SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன்

முதுபெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இயற்கை எய்தியிருக்கிறார். தந்தை ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை அடுத்தடுத்த உயரங்களுக்குக் எடுத்துச்சென்ற பெருமை ஏ.வி.எம். சரவணனுக்கு உண்டு. தந்தை தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை ஸ்டுடியோவாக அடுத்த கட்டங்களுக்கு வளர்த்தெடுத்த புகழும் சரவணனையே சேரும். எப்போதும் நிற்காமல் சுற்றும் உருண்டை வடிவ ஏ.வி.எம். க்ளோப், பரப்பான சினிமா வேலைகள் நடக்கும் ஷூட்டிங் ஃப்ளோர் என இவருடைய காலத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோ ஆற்காடு சாலையின் அடையாளமாகவும் திகழ்ந்தது. சிறுவயதில் டி.வியில் படம் பார்த்த பலராலும் ஏ.வி.எம். க்ளோப்பை மறக்கமுடியாது. ஏ.வி.எம் சரவணன் சினிமாவில் உருவான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியவர் சரவணன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனத் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் தொடங்கி ஏ.வி.எம். தயாரிப்பில் பணியாற்றிய பலரும் சரவணனின் பண்பு குறித்து அவ்வளவு மெச்சிப் பேசுவார்கள். ஒரு திரைப்படத்தின் உதவி இயக்குநர் தொடங்கிக் கடைக்கோடி ஊழியர் வரைக்கும் சமமான மரியாதையைக் கொடுக்க விரும்புவாராம் சரவணன். மெல்லிய தேகம், வெள்ளை நிற உடை, கட்டிய கைகள்தான் சரவணனின் அடையாளம். புதுமுக இயக்குநரோ, சீனியர் இயக்குநரோ, யார் வந்தாலும் கட்டிய கைகளை அவிழ்க்கவே மாட்டார். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது “நம்மைச் சந்திக்கப் பெரிய ஆட்களும், சிறிய ஆட்களும் வருவார்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சிறியவர்களின் முன்னால் நாம் மமதையாகத் தெரிந்துவிடக் கூடாது” எனக் கூறி வியக்க வைத்திருக்கிறார். ஏ.வி.எம் சரவணன் தந்தை சொன்ன எல்லையைத் தாண்டவே மாட்டார் சரவணன். “அப்புச்சி சொல்றதை நாங்க மீறிச் செய்ய மாட்டோம். அப்புச்சி அதை அப்படிச் செய்யச் சொல்லியிருக்கார்” என ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் இருந்தவரை அவர் பேச்சை இவர் மீறியது கிடையாதாம். தொடர்ந்த சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் சில காலம் தயாரிப்பிலிருந்து விலகி இருக்கலாம் என அறிவுரை சொல்லியிருக்கிறார் மெய்யப்ப செட்டியார். அதனையே சரவணனும் பின்பற்றினார். பிறகு, மீண்டும் தயாரிப்பின் பக்கம் முடிவு செய்த ஏ.வி.எம். நிறுவனம் இரண்டு படங்களை கமிட் செய்தது. அந்த இரண்டு படங்களுக்குமே கமல்தான் கதாநாயகன். ஆனால், அப்போது இயக்குநர்களின் கமிட்மென்ட் காரணங்களால் தாமதமாகிக்கொண்டே சென்றது. அந்த நேரத்தில் சரவணன், பஞ்சு அருணாச்சலம் மூலமாக ரஜினியின் கால்ஷீட் பெற முயற்சித்திருக்கிறார்.தனக்கு முதல் வாய்ப்புக் கொடுத்த நிறுவனம் என்னும் நன்றியுணர்விற்காகத் தன்னிடம் இருந்த ரஜினி கால்ஷீட்டை அவர் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு விட்டுக்கொடுத்தார். அப்படித்தான் ஏ.வி.எம். தயாரிப்பில் ‘முரட்டுக் காளை’ திரைப்படம் நிகழ்ந்தது. ஏ.வி.எம். - ரஜினி ஹிட் வரிசைக்குத் தொடக்கமிட்டதும் இத்திரைப்படம்தான். பஞ்சு அருணாச்சலத்திடம் சரவணன் ரஜினியின் கால்ஷீட் கேட்டதற்குப் பின்னால் பெரிய கதை இருக்கிறது. சரவணன், ஏ.வி.எம். நிறுவனத்தின் புகழை உயரப் பறக்க வைக்கவேண்டும் என விரும்பினார். மீண்டும் தயாரிப்புப் பக்கம் உறுதிப்பாட்டுடன் அடுத்தடுத்துத் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த ஆசைகள் தாமதமாகிக்கொண்டே போனது. அப்படியான வேளையில் சரவணனுக்குள் ஒரு பயமும் எழுந்தது. ஏ.வி.எம் சரவணன் அந்தச் சூழலை ஒருமுறை விளக்கியவர், “ரொம்ப நாளைக்குப் பிறகு இண்டஸ்ட்ரி நல்லா இருக்கு. நாம திரும்பவும் படம் எடுக்கலாம்’ங்கிற எண்ணத்துக்கு அப்புச்சி வந்தாங்க. ஆனா, கமிட் பண்ணின அந்த இரண்டு படங்களும் தள்ளிப்போகுது. இப்ப ரஜினியும் ‘அடுத்த வருஷம் கால்ஷீட் தர்றேன்’னு சொன்ன விஷயத்தை அப்புச்சிகிட்ட சொன்னா, அவர் மூட் அவுட் ஆகி, ‘நமக்கும் படம் எடுக்கிறதுக்கும் ராசி இல்லைபோல. நல்லா வசதியா இருக்கோம். போதும், நீங்க பேசாம ஸ்டுடியோவை மட்டும் கவனிச்சுக்கங்க’னு சொல்லிட்டார்னா எந்தக் காலத்துலயும் இனி நாங்க படம் எடுக்க முடியாது. ஏன்னா, அப்புச்சி பேச்சை நாங்க தட்ட மாட்டோம்னு உங்களுக்கே தெரியும்!” எனச் சொல்லியிருக்கிறார். தந்தை முடிவை மாற்றவிடக்கூடாது என்ற யோசனையில்தான் பஞ்சு அருணாச்சலத்திடம் வெளிப்படையாகவே ரஜினி கால்ஷீட்டை விட்டுத் தரக் கேட்டிருக்கிறார். சரவணனின் தாத்தா அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பல்பொருள் அங்காடியை வைத்திருக்கிறார். தாத்தாவின் ஐடியாவைத்தான் சரவணனும் பிற்காலத்தில் பின்பற்றினார். ஆக்‌ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து வகையான உணர்வுகளையும் சரவணன் தயாரித்த படைப்புகள் உள்ளடக்கியது. சரவணனின் சரியான திட்டமிடல்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நிறுவனத்தை மெருகேற்றியது எனக் கோலோச்சத் தொடங்கியது ஏ.வி.எம். நிறுவனம். அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் கால்ஷீட்கள் அனைத்துமே ஏ.வி.எம். நிறுவனத்தின் கைகளில் இருக்கும். Rajini - AVM Saravan காலமாற்றத்திற்கேற்ப வித்தியாசமானப் படங்களையும், மக்களின் ரசனைகளுக்கேற்ப புதிய வகையான படைப்புகளைத் தந்துவிட யோசித்துத்தான் சரவணன் ஷங்கர் - ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்திற்காக இணைந்தார். அப்படத்தை அத்தனை பிரமாண்டமாக எடுக்க முடிந்ததற்கும் காரணம் சரவணன்தான். கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ், ARRI கேமிராக்கள், ‘வாஜி வாஜி’ பாடலுக்கான பிரமாண்ட செட் என 'சிவாஜி'-யில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்க வைத்தவர் சரவணன். - தமிழ் சினிமாவில் அவர் பெயர் ஆழப்பதிந்திருக்கும்!

விகடன் 4 Dec 2025 2:08 pm

AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன்

முதுபெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இயற்கை எய்தியிருக்கிறார். தந்தை ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை அடுத்தடுத்த உயரங்களுக்குக் எடுத்துச்சென்ற பெருமை ஏ.வி.எம். சரவணனுக்கு உண்டு. தந்தை தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை ஸ்டுடியோவாக அடுத்த கட்டங்களுக்கு வளர்த்தெடுத்த புகழும் சரவணனையே சேரும். எப்போதும் நிற்காமல் சுற்றும் உருண்டை வடிவ ஏ.வி.எம். க்ளோப், பரப்பான சினிமா வேலைகள் நடக்கும் ஷூட்டிங் ஃப்ளோர் என இவருடைய காலத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோ ஆற்காடு சாலையின் அடையாளமாகவும் திகழ்ந்தது. சிறுவயதில் டி.வியில் படம் பார்த்த பலராலும் ஏ.வி.எம். க்ளோப்பை மறக்கமுடியாது. ஏ.வி.எம் சரவணன் சினிமாவில் உருவான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியவர் சரவணன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனத் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் தொடங்கி ஏ.வி.எம். தயாரிப்பில் பணியாற்றிய பலரும் சரவணனின் பண்பு குறித்து அவ்வளவு மெச்சிப் பேசுவார்கள். ஒரு திரைப்படத்தின் உதவி இயக்குநர் தொடங்கிக் கடைக்கோடி ஊழியர் வரைக்கும் சமமான மரியாதையைக் கொடுக்க விரும்புவாராம் சரவணன். மெல்லிய தேகம், வெள்ளை நிற உடை, கட்டிய கைகள்தான் சரவணனின் அடையாளம். புதுமுக இயக்குநரோ, சீனியர் இயக்குநரோ, யார் வந்தாலும் கட்டிய கைகளை அவிழ்க்கவே மாட்டார். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது “நம்மைச் சந்திக்கப் பெரிய ஆட்களும், சிறிய ஆட்களும் வருவார்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சிறியவர்களின் முன்னால் நாம் மமதையாகத் தெரிந்துவிடக் கூடாது” எனக் கூறி வியக்க வைத்திருக்கிறார். ஏ.வி.எம் சரவணன் தந்தை சொன்ன எல்லையைத் தாண்டவே மாட்டார் சரவணன். “அப்புச்சி சொல்றதை நாங்க மீறிச் செய்ய மாட்டோம். அப்புச்சி அதை அப்படிச் செய்யச் சொல்லியிருக்கார்” என ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் இருந்தவரை அவர் பேச்சை இவர் மீறியது கிடையாதாம். தொடர்ந்த சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் சில காலம் தயாரிப்பிலிருந்து விலகி இருக்கலாம் என அறிவுரை சொல்லியிருக்கிறார் மெய்யப்ப செட்டியார். அதனையே சரவணனும் பின்பற்றினார். பிறகு, மீண்டும் தயாரிப்பின் பக்கம் முடிவு செய்த ஏ.வி.எம். நிறுவனம் இரண்டு படங்களை கமிட் செய்தது. அந்த இரண்டு படங்களுக்குமே கமல்தான் கதாநாயகன். ஆனால், அப்போது இயக்குநர்களின் கமிட்மென்ட் காரணங்களால் தாமதமாகிக்கொண்டே சென்றது. அந்த நேரத்தில் சரவணன், பஞ்சு அருணாச்சலம் மூலமாக ரஜினியின் கால்ஷீட் பெற முயற்சித்திருக்கிறார்.தனக்கு முதல் வாய்ப்புக் கொடுத்த நிறுவனம் என்னும் நன்றியுணர்விற்காகத் தன்னிடம் இருந்த ரஜினி கால்ஷீட்டை அவர் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு விட்டுக்கொடுத்தார். அப்படித்தான் ஏ.வி.எம். தயாரிப்பில் ‘முரட்டுக் காளை’ திரைப்படம் நிகழ்ந்தது. ஏ.வி.எம். - ரஜினி ஹிட் வரிசைக்குத் தொடக்கமிட்டதும் இத்திரைப்படம்தான். பஞ்சு அருணாச்சலத்திடம் சரவணன் ரஜினியின் கால்ஷீட் கேட்டதற்குப் பின்னால் பெரிய கதை இருக்கிறது. சரவணன், ஏ.வி.எம். நிறுவனத்தின் புகழை உயரப் பறக்க வைக்கவேண்டும் என விரும்பினார். மீண்டும் தயாரிப்புப் பக்கம் உறுதிப்பாட்டுடன் அடுத்தடுத்துத் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த ஆசைகள் தாமதமாகிக்கொண்டே போனது. அப்படியான வேளையில் சரவணனுக்குள் ஒரு பயமும் எழுந்தது. ஏ.வி.எம் சரவணன் அந்தச் சூழலை ஒருமுறை விளக்கியவர், “ரொம்ப நாளைக்குப் பிறகு இண்டஸ்ட்ரி நல்லா இருக்கு. நாம திரும்பவும் படம் எடுக்கலாம்’ங்கிற எண்ணத்துக்கு அப்புச்சி வந்தாங்க. ஆனா, கமிட் பண்ணின அந்த இரண்டு படங்களும் தள்ளிப்போகுது. இப்ப ரஜினியும் ‘அடுத்த வருஷம் கால்ஷீட் தர்றேன்’னு சொன்ன விஷயத்தை அப்புச்சிகிட்ட சொன்னா, அவர் மூட் அவுட் ஆகி, ‘நமக்கும் படம் எடுக்கிறதுக்கும் ராசி இல்லைபோல. நல்லா வசதியா இருக்கோம். போதும், நீங்க பேசாம ஸ்டுடியோவை மட்டும் கவனிச்சுக்கங்க’னு சொல்லிட்டார்னா எந்தக் காலத்துலயும் இனி நாங்க படம் எடுக்க முடியாது. ஏன்னா, அப்புச்சி பேச்சை நாங்க தட்ட மாட்டோம்னு உங்களுக்கே தெரியும்!” எனச் சொல்லியிருக்கிறார். தந்தை முடிவை மாற்றவிடக்கூடாது என்ற யோசனையில்தான் பஞ்சு அருணாச்சலத்திடம் வெளிப்படையாகவே ரஜினி கால்ஷீட்டை விட்டுத் தரக் கேட்டிருக்கிறார். சரவணனின் தாத்தா அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பல்பொருள் அங்காடியை வைத்திருக்கிறார். தாத்தாவின் ஐடியாவைத்தான் சரவணனும் பிற்காலத்தில் பின்பற்றினார். ஆக்‌ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து வகையான உணர்வுகளையும் சரவணன் தயாரித்த படைப்புகள் உள்ளடக்கியது. சரவணனின் சரியான திட்டமிடல்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நிறுவனத்தை மெருகேற்றியது எனக் கோலோச்சத் தொடங்கியது ஏ.வி.எம். நிறுவனம். அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் கால்ஷீட்கள் அனைத்துமே ஏ.வி.எம். நிறுவனத்தின் கைகளில் இருக்கும். Rajini - AVM Saravan காலமாற்றத்திற்கேற்ப வித்தியாசமானப் படங்களையும், மக்களின் ரசனைகளுக்கேற்ப புதிய வகையான படைப்புகளைத் தந்துவிட யோசித்துத்தான் சரவணன் ஷங்கர் - ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்திற்காக இணைந்தார். அப்படத்தை அத்தனை பிரமாண்டமாக எடுக்க முடிந்ததற்கும் காரணம் சரவணன்தான். கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ், ARRI கேமிராக்கள், ‘வாஜி வாஜி’ பாடலுக்கான பிரமாண்ட செட் என 'சிவாஜி'-யில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்க வைத்தவர் சரவணன். - தமிழ் சினிமாவில் அவர் பெயர் ஆழப்பதிந்திருக்கும்!

விகடன் 4 Dec 2025 2:08 pm

AVM Saravanan: அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்- கண்ணீரில் சிவகுமார்

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது. சிவாஜி, கமல்ஹாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நான் உட்பட பல பேரை ஏ.வி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே கிடையாது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். ஏ.வி.எம் சரவணன் 1965-ல் என்னை இந்த நிறுவனம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது. என்னுடைய சொந்தபெயர் பழனிசாமி. இந்தப் பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர் ஏ.வி.எம் சரவணன் சார்தான். அவரின் நியாபக அர்த்தமாகத்தான் சூர்யாவிற்கு சரவணன் என்று பெயர் வைத்தேன். என்னுடைய முதல் படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எடுத்துவிட்டார்கள். அதனால் நான் அழுதேன். அப்போது சரவணன் சார் என்னிடம் மன்னித்து விடுங்கள் சிவகுமார். சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுப்போம் என்று சொன்னார். அதன்பிறகு 'உயர்ந்த மனிதன்' என்ற ஒரு படத்தில் நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. என்னுடைய அடுத்த தலைமுறையில் சூர்யாவிற்கு 'பேரழகன்', 'அயன்' படங்களைக் கொடுத்தார்கள். சிவகுமார் - சூர்யா இரண்டுமே வெற்றி படங்கள். சூர்யா வாழ்வில் மறக்கமுடியாத இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எனது முதல் படத்தின் சம்பளம் 1000 ரூபாய். ஆனால் சூர்யாவிற்கு அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் பல ஹிட்டான படங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். 88 வருட வாழ்க்கையை சரவணன் சார் நிறைவாக வாழ்ந்துவிட்டு இறந்திருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். AVM Saravanan: 66 ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்- இயக்குநர் வசந்த்

விகடன் 4 Dec 2025 2:01 pm

AVM Saravanan: அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்- கண்ணீரில் சிவகுமார்

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது. சிவாஜி, கமல்ஹாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நான் உட்பட பல பேரை ஏ.வி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே கிடையாது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். ஏ.வி.எம் சரவணன் 1965-ல் என்னை இந்த நிறுவனம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது. என்னுடைய சொந்தபெயர் பழனிசாமி. இந்தப் பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர் ஏ.வி.எம் சரவணன் சார்தான். அவரின் நியாபக அர்த்தமாகத்தான் சூர்யாவிற்கு சரவணன் என்று பெயர் வைத்தேன். என்னுடைய முதல் படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எடுத்துவிட்டார்கள். அதனால் நான் அழுதேன். அப்போது சரவணன் சார் என்னிடம் மன்னித்து விடுங்கள் சிவகுமார். சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுப்போம் என்று சொன்னார். அதன்பிறகு 'உயர்ந்த மனிதன்' என்ற ஒரு படத்தில் நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. என்னுடைய அடுத்த தலைமுறையில் சூர்யாவிற்கு 'பேரழகன்', 'அயன்' படங்களைக் கொடுத்தார்கள். சிவகுமார் - சூர்யா இரண்டுமே வெற்றி படங்கள். சூர்யா வாழ்வில் மறக்கமுடியாத இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எனது முதல் படத்தின் சம்பளம் 1000 ரூபாய். ஆனால் சூர்யாவிற்கு அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் பல ஹிட்டான படங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். 88 வருட வாழ்க்கையை சரவணன் சார் நிறைவாக வாழ்ந்துவிட்டு இறந்திருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். AVM Saravanan: 66 ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்- இயக்குநர் வசந்த்

