Dharmendra: ``எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்'' - ரஜினி, கமல், மம்மூட்டி.. லெஜண்ட்ஸ் இரங்கல்
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிராந்திய தலைவர்கள் முதல் திரையுலகின் பல தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்கள் வரை அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். தர்மேந்திரா அந்தவகையில் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், விடைபெறுங்கள் நண்பரே. உங்கள் பொன்னான இதயத்தையும், நாம் பகிர்ந்து கொண்ட தருணங்களையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். சாந்தியடையுங்கள், தரம் ஜி. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். என எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார். Farewell, my friend. I will always remember your golden heart and the moments we shared. Rest in peace, Dharam ji. My deepest condolences to his family. — Rajinikanth (@rajinikanth) November 24, 2025 தர்மேந்திராவும் ரஜினிகாந்தும் Farishtay, Insaaf Kaun Karega ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஹேமமாலினி இணைந்து நடித்த அந்தா கானூன் படத்தில் தர்மேந்திரா கேமியோ ரோலில் நடித்திருப்பார். கமல்ஹாசன், எனது அருமை நண்பரும், புகழ்பெற்ற நடிகருமான தர்மேந்திரா ஜி அவர்களின் மறைவால் மிகவும் வருத்தமுற்றேன். தரம் ஜி அவர்களின் வசீகரம், பணிவு மற்றும் மனோபலம் ஆகியவை திரையில் மட்டுமல்லாமல், திரைக்கு வெளியிலும் உண்மையானவை. இந்தியத் திரையுலகம் அதன் கனிவான பிம்பங்களில் ஒன்றை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என எழுதியிருக்கிறார். Deeply saddened by the passing of my dear friend and legendary actor Dharmendra ji. Dharam Ji’s charm, humility and strength of spirit were as real off-screen as on it. Indian cinema has lost one of its kindest icons. My heartfelt condolences to his family and admirers. pic.twitter.com/I9CgBmlCzl — Kamal Haasan (@ikamalhaasan) November 24, 2025 மலையாளம், தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த நட்சத்திரங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். The passing of Dharmendraji marks the end of a cinematic era. A legend whose warmth and artistry will live on forever. My deepest condolences to his family and loved ones. Om Shanti. — Mohanlal (@Mohanlal) November 24, 2025 A true icon has left us. Dharam ji’s legacy will continue to inspire every generation.Heartfelt condolences and prayers. pic.twitter.com/h3IUoNiPT2 — Mammootty (@mammukka) November 24, 2025 Sri Dharmji was not only a legendary actor but also a remarkable human being. The humility and warmth I experienced every time I met him deeply touched my heart. I will forever cherish the fond memories and personal moments I shared with him. My heartfelt condolences on his… pic.twitter.com/vuHMWyG34X — Chiranjeevi Konidela (@KChiruTweets) November 24, 2025 Dharmendra ji was more than an icon. He carried a warmth that touched generations and a grace that defined an entire era of Indian cinema. His films, his spirit and his performances will continue to live on in our hearts. May his soul rest in peace. pic.twitter.com/IdAW9Bee52 — Venkatesh Daggubati (@VenkyMama) November 24, 2025 ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் - யார் அவர்?
Dharmendra: `ஷோலே'பட வீரு; பாலிவுட்டின் ஹீ - மேன், ரிடையர்மென்டுக்கு நோ! - தர்மேந்திராவின் கதை!
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அவருடைய இல்லத்துக்கு வெளியே, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்ணீருடன் ஒரு பதாகையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த பதாகையில், “கடவுளே, தயவு செய்து தர்மாஜியை சீக்கிரமாக குணப்படுத்து!” என எழுதப்பட்டிருந்தது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே, அவருடைய இல்லத்துக்கு வெளியே நீண்ட நேரமாக அவர் நின்றிருந்தார். அந்த 60 வயது நபர் மட்டுமல்ல, தர்மேந்திரா சிகிச்சைப் பெற்று வந்தபோது அவருடைய ரசிகர்கள் பலரும் பல பகுதிகளில் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra Funeral இந்த அளவிற்கு பலருக்கும் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் தர்மேந்திரா. பாலிவுட்டில் பல சாதனைகளைப் படைத்த இந்த சீனியர் நடிகருக்கு எண்ணற்ற தீவிர ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் மனதையெல்லாம் கனமாக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், அவருடைய இல்லத்தில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று மதியம் இயற்கையை எய்தியுள்ளார். மறைவு செய்தியை அறிந்தவுடன், கண்ணீருடன் அவருடைய ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர். ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த பாலிவுட் லெஜெண்டிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் ‘He-Man’ என்று அழைக்கப்படும் இந்த சீனியர் நடிகர், அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இன்று இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைவருடைய பேவரைட் நடிகர்கள் பட்டியலிலும் தர்மேந்திரா நிச்சயமாக இருப்பார். அந்த அளவிற்கு பாலிவுட்டின் முக்கியமான படைப்புகளில் இவரின் முகம் ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ தோன்றியிருக்கிறது. ‘பூல் அவுர் பதார்’, ‘சத்யகம்’, ‘ஷோலே’ போன்ற இவருடைய படைப்புகள் பலவும் பாலிவுட் பெருமையாக சொல்லப்படும் படைப்புகள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra சிறுவயதில் வறுமையான சூழலிலேயே வளர்ந்தவர் தர்மேந்திரா. வறுமை காரணமாக சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாப்பில் ரெயில்வே கிளார்க்காக வேலை செய்திருக்கிறார். சினிமா ஆசையுடன் இருந்த அவர் ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டிய புகைப்படங்களை எடுக்கத் தேவையான பணம் கூட தர்மேந்திராவிடம் இல்லையாம். அவருடைய நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல், கனவுகளோடு மட்டுமே முயன்ற அவருக்கு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் கிடைத்தது. பிறகு சினிமாவில் வாய்ப்புத் தேடி மும்பைக்கு வந்தார். குடும்பத்தின் வறுமையான சூழலை அவர் எந்த நேரமும் தனது கனவுகளுக்கு தடையாக்கவில்லை. “கிடைத்த அறை, கிடைத்த உணவு. சரி, அதுவும் இல்லையென்றால், எனக்கு டீ மட்டுமே போதும்!” என அவர் இருந்ததாக முன்பு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் பெரும் கனவுடன், கிராமங்களிலிருந்து கிளம்பி வருபவர்களுக்கு நகரத்திலிருக்கும் விஷயங்களுக்கேற்ப தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதில் சில தயக்கங்கள் இருக்கும். அதே தயக்கங்களும் தொடக்கத்தில் தர்மேந்திராவுக்கும் இருந்திருக்கின்றன. தன்னம்பிக்கையுடன் தைரியமாக தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் பேசுவதில் தொடக்கத்தில் இவருக்கு சில தயக்கங்கள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் உடைத்து வெளிவர சில காலம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகும்கூட தர்மேந்திராவுக்கு நினைத்தபடியான பாதை அமையவில்லை. இரவு-பகலாக மும்பையில் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்து தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டியிருக்கிறார். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra பிறகு சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் முன்னேறியவருக்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடுவது பிடிக்காதாம். அவராகவே குதிரை சவாரி செய்வது உள்ளிட்ட பல ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கிவிடுவாராம். இப்படி தன் பணிக்கு நேர்மையாக இருந்தவருக்கு பாராட்டுகளும், அடையாளங்களும், விருதுகளும் குவிந்தன. ஒரு காலகட்டத்தில் பிஸியாக வலம் வரத் தொடங்கியவர் ஒரே நாளில் மூன்று படங்களின் ஷூட்டிங்கிற்கு சென்று வருவாராம். இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்தவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட்டு சென்று அங்கு நடிப்பதில் தர்மேந்திராவுக்கு நாட்டமில்லை. ஆதலால், அந்த வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பக்கமும் ரவுண்ட் அடித்திருக்கிறார். பிளாக் & வொயிட் சினிமா, கலர் சினிமா, ரீல் கேமிரா, டிஜிட்டல் கேமிரா, ஓடிடி என அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் இவர் அருகிலிருந்து கண்டிருக்கிறார். இந்த உச்ச நட்சத்திரத்துக்குள் ஒரு ரைட்டரும் இருக்கிறாராம். அதைப் பற்றி எந்த இயக்குநர்களும் இதுவரை பெரிதளவில் வெளியில் பேசியதில்லை. படப்பிடிப்பின்போது ஸ்கிரிப்டில் இருக்கும் சில காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதுவாராம். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியை மெருகேற்றுவதற்கான ஐடியாக்களையும் தருவாராம். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra உச்ச நட்சத்திரமாக, மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு நடிகர் அரசியலுக்கு வராமலா இருப்பார்!? அதுவும் நடந்தது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரின் கோரிக்கைக்குப் பிறகு அரசியலுக்கும் வந்தார். 2004 முதல் 2009 வரை ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். சினிமாவைப் போல அரசியல் வாழ்க்கை அவர் நினைத்தபடி அமையவில்லை. மக்கள், மீடியா என பலராலும் அவர் விமர்சிக்கப்பட்டார். பெரும் அலையாய் விமர்சனங்களை சந்தித்தவர் 2009-க்குப் பிறகு அரசியல் களத்துக்கு வரவில்லை. இது குறித்து அவரே, “அரசியல் என்னுடைய உலகம் கிடையாது. நானொரு சாதாரண நடிகர். அரசியல் எனக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. நான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை!” என்பதை திட்டவட்டமாக கூறினார். அறிமுக நடிகர், சிறந்த நடிகர், வாழ்நாள் சாதனையாளர் எனப் பல ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கும் இந்த லெஜெண்ட் நடிகருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் கிடைத்தது. “கேமிரா என்னுடைய வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. வயதாகிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சம் பயத்தையும் தருகிறது.” என முன்பொரு பேட்டியில் தர்மேந்திரா கூறியிருந்தார். இவருடைய வாரிசுகளான சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், கிரண் தியோல் என இவருக்கு அடுத்த இரண்டு தலைமுறைகள் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra ஆனால், இத்தனைக்கும் பிறகும், வயதான பிறகும், தர்மேந்திரா ரிடையர்மென்ட் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என கடைசிவரை பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து வந்தார். இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஒன் லாஸ்ட் டைம் ஹீ - மேன்! 60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா
Dharmendra: `ஷோலே'பட வீரு; பாலிவுட்டின் ஹீ - மேன், ரிடையர்மென்டுக்கு நோ! - தர்மேந்திராவின் கதை!
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அவருடைய இல்லத்துக்கு வெளியே, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்ணீருடன் ஒரு பதாகையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த பதாகையில், “கடவுளே, தயவு செய்து தர்மாஜியை சீக்கிரமாக குணப்படுத்து!” என எழுதப்பட்டிருந்தது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே, அவருடைய இல்லத்துக்கு வெளியே நீண்ட நேரமாக அவர் நின்றிருந்தார். அந்த 60 வயது நபர் மட்டுமல்ல, தர்மேந்திரா சிகிச்சைப் பெற்று வந்தபோது அவருடைய ரசிகர்கள் பலரும் பல பகுதிகளில் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra Funeral இந்த அளவிற்கு பலருக்கும் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் தர்மேந்திரா. பாலிவுட்டில் பல சாதனைகளைப் படைத்த இந்த சீனியர் நடிகருக்கு எண்ணற்ற தீவிர ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் மனதையெல்லாம் கனமாக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், அவருடைய இல்லத்தில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று மதியம் இயற்கையை எய்தியுள்ளார். மறைவு செய்தியை அறிந்தவுடன், கண்ணீருடன் அவருடைய ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர். ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த பாலிவுட் லெஜெண்டிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் ‘He-Man’ என்று அழைக்கப்படும் இந்த சீனியர் நடிகர், அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இன்று இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைவருடைய பேவரைட் நடிகர்கள் பட்டியலிலும் தர்மேந்திரா நிச்சயமாக இருப்பார். அந்த அளவிற்கு பாலிவுட்டின் முக்கியமான படைப்புகளில் இவரின் முகம் ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ தோன்றியிருக்கிறது. ‘பூல் அவுர் பதார்’, ‘சத்யகம்’, ‘ஷோலே’ போன்ற இவருடைய படைப்புகள் பலவும் பாலிவுட் பெருமையாக சொல்லப்படும் படைப்புகள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra சிறுவயதில் வறுமையான சூழலிலேயே வளர்ந்தவர் தர்மேந்திரா. வறுமை காரணமாக சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாப்பில் ரெயில்வே கிளார்க்காக வேலை செய்திருக்கிறார். சினிமா ஆசையுடன் இருந்த அவர் ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டிய புகைப்படங்களை எடுக்கத் தேவையான பணம் கூட தர்மேந்திராவிடம் இல்லையாம். அவருடைய நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல், கனவுகளோடு மட்டுமே முயன்ற அவருக்கு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் கிடைத்தது. பிறகு சினிமாவில் வாய்ப்புத் தேடி மும்பைக்கு வந்தார். குடும்பத்தின் வறுமையான சூழலை அவர் எந்த நேரமும் தனது கனவுகளுக்கு தடையாக்கவில்லை. “கிடைத்த அறை, கிடைத்த உணவு. சரி, அதுவும் இல்லையென்றால், எனக்கு டீ மட்டுமே போதும்!” என அவர் இருந்ததாக முன்பு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் பெரும் கனவுடன், கிராமங்களிலிருந்து கிளம்பி வருபவர்களுக்கு நகரத்திலிருக்கும் விஷயங்களுக்கேற்ப தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதில் சில தயக்கங்கள் இருக்கும். அதே தயக்கங்களும் தொடக்கத்தில் தர்மேந்திராவுக்கும் இருந்திருக்கின்றன. தன்னம்பிக்கையுடன் தைரியமாக தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் பேசுவதில் தொடக்கத்தில் இவருக்கு சில தயக்கங்கள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் உடைத்து வெளிவர சில காலம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகும்கூட தர்மேந்திராவுக்கு நினைத்தபடியான பாதை அமையவில்லை. இரவு-பகலாக மும்பையில் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்து தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டியிருக்கிறார். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra பிறகு சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் முன்னேறியவருக்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடுவது பிடிக்காதாம். அவராகவே குதிரை சவாரி செய்வது உள்ளிட்ட பல ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கிவிடுவாராம். இப்படி தன் பணிக்கு நேர்மையாக இருந்தவருக்கு பாராட்டுகளும், அடையாளங்களும், விருதுகளும் குவிந்தன. ஒரு காலகட்டத்தில் பிஸியாக வலம் வரத் தொடங்கியவர் ஒரே நாளில் மூன்று படங்களின் ஷூட்டிங்கிற்கு சென்று வருவாராம். இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்தவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட்டு சென்று அங்கு நடிப்பதில் தர்மேந்திராவுக்கு நாட்டமில்லை. ஆதலால், அந்த வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பக்கமும் ரவுண்ட் அடித்திருக்கிறார். பிளாக் & வொயிட் சினிமா, கலர் சினிமா, ரீல் கேமிரா, டிஜிட்டல் கேமிரா, ஓடிடி என அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் இவர் அருகிலிருந்து கண்டிருக்கிறார். இந்த உச்ச நட்சத்திரத்துக்குள் ஒரு ரைட்டரும் இருக்கிறாராம். அதைப் பற்றி எந்த இயக்குநர்களும் இதுவரை பெரிதளவில் வெளியில் பேசியதில்லை. படப்பிடிப்பின்போது ஸ்கிரிப்டில் இருக்கும் சில காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதுவாராம். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியை மெருகேற்றுவதற்கான ஐடியாக்களையும் தருவாராம். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra உச்ச நட்சத்திரமாக, மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு நடிகர் அரசியலுக்கு வராமலா இருப்பார்!? அதுவும் நடந்தது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரின் கோரிக்கைக்குப் பிறகு அரசியலுக்கும் வந்தார். 2004 முதல் 2009 வரை ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். சினிமாவைப் போல அரசியல் வாழ்க்கை அவர் நினைத்தபடி அமையவில்லை. மக்கள், மீடியா என பலராலும் அவர் விமர்சிக்கப்பட்டார். பெரும் அலையாய் விமர்சனங்களை சந்தித்தவர் 2009-க்குப் பிறகு அரசியல் களத்துக்கு வரவில்லை. இது குறித்து அவரே, “அரசியல் என்னுடைய உலகம் கிடையாது. நானொரு சாதாரண நடிகர். அரசியல் எனக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. நான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை!” என்பதை திட்டவட்டமாக கூறினார். அறிமுக நடிகர், சிறந்த நடிகர், வாழ்நாள் சாதனையாளர் எனப் பல ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கும் இந்த லெஜெண்ட் நடிகருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் கிடைத்தது. “கேமிரா என்னுடைய வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. வயதாகிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சம் பயத்தையும் தருகிறது.” என முன்பொரு பேட்டியில் தர்மேந்திரா கூறியிருந்தார். இவருடைய வாரிசுகளான சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், கிரண் தியோல் என இவருக்கு அடுத்த இரண்டு தலைமுறைகள் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra ஆனால், இத்தனைக்கும் பிறகும், வயதான பிறகும், தர்மேந்திரா ரிடையர்மென்ட் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என கடைசிவரை பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து வந்தார். இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஒன் லாஸ்ட் டைம் ஹீ - மேன்! 60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா
மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!
மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக மக்காச்சோளத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் இல்லாமல் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட...
முதல்ல என் loveஐ reject பண்ணிட்டாரு...! - `Thirumangalyam' Actress Megha Salman Exclusive | Serial
கமல்ஹாசனை விமர்சித்த டிவி நடிகருக்கு பா.ஜ.க வில் பதவி - பின்னணி என்ன?
விஜய் டிவியில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்', சன் டிவியில் `மருமகள்' ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். சில படங்களிலும் நடித்திருந்தாலும் டிவியில் அதிக கவனம் செலுத்தி வருபவர். சமீபமாக அரசியல் கருத்துகளை யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். குறிப்பாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், சனாதானம் குறித்து நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுன்டேஷன் விழாவில் கமல் பேசிய பேச்சைக் கண்டித்து பேட்டி கொடுத்த இவர், அப்போது சர்ச்சைக்குரிய சில வார்த்தைகளைப் பேசியதாக மக்கள் நீதி மயயம் சார்பில் இவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது நினைவிருக்கலாம். அந்த விவகாரத்தில் முன் ஜாமின் கூட விண்ணப்பித்தார். இந்த நிலையில் தற்போது பா.ஜ.க.வில் இவருக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. Kamal Haasan - கமல் ஹாசன் 'கமலைக் கடுமையாக விமர்சித்ததற்கு பரிசா?' என்றோம். 'ஒரு நடிகனாக கமல் சார் மீது நான் ரொம்பவே மரியாதை வச்சிருக்கேன். ஆனா அவர் இந்துக்களின் நம்பிக்கையான விஷயமான சனாதானம் குறித்து விமர்சனம் செய்தா எப்படி ஏத்துக்க முடியும்? அதனால எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக பேச வேண்டி வந்தது. அது முடிஞ்சு போன விஷயம். ஆனா மீடியாவுல அதை ரொம்பவே பெரிசு பண்ணிட்டாங்க. வீட்டுல என் பொண்ணு ரொம்பவே பயப்படுகிற அளவுக்கு கொண்டு போய் விட்டுட்டாங்க. கைது அது இதுன்னு பரவிய செய்தியில பதட்டமாகிட்ட பொண்ணு, `இனிமே யூ டியூப்கள்ல இந்த மாதிரி பேச மாட்டேன்னு சத்தியம்பண்ணுங்க'ங்கிற லெவலுக்குப் போயிடுச்சு. எப்படியோ அந்த சம்பவம் முடிஞ்சு போன விஷயம். அதுக்கும் பிரச்சார அணி பொறுப்பு கிடைச்சதுக்கும் தொடர்பில்லை. கட்சிக்காக நான் பேசிட்டு வர்றதை கவனிச்சு அவங்களா தந்திருக்காங்க. அதுக்கு என்ன செய்யணுமோ அதை செஞ்சாகணும். அதனால பொண்ணுகிட்ட இப்ப பேசியிருக்கேன். இனிமே பஞ்சாயத்து ஆகிற எல்லைக்குப் போகாம கட்சி வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களைப் பேசணும்' என்கிறார்.
