`புருவம் த்ரெட்டிங் முதல் கூட்டுப்புருவம் வரை' - அழகுக்கலை நிபுணர் டிப்ஸ்
''பியூட்டி பார்லர் பக்கமெல்லாம் நான் போறதே இல்லப்பா...' என்று சொல்லும் பெண்கள்கூட, கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான். இதற்கு டீன் ஏஜ்,. மிடில் ஏஜ், ஓல்டு ஏஜ் என்று எந்த ஏஜும் விதிவிலக்கல்ல'' என்கிற அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, இங்கே த்ரெட்டிங் தொடர்பான டிப்ஸ் வழங்குகிறார். புருவம் த்ரெட்டிங் ’’டீன் ஏஜ் காலத்தில் ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில் புசுபுசுவென காடு போல் முடி வளர்வது இயற்கையே. ஆனால், 'அழகாக இல்லையே' என்று அதன் மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டிங் செய்யும்போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் - குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள். அந்த வயதில், இயற்கைக்கு முரணாக உடம்பில் நாம் செய்யும் மாற்றங்கள் பூமராங் ஆகி, வேறுவிதமான சிக்கல்களுக்கு நிரந்தர விதை போட்டுவிடும்! புருவம் த்ரெட்டிங் அழகான அடர்த்தியான புருவத்துக்கு...டிப்ஸ்... டிப்ஸ்..! #BeautyTip 'த்ரெட்டிங்' என்பதை செய்ய ஆரம்பித்தால், அதன் பிறகு முடிகள் கம்பி போல் திக்காக வளர ஆரம்பித்து விடும். அதுமட்டுமல்ல... ஒரு தடவை த்ரெட்டிங் செய்தால், தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால்... புருவங்களிலிருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழகையே கெடுத்துவிடும். மழிக்கப்பட்ட இடங்களில் முடிக்கால்கள் தோன்றி... நம் முகத்தையே விகாரமாகக் காட்டி பயமுறுத்தும். 'எல்லாம் சரி! ஆனா, த்ரெட்டிங் செய்யாம இருக்க முடியலையே...!' என்பவர்களுக்கு... இதோ சில டிப்ஸ்கள்! புருவம் த்ரெட்டிங் Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! த்ரெட்டிங் போகும் முன்பாக கண்களைச் சுற்றி எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு கழுவிவிட்டு, த்ரெட்டிங் செய்தால்... புருவம் வில் போல் அழகான வடிவத்துக்கு மாறிவிடும். முதன்முறையாக செய்து கொள்பவர்களுக்கு... த்ரெட்டிங் செய்து கொள்ளும்போது தசையெல்லாம் சுருங்கக்கூடாது என்பதற்காக கண்களை கையால் அழுத்திக் கொண்டுதான் செய்வார்கள். முதன்முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலுடன், வலியும், வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஒரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்கத்தைப் போக்க, ஒரு நாள் வைட்டமின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆயில் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறைவதோடு, கண்களையும் அழகாகக் காட்டும். கூட்டுப் புருவ முடிகளை அகற்ற சில பெண்களுக்கு இரு புருவத்துக்குமிடையே முடி சேர்ந்து 'கூட்டுப் புருவம்' என்பதாக இருக்கும். பொட்டு வைத்தால்கூட அழகாகத் தெரியாது. இந்தக் கூட்டுப் புருவ முடிகளை அகற்ற... கஸ்தூரி மஞ்சள்தூள், கிழங்கு மஞ்சள்தூள், கடலை மாவு ஆகிய வற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பேஸ்டாக்குங்கள். இதை மூக்கின் நுனி பகுதியில் இருந்து புருவம் வரை ‘திக்’காக பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒத்தி எடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து முகம் பளிச்சென பிரகாசமாக தெரியும்’’ என்கிறார் ராஜம் முரளி.
Doctor Vikatan: ஃபேஸ் வாஷ், எப்படித் தேர்வு செய்ய வேண்டும்; யாருக்கு, எது பொருந்தும்?
Doctor Vikatan: முகத்துக்கு சோப் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம் என்று பொதுவாகச் சொல்கிறார்கள். ஆனால், ஃபேஸ்வாஷிலேயே ஏகப்பட்ட வெரைட்டி இருக்கின்றன. யாருக்கு, எது சரியாக இருக்கும், எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யும்போது அடிப்படையாக சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அந்த வகையில், முதலில், வயது மற்றும் சருமத்தின் தன்மையின் அடிப்படையில் ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யப்பட வேண்டும். அதாவது டீன் ஏஜ் மற்றும் டீன் ஏஜுக்கு முந்தைய வயதில் இருப்பவர்களுக்கு சருமத்தில் பொதுவாக அதிக எண்ணெய்ப் பசை இருக்கும். அவர்களும், சாதாரண சருமம் கொண்டவர்களும் காலையில் ஜெல் அடிப்படையிலான கிளென்சர் (Gel-based cleanser) பயன்படுத்தலாம். ஜெல் கிளென்சர் லேசாக நுரைத்து, சருமத்தை வறண்டு போகாமல் வைத்திருக்கும். ஜெல் வடிவ க்ளென்சர் பிடிக்காதவர்கள், மைல்டான க்ரீமி கிளென்சரையும் (Creamy cleanser) பயன்படுத்தலாம். பருக்கள் பாதிப்பு உள்ளவர்கள், நுரைக்கும் தன்மை கொண்ட ஃபேஸ் வாஷை (Foaming Face Wash) பயன்படுத்த வேண்டும். இதில், கிளைகாலிக் ஆசிட் (Glycolic Acid), அஸிலிக் ஆசிட் (Azelaic Acid), அல்லது சாலிசிலிக் ஆசிட் (Salicylic Acid) போன்ற ஏதேனும் ஆக்டிவ் பொருள் (Active) இருக்க வேண்டும். ஃபேஸ் வாஷ் இந்த வகை கிளென்சர்கள், எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தவும், மூக்கு மற்றும் கன்னப் பகுதிகளில் கரும்புள்ளிகள் (Blackheads) சேராமல் தடுக்கவும் உதவும். அதுவே, முதிர்ந்த சருமம், வறண்ட சருமம் அல்லது சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், கிரீம் வடிவிலான, நுரைக்காத, சோப் ஃப்ரீ கிளென்சர் பயன்படுத்துவது சிறந்தது. ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக நுரைக்கும் தன்மை கொண்ட ஃபேஸ் வாஷைத் தவிர்க்கவும். சில ஃபேஸ் வாஷ்களில் குளுட்டோதயோன் போன்ற ஆக்டிவ்ஸ் சேர்க்கப்பட்டிருக்கும். ஃபேஸ்வாஷ் என்பதை அதிகபட்சம் 20 நொடிகள் மட்டுமே சருமத்தில் பயன்படுத்தப் போகிறோம். எனவே, அதில் சேர்க்கப்படுகிற ஆக்டிவ்ஸ் பெரிதாக எந்தப் பலனையும் தராது என்பதால் ஆக்டிவ்ஸ் உள்ள ஃபேஸ்வாஷ் தேவையில்லை. உதாரணத்துக்கு, சிக்கன் நல்லது என்றாலும், அதை சருமத்தின் மேல் பூச்சாக உபயோகிப்பதால் பலன் கிடைக்காது. உள்ளுக்குச் சாப்பிட்டால்தான் பலன் தெரியும். அப்படித்தான் இதுவும். சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் மற்றும் சருமத்தின் தடுப்பு அரணைப் பாதிக்காத விதத்தில் வாங்கினால் போதும். சிறு சிறு துகள்கள் சேர்க்கப்பட்ட ஸ்கிரப் வடிவிலான ஃபேஸ்வாஷும் தேவையில்லை. மாய்ஸ்ச்சரைசர் சீதோஷ்ண நிலைக்கேற்பவும் ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யப்பட வேண்டும். கோடைக்காலத்தில், இயற்கையாகவே சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருப்பதால், நுரைக்கும் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம். குளிர்காலத்தில், சருமம் வறண்டு போகாமல் இருக்க, சோப் இல்லாத, கிரீமியான கிளென்சர்களை பயன்படுத்தலாம். குறைந்தபட்சம் 2 முறை முகத்தைக் கழுவ வேண்டும். ஃபேஸ் வாஷ் செய்த பிறகு மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும். பகல் வேளைகளில் மாய்ஸ்ச்சரைசருடன் சேர்த்து சன் ஸ்கிரீனும் பயன்படுத்த வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் கட்டாயமாக முகத்தைக் கழுவ வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: சர்க்கரைநோய்: இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால், மீண்டும் மாத்திரைகளுக்கு மாற முடியாதா?
கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? - மன நல மருத்துவர் ஆலோசனை
கோபம், நம் எல்லோருக்குமே வரும். எதிரில் இருப்பவரை மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தே காயப்படுத்தும் கோபத்தை எப்படி கட்டுக்குள் வைப்பது? சொல்லித் தருகிறார் மனநல ஆலோசகர் கவிதா சேகர் கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? கோபம் ஏற்படுத்துகிற நபர் பேசுகையில் ''உங்களுக்கு யாரால், எந்தச் சூழ்நிலையால் அதிகம் கோபம் ஏற்படுகிறது என்பதை ஒரு சுயபரிசோதனை செய்யுங்கள். அதை ஒரு பேப்பரில் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு நபர் பேசுவதைக் கேட்டாலே உங்கள் கோபம் வரும் அல்லது எரிச்சல் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால், அவரது குரலை ஒரு காமெடி நடிகர் அல்லது நடிகையின் குரலாகக் கற்பனைப் பண்ணிக்கொள்ளுங்கள். அந்த நபர் பேசும் விஷயங்களை காமெடி நடிகர் குரலோடு பொருத்திப்பார்த்து அதன்மூலம் சூழலை மாற்ற முயற்சி செய்யுங்கள். இது பலராலும் முயன்று வெற்றிபெற்ற ஒரு வழிமுறை. இதன்மூலம் கோபம் என்ற மனநிலையில் இருந்து நீங்கள் விடுபட முடியும். கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? உங்கள் சுவாசம் அசாதாரணம் ஆகும்! நீங்கள் கோபமாக இருக்கும்போது, கோபத்துக்கும் எரிச்சலுக்கும் இடையில் நீங்கள் உங்கள் சுவாசம் அசாதாரணமாவதை நீங்கள் உணரலாம். நீங்கள் கோபமாக உணரத் தொடங்கும்போது, ஆழ்ந்த சுவாசம், நேர்மறையான சுயபேச்சு அல்லது உங்கள் கோபமான எண்ணங்களை நிறுத்த முயலவும். உங்கள் அடிவயிற்றில் இருந்து ஆழமாக சுவாசிக்கவும். Parenting: இந்த வகை பெற்றோர்களின் குழந்தைகளே சமூகத்துக்கு வரம்! `நிதானமாக' அல்லது `எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்' போன்ற பாசிட்டிவ் வார்த்தைகளை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். கோபம் குறையும்வரை ஆழமாக சுவாசிக்கும்போது அதை நீங்களே செய்யவும். கோபத்தை வெளிப்படுத்துவது அதை அடக்குவதைவிட சிறந்தது என்றாலும், அதைச் செய்ய சரியான வழி இருக்கிறது. உங்களை தெளிவாக வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது? 3 டெக்னிக்ஸ் ஆங்கிலத்தில் CAR என்ற ஒரு பதம் இருக்கிறது. அதாவது, Change the Changeable, Accept the unchangeable and remove yourself from the unacceptable என்பார்கள். `உங்களால் மாற்ற முடிவதை மாற்றுங்கள், மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் அதேபோல், மாற்றவே முடியாத சூழலில் இருந்து நீங்கள் வெளியேறுங்கள்' என்பார்கள். இந்த எளிய வழியைப் பின்பற்றினால் எந்தச் சூழலையும் உங்களால் எதிர்கொள்ள முடியும்'' என்றார்.
பெண்கள் கரு முட்டைகளை சேமிக்க வேண்டும்- விவாதம் தூண்டிய ராம் சரண் மனைவியின் கருத்து; பின்னணி என்ன?
அப்போலோ மருத்துவமனை நிறுவனரின் பேத்தியும், அதே மருத்துவமனையின் CSR (Corporate Social Responsibility) துறையின் துணைத் தலைவரும், தொழில்முனைவோரும், நடிகர் ராம் சரணின் மனைவியுமான உபாசனா கொனிடேலா இந்த வார தொடக்கத்தில் இளம் பெண்களுக்கு தெரிவித்த கருத்து ஒன்று இணையதளத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. கடந்த திங்களன்று (நவம்பர் 17) ஹைதராபாத் ஐ.ஐ.டி-யில் கரியர் கவுன்சிலிங் செக்ஷனில் மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றிய உபாசனா, ``பெண்களுக்கு மிகப்பெரிய இன்சூரன்ஸ், கரு முட்டைகளை சேமித்து வைப்பது. ஏனெனில், பொருளாதார ரீதியாக நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது உங்களின் விருப்பப்படி எப்போது திருமணம் செய்ய வேண்டும், எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். உபாசனா - ராம் சரண் இன்று எனது சொந்தக் காலில் நான் நிற்கிறேன். என்னுடைய வாழ்க்கைக்கு நான் சம்பாதிக்கிறேன். பொருளாதார ரீதியாக நான் சுதந்திரமாக இருக்கிறேன். இது என்னுடைய வாழ்க்கையில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வைக்கிறது. 30 வயதைத் தொடுவதற்குள் உங்களின் இலக்குகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கரியருக்கான பாதையை அமைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதிக்கப்போகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். வாழ்வில் உங்களின் ரோல் என்ன, இலக்கு என்ன, தொலைநோக்குப் பார்வை என்ன என்பதை தெரிந்துகொண்டால் யாரும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார். தன்னுடைய இந்த உரையை உபாசனா தனது இன்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகிய சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு, ``ஹைதராபாத் ஐ.ஐ.டி மாணவர்களுடன் ஒரு அற்புதமான உரையாடல். `உங்களில் எத்தனை பேர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்' என மாணவர்களிடத்தில் கேட்டபோது, பெண்களை விட நிறைய ஆண்கள் கைகளை உயர்த்தினர். அப்போது, பெண்கள் தங்களின் கரியர் மீது அதிக கவனம் செலுத்துவதாகத் தோன்றியது. இது புதிய முற்போக்கு இந்தியா என்று பதிவிட்டிருந்தார். I advise young entrepreneurs I meet, both men and women, to marry and have kids in their 20s and not keep postponing it. I tell them they have to do their demographic duty to society and their own ancestors. I know these notions may sound quaint or old-fashioned but I am sure… https://t.co/5GaEzkMcbQ — Sridhar Vembu (@svembu) November 19, 2025 இதில், பெண்கள் தங்களின் கரு முட்டைகளை சேமித்து வைக்க வேண்டும் என்று உபாசனா கூறியது பெரும் விவாதப்பொருளானது. இதை மேலும் பெரிதாக்கும் விதமாக ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு ஒரு கருத்தைத் தெரிவித்தார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் உபாசனாவின் சமூக வலைத்தளப் பதிவைக் குறிப்பிட்டு ஶ்ரீதர் வேம்பு , ``ஆண்கள், பெண்கள் என நான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர்களிடம் திருமணம் செய்துகொண்டு 20 களில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள், தள்ளிப்போடாதீர்கள் என்று கூறுவேன். மேலும் அவர்களிடம், தங்கள் சமூகத்துக்கும், மூதாதையர்களுக்கும் தங்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் கடமையைச் செய்ய வேண்டும் என்பேன். இந்தக் கருத்துக்கள் விசித்திரமாகவோ அல்லது பழமையானதாகவோ தோன்றலாம். ஆனால் இவை மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன். என்று பதிவிட்டார். தொடர்ந்து இந்த விவாதத்தில், மகப்பேறு மருத்துவரும், மகளிர் மருத்துவ நிபுணருமான ராஜேஷ் பாரிக், ``உங்கள் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருக்கும்போது கரு முட்டை சேமிப்பது பற்றி ஆலோசனை வழங்குவது மிகவும் எளிதானது. IVF-ல் (In Vitro Fertilization) ஒரு சுழற்சிக்கு லட்சங்களில் செலவாகும். கரு முட்டை சேமிக்க லட்ச ரூபாய் ஆகும். கூடவே, வருடாந்திர பராமரிப்பு கட்டணம் உண்டு. உங்கள் (உபாசனா) பேச்சைக் கேட்கும் பெரும்பாலான இளம் பெண்களால் ஒரு சுழற்சியைக் கூட செய்ய முடியாது என்று கரு முட்டை சேமிப்பதில் பொருளாதார ரீதியாக உள்ள சிக்கலை எடுத்துரைத்தார். I would politely disagree. 1) Upasana is 36 years old now ( born 1989) Ram Charan is 40 years old (born 1985) . They were best friends since college and they married in 2012. So, Upasana was 23 years when she got married and he was 27 years old. They married young. And she is… https://t.co/bnhaFFYJvs — Sunita Sayammagaru (@drsunita02) November 18, 2025 அதேபோல் ஹைதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர் சுனிதா சாயம்மகரு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் உபாசனாவின் பதிவைக் குறிப்பிட்டு, ``ஒரு பெண் தனது முட்டையை சேமித்து வைத்தாலும் அது வெற்றிகரமான கருவுறுதலுக்கும், கர்ப்பத்திற்கும் வழிவகுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று வயதான பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களைச் சுட்டிக்காட்டினார். அதோடு ராஜேஷ் பாரிக், ``ராம்சரணை மணந்தபோது 23 வயது பெண்ணாக இருந்த அவருக்கு என்ன கரியர் இருந்தது? திருமணத்திற்குப் பிறகு அவர் தனது கரியரை உருவாக்கினார். அவர் சராசரி பெண் அல்ல. சராசரி பெண்கள் இந்தப் பணக்காரர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. கரியர் இலக்குகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. அதுவொரு கானல் நீர் போன்றது. ஒரு இலக்கை அடைந்தவுடன் மற்றொரு இலக்கு தோன்றும். தனது கரியருக்காக தன் பெர்சனல் ரிலேஷன்ஷிப்பை நிறுத்திவைக்கக் கூடாது. கரியரில் முன்னேறுவதற்கு முழு வாழ்க்கையும் இருக்கிறது. ஆனால், உறவுகளைக் கண்டடைவதற்கும், தாய்மையை அனுபவிப்பதற்கும் நமக்கு ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார். இவ்வாறு பல தரப்பிலிருந்தும் பல்வேறு கேள்விகளும், கருத்துக்களும் உபாசனா கருத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், தன்னுடைய கருத்துக்கெதிரான கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் உபாசனா தனது ட்வீட் மூலம் விளக்கத்தையும், கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார். உபாசனா தனது பதிவில், ``ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டியதில் எனக்கு மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு 4 கேள்விகளை முன்வைத்தார். I’m happy to have sparked a healthy debate & thank your for your respectful responses. Stay tuned as I voice my opinions on the pleasures/pressures of privilege - that u all have been talking about. Don’t forget to check out my images ! It has very important facts that will… pic.twitter.com/rE8mkbnUPW — Upasana Konidela (@upasanakonidela) November 19, 2025 அதில், ``ஒரு பெண் சமூக அழுத்தத்திற்கு அடிபணிவதற்குப் பதில், காதலுக்காக திருமணம் செய்து கொள்வது தவறா? தனக்குச் சரியான துணையைக் கண்டுபிடிக்கும் ஒரு பெண் காத்திருப்பது தவறா? தன் சூழ்நிலைகளைப் பொறுத்து தான் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு பெண் விரும்புவது தவறா? ஒரு பெண் தனக்கான இலக்குகளை நிர்ணயித்து, திருமணம் மற்றும் குழந்தைப் பெற்றுக்கொள்வது பற்றி மட்டும் சிந்திக்காமல் தனது கரியரில் கவனம் செலுத்துவது தவறா? என்ற கேள்விகளை உபாசனா முன்வைத்தார். ராம் சரண் - உபாசனா மேலும், ``என்னுடைய 29 வயதில் என் தனிப்பட்ட மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக என் கரு முட்டையை சேமிக்க முடிவு செய்தேன். 36 வயதில் எனது முதல் குழந்தையைப் பெற்றேன். இப்போது 39 வயதில் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கிறேன். எனக்குத் திருமண வாழ்க்கையும், கரியரும் போட்டி அல்ல, வாழ்வின் நிறைவான அர்த்தமுள்ள பகுதிகள். ஆனால், எப்போது எனும் டைம்லைனை நான்தான் முடிவு செய்கிறேன். அது என் சலுகை அல்ல, என் உரிமை என்று தன் மீதான தனிப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளித்தார். உபாசனாவின் கருமுட்டை சேமித்தல் கருத்து மற்றும் அதைத்தொடர்ந்து எழுந்த பதில் கருத்துக்களுக்கு அவர் முன்வைத்த கேள்விகள் மீதான உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். இரண்டு கருப்பைகள், இரண்டிலும் கரு... மருத்துவ உலகத்தை ஆச்சர்யப்படுத்திய அமெரிக்கப் பெண்!
Doctor Vikatan: சர்க்கரைநோய்: இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால், மீண்டும் மாத்திரைகளுக்கு மாற முடியாதா?
Doctor Vikatan: எனக்கு கடந்த 15 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இத்தனை வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது ஒரு மாதமாக இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டிருக்கிறேன். இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால் அதையேதான் தொடர வேண்டுமா,மீண்டும் மாத்திரைக்கு மாற வாய்ப்பே இல்லையா? நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. இன்சுலினில் பல வகைகள் உள்ளன. புதிய வகையான இன்சுலின்களும் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, இன்சுலின் மூன்று வகையான நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முதல் வகை: டைப் 1 நீரிழிவு நோயாளிகள் இவர்களுக்கு இன்சுலின் சிகிச்சை மட்டுமே பிரதானமானது. இதற்குக் காரணம், இவர்களது கணையத்தில் (Pancreas) இன்சுலினைச் சுரக்கக்கூடிய பீட்டா செல்கள் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கும். இவர்களுக்கு இன்சுலினுக்கு பதில் மாத்திரைகளைப் பரிந்துரைக்க முடியாது. இரண்டாம் வகை: டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இவர்கள் சாதாரணமாகப் பரவலாகக் காணப்படும் நீரிழிவு நோயாளிகள். இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) காரணமாக இவர்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது. இவர்களுக்கு மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் (Oral Hypoglycemic Agent Failure), ரத்தச் சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் (Euglycemia) கொண்டு வர முடியாத நிலையிலும், வேறு ஏதாவது சிக்கல்கள் (Complications) வரும்போதும் இன்சுலின் தான் தீர்வாகப் பரிந்துரைக்கப்படும். முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால், இவர்களுக்கு இன்சுலின் அளவைக் குறைத்து, தேவைப்பட்டால் நிறுத்துவதற்கும் வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயாளிகள் மூன்றாம் வகை: டைப் 3 நீரிழிவு நோயாளிகள் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் (Emergencies). இவர்களுக்கு சிகிச்சை அல்லது அவசரத் தேவைகளுக்காக இன்சுலின் பயன்படுத்தப்படும். உதாரணத்துக்கு, அறுவை சிகிச்சை (Surgery), இதயப் பிரச்னைகள் (Heart problem), சிறுநீரகப் பிரச்னைகள் (Kidney problem), விபத்து (Accident), கண்புரை அறுவை சிகிச்சை (Cataract) போன்றவற்றின் போது இன்சுலின் தேவைப்படும். இத்தகைய சூழல்களில், உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வர இன்சுலின் போடப்படுகிறது. இந்த அவசர நிலை (Crisis) சரியானதும், மாத்திரைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். Doctor Vikatan: 20 வருடங்களாக சுகர் மாத்திரை, சுகர் குறைய இனி இன்சுலின் போட வேண்டுமா? நீரிழிவு நோய்க்குச் சிறந்த சிகிச்சை முறைகளில் ஒன்று இன்சுலின் தான். இன்சுலின் போடுவது என்பது மோசமான நிலைக்கான அடையாளம் கிடையாது. அப்படி நினைப்பது மிகப்பெரிய மனத்தடை. இன்சுலின் சிகிச்சை என்பது, நீரிழிவு நோய் மீள்தன்மைக்கு (Diabetes Reversal) பெரிதும் உதவும். மேற்கொண்டு சிக்கல்கள் வராமல் தடுக்க உதவும். இன்சுலின் செலுத்திக் கொள்ளும் பெண் (சித்தரிப்பு படம்) நீரிழிவு நோயாளிகள் அனைவரும் டைப் 1 நோயாளிகளைப் போல நிரந்தரமாக இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எந்த வகையான இன்சுலின், யாருக்கு, எந்த நேரத்தில் போடப்படுகிறது என்பதைப் பற்றி உங்களுடைய சர்க்கரை நோய் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா BP மாத்திரைகள்?
Love Deposit: உங்க லவ் டெபாசிட் நிரம்பி வழியுதா? காலியா இருக்கா? காமத்துக்கு மரியாதை - 266
நீ...ள... வேண்டிய ஒரு திருமண உறவு ஏன் திடீர்னு முற்றுப்புள்ளியை மீட் பண்ணிடுதுன்னு எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா..? அப்படி நிகழாம தடுக்க என்ன செஞ்சிருக்கணும்னு யோசிச்சிருக்கீங்களா..? இதுவரைக்கும் யோசிக்காதவங்க, டாக்டர் காமராஜ் சொல்ற 'லவ் டெபாசிட்' செஞ்சு பாருங்க. திருமண வாழ்க்கை 70, 80-ல கூட சும்மா ஜம்முன்னு இருக்கும். லவ் டெபாசிட் ''காதலிக்கிறப்போ எப்போ பார்த்தாலும் அவங்க கூடவே இருக்க மாட்டோம்; அவங்களோட குற்றம், குறைகளைச் சொல்லிக் காட்ட மாட்டோம், அவங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்ய மாட்டோம், முக்கியமா நாகரீகமா நடந்துப்போம். இவையெல்லாம்தான் லவ் டெபாசிட். இவற்றையே முடிஞ்ச அளவுக்கு கல்யாணத்துக்குப் பின்னாடியும் ஃபாலோ பண்ணுங்க. உங்க `லவ் பிளே' மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? | காமத்துக்கு மரியாதை - 265 தவிர, கணவனோ மனைவியோ, உங்க பார்ட்னருக்குப் பிடிச்சதைச் சமைச்சுக்கொடுங்க; முடிஞ்சா அவங்க விரும்புற பொருளை வாங்கி கிஃப்ட்டா கொடுங்க; வீட்டு வேலைகள்ல பங்கெடுத்துக்கோங்க; கடைசியா, துணை அருவெறுப்பா ஃபீல் பண்ற விஷயங்களைச் செய்யாம இருங்க. love deposit கணவனோ, மனைவியோ தன்னோட பிரச்னையைச் சொன்னாங்கன்னா, காது கொடுத்துக் கேட்கணும். பொதுவா ஒருத்தர் நம்மகிட்ட பேச ஆரம்பிச்சா, 18 விநாடிகளுக்குள்ள அதுக்கான மறுபேச்சை நாம பேச ஆரம்பிச்சிடுவோம். இது மனித இயல்பு. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். காது கொடுக்கிறது எவ்ளோ முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் அளவா பேசுறதும்... முக்கியமா வெறுமனே 'உம்' கொட்டாமல், காது கொடுத்துக் கேட்டு, முடிஞ்சா பிரச்னைக்குத் தீர்வும் சொல்லலாம். தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264 காதலிக்கிறப்போ முதல் அட்ராக்ஷன் அவுட் லுக் தான். அதுக்கப்புறம்தான் குணம், படிப்பு, பொருளாதாரம் எல்லாம்... அதனால, கணவனும் மனைவியும் அந்த 'லுக்'கை பராமரிக்கிறதுல முடிஞ்ச வரைக்கும் கவனம் செலுத்தணும். இவையெல்லாம் தான் லவ் டெபாசிட். கணவனும் மனைவியும் நான் மேலே சொன்ன மாதிரி நடந்துக்கிற விதம் தான், அவங்களோட காதல் பேலன்ஸ் தீர்ந்துபோயிடாம, காதலை டெபாசிட் செஞ்சுக்கிட்டே இருக்கும். சுகப்பிரசவம்; சிசேரியன் - எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262 சரி, எவையெல்லாம் லவ் டெபாசிட்டை காலி செய்யும்..? வாழ்க்கைத்துணை கிட்ட ஆர்டர் போடுறது, சத்தம் போடுறது, கெட்ட வார்த்தை பேசுறது, இது கூடவா உனக்கு தெரியாதுன்னு மட்டம் தட்டுறது, நீ/நீங்க இப்படித்தான் இருக்கணும்; இப்படித்தான் நடந்துக்கணும்னு துணையை ஒழுங்குப்படுத்த முனையுறது... இந்த டைப் தம்பதியர் லவ் டெபாசிட்ல போடுற காதல் குறைவா இருக்கும். அதே நேரம் இழக்கிறது அதிகமா இருக்கும். இவையெல்லாம் நீங்க சேர்த்து வெச்சிருக்கிற லவ் டெபாசிட்டை காலி பண்ணிட்டே வரும். இதுல வாழ்க்கைத்துணையைத் திட்டுறதும் அடிக்கிறதும், லவ் டெபாசிட்டை மைனஸ்ல போக வெச்சிடும். ஸோ, பேங்க் பேலன்ஸை பராமரிக்கிற மாதிரியே காதலையும் நிறைய டெபாசிட் செய்யுங்க. லைஃப் நல்லா இருக்கும்'' என்கிறார் டாக்டர் காமராஜ். சுகப்பிரசவம்; சிசேரியன் - எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262
``அந்த மசாலா கடவுளின் அமிர்தம் தான்'' - சித்த மருத்துவர் சிவராமன்
நம் வீட்டு சமையலறைகளில் மணக்கும் பெருங்காயத்தின் பலன்களைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். பெருங்காயம் பிசாசு மலமா; கடவுளின் அமிர்தமா? ‘காலிப் பெருங்காய டப்பா’ எனத் தோற்றுப்போனவர்களைச் சமூகம் ஏளனப்படுத்தும் சொல் நமக்குத் நினைவிருக்கும். பெருங்காயம் அப்படியான சமாச்சாரம் அல்ல. அதன் மணத்தைக் கண்டு முகம் சுளித்த அமெரிக்கர் ஒருகாலத்தில் அதைப் ‘பிசாசு மலம்’ என ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. இப்போது நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப் போல, ஸ்பானிஷ் ஃப்ளூ 1910-களில் பல்லாயிரம் பேரை கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராக செயல்பட்டதைக் கண்டறிந்து, பெருங்காயத்தைக் கழுத்தில் தாயத்துப் போல அவர்கள் கட்டித் திரிந்ததும், அதன் பின் அதற்கு ‘கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டதும் வரலாறு சொல்லும் செய்திகள். பன்றிக் காய்ச்சல் தடுக்கும்! பன்றிக் காய்ச்சல் தடுக்கும் பெருங்காயம் தைவானில் உள்ள ஆய்வாளர்கள் இந்த பெருங்காயம் பன்றிக்காய்ச்சலுக்குப் பயனாகும் அமாட்டடின்/சைமடின் வைரஸ் மருந்துகளைப் போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக்கொண்டது எனக் கண்டறிந்தனர். தினம் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடலும் குளிரும், கால்சியமும் பெருகும், லாக்டோபாசில்லஸ் எனும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச் சுருட்டக்கூடும். பெருங்காயம் கலப்படப் பெருங்காயம்? நல்ல தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அதுவே, கருத்திருந்தால் வாங்க வேண்டாம். பெருங்காயத்தில் நடக்கும் கலப்படங்கள் ஏராளம். கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்த்துப் பெருங்காயம் சந்தையில் உலாவுவதால், மூக்கைத் துளைக்கும் வாசம் தந்தாலும், கண்ணை விரித்துப்பார்த்துதான் காயம் வாங்க வேண்டும். அதே போல், அதன் மணம் எளிதில் போய்விடுமாதலால், நல்ல காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருப்பது, அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கும். பெண்களைக் காக்கும் பெருங்காயம்! பெண்களுக்குப் பெருங்காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராதவர்கள், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாதவிடாய் தள்ளி தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (பாலி சிஸ்டிக் ஓவரி) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு, வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவு உருட்டிக் கொடுக்க மாதவிடாய் வந்து சூதகக் கட்டு அகலும். பெருங்காயம் குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பையில் இருந்து வெளிப்படும் ஒருவகையான திரவம், லோசியா (Lochia) முழுமையாய் வெளியேற, காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனை வெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்கள் காலையில் கொடுப்பது நல்லது. இந்த மூலிகை, ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். அஜீரணம் போக்கும் அஜீரணத்துக்குப் பெருங்காயம் மிக முக்கியமான மருந்து. புலால் சமைத்தாலும் சரி, வாயு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போது, துளிப் பெருங்காயம் அந்த உணவில் போட மறக்கக் கூடாது. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து, பெருங்காயம் இரண்டரை கிராம் (பிற பொருள் அளவின் கால் பங்கு மட்டும்) எடுத்துப் பொடித்துவைத்து, சோற்றில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையைச் சாப்பிட்டுப் பின் சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண், (Gastric oesophagal Reflex Disease-GERD), முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். மருத்துவர் சிவராமன் Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்? வாயு வலி நெஞ்சு எலும்பின் மையப்பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு, எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொண்டு, காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்கள் சாப்பிட, வாயுக்குத்து முழுமையாய் நீங்கும். அதற்கு முன்னர் வந்திருப்பது, ஜீரணம் தொடர்பான வலியா, அல்லது ஒரு வகையான நெஞ்சு வலியா (Unstable angina) என உறுதிப்படுத்துவது மிக அவசியம். Fenugreek: 'வெந்தயம்'னா என்ன அர்த்தம் தெரியுமா? | Health Benefits சாப்பிட்டவுடன் கழிச்சல் இரிடபிள் பவுல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி, நீர் மலமாய்ப் போகும் குடல் அழற்சி நோய்களிலும் பயனளிக்கக்கூடியது. குழந்தைகளுக்கு கொஞ்சம் ஓம நீரில், துளிக் காயப் பொடி கலந்துகொடுக்க, மாந்தக் கழிச்சலை நீக்கி, சரியான பசியைக் கொடுக்கும். புற்றுநோய் செல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்! ஜீரணம் மட்டுமல்ல. புற்றுநோயிலும்கூட இந்த தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல் புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கேரளாவில் மூளை தின்னும் அமீபா : சபரிமலை செல்பவர்களின் கவனத்துக்கு.! - விளக்கும் மருத்துவர்
கேரளாவின் 'மூளை தின்னும் அமீபா' குறித்த செய்திகள் கடந்த 2 வருடங்களாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், சென்ற வருடம் (2024) இந்த அமீபாவால் 9 பேர் மரணமடைந்தனர். 2025 வருடம் செப்டம்பர் மாதத்திலோ உயிரிழப்பு மற்றும் பாதிப்பின் எண்ணிக்கை 40-ஐ கடந்தது. இந்த நிலையில், தற்போது சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து இந்தியாவெங்கும் இருக்கிற ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல ஆரம்பிப்பார்கள். Brain Eating Amoeba பக்தர்களை எச்சரிக்கும் அரசாங்கங்கள்..! மூளை தின்னும் அமீபா குறித்த அச்சம் கேரளாவில் இன்னும் தீராத நிலையில், 'சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கையில் மூக்கின் உள்ளே நீர் செல்லாமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது. தவிர, தமிழக சுகாதாரத்துறையும் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், சபரிமலை செல்பவர்கள் அங்குள்ள ஆறு, குளம் நீர்நிலைகளில் குளிக்கையில் மூக்கினுள் நீர் செல்லாதபடிக்கு கவனமாக இருங்கள். நீரை கொதிக்க வைத்து அருந்துங்கள். மூளை தின்னும் அமீபா, கொரோனா தொற்றுபோல ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது என்பதால், அச்சப்பட தேவையில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. மூளை தின்னும் அமீபா முதன் முதலில் கண்டறியப்பட்ட வருடத்தில் இருந்து, அதனால் பாதிக்கப்பட்டால் வரக்கூடிய அறிகுறிகள், பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பன உள்ளிட்ட தகவல்களை பகிர்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா. ஏன் இந்தப் பெயர்? இது 'நிக்லேரியா ஃபவுலேரி' ( Naegleria fowleri) எனப்படும் அமீபா வகையைச் சேர்ந்தது. மருத்துவர்கள் இதை 'பிரைமரி அமீபிக் என்செஃபலைட்டிஸ்' (Primary Amoebic Encephalitis) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். அதனால், இதை 'மூளை தின்னும் அமீபா' என்கிறார்கள். இதை ஆஸ்திரேலியாவில் 1965-ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறிந்தார்கள். Brain Eating Amoeba எங்கெல்லாம் இருக்கும் மூளை தின்னும் அமீபாக்கள்? வாழும் இடத்தைப் பொறுத்து, 8 மைக்ரோமீட்டர் முதல் 15 மைக்ரோமீட்டர் வரையான அளவில் இந்த அமீபா காணப்படுகிறது. பொதுவாக இவை வெதுவெதுப்பான நன்னீரில் அல்லது அழுக்கான ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில், குறிப்பாக குறைந்த அளவு நீர் மட்டம் கொண்ட நீர்நிலைகளில் வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல், முறையாக குளோரின் கலந்து கிருமி நீக்கம் செய்யப்படாத நீச்சல் குளங்கள், குழாய்த் தண்ணீர், கிணற்று நீர், வாட்டர் தீம் பார்க் நீர்விளையாட்டு பகுதிகள், ஸ்பா போன்ற இடங்களிலும் வாழக்கூடும். சுத்தமற்ற வெதுவெதுப்பான நீர்நிலைகள்தான் ‘மூளைத் தின்னும் அமீபா’ வாழ்வதற்கு ஏற்ற இடம். 115 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்கூட இந்த அமீபா உயிர்வாழ முடியும். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குழாய்த் தண்ணீர், நீச்சல் குள நீர் மற்றும் உப்புக் கடல் நீரில் இந்த அமீபா வாழ முடியாது என்று ApolloHospital.com தெரிவிக்கிறது. மனிதர்களுக்குள் எப்படி நுழைகிறது? இந்த அமீபாக்கள் வாழும் நீர்நிலைகளில் மூழ்கி குளிக்கும்போது, அந்த நீர் மூக்குக்குள் சென்று விடும். அப்படி சென்றுவிட்டால், மூக்கின் உள்ளே உள்ள ‘கிரிப்ரிஃபார்ம் பிளேட்’ (Cribriform Plate) எனப்படும் எலும்பில் இருக்கும் சிறு சிறு ஓட்டைகள் வழியாக, அது மூளை நோக்கி செல்கிறது. Brain Eating Amoeba அறிகுறிகள்..! இதன்பிறகு, தீவிரமான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, குமட்டல், வாந்தி ஆகியவை ஆரம்பமாகும். அடுத்த பத்து நாள்களுக்குள், மூளை காய்ச்சலின் அறிகுறிகளான பின்கழுத்து இறுக்கம், தலைச்சுற்றல், வலிப்பு, கவனமின்மை, மூர்ச்சை, கோமா, இறப்பு ஆகியவை நிகழ்ந்துவிடும். கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம்! மூளைத் தின்னும் அமீபா தொற்று அரிதானது என்பதாலும், இதன் அறிகுறிகள் ‘பாக்டீரியா’ எனும் மற்றொரு ஒற்றைச் செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சலைப் போன்றே இருப்பதாலும், பிரச்சினைக்குக் காரணம் மூளைத் தின்னும் அமீபாதான் என்பதை கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம். இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களைத் தின்று முடிப்பதற்கு முன்பே விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. அதனால்தான் இந்த அமீபா தொற்று ஏற்பட்டால் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதம் என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. இதற்கு சிகிச்சை இருக்கிறதா, பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பதையும் அவர் விளக்கினார். அமீபா தமிழ்நாட்டில் ஒரு நபரை காப்பாற்றியிருக்கிறார்கள்! மூளைத் தின்னும் அமீபா தொற்று, பாக்டீரியா தொற்று போலத் தோன்றினாலும், பாக்டீரியா கொல்லிகள் என அழைக்கப்படும் ஆன்டிபயாட்டிக்குகளுக்கு (Antibiotics) அடங்காது. இதற்கு, கோவிட் காலத்தில் ஏற்பட்ட கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு பயன்படுத்திய ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ (Amphotericin B) சிகிச்சை பயனளிக்கிறது. இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உடனடியாகக் கணித்து, மூளைத் தண்டுவட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ சிகிச்சையை வழங்கினால், பாதிக்கப்பட்டவர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் 47 வயதான ஒரு நபரை இந்த முறையில் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் . Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! சரியான எண்ணிக்கை தெரிவதற்கு வாய்ப்பில்லை! வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், இதுவரை உலகளவில் 500-க்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 50-க்கும் குறைவான நபர்கள் இறந்ததாக மருத்துவ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், மூளைத் தின்னும் அமீபாவால் இறந்தவர்களை ‘மூளைக்காய்ச்சலால் இறந்தவர்கள்’ எனப் பதிவுசெய்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை நமக்குத் தெரியாமல் போகும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும் பொது நீர்நிலைகளில் குளிக்காமல் இருங்கள்! மற்றபடி, இந்த அமீபா தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. அசுத்தமான தண்ணீர் குடிப்பதாலும் பரவாது. நீர்நிலைகளிலும், நீச்சல் குளங்களிலும் குளிக்கும் அனைவருக்கும் இந்த அமீபா தொற்று ஏற்படுவதில்லை. மிக அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது; அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் அமைகிறது. அதனால், இந்த அமீபா குறித்து அச்சம்கொள்வதைவிட, பொது நீர்நிலைகளில் மூழ்கி குளிப்பதைத் தவிர்க்கவும். நீச்சல் குளங்கள் முறையாக குளோரினேட் செய்து கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளனவா என உறுதி செய்து கொண்ட பிறகே அதற்குள் இறங்குங்கள். நீச்சல் பயிற்சி செய்யும் போது nose clip (நோஸ் க்ளிப்) அணிந்துகொள்ளுங்கள். பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால்... ஒருவேளை, இந்த விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால், தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளபடி, உடனடியாக மருத்துவரிடம் சென்று 'பொது நீர்நிலையில் எத்தனை நாள்களுக்கு முன்னால் குளித்தீர்கள்' என்பதை தெரியப்படுத்துங்கள். உடனடியாக நோயைக் கண்டறிந்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.