விகடன் 4 Dec 2025 2:01 pm

BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்

சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள்.  அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறகு நச்சு பரவி மீண்டும் ரவுடி அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த வாரத்தில் ரெட் கார்டு கொடுத்து அவரை அனுப்பினாலும் தவறில்லை.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 59 ‘நெக்லஸை எடுத்து தரேன்’ என்று வினோத்தும் பிரஜனும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். மேஜர் சுந்தர்ராஜன் பாத்திரத்தைத்தான் பிரஜன் செய்கிறார் என்பது காலை எக்கி எக்கி பேசுவதில் இருந்து தாமதமாகத்தான் உணர முடிந்தது. அவரது உருவத்திற்கு கெட்டப் பொருந்தவில்லை. நாகேஷ் இன்ஸ்பெக்டர் ரோலில் இருப்பது போல.  திருமதி. சக்திவேல் கம்ருதீன் என்கிற பெயரை வைத்துக் கொண்டிருக்கிற பாரு, கேரக்டருடன் மிகவும் ஒன்றி விட்டார் போலிருக்கிறது. கம்முவிற்கு கழுத்து மசாஜ் செய்து ரொமான்ஸ் கொண்டிருந்த பாருவைப் பார்க்க தம்பதிகள் மாதிரியே இருந்தது. இவர்களின் உல்லாச நேரத்தைப் பயன்படுத்தி நெக்லஸ் திருட வந்த சுபிக்ஷா, சபரி முழித்துக் கொண்டவுடன் விலகி விட்டார்.  போர்வையை முழுக்க போர்த்திக் கொண்டு பாத்ரூம் பக்கம் சென்றிருந்த பெண்களை வினோத் பயமுறுத்திக் கொண்டிருந்தார். அவர் அத்தனை சிரமப்பட தேவையேயில்லை. அந்த விக்கை போட்டுக் கொண்டு அப்படியே சென்றிருந்தால் கூட போதும். ‘வீல்’ என்று அலறிய அரோராவும் சுபிக்ஷாவும் ‘ஏன் இப்படி பயமுறுத்தறீங்க. டாஸ்க்தான்னாலும் இதெல்லாம் நல்லாவேயில்லை’ என்று ஆட்சேபித்தார்கள். மல்லுக்கட்டிய சுபிக்ஷா நாற்காலிக்காக சண்டை போட்ட சான்ட்ரா சான்ட்ரா வருங்காலத்தில் அரசியல்வாதியாக வருவார் போலிருக்கிறது. அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் வந்து அமர்ந்த சுபிக்ஷாவிடம் “இது நான் உக்காந்த சேர். எழுந்திரு” என்று அடம் பிடித்தார். “வேற சோ் எடுத்துக்கங்களேன்’ என்றும் கேட்காமல் சுபிக்ஷாவின் மடியிலேயே அமர்ந்து அழும்பு செய்ய இருவருக்கும் மோதல். “அடிக்கறாங்கப்பா” என்று கதறினார் சுபிக்ஷா.  இது தொடர்பாக பிரஜனுக்கும் சான்ட்ராவிற்கும் கூட சிறிய சண்டை. இருவரும் உண்மையாகவே மனவருத்தத்தில் விலகியிருக்கிறார்களா, அல்லது ‘ஒண்ணா ஆடறாங்க’ என்கிற புகாரை உடைத்தெறிவதற்காக இப்படி பிளான் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. சான்ட்ரா செய்த அலப்பறையால் சுபிக்ஷா அழ ‘என் குழந்தையை அடிச்சீங்களாமே?’ என்று சப்போர்ட்டிற்கு வந்தார் கனி.  இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து ஆதிரைக்கும் வினோத்திற்குமாக மாறியது. “ஏன் அப்படி பயமுறுத்தினீங்க?” என்று ஆதிரை கேட்க “யாரை ஏய்ன்னு சொல்ற.. ஏய்.. ஏய்..” என்று வினோத் AI மோடில் கத்த “வாட்டர் மெலன் வெளியே போனதுக்கு நீங்கதான் காரணம்” என்று ஆதிரை புகார் சொல்ல “அதுக்கு அவர்தான் காரணம். உன்னால எத்தனை போ் போனாங்க தெரியுமா.. அதனாலதான் உன்னை மக்கள் வெளியே அனுப்பினாங்க” என்று வினோத்தும் மல்லுக்கட்ட, அன்றைய தினம் சண்டையுடன் சுபமாக ஆரம்பித்தது.  ஆதிரையை வினோத் ஒருமையிலும் அவமரியாதையாகவும் பேசியதால் ஆதிரைக்கு ஆதரவாக திவ்யா பேசியது நன்று. “இப்படி கத்தினாதான் அவங்க எழுந்து உள்ளே போவாங்க. நாம நெக்லஸ எடுக்கலாம். அதனாலதான் அப்படி பண்ணேன்” என்று சான்ட்ராவிடம் பிறகு சமாளித்துக் கொண்டிருந்தார் வினோத்.  ‘எங்க கிட்ட வேஸ்ட்டா கிரியேட்டிவிட்டி எதிர்பார்க்கறீங்களே பிக் பாஸ்’ - விக்ரம் சுயபகடி நாள் 59. “கிச்சன் டீம்ல இருக்கறவங்களே பாத்திரம் கழுவும் வேலையையும் செய்யறாங்க.. நீங்க போய் செய்யலாமில்ல” என்று சான்ட்ராவை வம்புக்கு இழுத்தார் விக்ரம். “நான் நேத்தே என் வேலையை முடிச்சிட்டேன், உங்க வேலையைப் பாருங்க” என்று சான்ட்ரா பதில் சொல்ல இருவருக்கும் மோதல்.  இன்ஸ்பெக்டர் பிரஜன் இதை தட்டிக் கேட்காமல் சும்மா இருந்ததால் “ஏன்யா போலீஸூ.. பார்த்துட்டுதானே இருக்கே. தொட்டிலையும் ஆட்டிட்டு பிள்ளையும் கிள்ளி விடறே. எரியற நெருப்புல எண்ணைய்ய ஊத்தறே” என்று சான்ட்ரா கோபிக்க, “நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது மேடம். என்னை உள்ளே இழுக்காதீங்க” என்று பிரஜன் எஸ்கேப் ஆக, சான்ட்ரா கண்கலங்கினார்.  இப்படி கச்சா முச்சா என்று சண்டையுடன் டாஸ்க் நகர்வதால் “நாங்க பாட்டுக்கு ஷூட்டிங் போயிட்டு பேட்டா வாங்கிட்டு காலத்தைக் கழி்ச்சிட்டு இருந்தோம். எங்களை கூப்பிட்டு வந்து கிரியேட்டிவ்வா டாஸ்க் பண்ணச் சொல்றீங்க.. நாங்க என்ன வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்.. அதெல்லாம் வராது பிக் பாஸ்.. இப்படி அப்பிராணியா இருக்கீங்களே” என்று தனிமையில் புலம்புவதின் மூலம் சிரிக்க வைத்தார் விக்ரம்.  டாஸ்க்கை இவர்கள் மொக்கையாக கொண்டு செல்வது பிக் பாஸிற்கும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே சபையைக் கூப்பிட்டு “டாஸ்க்ல இருந்து வெளியே வந்து ஹவுஸ்மேட்ஸா மாறுங்க.. ஸாரி.. ஏற்கெனவே பாதி போ் அப்படித்தான் இருக்கீங்க” என்று ஆரம்பத்திலேயே ஊமைக்குத்தாக குத்தினார்.  ஹவுஸ்மேட்ஸ்களிடம் உக்கிரத்துடன் பேசிய பிக் பாஸ் பிறகு நேரடியாக கடப்பாறைக் குத்துகள் இறங்கின. ‘ஒரு டாஸ்க் லெட்டரை கொடுத்து படிக்கச் சொல்லி ரெண்டு மணி நேரம் ஆச்சு.. உங்களுக்காக நாங்க நேரம் செலவு செஞ்சு கேரக்டர்கள் தந்து, அதுக்கு டிரஸ் எல்லாம் தைச்சு.. கொடுத்தா.. ஒரு உபயோகமும் இல்லை. வழக்கமா போடற சண்டையைத்தான் போடறீங்க.. சிம்ப்லி வேஸ்ட். .. “... இங்க இருக்கவங்கள்ல சில போ் ஆக்டர்ஸ்.. சில போ் அதற்கு முயற்சி செய்யறவங்க.. உங்களுக்காக ஒரு மேடை அமைச்சுக் கொடுத்தா அதை பயன்படுத்திக்க தெரியல. I don't see any fire. உங்களுக்காக சேது கிட்ட பேசி சப்போர்ட் பண்ணி சத்தியம் பண்ணி நான் அசிங்கப்பட்டதுதான் மிச்சம்… “... இனிமே டாஸ்க் நடுவுல பஸ்ஸர் அடிக்கும். கேரக்டர்ல இருந்து வெளியே வர்றவங்க போட்டில இருந்து வெளியேத்தப்படுவாங்க.. இதையெல்லாம் நான் செய்யக்கூடாது. ஆனா செய்ய வெச்சிட்டீங்க.. வினோத்.. ஆரம்பம்லாம் நல்லாத்தானே இருந்தது.. என்ன ஆச்சு.. இதை நான் எந்த சீசன்லயும் சொன்னது கிடையாது. I disown each and everyone of you. இதை நீங்கதான் இனி சம்பாதிக்கணும். Earn it” என்று கோபமாக சொல்லி விட்டு விலகினார் பிக் பாஸ்.  சுபிக்ஷா அழ, விக்ரம் கண் கலங்கி நீர் கசிய, மற்றவர்கள் மௌனமாக தலைகுனிந்திருந்தனர். “பேய் மாதிரி பயமுறுத்தியது தப்பா போயிடுச்சு. நைட்டு சரியா தூங்கலை பாஸ். அதான்” என்று மன்னிப்பு கேட்டார் வினோத். “உங்க பேரை காப்பாத்தலை. மன்னிச்சிடுங்க பிக் பாஸ்” என்று இன்னொரு மூலையில் அழுது கொண்டிருந்தார் ரம்யா.  டாஸ்க் லெட்டருக்காக கன்ஃபெஷன் ரூமிற்குச் சென்ற கம்ருதீன், சும்மா திரும்பி வராமல் “பாஸ்.. நான் பண்றது ஓகேவா.. ஏதாவது மாத்திக்கணுமா?” என்று ஒழுங்குப் பிள்ளை போல கேட்க “உன்னையே மாத்த வேண்டியதுதான்’ என்று மைண்ட் வாய்ஸிற்குள் அலறினாரோ, என்னமோ “எனக்குத் தெரியாது. உங்களுக்கும் எனக்கும் பர்சனலா ஒண்ணும் கிடையாது” என்று சொல்லி வெளியே துரத்தினார். கலவரம் ஆரம்பம் நெக்லஸை கைப்பற்றிய ரெட்ரோ சினிமா அணி அனைத்தையும் துடைத்துக் கொண்டு வெளியே வந்த கம்மு. டாஸ்க் லெட்டரை உற்சாகமாக வாசிக்க ஆரம்பித்தார். (எப்புட்றா!.. பாரு சகவாசம்!) ‘மாத்தி.. மாத்தி.. மாத்தி’ என்கிற விளையாட்டு டாஸ்க். முட்டையும் பந்தையும் போட்டியாளர் கையில் வைத்திருக்க வேண்டும். பிக் பாஸ் எதைச் சொல்கிறாரோ அந்தப் பொருளை தூக்கிப் போட்டு பிடிக்க வேண்டும். மாற்றிப் போட்டு பிடித்தால் அவுட்.  இன்னொரு விளையாட்டில் கையில் லாலிபாப்பும் சோப்பும் தரப்படும். பிக் பாஸ் lick என்று சொல்லும் போது லாலிபாப்பை சுவைக்க வேண்டும். ‘Smell என்றால் சோப்பை நுகர வேண்டும். (நல்ல வேளை இதை தமிழில் சொல்லியிருந்தால் கந்தரகோளமாகியிருக்கும்!) இந்த ஆட்டத்தில் ரெட்ரோ அணி வெற்றி பெற்று 5 புள்ளிகள் பெற்றது.  ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் நடந்து கொண்டிருந்த இந்த டாஸ்க் முடியும் சமயத்தில் பிரஜனும் சுபிக்ஷாவும் விரைவாக ஓடி லிவ்விங் ரூமிற்கு வந்தார்கள். மற்றவர்கள் வெளியே வராதபடி விக்ரம் கதவைப் பிடித்துக் கொண்டார். இதை முன்பே பிளான் செய்திருப்பார்கள் போல.  எதிரணியின் நெக்லஸை திருடிய பிரஜன், போக்கு காட்டி பாத்ரூம் ஏரியாவில் ஒளித்து வைத்தார். பின்னாலேயே ஓடிவந்த சபரியும் வினோத்தும் சோதனை போட்டும் கிடைக்கவில்லை. பதிலுக்கு பழிவாங்க நினைத்த சபரி, சுபிக்ஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெக்லஸை எடுத்து போங்காட்டம் ஆடினார். “என் கண் முன்னாடியே எடுத்தாரு” என்று ஆட்சேபம் செய்தார் சுபிக்ஷா.  கதவை அடைத்து நின்றதால் வினோத்திற்கும் விக்ரமிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பஞ்சாயத்து கூடியது. “அவங்க நெக்லஸ் எடுத்த விதம் சரியில்ல. அப்படின்னா நாங்க செஞ்சதும் கரெக்ட்டுதான். பிக் பாஸ் தப்புன்னு சொன்னா நெக்லஸை திருப்பித் தந்துடறோம்” என்று ரம்யா சொன்னார்.  ரணகளமாக நடந்த பஞ்சாயத்து - முரட்டுத்தனம் காட்டிய கம்ருதீன் வீட்டு தல பேசிக் கொண்டிருக்கும் போது அதை மதிக்காமல் தன் குரலை ஓங்கி உரக்கச் செய்வதுதான் பாருவின் வழக்கமான ஸ்டைல். இந்தச் சமயத்திலும் அவர் அது போல் எதையோ கத்திக் கொண்டிருக்க “சும்மா இருங்க பாரு.. உங்க பாயிண்ட்டைத்தான் பேசிட்டு இருக்கேன்” என்று ரம்யா பதிலுக்கு கத்த, பதிலுக்கு பாருவும் கத்த வீடு வழக்கம் போல் சந்தைக்கடையாக மாறியது.  பாருவிற்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அவரது பாதுகாவலரான கம்ருதீனும் எழுந்து கத்த “உக்காரு கம்ருதீன்” என்று ரம்யா சொல்ல, இருவருக்கும் சண்டை மூண்டது. ‘போடா.. போடி’ என்று ஏகவசனத்தில் பேசிக் கொண்டார்கள். பாருவின் அட்ராசிட்டியைத் தாங்க முடியாத ரம்யா, ஒரு கட்டத்தில் ‘எதிர் டீம் முன்னாடியே என்னை அசிங்கப்படுத்தறீங்களா.? கால்ல வேணா விழறேன்’ என்று எரிச்சலோடு பாருவின் காலில் விழுந்து விட்டு பிறகு அழுது கொண்டிருந்தார்.  வீட்டு தல ரம்யாவை, கம்ருதீன் அவமரியாதையாக பேசியதால், திவ்யா எழுந்து வந்தார். ‘தல பேசும் போது மதிக்க மாட்டீங்களா..?” என்று பொதுவாக கேட்க, அதை தனக்கானதாக எடுத்துக் கொண்ட கம்ருதீன் “அவளை இதுல வர வேணாம்ன்னு சொல்லுங்க..” என்று ஆட்சேபிக்க திவ்யாவிற்கும் கம்ருதீனுக்கும் பயங்கர சண்டை ஆரம்பித்தது. “நீ வெளியே கிளம்பு.. நீ கிளம்பு” என்று இருவரும் மோதிக் கொள்ள, எரிச்சல் தாங்காமல் கையில் இருக்கும் பொருளை தூக்கி எறிந்தார் திவ்யா “என்னை அடிக்க வரா.. பாத்தீங்களா?” என்று உக்கிரமான கம்ருதீன் ஆபாச வார்த்தைகளை இறைத்தார்.  “வார்த்தைகளை விடாத கம்ருதீன்” என்று பிரஜன் தடுத்தாலும் கம்மு அடங்கவில்லை. கூட இருந்து பாரு, கம்முவை தள்ளிக் கொண்டு செல்ல “பாரு.. நீயும் ஒரு பொண்ணுதானே.. இதைக் கேட்க மாட்டியா?” என்று திவ்யா பொங்க “அது வந்து.. நானும் சொல்லிட்டுதான் இருக்கேன்” என்று பம்மினார் பாரு. “அவங்க ரெண்டு பேரும் பண்ணதுக்கு வீக்கெண்டுல கிடைக்கும். நீங்க அமைதியா இருங்க” என்று திவ்யாவை சமாதானப்படுத்தினார் எஃப்ஜே.  கம்ருதீன் செய்யும் அட்ராசிட்டி பற்றி வெளியில் பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த வாரம் வீக்கெண்ட்ல கம்ருதீன் நல்லா வாங்கி கட்டிக்கப் போறான். அந்த அளவுக்கு வார்த்தையை விட்டிருக்கான்” என்றார் பிரஜன். (இவரே முன்னர் அப்படி அடி வாங்கியவர்தானே?!) “கெமியைக் கூட அடிக்கப் போயிருக்கான். என்னையும் அடிக்க வந்திருக்கான்” என்று பொங்கினார் ஆதிரை.  ஆக.. பிக் பாஸ் கழுவி கழுவி ஊற்றியும் கூட, ஒரு FUN TASK-ஐ மீண்டும் மீண்டும் சண்டை போட்டு சந்தைக்கடையாக மாற்றிய பெருமை போட்டியாளர்களைச் சாரும். ‘அகங்காரம்’ என்பதைக் கழற்றி வைக்காமல் மனித குலத்தில் சமாதானம் ஒன்று வரவே சாத்தியமில்லை.!

விகடன் 4 Dec 2025 1:47 pm

BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்

சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள்.  அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறகு நச்சு பரவி மீண்டும் ரவுடி அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த வாரத்தில் ரெட் கார்டு கொடுத்து அவரை அனுப்பினாலும் தவறில்லை.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 59 ‘நெக்லஸை எடுத்து தரேன்’ என்று வினோத்தும் பிரஜனும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். மேஜர் சுந்தர்ராஜன் பாத்திரத்தைத்தான் பிரஜன் செய்கிறார் என்பது காலை எக்கி எக்கி பேசுவதில் இருந்து தாமதமாகத்தான் உணர முடிந்தது. அவரது உருவத்திற்கு கெட்டப் பொருந்தவில்லை. நாகேஷ் இன்ஸ்பெக்டர் ரோலில் இருப்பது போல.  திருமதி. சக்திவேல் கம்ருதீன் என்கிற பெயரை வைத்துக் கொண்டிருக்கிற பாரு, கேரக்டருடன் மிகவும் ஒன்றி விட்டார் போலிருக்கிறது. கம்முவிற்கு கழுத்து மசாஜ் செய்து ரொமான்ஸ் கொண்டிருந்த பாருவைப் பார்க்க தம்பதிகள் மாதிரியே இருந்தது. இவர்களின் உல்லாச நேரத்தைப் பயன்படுத்தி நெக்லஸ் திருட வந்த சுபிக்ஷா, சபரி முழித்துக் கொண்டவுடன் விலகி விட்டார்.  போர்வையை முழுக்க போர்த்திக் கொண்டு பாத்ரூம் பக்கம் சென்றிருந்த பெண்களை வினோத் பயமுறுத்திக் கொண்டிருந்தார். அவர் அத்தனை சிரமப்பட தேவையேயில்லை. அந்த விக்கை போட்டுக் கொண்டு அப்படியே சென்றிருந்தால் கூட போதும். ‘வீல்’ என்று அலறிய அரோராவும் சுபிக்ஷாவும் ‘ஏன் இப்படி பயமுறுத்தறீங்க. டாஸ்க்தான்னாலும் இதெல்லாம் நல்லாவேயில்லை’ என்று ஆட்சேபித்தார்கள். மல்லுக்கட்டிய சுபிக்ஷா நாற்காலிக்காக சண்டை போட்ட சான்ட்ரா சான்ட்ரா வருங்காலத்தில் அரசியல்வாதியாக வருவார் போலிருக்கிறது. அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் வந்து அமர்ந்த சுபிக்ஷாவிடம் “இது நான் உக்காந்த சேர். எழுந்திரு” என்று அடம் பிடித்தார். “வேற சோ் எடுத்துக்கங்களேன்’ என்றும் கேட்காமல் சுபிக்ஷாவின் மடியிலேயே அமர்ந்து அழும்பு செய்ய இருவருக்கும் மோதல். “அடிக்கறாங்கப்பா” என்று கதறினார் சுபிக்ஷா.  இது தொடர்பாக பிரஜனுக்கும் சான்ட்ராவிற்கும் கூட சிறிய சண்டை. இருவரும் உண்மையாகவே மனவருத்தத்தில் விலகியிருக்கிறார்களா, அல்லது ‘ஒண்ணா ஆடறாங்க’ என்கிற புகாரை உடைத்தெறிவதற்காக இப்படி பிளான் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. சான்ட்ரா செய்த அலப்பறையால் சுபிக்ஷா அழ ‘என் குழந்தையை அடிச்சீங்களாமே?’ என்று சப்போர்ட்டிற்கு வந்தார் கனி.  இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து ஆதிரைக்கும் வினோத்திற்குமாக மாறியது. “ஏன் அப்படி பயமுறுத்தினீங்க?” என்று ஆதிரை கேட்க “யாரை ஏய்ன்னு சொல்ற.. ஏய்.. ஏய்..” என்று வினோத் AI மோடில் கத்த “வாட்டர் மெலன் வெளியே போனதுக்கு நீங்கதான் காரணம்” என்று ஆதிரை புகார் சொல்ல “அதுக்கு அவர்தான் காரணம். உன்னால எத்தனை போ் போனாங்க தெரியுமா.. அதனாலதான் உன்னை மக்கள் வெளியே அனுப்பினாங்க” என்று வினோத்தும் மல்லுக்கட்ட, அன்றைய தினம் சண்டையுடன் சுபமாக ஆரம்பித்தது.  ஆதிரையை வினோத் ஒருமையிலும் அவமரியாதையாகவும் பேசியதால் ஆதிரைக்கு ஆதரவாக திவ்யா பேசியது நன்று. “இப்படி கத்தினாதான் அவங்க எழுந்து உள்ளே போவாங்க. நாம நெக்லஸ எடுக்கலாம். அதனாலதான் அப்படி பண்ணேன்” என்று சான்ட்ராவிடம் பிறகு சமாளித்துக் கொண்டிருந்தார் வினோத்.  ‘எங்க கிட்ட வேஸ்ட்டா கிரியேட்டிவிட்டி எதிர்பார்க்கறீங்களே பிக் பாஸ்’ - விக்ரம் சுயபகடி நாள் 59. “கிச்சன் டீம்ல இருக்கறவங்களே பாத்திரம் கழுவும் வேலையையும் செய்யறாங்க.. நீங்க போய் செய்யலாமில்ல” என்று சான்ட்ராவை வம்புக்கு இழுத்தார் விக்ரம். “நான் நேத்தே என் வேலையை முடிச்சிட்டேன், உங்க வேலையைப் பாருங்க” என்று சான்ட்ரா பதில் சொல்ல இருவருக்கும் மோதல்.  இன்ஸ்பெக்டர் பிரஜன் இதை தட்டிக் கேட்காமல் சும்மா இருந்ததால் “ஏன்யா போலீஸூ.. பார்த்துட்டுதானே இருக்கே. தொட்டிலையும் ஆட்டிட்டு பிள்ளையும் கிள்ளி விடறே. எரியற நெருப்புல எண்ணைய்ய ஊத்தறே” என்று சான்ட்ரா கோபிக்க, “நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது மேடம். என்னை உள்ளே இழுக்காதீங்க” என்று பிரஜன் எஸ்கேப் ஆக, சான்ட்ரா கண்கலங்கினார்.  இப்படி கச்சா முச்சா என்று சண்டையுடன் டாஸ்க் நகர்வதால் “நாங்க பாட்டுக்கு ஷூட்டிங் போயிட்டு பேட்டா வாங்கிட்டு காலத்தைக் கழி்ச்சிட்டு இருந்தோம். எங்களை கூப்பிட்டு வந்து கிரியேட்டிவ்வா டாஸ்க் பண்ணச் சொல்றீங்க.. நாங்க என்ன வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்.. அதெல்லாம் வராது பிக் பாஸ்.. இப்படி அப்பிராணியா இருக்கீங்களே” என்று தனிமையில் புலம்புவதின் மூலம் சிரிக்க வைத்தார் விக்ரம்.  டாஸ்க்கை இவர்கள் மொக்கையாக கொண்டு செல்வது பிக் பாஸிற்கும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே சபையைக் கூப்பிட்டு “டாஸ்க்ல இருந்து வெளியே வந்து ஹவுஸ்மேட்ஸா மாறுங்க.. ஸாரி.. ஏற்கெனவே பாதி போ் அப்படித்தான் இருக்கீங்க” என்று ஆரம்பத்திலேயே ஊமைக்குத்தாக குத்தினார்.  ஹவுஸ்மேட்ஸ்களிடம் உக்கிரத்துடன் பேசிய பிக் பாஸ் பிறகு நேரடியாக கடப்பாறைக் குத்துகள் இறங்கின. ‘ஒரு டாஸ்க் லெட்டரை கொடுத்து படிக்கச் சொல்லி ரெண்டு மணி நேரம் ஆச்சு.. உங்களுக்காக நாங்க நேரம் செலவு செஞ்சு கேரக்டர்கள் தந்து, அதுக்கு டிரஸ் எல்லாம் தைச்சு.. கொடுத்தா.. ஒரு உபயோகமும் இல்லை. வழக்கமா போடற சண்டையைத்தான் போடறீங்க.. சிம்ப்லி வேஸ்ட். .. “... இங்க இருக்கவங்கள்ல சில போ் ஆக்டர்ஸ்.. சில போ் அதற்கு முயற்சி செய்யறவங்க.. உங்களுக்காக ஒரு மேடை அமைச்சுக் கொடுத்தா அதை பயன்படுத்திக்க தெரியல. I don't see any fire. உங்களுக்காக சேது கிட்ட பேசி சப்போர்ட் பண்ணி சத்தியம் பண்ணி நான் அசிங்கப்பட்டதுதான் மிச்சம்… “... இனிமே டாஸ்க் நடுவுல பஸ்ஸர் அடிக்கும். கேரக்டர்ல இருந்து வெளியே வர்றவங்க போட்டில இருந்து வெளியேத்தப்படுவாங்க.. இதையெல்லாம் நான் செய்யக்கூடாது. ஆனா செய்ய வெச்சிட்டீங்க.. வினோத்.. ஆரம்பம்லாம் நல்லாத்தானே இருந்தது.. என்ன ஆச்சு.. இதை நான் எந்த சீசன்லயும் சொன்னது கிடையாது. I disown each and everyone of you. இதை நீங்கதான் இனி சம்பாதிக்கணும். Earn it” என்று கோபமாக சொல்லி விட்டு விலகினார் பிக் பாஸ்.  சுபிக்ஷா அழ, விக்ரம் கண் கலங்கி நீர் கசிய, மற்றவர்கள் மௌனமாக தலைகுனிந்திருந்தனர். “பேய் மாதிரி பயமுறுத்தியது தப்பா போயிடுச்சு. நைட்டு சரியா தூங்கலை பாஸ். அதான்” என்று மன்னிப்பு கேட்டார் வினோத். “உங்க பேரை காப்பாத்தலை. மன்னிச்சிடுங்க பிக் பாஸ்” என்று இன்னொரு மூலையில் அழுது கொண்டிருந்தார் ரம்யா.  டாஸ்க் லெட்டருக்காக கன்ஃபெஷன் ரூமிற்குச் சென்ற கம்ருதீன், சும்மா திரும்பி வராமல் “பாஸ்.. நான் பண்றது ஓகேவா.. ஏதாவது மாத்திக்கணுமா?” என்று ஒழுங்குப் பிள்ளை போல கேட்க “உன்னையே மாத்த வேண்டியதுதான்’ என்று மைண்ட் வாய்ஸிற்குள் அலறினாரோ, என்னமோ “எனக்குத் தெரியாது. உங்களுக்கும் எனக்கும் பர்சனலா ஒண்ணும் கிடையாது” என்று சொல்லி வெளியே துரத்தினார். கலவரம் ஆரம்பம் நெக்லஸை கைப்பற்றிய ரெட்ரோ சினிமா அணி அனைத்தையும் துடைத்துக் கொண்டு வெளியே வந்த கம்மு. டாஸ்க் லெட்டரை உற்சாகமாக வாசிக்க ஆரம்பித்தார். (எப்புட்றா!.. பாரு சகவாசம்!) ‘மாத்தி.. மாத்தி.. மாத்தி’ என்கிற விளையாட்டு டாஸ்க். முட்டையும் பந்தையும் போட்டியாளர் கையில் வைத்திருக்க வேண்டும். பிக் பாஸ் எதைச் சொல்கிறாரோ அந்தப் பொருளை தூக்கிப் போட்டு பிடிக்க வேண்டும். மாற்றிப் போட்டு பிடித்தால் அவுட்.  இன்னொரு விளையாட்டில் கையில் லாலிபாப்பும் சோப்பும் தரப்படும். பிக் பாஸ் lick என்று சொல்லும் போது லாலிபாப்பை சுவைக்க வேண்டும். ‘Smell என்றால் சோப்பை நுகர வேண்டும். (நல்ல வேளை இதை தமிழில் சொல்லியிருந்தால் கந்தரகோளமாகியிருக்கும்!) இந்த ஆட்டத்தில் ரெட்ரோ அணி வெற்றி பெற்று 5 புள்ளிகள் பெற்றது.  ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் நடந்து கொண்டிருந்த இந்த டாஸ்க் முடியும் சமயத்தில் பிரஜனும் சுபிக்ஷாவும் விரைவாக ஓடி லிவ்விங் ரூமிற்கு வந்தார்கள். மற்றவர்கள் வெளியே வராதபடி விக்ரம் கதவைப் பிடித்துக் கொண்டார். இதை முன்பே பிளான் செய்திருப்பார்கள் போல.  எதிரணியின் நெக்லஸை திருடிய பிரஜன், போக்கு காட்டி பாத்ரூம் ஏரியாவில் ஒளித்து வைத்தார். பின்னாலேயே ஓடிவந்த சபரியும் வினோத்தும் சோதனை போட்டும் கிடைக்கவில்லை. பதிலுக்கு பழிவாங்க நினைத்த சபரி, சுபிக்ஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெக்லஸை எடுத்து போங்காட்டம் ஆடினார். “என் கண் முன்னாடியே எடுத்தாரு” என்று ஆட்சேபம் செய்தார் சுபிக்ஷா.  கதவை அடைத்து நின்றதால் வினோத்திற்கும் விக்ரமிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பஞ்சாயத்து கூடியது. “அவங்க நெக்லஸ் எடுத்த விதம் சரியில்ல. அப்படின்னா நாங்க செஞ்சதும் கரெக்ட்டுதான். பிக் பாஸ் தப்புன்னு சொன்னா நெக்லஸை திருப்பித் தந்துடறோம்” என்று ரம்யா சொன்னார்.  ரணகளமாக நடந்த பஞ்சாயத்து - முரட்டுத்தனம் காட்டிய கம்ருதீன் வீட்டு தல பேசிக் கொண்டிருக்கும் போது அதை மதிக்காமல் தன் குரலை ஓங்கி உரக்கச் செய்வதுதான் பாருவின் வழக்கமான ஸ்டைல். இந்தச் சமயத்திலும் அவர் அது போல் எதையோ கத்திக் கொண்டிருக்க “சும்மா இருங்க பாரு.. உங்க பாயிண்ட்டைத்தான் பேசிட்டு இருக்கேன்” என்று ரம்யா பதிலுக்கு கத்த, பதிலுக்கு பாருவும் கத்த வீடு வழக்கம் போல் சந்தைக்கடையாக மாறியது.  பாருவிற்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அவரது பாதுகாவலரான கம்ருதீனும் எழுந்து கத்த “உக்காரு கம்ருதீன்” என்று ரம்யா சொல்ல, இருவருக்கும் சண்டை மூண்டது. ‘போடா.. போடி’ என்று ஏகவசனத்தில் பேசிக் கொண்டார்கள். பாருவின் அட்ராசிட்டியைத் தாங்க முடியாத ரம்யா, ஒரு கட்டத்தில் ‘எதிர் டீம் முன்னாடியே என்னை அசிங்கப்படுத்தறீங்களா.? கால்ல வேணா விழறேன்’ என்று எரிச்சலோடு பாருவின் காலில் விழுந்து விட்டு பிறகு அழுது கொண்டிருந்தார்.  வீட்டு தல ரம்யாவை, கம்ருதீன் அவமரியாதையாக பேசியதால், திவ்யா எழுந்து வந்தார். ‘தல பேசும் போது மதிக்க மாட்டீங்களா..?” என்று பொதுவாக கேட்க, அதை தனக்கானதாக எடுத்துக் கொண்ட கம்ருதீன் “அவளை இதுல வர வேணாம்ன்னு சொல்லுங்க..” என்று ஆட்சேபிக்க திவ்யாவிற்கும் கம்ருதீனுக்கும் பயங்கர சண்டை ஆரம்பித்தது. “நீ வெளியே கிளம்பு.. நீ கிளம்பு” என்று இருவரும் மோதிக் கொள்ள, எரிச்சல் தாங்காமல் கையில் இருக்கும் பொருளை தூக்கி எறிந்தார் திவ்யா “என்னை அடிக்க வரா.. பாத்தீங்களா?” என்று உக்கிரமான கம்ருதீன் ஆபாச வார்த்தைகளை இறைத்தார்.  “வார்த்தைகளை விடாத கம்ருதீன்” என்று பிரஜன் தடுத்தாலும் கம்மு அடங்கவில்லை. கூட இருந்து பாரு, கம்முவை தள்ளிக் கொண்டு செல்ல “பாரு.. நீயும் ஒரு பொண்ணுதானே.. இதைக் கேட்க மாட்டியா?” என்று திவ்யா பொங்க “அது வந்து.. நானும் சொல்லிட்டுதான் இருக்கேன்” என்று பம்மினார் பாரு. “அவங்க ரெண்டு பேரும் பண்ணதுக்கு வீக்கெண்டுல கிடைக்கும். நீங்க அமைதியா இருங்க” என்று திவ்யாவை சமாதானப்படுத்தினார் எஃப்ஜே.  கம்ருதீன் செய்யும் அட்ராசிட்டி பற்றி வெளியில் பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த வாரம் வீக்கெண்ட்ல கம்ருதீன் நல்லா வாங்கி கட்டிக்கப் போறான். அந்த அளவுக்கு வார்த்தையை விட்டிருக்கான்” என்றார் பிரஜன். (இவரே முன்னர் அப்படி அடி வாங்கியவர்தானே?!) “கெமியைக் கூட அடிக்கப் போயிருக்கான். என்னையும் அடிக்க வந்திருக்கான்” என்று பொங்கினார் ஆதிரை.  ஆக.. பிக் பாஸ் கழுவி கழுவி ஊற்றியும் கூட, ஒரு FUN TASK-ஐ மீண்டும் மீண்டும் சண்டை போட்டு சந்தைக்கடையாக மாற்றிய பெருமை போட்டியாளர்களைச் சாரும். ‘அகங்காரம்’ என்பதைக் கழற்றி வைக்காமல் மனித குலத்தில் சமாதானம் ஒன்று வரவே சாத்தியமில்லை.!