சிவா உங்களுக்கு ஹீரோ ஆசை வேணாம், காமெடி ரோல் போதும்- சினிஷ், சிவகார்த்திகேயன் ஷேரிங்ஸ்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது. Super hero - Ninja அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம். இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா, பா.ரஞ்சித் எனப் பலரும் கலந்துகொண்டார்கள். 'நானும் சிவகார்த்திகேயனும் 10 வருஷமாக பேசிக்கல' -தயாரிப்பாளர் சினிஷ் இந்நிலையில் இந்த பட பூஜையில் சிவகார்த்திகேயன் குறித்து ஜாலியாகப் பேசியிருக்கும் தயாரிப்பாளர் சினிஷ், ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி 'வேட்டை மன்னன்' படத்தோட சமயத்தில சிவா கிட்ட ஏதோவொன்னு சொல்லி அவர் மனச கஷ்டப்படுத்திட்டேன். அதுனால் ரெண்டு பேரும் கிட்டத்தட்ட 10 வருஷம் பேசிக்கல. என்னோட இணை தயாரிப்பில் வந்த 'பார்க்கிங்' படம் தேசிய விருது வாகியபோது தயக்கமில்லாமல் என்னைப் பாராட்டினார் சிவா. என்றார். Nelson: விருது கிடைச்சா எனக்குதான்னு அக்ரீமெண்ட் போட்டார் - Parking தயாரிப்பாளர் குறித்து நெல்சன் தயாரிப்பாளர் சினிஷ் 'நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?' தயாரிப்பாளர் சினிஷ் - சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சிவகார்த்திகேயன், சினிஷ் எல்லாரும் 'வேட்டை மன்னன்' படத்தில் உதவி இயக்குநர்களாக வேலை பார்த்தவர்கள். அந்த நேரத்தில் சினிஷ், 'உங்களுக்கு என்ன ஆகனும்னு ஆசை' என சிவாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு சிவா, 'ஹிரோ ஆகனும்னு' ஜாலியாகச் சொல்லியிருக்கிறார். உடனே சினிஷ் எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. சைட்ல காமெடி ரோல் பண்றதுக்கு ஆசைப்பட்டால் ஓகேனு சொல்லியிருக்கிறார். சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் சினிஷ் 'வேட்டை மன்னன்' சமயத்துல 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம்'னு... - சிவகார்த்திகேயன் ஜாலி டாக் அதற்கு சிவா, ஏன், நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?னு கேட்டிருக்கிறார். இடையில் இவர்கள் ஒரு 10 வருடம் பேசாமல் இருந்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் ஹீரோவானதற்குப் பிறகு அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்காதீங்க'னு சொல்லியிருக்கிறார் சினிஷ். ஆனால், அதையெல்லாம் நான் மனசுல வச்சுக்கல. நடிப்பில் கொஞ்சம் பிஸியாகிட்டதால நாங்க பேசிக்க முடியல என்று சிவா இந்த படபூஜை நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன், சினிஷ் இடையேயான இந்த கலகல பேச்சு சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.
Serial Update: விசாரித்த போலீஸ்,'நான் அவனில்லை'என்ற நடிகர்; சீரியல் தயாரிப்பில் பிஸி ஆகிவிட்ட நீலிமா
மீண்டும் தயாரிப்பில் பிஸி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீலிமா ராணி. வளர்ந்த பின் சீரியல் சினிமா என ஒரு ரவுண்டு வந்தார். ஐம்பதுக்கும் அதிகமான சீரியல்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். நடிப்புக்காக விருதுகளையும் வாங்கியிருக்கும் இவர், ஒருகட்டத்தில் சீரியல் தயாரிப்பாளராக உயர்ந்தார். 'நிறம் மாறாத பூக்கள்' ஜீ தமிழ் சேனலில் இவர் தயாரிப்பில் ஒளிபரப்பான தொடர்தான். அந்தத் தொடருக்குப் பிறகு இன்னொரு சீரியலையும் தயாரித்தார். தற்போது இவரது அடுத்த சீரியல் ஒளிபரப்புக்குத் தயாராகிவிட்டது. இன்று (24/11/26) முதல் ஜீ தமிழ் சேனலில் பிற்பகல் 2.30 க்கு ஒளிபரப்பாகவிருக்கிற 'அண்ணாமலை குடும்பம்' நீலிமா ராணியின் தயாரிப்பில் உருவானதுதான். அண்ணாமலை குடும்பம் ஹீரோவாக `முத்தழகு', `சூர்யவம்சம்' ஆகிய தொடர்களில் நடித்த ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்க ஷாமிலி, `கோலங்கள்' அபிஷேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். திறமையான நடிகையாக வலம் வந்தவர் நீலிமா. மீண்டும் நடிப்பு பக்கம் எப்போது வருவாரென அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதற்கு வாய்ப்பு உள்ளதா என விசாரித்தால், 'மேடம் இப்ப திரும்பவும் தயாரிப்பில் பிஸி' என்கிறார்கள் அவர தரப்பில். நான் அவனில்லை சின்னத்திரையின் பிரபல தம்பதி ராகவ் - ப்ரீத்தா. நடிப்பு இசை என பன்முகத் திறமை கொண்டவர் ராகவ். 'எந்திரன்', `நஞ்சுபுரம்' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கும் ராகவ்விடம் சில தினங்களுக்கு முன் போலீஸ் விசாரணை நடத்தியது. என்ன விவகாரம் என அவரிடமே கேட்டோம். 'சென்னை திருவல்லிக் கேணியில் தனியாக வசித்த முதியவர் ஒருவர் சமீபத்தில் இறந்திருக்கார். அவருடைய உறவினர்கள் சிலர் என்னுடைய போட்டோவை போலீஸுக்கு கொடுத்து 'இவர்தான் அவருடைய மகன்'னு சொல்லியிருக்காங்க. ராகவ் எங்கிட்ட போலீஸ் கேட்டாங்க. என் அப்பா தவறி பல வருடங்களாகி விட்டது. அந்த முதியவர் யாருன்னே எனக்குத் தெரியாது. அவங்க உறவினர்கள் ஏன் என் போட்டோவைக் காட்டி மகன்னு சொன்னாங்கனும் தெரியலை. இந்தச் செய்தி ரெண்டு மூணு நாள் பயங்கர அப்செட் ஆக்கிடுச்சு. அதேநேரம் அந்த முதியவர் நிலையை நினைச்சு வருத்தப்படவும் செஞ்சேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்தனையும் செஞ்சேன்'' என்கிறார் ராகவ்.
60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று அவரது இல்லத்தில் காலமானார். பாலிவுட்டிற்கு தர்மேந்திரா வந்த பிறகுதான் பாலிவுட்டின் போக்கே மாறியது. அவர் வருவதற்கு முன்பு வரை நடிகர்கள் சோக படங்களிலும், பக்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்த பிறகுதான் காதல் படங்கள் பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தன. பாலிவுட்டில் 60 ஆண்டுகள் இருந்துள்ள தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் பாலிவுட்டில் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார். நாளை என்ற ஒன்று இல்லை இன்றே வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற கொள்கையில் வாழ்ந்த தர்மேந்திராவிற்கு இளம் வயதில் மும்பை வந்து நடிகராக மாறவேண்டும் என்பது கனவாக இருந்தது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் தர்மேந்திரா கேவல் கிருஷண் தியோல் என்ற பெயரில் பிறந்த தர்மேந்திரா பாலிவுட் நடிகர் திலிப் குமாரை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டார். முதல் மனைவியுடன் 1948ம் ஆண்டு நடிகர் திலிப் குமார் சாஹித் என்ற படத்தில்தான் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதோடு தனது கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ள சினிமா போஸ்டர்களில் தனது புகைப்படம் இருக்கிறதா என்பதை தேடி சைக்கிளில் ஊர் முழுக்க சுற்றும் தர்மேந்திரா எப்போதும் பெரிதாகக் கனவு கண்டார். அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அந்த கனவுகள் இருக்கும். காலை எழுத்தவுடன் தினமும் கண்ணாடி முன் நின்று தன்னால் திலீப் குமாராக மாற முடியுமா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1960க்கு முன்பு படங்களில் நடித்திருந்தாலும் 1960ம் ஆண்டு வெளியான தில் பி தேரா ஹம் பீ தேரே என்ற படம் தான் அவரை முற்றிலும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. கார் நிறுத்தும் இடத்தில் தங்கிய தர்மேந்திரா மும்பைக்கு வந்த புதிதில் தர்மேந்திரா மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு தங்குவதற்கு சரியான இடம் கூட கிடையாது. கார்களை நிறுத்தும் கேரேஜில் தங்கிக்கொண்டார். சரியாக வேலை இல்லாமல் டிரில்லிங் கம்பெனியில் ரூ.200 சம்பளத்திற்கு வேலை செய்தார். அதிலும் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓவர் டைம் வேலை செய்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். 1960களில் சாதாரண நடிகராக அன்பத், பந்தினி, அனுபமா மற்றும் ஆயா சவான் ஜூம் கே போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து தர்மேந்திராவை முன்னிறுத்தக்கூடிய ஷோலே, தரம் வீர், பூல் அவுர் பத்தர், மேரா காவ்ன் மேரா தேஷ் மற்றும் சீதா அவுர் கீதா போன்ற படங்களில் நடித்தார். 1966ம் ஆண்டு அவர் நடித்த ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் தான் அவரது முதல் பிளாக் பஸ்டராக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் சட்டை இல்லாமல் நடித்திருப்பார். கிரேக்க கடவுளாக சித்தரிக்கப்படுவது குறித்து தர்மேந்திராவிடம் கேட்டதற்கு கிரேக்க கடவுள் என்றால் எனக்கு அர்த்தம் தெரியாது என்று குறிப்பிட்டார். அவர் அளித்திருந்த பேட்டியில்,''நான் திரையில் வரும் ஒவ்வொரு முறையும் எனது இமேஜை உடைத்துவிட்டேன். எனக்கு ஒரு இமேஜ் இருப்பதாக நான் நம்பவில்லை. கிரேக்க கடவுள் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மக்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். ஹேமாமாலினியுடன் மக்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அதில் உயர்ந்தவனாக இருக்கவில்லை. காதல் எனக்கு ஒரு வலுவான அடித்தளத்தைக் கொடுத்துள்ளது, மேலும் இந்த அன்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்; அது ஒருபோதும் தேய்ந்து போகாது என்று நம்புகிறேன், என்று கூறியிருந்தார். பாலிவுட் அவருக்கு கரம் தரம் என்ற புனைப்பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து கரம் தரம் தாபா என்ற பெயரில் ரெஸ்டாரன்ட்களை தர்மேந்திரா தொடங்கினார். 1970-80களில் மிகவும் பிரபலமாக விளங்கிய தர்மேந்திரா ஷோலே, சீதா அவுர் கீதா மற்றும் ட்ரீம் கேர்ள் போன்ற படங்களில் நடிகை ஹேமமாலினியுடன் இணைந்து நடித்தார். 1980 இல் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமாமாலினியை திருமணம் செய்து கொண்டார். 2004ம் ஆண்டு தர்மேந்திரா ராஜஸ்தானில் இருந்து பா.ஜ.க சார்பாக எம்.பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக விளங்கிய தர்மேந்திரா தனது 89 வயதில் உயிரிழந்தார்.
60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று அவரது இல்லத்தில் காலமானார். பாலிவுட்டிற்கு தர்மேந்திரா வந்த பிறகுதான் பாலிவுட்டின் போக்கே மாறியது. அவர் வருவதற்கு முன்பு வரை நடிகர்கள் சோக படங்களிலும், பக்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்த பிறகுதான் காதல் படங்கள் பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தன. பாலிவுட்டில் 60 ஆண்டுகள் இருந்துள்ள தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் பாலிவுட்டில் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார். நாளை என்ற ஒன்று இல்லை இன்றே வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற கொள்கையில் வாழ்ந்த தர்மேந்திராவிற்கு இளம் வயதில் மும்பை வந்து நடிகராக மாறவேண்டும் என்பது கனவாக இருந்தது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் தர்மேந்திரா கேவல் கிருஷண் தியோல் என்ற பெயரில் பிறந்த தர்மேந்திரா பாலிவுட் நடிகர் திலிப் குமாரை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டார். முதல் மனைவியுடன் 1948ம் ஆண்டு நடிகர் திலிப் குமார் சாஹித் என்ற படத்தில்தான் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதோடு தனது கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ள சினிமா போஸ்டர்களில் தனது புகைப்படம் இருக்கிறதா என்பதை தேடி சைக்கிளில் ஊர் முழுக்க சுற்றும் தர்மேந்திரா எப்போதும் பெரிதாகக் கனவு கண்டார். அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அந்த கனவுகள் இருக்கும். காலை எழுத்தவுடன் தினமும் கண்ணாடி முன் நின்று தன்னால் திலீப் குமாராக மாற முடியுமா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1960க்கு முன்பு படங்களில் நடித்திருந்தாலும் 1960ம் ஆண்டு வெளியான தில் பி தேரா ஹம் பீ தேரே என்ற படம் தான் அவரை முற்றிலும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. கார் நிறுத்தும் இடத்தில் தங்கிய தர்மேந்திரா மும்பைக்கு வந்த புதிதில் தர்மேந்திரா மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு தங்குவதற்கு சரியான இடம் கூட கிடையாது. கார்களை நிறுத்தும் கேரேஜில் தங்கிக்கொண்டார். சரியாக வேலை இல்லாமல் டிரில்லிங் கம்பெனியில் ரூ.200 சம்பளத்திற்கு வேலை செய்தார். அதிலும் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓவர் டைம் வேலை செய்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். 1960களில் சாதாரண நடிகராக அன்பத், பந்தினி, அனுபமா மற்றும் ஆயா சவான் ஜூம் கே போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து தர்மேந்திராவை முன்னிறுத்தக்கூடிய ஷோலே, தரம் வீர், பூல் அவுர் பத்தர், மேரா காவ்ன் மேரா தேஷ் மற்றும் சீதா அவுர் கீதா போன்ற படங்களில் நடித்தார். 1966ம் ஆண்டு அவர் நடித்த ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் தான் அவரது முதல் பிளாக் பஸ்டராக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் சட்டை இல்லாமல் நடித்திருப்பார். கிரேக்க கடவுளாக சித்தரிக்கப்படுவது குறித்து தர்மேந்திராவிடம் கேட்டதற்கு கிரேக்க கடவுள் என்றால் எனக்கு அர்த்தம் தெரியாது என்று குறிப்பிட்டார். அவர் அளித்திருந்த பேட்டியில்,''நான் திரையில் வரும் ஒவ்வொரு முறையும் எனது இமேஜை உடைத்துவிட்டேன். எனக்கு ஒரு இமேஜ் இருப்பதாக நான் நம்பவில்லை. கிரேக்க கடவுள் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மக்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். ஹேமாமாலினியுடன் மக்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அதில் உயர்ந்தவனாக இருக்கவில்லை. காதல் எனக்கு ஒரு வலுவான அடித்தளத்தைக் கொடுத்துள்ளது, மேலும் இந்த அன்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்; அது ஒருபோதும் தேய்ந்து போகாது என்று நம்புகிறேன், என்று கூறியிருந்தார். பாலிவுட் அவருக்கு கரம் தரம் என்ற புனைப்பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து கரம் தரம் தாபா என்ற பெயரில் ரெஸ்டாரன்ட்களை தர்மேந்திரா தொடங்கினார். 1970-80களில் மிகவும் பிரபலமாக விளங்கிய தர்மேந்திரா ஷோலே, சீதா அவுர் கீதா மற்றும் ட்ரீம் கேர்ள் போன்ற படங்களில் நடிகை ஹேமமாலினியுடன் இணைந்து நடித்தார். 1980 இல் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமாமாலினியை திருமணம் செய்து கொண்டார். 2004ம் ஆண்டு தர்மேந்திரா ராஜஸ்தானில் இருந்து பா.ஜ.க சார்பாக எம்.பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக விளங்கிய தர்மேந்திரா தனது 89 வயதில் உயிரிழந்தார்.
BB Tamil 9: யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க, ஆனா! - வாக்குவாதத்தில் வியானா, திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் சாப்பாடு விஷயத்திற்காக வியானாவும், திவ்யா கணேஷும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். BB Tamil 9 மூணு தோசைதான் கொடுப்போம். இரண்டு தோசைதான் கொடுப்போம்'னு சொல்றாங்க. அப்றோ எதுக்கு மளிகை சாமான்கள் வருது. யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க. இவுங்க மேல தப்பு'னு சொன்னா பாத்திரத்தை டொப்பு டொப்புனு வைப்பாங்க. ப்ளீஸ் அடுத்து தலையா வரவுங்க சரியான குக்கிங் டீம் போடுங்க என வியானா, திவ்யா கணேஷை சாடுகிறார். அடுத்த தடவை வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க என திவ்யா கணேஷ் வியானாவை சொல்கிறார். BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி
BB Tamil 9: யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க, ஆனா! - வாக்குவாதத்தில் வியானா, திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் சாப்பாடு விஷயத்திற்காக வியானாவும், திவ்யா கணேஷும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். BB Tamil 9 மூணு தோசைதான் கொடுப்போம். இரண்டு தோசைதான் கொடுப்போம்'னு சொல்றாங்க. அப்றோ எதுக்கு மளிகை சாமான்கள் வருது. யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க. இவுங்க மேல தப்பு'னு சொன்னா பாத்திரத்தை டொப்பு டொப்புனு வைப்பாங்க. ப்ளீஸ் அடுத்து தலையா வரவுங்க சரியான குக்கிங் டீம் போடுங்க என வியானா, திவ்யா கணேஷை சாடுகிறார். அடுத்த தடவை வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க என திவ்யா கணேஷ் வியானாவை சொல்கிறார். BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி
Nelson: விருது கிடைச்சா எனக்குதான்னு அக்ரீமெண்ட் போட்டார் - Parking தயாரிப்பாளர் குறித்து நெல்சன்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது. அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம். இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள். தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சினிஷ் குறித்து நெல்சன், அவருடைய வழக்கமான கலாய் மோடிலேயே பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். Bhaarath - Ninja நெல்சன், தயாரிப்பாளர் சினிஷ் என்னுடைய காலேஜ் மேட். காலேஜ்ல மாஸ் காட்டுறதுக்காகப் பலரும் பஸ் டாப்ல ஏறி நின்னுட்டு வருவாங்க. அப்படி அவரும் டாப்ல வந்தபோதான் முதன்முதல்ல அவரைப் பார்த்தேன். டாப்ல நிக்கும்போதும் பயந்துட்டேதான் நின்னுட்டு வந்தாரு. பிறகு க்ளாஸ்ல என் பக்கத்துல வந்து உட்கார்ந்தாரு. 'நீங்கதான் பஸ்ல நின்னுட்டு வந்தது'னு கேட்டேன். 'ஆமா, நல்லா இருந்ததா'னு கேட்டாரு. Mask: வெற்றி மாறன் சாரை ஏமாற்றியது பெரிய விஷயம் - நெல்சன் கலகல பேச்சு பிறகொரு நாள் தனியாக அவர் மட்டும் போராட்டம் பண்ணிட்டு இருந்தாரு. காலேஜ் டைம் மாற்றச் சொல்லி அவர் மட்டும் போராட்டம் பண்ணிட்டு இருந்தாரு. நாங்களெல்லாம் மேல நின்னு 'ச்சீ மேல வா'னு கலாய்ச்சிட்டு இருந்தோம். பிறகு அவர் பக்கத்துல உட்கார கூடாதுனு பென்ச் மாறி உட்கார்ந்துட்டேன். செமஸ்டர் எக்ஸாம் முடிவுகள் வந்திருந்த நேரத்துல நாங்க ரிசல்ட் பார்த்துட்டு இருந்தோம். அதுக்கும் சினிஷ் லேட்டாகத்தான் வந்தாரு. எங்களுடைய இன்னொரு நண்பன் சினிஷ் ரிசல்ட் பார்க்கிறதுக்கு முன்னாடியே அவர்கிட்ட 'நீ ஃபெயில்'னு சொல்லிட்டான். சினிஷும் உண்மையாகவே அவர் ஃபெயிலாகிட்டதாக நினைச்சு அடுத்தடுத்து அதே பரிட்சையை அரியர் எழுதிட்டு இருந்தாரு. ரொம்ப நாளைக்குப் பிறகுதான் முதல் எக்ஸாம்லேயே அவர் பாஸ் ஆகிட்டார்ங்கிற விஷயம் அவருக்கே தெரிய வந்தது. இப்போ புரொடக்ஷன் பண்ணிட்டு இருக்காரு. Nelson 'பார்கிங்' படத்துடைய அக்ரிமென்ட்ல 'இந்தப் படத்துக்கு எந்த விருது கிடைச்சாலும் அது எனக்குத்தான்'னு போட்டுடாரு. (பார்கிங் படத்தை பாஷன் ஸ்டூடியோவுடன் இணைத்து சினிஷ் தயாரித்தார்) தேசிய விருது வாங்கின பிறகு ரொம்பவே தன்மையாக என்கிட்ட வந்து பேசினாரு. அதுக்கு முன்னாடி அவர் அப்படி பேசினதே கிடையாது. அவருடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு வெளிநாட்டுல இருந்து முதலீட்டாளர்கள் வந்திருக்காங்க. உள்ளூர்ல இருந்து யாருமே வரல பார்த்தீங்களா! (சிரித்துக் கொண்டே...) இந்தப் படங்கள் இரண்டும் வெற்றியடைய அவருக்கு வாழ்த்துகள் எனக் கலகலப்புடன் பேசினார். MASK: 'அரசன் அப்டேட், நெல்சன் - கவின் ரிலேஷன்ஷிப்’ - வெற்றிமாறன் பேச்சு!