Doctor Vikatan: தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா BP மாத்திரைகள்?
Doctor Vikatan: என் வயது 39. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 6 மாதங்களாக ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ரத்த அழுத்த மாத்திரைகள் (பிபி மாத்திரைகள்) எடுத்துக்கொள்வது ஒருவரது தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் என்கிறார்கள் சிலர். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு. தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் சில வகை ரத்த அழுத்த மாத்திரைகள், தாம்பத்ய வாழ்க்கையை ஓரளவுக்கு பாதிக்கலாம். ஆனால், இது அனைவருக்கும் அல்லது அனைத்து மாத்திரைகளுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. சில பிபி மாத்திரைகள் உடலின் ரத்த ஓட்டத்தையும் ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கக்கூடும். இதன் விளைவாக, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு (ED - Erectile Dysfunction) அல்லது பாலியல் ஆர்வம் குறைவு ஏற்படலாம். பெண்களுக்கு பாலியல் உந்துதல் குறைவு அல்லது பெண் உறுப்பில் வறட்சி (Dryness) ஏற்படலாம். சிலருக்கு மாத்திரைகளால் மனச்சோர்வு, மன அழுத்தம், அல்லது படபடப்பு காரணமாகவும் மறைமுகமாகப் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படலாம். நீண்ட காலமாகப் பயன்படுத்தும் பிபி மருந்துகள், பொதுவாகப் பாலியல் செயல்பாட்டை பாதிக்கலாம். நவீன மருத்துவ முன்னேற்றத்தில் கிடைக்கும் புதிய வகை பிபி மருந்துகள் பாலியல் ஆர்வத்தையோ, செயல்பாட்டையோ பாதிக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் கிடைக்கின்றன. ஒருவேளை, பிபி மாத்திரைகளால் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால் நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசிப்பது மிக முக்கியம். மாத்திரைகள் நீங்களாகவே மருந்துகளை நிறுத்தவோ அல்லது கடைகளில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடவோ கூடாது. மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, வேறு மருந்துகளைப் பரிந்துரைப்பார். தவிர, சிலருக்கு பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தவும் சில சிறப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். மருந்துகளால் அல்லாமல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் பாலியல் ஆர்வத்தை மேம்படுத்தலாம். அந்த வகையில், பழுப்பு அரிசி, சிறுதானியங்கள், நட்ஸ், சியா மற்றும் பூசணி விதைகள், கொழுப்புள்ள மீன் (Fatty Fish), முட்டை, இறைச்சி, கடல் உணவுகள், காளான்கள், கீரை மற்றும் பச்சைக் காய்கறிகள், டார்க் சாக்லேட், மாதுளை, தர்பூசணி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, துத்தநாகம் (Zinc) சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. பேக்கரி உணவுகள், அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை, சோடியம் (உப்பு) மற்றும் எண்ணெய் நிறைந்த வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மன அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும். பிடித்த வேலைகளைச் செய்வது மகிழ்ச்சியைத் தரும். மன அழுத்தம் வொர்க் - லைஃப் பேலன்ஸ் கடைப்பிடிக்கப்பட வேண்டும். போதுமான அளவு தூக்கம், குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவை அவசியம். புகை மற்றும் மதுப் பழக்கங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நாள்பட்ட நோய்கள், ஆண் உறுப்பில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால், இதற்குச் சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?
தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? - மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்
மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்திருக்கிறார். அதுவும், முதுகில் மாட்டியிருந்த புத்தக சுமையைக் கூட கீழே வைக்க விடாமல் அதோடு சிட் அப் செய்யும்படி சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாத அந்தக் குழந்தையும் 100 சிட் அப் எடுத்திருக்கிறாள். மாலை வீட்டுக்குத் திரும்பியதும் கடுமையான முதுகுவலி இருப்பதாக அம்மாவிடம் அழவே, பள்ளிக்கூடத்தில் நடந்ததை தெரிந்துகொண்ட மாணவியின் அம்மா, மகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மாணவி உயிரிழந்துவிட்டாள். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தரிடம் பேசினோம். புத்தக மூட்டை புத்தக மூட்டை ‘’முதலில் இந்தக் கால பள்ளிக்கூட புத்தக பைகளின் எடையை குறைக்க வேண்டும். சில பள்ளிக்கூடங்கள் இதில் கவனமாக இருந்து, மாணவர்களின் புத்தக சுமையைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா பள்ளிக்கூடங்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபுல் பாடி செக்கப் இரண்டாவது விஷயம். பள்ளி படிக்கும் மாணவர்களில் எங்கோ ஒருவருக்கு, சிறு வயதில் இருந்தே இதயம் அல்லது நுரையீரலில் சின்னதாக பிரச்னை இருக்கலாம். அது சிறிய அளவிலான துளையாகவும் இருக்கலாம். அது தெரியாமலே இருந்திருக்கலாம். ஏதோ ஒருகட்டத்தில், பிரச்னை பெரிதாகும்போது, குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் வரும். இதை வருடத்துக்கு முறை பள்ளிக்கூடங்களில் ஃபுல் பாடி செக்கப் செய்வதன் மூலம் கண்டறியலாம். பல பள்ளிக்கூடங்களில் இந்த நடைமுறை இல்லை. இதை செய்திருந்தால், எந்த மாணவருக்கு என்னப் பிரச்னை, அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்காக, ஹெல்தியான குழந்தைகளை இப்படி புத்தக மூட்டையுடன் 100 சிட்-அப் எடுக்க வைக்கலாம் என்று அர்த்தமில்லை. காற்று மாசுபாடு காற்று மாசுபாடு மூன்றாவது விஷயம். காற்று மாசுபாட்டின் இடையே தான் நாமும் நம் குழந்தைகளும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதுவும் பெரு நகரங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. இன்றைய குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொந்தரவு காற்று மாசுபாட்டினால் அதிகரித்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு எதுவும் இல்லாமல், 12 வயது குழந்தையை 100 முறை உட்கார்ந்து எழ வைத்தது மிகப் பெரிய தவறு. மாணவியை திருத்த நினைத்திருந்தால், 10 முறை சிட் அப் செய்ய வைத்திருக்கலாம். ஸ்கேலால் கையில் ஓர் அடி கூட வைத்திருக்கலாம். ஆனால், அந்த ஆசிரியர் செய்திருப்பது மகா பாவம். எங்கேயோ இருந்த கோபத்தை, அந்தக் குழந்தையின் மீது காட்டியிருக்கிறார். Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்! அந்த மாணவிக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்றால்... அந்த மாணவிக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்றால், முதல் 20 சிட்-அப் போடும்போதே மூச்சு வாங்க ஆரம்பித்திருக்கும். 100 சிட்-அப் எடுத்தவுடனே மாணவிக்கு நெஞ்சு வலியும், கூடவே மூச்சுத்திணறலும் சேர்ந்து வந்திருக்கும். அதன் காரணமாகத்தான், அந்த மாணவி இறந்திருப்பார். அவசர சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர் வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..? ஆசிரியர்கள் கொடுக்கும் தவறான மற்றும் தாங்க முடியாத தண்டனைகளால் மாணவர்கள் இறக்கும்போது, சமூகத்தில் இரண்டு தவறுகள் நடப்பதற்கு வழிவகுக்கின்றன: ஒன்று அதன்பிறகு நல்ல ஆசிரியர் பெருமக்களால்கூட, தங்கள் மாணவர்களின் தவறுகளைத் திருத்துவதற்காக சிறுசிறு தண்டனைகளும் கொடுக்க முடியாமல் போகும். இரண்டாவது, அப்படி திருத்தப்படாத மாணவர்கள் வளரும்போது, அது சமூகத்துக்கு கெடுதலாக அமையவும் வாய்ப்பிருக்கிறது’’ என்றவர், சிட் அப் தொடர்பான சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். 5 சிட் அப் அல்லது 10 சிட் அப் வரை எடுக்கலாம். ‘’காது நுனியை பிடித்தபடி சிட்-அப் எடுத்தால், கவனத்திறன் கூர்மையாகும்; நினைவுத்திறன் அதிகரிக்கும், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதனால், குழந்தைகள் 5 சிட்-அப் அல்லது 10 சிட்-அப் வரை எடுக்கலாம். வளர்ந்த குழந்தைகள் என்றால், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20 சிட்-அப் எடுக்கலாம். அதுவும், ஆரோக்கியமாக இருந்தால்... சிட்-அப் எடுப்பதற்கான ஸ்டாமினா எனப்படும் தாங்கும் திறன் நபருக்கு நபர், குழந்தைக்கு குழந்தை மாறுபடும். இதுபற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் ஓர் ஆசிரியர் அந்த 12 வயது குழந்தையின் உயிரைப் பறித்திருக்கிறார்’’ என்கிறார் வருத்தமுடன், அவசர சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தர்.
Marburg Virus: எத்தியோப்பியாவில் பரவும் மார்பர்க் வைரஸ்; உலக சுகாதார அமைப்பு விளக்கம்
தெற்கு எத்தியோப்பியாவில் 'மார்பர்க்' என்ற கொடிய வைரஸ் பரவி வருவதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எபோலா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ் கொடியது என்பதால், இது ஒரு புதிய பெருந்தொற்றுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுவரை 9 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த எத்தியோப்பிய அரசுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மனிதர்களுக்கு 'மார்பர்க் வைரஸ் நோயை' ஏற்படுத்துகிறது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தக்கசிவு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Fever நோய்த்தொற்று அறிகுறிகள் மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்ட 2 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் திடீரெனத் தோன்றும் என நோய் கட்டுப்பாட்டு மையம்தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் மலேரியா அல்லது டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் இருப்பதால், அதைக் கண்டறிவது கடினம் என்கின்றனர். முக்கிய அறிகுறிகள் திடீரென தொடங்கும் அதிக காய்ச்சல் தாங்க முடியாத தலைவலி மற்றும் தசை வலி மூன்றாவது நாளில் தொடங்கும் கடுமையான வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி ஈறுகள், மூக்கு மற்றும் கண்களில் இருந்து ரத்தக்கசிவு உடலில் அரிப்பு இல்லாத தடிப்புகள் தோன்றுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகக் கூறப்பட்டுள்ளது. Marburg is a highly infectious & often fatal disease in humans. Here's how to protect yourself from the virus: ▶️Avoid close physical contact with #MVD patients ▶️Wear gloves & PPEs when caring for an #MVD patient or suspected case ▶️Follow guidance on safe & dignified burials pic.twitter.com/kpL88hJDdx — WHO Ethiopia (@WHOEthiopia) November 15, 2025 பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், உமிழ்நீர், சிறுநீர், மலம் மற்றும் விந்து போன்ற உடல் திரவங்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதாகவும், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய படுக்கை, உடைகள் போன்ற பொருட்களைத் தொடுவதாலும் இது பரவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காற்று மூலம் பரவாது என்றாலும், நேரடித் தொடர்பு மூலம் எளிதில் தொற்றும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பர்க் வைரஸ் பரவல் அரிதானது என்றாலும், அதன் இறப்பு விகிதம் 50% வரை இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?
Doctor Vikatan: நான் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்கிறேன். கிலோமீட்டர் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. ஆனால், என் நண்பர்கள் பலரும், தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ், 12 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி நடப்பதுதான் பலன் தரும் என்கிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் 10,000 அடிகள் நடப்பது என்பது 8 கிலோமீட்டர் தூரம் நடப்பதற்குச் சமமானது. தினமும் அவ்வளவு தூரம் நடப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே, அதைப் பின்பற்றுவது நல்லதுதான். ஆனால், அதற்காக பத்தாயிரம் அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்கும் என்று இதைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கும்போது இதயத்தின் செயல் மேம்படும். அதை எப்படி நடக்கிறோம் என்பதும் இதில் முக்கியம். மிகவும் பொறுமையாக, நீண்ட நேரம் நடப்பது என்பது சிறந்த உடற்பயிற்சியாக இருக்காது. அதை உடலியக்கமாக மட்டுமே கருத முடியும். நீங்கள் 10,000 அடிகளை மிக மெதுவாக, நீண்ட நேரம் நடக்கிறீர்கள், பேசிக்கொண்டே நடக்கிறீர்கள் என்றால் அதன் பலன் முன்னதை விட குறைவாகவே இருக்கும். சிலரால் 5,000 அடிகள்தான் நடக்க முடியும். ஆனால், அதை வேகமாக நடப்பார்கள். பத்தாயிரம் அடிகளை மெதுவாக நடப்பதை விடவும் இது மிகவும் சிறந்தது. walking குறைவான தூரம் நடந்தாலும் வேகமாக நடக்கும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதயத்தை கண்டிஷன் செய்ய இது நல்ல பயிற்சியாக அமையும். உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு நீங்கள் 20 நிமிடங்கள் நடப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் ஒரு நிமிடம் மிக வேகமாகவும் அடுத்த ஒரு நிமிடம் மெதுவாகவும் நடப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்நிலையில் உங்கள் இதயத் துடிப்பானது அதிகரிப்பதும் குறைவதுமாக மாறிக்கொண்டே இருக்கும். அது உங்கள் இதயத்தை கண்டிஷன் செய்ய உதவியாக இருக்கும். இதில் உங்களால் 10,000 அடிகளை நடக்க முடியலாம், முடியாமலும் போகலாம். ஆனாலும், இந்த நடை உங்கள் ஆரோக்கியத்தை நிச்சயம் மேம்படுத்தியிருக்கும். எனவே, எண்களை முக்கியமாக நினைக்காமல், உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் சிறிது தூரம், சிறிது நேரம் நடப்பது என்பதை மட்டும் பின்பற்றுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?
நம்ம குடலுக்குள்ள ஒரு தோட்டமே இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர்!
உணவுக்குழாய்க்கு வருகிறது! இரைப்பையில் இருக்க வேண்டியவை '' 'டாக்டர், நெஞ்சு எரிச்சலா இருக்கு, புளிச்ச ஏப்பம் வருது, சாப்பிட்டா மாட்டேங்குது, எதுக்களிக்குது' என்று வருபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம். நாம் சாப்பிட்ட உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையைச் சென்று அடைய வேண்டும். இது ஒரு வழிப் பாதை. ஆனால், தற்போதைய உணவுப் பழக்கம், மது அருந்துதல் போன்ற பிரச்னைகளால் இரைப்பையில் இருக்க வேண்டிய உணவும், அமிலங்களும் உணவுக்குழாய்க்கு வருகின்றன. இதையே 'அசிடிட்டி’ என்கிறோம். இந்தப் பிரச்னையால் சிலருக்கு உணவுக் குழாயில் எரிச்சல், புண் மற்றும் குரலில் மாற்றம் ஏற்படுகிறது. மேலும் நுரையீரலில் இருந்து பல்லின் எனாமல் வரை பாதிக்கப்படுகிறது. gut health எப்போதாவது பிரச்னை வந்தால் பாதிப்பு இருக்காது! எப்போதாவது விருந்து சாப்பிடும்போதோ, அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ளும்போதோ இதுபோன்ற பிரச்னை வந்தால் அதில் பாதிப்பு இருக்காது. ஆனால், வாரக்கணக்கில் இந்தப் பிரச்னை நீடித்தால் வருடத்தில் பல முறை இந்தப் பிரச்னை ஏற்பட்டால், கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். சுய மருத்துவத்தைத் தவிர்த்து, மருத்துவரை அணுகி, இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் பாசுமணி. சுயமாக மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்கிற டாக்டர் அதற்கான காரணத்தை விளக்கினார். 10 நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் இருக்க வேண்டாம்! - மருத்துவர்கள் எச்சரிக்கை! ஏன் தெரியுமா? குடலுக்குள் ஒரு தோட்டமே இருக்கிறது! ''நம் உடல் 10 ஆயிரம் கோடி செல்களால் கட்டப்பட்டது என்றால், குடலில் மட்டும் 100 ஆயிரம் கோடி பாக்டீரியா உள்ளன. குடலுக்குள் ஒரு தோட்டமே இருக்கிறது. ஏன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நாம் உயிர்வாழ அந்த பாக்டீரியாவும் நம்மோடு சேர்ந்து வாழ்கிறது. நோய்த்தொற்று, ஃபுட் பாய்சன் போன்றவற்றின்போது இந்த பாக்டீரியா பாதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுக்கும்போது இந்த நன்மை செய்யும் பாக்டீரியாவும் சேர்ந்து பாதிக்கப்படும். அந்தத் தோட்டத்தைக் கட்டி எழுப்ப ஒரு வருடம்கூட ஆகலாம்! மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டும் இதுபோன்ற மருந்துகளை எடுக்கும்போது இந்த பாக்டீரியாவுக்குப் பாதிப்பு நேராமலும், அப்படியே ஏற்பட்டாலும் அது சிறிய அளவில் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளப்படும். இதனால், உணவுச் செரிமானத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். நீங்களாக மருந்து எடுத்தால், பாக்டீரியா அழிக்கப்படும். மீண்டும் அந்தத் தோட்டத்தைக் கட்டி எழுப்ப ஒரு வருடம்கூட ஆகலாம்'’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் பாசுமணி. Health: சாப்பிட்டப் பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்..!
Doctor Vikatan: தலைவலியே இல்லாவிட்டாலும் தினமும் தைலம் தடவும் வழக்கம், பிரச்னை வருமா?
Doctor Vikatan: என் வயது 53. எனக்கு தினமும் தலைவலி தைலம் தடவிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வலி இருக்கிறதோ, இல்லையோ, அதைத் தடவிக்கொண்டு தூங்கினால்தான் திருப்தியாக உணர்வேன். இந்தப் பழக்கத்தினால் ஏதேனும் பிரச்னைகள் வருமா... தைலம் என்ன செய்யும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் பொதுவாக இந்தத் தைலங்கள் நல்ல மணம் கொண்டவை, அந்த மணமானது இதமான உணர்வைத் தரும். ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்னைகளைப் போக்கும், வலிகளைப் போக்கும், நெற்றிப் பகுதியில் தடவுவதன் மூலம் மூக்கின் வழியே உள்ளே போய், நெஞ்சு சளியைப் போக்கும் என்றெல்லாம் காலம் காலமாக நம்பப்படுகிறது. தைலங்களின் மணம் ஏற்படுத்தும் உணர்வை உளவியலில் 'கண்டிஷனிங்' (conditioning) என்று குறிப்பிடுவோம். பல வீடுகளிலும் பெண்கள் இப்படி தைலத்தைத் தடவிக் கொண்டதும், வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உடல்நலம் சரியில்லை, ஓய்வெடுக்க நினைக்கிறார் என புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள். வீட்டு வேலை, வெளி வேலைகளைப் பார்த்துக் களைத்துப் போன பெண்களுக்கும், இப்படி ஒரு தைலத்தைத் தடவிக் கொண்டதும் ' வேலை செய்தது போதும்...ஓய்வெடு' என உளவியல்ரீதியான ஓர் உணர்வு ஏற்படுகிறது. அந்தத் தருணங்களில் அவர்களுக்கு தலைவலியோ, ஜலதோஷமோ இருக்க வேண்டும் என்றில்லை. தைலத்தைத் தடவிக்கொண்டு படுத்ததுமே அவர்களுக்கு உடல் ரிலாக்ஸ் ஆகி, தலைவலி போவதாக உணர்கிறார்கள். தலைவலி தைலம் பெரும்பாலான பெண்களுக்கும் ஸ்ட்ரெஸ் மற்றும் டென்ஷன் ஏற்படுத்தும் தலைவலிகளே பிரதானமானவை. அதை கவனிக்காமல் விடும்போதுதான் வலி அதிகமாகி, அடுத்தகட்டத்துக்குப் போகிறது. லேசான டென்ஷனாக உணரும்போதே இப்படி தைலத்தைத் தடவிக்கொள்வதால் டென்ஷன் விடுபடுவதாக உணர்கிறார்கள். இந்தப் பழக்கத்தால் பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படாது. சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்களுக்கு இந்தத் தைலங்களும் களிம்புகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, மெள்ள இதிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?
Doctor Vikatan: வயதுக்கேற்ற உயரம் இல்லாத டீன் ஏஜ் மகள்; 15-16 வயது பிறகு வளர்ச்சி நின்றுவிடுமா?
Doctor Vikatan: டீன் ஏஜில் இருக்கும் என் மகளுக்கு அந்த வயதுக்கேற்ற உயரம் இல்லை. 15-16 வயதுக்குப் பிறகு வளர்ச்சி நின்றுவிடும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா... வயதுக்கேற்ற உயரத்தைப் பெற ஏதேனும் வழிகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் ஒருவரது உயரம் என்பது மரபியல் ரீதியாகவும் தீர்மானிக்கப்படுவது. அம்மாவிடமிருந்தோ, அப்பாவிடமிருந்தோ அல்லது இருவரின் மரபு வழியிலிருந்தோ வருவதுதான் நம் உயரம். பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை 14-15 வயதில் பூப்பெய்துவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு உயரம் அதிகரிக்க வாய்ப்பில்லை. பருவ வயதை எட்டியபிறகு பிள்ளைகளின் வளர்ச்சி நின்றுவிடும். ஆண் குழந்தைகளுக்கு 15-16 வயது வரை வளர்ச்சி இருக்கும். உடலியல்ரீதியாக இப்படித்தான் எல்லோரும் படைக்கப்பட்டிருக்கிறோம். எனவே, இந்த வயதைத் தாண்டி அவர்களுடைய எலும்புகள் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. அப்படிப் பார்க்கும்போது பூப்பெய்தியதிலிருந்து ஒரு வருட காலம்வரை மட்டுமே வளர்ச்சி இருக்கும். அதன் பிறகு நின்றுவிடும். எனவே, சப்ளிமென்ட் எடுப்பதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ ஒருவரது உயரத்தை அதிகரிக்கச் செய்ய முடியாது. அது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவும் இல்லை. சிறுவயதிலிருந்தே குழந்தைகளை ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுக்க வேண்டும். பருவ வயதை எட்டியபிறகு பிள்ளைகளின் வளர்ச்சி சிறுவயதிலிருந்தே குழந்தைகளை ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுக்க வேண்டும். அது அவர்களுடைய எலும்புகளை உறுதியாக வளரச் செய்யும். ஓடியாடி விளையாடுவதால் உயரம் அதிகரிக்காது என்றாலும் உடல் உறுதியாகும். மார்க்கெட்டில் விற்கப்படும் ஊட்டச்சத்து பானங்கள், ஹெல்த் டிரிங்க்ஸ் போன்றவையும் உயரத்தை அதிகரிக்காது என்பதைப் புரிந்துகொள்ளவும். உங்களுடைய பெண் குழந்தைக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் இருக்கின்றனவா, ஹார்மோன் கோளாறுகள் உள்ளனவா என்பதையெல்லாம் மருத்துவரிடம் அழைத்துச்சென்று தெரிந்துகொள்வதும் அவசியம். உயரத்தை அதிகரிக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுக்கும் மருந்துகள், சிகிச்சைகள் போன்றவற்றை நம்பாதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: சதைப்பிடிப்பில்லாத உடல்வாகு, அடிக்கடி மயக்கம்... டீன் ஏஜ் மகனுக்கு சிகிச்சை அவசியமா?
உங்க சாப்பாட்ல மசாலா பொருள்கள் இருக்கா? - மருத்துவர் கு. சிவராமன்
தினசரி உணவில், நாம் எத்தனைவிதமான நறுமணப் பொருட்களை, மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறோம் தெரியுமா? வாரா வாரம் சாம்பார் பொடி, ரசப் பொடி, புளிக்குழம்பு பொடி எனத் திரித்துவைக்கும் அம்மாக்கள் இன்றைக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். `மொத்தமாக திரிச்சா மணம் மட்டும் அல்ல; கூடவே நல்ல பலன்களும் போய்விடும்’ என்பது அவர்களின் எளிய கூற்று. அது தாவர மருத்துவக்கூறுப்படி உண்மையும்கூட. மஞ்சள், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, லவங்கம், லவங்கப்பட்டை, ஏலம், அன்னாசிப் பூ, கிராம்பு, வெந்தயம், சீரகம், சோம்பு, பூண்டு, பெருங்காயம்... என நாம் அன்றாடம் சேர்க்கும் அனைத்துமே மணமூட்டிகள் மட்டும் அல்ல, மூலிகைகளும்கூட. அவற்றின் மணத்தையும் மகத்துவத்தையும் சொல்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். தாளிப்பது ஏன்? உங்க சாப்பாட்ல மசாலா பொருள்கள் இருக்கா? ஒவ்வொரு முறை உணவு தயாரித்து முடித்ததும் தாளிப்பது நம் வழக்கம். இதற்குப் பின்னால் ஒரு மருத்துவப் பின்னணி உண்டு. வெளிநாட்டு உணவுக் கலாசாரத்தில் `டிரெஸ்ஸிங்’ என்கிற அலங்கரிக்கும் முறை உண்டே தவிர, `தாளிப்பு’ கிடையாது. சமைக்கும்போது, சுவை ஒன்றோடு ஒன்று கலக்கும்போது அதன் மூலப் பொருட்களும் கலக்கும். அப்போது ஏற்படும் மாறுதல்களால், நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க, திரிதோட சமப் பொருட்கள் (வாதம், பித்தம், கபம் எனும் திரிதோடத்தையும் சமமாக நல்ல நிலையில் வைத்திருக்கும் பொருள்) எனும் எட்டு வகை கார, நறுமணப் பொருட்களைக் கடைசியில் சேர்க்கும் முறையை நம் முன்னோர் வழக்கமாக்கி வைத்திருந்தனர். இப்போது உள்ள தாளிக்கும் முறைக்கும் அந்தக்கால முறைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இப்போதுபோல, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை அப்போது தாளிக்கப் பயன்படுத்தப்படவில்லை. அவற்றுக்குப் பதிலாக, மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தப்பட்டன. சமைத்த பிறகு உணவில் இவை சேர்க்கப்படும்போது, சுவையைப் பெருக்கும்; ஜீரணத்தைச் சீராக்கும். உணவால் உடலுக்கும் எந்தக் கெடுதலும் நேராமல் பார்த்துக்கொள்ளும். இனிப்பும் ஏலமும்... இனிப்பும் ஏலமும்... * எந்த இனிப்புச் செய்தாலும், அதில் சிறிது ஏலக்காய் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால், இனிப்பால் அஜீரணம் ஏற்படாது; சளி சேராது. இனிப்பு, உடலில் வேகமாகச் சேராமல் இருக்கவும் ஏலக்காயில் இருக்கும் விதை உதவிடும். மிளகும், சுக்கும்... மிளகு, ஒரு நச்சு நீக்கி. எந்த அசைவ உணவைச் சமைத்தாலும், பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றை அவசியம் அதில் சேர்க்க வேண்டும். மிளகு, ஒரு நச்சு நீக்கி. ஒவ்வாமை ஏற்படாமலும், மூக்குப் பகுதியில் சளி சேராமலும் பாதுகாக்கும். மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) எனும் அல்கலாய்டு மிகச் சிறந்த ஜீரண நோய் எதிர்ப்புச்சக்தி தரும் பொருள் (Immune Modulator). பூண்டு, இதயம் காக்கும் இனிய நண்பன். நெடுங்காலமாக, இதை நாம் பயன்படுத்திவருகிறோம். உணவை எளிதில் ஜீரணிக்க சுக்கு உதவும்; உடலில் பித்தம் சேர்ந்து, மைக்ரேன் தலைவலி வராமல் இருக்கவும் உதவும். பூண்டு, வெங்காயத்தை ஒதுக்குவோர்கள் கவனத்துக்கு..! பூண்டு, வெங்காயத்தை ஒதுக்குவோர்கள் கவனத்துக்கு..! உங்கள் ரத்தக்கொழுப்பை சீராக வைத்துக்கொள்ளவும் இதயம் சீராக இயங்கவும் இவை இரண்டும் கண்டிப்பாக உணவில் இடம்பெற வேண்டும். அதிலும் சிறுபூண்டு, சின்ன வெங்காயம்தான் முதல் தேர்வாக இருக்க வேண்டும். பூண்டில் இருக்கும் அல்லிசின் (Allicin) எனும் சத்து மாரடைப்பைத் தடுப்பதுடன் ஒரு சிறந்த எதிர் நுண்ணுயிரியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தூள் பெருங்காயம் வாழைக்காய் பொரியல், உருளைப் பிரட்டல், சுண்டல் வகைகள் செய்யும்போது, முடிவில் பெருங்காயத் தூள் சேர்க்க மறக்கவே கூடாது. பெருங்காயம், மணமூட்டி மட்டும் அல்ல; உடலில் வாய்வு சேராமலும் அஜீரணம் ஆகாமலும் காக்கும். குடல் புண்களையும் ஆற்றும். சீரகமும் லவங்கப்பட்டையும்... `சீரகம் அகத்தைச் சீர்செய்வதால், `சீரகம்’ என்று பெயர். மந்தம் ஏற்படுத்தும் எண்ணெய்ப் பதார்த்தங்களைச் செய்யும்போது, பொன் வறுவலாக வறுத்த சீரகத்தைச் சேர்க்க வேண்டும். குடல் புண்களை ஏற்படுத்தும் 'ஹெலிகோபேக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் நுண்ணுயிரியைக் குடலில் வளரவிடாமல் செய்ய உதவுபவை, சீரகமும் லவங்கப்பட்டையும். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். இது, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நல்லது. வெந்தயம் நல்ல மருந்து வெந்தயம் Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 22 கிராம் நார்ச்சத்து நமக்குத் தேவை. வெந்தயம், சைவ உணவுகளில் அதிக நார்ச்சத்து கொண்ட பொருள். சாம்பார், இட்லி, சப்பாத்தி என அத்தனை உணவுகளிலும் வெந்தயத்தைச் சேர்க்கலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகிய முக்கியமான மூன்று பிரச்னைகளுக்கும் வெந்தயம் நல்ல மருந்து. தலைச்சிறந்த மணமூட்டி Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? மணமூட்டிகள் வகைகளிலேயே தலைச்சிறந்தது மஞ்சள். இதை ஏதோ ஒருவிதத்தில் உணவில் நாம் சேர்த்துவருவதால்தான், பல நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கின்றன. மஞ்சள் ஒரு புழுக்கொல்லி இயற்கை நுண்ணுயிர்க்கொல்லி (Natural Antibiotic). புற்றுநோய் செல்களை அழிக்கும் சிறந்த மருந்து. கார உணவுகளில், காய்ந்த மிளகாயின் கார்சினோஜெனிக் (Carcinogenic) இயல்பை, மஞ்சள் மாற்றிவிடும். அதனால்தான் மிளகாய் சேர்க்கும்போது, மஞ்சளும் சேர்க்கப்படுகிறது. எல்லா வகைப் பொரியல்களிலும், கூட்டுகளிலும் கொஞ்சம் மிளகுத் தூள், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்குச் சேர்த்தால் மருத்துவச் செலவும் கண்டிப்பாகக் குறையும். மணமூட்டிகள் நம் பாரம்பரியத்தின் அடையாளங்கள். வீட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்க, இந்த மணமூட்டிகள் அஞ்சறைப் பெட்டியில் அவசியம் இருக்க வேண்டும்.