விகடன் 4 Dec 2025 1:47 pm

விஜயாவின் கேவலமான புத்தியால் கிரிஷை கடத்திய சிந்தாமணி, காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, ஐடியா நன்றாக இருக்கிறது. நான் கிரிஷ் உடைய அம்மா இறந்து விட்டார்ன்னு சொல்கிறேன் என்றார். மீனா, ரோகிணியை பார்த்து முறைத்தார். இன்னொரு பக்கம் சுருதியை வெறுப்பேற்றுவதற்காக நீத்து ரவியை அழைத்துக் கொண்டு சுருதி ரெஸ்டாரண்டுக்கு போனார்கள். அப்போது நீத்து, ரவியை கட்டிப்பிடித்து உங்களால்தான் காம்பெடிஷனில் செலக்ட் ஆகி இருக்கிறேன். ரொம்ப நன்றி என்றெல்லாம் சுருதியை வெறுப்பேற்றும்படி பேசிக் கொண்டிருந்தார். ஆனால், ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. நீத்து,சுருதியை வெறுப்பேற்றுவதற்காகவே […] The post விஜயாவின் கேவலமான புத்தியால் கிரிஷை கடத்திய சிந்தாமணி, காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Dec 2025 1:27 pm

AVM Saravanan: தாணு மாதிரியானவங்க தான் தாக்குப்பிடிச்சு படம் எடுக்குறாங்கன்னு சொன்னாரு- வைகோ

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். குடும்பப்பாங்கான படங்களுக்கு ஏவிஎம் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. அப்படி எடுத்த படங்களிலேயே புகழைக் குவித்த படம் 'அன்பே வா'. ஆங்கில படம் ஒன்றின் உட்கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜா தேவி அவர்களும், நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களும் அந்தப்படத்தில் நடித்திருப்பார்கள். ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ இதில் ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 'அன்பே வா' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் 7,8 இடங்களில் சண்டை காட்சிகள் வரும். வாள்வீச்சு, கத்திச் சண்டை என எல்லாம் டூப் போடாமல் அவரே நடித்திருப்பார். ஆனால் இப்போதெல்லாம் சண்டைக் காட்சிகள் அப்படி இருப்பதில்லை. கொடூரமாகக் கொலை செய்கிறார்கள். துண்டு துண்டாக வெட்டி எறிகிறார்கள். எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திலும் ரத்தம் சிந்திய காட்சியே இருக்காது. ஒரே ஒரு படத்தை தவிர அது 'மதுரை வீரன்' படம். அவரது படத்தில் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். அந்தவகையில் ஏவிஎம் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளியான 'அன்பே வா' படத்தில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும். இசை ரசிக்கும்படியாக இருக்கும். ஏ.வி.எம் சரவணன் ஏ.வி.எம் குடும்பத்தில் நான் சரவணனிடம் தான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். கலைப்புலி தாணு மாதிரியான ஆட்கள்தான் தாக்குப்பிடித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் இப்போது அதிகமாகப் படம் எடுப்பதில்லை என்று என்னிடம் சரவணன் சொன்னார். நூறாண்டு வாழ வேண்டும் என்று விரும்பினார். அவரை மரணம் என்ற கழுகு கொத்திக்கொண்டு போய்விட்டது. ஏவிஎம் புகழ் கலைத்துறை இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 4 Dec 2025 1:04 pm

AVM Saravanan: தாணு மாதிரியானவங்க தான் தாக்குப்பிடிச்சு படம் எடுக்குறாங்கன்னு சொன்னாரு- வைகோ

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். குடும்பப்பாங்கான படங்களுக்கு ஏவிஎம் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. அப்படி எடுத்த படங்களிலேயே புகழைக் குவித்த படம் 'அன்பே வா'. ஆங்கில படம் ஒன்றின் உட்கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜா தேவி அவர்களும், நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களும் அந்தப்படத்தில் நடித்திருப்பார்கள். ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ இதில் ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 'அன்பே வா' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் 7,8 இடங்களில் சண்டை காட்சிகள் வரும். வாள்வீச்சு, கத்திச் சண்டை என எல்லாம் டூப் போடாமல் அவரே நடித்திருப்பார். ஆனால் இப்போதெல்லாம் சண்டைக் காட்சிகள் அப்படி இருப்பதில்லை. கொடூரமாகக் கொலை செய்கிறார்கள். துண்டு துண்டாக வெட்டி எறிகிறார்கள். எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திலும் ரத்தம் சிந்திய காட்சியே இருக்காது. ஒரே ஒரு படத்தை தவிர அது 'மதுரை வீரன்' படம். அவரது படத்தில் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். அந்தவகையில் ஏவிஎம் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளியான 'அன்பே வா' படத்தில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும். இசை ரசிக்கும்படியாக இருக்கும். ஏ.வி.எம் சரவணன் ஏ.வி.எம் குடும்பத்தில் நான் சரவணனிடம் தான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். கலைப்புலி தாணு மாதிரியான ஆட்கள்தான் தாக்குப்பிடித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் இப்போது அதிகமாகப் படம் எடுப்பதில்லை என்று என்னிடம் சரவணன் சொன்னார். நூறாண்டு வாழ வேண்டும் என்று விரும்பினார். அவரை மரணம் என்ற கழுகு கொத்திக்கொண்டு போய்விட்டது. ஏவிஎம் புகழ் கலைத்துறை இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 4 Dec 2025 1:04 pm

“அகண்டா 2: தாண்டவம்”நந்தமூரி பாலகிருஷ்ணா தமிழ் பத்திரிக்கையாளர் சந்தித்தார்!

“அகண்டா 2: தாண்டவம்” நந்தமூரி பாலகிருஷ்ணா தமிழ் பத்திரிக்கையாளர் சந்தித்தார்! தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.., நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது.., ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க...

தஸ்தர் 4 Dec 2025 12:59 pm

காவ்யா வைத்த ஆப்பால் ஆடிப்போன ஈஸ்வரி, போஸின் நிலைமை என்ன? பரபரப்பில் சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, உண்மையை சொல் போஸ் என்றார். போஸ், நான் தான் மருந்து கொண்டு வந்தேன் என்று மீண்டும் மீண்டும் பொய் சொன்னார். வலி தாங்க முடியாமல் ஈஸ்வரி, சேது சொன்னது தான் உண்மை. போஸ் மருந்து கொண்டு வரவில்லை. தமிழ்செல்வி தான் கொண்டு வந்தார் என்று எல்லா உண்மையும் சொல்லிவிட்டார். வலி தாங்க முடியாமல் போஸ் உண்மையை ஒத்துக் கொண்டார். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் […] The post காவ்யா வைத்த ஆப்பால் ஆடிப்போன ஈஸ்வரி, போஸின் நிலைமை என்ன? பரபரப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Dec 2025 12:32 pm

AVM: ``என் கஷ்ட காலங்களில் - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம் . தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களைத் தயாரித்திருக்கிறது. ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியது. 2014-ம் ஆண்டிற்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது. ஏவிஎம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தும் நடிகர் ரஜினி இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு திரைப் பிரபலங்கள் தொடர்ந்து ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மிகப்பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துகாட்டு சரவணன் சார். எப்போதும் வெள்ளை உடைதான் அணிவார். அவருடைய உள்ளமும் அப்படித்தான் இருக்கும். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தார். 10 நிமிடம் பேசினால்கூட அதில் 10 முறை 'அப்புச்சி... அப்புச்சி...' என தன் அப்பாவை நினைவுப்படுத்துவார். என் மீது அதிக அன்பு வைத்தவர். என் நலன் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக நின்றவர். ஏவிஎம் சரவணன் ஏ.வி.எம் தயாரிப்பில் 9 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் எல்லா படங்களும் மாபெரும் வெற்றிப் படங்கள். அதற்கு முக்கியக் காரணம் சரவணன் சார். 80-களில் தமிழில் மிக பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட படம் முரட்டுக்காளை. 2000-களில் சிவாஜி. 2020-களில் ஒரு படம் எடுக்கலாம் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அது நடக்கவே இல்லை. அவருடைய மறைவு மிகவும் மனதை பாதிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள். 50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்

விகடன் 4 Dec 2025 12:00 pm

AVM: ``என் கஷ்ட காலங்களில் - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம் . தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களைத் தயாரித்திருக்கிறது. ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியது. 2014-ம் ஆண்டிற்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது. ஏவிஎம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தும் நடிகர் ரஜினி இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு திரைப் பிரபலங்கள் தொடர்ந்து ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மிகப்பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துகாட்டு சரவணன் சார். எப்போதும் வெள்ளை உடைதான் அணிவார். அவருடைய உள்ளமும் அப்படித்தான் இருக்கும். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தார். 10 நிமிடம் பேசினால்கூட அதில் 10 முறை 'அப்புச்சி... அப்புச்சி...' என தன் அப்பாவை நினைவுப்படுத்துவார். என் மீது அதிக அன்பு வைத்தவர். என் நலன் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக நின்றவர். ஏவிஎம் சரவணன் ஏ.வி.எம் தயாரிப்பில் 9 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் எல்லா படங்களும் மாபெரும் வெற்றிப் படங்கள். அதற்கு முக்கியக் காரணம் சரவணன் சார். 80-களில் தமிழில் மிக பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட படம் முரட்டுக்காளை. 2000-களில் சிவாஜி. 2020-களில் ஒரு படம் எடுக்கலாம் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அது நடக்கவே இல்லை. அவருடைய மறைவு மிகவும் மனதை பாதிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள். 50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்

விகடன் 4 Dec 2025 12:00 pm

AVM Saravanan: 66 ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்- இயக்குநர் வசந்த்

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவருக்குப் பிறகு பொறுப்பெடுத்து நிர்வகித்தவர் ஏ.வி.எம் சரவணன். ஏராளமான வெற்றிப் படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் 86 வயதான ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று (டிச.4) உயிரிழந்திருக்கிறார். ஏ.வி.எம் சரவணன் இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் வசந்த் ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வசந்த், சரவணன் சாரைப் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். 1958-ல் ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனத்தின் பொறுப்பை அவர் எடுத்துக்கொண்டார். கிட்டதட்ட 65, 66 ஆண்டுகளாக மிகச்சிறந்த பண்பாளராக கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார். பண்பு என்றால் என்னவென்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். நான் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் படங்களை எடுத்ததில்லை. ஆனால் என்னுடைய படங்களுக்கு நான் தேசிய விருது வாங்கும்போது ஒரே ஒரு கடிதம் எனக்கு வரும். ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்திய வசந்த் அது ஏ.வி.எம் சரவணன் சாரின் கடிதமாகத்தான் இருக்கும். திரைத்துறையில் ஒருவருடன் நேரடி தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாராட்டுவார். பல முறை என்னுடைய படங்களை டிவியில் பார்த்த பிறகு அழைத்துப் பாராட்டியிருக்கிறார். மறக்கமுடியாத மாமனிதர் அவர். அவரை இழந்துவாடும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 4 Dec 2025 11:50 am

AVM: ``முரட்டுக்காளை வந்தபோது சரவணன் சாருக்கு கடிதம் எழுதினேன் - நினைவுகளைப் பகிரும் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம் . தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களை தயாரித்துள்ளது. ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியது. 2014-ம் ஆண்டிற்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு திரைப் பிரபலங்கள் தொடர்ந்து ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் , அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ஏ.வி.எம் மூன்று எழுத்துகள் இருப்பது போல, பணிவு, பண்பு, ஒழுக்கம் - இவையெல்லாவற்றிற்கும் உருவம் கொடுத்தது போல வாழ்ந்தவர் ஏ.வி.எம் சரவணன். அவர் கைக் கட்டி கொண்டு நின்றாலும் கூட, நமக்கு அவர் மீது மரியாதையும் பயமும் ஏற்படும். அதுபோன்ற ஒரு மாபெரும் மாமனிதர் அவர். இன்று கூட அவரின் மறைவு செய்தி எனக்கு கிடைத்த போது, ‘3:30 மணிக்கு இறுதி மரியாதை’ என குறிப்பிட்டிருந்தார்கள். அவருக்கு ‘இறுதி மரியாதை’ என ஒன்று கிடையவே கிடையாது. அவருக்கு எப்போதும் மரியாதைதான். அதற்கான காரணம் அவர் மட்டுமல்ல, அவரின் தகப்பனார் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரும். ஏவிஎம் சரவணன் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு சினிமா தான் கடவுள் அப்படி என்றால் ஏ.வி மெய்யப்பச் செட்டியார், ஏ.வி.எம் சரவணன் கடவுளின் பிரதிநிதிபோல. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மறைந்து, நீண்ட நாள்களுக்குப் பிறகு ஏ.வி.எம். சரவணன் தயாரித்தப் படம் 'முரட்டுக்காளை'. அந்தப் படம் வந்த பிறகு நான் சரவணன் சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் 'உங்கள் அப்பாவின் ஆன்மா இப்பொழுதுதான் சாந்தி அடைந்திருக்கும்' என எழுதியிருந்தேன். ஏ.வி.எம் சரவணன் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. ஆனால் இது இன்னொரு வகையில் ஈடு செய்யலாம். இப்போது அவர்களுடைய குடும்பத்தாரிடம் மீண்டும் ஏ.வி.எம் நிறுவனம் தொடர்ந்து படங்களை எடுக்க வேண்டும். சரவணன் சாரின் படத்தை போட்டு அவருக்கு அஞ்சலி என குறைந்தது 100 படங்களையாவது எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறேன். என்றார். 50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்

விகடன் 4 Dec 2025 11:27 am

AVM Saravanan: ``ஏவிஎம் ஸ்டுடியோஸ் எனக்கு பயிற்சி மையமா இருந்துருக்கு.!- விஷால் இரங்கல்

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவருக்கு பிறகு பொறுப்பு எடுத்து நிர்வகித்தவர் ஏ.வி.எம் சரவணன். ஏராளமான வெற்றி படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் 86 வயதான ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று (டிச.4) உயிரிழந்திருக்கிறார். ஏ.வி.எம் சரவணன் இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஷால் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ஏவிஎம் ஸ்டுடியோஸ் எனும் புரட்சிகர நிறுவனத்தின் பின்னணியில் இருந்த புரட்சி திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் சாரின் மறைவு செய்தியைக் கேள்விப்பட்டவுடன் மிகுந்த துயரம் அடைந்தேன். என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இன்று நான் திரைப்படத் துறையில் இருப்பதற்கு ஏவிஎம் ஸ்டுடியோ எனக்கு ஒரு பயிற்சி மையமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு தயாரிப்பாளரும் உங்கள் நேர்மையும், உழைப்பும், அர்ப்பணிப்பையும் பார்த்து கற்றுக்கொண்டார்கள். ஏ.வி.எம் சரவணன் உங்கள் படங்களுக்கு மட்டுமல்லாது , முழு திரைப்படத் துறைக்காக நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தது. இன்று இந்தியத் திரைப்படத் துறையில் பெரும் ஆளுமையை இழந்த துயரநாளாக இருக்கிறது. உங்கள் நினைவுகள் எப்போதும் எங்களின் மனதில் நிலைத்து நிற்கும். உங்கள் படங்கள் என்றும் புதுமுக இயக்குநர்களுக்குப் பயிற்சி தளமாக இருக்கும். இந்த மிகக் கடினமான நேரத்தில், அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் அதிக வலிமையையும் ஆறுதலையும் வழங்கட்டும் என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். 50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்

விகடன் 4 Dec 2025 11:23 am

AVM Saravanan: ``ஏவிஎம் ஸ்டுடியோஸ் எனக்கு பயிற்சி மையமா இருந்துருக்கு.!- விஷால் இரங்கல்

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவருக்கு பிறகு பொறுப்பு எடுத்து நிர்வகித்தவர் ஏ.வி.எம் சரவணன். ஏராளமான வெற்றி படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் 86 வயதான ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று (டிச.4) உயிரிழந்திருக்கிறார். ஏ.வி.எம் சரவணன் இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஷால் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ஏவிஎம் ஸ்டுடியோஸ் எனும் புரட்சிகர நிறுவனத்தின் பின்னணியில் இருந்த புரட்சி திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் சாரின் மறைவு செய்தியைக் கேள்விப்பட்டவுடன் மிகுந்த துயரம் அடைந்தேன். என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இன்று நான் திரைப்படத் துறையில் இருப்பதற்கு ஏவிஎம் ஸ்டுடியோ எனக்கு ஒரு பயிற்சி மையமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு தயாரிப்பாளரும் உங்கள் நேர்மையும், உழைப்பும், அர்ப்பணிப்பையும் பார்த்து கற்றுக்கொண்டார்கள். ஏ.வி.எம் சரவணன் உங்கள் படங்களுக்கு மட்டுமல்லாது , முழு திரைப்படத் துறைக்காக நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தது. இன்று இந்தியத் திரைப்படத் துறையில் பெரும் ஆளுமையை இழந்த துயரநாளாக இருக்கிறது. உங்கள் நினைவுகள் எப்போதும் எங்களின் மனதில் நிலைத்து நிற்கும். உங்கள் படங்கள் என்றும் புதுமுக இயக்குநர்களுக்குப் பயிற்சி தளமாக இருக்கும். இந்த மிகக் கடினமான நேரத்தில், அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் அதிக வலிமையையும் ஆறுதலையும் வழங்கட்டும் என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். 50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்

விகடன் 4 Dec 2025 11:23 am

கிருஷ்ணா சொன்ன வார்த்தையால் விஜய் எடுத்த அதிரடி முடிவு, கோபத்தில் கொந்தளிக்கும் காவிரி –மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர், அக்கா என்று கூப்பிட்டு பேசி இருந்தார். கோபத்தில் சாரதா மீண்டும் சண்டை போட்டார். உடனே காவிரி, கங்கா இருவரும் தடுத்து விட்டார்கள். அதற்குப்பின் விஜய் வீட்டிற்கு வந்தார். அப்போது சாரதா, முத்துமலர் குடும்பத்தை: திட்டிக் கொண்டிருந்தார். விஜயுமே ஆறுதல் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து விஜயின் பாட்டி, சித்தி இருவரும் கோபப்பட்டார்கள். சாரதா குடும்பத்தை திட்டிக் கொண்டிருந்தார்கள். பாட்டி,சித்தி எல்லோருமே ஒன்றாக இருப்பதால் காவிரி அவர்களிடம் பேசப் […] The post கிருஷ்ணா சொன்ன வார்த்தையால் விஜய் எடுத்த அதிரடி முடிவு, கோபத்தில் கொந்தளிக்கும் காவிரி – மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Dec 2025 10:56 am

BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் பார்வதி, கம்ருதீன்,fJ மூவருக்கும் சண்டை நடக்கிறது. மூணு நாள் தான் தூங்குனேன்'னு சொல்றீங்க, கேம்-ல அப்படி என்ன பண்ணிடீங்க. உன்னை மாதிரி நான் ஒண்ணும் பார்வதிக்கு சப்போர்ட் பண்ணிட்டு இல்ல என FJ கம்ருதீனிடம் சண்டைப் போடுகிறார். என்னை வச்சு சண்டைப் போடுறதுக்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது. நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு. நான் என்ன பண்ணனும்'னு எனக்கு தெரியும் என்று பார்வதி FJ-விடம் கோபப்பட்டு கத்துகிறார். BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

விகடன் 4 Dec 2025 10:18 am

BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் பார்வதி, கம்ருதீன்,fJ மூவருக்கும் சண்டை நடக்கிறது. மூணு நாள் தான் தூங்குனேன்'னு சொல்றீங்க, கேம்-ல அப்படி என்ன பண்ணிடீங்க. உன்னை மாதிரி நான் ஒண்ணும் பார்வதிக்கு சப்போர்ட் பண்ணிட்டு இல்ல என FJ கம்ருதீனிடம் சண்டைப் போடுகிறார். என்னை வச்சு சண்டைப் போடுறதுக்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது. நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு. நான் என்ன பண்ணனும்'னு எனக்கு தெரியும் என்று பார்வதி FJ-விடம் கோபப்பட்டு கத்துகிறார். BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

விகடன் 4 Dec 2025 10:18 am

ஹரித்வாரில் தர்மேந்திராவின் அஸ்தி கரைப்பு - தவிர்த்த ஹேமாமாலினி; ஓரங்கட்டினார்களா மகன்கள்?

