SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

Doctor Vikatan: சீரற்ற பல்வரிசை... வெளியே தெரியாமல் க்ளிப் போடுவது சாத்தியமா?

Doctor Vikatan: பற்கள் துருத்திக் கொண்டிருந்தால் அவற்றைச் சரியாக்க க்ளிப் போடும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறதா.... க்ளிப் போட்டது தெரியாதபடி  லேட்டஸ்ட் சிகிச்சைகள் ஏதும் உள்ளனவா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக்   பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் | சென்னை Happy Teeth: பல் மருத்துவரிடம் உடல்நலப் பிரச்னைகளை மறைப்பது இத்தனை பிரச்னைகளை ஏற்படுத்துமா..? துருத்திக்கொண்டிருக்கும் பற்களை சரிசெய்வது பல் மருத்துவப் பிரிவில் ஆர்த்தோடாண்டிக்ஸ் (Orthodontics) என்ற பிரிவின் கீழ் வரும். இது குறித்த விழிப்புணர்வு இன்று இளைஞர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி, பெண்களைவிடவும், ஆண்கள் இந்தச் சிகிச்சைக்கு முன்வருவது அதிகம் என்பது தெரிய வந்திருக்கிறது. பெரியவர்கள் செய்து கொள்ளும் 'அடல்ட் ஆர்த்தோடாண்டிக்ஸ்' சிகிச்சைகள் சமீபகாலத்தில் ரொம்பவே பிரபலமாகி வருகின்றன. 50 ப்ளஸ் வயதில் உள்ளோர்கூட, பற்களின் இடையில் இடைவெளி இருப்பதாகவும், பற்கள் முன்னே துருத்திக் கொண்டிருப்பதாகவும் அதைச் சரிசெய்யக் கோரி மருத்துவர்களை நாடி வருவது அதிகரித்திருக்கிறது.  ஆரத்தோடாண்டிக்ஸ் சிகிச்சை பொதுவாக பல லெவல்களில் செய்யப்படும். பற்களை நேராக்குவது அல்லது சரியான வரிசைக்குக் கொண்டு வருவது. அடுத்து புன்னகையை சரிசெய்வதோடு, கடிக்கும்போது பற்கள் சரியாகச் சேரும்படியான சிகிச்சை,  மூன்றாவதாக, தாடை அளவில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்வது, கடைசியாக, ஹேபிட் பிரேக்கிங் தெரபி....  அதாவது சில குழந்தைகள் விரல் சப்புவார்கள்.  ஒரு வயதுக்குள் நிறுத்த வேண்டிய அந்தப் பழக்கம் சில குழந்தைகளுக்கு ஏழெட்டு வயதாகியும் தொடரும். அதனால் தாடையின் அமைப்பே மாறிப்போகும். விரல் சப்பும் பழக்கத்தை நிறுத்தவும் ஆர்த்தோடாண்டிக்ஸில் சிகிச்சைகள் உள்ளன. அதேபோல பேசும்போது நாக்கை மேல் பல்லுடன் இடித்துப்பேசுவது, உதடுகளைக் கடித்துக்கொண்டே இருப்பது, இரவு நேரங்களில் பற்களை நறநறவென கடிப்பது போன்ற பல பிரச்னைகள் பலருக்கும் உண்டு. இவை பற்களை மட்டுமன்றி, தாடை, முகத்தசைகள் என பலதையும் பாதிக்கும்.  இதுபோன்ற பழக்கங்களை நிறுத்தச் செய்ய பிரத்யேக கருவிகள் பொருத்தி சரிசெய்யும் நவீன சிகிச்சைகள், இன்று பல் மருத்துவத்தில் உள்ளன.  கழற்றி மாட்டும் க்ளிப் Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது அதிகம் சாப்பிடுகிறேன். எடை கூடுவதிலிருந்து மீள முடியுமா? பற்களுக்கான சிகிச்சைகளில் லேட்டஸ்ட்டாக நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன. பற்களுக்குப் போடும் க்ளிப் தொடங்கி, அதை ஒட்டவைக்கும் பாண்டிங் ஏஜென்ட் (bonding agent ) வரை நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன. 3டி இமேஜிங் டெக்னிக்குகள் வந்துள்ளன. அதைவைத்து தாடை எலும்புகளில் பிரச்னை உள்ளதா என்றுகூட தெரிந்துகொள்ள இன்று மருத்துவ வசதிகள் உள்ளன. வெறும் எக்ஸ்ரே வை மட்டும் நம்பியிருக்க வேண்டாம். அதேபோல டிஜிட்டல் இம்ப்ரெஷன் முறையில்  டூத் பிரஷ் போன்ற ஒன்றில் கேமராவை பொருத்தி, சம்பந்தப்பட்ட நபரின் வாயில் வைத்து உடனடியாக ஸ்கேன் செய்ய முடியும்.  இதில் பேஷன்ட்டுக்கு எந்த அசௌகர்யமும் இருக்காது. பற்களுக்குப் பொருத்தும் க்ளிப்பில் மெட்டல், செராமிக், லிங்குவல் பிரேசஸ் (Lingual braces ) எனப்படும் பற்களுக்குப் பின்புறம் பொருத்துவது என பல வகை உண்டு.  க்ளிப் போட்டது வெளியே தெரியவேகூடாது என நினைப்பவர்களுக்கு பற்களுக்குப் பின்னால் பொருத்தும் இன்விசிபிள் பிரேசஸ் பொருத்தமாக இருக்கும். ஆனால், இந்த வகையில் சில குறைகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நாக்கில் குத்துவது, சரியாகச் சுத்தம் செய்ய முடியாதது போன்ற சில பிரச்னைகள்  இதில் இருக்கும்.  லேட்டஸ்ட்டாக க்ளியர் அலைனர்ஸ் (clear aligners) என்பவை ரொம்பவே பிரபலம். டிரான்ஸ்பரன்ட்டாக, பற்களின் வடிவத்திலேயே பொருத்திக்கொள்ளக்கூடியது இது. இதையும் தாண்டி, 'செல்ஃப் லைகேட்டிங் பிரேசஸ்' ( Self-Ligating Braces )  என ஒன்றும் வந்துள்ளது. பற்களில் க்ளிப்  பொருத்திய பிறகு ஒவ்வொரு மாதமும் உங்கள் பல் மருத்துவர் எலாஸ்டிக் பேண்டு போன்ற ஒன்றை மாட்டிவிடுவார். அதுவே செல்ஃப்  லைகேட்டிங்கில், ஸ்லைடிங் மெக்கானிசத்தில் அதிலுள்ள ஒயரானது க்ளிப்புடன் தானாகவே போய் இணைந்துகொள்ளும். இதைப் பொருத்திக்கொள்ளும் நிலையில், மாதந்தோறும் மருத்துவரைத் தேடிப்போக வேண்டிய அவசியமிருக்காது. பற்கள் Doctor Vikatan: பற்கள் விழுவது போன்ற கனவு... அடிக்கடி வருவதால் நிஜத்திலும் நடக்குமா? சிகிச்சையைத் தொடங்கும் முன்பே ஒரு நபருக்கு எந்தப் பல்லை எந்தக் கோணத்தில், எத்தனை மில்லிமீட்டர் நகர்த்தினால் அவர்களது சிரிப்பும் தோற்றமும் எப்படியிருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சாஃப்ட்வேர்கள் வந்துள்ளன. அக்ஸ்லரேட்டடு ஆர்த்தோடாண்டிக்ஸ் (Accelerated Orthodontics)  என்ற நவீன சிகிச்சையும் இன்று பிரபலம். அதாவது ஒரு வருடத்துக்கெல்லாம் என்னால் க்ளிப் போட முடியாது, ஐந்தாறு மாதங்கள்தான் முடியும் என்பவர்களுக்கு பற்களை சீக்கிரமே நகரவைக்க, மைக்ரோ ஆஸ்டியோ பெர்ஃபரேஷன் ( Micro-osteoperforations ) அல்லது ஹைஃப்ரீக்வன்சி வைப்ரேஷன் (High frequency vibration)  மாதிரியான நவீன சிகிச்சைகள் உள்ளன. எனவே, உங்களுடைய பிரச்னை என்ன, அதற்கான சரியான சிகிச்சை என்ன என்பதை பல் மருத்துவரை நேரில் அணுகித் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் பல் அமைப்பு, அதை சரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளைப் பார்த்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 25 Apr 2024 9:23 am

``தனிமையில் இருக்கும் பெண்கள் கேக், சாக்லேட் அதிகம் சாப்பிடுகின்றனர்...''ஆய்வில் தகவல்

தனிமையில் இருக்கும் பெண்கள் அதிக கலோரி உள்ள உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தனிமையில் இருக்கும் பெண்கள் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணத்தை அறிவதற்கான ஆய்வை மேற்கொண்டனர். தனிமையில் இருக்கும் பெண்கள் இனிப்பு அதிகம் சாப்பிடுகின்றனர். இந்த ஆய்வில் தனிமையில் இருக்கும், தனிமையில் இருப்பதாக உணரும் 93 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனிமையால் ஏற்படும் மனநல பிரச்னைகள் மற்றும் உடல் பருமனோடு இருந்தனர். ஆய்வின் முடிவில் தனிமையை உணரும் பெண்களுக்கு அதிக அளவில் உணவை உட்கொள்ளும் எண்ணம் உருவாவதுடன், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இனிப்பு நிறைந்த உணவுகள், கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற உணவுகளை உண்பதும் உடல் பருமன் பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கண்டறிந்துள்ளனர். இது குறித்து பேசிய பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர் மையத்தின் ஆராய்ச்சியாளரும், ஆய்வின் இணை இயக்குநருமான அர்பணா குப்தா, ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களின் செயல்பாடுகளை அறிய அவர்களுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. உடல் பருமன் அப்போது மூளையில் பசியைத் தூண்டும் செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அவர்கள் முன் பழச்சாறு போன்ற ஆரோக்கிய உணவுகளைக் காட்டியபோது எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இனிப்பான கேக், சாக்லேட், அதிக கலோரிகள் கொண்ட பீட்ஸா போன்றவற்றைக் காட்டியபோது மூளையின் செயல்பாடுகள் அதிகரித்ததைக் காண முடிந்தது. செயல்பாடுகள் அதிகரித்தது என்பது அவர்களுக்கு அந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியதைக் காட்டுகிறது. தனிமையில் இருக்கும்போது சுறுசுறுப்பாக ஏதாவது செயலில் ஈடுபட முயன்றவர்களில் இத்தகைய‌ மாற்றம் ஏற்படவில்லை. இனிப்பு Noodles: பருமன் முதல் புற்றுநோய் வரை வாய்ப்பு - -நொந்து நூடுல்ஸ் ஆகிடுவீங்க மக்களே! தனிமையில் இருக்கும்போது எப்படி பிறருடன் உரையாட மனம்‌ ஏங்குமோ அதே போல அதிக இனிப்பான, கலோரி கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதைக் கண்டறிந்தோம். இதுபோன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதும் அவர்களின் உடல் பருமன் பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம் என்றார். தனிமையில் இருக்கும் ஆண்களுக்கு இத்தகைய எண்ணம் ஏற்படுமா என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

விகடன் 24 Apr 2024 7:43 pm

Sexual Health: ஆண்மைக்குறைவா..? தைராய்டு செக் பண்ணுங்க... | காமத்துக்கு மரியாதை - 162

''கடந்த சில வருடங்களாக வாழ்வியல் நோய்கள் மனிதர்களின் தாம்பத்திய வாழ்க்கையை ஏதோவொரு வகையில் பாதித்துக்கொண்டு இருக்கின்றன. வாழ்வியல் நோய்கள் இல்லாதவர்களும் இன்றைய லைஃப் ஸ்டைல் காரணமாகத் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணத்தைக் கண்டறிந்துவிட்டால் பிரச்னையை எளிதில் தீர்த்துவிடலாம்'' என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அது பற்றிப் பேச ஆரம்பித்தார். ''ஐம்பதுகளில் இருக்கிற நபர் ஒருவர், `டாக்டர், நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். எனக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் என்று எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தாம்பத்திய உறவுக்கு முயன்றால் விறைப்புத் தன்மை முழுமையாக வருவதில்லை. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதுகளில் வேலை வேலையென ஓடிவிட்டேன். நேரமும் இளமையும் கொஞ்சம் மட்டுமே மிச்சமிருக்கிற இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறேன். ஆனால், முடியவில்லை. எனக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து ஏதாவது தர முடியுமா' என்றார். Thyroid in men Sexual Health: ஆண்மை என்றால் என்ன? - பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி! | காமத்துக்கு மரியாதை - 160 விறைப்புத்தன்மை இல்லையென்பது ஆண்மைக் குறைபாடுகளில் ஒன்றுதான். இந்தப் பிரச்னை 40 வயதுகளிலேயே கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேருக்கு வரலாம். 50 மற்றும் 60 வயது ஆண்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தினருக்கு விறைப்புத்தன்மை குறைவு ஏற்படலாம். 70-களில் இருக்கிற ஆண்கள் என்றால், 75 சதவிகிதம் வரை ஆண்மைக்குறைபாடு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இவையனைத்தும் உலகம் முழுக்க செய்யப்பட்ட பல ஆய்வுகள் சொல்கிற முடிவுகள். வயது செல்லச் செல்ல மனிதர்களுக்கு அதன் காரணமாகவே மன உளைச்சல் ஏற்படும். சிலர், இயல்பிலேயே பதற்றமானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கும் ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அடுத்து, ரத்த நாளங்களில் வரக்கூடிய பிரச்னைகள்... விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளவர்களில் கிட்டத்தட்ட 45 சதவிகிதத்தினருக்கு ரத்தநாளக் குறைபாடு இருக்கிறது. மருந்து, மாத்திரைகளால் வருகிற பக்க விளைவுகளாலும் ஆண்மைக்குறைவு வரலாம். நீரிழிவு, தைராய்டு போன்ற வளர்சிதை மாற்றம் காரணமாகவும், நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆண்மைக் குறைபாடு வரலாம். Dr. Kamaraj Increase Sperm Count: விந்தணுக்கள் வீரியமா இருக்க என்னென்ன சாப்பிடணும்? - காமத்துக்கு மரியாதை - 161 40 வயதுக்கு மேல் ஒவ்வொரு வருடமும் 0.2 ng/dL அளவு ஆண் ஹார்மோன் குறைய ஆரம்பிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவிர, ஆணுறுப்பில் வரக்கூடிய பைரோனி நோய், பிராக்சர் ஆஃப் பீனைல் (Penile Fractures) ஏற்பட்டிருந்தாலும் விறைப்புத்தன்மையில் பிரச்னை வரும். இத்தனை காரணங்களை நான் அடுக்கினாலும், முழுமையாக சிகிச்சையளித்தால் இவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்பதுதான் நல்ல செய்தி. பாலியல் மருத்துவர் மூலம் காரணத்தைக் கண்டறிந்து, மாத்திரைகள், ஷாக் தெரபி, இன்ஜெக்‌ஷன் என்று சம்பந்தப்பட்டவருக்குத் தேவையான சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள். இவை எதிலும் பிரச்னை சரியாகவில்லை என்றால், ஆணுறுப்பில் அறுவைசிகிச்சை செய்தும் சரி செய்யலாம். நாற்பதென்ன, ஐம்பது, அறுபதுகளிலும் கருத்தரிப்பு முறைகளைப் பின்பற்றி வீட்ல விசேஷம் என்று வாழுங்கள்'' என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.

விகடன் 24 Apr 2024 6:00 pm

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் - உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

உயிரைப் பறிக்கும் ஆபத்துடைய திரவ நைட்ரஜன் (Liquid Nitrogen) கலந்த உணவு பொருள்களை குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.  சமீபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த சிறுவன், ஸ்மோக் பிஸ்கட்டை வாங்கிச் சாப்பிட்ட நிலையில், வலியால் துடித்து மயக்கமடைந்திருக்கிறான். இந்த வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.  இந்நிலையில், குழந்தைகளுக்கு திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருள்களைக் கொடுக்க வேண்டாம் எனவும், உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் கலந்த உணவுகளை விற்கக் கூடாது எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.  பிஸ்கட் (சித்தரிப்பு படம்) உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்! டிரை ஐஸை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு கண் பார்வை மற்றும் பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  இந்நிலையில், திரவ நைட்ரஜன் உணவு பொருள்கள் சென்னையில் விற்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மேலும், திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருள்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   

விகடன் 24 Apr 2024 3:38 pm

Everest: ``மசாலா தயாரிப்பில் அதிக அளவு பூச்சிக்கொல்லி..?எவரெஸ்ட் நிறுவனத்தின் விளக்கம்..!

எவரெஸ்ட் நிறுவனத்தின் மசாலா தயாரிப்புகள் சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை செய்யப்படவில்லை என எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது. சோதனையும் அதிர்ச்சியும்... சமீபத்தில் எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்களின் மசாலா தயாரிப்புகளை ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு மையம் சோதனை செய்தது. ஹாங்காங்கின் சிம் ஷா சூயிலுள்ள மூன்று கடைகளில் இருந்த இந்நிறுவனங்களின் மசாலா மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியது.  சோதனையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் எம்.டி.ஹெச் நிறுவனத்தின் தயாரிப்புகளான மெட்ராஸ் கறித்தூள், சாம்பார் மசாலா, குழம்புப் பொடி மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்புப் பொடி ஆகியவற்றில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.  இந்தத் தயாரிப்புகளை சமையலில் சேர்த்து உண்ணும் போது உடல் நல பிரச்னைகள் உண்டாவதோடு, புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகளும் உள்ளன.  மசாலா பொருள்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி... இந்திய தயாரிப்புகளுக்குத் தடை..! அதிரடி நடவடிக்கை… இதனையடுத்து சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, விற்பனைக்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை அகற்ற வலியுறுத்தப்பட்டது. அதோடு இந்த இரண்டு இந்திய பிராண்டுகளின் மசாலா பொருள்களை வாங்க வேண்டாம் எனத் தனது நாட்டு மக்களை ஹாங்காங் எச்சரித்தது.  ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு மையத்தின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்ட சிங்கப்பூர் அரசும் அந்நாட்டில் ஏற்றுமதி செய்த மசாலா பொருள்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவிலும் இம்மசாலா பொருள்களை சோதனை செய்யும்படி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். எவரெஸ்ட் நிறுவனத்தின் பதிலென்ன?!...  இந்தக் களேபரங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் தன் அனைத்து தயாரிப்புகளும் பாதுகாப்பானவை மற்றும் உயர் தரம் வாய்ந்தவை என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து எவரெஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எவரெஸ்ட்டின் தயாரிப்புகள் எந்த நாட்டிலும் தடை செய்யப்படவில்லை.  60 எவரெஸ்ட் தயாரிப்புகளில் ஒன்று மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது. இது ஒரு நடைமுறையேயன்றி, தடை அல்ல.   spices (Representational Image) Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது அதிகம் சாப்பிடுகிறேன். எடை கூடுவதிலிருந்து மீள முடியுமா? எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவை மற்றும் உயர் தரம் வாய்ந்தவை என்பதை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான தரக் கட்டுப்பாடு சோதனைகளுக்கு உட்படுகின்றன. இந்திய ஸ்பைஸ் போர்டு ஆய்வகங்களில் (Spice Board of India)  இருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகின்றன'' என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.  குழந்தைகளுக்கான இருமல் மருந்து, செரிலாக், தற்போது மசாலாக்கள் என தொடர்ந்து இந்திய தயாரிப்புகள் மீதான உலக நாடுகளின் நம்பிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது. உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவில் விஷத்தை கலப்பதை என்னவென்று சொல்வது?!

விகடன் 24 Apr 2024 1:09 pm

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது அதிகம் சாப்பிடுகிறேன். எடை கூடுவதிலிருந்து மீள முடியுமா?

Doctor Vikatan: எனக்கு ஸ்ட்ரெஸ் (Stress) அதிகமாகும்போதெல்லாம் எதையாவது சாப்பிடுகிறேன். இதனாலேயே கடந்த சில மாதங்களாக என் உடல் எடை அதிகரித்துவிட்டது.  ஸ்ட்ரெஸ்ஸாகும்போது சாப்பிடக்கூடாது என நினைத்தாலும் தவிர்க்க முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ். சுபா சார்லஸ் Doctor Vikatan: பயண நேரத்தில் ஏற்படும் கால் வீக்கம்... காரணமென்ன, தவிர்க்க முடியுமா? நம்மில் பலரும் பசித்துச் சாப்பிடுவதில்லை. பசியைத் தவிர பல்வேறு காரணங்களுக்காகச் சாப்பிடுகிறோம். அந்த வகையில் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது பசியே இல்லாவிட்டாலும் சாப்பிடுவது ஒருவகை.  அது மனதை ஆசுவாசப்படுத்துவதாக உணர்கிறோம். ஸ்ட்ரெஸ் என்பது மனது சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, உடலும் சம்பந்தப்பட்டது. ஸ்ட்ரெஸ் ஆகும்போது அதீதமாக கற்பனை செய்துகொள்வோம். அது  ஒரு கட்டத்தில் நெகட்டிவிட்டியை நோக்கி நகரும். எதிர்காலத்தை பற்றிய பயத்தைக் கிளப்பும். கடந்தகாலத்தை பற்றிய கவலையைத் தரும். ஓவர் கற்பனையால் இதயம் படபடவென  துடிக்கும்.  ஓடுவது, டிரெட் மில்லில் நடப்பது, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது என உடற்பயிற்சிகள் செய்யும்போது இதயம் வேகமாகத் துடிக்கும். பிறகு நார்மலாகும். இது ஆரோக்கியமானது. உடல் பருமன்... Doctor Vikatan: நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் Ice Cream சாப்பிடவே கூடாதா? அதுவே, எதுவுமே செய்யாமல் உட்கார்ந்திருப்போம்... ஆனாலும்  எதற்கோ பயந்து  ஓடுகிற மாதிரி இதயம் வேகமாகத் துடிக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகரிக்கும். மூச்சுவிடுவதில் மாற்றம் உண்டாகும். உங்கள் செயல்திறன் குறையும். அப்படிப்பட்ட நேரத்தில் ஓர் உணவைப் பார்க்கும்போது உடனே சாப்பிடத் தோன்றும். அப்படிச் சாப்பிடும்போது தற்காலிகமாக நம்மை நாமே ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுவித்துக்கொள்கிற மாதிரி உணர்வோம். உணவுக்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்படி ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது எதையாவது சாப்பிடுவது, அதிக சர்க்கரை சேர்த்து காபி, டீ குடிப்பது போன்ற பழக்கமுள்ளவர்களுக்கு எளிதில் எடை கூடும். அடுத்த முறை இப்படிச் செய்யக்கூடாது என நினைத்தாலும் அவர்களையும் அறியாமல் அடுத்த முறை ஸ்ட்ரெஸ்ஸாகும்போதும் அப்படித்தான் சாப்பிடுவார்கள். இதைத் தடுக்க, வீட்டில் நொறுக்குத்தீனிகள், ரெடிமேடு உணவுகளை வாங்கி வைப்பதைத் தவிருங்கள். உணவைக் குறைப்பதால் உடல்நலம் கூடும் என்பதை உணருங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக உணர்ந்து, எதையாவது சாப்பிடத் தோன்றினால், முதல் வேலையாக குளிர்ந்த நீர் குடியுங்கள். சளி பிடிக்குமே, தொண்டைக் கரகரப்பு வருமே என்றெல்லாம் யோசிக்காமல் குடியுங்கள். இரண்டாவது மூளை எனச் சொல்லக்கூடிய வயிற்றை இந்தக் குளிர்ந்த நீர் இதமாக்கும். அது பசியல்ல, ஸ்ட்ரெஸ்ஸால் ஏற்படுகிற வயிற்றுச் சுருக்கம் என்பதை உணர்த்தும்.  தண்ணீர் | drinking water ஸ்ட்ரெஸ் கெட்டது... ஆனா, நல்லது! திடீர் ஸ்ட்ரெஸ்...எப்படிக் கையாள்வது? #SuddenStress எனவே, அடுத்தமுறை ஸ்ட்ரெஸ் ஆகும்போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது சாப்பிடுவது என்பது உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்கிற செயல் என்பதை மனதில் பதிய வையுங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது சாப்பிடுகிற இந்தப் பழக்கம் எந்த வகையிலும் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை போக்கப் போவதில்லை, மாறாக, உங்கள் உடல்நலத்தையே பாதிக்கப்போகிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள். குளிர்ந்த நீர் அல்லது சாதாரண தண்ணீர் குடியுங்கள். சிறிது அவல் மெல்லலாம்.  இனிப்புள்ள உணவுகளைச் சாப்பிடாதீர்கள். அந்த உணவுகளுக்கு அடிக் ஷனை ஏற்படுத்தும் தன்மை உண்டு. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 24 Apr 2024 9:00 am

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்... மாணவியின் தோற்றத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனது கடின உழைப்பால் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் இடத்தைப் பிடித்தவர், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). கொண்டாடப்பட வேண்டிய இம்மாணவியின் சாதனை அவரின் தோற்றத்தை வைத்து மழுங்கடிப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார் நிகம். ஆனால், இம்மாணவிக்கு முகத்தில் முடி வளர்ந்திருப்பதைப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.  Exams 18 வயதில் வேலை; School முடிக்கல; ஆனா, பென் நியூட்டனின் ஆண்டு வருமானம் ரூ.10 கோடி - எப்படி தெரியுமா?! `ஓர் இளம்பெண்ணுக்கான முகமில்லை’… `மீசை  வளர்ந்திருக்கிறது’… `நிகம் தனது அழகில் கவனம் செலுத்த வேண்டும்’ என மோசமான கருத்துகளைப் பதிவிடுவதோடு, அம்மாணவியின் புகைப்படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். அதேசமயம் அம்மாணவிக்கு ஆதரவாக பலர் ட்ரோல்களை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். இளம்பெண் இப்படித் தான் இருக்கவேண்டும் என்று கட்டமைக்கப்பட்டுள்ள அழகின் நிர்ணயத்திற்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.  பருவ வயதுப் பெண்களை பாதிக்கும் `பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்' (Polycystic Ovarian Syndrome) காரணமாக அவரது முகத்தில் முடிகள் வளர்த்திருக்கலாம் எனப் பலர் தெரிவித்துள்ளனர்.  முதலிடம் பிடித்தது குறித்து அம்மாணவி கூறுகையில், ``நான் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்தினேன்; ஆனால், முதல் இடத்தை எதிர்பார்க்கவில்லை. எனது கடின உழைப்பை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’’ என்று கூறியிருந்தார்.  Engineering NEET, JEE நுழைவுத் தேர்வு எழுத சிக்கல் ஏற்படுமா? - திருத்தப்பட்ட NCERT பாடத்திட்டம் தான் ஒரு இன்ஜினீயராக விரும்புவதாகவும், IIT-JEE  நுழைவுத் தேர்வில் வெற்றிபெறத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இம்மாணவி கல்வியின் சாதனைகளுக்காக மட்டுமன்றி, தான் எதிர்கொள்ளும் எதிர்மறை கருத்துகளைக் கடந்து செல்வதற்காகவும் பாராட்டப்படக் கூடியவர்.  இன்னும் ஒருவரின் சாதனையை மழுங்கடிக்கக் கூடிய வேலையை, சிலர் அழகையும், உருவத்தையும் வைத்து செய்கின்றனர். சாதிக்கக்கூட முகம் தான் முக்கியம் என நினைப்பவர்கள் தான் மாற வேண்டுமே தவிர, நீங்கள் அல்ல... அகம் பற்றி தெரியாதவர்கள் புறம் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். உங்களது வெற்றிக்கான பாதை தொடரட்டும். வாழ்த்துகள் பிராச்சி நிகம்...

விகடன் 23 Apr 2024 2:33 pm

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்... மாணவியின் தோற்றத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனது கடின உழைப்பால் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் இடத்தைப் பிடித்தவர், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). கொண்டாடப்பட வேண்டிய இம்மாணவியின் சாதனை அவரின் தோற்றத்தை வைத்து மழுங்கடிப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார் நிகம். ஆனால், இம்மாணவிக்கு முகத்தில் முடி வளர்ந்திருப்பதைப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.  Exams 18 வயதில் வேலை; School முடிக்கல; ஆனா, பென் நியூட்டனின் ஆண்டு வருமானம் ரூ.10 கோடி - எப்படி தெரியுமா?! `ஓர் இளம்பெண்ணுக்கான முகமில்லை’… `மீசை  வளர்ந்திருக்கிறது’… `நிகம் தனது அழகில் கவனம் செலுத்த வேண்டும்’ என மோசமான கருத்துகளைப் பதிவிடுவதோடு, அம்மாணவியின் புகைப்படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். அதேசமயம் அம்மாணவிக்கு ஆதரவாக பலர் ட்ரோல்களை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். இளம்பெண் இப்படித் தான் இருக்கவேண்டும் என்று கட்டமைக்கப்பட்டுள்ள அழகின் நிர்ணயத்திற்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.  பருவ வயதுப் பெண்களை பாதிக்கும் `பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்' (Polycystic Ovarian Syndrome) காரணமாக அவரது முகத்தில் முடிகள் வளர்த்திருக்கலாம் எனப் பலர் தெரிவித்துள்ளனர்.  முதலிடம் பிடித்தது குறித்து அம்மாணவி கூறுகையில், ``நான் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்தினேன்; ஆனால், முதல் இடத்தை எதிர்பார்க்கவில்லை. எனது கடின உழைப்பை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’’ என்று கூறியிருந்தார்.  Engineering NEET, JEE நுழைவுத் தேர்வு எழுத சிக்கல் ஏற்படுமா? - திருத்தப்பட்ட NCERT பாடத்திட்டம் தான் ஒரு இன்ஜினீயராக விரும்புவதாகவும், IIT-JEE  நுழைவுத் தேர்வில் வெற்றிபெறத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இம்மாணவி கல்வியின் சாதனைகளுக்காக மட்டுமன்றி, தான் எதிர்கொள்ளும் எதிர்மறை கருத்துகளைக் கடந்து செல்வதற்காகவும் பாராட்டப்படக் கூடியவர்.  இன்னும் ஒருவரின் சாதனையை மழுங்கடிக்கக் கூடிய வேலையை, சிலர் அழகையும், உருவத்தையும் வைத்து செய்கின்றனர். சாதிக்கக்கூட முகம் தான் முக்கியம் என நினைப்பவர்கள் தான் மாற வேண்டுமே தவிர, நீங்கள் அல்ல... அகம் பற்றி தெரியாதவர்கள் புறம் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். உங்களது வெற்றிக்கான பாதை தொடரட்டும். வாழ்த்துகள் பிராச்சி நிகம்...

விகடன் 23 Apr 2024 2:33 pm

Doctor Vikatan: பயணநேரத்தில் ஏற்படும் கால் வீக்கம்... காரணமென்ன, தவிர்க்க முடியுமா?

Doctor Vikatan: எனக்கு வயது 55. எப்போது பயணம் செய்தாலும் கால்கள் வீங்கிக்கொள்கின்றன. இதற்கு பயந்துகொண்டே பல பயணங்களைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. கால்களின் வீக்கத்துக்கு என்ன காரணம்.... இதைத் தவிர்க்க ஏதேனும் வழிகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்   மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் Doctor Vikatan: நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் Ice Cream சாப்பிடவே கூடாதா? கோடை விடுமுறையில் டூர்  போய்வந்ததும், கால் வீக்கம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு வருபவர்களை அதிகம் பார்க்கலாம்.  இத்தகைய கால் வீக்கம் இரண்டு வகையாக வரலாம். முதலாவது 'ஹைப்போஸ்டாட்டிக் எடீமா'  (Hypostatic edema). அதாவது, நீண்டநேரம் கால்களைத் தொங்கவிட்டபடி உட்கார்ந்து வருவதால், கால்களில் நீர் தேங்கும் பிரச்னை இது. அதன் காரணமாக கால்களில் வீக்கம் ஏற்படும். அடுத்து 'டீப்வெயின் த்ராம்போசிஸ்' (Deep vein thrombosis) என்கிற பிரச்னையாலும் கால்களில் வீக்கம் ஏற்படலாம். அதாவது கால்களின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது. இந்த இரண்டு பிரச்னைகளையும் குறைக்க சில வழிகள் உள்ளன.  நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளும்போது இடையிடையே கால்களைத் தூக்கி உயர்த்திவைத்துக்கொள்ள முடியுமா என்று பாருங்கள். அடிக்கடி கால்களை ஆட்டிக்கொண்டிருப்பதும் நல்லது. அப்படி அசைவு இருக்கும்போது ரத்தநாளங்கள் அடைபடுவது தடுக்கப்படும். ஸ்டாக்கிங்ஸ் (Stockings) என்று கடைகளில் கிடைக்கும். அவற்றை வாங்கி கால்களில் அணிந்துகொள்ளலாம். நீண்டதூரம் பயணம் மேற்கொள்பவர்கள், அசைய முடியாத நிலையில் ஸ்டாக்கிங்ஸ் பயன்படுத்துவதன் மூலம் கால் வீக்கத்தைத் தவிர்க்கலாம். travel Doctor Vikatan: கோடைக்காலம், அந்தரங்க உறுப்பில் அரிப்பு... பேக்கிங் சோடா உதவுமா? சொந்த வாகனத்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால் அரை மணி நேரத்துக்கொரு முறை இறங்கி சிறிது நடக்கலாம். பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றாலும், உள்ளேயே பாதுகாப்பாக அவ்வப்போது சிறு நடை போடலாம். இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்வது. நீண்டதூர பயணம் என்பதால் வழியில் கழிவறை வசதி இருக்காது என சிலர் தண்ணீரே குடிக்க மாட்டார்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது வெளியேற்ற வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயங்களைப் பின்பற்றினாலே பயண நேரத்தில் ஏற்படுகிற கால் வீக்கத்தைத் தவிர்க்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 23 Apr 2024 9:00 am

கேரளாவில் தீவிரமடையும் பறவைக் காய்ச்சல்; மாநில எல்லைகளில் 90 நாள்களுக்குக் கடும் கட்டுப்பாடு!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் மற்றும் வாத்துகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லைகளிலும் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பறவைக் காய்ச்சல் மூன்று மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்திற்குள் கோழி, வாத்து, முட்டை போன்றவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து உள்ளே வரும் மற்ற வாகனங்களிலும் கிருமிநாசினி தெளித்த‌ பின்னரே அனுமதித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள், ``நீலகிரி எல்லையில் கேரளாவிற்கு செல்லும் இந்த 8 சாலைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் கால்நடை மருத்துவர், ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் ஆகிய 3 பேர் அடங்கிய குழு 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுட்டு வருகின்றனர். 8 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளித்த பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் கோழி, வாத்து போன்ற பறவை இனங்கள், அவற்றின் எச்சம் மற்றும் கழிவுகளையும் கொண்டு வர அனுமதி இல்லை. பறவைக் காய்ச்சல் கிருமிகள் 90 நாள்களுக்குப் பிறகுதான் முழுமையாக அழியும் என்பதால், இந்தக் கண்காணிப்பு தொடர்ந்து 90 நாள்கள் இருக்கும். அதே சமயத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தால் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY கல்வராயன் மலை: தொலைதொடர்பில் ஏற்பட்ட சிக்கல்... வாக்குச்சாவடிகளை வாக்கி டாக்கியுடன் இணைத்த ஆட்சியர்!

விகடன் 22 Apr 2024 7:37 pm

கொளுத்தும் கோடை வெயில்; குளு குளு ஏசி... உடலுக்கு நல்லதா..? பாதிப்பு இல்லாமல் பயன்படுத்தலாமா?

