொல்லாத அது தப்பு என வினோத் சண்டை போடுகிறார். நாக்கைக் கடிச்சு அதட்டாம பேசுங்க வினோத். எல்லாத்தையும் இந்த வீட்டில பண்ணிட்டு பண்ணலன்னு சொல்றீங்க. வாட்டர் மெலன் (திவாகர்) வெளியே போனதுக்கு இவரும் ஒரு காரணம்தான் என ஆதிரை சொல்கிறார். வினோத் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம். BB Tamil 9: இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்- அரோராவிடம் பேசும் பார்வதி

விகடன் 3 Dec 2025 11:17 am

சிந்துவை அசிங்கப்படுத்திய விஜய் சித்தி, காவிரி செய்த விஷயம் –விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், அந்த வீட்டை ஆறாக பங்கு போட்டு ஐந்து பங்கு காவிரி வீட்டிற்கு, ஒரு பங்கு உங்களுக்கு என்றார். இதனால் கோபப்பட்ட கிருஷ்ணா ஒத்துக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் விஜய் சொன்ன விஷயத்தை எல்லாம் தன்னுடைய அம்மா, தங்கையிடம் கிருஷ்ணா சொன்னார். அவர்களுமே வந்த வரை போதும் கிளம்பி விடலாம் என்றார். ஆனால், கிருஷ்ணா ஒத்துக்கொள்ளவே இல்லை. சரி பாதியாக பங்கு போட வேண்டும் என்றார்.இன்னொரு பக்கம் காவேரி பாட்டு […] The post சிந்துவை அசிங்கப்படுத்திய விஜய் சித்தி, காவிரி செய்த விஷயம் – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 10:45 am

`இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் தர்மேந்திராவின் தாயாரை சந்தித்தேன்!’ - ஹேமாமாலினி

பா.ஜ.க எம்.பி.யும் நடிகையுமான ஹேமாமாலினி தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பாலிவுட்டிற்கு சென்று பிரபலம் அடைந்தார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடிகர் தர்மேந்திராவை அவர் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் அத்திருமணம் நடந்தபோது தர்மேந்திராவிற்கு ஏற்கனவே திருமணாகி குழந்தைகளும் இருந்தன. தர்மேந்திரா - ஹேமாமாலினி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தர்மேந்திரா காலமானார். அவர் மரணமடைந்துள்ள நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகை ஹேமாமாலினி தனது சுயசரிதையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். ஹேமாமாலினியின் வாழ்க்கை வரலாற்றை ராம் கோபால் முகர்ஜி என்பவர் சுயசரிதையாக எழுதியுள்ளார். Hema Malini: Beyond The Dream Girl என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள சுயசரிதையில், ''எனது மகள் இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் எனது மாமியார் சத்வந்த் கவுர் என்னை முதல் முறையாக பார்க்க வந்தார். நான் மும்பை ஜுகுவில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங்கில் ஈடுபட்டிருந்தபோதுதான் அவர் என்னை பார்க்க வந்தார். அவர் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. நான் அவரது காலை தொட்டு வணங்கினேன். அவர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு மகளே மகிழ்ச்சியாக இரு என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியாக இருந்ததால் நானும் மகிழ்ச்சியாக இருந்தேன். தர்மேந்திராவின் தந்தை கேவல் கிஷன் சிங் தியோலும் எனது தந்தை வி.எஸ். ராமானுஜம் சக்ரவர்த்தியும் கை மல்யுத்தத்தில் ஈடுபடுவதுண்டு. தர்மேந்திராவின் தந்தை, என் தந்தை அல்லது சகோதரனை பார்க்க வரும்போது அவர்கள் தேனீர் அருந்துவண்டு. அவர்கள் கைகுலுக்குவதற்குப் பதிலாக, அவர்களுடன் கையால் மல்யுத்தம் செய்வார். அவர்களைத் தோற்கடித்த பிறகு வெண்ணெய், லஸ்ஸி, நெய், இட்லி சாம்பார், நெய் உங்களுக்கு போதிய பலத்தை கொடுக்கவில்லை என்று தர்மேந்திராவின் தந்தை நகைச்சுவையாகச் சொல்வார். என் அப்பாவும் சிரிப்பில் கலந்து கொள்வார். தர்மேந்திராவின் தந்தை மிகவும் மகிழ்ச்சியான நபர்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். தர்மேந்திராவும், ஹேமாமாலினியும் 1980ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்நேரம் தர்மேந்திராவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருந்ததால், அவர்களது திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்ததால் தர்மேந்திரா மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. 1970ம் ஆண்டு Tum Haseen Main Jawaan என்ற படத்தில் நடித்தபோதுதான் முதல் முறையாக இருவரும் சந்தித்துக்கொண்டனர். அதன் பிறகு பல படங்களில் இணைந்து நடித்தனர்.

விகடன் 3 Dec 2025 10:16 am

திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயத்தையும் ஏத்துக்கிறேன்!- இயக்குநர் கலையரசன் பேட்டி

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ, மாளவிகா மனோஜ், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், ஜென்சன் எனப் பலர் நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தை ஓடிடி-யிலும் மக்கள் பலர் கண்டுகளித்து வருகிறார்கள். படத்திற்கு பல தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்தாலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில் ஆணாதிக்க சிந்தனைகள் நிறைந்திருக்கும் வகையில் படத்தின் திரைக்கதையாசிரியரகள் சிவக்குமார் முருகேசனும், கலையரசன் தங்கவேலும் அமைத்திருக்கிறார்கள் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 'ஆண் பாவம் பொல்லாதது' படத்திற்காக இயக்குநர் கலையரசன் தங்கவேலுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரைப் பேட்டி கண்டேன். வணக்கம். 'ஆண்பாவம் பொல்லாதது' படத்துக்கு தியேட்டர்ல நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. இப்போ ஓடிடி-யிலும் படத்தை மக்கள் பார்த்து பாராட்டுறாங்க. அறிமுக இயக்குநராக எனக்கு ரொம்ப சந்தோஷமான தருணமாக இது இருக்கு! என்றவர் திரைப்படத்தின் எழுத்து வேலைகள் குறித்து, படத்திற்கு கிடைத்து வரும் அனைத்து வகையான விமர்சனங்கள் குறித்தும் வெளிப்படையாக நம்மிடையே பேசினார். ஆண்பாவம் பொல்லாதது | Aan paavam pollathathu இந்தப் படத்துக்கான ஐடியாவை முதல்ல எங்களுடைய நண்பர் பாலாதான் எங்ககிட்ட சொன்னாரு. பிறகு அந்த ஐடியாவை வச்சு திரைக்கதையாசிரியர் சிவக்குமார் முருகேசன் கதையாக டெவலப் பண்ணினாரு. சிவக்குமார் முருகேசன் 'ஆண்பாவம் பொல்லாதது' கதையைச் சொல்லும்போது இது நிச்சயமாக வித்தியாசமான ஒண்ணா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதன் பிறகு படத்தைப் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். 'ஆண் பாவம்' என்பது ஓஜி டைட்டில்! அந்த டைட்டிலுக்கு நியாயம் சேர்த்தாகணும்னு முன்பே முடிவு பண்ணித்தான் வேலைகளைத் தொடங்கினோம். நாங்க நிறைய டைட்டில் டிஸ்கஸ் பண்ணினோம். ஆனா, எங்களுக்கு முதல் தோணின டைட்டில் 'ஆண்பாவம் பொல்லாதது' தான். இந்தத் தலைப்பும் படத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்னு முடிவு பண்ணி முறையாக பாண்டியராஜன் சாரையும், தயாரிப்பாளர்கள் சங்கத்தினரையும் சந்திச்சு அனுமதி வாங்கினோம். நாங்க பழைய டைட்டிலோட 'பொல்லாதது' என்கிற வார்த்தையைச் சேர்த்தாலும் அவங்களிடம் அனுமதி வாங்கி செய்வதுதான் சரின்னு தோணுச்சு. இந்த தருணத்துல, ரியோ அண்ணன், விக்னேஷ் காந்த் அண்ணன், டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப குழுவினர்னு எல்லோருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன். Kalaiarasan Thangavel - Aan Paavam Pollathathu Director ஒட்டுமொத்த டீம் வொர்க்னாலதான் இது சாத்தியமாகி இருக்கு. படத்திற்கு கிடைச்சிருக்கிற பாசிட்டிவ் கமென்ட்ஸ் மகிழ்ச்சியைத் தருது. அதே சமயம், இதை நீங்க திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயங்களையும் நான் சிரம் தாழ்ந்து ஏத்துக்கிறேன். என்றவர், ரியோ அண்ணன் எனக்கு 8 வருஷமாக பழக்கம். அவர் அறிமுக இயக்குநர்களுக்கு ஒரு பொக்கிஷம்! லொகேஷன் பார்க்கிறதுக்கு தொடங்கி அவரால் முடிஞ்ச உதவிகளையும் எங்களுக்கு பண்ணினாரு. 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துல நான் உதவி இயக்குநராக வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்தத் தருணத்துல நாங்க சின்ன பைலட் எடுத்துப் பார்த்தோம். அதுல ரியோ அண்ணன் நடிச்ச விதம்தான் இந்தக் கதைக்கு அவர் மிகப் பொருத்தமாக இருப்பார்னு தோணுச்சு. இன்னொரு முறை அவரோட சேர்ந்து படம் பண்ணுறதுக்கும் நான் தயாரா இருக்கேன். இந்தத் தருணத்துல தொழில்நுட்ப குழுவினர் பற்றி நான் பேசியாகணும். முதல்ல ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அண்ணனுடைய வொர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை இயக்குநர்களின் ஒளிப்பதிவாளர்னு சொல்லலாம். இவ்வளவு நேரத்துல இத்தனை ஷாட் எடுத்தாகணும்னா, அதுக்கேத்த மாதிரி வேலைகளை வேகமாக முடிப்பாரு. இன்னொரு முக்கியமான விஷயமும் இதுல இருக்குங்க! நானும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவன். அவரும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவர்தான். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... இசையமைப்பாளர் சித்துக்குமாரை நாங்க ஜீனினுதான் சொல்லுவோம். அவரை சோஷியல் மீடியாவுல 'மாடர்ன் தேனிசைத் தென்றல்'னு பாராட்டுறாங்க. இன்னும் அவருக்கு பெரிய அங்கீகாரங்கள் கிடைக்கணும். நாங்க எதிர்பார்க்கிறதைவிட பெஸ்டான விஷயங்களைச் செய்து தருவாரு. எடிட்டர் வருண் கே.ஜி படத்துக்கு இன்னொரு துணை இயக்குநர்னு சொல்லணும். நடிகரா, இயக்குநரா அவரை நாம பார்த்திருப்போம். இனிமேலும், அவரை அப்படியான பரிமாணங்கள்ல பார்ப்பீங்க! கலரிஸ்ட், சவுண்ட் இன்ஜினீயர்னு பலருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். என்றார் உற்சாகத்துடன். திரைக்கதையை எழுதத் தொடங்கும்போதே, பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில கதாபாத்திர வடிவமைப்பை சமமாகக் காட்சிப்படுத்தணும்னு முடிவுலதான் வேலைகளை ஆரம்பிச்சோம். படத்திற்காக நிறைய ரிசர்ச் பண்ணினோம். வழக்கறிஞர்களைச் சந்திச்சு அவர்களிடம் இருக்கிற வழக்குகள் பத்தித் தெரிஞ்சுகிட்டோம். அதுபோல, பாலின சமத்துவத்தைப் பேசும் நண்பர்களிடமும் எங்களுடைய ஸ்கிரிப்ட் கொடுத்து பேசினோம். அவர்களுடனான டிஸ்கஷன்ல, எது வேணும், எது வேண்டாம், எவை சரியா இருக்கும்னு பேசினோம். இந்த விஷயம் எல்லோருக்கும் போய்ச் சேரணும், தவறான விஷயத்தைச் சொல்லிடக்கூடாதுனு தெளிவா இருந்தோம். 2 மணி நேரம் நான் கதை சொல்லிட்டேன். அதை மக்களும் நேரம் கொடுத்துப் பார்த்து கருத்துகளைச் சொல்றாங்க. அதையும் நான் ஏத்துக்கிறேன். எல்லா இயக்குநர்களுக்கும் அவர்களுடைய படங்கள்ல இந்த விஷயத்தை மாத்தி வச்சிருக்கலாம்னு தோணும். எந்தவொரு இடத்திலும் தவறான அரசியலைப் பேசணும்னு நாங்க செய்யல. நான் வேறொரு விஷயம் சொல்ல முயற்சி பண்ணினேன். இன்னும் நான் தெளிவா சொல்லியிருக்கலாம். நான் அப்படியான அர்த்தத்துல அதைச் சொல்ல வரலைங்கிறதுதான் ஒரு வருத்தம். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... ஆடியன்ஸ் எப்போதும் சரியானவங்க. அவங்க பணம் கொடுத்து படம் பார்க்கிறாங்க. அவங்க சொல்ற விமர்சனத்தை நான் ஏத்துக்கிறேன். ரெண்டு மணி நேரம் செலவழிச்சுப் பார்த்தவங்களுக்கு நான் சரியாக கன்வே பண்ணலைனா என்மேலதான் தப்பு! ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு சிலர் விமர்சனங்கள் சொல்றாங்க. முழு படத்தையும் பார்த்துட்டு அந்த விமர்சனத்தை நீங்க சொன்னா, நிச்சயமா அதையும் நான் ஏத்துக்கிறேன். என்றவர் க்ளைமேக்ஸ் காட்சிகள் உருவான ஐடியா குறித்து விளக்கினார். அவர், இந்தப் படத்துல வர்ற ஹீரோ, ஹீரோயின்னு ரெண்டு பேர்மேலையும் சில தவறுகள் இருக்கும். படத்தின் முதல் காட்சியில மணப்பெண்ணைப் பார்க்கப் போகும்போது பெண்ணுக்கு சரியானவன் நான்தான்னு நிரூபிக்க கதாநாயகன் கீழ உட்காருவாரு. ஆனா, சிவா கதாபாத்திரத்துக்குள்ள சில ஆணாதிக்க சிந்தனைகள் இருக்கும். தாலி போடணும்னு சிவா எதிர்பார்க்கிறதும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான். ஷக்தி - சிவானு ரெண்டு பேரும் தங்களுக்குள்ள போலியான விஷயங்களைதான் தொடக்கத்துல வெளிகாட்டுவாங்க. உண்மை வெளிய தெரிய வரும்போது, அவங்களுக்கு இடையில சண்டை வரும். Kalaiarasan Thangavel - Aan Paavam Pollathathu Director ரெண்டு பேரும் அவங்களுடைய தவறுகளை உணர்ந்து சேர்றாங்க என்பதுதான் இந்தப் படத்தின் கரு. சிவா செய்யும் தவறை சுட்டிக்காட்டுறதுக்குதான் தீபா அக்காவின் கேரக்டரை வடிவமைச்சோம். நியாயத்தையும் தவறையும் ஒரு பெண் கதாபாத்திரம்தான் சுட்டிக்காட்டணும்கிற ஐடியாவுலதான் பாரதி மேம் மற்றும் தீபா அக்கா கேரக்டரை டிசைன் பண்ணினோம். எந்த இடத்திலும் நான் ரீல்ஸ் போடுவதை தவறுனு உணர்த்தவே இல்ல. அதை ஹீரோவின் பார்வையில்தான் நான் சொல்லியிருந்தேன். ஸ்விட்ச் வசனம் தொடங்கி படத்தின் முக்கியமான வசனங்கள் அனைத்திற்கும் கிரெடிட் சிவக்குமார் முருகேசனுக்குதான் கிடைக்கணும். அவருடைய பல திறமைகளை நீங்க இனி பார்ப்பீங்க! என்றவர், இந்தப் படத்துக்கு கிடைச்ச வரவேற்பு எனக்கு கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கு. இனி எனக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கும். அதை வச்சு அடுத்ததும் ஒரு நல்ல கதையைச் சொல்லணும். பார்ப்போம்! என நம்பிக்கையுடன் பேசினார்.

