SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

நான் வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு வந்தவன் –எமோஷனலாக நடிகர் சூரி சொன்ன விஷயம்

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. இவர் சீரியலில் தான் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தன்னுடைய விடாமுயற்சினால் தற்போது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான […] The post நான் வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு வந்தவன் – எமோஷனலாக நடிகர் சூரி சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Dec 2025 9:34 pm

திருமண தேதியை அறிவித்த பிக் பாஸ் ஜூலி –எப்போ? எங்கு தெரியுமா?

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இவர் முதல் சீசனில் சினிமா பற்றி எந்த ஒரு தெளிவும் இல்லாமல் கலந்து கொண்டவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜூலி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும் பல விமர்சனங்களை சந்தித்து இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது […] The post திருமண தேதியை அறிவித்த பிக் பாஸ் ஜூலி – எப்போ? எங்கு தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Dec 2025 8:55 pm

தணிக்கைக் குழுவில் சிக்கல் – ஜனநாயகன் படக்குழு பதற்றம்

தணிக்கைக் குழுவில் சிக்கல் – ஜனநாயகன் படக்குழு பதற்றம் விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கின. இதனைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் கூறியிருக்கிறார்கள். இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது படக்குழு. முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிப்பதை குறைக்கச் சொல்லியிருப்பதாக...

தஸ்தர் 30 Dec 2025 8:02 pm

‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா –ரஜினி, கமல் பங்கேற்கிறார்களா? –தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா – ரஜினி, கமல் பங்கேற்கிறார்களா? – தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் பராசக்தி மற்றும் ஜனநாயகன் இரு படங்களும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன. ஜனநாயகன் ஆடியோ லான்ச் கோலாகலமாக நடைபெற்றது தெரிந்ததே. விழாவில் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதற்கு போட்டியாக பராசக்தி ஆடியோ லான்ச் நடைபெறும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது. இச்சூழலில் ‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்...

தஸ்தர் 30 Dec 2025 7:51 pm

பணப் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! - சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன?

'என்னிடம் பத்து லட்சம் ஏமாற்றியதுடன் எனக்குச் சொந்தமான விலையுயர்ந்த காரையும் பறித்துக் கொண்டு மோசடி செய்து விட்டார்' பல ஹிட் சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராணி மற்றும் அவரது கணவர் மீது இப்படியொரு புகாரைக் கொடுத்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவர். இவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது காவல் துறை. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தின் சுருக்கம் இதுதான். தினேஷ் என்பவர் கரூரில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்திருக்கிறார். ஹோட்டலில் நஷ்டம் உண்டாக தனக்குத் தெரிந்த அரசியல்வாதியான ஜான் பாண்டியனைத் தொடர்பு கொண்டு, ஹோட்டலை யாருக்காவது குத்தகைக்கு விடுவது குறித்துப் பேசியிருக்கிறார். பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன் ஜான் பாண்டியன் சென்னையில் வசிக்கும் பாலாஜியை தினேஷுக்கு அறிமுகப் படுத்தி விட்டிருக்கிறார். பாலாஜி நடிகை ராணியின் கணவர். பாலாஜி கரூரில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேச அந்த நண்பர் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார். அப்போது அந்த நண்பர் பத்து லட்சம் ரூபாயை பாலாஜியிடமே தந்ததாகவும், ஆனால் பாலாஜி பணத்தை தினேஷிடம் தராமல் தான் எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் புகாரில் கூறியிருக்கிறார் தினேஷ். பணத்தை எடுத்துச் சென்ற போது தன்னுடைய விலையுர்ந்த காரையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் தினேஷ். பிறகு பாலாஜியைச் சந்தித்து தன்னுடைய பணத்தைக் கேட்டபோது, தினேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம் பாலாஜி. 'என்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது, உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ' என்றும் விரட்டி விட்டாராம். தினேஷ் ஜான் பாண்டியனிடம் முறையிட, அவருமே 'சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்'எனச் சொல்லி விட்டாராம். ராணி இந்த விவகாரத்தில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால் ராணி, அவரது கணவர் பாலாஜி ஆகியோர் தலைமறைவு ஆகி விட்டதாகக் கூறப்படுகிறது. ராணியிடம் இது தொடர்பாகப் பேச தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் பேசுகிறபட்சத்தில் அவரது விளக்கத்தை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

விகடன் 30 Dec 2025 7:49 pm

பணப் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! - சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன?

'என்னிடம் பத்து லட்சம் ஏமாற்றியதுடன் எனக்குச் சொந்தமான விலையுயர்ந்த காரையும் பறித்துக் கொண்டு மோசடி செய்து விட்டார்' பல ஹிட் சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராணி மற்றும் அவரது கணவர் மீது இப்படியொரு புகாரைக் கொடுத்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவர். இவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது காவல் துறை. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தின் சுருக்கம் இதுதான். தினேஷ் என்பவர் கரூரில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்திருக்கிறார். ஹோட்டலில் நஷ்டம் உண்டாக தனக்குத் தெரிந்த அரசியல்வாதியான ஜான் பாண்டியனைத் தொடர்பு கொண்டு, ஹோட்டலை யாருக்காவது குத்தகைக்கு விடுவது குறித்துப் பேசியிருக்கிறார். பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன் ஜான் பாண்டியன் சென்னையில் வசிக்கும் பாலாஜியை தினேஷுக்கு அறிமுகப் படுத்தி விட்டிருக்கிறார். பாலாஜி நடிகை ராணியின் கணவர். பாலாஜி கரூரில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேச அந்த நண்பர் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார். அப்போது அந்த நண்பர் பத்து லட்சம் ரூபாயை பாலாஜியிடமே தந்ததாகவும், ஆனால் பாலாஜி பணத்தை தினேஷிடம் தராமல் தான் எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் புகாரில் கூறியிருக்கிறார் தினேஷ். பணத்தை எடுத்துச் சென்ற போது தன்னுடைய விலையுர்ந்த காரையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் தினேஷ். பிறகு பாலாஜியைச் சந்தித்து தன்னுடைய பணத்தைக் கேட்டபோது, தினேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம் பாலாஜி. 'என்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது, உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ' என்றும் விரட்டி விட்டாராம். தினேஷ் ஜான் பாண்டியனிடம் முறையிட, அவருமே 'சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்'எனச் சொல்லி விட்டாராம். ராணி இந்த விவகாரத்தில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால் ராணி, அவரது கணவர் பாலாஜி ஆகியோர் தலைமறைவு ஆகி விட்டதாகக் கூறப்படுகிறது. ராணியிடம் இது தொடர்பாகப் பேச தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் பேசுகிறபட்சத்தில் அவரது விளக்கத்தை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

விகடன் 30 Dec 2025 7:49 pm

ஆடுகளம் படத்தில் அரசியல் ரீதியாக தவறான விஷயங்கள் இருக்கிறது, அதை நான்.!- இயக்குநர் வெற்றிமாறன்

ம.தொல்காப்பியன் எழுதிய `ஆடுகளம் காட்சிய நுட்பம்' மற்றும் `அதிர்விகளும் காட்சிமையும் EFFECTS & CINEMA LANGUAGE' ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நேற்று (டிச.29) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நிறைய பேர் இந்த நிகழ்ச்சியில் 'ஆடுகளம்' படம் குறித்து பேசியிருந்தார்கள். ஆடுகளம் நான் `ஆடுகளம்' படத்தை 15 வருடங்களாக பார்க்கவே இல்லை. ஒரு படம் எடுக்கும் வரைதான் அது நம் கையில் இருக்கும், எடுத்த பிறகு அதைக் கடந்து வந்துவிட வேண்டும். ஆனால், அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சமீபத்தில் பார்த்த போது ஒன்று மட்டும் எனக்கு தோன்றியது. இப்படி ஒரு க்ளைமாக்ஸை எடுக்கும் தைரியம் இன்று நமக்கு வருமா என தெரியவில்லை என்று என் குழுவினரிடம் சொன்னேன். மற்றபடி ஆடுகளம் படம் தொல்காப்பியனை ஒரு புத்தகம் எழுத தூண்டி இருக்கிறது, இதனை எழுதியதற்காக அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அந்த காலகட்டத்தில் 'ஆடுகளம்' படம் அரசியல் ரீதியாக சரியாக இருந்திருக்கலாம். இந்த காலகட்டத்தில் பார்க்கும்போது அரசியல் ரீதியாக தவறான விஷயங்கள் நிறைய இருக்கிறது. வெற்றிமாறன் அதனை விமர்சனத்திற்கு உட்படுத்த நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். குறிப்பாக அப்படத்தில் மிகவும் பிரபலமான பாட்டு உண்டு, அது இல்லாமல் இருந்திருக்கலாம் என தோன்றும், ஆனால் அந்த நேரத்தில் அது நன்றாக இருந்தது என வைத்துவிட்டோம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 7:14 pm

“சே’னு சொன்னால் ரொம்ப பவர்ஃபுல்லாக இருக்கும், ஏன்னா –சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. […] The post “சே’னு சொன்னால் ரொம்ப பவர்ஃபுல்லாக இருக்கும், ஏன்னா – சிவகார்த்திகேயன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Dec 2025 7:11 pm

மோசடியில் சிக்கி தவிக்கும் மாகாபா ஆனந்த்.. வைரலாகும் தகவல்.!!

மோசடியில் சிக்கி புலம்பி உள்ளார் மா.கா.பா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் மா.கா.பா.இவரை தெரியாதவர் இருக்க முடியாது .இந்த நிலையில் தற்போது இவருக்கு மோசடி நடந்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது மாகாபா ஆனந்த் அவருடைய காருக்கு பிரபல பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசல் போட்டுள்ளார் அதில் தண்ணீர் கலந்த மோசடி செய்துள்ளதால் அவரது கார் ரிப்பேர் ஆகி அதற்கு மூன்று...

தஸ்தர் 30 Dec 2025 6:58 pm

வசூலில் சாதனை படைத்த குட் பேட் அக்லி.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

குட் பேட் அக்லி திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் அஜித்தின் அடுத்த...

தஸ்தர் 30 Dec 2025 6:23 pm

லட்சக்கணக்கில் நகை, பணம், கார் இழந்த தொழில் அதிபர் –சீரியல் நடிகை ராணியை வலைவீசி தேடும் போலீஸ்

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராணி. இவர் பல வருடங்களாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் ராணி, இவருடைய கணவர் பாலாஜி, பாலாஜியின் நண்பர் புருஷோத்தமன் மீது கரூர் ஓட்டல் அதிபர் தினேஷ் ராஜ் அளித்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் ராஜ். இவர் கரூர்- கோவை தேசிய […] The post லட்சக்கணக்கில் நகை, பணம், கார் இழந்த தொழில் அதிபர் – சீரியல் நடிகை ராணியை வலைவீசி தேடும் போலீஸ் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Dec 2025 6:17 pm

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்?

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்? கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் முடிந்துள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகளில் நடைபெறவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது...

தஸ்தர் 30 Dec 2025 5:57 pm

Jana Nayagan: 'ஜனநாயகன்'படத்தை டிரிப்யூட் போல வடிவமைத்திருக்கிறோம் - தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27-ம் தேதி பிரமாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்றது. Jana Nayagan - Vijay அந்த இசை வெளியீட்டு விழாவின் காணொளிகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக இருக்கின்றன. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.வி. நாராயணன் NDTV ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழா சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்திருக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடிய நிகழ்வு இதுதான் எனவும் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இது விஜய் சாரின் கடைசி படம் என்று அவர் கூறிவிட்டார். திரையில் அவரை நாம் அனைவரும் உண்மையிலேயே மிஸ் செய்யப்போகிறோம். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக விஜய் சார் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அங்கமாக இருந்திருக்கிறார். அவரது வசனங்கள், நடனங்கள், பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் நமக்கு கொண்டாட்டமாக இருந்தது. இனி ஒரு வெற்றிடம் ஏற்படும். KV Narayanan - Jana Nayagan Producer அதை நிரப்ப முடியாது என்றே நினைக்கிறேன். விஜய் சாருடன் பணியாற்றிய அனுபவம் உண்மையிலேயே அழகானது. விஜய் சார் ஒரு கடின உழைப்பாளி. வேலையில் அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தொழில்முறை மற்றும் நெறிமுறைகள் அசாதாரணமானவை என்று நினைக்கிறேன். 'ஜன நாயகன்' படம் விஜய் சாரின் திரைத்துறை லெகசிக்கு ஒரு டிரிப்யூட்போல வடிவமைத்திருக்கிறோம். விஜய் சார் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் உள்ளன. எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 5:57 pm

Jana Nayagan: 'ஜனநாயகன்'படத்தை டிரிப்யூட் போல வடிவமைத்திருக்கிறோம் - தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27-ம் தேதி பிரமாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்றது. Jana Nayagan - Vijay அந்த இசை வெளியீட்டு விழாவின் காணொளிகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக இருக்கின்றன. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.வி. நாராயணன் NDTV ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழா சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்திருக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடிய நிகழ்வு இதுதான் எனவும் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இது விஜய் சாரின் கடைசி படம் என்று அவர் கூறிவிட்டார். திரையில் அவரை நாம் அனைவரும் உண்மையிலேயே மிஸ் செய்யப்போகிறோம். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக விஜய் சார் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அங்கமாக இருந்திருக்கிறார். அவரது வசனங்கள், நடனங்கள், பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் நமக்கு கொண்டாட்டமாக இருந்தது. இனி ஒரு வெற்றிடம் ஏற்படும். KV Narayanan - Jana Nayagan Producer அதை நிரப்ப முடியாது என்றே நினைக்கிறேன். விஜய் சாருடன் பணியாற்றிய அனுபவம் உண்மையிலேயே அழகானது. விஜய் சார் ஒரு கடின உழைப்பாளி. வேலையில் அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தொழில்முறை மற்றும் நெறிமுறைகள் அசாதாரணமானவை என்று நினைக்கிறேன். 'ஜன நாயகன்' படம் விஜய் சாரின் திரைத்துறை லெகசிக்கு ஒரு டிரிப்யூட்போல வடிவமைத்திருக்கிறோம். விஜய் சார் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் உள்ளன. எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 5:57 pm

மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி? விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘டிரெய்ன்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார் விஜய் சேதுபதி. முன்னதாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்பட பலர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’. படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது....

தஸ்தர் 30 Dec 2025 5:48 pm

அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன மொத்த குடும்பம் –அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் போலீஸ், மனோஜ் ஆபீசிற்கு வந்தார்கள். அப்போது போலீஸ், கடத்தல் விஷயமாக தினேஷை பிடித்து விட்டோம். ஆனால், காரில் அடிபட்டதால் அவனுக்கு பழைய ஞாபகம் எல்லாம் மறந்து விட்டது. அவன் கல்யாணி என்ற பெயரை மட்டும் சொல்கிறான். உங்களுக்கு தெரியுமா? என்றார். மனோஜ் ஷாக் ஆகி அதெல்லாம் ஒன்றும் தெரியாது என்று மறைத்து விட்டார். பின் போலீஸ் சென்றவுடன் மனோஜ், கல்யாணி பற்றி ரொம்ப மோசமாக திட்டி பேசினார். மனோஜ், […] The post அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன மொத்த குடும்பம் – அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Dec 2025 5:00 pm

பாக்கியா செய்த சதி வேலை, பாண்டியன் குடும்பத்தை காப்பாற்றினாரா முத்துவேல்?பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், இந்த விவாகரத்து விஷயத்தில் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லாதீர்கள். இதுதான் என்னுடைய முடிவு. நான் மாற மாட்டேன் என்றார். அதற்குப்பின் மாணிக்கம்- பாக்கியா இருவருமே போலீஸ் ஸ்டேஷன் சென்று பாண்டியன் குடும்பத்தின் மீது புகார் கொடுத்தார்கள். அப்போது பாக்யா, என் மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் பண்ண கொடுமையால் என்னுடைய மகள் கரு கலைந்து விட்டது என்றெல்லாம் பொய்யான புகார்களை எல்லாம் […] The post பாக்கியா செய்த சதி வேலை, பாண்டியன் குடும்பத்தை காப்பாற்றினாரா முத்துவேல்?பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Dec 2025 4:03 pm

Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினர். Parasakthi பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர். தற்போது 'பராசக்தி' திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்தக் காணொளியைப் பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள். World Of Parasakthi: 'தீ பரவட்டும்' - 'பராசக்தி' பட நிகழ்வின் புகைப்படங்கள் |Photo Album இக்காணொளியில் ரவி மோகன், சுதா மேம் எனக்கு கால் பண்ணி 'இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்'னு சொன்னாங்க. நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு. பிறகு, 'ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நீங்க பண்ணமாட்டீங்கனுதான் நினைச்சேன். ஆனா, நீங்க பண்றதுக்கு ரொம்பவே நன்றி. இந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும். அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு நான் நினைச்சுதான் கூப்பிட்டேன்'னு சுதா மேம் சொன்னாங்க. என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க. பிறகு ஹேர்ஸ்டைலில் ஒரு சுருள் வைத்து பார்த்ததும், சுதா மேம் அந்த லுக்கை ஓகே செய்தாங்க என்றார். Atharvaa அதர்வா கூறுகையில், எப்போதுமே ஒரு கதையைப் படிக்கும்போது அது விஷுவலாக எனக்குள்ள தோணும். அப்படி இந்த சின்னதுரை (பராசக்தி படத்தில் அதர்வாவின் கதாபாத்திரத்தின் பெயர்) கதாபாத்திரத்தை 100 வித்தியாசமான வழிகள்ல என்னால பார்க்க முடிஞ்சது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நாங்கள் லுக் டெஸ்ட் செஞ்சு பார்த்தோம். சுருள் முடி வைத்து அந்தக் கேரக்டர் மாதிரி போஸ் கொடுக்க சொன்னாங்க. அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் ஈர்ப்பான தருணம் எனப் பேசியிருக்கிறார். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ்

விகடன் 30 Dec 2025 3:49 pm

Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினர். Parasakthi பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர். தற்போது 'பராசக்தி' திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்தக் காணொளியைப் பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள். World Of Parasakthi: 'தீ பரவட்டும்' - 'பராசக்தி' பட நிகழ்வின் புகைப்படங்கள் |Photo Album இக்காணொளியில் ரவி மோகன், சுதா மேம் எனக்கு கால் பண்ணி 'இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்'னு சொன்னாங்க. நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு. பிறகு, 'ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நீங்க பண்ணமாட்டீங்கனுதான் நினைச்சேன். ஆனா, நீங்க பண்றதுக்கு ரொம்பவே நன்றி. இந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும். அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு நான் நினைச்சுதான் கூப்பிட்டேன்'னு சுதா மேம் சொன்னாங்க. என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க. பிறகு ஹேர்ஸ்டைலில் ஒரு சுருள் வைத்து பார்த்ததும், சுதா மேம் அந்த லுக்கை ஓகே செய்தாங்க என்றார். Atharvaa அதர்வா கூறுகையில், எப்போதுமே ஒரு கதையைப் படிக்கும்போது அது விஷுவலாக எனக்குள்ள தோணும். அப்படி இந்த சின்னதுரை (பராசக்தி படத்தில் அதர்வாவின் கதாபாத்திரத்தின் பெயர்) கதாபாத்திரத்தை 100 வித்தியாசமான வழிகள்ல என்னால பார்க்க முடிஞ்சது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நாங்கள் லுக் டெஸ்ட் செஞ்சு பார்த்தோம். சுருள் முடி வைத்து அந்தக் கேரக்டர் மாதிரி போஸ் கொடுக்க சொன்னாங்க. அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் ஈர்ப்பான தருணம் எனப் பேசியிருக்கிறார். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ்

விகடன் 30 Dec 2025 3:49 pm

BB Tamil 9: பிரேக் ஆயிருக்கேன்; உடனே கடந்துபோக முடியாது- கம்ருதீனால் பார்வதி எமோஷனல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9 இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கம்ருதீனும், பார்வதியும் மோதிக்கொண்டார்கள். கம்ருதீன் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் பார்வதி கதறி அழுதார். ப்ரீஸ் டாஸ்க் (ஃபேமிலி டாஸ்க்) முடிந்ததில் இருந்தே கம்ருதீன் பார்வதி இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். BB Tamil 9: இது ரொம்ப Cheap-ஆ இருக்கு - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது புரொமோவில், பார்வதி கம்ருதீன் குறித்து விக்ரமிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நான் டாஸ்க் பண்றேன். எல்லா விஷயங்களையும் பண்றேன். ஆனா நான் ஒரு மாதிரி பிரேக் ஆயிருக்கேன். BB Tamil 9 என்னால உடனேலாம் கடந்துபோயிட முடியாது. அவனோட ஓட்டு பாதிக்கும்'னு சொல்லும்போது தான் இன்னும் கோவம் வருது. அவன் பண்றது எல்லாமே ஒரு லவ் கேம்தான். அதுக்கு பயன்படுத்தப்பட்ட பகடைக்காய் தான் நானா? என்று எமோஷனலாக பேசிக்கொண்டிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 3:30 pm

BB Tamil 9: பிரேக் ஆயிருக்கேன்; உடனே கடந்துபோக முடியாது- கம்ருதீனால் பார்வதி எமோஷனல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9 இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கம்ருதீனும், பார்வதியும் மோதிக்கொண்டார்கள். கம்ருதீன் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் பார்வதி கதறி அழுதார். ப்ரீஸ் டாஸ்க் (ஃபேமிலி டாஸ்க்) முடிந்ததில் இருந்தே கம்ருதீன் பார்வதி இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். BB Tamil 9: இது ரொம்ப Cheap-ஆ இருக்கு - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது புரொமோவில், பார்வதி கம்ருதீன் குறித்து விக்ரமிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நான் டாஸ்க் பண்றேன். எல்லா விஷயங்களையும் பண்றேன். ஆனா நான் ஒரு மாதிரி பிரேக் ஆயிருக்கேன். BB Tamil 9 என்னால உடனேலாம் கடந்துபோயிட முடியாது. அவனோட ஓட்டு பாதிக்கும்'னு சொல்லும்போது தான் இன்னும் கோவம் வருது. அவன் பண்றது எல்லாமே ஒரு லவ் கேம்தான். அதுக்கு பயன்படுத்தப்பட்ட பகடைக்காய் தான் நானா? என்று எமோஷனலாக பேசிக்கொண்டிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 3:30 pm

Parasakthi: சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது! - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதியை 10 தேதிக்கு ப்ரீபோன்ட் செய்தனர். Parasakthi பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர். தற்போது 'பராசக்தி' திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த காணொளியை பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள். அந்தக் காணொளியில் சிவகார்த்திகேயன், எனக்கு செழியன் என்கிற பெயரே ரொம்ப பிடிச்சிருந்தது. அதை அனைவரும் 'சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது. இவ்வளவு பவர்ஃபுல்லான, எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதுல என்டர்டெயின்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்துச்சு. ஸ்கிரிப்ட் ரீடிங் தருணம் ஆபீஸில் நடைபெற்றது. ஒவ்வொரு பகுதி படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னாடியும் ஸ்கிரிப்ட் படிப்போம். இது மாதிரி நான் படிச்சிருந்தா, டாக்டர் ஆகியிருப்பேன். இல்லைனா, பொறியியல் படிப்புல கோல்ட் மெடலிஸ்ட் ஆகியிருப்பேன்னு எங்க வீட்டுல சொன்னேன். இந்தப் படத்துக்காகதான் முதல் முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன். Sivakarthikeyan அதுவே சுவாரஸ்யமான தருணமாக இருந்துச்சு. இதுக்கு முன்னாடி பாடலுக்காககூட அந்த காஸ்டியூம் நான் போட்டது கிடையாது. மாணவர்களும், மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர்ஃபுல்னு சொல்வதுதான் இந்த ஸ்கிரிப்ட். இப்படியா ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது, ஒரு ஹீரோவாக அதைச் செய்ய நான் ஏன் யோசிக்கணும்! நம் மண், மொழி சார்ந்த படம் இது. 'பராசக்தி' முழுமையான கமர்ஷியல் திரைப்படம். அனைத்து வகையான எமோஷன்களும் படத்துல இருக்கு. இந்தப் படம் திரையரங்கத்துல அதிரடியான அனுபவத்தைக் கொடுக்கும். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 3:18 pm

பல்லவன் யார் என்பதை போட்டுடைத்த நடேசன், அதிர்ச்சியில் உறைந்த நிலா –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவுமே பல்லவனுக்காக டான்ஸ் எல்லாம் ஆடி பாட்டு பாடினார். அதற்குப்பின் பல்லவன், தான் செய்த தவறை உணர்ந்து நிலாவிடம் மன்னிப்பு கேட்டார். நிலாவுமே பல்லவனை மன்னித்து ஏற்றுக் கொண்டார். இதையெல்லாம் பார்த்த சேரன், நிலா போன ஜென்மத்தில் அம்மாவாக இருந்திருப்பார் என்று சொன்னார். இதைக் கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பானது. தயவுசெய்து தங்கை என்று கூட சொல்லிவிடு அம்மா என்று என்னையும் அழைக்க வைக்காதே என்று சேரனை திட்டி […] The post பல்லவன் யார் என்பதை போட்டுடைத்த நடேசன், அதிர்ச்சியில் உறைந்த நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Dec 2025 3:05 pm

