SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

Doctor Vikatan: ஆணுறுப்பின் முன்தோல் நீக்கம்... குழந்தைகளுக்கு ஏன் அவசியம்?

Doctor Vikatan: என் நண்பன், தன் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளான். குழந்தைப்பருவத்திலேயே அதைச் செய்வது பிற்காலத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமானது என்றும் சொல்கிறான்.  குழந்தைகளுக்கு ஆணுறுப்பில் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை செய்வது அவசியமா.... பிரச்னை வந்தால் செய்தால் போதாதா? பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மருத்துவர் சஃபி   நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி ஆணுறுப்பின் முன்தோல் நீக்குவது என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. முன்தோல் இருப்பது ஆரோக்கியமற்றது என்பதிலும் முன்தோலை நீக்குவது ஆரோக்கியமானது என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆணுறுப்பின் முன்னுள்ள தோல் பகுதியை மருத்துவத்தில் 'rudimentary organ' என்று சொல்வோம். அதாவது காலப்போக்கில் செயலிழந்தது என்று அர்த்தம் கொள்ளலாம்.  குடல்வால் எனச் சொல்லப்படும் அப்பெண்டிக்ஸ்கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். இப்படிப்பட்ட உறுப்புகளால் நம் உடலில் எந்தச் செயலும் நடப்பதில்லை. அப்படித்தான் ஆணுறுப்பின் முன்தோலும் அவசியமில்லாத ஒன்று. 'பைமோசிஸ்' (phimosis) என்ற நிலை உள்ள ஆண் குழந்தைகளுக்கு அதை நீக்க வேண்டியிருக்கும். அதாவது அந்தத் தோல் பகுதியை, பின்னோக்கி இழுக்க முடியாத நிலை இது. ஆண் குழந்தைகள் சிலருக்கு ஆணுறுப்பின் முன்தோல் பகுதியானது ஒட்டிக்கொண்டது போலிருக்கும்.  ஆண் குழந்தைகள் சிலருக்கு ஆணுறுப்பின் முன்தோல் பகுதியானது ஒட்டிக்கொண்டது போலிருக்கும். Doctor Vikatan: குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் - வீட்டு வைத்தியங்களைச் செய்யலாமா? இப்படிப்பட்ட நிலையிலும் அந்தக் குழந்தைகளுக்கு முன்தோல் நீக்கம் செய்வது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆணுறுப்பின் முன்தோலில் இன்ஃபெக்ஷன் வரும் வாய்ப்புகள் உண்டு. முன்தோலை நீக்குவதன் (circumcision) மூலம் இந்தத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். பொதுவாகவே ஆண்களுக்கு ஆணுறுப்பின் முன்தோலில் நிறைய கிருமிகள் இருப்பது இயல்பானது.  கிருமித்தொற்றின் காரணமாக சிறுநீர்த் தொற்றும் வரலாம்.  அந்தப் பகுதியில் அப்படி பாக்டீரியாவோ, பூஞ்சையோ சேரவிடாமல் பார்த்துக்கொள்வது சிறந்தது. அதற்காக முன்தோலை நீக்குவது உண்டு. உங்கள் நண்பர் சொன்னது மருத்துவ ரீதியாக சரிதான். ஆனாலும், அதைச் செய்வதும் தவிர்ப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. உங்கள் குழந்தைக்கு மருத்துவர் அதை அவசியம் எனப் பரிந்துரைத்தால், செய்வதில் தவறில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 22 Dec 2025 7:30 am

Doctor Vikatan: தாம்பத்திய உறவுக்குப் பிறகு வெஜைனாவை  சுத்தப்படுத்த வேண்டுமா?

Doctor Vikatan: பொதுவாக வெஜைனா பகுதியை தனியே சுத்தம் செய்ய வேண்டாம் என்றே பல மருத்துவர்களும் சொல்கிறார்கள். தாம்பத்திய உறவுக்குப் பிறகும் இது பொருந்துமா அல்லது உறவு முடிந்ததும் வெஜைனாவை சுத்தம் செய்ய வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரான மாலா ராஜ். மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் வெஜைனாவில் உள்ள நல்ல பாக்டீரியாவே அந்தப் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். எனவே, அந்தப் பகுதியை தனியே சுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், சில பெண்கள்,  அதீத சுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, வெஜைனா பகுதியை  கழுவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பைக் கழுவுவது, தொற்று ஏற்படாமல் தடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வெஜைனாவின் வெளிப்புறத்தை 'வல்வா' (Vulva ) என்று சொல்கிறோம். அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. வெஜைனாவின் உள்புறத்தை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. அப்படிக்  கழுவ சாதாரண தண்ணீர்  போதுமானது. சோப், ஹைஜீன் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக, வாசனை சேர்த்த சோப், வெஜைனல் வாஷ் போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.  சோப் அல்லது வெஜைனல் வாஷில் உள்ள கெமிக்கல்கள், வெஜைனா பகுதியின் பிஹெச் அளவை பாதிப்பதால், எளிதில் கிருமித்தொற்று பாதிக்கும். கர்ப்பம் தரிக்கும் திட்டத்தில் இருப்பவர்கள், தாம்பத்திய உறவுக்குப் பிறகு உடனே எழுந்து சென்று பிறப்புறுப்பைக் கழுவாமல், சற்றுநேரம் ஓய்வெடுத்த பிறகே கழுவ வேண்டும். வெஜைனாவின் வெளிப்புறத்தை 'வல்வா' (Vulva ) என்று சொல்கிறோம். அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. Doctor Vikatan: எப்போதும் ஈரமாக இருக்கும் உள்ளாடை, ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா? சிலர், தாம்பத்திய உறவுக்குப் பிறகு  பிறப்புறுப்பை வேகமாகக் கழுவுவதால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவதாக நினைத்துக்கொண்டும் இப்படிச் செய்கிறார்கள்.  இது மிகவும் தவறானது. குழாயிலிருந்து வெளியேறும் வேகமான தண்ணீர், வெஜைனாவின் மென்மையான திசுக்களை சேதப்படுத்துவதோடு, அங்குள்ள நல்ல பாக்டீரியாவையும் அழித்துவிடும். அதனால் அடிக்கடி தொற்று பாதிக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 21 Dec 2025 6:39 am

Doctor Vikatan: இதயநோய் பாதிப்புகளைத் தவிர்க்குமா சத்து மாத்திரைகள்?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவர் இதயநோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருப்பவர். இதயநோய் பாதிப்புக்கான மருந்து, மாத்திரைகளை எடுத்து வருகிறார். ஆனால், அவற்றைத் தாண்டி, கூடுதலாக சத்து மாத்திரைகள் (சப்ளிமென்ட்டுகள்) எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா... எப்படிப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் பொதுவாக, ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் முறையான வாழ்க்கைமுறையும் இருப்பவர்களுக்கு கூடுதல் சப்ளிமென்ட்டுகள் (Supplements) அவசியமில்லை. இருப்பினும், சிலருக்கு, சில மருத்துவ நிலைகளில்  சப்ளிமென்ட்டுகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படலாம். அந்த வகையில், இதயநலனுக்குப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் சப்ளிமென்ட்டுகள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம். இவற்றில் முதன்மையானது ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் (Omega-3 Fatty Acids). இது மீன் எண்ணெயில் (Fish Oil) அதிகம் உள்ளது. குறிப்பாக, சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் டூனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. மீன் சாப்பிட முடியாத சைவ உணவுக்காரர்கள், அதற்கு பதிலாக வால்நட்ஸ், சோயா பீன்ஸ், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் (Flax seeds) ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, ரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு (Triglyceride) அளவைக் குறைத்து இதயத்திற்கு நன்மை செய்கிறது. சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் டூனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் மருந்துகள் எடுப்பவர்களுக்கு உடலில் கோஎன்சைம் Q10 (CoQ10)  அளவு குறையலாம். இதனால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை ஈடுகட்ட,  பசலைக்கீரை, புரொக்கோலி, காலிஃபிளவர், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, நிலக்கடலை, எள், முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.  இதயத்துடிப்பு சீராக இருக்கவும், தசைவலியைத் தவிர்க்கவும்  மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம்  அவசியம். இந்தச் சத்துகள், வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், அவகாடோ, மாதுளை, சப்போட்டா, கொய்யா மற்றும்பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றில் மிக அதிகம். இதயம், நரம்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு  வைட்டமின் டி (Vitamin D)  மிக முக்கியம். இது சூரிய ஒளியிலிருந்து தான் பிரதானமாகக் கிடைக்கும் என்பதால், காலை 6 மணி முதல் 8 மணி வரை வெயிலில் சிறிது நேரம் இருப்பது சிறந்தது. மேலும், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் காளான் ஆகியவற்றிலும் இது ஓரளவு உள்ளது. பிளான்ட் ஸ்டீரால் மற்றும் நார்ச்சத்து  இரண்டும்,  எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக்  குறைத்து, ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலை  அதிகரிக்க உதவுகின்றன. இவை, ஓட்ஸ், கோதுமை, கைக்குத்தல் அரிசி, ஆப்பிள், அவகாடோ மற்றும் பட்டாணியில் இருப்பதால், இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.  இதயம், நரம்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி (Vitamin D) மிக முக்கியம். இது சூரிய ஒளியிலிருந்து தான் பிரதானமாகக் கிடைக்கும். Doctor Vikatan: இதய நோயாளிகள் மாடிப்படிகளில் ஏறி, இறங்கலாமா, எப்போது அலெர்ட் ஆக வேண்டும்? ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் மருந்துகள் எடுப்பவர்கள் சப்ளிமென்ட்டுகளைத் தவிர்த்து உணவுமூலம் சத்துகளைப் பெறுவதே நல்லது. கூடுதல் சப்ளிமென்ட் தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம். இவை தவிர, வாழ்க்கைமுறை மாற்றங்களும் பின்பற்றப்பட வேண்டும்.  தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவில்  உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரையைக்  குறைக்க வேண்டும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.  7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம். எனவே, எல்லோருக்கும் சப்ளிமென்ட்டுகள்  அவசியமில்லை.  சத்தான உணவுகளின் மூலம் இந்தச் சத்துகளை இயற்கையாகவே பெற முடியும். மற்றபடி,  குறிப்பிட்ட நோயாளிகள் மட்டும் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

விகடன் 20 Dec 2025 7:00 am

நோயாளிக்கு தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் சிகிச்சையா? - மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோவில்பட்டி மட்டுமன்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளராக சுப்புராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விபத்தில் காயமடைந்த ஒருவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்களின் மேலாளர் அதன் பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டிலில் அமர வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளர் சுப்புராஜ், தலையில் காயத்துடன் இருந்தவருக்கு, சிகிச்சை அளித்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த ஒருவர், இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதற்குரிய வசதிகளும் பணியாளர்களும் முழுமையாக இல்லை. தலையில் அடிபட்டு வந்த நபருக்கு, தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் சிகிச்சை அளித்தது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், பெரும் ஆபத்து நேரிடும். சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்களின் மேலாளர் இந்த வீடியோ காட்சியைப் பார்த்த பின்பு, அரசு மருத்துவமனை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். எனவே, சம்பந்தப்பட்ட மேலாளர் மீது மட்டுமல்ல, அவர் சிகிச்சை அளிக்கக் காரணமாக இருந்த பணி நேர மருத்துவர், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவப் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, ”தூய்மை பணியாளர்களின் மேலாளர், தலையில் காயத்துடன் வந்தவருக்கு காயத்தை சுத்தம் மட்டுமே செய்கிறார். அவர் அருகே மருத்துவர் இருக்கிறார். மேலும், அங்கே செவிலியர்களும் இருந்தனர்” எனக் கூறினர்.  

விகடன் 18 Dec 2025 11:40 am

Doctor Vikatan: குளிர்காலத்தில் எண்ணெய்க் குளியல் எடுக்கலாமா?

Doctor Vikatan: குளிர்காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால், சளி பிடிக்குமா, காய்ச்சல் வருமா...  சிலருக்கு மற்ற நாள்களில் எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது ஒன்றும் ஆவதில்லை. அதுவே, குளிர்காலத்தில் தலைக்குக் குளித்தால் மட்டும் உடனே, சளி, இருமல், காய்ச்சல் வருவதைப் பார்க்கிறோம்.  இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் ஏற்கெனவே வழக்கமாக எண்ணெய்க் குளியல் எடுக்கும் வழக்கம் உள்ளவர்கள் என்றால், அவர்கள் குளிர்காலத்திலும் தாராளமாக அதனைத் தொடரலாம். பனி அதிகமாக இருக்கும் சூழலில், அதிகாலை வேளையைத் தவிர்த்து, சூரியன் உதித்து,  வெயில் வந்த பிறகு எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது. அதுவே, அடிக்கடி எண்ணெய்க் குளியல் எடுத்துப் பழக்கமில்லை, புதிதாக அந்தப் பழக்கத்தைத்   தொடங்கப் போகிறீர்கள் என்றால், குளிர்காலத்தைத் தவிர்த்துவிட்டு, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது அதைத் தொடங்குவது  பாதுகாப்பானது. ஏனெனில், எண்ணெய்க் குளியல் திடீரென புதிய பழக்கமாக மாற்றும்போது சளி, இருமல் அல்லது காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இதனால் பயந்துபோய் அந்தப் பழக்கத்தையே நீங்கள் கைவிட நேரிடலாம். எண்ணெய்க் குளியல் திடீரென புதிய பழக்கமாக மாற்றும்போது சளி, இருமல் அல்லது காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. எண்ணெய்க் குளியல்... ஏன், எப்படி, எப்போது? குளிர்காலத்திற்கு உகந்த சுக்குத் தைலம், கப நோய்களுக்கான நொச்சித் தைலம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தலாம். வீட்டில் எண்ணெய் தயாரிக்கும் போது, அதில் ஒரு துண்டு சுக்கு, பூண்டு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து லேசாகக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முன் மிளகுத்தூள் அல்லது சித்த மருத்துவத்திலுள்ள தாளிசாதி சூரணத்தை உச்சந்தலையில் தேய்த்துக் குளித்தால், கபம் (சளி) சேருவதற்கான வாய்ப்புகள் குறையும். சுருக்கமாகச் சொல்வதானால், ஆரோக்கியமாக இருப்பவர்கள் எந்தக் காலத்திலும் எண்ணெய்க் குளியல் எடுக்கலாம். ஒருவேளை சளி பிடித்தால், சில வாரங்கள் இடைவெளிவிட்டு, பிறகு மீண்டும் தொடரலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

விகடன் 18 Dec 2025 7:00 am

Doctor Vikatan: கருத்தரிக்க வாய்ப்புள்ள நாளை, முன்கூட்டியே கணிக்க முடியுமா?

Doctor Vikatan: ஓவுலேஷன் நடக்கும் நாளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா... அதற்கான பிரத்யேக டெஸ்ட் அல்லது கருவி ஏதேனும் உள்ளதா? அந்த நாள்களில் தாம்பத்திய உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு கூடும் என்பது உண்மையா? கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க  இந்த முறையை உறுதியாக நம்பலாமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் ஓவுலேஷன் (Ovulation) எனப்படும் அண்டவிடுப்பு நிகழும் நாளை நிச்சயம் ஒருவரால் கணிக்க முடியும். அதற்கென பிரத்யேகமாக சில பரிசோதனைகள் உள்ளன. 'ஓவுலேஷன் ப்ரெடிக்டர் கிட்' (ovulation predictor kit) அல்லது 'ஓவுலேஷன் டெஸ்ட்டிங் கிட்' (ovulation testing kit ) என்றே இதற்கான பிரத்யேக கிட், கடைகளில் கிடைக்கிறது. பெண்களின் உடலில், 'எல்.ஹெச்' (LH )  மற்றும் 'எஃப்.எஸ்.ஹெச்' (FSH) என இரண்டு ஹார்மோன்கள் இருக்கும்.  இவற்றில் எல்.ஹெச் என்ற ஹார்மோனின் அளவு, அண்டவிடுப்பு நிகழ்வதற்கு 24 முதல் 36 மணி நேரத்துக்கு முன் மிகவும் அதிகமாகும்.  இப்படி இந்த ஹார்மோன் அளவு அதிகரிப்பதை, சிறுநீர்ப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.  இந்தப் பரிசோதனைக்கான கிட், கர்ப்பத்தை உறுதிசெய்யும் பிரெக்னன்சி கிட் போன்றுதான் இருக்கும்.  இதிலும் சிறுநீரை வைத்தே வீட்டிலேயே டெஸ்ட் செய்து கொள்ளலாம்.  இந்த டெஸ்ட் பாசிட்டிவ் என வந்தால், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்துக்குள் ஓவுலேஷன் நடந்துவிடும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். எல்.ஹெச் என்ற ஹார்மோனின் அளவு, அண்டவிடுப்பு நிகழ்வதற்கு 24 முதல் 36 மணி நேரத்துக்கு முன் மிகவும் அதிகமாகும். Doctor Vikatan: 35 நாள்களில் ப்ளீடிங்... 15 நாள்கள் நீட்டிப்பு; ஹார்மோன் சிகிச்சைதான் ஒரே தீர்வா? இந்த டெஸ்ட்டை மிக எளிதாக வீட்டிலேயே செய்து பார்க்க முடியும், நம்பகமானதும்கூட. 28 நாள்கள் மாதவிலக்கு சுழற்சி உள்ள பெண்களுக்கு, 14-வது நாள் ஓவுலேஷன் நடக்கும் என்பது இயல்பானது. சிலருக்கு இது இரண்டு நாள்கள் முன்னதாகவோ, பிந்தியோ நடக்கலாம். இதன் அடிப்படையில்,  'சர்வைகல் மியூகஸ்' முறையின் மூலமும் ஓவுலேஷன் நடப்பதைக் கண்டுபிடிக்கலாம். ஓவுலேஷன் நடப்பதற்கு முன், வெஜைனாவில் ஏற்படும் திரவக் கசிவானது அடர்த்தியாக, சவ்வு மாதிரி  இருக்கும். அதை வைத்தும் ஓவுலேஷன் நடக்கவிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். அடுத்தது 'ஃபாலிக்குலர் ஸ்டடி' (follicular study) முறை. சம்பந்தப்பட்ட பெண்ணை, பீரியட்ஸின் 12-வது நாள் முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் வரச் சொல்லி, ஸ்கேன் செய்து, கருமுட்டை வளர்கிறதா, எப்படி வளர்கிறது என்பது கண்காணிக்கப்படும்.  அந்த முட்டையானது, 2 முதல் 2.1 செ.மீ அளவு வளர்ந்துவிட்டால், அண்டவிடுப்பு நிகழும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இப்படி அண்டவிடுப்பு நிகழ்வதை உறுதிசெய்துகொண்டு, அந்த நாள்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதை மருத்துவ மொழியில் 'ஃபெர்ட்டைல் விண்டோ' (Fertile Window) என்று சொல்வோம். மருத்துவ கண்காணிப்பு அதாவது ஓவுலேஷன் நிகழ்வதற்கு நான்கு நாள்கள் முன்பும், ஓவுலேஷன் நிகழும் நாள் அன்றும், ஓவுலேஷன் நடந்த ஒரு நாள் கழித்தும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். முட்டையானது ஒரு நாள் மட்டுமே உயிருடன் இருக்கும். அதுவே, உயிரணுவானது 3 முதல் 4 நாள்கள் வரை உயிருடன் இருக்கும்.  அதனால்தான் இந்தக் கணக்கு. இப்போது நிறைய பெண்கள் மென்ஸ்டுரல் ஆப் பயன்படுத்துகிறார்கள். பீரியட்ஸ் ஏற்படும் தேதியை அதில் தொடர்ந்து பதிவு செய்து வந்தால், அதுவே, உங்களுக்கான 'ஃபெர்ட்டைல் விண்டோ'வை கொடுக்கும். வெஜைனா கசிவு எப்படியிருக்கும், வேறு எப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கும் என சில அறிகுறிகளையும் உங்களுக்குச் சொல்லும். எனவே, அதையும் பயன்படுத்தலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    Doctor Vikatan: வீட்டில் பாசிட்டிவ், மருத்துவமனையில் நெகட்டிவ்: பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா?

விகடன் 16 Dec 2025 9:00 am

Calorie: நம் உடலில் கலோரிகள் கூடினால் அல்லது குறைந்தால் என்னவாகும்?