விகடன் 3 Dec 2025 9:17 am

திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயத்தையும் ஏத்துக்கிறேன்!- இயக்குநர் கலையரசன் பேட்டி

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ, மாளவிகா மனோஜ், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், ஜென்சன் எனப் பலர் நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தை ஓடிடி-யிலும் மக்கள் பலர் கண்டுகளித்து வருகிறார்கள். படத்திற்கு பல தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்தாலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில் ஆணாதிக்க சிந்தனைகள் நிறைந்திருக்கும் வகையில் படத்தின் திரைக்கதையாசிரியரகள் சிவக்குமார் முருகேசனும், கலையரசன் தங்கவேலும் அமைத்திருக்கிறார்கள் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 'ஆண் பாவம் பொல்லாதது' படத்திற்காக இயக்குநர் கலையரசன் தங்கவேலுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரைப் பேட்டி கண்டேன். வணக்கம். 'ஆண்பாவம் பொல்லாதது' படத்துக்கு தியேட்டர்ல நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. இப்போ ஓடிடி-யிலும் படத்தை மக்கள் பார்த்து பாராட்டுறாங்க. அறிமுக இயக்குநராக எனக்கு ரொம்ப சந்தோஷமான தருணமாக இது இருக்கு! என்றவர் திரைப்படத்தின் எழுத்து வேலைகள் குறித்து, படத்திற்கு கிடைத்து வரும் அனைத்து வகையான விமர்சனங்கள் குறித்தும் வெளிப்படையாக நம்மிடையே பேசினார். ஆண்பாவம் பொல்லாதது | Aan paavam pollathathu இந்தப் படத்துக்கான ஐடியாவை முதல்ல எங்களுடைய நண்பர் பாலாதான் எங்ககிட்ட சொன்னாரு. பிறகு அந்த ஐடியாவை வச்சு திரைக்கதையாசிரியர் சிவக்குமார் முருகேசன் கதையாக டெவலப் பண்ணினாரு. சிவக்குமார் முருகேசன் 'ஆண்பாவம் பொல்லாதது' கதையைச் சொல்லும்போது இது நிச்சயமாக வித்தியாசமான ஒண்ணா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதன் பிறகு படத்தைப் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். 'ஆண் பாவம்' என்பது ஓஜி டைட்டில்! அந்த டைட்டிலுக்கு நியாயம் சேர்த்தாகணும்னு முன்பே முடிவு பண்ணித்தான் வேலைகளைத் தொடங்கினோம். நாங்க நிறைய டைட்டில் டிஸ்கஸ் பண்ணினோம். ஆனா, எங்களுக்கு முதல் தோணின டைட்டில் 'ஆண்பாவம் பொல்லாதது' தான். இந்தத் தலைப்பும் படத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்னு முடிவு பண்ணி முறையாக பாண்டியராஜன் சாரையும், தயாரிப்பாளர்கள் சங்கத்தினரையும் சந்திச்சு அனுமதி வாங்கினோம். நாங்க பழைய டைட்டிலோட 'பொல்லாதது' என்கிற வார்த்தையைச் சேர்த்தாலும் அவங்களிடம் அனுமதி வாங்கி செய்வதுதான் சரின்னு தோணுச்சு. இந்த தருணத்துல, ரியோ அண்ணன், விக்னேஷ் காந்த் அண்ணன், டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப குழுவினர்னு எல்லோருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன். Kalaiarasan Thangavel - Aan Paavam Pollathathu Director ஒட்டுமொத்த டீம் வொர்க்னாலதான் இது சாத்தியமாகி இருக்கு. படத்திற்கு கிடைச்சிருக்கிற பாசிட்டிவ் கமென்ட்ஸ் மகிழ்ச்சியைத் தருது. அதே சமயம், இதை நீங்க திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயங்களையும் நான் சிரம் தாழ்ந்து ஏத்துக்கிறேன். என்றவர், ரியோ அண்ணன் எனக்கு 8 வருஷமாக பழக்கம். அவர் அறிமுக இயக்குநர்களுக்கு ஒரு பொக்கிஷம்! லொகேஷன் பார்க்கிறதுக்கு தொடங்கி அவரால் முடிஞ்ச உதவிகளையும் எங்களுக்கு பண்ணினாரு. 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துல நான் உதவி இயக்குநராக வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்தத் தருணத்துல நாங்க சின்ன பைலட் எடுத்துப் பார்த்தோம். அதுல ரியோ அண்ணன் நடிச்ச விதம்தான் இந்தக் கதைக்கு அவர் மிகப் பொருத்தமாக இருப்பார்னு தோணுச்சு. இன்னொரு முறை அவரோட சேர்ந்து படம் பண்ணுறதுக்கும் நான் தயாரா இருக்கேன். இந்தத் தருணத்துல தொழில்நுட்ப குழுவினர் பற்றி நான் பேசியாகணும். முதல்ல ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அண்ணனுடைய வொர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை இயக்குநர்களின் ஒளிப்பதிவாளர்னு சொல்லலாம். இவ்வளவு நேரத்துல இத்தனை ஷாட் எடுத்தாகணும்னா, அதுக்கேத்த மாதிரி வேலைகளை வேகமாக முடிப்பாரு. இன்னொரு முக்கியமான விஷயமும் இதுல இருக்குங்க! நானும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவன். அவரும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவர்தான். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... இசையமைப்பாளர் சித்துக்குமாரை நாங்க ஜீனினுதான் சொல்லுவோம். அவரை சோஷியல் மீடியாவுல 'மாடர்ன் தேனிசைத் தென்றல்'னு பாராட்டுறாங்க. இன்னும் அவருக்கு பெரிய அங்கீகாரங்கள் கிடைக்கணும். நாங்க எதிர்பார்க்கிறதைவிட பெஸ்டான விஷயங்களைச் செய்து தருவாரு. எடிட்டர் வருண் கே.ஜி படத்துக்கு இன்னொரு துணை இயக்குநர்னு சொல்லணும். நடிகரா, இயக்குநரா அவரை நாம பார்த்திருப்போம். இனிமேலும், அவரை அப்படியான பரிமாணங்கள்ல பார்ப்பீங்க! கலரிஸ்ட், சவுண்ட் இன்ஜினீயர்னு பலருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். என்றார் உற்சாகத்துடன். திரைக்கதையை எழுதத் தொடங்கும்போதே, பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில கதாபாத்திர வடிவமைப்பை சமமாகக் காட்சிப்படுத்தணும்னு முடிவுலதான் வேலைகளை ஆரம்பிச்சோம். படத்திற்காக நிறைய ரிசர்ச் பண்ணினோம். வழக்கறிஞர்களைச் சந்திச்சு அவர்களிடம் இருக்கிற வழக்குகள் பத்தித் தெரிஞ்சுகிட்டோம். அதுபோல, பாலின சமத்துவத்தைப் பேசும் நண்பர்களிடமும் எங்களுடைய ஸ்கிரிப்ட் கொடுத்து பேசினோம். அவர்களுடனான டிஸ்கஷன்ல, எது வேணும், எது வேண்டாம், எவை சரியா இருக்கும்னு பேசினோம். இந்த விஷயம் எல்லோருக்கும் போய்ச் சேரணும், தவறான விஷயத்தைச் சொல்லிடக்கூடாதுனு தெளிவா இருந்தோம். 2 மணி நேரம் நான் கதை சொல்லிட்டேன். அதை மக்களும் நேரம் கொடுத்துப் பார்த்து கருத்துகளைச் சொல்றாங்க. அதையும் நான் ஏத்துக்கிறேன். எல்லா இயக்குநர்களுக்கும் அவர்களுடைய படங்கள்ல இந்த விஷயத்தை மாத்தி வச்சிருக்கலாம்னு தோணும். எந்தவொரு இடத்திலும் தவறான அரசியலைப் பேசணும்னு நாங்க செய்யல. நான் வேறொரு விஷயம் சொல்ல முயற்சி பண்ணினேன். இன்னும் நான் தெளிவா சொல்லியிருக்கலாம். நான் அப்படியான அர்த்தத்துல அதைச் சொல்ல வரலைங்கிறதுதான் ஒரு வருத்தம். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... ஆடியன்ஸ் எப்போதும் சரியானவங்க. அவங்க பணம் கொடுத்து படம் பார்க்கிறாங்க. அவங்க சொல்ற விமர்சனத்தை நான் ஏத்துக்கிறேன். ரெண்டு மணி நேரம் செலவழிச்சுப் பார்த்தவங்களுக்கு நான் சரியாக கன்வே பண்ணலைனா என்மேலதான் தப்பு! ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு சிலர் விமர்சனங்கள் சொல்றாங்க. முழு படத்தையும் பார்த்துட்டு அந்த விமர்சனத்தை நீங்க சொன்னா, நிச்சயமா அதையும் நான் ஏத்துக்கிறேன். என்றவர் க்ளைமேக்ஸ் காட்சிகள் உருவான ஐடியா குறித்து விளக்கினார். அவர், இந்தப் படத்துல வர்ற ஹீரோ, ஹீரோயின்னு ரெண்டு பேர்மேலையும் சில தவறுகள் இருக்கும். படத்தின் முதல் காட்சியில மணப்பெண்ணைப் பார்க்கப் போகும்போது பெண்ணுக்கு சரியானவன் நான்தான்னு நிரூபிக்க கதாநாயகன் கீழ உட்காருவாரு. ஆனா, சிவா கதாபாத்திரத்துக்குள்ள சில ஆணாதிக்க சிந்தனைகள் இருக்கும். தாலி போடணும்னு சிவா எதிர்பார்க்கிறதும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான். ஷக்தி - சிவானு ரெண்டு பேரும் தங்களுக்குள்ள போலியான விஷயங்களைதான் தொடக்கத்துல வெளிகாட்டுவாங்க. உண்மை வெளிய தெரிய வரும்போது, அவங்களுக்கு இடையில சண்டை வரும். Kalaiarasan Thangavel - Aan Paavam Pollathathu Director ரெண்டு பேரும் அவங்களுடைய தவறுகளை உணர்ந்து சேர்றாங்க என்பதுதான் இந்தப் படத்தின் கரு. சிவா செய்யும் தவறை சுட்டிக்காட்டுறதுக்குதான் தீபா அக்காவின் கேரக்டரை வடிவமைச்சோம். நியாயத்தையும் தவறையும் ஒரு பெண் கதாபாத்திரம்தான் சுட்டிக்காட்டணும்கிற ஐடியாவுலதான் பாரதி மேம் மற்றும் தீபா அக்கா கேரக்டரை டிசைன் பண்ணினோம். எந்த இடத்திலும் நான் ரீல்ஸ் போடுவதை தவறுனு உணர்த்தவே இல்ல. அதை ஹீரோவின் பார்வையில்தான் நான் சொல்லியிருந்தேன். ஸ்விட்ச் வசனம் தொடங்கி படத்தின் முக்கியமான வசனங்கள் அனைத்திற்கும் கிரெடிட் சிவக்குமார் முருகேசனுக்குதான் கிடைக்கணும். அவருடைய பல திறமைகளை நீங்க இனி பார்ப்பீங்க! என்றவர், இந்தப் படத்துக்கு கிடைச்ச வரவேற்பு எனக்கு கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கு. இனி எனக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கும். அதை வச்சு அடுத்ததும் ஒரு நல்ல கதையைச் சொல்லணும். பார்ப்போம்! என நம்பிக்கையுடன் பேசினார்.

விகடன் 3 Dec 2025 9:17 am

Malavika Mannoj: ``மறந்தேனே என்ன மறந்தேனே'' - நடிகை மாளவிகா மனோஜ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ்

விகடன் 3 Dec 2025 8:24 am

அவர் இருந்து நடத்த வேண்டிய கல்யாணம், ஆனால் –பிக் பாஸ் அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி எமோஷனல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 58 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post அவர் இருந்து நடத்த வேண்டிய கல்யாணம், ஆனால் – பிக் பாஸ் அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 9:55 pm

நடிகை சமந்தா ஈஷா மையத்தில் திருமணம் செய்த காரணம் என்ன? வெளியான சுவாரசிய தகவல்

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த […] The post நடிகை சமந்தா ஈஷா மையத்தில் திருமணம் செய்த காரணம் என்ன? வெளியான சுவாரசிய தகவல் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 9:15 pm

Vasthara – Lyrical video

தஸ்தர் 2 Dec 2025 8:09 pm

Mu Dha La Li Song

தஸ்தர் 2 Dec 2025 8:07 pm

Ajith: சூப்பர் ஸ்டார் நடிகரின் அந்த செயல் ஆச்சரியமாக இருந்தது! - அஜித் குறித்து அனுபமா சோப்ரா

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முந்தையப் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய இந்திய பதிப்பின் ஆசிரியர் அனுபமா சோப்ரா நடிகர் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தார். Ajith அந்தப் பேட்டியின்போது, அஜித்தின் எளிமை அனுபமா சோப்ராவை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இப்போது அவர் தயாரிப்பாளர்களின் ரவுண்ட் டேபிள் நேர்காணல் செய்திருக்கிறார். இந்தப் பேட்டியில் அவர் அஜித் குறித்து பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், சமீபத்தில் துபாயில் நான் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தேன். அப்போது அவருடன் யாருமில்லை. எனக்காக அங்கொரு மேக்கப் செய்யும் நபர் இருந்தார். ஆனால், அவர் மேக்கப் செய்து கொள்ளமாட்டார். அவருடன் மேக்கப் போடும் நபர் இல்லை. ஆனால், என்னுடன் அதற்காக ஒரு நபர் இருந்தார். சூப்பர் ஸ்டார் நடிகர் இப்படி இருக்கிறார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடன் ஒரு பேக் எடுத்து வந்தார். பேட்டி நடைபெற்ற அறையின் ஓரத்திலேயே பேட்டிக்கு அவர் தயாரானார். அதுமட்டுமல்ல, எங்களுக்காக அவர் கதவு திறந்து நின்று கொண்டிருந்தார்! என ஆச்சரியமாகக் கூறினார். Archana Kalpathi அனுபமா சோப்ரா இதைக் கூறியப் பிறகு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி, அவர் எப்போதும் ஸ்வீட் & சிம்பிளாக இருப்பார். எனக் கூறினார். அதைத் தொடர்ந்து இந்தப் பேட்டியில் அர்ச்சனா கல்பதி, ப்ரீ-புரொடக்ஷன் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு புரொடக்ஷன் பட்ஜெட்டிலிருந்து 10 சதவீதத்திற்கு மேல் போக விட மாட்டேன். தெளிவு இல்லாத இயக்குநரிடமும் நான் வேலை செய்ய மாட்டேன். சினிமாவில் 9-5 வேலை நேரம் என்பது சாத்தியமே இல்ல. யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் இருப்பதே பொறுப்பு. என்றார்.