ஜல்லிக்கட்டு நாளில் கல்யாணம்; திருமண தேதியை அறிவித்தார் பிக் பாஸ் ஜூலி

'ஜல்லிக்கட்டு' நடத்தக்கோரி 2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் திரளாக நடந்த போராட்டத்தின் மூலம் மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர் ஜூலி. செவிலியராகப் பணிபுரிந்த இவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு எழுப்பிய முழுக்கங்கள் ஓவர் நைட்டில் வைரலாக, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியாளராகக் களம் கண்டார் தொடர்ந்து விளம்பரப் படங்கள், சினிமா வாய்ப்புகள் என ரொம்பவே பிஸியானார். கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்தார். இவர் நடித்திருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் இம்மாதத்தின் முதல் வாரம் தன்க்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கம் வழியே தெரிவித்திருந்தார். பிக் பாஸ் ஜூலி தன் காதலரான முகமது ஜக்ரீம் என்பவரை ஜூலி மணம் முடிக்கப் போகிறார் என்கிற அந்தச் செய்தியை நாமும் வெளியிட்டிருந்தோம். அப்போது திருமணத் தேதி குறித்து விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருந்தார். தற்போது அந்த திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டு, அழைப்பிதழ் தயாராகி விட்டது. நெருங்கிய நட்பு வட்டத்தில் அழைப்பிதழ் வைக்கத் தொடங்கி விட்டாராம். வரும் ஜனவரி 16 வெள்ளிக் கிழமை மாலை சென்னை பரங்கிமலையிலிருக்கும் செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் வைத்துத் திருமணம் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து அதே நாளில் இரவு 7 மணிக்கு மேல் வரவேற்பு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பொங்கலுக்கு அடுத்த சில தினங்களில்தான் ஜல்லிக்கட்டு நடக்கும். ஜல்லிக்கட்டு மூலம் புகழடைந்த ஜூலிக்கு அப்படியொரு நாளிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 30 Dec 2025 1:56 pm

ஜல்லிக்கட்டு நாளில் கல்யாணம்; திருமண தேதியை அறிவித்தார் பிக் பாஸ் ஜூலி

'ஜல்லிக்கட்டு' நடத்தக்கோரி 2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் திரளாக நடந்த போராட்டத்தின் மூலம் மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர் ஜூலி. செவிலியராகப் பணிபுரிந்த இவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு எழுப்பிய முழுக்கங்கள் ஓவர் நைட்டில் வைரலாக, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியாளராகக் களம் கண்டார் தொடர்ந்து விளம்பரப் படங்கள், சினிமா வாய்ப்புகள் என ரொம்பவே பிஸியானார். கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்தார். இவர் நடித்திருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் இம்மாதத்தின் முதல் வாரம் தன்க்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கம் வழியே தெரிவித்திருந்தார். பிக் பாஸ் ஜூலி தன் காதலரான முகமது ஜக்ரீம் என்பவரை ஜூலி மணம் முடிக்கப் போகிறார் என்கிற அந்தச் செய்தியை நாமும் வெளியிட்டிருந்தோம். அப்போது திருமணத் தேதி குறித்து விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருந்தார். தற்போது அந்த திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டு, அழைப்பிதழ் தயாராகி விட்டது. நெருங்கிய நட்பு வட்டத்தில் அழைப்பிதழ் வைக்கத் தொடங்கி விட்டாராம். வரும் ஜனவரி 16 வெள்ளிக் கிழமை மாலை சென்னை பரங்கிமலையிலிருக்கும் செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் வைத்துத் திருமணம் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து அதே நாளில் இரவு 7 மணிக்கு மேல் வரவேற்பு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பொங்கலுக்கு அடுத்த சில தினங்களில்தான் ஜல்லிக்கட்டு நடக்கும். ஜல்லிக்கட்டு மூலம் புகழடைந்த ஜூலிக்கு அப்படியொரு நாளிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 30 Dec 2025 1:56 pm

சிறுவர்களின் அந்த அரக்கத்தனமான அருவருப்பான செயல் மன உளைச்சலை கொடுக்கிறது- மாரி செல்வராஜ்

திருத்தணி ரயில் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (டிச. 30) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். Represental Images புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 1:42 pm

சிறுவர்களின் அந்த அரக்கத்தனமான அருவருப்பான செயல் மன உளைச்சலை கொடுக்கிறது- மாரி செல்வராஜ்

திருத்தணி ரயில் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (டிச. 30) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். Represental Images புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 1:42 pm

BB Tamil 9 Day 85: ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்க்கவா? - காப்பாத்துங்க மை லார்ட்

தானும் சும்மா இருந்து, மற்றவர்கள் வேலை செய்வதையும் தொந்தரவாக நினைத்த சான்ட்ராவிடம் “இதப் பாக்கறதுக்காக மக்கள் சப்ஸ்கிரைப் பண்றாங்க?” என்று கேட்டார் விசே.  அதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் வைக்கலாம். ‘பாரு - கம்முவிற்கு இடையே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்ப்பதற்காகவா பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? ஏன் அந்தக் காட்சிகளையே காட்டுகிறீர்கள்? ஒரு பக்கம், துஷார் என்றாலே கண்கலங்கும் அரோரா, இன்னொரு பக்கம் எதிராளியை பேச விடாமல் தானே மூச்சு விடாமல் பேசி இம்சிக்கும் திவ்யா, கம்ருதீனை ஏற்றி விட்டு அழகு பார்க்கும் வினோத், பீட் பாக்சிங் இம்சை சுபிக்ஷா, அவ்வப்போது அழ ஆரம்பித்திருக்கும் விக்ரம், சைலண்ட்டாக இருந்து வயலென்ட் செய்யும் சான்ட்ரா, நெகட்டிவிட்டியால் நிரம்பியிருக்கும் பாரு..  இவர்களைப் பார்ப்பதற்கா மக்கள் சானலை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? பிக் பாஸ் டீம் இதை யோசிக்குமா?.... BB Tamil 9 Day 85 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 85 பல விஷயங்களில் அடாவடியாக நடந்து கொள்ளும் பாரு, ரொமான்ஸ் விஷயத்தில் மட்டும் கம்ருதீனிடம் பம்முகிறார். ஏனெனில் இது அவரது இமேஜை ஆழமாக பாதிக்கும் விஷயம்.  ‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா.. எனக்கு மானமே போச்சு.. அதுக்கு தீர்வு வேணும்’ என்று மீண்டும் மீண்டும் இந்த விஷயத்தை நோண்டிக் கொண்டேயிருக்கும் கம்ருதீனின் பக்கம் செய்வது அநியாயமாகத் தெரிகிறது.  லவ் பண்ணும் போது கிளுகிளுப்பாக இருப்பது, அதில் ஒரு பிரச்சினையென்றால் உடனே கொடூரனாக மாறுவது.. என்று ஒரு ‘டாக்ஸிக் காதலன்’ பாத்திரத்தில் கம்ருதீன் கச்சிதமாகப் பொருந்துகிறார்.  கம்ருதீனின் முன்கோபமும் முரட்டுத்தனமும் பாருவிற்கு நன்றாகவே தெரியும். எனினும் அவரிடமிருந்து உடனே விலகாமல் ‘எங்க ரிலேஷன்ஷிப் நட்புக்கு மேலே.. காதலுக்கு கீழே’ என்று வியாக்கியானம் செய்துகொண்டு கம்முவுடன் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருந்தார் கம்முவின் ரொமான்ஸ் டாக்ஸிக்கில் சிக்கி அவஸ்தைப்படும் பாரு அது லவ் கன்டென்டிற்காக மட்டும் இல்லையென்று தோன்றுகிறது. இரண்டு சிறுமிகள் ஒரு பொம்மையைப் பறிப்பதற்காக போட்டுக் கொள்ளும் சண்டை போலவே இது தெரிகிறது. அரோராவிடம் இருந்து கம்ருதீன் என்கிற பொம்மையைப் பறிப்பதற்காக இந்த so called காதலை நிகழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயம் பாருவிற்கு இருந்திருக்கலாம். இப்படியொரு உளவியல் நெருக்கடி பாருவிற்கு நிகழ்ந்திருக்கலாம்.  பாரு - கம்மு ரொமான்ஸ், இந்த சீசன் முடிந்த அடுத்த நிமிடமே புட்டுக் கொள்ளும் என்று யூகித்தேன். ஆனால் ஷோவிற்குள்ளேயே இந்த இருவரின் முகமூடிகள் கிழிந்து தொங்குவது குறித்து மகிழ்ச்சி. இருவருமே தங்களின் ரொமான்ஸை பிக் பாஸ் சர்வைவலுக்காகவும் மைலேஜிற்காகவும் நிகழ்த்தினார்கள் என்பது வெளிப்படை. உண்மையான காதலில் பழிவாங்கும் போக்கு இருக்காது. ‘தன்னால் நேசிக்கப்பட்டவன் அல்லது பட்டவள் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என்கிற நல்லெண்ணம்தான் அடிப்படையாக இருக்கும்.  BB Tamil 9 Day 85 ‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா’ என்று கம்ருதீன் கூப்பாடு போடும் விவகாரத்தில் பாருவின் பக்கம்தான் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன். (பாரு ரசிகர்கள்.. ப்ளீஸ் நோட் திஸ் பாயின்ட்!). கம்ருதீனின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு முன்னால், தன்னை இம்ப்ரஸ் செய்ய முயலும் இம்சையாகத்தான் பாரு பார்த்திருக்கிறார். “என் கிட்ட நெருங்கி வந்தான். நான் டக்குன்னு திரும்பி போயிட்டேன்.. யாரு கிட்ட?” என்று திவாகரிடம் பெருமிதமாகச் சொன்னவர் இதே பாருதான்.  ‘எப்ப நடந்ததையோ வெச்சு சொன்னத’ - பாருவின் புலம்பலில் நியாயம் ஆனால் சிறைவாசத்திற்குப் பிறகு கம்ருதீனின் மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்காம். ‘இந்த அரோரா.. இவன் பின்னாடியே சுத்திட்டு இருக்காளே.. இதை எப்படியாவது பிரேக் செய்து கம்முவை நம்ம பக்கம் இழுக்கணும். அவனை வெச்சு மைலேஜ் தேத்தணும்..” என்று பாரு பிளான் செய்திருக்கலாம். அந்த வகையில் பாருவிற்கு வெற்றி கிடைத்தது. ஆனால் கம்ருதீனின் ‘டாக்சிக்தனம்’ தாங்காமல் இப்போது அவஸ்தைப் படுகிறார்.  “அந்தச் சமயத்தில் நான் அப்படி நினைத்தது உண்மைதான். ஆனால் பிறகு அப்படியில்லை. நம்மிடையே மலர்ந்த உறவானது என்னுடைய சம்மத்தோடுத்தான் நிகழ்ந்தது. உன் மீது தவறில்லை. அப்போது நினைத்ததை இயல்பாக சொன்னேன்”.. BB Tamil 9 Day 85 இதுதான் பாருவின் நேர்மையான விளக்கம். ஒரு பெண் இப்படி பகிரங்கமாக சொல்வது பாராட்டப்பட வேண்டியது. ஆனால் கம்முவோ “என்னை தப்பா சொல்லிட்டா மச்சான்.. ஒரு பொண்ணோட அனுமதியில்லாம தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்ல” என்று அனுதாபத்தைத் தேடி விக்டிம் கார்டை கையில் எடுக்கிறார் என்று தோன்றுகிறது. கம்மு அடிப்படையில் நல்ல மனிதர். நிதானமான சமயத்தில் நேர்மையாக யோசிக்கிறார். மன்னிப்பு கேட்கிறார். ஆனால் முன்கோபம் வந்து விட்டால் கூடவே பழிவாங்கும் வெறி வந்து விடுகிறது. பாருவிடமும் அரோராவிடமும் கோபத்தில் ஆழமாக புண்படுத்தும் வார்த்தைகளை வீசுகிறார். யார் எங்கே புண்படுவார்களே அங்கு குறி பார்த்து அடிக்கிறார். அரோவிற்கு துஷார் என்கிற ஆயுதம். பாருவிற்கு ‘நீ மட்டும் ஒழுக்கமா?’ என்கிற ஆயுதம். திவ்யாவிற்கு எதிராக ஆவேச டிராமாவை விக்ரம் நிகழ்த்துகிறாரா? பாருவிற்கு சார்பாக இன்னொரு பாயிண்ட்டையும் பார்த்து விடுவோம். விக்ரம் - திவ்யாவிற்கு இடையே நிகழும் சண்டையில் “இவங்க ரெண்டு பேரும் தனியாக உக்காந்து பேசட்டுமே.. ஏன் பொதுவில் அடித்துக் கொண்டு விக்ரம் மைலேஜ் தேட நினைக்கிறார்?” என்கிற பாருவின் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.  விக்ரம் பெரும்பாலும் நிதானமாக இயங்குபவர். சிறைக்குச் செல்லாமல் சான்ட்ரா - திவ்யா கூட்டணி பயங்கரமாக வெறுப்பேற்றிய போதும் அவமானப்படுத்திய போதும் சகித்துக் கொண்டவர். மற்றவர்களை வெறுப்பேற்றுவதையே முழு நேரமாக வைத்திருக்கும் பாருவைக் கூட திறமையாக கையாளத் தெரிந்தவர்.  ஆனால் சமீபகாலமாக நிறைய அழுகிறார். திவ்யா விவகாரத்தில் கண்களை உருட்டி ஆவேசப்படுகிறார். சான்ட்ரா போன்ற மிக்சர் பார்ட்டிகளோடு ஒப்பிடும் போது கனி வெளியேற்றப்பட்டு விட்டாரே என்கிற வருத்தமும் மனஅழுத்தமும்தான் இந்த ஆவேசத்திற்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். (இதைப் பற்றி நேற்றைய கட்டுரையில் யூகமாக எழுதியிருந்தேன். அதுதான் உண்மை என்பது சுபிக்ஷாவிற்கு அவர் பேசியதில் இருந்து உண்மை என்று தெரிகிறது) திவாகர் இது நாள் வரை காத்திருந்த பொறுமை ஒரு கொதிநிலையில் வெடித்திருக்கலாம்.  BB Tamil 9 Day 85 மாற்றுத் தரப்பை பேச அனுமதிக்காத திவ்யா - நியாயமா? ‘உங்க வீட்ல கத்தச் சொன்னாங்களா?’ என்று திவ்யா கேட்டது கோபத்தில் எழுந்த ஒரு சாதாரண குற்றச்சாட்டு. அப்போதைக்கு விக்ரமிற்கு கோபம் வந்தாலும் பிறகு பொறுமையாக கையாண்டிருக்கலாம். “நீயொரு பிராடு, கோழை, அயோக்கியத்தனம்” என்றெல்லாம் அதீதமான வார்த்தைகளை விடுவது அவரது இமேஜிற்குத்தான் வீழ்ச்சியைத் தரும்.  “வாங்க.. பேசித் தீர்க்கலாம்.. இது என்னோட அடிப்படை உரிமை” என்று விக்ரம் திவ்யாவிடம் மல்லுக்கட்டியது நிச்சயம் நல்ல செயல். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை வலியுறுத்தி நெருக்கடி தரக்கூடாது. பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இதிலுள்ள நியாயம் தன்னாலேயே புரிந்து விட்டிருக்கும். விக்ரம் இந்தப் பாணியைத்தான் வழக்கமாக செய்வார். ஆனால் இந்த முறை சறுக்கல் நிகழ்ந்து விட்டது. விக்ரம் திவ்யாவின் பிரச்சினையை தனிப்பட்ட வகையில் அமர்ந்து பேச முயன்றிருக்கலாம். பொதுவில் பேசுவதால்தான் திவ்யாவின் ஈகோ சீண்டப்படுகிறதோ என்று தோன்றுகிறது. ‘வாங்க பேசித் தீர்க்கலாம்’ என்று ஒருவர் கதறிக் கொண்டிருந்தாலும் அதை பிடிவாதமாக ஏற்க மறுக்கும் திவ்யாவின் தரப்பிலும் தவறு இருக்கிறது. பேசி பேசித்தான் உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.  BB TAMIL 9 DAY 85 பாரு + சான்ட்ரா = சந்தர்ப்பவாத டாக்ஸிக் கூட்டணி “என் புருஷன் போன போது நான் டிராமா பண்ணதா சொன்னாங்க.. இப்ப விக்ரம் பண்றதுக்கு பேரு என்னவாம்?” என்று சந்தடி சாக்கில் தன்னுடைய இமேஜை சரி செய்து கொள்ள முனைகிறார் சான்ட்ரா. பிரஜின் எவிக்ட் ஆவது உறுதியாகத் தெரியாத நிலையில் சான்ட்ரா செய்த ஆவேசம் முதல், பல நாட்களுக்கு மூக்கைச் சிந்தி அழுது கத்தி ஆர்ப்பாட்டது வரை செய்த இம்சையை ஒரே வாக்கியத்தில் நியாயப்படுத்தி விட முடியாது.  ‘பாருவை நம்பாத’ என்று மற்றவர்களுக்கு ரகசியமாக உபதேசம் செய்யும் சானட்ரா, சந்தர்ப்பவாதத்திற்காக தேவையான சமயத்தில் பாருவுடன் கூட்டணி வைக்கிறார். இப்போதைய நட்பும் அப்படித்தான். ‘உன்னைப் பத்தி எனக்குத் தெரியுண்டா’ என்கிற விதத்தில்தான் பாருவும் சான்ட்ராவும் பரஸ்பரம் பழகி வருகிறார்கள்.  PR Activity பற்றிய விவாதத்தை ஆரம்பித்து சிண்டு முடிய ஆரம்பித்தார் பிக் பாஸ். “நான் ஒரு மொள்ளமாறிங்க.. நான் ஒரு முடிச்சவிக்கங்க” என்கிற கவுண்டமணி - செந்தில் காமெடியைப் போல பல போட்டியாளர்களின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறியது. ஒருவரையொருவர் போட்டுக் கொடுத்தார்கள். “வீட்டு வாடகை கொடுக்கறதுக்கே வக்கில்லை. நான் எங்கே PR வெக்கறது?” என்று சிரிக்க வைத்தார் வினோத்.  இன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகும் பல பதிவுகளை, கமெண்ட்டுகளை  உண்மையான ரசிகர்கள் எழுதுகிறார்களா, அல்லது சம்பந்தபட்ட ஆசாமியின் PR டீம் எழுதுகிறார்களா என்பது நிறைய குழப்பங்களையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எப்படியாவது வெற்றியைப் அடைந்து  விட வேண்டும் என்பதற்காக பல்வேறு குறுக்கு வழியைத் தேடும் வெறி இன்று அதிகமாகி விட்டது. நேர்மையாக ஆடி வெற்றியை நோக்கி நகரும் sportsmanship அரிதாகி விட்டது. PR என்பது பெரிய வணிகமாகவே இன்று மாறியிருக்கிறது. BB TAMIL 9 DAY 85 ‘சுபிக்ஷா மீது வினோத்திற்கு பொறாமையா?’ “மீனவ சமூகத்திலிருந்து ஒரு பெண்ணா முதன்முறையா பிக் பாஸ் வந்திருக்கேன். சமூகம் என்னைக் காப்பாற்றும்” என்கிற மாதிரி சுபிக்ஷா சொன்ன போது “நீ மட்டும் வரலை. நிறைய பேர் இருக்காங்க” என்று வினோத் உறுமியதில் பொறாமைதான் தெரிந்தது. “நான் அப்படிச் சொல்லலை” என்று பிறகு அவர் சமாளித்தாலும், இந்தப் பாயிண்ட்டை பிடித்து சுபிக்ஷா முன்னேறி விடுவாளோ என்கிற போட்டி மனப்பான்மையை பார்க்க முடிந்தது. சுபிக்ஷாவும் வினோத்தும் விளிம்புநிலை சமூகத்திலிருந்து மேலே ஏறி வர முயல்பவர்கள்தான். எனில் ஏன் இந்தப் பொறாமை?  இந்த வார நாமினேஷன் ரணகளமாக நடந்தது. இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதால் சங்கடங்களை உதறி இறங்கி அடித்து காரணங்களைச் சொன்னார்கள். ஏற்கெனவே குறிப்பிட்டது போல திவ்யாவிற்காக ஆட்சேகரபமான காரணங்களை விக்ரம் சொன்னது தவறு. திவ்யா இதை கூலாக எதிர்கொண்டது நன்று.  பாருவும் கம்முவும் தங்களின் முகமூடிகளைக் கழற்றி விட்டு உக்கிரமாக அடித்துக் கொண்டார்கள். ஆனால் இவர்களின் ரொமான்ஸ் டிராமா இத்துடன் முடிவிற்கு வருமா என்பது சந்தேகம்தான். ‘ஸாரி பாரு.. ‘என்று பரிதாபமான முகத்துடன் கம்மு வந்திருக்கிறார். ‘இட்ஸ் ஓகே பேபி.. இனிமே இப்படி பேசாத’ என்று பாரு மீண்டும் உரசிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இனிமேல் ‘வீட்டு தல’ என்று யாரும் இல்லாததால் இந்த வாரம் அனைவருமே நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இந்த வாரமாவது தகுதியற்ற போட்டியாளர் வெளியேறுமாறு மக்கள் தீர்ப்பளிப்பார்களா.. மன்னிக்கவும் ..பிக் பாஸ் டீம் முடிவு செய்யுமா? BB Tamil 9 Day 85 தகுதியுள்ளவர்களுக்கு வெற்றி - ஆனால் அது நடக்குமா? டிக்கெட் டூ பினாலே - 1 டாஸ்க்கில் சிலுவையில் அறைவது போல ஸ்டாண்ட் மீது போட்டியாளர்கள் நிற்கப்பட்டார்கள். கை வலி தாங்காமல் முதலில் இறங்கியவர் சான்ட்ரா. அடுத்து இறங்கியவர் விக்ரம். கட்டையை விட்டு கையை விலக்கி விட்டு ‘அய்யோ’ என்று தலையில் அடித்துக்கொண்ட வினோத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.  போட்டியின் முடிவு தெரிவதற்குள் எபிசோட் முடிந்து விட்டாலும், ஒன்றாவது டாஸ்க்கில் சுபிக்ஷா வென்றிருப்பதாக தெரிகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து வென்று டிக்கெட்டைப் பெறுபவர் யார் என்று பார்க்க வேண்டும். அது யாராக இருந்தாலும் தகுதியுள்ளவர் பெற்றால் மகிழ்ச்சி.  ஒருவேளை பாருவை வின்னராகவும் சான்ட்ராவை ரன்னர் - அப்- ஆகவும் அறிவித்து ஆட்டம் முடிந்தால், இந்த பிக் பாஸ் சீசன் 9 என்கிற வஸ்த்துவை விரைவில் குழி தோண்டிப் புதைத்து விடலாம். 