உச்சம் தொட்டுவிட்டது வெயில். மற்ற நாள்களில் ஏசியை பயன்படுத்தாதவர்கள் கூட இப்போது ஏசியில் அதிகமாக இருப்பார்கள். கரன்ட் பில் டபுளாகி, மும்மடங்காகும். ஏசி இல்லாத வீடுகளாக இருந்தால் புதிதாக ஏசியும் வாங்குவார்கள். தொடர்ச்சியாக ஏசியை பயன்படுத்தும் இந்தக் காலத்தில், அதனை சரியாகப் பயன்படுத்துவது பற்றி அறிந்துகொள்வதும் அவசியம். பொதுமக்களின் நலன் கருதி சமீபத்தில் மத்திய அரசின் மின்சக்தி அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சத்தையும், அது தொடர்பான மருத்துவரின் கருத்தையும் பார்ப்போம். ஏசி Doctor Vikatan: நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் Ice Cream சாப்பிடவே கூடாதா? ‘நமது உடலின் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். சராசரியாக நம் உடல் 23 டிகிரியிலிருந்து 39 டிகிரி வரையிலான வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது. இதையே Human body tolerance என்று சொல்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள அறை வெப்பநிலை (Room temperature) குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்பட்சத்தில் அதற்கேற்ப நம் உடலும் தும்மல், நடுக்கம் என எதிர்வினையாற்றும். ஏசியை 19-20-21 என்கிற டிகிரியில் ஓட விடும்போது அறையின் வெப்பநிலை நம் உடலைவிட மிகவும் குறைவாக இருக்கும். இதனால் நம் உடல் 'ஹைப்போதெர்மியா' (Hypothermia) என்ற பிரச்னையைச் சந்திக்கிறது. ஹைப்போதெர்மியாவால் நம் உடலின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். சில உறுப்புகளுக்குப் போதுமான ரத்த ஓட்டம் செல்லாமலும் தடைப்படும். இது தொடர்ச்சியாக நீடித்தால், ஆர்த்ரைட்டிஸ் போன்ற பல உடல்நலக் கோளாறுகளைச் சந்திக்க வேண்டி வரும். வியர்வை என்பதும் தேவைதான். உடலின் நச்சுகள் வெளியேறும் ஒரு முக்கியமான வழி. ஆகவே, குளிர்சாதன வசதியிலேயே வியர்வை இல்லாமல் இருப்பதும் சரியானதல்ல. இது தொடர்ச்சியாக நீடித்தால் சரும அலர்ஜி, அரிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு தொந்தரவுகளை வரவழைக்கும். அதேபோல் நீங்கள் குறைவான வெப்பநிலையில் ஏசியை ஓட விடும்போது, ஏசியின் கம்ப்ரெஸர் முழுமையான சக்தியுடன் தொடர்ச்சியாக ஓடும். அதிகப்படியான மின்சார நுகர்வினால் உங்களின் மின் கட்டணமும் அதிகமாகும். ஏசி அறை Doctor Vikatan: பார்வையில் பிரச்னை இல்லாதபோதும் கண்ணாடியை அடிக்கடி மாற்ற வேண்டுமா? எனவே, 26 டிகிரி அல்லது அதற்கும் மேலாக ஏசியை பயன்படுத்துங்கள். 28 ப்ளஸ்ஸாக இருந்தால் இன்னும் சிறப்பு. இதனால் மின்சாரத்தேவை குறைவாகும். உங்களுடைய உடல் வெப்பநிலையும் சீராகப் பராமரிக்கப்படும். ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். மூளைக்குக் கொடுக்கப்படும் ரத்த அழுத்தம் குறையும். மொத்தத்தில் குளோபல் வார்மிங்கின் பின் விளைவுகளையும் குறைக்கும். ஒருவேளை 5 யூனிட் ஏசியை ஒருநாள் இரவில் நீங்கள் பயன்படுத்துவதாகக் கணக்கில் கொண்டால், 26 டிகிரி செல்சியஸில் உங்களைப் போலவே 10 லட்சம் வீடுகளில் ஏசியை பயன்படுத்தும் பட்சத்தில் ஒரு நாளில் 5 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறோம். இதையே நாடு முழுவதும் பின்பற்றினால் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் மிச்சப்படுத்தப்படும். ஏசியை முறையாகப் பயன்படுத்தி உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மின் பயன்பாட்டையும் குறையுங்கள். பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளது மத்திய அரசு. இதுகுறித்து நுரையீரல் சிறப்பு மருத்துவர் திருப்பதியிடம் பேசினோம்… ‘‘முதலில் ஏர் கண்டிஷனிங் செயல்படும் முறையைத் தெரிந்துகொள்வோம். ஏர் கண்டிஷனிங் என்பது செயற்கையான காற்று அல்ல. அறைக்கு வெளியில் இருக்கும் காற்றை உள்ளிழுத்துத் தருவதும் அல்ல. அறைக்குள் இருக்கும் காற்றை குளிரூட்டித் தரும் முறைதான் ஏசி. அதனால் ஏசி பயன்படுத்துவதால் பெரிய ஆரோக்கியக் குறைபாடு எதுவும் வந்துவிடாது. அதனை முறையாகக் கையாள வேண்டும் என்பதுதான் முக்கியம். நுரையீரல் மருத்துவர் திருப்பதி Doctor Vikatan: உடல் எடை கூடவில்லை, ஆனால் தொப்பை மட்டும் கூடுகிறது... குறைக்க வழி உண்டா? ஏர் கண்டிஷனிங் முறையில் அறையின் வெப்பநிலையை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இதன்மூலம் காற்றின் ஈரப்பதமும் கட்டுப்படுத்தப்படுகிறது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளில் பூஞ்சைத்தொற்றை உருவாக்கும் தன்மை (Fungal Spores) அதிகமாக இருக்கும். ஏசியின் மூலம் ஈரப்பதத்தைக் கட்டுக்குள் வைக்கும்போது தொற்று ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். அதனால் ஏசியை தாராளமாகப் பயன்படுத்தலாம். ஏசியில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதுதான். ஏசியின் ஃபில்டர், மற்ற பாகங்கள் சுத்தமாக இருக்கின்றனவா என்பதைக் குறிப்பிட்ட இடைவெளியில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவற்றில் இருக்கும் தூசுகள் தேவையற்ற அலர்ஜியை உருவாக்கும் வாய்ப்பு உருவாகிவிடும். எனவே, ஆஸ்துமா நோயாளிகளும் ஏசியை தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால், மிதமான குளிர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 18, 20 என்று அதிக குளிர் இருக்கும்படி பயன்படுத்தக் கூடாது. மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி 26 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் ஏசியை பயன்படுத்துவது நல்லது. 24 டிகிரி செல்சியஸுக்கு கீழ் ஏசியை பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது. ஏசியை 20-க்குக் கீழ் வைத்துவிட்டு, சிலர் மின் விசிறியையும் அதிவேகத்தில் ஓட விடுவார்கள். ஏசி ஓடும் போது ஃபேன் பயன்படுத்த வேண்டியதில்லை. தவிர்க்க முடியாதபட்சத்தில் மிகவும் குறைவான வேகத்தில் ஃபேன் பயன்படுத்தலாம். ஏசியில் இருக்கிறோம் என்பதற்கு ஒரு மூடப்பட்ட அறைக்குள் நாம் இருக்கிறோம் என்பதுதான் அர்த்தம். இதுபோல் மூடப்பட்ட அறைக்குள் அதிக நேரம் செலவிடக் கூடாது. இயற்கையான காற்று கிடைக்காமல் போய்விடும். வெளியில் அதிக வெப்பமான சூழ்நிலை, அலுவலகப்பணி, தூங்கும் நேரம் என குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின்போது நம் வசதிக்காக ஏசியை பயன்படுத்தலாம். ஆனால், அப்படியே எல்லா நேரமும் இருந்துவிடக் கூடாது. அது இயற்கைக்கு மாறான விஷயம். ஏர் கண்டிஷனிங் முறையில் அறைக்குள் இருக்கும் காற்று குளிரூட்டப்பட்டு சுழற்சியாகி மீண்டும் அறைக்குள்ளேயே வருகிறது. எனவே, ஏசி காற்றை ஓரளவுதான் அனுபவிக்க வேண்டும். இயற்கையான காற்று நமக்குத் தேவை. கார் ஏசி Doctor Vikatan: பின்னோக்கி நடக்கும் retro-walking; எல்லோரும் முயற்சி செய்யலாமா... அதனால் என்ன நன்மை? கார் ஏசியிலும் கவனம் செலுத்துங்கள்... கார் ஏசியில் இரண்டு முறைகள் இருக்கும். வெளியிலிருக்கும் காற்றை உள்ளிழுக்கும் முறை ஒன்று. இரண்டாவது உள்ளிருக்கும் காற்றையே குளிரூட்டும் முறை. டிராஃபிக்கான இடங்களிலும், வாகனப்புகை, தூசு போன்றவை அதிகம் உள்ள இடங்களிலும் வெளியில் இருந்து காற்றை உள்ளிழுக்கும் பட்டனை பயன்படுத்தக் கூடாது. வாகனப்புகையின் வாசம் கூட காருக்குள் வரும். நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது சுத்தமான காற்று கிடைக்கும். ஓரளவு டிராஃபிக் இருக்காது. அந்தச் சூழலில் கார் போகிறது என்றால், அங்கு வெளியிலிருந்து காற்றை உள்ளிழுக்கும் முறையை உபயோகிக்கலாம். ஜன்னலைத் திறக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. ஏனெனில், கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து கார் என்கிற சின்னப்பெட்டியில் வெளியேற்றிக் கொண்டேயிருக்கிறோம். எனவே, வெளியில் இருக்கும் இயற்கைக் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் முறையைப் பயன்படுத்துவது அவசியம். இல்லாவிட்டால் இதனால் களைப்பு ஏற்படலாம். தலைவலி வரலாம்.

விகடன் 22 Apr 2024 5:49 pm

மார்பகத்தின் அளவை குறைக்கும் அறுவை சிகிச்சை... இந்தியாவில் 100% அதிகரிக்க காரணம் இதுதான்..!

மார்பகத்தின் அளவைக் குறைக்கும் அறுவை சிகிச்சை (Breast Reduction surgery) இந்தியாவில் ஆண்டுதோறும் 100% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மார்பகத்தின் அளவை குறைக்கும் அறுவை சிகிச்சைகளுக்கான பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை இந்தியாவில் இல்லை. ஆனால், சர்வதேச அளவில் இதற்கான புள்ளிவிவரங்கள் உள்ளன. இருப்பினும் மார்பகத்தின் அளவைக் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டுதோறும் 100 சதவிகிதம் அல்லது அதைவிடவும் அதிகரித்துள்ளது என்று முன்னணி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் அமித் குப்தா கூறியுள்ளார்.     `எல்லாரும் தாவணி போட்டாங்க, நீ இன்னும் ஏன் போடல’ - அவளின் சிறகு - 5 இவரின் மதிப்பீட்டை டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்கள் அகன்ஷா கோயல் மற்றும் சுதன்ஷு புனியா ஆகியோரும் ஒப்புக் கொண்டனர். முன்பெல்லாம் மார்பகத்தின் அளவை குறைக்கும் சிகிச்சையானது மாதத்தில் ஒருவருக்கு மட்டுமே செய்யப்படும். தற்போது ஒரு மாதத்திற்கே நான்கு முதல் ஆறு பேர் இந்த சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர். அதிலும், குறிப்பாக இளம் பெண்கள் இந்த சிகிச்சையைச் செய்து கொள்வதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  மார்பகத்தின் அளவை குறைக்கும் அறுவை சிகிச்சைகள் அதிகரித்து வருவதற்குப் பல காரணங்கள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  *மேற்கத்திய ஆடையின் தாக்கம்…   மேற்கத்திய நாடுகளின் ஆடையின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. டி-ஷர்ட்கள் மற்றும் இறுக்கமான ஆடைகளுக்குப் பல பெண்கள் மாறியுள்ளனர். கனமான மார்பகங்களைக் கொண்ட பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிகையில், கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை எதிர்கொள்கின்றனர். இதனால் தங்களுக்குப் பிடித்த மேற்கத்திய ஆடைகளை அணிய வேண்டும் என்ற விருப்பத்தினால் அறுவை சிகிச்சைகளைச் செய்து கொள்கின்றனர்.  surgery மார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்! *பெண்களின் நிதிச் சுதந்திரம்… ஒரு தசாப்தத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் பெற்றோர் அல்லது கணவரை அதிகம் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் தயக்கம் இருந்தது. பெண்கள் இப்போது சுதந்திரமாக இருக்கிறார்கள். பெரிய அளவுடைய மார்பகத்தின் வலியினால் அவதிப்படுவதற்கு பதிலாக அறுவை சிகிச்சைக்கான பணத்தைத் தாமாகவே சேமித்து சிகிச்சையைச் செய்து கொள்கிறார்கள்.  *நம்பிக்கையின் வழி    அதிகளவு மார்பின் எடையால் அவதிப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் தங்களது நம்பிக்கை அதிகரிப்பதாகக் கூறுகின்றனர். *சோஷியல் மீடியா… பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் இருந்தன என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற  அறுவை சிகிச்சைகள் உள்ளன என்பதை இப்போது அதிகம் அறிந்திருக்கிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் மார்பகத்தின் அளவை குறைக்கும் அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிரும்போது அவற்றை பிறர் நம்புகின்றனர். பெரிய மார்பகங்களால் அவதியுறும் பலர் சிகிச்சையை மேற்கொள்வதற்கான முடிவுகளை எடுக்க இது உதவுகிறது. 

விகடன் 22 Apr 2024 4:55 pm

Doordarshan: நேரலையில் மயங்கி விழுந்த செய்தி தொகுப்பாளர்... என்ன நடந்தது?!

தூர்தர்ஷன் செய்தி தொகுப்பாளர் லோபாமுத்ரா சின்ஹா நேரலையில் வெப்பநிலை குறித்த செய்தி வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென இருக்கையிலேயே மயங்கி விழுந்தார். நேரலையில் அவர் மயங்கி விழுந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மேற்கு வங்கத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், அதிக வெப்பத்தின் காரணமாக அவரது ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கமடைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.  Heat Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? அதன்பின் தனது உடல்நிலை குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து கொண்டார். ``ஏப்ரல் 18 அன்று காலை நேரலையில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. மிகவும் சூடாக இருந்தது. என் ரத்த அழுத்தம் குறைந்தது. நான் மயங்கி விழுவதற்கு முன்பே உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். ஃப்ளோர் மேனேஜரிடம் தண்ணீர் (Floor Manager) கேட்டேன்'' என்று வீடியோவில் கூறியுள்ளார்.  சுமார் 21 வருடங்களாகச் செய்தி தொகுப்பாளராகப் பணிபுரியும் இவர், வழக்கமாகத் தனது மேசையில் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பதில்லை. 30 நிமிட செய்தி வாசிப்பில் அவர் தண்ணீர் குடிக்காமலே செய்திகளைப் படித்து முடித்து விடுவார். ஆனால், அவர் மயங்கி விழுந்த அன்று நிலைமை வேறாக இருந்துள்ளது.  அங்கு ஏர் கண்டிஷனிங் இருந்தாலும் வெப்பநிலையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. அன்று அவருக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றியுள்ளது. ஆனால், வழக்கமாக அவர் செய்தி வாசிக்கும்போது, வீடியோ ஒளிபரப்பு இருக்கும். இதனால் இடையே கொஞ்சம் நேரம் இருக்கும். அன்று செய்திக்கான காணொளி காட்சிகள் ஏதும் இல்லை. ஒரு வேளை காணொளிக்கான காட்சிகள் இருந்திருந்தால் அந்த இடைவெளியில் அவர் தண்ணீர் குடித்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

விகடன் 22 Apr 2024 1:01 pm

Doctor Vikatan: நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் Ice Cream சாப்பிடவே கூடாதா?

Doctor Vikatan: சம்மர் சீசன் வந்துவிட்டால் என் குழந்தைகள் அடிக்கடி ஐஸ்கிரீம் (Ice Cream) கேட்டு அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு வாங்கிக்கொடுக்கும்போது  வீட்டிலுள்ள  வயதான மாமனாரும் அதைச் சாப்பிட ஆசைப்படுகிறார்.  அவருக்கு நீரிழிவும், இதய பாதிப்பும் இருக்கிறது. சிகிச்சைகள் எடுத்துவருகிறார். அதனால் அவருக்கு ஐஸ்கிரீம் கொடுக்க பயமாக உள்ளது.  நீரிழிவு உள்ளவர்களுக்கு கொஞ்சமாக ஐஸ்கிரீம் கொடுக்கலாமா.... ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் குழந்தைகளுக்கு  சளி பிடிக்காமலிருக்க என்ன செய்வது? இதற்கு ஆரோக்கியமான மாற்றுவழி உண்டா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். ஸ்ரீமதி வெங்கட்ராமன் Doctor Vikatan: உடல் எடை கூடவில்லை, ஆனால் தொப்பை மட்டும் கூடுகிறது... குறைக்க வழி உண்டா? குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை வயது வித்தியாசமின்றி விரும்பும் ஓர் உணவு ஐஸ்கிரீம். ஆனாலும், இதைச் சாப்பிட்ட உடனேயே சிலருக்கு தொண்டை வலியும் தொண்டைக் கரகரப்பும் ஏற்படும். இதனாலேயே பெற்றோர், குழந்தைகள் கேட்டு அடம்பிடிக்கும்போது வாங்கித்தர பயப்படுகிறார்கள். வெயில் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் சிலருக்கு சளி பிடிக்கும். ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் உடனடியாக வெதுவெதுப்பான நீர் குடிப்பதன் மூலம் தொண்டைக் கரகரப்பை ஓரளவு தவிர்க்கலாம். ஆனால், இது மட்டுமே தீர்வாகாது. ஃப்ரெஷ்ஷாகவும் ஆரோக்கியமான முறையிலும் தயாராகி வரும் ஐஸ்கிரீம்களை சாப்பிட்டால் பிரச்னை வரும் வாய்ப்புகள் குறைவு. நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள், கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் எல்லாம் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா என்றால்,  அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே விஷம் என்பதுதான் பதில். நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை  மூன்றுமாதச் சர்க்கரை அளவு  (HbA1c ) 8-க்கு மேல் இருந்தால் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் சாப்பிடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீமில் கொழுப்பும் சர்க்கரையும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பாதிப்புள்ளவர்கள், எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், இதய நோயாளிகள் தவிர்ப்பதுதான் நல்லது. Popsicles `Ice Cream சாப்பிட்டா Cold பிடிக்காது; ஆனால்..!' - Dr. Vijayalakshmi இப்போது லோ கலோரி ஐஸ்கிரீம்கள், சுகர்ஃப்ரீ ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சிலர் இவற்றைத் தயாரிக்கிறார்கள். அப்படியிருந்தால் ஆசைக்கு ஒரு ஸ்கூப் சாப்பிடுவதில் தவறில்லை. சில குழந்தைகள் தினமும் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு சீசனில் கிடைக்கும் பழங்களை சாறு எடுத்து, ஐஸ்கிரீம் ஸ்டிக் உள்ள டிரேயில் ஊற்றி, ஃப்ரீஸ் செய்து பாப்சிகிள் (Popsicles ) போல செய்து கொடுக்கலாம். வெளியில் வாங்கும் குச்சி ஐஸ்களில் நிறைய சர்க்கரை சேர்த்திருப்பார்கள். அதுவே, வீட்டில் மிகக் குறைந்த அளவு சர்க்கரை சேர்த்தோ, சர்க்கரையே இல்லாமலோ செய்யலாம். பழங்கள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளையும் இந்த முறையில் சாப்பிட வைக்கலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 22 Apr 2024 9:00 am

வலி போக்குவது முதல் பூச்சிகளை விரட்டுவது வரை... எண்ணற்ற பலன்களை அள்ளித்தரும் எப்சம் சால்ட்..!

எப்சம் சால்ட்... இந்த வார்த்தையை எப்போதாவது ஒரு முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதென்ன எப்சம் சால்ட்... உப்பில் ஒருவகையா... சமையலுக்குப் பயன்படுத்துவதா என்றெல்லாம் யோசித்தவர்களுக்கு, எப்சம் சால்ட் பற்றிய அறிமுகத்துடன் அதன் எண்ணற்ற பலன்கள் குறித்தும் விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.  ''வழக்கமாக நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது சோடியம் குளோரைடு. ஆனால், எப்சம் சால்ட் என்பது சாப்பிடக்கூடிய உப்பு அல்ல.  மக்னீசியம் மற்றும் சல்பேட் இரண்டும் கலந்ததுதான் எப்சம் சால்ட். இங்கிலாந்தில் எப்சம் என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த உப்புக்கு எப்சம் உப்பு என்ற பெயர் வந்ததாக ஒரு தகவல் உண்டு. பாதவலி Doctor Vikatan: பார்வையில் பிரச்னை இல்லாதபோதும் கண்ணாடியை அடிக்கடி மாற்ற வேண்டுமா? எப்சம் சால்ட்டுக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. உடல்வலி தொடங்கி, சரும நிற மாற்றம், ஸ்ட்ரெஸ் என பலவித பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கும் தன்மை எப்சம் சால்ட்டில் உண்டு. எப்சம் சால்ட்டை அழகு சிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்தலாம்.  கால்கள் பொறுக்கும் சூட்டில் அரை பக்கெட் அளவுக்கு வெந்நீர் எடுத்துக்கொள்ளவும். அதில் கைப்பிடி அளவு எப்சம் சால்ட்டும், கைப்பிடி அளவு சோடியம் குளோரைடும் (சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பு) கலந்து அதில் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு, கால்களை சிறிது நேரம் ஊறவைக்கலாம். இப்படிச் செய்வதால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மென்மையாகும். பிறகு அவற்றைத் தேய்த்து எடுத்தால் வெடிப்பு நீங்கி, பாதங்கள் மென்மையாகும். சிலருக்கு கால்களில், விரல் இடுக்குகளில், நகங்களில் நீண்ட நாள்களாகத் தேங்கிப்போன அழுக்கு இருக்கும். அத்தகைய ஆழமான அழுக்குகளை நீக்கும் தன்மை, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போலவே எப்சம் சால்ட்டுக்கும் உண்டு. கால் வலியிலிருந்து நிவாரணம் பெற எப்சம் சால்ட் மிகச் சிறந்த தீர்வு. முதியவர்களுக்கு எப்போதும் கால்களில் ஒருவித வலி இருக்கும். அவர்கள் தினமுமே வெந்நீரில் எப்சம் சால்ட் கலந்து கால்களை சிறிது நேரம் வைத்திருக்கலாம்.  சோர்வடைந்த தசைகள் ரிலாக்ஸ் ஆகி, வலி குறையும். கீதா அஷோக் Doctor Vikatan: உடல் எடை கூடவில்லை, ஆனால் தொப்பை மட்டும் கூடுகிறது... குறைக்க வழி உண்டா? சிலருக்கு காரணமே தெரியாமல் அடிக்கடி வயிற்றுவலி வரும். குறிப்பாக, குழந்தைகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவார்கள். சிறிதளவு எப்சம் சால்ட்டை பொடித்து வைத்துக் கொள்ளவும். அதை விளக்கெண்ணெயில் குழைத்து, தொப்புளைச் சுற்றி தடவிவைத்து, சிறிது நேரம் கழித்துக் கழுவினால், வலி குறையும். சிலருக்கு கழுத்துப் பகுதியைச் சுற்றி கருமையான படலம் இருக்கும். அவர்கள் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயில் பொடித்த எப்சம் சால்ட்டை குழைத்துத் தடவி, சிறிது நேரம் ஊறி, குளித்துவிடலாம்.  கருமை நீங்கும். சிலருக்கு உதடுகள் எப்போதும் வறண்டு, வெடித்து, தோல் உரிந்துவரும். அவர்கள் வாசலினில் ஒரு சிட்டிகை எப்சம் சால்ட் பொடி கலந்து தேய்த்துக் கழுவினால், உதடுகள் சூப்பர் சாஃப்ட்டாக மாறுவதைப் பார்க்கலாம்.  சிலருக்கு கண்களில் எரிச்சல், களைப்பு இருக்கும். விளக்கெண்ணெயில் எப்சம் சால்ட் பொடியைக் குழைத்துக் கொள்ளவும். கண்களை மூடி, மேலே டிஷ்யூ பேப்பரை வைத்து அதன் மேல் விளக்கெண்ணெய் கலவையை வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்து கழுவலாம். கலவை கண்களுக்குள் சென்றுவிடாமல் கவனமாகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களையும் நீக்கும்.  ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவோர், அதில் ஒரு சிட்டிகை எப்சம் சால்ட் பொடியைக் கலந்து கைகளால் நன்றாகத் தேய்த்து முகம் கழுவினால்  இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென மாறும். Body pain Doctor Vikatan: எல்லா வயதினரும் பனங்கிழங்கு சாப்பிடலாமா.... சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டுமா? கூந்தலுக்கான கண்டிஷனராகவும் எப்சம் சால்ட் பயன்படும்.  ஹேர் கண்டிஷனரிலும் ஒரு சிட்டிகை எப்சம் சால்ட் பொடியைக் கலந்து தடவி, ஒரு நிமிடம் காத்திருந்து கூந்தலை அலசினால்,  வறண்ட கூந்தல் மென்மையாகும். எப்சம் சால்ட்டையும் சமையல் சோடாவையும் தண்ணீரில் கலந்து, வீட்டில் ஆங்காங்கே ஸ்பிரே செய்துவிட்டால், சின்னச் சின்ன பூச்சிகள், வண்டுகள் தொல்லை நீங்கும். துணிகளுக்கு மென்மையைத் தரக்கூடியது எப்சம் சால்ட். புதுத்துணி வாங்கியதும் சாயம் போகுமோ என்ற பயம் இருக்கும். அந்தத் துணிகளை அரை பக்கெட் தண்ணீரில் சிறிது கல் உப்பும், சிறிது எப்சம் சால்ட்டும் கலந்து துணிகளை ஊறவைத்து எடுத்துக் காயவைத்தால்  சாயமும் போகாது, துணியும் சாஃப்ட்டாக மாறும். டவல்களையும் இந்த முறையில் ஊறவைத்து அலசி, காயவைத்துப் பயன்படுத்தலாம். அழுக்குகள் நீங்கும், பயன்படுத்த ஏதுவாக சாஃப்ட்டாக மாறும்.   - ராஜலட்சுமி

விகடன் 21 Apr 2024 12:57 pm

Doctor Vikatan: பார்வையில் பிரச்னை இல்லாதபோதும் கண்ணாடியை அடிக்கடி மாற்ற வேண்டுமா?

Doctor Vikatan: எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை கண்ணாடி பவர் செக் செய்ய வேண்டும்.... பவர் அதிகரித்துள்ளதை அறிகுறிகள் மூலம் உணர முடியுமா.... எந்தப் பிரச்னையும் இல்லாவிட்டால் அதே கண்ணாடியை தொடர்ந்து அணிந்து வரலாமா? பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த கண் மருத்துவர் ஷோபா கினி. கண் மருத்துவர் ஷோபா கினி Doctor Vikatan: எல்லா வயதினரும் பனங்கிழங்கு சாப்பிடலாமா.... சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒவ்வொருவரது வயதைப் பொறுத்து வேறுபடும். பிறந்தது முதல் 21 வயது வரை, வளர்ச்சிப் பருவம் என்கிறோம். இந்த வயதில் உள்ளவர்களுக்கு வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்ய வேண்டியது முக்கியம். அதிலும் குறிப்பாக, பவர் அதிகமிருக்கும் 'மலிக்னன்ட் மயோபியா' (malignant myopia) பிரச்னை உள்ளவர்கள்  ஆறு மாதங்களுக்கொரு முறை கண் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம். இப்படிச் செய்கிற பரிசோதனை, வெறும் பவர் பற்றி தெரிந்துகொள்ள மட்டுமன்றி, விழி நரம்புகள் எப்படியிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவும் உதவும். பவர் அதிகரித்துள்ளதை அறிகுறிகளை வைத்து உங்களால் நிச்சயம் உணர முடியும்.  பொதுவாக இளவயதில் தூரப்பார்வை பிரச்னையும், வயதான பிறகு கிட்டப்பார்வை பிரச்னையும் ஏற்படுவது சகஜம். ஏற்கெனவே நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியால் எந்த அளவுக்குப் பார்க்க முடிந்தது, தற்போது அதில் எப்படிப்பட்ட சிக்கல்களை உணர்கிறீர்கள் என்று பாருங்கள். அதை வைத்து உங்கள் பவர் மாறியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பரிசோதனைக்குச் செல்லலாம். உங்களுக்கு பார்வையில் எந்தப் பிரச்னையும் இல்லை, ஏற்கெனவே அணிந்திருக்கும் கண்ணாடி, அதன் ஃப்ரேம் உள்பட எல்லாம் சரியாக இருக்கிறது என்ற பட்சத்தில் அதே கண்ணாடியைத் தொடர்ந்து உபயோகிக்கலாம், தவறில்லை. ஆனால், ஏற்கெனவே சொன்னதுபோல வெறும் பவருக்காக மட்டும் நாம் கண்களைப் பரிசோதிப்பதில்லை. அதில் விழி நரம்புகளில் ஏதேனும் கோளாறுகள் உள்ளனவா என்றும் பார்ப்பார்கள். கண் பரிசோதனை Doctor Vikatan: கண் ஆபரேஷனுக்காக இன்சுலின் ஊசிக்கு மாற்றம்: இனி ஊசியா, மாத்திரையா.. எதைத் தொடர்வது? விழித்திரையில் ஏற்படுகிற சிறு பாதிப்பை அலட்சியம் செய்யும் பட்சத்தில், அது விழித்திரை விலகல் என்கிற தீவிர பாதிப்பாக மாறக்கூடும். அதைத் தவிர்க்க அடிக்கடி கண் பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம். 40 ப்ளஸ் வயதில் உள்ளோர், கண்புரை, கண் அழுத்த நீர் போன்றவை ஏற்பட்டுள்ளனவா என்று தெரிந்துகொள்ளவும் கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் உள்ளோர் அவசியம் குறிப்பிட்ட இடைவெளிகளில் கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 40 ப்ளஸ் வயதில் 'ப்ரெஸ்பயோபியா' (Presbyopia ) என்ற பிரச்னை வரும். வாசிப்பதில் தெளிவின்றி உணர்வார்கள். அவர்கள் இரண்டு வருடங்களுக்கொரு முறை கண் பரிசோதனை செய்து பார்க்கலாம். கண்ணாடியில் ஏதேனும் கீறல்கள் இருந்தாலும் அதை மாற்ற வேண்டும். சிறுவயதில் கண்ணாடி அணிவோர், முகத்தின் வளர்ச்சிக்கேற்ப அவ்வப்போது கண்ணாடியை மாற்ற வேண்டும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 21 Apr 2024 9:00 am

Happy Teeth: பல் மருத்துவரிடம் உடல்நலப் பிரச்னைகளை மறைப்பது இத்தனை பிரச்னைகளை ஏற்படுத்துமா...?

பல் மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் செல்லும்போது உடல்நலம் பற்றிய சிறிய தகவல்களைக்கூட மறைக்காமல் தெரிவிக்க வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஃபெலிஷியா கிறிஸ்டினா ஹெப்சிபா. தன்னிடம் சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு ஏற்பட்ட அனுபவத்துடன் அதனை விளக்குகிறார். Dental care Happy Teeth: பல் செட் பொருத்தியவர்கள் இந்த டூத் பேஸ்ட் பயன்படுத்தாதீங்க..! எங்கள் மருத்துவமனைக்கு சில நாள்களுக்கு முன்பு நடுத்தர வயதுப் பெண் ஒருவர் பல் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவரிடம் கேட்டபோது வேறு எந்தப் பிரச்னைகளும் ஏற்படவில்லை. அதற்கான சிகிச்சையும் எடுக்கவில்லை. தைராய்டு குறைபாட்டுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். எனவே, பல் சிகிச்சைக்கான முன்தயாரிப்புகளைத் தொடங்கினோம். சிகிச்சையளிக்கப்படும் குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப் போகச் செய்வதற்கான ஊசியைச் (Local anesthesia) செலுத்தினோம். ஊசியைச் செலுத்திய பிறகு குறிப்பிட்ட இடம் முழுவதும் மரத்துப் போவதற்காக 10 நிமிடங்கள் காத்திருக்கச் சொல்வது வழக்கம். BP apparatus Happy Teeth: உங்கள் குழந்தைக்கு Tooth Paste விழுங்கும் பழக்கம் இருக்கிறதா? அந்த நேரத்தில் அந்தப் பெண் தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதுபோல உள்ளது என்றார். அதைத் தொடர்ந்து அவரது ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தபோது உயர் ரத்த அழுத்தம் இருந்தது. அதற்குப் பிறகு அதை பற்றி அவரிடம் கேட்டபோது, ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருந்துள்ளது. அதைப் பெரிதுபடுத்தாமல் அதற்கு சிகிச்சையும் எடுக்காமல் இருந்து வருவதாகத் தெரிவித்தார். அதனால் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் தைராய்டு குறைபாட்டை மட்டும் ஆரம்பத்தில் தெரிவித்ததாகவும் இதை பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் சொன்னா். மருத்துவமனையில் வைத்து இதுபோன்று நடந்ததால் உடனடியாக தேவையான மருத்துவ உதவிகளைச் செய்தோம். நல்லவிதமாக அவருக்கு மாரடைப்பு போன்ற பிரச்னை ஏற்படவில்லை. பல் மருத்துவம் Happy Teeth: விளம்பரங்கள் பார்த்துதான் Tooth paste வாங்குறீங்களா? ஒருவேளை சிறிய க்ளினிக்கில் சிகிச்சை பெறச் சென்றிருந்த நிலையில் மாரடைப்பு போன்ற பாதிப்பு ஏற்பட்டால் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். சிகிச்சை பெறுவதற்கு முன்பாகவே உடல்நிலை குறித்த விவரங்களை மறைக்காமல் தெரிவிக்கும்போது அதற்கேற்ற முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சையளிக்க முடியும். மேலும் இதயநோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள், ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகள் (Blood thinners) எடுத்துக்கொள்வோர் போன்றவர்கள் மருத்துவமனையுடன் கூடிய பல் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இதயநோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு பொதுவாக பல் சிகிச்சை செய்யும்போது ரத்த அழுத்தம் திடீரென்று அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏதேனும் மருத்துவ அவசரம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். பல் மருத்துவர் ஃபெலிஷியா கிறிஸ்டினா ஹெப்சிபா Happy Teeth: Heart Patients பல் சிகிச்சைக்கு முன்னால இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! அதேபோல இதுபோன்ற நோயாளிகள் பல் சிகிச்சைக்காகச் செல்லும்போது உடன் ஒருவரை அழைத்துச் செல்வது நல்லது. பல் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்றாலே சிலருக்கு பயம் வந்துவிடும். உணர்வுரீதியான பயம் (Emotional Fear) ஏற்படும்போது பல் மருத்துவர்களுக்கு அவர்களைக் கையாள்வது சற்று சிரமமாக இருக்கும். இதுபோன்ற நோயாளிகளின் பதற்றத்தை, பயத்தைப் போக்கும் வகையில் பல் மருத்துவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பிறகு சிகிச்சையை மேற்கொள்வார்கள். சர்க்கரைநோய், இதயநோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு காலை நேரங்களில் பல் சிகிச்சைக்கான அப்பாயின்ட்மென்ட் கொடுப்பது நல்லது. மேலும் சிகிச்சையளிக்கும் அறையும், சுற்றுச்சூழலும் சுத்தமாகவும், நோயாளிகளுக்கு ஏற்றதாகவும் இருப்பது அவசியம். நோயாளிகளைப் பயமுறுத்தும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அதே நேரம், அவர்களுக்கு அளிக்கவிருக்கும் சிகிச்சையை பற்றிய விஷயங்களையும் மறைக்காமல் தெரிவித்துவிட வேண்டும் என்கிறார். Happy Teeth Happy Teeth: பல் சிகிச்சை என்றாலே பதற்றமாகுதா? Dental Anxiety-யாக இருக்கலாம்! பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும். பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

விகடன் 20 Apr 2024 6:00 pm

61 வயதில், 38 வயதுக்கான தோற்றம்...எப்படி சாத்தியமானது? ரகசியத்தை சொல்லும் பயோஹேக்கர்..!

அமெரிக்காவைச் சேர்ந்த 61 வயதான டேவ் பாஸ்கோ என்பவர் பார்ப்பதற்கு 38 வயதுடையவர் போலத் தோற்றமளிக்கிறார். இவர் தன்னை `பயோஹேக்கர்’ (biohacker) எனக் குறிப்பிட்டுக் கொள்கிறார்.  அதாவது, ஒருவர் தனது உடல், உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் தீவிர மாற்றங்களை மேற்கொண்டு, ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலத்தை நீட்டிக்க முயற்சி செய்வதை `பயோஹேக்கிங்' என்று குறிப்பிடுகின்றனர். excercise வாக்காளர்களுக்கு மரக்கன்று, சிறுதானிய உணவு, ஓலை குடில்... கவனம் ஈர்த்த பசுமை வாக்குச்சாவடி! இளமையான தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ள, வயதாகும் செயல்முறையை மெதுவாக்க தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர், அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னே எழுந்து, வெளியில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார். தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்து முடிப்பதோடு, குறிப்பிட்ட உணவை மட்டும் உட்கொள்கிறார் மற்றும் கூடுதலாக தினமும் 158 மருந்து சப்ளிமென்ட்டுகளை (Supplements) எடுத்துக்கொள்கிறார்.  அவர் மதிய உணவை அரிதாகவே சாப்பிடுகிறார். அதற்கு பதிலாக, மாலை 3 முதல் 5 மணிக்கெல்லாம் இரவு உணவை சாப்பிட்டு முடித்து விடுகிறார். இவர் எப்போதும் ஆர்கானிக் உணவுகள், புல் சாப்பிடும் மாடுகளின் இறைச்சி, அடைக்கப்பட்டு வளர்க்கப்படாமல், சுதந்திரமாகச் சுற்றித் திரியும் முறையில் வளர்க்கப்பட்ட கோழிகள் (Free-range chicken) அல்லது காட்டில் பிடிக்கப்பட்ட மீன் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறார். அவர் பலவித காய்கறிகளில் பூண்டு, மூலிகைகள் மற்றும்  உப்பில் புளிக்கும் வரை வைக்கப்பட்ட முட்டைகோஸை தொடர்ந்து தனது உணவில் சேர்த்துக் கொள்கிறார். முதுமை (சித்தரிப்பு படம்) பேரப் பிள்ளைகளை அதட்ட தாத்தா - பாட்டிகளுக்கு உரிமையில்லையா? - முதுமை - முடிவில் ஓர் ஆரம்பம்: 21 இவர் தனது 90 அல்லது 110 வயதுக்கு மேலும் ஆரோக்கியமாக வாழ்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்.  இவரின் கதை பயோஹேக்கிங் இயக்கத்தில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ``பலரும் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு முறைகளைப் பரிசோதித்து, முதுமையை மெதுவாக்கலாம். இருப்பினும், இத்தகைய தீவிர அணுகுமுறைகள் விஞ்ஞானத்தால் உறுதி செய்யப்படவில்லை. எனவே, இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது'' என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

விகடன் 20 Apr 2024 10:40 am

Doctor Vikatan: உடல் எடை கூடவில்லை, ஆனால் தொப்பை மட்டும் கூடுகிறது... குறைக்க வழி உண்டா?