விகடன் 2 Dec 2025 7:23 pm

Ajith: சூப்பர் ஸ்டார் நடிகரின் அந்த செயல் ஆச்சரியமாக இருந்தது! - அஜித் குறித்து அனுபமா சோப்ரா

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முந்தையப் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய இந்திய பதிப்பின் ஆசிரியர் அனுபமா சோப்ரா நடிகர் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தார். Ajith அந்தப் பேட்டியின்போது, அஜித்தின் எளிமை அனுபமா சோப்ராவை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இப்போது அவர் தயாரிப்பாளர்களின் ரவுண்ட் டேபிள் நேர்காணல் செய்திருக்கிறார். இந்தப் பேட்டியில் அவர் அஜித் குறித்து பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், சமீபத்தில் துபாயில் நான் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தேன். அப்போது அவருடன் யாருமில்லை. எனக்காக அங்கொரு மேக்கப் செய்யும் நபர் இருந்தார். ஆனால், அவர் மேக்கப் செய்து கொள்ளமாட்டார். அவருடன் மேக்கப் போடும் நபர் இல்லை. ஆனால், என்னுடன் அதற்காக ஒரு நபர் இருந்தார். சூப்பர் ஸ்டார் நடிகர் இப்படி இருக்கிறார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடன் ஒரு பேக் எடுத்து வந்தார். பேட்டி நடைபெற்ற அறையின் ஓரத்திலேயே பேட்டிக்கு அவர் தயாரானார். அதுமட்டுமல்ல, எங்களுக்காக அவர் கதவு திறந்து நின்று கொண்டிருந்தார்! என ஆச்சரியமாகக் கூறினார். Archana Kalpathi அனுபமா சோப்ரா இதைக் கூறியப் பிறகு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி, அவர் எப்போதும் ஸ்வீட் & சிம்பிளாக இருப்பார். எனக் கூறினார். அதைத் தொடர்ந்து இந்தப் பேட்டியில் அர்ச்சனா கல்பதி, ப்ரீ-புரொடக்ஷன் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு புரொடக்ஷன் பட்ஜெட்டிலிருந்து 10 சதவீதத்திற்கு மேல் போக விட மாட்டேன். தெளிவு இல்லாத இயக்குநரிடமும் நான் வேலை செய்ய மாட்டேன். சினிமாவில் 9-5 வேலை நேரம் என்பது சாத்தியமே இல்ல. யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் இருப்பதே பொறுப்பு. என்றார்.

விகடன் 2 Dec 2025 7:23 pm

மூளை கம்மினால தான் சினிமாவில் நடிக்க முடியுது –விழாவில் கலகலப்பாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னையில் நடந்த fanly பொழுதுபோக்கு செயலின் விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் நடிக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்தால் நான் இயக்குனர்களை எல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் சொல்வதைக் கேட்டு நான் நடிக்கிறேன். அதனால்தான் எனக்கு மூளை கம்மியாக இருப்பது நல்லது தான். […] The post மூளை கம்மினால தான் சினிமாவில் நடிக்க முடியுது – விழாவில் கலகலப்பாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 6:50 pm

ரோகினிக்கே ஐடியா கொடுக்கும் மீனா, சுருதியை வெறுப்பேற்றும் நீத்து –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா வீட்டிற்கு மீண்டும் வந்தார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், விஜயா கவலைப்பட்டார்கள். மீனா மீண்டும் வந்ததை நினைத்து ரோகினிக்கு கதி கலங்குகிறது. பின் மீனா வந்தவுடனே விஜயா சமைக்க சொன்னார். மீனாவுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரோகினியை முறைத்து விட்டு சமைக்கப் போனார். அதற்குப்பின் மனோஜ் பிஏ ஜீவா, புது ஆர்டரை பற்றி சொன்னார். அதைக் கேட்டு மனோஜ் ரொம்பவே சந்தோஷப்பட்டார். […] The post ரோகினிக்கே ஐடியா கொடுக்கும் மீனா, சுருதியை வெறுப்பேற்றும் நீத்து – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 5:08 pm

எனக்கு கொஞ்சம் மூளை கம்மி ! தெய்வமா பாக்குற Fans வேண்டாம் – SK பேச்சு

எனக்கு கொஞ்சம் மூளை கம்மி ! தெய்வமா பாக்குற Fans வேண்டாம் – SK பேச்சு சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களம் இறங்குகின்றன. இந்நிலையில், சென்னையில் ஃபேன்லி (Fanly) என்ற ஆப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களில்...

தஸ்தர் 2 Dec 2025 4:59 pm

பிரதீப் ரங்கநாதனின் LIK செப்டம்பர் 18 ரிலீஸ்.. வெளியானது அப்டேட்!

பிரதீப் ரங்கநாதனின் LIK செப்டம்பர் 18 ரிலீஸ்.. வெளியானது அப்டேட்! பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்திசெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி...

தஸ்தர் 2 Dec 2025 4:51 pm

ரீ-ரிலீஸ் ஆகிறது விஜய்யின் காவலன் &ரஜினியின் எஜமான் உற்சாகத்தில் ரசிகர்கள்

ரீ-ரிலீஸ் ஆகிறது விஜய்யின் காவலன் & ரஜினியின் எஜமான் உற்சாகத்தில் ரசிகர்கள் ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம் ஆண்டு வெளியான படம் ‘எஜமான்’. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், செந்தில், கவுண்டமணி, விஜயகுமார், ஐஸ்வர்யா, மனோரமா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர். ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் மிகப்...

தஸ்தர் 2 Dec 2025 4:47 pm

அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானவர் - மீண்டும் இணையும் அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மம்மூட்டியை வைத்து அடுத்த படம் எடுக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய 'அனந்தரம்', 'மதிலுகள்', 'விதேயன்' ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதனை அடூர் கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன், என்னுடைய அடுத்தப் படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கதை எழுதும்போது முதன்மை கதாபாத்திரத்திற்கு என் மனதில் மம்மூட்டி முகமே தோன்றியது. அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானத் தேர்வு என்று நான் உணர்ந்தேன். என்னுடைய திரைப்படத்தில் நான்காவது முறையாக நடிக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி நான் இதுவரை மற்ற நடிகர்களுடன் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி திரைப்படங்களுக்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Kalamkaval: ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனா.!- நடிகர் மம்மூட்டி

விகடன் 2 Dec 2025 4:32 pm

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: டிச.8-ல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: டிச.8-ல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக...

தஸ்தர் 2 Dec 2025 4:26 pm

நடுரோட்டிலே பழனியை அவமானப்படுத்தும் கோமதி, சமையலில் மீனா செய்யும் அட்ராசிட்டி –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனாவை பார்க்க அவருடைய அப்பா, அம்மா இருவரும் வந்திருந்தார்கள். அப்போது மீனா, வீட்டில் சமைக்காத இருப்பதை தெரிந்த அவருடைய அம்மா, எப்படி செய்யனும், என்னென்ன பண்ணனும் எல்லாம் சொன்னார். ஆனால், மீனா அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. அதற்குப்பின் கோமதி, சரவணன்-தங்கமயில் சண்டை போட்டதை பற்றி பாண்டியனிடம் சொன்னார். பாண்டியன், அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்கணும். சீக்கிரமாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்றார். […] The post நடுரோட்டிலே பழனியை அவமானப்படுத்தும் கோமதி, சமையலில் மீனா செய்யும் அட்ராசிட்டி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 3:55 pm

இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான் - நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!

'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது என இருவரும் காதல் வயப்பட்டதை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நடிகை அதிதி ராவ் நான் மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்க விரும்பினேன்- அதிதி ராவ் திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தவர், இப்போது பல பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதிதி ராவ் தனது உணவு முறை குறித்து மனம்திறந்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தனது டயட் பிளான் குறித்து பேசியிருக்கும் அதிதி, காலை உணவைப் பொறுத்தவரை எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும். பொதுவாக தென்னிந்திய காலை உணவுகள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும். இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன். எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான். நடிகை அதிதி ராவ் Siddharth - Aditi Rao: 'புது பொண்ணே...' - சித்தார்த், அதிதி திருமண புகைப்படம் | Photo Album உடலை சீராக வைத்துக்கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் எனக்கு சலிப்புத் தட்டிவிடும். அதனால் ஒருநாள் யோகா, ஒருநாள் நடனம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உடற்பயிற்சியினை செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுமில்லை, இவைதான் என்னுடைய சிம்பிளான டயட் பிளான் மற்றும் உடல்பயிற்சிகள் என்று ஜாலியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அதிதி.

விகடன் 2 Dec 2025 3:52 pm

இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான் - நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!

'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது என இருவரும் காதல் வயப்பட்டதை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நடிகை அதிதி ராவ் நான் மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்க விரும்பினேன்- அதிதி ராவ் திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தவர், இப்போது பல பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதிதி ராவ் தனது உணவு முறை குறித்து மனம்திறந்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தனது டயட் பிளான் குறித்து பேசியிருக்கும் அதிதி, காலை உணவைப் பொறுத்தவரை எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும். பொதுவாக தென்னிந்திய காலை உணவுகள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும். இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன். எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான். நடிகை அதிதி ராவ் Siddharth - Aditi Rao: 'புது பொண்ணே...' - சித்தார்த், அதிதி திருமண புகைப்படம் | Photo Album உடலை சீராக வைத்துக்கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் எனக்கு சலிப்புத் தட்டிவிடும். அதனால் ஒருநாள் யோகா, ஒருநாள் நடனம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உடற்பயிற்சியினை செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுமில்லை, இவைதான் என்னுடைய சிம்பிளான டயட் பிளான் மற்றும் உடல்பயிற்சிகள் என்று ஜாலியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அதிதி.

விகடன் 2 Dec 2025 3:52 pm

Anupama Parameswaran: காட்டுப்பேச்சி நீ.. பாட்டுப்பேச்சி நீ! - அனுபமா க்ளிக்ஸ் | Photo Album

படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்தான்-அனுபமா பரமேஸ்வரன்

விகடன் 2 Dec 2025 3:34 pm

Anupama Parameswaran: காட்டுப்பேச்சி நீ.. பாட்டுப்பேச்சி நீ! - அனுபமா க்ளிக்ஸ் | Photo Album

படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்தான்-அனுபமா பரமேஸ்வரன்

விகடன் 2 Dec 2025 3:34 pm

ஈரோடு: சில்க் ஸ்மிதாவின் 66-வது பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர் | Photo Album

சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா ``சில்க் ஸ்மிதாவைக் காப்பாற்றத் தவறிட்டேன் - கடைசி போன்கால் நினைவுகூரும் நடிகை அனுராதா

விகடன் 2 Dec 2025 3:19 pm

சோழன் பற்றிய உண்மை அறிந்து உடைந்து போன காயத்ரி, நிலா சொன்ன வார்த்தை –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, நான் முக்கியமா? உன் குடும்பம் முக்கியமா? என்று சொன்னவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. அதற்குப்பின் நடேசனுக்கு உடம்பு சரியில்லாதால் நிலா அவரை கவனித்துக் கொண்டார். அப்போது வீட்டிற்கு சோழன் வருகிறார். நிலா கேட்கும் கேள்விக்கு சோழனால் ஒழுங்காக பதில் சொல்ல முடியவில்லை. பின் பல்லவன், சோழனின் போனை பார்த்துவிட்டு ப்ரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டார். நிலா ரெடியாகி வேலைக்கு கிளம்பினார். பல்லவன், பஸ் ஸ்டாண்டில் […] The post சோழன் பற்றிய உண்மை அறிந்து உடைந்து போன காயத்ரி, நிலா சொன்ன வார்த்தை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 3:02 pm

Kalamkaval: ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனா.!- நடிகர் மம்மூட்டி

ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’. இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘களம்காவல்’ அந்தவகையில் சமீபத்திய புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்மூட்டி, ரொமான்டிக்கான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினால், எனக்கு அந்தக் கதாபாத்திரங்கள் கட்டாயம் கிடைக்கும். ஆனால், நீங்கள் சீனியர் நடிகர் ஆகிவிட்ட பிறகு உங்களுக்கு இன்னமும் நிறைய கோணங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களைச் செய்ய முடியும். ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. இப்போது அதுவும் கொஞ்சம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், வில்லனுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை வில்லன் என்று கூறமாட்டேன். அதேநேரத்தில் அவன் நல்லவனும் கிடையாது. இந்த மாதிரியான கதாபாத்திரத்தை அசாத்திய தைரியத்தின் விளைவால் எடுத்தேன் எனச் சொல்லமுடியாது. இப்படியான கதாபாத்திரங்களைச் செய்யவேண்டும் என்கிற வேட்கைதான் அதற்குக் காரணம். மம்மூட்டி எனக்குள் இருக்கும் நடிகனை திருப்திப்படுத்த வேண்டும். நான் ஒரு நட்சத்திரமென அழைக்கப்படுவதில் எனக்குப் பிரச்னையில்லை. ஆனாலும் ஒரு நடிகனாக இருப்பதையே விரும்புகிறேன் என்று மம்மூட்டி கூறியிருக்கிறார்.

விகடன் 2 Dec 2025 2:59 pm

Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம். அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை 'ஜீவன் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். View this post on Instagram A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy) எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 2 Dec 2025 1:59 pm

Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம். அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை 'ஜீவன் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். View this post on Instagram A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy) எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 2 Dec 2025 1:59 pm

Kalamkaval: சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம்; நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம் - நடிகர் விநாயகன்

ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’. இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘களம்காவல்’ அந்தவகையில் சமீபத்திய புரொமோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விநாயகன், இப்படத்தில் மம்மூட்டிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியே பெயர் வைத்தார். இது என் வாழ்நாள் அதிர்ஷ்டம். அவருடன் நடிப்பது எளிதாக இருந்தது. வசனங்களில் அவர் நிறைய உதவினார். Mammootty: `இவரை ரகசியமாகப் பாதுகாத்து வந்தேன்!' - பெயர் சூட்டிய நண்பனை அறிமுகப்படுத்திய மம்மூட்டி சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம். நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம். இயக்குநர் ஜிதின் என் கை, கால்களைக் கட்டிப்போட்டு, என்னை நடிக்க வைத்தது போல தோன்றியது. 'நீங்க எதுவும் செய்ய வேண்டியதில்லை. நான் சொன்னதைச் செய்தால் போதும்' என்று சொல்லி நடிக்க வைத்தார் என்று சிரித்துக்கொண்டே தெரிவித்திருக்கிறார். விநாயகன் தொடர்ந்து பேசிய அவர், பொதுவெளியில் எப்படிப் பேசவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஆர்வம் இருந்தாலும் மக்களின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து பேசுவதில் பிரச்னை இருக்கிறது. என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. யாராவது ஒருவர் தேவையில்லாத கேள்விகளைக் கேட்பது கோபமாக்கிவிடுகிறது. நான் என்ன பேசுகிறேன் எனத் தெரியாமல் பேசிவிடுகிறேன். இதனால் பொதுவெளிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். Kaantha: 'நீ நல்ல படம்தான் பண்ணனும், ஏன்னா.!' - துல்கர் சல்மானிடம் மம்மூட்டி சொன்னது என்ன?

விகடன் 2 Dec 2025 1:56 pm

BB Tamil 9: அவர் முன்னால் நின்னு நடத்த வேண்டிய கல்யாணம் ஆனா... - அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி

விஜய் டிவியில் பாதி நாட்களைக் கடந்துவிட்டது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட 20 பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி மட்டும் பிக் பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இந்தச் சூழலில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் சென்ற அமித் பார்கவின் சொந்த தம்பியின் திருமணம் நேற்று நடந்தது. அமித்தின் தம்பிக்கும் போபாலைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று பெண் வீட்டார் முறைப்படி போபாலில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் வீட்டார் சார்பான சடங்குகள் நாளையும் நாளை மறுதினமும் பெங்களூருவில் நடைபெற இருக்கிறதாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் சொந்தத் தம்பியின் திருமணத்தில் அமித் கலந்து கொள்ளாத சூழலில் அவரது மனைவி ஸ்ரீ ரஞ்சனியிடம் பேசினோம்.  ‘’பிக் பாஸ் வாய்ப்பு வந்தப்பவே இந்தத் திருமணம் உறுதியாகியிருந்தது. சினிமா டிவி மாதிரியான மீடியாவுல வாய்ப்பு வர்ற போது தவற விடறது நல்லதில்லங்கிறதால அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டார். ஆனாலும் நேத்து மட்டுமில்ல இன்னும் ரெண்டு மூணு நாள் அவர் மனசு இந்தக் கல்யாணத்துலதான் இருக்கும்னு நினைக்கிறேன். வீட்டுல எங்க எல்லாருக்குமே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் பொறுத்துக்கிட்டோம். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி அந்த வீட்டுலயும் சரி வெளியிலயும் சரி இதுவரை அவருக்கு கெட்ட பெயர் பெருசா வரலைன்னுதான் நினைக்கிறோம். இப்படியே விளையாண்டா போதும்னு நினைக்கிறோம். பிக் பாஸில் கலந்து கொள்ளும் எல்லாருக்குமே டைட்டில் வாங்கணும்கிற ஆசை இருக்கதான் செய்யும். இவரைப் பொறுத்தவரை நூறு நாளும் அந்த வீட்டுல இருப்பார்னு நம்பறேன். மத்ததெல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் கடவுள் கையிலதான் இருக்கு’’ என்கிறார் இவர்.