உங்க `லவ் பிளே'மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? | காமத்துக்கு மரியாதை - 265
'லவ் பிளே' எப்படியெல்லாம் இருந்தால், தம்பதியர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை இங்கே விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். 1. நோ பதற்றம் காமத்துக்கு மரியாதை எக்காலத்திலும் பதற்றமாக செக்ஸ் செய்யாதீர்கள். இதனால், விந்து சீக்கிரமாக வெளி வந்துவிடும். இதனால், ஆண் ஆர்கசம் அடைந்தாலும், மனைவியால் அடைய முடியாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம். 2. ஆழ்ந்து மூச்செடுங்கள் காமத்துக்கு மரியாதை தொடர்ந்து உச்சக்கட்டம் அடைவதில் சிக்கல் இருக்கிறதென்றால், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மற்றும் மெடிட்டேஷன் செய்யுங்கள். இவை உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்து, ஆர்கசம் கிடைக்க உதவி செய்யும் என கண்டறிந்திருக்கிறார்கள். 3. ஆரோக்கியம் ஆர்கசத்துக்கு முக்கியம் காமத்துக்கு மரியாதை நல்ல செக்ஸ் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். அதே நேரம், உடம்பு ஆரோக்கியமாக இருந்தால்தான் நல்ல செக்ஸும், ஆர்கசமும் கிடைக்கும். தவிர, உடல்பருமன் பிரச்னை இருந்தாலும், உச்சக்கட்டம் அடைவது கடினமாக இருக்கும். 4. உடல் மீதான தாழ்வு மனப்பான்மை வேண்டாம் காமத்துக்கு மரியாதை தன் உடல் மீது தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கும், தன் உடலில் குறை இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் உச்சக்கட்டம் அடைவது கடினமாக இருக்கும். 5. கிண்டல் வேண்டாம் காமத்துக்கு மரியாதை கணவனும் மனைவியும் ஒருவரையொருவர், உடல் உறுப்புகளை சுட்டிக்காட்டி கிண்டல் செய்யவே கூடாது. வாயளவில் இதை அவர்கள் சிரித்து கடந்தாலும், மனதளவில் காயப்பட்டு விடுவார்கள். உறவின்போது இந்தக் கிண்டல்கள் நினைவுக்கு வந்துவிட்டால், முழுமனதாக உறவில் ஈடுபடவே மாட்டார்கள். 6. கூச்சப்படாதீர்கள். காமத்துக்கு மரியாதை தாம்பத்திய உறவில் கூச்சமே கொள்ளாதீர்கள். முன்விளையாட்டுகள், ரொமாண்டிக்காக பேசுதல், உறவின்போது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை துணையிடம் சொல்வது, உறவுக்கு ஏற்றபடி டிரெஸ் செய்வது என செக்ஸை அழகாக்குவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அம்மாவை ஏமாத்தலாம்... டாக்டரை ஏமாத்த முடியாது..! - காமத்துக்கு மரியாதை - 191 7. நிதானம் பிடிக்கும் காமத்துக்கு மரியாதை நிதானமாக உறவுகொள்வது பெண்களுக்குப் பிடிக்கும். ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல கிடுகிடுவென முடித்துவிட்டு தூங்கி விடாதீர்கள். இந்த பாயிண்ட் ஆண்களுக்கானது. விந்து முந்துதல்... தடுக்கும் A, B, C, D, E, F டெக்னிக்! | காமத்துக்கு மரியாதை 8. ஒரே மாதிரி... வேண்டவே வேண்டாம் தினமுமோ அல்லது அடிக்கடியோ ஒரே மாதிரி பொசிஷனில் ஈடுபடாதீர்கள். தொடர்ந்து ஒரே அறையிலும் உறவு கொள்ளாதீர்கள். பொசிஷனையும் அறைகளையும் மாற்றுங்கள். இவற்றையெல்லாம் பின்பற்றினால், கணவன் மனைவிக்குள்ளேயே செக்ஸில் த்ரில் கொண்டு வர முடியும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: தாம்பத்திய உறவு, நீண்ட நேரம் ஈடுபடுவது பிரச்னையின் அறிகுறியா?
Doctor Vikatan: 34 வயது நண்பனின் சார்பாக இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். அவனுக்கு சமீபத்தில்தான் திருமணமானது. வழக்கமாக பெரும்பாலான ஆண்களுக்கும், நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதுதான் பிரச்னையாக இருக்கும். என் நண்பனுக்கோ, நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவதுதான் பிரச்னையே... திருமணமான சில நாள்களிலேயே இதனால் அவனுக்கும் அவனின் மனைவிக்கும் பிரச்னை வந்துள்ளது. நண்பனுடைய பிரச்னை இயல்பானதா... அதற்கு சிகிச்சை ஏதும் தேவையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த , காக்னிட்டிவ் பிஹேவியரல் மற்றும் செக்ஸ் தெரபிஸ்ட் சுனிதா மேனன். சுனிதா மேனன் 'ஆண்களின் பாலியல் பிரச்னைகளில் 'மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்' (Male orgasmic disorder) என ஒன்று இருக்கிறது. டிலேடு இஜாகுலேஷன் (Delayed ejaculation) என்றும் இதைக் குறிப்பிடலாம். அதாவது, பாலியல் உறவின்போது உச்சக்கட்டத்தை எட்டுவதில் அல்லது விந்து வெளியேற்றுவதில் ஏற்படும் தாமதத்தைக் குறிக்கும் பிரச்னை இது. எவ்வளவு நேர தாமதம் இயல்பானது என்பதுதான் இங்கே கேள்வியே. சில ஆண்களுக்கு நீண்டநேரம் உறவில் ஈடுபடுவது என்பது ஒருவித 'கெத்து' ஃபீலிங்கை, திருப்தியைத் தரும். அதுவே. சில ஆண்களுக்கு முடிந்தும் முடியாமல் தொடரும் செக்ஸ் உறவு ஒருவித விரக்தியை, மன அழுத்தத்தைக் கொடுக்கும். செக்ஸ் உறவு செக்ஸ் உறவில் நீண்ட நேரம் ஈடுபடுவதை வைத்து, சம்பந்தப்பட்ட ஆணுக்கு 'மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்' பாதிப்பு இருப்பதாக முடிவுக்கு வந்துவிட முடியாது. விந்தை வெளியேற்ற முடியாத நிலையும், அது தரும் விரக்தியும், அந்த ஆணை மனத்தளவிலும் பாதிக்கும்போது அவருக்கு 'மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்' பிரச்னை இருக்கலாமோ என சந்தேகிக்கலாம். மக்கள்தொகையில் 8 சதவிகித ஆண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம் என்கின்றன புள்ளிவிவரங்கள். டிலேடு இஜாகுலேஷன் பிரச்னையோடு வரும் ஆண்களுக்கு முதலில் மருத்துவ ரீதியான பிரச்னைகள் உள்ளனவா என்று பார்க்கப்படும். உதாரணத்துக்கு, தைராய்டு பாதிப்பு, நரம்பியல் பாதிப்பு, முதுகுத்தண்டில் அடிபட்டதன் விளைவு என ஏதேனும் இருக்கிறதா என்று மருத்துவர்கள் கேட்டறிவார்கள். அப்படி எந்தப் பிரச்னை இல்லாதபட்சத்தில் அந்த ஆணை, செக்ஸ் தெரபிஸ்ட்டை சந்திக்க அனுப்புவார்கள். மன அழுத்தத்தைக் கையாளவும் கற்றுத் தரப்படும். தாம்பத்திய வாழ்க்கை (Representational Image) செக்ஸ் தெரபிஸ்ட்டை அணுகும்போது, சம்பந்தப்பட்ட ஆணின் உளவியல் பிரச்னைகள் கேட்டறியப்படும். உறவு வைத்துக்கொள்ளும் நிலை, இடம் போன்றவை கேட்கப்படும். மனைவியின் மனநிலையும் உடல்வலியும் புரியவைக்கப்படும். தொடர் கவுன்சலிங் மூலம் அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே, உங்கள் நண்பரை பாலியல் மருத்துவரையோ, செக்ஸ் தெரபிஸ்ட்டையோ அணுகி ஆலோசனை பெறச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். `தாம்பத்திய உறவு முடிஞ்சதுமே கணவர்கள் தூங்குறதுக்கு இதுதான் காரணம்!' | காமத்துக்கு மரியாதை - S3 E41
Doctor Vikatan: கையேந்தி பவன் முதல் பெரிய ரெஸ்டாரன்ட் வரை, போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது?
Doctor Vikatan: என் குழந்தைகள் இருவருக்கும் பனீர் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், சமீபகாலமாக பல கடைகளிலும் போலி பனீர் விற்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. போலி பனீரை எப்படித் தயாரிக்கிறார்கள்... அது உடல்நலத்துக்கு கெடுதல் ஆனதா?... போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை சின்ன கடைகள் தொடங்கி, பெரிய கடைகள் வரை போலி பனீர் பயன்பாடு அதிகமிருப்பதைப் பார்க்க முடிகிறது. காரணம், பனீரின் விலைதான். 'அனலாக் பனீர்' (Analogue Paneer) என அழைக்கப்படும் இந்த பனீர், செயற்கையானது, விலை மலிவானது. இத்தகைய போலி பனீரை, பாம் ஆயில், ஹைட்ரஜனேட்டடு வெஜிடபுள் ஆயில், ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து, பாலில் இருந்து பெறப்படும் திடப்பொருள், எண்ணெயையும் தண்ணீரையும் சேர்க்கும்போது அவை இரண்டும் தனித்தனியே பிரியாமல் ஒன்றாகச் சேர்வதற்கான எமல்சிஃபையர் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கிறார்கள். பார்ப்பதற்கோ, தன்மையிலோ அசல் பனீரை போலவே காட்சியளிப்பதால், பலருக்கும் அது அசலா, போலியா என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு, பிரிசர்வேட்டிவ் மற்றும் தரமற்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் போலி பனீரானது, இதயநோய்கள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்றவற்றை ஏற்படுத்தக் காரணமாகின்றன. கல்லீரலையும் பாதித்து, செரிமான பிரச்னைகளையும் ஏற்படுத்தும். பனீர் அப்படியானால் இத்தகைய போலி பனீரை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்வி எழலாம். முதல் விஷயம், பனீரின் விலை. அசல் பனீர், 200 கிராம் 80 முதல் 100 ரூபாய் வரை இருக்கும். அதைவிட அடிமட்ட விலைக்கு பனீர் கிடைக்கிறது என்றால் அது அசல்தானா என்று செக் செய்ய வேண்டும். அசல் பனீர், உதிர்த்தால் உதிரும்படியும் மென்மையாகவும் இருக்கும். போலி பனீர் என்றால், ரப்பர் தன்மையுடன் கடினமாக இருக்கும். சிறிதளவு பனீரில் சில துளிகள் அயோடின் திரவத்தை விட்டால், போலி பனீராக இருந்தால், அது நீலநிறமாக மாறும். காரணம், அதிலுள்ள மாவுச்சத்து. அசல் பனீர் என்றால் நிறம் மாறாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: நன்றாகச் சாப்பிடுவது, உணவைத் தவிர்ப்பது, உடல்நலமில்லாத போது எப்படி இருப்பது சரி?
Doctor Vikatan: பொதுவாக உடல்நலமில்லாத போது பெரும்பாலும் பசி இருக்காது. ஆனால், “சாப்பிட்டால்தான் மருந்து வேலை செய்யும்; நன்றாகச் சாப்பிட வேண்டும்” என்பார்கள் சிலர். இன்னும் சிலரோ, “உடல்நலமில்லாத போது உணவைத் தவிர்ப்பதுதான் சரியானது” என்கிறார்கள். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் யோ. தீபா. இயற்கை மருத்துவர் யோ. தீபா உடல்நலமில்லாத போது பட்டினி இருப்பது என்பது மிகச் சிறந்த மருத்துவம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், “பட்டினி கிடப்பது” என்பதைக் நல்ல உடல்நிலையில் இருக்கும்போது, பசியோடு இருக்கும்போது உணவைத் தவிர்ப்பது எனப் புரிந்துகொள்ள வேண்டாம். இதை விரதம் அல்லது உபவாசம் என்று புரிந்துகொள்ளலாம். உடல் எடையைக் குறைக்க, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க, பல வகையான நோய்களின் வீரியத்தைக் குறைக்க... என விரதம் என்பது மிகவும் உபயோகமானது. விரதம் என்பது இன்று, நேற்று வந்ததல்ல; காலங்காலமாக வழக்கத்தில் உள்ளதுதான். அதன் பலன்களை நேரடியாகச் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்பதால்தான், மதநம்பிக்கையோடு இணைத்துச் சொன்னார்கள். நம் உடலில் ஏதேனும் இன்ஃபெக்ஷனோ அல்லது இன்ஃப்ளமேஷன் எனப்படும் வீக்கமோ ஏற்பட்டால், அது பல காலமாக நம் உடலில் நீடித்தாலோ, குறிப்பிட்ட காலத்தில் நோயாகப் பிரதிபலிக்கும். விரதமிருப்பதன் மூலம் இந்த இன்ஃபெக்ஷன் மற்றும் இன்ஃப்ளமேஷன் ரிஸ்க்கை குறைக்க முடியும் என்றும், பெரிய நோய்பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. விரதம் விரதம் நல்லதுதான் என்றாலும், உபவாசம் இருக்கும் தினத்தில் எதையுமே சாப்பிடாமல் இருப்பது கூடாது. விரதம் இருக்கும்போது உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தண்ணீர், பழச்சாறு போன்றவற்றைக் குடிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் இருக்கும்போது நிறைய தண்ணீர், ஜூஸ், இயற்கை உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
`மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்!' - சொல்கிறார் மருத்துவர் கு.சிவராமன்
பெண்களுக்கு 47 - 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்றுபோகும். `இனிமேல் இந்த மூன்று நாள் அவஸ்தை இல்லை’ என்கிற விடுதலை உணர்வைத்தான் தர வேண்டும். உண்மையில், இந்த விடுதலை உணர்வு கிடைப்பது 35 சதவிகிதத்துக்கும் குறைவான, ஆரோக்கியமான உடல்வாகைப் பெற்றிருக்கும் பெண்களுக்கு மட்டுமே. மீதமுள்ள 65 சதவிகிதம் பெண்கள் படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தலைவலி, வாந்தி, வயிற்று வலி, வயிற்று உப்புசம் என பல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். கூடவே தனிமை உணர்வு, மற்றவர்கள் தன்னை உதாசீனப்படுத்துகிறார்களோ என்கிற எண்ணம் எல்லாம் சேர்ந்து மனதுக்கும் நிம்மதியின்மையைத் தந்துவிடும். இந்த காலகட்டத்தை இதமாக கடப்பதற்கான வழிகளைச் சொல்கிறார் சித்த மருத்துவர் சிவராமன். மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்! இனிமேல் கருமுட்டை வேண்டாம் என உடல் நிறுத்திக்கொள்ளும் இந்தப் பருவத்தில்தான் எலும்புகளின் கால்சியம் அடர்வு குறைய ஆரம்பிக்கிறது. கால் மூட்டுகளில், கழுத்து - இடுப்பு எலும்புகளில் கால்சியம் குறையும். சாதாரணமாக தினமும் 1,000 மி.கி கால்சியம் தேவைப்பட்டால், மெனோபாஸ் சமயத்தில் 1,250 மி.கி வரை அவசியம். மாதவிடாய் முடியும் நேரத்தில் கால்சியம் மட்டும் போதாது; அதை கிரகிக்க வைட்டமின் டி சத்தும் தேவை. உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் * உடற்பயிற்சி மிக அவசியம் இதுவரை நடைப்பயிற்சி செய்யாதவர்கள்கூட இனி அவசியம் செய்ய வேண்டும். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பவை. Menopause - Walking must பிராணாயாமம் * மனப்பதற்றம், பயம், படபடப்பு, திடீர் வியர்வை அவஸ்தைகளுக்கு பிராணாயாமம் மற்றும் ‘சூரிய வணக்கம்’ யோகாசனப் பயிற்சி செய்வது நல்ல பலன் தரும். சூரிய வணக்கம் செய்வது உடலின் ஆறு சக்கரங்களை வலுப்படுத்தி, ஹார்மோன்களைச் சீராக்க உதவும். * பாலில் கால்சியம் கிடைக்கும். அதைவிட மோரே சிறந்தது. ஒரு குவளை மோரில் 250 மி.கி கால்சியம் கிடைக்கும். * சில வகை கீரைகள், வெண்டைக்காய், சோயாபீன்ஸ், தோலுடன்கூடிய உருளைக்கிழங்கு, அத்திப்பழம், பாதாம் பருப்பு, இவற்றில் கால்சியம் உண்டு. * சூரிய ஒளியில் வளரும் காளான்கள், மீன், முட்டை, இறைச்சி, ஈரல் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகம் உண்டு. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்! மெனோபாஸ் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவை, சாப்பிட வேண்டியவை! * உணவில் 30 சதவிகிதம் பழங்களாக இருக்கட்டும். சிவந்த நிறமுள்ள மாதுளை, கொய்யா, பப்பாளி ஆகியவை கர்ப்பப்பை புற்றுநோயையும் மார்பகப் புற்றுநோயையும் தடுப்பவை. * ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த தோலுள்ள உளுந்து, நவதானியக் கஞ்சி, `டோஃபு’ எனப்படும் சோயா கட்டி, இரும்புச்சத்து நிறைந்த கம்பு, கால்சியம் நிறைந்த கேழ்வரகு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். `` ``மெனோபாஸ் மன அழுத்தம் என்னைத் தற்கொலைவரை கொண்டு சென்றது!'' - நடிகை நளினி * பால் சேர்க்காத தேநீர், அதிலும் கிரீன் டீ அருந்துவது நல்லது. தேநீரைக் கஷாயம் போடுவதுபோல் காய்ச்சி எடுக்கக் கூடாது. அது தேநீர் தரும் பலன்களைக் குறைத்துவிடும். கொதிக்கும் வெந்நீரில் தேயிலையைப் போட்டு 4 - 5 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு வடிகட்டி ஆறவைத்துக் குடிக்க வேண்டும். மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்! மாதவிடாய் நின்றுபோகும் பருவத்தில் உள்ள பெண்களுக்கான தினசரி உணவுப் பட்டியல் * காலை - நீராகாரம் அல்லது தேநீர். முந்தைய தினம் ஊறவைத்த பாதாம் பருப்பு இரண்டு. * காலைச் சிற்றுண்டி - கம்பு, சோள, உளுந்து மாவில் சுட்ட தோசையுடன் பிரண்டை சட்னி அல்லது வெங்காயச் சட்னி. அத்திப்பழம் இரண்டு, ஒரு வாழைப்பழம். * மதிய உணவு - கருங்குறுவை அல்லது மாப்பிள்ளை சம்பா அல்லது கவுனி அரிசி அல்லது வரகரிசியில் சோறு. வாழைத்தண்டு பச்சடி, பீன்ஸ், அவரை, சிவப்பு கொண்டைக்கடலை சேர்ந்த தொடுகறிகள். முருங்கை / பசலைக் கீரை, சுரைக்காய் கூட்டு, சுண்டைக்காய் வற்றல் மற்றும் குதிரைவாலி மோர் சோறு. * மாலை - முருங்கைக்காய் சூப் உடன் ராகி பனைவெல்ல உருண்டை, நவதானியச் சுண்டலுடன் தேநீர். * இரவு - கேழ்வரகு தோசை அல்லது உளுந்து கஞ்சி. (குடும்ப மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும் பால் சேர்த்துக்கொள்ளலாம்). இவற்றை மட்டும் தினமும் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இந்த உணவுப் பழக்கத்தை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது அமைத்துக்கொள்வது மெனோபாஸ் பருவத்தை மென்மையாகக் கடக்க வைக்கும்.
Savings: 'பெண்களே! 2026-ல் உங்க வாழ்க்கையை மாற்றணுமா?' - தங்கம் மட்டுமல்ல, தன்னம்பிக்கையும் வேணும்!
காலங்காலமாக, ஒரு பெண்ணின் முதல் சேமிப்பு ஒரு கிராம் தங்கமாகத்தான் இருந்திருக்கிறது. அது நம் பாட்டியாக இருந்தாலும் சரி, அம்மாவாக இருந்தாலும் சரி, அவர்களின் பாதுகாப்பு உணர்வின் அடையாளம் அந்த மஞ்சள் உலோகம்தான். இன்றும், பல பெண்கள் தங்கள் முதல் சம்பாத்தியத்தில் வாங்குவது ஒரு ஜோடி கம்மலாகவோ அல்லது ஒரு சிறிய நாணயமாகவோதான் இருக்கிறது. ஆனால், உலகம் மாறிவிட்டது. இன்று, உங்கள் சேமிப்பை தங்கத்தை விட வேகமாக வளர்க்கக்கூடிய, உங்கள் கனவுகளுக்கு வலு சேர்க்கக்கூடிய பல புதிய வழிகள் வந்துவிட்டன. தங்கத்தைத் தாண்டி யோசிக்கும் இந்தியப் பெண்கள்! Women Investors சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஒரு ஆச்சரியமான உண்மையைப் போட்டுடைக்கின்றன. இன்று, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட வேகமாக அதிகரித்து வருகிறது. தேசியப் பங்குச் சந்தையின் தரவுகளின்படி, ஜூன் 2025 நிலவரப்படி, பங்குச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு 24.5% ஆக உயர்ந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 2-3% ஆக இருந்த நிலை மாறி, இன்று பெண்களின் பங்களிப்பு பன்மடங்கு பெருகியுள்ளது. Personal Finance: வைகைப் புயல் வடிவேலு கற்றுத் தந்த பாடம்… நிதிச் சுதந்திரம் - 2 குறிப்பாக, 35 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள், தங்கள் நிதி எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் SIP (மாதாந்திர முதலீட்டுத் திட்டம்) மூலம், மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, தங்கள் பணத்தை வளரச் செய்கிறார்கள். பெண்கள் இன்று சம்பாதிக்கிறார்கள்; குடும்பத்தைக் கவனிக்கிறார்கள்; அதே நேரத்தில், தங்கள் பணத்தையும் புத்திசாலித்தனமாக நிர்வகிக்கக் கற்றுக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணின் முதலீடு, ஒரு குடும்பத்தின் வளர்ச்சி! Women (Representational Image) நீங்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாயும், உங்களுக்கானது மட்டுமல்ல. அது உங்கள் குழந்தையின் சிறந்த கல்விக்கான அடித்தளம். உங்கள் குடும்பத்தின் திடீர் மருத்துவச் செலவுகளுக்கான பாதுகாப்பு கவசம். சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற உங்கள் பல நாள் கனவின் முதல் படி. ஒரு பெண் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்கும்போது, அந்தக் குடும்பமே வலுவடைகிறது. பிள்ளைகளின் படிப்பு, ஆரோக்கியம், ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்திலுமே ஒரு படி மேலே செல்ல முடிகிறது. முதலீடு குறித்த உங்கள் தயக்கங்கள்... இதோ அதற்கான பதில்கள்! 1. பெரிய பணம் தேவையில்லை; ஒரு சிறிய அடிவைத்தாலே போதும்! ‘மாதம் 500 ரூபாய் சேமித்தால் கூடப் போதுமா?’ என்று நீங்கள் நினைக்கலாம். அந்தக் கேள்விக்கான பதில்தான் ‘SIP’. 500 ரூபாய் என்பது ஒருமுறை ஹோட்டலில் சாப்பிடும் செலவு. ஆனால், அதே 500 ரூபாய், சரியாக முதலீடு செய்தால், உங்கள் குழந்தையின் ஒரு வருடப் புத்தகச் செலவை ஈடுகட்டும். தொடங்குவதற்குத் தேவை பெரிய பணம் அல்ல; சரியான நேரத்தில் எடுத்து வைக்கும் ஒரு சின்ன அடி. 2. பங்குச் சந்தை ரிஸ்க்கா? பணவீக்கம் அதைவிடப் பெரிய ரிஸ்க்! பங்குச் சந்தை என்றவுடன் ‘ஐயோ, ரிஸ்க்’ என்று பயம் வருகிறதா? நியாயம்தான். ஆனால், உங்கள் பீரோவில் இருக்கும் பணத்தைப் பணவீக்கம் என்ற கரையான் அரித்துக்கொண்டே இருப்பது அதைவிடப் பெரிய ரிஸ்க் இல்லையா? கடந்த பத்து ஆண்டுகளில், பணவீக்கத்தால் உங்கள் பணத்தின் மதிப்பு பாதியாகக் குறைந்துவிட்டது. தங்கத்தின் வளர்ச்சி ஒரு எல்லைக்குட்பட்டது. ஆனால், சரியான முதலீடு உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சக்திகொண்டது. ரிஸ்கைக் குறைத்து, வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்பதைத்தான் இந்த வெபினாரில் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள். Personal Finance: NRIகள் மாதா மாதம் ₹ 70,000 பென்ஷனாகப் பெறுவது எப்படி? 3. நிதிச் சுதந்திரம்: உங்களுக்கான அதிகாரம்! நிதிச் சுதந்திரம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல. அது, ‘யாருடைய அனுமதியும் தேவையில்லை, இது என் முடிவு’ என்று சொல்லும் தைரியம். பிள்ளையின் ஆசைப்பட்ட மேற்படிப்பிற்குத் தயங்காமல் பணம் கட்டும் பெருமிதம். கணவருக்குப் பக்கபலமாக நிற்பதோடு, உங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் தன்னம்பிக்கை. உங்கள் முதலீடு, இந்தச் சுதந்திரத்திற்கான திறவுகோல். உங்களுக்கான ஒரு சிறப்பு வழிகாட்டி! தங்கத்தைத் தாண்டி, உங்கள் சேமிப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே ஒரு சிறப்பு வெபினார் ஏற்பாடு செய்துள்ளது மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'. இந்த வெபினாரில், முதலீட்டு ஆலோசகர் ஸ்ரீகாந்த் நரசிம்மன் கலந்துகொண்டு, பெண்களுக்கான முதலீட்டு ரகசியங்களை எளிய தமிழில் விளக்கவிருக்கிறார். இவர், பல ஆண்டுகளாக பெண்கள் தங்கள் நிதி இலக்குகளை அடைய வழிகாட்டி வருபவர். தங்கத்தைத் தாண்டி: பெண்களுக்கான ஸ்மார்ட் முதலீட்டு வழிகள் தலைப்பு: தங்கத்தைத் தாண்டி: பெண்களுக்கான ஸ்மார்ட் முதலீட்டு வழிகள் நாள்: நவம்பர் 12, 2025 (புதன்கிழமை) நேரம்: மாலை 7:30 - 8:30 மணி இந்த வெபினாரில் கலந்துகொள்ளும் அனைத்துப் பெண்களுக்கும், உங்கள் மாதாந்திர சேமிப்பைத் திட்டமிடுவதற்கான ‘தனிப்பட்ட மாத சேமிப்பு ஷீட்’ இலவசமாக வழங்கப்படும். கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 75 பெண்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு செய்ய: https://labham.money/webinar-nov-12-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov12_2025 Personal Finance: முதலீட்டின் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்கணுமா? 15:15:15 ஃபார்முலாதான் ஒரே வழி!
``500+ மலை கிராமங்களுக்கு நடந்தே சென்று மருத்துவ சேவையைச் செய்துள்ளோம்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உடல் நலன் குறித்த கவலைகள் இன்று அதிகரித்தவண்ணம் உள்ளன. 'வரும் முன் காப்போம்' என்பதற்கேற்ப முறையான விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அவள் விகடன் நடத்திய ‘ஹெல்த் கான்க்ளேவ் 2025’ சென்னை எழும்பூரில் உள்ள ரமடா ஹோட்டலில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக மக்கள் சென்றுகொண்டிருந்த நிலை மாறி, இன்று 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிகிச்சைக்காக மக்கள் தமிழ்நாடு நோக்கி வருகின்றனர். தமிழ்நாடு ‘மெடிக்கல் ஹப்’ (Medical Hub) ஆக மாறி வருகிறது” என்றார். இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலாவுக்காக வரும் வெளிநாட்டவர்களில் 25%, அதாவது ஆண்டுக்கு 15 லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். “ மக்களைத் தேடி மருத்துவம் , நம்மை காக்கும் 48 , இதயம் பாதுகாப்போம் , சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் , பாதம் பாதுகாப்போம் , நடப்போம் நலம் பெறுவோம் , மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம் , தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் ” என்று ஏராளமான மேம்பாட்டு திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது. அவள் விகடன் ஹெல்த் கான்கிளேவ் ‘ மக்களைத் தேடி மருத்துவம் ’ திட்டம் இரண்டரை கோடி பயனாளர்களை நெருங்கியுள்ளதை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை 2024-ல் விருது வழங்கி சிறப்பித்தது. மாநில அரசின் ஒரு துறைக்கு இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாட்டில் 2,200-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. அதில் பெரும்பாலான கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாது. 500-க்கும் மேற்பட்ட அத்தகைய கிராமங்களுக்கு நடந்தே சென்று மருத்துவ சேவையைச் சேர்த்துள்ளோம். மேலும், பெண்களுக்கென்று பிரத்யேகமாக “Women’s Wellness on Wheels” என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். நாம் நலமுடன் வாழ நல்ல உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும் அவசியம். அதிலும் நடைப்பயிற்சி மிகவும் முக்கியம். நான் தினமும் 14 முதல் 15 கிமீ நடப்பேன். 2004-ல் நடந்த ஒரு விபத்துக்குப் பிறகு மருத்துவர்கள் “என்னால் நடக்கவே முடியாது” என்றார்கள். இன்று நடப்பது மட்டுமல்லாமல் சிரசாசனம் வரை செய்கிறேன். 165 மாரத்தான்களில் ஓடியுள்ளேன். இரண்டு ஆண்டுகளில் 25 மாரத்தான்கள் ஓடி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் , மூன்று ஆண்டுகளில் 50 மாரத்தான்கள் ஓடி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் , நான்கு ஆண்டுகளில் 75 மாரத்தான்கள் ஓடி உலக சாதனையிலும் இடம் பெற்றுள்ளேன், என்று தனது உடல்நல அக்கறையைப் பகிர்ந்துகொண்டார். அவள் விகடன் ஹெல்த் கான்கிளேவ் வல்லுநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், பாத நலன் குறித்து நீரிழிவு பாத சிகிச்சை மருத்துவர் ராஜேஷ் கேசவன் , சிறுநீரக நோய்கள் குறித்து சிறுநீரக மருத்துவர் வெங்கட் சுப்ரமணியம் , மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து புற்றுநோய் மருத்துவர்கள் கிரண் குமார் மற்றும் நவீன் பத்மநாபன் ஆகியோர் பங்கேற்று, பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். ``மக்களைத் தேடி மருத்துவம்; நாடு முழுக்க செயல்படுத்த மத்திய அமைச்சர் விருப்பம்” - மா.சுப்பிரமணியன்
Doctor Vikatan: ``குழந்தையின் அப்பா யார்?'' - DNA டெஸ்ட் உறுதிசெய்யுமா? எப்படி செய்யப்படுகிறது?