நம் உடலும் மூளையும் சரியாக இயங்குவதற்கு, நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் ஆற்றல் (Energy) கிடைக்கிறது. இந்த ஆற்றல்தான், கலோரி (Calorie) எனப்படுகிறது. இந்த கலோரிகள், உடலிலுள்ள செல்களின் திறனை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. இந்த கலோரி அளவுதான், உடல் எடையைக் கூட்டுவது மற்றும் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது'' என்கிற சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன், உணவுக்கும் கலோரிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்துப் பேசுகிறார். Calorie கலோரிக்கு ஏன் அதீத முக்கியத்துவம் தரப்படுகிறது? தண்ணீரில் மட்டும் கலோரிகள் கிடையாது. மற்றபடி, சமைத்த மற்றும் சமைக்காத எல்லா விதமான திட மற்றும் திரவ உணவுகள் மூலமாகவும் கலோரிகள் கிடைக்கின்றன. அதற்காக, பிடித்த உணவுகளையும், ஆசைப்பட்ட தின்பண்டங்களையும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பக் கூடாது. உடலில் ஆற்றல் (கலோரி) குறையும்போதுதான், சோர்வு, மயக்கம் ஏற்படும். எனவே, தொடர் ஓட்டத்துக்கான ஆற்றல் உடலுக்கு எப்போதும் தேவை. அதற்கு, உரிய இடைவெளியில் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும். பின்னர், உட்கொண்ட உணவுகள் எரிக்கப்பட (Burn) போதிய உடலுழைப்பு கொடுக்க வேண்டும். Calorie யாருக்கு, எத்தனை கலோரிகள் தேவை? ஒவ்வொருவருமே அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்க வேண்டும். நம் எடையில் (Ideal Body Weight) ஒவ்வொரு கிலோவுக்கும் தலா 30 கலோரிகள் வீதம் தினமும் தேவை. எனவே, இந்த அளவுக்கேற்ப நாம் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஒருவர் 60 கிலோ எடையில் (Ideal Body Weight) இருக்கிறார் எனில், அவருக்குத் தினமும் 1,800 கலோரிகள் (60 X 30) தேவை. இந்தக் கணக்கீடு, 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் பொருந்தும். குறைவான எடையில் இருப்பவர்கள்... உரிய எடையைவிட (Ideal Body Weight) அதிக எடையில் இருப்பவர்கள், ஒரு கிலோ எடைக்கு தலா 25 கலோரிகள் வீதம் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதுவே, உரிய எடையைவிட (Ideal Body Weight) குறைவான எடையில் இருப்பவர்கள், ஒரு கிலோ எடைக்கு தலா 35 கலோரிகள் கிடைக்கும் வகையில் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதுகுறித்து, மருத்துவர் அல்லது உணவு ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. Calorie நம் உடலில் கலோரிகள் கூடினால் அல்லது குறைந்தால் என்னாகும்? அவரவர் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவிலிருந்து தலா 100 - 200 கலோரிகள் அதிகமாக அல்லது குறைவாக எப்போதாவது உணவைச் சாப்பிடலாம். தவறில்லை. இதுவே, தேவையைவிட அதிகமான கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கும்பட்சத்தில், உடல் பருமன் ஏற்படும். தேவையைவிட மிகக் குறைவான கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கும்பட்சத்தில், உடல் எடை குறையும். 500 கலோரிகள் காலை உணவில் 4 இட்லி, பருப்பு சாம்பார், ஒரு முட்டை, சிறிதளவு தானியங்கள் அல்லது வேக வைத்த காய்கறிகள் அல்லது பழத்துண்டுகள் சிறிதளவு சாப்பிட்டாலே சராசரியாக 500 கலோரிகள் கிடைத்துவிடும். மதியத்தில், சாதம், பருப்பு சாம்பார் அல்லது தானியங்களில் செய்த குழம்பு, பொரியல், தயிர் எடுத்துக்கொண்டாலேயே 500 கலோரிகளுக்கு மேல் கிடைத்துவிடும். இரவில், 3 - 4 இட்லி அல்லது 3 - 4 சப்பாத்தி அல்லது ஒரு கப் கிச்சடியுடன், பருப்பு சாம்பார் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்வதால் 400 - 500 கலோரிகள் கிடைக்கும். Calorie தினமும் சராசரியாக 1,600 - 1,700 கலோரிகள் உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில், டீ அல்லது காபி அல்லது ஜூஸ் அல்லது மோர் மற்றும் குறைவான அளவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் 200 - 300 கலோரிகள் கிடைக்கும். இந்த வகையில் தினமும் சராசரியாக 1,600 - 1,700 கலோரிகள் கிடைக்கும். எடை குறைவானவர்கள், இந்த உணவுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதைவிடச் சற்று அதிகமாகவும், எடை அதிகமுள்ளவர்கள் கொஞ்சம் குறைவான அளவிலும் உணவை உட்கொண்டால் போதுமானது. கலோரி விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்! தினமும் ஒரு மணி நேரம் வேகமான நடைப்பயிற்சி செய்வதால், நம் உடலில் 150 - 200 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதுபோலத்தான், ஜிம்மில் நாம் செய்யும் உடற்பயிற்சிக்கேற்ப கலோரிகள் கரைகின்றன. கலோரிகளைக் கரைப்பது கடினம். இதுவே, கலோரிகளைக் கூட்டுவது மிக எளிது. எப்படி என்கிறீர்களா? Calorie ஒரு வடை 75 - 100 கலோரிகள் ஒரு டம்ளர் டீ குடிப்பதால், சர்க்கரையின் அளவைப் பொறுத்து, நம் உடலில் 30 - 50 கலோரிகள் கூடும். ஒரு கப் காபி குடித்தால் 75 கலோரிகள் கூடும். ஒரு வடை சாப்பிட்டாலேயே 75 - 100 கலோரிகள் கிடைக்கின்றன. ஒரு பப்ஸ் சாப்பிட்டால் 150 கலோரிகள் கிடைக்கின்றன. சிறிய அளவிலான டார்க் சாக்லேட்டில் 80 கலோரிகள் கிடைக்கின்றன. அரை கப் கேசரி சாப்பிட்டால் 150 கலோரிகள் கிடைக்கின்றன. Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா? 50 கிராம் மைசூர்பா சாப்பிடுவதால் 120 கலோரிகள் கிடைக்கின்றன. ஒரு ஜாங்கிரி சாப்பிட்டால் 200 கலோரிகள் கிடைக்கின்றன. மீடியம் அளவிலான பீட்ஸா ஒரு துண்டு சாப்பிட்டாலே 400 - 600 கலோரிகள் கிடைக்கின்றன. சில துண்டுகள் பீட்ஸா சாப்பிட்டால், ஒருநாளைக்குத் தேவையான மற்றும் அதைவிட அதிக கலோரிகள் கிடைத்துவிடுகின்றன. பீட்ஸாவுடன் சேர்த்து குளிர்பானம் குடித்தால், கலோரிகளின் அளவு எக்கச்சக்கமாக எகிறும். Calorie Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! பீட்ஸா சாப்பிட்ட நேரம் தவிர்த்து, மற்ற இரண்டு வேளைகளிலும் உணவு சாப்பிடுவோம். அப்போது, ஒருநாளைக்குக் கிடைக்க வேண்டிய அளவைவிட அதிகமான கலோரிகள் நமக்குக் கிடைக்கும். இது ஏதாவது ஒருநாள் என்றால் பாதிப்பில்லை. அடிக்கடி பீட்ஸா மற்றும் துரித உணவுகளைச் சாப்பிடுவதால், உடலில் கொழுப்புச்சத்து கூடும். இதனால், உடல் பருமன் ஏற்படும். அதுமட்டும்தானா? Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? உணவுப் பொருள்களின் தன்மைக்கேற்ப அதன் மூலம் கிடைக்கும் கலோரிகளின் அளவு மாறுபடும். உதாரணத்துக்கு, தலா ஒரு கிராம் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளிலிருந்து, தலா 4 கலோரிகள் உடலுக்குக் கிடைக்கின்றன. இதுவே, தலா ஒரு கிராம் கொழுப்புச்சத்திலிருந்து 9 கலோரிகள் நமக்குக் கிடைக்கின்றன. கொழுப்புச்சத்து நிறைந்த துரித உணவுகளைச் சாப்பிட்டால், வயிறு நிறையும். அந்த உணவுகள் மூலம், கொழுப்புச்சத்து மற்றும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கின்றன. மற்ற அடிப்படை சத்துகள் கிடைக்காமல் போவதால், ஊட்டச்சத்துக் குறைபாடு (Nutrient Deficiency) ஏற்படும்’’ என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.

விகடன் 15 Dec 2025 6:31 am

Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் கண்களில் விளக்கெண்ணெய் விடுவது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு துளி விளக்கெண்ணெயை (Castor Oil) கண்களில் விடும் பழக்கம் பல காலமாக, பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும், பார்வைத்திறன் மேம்படும், உடலுக்கும் குளிர்ச்சி என்றெல்லாம் சொல்கிறார்களே, உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் முன்பெல்லாம், வீட்டுப் பெரியவர்கள் விளக்கெண்ணெயை (Castor Oil), டிரை ஐஸ் எனப்படும் கண் வறட்சிக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது  கண் மருத்துவர்கள், கண்ணுக்குள் விளக்கெண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியே அறிவுறுத்துகிறோம். ஏனென்றால், விளக்கெண்ணெய் போடுவதால் கண்ணில் தொற்று (Infection), எரிச்சல் (Irritation) போன்ற பிரச்னைகள் வரலாம். இருப்பினும், சிலர் இன்னும் கண் வறட்சிக்கு  விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. கண்களுக்குக் குளிர்ச்சி, கண்களைப் பிரகாசமாக வைக்கும் என்றெல்லாம் அதற்கு காரணங்களும் சொல்வதைப் பார்க்கிறோம். கண்களுக்கு வெளியே தடவிக்கொண்டால் அந்த அளவுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், கண்ணுக்குள் சொட்டு மருந்து போல, விளக்கெண்ணெய் விட்டுக்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். காலங்காலமாகப் பின்பற்றும் விஷயம்தானே? அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்றும் சிலர் விவாதம் செய்வதைப் பார்க்கிறோம். விளக்கெண்ணெய் கண்களுக்குள் விளக்கெண்ணெய் விடுவதைத் தவிர்க்கச் சொல்வதற்கு முக்கியமான  இரண்டு  காரணங்கள் உண்டு. விளக்கெண்ணெய் என்றாலும், அது கண்களில் தொற்று (Infection in the eyes) ஏற்படக் காரணமாகலாம். கண்களில் எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையில் ஒருவர் பயன்படுத்தும் விளக்கெண்ணெயின் தரம் எப்படிப்பட்டது என்பது மிக முக்கியம். அது சுத்திகரிக்கப்படாததாக இருக்கும்பட்சத்தில், இன்னும் ஆபத்தானது. எனவே, கண்கள் தொடர்பான எந்தப் பிரச்னைக்கும் மருத்துவ ஆலோசனையோடு சிகிச்சைகளைப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

விகடன் 14 Dec 2025 9:00 am

Midlife Crisis: நடுத்தர வயதில் வருகின்ற பயம்; கடப்பது எப்படி? - வழிகாட்டும் நிபுணர்!

நம் அனைவருக்குமே, நம் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில், வாழ்தலின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் மிக அதிகமாக இருந்திருக்கும். அப்படியான நேரத்தில், `என்ன ஆனாலும் சரிப்பா, வாழ்ந்து பார்த்துடறேன்' என உற்சாகத்துடன் சொல்லி, வழக்கத்தைவிடவும் அதிக புத்துணர்ச்சியோடு செயல்பட்டிருப்போம். இதேபோல, காரணமே இல்லாமல், `என்ன வாழ்க்கைடா இது' எனத் துவண்டுபோவது, வாழ்வின் மீதுள்ள பிடிப்பு மொத்தமும் போய், `இனி என்ன செய்யுறது' எனப் புரியாமல் திகைத்து நிற்பது, அடுத்தது என்ன என்ற கேள்வியும், அது தரும் பயங்களும்கூட இயல்பானதுதான். இது தற்காலிகமானதும்கூட. குறிப்பாக, நடுத்தர வயதில் இந்த மனநிலை மாற்றங்கள் அதிகம் நிகழும். இதுதான் மிட்லைஃப் க்ரைசிஸ். இது குறித்து, மனநல மருத்துவர் வசந்திடம் பேசினோம். காரணம் மற்றும் மிட்லைஃப் க்ரைசிஸ் தடுக்க... Midlife Crisis ''மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னைக்கான முக்கியக் காரணம், மனநலனில் கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருத்தல்தான். 30களின் இறுதியிலேயோ 40களின் தொடக்கத்திலேயோகூட ஒருவருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டுவிடலாம் என்பதால், முப்பதை தாண்டிய உடனே மனநலனில் கவனமாக இருக்கத் தொடங்க வேண்டும். இங்கு, 30களைத் தாண்டிய பின்னர் நம் வாழ்க்கை அலுவலகம், வேலை, குடும்பம் என ஏதோவொன்றின் பின்னே பின்னப்பட்டுவிடுகிறது. அதற்கிடையில், நமக்காகவும் நாம் இயங்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம் என்பதுதான் பிரச்னை. அனைத்து வயதினருமே, தங்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, மனநிறைவான வாழ்க்கையை முன்னெடுத்தால் மட்டுமே மிட்லைஃப் க்ரைசிஸை முழுமையாக வரும் முன் தடுக்கமுடியும். வந்த பிறகு என்ன செய்வது..? Midlife Crisis Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது? `என்னால் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இப்போது மிட்லைஃப் க்ரைசிஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது' என்பவர்கள், தயங்காமல் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். மனநலப் பிரச்னைகள் அனைத்துமே, முறையான ஆலோசனை மூலம் சரிசெய்ய முடிபவைதான் என்பதால், பிரச்னை குறித்த பயம் அறவே வேண்டாம். ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான் என்ற உத்வேகத்துடன் இருக்கப் பழகுங்கள். உங்களை மகிழ்ச்சியாக்கும் விஷயங்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றைச் செய்து வாருங்கள். திட்டமிடுங்கள்! Midlife Crisis Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! 40 வயதென்பது, ஒருவர் புரொஃபஷனலாகத் தன்னுடைய பெஸ்ட்டைக் கொடுத்துவிட்டு சற்றே பெருமூச்சுவிடத் தொடங்கும் தருணம் என்பதால், வேலையைச் சற்று சோர்வுடனோ அலட்சியத்துடனோ அணுகும் மனநிலை இருக்கும். அப்படியான நேரத்தில் மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னையும் ஏற்பட்டால், வருங்காலம் குறித்த பயம் ஏற்படத் தொடங்கும். இப்படியான சிக்கல்களையெல்லாம் தடுக்கச் சிறந்த வழி, திட்டமிடுதல்தான். ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான்! வாழ்வில் எதன் மீதெல்லாம் உங்களுக்கு பயம் இருக்கிறதோ, அவற்றில் ஏற்படவிருக்கும் சிக்கல்களை முன்கூட்டியே அனுமானித்து, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளைச் செய்து வாருங்கள். முன்பே சொன்னதுபோல, ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான். தினமும் போகின்ற போக்கில் வாழாமல், வாழ்க்கையை நேர்த்தியான திட்டமிடலோடு வாழ்ந்து வாருங்கள். முக்கியமாகப் பொருளாதார தேவைகள் குறித்து தகுந்த நபரோடு ஆலோசித்து சரியாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என்கிறார் மனநல மருத்துவர் வசந்த்.

விகடன் 14 Dec 2025 8:31 am

Doctor Vikatan: தினமும் பூண்டை பச்சையாகச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது உண்மையா?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவர், தினமும் இரவில் நான்கைந்து பற்கள் பூண்டை, பச்சையாகச் சாப்பிடும் வழக்கம் வைத்திருக்கிறார். அப்படிச் சாப்பிட்டால் எந்த உடல்நலப் பிரச்னையும் வராது என்கிறார். நிறைய வீடியோக்களிலும் இதைப் பார்க்க முடிகிறது. பச்சைப் பூண்டு சாப்பிடுவது உண்மையிலேயே ஆரோக்கியமானதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.   சித்த மருத்துவர் அபிராமி பூண்டு காரத்தன்மை கொண்டது. எனவே, பூண்டை வெறும் வயிற்றில் பச்சையாகச் சாப்பிடுவது சரியானதல்ல. ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சாப்பிடலாமே தவிர, தொடர்ந்து அப்படிச் சாப்பிடக்கூடாது. சமூக வலைத்தளங்களில் இப்படி தினமும் பச்சையாக பூண்டு சாப்பிடும்படி வரும் வீடியோக்கள், தகவல்களை அப்படியே நம்பி பின்பற்ற வேண்டாம். பூண்டை தொடர்ந்து பச்சையாகச் சாப்பிட்டால், இரைப்பை எரிச்சலை ( gastric irritation) ஏற்படுத்தும்.  உணவுக்குழாயிலும், வயிற்றிலும் எரிச்சலை உண்டாக்கும். பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.  இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பலவித வைரஸ் தொற்றுகள் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை நீக்கவும் உதவும். தவிர, இது ஒரு நல்ல ஆன்டிபயாடிக் போல் வேலை செய்யக்கூடியது, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கவசமாக இதை அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.  ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும்,  கெட்ட கொலஸ்ட்ரால்  அதிகமாக உள்ளவர்களுக்கும் பூண்டு மிக நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்தும், வயிற்றில் சேரும் வாயுவை வெளியேற்ற உதவும். பொதுவாக குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பூண்டு நல்லது.  மூட்டுகளில் ஏற்படும் வலிகள், வீக்கம் ஆகியவற்றைக் குறைப்பதற்கும் கூட பூண்டு  நல்ல மருந்தாகச் செயல்படும். தாளிக்கும்போது இரண்டு பல் பூண்டைத் தட்டிப் போடலாம். ரசத்தில் தட்டிப் போடலாம். Doctor Vikatan: குடலைச் சுத்தப்படுத்த விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வது சரியா? இத்தனை நல்ல பலன்கள் உள்ள பூண்டை நாம் முழுமையாகச் சமைக்க வேண்டியதில்லை. அதில் உள்ள சத்துகள் ஆவியாகிவிடும் என்பதால், அதிகமாகச் சமைப்பதும் தவறு. அதற்காக, அதைப் பச்சையாகச் சாப்பிடுவதும் தவறு. பூண்டை எப்போதும் லேசாக வதக்கிப் பயன்படுத்தலாம். தாளிக்கும்போது  இரண்டு பல் பூண்டைத் தட்டிப் போடலாம். ரசத்தில் தட்டிப் போடலாம். சூடான பாலில் பூண்டை தட்டிப்போட்டு, 5 நிமிடங்கள்  அந்தச் சூட்டிலேயே விட்டுவிட்டு, வடிகட்டி அந்தப் பாலைக் குடிக்கலாம். இட்லி மிளகாய்ப் பொடி போல  பொடி வகைகளில் பூண்டை வதக்கிச் சேர்த்துச் சாப்பிடலாம். இப்படியெல்லாம் சாப்பிட்டால்தான் பூண்டை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ள முடியும்.  பச்சையாகச் சாப்பிட்டால், ஒரு கட்டத்தில் பூண்டைப் பார்த்தாலே ஓடி ஒளியும் அளவுக்கு அதன் மேல் வெறுப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல என்பதால் பச்சைப் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்ப்பதே சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 13 Dec 2025 9:00 am

Throat infection: குளிர்கால தொண்டை தொற்று; வீட்டு மருத்துவம் சொல்லும் சித்த மருத்துவர்!

குளிர்காலம் தொடங்கியதிலிருந்தே ’தொண்டை ஒரே எரிச்சலா இருக்கு. எச்சில் விழுங்கும்போதெல்லாம் வலிக்குது' போன்ற புலம்பல்களை அதிகமாகக் கேட்க முடிகிறது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இதுபோன்ற தொண்டை சார்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபட, சில எளிமையான வீட்டு மருத்துவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார். வாய் கொப்பளிப்பு Throat infection ''தொண்டையில் பிரச்னை தெரியவருபவர்கள், முதல் நாளிலிருந்தே கீழ்க்காணும் மருத்துவ முறைகளைப் பின்பற்றவும். * தினமும் உப்புத்தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வரவும். அதிமதுர நீர் Throat infection * அதிமதுரம் பொடியை நீரில் கலந்து குடிக்கவும். அதிமதுர நீரைக் கொண்டு அடிக்கடி வாய் கொப்பளித்தும் வரலாம். * திரிகடுக சூரணத்தை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரவும். மஞ்சள் பால் Throat infection Healthy Cooking : மருந்து சாதம் முதல் அலுப்புக்குழம்பு வரை... குளிர் கால ரெசிப்பிகள் * பாலில் மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து, இரவு நேரத்தில் குடிக்கவும் துளசி Throat infection * வெந்நீரில் துளசி சேர்த்து அருந்தவும். கற்பூரவல்லி மற்றும் தூதுவளை சட்னி Throat infection குளிர் காலத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள்! * கற்பூரவல்லி மற்றும் தூதுவளையை சட்னி போல அரைத்து, இட்லி அல்லது தோசைக்குத் தொட்டுச் சாப்பிடவும். முடிந்தவரை வெந்நீர் மட்டும் அருந்தவும்! * குடிநீர் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். சுத்திகரிக்கப்படாத நீரை முழுமையாகத் தவிர்க்கவும். முடிந்தவரை வெந்நீர் மட்டும் அருந்தவும். வெளி இடங்களில், குறிப்பாகத் தெருவோரங்களில் நீராகாரங்கள் குடிக்கும் பழக்கம் இருந்தால், கைவிடவும்!

விகடன் 13 Dec 2025 7:39 am

குளிரில் ஏன் உடல் நடுங்குகிறது தெரியுமா? - அறிவியல் காரணம் இதான்!

குளிர்காலம் வரும்போது அல்லது குளிர்ந்த காற்று வீசும்போது நமது உடல் தாமாகவே நடுங்குவதை நாம் அனைவரும் உணர்ந்து இருப்போம். ஸ்வெட்டர், கனமான ஆடைகள் அணிந்து இருந்தாலும் கூட சில சமயங்களில் இந்த நடுக்கம் நிற்பதில்லை. எதற்காக இவ்வாறு குளிரின் போது உடல் நடுங்குகிறது என்பது குறித்தும் இது வெறும் குளிரின் தாக்கம் தானா? என்பது குறித்தும் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம். உடலில் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள உடல் மேற்கொள்ளும் ஒரு செயல்முறையே இந்த நடுக்கம் என்கின்றனர் மருத்துவர்கள். Human மருத்துவர் நடாஷா புயான் கூற்றுப்படி, உடலுக்குள் குளிர் ஏற்படும் போது வெப்பத்தை உருவாக்குவதற்காக தான் இந்த நடுக்கம் ஏற்படுகிறது. அதாவது தசைகள் வேகமாக சுருங்கி விரிவதன் மூலம் வெப்பம் உருவாக்கப்படுகிறது. இந்த செயல்முறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. தும்மல், புல்லரிப்பு போன்றவைப் போலவே நடுக்கமும் நமது உடலின் கட்டுப்பாட்டின் மீது நடக்கும் ஒரு விஷயம். மூளையில் உள்ள 'ஹைபோதலாமஸ்' (Hypothalamus) என்ற பகுதிதான் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் 'தெர்மோஸ்டாட்' போலச் செயல்படுகிறது. உடலின் வெப்பநிலை சற்று குறைந்தாலும், ஹைபோதலாமஸ் உடனடியாகத் தசைகளை, வேகமாக இயங்க செய்கிறது. இதுவே நடுக்கமாக வெளிப்படுகிறது. பொதுவாக மனித உடலின் சராசரி வெப்பநிலை 97 முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். இது குறையும்போது நடுக்கம் ஏற்படும். ஆனால் வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்து இது மாறுபடும் என்கிறார் நடாஷா. குளிர் மட்டும்தான் காரணமா? நமக்கு ஏற்படும் நடுக்கம் குளிர் தவிர வேறு சில காரணங்களாலும் ஏற்படலாம். நாம் பயப்படும்போதோ அல்லது அதிக பதற்றத்தில் இருக்கும்போதோ, உடலில் அட்ரினலின் சுரப்பு அதிகரிக்கும். இது தசைகளைச் சுருங்கச் செய்து நடுக்கத்தை ஏற்படுத்தும். குளிர் இல்லாத சூழலிலும் ஒருவருக்கு நடுக்கம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம் என்கிறார் மருத்துவர் நடாஷா.

விகடன் 12 Dec 2025 12:30 pm

Doctor Vikatan: குழந்தையின் இடது கைப்பழக்கம் அப்படியே விடலாமா, மாற்ற வேண்டுமா?

Doctor Vikatan:  என் குழந்தைக்கு 3 வயதாகிறது. அவளுக்கு இடதுகை பழக்கம் இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, வலக்கை பழக்கத்துக்கு மாற்ற வேண்டும் என்கிறார்கள். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ். மனநல மருத்துவர் சுபா சார்லஸ் குழந்தையின் இடது கைப்பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. மாறாக, குழந்தையிடம் இயற்கையாக அமைந்துள்ள அந்தத் திறமையை போற்றிப் பாதுகாப்பதுடன், வலது கைப்பழக்கத்தையும் இணைத்து, அவர்களை ஓர் அதிசயமான ஒருங்கிணைந்த திறமைசாலியாக (Ambidextrous) உருவாக்க முயற்சி செய்வதுதான் மிகவும் சிறந்த அணுகுமுறையாகும்.    நம்முடைய உடலின் இயக்கமும் திறமையும் பெரும்பாலும் மூளையின் எந்தப் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தது. பொதுவாக, வலது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடது மூளை ஆதிக்கம் செலுத்தும்  (Left Hemisphere). அதன் விளைவாக, லாஜிக்கல் சிந்தனை, கணிதம் மற்றும் பகுப்பாய்வுத் திறனுடன் வளர்வார்கள்.  அதுவே,  இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது மூளையின் (Right Hemisphere) ஆதிக்கத்தால், தனித்துவமான படைப்பாற்றல், கற்பனை, ஆக்கபூர்வமான மற்றும் பக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking) போன்ற திறமைகளுடன் வளர்கிறார்கள். இந்த வலது மூளைத் திறனை மாற்றுவதற்கு பதிலாக, இரண்டு கைகளையும் அழகாக, லாவகமாகப் பயன்படுத்தும் இருகைப்பழக்கம் (Ambidexterity) என்னும் நிலையை அடைய உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தலாம்.  இரண்டு கைகளையும் அழகாக லாவகமாகப் பயன்படுத்தும் இருகைப்பழக்கம் (Ambidexterity) என்னும் அதீத நிலையை அடைய உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தலாம். Doctor Vikatan: எழுதும்போது கைவலிப்பதாகச் சொல்லும் குழந்தை... சிகிச்சை அவசியமா? இந்தியாவில் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு குழந்தைகளைப் பயிற்றுவித்து,  அவர்கள் குறைந்த நேரத்தில் அதிகத் திறனுடன்  தேர்வுகளில் எழுதிச் சாதிக்க வைத்த செய்தி ஒன்று சமீபத்தில் தெரியவந்தது.  எனவே, உங்கள் குழந்தையின் இடது கைப்பழக்கம் அவர்களின் தனித்துவமான பலம். அதனுடன் வலது கைப்பழக்கத்தையும் இணைப்பது, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 12 Dec 2025 9:00 am

Doctor Vikatan: இதய நோயாளிகள் மாடிப்படிகளில் ஏறி, இறங்கலாமா, எப்போது அலெர்ட் ஆக வேண்டும்?