Doctor Vikatan: என் வயது 46. நான் சரியான எடையில் இருக்கிறேன். ஆனாலும், நாளுக்கு நாள்  தொப்பை மட்டும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம்... தொப்பையைக் குறைக்க என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்   கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர் Doctor Vikatan: எல்லா வயதினரும் பனங்கிழங்கு சாப்பிடலாமா.... சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டுமா? தொப்பை என்பது வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பையே குறிக்கிறது. கொழுப்பில் இரு வகைகள் உள்ளன. 'விசெரல் ஃபேட்' ( Visceral fat ) என்பது உடலின் உறுப்புகளைச் சுற்றிக் காணப்படுவது. 'சப்கியூட்டேனியஸ் ஃபேட்' ( Subcutaneous fat ) என்பது சருமத்தின் அடியில் காணப்படுவது. ஊட்டச்சத்தில்லாத உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, ஸ்ட்ரெஸ், ஆல்கஹால், சரியான தூக்கமின்மை, மரபியல் என பல காரணங்களால் தொப்பை  உண்டாகலாம். இவற்றில் ஊட்டச்சத்தில்லாத உணவுப் பழக்கமே பிரதான காரணம். நாம் சாப்பிடுகிற உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கலோரிகள் மற்றும் உடலியக்கத்தின் மூலம் எரிக்கப்படும் கலோரிகள் இரண்டும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.  அந்த வகையில் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதும், கலோரிகளை எரிக்கும்விதமாக உடலியக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அவசியமாகிறது. வயதாக, ஆக நம் உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடு மந்தமாகத் தொடங்கும். தொப்பை விழுவதற்கு அதுவும் ஒரு காரணம்.  Exercise Doctor Vikatan: பின்னோக்கி நடக்கும் retro-walking; எல்லோரும் முயற்சி செய்யலாமா... அதனால் என்ன நன்மை? மரபியல் ரீதியாக சிலருக்கு வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேரும்... இன்னும் சிலருக்கு உடல் முழுவதுமே கொழுப்பு சேரும். பெண்களைப் பொறுத்தவரை மெனோபாஸுக்கு முந்தைய 'பெரி மெனோபாஸ்' காலகட்டத்திலும் மெனோபாஸ் காலகட்டத்திலும் உடல் பருமன் கூடும். அந்தப் பருவத்தில் அவர்களது உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவே இதற்கு காரணம்.  கலோரிகளை கணக்கு செய்து மிகக் குறைவான கலோரிகளை நீண்டகாலத்துக்கு எடுக்கும் நிலையில், உடலானது, உணவுத்தேவையை உணர்ந்து, உடலில் அதிக கொழுப்பைச் சேமிக்கத் தொடங்கும்.  ஒருவரது உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படுகிற ஏற்ற, இறக்கங்களாலும் கொழுப்பு சேர்வது அதிகரிக்கலாம்.  உடல்ரீதியான மற்றும் மனரீதியான ஸ்ட்ரெஸ்ஸும் வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.  அதாவது, ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது உடலில் கார்ட்டிசால் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும்.  அந்த ஹார்மோன் கொழுப்பைச் சேர்க்கக்கூடிய தன்மை கொண்டது. அது பசி உணர்வைத் தூண்டி, அதிக கலோரிகள் உள்ள உணவுகளையும் இனிப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளையும் சாப்பிடச் செய்யும். சில வகை மருந்துகளாலும் உடல் எடை அதிகரிக்கலாம். குறிப்பாக வயிற்றைச் சுற்றிய கொழுப்பை அதிகரிக்கலாம். Stress Doctor Vikatan: தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம்... நிறுத்த வழி உண்டா? தொப்பையைக் குறைக்க வேண்டியது மிக முக்கியமானது. அதைக் குறைக்காத பட்சத்தில் நீரிழிவு, ஹைப்பர்டென்ஷன், உடல்பருமன் போன்ற பல பிரச்னைகளும் பாதிக்கும்.  எனவே, உங்கள் விஷயத்தில் தொப்பைக்கான காரணம் என்னவென்று தெரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளை, வாழ்வியல் மாற்றங்களை உடனடியாகத் தொடங்க வேண்டும்.  ஊட்டச்சத்து ஆலோசகரை அணுகுங்கள். அவர் உங்களை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு உங்களுக்கான டயட் பிளான் மற்றும் வாழ்வியல் மாற்றங்களைப் பரிந்துரைப்பார்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 20 Apr 2024 9:00 am

Doctor Vikatan: எல்லா வயதினரும் பனங்கிழங்கு சாப்பிடலாமா.... சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: எல்லா வயதினரும் பனங்கிழங்கு  எடுத்துக்கொள்ளலாமா.... அது செரிமான பிரச்னையை ஏற்படுத்துமா....? குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடுவது எந்த அளவுக்கு சரியானது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் Doctor Vikatan: பின்னோக்கி நடக்கும் retro-walking; எல்லோரும் முயற்சி செய்யலாமா... அதனால் என்ன நன்மை? பனங்கிழங்கில் நார்ச்சத்து மிக அதிகம்.  எல்லோருமே இதை ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கேஸ்ட்ரைட்டிஸ் (Gastritis) எனப்படும் இரைப்பை அழற்சி பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இதை கவனமாகச் சாப்பிட வேண்டும். அவர்களுக்கு பனங்கிழங்கு, கேஸ்ட்ரைட்டிஸ் பிரச்னையை சற்று தீவிரப்படுத்தலாம். எனவே, அவர்கள் பகல் வேளைகளில் கொஞ்சமாக இதைச் சாப்பிடலாம். மாலை மற்றும் இரவு வேளைகளில் தவிர்த்துவிடலாம். பனங்கிழங்கில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும். குடல் இயக்கம் சீராவதுடன், கொலஸ்ட்ராலும் கட்டுப்பாட்டுக்குள் வரும். பனங்கிழங்கில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தச்சோகையை விரட்டக்கூடியதும்கூட. கால்சியம், மக்னீசியம்  போன்ற சத்துகளும் இந்தக் கிழங்கில் உள்ளன.  இதிலுள்ள புரதச்சத்தானது செல்களை பழுதுபார்க்கவும், புதுப்பிக்கவும் ஹார்மோன்களின் சீரான இயக்கத்துக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோய்! Doctor Vikatan: கடலை, கிழங்கு உணவுகளால் வாயுத்தொல்லை வருவதைத் தடுக்க முடியுமா? ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி தன்மை கொண்டதால், சருமப் பராமரிப்புக்கும் பனங்கிழங்கு உதவுகிறது. சாப்பிட்ட உணவானது, எவ்வளவு சீக்கிரம் ரத்தச் சர்க்கரையாக மாறுகிறது என்பதை  கிளைசெமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்று குறிப்பிடுகிறோம். அந்த வகையில் பனங்கிழங்கில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு. எனவே, இதை சர்க்கரை நோயாளிகளும் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம்.  பனங்கிழங்கு சாப்பிடும் நாள்களில், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு உள்ளிட்ட வேறு எந்தக் கிழங்கு வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 19 Apr 2024 9:00 am

Nestle's Cerelac குழந்தைகளுக்கு ஆபத்தான உணவா? எச்சரிக்கும் நிபுணர்கள்! அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை...

உலகம் முழுவதும் நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் உணவுப் பொருள்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான செரிலாக் தானிய தயாரிப்புகளில் (Nestle Cerelac) அதிகளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வும், அதிர்ச்சியும்... பப்ளிக் ஐ (Public Eye) மற்றும் இன்டர்நேஷனல் பேபி ஃபுட் ஆக்ஷன் நெட்வொர்க் இணைந்து ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் விற்கப்படும் நெஸ்லே நிறுவனத்தின் குழந்தை உணவுப் பொருள்களின் மாதிரிகளை பெல்ஜிய ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பின. Nestle India | நெஸ்லே இந்தியா Bournvita மீது குற்றச்சாட்டு, இன்ஃப்ளூயன்சர் மீது சட்ட நடவடிக்கை, சமூகவலைதள விவாதம்; என்ன நடந்தது? இந்தச் சோதனையின் முடிவில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்கப்படும் நெஸ்லேவின் குழந்தைகளுக்கான பால் மற்றும் தானிய பொருள்களில் சர்க்கரை மற்றும் தேனை நிறுவனம் சேர்த்துள்ளது தெரியவந்தது. இதன்மூலம் உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்கும் சர்வதேச வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவில் நெஸ்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், செரிலாக் என்ற பெயரில் இரண்டு வகையான சுவையுடன் குழந்தைகள் உணவை விற்பனை செய்து வருகிறது. 2022-ல் இந்தியாவில் 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் விற்பனையில் சாதனை படைத்தது. அந்தளவுக்கு மக்கள் அதிகமாக நம்பிக்கையோடு வாங்கும் இந்த குழந்தைகள் உணவில் குறிப்பிட்ட அளவை மீறி சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Noodles: பருமன் முதல் புற்றுநோய் வரை வாய்ப்பு - -நொந்து நூடுல்ஸ் ஆகிடுவீங்க மக்களே! ஏன் இந்த இரட்டை வேடம்?!... அதுவே ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆறு மாத குழந்தைகளுக்கான நெஸ்லேவின் கோதுமை தானிய உணவுகளில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை. இதே தயாரிப்பு எத்தியோப்பியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 5 - 6 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. சோதனையில் இதை உறுதி செய்த நிபுணர்கள், நேற்று பொதுமக்களின் கவனத்திற்கு அறிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி நைஜல் ரோலின்ஸ், `` நெஸ்லே நிறுவனத்தின் இந்த இரட்டை நிலைப்பாட்டை நியாயப்படுத்த முடியாது. ஸ்விட்சர்லாந்தில் இந்தத் தயாரிப்புகளில் நெஸ்லே சர்க்கரையைச் சேர்க்கவில்லை. ஆனால், குறைந்த வள அமைப்பு கொண்ட நாடுகளில் அதைச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறது என்பது பொது சுகாதாரம் மற்றும் நெறிமுறைக் கண்ணோட்டத்தில் சிக்கலானது'' என்று தெரிவித்துள்ளார். அத்துடன், குழந்தைகள் உணவுப்பொருளில் இப்படி சர்க்கரையைச் சேர்ப்பது ஆபத்தானது. அதிகப்படியான சர்க்கரை குழந்தைகளை இந்த உணவு பழக்கத்துக்கு அடிமையாக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். Bournvita: ``போர்ன்விட்டா ஹெல்த் டிரிங்க் அல்ல இ-காமர்ஸ் தளங்களுக்கு அரசின் அதிரடி உத்தரவு! நெஸ்லேவின் பதிலென்ன?!... இது குறித்து நெஸ்லேவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், `கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கான தானிய உணவுகளில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை 30 சதவிகிதம் வரை குறைத்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து எங்கள் போர்ட்ஃபோலியோவை மதிப்பாய்வு செய்து, தரம், பாதுகாப்பு மற்றும் சுவை ஆகியவற்றில் சமரசம் செய்யாமல், சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின் அளவை மேலும் குறைக்க எங்கள் தயாரிப்புகளை புதுமைப்படுத்தி, மறுசீரமைக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.  ஏழை நாடுகளுக்கு ஒன்று... பணக்கார நாடுகளுக்கு வேறொன்று என செயல்படும் நிறுவனத்தின் இந்த இரட்டை வேட தயாரிப்பு முறை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   

விகடன் 18 Apr 2024 2:58 pm

Summer: டீ முதல் மாம்பழம் வரை... கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெப்பம் அதிகரிக்கும் போது உடல் சூடு, வறட்சி, அம்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கோடைக்காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.  மோர், இளநீர், பதநீர், பழச்சாறுகள் போன்றவற்றை பருகச்சொல்லி முன்னோர்கள் தொடங்கி, மருத்துவர்கள் வரை பலரும் அறிவுரை வழங்குவார்கள்.இவையெல்லாம் உடலை குளிர்ச்சி அடையச்செய்யும். சம்மரில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்வது போல், உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம்...நோய் தாக்கம் ஏற்படாமல் சம்மரிலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் ரேச்சல் தீப்தி... ரேச்சல் தீப்தி கோடைக்காலத்தில் அடிக்கடி நாவறட்சி ஏற்படும். தாகத்தைத் தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கிப் பருகுவார்கள்... ஆனால், இது போன்று கார்பனேட்டடு குளிர்பானங்கள் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள், பசியின்மை போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. நீர்மோர், ஐஸ் சேர்க்காத பழச்சாறுகள், பதநீர், போன்றவை பருகலாம். எந்த பானம் பருகுவதாக இருந்தாலும், ஐஸ்கட்டிகளை தவிர்த்துவிடுங்கள். Summer foods: கோடைக்கால பரிசு... நுங்கு சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் இதுதான்! டிரை ஃப்ரூட்ஸ் இப்போது எல்லோரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது. பழங்களை ஒப்பிடும் போது, உலர் பழங்களில் நீர்ச்சத்து குறைவு என்பதால் ஃப்ரெஷ் பழங்களை வாங்கி உண்பது கூடுதல் ஆரோக்கியம் சேர்க்கும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் நிச்சயம் செரிமான பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றைத் தவிர்த்து, ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். எளிதில் செரிக்கும். மாம்பழம், பலா, போன்றவை இந்த சீசனில் மட்டுமே கிடைக்கும் என்றாலும், இவை உடலின் சூட்டை அதிகரிக்கும் என்பதால் அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். மமுலாம்பழம், தர்பூசணி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளை எண்ணெய்யில் பொரிக்கும் போது அதிலிருக்கும் புரதச் சத்துகள் நீங்கிவிடும். உடலுக்கு முழுமையான சத்து கிடைக்காது. மேலும், எண்ணெய் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, அசைவ உணவுகளை குழம்பு வைத்துச் சாப்பிடுவது நல்லது.  முழுமையாக வேக வைக்காத உணவுகள் சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும். இது உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கும் என்பதால் உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிடவும். அதே போல் பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தி, செரிமானக்  கோளறுகளை  ஏற்படுத்தும் என்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.  Doctor Vikatan: பின்னோக்கி நடக்கும் retro-walking; எல்லோரும் முயற்சி செய்யலாமா...அதனால் என்ன நன்மை? அதிக காரமான உணவுகள், ஊறுகாய், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான டீ, காபி பசியின்மை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளரி, பூசணி, போன்று நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வெந்தயம் ஊற வைத்த நீரை பருகலாம். சரியான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொருவருக்கும் உடலின் தன்மை , உடல் சூட்டின் அளவு வேறுபடும் என்பதால் உங்கள் உடலுக்கு ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுங்கள். 

விகடன் 18 Apr 2024 12:57 pm

Sexual Health: ஆண்மை என்றால் என்ன? - பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி! | காமத்துக்கு மரியாதை - 160

'ஆம்பளையா நீ' ; `ஆண்மையில்லாதவன்' - ஆண்மைக்குறைவு என்ற அர்த்தம் தொனிக்கிற வார்த்தைகளை பெரும்பாலானோர் வாழ்க்கையில் ஒருமுறையாவது உச்சரித்து இருப்பார்கள். உண்மையில் ஆண்மை என்றால் என்ன... மூத்த பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி இங்கே விளக்குகிறார். ``போலி மருத்துவர்கள் `ஆண்மைக்குறைவு' என்ற வார்த்தையை தங்கள் வியாபாரத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாமோ, சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்னிடம் ஆலோசனைக்காக வருகிற சிலர்கூட, `என் மாப்பிள்ளைக்கு ஆண்மை இல்லைங்க' ; `அவருக்கு ஆண்மை இருக்கா, இல்லையான்னு பரிசோதிச்சுப் பார்த்து சொல்லுங்க' என்கிறார்கள். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் கோளாறு இருக்கும், தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாமல் இருக்கும். ஆனால், அவர்களுடைய விந்தணுக்களைப் பரிசோதித்துப் பார்த்தால் மிகத் தரமானவையாக இருக்கும். அந்த ஆண் உறவில் ஈடுபட்டால் நிச்சயம் குழந்தை பிறக்கும். இப்படிப்பட்ட ஆண்களை சுய இன்பம் செய்ய வைத்து விந்தணுக்களைச் சேகரித்து, மனைவியின் கர்ப்பப்பையில் கருமுட்டை வெளிப்படும் நேரத்தில் உள்ளே செலுத்தினால், அந்த மனைவி கருத்தரிக்க வாய்ப்பு இருக்கிறது. Sexual health Sex & Pregnancy: `மனைவி மாசமா இருக்கிறப்போ செக்ஸ் வெச்சுக்கலாமா?' - காமத்துக்கு மரியாதை - 159 சில ஆண்களுக்கு விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுகிற பிரச்னை இருக்கும். பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்துவதற்கு முன்னரே விந்தணுக்கள் வெளியேறி விடும். இப்படிப்பட்டவர்களின் மனைவியால் கருத்தரிக்க முடியாமல் போகும். இந்த ஆண்களின் விந்தணுக்களை எடுத்து மனைவியின் கர்ப்பப்பையில் செலுத்தி கருத்தரிக்க வைக்க முடியும். மேலே சொன்ன இந்த இரண்டு வகை ஆண்களாலும் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. என்றாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அப்படியென்றால் எதை வைத்து ஓர் ஆணுக்கு ஆண்மை இருக்கிறது அல்லது இல்லை என்பதைச் சொல்ல முடியும்? சில ஆண்கள் தாம்பத்திய உறவில் நன்றாகவே ஈடுபடுவார்கள். ஆனால், அவர்களுடைய விந்தணுக்கள் போதுமான எண்ணிக்கையில் இருக்காது அல்லது தரமாக இருக்காது. இப்படிப்பட்டவர்களின் மனைவிகளால் கருத்தரிக்க இயலாது. இந்த வகை ஆண்களை எப்படி ஆண்மையற்றவர்கள் என்று சொல்ல முடியும்? இன்னோர் உதாரணமும் சொல்கிறேன். ஓரினச் சேர்க்கையில் விருப்பம் கொண்ட ஆண்களுக்கு, பெண்கள் மீது எந்த ஈடுபாடும் இருக்காது. ஆண்கள் மீது மட்டுமே அவருக்கு ஈர்ப்பு ஏற்படும். அதற்காக அவர்களை ஆண்மையற்றவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? ஆன்மிகத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட சிலர் தாம்பத்திய உறவின் மீது ஈடுபாடில்லாமல் இருக்கலாம். அந்த ஆண்களைப் பரிசோதித்தால் குழந்தை பெறுவதற்கான தகுதியுடன் இருப்பார்கள். செக்ஸில் விருப்பமில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை ஆண்மையற்றவர்கள் என்று சொல்ல முடியாதல்லவா? அதனால், எந்தவோர் ஆணையும் ஆண்மையற்றவர் என்ற வார்த்தையால் குறிப்பிடாதீர்கள் என்றவர் தொடர்ந்தார். sexual health Sexual Health: கோபமா இருக்கிறப்போ `நோ' தாம்பத்திய உறவு... ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 158 இப்போது மருத்துவரீதியாக ஆண் என்பதற்கான ஏழு அறிகுறிகளை உங்களுக்குச் சொல்கிறேன். ஓர் ஆணுடைய செல்லை பரிசோதித்தால் , குரோமோசோம்களில் 23-வது ஜோடியில் ஒரு X, ஒரு Y இருக்கும். இதை வைத்து அவர் ஆண் என்பதை உறுதி செய்யலாம். இதுதான் முதல் அறிகுறி. முகத்தில் மீசை, தாடி, உடலில் மார்பு, அடிவயிறு ஆகிய பகுதிகளில் ரோம வளர்ச்சி இருக்கும். இது இரண்டாவது அறிகுறி. கண்ணுக்குத் தெரிந்த ஆணுறுப்பும் விதைப்பைகளும் இருப்பது மூன்றாவது அறிகுறி. கண்ணுக்குத் தெரியாமல் உடலுக்குள் இருக்கிற புராஸ்ட்டேட் சுரப்பி, செமினல் வெசிகல் சுரப்பி நான்காவது அறிகுறி. டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் ஆண் உடம்பிலும் இருக்கும்; பெண் உடம்பிலும் இருக்கும். ஆனால், இது ஆண்களுடைய உடம்பில் அதிகமாக இருக்கும். இதை வைத்தும் சம்பந்தப்பட்டவர் ஆண் என்பதை உறுதி செய்யலாம். இது ஐந்தாவது அறிகுறி. பார்க்கும்போதே ஆணுக்குரிய உடல் வடிவம் தெரிவது ஆறாவது அறிகுறி. ஆண் ஹார்மோன் காரணமாக, ஓர் ஆணின் சிந்தனைகள், வேலை செய்யும் விதம் எல்லாமே 'male brain pattern'-ல் இருக்கும். பெண்ணுக்கு இது வேறு மாதிரி இருக்கும். இது ஏழாவது அறிகுறி. இந்த ஏழும் சேர்ந்தால்தான் மருத்துவரீதியாக ஒருவரை ஆண் என்று சொல்ல முடியும். இதை விடுத்து விறைப்புத்தன்மை இருக்கிறதா; தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா; மனைவியை தாயாக்க முடிகிறதா என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. Dr. Narayana Reddy Breast Size: மார்பகங்கள் ஒரே அளவுலதான் இருக்கணுமா..? - காமத்துக்கு மரியாதை - 157 ஆண் தன் மீது நம்பிக்கைக் கொண்டவனாக இருக்க வேண்டும். குடும்பத்தைக் காப்பவன், மனைவிக்கு சம மரியாதை தருபவனாக இருக்க வேண்டும். மீசையை முறுக்குவதெல்லாம் ஆண்மைக்கான அடையாளம் அல்ல. இனிமேல், எந்தவோர் ஆணையும் ஆண்மையற்றவர் என்று குறிப்பிடாதீர்கள் என்று முடித்தார் டாக்டர் நாராயண ரெட்டி.

விகடன் 17 Apr 2024 8:11 pm

`சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும்'...ஒரு மாத குழந்தைக்கு உணவு கொடுக்காமல் கொன்ற இன்ஃப்ளுயென்ஸர்!

ரஷ்யாவைச் சேர்ந்த வீகன் இன்ஃப்ளுயென்ஸர் மாக்சிம் லியுட்டி என்பவர் தன்னுடைய ஒரு மாதக் குழந்தைக்கு உணவு ஏதும் கொடுக்காமல் சூரிய ஒளியில் மட்டுமே வைத்திருக்கிறார். காஸ்மோஸ் என்ற தன் ஒரு மாத ஆண் குழந்தையைச் சூரிய ஒளியில் வைத்திருந்தால் `சூப்பர்ஹுயூமன் பவர்' கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் குழந்தையை வெயிலில் வைத்திருக்கிறார். தாய்ப்பால் கொடுக்கக்கூடாது எனத் தன் மனைவி ஒக்ஸானா மிரோனோவாவைத் தடுத்திருக்கிறார். சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும் என்று சொல்லி இருக்கிறார்.  இவர் குழந்தையை வைத்துச் சோதனையை மேற்கொண்டுள்ளார். குருக்களும், ரிஷிகளும் பழங்காலத்தில் உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் தவமிருந்து வெறும் பிராண (prana) சக்தியின் மூலம் மட்டுமே வாழ்ந்தனர் எனக் கூறப்படுகிறது. இதனைத் தன் குழந்தைக்கு முயற்சி செய்திருக்கிறார்.  newborn baby ஒரு செல்ஃபி போதும், உங்க Smartphone-ஐ உங்களுக்கே தெரியாம திறந்துடலாம் - எப்படி தெரியுமா?! #Selfie குழந்தைக்கு விதிமுறைகளோடு வீகன் பிராணா டயட்டை (vegan prana diet) வழங்கி இருக்கிறார். உடலின் ஆன்மிக ஆற்றலை மேம்படுத்துவதாக நம்பப்படும் பெர்ரி போன்ற உணவுகளை மட்டும் அந்த பிஞ்சுக் குழந்தைக்கு கொடுத்திருக்கிறார். அதோடு குழந்தையைப் பலப்படுத்தும் என குளிர்ந்த நீரில் குளிக்க வைத்திருக்கிறார்.  இந்நிலையில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து குழந்தையை சோச்சியிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நிமோனியாவால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   குழந்தைக்கு வேண்டுமென்றே தீவிரமான உடல் தீங்கு விளைவித்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வாரம் தண்டனைக்கு முன்னதாக அவர் இறுதி நீதிமன்ற விசாரணையில் ஆஜராகியபோது, தன் மகனைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். வழக்கறிஞர்கள் அவருக்கு எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 900 பவுண்டுகள் அபராதமும் விதிக்கக் கோரினர்.  இது குறித்து மிரோனோவாவின் உறவினர் ஒலேஸ்யா நிகோலயேவா கூறுகையில், ``குழந்தைக்கு உணவளிக்கக் கூடாது என்று அவர் கட்டாயப்படுத்தினார். சூரியன் குழந்தைக்கு உணவளிப்பதாக அவர் நம்பினார். ஒக்ஸானா ரகசியமாகக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முயன்றாள்; ஆனால், அவள் அவருக்கு மிகவும் பயந்தாள். சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிப்பது எப்படி சாத்தியம்?... ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் தேவை’’ என்று கூறியுள்ளார். மிரனோவாவின் தாயார் கலினா, ``என் மகள் இப்படி இருப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நான் எல்லாவற்றையும் உணர்ந்தேன், அவன் பைத்தியம் என்று அவளிடம் சொன்னேன்; ஆனால், அவள் என் பேச்சைக் கேட்கவில்லை.  சிறைச்சாலை 10 செ.மீ வாலோடு பிறந்த குழந்தை... வாலை அகற்ற முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டம்: ஏன் தெரியுமா?! அவள் அங்கு ஒரு பன்றியைப் போல வாழ்ந்தாள். அவள் அவனுடைய அடிமை. அவள் பல முறை அவனை விட்டு வெளியேற விரும்பினாள், ஆனால், அவன் அவளைத் தடுத்து நிறுத்தினான். அவன் தன் மகனை சூரியனை மட்டுமே உண்ணும் மனிதனாக வளர்க்க விரும்பினான்.  அவன் ஆண் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்ட நேரத்தில், மிகவும் தாமதமாகிவிட்டது. ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி மருத்துவமனை செல்வதற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது. 3.5 பவுண்டுகள் எடையுள்ள குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். லியுட்டி மற்றும் மிரோனோவா இருவரும் கைது செய்யப்பட்டனர்’’ என்று வருந்தியுள்ளார்.  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சிறைவாசத்தின் போது, லியுட்டி தன் முந்தைய மூடநம்பிக்கைகளை முற்றிலும் கைவிட்டுவிட்டாராம். இறைச்சியைக் கூட உட்கொள்கிறார் எனக் கூறப்படுகிறது.     `இவர் குழந்தையின் மீது பரிசோதனை செய்து, சூரிய ஒளி மூலம் உணவளிக்க விரும்பியுள்ளார், பின்னர் நீங்கள் இப்படிச் சாப்பிடலாம் என்று மற்றவர்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் என்று அவர் யோசித்திருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  விளம்பரம் செய்வதற்கும், சோதனை செய்வதற்கும் குழந்தை ஒரு விளையாட்டு பொம்மையல்ல! 

விகடன் 17 Apr 2024 5:26 pm

Doctor Vikatan: கொலாஜென் மாஸ்க் (collagen mask) பயன்படுத்தினால் சருமத்தின் சுருக்கங்கள் நீங்குமா?

Doctor Vikatan: சமீப காலமாக கொலாஜென் மாஸ்க் (collagen mask) விளம்பரங்கள் நிறைய பார்க்கிறோம். மெல்லிய பேப்பர் போன்ற ஷீட்டை முகத்தில் ஒட்டிக்கொண்டால், அது சில நொடிகளில் சருமத்தில் ஊடுருவி காணாமல் போகிறது. அதன் மூலம் சருமம் இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா Doctor Vikatan: சரும அழகை மேம்படுத்துமா Spirulina எனப்படும் பாசி? கொலாஜென் (collagen) என்பது நம் சருமத்துக்கடியில் உள்ள ஒருவகையான புரதம். அது போதுமான அளவு இருக்கும்வரைதான் நம் சருமம் தொய்வின்றி, டைட்டாக இருக்கும். கொலாஜெனை ஒரு வலைபோன்று கற்பனை செய்து கொள்ளுங்கள். வயதாக, ஆக அந்த வலைப்பின்னல் விட்டுப் போய் தளரும்போது நம் சருமமும்  தொய்வடையத்  தொடங்குகிறது. ஆன்டிஏஜிங் அழகு சாதனங்கள் எல்லாமே நம் சருமத்திலுள்ள கொலாஜெனை தக்க வைப்பதையும், புதிய கொலாஜெனை உற்பத்தி செய்வதையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுபவைதான். நன்றாகத் தூங்கும்போது  இயற்கையான கொலாஜென் உற்பத்தியாகும். இது தவிர, வைட்டமின் ஏ க்ரீம், ரெட்டினால் க்ரீம் போன்றவை செயற்கையாக உதவும். மைக்ரோ நீட்லிங், லேஸர் போன்ற சிலவகை சிகிச்சைகளின் மூலமும்  கொலாஜென் உற்பத்தியைத் தூண்ட முடியும். அதுவே, ஒரு மாஸ்க்கின் மூலம் கொலாஜெனை சருமத்துக்குள் செலுத்த முடியுமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. கொலாஜெனை சிக்கன் பீஸ் என்று கற்பனை செய்வோம். சிக்கன் பீஸை எடுத்து முகத்தில் ஒட்டிக்கொண்டால், அதிலுள்ள புரதம், சருமத்துக்குள் போகுமா....? அப்படித்தான் கொலாஜென் மாஸ்க்கும். மீன் அவள் பதில்கள் 88: கொரியன் கிளாஸ் ஸ்கின்... எல்லோருக்கும் சாத்தியமா? நாம் உண்ணும் புரதச்சத்துள்ள உணவுகள் எல்லாவற்றின் மூலமும் சருமத்துக்கு கொலாஜென் கிடைக்கும். ஆட்டுக்கால் பாயா, சிக்கன்  சாறு, மீன் என பல உணவுகளாலும் கொலாஜென் கிடைக்கும். கொலாஜென் மாஸ்க் (collagen mask) உபயோகிப்பதால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்குமே தவிர, வேறெந்தப் பலனும் கிடைக்காது. எனவே, கண்களைக் கவரும் விளம்பரங்களைப் பார்த்து இதுபோன்ற விஷயங்களைப் பின்பற்றாமல், இயற்கையான வழிகளைப் பின்பற்றுங்கள். நன்கு தூங்குங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். புரதமுள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள்.  இயற்கையான கொலாஜென் உற்பத்தி அதிகரிக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 17 Apr 2024 9:00 am

காதில் கேட்ட வேடிக்கையான சத்தம்... பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தைச் சேர்ந்த 55 வயதான பெண் டெனிஸ் விங்ஃபீல்ட். இவருக்கு, நீண்ட நாள்களாகவே காதில் தொடர்ந்து விநோதமான சத்தம் கேட்டிருக்கிறது. இரவு நேரங்களில் இந்தச் சத்தம் அவரைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. காதில் இரைச்சல் கேட்கும் 'டின்னிடஸ்' (Tinnitus)போன்ற சாதாரண பிரச்னையாக இருக்கலாம் எனக் கடந்துவிட்டார் டெனிஸ். காதில் கேட்ட வேடிக்கையான சத்தம் Bournvita: ``போர்ன்விட்டா ஹெல்த் டிரிங்க் அல்ல இ-காமர்ஸ் தளங்களுக்கு அரசின் அதிரடி உத்தரவு! இறுதியாக மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்துப் பேசிய டெனிஸ், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். ஆரம்பத்தில் இதை நான் பெரிதுபடுத்தவில்லை. ஒருகட்டத்தில் இதுகுறித்து என் உறவினர்களிடம் தெரிவித்தபோது காது - மூக்கு - தொண்டை மருத்துவரிடம் செல்லுமாறு அறிவுறுத்தினர். என்னைப் பரிசோதனை செய்த மருத்துவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தபோதுதான் எனக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இது 'ஒலிகோடெண்ட்ரோக்லியோமா' (Oligodendroglioma) வகை புற்றுநோய் என்றும் அதில் இரண்டாவது நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதன் பிறகு 'கிரானியோட்டமி' (craniotomy) என்ற அறுவை சிகிச்சையின் மூலம் மண்டை ஓட்டுப்பகுதியில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள எலும்பை அகற்றி அதன் வழியாக மூளையில் இருந்த புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டன. 9 மணி நேரம் தொடர்ந்து இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கட்டிகள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தொடர்ந்து கீமோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறேன். புற்றுநோய் கட்டியில் வளர்ச்சி இருக்கிறதா என்பதை அவ்வப்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தும் பரிசோதித்து வருகிறேன் என்கிறார். இது குறித்துப் பேசிய நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் கிம்பர்லி ஹோங்கால், இந்த வகை புற்றுநோய் பொதுவாக 40 முதல் 60 வயதுடைய முதியவர்களுக்கு ஏற்படக்கூடியது. Cancer Sperm Donor: `ஒரு முத்தமோ அரவணைப்போ கிடைக்கல...' 13 வருட விந்தணு தானம் செய்தவரின் மனக்குமுறல்! இவ்வகை புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது. இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு குறைந்த அளவே ஏற்படும். இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காதில் இரைச்சல், கவனக்குறைவு போன்ற அறிகுறிகள் இருக்கும். இதற்கு 'கிரானியோட்டமி' சிகிச்சையே போதுமானது. பொதுவாக 'கிரானியோட்டமி' அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இதய பிரச்னைகள், பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். எனவே, இவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பது நல்லது என்றார்.

விகடன் 16 Apr 2024 7:45 pm

Doctor Vikatan: சரும அழகை மேம்படுத்துமா Spirulina எனப்படும் பாசி?

Doctor Vikatan: என்னுடைய தோழி அடிக்கடி சருமத்துக்கு Spirulina எனப்படுகிற பேக்கை தடவிக்கொள்கிறாள். தவிர, அதையே மாத்திரை வடிவிலும் எடுத்துக்கொள்கிறாள். இது சரும அழகுக்குப் பெரிதும் உதவும் என்று சொல்கிறாள். அது உண்மையா?  Spirulina என்பது என்ன...? அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. வசுந்தரா Doctor Vikatan: அடிக்கடி தொடைகளில் ஏற்படும் வலி... Kidney பாதிப்பின் அறிகுறியா? ஸ்பைருலினா ( Spirulina) என்பது ஒருவகையான பாசி. அதை 'ப்ளூ-க்ரீன் மைக்ரோ ஆல்கே' ( blue-green micro algae ) என்று சொல்வோம். சிலது கரும்பச்சை நிறத்திலும், சிலது கருநீல நிறத்திலும் இருக்கும்.  நிறைய ஊட்டச்சத்துகள் கொண்ட இதை உணவு சப்ளிமென்ட்டாக பலரும் எடுத்துக்கொள்வதுண்டு. இதை ஸ்மூத்தியில் சேர்த்தோ, ஜூஸில் சேர்த்தோ குடிக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. அந்த அளவுக்கு இதை ஒரு சூப்பர்ஃபுட் என்றே சொல்லலாம். இதில் நிறைய பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, மாங்கனீஸ், அமினோ அமிலங்கள் போன்றவை அபரிமிதமாக உள்ளன.  உள் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு மட்டுமன்றி, கூந்தல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் பெரிதும் உதவக்கூடியது இந்த ஸ்பைருலினா. இதில் உள்ள ஃபைக்கோசயானின் (Phycocyanin ) என்ற புரோட்டீன், உள்ளே எடுத்துக்கொள்ளும்போது உள் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதுபோலவே, வெளிப்பூச்சாகப் போடும்போதும் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.  #FacePack Doctor Vikatan: எப்போதும் எதையாவது கொறிக்கும் பழக்கம்... பசி எடுக்காமல் சாப்பிடுவதற்கு தீர்வு என்ன? குறிப்பாக, ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பாதிப்பைக் குறைக்கிறது. சூரிய ஒளியோ, வெளிச்சமோ பட்டதும் உடனடியாக நம் சருமம் கருமையடையும். அதைக் கட்டுப்படுத்தவும் ஸ்பைருலினா ( Spirulina) பெரிதும் உதவுகிறது. வெயிலில் அலைந்துவிட்டு வந்ததும், ஸ்பைருலினா பேக் போடுவதன் மூலம் சருமத்தின் கருமை நீங்கி, பிரகாசமாக மாறும். வெயிலில் செல்லும்போது, சூரியனின் புறஊதா கதிர்களின் தாக்குதல் காரணமாக, எப்படிப்பட்ட ஆரோக்கியமான சருமமும் பாதிக்கப்படும்.  அதைச் சரியாக்கக்கூடிய தன்மை, ஸ்பைருலினாவில்  உள்ள ஃபைக்கோசயானின் புரதத்துக்கு உண்டு. ஸ்பைருலினாவை முகத்துக்கான பேக்கில் பலவிதங்களில் பயன்படுத்தலாம். முடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படக்கூடிய பூஞ்சைத் தொற்று பாதிப்புகளைச் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு. இதன் ஆன்டிஃபங்கல் தன்மையின் காரணமாக, இது பலவித க்ரீம்களில் சேர்க்கப்படுகிறது. உதாரணத்துக்கு, நகச்சுற்றுக்கான க்ரீம்களில் ஸ்பைருலினா ( Spirulina) சேர்க்கப்படுவதுண்டு. பொடுகுக்கான சிகிச்சையில், ஹேர்பேக்குடன் ஸ்பைருலினாவை கலந்து போடும்போது சீக்கிரமே நிவாரணம் கிடைக்கும்.  spirulina Spirulina Face Mask for all skin types! | Summer care ஆன்டிஏஜிங் தன்மை கொண்டது என்பது இதன் இன்னொரு ஸ்பெஷல் தன்மை.  வயதாக, ஆக, நம் சருமத்தின் மீள்தன்மைக்கு காரணமான கொலாஜென் மற்றும் எலாஸ்டின் போன்றவை குறையத் தொடங்கும். அதனால் சருமத்தில் சுருக்கங்கள் விழும். அடிக்கடி ஸ்பைருலினா ( Spirulina) பேக் தடவும்போதும், அதை சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளும்போதும், கொலாஜென் உற்பத்தியைத் தூண்டி, சருமத்தை சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக வைத்திருக்கும்.  எனவே, இயற்கையான முறையில் சருமத்தின் கொலாஜெனை அதிகரிக்க, ஸ்பைருலினாவை வாய்வழியே சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.  வாய்வழி சப்ளிமென்ட்டாக  எடுக்க நினைப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையோடு எடுப்பதுதான் பாதுகாப்பானது. ஃபேஸ்பேக்காக போடும்முன் உங்கள் சருமத்தின் தன்மை தெரிந்து அழகுக்கலை ஆலோசகர் பரிந்துரைக்கும் முறையில் பயன்படுத்தவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 16 Apr 2024 9:00 am

Doctor Vikatan: அடிக்கடி தொடைகளில் ஏற்படும் வலி... Kidney பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் வயது 34. எனக்கு அடிக்கடி தொடைகளில் வலி ஏற்படுகிறது. தொடை வலி என்பது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறாள் என் தோழி. அது உண்மையா.... இந்த வலிக்கு என்ன காரணமாக இருக்கும்.... எப்படி மீள்வது? பதில் சொல்கிறார்  சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். நித்யா மனோஜ் Doctor Vikatan: எப்போதும் வழிந்தோடும் வியர்வை... மாத்திரை உதவுமா... தீர்வுதான் என்ன? உங்கள் தோழி சொன்னதுபோல சிறுநீரகத்திற்கும் தொடை வலிக்கும் பெரும்பாலும் தொடர்பு இல்லை. சிறுநீரகம்,நமது நெஞ்சாங்கூட்டின் கீழே, முதுகுத்தண்டுவடத்திற்கு அருகில் இருபுறமும் உள்ளது. சிறுநீர்க் குழாயோ அங்கு  தொடங்கி  இடுப்பு எலும்புக்கூட்டினுள் உள்ள சிறுநீர்ப்பை வரை நீளும். எனவே, சிறுநீரகக் கல், சிறுநீரகம் தொடர்பான பிற  வலிகள் என்பவை பின் இடுப்பில் தொடங்கி பிறப்புறுப்பு வரை பரவலாம். தொடைப்பகுதி நம் உடலின் மிக மிக உறுதியான எலும்பு மற்றும் தசைகளால் ஆனது. இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்க மனிதர்களுக்கு பிட்டம் மற்றும் தொடைகள் வலுவாக இருப்பது அவசியமாகிறது.   தொடைவலிக்கான பொதுவான காரணங்கள் என்று பார்த்தால் , படிகளில் ஏறி இறங்குதல், வெகு தூரம் நடத்தல், நிறைய நேரம் முழங்கால் இடுதல், குத்துக்கால் வைத்து அமருதல் போன்றவையே. பொதுவான காரணங்களில் தசைப்பிடிப்பு அல்லது சுளுக்கு ஆகியவையும் அடங்கும். படிக்கட்டுகள் Doctor Vikatan: எப்போதும் எதையாவது கொறிக்கும் பழக்கம்... பசி எடுக்காமல் சாப்பிடுவதற்கு தீர்வு என்ன? வெயில் காலத்தில்  உடலில் உப்புச்சத்து, நீர்ச்சத்து குறைவால் ஏற்படும்  கிராம்ப்ஸ் (cramps) எனும் தசை இறுக்கம் கெண்டைக்காலில்  ஏற்படலாம். வெகு அரிதாக சிலருக்கு இது தொடைவலியாக வரலாம்.  மேலும், பின் தொடைகளில் ஏற்படும் வலி, தண்டுவட வட்டு அழுத்தத்தால் ஏற்படும் 'சியாட்டிக்கா' (Sciatica) வலியாகவும் இருக்கலாம். கீல்வாதம் அல்லது லேபரல் கிழிவு போன்ற இடுப்பு மூட்டு பிரச்னைகளும் தொடைவலியாக வெளிப்படும். ரத்தக் கட்டிகள் அல்லது புற தமனி நோய் போன்ற வாஸ்குலர் பிரச்னைகள் ரத்த ஓட்டம் மற்றும் தொடைப்பகுதியில் வலியை ஏற்படுத்தலாம். அதே நேரத்தில் செல்லுலிடிஸ் (Cellulitis ) அல்லது ஆஸ்டியோமைலிடிஸ் (Osteomyelitis) போன்ற தொற்றுகள், கட்டிகள்கூட  இதே போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். தொடைவலிக்கான அடிப்படை காரணத்தைப் பொறுத்து சிறிய சுளுக்குகளுக்கு, ஓய்வு, ஐஸ் ஒத்தடம், தசை மசாஜ்  மற்றும் உயரத்தில் காலை தூக்கி வைத்தல் (RICE)  போன்றவை உதவும். குறிப்பிட்ட சில வலி நிவாரணிகள் அசௌகர்யத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கலாம்.  கிராம்ப்ஸ் பிரச்னைக்கு இளநீர், தண்ணீர், மோர் போன்றவற்றுடன் அதற்கான மருந்துகளும் எடுத்துக்கொள்வது அவசியம். MRI Scanning Doctor Vikatan: ஆயில் மசாஜ், எப்சம் சால்ட், புது காலணி.. எதற்கும் குறையாத பாதவலி; தீர்வு கிடைக்குமா? மிகவும் கடுமையாகவோ அல்லது தொடர்ந்தோ வலி ஏற்படும் சந்தர்ப்பங்களில், மருத்துவ ஆலோசனையை நாடுவது, எக்ஸ்ரே அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற சோதனைகள் முக்கியம்.  2 -3 நாள்களுக்குள் கை வைத்தியத்திற்கு கட்டுப்படாத வலிகளுக்கு, குறிப்பிட்ட உடற்பயிற்சிகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அல்லது கார்டிகோஸ்டீராய்டு ஊசிகள், அறுவை சிகிச்சை ஆகியவை தேவைப்படலாம். எனவே, இந்த வலிக்கு இதுதான் காரணம் என நீங்களாக எதையாவது நம்பிக்கொண்டிருக்காமல்,   மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். உங்களுடைய தொடைவலி பிரச்னைக்கும் கிட்னி பாதிப்புதான் காரணம் என நம்பிக்கொண்டிருக்காமல்,  ஓய்வு, ரத்தக்கட்டுக்கான மருந்துகள், மசாஜ் போன்றவற்றை முதல்கட்டமாக முயற்சி செய்து பாருங்கள். அவை பலனளிக்காத பட்சத்தில் மருத்துவரை நாடுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 15 Apr 2024 9:00 am