Nelson: விருது கிடைச்சா எனக்குதான்னு அக்ரீமெண்ட் போட்டார் - Parking தயாரிப்பாளர் குறித்து நெல்சன்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது. அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம். இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள். தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சினிஷ் குறித்து நெல்சன், அவருடைய வழக்கமான கலாய் மோடிலேயே பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். Bhaarath - Ninja நெல்சன், தயாரிப்பாளர் சினிஷ் என்னுடைய காலேஜ் மேட். காலேஜ்ல மாஸ் காட்டுறதுக்காகப் பலரும் பஸ் டாப்ல ஏறி நின்னுட்டு வருவாங்க. அப்படி அவரும் டாப்ல வந்தபோதான் முதன்முதல்ல அவரைப் பார்த்தேன். டாப்ல நிக்கும்போதும் பயந்துட்டேதான் நின்னுட்டு வந்தாரு. பிறகு க்ளாஸ்ல என் பக்கத்துல வந்து உட்கார்ந்தாரு. 'நீங்கதான் பஸ்ல நின்னுட்டு வந்தது'னு கேட்டேன். 'ஆமா, நல்லா இருந்ததா'னு கேட்டாரு. Mask: வெற்றி மாறன் சாரை ஏமாற்றியது பெரிய விஷயம் - நெல்சன் கலகல பேச்சு பிறகொரு நாள் தனியாக அவர் மட்டும் போராட்டம் பண்ணிட்டு இருந்தாரு. காலேஜ் டைம் மாற்றச் சொல்லி அவர் மட்டும் போராட்டம் பண்ணிட்டு இருந்தாரு. நாங்களெல்லாம் மேல நின்னு 'ச்சீ மேல வா'னு கலாய்ச்சிட்டு இருந்தோம். பிறகு அவர் பக்கத்துல உட்கார கூடாதுனு பென்ச் மாறி உட்கார்ந்துட்டேன். செமஸ்டர் எக்ஸாம் முடிவுகள் வந்திருந்த நேரத்துல நாங்க ரிசல்ட் பார்த்துட்டு இருந்தோம். அதுக்கும் சினிஷ் லேட்டாகத்தான் வந்தாரு. எங்களுடைய இன்னொரு நண்பன் சினிஷ் ரிசல்ட் பார்க்கிறதுக்கு முன்னாடியே அவர்கிட்ட 'நீ ஃபெயில்'னு சொல்லிட்டான். சினிஷும் உண்மையாகவே அவர் ஃபெயிலாகிட்டதாக நினைச்சு அடுத்தடுத்து அதே பரிட்சையை அரியர் எழுதிட்டு இருந்தாரு. ரொம்ப நாளைக்குப் பிறகுதான் முதல் எக்ஸாம்லேயே அவர் பாஸ் ஆகிட்டார்ங்கிற விஷயம் அவருக்கே தெரிய வந்தது. இப்போ புரொடக்ஷன் பண்ணிட்டு இருக்காரு. Nelson 'பார்கிங்' படத்துடைய அக்ரிமென்ட்ல 'இந்தப் படத்துக்கு எந்த விருது கிடைச்சாலும் அது எனக்குத்தான்'னு போட்டுடாரு. (பார்கிங் படத்தை பாஷன் ஸ்டூடியோவுடன் இணைத்து சினிஷ் தயாரித்தார்) தேசிய விருது வாங்கின பிறகு ரொம்பவே தன்மையாக என்கிட்ட வந்து பேசினாரு. அதுக்கு முன்னாடி அவர் அப்படி பேசினதே கிடையாது. அவருடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு வெளிநாட்டுல இருந்து முதலீட்டாளர்கள் வந்திருக்காங்க. உள்ளூர்ல இருந்து யாருமே வரல பார்த்தீங்களா! (சிரித்துக் கொண்டே...) இந்தப் படங்கள் இரண்டும் வெற்றியடைய அவருக்கு வாழ்த்துகள் எனக் கலகலப்புடன் பேசினார். MASK: 'அரசன் அப்டேட், நெல்சன் - கவின் ரிலேஷன்ஷிப்’ - வெற்றிமாறன் பேச்சு!
Jilloma – Lyrical Video , Middle Class , Munishkanth, Vijayalakshmi ,Kapil Kapilan , Pranav Muniraj
தர்மேந்திரா காலமானார்; மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சிகிச்சை எடுத்தபோது உயிர் பிரிந்தது
கடந்த ஒரு மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89. டிசம்பர் 8ம் தேதி, அவரது 90வது பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போதே அவர் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. இதையடுத்து அவரின் மனைவி ஹேமாமாலினி தன் கணவர் நலமோடு இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும், மீடியாக்கள் தவறான செய்தியை பரப்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தர்மேந்திரா அதோடு கடந்த 12 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் தர்மேந்திரா வீட்டிற்கு வெளியில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அவரது உடல் நிலை இன்று மோசமடைந்தது. அவர் பிற்பகலில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1960ம் ஆண்டு தில் பி தேரா ஹம் பி தேரே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தர்மேந்திரா பாலிவுட்டில் முடிசூடா மன்னனாக இருந்தார். கடைசியாக அவர் தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் அடுத்த மாதம் 25ம் தேதிதான் திரைக்கு வருகிறது. தர்மேந்திராவிற்கு பிரகாஷ் கவுர் மற்றும் ஹேமமாலினி ஆகிய இரு மனைவிகள் மற்றும் நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், இஷா தியோல் மற்றும் அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா என மகன், மகள்கள் இருக்கின்றனர்.
தர்மேந்திரா காலமானார்; மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சிகிச்சை எடுத்தபோது உயிர் பிரிந்தது
கடந்த ஒரு மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89. டிசம்பர் 8ம் தேதி, அவரது 90வது பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போதே அவர் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. இதையடுத்து அவரின் மனைவி ஹேமாமாலினி தன் கணவர் நலமோடு இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும், மீடியாக்கள் தவறான செய்தியை பரப்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தர்மேந்திரா அதோடு கடந்த 12 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் தர்மேந்திரா வீட்டிற்கு வெளியில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அவரது உடல் நிலை இன்று மோசமடைந்தது. அவர் பிற்பகலில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1960ம் ஆண்டு தில் பி தேரா ஹம் பி தேரே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தர்மேந்திரா பாலிவுட்டில் முடிசூடா மன்னனாக இருந்தார். கடைசியாக அவர் தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் அடுத்த மாதம் 25ம் தேதிதான் திரைக்கு வருகிறது. தர்மேந்திராவிற்கு பிரகாஷ் கவுர் மற்றும் ஹேமமாலினி ஆகிய இரு மனைவிகள் மற்றும் நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், இஷா தியோல் மற்றும் அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா என மகன், மகள்கள் இருக்கின்றனர்.
அஜித் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட வெங்கடேஷ் பட்..!
அஜித் குறித்து சிப்ஸ் வெங்கடேஷ் பட் பேசி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் செஃப் வெங்கடேஷ் பட்.இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக் டூப் குக் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் செஃப் வெங்கடேஷ் பட். ரஜினி சாருக்கு...
'வேட்டை மன்னன்'சமயத்துல 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம்'னு... - சிவகார்த்திகேயன் ஜாலி டாக்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினீஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது. அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம். இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள். Bhaarath - Ninja இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், 'சூப்பர் ஹீரோ' படத்திற்காக அர்ஜூன் தாஸுக்கு வாழ்த்துகள். 'நிஞ்சா' டீமுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்தக் கதையின் ஐடியா எனக்குத் தெரியும். ரொம்பவே சுவாரஸ்யமானது அது. நெல்சன் அண்ணன்கிட்ட நான் 'வேட்டை மன்னன்' படத்துல உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அப்போ எங்களுக்கு ஆபீஸ் எதுவும் கிடையாது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள்னு யாரும் அப்போ உறுதியாகல. அப்போ, நாங்க மெரினா பீச்ல உட்கார்ந்துதான் கதை பேசுவோம். நெல்சன் அண்ணன் சொல்ற விஷயங்களை நான் எழுதுவேன். ஆபீஸ் போட்டதுக்குப் பிறகு அருண் ராஜா வந்து சேர்ந்தாரு. அதன் பிறகு சினிஷ் (பலூன் பட இயக்குநர் & பார்க்கிங் பட தயாரிப்பாளர்) வந்தாரு. அவர் நெல்சன் அண்ணனுடைய ஃப்ரெண்ட்னு எனக்குத் தெரியும். அப்போ அவர் என்கிட்ட 'நீங்க என்னவாக ஆகப்போறீங்க சிவா'னு கேட்டாரு. அப்போ எனக்கு ஹீரோவாகணும்னு எண்ணம் கிடையாது. 'வேட்டை மன்னன்' படத்துல அப்போ உதவி இயக்குநர், ஒரு காமெடி ரோல் செய்திட்டு இருந்தேன். சினிஷை வம்பிழுப்போம்னு 'நான் ஹீரோவாகணும்'னு சொன்னேன். உடனே அவர் 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. சைட்ல காமெடி ரோல் பண்றதுக்கு ஆசைப்பட்டால் ஓகே'னு சொன்னாரு. உடனே நான் 'ஏன், நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?'னு கேட்டேன். அவர் 'தேவையில்லாத வேலைப் பார்க்கிறீங்க. இந்த ஹீரோலாம் உங்களுக்கு வேணாம்னு' சொன்னாரு. Sivakarthikeyan அவர் சொன்ன விஷயத்தையே நான் மறந்துட்டேன். நான் ஹீரோவானப் பிறகு அவருக்கு ஒரு நாள் இந்த விஷயம் நினைவுக்கு வந்து என்கிட்ட 'அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்காதீங்க'னு சொன்னாரு. அப்போ கொஞ்சம் பிஸியாக இருந்து பேசாம இருந்ததுனால, அவர் மேல நான் கோபமாக இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காரு. ஆனா, அந்த விஷயத்தையே நான் மறந்துட்டேன். அவர் இது மாதிரி நிறைய விஷயங்களை வெளிப்படையாகப் பேசிடுவாரு. அதுனால நிறைய பஞ்சாயத்தும் வந்திருக்கு (சிரித்துக் கொண்டே...). எந்தவொரு பின்புலமும் இல்லாமல் இன்னைக்கு சினிமாவுல இத்தனை பேரை அவர் சம்பாதிச்சிருக்கிறதுதான் அவருடைய நான் சக்சஸாகப் பார்க்கிறேன். என உற்சாகத்துடன் பேசினார்.
'வேட்டை மன்னன்'சமயத்துல 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம்'னு... - சிவகார்த்திகேயன் ஜாலி டாக்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினீஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது. அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம். இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள். Bhaarath - Ninja இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், 'சூப்பர் ஹீரோ' படத்திற்காக அர்ஜூன் தாஸுக்கு வாழ்த்துகள். 'நிஞ்சா' டீமுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்தக் கதையின் ஐடியா எனக்குத் தெரியும். ரொம்பவே சுவாரஸ்யமானது அது. நெல்சன் அண்ணன்கிட்ட நான் 'வேட்டை மன்னன்' படத்துல உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அப்போ எங்களுக்கு ஆபீஸ் எதுவும் கிடையாது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள்னு யாரும் அப்போ உறுதியாகல. அப்போ, நாங்க மெரினா பீச்ல உட்கார்ந்துதான் கதை பேசுவோம். நெல்சன் அண்ணன் சொல்ற விஷயங்களை நான் எழுதுவேன். ஆபீஸ் போட்டதுக்குப் பிறகு அருண் ராஜா வந்து சேர்ந்தாரு. அதன் பிறகு சினிஷ் (பலூன் பட இயக்குநர் & பார்க்கிங் பட தயாரிப்பாளர்) வந்தாரு. அவர் நெல்சன் அண்ணனுடைய ஃப்ரெண்ட்னு எனக்குத் தெரியும். அப்போ அவர் என்கிட்ட 'நீங்க என்னவாக ஆகப்போறீங்க சிவா'னு கேட்டாரு. அப்போ எனக்கு ஹீரோவாகணும்னு எண்ணம் கிடையாது. 'வேட்டை மன்னன்' படத்துல அப்போ உதவி இயக்குநர், ஒரு காமெடி ரோல் செய்திட்டு இருந்தேன். சினிஷை வம்பிழுப்போம்னு 'நான் ஹீரோவாகணும்'னு சொன்னேன். உடனே அவர் 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. சைட்ல காமெடி ரோல் பண்றதுக்கு ஆசைப்பட்டால் ஓகே'னு சொன்னாரு. உடனே நான் 'ஏன், நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?'னு கேட்டேன். அவர் 'தேவையில்லாத வேலைப் பார்க்கிறீங்க. இந்த ஹீரோலாம் உங்களுக்கு வேணாம்னு' சொன்னாரு. Sivakarthikeyan அவர் சொன்ன விஷயத்தையே நான் மறந்துட்டேன். நான் ஹீரோவானப் பிறகு அவருக்கு ஒரு நாள் இந்த விஷயம் நினைவுக்கு வந்து என்கிட்ட 'அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்காதீங்க'னு சொன்னாரு. அப்போ கொஞ்சம் பிஸியாக இருந்து பேசாம இருந்ததுனால, அவர் மேல நான் கோபமாக இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காரு. ஆனா, அந்த விஷயத்தையே நான் மறந்துட்டேன். அவர் இது மாதிரி நிறைய விஷயங்களை வெளிப்படையாகப் பேசிடுவாரு. அதுனால நிறைய பஞ்சாயத்தும் வந்திருக்கு (சிரித்துக் கொண்டே...). எந்தவொரு பின்புலமும் இல்லாமல் இன்னைக்கு சினிமாவுல இத்தனை பேரை அவர் சம்பாதிச்சிருக்கிறதுதான் அவருடைய நான் சக்சஸாகப் பார்க்கிறேன். என உற்சாகத்துடன் பேசினார்.
BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரொமோவில் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருக்கிறார். நடிகர் ஆர்யன் - கம்ருதீன் அந்தவகையில் அடுத்த 50 நாளுக்கான வைப் ( Vibe) இந்த வீட்டுல உச்சத்துல இருக்கணும். அதுக்கு நடுவுல FJ இருக்கணும் FJ விடம் அவரது நண்பர் பேசுகிறார். கம்ருதீனிடம் இந்த கேம்ம நீ தனியா விளையாண்ட அப்படின்னா அந்த பினாலே ஸ்டேஜ்ல நிக்கிறதுக்கான அவ்வளவு தகுதியும் உன் கிட்ட இருக்கு என நடிகர் ஆர்யன் சொல்கிறார். BB Tamil 9: நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம் - எச்சரிக்கும் பிரஜின் தொடர்ந்து மத்தவங்களை ஜெயிக்க வைக்க வந்த சப்போர்ட்டிங் கேரக்ட்டர் நீயா? இல்ல, டைட்டில் ஜெயிக்க போற மெயின் கேரக்ட்டர் நீயா? என கனி திருவிடம் அவரது சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி கேட்கிறார். விஜயலட்சுமி - கனி திரு அதேபோல எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல. இந்த ஷோல உன்னோட எக்ஸ்பீரியன்ஸை காட்டாம உன் வாழ்க்கையில நீ எங்க காட்ட போற என நடிகர் ஆரி பிரஜினிடம் சொல்கிறார்.
BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரொமோவில் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருக்கிறார். நடிகர் ஆர்யன் - கம்ருதீன் அந்தவகையில் அடுத்த 50 நாளுக்கான வைப் ( Vibe) இந்த வீட்டுல உச்சத்துல இருக்கணும். அதுக்கு நடுவுல FJ இருக்கணும் FJ விடம் அவரது நண்பர் பேசுகிறார். கம்ருதீனிடம் இந்த கேம்ம நீ தனியா விளையாண்ட அப்படின்னா அந்த பினாலே ஸ்டேஜ்ல நிக்கிறதுக்கான அவ்வளவு தகுதியும் உன் கிட்ட இருக்கு என நடிகர் ஆர்யன் சொல்கிறார். BB Tamil 9: நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம் - எச்சரிக்கும் பிரஜின் தொடர்ந்து மத்தவங்களை ஜெயிக்க வைக்க வந்த சப்போர்ட்டிங் கேரக்ட்டர் நீயா? இல்ல, டைட்டில் ஜெயிக்க போற மெயின் கேரக்ட்டர் நீயா? என கனி திருவிடம் அவரது சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி கேட்கிறார். விஜயலட்சுமி - கனி திரு அதேபோல எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல. இந்த ஷோல உன்னோட எக்ஸ்பீரியன்ஸை காட்டாம உன் வாழ்க்கையில நீ எங்க காட்ட போற என நடிகர் ஆரி பிரஜினிடம் சொல்கிறார்.
Sai pallavi:``மரியாதையான, சிறந்த நடிகை - சாய் பல்லவி குறித்து நடிகர் அனுபம் கெர் பாராட்டு
கோவாவில் நடந்து வரும் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் இவ்விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் முதல் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமரன் படக்குழுவினர் கோவா சென்றனர். இவ்விழாவில் பழம்பெரும் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டப் பலப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். View this post on Instagram அப்போது சாய் பல்லவியுடன் நடிகர் அனுபம் கெர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த சந்திப்புக்குப் பிறகு அனுபம் கெர் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``சாய் பல்லவி உண்மையானவர், பாசமுள்ளவர், தனித்துவமானவர், மரியாதையானவர் என உணர்ந்தேன். திறமையான நடிகை. இந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவரின் திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகை சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். Sai Pallavi: 'Happie Happie' - நடிகை சாய் பல்லவி லேட்டஸ் க்ளீக்ஸ் | Photo Album
BB TAMIL 9: DAY 49: `கம்முவின் ரொமான்ஸ் இழுபறி; கார் எவிக்ஷன் - சாண்ட்ரா மயக்கம்!’ - நடந்தது என்ன?