Doctor Vikatan: என் உறவினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.  ஆறு மாதங்கள்கூட முடியாத நிலையிலும் அவர் வேகமாக மாடிப் படிகளில் ஏறி, இறங்குகிறார். நடைப்பயிற்சி செய்கிறார். இதய நோயாளிகள் இப்படி மாடிப் படிகளில் ஏறி, இறங்குவது சரியானதா, உடல் ஏதேனும் அலெர்ட் சிக்னல் காட்டுமா... அப்போது எச்சரிக்கையாக வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல். இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் மாரடைப்பு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் உட்பட பெரும்பாலான இதய நோயாளிகள் மாடிப்படிகள் ஏறி இறங்கலாம். அறுவை சிகிச்சை முடிந்த ஐந்தாவது அல்லது ஏழாவது நாளில் டிஸ்சார்ஜ் செய்யும்போது, ஒரு மாடி ஏறி இறங்கிப் பார்த்த பின்னரே மருத்துவர்கள் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வோம். Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா? சம்பந்தப்பட்ட நோயாளி, நிலையாக (Stable) இருப்பதாக மருத்துவர்   சொல்லி, நடக்க அனுமதி அளித்திருந்தால், முதலில் 5 அல்லது 10 நிமிடங்கள் நடந்துவிட்டு, அதன் பின்னர் மருத்துவ மேற்பார்வையில் (Doctor Supervision) மற்றும் பிசியோதெரபி உதவியுடன் ஒரு மாடி ஏறி இறங்கிப் பழகலாம். Climb on Steps மருத்துவமனையில் இதைப் பயிற்சி செய்த பிறகு, சம்பந்தப்பட்ட நபர்,  வீட்டிற்குச் செல்லும்போது ஒரு மாடி ஏறலாம். அதற்கு மேல் ஏறுவதற்கு மருத்துவ அனுமதி தேவை. சிலர், நன்றாக இருந்தால் இரண்டு மாடிகள் கூட ஏறலாம்.  இரண்டு மாடிகள் ஏறும்போது, இடைஇடையே தேவைப்பட்டால் ஓய்வெடுத்து ஏற வேண்டும். தொடர்ந்து ஒரே மூச்சில் ஏறக்கூடாது. ஒரு படி ஏறிவிட்டு சில நொடிகள் இடைவெளி விட்டு அடுத்த படி ஏறவும் அறிவுறுத்தப்படும். உங்கள் உறவினர், நடைப்பயிற்சி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.  அவர் அதை மருத்துவ ஆலோசனையோடு செய்கிறாரா என்று கேளுங்கள். நடைப்பயிற்சி செய்யும்போது அசாதாரண  அறிகுறிகள் ஏற்பட்டால், அவர் உடனடியாக நடைப்பயிற்சியை நிறுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்.  Heart attack (Representational Image) மார்வலி (Chest Pain), மூச்சுத் திணறல் அல்லது மூச்சிறைப்பு, படபடப்பு (Palpitation), தலைச்சுற்றல் (Dizziness), அதிக வியர்வை (Excessive Sweating) போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக நிறுத்திவிட்டு, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சரிசெய்த பின்னரே மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். நடக்கும்போது மார்புவலி, மூச்சிறைப்பு அல்லது படபடப்பு வந்தாலோ, ரத்த அழுத்தம் (Blood Pressure) அல்லது இதயத் துடிப்பு சீராக இல்லாமல், கட்டுப்பாடின்றி இருந்தாலோ, சமீபத்தில் பக்கவாதம் (Stroke), இதயச் செயலிழப்பு (Heart Failure) அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தால், மருத்துவ அனுமதியின்றி நடக்கக் கூடாது. இவற்றையும் உங்கள் உறவினருக்குப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அடிக்கடி கொட்டாவி வருவது ஏன்?

விகடன் 11 Dec 2025 9:00 am

திருமணத்துக்குப் பிறகு விந்தணுக்கள் வரவில்லையா?  - காமத்துக்கு மரியாதை 269 

திருமணத்துக்கு முன்னர் சுய இன்பம் செய்திருப்பார்கள். அப்போது விந்தணுக்கள் வெளியேறி இருக்கும். ஆனால், திருமணமான பிறகு, மனைவியுடன் உறவுக்கு முயலும்போது விந்தணுக்கள் வராது.  இதற்கான காரணங்கள் என்னென்ன, தீர்வுகள் இருக்கின்றனவா..? சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.   உடனடியாக பாலியல் மருத்துவரை சந்திக்க வேண்டுமா? காமத்துக்கு மரியாதை ''இப்படி திடீரென திருமணத்துக்குப் பிறகு விந்தணுக்கள் வரவில்லை என்றால்,  சம்பந்தப்பட்ட ஆணுக்கு விறைப்புத்தன்மையில் ஆரம்பித்து ஆர்கசம் வரைக்கும் எல்லாவற்றிலும் குழப்பம் ஏற்பட்டு விடும். இந்தப் பிரச்னையை உடனடியாக ஒரு பாலியல் மருத்துவரை சந்தித்து சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பெரும் சிக்கலாகி விடும். ஒன்று விறைப்புத்தன்மையிலேயே சிக்கல் வரலாம். அல்லது விறைப்புத்தன்மை வந்தாலும், விந்தணுக்கள் வெளியேறாது.  விருப்பமில்லாத திருமணங்களில்... காமத்துக்கு மரியாதை விருப்பமில்லாத திருமணங்களில், மனம் தொடர்பான பிரச்னை காரணமாக விந்தணுக்கள் வெளியேறாமல் இருக்கலாம். இவர்களிடம் பேசி புரிய வைத்து பிரச்னையை சரி செய்துவிடலாம்.  சில மருந்துகள் விந்தணுக்களை வெளியேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தும். அதைப்பற்றி தெரிந்துகொண்டு, அதைப் பரிந்துரைத்த மருத்துவருடன் பேசி மருந்துகளை மாற்றுவோம் அல்லது டோசேஜை குறைப்போம்.  மருந்துகள் மூலம் விந்தணுக்களை வெளியேற்றலாம்! காமத்துக்கு மரியாதை சிலருக்கு மருந்துகள் கொடுப்பதன் மூலம், விந்தணுக்களை வெளியேற்ற வைக்க முடியும். சில நேரம், பாலியல் படங்களைப் பார்த்துக்கொண்டு சுய இன்பம் செய்யலாம் அல்லது செக்ஸ் செய்யலாம். இப்படி செய்யும் போது சிலருக்கு விந்தணுக்கள் வெளியேறி விடும். குதித்துவிட்டு பிறகு உறவுகொள்ளலாம்! காமத்துக்கு மரியாதை ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் Ball பட்டால் என்ன செய்ய வேண்டும்? காமத்துக்கு மரியாதை 267 இன்னும் சிலர் , செக்ஸுக்கு முன்னர் ஜாகிங் செய்வதுபோல சிறிது நேரம் குதித்துவிட்டு, மார்பு லேசாக படபடக்க ஆரம்பிக்கையில் உறவு கொள்ளலாம். இப்படி செய்தாலும், விந்தணுக்கள் வந்துவிடும்.  செக்ஸ் பிரச்னைகளுக்கு இன்றைக்கு தீர்வுகள் இருக்கின்றன! உள்ளாடை முதல் பைக் சீட் வரை; ஆண்களுக்கு சில அலர்ட் டிப்ஸ் - காமத்துக்கு மரியாதை 268 இதிலும் குணமடையாதவர்கள், இதற்கென இருக்கிற வைப்ரேட்டர் மூலம் ஆணுறுப்பைத் தூண்டி விந்து வெளியேற்றலாம். இதிலும் சரியாகவில்லை என்றால், எலக்ட்ரோ எஜாகுலேட்டர் மூலம் விந்தணுக்களை எடுத்து, மனைவியை கருத்தரிக்க வைக்கலாம்.  செக்ஸ் தொடர்பான கிட்டத்தட்ட எல்லா பிரச்னைகளுக்கும், இன்றைக்கு தீர்வுகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, நிம்மதியாக உங்கள் செக்ஸ் வாழ்க்கையை அனுபவியுங்கள் என்கிறார் டாக்டர் காமராஜ்.  

விகடன் 10 Dec 2025 1:15 pm

Doctor Vikatan: இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அடிக்கடி கொட்டாவி வருவது ஏன்?

Doctor Vikatan: அலுவலக நேரத்தில் அதிக கொட்டாவி வருகிறது. இரவில் நன்றாகத் தூங்குகிறேன். தூக்கமின்மை பிரச்னை இல்லாதபோதும் இப்படி கொட்டாவி வருவது ஏன்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் நீங்கள் நன்றாகத் தூங்கிய பிறகும் அலுவலக நேரத்தில் அதிக கொட்டாவி மற்றும் சோர்வு ஏற்படுவதற்கு, உடல்நலக் குறைபாடுகள் அல்லது இரவுத் தூக்கத்தில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். நீங்கள் நன்றாகத் தூங்குவதாக நினைத்தாலும், உங்கள் உடலுக்குத் திருப்தி அளிக்கும் ஆழ்ந்த உறக்கம் (Deep Sleep) கிடைக்காமல் இருக்கலாம். ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) என்ற பாதிப்பு இருக்கிறதா என்றும் பாருங்கள். அதாவது, அதிகக் குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு, தூங்கும்போது காற்றோட்டம் தடைப்பட்டு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். இதனால் இரவில் தூக்கம் திருப்தியாக இருக்காது, பகலில் அதிக சோர்வு மற்றும் கொட்டாவி வரலாம். தூக்கத்தின் அளவு போதுமானதாக இருந்தாலும், அதன் தரம் குறைவாக இருந்தால், அதாவது சோர்வுக்கு வழிவகுத்தாலும் கொட்டாவி வரலாம். அதிகக் குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு.. ரத்தச்சோகை  (Anemia) எனப்படும் அனீமியா இன்று பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். பலருக்கு சோர்வு மற்றும் கொட்டாவிக்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதால், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் திறன் குறைகிறது. எனவே, ரத்தச்சோகைக்கான டெஸ்ட்டை செய்து பார்க்கவும். Doctor Vikatan: திடீரென பறிபோன தூக்கம்; சரியாகுமா, தொடர்கதையாக மாறுமா? வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உட்பட இதர வைட்டமின் குறைபாடுகள், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் நீரிழப்பு (Dehydration) கூட சோர்வையும் கொட்டாவியையும் தூண்டலாம்.  மனக்கவலை (Anxiety) அல்லது மனச்சோர்வு (Depression) உள்ளவர்கள், தாங்கள் நன்றாகத் தூங்குவதாக நினைத்தாலும், உடல்ரீதியாக திருப்தி அளிக்காத தூக்கத்தைப் பெறக்கூடும். இது பகல் நேரச் சோர்வு மற்றும் அதிக கொட்டாவிக்குக் காரணமாகலாம். மனக்கவலை (Anxiety), மனச்சோர்வு (Depression) ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடு போன்ற உடல் சார்ந்த காரணங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, ஒரு மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஸ்லீப் அப்னியா போன்ற பிரச்னைகள்  இருக்கலாம் என சந்தேகப்பட்டால், ஸ்லீப் ஸ்டடி (Sleep Study) எனப்படும் சிறப்புப் பரிசோதனை செய்து பார்க்கலாம். மனக்கவலை அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் இருப்பதாகச் சந்தேகித்தால், மனநல மருத்துவரை (Psychiatrist) சந்தித்து ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விளக்கமும்

விகடன் 10 Dec 2025 9:00 am

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா?

Doctor Vikatan: என்னுடைய தோழி தினமும் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறாள். வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் அவள், காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக எடையைக் குறைக்க முடியும் என்றும் சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் காலை உணவைத் தவிர்ப்பது எடை குறைக்க உதவும் என்பது தவறான கருத்து. கண்டிப்பாக அனைவரும் காலை உணவு சாப்பிட வேண்டும். இரவு உணவை முடித்துவிட்டு,  தூங்கும் நேரம், மறுநாள் காலை விழித்த பிறகு இயல்பான வேலைகளைச் செய்வது என நாம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பட்டினியாக இருக்கிறோம். அன்றைய நாள், மற்ற வேலைகளுக்குத் தேவையான சக்தியைப் பெற, காலையில் கட்டாயமாகச் சாப்பிட வேண்டும்.   காலை உணவைத் தவிர்த்து, நீண்ட நேரம் கழித்து மதிய உணவு (Lunch) சாப்பிடும்போது, 'இத்தனை மணி நேரத்துக்குப் பிறகு உணவு கிடைத்திருக்கிறது. அடுத்த உணவு எப்போது கிடைக்குமோ' என்ற எண்ணத்தில் கிடைக்கும் உணவில் உள்ள சக்தியை எல்லாம் உடல்  உடனே உறிஞ்சிக் கொள்ளும்.  அது கொழுப்பாக மாறுவதற்கு  வாய்ப்புள்ளது. இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்? எனவே, காலையில் பட்டினி இருப்பதால் எடை குறைய வாய்ப்பில்லை. ஆனால், இப்போது பலரும் 'இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) என்ற டயட் முறையைப் பின்பற்றுகிறார்கள்.  அதாவது, இரவு 7 மணிக்கு டின்னர் சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் காலையில் 9 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது போல, 12 மணி நேரம்,14 மணிநேரம், 16 மணி நேரம் என விருப்பப்படி அந்த இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய உணவுமுறை எடைக்குறைப்புக்கும்  ஓரளவுக்கு உதவுகிறது. மருத்துவ ஆலோசனையுடன் அதைப் பின்பற்றலாம். மற்றபடி, காலையில் வெறும் வயிற்றுடன் இருந்துவிட்டு, ஒரேயடியாக மதிய உணவைச் சாப்பிடுவதும், அதனால் வெயிட்லாஸ் ஆகும் என நம்புவதும் மிகவும் தவறு. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

விகடன் 9 Dec 2025 9:00 am

முடவாட்டுக்கால் உண்மையிலே முட்டிவலியைப் போக்குமா?

முட்டிவலி என்று கூகுளில் டைப் செய்தால், முடவாட்டுக்கால் பற்றிய கட்டுரைகளும் வீடியோக்களும் கொட்டுகின்றன. 'முடவாட்டுக்கால் சூப் செய்வது எப்படி' என்கிற சமையல் வீடியோக்களுக்கும் பஞ்சமில்லை. முடவாட்டுக்கால் உண்மையிலே முட்டிவலியைப் போக்குமா என்று, சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் செல்வ சண்முகம் அவர்களிடம் கேட்டோம். முடவாட்டுக்கால் சூப் ஆர்த்ரைட்டீஸுக்கு எதிரான தன்மை இருக்கிறது! ''முடவாட்டுக்கால் கிழங்கு மருத்துவ குணமுள்ள ஓர் உணவுப்பொருள்தான். அதில் சந்தேகமே வேண்டாம். உடலில் ஏற்படக்கூடிய வலி, வீக்கம், சிவந்துபோதல், உடற்சூடு போன்றவற்றை நீக்கக்கூடிய தன்மை இந்தக் கிழங்கில் இருப்பது உண்மைதான். இந்தக் கிழங்கில் ஆர்த்ரைட்டீஸுக்கு எதிரான தன்மையும் இருக்கிறது. கூடவே, மன அமைதியையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். இதுதொடர்பாக நிறைய ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன. ஆய்வுகள் என்ன சொல்கின்றன? இதில் இருக்கிற பைட்டோ நியூட்ரியன்ஸ் எனப்படும் தாவர வேதிப்பொருள்கள், வலி நிவாரணம் தரக்கூடியது என்பதை பல இன்டர்நேஷனல் மருத்துவ ஆய்வு இதழ்கள், வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, நம்பகமான PubMed போன்ற ஆய்வுத்தொகுப்பிலும் முடவாட்டுக்கால் பற்றிய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. முட்டி வலி Periods: பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது? ; அந்த வலியை வராமல் தடுக்க முடியுமா? | சந்தேகங்களும் தீர்வும்! ஆகாய கங்கையில் குளிக்க வருபவர்களுக்கு... முடவாட்டுக்கால் கொல்லி மலையில் நிறைய விளையும். அங்கிருக்கிற ஆகாய கங்கையில் குளிக்க வருபவர்களுக்கு மலைப்பகுதியில் நடந்து வந்தக் காரணமாக முட்டி வலி வரும். அதை போக்க இந்தக் கிழங்கை வேக வைத்து சூப்பாக அருந்துவார்கள். தவிர, அந்தப்பகுதியில் இருக்கிற மலைவாழ் மக்களும், வேலை காரணமாக அந்தப்பகுதியில் மலையேறுபவர்களுக்கும் வருகிற கால் வலியைப் போக்க முடவாட்டுக்காலை மருந்துணவாக இயற்கை அங்கு வைத்திருக்கிறது. இதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருப்பதால், முட்டி வலி இருப்பவர்கள் எல்லோரும் முடவாட்டுக்காலை சாப்பிட வேண்டியதில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகள் இருக்கின்றன! அதற்குபதில், முட்டி வலியால் அவதிப்படுபவர்கள் நம்முடைய மண்ணில் நிறைய விளையக்கூடிய, அபரிமிதமாகக் கிடைக்கக்கூடிய மிளகு, மஞ்சள், பூண்டு, இஞ்சி, ஏலக்காய் போன்ற மருந்துணவுகளை சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தாவரத்தில், ஒரு மருத்துவ குணம் இருக்கிறது என்ற காரணத்துக்காக எல்லோரும் அதையே சாப்பிட்டு அந்தத் தாவரத்தையே வேரோடு அழிப்பது புத்திசாலித்தனமல்ல. மற்றபடி, முட்டி வலி போக்க நம் மண்ணில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகள் இருக்கின்றன. முடவாட்டுக்கால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை'' என்கிறார் டாக்டர் செல்வ சண்முகம். Survival: உலகிலேயே வலி மிகுந்த பிரசவத்தை சந்திக்கிற விலங்கு இதுதான்!

விகடன் 9 Dec 2025 7:17 am

Doctor Vikatan: சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் புளிப்பான உணவுகளை அறவே தவிர்க்கவேண்டுமா?

Doctor Vikatan: என் உறவினருக்கு நீண்டகாலமாக சைனஸ் பிரச்னை உள்ளது. குளிர்காலத்தில் அது இன்னும் தீவிரமாகும். அவர் உணவில் புளிப்புச்சுவையை அறவே சேர்த்துக்கொள்வதில்லை. புளி உள்ளிட்ட அனைத்து புளிப்பு உணவுகளும் சைனஸ் பாதிப்பை அதிகப்படுத்தும் என்கிறார், அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு, சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சைனஸ் மாதிரி பிரச்னைக்கும் சரி, மற்ற எந்த விஷயத்துக்குமே பத்தியம் என்பதை  இரண்டு விதங்களாகப் பார்க்கலாம். ஒன்று நோய்க்கு ஏற்ற பத்தியம், இன்னொன்று மருந்துகள் சார்ந்த பத்தியம்.   பெருமருந்துகள்  கொடுக்கும்போது, சித்த மருத்துவத்தில் சில பத்தியங்கள் அறிவுறுத்தப்படும். அதில் புளிப்புச்சுவையை குறைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம்.   எல்லா நோய்களுக்கும் புளிப்பை முழுவதுமாக நீக்க வேண்டியதில்லை, ஆனால், கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய் என்பதால், புளிப்புச் சுவை அதிகமாகும் போது கபம் அதிகரிக்கலாம். சுவை தத்துவத்தின்படி, புளியைக் குறைப்பது சைனஸ் சிகிச்சைக்கு உதவும்.   புளியை முற்றிலுமாக நீக்குவது பெரிய மருந்துகள் எடுக்கும்போதும், புற்றுநோய் போன்ற தீவிர சிகிச்சை எடுக்கும்போதும் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய் மற்ற நேரங்களில், புளியை முழுமையாக நீக்காமல் கொஞ்சம் குறைத்து எடுக்கலாம். சுவையே இல்லாமல் உண்பதும் தவறு.   புளிப்புத் தன்மை குறைவாக உள்ள, ஆனால் புளியின் பலன்களைக் கொடுக்கக்கூடிய கேரளத்துக் குடம் புளியை   பயன்படுத்தலாம்.   சைனஸ் ஏற்படும் சீசனிலும், சைனஸ் தீவிரமாக இருக்கும்போதும் நல்ல உணவியல் முறைகளைப் பின்பற்றவது,  ஆவி பிடிப்பது, ஃப்ரெஷ்ஷாக சமைத்த சூடான உணவுகளைச் சாப்பிடுவது,  கார்ப்புத்தன்மை உடைய, வெப்ப வீரியம் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்வது (உதாரணத்துக்கு, தூதுவளைத் துவையல், கொள்ளுத்துவையல், கொள்ளு ரசம் போன்றவை)   போன்றவற்றைப் பின்பற்றினாலே ஆரோக்கியமாக இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Myths and Facts: புளி சேர்த்துக்கொண்டால் ரத்தம் சுண்டிப்போகுமா?

விகடன் 8 Dec 2025 9:00 am

Digestion: ஜீரணப் பிரச்னை; வராமல் தடுக்க மருத்துவர் கு.சிவராமன் கம்ப்ளீட் வழிகாட்டல்!

''சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம். ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு. இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள். செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம்'' என்கிற சித்த மருத்துவர் சிவராமன், ஜீரணத்தை சீராக்க வழிமுறைகளையும் சொல்கிறார். Digestion * ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. இரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு. * காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தைக் குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல் பொங்கல் அல்லது உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிறு குழந்தைகளாக இருந்தால் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி நல்லவை. வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், இளம் பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம். ஜீரணத்தை சீராக்கும். Digestion * மதிய உணவில் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு / கடைசல் இவற்றுடன் அரிசி உணவை அளவாகச் சாப்பிட வேண்டும். * அதிக காரத்தைத் தவிர்க்கவும். காய்ந்த மிளகாய் பயன்படுத்தவேண்டிய உணவுகளில், அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்த வேண்டும். * ஜீரணத்தை எளிதாக்க, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது. * சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். * அவசியமின்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. Digestion * எப்போதும் டென்ஷனுடன் இருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறு வந்துவிடும். மனதை லகுவாக வைத்திருக்கவும். * புகை, மது இரண்டும் கேன்ஸரை வயிற்றுப்புண் வழியாக அழைத்து வருபவை. இரண்டையும் தவிர்க்கவும். * காலை உணவில் இட்லிக்கு பிரண்டைத் துவையல் நல்லது. * துவரம்பருப்பு சாம்பாருக்கு பதிலாக பாசிப்பருப்பு சாம்பார் செய்து சாப்பிடலாம். * வெள்ளைக் கொண்டைக்கடலைக்குப் பதில், சிறு சிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தலாம். அதுவும்கூட குறைந்த அளவில், மிளகு சீரகம் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். Digestion * காலை 11 மணிக்கு நீர் மோர் இரண்டு டம்ளர் அருந்தலாம். * மதிய உணவில் காரமில்லாத, பாசிப் பயறு சேர்த்த கீரைக் குழம்பு, தேங்காய்ப் பால் குழம்பு (சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் இரண்டு குவளை சீரகத் தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை எளிதாக்கும். * இரவில் வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடவும். Digestion * கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கவும். அதிக அளவிலான மாம்பழமும் பலாப்பழமும்கூட வாயுவை உண்டாக்கும். Health: வேக வேகமாக சாப்பிட்டா ஆயுள் குறையுமா? - டாக்டர் விளக்கம்! * சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. சாப்பிட்டதும் வயிற்று உப்புசம் வருபவர்களுக்கு இந்த அன்னப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, மோருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். உடனடியாக வாயு விலகி, வயிற்று உப்புசம் நீங்கும். * சித்த மருத்துவரிடம் கிடைக்கும் ஜீரண சஞ்சீவி, சீரக விவாதி மருந்துகள் அஜீரணத்தை அகற்ற உதவுபவை. * தினமும் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். அடுப்பங்கரையில் கொஞ்சம் அக்கறை காட்டினால் அஜீரணத்தை வெல்லலாம்! Stomach Health: இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க... எதுக்களிப்பு பிரச்னை வரவே வராது!