விகடன் 2 Dec 2025 1:12 pm

BB Tamil 9: அவர் முன்னால் நின்னு நடத்த வேண்டிய கல்யாணம் ஆனா... - அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி

விஜய் டிவியில் பாதி நாட்களைக் கடந்துவிட்டது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட 20 பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி மட்டும் பிக் பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இந்தச் சூழலில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் சென்ற அமித் பார்கவின் சொந்த தம்பியின் திருமணம் நேற்று நடந்தது. அமித்தின் தம்பிக்கும் போபாலைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று பெண் வீட்டார் முறைப்படி போபாலில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் வீட்டார் சார்பான சடங்குகள் நாளையும் நாளை மறுதினமும் பெங்களூருவில் நடைபெற இருக்கிறதாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் சொந்தத் தம்பியின் திருமணத்தில் அமித் கலந்து கொள்ளாத சூழலில் அவரது மனைவி ஸ்ரீ ரஞ்சனியிடம் பேசினோம்.  ‘’பிக் பாஸ் வாய்ப்பு வந்தப்பவே இந்தத் திருமணம் உறுதியாகியிருந்தது. சினிமா டிவி மாதிரியான மீடியாவுல வாய்ப்பு வர்ற போது தவற விடறது நல்லதில்லங்கிறதால அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டார். ஆனாலும் நேத்து மட்டுமில்ல இன்னும் ரெண்டு மூணு நாள் அவர் மனசு இந்தக் கல்யாணத்துலதான் இருக்கும்னு நினைக்கிறேன். வீட்டுல எங்க எல்லாருக்குமே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் பொறுத்துக்கிட்டோம். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி அந்த வீட்டுலயும் சரி வெளியிலயும் சரி இதுவரை அவருக்கு கெட்ட பெயர் பெருசா வரலைன்னுதான் நினைக்கிறோம். இப்படியே விளையாண்டா போதும்னு நினைக்கிறோம். பிக் பாஸில் கலந்து கொள்ளும் எல்லாருக்குமே டைட்டில் வாங்கணும்கிற ஆசை இருக்கதான் செய்யும். இவரைப் பொறுத்தவரை நூறு நாளும் அந்த வீட்டுல இருப்பார்னு நம்பறேன். மத்ததெல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் கடவுள் கையிலதான் இருக்கு’’ என்கிறார் இவர்.

விகடன் 2 Dec 2025 1:12 pm

``என்னை மன்னிசுடுங்க'' - சர்ச்சையை உருவாக்கிய `காந்தாரா'நடிப்பு; மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

கோவாவில் கடந்த 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் சில அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி, ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 'காந்தாரா -சாப்டர் 1'படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ரிஷப் ஷெட்டியிடம் மேடையிலிருந்து நடித்து காண்பித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது. ரிஷப் ஷெட்டி- ரன்வீர் சிங் மேடையில் பேசிய ரன்வீர் சிங், “ 'காந்தாரா- சாப்டர் 1' படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு...” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை கேலியாக செய்து காண்பித்திருந்தார். அது பெண் ஆவி இல்லை, பெண் கடவுள் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது என்றும் அக்கடவுளை வணங்கும் துளு மொழி பேசும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இதற்கு துளுநாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த அவர் நடிகர் ரன்வீர் சிங்கின் இந்த செயல் எங்களின் பெண் தெய்வத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது செயலால் எங்கள் மனது புண்பட்டுள்ளது. இதற்கு நடிகர் ரன்வீர் சிங், கத்ரி மஞ்சுநாதா கோவிலுக்கு வந்து சாமி சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல் ரன்வீர் சிங்கின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தார். ரன்வீர் சிங் இந்நிலையில் ரன்வீர் சிங் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த படத்தில் ரிஷப்பின் அசாதாரணமான நடிப்பை முன்வைத்துக் காட்டுவதே என் நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் நம் நாட்டின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மரபையும், நம்பிக்கையையும் ஆழமாக மதித்து வருகிறேன். யாருடைய உணர்ச்சிகளையும் நான் புண்படுத்தி இருந்தால், இதயம் கனிந்த மன்னிப்பைக் கேட்டுகொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?

விகடன் 2 Dec 2025 1:08 pm

உண்மையை நிரூபிக்க சேது செய்த வேலை, அவஸ்தைப்படும் ஈஸ்வரி –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா மனம் இறங்காமல் போசை திட்டி விட்டார். அதற்குப்பின் மாப்பிள்ளை, மணமகள் இருவரையும் மேடைக்கு அழைத்தார்கள். தனம்- தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தனம், இந்த கல்யாணம் நடக்குமா? சேது மாமா உண்மையை கண்டுபிடிப்பாரா? என்றார். அதற்கு தமிழ், கண்டிப்பாக சேது உண்மையை கண்டுபிடிப்பார் என்றார். அதற்கு பின் அப்பத்தா, ஈஸ்வரியை அழைத்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மேடையில் எல்லோரும் முன்பும் தந்தார். ராஜாங்கம், தன்னுடைய […] The post உண்மையை நிரூபிக்க சேது செய்த வேலை, அவஸ்தைப்படும் ஈஸ்வரி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 1:08 pm

Mrunal Thakur: `மின்னலே மின்னலே' - நடிகை மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

Sai Pallavi: 'Happie Happie' - நடிகை சாய் பல்லவி லேட்டஸ் க்ளீக்ஸ் | Photo Album

விகடன் 2 Dec 2025 12:34 pm

BB Tamil 9 Day 57: `பீலிங்ஸ் ஒண்ணும் கிடையாது' - FJ - ஆதிரை மீட்; வீட்டுத் தலையாக ரம்யா சாதிப்பாரா?

FJ தற்போது வியானாவுடன் ரொமான்ஸிக் கொண்டிருப்பதால் இந்தச் சமயத்தில் ஆதிரையை உள்ளே அனுப்பினால் ஏதேனும் கலகம் நிகழும் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் பெரிதாக வெடிக்காது என்று தோன்றுகிறது. இரண்டு நாட்களில் ஆதிரையும் ஜோதியில் கலந்துவிடுவார்.  பிக் பாஸ் வீட்டின் இப்போதைய தலையாய பிரச்னை. கம்மு - அம்மு - பாருவின் டிரையாங்கிள் ரொமான்ஸ்தான். அது முடிவிற்கு வருமா? BB Tamil 9: Day 57 Review பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 57 சிவப்பு - பச்சை டாஸ்க்கில் ‘நான் கனியின் நிழலை விட்டு விலகினாதான் உருப்படுவேன். எனவே அவங்களை விட்டு விலகறேன்’ என்று அறிவித்தார் ரம்யா. பதிலுக்கு கனியும் சபரியும் ரம்யாவை விட்டுத் தள்ளியிருப்பதாக அறிவித்தார்கள். இதெல்லாம் ஆட்டத்தின் போக்கில் நிகழ்வது. ஒருவர் individual player ஆக இருப்பது அவரை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.  ஆனால் ரம்யா இதை பர்சனலாக எடுத்துக்கொண்டு “இந்த ஆட்டத்துக்கு நான் செட் ஆக மாட்டேன் போலிருக்கு. முன்ன காசு இல்ல. நிம்மதி இருந்தது. இப்ப காசு வந்திருக்கு. ஆனா நிம்மதி போயிடுச்சு.. வெளியே போணும்’ என்கிற மாதிரி கலங்கிக் கொண்டிருக்க “அதையெல்லாம் விடு ‘தல’ போட்டிக்கு செலக்ட் ஆகியிருக்க.. அதுல கான்ஸ்ன்டிரேட் பண்ணு” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.  மற்றவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவது, அவர்களுக்கு வழிகாட்டுவது, எதிரியாக இருந்தாலும் அவர்களின் வெற்றியைக் கண்டு உண்மையாகவே சந்தோஷப்படுவது போன்றவை விக்ரமின் நல்ல குணாதிசயங்களாக தெரிகின்றன. ஒருவேளை பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இவற்றை வலுக்கட்டாயமாக பாவனை செய்வதாக இருந்தாலும் நல்ல விஷயம்தான்.  ஆனால் பிறகு தல போட்டியில் வெற்றி பெற்ற ரம்யா “என் முயற்சியால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நானே என்னை லவ் பண்றேன்” என்றுதான் கூறினார். விக்ரம் பற்றி ஒரு வார்த்தையும் சொன்னதாகத் தெரியவில்லை. சட்டென்று உணர்ச்சிவசப்படும் ரம்யா, வீட்டு ‘தல’யாக மிகவும் அவஸ்தைப்படுவார் என்று தோன்றுகிறது.  BB Tamil 9: Day 57 Review FJ - ஆதிரை சந்திப்பு - ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’ மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த FJ - ஆதிரை சந்திப்பு நடந்தது. ஆனால் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. “என்ன நடக்குது?” என்று ஆதிரை ஆரம்பிக்க “அதான் வெளியே பார்த்துட்டு வந்திருப்பியே.. சர்காஸமா சிரிக்கற?” என்று சாமர்த்தியமாக நழுவினார் FJ. “நான்தான் முன்னமே சொன்னேனே.. ஒரு மாதிரி ஃபீலிங்க்ஸ் ஆவுதுன்னு சொன்னே.. அதெல்லாம் வேணாம்ன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்..” என்று FJ சொல்ல “நான் எப்ப ஃபீலிங்க்ஸ்ன்னு சொன்னேன்.. ஒரு comfortable zone இருக்குது..உனக்கும் எனக்கும் செட் ஆகுதுன்னுதான் சொன்னேன்’ என்று அதை மறுத்துக் கொண்டிருந்தார் ஆதிரை. (காமிரால எல்லாம் ரிகார்டு ஆகும் போதே இப்படிப் பேசறாங்க!) நாள் 57: ‘வந்துச்சே ஃபீலிங்க்ஸூ’ என்று டைமிங்கான பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘ஒண்ணுமே புரியலையே’ என்று பிக் பாஸ் 9 தீம் பாடலை, காமிரா முன்பு வியானா பரிதாபமாக பாடிக்கொண்டிருந்தார். ஆதிரையின் என்ட்ரி அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘ஆதிரை எப்படி வெளியே போனாங்க.. நல்லா யோசிச்சுப் பாரு.. உனக்கான விடை அதுல இருக்கு’ என்று ரோபோ முகத்துடன் சொன்னார் சான்ட்ரா. FJவை தலை முழுகி விட்டு தனியாக ஆடத் தொடங்கினால் கொஞ்சமாவது உருப்படலாம் என்று அர்த்தம்.  சுபிக்ஷா எப்போதும் மீனவர் சமூகத்தைப் பற்றியே பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு புகாராகவே வருகிறது. மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கூட ‘சுபி.. கடலை விட்டு வெளியே வாம்மா’ என்று யாரோ (திவ்யா?!) எழுதியிருந்தார்கள். இது தொடர்பாக விக்ரம் தந்த ஆலோசனை பாராட்டத்தக்கது.  BB Tamil 9: Day 57 Review “நீ சார்ந்திருக்கிற சமூகம் பத்தின பிரச்னைகளைப் பத்தி தொடர்ந்து பேசற.. நல்ல விஷயம். பாராட்டுக்கள். ஆனா அதுக்குப் பின்னாடி நீ ஒளிஞ்சிட்டு இருக்கற மாதிரி இருக்குது. சுபிக்ஷா யாருன்னு மக்களுக்கு தெரிய வேண்டாமா?” என்று சரியான அட்வைஸை தந்து கொண்டிருந்தார் விக்ரம்.  வீட்டு ‘தல’யாக ரம்யா சாதிப்பாரா? சந்தேகம்தான் தல போட்டி ஆரம்பித்தது. ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த ரம்யா, பிரஜினோடு புது என்ட்ரியான ஆதிரையையும் உள்ளே நுழைத்தார் பிக் பாஸ். (உன் வாய்.. உன் உருட்டு என்பது மாதிரி பிக் பாஸ் வீட்டின் விதிகளே கோக்குமாக்கானவை!) பிஸிக்கல் டாஸ்க் என்றால் ஒருவேளை பிரஜின் ஜெயித்திருக்கக்கூடும். ஆனால் நிதானமாக ஆட வேண்டிய பந்து விளையாட்டு என்பதால் ரம்யா விரைவில் வெற்றி பெற்றார். “இந்த வாரத்துல நான் தனியா ஆடினேன். அதனாலதான் ஜெயிக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்று பெருமிதமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா.  BB Tamil 9: Day 57 Review நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. வீட்டு தல ரம்யாவையும் ரீ என்ட்ரி ஆதிரையையும் நாமினேட் செய்ய முடியாது. கன்பெஷன் ரூமில் நடந்த நாமினேஷன் என்பதால் காரணங்கள் ரகளையாக இருந்தது. பாருவின் மாதாந்திர அவஸ்தை குறித்து அமித் எள்ளலாக பேசியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. எனவே அந்தக் காரணத்தை வைத்து அமித்தை குத்தினார்கள்.  ‘நீ சாப்பாடுதான் சாப்பிடறியா?’ என்று கம்ருதீன் ஆபாசமாகப் பேசியதால் அவரை நாமினேட் செய்தார் திவ்யா. பதிலுக்கு கம்முவும் திவ்யாவின் பெயரைச் சொன்னார். வீட்டு தல, அஸிஸ் வார்டன் என்கிற இரண்டு பொறுப்புகளையும் சரியாகக் கையாளாத FJ மீதும் வாக்குகள் விழுந்தன. “அவரு பொண்ணுங்களை வெச்சு ‘comfort zone’ ஆட்டத்தை கேவலமா ஆடுறாரு’ என்று காட்டமான காரணத்தைச் சொன்னார் ஆதிரை.  டிரையாங்கிள் டிராமாவை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் பாரு “பர்சனல் காரணங்களை வெச்சு என்னைப் பழிவாங்கறாங்க’ என்று பாரு குறித்து காரணம் சொன்னார் அரோரா. “சண்டைதான் இங்க என்டர்டெயின்மென்ட்டுன்னு பாரு ஓப்பனாவே சொல்றாங்க. அதைத்தான் கிரியேட்டிவிட்டின்னு நெனக்கறாங்க” என்றார் FJ. “சான்ட்ரா அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பிளே பண்றாங்க” என்பதும் அவர் சொன்ன காரணம்.  இது முடிந்ததும் காரணங்களைச் சொல்லி பெயர்களைச் சொன்னார் பிக் பாஸ். ஆனால் ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற காமெடி மாதிரி, யார் எதைச் சொல்லியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த அளவிற்கு திறமையாக போட்டுக்கொடுத்தார் பிக் பாஸ்.  இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், FJ, திவ்யா, கம்ருதீன், பாரு, பிரஜின், அமித், சான்ட்ரா, விக்ரம், வினோத், கனி மற்றும் சுபிக்ஷா. தப்பித்தவர்கள் வியானா மற்றும் சபரி.  BB Tamil 9: Day 57 Review காரணங்கள் வெளிப்படையாகத் தெரிந்ததால் “ஏன் அப்படிச் சொன்னே..?” என்று கம்மு அரோராவிடம் கேட்க “அவ என்னை ரொம்ப அவமானப்படுத்தியிருக்கா.. சாணி கரைச்சு ஊத்தினா கூட நீ போவே. என்னால முடியாது.” என்று அரோரா காட்டமாக பதிலளிக்க “அப்படின்னா இனி என் கூட பேசாத’ என்று இருவருக்கும் முட்டிக்கொண்டது.  அரோராவிடம் சண்டை என்பதால் மறுபடியும் பாருவிடம் தஞ்சமடைந்தார் கம்ருதீன். (இவன் இன்னும் திருந்தலை மாமா!) “அவ உன்னை வெச்சு கேம் ஆடறா.. இந்த வாரம் அவ தப்பிச்சிட்டா பாத்தியா?” என்று ஏற்றிக் கொடுத்தார் பாரு.  “நீங்க மூணு பேரும் பண்றது வெளில பார்க்க நல்லா இல்லை. எல்லாமே மெச்சூர்ட் ஆனவங்கதானே?” என்று பாருவிற்கு எச்சரிக்கை மணி அடித்தார் ஆதிரை. இதனால் ஞானோதயம் பெற்ற பாரு, அரோராவை சந்தித்து ‘இந்த டிரையாங்கிள் டிராமாவை முடிச்சுக்கலாம்’ என்று ஒப்பந்தம் பேச “இங்க பாரும்மா. கம்மு மேல எனக்கு ஒண்ணுமே கிடையாது. நீங்க இப்படியே வெளில போயி பக்கத்து கோயில்ல கூட கல்யாணம் பண்ணிக்கங்க.. எனக்குப் பிரச்சினையே இல்ல” என்று கையைக் கழுவினார் அரோரா.  BB Tamil 9: Day 57 Review வெட்டியாக ஆரம்பித்த பட்டி மன்றம் - ஆண்களா, பெண்களா? ‘ஏதாவது கன்டென்ட் வேணுமே.. இவிங்களை வெச்சிக்கிட்டு இந்த சீசனை எப்படித்தான் நகர்த்தறது?’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்க பிக் பாஸ் டீம், ஒருவழியாக ஒரு ஐடியாவை ஆரம்பித்தது. பட்டிமன்றங்களில் வரும் அரதப்பழசான தலைப்பு.  வீட்டை சுத்தமாக நிர்வகிப்பது ஆண்களா அல்லது பெண்களா என்று இருவரையும் மோதவிட திட்டமிடப்பட்டது. ‘யார் நடுவராக இருப்பது?’ என்பதிலேயே பெண்கள் அணிக்குள் தகராறு ஆரம்பித்துவிட்டது.  “அணியில் இருந்து பேசுவதற்குத் திறமையான ஆட்கள் வேண்டும். அப்படி அல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கட்டும்” என்பது போல் பெண்கள் அணி திட்டமிட்டது அபத்தமானதொன்று. ஒரு நல்ல நடுவர் திறமையாக பேச்சாளராகவும் இருக்க வேண்டும்.  ‘நானும் நடுவரா இருப்பேன்’ என்று வம்படியாக எழுந்த வந்த வியானா “எதிர்ப் பக்கம் என்ன பாயின்ட் சொன்னாலும் அதை டிவிஸ்ட் செஞ்சு நம்ம அணிக்கு சாதகமா வர்ற மாதிரி பேசுவேன்” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார். ‘பாரபட்சமா இருப்பேன்னு ஒரு நடுவரே ஓப்பனா பேசறாங்க. இவங்களை எப்படி ஒத்துக்க முடியும்?” என்று விக்ரம் தலைமையில் ஆண்கள் அணியினர் ஆட்சேபம் எழுப்பினார்கள். எனவே வியானாவை தூக்கி விட்டு அரோராவை நடுவராக மாற்றினார்கள். “டம்மி பீஸா எப்படி ஜெயிக்கறது?’ என்று அரோரா சொன்னதை தனக்கு சொன்னதாக நினைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டார் வியானா.  பெண்கள் அணி இத்தனை மோதல்களுக்குப் பிறகு நடுவரை அறிவிக்க, ஆண்கள் அணியோ ஒரு சத்தமும் இல்லாமல் மிக சமர்த்தாக நடுவரை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அந்தத் தேர்வுதான் கோக்குமாக்காக இருந்தது. கம்ருதீன் நடுவராம்.  BB Tamil 9: Day 57 Review அரோரா தந்த பாரபட்சமான தீர்ப்பு - கிச்சானாலே இளிச்சவாயன்தான் பட்டிமன்றம் ஆரம்பித்தது. முதலில் களத்தில் இறங்கிய சபரி “ஆண்கள் கிச்சன் டீம்ல இருந்தப்ப ஒரு பிரச்சினையும் வரவேயில்ல. கிச்சன் சுத்தமா இருந்தது. விசேவே பாராட்டினார். அதுக்கு அப்புறம் சாம்பார் அணில பெண்கள் வந்தாங்க. ‘கிச்சன் மூடப்பட்டது’ன்னு ஒருமுறை சொன்னாங்க. நாங்க இருந்தப்போ கிச்சனை மூடவேயில்ல. இதுல இருந்தே தெரியலையா.. ஆண்கள் அணிதான் சிறந்தது’ என்று முழங்கினார்.  அதற்குப் போட்டியாக இறங்கிய பாரு, தகுதியான காரணங்களுக்குப் பதிலாக “நாங்கதான் அம்மா மாதிரி இருந்து கருணையுள்ளத்தோட சோறு போட்டோம். அம்மி வெச்சு முதன் முதலா வடை சுட்டது பெண்கள்தான்’ என்று சென்டிமென்ட் தூவிப் பேசினார்.  ஆண்கள் அணியில் அடுத்து இறங்கிய விக்ரம் “அற்ப மானிடன்.. என்னைக் கூட மதிக்க வேணாம்யா.. பிக் பாஸைக் கூட இவங்க மதிக்கலை. தாங்க இருக்கற வீட்டை மட்டும் சுத்தமா கூட்டிட்டு மத்த ஏரியாக்களை அப்படியே விட்டுட்டாங்க. ஜெயிலுக்குப் போறதுக்கு கூட ராத்திரி முழுக்க ராவடி பண்ணாங்க” என்று சான்ட்ரா - திவ்யா சம்பவத்தைப் பற்றி ஆவேசமாக பேசினார். அவர்கள் செய்த அட்ராசிட்டி காரணமாக விக்ரமின் உண்மையான வயிற்றெரிச்சல் வெளியே வந்தது.  இதற்குப் பதிலடி தர வேண்டிய சுபிக்ஷா “திவாகர் ஏன் சமையல் டீம்ல இருந்து ரிசைன் பண்ணாரு.. திவ்யாவிற்கு உடம்பு முடியலைன்னாலும் முடிஞ்ச வரைக்கும் சுத்தம் பண்ணாங்க” என்று பலவீனமாக எதிர் வாதம் வைத்தார். அடுத்து நடந்த FJ - ஆதிரை வாதமும் மோசம்தான்.  BB Tamil 9: Day 57 Review ‘பெண்கள் அணிதான் வெற்றி பெற்றது’ என்று அரோரா அநியாயமாக அறிவிக்க, கூட இருந்த கம்ருதீன் அசட்டு இளிப்புடன் சும்மா இருந்தார்.  வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் நெக்லஸைத் திருட வேண்டிய வீக்லி டாஸ்க்கை இந்த வாரத்தில் பிக் பாஸ் அறிவித்திருப்பது இன்றைய புரொமோவில் தெரிகிறது. இந்த சீசனை எப்படியாவது ஒப்பேற்றி விடுவதற்காக பிக் பாஸ் நிறைய சிரமப்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. 