விகடன் 30 Dec 2025 1:07 pm

BB Tamil 9 Day 85: ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்க்கவா? - காப்பாத்துங்க மை லார்ட்

தானும் சும்மா இருந்து, மற்றவர்கள் வேலை செய்வதையும் தொந்தரவாக நினைத்த சான்ட்ராவிடம் “இதப் பாக்கறதுக்காக மக்கள் சப்ஸ்கிரைப் பண்றாங்க?” என்று கேட்டார் விசே.  அதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் வைக்கலாம். ‘பாரு - கம்முவிற்கு இடையே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்ப்பதற்காகவா பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? ஏன் அந்தக் காட்சிகளையே காட்டுகிறீர்கள்? ஒரு பக்கம், துஷார் என்றாலே கண்கலங்கும் அரோரா, இன்னொரு பக்கம் எதிராளியை பேச விடாமல் தானே மூச்சு விடாமல் பேசி இம்சிக்கும் திவ்யா, கம்ருதீனை ஏற்றி விட்டு அழகு பார்க்கும் வினோத், பீட் பாக்சிங் இம்சை சுபிக்ஷா, அவ்வப்போது அழ ஆரம்பித்திருக்கும் விக்ரம், சைலண்ட்டாக இருந்து வயலென்ட் செய்யும் சான்ட்ரா, நெகட்டிவிட்டியால் நிரம்பியிருக்கும் பாரு..  இவர்களைப் பார்ப்பதற்கா மக்கள் சானலை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? பிக் பாஸ் டீம் இதை யோசிக்குமா?.... BB Tamil 9 Day 85 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 85 பல விஷயங்களில் அடாவடியாக நடந்து கொள்ளும் பாரு, ரொமான்ஸ் விஷயத்தில் மட்டும் கம்ருதீனிடம் பம்முகிறார். ஏனெனில் இது அவரது இமேஜை ஆழமாக பாதிக்கும் விஷயம்.  ‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா.. எனக்கு மானமே போச்சு.. அதுக்கு தீர்வு வேணும்’ என்று மீண்டும் மீண்டும் இந்த விஷயத்தை நோண்டிக் கொண்டேயிருக்கும் கம்ருதீனின் பக்கம் செய்வது அநியாயமாகத் தெரிகிறது.  லவ் பண்ணும் போது கிளுகிளுப்பாக இருப்பது, அதில் ஒரு பிரச்சினையென்றால் உடனே கொடூரனாக மாறுவது.. என்று ஒரு ‘டாக்ஸிக் காதலன்’ பாத்திரத்தில் கம்ருதீன் கச்சிதமாகப் பொருந்துகிறார்.  கம்ருதீனின் முன்கோபமும் முரட்டுத்தனமும் பாருவிற்கு நன்றாகவே தெரியும். எனினும் அவரிடமிருந்து உடனே விலகாமல் ‘எங்க ரிலேஷன்ஷிப் நட்புக்கு மேலே.. காதலுக்கு கீழே’ என்று வியாக்கியானம் செய்துகொண்டு கம்முவுடன் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருந்தார் கம்முவின் ரொமான்ஸ் டாக்ஸிக்கில் சிக்கி அவஸ்தைப்படும் பாரு அது லவ் கன்டென்டிற்காக மட்டும் இல்லையென்று தோன்றுகிறது. இரண்டு சிறுமிகள் ஒரு பொம்மையைப் பறிப்பதற்காக போட்டுக் கொள்ளும் சண்டை போலவே இது தெரிகிறது. அரோராவிடம் இருந்து கம்ருதீன் என்கிற பொம்மையைப் பறிப்பதற்காக இந்த so called காதலை நிகழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயம் பாருவிற்கு இருந்திருக்கலாம். இப்படியொரு உளவியல் நெருக்கடி பாருவிற்கு நிகழ்ந்திருக்கலாம்.  பாரு - கம்மு ரொமான்ஸ், இந்த சீசன் முடிந்த அடுத்த நிமிடமே புட்டுக் கொள்ளும் என்று யூகித்தேன். ஆனால் ஷோவிற்குள்ளேயே இந்த இருவரின் முகமூடிகள் கிழிந்து தொங்குவது குறித்து மகிழ்ச்சி. இருவருமே தங்களின் ரொமான்ஸை பிக் பாஸ் சர்வைவலுக்காகவும் மைலேஜிற்காகவும் நிகழ்த்தினார்கள் என்பது வெளிப்படை. உண்மையான காதலில் பழிவாங்கும் போக்கு இருக்காது. ‘தன்னால் நேசிக்கப்பட்டவன் அல்லது பட்டவள் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என்கிற நல்லெண்ணம்தான் அடிப்படையாக இருக்கும்.  BB Tamil 9 Day 85 ‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா’ என்று கம்ருதீன் கூப்பாடு போடும் விவகாரத்தில் பாருவின் பக்கம்தான் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன். (பாரு ரசிகர்கள்.. ப்ளீஸ் நோட் திஸ் பாயின்ட்!). கம்ருதீனின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு முன்னால், தன்னை இம்ப்ரஸ் செய்ய முயலும் இம்சையாகத்தான் பாரு பார்த்திருக்கிறார். “என் கிட்ட நெருங்கி வந்தான். நான் டக்குன்னு திரும்பி போயிட்டேன்.. யாரு கிட்ட?” என்று திவாகரிடம் பெருமிதமாகச் சொன்னவர் இதே பாருதான்.  ‘எப்ப நடந்ததையோ வெச்சு சொன்னத’ - பாருவின் புலம்பலில் நியாயம் ஆனால் சிறைவாசத்திற்குப் பிறகு கம்ருதீனின் மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்காம். ‘இந்த அரோரா.. இவன் பின்னாடியே சுத்திட்டு இருக்காளே.. இதை எப்படியாவது பிரேக் செய்து கம்முவை நம்ம பக்கம் இழுக்கணும். அவனை வெச்சு மைலேஜ் தேத்தணும்..” என்று பாரு பிளான் செய்திருக்கலாம். அந்த வகையில் பாருவிற்கு வெற்றி கிடைத்தது. ஆனால் கம்ருதீனின் ‘டாக்சிக்தனம்’ தாங்காமல் இப்போது அவஸ்தைப் படுகிறார்.  “அந்தச் சமயத்தில் நான் அப்படி நினைத்தது உண்மைதான். ஆனால் பிறகு அப்படியில்லை. நம்மிடையே மலர்ந்த உறவானது என்னுடைய சம்மத்தோடுத்தான் நிகழ்ந்தது. உன் மீது தவறில்லை. அப்போது நினைத்ததை இயல்பாக சொன்னேன்”.. BB Tamil 9 Day 85 இதுதான் பாருவின் நேர்மையான விளக்கம். ஒரு பெண் இப்படி பகிரங்கமாக சொல்வது பாராட்டப்பட வேண்டியது. ஆனால் கம்முவோ “என்னை தப்பா சொல்லிட்டா மச்சான்.. ஒரு பொண்ணோட அனுமதியில்லாம தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்ல” என்று அனுதாபத்தைத் தேடி விக்டிம் கார்டை கையில் எடுக்கிறார் என்று தோன்றுகிறது. கம்மு அடிப்படையில் நல்ல மனிதர். நிதானமான சமயத்தில் நேர்மையாக யோசிக்கிறார். மன்னிப்பு கேட்கிறார். ஆனால் முன்கோபம் வந்து விட்டால் கூடவே பழிவாங்கும் வெறி வந்து விடுகிறது. பாருவிடமும் அரோராவிடமும் கோபத்தில் ஆழமாக புண்படுத்தும் வார்த்தைகளை வீசுகிறார். யார் எங்கே புண்படுவார்களே அங்கு குறி பார்த்து அடிக்கிறார். அரோவிற்கு துஷார் என்கிற ஆயுதம். பாருவிற்கு ‘நீ மட்டும் ஒழுக்கமா?’ என்கிற ஆயுதம். திவ்யாவிற்கு எதிராக ஆவேச டிராமாவை விக்ரம் நிகழ்த்துகிறாரா? பாருவிற்கு சார்பாக இன்னொரு பாயிண்ட்டையும் பார்த்து விடுவோம். விக்ரம் - திவ்யாவிற்கு இடையே நிகழும் சண்டையில் “இவங்க ரெண்டு பேரும் தனியாக உக்காந்து பேசட்டுமே.. ஏன் பொதுவில் அடித்துக் கொண்டு விக்ரம் மைலேஜ் தேட நினைக்கிறார்?” என்கிற பாருவின் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.  விக்ரம் பெரும்பாலும் நிதானமாக இயங்குபவர். சிறைக்குச் செல்லாமல் சான்ட்ரா - திவ்யா கூட்டணி பயங்கரமாக வெறுப்பேற்றிய போதும் அவமானப்படுத்திய போதும் சகித்துக் கொண்டவர். மற்றவர்களை வெறுப்பேற்றுவதையே முழு நேரமாக வைத்திருக்கும் பாருவைக் கூட திறமையாக கையாளத் தெரிந்தவர்.  ஆனால் சமீபகாலமாக நிறைய அழுகிறார். திவ்யா விவகாரத்தில் கண்களை உருட்டி ஆவேசப்படுகிறார். சான்ட்ரா போன்ற மிக்சர் பார்ட்டிகளோடு ஒப்பிடும் போது கனி வெளியேற்றப்பட்டு விட்டாரே என்கிற வருத்தமும் மனஅழுத்தமும்தான் இந்த ஆவேசத்திற்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். (இதைப் பற்றி நேற்றைய கட்டுரையில் யூகமாக எழுதியிருந்தேன். அதுதான் உண்மை என்பது சுபிக்ஷாவிற்கு அவர் பேசியதில் இருந்து உண்மை என்று தெரிகிறது) திவாகர் இது நாள் வரை காத்திருந்த பொறுமை ஒரு கொதிநிலையில் வெடித்திருக்கலாம்.  BB Tamil 9 Day 85 மாற்றுத் தரப்பை பேச அனுமதிக்காத திவ்யா - நியாயமா? ‘உங்க வீட்ல கத்தச் சொன்னாங்களா?’ என்று திவ்யா கேட்டது கோபத்தில் எழுந்த ஒரு சாதாரண குற்றச்சாட்டு. அப்போதைக்கு விக்ரமிற்கு கோபம் வந்தாலும் பிறகு பொறுமையாக கையாண்டிருக்கலாம். “நீயொரு பிராடு, கோழை, அயோக்கியத்தனம்” என்றெல்லாம் அதீதமான வார்த்தைகளை விடுவது அவரது இமேஜிற்குத்தான் வீழ்ச்சியைத் தரும்.  “வாங்க.. பேசித் தீர்க்கலாம்.. இது என்னோட அடிப்படை உரிமை” என்று விக்ரம் திவ்யாவிடம் மல்லுக்கட்டியது நிச்சயம் நல்ல செயல். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை வலியுறுத்தி நெருக்கடி தரக்கூடாது. பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இதிலுள்ள நியாயம் தன்னாலேயே புரிந்து விட்டிருக்கும். விக்ரம் இந்தப் பாணியைத்தான் வழக்கமாக செய்வார். ஆனால் இந்த முறை சறுக்கல் நிகழ்ந்து விட்டது. விக்ரம் திவ்யாவின் பிரச்சினையை தனிப்பட்ட வகையில் அமர்ந்து பேச முயன்றிருக்கலாம். பொதுவில் பேசுவதால்தான் திவ்யாவின் ஈகோ சீண்டப்படுகிறதோ என்று தோன்றுகிறது. ‘வாங்க பேசித் தீர்க்கலாம்’ என்று ஒருவர் கதறிக் கொண்டிருந்தாலும் அதை பிடிவாதமாக ஏற்க மறுக்கும் திவ்யாவின் தரப்பிலும் தவறு இருக்கிறது. பேசி பேசித்தான் உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.  BB TAMIL 9 DAY 85 பாரு + சான்ட்ரா = சந்தர்ப்பவாத டாக்ஸிக் கூட்டணி “என் புருஷன் போன போது நான் டிராமா பண்ணதா சொன்னாங்க.. இப்ப விக்ரம் பண்றதுக்கு பேரு என்னவாம்?” என்று சந்தடி சாக்கில் தன்னுடைய இமேஜை சரி செய்து கொள்ள முனைகிறார் சான்ட்ரா. பிரஜின் எவிக்ட் ஆவது உறுதியாகத் தெரியாத நிலையில் சான்ட்ரா செய்த ஆவேசம் முதல், பல நாட்களுக்கு மூக்கைச் சிந்தி அழுது கத்தி ஆர்ப்பாட்டது வரை செய்த இம்சையை ஒரே வாக்கியத்தில் நியாயப்படுத்தி விட முடியாது.  ‘பாருவை நம்பாத’ என்று மற்றவர்களுக்கு ரகசியமாக உபதேசம் செய்யும் சானட்ரா, சந்தர்ப்பவாதத்திற்காக தேவையான சமயத்தில் பாருவுடன் கூட்டணி வைக்கிறார். இப்போதைய நட்பும் அப்படித்தான். ‘உன்னைப் பத்தி எனக்குத் தெரியுண்டா’ என்கிற விதத்தில்தான் பாருவும் சான்ட்ராவும் பரஸ்பரம் பழகி வருகிறார்கள்.  PR Activity பற்றிய விவாதத்தை ஆரம்பித்து சிண்டு முடிய ஆரம்பித்தார் பிக் பாஸ். “நான் ஒரு மொள்ளமாறிங்க.. நான் ஒரு முடிச்சவிக்கங்க” என்கிற கவுண்டமணி - செந்தில் காமெடியைப் போல பல போட்டியாளர்களின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறியது. ஒருவரையொருவர் போட்டுக் கொடுத்தார்கள். “வீட்டு வாடகை கொடுக்கறதுக்கே வக்கில்லை. நான் எங்கே PR வெக்கறது?” என்று சிரிக்க வைத்தார் வினோத்.  இன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகும் பல பதிவுகளை, கமெண்ட்டுகளை  உண்மையான ரசிகர்கள் எழுதுகிறார்களா, அல்லது சம்பந்தபட்ட ஆசாமியின் PR டீம் எழுதுகிறார்களா என்பது நிறைய குழப்பங்களையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எப்படியாவது வெற்றியைப் அடைந்து  விட வேண்டும் என்பதற்காக பல்வேறு குறுக்கு வழியைத் தேடும் வெறி இன்று அதிகமாகி விட்டது. நேர்மையாக ஆடி வெற்றியை நோக்கி நகரும் sportsmanship அரிதாகி விட்டது. PR என்பது பெரிய வணிகமாகவே இன்று மாறியிருக்கிறது. BB TAMIL 9 DAY 85 ‘சுபிக்ஷா மீது வினோத்திற்கு பொறாமையா?’ “மீனவ சமூகத்திலிருந்து ஒரு பெண்ணா முதன்முறையா பிக் பாஸ் வந்திருக்கேன். சமூகம் என்னைக் காப்பாற்றும்” என்கிற மாதிரி சுபிக்ஷா சொன்ன போது “நீ மட்டும் வரலை. நிறைய பேர் இருக்காங்க” என்று வினோத் உறுமியதில் பொறாமைதான் தெரிந்தது. “நான் அப்படிச் சொல்லலை” என்று பிறகு அவர் சமாளித்தாலும், இந்தப் பாயிண்ட்டை பிடித்து சுபிக்ஷா முன்னேறி விடுவாளோ என்கிற போட்டி மனப்பான்மையை பார்க்க முடிந்தது. சுபிக்ஷாவும் வினோத்தும் விளிம்புநிலை சமூகத்திலிருந்து மேலே ஏறி வர முயல்பவர்கள்தான். எனில் ஏன் இந்தப் பொறாமை?  இந்த வார நாமினேஷன் ரணகளமாக நடந்தது. இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதால் சங்கடங்களை உதறி இறங்கி அடித்து காரணங்களைச் சொன்னார்கள். ஏற்கெனவே குறிப்பிட்டது போல திவ்யாவிற்காக ஆட்சேகரபமான காரணங்களை விக்ரம் சொன்னது தவறு. திவ்யா இதை கூலாக எதிர்கொண்டது நன்று.  பாருவும் கம்முவும் தங்களின் முகமூடிகளைக் கழற்றி விட்டு உக்கிரமாக அடித்துக் கொண்டார்கள். ஆனால் இவர்களின் ரொமான்ஸ் டிராமா இத்துடன் முடிவிற்கு வருமா என்பது சந்தேகம்தான். ‘ஸாரி பாரு.. ‘என்று பரிதாபமான முகத்துடன் கம்மு வந்திருக்கிறார். ‘இட்ஸ் ஓகே பேபி.. இனிமே இப்படி பேசாத’ என்று பாரு மீண்டும் உரசிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இனிமேல் ‘வீட்டு தல’ என்று யாரும் இல்லாததால் இந்த வாரம் அனைவருமே நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இந்த வாரமாவது தகுதியற்ற போட்டியாளர் வெளியேறுமாறு மக்கள் தீர்ப்பளிப்பார்களா.. மன்னிக்கவும் ..பிக் பாஸ் டீம் முடிவு செய்யுமா? BB Tamil 9 Day 85 தகுதியுள்ளவர்களுக்கு வெற்றி - ஆனால் அது நடக்குமா? டிக்கெட் டூ பினாலே - 1 டாஸ்க்கில் சிலுவையில் அறைவது போல ஸ்டாண்ட் மீது போட்டியாளர்கள் நிற்கப்பட்டார்கள். கை வலி தாங்காமல் முதலில் இறங்கியவர் சான்ட்ரா. அடுத்து இறங்கியவர் விக்ரம். கட்டையை விட்டு கையை விலக்கி விட்டு ‘அய்யோ’ என்று தலையில் அடித்துக்கொண்ட வினோத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.  போட்டியின் முடிவு தெரிவதற்குள் எபிசோட் முடிந்து விட்டாலும், ஒன்றாவது டாஸ்க்கில் சுபிக்ஷா வென்றிருப்பதாக தெரிகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து வென்று டிக்கெட்டைப் பெறுபவர் யார் என்று பார்க்க வேண்டும். அது யாராக இருந்தாலும் தகுதியுள்ளவர் பெற்றால் மகிழ்ச்சி.  ஒருவேளை பாருவை வின்னராகவும் சான்ட்ராவை ரன்னர் - அப்- ஆகவும் அறிவித்து ஆட்டம் முடிந்தால், இந்த பிக் பாஸ் சீசன் 9 என்கிற வஸ்த்துவை விரைவில் குழி தோண்டிப் புதைத்து விடலாம். 

விகடன் 30 Dec 2025 1:07 pm

BB Tamil 9: இது ரொம்ப Cheap-ஆ இருக்கு - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9: நான் அந்த ஃபீலிங்ல விளையாடப்பட்டுடேனோன்னு தோணுது- கம்ருதீனை நாமினேட் செய்த பாரு BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கால் மோதல் நடக்கிறது. நீ யாரு என் மேல கை வைக்க. என் கிட்ட மன்னிப்பு கேட்கணும். இல்லன்னா விட மாட்டேன் எனக் கம்ருதீன், பார்வதியிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார். நீ மட்டும் என் மேல கை வைக்கலையா? இது ரொம்ப சீப்பா இருக்கு கம்ருதீன். உன்கிட்ட மன்னிப்புலாம் கேட்க முடியாது. நான் என்ன பண்னேன் எனப் பார்வதி அழுகிறார்.

விகடன் 30 Dec 2025 1:01 pm

BB Tamil 9: இது ரொம்ப Cheap-ஆ இருக்கு - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9: நான் அந்த ஃபீலிங்ல விளையாடப்பட்டுடேனோன்னு தோணுது- கம்ருதீனை நாமினேட் செய்த பாரு BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கால் மோதல் நடக்கிறது. நீ யாரு என் மேல கை வைக்க. என் கிட்ட மன்னிப்பு கேட்கணும். இல்லன்னா விட மாட்டேன் எனக் கம்ருதீன், பார்வதியிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார். நீ மட்டும் என் மேல கை வைக்கலையா? இது ரொம்ப சீப்பா இருக்கு கம்ருதீன். உன்கிட்ட மன்னிப்புலாம் கேட்க முடியாது. நான் என்ன பண்னேன் எனப் பார்வதி அழுகிறார்.

விகடன் 30 Dec 2025 1:01 pm

சாவித்திரி-தாமரையின் சதி வேலையால் அவமானப்படுவாரா ராஜாங்கம்? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்-சேதுவின் திருமண நாளுக்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது. பின் தமிழ்-சேது இருவரும் ஜோடியாக வந்தார்கள். அதை பார்த்து அப்பத்தா-ராஜாங்கம் சந்தோசப்பட்டார். பின் பத்து ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க எல்லோரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். கோயிலில் திருமண ஜோடிகளுக்கு கொடுக்கும் சீர்வரிசியை பார்த்து ஈஸ்வரி, சாவித்திரி இருவரும் வாயை பிளந்தார்கள். கோயிலில் தமிழ்-சேது திருமண நாளை முன்னிட்டு கோலாகலமாக 10 ஜோடிகளுக்கான இலவச சீர்வரிசைகள் இறங்கி இருக்கிறது. 10 […] The post சாவித்திரி-தாமரையின் சதி வேலையால் அவமானப்படுவாரா ராஜாங்கம்? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Dec 2025 12:57 pm

கதறி அழுத ரோகினி, அண்ணாமலை எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி கதை சொல்லி முடிக்க மீனா கதை சூப்பராக இருப்பதாக சொல்லி பாராட்டுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் ரோகினி வந்து மனோஜ் ரொம்ப கடன் தொல்லைல மாட்டிகிட்டு இருக்காரு நீங்க ஒரு அஞ்சு லட்சம் கொடுத்து உதவினீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்ல உடனே பார்வதி நேராக சிவனிடம்...

தஸ்தர் 30 Dec 2025 12:20 pm

Cinema Roundup 2025: இந்தாண்டு பேசுபொருளான சினிமா நிகழ்வுகள் |முழு தொகுப்பு

லவை2025-ம் ஆண்டு இறுதி நாட்களை எட்டியிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு அதிகம் பேசு பொருளான, கவனம் ஈர்த்த 25 நிகழ்வுகள் குறித்து பார்ப்போம். * கன்னடத்தில் சிக்கலைச் சந்தித்த தக் லைஃப்: கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தக் லைஃப் திரைப்படத்தின் புரொமோஷனில் கமல்ஹாசன் 'கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது' என்று கூறிய கருத்தால் கர்நாடகாவில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்க மறுத்தார். இதனால் இத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. Thug Life * காந்தாரா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்: IFFI 2025 நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் மேடையில் பேசிய நடிகர் ரன்வீர் சிங், `காந்தாரா' திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போல் பாவித்ததும், படத்தில் வரும் பெண் தெய்வ கதாபாத்திரத்தைப் பெண் பேய் என்று குறிப்பிட்டதும் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளானது. அதன் பின் அவர் அதற்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. * பணி நேரம் குறித்து பேசிய நடிகை தீபிகா படுகோனே: இந்த ஆண்டு நிறைய தொழிலதிபர்களும், பிரபலங்களும் ஒரு நாளின் சராசரி பணி நேரம் குறித்து பேசி வந்தனர். அந்த வரிசையில் நடிகை தீபிகா படுகோனேவும் சினிமாவில் பணி நேரம் குறித்து பேசியிருந்தார். 'ஒரு நாளைக்கு 8 மணி நேரப் பணி நேரம் மனித உடலுக்கும், மனதுக்கும் போதுமானது' என்றார் அவர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதன் பிறகு அவர் அடுத்தடுத்து கைவசம் வைத்திருந்த திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. * நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிக்கானின் வீட்டில் புகுந்து சிலர் அவரை கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதில் அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சைஃப் அலிகான். * வார்னர் பிரதர்ஸை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்: பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பொருளாதாரக் காரணங்களுக்காக ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு கேட்ட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வார்னர் பிரதர்ஸை வாங்கியது. Netflix Warner Bros buyout * யூடியூபில் படத்தை வெளியிட்ட அமீர் கான்: நடிகர் அமீர் கான் தயாரித்து நடித்த திரைப்படம் 'சித்தாரே ஜமீன் பர்'. ஆட்டிசம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் திரையரங்க வெளியீட்டில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஓடிடி வெளியீட்டுக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் திரைப்படத்தை நேரடியாக யூடியூபில் வெளியிட்டார் அமீர் கான். இம்முடிவு பெரும் விவாதப்பொருள் ஆனது. * வெளியான பாகுபலி எபிக்: பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து, மொத்தமாக எடிட் செய்து 'பாகுபலி எபிக்' என்று இந்த ஆண்டு வெளியிட்டனர். * விலைக்கு வந்த பிரேக்கிங் பேட் வீடு: உலகெங்கும் பெரும் ரசிகர் பலம் கொண்ட வெப் தொடர் 'பிரேக்கிங் பேட்'. அந்தத் தொடரில் வரும் வால்டர் வைட் பயன்படுத்திய வீடு இந்த ஆண்டு ஏலத்திற்கு வந்தது. அல்பகர்கியூ நகரில் உள்ள இந்த வீடு 4 மில்லியன் டாலர் விலை போனது. * திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா: நடிகை சமந்தா சமீபத்தில் பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இயக்கத்தில் சமந்தா 'ஃபேமிலி மேன்', 'சிட்டாடல்' ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்திருக்கிறார். Actor Dileep * நிரபராதி என அறிவிக்கப்பட்ட திலீப்: கடந்த 2017-ம் ஆண்டு, நடிகையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார் மலையாள நடிகர் திலீப். இந்த வழக்கில் இத்தனை ஆண்டுகள் விசாரணைக்குப் பின் திலீப் மீது தவறில்லை என்று சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. * ஆஸ்கர் குறித்து பேசிய கங்கனா: நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்த எமர்ஜென்சி திரைப்படம் ஆஸ்கர் வென்றிருக்க வேண்டும் என்று ஆன்லைனில் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு 'அவர்களது குப்பை ஆஸ்கரை அவர்களே வைத்துக் கொள்ளட்டும், நம்மிடம் தேசிய விருதுகள் உள்ளன' என்று பதிலளித்திருந்தார் கங்கனா. * எம்புரான் பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'லூசிஃபர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் முதல் பாதியில் வந்த காட்சிகள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த முசாபர் நகர் கலவரத்தைத் தழுவியது போல் இருப்பதாக விமர்சனங்கள் வர, அடுத்தடுத்துக் கண்டனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது. * தவறாகச் சித்தரித்த கிங்டம்: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் திரைப்படத்தில் ஈழத்தமிழர்களையும், ஈழப் போரையும் தவறாகச் சித்தரித்து சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளிடம் படம் கடும் கண்டனங்களைப் பெற்றது. திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. Kingdom Movie * ரசிகைக்கு முத்தம்; விமர்சிக்கப்பட்ட உதித் நாராயணன்: பிரபல பாடகர் உதித் நாராயணன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரசிகை ஒருவர் அவருடன் புகைப்படம் எடுக்க முற்பட்டார். அப்போது அவர் அந்த ரசிகைக்கு முத்தம் கொடுத்தது சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. * நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: இந்திய அளவில் திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு தேர்வானார் பிரபல மலையாள நடிகர் மோகன்லால். 71-வது தேசிய திரைப்பட விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருது பெற்றார். *திருமணத்தை அறிவித்த நடிகர் விஷால்: பல ஆண்டுகளாகத் திருமணத்தைத் தவிர்த்து வந்த நடிகர் விஷால் இந்த ஆண்டு தனது திருமணம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார். நடிகை சாய் தன்ஷிகாவும் தானும் காதலித்து வருவதாக அறிவித்த அவர், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறினார். ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. நடிகர் அஜித் குமார் *பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார்: இந்த ஆண்டு, இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார். ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்.

விகடன் 30 Dec 2025 11:58 am

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா இருவரும் சுந்தரவல்லியை பாராட்டி பேசுகின்றனர். இது என்ன இருக்கு இதுக்கு மேல நான் ஆட...