விகடன் 8 Dec 2025 6:19 am

Doctor Vikatan: சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

Doctor Vikatan: கொரோனா காலத்தில் வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி அதிகம் வலியுறுத்தப்பட்டது. பொதுவாகவே, வைட்டமின் சி மாத்திரைகளை தினமும் எடுத்துக்கொண்டால், சளி, காய்ச்சல் பாதிக்காது என்று சொல்லப்டுவது எந்த அளவுக்கு உண்மை?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி சளி, காய்ச்சல் பிரச்னை எதனால் வருகிறது என்பது மிகவும் முக்கியம். சளி, காய்ச்சல் என்பது வைட்டமின் சி குறைபாடுகாரணமாக வருவது கிடையாது. சளி, காய்ச்சல் வருவதற்கான பல காரணங்களில் மிக முக்கியமான காரணம், தொற்று (Infection). தொற்று பாதிக்கிறது என்றால், நம் உடலின்நோய் எதிர்ப்புச் சக்தி (Immune Level) சற்று குறைவாக இருப்பதாக அர்த்தம். நம் உடல் 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' (Oxidative Stress) நிலையில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்போது ஏற்படும் சமநிலையற்ற நிலை.  இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை சமன் செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ உபயோகப்படுத்துவதுதான் வைட்டமின் சி. அதனால்தான், காயம் ஆறும் காலத்தில் உள்ளவர்களுக்கோ (Healing Time), புகை பிடிப்பவர்களுக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை முடித்தவர்களுக்கு, அதேபோல நீரிழிவு நோயாளிகளுக்குப்  புண்கள் ஏதாவது வந்தாலோ வைட்டமின் சி சப்ளிமென்ட்டை (Supplement) மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறோம். இதன் நோக்கம், அவர்களுடைய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து, அவர்களுடைய நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம். நாம் ஒருநாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கு மேல் வைட்டமின் சி எடுத்தால், அதுவே நமக்கு பிரச்னைகளை உண்டாக்கும். ஒரு நாளைக்கு ஒருவர்2,000 மில்லிகிராமுக்குள்தான் வைட்டமின் சி எடுக்க வேண்டும். அதற்கும் மேல் போனால், அந்த வைட்டமின் சி-யே அவர்களுக்குப் பிரச்னைகளை உண்டுபண்ணும். அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம். அது அவர்களுக்கு வைட்டமின் சியின் பலனை அளிக்கும். வைட்டமின் சி மட்டுமல்ல, எந்த சப்ளிமென்ட்டையும் மருத்துவரின் பரிந்துரையின்றி, எடுக்காமல் இருப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கோபம், அழுகை, தனிமை, பயம்... மாறும் மனநிலையை சரிசெய்யுமா பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்?

விகடன் 7 Dec 2025 9:00 am

Doctor Vikatan: அனீமியா, பிறப்புறுப்புக் கசிவு, மெனோபாஸுக்கு பிறகும் தொடருமா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்குக் கடந்த சில வருடங்களாக தீவிர அனீமியா (ரத்தச்சோகை) பிரச்னை இருக்கிறது. மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமிருப்பதுதான் காரணம் என்றும், பீரியட்ஸ் நின்றுவிட்டால், அதாவது மெனோபாஸுக்கு பிறகு இது சரியாகிவிடும் என்றும் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? அதேபோல, அவ்வப்போது படுத்தும் பிறப்புறுப்புக் கசிவும், மெனோபாஸ் வந்துவிட்டால் சரியாகிவிடுமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸ் வந்துகொண்டிருக்கும்வரை, அளவுக்கதிக ப்ளீடிங் பிரச்னை உள்ளவர்களுக்கு அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு வரலாம். அதிக ப்ளீடிங்கிற்கான காரணத்தைச் சரிசெய்யாதவரை அனீமியாவும் சரியாகாது. மெனோபாஸுக்கு பிறகு அனீமியா தொடர்ந்தால், பீரியட்ஸின் மூலம் ப்ளீடிங் இல்லாத காரணத்தால், வேறு எங்கே ரத்த இழப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். நம் உடலில் இரும்புச்சத்தானது ஃபெரிட்டின் (Ferritin) என்ற பெயரில் சேமித்து வைக்கப்படும். இப்படி சேமித்து வைக்கப்பட்ட இரும்பானது முழுவதும் காலியான பிறகுதான் 'அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா' (Iron deficiency anemia )  என்ற ரத்தச்சோகை நிலை வரும். இதை சப்ளிமென்ட்டுகள் கொடுத்துதான் சரிசெய்ய வேண்டியிருக்கும். அடுத்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படாத (Malabsorption) நிலையால் ஏற்படும் அனீமியா. வயிற்றிலோ, குடல் பகுதியிலோ ஏதோ பிரச்னை காரணமாக, இரும்புச்சத்தானது  சரியாக கிரகிக்கப்படாத நிலையே இது. அதைக் கண்டுபிடித்து சரி செய்தால்தான் இந்த வகை அனீமியா சரியாகும். எனவே, மெனோபாஸுக்கு பிறகு அனீமியா பாதிப்பு இருந்தால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து குணப்படுத்த வேண்டியது மிக அவசியம். மெனோபாஸுக்கு சிகிச்சைகள் அவசியமா? பெரிமெனோபாஸிலும் சரி மெனோபாஸிலும் சரி, பிறப்புறுப்பில் திரவக்கசிவு இருக்கும். 'வெஜைனல் எட்ரோஃபி' (Vaginal atrophy) என்ற பிரச்னையாலும் இப்படி இருக்கலாம். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் வெஜைனா பகுதியில் வறட்சி அதிகமாகும். அந்த நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் வெஜைனாவிலிருந்து கசிவு ஏற்படலாம். அந்தக் கசிவானது நீர்த்து, மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் வெளிப்பட்டால் வெஜைனா பகுதி ஆல்கலைனாக மாறிவிட்டதாக அர்த்தம். அதன் விளைவாக அங்கே பாக்டீரியா கிருமிகள் வளர்வது அதிகரிக்கும். அது வெஜைனா பகுதியில் இன்ஃபெக்ஷன் ஏற்படவும் காரணமாகும். அதற்கு சிகிச்சை அவசியம். தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கசிவு என்று தெரிந்தால் வெஜைனல் லூப்ரிகன்ட் அல்லது வெஜைனல் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஹார்மோன் க்ரீம், ஹார்மோன் தெரபி போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்தியம்; வெஜைனல் க்ரீம் நிஜமாகவே உதவுமா?

விகடன் 6 Dec 2025 9:00 am

Doctor Vikatan: கண்களுக்குள் ரத்தக்கசிவு - காரணம் என்ன, தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் உறவினர் பெண்ணுக்கு 70 வயதாகிறது. அவருக்கு கண்களுக்குள் ரத்தக் கசிவு இருப்பதாகவும் அதை சரிசெய்ய முடியாதென மருத்துவர் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார். கண்களுக்குள் ரத்தம் கசிவது ஏன், அதை சரிசெய்ய முடியாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் கண்ணில் ரத்தக் கசிவு (Vitreous Hemorrhage) ஏற்படுவதற்குப் பொதுவாக இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று உயர் ரத்த அழுத்தம் (Hypertension/பிபி), மற்றொன்று நீரிழிவு நோய் (Diabetes). நீரிழிவு நோயில், கண்ணில் ஆக்ஸிஜன் குறைவு (Hypoxia) ஏற்படுகிறது. இதனால், கண்ணில் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகின்றன. இந்த இயல்புக்கு மாறான புதிய ரத்தக் குழாய்கள் (Abnormal Blood Vessels) தொடர்ந்து ரத்தம் கசியும் (Bleeding Tendency) தன்மையுடன் இருப்பதால், இதுவே நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது.  உயர் ரத்த அழுத்தத்தின்போது, ரத்தக் குழாய்கள் சுருங்கி (Vessel Narrowing), விழித்திரையின் மையப் பகுதியில் நீர் கோத்தல் (Macular Edema) ஏற்படுகிறது. மேலும், ரத்தக் குழாய்கள் வெடித்து, அங்கேயும் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகின்றன.  இந்த இரண்டு நிலைமைகளுக்கும் அளிக்கப்படும் முக்கியச் சிகிச்சைகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. கண்களுக்குள் ரத்தக்கசிவு... காரணம் என்ன? முதலில் லேசர் சிகிச்சை (Laser Treatment), விழித்திரையின் அனைத்துப் பகுதிகளுக்கும் லேசர் சிகிச்சை (Pan-Retinal Photocoagulation - PRP) அளிக்கப்படுகிறது. அடுத்தது, ஊசி சிகிச்சை (Injections) , விழித்திரையின் மையப்பகுதி (Macula) பாதிக்கப்பட்டு இருந்தால், கண்ணுக்குள் நேரடியாக ஊசி போடும் சிகிச்சை (Anti-VEGF Treatment) அளிக்கப்பட வேண்டும். கடைசியாக, அறுவை சிகிச்சை (Surgery) பரிந்துரைக்கப்படலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு விழித்திரை விலகல் (Tractional Retinal Detachment) போன்ற கடைசிநிலை பாதிப்புகள் இருந்தால், அதற்குரிய அறுவை சிகிச்சை (Retinal Detachment Surgery) செய்யப்பட வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால், தயவுசெய்து முதலில் அவற்றைச் சரிபார்த்து கட்டுக்குள் கொண்டு வாருங்கள். மிக  முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால், தயவுசெய்து முதலில் அவற்றைச் சரிபார்த்து கட்டுக்குள் கொண்டு வாருங்கள். அதைத் தொடர்ந்து, உங்கள் கண் மருத்துவரை அணுகி, லேசர் வேண்டுமா அல்லது ஊசி சிகிச்சை வேண்டுமா என்பதை முடிவு செய்து சிகிச்சை பெறுங்கள்.     உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

விகடன் 5 Dec 2025 9:00 am

Choking: தொடரும் சோக்கிங் மரணங்கள்; எப்படித் தவிர்ப்பது; எப்படி முதலுதவி செய்வது?

செவ்வாழைப்பழம் தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி, ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி, பரோட்டா தொண்டையில் சிக்கி ஆண் பலி என, ஏதோவொரு உணவுப்பொருள் தொண்டையில் சிக்கி இறப்பவர்களைப்பற்றிய செய்திகள் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதோ, இப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், தொண்டைக்குழியில் வாழைப்பழம் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறான். மனைவியிடம் போன் பேசியபடியே பரோட்டா சாப்பிட்டார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது! Choking First Aid இதில், குழந்தைகளுக்கு எதிர்பாராவிதமாக நடந்தது என்றால், பெரியவர்கள் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிடும்போதுதான் இப்படி நிகழ்ந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னால், சட்டக்கல்லூரி மாணவி ஒருவருக்கு வாழைப்பழம் சாப்பிடும்போது வலிப்பு வந்திருக்கிறது. விளைவு, தொண்டைக்குழியில் சிக்கி மரணம். பரோட்டா தொண்டையில் சிக்கி பலியானவர், மனைவியிடம் போன் பேசியபடியே பரோட்டா சாப்பிட்டார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. தொண்டையில் ஏதோவொரு உணவுப்பொருள் சிக்கிக்கொண்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா விளக்குகிறார். உணவுப்பொருள் தொண்டையில் சிக்காமல் இருக்க டாக்டர் ஃபரூக் அப்துல்லா ''நாம் சாப்பிடுகிற எந்த உணவுப்பொருளும் இப்படியோர் ஆபத்தை விளைவிக்கலாம். இதற்கு வயது வித்தியாசமும் கிடையாது. என்றாலும், சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு தொண்டையில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று, சாப்பிடும்போது பேசக்கூடாது. இரண்டு, அவசர அவசரமாக சாப்பிடவே கூடாது. இவையிரண்டும்தான் உணவுப்பொருள் தொண்டையில் சிக்கும் ஆபத்தை அதிகரிக்கும். உணவுப்பொருளோ அல்லது வேறு ஏதேனும் பொருளோ, தொண்டையை அடைத்துக்கொண்டு மூச்சுப் பாதையில் தடை ஏற்படுத்துவதை 'சோக்கிங்' (Choking) என்போம். இந்த மெடிக்கல் எமர்ஜென்சி யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், இதற்கான முதலுதவியை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம்'' என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார். இருமலும், முதுகுத்தட்டலும் இருமலும், முதுகுத்தட்டலும்... இருமும்போது சுவாசப்பாதையில் அடைத்துக்கொண்டிருக்கும் பொருள் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், பாதிக்கப்பட்டவர்களால் முடிந்தால் தொடர்ந்து இரும சொல்லலாம். ஒருவேளை அவர்களால் இருமவோ, பேசவோ, கத்தவோ முடியவில்லையென்றால், அவருக்கு பக்கவாட்டில் நின்றுகொண்டு, அவருடைய நெஞ்சுப்பகுதியை கைகளில் தாங்கிக்கொண்டு, அவரை இடுப்புப்பகுதி வரை குனிய வைக்க வேண்டும். பிறகு, அவருடைய முதுகுபக்கத்தில் இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில், உள்ளங்கையை வைத்து ஐந்து முறை நன்றாக அடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டையில் அடைத்துக்கொண்டிருக்கிற பொருள் வெளியேற வாய்ப்பு அதிகம். ஹெம்லிச் (Heimlich) Heimlich டூ-வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள்... கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? மேலே சொன்ன முதலுதவி பயன்கொடுக்கவில்லை என்றால், மூச்சுத்திணறல் ஏற்பட்டவரின் பின்புறம் நின்றுகொண்டு, அவரது இடுப்பை, பின்புறத்தில் இருந்து ஒரு கையால் அணைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இன்னொரு கையின் ஐந்து விரல்களையும் குத்துவதற்கு தயாராவதுபோல ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இணைத்த இந்தக் கையை சரியாக அவரின் மேல் வயிற்றுப்பகுதியில் இருக்குமாறு வைக்கவேண்டும். இந்தக் கையை அணைத்துள்ள கை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவரின் வயிற்றுப்பகுதியை அழுத்தியபடி, வேகமாக உங்கள் இரண்டு கைகளையும் மேல்நோக்கி தூக்க வேண்டும். இப்படி செய்யும்போது, பாதிக்கப்பட்டவரை சிறு உயரம் தூக்கி கீழே விடுவது போல இருக்கும். இதைத் தொடர்ந்து 5 முறை வேக வேகமாக செய்ய வேண்டும். நான் மேலே சொன்ன, இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில் தட்டுவதையும், ஹெம்லிச் செய்முறையையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். மூர்ச்சை நிலைக்கு சென்றால் சிபிஆர் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..! ஒருவேளை பாதிக்கப்பட்டவர் மூர்ச்சை நிலைக்கு சென்றுவிட்டால், அவரின் முதுகுப்பகுதி தரையில் இருக்குமாறு படுக்க வைத்து, அவருடைய வாயை கவனிக்க வேண்டும். மூச்சுத்திணறலை ஏற்படுத்திய பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், அதை லாகவமாக எடுத்துவிடலாம். கண்ணுக்குத் தெரியாத பொருளை எடுக்க வாய்க்குள் விரலைவிட்டால், அடைத்துக்கொண்டிருக்கிற பொருள் இன்னும் உள்ளே சென்று பிரச்னையை அதிகமாக்கி விடலாம். மூர்ச்சை நிலை தொடர்ந்தால், சிபிஆர் எனும் உயிர்காக்கும் முதலுதவியை செய்ய வேண்டும். நமக்கு நாமே எப்படி செய்துகொள்வது..? Choking ஒருவேளை யாருமே இல்லாத இடத்தில் நமக்கே இந்த நிலை ஏற்பட்டால், நம் கைகளை இணைத்து வயிற்றுப்பகுதியில் வைத்து, நாற்காலி அல்லது மேஜை போன்ற கடினமான சமதளத்தில் அழுத்த வேண்டும். குழந்தைகளுக்காக சில டிப்ஸ்..! பொதுவாக குழந்தைகள் கண்ணில்படுகிற சின்னச்சின்னப் பொருள்களை வாயிலோ அல்லது மூக்கிலோ போட்டுக்கொள்வார்கள் என்பதால், அப்படிப்பட்டப் பொருள்கள் வீட்டில் இல்லாமலோ அல்லது குழந்தைகள் கைக்கு எட்டாமலோ பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பட்டன் பேட்டரி, உடைந்த கிரையான்ஸ் துண்டுகள், உடைந்த பொம்மையின் பாகங்கள் போன்றவை குழந்தைகளின் கையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பட்டாணி, வேர்க்கடலை, ராஜ்மா போன்ற சுண்டல் வகைகளை குழந்தைகள் உங்கள் கண்முன்னால் சாப்பிட வையுங்கள். இவைகூட சிறு குழந்தைகளின் தொண்டையில் சிக்கலாம், கவனம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.

விகடன் 5 Dec 2025 7:38 am

Doctor Vikatan: சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி சாப்பிட்டால், இருமல், சளி சரியாகுமா?

Doctor Vikatan: சளி, இருமல் இருக்கும்போது சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே குணமாகும் என்பது எந்த அளவுக்கு உண்மை. அந்த உணவுகள் மட்டுமே போதுமா? பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ராஜம். அரசு சித்த மருத்துவர் ராஜம் சிக்கன் கறி, சிக்கன் குருமா, சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் என்று இன்று பெரும்பாலோரின் பிடித்தமான, மிகவும் பிரியமான உணவாக விளங்குவது சிக்கன். பலரும் பல விதங்களில், பலவிதமான செய்முறைகளில் தங்களது விருப்ப உணவாக இதைச் சாப்பிடுகிறார்கள். உணவாகப் பயன்படும் சிக்கனை, மருந்தாகவும் பயன்படுத்தலாம். தாது, தாவர, ஜீவப் பொருள்களை மருந்துகளாகவும் தன்னுள் உள்ளடக்கியதுதான் சித்த மருத்துவம். அந்த வகையில் உடும்பு, நத்தை, ஆமை, கோழி, ஓணான் எனப்   பல்வேறு உயிரினங்களும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. குக்குடம், குருகு, காலாயுதம், வாரணம், ஆண்டலைப்புள் என்று பல பெயர்களில் வழங்கப்படும் கோழியும் மருத்துவப் பயன்களை உடையது தான். கோழிக்கறி, கோழி முட்டை, முட்டை ஓடு என அனைத்துமே மருத்துவ குணங்களை உடையவை. கருங்கோழி, கானாங்கோழி, வான்கோழி, சம்பங்கோழி என 4 வகைகளாகக் கோழிகள் வகைப்படுத்தப்படுகின்றன.  செட்டிநாடு சிக்கன் பிரியாணி எந்த டயட், நல்ல டயட்... பிஸ்கட் முதல் பிரியாணி வரை... சந்தேகங்கள்... நிபுணர்களின் விளக்கங்கள்! கோழிக்கறியினால் சுவாசம் அதாவது கபம் (சளி, இருமல்) நீங்கும். கருங்கோழிக் கறியினால் உடலுக்கு வன்மை கிடைக்கும். கருங்கோழி சூரணத்தினாலும் சளி, இருமல் தீரும்.   கானாங்கோழிக்கறியும் கப நோய்களைப் போக்கும். இவ்வாறெல்லாம் சித்த மருத்துவத்தில் சளி, இருமலைப் போக்கும் மருந்தாகக் கோழிக்கறி கூறப்பட்டுள்ளது. கோழிக்கறி மட்டுமல்ல, கோழி, அதன் முட்டை இவற்றைக் கொண்டு, அண்டத் தைலம், சிற்றண்ட மெழுகு, அண்ட எருக்கஞ் செய்நீர், கருங்கோழிச்  சூரணம் போன்ற மருத்துவப் பலன்களை உடைய பல செய்மருந்துகள் செய்யப்படுகின்றன. எனவே, சிக்கன் சூப்பினால் இருமல் குறையும் என்பதும் உண்மைதான். கோழிக்கறியில் இருக்கும்  அமினோ அமிலம், சளியைக் குறைக்கவல்லது என்று தான் நவீன மருத்துவ ஆய்வுகளும் கூறுகின்றன. Jewish Penicillin  என்று அழைக்கப்படும் சிக்கன் சூப்பை, பலரும் பல விதங்களில் தயாரிக்கிறார்கள். சிக்கனுடன் தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு  போன்று மருத்துவப் பயன்களை உடைய பல பொருள்கள்  சேர்க்கப்படுகின்றன. இந்த மூலிகைகள் அனைத்துமே இருமலைப் போக்கக்கூடியவையாகவும், உடலின் வன்மையைப் பெருக்கக் கூடியவையாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. எனவே, சிக்கன் சூப் குடித்தால் இருமல் தணியும். ஆனால், இருமலைத் தணிக்க சிக்கன் சூப் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சிக்கனுடன் தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்று மருத்துவப் பயன்களை உடைய பல பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா? இப்படி சிக்கன் சூப்பில் சேர்க்கப்படும் மூலிகைகள் இருமலைப் போக்கக்கூடிய தன்மை உடையவையாக இருக்கும்போது, அந்த மூலிகைகளையே நாம் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், கோழிக்கறி உடல் வெப்பத்தை அதிகப்படுத்தும். எனவே, நோயாளிகள் குறிப்பாக, சரும நோயாளிகள் இதைத் தவிர்ப்பது நல்லது. தவிர, பறவைகளின் மூலம் அதிலும் கோழிகளின் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க, உயிரினங்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இருமலுக்கு சிக்கன் சூப் தான் மருந்து என்று இல்லாமல், மகத்தான பயனுள்ள, அருமையான மூலிகைகள் பலவற்றையும் பயன்படுத்தி, பலன் பெறலாம். ‘மூலிகைகளால் முதல் மருத்துவம்’ என்பதுதான் சித்தர்களின் கோட்பாடு. அதை உணர்ந்து பின்பற்றுவோம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 4 Dec 2025 9:00 am

Dopamine toxicity: செயற்கையான மகிழ்ச்சியோட இருந்தீங்கன்னா என்னப் பிரச்னை வரும் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு உறங்கும் வரை அனைவரும் செல்போனும் கையுமாகவே வாழ்கிறோம். இதனால் நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் விளைவுகளையும், அதிலிருந்து வெளிவரும் வழிமுறைகளையும் சொல்கிறார் இயற்கை மருத்துவர் யோ. தீபா. Dopamine toxicity காலையில் எழுந்தவுடன் படுக்கையில் இருந்து கால்களை கீழே வைப்பதற்குள், நம் அனைவருடைய கைகளும் முதலில் செல்போனைத்தான் தேடும். இப்படி செல்போனை பார்க்கும்போது மூளையில் ’டோபமைன்’ என்ற ஹார்மோன் உற்பத்தியாகும். இது ஒரு மகிழ்ச்சி தரும் ஹார்மோன். ’ஒரு நிமிடம்’ என்று போனை பார்க்க ஆரம்பித்தால், நம்மை மறந்து மணிக்கணக்கில் அதிலேயே மூழ்கி இருக்க, செல்போன் பார்க்க ஆரம்பிக்கையில் உற்பத்தியாக ஆரம்பிக்கிற இந்த டோபமைன்தான் முக்கிய காரணம். மசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்... லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்! உண்மையில், டோபமைன் நல்ல ஹார்மோன் தான். நம்மை மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். அந்தக் காலத்தில் கஷ்டப்பட்டு படித்து மதிப்பெண் பெறுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் பாராட்டுப் பெறுவது போன்றவற்றை ஒரு பரிசாகப் பார்த்தது நமது மூளை. ஆனால், இப்போது இருக்கும் தொழில்நுட்பம் ஒரு ரீல்ஸ் மூலமே இந்த டோபமைன் உற்பத்தியைத் தூண்டி விட்டு விடுகிறது. நாம் மணிக்கணக்கில் ரீல்ஸ் பார்க்க, மகிழ்ச்சி தரும் டோபமைன் ஹார்மோனும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்க, நாளடைவில் இதுவே ‘டோபமைன் நச்சுத்தன்மை’யை ஏற்படுத்தி விடும். விளைவு, தேவைப்படும்போது டோபமைன் பற்றாக்குறையாகிவிடும். Dopamine toxicity Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்..! நாளடைவில் நம் மூளைக்கு உண்மையான சந்தோஷம் என்னவென்றே தெரியாமல் போகலாம். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அதிலிருந்து கவனம் மாறி வேறொரு வேலையை செய்வது; சின்ன வேலையைக்கூட சரியாக கவனம் செலுத்தி செய்ய முடியாமல் மூளை தடுமாறுவது போன்ற அறிகுறிகள் மன அழுத்தத்தை உருவாக்க ஆரம்பிக்கும். அதாவது, ரீல்ஸ் பார்த்துப் பார்த்து இப்போது எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு பின்னாட்களில் மன அழுத்தத்தில் தள்ளப்படுவோம். டோபமைன் நச்சுத்தன்மையை குறைக்க * காலையில் எழுந்ததும் தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு, புத்தகம் அல்லது நியூஸ் பேப்பர் வாசிக்கலாம். நடைப்பயிற்சி செய்வது, சமையல் செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவற்றை செய்யலாம். * மற்ற நேரங்களில் ஓய்வுக்கிடைத்தால், நண்பர்களுடன் நேரம் செலவு செய்வது, சந்தோஷமான நிகழ்வுகளை நினைவுபடுத்துவது போன்றவற்றை செய்யலாம். டோபமைன் நச்சுத்தன்மையைக் குறைக்கும் மூச்சுப்பயிற்சிகள் பற்றிய வீடியோ இதோ.. * காலையில் மூச்சுப்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். இது ஸ்டிரெஸ் ஹார்மோனான கார்டிசோல் அளவைக் குறைத்து, ஹேப்பி ஹார்மோனான டோபமைனை தேவையான நேரத்தில் விடுவிக்கும். * நல்ல சத்தான உணவுப்பொருட்கள், தானியம் மற்றும் விதை வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. பழங்களை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், உங்கள் மனதுக்குள் இருக்கிற குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்கிறார் டாக்டர் யோ. தீபா.