Doctor Vikatan: திருமணம் தாண்டிய உறவுகளிலும், திருமணமாகியிருந்த நிலையிலும்கூட, இருவருக்குப் பிறக்கும் குழந்தையை தனதல்ல என அந்த ஆண் மறுக்கும் சம்பவங்களை அடிக்கடி பார்க்கிறோம். அப்போதெல்லாம் டிஎன்ஏ டெஸ்ட் பற்றியும் பேசுகிறார்கள். அதென்ன டிஎன்ஏ டெஸ்ட்... அது எப்படிச் செய்யப்படுகிறது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் டிஎன்ஏ டெஸ்ட்டிங் அல்லது பெட்டர்னிட்டி டெஸ்ட்டிங் என்பது அறிவியல்ரீதியான ஒரு பரிசோதனை முறை. இந்தப் பரிசோதனையின் மூலம் ஓர் ஆண், அவருக்குப் பிறந்ததாகச் சொல்லப்படுகிற குழந்தைக்கு மரபியல் ரீதியான தந்தை என்பதை உறுதி செய்யலாம். டிஎன்ஏ பரிசோதனையில், குழந்தையின் டிஎன்ஏவை, அப்பாவின் டிஎன்ஏ உடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். சில நேரங்களில், தேவைக்கேற்ப அம்மாவின் டிஎன்ஏ உடனும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். டிஎன்ஏ பரிசோதனையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், டிஎன்ஏ என்பது என்ன என்ற தெளிவு பெற வேண்டியது அவசியமாகிறது. டிஎன்ஏ என்பது மரபணு வரைபடம் (ப்ளூப்ரின்ட்) போன்றது. அது நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது. பிறக்கும் குழந்தையானது தாயிடமிருந்து 50 சதவிகித டிஎன்ஏவையும் தந்தையிடமிருந்து 50 சதவிகித டிஎன்ஏவையும் கொண்டிருக்கும். அந்த அடிப்படையில், டிஎன்ஏவில் குறிப்பிட்ட சில விஷயங்களை குழந்தை மற்றும் தந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆண்தான், குழந்தைக்கு மரபியல்ரீதியான தந்தையா என்பது உறுதிசெய்யப்படும். ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்படும். பக்கல் ஸ்வாப் (Buccal Swab) எனப்படும் கன்னங்களின் உள்பகுதியிலிருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படும். சில நேரங்களில் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்படும். ஆனால், Buccal Swab என்பது வலியற்ற, எளிய முறை என்பதால் பெரும்பாலும் அதுவே மேற்கொள்ளப்படும். குழந்தை மற்றும் தந்தையிடமிருந்து இப்படி மாதிரிகள் பெறப்படும். பரிசோதனையின் துல்லியத்தை உறுதிசெய்ய, சில நேரங்களில் அம்மாவிடமிருந்தும் மாதிரி பெறப்பட்டு பரிசோதிக்கப்படும். குரோமோசோமில் ஒரு குறிப்பிட்ட மரபணு (Gene) அல்லது மரபியல் குறிப்பான் (Genetic Marker) அமைந்துள்ள துல்லியமான இடம் அல்லது நிலையை லோக்கஸ் என்கிறோம். இது குழந்தைக்கும் தந்தைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். டிஎன்ஏ முழுவதும் மேட்ச் ஆகிவிட்டால், அந்த ஆண்தான் குழந்தையின் தந்தை என்பது உறுதியாகும். மேட்ச் ஆகாத பட்சத்தில், அவர் அந்தக் குழந்தையின் தந்தையில்லை என்ற முடிவுக்கு வருவார்கள். கோர்ட் ஆர்டர் இருந்தால் மட்டுமே இந்த டெஸ்ட் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற டெஸ்ட் அவசியமாகிறது. சட்டத்துக்குப் புறம்பான உறவுகள், அதன் காரணமாகப் பிறந்த குழந்தைக்கு தந்தை யார் என்பதில் எழுந்த சிக்கல் போன்றவற்றைக் கண்டறியவே இந்த டெஸ்ட் வலியுறுத்தப்படும். கோர்ட் ஆர்டர் இருந்தால் மட்டுமே இந்த டெஸ்ட் செய்யப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த டெஸ்ட் சட்டப்படி மதிப்புக்குரியது. அரசு அங்கீகரித்த பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். தனியார் பரிசோதனைக்கூடங்களில் செய்யப்படுகிற டெஸ்ட், சட்டரீதியான விஷயங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். ஜாய் என்னை மிரட்டியதால் திருமணம் செய்து கொண்டேன்; ஆனால் -மாதம்பட்டி ரங்கராஜ் சொல்லும் விளக்கம்
'அதிபருக்கே நடக்குமென்றால், சாமானியப் பெண்ணின் நிலை?' - பாலின சமத்துவமும் அரசின் கடமையும் #Hersafety
பெண்களின் பாதுகாப்பு பற்றிய உரையாடல் நடக்க, ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சென்ற வாரம் கோவையில் நடந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு மீண்டும் தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு பற்றிய உரையாடலைத் துவக்கி இருக்கிறது. நவம்பர் 2 ஆம் தேதி கோவையில் ஒரு கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் காலியான சாலையோரத்தில் காரில் இருந்தபோது மூன்று நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கின்றனர். அவர்களைத் தடுக்கமுயன்ற ஆண் நண்பரை அடித்து போட்டு அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து, தூக்கி வீசிவிட்டு சென்றிருக்கின்றனர். 2012ம் ஆண்டு டெல்லியில், ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்தில்செல்கிறார். ஓட்டுநர், ஒரு மைனர் உட்பட பேருந்தில் இருந்த ஆறு ஆண்கள், அந்த ஆண் நண்பரை அடித்து போட்டு பெண்ணைக் கொடூரமான கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி இருவரையும் சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவத்தை எவராலும் மறந்துவிட முடியாது. நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பெண் வாடிக்கையாளர் மீது பாலியல் சீண்டல்; வைரல் வீடியோவால் பரபரப்பு நிர்பயா வழக்கு குறித்த ஆவணப்படத்தில், தான் செய்த பாலியல் வல்லுறவு அந்தப் பெண்ணுக்கும் அவரது ஆண் நபருக்கும் புகட்டப்பட்ட பாடம் என்றும், இரவு நேரத்தில் தனியாக பெண்கள் வெளியில் வந்தால் அவர்களுக்கு இதுதான் நடக்கும் என்றும் குற்றவாளி முகேஷ் சிங் பேசியிருந்தார். 2013-ல் குற்றம் நிரூபிக்கப்பட்ட நான்கு மேஜர் குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்தது. தண்டனையை 2017-ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 2020-ல் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கியபோது, மெக்ஸிகோ நாட்டின் 60 வயது பெண் அதிபர் கிளவுடியா ஷெயின்பம், மக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் போது, மதுபோதையில் ஒருவர் அவர் உடல் மீது தகாத முறையில் கைவைக்க முயற்சி செய்த செய்தி வந்துசேர்ந்தது. சம்பவத்திற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் கிளவுடியா அந்த நபர் மீதுதான் புகாரைப் பதிவு செய்திருப்பதாகக் கூறி, இது போன்ற ஒரு சம்பவம், ஒரு அதிபருக்கே நடக்கும் என்றால், நாட்டில் உள்ள சாமானிய பெண்களின் நிலை என்ன என்ற கேள்வியை வைத்தார். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 6 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் எனப் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. நிர்பயா மீது தொடுக்கப்பட்ட வன்முறை ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வந்தது. முகேஷ் சிங்கின் வார்த்தைகளில் கூறவேண்டும் என்றால், ஒரு பெண்ணின் இடம் சமயலறையில். ஒரு பெண் என்றும் ஒரு ஆணுக்குச் சமமானவள் அல்ல அதிபர் கிளவுடியாவுக்கு நேர்ந்த சம்பவம், அதிகாரம் கொண்டிருக்கும் பெண்ணுமே கூட ஆணுக்குச் சமமல்ல என்கிற சிந்தனையில் நிகழ்த்தப்பட்ட சம்பவம். பெண் எத்தனை உயர்வான இடத்துக்குச் சென்றாலும், அவளைச் சுற்றி பாதுகாவலர்கள் இருந்தாலும், தன்னால் அவளின் உடல் மீது கை வைக்க முடியும் என நினைக்கும் ஆண் மைய அதிகார சிந்தனையிலிருந்து விளைந்த சம்பவம்! நிர்பயா வழக்கை கிடப்பில் போட்டுவிட்டார்கள்; வருந்தும் தாய் நிர்பயா சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பிறகுதான் அரியலூர் நந்தினி கூட்டுப் பாலியல் வல்லுறவு, பொள்ளாச்சி சம்பவம், ஒரத்தநாடு கூட்டுப் பாலியல் வல்லுறவு, தற்போது கோவை கூட்டுப் பாலியல் வல்லுறவு எனப் பல சம்பவங்கள் நேர்ந்து கொண்டிருக்கின்றன. சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை நாம் இன்றும் தொடர்ந்து பார்க்கிறோம். தூக்குத் தண்டனை வரை கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பாலியல் கொடுமைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நிகழும் வன்முறை உலகளவில் மிகவும் பரவலாகவும் இடைவிடாமலும் காணப்படும் மனித உரிமை மீறல்களில் முக்கியமான ஒன்று. உலகளவில், மூன்று பெண்களில் கிட்டத்தட்ட ஒருவராவது தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு, நெருங்கிய துணையாலோ அல்லது துணையல்லாதவர்களின் மூலமாகவோ அல்லது இரண்டு தரப்பினாலுமோ ஏதோ ஒரு கட்டத்தில் ஆளாக்கப்படுகிறார். கோவை சம்பவம் : `பாலியல் வன்கொடுமையை கூட நார்மலைஸ் செஞ்சிடுவீங்களா?’ - பதறும் 2K கிட்ஸ் | #HerSafety 2023 ஆம் ஆண்டில் பாலின அடிப்படையிலான வன்முறை காரணமாகக் குறைந்தபட்சம் 51,100 பெண்கள், தங்களின் துணைவர் அல்லது குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்பட்டார் என்கிறது ஐநா பெண்கள் அமைப்பு. ஆண், பெண், மூன்றாம் பாலினம் என அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் உண்டு. எனினும் மக்கள்தொகையில் தனக்குச் சரிசமமான எண்ணிக்கையில் இருக்கும் பாலினத்தை இரண்டாம் தர குடிமக்களாகப் பார்க்கும் போக்கு காலங்காலமாக நிலவி வருகிறது. இந்த ஆணாதிக்க போக்கு பெண்களைத் தங்களுக்குக் கீழாகவும், தங்களின் இச்சைகளைப் போக்கும் போகப்பொருளாகவும் பார்க்க வைக்கிறது. உலகளவில் இந்தப் போக்கு இருந்தாலும், இந்தியா போன்ற சாதிய, மத, நவதாரளாதவாத நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கதன்மையுடன் இருக்கும் ஆண்களின் மனநிலை, இந்தியப் பெண்களை இனப்பெருக்கம் செய்யும் கருவிகளாக மட்டுமே பார்க்கிறது. குடும்பம் என்னும் நிறுவனம், பண்பாடு என்கிற போர்வையில் இந்தச் சிந்தனைப்போக்கை போதித்து வளர்த்தெடுக்கும் பயிற்சி மையமாகத் திகழ்கிறது. பாலியல் வன்கொடுமை கரூர்: ``என் குரல் பெண் குரல்போல இருப்பதால், பாலியல் சீண்டல் செய்கிறார் ஆசிரியர்'' - மாணவர் புகார் பணிவிடை செய்து, இனப்பெருக்கம் செய்து, சுயமாக முடிவுகள் எடுக்க அனுமதியில்லாத, பலவீனமானவர்களாக பெண்களைப் பார்க்க குடும்பங்கள் கற்றுக்கொடுக்கிறது. விளைவாக, பெண்களை உடல்ரீதியிலான போக இச்சை பொருட்களாகவும், தங்களுடைய உடைமைகளாகவும், அதிகாரம் செலுத்தப்படக் கூடிய அடிமைகளாகவும் பார்க்கும் வழக்கமே தொடர்ந்து தக்க வைக்கப்படுகிறது. பெண்கள் பற்றிய ஆண்களின் பார்வை, பாலியல் இச்சைகளாக பெண்களை அவதானிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் ஆதிக்கம், அதிகாரம், கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆண்களின் சிந்தனை அடித்தளத்தில் வேரூன்றி இருக்கிறது. இதனால் அவர்கள் பெண்ணின் உடலை தங்கள் பாலியல் தேவைகளுக்கு எடுத்துக்கொள்ளும் உரிமை இருப்பதாக நினைக்கின்றனர். இந்தச் சிந்தனைதான், ஆண்கள் செய்யும் பாலியல் குற்றத்தை நியாயப்படுத்தும் இடத்திற்கு அவர்களை எடுத்து செல்கிறது. பாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை போன்ற கடும்தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும், பாலியல் குற்றங்கள் தொடர்வதற்குக் காரணமும் இதுதான். `மகள்களுக்கு’ எதிரான வன்கொடுமைகளை தட்டிக் கேட்பது எப்போது? | #HerSafety “ஒரு பெண் ஏன் இரவு நேரத்தில் வெளியே வருகிறார்?” என முகேஷ் சிங் கூறியதுபோலவும், “ஏன் அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவில் செல்கிறார்?” என கோவை பாலியல் சம்பவத்துக்கு எதிர்வினையாகப் பலர் எழுதிவருவது போலவும் ஆண்களின் மனநிலை இருப்பதற்கு காரணம், அந்தச் சிந்தனை ஆண்களின் அதிகார உணர்வில் இருந்து வருகிறது என்பதுதான். இவர்களுக்கு தண்டனைகள் எந்த அச்சத்தையும் கொடுப்பதில்லை. மாறாக மேலும் பெண்கள் மீது தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக நினைக்கும் போக்குத்தான் தொடர்கிறது. சாதியும் மதமும் போதிக்கும் ஆணாதிக்க சிந்தனைகளை குடும்பக் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தி சமூகத்திலும் அரச நிறுவனங்களிலும் புகுத்துகிறது. இதனால் சமூகப்படிநிலையில் உள்ள அனைத்து மட்டங்களிலும், பெண்களை இரண்டாம்தர குடிமக்களாகப் பார்க்கும் போக்கு தொடர வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால், பெண்கள் மீதான வன்முறைக்கும், சுரண்டலுக்குமான வழிகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. பாலியல் தொல்லை தினசரி வாழ்வில் நீக்கமற கலந்திருக்கும் ஆணாதிக்க சிந்தனைப் போக்கிலிருந்து பாலின சமத்துவத்தை நோக்கிய மன மாற்றத்தைக் கொண்டுவர அரசுகள் முதலில் பாலின சமத்துவ அரசுகளாக இருக்க வேண்டும். எப்படி ஒரு கலைஞர் தனது கலைப்படைப்பில் தனது சிந்தனையைக் கொண்டு வருகிறார்களோ, எப்படி லட்சக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் 'app' -களை வடிவமைக்கும் ஒரு மென்பொருள் பொறியாளர் தனது சிந்தனையை அந்தச் செயலிகளுக்குள் கொண்டு வருகிறாரோ, அது போல கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டின் தலைமையும் பாலின சமத்துவம், பெண்கள் விடுதலை, பெண் உரிமை, பெண் பாதுகாப்பு முதலிய பார்வைகளைத் தனது நிர்வாகத்தில் முன்னெடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு என்பது வெறுமனே ஆபத்தைத் தடுப்பது என்பதாக மட்டும் கருதப்படாமல், வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் இடங்களிலும் வன்முறை, ஒடுக்குமுறை, சுரண்டலில் இருந்து விடுதலை பெற்று சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் பெண்கள் வாழ்வதுதான் எனக் கருதப்படும் சிந்தனை மாற்றம் ஏற்படவேண்டும். Sexual Abuse: `வழி நெடுக வலியின் சத்தமும்; அழுகுரலின் நடுக்கமும்' #Hersafety பெண்களுக்கான வாழ்க்கை, கல்வி மற்றும் உறவுக்கான தேர்வுகளில் தங்களுக்கான விருப்பத்துடன் வாழ்வதும் பொருளாதார சுதந்திரத்துடன் பெண்கள் வாழ்வதற்கான வழிகளை உறுதிப்படுத்துவதும்தான். உண்மையான பெண் பாதுகாப்பு ஆகும். அதுவே, பெண் விடுதலையை நோக்கி செல்வதற்கான உண்மையான வழியாகவும் இருக்க முடியும்! பாலியல் வன்கொடுமை வரலாறு நெடுக அரசுகள் போலியோ, காலரா, எய்ட்ஸ் போன்ற பல உயிர்க் கொல்லி நோய்களை அறிவியல்பூர்வமாகச் செயல்பட்டு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றன. சமீபமாகப் பரவிய கொரோனா நோய்த்தொற்றைக் கூட எதிர்ப்பு மருந்துகள் மூலம் கையாளமுடிந்திருக்கிறது. ஆனால் அதே கொரோனா காலத்தில் கொரோனோ போலவே அதிகரித்து, Shadow Pandemic என ஐநாவால் அழைக்கப்பட்ட குடும்ப வன்முறைக்கு இன்றுவரை தீர்வு இல்லை என்பதே யதார்த்தம். ஏனெனில் அதிகாரம் ஏறும் அரசுகளுக்கு, உழைப்பு சக்தியாகப் பயன்பட மக்கள் வேண்டும், அவ்வளவுதான். அந்த மக்கள் மத்தியில் நிலவும் ஆண்-பெண் பாகுபாட்டைக் களைந்து, பாலின சமத்துவம் கொண்டு வர வேண்டிய தேவையை அரசுகள் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில் அதிகாரக் கட்டமைப்பு ஆணாதிக்கத்துக்கு ஏதுவாகச் செயல்பட மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. - கவிதா ராஜேந்திரன் `இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety
Doctor Vikatan: அதிக ரத்த அழுத்தம்தானே ஆபத்து, ரத்த அழுத்தம் குறைந்தாலும் பிரச்னையா?
Doctor Vikatan: பொதுவாக ஒருவருக்கு பிபி எனப்படும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதைத்தானே ஆபத்தான அறிகுறியாகச் சொல்வோம்.ஆனால், சிலர், குறைந்த ரத்த அழுத்தமும் பிரச்னைக்குரியது என்கிறார்களே. அது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் ரத்த அழுத்தம் பொதுவாக 120/80 இருக்கும். இது 10 சதவிகிதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ரத்த அழுத்தம் 90/60-க்குக் கீழே இருந்தால் அதை நாம் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) என்று சொல்கிறோம். ரத்த அழுத்தம் 90/60-க்குக் கீழே குறையும்போது, உடலில் ரத்த ஓட்டம் குறைந்து முக்கியமான உறுப்புகளுக்கு, குறிப்பாக, மூளை, இதயம், சிறுநீரகம், தசைகள் போன்றவற்றுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் செல்வது குறைகிறது. இதன் விளைவாக சில அறிகுறிகள் ஏற்படுகின்றன. மூளைக்கு ரத்தம் குறையும்போது தலைச்சுற்றல் அல்லது மயக்கம் வரலாம். சில நேரங்களில் நினைவில்லாமல் கீழே விழவும் வாய்ப்புள்ளது. பொதுவாகவே ரத்த அழுத்தம் குறையும்போது சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். கண் பார்வை மங்கலாகத் தெரியும். சிலருக்கு மனக் குழப்பமும் மறதியும் ஏற்படும். தொட்டுப் பார்த்தால் ஜில்லென்று இருக்கும். மற்றும் சிலருக்கு வியர்வை இருக்கும். சில நேரங்களில் மயக்கமாகி கீழே விழுவதும் வாய்ப்பாக இருக்கிறது. தலைச்சுற்றல் Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? நீண்ட காலமாகக் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் தீவிரமான பாதிப்புகள் ஏற்படலாம். இதயத்திற்கு ரத்தம் குறைவதால், இதயத்துடிப்பு சீரற்றதாகவும் அசாதாரணமானதாகவும் மாறலாம். இதன் காரணமாக அவர்களுக்கு மார்பில் வலி, படபடப்பு மற்றும் மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும். ரத்தம் வடிகட்டப்படுவது குறைவதால், சிறுநீரில் அசுத்தமான பொருள்கள் வெளியேறுவது குறையும். ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கலாம், உடலில் தண்ணீர் தேங்கி, வீக்கங்கள் ஏற்படலாம். சில நேரங்களில், ரத்தம் அழுத்தம் அதிகமாகக் குறைந்து தொடர்ந்து நீடித்தால், ஷாக் (Shock) என்று சொல்லக்கூடிய உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படலாம். இது மிகவும் குறைந்த ரத்த அழுத்தத்தால் ஏற்படுகிறது. சிலருக்கு இயற்கையாகவே குறைந்த ரத்த அழுத்தம் இருக்கும். குறிப்பாக, ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் இப்படி இருக்கலாம். இந்த மாதிரி இயற்கையாகவே ரத்த அழுத்தம் சற்று குறைந்த நிலையில் இருந்து, அவர்களுக்கு நீரிழப்பு இல்லாமல், வேறு பிரச்னைகளோ அல்லது வேறு நோய்களோ இல்லாமல் இருந்தால், அவர்கள் மற்றவர்களை விட அதிக ஆண்டுகள் வாழ வாய்ப்பு அதிகம். ரத்த அழுத்தம் குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது சரியாகத் தண்ணீர் குடிக்காமல் இருப்பது. வாந்தி, பேதி அல்லது அதிக அளவில் வியர்வை வெளியேறுதல் போன்றவற்றால் உடலில் தண்ணீர்ச்சத்து குறையும்போது நீரிழப்பு ஏற்படும். நீரிழப்பு உயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்? நீண்ட நேரம் பசியுடன் சாப்பிடாமல் இருந்தாலும் ரத்த அழுத்தம் குறையலாம். அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உட்கொள்ளும் மருந்துகளின் (உதாரணமாக, பீட்டா-பிளாக்கர்கள் அல்லது டையூரிடிக்ஸ், ஆல்ஃபா பிளாக்கர்கள்) தாக்கம் அதிகமாக இருக்கும்போதும் ரத்த அழுத்தம் குறையலாம். மனச்சோர்வுக்கான மருந்துகளும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவைக் கொண்டிருக்கலாம். மாரடைப்பு ஏற்பட்டால், இதயத்துடிப்பு சீரற்று மாறினால் அல்லது இதயச் செயலிழப்பு அதாவது, இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் குறைவதாலும் ரத்த அழுத்தம் குறையலாம். இது போன்ற நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். தைராய்டு சுரப்புக் குறைவு (Hypothyroidism) போன்ற அல்லது அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டுக் குறைவு போன்ற ஹார்மோன் குறைபாடுகளாலும் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு அதிகம். விபத்துகளில் ரத்தம் அதிகமாக வெளியேறுவது திடீர் ரத்த இழப்புக்கு மிக முக்கியமான காரணம். விபத்து ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரம் Golden Hour என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதித்து, ரத்த அழுத்தத்தை, ஆக்ஸிஜன் அளவைச் சரிபார்த்து, உடனடியாகச் சரிசெய்தால், 95 சதவிகிதம் உயிரைக் காப்பாற்ற வாய்ப்பு அதிகம். அறுவை சிகிச்சையின்போது ரத்தம் இழப்பு ஏற்பட்டால், அதற்கான ரத்த மாற்று (Blood Transfusion) செய்து உடனடியாகச் சரிசெய்ய முடியும். ஆபத்தான கிருமித்தொற்று அதிகரித்து, செப்சிஸ் அல்லது செப்டிக் ஷாக் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் அபாயகரமாகக் குறையலாம். செப்டிக் ஷாக்கிற்கு உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். மருந்துகள் கொடுத்து, ரத்த அழுத்தத்தை உடனடியாகச் சாதாரண நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இதயம், மூளை, குறிப்பாக.. சிறுநீரகம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். ரத்தம் குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளன. பொதுவாக, ஒரு நாளைக்கு இரண்டே முக்கால் முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்; வெறும் வயிறாக அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும். பலவீனமாக இருப்பவர்கள், நீரிழப்பு உள்ளவர்கள் அல்லது வயதானவர்கள் திடீரென எழுவதைத் தவிர்க்க வேண்டும். படுத்து எழுந்தவுடன், மெதுவாக உட்கார்ந்து 30 முதல் 40 நொடிகள் இருக்கவும். பிறகு நின்று 20 நொடிகள் கழித்து நடக்கவும். இரவு தூக்கத்தில் BP குறைவாக இருக்கும். திடீரென எழுவது மேலும் குறையச் செய்து மயக்கம் வர வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாக இருந்தால், உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து ஆலோசிக்கவும். சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ற சரியான சிகிச்சையை எடுக்கவும். இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சரிசெய்ய நல்ல மருந்துகள் உள்ளன. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தம்... வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா?
மைக்ரேன் கஷாயம், சைனசைடிஸ் லேகியம், இருமலுக்கான பசும்பால் - மரு. சிவராமன் சொல்லும் தீர்வு!
தலைவலி என்றாலே அது தாங்க முடியாததுதானே... பலரையும் பாதிக்கிற இதற்கு சில சித்த மருத்துவ தீர்வுகளைச் சொல்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..! இது மைக்ரேன் கஷாயம்! ’தலை தெறிக்கிற மாதிரி வலி. ஒரே குமட்டலா வேற வருது' என்றால், அது ஒற்றைத்தலைவலி. மைக்ரேன்னு சொல்ற இந்தப் பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம்தான் சட்டுனு கேட்கும். பாதித் தலைவலி நம்ம தப்பான பழக்கவழக்கத்தாலேதான் வருது. நடு ராத்திரி வரைக்கும் தூங்காம, செல்போனை அழுத்திக்கிட்டே இருக்கிறது, தலைக்குக் குளிக்காம 'தண்ணி’ காட்டறது, எதற்கெடுத்தாலும் டென்ஷன், இதெல்லாம்தான் பித்தத் தலைவலிக்கு முக்கியக் காரணங்கள். இஞ்சியும், சுக்கும் தலைவலியை நீக்குற மருந்து. சுக்கு அல்லது இஞ்சி, தனியா இரண்டையும் சம பங்கு எடுத்து, தண்ணீரை விட்டு, கால் பங்கா குறுக்கிக் காய்ச்சி, கூடவே பனைவெல்லம் சேர்த்து 100 மி.லி குடிச்சாப் போதும். தலைவலி, உடனே சரியாயிடும். இது சைனசைடிஸ் தலைவலிக்கு மூக்கு ஒழுகி, தும்மலோடு வர்றது சைனசைடிஸ் தலைவலி. இதுக்கு, இஞ்சியைப், பொடிசா நறுக்கி நெய் சேர்த்து பொன் நிறமா நீர் வத்தற வரைக்கும் வறுத்துக்கணும். இதே அளவுக்குச் சீரகத்தையும் வறுத்து எடுத்துக்கணும். இரண்டையும் சேர்த்த அளவுக்கு வெல்லத்தை எடுத்து உதிர்த்துக்கணும். எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து கலந்து தினமும் காலை சாப்பாட்டுக்கு பின்னால, அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தா, சைனசைடிஸ் தலைவலி போறதோட திரும்பவும் எட்டிக்கூடப் பார்க்காது. தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..! தலைவலியோட சளி, இருமலும் சேர்ந்து இருந்தா தலைவலியோட சளி, இருமலும் சேர்ந்து இருந்தா, ஒரு டம்ளர் பசும்பாலில் 5 கிராம் அதிமதுரம், 5 கிராம் பெருஞ்சீரகம், 10 கிராம் பனங்கல்கண்டு... இல்லேன்னா, வெல்லம் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடா தினமும் குடிச்சிட்டு வந்தா, மூணு பிரச்னையும் சரியாகும். ’’உணவு கொடுக்கப் போறப்போ சின்னப் பசங்கள கூட்டிட்டுப் போவோம்; ஏன்னா...’’ - இது மதுரை மனிதாபிமானம்! தலைவலிப் போக்கும் தைலங்கள்! தலைவலிக்குன்னே சுக்குத் தைலம், கொம்பரக்குத் தைலம், குறட்டப்பழத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம்னு சித்த வைத்தியத்துல நிறையத் தைலங்கள் இருக்கு. இதுல ஏதாவது ஒண்ணைத் தேய்ச்சுக் குளிச்சிட்டு வந்தா தலைவலி பறந்திடும். ஆனா, எல்லாருக்கும் தைலக்குளியல் சரியா வரும்னு சொல்ல முடியாது. நாடி பிடிச்சு சொல்ற மருத்துவரைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும். இப்பல்லாம் சின்னக் குழந்தைக்குக்கூடத் தலைவலி வருது. பார்வைத்திறன் குறைவுகூடக் காரணமாயிருக்கலாம். இதுக்கு, கண் மருத்துவரைத்தான் பார்க்கணும். பி.பி தலைவலிக்கு என்னத் தீர்வு? பி.பி கட்டுக்குள் இல்லைன்னா, தலைவலிதான் முதல் அறிகுறி. அதுவும் குறிப்பா காலையில் எழுந்ததும் தலை வலிச்சா, முதல்ல ரத்த அழுத்தத்தை 'செக்’ பண்ணிக்கணும். அதுவும் உட்கார்ந்து, படுத்து, நின்னு ரத்த அழுத்தத்தைப் பரிசோதிச்சாதான், பிரச்னையை சரியா கண்டுபிடிக்கலாம். அந்தக்கால டாக்டரெல்லாம் அப்படித்தான் பார்ப்பாங்க. சரியான மருந்தை மருத்துவர் பரிந்துரையோட சாப்பிடுவது முக்கியம். அதோடு, முருங்கைக் கீரை சூப், வெள்ளைத்தாமரை பூ இதழ் உலர்த்திய பொடி அரை ஸ்பூன் தினசரி எடுத்துக்கலாம். கூடவே, 1 லிட்டர் நல்லெண்ணெயில் 3 ஸ்பூன் சீரகம் போட்டுக் காய்ச்சிய எண்ணெயைத் தேய்ச்சு வாரம் இருமுறை குளிக்கணும். ராத்திரி எந்தத் தடையுமில்லாம, 6 மணி நேரம் தூங்கணும். தினசரி பிராணாயாமப் பயிற்சி. அதிலும் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறவங்க, சீதளி பிராணாயாமம் செய்தா, தலைவலி காணாமலேயே போகும். Health: நாம் ஏன் தினமும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்? நிபுணர் சொல்லும் விளக்கம் இதான்!
Heart Attack வருமான்னு முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம் | Calcium Scoring Test | Vikatan
Doctor Vikatan: தலைச்சுற்றல் பிரச்னை, ஏன் இ.என்.டி மருத்துவரைப் பார்க்க வேண்டும்?
Doctor Vikatan: என் அம்மாவுக்கு கடந்த ஒரு வருடமாக தலைச்சுற்றல் பிரச்னை இருக்கிறது. மருத்துவரை அணுகியபோது , இது வெர்டிகோ பாதிப்பாக இருக்கலாம் என்றும் இ.என்.டி மருத்துவரைப் பார்க்கும்படியும் சொன்னார். தலைச்சுற்றலுக்கு இ.என்.டி மருத்துவர் ஏன்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா வெர்ட்டிகோ பிரச்னைக்கு எந்த மருத்துவரைச் சந்திப்பது என்ற குழப்பம் பலரிடமும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பிரச்னைக்கு ஆலோசனை பெற காது, மூக்கு, தொண்டை மருத்துவர் (இ.என்.டி) அல்லது நரம்பியல் மருத்துவர் அல்லது பொது மருத்துவர், இவர்களில் யாரை வேண்டுமானாலும் அணுகலாம். சில நேரங்களில் இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை கொடுக்க ஒரு குழுவே சேர்ந்து இயங்க வேண்டியிருக்கலாம். வெர்ட்டிகோ பிரச்னை ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். காது தொடர்பான பிரச்னையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். நரம்பியல் பாதிப்புகள் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். பொதுவான காரணங்களால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். வெர்ட்டிகோ (Vertigo) முதலில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து பார்ப்பது அவசியம். உடலில் வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதை முழுமையாகப் பார்த்துத் தெரிந்துகொண்ட பிறகு, தேவையின் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரைச் சந்திப்பதுதான் சரியானதாக இருக்கும். இந்தப் பிரச்னைக்காக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகும்போது, சம்பந்தப்பட்ட நபரின் முழுமையான ஆரோக்கிய தகவல்கள் கேட்கப்படும். வெர்ட்டிகோ தொடர்பான முதல் அறிகுறி எப்போது ஏற்பட்டது, எப்படிப்பட்ட அறிகுறி என்பது மிக முக்கியமாகக் கேட்கப்படும். அந்த முதல் அறிகுறிதான் அந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது, எப்படிப்பட்ட சிகிச்சை தேவைப்படும் என்று முடிவுசெய்வதற்கான க்ளூவாக இருக்கும். Vertigo: குனிஞ்சு நிமிர்ந்தால் கிறுகிறுன்னு வருதா..? தீர்வு சொல்லும் இயற்கை மருத்துவர் பெரும்பாலான நபர்களுக்கும் இந்த முதல் அறிகுறி நினைவில் இருப்பதைப் பார்க்கலாம். தேவையான தகவல்களைத் திரட்டியதும், இ.என்.டி தொடர்பான மற்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதாவது, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதையடுத்து பிரத்யேகமான இ.என்.டி பரிசோதனைகள் செய்யப்படும். மருத்துவப் பரிசோதனைகள் கேட்கும் திறனைப் பரிசோதிக்கும் ஆடியோகிராம் சோதனை செய்யப்படும். கூடவே, காதின் உள்ளே உள்ள அழுத்தமும் அளவிடப்படும். அதற்கு 'இம்பீடன்ஸ்' என்று பெயர். அதையடுத்து உள்காது எப்படிச் செயல்படுகிறது என்பதற்கான டெஸ்ட் செய்யப்படும். இப்படிச் செய்யப்படுகிற ஒவ்வொரு பரிசோதனையுமே இந்தப் பிரச்னையை அணுகவும், சிகிச்சையைத் தொடரவும் முக்கியமானது. எல்லா டெஸ்ட் ரிசல்ட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, சிகிச்சை குறித்த முடிவுக்கு மருத்துவர் வருவார். அதற்கேற்ப, பிரச்னைக்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு சிகிச்சை ஆரம்பிக்கப்படும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். விரட்ட முடியாத வியாதி அல்ல 'வெர்ட்டிகோ'!
Non Veg: வாரத்துக்கு எத்தனை முறை சாப்பிடலாம்? ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி விளக்கம்
'அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடலாமா?' விளக்கமளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன். Non Veg அசைவ உணவுகள் நல்லவையா? அசைவம் சாப்பிடுபவர்களில் ஒரு வகையினர், அசைவ உணவு பிரியர்கள். மற்றொரு தரப்பினர், புரோட்டீன் தேவைக்காக அடிக்கடி அசைவம் சாப்பிடுபவர்கள். தானியங்களைக் காட்டிலும் சில அசைவ உணவுகளில் புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பது உண்மைதான். அதேசமயம், அசைவ உணவுகளில் இயற்கையாகவே கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது. இருப்பினும், இறைச்சியில் சுவைக்காக அதிக அளவிலான எண்ணெய் சேர்த்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகிவிட்டது. மேலும், உப்பு, காரம், மசாலா பொருள்களையும் அசைவ உணவில் அதிகமாகச் சேர்க்கின்றனர். இவ்வாறு, அசைவ உணவுகளை கொழுப்புச்சத்து நிறைந்த உணவாக உட்கொள்ளும் ஆபத்தான போக்கையே பலரும் கடைப்பிடிக்கின்றனர். அசைவ உணவு நல்லதுதான். ஆனால், அதை உடலுக்குக் கெடுதலான வகையில் மாற்றி உட்கொள்வதுதான் ஆபத்தானது. Non Veg எப்படிச் சமைக்கலாம்? மீனில் உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புச்சத்து அதிகமுள்ளது. எனவே, மீன் சிறந்த உணவாகிறது. நீர்ச்சத்து அதிகமுள்ள எந்த உணவாக இருந்தாலும், அதை எண்ணெயில் பொரிக்கும்போது, நீர்ச்சத்துக்கு இணையான அளவு அந்த உணவில் எண்ணெய் சேகரமாகும். நீரிலேயே வாழ்வதால், மீனின் உடலில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது. அதை எண்ணெயில் பொரிக்கும்போது, அதன் உடலிலுள்ள ஒவ்வொரு சொட்டு நீருக்கும் ஒவ்வொரு சொட்டு எண்ணெய் அதனுள் சேர்ந்துதான் சாப்பிட ஏதுவாக மீன் தயாராகும். இதனால், மீனிலுள்ள நல்ல கொழுப்புச்சத்து, உடலுக்குத் தீமை பயக்கும் கெட்ட கொழுப்பாக மாற வாய்ப்புள்ளது. எனவே, பொரித்த மீனை அடிக்கடி அல்லது அதிகளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மாறாக, குழம்பாகச் செய்து சாப்பிடுவது நல்லது. சிக்கன், மட்டன், மீன் போன்ற பெரும்பாலான அசைவ உணவுகளையும் வெளிநாட்டினர் 'க்ரில்டு' (Grilled) எனும் எண்ணெய் சேர்க்காத குக்கிங் முறையில் தயாரிக்கின்றனர். இதன்மூலம், இறைச்சியானது, அதிலுள்ள கொழுப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து மூலமாகவே வேக வைக்கப்படுவதால், அந்த உணவிலுள்ள சத்துகள் நமக்குச் சரியாகக் கிடைக்கின்றன. இதுபோன்று க்ரில்டு உணவாகச் சாப்பிடலாம். அல்லது, இறைச்சி உணவுகள் எதுவானாலும் குழம்பாகச் செய்து சாப்பிடலாம். Non Veg வாரத்தில் எத்தனை முறை இறைச்சி சாப்பிடலாம்? ஞாயிற்றுக்கிழமை என்பது பெரும்பாலான வீடுகளில் 'மீட் டே'வாக (Meat Day) மாறிவிடுகிறது. குறிப்பாக, அன்றைய தினம் பலரும் 2 - 3 வேளைக்கு அசைவம் சாப்பிடுவதுண்டு. இதுவும் தவறான பழக்கம்தான். ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தில் எந்த நாளாக இருந்தாலும், காலை அல்லது மதியத்தில் மட்டும் அசைவம் சாப்பிடலாம். இரவில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு, வாரத்துக்கு தலா 100 கிராம் வீதம் 1 - 3 தடவை மட்டும் அசைவம் சாப்பிடுவதே சரியானது. அசைவ உணவுகள் செரிமானமாக அதிக நேரமெடுக்கும். இதுபோன்ற கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை ஒரே நாளில் பலமுறை உட்கொள்வது மிகவும் தவறு. நீண்ட, ஆரோக்கிய வாழ்வுக்கு ஒவ்வொரு நாளும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான வீடுகளில் அசைவம் தவிர, காய்கறிகள், தானியங்கள் சேர்த்த உணவுகள் சமைக்கப்படுவதில்லை. ஒருநேர உணவில் அசைவம், மற்ற இரண்டு வேளைகளில் காய்கறிகள், தானியங்கள் என நம் உணவுமுறை இருக்க வேண்டும். meat with vegetables pic அசைவ உணவுகளைச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா? இறைச்சி உணவுகளைத் திரும்பத் திரும்பச் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாது. குறிப்பாக, புளி அதிகம் சேர்த்துச் சமைக்கப்பட்ட மீன் குழம்பை பலரும் நாள் கணக்கில் வைத்திருந்து, திரும்பத் திரும்ப சூடுபடுத்திச் சாப்பிடுவார்கள். இது தவறு. Health: பூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! அதிகபட்சமாக ஒருமுறை மட்டுமே மீன் குழம்பைச் சூடுபடுத்திச் சாப்பிடலாம். மீனில் நல்ல கொழுப்புச்சத்து உள்ளது. மீன் உணவை அதிக தடவைச் சூடுபடுத்தும்போது, உடலுக்குக் கெடுதலான கொழுப்பு அமிலங்களாக (Trans fatty acids) மாறும். Fridge: ஃப்ரிட்ஜில் உணவுப் பொருள்கள்... தவிர்க்க வேண்டிய தவறுகள்; கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்..! வயதானவர்கள் இறைச்சி உணவுகள் சாப்பிடலாமா? உடலுழைப்பு குறையும்போது, நாம் செலவிடுகிற ஆற்றலுக்கு ஏற்ப உணவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அது, இறைச்சி உணவுகளுக்கும் பொருந்தும். '80 வயதிலும் நன்றாக வேலை செய்கிறேன். உடலுழைப்புடன், செரிமான பாதிப்புகளும் இல்லை' என்பவர்கள், அசைவ உணவுகளை வாரத்தில் ஓரிரு முறை (குறைவான அளவில்) சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவாக இல்லாமல், குழம்பு மற்றும் சூப் செய்து சாப்பிடலாம் என்று முடித்தார் தாரிணி கிருஷ்ணன்.