தஸ்தர் 30 Dec 2025 11:47 am

BB Tamil 9: ``வன்மம் வீழ்த்தப்பட்டது - பார்வதியைக் கலாய்த்த கமருதீன்; ஆத்திரத்தில் விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை விக்ரம் வாசிக்கிறார். BB Tamil 9: எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா- ஆக்ரோசமான விக்ரம் BB Tamil 9 அந்த அறிவிப்பில், நடுவில் இருக்கும் பெட்டியில் பந்துகள் இருக்கும். அதில் வெள்ளைப் பந்துகள், கருப்புப் பந்துகள் இரண்டு கோல்டன் நிறப் பந்துகள் இருக்கும். எடுக்கும் பந்தை மாற்றக்கூடாது. போட்டியாளர்கள் மற்றவர் எடுக்கும் பந்துகளின் பாஸ்கெட்டிலிருந்து பந்துகளை எடுக்கலாம். இறுதி பஸ்ஸர் அடிக்கும்போது உங்களிடம் கருப்புப் பந்து இருந்தால் அவுட். ஒவ்வொரு போட்டியாளரும் ஆக்ரோஷமாக விளையாடும் காட்சி ஒளிபரப்பப்படுகிறது. பார்வதி, வினோத் பாஸ்கெட்டிலிருந்து பந்தை எடுக்க முயல்கிறார். திவ்யா பந்துகளைப் பிடிங்கிச் செல்லும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. இறுதியில் பார்வதி, கமருதீனிடம், ``கேவலமா இருக்கு உன் கேம்... நீ ரொம்ப நல்லவனோ... நீ என்ன ஹீரோவா நான்தான் வில்லியா எனச் சண்டையிடுகிறார். கமருதீன் சிரித்துக்கொண்டே, வன்மம் வீழ்த்தப்பட்டது எனப் பேசுகிறார். டிக்கெட் டூ ஃபினாலே பிக்பாஸ் நிகழ்ச்சியும் முக்கியமான அம்சம் என்பதால் யார் வெற்றிப்பெறப்போகிறார்கள் என்பது இன்று நிகழ்ச்சியில் தெரியவரும்.

விகடன் 30 Dec 2025 11:09 am

சகுனி வேலை செய்யும் சித்தப்பா, சூழ்ச்சியை கண்டுபிடித்த விஜய், காவேரி –விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா, சாரதா இருவரும் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருப்பதை கவனித்த விஜயின் தாத்தா, அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். இன்னொரு பக்கம் வேலையெல்லாம் முடித்துவிட்டு விஜய்-காவிரி இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது சோர்வாக இருப்பதால் காவிரி, டீ கேட்டார். பின் விஜய்யும் காவிரி சாப்பிடுவதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி கொடுத்து ஆபீஸில் நடந்ததை பற்றி எல்லாம் பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். அடுத்த நாள் காலையில் தாத்தா, பாட்டி இருவரும் விஜய்யை […] The post சகுனி வேலை செய்யும் சித்தப்பா, சூழ்ச்சியை கண்டுபிடித்த விஜய், காவேரி – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Dec 2025 10:58 am

Serial Rewind 2025: சர்ச்சை கிளப்பிய 'இவருக்குப் பதில் இவர்', சங்கத்தை உடைத்த ஆளுங்கட்சி?

2025ல் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட சில முக்கிய சம்பவங்களை இங்கு பார்க்கலாம். ஒரே இழுவை.. ஓஹோனு வாழ்க்கை! படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் சொந்த ஊரில் இருக்கும் அணைக்கட்டில் குளித்தபடி, 'ஏங்க, எங்க ஊருக்கு வாங்க' எனத் தம் பிடித்து இழுத்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டார் விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் தங்கபாண்டி. அடுத்த சில தினங்களில் தூக்கி வந்து 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் நடிகை சாந்தினியுடன் ஜோடி சேர்த்து விட்டது ஜீ தமிழ். தங்கபாண்டி - சாந்தினி அந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பான போதே 'நிச்சயம் இவருக்குத்தான் டைட்டில், பார்க்கலாமா' எனப் பந்தயம் கட்டியவர்கள் பலர். கடைசியில் அது நடந்தே விட்டது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன தங்கபாண்டியன் சினிமா, கடை திறப்பு நிகழ்ச்சிகள் என இன்னும் கொஞ்ச நாளுக்கு பிசிதான். கூமாபட்டி தங்கபாண்டி : என்னைப் பார்த்து வயித்தெரிச்சல் படுறவங்க நல்லாருங்க; ஆனா, ஒன்னு! உள்ளே வெளியே ஆட்டம்! 'இவருக்குப் பதில் இவர்' என இந்தாண்டு நடந்த சில மாற்றங்கள் ரொம்பவே பேசப்பட்டன. 'எதிர் நீச்சல்' இரண்டாவது சீசனில் நடித்து வந்த நடிகை கனிகா தொடரிலிருந்து திடீரென வெளியேறினார். 'பர்சனல் காரணங்கள்' என அவரே விருப்பப்பட்டு வெளியேறியதாக ஒரு சிலர் சொல்ல, 'தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கிடைக்காத அதிருப்தியில் வெளியேறினார்' என்றனர் வேறு சிலர். இன்னும் சிலரோ 'வெளிநாட்டில் செட்டில் ஆகப் போகிறார்' என்றார்கள். கனிகா எது நிஜமெனத் தெரியவில்லை, ஆனால் சீரியலில் இருந்து வெளியேறிய அடுத்த மாதங்களிலேயே ஜீ தமிழ் சேனலில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஜட்ஜ்ஜாகப் போய் அமர்ந்து விட்டார். 'எதிர் நீச்சல்' யூனிட்டோ இன்னும் அவரது கேரக்டருக்கு வேறு ஆர்ட்டிஸ்ட்டைக் கமிட் செய்ததாகத் தெரியவில்லை. இன்னொரு ஆள் மாற்றத்தின் பின்னணியிலும் சர்ச்சை இருந்தது. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' தொடரில் ஹீரோவாக நடித்த சிபு சூர்யன் வெளியேற, அவருக்குப் பதில் ஸ்ரீ குமார் வந்தார். தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் சாயா சிங்குடன் சிபுவுக்கு ஏதோ பிரச்னை என்றார்கள். 'அவர் சீரியலில் தொடர்ந்தால், நான் வெளியேறி விடுகிறேன்' என சாயா சிங் சொன்னதும், சிபு அனுப்பப்பட்டதாகக் கூறினார்கள். செய்திக்கே செய்தி! ஊரில் நடப்பதையெல்லாம் நமக்குச் சொல்கிற செய்தி வாசிப்பாளர்களின் சங்கம் இரண்டு பட்டது இந்த ஆண்டில்தான். தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்தது. பிரபுதாசன் என்பவர் முயற்சியில் உருவான தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கம் ஆரம்பத்தில் சுமூகமாக இயங்கியது. ஒரு கட்டத்தில் உறுப்பினர்கள் சிலர் பிரபுதாசனைக் கேள்வி கேட்டதில் இரண்டு அணியாகப் பிரிந்தார்கள். பிரிந்த ஒரு சாரார் கூடி தேர்தலை அறிவித்து, அதில் வென்றவர்களை புதிய நிர்வாகிகளாக அறிவித்தனர். A I செய்தி வாசிப்பாளர் லிசா பிரபுதாசன் ஆதரவுத் தரப்போ, 'சங்கத்த்தின் அத்தனை ஆவணங்களும் எங்களிடமே இருக்கின்றன. அவர்கள் இந்தச் சங்கத்தின் பெயரையே பயன்படுத்தக் கூடாது. ஆனால் அமைச்சரைக் கூட்டி வந்து பதவி எற்பு விழா நடத்துகிறார்கள். இதிலிருந்தே சங்கம் பிளவுபட்டதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். நாங்கள் இதை இப்படியே விட மாட்டோம். சட்டப்படி சந்திக்க இருக்கிறோம்' என்கிறது.

விகடன் 30 Dec 2025 8:14 am

Serial Rewind 2025: சர்ச்சை கிளப்பிய 'இவருக்குப் பதில் இவர்', சங்கத்தை உடைத்த ஆளுங்கட்சி?

2025ல் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட சில முக்கிய சம்பவங்களை இங்கு பார்க்கலாம். ஒரே இழுவை.. ஓஹோனு வாழ்க்கை! படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் சொந்த ஊரில் இருக்கும் அணைக்கட்டில் குளித்தபடி, 'ஏங்க, எங்க ஊருக்கு வாங்க' எனத் தம் பிடித்து இழுத்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டார் விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் தங்கபாண்டி. அடுத்த சில தினங்களில் தூக்கி வந்து 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் நடிகை சாந்தினியுடன் ஜோடி சேர்த்து விட்டது ஜீ தமிழ். தங்கபாண்டி - சாந்தினி அந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பான போதே 'நிச்சயம் இவருக்குத்தான் டைட்டில், பார்க்கலாமா' எனப் பந்தயம் கட்டியவர்கள் பலர். கடைசியில் அது நடந்தே விட்டது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன தங்கபாண்டியன் சினிமா, கடை திறப்பு நிகழ்ச்சிகள் என இன்னும் கொஞ்ச நாளுக்கு பிசிதான். கூமாபட்டி தங்கபாண்டி : என்னைப் பார்த்து வயித்தெரிச்சல் படுறவங்க நல்லாருங்க; ஆனா, ஒன்னு! உள்ளே வெளியே ஆட்டம்! 'இவருக்குப் பதில் இவர்' என இந்தாண்டு நடந்த சில மாற்றங்கள் ரொம்பவே பேசப்பட்டன. 'எதிர் நீச்சல்' இரண்டாவது சீசனில் நடித்து வந்த நடிகை கனிகா தொடரிலிருந்து திடீரென வெளியேறினார். 'பர்சனல் காரணங்கள்' என அவரே விருப்பப்பட்டு வெளியேறியதாக ஒரு சிலர் சொல்ல, 'தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கிடைக்காத அதிருப்தியில் வெளியேறினார்' என்றனர் வேறு சிலர். இன்னும் சிலரோ 'வெளிநாட்டில் செட்டில் ஆகப் போகிறார்' என்றார்கள். கனிகா எது நிஜமெனத் தெரியவில்லை, ஆனால் சீரியலில் இருந்து வெளியேறிய அடுத்த மாதங்களிலேயே ஜீ தமிழ் சேனலில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஜட்ஜ்ஜாகப் போய் அமர்ந்து விட்டார். 'எதிர் நீச்சல்' யூனிட்டோ இன்னும் அவரது கேரக்டருக்கு வேறு ஆர்ட்டிஸ்ட்டைக் கமிட் செய்ததாகத் தெரியவில்லை. இன்னொரு ஆள் மாற்றத்தின் பின்னணியிலும் சர்ச்சை இருந்தது. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' தொடரில் ஹீரோவாக நடித்த சிபு சூர்யன் வெளியேற, அவருக்குப் பதில் ஸ்ரீ குமார் வந்தார். தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் சாயா சிங்குடன் சிபுவுக்கு ஏதோ பிரச்னை என்றார்கள். 'அவர் சீரியலில் தொடர்ந்தால், நான் வெளியேறி விடுகிறேன்' என சாயா சிங் சொன்னதும், சிபு அனுப்பப்பட்டதாகக் கூறினார்கள். செய்திக்கே செய்தி! ஊரில் நடப்பதையெல்லாம் நமக்குச் சொல்கிற செய்தி வாசிப்பாளர்களின் சங்கம் இரண்டு பட்டது இந்த ஆண்டில்தான். தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்தது. பிரபுதாசன் என்பவர் முயற்சியில் உருவான தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கம் ஆரம்பத்தில் சுமூகமாக இயங்கியது. ஒரு கட்டத்தில் உறுப்பினர்கள் சிலர் பிரபுதாசனைக் கேள்வி கேட்டதில் இரண்டு அணியாகப் பிரிந்தார்கள். பிரிந்த ஒரு சாரார் கூடி தேர்தலை அறிவித்து, அதில் வென்றவர்களை புதிய நிர்வாகிகளாக அறிவித்தனர். A I செய்தி வாசிப்பாளர் லிசா பிரபுதாசன் ஆதரவுத் தரப்போ, 'சங்கத்த்தின் அத்தனை ஆவணங்களும் எங்களிடமே இருக்கின்றன. அவர்கள் இந்தச் சங்கத்தின் பெயரையே பயன்படுத்தக் கூடாது. ஆனால் அமைச்சரைக் கூட்டி வந்து பதவி எற்பு விழா நடத்துகிறார்கள். இதிலிருந்தே சங்கம் பிளவுபட்டதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். நாங்கள் இதை இப்படியே விட மாட்டோம். சட்டப்படி சந்திக்க இருக்கிறோம்' என்கிறது.

விகடன் 30 Dec 2025 8:14 am

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இது மோசமான ஆண்டு! - எப்படி இருந்திருக்கிறது 2025 கோலிவுட்? | ஒரு பார்வை

ஆண்டின் இறுதி நாட்கள் வந்துவிட்டது! ஒவ்வொரு வருடமும், சினிமாவில் பல எதிர்பாராத அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சற்று, இந்தாண்டின் சினிமாக்களையும் திரும்பிப் பார்த்தால், வருடந்தோறும் நிகழும் அதே அற்புதம் இந்தாண்டும் வெகு சிறப்பாகவே நிகழ்ந்திருக்கிறது. ஆம், இந்தாண்டு பல சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் நம் விஷ் லிஸ்டில் இடம் பிடித்ததோடு பாக்ஸ் ஆஃபீஸிலும் பெரும் வசூலை ஈட்டியிருக்கிறது. Tourist Family Movie இது ஒரு புறமிருந்தாலும், இந்த வருடம் பாதி முடிவடைந்த நேரத்திலேயே திரையரங்கு உரிமையாளர்கள், ``இந்தாண்டு மிக மோசமானதாக தொடர்ந்து வருகிறது. பெரிய படங்கள் நாங்கள் கணித்ததைப் போல எங்களுக்கு கைகொடுக்கவில்லை! என அவர்களுடைய வருத்தங்களைச் சொல்லத் தொடங்கினர். இந்தாண்டு வெளியாவதற்கு திட்டமிட்டிருந்த அத்தனை படங்களும் வெளியாகி விட்டன. கடைசியாக டிசம்பர் 25-ம் தேதி 'ரெட்ட தல' படமும், 'சிறை' திரைப்படமும் ரிலீஸ் ஆகியிருந்தன. இந்த வருடத்தின் ரிலீஸ் கணக்குகள் அத்தோடு முடிவடைந்துவிட்டன. இப்படியான சமயத்தில், 2025-ம் ஆண்டு கோலிவுட்டுக்கு எப்படியான வருடமாக அமைந்திருக்கிறது என்ற கேள்வியோடு முதலில் தயாரிப்பாளர் மற்றும் சினிமா வணிக ஆய்வாளரான தனஞ்செயனைத் தொடர்புக் கொண்டோம். ''இந்தாண்டு எத்தனை படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்தன? எப்படியான வகைகளில் அவை லாபம் தந்தன? இந்தாண்டு தயாரிப்பாளர்களுக்கு எப்படியானதாக இருந்திருக்கிறது? என அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவான பதிலை நம்மிடையே பகிர்ந்து கொண்ட தனஞ்செயன், இந்தாண்டு மட்டும் தமிழ் சினிமாவில் மொத்தமாக 285 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதிகமான திரைப்படங்கள் வெளியான ஆண்டு என இந்த வருடத்தை நாம் குறிப்பிடலாம். Dhananjeyan அந்த 285-ல், 35 திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமானதாக அமைந்திருக்கிறது. இந்த 35 படங்களில் சிலவற்றுக்குத் திரையரங்குகளில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்காது. ஆனால், அவை ஓடிடி, டிஜிட்டல் உள்ளிட்ட பிசினஸ் மூலம் லாபத்தை தொட்டிருக்கின்றன. சினிமாவில் வணிக ரீதியான வெற்றி என்பதே மிக முக்கியமானது. கடந்தாண்டு 25 திரைப்படங்கள் மட்டுமே லாபங்களை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தன. இந்தாண்டு அந்தக் கணக்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், 2023, 2024-ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தாண்டில் திரையரங்க வசூல் குறைந்திருக்கிறது. இதற்கு கன்டென்ட்தான் முக்கியமான காரணம். சில திரைப்படங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபகரமான இடத்தை அடைந்துவிடுகிறது. ஆனால், தியேட்டரில் ஒரு படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு என்பது மிக முக்கியமானது. அதே சமயம் தயாரிப்பாளருக்கு வணிக ரீதியான வெற்றி என்பது பிரதானமானது. ஒன்றை நம்பித்தான் தயாரிப்பாளர் எப்போதும் செயல்படுவார். முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கு மீண்டும் பணம் கிடைக்க வேண்டும். இன்றைய தேதியில், ஒரு தயாரிப்பாளருக்கு தியேட்டர் 20 சதவீத வருவாயை ஈட்டித் தருகிறது. கிட்டத்தட்ட 38 சதவீத வருவாயை ஓடிடி பிசினஸ் மூலம் அவர்கள் எடுக்கிறார்கள். என்றவர், அடுத்த வருடம் இந்த லாபத்தை தொடும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்! எனப் பேசினார். Theatres | தியேட்டர் (Representational image) '2025-ம் ஆண்டு திரையரங்க உரிமையாளர்களுக்கு எப்படியான ஆண்டாக அமைந்திருக்கிறது?' என்ற கேள்வியுடன் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம். நம்மிடையே பேசியவர், சொல்லப்போனால், திரையரங்க உரிமையாளர்களுக்கு 2025 மிக மோசமான ஆண்டு. கடந்த 100 ஆண்டுக்கால தமிழ் சினிமா வரலாற்றிலேயே இந்த 2025-தான் மோசமான ஆண்டாக எங்களுக்கு அமைந்திருக்கிறது. திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் (Footfall) பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இந்தாண்டு வெளியான பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் நாங்கள் நினைத்தப்படி சோபிக்காததுதான் இந்த வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம். 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'மாமன்', 'தலைவன் தலைவி', 'டிராகன்' போன்ற படங்கள்தான் இந்த வருடம் திரையரங்குகளைக் காப்பாற்றி இருக்கின்றன. இந்த வருடத்தில் இருந்தது போன்ற ஃபுட்ஃபால் இருந்தால் உரிமையாளர்கள் திரையரங்கத்தை நடத்துவது மிகக் கடினம். 2023, 2024-ம் ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தாண்டு கிட்டத்தட்ட 40 சதவீத ஃபுட்ஃபால் குறைந்திருக்கிறது. ஓடிடி தளங்களில் மிகக் குறுகிய இடைவெளிகளில் படம் வெளியாவது, நல்ல கண்டென்ட் கொண்ட திரைப்படங்கள் பெரியளவில் வராததுதான் இந்த சரிவுக்கு முக்கியமான காரணங்களாக நான் சொல்வேன். திருப்பூர் சுப்ரமணியம் தனி மனித தாக்குதல் செய்யப்படுவது மாதிரியான மோசமான விமர்சனங்கள் முதல் நாளிலேயே வருவதும் இதற்கொரு காரணம். என்றவர், திரையரங்கிற்கு வெளியே எடுக்கப்படும் விமர்சனங்களில் நிறை, குறைகளை சொல்லும் விதத்தில் சொல்லலாம். ஒரு உணவகத்திற்கு வெளியே நின்றுக் கொண்டு 'இந்த ஹோட்டலில் உணவு தரமாக இல்லை. உணவகத்தில் சுகாதாரம் கிடையாது' எனச் சொன்னால், சாப்பிடுவதற்கு யார் வருவார்கள்?! அதே ஃபார்முலாதான் இங்கும். என்றார். தொடர்ந்து பேசியவர், அடுத்தாண்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசியிருக்கிறோம். பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கண்டென்ட் இல்லையென்றால் நாங்கள் திரையரங்கிற்கு வரமாட்டோம் என 2025-ம் ஆண்டில் மக்கள் நிரூபித்துவிட்டார்கள். மக்கள் விரும்பும் விஷயங்களை தயாரிப்பாளர்கள் புரிந்துக் கொண்டால் 2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு ஆண்டாக அமையும். மலையாளத்திலும், இந்தியிலும் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியாகிறது. ஆனால், இங்கு நான்கு வாரத்திற்கு உள்ளாகவே ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுதால், திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்கவும் பேசி வருகிறோம். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் சினிமாவும் நன்றாக இருக்கும். இந்த வருடத்தில் பெரும் நஷ்டங்களை அவர்கள் சந்தித்துவிட்டார்கள். என்றார் வருத்தத்துடன். OTT Platform இவரைத் தொடர்ந்து நம்மிடையே பேசிய சென்னை ரோகிணி திரையரங்கத்தின் உரிமையாளர் ரேவந்த், வருடத்திற்கு வருடம், மற்ற மொழி படங்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை நாங்கள் நேர்மறையான விஷயமாகப் பார்க்கிறோம். இந்தாண்டு, 'காந்தாரா', 'லோகா' போன்ற படங்களுக்கு இங்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. இப்போதுதான் தமிழ் ஆடியன்ஸ், தமிழை தாண்டி மற்ற தென்னிந்திய சினிமாக்களை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தி படங்களும் 'காந்தாரா', 'லோகா' படங்களைப் போல அதிரடியான வரவேற்பை பெறுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்.என்றவர், 'அவதார்' திரைப்படம் இந்த டிசம்பர் மாதத்தில் எங்களுக்கு ஆடியன்ஸைக் திரையரங்குகளுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால், நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த மற்ற ஹாலிவுட் படங்கள் இந்தாண்டு பெரியளவில் வசூல் ஈட்டவில்லை. அதுபோல, இந்தாண்டு சில ரீ-ரிலீஸ் படங்களும் எங்களுக்கு கைக் கொடுத்திருக்கிறது எனலாம். சில பெரிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்த்தோம். அதில் இந்தாண்டு எங்களுக்கு ஏமாற்றம்தான். இந்த வருடம் விஜய் சாரின் படம் வெளியாகாததையும் குறையாகப் பார்க்கிறோம். வருடந்தோறும் அவருடைய படம் வெளியாகி நல்லதொரு லாபத்தை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். அது இந்த வருடம் தவறிவிட்டது. இந்தாண்டு பல சின்ன திரைப்படங்கள் மேஜிக்குகளை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தாண்டும் இது தொடர வேண்டும் என்பதே எங்களின் ஆசை. அதுபோல, இந்தாண்டைப் போலில்லாமல் அடுத்தாண்டு அனைத்து பெரிய திரைப்படங்களும் சோபிக்க வேண்டும். எனக் கூறினார்.

