கியூட்டாக காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா –விக்னேஷ் சிவன், வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நயன்- சீரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நயன்தாரா […] The post கியூட்டாக காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன், வைரலாகும் புகைப்படம் appeared first on Tamil Behind Talkies .
தோல்விகள், புறக்கணிப்பு, அவமானங்கள் கடந்து கிடைத்த பொக்கிஷம் –நாஞ்சில் விஜயன் எமோஷனல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர். பின் இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் இவர் நிகழ்ச்சிகளில் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். லேடிஸ் நாஞ்சில் விஜயனுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் விஜய் […] The post தோல்விகள், புறக்கணிப்பு, அவமானங்கள் கடந்து கிடைத்த பொக்கிஷம் – நாஞ்சில் விஜயன் எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .
'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ்
`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’-க்கான `பெருந்தகையாளர்’ விருதை SA. அமீர் அம்சாவுக்கு வழங்கினார், நடிகர் கருணாஸ். அவர் பேசும்போது, ``முதலில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கும், விகடன் நிர்வாக இயக்குநர் திரு.சீனிவாசன் சாருக்கும் என் நன்றிகள். விகடனுக்கும் எனக்குமான தொடர்பு 26 ஆண்டுகாலமாகத் தொடர்கிறது. 2000-ம் ஆண்டில் விகடன் அட்டைப்படத்தில் நடிகனாக இல்லாத ஒரு பாடகனாக என் முகம் வந்ததை என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். கருணாஸ் நான் விட்டுக்கொடுத்த படம் தான் 'அசுரன்' - கருணாஸ் | நம்பிக்கை விருதுகள் 2025 | Live என் மகன் கென் கருணாஸைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள். 'அசுரன்' படத்தில் அவன் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தான். அந்தச் சமயத்தில், அரசியலில் நான் இருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார். அதன் பிறகு எனக்கு அதில் ஈடுபாடு இல்லாமல்போனது. மீண்டும் நடிக்கலாம் என்று முடிவெடுத்து இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்தேன். 'இனிமேல் நான் காமெடி பண்ணுவது சரியாக வராது. ஒரு குணச்சித்திர நடிகனாக நடிக்கிறேன்' என்று சொன்னேன். வெற்றிமாறன் என்னிடம் 'வெக்கை' நாவலைப் படிக்கச் சொல்லி, அதில் அப்பாவாக என்னையும், மகனாக கென்னையும் நடிக்க வைக்கலாம் என்றார். ஆனால், நாவலைப் படித்த பிறகு நான் வெற்றியிடம், 'வெற்றி, இந்தக் கதையில் நான் நடிப்பதைவிட ஒரு பெரிய ஹீரோ நடித்தால் படம் மிகப்பெரிய ஹிட்டாகும். அதனால் ஒரு ஹீரோவை வைத்து எடுங்கள்' என்றேன். அவர் 'உங்களை வைத்து எடுக்கத்தான் ஆசைப்படுகிறேன்' என்று சொல்லியும், என் மகனுக்காகவும், படத்தின் வணிக வெற்றிக்காகவும் நான் விட்டுக்கொடுத்த படம்தான் 'அசுரன்.’ வெற்றிமாறன் போன்ற ஒரு தேசிய அளவிலான இயக்குநர் வாய்ப்பு தரும்போது, 'வேண்டாம், என் மகனுக்காகப் பண்ணுங்க' என்று சொல்வதற்கு ஒரு தனி மனசு வேண்டும். அதை ஒரு அப்பாவாக நான் செய்ததில் பெருமைப்படுகிறேன் என்றார்.
'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ்
`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’-க்கான `பெருந்தகையாளர்’ விருதை SA. அமீர் அம்சாவுக்கு வழங்கினார், நடிகர் கருணாஸ். அவர் பேசும்போது, ``முதலில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கும், விகடன் நிர்வாக இயக்குநர் திரு.சீனிவாசன் சாருக்கும் என் நன்றிகள். விகடனுக்கும் எனக்குமான தொடர்பு 26 ஆண்டுகாலமாகத் தொடர்கிறது. 2000-ம் ஆண்டில் விகடன் அட்டைப்படத்தில் நடிகனாக இல்லாத ஒரு பாடகனாக என் முகம் வந்ததை என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். கருணாஸ் 'மானுட நேசகி' அலமேலு மங்கையற்கரசி - விருது வழங்கிச் சிறப்பித்த கௌதமி | நம்பிக்கை விருதுகள் 2025 | Live என் மகன் கென் கருணாஸைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள். 'அசுரன்' படத்தில் அவன் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தான். அந்தச் சமயத்தில், அரசியலில் நான் இருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார். அதன் பிறகு எனக்கு அதில் ஈடுபாடு இல்லாமல்போனது. மீண்டும் நடிக்கலாம் என்று முடிவெடுத்து இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்தேன். 'இனிமேல் நான் காமெடி பண்ணுவது சரியாக வராது. ஒரு குணச்சித்திர நடிகனாக நடிக்கிறேன்' என்று சொன்னேன். வெற்றிமாறன் என்னிடம் 'வெக்கை' நாவலைப் படிக்கச் சொல்லி, அதில் அப்பாவாக என்னையும், மகனாக கென்னையும் நடிக்க வைக்கலாம் என்றார். ஆனால், நாவலைப் படித்த பிறகு நான் வெற்றியிடம், 'வெற்றி, இந்தக் கதையில் நான் நடிப்பதைவிட ஒரு பெரிய ஹீரோ நடித்தால் படம் மிகப்பெரிய ஹிட்டாகும். அதனால் ஒரு ஹீரோவை வைத்து எடுங்கள்' என்றேன். அவர் 'உங்களை வைத்து எடுக்கத்தான் ஆசைப்படுகிறேன்' என்று சொல்லியும், என் மகனுக்காகவும், படத்தின் வணிக வெற்றிக்காகவும் நான் விட்டுக்கொடுத்த படம்தான் 'அசுரன்.’ வெற்றிமாறன் போன்ற ஒரு தேசிய அளவிலான இயக்குநர் வாய்ப்பு தரும்போது, 'வேண்டாம், என் மகனுக்காகப் பண்ணுங்க' என்று சொல்வதற்கு ஒரு தனி மனசு வேண்டும். அதை ஒரு அப்பாவாக நான் செய்ததில் பெருமைப்படுகிறேன் என்றார். நம்பிக்கை விருதுகள் 2025
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஒன்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக ஆண்டு வரவேற்பை வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம். அந்த அளவிற்கு இந்த […] The post மிக எளிமையாக வீட்டிலே தன் மனைவிக்கு இரண்டாவது வளைகாப்பு நடத்திய சூப்பர் சிங்கர் பிரபலம் அஜய் கிருஷ்ணா appeared first on Tamil Behind Talkies .
Kadhal Reset Repeat – Official Teaser
Kadhal Reset Repeat – Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar
சிந்தாமணியிடம் ஏமாந்து போன விஜயா, சமரசம் பேச போன இடத்தில் வெடித்த கலவரம் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மனோஜ் கடைக்கு சென்றார். அங்கு விஜயா, பத்திரத்தை எடுப்பதற்கு அப்பா கையெழுத்து போட்ட மாதிரி பணத்தை வாங்குவதற்கும் போட்டு விடு. நீ இந்த கடன் தொல்லையிலிருந்து நீங்கி நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்றார். மனோஜும் தன் அம்மா சொல்வதற்கு ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் ரவி, ஸ்ருதியின் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது போன் செய்த நீத்து ஆர்டர் சொன்னார். ரவியும் ஆர்டரை எடுத்துக்கொண்டு இருந்தார். இதை […] The post சிந்தாமணியிடம் ஏமாந்து போன விஜயா, சமரசம் பேச போன இடத்தில் வெடித்த கலவரம் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
போலீஸிடம் இருந்து தப்பிய சூர்யா, நந்தினி செய்த வேலை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ஆட்டோவில் வரும்போது ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு ஒரு பார்சல் வரும் அதை வாங்கிக்கொண்டு போய்விடலாம்...
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த மாமன்னன் போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் பெண்களின் தைரியம் குறித்து...
கோர்ட்டில் தன் வாழ்கைக்காக போராடும் தங்கமயில், கோமதி சொன்ன வார்த்தை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், வீட்டில் யாருமே தங்கமயிலிடம் பேசாத போது நீ எதற்காக பேசினாய்? நகை விஷயத்தை எதற்காக மறைத்தாய்? கதிர் திருமணத்தை எதற்கு சொல்லவில்லை? என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் மீனாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. இன்னொரு பக்கம் விவாகரத்து கேஸ் நடப்பதால் பாக்கியம் கோர்ட்டில் விவாகரத்து வேண்டாம் என்று உறுதியாக இரு. எப்படியாவது உன் மாமியார் வீட்டுக்குள் போ. மீண்டும் இந்த வீட்டிற்கு வராதே என்று தங்கமயிலை […] The post கோர்ட்டில் தன் வாழ்கைக்காக போராடும் தங்கமயில், கோமதி சொன்ன வார்த்தை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
What To Watch: 'TTT'முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் &ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்!
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், சீரிஸ்களின் லிஸ்ட். 'மை லார்ட்' (தமிழ்) சசிகுமார், சைத்ரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்'. ராஜு முருகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரித்திருக்கிறது. இந்தப் படம் இந்த வாரம் திரையரங்குகளில் (பிப்.13) வெளியாகியிருக்கிறது. பூக்கி (தமிழ்) விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி' (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். 'பூக்கி' (Pookie) படம் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. My Lord Movie மைலாஞ்சி (தமிழ்) அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மைலாஞ்சி’. சிங்கம்புலி,முனீஷ் காந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகி ஆக கிரிஷா க்ரூப் நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதைத் தவிர தமிழில் ‘மின்னலே’, ‘மௌனம் பேசியதே’, ‘காதலர் தினம்’, ‘உயிருள்ள வரை உஷா’ போன்ற படங்கள் ரீ- ரிலீஸூம் செய்யப்பட்டிருக்கிறது. Couple Friendly ( தெலுங்கு): அஸ்வின் சந்திரசேகர் கதை ,திரைக்கதை எழுதி இயக்க சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி , யோகி பாபு , லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘Couple Friendly’. இண்ட்டீரியர் டெக்ரேசன் டிசைனர் ஆக சென்னையில் வாழும் நாயகன் நாயகியை சந்தித்ததும் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் கதை. Funky (தெலுங்கு): கயாடு லோஹர் நாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை கே.வி அனுதீப் இயக்கி இருக்கிறார். தெலுங்கு படமான ‘Funky’ தமிழ் டப்பிங்கிலும் வெளியாகிறது. ஓ ரோமியோ (இந்தி): விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், ஷாஹித் கபூர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘ஓ ரோமியோ’ (O’ Romeo). திரிப்தி திம்ரி, தமன்னா, திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. சீதா பயணம்: ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் இது. அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகி ஆக நடிக்க அர்ஜூனும், நடிகர் துருவா சர்ஜாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. Seetha Payanam Movie வூதரிங் ஹைட்ஸ் (ஹாலிவுட்): எமரால்ட் பென்னெல் இயக்கத்தில் மார்கோட் ராபி மற்றும் ஜேக்கப் எலோர்டி நடிப்பில் உருவாகியுள்ள 'வூதரிங் ஹைட்ஸ்' படம் இந்த வாரம் (பிப்.13) வெளியாகி இருக்கிறது. ஓடிடி ரிலீஸ்கள்: 1. அநாகாநாகா ஒரு ராஜு - Netflix - February 11, 2026 2. மனா ஷங்கர வரபிரசாத் காரு - ZEE5 - February 11, 2026 3. தலைவர் தம்பி தலைமையில் - Netflix - February 12, 2026 4. பேபி கேர்ள் - Sony LIV - February 12, 2026 5. கோஹ்ரா சீசன் 2 - Netflix - February 11, 2026 6. தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் - JioHotstar - February 13, 2026 7. கிராஸ் சீசன் 2 - Netflix - February 11, 2026
What To Watch: 'TTT'முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் &ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்!