ப்ரீ டயாபட்டீஸ் யாருக்கெல்லாம் வரலாம்? வந்துவிட்டால் என்ன செய்வது?
ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிற நிலையில், ப்ரீ டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம். சர்க்கரை நோய் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்றால் என்ன?' 'பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன் 100 முதல் 125 mg/dl என்ற அளவிலும், உணவு உட்கொண்ட பிறகு 140 முதல் 199 mg/dl என்ற அளவிலும் இருந்தால், அவர் ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ளார். அதாவது, எதிர்காலத்தில் சர்க் கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அதிகம் என்று அர்த்தம்.' 'ப்ரீ டயாபடீஸ் யாருக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது?' 'அதிக உடல் எடை இருப்பவர்கள், குறிப்பாக பி.எம்.ஐ மதிப்பில் 25க்கு மேல் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (Gestational Diabetes) வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி, அதிக கலோரி உணவு உண்ணுபவர்கள் (Sedentary type) ஆகியோருக்கு ப்ரீ டயாபடீஸ் வரலாம். இவர்கள் தாங்களாகவே முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.' டயாபட்டீஸ் 'ப்ரீ டயாபடீஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிவது?' 'சர்க்கரை நோய்க்கான சோதனை மூலம் அறியலாம். காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், உணவு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரம் கழித்தும் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். சிலர் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே, சர்க்கரை, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, பரிசோதனையின்போது, சர்க்கரையின் அளவு குறைவு எனக் காண்பிக்க விரும்புகிறார்கள். இது தவறு. இவர்களுக்காகவே, தற்போது ஹெச்.பி.ஏ.1சி (HbA1c) என்ற பரிசோதனை இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் நம் சராசரியான சர்க்கரையின் அளவு என்ன என்பதை அது தெளிவாக விளக்கிவிடும். ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் நமது உடலில் சர்க்கரையின் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படலாம்.' குழந்தைகளிடையே அதிகரிக்கும் டயபடீஸ்: ’சுகர் போர்ட்’ எச்சரிக்கை; பெற்றோர்களுக்கு நிபுணர் அட்வைஸ்! 'ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்ன?' ''ப்ரீ டயாபடீஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் தரப்படுகின்றன. ஆனால். அவற்றை எடுத்துக் கொள்ளாமல், 'உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைக் கட்டுப்பாடு’ போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம். மருத்துவர் மற்றும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெற்று உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட சிப்ஸ் முதலான கொழுப்புச் சத்துள்ள பொருட்கள், சர்க்கரை மட்டுமின்றி இனிப்புப் பதார்த்தம் உண்ணுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். மாவுச்சத்துள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தாமதமாக உணவு உட்கொள்வது, உணவைத் தவிர்ப்பது கட்டாயம் கூடாது. Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? இரவில் உறங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே மிதமான உணவைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு டீ/காபி 2 கப் அளவுக்கு மேல் அருந்தக் கூடாது. தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வாரத்துக்கு 5 நாட்களாவது முறையான நடைப்பயிற்சி அவசியம். பயிற்சியாளர், மருத்துவர் பரிந்துரை இன்றி கடினமான பளு தூக்கும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக ப்ரீ டயாபடீஸ் வந்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மனக்கவலையைத் தவிர்த்து உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், ப்ரீ டயாபடீஸிலிருந்து நார்மல் நிலைக்கு வரலாம். இதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.'
Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cider Vinegar தெரியுமா?
ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar, ACV) என்பது நொதித்த ஆப்பிள் சாற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வினிகர். எடைக்குறைப்பு, சரும பளபளப்பிற்காக பலரும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் இதில் உள்ளன. சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட கதாநாயகிகள்கூட ஆப்பிள் சிடர் வினிகரின் நன்மைகள் பேசியதை அடுத்து, இது இன்னமும் சமூக வலைத்தளங்களில் பிரபலங்களில் தொடங்கி சாமானியர் வரை பிரபலமாகிவிட்டது. ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்... ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar) ஆரோக்கியம் காக்கும்! ஆப்பிள் சிடர் வினிகரை உணவில் சேர்த்துக்கொள்வது உண்மையில் உடலுக்கு நல்லதா, யாரெல்லாம் இதை எடுத்துக்கொள்ளலாம்? ஆப்பிள் சிடர் வினிகரைப் பயன்படுத்துவதில் உண்மையில் என்ன பயன்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்: ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்து முகம் கழுவி வந்தால் சருமம் பளபளவென்று பொலிவடையும். (ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது) Beauty: இரவு நேர சருமப் பராமரிப்பு டிப்ஸ்! காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால், கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். (ஆனால், இதை 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்) Apple Cider Vinegar ஆப்பிள் சிடர் வினிகரில் அதிகப்படியான அமிலத்தன்மை உள்ளதால் இதை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. பழங்கள் அல்லது காய்கறி சாலட்டுடன் கலந்து சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 100 மி.லி தண்ணீரில் நன்றாகக் கலந்து அருந்தலாம். நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. Beauty: சருமம் பளபளப்பா இருக்க வீட்டுக்குள்ள ஒரு பியூட்டி பார்லர்!
UPSC: `இறுதியில் என்னையே நான் தொலைத்துவிட்டேன்!' - யு.பி.எஸ்.சி தயாரிப்பு குறித்து இளம்பெண் எமோஷனல்
யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்குத் தயாராகும் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களின் உயரிய இலகுக்காக, பல்வேறு தியாகங்களைச் செய்கின்றனர். சவால்கள் நிறைந்த இந்தப் பாதையில், ஒரு தேர்வரின் மனமும் வாழ்க்கையும் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்படுகின்றன என்பதை, மான்வி ஸ்ரீவஸ்தவா என்ற இளம் பெண்ணின் உணர்வுப்பூர்வமான காணொளி சமீபத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. ஒரு மகத்தான லட்சியத்துக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எழும் ஒரு கேள்வியாகவே அவருடைய ஆதங்கம் இன்று பார்க்கப்படுகிறது! யு.பி.எஸ்.சி தேர்வைத் தன் இலக்காகக் கொண்ட அவர், அந்தப் பயணத்தில் தான் சந்தித்த சிரமங்களைப் பதிவு செய்துள்ளார். எனது 20-களை இதற்காகவே நான் கொடுத்துவிட்டேன். பிறந்தநாள், நண்பர்கள், உறவுகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று மான்வி கூறுகிறார். தேர்வு இந்தக் கடுமையான ஒழுக்கமும், வெளி உலகத்துடனான தொடர்புகளை முழுவதுமாகத் துண்டித்துக் கொண்ட தனிமையும், ஒரு கட்டத்தில் அவரது வாழ்க்கையின் மீதே ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. இலக்கை அடைவதற்காகத் தன்னை வருத்திக்கொண்டபோது, அவர் படிப்படியாகத் தன்னுடைய இயல்பான மகிழ்ச்சி மற்றும் அடையாளத்தையே இழந்துவிட்டதாகச் சொல்கிறார். தேர்வுப் பாதை முடிவுக்கு வந்தபோதுதான், மான்வி ஒரு பெரிய வெற்றிடத்தை உணர்ந்தார். எல்லாம் முடிந்த பிறகு, நான் யார் என்றே எனக்குத் தெரியவில்லை. யு.பி.எஸ்.சியைத் துரத்துவதற்கும், தூக்கத்தை இழந்ததற்கும் இடையில், நான் எப்போதோ என்னையே தொலைத்துவிட்டேன் என்று அவர் மன வேதனையுடன் பேசுகிறார். அவருடைய லேப்டாப் திரையில் தன் ரெஸ்யூமை எழுத முற்படும்போது, அது தோல்விகளைப் பற்றி மட்டுமே அறிந்த ஒருவருடையதைப் போல் தோன்றுவதாகவும், 'வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்' என்று தெரியாதவராக உணருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தன்னுடைய இந்தக் கடுமையான அனுபவத்திலிருந்து, மான்வி மற்ற தேர்வர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை வைக்கிறார். தான் அனுபவித்த தனிமையின் வலியைத் தாங்களும் அனுபவிக்காமல், மற்ற தேர்வர்கள் தங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். View this post on Instagram A post shared by Manvi Srivastava (@discipline.over.motivation.now) நீங்கள் உங்கள் கனவுகளுக்காகத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால், தயவுசெய்து உங்களைத் தொலைத்து விடாதீர்கள். எல்லாம் முடிந்த பிறகு, உங்களுக்கு நீங்களே தேவைப்படுவீர்கள். உங்கள் மன ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்பதே அவருடைய அழுத்தமான செய்தியாகும். இலக்கை அடைவதற்கான பாதையில், மனத் தெளிவுக்கும், சுயமகிழ்ச்சிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்.
Doctor Vikatan: திடீரென பறிபோன தூக்கம்; சரியாகுமா, தொடர்கதையாக மாறுமா?
Doctor Vikatan: நான் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த 2 மாதங்களாக இரவில் தூக்கமே இல்லை. ஆழ்ந்த உறக்கம் என்பதே கனவாகிவிட்டது. தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டாலும், மீண்டும் தூக்கத்துக்குள் போக முடியாமல், விடிய விடிய விழித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முன் இப்படி இருந்ததில்லை. இந்தப் பிரச்னை சரியாகிவிடுமா அல்லது இனி இதுவே தொடர்கதையாகிவிடுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் நீண்டகால தூக்கமின்மை என்பது சிகிச்சை தேவைப்படுகிற விஷயம். ஆனால், தற்காலிக தூக்கமின்மை அப்படியல்ல. சின்னச் சின்ன டெக்னிக்ஸை பின்பற்றினாலே இதிலிருந்து வெளியே வரலாம். திடீரென ஒருநாள், இரண்டு நாள் அல்லது அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு தூக்கமின்மை ஏற்படுவதை 'ஷார்ட் டேர்ம் இன்சோம்னியா' (Short-term insomnia) என்கிறோம். மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தூக்கமில்லாமல் இருக்கும் பிரச்னையைப் போன்றதல்ல இது. தற்காலிக தூக்கமின்மை பிரச்னைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். இரவு நேரத்தில் ஸ்ட்ரெஸ் இருந்தால் தூக்கம் வராது. உடலும் உள்ளமும் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் நடக்கவுள்ள திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள், அடுத்தடுத்த நாள்களில் அட்டெண்ட் செய்யவிருக்கிற இன்டர்வியூ, தேர்வு, போட்டிகள், சுற்றுலா போன்றவற்றை பற்றி இரவு நேரங்களில் யோசிப்பார்கள். மனது பரபரப்பாக எதையேனும் யோசிக்கும்போதும், சிந்தனைகள் (பாசிட்டிவ்வாகவோ, நெகட்டிவ்வாகவோ) ஓடிக்கொண்டிருக்கும்போதும் தூக்கம் பாதிக்கப்படலாம். இரவு தூக்கம் வழக்கமாகத் தூங்கும் அறையை, இடத்தை மாற்றிவிட்டு, வேறோர் இடத்தில் தூங்க முயற்சிசெய்யும்போதும் உடல் அந்தச் சூழலுக்குப் பழகாததால் தூக்கம் தடைப்படலாம். பெண்களுக்கு மெனோபாஸ், ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ், ஹைப்பர் தைராய்டிசம், கர்ப்பகாலம் உள்ளிட்ட நிலைகளில் உடலில் அடிக்கடி ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இவையும் தற்காலிக தூக்கமின்மையை ஏற்படுத்தலாம். மாலை 3-4 மணிக்கு மேல் காபி, டீ குடிப்பதாலும் ஆல்கஹால் கலந்த பானங்களைக் குடிப்பதாலும் தூக்கம் தடைப்படலாம். என்றோ ஒருநாள் வழக்கத்தைவிட அதிக அளவில் காபி, டீ குடிக்க வேண்டியிருக்கலாம். அந்த நாள்களிலும் தூக்கம் தடைப்படும். Doctor Vikatan: கனவுகளே இல்லாத தூக்கம் வரமா, சாபமா? மிதமான உடற்பயிற்சி என்பது உறக்கத்துக்கு உத்தரவாதம் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிலர் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக உடற்பயிற்சி செய்வார்கள். அப்படிச் செய்வது தூக்கத்தை பாதிக்கும். இரவு நேரத்தில் பரபரப்பான கேம்ஸ் விளையாடுவது, திகில் காட்சிகள் நிறைந்த டி.வி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் பார்ப்பதும் அன்றைய நாளின் தூக்கத்தைக் கெடுக்கும். அடுத்த இரண்டு நாள்களுக்குக்கூட அந்த பாதிப்பு தொடரலாம். பகல் மற்றும் இரவு ஷிஃப்ட்டில் மாற்றி மாற்றி வேலை பார்ப்பவர்களுக்கு, ஷிஃப்ட் மாறும் நாள்களில் தூக்கம் பாதிக்கப்படலாம். 'ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம்' ( Restless legs syndrome ) என்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, இரவு முழுவதும் கால்களில் ஒருவித குடைச்சலும் வலியும் அசௌகர்யமும் இருக்கும். கால்களை மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். இது அவர்களது தூக்கத்தை பாதிக்கும். படுக்கையிலேயே புரண்டு தூக்கம் தற்காலிகத் தூக்கமின்மை குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. அதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. தூக்கமில்லையே என்று கவலைப்பட ஆரம்பித்தால், அது 'க்ரானிக் இன்சோம்னியா' (Chronic Insomnia) எனப்படும் தீவிர தூக்கமின்மை பாதிப்புக்கு காரணமாகலாம். தூக்கமில்லாத இரவுகளில், அது பற்றியே யோசித்துக்கொண்டு, படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்க வேண்டாம். படுக்கையிலிருந்து எழுந்து விடுங்கள். பெட்ரூமிலிருந்து வெளியே வந்து விடுங்கள். செய்யாமல் விடப்பட்ட சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம். காலையில் சூரிய உதயத்தின்போது அந்த வெயில் உடலில்படும்படி சில நிமிடங்கள் இருக்கலாம். அதேபோல மாலை வேளையில், சூரிய அஸ்தமனத்தின் போதான வெளிச்சமும் உடலில் படட்டும். கண்கள் மூலம் சூரிய ஒளியானது மூளையை எட்ட அனுமதிக்கும்போது, பகல் வேளையில் உடலும் மூளையும் எனர்ஜியோடு இருக்கும். மாலை வேளைக்குப் பிறகு உடலும், மனதும் அமைதியடையும். இரவில் ஆழ்ந்த உறக்கம் உங்களைத் தழுவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வது எப்படி?
பிரண்டைக்கீரை முதல் பசலைக்கீரை வரை - மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் தகவல்கள்!
''கீரை, பசிக்கான சாப்பாடு மட்டும் இல்லை. இது வைட்டமின் சத்துக்களைத் தருகிற டானிக்'' என்கிற சித்த மருத்துவர் கு. சிவராமன், இங்கே சில கீரைகள் நமக்கு தருகிற ஆரோக்கியத்தைப் பற்றி சொல்கிறார். கீரைகளின் மருத்துவ பலன்கள்! தூதுவளை வீசிங் இருக்கிறவங்களுக்கான கீரை இது. இதை பருப்புக் கடைசலாக, ரசமாக, துவையலாக எப்படி வேணாலும் சாப்பிடலாம். முள்ளை நீக்கிட்டு எல்லாக் கீரையும் மாதிரி சமைக்க வேண்டியதுதான். கரிசலாங்கண்ணி நெஞ்சுல சளி ரொம்ப அதிகமா இருந்து, 'கள் கள்’ சத்தத்தோட இருமலும் சேர்ந்து வந்தா, கரிசலாங்கண்ணிக் கீரையை சாறு எடுத்து, சம பங்கா நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, நீர் வத்திப்போறவரைக்கும் விட்டு எடுத்துக்கணும். தொடர்ந்து அஞ்சு நாளைக்கு ரெண்டு வேளை, இந்தக் கீரைத்தைலத்தை ஒரு ஸ்பூன் கொடுத்தாலே, சளி போயிடும். முடி கறுப்பா வளர உதவுறதும், கல்லீரலைப் பாதுகாக்கிறதும் இந்தக் கீரைதான். பிரண்டைக்கீரை பிரண்டைக்கீரை பிரண்டைக் கீரையை உப்பு, புளி, வர மிளகாய் சேர்த்துத் துவையலா அரைச்சு சாப்பிட்டா, எலும்பு நல்ல உறுதியா இருக்கும். வயித்துல வர்ற குடற்புண்ணை ஆத்திடும். பிள்ளைகளுக்கு வயிறு மந்தமா இருந்தா, இந்த கீரை சமைச்சுக் குடுக்கலாம். நல்லா பசியைத் தூண்ட வைக்கும். பசலைக்கீரை 'புள்ளத்தாச்சிக்குன்னே இருக்கு பசலைக் கீரை. லேசா கால் வீக்கம் இருந்தா, பருப்பு சேர்த்து சமைச்சுக் குடுக்கலாம். வீக்கம் போயிடும். பசலை மாதிரியே, சிறுநீரகக் கல்லைப் போக்க, காசினிக் கீரை இருக்கு. இந்தக் கீரையை சமைச்சு சாப்பிட்டா, சிறுநீரகக் கல்லும் படிப்படியா கரைஞ்சிடும். பசலைக்கீரை அகத்திக்கீரை அகத்திக் கீரையை மாசத்துக்கு ரெண்டு முறை சாப்பிடுறது அக உறுப்புகளுக்கு நல்லது. அகச் சூட்டை குறைக்கிறதாலதான், இதுக்கு ’அகத்தி’னு பேர் வந்ததாம். ஆனா, சித்த மருந்து எடுக்கறப்ப, இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது.' குப்பைக் கீரை கடைஞ்சா ஆசையா சாப்பிடும்! - மனோரமா பற்றி பார்வதி சிகப்பு பொன்னாங்கண்ணி இந்தக் கீரையை சாப்பிடறவங்க உடம்பு தகதகனு பொன் மாதிரி மின்னும். 'போன கண்ணும் திரும்புமாம் பொன்னாங்கண்ணியால’னு ஒரு வழக்கு மொழியும் இருக்கு. முருங்கைக் கீரை Health: தெரியாத கீரை; ஆனால், சாப்பிட வேண்டிய கீரை அது... ஏன் தெரியுமா? வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி கீரை, ஆரோக்கியமில்லாத, மந்தமான பிள்ளைக்கு முருங்கைக் கீரை, உடல்சூடுக்கு தண்டுக்கீரை, அஜீரணத்துக்கு கொத்துமல்லி/புதினா கீரை, மூட்டுவலிக்கு முடக்கறுத்தான், சர்க்கரை நோய்க்கு வெந்தயக் கீரைனு எல்லாக் கீரையுமே உணவுக்கு பக்கபலமாவும், நோய் வராமல் தடுக்கிற மருந்தாவும் இருக்கு. குழந்தைகளுக்கு எப்படித் தருவது? ரெண்டு வயசு வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு நார் உள்ள கீரைகளைக் கொடுக்க கூடாது. செரிமானத்துக்கு நல்லது இல்லை. சிறு கீரை, அரைக்கீரையை நல்லா கடைஞ்சு சாதத்துல பிசைஞ்சு குடுக்கலாம். கீரைகளை பொரியைல் செய்றதை விட, கடைசல், பாசிப்பருப்பு போட்ட கூட்டு செஞ்சு சாப்பிடறது நல்லது. அகத்திக் கீரையை நல்லா வேக வைக்கணும். ஆனா, முருங்கைக் கீரையை குழைவா வேக வைக்கக் கூடாது. கீரையை நோய் வந்தவங்களும் சாப்பிடலாமா? சிறுநீரகச் செயலிழப்பு இருக்கிறவங்க மட்டும், கீரையை நிறைய தண்ணீர் சேர்த்து வேகவைச்சு, வடிச்சு அந்த தண்ணீரைக் கொட்டிட்டு, அதுக்கப்புறம் அந்தக் கீரையை சமைச்சு சாப்பிடலாம். அதுல இருக்கிற உப்புக்கள் போயிடும். கீரையோட தயிர் சேர்த்தோ, மீன் சேர்த்தோ சாப்பிடக் கூடாது. ராத்திரியில் கட்டாயம் கீரை சாப்பிடக் கூடாதுனு உணவு விதியே இருக்கு.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... உங்களின் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்யுங்கள்! #HerSafety
கோயம்புத்தூரில் அண்மையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வது, நம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சமூக அவலத்திற்கு நிரந்தரத் தீர்வு காண, அரசின் நடவடிக்கை மட்டும் போதாது; ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனை மாற்றமும் அவசியம். இந்தச் சூழலில், விகடன் அதன் வாசகர்களின் குரலை ஆவணப்படுத்தவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீர்வுகளை நோக்கி நகர்த்தவும் முடிவு செய்துள்ளது. HerSafety உங்களின் பார்வை என்ன? வாசகர்களாகிய நீங்கள், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து உங்கள் ஆழமான பார்வையைப் பதிவு செய்யலாம். உங்கள் கட்டுரைகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பிரிவில் அமையலாம்: சமூகப் பார்வை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? சட்டம் மற்றும் சமூக நீதி அமைப்புகளிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? தீர்வு: இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க பள்ளி, கல்லூரி, குடும்பம் மற்றும் அரசு மட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் என்னென்ன? தனிப்பட்ட அனுபவம் (பெயர் வெளியிடாமல்): உங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அல்லது தொந்தரவு குறித்த அனுபவங்கள் (பெயர், இடம் போன்ற விவரங்கள் பாதுகாக்கப்படும்). எதிர்ப்புக் குரல்: ஆண்களின் மனநிலையில் வர வேண்டிய மாற்றங்கள், பெண்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்துக்கள். நினைவில் கொள்க: ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. `இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?
Doctor Vikatan: வயதான என் அம்மாவுக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் நார்மலாகவே இருக்கிறது. இந்த வீக்கத்துக்கு வேறு என்ன காரணமாக இருக்கும். தானாகச் சரியாகிவிடும் என விடலாமா, சிகிச்சை எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி வயதானவர்களுக்கு கால்களில் ஏற்படும் திடீர் வீக்கத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கால்களில் ஏற்படும் வீக்கம் இரண்டு வகையாகப் பார்க்கப்படும். ஒன்று வலியோடு கூடிய வீக்கம், இன்னொன்று வலியில்லாத வீக்கம். திடீரென அடிபடுதல், காயம் ஏற்படுதல், தசை நார் கிழிதல் போன்ற காரணங்களால் ஏற்படும் வீக்கத்தில் வலியும் இருக்கும். இதுபோன்ற வலி மற்றும் வீக்கத்துக்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். அதிலும், வயதானவர்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பு உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். லேசாக கால் பிரண்டால்கூட சவ்வு கிழியலாம். எலும்புகளில் லேசான விரிசல்கூட ஏற்படலாம். உடனடியாக சிகிச்சை கொடுக்கப்படாத பட்சத்தில், அது பெரிய பிரச்னையாக மாறக்கூடும். அடுத்தது வலியில்லாத வீக்கம். இதிலும் இரண்டு வகை உண்டு. ரத்தக் குழாய்களில் உள்ள வால்வுகள் பலவீனமாவதால், அந்த இடத்தில் ரத்தம் தேங்கிவிடும். ரத்தமானது பம்ப் செய்யப்பட்டு, கால்களிலிருந்து இதயத்துக்கு வர வேண்டும். அந்த வால்வு பலவீனமாகியிருந்தால், அசுத்தமான ரத்தமும் நீரும் கால்களில் கோத்துக்கொள்ளும். இந்தப் பிரச்னை பல நாள்களாகத் தொடர்ந்தால், சருமம் பாதிக்கப்படலாம். அந்தப் பகுதி கருமையாக மாறலாம். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். நாள்கள் செல்லச் செல்ல வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இதற்கும் சிகிச்சை மிக அவசியம். கால்களில் வீக்கம் | Swelling in the legs வலியில்லாத வீக்கத்துக்கு இன்னொரு காரணம், இதயம் அல்லது சிறுநீரகங்களில் ஏற்பட்ட பாதிப்பாகவும் இருக்கலாம். ஏற்கெனவே, இதய பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு இதயநலனை பரிசோதித்துப் பார்க்க வேண்டியது மிக அவசியம். அதேபோல சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் இப்படி வலியில்லாத வீக்கம் ஏற்படலாம். சிறுநீரக பாதிப்பின் காரணமாக நீரை வெளியேற்ற முடியாமல், கால்களில் வீக்கமாக வெளிப்படலாம். இந்த வீக்கமானது கால்களில்தான் வர வேண்டும் என்றில்லை, வயிற்றைச் சுற்றியோ, கண்களைச் சுற்றியோகூட வரலாம். இதுவும் தாமதமின்றி உடனடியாக சிகிச்சை கொடுக்கப்பட வேண்டியது. எனவே, கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்து அதற்கான சிகிச்சை வேறுபடும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?
சிகரெட்: புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது. புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும். சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னையைச் சேர்ந்த இதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம். புகை பிடிப்பதை நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட 20-வது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. * புகை பிடிப்பதைவிட்ட 8 மணி நேரத்தில், ரத்தத்தில் உள்ள நிக்கோடின் மற்றும் கார்பன் மோனாக்ஸைடு அளவு பாதியாக குறைந்துவிடும். ஆக்ஸிஜன் அளவு நார்மலுக்கு வந்து விடும். * 24 மணி நேரத்தில் ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு முற்றிலும் வெளியேறி விடும். புகை பிடிப்பதை நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? * 48 மணி நேரத்தில் உடலில் உள்ள நிக்கோடின் முற்றிலும் வெளியேறி விடும். * 72 மணி நேரத்தில் சுவாசம் சீராகி விடும். உடலில் ஆற்றல் அதிகரித்துவிடும். * 2 முதல் 12 வாரங்களில் ரத்த ஓட்டம் மேம்பட்டிருக்கும். Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? * ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. அகர்பத்தி புகை: மூக்குக்கு வாசனையா, நுரையீரலுக்கு வேதனையா? * இப்படியே தொடர்ந்தால், புகை பழக்கம் இருக்கிற ஆண், பெண் இருவருக்குமே குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது'' என்கிறார் டாக்டர் ஆர்.ரவிக்குமார். புகை பிடிப்பதை நிறுத்த முடிவெடுத்து விட்டீர்கள்தானே?
Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?
Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில மாதங்களாக கழுத்து வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் போட்டும் பலன் இல்லை. இந்நிலையில், தலையணை வைத்துப் படுப்பதுதான் கழுத்துவலிக்குக் காரணம் என்றும், அதைத் தவிர்த்துவிட்டு வெறுமனே படுக்கும்படியும் சொல்கிறார் என் நண்பர். இது உண்மையா, தலையணையைத் தவிர்த்தால் கழுத்துவலி சரியாகிவிடுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு. எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு கழுத்து வலி என்றதுமே, தலையணை வைக்காமல் படுத்தால் சரியாகிவிடும் என்கிற கருத்து பலரிடமும் உள்ளது. தலையணை இல்லாமல் படுத்தால் உங்களுக்கு வலி சரியாகிறது என்றால் படுக்கலாம். ஆனால், கழுத்துவலி உள்ள எல்லோருக்கும் இது தீர்வாக அமையும் என்று சொல்ல முடியாது. பல நாள்களாக கழுத்துவலி தொடர்வதாகச் சொல்லும் நீங்கள், அதற்கான மருத்துவரைப் பார்த்து காரணம் கேட்டீர்களா, சிகிச்சையை எடுத்தீர்களா என்று தெரியவில்லை. காரணம் தெரிந்து சரியான சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. நீங்களாகவே பெயின் கில்லர் வாங்கிப் பயன்படுத்துவது சரியல்ல. நீங்கள் பயன்படுத்தும் தலையணை கடினமாக இல்லாமல் மென்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் இலவம்பஞ்சு தலையணை மிகவும் ஏற்றது. ஃபோம் (Foam) தலையணைகளும் உபயோகிக்கலாம். குறிப்பாக, மெமரி ஃபோம் (Memory Foam) தலையணைகளை வைத்துப் படுத்துக்கொள்ளலாம். மெமரி ஃபோம் வகைத் தலையணை மெமரி ஃபோம் வகைத் தலையணையில் தலை வைத்துப் படுக்கும்போது ஃபோம் அமுங்கும். அதிலிருந்து தலையை எடுத்ததும், மீண்டும் தலையணை பழைய நிலைக்குத் திரும்பிவிடும். சாதாரண ஃபோம் தலையணையைப் பயன்படுத்தும்போது நாளாக, ஆக, அது பழைய நிலைக்குத் திரும்பாது. கழுத்து வலி உள்ளவர்களுக்கு இந்த வகை தலையணையோ, மெத்தையோ ஏற்றவை அல்ல. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் மாதுளம் பழ எண்ணெய்! வீட்டிலேயே தயாரிக்கலாம்!
‘‘தன் பூ, கனி, உள்ளிருக்கும் முத்துக்கள் என்று அனைத்திலும் அழகு மிளிரும் மாதுளையை ஓர் அழகுராணி’’ எனும் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, மாதுளையை கொண்டு செய்யப்படும் அழகுக் குறிப்புகளை இங்கே வழங்குகிறார். மாதுளம் எண்ணெய் தயாரிக்கலாமா? மாதுளம் எண்ணெய் தயாரிக்கலாமா? ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு மாதுளம்பழத்தை நான்காக நறுக்கிப் போடவும். பாத்திரத்தில் கைகளை அமிழ்த்தி மாதுளம் முத்துக்களைப் பிரிக்கவும். மாதுளம் தோல்களை வெளியே எடுத்துவிடவும். இப்போது பாத்திரத்தின் அடிப்பகுதியில் நல்ல மாதுளம் முத்துக்கள் இறங்கியிருக்க, பூச்சி அரித்த, சொத்தை மற்றும் அழுகிய மாதுளம் முத்துக்கள் மேலே மிதக்கும். தண்ணீரோடு அவற்றை வடித்துவிடவும். அடிப்பகுதியில் தங்கியிருக்கும் நல்ல மாதுளம் முத்துக்களை ஒரு காட்டன் துணியில் பரப்பி, ஃபேன் காற்றில் உலர்த்தவும். இதனை ஒரு கனமான கண்ணாடி பாட்டிலில் சேமித்துக்கொள்ளவும். மற்ற எண்ணெயைப்போல் பிசுபிசுப்பு இருக்காது! 50 மில்லி பாதாம் எண்ணெயைக் காய்ச்சி, பாட்டிலில் உள்ள மாதுளம் முத்துக்களின் மீது சூடாக ஊற்றவும். எண்ணெய் ஆறியவுடன் பாட்டிலை நன்கு மூடி, வெயில்படாத இருட்டு அறையில் வைக்கவும். 10, 15 நாட்களுக்குப் பிறகு பாட்டிலில் மாதுளம் எண்ணெய் தயாராகியிருக்கும். ஒரு மாதுளம்பழத்தின் முத்துக்கள் 100 கிராம் எனில், 25 மில்லி அளவில் எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயில் மற்ற எண்ணெயைப்போல் பிசுபிசுப்பு இருக்காது. உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் மாதுளம் பழ எண்ணெய் சருமப் பொலிவுக்கு பயன்படுத்தும் முறை! * மாதுளம் எண்ணெயை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவ, வறண்ட சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கும். * பொதுவாக, எண்ணெய்ப் பிசுக்கு சருமம் உடையவர்களும் பருக்கள் உடையவர்களும், முகத்தில் எண்ணெய் தடவக்கூடாது. ஆனால், மாதுளம் எண்ணெய், பிசுக்குத்தன்மை இல்லாத லேசான எண்ணெய் என்பதால் பயன்படுத்தலாம். பருக்கள் உள்ளவர்கள் சிறிது பஞ்சில் மாதுளம் எண்ணெயைத் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்து, 10, 15 நிமிடங்களில் முகத்தைக் கழுவவும். இதனால் பருக்கள் தோன்றுவது மட்டுப்படுத்தப்படும். * மாதுளம் எண்ணெயை சுடவைத்து, மிதமான சூட்டில் தலைக்குத் தடவி மசாஜ் செய்து, வெந்நீரில் முக்கி எடுத்த டவலால் தலையைச் சுற்றி நீராவி கொடுக்கவும். அரை மணி நேரம் கழித்து டவலை எடுத்துவிட்டு, பகல் முழுக்க அந்த எண்ணெயைத் தலையில் ஊறவிட்டு பிறகு குளிக்கவும். இது முடியின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்யும். மாதுளை எண்ணெய் கூந்தல் மசாஜ் *மாதுளம் எண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்துகொண்டு அதில் பஞ்சை நனைத்து, தினசரி கண் இமைகளின் மேல் மற்றும் கண்களைச் சுற்றியும் தடவிவந்தால் கண்கள் பளிச்சிடும்'' என்றவர், மாதுளம் சாற்றின் பலன்களையும் விவரித்தார். மாதுளம் சாற்றின் பலன்கள்! * ஒரு ஸ்பூன் மாதுளம் சாற்றுடன் கால் ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் `பேக்' போட்டு 10 நிமிடங்கள் கழித்து தண்ணீர் தொட்டு தேய்த்துக் கழுவவும். * முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் இதை, தினசரி முகத்தை சுத்தப்படுத்த க்ளென்சராகப் பயன்படுத்தலாம். * மாதுளம் சாறு ஒரு டீஸ்பூன், புதினா சாறு அரை டீஸ்பூன், பால் பவுடர் ஒரு டீஸ்பூன் இவற்றை பேஸ்ட் போல குழைத்து பருக் களினால் ஏற்பட்ட வடுக்களின் மேல் தினசரி ஒரு முறை தடவிவர, வடுக்கள் மறையும். மாதுளம் சாற்றின் பலன்கள்! * மாதுளம்பழ சாறு தயாரித்தவுடன் மிச்சம் இருக்கும் சக்கையை வீணாக்காமல் முகத்தில் தடவினால், வெயிலினால் நெற்றி, மூக்கு கன்னங்களில் ஏற்படும் நாள்பட்ட கருந்திட்டுக்கள் மறையும். * மாதுளம் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி பொடி செய்துகொள்ளவும். வாரம் ஒருமுறை, இந்தப் பொடியைத் தண்ணீரில் குழைத்து முகம் மட்டுமில்லாமல் உடல் முழுக்க தேய்த்துக் குளித்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! * உதடு, பாதம், உள்ளங்கை போன்றவற்றில் வெடிப்பு ஏற்பட்டால், மாதுளம் சாறு ஒரு ஸ்பூன், இரண்டு பாதாம், ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை, ஒரு டீஸ்பூன் கசகசா அனைத்தையும் சேர்த்து அரைத்து, தினசரி இரவு அந்த வெடிப்புகளில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனால் வெடிப்புகள் மறைந்து சருமம் மிருதுவாகும். * நாள் முழுவதும் கணினியில் வேலைபார்ப்பதால் ஏற்படும் கண் வறட்சியில் இருந்து தப்பிக்க, மாதுளம் சாறு 2 ஸ்பூன், தண்ணீர் 2 ஸ்பூன் கலந்து வைத்துக்கொண்டு, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பஞ்சை அதில் நனைத்து மூடிய கண்களின் மேல் ஒத்தடம்போல கொடுக்கவும். * தலையில் ஆரம்பகட்டத்தில் இருக்கும் வழுக்கையைத் தடுக்க, உலர்ந்த மாதுளம் தோல் 100 கிராம், அதிமதுரம் 50 கிராம், உலர்ந்த ஒற்றைச் செம்பருத்தி 50 கிராம் இவை அனைத்தையும் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொண்டு, இந்தப் பொடியை தலைக்குத் தேய்த்துக் குளித்து வரவும். Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்!
Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?
Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. பீரியட்ஸ் தள்ளிப்போகும் போதெல்லாம் பிரெகன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் காட்ட வாய்ப்பிருக்கிறதா? வேறு எந்த விஷயங்களை எல்லாம் இதில் கவனிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் கர்ப்பத்தை உறுதிசெய்ய சிறுநீர்ப் பரிசோதனைதான் செய்யப்படும். அந்தப் பரிசோதனையில், ரத்தத்தில் ஹெச்.சி.ஜி (Human Chorionic Gonadotropin) என்ற ஹார்மோன் இருக்கிறதா, இல்லையா என்பதைக் காட்டிக் கொடுக்கும். ஆனால், அதில் ஹெச்.சி.ஜி அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் காட்டாது. கர்ப்பம் தரித்ததும் உடலில் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் உருவாகும். அதாவது கரு பதியத் தொடங்கிய பிறகு, இது ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு நிகழ்ந்த 6 முதல் 10 நாள்கள் கழித்து, கர்ப்பம் தரித்திருந்தால் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் உற்பத்தியாவது நடக்கும். உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது 28 நாள்களுக்கொரு முறை சரியாக வருவதாக வைத்துக்கொள்வோம். கடந்த மாதம் 14-ம் தேதி பீரியட்ஸ் வந்திருந்து, அடுத்த மாதம் அதே தேதியில் வராவிட்டால், 15-ம் தேதியன்று நீங்கள் டெஸ்ட் செய்து பார்க்கலாம். அதற்கு முன்பு டெஸ்ட் செய்து பார்ப்பதில் அர்த்தமில்லை. கர்ப்பம் எப்போதுமே காலையில் வெளியேற்றும் முதல் சிறுநீரை எடுத்துதான் இந்த டெஸ்ட்டை செய்யச் சொல்வோம். அந்தச் சிறுநீர் அடர்த்தியாக இருக்கும். அதில் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் அளவு அதிகமாக இருக்கும். கர்ப்பம் தரித்திருந்தால், இந்த டெஸ்ட்டில் 97 முதல் 99 சதவிகிதம் துல்லியமாகச் சொல்லிவிடும். அதை 'சென்சிட்டிவிட்டி' (Sensitivity) என்று சொல்வோம். அடுத்து ஸ்பெசிஃபிசிட்டி (Specificity). அதாவது டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று வந்தால், அது கர்ப்பம் தரித்திருப்பதை 99 சதவிகிதம் உறுதிசெய்கிற விஷயத்தை ஸ்பெசிஃபிசிட்டி என்று சொல்வோம். அடுத்து 'ஃபால்ஸ் நெகட்டிவ்' (False negative) என்றொரு விஷயம் குறிப்பிடுவோம். அதாவது கர்ப்பம் இருக்கிறது, ஆனால் இல்லை... என்பதைக் குறிப்பது. இப்படிக்கூட நடக்குமா என்றால், அதற்கு 1 முதல் 2 சதவிகித வாய்ப்பு இருக்கிறது. ரத்தப் பரிசோதனை ரொம்பவும் சீக்கிரமே டெஸ்ட் செய்யும்போதோ, முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்களுக்கோ, நிறைய தண்ணீர் குடித்ததன் விளைவாக, சிறுநீர் ரொம்பவும் நீர்த்திருந்தாலோ, டெஸ்ட் செய்யத் தெரியாவிட்டாலோ, இப்படி நடக்கலாம். அல்லது பிரெக்னன்சி டெஸ்ட் கிட்டில் ஏதேனும் கோளாறு இருப்பதும் காரணமாகலாம். அதே போல 'ஃபால்ஸ் பாசிட்டிவ்' (False positive) என்றும் காட்டலாம். அதாவது கர்ப்பம் இல்லை, ஆனால் இருப்பதாகக் காட்டும். இதற்கும் கிட் பிரச்னையால் நிகழலாம். குழந்தையின்மை சிகிச்சையில் இருப்போர் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவாக இருக்கலாம். கருச்சிதைவின் காரணமாக இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ்... ஆனாலும் ப்ளீடிங்... என்ன காரணம்?
தண்ணீரை முறைப்படி காய்ச்சிக் குடிப்பது எப்படி?
மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது. வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது. முறைப்படி தண்ணீரை காய்ச்சிக் குடிப்பது எப்படி? மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக் குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச்சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நீரின் தன்மை பற்றி சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம். Can water: கேன் வாட்டர் குடிச்சா ஆண்மை குறையுமா..? | காமத்துக்கு மரியாதை - 180 கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம்! 'நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம். அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்களால் மாசுபட்டுள்ளது. நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. முறையான கொதிக்கவைத்தல் தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்’ பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள் இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளே விடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது' என்கிறார் டாக்டர் எழிலன். சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத்துவர் விளக்கம்!
Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஆப்பிளை தோலுடன் கொடுக்கலாமா? அதனால் பாதிப்பு வருமா?
Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுக்கும்போது தோலுடன் கொடுப்பது சரியா, ஏனெனில் இப்போது வரும் ஆப்பிள்கள் மெழுகு பூச்சுடன் வருகின்றன. அதனால் ஏதேனும் பாதிப்பு வருமா, எந்தெந்தப் பழங்களை குழந்தைகளுக்கு எப்படிக் கொடுக்கலாம்? -sivashanmugarajan, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆப்பிள் கொடுக்கலாம். அதை தோல் நீக்கி, ஆவியில் வேகவைத்து, மசித்துக் கொடுப்பதுதான் சரியானது. இன்னும் சொல்லப் போனால், ஒன்பது மாதங்கள் தாண்டிய குழந்தைகளுக்கும் தோலுடன் ஆப்பிள் கொடுக்கும்போது, அது தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. எனவே, தோல் நீக்கிக் கொடுப்பதுதான் சரியானது. ஆப்பிள் தோலில் மெழுகுப் பூச்சு இருப்பதால், அதை குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா, கூடாதா என்ற சந்தேகம் பெரும்பாலான பெற்றோருக்கும் இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில்தான் பெரும்பாலும் இப்படி மெழுகுப் பூச்சு இருப்பதைப் பார்க்கிறோம். FSSAI மற்றும் FDA போன்ற உணவுப் பாதுகாப்பு அமைப்புகளின் விதிகளின்படி, சில வகையான மெழுகுகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், ஆப்பிள்களின் மேல்பூச்சில் பயன்படுத்தப்படும் மெழுகு எப்படிப்பட்டது, அரசால் அனுமதிக்கப்பட்டதா என்பது சாதாரண மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆப்பிள் சில நேரங்களில் ஆப்பிள்களில் உரங்களின் எச்சமும் இருக்கலாம். எனவே, குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுக்கும்போது முதலில் அவற்றை நன்கு கழுவிவிட வேண்டும். இரண்டு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து அதில் ஆப்பிளைக் கழுவுவது நல்லது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் ஆப்பிளின் மேலுள்ள மெழுகுப் பூச்சு நீங்கிவிடும். உள்ளூரில் கிடைக்கும் புது (ஃப்ரெஷ்) ஆப்பிள்கள் என்றால், இந்த மெழுகுப் பூச்சு கவலை இல்லாமல் தோலுடன் அப்படியே பயன்படுத்தலாம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புது ஆப்பிள் என்று தெரிந்தால் மட்டுமே அப்படிப் பயன்படுத்தலாம். தோலில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. Doctor Vikatan: சாப்பிட அடம்பிடிக்கும் பிள்ளைகள்... டொமேட்டோ சாஸ், கெட்ச்சப் கொடுப்பது சரியா? ஆறு மாதங்களிலிருந்து குழந்தைகளுக்கு வாழைப்பழமும் கொடுக்கலாம். எல்லா வகையான வாழைப்பழங்களையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அப்படியே மசித்துக் கொடுக்கலாம். நேந்திரம்பழம் மட்டும் சற்று கடினமாக இருக்கும் என்பதால், அதை வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். விதையுள்ள திராட்சை, தர்பூசணி போன்ற பழங்களை விதைகளை நீக்கி மசித்துதான் கொடுக்க வேண்டும். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களைக் கொடுத்தாலே போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். விலை உயர்ந்த வெளிநாட்டு பழங்களைத் தேடிப் போக வேண்டியதில்லை. எல்லா வகையான வாழைப்பழங்களையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஏழாவது மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 50 முதல் 60 கிராம் அளவுக்குப் பழங்கள் கொடுக்கலாம். ஒரு வயதுக்குப் பிறகு 75 கிராம் அளவு கொடுக்கலாம். ஏழு முதல் பதினைந்து வயது வரை தினமும் 100 கிராம் அளவு பழங்கள் கொடுக்கலாம். பதினாறு முதல் பதினெட்டு வயதில் 150 கிராம் கொடுக்கலாம். ஜூஸாகக் கொடுப்பதால் நார்ச்சத்து உடலில் சேராது என்பதால், பழங்களாகக் கொடுப்பதுதான் சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
பெருங்குடலை அலசி நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கலாமா?
வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு இருப்பதும், மூலிகைக் கஷாயம் குடிப்பதும், விளக்கெண்ணெய் குடிப்பதும் அல்லது எனிமா எடுத்துக்கொள்வதும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த பழக்கங்கள். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள், நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றோ வீட்டை சுத்தம் செய்யக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். வயிற்றை சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படி செய்யப்படுகிறது என வயிறு மற்றும் செரிமான மண்டல சிகிச்சை நிபுணர் பாசுமணியிடம் விரிவாகக் கேட்டோம். பெருங்குடல் சுத்தம்; எப்படி செய்வது? ’’வாயில் தொடங்கி ஆசனவாய் வரை உள்ள நம் செரிமான மண்டலத்தின் கடைசி பகுதி பெருங்குடல். இந்த பெருங்குடல் சுமார் ஐந்து அடி நீளமும், இரண்டரை இன்ச் சுற்றளவும் கொண்டது. இதன் முக்கிய பணி, உணவு செரிமானத்துக்குப் பிறகு ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதும், நீர் இழப்பைத் தவிர்ப்பதும்தான். பெருங்குடலில் நன்மை தரும் பாக்டீரியா வசிக்கிறது. இந்த பாக்டீரியா வைட்டமின் கே மற்றும் பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது. கழிவுகள் என்றாலே விஷம்தான் கழிவுகளை வெளியேற்றும் போது சில நேரங்களில் பெருங்குடலிலேயே கழிவுகள் தங்கிவிடலாம். அது நாம் சாப்பிட்ட உணவின் எச்சம், இறந்த செல் திசு, வயிற்றில் சுரக்கும் சளி போன்ற திரவம், ஒட்டுண்ணியாகவும் இருக்கலாம். இப்படி தங்கும் கழிவுகளால் நமக்குப் பிரச்னைதான். கழிவுகள் என்றாலே விஷம்தான். இப்படி தங்கிவிட்ட நஞ்சு மீண்டும் ரத்தத்தில் கலந்து, நல்ல பாக்டீரியாவைப் பாதித்து ஊட்டச்சத்து உற்பத்தியைத் தடுத்துவிடும். மேலும், செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு இப்படி கழிவு தங்கினால், தலைவலி, முதுகுவலி, மலச்சிக்கல், சோர்வு, வாயில் கெட்ட வாசனை, உடலில் துர்நாற்றம், எரிச்சல், குழப்பமான மனநிலை, தோல் பிரச்சனைகள், வாயுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, இடுப்புவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். பெருங்குடல் சுத்தம்; எப்படி செய்வது? 'கலோனிக் லாவேஜ்’. இதைக் சுத்தம் செய்யும் சிகிச்சை முறைக்குத்தான் ‘கலோனிக் லாவேஜ்’. அதாவது, பெருங்குடலை நீரால் அலசி சுத்தப்படுத்தும் நீர் சிகிச்சை. ஒரு மணி நேரத்தில் பெருங்குடல் சுத்தப்படுத்தும் சிகிச்சை முடிந்துவிடும். இதற்காக தோராயமாக 18–20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையின் போது, சிகிச்சை எடுத்துக்கொள்பவரின் வயிற்றில் மென்மையாக மசாஜ் செய்யப்படும். அதன் பிறகு, அவரது ஆசனவாய் வழியே குடலைச் சுத்தப்படுத்தும் பிரத்யேக கருவி பெருங்குடல் வரை உள்ளே செலுத்தப்படும். இந்த கருவியின் ஒரு குழாய் சுத்தமான நீரை உள்ளே பாய்ச்சும்; அந்த நீர் குடலைச் சுத்தப்படுத்தும். மற்றொரு குழாய், குடலைச் சுத்தப்படுத்திய நீரை உறிஞ்சி வெளியே எடுக்கும். இப்படி பெருங்குடல் முதல் மலக்குடல் வரை உள்ள குடல் பகுதிகள் கழுவி சுத்தம் செய்யப்படும். ஆசனவாய் வழியே செலுத்தப்படுகிறதே என்ற அசௌகரியத்தைத் தவிர்த்து, வலி ஏதும் இருக்காது. Muskmelon: முலாம் பழம் குளிர்ச்சி தரும்; குடல் புழுக்களைக் கொல்லும்; அல்சரை குணப்படுத்தும்! நன்மை செய்யும் பாக்டீரியா வாழ ஏற்ற சூழல் ஏற்படுத்தித்தரப்படுவதால்... இந்த சிகிச்சையின் போது, வயிற்றில் உள்ள கழிவுகளுடன் நன்மை செய்யும் பாக்டீரியாவும் வெளியேறும். ஆனால் பாக்டீரியா முற்றிலும் வெளியேற்றப்படுவது இல்லை. குடலைச் சுத்தம் செய்து, நன்மை செய்யும் பாக்டீரியா வாழ ஏற்ற சூழல் ஏற்படுத்தித் தரப்படுவதால், அவை சில நாட்களிலேயே நன்றாக பெருக்கம் அடைந்துவிடும். சிலர், “எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், எனிமா கொடுத்தாலே வயிறு சுத்தமாகிவிடுமே” என்று நினைக்கலாம். எனிமா என்பது மலக்குடலை மட்டுமே சுத்தம் செய்யும். அதனால் பெருங்குடலைச் சுத்தப்படுத்த முடியாது. பொதுவாக கேஸ்ட்ரோஎன்ட்ராலஜி மருத்துவர்கள் இதைப் பரிந்துரை செய்வது இல்லை. ஆனால், நோயாளி விரும்பினால், அவருக்கு இதைச் செய்வதால் பாதிப்பு இல்லை என்ற நிலையில் நீர் சிகிச்சை செய்யப்படுகிறது,” என்றார். சுத்தம் கவனம்! அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதற்கென வயிறு செரிமான மண்டல நிபுணர்கள் அல்லது பயிற்சி பெற்ற செவிலியர்கள் சிகிச்சை அளிப்பார்கள். இந்தியாவில் 'இந்த சிகிச்சை புதிது’ என்பதால் ஒரு சில மருத்துவர்கள்தான் சிகிச்சை அளிக்கின்றனர். நன்கு பயிற்சிபெற்ற நிபுணரிடம் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். இல்லை எனில், பிரத்யேகக் கருவியை உள்ளே செலுத்தும்போதும், நீரைப் பீய்ச்சி அடிக்கும்போதும் குடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு'' என்கிறார் டாக்டர் பாசுமணி. Health: குடல் சுத்தம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. ஆரோக்கியம் தரும் 7 நாள் 7 ஜூஸ் ஃபார்முலா
தூங்கப் போகுமுன் செல்போன் திரையைப் பார்க்கிறீர்களா? - எச்சரிக்கும் புதிய ஆய்வு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, ஓய்வெடுக்கப் போகும் முன் செல்போனை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பதுதான் இன்று பலரின் பழக்கம். குறிப்பாக இரவில் மொபைல் பார்த்தபடி தூங்குவது பலரின் பழக்கம் ஆகிவிட்டது. ஆனால், இந்த பழக்கம் நாளடைவில் உங்கள் இதயத்தை பாதிக்கக் கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நான் சமீபத்தில் வாசித்த ஒரு ஆய்வுக் கட்டுரை என்னை அதிர்ச்சி அடைய செய்தது. அதைப் பற்றி இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். ஒன்பது ஆண்டுகால ஆராய்ச்சி சொல்லும் உண்மை! ஆஸ்திரேலியாவின் ஃப்ளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு முக்கியமான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதற்காக, இங்கிலாந்தைச் சேர்ந்த சுமார் 89,000 பேரை, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்காணித்தனர். அவர்களின் கைகளில் Sensors பொருத்தப்பட்டது. அதன் மூலம், அவர்கள் இரவு நேரத்தில் எந்தளவுக்கு டிஜிட்டல் திரை வெளிச்சத்துக்கு ஆட்படுகிறார்கள் என்ற தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வின் முடிவில், இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்துக்குத் தொடர்ந்து ஆளானவர்களுக்கு, இதயச் செயலிழப்பு (Heart Failure) வருவதற்கான அபாயம் 56 சதவீதம் வரை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இது இருதய நோய்கள் வருவதற்கான ஒரு பெரிய ஆபத்துக் காரணியாக உருவெடுத்துள்ளது. இந்த ஆய்வின்படி பார்த்தால், இந்த விஷயத்தில் குறிப்பாக, 40 வயதைக் கடந்தவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! ஆம், இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்துக்கு நம்மை நாமே வெளிப்படுத்துவதும், குறிப்பாக உறங்கச் செல்லும் முன் கைபேசித் திரையின் நீல ஒளியைப் பார்ப்பதும், இதயச் செயலிழப்பு (Heart Failure) அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்கிறது இந்த புதிய ஆய்வு. நமது உடலில் உள்ள 'சர்காடியன் கடிகாரம்' (Circadian Clock) எனப்படும் இயற்கையான சுழற்சியை, இரவு நேர வெளிச்சம் குழப்பிவிடுவதே இதற்குக் காரணம். இந்தக் குழப்பம், நாளடைவில் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்திற்கு தங்களை ஆட்படுத்துபவர்களுக்கு, இதயச் செயலிழப்பு மட்டுமல்லாமல், வேறு சில இருதய நோய்களும் அதிகரிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். செய்ய வேண்டியது என்ன? இரவு நேரத்தில் அதிக டிஜிட்டல் திரை ஒளிக்கு நம்மை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதே நம் இதயம் மற்றும் உடலைப் பாதுகாக்கும் ஒரே வழி என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே செல்போன், லேப்டாப் போன்ற அதிக ஒளி தரும் திரைகளைப் பார்ப்பதை முழுமையாக நிறுத்துங்கள். இரவு நேரங்களில், குறைவான ஒளி (Dim Lights) தரும் விளக்குகளை மட்டுமே பயன்படுத்துங்கள். இந்த எளிய மாற்றத்தைச் செய்வதன் மூலம், உங்கள் விலைமதிப்பற்ற இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும். இனியாவது, 'இரவு வணக்கம்' செல்போனுக்கு அல்ல, நிம்மதியான உறக்கத்துக்குச் சொல்லுங்கள்! Source : Study published in the Journal of the American Medical Association (JAMA) விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை, அதீத களைப்பு; வேலைதான் காரணமா?
Doctor Vikatan: நீண்டகாலமாக வேலை தேடிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், நைட் ஷிஃப்ட் வேலைதான் கிடைத்திருக்கிறது. ஒரு மாதமாக இந்த வேலையைப் பார்க்கிறேன். ஆனால், இதுவரை இல்லாத அளவு மிகவும் களைப்பாக உணர்கிறேன். பகலில் தூக்கமும் இல்லை. என்னுடைய திடீர் களைப்புக்கு என் நைட் ஷிஃப்ட் வேலைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் களைப்பாக உணர ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான உணவை சரியானதாகவும் சரியான நேரத்திலும் சாப்பிட வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை. இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, பகலில் பட்டினி கிடப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பகலில் எனர்ஜி குறைவாக இருக்கும். எனவே, ஒவ்வொரு வேளை உணவுக்கும் சரியான இடைவெளி முக்கியம். அடுத்தது உறக்கம். ஆரோக்கியமான நபருக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானது. ஆனால், சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் அடுத்தநாள் காலையில் களைப்புடனேயே எழுந்திருப்பார்கள். உடல் பருமனானவர்களுக்கும் ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகாமல் போகலாம். நம் எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். அதை 'எட்டு எட்டாக ' மூன்றாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இரவில் 12 மணி நேரம் ஓய்வெடுக்கவும் பகலில் 12 மணி நேரம் வேலைசெய்யவும் ஏதுவாகத்தான் இயற்கையே நம் உடலை வடிவமைத்திருக்கிறது. நீங்கள் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர் என்றால் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் எடுத்துக்கொள்ளும் உணவுதான் உங்களுக்கான பிரேக்ஃபாஸ்ட். நள்ளிரவு 12 மணிக்குச் சாப்பிடுவது லஞ்ச். காலையில் வீட்டுக்கு வரும்போது சாப்பிடுவது டின்னர். அதற்கடுத்த 12 மணி நேரம் ஓய்வெடுப்பதற்கானது. அந்த நேரத்தில் நீங்கள் சாப்பிட வேண்டியதில்லை. அதாவது நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்கள், பகலை இரவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கும் பலரும் பகலில் கிடைக்கிற நேரத்தை டி.வி பார்க்க, போன் பேச, வேறு வேலைகளைப் பார்க்கவெல்லாம் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் ஆரோக்கியத்தை ஆபத்தை நோக்கித் தள்ளுகிறார்கள் என்றுதான் அர்த்தம். போதுமான நேரம் தூங்காத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இளவயதிலேயே நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். 6 முதல் 8 நேரத் தூக்கத்தில்தான் உங்கள் உடல் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும். உடல் ஓய்வெடுத்துக்கொள்ளும். அதீத களைப்பு: நைட் ஷிஃப்ட் வேலைதான் காரணமா? பகலில் தூங்கும்போது உங்கள் அறை, இருட்டாகவும் சத்தங்கள் இன்றியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பகல்தான் உங்களுக்கு இரவு என்பதால் பகலிலும் மீண்டும் சாப்பிடாதீர்கள். சரியாகத் தூங்காமலும் இரவில் மட்டுமன்றி பகலிலும் சாப்பிடுவதாலும் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கத் தொடங்கிய மூன்று முதல் நான்கு வருடங்களுக்குள் உங்கள் ஆரோக்கியம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். இதையெல்லாம் சரியாகப் பின்பற்றினாலே உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடனடியாக உங்கள் உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொண்டாலே உங்கள் பிரச்னைகள் தானாகச் சரியாகும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துமா?
தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264
கணவனும் மனைவியும் உறவுகொள்கையில் பேச வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். பேசுவதால் என்ன பலன் என்றோம். தாம்பத்திய உறவு அப்போ பெண்கள் ஏன் பேசணும்னா... குழப்பமான மனநிலையில இருக்கிற பெண்களுக்கு... ''பல நேரங்களில் உறவின்போது, பெண்கள் தங்கள் கணவரிடம் பேசுவதே இல்லை. 'என்னைத் திருப்திப்படுத்த வேண்டியது கணவரோட வேலை. ஆனா, என்னை அங்க, இங்கன்னு தொடக்கூடாது. செக்ஸ் பண்றப்போ பேசுறதுக்கும் எனக்கு பிடிக்காது. கூச்சமா இருக்கும்' என்பார்கள். இத்தனைக் குழப்பமான மனநிலையில இருக்கிற பெண்களுக்கு உச்சக்கட்டம் கிடைக்காவிட்டால் கோபம் வரும். ஆனால், அந்தக் கோபத்தால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்பதே உண்மை. தீர்வு பேசுவதில்தான் இருக்கிறது. 'என் மனைவிக்கு பெண்ணுறுப்பைத் தொட்டா பிடிக்கல. ஆனா, உச்சக்கட்டமே வரலைன்னு சொல்றாங்க. நான் வேற என்னதான் பண்றது டாக்டர்'னு கேட்பவர்களையும் பார்த்திருக்கிறேன். தாம்பத்திய உறவு அப்போ பெண்கள் ஏன் பேசணும்னா... விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! - காமத்துக்கு மரியாதை - 12 எல்லா ஆண்களாலும் இது முடியாது! ஓர் ஆண், தன் மனைவியை உச்சக்கட்டம் அடைய வைக்க வேண்டுமென்றால், 14 நிமிடங்கள் விடாமல் தூண்ட வேண்டும். இது எங்கோ ஒரு கணவனுக்குத்தான் சாத்தியம். எல்லா ஆண்களாலும் இது முடியாது. அதற்குள் விந்து வந்துவிடும். அதனால், தனக்கு என்ன வேண்டும், எப்படி செய்தால் பிடிக்கிறது, எதை ரொம்ப விரும்புகிறேன் என்பதை ஒரு பெண் சொன்னால் மட்டுமே கணவனுக்குத் தெரியும். 'செக்ஸ் வெச்சுக்கிறப்போ பேச சங்கடமா இருக்கு' என்று நினைக்கிற பெண்கள், அதற்கு முன்னரே 'குளிச்சிட்டு வாங்க; பல் தேய்ச்சிட்டு வாங்க; நான் இந்த டிரெஸ் போட்டுக்கவா' என்பதுபோல பேசலாம். இப்படிப் பேச, பேச ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவில் இது பிடித்திருக்கிறது, இது பிடிக்கவில்லை என்பதுபோல பேச ஆரம்பிக்கலாம். அது படுக்கையறை, ஓட்டப்பந்தய மைதானம் கிடையாது; அதனால் ஆண்களே..! | காமத்துக்கு மரியாதை - 244 அது ப்யூர்லி பர்சனல்! இப்போது நான் சொல்லியிருப்பதெல்லாம் எல்லோருக்கும் பொதுவானது. தாம்பத்திய உறவு தரும் உணர்வுகள், அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அது ப்யூர்லி பர்சனல். மருத்துவர்கள் நாங்கள் பொதுவாகச் சொல்கிற விஷயங்களும் சில உதவும் என்றாலும், உங்கள் கணவருக்கும் உங்களுக்குமான தனிப்பட்ட பேச்சுக்கள் என்று இருக்கும். அவற்றை உறவின்போது பேசுங்கள்...'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்பது உண்மையா?
Doctor Vikatan: பொதுவாகவே ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்றும் பருமனானவர்களுக்கு அது அதிகமிருக்கும் என்றும் கேள்விப்படுகிறோம். ஆனால், அது தவறான கருத்து என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். உண்மையா? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் ஒல்லியான நபர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது, பருமனானவர்களுக்கு தான் அது அதிகமிருக்கும் என்ற அறியாமை படித்தவர்களுக்கே கூட இருப்பதைப் பார்க்கிறோம். ஒருவரது உடல் அமைப்புக்கும் அவரது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் சம்பந்தமே இல்லை. கொழுப்பில் பலவிதங்கள் உள்ளன. நம் சருமத்துக்குக் கீழே, அதாவது கழுத்து, இடுப்பு, மார்பு என உடல் முழுவதும் சருமத்துக்குக் கீழே உள்ள கொழுப்புக்கு 'சப்கியூட்டேனியஸ் ஃபேட்' ( subcutaneous fat ) என்று பெயர். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதுதான் ஒருவருக்கு உடல் பருமன் ஏற்படக் காரணமாகிறது. இந்தக் கொழுப்புத் திசுக்களுக்கும், கொலஸ்ட்ரால் எனப்படுகிற கொழுப்புச்சத்துக்கும் சம்பந்தமே கிடையாது. கொலஸ்ட்ரால் என்பது நம் கல்லீரலில் இயற்கையாக உருவாகக்கூடியது. இது ஒருவருக்கு 100 கிராம் ரத்தத்தில் 200 முதல் 250 மில்லிகிராம் அளவுதான் இருக்க வேண்டும். இந்தக் கொழுப்புச்சத்தை உருவாக்குவதே கல்லீரல்தான். இது நம் உடலில் ஹார்மோன்கள் உற்பத்திக்கு உதவுகிறது. நம் மூளையும் நரம்புகளும் சரியாக இயங்க உதவுகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, பல்வேறு வகையான பிரச்னைகளைக் கொடுக்கிறது. கொலஸ்ட்ரால் டேட்டா எனவே, பருமனாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமிருக்கும் என்ற எண்ணமே தவறு. ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது பரம்பரைத் தன்மை. ஒருவரின் மரபணுக்கள், கல்லீரலின் செயல்பாடு, அதன் உற்பத்தித் திறன் போன்றவற்றைப் பொறுத்தது. கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு 80 சதவிகிதம் இதுதான் காரணம். மீதி 20 சதவிகிதம் என்பது ஒருவரது உணவுப்பழக்கத்தினால் வருவது. பொதுவாக சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் கிடையாது. அசைவ உணவுகளில்தான் அது அதிகம். அடிக்கடி அசைவ உணவுகள் சாப்பிடும்போது அளவுக்கதிகமாக கொலஸ்ட்ரால் சேர்கிறது. எனவே, ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு எப்படி இருக்கிறது என்பதை தோற்றத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. அதற்கான பிரத்யேகப் பரிசோதனைகளின் மூலம்தான் கண்டறிய முடியும். குடும்பப் பின்னணியில் கொலஸ்ட்ரால், இதயநோய், பக்கவாத பாதிப்பு ரிஸ்க் உள்ளவர்களும், அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களும் மருத்துவ ஆலோசனையோடு கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து பார்த்து அதன் அளவைத் தெரிந்துகொள்ளலாம். அதிகமிருப்பின் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகமானால்தானே ஆபத்து; குறைந்தாலும் மூளையைப் பாதிக்குமா?
சைனஸ் எப்போது ஆஸ்துமாவாக மாறலாம்? நிபுணர் விளக்கம்!
நவம்பர் மாதத்தில் இருந்தே குளிர்காலம் ஆரம்பித்துவிடும். இந்த காலகட்டத்தில்தான் சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு அது அதிகரிக்கும். இதற்கு லைஃப் ஸ்டைல் தீர்வுகள் என்னென்ன என்று சொல்கிறார் செங்கல்பட்டைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ந. கிருபானந்த். சைனஸ், தப்பிக்க என்ன வழி? ''மூளையின் எடையை பேலன்ஸ் செய்ய, தகவமைப்பாக முகத்தில் காற்று அறைகள் இருக்கின்றன. இவை, சைனஸ் அறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சைனஸ் காற்றறைகள் ஒவ்வாமையினால் தொற்றுக்கு உள்ளாகும்போது அழற்சிஅடைவதுதான் 'சைனஸைடிஸ்’ நோயாக அறியப்படுகிறது. சளியாக மாறத் துவங்கும்! எதிர்ப்புச் சக்தி குறைவால் நாளடைவில் அந்த நீர் சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தனிப்பட்ட மனித உடல் இயல்பினாலோ உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒரு வகை நீரை சுரக்க ஆரம்பிக்கின்றன. எதிர்ப்புச் சக்தி குறைவால் நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். உப உபத்திரவமாக தும்மல், தலைவலி, தலைபாரம் போன்றவையும் தோன்றும். இந்த நிலை வரை எழும் தொந்தரவுகள் சைனஸைடிஸ் வரையறைக்குட்பட்டவை. இதே தொந்தரவுகள் தொடர்ந்து நீடிக்கும்போது, அது ஆஸ்துமாவாக உருவாகலாம். சைனஸ், தப்பிக்க என்ன வழி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடலின் ஒவ்வாமைக்கு தனிப்பட்ட மற்றும் பொதுவான காரணிகள் ஏராளமாக இருக்கின்றன. ஒருவருக்குக் குறிப்பிட்ட பதார்த்தம் ஒவ்வாமையைத் தரலாம். மேற்படி உணவைத் தவிர்ப்பதன் மூலம் அவர் நிவாரணம் பெற முடியும். ஆனால், மழை, பனி போன்ற சீதோஷ்ண மாறுதல்கள் ஒருவரின் ஒவ்வாமை இயல்பை அதிகரிக்கும்போது சமாளிப்பது சற்று சிரமம்தான். உதாரணமாக, காற்றில் பரவும் மாசுகளை மழையும் பனியும் ஈர்த்து, நம் சுவாசப்பரப்பிலேயே நிலைநிறுத்துகின்றன. கூடவே, இந்தக் காலங்களில் பூச்செடி, மரங்கள் என்று அதிகரிக்கும் மகரந்தச் சேர்க்கையும் சைனஸைத் தூண்டும். இந்தப் பொதுக் காரணங்களை தவிர்க்க முடியாது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஓரளவு பாதுகாப்பு பெறலாம். சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்! லைஃப் ஸ்டைல் ஒழுங்குகளே நல்ல ரிசல்ட் தரும்! சைனஸைடிஸை எதிர்கொள்ள மருத்துவ சிகிச்சைகளை விட, லைஃப் ஸ்டைல் ஒழுங்குகளே நல்ல ரிசல்ட் தரும். தூய பருத்தி ஆடைகள், கம்பளி ஆடையெனில் அவை தூசு இல்லாதிருப்பது, பூக்கள், தூசுக்கள் சூழலைத் தவிர்ப்பது, மாஸ்க் அல்லது கர்ச்சீஃப் உபயோகிப்பது என ஆயத்தமாக இருக்கலாம். பனி, மழை காலங்களில் பாக்டீரியா தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதால் உடல் எதிர்ப்பு சக்தி சீர்குலையாதிருக்க ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். Health: சைனஸ் முதல் மூட்டு வீக்கம் வரை... குளிர்கால ஹெல்த் பிரச்னைகள்; வராமல் தடுக்க டிப்ஸ்! இறுகியும், மஞ்சள் நிறத்திலும் சளி இருக்குமானால் சைனஸ் அறைகளின் ஆரம்பகால பாதிப்புக்கு சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமானது. இறுகியும், மஞ்சள் நிறத்திலும் சளி இருக்குமானால் மருத்துவ ஆலோசனையுடன் கூடுதல் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது மாத்திரை வடிவில் கிடைக்கும் மருந்துகளை கொண்டு 'வேது’ (நீராவி) பிடிப்பது பக்க விளைவுகளற்ற சிறப்பான வழி. நாள்பட்ட சைனஸ் பாதிப்பு, காற்றறை சுவரை தடிப்பாக்கி, அதன் வாயை அடைக்க முற்படும். இதற்கு எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம். போதிய கவனிப்பு, சிகிச்சைகளின்றி சைனஸ் பிரச்னை ஆஸ்துமாவாக உருவெடுக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் இருக்கட்டும்'' என்கிறார் டாக்டர் ந. கிருபானந்த்.
மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; கல்லூரிக்கு விடுமுறை, சமையல் அறைக்கு சீல்- நாமக்கல்லில் நடந்தது என்ன?