விகடன் 30 Dec 2025 7:30 am

சாதி வைத்து என்னை பேசாதீர்கள் –மேடையில் ஆவேசமாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் […] The post சாதி வைத்து என்னை பேசாதீர்கள் – மேடையில் ஆவேசமாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 29 Dec 2025 9:40 pm

Retta Thala Trailer Launch

தஸ்தர் 29 Dec 2025 8:34 pm

99 66 Movie Stills

தஸ்தர் 29 Dec 2025 8:31 pm

Akhanda 2 Press Meet

தஸ்தர் 29 Dec 2025 8:30 pm

Akhanda 2 Press Meet

தஸ்தர் 29 Dec 2025 8:30 pm

மக்களுக்கு ஏன் என்னால் பிடிக்கல –பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கனி திரு வெளியிட்ட எமோஷனல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 84 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post மக்களுக்கு ஏன் என்னால் பிடிக்கல – பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கனி திரு வெளியிட்ட எமோஷனல் வீடியோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 29 Dec 2025 8:28 pm

Kombuseevi Movie Audio Launch Stills

தஸ்தர் 29 Dec 2025 8:26 pm

Puththam Puthu Neram Movie Audio Launch

தஸ்தர் 29 Dec 2025 8:22 pm

Suriya 47 Movie Launch

தஸ்தர் 29 Dec 2025 8:21 pm

Vaa Vaathiyaar Pre Release Event

தஸ்தர் 29 Dec 2025 8:19 pm

கோபத்தில் ரோகினியின் கழுத்தை பிடிக்கும் மனோஜ், வேதனையில் உடைந்த அண்ணாமலை –சிறகடிக்க ஆசை

+விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பார்வதி, என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறான நட்பு நீதான். நீ இனிமேல் என்னை பார்க்க வராதே. உன்னுடைய கிளாஸ் இங்கு நடத்த வேண்டாம். வெளியே சென்று விடு என்று விஜயாவை திட்டிய அனுப்பி விட்டார். வீட்டுக்கு வந்த விஜயா, நடந்ததை சொல்லாமல் முத்து-மீனா என்னுடைய நட்பை பிரித்து விட்டார்கள் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே குழப்பமாக இருந்தது. முத்து, மீனா இருவரும் விஜயா […] The post கோபத்தில் ரோகினியின் கழுத்தை பிடிக்கும் மனோஜ், வேதனையில் உடைந்த அண்ணாமலை – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 29 Dec 2025 6:29 pm

The RajaSaab Trailer 2.0 (Tamil)

தஸ்தர் 29 Dec 2025 6:22 pm

போலீஸ் ஸ்டேஷன் வந்த முத்துவேல்-சத்திவேல், கோமதி குடும்பத்தை காப்பாற்றுவார்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, கதிர் இருவரும் ஆறுதல் சொல்லியுமே சரவணன் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய கோபத்தின் வெளிப்பாட்டை காண்பித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் வீட்டுக்கு வரவில்லை என்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது சரவணன், கதிர் இருவரும் குடித்திருப்பதை பாண்டியன் கண்டுபிடித்து விட்டார். இருந்தாலும் பெரிதாக திட்டாமல் பாண்டியன் சென்று விட்டார். அதற்குப்பின் ரூமிற்கு சென்ற கதிர், போதையில் ராஜி போலீசாக வேண்டும். நீ நன்றாக படி என்றெல்லாம் பேசிக் […] The post போலீஸ் ஸ்டேஷன் வந்த முத்துவேல்-சத்திவேல், கோமதி குடும்பத்தை காப்பாற்றுவார்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 29 Dec 2025 4:46 pm

சாவித்திரியின் முகத்திரையை கிழித்த காவியா, ராஜாங்கம் சொன்ன வார்த்தை –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மலர்- காவியா இருவருமே ரொம்ப ஜாலியாக நண்பர்கள் போல பேசி கொண்டார்கள். பின் இருவரும் வீட்டிற்கு சேர்ந்து வருவதை பார்த்து தமிழுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்போது காவியா, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்வதால் தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் 12 மணி ஆவதால் சேது, தமிழ்செல்வியை எழுப்பி திருமண நாள் வாழ்த்துக்களை சொல்லி கேக் வெட்ட அழைத்தார். வீட்டில் எல்லோருமே தமிழ் செல்வி-சேது திருமண நாளை […] The post சாவித்திரியின் முகத்திரையை கிழித்த காவியா, ராஜாங்கம் சொன்ன வார்த்தை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 29 Dec 2025 3:53 pm

இந்த 28 வருடங்களில் நான் பார்த்த பொக்கிஷம் ரஞ்சித் தான் - புகழ்ந்து பேசிய மிஷ்கின்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அந் தவகையில் நேற்று (டிச. 29) மிஷ்கின் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், இந்த சினிமாவில் 28 வருடங்களாக இருக்கிறேன். பா.ரஞ்சித் ஒவ்வொரு நாளும் இரண்டு சல்லடைகளால் நான் மனிதர்களை சல்லடை போட்டு பார்க்கிறேன். அதில் முதல் சல்லடை ஆளுமை. அந்த ஆளுமை என்ற சல்லடையில் போட்டு சலித்துப் பார்த்ததில் நான் ஆச்சர்யப்பட்டு பார்த்த நபர்கள்... கமல் சார், பி.சி ஸ்ரீராம், நாசர், இளையராஜா. இவர்களை எல்லாம் மிகப்பெரிய ஆளுமைகளாகப் பார்த்திருக்கிறேன். இந்த மனிதர்கள் எப்பொழுதும் என்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு சல்லடை அறம். அந்த அறத்தில் போட்டு நான் சலித்துப் பார்த்ததில் இருந்த ஒரே மனிதன் இந்த ரஞ்சித்தான். அவரின் தாய் வயிற்றில் பிறந்த மூத்த மகன் நான். இளைய மகன் ரஞ்சித். என் சினிமாவில் அறிவான நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அழுக்கான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதில் உண்மையான மனிதர்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். மிஷ்கின் அதில் முதல் நபராக ரஞ்சித்தை தான் சொல்வேன். இந்த 28 வருடத்தில் நான் பார்த்த பொக்கிஷம் இந்த ரஞ்சித். என்னுடைய அலுவலகத்துக்கு வரும்போதெல்லாம் அவனுடைய சக உறவுகளுக்கும், குடும்பங்களுக்கும் என்ன பண்ண வேண்டும் என்பதை மட்டும் தான் பேசுவார். ஒரு காசிப் (Gossip) கூட பேசமாட்டார். அவர் பேசுவது எல்லாம் அறம் தான். ரஞ்சித் ஒரு மார்ட்டின் லூதர் கிங் என்று மிஷ்கின் ரஞ்சித் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 29 Dec 2025 3:00 pm

பல்லவன் அம்மா சொன்ன விஷயத்தால் ஆடிப்போன நிலா, வெளிவருமா உண்மை? அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சந்தா, சேரனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் கடைக்கு வந்த வானதி, பணத்தை ரெடி பண்ணி விட்டாயா? கடைக்கு என்ன பெயர் வைக்க போகிறாய்? என்னிடம் சொல்லவில்லை என்றாலும் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தார். அதற்கு பாண்டியன், நல்ல நாள் பார்த்து சொல்கிறேன். கடையின் பெயர் சர்பிரைஸ் என்றார். பின் சேரன், சோழன் எல்லோருமே பணத்தை எடுத்துக்கொண்டு பாண்டியன் கடைக்கு சென்று முதலாளி இடம் கொடுத்தார்கள். சேரன் மூன்று […] The post பல்லவன் அம்மா சொன்ன விஷயத்தால் ஆடிப்போன நிலா, வெளிவருமா உண்மை? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 29 Dec 2025 3:00 pm

ஜனநாயகம் vs பராசக்தி ஜெயிக்கப் போவது யார்?வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நேற்று முன்தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. அதேசமயம் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த...

தஸ்தர் 29 Dec 2025 2:54 pm

உயிரை மாய்த்துக்கொண்ட சீரியல் நடிகை நந்தினி; டபுள் ரோலில் நடித்தவர் சோக முடிவை தேடியது ஏன்?

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி நேற்று பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் கன்னட சீரியல் மூலம் நடிப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்திருந்தவர், கௌரி தொடர் மூலம் தமிழுக்கு வந்தார். இந்த சீரியலில் கனகா, துர்கா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தார். சதீஷ் இந்த சீரியலின் ஷூட்டிங் முழுக்க ஆரம்பத்தில் பெங்களூருவிலேயே நடந்து வந்தது. எனவே பெங்களூருவில் வசித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் ஷூட்டிங்கை சென்னைக்கு மாற்றினார்களாம். எனவே கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டு தற்போது பிரேக் என்பதால் பெங்களூருவுக்குத் திரும்பினாராம். இந்நிலையில் நேற்று இரவு தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். கௌரி தொடரில் நடித்து வரும் சதீஷிடம் நாம் பேசினோம். ''கலகலப்பா பேசிட்டிருக்கிற பொண்ணு. சில தினங்களுக்கு முன்னாடிகூட ஷூட்டிங் வந்துச்சு. டபுள் ரோல்.. உற்சாகமாகத்தான் நடிச்சிட்டிருந்தாங்க. சின்னப் பொண்ணு. இன்னும் கல்யாணம் ஆகல. என்ன பிரச்னைனு தெரியல. மனசுல ஏதாவது கஷ்டம் இருந்தாகூட இருக்கிற சக நடிகர்கள்கிட்ட பேசியிருக்கலாம். ஆனா இப்படியொரு முடிவை எடுத்திருக்கு. யூனிட்ல எல்லாருக்குமே பெரிய ஷாக். சக ஆர்ட்டிஸ்ட் சிலர் பெங்களூரு போயிருக்காங்க'' என்றார் அவர்.

விகடன் 29 Dec 2025 2:52 pm

உயிரை மாய்த்துக்கொண்ட சீரியல் நடிகை நந்தினி; டபுள் ரோலில் நடித்தவர் சோக முடிவை தேடியது ஏன்?

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி நேற்று பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் கன்னட சீரியல் மூலம் நடிப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்திருந்தவர், கௌரி தொடர் மூலம் தமிழுக்கு வந்தார். இந்த சீரியலில் கனகா, துர்கா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தார். சதீஷ் இந்த சீரியலின் ஷூட்டிங் முழுக்க ஆரம்பத்தில் பெங்களூருவிலேயே நடந்து வந்தது. எனவே பெங்களூருவில் வசித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் ஷூட்டிங்கை சென்னைக்கு மாற்றினார்களாம். எனவே கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டு தற்போது பிரேக் என்பதால் பெங்களூருவுக்குத் திரும்பினாராம். இந்நிலையில் நேற்று இரவு தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். கௌரி தொடரில் நடித்து வரும் சதீஷிடம் நாம் பேசினோம். ''கலகலப்பா பேசிட்டிருக்கிற பொண்ணு. சில தினங்களுக்கு முன்னாடிகூட ஷூட்டிங் வந்துச்சு. டபுள் ரோல்.. உற்சாகமாகத்தான் நடிச்சிட்டிருந்தாங்க. சின்னப் பொண்ணு. இன்னும் கல்யாணம் ஆகல. என்ன பிரச்னைனு தெரியல. மனசுல ஏதாவது கஷ்டம் இருந்தாகூட இருக்கிற சக நடிகர்கள்கிட்ட பேசியிருக்கலாம். ஆனா இப்படியொரு முடிவை எடுத்திருக்கு. யூனிட்ல எல்லாருக்குமே பெரிய ஷாக். சக ஆர்ட்டிஸ்ட் சிலர் பெங்களூரு போயிருக்காங்க'' என்றார் அவர்.

விகடன் 29 Dec 2025 2:52 pm

அண்ணாமலை சொன்ன வார்த்தை, முத்து சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை மனோஜுக்காக பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார். பணம் கொடுத்த நபர் பணம் மட்டும் சரியான தேதில வரல நான் உங்க குடும்பத்துல இருந்து கண்டிப்பா ஒரு ஆளை தூக்கிட்டுவேன் என்று சொல்லி மிரட்டி விட்டுப் போக, முத்து மனோஜ் மீது கோபப்படுகிறார். உடனே மனோஜ் எனக்காக யாரும் கஷ்டப்படுத்தவில்லை சொத்துல...

தஸ்தர் 29 Dec 2025 2:33 pm

‘ஜனநாயகன்’ ரீமேக் படமா? –இசை வெளியீட்டு விழாவில் ஹெச்.வினோத் விளக்கம்

‘ஜனநாயகன்’ ரீமேக் படமா? – இசை வெளியீட்டு விழாவில் ஹெச்.வினோத் விளக்கம் விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படக்கதையை அடிப்படையாக வைத்து தமிழுக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவிக்கையில், ‘ஜனநாயகன்’ படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய்...

தஸ்தர் 29 Dec 2025 2:25 pm

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: இணையத்தில் வைரலான ஏஐ புகைப்படங்கள்

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: இணையத்தில் வைரலான ஏஐ புகைப்படங்கள் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமன்றி விஜய்யின் நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழா தொடங்கப்பட்ட உடனே விழா அரங்கில் இருந்து பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டது. இந்த புகைப்படங்கள் வைரலாவதை முன்வைத்து, போலியாக ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களும் வெளியானது....

தஸ்தர் 29 Dec 2025 2:18 pm

தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய் என்று ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள்

தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய் என்று ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள் மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்பதால் பலரும் நெகிழ்ச்சியுடன் பேசினார்கள். இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது, ‘அமைதியும், பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் வேறு...

தஸ்தர் 29 Dec 2025 2:07 pm

விஜய் சினிமாவைவிட்டு விலகுவது குறித்த கேள்விக்கு நடிகர் கருணாஸ் கருத்து

விஜய் சினிமாவைவிட்டு விலகுவது குறித்த கேள்விக்கு நடிகர் கருணாஸ் கருத்து விஜய்யின் ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. இது விஜய்யின் கடைசிப் படமாகும். அதன்பின் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இச்சூழலில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில்...

தஸ்தர் 29 Dec 2025 2:01 pm

சூர்யா 46 படத்தின் கதை என்ன? –தயாரிப்பாளர் விளக்கம்

சூர்யா 46 படத்தின் கதை என்ன? – தயாரிப்பாளர் விளக்கம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்மீக கதைக்களத்தில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ளார். ‘பிரேமலு’ படம் மூலம் பிரபல​மானமலை​யாள நடிகை மமிதா பைஜு. தமிழில் ‘ரெபல்’, ‘டியூட்’ படங்களில் நடித்த இவர்​ ,​‘ஜன​நாயகன்’ படத்​திலும் நடித்துள்ளார். தற்போது சூர்யா ஹீரோ​வாக நடித்​துள்ள 46-வது...

தஸ்தர் 29 Dec 2025 1:55 pm

எஸ்.கே 26 படம் குறித்து வெளியான தரமான அப்டேட்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே 26 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் இன்று...

தஸ்தர் 29 Dec 2025 1:53 pm

BB Tamil 9 Day 84: வம்பிழுத்த கம்ருதீன்; சிறப்பாக நடித்த பாரு - கனியின் எவிக்ஷனில் நடந்தது என்ன?

அமித், கனி போன்ற நல்ல போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாரு, சான்ட்ரா, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்கள் ஆட்டத்தில் இன்னமும் நீடிக்கிறார்கள்.  ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் இந்தச் செய்தியைத்தான் தொடர்ந்து சொல்கிறது. ‘Survival of the fittest’.  வலிமையுள்ளதே எஞ்சும் என்பது வனத்தில் உள்ள விலங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்கள் வாழும் சமூகத்திற்கும் பொருந்தும்தான். ஆனால் விலங்குகளால் செய்ய முடியாத பலவற்றை மனிதன் செய்ய முடியும். பகுத்தறிவு, மனிதநேயம், அன்பு, கருணை என்று பல அற்புதங்களை மனித குலத்தால் நிகழ்த்த முடியும். ஒரு சிறிய அலுவலகத்திலேயே அதிகார அரசியலின் உக்கிரமான மோதலைப் பார்க்கலாம். அடாவடியானவர்கள்தான் எப்போதும் மற்றவர்களை முந்திக்கொண்டு மேலே செல்வார்கள் என்றால், தகுதியும் திறமையும் கொண்ட சாமானியர்களின் குரலுக்கு மதிப்பே இல்லையா, அவர்களுக்கு ஏன் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்று பெருமூச்சுதான் வருகிறது.  BB TAMIL 9 DAY 84 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 84 நேற்றே சொல்லியிருக்க வேண்டும். புதிய திரைப்படத்திற்கான விசேவின் லுக் நன்றாக இருந்தது. “டாப் 10க்குள் இவங்க வந்துட்டாங்க. நியாயமா பார்த்தா கொண்டாடணும். ஆனா அதே பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டி சண்டை போடறாங்க. ஒரு ஸ்பெஷல் ஷோ இருக்கு.. வாங்க பார்க்கலாம்’ என்றார் விசே.  பார்வையாளர்களின் காதுகளில் ரத்தம் வரும்படியான உக்கிரமான சண்டைக்காட்சிகளைத்தான் பிக் பாஸ் டீம் எப்போதும் மிக ஆர்வமாக ஒளிபரப்புகிறது. ஓரிடத்தில் சண்டை நடக்கிறது என்றால், கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாடலை நிறுத்தி விட்டு ஓடிச் சென்று அதை வேடிக்கை பார்ப்பதுதான் சராசரி மனிதனின் ஆதாரமான குணம்.  வன்முறையின் மீதுள்ள இச்சை நம் ஆழ்மனதில் உறைந்துள்ளது. ஆனால் அவற்றிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதுதான் கலைப்படைப்புகளின் அடிப்படையான நோக்கம். ஆனால் பிக் பாஸ் என்பது வணிகம். பார்வையாளர்களைத் திருத்த முயல்வது அதன் பணியல்ல. என்றாலும் போட்டியாளர்களுக்கு நிகழும் எத்தனையோ இனிமையான தருணங்களையும் அவ்வப்போது ஒளிபரப்பலாம்.  “துஷார் போக அரோதான் காரணம்” - மீண்டும் வம்பிழுத்த கம்ருதீன் திவ்யாவிடம் தான் மனமார மன்னிப்புக் கேட்டதை அரோரா கொச்சைப்படுத்தி விட்டார் என்று கம்முவிற்கு கோபம். எனவே அவருக்குள் இருக்கும் மிருகம் மீண்டும் விழித்துக்கொள்ள அரோ மீது  உக்கிரமாகப் பாய்ந்தார். துஷாரின் வெளியேற்றத்திற்கு அரோரா காரணமில்லை என்று விசே பலமுறை அறிவுறுத்தி, அதை கம்ருதீனும் ஒப்புக்கொண்ட அடுத்த கணத்தில் அதே ஆயுதத்தை கம்ருதீன் எடுக்கிறார்.  போட்டியாளர்களுக்குள் கொம்பு சீவி விடும் பணியை பிக் பாஸ் சிறப்பாகச் செய்கிறது. அதன் மூலம் நிகழும் போட்டி மனப்பான்மையும் போரும்தான் பிக் பாஸின் கச்சாப் பொருள்.  BB TAMIL 9 DAY 84 வார இறுதி நாட்களில் ஹோஸ்ட்டின் மூலமாக இதைத்தான் பிக் பாஸ் டீம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. சக போட்டியாளர் மனம் காயப்படுவாரோ என்று ஒருவர் மென்மையாக தன்னுடைய கருத்தைச் சொன்னால் ‘இத்தனை டிப்ளமசியா பேசக்கூடாது… இறங்கி அடிங்க. இல்லாட்டி நீங்க பலவீனமான போட்டியாளர்’ என்று அவர் மீது முத்திரை குத்தப்படும்.  இந்த எபிசோடியிலேயே அதற்கான உதாரணம் இருக்கிறது. ‘டிக்கெட் டு ஃபினாலே யாருக்கு கிடைக்கக்கூடாது?’ என்கிற டாஸ்க்கில் காமெடி கலந்து தன் கருத்தைச் சொன்னார் சபரி. நகைச்சுவை என்பதும் ஓர் அரசியல் ஆயுதம்தான். அதன் மூலம் வலிமையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தன் கருத்துக்களை காமெடி கலந்துசொல்லும் வழக்கமுள்ளவர் சபரி.  ‘அப்படியே லெஃப்ட்ல குத்து.. ரைட்ல அடி’ - பிக் பாஸ் ஆட்டத்தின் தாரக மந்திரம் ஆனால் சபரியை இடைமறித்த விசே “இது சீரியஸான டாஸ்க். அப்பத்தான் நீங்க சொல்றது சம்பந்தப்பட்டவங்களுக்கு அழுத்தமா புரியும். மறுபடியும் சொல்லுங்க. டேக் 2” என்று காரசாரமாக பேசவேண்டிய நெருக்கடியை அவருக்கு உருவாக்கினார். போட்டியாளர்களை அவர்களின் இயல்பின்படி இயங்கவிடாமல் “எதிராளியின் முகத்தில் குத்து..  ஓங்கி அடி. அப்பத்தான் விறுவிறுப்பா இருக்கும்’ என்பது பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படையான இயங்குமுறையாக இருக்கிறது.  போட்டியாளர்கள் புத்திசாலித்தனமானவர்களாக இருந்தால் பிக் பாஸின் இந்த தந்திரத்தை முறியடிக்க முடியும். டாஸ்க் நேரத்தில் தங்களின் கருத்தை வலிமையாகச் சொல்லிவிட்டு ‘இந்த கேமை  இப்படித்தான் ஆட முடியும்’ என்கிற புரிதலுடன் சக போட்டியாளர்களுடன் புன்னகையுடன் நட்பைத் தொடர முடியும். ஆனால் மனிதன் அத்தனை முதிர்ச்சியானவனா என்ன? BB TAMIL 9 DAY 84 பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல. நமக்குமே இது பொருந்தும். இந்த ஷோவில் நடக்கும் சண்டைகளைப் பார்க்கும் போது “ஏன்யா.. இப்படி அடிச்சுக்கறாங்க.. உக்காந்து நிதானமா பேசலாம்… இல்லன்னா கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம். ஏன் இத்தனை எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்” என்று உபதேசம் சொல்லத் தோன்றும். ஆனால் அன்றாட வாழக்கையில் நாமே அப்படி இல்லை என்பதுதான் வேடிக்கை. முன்கோபமும் அகங்காரமும் ஒரு விவாதத்தில் தன்னுடைய குரலே இறுதியாக இருக்க வேண்டும் என்கிற வெறியும் சண்டையை வலுவாக போடச் செய்யும்.  கம்மு - அரோரா சண்டையில் ‘டிரையாங்கிள் ரொமான்ஸூம்’ கலந்து பேசப்படுவதை ஒருவிதமான எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தார் பாரு. ‘அரோ சொன்னது அவங்க கருத்து. உங்களோட கருத்து உங்களுடையது. அப்படி எடுத்துட்டு போங்களேன்” என்று கம்ருதீனுக்கு திவ்யா சொன்னது நல்ல உபதேசம். ஆனால் கம்ருதீன் அப்படி அடங்குபவரா என்ன?  தவறான விஷயங்களில் கம்ருதீனுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து உங்களின் பெயரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று வினோத்திற்கு பல முறை உபதேசிக்கப்பட்டும், கம்முவிற்கு ஒரு பிரச்னை என்றால் வினோத் உடனே ஓடி வந்து முட்டு கொடுக்கிறார். இப்போதும் அதுதான் நடந்தது.  இந்தச் சமயத்தில் கம்முவை இடைமறித்த விக்ரம் ஒரு சிறப்பான உபதேசத்தை சொன்னார். “உனக்கு ரெட் கார்டு தரணும்ன்ற மாதிரி சூழலில் உனக்காக உண்மையாகவே அரோ அழுதார்”.  யார் நமக்கு உண்மையான நண்பன், யார் நம்மைச் சுரண்டுபவன் என்கிற புரிதல் கம்முவிடம் இல்லை. அதனால்தான் அவர் பாருவைத் தேர்ந்தெடுத்தார். அந்த டாக்ஸிக் நட்பால் இப்போது அவஸ்தைப்படுகிறார்.  BB TAMIL 9 DAY 84 ‘எனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்ல. அவனுக்கு ஒரு கண்ணாவது போகணும்’ - பிக் பாஸின் சிறப்பான டாஸ்க் “யம்மா தாயி.. நீ பீட் பாக்ஸிங்கை நிறுத்து. பார்க்க நல்லால்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் வலியுறுத்திச் சென்றாலும் சுபிக்ஷா அடங்குவதாக இல்லை. அந்தத் திறமையை அவர் நிச்சயம் வெளியில் சென்று நன்றாக வளர்த்துக் கொள்ளட்டும். ஆனால் அதை அரைகுறையாக கற்றுக்கொண்டு ‘டுப்புசிக்கு.. டுப்புசிக்கு’ என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தால் பார்வையாளர்களுக்கு எரிச்சல் வந்து விடும்.  “சரி.. பாடுங்க” என்று விசே சிரித்துக்கொண்டே அனுமதி கொடுக்க, எந்தவித ரைமிங்கும் இல்லாமல் சுபிக்ஷா பாடினார். அதற்கு பாரு தந்த எக்ஸ்பிரஷன் இருக்கிறதே?! காணக் கண் கோடி வேண்டும்.  டாப் 10 போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொல்லி “எனக்கு கிடைக்கலானாலும் பரவாயில்ல. `டிக்கெட் டு பினாலே' இவங்களுக்கு போகக்கூடாதுன்னா.. யாரைச் சொல்வீங்க?” என்று பிக் பாஸ் வழக்கப்படி ஒரு குரூரமான ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார் விசே.  சான்ட்ராவின் பெயரை அரோவும் சபரியும் சொன்னது சரியான விஷயம். ‘பிக் பாஸையும் மதிக்கல. யாரையும் மதிக்கறதுல்ல” என்று பாருவையும் கம்முவையும் சொன்னார் சுபிக்ஷா. “டாஸ்க்கும் சரியா பண்றதில்ல. யாரையும் பேச விடறதில்ல” என்கிற காரணத்தை திவ்யாவை வைத்து சொன்னார் விக்ரம். (இதுதான் பின்னர் மிகப் பெரிய சண்டையாக மாறியது!) BB TAMIL 9 DAY 84 பாருவையும் வினோத்தையும் காரணம் கட்டி திவ்யா நீளமாகப் பேச “இது பர்சனல் மாதிரி தெரியுது. வேற சொல்லுங்க” என்றார் விசே. அடுத்த டர்னில் கம்ருதீன் + விக்ரம் பெயரைச் சொல்லி பல்டி அடித்தார் திவ்யா. “வேலை செய்யறதில்ல. எதையும் ஸ்போர்டிவ்வா எடுத்துக்கறதில்ல” என்று பாருவை கம்ருதீன் போட்டுக் கொடுக்க பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல். (வழக்கம் போல் பாருவின் எக்ஸ்பிரஷன் கலக்கல்!) திவ்யாவின் நீளமான விளக்கத்தைக் கேட்க முடியாமல் சைலன்ட்டாக பிரேக் விட்டுச் சென்றார் விசே. ‘தலை சுத்திடுச்சுல்ல” என்று சிரித்தபடி மீண்டும் வந்த காப்பாற்றப்பட்டவர்கள் பற்றிய தகவலைச் சொன்னார். எஞ்சியிருந்தவர்கள் கனி மற்றும் சான்ட்ரா.  கனியை வெளியேற்றி சான்ட்ராவை காப்பாற்ற முயல்கிறார்களா? ‘இரண்டு பேர்ல யாரு இருக்கணும்?” என்று மறுபடியும் ஒரு கொம்புசீவி கேள்வியை விசே கேட்க எல்லோருமே ‘கனி வேண்டும். சான்ட்ரா வேண்டாம்’ என்று மனப்பாடப்பகுதியை சொல்வது போல் சொன்னார்கள். அதுதான் நியாமும் கூட. ஆனால் ‘என் வழி.. தனி வழி..’ என்று செல்லும் பாரு மட்டும் ‘சான்ட்ரா இருக்கணும். கனி வேண்டாம்” என்று சொன்னார். அவருக்கு கனியைப் பிடிக்காது என்பது காரணம். அந்த ரிவேன்ஜ் மோடில், சான்ட்ரா தகுதியானவரா என்பதை பாரு யோசிக்கவில்லை. அதுதான் பாரு.  யாருமே எதிர்பார்க்காதபடியாக ‘கனி’யின் பெயர் கொண்ட கார்டை நீட்டினார் விசே. (பிக் பாஸ்.. உங்க கிரவுண்டு.. உங்க உருட்டு!). ஏறத்தாழ அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி. கனியும் அதிர்ச்சியடைந்து பிறகு சுதாரித்துக் கொண்டார். ஆனால் ஒருவரின் முகத்தில் மட்டும் பயங்கர சந்தோஷம். அது பாரு என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.  BB TAMIL 9 DAY 84 ‘டிக்கெட் டு பினாலே எனக்கு வரக்கூடாதுன்னு பலரும் சொன்னாங்க. அதுல கனியும் ஒருத்தர். இப்ப பார்த்தீங்களா.. எனக்கு நீதி கிடைச்சிருக்கு. இந்த நாளை மறக்கவே மாட்டேன்” என்று ஆனந்தப் பரவசத்தில் அழுதார் பாரு.  கனியின் எவிக்ஷனால் விக்ரமும் சபரியும் மனம் உடைந்து அழுதார்கள். “என்னங்க இது.. நம்பவே முடியல. இது நியாயமே இல்ல” என்று விக்ரம் கதறினார். ஆனால் பிக் பாஸ் அப்படிப்பட்ட டிவிஸ்ட்களை தந்துதான் பழக்கம்.  சான்ட்ராவிற்கும் கனி வெளியேறுவது குறித்து சந்தோஷமாகத்தான் இருக்க முடியும். ஆனால் பாருவைப் போல வெளிப்படையாக சந்தோஷப்படாமல் “நான் ஏதாவது ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்று கனியிடம் பாவனையாக மன்னிப்பு கேட்டு தன் இமேஜை காப்பாற்றிக் கொண்டது போல் தோன்றியது.  ‘கனி வெளியே போறதுல எனக்கு வருத்தம்பா’ - சிறப்பாக நடித்த பாரு “கனி.. Well played. Will miss you’ என்று பாசத்துடன் பிக் பாஸ் விடை தர, “நான் வெளியே போறதுல துளியும் கவலை இல்ல. ஆனா உங்க குரலை மிஸ் பண்றதுதான் துயரம். ஒழுங்கா என்னை மிஸ் பண்ணுங்க’ என்று உரிமையுடன் கனி சொன்னது க்யூட்டான காட்சி.  மேடைக்கு வந்த கனி, பிறகு வீட்டார்களிடம் பேசும்போது “மக்களுக்கு பெரிய நன்றி சொல்லணும்” என்று பாரு ஆரம்பிக்க “எதுக்கு கனியை வெளியே அனுப்பினதுக்கா?” என்று சர்காஸ குண்டூசியை சிறப்பாகக் குத்தினார் விசே. “அய்யோ.. இல்ல.. என்னைக் காப்பாத்தியதற்கு.. கனி போனது வருத்தம்’தான்” என்று பாரு நடிக்க ஆரம்பிக்க, விசேவின் டோனில் ‘பாரு.. பாரு..’ என்று கனி குறுக்கிட்டது நல்ல நகைச்சுவை.  BB TAMIL 9 DAY 84 பரம எதிரி கனி வெளியே போனதிலும் தான் காப்பாற்றப்பட்டதிலும் குஷியான பாரு, சான்ட்ராவிடம் இது பற்றி எதையோ ஓதிக் கொண்டேயிருக்க “அவங்களை இன்ப்ளூயன்ஸ் பண்ணாதீங்க” என்று மூக்கை நுழைத்தார் திவ்யா. “ஏங்க.. நாங்க என்ன பேசறோம்ன்னு உங்களுக்குத தெரியுமா?. என்னன்னு தெரியாம பேசாத. போ அப்படி..”என்று பாரு எரிந்து விழுந்தார். சான்ட்ராவை காப்பாற்ற முனைவது திவ்யாவிற்கு தேவையில்லாத வேலை.  பிறகு இந்தச் சூழல் திசை மாறி, சுபிக்ஷாவிடம் திவ்யா பேசும் போது “நீங்களும் விக்ரமும் கூடத்தான் ஸ்கிரீன் பின்னாடி பேசினீங்க.. பிக் பாஸ் கண்டிச்சாரு” என்று சம்பந்தமில்லாமல் வாதத்தை ஆரம்பித்தார்.  மாற்றுக்கருத்தை கேட்கவே விரும்பாத ‘அட்ராசிட்டி’ திவ்யா தான் டாஸ்க்கை சிறப்பாக செய்தும் ‘திவ்யா டாஸ்க் சரியா பண்ணலை” என்று விக்ரம் சொல்லி விட்டார் என்பது திவ்யாவின் கோபத்திற்கு காரணம். அதனால் இந்த ஸ்கீரின் காரணத்தை கொண்டு வந்திருக்கிறார்.  சுபிக்ஷா மனம் உடைந்து அழும் போது ஆறுதல் சொல்லத்தான் விக்ரம் சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதை ஒரு குற்றமாக திவ்யா கொண்டு வந்திருக்க வேண்டாம். ஆத்திரம் யார் கண்ணையும் மறைத்து விடும்.  இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து விக்ரமும் உள்ளே புகுந்து கத்த “உங்க வீட்ல கத்தச் சொன்னாங்களா?” என்று திவ்யா வாயை விட்டு விட்டார். “இதுல ஏன் என் ஃபேமிலியை இழுக்கறீங்க..?” என்று ருத்ர தாண்டவம் ஆடி விட்டார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 84 பாரு, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் தன் மீது கடப்பாறையே வீசினாலும் “பீஸூ பிஸா கிழிக்கும் போது யேசு போல முகத்தைப் பாரு” என்கிற மாதிரி பொறுமையாக ஹாண்டில் செய்பவர் விக்ரம். வார இறுதி நாட்களில் தன் மீது குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் உடனே ரியாக்ட் ஆகாமல், தலைகுனிந்தபடி புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பார்.  அப்படிப்பட்ட சாந்த சொருபீயான விக்ரம், இன்று மிகவும் ஆவேசப்படுகிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்களை யூகிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, கனியின் எவிக்ஷன் அவரை மனதளவில் மிகவும் பாதித்திருக்க வேண்டும். அந்த டென்ஷனில் இந்தச் சண்டையும் சேர்ந்ததால் அவர் வெடித்திருக்கலாம். இரண்டாவது, தன் மனைவியுடன் மிகவும் அட்டாச் ஆனவர் விக்ரம். அவருடைய பெயர் சம்பந்தமில்லாமல் வந்ததால் கோபம் கொண்டிருக்கலாம்.  ஆவேசமடைந்த விக்ரம், மற்றவர்கள் சமாதானப்படுத்தியதால் சற்று நிதானம் வந்து ‘திவ்யா.. நீங்க சொல்றதையெல்லாம் சொல்லிட்டீங்க. இப்ப நான் சொல்றத கேளுங்க..” என்று எத்தனையோ மன்றாடியும் அதற்கு திவ்யா ஒப்புக் கொள்ளவேயில்லை. எதிராளியின் மீது அத்தனை புகாரையும் பதிவு செய்து விட்டு அந்த விவாதத்திற்கு தான் தயாராக இல்லை என்று ஓடிச் சொல்வது முதிர்ச்சியற்ற மனோபாவம். மற்றவர்களின் பிரச்சினைகளில் நியாயமாக பஞ்சாயத்து பேசும் திவ்யாவால் தன்னுடைய பிரச்சினையில் அந்த நிதானத்தையும் நியாயத்தையும் கடைப்பிடிக்க முடியவில்லை.  “வாங்க. பேசலாம்.. எப்ப வேணா காத்திட்டிருப்பேன்” என்று விக்ரம் மன்றாட ‘அது நடக்கவே நடக்காது” என்று கோபத்துடன் விலகினார் திவ்யா. தான் கத்துவதையெல்லாம் கத்தி விட்டு எதிராளியின் கருத்தை கேட்காமல் விலகுவது சான்ட்ராவின் பாணி. அதையே திவ்யாவும் இப்போது கற்றுக்கொண்டார் போல.  BB TAMIL 9 DAY 84 தல பதவியில் இருப்பதால் இங்கும் அங்குமாக பொறுமையுடன் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார் கம்ருதீன். வீட்டில் ஒரு சண்டை என்றால் அங்கு பாரு இல்லாமல் இருக்க மாட்டார். ஆனால் இப்போதோ வேறு விதமான சூழல் என்பதால் பாரு தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  தன் வாதத்தை மிக நீளமாக வைக்கும் திவ்யாவின் போக்கு குறித்து விசே இப்போதுதான் உணர்த்திக் காட்டி விட்டுச் சென்றார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதையேதான் திவ்யா செய்கிறார்.  கனியின் எவிக்ஷன் நியாயமானதா? உங்களின் கருத்தைச் சொல்லுங்கள். 