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், சீரிஸ்களின் லிஸ்ட். 'மை லார்ட்' (தமிழ்) சசிகுமார், சைத்ரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்'. ராஜு முருகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரித்திருக்கிறது. இந்தப் படம் இந்த வாரம் திரையரங்குகளில் (பிப்.13) வெளியாகியிருக்கிறது. பூக்கி (தமிழ்) விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி' (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். 'பூக்கி' (Pookie) படம் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. My Lord Movie மைலாஞ்சி (தமிழ்) அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மைலாஞ்சி’. சிங்கம்புலி,முனீஷ் காந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகி ஆக கிரிஷா க்ரூப் நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதைத் தவிர தமிழில் ‘மின்னலே’, ‘மௌனம் பேசியதே’, ‘காதலர் தினம்’, ‘உயிருள்ள வரை உஷா’ போன்ற படங்கள் ரீ- ரிலீஸூம் செய்யப்பட்டிருக்கிறது. Couple Friendly ( தெலுங்கு): அஸ்வின் சந்திரசேகர் கதை ,திரைக்கதை எழுதி இயக்க சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி , யோகி பாபு , லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘Couple Friendly’. இண்ட்டீரியர் டெக்ரேசன் டிசைனர் ஆக சென்னையில் வாழும் நாயகன் நாயகியை சந்தித்ததும் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் கதை. Funky (தெலுங்கு): கயாடு லோஹர் நாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை கே.வி அனுதீப் இயக்கி இருக்கிறார். தெலுங்கு படமான ‘Funky’ தமிழ் டப்பிங்கிலும் வெளியாகிறது. ஓ ரோமியோ (இந்தி): விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், ஷாஹித் கபூர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘ஓ ரோமியோ’ (O’ Romeo). திரிப்தி திம்ரி, தமன்னா, திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. சீதா பயணம்: ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் இது. அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகி ஆக நடிக்க அர்ஜூனும், நடிகர் துருவா சர்ஜாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. Seetha Payanam Movie வூதரிங் ஹைட்ஸ் (ஹாலிவுட்): எமரால்ட் பென்னெல் இயக்கத்தில் மார்கோட் ராபி மற்றும் ஜேக்கப் எலோர்டி நடிப்பில் உருவாகியுள்ள 'வூதரிங் ஹைட்ஸ்' படம் இந்த வாரம் (பிப்.13) வெளியாகி இருக்கிறது. ஓடிடி ரிலீஸ்கள்: 1. அநாகாநாகா ஒரு ராஜு - Netflix - February 11, 2026 2. மனா ஷங்கர வரபிரசாத் காரு - ZEE5 - February 11, 2026 3. தலைவர் தம்பி தலைமையில் - Netflix - February 12, 2026 4. பேபி கேர்ள் - Sony LIV - February 12, 2026 5. கோஹ்ரா சீசன் 2 - Netflix - February 11, 2026 6. தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் - JioHotstar - February 13, 2026 7. கிராஸ் சீசன் 2 - Netflix - February 11, 2026
நடிகையாக என்ட்ரி கொடுக்கும் குஷ்பூ மகள், முதல் படமே எந்த மொழி தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்
தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் நடிகை குஷ்பூ 90களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார். அதோடு ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக […] The post நடிகையாக என்ட்ரி கொடுக்கும் குஷ்பூ மகள், முதல் படமே எந்த மொழி தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட் appeared first on Tamil Behind Talkies .
Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி'காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா?
ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக 'பூக்கி' எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இவர்களுக்கிடையில் மோதல் முட்டுகிறது. அந்த மோதல், பிரேக்-அப்பில் வந்து முடிகிறது. பிரேக்-அப்பிற்குப் பிறகு கைலாஷும், தனுஷாவும் காதல் நினைவுகளை மறப்பதற்கும், அதிலிருந்து நகர்ந்து செல்வதற்கும் உடற்பயிற்சி, ஆன்மிகம் என பல்வேறு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். அதே சமயம், இருவரும் வேறொரு காதலையும் தேடிச் செல்கிறார்கள். இறுதியில், கைலாஷுக்கும் தனுஷாவுக்கும் என்ன ஆனது, அவர்கள் பிரேக்-அப் எப்படி பேட்ச் அப் ஆகிறது என்பதுதான் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கும் இக்காதல் படத்தின் கதை. Pookie Review | பூக்கி விமர்சனம் காதல் தோல்வியிலிருந்து வெளிவரத்துடிக்கும் இளைஞனாகத் துள்ளல், பிரிவு, கோபம் எனப் பல்வேறு எமோஷன்கள் கொண்டு இந்தக் காதல் கதையைத் தாங்கியிருக்கிறார் நடிகர் அஜய் திஷன். ஆனால், தேவையின்றி இடையிடையே தலைதூக்கும் மிகை நடிப்பு பக்கங்களைக் கசக்கிப் போட்டிருக்கலாம். நாயகியாக ஆர்.கே. தனுஷா ஏமாற்றம், பிரிவின் வலி, நினைவுகளிலிருந்து மீள முடியாத துயரம் என நடிப்பில் தேவையான டச் தந்து 'பூக்கி'யாக பெயர் வாங்குகிறார். ஆனால், உடல் எடையை உடனுக்குடன் ஏற்றி இறக்கும் லாஜிக் மீறலை (continuity) இவருடைய கதாபாத்திரத்தில் கண்டும் காணாமல் விட்டிருப்பது ஏனோ?! My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்? தந்தையாக பாண்டியராஜன் குறைந்த திரை நேரத்தில் வந்தாலும், எமோஷனலாக ஸ்கோர் செய்கிறார். இவரைத் தாண்டி இந்துமதி மணிகண்டன், ப்ளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் வழக்கமான கதாபாத்திரங்களிலேயே வந்து அட்டெண்டன்ஸ் மட்டும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். Pookie Review | பூக்கி விமர்சனம் வண்ணமயமான ப்ரேம்கள் கொண்டு இந்தக் காதல் கதைக்கு வசீகரிக்கும் திரைமொழியைச் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா. இந்தக் கதைக்குக் கொடுக்க வேண்டிய சுவாரஸ்யப் பின்னல்களைக் கொடுக்காமல் சிக்கல்களுக்குள் சிக்கிச் சுழல வைத்திருக்கிறது விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பு. க்ரீன் மேட் உதவி கொண்டு சாத்தியப்படுத்தியிருக்கும் ஓரிரு கிராபிக்ஸ் காட்சிகளின் தரமும் சுமார் ரகமே! Pookie: ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்- 'பூக்கி' படம் குறித்து விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் பாடல்களில், அவருடைய டிரேட்மார்க் வைப் 'கீ' இடம்பெறாமல் போயிருப்பது கோஸ்டிங் செயல் ப்ரோ! பின்னணி இசையிலும் இந்தக் காதல் கதையை உயிர்ப்புடன் வைக்கத் தவறியிருக்கிறார். ஆங்காங்கே, காட்சிகளை ஸ்டாக்கிங் செய்யும் ஜிங்கிள் வடிவிலான பாடல்களும் செவிகளுக்குத் தொந்தரவையே உருவாக்குகின்றன. Pookie Review | பூக்கி விமர்சனம் மாற்றுப் புரிதல்களால் உண்டாகும் கைலாஷ் மற்றும் ஆழியின் காதல் பிரிவு, என நேரடியாகவே திரைக்கதைக்குள் செல்கிறது படம். அதிலிருந்து காமெடி, காதல் என வலுவிழந்த பரிசலிலேயே பயணிக்கிறது இக்கதை. சமூக வலைதள டிரெண்டிங் மீம் வசனங்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் நகைச்சுவைகளில் சிலது மட்டுமே நம்மைச் சிரிக்க வைக்கின்றன. இடைவெளி இன்றி, இப்படியான வசனங்களைத் திரைக்கதை முழுவதுமாக அடு...க்கி நமக்குச் சலிப்பையே உண்டாக்குகிறார்கள். சமூக வலைதள டிரெண்டிங் வசனங்களையும் முகங்களையும் திரையில் கொண்டு வருவதால் மட்டுமே அது ஜென் ஜி சமூகத்திற்கான படைப்பாகாது இயக்குநரே! காதல் பிரிவிலிருந்து கடந்து செல்ல நாயகன், நாயகி கையிலெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகள் என மீண்டும் மீண்டும் ஒரு இடத்திற்குள்ளாகவே வட்டமிட்டு 'ரெட் ஃப்ளாக்'யே பெறுகிறது இந்த திரைக்கதை. இடையிடையே குடும்ப சென்டிமென்ட், ஆன்மிகம் என்கிற பெயரில் செய்யப்படும் அரசியல் ஏமாற்று ஆட்டம் திரைக்கதையைத் தேவையில்லாத திசைகளுக்கு டேட்டிங் அழைத்துச் சென்றிருக்கிறது. பெண்ணியவாதிகள் குறித்துத் தவறான பிம்பத்தைக் கட்டமைக்கும் வகையில் சித்திரித்திருப்பதும் இந்த 'ஜென் ஜி' காதல் கதை செய்திருக்கும் பூமர் செயல்! காதல் பிரிவில் ஆண்கள், பெண்கள் என இருவரும் பாதிக்கப்படுவதாக முதல் பாதியில் காட்சிப்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் பெண்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் 'ஆண் மைய' பார்வையோடு காட்சிகளை எழுப்பியிருப்பது மோசமான போக்கே! Pookie Review | பூக்கி விமர்சனம் அழுத்தமான திரைக்கதையில்லாமல் சோதனையாட்டம் கண்டிருக்கும் இந்த 'பூக்கி', ஜென் ஜி, ஜென் எக்ஸ், மில்லினியல்கள் என எவருடனும் நெருங்காமல், அந்நியமாகிப் போயிருக்கிறது. மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?
Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி'காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா?
ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக 'பூக்கி' எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இவர்களுக்கிடையில் மோதல் முட்டுகிறது. அந்த மோதல், பிரேக்-அப்பில் வந்து முடிகிறது. பிரேக்-அப்பிற்குப் பிறகு கைலாஷும், தனுஷாவும் காதல் நினைவுகளை மறப்பதற்கும், அதிலிருந்து நகர்ந்து செல்வதற்கும் உடற்பயிற்சி, ஆன்மிகம் என பல்வேறு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். அதே சமயம், இருவரும் வேறொரு காதலையும் தேடிச் செல்கிறார்கள். இறுதியில், கைலாஷுக்கும் தனுஷாவுக்கும் என்ன ஆனது, அவர்கள் பிரேக்-அப் எப்படி பேட்ச் அப் ஆகிறது என்பதுதான் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கும் இக்காதல் படத்தின் கதை. Pookie Review | பூக்கி விமர்சனம் காதல் தோல்வியிலிருந்து வெளிவரத்துடிக்கும் இளைஞனாகத் துள்ளல், பிரிவு, கோபம் எனப் பல்வேறு எமோஷன்கள் கொண்டு இந்தக் காதல் கதையைத் தாங்கியிருக்கிறார் நடிகர் அஜய் திஷன். ஆனால், தேவையின்றி இடையிடையே தலைதூக்கும் மிகை நடிப்பு பக்கங்களைக் கசக்கிப் போட்டிருக்கலாம். நாயகியாக ஆர்.கே. தனுஷா ஏமாற்றம், பிரிவின் வலி, நினைவுகளிலிருந்து மீள முடியாத துயரம் என நடிப்பில் தேவையான டச் தந்து 'பூக்கி'யாக பெயர் வாங்குகிறார். ஆனால், உடல் எடையை உடனுக்குடன் ஏற்றி இறக்கும் லாஜிக் மீறலை (continuity) இவருடைய கதாபாத்திரத்தில் கண்டும் காணாமல் விட்டிருப்பது ஏனோ?! My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்? தந்தையாக பாண்டியராஜன் குறைந்த திரை நேரத்தில் வந்தாலும், எமோஷனலாக ஸ்கோர் செய்கிறார். இவரைத் தாண்டி இந்துமதி மணிகண்டன், ப்ளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் வழக்கமான கதாபாத்திரங்களிலேயே வந்து அட்டெண்டன்ஸ் மட்டும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். Pookie Review | பூக்கி விமர்சனம் வண்ணமயமான ப்ரேம்கள் கொண்டு இந்தக் காதல் கதைக்கு வசீகரிக்கும் திரைமொழியைச் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா. இந்தக் கதைக்குக் கொடுக்க வேண்டிய சுவாரஸ்யப் பின்னல்களைக் கொடுக்காமல் சிக்கல்களுக்குள் சிக்கிச் சுழல வைத்திருக்கிறது விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பு. க்ரீன் மேட் உதவி கொண்டு சாத்தியப்படுத்தியிருக்கும் ஓரிரு கிராபிக்ஸ் காட்சிகளின் தரமும் சுமார் ரகமே! Pookie: ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்- 'பூக்கி' படம் குறித்து விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் பாடல்களில், அவருடைய டிரேட்மார்க் வைப் 'கீ' இடம்பெறாமல் போயிருப்பது கோஸ்டிங் செயல் ப்ரோ! பின்னணி இசையிலும் இந்தக் காதல் கதையை உயிர்ப்புடன் வைக்கத் தவறியிருக்கிறார். ஆங்காங்கே, காட்சிகளை ஸ்டாக்கிங் செய்யும் ஜிங்கிள் வடிவிலான பாடல்களும் செவிகளுக்குத் தொந்தரவையே உருவாக்குகின்றன. Pookie Review | பூக்கி விமர்சனம் மாற்றுப் புரிதல்களால் உண்டாகும் கைலாஷ் மற்றும் ஆழியின் காதல் பிரிவு, என நேரடியாகவே திரைக்கதைக்குள் செல்கிறது படம். அதிலிருந்து காமெடி, காதல் என வலுவிழந்த பரிசலிலேயே பயணிக்கிறது இக்கதை. சமூக வலைதள டிரெண்டிங் மீம் வசனங்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் நகைச்சுவைகளில் சிலது மட்டுமே நம்மைச் சிரிக்க வைக்கின்றன. இடைவெளி இன்றி, இப்படியான வசனங்களைத் திரைக்கதை முழுவதுமாக அடு...க்கி நமக்குச் சலிப்பையே உண்டாக்குகிறார்கள். சமூக வலைதள டிரெண்டிங் வசனங்களையும் முகங்களையும் திரையில் கொண்டு வருவதால் மட்டுமே அது ஜென் ஜி சமூகத்திற்கான படைப்பாகாது இயக்குநரே! காதல் பிரிவிலிருந்து கடந்து செல்ல நாயகன், நாயகி கையிலெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகள் என மீண்டும் மீண்டும் ஒரு இடத்திற்குள்ளாகவே வட்டமிட்டு 'ரெட் ஃப்ளாக்'யே பெறுகிறது இந்த திரைக்கதை. இடையிடையே குடும்ப சென்டிமென்ட், ஆன்மிகம் என்கிற பெயரில் செய்யப்படும் அரசியல் ஏமாற்று ஆட்டம் திரைக்கதையைத் தேவையில்லாத திசைகளுக்கு டேட்டிங் அழைத்துச் சென்றிருக்கிறது. பெண்ணியவாதிகள் குறித்துத் தவறான பிம்பத்தைக் கட்டமைக்கும் வகையில் சித்திரித்திருப்பதும் இந்த 'ஜென் ஜி' காதல் கதை செய்திருக்கும் பூமர் செயல்! காதல் பிரிவில் ஆண்கள், பெண்கள் என இருவரும் பாதிக்கப்படுவதாக முதல் பாதியில் காட்சிப்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் பெண்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் 'ஆண் மைய' பார்வையோடு காட்சிகளை எழுப்பியிருப்பது மோசமான போக்கே! Pookie Review | பூக்கி விமர்சனம் அழுத்தமான திரைக்கதையில்லாமல் சோதனையாட்டம் கண்டிருக்கும் இந்த 'பூக்கி', ஜென் ஜி, ஜென் எக்ஸ், மில்லினியல்கள் என எவருடனும் நெருங்காமல், அந்நியமாகிப் போயிருக்கிறது. மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?
ஜெனியின் திருமணத்தை நிறுத்த போராடும் தமிழ்-சேது, ராஜாங்கம் எடுக்கும் முடிவுஎன்ன ? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஸ் பிச்சையை சந்தித்த தாமரை, எங்கள் வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் என்றெல்லாம் சொன்னார். காமேஷ், உங்கள் மாமா குறித்த அதே தேதியில் நான் தான் உனக்கு தாலி கட்டுவேன். யாராலும் அதை தடுக்க முடியாது என்றார். இதையெல்லாம் சித்ரா வீடியோவாக எடுத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் கல்லூரிக்கு தமிழை பார்க்க சேது சென்றிருந்தார். அப்போது சேது, தமிழுக்கு […] The post ஜெனியின் திருமணத்தை நிறுத்த போராடும் தமிழ்-சேது, ராஜாங்கம் எடுக்கும் முடிவுஎன்ன ? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா! - ஹாரிஸ் 25 ஸ்பெஷல்! | From Vikatan Archives
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு சினிமாவில் இது 25வது ஆண்டு. அவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'மின்னலே' திரைப்படம் வெளியாகி பிப்ரவரி மாதத்துடன் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அப்படமும் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. இவர் முதல் முதலில் இசையமைப்பாளராக கமிட்டான திரைப்படம் பிரசாந்த் நடித்திருந்த 'மஜ்னு' படம்தான். 'மின்னலே' ஆனால், 'மின்னலே' முதலாவதாக ரிலீஸாகிவிட்டது. எக்கசக்கமான ஹிட் பாடல்களை தந்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜிடம் ஏ.ஆர். ரஹ்மானின் டச் தெரிவதாக அவருடைய ஆரம்ப காலகட்டங்களில் விமர்சனங்கள் எழுந்தன. 25 ஆண்டுகளுக்கு முன்பு , 'மின்னலே' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு... அதாவது 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆனந்த விகடனுக்கு அவர் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், விமர்சனங்கள் குறித்தும், அவருடைய வருங்கால திட்டங்கள் குறித்தும் அப்போது அவர் பகிர்ந்திருந்தார். அப்போது அவர், ரஹ்மானின் உயரம் ரொம்ப ரொம்ப மேல இருக்கு சார். அவர் மியூஸிக் போல என்னுது இருக்குன்னு சொல்றீங்கன்னா டெக்னிக்கல் விஷயங்களில் நான் பொஃபெக்டா இருக்கறதுதான் காரணம்னு நினைக்கிறேன். மற்றபடி யாருடைய சாயலும் இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். நான் ரஹ்மானிடம மட்டும் வேலைபார்க்கவில்லை. நான்கு மொழிகளில் நாற்பது மியூசிக் டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறேன். எல்லோரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றிருக்கிறேன். எனது பன்னிரண்டு வருட உழைப்புக்குக் கிடைத்திருக்கும் உயர்வு இது. பன்னிரண்டு வயசிலேயே மியூஸிக் பக்கம் வந்துட்டேன். என் அப்பா ஒரு கிடாரிஸ்ட், அம்மா பாடகி சின்ன வயசிலேயே போர்டு வாசிக்க ஆரம்பித்துவிட்டதால், படிப்பில் கவனம் செல்லவில்லை. பாடப் புத்தக நோட்ஸுகளைவிட மியூஸிக்கல் நோட்ஸ்தான் எனக்கு உற்சாகம் தந்தது. ஸ்கூல் படிப்பு முடிச்சேன். காலேஜ் போக ஆர்வமில்லை. படிப்பை மூட்டைகட்டி வெச்சிட்டு முழுநேரமும் மியூஸிக்ல இறங்கிட்டேன். Harris Jeyaraj - Ananda Vikatan Interview ''மின்னலே' பாடல் களைக் கேட்டபிறகு பத்துப் பன்னிரண்டு பேர் வந்தார்கள். நான் ரொம்ப யோசித்து நாலே நாலு படம் ஒப்புக்கொண்டிருக்கிறேன். கிடுகிடுவென்று படங்களை ஏற்றுக் கொள்வதைவிட தேர்ந்தெடுத்துச் செய்யலாம் என்பது என் திட்டம். எனக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவரிடம், கிராமிய இசைக்கு இளையராஜா, கானாவுக்கு தேவா, மாடர்ன் இசைக்கு ரஹ்மான் என்று ஆளுக்கு ஒரு ஏரியாவில் அசத்து றாங்க... நீங்க எப்படி?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் தந்த ஹாரிஸ் ஜெயராஜ், ''இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ளே இப்படி ஒப்பீடு செய்யறது சரியா வராது. ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்... எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா. அதில் நிறைய அசத்த முடியும். என்றிருக்கிறார்.
எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா! - ஹாரிஸ் 25 ஸ்பெஷல்! | From Vikatan Archives
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு சினிமாவில் இது 25வது ஆண்டு. அவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'மின்னலே' திரைப்படம் வெளியாகி பிப்ரவரி மாதத்துடன் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அப்படமும் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. இவர் முதல் முதலில் இசையமைப்பாளராக கமிட்டான திரைப்படம் பிரசாந்த் நடித்திருந்த 'மஜ்னு' படம்தான். 'மின்னலே' ஆனால், 'மின்னலே' முதலாவதாக ரிலீஸாகிவிட்டது. எக்கசக்கமான ஹிட் பாடல்களை தந்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜிடம் ஏ.ஆர். ரஹ்மானின் டச் தெரிவதாக அவருடைய ஆரம்ப காலகட்டங்களில் விமர்சனங்கள் எழுந்தன. 25 ஆண்டுகளுக்கு முன்பு , 'மின்னலே' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு... அதாவது 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆனந்த விகடனுக்கு அவர் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், விமர்சனங்கள் குறித்தும், அவருடைய வருங்கால திட்டங்கள் குறித்தும் அப்போது அவர் பகிர்ந்திருந்தார். அப்போது அவர், ரஹ்மானின் உயரம் ரொம்ப ரொம்ப மேல இருக்கு சார். அவர் மியூஸிக் போல என்னுது இருக்குன்னு சொல்றீங்கன்னா டெக்னிக்கல் விஷயங்களில் நான் பொஃபெக்டா இருக்கறதுதான் காரணம்னு நினைக்கிறேன். மற்றபடி யாருடைய சாயலும் இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். நான் ரஹ்மானிடம மட்டும் வேலைபார்க்கவில்லை. நான்கு மொழிகளில் நாற்பது மியூசிக் டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறேன். எல்லோரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றிருக்கிறேன். எனது பன்னிரண்டு வருட உழைப்புக்குக் கிடைத்திருக்கும் உயர்வு இது. பன்னிரண்டு வயசிலேயே மியூஸிக் பக்கம் வந்துட்டேன். என் அப்பா ஒரு கிடாரிஸ்ட், அம்மா பாடகி சின்ன வயசிலேயே போர்டு வாசிக்க ஆரம்பித்துவிட்டதால், படிப்பில் கவனம் செல்லவில்லை. பாடப் புத்தக நோட்ஸுகளைவிட மியூஸிக்கல் நோட்ஸ்தான் எனக்கு உற்சாகம் தந்தது. ஸ்கூல் படிப்பு முடிச்சேன். காலேஜ் போக ஆர்வமில்லை. படிப்பை மூட்டைகட்டி வெச்சிட்டு முழுநேரமும் மியூஸிக்ல இறங்கிட்டேன். Harris Jeyaraj - Ananda Vikatan Interview ''மின்னலே' பாடல் களைக் கேட்டபிறகு பத்துப் பன்னிரண்டு பேர் வந்தார்கள். நான் ரொம்ப யோசித்து நாலே நாலு படம் ஒப்புக்கொண்டிருக்கிறேன். கிடுகிடுவென்று படங்களை ஏற்றுக் கொள்வதைவிட தேர்ந்தெடுத்துச் செய்யலாம் என்பது என் திட்டம். எனக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவரிடம், கிராமிய இசைக்கு இளையராஜா, கானாவுக்கு தேவா, மாடர்ன் இசைக்கு ரஹ்மான் என்று ஆளுக்கு ஒரு ஏரியாவில் அசத்து றாங்க... நீங்க எப்படி?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் தந்த ஹாரிஸ் ஜெயராஜ், ''இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ளே இப்படி ஒப்பீடு செய்யறது சரியா வராது. ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்... எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா. அதில் நிறைய அசத்த முடியும். என்றிருக்கிறார்.
நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேபி | வரித்துணையே 01
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. வரித்துணையே 1 'நீ கவிதைகளா' காதலர் தினம் ஸ்பெஷலாக முதலில் 'நீ கவிதைகளா' பாடல் பற்றி உரையாட பாடலாசிரியர் ஜிகேபி-யின் வீட்டு கதவைத் தட்டினோம். வாஞ்சையுடன் வரவேற்று மலர்ந்த சிரிப்புடன் 'நீ கவிதைகளா' பாடல் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.... எப்போதும் ஒவ்வொரு பாடலுக்கும், அது இடம்பெறும் சூழலை இயக்குநர்களோ, இசையமைப்பாளர்களோ விளக்கி விடுவார்கள். ஆனால், 'நீ கவிதைகளா' பாடலைப் பொறுத்தமட்டில், பாடலை முன்பே மான்டேஜ்களாக படம்பிடித்துவிட்டார்கள். நான் எழுதத் தொடங்குவதற்கு முன் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும், இயக்குநர் சரவணனும் 'கதாநாயகியிடம் கதாநாயகன் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பே, அவனின் வாழ்விலிருந்து அவள் விலகிச் சென்றுவிடுகிறாள்' என்பதை மட்டுமே சொன்னார்கள். இதை அவர்கள் விளக்கி முடித்ததுமே எனக்குள் 'நீ கடந்ததுவா, நிகழ்ந்ததுவா, பதில் மொழியே' வரிகள் தோன்றிவிட்டன. திபு நினன் தாமஸ் எப்போதும், பாடலாசிரியர்களிடம் வரிகளைக் கேட்டு வாங்குவார். சொல்லப்போனால், அவரொரு மலையாளி. ஆனால், அவருக்கு தமிழ் மொழி மேல் அத்தனை ப்ரியம். நான் எழுதும் வரிகளின் அர்த்தம் அவருக்குப் புரியாது. அதை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் செய்வார். இந்தப் பாடலில் இடையில் இடம்பெறும் 'முகம் காட்டு நீ, முழு வெண்பனி, ஓடாதே நீ, என் எல்லையே, இதழோரமாய், சிறு புன்னகை, நீ காட்டடி, என் முல்லையே' என்கிற வரியை எழுதுவதற்கு மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டோம். திபு நினன் தாமஸ் முழுப் பாடலை ஒரே நாளில் முடித்துவிட்டேன். ஆனால், இந்த இடைப்பட்ட வரிகளுக்கு மட்டும் மூன்று நாட்கள் செலவழித்தோம். மூன்று நாட்களுக்கு திபு நினன் தாமஸ் என்னை நகரக்கூட விடாமல் எழுத வைத்தார். இந்த வரிக்கு 10 - 15 வெர்ஷன்களும் எழுதியும் அவரை திருப்திப்படுத்த முடியவில்லை. இத்தனை கடின உழைப்புதான் அந்தப் பாடலை எவர்கிரீன் ஆக்கியிருக்கிறது. நான் இளையராஜா சாருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறேன். பாடலின் மெட்டை அவர் லூப்பில் போடாமல், அவரே ஹார்மோனியத்தில் பாடலாசிரியர்களுக்காக மீண்டும் மீண்டும் வாசிப்பார். அப்படி திபு நினன் தாமஸும் இந்தப் பாடலுக்கு மீண்டும் மீண்டும் கைவலிக்க எனக்காக வாசித்துக் கொண்டே இருந்தார். ஏனோ, இந்தப் பாடல் அவருக்கும் அவ்வளவு நெருக்கம்! அனைத்து மனிதனுக்குள்ளும் ஒரு ஊமைக் காதல் இருக்கும். அதன் பின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கும். அதற்கு உயிர் கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இந்தப் பாடல். இயக்குநர் சரவணனும் 'இது கனமான காதல். அதற்கு நீ இதமான ஒரு பாடலை எழுத வேண்டும்.' எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். என்றவர், இந்தப் பாடலைப் பற்றி பேசும்போதுதான் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. அதையும் கேளுங்கள்... எனத் தொடர்ந்தார், நான் சினிமாவில் பல துரோகங்களை சந்தித்துவிட்டேன். அது உண்டாக்கிய வலி ஒரு கட்டத்தில் எனக்கு சலிப்பையே உண்டாக்கிவிட்டது. சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், திபு நினன் தாமஸ் இந்தப் பாடலை எழுதுவதற்கு என்னை அழைத்தார். இப்படியான உச்சக்கட்ட சலிப்பில் இருந்தபோது இந்தப் பாடல் மூலம் எனக்கு புதியதொரு லைஃப் அமைத்துக் கொடுத்தார் திபு. என்னுடைய கம்பேக் இதுவாக இருக்கட்டும் என நினைத்துதான் எழுதத் தொடங்கினேன். நான் நினைத்ததுவே நிகழ்ந்தது என நினைக்கிறேன்! என்றார் சிறு புன்னகையுடன். பாடலாசிரியர் ஜிகேபி நான் எத்தனை பெரிய துயரத்தில் இருந்தாலும், பாடல் எழுதும்போது அச்சமயத்தில் இயக்குநர் சொல்லும் சூழலுக்குள் என்னை புகுத்திவிடுவேன். அப்படி நான் அந்தச் சூழலுக்குள் செல்லும்போது, நேர்மையான பணியைச் செய்து கொண்டிருக்கிறோம் என்கிற முழு திருப்தி எனக்கு ஏற்பட்டுவிடும். ஆனால், நான் செய்த வேலையை நானே ரசிக்கமாட்டேன். நான் எழுதி முடித்த பிறகு அதை மறந்துவிடுவேன். ஆனால், நான் மிகவும் ரசித்து மீண்டும் மீண்டும் கேட்டப் பாடல் இந்த 'நீ கவிதைகளா'. சொல்லப்போனால், ஒரு முறை இப்பாடல் எனக்குள் புதைந்திருக்கும் பல மனவோட்டங்களை கண்ணீராய் வெளிக்கொண்டு வரச் செய்தது. நான் இந்தப் பாடலைக் கேட்டு தேம்பி தேம்பி அழுததைப் பார்த்த என் மனைவி 'ஏன்டா இப்படி அழுகுற' எனவும் ஆச்சரியப்பட்டுவிட்டார். எனக்கு மட்டுமல்ல பலருக்குள்ளும் இந்தப் பாடல் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்தப் பாடல் வெளிவந்த பிறகு திடீரென ஒரு நாள் இரவு எனக்கு ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. நான் அந்த அழைப்பை எடுத்ததும், எதிரிலிருப்பவர் அழத் தொடங்கிவிட்டார். அழுதுக் கொண்டே எனக்கு அளவற்ற அன்பை பொழிந்தவர்,' நான் என் காதலிக்கு இந்தப் பாடலை அனுப்பப் போகிறேன். என் காதல் வெற்றி பெற்றால் உங்களுக்குக் கோவில் கட்டுகிறேன்.' என்றார். பாடலாசிரியர் ஜிகேபி மற்றொரு நாள் அவர் காதலியுடன் சேர்ந்துவிட்டார் என நன்றியும் தெரிவித்தார். எனக்கு விருதுகள் என்றைக்கும் முக்கியம் கிடையாது. மக்கள் மனதில் நான் எப்படியான இடத்தைப் பிடிக்கிறேன் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வேன். வெற்றி ஏற்படுத்தி தரும் ஆராவாரம் எனக்கு வேண்டாம். இப்படியான அன்பு என்னை தொடர்ந்து எழுத பயணப்பட வைக்கும். நிக்கி கல்ராணி - ஆதி ஜோடிக்கான பாடலாகவும் இது அமைந்துவிட்டது. என்றவர், பலரைப் போல எனக்கும் பல காதல்கள் இருந்திருக்கின்றன. அவர்களில் ஒருவரை நினைத்துதான் இந்தப் பாடலை எழுதினேன். இந்தப் பாடலை அவரும் கேட்டுவிட்டு 'நீ எனக்காகதான் இந்தப் பாடலை எழுதியிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும்' என அன்புடன் வாழ்த்துகளைச் சொன்னார். என்றார். (தொடரும்..)
நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேபி | வரித்துணையே 01
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. வரித்துணையே 1 'நீ கவிதைகளா' காதலர் தினம் ஸ்பெஷலாக முதலில் 'நீ கவிதைகளா' பாடல் பற்றி உரையாட பாடலாசிரியர் ஜிகேபி-யின் வீட்டு கதவைத் தட்டினோம். வாஞ்சையுடன் வரவேற்று மலர்ந்த சிரிப்புடன் 'நீ கவிதைகளா' பாடல் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.... எப்போதும் ஒவ்வொரு பாடலுக்கும், அது இடம்பெறும் சூழலை இயக்குநர்களோ, இசையமைப்பாளர்களோ விளக்கி விடுவார்கள். ஆனால், 'நீ கவிதைகளா' பாடலைப் பொறுத்தமட்டில், பாடலை முன்பே மான்டேஜ்களாக படம்பிடித்துவிட்டார்கள். நான் எழுதத் தொடங்குவதற்கு முன் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும், இயக்குநர் சரவணனும் 'கதாநாயகியிடம் கதாநாயகன் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பே, அவனின் வாழ்விலிருந்து அவள் விலகிச் சென்றுவிடுகிறாள்' என்பதை மட்டுமே சொன்னார்கள். இதை அவர்கள் விளக்கி முடித்ததுமே எனக்குள் 'நீ கடந்ததுவா, நிகழ்ந்ததுவா, பதில் மொழியே' வரிகள் தோன்றிவிட்டன. திபு நினன் தாமஸ் எப்போதும், பாடலாசிரியர்களிடம் வரிகளைக் கேட்டு வாங்குவார். சொல்லப்போனால், அவரொரு மலையாளி. ஆனால், அவருக்கு தமிழ் மொழி மேல் அத்தனை ப்ரியம். நான் எழுதும் வரிகளின் அர்த்தம் அவருக்குப் புரியாது. அதை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் செய்வார். இந்தப் பாடலில் இடையில் இடம்பெறும் 'முகம் காட்டு நீ, முழு வெண்பனி, ஓடாதே நீ, என் எல்லையே, இதழோரமாய், சிறு புன்னகை, நீ காட்டடி, என் முல்லையே' என்கிற வரியை எழுதுவதற்கு மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டோம். திபு நினன் தாமஸ் முழுப் பாடலை ஒரே நாளில் முடித்துவிட்டேன். ஆனால், இந்த இடைப்பட்ட வரிகளுக்கு மட்டும் மூன்று நாட்கள் செலவழித்தோம். மூன்று நாட்களுக்கு திபு நினன் தாமஸ் என்னை நகரக்கூட விடாமல் எழுத வைத்தார். இந்த வரிக்கு 10 - 15 வெர்ஷன்களும் எழுதியும் அவரை திருப்திப்படுத்த முடியவில்லை. இத்தனை கடின உழைப்புதான் அந்தப் பாடலை எவர்கிரீன் ஆக்கியிருக்கிறது. நான் இளையராஜா சாருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறேன். பாடலின் மெட்டை அவர் லூப்பில் போடாமல், அவரே ஹார்மோனியத்தில் பாடலாசிரியர்களுக்காக மீண்டும் மீண்டும் வாசிப்பார். அப்படி திபு நினன் தாமஸும் இந்தப் பாடலுக்கு மீண்டும் மீண்டும் கைவலிக்க எனக்காக வாசித்துக் கொண்டே இருந்தார். ஏனோ, இந்தப் பாடல் அவருக்கும் அவ்வளவு நெருக்கம்! அனைத்து மனிதனுக்குள்ளும் ஒரு ஊமைக் காதல் இருக்கும். அதன் பின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கும். அதற்கு உயிர் கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இந்தப் பாடல். இயக்குநர் சரவணனும் 'இது கனமான காதல். அதற்கு நீ இதமான ஒரு பாடலை எழுத வேண்டும்.' எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். என்றவர், இந்தப் பாடலைப் பற்றி பேசும்போதுதான் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. அதையும் கேளுங்கள்... எனத் தொடர்ந்தார், நான் சினிமாவில் பல துரோகங்களை சந்தித்துவிட்டேன். அது உண்டாக்கிய வலி ஒரு கட்டத்தில் எனக்கு சலிப்பையே உண்டாக்கிவிட்டது. சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், திபு நினன் தாமஸ் இந்தப் பாடலை எழுதுவதற்கு என்னை அழைத்தார். இப்படியான உச்சக்கட்ட சலிப்பில் இருந்தபோது இந்தப் பாடல் மூலம் எனக்கு புதியதொரு லைஃப் அமைத்துக் கொடுத்தார் திபு. என்னுடைய கம்பேக் இதுவாக இருக்கட்டும் என நினைத்துதான் எழுதத் தொடங்கினேன். நான் நினைத்ததுவே நிகழ்ந்தது என நினைக்கிறேன்! என்றார் சிறு புன்னகையுடன். பாடலாசிரியர் ஜிகேபி நான் எத்தனை பெரிய துயரத்தில் இருந்தாலும், பாடல் எழுதும்போது அச்சமயத்தில் இயக்குநர் சொல்லும் சூழலுக்குள் என்னை புகுத்திவிடுவேன். அப்படி நான் அந்தச் சூழலுக்குள் செல்லும்போது, நேர்மையான பணியைச் செய்து கொண்டிருக்கிறோம் என்கிற முழு திருப்தி எனக்கு ஏற்பட்டுவிடும். ஆனால், நான் செய்த வேலையை நானே ரசிக்கமாட்டேன். நான் எழுதி முடித்த பிறகு அதை மறந்துவிடுவேன். ஆனால், நான் மிகவும் ரசித்து மீண்டும் மீண்டும் கேட்டப் பாடல் இந்த 'நீ கவிதைகளா'. சொல்லப்போனால், ஒரு முறை இப்பாடல் எனக்குள் புதைந்திருக்கும் பல மனவோட்டங்களை கண்ணீராய் வெளிக்கொண்டு வரச் செய்தது. நான் இந்தப் பாடலைக் கேட்டு தேம்பி தேம்பி அழுததைப் பார்த்த என் மனைவி 'ஏன்டா இப்படி அழுகுற' எனவும் ஆச்சரியப்பட்டுவிட்டார். எனக்கு மட்டுமல்ல பலருக்குள்ளும் இந்தப் பாடல் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்தப் பாடல் வெளிவந்த பிறகு திடீரென ஒரு நாள் இரவு எனக்கு ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. நான் அந்த அழைப்பை எடுத்ததும், எதிரிலிருப்பவர் அழத் தொடங்கிவிட்டார். அழுதுக் கொண்டே எனக்கு அளவற்ற அன்பை பொழிந்தவர்,' நான் என் காதலிக்கு இந்தப் பாடலை அனுப்பப் போகிறேன். என் காதல் வெற்றி பெற்றால் உங்களுக்குக் கோவில் கட்டுகிறேன்.' என்றார். பாடலாசிரியர் ஜிகேபி மற்றொரு நாள் அவர் காதலியுடன் சேர்ந்துவிட்டார் என நன்றியும் தெரிவித்தார். எனக்கு விருதுகள் என்றைக்கும் முக்கியம் கிடையாது. மக்கள் மனதில் நான் எப்படியான இடத்தைப் பிடிக்கிறேன் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வேன். வெற்றி ஏற்படுத்தி தரும் ஆராவாரம் எனக்கு வேண்டாம். இப்படியான அன்பு என்னை தொடர்ந்து எழுத பயணப்பட வைக்கும். நிக்கி கல்ராணி - ஆதி ஜோடிக்கான பாடலாகவும் இது அமைந்துவிட்டது. என்றவர், பலரைப் போல எனக்கும் பல காதல்கள் இருந்திருக்கின்றன. அவர்களில் ஒருவரை நினைத்துதான் இந்தப் பாடலை எழுதினேன். இந்தப் பாடலை அவரும் கேட்டுவிட்டு 'நீ எனக்காகதான் இந்தப் பாடலை எழுதியிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும்' என அன்புடன் வாழ்த்துகளைச் சொன்னார். என்றார். (தொடரும்..)