விகடன் 4 Dec 2025 7:14 am

உள்ளாடை முதல் பைக் சீட் வரை; ஆண்களுக்கு சில அலர்ட் டிப்ஸ் - காமத்துக்கு மரியாதை 268

இளைஞர்கள், திருமணமாகாத ஆண்கள், இன்னும் குழந்தைப் பெறாத ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ் தருகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ்! லேப்டாப்..! லேப்டாப்பை மடியில் வைத்து வேலைபார்ப்பதால், ஆணுறுப்புக்கு நேரிடையாக மிகப்பெரிய பாதிப்பு வராது என்றாலும், விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். விந்துப்பைகள் உடம்பிலிருந்து கீழே தொங்குவதற்கு காரணம், அது 35 டிகிரி வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மடியில் லேப்டாப் வைத்து வேலைபார்க்கும்போதும், விந்துப்பையின் வெப்பநிலை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். செல்போன்..! செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதால், அதிலிருந்து வெளிப்படுகிற ரேடியேஷன் விந்தணுக்கள் உற்பத்தியைக் குறைக்கிறது என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதனால் விறைப்புத்தன்மையில் குறைபாடு வராது. இதுவரை குழந்தைப் பெறாதவர்கள், குழந்தையின்மை பிரச்னையுடன் இருப்பவர்கள், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்ப்பதே நல்லது. ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ்! ஜீன்ஸ் பேன்ட்..! இந்தியா போன்ற வெப்பம் அதிகமான நாடுகளில், வெப்பத்தை அதிகரிக்கிற மற்றும் வெப்பத்தை வெளியேற்றாமல் இருக்கிற உடைகளை அணிந்தால் விந்துப்பைகளின் வெப்பநிலைக்கு அதிகரித்துவிடும். விளைவு, விந்தணுக்கள் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும். தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264 உள்ளாடைகள்கூட விந்துப்பைகளை நசுக்காமல், அவற்றைத் தாங்கிப் பிடிக்கும்வண்ணம் இருப்பதே நல்லது. ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் Ball பட்டால் என்ன செய்ய வேண்டும்? காமத்துக்கு மரியாதை 267 சைக்கிளும் பைக்கும்..! நீண்ட தூரம் பைக் ஓட்டாதவர்கள் இன்றைக்கு இருக்கவே முடியாது. அதுவும் வேலை காரணமாக தொடர்ந்து பல வருடங்கள் ஓட்டிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஆணுறுப்பைச்சுற்றி மரத்துப்போகும். இதற்குக் காரணம், அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதுதான். இதனால், ஆண்மைக்குறைவும் வரும்; விந்தணுக்கள் குறைவும் ஏற்படும். நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் இது பொருந்தும். குழந்தையில்லாதவர்கள் இவற்றை தவிர்ப்பதே நல்லது.

விகடன் 3 Dec 2025 4:49 pm

Doctor Vikatan: இதய நோயாளிகள் வாக்கிங் போகலாமா, எந்த வேகத்தில் நடக்க வேண்டும்?

Doctor Vikatan: என் மாமனாருக்கு சமீபத்தில் ஹார்ட் சர்ஜரி நடந்தது. இப்போது அவர் நலமாக இருக்கிறார். ஆபரேஷனுக்கு முன்பு அவருக்கு வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்தது. இப்போது மீண்டும் வாக்கிங் போக வேண்டும் என்கிறார்.  அதை அனுமதிக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதய நோயாளிகள் கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்யலாம். ஆனால், மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே செய்ய வேண்டும். உண்மையில், அனைத்து இதய நோயாளிகளையும்  மருத்துவர்கள் நடக்கச் சொல்கிறோம். ஒவ்வொரு நோயாளிக்கும் எவ்வளவு தூரம் நடக்கலாம், எந்த வேகத்தில் நடக்கலாம், எப்படி நடக்க வேண்டும் என்று  வழிகாட்டுகிறோம். மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்ட நோயாளிகளைக் கூட, ஒரு நாள் படுக்கை ஓய்வுக்குப் பிறகு, அடுத்த நாள் படுக்கையில் உட்கார வைத்து, 48 மணி நேரத்திற்குப் பிறகு நாற்காலியில் உட்கார வைத்து பிறகு நடக்க வைக்கிறோம்.   பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் கூட, 24 மணி நேரத்திற்குப் பிறகு, வெளியே வந்த பின்னர், அடுத்த 48 மணி நேரத்தில் நாற்காலியில் உட்கார வைக்கப்படுவார்கள். 72 மணி நேரத்தில் அவர்களை நடக்க வைக்கிறோம். எனவே, நடப்பது மிக மிக முக்கியம். இது 'கார்டியாக் ரீஹேபிலிடேஷன்' (Cardiac Rehabilitation) என்ற முறையின் கீழ், ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நிலைக்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Personalized) சிகிச்சையாக அளிக்கப்படுகிறது. ஏனெனில், ஒவ்வொரு நோயாளியும் ஒவ்வொரு விதமானவர்கள். சிலருக்கு நுரையீரல் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு இதயம் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு தசைகள் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு கால் வலி காரணமாக நடக்க முடியாமல் இருக்கலாம். இந்தக் காரணங்களுக்காக, அவர்களுக்கேற்றபடி நாங்கள் நடைப்பயிற்சியைப் பரிந்துரைக்கிறோம். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளுக்கு ஏற்றபடி பரிந்துரை. Doctor Vikatan: இதய நோயாளிகள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா? நடைப்பயிற்சி இதயத்தின் திறனை மேம்படுத்தி, ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத் திறனை உயர்த்துகிறது. நோயாளியின் இதய நிலை, ஸ்டென்ட் வைத்த பிறகோ அல்லது பைபாஸ் செய்த பிறகோ, அல்லது நாள்பட்ட நிலையான இதய நோயில் (Stable Angina) இருந்தால், மருத்துவர் அறிவுறுத்தியபடி நடக்கலாம். பொதுவாக, காலை மற்றும் மாலை என இரு வேளையும் நடக்கச் சொல்வோம். ஒரு வேளை மட்டுமே நடக்க முடியுமானால், காலையில் நடப்பது நல்லது. ஆரம்பத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். குறைந்தபட்சம் வாரத்திற்கு 5 நாள்கள் நடக்க வேண்டும். இதனை படிப்படியாக  15, 20, 25, 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம். தொடர்ந்து 30 நிமிடங்கள் நடந்த பிறகு, 5 அல்லது 10 நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் 30 நிமிடங்கள் நடக்கலாம். நடக்கும்போது படபடப்பு (Palpitation) அல்லது மூச்சு வாங்குதல் போன்ற சிரமங்கள் ஏற்பட்டால், 10 முதல் 20 நிமிடங்கள் நடந்துவிட்டு, 5 நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டு, மீண்டும் 10 முதல் 20 நிமிடங்கள் நடக்கலாம். (இது ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நிலையைப் பொறுத்து அறிவுரையாக வழங்கப்படும்). ஒரு மணி நேரம் நடப்பவர்கள் கூட, இடையில் 5 நிமிடங்கள் உட்கார்ந்து, மூச்சுப் பயிற்சி, கை மற்றும் தோள்பட்டைகளுக்கான பயிற்சிகள் செய்துவிட்டு மீண்டும் நடக்கலாம். மிதமான வேகத்தில் நடப்பது நல்லது. அதற்காக, மிக மெதுவாக நடந்தால் பலன் இல்லை. மிக வேகமாக நடப்பதும் அவசியம் இல்லை. உங்களால் பேசிக்கொண்டே நடக்க முடியும் என்பதே மிதமான வேகம் என அர்த்தம். நடக்கும்போது மூச்சு வாங்கக்கூடாது. மூச்சு விடுவதில் சிரமம் இருக்கக்கூடாது. இதுவே சரியான வேகம்.   உங்களால் பேசிக்கொண்டே நடக்க முடியும் என்பதே மிதமான வேகம் என அர்த்தம். Doctor Vikatan: ஸ்டென்ட், பைபாஸ் தேவையில்லையா... இதய நோயாளிகளைக் காப்பாற்றுமா EECP சிகிச்சை? அதிகமான வேகத்தில் சென்றால் இதயத் துடிப்பு அதிகமாகி, பாதிப்பு வர வாய்ப்புள்ளது. சாதாரணமாக இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 70 முதல் 80 வரை இருக்கும். நீங்கள் நடக்கும்போது அது அதிகபட்சமாக 120 முதல் 140 வரை போகலாம். இதற்கு மேலும் போகக்கூடாது. அதேபோல், இதற்கு குறைவாக இருந்தாலும் பலன் இல்லை. நடைப்பயிற்சியைத் தொடங்கும்போது, மூன்று நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்தில் 5 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.  நிறுத்தும்போது, சடாரென நிறுத்தக்கூடாது. அதிக வேகத்தில் இருந்து மெதுவாக வேகத்தைக் குறைத்து, 5 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக நிறுத்த வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 3 Dec 2025 9:00 am

முகவாதம்; வராமல் இருக்க, வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? கம்ப்ளீட் கைடன்ஸ்!

குளிர் காலங்களில், வயதானவர்களுக்கும், நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற இணை நோய்கள் இருப்பவர்களுக்கும் ’முகவாதம்’ (Facial Palsy) வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. முகவாதம் என்றால் என்ன; முகவாதமும் பக்கவாதமும் ஒன்றா; இது ஏன் ஏற்படுகிறது; வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்; வந்துவிட்டால் என்ன செய்வது என விளக்கமாக சொல்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா. Facial Palsy முகவாதம் என்றால் என்ன? முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வுகளைத் தரும் முக நரம்புகளில், (Facial Nerves) உள் காயம் ஏற்பட்டாலோ, வைரஸ் தொற்று ஏற்பட்டாலோ முகவாதம் வரலாம். முகவாதம் வந்தவர்களால், வாயைக் குவிக்க முடியாது, உதடு ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளும், ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது, வாய் வழி எச்சில் வடியும், சரியாக பேச இயலாமல் குழறும். அதென்ன ஃபேஷியல் நரம்புகள் (Facial Nerves)? முகத்திற்கு உணர்வளிக்கும் ஃபேஷியல் நரம்பில் ஐந்து முக்கிய கிளைகள் இருக்கின்றன. டெம்போரல் கிளை (temporal) : நெற்றிப் பகுதியில் உள்ள தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளை. முகவாதத்தில், இந்த கிளை பாதிக்கப்படுவதால் நெற்றியை சுருக்க இயலாமல் போகும். சைகோமேட்டிக் கிளை (Zygomatic) : இது கண்கள் மற்றும் கன்னப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளை. முகவாதத்தில், இந்தக் கிளை பாதிக்கப்படுவதால் கண்களை மூட இயலாமல் போகும். சிரிக்க இயலாமல் போகும். முகவாதம் I சித்திரிப்புப் படம் பக்கல் கிளை (Buccal) : இது பாதிக்கப்பட்டால், கன்னப்பகுதி உணர்வற்றுப் போகும். உணவை சரிவர மெல்ல இயலாது. மார்ஜினல் மாண்டிபுலர் கிளை (Marginal mandibular): இது கீழ் உதடு மற்றும் தாடை தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளையாகும். இது பாதிக்கப்பட்டால், கீழ்வாய் தொங்கிப்போகும். கீழ் உதட்டில் இருந்து எச்சில் வடிந்தோடும். செர்விக்கல் கிளை (Cervical ): இந்த கிளை கழுத்தில் இருக்கும் ப்ளாடிஸ்மா தசைக்கு உணர்வூட்டுகிறது. முகவாதம் வராமல் இருக்க * தரையில் பாய், பெட்ஷீட் போன்றவற்றை விரிக்காமல் ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிர்ச்சியான தரையில் வைத்துப் படுப்பதை தவிர்க்க வேண்டும். * தலையணை வைக்காமல் நேரடியாக டைல்ஸ்/ மார்பிள்/ கிரானைட் தரைகளில் தலையை வைத்துப் படுத்தால், முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம், ஜாக்கிரதை. * கார், பேருந்து, ரயில் பயணங்களின்போது, குளிர்ந்த வாடைக் காற்று தொடர்ந்து காது மற்றும் கன்னப்பகுதியில் பட்டுக்கொண்டே இருந்தால், முகவாதம் ஏற்படலாம். பயணங்களின்போது... * வீட்டிலும், உறங்கும்போது ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்தக் காற்று நேரடியாக முகத்தில் படுமாறு படுப்பதை தவிர்ப்பது நல்லது. * ஏசி உபயோகிப்பவர்களும் குளிர் காற்று நேரடியாக முகத்தில் படாதவாறு படுப்பது நல்லது. * எப்போதும் மிகக்கடினமான தலையணை உபயோகிப்பதைத் தவிர்த்து, லேசான தலையணை உபயோகிப்பது நல்லது. முகவாதமும் பக்கவாதமும் ஒன்றா? கிடையாது. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்த நாள அடைப்பினால் அல்லது ரத்தக்கசிவால் ஏற்படும். ஆனால், முகவாதம் வந்தவர்களுக்கு மூளையில் எந்தப் பிரச்னையும் இருக்காது. முகத்துக்கு உணர்வுகளைத் தரும் நரம்பில் அழுத்தம் அல்லது அழற்சி அல்லது வைரஸ் தொற்று ஆகியவை தான் முகவாதம் வருவதற்கு காரணம். stroke Health: பனிக்காலமும் பனிக்காற்றும்... யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்? - மருத்துவர் விளக்கம்! முகவாதம் எவ்வளவு நாட்களில் சரியாகும்? இந்தப் பிரச்னையில், முக நரம்புகளில் உள்காயம் எற்பட்டு, வீக்கமடைந்து இருக்கும் என்பதால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். பொதுவாக இதுபோன்ற குளிர் சீதோஷ்ண நிலை மற்றும் அழுத்தத்தால் விளைந்த முக வாதம் குணமாக 2 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்! முகவாதம் ஏற்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டியவை * உள்காயத்தை ஆற்றுவதற்குத் தேவையான ஸ்டீராய்டு மருந்தும் வைரஸ் தொற்றுக்கு எதிரான ஆன்ட்டி வைரல் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். * கண்கள் திறந்தே இருக்கும் என்பதால் வறண்டுவிடாமல் இருக்க, மருத்துவரின் பரிந்துரையைக் கேட்டு சொட்டு மருந்து அல்லது ஆயின்மென்ட் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். தவிர, கண்களுக்கு பகல் நேரத்தில் கண்ணாடியும், இரவு நேரத்தில் கண்களை மூடும் கவசமும் அணிந்துக்கொள்ளலாம். டாக்டர் ஃபரூக் அப்துல்லா * மென்று உண்பது கடினம் என்பதால், உண்ணும் உணவு முழு திரவமும் இல்லாமல் முழு திட உணவாகவும் இல்லாமல் கரைத்த கஞ்சியாக உண்பது சிறந்தது. தவிர, எளிதாக மென்று விழுங்கக்கூடிய அளவில் சிறு சிறு கவளங்களாக உணவை உட்கொள்ள வேண்டும். உணவை நீண்ட நேரம் எடுத்து மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிட நினைத்தால் புரையேறும். இருமல் வரும். * வாய் வறண்டு இருக்கும் என்பதால், உணவில் வெண்ணெய் போன்றவற்றை வழ வழப்புக்காக கலந்துக்கொள்ளலாம். * உணவு உண்ணும்போதும், நீர் பருகும்போதும் எந்த கவனச்சிதறலும் இல்லாமல் முழுக் கவனமும் அவற்றில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். * நீரை பாட்டிலில் ஊற்றி பருகுவதை தவிர்த்துவிட்டு, சிறிய கப்பில் ஊற்றிப் பருகுவது நல்லது. * பாதிக்கப்பட்டப் பகுதியில் வெந்நீர் ஒத்தடம் மற்றும் மசாஜ் செய்ய வேண்டும். கூடவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில், பிசியோதெரபி சிகிச்சையும் எடுக்க வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.

விகடன் 3 Dec 2025 6:45 am

பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?

உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பல் தூரிகைகளை (டூத் பிரஷ்) கழிவறையில் அல்லது அதனருகில் உள்ள சுவரில் வைப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்கான கட்டுரை தான். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்? வீடுகளில் நாம் பயன்படுத்திவிட்டு வைக்கும் டூத் பிரஷ்களை கழிவறைகளிலோ அல்லது அதன் பக்கவாட்டு சுவர்களில் வைப்பதோ சுகாதாரமற்றது என்கிறது அறிவியல் முடிவுகள். மேற்கத்திய கழிப்பறை பயன்பாட்டுக்குப் பிறகு மூடியை மூடாது, கழிவுகளை அகற்ற அதிக அழுத்தத்தில் வெளிவரும் நீரால், கழிப்பறை உள்ளிருந்து கண்களுக்கே தெரியாத மேகம் போல் எழும் நுண்ணிய கிருமிகள் மற்றும் மனித மலத்திலிருந்து வெளியேறும் கிருமிகள் இணைந்து நச்சுத்தன்மை கொண்ட பாக்டீரியாக்களை பரப்புகின்றன. இந்த கண்களுக்கு புலப்படாத பாக்டீரியாக்கள், அந்த கழிப்பறையில் உள்ள மற்ற பொருட்களின் மீது நீண்ட நேரம் தாக்கத்தை செலுத்துகின்றன. இந்த பாக்டீரியாக்கள் கழிப்பறை வெளியேயும் காற்றில் பரவி மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களிலும் படிகின்றன. குறிப்பாக கழிப்பறையில் வைக்கப்படும் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை, டூத் பிரஷ்களில் நீண்ட நேரம் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்? 2 பாக்டீரியாக்கள் க்ளோஸ்ட்ரிடியம் (Clostridium), எசரிக்கியா கோலை (Escherichia coli) எனப்படும் பாக்டீரியாக்கள், மேற்கத்திய கழிப்பறை பயன்பாட்டின்போது மூடியை மூடாமல் அதிக அழுத்தத்தில் தண்ணீர் வெளியேற்றப்படும் போது வெளியேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் டூத் பிரஷ்களில் அதிகளவில் படியும்போது, அதிலுள்ள முட்கள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதை கண்டுணராமல் அப்படியே பயன்படுத்துவதால் காலப்போக்கில் பல் சுத்தத்திற்கு மட்டுமின்றி இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தையே தாக்குகிறது. ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களிடம் இன்னும் சில விளைவுகளை இது உண்டாக்கும். இது கிட்டத்தட்ட இந்திய கழிப்பறைகளுக்கும் பொருந்தும். இந்திய கழிப்பறை மூடி இல்லாமல் இருப்பதால், இதில் மலம் கழித்த பிறகு அதற்கென உள்ள சுகாதார வேதி திரவத்தால் சுத்தம் செய்து பராமரிப்பது மிக அவசியமான ஒன்றாகும். பல் மருத்துவர் ஹேமா மாலதி மன அழுத்தம் வந்தால் பற்களைக் கடிக்கிறீர்களா? இதை படிங்க! பாக்டீரியாக்களிடமிருந்து பல் தூரிகைகளை ( டூத் பிரஷ்) எவ்வாறு காப்பது? இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பல் மருத்துவர் ஹேமா மாலதி கூறியதாவது... ’’இந்தியாவில் பெரும்பாலும் கழிப்பறையும், குளியலறையும் ஒன்றாக இருப்பதால் சுவரின் பக்கவாட்டில் குடும்ப உறுப்பினர்கள் டூத் பிரஷ்களை ஒன்றோடொன்று தொடும் படி வைத்துவிடுகிறார்கள். இதன் காரணமாகவும், காற்றோட்டம் இல்லாததால் ஏற்படும் நீடிக்கும் ஈரப்பதம், கழிவறைகளில் பரவும் பாக்டீரியாக்கள் பல் தூரிகைகளில் படர்ந்து பாக்டீரியாக்கள் பெருக்கத்திற்கு காரணமாகிறது. டூத் பிரஷ்களின் ஆயுட்காலம் 3 மாதங்கள் மட்டுமே. எப்போது டூத் பிரஷ்களின் முட்கள் விரிவடைகிறதோ, அப்போதே அது பயனற்று போகிறது. டூத் பிரஷ்களை காற்றோட்டமான நிலையில், நிமிர்ந்த நேரான நிலையில் பிற பொருட்களோடு மோதாத வகையில் வைக்க வேண்டும். புற ஊதா கதிர்கள் மூலம் டூத் பிரஷ்களை சுத்தம் (UV sanitisation ) செய்தல் சாத்தியமற்றது. பல் துலக்குவதற்கு முன்பு குழாயிலிருந்து வரும் அதிக விசையுடன் கூடிய நீரில் கழுவிவிட்டு அதன் பிறகே பற்பசையை தடவ வேண்டும்’’ என்கிறார் பல் மருத்துவர் ஹேமா மாலதி. காலை உணவை முடித்துவிட்டுதான் பல் துலக்கணுமா? - விளக்குகிறார் மருத்துவர்! அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குழு அறிவுத்துவது என்ன? கழிப்பறை மற்றும் குளியலறையில் டூத் பிரஷ்களை வைக்காமல் உலர்ந்த காற்றோட்டமான பகுதிகளில் வைப்பதுதான் பாதுகாப்பான ஒன்று. மேற்கத்திய கழிப்பறையில் கழிவுகளை அகற்ற அதீத அழுத்த நீர் வெளியேற்றத்திற்கு முன்பு கழிப்பறை மூடியை மூடினால் அதிலிருந்து வெளிவரும் கிருமிகளை ஓரளவு கட்டுபடுத்த முடியும். பல வீடுகளுக்குள் கழிப்பறைகள் அளவு சிறிய அளவில் இருப்பதால் டூத் பிரஷ்களை வேறு காற்றோட்டமான அறைகளில் வைப்பதே சுகாதாரம்.

விகடன் 2 Dec 2025 7:05 am

ஹெச்.ஐ.வி வைரஸ்; சிகிச்சை எடுத்தால் 100 வயது வாழலாம் - தைரியம் கொடுக்கும் நிபுணர்!