Sex & Pregnancy: `மனைவி மாசமா இருக்கிறப்போ செக்ஸ் வெச்சுக்கலாமா?'- காமத்துக்கு மரியாதை - 159

தாம்பத்திய உறவு தொடர்பான சில சந்தேகங்கள் எல்லா காலங்களிலும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அதிலொரு முக்கியமான சந்தேகம், 'மனைவி மாசமா இருக்கிறப்போ செக்ஸ் வெச்சுக்கலாமா' என்பதுதான். இந்த வாரம் இதற்கான விளக்கத்தைத்தான் சொல்லவிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். ''கர்ப்ப கால செக்ஸ் பற்றிய நிறைய குழப்பங்கள் தம்பதிகள் மத்தியில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் (முதல் டிரைமெஸ்டர்) வரை தாம்பத்திய உறவே வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் பெரும்பாலான தம்பதிகள் தீர்மானமாக இருக்கிறார்கள். காரணம், இந்த மாதங்களில் உறவு வைத்துக்கொண்டால் வயிற்றில் இருக்கிற கரு கலைந்துவிடுமோ என்கிற அச்சம். உண்மையில் இப்படி நிகழாது. ஏனென்றால், கருத்தரித்த ஆரம்பத்தில் கருவானது கண்ணுக்கே தெரியாத அளவில்தான் இருக்கும். டெஸ்ட் டியூப் பேபிக்கு முயற்சி செய்கையில், கண்ணுக்கே தெரியாத அக்கருவை மைக்ரோஸ்கோப் வழியாகத்தான் மருத்துவர்கள் பார்ப்பார்கள். அந்தளவுக்குச் சிறிதான கரு, தாம்பத்திய உறவின்போது நிகழ்கிற உடல் அசைவுகளால் கலையாது. Sex & Pregnancy Peyronie's disease: வளைந்த ஆணுறுப்பு... உள்ளாடையிலும் இருக்கு தீர்வு..! காமத்துக்கு மரியாதை - 156 கர்ப்பமாக இருக்கையில் தாம்பத்திய உறவுகொள்வது கணவன், மனைவி, வயிற்றில் இருக்கும் கரு என மூவருக்குமே நல்லது. குறிப்பாக கணவனும் மனைவியும் நல்ல மனநிலையுடன், மகிழ்ச்சியாக இருக்க தாம்பத்திய உறவு உதவும். தவிர, உறவு கொள்ளும்போது மூளையிலிருந்து மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும். அது தாய்க்கும் சேய்க்கும் நல்லது. முதல் டிரைமெஸ்டர் போலவே இரண்டு மற்றும் மூன்றாவது டிரைமெஸ்டர்களிலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். இதில் அனைத்து தம்பதியரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவலொன்று இருக்கிறது. அதாவது, கர்ப்பம் உறுதியானவுடனே 'இந்தத் தேதியில் பிரசவம் நிகழலாம்' என்று, ஒரு தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பார்கள் மகப்பேறு மருத்துவர்கள். அந்தத் தேதிக்கு முன்னாலும் பிரசவம் நிகழலாம், பின்னாலும் நிகழலாம். மகப்பேறு மருத்துவர் குறித்துக்கொடுத்த தேதியைத் தாண்டியும் பிரசவ வலி ஏற்படவில்லையென்றால், அதற்கான தீர்வாகவும் செக்ஸ் பயன்படலாம். Dr. Kamaraj Breast Size: மார்பகங்கள் ஒரே அளவுலதான் இருக்கணுமா..? - காமத்துக்கு மரியாதை - 157 அதாவது, குறிப்பிட்ட நாள் தாண்டியும் பிரசவ வலி வரவில்லையென்றால் சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளுக்கு புரோஸ்டாகிளாண்டின்ஸ் (prostaglandins) என்ற மருந்தைத் தந்து சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இந்த மருந்து கர்ப்பப்பையின் வாயை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது. இதே புரோஸ்டாகிளாண்டின்ஸ் ஆணின் விந்திலும் இருக்கிறது. பிரசவ தேதி நெருங்கும்போதும் தம்பதியர் உறவுகொண்டால், விந்தில் இருக்கிற புரோஸ்டாகிளாண்டின்ஸ் கர்ப்பப்பையின் வாயை விரிவடையச் செய்து, பிரசவ வலியை ஏற்படுத்திவிடும். இதனால், சுகப்பிரசவம் நிகழவும் அதிக வாய்ப்பிருக்கிறது. சொல்லப்பட்ட பிரசவ தேதி தாண்டியும் வலி வரவில்லையென்றால், பதற்றப்படாமல் தாம்பத்திய உறவுகொண்டாலே போதும். அதே நேரம், இரண்டு விஷயங்களை தம்பதியர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, மனைவியின் வயிற்றில் அழுத்தம் கொடுக்காமல் பொசிஷனை மாற்றி உறவுகொள்ள வேண்டும். இரண்டு, வழக்கம்போல குழந்தையின் அசைவை அடிக்கடி கண்காணித்துக்கொண்டும் இருக்க வேண்டும். மற்றபடி, கர்ப்ப காலம் முழுவதும் தாம்பத்திய உறவு கொள்ளலாம். அதனால் எந்தப் பிரச்னையும் வராது'' என்றவர், யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார். Sexual Health: கோபமா இருக்கிறப்போ `நோ' தாம்பத்திய உறவு... ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 158 ''தாய்க்கும் கருவிலிருக்கும் சேய்க்கும் இணைப்பாக இருக்கும் நஞ்சு (பிளாசன்டா) கீழே இறங்கியிருந்தால், அதாவது கர்ப்பப்பை திறக்கும் இடத்தில் அந்த நஞ்சு இருந்தால் உறவைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களும் கர்ப்ப கால செக்ஸை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் லேசான ரத்தப்போக்கு இருக்கிற பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம். இப்படிப்பட்ட பெண்களும் உறவைத் தவிர்ப்பதே நல்லது. `கர்ப்பப்பையில் கிருமித்தொற்று ஏற்படலாம்' என்று அறிவுறுத்தப்பட்ட கர்ப்பிணிகளும் செக்ஸை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் கர்ப்ப காலம் முழுதும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 14 Apr 2024 6:00 pm

Summer foods: கோடைக்கால பரிசு... நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இதுதான்!

கோடைக்கால வெயிலை தணிக்க ஐஸ்கிரீம், ஜூஸ், மில்க் ஷேக் என்று பல குளிர்பானங்கள் இருந்தாலும் நம்முடைய இயற்கை  அன்னை அருளிய  நுங்குக்கு ஈடு இணை கொடுக்க இவற்றால் முடியாது. பல மகத்துவம் நிறைந்த நுங்கினை வழங்கக்கூடிய பனைமரம் ஏழைகளின் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. நுங்கு, சப்போட்டா, குக்கீ, கல்கண்டு ஐஸ்க்ரீம்... | `ஜில்லுனு ஒரு வீக் எண்டு' கோடைகால வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல் சூட்டை தணிக்க மக்கள் பெருமளவில்  நுங்கு மற்றும் பதநீரை விரும்பி வாங்கி உட்கொள்கின்றனர். சேலம் மாவட்டத்தில்  கருப்பூர், காடையாம்பட்டி, ஜலகண்டாபுரம், ஓமலூர், மேச்சேரி, தாரமங்கலம், வீரபாண்டி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் காணப்படுகின்றன. சேலத்தில் விற்பனையாகும் நுங்குகள், சேலம்  மாவட்டத்திலிருந்தும் பொள்ளாச்சி போன்ற வெளி மாவட்டங்களிலிருந்தும்  விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. பொதுவாக, எல்லா இடங்களிலும் ஒரு சுளை நுங்கு 10 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், சேலத்தில் அதிக அளவில் நுங்கு கிடைப்பதால் மூன்று சுளை நுங்கு 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா வயதினரும் அதிக அளவில் நுங்கு மற்றும் பதநீரை விரும்பி வாங்கி உண்டு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கின்றனர். இது குறித்து நுங்கு விற்பனையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், தென்காசியில இருக்கிற எங்க தோட்டத்துல மொத்தம் 700 பனை மரங்கள் இருக்கு. அதுமட்டுமல்லாமல் 2000 பனை மரங்கள பொள்ளாச்சியில் குத்தகைக்கு எடுத்திருக்கேன். அதுல இருந்து கிடைக்கிற நுங்கை பொள்ளாச்சி, சேலம், மதுரை, சோமனூர் போன்ற இடங்கள்ல ஆளு வச்சி நுங்கு வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன். அதிக அளவுல நுங்கு கையில இருக்குறதனால மூணு சுளை 20 ரூபாய்க்கும், 250 மி.லி பதநீரை 20 ரூபாய்க்கும் கொடுக்க முடியுது. எல்லாரும் நினைக்கிறாங்க நுங்கு கோடைக்கால உணவுனு. ஆனா, அப்படி கிடையாது. ஒவ்வோர் இடத்திற்கு ஏத்த மாதிரி எல்லா மாதங்களிலும் கிடைக்கும். ஒரு வருஷத்துல பாத்தோம்னா பொள்ளாச்சியில கார்த்திகை முதல் சித்தரை வரை, தென்காசியில சித்தரை முதல் ஆனி மாதம் வரை நுங்கு காய்க்கும். தூத்துக்குடியில வைகாசி முதல் ஆவணி வரைக்கும் நுங்கு கிடைக்கும். இப்படி ஒரு வருஷத்துக்கு 10 மாசமும் நுங்கு கிடைக்கும் என நுங்கு வியாபாரம் குறித்தும் நுங்கின் விளைச்சல் குறித்தும் கூறினார். பாலகிருஷ்ணன் நுங்கு, வெள்ளரி மட்டுமா? வெயிலைச் சமாளிக்க இவற்றையும் சாப்பிடுங்க! #VikatanPhotoCards கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் வெயிலின் சூட்டை குறைப்பதற்காக ஐஸ்கிரீம், ஜூஸ் போன்ற குளிர்பானங்களுக்கு நிகராக பலரும்  பதநீர் மற்றும் நுங்கினை விரும்பி வாங்குகிறார்கள். இதுகுறித்து கல்லூரி மாணவி சையது பெனாசீர் பீவி கூறுகையில், சின்ன வயசா இருக்கும்போது எங்க தாத்தா பதநீர் வாங்கி தருவாங்க. ஆனா, சிட்டில பதநீர் எல்லாம்  கிடைக்குறது ரொம்ப அரிது. இப்போ, இந்த வருஷம்  நிறைய இடத்துல நுங்கு, பதநீர் எல்லாம் பரவலா விக்கிறாங்க, அதை பார்த்ததும் அதை வாங்க ஆர்வம் வந்துச்சு. அதனால, தினமும் கல்லூரிக்கு வரும் போது பதநீர் வாங்கி குடிச்சிட்டு இருக்கேன். இத தொடர்ந்து குடிச்சிட்டு இருக்குறதனால வெயிலால் வரக்கூடிய வியர்குரு உடல் சூட்டு எல்லாத்தையும் தவிர்க்க முடியும் என்று தன்னுடைய பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பதநீர் உடல் சூட்டை குறைப்பது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்கிறார்கள். இது குறித்து தினமும் நுங்கினை உட்கொள்ளும் கணேஷ் பேசும்போது. நான் கோடை காலத்துல தினமும் நுங்கு சாப்பிடுவதால் என்னுடைய சர்க்கரை அளவ என்னால கட்டுக்குள் வச்சிருக்க முடியுது. வேலைகள் காரணமா அதிக நேரம் வெயில்ல பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும், அப்ப எல்லாம் முடிஞ்ச அளவுக்கு நுங்க வாங்கி சாப்பிடுவதால் வெயிலால வரக்கூடிய உஷ்ணத்த குறைக்குறதுக்கு நுங்கு உதவிகரமா இருக்கு என்று கூறினார். பாலகிருஷ்ணன் ‘பணம் காய்க்கும் பனை!’ - மதிப்புக்கூட்டலில் அசத்தும் ஐடி பெண் நுங்கின் மருத்துவ குணம் பற்றி தெளிவாக விளக்குகிறார், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் தீபா, நுங்கு கோடை காலத்தோட ஒரு உண்மையான ட்ரீட் என்று  சொல்லலாம். அதற்கான காரணம் , நம்ம நுங்கை பிரிட்ஜில வைக்காமலே அதை சாப்பிடும்போது அதில் இருந்து நமக்கு கிடைக்கக்கூடிய குளிர்ச்சி மற்றும் அதனுடைய இனிப்புச் சுவை கோடை காலத்துல ஏற்படக்கூடிய டீஹைட்ரேஷனை (Dehydration) குறைக்குது. இதனாலதான் நுங்கை ஐஸ் ஆப்பிள் (Ice Apple) என்றும் அழைக்கிறாங்க. அது மட்டும் இல்லாம, கோடை காலத்துக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நுங்குல ரொம்பவே அதிகமா இருக்கு. வைட்டமின்ஸ் வகைகள பார்த்தோம்னா வைட்டமின் ஏ, பி, சி என்று சொல்லிட்டே போலாம். அது மட்டும் இல்லாமல், பொட்டாசியம் (Potassium ), பாஸ்பரஸ் (Phosphorus), ஜின்க் (Zinc),  இரும்புச்சத்து (Iron ) போன்ற பல தாதுக்கள் நமக்கு நுங்க சாப்பிடுவதால் கிடைக்குது. இப்படி பைட்டோ நியூட்ரியன் (Phyto nutrients ) நிறைந்த  உணவாக நுங்கு இருக்கறதுனால வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய தடிப்பு குறைப்பதற்காகவும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கலை தீர்ப்பதற்காகவும் நல்ல பசியைத் தூண்டுவதற்காகவும் இந்த நுங்கு உதவிகரமாக இருக்குது.  அமைதியான மனநிலையையும் ஆழ்ந்த உறக்கத்தையும்  நுங்கை சாப்பிடும்போது நமக்கு கிடைக்குது. நுங்கில் இருக்கக்கூடிய ஆன்ட்டி இன்ஃப்லமேட்டரி எபெக்ட் ( Anti- inflammatory effect ) நம்ம சருமத்தையும் நம்முடைய கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுது. நன்மை எல்லாம் தரும் நுங்கு! “பதநீர் குடிக்கும் சமூகமாக மாற்றுவோம்!’’ 2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி,  நுங்குல இருக்கக்கூடிய ஆன்ட்டி ஹைப்பர் கிளைசிமிக் எஃபக்ட்னால (Anti-hyperglycemic effect ) ரத்த சர்க்கரையின் அளவை குறைக்குது என்று நிரூபணமாகி இருக்கு. அதனால, சர்க்கரை நோய் இருக்கக்கூடிய நபர்கள் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து 4 நுங்கை சாப்பிடலாம். நுங்கு சில எதிர் விளைவுகளையும் கொண்டிக்கு. சைனஸ் இருக்கக்கூடியவங்க நுங்கை சாப்பிடும்போது  அவங்களுக்கு சைனஸ் அதிகரிக்கும். மேலும், இந்த நுங்கு மருந்துகள்கூட சேர்ந்து இன்ட்ராக்ட் (interaction)  செய்யும் தன்மை இருக்கிறதுனால பிளட் டைக்குரியாசிஸ் ( Blood Dyscrasias ) போன்ற நோய் இருக்கக்கூடியவங்க மருத்துவர்களுடைய உரிய பரிந்துரையைக் கேட்டு  நுங்கை சாப்பிடுவது உடலுக்கு நன்மையை  விளைவிக்கும் என்று நுங்கின் சிறப்புகள் குறித்து அடுக்கினார்.

விகடன் 14 Apr 2024 10:45 am

Happy Teeth: பல் செட் பொருத்தியவர்கள் இந்த டூத் பேஸ்ட் பயன்படுத்தாதீங்க..!

முதுமை, பல் சார்ந்த பாதிப்புகள் உள்ளிட்டவற்றால் இன்று பலரும் செயற்கைப் பற்களைப் பொருத்தியிருக்கின்றனர். அப்படிப் பொருத்தியவர்கள் தங்கள் பற்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும், வெளிநாட்டு தயாரிப்பு டூத் பேஸ்டை பயன்படுத்தலாமா என்பதை பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஃபெலிஷியா கிறிஸ்டினா ஹெப்சிபா. பல் செட் செயற்கைப் பற்கள், பல் செட் பொருத்தியிருப்பவர்கள், பற்களுக்கு க்ரௌன், பிரிட்ஜிங், இம்ப்ளான்ட்ஸ் சிகிச்சை செய்தவர்களுக்கென்று பிரத்யேக பராமரிப்பு முறைகள் உள்ளன. உதாரணத்துக்கு, ரூட் கனால் சிகிச்சை செய்து பற்களில் 'கேப்' (Cap) பொருத்தியிருந்தால் ஃப்ளாஸிங் (Flossing) என்ற முறையைப் பயன்படுத்தி பற்களில் படியும் உணவுத்துகள்களை நீக்கப் பரிந்துரைப்பார்கள். பல் சிகிச்சை Happy Teeth: உங்கள் குழந்தைக்கு Tooth Paste விழுங்கும் பழக்கம் இருக்கிறதா? சில நேரம் பற்களுக்கு நடுவில் சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்றுவதற்கு இன்டர்டென்ட்டல் பிரஷ்ஷிங் தேவைப்படலாம். இதற்கென்று பிரத்யேக டூத் பிரஷ் உள்ளது. அதைப் பயன்படுத்தி உணவுத் துகளை அகற்ற வேண்டும். உள்புறத்தில் உலோகம், வெளிப்புறத்தில் செராமிக்கால் ஆன செயற்கைப் பற்களைப் பொருத்தியவர்கள், சிராய்ப்பை (Abrasive) ஏற்படுத்தும் டூத்பேஸ்டை பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்யும்போது வெளிப்புறத்தில் இருக்கும் செராமிக் சேதமடைந்து, உலோகம் வெளியில் தெரியும். எனவே, அதற்கேற்ற டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். பொதுவாகவே, செயற்கைப் பல், பல் செட் பொருத்தியவர்களுக்கென்று பிரத்யேக டூத் பேஸ்ட், டூத் பிரஷ் உள்ளது. அதேபோல பிரஷ் செய்ய பிரத்யேக டெக்னிக்கும் மருத்துவர்கள் கற்றுக்கொடுப்பார்கள். டூத் பேஸ்ட் Happy Teeth: பல் சிகிச்சை என்றாலே பதற்றமாகுதா? Dental Anxiety-யாக இருக்கலாம்! இவை தவிர, வேறு சில பராமரிப்பும் சிலருக்குத் தேவைப்படலாம். இதுபோல சரியாகப் பராமரிக்கும்போதுதான் செயற்கைப் பற்களின் ஆயுள் அதிகரிக்கும். இல்லையென்றால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு அடிக்கடி பல் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்லும்படி ஆகிவிடும். வெளிநாட்டு டூத் பேஸ்ட் வெளிநாட்டுக்குச் செல்லும்போது வாங்கி வருவது அல்லது வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கொடுப்பது என வெளிநாட்டைச் சேர்ந்த டூத் பேஸ்ட்டை சிலர் பயன்படுத்துவார்கள். அந்த டூத் பேஸ்ட் ஒத்துக்கொள்கிறது, பல், வாய் சுகாதாரத்துக்கு ஏற்றதாக உள்ளது என்றால் அதைப் பயன்படுத்துவது தவறில்லை. இருப்பினும் உங்கள் பல் மருத்துவரிடம் இதுபற்றி ஆலோசனை பெறுவது அவசியம். பல் மருத்துவர் ஃபெலிஷியா கிறிஸ்டினா ஹெப்சிபா நமது உணவுப் பழக்கவழக்கம், பல் அமைப்பு, சுகாதாரம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நம் நாட்டில் தயாரிக்கப்படும் டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவதே சிறந்தது. நாம் வாங்கும் டூத் பேஸ்ட் இந்திய பல் மருத்துவ சங்கத்தால் (Indian Dental Association -IDA) அங்கீகரிக்கப்பட்டது என டூத் பேஸ்ட் அட்டைப்பெட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் அமெரிக்க பல் மருத்துவ சங்கம் (Ameican Dental Association - ADA) அங்கீகரிக்கப்பட்ட டூத் பேஸ்ட் தரமானதாக கருதப்படுகிறது. பிற நாடுகளைப் பொறுத்தவரை அந்தந்த நாட்டின் பல் மருத்துவச் சங்கத்தின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும். பல் மருத்துவ சங்கம் அங்கீகரித்துள்ள டூத் பேஸ்ட்டை வாங்கிப் பயன்படுத்துவது சிறந்தது என்றார். Happy Teeth Happy Teeth: வாய் துர்நாற்றம் நீங்க இந்த 3 விஷயம் பண்ணினா போதும்! I Bad Breath பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும். பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

விகடன் 13 Apr 2024 6:00 pm

Doctor Vikatan: தினமும் mouthwash பயன்படுத்துவது, chewing gum மெல்வது பற்களின் ஆரோக்கியம் காக்குமா?

Doctor Vikatan: தினமும் மவுத் வாஷ் பயன்படுத்தலாமா.... வாய் துர்நாற்றம் தவிர்க்க சூயிங்கம் மெல்வது சரியானதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக்      பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் | சென்னை Happy Teeth: விளம்பரங்கள் பார்த்துதான் Tooth paste வாங்குறீங்களா? அடிக்கடி சொத்தைப் பற்கள் ஏற்பட்டு அவதிப்படுவோர், எப்போதும் வாயில் துர்நாற்றம் வீசுகிறது என்போர், ஈறுகளில் சீழ் கோக்கும் பிரச்னை உள்ளோர், புற்றுநோய் பாதித்து கீமோதெரபி சிகிச்சை எடுப்பவர்கள், உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருப்போர், பிரஷ் பிடித்து பல் துலக்க முடியாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் போன்றோருக்கு மவுத் வாஷ் பரிந்துரைப்போம். மவுத் வாஷில் வெறும் ஃப்ளூரைடு உள்ளது, ஆன்டிபயாடிக் உள்ளது, காஸ்மெட்டிக் மவுத்வாஷ் என பல வகைகள் உள்ளன.  பொதுவாக, மார்க்கெட்டில் கிடைக்கும் மவுத்வாஷ்களில் பெரும்பாலும் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கும். ஆல்கஹால், வாயின் பிஹெச் அளவை (அமில-காரத்தன்மை) குறைக்கும். பெரும்பாலான மவுத்வாஷ்களில் இந்த பிஹெச் அளவானது குறைவாகவே இருக்கும். அதனால் வாய் வறண்டுபோகும். அதன் விளைவாக நாம் சாப்பிடும் உணவானது வாயிலேயே ஒட்டிக்கொண்டிருப்பதால், பாக்டீரியா உற்பத்தி அதிகரிக்கும். அதனால் சொத்தைப் பற்கள் உருவாவது வேகமாகும்.  பல் சொத்தை Happy Teeth: வாய் துர்நாற்றம் நீங்க இந்த 3 விஷயம் பண்ணினா போதும்! I Bad Breath பல் மருத்துவர்கள் பொதுவாக, யாருக்கும் மவுத்வாஷை தினசரி பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கவே மாட்டார்கள். எந்தப் பிரச்னைக்கு எத்தகைய மவுத்வாஷ் என்று பார்த்து, அதை எத்தனை நாள்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்றும் பரிந்துரைப்பார்கள். வெந்நீரில் கல் உப்பு சேர்த்து வாய்க் கொப்பளிப்பது நேச்சுரல் மவுத் வாஷாக செயல்படும்.  மற்றபடி, கடைகளில் வாங்கும் மவுத்வாஷை தினமும் பயன்படுத்துவது எனாமலையும் பாதிக்கும். நீங்களாக அதை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம். சூயிங்கம் மெல்வது, வாயில் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும். சாப்பிட்ட பிறகு பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட உணவுத் துகள்களை உமிழ்நீரானது இயல்பாகவே சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கும்.  சூயிங்கம் மெல்வதில் இப்படியொரு நல்ல விஷயம் இருப்பினும், அதைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவை.ஏடிஏ ( American Dental Association ) எனப்படும் அமெரிக்கன் டென்ட்டல் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்ட சூயிங்கமா என்று பார்த்து வாங்க வேண்டும். Chewing gum Doctor Vikatan: துருத்திக்கொண்டு நிற்கும் முன்வரிசை பற்கள்... இன்விசிபிள் க்ளிப் உதவுமா? சூயிங்கத்தில் செயற்கை கலர் மற்றும் ஃப்ளேவர் சேர்த்திருக்கக்கூடாது. இனிப்பில்லாத சூயிங்கம்தான் சிறந்தது.  அப்படியில்லாத பட்சத்தில் அனுமதிக்கப்பட்ட செயற்கை இனிப்புகள் சேர்த்தவை ஓகே. அவை பற்களில் சொத்தையை ஏற்படுத்தாது. எப்படியிருப்பினும், எப்போதாவது ஒருமுறை சூயிங்கம் சாப்பிடுவது ஓகே. தினமுமோ, அடிக்கடியோ சூயிங்கம் சாப்பிடுவது நிச்சயம் அறிவுறுத்தத்தக்கதல்ல. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 13 Apr 2024 9:00 am

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் கடுமையான தலைவலி... மாத்திரை போடலாமா?

Doctor Vikatan: என் மகளுக்கு 27 வயதாகிறது. நான்கு மாத கர்ப்பிணி. அவளுக்கு கடந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை கடுமையான தலைவலி வந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு வலியால் துடித்தாள். அடுத்தமுறை தலைவலி வந்தால் தலைவலி மாத்திரை கொடுக்கலாமா.... இந்த வலிக்கு என்ன காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன். மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன் Doctor Vikatan: எப்போதும் வழிந்தோடும் வியர்வை... மாத்திரை உதவுமா... தீர்வுதான் என்ன? கர்ப்பகால தலைவலிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் பொதுவான சிலவற்றை விளக்குகிறேன். உங்கள் மகளுக்கு வந்த தலைவலிக்கான காரணம் தெரியாமல் நீங்களாக சுய மருத்துவம் செய்யாதீர்கள். கர்ப்பகால தலைவலிக்கு முதலும் முக்கியமுமான காரணம், உடலில் நீர்ச்சத்துக் குறைவது....  அதைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் உடலில் ஹார்மோன் அளவுகளில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். அதன் விளைவாகவும் தலைவலி வரலாம். இந்தப் பிரச்னை, பெரும்பாலும் 6 மாதங்களுக்குள் தானாகவே சரியாகிவிடும். சைனஸ் மற்றும் சளித் தொந்தரவு உள்ள கர்ப்பிணிகளுக்கும் அதன் விளைவாக தலைவலி வரலாம்.  கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தாலும், அது தலைவலியாக உணரப்படலாம். அடிக்கடி ரத்த அழுத்த அளவைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதே போல, ரத்தச் சர்க்கரை அளவில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் தலைவலி வரலாம்.  பார்வையில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் தலைவலி வரலாம். கம்ப்யூட்டர், மொபைல் என ஸ்கிரீன் டைம் அதிகரிப்பதன் விளைவாகவும் தலைவலி வரலாம் என்பதால் இதையும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.  கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தாலும்... கர்ப்பிணிகள் வெண்ணெய் சாப்பிட்டால் சுகப்பிரசவம் நிகழுமா? - அவள் பதில்கள்: 82 ஸ்ட்ரெஸ் மற்றும் டென்ஷன் இல்லாமலிருக்கும்படி கர்ப்பிணிகளுக்கு பொதுவாக அறிவுறுத்தப்படும். அந்த இரண்டும் தலைவலிக்கு காரணமாகலாம். ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுபடும் வழிகளைத் தெரிந்து பின்பற்றுவதுதான் தீர்வு. ஏற்கெனவே மைக்ரேன் பாதிப்புள்ள கர்ப்பிணிகள் என்றால், முன்கூட்டியே மருத்துவரிடம் கலந்தாலோசித்து, தலைவலி அதிகரிக்கும்போது அதைச் சமாளிப்பது குறித்துத் தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.  பிரசவத்தை பற்றியோ, பிறக்கவிருக்கும் குழந்தையை பற்றியோ அதீத கற்பனைகள், கவலைகள், எதிர்பார்ப்புகளைத் தவிர்க்கவும். அதுவும் தலைவலிக்கான தீர்வுதான். திடீரென தாங்க முடியாத தலைவலியை உணர்ந்தாலோ, வித்தியாசமான தலைவலியை உணர்ந்தாலோ, அடிக்கடி தலைவலி வந்தாலோ கர்ப்பிணிகள் பெயின் கில்லர் போடுவது, சுய மருத்துவம் செய்வது போன்றவற்றைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதே சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 12 Apr 2024 9:00 am

பாஜக பிரசாரத்தில் இருந்து விலகிய குஷ்பூ... மருத்துவ காரணங்களின் உண்மைத்தன்மை என்ன?

மக்களைவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாஜக செயற்குழு தலைவரான நடிகை குஷ்பூ, வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் மற்றும் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு பிரசாரத்தில் இருந்து விலகுவதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். குஷ்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக வலிக்குமா? | வலியே என் உயிர் வலியே - 2 அதில், 2019-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற விபத்து ஒன்றில் வால் எலும்பில் முறிவு (Tailbone fracture) ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இதனால் அவதிப்பட்டு வருவதாகவும், மருத்துவக் குழுவினர் கண்டிப்பாக பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் குஷ்பூ கடிதத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பான சிகிச்சையை (Procedure) தாமதிக்காமல் செய்ய வேண்டியதுள்ளது. எனவே, பிரசாரத்தில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முறிவால் இப்போதும் பிரச்னை ஏற்படுமா என்று சென்னையைச் சேர்ந்த முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தினேஷ் சௌத்ரியிடம் கேட்டோம்: Bone குடல் வால் போல வால் எலும்பும் உடலில் இருக்கும். மருத்துவச் சொற்களில் இதை காக்சிஸி (coccyx) என்பார்கள். இதனால் எவ்வித பயனும் இருப்பதில்லை. இதில் ஏற்படும் பாதிப்பு வருடங்கள் கடந்தாலும் தொந்தரவு கொடுத்துக் கொண்டுதான் இருக்கும். இந்த எலும்பானது 33 முதுகெலும்புகளும் முடியும் இடத்தில் இருக்கும். விலங்குகளுக்கு அந்த எலும்பில் இருந்து வால் உருவாகியிருக்கும். அந்தப் பகுதியைச் சுற்றி ஏற்படும் வலியை காக்ஸிடினியா (coccydynia) என்பார்கள். மேலும் உடலின் மிகமுக்கியமான எலும்பான முதுகுத் தண்டுவட எலும்பில் இந்த வால் எலும்பு அமைந்துள்ளதால் அதில் பாதிப்பு ஏற்படும்போது நடப்பதற்கு, உட்கார்வதற்கு, பிற செயல்களைச் செய்வதற்கும் சிரமமாக இருக்கும். மிகுந்த வலியையும் கொடுக்கும். Dr.Dinesh Choudary தலையைக் கழற்றி தனியே வைக்க முடியுமா?! | வலியே, என் உயிர் வலியே - 1 நீண்ட நேரம் நிற்கும்போது, சைக்கிள் ஓட்டும்போது அல்லது அதிக நேரம் உட்காரும்போது அதிகப்படியான வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வலியைக் குறைக்க உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை காக்ஸிடினியா உடற்பயிற்சி என்று அழைப்போம். இந்த உடற்பற்சியானது முதுகெலும்பை வலுப்படுத்துவதோடு பிருட்டங்களையும் வலுப்படுத்தும். குஷ்பு இந்த உடற்பயிற்சியின் மூலம் பாதிப்பினால் ஏற்பட்ட வலி மீண்டும் வராமல் 100 சதவிகிதம் தடுக்க முடியும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். லேசான வலி என்றால் போதுமான ஓய்வு, உடற்பயிற்சி, ஐஸ் ஒத்தடத்தின் மூலம் தீர்வு காணலாம். லேசான வலிக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை. வால் எலும்பு நகர்ந்து இருப்பின் அறுவை சிகிச்சை செய்வதுதான் தீர்வாக இருக்கும் என்றார்.

விகடன் 11 Apr 2024 12:06 pm

Doctor Vikatan: எப்போதும் வழிந்தோடும் வியர்வை... மாத்திரை உதவுமா.. தீர்வுதான் என்ன?