வீட்டை மீட்க போராடும் நிலா, நடேசன் என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன் அண்ணன்- தங்கை இருவரும் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார்கள். நடேசன் வீட்டிற்கு வந்த போலீஸ், இங்கு எந்த வேலையும் செய்யக்கூடாது வெளியில் கிளம்புங்கள் என்றார். சேரன் எவ்வளவோ கெஞ்சியுமே நடேசன் அண்ணன், தங்கை மனம் மாறவில்லை. இதனால் நடேசனுக்கும், அவருடைய தங்கை-அண்ணனுக்கும் இடையே கலவரம் வெடிக்கிறது. கோபத்தில் போலீஸ், நடேசன் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார்கள். வீட்டிற்கு சீல் வைப்பதாகவும் சொன்னார்கள். நடேசன் அந்த […] The post வீட்டை மீட்க போராடும் நிலா, நடேசன் என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
With Love: உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும்.!- விஜய் தேவரகொண்டாவுடன் அபிஷன் ஜீவிந்த்
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். கடந்த பிப்.6 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. With Love இந்நிலையில் 'வித் லவ்' படத்திற்காக அபிஷன் ஜீவிந்த்தை விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்து பாராட்டியிருக்கிறார். இததொடர்பாக அபிஷன் ஜீவிந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், விஜய் தேவரகொண்டா அண்ணாவிடம் இருந்து 'With Love'... என்னுடன் நேரம் ஒதுக்கி பேசியதற்காக, அண்ணாவுக்கு நன்றி. உண்மையிலேயே இன்று நான் உங்களுடன் சிறந்த உரையாடலைக் கொண்டிருந்தேன். உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. மிகவும் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் உணர்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
With Love: உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும்.!- விஜய் தேவரகொண்டாவுடன் அபிஷன் ஜீவிந்த்
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். கடந்த பிப்.6 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. With Love இந்நிலையில் 'வித் லவ்' படத்திற்காக அபிஷன் ஜீவிந்த்தை விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்து பாராட்டியிருக்கிறார். இததொடர்பாக அபிஷன் ஜீவிந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், விஜய் தேவரகொண்டா அண்ணாவிடம் இருந்து 'With Love'... என்னுடன் நேரம் ஒதுக்கி பேசியதற்காக, அண்ணாவுக்கு நன்றி. உண்மையிலேயே இன்று நான் உங்களுடன் சிறந்த உரையாடலைக் கொண்டிருந்தேன். உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. மிகவும் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் உணர்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
Register Marriage பண்றப்ப திடீர்னு அப்பா வந்துட்டாங்க...! - Salmanul Faris & Megha Salman Exclusive
Register Marriage பண்றப்ப திடீர்னு அப்பா வந்துட்டாங்க...! - Salmanul Faris & Megha Salman Exclusive
தேவயானியை லவ் பண்றீங்களானு கேட்டப்போ இல்லைனு சொன்னீங்க! | Vikraman & Rajakumaran | Guru Sishyan
18 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த சக்ஸஸ் –சூப்பர் ஸ்டார் மகள் எமோஷனல்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித் லவ். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மதன் என்பவர் இயக்கி இருக்கிறார். அபிஷன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தது.அதேபோல் இவர் […] The post 18 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த சக்ஸஸ் – சூப்பர் ஸ்டார் மகள் எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .
காதலர் தினத்தை ஒட்டி வந்த ‘பூக்கி’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராகவும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தற்போது இவருடைய இசையில் உருவாகி இருக்கும் படம் பூக்கி. இந்த படத்தில் அஜய், தனுஷா, பாண்டியராஜன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ஹீரோ அஜய், ஹீரோயின் […] The post காதலர் தினத்தை ஒட்டி வந்த ‘பூக்கி’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
ரஹ்மான் டு சாய் பல்லவி: திரண்ட திரைநட்சத்திரங்கள்; தமிழ்நாடு அரசு விருது விழா - புகைப்படத் தொகுப்பு!
பிப்ரவரி 14ம் தேதி முட்டாள்கள் தினமாக போகிறது- திருமணம் சர்ச்சைக்கு மிருணாள் கொடுத்த பதிலடி
சமீப காலமாகவே முன்னணி நடிகர், நடிகைகள் இடையே காதல், கல்யாணம் போன்ற கிசுகிசுக்கள் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதில் சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், சில விஷயங்கள் வதந்திகள். அதை விளம்பரத்திற்காகவே செய்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தனுஷ்-மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன் மிருணாள் படத்தினுடைய விழாவிற்காக சிறப்பு விருந்தினராக தனுஷ் வந்திருந்தார். உடனே இருவருக்கும் ஏதாவது கிசுகிசு இருக்கிறதா? என்று கூற […] The post பிப்ரவரி 14ம் தேதி முட்டாள்கள் தினமாக போகிறது- திருமணம் சர்ச்சைக்கு மிருணாள் கொடுத்த பதிலடி appeared first on Tamil Behind Talkies .
சர்வேதேச விருதை வென்ற ராஜாங்கம், ஈஸ்வரியிடம் வசமாக சிக்கிய தாமரை –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஷ் பிச்சையை சந்திப்பதற்காக சாவித்திரி- தாமரை இருவரும் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு காமேஷ் பிச்சை, தாமரையை காதலிப்பதாக ஒத்துக் கொண்டார். இதனால் சாவித்திரி ரொம்பவே சந்தோசப்பட்டார். அந்த சமயம் பார்த்து சாவித்திரிக்கு போன் செய்த ஈஸ்வரி, வீட்டிற்கு வர சொன்னார். வீட்டில் ராஜாங்கம் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள். சீக்கிரமாகவே கல்யாணத்தை வைத்து விடலாம் என்று பேசி இருந்தார்கள். சாவித்திரி- தாமரை இருவரும் கல்யாணத்தை தடுக்க நினைத்தார்கள். ஆனால், […] The post சர்வேதேச விருதை வென்ற ராஜாங்கம், ஈஸ்வரியிடம் வசமாக சிக்கிய தாமரை – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?
கோவில்பட்டி, மைப்பாறையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் முத்து சிற்பியும் (சசிகுமார்), அவரது மனைவி சுசிலாவும் (சைத்ரா) இறந்து போய்விட்டதாக அரசால் போலியான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்று, ஊடகத்தைத் தன் பக்கம் கவனிக்க வைக்கிறார் முத்துசிற்பி. அதனால், காவல் நிலையத்தில் வைத்து, அவரை அடித்து உதைக்கிறது போலீஸ். My Lord Review | மை லார்ட் விமர்சனம் இச்சூழலில், சென்னையில் மிகப்பெரிய அதிகாரமும், பணமும் படைத்த சுஜாதாவின் (ஆஷா சரத்) சிகிச்சைக்குச் சிறுநீரகம் தேவைப்பட, அதற்கு மருத்துவ ரீதியாக முத்து சிற்பியின் சிறுநீரகம் பொருந்துகிறது. அதனால், அவரிடமிருந்து சிறுநீரகத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக வாங்க கிருஷ்ணா (ராம்குமார் பிரசன்னா) என்பவர் முயல்கிறார். முத்து சிற்பி தம்பதிக்கு ஏன் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, முத்து சிற்பியின் சிறுநீரகம் வாங்கப்பட்டதா, உண்மையில் சுஜாதா யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது ராஜுமுருகன் இயக்கியிருக்கும் 'மை லார்ட்' திரைப்படம். My Lord: ஜாலியா பாட்டுக்குள்ள கெட்ட வார்த்தையை வச்சுட்டோம்! | Sasikumar, Rajumurugan, Yugabharathi பணமும் அதிகாரமுமற்று, அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் சாமானியனாகத் தோற்றத்திலும், உடல்மொழியிலும் கச்சிதம் கூட்டுகிறார் சசிகுமார். ஆனால், அப்பாவித்தனம், காதல், இயலாமை, கோபம் என மாறிக்கொண்டே இருக்கும் எமோஷன் முகத்தில் வழக்கமான சசிகுமாரே பெரும்பாலும் வந்து போவது மைனஸ்! பயமும், காதலும் ஒருசேரக் கலந்திருக்கும் முகத்தோடு, படத்தின் பதைபதைப்பைத் தாங்கி நிற்கும் சைத்ரா, உடல்மொழியாலேயே எமோஷனைக் கடத்தி படத்தின் சொத்தாக மாறியிருக்கிறார். பார்வையாலேயே கதாபாத்திரத்திற்கான கம்பீரத்தையும், மிடுக்கையும் கடத்தியிருக்கிறார் ஆஷா சரத். கொங்கு வட்டார வழக்கில் பேசி, ஆங்காங்கே வரும் காமெடி மீட்டரைக் குறைய விடாமல் பார்த்துக்கொள்ளும் ராம்குமார் பிரசன்னாவின் பங்களிப்பு பெரிய ப்ளஸ். My Lord Review | மை லார்ட் விமர்சனம் குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், வசுமித்ரா, அருள் எழிலன், கோபி நயினார் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் கரிசல் கிராமத்தின் வெக்கையும், அதன் இயல்பான எளிமையும் படத்தின் எதார்த்தத்திற்கு உரமூட்டுகின்றன. எமோஷன் காட்சிகளில் சத்யராஜ் நடராஜனின் பரபரப்பில்லாத படத்தொகுப்பு கைகொடுத்தாலும், மையக்கதையிலிருந்து கருத்துச்சாலைக்கு இண்டிகேட்டர் போடாமல் தாவியோடும் காட்சிகளுக்குக் கண்டிப்பு காட்டத் தவறுகிறார். My Lord: 'தனிமையில இருக்காதீங்க, நிறைய பேர்கிட்ட பேசுங்கன்னு.!'- மாரிசெல்வராஜ் அட்வைஸ் குறித்து பாலா ஷான் ரோல்டன் இசையில், எல்லாப் பாடல்களும் திரையோட்டத்தோடு வந்து, கரிசல் நிலத்தின் பருத்தியாகச் சுகம் கூட்டுகின்றன. காமெடி, எமோஷன், பரபரப்பு என எல்லா நிலத்திலும் தேவையான மகசூலை எடுத்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. பிரதான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, நேராகக் கதைக்குள் நுழைக்கிறது திரைக்கதை. காதலும், எளிமையும் மிகுந்த முத்து சிற்பி - சுசிலாவின் கதை விரிகிறது. சின்ன சின்ன கலாட்டா, அழகான காதல், வல்லாளாரின் போதனை என நகர்ந்து, படம் பேசும் சமூக அவலத்தைத் தொடுகிறது. ஆனாலும், எதார்த்தத்தை மீறி, துணைக் கதாபாத்திரங்கள் கருத்துச் சொல்லிக்கொண்டே இருப்பது துருத்தல். My Lord Review | மை லார்ட் விமர்சனம் கடும் வறுமையின் காரணமாக ஏழைகளிடம் சட்டவிரோதமாக சிறுநீரகம் வாங்கும் கும்பல், அவர்களுக்கே தெரியாமல் திருடும் கும்பல், அந்த வலைப்பின்னல்கள் செயல்படும் முறை, அரசின் கட்டமைப்பும் மாஃபியாக்களும் கைகோர்க்கும் இடம், ரேஷன் கார்டு வாங்கப் போராடும் அவலம் என இடைவேளை வரை அழுத்தமாகக் கதையின் மையத்தைப் பேசுகிறது திரைக்கதை. அவற்றைச் சுட்டிக்காட்டும் வசனங்களும் நெருப்பாகத் தெறிக்கின்றன. சில செயற்கைத்தனங்கள் எட்டிப் பார்த்தாலும், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பும் இடைவேளைக் காட்சி நச்! சங்காரம்: அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும்; படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு! - நெகிழும் சசிகுமார் மனைவியை மகிழ்விக்கக் கதாநாயகன் செய்யும் சேட்டைகள், அதனால் கிருஷ்ணன் படும் பாடு, ஆஸ்பத்திரியில் தம்பதிகள் செய்யும் கலாட்டா எனக் கதையிலிருந்து விலகியோடும் காமெடி காட்சிகள் இரண்டாம் பாதியின் பாதி வரை ஓடுகின்றன. அவற்றிலும் பாதியே க்ளிக் ஆகியிருக்கின்றன. மீண்டும் சிறுநீரகத் திருட்டிற்கு எதிரான சட்டப்போராட்டத்திற்குள் நுழையும் திரைக்கதை, தேவையான நிதானத்தையும் தெளிவையும் கொடுக்காமல் கடகடவென ஓடுகிறது. அதனால், அரசு vs சாமானியன் என்ற வீரியமான மையக்கதை தேவையான அழுத்தத்தைத் தராமல் போகிறது. மேலும், இவ்வளவு ஊடகப் புகழ்பெற்ற முத்து சிற்பியை ஏன் இத்தனை அபாயகரமான முயற்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள், தொடக்கத்தில் அப்பாவித்தனமாகவும் பிற்பாடு விவரம் தெரிந்த தைரியசாலியாகவும் எப்படி முத்து சிற்பி கதாபாத்திரம் மாறுகிறது போன்ற பிரதான லாஜிக் ஓட்டைகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. இவற்றைத் தாண்டி, உணர்வுபூர்வமான இறுதிக்காட்சி நேர்த்தியாகக் கைகூடி, மிதமான சிலிர்ப்பைத் தருகிறது. My Lord Review | மை லார்ட் விமர்சனம் சமகால சமூக அவலத்தைப் பேசும் மையக்கதை கவனிக்க வைத்தாலும், அதைத் தெளிவான திரைக்கதையில் திடமாகச் சொல்லியிருந்தால், இந்தச் சாமானியனின் தீர்ப்பு இன்னும் உரக்கக் கேட்டிருக்கும். 'பரியேறும் பெருமாள்' பார்த்துட்டு நானும் H.வினோத்தும் வெட்கப்பட்டோம், ஏன்னா.!- ராஜு முருகன்
My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?