``அது 1982-ம் வருடம். அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழுவில் இருந்தவர்களில் சிலர், வரிசையாக இறந்துகொண்டே இருந்தனர். அதற்கு என்னக் காரணம் என்று தெரியவில்லை; அது என்ன நோய் என்றும் தெரியவில்லை. சாதாரண காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கூட நாள்கணக்கில் நீடித்தன... விளைவு, அந்தக் குழுவினரில் சிலர் மரணம் அடைந்தனர். அதாவது, அவர்களுடைய உடம்பில் மேலே சொன்ன சிறு சிறு பிரச்னைகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்திகூட இல்லை.  எய்ட்ஸ் புது வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது! என்னதான் பிரச்னை என்று ரத்த பரிசோதனை செய்துபார்க்க ஒரு புது வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதன் பெயர் ஹெச்.ஐ.வி என்றெல்லாம் இந்த உலகத்துக்கு தெரியாது. அதனால், ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைபாடு என்று பொருள்படும் (Gay-Related Immune Deficiency - GRID) என்று அழைக்கப்பட்டது’’ என்கிற சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், அதன் பின்னர் என்ன நடந்தது, சென்னையில் எப்போது எய்ட்ஸ் கண்டறியப்பட்டது; எய்ட்ஸ் நோயாளிகளுக்கான இன்றைய மருத்துவ வளர்ச்சி உள்ளிட்டவற்றை விரிவாகப் பேசுகிறார்.  நோய்க்கு AIDS எனப் பெயரிட்டார்கள். புதிதாக கண்டறியப்பட்ட அந்த ’’பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னையை வைத்து, ’Acquired immuno deficiency syndrome’ என்று அதைக் குறிப்பிட்டார்கள். Acquired என்றால், பிறக்கும் போதே வருகிற நோய் அல்ல; இது திடீரென்று வருகிற நோய் என்று அர்த்தம். immuno deficiency என்றால், இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் வருகிற பிரச்னை என்று அர்த்தம். syndrome என்றால் அறிகுறிகள் என்று அர்த்தம். இவற்றின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்து,  புதிதாக கண்டறியப்பட்ட அந்த நோய்க்கு AIDS பெயரிட்டார்கள். HIV இருக்கலாம் என்று கருதினார்கள்! குரங்கிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி பிறகு, அந்த நோய்க்குக் காரணமான வைரஸுக்கு, Human immunodeficiency virus  ( HIV) என்று பெயரிட்டார்கள். மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் என்று இதற்கு அர்த்தம். ஆரம்பத்தில் குரங்கிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று கருதினார்கள்.  இந்தியாவில் எய்ட்ஸ் வரவே வராது என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்கிற தேசம். அதனால் இங்கிருப்பவர்களுக்கு எய்ட்ஸ் வரவே வராது என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை அது இந்தியாவுக்குள் வருவதற்கு முன்னரே அமெரிக்காவில் அதற்கான மருந்தை கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், 1986 வரை இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை.  HIV ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் எய்ட்ஸ் விஷயத்தில் பதறிக் கொண்டிருந்தன. காரணம், அங்கு வி வி ஐ பி அந்தஸ்த்தில் இருந்த பல முக்கியஸ்தர்களும் இந்த வைரஸால் மடிந்துக் கொண்டிருந்தார்கள்.  இருப்பது முதன்முதலாக தெரிய வந்தது! சென்னையிலும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சூழ்நிலையில்தான் இந்தியாவிலும் எய்ட்ஸ் பரிசோதனைகளை செய்ய ஆரம்பித்தார்கள். இந்த இடத்தில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுனிதி சாலமன் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். இவர் பயோ கெமிஸ்ட்ரி ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். இவருடைய கணவர் விக்டர் சாலமன் அந்தக் காலகட்டத்தில் புகழ்பெற்ற இதய நோய் நிபுணர். டாக்டர் சுனிதி சாலமன் தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். பாலியல் தொழில் செய்பவர்கள் மற்றும் தன் பாலின உறவுக்காரர்களிடமிருந்து 200 ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ததில் சென்னையிலும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது முதன்முதலாக தெரிய வந்தது. பிறகு, ஒரு பிரஸ் மீட் வைத்து அதை வெளிப்படுத்தவும் செய்தார் டாக்டர் சுனிதி சாலமன். அப்போதுதான் ஹெச்.ஐ.வி வைரஸ் இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றது’’ என்றவர், தொடர்ந்தார்.  HIV 'பசியால் இறப்பதைவிட எய்ட்ஸ் வந்து இறந்து விட்டுப் போகிறோம்’ என்பார்கள். ’’வருடத்துக்கு 10 எய்ட்ஸ் நோயாளிகளையாவது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பாலியல் தொழில் செய்பவர்களால் அந்த அளவுக்கு பணம் கொடுத்து பெண்களுக்கான காண்டம் வாங்க முடிவதில்லை. ’எய்ட்ஸ் வரலாம்; இதை விட்டுவிடுங்கள்’ என்றாலும் ’இன்றைக்கு பசியால் இறப்பதைவிட எய்ட்ஸ் வந்து பத்து வருடம் கழித்து இறந்து விட்டுப் போகிறோம்’ என்பார்கள். இது அவர்களுடைய துக்ககரமான நிலைமை. பாலியல் தொழிலாளிகளுடன் உறவு, ரத்த தானம், கணவரிடமிருந்து மனைவிக்கு, தாயிடமிருந்து குழந்தைக்கு என எய்ட்ஸ் பரவுகிறது. தவிர, போதை பழக்கத்தில் இருப்பவர்கள் ஒருவர் பயன்படுத்திய ஊசியை இன்னொருவர் பயன்படுத்தும்போது எய்ட்ஸ் பரவும்; எய்ட்ஸ் வந்தவருக்கு பயன்படுத்திய ஊசியை அடுத்தவருக்கு பயன்படுத்தும்போது அவரும் பாதிக்கப்படுவார். HIV இப்படி Sex வெச்சுக்கிட்டா பால்வினை நோய்கள் வராதா..? | காமத்துக்கு மரியாதை - 189 நோய் வெளிப்படையாக தெரிவதற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிடும்! எய்ட்ஸை பொறுத்தவரை பெரிய அளவுக்கு அறிகுறிகளே காட்டாது. ஒரு வாரத்துக்கு லேசான தொண்டை கமறல், விடாத காய்ச்சல் என்று ஆரம்பிக்கலாம். திடீரென்று 5 முதல் 10 கிலோ வரைகூட உடல் எடை குறையும். வயிற்றுப்போக்கு வந்தால் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும். நோய் வெளிப்படையாக தெரிவதற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பாதிக்கப்பட்டவர் பலருக்கும் பரப்பி இருப்பார். டயாபட்டீஸ் வந்தவர்களைவிட எய்ட்ஸ் வந்தவர்கள் நன்றாகவே வாழலாம்! எயிட்ஸுக்கான மருந்துகள் இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு 100 வயது வரைகூட வாழலாம். சொல்லப்போனால் டயாபட்டீஸ் வந்தவர்களைவிட எய்ட்ஸ் வந்தவர்கள் நன்றாகவே வாழலாம். அந்த அளவுக்கு மருந்துகள் தற்போது இருக்கின்றன என்பதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.  ஒருவேளை திருமணம் தாண்டி ஒரு நபரிடம் உறவு கொண்டீர்கள் என்றால் 72 மணி நேரத்துக்குள் மருத்துவரை சந்தித்து அதற்கான மாத்திரை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், எய்ட்ஸ் வராமல் தடுத்து விடலாம்.  மைட்டோகாண்ட்ரியாவுக்குள் சென்று பதுங்கிக் கொள்ளும்! தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் ஹெச்ஐவி வைரஸ் ரத்தத்திலிருந்து போய்விடும். ஆனால், நம்முடைய செல்களுக்குள் இருக்கிற மைட்டோகாண்ட்ரியாவுக்குள் சென்று பதுங்கிக் கொள்ளும். ரத்தப்பரிசோதனையில் ஹெச்ஐவி இல்லை என்று காட்டும். அதை நம்பி மருந்துகளை நிறுத்தி விட்டால் ஆறு மாதம் கழித்து மறுபடியும் எய்ட்ஸ் வரும்.  இப்படி செல்களுக்குள் ஒளிந்து கொள்கிற வைரஸை கண்டுபிடிக்கவும் இப்போது ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான மருந்துகளும் இன்னும் ஐந்தாவது வருடத்தில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’’ என்று எய்ட்ஸுக்கு எதிரான நம்பிக்கைக் கொடுத்து பேசி முடித்தார் டாக்டர் காமராஜ்.  

விகடன் 2 Dec 2025 7:05 am

Doctor Vikatan: ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யலாமா?

Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு சற்று கடினமான வேலைகளைச் செய்தாலும் பிரச்னை தீவிரமாகும். இந்நிலையில், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் வாக்கிங் உள்ளிட்ட மற்ற உடற்பயிற்சிகளைச் செய்வது சரியா, ஜிம் செல்லலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் நீங்கள் உடற்பயிற்சி செய்வதென முடிவெடுத்தால், அதற்கு முன் ஒரு மருத்துவரின் அனுமதியைப் பெறுவது அவசியம். அவர் உங்களின் ஆஸ்துமாவின் தீவிரத்தன்மை  எப்படி என்று பார்த்து, அதற்குப் பிறகு அதற்கேற்ப எந்த அளவு தீவிரத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது என்று சொல்வார். உண்மையில், உடற்பயிற்சி செய்வது, அதாவது நீங்கள் நடைப்பயிற்சிஅல்லது பிரிஸ்க் வாக்கிங் (Brisk Walking) செய்வது (சாதாரண நடையை விட சற்று வேகமாக நடப்பது)  உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த நுரையீரல் திறனுக்கும் (Lung Capacity) மிகவும் நல்லது. உடற்பயிற்சி Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை; இன்ஹேலர், நெபுலைசர் இரண்டில் எது பெஸ்ட்? ஆனால், அதை ஒரு மருத்துவரிடம் அனுமதி வாங்கிவிட்டுச் செய்வது நல்லது.  எனது அனுபவத்தில், இப்படி ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆஸ்துமா பாதிப்புள்ள அவர் உடற்பயிற்சி செய்வதற்கு முன், தனது இன்ஹேலரை வைத்து ஒரு பஃப் (Puff) எடுத்துக்கொள்வார். அதை உபயோகித்த பிறகுதான் அவர் உடற்பயிற்சியைத் தொடங்குவார். அவர் உடற்பயிற்சி செய்து முடிக்கும் வரையிலும் நலமாகவே இருப்பார்.  அந்தப் பெண்ணுக்கு இது உதவியது என்பதற்காக எல்லோரும் அப்படியே செய்வது சரியல்ல.  மருத்துவரின் வழிகாட்டுதலைப் பெற்ற பிறகுதான் நீங்கள் தொடங்க வேண்டும். எப்படி இருந்தாலும், உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், நீங்கள் கடுமையான  பயிற்சிகளைச் செய்யத் தேவையில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் நுரையீரல் திறனை மேம்படுத்தினால், அது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். உண்மையில், உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லதுதான். ஆனால், எதையும் அவரவர் உடல்நலத்தின் அடிப்படையில் மருத்துவர் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும். உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும்போது அசௌகர்யம் ஏற்பட்டது என்றால், நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எது வேலை செய்கிறது, எது வேலை செய்யவில்லை, எது ஆஸ்துமாவைத் தூண்டுகிறது (Trigger) என்பதை நீங்கள் கண்டறிந்து, அதற்கேற்ப செய்ய வேண்டும். Doctor ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய உங்கள் மருத்துவர் அனுமதிக்கும் பட்சத்தில் நீங்கள் முக்கியமான சில விஷயங்களை  கவனிக்க வேண்டும். அதாவது, அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். காற்றோட்டமாக இருக்க வேண்டும். தூசு போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது. மிக மெதுவாகவே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். மருத்துவர் அனுமதித்தால், உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு இன்ஹேலர் பயன்படுத்திவிட்டும் தொடங்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: பச்சை முட்டை, வேக வைத்தது, half boiled - முட்டையை எப்படிச் சாப்பிடுவது சரியானது?

விகடன் 1 Dec 2025 9:00 am

Doctor Vikatan: அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு சமீபத்தில் ஓர் அறுவைசிகிச்சை நடந்தது. உடலளவில் ரொம்பவும் சோர்வாக இருக்கிறான். அதனால் அவனை அசைவ உணவுகள் சாப்பிடச் சொல்லி அட்வைஸ் செய்தேன். ஆனால், அவனோ, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அசைவம் சாப்பிடக்கூடாது என யாரோ சொன்னதாகச் சொல்கிறான். அது எந்த அளவுக்கு உண்மை? எத்தனை நாள்கள் கழித்து அசைவ உணவுகள் சாப்பிடலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி அறுவை சிகிச்சை காயங்களுக்கும், அசைவத்திற்கும் முதலில் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்த வகையான அறுவை சிகிச்சை செய்கிறார்களோ, அதற்கு ஏற்றவாறு அந்தக் காயம் இருக்கும். பொதுவாக, அறுவை சிகிச்சை முடிந்தவுடன், இப்போது இருக்கிற நவீன விஞ்ஞான முறைப்படி, மிகவும் எளிதாக ஆறக்கூடிய, விரைவாக ஆறக்கூடிய  தையல் (Sutures) போடப்படுகிறது. அதனால், அந்த மாதிரி மேம்பட்ட (Advanced) மருத்துவ முறைகளில், அசைவம் சாப்பிட்டால் காயம் ஆறாது என்று சொல்வது மிகப் பெரிய பிற்போக்குத்தனம் ஆகும். அதில் முக்கியமாக, அசைவத்தில் நல்ல புரோட்டீன் இருக்கிறது. புரோட்டீன்தான் அமினோ அமிலங்கள் (Amino Acids)... அமினோ அமிலங்கள்தான் பில்டிங் பிளாக்ஸ் (Building Blocks). அந்த பில்டிங் பிளாக்ஸ்தான், காயங்கள் ஆறுவதற்கு (Healing) இன்னும் வேகமாக நமக்கு உதவும். காயங்கள் ஆறுவதில் (Healing) வந்து, நான்கு நிலைகள் (Four Stages) உண்டு. அதில், புரொலிஃபெரேஷன் (Proliferation) என்று ஒரு நிலை, அப்புறம் ரீமாடலிங் (Remodeling) என்று ஒரு நிலை. இந்த புரொலிஃபெரேஷன் நிலையில், அங்கு இருக்கக்கூடிய நமது திசு அளவில் (Tissue Level) ஆறுதல் அப்போதுதான் நடக்கும். அதற்கு, புரோட்டீன்களின் உதவி மிகவும் முக்கியம். அதே மாதிரிதான் ரீமாடலிங்கும். அசைவத்தில்தான் புரோட்டீன் அதிகம். Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்? ரீமாடலிங் என்றால் என்னவென்றால்,  வெட்டுப்பட்ட இடத்தில், அல்லது அந்த அறுவை சிகிச்சை காயம்பட்ட இடத்தில், பழையபடி அந்தக் காயம் இல்லாமல் மூடுவதுதான் ரீமாடலிங். அதற்கும் புரோட்டீன் முக்கியம். அசைவத்தில்தான் புரோட்டீன் அதிகம் நமக்குத் தெரியும். அதுவும், ஜீரணிக்கக்கூடிய (Digestible), எளிதில் கிடைக்கக்கூடிய (Easily Available) மற்றும் முழுமையான புரோட்டீன் (Complete Protein) இருப்பது அசைவத்தில்தான். அதனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அசைவம் சாப்பிடுவது காயம் ஆறாது என்று சொல்வதெல்லாம் உண்மையிலேயே மிகப் பெரிய பிற்போக்குத்தனம்.  அசைவம் சாப்பிடுவது உண்மையிலேயே நல்லதுதான். காயம் ஆறுவதற்கு அசைவம் சாப்பிடுவது ரொம்ப நல்லது. அது, இந்த மாதிரிப்பட்ட புரளிகளை நம்ப வேண்டாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

விகடன் 30 Nov 2025 9:00 am

BB Tamil: ஓவியா முதல் கம்ருதீன் வரை - பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தாலே ஈர்ப்பும், மோதலும் வந்துவிடுமா?

இரண்டு பேர் சில நாள்கள் சேர்ந்திருந்தால், அவர்களுக்குள் ஈர்ப்போ அல்லது மோதலோ வந்து விடும் என்பார்கள். இந்த உளவியல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கும் பொருந்தும். ஆரவ், ஓவியா, கவின், லாஸ்லியா, பாலாஜி, ஷிவானி, விஜே விஷால், அன்ஷிதா, கம்ருதீன், பார்வதி, FJ, வியானா என சிலரை இந்த ஈர்ப்புக்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால், மோதல் போக்கு எல்லோரிடமுமே இருந்தது. இருக்கிறது... இருக்கும்..! அறிமுகமில்லாத அல்லது ஒருவருக்கொருவர் நன்கு பழகாத ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பிக்பாஸ் போல ஒரு கூரையின் கீழ் வாழ வேண்டிய நிலை வரும்போது, ஈர்ப்பும் மோதலும் மனித இயல்பே... இந்த இயல்புக்குப் பின்னால் இருக்கிற உளவியல் காரணங்களை, சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் அவர்களிடம் கேட்டோம். ஈர்ப்பு | காதல் ''கல்லூரி, அலுவலகம், பிக்பாஸ் வீடு என ஓர் இடத்தில் பலர் சேர்ந்து இருக்கையில், ஈர்ப்பு, காதல், ஈகோ, சண்டை என எல்லா உணர்வுகளும் எழவே செய்யும். காரணம், 'அருகாமை'தான். ஆங்கிலத்தில் பிராக்ஸிமிட்டி (proximity) என்போம். இந்த உணர்வுகள் எல்லோருக்கும் வருமா என்றால், அப்படி சொல்ல முடியாது. முதலில் ஈர்ப்பை எடுத்துக்கொள்வோம். திருமணம் முடித்த பலரும் தமிழ் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். நான் அறிந்தவரை அவர்கள் நட்புடன் இருந்திருக்கிறார்கள். யாரிடமும் ஈர்க்கப்பட்ட சம்பவம் நிகழவில்லை என்றே நினைக்கிறேன். அப்படியென்றால், திருமணமாகாதவர்களிடையே ஈர்ப்பு வந்துவிடுமா என்றால், அப்படியும் சொல்ல முடியாது. 'தனக்கான துணையை இங்குகூட சந்திக்க நேரலாம்' என்கிற மனப்பான்மையுடன் இருப்பவர்களுக்கு இது நிகழலாம். ஒரே இடத்தில் பல நாட்கள் சேர்ந்து இருக்கையில், நம்பிக்கையின் அடிப்படையில் ஈர்ப்பு வரலாம். சுஜா வருணி போல, தன்னுடைய துணை வெளியே இருக்கிறது என்பதை பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே தெளிவாக சொன்னவர்களும் இருக்கிறார்கள். அடுத்தது மோதல். இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். ஒரு வீட்டுக்குள் சேர்ந்து வாழும்போது கருத்து வேறுபாடுகள் வரலாம். ஈகோ கிளறப்படலாம். 'நான் ஜெயிக்கணும்' என்கிற போட்டி மனப்பான்மையால் மோதல் வரலாம். 'இவங்க நமக்கு முன்னாடி ஓடிடுவாங்களோ' என்கிற பாதுகாப்பின்மை உணர்வால் சண்டை வரலாம். 'எனக்கென்ன வேணுமோ அதை நான் எடுத்துப்பேன்; எனக்கென்ன தோணுதோ அதை தான் செய்வேன்; சொல்வேன் ' என்கிற, அடுத்தவர் இடத்தில் இருந்து யோசிக்காத இயல்பு கொண்டவர்களாலும், சில பேர் கூடியிருக்கிற ஓர் இடத்தில் சண்டை வரலாம். CWC to Bigg Boss: ரஜினி டயலாக்; சல்மானை சிரிக்க வைத்த குறும்பு- கலக்கிக்கொண்டிருக்கும் ஸ்ருதிகா நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆளுமை இருக்கும். ஒன்றையொன்று உரசும் இடத்தில் சண்டை வெடிக்கலாம். ஒவ்வொருவருடைய வொர்க்கிங் ஸ்டைலும் வேறு வேறுவிதமாக இருக்கும். அவர்கள் சேர்ந்து ஒரு டாஸ்க் செய்யும்போது, ஒருவருடைய வொர்க்கிங் ஸ்டைலில் இன்னொருவரால் மாற்றம் நிகழும். இதன் காரணமாகவும் சண்டை வரலாம். Bigg Boss Tamil 8: `அதை மறந்துடாதீங்க சேது'- மக்கள் உளவியலும்,விஜய் சேதுபதி முன் நிற்கும் சவால்களும் ஒரு கூட்டத்தில் ஒருவர் ஆதிக்க மனப்பான்மையுடன் இருந்தாலே, அங்கு அமைதி கெடும். சிலர், வெளியில் அமைதியாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், பின்னால் சென்று புரளிப் பேசுபவர்களாக, அடுத்தவர்களை பின்னால் இருந்து நெகட்டிவாக இயக்குபவர்களாக இருப்பார்கள். இவர்களின் குணம் அறிந்தவர்களுடன் உரசல் வரத்தான் செய்யும். இன்னும் சிலர், உண்மையிலேயே அமைதியான கேரக்டர்களாகவே இருப்பார்கள். ஆனால், தனக்கு எதிராக நிகழ்கிற சம்பவங்களை நினைத்து மனதுக்குள் குமுறுகிறவர்களாக இருப்பார்கள். இந்தக் குமுறல் வெடிக்கையில் மோதல் நிகழத்தான் செய்யும். ஒருசிலர், சண்டையோ, சமாதானமோ அதை நேரடியாகச் சொல்லி விடுவார்கள். இந்த இயல்புக்கு எதிர்வரிசையில் இருப்பவர்களுடம் நிச்சயம் முட்டத்தான் செய்யும். இவை அத்தனையும் மனித இயல்புகள்தான்'' என்கிறார், உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

விகடன் 29 Nov 2025 10:24 am

Doctor Vikatan: பச்சை முட்டை, வேக வைத்தது, half boiled - முட்டையை எப்படிச் சாப்பிடுவது சரியானது?