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்கபாளையம் கிராமத்தில், எக்ஸெல் எனும் தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தக் கல்வி வளாகத்தில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான கல்லூரிகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 27.10.2025 அன்று கல்லூரி விடுதியில் தங்கி இருந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கல்லூரியில் இயங்கிவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதைத் தொடர்ந்து, 28.10.2025 அன்றும் ஒரு சில மாணவ, மாணவியர்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மாணவ, மாணவிகள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தங்கவிக்னேஷ், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரங்கநாதன் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறையினர், கல்லூரி விடுதிக்குள் அமைந்துள்ள கல்லூரி உணவக இருப்பு அறை, உணவு பரிமாறும் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், தகுதியற்ற முறையில் இயங்கி வந்த சமையலறைக்கு சீல் வைக்கப்பட்டது. , மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவின் பெயரில், 29.10.2025ம் தேதி முதல் 02.11.2025ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விடுதி உணவை சாப்பிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் வரை உயிரிழந்து உள்ளதாகவும், சமூக வலைதளங்களில் செய்தி பரவ... பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தண்ணீர் தொட்டிகள் ஆய்வு இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் சிலரிடம் பேசினோம். ''கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவு மிகவும் தரமற்றதாக இருக்கும். சமீபத்தில் உணவில் கூல் லிப் (cool lip) இருந்தது. இது தொடர்பாக புகார் அளித்தபோது, 'மார்க்கில் கை வைத்து விடுவோம்...' என்று நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். கடந்த திங்கள்கிழமை கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டு ஏராளமான மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் நிறைய விஷயங்களை மறைக்கிறது. கல்லூரி தரப்பில் இருந்து மாணவர்களுக்கு எந்தவித விளக்கத்தையும் கொடுக்காமல், விடுதியை காலி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வரும் திங்கட்கிழமை (03.11.2025) அன்று மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மாணவர்கள் உயிரிழந்ததாக பரவிவரும் செய்தி தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ''27.10.2025 மற்றும் 28.10.2025 ஆகிய தேதிகளில் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவிகள் சுமார் 128 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சில மாணவர்கள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கல்லூரி விடுதி சமையலறையை ஆய்வு செய்தனர். அவர்கள் சமையல் அறையில் சில மாற்றங்களை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சிகிச்சை பெற்று வந்த மாணவர்கள் அனைவரும் உடல்நிலை சரியாகி வீடு திரும்பி உள்ளனர். மாணவிகள் இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. கல்லூரி வளாகத்திற்குள் எந்த விதமான அசாதாரண சூழ்நிலையும் ஏற்படவில்லை'' என்று தெரிவித்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதனிடம் பேசியபோது, ''திங்கட்கிழமை (27.10.2025) அன்று கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக விடுதி மாணவர்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, சமையல் அறை, உணவக இருப்பு அறை, உணவு பரிமாறும் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற முறையில் உணவு கூடம் இயங்கியது தெரியவந்தது. உடனடியாக மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு கல்லூரியில் ஆய்வு நடத்தினோம். ஆய்வின் அடிப்படையில் கல்லூரியில் உணவுக்கூடம் சமைப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருந்ததால் சீல் வைக்கப்பட்டது. பின்னர், தண்ணீர் தொட்டி முறையாக பராமரித்தல், சமையல் அறை புதுப்பித்தல், உணவுப் பொருட்களை மாற்றுவது உள்ளிட்ட 21 விதிமுறைகளை சரி செய்தால் மட்டுமே சமையல் அறை திறக்க உத்தரவிட்டுள்ளோம். கல்லூரிக்கு தண்ணீர் அருகே உள்ள கிணற்றிலிருந்து லாரி மூலமாக கொண்டு வரப்படுகிறது. அந்தக் கிணற்றையும் ஆய்வு செய்து சுத்தம் செய்ய சொல்லி இருக்கிறோம். மாணவர்களை பொறுத்தவரை 220 பேர் மருத்துவமனையில் அனுமதித்து உடல்நிலை சரியான உடன் வீடு திரும்பி உள்ளனர். பெரிய அளவில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்றார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கல்லூரி நிர்வாகத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கூறுகையில், ''கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. எக்ஸெல் கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு சான்றிதழ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதியில் 19 குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை நிவர்த்தி செய்ய முன்னேற்ற அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் கீழ், கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு 48 மணி நேரத்திற்குள் விடுதி, சமையலறை மற்றும் அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரச் சட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் கீழ் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தரவு விரைவில் வழங்கப்படும்'' என்று கூறினார்.
Doctor Vikatan: பருக்களை விரட்டுமா பயத்த மாவும் கடலை மாவும்?
Doctor Vikatan: எனக்கு வயது 23. நினைவு தெரிந்த நாள் முதல் முகத்துக்கு சோப் உபயோகிப்பதில்லை. பயத்த மாவு (பாசிப்பயறு மாவு) அல்லது கடலை மாவு மட்டும்தான் பயன்படுத்துவேன். சமீப நாள்களாக எனக்கு முகத்தில் அளவுக்கதிகமாக பருக்கள் வருகின்றன. எப்போதும் போல பயத்த மாவும் கடலை மாவும் உபயோகித்தாலே போதுமா, பருக்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா முதல் விஷயம், இத்தனை வருடங்களில இல்லாமல் உங்களுக்கு திடீரென பருக்கள் வர என்ன காரணம் என்பதை முதலில் பாருங்கள். ஆரோககியமான வாழ்க்கைமுறைக்கு அடிப்படை சரியான உணவுப்பழக்கம். அதிக மாவுச்சத்தும் இனிப்பும் பதப்படுத்திய உணவுகளும் பால் பொருள்களும் உள்ள உணவுப்பழக்கம் பருக்களைத் தூண்டும். பருக்களை ஏற்படுத்துபவை ஒருவகை பாக்டீரியா. சருமத்தில் அதிக எண்ணெய்ப்பசை சுரந்தால் அதை உண்பதற்காக பாக்டீரியா கிருமிகள் முன்வரும். எனவே, சருமத்தின் எண்ணெய்ப்பசையைக் கட்டுப்படுத்துகிற மாதிரியான மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஃபேஸ்வாஷ் போன்ற புற சிகிச்சைகளை நாடலாம். இவற்றில் உங்களுக்கு எது சரி என்பதை உங்கள் பருக்களின் தீவிரத்தைப் பார்த்த பிறகுதான் மருத்துவரால் முடிவு செய்ய முடியும். ஆரம்பநிலை என்றால் புறப்பூச்சுகளின் மூலமே சமாளிக்கப் பார்க்கலாம். அதுவே, பருக்கள் கட்டிகள் போல உருமாறி, உள்ளே சீழுடன் வலி நிறைந்ததாக இருந்தால் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் மூலம்தான் குணப்படுத்த முடியும். பருக்கள் கட்டிகள் போல உருமாறி, உள்ளே சீழுடன் வலி நிறைந்ததாக இருந்தால் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் மூலம்தான் குணப்படுத்த முடியும். Doctor Vikatan: முகம், முதுகு எனப் பரவும் பருக்கள்; தீர்வு உண்டா? தினசரி 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் செயல்பாட்டை சரியாக வைத்துக்கொள்ளலாம். பருக்கள் வராமல் தடுக்க முறையான சருமப் பராமரிப்பும் முக்கியம். சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட், நியாசினமைடு போன்றவை உள்ள ஃபேஸ்வாஷ், க்ரீம்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும். வீட்டு வைத்தியங்களின் மூலம் பருக்களை குணப்படுத்துவது சிரமம். அப்படிப்பட்ட குறிப்புகளைப் பின்பற்றினால் இருக்கும் பருக்கள் மேலும் பெரிதாகி, சீழ்க்கட்டிகளாகி, பிறகு தழும்புகளும் நிரந்தரமாகிவிடும். எனவே, முதலில் சரும மருத்துவரை சந்தித்து உங்கள் பருக்களின் தீவிரத்துக்கேற்ப அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைப் பின்பற்றுங்கள். உணவுப்பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் முறைப்படுத்துங்கள். நேரத்துக்குச் சாப்பிடுங்கள். பயத்த மாவும் கடலை மாவும் பருக்கள் போக உதவாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Health: கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை; செலவில்லா அழகுக்குறிப்புகள்!
கேரட்... கரோட்டின் மற்றும் விட்டமின் `ஏ' சத்து நிறைந்தது. விட்டமின் `ஏ', கண்களுக்கு மிகவும் நல்லது என்பதுடன், உடல் திசுக்களுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது. கரோட்டின் சத்து தொடர்ந்து கிடைக்கப்பெற்றால், சருமம் பளிச்சென்று ஆகும். கேரட் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை கண்களுக்கு... ஒரு கப் கேரட் துருவலுடன் 4 வெள்ளரித் துண்டுகள் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை வடிகட்டினால் `வழவழ' க்ரீம் போல வரும். அதை கண்களைச் சுற்றி அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து கண்களுக்கு மேற்புறமும் வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து துணியை எடுத்துவிட்டு, க்ரீமை கழுவாமல் அப்படியே விட்டுவிடவும். இது கண்களை `பளிச்' என்று ஆக்கும், கூரிய பார்வை கிடைக்கச் செய்யும். இதை முகம், கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசர் ஆகவும் பயன்படுத்தலாம். முகம் மங்காமல் இருக்க... வெயிலில் வேலை செய்வோர் மற்றும் லேப்டாப், கணினியில் வேலை செய்வோருக்கு அந்த வெப்பம் காரணமாக முகம் சிறிது மங்கிக் காணப்படும். அரைத்த கேரட் ஒன்றுடன் ஒரு டீஸ்பூன் பால், சிறிது கடலை மாவு சேர்த்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர, மங்கிய முகம் தன் இயல்பை மீட்கும். கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை கருமையைத் தவிர்க்க.... கேரட்டை பாலில் வேக வைத்து அரைக்க, க்ரீம் போல கிடைக்கும். இதை தினமும் வெளியே செல்லும்போது மாய்ஸ்ச்சரைசராக முகம், காது, கழுத்துப் பகுதியில் பயன்படுத்தலாம். இதனால் வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும். காது, கழுத்து பகுதிகளில் உள்ள கருமை நீங்குவதோடு... புருவம் அரிப்பதும், புருவத்தில் முடி உதிர்வதும் தடுக்கப்படும். கரும்புள்ளிகள் நீங்க... அரை கப் கேரட் சாற்றுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் `பேக்' போட்டு அரை மணி நேரம் கழித்து உரித்தெடுக்கவும். இதை தொடர்ந்து செய்து வர, கரும்புள்ளிகளுக்கு `பை பை' சொல்லலாம். கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் நீங்க... பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பின் வயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வந்துவிடும். குழந்தைப் பராமரிப்பு பொறுப்புகளுக்கு இடையே அதை நீக்கும் வழிமுறைகளைச் செய்யத் தவறிவிட்டால், அது நிரந்தரமாகத் தங்கிவிடும். அதைத் தவிர்க்க, 5 துண்டுகள் கேரட்டுடன் 5 பாதாம் சேர்த்து அரைத்து, தழும்புகளில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கவும். இதை தினசரி செய்து வந்தால் பலன் கிடைக்கும். Beauty: ``5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய அழகுக்குறிப்பு!'' - ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்! வெளிறிப்போதலை தடுக்க... டைஃபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு, கன்னங்கள் வெளிறிப்போயிருக்கும். அதைச் சரிசெய்ய, ஒரு கேரட், 2 பேரீச்சம்பழத்துடன் சிறிது பால் சேர்த்து அரைக்கவும். இதை கன்னங்களுக்கு பேக் போட்டு கழுவி வர, இழந்த பொலிவு மீண்டும் கிடைக்கும். Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்! மாசு, தூசு, பாதிப்பு நீங்க... கேரட் சாறு - அரை கப், கஸ்தூரி மஞ்சள் - ஒரு டீஸ்பூன், பார்லி பொடி - 2 டீஸ்பூன்... இவை அனைத்தையும் கலந்து வாரம் ஒருமுறை சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தி குளித்துவர, மாசு, தூசால் சருமத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.’’
நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனுமதி! - விவரம் என்ன?
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்கபாளையம் கிராமத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 27.10.2025 அன்று கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவியர்களில் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கல்லூரியில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதைத் தொடர்ந்து, 28.10.2025 அன்றும் ஒரு சில மாணவ, மாணவியர்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மாணவ மாணவிகள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாள்களில் 128 மாணவ, மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் விடுதி உணவகத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இல்லாததால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. College (Representational Image) இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தங்கவிக்னேஷ், தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர், கல்லூரி விடுதிக்குள் அமைந்துள்ள கல்லூரி உணவக இருப்பு அறை, உணவு பரிமாரும் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை ஆய்விற்கு எடுத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவின் பெயரில், 29.10.2025ம் தேதி முதல் 02.11.2025ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐந்து மாணவிகள் உயிரிழந்து உள்ளதாகவும் பரவி வரும் தகவல் வதந்தியானது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுக்கலாமா?
Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில், வேப்பிலை, வெற்றிலை உள்ளிட்ட ஏதேதோ பொருள்களை அரைத்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் என் மாமியார். பல வீடுகளில் இந்த வைத்தியம் பின்பற்றப்படுகிறது. இது உண்மையிலேயே அவசியம்தானா, பிறந்த குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுப்பது பாதுகாப்பானதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த மருந்துக்கு 'வேப்பங்காரம்' என்று பெயர். 6 மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு, தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் கொடுக்கக்கூடாது என்பதுதான் உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பிறகு இந்த வேப்பங்காரம் கொடுக்கலாம். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வேம்பு நம் மருத்துவத்தில் முக்கியப் பொருளாக இருந்திருக்கிறது. அது தொல்காப்பியத்தில்கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வளவு பழைமையான, பாதுகாப்பான மருந்து வேம்பு. வேப்பங்கொழுந்து 5 எண்ணிக்கை, ஒரு மிளகு, 10 சீரகம் ஆகியவற்றை நன்கு நுணுக்கி சுத்தமான, வெள்ளைத் துணியில் கட்டி முடிந்துகொள்ளவும். அதை 15 மில்லி தாய்ப்பாலில் ஊறவைக்கவும். குழந்தையைக் குளிப்பாட்டியதும், காலில் இருந்து தூக்குவதற்கு முன்பே, ஊறிக்கொண்டிருக்கும் மருந்தைக் கசக்கி, வடிகட்டி எடுத்து, சங்கில் குழந்தைக்குக் கொடுத்து விடுவார்கள். Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை... வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா? குழந்தைக்கு எண்ணெய் தடவும்போதே இதை ரெடி செய்துவிட வேண்டும். பிறகு குழந்தையைக் குளிப்பாட்டி முடிக்கும்வரை இந்த மருந்து, தாய்ப்பாலில் ஊறிக்கொண்டிருக்கும். குழந்தையைக் குளிப்பாட்டியதும், காலில் இருந்து தூக்குவதற்கு முன்பே, ஊறிக்கொண்டிருக்கும் மருந்தைக் கசக்கி, வடிகட்டி எடுத்து, சங்கில் குழந்தைக்குக் கொடுத்து விடுவார்கள். வேப்பங்காரம் கொடுத்த சில நொடிகளில், குழந்தைக்கு சளி கட்டியிருந்தால், அதைக் கக்கி விடும். பிறகு அதைச் சுத்தம் செய்து, குழந்தையைத் துடைத்து எடுப்பார்கள். இது காலங்காலமாக கிராமங்களில் பின்பற்றப்படுகிற விஷயம்தான். பயப்படத் தேவையில்லை. வேப்பங்கொழுந்து உள்ளிட்ட மருந்துப் பொருள்களை நுணுக்குவது, தாய்ப்பாலை எடுப்பது, ஊறவைப்பது என எல்லாவற்றையும் மிகமிகச் சுத்தமாகக் கையாள வேண்டியது அவசியம். வேப்பிலை பிறந்து 6 மாதங்கள் முடிந்துவிட்ட குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு உணவுகளையும் அறிமுகப்படுத்துவோம். அந்தக் குழந்தையின் குடலானது வாரந்தோறும் வளர்ச்சி அடையும். அந்த மாற்றங்களால் குழந்தையின் வயிற்றில் வாய்வு சேரும். திடீர் திடீரென குழந்தை வலியால் அழும். அந்தப் பிரச்னைகள் வராமல் தடுக்கவும் வேப்பங்காரம் உதவும். நெஞ்சில் சளி சேராமல் தடுக்கும். அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். 12 வயது வரை இந்த மருந்தைக் கொடுக்கலாம். வயதாக, ஆக, வேப்பங்கொழுந்து, சீரகத்தின் எண்ணிக்கையை ஐந்து, ஐந்தாகவும், மிளகின் எண்ணிக்கையை ஒன்றிரண்டாகவும் அதிகரித்துக்கொள்ளலாம். எனவே, உங்கள் மாமியார் கொடுக்கும் இந்த வேப்பங்காரம், குழந்தைக்கு நிச்சயம் நல்லதுதான் செய்யும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் இணைந்து, திருச்சியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை பெருக்கும் நோக்கில் 'ரன் ஃபார் ஹோப்' மாரத்தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். 2 கிமீ, 5 கிமீ மற்றும் 10 கிமீ ஓட்டங்களில் 1000 அதிகமான பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பி.ஹெச்.இ.எல் நிர்வாக இயக்குநர் திரு. பிரபாகர் தலைமை விருந்தினராக துவக்கி வைத்தார். மாரத்தான் பி.ஹெச்.இ.எல் பொது மேலாளர் திரு. ரவி மற்றும் சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். மொத்தமாக ₹40,000 பரிசுத்தொகையுடன், பி.ஹெச்.இ.எல் சமுதாயத்திலிருந்து 1000 அதிகமான பேர் கலந்து கொண்ட மாரத்தான் சிறப்பாக நடைபெற்றது.
Doctor Vikatan: உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா?
Doctor Vikatan: காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல். இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய, ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடிய பாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூட பாதிக்கப்படலாம். எனவே, இதயம், மூளை, கண்கள், சிறுநீரகங்கள் என எல்லாமே ஆரோக்கியமாக இருக்க ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம். பிபி பரிசோதிக்கும் மானிட்டரை வீட்டில் வைத்தும் அவ்வப்போது டெஸ்ட் செய்து பார்க்கலாம். Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முடியுமா? ரத்த அழுத்தமானது 120/80-க்குள் இருக்க வேண்டும். 121 முதல் 135 வரை (121/89 - 135/89) அதிகரிக்கும்போது உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம். 140/90- என்பதைத் தொட்டுவிட்டால் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்பற்றினால், ஒரு கட்டத்தில் மாத்திரைகளை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது. BP அளவை மருத்துவரிடம் செக் செய்து கொள்வதே சிறந்தது. அது தவிர்த்து பிபி பரிசோதிக்கும் மானிட்டரை வீட்டில் வைத்தும் அவ்வப்போது டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஏனென்றால், மருத்துவமனைக்கு வருவதால் பிபி அதிகரிக்கும் மக்கள் பலர். அதற்கு 'வொயிட் கோட் ஹைப்பர்டென்ஷன்' (White coat hypertension) என்றே பெயர். அதேபோல, ' ஆம்புலேட்டரி பிபி மானிட்டரிங்' (Ambulatory blood pressure monitoring) என்றொரு கருவியும் உண்டு. வருடம் ஒருமுறை இதிலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். இரவில் பொதுவாக பிபி அளவு குறைய வேண்டும். அப்படிக் குறையாவிட்டால் அதை 'நாக்டர்னல் ஹைப்பர் டென்ஷன்' (Nocturnal hypertension) என்று சொல்வோம். இதை ஹோம் பிபி மானிட்டர் வைத்துக் கண்டுபிடிக்க முடியாது. BP checking உணவில் அதிக உப்பும் கொழுப்பும் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக காபி, டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 2 கப்புக்கு மேல் போக வேண்டாம். நீரிழிவு கட்டுக்குள் இருக்க வேண்டும். 80 முதல் 90 சதவிகித மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் அவசியம். பலருக்கும் அறிகுறிகள் இருப்பதில்லை என்பதால், பிரச்னை இல்லை என மருந்துகளை நிறுத்தக்கூடாது. 10 முதல் 15 சதவிகித மக்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வே இருப்பதில்லை. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், உடலின் மற்ற உறுப்புகள் பாதிப்படைவதையும் உயிரிழப்பையும் பெருமளவில் தடுக்க முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
டாக்டர் திலீப்பும் டாக்டர் சிவரஞ்சனியும்; இது ORS பிறந்த கதையும் அது மீண்ட கதையும்!
உயிர் காக்கும் மருத்துவ கண்டுபிடிப்பு ஒன்று, வணிகரீதியான பொருளாக மாற்றப்பட்டால், அதனால் மக்களுக்கு என்னவெல்லாம் கெடுதல்கள் நடக்கும் தெரியுமா? அதற்கு முன்னால் அந்த உயிர் காக்கும் மருந்தின் பெயர் என்ன; அது பிறந்த கதை என்ன என நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா..? அந்தக் கதையை நமக்கு சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் பாசுமணி. ஓ.ஆர்.எஸ் கரைசல் ஒரு கொடிய வியாதி இது! ''இன்றைக்கும் நம்முடைய கிராமங்களில் அடுத்தவர் மீது கோபம் வந்து சாபம் கொடுக்கையில் 'வாந்தி, பேதி வந்து வாரிக்கிட்டுப் போக' என்று காலரா நோயை குறிப்பிட்டு சாபம் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு காலரா தொற்றுக்கு லட்சக்கணக்கானவர்களை நாம் வாரிக்கொடுத்திருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, இன்றைக்கும் ஒரு வருடத்தில் உலகம் முழுக்க, ஐந்து வயதுக்கு உட்பட்ட நாலரை லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து வருகிறார்கள். அந்தளவுக்கு ஒரு கொடிய வியாதி இது. இதற்கான மருந்தை நரம்பு வழியாக செலுத்திக் காப்பாற்றி வந்தார்கள் மருத்துவர்கள். அப்படியென்றால், ORS (வாய்வழி நீரேற்றுக் கரைசல்) எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்கிறீர்களா? டாக்டர் திலீப் மகாலனாபிஸ் 1971-ல் பங்களாதேஷ் விடுதலைப் போர் நடந்தது. அகதிகள் முகாமில் இருந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொல்கத்தாவில் மருத்துவம் படித்து, வெளிநாட்டில் பயிற்சி பெற்ற டாக்டர் திலீப் மகாலனாபிஸ் (Dilip Mahalanabis) என்பவர் வந்தார். இவர் ஒரு குழந்தை நல மருத்துவர். அவர் அந்த அகதிகள் முகாமிற்கு சென்றபோது நாள்தோறும் பலரும் காலராவினால் இறந்துகொண்டிருந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பில் ஏற்ற வேண்டிய டிரிப்ஸ் பாட்டில்கள் குறைவாக இருந்தன. தவிர,, பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருந்த அவருக்கு உதவியாளர்களாக வெறும் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். டாக்டர் திலீப் ஒரு முடிவெடுத்தார். ஆனால், அவருடைய அந்த முடிவை பலரும் எதிர்த்தனர். இதெல்லாம் 'வேலைக்கு ஆகாது' என்கிற தொனியில் நம்பிக்கையில்லாமல் பேசினர். அவர்களை எல்லாம் மீறி, காலராவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய் வழியாக திரவம் தரும் சிகிச்சையை தொடங்கினார் டாக்டர் திலீப். உதவியாளர்கள் குறைவாக இருப்பதால், நோயாளிகளின் உறவினர்களுக்கு வாய் வழியாக தருகிற திரவத்தை எப்படித் தயாரிப்பது என சொல்லித்தருகிறார். டாக்டர் திலீப் மகாலனாபிஸ் (Dilip Mahalanabis) அது என்ன திரவம் தெரியுமா..? சாதாரண சமையல் உப்பையும் சர்க்கரையும் சேர்த்து அந்தத் திரவத்தை தயாரித்து, காலராவால் இறப்பை நோக்கி சென்றுகொண்டிருப்பவர்களுக்கு அருந்தக் கொடுக்கிறார் டாக்டர் திலீப். என்ன ஆச்சரியம், அந்தத் திரவத்தை பாதிக்கப்பட்டவர்கள் அருந்த ஆரம்பித்தபின், காலராவால் நூற்றுக்கு 30 பேர் இறந்துகொண்டிருந்த முகாமில், நூற்றுக்கு ஒருவர் மட்டுமே இறந்தார். உருவானது ஓ.ஆர்.எஸ் இந்தக் கண்டுபிடிப்பைப் பார்த்து மொத்த உலகமும் ஸ்தம்பித்து நின்றது. இந்தக் கண்டுபிடிப்புக்காக உலக சுகாதார நிறுவனம் டாக்டர் திலீப் மகாலனாபிஸ்க்கு பல அங்கீகாரங்களை வழங்கியது. இதை அடிப்படையாக வைத்து ORS காம்பினேஷன் உருவாக்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டில், மருத்துவ உலகில் மிகப்பெரிய கண்டுபிடிப்பைச் செய்து, காலராவிடமிருந்து லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய வணக்கத்திற்குரிய டாக்டர் திலீப் மகாலனாபிஸ் அவர்களுக்கு 2023-ம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷண் என்கிற உயரிய விருதை வழங்கி கௌரவித்தது. ஓ.ஆர்.எஸ் கரைசல் ஏற்றுக்கொண்ட உலக சுகாதார நிறுவனம்..! காலரா வந்தவர்களின் உடலுக்குள் சோடியத்தை செலுத்தி நீரேற்றத்தை தக்க வைத்துக் கொள்ளுதல் என்பது சாதாரண விஷயம் அல்ல. வெறும் சோடியத்தை மட்டும் கொடுத்தால் உடல் அதை ஏற்றுக்கொள்ளாது. கூடவே சர்க்கரையை கொடுத்தால்தான் உடம்பு அதை எடுத்துக் கொள்ளும். இந்த ஒரு நுட்பத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி டாக்டர் திலீப் நிரூபித்து விட்டதால், இந்தக் கரைசலை உலகம் முழுக்க உலக சுகாதார நிறுவனம் எடுத்துக்கொண்டு சென்றது. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, இந்த உப்புச் சர்க்கரைக் கரைசலை தயங்காமல் கொடுங்கள் என்றது. 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இந்த சிம்பிளான ஓ.ஆர்.எஸ் கரைசல்தான். இந்த ஒரு சிகிச்சை ஏறத்தாழ ஏழு கோடி குழந்தைகளை இதுவரை காப்பாற்றியுள்ளது. ஓ.ஆர்.எஸ் கரைசலின் ஃபார்முலா உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு லிட்டர் நீரில் கரைக்க வேண்டிய ORS பவுடரில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட் மற்றும் 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை இருக்க வேண்டும். 4 கிராம் ORS பாக்கெட் என்றால் 200 மில்லி நீரில் கலக்க வேண்டும். 20 கிராம் பாக்கெட் என்றால் ஒரு லிட்டர் நீரில் கலக்க வேண்டும். இது ரெடிமேடாக மருந்தகங்களில் கிடைக்கிறது. WHO உலக சுகாதார அமைப்பு தரக் கட்டுப்பாட்டு இதில் இருக்கிற உப்பும் சர்க்கரையும் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருப்பதால் இதுவொரு மருந்தாகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி தயாரித்து, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மருந்தாக விற்பனை செய்து வருகிறது. இந்த ORS கரைசல் ஃபார்முலா பல தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு அது மருந்து என்கிற வரையறைக்குள் வருவதாலும், அதற்குரிய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படுவதாலும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ORS கரைசலை, பெற்றோர்கள் தாராளமாக அருந்தக் கொடுக்கலாம். இத்தனைக்கும் ஆரம்பப்புள்ளியான டாக்டர் திலீப் மகாலனாபிஸ் 2022-ல், தன்னுடைய 87-வது வயதில் முதுமை காரணமாக மரணமடைந்தார். டாக்டர் திலீபனின் மரணமும் டாக்டர் சிவரஞ்சனியின் போராட்டமும்... ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த எட்டு வருடங்களாகப் போராடி 2022-ல், டாக்டர் திலீபன் இறந்த அதே வருடத்தில் ORS கரைசல் தொடர்பான இன்னொரு வெற்றியை பெற்றிருக்கிறார். அது, பாட்டில்களில் விற்கப்படும் பழச்சாறுகள், காற்று அடைக்கப்பட்ட பானங்கள் உள்பட எந்தவொரு பானத்திற்கும் இனிமேல், 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யக்கூடாது என்பதுதான். டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் ஏறத்தாழ பத்து மடங்கு அதிகம். சரி, இந்த 'ORS' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பானங்களில் அப்படி என்னதான் பிரச்னை இருக்கிறதென்றால், உலக சுகாதார நிறுவனம் 'ORS' கரைசலில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவாக அறிவுறுத்தியிருப்பது 13.5 கிராம். ஆனால், இந்த பானங்களில் 90-ல் இருந்து 120 கிராம் வரைக்கும் சுவைக்காக சர்க்கரையை சேர்த்திருக்கிறார்கள். ஏறத்தாழ பத்து மடங்கு அதிகம். மிச்சம் மீதி தண்ணீரையும் வெளியேற்றி விடும்! சர்க்கரையும் உப்பும் கலந்த நீரை நம் குடலின் உட்சுவர் உறிஞ்சும்போது, இதுபோன்ற போலியான 'ORS' கரைசல்களில் அதிகப்படியாக இருக்கிற சர்க்கரை என்ன செய்யும் தெரியுமா? உடம்பில் இருக்கிற தண்ணீரை வெளியேற்றி விடும். அதாவது ஒரிஜினல் 'ORS' கரைசல் வயிற்றுப்போக்குக் காரணமாக உடம்பில் இருந்து வெளியேறிய தண்ணீரை உடலில் ஈடு செய்யும். ஆனால், சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்ட இந்த பானங்கள் உடலில் இருக்கிற மிச்சம் மீதி தண்ணீரையும் வெளியேற்றி, இதை அருந்தும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய உயிராபத்தை ஏற்படுத்தி விடும். Baby (Representational Image) 'ORS'-க்கு மாற்றாக எப்படி மாறின இந்தப் பானங்கள்? இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் (fssai), ORS லேபிள் ஒட்டப்பட்ட இந்த சர்க்கரை பானங்களை குடிக்கும் பானங்கள் என்கிற அடிப்படையில் உரிமம் பெற்று, விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில், இவை மெள்ள மெள்ள ORS கரைசலுக்கு மாற்றாக மாறியிருக்கிறது. இந்த பானங்கள், மருந்தகங்களில் விற்கப்படுகிற ORS கரைசல் பாக்கெட்டைவிட விலை குறைவாக இருப்பதாலும், அவற்றை விற்கும்போது லாபம் அதிகமாக கிடைப்பதாலும், ORS லேபிள் ஒட்டிய பானங்களை விற்பதற்கு வியாபாரிகள் முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். இந்த பிரச்னை இந்தியா முழுக்க இருக்கிறது. மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை கவனித்து, சட்டப் போராட்டம் நடத்திய டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் அவர்களும் சரி, மற்ற குழந்தைகள் நல மருத்துவர்களும் சரி என்ன சொல்கிறார்கள் என்றால், 'இந்தப் போலி ORS கரைசல் கொடுத்த குழந்தைகளுக்கு பேதி நிற்காமல் இன்னும் அதிகமாகி உயிரிழப்பு ஏற்படலாம். தவிர, சிறு வயதிலேயே நீரிழிவு வந்த குழந்தைகளுக்கு இந்த போலி ORS கரைசலை கொடுக்கும்போது அந்தப் பிரச்னை அதிகமாகி, அதனாலும் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது' என்கிறார்கள். ஏற்கெனவே வயிற்றுப்போக்கால் இறந்துகொண்டிருக்கிற நம் குழந்தைகளுக்கு சரியான தீர்வு கொடுக்காமல் இருப்பதோடு, அந்த குழந்தைகளுக்கு இன்னும் உயிராபத்தை ஏற்படுத்துகிற போலி ORS பானங்களை விற்பனை செய்வது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்துகிறது. சர்க்கரை பானங்கள் இனி செய்ய வேண்டும்? டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் தொடர்ந்து போராடியதன் காரணமாக ஒரு தற்காலிக வெற்றி கிடைத்திருக்கிறது. என்றாலும், இந்திய உணவுக் கட்டுப்பாடு நிறுவனமும் சரி, நம்முடைய ஆரோக்கியத்துக்கு பாதுகாவலனாக இருக்கிற சுகாதார அமைச்சகமும் சரி, குழந்தைகளின் உயிர்காக்கும் பிரச்னையாக இதை அணுகி, இனி எக்காலத்திலும் சர்க்கரை பானங்கள் ORS லேபிளுடன் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவிர, தற்போது மார்க்கெட்டில் இருக்கிற பானங்களின் மேல் ஒட்டப்பட்டிருக்கிற ORS லேபிளை உரித்து எடுக்கவும் அறிவுறுத்த வேண்டும். Thyroid: தைராய்டு இருந்தா முட்டைகோஸ் சாப்பிடக்கூடாதா..? பேசுகிறேன்-13 எத்தனை பெரிய கொடுமை? நல்ல உடல் நிலையுடன் இருப்பவர்களே இதுபோன்ற பானங்களை தவிர்க்க வேண்டும் என்றால், ஏற்கெனவே வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற குழந்தைகளுக்கு இந்த போலி ORS கரைசலைக் கொடுப்பது எத்தனை பெரிய கொடுமை? அதை வெளியுலகத்துக்கு எடுத்துச்சொன்ன, சர்க்கரை பானங்களின் மேல் ORS லேபிள் ஒட்டக்கூடாது என்று போராடி அதில் வெற்றிபெற்ற டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷுக்கும், அவருடன் இணைந்து போராடிய மருத்துவர்களுக்கும், இந்தியாவில் இருக்கிற அனைத்து மருத்துவர்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். 'ORS' லேபிள் ஒட்டுவதற்கு எதிராகப் போராடி வென்ற பெண் டாக்டர்; அதிர்ச்சியான காரணம் இதோ! போலி ORS பானங்கள் கடைகளில், இதுபோன்ற பானங்களைக் கொடுத்தால், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த ORS கரைசல் பாக்கெட்டைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்குங்கள. உங்கள் குழந்தை வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் இதை மட்டுமே கொடுங்கள். இதுதொடர்பான விழிப்புணர்வை இந்தியா முழுக்க ஏற்படுத்த வேண்டும்! இந்தப் போலி ORS பானங்கள் நகரங்களில் இருந்து கிராமங்களுக்குச் சென்று, இதுபற்றி தெரியாதவர்களின் குழந்தைகளை பாதிப்பதற்குள் இதுதொடர்பான விழிப்புணர்வை இந்தியா முழுக்க ஏற்படுத்த வேண்டும். அதை உடனடியாக செய்ய வேண்டும். இந்தக் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது'' என்கிறார் டாக்டர் பாசுமணி.
Doctor Vikatan: கர்ப்பகால நீரிழிவு, தானாகச் சரியாகிவிடுமா? தாய்ப்பால் வழியே சர்க்கரை பரவுமா?
Doctor Vikatan: நான் இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு கர்ப்பமானதுமே சுகர் வந்துவிட்டது. இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு வருகிறேன. இந்த வகை நீரிழிவு, பிரசவத்துக்குப் பிறகு தானாகச சரியாகிவிடும் என்கிறார்கள். அது உண்மையா, குழந்தை பிறந்தால் நான் தாய்ப்பால் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீரிழிவு உள்ள அம்மாக்கள் குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். கர்ப்பகால நீரிழிவு என்பது பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு தானாக சரியாகிவிடும். ஆனால், அது பிற்காலத்தில் நீரிழிவாக மாறாமல் இருக்க, இப்போதிலிருந்தே கவனமாக இருக்கவும். நீரிழிவு பாதிப்பு என்பது தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒருபோதும் தடையாக அமைவதில்லை. தாய்க்கு நீரிழிவு இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு அந்த பாதிப்பு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. நீரிழிவு உள்ள அம்மாக்களின் ரத்தச் சக்கரை அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கத் தொடங்கும். அதாவது, தாய்ப்பால் குடிப்பதால் குழந்தையின் குளுக்கோஸ் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். அதன் விளைவாக அந்தக் குழந்தைக்கு இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கத் தொடங்கும். தாய்ப்பால் (breastfeed) குழந்தைக்கு இன்சுலின் சுரப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்போது குழந்தை பிறந்து வெளியே வந்ததும் அதற்கு ரத்தச் சர்க்கரை அளவானது குறையத் தொடங்கும். எனவே, குழந்தை பிறந்ததும் தாய்க்கு நீரிழிவு இருந்தாலும் அடிக்கடி அதற்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது அவசியம். இதன் மூலம் குழந்தைக்கு ஹைப்போகிளைசிமியா எனப்படும் தாழ சர்க்கரை நிலை ஏற்படுவது தவிர்க்கப்படும். எனவே, நீரிழிவு உள்ள அம்மாக்கள் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கு நீரிழிவு வந்துவிடும் என பயப்படத் தேவையில்லை. நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதற்கான அலாரமாக இதை எடுத்துக் கொள்ளவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். `தூங்கும் முன் வெளிச்சத்தைத் தவிர்த்தால் கர்ப்பகால நீரிழிவு குறையும்’ - ஆய்வில் தகவல்!
சைனஸ் முதல் மைக்ரேன் வரை; மரு.சிவராமன் சொல்லும் தீர்வுகள்!