மறுபடியும் அதேதான் நிகழ்கிறது. ஆட்டத்தில் நீடிக்கத் துடிக்கும் கெமி வெளியேற்றப்பட்டிருக்கிறார். வீட்டுக்குப் போகத் துடிக்கும் ரம்யா இன்னமும் நீடிக்கிறார். இன்னொரு பக்கம், பாரு, சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் போன்ற அடாவடி நபர்கள், கன்டென்ட் காரணமாக எளிதில் அனுப்பப்பட மாட்டார்கள். வெளியுலகத்தில் சாமானியர்களுக்கு நிகழும் அதே விதமான அரசியல் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் நிகழ்கிறது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 49 ‘இது 50வது எபிசோட்’ என்கிற பெருமிதத்துடன் மேடைக்கு வந்தார் விசே. ஆனால் இந்த சீசன் இன்னும் கூட பெருமளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வீட்டுக்குள் சென்ற விசே, ஆரம்பத்திலேயே ‘சாண்ட்ரா. என் மேல கோவமா இருக்கீங்களா.. இல்லையே?” என்று கேட்டு கூலாக்க முயன்றார். “உங்க மேல இல்ல. அவர் மேலதான்” என்று பிரஜினை கை காட்டினார் சாண்ட்ரா. (`அடுத்த சீசன்ல உங்க வாயை மூடிக்கங்க’ என்று தன் மைண்ட் வாய்ஸை விசேவிடம் வெளிப்படையாக சொல்ல முடியுமா?!) “இந்த டிக்கெட்லாம் எப்படி அம்பது நாளுக்கு மேல தாங்குது.. எப்பவோ வண்டியை விட்டு இறங்கியிருக்க வேண்டிய டிக்கெட்டாச்சே.. அப்படி மத்தவங்களைப் பத்தி உங்களுக்கு தோணியிருக்கம்ல.. அதைப் பத்தி சொல்லுங்க” என்று ஒரு புதிய விசாரணையை ஆரம்பித்தார் விசே. இதில் பெரும்பாலோனோர் ரம்யாவை நோக்கி கை காட்டினார்கள். அவரோ கண்கலங்கி ‘எப்படா சாமி முடிப்பீங்க?’ என்பது மாதிரியே அமர்ந்திருந்தார். “ஆரம்பத்துல ஓப்பனா இருந்து போகப் போக டல்லாயிட்டாங்க” என்று வியானா சொன்னதை பின்னர் வந்தவர்களும் வழிமொழிந்தார்கள். ரம்யாவிற்குப் பிறகு அரோராவிற்கு கணிசமான வாக்குகள் விழுந்தது மிகப் பொருத்தம். இந்த சீசனில் அவரது பங்களிப்பு என்பது என்னவென்றே தெரியவில்லை. பாருவிடம் சலித்துக் கொண்ட விசே ‘எப்பதான் நேரா பதில் சொல்வீங்க?’ பாரு எழுந்த போது, தனக்கும் விக்ரமிற்குமான பகைமையின் வரலாற்றைப் பற்றி ஆயிரம் வார்த்தைகளில் குறிப்பு வரைந்து கொண்டே போக “இதான்.. உங்க கிட்ட பிரச்சினை… கேட்ட கேள்விக்கு நேரா பதில் சொல்ல மாட்டீங்க. உக்காருங்க” என்று விசே சொல்ல, தனது சேஷ்டையான புன்னகையுடன் அமர்ந்தார். சாண்ட்ராவின் முறை வரும் போது ‘ரம்யா, அரோரா, கனி, விக்ரம்.. என்று பெரிய பட்டியலையே சொன்னார். ‘வெளியில் பார்த்த போது பிடித்த ஆட்டக்காரராக இருந்த விக்ரம், உள்ளே வந்து பார்க்கும் போது எதிரியாக மாறி விட்டாராம். “சக போட்டியாளரை வெறுப்பேத்தறதுக்கும் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்குக்கும் வித்தியாசமே இவங்களுக்கு தெரியல” என்று விக்ரம் சொன்ன போது பலத்த கைத்தட்டல். கூடவே திவ்யா மற்றும் ரம்யா பெயரைச் சொன்னார் விக்ரம். விசே பிரேக்கில் சென்றதும் “பிரஜின்.. என்னைப் பத்தி நீங்க சொன்ன பாயிண்ட் வேலிட்டே இல்ல. மேக்கப் போடறது ஒரு பிரச்னையா.. பிரசண்டபிளா இருக்கணும்னு பிக் பாஸ்தான் சொல்லியிருக்காரு” என்று தனது ஆட்சேபத்தை தெரிவித்தார் வியானா. கேசரி செய்து தந்ததைக் கூட ஒரு பிரச்னையாக சொல்லியிருக்கிறார் பிரஜின். கமு்முவின் பக்கத்தில் இடம்பிடித்து அமர்ந்திருந்த பாரு, அவருடன் கிசுகிசுத்துக் கொண்டிருக்க “என்னைப் பத்தி கூட சொன்னாங்க. நான் டிஃபண்ட் பண்ணேனா..?” என்று அரோரா சீறினார். “சும்மா இருந்தா உங்களுக்கு பிரச்சினையா.. இனிமே நானும் கத்துவேன்” என்று சபதம் ஏற்றார் ரம்யா. நாமினேஷன் சதியாலோசனையின் லீடர் பாரு பிரேக் முடிந்து திரும்பிய விசே “நாமினேஷன் பத்தியெல்லாம் டிஸ்கஸ் பண்றீங்க. யார் அப்படியெல்லாம் பண்றது.. அப்படி பண்றதால.. யார் இன்ஃப்ளூயன்ஸ் ஆகி யாரை நாமினேட் பண்றது?” என்கிற கேள்வியை முன்வைத்தார். இப்படி ஓப்பனாக நாமினேட் பற்றி பேசுவது சரியா, தவறா என்பதை அவர் சொல்லவில்லை. இதில் சரமாரியாக பெயர்கள் வந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வீட்டில் இருக்கும் இரு அணிகளும் எதிர் அணியில் உள்ள பிடிக்காதவர்களை ஒழித்துக் கட்டுவதில் ஆவேசமாக செயல்படுகின்றன. இதில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பது செயல்படுவது பாரு தலைமையிலான வம்பு அணிதான். ‘அரோராவை தூக்கியாகணும்’ என்கிற ஆவேசத்தில் இருக்கிறார் பாரு. விக்ரமை வெளியே அனுப்பணும் என்கிற கொலைவெறியில் சாண்ட்ராவும் திவ்யாவும் இருக்கிறார்கள். சாண்ட்ராவிற்கு யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களை தனது ஹிட்லிஸ்டில் சோ்த்து வைக்கிறார் பிரஜின் “நான் யாரையும் அப்படி கவனிக்கலை” என்று அமித் அப்பாவித்தனமாக சொல்ல “கவனிக்கணும் சார். அதை விட வேறென்ன வேலை?” என்றார் விசே. ‘தலைவலி’ திவ்யாவும் இதே காரணத்தைச் சொல்லி ‘சாப்பிட்டுட்டு இருந்தேன்..நான் கவனிக்கலை” என்று கால் பிளேட் பிரியாணியில் டயனோசரை ஒளித்து வைக்க முயன்றார். பாருவின் சதியாலோசனையில் முக்கிய உறுப்பினரே திவ்யாதான். அவருக்கு எப்படி தெரியாமல் போகும்? ‘இங்க க்ரூப்பிஸம் நடக்குதுன்னு புகாரோட வந்தவங்கதான் வைல்ட் கார்ட் எண்ட்ரிஸ். ஆனா இப்ப அவங்களே ஒரு க்ரூப்பா நின்னு குத்தறாங்க” என்று சரியாக சாட்சியம் சொன்னார் சுபிக்ஷா. “அதோட லீடர் யாரு?” என்று விசே கேட்க, துளி கூட சந்தேகம் இல்லாமல் பதில் வந்தது. ‘பாரு’. இது போல் அன்பு கேங்கின் லீடர் கனி என்பதும் பதிவாகியது. இந்த டாஸ்க்கின் இடையில் காப்பாற்றப்பட்டவர்களின் பெயர்களையும் வரிசையாக சொன்னார் விசே. கட்டக்கடேசியில் ரம்யாவின் பெயரும் வர, சந்தோஷமா, துக்கமா என்று கண்டறிய முடியாத எக்ஸ்பிரஷனைத் தந்தார் ரம்யா. இறுதியில் மிஞ்சியவர் பிரஜின் மற்றும் கெமி. “இந்த எவிக்ஷன் பிராசஸை பிக் பாஸ் சொல்லுவார்” என்றபடி பிரேக்கில் சென்றார் விசே. ஹைவோல்டேஜ் டிராமா கார் - எவிக்ஷன் - சாண்ட்ரா மயக்கம் கார் விளம்பரத்தை எவிக்ஷனோடு இணைத்திருக்கிறார்கள். வீட்டிற்குள் இரண்டு கார் வரும். அதில் இருவரும் ஏற்றப்படுவார்கள். திரும்பி வரும் காரில் இருப்பவர் காப்பாற்றப்பட்டார் என்று பொருள். வராதவர் எவிக்ஷன் ஆனார் என்று அர்த்தம். அப்போதே கெமி அழ ஆரம்பிக்க “ஒண்ணும்.. ஆகாது.. நீ நல்ல பிளேயர். திரும்பி வந்துடுவ” என்று மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். பிரஜின் தடுமாறாமல் இருந்தாலும் அவரது மனைவியான சாண்ட்ரா அழுது புலம்பி அமர்க்களப்படுத்தி விட்டார். ‘நாம சரியாத்தான் ஆடியிருக்கோம். நான் கண்டிப்பா திரும்பி வருவேன்’ என்று பிரஜின் ஆறுதல் சொன்னாலும் சாண்ட்ரா அழுகையை நிறுத்தவில்லை. கார்கள் கிளம்பிய போது சாண்ட்ராவின் புலம்பல் உச்சத்திற்குச் சென்றது. தடுக்க முயன்றவர்களை தள்ளி விட்டு ‘என்னை விடு. நானும் போறேன்’ என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். ‘நாங்க ரெண்டு பேரும் தனித்தனியாத்தான் ஆடறோம்’ என்று சொன்னாலும் ஒரு சக ஆட்டக்காரரின் எவிக்ஷனுக்கு சாண்ட்ரா ஏன் இத்தனை உணர்ச்சிவசப்பட வேண்டும். எனில் அந்த ஸ்டேட்மெண்ட் பொய்தானே? தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது உண்மையாகி விட்டது. இது ஒரு கேம். இதில் எவிக்ஷன் என்பது இருக்கும் என்பது நன்றாகவே தெரியும். அந்த எவிக்ஷன் உறுதியாகாத நிலையில், தன் கணவரை தற்காலிமாக பிரிவதற்கு கூட சாண்ட்ராவின் மனம் ஒப்பவில்லை. அழுது புலம்பி துடித்தார். ஆனால் இன்னொரு குடும்பத்தின் உறுப்பினர்களைப் பற்றி தன் கணவர் அபாண்டமாக பேசிய போது தடுக்கவில்லை. ஒரு கார் ஹார்ன் அடித்தபடி திரும்பி வந்தது. கெமிதான் வருவார் என்று இந்த க்ரூப் நம்பியது. பிரஜின் வன்முறைப் பேச்சு காரணமாக அவர் வர மாட்டார் என்று சாண்ட்ரா உள்ளிட்டவர்கள் நம்பியிருக்கலாம். ஆனால் திரும்பி வந்தவர் பிரஜின். ‘ஐ யம் பேக்’ என்று பெருமிதத்துடன் வந்தவரை பாய்ந்து சென்று கட்டியணைத்துக் கொண்ட சாண்ட்ரா, அப்படியே பொதேல் என்று மயங்கி விழுந்தார். மற்றவர்களின் உணர்வுகளை மோசமாக காயப்படுத்திப் பேசும் சாண்ட்ரா, இன்னொரு பக்கம் உள்ளுக்குள் மிகவும் பலவீனமாக இருக்கிறார். கம்மு காமெடி ‘நான் எவிக்ட் ஆகும் போது புது கண்ணாடி கொடுங்க’ இப்படியொரு ரணகளமான டிராமா ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கிளுகிளுப்பான டிராமா ஓடிக் கொண்டிருந்தது. “நீ போயிருந்தா நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று வியானாவிடம் சொல்லிக் கொண்டிருந்த எஃப்ஜே தனது டிராக்கை ஸ்ட்ராங்க் ஆக்கிக் கொண்டிருந்தார். “வெளிய போனவங்கள்ல யாரை மிஸ் பண்றே?” என்று புத்திசாலித்தனமாக கேட்டு போட்டு வாங்க முயன்றார் வியானா. “பிரவீனைத்தான். அவன்தான் போக மாட்டான்னு நெனச்சேன்” என்று எஸ்கேப் ஆனார் எஃப்ஜே. மேடைக்கு வந்த கெமியிடம் “நல்லா விளையாடினீங்க.. எப்படி இருந்தது அனுபவம்?” என்று விசே கேட்க “அற்புதமா இருந்தது. வெளில நான் தனியா இருக்கேன். இங்க ஒண்ணா உக்காந்து சாப்பிட. சண்டை போட ஒரு குடும்பம் இருந்தது” என்ற கெமி “என் ஆட்டத்தை நேர்மையா ஆடினேன். யாரையும் கீழே தள்ளி விட்டு மேல வரணும்ன்னு நெனக்கல. பிக் பாஸ் வீட்டை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று கண்கலங்க, தன் கூலிங் கிளாஸை கழற்றி ‘போட்டுக்கங்க” என்று விசே சொன்னது சிறப்பு. கிளம்பும் போது கண்ணாடியுடனே இறங்கிய கெமி “உங்க நினைவா வெச்சுக்கட்டுமா?” என்கிற மாதிரி கேட்க ‘வட போச்சே’ என்கிற மாதிரி ஃபீல் செய்த விசே, “ஓகே.. என் பரிசு. உங்களுக்கு புதிய பார்வையை அளிக்கட்டும்’ என்று விடைதந்தார். வீட்டிற்குள் சென்ற விசேவிடம் “என்ன சார். கூலிங் கிளாஸ் இல்ல. கெமி பிடுங்கிட்டாளா,” என்று மக்கள் கேட்க “ஆமாம்ப்பா.. அந்த சோகத்தை ஏன் கேக்கறீங்க. புதுசா வாங்கினது” என்று ஜாலியாக சோகப்பட்ட விசே “இல்லப்பா.. நான்தான் கொடுத்தேன்” என்றார். “சார். நான் எவிக்ட் ஆகி வர்றப்ப.. ஒரு நல்ல கண்ணாடியா வாங்கி போட்டுட்டு இருங்க” என்று கம்மு சொல்ல சபை கலகலத்தது. (அப்ப கூட நல்லபடியா ஜெயிப்பேன்னு வாய்ல வருதா பாரு!) “நாளைக்கு உங்களுக்கு எல்லாம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றபடி விடைபெற்றார் விசே. (என்னவா இருக்கும்.. வைல்ட் கார்டா?!) கம்மு ரொமான்ஸ் இழுபறி ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ விசாரணையின் போது பாருவின் பக்கத்தில் அமர்ந்திருந்த கம்மு, இப்போது அரோராவுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். “நீ அவ கூடவே இரு. ரெண்டு பக்கம் பேலன்ஸ் பண்ணாத.. உனக்கு அவளைத்தான் பிடிக்கும்ன்னு தெரியும். ‘இங்க சண்டை போட்டு கத்தினாதான் நீடிக்க முடியும்ன்னு ஓப்பனா சொல்றா.. என்னை ஹர்ட் பண்ணவங்களோட பிரெண்டு கிட்டலாம் என்னால ஓப்பனா பழக முடியாது. என் ஷூல இருந்து பாரு” என்று கம்முவிடம் வேண்டிக் கொண்டிருந்தார் அரோரா. உடனே எழுந்த கம்மு, அரோவின் ஷீவில் ஏறி நின்று ‘ஆமாம்.. கஷ்டமாத்தான் இருக்கு” என்று மொக்கை காமெடி செய்ய “வாய்ல அசிங்கமா வந்துரும். கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாத. டைல்ஸ் வெச்சு நான் ஆபாசக் குறியீடு காட்டினேன்னு அபாண்டமா சொன்னவ அவ. அவ கூட சங்காத்தம் வெச்சிருக்கறவங்க யாரும் எனக்கு வேணாம்” என்று கம்முவை துரத்திக் கொண்டிருந்தார் அரோரா. இது ஒரு வகையான உளவியல் நெருக்கடி. ‘ஒண்ணு.. என் கூட இரு. இல்லைன்னா அங்க போ’ என்பதைத்தான் சுற்றிச் சுற்றி அரோரா சொல்கிறார். ஆனால் கம்முவோ ‘கண்ணா.. ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா’ மோடில் அசடு வழிகிறார். பிரஜின், திவ்யா, சாண்ட்ரா கூட்டணி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. “நாம பூண்டு உரிச்சு வீடு ஃபுல்லா போட்டதாலதான் பாயிண்ட் கிடைச்சது. நீங்க ரெண்டு பேரும் சோ்ந்து ஆடறது தப்பே கிடையாது” என்று ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார் திவ்யா. இவர் இருக்கும் வரை நமக்கு தலைவலியும் நீடிக்கும் போலிருக்கிறது.!
ஐஸ்வர்யா ராய்க்கு சுக பிரசவம்தான் விருப்பம்; 2-3 மணி நேரம் வலியுடன் போராடினார் - அமிதாப்பச்சன்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். மும்பை அந்தேரியில் உள்ள செவல் ஹில் மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் நடந்தது. குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. இந்தப் பிரசவம் குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்திருந்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. அமிதாப்பச்சன் அளித்த பேட்டியில், ''ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். அமிதாப்பச்சன் இதற்காக அவர் வலி நிவாரண மருந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வலியுடன் போராடினார். அவர் கிட்டத்தட்ட 2-3 மணி நேரம் கடுமையான பிரசவ வலியில் இருந்தார். அவரது மனவலிமையை நான் பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்த பிறகு அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 2011ம் ஆண்டுதான் குழந்தை பிறந்தது. 2010ம் ஆண்டு பத்திரிகை ஒன்று ஐஸ்வர்யா ராயால் குழந்தை பெற முடியாது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இது குறித்து அமிதாப்பச்சன் வெளியிட்டு இருந்த பதிவில், ''இன்று மிகுந்த வேதனை, வலி மற்றும் வெறுப்புடன் எழுதுகிறேன். இந்தக் கட்டுரை முற்றிலும் தவறானது, முற்றிலும் ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்றது, உணர்ச்சியற்றது. நான் என் குடும்பத்தின் தலைவர். ஐஸ்வர்யா என் மருமகள் அல்ல, அவள் என் மகள், ஒரு பெண். யாராவது அவளைப் பற்றி இழிவாகப் பேசினால், என் கடைசி மூச்சு வரை அவளுக்காகப் போராடுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா கடந்த வாரம் தனது 14வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அமிதாப்பச்சனின் 83வது பிறந்தநாள்; டாட்டூ, டிசர்ட், கேக்குடன் வீட்டிற்கு வந்த அமிதாப் ரசிகர்கள்
ஐஸ்வர்யா ராய்க்கு சுக பிரசவம்தான் விருப்பம்; 2-3 மணி நேரம் வலியுடன் போராடினார் - அமிதாப்பச்சன்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். மும்பை அந்தேரியில் உள்ள செவல் ஹில் மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் நடந்தது. குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. இந்தப் பிரசவம் குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்திருந்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. அமிதாப்பச்சன் அளித்த பேட்டியில், ''ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். அமிதாப்பச்சன் இதற்காக அவர் வலி நிவாரண மருந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வலியுடன் போராடினார். அவர் கிட்டத்தட்ட 2-3 மணி நேரம் கடுமையான பிரசவ வலியில் இருந்தார். அவரது மனவலிமையை நான் பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்த பிறகு அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 2011ம் ஆண்டுதான் குழந்தை பிறந்தது. 2010ம் ஆண்டு பத்திரிகை ஒன்று ஐஸ்வர்யா ராயால் குழந்தை பெற முடியாது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இது குறித்து அமிதாப்பச்சன் வெளியிட்டு இருந்த பதிவில், ''இன்று மிகுந்த வேதனை, வலி மற்றும் வெறுப்புடன் எழுதுகிறேன். இந்தக் கட்டுரை முற்றிலும் தவறானது, முற்றிலும் ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்றது, உணர்ச்சியற்றது. நான் என் குடும்பத்தின் தலைவர். ஐஸ்வர்யா என் மருமகள் அல்ல, அவள் என் மகள், ஒரு பெண். யாராவது அவளைப் பற்றி இழிவாகப் பேசினால், என் கடைசி மூச்சு வரை அவளுக்காகப் போராடுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா கடந்த வாரம் தனது 14வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அமிதாப்பச்சனின் 83வது பிறந்தநாள்; டாட்டூ, டிசர்ட், கேக்குடன் வீட்டிற்கு வந்த அமிதாப் ரசிகர்கள்
BB Tamil 9: இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றவர்கள் யார் யார்?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இரண்டு நபர்களைத் தேர்வு செய்க என பிக் பாஸ் சொல்ல, ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொரு காரணங்களுடன் சக போட்டியாளர்களை நாமினேட் செய்கின்றனர். BB Tamil 9 கணவன் மனைவியா விட்டுக்கொடுக்காம விளையாடுறாங்க என சிலர் சாண்ட்ராவையும், தேஞ்ச டேப்ரிகாட் ரெக்காடர் மாதிரி ஒரு விஷயத்தை சொல்லுவாங்க என திவ்யாவையும், எல்லாரையும் திசை திருப்பி விடுறாங்க என பார்வதியையும், ஒருதலைபட்சமா இருக்காரு என FJ-வையும், இதுவரைக்கும் அவர் ஒண்ணுமே பண்ணல என கனி திருவையும் நாமினேட் செய்திருக்கின்றனர். BB Tamil 9: நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம் - எச்சரிக்கும் பிரஜின்
BB Tamil 9: இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றவர்கள் யார் யார்?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இரண்டு நபர்களைத் தேர்வு செய்க என பிக் பாஸ் சொல்ல, ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொரு காரணங்களுடன் சக போட்டியாளர்களை நாமினேட் செய்கின்றனர். BB Tamil 9 கணவன் மனைவியா விட்டுக்கொடுக்காம விளையாடுறாங்க என சிலர் சாண்ட்ராவையும், தேஞ்ச டேப்ரிகாட் ரெக்காடர் மாதிரி ஒரு விஷயத்தை சொல்லுவாங்க என திவ்யாவையும், எல்லாரையும் திசை திருப்பி விடுறாங்க என பார்வதியையும், ஒருதலைபட்சமா இருக்காரு என FJ-வையும், இதுவரைக்கும் அவர் ஒண்ணுமே பண்ணல என கனி திருவையும் நாமினேட் செய்திருக்கின்றனர். BB Tamil 9: நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம் - எச்சரிக்கும் பிரஜின்
மாஸ்க் : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
மாஸ்க் படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ்...