Doctor Vikatan: என் நண்பன் ஒருவன் தினமும் 5 பச்சை முட்டைகள் சாப்பிடுகிறான். என் வீட்டிலோ பச்சை முட்டை சாப்பிடக்கூடாது என்று தடுக்கிறார்கள். முட்டையை பச்சையாகச் சாப்பிடுவது என்பது எந்த அளவுக்குச் சரியானது... ஒருவர் ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம்?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் பச்சை முட்டையா, சமைத்த முட்டையா, எது சிறந்தது என்று பார்த்தால் பச்சை முட்டை நல்லதுதான். பச்சையாக இருக்கும்போது முட்டையில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும், குறிப்பாக கால்சியம், வைட்டமின் டி, மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உடலால் எளிதில் உறிஞ்சப்படுகின்றன. பச்சை முட்டையில் உள்ள கோலின் (Choline) என்ற சத்து, மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலும், மூளைப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டது. சமைக்கும்போது இதன் மதிப்பு குறைகிறது. முட்டையில் உள்ள பயோட்டின் எனப்படும் புரதச்சத்தும் சமைக்கும்போது சற்று குறைந்துவிடும்; ஆனால், பச்சையாக இருக்கும்போது இது முழுமையாக உறிஞ்சப்படுகிறது. பச்சை முட்டையில் சால்மோனெல்லா (Salmonella) எனப்படும் ஒரு வகை பாக்டீரியா இருக்கக்கூடும். இந்த பாக்டீரியா சமைக்கும்போது மட்டுமே அழிக்கப்படுகிறது. சில சமயங்களில், அதிக அளவில் பச்சை முட்டை சாப்பிடும்போது இது பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தலாம். பச்சை முட்டையில் கிளைக்கோடாக்ஸின் (Glycotoxin) என்ற சத்து இருக்காது. ஆனால், முட்டையைச் சமைக்கும்போது இது சற்றுகூடி, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன் கொண்டது. முட்டை ஊட்டச்சத்துகள் அதிகமாக உறிஞ்சப்பட வேண்டும் என நினைப்பவர்கள், குறிப்பாக, குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் 'புல்ஸ் ஐ எனப்படும் ரெசிபி பாணியில் இரண்டு நிமிடங்களுக்கு வேக வைத்த முட்டையை (two-minutes boil / half-boiled) சாப்பிடலாம். இது மிகவும் நல்லது. வயதானவர்கள் மற்றும் வயிற்றுப் பிரச்னைகள் உள்ளவர்கள் பச்சை முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்தவிதமான உடல்நலப் பிரச்னைகளும் (கொலஸ்ட்ரால் உள்பட) இல்லாதவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். முட்டை உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது புரோட்டீன் சத்தை அதிகரிக்க விரும்புபவர்கள், ஒரு நாளைக்கு ஐந்து முட்டைகள் வரை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம். இதில், இரண்டு நிமிடங்களுக்கு வேக வைத்த முட்டை (Two Minutes Boil) மிகவும் சிறந்தது. இதய நோய், அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் (Egg White) ஒரு நாளைக்கு மூன்று வரை எடுத்துக்கொள்ளலாம். முட்டை சாப்பிட, காலை உணவு நேரமும், மதிய உணவு நேரமும் மிகவும் ஏற்றது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: வெண்டைக்காய் ஊறவைத்த நீர்; சர்க்கரைநோய், பிசிஓடி, குடல் பிரச்னைகளுக்கு பயனளிக்குமா?

விகடன் 29 Nov 2025 9:00 am

உங்களை அறியாமலே போதைப் பழக்கத்தில் இருக்கிறீர்களா? கண்டறிந்து, மீள்வது எப்படி?

இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிகப் பெரிய பிரச்னையாகவும் சவாலாகவும் இருப்பது போதைப்பழக்கம்தான். 'இது போதை' என்று தெரிந்தே சிக்குபவர்கள் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் 'இவையெல்லாமும்கூட போதை தான்' என்று தெரியாமலேயே சிக்கிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இவை இரண்டு குறித்தும் விரிவாகப் பேசுகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் சுபாராமன். Drug addiction ஹார்மோன் செய்யும் வேலை! போதைப் பழக்கத்திற்கு நம் மூளைதான் முக்கியமான காரணம். நம் மூளையில் இருக்கக்கூடிய வெகுமதி மையத்திற்கு (reward Center) இதில் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. நம் அன்றாட வாழ்வில் நாம் தொடர்ந்து இயங்குவதற்கு ஹார்மோன்கள் உதவுகின்றன. அதில் டோபமைன் (dopamine) என்று சொல்லக்கூடிய ஹார்மோன், மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. நம்மை மற்றவர்கள் பாராட்டும்போது, அதிக மதிப்பெண் எடுக்கும்போது, உயர் பதவி, ஊதிய உயர்வு என்று தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் பல பாசிட்டிவ் நிகழ்வுகளின்போது டோபமைன் சுரக்கும். அதாவது, ஒரு செயல் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தால் இந்நிகழ்வு நடக்கும். இதே மகிழ்ச்சி, போதைப்பொருள்கள் பயன்படுத்தியதும், நினைத்தே பார்க்காத அளவில் கிடைப்பதால் திரும்ப திரும்ப போதைப்பொருட்களை பயன்படுத்த மூளை கட்டளையிடுகிறது. கூடவே, போதைப்பொருட்களை பயன்படுத்துவதை மட்டுமே முழு நேர செயல்பாடாக மாற்றவும் மூளை ஏங்குகிறது. உங்களை அறியாமலே போதைப் பழக்கத்தில் இருக்கிறீர்களா? இவையும் போதையே..! 'இதுகூட போதைப்பழக்கத்திற்கு வழிவகுக்கும்' என்கிற விழிப்புணர்வு இல்லாமல், நிறைய பழக்கங்கள் மாணவர்களிடையே காணப்படுகிறது. பஞ்சர் டியூப் கரைசல், பெயின்ட் தின்னர், வெண்மையாக்கி (whitener), நெயில் பாலீஷ், இருமல் மருந்து, மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மாத்திரைகள் என்று நம் அன்றாட வாழ்க்கையிலோ அல்லது அடிக்கடியோ பயன்படுத்தும் பொருட்களைக்கூட இளம் பருவத்தினர் போதைக்காக பயன்படுத்துகின்றனர். சமீபத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், 'பெட்ரோலை பாலித்தீன் கவரில் ஊற்றி அதனை முகர்ந்து பார்க்கும் பழக்கம் இருப்பதாகவும், அதிலிருந்து மீள' உளவியல் ஆலோசனைக்காக என்னிடம் வந்திருந்தார். மது, புகை மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது மட்டும்தான் போதைப்பழக்கம் என பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர். நான் மேலே சொன்னவையும் போதைப்பழக்கமே. தவிர, இணைய தள விளையாட்டு, ஆபாச வலைத்தளம் மற்றும் சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடுதல், கட்டுப்பாடின்றி தொடர்ந்து பொருள்களை வாங்கிக் குவிப்பது போன்ற செயல்வழி சார்ந்த அடிமைத்தனத்தாலும் (process addiction) பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்களை அறியாமலே போதைப் பழக்கத்தில் இருக்கிறீர்களா? சினிமாவும் ஒரு காரணம்! சமீபகாலமாக போதைப்பழக்கம் அதிகரித்திருப்பதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம் என்பேன். சினிமாவே சிகரெட் பிடிப்பதையும், மதுப்பழக்கத்தையும் நார்மலைஸ் செய்தது. தற்போது கஞ்சா புகைப்பது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை நடிகர்கள் பயன்படுத்துவது அதனை ஊக்குவிப்பது போல உள்ளது. ஒவ்வொரு நடிகரும், இயக்குநரும் தங்களுக்கு இருக்கும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசர அவசியம். எப்படிக் கண்டுபிடிப்பது? தினசரி நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களான படிப்பு அல்லது வேலையில் விருப்பமின்மை, பணியிடத்தில் அடிக்கடி சண்டை அல்லது லீவு போடுதல், தன்னுடைய அன்றாட செயல்களில் போதைக்கு முன்னுரிமை அளிப்பது, திருடுவது, பொய் சொல்லுவது போன்ற செயல்பாடுகள் போதைப்பழக்க அடிமைத்தனத்தை காட்டும். உளவியல் நிபுணர் சுபாராமன் தீர்வுகள்..! * ஒருவர் போதைப்பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டுமானால் குடும்ப உறுப்பினர்கள் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். * போதைப்பழக்கத்திலிருந்து மீள நினைத்தால், முதலாவது இதனால் வரக்கூடிய உடல், மனம், குடும்பம், சமூகம் மற்றும் சட்டரீதியான பிரச்னைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். `9, 10-ம் வகுப்பு பிள்ளைகளையே போதைக் கும்பல் குறிவைக்கிறது!' - போலீஸ் சூப்பிரண்டு ஆனி * இரண்டாவது, சூழலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். பெரும்பாலான போதைப்பழக்கம் சூழல் காரணமாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக நண்பர்களின் அழுத்தத்தினால் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகின்றனர். இதில் குடும்ப உறுப்பினர்கள் கவனம் செலுத்துவது நல்லது. இவர்களின் சூழலை மாற்றினால் நல்ல மாற்றம் தெரியும். * இறுதியாக நேர்மறையான எண்ணங்களை மனதில் விதைத்து, நண்பர்களின் அழுத்தத்தைத் தவிர்த்து, நல்ல செயல்களில் தன்னை ஈடுபடுத்த முயற்சி செய்யலாம். உதாரணமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வது, நூலகம் செல்வது, தனித்திறன்களை வளர்ப்பதில் ஈடுபடுவது, உயர்வான குறிக்கோள்களை தன் மனதில் விதைத்து அதை நோக்கிச் செல்வது, ஏதேனும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பது போதைப் பழக்கத்திலிருந்து மீள வழிவகைக்கும். தவிர, மருத்துவரின் உதவியும் தேவைப்படும். உளவியல் ஆலோசகரின் தனிநபர் ஆலோசனை மற்றும் குடும்ப ஆலோசனையும் நிச்சயம் தேவைப்படும். உளவியல் ஆலோசனை, குடும்ப ஒத்துழைப்பு, நல்லவிதமான சமூக தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் போதை பாதையிலிருந்து நிச்சயம் விலகலாம்'' என்று நம்பிக்கைக் கொடுக்கிறார் உளவியல் நிபுணர் சுபாராமன். `டிப்ரெஷனுக்கு போதைப்பொருள்கள் தீர்வல்ல!' - தவறான நம்பிக்கையும் மருத்துவ எச்சரிக்கையும்

விகடன் 29 Nov 2025 7:00 am

Doctor Vikatan: வெண்டைக்காய் ஊறவைத்த நீர்; சர்க்கரைநோய், பிசிஓடி, குடல் பிரச்னைகளுக்கு பயனளிக்குமா?

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ பார்த்தேன். வெண்டைக்காயைத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடித்தால் நீரிழிவு கட்டுப்படும், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி சரியாகும், குடல் பிரச்னைகள் குணமாகும் என்று அதை சர்வரோக நிவாரணி போல சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை... யார், எப்படி, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார்  சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா. இயற்கை மருத்துவர் யோ. தீபா வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதிலுள்ள சத்துகள், பலவகைகளிலும் ஆரோக்கியத்துக்கு உதவுவது உண்மைதான். சமூக ஊடகங்களில் சமீபகாலமாக வெண்டைக்காய் குறித்து நிறைய தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும், பெண்களின் இல்லற வாழ்க்கையை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனாலும், இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதற்கான ஆதாரங்கள், நிரூபணங்கள் இதுவரை இல்லை. அதற்குள் போவதற்கு முன், வெண்டைக்காய் தண்ணீர் குறித்துப் பார்ப்போம். வெண்டைக்காயை வெட்டி, தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கலாம். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கும். அது தண்ணீரை கெட்டியாக்கி, ஒருவித மணத்தையும் கொடுக்கும். ஆனால், இதில் அறிவியல்பூர்வ நன்மைகள் உள்ளனவா என்பதற்கான ஆய்வுகள் இதுவரை இல்லை. வெண்டைக்காய் ஆனாலும், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் பாதிப்பு எதுவும் வரப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதில் தேவையான வைட்டமின்கள், (வைட்டமின் ஏ மற்றும் கே) தாதுச்சத்துகள், மக்னீசியம், ஃபோலேட், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை இருப்பதால், பச்சையாக எடுத்துக்கொள்வதாலேயே அதன் பலன்கள் நமக்குக் கிடைத்துவிடும். ஆனாலும், இதை யாரெல்லாம், எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கான ஆய்வுகள் தேவை. இதில் செரிமானத்தை மேம்படுத்தும் திறன் இருக்கிறது. 2019-ல் விலங்குகளை வைத்து இது குறித்து ஓர் ஆராய்ச்சியும்,  2021-ல் மற்றோர் ஆராய்ச்சியும் நடத்தப்பட்டுள்ளன. அதில் வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு, ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெண்டைக்காய் சாப்பிட்டால் இயல்பிலேயே குடலின் செயல்திறன் சீராகும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதாலும் குடல் இயக்கம் சீராகும். குடல் இயக்கம் சீராகும் 2023-ல்  நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெண்டைக்காய் அலர்ஜி உள்ளவர்களுக்கு இப்படியெல்லாம் எடுப்பது அலர்ஜியை தீவிரப்படுத்தலாம். இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடிப்பதும் சிலருக்கு செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். எனவே, ஃப்ரெஷ்ஷாக சமைத்து உடனே சாப்பிடுவதற்கும், இப்படி இரவு முழுவதும் ஊறவைத்து சமைக்காமல் சாப்பிடுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. இதில் ஆக்ஸலேட் அதிகம் என்பதால் கிட்னி ஸ்டோன்ஸ் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும். ஆக்ஸலேட் என்பது கால்சியத்துடன் சேர்வதால்தான் கிட்னி ஸ்டோன் உருவாகிறது. எனவே, எந்த மருத்துவத் தகவலையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவதுதான் சரியானது. சோஷியல் மீடியாவை பார்த்துப் பின்பற்றுவது ஆபத்தானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: வெண்டைக்காய் ஊற வைத்த நீரும், பாகற்காய் நீரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா..?

விகடன் 28 Nov 2025 9:00 am

Doctor Vikatan: `நீரிழிவு'தாம்பத்திய வாழ்க்கை, குழந்தைப் பேற்றை பாதிக்குமா?

Doctor Vikatan: என் வயது 34. இன்னும் திருமணமாகவில்லை. ஆனால், கடந்த ஒரு வருடமாக சர்க்கரைநோய் இருக்கிறது. நீரிழிவு இருப்பவர்கள் திருமணம் செய்துகொண்டால், இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது சிரமமாகும், குழந்தைப் பேறு பிரச்னையாகும் என்றெல்லாம் சொல்கிறார்களே, எந்த அளவுக்கு உண்மை. நான் என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி சர்க்கரை நோய் என்பதை முன்பு வயதானவர்களிடம் பார்த்தோம். தற்போது இளம்வயதினரிடமே பார்க்கிறோம். அதிலும் 20, 25 வயதுள்ள ஆண்களிடமே சர்க்கரை நோய் வருவது சாதாரணமாக மாறிவிட்டது. அதனால் இப்படி ஒரு கேள்வி எழுகிறது என்று நினைக்கிறேன். சர்க்கரை நோய் ஒன்றும் தடை செய்யப்பட்ட நோயல்ல. அதனாலேயே திருமணம் செய்யக் கூடாது என்றும் அர்த்தமில்லை.  நீரிழிவு என்பது நாம் கையாளக் கூடியது; கட்டுப்படுத்தக் கூடியது. டயாபட்டீஸால் திருமணம் செய்துகொள்ளக் கூடிய பெண்ணின் நிலைமை பாதிக்கப்படும் என்றும் மேலோட்டமாகச் சொல்லக் கூடாது. எனவே,  நீரிழிவு நோயாளிகளும் திருமணம் செய்துகொள்ளலாம். நீரிழிவு நீரிழிவு நோயாளியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்கவும் முடியும். நீரிழிவைக் கட்டுப்படுத்தாமல் மோசமாக வளர விட்டால்தான் அதன் பாதிப்புகள் பலவிதங்களிலும் எதிரொலிக்கும். மற்றபடி நீரிழிவைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால் அவருக்கு மேற்கொண்டு எந்த பாதிப்புகளும் வராமல் தவிர்க்க முடியும். எனவே, இந்த அச்சம் தேவையில்லை. கட்டுப்பாடில்லாமல் நீரிழிவை உதாசீனப்படுத்துகிறவர்களுக்கும், அலட்சியப்படுத்துகிறவர்களுக்கும் அடுத்து வேறு பாதிப்பு வர சாத்தியம் மிக மிக அதிகம். எனவே, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். நீரிழிவு நோயாளிகளிடம் அதிகம் பார்க்கக் கூடிய பிரச்னை Erectile dysfunction என்கிற விறைப்புத்தன்மை கோளாறு. நீரிழிவாளர்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை அதிகமாக இருக்கும். அதிலும் இளவயதில் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடம் மிக அதிகமாக இருப்பதை மருத்துவர்கள் கவனிக்கிறோம். அந்த வகையில் இதன் அடுத்தநிலையாக குழந்தையின்மை  பாதிப்பு (Infertility) உண்டாக்கலாம். அதாவது விறைப்புத்தன்மைக் கோளாறை அலட்சியப்படுத்தினால் மலட்டுத்தன்மை சாத்தியம் உண்டு. எந்த நோயாக இருந்தாலும் இதுபோல் உதாசீனப்படுத்தினால் அதற்கென பின்விளைவுகள் வரவே செய்யும். நீரிழிவு... இல்லற வாழ்க்கையைக் கசக்கச் செய்யுமா? நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் விறைப்புத்தன்மை கோளாறும் வராது. அதன் அடுத்தகட்டமாக மலட்டுத்தன்மை சாத்தியமும் அதிகரிக்காது.  இதன் பின்விளைவுகளும் கூட உடனே நிகழ்வதில்லை. பல நாள் அலட்சியத்தின் தொடர்ச்சியாகவே நிகழும். நீரீழிவு என்று இல்லை; எந்த நோயாக இருந்தாலும் அதை சரியாகக் கண்டறிந்து, சரியான மருத்துவரின் வழிகாட்டுதலுடன் இருந்தால், அந்த நோய் கட்டுப்பாட்டில் இருந்தால், முறையாக அந்த நோயின் பாதிப்பைக் குறைப்பதாக இருந்தால், நோய் மேலும் மோசமாகாமல் இருந்தால், உரிய இடைவெளியில் பரிசோதனைகள் செய்துகொண்டால், பல பிரச்னைகளை வருமுன் தடுக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?

விகடன் 27 Nov 2025 9:00 am

பெண்களே உங்கள் உணவில் வைட்டமின் `கே'இருக்கிறதா?

''கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் கே-வும் ஒன்று. ரத்த உறைதலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து இது. வெளிநாடுகளில், வைட்டமின் கே  குறைபாட்டால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், நம்  உணவுப்பழக்கம் காரணமாக வைட்டமின் கே தேவையான அளவு கிடைத்துவிடுகிறது. தற்போது, வெளிநாட்டு நுகர்வுக் கலாசாரம் காரணமாக உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்தியர்களுக்கும் வைட்டமின் கே பற்றாக்குறையை அதிக அளவில் ஏற்படுத்திவருகிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். வைட்டமின் கே வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 ''வைட்டமின் 'கே' இயற்கையாகவே தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கிறது. இதை, வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 என இரு வகைப்படுத்தலாம்.  தாவரங்களில் இருந்து கிடைக்கும்  பைலோகுயினோன் (Phylloquinone) ‘வைட்டமின் கே 1’ என்றும், விலங்கினங்களில் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கும்  மெனாகுயினோன் (Menaquinone) ‘வைட்டமின் கே 2’ என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.  நமது வயிற்றில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. இவை, மெனாகுயினோன் எனும் வைட்டமின் கே 2-வை உற்பத்தி செய்கின்றன.  வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 இரண்டுமே  மனிதர்களுக்கு அவசியம் தேவையான வைட்டமின்களே. என்னென்ன செய்கிறது வைட்டமின் கே? உடலில்  உள்ள  கால்சியம் மற்றும் புரதம் ஆகியவற்றை எலும்புகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. பெண்களுக்கு மெனோபாஸ் நிலையில் எலும்பு அடர்த்தி குறைந்து, எலும்பு பலவீனமடையத் தொடங்கும். வைட்டமின் கே ஆஸ்டியோபொரோசிஸ் வருவதைத் தடுக்கிறது. மெனோபாஸ் வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். தேவையான நேரத்தில் ரத்தத்தை உறைய வைப்பதற்கும் வைட்டமின் கே-தான் உதவுகிறது. ரத்தம், உடலின் தேவைக்கு ஏற்ப பாய்வதற்கு உதவுகிறது. பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா? வைட்டமின் கே உள்ள உணவுகள் பால், உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, ஆரஞ்சு, முட்டை, வெண்ணெய், சீஸ், சூரியகாந்தி எண்ணெய், ஓட்ஸ், பட்டாணி, காலிஃபிளவர், புரொக்கோலி, முட்டைகோஸ், கீரைகள்... வைட்டமின் கே அதிகமானால்... தாவரத்தில் இருந்து கிடைக்கும் வைட்டமின் கே 1 அதிகமானால், நஞ்சாகிவிடும். இதனால், ஹைப்பர்பிலிரூபினிமியா (Hyperbilirubinemia) எனும் பிரச்னை ஏற்பட்டு தீவிர மஞ்சள் காமாலை நோய் வரலாம்'' என்கிறார் ஷைனி சுரேந்திரன். Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள்

விகடன் 27 Nov 2025 6:48 am

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்கம், சினைப்பைகளையும் சேர்த்து நீக்குவது சரியா?

Doctor Vikatan: என் அக்காவுக்கு 45 வயதாகிறது. ப்ளீடிங் பிரச்னைகள் காரணமாக பல வருட சிகிச்சை எடுத்தார். இப்போது கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்கிறார் மருத்துவர். தேவைப்பட்டால் சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டியிருக்கலாம் என்கிறார். இப்படி கர்ப்பப்பையை அகற்றும்போது சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டுமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் வழக்கமாக, 45 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு, சினைப்பையில் பிரச்னைகள் இல்லாத பட்சத்தில் கர்ப்பப்பையை அகற்றும்போது, சினைப்பைகளையும் சேர்த்து அகற்ற மாட்டோம். கர்ப்பப்பையையும், சினைக்குழாய்களையும் மட்டும் நீக்கிவிடுவோம். சினைப்பைகளை பத்திரப்படுத்தவே நினைப்போம். அதையும் தாண்டி, சிலருக்கு குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் சினைப்பை புற்றுநோய் இருந்தால், கர்ப்பப்பையை நீக்கும்போது சினைப்பைகளையும் நீக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 50- 51 என்று இருக்கிறது. அந்த வயது வரை இதயத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு மிக அவசியம். அந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை சுரப்பவை சினைப்பைகள் என்பதால், முடிந்தவரை அவற்றை அகற்றாமல் பத்திரப்படுத்தவே முயல்வோம். குழந்தைப்பேற்றை முடித்துவிட்ட பெண்கள், கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னைகள் வந்தால், அதை அகற்றத் தயங்க வேண்டியதில்லை. அப்போதும் சினைப்பைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். மருத்துவர் ஆலோசனை கர்ப்பப்பையை அகற்றும்போது, கர்ப்பப்பையின் வாயும் அகற்றப்படும். அதன் விளைவாக சில பெண்களுக்கு வெஜைனா வறண்டுபோவதால்  தாம்பத்திய உறவில் சிக்கல்கள் வரலாம். இதைத் தவிர்க்க, 'சப்டோட்டல் ஹிஸ்டரெக்டமி' (subtotal hysterectomy) என்றொரு வழி இருக்கிறது. அதில் கர்ப்பப்பை வாய்ப்பகுதியைத் தக்கவைத்துவிடுவோம். எனவே, வெறும் ப்ளீடிங் தொடர்பான பிரச்னைக்காக மட்டும் கர்ப்பப்பையை நீக்குவோருக்கு, இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  கர்ப்பப்பை பிரச்னைகளுக்கு மருந்தாகும் சப்பாத்திக்கள்ளி கிரேவி!