விகடன் 2 Dec 2025 12:32 pm

BB Tamil 9 Day 57: `பீலிங்ஸ் ஒண்ணும் கிடையாது' - FJ - ஆதிரை மீட்; வீட்டுத் தலையாக ரம்யா சாதிப்பாரா?

FJ தற்போது வியானாவுடன் ரொமான்ஸிக் கொண்டிருப்பதால் இந்தச் சமயத்தில் ஆதிரையை உள்ளே அனுப்பினால் ஏதேனும் கலகம் நிகழும் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் பெரிதாக வெடிக்காது என்று தோன்றுகிறது. இரண்டு நாட்களில் ஆதிரையும் ஜோதியில் கலந்துவிடுவார்.  பிக் பாஸ் வீட்டின் இப்போதைய தலையாய பிரச்னை. கம்மு - அம்மு - பாருவின் டிரையாங்கிள் ரொமான்ஸ்தான். அது முடிவிற்கு வருமா? BB Tamil 9: Day 57 Review பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 57 சிவப்பு - பச்சை டாஸ்க்கில் ‘நான் கனியின் நிழலை விட்டு விலகினாதான் உருப்படுவேன். எனவே அவங்களை விட்டு விலகறேன்’ என்று அறிவித்தார் ரம்யா. பதிலுக்கு கனியும் சபரியும் ரம்யாவை விட்டுத் தள்ளியிருப்பதாக அறிவித்தார்கள். இதெல்லாம் ஆட்டத்தின் போக்கில் நிகழ்வது. ஒருவர் individual player ஆக இருப்பது அவரை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.  ஆனால் ரம்யா இதை பர்சனலாக எடுத்துக்கொண்டு “இந்த ஆட்டத்துக்கு நான் செட் ஆக மாட்டேன் போலிருக்கு. முன்ன காசு இல்ல. நிம்மதி இருந்தது. இப்ப காசு வந்திருக்கு. ஆனா நிம்மதி போயிடுச்சு.. வெளியே போணும்’ என்கிற மாதிரி கலங்கிக் கொண்டிருக்க “அதையெல்லாம் விடு ‘தல’ போட்டிக்கு செலக்ட் ஆகியிருக்க.. அதுல கான்ஸ்ன்டிரேட் பண்ணு” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.  மற்றவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவது, அவர்களுக்கு வழிகாட்டுவது, எதிரியாக இருந்தாலும் அவர்களின் வெற்றியைக் கண்டு உண்மையாகவே சந்தோஷப்படுவது போன்றவை விக்ரமின் நல்ல குணாதிசயங்களாக தெரிகின்றன. ஒருவேளை பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இவற்றை வலுக்கட்டாயமாக பாவனை செய்வதாக இருந்தாலும் நல்ல விஷயம்தான்.  ஆனால் பிறகு தல போட்டியில் வெற்றி பெற்ற ரம்யா “என் முயற்சியால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நானே என்னை லவ் பண்றேன்” என்றுதான் கூறினார். விக்ரம் பற்றி ஒரு வார்த்தையும் சொன்னதாகத் தெரியவில்லை. சட்டென்று உணர்ச்சிவசப்படும் ரம்யா, வீட்டு ‘தல’யாக மிகவும் அவஸ்தைப்படுவார் என்று தோன்றுகிறது.  BB Tamil 9: Day 57 Review FJ - ஆதிரை சந்திப்பு - ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’ மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த FJ - ஆதிரை சந்திப்பு நடந்தது. ஆனால் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. “என்ன நடக்குது?” என்று ஆதிரை ஆரம்பிக்க “அதான் வெளியே பார்த்துட்டு வந்திருப்பியே.. சர்காஸமா சிரிக்கற?” என்று சாமர்த்தியமாக நழுவினார் FJ. “நான்தான் முன்னமே சொன்னேனே.. ஒரு மாதிரி ஃபீலிங்க்ஸ் ஆவுதுன்னு சொன்னே.. அதெல்லாம் வேணாம்ன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்..” என்று FJ சொல்ல “நான் எப்ப ஃபீலிங்க்ஸ்ன்னு சொன்னேன்.. ஒரு comfortable zone இருக்குது..உனக்கும் எனக்கும் செட் ஆகுதுன்னுதான் சொன்னேன்’ என்று அதை மறுத்துக் கொண்டிருந்தார் ஆதிரை. (காமிரால எல்லாம் ரிகார்டு ஆகும் போதே இப்படிப் பேசறாங்க!) நாள் 57: ‘வந்துச்சே ஃபீலிங்க்ஸூ’ என்று டைமிங்கான பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘ஒண்ணுமே புரியலையே’ என்று பிக் பாஸ் 9 தீம் பாடலை, காமிரா முன்பு வியானா பரிதாபமாக பாடிக்கொண்டிருந்தார். ஆதிரையின் என்ட்ரி அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘ஆதிரை எப்படி வெளியே போனாங்க.. நல்லா யோசிச்சுப் பாரு.. உனக்கான விடை அதுல இருக்கு’ என்று ரோபோ முகத்துடன் சொன்னார் சான்ட்ரா. FJவை தலை முழுகி விட்டு தனியாக ஆடத் தொடங்கினால் கொஞ்சமாவது உருப்படலாம் என்று அர்த்தம்.  சுபிக்ஷா எப்போதும் மீனவர் சமூகத்தைப் பற்றியே பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு புகாராகவே வருகிறது. மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கூட ‘சுபி.. கடலை விட்டு வெளியே வாம்மா’ என்று யாரோ (திவ்யா?!) எழுதியிருந்தார்கள். இது தொடர்பாக விக்ரம் தந்த ஆலோசனை பாராட்டத்தக்கது.  BB Tamil 9: Day 57 Review “நீ சார்ந்திருக்கிற சமூகம் பத்தின பிரச்னைகளைப் பத்தி தொடர்ந்து பேசற.. நல்ல விஷயம். பாராட்டுக்கள். ஆனா அதுக்குப் பின்னாடி நீ ஒளிஞ்சிட்டு இருக்கற மாதிரி இருக்குது. சுபிக்ஷா யாருன்னு மக்களுக்கு தெரிய வேண்டாமா?” என்று சரியான அட்வைஸை தந்து கொண்டிருந்தார் விக்ரம்.  வீட்டு ‘தல’யாக ரம்யா சாதிப்பாரா? சந்தேகம்தான் தல போட்டி ஆரம்பித்தது. ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த ரம்யா, பிரஜினோடு புது என்ட்ரியான ஆதிரையையும் உள்ளே நுழைத்தார் பிக் பாஸ். (உன் வாய்.. உன் உருட்டு என்பது மாதிரி பிக் பாஸ் வீட்டின் விதிகளே கோக்குமாக்கானவை!) பிஸிக்கல் டாஸ்க் என்றால் ஒருவேளை பிரஜின் ஜெயித்திருக்கக்கூடும். ஆனால் நிதானமாக ஆட வேண்டிய பந்து விளையாட்டு என்பதால் ரம்யா விரைவில் வெற்றி பெற்றார். “இந்த வாரத்துல நான் தனியா ஆடினேன். அதனாலதான் ஜெயிக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்று பெருமிதமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா.  BB Tamil 9: Day 57 Review நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. வீட்டு தல ரம்யாவையும் ரீ என்ட்ரி ஆதிரையையும் நாமினேட் செய்ய முடியாது. கன்பெஷன் ரூமில் நடந்த நாமினேஷன் என்பதால் காரணங்கள் ரகளையாக இருந்தது. பாருவின் மாதாந்திர அவஸ்தை குறித்து அமித் எள்ளலாக பேசியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. எனவே அந்தக் காரணத்தை வைத்து அமித்தை குத்தினார்கள்.  ‘நீ சாப்பாடுதான் சாப்பிடறியா?’ என்று கம்ருதீன் ஆபாசமாகப் பேசியதால் அவரை நாமினேட் செய்தார் திவ்யா. பதிலுக்கு கம்முவும் திவ்யாவின் பெயரைச் சொன்னார். வீட்டு தல, அஸிஸ் வார்டன் என்கிற இரண்டு பொறுப்புகளையும் சரியாகக் கையாளாத FJ மீதும் வாக்குகள் விழுந்தன. “அவரு பொண்ணுங்களை வெச்சு ‘comfort zone’ ஆட்டத்தை கேவலமா ஆடுறாரு’ என்று காட்டமான காரணத்தைச் சொன்னார் ஆதிரை.  டிரையாங்கிள் டிராமாவை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் பாரு “பர்சனல் காரணங்களை வெச்சு என்னைப் பழிவாங்கறாங்க’ என்று பாரு குறித்து காரணம் சொன்னார் அரோரா. “சண்டைதான் இங்க என்டர்டெயின்மென்ட்டுன்னு பாரு ஓப்பனாவே சொல்றாங்க. அதைத்தான் கிரியேட்டிவிட்டின்னு நெனக்கறாங்க” என்றார் FJ. “சான்ட்ரா அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பிளே பண்றாங்க” என்பதும் அவர் சொன்ன காரணம்.  இது முடிந்ததும் காரணங்களைச் சொல்லி பெயர்களைச் சொன்னார் பிக் பாஸ். ஆனால் ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற காமெடி மாதிரி, யார் எதைச் சொல்லியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த அளவிற்கு திறமையாக போட்டுக்கொடுத்தார் பிக் பாஸ்.  இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், FJ, திவ்யா, கம்ருதீன், பாரு, பிரஜின், அமித், சான்ட்ரா, விக்ரம், வினோத், கனி மற்றும் சுபிக்ஷா. தப்பித்தவர்கள் வியானா மற்றும் சபரி.  BB Tamil 9: Day 57 Review காரணங்கள் வெளிப்படையாகத் தெரிந்ததால் “ஏன் அப்படிச் சொன்னே..?” என்று கம்மு அரோராவிடம் கேட்க “அவ என்னை ரொம்ப அவமானப்படுத்தியிருக்கா.. சாணி கரைச்சு ஊத்தினா கூட நீ போவே. என்னால முடியாது.” என்று அரோரா காட்டமாக பதிலளிக்க “அப்படின்னா இனி என் கூட பேசாத’ என்று இருவருக்கும் முட்டிக்கொண்டது.  அரோராவிடம் சண்டை என்பதால் மறுபடியும் பாருவிடம் தஞ்சமடைந்தார் கம்ருதீன். (இவன் இன்னும் திருந்தலை மாமா!) “அவ உன்னை வெச்சு கேம் ஆடறா.. இந்த வாரம் அவ தப்பிச்சிட்டா பாத்தியா?” என்று ஏற்றிக் கொடுத்தார் பாரு.  “நீங்க மூணு பேரும் பண்றது வெளில பார்க்க நல்லா இல்லை. எல்லாமே மெச்சூர்ட் ஆனவங்கதானே?” என்று பாருவிற்கு எச்சரிக்கை மணி அடித்தார் ஆதிரை. இதனால் ஞானோதயம் பெற்ற பாரு, அரோராவை சந்தித்து ‘இந்த டிரையாங்கிள் டிராமாவை முடிச்சுக்கலாம்’ என்று ஒப்பந்தம் பேச “இங்க பாரும்மா. கம்மு மேல எனக்கு ஒண்ணுமே கிடையாது. நீங்க இப்படியே வெளில போயி பக்கத்து கோயில்ல கூட கல்யாணம் பண்ணிக்கங்க.. எனக்குப் பிரச்சினையே இல்ல” என்று கையைக் கழுவினார் அரோரா.  BB Tamil 9: Day 57 Review வெட்டியாக ஆரம்பித்த பட்டி மன்றம் - ஆண்களா, பெண்களா? ‘ஏதாவது கன்டென்ட் வேணுமே.. இவிங்களை வெச்சிக்கிட்டு இந்த சீசனை எப்படித்தான் நகர்த்தறது?’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்க பிக் பாஸ் டீம், ஒருவழியாக ஒரு ஐடியாவை ஆரம்பித்தது. பட்டிமன்றங்களில் வரும் அரதப்பழசான தலைப்பு.  வீட்டை சுத்தமாக நிர்வகிப்பது ஆண்களா அல்லது பெண்களா என்று இருவரையும் மோதவிட திட்டமிடப்பட்டது. ‘யார் நடுவராக இருப்பது?’ என்பதிலேயே பெண்கள் அணிக்குள் தகராறு ஆரம்பித்துவிட்டது.  “அணியில் இருந்து பேசுவதற்குத் திறமையான ஆட்கள் வேண்டும். அப்படி அல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கட்டும்” என்பது போல் பெண்கள் அணி திட்டமிட்டது அபத்தமானதொன்று. ஒரு நல்ல நடுவர் திறமையாக பேச்சாளராகவும் இருக்க வேண்டும்.  ‘நானும் நடுவரா இருப்பேன்’ என்று வம்படியாக எழுந்த வந்த வியானா “எதிர்ப் பக்கம் என்ன பாயின்ட் சொன்னாலும் அதை டிவிஸ்ட் செஞ்சு நம்ம அணிக்கு சாதகமா வர்ற மாதிரி பேசுவேன்” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார். ‘பாரபட்சமா இருப்பேன்னு ஒரு நடுவரே ஓப்பனா பேசறாங்க. இவங்களை எப்படி ஒத்துக்க முடியும்?” என்று விக்ரம் தலைமையில் ஆண்கள் அணியினர் ஆட்சேபம் எழுப்பினார்கள். எனவே வியானாவை தூக்கி விட்டு அரோராவை நடுவராக மாற்றினார்கள். “டம்மி பீஸா எப்படி ஜெயிக்கறது?’ என்று அரோரா சொன்னதை தனக்கு சொன்னதாக நினைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டார் வியானா.  பெண்கள் அணி இத்தனை மோதல்களுக்குப் பிறகு நடுவரை அறிவிக்க, ஆண்கள் அணியோ ஒரு சத்தமும் இல்லாமல் மிக சமர்த்தாக நடுவரை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அந்தத் தேர்வுதான் கோக்குமாக்காக இருந்தது. கம்ருதீன் நடுவராம்.  BB Tamil 9: Day 57 Review அரோரா தந்த பாரபட்சமான தீர்ப்பு - கிச்சானாலே இளிச்சவாயன்தான் பட்டிமன்றம் ஆரம்பித்தது. முதலில் களத்தில் இறங்கிய சபரி “ஆண்கள் கிச்சன் டீம்ல இருந்தப்ப ஒரு பிரச்சினையும் வரவேயில்ல. கிச்சன் சுத்தமா இருந்தது. விசேவே பாராட்டினார். அதுக்கு அப்புறம் சாம்பார் அணில பெண்கள் வந்தாங்க. ‘கிச்சன் மூடப்பட்டது’ன்னு ஒருமுறை சொன்னாங்க. நாங்க இருந்தப்போ கிச்சனை மூடவேயில்ல. இதுல இருந்தே தெரியலையா.. ஆண்கள் அணிதான் சிறந்தது’ என்று முழங்கினார்.  அதற்குப் போட்டியாக இறங்கிய பாரு, தகுதியான காரணங்களுக்குப் பதிலாக “நாங்கதான் அம்மா மாதிரி இருந்து கருணையுள்ளத்தோட சோறு போட்டோம். அம்மி வெச்சு முதன் முதலா வடை சுட்டது பெண்கள்தான்’ என்று சென்டிமென்ட் தூவிப் பேசினார்.  ஆண்கள் அணியில் அடுத்து இறங்கிய விக்ரம் “அற்ப மானிடன்.. என்னைக் கூட மதிக்க வேணாம்யா.. பிக் பாஸைக் கூட இவங்க மதிக்கலை. தாங்க இருக்கற வீட்டை மட்டும் சுத்தமா கூட்டிட்டு மத்த ஏரியாக்களை அப்படியே விட்டுட்டாங்க. ஜெயிலுக்குப் போறதுக்கு கூட ராத்திரி முழுக்க ராவடி பண்ணாங்க” என்று சான்ட்ரா - திவ்யா சம்பவத்தைப் பற்றி ஆவேசமாக பேசினார். அவர்கள் செய்த அட்ராசிட்டி காரணமாக விக்ரமின் உண்மையான வயிற்றெரிச்சல் வெளியே வந்தது.  இதற்குப் பதிலடி தர வேண்டிய சுபிக்ஷா “திவாகர் ஏன் சமையல் டீம்ல இருந்து ரிசைன் பண்ணாரு.. திவ்யாவிற்கு உடம்பு முடியலைன்னாலும் முடிஞ்ச வரைக்கும் சுத்தம் பண்ணாங்க” என்று பலவீனமாக எதிர் வாதம் வைத்தார். அடுத்து நடந்த FJ - ஆதிரை வாதமும் மோசம்தான்.  BB Tamil 9: Day 57 Review ‘பெண்கள் அணிதான் வெற்றி பெற்றது’ என்று அரோரா அநியாயமாக அறிவிக்க, கூட இருந்த கம்ருதீன் அசட்டு இளிப்புடன் சும்மா இருந்தார்.  வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் நெக்லஸைத் திருட வேண்டிய வீக்லி டாஸ்க்கை இந்த வாரத்தில் பிக் பாஸ் அறிவித்திருப்பது இன்றைய புரொமோவில் தெரிகிறது. இந்த சீசனை எப்படியாவது ஒப்பேற்றி விடுவதற்காக பிக் பாஸ் நிறைய சிரமப்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. 