விகடன் 29 Dec 2025 1:31 pm

BB Tamil 9 Day 84: வம்பிழுத்த கம்ருதீன்; சிறப்பாக நடித்த பாரு - கனியின் எவிக்ஷனில் நடந்தது என்ன?

அமித், கனி போன்ற நல்ல போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாரு, சான்ட்ரா, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்கள் ஆட்டத்தில் இன்னமும் நீடிக்கிறார்கள்.  ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் இந்தச் செய்தியைத்தான் தொடர்ந்து சொல்கிறது. ‘Survival of the fittest’.  வலிமையுள்ளதே எஞ்சும் என்பது வனத்தில் உள்ள விலங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்கள் வாழும் சமூகத்திற்கும் பொருந்தும்தான். ஆனால் விலங்குகளால் செய்ய முடியாத பலவற்றை மனிதன் செய்ய முடியும். பகுத்தறிவு, மனிதநேயம், அன்பு, கருணை என்று பல அற்புதங்களை மனித குலத்தால் நிகழ்த்த முடியும். ஒரு சிறிய அலுவலகத்திலேயே அதிகார அரசியலின் உக்கிரமான மோதலைப் பார்க்கலாம். அடாவடியானவர்கள்தான் எப்போதும் மற்றவர்களை முந்திக்கொண்டு மேலே செல்வார்கள் என்றால், தகுதியும் திறமையும் கொண்ட சாமானியர்களின் குரலுக்கு மதிப்பே இல்லையா, அவர்களுக்கு ஏன் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்று பெருமூச்சுதான் வருகிறது.  BB TAMIL 9 DAY 84 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 84 நேற்றே சொல்லியிருக்க வேண்டும். புதிய திரைப்படத்திற்கான விசேவின் லுக் நன்றாக இருந்தது. “டாப் 10க்குள் இவங்க வந்துட்டாங்க. நியாயமா பார்த்தா கொண்டாடணும். ஆனா அதே பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டி சண்டை போடறாங்க. ஒரு ஸ்பெஷல் ஷோ இருக்கு.. வாங்க பார்க்கலாம்’ என்றார் விசே.  பார்வையாளர்களின் காதுகளில் ரத்தம் வரும்படியான உக்கிரமான சண்டைக்காட்சிகளைத்தான் பிக் பாஸ் டீம் எப்போதும் மிக ஆர்வமாக ஒளிபரப்புகிறது. ஓரிடத்தில் சண்டை நடக்கிறது என்றால், கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாடலை நிறுத்தி விட்டு ஓடிச் சென்று அதை வேடிக்கை பார்ப்பதுதான் சராசரி மனிதனின் ஆதாரமான குணம்.  வன்முறையின் மீதுள்ள இச்சை நம் ஆழ்மனதில் உறைந்துள்ளது. ஆனால் அவற்றிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதுதான் கலைப்படைப்புகளின் அடிப்படையான நோக்கம். ஆனால் பிக் பாஸ் என்பது வணிகம். பார்வையாளர்களைத் திருத்த முயல்வது அதன் பணியல்ல. என்றாலும் போட்டியாளர்களுக்கு நிகழும் எத்தனையோ இனிமையான தருணங்களையும் அவ்வப்போது ஒளிபரப்பலாம்.  “துஷார் போக அரோதான் காரணம்” - மீண்டும் வம்பிழுத்த கம்ருதீன் திவ்யாவிடம் தான் மனமார மன்னிப்புக் கேட்டதை அரோரா கொச்சைப்படுத்தி விட்டார் என்று கம்முவிற்கு கோபம். எனவே அவருக்குள் இருக்கும் மிருகம் மீண்டும் விழித்துக்கொள்ள அரோ மீது  உக்கிரமாகப் பாய்ந்தார். துஷாரின் வெளியேற்றத்திற்கு அரோரா காரணமில்லை என்று விசே பலமுறை அறிவுறுத்தி, அதை கம்ருதீனும் ஒப்புக்கொண்ட அடுத்த கணத்தில் அதே ஆயுதத்தை கம்ருதீன் எடுக்கிறார்.  போட்டியாளர்களுக்குள் கொம்பு சீவி விடும் பணியை பிக் பாஸ் சிறப்பாகச் செய்கிறது. அதன் மூலம் நிகழும் போட்டி மனப்பான்மையும் போரும்தான் பிக் பாஸின் கச்சாப் பொருள்.  BB TAMIL 9 DAY 84 வார இறுதி நாட்களில் ஹோஸ்ட்டின் மூலமாக இதைத்தான் பிக் பாஸ் டீம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. சக போட்டியாளர் மனம் காயப்படுவாரோ என்று ஒருவர் மென்மையாக தன்னுடைய கருத்தைச் சொன்னால் ‘இத்தனை டிப்ளமசியா பேசக்கூடாது… இறங்கி அடிங்க. இல்லாட்டி நீங்க பலவீனமான போட்டியாளர்’ என்று அவர் மீது முத்திரை குத்தப்படும்.  இந்த எபிசோடியிலேயே அதற்கான உதாரணம் இருக்கிறது. ‘டிக்கெட் டு ஃபினாலே யாருக்கு கிடைக்கக்கூடாது?’ என்கிற டாஸ்க்கில் காமெடி கலந்து தன் கருத்தைச் சொன்னார் சபரி. நகைச்சுவை என்பதும் ஓர் அரசியல் ஆயுதம்தான். அதன் மூலம் வலிமையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தன் கருத்துக்களை காமெடி கலந்துசொல்லும் வழக்கமுள்ளவர் சபரி.  ‘அப்படியே லெஃப்ட்ல குத்து.. ரைட்ல அடி’ - பிக் பாஸ் ஆட்டத்தின் தாரக மந்திரம் ஆனால் சபரியை இடைமறித்த விசே “இது சீரியஸான டாஸ்க். அப்பத்தான் நீங்க சொல்றது சம்பந்தப்பட்டவங்களுக்கு அழுத்தமா புரியும். மறுபடியும் சொல்லுங்க. டேக் 2” என்று காரசாரமாக பேசவேண்டிய நெருக்கடியை அவருக்கு உருவாக்கினார். போட்டியாளர்களை அவர்களின் இயல்பின்படி இயங்கவிடாமல் “எதிராளியின் முகத்தில் குத்து..  ஓங்கி அடி. அப்பத்தான் விறுவிறுப்பா இருக்கும்’ என்பது பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படையான இயங்குமுறையாக இருக்கிறது.  போட்டியாளர்கள் புத்திசாலித்தனமானவர்களாக இருந்தால் பிக் பாஸின் இந்த தந்திரத்தை முறியடிக்க முடியும். டாஸ்க் நேரத்தில் தங்களின் கருத்தை வலிமையாகச் சொல்லிவிட்டு ‘இந்த கேமை  இப்படித்தான் ஆட முடியும்’ என்கிற புரிதலுடன் சக போட்டியாளர்களுடன் புன்னகையுடன் நட்பைத் தொடர முடியும். ஆனால் மனிதன் அத்தனை முதிர்ச்சியானவனா என்ன? BB TAMIL 9 DAY 84 பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல. நமக்குமே இது பொருந்தும். இந்த ஷோவில் நடக்கும் சண்டைகளைப் பார்க்கும் போது “ஏன்யா.. இப்படி அடிச்சுக்கறாங்க.. உக்காந்து நிதானமா பேசலாம்… இல்லன்னா கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம். ஏன் இத்தனை எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்” என்று உபதேசம் சொல்லத் தோன்றும். ஆனால் அன்றாட வாழக்கையில் நாமே அப்படி இல்லை என்பதுதான் வேடிக்கை. முன்கோபமும் அகங்காரமும் ஒரு விவாதத்தில் தன்னுடைய குரலே இறுதியாக இருக்க வேண்டும் என்கிற வெறியும் சண்டையை வலுவாக போடச் செய்யும்.  கம்மு - அரோரா சண்டையில் ‘டிரையாங்கிள் ரொமான்ஸூம்’ கலந்து பேசப்படுவதை ஒருவிதமான எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தார் பாரு. ‘அரோ சொன்னது அவங்க கருத்து. உங்களோட கருத்து உங்களுடையது. அப்படி எடுத்துட்டு போங்களேன்” என்று கம்ருதீனுக்கு திவ்யா சொன்னது நல்ல உபதேசம். ஆனால் கம்ருதீன் அப்படி அடங்குபவரா என்ன?  தவறான விஷயங்களில் கம்ருதீனுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து உங்களின் பெயரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று வினோத்திற்கு பல முறை உபதேசிக்கப்பட்டும், கம்முவிற்கு ஒரு பிரச்னை என்றால் வினோத் உடனே ஓடி வந்து முட்டு கொடுக்கிறார். இப்போதும் அதுதான் நடந்தது.  இந்தச் சமயத்தில் கம்முவை இடைமறித்த விக்ரம் ஒரு சிறப்பான உபதேசத்தை சொன்னார். “உனக்கு ரெட் கார்டு தரணும்ன்ற மாதிரி சூழலில் உனக்காக உண்மையாகவே அரோ அழுதார்”.  யார் நமக்கு உண்மையான நண்பன், யார் நம்மைச் சுரண்டுபவன் என்கிற புரிதல் கம்முவிடம் இல்லை. அதனால்தான் அவர் பாருவைத் தேர்ந்தெடுத்தார். அந்த டாக்ஸிக் நட்பால் இப்போது அவஸ்தைப்படுகிறார்.  BB TAMIL 9 DAY 84 ‘எனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்ல. அவனுக்கு ஒரு கண்ணாவது போகணும்’ - பிக் பாஸின் சிறப்பான டாஸ்க் “யம்மா தாயி.. நீ பீட் பாக்ஸிங்கை நிறுத்து. பார்க்க நல்லால்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் வலியுறுத்திச் சென்றாலும் சுபிக்ஷா அடங்குவதாக இல்லை. அந்தத் திறமையை அவர் நிச்சயம் வெளியில் சென்று நன்றாக வளர்த்துக் கொள்ளட்டும். ஆனால் அதை அரைகுறையாக கற்றுக்கொண்டு ‘டுப்புசிக்கு.. டுப்புசிக்கு’ என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தால் பார்வையாளர்களுக்கு எரிச்சல் வந்து விடும்.  “சரி.. பாடுங்க” என்று விசே சிரித்துக்கொண்டே அனுமதி கொடுக்க, எந்தவித ரைமிங்கும் இல்லாமல் சுபிக்ஷா பாடினார். அதற்கு பாரு தந்த எக்ஸ்பிரஷன் இருக்கிறதே?! காணக் கண் கோடி வேண்டும்.  டாப் 10 போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொல்லி “எனக்கு கிடைக்கலானாலும் பரவாயில்ல. `டிக்கெட் டு பினாலே' இவங்களுக்கு போகக்கூடாதுன்னா.. யாரைச் சொல்வீங்க?” என்று பிக் பாஸ் வழக்கப்படி ஒரு குரூரமான ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார் விசே.  சான்ட்ராவின் பெயரை அரோவும் சபரியும் சொன்னது சரியான விஷயம். ‘பிக் பாஸையும் மதிக்கல. யாரையும் மதிக்கறதுல்ல” என்று பாருவையும் கம்முவையும் சொன்னார் சுபிக்ஷா. “டாஸ்க்கும் சரியா பண்றதில்ல. யாரையும் பேச விடறதில்ல” என்கிற காரணத்தை திவ்யாவை வைத்து சொன்னார் விக்ரம். (இதுதான் பின்னர் மிகப் பெரிய சண்டையாக மாறியது!) BB TAMIL 9 DAY 84 பாருவையும் வினோத்தையும் காரணம் கட்டி திவ்யா நீளமாகப் பேச “இது பர்சனல் மாதிரி தெரியுது. வேற சொல்லுங்க” என்றார் விசே. அடுத்த டர்னில் கம்ருதீன் + விக்ரம் பெயரைச் சொல்லி பல்டி அடித்தார் திவ்யா. “வேலை செய்யறதில்ல. எதையும் ஸ்போர்டிவ்வா எடுத்துக்கறதில்ல” என்று பாருவை கம்ருதீன் போட்டுக் கொடுக்க பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல். (வழக்கம் போல் பாருவின் எக்ஸ்பிரஷன் கலக்கல்!) திவ்யாவின் நீளமான விளக்கத்தைக் கேட்க முடியாமல் சைலன்ட்டாக பிரேக் விட்டுச் சென்றார் விசே. ‘தலை சுத்திடுச்சுல்ல” என்று சிரித்தபடி மீண்டும் வந்த காப்பாற்றப்பட்டவர்கள் பற்றிய தகவலைச் சொன்னார். எஞ்சியிருந்தவர்கள் கனி மற்றும் சான்ட்ரா.  கனியை வெளியேற்றி சான்ட்ராவை காப்பாற்ற முயல்கிறார்களா? ‘இரண்டு பேர்ல யாரு இருக்கணும்?” என்று மறுபடியும் ஒரு கொம்புசீவி கேள்வியை விசே கேட்க எல்லோருமே ‘கனி வேண்டும். சான்ட்ரா வேண்டாம்’ என்று மனப்பாடப்பகுதியை சொல்வது போல் சொன்னார்கள். அதுதான் நியாமும் கூட. ஆனால் ‘என் வழி.. தனி வழி..’ என்று செல்லும் பாரு மட்டும் ‘சான்ட்ரா இருக்கணும். கனி வேண்டாம்” என்று சொன்னார். அவருக்கு கனியைப் பிடிக்காது என்பது காரணம். அந்த ரிவேன்ஜ் மோடில், சான்ட்ரா தகுதியானவரா என்பதை பாரு யோசிக்கவில்லை. அதுதான் பாரு.  யாருமே எதிர்பார்க்காதபடியாக ‘கனி’யின் பெயர் கொண்ட கார்டை நீட்டினார் விசே. (பிக் பாஸ்.. உங்க கிரவுண்டு.. உங்க உருட்டு!). ஏறத்தாழ அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி. கனியும் அதிர்ச்சியடைந்து பிறகு சுதாரித்துக் கொண்டார். ஆனால் ஒருவரின் முகத்தில் மட்டும் பயங்கர சந்தோஷம். அது பாரு என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.  BB TAMIL 9 DAY 84 ‘டிக்கெட் டு பினாலே எனக்கு வரக்கூடாதுன்னு பலரும் சொன்னாங்க. அதுல கனியும் ஒருத்தர். இப்ப பார்த்தீங்களா.. எனக்கு நீதி கிடைச்சிருக்கு. இந்த நாளை மறக்கவே மாட்டேன்” என்று ஆனந்தப் பரவசத்தில் அழுதார் பாரு.  கனியின் எவிக்ஷனால் விக்ரமும் சபரியும் மனம் உடைந்து அழுதார்கள். “என்னங்க இது.. நம்பவே முடியல. இது நியாயமே இல்ல” என்று விக்ரம் கதறினார். ஆனால் பிக் பாஸ் அப்படிப்பட்ட டிவிஸ்ட்களை தந்துதான் பழக்கம்.  சான்ட்ராவிற்கும் கனி வெளியேறுவது குறித்து சந்தோஷமாகத்தான் இருக்க முடியும். ஆனால் பாருவைப் போல வெளிப்படையாக சந்தோஷப்படாமல் “நான் ஏதாவது ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்று கனியிடம் பாவனையாக மன்னிப்பு கேட்டு தன் இமேஜை காப்பாற்றிக் கொண்டது போல் தோன்றியது.  ‘கனி வெளியே போறதுல எனக்கு வருத்தம்பா’ - சிறப்பாக நடித்த பாரு “கனி.. Well played. Will miss you’ என்று பாசத்துடன் பிக் பாஸ் விடை தர, “நான் வெளியே போறதுல துளியும் கவலை இல்ல. ஆனா உங்க குரலை மிஸ் பண்றதுதான் துயரம். ஒழுங்கா என்னை மிஸ் பண்ணுங்க’ என்று உரிமையுடன் கனி சொன்னது க்யூட்டான காட்சி.  மேடைக்கு வந்த கனி, பிறகு வீட்டார்களிடம் பேசும்போது “மக்களுக்கு பெரிய நன்றி சொல்லணும்” என்று பாரு ஆரம்பிக்க “எதுக்கு கனியை வெளியே அனுப்பினதுக்கா?” என்று சர்காஸ குண்டூசியை சிறப்பாகக் குத்தினார் விசே. “அய்யோ.. இல்ல.. என்னைக் காப்பாத்தியதற்கு.. கனி போனது வருத்தம்’தான்” என்று பாரு நடிக்க ஆரம்பிக்க, விசேவின் டோனில் ‘பாரு.. பாரு..’ என்று கனி குறுக்கிட்டது நல்ல நகைச்சுவை.  BB TAMIL 9 DAY 84 பரம எதிரி கனி வெளியே போனதிலும் தான் காப்பாற்றப்பட்டதிலும் குஷியான பாரு, சான்ட்ராவிடம் இது பற்றி எதையோ ஓதிக் கொண்டேயிருக்க “அவங்களை இன்ப்ளூயன்ஸ் பண்ணாதீங்க” என்று மூக்கை நுழைத்தார் திவ்யா. “ஏங்க.. நாங்க என்ன பேசறோம்ன்னு உங்களுக்குத தெரியுமா?. என்னன்னு தெரியாம பேசாத. போ அப்படி..”என்று பாரு எரிந்து விழுந்தார். சான்ட்ராவை காப்பாற்ற முனைவது திவ்யாவிற்கு தேவையில்லாத வேலை.  பிறகு இந்தச் சூழல் திசை மாறி, சுபிக்ஷாவிடம் திவ்யா பேசும் போது “நீங்களும் விக்ரமும் கூடத்தான் ஸ்கிரீன் பின்னாடி பேசினீங்க.. பிக் பாஸ் கண்டிச்சாரு” என்று சம்பந்தமில்லாமல் வாதத்தை ஆரம்பித்தார்.  மாற்றுக்கருத்தை கேட்கவே விரும்பாத ‘அட்ராசிட்டி’ திவ்யா தான் டாஸ்க்கை சிறப்பாக செய்தும் ‘திவ்யா டாஸ்க் சரியா பண்ணலை” என்று விக்ரம் சொல்லி விட்டார் என்பது திவ்யாவின் கோபத்திற்கு காரணம். அதனால் இந்த ஸ்கீரின் காரணத்தை கொண்டு வந்திருக்கிறார்.  சுபிக்ஷா மனம் உடைந்து அழும் போது ஆறுதல் சொல்லத்தான் விக்ரம் சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதை ஒரு குற்றமாக திவ்யா கொண்டு வந்திருக்க வேண்டாம். ஆத்திரம் யார் கண்ணையும் மறைத்து விடும்.  இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து விக்ரமும் உள்ளே புகுந்து கத்த “உங்க வீட்ல கத்தச் சொன்னாங்களா?” என்று திவ்யா வாயை விட்டு விட்டார். “இதுல ஏன் என் ஃபேமிலியை இழுக்கறீங்க..?” என்று ருத்ர தாண்டவம் ஆடி விட்டார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 84 பாரு, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் தன் மீது கடப்பாறையே வீசினாலும் “பீஸூ பிஸா கிழிக்கும் போது யேசு போல முகத்தைப் பாரு” என்கிற மாதிரி பொறுமையாக ஹாண்டில் செய்பவர் விக்ரம். வார இறுதி நாட்களில் தன் மீது குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் உடனே ரியாக்ட் ஆகாமல், தலைகுனிந்தபடி புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பார்.  அப்படிப்பட்ட சாந்த சொருபீயான விக்ரம், இன்று மிகவும் ஆவேசப்படுகிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்களை யூகிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, கனியின் எவிக்ஷன் அவரை மனதளவில் மிகவும் பாதித்திருக்க வேண்டும். அந்த டென்ஷனில் இந்தச் சண்டையும் சேர்ந்ததால் அவர் வெடித்திருக்கலாம். இரண்டாவது, தன் மனைவியுடன் மிகவும் அட்டாச் ஆனவர் விக்ரம். அவருடைய பெயர் சம்பந்தமில்லாமல் வந்ததால் கோபம் கொண்டிருக்கலாம்.  ஆவேசமடைந்த விக்ரம், மற்றவர்கள் சமாதானப்படுத்தியதால் சற்று நிதானம் வந்து ‘திவ்யா.. நீங்க சொல்றதையெல்லாம் சொல்லிட்டீங்க. இப்ப நான் சொல்றத கேளுங்க..” என்று எத்தனையோ மன்றாடியும் அதற்கு திவ்யா ஒப்புக் கொள்ளவேயில்லை. எதிராளியின் மீது அத்தனை புகாரையும் பதிவு செய்து விட்டு அந்த விவாதத்திற்கு தான் தயாராக இல்லை என்று ஓடிச் சொல்வது முதிர்ச்சியற்ற மனோபாவம். மற்றவர்களின் பிரச்சினைகளில் நியாயமாக பஞ்சாயத்து பேசும் திவ்யாவால் தன்னுடைய பிரச்சினையில் அந்த நிதானத்தையும் நியாயத்தையும் கடைப்பிடிக்க முடியவில்லை.  “வாங்க. பேசலாம்.. எப்ப வேணா காத்திட்டிருப்பேன்” என்று விக்ரம் மன்றாட ‘அது நடக்கவே நடக்காது” என்று கோபத்துடன் விலகினார் திவ்யா. தான் கத்துவதையெல்லாம் கத்தி விட்டு எதிராளியின் கருத்தை கேட்காமல் விலகுவது சான்ட்ராவின் பாணி. அதையே திவ்யாவும் இப்போது கற்றுக்கொண்டார் போல.  BB TAMIL 9 DAY 84 தல பதவியில் இருப்பதால் இங்கும் அங்குமாக பொறுமையுடன் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார் கம்ருதீன். வீட்டில் ஒரு சண்டை என்றால் அங்கு பாரு இல்லாமல் இருக்க மாட்டார். ஆனால் இப்போதோ வேறு விதமான சூழல் என்பதால் பாரு தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  தன் வாதத்தை மிக நீளமாக வைக்கும் திவ்யாவின் போக்கு குறித்து விசே இப்போதுதான் உணர்த்திக் காட்டி விட்டுச் சென்றார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதையேதான் திவ்யா செய்கிறார்.  கனியின் எவிக்ஷன் நியாயமானதா? உங்களின் கருத்தைச் சொல்லுங்கள். 