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக செய்யப்பட்டது. அவரது உடல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவில்லை. இறுதிச்சடங்கு முடிந்த பிறகு தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் குடும்பத்தினர் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தபோது அதில் ஹேமாமாலினி அல்லது அவரது மகள்கள் கலந்து கொள்ளவில்லை. ஹேமாமாலினி தனது வீட்டில் இதற்காக தனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தற்போது தர்மேந்திராவின் அஸ்தி ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தர்மேந்திராவின் மகன்கள் சன்னி தியோல், கரன் தியோல், பாபி தியோல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி மற்றும் அவரது இரண்டு மகள்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அஸ்தி கரைப்பை வீடியோ எடுக்க முயன்ற புகைப்படக்காரர்களுடன் சன்னி தியோல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு புகைப்பட கலைஞரிடம் கேமராவை பிடுங்கிய சன்னி தியோல், எவ்வளவு பணம் வேண்டும் சொல் தருகிறேன் என்று கோபத்தில் பேசினார். இதே போன்று தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்து வந்தபோதும், மும்பை வீட்டிற்கு வெளியில் ஏராளமான புகைப்பட கலைஞர்கள் கூடி நின்றனர். அவர்களிடம் சன்னி தியோல் கறாராக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தர்மேந்திராவின் இறுதிச்சடங்கு, அஸ்தி கரைப்பில் ஹேமாமாலினியும், அவரது மகள்களையும் தர்மேந்திராவின் குடும்பத்தினர் தவிர்த்தது இரு குடும்பத்திற்கிடையே பகை இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஹேமாமாலினியை திருமணம் செய்த பிறகு தனது முதல் மனைவியின் வீட்டிற்கு செல்வதை தர்மேந்திரா தவிர்த்தார். ஆனால் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தர்மேந்திரா தனது முதல் மனைவியின் இல்லத்திற்கு சென்றார். தர்மேந்திராவிற்கு புனே அருகில் 100 ஏக்கரில் பண்ணை வீடு இருக்கிறது. இனி இந்த சொத்துக்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக குடும்பத்தினரிடையே மோதல் ஏற்படலாம் என்கிறார்கள் இரு குடும்பத்துக்கும் நெருக்கமான சிலர்.

விகடன் 4 Dec 2025 10:05 am

ஹரித்வாரில் தர்மேந்திராவின் அஸ்தி கரைப்பு - தவிர்த்த ஹேமாமாலினி; ஓரங்கட்டினார்களா மகன்கள்?

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக செய்யப்பட்டது. அவரது உடல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவில்லை. இறுதிச்சடங்கு முடிந்த பிறகு தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் குடும்பத்தினர் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தபோது அதில் ஹேமாமாலினி அல்லது அவரது மகள்கள் கலந்து கொள்ளவில்லை. ஹேமாமாலினி தனது வீட்டில் இதற்காக தனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தற்போது தர்மேந்திராவின் அஸ்தி ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தர்மேந்திராவின் மகன்கள் சன்னி தியோல், கரன் தியோல், பாபி தியோல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி மற்றும் அவரது இரண்டு மகள்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அஸ்தி கரைப்பை வீடியோ எடுக்க முயன்ற புகைப்படக்காரர்களுடன் சன்னி தியோல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு புகைப்பட கலைஞரிடம் கேமராவை பிடுங்கிய சன்னி தியோல், எவ்வளவு பணம் வேண்டும் சொல் தருகிறேன் என்று கோபத்தில் பேசினார். இதே போன்று தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்து வந்தபோதும், மும்பை வீட்டிற்கு வெளியில் ஏராளமான புகைப்பட கலைஞர்கள் கூடி நின்றனர். அவர்களிடம் சன்னி தியோல் கறாராக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தர்மேந்திராவின் இறுதிச்சடங்கு, அஸ்தி கரைப்பில் ஹேமாமாலினியும், அவரது மகள்களையும் தர்மேந்திராவின் குடும்பத்தினர் தவிர்த்தது இரு குடும்பத்திற்கிடையே பகை இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஹேமாமாலினியை திருமணம் செய்த பிறகு தனது முதல் மனைவியின் வீட்டிற்கு செல்வதை தர்மேந்திரா தவிர்த்தார். ஆனால் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தர்மேந்திரா தனது முதல் மனைவியின் இல்லத்திற்கு சென்றார். தர்மேந்திராவிற்கு புனே அருகில் 100 ஏக்கரில் பண்ணை வீடு இருக்கிறது. இனி இந்த சொத்துக்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக குடும்பத்தினரிடையே மோதல் ஏற்படலாம் என்கிறார்கள் இரு குடும்பத்துக்கும் நெருக்கமான சிலர்.

விகடன் 4 Dec 2025 10:05 am

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார்

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார் தமிழ் திரையுலகின் மிகப் பெரிய தூண்களில் ஒருவராக திகழ்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சாரவணன் ஐயா (86) இன்று அதிகாலை வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் . இந்திய திரையுலகில் ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இழப்பாக அவரது மறைவு கருதப்படுகிறது. நேற்று தான் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த ஏ.வி.எம். சாரவணன் ஐயா, பல தலைமுறைகளுக்கு...

தஸ்தர் 4 Dec 2025 8:40 am

50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்

தமிழ் சினிமாவில் முக்கியமான தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86. நேற்று தான் இவருடைய  பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடிய சூழலில் இன்று காலமானார். தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களை ஏ.வி. எம் நிறுவனம் வழங்கியதில் சரவணனின் பங்கு அளப்பரியது. தந்தையின் காலத்துக்குப் பிறகு தயாரிப்பு நிறுவனத்தை அதே பாரம்பரியத்துடன் இவர் நடத்தியதை தமிழ் சினிமாவில் பலரும் இப்போது நினைவு கூர்கிறார்கள். அமைதியாகப் பேசுபவர். வெள்ளை பேன் ட் வெள்ளை சர்ட் இவரது அடையாளம். பெரிய பின்புலம் இருந்த போதும் கைகட்டி இருக்கும் அவரது எளிமை, தன் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்தால் தன் கைப்பட நன்றிக் கடிதம் அனுப்பும் வழக்கம் என இவர் குறித்துப் பேச எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றன. சினிமா போலவே சீரியல்களும் தயாரித்தார். விகடன் குழுமத்திலிருந்து வழங்கப்படும் உயரிய சினிமா விருதான எஸ் .எஸ் வாசன் விருது கடந்தாண்டுக்கு முந்தைய ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. சினிமா பிரபலங்கல் பலரும் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர், மறைந்த சரவணனின் உடலடக்கம் இன்று மாலை ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நடைபெறுகிறது.

விகடன் 4 Dec 2025 8:37 am

50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்

தமிழ் சினிமாவில் முக்கியமான தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86. நேற்று தான் இவருடைய  பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடிய சூழலில் இன்று காலமானார். தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களை ஏ.வி. எம் நிறுவனம் வழங்கியதில் சரவணனின் பங்கு அளப்பரியது. தந்தையின் காலத்துக்குப் பிறகு தயாரிப்பு நிறுவனத்தை அதே பாரம்பரியத்துடன் இவர் நடத்தியதை தமிழ் சினிமாவில் பலரும் இப்போது நினைவு கூர்கிறார்கள். அமைதியாகப் பேசுபவர். வெள்ளை பேன் ட் வெள்ளை சர்ட் இவரது அடையாளம். பெரிய பின்புலம் இருந்த போதும் கைகட்டி இருக்கும் அவரது எளிமை, தன் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்தால் தன் கைப்பட நன்றிக் கடிதம் அனுப்பும் வழக்கம் என இவர் குறித்துப் பேச எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றன. சினிமா போலவே சீரியல்களும் தயாரித்தார். விகடன் குழுமத்திலிருந்து வழங்கப்படும் உயரிய சினிமா விருதான எஸ் .எஸ் வாசன் விருது கடந்தாண்டுக்கு முந்தைய ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. சினிமா பிரபலங்கல் பலரும் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர், மறைந்த சரவணனின் உடலடக்கம் இன்று மாலை ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நடைபெறுகிறது.

விகடன் 4 Dec 2025 8:37 am

``ஆந்திராவின் எஸ்.பி.பி-க்கு தெலங்கானாவில் எதற்கு சிலை - எதிர்க்கும் சமூக ஆர்வலர்; விவரம் என்ன?

தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் கொனேதம்மாபேட்டாவில் 1946 ஜூன் 4-ம் தேதி பிறந்த இவர், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மொழி உட்பட மொத்தம் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பிறந்த மாநிலமான ஆந்திராவில் மாநில அரசின் தெலுங்கு சினிமா விருதை 25 முறை வென்றிருக்கிறார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகளின் திரைத்துறை விருதுகளையும் வென்றிருக்கிறார். 6 முறை தேசிய விருது வென்றிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷன் (2011) ஆகிய விருதுகளைப் பெற்றார். எஸ்.ஜானகி, மற்றும் எஸ்.பி.பி 2020 செப்டம்பர் 25-ம் தேதி கொரோனா தொற்றால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதற்கடுத்த ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவித்து அவரைக் கௌரவித்தது. மேலும், தமிழக அரசு கடந்த ஆண்டு அவரின் நினைவு நாளில், அவர் இறுதி மூச்சுவரை வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' எனப் பெயர் மாற்றியது. இவ்வாறிருக்க, இந்திய சினிமா மற்றும் இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் தெலங்கானா அரசு அவருக்கு சிலை அமைத்திருக்கிறது. இந்தச் சிலையானது தெலங்கானாவின் பிரபல கலாச்சார மையமான ரவீந்திர பாரதி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலையை டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கவிருக்கிறார். இந்த நிலையில், தெலங்கானாவின் சமூக ஆர்வலர் பிரித்விராஜ் யாதவ் என்பவர் அரசின் இந்த முடிவை எதிர்த்திருக்கிறார். நேற்றைய தினம் (டிசம்பர் 2) ரவீந்திர பாரதி வளாகத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் நடிகருமான சுபாலேகா சுதாகரிடம் பிரித்விராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. రవీంద్రభారతిలో ఎస్పీ బాలసుబ్రహ్మణ్యం విగ్రహ ఏర్పాటుపై వివాదం 15న ఎస్పీ బాలు విగ్రహావిష్కరణకు ఏర్పాట్లు అభ్యంతరం వ్యక్తం చేస్తున్న తెలంగాణ ఉద్యమకారుడు పృథ్వీరాజ్ తెలంగాణలో ఏపీ వారి విగ్రహాలు ఎందుకంటూ అడ్డుకుంటున్న పృథ్వీరాజ్ తెలంగాణ ప్రముఖులు గద్దర్, అందెశ్రీ విగ్రహాలకు… pic.twitter.com/A16x3jnJUs — BIG TV Breaking News (@bigtvtelugu) December 2, 2025 ஆந்திராவைச் சேர்ந்த புகழ்பெற்ற நபருக்கு தெலங்கானா கலாச்சார மையத்தில் எதற்கு சிலை எனக் கேள்வியெழுப்பும் பிரித்விராஜ், கத்தார் (Gaddar) மற்றும் ஆண்டே ஸ்ரீ (Ande Sri) போன்ற தெலங்கானா முக்கிய ஆளுமைகளை அரசு கௌரவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் தனியார் ஊடகத்திடம், ``அவரது சிலை இங்கு நிறுவ வேண்டிய அவசியமில்லை. தெலங்கானாவில் பிறந்த பல முக்கிய நபர்கள் இருக்கின்றனர். அவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும். தெலங்கானா மாநில பாடலைப் பாடுமாறு அவரிடம் கேட்டபோது, ​​அவர் மறுத்துவிட்டார். எனவே, அவரின் சிலை இங்கு நிறுவப்பட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று பிரித்விராஜ் கூறியிருக்கிறார். இதனால், தெலங்கானாவில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

விகடன் 3 Dec 2025 9:10 pm

``ஆந்திராவின் எஸ்.பி.பி-க்கு தெலங்கானாவில் எதற்கு சிலை - எதிர்க்கும் சமூக ஆர்வலர்; விவரம் என்ன?

தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் கொனேதம்மாபேட்டாவில் 1946 ஜூன் 4-ம் தேதி பிறந்த இவர், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மொழி உட்பட மொத்தம் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பிறந்த மாநிலமான ஆந்திராவில் மாநில அரசின் தெலுங்கு சினிமா விருதை 25 முறை வென்றிருக்கிறார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகளின் திரைத்துறை விருதுகளையும் வென்றிருக்கிறார். 6 முறை தேசிய விருது வென்றிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷன் (2011) ஆகிய விருதுகளைப் பெற்றார். எஸ்.ஜானகி, மற்றும் எஸ்.பி.பி 2020 செப்டம்பர் 25-ம் தேதி கொரோனா தொற்றால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதற்கடுத்த ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவித்து அவரைக் கௌரவித்தது. மேலும், தமிழக அரசு கடந்த ஆண்டு அவரின் நினைவு நாளில், அவர் இறுதி மூச்சுவரை வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' எனப் பெயர் மாற்றியது. இவ்வாறிருக்க, இந்திய சினிமா மற்றும் இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் தெலங்கானா அரசு அவருக்கு சிலை அமைத்திருக்கிறது. இந்தச் சிலையானது தெலங்கானாவின் பிரபல கலாச்சார மையமான ரவீந்திர பாரதி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலையை டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கவிருக்கிறார். இந்த நிலையில், தெலங்கானாவின் சமூக ஆர்வலர் பிரித்விராஜ் யாதவ் என்பவர் அரசின் இந்த முடிவை எதிர்த்திருக்கிறார். நேற்றைய தினம் (டிசம்பர் 2) ரவீந்திர பாரதி வளாகத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் நடிகருமான சுபாலேகா சுதாகரிடம் பிரித்விராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. రవీంద్రభారతిలో ఎస్పీ బాలసుబ్రహ్మణ్యం విగ్రహ ఏర్పాటుపై వివాదం 15న ఎస్పీ బాలు విగ్రహావిష్కరణకు ఏర్పాట్లు అభ్యంతరం వ్యక్తం చేస్తున్న తెలంగాణ ఉద్యమకారుడు పృథ్వీరాజ్ తెలంగాణలో ఏపీ వారి విగ్రహాలు ఎందుకంటూ అడ్డుకుంటున్న పృథ్వీరాజ్ తెలంగాణ ప్రముఖులు గద్దర్, అందెశ్రీ విగ్రహాలకు… pic.twitter.com/A16x3jnJUs — BIG TV Breaking News (@bigtvtelugu) December 2, 2025 ஆந்திராவைச் சேர்ந்த புகழ்பெற்ற நபருக்கு தெலங்கானா கலாச்சார மையத்தில் எதற்கு சிலை எனக் கேள்வியெழுப்பும் பிரித்விராஜ், கத்தார் (Gaddar) மற்றும் ஆண்டே ஸ்ரீ (Ande Sri) போன்ற தெலங்கானா முக்கிய ஆளுமைகளை அரசு கௌரவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் தனியார் ஊடகத்திடம், ``அவரது சிலை இங்கு நிறுவ வேண்டிய அவசியமில்லை. தெலங்கானாவில் பிறந்த பல முக்கிய நபர்கள் இருக்கின்றனர். அவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும். தெலங்கானா மாநில பாடலைப் பாடுமாறு அவரிடம் கேட்டபோது, ​​அவர் மறுத்துவிட்டார். எனவே, அவரின் சிலை இங்கு நிறுவப்பட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று பிரித்விராஜ் கூறியிருக்கிறார். இதனால், தெலங்கானாவில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

விகடன் 3 Dec 2025 9:10 pm

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க நினைக்கும் சேது, தமிழ் என்ன சொல்ல போகிறார்? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, சூப்பராக இருக்கு கதை. நீதான் சொல்லிக் கொடுத்தாயா? சேது என்றெல்லாம் பேசி இருந்தார். உடனே ராஜாங்கம், நீ கொண்டுவந்த ஆதாரம் பத்தவில்லை. வேறு ஏதாவது இருந்தால் சொல்லு சேது. அப்பதான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்று சொன்னார். உடனே சேது, தன் கையில் இருந்த விஷ வண்டுவை காண்பித்தார். அதை பார்த்து எல்லோருமே பதறினார்கள். சாவித்திரி தாமரை அங்கிருந்து ஓடினார்கள். பின் சேது, அந்த வண்டை […] The post தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க நினைக்கும் சேது, தமிழ் என்ன சொல்ல போகிறார்? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 8:42 pm

‘குட் பேட் அக்லி’படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். ‘குட் பேக் அக்லி பட’த்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி,...

தஸ்தர் 3 Dec 2025 7:17 pm

போலீஸ் விசாரணையில் முத்துமலர் வைத்த செக், ஆடிப்போன காவிரி குடும்பம் –பரபரப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், முத்து மலர் குடும்பம் தங்குவதற்காக ரூமை ஏற்பாடு செய்து தர சொன்னார். இதை கேட்ட விஜயின் சித்தி, நான் சொல்லும் இடத்தை காட்டு என்று வேலைக்காரிடம் சொன்னார். மோசமாக இருக்கும் ரூமில் முத்துமலர் குடும்பத்தை தங்க சொன்னார். இதையெல்லாம் பார்த்து சிந்து பயங்கரமாக அழுதார். கோபத்தில் கிருஷ்ணா, இங்கு எப்படி தங்க முடியும்? என்றார். அதற்கு விஜயின் சித்தி, முத்துமலர் குடும்பத்தை திட்டி அவமானப்படுத்தி விட்டு சென்றார். வேறு […] The post போலீஸ் விசாரணையில் முத்துமலர் வைத்த செக், ஆடிப்போன காவிரி குடும்பம் – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 7:05 pm

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’ திரைப்படம், ஜனவரியில் வெளியாகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’ திரைப்படம், ஜனவரியில் வெளியாகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார். வரும் ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி...

தஸ்தர் 3 Dec 2025 5:39 pm

சந்தோஷ் நாராயணன் பண்ண வைரல் சேட்டை.. அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பாடல் வைரல்!

சந்தோஷ் நாராயணன் பண்ண வைரல் சேட்டை.. அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பாடல் வைரல்! அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும்...

தஸ்தர் 3 Dec 2025 5:28 pm

கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது! திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !! சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இளம் நடிகர் திரு வீர்,...

தஸ்தர் 3 Dec 2025 5:11 pm

கிரிஷை முத்துவீட்டில் விட்ட லட்சுமி, அண்ணாமலை சொன்ன வார்த்தை –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, தன்னுடைய ஆபிஸில் வேலை செய்யும் ஒருவர் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து விட்டதை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மீனாவின் அம்மா, தவறு செய்பவரை விட அதை மறைக்க துணையாக இருப்பவர் செய்வதும் தவறு தான் என்றெல்லாம் சொல்வதால் மீனாவிற்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. பின் மீனா, ரோகிணி வீட்டிற்கு போனார். அங்கு லட்சுமி, ரோகினி செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் மீனா, லட்சுமியை திட்டிவிட்டு […] The post கிரிஷை முத்துவீட்டில் விட்ட லட்சுமி, அண்ணாமலை சொன்ன வார்த்தை – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 5:07 pm

நடிகர் ரியோவின் ‘ராம் இன் லீலா’படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

நடிகர் ரியோவின் ‘ராம் இன் லீலா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’...

தஸ்தர் 3 Dec 2025 4:52 pm

Akhanda 2: ''தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது - சென்னையில் பாலைய்யா

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. 2021-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு. சம்யுக்தா மேனன், ஆதி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். Akhanda 2 இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 'அகண்டா 2: தாண்டவம்' படக்குழுவினர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். பிரசாத் லேபில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு, நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா உட்பட சிலர் வருகை தந்திருந்தார்கள். மேடையில் தமிழில் பேசிய பாலைய்யா, “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சொந்த வீட்டுக்கு வந்த மாதிரியான உணர்வு இப்போ எனக்கிருக்கு. நான் பொறந்தது இங்கதான். தமிழ்நாடு என்னுடைய ஜென்ம பூமி. தெலங்கானா என்னுடைய கர்ம பூமி. ஆந்திரா என்னுடைய ஆத்ம பூமி. என்னுடைய அப்பா என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையும் இங்கதான் வளர்ந்ததுனு உங்களுக்குத் தெரியும். Nandamuri Balakrishna மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் எங்க அப்பா மீது வைத்திருந்த அன்பு, பாசம் மறக்க முடியாதது. என்னுடைய அப்பாவும் தமிழ்நாட்டுக்கு அன்பு, பாசத்தைக் காட்டினார். அவர் எனக்கு குரு, தெய்வம் எல்லாமே. கோவிட் சமயத்துல 'அகண்டா' படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆச்சு. அந்த நேரத்துல இந்தப் படத்தை தியேட்டருக்கு வந்து மக்கள் பார்ப்பாங்களான்னு பயம் இருந்தது. ஆனா, மக்கள் வெளிவர்றதுக்கு இந்த மாதிரியான படம் வேணும்னு படக்குழுவினர் உணர்ந்தாங்க. அந்தப் படம் 2021-ல வெளியாகி பெரிய ஹிட் ஆச்சுனு சொல்லலாம். இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனுவுடனான என்னுடைய நான்காவது படம். ‘சிம்ஹா’, ‘லெஜெண்ட்’, ‘அகண்டா 1’ இப்போ ‘அகண்டா 2’ செய்திருக்கோம். இவை அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்கள். எனக்கும் அவருக்கும் இடையில நல்ல புரிதல் இருக்கு. அதனாலதான் பல்வேறு லொகேஷன்களில் இந்தப் படத்தை 130 நாள்ல எடுக்க முடிஞ்சது. Balaiyaa ஏதோ தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது. இந்த இரண்டாம் பாகத்தை சீக்வெல்னு சொல்ல முடியாது. இந்த ‘அகண்ட தாண்டவம்’ திரைப்படம் நம்முடைய கலாசாரத்தை உலகத்திற்கு எடுத்துரைக்கச் செய்யும் ஒரு யாகம். நம்முடைய சக்தியைத் தூண்டும் தாண்டவம். இந்தப் படத்தைப் பார்த்தால் எதிர்கால சந்ததியினருக்கு தெரிய வரும்.” என்று பேசினார்.

விகடன் 3 Dec 2025 4:46 pm

Samantha: நிழல்போல நானும், நடைபோட நீயும்! - சமந்தா - ராஜ் திருமண தருணங்கள் | Photo Album

Samantha: 1st love முதல் செல்போனுடன் toxic relationship வரை.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா

விகடன் 3 Dec 2025 4:23 pm

BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் பார்வதி, ரம்யா, கம்ருதீன் மூவருக்கும் சண்டை நடக்கிறது. நான் சொல்லும்போது ஏன் யாருமே கேட்கல என பார்வதி கேட்க, இந்த விஷயத்தை நீ தான் சொன்ன, நான் சொன்னேன்னு யார்கிட்டையும் சொல்லவே இல்லையே என ரம்யா சொல்கிறார். இதனிடையே பார்வதிக்கு ஆதரவாக கம்ருதீன் பேச கம்ருதீனுக்கும், ரம்யாவுக்கும் வாக்குவாதம் ஆகிறது. என் கிட்ட பேசாத உன் கால்-ல கூட விழுறேன் என ரம்யா பார்வதியின் காலில் விழுந்து அழுகிறார். BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

விகடன் 3 Dec 2025 3:36 pm

BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் பார்வதி, ரம்யா, கம்ருதீன் மூவருக்கும் சண்டை நடக்கிறது. நான் சொல்லும்போது ஏன் யாருமே கேட்கல என பார்வதி கேட்க, இந்த விஷயத்தை நீ தான் சொன்ன, நான் சொன்னேன்னு யார்கிட்டையும் சொல்லவே இல்லையே என ரம்யா சொல்கிறார். இதனிடையே பார்வதிக்கு ஆதரவாக கம்ருதீன் பேச கம்ருதீனுக்கும், ரம்யாவுக்கும் வாக்குவாதம் ஆகிறது. என் கிட்ட பேசாத உன் கால்-ல கூட விழுறேன் என ரம்யா பார்வதியின் காலில் விழுந்து அழுகிறார். BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

விகடன் 3 Dec 2025 3:36 pm

Mellisai Song , Idhu Enna Maayam Video Song , Kishore , Subatra ,Dhirav , Srinisha Jayaseelan

Mellisai Song , Idhu Enna Maayam Video Song ,https://www.youtube.com/watch?v=hfZaoegXD4o Kishore , Subatra ,Dhirav , Srinisha Jayaseelan

தஸ்தர் 3 Dec 2025 3:30 pm

Mellisai Song , Idhu Enna Maayam Video Song , Kishore , Subatra ,Dhirav , Srinisha Jayaseelan

Mellisai Song , Idhu Enna Maayam Video Song ,https://www.youtube.com/watch?v=hfZaoegXD4o Kishore , Subatra ,Dhirav , Srinisha Jayaseelan

தஸ்தர் 3 Dec 2025 3:30 pm

போஸை வெளுத்து வாங்கிய ராஜாங்கம், காவியா எடுத்த அதிரடி முடிவு –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி கதறி அழுது ஒரு டிராமா செய்து, சேது எல்லாம் பொய் என்று சொல்லிவிட்டார். அதனால் ராஜாங்கத்திற்கு சேது சொல்வதில் நம்பிக்கையே இல்லை. பின் சேது, தான் அழைத்த வந்த ஆட்கள் மூலம் உண்மை சொன்னார். வைத்தியரின் மகள், நடந்ததை எல்லாம் சொன்னார். அதைக் கேட்டு ராஜாங்கம் ஷாக் ஆனார். ஈஸ்வரிக்கு கோபத்தில் நின்று கொண்டிருந்தார். போஸிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார். வைத்தியரின் […] The post போஸை வெளுத்து வாங்கிய ராஜாங்கம், காவியா எடுத்த அதிரடி முடிவு – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 3:12 pm

அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்! - 8 மணி நேர பணி குறித்து துல்கர் &ரானாவின் கருத்து என்ன?

சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்தார். இவருடைய கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் முக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் பேசி வருகிறார்கள். Deepika Padukone ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்காக அதன் ஆசிரியர் அனுபமா சோப்ரா, 2025-ம் ஆண்டின் முன்னணி தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ரவுண்ட் டேபிள் நேர்காணல் நடத்தியிருந்தார். அதில் நடிகர்கள் துல்கர் சல்மானும், ரானாவும் இந்த 8 மணி நேரப் பணி குறித்து அவர்களுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். அந்த நேர்காணலில் ரானா, சினிமா என்பது வேலை இல்லை. இது ஒரு லைஃப்ஸ்டைல். இதில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனித்தன்மைகளைக் கொண்டிருக்கும். அதைக் குறிப்பிட்ட நேர அட்டவணைக்குள் அடைக்க முடியாது. தொழிற்சாலையைப் போல அசெம்பிளி லைன் அணுகுமுறை கதை சொல்லலைப் பாழாக்கிவிடும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலையைச் செய்தால் தானாக சிறந்த காட்சி வந்துவிடும் என்று கிடையாது. தெலுங்கு சினிமாவில் இப்போது பல முன்னணி நடிகர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவதால் பட்ஜெட்டைக் கட்டுப்படுத்தவும், ஷூட்டிங்கை விரைவாக முடிக்கவும் முடிகிறது. பெரிய நட்சத்திரங்கள் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளையும் சொகுசையும் குறைப்பது அவர்களது பொறுப்பு என்றார். Rana Daggubati அவரைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான், மலையாள சினிமாவில் பட்ஜெட் சிறியதாக இருப்பதால் நீண்ட தொடர் ஷெட்யூல்களையே பின்பற்றியிருக்கிறோம். இடைவெளி அதிகம் இல்லாமல் விரைவாக ஷூட்டிங்கை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் தெலுங்கு படங்களில் பணிபுரியும் போது பெரிய பட்ஜெட், சிறந்த திட்டமிடல் இருப்பதால் பெரும்பாலும் மாலைக்குள்ளேயே பேக் அப் ஆகிவிடும். எல்லாம் ஒழுங்காக, கட்டமைக்கப்பட்ட விதத்தில் நடக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை என்பது எப்போதும் பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை. ஒரு நாளைக்கு சில மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்வது, மற்றொரு முழு நாள் ஷூட்டிங் செய்வதைவிட குறைவான பணமே செலவாகும். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:55 pm

அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்! - 8 மணி நேர பணி குறித்து துல்கர் &ரானாவின் கருத்து என்ன?

சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்தார். இவருடைய கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் முக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் பேசி வருகிறார்கள். Deepika Padukone ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்காக அதன் ஆசிரியர் அனுபமா சோப்ரா, 2025-ம் ஆண்டின் முன்னணி தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ரவுண்ட் டேபிள் நேர்காணல் நடத்தியிருந்தார். அதில் நடிகர்கள் துல்கர் சல்மானும், ரானாவும் இந்த 8 மணி நேரப் பணி குறித்து அவர்களுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். அந்த நேர்காணலில் ரானா, சினிமா என்பது வேலை இல்லை. இது ஒரு லைஃப்ஸ்டைல். இதில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனித்தன்மைகளைக் கொண்டிருக்கும். அதைக் குறிப்பிட்ட நேர அட்டவணைக்குள் அடைக்க முடியாது. தொழிற்சாலையைப் போல அசெம்பிளி லைன் அணுகுமுறை கதை சொல்லலைப் பாழாக்கிவிடும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலையைச் செய்தால் தானாக சிறந்த காட்சி வந்துவிடும் என்று கிடையாது. தெலுங்கு சினிமாவில் இப்போது பல முன்னணி நடிகர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவதால் பட்ஜெட்டைக் கட்டுப்படுத்தவும், ஷூட்டிங்கை விரைவாக முடிக்கவும் முடிகிறது. பெரிய நட்சத்திரங்கள் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளையும் சொகுசையும் குறைப்பது அவர்களது பொறுப்பு என்றார். Rana Daggubati அவரைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான், மலையாள சினிமாவில் பட்ஜெட் சிறியதாக இருப்பதால் நீண்ட தொடர் ஷெட்யூல்களையே பின்பற்றியிருக்கிறோம். இடைவெளி அதிகம் இல்லாமல் விரைவாக ஷூட்டிங்கை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் தெலுங்கு படங்களில் பணிபுரியும் போது பெரிய பட்ஜெட், சிறந்த திட்டமிடல் இருப்பதால் பெரும்பாலும் மாலைக்குள்ளேயே பேக் அப் ஆகிவிடும். எல்லாம் ஒழுங்காக, கட்டமைக்கப்பட்ட விதத்தில் நடக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை என்பது எப்போதும் பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை. ஒரு நாளைக்கு சில மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்வது, மற்றொரு முழு நாள் ஷூட்டிங் செய்வதைவிட குறைவான பணமே செலவாகும். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:55 pm

Angammal: அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு! - கீதா கைலாசம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள 'அங்கம்மாள்' படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கீதா கைலாசம் - சரண் சக்தி தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். டிசம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கீதா கைலாசம், “'அங்கம்மாள்' கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது. அவளுடைய மௌனத்திற்கும், பெருமைக்கும், இதயத்துடிப்புக்கும் முழுமையாக சரணடைய வேண்டியிருந்தது. கிராமத்தில் படமாக்கியதால் ஒவ்வொரு ஃபிரேமிலும் நான் நடிக்கும் முறையே மாறியது. இந்தக் கதையை இவ்வளவு உணர்திறனுடன் வடிவமைத்த இயக்குநர் விபினுக்கு நன்றி. ரிகர்சல் மூலம் அல்லாமல் அந்த கதாபாத்திரத்தை நான் உணர்ந்து நடிக்க அனுமதித்தார். சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது. கீதா கைலாசம் - பரணி இந்தப் படம் வெளியானதும் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சின்சியராக நடித்தோம். இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் புது அனுபவத்தையும் ஒரு தலைமுறையின் வலிமையையும் எடுத்து சொல்லும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:49 pm

Vikatan Digital Award: ``அப்பா கமல் ரசிகர்; அவரோட திருமணத்திற்கு கூட'' - தமிழ் டெக் தமிழ்ச்செல்வன்

சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் 'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025' கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். தமிழ்ச்செல்வன் விருதைப் பெற்ற பிறகு பேசிய தமிழ்ச்செல்வன், சுட்டி விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினதுல இருந்து ரெண்டாம் க்ளாஸ் படிக்கும்போது கம்யூட்டர் க்ளாஸ் சேர்த்துவிட்டது வரைக்கும் எல்லாமே என் அப்பா தான் பண்ணாரு. எங்க அப்பா கமல் சாரோட மிகப்பெரிய ரசிகர். அப்படி ஒரு ரசிகரை பார்க்க முடியாது, வீட்டில மிகப்பெரிய சண்டை நடந்து தான் அப்பா நற்பணி மன்றம் பொறுப்பில் இருந்து வெளியில வந்தாரு, அப்பாவோட திருமணத்திற்கு கூட கமல் சாரை‌ நேரில் அழைச்சிருந்தாரு. ஆனா அவரால வர முடியல. தமிழ்ச்செல்வன் அப்பாவால் தான் இந்த விருது கிடைச்சிருக்கு. எங்க அப்பா என் கூட இருக்காருங்கிற நம்பிக்கையில தான் இன்னும் ஓடிக்கிட்டே இருக்கேன் என விகடன் மேடையில் பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

விகடன் 3 Dec 2025 1:29 pm

சோழனின் சாமர்த்திய பேச்சால் அந்தர் பல்டி அடித்த நிலா, காயத்ரி நிலை என்ன? அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் காயத்ரி, ஏன் போன் எடுக்கவில்லை. எதற்காக என்னை அவாய்ட் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு சேரனுக்கு ஷாக்காக இருந்தது. காயத்ரியை தனியாக அழைத்து சென்று சோழன் பேசி இருந்தார். அதற்குப்பின் பாண்டியன், சோழனை காயத்ரி காதலிக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். இதை கேட்டு சேரனுக்கு இன்னும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு பக்கம் சோழன், எனக்கும் உங்களுக்கும் செட்டாகாது. நான் உங்களை காதலிக்கவே இல்லை என்றார். […] The post சோழனின் சாமர்த்திய பேச்சால் அந்தர் பல்டி அடித்த நிலா, காயத்ரி நிலை என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Dec 2025 1:17 pm

BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கும், திவ்யா கணேஷிற்கும் சண்டை நடக்கிறது. ஒருத்தவுங்களை பேச விட்டு எல்லாரும் வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்தீங்க என திவ்யா சொல்ல தேவை இல்லாம பேசாத. நீ எல்லாம் என் கூட பேசவே கூடாது கிளம்பு என கம்ருதீன் கோபப்படுகிறார். மரியாதையா பேசு கம்ருதீன் என திவ்யா கத்துகிறார். கம்ருதீனை சமாதானம் செய்யும் பார்வதியை 'நீ பண்றது தப்பு' என காட்டமாக பேசுகிறார் திவ்யா.

விகடன் 3 Dec 2025 12:57 pm

BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கும், திவ்யா கணேஷிற்கும் சண்டை நடக்கிறது. ஒருத்தவுங்களை பேச விட்டு எல்லாரும் வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்தீங்க என திவ்யா சொல்ல தேவை இல்லாம பேசாத. நீ எல்லாம் என் கூட பேசவே கூடாது கிளம்பு என கம்ருதீன் கோபப்படுகிறார். மரியாதையா பேசு கம்ருதீன் என திவ்யா கத்துகிறார். கம்ருதீனை சமாதானம் செய்யும் பார்வதியை 'நீ பண்றது தப்பு' என காட்டமாக பேசுகிறார் திவ்யா.

விகடன் 3 Dec 2025 12:57 pm

BB Tamil 9 Day 58: தற்காலிக காதல்கள்; நெருங்கிய நட்பில் பிரஜின் - திவ்யா; நடந்தது என்ன?

முதல் சீசனில் வந்த ‘நெக்லஸ்’ டாஸ்க்கை தூசு தட்டி மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்கள் reckless ஆக இல்லாமல் இருந்தால் சரிதான்.  முக்கோணக் காதல் பிரச்னையை தீர்ப்பதற்காக நடந்த வரலாற்றுச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இது ஜியாமென்ட்ரி பாக்ஸில்கூட அடக்கமுடியாத அளவிற்கு அறுங்கோணமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதுபோல. இப்போது அரோரா FJ-வுடன் நெருக்கமாகத் தொடங்கியிருக்கிறாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 58 பெர்முடா முக்கோண மர்மத்தின் ரகிசயத்தைக்கூட கண்டுபிடித்து முடியும்போல. ஒரு காதலின் முக்கோணச் சிக்கலை அவிழ்ப்பது அத்தனை எளிதல்ல. கமு்மு - அம்மு - பாருவின் சமாதான பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் தொடங்கியது.  BB Tamil 9 Day 58 “இந்த டிரையாங்கிள் பிரச்னையை இத்தோட நிறுத்திக்கலாம். எங்க லவ் ரொம்ப ஸ்ட்ராங்கு. நீதான் குறுக்க வர்ற” என்கிற மாதிரி பாரு சொல்ல, “அப்படின்னா கம்முவோட இன்னமும் நான் பிரெண்டா இருக்கறது நல்லாயிரு்ககாது. நீங்க அனுமதி கொடுக்கும்போது மட்டும் பேசணும்னு எனக்கு அவசியமில்ல.” என்று அரோரா சொல்ல “உன் கேமை நீ ஆடு... அவங்கவங்க அவங்க கேமை ஆடலாம்” என்று கம்மு எரிச்சலாக அரோரா கையெடுத்து கும்பிட்டு விட்டுச்சென்றார்.  கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள முயன்றால்.. பாரு, அரோரா ஆகிய இருவருக்குமே கம்மு என்கிற பொம்மை ஆடுவதற்குத் தேவைப்படுகிறது. இருவருக்குமே அதை விட்டுக்கொடுக்க மனமில்லை. வெளியுலகம் என்றால் சட்டென்று விலகிவிடலாம். ஆனால் பிக் பாஸ் என்கிற அடைபட்ட சூழலில் தனக்கேற்ற comfort zone-ஐ ஒருவர் தேடிக்கொள்வது இயல்பானது. ஆகவே இருவரும் போட்டியிடுகிறார்கள்.  ‘எனக்கு ஃபீலீங்க்ஸ் இருக்கு. பொசசிவ் ஆகுது. பிரெண்டா இருக்கட்டும். ஆனா என் கண் முன்னாடி வேணாம்” என்று நிபந்தனையிடுகிறார் பாரு. ‘அப்படிப்பட்ட பிரெண்ட்ஷிப்பே எனக்கு வேணாம்’ என்று உதறிச் செல்கிறார் அரோரா. அப்படிச் சென்றாலும் கலங்காமல் இருக்க அவரால் முடியவில்லை. துஷாரின் இடத்தை கம்முவின் மூலம் ரீபிளேஸ் செய்ய விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.  இப்படியாக இரண்டு பெண்கள் ஒரு பொம்மைக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க, கம்மு என்கிற பொம்மையோ ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என்று இரண்டு பக்கமும் கோல் அடிக்க நினைக்கிறது. ரொம்பவும் வற்புறுத்தினால் ‘ஆமாம்.. பாரு மேலதான் ஃபீலிங்க்ஸ்’ என்று அரோரா மீது கோபம் கொள்கிறது. BB Tamil 9 Day 58 பிக் பாஸ் வீட்டில் உருவாகும் தற்காலிக காதல்கள் பிக் பாஸ் வீட்டில் உருவாகிற லவ் டிராக் எல்லாம் அப்போதைய நேரத்திற்கு உருவாகும் தற்காலிக உணர்ச்சி என்பது உலகத்திற்கே தெரியும். அப்படி இருந்தும் கூட கவின் - லோஸ்லியா (3-ம் சீசன்) இருவருக்கு இடையே உண்டான காவியக்காதல் வெளியில் தொடர்ந்து திருமணத்தில் முடியும் என்று ஒரு கணம் நம்பினேன். இதுதான் நிலைமை. மீடியாவில் ஊறியுள்ள பாருவிற்கும் கம்முவிற்கும் இது நன்றாகத் தெரியும். என்றாலும் ‘எனக்கு ஃபீலிங்க்ஸ் அதிகம்' என்று பாரு வலியுறுத்துவது டிராமா என்றுதான் தோன்றுகிறது.  ‘என்னோட வளர்ச்சியைப் பத்தி அரோரா உண்மையாவே கவலைப்படறா. ‘நீ நல்ல நடிகன் ஆகணும்’ன்னு சொல்லி திறமையை வளர்த்துக்கச் சொல்றா. எனக்கு ரெட் கார்டு கிடைக்கும்ன்னு பேசிக்கிட்ட அரோரா அழுதா.. அவதான் எனக்கு உண்மையான பிரெண்டு. ஆனால் பாருவோ அவளைப் பத்திதான் கவலைப்படறா. வம்பு பேசறா’ என்று மிகத் தெளிவாக சொன்னவரும் இதே கம்ருதீன்தான். ஆனால் தனக்கு எது தேவை என்று வரும்போது பாருவின் பக்கம் சாய்கிறார். (கசாப்புக் கடைக்காரனைத்தான் ஆடு நம்பும் என்றொரு பழமொழி இருக்கிறது)  ‘அதே டெய்லர்.. அதே வாடகை.. எனக்கும் அதையேதான் சொன்னான்’ என்று அரேரராவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ஆதிரை. ‘வெண்மதி வெண்மதியே நில்லு’ என்று டைமிங்கான பாட்டை FJ தலைமையில் ஒரு குழு டைமிங்காக பாட தனியாகச் சென்று கண்கலங்கினார் அரோரா. காமிரா துஷார் படத்தை க்ளோசப்பில் காண்பித்தது.  சான்ட்ராவின் புரியாத கோபம் - எஸ்கேப் ஆன பிரஜன் நாள் 58. தல ரம்யா அறையில் கனி தூங்கிய விவகாரத்தை துண்டுக் காட்சியாக எதற்கோ காண்பித்தார்கள்.  பாருவும் வியானாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். “ஒரு பிரண்ட்ஷிப் எப்ப வேணா லவ்வா மாறலாம். அதுல தப்பில்லை. நீங்க பண்றது ரொம்ப வெளிப்படையா தெரியுது” என்று வியானா சொல்ல “நான் நிறைய விட்டுக் கொடுத்திருக்கேன். அவங்க ரெண்டு பேரும் நட்புச் செடியை நல்லாவே தண்ணி விட்டு வளர்க்கட்டும். ஆனா என் கண்ணு முன்னாடி வேணாம். நான் இந்த மாதிரி Evil ஆட்டமெல்லாம் ஆட மாட்டேன்” என்று தன் பொசசிவ்னஸிற்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்தார் பாரு.  BB Tamil 9 Day 58 இந்த லவ் டிராக் சிக்கல்தான் இப்படியென்றால், திருமண டிராக்கிலும் ஒரே பிரச்னைதான். சான்ட்ரா எதற்காக கோபமாக இருக்கிறார், அடிக்கடி தனிமையில் அமர்ந்து கொள்கிறார் என்கிற ரகசியத்தை அறிய முடியவில்லை.  “ஒருவேளை அவளுக்கு நான் ரெட் பேட்ஜ் கொடுத்துது காரணமா இருக்கலாம். தெரியல. அப்படியே விட்ரு. நான் சக போட்டியாளர்தான். இதையெல்லாம் விசாரிக்க முடியாது” என்று திவ்யாவிடம் ஜாக்கிரதையாகச் சொன்னார் பிரஜன். ஆனால் திவ்யாவோ “ அவ கிட்ட பேசவே பயமா இருக்குது. இருந்தாலும் போய்க் கேட்டுட்டு வரேன்’ என்று வம்படியாக கிளம்பிச் சென்றார்.  ‘ரெண்டு ரூவாதாண்டா கேட்டேன். அவன் என்ன கோபத்துல இருந்தானோ. தெரியல.. இவ்ளோ பெரிய கத்திய உருவிட்டான்’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி, திவ்யா அருகில் வந்ததுமே படபடவென பொறிய ஆரம்பித்துவிட்டார் சான்ட்ரா. “எனக்கு நூறு பிரச்னை இருக்கும். அதையெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியுமா.. எங்க அப்பா செத்த மாசம் இது. உனக்கு தெரியாம இருக்கலாம். அவருக்கு தெரியாதா.. இப்ப நான் என்ன பண்ணணும்..?” என்றெல்லாம் சான்ட்ரா எரிந்து விழ ‘தப்பிச்சோம்டா சாமி’ என்று எழுந்து வந்தார் திவ்யா.  பெண்களின் குறிப்பான மனைவிமார்களின் கோபத்திற்கான காரணத்தை அறிவது பிரம்ம சூத்திரம். காரணத்தை வெளிப்படையாகச் சொல்லியும் தொலைக்க மாட்டார்கள். விசாரிக்க அருகில் சென்றாலும் மேலே பாய்ந்து பிடுங்குவார்கள்.  ஆனால் பிரஜின் ரொம்பவும் அனுபவஸ்தராக இருக்கிறார். “இப்ப வேணாம் விட்ரு. பார்த்துக்கலாம். வண்டி தானா வரட்டும்’ என்று சாமர்த்தியமாக டீல் செய்கிறார்.  BB Tamil 9 Day 58 பிரஜனும் திவ்யாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் சான்ட்ராவிற்கு பொசசிவ் ஏற்படுகிறதா, அல்லது பிரஜன் சொன்னது மாதிரி ‘ரெட் பேட்ஜ்’தான் பிரச்னையா? சான்ட்ராவிற்கே வெளிச்சம்.  ‘பிரஜின் எவிக்ஷன்’ என்னும் போது ஊரையே கூட்டி அழுது அலப்பறை செய்த சான்ட்ரா, இப்போது கோபத்தையும் அதே அளவிற்கான மீட்டரில் காட்டுகிறார். எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரீம் என்றால் எப்படி? ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’ என்று டாஸ்க்கின்போது பிரஜின் சொல்ல “அப்புறம் உங்க  நிலைமை என்ன ஆகப் போகுதோ?’ என்று விசே கிண்டலடித்தது உண்மையாகிக் கொண்டிருக்கிறது.  ‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ - திவாகரைப் பிரிய மனமில்லாத பிக் பாஸ் வீக்லி டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ‘ஜமீன்தாரும் நெக்லஸூம்’ என்பது தலைப்பு. ஜமீன்தாரின் பெயர் ‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ வாம். திவாகர் வெளியே சென்றாலும்கூட இவர்கள்விட மாட்டார்கள் போலிருக்கிறது. ‘பாருங்க.. தமிழக மக்களே.. என் பெயராலதான் பிக் பாஸ் வண்டி ஓடுது’ என்று அவர் பெருமிதமாக இண்டர்வியூவில் சொல்லப்போகிறார்.  ‘ரெட்ரோ சினிமா’, ‘மாடர்ன் சினிமா’ என்று வீடு இரண்டு அணிகளாகப் பிரியும். ஜமீன்தார் தந்து விட்டுச் சென்றிருக்கும் நெக்லஸூகளை இரண்டு அணிகளும் பாதுகாக்க வேண்டும். நெக்லஸை தொலைக்கும் அணி ஒட்டுமொத்தமாக நாமினேஷன் ஆகும். வெற்றி பெறும் அணி நாமினேஷன் ப்ரீ பாஸ் வெல்லும்.  BB Tamil 9 Day 58 ஒவ்வொருவரின் சினிமா கேரக்டர்கள் தரப்பட்டன. ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதவாக விக்ரம், வசந்தமாளிகை சரோஜாதேவியாக ‘கனி’, இதே படத்தின் சிவாஜியாக ஆதிரை, திருவிளையாடல் தருமியாக சுபிக்ஷா, பிராமண வீட்டுப் பெண்ணாக அரோரா, கர்ணன் சிவாஜியாக அமித், ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியாக திவ்யா, இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கமாக பிரஜின், முதல் மரியாதை ராதா (?!) வாக வியானா, ரெமோ நர்ஸ் ஆக கம்ருதீன், நத்தக்கண்ணுவாக பாரு, (என்னடா பேரு இது?) டி.ஆர் ஆக வினோத், மதராசப் பட்டினம் எமி ஜாக்ஸனாக சான்ட்ரா, வல்லவன் சிம்புவாக FJ, குணா அபிராமியாக சபரி.  டி.ஆர் பாத்திரம் என்று அறிவிக்கப்பட்டதுமே அந்த மோடில் மாறி ரைமிங்கில் அலப்பறையைத் தொடங்கிவிட்டார் வினோத். தனக்கு தரப்பட்ட விக்கை மாட்டிக் கொண்டு ‘என்னடா.. இது ஓலைக்குடிசைக்குள்ள வாழற மாதிரி இருக்கு’ என்று சொன்னது நல்ல நகைச்சுவை. ‘சும்மாவே பேசுவான்.. இப்ப இந்த காரெக்டர் வேறயா?” என்று மற்றவர்கள் ஜாலியாக சலித்துக்கொண்டார்கள்.  ஒவ்வொருவரும் தங்களின் காரெக்ட்டரில் கோரஸாக கத்திக்கொண்டிருந்தார்கள். அப்போதும்கூட அரோராவும் பாருவும் தங்களின் ‘ஃபீலிங்’ சண்டையை ஜாடையாக நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். பாருவின் கணவர் பெயர் சக்திவேல் கம்ருதீனாம். காரெக்டர்லகூட ரொமான்ஸை சேர்க்கிற அளவிற்கு ஃபீலிங்க்ஸ் டெவலப் ஆகியிருக்கிறது. ‘சதி லீலாவதி’ கோவை சரளாவின் காரெக்டரை காப்பி செய்ய முயன்று கொண்டிருந்தார் பாரு.  காய்கறிகளை மேஜையில் அடுக்கி வைத்து, கண்ணைக் கட்டிக்கொண்டு கண்டுபிடிக்கிற டெய்லி டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். சான்ட்ராவிற்கும் அமித்திற்கும் நடந்த முதல் சுற்றில், பார்வதி கத்திக் கொண்டேயிருந்ததால் அமித் கோபம் அடைந்தார்.  ஒவ்வொருவருக்கும் சுவாரசியமான கேரக்டர்கள் தரப்பட்டிருக்கின்றன. இதை வைத்து டாஸ்க்கை சிறப்பாகச் செய்து நடிப்பு அரக்கனின் பெயரைக் காப்பாற்றுவார்களா?