விகடன் 2 Dec 2025 12:32 pm

BB Tamil 9 Day 57: `பீலிங்ஸ் ஒண்ணும் கிடையாது' - FJ - ஆதிரை மீட்; வீட்டுத் தலையாக ரம்யா சாதிப்பாரா?

FJ தற்போது வியானாவுடன் ரொமான்ஸிக் கொண்டிருப்பதால் இந்தச் சமயத்தில் ஆதிரையை உள்ளே அனுப்பினால் ஏதேனும் கலகம் நிகழும் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் பெரிதாக வெடிக்காது என்று தோன்றுகிறது. இரண்டு நாட்களில் ஆதிரையும் ஜோதியில் கலந்துவிடுவார்.  பிக் பாஸ் வீட்டின் இப்போதைய தலையாய பிரச்னை. கம்மு - அம்மு - பாருவின் டிரையாங்கிள் ரொமான்ஸ்தான். அது முடிவிற்கு வருமா? BB Tamil 9: Day 57 Review பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 57 சிவப்பு - பச்சை டாஸ்க்கில் ‘நான் கனியின் நிழலை விட்டு விலகினாதான் உருப்படுவேன். எனவே அவங்களை விட்டு விலகறேன்’ என்று அறிவித்தார் ரம்யா. பதிலுக்கு கனியும் சபரியும் ரம்யாவை விட்டுத் தள்ளியிருப்பதாக அறிவித்தார்கள். இதெல்லாம் ஆட்டத்தின் போக்கில் நிகழ்வது. ஒருவர் individual player ஆக இருப்பது அவரை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.  ஆனால் ரம்யா இதை பர்சனலாக எடுத்துக்கொண்டு “இந்த ஆட்டத்துக்கு நான் செட் ஆக மாட்டேன் போலிருக்கு. முன்ன காசு இல்ல. நிம்மதி இருந்தது. இப்ப காசு வந்திருக்கு. ஆனா நிம்மதி போயிடுச்சு.. வெளியே போணும்’ என்கிற மாதிரி கலங்கிக் கொண்டிருக்க “அதையெல்லாம் விடு ‘தல’ போட்டிக்கு செலக்ட் ஆகியிருக்க.. அதுல கான்ஸ்ன்டிரேட் பண்ணு” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.  மற்றவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவது, அவர்களுக்கு வழிகாட்டுவது, எதிரியாக இருந்தாலும் அவர்களின் வெற்றியைக் கண்டு உண்மையாகவே சந்தோஷப்படுவது போன்றவை விக்ரமின் நல்ல குணாதிசயங்களாக தெரிகின்றன. ஒருவேளை பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இவற்றை வலுக்கட்டாயமாக பாவனை செய்வதாக இருந்தாலும் நல்ல விஷயம்தான்.  ஆனால் பிறகு தல போட்டியில் வெற்றி பெற்ற ரம்யா “என் முயற்சியால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நானே என்னை லவ் பண்றேன்” என்றுதான் கூறினார். விக்ரம் பற்றி ஒரு வார்த்தையும் சொன்னதாகத் தெரியவில்லை. சட்டென்று உணர்ச்சிவசப்படும் ரம்யா, வீட்டு ‘தல’யாக மிகவும் அவஸ்தைப்படுவார் என்று தோன்றுகிறது.  BB Tamil 9: Day 57 Review FJ - ஆதிரை சந்திப்பு - ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’ மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த FJ - ஆதிரை சந்திப்பு நடந்தது. ஆனால் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. “என்ன நடக்குது?” என்று ஆதிரை ஆரம்பிக்க “அதான் வெளியே பார்த்துட்டு வந்திருப்பியே.. சர்காஸமா சிரிக்கற?” என்று சாமர்த்தியமாக நழுவினார் FJ. “நான்தான் முன்னமே சொன்னேனே.. ஒரு மாதிரி ஃபீலிங்க்ஸ் ஆவுதுன்னு சொன்னே.. அதெல்லாம் வேணாம்ன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்..” என்று FJ சொல்ல “நான் எப்ப ஃபீலிங்க்ஸ்ன்னு சொன்னேன்.. ஒரு comfortable zone இருக்குது..உனக்கும் எனக்கும் செட் ஆகுதுன்னுதான் சொன்னேன்’ என்று அதை மறுத்துக் கொண்டிருந்தார் ஆதிரை. (காமிரால எல்லாம் ரிகார்டு ஆகும் போதே இப்படிப் பேசறாங்க!) நாள் 57: ‘வந்துச்சே ஃபீலிங்க்ஸூ’ என்று டைமிங்கான பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘ஒண்ணுமே புரியலையே’ என்று பிக் பாஸ் 9 தீம் பாடலை, காமிரா முன்பு வியானா பரிதாபமாக பாடிக்கொண்டிருந்தார். ஆதிரையின் என்ட்ரி அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘ஆதிரை எப்படி வெளியே போனாங்க.. நல்லா யோசிச்சுப் பாரு.. உனக்கான விடை அதுல இருக்கு’ என்று ரோபோ முகத்துடன் சொன்னார் சான்ட்ரா. FJவை தலை முழுகி விட்டு தனியாக ஆடத் தொடங்கினால் கொஞ்சமாவது உருப்படலாம் என்று அர்த்தம்.  சுபிக்ஷா எப்போதும் மீனவர் சமூகத்தைப் பற்றியே பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு புகாராகவே வருகிறது. மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கூட ‘சுபி.. கடலை விட்டு வெளியே வாம்மா’ என்று யாரோ (திவ்யா?!) எழுதியிருந்தார்கள். இது தொடர்பாக விக்ரம் தந்த ஆலோசனை பாராட்டத்தக்கது.  BB Tamil 9: Day 57 Review “நீ சார்ந்திருக்கிற சமூகம் பத்தின பிரச்னைகளைப் பத்தி தொடர்ந்து பேசற.. நல்ல விஷயம். பாராட்டுக்கள். ஆனா அதுக்குப் பின்னாடி நீ ஒளிஞ்சிட்டு இருக்கற மாதிரி இருக்குது. சுபிக்ஷா யாருன்னு மக்களுக்கு தெரிய வேண்டாமா?” என்று சரியான அட்வைஸை தந்து கொண்டிருந்தார் விக்ரம்.  வீட்டு ‘தல’யாக ரம்யா சாதிப்பாரா? சந்தேகம்தான் தல போட்டி ஆரம்பித்தது. ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த ரம்யா, பிரஜினோடு புது என்ட்ரியான ஆதிரையையும் உள்ளே நுழைத்தார் பிக் பாஸ். (உன் வாய்.. உன் உருட்டு என்பது மாதிரி பிக் பாஸ் வீட்டின் விதிகளே கோக்குமாக்கானவை!) பிஸிக்கல் டாஸ்க் என்றால் ஒருவேளை பிரஜின் ஜெயித்திருக்கக்கூடும். ஆனால் நிதானமாக ஆட வேண்டிய பந்து விளையாட்டு என்பதால் ரம்யா விரைவில் வெற்றி பெற்றார். “இந்த வாரத்துல நான் தனியா ஆடினேன். அதனாலதான் ஜெயிக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்று பெருமிதமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா.  BB Tamil 9: Day 57 Review நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. வீட்டு தல ரம்யாவையும் ரீ என்ட்ரி ஆதிரையையும் நாமினேட் செய்ய முடியாது. கன்பெஷன் ரூமில் நடந்த நாமினேஷன் என்பதால் காரணங்கள் ரகளையாக இருந்தது. பாருவின் மாதாந்திர அவஸ்தை குறித்து அமித் எள்ளலாக பேசியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. எனவே அந்தக் காரணத்தை வைத்து அமித்தை குத்தினார்கள்.  ‘நீ சாப்பாடுதான் சாப்பிடறியா?’ என்று கம்ருதீன் ஆபாசமாகப் பேசியதால் அவரை நாமினேட் செய்தார் திவ்யா. பதிலுக்கு கம்முவும் திவ்யாவின் பெயரைச் சொன்னார். வீட்டு தல, அஸிஸ் வார்டன் என்கிற இரண்டு பொறுப்புகளையும் சரியாகக் கையாளாத FJ மீதும் வாக்குகள் விழுந்தன. “அவரு பொண்ணுங்களை வெச்சு ‘comfort zone’ ஆட்டத்தை கேவலமா ஆடுறாரு’ என்று காட்டமான காரணத்தைச் சொன்னார் ஆதிரை.  டிரையாங்கிள் டிராமாவை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் பாரு “பர்சனல் காரணங்களை வெச்சு என்னைப் பழிவாங்கறாங்க’ என்று பாரு குறித்து காரணம் சொன்னார் அரோரா. “சண்டைதான் இங்க என்டர்டெயின்மென்ட்டுன்னு பாரு ஓப்பனாவே சொல்றாங்க. அதைத்தான் கிரியேட்டிவிட்டின்னு நெனக்கறாங்க” என்றார் FJ. “சான்ட்ரா அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பிளே பண்றாங்க” என்பதும் அவர் சொன்ன காரணம்.  இது முடிந்ததும் காரணங்களைச் சொல்லி பெயர்களைச் சொன்னார் பிக் பாஸ். ஆனால் ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற காமெடி மாதிரி, யார் எதைச் சொல்லியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த அளவிற்கு திறமையாக போட்டுக்கொடுத்தார் பிக் பாஸ்.  இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், FJ, திவ்யா, கம்ருதீன், பாரு, பிரஜின், அமித், சான்ட்ரா, விக்ரம், வினோத், கனி மற்றும் சுபிக்ஷா. தப்பித்தவர்கள் வியானா மற்றும் சபரி.  BB Tamil 9: Day 57 Review காரணங்கள் வெளிப்படையாகத் தெரிந்ததால் “ஏன் அப்படிச் சொன்னே..?” என்று கம்மு அரோராவிடம் கேட்க “அவ என்னை ரொம்ப அவமானப்படுத்தியிருக்கா.. சாணி கரைச்சு ஊத்தினா கூட நீ போவே. என்னால முடியாது.” என்று அரோரா காட்டமாக பதிலளிக்க “அப்படின்னா இனி என் கூட பேசாத’ என்று இருவருக்கும் முட்டிக்கொண்டது.  அரோராவிடம் சண்டை என்பதால் மறுபடியும் பாருவிடம் தஞ்சமடைந்தார் கம்ருதீன். (இவன் இன்னும் திருந்தலை மாமா!) “அவ உன்னை வெச்சு கேம் ஆடறா.. இந்த வாரம் அவ தப்பிச்சிட்டா பாத்தியா?” என்று ஏற்றிக் கொடுத்தார் பாரு.  “நீங்க மூணு பேரும் பண்றது வெளில பார்க்க நல்லா இல்லை. எல்லாமே மெச்சூர்ட் ஆனவங்கதானே?” என்று பாருவிற்கு எச்சரிக்கை மணி அடித்தார் ஆதிரை. இதனால் ஞானோதயம் பெற்ற பாரு, அரோராவை சந்தித்து ‘இந்த டிரையாங்கிள் டிராமாவை முடிச்சுக்கலாம்’ என்று ஒப்பந்தம் பேச “இங்க பாரும்மா. கம்மு மேல எனக்கு ஒண்ணுமே கிடையாது. நீங்க இப்படியே வெளில போயி பக்கத்து கோயில்ல கூட கல்யாணம் பண்ணிக்கங்க.. எனக்குப் பிரச்சினையே இல்ல” என்று கையைக் கழுவினார் அரோரா.  BB Tamil 9: Day 57 Review வெட்டியாக ஆரம்பித்த பட்டி மன்றம் - ஆண்களா, பெண்களா? ‘ஏதாவது கன்டென்ட் வேணுமே.. இவிங்களை வெச்சிக்கிட்டு இந்த சீசனை எப்படித்தான் நகர்த்தறது?’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்க பிக் பாஸ் டீம், ஒருவழியாக ஒரு ஐடியாவை ஆரம்பித்தது. பட்டிமன்றங்களில் வரும் அரதப்பழசான தலைப்பு.  வீட்டை சுத்தமாக நிர்வகிப்பது ஆண்களா அல்லது பெண்களா என்று இருவரையும் மோதவிட திட்டமிடப்பட்டது. ‘யார் நடுவராக இருப்பது?’ என்பதிலேயே பெண்கள் அணிக்குள் தகராறு ஆரம்பித்துவிட்டது.  “அணியில் இருந்து பேசுவதற்குத் திறமையான ஆட்கள் வேண்டும். அப்படி அல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கட்டும்” என்பது போல் பெண்கள் அணி திட்டமிட்டது அபத்தமானதொன்று. ஒரு நல்ல நடுவர் திறமையாக பேச்சாளராகவும் இருக்க வேண்டும்.  ‘நானும் நடுவரா இருப்பேன்’ என்று வம்படியாக எழுந்த வந்த வியானா “எதிர்ப் பக்கம் என்ன பாயின்ட் சொன்னாலும் அதை டிவிஸ்ட் செஞ்சு நம்ம அணிக்கு சாதகமா வர்ற மாதிரி பேசுவேன்” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார். ‘பாரபட்சமா இருப்பேன்னு ஒரு நடுவரே ஓப்பனா பேசறாங்க. இவங்களை எப்படி ஒத்துக்க முடியும்?” என்று விக்ரம் தலைமையில் ஆண்கள் அணியினர் ஆட்சேபம் எழுப்பினார்கள். எனவே வியானாவை தூக்கி விட்டு அரோராவை நடுவராக மாற்றினார்கள். “டம்மி பீஸா எப்படி ஜெயிக்கறது?’ என்று அரோரா சொன்னதை தனக்கு சொன்னதாக நினைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டார் வியானா.  பெண்கள் அணி இத்தனை மோதல்களுக்குப் பிறகு நடுவரை அறிவிக்க, ஆண்கள் அணியோ ஒரு சத்தமும் இல்லாமல் மிக சமர்த்தாக நடுவரை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அந்தத் தேர்வுதான் கோக்குமாக்காக இருந்தது. கம்ருதீன் நடுவராம்.  BB Tamil 9: Day 57 Review அரோரா தந்த பாரபட்சமான தீர்ப்பு - கிச்சானாலே இளிச்சவாயன்தான் பட்டிமன்றம் ஆரம்பித்தது. முதலில் களத்தில் இறங்கிய சபரி “ஆண்கள் கிச்சன் டீம்ல இருந்தப்ப ஒரு பிரச்சினையும் வரவேயில்ல. கிச்சன் சுத்தமா இருந்தது. விசேவே பாராட்டினார். அதுக்கு அப்புறம் சாம்பார் அணில பெண்கள் வந்தாங்க. ‘கிச்சன் மூடப்பட்டது’ன்னு ஒருமுறை சொன்னாங்க. நாங்க இருந்தப்போ கிச்சனை மூடவேயில்ல. இதுல இருந்தே தெரியலையா.. ஆண்கள் அணிதான் சிறந்தது’ என்று முழங்கினார்.  அதற்குப் போட்டியாக இறங்கிய பாரு, தகுதியான காரணங்களுக்குப் பதிலாக “நாங்கதான் அம்மா மாதிரி இருந்து கருணையுள்ளத்தோட சோறு போட்டோம். அம்மி வெச்சு முதன் முதலா வடை சுட்டது பெண்கள்தான்’ என்று சென்டிமென்ட் தூவிப் பேசினார்.  ஆண்கள் அணியில் அடுத்து இறங்கிய விக்ரம் “அற்ப மானிடன்.. என்னைக் கூட மதிக்க வேணாம்யா.. பிக் பாஸைக் கூட இவங்க மதிக்கலை. தாங்க இருக்கற வீட்டை மட்டும் சுத்தமா கூட்டிட்டு மத்த ஏரியாக்களை அப்படியே விட்டுட்டாங்க. ஜெயிலுக்குப் போறதுக்கு கூட ராத்திரி முழுக்க ராவடி பண்ணாங்க” என்று சான்ட்ரா - திவ்யா சம்பவத்தைப் பற்றி ஆவேசமாக பேசினார். அவர்கள் செய்த அட்ராசிட்டி காரணமாக விக்ரமின் உண்மையான வயிற்றெரிச்சல் வெளியே வந்தது.  இதற்குப் பதிலடி தர வேண்டிய சுபிக்ஷா “திவாகர் ஏன் சமையல் டீம்ல இருந்து ரிசைன் பண்ணாரு.. திவ்யாவிற்கு உடம்பு முடியலைன்னாலும் முடிஞ்ச வரைக்கும் சுத்தம் பண்ணாங்க” என்று பலவீனமாக எதிர் வாதம் வைத்தார். அடுத்து நடந்த FJ - ஆதிரை வாதமும் மோசம்தான்.  BB Tamil 9: Day 57 Review ‘பெண்கள் அணிதான் வெற்றி பெற்றது’ என்று அரோரா அநியாயமாக அறிவிக்க, கூட இருந்த கம்ருதீன் அசட்டு இளிப்புடன் சும்மா இருந்தார்.  வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் நெக்லஸைத் திருட வேண்டிய வீக்லி டாஸ்க்கை இந்த வாரத்தில் பிக் பாஸ் அறிவித்திருப்பது இன்றைய புரொமோவில் தெரிகிறது. இந்த சீசனை எப்படியாவது ஒப்பேற்றி விடுவதற்காக பிக் பாஸ் நிறைய சிரமப்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. 

விகடன் 2 Dec 2025 12:32 pm

முத்துமலர் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜய் சித்தி, கொந்தளித்த சாரதா –பரபரப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்- காவிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, இனிமேல் உங்களை கஷ்டப்படுத்தாமல் எல்லா பிரச்சினையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு விஜய், நாம் இருவரும் கணவன்- மனைவி. எந்த பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து சமாளிக்கலாம். எதைப்பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்கு. இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி காவிரியை சமாதானம் செய்து தூங்க வைத்தார். முத்து மலர், என்ன பண்றீங்க அக்கா? என்று […] The post முத்துமலர் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜய் சித்தி, கொந்தளித்த சாரதா – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 11:56 am

பணக்காரங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க, ஆனால் –மனம் திறந்து பேசிய நடிகை தீபா சங்கர்

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகையாக திகழ்பவர் தீபா சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் அரியப்பட்டது என்னவோ கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் தான். அதன் பின் இவருக்கு மிகப்பெரிய […] The post பணக்காரங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க, ஆனால் – மனம் திறந்து பேசிய நடிகை தீபா சங்கர் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 10:20 am

Sivakarthikeyan: மூளை கம்மியா இருக்கறதாலதான் நடிக்க முடியுது - ஜாலியாக பேசிய எஸ்.கே!

சென்னையில் நடைபெற்ற Fanly பொழுதுபோக்கு செயலியின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அனைவரையும் கவரும் வகையில் தனக்கும் தனது ரசிகர்களுக்குமான உறவு பற்றியும் சமூக வலைத்தளங்கள் பற்றியும் பேசியுள்ளார். Sivakarthikeyan பேச்சு! இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான். சிவகார்த்திகேயன் நான் எப்பவுமே என்னுடைய ஃபேன்ஸ என் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்னு சொல்லுவேன். ஏன்னா அவங்கள ஒரு ஃபேமிலியா பார்க்கிறேன்... என் ஃபேன்ஸ் டிஸ்ட்ராக்ட் ஆகிடக் கூடாது, வேற எதோ அவங்க மைண்டுக்குள்ள திணிச்சிடக் கூடாதுங்கிறத நான் மைண்ட்ல எப்பவும் வச்சிருப்பேன். எனக்கு எப்படிப்பட்ட ஃபேன்ஸ் இருக்கணும்னு ஆசைப்படுறேன்னா, என்ன வர்ஷிப் பண்ற ஃபேன்ஸ் வேண்டாம். அவங்க வர்ஷிப் பண்ண வேண்டியது கடவுளையும் அவங்க அப்பா அம்மாவையும் தான். என் கூட பிரெண்ட்லியா பேசுற, இல்ல ஒரு அண்ணன் தம்பி மாதிரி இருக்கிற, அப்படி பழகுற ஒரு ஃபேன்ஸ் தான் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். social media - சோஷியல் மீடியா ஏன்னா இன்னைக்கு வந்து சோசியல் மீடியால, நிறைய ஆப்ஸ்ல ட்ராக்ஷனுக்காக நெகட்டிவிட்டீஸ தான் புரமோட் பண்றாங்க. ட்ராக்ஷனுக்காகவே தான் இன்னைக்கு நிறைய ட்வீட்ஸ்லாம் வருது. என்னமோ ஒன்னு பொய்யாவாது சொல்லுவோம் அதுக்கு தான் நிறைய ட்ராக்ஷன் இருக்குன்னு... பட் எங்களுக்கு ட்ராக்ஷன் வேண்டாம் எங்களுக்கு இன்பர்மேஷன் ஆத்தென்டிக்கா இருக்கணும். பாசிட்டிவான என்கேஜ்மென்ட் இருக்கணும்னு நினைக்கிறது ஒரு சூப்பரான சிந்தனை. எனக்கு இதுல அனிருத் வரணும்னு ரொம்ப ஆசை. அவருக்கு இது ரொம்ப பெர்ஃபெக்டா இருக்கும். உலகம் ஃபுல்லா ஒன்லி அனிருத்தோட மியூசிக் புடிச்சவங்க மட்டும் நிறைய பேர் இருக்காங்க. சோ, அனி ஃபேன்ஸ்க்குன்னு ஒரு தனியா ஒரு இடம் இருக்குன்னு கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. இது ரொம்ப ரொம்ப பாசிட்டிவான ஒரு சூழலை கிரியேட் பண்ணட்டும். என்றார். Amaran: ``சிந்திய ரத்தத்துக்கும், கண்ணீருக்கும் எளிய காணிக்கை'' - வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் அறிக்கை

விகடன் 2 Dec 2025 6:20 am

போஸின் முகத்திரையை கிழித்த சேது, அழுது புரண்டு ட்ராமா போடும் ஈஸ்வரி, அடுத்து என்ன? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, ஈஸ்வரி இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள். ஆனால், இதையெல்லாம் காவியா கேட்கவில்லை. அவர் காதில் ஹெட்செட் போட்டிருந்தார். பின் காவியா, கல்யாணத்தை எப்ப நிறுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மகனுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என்றார். இதை கேட்டு ஈஸ்வரி ஆடிப் போகிறாய். சித்ரா, எப்படியாவது அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தையாவது வாங்கணும். சேதுவை உண்மை சொல்ல விடக்கூடாது என்றெல்லாம் சொன்னார். ஈஸ்வரி, போஸுக்கு […] The post போஸின் முகத்திரையை கிழித்த சேது, அழுது புரண்டு ட்ராமா போடும் ஈஸ்வரி, அடுத்து என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 9:20 pm

மோகன் ஜி படம்ன்னு தெரிஞ்சியிருந்தா பாடியிருக்கவே மாட்டேன் –பாடகி சின்மயி வருத்தம்

மோகன் ஜி படத்தில் பாடியது பற்றி பாடகி சின்மயி போட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். ‘பழைய வண்ணார்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தான் மோகன் ஜி இயக்குனராக மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை […] The post மோகன் ஜி படம்ன்னு தெரிஞ்சியிருந்தா பாடியிருக்கவே மாட்டேன் – பாடகி சின்மயி வருத்தம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 9:00 pm

TVK விஜய்க்கு அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை.. ஓபனாக பேசிய கமல்..!