Doctor Vikatan: என் வயது 29. எனக்கு கோடைக்காலம் மட்டுமன்றி எல்லாக் காலங்களிலுமே அளவுக்கதிகமாக வியர்த்து வழியும். இது மற்றவர்களை முகம்சுளிக்க வைக்கிறது. உடை எப்போதும் வியர்வையில் நனைந்து ஈரமாகவே உள்ளது. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் உள்ளதாகக் கேள்விப்பட்டேன். அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் தில்லைக்கரசி. சருமநல மருத்துவர் தில்லைக்கரசி வியர்வை என்பது நபருக்கு நபர் வேறுபடும். வியர்வை அதிகமாகச் சுரப்பதும், குறைவாகச் சுரப்பதும் அவரவர் உடலிலுள்ள வியர்வைச் சுரப்பிகளின் செயல்பாட்டைப் பொறுத்தது.  உடலின் நச்சுகளை, கழிவுகளை வெளியேற்றவும், உடலின் வெப்பநிலையை பேலன்ஸ் செய்யவும் வியர்வை மிகவும் அவசியம். உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, வியர்வைச் சுரப்பிகள் தூண்டப்பட்டு, வியர்வை சுரப்பதன் மூலம், நம் உடலின் குளிர்ச்சி தக்கவைக்கப்படுகிறது. எனவே, உடலின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம், வியர்வைச் சுரப்பிகளின் இயக்கமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதன் விளைவாக, அளவுக்கதிகமாக வியர்ப்பதும் தடுக்கப்படும். வெப்பம் ரொம்பவும் அதிகமாக இருக்கும் தருணங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் குடிப்பதன் மூலம் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும். உள்ளாடைகள், உடைகள்,  சாக்ஸ் என எல்லாமே ரொம்பவும் இறுக்கமாக இல்லாமல், தளர்வாகவும், காட்டனால் தயாரிக்கப்பட்டவையாகவும்  இருக்கும்படி பார்த்து அணியவும். வியர்வை அவள் பதில்கள் - 53 - பெர்ஃப்யூம், டியோடரண்ட்… வியர்வை வாடையை விரட்ட எது பெஸ்ட்? அதீத வியர்வையைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அந்த மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். நீங்கள் அதிகம் என நினைக்கும் வியர்வை, உண்மையிலேயே அதிகமானதுதானா என்பதை சரும மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அவரும் அதை அதிகம் என உறுதிசெய்தால், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை  எடுத்துக்கொள்ளலாம்.  எனவே, மருந்து, மாத்திரைகளின் உதவியின்றி, இருமுறை குளிப்பது, பருத்தி உள்ளாடைகள் மற்றும் உடை அணிவது போன்ற எளிமையான வழிகளிலேயே அதீத வியர்வையைக் கட்டுப்படுத்த முடியும்.   உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 11 Apr 2024 9:00 am

Sexual Health: கோபமா இருக்கிறப்போ 'நோ'தாம்பத்திய உறவு... ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 158

''எவையெல்லாம் தாம்பத்திய உறவை நாசமாக்கும் விஷயங்கள் என்று கேட்டால், கணவன், தன் மனைவியின் குடும்பத்தாரையும், மனைவி, தன் கணவன் குடும்பத்தாரையும் கைகாட்டுவார்கள். ஆனால், தாம்பத்திய உறவை நாசம் செய்கிற காரணிகள் சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியரிடையேதான் இருக்கும்'' என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அவை பற்றி விளக்குகிறார். ''ஊடலுக்குப் பிறகான கூடல் தம்பதியரிடையே மிக இனிமையாகவே இருக்கும். அதேபோல, ஒரு சண்டை நிகழ்ந்து சமாதானம் ஆனபிறகு நிகழ்கிற தாம்பத்திய உறவிலும் கூடுதல் ஆனந்தம் கிடைக்கும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் கணவன் - மனைவி இருவரும் பரஸ்பரம் கோபத்திலோ, வெறுப்பிலோ இருக்கும்போது உறவுகொண்டால், அது இருவருக்குமே நல்லதல்ல. இதுதான் முதல் காரணி. Sexual Health Peyronie's disease: வளைந்த ஆணுறுப்பு... உள்ளாடையிலும் இருக்கு தீர்வு..! காமத்துக்கு மரியாதை - 156 காதலிக்கும்போதோ, திருமணமான புதிதிலோ இருவரும் ஈருடல் ஓருயிராக இருப்பார்கள். மோகம், ஆசையெல்லாம் முடிந்து வழக்கமான வாழ்க்கை முறைக்கு வந்தபிறகும், அதே காதலுடன் வாழ்க்கையைக் கொண்டாடினீர்களென்றால் நல்லது. ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை. ஒருவர் மீது ஒருவருக்கு கோபம், வெறுப்பு, பகை, ஏன் சிலருடைய மனதில் போட்டி மனப்பான்மைகூட வந்துவிடுகிறது. இந்த உணர்வுகளோடு தாம்பத்திய உறவுக்கு முயன்றால், பதற்றத்தில் விந்து முந்துதலில் ஆரம்பித்து ஆண்மைக்குறைபாடு வரைக்கும் ஏற்படலாம். கணவருக்கு விந்து முந்தினால், மனைவிக்கும் உறவில் உச்சக்கட்டம் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவே நல்ல மனநிலையிலிருக்கும்போது தாம்பத்திய உறவில் ஈடுபட்டால், கூடுதலாக மகிழ்ச்சி ஹார்மோன்களும் சுரந்து உங்கள் படுக்கையறையைச் சொர்க்கமாக்கும். இரண்டாவது காரணி பால்வினை நோய்கள். பிறப்புறுப்பில் புண், வலி, சீழ்ப்பிடித்தல் என்று வந்து தாம்பத்திய உறவையே நாசம் செய்துவிடும். திருமண உறவில் இருந்தாலும் சரி, லிவ்வின் உறவில் இருந்தாலும் சரி, ஒருவருக்கு ஒருவர் என்கிற விதியை ஃபாலோ செய்தாலே பால்வினை நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளைத் தடுத்துவிடலாம். மூன்றாவது காரணி பாலியல் பிரச்னைகள். இதில் முக்கியமான பிரச்னை விந்து முந்துதல். உறவு ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே விந்து வெளியேறிவிடும். கணவனுக்கு தன்னால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லை என்கிற விரக்தியில் கோபம், இயலாமை ஆகிய உணர்வுகள் வந்துவிடும். மனைவிக்கோ, `பிடித்த உணவை ஆசையாக ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டவுடன் தட்டை எடுத்துச்சென்றுவிட்டது' போன்ற ஏக்கம் வந்துவிடும். விறைப்புத்தன்மை இன்மையும் கணவனும் மனைவியும் முழுமையாக உறவில் ஈடுபட முடியாதபடி செய்துவிடும். மொத்தத்தில், ஆண்மைக்குறைவு இருவரின் உணர்வுகளையும் ஆசைகளையும் கொன்றுவிடும். Sexologist Kamaraj Breast Size: மார்பகங்கள் ஒரே அளவுலதான் இருக்கணுமா..? - காமத்துக்கு மரியாதை - 157 மேலே சொன்ன மூன்று பிரச்னைகளையுமே சரி செய்ய முடியும். ஒருவர் மீது ஒருவருக்கு வருகிற பகையுணர்ச்சியை உளவியல் ஆலோசனை மூலம் சரிசெய்யலாம். பால்வினை நோய் வராதபடிக்கு கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை வந்துவிட்டால், அது சரியாகும் வரை உறவில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். விறைப்பின்மை, விந்து முந்துதல் போன்ற ஆண்மைக்குறைபாடுகள் சரி செய்யக்கூடிய பிரச்னைகள்தான்... உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை நாசமாக்கும் காரணிகளில் ஒன்று உங்கள் வாழ்க்கையில் நுழைந்துவிட்டால், வாழ்க்கையே அவ்வளவுதான் என்கிற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அதன்பிறகும் வாழ்க்கையை இனிமையாக்க முடியும்'' என்று நம்பிக்கை கொடுக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

விகடன் 10 Apr 2024 6:00 pm

Doctor Vikatan: Irregular Periods-மாத்திரைகள் இன்றி, இயற்கையான முறையில் முறைப்படுத்த வழிகள் உண்டா?

Doctor Vikatan: என் வயது 26. இன்னும் திருமணமாகவில்லை. பருவமடைந்தது முதல் இப்போதுவரை எனக்கு மாதவிடாய் சுழற்சி முறைதவறித்தான் வருகிறது. மருத்துவரைச் சந்தித்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் சரியான நாள்களில் வருகிறது. மாத்திரையை நிறுத்தினால் மறுபடி தள்ளிப் போகிறது. இந்தப் பிரச்னைக்கு மாத்திரைகள் இல்லாமல் இயற்கையான தீர்வுகள் கிடையாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா இயற்கை மருத்துவர் யோ. தீபா மாதவிடாய் வலி... மெஃப்தால் ஸ்பாஸ் மாத்திரை... உஷார் பெண்களே... உஷார்! மாதவிடாய் சுழற்சி முறைதவறி வருவதற்கான காரணத்தை முதலில் தெரிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சை எடுக்க வேண்டும். இர்ரெகுலர் பீரியட்ஸ் (Irregular Periods) பிரச்னையை  முறைப்படுத்துவதற்கான மருந்துப் பொருள்கள் நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியிலேயே இருக்கின்றன. சீரகம், சோம்பு, தனியா... மூன்றையும் தலா அரை டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து தினமும் குடிக்கலாம். வெறும் தனியாவை அரை டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்தாலே மாதவிடாய் சுழற்சி தூண்டப்படும்.  கற்றாழையின் ஜெல் பகுதியை எடுத்து, நான்கைந்து முறை கழுவி, துண்டுகளாக்கி, அரைத்து, அத்துடன் தேங்காய் பாலும் சிறிது தேனும் கலந்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து அப்படியே கீர் போலக் குடிக்கலாம். தொடர்ந்து இதைச் செய்துவர, பீரியட்ஸ் சுழற்சி நன்றாக முறைப்படும். முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுவது, மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துவதுடன், பீரியட்ஸின் போது வயிற்று வலி வராமலும் தடுக்கும். மாதுளம் பழம் சாப்பிடலாம். கேரட் ஜூஸ் குடிக்கலாம். மருத்துவர் பரிந்துரையோடு தினமும் எள்ளுருண்டை  சாப்பிடுவதும்  பீரியட்ஸ் சுழற்சியை முறைப்படுத்தும்.  Irregular Periods பப்பாளி சாப்பிடுவதும் இந்தப் பிரச்னைக்கான தீர்வாக அமையும். பப்பாளி, கர்ப்பப்பையைத் தூண்டி சுருங்கச் செய்யும் தன்மை கொண்டது. அப்படிச் சுருங்குவதால், ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும். அறிவியில்ரீதியாக  இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பழமாகச் சாப்பிடுவதைவிடவும், செங்கனியாக இருப்பதாகப் பார்த்துச் சாப்பிடுவது அதிக பலன்களைத் தரும். பப்பாளி Doctor Vikatan: அல்சரை குணப்படுத்துமா அம்மான் பச்சரிசி? இஞ்சியைத் துருவி, தண்ணீரில் சேர்த்து, சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து தேன் கலந்து குடித்தாலும் பீரியட்ஸ் சுழற்சி தூண்டப்பட்டு சீக்கிரமே மாதவிடாய் வரும். மாதவிடாய் நாள்களின் வலியும் குறையும், உடல் வெப்பத்தையும் தணிக்கும்.  பனைவெல்லம், பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போதும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகி, அதன் விளைவாக பீரியட்ஸ் சுழற்சி முறைப்படும்.  ஆனால், இதற்கெல்லாம் முன்பு, முறைதவறி வரும் மாதவிடாயின் பின்னணியில் வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதை மருத்துவரை அணுகித் தெரிந்து சிகிச்சை எடுப்பது அவசியம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 10 Apr 2024 9:00 am

Doctor Vikatan: ஆயில் மசாஜ், எப்சம் சால்ட், புது காலணி.. எதற்கும் குறையாத பாதவலி; தீர்வு கிடைக்குமா?

Doctor Vikatan: எனக்கு பாதங்கள் மிகவும் வலிக்கின்றன. வெந்நீரில் எப்சம் சால்ட் ( Epsom Salt) போட்டு அதில் கால்களை வைத்துப் பார்த்துவிட்டேன். ஆயில் மசாஜ் செய்து பார்த்துவிட்டேன். காலணிகளையும் மாற்றிப் பார்த்துவிட்டேன்.  ஆனாலும், பாதவலி  குறைவதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும்.... இதிலிருந்து விடுபட என்ன செய்வது? -உமா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார்  சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் பாத வலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, 'ஓவர்யூஸ் மயால்ஜியா' (overuse myalgia) எனும் அதிக வேலைப்பளுவினால் ஏற்படும் பாத அலுப்பு .  ஏதேனும்  விசேஷ நாள், கிழமைகளில் வழக்கத்தைவிட அதிகமாக நடக்க வேண்டியிருக்கலாம். விடுமுறைகளில் செல்லும் சுற்றுலாக்களில் அதிகம் நடக்க வேண்டியிருக்கலாம், அதனால் பாதங்களில் வலி ஏற்படலாம். இப்படிப்பட்ட வலி எல்லாம்  இந்த வகையைச் சேரும். இந்தவகை வலியிலிருந்து நிவாரணம் பெற  வெந்நீரில் எப்சம் உப்பு (Epsom Salt) சேர்த்து, கால்களை வைத்திருப்பது, பாதங்களுக்கான மசாஜ் போன்றவை பெரிதும் உதவும். ஆனால், இது போல எந்த நிகழ்வும் இல்லாமல் வலி இருப்பின் முதலில் எடை அதிகரித்துள்ளதா என்று பார்க்க வேண்டும். உடல் பருமன் தலையைக் கழற்றி தனியே வைக்க முடியுமா?! | வலியே, என் உயிர் வலியே - 1 உடல் எடையில் ஒவ்வொரு 2 கிலோ  அதிகரிக்கும் போதும், பாத தசைகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். இதனால் ஏற்படும் பாத வலியை, எடைக்குறைப்பால் மட்டுமே சரி செய்ய இயலும். மேலும், ரத்தச் சக்கரை அளவையும் கண்காணிக்க வேண்டும். 5 வருடங்களுக்கு மேல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாத நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பாதிப்பு அடையும் வாய்ப்புகள் அதிகம். எனவே, அதற்கான மருந்துகளைத் தொடங்குவதன் மூலம், பாத வலியையும் சரி செய்யலாம். பாத வலிக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும், மணலின் மேல் 20 நிமிடங்கள் நடப்பது, பாத விரல்களால் சிறு மணிகளை எடுப்பது, பாத தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் செய்வது போன்றவை மூலம் வலியைக்  குறைக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 9 Apr 2024 9:00 am

Cancer: உலகின் புற்றுநோய் தலைநகரமாகும் இந்தியாஅதிர வைக்கும் அப்போலோவின் அறிக்கை..!

`உலகின் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது' என அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.  ஆண்டுதோறும் இந்தியாவின் சுகாதாரம் குறித்த அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2024 உலக சுகாதார தினத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா உள்ளது என எச்சரித்துள்ளது. மேலும், இந்தியாவில் புற்றுநோய், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் மனநலப் பிரச்னைகள் உள்ளிட்ட தொற்றாத நோய்கள் (non-communicable diseases) அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. சர்க்கரை நோய் Doctor Vikatan: கோடைக்காலம், அந்தரங்க உறுப்பில் அரிப்பு... பேக்கிங் சோடா உதவுமா? அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்… அச்சுறுத்தும் புற்றுநோய்… *இந்தியாவிலுள்ள பெண்கள் பொதுவாக மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். *நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களால் ஆண்கள் பொதுவாக பாதிக்கப்படுகின்றனர். *இந்தியாவில் 2020-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.39 மில்லியனாக இருந்தது. 2025-ல் இந்த எண்ணிக்கை 1.57 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நோயின் பாதிப்பு ஐந்து ஆண்டுகளில் 13% வளர்ச்சியடைகிறது. *மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சராசரி வயது குறைவாக உள்ளது. இந்தியாவில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சராசரி வயது 52-ஆக இருக்கிறது. அதுவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சராசரி வயது 63 ஆக உள்ளது.  *இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சராசரி வயது 59, மேற்கு நாடுகளில் இது 70-ஆக இருக்கிறது.  புற்றுநோய் பரிசோதனையில் பின்தங்கும் இந்தியா... *மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் அமெரிக்காவில் 82 சதவிகிதமாகவும், இங்கிலாந்தில் 70 சதவிகிதமாகவும் மற்றும் சீனாவில் 23 சதவிகிதமாகவும் உள்ளது. அதுவே, இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை 1.9 சதவிகிதமாகவுள்ளது.  *இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை 0.9% உள்ளது. இப்பரிசோதனைகள் அமெரிக்காவில் 73 சதவிகிதமாகவும், இங்கிலாந்தில் 70 சதவிகிதமாகவும் மற்றும் சீனாவில் 43 சதவிகிதமாகவும் உள்ளன.  stress கர்ப்பக்கால மனஅழுத்தம்: கருக்கலைப்புக்குக் காரணமாகலாம்! - மருத்துவர் விளக்கம்... அதிகரிக்கும் தொற்றா நோய்கள்: *இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 63 சதவிகிதம் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. 2030-ம் ஆண்டிற்குள் இந்த நோய்களால் இந்தியாவிற்கு 3.55 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. *மூன்று இந்தியர்களில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (pre-diabetic) இருக்கிறார். *மூவரில் இருவர் உயர் ரத்த அழுத்தத்திற்கு முந்தைய நிலையில் (pre-hypertension) இருக்கின்றனர் என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மனஅழுத்தம்: *சோதனைக்குட்படுத்தபட்ட 5000 நபர்களில் ஒவ்வொரு 10 நபர்களில் ஒருவர் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். *18-25 வயதிற்குட்பட்டவர்களிடையே மனஅழுத்தத்தின் சதவிகிதம் அதிகமாக உள்ளது. இந்த வயதுடையவர்களில் ஐந்தில் ஒருவர் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.  *18-30 வயதுடையவர்களில் 80 சதவிகிதமும், 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களில் கணிசமானவர்கள் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

விகடன் 8 Apr 2024 3:11 pm

Doctor Vikatan: கோடைக்காலம், அந்தரங்க உறுப்பில் அரிப்பு... பேக்கிங் சோடா உதவுமா?

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் வந்தாலே அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு ஆரம்பித்துவிடும். பவுடர் போட்டாலும், இருமுறை குளித்தாலும் அந்த அரிப்பு கட்டுப்படுவதில்லை. கூகுளில் தீர்வு தேடியபோது பேக்கிங் சோடா பயன் தரும் என்ற தகவல் கிடைத்தது. அது உண்மையா.... எப்படிப் பயன்படுத்த வேண்டும்? கோடைக்காலத்தில் ஏற்படும் இந்த அரிப்புக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்   மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் Doctor Vikatan: Stress.. சட்டென மனநிலையை மாற்றும் மாத்திரைகள் உள்ளதா... யார் எடுத்துக்கொள்ளலாம்? கோடைக்காலத்தில் பலரும் சந்திக்கிற பிரச்னை இது. கூகுளில் தீர்வு தேடினால், பேக்கிங் சோடா மட்டுமல்ல, தயிர், புரோபயாடிக், க்ரீம் என ஏராளமான தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.  இவையெல்லாம் பலன் தருமா என்று தெரிந்துகொள்வதற்கு முன் அரிப்புக்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.  கோடைக்காலத்தில் அந்தரங்க உறுப்புகளில் வியர்வை அதிகமாகத் தங்கும். குறிப்பாக, உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கும், தொடைப்பகுதிகளில் கொழுப்பு அதிகமுள்ளவர்களுக்கும் வியர்வை இன்னும் அதிகமாகத் தங்கும். நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாக இருக்கும். இவர்களுக்கெல்லாம் அந்தப் பகுதிகளில் டீனியா (Tinea) அல்லது கேண்டிடா (Candida) என்ற பூஞ்சைத் தொற்று ஏற்படும். இந்தத் தொற்றின் காரணமாக அந்தப் பகுதிகளில் வீக்கம் ஏற்படும். அதன் விளைவாகவே அங்கே அரிப்பு ஏற்படுகிறது. ஆன்டிஃபங்கல் க்ரீம் (Antifungal Cream) என்று கேட்டு வாங்கி, அரிப்புள்ள இடங்களில் தடவலாம். இந்த க்ரீம்களில் ஸ்டீராய்டு இல்லாததாகப் பார்த்து வாங்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிஃபங்கல் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். அந்தரங்க உறுப்பு அரிப்பு Doctor Vikatan: எப்போதும் நீங்காத வாய் துர்நாற்றம்... நிரந்தர தீர்வு கிடைக்குமா? அந்தரங்கப் பகுதிகளில் வியர்வை தங்காதபடி, வசதியான உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான, சிந்தெடிக் உள்ளாடைகள் வியர்வையை அதிகப்படுத்தும். எனவே, தளர்வான காட்டன் உள்ளாடைகளே சிறந்தவை. முடிந்தவரை காற்றோட்டமான இடங்களில் இருக்க வேண்டியதும் முக்கியம். உடல் பருமன் அதிகமிருந்தால், முதலில் அதைக் குறைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதேபோல, ரத்தச் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது முக்கியம். இந்த எளிய வழிகளின் மூலமே அந்தரங்க உறுப்பு அரிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம். ஆன்லைனை பார்த்து கண்ட சிகிச்சைகளையும் பின்பற்றி, தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு, பாதிப்பைத் தீவிரப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 8 Apr 2024 9:00 am

Breast Size: மார்பகங்கள் ஒரே அளவுலதான் இருக்கணுமா..? - காமத்துக்கு மரியாதை 157

பெண்கள் தங்கள் உடல் சார்ந்த சந்தேகங்களையும் பிரச்னைகளையும் அவ்வளவு சுலபத்தில் யாரிடமும் பேசி நிவர்த்தி செய்துகொள்ள மாட்டார்கள். அவற்றில் ஒன்றுதான், `ஒரு பக்க மார்பகம் பெரிதாக இருக்கிறது... மறுபக்கமோ அதைவிட சிறிதாக இருக்கிறது... இது பிரச்னையா அல்லது இயல்பானதா' என்கிற சந்தேகம். இந்த வாரம் இதுபற்றி பேசுகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். '' சில பெண்களுக்கு மார்பகங்கள் ஒரு பக்கம் பெரிதாகவும், மற்றொரு பக்கம் சற்று சிறியதாகவோ, வடிவில் சற்று வித்தியாசமாகவோ இருக்கும். இந்தப் பெண்களுக்கு 'இந்த அளவு வித்தியாசம் நமக்குத் தெரிஞ்ச மாதிரி மத்தவங்களுக்கும் தெரிஞ்சுடுமோ' என்கிற பயமும் கூச்சமும் இருக்கும். சிலருக்கு 'இது ஏதாவது பிரச்னையா இருக்குமோ' என்கிற பயத்தையும் ஏற்படுத்திவிடும். Models Sexual Wellness: `ச்சீ, என் பிள்ள சுயஇன்பம் செய்யுறானே'ன்னு கோபப்படறீங்களா?| காமத்துக்கு மரியாதை 153 பெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக மனிதர்களுடைய உடலின் இருபக்கங்களும் ஒன்றுபோல இருக்காது. பார்ப்பதற்கு பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது என்றாலும், பலருடைய உடலிலும் இந்த வித்தியாசம் இருக்கும். உற்றுப்பார்த்தால் மட்டுமே இது தெரியும். உடலின் வெளிப்புற உறுப்புகள் மட்டுமல்ல, உடலின் உள்ளுறுப்புகளும் ஒரு பக்கத்தில் இருப்பதுபோல மறுபக்கத்தில் இருக்காது. ஆண்களின் விதைப்பைகள்கூட ஒருபக்கம் ஏறியும் ஒருபக்கம் இறங்கியும்தான் இருக்கும். இயற்கை, மனித உடலமைப்பை இப்படித்தான் படைத்திருக்கிறது. மார்பகங்கள் இரண்டும் ஒன்றுபோலவே இருப்பதும், ஒரே அளவில் இருக்க வேண்டியதும் அவசியமே இல்லை; அப்படி இருக்கவும் இருக்காது. அளவும் வடிவும் மாறி மாறித்தான் இருக்கும். இது பிரச்னையா என்றால், பெரும்பாலும் இல்லை'' என்றவர் தொடர்ந்தார். Dr. Kamaraj Sexual Wellness: அதென்ன முதலிரவு... முதல் பகல்னு இருக்கக் கூடாதா..? - காமத்துக்கு மரியாதை - 155 ''திருமணமான பெண்களில் பெரும்பாலானோருக்கு இடது மார்பகம் வலது பக்கத்தைவிட சற்று பெரிதாக இருக்கும். இதற்கு காரணம் பெரும்பாலான ஆண்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள் என்பதுதான். இந்தக் காரணமில்லாமலும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் இயல்பானதுதான். ஒருவேளை சாதாரணமாகப் பார்த்தாலே வித்தியாசம் நன்கு தெரிகிறது என்றாலும், பெரும்பாலும் அதனால் எந்தப் பிரச்னையும் இருக்காது. வெளியே தெரிகிற அளவுக்கு வித்தியாசம் தெரிகிற நிலையில் இருக்கிற பெண்களும், உடல் வடிவத்துக்கு முக்கியத்துவம் தருகிற மாடலிங், ஆக்டிங் போன்ற வேலைகள் செய்கிற பெண்களும் சிறிய அறுவைசிகிச்சையின் மூலம் இதைச் சரிசெய்து கொள்ளலாம். மற்ற பெண்களுக்கு அறுவை சிகிச்சையெல்லாம் அவசியமில்லை. பெண்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதே என் கருத்து. 'இது ஏதேனும் பிரச்னையாக இருக்குமோ' என்று பயப்படுகிற பெண்கள் மட்டும் மருத்துவரை அணுகுவது நல்லது'' என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

விகடன் 7 Apr 2024 6:00 pm

Doctor Vikatan: Stress.. சட்டென மனநிலையை மாற்றும் மாத்திரைகள் உள்ளதா... யார் எடுத்துக்கொள்ளலாம்?

Doctor Vikatan: என்னுடைய தோழி, அடிக்கடி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்கிறாள். மனநிலை சரியில்லாத நாள்களிலும், ஸ்ட்ரெஸ்ஸாக உணருமபோதும் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால், உடனே மனநிலை மாறும் என்கிறாள். இது உண்மையா? இந்த மாத்திரைகளை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் சுபா சார்லஸ் இன்றைய நவீன உலகில்  ஸ்ட்ரெஸ் இல்லாத மனிதர்களே இல்லை என்கிற அளவுக்கு எல்லோரும் எதன் பின்னாடியோ ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.  போட்டிகள், ஆசைகள், தேடல்கள் என எல்லாம் அதிகரித்துவிட்டன. ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை தவிர்க்க முடியாததாகிவிட்டது.  எந்த வேலையுமே செய்யாமலிருந்தால் ஸ்ட்ரெஸ் இருக்காதா என்றால் அதுவும் சாத்தியமில்லை. சும்மா இருப்பது இன்னும் அதிக ஸ்ட்ரெஸ்ஸையே கொடுக்கும். ஆடு, மாடு, நாய், பூனை என விலங்கினங்களுக்கு மோட்டிவேஷன் தேவையில்லை. சாப்பிடுவது, இயற்கை உபாதைகளைக் கழிப்பது, இனப்பெருக்கம் செய்வது என அவை இயந்திரத்தனமான வேலைகளைச் செய்து வாழ்ந்து முடியும். மனிதர்கள் அப்படியல்ல... அவர்களுக்கு இலக்குகள், லட்சியங்கள் உண்டு. அவற்றை நோக்கி முன்னேற அவர்களுக்கு மோட்டிவேஷன் தேவை.  முன்னேறுவது மனிதப் பண்பு.  அதே சமயம், போதுமென்ற மனநிலையோடு பேலன்ஸ் செய்யவும் பழக வேண்டும். இந்த பேலன்ஸ் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அதன் விளைவாக ஸ்ட்ரெஸ்ஸில் தவிக்கிறார்கள்.  Stress Doctor Vikatan: முன்னந்தலையில் முடி உதிர என்ன காரணம்... தடுக்க முடியுமா? ஸ்ட்ரெஸ்ஸை குறைப்பதற்கான மாத்திரைகள் நிறைய உள்ளன. திடீரென பதற்றமாக உணரும்போது, திடீரென பயம் உண்டாகும்போது, திடீரென படபடப்பாகும்போது... இப்படிப் பல தருணங்களில் சாப்பிடும் மாத்திரைகள் இன்றைய நவீன மருத்துவத்தில் உள்ளன. ஆனால், இந்த மருந்துகளுக்குப் பக்க விளைவுகள் இருக்கும். தூக்கம் அவற்றில் மிக முக்கியமான பக்கவிளைவு. எனவே, அளவாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அடிக்ஷனாக மாறிவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்துகளை அவசியத்துக்கு அளவாக எடுத்துக்கொண்டால், மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.  உங்கள் தோழி எடுத்துக்கொள்வதாக நீங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பது வைட்டமின் மாத்திரை.  அதில் நிறைய உள்ளன. குறிப்பாக, வைட்டமின் டி மாத்திரை. சூரிய ஒளி நம் உடலில் படும்போது நம் சருமம் உற்பத்தி செய்கிற வைட்டமின் அது.  மருத்துவர் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல், மனநிலைக்கு உதவும். இவை தவிர, வைட்டமின் பி12 மாத்திரையும் நல்ல மனநிலைக்கு உதவும். வைட்டமின் சி மாத்திரை எடுத்துக்கொண்டால் நன்றாக உணர்வதாகச் சிலர் சொல்வார்கள்.  வைட்டமின் டி Doctor Vikatan: இளநரையை மறைக்க மருதாணிக் கலவை பயன்படுத்தலாமா? சிலருக்கு காரணமே இல்லாமல் ஸ்ட்ரெஸ் உண்டாகும். ஒரு வாக் போய்விட்டு வந்தால் ஸ்ட்ரெஸ் மறைவதையும், கோயிலுக்குச் சென்று வந்தால் அது மாயமாவதையும் உணர்வார்கள். அப்படிப்பட்ட சின்னச்சின்ன விஷயங்களே ஸ்ட்ரெஸ்ஸை போக்கிவிடும். அது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்தது. எனவே, உங்கள் தோழி எந்த மாத்திரையை, எவ்வளவு எடுத்துக்கொள்கிறார் என்ற விவரங்கள் தெரியாமல் நீங்களும் அவற்றை எடுக்க வேண்டாம். மருத்துவ ஆலோசனையுடன் உங்களுக்கானதை எடுப்பதே பாதுகாப்பானது.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 7 Apr 2024 9:00 am

Happy Teeth: உங்கள் குழந்தைக்கு Tooth Paste விழுங்கும் பழக்கம் இருக்கிறதா?

உங்கள் குழந்தைக்கு Tooth Paste விழுங்கும் பழக்கம் இருக்கிறதா? இப்பதான பிரஷ்ல பேஸ்ட் வெச்சுக் கொடுத்தேன்...அதுக்குள்ள மறுபடி வந்து வைக்கச் சொல்ற... குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதுபோன்ற பேச்சுகளை அடிக்கடி கேட்டிருப்போம். நாமே குழந்தையாக இருந்தபோதும் இதைக் கேட்டிருக்கலாம். டூத் பேஸ்ட் இனிப்பாக இருப்பதால் குழந்தைகளுக்கு அதன் சுவை பிடித்துப் போய் விழுங்கிவிடுகின்றனர். Brushing Happy Teeth: Heart Patients பல் சிகிச்சைக்கு முன்னால இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! ஆனால், அப்படி விழுங்குவது பல் சார்ந்த பிரச்னையை உருவாக்கலாம் என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஃபெலிஷியா கிறிஸ்டினா ஹெப்சிபா. குழந்தைகளுக்கு எப்படி டூத் பேஸ்ட் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்குகிறார் அவர். பெரியவர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்டை குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது. பெரியவர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்டில் ப்ளூரைடு (Fluride) என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டிருக்கும். குழந்தைகளுக்கு ஃப்ளூரைடு சேர்த்திருக்கும் டூத் பேஸ்ட் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். பேஸ்டில் இனிப்புச் சுவை இருப்பதால் குழந்தைகள் அதை விழுங்கிவிடக்கூடும். Tooth paste Happy Teeth: விளம்பரங்கள் பார்த்துதான் Tooth paste வாங்குறீங்களா? அப்போது பேஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கும் ஃப்ளூரைடு வயிற்றுக்குள் செல்வதால் நிரந்தப் பற்கள் முளைக்கும்போது ஃப்ளூரோசிஸ் (Fluorosis) என்ற பிரச்னை ஏற்படலாம். ஃப்ளூரைடுக்கு அதிகம் வெளிப்படுபவர்களின் பற்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் புள்ளிகள், திட்டுகள் போன்று உருவாகும். ஃப்ளுரோசிஸ் பிரச்னையின் முக்கிய அறிகுறி இதுதான். பற்களில் மட்டுமன்றி எலும்புகளையும் ப்ளூரோசிஸ் பிரச்னை பாதிக்கக்கூடும். இது பற்களின் மேல்பகுதியான எனாமலை பாதித்து, பற்களின் தோற்றம், ஆரோக்கியத்தையும் பாதிக்கும். குழந்தைகளுக்கான பிரத்யேக டூத் பேஸ்ட்டை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து வயதினருக்கும் ஏற்ற மாதிரி டூத் பேஸ்டை தேர்வுசெய்ய வேண்டும். Kid Happy Teeth: கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை... குழந்தையை பாதிக்குமா? தற்போது சர்க்கரை, நிறமிகள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், பொறித்த உணவுகள் என ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கின்றனர். இதனால் உடல் நலம் மட்டுமல்ல பற்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஒவ்வொருவரின் உணவுப்பழக்கம், பற்களின் தன்மை, அவரவரின் வாய் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் டூத் பேஸ்ட்டை தேர்வுசெய்ய வேண்டும். எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அவரவர் பற்களின் தன்மைக்கேற்ற இடுபொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும் டூத் பேஸ்ட்டை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிறம் நன்றாக இருக்கிறது, சுவை பிடித்திருக்கிறது என்று நாமே சுயமாக டூத்பேஸ்டை வாங்கிப் பயன்படுத்தினால் பற்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. பல் மருத்துவர் ஃபெலிஷியா கிறிஸ்டினா ஹெப்சிபா பொதுவாகவே நமது நாட்டில் பல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுவது குறைவாகவே உள்ளது. ஏதாவது தொந்தரவு, வலி, வீக்கம் என சமாளிக்க முடியாத அளவு பிரச்னை வரும்போதுதான் பல் மருத்துவரை அணுகிறார்கள். மேலை நாடுகளில் குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் முதலே குறிப்பிட்ட இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஆலோசனைக்காகச் செல்வார்கள். பல் முளைப்பதே அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதனால் சிறு குழந்தை முதலே பல் மருத்துவரை அணுக வேண்டும். மேலும், அங்கு பல் சிகிச்சைக்கான காப்பீடு இருப்பதாலும் குறிப்பிட்ட இடைவெளியில் பல் மருத்துவரை அணுகுகின்றனர். இதனால் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பாகவே அதைக் கண்டறிந்துவிட முடியும் என்கிறார் பல் மருத்துவர் ஃபெலிஷியா கிறிஸ்டினா ஹெப்சிபா. Brushing Happy Teeth: வீட்டிலேயே Teeth Whitening சிகிச்சை செய்யலாமா? பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும். பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

விகடன் 6 Apr 2024 6:00 pm

காயத்துக்குப் பயன்படுத்தும் Bandage புற்றுநோயை ஏற்படுத்துமா? அதிர்ச்சித் தகவல்!

உடலில் சிறிய காயம், சிராய்ப்பு ஏற்பட்ட உடனே முதலுவதவியாக பேண்டேஜை எடுத்து காயத்தின் மீது ஒட்டிவிடுவோம். காயத்தைக் குணப்படுத்தும் பேண்டேஜ் புற்றுநோய் போன்ற கொடிய நோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் நுகர்வோர் பாதுகாப்பையும் கண்காணிக்கும் அமைப்பான Mamavation மற்றும் Environmental health news இணைந்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. First aid kit Doctor Vikatan: முன்னந்தலையில் முடி உதிர என்ன காரணம்... தடுக்க முடியுமா? இந்த ஆய்வில் காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் பேண்டேஜ்களில் PFAS எனப்படும் பாலி ஃப்ளுரோஅல்கையில் மற்றும் PTFE எனப்படும் பாலி டெட்ரோ ஃப்ளுரோ எத்திலின் போன்ற வேதிப்பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதில் 40-க்கும் மேற்பட்ட பிரபல பிராண்டுகளின் பேண்டேஜ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 26 பிராண்டுகளில் இந்த வேதிப்பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த நச்சுயியல் நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியரும், அந்நாட்டு தேசிய சுற்றுச்சூழல் சுகாதார நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான மருத்துவர் லிண்டா எஸ் பிர்ன்பாம் பேசுகையில், PFAS போன்ற கரிம வேதிப்பொருள்கள் பொதுவாக கறைகள், எண்ணெய்ப் பசைகள் ஒட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக சேர்க்கப்படுபவை. இவை பெரும்பாலும் வீட்டில் பயன்படுத்தப்படும் நான்ஸ்டிக் பொருள்களின் தயாரிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும். Cancer Doctor Vikatan: சம்மரில் weight loss  செய்வது சுலபமா? காயத்தைக் குணப்படுத்த PFAS போன்ற வேதிப்பொருள்கள் அவசியம் இல்லை. ஆனால், பேண்டேஜ்களில் ஒட்டுவதற்கான பசை இருக்கும் பகுதிகளில் அவை காணப்படுகின்றன. காயத்தில் நீர் புகுந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வேதிப்பொருள் சேர்க்கப்பட்டிருக்கலாம். வெட்டுக் காயங்கள் போன்ற உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களில் பேண்டேஜ்கள் ஒட்டப்படும்போது ரத்தத்தினுள் கலந்து திசுக்களில் ஒட்டி வளர்ச்சி அடையக்கூடும். இது பல ஆண்டுகளாக மனித உடலிலேயே தங்கியிருக்கும். Bandage கனவு -131 | `வாழை நார் Medical Bandage முதல் Moss Cement வரை...' | ஈரோடு - வளமும் வாய்ப்பும்! இதனால் தைராய்டு, இனப்பெருக்க பிரச்னை, வளர்ச்சி ஹார்மோன்கள் பாதிப்பு, உடல் பருமன் கோளாறுகள், நோய் எதிர்ப்பு திறன் குறைவு, நாளமில்லா சுரப்பி சீர்குலைவு போன்ற பிரச்னைகள், உயிரையே பறிக்கக்கூடிய புற்றுநோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்பை 56 % வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது‌. எனவே, தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது விற்பனையில் இருக்கும் பேண்டேஜ்களை (Bandage) திரும்பப் பெற்று, வேதிப்பொருள்கள் இல்லாதவற்றை உற்பத்தி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விகடன் 6 Apr 2024 4:51 pm

அப்சரா ரெட்டி தொடர்ந்த அவதூறு வழக்கு: 50 லட்சம் இழப்பீடு வழங்க யூடிபருக்கு அதிரடி உத்தரவு!

அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநர் அப்சரா ரெட்டி, யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராகத் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில், மனுதாரருக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஏற்கெனவே விதிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.  அப்சரா ரெட்டி, கொடை தந்த வடக வியாபாரி, கண்களைக் குளமாக்கிய வாச்சாத்தி- வாசகரைக் கவர்ந்த விகடன் நம்பிக்கை விருதுகள்! முன்னதாக ஜோ மைக்கேல் பிரவீன், அப்சரா ரெட்டியின் மீது அவதூறு பரப்பும் வகையில் 10-க்கும் மேற்பட்ட வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அப்சரா ரெட்டி, தனக்கெதிராக வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்குமாறும், நஷ்ட ஈடாக 1.25 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடுமாறும் கோரிக்கை வைத்தார்.  பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், யூடியூபில் கருத்துகளை வெளியிடுவது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும், பிறரின் தனிப்பட்ட உரிமையில் தலையிட முடியாது என்றும் கூறி, மனுதாரருக்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து, தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் இந்த உத்தரவை ரத்து செய்யுமாறும் நீதிமன்றத்தில் ஜோ மைக்கேல் பிரவீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீண்டும்  நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது அவருக்குத் தெரியும் என்று அப்சரா ரெட்டி தரப்பில் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன.  court order -Representational Image `கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கான வழியே பணமதிப்பிழப்பு..!' - உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா அப்போது நீதிபதி சதீஷ்குமார், ``நீதிமன்றத்துக்கு சுத்தமான கரங்களுடன் வந்தால், முன்பு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதன் மூலம் நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், ஒரு விண்ணப்பதாரர் நீதிமன்றத்துக்கு உண்மைகளை மறைத்து வந்தால், அவர் அதற்குத் தகுதியற்றவராகிறார்’’ என்று கூறி ஜோ மைக்கேல் பிரவீனின் மனுவைத் தள்ளுபடி செய்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவை உறுதி செய்தார்.

விகடன் 6 Apr 2024 3:43 pm

`எந்த மருந்தும் எடுக்கல, சர்க்கரை நோயிலிருந்து மீண்டேன்'... சிஎஃப்ஓ-வின் ரியல் ஸ்டோரி சாத்தியமா?!

வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல, இப்போதெல்லாம் வீட்டிற்கு ஒருவர் சர்க்கரை நோயாளியாக இருக்கிறார். `எனக்கு ஒன்று’, `எனக்கு போன மாசத்துல இருந்து இரண்டு’ எனக் கல்யாணம், காதுகுத்து... ஏன் டீக்கடைகளில் கூட சுகர் மாத்திரைகளை குறித்து பலர் பேசிக் கொள்கிறார்கள்.   ஒருபுறம் சர்க்கரையைக் குறைக்கப் பெரும்பாலானவர்கள் மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிஎஃப்ஓ எந்த மருந்தும் இல்லாமல் சர்க்கரை நோயிலிருந்து மீண்டுள்ளதாகக் கூறியுள்ளார். இது எப்படிச் சாத்தியமானது எனப் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.  Running (Representational Image) Doctor Vikatan: தினமும் காலையில் வயிற்றுப்போக்கு... பிரச்னையின் அறிகுறியா... சிகிச்சை தேவையா? அமோலி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின்  சிஎஃப்ஓ- ஆக பணிபுரிபவர் 51 வயதான ரவி சந்திரா. இவர் 2015-ல் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்தச் சமயம் மருத்துவர்கள் அவரை மருந்துகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் அதற்கு மாறாக ரன்னிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.  அவர் 29 ஓட்ட பந்தயங்கள், ஹாங்காங், சீனா, தைவான் மற்றும் இந்தியாவில் 12 மராத்தான்கள், 5 அரை மராத்தான்கள், ஏழு 10 கிலோமீட்டர் பந்தயங்கள் என இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு ஓடியுள்ளார். ஆக்ஸிஜனை நுகரும் பயிற்சிகளையும் (Maximal aerobic Exercise) செய்தார்.  அதோடு உணவு முறைகளையும் மாற்றியிருக்கிறார். சைவ உணவுகளை மட்டுமே உண்பதாகவும், அரிதாகவே மீன் அல்லது கோழி சாப்பிடுவதாகவும் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து ஓடத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவரது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.  இது குறித்து அவர் கூறுகையில், ``நான் மருந்துகளை எடுக்கத் தொடங்கியிருந்தால், மருந்தின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று உணர்ந்தேன். என் உடற்பயிற்சி நிலைகளை மேம்படுத்துவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று உணர்ந்தேன்.  Diabetes Doctor Vikatan: சம்மரில் weight loss  செய்வது சுலபமா? கூடுதலாக, எனது பணி மிகவும் மன அழுத்தமாக இருந்தது, வழக்கமான உடற்பயிற்சி என்னை அமைதிப்படுத்த உதவும் என்று நினைத்தேன். நான் முதலில் ஒரு கிலோமீட்டர் நடக்க ஆரம்பித்தேன், பின்னர் நான் 10 கிலோ மீட்டர் வரை ஓடுவேன், நடப்பேன். விரைவில், எனது ஸ்டாமினா மேம்பட்டது. அதனால், வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை எங்கேயும் நிற்காமல் 10 கிலோ மீட்டர் வரை என்னால்  ஓட முடிந்தது’’ என்றார். ரன்னிங் மற்றும் டயட் என வாழ்க்கை முறையை மாற்றியமைத்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியுமா எனச் சென்னையைச் சேர்ந்த சர்க்கரைநோய் மருத்துவர் அஸ்வின் கருப்பன் அவர்களிடம் பேசினோம்…     ``டைப் 2 சர்க்கரை நோயாளிகள் ரன்னிங் பயிற்சி செய்வதன் மூலமாகவே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும். டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் உடல் எடை அதிகமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  இயல்பாகவே 70 கிலோ வரை உடல் எடை இருக்கலாமெனில், 80 கிலோ எடை இருந்தாலும், உடலானது தாங்கிக் கொள்ளும். அதன்பிறகு வயதாக வயதாக இன்சுலின் சுரப்பது குறையும். இதனால் உடல் எடை அதிகமிருப்பவர்களுக்குச் சாதாரணமாகவே  சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கும். சென்னையைச் சேர்ந்த சர்க்கரைநோய் மருத்துவர் அஸ்வின் கருப்பன்! Doctor Vikatan: முன்னந்தலையில் முடி உதிர என்ன காரணம்... தடுக்க முடியுமா? 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக உடல் எடை இருந்தாலே அவர்களுக்கு வெறும் வயிற்றில் இருக்கக் கூடிய சர்க்கரையின் அளவு (Fasting Glucose Level) அதிகமாக இருக்கும். அவர்கள் அனைவருமே `பார்டர்லைன் டயாபடீஸ்’ (Borderline diabetes) எனப்படும் சர்க்கரை நோயின் முந்தைய நிலையில் இருக்கின்றனர்.  இது போன்ற நோயாளிகள் நன்றாக ரன்னிங் மற்றும் உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்து, டயட்டில் இருந்தால் கட்டாயம் அவர்களால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து மீள (Reverse) முடியும். ஆனால், இதைச் செய்யத் தான் மக்களுக்கு நேரமில்லை.  அந்த நபர், `Maximal aerobic function’ டெக்னிக்கை பின்பற்றியதாகக் கூறியிருப்பார். ரன்னிங், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஸ்விம்மிங் போன்ற உடற்பயிற்சிகளை நாம் ஆக்ஸிஜனை அதிகம் நுகரும் உடற்பயிற்சி (Aerobic Excercise) என்போம். இது போன்ற உடற்பயிற்சிகள் செய்கையில், கலோரிகள் அதிகம் செலவிடப்படும்.  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அவர் சாப்பாட்டின் அளவையும் குறைந்திருப்பதாகக் கூறியுள்ளார். உடற்பயிற்சி, டயட் என இதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தால் கட்டாயம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும்.  சர்க்கரை நோயாளிகளில் 50% பேர் இவற்றையெல்லாம் பின்பற்றினாலே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால், இதையெல்லாம் தொடர்ந்து பின்பற்றி வரும்வரையில் தான் கட்டுப்படுத்த முடியும். மக்கள் தொடர்ந்து இவற்றையெல்லாம் பின்பற்றத் தவறுவதாலேயே மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். Smiling ``மாட்டின் இதயம் மற்றும் கல்லீரலை உண்பேன்'': டயட் ரகசியம் பகிர்ந்த பிரபலம்! சர்க்கரை நோய் பாதிப்புடையவர்கள் ஓட ஆரம்பித்துவிட்டாலே 50% நோயாளிகளுக்கு மாத்திரையே தேவைப்படாது. ஆனால், தினமும் ஓடுவார்களா என்பது கேள்விக்குறி. சில நாள்கள் பயிற்சி செய்து, சில நாள்கள் டயட் எடுத்து பின்னர் சர்க்கரையின் அளவு நார்மலாக தானே இருக்கிறது எனப் பயிற்சியை விடுவார்கள், டயட்டை விடுவார்கள். இந்த மாதிரி பிரச்னைகள் இருப்பதாலேயே மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.  சர்க்கரை நோயாளிகள் அவர்களது வாழ்க்கைமுறையில் ஒரு பழக்கமாகவே இவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும். என்ன நடந்தாலும் நடக்காவிடினும் உலகத்தின் எந்த மூலையில்  இருந்தாலும் இவற்றையெல்லாம் ஒருபோதும் விடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்வார்களெனில் சர்க்கரை நோயின் மருந்துகளிலிருந்து விடுபட்டு இனிமையாக வாழலாம்…

விகடன் 6 Apr 2024 12:27 pm

Taiwan Earthquake: நிலநடுக்கத்தில் குழந்தைகளைப் பாதுகாத்த செவிலியர்கள்... வைரல் வீடியோ!

தைவானில் புதன்கிழமையன்று 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது ஒன்பது பேர் வரை இறந்தனர் மற்றும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன.  தைவான் நிலநடுக்கம் - 2024 Twins: 22 நாள்கள் இடைவெளியில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாய்... மருத்துவ உலகின் அதிசயம்! ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கைகளும் அறிவிக்கப்பட்டு இருந்தன. மேலும், நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்பின் வீடியோக்கள் வெளியாகி பலரையும் பதைபதைக்க வைத்தன. சோஷியல் மீடியாக்களில் தைவானின் நிலநடுக்க காட்சிகள் குவிந்தன.  இந்நிலையில், தைவான் மருத்துவமனை ஒன்றில் பூகம்பத்தின்போது பதிவாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளன. அந்த வீடியோவில், பிறந்த குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்.  Nurses in a Taiwan Hospital protecting babies during Earthquake pic.twitter.com/I66wVRdMME — Bonjour (@imromec) April 3, 2024 ``இது எங்கள் தெய்வப்பூ... காலநிலை மாற்றத்தால் காணாமல் போகிறது - தைவான் பழங்குடி மக்களின் ஆதங்கம்! நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை கட்டடம் நடுங்கத் தொடங்குகிறது. உடனடியாக இன்குபேட்டர்களை நான்கு செவிலியர்கள் ஒருசேரப் பிடிக்கின்றனர். குழந்தைகளை முதலில் பாதுகாக்க வேண்டும் என்று குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள தொட்டிலை (bassinets) நிறுத்தப் போராடுகின்றனர்...  இந்த வீடியோ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டு, 2.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அவசர சூழலில் தங்களது உயிரைத் துச்சமென நினைத்து குழந்தைகளைக் காக்கும் செவிலியர்களைப்  பலரும் பாராட்டி வருகின்றனர். 

விகடன் 5 Apr 2024 6:26 pm

3 மடங்கு துல்லியம்... பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள `வேற மாதிரி' MRI scan கருவி!

அதிக துல்லியமான MRI கருவி: உலகில் முதன்முறையாக மனித மூளையில் உள்ள நுண்ணுறுப்புகளின் செயல்பாடுகளைக்கூட காட்சிப்படுத்தும் அதிகாந்த சக்தி வாய்ந்த எம்ஆர்ஐ ஸ்கேனிங் இயந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர் பிரான்ஸ் நாட்டின் அணுசக்தி ஆணைய ஆராய்ச்சியாளர்கள். எம்ஆர்ஐ (MRI - Magnetic resonance imaging) ஸ்கேன் என்பது சக்தி வாய்ந்த காந்த அலை உதவியுடன் கண்களால் காண முடியாதவற்றை ஸ்கேன் செய்து திரையில் காண்பது ஆகும். MRI Scan Doctor Vikatan: உடல்பருமனுக்கும் மூட்டுவலிக்கும் என்ன தொடர்பு? மருத்துவத்துறையில் மனித உடலைப் பரிசோதித்து, கண்களால் காண முடியாத பிரச்னைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. பொதுவாக மருத்துவமனைகளில் MRI ஸ்கேன் செய்ய 3 டெஸ்லாஸ் (Teslas) அளவு கொண்ட காந்த அலைகளே பயன்படுத்தப்படும். தற்போது பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள ஸ்கேனிங் இயந்திரமானது பொதுவாகப் பயன்படுத்தப்படும் காந்த அளவைவிட மூன்று மடங்கு அதிக அளவு காந்தத்திறனைக் கொண்டுள்ளது. அதாவது 11.7 டெஸ்லாஸ் அளவுடைய, 10 மடங்கு துல்லியமாகப் படம் பிடிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். அந்த இயந்திரத்தின் மூலம் மனித மூளையின் நுண்ணுறுப்புகளின் செயல்திறனைப் படம் பிடித்துக் காட்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். இந்த இயந்திரத்துக்கு iseult என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இது குறித்து பேசிய அணுசக்தி ஆணைய ஆராய்ச்சியாளர்கள், 2021-ம் ஆண்டு iseult இயந்திரத்தின் மூலம் 11.7 டெஸ்லாஸ் அளவு கொண்ட காந்தப்புலத்தைப் பயன்படுத்தி நாங்கள் முதன் முதலில் பூசணிக்காயை ஸ்கேன் செய்தோம். அதன்பிறகு குறிப்பிட்ட அளவு காந்தப் புலத்தைப் பயன்படுத்தி மனித மூளையை ஸ்கேன் செய்வதற்காக பிரான்ஸ் நாட்டு சுகாதாரத்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. iseult இயந்திரத்தின் மூலம் மனித மூளையின் நுண்ணுறுப்புகளின் செயல்திறனைப் படம் பிடித்துக் காட்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். Doctor Vikatan: சம்மரில் weight loss  செய்வது சுலபமா? அனுமதி கிடைத்ததையடுத்து, ஆரோக்கியமான தன்னார்வலர்கள் 20 பேருக்கு ஸ்கேன்செய்து பல மாதங்களாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. Iseult ஸ்கேனர் மூலம் எடுக்கப்பட்ட மூளையின் புகைப்படங்களை, 3 டெஸ்லாஸ் அளவு காந்தப் புலத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்‌. Iseult மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூளையின் நுண்ணுறுப்புகளின் செயல்பாடுகளை மிகவும் துல்லியமாகப் படம்பிடித்து இருந்தன. இது அணுசக்தி ஆணையம் இதுவரை எட்டாத துல்லிய நிலையாகும். இதுவரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்கு எவ்வித பின்விளைவுகளும் ஏற்படவில்லை. உலகில் இதைவிட அதிக அளவு டெஸ்லாஸ் அளவு காந்தப்புலம் கொண்ட இயந்திரங்கள் அமெரிக்கா , தென்கொரியா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அவை மனித உடலில் ஆராய்ச்சியை மேற்கொள்ளவில்லை. ஆகையால் iseult இயந்திரமே உலகின் அதிகளவு டெஸ்லாஸ் காந்தப்புலத்தைக் கொண்டு மனித உடலில் ஸ்கேன் செய்யும் அதிசக்தி வாய்ந்த MRI ஸ்கேனர் ஆகும். iseult இயந்திரமே உலகின் அதிகளவு டெஸ்லாஸ் காந்தப்புலத்தை கொண்டு மனித உடலில் ஸ்கேன் செய்யும் அதிசக்தி வாய்ந்த MRI ஸ்கேனர் ஆகும். Doctor Vikatan: இளநரையை மறைக்க மருதாணிக் கலவை பயன்படுத்தலாமா? எதிர்காலத்தில் மருத்துவ துறையில் இதும் பெரும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு மூளையின் செயல்பாடுகள் முதல், 'பைபோலார் டிஸ்ஆர்டர்' (Bipolar disorder) (Biopolar disorder, அல்சைமர் நோய் (Alzheimer), பார்கின்சன் (Parkinson) போன்ற‌ நோய்களின் நரம்பியல் தொடர்பான பிரச்னைகளைக் கண்டறிந்து, அது தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெறவும் இந்த இயந்திரம் பெருமளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

விகடன் 5 Apr 2024 11:56 am

Doctor Vikatan: சம்மரில் weight loss  செய்வது சுலபமா?

Doctor Vikatan: வருடத்தின் மற்ற நாள்களைவிட, சம்மரில் உடல் எடையைக் குறைப்பது மிகவும் சுலபம் என்கிறாள் என் தோழி. அவள் அப்படித்தான் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 6 கிலோ வரை குறைத்ததாகச் சொல்கிறாள். சம்மரில் வெயிட்லாஸ் செய்வது ஈஸி என்பது உண்மையா.... அப்படியானால் அதற்கான உணவுப்பழக்கம் எப்படியிருக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: உடல்பருமனுக்கும் மூட்டுவலிக்கும் என்ன தொடர்பு? நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். மற்ற நாள்களைவிட, கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைப்பது சற்று சுலபமானதுதான். காரணம், அந்த நாள்களில் நாம் திட உணவுகளைவிடவும் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வோம். அதனால் இயல்பாகவே எடை குறையும். காலை உணவுக்கு கஞ்சி, கூழ், பழையசாதம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். மதிய உணவுக்கு நிறைய தயிர்ப்பச்சடி, சாலட், பருப்பு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இடைப்பட்ட நேரத்தில், இளநீர், லெமன் ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கலாம். உடற்பயிற்சிகள் செய்வோர் என்றால் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவுக்கு சூப், அதிக எண்ணெய் சேர்க்காமல் லேசாக வதக்கிய காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம். சாலட் Doctor Vikatan: தினமும் காலையில் வயிற்றுப்போக்கு... பிரச்னையின் அறிகுறியா... சிகிச்சை தேவையா? மதிய உணவுக்கு எலுமிச்சை சாதம், தேங்காய்சாதம், தயிர்சாதம், புளியோதரை, மாங்காய் சாதம் எடுத்துக்கொள்ளலாம். தேங்காய் சாதத்துடன் ஏதேனும் ஒரு காய்கறி, எலுமிச்சை சாதத்துடன் சாலட் அல்லது பொறியல், புளியோதரையுடன்  வேகவைத்த முட்டை அல்லது நிறைய காய்கறிகள் சேர்த்த அவியல்,  மாங்காய் சாதத்துடன்  சாலட் அல்லது தயிர்ப்பச்சடி, தயிர் சாதத்துடன் நிறைய காய்கறிகள் என சரியான காம்பினேஷனில் எடுத்துக்கொள்ளவும். வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, வாழைத்தண்டு, பூசணிக்காய் போன்றவற்றில் நிறைய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து தயிர் சேர்த்து, பச்சடியாகச் செய்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. தர்பூசணி பழத்துண்டுகளுடன்  கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து சாலடாக சாப்பிடலாம். நீர் மோர் Doctor Vikatan: விரதமிருக்கும் நாள்களில் தலைவலி அதிகரிப்பது ஏன்? நிறைய நீர்மோர் எடுத்துக்கொள்ளலாம்.  கொஞ்சமாகத் தயிர் எடுத்து அதில் நிறைய தண்ணீர் சேர்த்து இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுது சேர்த்துக் குடிக்கலாம்.  இரவு உணவுக்கு இட்லி, தேங்காய் சட்னி சாப்பிடலாம்.  மேற்குறிப்பிட்ட உணவுகள், கோடைக்காலத்தில் செரிமானத்தை சிக்கலின்றி வைக்கும். எடைக்குறைப்புக்கும் உதவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 5 Apr 2024 9:00 am

தினம் அணியும் நகைகளை எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்கிறீர்கள்?!... க்ளீனிங் டிப்ஸ்!

கவரிங் முதல் தங்கம் வரை ஆபரணங்களை அணியும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. 24 மணிநேரமும் அவற்றை அணிந்திருப்பதால் அவற்றைச் சுத்தம் செய்வதையே பலர் மறந்து விடுகின்றனர். காதுகளில் அணிந்திருக்கும் தோடுகளைக் கழற்றிப் பார்த்தாலே எந்தளவு நகைகளை சுத்தம் செய்கிறோம் என்று தெரிந்துவிடும்.  இந்நிலையில் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை நாம் அணியும் நகைகளைச் சுத்தம் செய்ய வேண்டும், நகைகளைச் சுத்தம் செய்யாவிடில் என்ன பாதிப்புகள் வரும் என்பதைக் குறித்து அறிந்து கொள்வோம்... jewels (Representational Image) How to: வீட்டிலேயே ஃபேஷியல் செய்வது எப்படி? I How to do facial at home? பாதிப்புகள் என்ன?!... பெங்களூரைச் சேர்ந்த பாடிகிராஃப்ட் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் தோல் மருத்துவரான மிக்கி சிங் கூறுகையில், ``24 மணிநேரமும் நகையை அணிய வேண்டிய அவசியமில்லை. அவற்றை அடிக்கடி கழற்றி வைத்துச் சுத்தப்படுத்திப் பயன்படுத்தலாம். இது அப்பொருள் நீடித்த நாள் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். தொடர்ந்து நகைகளை அணிவது சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். அதோடு நகைகளின் இடுக்கில் அழுக்குகள் சிக்கும் நிலையில், உங்களுக்கு ஏதேனும் காயங்கள் (open wounds) இருந்தால் அவை நோய்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். வீக்கம் உண்டாகலாம். தூக்கத்தின் போது நகைகள் உடைந்துவிடுவதற்கும் வாய்ப்புண்டு.  நகைகளுக்கு மேல் போடப்படும் மேக்அப்பால் நகைகளுக்குக் கீழே உள்ள தோலின் நிறம் மாறுவதற்கும், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் ஏற்படவும் வாய்ப்புண்டு'' என்றார்.   எப்போது, எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?!... கொல்கத்தாவிலுள்ள மஹாபீர் தன்வார் ஜுவல்லர்ஸின் இயக்குநர் விஜய் குமார் சோனி கூறுகையில், ``குளிப்பதற்கும் தூங்குவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் முன் நகைகளைக் கழற்றிவிடுவது நல்லது. விரைவாக நகைகளைச் சுத்தம் செய்ய ஒரு மென்மையான துணியினால் அவற்றைத் துடைக்கலாம். முழுமையாகச் சுத்தம் செய்ய வாரத்திற்கு ஒருமுறை 10-15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான சோப்பு நீரில் நகைகளை ஊற வைக்கலாம். வேலைப்பாடுகள் அதிகமுள்ள சிக்கலான நகைகளுக்கு மென்மையான பிரஷ் பயன்படுத்தி நீரில் சுத்தம் செய்து பஞ்சு இல்லாத துணியால் துடைக்கலாம்.  gemstone வாஷிங் மெஷின் பராமரிப்பு: டப்பை சுத்தம் செய்யாவிட்டால் என்ன ஆகும், எப்படி க்ளீன் செய்வது? ரத்தின கற்கள் உள்ள நகைகளுக்குச் சிறப்பு கவனிப்பு தேவைப்படலாம். தெளிவாகத் தெரியாவிடில் அவற்றை நீரில் ஊற வைத்துக் கழுவுவதைத் தவிர்த்து விடுங்கள். ஆழமாகச் சுத்தம் செய்ய ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை புரொஃபஷனல் க்ளீனிங் செய்து கொள்ளுங்கள். நகைகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்களை ( harsh chemicals) பயன்படுத்த வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.

விகடன் 4 Apr 2024 4:53 pm

Doctor Vikatan: உடல்பருமனுக்கும் மூட்டுவலிக்கும் என்ன தொடர்பு?

Doctor Vikatan: உடல் எடை அதிகரிப்புக்கும் கால் வலிக்கும் என்ன தொடர்பு? உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இந்த வலி குறையுமா? மூட்டுவலிக்கும் உடல் எடைக்கும் தொடர்பு உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்    ஷீபா தேவராஜ் கால் வலி என நீங்கள் குறிப்பிட்டிருப்பது மூட்டுகளையும் சேர்த்து என்று தெரிகிறது. கணுக்கால்களையும் சேர்த்துச் சொல்கிறீர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். மூட்டுகளின் இணைப்பை 'சினோவியல் ஜாயின்ட்' ( synovial joint ) என்று சொல்வோம். உடல் எடை அதிகரிக்கும்போது, இந்த இணைப்புகளின் மீது அழுத்தம் கூடும். அதாவது இடுப்புக்கு மேலுள்ள உடல் பகுதியில் எடை அதிகரிக்க, அதிகரிக்க, அதன் அழுத்தம் மூட்டுகளில் பிரதிபலிக்கும். அதேபோல கணுக்கால் மூட்டுகளிலும் அழுத்தம் கூடும். அதன் விளைவாக வலி ஏற்படும். அதனால்தான் இதை 'விஷியஸ் சைக்கிள்' ( vicious cycle) என்று சொல்வோம். அதாவது வலி இருந்தால் உங்களால் நடக்கவோ, ஓடவோ முடியாது. நீங்கள் நடக்காமல், ஓடாமல் இருந்தால் உங்களுக்கு மறுபடி வலி வரும்.   மூட்டுவலி அவள் பதில்கள் 68 - பிரசவத்துக்குப் பிறகு எத்தனை நாள்கள் கழித்து உடற்பயிற்சிகள் செய்யலாம்? உடல் பருமன் அதிகரித்ததை நீங்களே உணர்கிறீர்கள் என்ற பட்சத்தில், முதல் வேலையாக உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைத்து, வலி குறைந்ததும்  நடைப்பயிற்சியைத் தொடங்கலாம். நடக்க ஆரம்பித்ததும்  மெள்ள மெள்ள வலி குறையத் தொடங்கும். கால்வலி, குறிப்பாக கணுக்கால்களில் வலி ஏற்படுவது உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டதன் அறிகுறியாகவும் இருக்கலாம். மூட்டுவலி என்பது எல்லோருக்கும், உடல் பருமனால்தான் ஏற்பட வேண்டும் என்ற அவசியமில்லை.  நீங்கள் உடற்பயிற்சிகள் செய்பவராக இருந்தால், 'சோர்னெஸ்'  ( soreness ) காரணமாக ஏற்படும் வலியாகவும் அது இருக்கலாம்.  மூட்டுவலி என்பது உடல் பருமனால் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  இப்படி எந்தக் காரணமும் இல்லை, ஆனாலும், கால்கள் முழுக்க வலிக்கின்றன என்றால் அது நீர்வறட்சி மற்றும் சத்துக்குறைபாடு காரணமாக இருக்கக்கூடும். எனவே, உங்கள் விஷயத்தில் கால் வலிக்கான காரணம் உடல் பருமன்தானா அல்லது வேறெதுவுமா எனத் தெரிந்து அதற்கேற்ற சிகிச்சையை எடுக்கவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 4 Apr 2024 9:00 am

Twins: 22 நாள்கள் இடைவெளியில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாய்... மருத்துவ உலகின் அதிசயம்!

மருத்துவ உலகில் பல விநோதமான சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது கெய்லி டாய்ல், 22 நாள்கள் இடைவெளியில் வெவ்வேறு மருத்துவமனைகளில் தன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். Pregnant (Representational image) America: பெற்றோர் தற்கொலை... 2 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழகம் வந்த 4 வயது குழந்தை! அக்டோபர் 2020-ல் இப்பெண் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்துள்ளார். நிலைமை நன்றாகச் சென்று கொண்டிருக்க 2021-ல் கருவுற்ற 22 வாரங்களில் முன்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்திருக்கிறது. சுகப்பிரசவமாக இருந்தாலும் ஆர்லோ எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை நஞ்சுக்கொடியில் ஏற்பட்ட ரத்த உறைவு காரணமாக இறந்து பிறந்தது. இரட்டையர்களில் ஒரு குழந்தை மட்டும் பிறந்த நிலையில் மற்றொரு குழந்தை பிறக்கவில்லை. இரண்டாவது குழந்தை உயிர் பிழைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். பிரசவ வேதனை நின்று இயல்பு நிலைக்கு அவர் திரும்பவே மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எதிர்பாராத விதமாக 22 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது குழந்தையான ஆஸ்ட்ரோவை அறுவை சிகிச்சையின் (C-section) மூலம் பெற்றெடுத்தார். மருத்துவ கணிப்பை மீறி இரண்டாவது குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால், இரட்டையர்களின் பிரசவத்திற்கு இடையேயான கால இடைவெளி மருத்துவ நிபுணர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.   இது குறித்து அப்பெண் கூறுகையில், ``என் முதல் குழந்தையைப் பெற்றெடுத்த அதிர்ச்சிக்குப் பிறகு, நான் வீட்டிற்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் கூறியபோது நான் திகைத்துப் போனேன். இன்றுவரை, இங்கிலாந்தில் 22 நாள்களின் இடைவெளியில் இரட்டையர்களைப் பெற்ற ஒரு பெண்ணைக் கூட நான் பார்த்ததில்லை.   Child Birth குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத தென்கொரியப் பெண்கள், கடுமையாகச் சரிந்த பிறப்பு விகிதம்... வேறொரு மருத்துவமனையில் எனக்கு ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டார், மேலும், இரண்டு பிறப்புகளுக்கு இடையில் தினசரி பரிசோதனை செய்தேன். இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதால் ஏற்படும் அனைத்து ஆபத்துகளையும் நான் அறிந்திருந்தேன். சிக்கல்களை பற்றி நான் மிகவும் கவலைப்பட்டதால், தனியார் மருத்துவரின் சந்திப்புகளுக்குக் கூட பணம் செலுத்தினேன். ஆஸ்ட்ரோ பிறந்தபோது அவன் உயிர்பிழைத்திருப்பதை என்னால் நம்ப இயலவில்லை’’ என்றார்.

விகடன் 3 Apr 2024 7:58 pm

Hair Straightening செய்த பெண்ணுக்கு சிறுநீரில் ரத்தக்கசிவு... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Hair Straightening செய்தவருக்கு சிறுநீரக பாதிப்பு சலூனில் முடியை ஸ்ட்ரெயிட்டனிங் (Hair Straightening) செய்த இளம்பெண்ணுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' என்ற மருத்துவ இதழில் இது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சை பெற்ற பெண்ணின் அடையாளங்களை வெளியிடாமல், பாதிப்பு பற்றிய விவரங்களை இதில் ஆவணப்படுத்தியுள்ளனர். Hair Straightening Mangoes: இப்படி செய்தால் மட்டும் போதும்; மாம்பழங்களை 6 மாதங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்! அதன்படி, 26 வயதாகும் அந்தப் பெண் 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தனது முடியை ஸ்ட்ரெயிட்டனிங் செய்துள்ளார். அதற்கு முன்பு எவ்வித உடல்நலப் பிரச்னைகளும் இல்லாத அந்தப் பெண் ஒவ்வொரு முறை முடியை ஸ்ட்ரெயிட்டனிங் செய்த பிறகும் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், முதுகுவலி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உச்சந்தலையில் எரிச்சல் உணர்வு இருந்ததாகவும், புண்கள் ஏற்பட்டதாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனையும், சிறுநீரகப் பரிசோதனையும் செய்யப்பட்டன. அதில் ரத்தத்தில் கிரியாட்டினின் என்ற புரதம் அளவுக்கு அதிகமாகவும், சிறுநீரில் ரத்தம் கலந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் நோய்த்தொற்றோ, அடைப்போ எதுவும் கண்டறியப்படவில்லை. Hair Straightening Artificial Pancreas: செயற்கை கணையம்... டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கான புது கண்டுபிடிப்பு! இந்நிலையில் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும்போது க்ளைஆக்ஸிலிக் அமிலம் (Glyoxylic acid) என்ற ரசாயனம் கலந்த க்ரீம் பயன்படுத்தப்பட்டதாக அந்தப் பெண் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த ரசாயனத்தை எலிகளின் மீது சோதனை செய்துள்ளனர். அந்த ரசாயனமானது தோலின் மூலம் உறிஞ்சப்பட்டு, சிறுநீரகத்துக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கண்டறிந்துள்ளனர். பாதிப்புகள் புதிதல்ல... இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் சூர்யாவிடம் பேசினோம்: ''இது போன்ற பாதிப்புகள் கண்டறியப்படுவது முதன்முறை அல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்பே இஸ்ரேல் நாட்டில் 26 பேருக்கு இதுபோன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டிருந்தன. அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதற்கும் முடி ஸ்ட்ரெயிட்டனிங் செய்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது. சிறுநீரகம் (Kidney) நீரிழிவுக்காக மீனின் பித்தப்பை உண்ட பெண்; சிறுநீரகம் செயலிழந்த சோகம்; போலி வைத்தியரால் நேர்ந்த கதி! முடியை ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதற்காகப் பூசப்படும் க்ரீமில் சேர்க்கப்படும் சில ரசாயனங்கள், குறிப்பாக க்ளைகாலிக் அமிலம் (Glycolic acid) மற்றும் அதிலிருந்து பிரித்துப் பெறப்படும் க்ளைஆக்ஸிலிக் அமிலம் போன்றவை இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. க்ளைகாலிக் அமிலத்தைத் தலையில் பூசும்போது தலைமுடியில் உள்ள வேர்க்கால்களின் மூலம் தலையின் உட்புறத்துக்குச் சென்று க்ளைஆக்ஸலிக் அமிலமாக மாறும். இவை ரத்தத்தில் கலப்பதோடு கல்லீரலைச் சென்றடைந்து சீறுநீரிலும் கலக்கும். சிறுநீரகத்துக்குச் செல்லும்போது க்ளைகாலிக் அமிலம் க்ளைஆக்ஸிலேட்டாக மாறுகிறது. இந்த அமிலமானது சிறுநீரகத்தில் கால்சியத்துடன் சேர்ந்து கால்சியல் ஆக்ஸலேட் சிறுநீரகத்தின் மீது ஒரு படிமமாக மாறுகிறது. இந்த நிகழ்வுகள் ஒன்றில் இருந்து மூன்று நாள்களுக்குள் உடலில் நிகழும். இந்த அமிலமானது பொதுவாகவே எல்லா ஷாம்பூ, கண்டிஷனர், கிரீம்களிலும் காணப்படும். தோல் மருத்துவர் சூர்யா ஆனால், அவற்றின் அமிலத்தன்மை உடலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் மிகக் குறைவாக மட்டுமே இருக்கும். ஆனால், ஸ்ட்ரெயிட்டனிங் க்ரீம்களில் அமிலத்தன்மை அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களான ஃபார்மால்டீஹைட் (Formaldehyde), மெத்திலீன் க்ளைகால் (Methylene glycol) போன்றவற்றின் அமிலத்தன்மையின் அளவு மற்றும் தலையின் வேர்க்காலில் இருக்கும் அமிலத்தன்மை (PH Level) ஆகியவற்றைப் பொருத்தும் இந்த பாதிப்புகள் ஏற்படலாம். இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது... இதைத் தவிர்த்து, முடியை ஸ்ட்ரெயிட்டனிங் (Hair Straightening) செய்யும்போது அதிகப்படியான வெப்பம் உருவாகும். அதன் காரணமாக சில அமிலங்கள் விஷத்தன்மையுடையதாக மாறக்கூடிய அபாயங்களும் உள்ளன. பொதுவாக தலையின் வேர்க்கால்களில் அதிகப்படியான உள்ளிழுத்தல் (Absorbtion) நடக்கும். அங்கு அதிகப்படியான ரத்தஓட்டமும் நடக்கும். இதனால் மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு உள்ளிழுத்தல் அதிகமாகவே நிகழ்கிறது. ஆனால், அனைவருக்கும் இந்த வேதிப்பொருள்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூற முடியாது என்றார். ரசாயனங்கள் பீகார்: தந்தைக்கு சிறுநீரகம் கொடுத்து உதவிய ரோஹிணி, மக்களவைத் தேர்தலில் போட்டியா? இத்தகைய வேதிப் பொருள்களை பிரேசில், கனடா, ஐரோப்பா போன்ற நாடுகள் தடைசெய்துள்ளன. ஆனால், இந்தியா உள்பட சில நாடுகளில் இவை தடை செய்யப்படாமல் மக்கள் மத்தியில் இன்னும் பயன்பாட்டிலுள்ளன. செயற்கை ரசாயனங்கள், அமிலங்களின் பயன்பாடு எந்த வகையில் இருந்தாலும் அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். கூடுமான வரையில் இவற்றின் பயன்பாட்டைத் தவிர்ப்பதே நல்லது.

விகடன் 3 Apr 2024 6:21 pm

Peyronie's disease: வளைந்த ஆணுறுப்பு... உள்ளாடையிலும் இருக்கு தீர்வு..! காமத்துக்கு மரியாதை - 156

விந்து முந்துதல், சிறிய ஆணுறுப்பு ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கு அடுத்ததாக, பல ஆண் வாசகர்கள் தங்களுடைய பிரச்னையாகக் குறிப்பிடுவது `வளைந்த ஆணுறுப்பு'. இது இயல்பான ஒன்றா அல்லது ஏதேனும் பிரச்னையா? டாக்டர் காமராஜ் சொல்வதைக் கேட்போம். ''ஆண்கள் பலரும் ஆணுறுப்பு 90 டிகிரியில் நேராக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படியிருக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. மேல் நோக்கி, கீழ் நோக்கி, வலது அல்லது இடது பக்கம் நோக்கி என லேசாக வளைந்துதான் இருக்கும் ஆணுறுப்பு. இந்த வளைவுகள் எல்லாம் இயல்பானவையே. ஆனால், ஆங்கில எழுத்து `எல்' மாதிரியோ, `எஸ்' மாதிரியோ வளைந்திருந்தால் அது `பைரோனி' (Peyronie) என்கிற நோய். 1970-களில் வாழ்ந்த ஃபிரெஞ்சு மருத்துவர் பைரோனி, ஆணுறுப்பு வளைவு தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்ததால், அவர் பெயராலேயே இந்த நோய் அழைக்கப்படுகிறது. இயல்பான வளைவா, பைரோனி நோயா என்பதை சில அறிகுறிகள் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்'' என்றவர், அவை பற்றி விளக்க ஆரம்பித்தார். Sex Education Sexual Wellness: அதென்ன முதலிரவு... முதல் பகல்னு இருக்கக் கூடாதா..? - காமத்துக்கு மரியாதை - 155 ''வளைந்த ஆணுறுப்பைக் கொண்டவர்கள், தங்கள் உறுப்பைத் தொட்டுப்பார்த்தால் உள்ளே கட்டிபோல இருப்பதை உணர்வார்கள். இந்தக் கட்டியை மருத்துவர்கள் `ஃபைப்ரோசிஸ்' (fibrosis) என்று சொல்வோம். ஆணுறுப்பு இப்படி வளைந்திருப்பதால் அதன் நீளம் குறைவாக இருக்கும். விறைப்புத்தன்மை அடையும்போது சுரீரென்று வலிக்கும். விறைப்புத்தன்மை வருவதிலும் பிரச்னை இருக்குமென்பதால் ஆண்மைக்குறைபாடும் ஏற்படலாம். இதுவே பிரச்னையில்லாத வளைவு என்றால், ஆணுறுப்பினுள்ளே கட்டி எதுவும் இருக்காது. பைரோனியை முற்றிலும் சரிசெய்ய முடியும். அறுவைசிகிச்சை செய்து கட்டியை நீக்குவது முதல் தீர்வு. அந்தக் கட்டியின் மீது ஊசி வழியாக 12 தடவை, அதற்கான கால இடைவெளியுடன் மருந்தைச் செலுத்துவதன் மூலம் கட்டியைக் கரைக்கலாம். இந்திய ரூபாய் மதிப்பில் இந்த 12 ஊசிகளுக்கு ரூ.3.50 லட்சம் வரை செலவாகும். இது இரண்டாவது வகை தீர்வு. மூன்றாவதாக, அந்தக் கட்டியை அதற்கென்று இருக்கிற கருவி மூலம் கரைத்துவிடலாம். Dr. Kamaraj Sexual Wellness: `ச்சீ, என் பிள்ள சுயஇன்பம் செய்யுறானே'ன்னு கோபப்படறீங்களா?| காமத்துக்கு மரியாதை 153 ஆணுறுப்பு லேசாகத்தான் வளைந்திருக்கிறது என்றால், உள்ளாடை அணியும்போது ஆணுறுப்பு எந்தப் பக்கம் வளைந்திருக்கிறதோ அதற்கு எதிர்பக்கமாக ஆணுறுப்பை ஒதுக்கி வைத்து உள்ளாடை அணிய வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவந்தால் கொஞ்ச காலத்தில் அந்த வளைவு சரியாவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆணுறுப்பில் வளைவு கொண்டவர்கள் அத்தனை பேரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ரொம்பவும் வளைந்திருக்கிறது; வலியிருக்கிறது; தாம்பத்திய உறவுகொள்ள முடியவில்லை என்றால் மட்டும் மருத்துவரைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்'' என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.