விகடன் 29 Dec 2025 1:31 pm

BB Tamil 9 Day 84: வம்பிழுத்த கம்ருதீன்; சிறப்பாக நடித்த பாரு - கனியின் எவிக்ஷனில் நடந்தது என்ன?

அமித், கனி போன்ற நல்ல போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாரு, சான்ட்ரா, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்கள் ஆட்டத்தில் இன்னமும் நீடிக்கிறார்கள்.  ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் இந்தச் செய்தியைத்தான் தொடர்ந்து சொல்கிறது. ‘Survival of the fittest’.  வலிமையுள்ளதே எஞ்சும் என்பது வனத்தில் உள்ள விலங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்கள் வாழும் சமூகத்திற்கும் பொருந்தும்தான். ஆனால் விலங்குகளால் செய்ய முடியாத பலவற்றை மனிதன் செய்ய முடியும். பகுத்தறிவு, மனிதநேயம், அன்பு, கருணை என்று பல அற்புதங்களை மனித குலத்தால் நிகழ்த்த முடியும். ஒரு சிறிய அலுவலகத்திலேயே அதிகார அரசியலின் உக்கிரமான மோதலைப் பார்க்கலாம். அடாவடியானவர்கள்தான் எப்போதும் மற்றவர்களை முந்திக்கொண்டு மேலே செல்வார்கள் என்றால், தகுதியும் திறமையும் கொண்ட சாமானியர்களின் குரலுக்கு மதிப்பே இல்லையா, அவர்களுக்கு ஏன் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்று பெருமூச்சுதான் வருகிறது.  BB TAMIL 9 DAY 84 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 84 நேற்றே சொல்லியிருக்க வேண்டும். புதிய திரைப்படத்திற்கான விசேவின் லுக் நன்றாக இருந்தது. “டாப் 10க்குள் இவங்க வந்துட்டாங்க. நியாயமா பார்த்தா கொண்டாடணும். ஆனா அதே பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டி சண்டை போடறாங்க. ஒரு ஸ்பெஷல் ஷோ இருக்கு.. வாங்க பார்க்கலாம்’ என்றார் விசே.  பார்வையாளர்களின் காதுகளில் ரத்தம் வரும்படியான உக்கிரமான சண்டைக்காட்சிகளைத்தான் பிக் பாஸ் டீம் எப்போதும் மிக ஆர்வமாக ஒளிபரப்புகிறது. ஓரிடத்தில் சண்டை நடக்கிறது என்றால், கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாடலை நிறுத்தி விட்டு ஓடிச் சென்று அதை வேடிக்கை பார்ப்பதுதான் சராசரி மனிதனின் ஆதாரமான குணம்.  வன்முறையின் மீதுள்ள இச்சை நம் ஆழ்மனதில் உறைந்துள்ளது. ஆனால் அவற்றிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதுதான் கலைப்படைப்புகளின் அடிப்படையான நோக்கம். ஆனால் பிக் பாஸ் என்பது வணிகம். பார்வையாளர்களைத் திருத்த முயல்வது அதன் பணியல்ல. என்றாலும் போட்டியாளர்களுக்கு நிகழும் எத்தனையோ இனிமையான தருணங்களையும் அவ்வப்போது ஒளிபரப்பலாம்.  “துஷார் போக அரோதான் காரணம்” - மீண்டும் வம்பிழுத்த கம்ருதீன் திவ்யாவிடம் தான் மனமார மன்னிப்புக் கேட்டதை அரோரா கொச்சைப்படுத்தி விட்டார் என்று கம்முவிற்கு கோபம். எனவே அவருக்குள் இருக்கும் மிருகம் மீண்டும் விழித்துக்கொள்ள அரோ மீது  உக்கிரமாகப் பாய்ந்தார். துஷாரின் வெளியேற்றத்திற்கு அரோரா காரணமில்லை என்று விசே பலமுறை அறிவுறுத்தி, அதை கம்ருதீனும் ஒப்புக்கொண்ட அடுத்த கணத்தில் அதே ஆயுதத்தை கம்ருதீன் எடுக்கிறார்.  போட்டியாளர்களுக்குள் கொம்பு சீவி விடும் பணியை பிக் பாஸ் சிறப்பாகச் செய்கிறது. அதன் மூலம் நிகழும் போட்டி மனப்பான்மையும் போரும்தான் பிக் பாஸின் கச்சாப் பொருள்.  BB TAMIL 9 DAY 84 வார இறுதி நாட்களில் ஹோஸ்ட்டின் மூலமாக இதைத்தான் பிக் பாஸ் டீம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. சக போட்டியாளர் மனம் காயப்படுவாரோ என்று ஒருவர் மென்மையாக தன்னுடைய கருத்தைச் சொன்னால் ‘இத்தனை டிப்ளமசியா பேசக்கூடாது… இறங்கி அடிங்க. இல்லாட்டி நீங்க பலவீனமான போட்டியாளர்’ என்று அவர் மீது முத்திரை குத்தப்படும்.  இந்த எபிசோடியிலேயே அதற்கான உதாரணம் இருக்கிறது. ‘டிக்கெட் டு ஃபினாலே யாருக்கு கிடைக்கக்கூடாது?’ என்கிற டாஸ்க்கில் காமெடி கலந்து தன் கருத்தைச் சொன்னார் சபரி. நகைச்சுவை என்பதும் ஓர் அரசியல் ஆயுதம்தான். அதன் மூலம் வலிமையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தன் கருத்துக்களை காமெடி கலந்துசொல்லும் வழக்கமுள்ளவர் சபரி.  ‘அப்படியே லெஃப்ட்ல குத்து.. ரைட்ல அடி’ - பிக் பாஸ் ஆட்டத்தின் தாரக மந்திரம் ஆனால் சபரியை இடைமறித்த விசே “இது சீரியஸான டாஸ்க். அப்பத்தான் நீங்க சொல்றது சம்பந்தப்பட்டவங்களுக்கு அழுத்தமா புரியும். மறுபடியும் சொல்லுங்க. டேக் 2” என்று காரசாரமாக பேசவேண்டிய நெருக்கடியை அவருக்கு உருவாக்கினார். போட்டியாளர்களை அவர்களின் இயல்பின்படி இயங்கவிடாமல் “எதிராளியின் முகத்தில் குத்து..  ஓங்கி அடி. அப்பத்தான் விறுவிறுப்பா இருக்கும்’ என்பது பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படையான இயங்குமுறையாக இருக்கிறது.  போட்டியாளர்கள் புத்திசாலித்தனமானவர்களாக இருந்தால் பிக் பாஸின் இந்த தந்திரத்தை முறியடிக்க முடியும். டாஸ்க் நேரத்தில் தங்களின் கருத்தை வலிமையாகச் சொல்லிவிட்டு ‘இந்த கேமை  இப்படித்தான் ஆட முடியும்’ என்கிற புரிதலுடன் சக போட்டியாளர்களுடன் புன்னகையுடன் நட்பைத் தொடர முடியும். ஆனால் மனிதன் அத்தனை முதிர்ச்சியானவனா என்ன? BB TAMIL 9 DAY 84 பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல. நமக்குமே இது பொருந்தும். இந்த ஷோவில் நடக்கும் சண்டைகளைப் பார்க்கும் போது “ஏன்யா.. இப்படி அடிச்சுக்கறாங்க.. உக்காந்து நிதானமா பேசலாம்… இல்லன்னா கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம். ஏன் இத்தனை எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்” என்று உபதேசம் சொல்லத் தோன்றும். ஆனால் அன்றாட வாழக்கையில் நாமே அப்படி இல்லை என்பதுதான் வேடிக்கை. முன்கோபமும் அகங்காரமும் ஒரு விவாதத்தில் தன்னுடைய குரலே இறுதியாக இருக்க வேண்டும் என்கிற வெறியும் சண்டையை வலுவாக போடச் செய்யும்.  கம்மு - அரோரா சண்டையில் ‘டிரையாங்கிள் ரொமான்ஸூம்’ கலந்து பேசப்படுவதை ஒருவிதமான எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தார் பாரு. ‘அரோ சொன்னது அவங்க கருத்து. உங்களோட கருத்து உங்களுடையது. அப்படி எடுத்துட்டு போங்களேன்” என்று கம்ருதீனுக்கு திவ்யா சொன்னது நல்ல உபதேசம். ஆனால் கம்ருதீன் அப்படி அடங்குபவரா என்ன?  தவறான விஷயங்களில் கம்ருதீனுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து உங்களின் பெயரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று வினோத்திற்கு பல முறை உபதேசிக்கப்பட்டும், கம்முவிற்கு ஒரு பிரச்னை என்றால் வினோத் உடனே ஓடி வந்து முட்டு கொடுக்கிறார். இப்போதும் அதுதான் நடந்தது.  இந்தச் சமயத்தில் கம்முவை இடைமறித்த விக்ரம் ஒரு சிறப்பான உபதேசத்தை சொன்னார். “உனக்கு ரெட் கார்டு தரணும்ன்ற மாதிரி சூழலில் உனக்காக உண்மையாகவே அரோ அழுதார்”.  யார் நமக்கு உண்மையான நண்பன், யார் நம்மைச் சுரண்டுபவன் என்கிற புரிதல் கம்முவிடம் இல்லை. அதனால்தான் அவர் பாருவைத் தேர்ந்தெடுத்தார். அந்த டாக்ஸிக் நட்பால் இப்போது அவஸ்தைப்படுகிறார்.  BB TAMIL 9 DAY 84 ‘எனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்ல. அவனுக்கு ஒரு கண்ணாவது போகணும்’ - பிக் பாஸின் சிறப்பான டாஸ்க் “யம்மா தாயி.. நீ பீட் பாக்ஸிங்கை நிறுத்து. பார்க்க நல்லால்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் வலியுறுத்திச் சென்றாலும் சுபிக்ஷா அடங்குவதாக இல்லை. அந்தத் திறமையை அவர் நிச்சயம் வெளியில் சென்று நன்றாக வளர்த்துக் கொள்ளட்டும். ஆனால் அதை அரைகுறையாக கற்றுக்கொண்டு ‘டுப்புசிக்கு.. டுப்புசிக்கு’ என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தால் பார்வையாளர்களுக்கு எரிச்சல் வந்து விடும்.  “சரி.. பாடுங்க” என்று விசே சிரித்துக்கொண்டே அனுமதி கொடுக்க, எந்தவித ரைமிங்கும் இல்லாமல் சுபிக்ஷா பாடினார். அதற்கு பாரு தந்த எக்ஸ்பிரஷன் இருக்கிறதே?! காணக் கண் கோடி வேண்டும்.  டாப் 10 போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொல்லி “எனக்கு கிடைக்கலானாலும் பரவாயில்ல. `டிக்கெட் டு பினாலே' இவங்களுக்கு போகக்கூடாதுன்னா.. யாரைச் சொல்வீங்க?” என்று பிக் பாஸ் வழக்கப்படி ஒரு குரூரமான ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார் விசே.  சான்ட்ராவின் பெயரை அரோவும் சபரியும் சொன்னது சரியான விஷயம். ‘பிக் பாஸையும் மதிக்கல. யாரையும் மதிக்கறதுல்ல” என்று பாருவையும் கம்முவையும் சொன்னார் சுபிக்ஷா. “டாஸ்க்கும் சரியா பண்றதில்ல. யாரையும் பேச விடறதில்ல” என்கிற காரணத்தை திவ்யாவை வைத்து சொன்னார் விக்ரம். (இதுதான் பின்னர் மிகப் பெரிய சண்டையாக மாறியது!) BB TAMIL 9 DAY 84 பாருவையும் வினோத்தையும் காரணம் கட்டி திவ்யா நீளமாகப் பேச “இது பர்சனல் மாதிரி தெரியுது. வேற சொல்லுங்க” என்றார் விசே. அடுத்த டர்னில் கம்ருதீன் + விக்ரம் பெயரைச் சொல்லி பல்டி அடித்தார் திவ்யா. “வேலை செய்யறதில்ல. எதையும் ஸ்போர்டிவ்வா எடுத்துக்கறதில்ல” என்று பாருவை கம்ருதீன் போட்டுக் கொடுக்க பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல். (வழக்கம் போல் பாருவின் எக்ஸ்பிரஷன் கலக்கல்!) திவ்யாவின் நீளமான விளக்கத்தைக் கேட்க முடியாமல் சைலன்ட்டாக பிரேக் விட்டுச் சென்றார் விசே. ‘தலை சுத்திடுச்சுல்ல” என்று சிரித்தபடி மீண்டும் வந்த காப்பாற்றப்பட்டவர்கள் பற்றிய தகவலைச் சொன்னார். எஞ்சியிருந்தவர்கள் கனி மற்றும் சான்ட்ரா.  கனியை வெளியேற்றி சான்ட்ராவை காப்பாற்ற முயல்கிறார்களா? ‘இரண்டு பேர்ல யாரு இருக்கணும்?” என்று மறுபடியும் ஒரு கொம்புசீவி கேள்வியை விசே கேட்க எல்லோருமே ‘கனி வேண்டும். சான்ட்ரா வேண்டாம்’ என்று மனப்பாடப்பகுதியை சொல்வது போல் சொன்னார்கள். அதுதான் நியாமும் கூட. ஆனால் ‘என் வழி.. தனி வழி..’ என்று செல்லும் பாரு மட்டும் ‘சான்ட்ரா இருக்கணும். கனி வேண்டாம்” என்று சொன்னார். அவருக்கு கனியைப் பிடிக்காது என்பது காரணம். அந்த ரிவேன்ஜ் மோடில், சான்ட்ரா தகுதியானவரா என்பதை பாரு யோசிக்கவில்லை. அதுதான் பாரு.  யாருமே எதிர்பார்க்காதபடியாக ‘கனி’யின் பெயர் கொண்ட கார்டை நீட்டினார் விசே. (பிக் பாஸ்.. உங்க கிரவுண்டு.. உங்க உருட்டு!). ஏறத்தாழ அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி. கனியும் அதிர்ச்சியடைந்து பிறகு சுதாரித்துக் கொண்டார். ஆனால் ஒருவரின் முகத்தில் மட்டும் பயங்கர சந்தோஷம். அது பாரு என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.  BB TAMIL 9 DAY 84 ‘டிக்கெட் டு பினாலே எனக்கு வரக்கூடாதுன்னு பலரும் சொன்னாங்க. அதுல கனியும் ஒருத்தர். இப்ப பார்த்தீங்களா.. எனக்கு நீதி கிடைச்சிருக்கு. இந்த நாளை மறக்கவே மாட்டேன்” என்று ஆனந்தப் பரவசத்தில் அழுதார் பாரு.  கனியின் எவிக்ஷனால் விக்ரமும் சபரியும் மனம் உடைந்து அழுதார்கள். “என்னங்க இது.. நம்பவே முடியல. இது நியாயமே இல்ல” என்று விக்ரம் கதறினார். ஆனால் பிக் பாஸ் அப்படிப்பட்ட டிவிஸ்ட்களை தந்துதான் பழக்கம்.  சான்ட்ராவிற்கும் கனி வெளியேறுவது குறித்து சந்தோஷமாகத்தான் இருக்க முடியும். ஆனால் பாருவைப் போல வெளிப்படையாக சந்தோஷப்படாமல் “நான் ஏதாவது ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்று கனியிடம் பாவனையாக மன்னிப்பு கேட்டு தன் இமேஜை காப்பாற்றிக் கொண்டது போல் தோன்றியது.  ‘கனி வெளியே போறதுல எனக்கு வருத்தம்பா’ - சிறப்பாக நடித்த பாரு “கனி.. Well played. Will miss you’ என்று பாசத்துடன் பிக் பாஸ் விடை தர, “நான் வெளியே போறதுல துளியும் கவலை இல்ல. ஆனா உங்க குரலை மிஸ் பண்றதுதான் துயரம். ஒழுங்கா என்னை மிஸ் பண்ணுங்க’ என்று உரிமையுடன் கனி சொன்னது க்யூட்டான காட்சி.  மேடைக்கு வந்த கனி, பிறகு வீட்டார்களிடம் பேசும்போது “மக்களுக்கு பெரிய நன்றி சொல்லணும்” என்று பாரு ஆரம்பிக்க “எதுக்கு கனியை வெளியே அனுப்பினதுக்கா?” என்று சர்காஸ குண்டூசியை சிறப்பாகக் குத்தினார் விசே. “அய்யோ.. இல்ல.. என்னைக் காப்பாத்தியதற்கு.. கனி போனது வருத்தம்’தான்” என்று பாரு நடிக்க ஆரம்பிக்க, விசேவின் டோனில் ‘பாரு.. பாரு..’ என்று கனி குறுக்கிட்டது நல்ல நகைச்சுவை.  BB TAMIL 9 DAY 84 பரம எதிரி கனி வெளியே போனதிலும் தான் காப்பாற்றப்பட்டதிலும் குஷியான பாரு, சான்ட்ராவிடம் இது பற்றி எதையோ ஓதிக் கொண்டேயிருக்க “அவங்களை இன்ப்ளூயன்ஸ் பண்ணாதீங்க” என்று மூக்கை நுழைத்தார் திவ்யா. “ஏங்க.. நாங்க என்ன பேசறோம்ன்னு உங்களுக்குத தெரியுமா?. என்னன்னு தெரியாம பேசாத. போ அப்படி..”என்று பாரு எரிந்து விழுந்தார். சான்ட்ராவை காப்பாற்ற முனைவது திவ்யாவிற்கு தேவையில்லாத வேலை.  பிறகு இந்தச் சூழல் திசை மாறி, சுபிக்ஷாவிடம் திவ்யா பேசும் போது “நீங்களும் விக்ரமும் கூடத்தான் ஸ்கிரீன் பின்னாடி பேசினீங்க.. பிக் பாஸ் கண்டிச்சாரு” என்று சம்பந்தமில்லாமல் வாதத்தை ஆரம்பித்தார்.  மாற்றுக்கருத்தை கேட்கவே விரும்பாத ‘அட்ராசிட்டி’ திவ்யா தான் டாஸ்க்கை சிறப்பாக செய்தும் ‘திவ்யா டாஸ்க் சரியா பண்ணலை” என்று விக்ரம் சொல்லி விட்டார் என்பது திவ்யாவின் கோபத்திற்கு காரணம். அதனால் இந்த ஸ்கீரின் காரணத்தை கொண்டு வந்திருக்கிறார்.  சுபிக்ஷா மனம் உடைந்து அழும் போது ஆறுதல் சொல்லத்தான் விக்ரம் சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதை ஒரு குற்றமாக திவ்யா கொண்டு வந்திருக்க வேண்டாம். ஆத்திரம் யார் கண்ணையும் மறைத்து விடும்.  இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து விக்ரமும் உள்ளே புகுந்து கத்த “உங்க வீட்ல கத்தச் சொன்னாங்களா?” என்று திவ்யா வாயை விட்டு விட்டார். “இதுல ஏன் என் ஃபேமிலியை இழுக்கறீங்க..?” என்று ருத்ர தாண்டவம் ஆடி விட்டார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 84 பாரு, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் தன் மீது கடப்பாறையே வீசினாலும் “பீஸூ பிஸா கிழிக்கும் போது யேசு போல முகத்தைப் பாரு” என்கிற மாதிரி பொறுமையாக ஹாண்டில் செய்பவர் விக்ரம். வார இறுதி நாட்களில் தன் மீது குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் உடனே ரியாக்ட் ஆகாமல், தலைகுனிந்தபடி புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பார்.  அப்படிப்பட்ட சாந்த சொருபீயான விக்ரம், இன்று மிகவும் ஆவேசப்படுகிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்களை யூகிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, கனியின் எவிக்ஷன் அவரை மனதளவில் மிகவும் பாதித்திருக்க வேண்டும். அந்த டென்ஷனில் இந்தச் சண்டையும் சேர்ந்ததால் அவர் வெடித்திருக்கலாம். இரண்டாவது, தன் மனைவியுடன் மிகவும் அட்டாச் ஆனவர் விக்ரம். அவருடைய பெயர் சம்பந்தமில்லாமல் வந்ததால் கோபம் கொண்டிருக்கலாம்.  ஆவேசமடைந்த விக்ரம், மற்றவர்கள் சமாதானப்படுத்தியதால் சற்று நிதானம் வந்து ‘திவ்யா.. நீங்க சொல்றதையெல்லாம் சொல்லிட்டீங்க. இப்ப நான் சொல்றத கேளுங்க..” என்று எத்தனையோ மன்றாடியும் அதற்கு திவ்யா ஒப்புக் கொள்ளவேயில்லை. எதிராளியின் மீது அத்தனை புகாரையும் பதிவு செய்து விட்டு அந்த விவாதத்திற்கு தான் தயாராக இல்லை என்று ஓடிச் சொல்வது முதிர்ச்சியற்ற மனோபாவம். மற்றவர்களின் பிரச்சினைகளில் நியாயமாக பஞ்சாயத்து பேசும் திவ்யாவால் தன்னுடைய பிரச்சினையில் அந்த நிதானத்தையும் நியாயத்தையும் கடைப்பிடிக்க முடியவில்லை.  “வாங்க. பேசலாம்.. எப்ப வேணா காத்திட்டிருப்பேன்” என்று விக்ரம் மன்றாட ‘அது நடக்கவே நடக்காது” என்று கோபத்துடன் விலகினார் திவ்யா. தான் கத்துவதையெல்லாம் கத்தி விட்டு எதிராளியின் கருத்தை கேட்காமல் விலகுவது சான்ட்ராவின் பாணி. அதையே திவ்யாவும் இப்போது கற்றுக்கொண்டார் போல.  BB TAMIL 9 DAY 84 தல பதவியில் இருப்பதால் இங்கும் அங்குமாக பொறுமையுடன் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார் கம்ருதீன். வீட்டில் ஒரு சண்டை என்றால் அங்கு பாரு இல்லாமல் இருக்க மாட்டார். ஆனால் இப்போதோ வேறு விதமான சூழல் என்பதால் பாரு தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  தன் வாதத்தை மிக நீளமாக வைக்கும் திவ்யாவின் போக்கு குறித்து விசே இப்போதுதான் உணர்த்திக் காட்டி விட்டுச் சென்றார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதையேதான் திவ்யா செய்கிறார்.  கனியின் எவிக்ஷன் நியாயமானதா? உங்களின் கருத்தைச் சொல்லுங்கள். 