முத்துவை கண்டித்த அண்ணாமலை, சந்தோஷப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனா வீட்டை விட்டு வெளியேற முத்துவிடம் அண்ணாமலை கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து குடித்து விட்டு பேசிக்கொண்டு இருக்க செல்வம் அவரை வீட்டுக்கு போக சொல்லுகிறார் நான் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கேன் என்று சொல்ல வேணாடா சிஸ்டர் தேடிட்டு இருப்பாங்க நீ போ என்று சொல்லுகிறார் ஏற்கனவே நீ சண்டை போட்டுட்டு...
Gouri Kishan: ``மஞ்சள் நிறமே... மஞ்சள் நிறமே - நடிகை கௌரி கிஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் |Photo Album
Rukmini Vasanth: அந்த அழைப்பும் செய்திகளும் போலியானவை- ருக்மிணி வசந்த் எச்சரிக்கை
FRIDAY – Trailer , Dheena , Anish Masilamani , Mime Gopi , Hari Venkatesh , Dakdam Motion Pictures
FRIDAY – Trailer , Dheena , Anish Masilamani , Mime Gopi , Hari Venkatesh , Dakdam Motion Pictures
Galatta Family Trailer , Vimal , Anicka Vickram , Thambi Ramaiya , Mottai Rajendran ,A.Sarkunam ,VV
Nellai Boys Trailer | White Screen Production | V.Raja | Arivazhagan , Hema Rajkumar | Kamal G
Dashamakan – Title UNLOCKED , Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael
Anjaan – Re-Release Trailer , Suriya, Samantha , Yuvan Shankar Raja , N. Lingusamy
Akhanda 2 Thaandavam Trailer (TAMIL)
Akhanda 2 Thaandavam Trailer (TAMIL) | Nandamuri Balakrishna | Boyapati Sreenu | ThamanS | DEC 5th
Nirvaagam Porupalla – Official Trailer
Nirvaagam Porupalla – Official Trailer , Srikanth Deva , S.Kaarthieswaran ,Star Music
முத்துமலர் குடும்பத்தை பார்த்து பயந்தோடும் சாரதா, விஜய் எடுக்க போகும் முடிவு என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வேண்டுமென்று யமுனா, தண்ணியை தட்டி விடுகிறார். இதனால் கோபத்தில் முத்தமிழரின் மகன் சண்டை போடுகிறார். நிவினுக்கு உண்மை தெரியவில்லை. இருந்தாலும் யமுனாவிற்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்காக முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொல்கிறார்கள். ஆனால் ,அவர்கள் முடியாது என்று மறுக்கிறார்கள். உடனே முத்து மலரின் மகன், நீங்கள் இந்த வீட்டை விற்கை ஏற்பாடு செய்யும் விஷயம் […] The post முத்துமலர் குடும்பத்தை பார்த்து பயந்தோடும் சாரதா, விஜய் எடுக்க போகும் முடிவு என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!
காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?அதனை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு...
சுந்தரவல்லி போட்ட திட்டம், சதியில் சிக்கிய விஜி விவேக்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சொந்தத் தம்பி என்று கூட பார்க்காமல் இப்படி பண்ணாங்க ஆனா சுந்தரவல்லி அம்மா அவங்க கிட்ட எதுவுமே...
''நிறைய பேர் கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்பாங்க; சிவப்பதிகாரம் ஷூட்டிங்ல ஒரு பெண்..- விஷால் ஷேரிங்ஸ்
நடிகர் விஷால் தற்போது 'மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு முதலில் இப்படத்தை இயக்கி வந்த நிலையில் இப்போது விஷால்தான் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளிவந்த பேட்டியில் அவருடைய கரியரின் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். Vishal - Magudam தற்போது அந்தப் பேட்டியின் இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. அதிலும் சில சுவாரஸ்யமான தகவல்களை விஷால் பகிர்ந்திருக்கிறார். நடிகர் கார்த்தியுடனான நட்பு குறித்து விஷால் பேசுகையில், “நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன். நான் ஒரு நாளைக்கு 6 முறையாவது அவனுக்கு கால் செய்வேன். அவனும் அவனுடைய மனைவியைவிட என்னிடம்தான் அதிகமாகப் பேசிட்டு இருப்பான்” என்றவர், “ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய பேர் வந்து 'உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு' சொல்வாங்க. 'எதை வச்சு அதை முடிவு பண்ணினீங்க. திரையில பார்க்கிற விஷால் வேற'னு சொல்லிடுவேன். ஒரு பெண் என்னுடைய முகத்தை இரத்தத்துல வரைந்து எடுத்திட்டு வந்திருக்காங்க. ‘சிவபாதிகாரம்’ படப்பிடிப்பின்போது ஒரு பெண் திடீரென எனக்கு முத்தம் கொடுத்திட்டாங்க. நான் உடனே அவரிடம் ‘இப்படிச் செய்யாதீங்க’னு சொல்லிட்டேன். Vishal என்னுடைய புகழை யூஸ் பண்ணி எந்தப் பெண்ணையும் நான் தவறாகப் பயன்படுத்தினது கிடையாது. என்னைப் பற்றின வதந்திகளுக்கு நானே முற்றுப்புள்ளி வச்சிடுவேன். ‘மார்க் ஆண்டனி’ படத்துடைய கிளைமாக்ஸ்ல என்னை விமர்சித்த மாதிரி நான் விமர்சிப்பேன். அதுபோல எப்பவும் என்னையே நான் விமர்சிப்பேன். ஒரு முறை நான் சாப்பிடுறதுக்கு முன்னாடி கடவுளை வேண்டிக்கிட்ட விஷயத்திற்காக என்னை ட்ரோல் பண்ணினாங்க. அதனால அதையும் இப்போ நிறுத்திட்டேன்” எனக் கூறினார்.
போஸின் முகத்திரையை கிழிக்க வரும் சேது, திருமணத்திற்கு தயாரான காவியா –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, உன் மகன் செய்த வேலையைப் பற்றி போய் கேள். இந்த கல்யாணம் நடக்குமானே தெரியவில்லை என்று நக்கலாக பேசி இருந்தார். பின் ஈஸ்வரி, போஸ் இடம் விசாரித்தார். அப்போது போஸ் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதைக் கேட்டு அதிர்ச்சியான ஈஸ்வரி, போஸை அடிக்கிறார். பின் ஈஸ்வரி, காவியாவிற்கு ஃபோன் செய்து மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார். அதற்கு காவியா, இவ்வளவு கேவலமான மகனை பெற்றுவிட்டு நீங்கள் […] The post போஸின் முகத்திரையை கிழிக்க வரும் சேது, திருமணத்திற்கு தயாரான காவியா – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார்?வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!
இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி வெளியில் இரண்டு கார் வந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நிற்கும் அதில் எளிமினேஷன் பட்டியலில் இருக்கும் போட்டியாளர்களான...
Dhanush: எனக்கு லவ் ஃபெயிலர் முகம் இருக்கிறதா! - நிகழ்வில் தனுஷின் ஜாலி டாக்!
பாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை 'ராஞ்சனா', 'அத்ராங்கி ரே' படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கியிருக்கிறார். Tere Ishq Mein ரிலீஸையொட்டி படக்குழுவினர் ப்ரோமோஷனில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்திய ப்ரோமோஷன் நிகழ்வு ஒன்றில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தன்னை இப்படியான காதல் தோல்வி கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்வது குறித்து ஜாலியாக பேசியிருக்கிறார் தனுஷ். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்வில் தனுஷ், “நான் என் இயக்குநரிடம் ‘ஏன் என்னை இப்படியான காதல் தோல்வியைச் சந்திக்கும் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்கிறீர்கள்’ எனக் கேட்டேன். அவர் ‘உங்களுக்கு லவ் ஃபெயிலியர் முகம் இருக்கிறது’ என்றார். அன்று நான் என் வீட்டிற்குச் சென்றதும் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். இயக்குநர் சொன்னதை நான் பாராட்டாக எடுத்துக்கொண்டேன். ஆனால், அப்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது சவாலான விஷயம். தனுஷ் ‘ராஞ்சனா’ தொடங்கி இப்படம் வரை அந்த சவாலான விஷயம் இருந்தது. ‘ராஞ்சனா’ படத்தில் அது சாதாரணமான கதாபாத்திரமாகத் தெரியலாம். ஆனால், அப்படி கிடையாது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது கடினமானது. கொஞ்சம் தவறினாலும் உங்களுக்கு குந்தன் கதாபாத்திரம் பிடிக்காமல் போய்விடும். அதுபோல, இப்படத்தின் ஷங்கர் கதாபாத்திரத்திற்கும் சில சவால்கள் இருந்தன. படம் பார்க்கும்போது அந்தக் கதாபாத்திரம் பற்றி உங்களுக்கு தெரியவரும்.” என்றார்.
AR Rahman: எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது பிரச்சனை! - ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. தனுஷ், கிரித் சனூன் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கியிருக்கிறார். Tere Ishq Mein - Dhanush இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் இப்போது ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார். யூடியூபர் நிகில் காமத்துக்கு அளித்த பேட்டியில் அவர் அனைத்து மதங்களையும் மதிப்பது குறித்தும், சூஃபி மதம் குறித்தும் பேசியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் உண்மையான பெயர் திலீப் குமார். 23 வயதில் அவர் மதம் மாறிய பிறகுதான் ஏ.ஆர். ரஹ்மான் எனப் பெயரை மாற்றிக் கொண்டார் என்ற தகவல் பலரும் அறிந்ததே. அந்தப் பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான், “இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன். எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது, தீங்கு செய்வது மட்டும் பிரச்னை. மக்களை எண்டர்டெயின் செய்வது எனக்குப் பிடிக்கும். நான் மேடையில் நின்று பாடும்போது அது ஒரு கோவில் போன்ற உணர்வை எனக்குத் தரும். அங்கே பல மதத்தவரும், பல மொழிகளில் பேசும் மக்களும் ஒன்றாக இணைந்து மகிழ்கிறார்கள்” என்றவர் சூஃபிசம் குறித்து, “நம்முள் உள்ள ஆசை, பேராசை, பொறாமை என அனைத்தும் மறைந்து போக வேண்டும். AR Rahman அப்போதுதான் அகங்காரம் அழிந்து, கடவுள் போல ஒரு தெளிவான நிலைக்கு நாம் வர முடியும். நாமெல்லாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அந்த நம்பிக்கையின் உண்மையான நேர்மையே முக்கியம். அதுதான் மனிதர்களை நல்ல செயல்களுக்கு இட்டுச் செல்கிறது” எனப் பேசியிருக்கிறார்.
BB Tamil 9 Day 48: சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள்; பந்தா காட்டிய பிரஜின்; எரிச்சலான விசே!
வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எபிசோடில் கச்சிதமாகப் பொருந்தியது. ஏனெனில் சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் செய்த அநியாயமான சேட்டைகள் அப்படி. இந்த மூவர் மட்டுமே இந்த எபிசோடை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டார்கள். க்ரைம் ரெக்கார்ட் அப்படி. மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 48 “இன்னிக்கு நீங்க பார்க்காத படத்தை காட்டறோம். முன்ன எல்லாம் பொிய மனுஷங்க போராட்டம் பண்ணி ஜெயிலுக்குப் போவாங்க. ஆனா இவங்களை ஜெயிலுக்கு அனுப்பறதே போராட்டமா ஆயிடுச்சு. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம்” என்றார் விசே. வழக்கமாக இந்த போர்ஷன் சுருக்கமாக முடிந்து விடும். ஆனால் இன்று சாண்ட்ரா+திவ்யா கூட்டணியின் அலப்பறை காரணமாக நீண்ட நேரத்திற்கு காட்டப்பட்டது. BB TAMIL 9: DAY 48 ஏற்கெனவே சொன்னது போல, சாண்ட்ரா + திவ்யாவை வேலை பார்க்க வைக்கும் சூப்பர்வைசர் பணி விக்ரமிற்கு தரப்பட்ட தண்டனையாக அமைந்தது. “என்னங்க செய்றீங்களா…?” என்று கேட்டே சோர்ந்து போனார். ஒருவர் படுத்தபடி வீட்டைப் பெருக்குவதை எங்குமே பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ‘பெருக்காசனம்’ செய்து உலக சாதனை செய்தார் திவ்யா. ‘வேலை செய்யறீங்களா?” என்று விக்ரம் மீண்டும் கேட்க “எனக்கு தலை வலிக்குது. டீ வேணும். பிளாக் டீல்லாம் வேணாம்.. பால் டீதான் வேணும்” என்று அடம்பிடித்தார் திவ்யா. புத்திசாலித்தனமான குற்றவாளிகள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்களுக்கான தண்டனையை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுப்பார்கள். சாண்ட்ராவும் திவ்யாவும் அப்படியாக நேரத்தை இழுத்துக் கொண்டே போனார்கள். “இது பிக் பாஸ் ஆர்டருங்க. உங்களை ஜெயில்ல அடைக்கச் சொல்லியிருக்காங்க” என்று விக்ரமும் எஃப்ஜேவும் கெஞ்ச “எங்க வேலை முடியலை. முடிஞ்சவுடன்தான் வருவோம்” என்று அழிச்சாட்டியம் செய்தார்கள். நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள் காலை, மாலை மட்டும் பால் தரவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருப்பதால் அந்த நோக்கில் பால் தர முடியாது என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தார் எஃப்ஜே. “மெடிக்கல் எமர்ஜென்சின்னா கூடவா தர மாட்டீங்க?” என்றார் திவ்யா. தலைவலி எப்போது மெடிக்கல் எமர்ஜென்சியில் சேர்ந்தது என்று தெரியவில்லை. “இவன் பாலை எங்கதான் போய் ஊத்துவான்.. அவன் ஃபேமிலிக்கா?” என்று பிரஜின் வார்த்தைகளை விட்டது அநியாயம். “உன் வொய்ஃபை கூட்டிட்டு வாங்க” என்று இந்தப் போட்டிக்கு சம்பந்தமில்லாத குடும்ப உறுப்பினர்களை அநாவசியமாக இழுப்பதை பிரஜின் வழக்கமாக வைத்திருக்கிறார். தனக்கு பால் தராமல் போன அநீதியை எண்ணி பாத்ரூமில் சென்று திருட்டு அழுகை அழுதார் திவ்யா. “போங்க.. இப்ப போய் அவ கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து ஜெயில்ல தள்ளுங்க” என்று விக்ரமிடம் சொல்லி ஓவராக சீன் போட்டார் சாண்ட்ரா. “நான் ஏங்க ..