விகடன் 3 Apr 2024 6:00 pm

Doctor Vikatan: தினமும் காலையில் வயிற்றுப்போக்கு... பிரச்னையின் அறிகுறியா... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: நான் 40 வயதுப் பெண். எனக்கு தினமும் காலையில் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், அதுதான் அலாரம் வைத்ததுபோல என்னை தினமும் எழுப்பிவிடுகிறது என்றே சொல்லலாம். அவசரமாக கழிவறைக்கு விரைய வேண்டியிருக்கிறது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா.... இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்     மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் 40 வயதில் வயிறு சம்பந்தமான வேறு பிரச்னைகள் ஏதும் இல்லை என்ற பட்சத்திலும், மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறவில்லை என்ற பட்சத்திலும், இந்தப் பிரச்னையின் பின்னணியில் லாக்டோஸ் இன்டாலரென்ஸ் (Lactose intolerance  ) எனப்படும் பால் பொருள்கள் ஒவ்வாமை காரணமாக இருக்கலாம்.  நம்மில் பலருக்கும் லாக்டோஸ் இன்டாலரென்ஸ் பிரச்னை இருக்கிறது. ஆனால், அப்படியொரு பிரச்னை இருப்பதையே பலரும் உணர்வதில்லை. ஏனெனில், நம்மில் பலரும் பால், தயிர் சாப்பிட்டுதான் வளர்ந்திருப்போம். இந்தப் பிரச்னைக்கு முதல் தீர்வு, 2 முதல் 3 வாரங்களுக்கு பால் தொடர்பான எந்த உணவுகளையும் எடுக்காமல் தவிர்ப்பதுதான்.  இதற்கு 'எலிமினேஷன் டயட்' (elimination diet) என்று பெயர்.   பால் பொருள்கள் Doctor Vikatan: இளநரையை மறைக்க மருதாணிக் கலவை பயன்படுத்தலாமா? புரோட்டீன் பார்கள் உள்பட பல உணவுகளிலும் வே, கேசின் போன்ற பால் பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அவற்றையும் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.  குறைந்தது 3 வாரங்களுக்கு இப்படி பால் உணவுகளை அறவே தவிர்த்துப் பார்த்து, இந்தப் பிரச்னை சரியாகிறதா என்று கவனியுங்கள். அப்படி பால் உணவுகளைத் தவிர்த்ததன் விளைவாக உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தால், உங்களுக்கு 'லாக்டோஸ் இன்டாலரென்ஸ்' பாதிப்பு இருப்பதை உறுதிசெய்யலாம். செயற்கை இனிப்புகள், ப்ரிசர்வேட்டிவ் சேர்த்த உணவுகள் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உண்டா என்பதையும் பாருங்கள். அவையும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் பழங்களை அதிகம் சாப்பிடுவதால், அவற்றிலுள்ள சர்க்கரைச் சத்தும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம்.  இவை தவிர, மருத்துவரீதியான காரணங்கள் என்றால் ஐபிஎஸ் எனப்படும் 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' (Irritable bowel syndrome  ) உள்ளிட்டவையும் இந்தப் பிரச்னைக்கு காரணமாக இருக்கக்கூடும்.  பழங்கள் உங்கள் கேள்வியை வைத்து, உங்களுக்கு மருத்துவ ரீதியான பிரச்னைகள் ஏதும் இல்லை என்ற யூகத்துடன், வாழ்வியல் மாற்றங்களால் வயிற்றுப்போக்கு பிரச்னை ஏற்பட்டதாக இதை அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். அந்த அடிப்படையில், அதற்கேற்ற தீர்வுகளையும் சொல்கிறேன். முதல் வேலையாக, நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்துங்கள். எடுத்ததுமே அளவுக்கதிக நார்ச்சத்து உணவுகளை எடுத்தால் வயிற்று உப்புசம் வரலாம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாகவே அதை அதிகரிக்க வேண்டும். Fibrerich foods Doctor Vikatan: சாதாரண உப்பைவிட இந்துப்பு ஆரோக்கியமானதா? இயற்கையான முறையில் நார்ச்சத்தை அதிகரிக்க, காய்கறிகள், அதிக இனிப்பில்லாத பழங்கள், கீரைகள், முழுத்தானியங்கள், சியா விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.  நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம் குடல் இயக்கத்தைச் சீராக்கும். உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை இருக்கிறதா என்றும் பாருங்கள். அதுவும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். வேறு ஏதேனும் பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்களா என்று தெரியவில்லை. அதன் விளைவாகவும் இந்தப் பிரச்னை இருக்கலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 3 Apr 2024 9:00 am

நாவலூர்: பிரபல ஹோட்டலில் சுகாதாரமற்ற உணவு பரிமாறப்பட்டதாக புகார்; உணவுப் பாதுகாப்புத்துறை நடவடிக்கை!

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர், சென்னை நாவலூர் சுங்கச்சாவடி அருகிலுள்ள சேலம் ஆர்.ஆர் பிரியாணி உணவகத்துக்கு சாப்பிடச் சென்றிருக்கின்றனர். மாணவர்கள், ஒரு சிக்கன் 65 பிரியாணியும், மட்டன் பிரியாணி ஒன்றும் ஆர்டர் செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிக்கன் 65-யில் அழுகிய துர்நாற்றம் வீசியதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து மாணவர்கள் உடனே உணவக ஊழியர்களை அழைத்து, சிக்கன் அழுகியிருப்பது குறித்துப் புகார் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அந்தச் சிக்கனைச் சாப்பிட்டுப் பார்க்குமாறும் கூறியிருக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவித்த உணவக ஊழியர்கள், அந்த மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, `சிக்கன் நன்றாகத்தான் இருக்கிறது' என்று கூறியிருக்கின்றனர். சிக்கன் அதையடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், உணவக மேலாளர் உடனடியாக அங்கு வந்து, அந்தச் சிக்கனைச் சோதித்துவிட்டு, `தெரியாமல் நடந்துவிட்டது, இனி இப்படி நடக்காது. நீங்கள் சாப்பிட்ட உணவுக்குப் பணம் செலுத்த வேண்டாம்' எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மாணவர்கள் மறுப்பு தெரிவித்து, உணவின் தரம் குறித்து கேள்வியெழுப்பி, தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும், தாங்கள் ஆர்டர் செய்த சிக்கன் அழுகியிருப்பதையும், அதற்குள் புழு இருப்பதையும் செல்போனில் புகைப்படங்கள் எடுத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து உணவகத்தின் புகைப்படங்கள், உணவில் புழு இருக்கும் புகைப்படங்களுடன் உணவகத்தின் முகவரியைக் குறிப்பிட்டு, உணவுப் பாதுகாப்புத்துறையிடம் வாட்ஸ்அப் மூலம் புகார் அளித்திருக்கின்றனர். இதற்கிடையில் உணவகத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவர்கள் காவல்துறையின் அவசர உதவி எண்ணிலும் அழைத்து, சம்பவம் குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தங்களிடம் என்ன நடந்தது என விசாரிக்காமல், உணவக வரவேற்பாளரையும், மேலாளரையும் அழைத்துச் சென்றதாக, மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதையடுத்து சக கல்லூரி மாணவர்களை அழைத்தவர்கள், சாலையில் அமர்ந்து உணவகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தொடங்கினர். விவகாரம் பெரிதாகவே, காவல்துறை உயரதிகாரிகள் உணவகத்துக்கு விரைந்து வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், உணவகத்தில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்கும் வரை, கலைந்து சொல்லப்போவதில்லை என மாணவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து இரவு 7 மணிக்கு அங்கு வந்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பிரச்னைக்குரிய சிக்கனைப் பரிசோதித்ததோடு, உணவகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். அதில், உணவகம் சுகாதாரமாக இயங்கவில்லை என்பதை உறுதிசெய்த அதிகாரிகள், `மறு உத்தரவு வரும் வரை, இந்தக் கடையைத் திறக்கக் கூடாது... இங்கு விற்பனை நடைபெறக் கூடாது' என உத்தரவு பிறப்பித்து, உணவகத்தை மூடி, நடவடிக்கை மேற்கொண்டனர். சென்னை மசூதியில் 40 ஆண்டுகளாக நோன்பு திறக்க உணவு தரும் இந்துக்கள்! | Big Mosque

விகடன் 2 Apr 2024 4:56 pm

Doctor Vikatan: இளநரையை மறைக்க மருதாணிக் கலவை பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: இப்போதைய தலைமுறையினருக்கு 15 வயதிலேயே தலை நரைக்கத் தொடங்குகிறது. 30 ப்ளஸ்ஸிலேயே சருமத்தில் சுருக்கங்கள் வருகின்றன. ஆன்டிஏஜிங் சிகிச்சைகளை எந்த வயதிலிருந்து தொடங்க வேண்டும்.... இளவயது நரைக்கு மருதாணிக் கலவை தடவுவதுதானே பாதுகாப்பானது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளும், எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளோரும் பலாக்கொட்டை சாப்பிடலாமா? நாம் பிறந்த நொடியிலிருந்தே நமக்கு வயதாகத் தொடங்குகிறது. கொலாஜென் என்பதுதான் நம் சருமத்தை இளமையாக, உறுதியாக, எலாஸ்டிக் தன்மையோடு வைத்திருப்பது. 20 வயதுக்குப் பிறகு  இந்த கொலாஜென் உற்பத்தி குறையத் தொடங்கும். 40 வயதில், அதன் உற்பதில் 20 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துவிடும். சருமத்தில் கொலாஜென் உற்பத்தி குறைவது என்பது மரபியல் ரீதியாகவும் ஏற்படும். வெயிலில் அதிகம் அலைவது, சரியான சருமப் பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் சருமத்தின் முதுமைத் தோற்றம் சீக்கிரமாகவும் தீவிரமாகவும் தொடங்குகிறது. அதனால்,  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சருமத்துக்கு அவசியமான, அடிப்படையான மாய்ஸ்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கத் தொடங்க வேண்டியது மிக அவசியம். சன்ஸ்கிரீன் Doctor Vikatan: Kidney stones இருந்தால் கீரைகளைத் தவிர்க்க வேண்டுமா? சருமத்தில் சுருக்கங்கள் விழுவதுதான் வயதாவதன் அறிகுறி என பலரும் நினைப்போம். ஆனால், சருமத்தில் ஏற்படும் நிற மாற்றம் (pigmentation) கூட முதுமையின் அடையாளம்தான். திடீரென முகத்தில் புள்ளிப்புள்ளியாக வருவது, கருந்திட்டுகள் தோன்றுவது போன்றவை எல்லாம் முதுமையின் அறிகுறிகள்தான்.  அடுத்து சருமம் வறட்சியடையும். பிறகு கண்களைச் சுற்றி, வாயைச் சுற்றி சுருக்கங்கள், சருமம் தொய்வடைவது போன்றவை எல்லாம் ஏற்படும்.  முதுமை என்பது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் பொருந்தும். ஒட்டுமொத்த உடலிலும் அந்த மாற்றம் இருந்தாலும், அதன் பிரதிபலிப்பாக முகத்தில் நாம் அதன் அறிகுறிகளைப் பார்க்கிறோம். சருமப் பராமரிப்பின் மூலம் வெளிப்புற முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடுகிறோம். அதேபோல, சரிவிகித உணவு, ஆரோக்கியமான உணவுப்பழக்கம் போன்றவற்றின் மூலம் உடலின் உள்புறத்திலிருந்தும் முதுமையைத் தள்ளிப்போடும் வேலைகளைச் செய்ய வேண்டும்.  ஹேர் டை, ஹேர் கலரிங் அவள் பதில்கள் 77 - வீட்டு சிகிச்சைகளால் பருக்களை குணப்படுத்தமுடியுமா? கூந்தலில் நரை ஏற்படுவதும் முதுமையின் அறிகுறிதான். அது தவிர, கூந்தல் வறண்டுபோவது, புரதச்சத்து குறைவதால்  முடியின் வேர்க்கால்கள் பலமிழந்து, முன்னந்தலையில் முடி கொட்டுவது போன்றவை எல்லாம் ஏற்படும்.  தலை நரைக்கத் தொடங்கியதும் முதலில் பலரும் முயற்சி செய்வது மருதாணிப் பொடி தடவுவதைத்தான். அந்தப் பொடியில் தார் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் கெமிக்கல்களை பயன்படுத்துவார்கள். அப்போதுதான் அதன் நிறம் சட்டென ஒட்டிக்கொள்ளும் என்பதுதான் காரணம்.  அந்த ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயமானவை. அடிக்கடி உபயோகிப்பதால் முகத்தில் மங்கு பாதிப்பும் ஏற்படலாம். நிறைய ஹேர் டை பயன்படுத்தும் ஆண்களுக்கு வாயைச் சுற்றி புண்கள், நிற மாற்றம் இருப்பதைப் பார்க்கலாம். காரணம், மீசை, தாடிக்கெல்லாம் டை போடுவதுதான். எனவே, அமோனியா, பிபிடி இல்லாத ஹேர் கலர்களாக பார்த்து உபயோகிக்க வேண்டியது மிக அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 2 Apr 2024 9:00 am

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்: மார்பக புற்றுநோய் அறுவைச் சிகிச்சையில் ஒரு புதுயுகம்!

உடல்நல சிகிச்சையில் உயர்நேர்த்தியான சேவை மீது தனது அர்ப்பணிப்புக்காக உலகளவில் புகழ்பெற்றிருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர், சென்னை (ACC), மார்பக புற்றை நீக்கும் சிகிச்சையில் ரோபோ உதவியுடன் முலைக்காம்பை அகற்றாமல் தக்கவைத்து உடனடியாக மறுகட்டமைப்பை மேற்கொள்ளும் தெற்காசியாவின் முதல் சிகிச்சை செயல்முறையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. மார்பக அறுவைசிகிச்சையில் புதிய பாதை படைக்கும் சாதனை என்றே இதனை கூறலாம். மறைவாக உள்ள மிகச்சிறிய கீறல்கள் வழியாக முலைக்காம்பை தக்கவைக்கும் அதே நேரத்தில் ஒட்டுமொத்த மார்பகத்தையும் அறுவைசிகிச்சை நிபுணர்களால் அகற்றுவது இதனால் சாத்தியமாகியிருக்கிறது. நோயாளிக்கு அழகியல் ரீதியில் சிறப்பான விளைவுகள் கிடைப்பதை இந்த ரோபோட்டிக் சிகிச்சை ஏதுவாக்கியிருக்கிறது.  அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் டாக்டர P. வெங்கட் மற்றும் டாக்டர். பிரியா கபூர் ஆகியோர் தலைமையிலான ரோபோட்டிக் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர்களது குழுவால் மேற்கொள்ளப்பட்ட இந்த புதுமையான செயல்முறை, மார்பக புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. தொடக்கநிலை மார்பக புற்றுநோய் மற்றும் ஒரு BRCA1 பிறழ்வு பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த 37 வயதான பெண்ணுக்கு இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது பாதிப்பு நிலையின் காரணமாக முற்காப்பு முறையில் அவரது இரு கருவகங்களையும் அகற்றுவதுடன் சேர்த்து இருபக்க மார்பக நீக்க சிகிச்சையும் அவசியமாக இருந்தது. அப்பெண்ணின் வயதையும் மற்றும் அவரது மார்பகங்களின் இயற்கையான தோற்றத்தை தக்கவைப்பதின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, முலைக்காம்பை அகற்றாமல் தக்கவைக்கும் மார்பக நீக்க சிகிச்சை அணுகுமுறை மருத்துவர்கள் குழுவால் தேர்வுசெய்யப்பட்டது. பெண்களுக்கு ஒரு அத்தியாவசிய குறியீடாக இருக்கும் இதனை அகற்றாமல் தக்கவைப்பதன் மூலம் நோயாளியின் வாழ்க்கைத்தரத்தின் மீது ஏற்படும் பாதிப்பை குறைப்பதே இந்த உத்தியின் நோக்கமாகும்; அத்துடன் அறுவைசிகிச்சைக்குப்பிறகு அதிக நேர்மறையுடனான அனுபவத்தை நோயாளிக்கு உறுதிசெய்வதும் இதன் இலக்காகும்.  கேன்சர் இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்த குறிப்பிட்ட சிகிச்சை நெறிமுறைகளை அறுவைசிகிச்சை நிபுணர்கள் பின்பற்றினர். புற்றுக்கட்டியை அகற்றுவதற்கு முன்பு ஹீமோதெரபி தரப்படும் சிகிச்சை இப்பெண்ணுக்கு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முற்காப்பு செயல்பாடாக இரு கருவகங்களையும் மற்றும் இருபக்க மார்பகங்களையும் அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ள நோயாளி சம்மதித்தார். முற்காப்பு அடிப்படையில் இடரை குறைக்கும் கருவக நீக்க சிகிச்சையுடன் மார்பகத்தின் முலைக்காம்பை நீக்காமல் மார்பகத்தை மட்டும் அகற்றும் சிகிச்சையானது செய்யப்பட்டது. மிகச்சிறிய கீறல்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட இச்செயல்முறையில் ரோபோட்டிக் சிகிச்சையின் சாதகங்கள் சிறப்பாக பயன்படுத்தப்பட்டன.  உதிப்தி பருவா (வேண்டுகோளின்பேரில் பெயர் மாற்றப்பட்டுள்ளது) இச்சிகிச்சை குறித்து கூறியதாவது, ‘‘வாழ்க்கையையே மாற்றியமைக்கும் இந்த மருத்துவ செயல்முறைக்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் எனது வழக்கமான செயல்பாடுகளை நான் மீண்டும் மேற்கொள்வதற்கு அப்போலோ கேன்சர் சென்டரின் மருத்துவர்களின் திறன்மிக்க சிகிச்சை முறை உதவியிருக்கிறது. மார்பக புற்றுநோயை வெற்றிகொள்ளும் அதே நேரத்தில் எனது இயற்கையான தோற்றத்தை தக்கவைப்பதன் மூலம் கண்ணியத்தோடு எனது வாழ்க்கையை திரும்பப் பெறுவதற்கு டாக்டர். வெங்கட் மற்றும் அவரது குழுவினர்கள் எனக்கு உதவியிருக்கின்றனர். இன்றைக்கு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையோடு, முன்பைவிட இன்னும் வலுவான நபராக நான் எனது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறேன்.’’ அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் இந்தியாவில் ரோபோட்டிக் உதவியுடனான மார்பக அறுவைசிகிச்சையின் எதிர்காலம் குறித்து தனது வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்திய ACC சென்னையின் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். P. வெங்கட், ‘‘நோயாளியின் இயற்கையான மார்பக அமைப்பை தக்கவைக்க வேண்டுமென்ற உறுதியான குறிக்கோள்களின் அடிப்படையில் இடர்வாய்ப்பை குறைப்பதற்காக ஒரு முற்காப்பு நடவடிக்கையாக கருவகங்களை அகற்றும் செயல்முறையுடன் ரோபோட்டிக் உதவியுடன் இருபக்க மார்பக நீக்கம் என்ற புரட்சிகரமான அணுகுமுறையை நாங்கள் இதில் மேற்கொண்டோம். இந்த நவீன, ரோபோ உதவியுடனான உத்தி மிகச்சிறப்பான பார்வைத்திறனை வழங்குவதுடன் குறைவான இரத்த இழப்பு, மேம்படுத்தப்பட்ட பணிச்சூழலியையும் மற்றும் மிகச்சிறப்பான அழகியல் விளைவுகளையும் சாத்தியமாக்குகிறது. இந்நோயாளி விரைவாகவும், வெற்றிகரமாகவும் இயல்புநிலைக்கு திரும்பியது, இந்த அறுவைசிகிச்சை செயல்முறையிலிருந்து 24 மணிநேரத்திற்குள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு வழிவகுத்தது.’’ ACC சென்னையின் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பிரியா கபூர் பேசுகையில், ‘‘மிகச்சிறிய கீறல்கள் வழியாக ஒட்டுமொத்த மார்பகக் கட்டியையும் இந்த செயல்முறை அகற்றுவதோடு, மார்பகத்தின் தோலிலும் மற்றும் முலைக்காம்பிலும் உணர்வினை தக்கவைத்துக்கொள்ளும் சாத்தியத்தையும் அதிகரிக்கிறது. இந்த புதுமையான உத்தியின் காரணமாக, முலைக்காம்பு தோல் மற்றும் மார்பகம் ஆகியவை அறுவைசிகிச்சைக்குப் பிறகும்கூட அப்படியே தக்கவைக்கப்படுகிறது; அதற்கும் மேலாக மார்பகத்தின் முழுமையான வடிவமைப்பும் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த புதிய உத்தியை அறிமுகம் செய்வதன் மூலம் சாத்தியமுள்ள சிறந்த அழகியல் விளைவுகளை எமது நோயாளிகளுக்கு வழங்குவதும் மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு சிறப்பான வாழ்க்கைத்தரத்தை உறுதிசெய்வதும் எமது நோக்கமாகும்’’ என்று கூறினார். கேன்சர் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் செயலாக்க துணைத்தலைவர் டாக்டர். ப்ரீத்தா ரெட்டி, இந்த புரட்சிகர சாதனை குறித்து பெருமையையும், பெருமிதத்தையும் வெளிப்படுத்தி கூறியதாவது, ‘‘டாக்டர். வெங்கட் மற்றும் டாக்டர். பிரியா ஆகியோரது தலைமையின்கீழ் செயல்படும் எமது ரோபோட்டிக் அறுவைசிகிச்சை குழுவின் இந்த அசாதாரண வெற்றியினை காண்பது பெருமகிழ்ச்சியையும், அளவில்லா உற்சாகத்தையும் தருகிறது. டா வின்சி Xi என்ற ரோபோ சாதனத்தின் உதவியோடு, முலைக்காம்பை நீக்காமல் தக்கவைத்துக்கொண்டு இருபக்க மார்பக கட்டியை அகற்றும் தெற்காசியாவின் முதல் அறுவைசிகிச்சை என்ற சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது. இந்த புதுமையான அறுவைசிகிச்சையின் சிறப்பான முடிவுகள், இந்தியாவின் முதன்மையான ரோபோ உதவியுடனான மார்பக அறுவைசிகிச்சை செயல்திட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டிருப்பதை உரத்த குரலில் அறிவிக்கிறது. அறுவைசிகிச்சை செயல்நேர்த்தியில் புதிய தரநிலையை நிறுவியிருக்கும் இந்த முயற்சி, நவீன தொழில்நுட்பமும், கனிவான பராமரிப்பும் ஒருங்கிணைகிற ஒரு புதிய எதிர்காலத்திற்கான பாதையை அமைக்கிறது; புற்றுநோய் சிகிச்சையில் பெண் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை இது உருவாக்கியிருக்கிறது. பொதுப்படையாக பார்க்கையில், உயர்தரமான சிகிச்சையை வழங்குவதிலும் மற்றும் நவீன உடல்நல சிகிச்சையை அனைவரும் பெற்று பயனடையுமாறு ஆக்குவதிலும் எங்களது தளர்வற்ற பொறுப்புறுதிக்கு இது ஒரு நல்ல சான்றாகும்.’’  கேன்சர் உலகளவில் பெண்களிடம் மிக அதிகமாக காணப்படும் புற்றுநோயாக இருப்பது மார்பக புற்றுநோயே. புற்றுநோய் தொடர்பான உயிரிழப்புகளில் இரண்டாவது முன்னணி காரணமாகவும் இதுவே இருக்கிறது. மார்பக புற்றுநோய் நிகழ்வுகள் குறிப்பாக, இளவயது பெண்களில் அதிகரித்து வருவதை தெளிவாக உணர்ந்திருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர், நோயாளிகளுக்கான சிகிச்சை பலன்களை மேம்படுத்த மிக நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும், புதிய உத்திகளை பயன்படுத்துவதிலும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.

விகடன் 1 Apr 2024 4:46 pm

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளும், எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளோரும் பலாக்கொட்டை சாப்பிடலாமா?

Doctor Vikatan: நீரிழிவு உள்ளோர், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளோர் ஆகியோர் பலாப்பழம் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் படுகிறார்கள். இதே அறிவுரை, பலாக் கொட்டைக்கும் பொருந்துமா? அவர்கள் பலாக்கொட்டைகள் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் பலாப்பழத்தில் உள்ள அனைத்து நல்ல தன்மைகளும் பலாக்கொட்டைக்கும் உண்டு. குறிப்பாக, குடல் ஆரோக்கியத்துக்கு பலாக்கொட்டை மிகவும்  நல்லது. பலாக்கொட்டையிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆனாலும், உருளைக்கிழங்கோடு ஒப்பிடுகையில், இது ஆரோக்கியமானதுதான். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து கிடையாது. பலாக்கொட்டையில் நார்ச்சத்து அதிகம். அதனால், இது மறைமுகமாக எடைக்குறைப்புக்கும் உதவக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதிலுள்ள தையாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகிய பி வைட்டமின்கள், உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்து, உடலியக்கங்கள் சீராக நடைபெற உதவக்கூடியவை. ஆன்டிமைக்ரோபியல் தன்மை கொண்டதால், இவை, பாக்டீரியா கிருமித் தொற்றிலிருந்தும் உடலைப் பாதுகாக்கக்கூடியவை. பலாக்கொட்டை Doctor Vikatan: எடைக்குறைப்புக்கு உதவுமா சைனா கிராஸ் எனப்படும் கடல்பாசி? புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மையும் பலாக்கொட்டையில் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதாகவும் ஆய்வுத் தகவல்கள் உள்ளன. பொதுவாக, வெயிட்லாஸ்  செய்ய நினைப்போருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவோம். அந்த உணவுகள் கிளைசெமிக் இண்டெக்ஸை (Glycemic index) அதிகரிக்கக் கூடியவை. அதாவது, சாப்பிட்ட உணவானது, எவ்வளவு சீக்கிரம் ரத்தச் சர்க்கரையாக மாறுகிறது என்பதே கிளைசெமிக் இண்டெக்ஸ். எனவே, மாவுச்சத்துள்ள மற்ற உணவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப் பட்டவர்கள் கூட, பலாக்கொட்டையைச் சேர்த்துக் கொள்ளலாம். அதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. தவிர, சுவையும் நன்றாக இருக்கும். வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றைப் போல, வாய்வுப் பிரச்னையையும் ஏற்படுத்தாது என்பதால், பலாக்கொட்டையை எல்லோரும் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 1 Apr 2024 9:00 am

Sexual Wellness: அதென்ன முதலிரவு... முதல் பகல்னு இருக்கக்கூடாதா..? - காமத்துக்கு மரியாதை - 155

ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார் 'அதென்ன மொத ராத்திரி... மொத பகல்னு இருக்கக்கூடாதா...' என்று. இதே கேள்வியை சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம். ''உலகம் முழுக்க இரவுதான் உறவுக்கான நேரமாக இருந்து வருகிறது. அதனால்தான், நம் கலாசாரத்தில் முதலுறவு நாளை முதலிரவு என்று குறிப்பிடுகிறார்கள். மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் பகலெல்லாம் வேட்டையாடிவிட்டு, ஓய்ந்திருக்கும் இரவு வேளைகளில் உறவுகொள்ள ஆரம்பித்தார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பு உருவான பிறகு, தாங்கள் உறவுகொள்வது மற்றவர்கள் கண்களில் படக்கூடாது என்பதற்காக இரவையே உறவுக்கான நேரமாகத் தொடர்ந்தார்கள். இதுவே பின்னாளில், `அய்யோ, யாராவது பார்த்துட்டா' என்று இரவையே தாம்பத்திய உறவுக்கான நேரமாகத் தேர்ந்தெடுப்பதற்கு காரணமாகிவிட்டது. Sexual Wellness Sexual Health: முதல் நாள் 95 சதவிகிதம் நடக்காது... இதுதான் உண்மை... | காமத்துக்கு மரியாதை 152 அடுத்து அரசர்கள் காலம். நாகரிகம், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாசாரமெல்லாம் உருவாகிவிட்டது. ஆனால், அரண்மனையே என்றாலும் அறைகளுக்கு கதவில்லை. திரைச்சீலைகள் மட்டும்தான். அரசனும் அரசியும் இணைந்திருக்கும் நேரத்தில், அவர்களின் அறையில் தொங்கவிடப்பட்டிருந்த பங்கா (விசிறி)வை பக்கத்து அறையிலிருந்து பணிப்பெண்கள் இயக்கிக் கொண்டிருப்பார்கள். அப்போதும் இரவுதான் உறவுக்கு அந்தரங்கமான நேரமாக இருந்தது. கதவுகள் புழக்கத்துக்கு வந்த பிறகும், எல்லோராலும் அவற்றை வாங்க முடியவில்லை. துணி, கோணி என்று அவரவர் பொருளாதாரத்துக்கு ஏற்பதான் வீட்டு வாசலை மறைக்க முடிந்தது. எல்லோர் வீட்டுக்கும் கதவுகள் வைக்கிற சூழல் வரும்வரையில் இரவும் இருட்டும்தான் உறவுக்கு பாதுகாப்பான நேரமாக இருந்தது. Sexologist Kamaraj Premature ejaculation: விந்து முந்துதா... உங்ககிட்டேயே தீர்வு இருக்கு..! - காமத்துக்கு மரியாதை 153 மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்னாள்வரை, இரவுகள் மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணிவரைக்கும் மிகவும் நீண்டதாக இருந்தன. அது உறவுக்கு தோதாக இருந்தது. இப்படித்தான் இரவு தாம்பத்திய உறவுக்கான பொழுதாக மாறியது. கூச்சம் காரணமாக உறவுகொள்ளத் தயங்குகிற புதுமணத் தம்பதியருக்கு இரவும் இருட்டும்தான் பொருத்தமானது. திருமணமாகி, சில பல வருடங்கள் ஆனவர்களென்றால் குழந்தைகள் தூங்கிய பிறகு உறவுகொள்வதற்கும் இரவுதான் வசதி. உடலமைப்பில் சின்னச் சின்ன குறைபாடுகள் இருப்பதாக நினைத்து தாழ்வு மனப்பான்மை கொள்பவர்களுக்கும் இரவும் இருட்டும் முழு மனதுடன் உறவில் ஈடுபட உதவி செய்யும். மற்றபடி, இன்றைக்கு இரவை பகல்போல மாற்றும் மின்சார விளக்குகள் இருக்கின்றன. அதே நேரம் ஜன்னல்களையும் கதவையும் மூடினால் நண்பகலும் இரவுபோலத்தான் இருக்கிறது, தற்போது. கூடவே பாதுகாப்பான கதவுகளும் இருக்கின்றன. அதனால், தம்பதியருக்கு விருப்பமிருந்தால் எந்நேரமும் தாம்பத்திய உறவுக்கான நேரமே'' என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

விகடன் 31 Mar 2024 6:00 pm

தொடரும் மரணங்கள் - கோவை வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

கோவை வெள்ளியங்கிரி மலை கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெள்ளியங்கிரி மலை ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கபடுவார்கள். அதன்படி இந்தாண்டு பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக அந்த மலையில் பயணிப்பவர்களில் ஒருசிலர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டுமே இப்படி 3 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒன்றரை மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரகுராமன் (வயது 60) என்பவர் நேற்று  வெள்ளியங்கிரி மலை ஏறினார். ரகுராமன் அப்போது ஐந்தாவது மலை சீதை வனம் அருகே அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் சொல்லப்பட்டது. சிறிதுநேரத்தில் வனத்துறை மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அங்கு சென்றனர். அப்போது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து ஆலாந்துறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளியங்கிரி மலை 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இதயம், நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் மலை ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என வனத்துறை கூறியுள்ளது. அதையும் மீறி உயிரிழப்புகள் தொடர்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் உயிரிழப்புகள் - கோவை வெள்ளியங்கிரி மலை செல்வோர் கவனத்துக்கு..!

விகடன் 31 Mar 2024 4:38 pm

Doctor Vikatan: Kidney stones இருந்தால் கீரைகளைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: சிறுநீரகக் கல் ( Kidney stones ) பிரச்னை உள்ளவர்கள், கீரைகள் மற்றும் தக்காளி சாப்பிடக்கூடாது என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை?  பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து, உடலை நீர் வறட்சியின்றி வைத்துக்கொள்ளாவிட்டால், சிறுநீரகக் கல் பிரச்னை மீண்டும், மீண்டும் தொடரும். கிட்னி ஸ்டோன்ஸ் வராமலிருக்க சில வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.  கிட்னி ஸ்டோன்ஸ் என்பவை ஆக்ஸலேட் கற்களைக் குறிக்கும். கீரைகளில் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் ஆக்ஸலேட் அதிகம். அதாவது  100 கிராம் கீரையில் 755 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் (Oxalates) இருக்கும். எனவே, கிட்னி ஸ்டோன் பிரச்னை உள்ளவர்கள், கீரை, குறிப்பாக பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பதே நல்லது. சிறுநீரகக் கல் பாதிப்புள்ளவர்கள், தக்காளி எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு.  தக்காளி சாஸில் 17 மில்லிகிராம் ஆக்ஸலேட் உள்ளது.  எனவே, வாரத்தில் 3 நாள்களுக்கு மட்டும் தக்காளி சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி சாஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. tomato Doctor Vikatan: கரும்பு ஜூஸ் ஆரோக்கியமானதா... சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா? அரிசித் தவிட்டில் 281 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் உள்ளதால் அதையும் தவிர்க்கவும். அவகேடோ, பேரீச்சம்பழம், கிவி, ப்ரூன் மற்றும் அத்திப் பழங்களிலும் ஆக்ஸலேட் அளவு அதிகம் என்பதால் இவற்றையும் தவிர்ப்பதே சிறந்தது. இவற்றுக்கு பதில் ஆரஞ்சுப் பழம் சாப்பிடலாம். சிட்ரஸ் பழங்கள் எல்லாமே சாப்பிடலாம்.  பால், யோகர்ட், சீஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். தினசரி கீரை சாப்பிடுவது ஆரோக்கியமானது என்ற எண்ணத்தில் அதை அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டாம். ஆரோக்கியமான உணவு என்றாலும் அளவோடு சாப்பிடுவதுதான் சரியானது.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 31 Mar 2024 9:00 am

Happy Teeth: விளம்பரங்கள் பார்த்துதான் Tooth paste வாங்குறீங்களா?

Tooth Paste தேர்வு எப்படி இருக்க வேண்டும்? நான் சின்னப் பிள்ளையா இருக்கிறதுல இருந்து எங்க வீட்ல அந்த சிவப்பு கலர் Tooth Paste தான். அது இனிப்பா இருக்குமா...பிரஷ்ல வெச்சதும் சாப்பிட்டுருவேன். நான் டூத் பேஸ்ட் சாப்பிடுறதை எங்க அம்மா பார்த்துட்டாங்கன்னா அன்னைக்கு அடி கன்ஃபார்ம் இதுபோல பல கதைகளை நாம் பேசியிருப்போம். பெரும்பாலும் பல வீடுகளில் ஆண்டாண்டுக் காலமாக ஒரே பிராண்டின் டூத் பேஸ்டைதான் பயன்படுத்துவது வழக்கம். Tooth paste Happy Teeth: பல் சிகிச்சை என்றாலே பதற்றமாகுதா? Dental Anxiety-யாக இருக்கலாம்! இதைப் பரிந்துரைத்தது யார், குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் இது பொருந்துமா என்பதை பற்றியெல்லாம் யோசிப்பதே இல்லை. டூத் பேஸ்ட் பற்றிய அவசியமான தகவல்களைத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஃபெலிஷியா கிறிஸ்டினா ஹெப்சிபா: கலர் கோடுகள் சொல்லும் செய்தி என்ன? டூத் பேஸ்ட் டியூப்களில் பச்சை, சிவப்பு, நீலம், கறுப்பு உள்ளிட்ட நிறங்கள் (Color Code) காணப்படும். இணையதளத்தில் இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் காணக் கிடைக்கின்றன. அதாவது, பச்சை நிற கோடு இருந்தால் அது முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களால் ஆனது. கறுப்பு என்றால் முழுவதும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது. சிவப்பு என்றால் ரசாயனங்கள் மற்றும் இயற்கைப் பொருள்கள் இரண்டும் உள்ளது. டூத் பேஸ்ட் Happy Teeth: Heart Patients பல் சிகிச்சைக்கு முன்னால இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! நீலம் என்றால் சிகிச்சைக்காகப் பயன்படுத்துவது என்பது போன்ற தகவல்கள் நிலவுகின்றன. டூத் பேஸ்ட் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு டியூப்களில் அடைக்கப்படும். அப்போது பேஸ்ட் நிரப்பப்பட்ட டியூபை எந்த இடத்தில் வெட்டி, மடித்து, சீல் செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பதற்காக அந்தக் கோடு அச்சிடப்பட்டிருக்கும். அந்தக் கோடுகளை சென்சார்கள் ஸ்கேன் செய்யும்போது சரியான இடத்தில் அந்த டியூப்கள் வெட்டி, மடிக்கப்பட்டு, சீல் செய்யப்படும். ஒவ்வொரு சென்சார் மெஷினுக்கும் ஏற்றவாறு பல்வேறு நிறங்களில் இந்தக் கோடுகள் இருக்கும். Brushing Happy Teeth: வீட்டிலேயே Teeth Whitening சிகிச்சை செய்யலாமா? டியூப்பில் இருக்கும் நிறத்துக்கும் அதன் உள்ளே இருக்கும் டூத் பேஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. டூத் பேஸ்டில் என்ன பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு டூத் பேஸ்டில் பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்படும். என்ன பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்துதான் அதன் தன்மை (Texture) இருக்கும். விளம்பரங்களைப் பார்த்து... பற்களை வெண்மையாக்குவதற்கு, பற்கூச்சத்துக்கு, பல் சொத்தைக்கானது, கறை நீக்குவதற்கு எனப் பல்வேறு வகையான டூத் பேஸ்டுகள் பல நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகின்றன. குடும்பத்தில் ஆண்டாண்டுக் காலமாக பயன்படுத்துவது, விளம்பரங்களைப் பார்த்து, கையில் கிடைப்பது என ஏதேதோ டூத் பேஸ்டுகளை பயன்படுத்துகிறோம். ஆனால் ஒவ்வொருவரின் பற்கள், வாய் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில்தான் டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். பல் மருத்துவர் ஃபெலிஷியா கிறிஸ்டினா ஹெப்சிபா Happy Teeth: கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை... குழந்தையை பாதிக்குமா? சில விளம்பரங்களில் ஒருமுறை பிரஷ் செய்தாலே பற்கள் வெள்ளையாகிவிடும் என்பது போல காட்டப்படுகிறது. இதுபோன்ற விளம்பரங்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பக்கூடாது. நமது விருப்பத்துக்கு ஏற்ப டூத்பேஸ்டை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லதல்ல. ஒருவருக்கு ஈறுகளில் ரத்தக்கசிவு பிரச்னை இருக்கும் நிலையில், அவர் அதிக வீரியமுள்ள பேஸ்டை பயன்படுத்தினால் பிரச்னை மேலும் தீவிரமாக வாய்ப்புள்ளது. Tooth Paste-ஐ எப்படித் தேர்வு செய்வது? பல் மருத்துவரை அணுகி அந்தப் பிரச்னைக்கென்று இருக்கும் டூத் பேஸ்டை பயன்படுத்த வேண்டும். ஒருவேளை பற்களில் எதுவும் பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு மருத்துவர் ஃப்ளூரைடு (Fluoride) சேர்க்கப்பட்டிருக்கும் பேஸ்டை பரிந்துரைப்பார். சிலர் ஃப்ளூரைடுக்கு அதிகமாக வெளிப்பட்டதால் ஏற்படும் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) என்ற பிரச்னை இருக்கும். அவர்களுக்கு ஃப்ளூரைடு இல்லாத டூத் பேஸ்ட் பரிந்துரைக்கப்படும். எனவே, யாருக்கு என்ன டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்பதை பல் மருத்துவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். brushing Happy Teeth: நாக்கில் வெள்ளையாகப் படிவது ஏன்? என்ன தீர்வு? பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும். பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

விகடன் 30 Mar 2024 6:00 pm

Conjoined Twins: ஓருடல், இரு தலை... ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் திருமணம்: வைரல் வீடியோ!