விகடன் 3 Dec 2025 11:51 am

BB Tamil 9 Day 58: தற்காலிக காதல்கள்; நெருங்கிய நட்பில் பிரஜின் - திவ்யா; நடந்தது என்ன?

முதல் சீசனில் வந்த ‘நெக்லஸ்’ டாஸ்க்கை தூசு தட்டி மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்கள் reckless ஆக இல்லாமல் இருந்தால் சரிதான்.  முக்கோணக் காதல் பிரச்னையை தீர்ப்பதற்காக நடந்த வரலாற்றுச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இது ஜியாமென்ட்ரி பாக்ஸில்கூட அடக்கமுடியாத அளவிற்கு அறுங்கோணமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதுபோல. இப்போது அரோரா FJ-வுடன் நெருக்கமாகத் தொடங்கியிருக்கிறாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 58 பெர்முடா முக்கோண மர்மத்தின் ரகிசயத்தைக்கூட கண்டுபிடித்து முடியும்போல. ஒரு காதலின் முக்கோணச் சிக்கலை அவிழ்ப்பது அத்தனை எளிதல்ல. கமு்மு - அம்மு - பாருவின் சமாதான பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் தொடங்கியது.  BB Tamil 9 Day 58 “இந்த டிரையாங்கிள் பிரச்னையை இத்தோட நிறுத்திக்கலாம். எங்க லவ் ரொம்ப ஸ்ட்ராங்கு. நீதான் குறுக்க வர்ற” என்கிற மாதிரி பாரு சொல்ல, “அப்படின்னா கம்முவோட இன்னமும் நான் பிரெண்டா இருக்கறது நல்லாயிரு்ககாது. நீங்க அனுமதி கொடுக்கும்போது மட்டும் பேசணும்னு எனக்கு அவசியமில்ல.” என்று அரோரா சொல்ல “உன் கேமை நீ ஆடு... அவங்கவங்க அவங்க கேமை ஆடலாம்” என்று கம்மு எரிச்சலாக அரோரா கையெடுத்து கும்பிட்டு விட்டுச்சென்றார்.  கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள முயன்றால்.. பாரு, அரோரா ஆகிய இருவருக்குமே கம்மு என்கிற பொம்மை ஆடுவதற்குத் தேவைப்படுகிறது. இருவருக்குமே அதை விட்டுக்கொடுக்க மனமில்லை. வெளியுலகம் என்றால் சட்டென்று விலகிவிடலாம். ஆனால் பிக் பாஸ் என்கிற அடைபட்ட சூழலில் தனக்கேற்ற comfort zone-ஐ ஒருவர் தேடிக்கொள்வது இயல்பானது. ஆகவே இருவரும் போட்டியிடுகிறார்கள்.  ‘எனக்கு ஃபீலீங்க்ஸ் இருக்கு. பொசசிவ் ஆகுது. பிரெண்டா இருக்கட்டும். ஆனா என் கண் முன்னாடி வேணாம்” என்று நிபந்தனையிடுகிறார் பாரு. ‘அப்படிப்பட்ட பிரெண்ட்ஷிப்பே எனக்கு வேணாம்’ என்று உதறிச் செல்கிறார் அரோரா. அப்படிச் சென்றாலும் கலங்காமல் இருக்க அவரால் முடியவில்லை. துஷாரின் இடத்தை கம்முவின் மூலம் ரீபிளேஸ் செய்ய விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.  இப்படியாக இரண்டு பெண்கள் ஒரு பொம்மைக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க, கம்மு என்கிற பொம்மையோ ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என்று இரண்டு பக்கமும் கோல் அடிக்க நினைக்கிறது. ரொம்பவும் வற்புறுத்தினால் ‘ஆமாம்.. பாரு மேலதான் ஃபீலிங்க்ஸ்’ என்று அரோரா மீது கோபம் கொள்கிறது. BB Tamil 9 Day 58 பிக் பாஸ் வீட்டில் உருவாகும் தற்காலிக காதல்கள் பிக் பாஸ் வீட்டில் உருவாகிற லவ் டிராக் எல்லாம் அப்போதைய நேரத்திற்கு உருவாகும் தற்காலிக உணர்ச்சி என்பது உலகத்திற்கே தெரியும். அப்படி இருந்தும் கூட கவின் - லோஸ்லியா (3-ம் சீசன்) இருவருக்கு இடையே உண்டான காவியக்காதல் வெளியில் தொடர்ந்து திருமணத்தில் முடியும் என்று ஒரு கணம் நம்பினேன். இதுதான் நிலைமை. மீடியாவில் ஊறியுள்ள பாருவிற்கும் கம்முவிற்கும் இது நன்றாகத் தெரியும். என்றாலும் ‘எனக்கு ஃபீலிங்க்ஸ் அதிகம்' என்று பாரு வலியுறுத்துவது டிராமா என்றுதான் தோன்றுகிறது.  ‘என்னோட வளர்ச்சியைப் பத்தி அரோரா உண்மையாவே கவலைப்படறா. ‘நீ நல்ல நடிகன் ஆகணும்’ன்னு சொல்லி திறமையை வளர்த்துக்கச் சொல்றா. எனக்கு ரெட் கார்டு கிடைக்கும்ன்னு பேசிக்கிட்ட அரோரா அழுதா.. அவதான் எனக்கு உண்மையான பிரெண்டு. ஆனால் பாருவோ அவளைப் பத்திதான் கவலைப்படறா. வம்பு பேசறா’ என்று மிகத் தெளிவாக சொன்னவரும் இதே கம்ருதீன்தான். ஆனால் தனக்கு எது தேவை என்று வரும்போது பாருவின் பக்கம் சாய்கிறார். (கசாப்புக் கடைக்காரனைத்தான் ஆடு நம்பும் என்றொரு பழமொழி இருக்கிறது)  ‘அதே டெய்லர்.. அதே வாடகை.. எனக்கும் அதையேதான் சொன்னான்’ என்று அரேரராவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ஆதிரை. ‘வெண்மதி வெண்மதியே நில்லு’ என்று டைமிங்கான பாட்டை FJ தலைமையில் ஒரு குழு டைமிங்காக பாட தனியாகச் சென்று கண்கலங்கினார் அரோரா. காமிரா துஷார் படத்தை க்ளோசப்பில் காண்பித்தது.  சான்ட்ராவின் புரியாத கோபம் - எஸ்கேப் ஆன பிரஜன் நாள் 58. தல ரம்யா அறையில் கனி தூங்கிய விவகாரத்தை துண்டுக் காட்சியாக எதற்கோ காண்பித்தார்கள்.  பாருவும் வியானாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். “ஒரு பிரண்ட்ஷிப் எப்ப வேணா லவ்வா மாறலாம். அதுல தப்பில்லை. நீங்க பண்றது ரொம்ப வெளிப்படையா தெரியுது” என்று வியானா சொல்ல “நான் நிறைய விட்டுக் கொடுத்திருக்கேன். அவங்க ரெண்டு பேரும் நட்புச் செடியை நல்லாவே தண்ணி விட்டு வளர்க்கட்டும். ஆனா என் கண்ணு முன்னாடி வேணாம். நான் இந்த மாதிரி Evil ஆட்டமெல்லாம் ஆட மாட்டேன்” என்று தன் பொசசிவ்னஸிற்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்தார் பாரு.  BB Tamil 9 Day 58 இந்த லவ் டிராக் சிக்கல்தான் இப்படியென்றால், திருமண டிராக்கிலும் ஒரே பிரச்னைதான். சான்ட்ரா எதற்காக கோபமாக இருக்கிறார், அடிக்கடி தனிமையில் அமர்ந்து கொள்கிறார் என்கிற ரகசியத்தை அறிய முடியவில்லை.  “ஒருவேளை அவளுக்கு நான் ரெட் பேட்ஜ் கொடுத்துது காரணமா இருக்கலாம். தெரியல. அப்படியே விட்ரு. நான் சக போட்டியாளர்தான். இதையெல்லாம் விசாரிக்க முடியாது” என்று திவ்யாவிடம் ஜாக்கிரதையாகச் சொன்னார் பிரஜன். ஆனால் திவ்யாவோ “ அவ கிட்ட பேசவே பயமா இருக்குது. இருந்தாலும் போய்க் கேட்டுட்டு வரேன்’ என்று வம்படியாக கிளம்பிச் சென்றார்.  ‘ரெண்டு ரூவாதாண்டா கேட்டேன். அவன் என்ன கோபத்துல இருந்தானோ. தெரியல.. இவ்ளோ பெரிய கத்திய உருவிட்டான்’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி, திவ்யா அருகில் வந்ததுமே படபடவென பொறிய ஆரம்பித்துவிட்டார் சான்ட்ரா. “எனக்கு நூறு பிரச்னை இருக்கும். அதையெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியுமா.. எங்க அப்பா செத்த மாசம் இது. உனக்கு தெரியாம இருக்கலாம். அவருக்கு தெரியாதா.. இப்ப நான் என்ன பண்ணணும்..?” என்றெல்லாம் சான்ட்ரா எரிந்து விழ ‘தப்பிச்சோம்டா சாமி’ என்று எழுந்து வந்தார் திவ்யா.  பெண்களின் குறிப்பான மனைவிமார்களின் கோபத்திற்கான காரணத்தை அறிவது பிரம்ம சூத்திரம். காரணத்தை வெளிப்படையாகச் சொல்லியும் தொலைக்க மாட்டார்கள். விசாரிக்க அருகில் சென்றாலும் மேலே பாய்ந்து பிடுங்குவார்கள்.  ஆனால் பிரஜின் ரொம்பவும் அனுபவஸ்தராக இருக்கிறார். “இப்ப வேணாம் விட்ரு. பார்த்துக்கலாம். வண்டி தானா வரட்டும்’ என்று சாமர்த்தியமாக டீல் செய்கிறார்.  BB Tamil 9 Day 58 பிரஜனும் திவ்யாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் சான்ட்ராவிற்கு பொசசிவ் ஏற்படுகிறதா, அல்லது பிரஜன் சொன்னது மாதிரி ‘ரெட் பேட்ஜ்’தான் பிரச்னையா? சான்ட்ராவிற்கே வெளிச்சம்.  ‘பிரஜின் எவிக்ஷன்’ என்னும் போது ஊரையே கூட்டி அழுது அலப்பறை செய்த சான்ட்ரா, இப்போது கோபத்தையும் அதே அளவிற்கான மீட்டரில் காட்டுகிறார். எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரீம் என்றால் எப்படி? ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’ என்று டாஸ்க்கின்போது பிரஜின் சொல்ல “அப்புறம் உங்க  நிலைமை என்ன ஆகப் போகுதோ?’ என்று விசே கிண்டலடித்தது உண்மையாகிக் கொண்டிருக்கிறது.  ‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ - திவாகரைப் பிரிய மனமில்லாத பிக் பாஸ் வீக்லி டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ‘ஜமீன்தாரும் நெக்லஸூம்’ என்பது தலைப்பு. ஜமீன்தாரின் பெயர் ‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ வாம். திவாகர் வெளியே சென்றாலும்கூட இவர்கள்விட மாட்டார்கள் போலிருக்கிறது. ‘பாருங்க.. தமிழக மக்களே.. என் பெயராலதான் பிக் பாஸ் வண்டி ஓடுது’ என்று அவர் பெருமிதமாக இண்டர்வியூவில் சொல்லப்போகிறார்.  ‘ரெட்ரோ சினிமா’, ‘மாடர்ன் சினிமா’ என்று வீடு இரண்டு அணிகளாகப் பிரியும். ஜமீன்தார் தந்து விட்டுச் சென்றிருக்கும் நெக்லஸூகளை இரண்டு அணிகளும் பாதுகாக்க வேண்டும். நெக்லஸை தொலைக்கும் அணி ஒட்டுமொத்தமாக நாமினேஷன் ஆகும். வெற்றி பெறும் அணி நாமினேஷன் ப்ரீ பாஸ் வெல்லும்.  BB Tamil 9 Day 58 ஒவ்வொருவரின் சினிமா கேரக்டர்கள் தரப்பட்டன. ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதவாக விக்ரம், வசந்தமாளிகை சரோஜாதேவியாக ‘கனி’, இதே படத்தின் சிவாஜியாக ஆதிரை, திருவிளையாடல் தருமியாக சுபிக்ஷா, பிராமண வீட்டுப் பெண்ணாக அரோரா, கர்ணன் சிவாஜியாக அமித், ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியாக திவ்யா, இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கமாக பிரஜின், முதல் மரியாதை ராதா (?!) வாக வியானா, ரெமோ நர்ஸ் ஆக கம்ருதீன், நத்தக்கண்ணுவாக பாரு, (என்னடா பேரு இது?) டி.ஆர் ஆக வினோத், மதராசப் பட்டினம் எமி ஜாக்ஸனாக சான்ட்ரா, வல்லவன் சிம்புவாக FJ, குணா அபிராமியாக சபரி.  டி.ஆர் பாத்திரம் என்று அறிவிக்கப்பட்டதுமே அந்த மோடில் மாறி ரைமிங்கில் அலப்பறையைத் தொடங்கிவிட்டார் வினோத். தனக்கு தரப்பட்ட விக்கை மாட்டிக் கொண்டு ‘என்னடா.. இது ஓலைக்குடிசைக்குள்ள வாழற மாதிரி இருக்கு’ என்று சொன்னது நல்ல நகைச்சுவை. ‘சும்மாவே பேசுவான்.. இப்ப இந்த காரெக்டர் வேறயா?” என்று மற்றவர்கள் ஜாலியாக சலித்துக்கொண்டார்கள்.  ஒவ்வொருவரும் தங்களின் காரெக்ட்டரில் கோரஸாக கத்திக்கொண்டிருந்தார்கள். அப்போதும்கூட அரோராவும் பாருவும் தங்களின் ‘ஃபீலிங்’ சண்டையை ஜாடையாக நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். பாருவின் கணவர் பெயர் சக்திவேல் கம்ருதீனாம். காரெக்டர்லகூட ரொமான்ஸை சேர்க்கிற அளவிற்கு ஃபீலிங்க்ஸ் டெவலப் ஆகியிருக்கிறது. ‘சதி லீலாவதி’ கோவை சரளாவின் காரெக்டரை காப்பி செய்ய முயன்று கொண்டிருந்தார் பாரு.  காய்கறிகளை மேஜையில் அடுக்கி வைத்து, கண்ணைக் கட்டிக்கொண்டு கண்டுபிடிக்கிற டெய்லி டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். சான்ட்ராவிற்கும் அமித்திற்கும் நடந்த முதல் சுற்றில், பார்வதி கத்திக் கொண்டேயிருந்ததால் அமித் கோபம் அடைந்தார்.  ஒவ்வொருவருக்கும் சுவாரசியமான கேரக்டர்கள் தரப்பட்டிருக்கின்றன. இதை வைத்து டாஸ்க்கை சிறப்பாகச் செய்து நடிப்பு அரக்கனின் பெயரைக் காப்பாற்றுவார்களா?

விகடன் 3 Dec 2025 11:51 am

BB Tamil 9: திவாகர் வெளிய போனதுக்கு இவர்தான் காரணம் - மோதிக்கொள்ளும் ஆதிரை - வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாட்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில் ஆதிரைக்கும், வினோத்திற்கும் வாக்குவாதம் நடக்கிறது. சபரியிடம் வினோத் பேசிக்கொண்டிருக்கும்போது, ஏய் யாரை சொல்ற என ஆதிரை, வினோத்தைக் கேட்க, யாரை இப்போ ஏய்ன்னு சொல்ற? அப்படி சொல்லாத அது தப்பு என வினோத் சண்டை போடுகிறார். நாக்கைக் கடிச்சு அதட்டாம பேசுங்க வினோத். எல்லாத்தையும் இந்த வீட்டில பண்ணிட்டு பண்ணலன்னு சொல்றீங்க. வாட்டர் மெலன் (திவாகர்) வெளியே போனதுக்கு இவரும் ஒரு காரணம்தான் என ஆதிரை சொல்கிறார். வினோத் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம். BB Tamil 9: இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்- அரோராவிடம் பேசும் பார்வதி

விகடன் 3 Dec 2025 11:17 am

BB Tamil 9: திவாகர் வெளிய போனதுக்கு இவர்தான் காரணம் - மோதிக்கொள்ளும் ஆதிரை - வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாட்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில் ஆதிரைக்கும், வினோத்திற்கும் வாக்குவாதம் நடக்கிறது. சபரியிடம் வினோத் பேசிக்கொண்டிருக்கும்போது, ஏய் யாரை சொல்ற என ஆதிரை, வினோத்தைக் கேட்க, யாரை இப்போ ஏய்ன்னு சொல்ற? அப்படி சொல்லாத அது தப்பு என வினோத் சண்டை போடுகிறார். நாக்கைக் கடிச்சு அதட்டாம பேசுங்க வினோத். எல்லாத்தையும் இந்த வீட்டில பண்ணிட்டு பண்ணலன்னு சொல்றீங்க. வாட்டர் மெலன் (திவாகர்) வெளியே போனதுக்கு இவரும் ஒரு காரணம்தான் என ஆதிரை சொல்கிறார். வினோத் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம். BB Tamil 9: இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்- அரோராவிடம் பேசும் பார்வதி

விகடன் 3 Dec 2025 11:17 am

`இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் தர்மேந்திராவின் தாயாரை சந்தித்தேன்!’ - ஹேமாமாலினி

பா.ஜ.க எம்.பி.யும் நடிகையுமான ஹேமாமாலினி தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பாலிவுட்டிற்கு சென்று பிரபலம் அடைந்தார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடிகர் தர்மேந்திராவை அவர் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் அத்திருமணம் நடந்தபோது தர்மேந்திராவிற்கு ஏற்கனவே திருமணாகி குழந்தைகளும் இருந்தன. தர்மேந்திரா - ஹேமாமாலினி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தர்மேந்திரா காலமானார். அவர் மரணமடைந்துள்ள நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகை ஹேமாமாலினி தனது சுயசரிதையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். ஹேமாமாலினியின் வாழ்க்கை வரலாற்றை ராம் கோபால் முகர்ஜி என்பவர் சுயசரிதையாக எழுதியுள்ளார். Hema Malini: Beyond The Dream Girl என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள சுயசரிதையில், ''எனது மகள் இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் எனது மாமியார் சத்வந்த் கவுர் என்னை முதல் முறையாக பார்க்க வந்தார். நான் மும்பை ஜுகுவில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங்கில் ஈடுபட்டிருந்தபோதுதான் அவர் என்னை பார்க்க வந்தார். அவர் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. நான் அவரது காலை தொட்டு வணங்கினேன். அவர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு மகளே மகிழ்ச்சியாக இரு என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியாக இருந்ததால் நானும் மகிழ்ச்சியாக இருந்தேன். தர்மேந்திராவின் தந்தை கேவல் கிஷன் சிங் தியோலும் எனது தந்தை வி.எஸ். ராமானுஜம் சக்ரவர்த்தியும் கை மல்யுத்தத்தில் ஈடுபடுவதுண்டு. தர்மேந்திராவின் தந்தை, என் தந்தை அல்லது சகோதரனை பார்க்க வரும்போது அவர்கள் தேனீர் அருந்துவண்டு. அவர்கள் கைகுலுக்குவதற்குப் பதிலாக, அவர்களுடன் கையால் மல்யுத்தம் செய்வார். அவர்களைத் தோற்கடித்த பிறகு வெண்ணெய், லஸ்ஸி, நெய், இட்லி சாம்பார், நெய் உங்களுக்கு போதிய பலத்தை கொடுக்கவில்லை என்று தர்மேந்திராவின் தந்தை நகைச்சுவையாகச் சொல்வார். என் அப்பாவும் சிரிப்பில் கலந்து கொள்வார். தர்மேந்திராவின் தந்தை மிகவும் மகிழ்ச்சியான நபர்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். தர்மேந்திராவும், ஹேமாமாலினியும் 1980ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்நேரம் தர்மேந்திராவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருந்ததால், அவர்களது திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்ததால் தர்மேந்திரா மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. 1970ம் ஆண்டு Tum Haseen Main Jawaan என்ற படத்தில் நடித்தபோதுதான் முதல் முறையாக இருவரும் சந்தித்துக்கொண்டனர். அதன் பிறகு பல படங்களில் இணைந்து நடித்தனர்.

விகடன் 3 Dec 2025 10:16 am

`இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் தர்மேந்திராவின் தாயாரை சந்தித்தேன்!’ - ஹேமாமாலினி

பா.ஜ.க எம்.பி.யும் நடிகையுமான ஹேமாமாலினி தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பாலிவுட்டிற்கு சென்று பிரபலம் அடைந்தார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடிகர் தர்மேந்திராவை அவர் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் அத்திருமணம் நடந்தபோது தர்மேந்திராவிற்கு ஏற்கனவே திருமணாகி குழந்தைகளும் இருந்தன. தர்மேந்திரா - ஹேமாமாலினி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தர்மேந்திரா காலமானார். அவர் மரணமடைந்துள்ள நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகை ஹேமாமாலினி தனது சுயசரிதையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். ஹேமாமாலினியின் வாழ்க்கை வரலாற்றை ராம் கோபால் முகர்ஜி என்பவர் சுயசரிதையாக எழுதியுள்ளார். Hema Malini: Beyond The Dream Girl என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள சுயசரிதையில், ''எனது மகள் இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் எனது மாமியார் சத்வந்த் கவுர் என்னை முதல் முறையாக பார்க்க வந்தார். நான் மும்பை ஜுகுவில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங்கில் ஈடுபட்டிருந்தபோதுதான் அவர் என்னை பார்க்க வந்தார். அவர் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. நான் அவரது காலை தொட்டு வணங்கினேன். அவர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு மகளே மகிழ்ச்சியாக இரு என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியாக இருந்ததால் நானும் மகிழ்ச்சியாக இருந்தேன். தர்மேந்திராவின் தந்தை கேவல் கிஷன் சிங் தியோலும் எனது தந்தை வி.எஸ். ராமானுஜம் சக்ரவர்த்தியும் கை மல்யுத்தத்தில் ஈடுபடுவதுண்டு. தர்மேந்திராவின் தந்தை, என் தந்தை அல்லது சகோதரனை பார்க்க வரும்போது அவர்கள் தேனீர் அருந்துவண்டு. அவர்கள் கைகுலுக்குவதற்குப் பதிலாக, அவர்களுடன் கையால் மல்யுத்தம் செய்வார். அவர்களைத் தோற்கடித்த பிறகு வெண்ணெய், லஸ்ஸி, நெய், இட்லி சாம்பார், நெய் உங்களுக்கு போதிய பலத்தை கொடுக்கவில்லை என்று தர்மேந்திராவின் தந்தை நகைச்சுவையாகச் சொல்வார். என் அப்பாவும் சிரிப்பில் கலந்து கொள்வார். தர்மேந்திராவின் தந்தை மிகவும் மகிழ்ச்சியான நபர்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். தர்மேந்திராவும், ஹேமாமாலினியும் 1980ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்நேரம் தர்மேந்திராவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருந்ததால், அவர்களது திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்ததால் தர்மேந்திரா மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. 1970ம் ஆண்டு Tum Haseen Main Jawaan என்ற படத்தில் நடித்தபோதுதான் முதல் முறையாக இருவரும் சந்தித்துக்கொண்டனர். அதன் பிறகு பல படங்களில் இணைந்து நடித்தனர்.