விகடன் 29 Dec 2025 1:31 pm

BB Tamil 9 Day 84: வம்பிழுத்த கம்ருதீன்; சிறப்பாக நடித்த பாரு - கனியின் எவிக்ஷனில் நடந்தது என்ன?

அமித், கனி போன்ற நல்ல போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாரு, சான்ட்ரா, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்கள் ஆட்டத்தில் இன்னமும் நீடிக்கிறார்கள்.  ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் இந்தச் செய்தியைத்தான் தொடர்ந்து சொல்கிறது. ‘Survival of the fittest’.  வலிமையுள்ளதே எஞ்சும் என்பது வனத்தில் உள்ள விலங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்கள் வாழும் சமூகத்திற்கும் பொருந்தும்தான். ஆனால் விலங்குகளால் செய்ய முடியாத பலவற்றை மனிதன் செய்ய முடியும். பகுத்தறிவு, மனிதநேயம், அன்பு, கருணை என்று பல அற்புதங்களை மனித குலத்தால் நிகழ்த்த முடியும். ஒரு சிறிய அலுவலகத்திலேயே அதிகார அரசியலின் உக்கிரமான மோதலைப் பார்க்கலாம். அடாவடியானவர்கள்தான் எப்போதும் மற்றவர்களை முந்திக்கொண்டு மேலே செல்வார்கள் என்றால், தகுதியும் திறமையும் கொண்ட சாமானியர்களின் குரலுக்கு மதிப்பே இல்லையா, அவர்களுக்கு ஏன் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்று பெருமூச்சுதான் வருகிறது.  BB TAMIL 9 DAY 84 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 84 நேற்றே சொல்லியிருக்க வேண்டும். புதிய திரைப்படத்திற்கான விசேவின் லுக் நன்றாக இருந்தது. “டாப் 10க்குள் இவங்க வந்துட்டாங்க. நியாயமா பார்த்தா கொண்டாடணும். ஆனா அதே பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டி சண்டை போடறாங்க. ஒரு ஸ்பெஷல் ஷோ இருக்கு.. வாங்க பார்க்கலாம்’ என்றார் விசே.  பார்வையாளர்களின் காதுகளில் ரத்தம் வரும்படியான உக்கிரமான சண்டைக்காட்சிகளைத்தான் பிக் பாஸ் டீம் எப்போதும் மிக ஆர்வமாக ஒளிபரப்புகிறது. ஓரிடத்தில் சண்டை நடக்கிறது என்றால், கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாடலை நிறுத்தி விட்டு ஓடிச் சென்று அதை வேடிக்கை பார்ப்பதுதான் சராசரி மனிதனின் ஆதாரமான குணம்.  வன்முறையின் மீதுள்ள இச்சை நம் ஆழ்மனதில் உறைந்துள்ளது. ஆனால் அவற்றிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதுதான் கலைப்படைப்புகளின் அடிப்படையான நோக்கம். ஆனால் பிக் பாஸ் என்பது வணிகம். பார்வையாளர்களைத் திருத்த முயல்வது அதன் பணியல்ல. என்றாலும் போட்டியாளர்களுக்கு நிகழும் எத்தனையோ இனிமையான தருணங்களையும் அவ்வப்போது ஒளிபரப்பலாம்.  “துஷார் போக அரோதான் காரணம்” - மீண்டும் வம்பிழுத்த கம்ருதீன் திவ்யாவிடம் தான் மனமார மன்னிப்புக் கேட்டதை அரோரா கொச்சைப்படுத்தி விட்டார் என்று கம்முவிற்கு கோபம். எனவே அவருக்குள் இருக்கும் மிருகம் மீண்டும் விழித்துக்கொள்ள அரோ மீது  உக்கிரமாகப் பாய்ந்தார். துஷாரின் வெளியேற்றத்திற்கு அரோரா காரணமில்லை என்று விசே பலமுறை அறிவுறுத்தி, அதை கம்ருதீனும் ஒப்புக்கொண்ட அடுத்த கணத்தில் அதே ஆயுதத்தை கம்ருதீன் எடுக்கிறார்.  போட்டியாளர்களுக்குள் கொம்பு சீவி விடும் பணியை பிக் பாஸ் சிறப்பாகச் செய்கிறது. அதன் மூலம் நிகழும் போட்டி மனப்பான்மையும் போரும்தான் பிக் பாஸின் கச்சாப் பொருள்.  BB TAMIL 9 DAY 84 வார இறுதி நாட்களில் ஹோஸ்ட்டின் மூலமாக இதைத்தான் பிக் பாஸ் டீம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. சக போட்டியாளர் மனம் காயப்படுவாரோ என்று ஒருவர் மென்மையாக தன்னுடைய கருத்தைச் சொன்னால் ‘இத்தனை டிப்ளமசியா பேசக்கூடாது… இறங்கி அடிங்க. இல்லாட்டி நீங்க பலவீனமான போட்டியாளர்’ என்று அவர் மீது முத்திரை குத்தப்படும்.  இந்த எபிசோடியிலேயே அதற்கான உதாரணம் இருக்கிறது. ‘டிக்கெட் டு ஃபினாலே யாருக்கு கிடைக்கக்கூடாது?’ என்கிற டாஸ்க்கில் காமெடி கலந்து தன் கருத்தைச் சொன்னார் சபரி. நகைச்சுவை என்பதும் ஓர் அரசியல் ஆயுதம்தான். அதன் மூலம் வலிமையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தன் கருத்துக்களை காமெடி கலந்துசொல்லும் வழக்கமுள்ளவர் சபரி.  ‘அப்படியே லெஃப்ட்ல குத்து.. ரைட்ல அடி’ - பிக் பாஸ் ஆட்டத்தின் தாரக மந்திரம் ஆனால் சபரியை இடைமறித்த விசே “இது சீரியஸான டாஸ்க். அப்பத்தான் நீங்க சொல்றது சம்பந்தப்பட்டவங்களுக்கு அழுத்தமா புரியும். மறுபடியும் சொல்லுங்க. டேக் 2” என்று காரசாரமாக பேசவேண்டிய நெருக்கடியை அவருக்கு உருவாக்கினார். போட்டியாளர்களை அவர்களின் இயல்பின்படி இயங்கவிடாமல் “எதிராளியின் முகத்தில் குத்து..  ஓங்கி அடி. அப்பத்தான் விறுவிறுப்பா இருக்கும்’ என்பது பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படையான இயங்குமுறையாக இருக்கிறது.  போட்டியாளர்கள் புத்திசாலித்தனமானவர்களாக இருந்தால் பிக் பாஸின் இந்த தந்திரத்தை முறியடிக்க முடியும். டாஸ்க் நேரத்தில் தங்களின் கருத்தை வலிமையாகச் சொல்லிவிட்டு ‘இந்த கேமை  இப்படித்தான் ஆட முடியும்’ என்கிற புரிதலுடன் சக போட்டியாளர்களுடன் புன்னகையுடன் நட்பைத் தொடர முடியும். ஆனால் மனிதன் அத்தனை முதிர்ச்சியானவனா என்ன? BB TAMIL 9 DAY 84 பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல. நமக்குமே இது பொருந்தும். இந்த ஷோவில் நடக்கும் சண்டைகளைப் பார்க்கும் போது “ஏன்யா.. இப்படி அடிச்சுக்கறாங்க.. உக்காந்து நிதானமா பேசலாம்… இல்லன்னா கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம். ஏன் இத்தனை எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்” என்று உபதேசம் சொல்லத் தோன்றும். ஆனால் அன்றாட வாழக்கையில் நாமே அப்படி இல்லை என்பதுதான் வேடிக்கை. முன்கோபமும் அகங்காரமும் ஒரு விவாதத்தில் தன்னுடைய குரலே இறுதியாக இருக்க வேண்டும் என்கிற வெறியும் சண்டையை வலுவாக போடச் செய்யும்.  கம்மு - அரோரா சண்டையில் ‘டிரையாங்கிள் ரொமான்ஸூம்’ கலந்து பேசப்படுவதை ஒருவிதமான எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தார் பாரு. ‘அரோ சொன்னது அவங்க கருத்து. உங்களோட கருத்து உங்களுடையது. அப்படி எடுத்துட்டு போங்களேன்” என்று கம்ருதீனுக்கு திவ்யா சொன்னது நல்ல உபதேசம். ஆனால் கம்ருதீன் அப்படி அடங்குபவரா என்ன?  தவறான விஷயங்களில் கம்ருதீனுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து உங்களின் பெயரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று வினோத்திற்கு பல முறை உபதேசிக்கப்பட்டும், கம்முவிற்கு ஒரு பிரச்னை என்றால் வினோத் உடனே ஓடி வந்து முட்டு கொடுக்கிறார். இப்போதும் அதுதான் நடந்தது.  இந்தச் சமயத்தில் கம்முவை இடைமறித்த விக்ரம் ஒரு சிறப்பான உபதேசத்தை சொன்னார். “உனக்கு ரெட் கார்டு தரணும்ன்ற மாதிரி சூழலில் உனக்காக உண்மையாகவே அரோ அழுதார்”.  யார் நமக்கு உண்மையான நண்பன், யார் நம்மைச் சுரண்டுபவன் என்கிற புரிதல் கம்முவிடம் இல்லை. அதனால்தான் அவர் பாருவைத் தேர்ந்தெடுத்தார். அந்த டாக்ஸிக் நட்பால் இப்போது அவஸ்தைப்படுகிறார்.  BB TAMIL 9 DAY 84 ‘எனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்ல. அவனுக்கு ஒரு கண்ணாவது போகணும்’ - பிக் பாஸின் சிறப்பான டாஸ்க் “யம்மா தாயி.. நீ பீட் பாக்ஸிங்கை நிறுத்து. பார்க்க நல்லால்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் வலியுறுத்திச் சென்றாலும் சுபிக்ஷா அடங்குவதாக இல்லை. அந்தத் திறமையை அவர் நிச்சயம் வெளியில் சென்று நன்றாக வளர்த்துக் கொள்ளட்டும். ஆனால் அதை அரைகுறையாக கற்றுக்கொண்டு ‘டுப்புசிக்கு.. டுப்புசிக்கு’ என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தால் பார்வையாளர்களுக்கு எரிச்சல் வந்து விடும்.  “சரி.. பாடுங்க” என்று விசே சிரித்துக்கொண்டே அனுமதி கொடுக்க, எந்தவித ரைமிங்கும் இல்லாமல் சுபிக்ஷா பாடினார். அதற்கு பாரு தந்த எக்ஸ்பிரஷன் இருக்கிறதே?! காணக் கண் கோடி வேண்டும்.  டாப் 10 போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொல்லி “எனக்கு கிடைக்கலானாலும் பரவாயில்ல. `டிக்கெட் டு பினாலே' இவங்களுக்கு போகக்கூடாதுன்னா.. யாரைச் சொல்வீங்க?” என்று பிக் பாஸ் வழக்கப்படி ஒரு குரூரமான ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார் விசே.  சான்ட்ராவின் பெயரை அரோவும் சபரியும் சொன்னது சரியான விஷயம். ‘பிக் பாஸையும் மதிக்கல. யாரையும் மதிக்கறதுல்ல” என்று பாருவையும் கம்முவையும் சொன்னார் சுபிக்ஷா. “டாஸ்க்கும் சரியா பண்றதில்ல. யாரையும் பேச விடறதில்ல” என்கிற காரணத்தை திவ்யாவை வைத்து சொன்னார் விக்ரம். (இதுதான் பின்னர் மிகப் பெரிய சண்டையாக மாறியது!) BB TAMIL 9 DAY 84 பாருவையும் வினோத்தையும் காரணம் கட்டி திவ்யா நீளமாகப் பேச “இது பர்சனல் மாதிரி தெரியுது. வேற சொல்லுங்க” என்றார் விசே. அடுத்த டர்னில் கம்ருதீன் + விக்ரம் பெயரைச் சொல்லி பல்டி அடித்தார் திவ்யா. “வேலை செய்யறதில்ல. எதையும் ஸ்போர்டிவ்வா எடுத்துக்கறதில்ல” என்று பாருவை கம்ருதீன் போட்டுக் கொடுக்க பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல். (வழக்கம் போல் பாருவின் எக்ஸ்பிரஷன் கலக்கல்!) திவ்யாவின் நீளமான விளக்கத்தைக் கேட்க முடியாமல் சைலன்ட்டாக பிரேக் விட்டுச் சென்றார் விசே. ‘தலை சுத்திடுச்சுல்ல” என்று சிரித்தபடி மீண்டும் வந்த காப்பாற்றப்பட்டவர்கள் பற்றிய தகவலைச் சொன்னார். எஞ்சியிருந்தவர்கள் கனி மற்றும் சான்ட்ரா.  கனியை வெளியேற்றி சான்ட்ராவை காப்பாற்ற முயல்கிறார்களா? ‘இரண்டு பேர்ல யாரு இருக்கணும்?” என்று மறுபடியும் ஒரு கொம்புசீவி கேள்வியை விசே கேட்க எல்லோருமே ‘கனி வேண்டும். சான்ட்ரா வேண்டாம்’ என்று மனப்பாடப்பகுதியை சொல்வது போல் சொன்னார்கள். அதுதான் நியாமும் கூட. ஆனால் ‘என் வழி.. தனி வழி..’ என்று செல்லும் பாரு மட்டும் ‘சான்ட்ரா இருக்கணும். கனி வேண்டாம்” என்று சொன்னார். அவருக்கு கனியைப் பிடிக்காது என்பது காரணம். அந்த ரிவேன்ஜ் மோடில், சான்ட்ரா தகுதியானவரா என்பதை பாரு யோசிக்கவில்லை. அதுதான் பாரு.  யாருமே எதிர்பார்க்காதபடியாக ‘கனி’யின் பெயர் கொண்ட கார்டை நீட்டினார் விசே. (பிக் பாஸ்.. உங்க கிரவுண்டு.. உங்க உருட்டு!). ஏறத்தாழ அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி. கனியும் அதிர்ச்சியடைந்து பிறகு சுதாரித்துக் கொண்டார். ஆனால் ஒருவரின் முகத்தில் மட்டும் பயங்கர சந்தோஷம். அது பாரு என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.  BB TAMIL 9 DAY 84 ‘டிக்கெட் டு பினாலே எனக்கு வரக்கூடாதுன்னு பலரும் சொன்னாங்க. அதுல கனியும் ஒருத்தர். இப்ப பார்த்தீங்களா.. எனக்கு நீதி கிடைச்சிருக்கு. இந்த நாளை மறக்கவே மாட்டேன்” என்று ஆனந்தப் பரவசத்தில் அழுதார் பாரு.  கனியின் எவிக்ஷனால் விக்ரமும் சபரியும் மனம் உடைந்து அழுதார்கள். “என்னங்க இது.. நம்பவே முடியல. இது நியாயமே இல்ல” என்று விக்ரம் கதறினார். ஆனால் பிக் பாஸ் அப்படிப்பட்ட டிவிஸ்ட்களை தந்துதான் பழக்கம்.  சான்ட்ராவிற்கும் கனி வெளியேறுவது குறித்து சந்தோஷமாகத்தான் இருக்க முடியும். ஆனால் பாருவைப் போல வெளிப்படையாக சந்தோஷப்படாமல் “நான் ஏதாவது ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்று கனியிடம் பாவனையாக மன்னிப்பு கேட்டு தன் இமேஜை காப்பாற்றிக் கொண்டது போல் தோன்றியது.  ‘கனி வெளியே போறதுல எனக்கு வருத்தம்பா’ - சிறப்பாக நடித்த பாரு “கனி.. Well played. Will miss you’ என்று பாசத்துடன் பிக் பாஸ் விடை தர, “நான் வெளியே போறதுல துளியும் கவலை இல்ல. ஆனா உங்க குரலை மிஸ் பண்றதுதான் துயரம். ஒழுங்கா என்னை மிஸ் பண்ணுங்க’ என்று உரிமையுடன் கனி சொன்னது க்யூட்டான காட்சி.  மேடைக்கு வந்த கனி, பிறகு வீட்டார்களிடம் பேசும்போது “மக்களுக்கு பெரிய நன்றி சொல்லணும்” என்று பாரு ஆரம்பிக்க “எதுக்கு கனியை வெளியே அனுப்பினதுக்கா?” என்று சர்காஸ குண்டூசியை சிறப்பாகக் குத்தினார் விசே. “அய்யோ.. இல்ல.. என்னைக் காப்பாத்தியதற்கு.. கனி போனது வருத்தம்’தான்” என்று பாரு நடிக்க ஆரம்பிக்க, விசேவின் டோனில் ‘பாரு.. பாரு..’ என்று கனி குறுக்கிட்டது நல்ல நகைச்சுவை.  BB TAMIL 9 DAY 84 பரம எதிரி கனி வெளியே போனதிலும் தான் காப்பாற்றப்பட்டதிலும் குஷியான பாரு, சான்ட்ராவிடம் இது பற்றி எதையோ ஓதிக் கொண்டேயிருக்க “அவங்களை இன்ப்ளூயன்ஸ் பண்ணாதீங்க” என்று மூக்கை நுழைத்தார் திவ்யா. “ஏங்க.. நாங்க என்ன பேசறோம்ன்னு உங்களுக்குத தெரியுமா?. என்னன்னு தெரியாம பேசாத. போ அப்படி..”என்று பாரு எரிந்து விழுந்தார். சான்ட்ராவை காப்பாற்ற முனைவது திவ்யாவிற்கு தேவையில்லாத வேலை.  பிறகு இந்தச் சூழல் திசை மாறி, சுபிக்ஷாவிடம் திவ்யா பேசும் போது “நீங்களும் விக்ரமும் கூடத்தான் ஸ்கிரீன் பின்னாடி பேசினீங்க.. பிக் பாஸ் கண்டிச்சாரு” என்று சம்பந்தமில்லாமல் வாதத்தை ஆரம்பித்தார்.  மாற்றுக்கருத்தை கேட்கவே விரும்பாத ‘அட்ராசிட்டி’ திவ்யா தான் டாஸ்க்கை சிறப்பாக செய்தும் ‘திவ்யா டாஸ்க் சரியா பண்ணலை” என்று விக்ரம் சொல்லி விட்டார் என்பது திவ்யாவின் கோபத்திற்கு காரணம். அதனால் இந்த ஸ்கீரின் காரணத்தை கொண்டு வந்திருக்கிறார்.  சுபிக்ஷா மனம் உடைந்து அழும் போது ஆறுதல் சொல்லத்தான் விக்ரம் சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதை ஒரு குற்றமாக திவ்யா கொண்டு வந்திருக்க வேண்டாம். ஆத்திரம் யார் கண்ணையும் மறைத்து விடும்.  இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து விக்ரமும் உள்ளே புகுந்து கத்த “உங்க வீட்ல கத்தச் சொன்னாங்களா?” என்று திவ்யா வாயை விட்டு விட்டார். “இதுல ஏன் என் ஃபேமிலியை இழுக்கறீங்க..?” என்று ருத்ர தாண்டவம் ஆடி விட்டார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 84 பாரு, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் தன் மீது கடப்பாறையே வீசினாலும் “பீஸூ பிஸா கிழிக்கும் போது யேசு போல முகத்தைப் பாரு” என்கிற மாதிரி பொறுமையாக ஹாண்டில் செய்பவர் விக்ரம். வார இறுதி நாட்களில் தன் மீது குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் உடனே ரியாக்ட் ஆகாமல், தலைகுனிந்தபடி புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பார்.  அப்படிப்பட்ட சாந்த சொருபீயான விக்ரம், இன்று மிகவும் ஆவேசப்படுகிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்களை யூகிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, கனியின் எவிக்ஷன் அவரை மனதளவில் மிகவும் பாதித்திருக்க வேண்டும். அந்த டென்ஷனில் இந்தச் சண்டையும் சேர்ந்ததால் அவர் வெடித்திருக்கலாம். இரண்டாவது, தன் மனைவியுடன் மிகவும் அட்டாச் ஆனவர் விக்ரம். அவருடைய பெயர் சம்பந்தமில்லாமல் வந்ததால் கோபம் கொண்டிருக்கலாம்.  ஆவேசமடைந்த விக்ரம், மற்றவர்கள் சமாதானப்படுத்தியதால் சற்று நிதானம் வந்து ‘திவ்யா.. நீங்க சொல்றதையெல்லாம் சொல்லிட்டீங்க. இப்ப நான் சொல்றத கேளுங்க..” என்று எத்தனையோ மன்றாடியும் அதற்கு திவ்யா ஒப்புக் கொள்ளவேயில்லை. எதிராளியின் மீது அத்தனை புகாரையும் பதிவு செய்து விட்டு அந்த விவாதத்திற்கு தான் தயாராக இல்லை என்று ஓடிச் சொல்வது முதிர்ச்சியற்ற மனோபாவம். மற்றவர்களின் பிரச்சினைகளில் நியாயமாக பஞ்சாயத்து பேசும் திவ்யாவால் தன்னுடைய பிரச்சினையில் அந்த நிதானத்தையும் நியாயத்தையும் கடைப்பிடிக்க முடியவில்லை.  “வாங்க. பேசலாம்.. எப்ப வேணா காத்திட்டிருப்பேன்” என்று விக்ரம் மன்றாட ‘அது நடக்கவே நடக்காது” என்று கோபத்துடன் விலகினார் திவ்யா. தான் கத்துவதையெல்லாம் கத்தி விட்டு எதிராளியின் கருத்தை கேட்காமல் விலகுவது சான்ட்ராவின் பாணி. அதையே திவ்யாவும் இப்போது கற்றுக்கொண்டார் போல.  BB TAMIL 9 DAY 84 தல பதவியில் இருப்பதால் இங்கும் அங்குமாக பொறுமையுடன் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார் கம்ருதீன். வீட்டில் ஒரு சண்டை என்றால் அங்கு பாரு இல்லாமல் இருக்க மாட்டார். ஆனால் இப்போதோ வேறு விதமான சூழல் என்பதால் பாரு தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  தன் வாதத்தை மிக நீளமாக வைக்கும் திவ்யாவின் போக்கு குறித்து விசே இப்போதுதான் உணர்த்திக் காட்டி விட்டுச் சென்றார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதையேதான் திவ்யா செய்கிறார்.  கனியின் எவிக்ஷன் நியாயமானதா? உங்களின் கருத்தைச் சொல்லுங்கள். 

விகடன் 29 Dec 2025 1:31 pm

அருணாச்சலம் கேட்ட கேள்வி,சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் நீங்க எதுவும் பண்ணாதீங்க எதுவும் பிரச்சனையா ஆகி விடப்போகிறது என்று சொல்ல நீ அமைதியாக...

தஸ்தர் 29 Dec 2025 1:24 pm

BB Tamil 9: நான் அந்த ஃபீலிங்ல விளையாடப்பட்டுடேனோன்னு தோணுது- கம்ருதீனை நாமினேட் செய்த பாரு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 84 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. BB Tamil 9: எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா- ஆக்ரோசமான விக்ரம் BB Tamil 9 இதில் திவ்யாவை விக்ரம் நாமினேட் செய்தார். நியாயத்துக்காக குரல் கொடுக்கிறேன்னு சொல்லி வெறும் சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட் (Fraud). மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத ஒரு கோழை. உங்க மேல வைக்கிற மாற்றுக் கருத்துக்களை ஏத்துக்காம இத்தனை வாரம் வந்ததுலாம் அயோக்கியத்தனம். நான்தான் இங்க நியாயம் கேட்கிறேன்னு சொல்லி ஒரு பொய்யான வேடமும், பொய்யான முகமூடியும் போட்டுகொள்கிற ஒரு ஃபிராட் என்று திவ்யாவை விக்ரம் கடுமையாகச் சாடி நாமினேட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது புரொமோவில் வினோத், அரோரா, சுபிக்ஷா, கம்ருதீன், சபரி ஆகியோர் நாமினேட் செய்யப்படுகின்றனர். BB Tamil 9 குறிப்பாக கம்ருதீனை பார்வதி நாமினேட் செய்கிறார். நான் அந்த ஃபீலிங்ல விளையாடப்பட்டுடேனோ அப்படின்னு எனக்குத் தோணுது என்ற காரணத்தைச் சொல்லி பார்வதி நாமினேட் செய்கிறார்.

விகடன் 29 Dec 2025 12:55 pm