கோவில்பட்டி, மைப்பாறையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் முத்து சிற்பியும் (சசிகுமார்), அவரது மனைவி சுசிலாவும் (சைத்ரா) இறந்து போய்விட்டதாக அரசால் போலியான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்று, ஊடகத்தைத் தன் பக்கம் கவனிக்க வைக்கிறார் முத்துசிற்பி. அதனால், காவல் நிலையத்தில் வைத்து, அவரை அடித்து உதைக்கிறது போலீஸ். My Lord Review | மை லார்ட் விமர்சனம் இச்சூழலில், சென்னையில் மிகப்பெரிய அதிகாரமும், பணமும் படைத்த சுஜாதாவின் (ஆஷா சரத்) சிகிச்சைக்குச் சிறுநீரகம் தேவைப்பட, அதற்கு மருத்துவ ரீதியாக முத்து சிற்பியின் சிறுநீரகம் பொருந்துகிறது. அதனால், அவரிடமிருந்து சிறுநீரகத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக வாங்க கிருஷ்ணா (ராம்குமார் பிரசன்னா) என்பவர் முயல்கிறார். முத்து சிற்பி தம்பதிக்கு ஏன் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, முத்து சிற்பியின் சிறுநீரகம் வாங்கப்பட்டதா, உண்மையில் சுஜாதா யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது ராஜுமுருகன் இயக்கியிருக்கும் 'மை லார்ட்' திரைப்படம். My Lord: ஜாலியா பாட்டுக்குள்ள கெட்ட வார்த்தையை வச்சுட்டோம்! | Sasikumar, Rajumurugan, Yugabharathi பணமும் அதிகாரமுமற்று, அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் சாமானியனாகத் தோற்றத்திலும், உடல்மொழியிலும் கச்சிதம் கூட்டுகிறார் சசிகுமார். ஆனால், அப்பாவித்தனம், காதல், இயலாமை, கோபம் என மாறிக்கொண்டே இருக்கும் எமோஷன் முகத்தில் வழக்கமான சசிகுமாரே பெரும்பாலும் வந்து போவது மைனஸ்! பயமும், காதலும் ஒருசேரக் கலந்திருக்கும் முகத்தோடு, படத்தின் பதைபதைப்பைத் தாங்கி நிற்கும் சைத்ரா, உடல்மொழியாலேயே எமோஷனைக் கடத்தி படத்தின் சொத்தாக மாறியிருக்கிறார். பார்வையாலேயே கதாபாத்திரத்திற்கான கம்பீரத்தையும், மிடுக்கையும் கடத்தியிருக்கிறார் ஆஷா சரத். கொங்கு வட்டார வழக்கில் பேசி, ஆங்காங்கே வரும் காமெடி மீட்டரைக் குறைய விடாமல் பார்த்துக்கொள்ளும் ராம்குமார் பிரசன்னாவின் பங்களிப்பு பெரிய ப்ளஸ். My Lord Review | மை லார்ட் விமர்சனம் குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், வசுமித்ரா, அருள் எழிலன், கோபி நயினார் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் கரிசல் கிராமத்தின் வெக்கையும், அதன் இயல்பான எளிமையும் படத்தின் எதார்த்தத்திற்கு உரமூட்டுகின்றன. எமோஷன் காட்சிகளில் சத்யராஜ் நடராஜனின் பரபரப்பில்லாத படத்தொகுப்பு கைகொடுத்தாலும், மையக்கதையிலிருந்து கருத்துச்சாலைக்கு இண்டிகேட்டர் போடாமல் தாவியோடும் காட்சிகளுக்குக் கண்டிப்பு காட்டத் தவறுகிறார். My Lord: 'தனிமையில இருக்காதீங்க, நிறைய பேர்கிட்ட பேசுங்கன்னு.!'- மாரிசெல்வராஜ் அட்வைஸ் குறித்து பாலா ஷான் ரோல்டன் இசையில், எல்லாப் பாடல்களும் திரையோட்டத்தோடு வந்து, கரிசல் நிலத்தின் பருத்தியாகச் சுகம் கூட்டுகின்றன. காமெடி, எமோஷன், பரபரப்பு என எல்லா நிலத்திலும் தேவையான மகசூலை எடுத்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. பிரதான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, நேராகக் கதைக்குள் நுழைக்கிறது திரைக்கதை. காதலும், எளிமையும் மிகுந்த முத்து சிற்பி - சுசிலாவின் கதை விரிகிறது. சின்ன சின்ன கலாட்டா, அழகான காதல், வல்லாளாரின் போதனை என நகர்ந்து, படம் பேசும் சமூக அவலத்தைத் தொடுகிறது. ஆனாலும், எதார்த்தத்தை மீறி, துணைக் கதாபாத்திரங்கள் கருத்துச் சொல்லிக்கொண்டே இருப்பது துருத்தல். My Lord Review | மை லார்ட் விமர்சனம் கடும் வறுமையின் காரணமாக ஏழைகளிடம் சட்டவிரோதமாக சிறுநீரகம் வாங்கும் கும்பல், அவர்களுக்கே தெரியாமல் திருடும் கும்பல், அந்த வலைப்பின்னல்கள் செயல்படும் முறை, அரசின் கட்டமைப்பும் மாஃபியாக்களும் கைகோர்க்கும் இடம், ரேஷன் கார்டு வாங்கப் போராடும் அவலம் என இடைவேளை வரை அழுத்தமாகக் கதையின் மையத்தைப் பேசுகிறது திரைக்கதை. அவற்றைச் சுட்டிக்காட்டும் வசனங்களும் நெருப்பாகத் தெறிக்கின்றன. சில செயற்கைத்தனங்கள் எட்டிப் பார்த்தாலும், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பும் இடைவேளைக் காட்சி நச்! சங்காரம்: அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும்; படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு! - நெகிழும் சசிகுமார் மனைவியை மகிழ்விக்கக் கதாநாயகன் செய்யும் சேட்டைகள், அதனால் கிருஷ்ணன் படும் பாடு, ஆஸ்பத்திரியில் தம்பதிகள் செய்யும் கலாட்டா எனக் கதையிலிருந்து விலகியோடும் காமெடி காட்சிகள் இரண்டாம் பாதியின் பாதி வரை ஓடுகின்றன. அவற்றிலும் பாதியே க்ளிக் ஆகியிருக்கின்றன. மீண்டும் சிறுநீரகத் திருட்டிற்கு எதிரான சட்டப்போராட்டத்திற்குள் நுழையும் திரைக்கதை, தேவையான நிதானத்தையும் தெளிவையும் கொடுக்காமல் கடகடவென ஓடுகிறது. அதனால், அரசு vs சாமானியன் என்ற வீரியமான மையக்கதை தேவையான அழுத்தத்தைத் தராமல் போகிறது. மேலும், இவ்வளவு ஊடகப் புகழ்பெற்ற முத்து சிற்பியை ஏன் இத்தனை அபாயகரமான முயற்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள், தொடக்கத்தில் அப்பாவித்தனமாகவும் பிற்பாடு விவரம் தெரிந்த தைரியசாலியாகவும் எப்படி முத்து சிற்பி கதாபாத்திரம் மாறுகிறது போன்ற பிரதான லாஜிக் ஓட்டைகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. இவற்றைத் தாண்டி, உணர்வுபூர்வமான இறுதிக்காட்சி நேர்த்தியாகக் கைகூடி, மிதமான சிலிர்ப்பைத் தருகிறது. My Lord Review | மை லார்ட் விமர்சனம் சமகால சமூக அவலத்தைப் பேசும் மையக்கதை கவனிக்க வைத்தாலும், அதைத் தெளிவான திரைக்கதையில் திடமாகச் சொல்லியிருந்தால், இந்தச் சாமானியனின் தீர்ப்பு இன்னும் உரக்கக் கேட்டிருக்கும். 'பரியேறும் பெருமாள்' பார்த்துட்டு நானும் H.வினோத்தும் வெட்கப்பட்டோம், ஏன்னா.!- ராஜு முருகன்
மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ் டுடே, டியூட், டிராகன் போன்ற ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்திலும் நடித்துள்ளார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் பிரதீப் ரங்கநாதன் கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் ஒன்றில் கலந்து...