’’உண்மையில் ஒரு மருத்துவருக்குத் தலைவலி தரும் விஷயம் என்ன தெரியுமா? தலைவலிக்குக் காரணம் தேடுவது. ஏனென்றால், தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு’’ என்கிற சித்த மருத்துவர் கு.சிவராமன், சைனஸ் தலைவலி முதல் ஒற்றைத்தலைவலி எனப்படும் மைக்ரேன் வரைக்குமான காரணங்கள் மற்றும் தீர்வுகளைச் சொல்கிறார். தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள் சில தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள் சில... * 6-7 மணி நேரமாவது தடை இல்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது... * ஷிப்ட் முறை வேலையால் சீரான நேரத்தில் தூங்க இயலாமல் நேரம் தவறித் தூங்கும்போது... * காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது... * தொல்பொருள் ஆய்வாளரிடம் சிக்கிய ஓலைச்சுவடிபோல, பர்ஸில் வைத்திருக்கும் 15 வருடங்களுக்கு முந்தைய பிரிஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும்போது... * சிங்கப்பூரில் சீப்பாகக் கிடைக்கும் என வாங்கி வந்து பரிசளிக்கப்பட்ட சென்ட்டை கக்கத்திலும் கைக்குட்டையிலும் விசிறிக்கொள்ளும்போது... தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள் சில... * ஊட்டி, கொடைக்கானல் ஊர்சுற்றலில், பெட்டிக்கடைகளில் மலிவான விலையில் விற்கப்படும் குளிர்கண்ணாடிகளை குஷியாக வாங்கி மாட்டிக்கொண்டு உலவும்போது... * பாராட்டாகக் கொஞ்சம் புன்னகை, பரவசப்படுத்தும் உச்சி முத்தம், பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தும் அரவணைப்பு... இவை எதுவும் எப்போதுமே கிடைக்காதபோது... தலைவலி தவிர்க்க... மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் பெண்களுக்கும் அதிகம். இதற்கு மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய ’நீர்க்கோவை’ மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால் தலைவலி காணாமல் போகும். அதோடு, நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகுக் கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும். தலைவலி தவிர்க்க... சைனசைடிஸ் தலைவலி சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சீந்தில் சூரணம் முதலான ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன. சீந்தில் கொடியை 'சித்த மருத்துவத்தின் மகுடம்' எனலாம். நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகத்தை வீங்க வைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது. சுக்குத் தைலம் சைனசைட்டிஸோ, மைக்ரேன் தலைவலியோ... வாரம் இருமுறை சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், வலி மெள்ள மெள்ள மறையும். மைக்ரேன் எனும் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. இந்த வலி வராமலிருக்க, இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டி மருத்துவம் இருக்கிறது. இஞ்சியை மேல் தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து, தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல். மைக்ரேன் எனும் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. அஜீரணத் தலைவலி இஞ்சி, சீரகம், இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை டீஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும். மைக்ரேன் தலைவலி க்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹை ட்ரேஸ் (High Trace) மினரல்ஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும். வெளிநாட்டவர்கள் கொண்டாடும் மண்... தலை முதல் பாதம் வரை நல்லது! சொல்கிறது நம் இயற்கை மருத்துவம்..! சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலி சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, 'திருவள்ளுவ மாலை' எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது, சாப்பிடவும் வேண்டும். ஹேங் ஓவர் தலைவலிக்கு... அஜீரணத் தலைவலி மற்றும் இரவெல்லாம் ’மப்பேறி' மறுநாள் வரும் ஹேங் ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து, தலைவலி போகும். மொட்டை போட்டால் இளநரை போகுமா ?
இதற்காகவெல்லாம் உங்கள் தாம்பத்திய இன்பத்தை இழக்காதீர்கள்! | காமத்துக்கு மரியாதை -263
''மிகவும் சின்ன விஷயமாக இருக்கும். ஆனால், மனம் விட்டுப் பேசாததால் கணவன் - மனைவிக்கு இடையே அது மிகப்பெரிய பிரச்னையாக மாறி நிற்கும். அப்படியொரு பிரச்னையுடன் தான் அந்த தம்பதியினர் என்னை சந்திக்க வந்திருந்தார்கள். கணவர், 'எங்களோட செக்ஸுவல் லைஃப் திருப்தியா இல்ல' என்றார். மனைவியோ, 'இவர் எனக்கு துரோகம் பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு' என்றார். இருவரிடமும் தனித்தனியாக பேசினேன்'' என்றபடி, பேச ஆரம்பித்தார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். தாம்பத்தியம் ஒருசிலருடைய செக்ஸுவல் லைஃபில் இந்தப் பிரச்னை இருக்கிறது என்றால்... ''கணவர், 'எங்களோட செக்ஸுவல் லைஃப் திருப்தியா இல்ல' என்று சொன்னதற்கு, பல மனைவிகள் தயங்குகிற 'நியூட் செக்ஸ்'தான் காரணம். 'எங்களுக்குள்ள செக்ஸ் நடக்குது. ஆனா, அதுல ஒரு முழுமையே இல்ல. அவங்க தன்னை ரொம்ப மறைச்சி மறைச்சி வெச்சுக்கிறாங்க. ஆர்கசம் கிடைக்குது. ஆனா, என் மனைவி எப்படி இருப்பாங்கன்னு நான் முழுமையா பார்த்ததே இல்ல' என்று வருத்தப்பட்டார். அந்தக் காலத்தில், கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தபோது இந்தக் காரணத்தால், பல கணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தனிக்குடித்தனம் அல்லது தங்களுக்கென தனியாக ஒரு படுக்கையறை கொண்ட வாழ்க்கை முறை வந்தப் பிறகு, இந்தப் பிரச்னை பெரும்பாலும் குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியும் ஒருசிலருடைய செக்ஸுவல் லைஃபில் இந்தப் பிரச்னை இருக்கிறது என்றால், அதற்கு வேறு ஏதேனும் தான் காரணமாக இருக்க வேண்டும். கணவன், மனைவி இருவருக்குமே உதவும் வைப்ரேட்டர் காண்டம்! - காமத்துக்கு மரியாதை 261 தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இருந்தார். அடுத்து அவருடைய மனைவியிடம் பேசினேன். மற்றப் பெண்களைவிட தன்னுடைய மார்பக அளவு சிறியதாக இருக்கிறது என்கிற தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இருந்தார். அதனால்தான், நியூட் செக்ஸுக்கு அவர் மறுத்தே வந்திருக்கிறார். கணவர் அதற்கு முயற்சி செய்தாலும், அவருடைய கையை தட்டி விடுவது; தன்னுடைய கைகளால் உடலை மறைத்துக்கொள்வது என்று இருந்திருக்கிறார். இந்தக் காரணத்தால்தான், 'கணவர் வேறு யாருடனாவது உறவு வைத்துக்கொள்வாரோ' என்கிற பயத்தில் 'இவர் எனக்கு துரோகம் பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு' என்று சொல்லியிருக்கிறார். சுகப்பிரசவம்; சிசேரியன் - எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262 அளவு ஒரு விஷயமே கிடையாது. இருவருடைய பிரச்னைகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கவுன்சலிங் கொடுத்தேன். அளவு ஒரு விஷயமே கிடையாது. உன் மேல் எனக்கு இருக்கிற காதலை மட்டும் பார். என்னுடைய ஆசைகளை உன்னைத் தவிர வேறு யாரிடம் நான் கேட்க முடியும்? உன்னிடத்தில் இன்னொரு பெண்ணை நான் கனவிலும் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று கணவர் தன் மனைவியிடம் தன்னைப் புரிய வைத்தார். அந்தப் பெண்ணின் முகத்திலும் ஒரு தெளிவு வந்தது. இந்தப் பெண்ணைப்போலவே ஆண்களும் தங்கள் உறுப்பின் அளவு குறித்த தாழ்வு மனப்பான்மையால் திருமணத்தையோ அல்லது தாம்பத்திய உறவையோ தவிர்த்து வருவார்கள். இதுவும் அவசியமே இல்லாததுதான். ஒரு கவுன்சலிங் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுதல் மூலமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடித்துவிட முடியும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: விருந்துக்குப் பிறகு பீடா சாப்பிடும் வழக்கம், செரிமானத்துக்கு நல்லதா?
Doctor Vikatan: என் கணவருக்கு அடிக்கடி பீடா சாப்பிடும் பழக்கம் உள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் சாப்பிடும்போது அங்கே விற்கப்படும் ஸ்வீட் பீடாவை தவறாமல் வாங்கிச் சாப்பிடுகிறார். “பீடா வேண்டாம், வெற்றிலை–பாக்கு போடுங்கள்” என்றால் கேட்க மறுக்கிறார். “செரிமானத்துக்கானதுதானே… ஒன்றும் செய்யாது” என்கிறார். அவர் சொல்வது சரிதானா? பதில் சொல்கிறார்: சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்ததாக இருக்கிறது ஸ்வீட் பீடா. ஆனால் ஸ்வீட் பீடாவில் கலோரிகள் மிக அதிகம். என்றாவது ஒருநாள் ஒரு மாற்றத்திற்காக அதைச் சாப்பிடுவதில் தவறில்லை. சாப்பாட்டுக்குப் பிறகு அது வாயில் ஏற்படுத்தும் நல்ல மணமும் ருசியும் அலாதியானது. சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை-பாக்கு போடும் பழக்கம் நம் முன்னோர்களிடமும் இருந்தது. செரிமானத்துக்காக அவர்கள் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். பிரசவமான பெண்களுக்கு முதல் 40 நாள்கள் வரை வெற்றிலை கொடுப்பதும் இப்போதும் சில இடங்களில் வழக்கத்தில் உள்ளது. குழந்தை பெற்ற பெண்களின் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கச் செய்வதற்காக அது செய்யப்படுகிறது. சமீப காலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு காம்பினேஷனின் அளவு சரியாகப் பின்பற்றப் படுவதில்லை. இந்த மூன்றில் எதன் அளவு அதிகமானாலும் அது உணவுக்குழாயில் எரிச்சலையும், வாய்ப்புண்ணையும் ஏற்படுத்திவிடும். ஆனால், சமீப காலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு காம்பினேஷனின் அளவு சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்த மூன்றில் எதன் அளவு அதிகமானாலும் அது உணவுக்குழாயில் எரிச்சலையும், வாய்ப்புண்ணையும் ஏற்படுத்திவிடும். வெற்றிலை நல்லதுதான் என்றாலும் தினமும் எடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது. அதேபோல இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பீடாவும் அடிக்கடி சாப்பிட உகந்தது அல்ல. அது பழக்கமாக மாறிவிடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நுரையீரல் அடைப்பு, மூச்சுத்திணறல்... புகை, பாக்கு பழக்கங்கள் காரணமாகுமா?
தயிர் முதல் அருகம்புல் சாறு வரை பொடுகுத் தொல்லை தீர டிப்ஸ்!
வயது வித்தியாசமில்லாமல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலைபோகிற ஒரு பிரச்னை பொடுகுதான். பொடுகு ஏன் ஏற்படுகிறது, இதற்கான வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் ஏதும் உள்ளதா என சொல்கிறார் சித்த மருத்துவர் முகமது மாலிக். பொடுகுப் பிரச்னை, குளிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், அதிகப்படியான வியர்வை காரணமாக இந்தியாவில் கோடைகாலத்திலும் அரிப்பு ஏற்பட்டு, பொடுகுத் தொல்லை வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆரம்பகாலத்தில் வரும் பொடுகுகள் வெள்ளை நிறத்திலும், முற்றிய நிலைகளில் மஞ்சள் நிறத்திலும் சில நேரங்களில் சிவப்பு நிறத்திலும்கூட இருக்கும். பொடுகுத் தொல்லை தீர டிப்ஸ்! பொடுகு வந்தால், முகத்தில் பருக்கள் வரலாம். பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், முடி உதிர்வதுடன் அரிப்பும் ஏற்படலாம். தலையில் பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்தும் சீப்பு மற்றும் துணிகளைப் பயன்படுத்தினால் பொடுகு வரும். பொடுகு போயே போச்! * கைப்பிடி அளவு வேப்பங்கொழுந்தை நீரில் கழுவி, விழுதாக அரைத்து, குளிக்கும் முன்பு தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு வாளி தண்ணீரில் இரண்டு எலுமிச்சை பழச்சாறைக் கலந்து, அந்த நீரில் குளித்தால் பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். Hair Care Health: உங்க தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு எது? கண்டுபிடிக்கலாம் வாங்க! * தலையில் அதிக எண்ணெய்ப் பசையுடன், பொடுகுத் தொல்லையும் இருந்தால் முடி உதிரலாம். இந்தப் பிரச்னைக்கு குளிக்கும் முன்பு தயிர் அல்லது மோரினை தலையில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊறிய பிறகு குளித்தால், எண்ணெய்ப்பசை நீங்கும். முடியும் வலுவாகிப் பளபளப்பு கூடும். * மஞ்சள்தூளை, தண்ணீரில் கலந்தோ அல்லது, ஷாம்பூவுடன் கலந்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம். * அருகம்புல் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து மணல் போன்று வருமாறு நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை குளிரவைத்து, இரண்டு நாட்களுக்கு வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து தலைக்குப் பயன்படுத்தலாம். Beauty: வெண்ணெய் முதல் சந்தனத்தூள் வரை... பேரழகியாக ஜொலிக்க பியூட்டி டிப்ஸ்!
Doctor Vikatan: ஓவர்நைட் ஓட்ஸ், பாதாம், சியா சீட்ஸ் காம்போ - ஆரோக்கியமான காலை உணவா?
Doctor Vikatan: நான் தினமும் இரவில் ஆர்கானிக் ஓட்ஸ், சியா சீட்ஸ் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, மறுநாளுக்கு காலை உணவாக எடுத்துக்கொள்கிறேன். காலையில் அத்துடன் சிறிது தேனும் கலந்துகொள்கிறேன். இது சத்தான உணவா, இதனால் ஆரோக்கியம் கிடைக்குமா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஓட்ஸை இரவில் ஊறவைத்து மறுநாள் சாப்பிடும் 'ஓவர்நைட் ஓட்ஸ்' மிகவும் ஆரோக்கியமானது. அதில் நார்ச்சத்து மிக அதிகம் என்பது முக்கியமான காரணம். கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகளில் ஓட்ஸும் முக்கியமானது. அதிலுள்ள பீட்டா குளுக்கன், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். அதன் மூலம் இதயநலன் உறுதிசெய்யப்படுகிறது. சிலவகை கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டால், உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அது நீரிழிவு பாதிப்பு உள்ளோருக்கு நல்லதல்ல. ஓட்ஸ் உணவுகளைச் சாப்பிடும்போது அந்தப் பிரச்னை வருவதில்லை. சியா சீட்ஸ் என்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள விதை. அது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவக்கூடியது. இதிலும் நார்ச்சத்து மிக அதிகம். சியா சீட்ஸில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் மிக அதிகம். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது. பாதாம், சியா சீட்ஸ் போன்றவற்றை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அவை ஊறிப் பெரிதாகும். அவற்றைச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். நீண்ட நேரத்துக்குப் பசி எடுக்காது. மலச்சிக்கல் பிரச்னை வராமலும் தடுக்கும். சியா சீட்ஸ் என்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள விதை. மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவக்கூடியது. Doctor Vikatan: சியா சீட்ஸ், சப்ஜா சீட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? ஆக, ஓட்ஸ், பாதாம், சியா சீட்ஸ் என்ற காம்பினேஷன் உண்மையிலேயே மிக ஆரோக்கியமானது. செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் வைத்திருக்கும். முழுமையான சத்துகளைக் கொடுக்கும். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் நல்ல சாய்ஸ். சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது, உடனடியாக எனர்ஜி கிடைத்தது போல உணர்வீர்கள். சிறிது நேரத்தில், எனர்ஜி குறைந்தது போல ஆகிவிடும். ஆனால், இந்த ஓட்ஸ்-நட்ஸ் காம்போவில் அந்தப் பிரச்னை இருக்காது. இந்த உணவில் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். அது உடல் பலவீனம் இல்லாமல் வைத்திருக்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் தேன் கலந்தும் சாப்பிடலாம். உங்களுக்கு நீரிழிவு இருந்தாலோ, எடையைக் குறைக்க வேண்டும் என்றாலோ, தேன் உள்ளிட்ட எந்த இனிப்பையும் தவிர்ப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Pink October: தயக்கத்தையும் கூச்சத்தையும் தள்ளி வையுங்கள்; மார்பகப் புற்றுநோயையும் தள்ளி வைக்கலாம்!
பெண்களுக்கு ஏற்படுகின்ற புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அதைப் பற்றி பேசுவதற்கு பெண்கள் கூச்சப்படுவதாலும், இன்று மார்பகப் புற்றுநோயால் இறக்கும் பெண்களின் விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மார்பகப் புற்றுநோய் மாதம் (பிங்க் அக்டோபர்) அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலக சுகாதார அமைப்பு இந்த வருட தீமாக 'ஒவ்வொரு கதையும் தனித்துவமானது, ஒவ்வொரு பயணமும் முக்கியமானது' என்று பொருள்படும் Every Story is Unique, Every Journey Matters என்ற வாசகத்தை வெளியிட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுத் தகவல்களை நெல்லை கேன்சர் சென்டரில் பணியாற்றும் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் சாரதா அவர்களிடம் கேட்டோம். Pink October 100% குணப்படுத்தியிருக்க முடியும்! பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய்களில் தற்போது, உலக அளவிலும், இந்தியாவிலும் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் 1.5 லட்சம் பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர். அதில் 80 ஆயிரம் பேர் இறந்துவிடுகின்றனர். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால், அவர்களையெல்லாம் 100% குணப்படுத்தியிருக்க முடியும். போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால், இறுதி நிலையில்தான் வருகின்றனர். அதுவும் அதிகமாக இளம்பெண்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று வருத்தப்பட்டவர் தொடர்ந்தார். சிகிச்சைப் பற்றிய பயம் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்கு வரவே பயப்படுகின்றனர். சிகிச்சைப் பற்றி சரியான முறையில் அவர்களிடம் எடுத்துக் கூறினால், அவர்கள் நிச்சயம் சிகிச்சைக்கு வருவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வராமல் அவர்களைக் குணப்படுத்த முடியாது அல்லவா? 40 வயதில் காலடி எடுத்து வைத்தவுடன், பெண்கள் அனைவரும் கட்டாயமாக Breast Cancer Screening (Mammogram) செய்து கொள்ளவேண்டும். பிறகு, மார்பகத்தில் புற்றுநோய் இருந்தால் Bioxin Test -ம் செய்கிறோம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகம் தவிர்த்து, மார்பில் உள்ள கட்டிகளை மட்டும் நீக்கலாம். டாக்டர் சாரதா எப்படிப் பரிசோதிப்பது? பெண்கள் 20 வயதிலிருந்து மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மாதந்தோறும், மாதவிடாய் முடிந்தபின் முதல் வாரம் இதை செய்ய வேண்டும். மார்பகத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா; மார்பகத்தைத் தொட்டு ஏதேனும் திரவம் வடிகிறதா, கட்டி உள்ளதா, மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் உள்ளதா, கால்புப் பகுதியில் மாற்றம் உள்ளதா, நிணநீர் கணுக்களில் வீக்கம் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்ய வேண்டும். இதை வழக்கமாக செய்து வரும்பட்சத்தில், ஏதேனும் ஒரு நிலையில் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடித்து மருத்துவரிடம் சென்றுவிடலாம். Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? தலைமுறை தலைமுறையாக வரக்கூடியது. மார்பகத்தின் தோலில் ஏதேனும் மாற்றம் அல்லது மார்புகளில் கட்டி இருந்தால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அதை வெளியே சொல்லாமல் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். பல பெண்கள் இறப்பதற்கு இதுவே காரணம். ஒருவிதத்தில், மார்பகப் புற்றுநோய் தலைமுறையாக வரக்கூடியது. ஒரு பெண்ணின் தாய்க்கோ அல்லது அத்தைக்கோ மார்பகப் புற்றுநோய் இருந்தால், உடனே அந்தப் பெண்ணும் மார்பகப் பரிசோதனையை மருத்துவமனையில் செய்துகொள்ள வேண்டும். Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர் விளக்கம் காரணங்கள்... மார்பகப் புற்றுநோய்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. நாம் உண்ணும் உணவுகள், உடல் பருமன், மரபு, ஹார்மோன் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது ஆகியவை அவற்றில் சில. சில சமயங்களில், மார்பகப் புற்றுநோய் வருவதன் காரணம் தெரியாமலும் போகலாம். மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை, சீக்கிரம் நோயைக் கண்டுபிடிப்பதே நல்ல சிகிச்சைக்கும், அதிலிருந்து சீக்கிரம் மீள்வதற்கும் வழிவகுக்கும். அதனால், பெண்கள் சுயபரிசோதனை செய்ய பழகுங்கள். தயக்கமின்றி மருத்துவர்களை அணுகுங்கள் என்கிறார் டாக்டர் சாரதா.
Doctor Vikatan: கொட்டாவி விடும்போது மாட்டிக்கொண்ட தாடை; `ஓப்பன் லாக்'சீரியஸ் பிரச்னையா?
Doctor Vikatan: சமீபத்தில் செய்திகளில் பார்த்த ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரளாவில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு நபர், கொட்டாவி விட்டபோது, அவரது வாய்ப்பகுதி 'லாக்' ஆகிவிட்டதாகவும், பிறகு ஒரு மருத்துவர் வந்து அதைச் சரி செய்ததாகவும் பார்த்தோம். இப்படியெல்லாம் கூட நடக்குமா, இது எப்படிப்பட்ட பிரச்னை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி இந்த நிகழ்வு அடிக்கடி நடப்பது இல்லை என்றாலும், வழக்கமாகப் பார்க்கக்கூடிய விஷயம்தான். இந்தப் பிரச்னையை 'டெம்போரோமேண்டிபுலர் டிஸ்ஆர்டர்' (Temporomandibular joint disorder) என்று சொல்வோம். 'டெம்போரோமேண்டிபுலர் சப்லக்ஸேஷன்' (Temporomandibular subluxation) என்றும் சொல்வதுண்டு. நமது மண்டை ஓட்டுடன் நமது தாடை சேர்ந்து நிற்கக்கூடிய இடம்தான் டெம்போரோமேண்டிபுலர் ஜாயின்ட் எனப்படும். நம்முடைய உடலில் கை, கால் மூட்டுகள், இடுப்பு மூட்டுகள் என பல இணைப்புகள் இருப்பதைப் போல டெம்போரோமேண்டிபுலர் ஜாயின்ட் என்பதும் மிக முக்கியமான ஓர் இணைப்பு. அந்த இணைப்பு இருப்பதால்தான் நம்மால் பேச முடிகிறது, சாப்பிட முடிகிறது. வாய்வழியே செய்யக்கூடிய பல விஷயங்களையும் செய்ய முடிகிறது. கொட்டாவி Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்? டெம்போரோமேண்டிபுலர் ஜாயின்ட்டில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், உதாரணத்துக்கு, பாக்டீரியா தொற்று, தசை பலவீனம் போன்ற பாதிப்புகளில் தாடைப் பகுதி பலவீனமாக வாய்ப்புகள் உண்டு. அப்போது தாடையில் உள்ள எலும்பானது, மண்டை ஓட்டில் உள்ள சாக்கெட்டில இருந்து விலகுவதைத்தான் 'டெம்போரோமேண்டிபுலர் சப்லக்ஸேஷன்' அல்லது 'டெம்போரோமேண்டிபுலர் டிஸ்லொகேஷன்' என்று சொல்கிறோம். தோள்பட்டை இணைப்பானது சிலருக்கு நழுவிப் போவதைக் கேள்விப்பட்டிருப்போம். தோள்பட்டை இணைப்பு இறங்கிவிட்டதாகச் சொல்வதைக் கேட்டிருக்கலாம். அப்படி நழுவியதை சரிசெய்ய சிகிச்சைகள் உள்ளன. சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அப்படித்தான் டெம்போரோமேண்டிபுலர் டிஸ்ஆர்டர் பிரச்னையும். வாயைப் பெரிதாகத் திறந்து கொட்டாவி விடும்போதோ, அதிகபட்ச சோகம் அல்லது ஸ்ட்ரெஸ்ஸில் பெரிதாக அழும்போதோகூட வாய் திறந்த நிலையில் மாட்டிக் கொள்ளும். இதை 'ஓப்பன் லாக்' என்று சொல்வோம். ஸ்ட்ரெஸ் (Stress) இதற்கான சிகிச்சை மிக எளிதுதான். அடிக்கடி இந்தப் பிரச்னை வந்த அனுபவம் உள்ளவர்கள், வாயை அசைத்து அசைத்து தானாகவே சரி செய்து கொண்டு விடுவார்கள். முதல்முறை வரும்போது சிலருக்கு இதை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல் இருக்கும். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவை. ரொம்பவும் பெரிதாக கொட்டாவி விடாமல் பார்த்துக்கொள்வது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக்கொள்வது, தசைகளில் பலவீனம் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவை இந்த விஷயத்தில் முக்கியம். மற்றபடி, இது பெரிய அளவில் பயப்படக்கூடிய பிரச்னை எல்லாம் இல்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சுத்திணறலுக்கு உடனடி தீர்வளிக்குமா தாளிசாதி எனும் சித்த மருந்து?
இந்த சிம்பிள் டிப்ஸ் மழைக்காலத்துல நம்மை ஆரோக்கியமா வெச்சுக்கும்!
மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம், காய்ச்சல் போன்ற தொல்லைகள் வருவது இயல்பே. இந்தப் பிரச்னைகளுக்கு நம் வீட்டுச் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியிலேயே மருந்து இருக்கிறது என்கிறார் கன்யாகுமரியைச் சேர்ந்தவரும் மணிப்பால் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியருமான சித்த மருத்துவர் அருள் அமுதன். அவர் தரும் கை வைத்தியக் குறிப்புகள் இங்கே. மழை. ``சித்தர்கள் ஒரு வருடத்தை கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என்று 6 பருவங்களாகப் (Seasons) பிரித்துள்ளனர். இயற்கையின் இந்தக் காலமாற்றத்துக்கு ஏற்ப நம்மைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் அவர்கள் விரிவாகச் சொல்லிச் சென்றுள்ளனர். இந்த வழிமுறைகளை நாம் பின்பற்ற ஆரம்பித்தால் மழையோ, குளிரோ, வெயிலோ நம்மை எதுவும் செய்துவிடாது. மாயம் செய்யும் மூன்று! வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உயிர்த்தாதுகளும் மனித உடலுக்குள் உண்டு. இந்த மூன்றும் தன் அளவைவிட மிகுந்தாலோ, குறைந்தாலோ நோய் வரும். இதைப் போலவே பூமிக்கும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றும் உண்டு. குறிப்பாக, மழைக்காலங்களில் (கார்காலம், கூதிர்காலம்), பூமியின் கபம் அதிகரிக்கும், பித்தம் குறையும். மழைக்காலத்தைத் தொடர்ந்து வரும் குளிர் அல்லது பனிக்காலத்தில், (முன்பனிக்காலம், பின் பனிக்காலம்) கபத்துடன், வாதமும் சேர்ந்து அதிகரிக்கும். இந்த அதிகரிப்புதான் மனிதனுக்குள்ளும் கபத்தன்மையையும் வாதத்தன்மையையும் அதிகரித்து இந்தக் காலகட்டங்களில் குறிப்பிட்ட நோய்களைத் தருகின்றன. குறிப்பாக, பூமியின் கபத்தன்மை அதிகரிப்பதால், பல கிருமிகள் பெருகி வாழும். இவை நமக்கு நோய்களை ஏற்படுத்தும். இந்தக் காலம் மாறிவிட்டால் இந்நோய்களும் தானாகக் காணாமல் போய்விடும். இந்தக் காலகட்டத்தில், நம்மை எப்படி நாம் பாதுகாத்துக்கொள்கிறோம் என்பதுதான் நம் கண்முன் இருக்கும் சவாலே. சித்த மருத்துவம் கபமா, வாதமா? உடல் அறிகுறிகளே காட்டிக்கொடுத்துவிடும்! மழை மற்றும் குளிர்காலங்களில் கபம் அதிகரிக்கும்போது சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தலைபாரம், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற தொல்லைகள் வரும். வாதம் அதிகரிக்கும்போது சிலருக்குக் கை கால்வலி, தோல் வறட்சி, நரம்பு - எலும்பு வலிகளும் உண்டாகும். மேற்சொன்ன இந்த அறிகுறிகளிலிருந்து நமக்கு வந்திருக்கும் பிரச்னை கபத்தினாலா, வாதத்தினாலா என்பதைப் பகுத்தறிய முடியும். கபத்தை அதிகரிக்கும் உணவுகளுக்கு `நோ' சொல்லுங்கள்! வெளியிலிருந்து, அதாவது பூமியிலிருந்து நம்மை தாக்கும் கபத்திலிருந்து நம்மை பாதுகாக்க கபத்தை குறைக்கும் உணவு, மூலிகைகள் மற்றும் வாழ்வுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உடலைக் குளிர்வித்து கபத்தை அதிகரிக்கும் நீர்ச்சத்து அதிகமாக உள்ள வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், இளநீர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மிகக் குறிப்பாக, ஐஸ்க்ரீம் போன்ற உணவுப் பண்டங்களை இந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதேபோல இனிப்புச் சுவையுள்ள உணவுப் பண்டங்கள் கபத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது சாலச் சிறந்தது. சளித்தொல்லை கபத்தைக் குறைக்க எவற்றை உண்ணலாம்? உடலின் வெப்பத்தை அதிகரித்து, கபத்தைக் குறைக்கக்கூடிய கத்திரிக்காய், வழுதனங்காய் (நீண்ட பச்சை கத்திரிக்காய்), சுண்டைக்காய், மணத்தக்காளி, நார்த்தங்காய், வெற்றிலை, தூதுவளை போன்ற வெப்பத்தை அதிகரிக்கும் காய்கறிகளை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ரசம் என்னும் பேரமுதம்! இந்த மழை மற்றும் குளிர்காலத்தில் தினமும் கண்டிப்பாக ரசம் வைத்து உண்ண வேண்டும். குறுமிளகு (நல்ல மிளகு), மஞ்சள், பெருங்காயம், சுக்கு, வெந்தயம், சின்ன வெங்காயம் போன்றவை ரசத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும். நம் வீட்டின் சமையலறையிலும், அஞ்சறைப் பெட்டியிலும் இருக்கும் இந்த மருந்துப் பொருள்கள் மூலம் செய்யப்படும் ரசம் நிச்சயம் மனதையும் உடலையும் இதமாக்கும். நீங்கள் எப்போதும் வைக்கும் ரசத்தில் வெற்றிலையை நறுக்கிச் சேர்த்தால் அது வெற்றிலை ரசமாகிவிடும். இந்த வெற்றிலை ஒரு நல்ல மருந்து. சளி சுரப்பதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிலைக்கு நிகர் வெற்றிலைதான். ரசம் துளசி ரசமும் சூப்பர்தான்! எப்படி வெற்றிலை சளி சுரப்பைக் கட்டுப்படுத்துமோ அதேபோல, உருவாகும் சளியை வெளியே தள்ளுவதில் துளசி சிறந்தது. எனவே, சளிப்பிடித்தவர்கள் வெற்றிலை ரசத்தைச் சாப்பிடுவது போலவே துளசியையும் ரசமாகச் செய்து பருகலாம். அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். ரசமாகப் பருக விருப்ப மில்லை எனில், தேநீர் தயாரிக்கும்போது துளசியையும் சேர்த்துத் தேநீர் தயாரித்துப் பருகலாம். சளியை அண்டவிடாமல் செய்யும் காயகல்ப மூலிகை! மழைக்காலத்தில் நீங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒரு மூலிகை தூதுவளை. இந்தத் தூதுவளைக் கீரையைச் சட்னி செய்து சாப்பிடலாம். அல்லது தூதுவளையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராகவும் பயன்படுத்தலாம். இதை நீங்கள் உணவில் சேர்த்து வரவர சளி உங்கள் பக்கம் வரவே வராது. சித்த மருத்துவ மூலிகைகளான தூதுவளை, கண்டங்கத்திரியால் செய்யப்பட்ட பொடிகள், லேகியங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவையும் மழை மற்றும் குளிர் காலங்களில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நொச்சி Health : மழைக்காலத்தில் அச்சுறுத்தும் கொசுத்தொல்லை; இயற்கை முறையில் விரட்டுவதெப்படி? நொச்சி இலையை மறக்காதீங்க! மழை மற்றும் குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம் போன்றவையும் கூடவே வந்துவிடும். இவற்றைச் சரிசெய்யவும் ஓர் இயற்கை வழி இருக்கிறது. நாட்டுமருந்துக் கடைகளில் நொச்சி இலை கிடைக்கும். இதை வாங்கி நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, ஆவி (வேது) பிடிக்க வேண்டும். இந்த நொச்சி இலை கிடைக்கவில்லையென்றாலும் கவலை வேண்டாம். வெறும் நீரில் உப்புபோட்டுக் கொதிக்க வைத்து அதில் ஆவிபிடிக்கலாம். இது நுரையீரல் மற்றும் மூக்கின் பக்கத்திலுள்ள சைனஸ் அறைகளில் உள்ள சளியைக் கரைத்து வெளியேற்றும். அங்கே நுழைந்துள்ள கிருமிகளையும் கொல்லும். Health: மழை & குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா? மூக்கடைப்பை விரட்டும் மஞ்சள், மிளகு வைத்தியம்! மழை மற்றும் குளிர்காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இதை விரட்டவும் எளிமையான ஒரு வழி இருக்கிறது. உலர்ந்த மஞ்சள் கொம்பு ஒன்றை எடுத்து அதை அடுப்பில் காட்டி எரியவிடுங்கள். பின்னர், அதிலுள்ள தீயை அணைத்தால் ஏற்படும் புகையை சுவாசியுங்கள். இவ்வாறு செய்யும்போது மூக்கடைப்பு அகலும். அதுமட்டுமல்லாமல் கிருமிகளை அழித்து மூக்கு, சைனஸ் அறைகள் மற்றும் நுரையீரலைச் சுத்தமாக வைத்திருக்கவும் இது உதவும். மூக்கு முற்றிலும் அடைத்துவிட்டாலும் கவலை வேண்டாம். குறுமிளகு என்று சொல்லக்கூடிய நல்ல மிளகை ஊசியில்குத்தி, நெருப்பில்காட்டி, பின்னர் அதிலிருந்து எழும் புகையை சுவாசிக்க சளியால் அடைத்த மூக்கை உடனே திறக்கும். சுக்குமல்லி காபி சுகம் தரும் சுக்குமல்லி காபி சுக்கு, மல்லி விதை (தனியா) ஆகியவற்றுடன் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுக்குமல்லி காபியைத் தயாரிக்கலாம். நீங்கள் வழக்கமாகப் பருகும் டீ, காபிக்கு பதிலாக இந்தச் சுக்குமல்லி காபியை எத்தனை முறை வேண்டு மானாலும் குடிக்கலாம். குறிப்பாக, காலையில் எழுந்து பல் துலக்கிய உடனே வெந்நீர் அல்லது மேலே சொன்ன சுக்கு மல்லி காபியை அருந்தி சுகம் பெறலாம். காய்ச்சல் வராமல் இருக்க உதவும் தடுப்பு மருந்து! நிலவேம்புக் குடிநீர் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துவதோடு காய்ச்சலைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் தடுப்பு மருந்தாகவும் இது திறம்படச் செயலாற்றும் தன்மை கொண்டது. நிலவேம்புக் குடிநீர் காய்ச்சலுக்குக் கைவைத்தியம் என்ன? காய்ச்சல் வந்துவிட்டால் சுக்கு, குறுமிளகு, மல்லி (தனியா), துளசி, வெற்றிலை போன்றவற்றை நீர் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி குடித்தால் வியர்வை வெளியேறி காய்ச்சல் மற்றும் சளி தீரும். மூன்று நாள்களுக்கு மேல் கைவைத்தியம் வேண்டாம்! பொதுவாக எந்த மிதமான நோய்களுக்கும் மூன்று நாள்கள் கைவைத்தியம் பார்க்கலாம். அதற்குப் பிறகும் காய்ச்சல், சளி குறையாவிட்டால், உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். ஏனென்றால் இந்தக் காலகட்டத்தில் டெங்கு, சிக்கன்குனியா, டைபாய்டு, மலேரியா, கோவிட் தொற்று மற்றும் வைரல் காய்ச்சல்கள் எனப் பல வகையான நோய்கள் நம்மை அச்சுறுத்தி வருவதால் நோயைச் சரியாகக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டியது மிகமிக அவசியம்'' என்கிறார் மருத்துவர் அருள் அமுதன். எல்லா பருவ காலத்திலும் ஆரோக்கியமாக இருப்போம்..!

25 C