விகடன் 26 Nov 2025 9:00 am

Doctor Vikatan: விக்கல் உடனே நிற்காமல் பல நிமிடங்கள் நீடிப்பது பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு அடிக்கடி விக்கல் வருகிறது. அப்படி விக்கல் வந்தால் உடனே நிற்பதில்லை. பல நிமிடங்களுக்கு நீடிக்கிறது. இப்படி நீண்டநேரம் விக்கல் தொடர்வது ஏதாவது பிரச்னையின் அறிகுறியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் இந்தக் கேள்விக்கான விளக்கத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், விக்கல் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வது அவசியம். குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதிலிருந்து அது முதியவராகும்வரை எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு விக்கல் வரலாம். நெஞ்சுப்பகுதிக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் (Diaphragm) என்ற பகுதி தானாகவே சுருங்க ஆரம்பிக்கும். அப்போது விக்கல் வரும்.  பொதுவாக உதரவிதானம் உள்வாங்கும்போது , நுரையீரலுக்குள் காற்று போகும்.  உதரவிதானம் ஓய்வெடுக்கும்போது  நுரையீரலுக்குள் உள்ள காற்று வெளியே போகும்.  விக்கல் வந்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் நின்றுவிடும். சிலருக்கு அது நீண்ட நேரம் நீடிக்கலாம். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள்வரை நீடிக்கும் விக்கலானது, அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாலோ, அதிக காரமுள்ள உணவுகளாலோ, மது அருந்துவதாலோ வரலாம். கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும் விக்கல் வரலாம். சோடா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும், அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவதாலும்கூட விக்கல் வரலாம்.  திடீரென காற்றின் வெப்பநிலை மாறும்போதுகூட சிலருக்கு விக்கல் வரும்.  அதீத ஸ்ட்ரெஸ் அல்லது அதீதமாக உணர்ச்சிவசப்படுதல் காரணமாகவும் விக்கல் வரலாம். ஆண்களுக்கு பெண்களைவிட விக்கல் அடிக்கடி வரும். மன ரீதியான படபடப்பு, பதற்றம் அதிகமுள்ளோருக்கும் விக்கல் வரலாம். வயிற்றுக்குள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும், ஜெனரல் அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும் மற்றவர்களைவிட அதிகமாக விக்கல் வரும்.  விக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும் ஏலக்காய்! விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டாலும் நிற்கும்.  மூச்சை நன்கு இழுத்துப் பிடித்திருந்து வெளியேற்றினாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்கும். ஏப்பம் விடுகிற மாதிரி நாமே முயற்சி செய்து பார்த்தாலும் நிற்கும்.  கால்களை மடக்கி, மூட்டானது நெஞ்சுப் பகுதியைத் தொடும்படி வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும்.  ரிலாக்ஸ் செய்து மெதுவாக மூச்சுவிட்டாலும் விக்கல் நிற்கும்.  தண்ணீர் குடித்தாலும் விக்கல் நிற்கும். இதையெல்லாம் முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை, அதாவது தொடர்ந்து இரண்டு நாள்களாக விக்கல் நிற்கவில்லை என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டும், அவர்கள் கரோட்டிடு சைனஸ் மசாஜ் (Carotid sinus massage ) செய்வார்கள். கரோட்டிடு ரத்தக்குழாய் கழுத்துப் பகுதியில் இருக்கும். அதில் மருத்துவர் மசாஜ் செய்யும்போது விக்கல் நிற்கும். மூக்கு வழியே வயிற்றுக்குள் டியூப் விட்டு ஒரு சிகிச்சை செய்வார்கள். உதரவிதானத்தில் உள்ள குறிப்பிட்ட நரம்பில் அனஸ்தீசியா கொடுப்பதன் மூலமும் விக்கலை நிறுத்தச் செய்வார்கள்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Doctor Vikatan: குழந்தையின்மைக்கும் உணவுப்பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?

விகடன் 25 Nov 2025 9:00 am

Menstrual Masking: மாதவிடாய் ரத்தத்தை பூசினால் முகம் பொழிவாகுமா? - எச்சரிக்கும் மருத்துவர்

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில விசித்திரமான அழகுக்குறிப்புகள் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. 'மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்' (Menstrual Masking) என்று அழைக்கப்படும் இந்த முறையில், பெண்கள் தங்கள் மாதவிடாய் ரத்தத்தையே முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். இது சருமத்திற்கு பொலிவை தரும் என்று கருதி இதனை பயன்படுத்துகின்றனர் ஆனால், இதில் மறைந்துள்ள ஆபத்துகள் குறித்து தோல் மருத்துவர் எச்சரித்துள்ளார். மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங் பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை சேகரித்து, அதை முகத்தில் ஒரு 'பேஸ் மாஸ்க்' போல பூசிக் கொள்வதையே 'மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்' என்கின்றனர். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த ரத்தத்தை முகத்தில் வைத்துவிட்டு, பின்னர் கழுவி விடுகிறார்கள். இந்த வினோத பழக்கம் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக் போன்ற செயலிகளில் வேகமாக பரவி வருகிறது. Menstrual Cup 'மாதவிடாய் ரத்தம் சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யவும், முகப்பொலிவை அதிகரிக்கவும் உதவும்' என்று இதனை பயன்படுத்துவோர் நம்புகிறார்கள். ஆனால் இந்த முறை ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிகின்ற்றனர். இது குறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா ராகுல் நம்மிடம் பேசுகையில், மாதவிடாய் ரத்தத்தில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் இருக்கின்றன. குறிப்பாக 'ஸ்டாஃபிலோகாக்கஸ் ஆரியஸ்' (Staphylococcus aureus) போன்ற கிருமிகள் இதில் உள்ளன. முகத்தில் சிறிய வெட்டுக்களோ அல்லது துளைகளோ இருந்தால், இதன் மூலம் கடுமையான தொற்றுகள் ஏற்படலாம். பால்வினை நோய்த்தொற்றுகள் முகத்திற்கு பரவும் அபாயமும் இதில் உள்ளது. மருத்துவர் கோல்டா ராகுல் இப்படி மாதவிடாய் ரத்ததை முகத்தில் பூசினால் பொழிவு கிடைக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, சிலர் இந்த முறையினை 'பிஆர்பி' (PRP) சிகிச்சையுடன் ஒப்பிடுகிறார்கள், ஆனால் பிஆர்பி சிகிச்சை சரியான அளவில் அவர்களின் ரத்ததையே எடுத்து சிகிச்சை வழங்கப்படுகிறது, அது முற்றிலும் பாதுக்காப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், மாதவிடாய் ரத்தத்தை நேரடியாக முகத்தில் பூசுவது ஆபத்தானது. எந்தவொரு மருத்துவ அங்கீகாரமும் இல்லாத, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத இத்தகைய ஆபத்தான முயற்சிகளை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். Gout: மூட்டு வாதம் வரக் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் & தீர்வுகள்

விகடன் 24 Nov 2025 3:02 pm

பீகார்: குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலில் யுரேனியம் - உடல் நல பிரச்னைகள் வரும் அபாயம்?

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் பிரதான உணவாக இருக்கிறது. தாய்ப்பாலில் அனைத்து வகையாக சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. அந்த தாய்ப்பால் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டபோது அதிர்ச்சித் தகவல் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் அனைத்து மாவட்டத்திலும் தாய்ப்பால் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அனைத்து தாய்ப்பாலிலும் கதிர்வீச்சை உண்டுபண்ணும் யுரேனியம் கலந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. பல்வேறு ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது குழந்தைகளுக்கு புற்றுநோய் அல்லாத உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுத்தக்கூடும் என்று பல நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பால் I சித்திரிப்பு படம் இது குறித்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் அசோக் வர்மா கூறுகையில்,'' 40 தாய்மார்களிடம் எடுக்கப்பட்ட தாய்ப்பால் மாதிரியில் அனைத்திலுமே யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 70% குழந்தைகளுக்கு புற்றுநோய் அல்லாத உடல்நல கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குக் கீழேதான் இருந்தன. எனவே குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு குறைந்தபட்ச பாதிப்பையே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ககாரியா மாவட்டத்தில் சராசரியாக அதிகபட்ச யுரேனிய மாசுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யுரேனியம் பாதிப்பால் நரம்பியல் வளர்ச்சி குறைபாடு மற்றும் மூளைவளர்ச்சி குறைதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது என்றார். சிறுநீரக கோளாறு அபாயம் 70% குழந்தைகளுக்கு HQ அளவு 1 என்ற அளவில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பதால் ஏற்படக்கூடிய புற்றுநோய் அல்லாத உடல்நல கோளாறு அபாயங்களைக் குறிக்கிறது என்கிறார்கள். யுரேனியம் பாதிப்பால் குழந்தைகளுக்கு சிறுநீரக வளர்ச்சி, நரம்பியல் வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் மனநலத்தில்(குறைந்த IQ மற்றும் நரம்பியல் வளர்ச்சி தாமதம் உட்பட) பாதிப்பு ஏற்படும். இருப்பினும், தாய்ப்பாலில் உள்ள யுரேனியத்தின் அளவின் அடிப்படையில் (0-5.25 ug/L), குழந்தையின் ஆரோக்கியத்தில் உண்மையான தாக்கம் குறைவாகவே இருப்பதாக ஆய்வு முடிவு கூறுகிறது. மேலும் தாய்மார்களின் உடம்பிற்குள் செல்லும் பெரும்பாலான யுரேனியம் தாய்ப்பாலில் சேர்ந்துவிடாமல், சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே, மருத்துவ அறிகுறிகள் குறித்து எதுவும் குறிப்பிடாத பட்சத்தில் தாய்ப்பால் குழந்தைகளுக்கு தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகிறது. இது போன்ற ஆய்வுகள் மற்ற மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்'' என்று அவர் கூறினார். ஆய்வு அறிக்கைகள் குழந்தை மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் யுரேனியம் கலந்த தாய்ப்பாலால் புற்றுநோயற்ற சுகாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறது. கதிரியக்க தனிமமான யுரேனியம், பொதுவாக கிரானைட் மற்றும் பிற பாறைகளில் காணப்படுகிறது. தாய்ப்பாலில் ஈயம், பாதரசம் இந்த யுரேனியம் சுரங்கம், நிலக்கரி எரித்தல், அணுசக்தி வெளிப்பாடு மற்றும் பாஸ்பேட் உரங்களின் பயன்பாடு போன்ற இயற்கை செயல்முறைகள் மற்றும் மனித நடவடிக்கைகள் மூலம் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. முந்தைய ஆராய்ச்சிகளில் ஏற்கனவே தாய்ப்பாலில் ஆர்சனிக், ஈயம் மற்றும் பாதரசம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயத்தை நன்கு புரிந்துகொள்ள, தாய்ப்பாலில் உள்ள பூச்சிக்கொல்லிகள் போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடுகள் உட்பட நச்சு மாசுபடுத்திகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு குடிநீரில் யுரேனியத்தின் அளவு லிட்டருக்கு 30 மைக்ரோகிராம் (ug/L) என்று வரம்பை நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனி போன்ற சில நாடுகள் 10 ug/L என்ற கடுமையான வரம்புகளை விதித்துள்ளன. இந்தியாவில், 18 மாநிலங்களில் உள்ள 151 மாவட்டங்களில் யுரேனியம் மாசுபாடு பதிவாகியுள்ளது. பீகாரில் 1.7 சதவீத நிலத்தடி நீர் ஆதாரங்கள் யுரேனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

விகடன் 24 Nov 2025 12:33 pm

Doctor Vikatan: சில வகை இருமல் மருந்துகளைக் குடித்தால் கை, கால் நடுக்கம் ஏற்படுவது ஏன்?

Doctor Vikatan: என் வயது 45. சளி, இருமல் வரும்போது மருந்துக் கடைகளில் இருமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவது வழக்கம். சில வகை இருமல் மருந்துகள் எந்தப் பக்கவிளைவையும் ஏற்படுத்துவதில்லை. சில இருமல் மருந்துகளோ, கை, கால் நடுக்கம், படபடப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை சளி மற்றும் இருமல் மருந்துகள் பொதுவாகப் பல மருந்துகளின் கலவையாகவே இருக்கும். அவற்றில் உள்ள சில கூறுகள் கை, கால் நடுக்கம் (Tremors) மற்றும் இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இருமல் மருந்துகள் பல வகைப்படும். ஒருவரின் பிரச்னை மற்றும் உடல்நலம், இருமலின் தீவிரம் என பல விஷயங்களைப் பொறுத்தே அவை பரிந்துரைக்கப்படும். அந்த வகையில், 1. டீகன்ஜெஸ்டென்ட்ஸ் (Decongestants) ஃபினைல்எஃப்ரின் (Phenylephrine) அல்லது சூடோஎஃபெட்ரின் (Pseudoephedrine) போன்ற டீகன்ஜெஸ்டென்ட்ஸ், மூக்கடைப்பை நீக்க உதவுகின்றன. ஆனால், இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், இதயத் துடிப்பை வேகப்படுத்தலாம், மற்றும் சிலருக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (Arrhythmias) அல்லது நடுக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்னைகள் உள்ளவர்கள் இவற்றைக் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். 2. பிராங்கோடைலேட்டர்ஸ் (Bronchodilators) சில இருமல் சிரப்களில் டெர்புடலைன் (Terbutaline) அல்லது சல்புடமால் (Salbutamol) போன்றவை கலந்திருக்கலாம். இவை சுவாசக்குழாயைத் தளர்த்தி, சளியை வெளியேற்றவும் மூச்சு விடுவதை எளிதாக்கவும் உதவுகின்றன. இந்த மருந்துகள் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதால், இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் கை, கால்களில் நடுக்கத்தை (Tremor) பக்க விளைவாக உருவாக்கலாம். மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். 3. ஆன்டிஹிஸ்டமின்ஸ் (Antihistamines) சில ஆன்டிஹிஸ்டமின்களும் சில நேரங்களில் இதயத் துடிப்பை வேகமாக அதிகரிக்கச் செய்யலாம், சிலருக்கு நடுக்கத்தைக்கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, எப்போதுமே நீங்களாக மருந்துக் கடைகளில் இருமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்து குடித்த பிறகு உங்களுக்குத் தீவிரமான அல்லது தொடர்ச்சியான நடுக்கமோ, வேறு பக்க விளைவுகளோ ஏற்பட்டால், உடனடியாக மருந்தை நிறுத்திவிட்டு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம்

விகடன் 24 Nov 2025 9:00 am

Gout: மூட்டு வாதம் வரக் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் &தீர்வுகள்

“சிலர் ‘காலில் வீக்கம், எரிச்சல்... நடக்க முடியவில்லை’ என்று வருகின்றனர். இந்த கால் வீக்கத்தை உற்றுப் பார்த்தால், ஏதோ நீர் கோத்துக் கொண்டது போல இருக்கும். சப்பாத்திக் கள்ளியை காலில் கட்டி வைத்தால் எப்படி குத்துமோ, வலிக்குமோ அதே வலியை உணர்வார்கள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு கவுட் பிரச்னை இருக்க வாய்ப்பு அதிகம்” என்கிற ஹோமியோபதி மருத்துவர் ராமகிருஷ்ணன், ‘கவுட்’ பற்றிய டவுட்களைக் களைகிறார். கவுட் என்றால் என்ன? gout கவுட்(Gout) என்பது ஒரு வகை மூட்டுவாதம். ரத்தத்தில் யூரிக் அமிலம் (Uric acid) அளவு அதிகரிக்கும்போது கவுட் ஏற்படும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 6-7 மி.லி கிராம் அளவுக்கு யூரிக் அமிலம் உடலில் இருப்பது இயல்புநிலை. இதற்கு மேல் சென்றால் கவுட் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள்? பெருவிரலில் வீக்கம், நீர் கோத்து வலியுடன் கூடிய எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். பெரும்பாலும் கால் பெருவிரலில் கவுட் வரும். சிலருக்கு கைவிரல், முழங்கால் முட்டி, முழுங்கை முட்டி போன்ற எந்த மூட்டுகளில் வேண்டுமானாலும் வலியும், வீக்கமும் வரலாம். இந்த வீக்கத்தில் நீர் கோத்துக் கொண்டு தாளாத வலி ஏற்படும். முள் குத்துவது போன்ற எரிச்சலையும், நெருப்பின் மேல் நடப்பது போன்ற எரிச்சலையும் சிலர் உணர்வதாகச் சொல்கின்றனர். ஒயின், பீர் அருந்து பவர்களுக்கு கவுட் வர வாய்ப்புகள் அதிகம். யாருக்கு கவுட் வரலாம்? பெரும்பாலும் ஆண்களுக்கு கவுட் அதிகமாக வரும். ஆனால், இப்போது பெண்களுக்கும் கூட வருகிறது. 35 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு கவுட் பிரச்னை வரலாம். குறிப்பாக ஒயின், பீர் அருந்து பவர்களுக்கு கவுட் வர வாய்ப்புகள் அதிகம். மற்றபடி மரபியல், உணவுப் பழக்கங்கள் போன்ற காரணங்களால் கவுட் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. Health: சைனஸ் முதல் மூட்டு வீக்கம் வரை... குளிர்கால ஹெல்த் பிரச்னைகள்; வராமல் தடுக்க டிப்ஸ்! தீர்வு என்ன? கவுட் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கலாம். ஆறு மாதங்களாக கவுட் பிரச்னை இருக்கிறது என்றால், நோய் குணமாக 3-4 மாதங்களாவது தேவைப்படும். ஐந்து ஆண்டுகளாக கவுட் பிரச்னை பாதித்திருந்தால், குணமாக குறைந்தது ஒர் ஆண்டு பிடிக்கும். இது அவரவர் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்தது. ரத்தத்தில் யூரிக் அமிலம் கலந்திருந்தால், இதற்கு மட்டும் மருந்து கொடுத்து சரி செய்ய முடியாது. இப்படி செய்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது. உடல் முழுவதற்கும் தேவைப்படுகிற ஆற்றலை தந்து, நோய் எதிர்ப்பு திறனை கூட்டி யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தி சிகிச்சை செய்வதே சரியான முறை. இந்த பிரச்னைக்கு ஹோமியோபதி சிகிச்சை முறையில் தீர்வு இருக்கிறது. தகுதியான மருத்துவரைச் சந்திந்து, சிகிச்சை பெறுவதன் மூலம் நிரந்தரத் தீர்வை காணலாம். கவுட் தவிர்க்க... * குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட திரவ உணவுகளைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய திரவ உணவுகளை உண்பதால் கவுட் பிரச்னையின் தாக்கம் குறையும். * பீர், ஒயின் மட்டுமல்ல, மதுவை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. * கொழுப்பு குறைந்த பால் பொருட்களைச் சாப்பிடலாம். காலை உணவில் அவசியம் புரதச் சத்துக்கள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும். * அசைவ உணவுகளால் கவுட் பிரச்னை வருகிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. எனினும் அசைவ உணவுகளை அளவாக உண்ணலாம். குறிப்பாக ஈரல், மண்ணீரல், குடல் போன்ற உறுப்புகள் சார்ந்த அசைவ உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். * உடல் எடை கூடாமல் பார்த்துக் கொண்டால் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் இருக்கும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். * இயற்கை முறையில் விளையும் ஆர்கானிக் உணவுகளையே பிரதான உணவாக மாற்றிக் கொள்வதன் மூலம் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். Palm Sugar: அது எலும்பை அரிக்கும்; இது எலும்பை வலுவாக்கும்! | health tips

விகடன் 24 Nov 2025 6:30 am

Doctor Vikatan: `தினமும் 3 லிட்டர் தண்ணீர்' - அனைவருக்குமான அறிவுரையா?

Doctor Vikatan: தினமும் 8 டம்ளர் அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பொதுவான ஆலோசனையாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சிலர், திரவ உணவுகளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது. 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது என்பது எல்லோருக்குமான பொதுவான அட்வைஸ் என்று எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் எந்த மருத்துவப் பரிந்துரையையும் அறிவுரையையும் எல்லோருக்குமான பொதுவான விஷயமாக எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டாம். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் உடல் உறுப்புகள் சுத்தமாகும். உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது தலைச்சுற்றல், மயக்கம், களைப்பு, தலைவலி போன்றவை வரலாம். உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது சிலருக்கு கடுமையான தலைவலி வரும். தண்ணீர் குடித்ததும் தலைவலி குணமாவதை உணர்வார்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டுபோகும். உதடுகள் வெடிக்கும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். எனவே தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்துப் பழகாமல் குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துப் பழகுவது நல்லது. நீங்கள் குறிப்பிட்டதுபோல வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டலை ஏற்படுத்தலாம். அவர்கள், தண்ணீரில் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு கலந்து புதினா இலைகள் சேர்த்துக் குடிக்கலாம். தண்ணீர் நீர்வறட்சி ஏற்படாமலிருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் தண்ணீர் சேர்த்து நீர் மோராக்கி, நாள் முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்கலாம். சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்துவது செரிமானத்துக்கும் சிறந்தது. உடலையும் குளிர்ச்சியாக வைக்கும். சூப், ரசம், இளநீர் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நீர் வறட்சியைத் தவிர்க்கும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், இதயநோயாளிகளும் மருத்துவர் அனுமதிக்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். மற்றபடி குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வலியுறுத்த வேண்டும். அடிக்கடி சிறுநீர்த்தொற்றுக்கு உள்ளாகிறவர்களும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும். எனவே, உங்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டே இதில் முடிவெடுக்க வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?

விகடன் 22 Nov 2025 9:00 am

`புருவம் த்ரெட்டிங் முதல் கூட்டுப்புருவம் வரை' - அழகுக்கலை நிபுணர் டிப்ஸ்

''பியூட்டி பார்லர் பக்கமெல்லாம் நான் போறதே இல்லப்பா...' என்று சொல்லும் பெண்கள்கூட, கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான். இதற்கு டீன் ஏஜ்,. மிடில் ஏஜ், ஓல்டு ஏஜ் என்று எந்த ஏஜும் விதிவிலக்கல்ல'' என்கிற அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, இங்கே த்ரெட்டிங் தொடர்பான டிப்ஸ் வழங்குகிறார். புருவம் த்ரெட்டிங் ’’டீன் ஏஜ் காலத்தில் ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில் புசுபுசுவென காடு போல் முடி வளர்வது இயற்கையே. ஆனால், 'அழகாக இல்லையே' என்று அதன் மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டிங் செய்யும்போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் - குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள். அந்த வயதில், இயற்கைக்கு முரணாக உடம்பில் நாம் செய்யும் மாற்றங்கள் பூமராங் ஆகி, வேறுவிதமான சிக்கல்களுக்கு நிரந்தர விதை போட்டுவிடும்! புருவம் த்ரெட்டிங் அழகான அடர்த்தியான புருவத்துக்கு...டிப்ஸ்... டிப்ஸ்..! #BeautyTip 'த்ரெட்டிங்' என்பதை செய்ய ஆரம்பித்தால், அதன் பிறகு முடிகள் கம்பி போல் திக்காக வளர ஆரம்பித்து விடும். அதுமட்டுமல்ல... ஒரு தடவை த்ரெட்டிங் செய்தால், தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால்... புருவங்களிலிருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழகையே கெடுத்துவிடும். மழிக்கப்பட்ட இடங்களில் முடிக்கால்கள் தோன்றி... நம் முகத்தையே விகாரமாகக் காட்டி பயமுறுத்தும். 'எல்லாம் சரி! ஆனா, த்ரெட்டிங் செய்யாம இருக்க முடியலையே...!' என்பவர்களுக்கு... இதோ சில டிப்ஸ்கள்! புருவம் த்ரெட்டிங் Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! த்ரெட்டிங் போகும் முன்பாக கண்களைச் சுற்றி எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு கழுவிவிட்டு, த்ரெட்டிங் செய்தால்... புருவம் வில் போல் அழகான வடிவத்துக்கு மாறிவிடும். முதன்முறையாக செய்து கொள்பவர்களுக்கு... த்ரெட்டிங் செய்து கொள்ளும்போது தசையெல்லாம் சுருங்கக்கூடாது என்பதற்காக கண்களை கையால் அழுத்திக் கொண்டுதான் செய்வார்கள். முதன்முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலுடன், வலியும், வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஒரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்கத்தைப் போக்க, ஒரு நாள் வைட்டமின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆயில் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறைவதோடு, கண்களையும் அழகாகக் காட்டும். கூட்டுப் புருவ முடிகளை அகற்ற சில பெண்களுக்கு இரு புருவத்துக்குமிடையே முடி சேர்ந்து 'கூட்டுப் புருவம்' என்பதாக இருக்கும். பொட்டு வைத்தால்கூட அழகாகத் தெரியாது. இந்தக் கூட்டுப் புருவ முடிகளை அகற்ற... கஸ்தூரி மஞ்சள்தூள், கிழங்கு மஞ்சள்தூள், கடலை மாவு ஆகிய வற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பேஸ்டாக்குங்கள். இதை மூக்கின் நுனி பகுதியில் இருந்து புருவம் வரை ‘திக்’காக பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒத்தி எடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து முகம் பளிச்சென பிரகாசமாக தெரியும்’’ என்கிறார் ராஜம் முரளி.

விகடன் 22 Nov 2025 7:21 am