கழுத்தையெல்லாம் பிடிக்கப் போறேன்” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம். “அப்ப மூடிட்டு போங்க” என்கிற மாதிரி சைகை காட்டினார் சாண்ட்ரா. விக்ரம் பாடிய பாடல் வரிகளை வைத்து ‘லைஃப்ல நீ மறக்க மாட்டே’ என்று சாபம் விட்டுக் கொண்டே போனார். BB TAMIL 9: DAY 48 “இது பிக் பாஸ் ஆர்டர். ஜெயில்ல போடணும்” என்று விக்ரமும் எஃப்ஜேவும் மறுபடி வந்து கெஞ்ச “சாவிய வெச்சிட்டு போங்க.. வரேன்.. வர முடியாது’ என்றெல்லாம் சொன்னார் திவ்யா. விக்ரம் அகன்ற பிறகு “என்ன திமிர் பாரேன்.. இவனுக்கு?” என்றார். தண்டனையிலிருந்து தப்பிக்க எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ, அவ்வளவு நேரத்தை இழுத்த கிரிமினல்களான சாண்ட்ராவும் திவ்யாவும் இரவு முழுவதும் வீட்டை தூங்க விடாமல் அதிகாலை மூன்று மணிக்குத்தான் ஒருவழியாக சிறைக்குள் சென்றார்கள். அதுவரை கார்டன் ஏரியாவில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உள்ளே செல்ல “பாம்புங்கள்லாம் உள்ளே போகுது” என்று கனியை டார்கெட் செய்து வசைபாடினார் சாண்ட்ரா. பாருவின் நெகட்டிவிட்டி பற்றி குறை சொன்னவர்கள், பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்ளும் மர்மம் ஒரு விஷயம்தான் புரியவில்லை. வைல்ட் கார்ட் எண்ட்ரிகளாக சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் உள்ளே நுழையும் போது பாரு செய்து கொண்டிருந்த அடாவடிகளை கண்டித்தார்கள். ‘இது வெளில எப்படி தெரியும் தெரியுமா’ என்று எச்சரித்தார்கள். எனில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவர் மோசமாக நடந்து கொண்டால் அது பல மடங்கு வெறுப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் என்பது ஷோவைப் பார்த்து விட்டு வந்திருக்கும் இவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் இவர்கள் அனைவருமே மீடியாவில் இருப்பதால் அதன் பவரை நன்கு உணர்ந்திருப்பார்கள். எனில், பாருவிற்கு பாடம் சொன்ன இவர்கள் பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? இவர்கள் அட்வைஸ் வேடம் கலைந்து அசல் நிறம் வெளிப்படுகிறதா? அல்லது பெயர் கெட்டாலும் பரவாயில்லை, கன்டென்ட் தந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்கிற டிராமாவா? BB TAMIL 9: DAY 48 மேடைக்கு வந்த விசே “தன்னை புத்திசாலின்னு நம்பற முட்டாள்களும், வீரன்னு நெனச்சிக்கிற கோழைகளும் வீட்டுக்குள்ள இருக்கறாங்க.. அவங்களை முதல்ல பாராட்டுவோம். ஸோ… நீங்க நல்லா கைத்தட்டுங்க.. அவங்க கன்ஃப்யூஸ் ஆகட்டும்”என்கிற வேடிக்கையுடன் உள்ளே சென்றார். திரை விலகியதும் பார்வையாளர்கள் மிகையாக கைத்தட்ட, தங்களுக்கு கிடைத்த பாராட்டாக போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். “பிரஜின்.. எப்பவும் ஒரு போஸ்லதான் உக்காந்திருக்கீங்க?” என்று கிண்டலடித்தார் விசே. (பின்னே.. ஹீரோ மெட்டீரியல் ஆச்சே?!) “திவ்யா.. சாண்ட்ரா.. நல்லாயிருக்கீங்களா.. இவர்கள் இருவரும் வீரமங்கையர்கள்.. பிக் பாஸையே எதிர்த்து பேசுவாங்க.. நடப்பாங்க” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் விசே. பதில் சொல்லாமல் அடம்பிடித்த திவ்யா “ஏன் ஜெயிலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடிச்சீங்க. என்னதான் வேலை செஞ்சீங்க?” என்று விசே விசாரிக்கும் போது அவர்கள் தூங்கும் சூப்பர் டீலக்ஸ் வீட்டை மட்டும் நன்றாக பெருக்கியுள்ளது தெரியவந்தது. “எனக்கு தலைவலி சார்” என்று ஸ்கூலுக்கு மட்டம் போட்ட மாணவன் மாதிரி ஆரம்பித்தார் திவ்யா. சாண்ட்ரா இடையில் சிரிக்க “அப்படி சிரிக்காதீங்க.. எரிச்சலாகுது” என்று வெளிப்படையாகவே கோபப்பட்டார் விசே. திவ்யாவின் டிராமாவை ஏற்காத விசே ‘என்னவொரு ஆட்டிடியூட்.. பிக் பாஸ் கண்ணை திறந்து வெச்சிருக்கணுமா.. மூடணுமான்னுல்லாம் சொல்லத் தெரியுது. இந்த ஷோ உங்களால மட்டும் நடக்கலை. சாண்ட்ரா.. உங்க பேரு ஸ்பாயில் ஆகும்ன்னு திவ்யாவிற்கு நல்லா தெரியும். நோயாளின்ற லேபிள்ல தப்பிச்சுடுவாங்க.” என்று வெடித்தார் விசே. அதாவது இந்த அலப்பறைகளுக்கு திவ்யாதான் மாஸ்டர் மைண்ட் என்கிற மாதிரியும் சாண்ட்ரா பேபிக்கு எதுவுமே தெரியாது என்கிற மாதிரியும் திவ்யாவினால்தான் அவர் மோசமாக நடந்து கொண்டார் என்கிற மாதிரியும் ஒரு சித்திரத்தை விசே எழுப்ப முயன்றாரா? உண்மையில் சாம்பார் அணி, டாக்ஸிக் அணியாக மாறியதற்கு சாண்ட்ராவின் துர்உபதேசங்கள்தான் காரணம். கைகேயி மாதிரி கூடவே உதவியாக இருந்தார் பாரு. “திவ்யாவிற்குத்தான் தலைவலி.. நீங்க ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்கப்பட “செஞ்சேன் சார்.. அப்புறமா திவ்யாவிற்கு தலைவலி வந்துடுச்சா.. அதான் கூடவே உதவிக்கு நின்னேன்” என்று சாண்ட்ரா மழுப்ப, திவ்யா எதையோ சொல்வதற்கு கை காட்ட “உக்காருங்க. வேலை செய்ய வக்கில்லை” என்று ஆத்திரமானார் விசே. BB TAMIL 9: DAY 48 “அவங்களுக்கு தலைவலி.. நீங்கதான் தனியா ஆடறவங்களாச்சே. ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்க ‘திவாகர் பாணியில்’ தலையைக் குனிந்தபடி நின்றார் அப்பாவி சாண்ட்ரா. படுத்துக் கொண்டே வீடு பெருக்கிய லட்சணத்தை விசே விசாரிக்க “அது சும்மா ஜாலிக்காக பண்ணினது” என்றார் திவ்யா. “நீங்க உங்க வீ்ட்டுல எப்படி வேணா பெருக்குங்க. யார் கேட்கப் போறா.. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதை மதிக்கணும். நீங்க உங்க ஜாலிக்கு பண்ணக்கூடாது. பார்க்கற எங்களுக்குத்தான் ஜாலியா இருக்கணும்.” என்றெல்லாம் விசே காட்டமானார். திவ்யாவின் திமிர் காரணமாக எரிச்சலான விசே விசேவின் கோபத்தைக் கண்டு திவ்யா முகம் சுளிக்க “என்ன டயர்ட்டா இருக்கா.. வேணுமின்னா வெளிய வந்துடறீங்களா… உடம்பு சரியில்லைன்னா உக்காருங்க” என்று விசே சொல்ல ‘பரவாயில்ல நிக்கறேன்’ என்று கெத்து காட்டினார் திவ்யா. “ஹலோ.. உக்காருன்னா உக்காரணும்.. என்ன பழக்கம் இது?” என்று கோபமானார் விசே. “நீங்க சொல்லுங்க. சாண்ட்ரா.. கோபம் வந்தா எது பேசணும்ன்னு இல்லையா.. பிக் பாஸிற்கே அட்வைஸ் பண்ணுவீங்களா.. அதையெல்லாம் நீங்க யாருங்க சொல்றதுக்கு?” என்று சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விசே, சட்டென்று திரும்பி “நீங்க டென்ஷன் ஆகாதீங்க பிரஜின்” என்று சொன்னது டைமிங் நகைச்சுவை. மீசையை முறுக்கிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பிரஜின். BB TAMIL 9: DAY 48 “விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” - வாக்குமூலம் தந்த திவ்யா “போன வாரம்தான் சொல்லிட்டுப் போனேன். பிக் பாஸ் சொல்றதை மதிங்கன்னு.. தீபக் கூட வந்து கண்கலங்கிட்டுப் போனார். உங்களுக்குள்ள சண்டை போடுங்க.. ஆனா பிக் பாஸ் சொல்றத மதிங்க.. பாவம் அவரும் ஒண்டியா என்னதான் பண்ணுவாரு” என்று விசே சொன்னதைக் கேட்டு பிக் பாஸிற்கே கண்கலங்கியிருக்க வேண்டும். மறுபடியும் திவ்யாவிடம் “ஏன் வேலை செய்யலை?” என்று விசே கேட்க திவாகர் பாணியை இப்போது திவ்யாவும் பின்பற்றினார். பாரு வழக்கம் போல் தனது சேஷ்டையான சிரிப்பை வைக்க “பாரு.. உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எது எதுக்கு எப்படி சிரிப்பீங்கன்னு தெரியும்” என்று விசே நையாண்டி செய்ய அதற்கும் அசட்டுச் சிரிப்பை வைத்தார் பாரு. (இவன் இன்னும் திருந்தல மாமா மோமெண்ட்!). “நீங்க உங்க வீட்டுல மகாராணியாவே இருந்துட்டுப் போங்க. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதுதான் ரூல். நீங்க தப்பிக்கவே முடியாது. பதில் சொல்லாம இருக்க முடியாது” என்று கேட்டு சலித்துப் போன விசே ‘நான் பிரேக்ல போறேன்” என்று கிளம்பினார். (திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ!) விசே பிரேக்கில் சென்றதும் “என்ன பதில் சொல்லணும்.. விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” என்று தன்னிச்சையாக உண்மை திவ்யாவிடம் வாயில் இருந்து விட்டது. பிரேக்கில் இருந்து திரும்பிய விசே “திவ்யா.. இதை அப்பவே சொல்லியிருக்கலாமே.. விக்ரமை வெறுப்பேத்த செஞ்சீங்களா.. உக்காருங்க” என்று சொல்லி “சாண்ட்ரா.. அவங்க கூட கூட்டு சோ்ந்தா உங்க கேம் பாதிக்கும். எடுப்பார் கைப்பிள்ளையா மாறிடாதீங்க” என்று சாண்ட்ராவிற்கு அட்வைஸ் செய்தது ஓவர். பாருவிற்குப் பிறகு இந்த சீசன் அதிகமாக டாக்ஸிக் ஆனதற்கு காரணமே சாண்ட்ராதான். அவரையே ஏதோ ஒரு குழந்தை போல சித்தரிப்பதை விசே தவிர்த்திருக்க வேண்டும். BB TAMIL 9: DAY 48 சாண்ட்ரா பேபி - செல்லம் கொஞ்சிய பாருவின் பச்சோந்தித்தனம் ஒருவழியாக இந்த ‘மிட்நைட் பஞ்சாயத்து’ முடிந்ததும் அடுத்ததாக ‘சோறு - சோப்பு - மாப்பு’ டாஸ்க்கிற்கு வந்த விசே “டாஸ்க் ரொம்ப நல்லா பண்ணீங்க”என்று பாராட்டினார். (சர்காஸமோ?!) “எல்லோரும் டீமா பிரிஞ்சு உக்காருங்க. டீம்ல இருக்கறவங்க உங்க கேப்டனைப் பத்தி சொல்லுங்க” என்று விசாரணையை ஆரம்பித்தார். விக்ரம் டீமில் இருந்த சுபிக்ஷா தன் லீடரைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொன்னார். ஆனால் சாம்பார் டீமில் இருந்தவர்களே சாண்ட்ராவை குத்தினார்கள். “எங்க டீம் டாக்ஸிக் தன்மையோட ஆனதுக்கு சாண்ட்ராவோட தப்பான டைரக்ஷன்தான் காரணம்” என்றார் வியானா. அடுத்ததாக பாரு எழுந்தார். அவர் சாண்ட்ராவை காட்டித் தர மாட்டார் என்பது வெளிப்படை. கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் “திவாகர் போனதுல இருந்து ஒரு மாதிரியா இருந்தது. அதான் சமையல் டீம்ல ஒட்டிக்கிட்டேன். சமையல்ன்றது இங்க பிரம்மாஸ்திரம். அத வெச்சு எதையாவது பண்ணலாம்னு .. ‘“ என்று பாரு இழுக்க “கனியை இத வெச்சுதானே ராஜமாதான்னு கிண்டல் பண்ணுவீங்க. இப்ப நீங்க ராஜமாதாவா மாற டிரை பண்றீங்களா?” என்று விசே மடக்க ‘இதை நாம எதிர்பார்க்கலையே’ என்கிற மாதிரி திகைத்து நின்றார் பாரு. BB TAMIL 9: DAY 48 “சாண்ட்ரா பேபி என்ன பண்ணாலும் மன்னிச்சு விட்ற மாதிரி க்யூட்னஸ் இருக்கும்” என்று பாரு அள்ளி விட “இப்படி ஏத்தி விட்டுத்தான் அவங்க இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. இது அந்தப் பய புள்ளைகளுக்கு புரியல.” என்று விசே ஜாலியாக கொளுத்திப் போட “சலங்கையைக் கட்டியாச்சு.. நடிச்சுதானே ஆகணும்” என்றார் பாரு. ‘இது அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே” என்று பாருவின் பச்சோந்தித்தனத்தை நகைச்சுவை மோடில் சுடடிக் காட்டினார் விசே. “சார். வேணாம்..சார்.. அப்புறம் டிரையின் இந்தப் பக்கம் திரும்பிடும்” என்று பாரு நடுங்க “அடடா.. பயப்படற மாதிரி கூட நடிக்கறாங்கப்பா.. என்னால முடியல. நான் போறேன்” என்று விசே சொல்ல சபை கலகலத்தது. ஹீரோ மாதிரி பந்தா காட்டி ஜீரோவான பிரஜின் பிரேக் முடிந்து வந்து மீண்டும் பாருவிடம் விசாரணையைத் தொடர்ந்தார் விசே. “அதாவதுங்க சார்.. சாண்ட்ரா இன்னும் கொஞ்சம் எண்டர்டெயின்மென்ட் தந்திருக்கலாம். கனியும் சாண்ட்ராவும் ஒத்துப் போயிருக்கலாம்” என்று ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் பேச “டீம் கேப்டன் யாரு.. சாண்ட்ராதானே.. அவங்கதானே கோஆர்டினேட் பண்ணியிருக்கணும். உங்களுக்குப் பிடிச்சவங்கறதுக்காக பார்ஷியாலிட்டி காட்டாதீங்க. பார்க்க நல்லாயில்ல. ஒவ்வொரு முறையும் சொல்றேன். அதையே பண்றீங்க. உக்காருங்க” என்று பாருவை அமர வைத்தார் விசே. அடுத்ததாக பிரஜின் பஞ்சாயத்து. ஹீரோ பேசிய பன்ச் வசனங்களை பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டு வரிசையாக சொன்ன விசே “விக்ரம் சொன்னது கப்புளா இருக்கும் போது எமோஷனல் சப்போர்ட் கிடைக்குன்ற பத்தி. இந்த அபிப்ராயம் எல்லோருக்குமே இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள் யார் வரலாம்ன்ற முடிவை நாங்கதான் எடுப்போம். பிக் பாஸ் கிட்ட சொல்றேன். சேது கிட்ட பேசறேன்னு நீங்க எப்படி சொல்லலாம்.. அதை சொல்ல நீங்க யாரு. நீங்க சொன்னா கதவைத் திறக்கணும். நீங்க சொன்னா கண்ணை மூடிக்கணுமா.. வண்டி என் பக்கம் வந்தா கண்டம் பண்ணிடுவேன்னு சொல்றீங்க.. BB TAMIL 9: DAY 48 … ஐ எம் எ ஃபாதர் ஐ எம் எ ஹஸ்பண்ட்.. ஐ எம் எ ஹீரோன்னு சொல்றீங்க. இதையெல்லாம் மத்தவங்க சொல்லணும் சார். வியானாவையும் சுபிக்ஷாவையும் ‘காலி பண்ணிடுவேன்’ன்னு மிரட்றீங்க. இதுதான் ‘சரியா வளர்க்கப்பட்டவன்’ற அடையாளமா.. பாலை யாருக்கு ஊத்தப் போறான்.. அப்பாவுக்கா.. அம்மாவுக்கா..ன்னு கேக்கறீங்க.. இதெல்லாம் நியாயமா.. உங்க குழந்தைங்க இதை பார்க்க மாட்டாங்களா.? என்று பிரஜினை நிற்க வைத்து கேள்வி மழை பொழிந்தார் விசே. ஆனால் பிரஜினோ முறைப்பான போஸில் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார். ‘பால் ஊத்தும் வசனம் எனக்கு கேட்கவேயில்லை. கேட்டிருந்தா தடுத்திருப்பேன்’ என்று அபாண்டமாக புளுகினார் சாண்ட்ரா. “நான் சொன்ன எதையும் மறுக்கல. நான் இப்படித்தான். ஒருத்தருக்கு தலைவலின்னா பால் தர மாட்றாங்க. நான் கேப்டனா இருந்தா தந்திருப்பேன்” என்று பிரஜின் சமாளிக்க “ஒரு சோ் கொடுங்கப்பா.. உக்காருவோம். இது ரொம்ப நேரம் போவும் போலிருக்கு” என்று சேரை வரவழைத்த விசே, பிரஜின் அலட்டல் மாதிரியே கால் மேல் கால் போட்டு உட்கார, பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்தார்கள். தக்காளி சட்னி - ரத்தம் ஃபார்முலாவைப் பின்பற்றும் பாரு “நான் தனியாத்தான் ஆடறேன். நாமினேஷன் ப்ரீபாஸ் எனக்கு தரப்பட்ட போது வேணாமின்னு மறுத்தேன்” என்று பிரஜின் சொல்ல கூட்டம் சிரித்தது. “பால் வேணுமின்னா சண்டை போட்டு கூட வாங்கியிருக்கலாம். அது உங்க கேம். ஆனா இப்படியா அநாகரிகமா வார்த்தைகளை விடறது?” என்று பொங்கினார் விசே. தன் குடும்பத்தினரைப் பற்றி பிரஜின் அவதூறாக பேசியதை இப்போதுதான் எஃப்ஜே அறிகிறார். எனவே அவருக்கு கோபம் வந்தது நியாயம். பொறுக்க முடியாமல் அவர் பொங்க “இந்த எஃப்ஜே ரொம்ப துள்றான்” என்று போட்டுக் கொடுத்தார் பாரு. இந்த சமயத்தில் பாருவின் பச்சோந்தித்தனம் மேலும் அம்பலமானது. திவ்யா வைல்ட் கார்டாக வந்த சமயத்தில் ‘என்னைப் பத்தி எப்படி வெளிய தெரியுது?” என்று கேட்டு போட்டு வாங்க முயன்றார் பாரு. கம்ருதீன் விவகாரம் பற்றி சொன்ன திவ்யா “வீட்ல உங்க அம்மா பார்த்தா என்ன நெனப்பாங்க?” என்று ஓர் அக்கறையில் சொல்லி விட அப்போதைக்கு மண்டையை ஆட்டினாலும் பிறகு “அதெப்படி எங்க வீட்டைப் பத்தி நீ பேசலாம்?” என்று திவ்யாவை நாள் முழுவதும் திட்டிக் கொண்டிருந்தார் பாரு. BB TAMIL 9: DAY 48 பிரஜினும் சாண்ட்ராவும் - ஜாடிக்கேற்ற வன்ம மூடிகள் ஆனால் அதே பாருதான், இப்போது எஃப்ஜேவின் கோபத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார். தனக்கு வந்தால் ரத்தம். மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி பாலிசி. “ண்ணா.. உங்களுக்காகத்தான் இப்ப கம்முன்னு இருக்கேன்” என்று எஃப்ஜே சொல்ல “குட் மாறிட்டே வர்றீங்க இல்லையா..அதுதான் முதிர்ச்சி” என்று சமாதானப்படுத்தினார் விசே. “நீங்களே சண்டை போடுங்கன்னு சொல்றீங்க.. நீங்களே சண்டை வேணாம்ன்னு சொல்றீங்க. ஒண்ணும் புரியலை” என்று பிரஜின் விதாண்டாவாதம் பேச “சண்டை போடுங்க. அது உங்க கேம். ஆனா அது ஒரு எல்லைக்குள்ள நாகரிகமா இருக்கணும். கம்முவைப் பாருங்க.. இப்ப கம்முன்னு ஆயிட்டாரு. அவர் ஆடாத ஆட்டமா.. உங்களுக்கும் புரியும்” என்று பிரஜினுடன் மல்லுக்கட்டிய விசே, கோட்டை கழட்டிய படியே எரிச்சலுடன் சென்றார். “பர்சனல் வேற.. கேம் வேற” என்று என்னதான் விசே சொல்லி அனுப்பினாலும் பிரஜின் அதை வைத்து அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது போல் தெரிகிறது. வீறாப்பாக நிற்பதும், முறைப்பதும் என்று ஹோஸ்ட்டிற்கு மரியாதை தரவில்லை. விசேவும் கூட பிரஜினுடன் விவாதிக்கும் போது வார்த்தைகள் வராமல் திண்டாடினார். இனியாவது சேனலுக்கு நெருக்கமானவர்களை போட்டிக்கு தோ்வு செய்யக்கூடாது என்பது இதன் மூலம் தெரிய வரும் பாடம். ஆனால் பின்பற்ற மாட்டார்கள். விசே சென்றதும் எஃப்ஜேவிற்கும் பாருவிற்கும் சண்டை நிகழ்ந்தது. “உங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி பேசினா உனக்கு கோபம் வரும்தானே. கோள் மூட்டி வேலையை வெச்சுக்காதீங்க” என்று பொங்கினார் எஃப்ஜே. “அப்பவே சொன்னேன். நம்ம குழந்தைகள் பார்ப்பாங்க.. வார்த்தைகளை விடாதீங்கன்னு” என்று பிரஜின் குறித்து புலம்பினார் சாண்ட்ரா. ஆனால் இவரும் அதையேதான் செய்கிறார் என்பது இவருக்குப் புரியவில்லையா? BB TAMIL 9: DAY 48 இப்படி ஆயிடுச்சே. என்று சாண்ட்ரா அழுது புலம்பியது கூட ஓகே. ஆனால் ‘அவர் அக்கா.. தங்கச்சின்னு சொன்னது.. கனியைப் பத்திதான்’ என்று சமாளித்த விதம் இருக்கிறதே.. அநியாயம். எனில் கனியைப் பற்றி தவறாக சொன்னால் மட்டும் ஓகேவா?... முன்னரே சொன்ன மாதிரி பாருவின் நச்சுத்தன்மையால் கெட்டுப் போயிருந்த இந்த ஷோ, சாண்ட்ரா, திவ்யா, பிரஜினின் வருகைக்குப் பிறகு கூடுதல் நச்சாக மாறியிருக்கிறது. சண்டை, வன்மம், பழிவாங்கல், கோள் மூட்டுதல், பச்சோந்தித்தனம் என்று பல நெகட்டிவிட்டிகள். சுவாரசியம் என்பதின் சதவீதம் மிகவும் குறைவு. இந்த வாரத்தில் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டால் நன்றாக இருக்கும் ஆனால் அது நடக்காது. வேறு பலியாட்டை தோ்வு செய்வார்கள். பார்ப்போம்.
BB Tamil 9 Day 48: சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள்; பந்தா காட்டிய பிரஜின்; எரிச்சலான விசே!
வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எபிசோடில் கச்சிதமாகப் பொருந்தியது. ஏனெனில் சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் செய்த அநியாயமான சேட்டைகள் அப்படி. இந்த மூவர் மட்டுமே இந்த எபிசோடை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டார்கள். க்ரைம் ரெக்கார்ட் அப்படி. மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 48 “இன்னிக்கு நீங்க பார்க்காத படத்தை காட்டறோம். முன்ன எல்லாம் பொிய மனுஷங்க போராட்டம் பண்ணி ஜெயிலுக்குப் போவாங்க. ஆனா இவங்களை ஜெயிலுக்கு அனுப்பறதே போராட்டமா ஆயிடுச்சு. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம்” என்றார் விசே. வழக்கமாக இந்த போர்ஷன் சுருக்கமாக முடிந்து விடும். ஆனால் இன்று சாண்ட்ரா+திவ்யா கூட்டணியின் அலப்பறை காரணமாக நீண்ட நேரத்திற்கு காட்டப்பட்டது. BB TAMIL 9: DAY 48 ஏற்கெனவே சொன்னது போல, சாண்ட்ரா + திவ்யாவை வேலை பார்க்க வைக்கும் சூப்பர்வைசர் பணி விக்ரமிற்கு தரப்பட்ட தண்டனையாக அமைந்தது. “என்னங்க செய்றீங்களா…?” என்று கேட்டே சோர்ந்து போனார். ஒருவர் படுத்தபடி வீட்டைப் பெருக்குவதை எங்குமே பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ‘பெருக்காசனம்’ செய்து உலக சாதனை செய்தார் திவ்யா. ‘வேலை செய்யறீங்களா?” என்று விக்ரம் மீண்டும் கேட்க “எனக்கு தலை வலிக்குது. டீ வேணும். பிளாக் டீல்லாம் வேணாம்.. பால் டீதான் வேணும்” என்று அடம்பிடித்தார் திவ்யா. புத்திசாலித்தனமான குற்றவாளிகள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்களுக்கான தண்டனையை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுப்பார்கள். சாண்ட்ராவும் திவ்யாவும் அப்படியாக நேரத்தை இழுத்துக் கொண்டே போனார்கள். “இது பிக் பாஸ் ஆர்டருங்க. உங்களை ஜெயில்ல அடைக்கச் சொல்லியிருக்காங்க” என்று விக்ரமும் எஃப்ஜேவும் கெஞ்ச “எங்க வேலை முடியலை. முடிஞ்சவுடன்தான் வருவோம்” என்று அழிச்சாட்டியம் செய்தார்கள். நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள் காலை, மாலை மட்டும் பால் தரவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருப்பதால் அந்த நோக்கில் பால் தர முடியாது என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தார் எஃப்ஜே. “மெடிக்கல் எமர்ஜென்சின்னா கூடவா தர மாட்டீங்க?” என்றார் திவ்யா. தலைவலி எப்போது மெடிக்கல் எமர்ஜென்சியில் சேர்ந்தது என்று தெரியவில்லை. “இவன் பாலை எங்கதான் போய் ஊத்துவான்.. அவன் ஃபேமிலிக்கா?” என்று பிரஜின் வார்த்தைகளை விட்டது அநியாயம். “உன் வொய்ஃபை கூட்டிட்டு வாங்க” என்று இந்தப் போட்டிக்கு சம்பந்தமில்லாத குடும்ப உறுப்பினர்களை அநாவசியமாக இழுப்பதை பிரஜின் வழக்கமாக வைத்திருக்கிறார். தனக்கு பால் தராமல் போன அநீதியை எண்ணி பாத்ரூமில் சென்று திருட்டு அழுகை அழுதார் திவ்யா. “போங்க.. இப்ப போய் அவ கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து ஜெயில்ல தள்ளுங்க” என்று விக்ரமிடம் சொல்லி ஓவராக சீன் போட்டார் சாண்ட்ரா. “நான் ஏங்க ..கழுத்தையெல்லாம் பிடிக்கப் போறேன்” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம். “அப்ப மூடிட்டு போங்க” என்கிற மாதிரி சைகை காட்டினார் சாண்ட்ரா. விக்ரம் பாடிய பாடல் வரிகளை வைத்து ‘லைஃப்ல நீ மறக்க மாட்டே’ என்று சாபம் விட்டுக் கொண்டே போனார். BB TAMIL 9: DAY 48 “இது பிக் பாஸ் ஆர்டர். ஜெயில்ல போடணும்” என்று விக்ரமும் எஃப்ஜேவும் மறுபடி வந்து கெஞ்ச “சாவிய வெச்சிட்டு போங்க.. வரேன்.. வர முடியாது’ என்றெல்லாம் சொன்னார் திவ்யா. விக்ரம் அகன்ற பிறகு “என்ன திமிர் பாரேன்.. இவனுக்கு?” என்றார். தண்டனையிலிருந்து தப்பிக்க எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ, அவ்வளவு நேரத்தை இழுத்த கிரிமினல்களான சாண்ட்ராவும் திவ்யாவும் இரவு முழுவதும் வீட்டை தூங்க விடாமல் அதிகாலை மூன்று மணிக்குத்தான் ஒருவழியாக சிறைக்குள் சென்றார்கள். அதுவரை கார்டன் ஏரியாவில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உள்ளே செல்ல “பாம்புங்கள்லாம் உள்ளே போகுது” என்று கனியை டார்கெட் செய்து வசைபாடினார் சாண்ட்ரா. பாருவின் நெகட்டிவிட்டி பற்றி குறை சொன்னவர்கள், பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்ளும் மர்மம் ஒரு விஷயம்தான் புரியவில்லை. வைல்ட் கார்ட் எண்ட்ரிகளாக சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் உள்ளே நுழையும் போது பாரு செய்து கொண்டிருந்த அடாவடிகளை கண்டித்தார்கள். ‘இது வெளில எப்படி தெரியும் தெரியுமா’ என்று எச்சரித்தார்கள். எனில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவர் மோசமாக நடந்து கொண்டால் அது பல மடங்கு வெறுப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் என்பது ஷோவைப் பார்த்து விட்டு வந்திருக்கும் இவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் இவர்கள் அனைவருமே மீடியாவில் இருப்பதால் அதன் பவரை நன்கு உணர்ந்திருப்பார்கள். எனில், பாருவிற்கு பாடம் சொன்ன இவர்கள் பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? இவர்கள் அட்வைஸ் வேடம் கலைந்து அசல் நிறம் வெளிப்படுகிறதா? அல்லது பெயர் கெட்டாலும் பரவாயில்லை, கன்டென்ட் தந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்கிற டிராமாவா? BB TAMIL 9: DAY 48 மேடைக்கு வந்த விசே “தன்னை புத்திசாலின்னு நம்பற முட்டாள்களும், வீரன்னு நெனச்சிக்கிற கோழைகளும் வீட்டுக்குள்ள இருக்கறாங்க.. அவங்களை முதல்ல பாராட்டுவோம். ஸோ… நீங்க நல்லா கைத்தட்டுங்க.. அவங்க கன்ஃப்யூஸ் ஆகட்டும்”என்கிற வேடிக்கையுடன் உள்ளே சென்றார். திரை விலகியதும் பார்வையாளர்கள் மிகையாக கைத்தட்ட, தங்களுக்கு கிடைத்த பாராட்டாக போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். “பிரஜின்.. எப்பவும் ஒரு போஸ்லதான் உக்காந்திருக்கீங்க?” என்று கிண்டலடித்தார் விசே. (பின்னே.. ஹீரோ மெட்டீரியல் ஆச்சே?!) “திவ்யா.. சாண்ட்ரா.. நல்லாயிருக்கீங்களா.. இவர்கள் இருவரும் வீரமங்கையர்கள்.. பிக் பாஸையே எதிர்த்து பேசுவாங்க.. நடப்பாங்க” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் விசே. பதில் சொல்லாமல் அடம்பிடித்த திவ்யா “ஏன் ஜெயிலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடிச்சீங்க. என்னதான் வேலை செஞ்சீங்க?” என்று விசே விசாரிக்கும் போது அவர்கள் தூங்கும் சூப்பர் டீலக்ஸ் வீட்டை மட்டும் நன்றாக பெருக்கியுள்ளது தெரியவந்தது. “எனக்கு தலைவலி சார்” என்று ஸ்கூலுக்கு மட்டம் போட்ட மாணவன் மாதிரி ஆரம்பித்தார் திவ்யா. சாண்ட்ரா இடையில் சிரிக்க “அப்படி சிரிக்காதீங்க.. எரிச்சலாகுது” என்று வெளிப்படையாகவே கோபப்பட்டார் விசே. திவ்யாவின் டிராமாவை ஏற்காத விசே ‘என்னவொரு ஆட்டிடியூட்.. பிக் பாஸ் கண்ணை திறந்து வெச்சிருக்கணுமா.. மூடணுமான்னுல்லாம் சொல்லத் தெரியுது. இந்த ஷோ உங்களால மட்டும் நடக்கலை. சாண்ட்ரா.. உங்க பேரு ஸ்பாயில் ஆகும்ன்னு திவ்யாவிற்கு நல்லா தெரியும். நோயாளின்ற லேபிள்ல தப்பிச்சுடுவாங்க.” என்று வெடித்தார் விசே. அதாவது இந்த அலப்பறைகளுக்கு திவ்யாதான் மாஸ்டர் மைண்ட் என்கிற மாதிரியும் சாண்ட்ரா பேபிக்கு எதுவுமே தெரியாது என்கிற மாதிரியும் திவ்யாவினால்தான் அவர் மோசமாக நடந்து கொண்டார் என்கிற மாதிரியும் ஒரு சித்திரத்தை விசே எழுப்ப முயன்றாரா? உண்மையில் சாம்பார் அணி, டாக்ஸிக் அணியாக மாறியதற்கு சாண்ட்ராவின் துர்உபதேசங்கள்தான் காரணம். கைகேயி மாதிரி கூடவே உதவியாக இருந்தார் பாரு. “திவ்யாவிற்குத்தான் தலைவலி.. நீங்க ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்கப்பட “செஞ்சேன் சார்.. அப்புறமா திவ்யாவிற்கு தலைவலி வந்துடுச்சா.. அதான் கூடவே உதவிக்கு நின்னேன்” என்று சாண்ட்ரா மழுப்ப, திவ்யா எதையோ சொல்வதற்கு கை காட்ட “உக்காருங்க. வேலை செய்ய வக்கில்லை” என்று ஆத்திரமானார் விசே. BB TAMIL 9: DAY 48 “அவங்களுக்கு தலைவலி.. நீங்கதான் தனியா ஆடறவங்களாச்சே. ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்க ‘திவாகர் பாணியில்’ தலையைக் குனிந்தபடி நின்றார் அப்பாவி சாண்ட்ரா. படுத்துக் கொண்டே வீடு பெருக்கிய லட்சணத்தை விசே விசாரிக்க “அது சும்மா ஜாலிக்காக பண்ணினது” என்றார் திவ்யா. “நீங்க உங்க வீ்ட்டுல எப்படி வேணா பெருக்குங்க. யார் கேட்கப் போறா.. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதை மதிக்கணும். நீங்க உங்க ஜாலிக்கு பண்ணக்கூடாது. பார்க்கற எங்களுக்குத்தான் ஜாலியா இருக்கணும்.” என்றெல்லாம் விசே காட்டமானார். திவ்யாவின் திமிர் காரணமாக எரிச்சலான விசே விசேவின் கோபத்தைக் கண்டு திவ்யா முகம் சுளிக்க “என்ன டயர்ட்டா இருக்கா.. வேணுமின்னா வெளிய வந்துடறீங்களா… உடம்பு சரியில்லைன்னா உக்காருங்க” என்று விசே சொல்ல ‘பரவாயில்ல நிக்கறேன்’ என்று கெத்து காட்டினார் திவ்யா. “ஹலோ.. உக்காருன்னா உக்காரணும்.. என்ன பழக்கம் இது?” என்று கோபமானார் விசே. “நீங்க சொல்லுங்க. சாண்ட்ரா.. கோபம் வந்தா எது பேசணும்ன்னு இல்லையா.. பிக் பாஸிற்கே அட்வைஸ் பண்ணுவீங்களா.. அதையெல்லாம் நீங்க யாருங்க சொல்றதுக்கு?” என்று சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விசே, சட்டென்று திரும்பி “நீங்க டென்ஷன் ஆகாதீங்க பிரஜின்” என்று சொன்னது டைமிங் நகைச்சுவை. மீசையை முறுக்கிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பிரஜின். BB TAMIL 9: DAY 48 “விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” - வாக்குமூலம் தந்த திவ்யா “போன வாரம்தான் சொல்லிட்டுப் போனேன். பிக் பாஸ் சொல்றதை மதிங்கன்னு.. தீபக் கூட வந்து கண்கலங்கிட்டுப் போனார். உங்களுக்குள்ள சண்டை போடுங்க.. ஆனா பிக் பாஸ் சொல்றத மதிங்க.. பாவம் அவரும் ஒண்டியா என்னதான் பண்ணுவாரு” என்று விசே சொன்னதைக் கேட்டு பிக் பாஸிற்கே கண்கலங்கியிருக்க வேண்டும். மறுபடியும் திவ்யாவிடம் “ஏன் வேலை செய்யலை?” என்று விசே கேட்க திவாகர் பாணியை இப்போது திவ்யாவும் பின்பற்றினார். பாரு வழக்கம் போல் தனது சேஷ்டையான சிரிப்பை வைக்க “பாரு.. உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எது எதுக்கு எப்படி சிரிப்பீங்கன்னு தெரியும்” என்று விசே நையாண்டி செய்ய அதற்கும் அசட்டுச் சிரிப்பை வைத்தார் பாரு. (இவன் இன்னும் திருந்தல மாமா மோமெண்ட்!). “நீங்க உங்க வீட்டுல மகாராணியாவே இருந்துட்டுப் போங்க. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதுதான் ரூல். நீங்க தப்பிக்கவே முடியாது. பதில் சொல்லாம இருக்க முடியாது” என்று கேட்டு சலித்துப் போன விசே ‘நான் பிரேக்ல போறேன்” என்று கிளம்பினார். (திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ!) விசே பிரேக்கில் சென்றதும் “என்ன பதில் சொல்லணும்.. விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” என்று தன்னிச்சையாக உண்மை திவ்யாவிடம் வாயில் இருந்து விட்டது. பிரேக்கில் இருந்து திரும்பிய விசே “திவ்யா.. இதை அப்பவே சொல்லியிருக்கலாமே.. விக்ரமை வெறுப்பேத்த செஞ்சீங்களா.. உக்காருங்க” என்று சொல்லி “சாண்ட்ரா.. அவங்க கூட கூட்டு சோ்ந்தா உங்க கேம் பாதிக்கும். எடுப்பார் கைப்பிள்ளையா மாறிடாதீங்க” என்று சாண்ட்ராவிற்கு அட்வைஸ் செய்தது ஓவர். பாருவிற்குப் பிறகு இந்த சீசன் அதிகமாக டாக்ஸிக் ஆனதற்கு காரணமே சாண்ட்ராதான். அவரையே ஏதோ ஒரு குழந்தை போல சித்தரிப்பதை விசே தவிர்த்திருக்க வேண்டும். BB TAMIL 9: DAY 48 சாண்ட்ரா பேபி - செல்லம் கொஞ்சிய பாருவின் பச்சோந்தித்தனம் ஒருவழியாக இந்த ‘மிட்நைட் பஞ்சாயத்து’ முடிந்ததும் அடுத்ததாக ‘சோறு - சோப்பு - மாப்பு’ டாஸ்க்கிற்கு வந்த விசே “டாஸ்க் ரொம்ப நல்லா பண்ணீங்க”என்று பாராட்டினார். (சர்காஸமோ?!) “எல்லோரும் டீமா பிரிஞ்சு உக்காருங்க. டீம்ல இருக்கறவங்க உங்க கேப்டனைப் பத்தி சொல்லுங்க” என்று விசாரணையை ஆரம்பித்தார். விக்ரம் டீமில் இருந்த சுபிக்ஷா தன் லீடரைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொன்னார். ஆனால் சாம்பார் டீமில் இருந்தவர்களே சாண்ட்ராவை குத்தினார்கள். “எங்க டீம் டாக்ஸிக் தன்மையோட ஆனதுக்கு சாண்ட்ராவோட தப்பான டைரக்ஷன்தான் காரணம்” என்றார் வியானா. அடுத்ததாக பாரு எழுந்தார். அவர் சாண்ட்ராவை காட்டித் தர மாட்டார் என்பது வெளிப்படை. கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் “திவாகர் போனதுல இருந்து ஒரு மாதிரியா இருந்தது. அதான் சமையல் டீம்ல ஒட்டிக்கிட்டேன். சமையல்ன்றது இங்க பிரம்மாஸ்திரம். அத வெச்சு எதையாவது பண்ணலாம்னு .. ‘“ என்று பாரு இழுக்க “கனியை இத வெச்சுதானே ராஜமாதான்னு கிண்டல் பண்ணுவீங்க. இப்ப நீங்க ராஜமாதாவா மாற டிரை பண்றீங்களா?” என்று விசே மடக்க ‘இதை நாம எதிர்பார்க்கலையே’ என்கிற மாதிரி திகைத்து நின்றார் பாரு. BB TAMIL 9: DAY 48 “சாண்ட்ரா பேபி என்ன பண்ணாலும் மன்னிச்சு விட்ற மாதிரி க்யூட்னஸ் இருக்கும்” என்று பாரு அள்ளி விட “இப்படி ஏத்தி விட்டுத்தான் அவங்க இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. இது அந்தப் பய புள்ளைகளுக்கு புரியல.” என்று விசே ஜாலியாக கொளுத்திப் போட “சலங்கையைக் கட்டியாச்சு.. நடிச்சுதானே ஆகணும்” என்றார் பாரு. ‘இது அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே” என்று பாருவின் பச்சோந்தித்தனத்தை நகைச்சுவை மோடில் சுடடிக் காட்டினார் விசே. “சார். வேணாம்..சார்.. அப்புறம் டிரையின் இந்தப் பக்கம் திரும்பிடும்” என்று பாரு நடுங்க “அடடா.. பயப்படற மாதிரி கூட நடிக்கறாங்கப்பா.. என்னால முடியல. நான் போறேன்” என்று விசே சொல்ல சபை கலகலத்தது. ஹீரோ மாதிரி பந்தா காட்டி ஜீரோவான பிரஜின் பிரேக் முடிந்து வந்து மீண்டும் பாருவிடம் விசாரணையைத் தொடர்ந்தார் விசே. “அதாவதுங்க சார்.. சாண்ட்ரா இன்னும் கொஞ்சம் எண்டர்டெயின்மென்ட் தந்திருக்கலாம். கனியும் சாண்ட்ராவும் ஒத்துப் போயிருக்கலாம்” என்று ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் பேச “டீம் கேப்டன் யாரு.. சாண்ட்ராதானே.. அவங்கதானே கோஆர்டினேட் பண்ணியிருக்கணும். உங்களுக்குப் பிடிச்சவங்கறதுக்காக பார்ஷியாலிட்டி காட்டாதீங்க. பார்க்க நல்லாயில்ல. ஒவ்வொரு முறையும் சொல்றேன். அதையே பண்றீங்க. உக்காருங்க” என்று பாருவை அமர வைத்தார் விசே. அடுத்ததாக பிரஜின் பஞ்சாயத்து. ஹீரோ பேசிய பன்ச் வசனங்களை பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டு வரிசையாக சொன்ன விசே “விக்ரம் சொன்னது கப்புளா இருக்கும் போது எமோஷனல் சப்போர்ட் கிடைக்குன்ற பத்தி. இந்த அபிப்ராயம் எல்லோருக்குமே இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள் யார் வரலாம்ன்ற முடிவை நாங்கதான் எடுப்போம். பிக் பாஸ் கிட்ட சொல்றேன். சேது கிட்ட பேசறேன்னு நீங்க எப்படி சொல்லலாம்.. அதை சொல்ல நீங்க யாரு. நீங்க சொன்னா கதவைத் திறக்கணும். நீங்க சொன்னா கண்ணை மூடிக்கணுமா.. வண்டி என் பக்கம் வந்தா கண்டம் பண்ணிடுவேன்னு சொல்றீங்க.. BB TAMIL 9: DAY 48 … ஐ எம் எ ஃபாதர் ஐ எம் எ ஹஸ்பண்ட்.. ஐ எம் எ ஹீரோன்னு சொல்றீங்க. இதையெல்லாம் மத்தவங்க சொல்லணும் சார். வியானாவையும் சுபிக்ஷாவையும் ‘காலி பண்ணிடுவேன்’ன்னு மிரட்றீங்க. இதுதான் ‘சரியா வளர்க்கப்பட்டவன்’ற அடையாளமா.. பாலை யாருக்கு ஊத்தப் போறான்.. அப்பாவுக்கா.. அம்மாவுக்கா..ன்னு கேக்கறீங்க.. இதெல்லாம் நியாயமா.. உங்க குழந்தைங்க இதை பார்க்க மாட்டாங்களா.? என்று பிரஜினை நிற்க வைத்து கேள்வி மழை பொழிந்தார் விசே. ஆனால் பிரஜினோ முறைப்பான போஸில் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார். ‘பால் ஊத்தும் வசனம் எனக்கு கேட்கவேயில்லை. கேட்டிருந்தா தடுத்திருப்பேன்’ என்று அபாண்டமாக புளுகினார் சாண்ட்ரா. “நான் சொன்ன எதையும் மறுக்கல. நான் இப்படித்தான். ஒருத்தருக்கு தலைவலின்னா பால் தர மாட்றாங்க. நான் கேப்டனா இருந்தா தந்திருப்பேன்” என்று பிரஜின் சமாளிக்க “ஒரு சோ் கொடுங்கப்பா.. உக்காருவோம். இது ரொம்ப நேரம் போவும் போலிருக்கு” என்று சேரை வரவழைத்த விசே, பிரஜின் அலட்டல் மாதிரியே கால் மேல் கால் போட்டு உட்கார, பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்தார்கள். தக்காளி சட்னி - ரத்தம் ஃபார்முலாவைப் பின்பற்றும் பாரு “நான் தனியாத்தான் ஆடறேன். நாமினேஷன் ப்ரீபாஸ் எனக்கு தரப்பட்ட போது வேணாமின்னு மறுத்தேன்” என்று பிரஜின் சொல்ல கூட்டம் சிரித்தது. “பால் வேணுமின்னா சண்டை போட்டு கூட வாங்கியிருக்கலாம். அது உங்க கேம். ஆனா இப்படியா அநாகரிகமா வார்த்தைகளை விடறது?” என்று பொங்கினார் விசே. தன் குடும்பத்தினரைப் பற்றி பிரஜின் அவதூறாக பேசியதை இப்போதுதான் எஃப்ஜே அறிகிறார். எனவே அவருக்கு கோபம் வந்தது நியாயம். பொறுக்க முடியாமல் அவர் பொங்க “இந்த எஃப்ஜே ரொம்ப துள்றான்” என்று போட்டுக் கொடுத்தார் பாரு. இந்த சமயத்தில் பாருவின் பச்சோந்தித்தனம் மேலும் அம்பலமானது. திவ்யா வைல்ட் கார்டாக வந்த சமயத்தில் ‘என்னைப் பத்தி எப்படி வெளிய தெரியுது?” என்று கேட்டு போட்டு வாங்க முயன்றார் பாரு. கம்ருதீன் விவகாரம் பற்றி சொன்ன திவ்யா “வீட்ல உங்க அம்மா பார்த்தா என்ன நெனப்பாங்க?” என்று ஓர் அக்கறையில் சொல்லி விட அப்போதைக்கு மண்டையை ஆட்டினாலும் பிறகு “அதெப்படி எங்க வீட்டைப் பத்தி நீ பேசலாம்?” என்று திவ்யாவை நாள் முழுவதும் திட்டிக் கொண்டிருந்தார் பாரு. BB TAMIL 9: DAY 48 பிரஜினும் சாண்ட்ராவும் - ஜாடிக்கேற்ற வன்ம மூடிகள் ஆனால் அதே பாருதான், இப்போது எஃப்ஜேவின் கோபத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார். தனக்கு வந்தால் ரத்தம். மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி பாலிசி. “ண்ணா.. உங்களுக்காகத்தான் இப்ப கம்முன்னு இருக்கேன்” என்று எஃப்ஜே சொல்ல “குட் மாறிட்டே வர்றீங்க இல்லையா..அதுதான் முதிர்ச்சி” என்று சமாதானப்படுத்தினார் விசே. “நீங்களே சண்டை போடுங்கன்னு சொல்றீங்க.. நீங்களே சண்டை வேணாம்ன்னு சொல்றீங்க. ஒண்ணும் புரியலை” என்று பிரஜின் விதாண்டாவாதம் பேச “சண்டை போடுங்க. அது உங்க கேம். ஆனா அது ஒரு எல்லைக்குள்ள நாகரிகமா இருக்கணும். கம்முவைப் பாருங்க.. இப்ப கம்முன்னு ஆயிட்டாரு. அவர் ஆடாத ஆட்டமா.. உங்களுக்கும் புரியும்” என்று பிரஜினுடன் மல்லுக்கட்டிய விசே, கோட்டை கழட்டிய படியே எரிச்சலுடன் சென்றார். “பர்சனல் வேற.. கேம் வேற” என்று என்னதான் விசே சொல்லி அனுப்பினாலும் பிரஜின் அதை வைத்து அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது போல் தெரிகிறது. வீறாப்பாக நிற்பதும், முறைப்பதும் என்று ஹோஸ்ட்டிற்கு மரியாதை தரவில்லை. விசேவும் கூட பிரஜினுடன் விவாதிக்கும் போது வார்த்தைகள் வராமல் திண்டாடினார். இனியாவது சேனலுக்கு நெருக்கமானவர்களை போட்டிக்கு தோ்வு செய்யக்கூடாது என்பது இதன் மூலம் தெரிய வரும் பாடம். ஆனால் பின்பற்ற மாட்டார்கள். விசே சென்றதும் எஃப்ஜேவிற்கும் பாருவிற்கும் சண்டை நிகழ்ந்தது. “உங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி பேசினா உனக்கு கோபம் வரும்தானே. கோள் மூட்டி வேலையை வெச்சுக்காதீங்க” என்று பொங்கினார் எஃப்ஜே. “அப்பவே சொன்னேன். நம்ம குழந்தைகள் பார்ப்பாங்க.. வார்த்தைகளை விடாதீங்கன்னு” என்று பிரஜின் குறித்து புலம்பினார் சாண்ட்ரா. ஆனால் இவரும் அதையேதான் செய்கிறார் என்பது இவருக்குப் புரியவில்லையா? BB TAMIL 9: DAY 48 இப்படி ஆயிடுச்சே. என்று சாண்ட்ரா அழுது புலம்பியது கூட ஓகே. ஆனால் ‘அவர் அக்கா.. தங்கச்சின்னு சொன்னது.. கனியைப் பத்திதான்’ என்று சமாளித்த விதம் இருக்கிறதே.. அநியாயம். எனில் கனியைப் பற்றி தவறாக சொன்னால் மட்டும் ஓகேவா?... முன்னரே சொன்ன மாதிரி பாருவின் நச்சுத்தன்மையால் கெட்டுப் போயிருந்த இந்த ஷோ, சாண்ட்ரா, திவ்யா, பிரஜினின் வருகைக்குப் பிறகு கூடுதல் நச்சாக மாறியிருக்கிறது. சண்டை, வன்மம், பழிவாங்கல், கோள் மூட்டுதல், பச்சோந்தித்தனம் என்று பல நெகட்டிவிட்டிகள். சுவாரசியம் என்பதின் சதவீதம் மிகவும் குறைவு. இந்த வாரத்தில் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டால் நன்றாக இருக்கும் ஆனால் அது நடக்காது. வேறு பலியாட்டை தோ்வு செய்வார்கள். பார்ப்போம்.