Balu Mahendra: அழியாத கோலங்கள் `டு'தலைமுறைகள் - பாலுமகேந்திரா திரைப்பயணம் ஒரு பார்வை!
பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும், இயக்குநராக 23 படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அவரின் நினைவு நாளான இன்று (பிப்.13) அவர் இயக்கிய சில படங்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம். * 1977-ல் 'கோகிலா' என்ற கன்னடப் படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இது அவருடைய முதல் படம். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மோகன், ஷோபா ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிறந்த ஒளிப்பதிவிற்கான முதல் தேசிய விருதினை பாலுமகேந்திராவுக்கு இந்தப் படம் பெற்று தந்திருக்கிறது. பாலுமகேந்திரா * 1979-ல் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்தப் படம் மூன்று இளைஞர்களின் வாழ்க்கை, பருவ வயதில் எப்படி இருக்கும் என்பதை அப்படியே சொன்ன படம். * 1980-ல் வெளியான படம் 'மூடுபனி'. மீண்டும் பிரதாப் போத்தன், ஷோபாவை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். பாலுமகேந்திராவுக்கு இளையராஜா இசையமைத்த முதல் படம் இது. * 1982-ல் மலையாளத்தில் வெளியான படம் 'ஓளங்கள்'. இது அவர் இயக்கிய முதல் மலையாளப் படம். பூர்ணிமா ஜெயராம், அம்பிகா, அமோல் பாலேகர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் ஜானகி பாடிய ‘தும்பி வா தும்பக்குளத்தில்’ பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் க்ளாஸ் ஹிட் அடித்தது. * 1982-ல் வெளியான படம் நிரீக்ஷனா. பானு சந்தர், அர்ச்சனா இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தெலுங்கில் சோதனை முயற்சியில் இறங்கி அங்கேயும் ஹிட் அடித்திருக்கிறார். * 1982-ல் 'மூன்றாம் பிறை' படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். நடிப்பிற்காக கமலுக்கும், ஒளிப்பதவிற்காக பாலுமகேந்திராவிற்கும் என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. கண்ணதாசனின் கடைசி பாடலான ‘கண்ணே கலைமானே!’ இன்றைக்கும் எவர் கீரின். மூன்றாம் பிறை * 1983-ல் வெளியான மலையாளப் படம் ‘ஓமக்குயில்’. ஒய்.ஜி மகேந்திரன், அருணா, பூர்ணிமா ஜெயராம் நடித்திருக்கின்றனர். கன்னடத்தில் வெளியான ‘கோகிலா’ படத்தின் ரீமேக் இது. * 1983-ல் இந்தியில் வெளியான படம் ‘சாத்மா’ கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் மூன்றாம் பிறை படத்தின் இந்தி ரீமேக். இளையராஜா இசையமைத்த முதல் இந்திப் படமும் இதுதான். * 1985-ல் வெளியான படம் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ ரஜினிகாந்த், மாதவி இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பாலுமகேந்திரா இயக்குநராக ரஜினியுடன் சேர்ந்த முதல் படம் இதுதான். * 1988-ல் வெளியான படம் ‘வீடு’. அர்ச்சனா பானுசந்தர் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படம். சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. பாலுமகேந்திரா , சசிகுமார் * 1989-ல் வெளியான படம் ‘சந்தியா ராகம்’. இந்தப் படத்தில் சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா நடித்திருக்கின்றனர். அவருக்கு இந்தப் படமும் தேசிய விருதை அள்ளிக்கொடுத்தது. ‘ எந்த சமரசமும் இல்லாமல் நான் நினைத்ததை இயக்கியிருக்கிறேன்’ என்று பாலுமகேந்திரா சொன்ன படம் இது. * 2013-ல் வெளியான படம் ‘தலைமுறைகள்’. பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பாலு மகேந்திராவின் கடைசிப் படம் இது. தமிழையும், இந்தத் தாத்தாவையும் மறக்கவே முடியாது!
சூர்யா சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட அருணாச்சலம்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் பூஜை ரூமில் வந்து பேப்பரை பிரித்துப் பார்க்க அதில் நந்தினி வரமாட்டாள் என எழுதி...
அண்ணாமலையை ஏமாற்றிய மனோஜ், ரோகினியை தூண்டி விடும் சிந்தாமணி –பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், நான் நிறைய கடன் வாங்கி இருக்கிறேன். அந்த ஆர்டர் வேண்டும் என்றார். இதனால் கொந்தளித்த விஜயா, மனோஜை அடித்தார். வீட்டில் உள்ள எல்லோருமே மனோஜ் கடன் வாங்கியதற்காக திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் மனோஜ்-விஜயா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜயா, உனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்று சொல். நான் சிந்தாமணியிடம் சொல்லி ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். இதை எல்லாம் கேட்ட மீனா, முத்துவிடம் சொன்னார். […] The post அண்ணாமலையை ஏமாற்றிய மனோஜ், ரோகினியை தூண்டி விடும் சிந்தாமணி – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
தனுஷ் 56 படத்தின் கதைகளும் குறித்து தகவலை பகிர்ந்த மாரி செல்வராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார் இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் சமீபத்தில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்...
கோர்ட்டில் சரவணன் சொன்ன வார்த்தை, தங்கமயில் நிலை என்ன? பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், எதற்காக கோயிலுக்கு போனாய் என்று கேட்டார். சரவணன், அம்மாவின் மீது இருக்கும் கோபம் குறைய வேண்டும் என்று போனேன் என்றார். பின் பாண்டியன், சரவணனை திட்டி விட்டார். இன்னொரு பக்கம் ரூமில் ராஜி, கதிருக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது ரூமிற்கு வந்த கதிர், ராஜிக்காக மல்லிகைப்பூ வாங்கி வந்து தலையில் வைத்து விட்டார். இதெல்லாம் பார்த்து ராஜிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அஞ்சலி, சரவணனுக்கு மெசேஜ் […] The post கோர்ட்டில் சரவணன் சொன்ன வார்த்தை, தங்கமயில் நிலை என்ன? பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
எங்க அப்பாவை பார்த்து இதுதான் சக்சஸா என்று கேட்டேன்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு.!!
வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரது தயாரிப்பில் தற்போது வித் லவ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனரான மதன் இயக்கியுள்ள இந்த படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அபிஷன் ஜீவன்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் மலையாள...
உண்மை தெரியாமல் வேதனையில் தவிக்கும் விஜய், சந்தோஷத்தில் காவிரி –விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரி பற்றி கேட்டுக்கொண்டு இருந்தார். உடனே கல்யாணி அழுது டிராமா செய்தார். சித்தப்பா, காவிரி இறந்து விட்டாள் என்று சொன்னார். இதைக் கேட்ட விஜய் உடைந்து போய் கதறி அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜய்க்கு ஆறுதல் சொன்னார்கள். பின் சித்தி, குழந்தையை கொண்டு வந்து விஜய் இடம் கொடுத்தார். குழந்தையை பார்த்து விஜய் எமோஷனலாக அழுதார். 5 வருடங்களுக்கு பிறகு காண்பிக்கிறார்கள். விஜய் தன்னுடைய மகளுக்கு காவிரி […] The post உண்மை தெரியாமல் வேதனையில் தவிக்கும் விஜய், சந்தோஷத்தில் காவிரி – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
Pookie: ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்- 'பூக்கி'படம் குறித்து விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி' (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். 'பூக்கி' (Pookie) படம் இன்று ( பிப்.13) வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய் ஆண்டனி, படத்தின் பெயர் 'பூக்கி' என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 'பூக்கி' அந்தக் காலத்தில் சாமி, நாதா, அத்தான் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இன்று அது 'பூக்கி'-யாக மாறியிருக்கிறது. பெரியவர்களும் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். ஜென்சி மாதிரியான படமாக இருந்தாலும் கலகலப்பாகவும், எமோஷனலாகவும் எல்லோருக்கும் புரிகின்ற, பிடிக்கின்ற மாதிரியான படமாக இருக்கும். எடிட் செய்த பிறகு இந்தப் படத்தை நிறைய முறை பார்த்தேன். ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதிருக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த நல்ல படமாக நிச்சயம் இந்தப் படம் இருக்கும் என்று பேசியிருக்கிறார்.
Pookie: ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்- 'பூக்கி'படம் குறித்து விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி' (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். 'பூக்கி' (Pookie) படம் இன்று ( பிப்.13) வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய் ஆண்டனி, படத்தின் பெயர் 'பூக்கி' என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 'பூக்கி' அந்தக் காலத்தில் சாமி, நாதா, அத்தான் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இன்று அது 'பூக்கி'-யாக மாறியிருக்கிறது. பெரியவர்களும் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். ஜென்சி மாதிரியான படமாக இருந்தாலும் கலகலப்பாகவும், எமோஷனலாகவும் எல்லோருக்கும் புரிகின்ற, பிடிக்கின்ற மாதிரியான படமாக இருக்கும். எடிட் செய்த பிறகு இந்தப் படத்தை நிறைய முறை பார்த்தேன். ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதிருக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த நல்ல படமாக நிச்சயம் இந்தப் படம் இருக்கும் என்று பேசியிருக்கிறார்.
கிருஷுக்கு வந்த காய்ச்சல்.. ரோகினிக்கு உதவிய சிந்தாமணி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனா அண்ணாமலை உட்கார்ந்து கொண்டிருக்க விஜயாவும் மனோஜம் வந்து உட்காருகின்றனர் அப்போது மனோஜ் அண்ணாமலை இடம் புதுசா ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ண போறேன்பா அதுக்கு நீங்க சைன் பண்ணனும் என்று சொல்ல முத்து எப்பவும் அம்மா கிட்ட தானே கையெழுத்து...
சதியால் அய்யனார் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல், உடைந்து போய் தவிக்கும் நடேசன் குடும்பம் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன்,ராகவ் ஏதாவது தொல்லை செய்யப் போகிறான். அங்கே வேலை செய்யனுமா என்றார். நிலா, எனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் முக்கியம். பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதுவும் ராகவிடம் சண்டை போட வேண்டாம் என்றார். அதற்குப்பின் வீட்டை சரி செய்யும் வேலையை சேரன், சோழன், பாண்டியன் மூவரும் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது போன் செய்த வானதியிடம் பாண்டியன் பாம்பு வந்த விஷயத்தைப் பற்றி சொன்னார். பொறாமையில் வானதி, நிலாவை திட்டினார். […] The post சதியால் அய்யனார் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல், உடைந்து போய் தவிக்கும் நடேசன் குடும்பம் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

26 C