விகடன் 3 Dec 2025 10:16 am

திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயத்தையும் ஏத்துக்கிறேன்!- இயக்குநர் கலையரசன் பேட்டி

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ, மாளவிகா மனோஜ், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், ஜென்சன் எனப் பலர் நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தை ஓடிடி-யிலும் மக்கள் பலர் கண்டுகளித்து வருகிறார்கள். படத்திற்கு பல தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்தாலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில் ஆணாதிக்க சிந்தனைகள் நிறைந்திருக்கும் வகையில் படத்தின் திரைக்கதையாசிரியரகள் சிவக்குமார் முருகேசனும், கலையரசன் தங்கவேலும் அமைத்திருக்கிறார்கள் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 'ஆண் பாவம் பொல்லாதது' படத்திற்காக இயக்குநர் கலையரசன் தங்கவேலுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரைப் பேட்டி கண்டேன். வணக்கம். 'ஆண்பாவம் பொல்லாதது' படத்துக்கு தியேட்டர்ல நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. இப்போ ஓடிடி-யிலும் படத்தை மக்கள் பார்த்து பாராட்டுறாங்க. அறிமுக இயக்குநராக எனக்கு ரொம்ப சந்தோஷமான தருணமாக இது இருக்கு! என்றவர் திரைப்படத்தின் எழுத்து வேலைகள் குறித்து, படத்திற்கு கிடைத்து வரும் அனைத்து வகையான விமர்சனங்கள் குறித்தும் வெளிப்படையாக நம்மிடையே பேசினார். ஆண்பாவம் பொல்லாதது | Aan paavam pollathathu இந்தப் படத்துக்கான ஐடியாவை முதல்ல எங்களுடைய நண்பர் பாலாதான் எங்ககிட்ட சொன்னாரு. பிறகு அந்த ஐடியாவை வச்சு திரைக்கதையாசிரியர் சிவக்குமார் முருகேசன் கதையாக டெவலப் பண்ணினாரு. சிவக்குமார் முருகேசன் 'ஆண்பாவம் பொல்லாதது' கதையைச் சொல்லும்போது இது நிச்சயமாக வித்தியாசமான ஒண்ணா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதன் பிறகு படத்தைப் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். 'ஆண் பாவம்' என்பது ஓஜி டைட்டில்! அந்த டைட்டிலுக்கு நியாயம் சேர்த்தாகணும்னு முன்பே முடிவு பண்ணித்தான் வேலைகளைத் தொடங்கினோம். நாங்க நிறைய டைட்டில் டிஸ்கஸ் பண்ணினோம். ஆனா, எங்களுக்கு முதல் தோணின டைட்டில் 'ஆண்பாவம் பொல்லாதது' தான். இந்தத் தலைப்பும் படத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்னு முடிவு பண்ணி முறையாக பாண்டியராஜன் சாரையும், தயாரிப்பாளர்கள் சங்கத்தினரையும் சந்திச்சு அனுமதி வாங்கினோம். நாங்க பழைய டைட்டிலோட 'பொல்லாதது' என்கிற வார்த்தையைச் சேர்த்தாலும் அவங்களிடம் அனுமதி வாங்கி செய்வதுதான் சரின்னு தோணுச்சு. இந்த தருணத்துல, ரியோ அண்ணன், விக்னேஷ் காந்த் அண்ணன், டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப குழுவினர்னு எல்லோருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன். Kalaiarasan Thangavel - Aan Paavam Pollathathu Director ஒட்டுமொத்த டீம் வொர்க்னாலதான் இது சாத்தியமாகி இருக்கு. படத்திற்கு கிடைச்சிருக்கிற பாசிட்டிவ் கமென்ட்ஸ் மகிழ்ச்சியைத் தருது. அதே சமயம், இதை நீங்க திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயங்களையும் நான் சிரம் தாழ்ந்து ஏத்துக்கிறேன். என்றவர், ரியோ அண்ணன் எனக்கு 8 வருஷமாக பழக்கம். அவர் அறிமுக இயக்குநர்களுக்கு ஒரு பொக்கிஷம்! லொகேஷன் பார்க்கிறதுக்கு தொடங்கி அவரால் முடிஞ்ச உதவிகளையும் எங்களுக்கு பண்ணினாரு. 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துல நான் உதவி இயக்குநராக வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்தத் தருணத்துல நாங்க சின்ன பைலட் எடுத்துப் பார்த்தோம். அதுல ரியோ அண்ணன் நடிச்ச விதம்தான் இந்தக் கதைக்கு அவர் மிகப் பொருத்தமாக இருப்பார்னு தோணுச்சு. இன்னொரு முறை அவரோட சேர்ந்து படம் பண்ணுறதுக்கும் நான் தயாரா இருக்கேன். இந்தத் தருணத்துல தொழில்நுட்ப குழுவினர் பற்றி நான் பேசியாகணும். முதல்ல ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அண்ணனுடைய வொர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை இயக்குநர்களின் ஒளிப்பதிவாளர்னு சொல்லலாம். இவ்வளவு நேரத்துல இத்தனை ஷாட் எடுத்தாகணும்னா, அதுக்கேத்த மாதிரி வேலைகளை வேகமாக முடிப்பாரு. இன்னொரு முக்கியமான விஷயமும் இதுல இருக்குங்க! நானும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவன். அவரும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவர்தான். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... இசையமைப்பாளர் சித்துக்குமாரை நாங்க ஜீனினுதான் சொல்லுவோம். அவரை சோஷியல் மீடியாவுல 'மாடர்ன் தேனிசைத் தென்றல்'னு பாராட்டுறாங்க. இன்னும் அவருக்கு பெரிய அங்கீகாரங்கள் கிடைக்கணும். நாங்க எதிர்பார்க்கிறதைவிட பெஸ்டான விஷயங்களைச் செய்து தருவாரு. எடிட்டர் வருண் கே.ஜி படத்துக்கு இன்னொரு துணை இயக்குநர்னு சொல்லணும். நடிகரா, இயக்குநரா அவரை நாம பார்த்திருப்போம். இனிமேலும், அவரை அப்படியான பரிமாணங்கள்ல பார்ப்பீங்க! கலரிஸ்ட், சவுண்ட் இன்ஜினீயர்னு பலருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். என்றார் உற்சாகத்துடன். திரைக்கதையை எழுதத் தொடங்கும்போதே, பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில கதாபாத்திர வடிவமைப்பை சமமாகக் காட்சிப்படுத்தணும்னு முடிவுலதான் வேலைகளை ஆரம்பிச்சோம். படத்திற்காக நிறைய ரிசர்ச் பண்ணினோம். வழக்கறிஞர்களைச் சந்திச்சு அவர்களிடம் இருக்கிற வழக்குகள் பத்தித் தெரிஞ்சுகிட்டோம். அதுபோல, பாலின சமத்துவத்தைப் பேசும் நண்பர்களிடமும் எங்களுடைய ஸ்கிரிப்ட் கொடுத்து பேசினோம். அவர்களுடனான டிஸ்கஷன்ல, எது வேணும், எது வேண்டாம், எவை சரியா இருக்கும்னு பேசினோம். இந்த விஷயம் எல்லோருக்கும் போய்ச் சேரணும், தவறான விஷயத்தைச் சொல்லிடக்கூடாதுனு தெளிவா இருந்தோம். 2 மணி நேரம் நான் கதை சொல்லிட்டேன். அதை மக்களும் நேரம் கொடுத்துப் பார்த்து கருத்துகளைச் சொல்றாங்க. அதையும் நான் ஏத்துக்கிறேன். எல்லா இயக்குநர்களுக்கும் அவர்களுடைய படங்கள்ல இந்த விஷயத்தை மாத்தி வச்சிருக்கலாம்னு தோணும். எந்தவொரு இடத்திலும் தவறான அரசியலைப் பேசணும்னு நாங்க செய்யல. நான் வேறொரு விஷயம் சொல்ல முயற்சி பண்ணினேன். இன்னும் நான் தெளிவா சொல்லியிருக்கலாம். நான் அப்படியான அர்த்தத்துல அதைச் சொல்ல வரலைங்கிறதுதான் ஒரு வருத்தம். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... ஆடியன்ஸ் எப்போதும் சரியானவங்க. அவங்க பணம் கொடுத்து படம் பார்க்கிறாங்க. அவங்க சொல்ற விமர்சனத்தை நான் ஏத்துக்கிறேன். ரெண்டு மணி நேரம் செலவழிச்சுப் பார்த்தவங்களுக்கு நான் சரியாக கன்வே பண்ணலைனா என்மேலதான் தப்பு! ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு சிலர் விமர்சனங்கள் சொல்றாங்க. முழு படத்தையும் பார்த்துட்டு அந்த விமர்சனத்தை நீங்க சொன்னா, நிச்சயமா அதையும் நான் ஏத்துக்கிறேன். என்றவர் க்ளைமேக்ஸ் காட்சிகள் உருவான ஐடியா குறித்து விளக்கினார். அவர், இந்தப் படத்துல வர்ற ஹீரோ, ஹீரோயின்னு ரெண்டு பேர்மேலையும் சில தவறுகள் இருக்கும். படத்தின் முதல் காட்சியில மணப்பெண்ணைப் பார்க்கப் போகும்போது பெண்ணுக்கு சரியானவன் நான்தான்னு நிரூபிக்க கதாநாயகன் கீழ உட்காருவாரு. ஆனா, சிவா கதாபாத்திரத்துக்குள்ள சில ஆணாதிக்க சிந்தனைகள் இருக்கும். தாலி போடணும்னு சிவா எதிர்பார்க்கிறதும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான். ஷக்தி - சிவானு ரெண்டு பேரும் தங்களுக்குள்ள போலியான விஷயங்களைதான் தொடக்கத்துல வெளிகாட்டுவாங்க. உண்மை வெளிய தெரிய வரும்போது, அவங்களுக்கு இடையில சண்டை வரும். Kalaiarasan Thangavel - Aan Paavam Pollathathu Director ரெண்டு பேரும் அவங்களுடைய தவறுகளை உணர்ந்து சேர்றாங்க என்பதுதான் இந்தப் படத்தின் கரு. சிவா செய்யும் தவறை சுட்டிக்காட்டுறதுக்குதான் தீபா அக்காவின் கேரக்டரை வடிவமைச்சோம். நியாயத்தையும் தவறையும் ஒரு பெண் கதாபாத்திரம்தான் சுட்டிக்காட்டணும்கிற ஐடியாவுலதான் பாரதி மேம் மற்றும் தீபா அக்கா கேரக்டரை டிசைன் பண்ணினோம். எந்த இடத்திலும் நான் ரீல்ஸ் போடுவதை தவறுனு உணர்த்தவே இல்ல. அதை ஹீரோவின் பார்வையில்தான் நான் சொல்லியிருந்தேன். ஸ்விட்ச் வசனம் தொடங்கி படத்தின் முக்கியமான வசனங்கள் அனைத்திற்கும் கிரெடிட் சிவக்குமார் முருகேசனுக்குதான் கிடைக்கணும். அவருடைய பல திறமைகளை நீங்க இனி பார்ப்பீங்க! என்றவர், இந்தப் படத்துக்கு கிடைச்ச வரவேற்பு எனக்கு கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கு. இனி எனக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கும். அதை வச்சு அடுத்ததும் ஒரு நல்ல கதையைச் சொல்லணும். பார்ப்போம்! என நம்பிக்கையுடன் பேசினார்.

விகடன் 3 Dec 2025 9:17 am

திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயத்தையும் ஏத்துக்கிறேன்!- இயக்குநர் கலையரசன் பேட்டி

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ, மாளவிகா மனோஜ், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், ஜென்சன் எனப் பலர் நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தை ஓடிடி-யிலும் மக்கள் பலர் கண்டுகளித்து வருகிறார்கள். படத்திற்கு பல தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்தாலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில் ஆணாதிக்க சிந்தனைகள் நிறைந்திருக்கும் வகையில் படத்தின் திரைக்கதையாசிரியரகள் சிவக்குமார் முருகேசனும், கலையரசன் தங்கவேலும் அமைத்திருக்கிறார்கள் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 'ஆண் பாவம் பொல்லாதது' படத்திற்காக இயக்குநர் கலையரசன் தங்கவேலுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரைப் பேட்டி கண்டேன். வணக்கம். 'ஆண்பாவம் பொல்லாதது' படத்துக்கு தியேட்டர்ல நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. இப்போ ஓடிடி-யிலும் படத்தை மக்கள் பார்த்து பாராட்டுறாங்க. அறிமுக இயக்குநராக எனக்கு ரொம்ப சந்தோஷமான தருணமாக இது இருக்கு! என்றவர் திரைப்படத்தின் எழுத்து வேலைகள் குறித்து, படத்திற்கு கிடைத்து வரும் அனைத்து வகையான விமர்சனங்கள் குறித்தும் வெளிப்படையாக நம்மிடையே பேசினார். ஆண்பாவம் பொல்லாதது | Aan paavam pollathathu இந்தப் படத்துக்கான ஐடியாவை முதல்ல எங்களுடைய நண்பர் பாலாதான் எங்ககிட்ட சொன்னாரு. பிறகு அந்த ஐடியாவை வச்சு திரைக்கதையாசிரியர் சிவக்குமார் முருகேசன் கதையாக டெவலப் பண்ணினாரு. சிவக்குமார் முருகேசன் 'ஆண்பாவம் பொல்லாதது' கதையைச் சொல்லும்போது இது நிச்சயமாக வித்தியாசமான ஒண்ணா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதன் பிறகு படத்தைப் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். 'ஆண் பாவம்' என்பது ஓஜி டைட்டில்! அந்த டைட்டிலுக்கு நியாயம் சேர்த்தாகணும்னு முன்பே முடிவு பண்ணித்தான் வேலைகளைத் தொடங்கினோம். நாங்க நிறைய டைட்டில் டிஸ்கஸ் பண்ணினோம். ஆனா, எங்களுக்கு முதல் தோணின டைட்டில் 'ஆண்பாவம் பொல்லாதது' தான். இந்தத் தலைப்பும் படத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்னு முடிவு பண்ணி முறையாக பாண்டியராஜன் சாரையும், தயாரிப்பாளர்கள் சங்கத்தினரையும் சந்திச்சு அனுமதி வாங்கினோம். நாங்க பழைய டைட்டிலோட 'பொல்லாதது' என்கிற வார்த்தையைச் சேர்த்தாலும் அவங்களிடம் அனுமதி வாங்கி செய்வதுதான் சரின்னு தோணுச்சு. இந்த தருணத்துல, ரியோ அண்ணன், விக்னேஷ் காந்த் அண்ணன், டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப குழுவினர்னு எல்லோருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன். Kalaiarasan Thangavel - Aan Paavam Pollathathu Director ஒட்டுமொத்த டீம் வொர்க்னாலதான் இது சாத்தியமாகி இருக்கு. படத்திற்கு கிடைச்சிருக்கிற பாசிட்டிவ் கமென்ட்ஸ் மகிழ்ச்சியைத் தருது. அதே சமயம், இதை நீங்க திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயங்களையும் நான் சிரம் தாழ்ந்து ஏத்துக்கிறேன். என்றவர், ரியோ அண்ணன் எனக்கு 8 வருஷமாக பழக்கம். அவர் அறிமுக இயக்குநர்களுக்கு ஒரு பொக்கிஷம்! லொகேஷன் பார்க்கிறதுக்கு தொடங்கி அவரால் முடிஞ்ச உதவிகளையும் எங்களுக்கு பண்ணினாரு. 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துல நான் உதவி இயக்குநராக வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்தத் தருணத்துல நாங்க சின்ன பைலட் எடுத்துப் பார்த்தோம். அதுல ரியோ அண்ணன் நடிச்ச விதம்தான் இந்தக் கதைக்கு அவர் மிகப் பொருத்தமாக இருப்பார்னு தோணுச்சு. இன்னொரு முறை அவரோட சேர்ந்து படம் பண்ணுறதுக்கும் நான் தயாரா இருக்கேன். இந்தத் தருணத்துல தொழில்நுட்ப குழுவினர் பற்றி நான் பேசியாகணும். முதல்ல ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அண்ணனுடைய வொர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை இயக்குநர்களின் ஒளிப்பதிவாளர்னு சொல்லலாம். இவ்வளவு நேரத்துல இத்தனை ஷாட் எடுத்தாகணும்னா, அதுக்கேத்த மாதிரி வேலைகளை வேகமாக முடிப்பாரு. இன்னொரு முக்கியமான விஷயமும் இதுல இருக்குங்க! நானும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவன். அவரும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவர்தான். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... இசையமைப்பாளர் சித்துக்குமாரை நாங்க ஜீனினுதான் சொல்லுவோம். அவரை சோஷியல் மீடியாவுல 'மாடர்ன் தேனிசைத் தென்றல்'னு பாராட்டுறாங்க. இன்னும் அவருக்கு பெரிய அங்கீகாரங்கள் கிடைக்கணும். நாங்க எதிர்பார்க்கிறதைவிட பெஸ்டான விஷயங்களைச் செய்து தருவாரு. எடிட்டர் வருண் கே.ஜி படத்துக்கு இன்னொரு துணை இயக்குநர்னு சொல்லணும். நடிகரா, இயக்குநரா அவரை நாம பார்த்திருப்போம். இனிமேலும், அவரை அப்படியான பரிமாணங்கள்ல பார்ப்பீங்க! கலரிஸ்ட், சவுண்ட் இன்ஜினீயர்னு பலருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். என்றார் உற்சாகத்துடன். திரைக்கதையை எழுதத் தொடங்கும்போதே, பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில கதாபாத்திர வடிவமைப்பை சமமாகக் காட்சிப்படுத்தணும்னு முடிவுலதான் வேலைகளை ஆரம்பிச்சோம். படத்திற்காக நிறைய ரிசர்ச் பண்ணினோம். வழக்கறிஞர்களைச் சந்திச்சு அவர்களிடம் இருக்கிற வழக்குகள் பத்தித் தெரிஞ்சுகிட்டோம். அதுபோல, பாலின சமத்துவத்தைப் பேசும் நண்பர்களிடமும் எங்களுடைய ஸ்கிரிப்ட் கொடுத்து பேசினோம். அவர்களுடனான டிஸ்கஷன்ல, எது வேணும், எது வேண்டாம், எவை சரியா இருக்கும்னு பேசினோம். இந்த விஷயம் எல்லோருக்கும் போய்ச் சேரணும், தவறான விஷயத்தைச் சொல்லிடக்கூடாதுனு தெளிவா இருந்தோம். 2 மணி நேரம் நான் கதை சொல்லிட்டேன். அதை மக்களும் நேரம் கொடுத்துப் பார்த்து கருத்துகளைச் சொல்றாங்க. அதையும் நான் ஏத்துக்கிறேன். எல்லா இயக்குநர்களுக்கும் அவர்களுடைய படங்கள்ல இந்த விஷயத்தை மாத்தி வச்சிருக்கலாம்னு தோணும். எந்தவொரு இடத்திலும் தவறான அரசியலைப் பேசணும்னு நாங்க செய்யல. நான் வேறொரு விஷயம் சொல்ல முயற்சி பண்ணினேன். இன்னும் நான் தெளிவா சொல்லியிருக்கலாம். நான் அப்படியான அர்த்தத்துல அதைச் சொல்ல வரலைங்கிறதுதான் ஒரு வருத்தம். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... ஆடியன்ஸ் எப்போதும் சரியானவங்க. அவங்க பணம் கொடுத்து படம் பார்க்கிறாங்க. அவங்க சொல்ற விமர்சனத்தை நான் ஏத்துக்கிறேன். ரெண்டு மணி நேரம் செலவழிச்சுப் பார்த்தவங்களுக்கு நான் சரியாக கன்வே பண்ணலைனா என்மேலதான் தப்பு! ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு சிலர் விமர்சனங்கள் சொல்றாங்க. முழு படத்தையும் பார்த்துட்டு அந்த விமர்சனத்தை நீங்க சொன்னா, நிச்சயமா அதையும் நான் ஏத்துக்கிறேன். என்றவர் க்ளைமேக்ஸ் காட்சிகள் உருவான ஐடியா குறித்து விளக்கினார். அவர், இந்தப் படத்துல வர்ற ஹீரோ, ஹீரோயின்னு ரெண்டு பேர்மேலையும் சில தவறுகள் இருக்கும். படத்தின் முதல் காட்சியில மணப்பெண்ணைப் பார்க்கப் போகும்போது பெண்ணுக்கு சரியானவன் நான்தான்னு நிரூபிக்க கதாநாயகன் கீழ உட்காருவாரு. ஆனா, சிவா கதாபாத்திரத்துக்குள்ள சில ஆணாதிக்க சிந்தனைகள் இருக்கும். தாலி போடணும்னு சிவா எதிர்பார்க்கிறதும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான். ஷக்தி - சிவானு ரெண்டு பேரும் தங்களுக்குள்ள போலியான விஷயங்களைதான் தொடக்கத்துல வெளிகாட்டுவாங்க. உண்மை வெளிய தெரிய வரும்போது, அவங்களுக்கு இடையில சண்டை வரும். Kalaiarasan Thangavel - Aan Paavam Pollathathu Director ரெண்டு பேரும் அவங்களுடைய தவறுகளை உணர்ந்து சேர்றாங்க என்பதுதான் இந்தப் படத்தின் கரு. சிவா செய்யும் தவறை சுட்டிக்காட்டுறதுக்குதான் தீபா அக்காவின் கேரக்டரை வடிவமைச்சோம். நியாயத்தையும் தவறையும் ஒரு பெண் கதாபாத்திரம்தான் சுட்டிக்காட்டணும்கிற ஐடியாவுலதான் பாரதி மேம் மற்றும் தீபா அக்கா கேரக்டரை டிசைன் பண்ணினோம். எந்த இடத்திலும் நான் ரீல்ஸ் போடுவதை தவறுனு உணர்த்தவே இல்ல. அதை ஹீரோவின் பார்வையில்தான் நான் சொல்லியிருந்தேன். ஸ்விட்ச் வசனம் தொடங்கி படத்தின் முக்கியமான வசனங்கள் அனைத்திற்கும் கிரெடிட் சிவக்குமார் முருகேசனுக்குதான் கிடைக்கணும். அவருடைய பல திறமைகளை நீங்க இனி பார்ப்பீங்க! என்றவர், இந்தப் படத்துக்கு கிடைச்ச வரவேற்பு எனக்கு கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கு. இனி எனக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கும். அதை வச்சு அடுத்ததும் ஒரு நல்ல கதையைச் சொல்லணும். பார்ப்போம்! என நம்பிக்கையுடன் பேசினார்.

விகடன் 3 Dec 2025 9:17 am

Malavika Mannoj: ``மறந்தேனே என்ன மறந்தேனே'' - நடிகை மாளவிகா மனோஜ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ்

விகடன் 3 Dec 2025 8:24 am

அவர் இருந்து நடத்த வேண்டிய கல்யாணம், ஆனால் –பிக் பாஸ் அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி எமோஷனல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 58 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post அவர் இருந்து நடத்த வேண்டிய கல்யாணம், ஆனால் – பிக் பாஸ் அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 9:55 pm

நடிகை சமந்தா ஈஷா மையத்தில் திருமணம் செய்த காரணம் என்ன? வெளியான சுவாரசிய தகவல்

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த […] The post நடிகை சமந்தா ஈஷா மையத்தில் திருமணம் செய்த காரணம் என்ன? வெளியான சுவாரசிய தகவல் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 9:15 pm

Vasthara – Lyrical video

தஸ்தர் 2 Dec 2025 8:09 pm

தனது 18 வயதில் சொந்த உழைப்பில் புது கார் வாங்கிய தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா –குவியும் வாழ்த்துக்கள்

தமிழில் 90ஸ்களில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர். அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை அர்ச்சனா தான் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், அர்ச்சனாவின் மாபெரும் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் […] The post தனது 18 வயதில் சொந்த உழைப்பில் புது கார் வாங்கிய தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா – குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 8:05 pm

Ajith: சூப்பர் ஸ்டார் நடிகரின் அந்த செயல் ஆச்சரியமாக இருந்தது! - அஜித் குறித்து அனுபமா சோப்ரா

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முந்தையப் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய இந்திய பதிப்பின் ஆசிரியர் அனுபமா சோப்ரா நடிகர் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தார். Ajith அந்தப் பேட்டியின்போது, அஜித்தின் எளிமை அனுபமா சோப்ராவை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இப்போது அவர் தயாரிப்பாளர்களின் ரவுண்ட் டேபிள் நேர்காணல் செய்திருக்கிறார். இந்தப் பேட்டியில் அவர் அஜித் குறித்து பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், சமீபத்தில் துபாயில் நான் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தேன். அப்போது அவருடன் யாருமில்லை. எனக்காக அங்கொரு மேக்கப் செய்யும் நபர் இருந்தார். ஆனால், அவர் மேக்கப் செய்து கொள்ளமாட்டார். அவருடன் மேக்கப் போடும் நபர் இல்லை. ஆனால், என்னுடன் அதற்காக ஒரு நபர் இருந்தார். சூப்பர் ஸ்டார் நடிகர் இப்படி இருக்கிறார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடன் ஒரு பேக் எடுத்து வந்தார். பேட்டி நடைபெற்ற அறையின் ஓரத்திலேயே பேட்டிக்கு அவர் தயாரானார். அதுமட்டுமல்ல, எங்களுக்காக அவர் கதவு திறந்து நின்று கொண்டிருந்தார்! என ஆச்சரியமாகக் கூறினார். Archana Kalpathi அனுபமா சோப்ரா இதைக் கூறியப் பிறகு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி, அவர் எப்போதும் ஸ்வீட் & சிம்பிளாக இருப்பார். எனக் கூறினார். அதைத் தொடர்ந்து இந்தப் பேட்டியில் அர்ச்சனா கல்பதி, ப்ரீ-புரொடக்ஷன் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு புரொடக்ஷன் பட்ஜெட்டிலிருந்து 10 சதவீதத்திற்கு மேல் போக விட மாட்டேன். தெளிவு இல்லாத இயக்குநரிடமும் நான் வேலை செய்ய மாட்டேன். சினிமாவில் 9-5 வேலை நேரம் என்பது சாத்தியமே இல்ல. யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் இருப்பதே பொறுப்பு. என்றார்.