Ajith: வெனிஸில் அஜித்துக்கு ஜெண்டில்மென் டிரைவர் விருது! - மேடையில் அஜித் வைத்த கோரிக்கை என்ன?
நடிகர் அஜித் குமார் தற்போது ரேசிங் களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றிருந்த அவருக்கு எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித். அஜித் குமார் அவர் விருது வென்றிருப்பது குறித்து அவருடைய மனைவி ஷாலினி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “வெனிஸில் என் கணவருக்கு ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்படும் போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமைகிடைக்கிறது. தொழிலதிபரும் ரேசிங் டிரைவருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அஜித் பேசுகையில், “இங்கு இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அன்பான நபர், அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022) என்னுடைய குடும்பத்திற்கும், என் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கும் மீடியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நானொரு கோரிக்கையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேசிங் சீரிஸ்களைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். இப்படியான சீரிஸ்களை நடத்துவதற்கு நாங்களும் விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவிற்குச் செல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.” எனக் கூறினார்.
Ajith: வெனிஸில் அஜித்துக்கு ஜெண்டில்மென் டிரைவர் விருது! - மேடையில் அஜித் வைத்த கோரிக்கை என்ன?
நடிகர் அஜித் குமார் தற்போது ரேசிங் களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றிருந்த அவருக்கு எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித். அஜித் குமார் அவர் விருது வென்றிருப்பது குறித்து அவருடைய மனைவி ஷாலினி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “வெனிஸில் என் கணவருக்கு ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்படும் போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமைகிடைக்கிறது. தொழிலதிபரும் ரேசிங் டிரைவருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அஜித் பேசுகையில், “இங்கு இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அன்பான நபர், அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022) என்னுடைய குடும்பத்திற்கும், என் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கும் மீடியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நானொரு கோரிக்கையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேசிங் சீரிஸ்களைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். இப்படியான சீரிஸ்களை நடத்துவதற்கு நாங்களும் விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவிற்குச் செல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.” எனக் கூறினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி தன் தரப்பு நியாயத்தை சொல்ல வந்தார். ஆனால், யாருமே கேட்கவில்லை. பாண்டியன், கோமதி, சரவணன் என்று வீட்டில் உள்ள எல்லோருமே மாற்றி மாற்றி பழனியை திட்டிக் கொண்டிருந்தார்கள். கோபத்தின் உச்சத்தில் சென்ற கோமதி, நீ இனிமேல் என் முகத்தில் முழிக்காதே. வீட்டை விட்டு வெளியே போ என்றார். பாண்டியனுமே வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதனால் பழனி ரொம்பவே மனமடைந்து விட்டார். கதிர், பழனிக்காக […] The post கதிரை அடித்து வெளியே துரத்திய குமார், எரிமலையாய் வெடிக்கும் ராஜி – விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, சபரி சொன்ன பதில், வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் யாரு யார் பேச்சைக் கேட்டு நாமினேஷன் செய்றாங்க என்று கேட்க சக போட்டியாளர்களும்...
மாஸ்க் ; 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!
மாஸ்க் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ்...
Friends: 'டேய் மிஸ் பண்ணிடாத'னு விஜய் சொன்ன விஷயம்தான்... - சீக்ரெட்ஸ் பகிரும் நடிகர் ஶ்ரீமன்!
நிச்சயமாக நாம் அனைவருக்கும் குடும்பமாக உட்கார்ந்து 'ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படம் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இருக்கும். படம் முழுக்க நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பார் இயக்குநர் சித்திக். 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தின் நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் காலம் கடந்தும் மீம் டெம்ப்லேட்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா இவ்வளவு நகைச்சுவை கதையாடலுக்கு மத்தியில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை அதுவும் விஜய்-சூர்யா என்று இருவருக்கும் வில்லனாக ஒரு கதாபாத்திரத்தைத் தூக்கிச் சுமப்பது எளிதான காரியமல்ல. அதை கணக்கச்சிதமாக செய்தவர் நடிகர் ஶ்ரீமன். ரீ-ரிலீஸையொட்டி அவரிடம் பேசினோம். விஜய் - சூர்யா என்னை பரிந்துரைத்தார்கள்! நம்மிடையே பேசிய அவர், “என்னுடைய கெளதம் கதாபாத்திரத்தை வேறொரு புகழ்பெற்ற நடிகர் மூன்று நாட்கள் நடித்துள்ளார். ஆனால் இயக்குநர் சித்திக் திருப்தி அடையவில்லையாம். அந்தச் சூழலில் இயக்குநரிடம் விஜய்யும் சூர்யாவும் என்னைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். சேது வெளியான தருணம் அது. நான் பிஸியாக இருக்கலாம் என்பதையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர். படக்குழு என்னைத் தொடர்பு கொண்டு, ‘சேது திரைப்படம் பார்த்தோம். உங்களால் ஒரு பத்து நாள் ஷூட்டுக்கு வர முடியுமா’ என்று கேட்டனர். அப்போது நான் ஹைதராபாத்தில் ‘சேது’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துக் கொண்டிருந்தேன். Sriman with Vadivelu இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி தெலுங்குப் படக்குழுவினரிடம் நான் கூறியபோது பட ஷூட்டிங்கை விட்டுக்கொடுத்து என்னை அனுப்பிவைத்தனர். அன்றே விமானம் ஏறி சென்னை வந்து நேராக பழனியில் நடைபெற்ற ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். இயக்குநர் சித்திக் என்னைப் பார்த்துவிட்டு ‘மேக்கப் போட முடியுமா?’ என்றார். போட்டுவிட்டுச் சென்றேன். முதல் ஷாட் நான் வீட்டுக்குள் என்டர் ஆகும் காட்சி. அந்தக் காட்சியை ஷூட் செய்துவிட்டு இயக்குநர் சித்திக் விஜய்யிடம், ‘சார் பர்ஃபெக்ட்டான சாய்ஸ்’ என்று கூறினார்.” என்றார் உற்சாகத்துடன். என்னை அவர் ஆட வைத்தார்! இயக்குநர் சித்திக் பற்றி கூறுகையில், “நான் ஒவ்வொரு காட்சிகளுக்கு தயாராகி நடிப்பதை ரசிப்பார் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரிஜினலாக மலையாளத்தில் வந்தது. அதிலிருந்து நான் தமிழில் நிறைய விஷயங்களை மெருகேற்றி செய்து நடித்திருந்தேன். அதைக்காட்டிலும் தெலுங்கில் இன்னும் பல மடங்கு சிரத்தைக் கொடுத்து நடித்தேன். சித்திக் சார் படங்களைப் பொறுத்தவரை கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தனி நபர்களுக்காக அவர் கதை எழுதமாட்டார். அவரின் கதைக்குள் கதாபாத்திரமாக நாம் செல்லவேண்டும். அப்படிச் செல்லும் அனைவருக்கும் பேர் வாங்கிக் கொடுப்பார். மேலும், நான் நன்றாக நடித்ததற்காக அவரின் அடுத்த படத்தில் ஒரு பாடலில் மட்டும் என்னை ஆட வைத்தார் சித்திக் என்றார். Sriman விஜய் பற்றி பகிர்ந்துகொண்ட ஶ்ரீமன், “‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘பெண்களோடு போட்டி போடும்’ பாடல் ஷூட்டின்போது, ‘ஸ்ரீமன் நன்றாக டான்ஸ் ஆடுவார்’ என்று விஜய் தான் சித்திக்கிடம் கூறினார். அந்தப் பாடலில் சித்திக் என்னையும் ஆட வைத்து அழகு பார்த்தார். மேலும், 25 வருடங்களுக்குப் பின் இந்த ரகசியத்தை உடைக்கிறேன். கெளதம் கதாபாத்திரத்திற்கு இயக்குநரிடம் என் பெயரைப் பரிந்துரைத்த விஜய் என்னைத் தொடர்பு கொண்டு, ‘டேய் இந்தக் கேரக்டர் மிஸ் பண்ணிடாத, உன் பெயரைத்தான் சொல்லிருக்கோம்’ என்று பர்சனலாகச் சொன்னார். நான் அந்த ஷூட்டை விட்டுவிட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்ததற்கு இது முக்கியமான காரணம்.” என்றார். “படத்தில் சார்லி சாரின் போஷன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், வடிவேல் சாருக்கும் அந்தத் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. வடிவேல் சாருக்கு முழுக்க முழுக்க மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரம் அதற்கு நேர்மறையாக சார்லி சாரின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். அது சிறப்பானதொரு காம்போவாக அமைந்தது. சூர்யாவுக்கும் அது முக்கியமான படமாக அமைந்தது. மேலும், இளையராஜா படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். படத்தின் இறுதிக் காட்சியில் சூர்யாவும் விஜயும் என்னுடன் சண்டையிடும்படி அமைந்திருக்கும். நாங்கள் மூவருமே ஸ்டண்ட் பயிற்சி செய்தவர்கள். மேலும், அப்போது நாங்கள் மூவருமே 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தோம். அதனால் மூன்று நாட்கள் நடக்க வேண்டிய ஷூட் இரண்டரை நாட்களில் நடந்து முடிந்தது.” என்று கூறி மகிழ்ந்தார். Vijay with Sriman இறுதியாக, “குடும்ப நட்பு உறவுகள் சார்ந்த திரைப்படம் இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை. இன்றைய சூழலுக்கேற்ப மாறிவருகிறது. அந்த காலங்களில் நாங்கள் நட்பாகவும் குடும்பமாகவும் எப்படி இருந்தோம் என்பதைப் பேசுவதில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரு முக்கியமான படம். நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் இத்திரைப்படம். என் வாழ்க்கையின் மறக்க முடியாத படங்களில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படமும் ஒன்று.” என நெகிழ்ச்சியாகப் பேசினார். -ரொ.கோகுலசரண்
Friends: 'டேய் மிஸ் பண்ணிடாத'னு விஜய் சொன்ன விஷயம்தான்... - சீக்ரெட்ஸ் பகிரும் நடிகர் ஶ்ரீமன்!
நிச்சயமாக நாம் அனைவருக்கும் குடும்பமாக உட்கார்ந்து 'ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படம் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இருக்கும். படம் முழுக்க நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பார் இயக்குநர் சித்திக். 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தின் நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் காலம் கடந்தும் மீம் டெம்ப்லேட்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா இவ்வளவு நகைச்சுவை கதையாடலுக்கு மத்தியில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை அதுவும் விஜய்-சூர்யா என்று இருவருக்கும் வில்லனாக ஒரு கதாபாத்திரத்தைத் தூக்கிச் சுமப்பது எளிதான காரியமல்ல. அதை கணக்கச்சிதமாக செய்தவர் நடிகர் ஶ்ரீமன். ரீ-ரிலீஸையொட்டி அவரிடம் பேசினோம். விஜய் - சூர்யா என்னை பரிந்துரைத்தார்கள்! நம்மிடையே பேசிய அவர், “என்னுடைய கெளதம் கதாபாத்திரத்தை வேறொரு புகழ்பெற்ற நடிகர் மூன்று நாட்கள் நடித்துள்ளார். ஆனால் இயக்குநர் சித்திக் திருப்தி அடையவில்லையாம். அந்தச் சூழலில் இயக்குநரிடம் விஜய்யும் சூர்யாவும் என்னைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். சேது வெளியான தருணம் அது. நான் பிஸியாக இருக்கலாம் என்பதையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர். படக்குழு என்னைத் தொடர்பு கொண்டு, ‘சேது திரைப்படம் பார்த்தோம். உங்களால் ஒரு பத்து நாள் ஷூட்டுக்கு வர முடியுமா’ என்று கேட்டனர். அப்போது நான் ஹைதராபாத்தில் ‘சேது’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துக் கொண்டிருந்தேன். Sriman with Vadivelu இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி தெலுங்குப் படக்குழுவினரிடம் நான் கூறியபோது பட ஷூட்டிங்கை விட்டுக்கொடுத்து என்னை அனுப்பிவைத்தனர். அன்றே விமானம் ஏறி சென்னை வந்து நேராக பழனியில் நடைபெற்ற ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். இயக்குநர் சித்திக் என்னைப் பார்த்துவிட்டு ‘மேக்கப் போட முடியுமா?’ என்றார். போட்டுவிட்டுச் சென்றேன். முதல் ஷாட் நான் வீட்டுக்குள் என்டர் ஆகும் காட்சி. அந்தக் காட்சியை ஷூட் செய்துவிட்டு இயக்குநர் சித்திக் விஜய்யிடம், ‘சார் பர்ஃபெக்ட்டான சாய்ஸ்’ என்று கூறினார்.” என்றார் உற்சாகத்துடன். என்னை அவர் ஆட வைத்தார்! இயக்குநர் சித்திக் பற்றி கூறுகையில், “நான் ஒவ்வொரு காட்சிகளுக்கு தயாராகி நடிப்பதை ரசிப்பார் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரிஜினலாக மலையாளத்தில் வந்தது. அதிலிருந்து நான் தமிழில் நிறைய விஷயங்களை மெருகேற்றி செய்து நடித்திருந்தேன். அதைக்காட்டிலும் தெலுங்கில் இன்னும் பல மடங்கு சிரத்தைக் கொடுத்து நடித்தேன். சித்திக் சார் படங்களைப் பொறுத்தவரை கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தனி நபர்களுக்காக அவர் கதை எழுதமாட்டார். அவரின் கதைக்குள் கதாபாத்திரமாக நாம் செல்லவேண்டும். அப்படிச் செல்லும் அனைவருக்கும் பேர் வாங்கிக் கொடுப்பார். மேலும், நான் நன்றாக நடித்ததற்காக அவரின் அடுத்த படத்தில் ஒரு பாடலில் மட்டும் என்னை ஆட வைத்தார் சித்திக் என்றார். Sriman விஜய் பற்றி பகிர்ந்துகொண்ட ஶ்ரீமன், “‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘பெண்களோடு போட்டி போடும்’ பாடல் ஷூட்டின்போது, ‘ஸ்ரீமன் நன்றாக டான்ஸ் ஆடுவார்’ என்று விஜய் தான் சித்திக்கிடம் கூறினார். அந்தப் பாடலில் சித்திக் என்னையும் ஆட வைத்து அழகு பார்த்தார். மேலும், 25 வருடங்களுக்குப் பின் இந்த ரகசியத்தை உடைக்கிறேன். கெளதம் கதாபாத்திரத்திற்கு இயக்குநரிடம் என் பெயரைப் பரிந்துரைத்த விஜய் என்னைத் தொடர்பு கொண்டு, ‘டேய் இந்தக் கேரக்டர் மிஸ் பண்ணிடாத, உன் பெயரைத்தான் சொல்லிருக்கோம்’ என்று பர்சனலாகச் சொன்னார். நான் அந்த ஷூட்டை விட்டுவிட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்ததற்கு இது முக்கியமான காரணம்.” என்றார். “படத்தில் சார்லி சாரின் போஷன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், வடிவேல் சாருக்கும் அந்தத் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. வடிவேல் சாருக்கு முழுக்க முழுக்க மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரம் அதற்கு நேர்மறையாக சார்லி சாரின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். அது சிறப்பானதொரு காம்போவாக அமைந்தது. சூர்யாவுக்கும் அது முக்கியமான படமாக அமைந்தது. மேலும், இளையராஜா படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். படத்தின் இறுதிக் காட்சியில் சூர்யாவும் விஜயும் என்னுடன் சண்டையிடும்படி அமைந்திருக்கும். நாங்கள் மூவருமே ஸ்டண்ட் பயிற்சி செய்தவர்கள். மேலும், அப்போது நாங்கள் மூவருமே 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தோம். அதனால் மூன்று நாட்கள் நடக்க வேண்டிய ஷூட் இரண்டரை நாட்களில் நடந்து முடிந்தது.” என்று கூறி மகிழ்ந்தார். Vijay with Sriman இறுதியாக, “குடும்ப நட்பு உறவுகள் சார்ந்த திரைப்படம் இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை. இன்றைய சூழலுக்கேற்ப மாறிவருகிறது. அந்த காலங்களில் நாங்கள் நட்பாகவும் குடும்பமாகவும் எப்படி இருந்தோம் என்பதைப் பேசுவதில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரு முக்கியமான படம். நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் இத்திரைப்படம். என் வாழ்க்கையின் மறக்க முடியாத படங்களில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படமும் ஒன்று.” என நெகிழ்ச்சியாகப் பேசினார். -ரொ.கோகுலசரண்

27 C