TVK விஜய்க்கு அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை.. ஓபனாக பேசிய கமல்..! கமல்ஹாசனிடம், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ‘திமுக தான் தங்களுக்கு முக்கிய எதிரி’ என விஜய் கூறி வருகிறார். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டதற்கு கமல்ஹாசன் கூறியதாவது, ‘என் எதிரி, நேரடி எதிரி என்றால் அது சாதிவெறி தான். சாதிவெறி என்பது ரொம்ப ரொம்ப...

தஸ்தர் 1 Dec 2025 8:09 pm

‘தலைவர் ரஜினியின்’-173 பட தாமதத்திற்கு காரணம் இதுதான்!

‘தலைவர் ரஜினியின்’-173 பட தாமதத்திற்கு காரணம் இதுதான்! ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் ‘தலைவர்-173’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. பார்க்கிங்” படம் மூலம் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து NOC-க்காக தற்போது காத்துக்கொண்டு இருக்கிறார். ஏனென்றால், அவர் இதற்கு முன்பு சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அப்படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவிருந்தார்....

தஸ்தர் 1 Dec 2025 8:00 pm

சரவெடியாக நடக்கும் நாமினேஷன் –யார்? யாரை சொல்லி இருக்காங்க பாருங்க –லிஸ்ட் இதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 57 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post சரவெடியாக நடக்கும் நாமினேஷன் – யார்? யாரை சொல்லி இருக்காங்க பாருங்க – லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 7:55 pm

‘அரசன்’ X தளத்தில் சிம்பு செய்த ட்வீட் வைரலாகி வருகிறது

‘அரசன்’ X தளத்தில் சிம்பு செய்த ட்வீட் வைரலாகி வருகிறது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், சிம்புவின் நடிப்பு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. இந்நிலையில், ‘தக் லைப்’ படத்தை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன்...

தஸ்தர் 1 Dec 2025 7:50 pm

GV Prakash: '''சூர்யா 46'அந்தப் படத்தைப் போன்றதொரு டோனில் இருக்கும்! - அப்டேட் தந்த ஜி.வி

நடிகர், மியூசிக் டைரக்டர் என பரபரப்பாக சுற்றி வருகிறார் ஜி.வி. பிரகாஷ். நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'மென்டல் மனதில்', இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் 'இம்மார்டல்' என நடிப்பில் அடுத்தடுத்த லைன் அப் வைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ், சூர்யா 46, தனுஷ் 54, பராசக்தி, மண்டாடி, துல்கர் சல்மானின் தெலுங்கு படம் என மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். Yuvan in Parasakthi - Sudha Kongara - GV Prakash கோவா திரைப்பட விழாவின் இறுதி நாளில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். அதில் அவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து சில அப்டேட்கள் தந்திருக்கிறார். அதில் அவர், எனக்கு இந்தாண்டு தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. 'லக்கி பாஸ்கர்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அத்லூரி எனக்கு அற்புதமான கதையைச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து எனக்கு நல்ல கதைகள் வருவதில் மகிழ்ச்சி. வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா சார் நடிக்கும் படத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதுவொரு ஃபேமிலி டிராமா திரைப்படம். படமும் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. 'அலா வைகுணடபுரமுலோ' படத்தின் டோனில் இந்தப் படமும் இருக்கும். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் 'ஆகாசம்லோ ஒக்கதாரா' படத்திற்கு இசையமைத்து வருகிறேன். GV Prakash சுதா கொங்கராவின் 'பராசக்தி' திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகிறது. நீலம் தயாரிப்பில் நான், சுனில், ஶ்ரீநாத் பாசி என மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறோம். அது பிப்ரவரி மாதம் வெளியாகும். நடிப்பு, இசை என இரண்டுமே வேறுபட்டது. நடிப்பிற்கு உடலளவில் உழைப்பைத் தர வேண்டும். இசை வேலைகளுக்கு சிந்தனையைப் பயன்படுத்த வேண்டும். எனப் பேசினார்.

விகடன் 1 Dec 2025 6:36 pm

ரோகினியை மிரட்டும் மேனேஜர், கோபத்தில் மீனா எடுத்த முடிவு என்ன? சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, மீனாவை பார்ப்பதால் என்ன தவறு? என்றார். விஜயா, மீனாவை யாரும் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்றெல்லாம் ரூல்ஸ் போட்டார். அதற்குப்பின் முத்து மாலை போட்டு கொண்டு வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து விஜயா- மனோஜ் இருவருமே கொந்தளித்து திட்டினார்கள். கடைசியில் முத்து, நான் கார் செட்டிலேயே தூங்கிக் கொள்கிறேன் என்று சென்று விட்டார். பின் கார் செட்டில் நடந்த பூஜைக்கு மீனா, மீனாவின் அம்மா, சத்யா எல்லோரும் […] The post ரோகினியை மிரட்டும் மேனேஜர், கோபத்தில் மீனா எடுத்த முடிவு என்ன? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 5:30 pm

சமந்தாவின் திருமணம் பற்றி இயக்குனர் ராஜின் முன்னாள் மனைவி போட்ட அதிர்ச்சி பதிவு –என்ன தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த […] The post சமந்தாவின் திருமணம் பற்றி இயக்குனர் ராஜின் முன்னாள் மனைவி போட்ட அதிர்ச்சி பதிவு – என்ன தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 5:29 pm

Samantha: 'ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும்' - பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய்துக் கொண்ட சமந்தா

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கோவை இஷா யோகா மையத்திலுள்ள லிங்க பைரவி கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. Samantha - Raj Nidimoru குடும்பத்தினர், நண்பர்கள் என மிக நெருங்கிய வட்டாரம் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சமந்தாவின் திருமணம் பூதசுத்தி விவாஹா முறையில் நடந்திருக்கிறது. இந்த பூதசுத்தி விவாஹா திருமண முறை குறித்தும், சமந்தாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் இஷா யோகா மையம், “லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது. Samantha - Raj Nidimoru ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தேவியின் எல்லையற்ற அருளும், பேரானந்தமும் அவர்களின் இணைவில் நிறைந்து இருக்க வாழ்த்துகிறது. ஈஷா யோகா மையத்தில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கபைரவி தேவி, பெண்தன்மையின் சக்திமிக்க வெளிப்பாடாகும். லிங்க பைரவி வளாகம் மக்களின் வாழ்வை வளமாக்கும் சடங்குகளுக்கு ஒரு துடிப்பான இருப்பிடமாகத் திகழ்கிறது. இங்கு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவியின் அருளைப் பெறும் வகையிலான சடங்குகள் நடைபெறுகின்றன” எனத் தெரிவித்திருக்கிறது.

விகடன் 1 Dec 2025 4:38 pm

Samantha: 'ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும்' - பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய்துக் கொண்ட சமந்தா

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கோவை இஷா யோகா மையத்திலுள்ள லிங்க பைரவி கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. Samantha - Raj Nidimoru குடும்பத்தினர், நண்பர்கள் என மிக நெருங்கிய வட்டாரம் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சமந்தாவின் திருமணம் பூதசுத்தி விவாஹா முறையில் நடந்திருக்கிறது. இந்த பூதசுத்தி விவாஹா திருமண முறை குறித்தும், சமந்தாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் இஷா யோகா மையம், “லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது. Samantha - Raj Nidimoru ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தேவியின் எல்லையற்ற அருளும், பேரானந்தமும் அவர்களின் இணைவில் நிறைந்து இருக்க வாழ்த்துகிறது. ஈஷா யோகா மையத்தில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கபைரவி தேவி, பெண்தன்மையின் சக்திமிக்க வெளிப்பாடாகும். லிங்க பைரவி வளாகம் மக்களின் வாழ்வை வளமாக்கும் சடங்குகளுக்கு ஒரு துடிப்பான இருப்பிடமாகத் திகழ்கிறது. இங்கு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவியின் அருளைப் பெறும் வகையிலான சடங்குகள் நடைபெறுகின்றன” எனத் தெரிவித்திருக்கிறது.

விகடன் 1 Dec 2025 4:38 pm

‘அகண்டா-2’படம் குறித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய இயக்குநர் போயபதி ஸ்ரீனு 

‘அகண்டா-2’ படம் குறித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய இயக்குநர் போயபதி ஸ்ரீனு ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. சில காரணங்களால், தற்போது பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இதற்கிடையில், பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள ‘அகண்டா-2’ படம் வெளியாகவுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ர கபிர் துஹார் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற...

தஸ்தர் 1 Dec 2025 4:36 pm

சுந்தர்.சி &விஷால் மீண்டும் இணைந்து ஒரு புதிய அதிரடி அப்டேட்

சுந்தர்.சி & விஷால் மீண்டும் இணைந்து ஒரு புதிய அதிரடி அப்டேட் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருந்த ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய சுந்தர்.சி தனது அடுத்த படப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, தனது அடுத்த...

தஸ்தர் 1 Dec 2025 4:17 pm

சிறப்பாக நடந்து முடிந்த சமந்தா –ராஜ் நிடிமோருவின் இரண்டாம் திருமணம் –எங்கு தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த […] The post சிறப்பாக நடந்து முடிந்த சமந்தா – ராஜ் நிடிமோருவின் இரண்டாம் திருமணம் – எங்கு தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 4:01 pm

BB Tamil 9: இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்- அரோராவிடம் பேசும் பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எவிக்ஷன் இல்லாத வாரமாக பிக் பாஸ் அறிவித்துவிட்டார். BB Tamil 9 இதனால் இந்த வாரம் குறைவான ஓட்டை பெற்ற ரம்யா, வியானா எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டனர். மேலும் 21-வது நாளில் வெளியேறிய ஆதிரை நேற்று (நவ.30) மீண்டும் பிக் பாஸிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக இருந்தாலும் fJ வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியாகியிருந்தனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில், இந்த வாரத்திற்கான டாஸ்க் நடைபெற்றது. டாஸ்க்கில் வெற்றி பெற்ற ரம்யா இந்த வாரத்திற்கான வீட்டு தலயாகத் தேர்வாகியிருக்கிறார். BB Tamil 9 தற்போது வெளியாகியிருக்கும் 3-வது புரொமோவில் கம்ருதீன் விஷயத்தில் பார்வதிக்கும்-அரோராவுக்கும் நடக்கும் பிரச்னை குறித்து பார்வதி ஆதிரையிடம் பேசுகிறார். ட்ரையாங்கிள் மாதிரி எங்க விஷயம் போயிட்டு இருக்கு. அதை உடைக்கணும்'னு நான் நினைக்கிறேன் என்று பார்வதி சொல்ல, நீங்க பண்றது ரொம்ப சில்லியா இருக்கு. நீங்களா ஏன் ஒரு விஷயத்தை கிரியேட் பண்றீங்க. ப்ரெண்ட்ஷிப் இருக்கலாம். BB Tamil 9 ஆனா அதுக்காக நீயும் அரோராவும் ஏன் இப்படி பண்றீங்க என ஆதிரை அட்வைஸ் பண்ணுகிறார். இதனைத்தொடர்ந்து அரோரா நான் உன்கிட்ட பேசலாமா? இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும் என பார்வதி அரோராவிடம் பேசுகிறார்.

விகடன் 1 Dec 2025 3:38 pm

BB Tamil 9: இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்- அரோராவிடம் பேசும் பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எவிக்ஷன் இல்லாத வாரமாக பிக் பாஸ் அறிவித்துவிட்டார். BB Tamil 9 இதனால் இந்த வாரம் குறைவான ஓட்டை பெற்ற ரம்யா, வியானா எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டனர். மேலும் 21-வது நாளில் வெளியேறிய ஆதிரை நேற்று (நவ.30) மீண்டும் பிக் பாஸிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக இருந்தாலும் fJ வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியாகியிருந்தனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில், இந்த வாரத்திற்கான டாஸ்க் நடைபெற்றது. டாஸ்க்கில் வெற்றி பெற்ற ரம்யா இந்த வாரத்திற்கான வீட்டு தலயாகத் தேர்வாகியிருக்கிறார். BB Tamil 9 தற்போது வெளியாகியிருக்கும் 3-வது புரொமோவில் கம்ருதீன் விஷயத்தில் பார்வதிக்கும்-அரோராவுக்கும் நடக்கும் பிரச்னை குறித்து பார்வதி ஆதிரையிடம் பேசுகிறார். ட்ரையாங்கிள் மாதிரி எங்க விஷயம் போயிட்டு இருக்கு. அதை உடைக்கணும்'னு நான் நினைக்கிறேன் என்று பார்வதி சொல்ல, நீங்க பண்றது ரொம்ப சில்லியா இருக்கு. நீங்களா ஏன் ஒரு விஷயத்தை கிரியேட் பண்றீங்க. ப்ரெண்ட்ஷிப் இருக்கலாம். BB Tamil 9 ஆனா அதுக்காக நீயும் அரோராவும் ஏன் இப்படி பண்றீங்க என ஆதிரை அட்வைஸ் பண்ணுகிறார். இதனைத்தொடர்ந்து அரோரா நான் உன்கிட்ட பேசலாமா? இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும் என பார்வதி அரோராவிடம் பேசுகிறார்.

விகடன் 1 Dec 2025 3:38 pm

Suriya: நல்ல நண்பர்களாக இருங்க! - ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு சூர்யா வாழ்த்து

ரசிகரின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 'ரெட்ரோ' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். Suriya 46 இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்றம் சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நந்தாவின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூர்யா. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. வீடியோ காலில் பேசியிருக்கும் சூர்யா, உங்க இரண்டு பேருக்கும் எங்களோட வாழ்த்துகள். சந்தோஷமா இருங்க. நல்ல நண்பர்களா இருங்க. உங்களோட வாழ்க்கை அழகான பிரமாதமான வாழ்க்கையாக இருக்கட்டும். சந்தோஷம் எப்போதும் உங்க வாழ்க்கையில நிரந்தரமாக இருக்கட்டும் என வாழ்த்தியிருக்கிறார். . @Suriya_offl anna wished his Salem North District Fans club Head @Nandha_SalemSFC on his wedding through a video call. He always values his Fans! ❤️ pic.twitter.com/gWAnhwrNZs — All India Suriya Fans Club (@Suriya_AISFC) December 1, 2025 Suriya: அவரின் மகன் என்பதே எனக்கான அடையாளம் - தந்தை சிவகுமார் குறித்து சூர்யா நெகிழ்ச்சி

விகடன் 1 Dec 2025 2:56 pm

Suriya: நல்ல நண்பர்களாக இருங்க! - ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு சூர்யா வாழ்த்து

ரசிகரின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 'ரெட்ரோ' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். Suriya 46 இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்றம் சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நந்தாவின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூர்யா. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. வீடியோ காலில் பேசியிருக்கும் சூர்யா, உங்க இரண்டு பேருக்கும் எங்களோட வாழ்த்துகள். சந்தோஷமா இருங்க. நல்ல நண்பர்களா இருங்க. உங்களோட வாழ்க்கை அழகான பிரமாதமான வாழ்க்கையாக இருக்கட்டும். சந்தோஷம் எப்போதும் உங்க வாழ்க்கையில நிரந்தரமாக இருக்கட்டும் என வாழ்த்தியிருக்கிறார். . @Suriya_offl anna wished his Salem North District Fans club Head @Nandha_SalemSFC on his wedding through a video call. He always values his Fans! ❤️ pic.twitter.com/gWAnhwrNZs — All India Suriya Fans Club (@Suriya_AISFC) December 1, 2025 Suriya: அவரின் மகன் என்பதே எனக்கான அடையாளம் - தந்தை சிவகுமார் குறித்து சூர்யா நெகிழ்ச்சி

விகடன் 1 Dec 2025 2:56 pm

Samantha: 'இன்பம் எதுவரை! நாம் போவோம் அதுவரை!' - சமந்தா திருமண க்ளிக்ஸ் | Photo Album

Samantha: 1st love முதல் செல்போனுடன் toxic relationship வரை.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா

விகடன் 1 Dec 2025 2:41 pm