விகடன் 2 Dec 2025 7:23 pm

Ajith: சூப்பர் ஸ்டார் நடிகரின் அந்த செயல் ஆச்சரியமாக இருந்தது! - அஜித் குறித்து அனுபமா சோப்ரா

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முந்தையப் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய இந்திய பதிப்பின் ஆசிரியர் அனுபமா சோப்ரா நடிகர் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தார். Ajith அந்தப் பேட்டியின்போது, அஜித்தின் எளிமை அனுபமா சோப்ராவை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இப்போது அவர் தயாரிப்பாளர்களின் ரவுண்ட் டேபிள் நேர்காணல் செய்திருக்கிறார். இந்தப் பேட்டியில் அவர் அஜித் குறித்து பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், சமீபத்தில் துபாயில் நான் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தேன். அப்போது அவருடன் யாருமில்லை. எனக்காக அங்கொரு மேக்கப் செய்யும் நபர் இருந்தார். ஆனால், அவர் மேக்கப் செய்து கொள்ளமாட்டார். அவருடன் மேக்கப் போடும் நபர் இல்லை. ஆனால், என்னுடன் அதற்காக ஒரு நபர் இருந்தார். சூப்பர் ஸ்டார் நடிகர் இப்படி இருக்கிறார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடன் ஒரு பேக் எடுத்து வந்தார். பேட்டி நடைபெற்ற அறையின் ஓரத்திலேயே பேட்டிக்கு அவர் தயாரானார். அதுமட்டுமல்ல, எங்களுக்காக அவர் கதவு திறந்து நின்று கொண்டிருந்தார்! என ஆச்சரியமாகக் கூறினார். Archana Kalpathi அனுபமா சோப்ரா இதைக் கூறியப் பிறகு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி, அவர் எப்போதும் ஸ்வீட் & சிம்பிளாக இருப்பார். எனக் கூறினார். அதைத் தொடர்ந்து இந்தப் பேட்டியில் அர்ச்சனா கல்பதி, ப்ரீ-புரொடக்ஷன் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு புரொடக்ஷன் பட்ஜெட்டிலிருந்து 10 சதவீதத்திற்கு மேல் போக விட மாட்டேன். தெளிவு இல்லாத இயக்குநரிடமும் நான் வேலை செய்ய மாட்டேன். சினிமாவில் 9-5 வேலை நேரம் என்பது சாத்தியமே இல்ல. யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் இருப்பதே பொறுப்பு. என்றார்.

விகடன் 2 Dec 2025 7:23 pm

மூளை கம்மினால தான் சினிமாவில் நடிக்க முடியுது –விழாவில் கலகலப்பாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னையில் நடந்த fanly பொழுதுபோக்கு செயலின் விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் நடிக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்தால் நான் இயக்குனர்களை எல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் சொல்வதைக் கேட்டு நான் நடிக்கிறேன். அதனால்தான் எனக்கு மூளை கம்மியாக இருப்பது நல்லது தான். […] The post மூளை கம்மினால தான் சினிமாவில் நடிக்க முடியுது – விழாவில் கலகலப்பாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 6:50 pm

ரோகினிக்கே ஐடியா கொடுக்கும் மீனா, சுருதியை வெறுப்பேற்றும் நீத்து –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா வீட்டிற்கு மீண்டும் வந்தார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், விஜயா கவலைப்பட்டார்கள். மீனா மீண்டும் வந்ததை நினைத்து ரோகினிக்கு கதி கலங்குகிறது. பின் மீனா வந்தவுடனே விஜயா சமைக்க சொன்னார். மீனாவுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரோகினியை முறைத்து விட்டு சமைக்கப் போனார். அதற்குப்பின் மனோஜ் பிஏ ஜீவா, புது ஆர்டரை பற்றி சொன்னார். அதைக் கேட்டு மனோஜ் ரொம்பவே சந்தோஷப்பட்டார். […] The post ரோகினிக்கே ஐடியா கொடுக்கும் மீனா, சுருதியை வெறுப்பேற்றும் நீத்து – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 5:08 pm

எனக்கு கொஞ்சம் மூளை கம்மி ! தெய்வமா பாக்குற Fans வேண்டாம் – SK பேச்சு

எனக்கு கொஞ்சம் மூளை கம்மி ! தெய்வமா பாக்குற Fans வேண்டாம் – SK பேச்சு சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களம் இறங்குகின்றன. இந்நிலையில், சென்னையில் ஃபேன்லி (Fanly) என்ற ஆப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களில்...

தஸ்தர் 2 Dec 2025 4:59 pm

பிரதீப் ரங்கநாதனின் LIK செப்டம்பர் 18 ரிலீஸ்.. வெளியானது அப்டேட்!

பிரதீப் ரங்கநாதனின் LIK செப்டம்பர் 18 ரிலீஸ்.. வெளியானது அப்டேட்! பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்திசெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி...

தஸ்தர் 2 Dec 2025 4:51 pm

நடிகர் ரிஷப் ஷெட்டிபோல் நடிப்பு….கிளம்பிய சர்ச்சை –மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

நடிகர் ரிஷப் ஷெட்டிபோல் நடிப்பு….கிளம்பிய சர்ச்சை – மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை...

தஸ்தர் 2 Dec 2025 4:38 pm

அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானவர் - மீண்டும் இணையும் அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மம்மூட்டியை வைத்து அடுத்த படம் எடுக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய 'அனந்தரம்', 'மதிலுகள்', 'விதேயன்' ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதனை அடூர் கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன், என்னுடைய அடுத்தப் படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கதை எழுதும்போது முதன்மை கதாபாத்திரத்திற்கு என் மனதில் மம்மூட்டி முகமே தோன்றியது. அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானத் தேர்வு என்று நான் உணர்ந்தேன். என்னுடைய திரைப்படத்தில் நான்காவது முறையாக நடிக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி நான் இதுவரை மற்ற நடிகர்களுடன் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி திரைப்படங்களுக்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Kalamkaval: ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனா.!- நடிகர் மம்மூட்டி

விகடன் 2 Dec 2025 4:32 pm

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: டிச.8-ல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: டிச.8-ல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக...

தஸ்தர் 2 Dec 2025 4:26 pm

நடுரோட்டிலே பழனியை அவமானப்படுத்தும் கோமதி, சமையலில் மீனா செய்யும் அட்ராசிட்டி –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனாவை பார்க்க அவருடைய அப்பா, அம்மா இருவரும் வந்திருந்தார்கள். அப்போது மீனா, வீட்டில் சமைக்காத இருப்பதை தெரிந்த அவருடைய அம்மா, எப்படி செய்யனும், என்னென்ன பண்ணனும் எல்லாம் சொன்னார். ஆனால், மீனா அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. அதற்குப்பின் கோமதி, சரவணன்-தங்கமயில் சண்டை போட்டதை பற்றி பாண்டியனிடம் சொன்னார். பாண்டியன், அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்கணும். சீக்கிரமாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்றார். […] The post நடுரோட்டிலே பழனியை அவமானப்படுத்தும் கோமதி, சமையலில் மீனா செய்யும் அட்ராசிட்டி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 3:55 pm

இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான் - நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!

'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது என இருவரும் காதல் வயப்பட்டதை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நடிகை அதிதி ராவ் நான் மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்க விரும்பினேன்- அதிதி ராவ் திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தவர், இப்போது பல பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதிதி ராவ் தனது உணவு முறை குறித்து மனம்திறந்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தனது டயட் பிளான் குறித்து பேசியிருக்கும் அதிதி, காலை உணவைப் பொறுத்தவரை எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும். பொதுவாக தென்னிந்திய காலை உணவுகள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும். இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன். எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான். நடிகை அதிதி ராவ் Siddharth - Aditi Rao: 'புது பொண்ணே...' - சித்தார்த், அதிதி திருமண புகைப்படம் | Photo Album உடலை சீராக வைத்துக்கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் எனக்கு சலிப்புத் தட்டிவிடும். அதனால் ஒருநாள் யோகா, ஒருநாள் நடனம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உடற்பயிற்சியினை செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுமில்லை, இவைதான் என்னுடைய சிம்பிளான டயட் பிளான் மற்றும் உடல்பயிற்சிகள் என்று ஜாலியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அதிதி.

விகடன் 2 Dec 2025 3:52 pm

இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான் - நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!

'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது என இருவரும் காதல் வயப்பட்டதை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நடிகை அதிதி ராவ் நான் மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்க விரும்பினேன்- அதிதி ராவ் திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தவர், இப்போது பல பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதிதி ராவ் தனது உணவு முறை குறித்து மனம்திறந்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தனது டயட் பிளான் குறித்து பேசியிருக்கும் அதிதி, காலை உணவைப் பொறுத்தவரை எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும். பொதுவாக தென்னிந்திய காலை உணவுகள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும். இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன். எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான். நடிகை அதிதி ராவ் Siddharth - Aditi Rao: 'புது பொண்ணே...' - சித்தார்த், அதிதி திருமண புகைப்படம் | Photo Album உடலை சீராக வைத்துக்கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் எனக்கு சலிப்புத் தட்டிவிடும். அதனால் ஒருநாள் யோகா, ஒருநாள் நடனம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உடற்பயிற்சியினை செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுமில்லை, இவைதான் என்னுடைய சிம்பிளான டயட் பிளான் மற்றும் உடல்பயிற்சிகள் என்று ஜாலியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அதிதி.

விகடன் 2 Dec 2025 3:52 pm

Anupama Parameswaran: காட்டுப்பேச்சி நீ.. பாட்டுப்பேச்சி நீ! - அனுபமா க்ளிக்ஸ் | Photo Album

படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்தான்-அனுபமா பரமேஸ்வரன்

விகடன் 2 Dec 2025 3:34 pm

Anupama Parameswaran: காட்டுப்பேச்சி நீ.. பாட்டுப்பேச்சி நீ! - அனுபமா க்ளிக்ஸ் | Photo Album

படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்தான்-அனுபமா பரமேஸ்வரன்

விகடன் 2 Dec 2025 3:34 pm

Ditwah: சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர்! | Rainy Day Roundup Photo Album

டிட்வா: அவர்கள் மீண்டெழுந்திட துணை நிற்போம் - இலங்கை பாதிப்பு குறித்து ஸ்டாலின்

விகடன் 2 Dec 2025 3:04 pm

சோழன் பற்றிய உண்மை அறிந்து உடைந்து போன காயத்ரி, நிலா சொன்ன வார்த்தை –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, நான் முக்கியமா? உன் குடும்பம் முக்கியமா? என்று சொன்னவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. அதற்குப்பின் நடேசனுக்கு உடம்பு சரியில்லாதால் நிலா அவரை கவனித்துக் கொண்டார். அப்போது வீட்டிற்கு சோழன் வருகிறார். நிலா கேட்கும் கேள்விக்கு சோழனால் ஒழுங்காக பதில் சொல்ல முடியவில்லை. பின் பல்லவன், சோழனின் போனை பார்த்துவிட்டு ப்ரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டார். நிலா ரெடியாகி வேலைக்கு கிளம்பினார். பல்லவன், பஸ் ஸ்டாண்டில் […] The post சோழன் பற்றிய உண்மை அறிந்து உடைந்து போன காயத்ரி, நிலா சொன்ன வார்த்தை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 3:02 pm

Kalamkaval: ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனா.!- நடிகர் மம்மூட்டி

ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’. இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘களம்காவல்’ அந்தவகையில் சமீபத்திய புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்மூட்டி, ரொமான்டிக்கான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினால், எனக்கு அந்தக் கதாபாத்திரங்கள் கட்டாயம் கிடைக்கும். ஆனால், நீங்கள் சீனியர் நடிகர் ஆகிவிட்ட பிறகு உங்களுக்கு இன்னமும் நிறைய கோணங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களைச் செய்ய முடியும். ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. இப்போது அதுவும் கொஞ்சம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், வில்லனுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை வில்லன் என்று கூறமாட்டேன். அதேநேரத்தில் அவன் நல்லவனும் கிடையாது. இந்த மாதிரியான கதாபாத்திரத்தை அசாத்திய தைரியத்தின் விளைவால் எடுத்தேன் எனச் சொல்லமுடியாது. இப்படியான கதாபாத்திரங்களைச் செய்யவேண்டும் என்கிற வேட்கைதான் அதற்குக் காரணம். மம்மூட்டி எனக்குள் இருக்கும் நடிகனை திருப்திப்படுத்த வேண்டும். நான் ஒரு நட்சத்திரமென அழைக்கப்படுவதில் எனக்குப் பிரச்னையில்லை. ஆனாலும் ஒரு நடிகனாக இருப்பதையே விரும்புகிறேன் என்று மம்மூட்டி கூறியிருக்கிறார்.

விகடன் 2 Dec 2025 2:59 pm

Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம். அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை 'ஜீவன் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். View this post on Instagram A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy) எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 2 Dec 2025 1:59 pm

Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம். அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை 'ஜீவன் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். View this post on Instagram A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy) எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 2 Dec 2025 1:59 pm

Kalamkaval: சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம்; நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம் - நடிகர் விநாயகன்

ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’. இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘களம்காவல்’ அந்தவகையில் சமீபத்திய புரொமோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விநாயகன், இப்படத்தில் மம்மூட்டிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியே பெயர் வைத்தார். இது என் வாழ்நாள் அதிர்ஷ்டம். அவருடன் நடிப்பது எளிதாக இருந்தது. வசனங்களில் அவர் நிறைய உதவினார். Mammootty: `இவரை ரகசியமாகப் பாதுகாத்து வந்தேன்!' - பெயர் சூட்டிய நண்பனை அறிமுகப்படுத்திய மம்மூட்டி சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம். நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம். இயக்குநர் ஜிதின் என் கை, கால்களைக் கட்டிப்போட்டு, என்னை நடிக்க வைத்தது போல தோன்றியது. 'நீங்க எதுவும் செய்ய வேண்டியதில்லை. நான் சொன்னதைச் செய்தால் போதும்' என்று சொல்லி நடிக்க வைத்தார் என்று சிரித்துக்கொண்டே தெரிவித்திருக்கிறார். விநாயகன் தொடர்ந்து பேசிய அவர், பொதுவெளியில் எப்படிப் பேசவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஆர்வம் இருந்தாலும் மக்களின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து பேசுவதில் பிரச்னை இருக்கிறது. என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. யாராவது ஒருவர் தேவையில்லாத கேள்விகளைக் கேட்பது கோபமாக்கிவிடுகிறது. நான் என்ன பேசுகிறேன் எனத் தெரியாமல் பேசிவிடுகிறேன். இதனால் பொதுவெளிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். Kaantha: 'நீ நல்ல படம்தான் பண்ணனும், ஏன்னா.!' - துல்கர் சல்மானிடம் மம்மூட்டி சொன்னது என்ன?

விகடன் 2 Dec 2025 1:56 pm

BB Tamil 9: அவர் முன்னால் நின்னு நடத்த வேண்டிய கல்யாணம் ஆனா... - அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி

விஜய் டிவியில் பாதி நாட்களைக் கடந்துவிட்டது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட 20 பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி மட்டும் பிக் பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இந்தச் சூழலில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் சென்ற அமித் பார்கவின் சொந்த தம்பியின் திருமணம் நேற்று நடந்தது. அமித்தின் தம்பிக்கும் போபாலைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று பெண் வீட்டார் முறைப்படி போபாலில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் வீட்டார் சார்பான சடங்குகள் நாளையும் நாளை மறுதினமும் பெங்களூருவில் நடைபெற இருக்கிறதாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் சொந்தத் தம்பியின் திருமணத்தில் அமித் கலந்து கொள்ளாத சூழலில் அவரது மனைவி ஸ்ரீ ரஞ்சனியிடம் பேசினோம்.  ‘’பிக் பாஸ் வாய்ப்பு வந்தப்பவே இந்தத் திருமணம் உறுதியாகியிருந்தது. சினிமா டிவி மாதிரியான மீடியாவுல வாய்ப்பு வர்ற போது தவற விடறது நல்லதில்லங்கிறதால அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டார். ஆனாலும் நேத்து மட்டுமில்ல இன்னும் ரெண்டு மூணு நாள் அவர் மனசு இந்தக் கல்யாணத்துலதான் இருக்கும்னு நினைக்கிறேன். வீட்டுல எங்க எல்லாருக்குமே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் பொறுத்துக்கிட்டோம். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி அந்த வீட்டுலயும் சரி வெளியிலயும் சரி இதுவரை அவருக்கு கெட்ட பெயர் பெருசா வரலைன்னுதான் நினைக்கிறோம். இப்படியே விளையாண்டா போதும்னு நினைக்கிறோம். பிக் பாஸில் கலந்து கொள்ளும் எல்லாருக்குமே டைட்டில் வாங்கணும்கிற ஆசை இருக்கதான் செய்யும். இவரைப் பொறுத்தவரை நூறு நாளும் அந்த வீட்டுல இருப்பார்னு நம்பறேன். மத்ததெல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் கடவுள் கையிலதான் இருக்கு’’ என்கிறார் இவர்.

விகடன் 2 Dec 2025 1:12 pm

BB Tamil 9: அவர் முன்னால் நின்னு நடத்த வேண்டிய கல்யாணம் ஆனா... - அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி

விஜய் டிவியில் பாதி நாட்களைக் கடந்துவிட்டது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட 20 பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி மட்டும் பிக் பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இந்தச் சூழலில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் சென்ற அமித் பார்கவின் சொந்த தம்பியின் திருமணம் நேற்று நடந்தது. அமித்தின் தம்பிக்கும் போபாலைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று பெண் வீட்டார் முறைப்படி போபாலில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் வீட்டார் சார்பான சடங்குகள் நாளையும் நாளை மறுதினமும் பெங்களூருவில் நடைபெற இருக்கிறதாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் சொந்தத் தம்பியின் திருமணத்தில் அமித் கலந்து கொள்ளாத சூழலில் அவரது மனைவி ஸ்ரீ ரஞ்சனியிடம் பேசினோம்.  ‘’பிக் பாஸ் வாய்ப்பு வந்தப்பவே இந்தத் திருமணம் உறுதியாகியிருந்தது. சினிமா டிவி மாதிரியான மீடியாவுல வாய்ப்பு வர்ற போது தவற விடறது நல்லதில்லங்கிறதால அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டார். ஆனாலும் நேத்து மட்டுமில்ல இன்னும் ரெண்டு மூணு நாள் அவர் மனசு இந்தக் கல்யாணத்துலதான் இருக்கும்னு நினைக்கிறேன். வீட்டுல எங்க எல்லாருக்குமே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் பொறுத்துக்கிட்டோம். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி அந்த வீட்டுலயும் சரி வெளியிலயும் சரி இதுவரை அவருக்கு கெட்ட பெயர் பெருசா வரலைன்னுதான் நினைக்கிறோம். இப்படியே விளையாண்டா போதும்னு நினைக்கிறோம். பிக் பாஸில் கலந்து கொள்ளும் எல்லாருக்குமே டைட்டில் வாங்கணும்கிற ஆசை இருக்கதான் செய்யும். இவரைப் பொறுத்தவரை நூறு நாளும் அந்த வீட்டுல இருப்பார்னு நம்பறேன். மத்ததெல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் கடவுள் கையிலதான் இருக்கு’’ என்கிறார் இவர்.

விகடன் 2 Dec 2025 1:12 pm

``என்னை மன்னிசுடுங்க'' - சர்ச்சையை உருவாக்கிய `காந்தாரா'நடிப்பு; மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

கோவாவில் கடந்த 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் சில அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி, ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 'காந்தாரா -சாப்டர் 1'படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ரிஷப் ஷெட்டியிடம் மேடையிலிருந்து நடித்து காண்பித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது. ரிஷப் ஷெட்டி- ரன்வீர் சிங் மேடையில் பேசிய ரன்வீர் சிங், “ 'காந்தாரா- சாப்டர் 1' படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு...” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை கேலியாக செய்து காண்பித்திருந்தார். அது பெண் ஆவி இல்லை, பெண் கடவுள் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது என்றும் அக்கடவுளை வணங்கும் துளு மொழி பேசும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இதற்கு துளுநாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த அவர் நடிகர் ரன்வீர் சிங்கின் இந்த செயல் எங்களின் பெண் தெய்வத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது செயலால் எங்கள் மனது புண்பட்டுள்ளது. இதற்கு நடிகர் ரன்வீர் சிங், கத்ரி மஞ்சுநாதா கோவிலுக்கு வந்து சாமி சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல் ரன்வீர் சிங்கின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தார். ரன்வீர் சிங் இந்நிலையில் ரன்வீர் சிங் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த படத்தில் ரிஷப்பின் அசாதாரணமான நடிப்பை முன்வைத்துக் காட்டுவதே என் நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் நம் நாட்டின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மரபையும், நம்பிக்கையையும் ஆழமாக மதித்து வருகிறேன். யாருடைய உணர்ச்சிகளையும் நான் புண்படுத்தி இருந்தால், இதயம் கனிந்த மன்னிப்பைக் கேட்டுகொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?

விகடன் 2 Dec 2025 1:08 pm

``என்னை மன்னிசுடுங்க'' - சர்ச்சையை உருவாக்கிய `காந்தாரா'நடிப்பு; மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

கோவாவில் கடந்த 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் சில அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி, ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 'காந்தாரா -சாப்டர் 1'படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ரிஷப் ஷெட்டியிடம் மேடையிலிருந்து நடித்து காண்பித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது. ரிஷப் ஷெட்டி- ரன்வீர் சிங் மேடையில் பேசிய ரன்வீர் சிங், “ 'காந்தாரா- சாப்டர் 1' படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு...” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை கேலியாக செய்து காண்பித்திருந்தார். அது பெண் ஆவி இல்லை, பெண் கடவுள் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது என்றும் அக்கடவுளை வணங்கும் துளு மொழி பேசும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இதற்கு துளுநாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த அவர் நடிகர் ரன்வீர் சிங்கின் இந்த செயல் எங்களின் பெண் தெய்வத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது செயலால் எங்கள் மனது புண்பட்டுள்ளது. இதற்கு நடிகர் ரன்வீர் சிங், கத்ரி மஞ்சுநாதா கோவிலுக்கு வந்து சாமி சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல் ரன்வீர் சிங்கின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தார். ரன்வீர் சிங் இந்நிலையில் ரன்வீர் சிங் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த படத்தில் ரிஷப்பின் அசாதாரணமான நடிப்பை முன்வைத்துக் காட்டுவதே என் நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் நம் நாட்டின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மரபையும், நம்பிக்கையையும் ஆழமாக மதித்து வருகிறேன். யாருடைய உணர்ச்சிகளையும் நான் புண்படுத்தி இருந்தால், இதயம் கனிந்த மன்னிப்பைக் கேட்டுகொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?

விகடன் 2 Dec 2025 1:08 pm

உண்மையை நிரூபிக்க சேது செய்த வேலை, அவஸ்தைப்படும் ஈஸ்வரி –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா மனம் இறங்காமல் போசை திட்டி விட்டார். அதற்குப்பின் மாப்பிள்ளை, மணமகள் இருவரையும் மேடைக்கு அழைத்தார்கள். தனம்- தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தனம், இந்த கல்யாணம் நடக்குமா? சேது மாமா உண்மையை கண்டுபிடிப்பாரா? என்றார். அதற்கு தமிழ், கண்டிப்பாக சேது உண்மையை கண்டுபிடிப்பார் என்றார். அதற்கு பின் அப்பத்தா, ஈஸ்வரியை அழைத்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மேடையில் எல்லோரும் முன்பும் தந்தார். ராஜாங்கம், தன்னுடைய […] The post உண்மையை நிரூபிக்க சேது செய்த வேலை, அவஸ்தைப்படும் ஈஸ்வரி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 1:08 pm