`மாற்றான்' படத்தின் மூலம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் வாழ்க்கை குறித்து பலரும் அறிந்திருப்போம். 1996-ல் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் தோன்றியதற்குப் பிறகு மிகவும் பிரபலமானவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல். ஒரே உடலில் இரு தலைகள் ஒன்றாக ஒட்டியிருக்கும்படியான அரிய வடிவில் (Dicephalus conjoined twins) இவர்கள் உள்ளனர். இவர்கள் ரத்த ஓட்டம் மற்றும் இடுப்புக்குக் கீழே உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்பி வலது கை மற்றும் காலைக் கட்டுப்படுத்துகிறார், பிரிட்டானி இடதுபுறத்தைக் கட்டுப்படுத்துகிறார்.  அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல். இவர்கள் 1990-ல் பிறந்தனர். அறுவைசிகிச்சை மூலம் இருவரும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூற, இவர்களின் பெற்றோரும் குழந்தைகளைப் பிரிக்கும் அறுவைசிகிச்சை வேண்டாமென்று முடிவு செய்துள்ளனர்.  இரட்டையர்களில் ஒருவரான அப்பி 2021-ல் அமெரிக்க ராணுவ வீரரான ஜோஷ் பவுலிங்கை திருமணம் செய்துகொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைராலாகி வருகின்றன. அந்த வீடியோவில் ஜோஷ் பவுலிங்குடன் இரட்டையர்கள் நடனமாடுவது போன்ற காட்சிகள் உள்ளன.   ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்... 11 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாகப் பிரிப்பு அமெரிக்காவின் மின்னசோட்டாவில் வசித்து வரும் இந்த இரட்டையர்கள் இப்போது ஐந்தாவது கிரேடு ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.  2,00,000 பிறப்புகளில் ஒன்றில் மட்டுமே இந்த பாதிப்பு உண்டாகிறது. ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஏறக்குறைய 70 சதவிகித்தினர் பெண்களாக உள்ளனர், இப்படி பிறக்கும் பெரும்பாலானவர்கள் இறந்து பிறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 30 Mar 2024 11:53 am

Doctor Vikatan: ஹெர்னியா பாதிப்புக்கு ஆபரேஷன் செய்வதுதான் தீர்வா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு ஹெர்னியா பாதித்திருப்பதாக மருத்துவர் சொல்கிறார். ஹெர்னியா என்றால் என்ன....அதற்கு ஆபரேஷன் செய்வதுதான் தீர்வா? -Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி    மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: திடீர் வாய்வுப்பிடிப்பு, அஜீரணம்.... உடனடி நிவாரணம் தருமா வீட்டு வைத்தியங்கள்? ஏதேனும் ஓர் உறுப்பு, ஒரு தசை அல்லது திசுவில் உள்ள திறந்த பகுதி வழியே, பலவீனம் காரணமாக வெளியே தள்ளப்பட்டு வருவதையே 'ஹெர்னியா' (Hernia) என்கிறோம். உதாரணத்துக்கு, குடல் பகுதியானது நம் வயிற்றுப்பகுதியின் சுவர்களின் பலவீனம் காரணமாக வெளியே தள்ளப்பட்டு வரலாம். அதை  'ஹெர்னியா' என்று சொல்வோம். ஹெர்னியா பாதிப்பானது நம் வயிற்றுக்கும் நெஞ்சுப் பகுதிக்கும் இடையில் வரும். சில நேரங்களில் இடுப்பும் தொடையும் சேருமிடத்திலும் வரலாம்.  பெரும்பாலும் இந்த பாதிப்பானது ஆரம்பநிலையிலேயே எந்தப் பிரச்னையையும் தரப்போவதில்லை. போகப்போக சில பிரச்னைகள் வரலாம். அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம்.  ஹெர்னியா பாதிப்பில் பல வகைகள் உள்ளன. நீங்கள் எந்த வகை குறித்துக் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், பொதுவாக ஹெர்னியா என்றாலே ஒரு வீக்கம் இருக்கும். உதாரணத்துக்கு, இன்குயினல் ஹெர்னியா (Inguinal hernia) என்ற வகையில் இடுப்பெலும்பும் தொடைப்பகுதியும் இணையும் இடத்தில் வீக்கம் வரலாம்.  இந்த வீக்கமானது படுக்கும்போது காணாமல் போய்விடும்.  எழுந்திருக்கும்போது, உடலை வளைக்கும்போது, இருமும்போது அந்த இடத்தில் வலி மற்றும் அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம்.  வயிறு Doctor Vikatan: குழந்தைகளுக்கு பாதாம் பிசின் தரலாமா? 'ஹயட்டல் ஹெர்னியா' ( Hiatal hernia ) என்ற வகையில் மார்புக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் எனப்படும் பகுதி வழியே வயிறானது நுழைந்து, மார்புப்பகுதியை ஊடுருவும். உதரவிதான தசையானது நம் சுவாசத்திற்கு மிகவும் முக்கியமானது. வயிறு மற்றும் மார்புப்பகுதியைப் பிரிப்பதும் இந்த உதரவிதானம்தான். இந்த வகை ஹெர்னியா குழந்தைகளை பிறவியிலேயே பாதிக்கலாம். மற்றபடி 50 வயதுக்கு மேலானவர்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது.  மிகவும் பரவலாக பாதிக்கும் ஹெர்னியா வகை 'அம்பிலிகல் ஹெர்னியா' ( Umbilical hernia). இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும்.  தொப்புளுக்கு அருகில் உள்ள வயிற்றுச்சுவரின் தசைகள் பலவீனமாக இருந்து, அதன் விளைவாக சிறுகுடல் வெளித்தள்ளப்படுவதைக் குறிப்பது இது. வயிற்றுச்சுவர் தசைகள் வலிமையடையும்போது இந்தப் பிரச்னை தானாகவே சரியாக வாய்ப்புகள் உண்டு.  சில நேரங்களில் பெரியவர்களையும் இது பாதிக்கலாம்.  உடல்பருமன், கர்ப்பகாலம், வயிற்றில் நீர்கோப்பது போன்றவற்றால் வயிற்றுச்சுவர் தசைகள் பலவீனமடைந்து இந்தப் பிரச்னை பாதிக்கலாம்.  இன்னொரு வகை, 'இன்சிஷனல் ஹெர்னியா' (Incisional hernia). சிசேரியன் மாதிரியான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அந்த இடத்தின் தழும்பு மற்றும் பலவீனம் காரணமாக வரும் பாதிப்பு இது.  தீவிரமான உடற்பயிற்சி அல்லது அளவுக்கதிகமாக எடை தூக்குவது போன்றவற்றாலும் ஹெர்னியா பாதிக்கலாம்.  சிலருக்கு எப்போதும் இருமல் இருப்பதாலும் வரலாம். ஒன்றுக்கு மேலான கர்ப்பத்தைச் சுமப்பதாலும் வரலாம். ஹெர்னியா அறுவை சிகிச்சை Doctor Vikatan: PCOD எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களால் கருத்தரிக்க முடியுமா? ஹெர்னியா பாதிப்புக்கு  அறுவை சிகிச்சைதான் தீர்வு. ஆனால், அதன் அளவு, அதனால் ஏற்படும் வலி உள்ளிட்ட அசௌகர்யங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அறுவை சிகிச்சை தேவையா என முடிவு செய்யப்படும். சில நேரங்களில் இன்னும் சில காலம் பொறுத்துக்கொள்ளலாம், பிரச்னை தீவிரமானால் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலையில் அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடலாம். அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். ஸ்கேன் மூலம் இதை உறுதிசெய்யலாம்.  கவனிக்காமல் விட்டாலும் இது சில நேரங்களில் பிரச்னையை ஏற்படுத்தலாம். அது உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம் என்பதால் இதை அணுகுவதில் அலட்சியமும் வேண்டாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 30 Mar 2024 9:00 am

Doctor Vikatan: திடீர் வாய்வுப்பிடிப்பு, அஜீரணம்.... உடனடி நிவாரணம் தருமா வீட்டு வைத்தியங்கள்?

Doctor Vikatan: திடீரென ஏற்படும் வாய்வுப்பிடிப்பு, அஜீரணத்துக்கு  ஆண்டாசிட்ஸ்  (antacids) எடுத்துக்கொள்வது தான் தீர்வா? உடனடி நிவாரணத்துக்கு உதவக்கூடிய எளிமையான வீட்டு வைத்தியங்கள் சொல்ல முடியுமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் Doctor Vikatan: மனநல பிரச்னைகளுக்கான மருந்துகள்... ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா? செரிமானத்துக்கான ஆண்டாசிட்ஸ் (antacids ) மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். முந்தைய காலத்தில் எல்லாம், செரிமானப் பிரச்னை ஏற்பட்டால் சிறிதளவு சீரகத்தையோ, சோம்பு, ஓமம் போன்றவற்றையோ  நீரில் கொதிக்கவைத்துக் குடிக்கும் பழக்கம் இருந்தது.  பெரிய விருந்துகளில் வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு அஜீரண கோளாறு ஏற்படாமலிருக்க, சீரகம் கொதிக்க வைத்த நீர் குடிப்பார்கள். அதுவே கோடைக்காலம் என்றால் சீரகத்தை ஊறவைத்த தண்ணீரைக் குடிப்பார்கள்.  இவையே ஆண்டாசிட் மருந்துகளைப் போன்ற பலன்களைத் தந்தன. இவற்றில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் தன்மைகளின் காரணமாக, வயிற்றுப் புண்கள் வராமலும் உதவின. Tablets (Representational Image) Doctor Vikatan: குழந்தைகளுக்கு பாதாம் பிசின் தரலாமா? ஆனால், இந்தக் காலத்தில் விளம்பரங்களைப் பார்த்தும், மருத்துவரின் பரிந்துரையின்றியும்  செரிமானத்துக்கான மாத்திரைகள், மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவது எளிதாகிவிட்டது. ஆண்டாசிட் மருந்துகள் என்பவை, வலிக்கான மாத்திரைகள் எடுக்கும்போது சேர்த்து எடுக்க வேண்டியவை. தாங்க முடியாத அளவுக்கு வயிற்றுப்புண்கள் இருக்கும் நிலையில் மருத்துவர்கள் இந்த மருந்துகளை குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் பரிந்துரைப்பார்கள்.  ஆண்டாசிட் மருந்துகள் பற்றிய தகவல்களை நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தாலே அவற்றின் பக்க விளைவுகளைத் தெரிந்துகொள்வீர்கள். எனவே, மருத்துவரின் பரிந்துரையின்றி ஆண்டாசிட் மருந்துகளை எடுக்கவே கூடாது. அஜீரண பிரச்னைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண பல வழிகள் உள்ளன.  அதிகம் சாப்பிட்டுவிட்டதாக உணர்ந்தால், அடுத்தவேளை சாப்பாட்டைத் தவிர்த்துவிடுவதுகூட அஜீரண பிரச்னையிலிருந்து விடுதலை தரும். மேற்குறிப்பிட்ட சீரகம், ஓமம், சோம்புத் தண்ணீரும் உதவும். சீரகம் திடீர் நெஞ்சுவலியா? 'அஜீரணம்'னு அலட்சியமும் வேணாம், 'ஹார்ட்அட்டாக்'னு அலறவும் வேணாம்! சித்த மருத்துவத்தில் சீரகச் சூரணம், ஏலாதிச் சூரணம் போன்றவை செரிமான பிரச்னைகளுக்கான மருந்துகளாகப் பரிந்துரைக்கப்படுபவை. இவற்றை கைவசம் வீட்டில் வைத்திருக்கலாம். அஜீரணம் ஏற்படும்போது இவற்றில் அரை டீஸ்பூன் சாப்பிட்டாலே உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணர்வீர்கள். முன்கூட்டியே ஆண்டாசிட் மருந்துகளை எடுத்துக்கொண்டு விருந்துகளுக்குப் போகிறவர்களும் இருக்கிறார்கள். எப்போதும் கையில் செரிமானத்துக்கான மாத்திரை, மருந்துகளை வைத்திருப்போரும் இருக்கிறார்கள். இந்தச் சூழல் நிச்சயம் மாற வேண்டும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 29 Mar 2024 9:00 am

2 ஆண்டுகளில் 71 கிலோ எடையை குறைத்தது எப்படி..? அனுபவம் பகிரும் துருவ் அகர்வாலா..!

உடலை கவனிக்காமல் ஓடிக்கொண்டே இருந்தால், ஒரு நாள் உடல் சொல்வதைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம்... பிரபல ரியல் எஸ்டேட் தளமான ஹவுசிங்.காமின் (Housing.com) தலைமை நிர்வாக அதிகாரி துருவ் அகர்வாலா இரண்டு ஆண்டுகளில் 71 கிலோ எடையைக் குறைத்தது குறித்து இன்டெர்வியூ ஒன்றில் பேசியுள்ளார்.  ஒரு நாள் அவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது, நெஞ்செரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதனை அவர் தவறாக மாரடைப்பு என்று எண்ணி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அவரின் உடல் எடை 151.7 கிலோவாக இருந்தது. நீரிழிவு நோயின் பாதிப்புக்கு முந்தைய நிலையில் இருந்தார். அதோடு 4 வருடங்களாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்காக மருந்துகளை உட்கொண்டிருக்கிறார்.  நெஞ்சு வலி (சித்தரிப்பு படம்) Doctor Vikatan: குழந்தைகளுக்கு பாதாம் பிசின் தரலாமா? எடைக்குறைப்பின் தீவிரத்தை இந்தச் சம்பவம் அவருக்கு எடுத்துரைக்க, தனது எடை குறைக்கும் பயணத்தில் ஈடுபட ஆரம்பித்தார். உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றினார். சிங்கப்பூரில் ஒரு தனிப்பட்ட பயிற்சியாளருடன் வாரத்திற்கு மூன்று முறை உடல் வலிமைக்கான (strength-training) பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். ஒரு நாளைக்கு 12,000 படிகள் ஏறினார்.    உணவு உட்கொள்ளலிலும் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்தார். தினசரி உணவில் 1,700 கலோரிகளை குறைத்தார். மது மற்றும் பதப்படுத்தப்பட்ட, வறுத்த உணவுகளை அறவே தவிர்த்தார். புரத உணவுகளைச் சேர்த்துக் கொண்டார். மதியத்தில் 200-300 மில்லி அளவு பருப்பு, 150 முதல் 180 கிராம் சமைத்த காய்கறிகள், ரொட்டி உண்பார். இரவில் வறுக்கப்பட்ட கோழி அல்லது மீன் அல்லது சூப் குடிப்பார். நான்கு மாதங்கள் உடற்பயிற்சி செய்து 20 கிலோ எடையைக் குறைத்தார். மனதில் புதுவித தெம்பும், சுற்றியிருந்தவர்களின் பாராட்டும் கிடைக்கவே, தொடர்ந்து எடையைக் குறைக்கும் நோக்கத்தில், 2023-ல் ரன்னிங் மற்றும் நீச்சல் பயிற்சிகளை எடுத்தார். இரண்டு வருடங்களிலேயே 71 கிலோ எடையைக் குறைத்தார்.   இது குறித்து துருவ் அகர்வாலா கூறுகையில், ``ஒரு நாள் நான் உடல் எடையைக் குறைப்பேன், ஒரு நாள் ஃபிட்டாக மாறுவேன் என மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேரும் வரை எண்ணிக் கொண்டே இருந்தேன். மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த அந்தத் தருணத்தை நான் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். அந்தத் தருணமே எனது உடல்நிலையில் கவனம் செலுத்த உந்தியது. Weight loss (Representational Image) `5 கிலோ எடை கூடுதலாக இருக்கிறீர்கள்...' - பாடி ஷேமிங் குறித்த அனுபவம் பகிர்ந்த `காலா' பட நடிகை! உடல் எடையைக் குறைப்பதிலுள்ள சிறந்த அம்சம் என்னவென்றால், எனது அலமாரியை பலமுறை மாற்றி, இறுதியாக நான் விரும்பும் ஆடைகளை எப்போதும் என்னால் அணிய முடிகிறது. நான் என்னை பற்றி நன்றாக உணர்கிறேன். எனது உடற்பயிற்சி நிலைகளின் இலக்குகளை உயர்த்துவதன் மூலம் எடை இழப்பைத் தக்க வைத்துக் கொண்டேன், நான் என் இலக்குகளை அடைந்துவிட்டதாக ஒருபோதும் நம்பமாட்டேன்’’ என்றார்.

விகடன் 28 Mar 2024 12:52 pm

Doctor Vikatan: குழந்தைகளுக்கு பாதாம் பிசின் தரலாமா?

Doctor Vikatan: கோடைக்காலத்தில் ஜூஸ், பால் போன்றவற்றில் சிலர் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்துக் குடிப்பதைப் பார்க்க முடிகிறது. இதை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் பாதாம் பிசினுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொண்டது. வட இந்தியர்களிடம் பாதாம் பிசின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம்.  பிரசவமான பெண்களுக்கு அங்கே, உடனடியாக கோந்து லட்டு கொடுப்பார்கள்.  அவர்களின் உடல் வலிமையை அதிகரிக்கும் என்றும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என்றும் கொடுக்கப்படும் இந்த மல்ட்டி கிரெயின் லட்டில், பாதாம் பிசின்தான் பிரதானமாகச் சேர்க்கப்படும். பாதாம் பிசின், தசைகளை வலிமையாக்கும், உடலைக் குளிர்ச்சியாக வைக்கும். பால் சர்பத் Doctor Vikatan: எடைக்குறைப்புக்கு உதவுமா சைனா கிராஸ் எனப்படும் கடல்பாசி? கோடைக்காலத்தில் சர்பத், ஜூஸ் போன்றவற்றில் இந்த பாதாம் பிசினைச் சேர்க்கலாம். தவிர, ஜெலட்டின் அசைவம் என அதைத் தவிர்ப்போர், ஜெலட்டின் பயன்படுத்திச் செய்கிற உணவுகளில், அதற்கான மாற்றாக பாதாம் பிசின் பயன்படுத்தலாம்.  நீர்க்கடுப்பு எனப்படும் யூரினரி இன்ஃபெக்‌ஷனால் பாதிக்கப் படுவோருக்கும் பாதாம் பிசின் நிவாரணம் தரும். இதை எந்த வடிவத்தில், எந்த உணவுடன் எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து, எடைக்குறைப்பு மற்றும் எடை அதிகரிப்பு என இரண்டுக்குமே உதவும். எந்த வயதினரும் இதை எடுத்துக் கொள்ளலாம். ரொம்பவும் சிறிய குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டாம். அடிக்கடி சளி, வீஸிங் பிரச்னைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் இதைத் தவிர்க்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 28 Mar 2024 9:00 am

100 ரூபாய்க்கு புற்றுநோய் சிகிச்சை மாத்திரை... இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு பலனளிக்குமா?

மும்பையைச் சேர்ந்த டாடா புற்றுநோய் நிறுவனத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக புதிய மாத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் இரண்டாவதாகப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கு இந்த மாத்திரை பெரிதும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. டாடா நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் பத்து வருடங்களாகச் செய்த தொடர் ஆய்வுகளின் பலனாக இந்த மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்... ஆதித்யா எல் 1 செலுத்தப்பட்ட நாளில் வெளியான ரிப்போர்ட்..! புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்ட பிறகும் மீண்டும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாத்திரை இரண்டாவது முறை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைத்துவிடும். இந்த ஆராய்ச்சி குறித்து டாடா மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜேந்திர பட்வே கூறும்போது,”இந்த ஆராய்ச்சியில் மனித புற்றுநோய் செல்கள் எலிகளின் உடலில் செலுத்தப்பட்டு அவற்றுக்கு செயற்கையாகப் புற்றுநோய் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு எலிகளுக்கு கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சிகிச்சையின்போது அழியும் புற்றுநோய் செல்கள் க்ரோமேடின் (Chromatin) என்னும் நுண்துகள்களை வெளியேற்றும். அந்தத் துகள்கள் உடலின் மற்ற பகுதிகளுக்குச் சென்று மீண்டும் புற்றுநோயை உண்டாக்கும். இதற்கு ஒரு தீர்வாகவே இந்த மாத்திரை செயல்படும். இந்த மாத்திரையில் உள்ள ரிசர்வெட்ரால் (Resveratrol) என்ற வேதிப்பொருள் மற்றும் காப்பர் (R+Cu) போன்றவை க்ரோமேடின்களை அழிக்கின்றன. சோதனைக்காக எலியின் உடலில் செலுத்தப்பட்டபோது க்ரோமேடின்களை அழிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் கீமோதெரபியால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைக்கலாம். இந்த மாத்திரையை உட்கொள்ளும்போது அவை வேகமாக ரத்தத்தில் கலந்து உடனடியாகச் செயல்படத் தொடங்குகிறது. Tablets (Representational Image) கர்ப்பப்பைவாய் புற்றுநோய்... பூனம் பாண்டே நினைத்தது நடந்ததா? இந்த மாத்திரை மீண்டும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை 30 சதவிகிதம் குறைப்பதோடு, பக்கவிளைவுகளை 50 சதவிகிதம் வரை குறைக்கும். புற்றுநோய் சிகிச்சைகளுக்கு லட்சங்களிலிருந்து கோடிகள் வரை செலவாகும் சூழலில் இந்த மாத்திரையானது வெறும் 100 ரூபாய்க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மாத்திரை இந்திய உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு கழகத்தின் (FSSAI) ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இன்னும் சில கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த மாத்திரை மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. புற்றுநோய் சிகிச்சை முறைகளில் இது நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார். கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர் ஆர்.ரத்னா தேவி ``4 மாவட்டத்தில் 4,000 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி..! அரசின் அதிர்ச்சி அறிக்கை! இந்தப் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு குறித்தும் அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்தும் சென்னையைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர் ஆர்.ரத்னா தேவி கூறுகையில், “அழியும் புற்றுநோய் செல்களிலிருந்து வெளியாகும் க்ரோமோடின் என்ற நுண்துகள்களை அழிப்பதற்காக இந்த மாத்திரைகள் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த மாத்திரைகளில் இருக்கும் ரிசர்வெட்ரால் மற்றும் காப்பர், புற்றுநோய் செல்களில் இருந்து வெளிப்படும் க்ரோமேடின்களை அகற்றுகின்றன. இதனால் மீண்டும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையலாம். மேலும் புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளும் குறைய வாய்ப்புள்ளது. இந்த மாத்திரையை ஏற்கெனவே இருக்கும் புற்றுநோய் சிகிச்சைகளுக்கான மாற்று எனக் கருத முடியாது. Breast cancer Cancer: 5 முறை புற்றுநோய் பாதிப்பு; 11 அறுவைசிகிச்சைகள்... மீண்டெழுந்த ஃபீனிக்ஸ் பெண்! ஏற்கெனவே வழங்கப்படும் சிகிச்சையுடன் கூடுதல் இணைப்பாக இந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ளும்போது நிறைய நன்மைகள் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாகவே இப்படி கூடுதலாக வழங்கப்படும் மாத்திரைகளின் விலை சற்று குறைவாகவே இருக்கும். எலிகள் மீது நடத்தியது மட்டுமன்றி, மனிதர்களிடமும் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் இந்த மாத்திரையின் பலன்கள் பற்றி கூடுதலாக அறிய முடியும்”என்கிறார். நல்ல முயற்சிதான்.. ஆனாலும்... இந்தக் கண்டுபிடிப்புப் பற்றி 'ஐசிஎம்ஆர் எமரிட்டஸ்' விஞ்ஞானியும் பேராசிரியருமான டாக்டர் எம்.பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ‘’இரண்டாவது முறையாக புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கக்கூடிய குறைந்த செலவிலான சிகிச்சையைக் கண்டுபிடிப்பது நிகழ்காலத்துக்கு மிகமிக அவசியமானது. அந்த வகையில், டாடா நினைவு மையக் குழுவின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை கொள்கையளவில் நான் பாராட்டுகிறேன். இந்த மாத்திரையின் பக்க விளைவுகள் குறித்து, எலிகள் மற்றும் மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், புற்றுநோய் தடுப்பு சோதனையானது எலிகளில் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. மனிதர்களிடம் முழுமையாக சோதனை நடத்தி முடிக்க, சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளனர். Cancer: 5 முறை புற்றுநோய் பாதிப்பு; 11 அறுவைசிகிச்சைகள்... மீண்டெழுந்த ஃபீனிக்ஸ் பெண்! எந்தவோர் ஆய்வக ஆராய்ச்சியும் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முயலும் அதேசமயத்தில், புதிய சிக்கல்களையும் உருவாக்கும். அந்த வகையில், என் மனதில் பல கேள்விகள் உள்ளன. புற்றுநோய் மீண்டும் வருவது தொடர்பாக எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையின் பலன்கள், மனிதர்களுக்கும் கிடைக்கும் என்று எப்படி உறுதியாகத் தீர்மானிக்க முடியும்? சிகிச்சைக்கு முன் நோயாளிகளுக்கு ரெடாக்ஸ் ஹோமியோஸ்டாஸிஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சுமையை மதிப்பிடுவதற்கு ஏதேனும் சோதனை தேவையா? இந்தச் சிகிச்சைக்கு முன் நோயாளிகளுக்கு  Cu (காப்பர்) குறைபாடு அல்லது  Cu  நச்சுத்தன்மையைப் பரிசோதிப்பது முக்கியமா? ஏனென்றால் உடலில் சிலருக்கு ஏற்கெனவே காப்பரின் அளவு மிகவும் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ இருக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் இந்த மாத்திரையைப் பரிந்துரைப்பதில் கவனம் தேவை. அது ஏற்கெனவே அசாதாரணமாக உள்ள காப்பர் அளவில் இன்னும் மாற்றம் செய்து ஆபத்தை உண்டாக்கலாம்.

விகடன் 27 Mar 2024 5:29 pm

`சும்மா'இருப்பதே சுகம்... வெட்டியாக இருப்பதில் இத்தனை நன்மைகளா?

எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருப்பதை நிறைய பேர் எதிர்மறையான கண்ணோட்டத்தில் அணுகுவதைப் பார்த்திருப்போம். ”என்ன சும்மாவே இருக்க?”, ”வெட்டியா இருக்காம ஏதாச்சும் வேலையைப் பாரு” என்பன போன்ற வசனங்களை குடும்பத்தில், அலுவலகத்தில் எனப் பல இடங்களில் சொல்வதைக் கேட்டிருப்போம். எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே, தனியாக அமர்ந்திருக்கும் போது நமக்கே ஒரு சலிப்பு மனநிலை (boredom) ஏற்படும். Boredom Doctor Vikatan: ஸ்ட்ரெஸ் அதிகமானால் மூளையின் ரத்தக் குழாய்கள் வெடிக்குமா? ஏன் இப்படி இருக்கிறோம், ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம் கூட யோசிப்போம். ஆனால், உண்மையில் சலிப்பு மனநிலையில், எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை. அந்த மனநிலை காரணமாக நமக்கு சில நன்மைகள்கூட உண்டாகலாம் என்கின்றனர் வல்லுநர்கள். இதுபற்றி விளக்குகிறார் மதுரையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சுரேஷ் குமார்: ''எந்த வேலையும் இல்லாமல் இருக்கும்போது, ஒருவருக்கு நேரம் மிகவும் மெதுவாகச் செல்வதுபோல இருக்கும். இதனால் பரபரப்பு குறைந்து அமைதி உண்டாகும். அன்றாட வாழ்வில் ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும்போதே பல்வேறு விஷயங்கள் பற்றியும் சிந்தனைகள் அலைபாய்ந்து கொண்டிருக்கும். Bored போபால்: மன அழுத்தம்; கர்ப்பிணி டாக்டர் மயக்க மருந்தை ஊசிமூலம் செலுத்தி தற்கொலை; என்ன நடந்தது? ஆனால், வேலை எதுவும் இல்லாமல் கொஞ்சம் ஓய்வாக அமர்ந்திருக்கும் சமயத்தில் அப்படி பல பல எண்ணங்களோடு பரபரக்கத் தேவையில்லை. நிதானமாக சில விஷயங்கள் குறித்து தீவிரமாக ஆராய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். மன அழுத்தம் குறையலாம்! இந்த நிதானம் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். எந்த வேலையும் இல்லாமல் சும்மா உட்கார்ந்து அமர்ந்து எதையாவது சம்பந்தமே இல்லாமல் தீவிரமாக யோசிக்கும்போதுதான் பல புதிய சிந்தனைகள் உதிப்பதாகப் பலர் சொல்லக் கேட்கலாம். உளவியல் நிபுணர் சுரேஷ் குமார் ஒரு விஷயத்தை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல் புதிய பரிணாமத்தில் அணுக உதவிகரமாக இருக்கும். சலிப்பு நேரங்களில் ஒரு மனிதனுக்கு கிரியேட்டிவ்வான பல புதிய எண்ணங்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதை நிதானமான அணுக சிந்தனை தேவை. அந்த நிதானத்தையும் சலிப்பான பொழுதுகள் கொடுக்கும். வேறு கவலைகள் பற்றி பெரிதாக யோசிக்காமல் பிரச்னையை மட்டும் மையப்படுத்தி, அதற்கு தீர்வு காண, யோசனைகள் ஏற்பட நல்வாய்ப்பாக இருக்கும். சலிப்பான நேரங்களில் நம்மை பற்றி நாமே அதிகம் தெரிந்து கொள்ளலாம். பரபரப்பாக வேலைசெய்து கொண்டிருக்கும்போது, நம்மை பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. ஆனால், வேறு எதுவும் செய்வதற்கு இல்லை என்ற சூழலில் சிந்தனைகள் நம்மைச் சுற்றி, நம் மனநிலை, எண்ணங்கள், நமக்குப் பிடித்தது, பிடிக்காதது இன்னும் நம்மிடம் என்னவெல்லாம் மாற்றம் வர‌ வேண்டும் போன்ற அனைத்து கோணங்களிலும் சிந்திப்போம். இது நம் வாழ்வுக்கான முன்னேற்றத்துக்கு உதவும். Boredom மலைக்கோட்டை வாலிபன்: படப்பிடிப்பு தளத்தில் மன அழுத்தம்; இயக்குநர் செய்த காரியம்... - டேனிஷ் சைட் வாழ்வில் புதிய முடிவுகளை எடுப்பதற்கும் சலிப்பான பொழுதுகள் உதவும். நாம் எந்த வேலையுமின்றி சும்மா அமர்ந்திருக்கும்போது, அடுத்து என்ன செய்யலாம் என்ற தேடல் உண்டாகும். சும்மாவே இருப்பதால் நம் மீதே நமக்கு அதிருப்தி ஏற்படும். அத்தகைய‌ அதிருப்திகூட நம் வாழ்வின் திருப்புமுனையாக மாறலாம்”என்கிறார்.

விகடன் 27 Mar 2024 3:10 pm

Doctor Vikatan: எப்போதும் நீங்காத வாய் துர்நாற்றம்... நிரந்தர தீர்வு கிடைக்குமா?

Doctor Vikatan: நான் தினமும் இருவேளை பல் துலக்குகிறேன்.  ஆனாலும் எனக்கு எப்போதும் வாய் துர்நாற்றம் இருக்கிறது. சில நேரம் அது மற்றவர்களை முகம் சுளிக்கவைப்பதையும் பார்க்கிறேன். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு இருக்கிறதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்   மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் Doctor Vikatan: எடைக்குறைப்புக்கு உதவுமா சைனா கிராஸ் எனப்படும் கடல்பாசி? காலையில் எழுந்ததும் எல்லோருமே வாய் துர்நாற்றத்தை உணர்வார்கள். இதற்கு 'ஹாலிட்டோசிஸ் ' (halitosis) என்று பெயர். நம் வாய்க்குள் பாக்டீரியா கிருமிகள் இருக்கும். அந்தக் கிருமிகள், வாயில் எஞ்சியிருக்கும் உணவுத் துகள்களை, சல்பர் உருவாக்கும்படி மாற்றிவிடும். இது வாய் துர்நாற்றத்தை உருவாக்கும். பல் துலக்கியதும், இந்த நாற்றம் தானாகச் சரியாகிவிடும். சிலசமயங்களில், பூண்டு, வெங்காயம் சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றம் வரும். தவிர,  ஆல்கஹால் மற்றும் சிகரெட் பழக்கங்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். இப்படி எந்தக் காரணமும் இல்லாமலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் வரும். மேற்குறிப்பிட்ட காரணங்களால் வாய் துர்நாற்றம் இல்லை என்று தெரிந்தால், சரியாகப் பல் துலக்குகிறீர்களா என்று கவனியுங்கள். தினமும் இரு வேளைகள் பல் துலக்க வேண்டும். பற்களில் சொத்தை இருக்கிறதா என்பதையும் பாருங்கள். dehydration Doctor Vikatan: RO வாட்டரா... கேன் வாட்டரா.. குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் எது? அடுத்ததாக, போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்று பாருங்கள். உடலில் நீர்வறட்சி ஏற்பட்டாலும், அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். விரதம் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கும். வயிற்றில் புண் இருந்தாலும் வாய் துர்நாற்றம் வரலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, வாய் சுகாதாரத்தைப் பேணுவது, சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது  போன்றவற்றின் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 27 Mar 2024 9:00 am

குழந்தையின்மைக்காக தற்கொலையா? தீர்வுகளை அலசும் நிபுணர்கள்!

குழந்தை இல்லை என கேலி செய்யப்பட்டதால் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான செல்வம் என்ற இளைஞருக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதைக் காரணமாக வைத்து உடன் வேலை செய்தவர்கள் கேலி செய்ததால் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். suicide Doctor Vikatan: அதிக ப்ளீடிங்கால் அவதிப்படும் மனைவி; கர்ப்பப்பையை நீக்காமல் குணப்படுத்த வழி உண்டா? குழந்தையின்மையால் தம்பதிகள் உளவியல்ரீதியாக என்ன மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பது பற்றி பேசுகிறார் மதுரையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சிமோனா: ”குழந்தை இல்லாததால் தம்பதிகளுக்கு உண்டாகும் உளவியல் பிரச்னைகள் சமூக அழுத்தங்களில் இருந்தே உருவாகின்றன. 'குழந்தை இல்லையா?' எனத் திரும்பத் திரும்ப சுற்றி இருப்பவர்கள் கேட்பது, குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே ஒரு தம்பதியின் அதிகபட்ச சாதனை என்ற ரீதியில் சுற்றி இருப்பவர்கள் பேசுவது போன்றவை தம்பதிகளிடம் அழுத்தத்தை உண்டாக்கும். இதுபோன்ற சூழலை தம்பதிகளாகச் சேர்ந்தும் தனித்தனியாகவும் சந்திக்க நேர்கிறது. நம்முடைய சமுதாய சூழலில் குழந்தை இல்லாததற்கு பெண்கள்தான் காரணம் என்ற பிம்பம் உள்ளது. இது பெண்களுக்கு மனதளவில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தையே பிறக்காமல் போய்விடுமோ என்ற பயம் அதிகரிப்பதோடு, எப்படியாவது ஒரு குழந்தை பெற்றாக வேண்டும் என்ற தவிப்பு அதிகமாகத் தொடங்கிவிடும். குழந்தையின்மை Doctor Vikatan: அடுத்தவர் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தால் எனக்கும் வரும் ஆசை... தவிர்க்க முடியுமா? குழந்தை இல்லாதது தம்பதிகளின் உறவில் விரிசலை உண்டாக்கக்கூட வாய்ப்புள்ளது. அவர்களின் பெரும்பாலான பேச்சு,செயல் அனைத்தும் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றியே இருக்கும். குழந்தை இல்லாததற்கு ஒருவர் மாற்றி ஒருவர் குறைசொல்லிக் கொண்டு ஒருவித ஆற்றாமையில் தவிக்கவும் வாய்ப்புள்ளது. இது அவர்களின் உறவில் ஒருவித தொய்வை உண்டாக்கலாம். குழந்தையின்மைக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளுக்கு அதிக செலவாகலாம். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுவும் அவர்களின் மனக்கவலையை அதிகரிக்கும். குழந்தை இல்லாததை பிறர் குறை கூறுவார்களே என்ற பயம் மற்றும் தயக்கத்தில் சமூகத்திலிருந்து விலகி தனிமையில் இருக்கத் தொடங்குவார்கள். இதனால் தற்கொலை எண்ணங்கள் எழக்கூடும். உளவியல் ஆலோசகர் சிமோனா Doctor Vikatan: வெள்ளைச் சாதத்தைத் தவிர்த்தால்தான் weight loss  சாத்தியமா? இத்தகைய உளவியல் சிக்கல்களில் இருந்து விடுபட தம்பதிகள் அவர்கள் குழந்தையின்மையை அணுகும் மனநிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்வது அவசியம்தான். அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் சிகிச்சை பெறுவதும் சரியானதுதான். சிகிச்சை முறைகளால் பயனில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். ஆனால் குழந்தை இல்லையெனில் வாழ்க்கையே இல்லை என்பது போன்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். பிரச்னைக்கு மாற்றுத் தீர்வு என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர, அதனால் மன அழுத்தம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை தத்தெடுப்பது, வாடகைத் தாய் முறை என வேறு ஏதும் வழிகள் உள்ளனவா என ஆராய வேண்டும். குழந்தையை தத்தெடுப்பதில் பலருக்கு தயக்கங்களும், குழப்பங்களும் உள்ளன. தேவைப்பட்டால் அவை குறித்து உளவியல் ஆலோசனை பெறலாம்” என்கிறார். treatment குழந்தையின்மை - வதைக்கும் குடும்பங்கள், விடுபட வழி என்ன?! இந்நிலையில் குழந்தையின்மை பிரச்னை ஏன் தற்போது அதிகமாக உள்ளது குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் மகப்பேறு மருத்துவரான அரவிந்த் சந்தோஷிடம் கேட்டோம். ”குழந்தையின்மைக்கான சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு முன்பு அதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். சில சமயங்களில் பிரச்னை ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ இருக்கலாம். இல்லையெனில் இரண்டு பேருக்கும்கூட சிகிச்சை தேவைப்படும் சூழல் இருக்கலாம்‌. இந்த மூன்று சூழ்நிலைகளுக்கும் சமமான அளவில் சாத்தியங்கள் உள்ளன‌. குழந்தையின்மை பிரச்னை அதிகரித்துள்ளதற்கு வாழ்வியல் மாற்றங்களே காரணமாகும். துரித உணவுகள், குறைந்த உடல் உழைப்பு, அதிக நெகிழிப் பயன்பாட்டால் ஹார்மோன் அளவுகள் மாற்றம் பெறுவது எனப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இதுதவிர, நிறைய பேர் தங்களுடைய படிப்பு,வேலை போன்ற காரணங்களால் மிகவும் தாமதித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவை எடுக்கிறார்கள். இதுவும் குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சினைப்பை நீர்க்கட்டி (PCOS) போன்ற பிரச்னைகளை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது. Junk Food Doctor Vikatan: எடைக்குறைப்புக்கு உதவுமா சைனா கிராஸ் எனப்படும் கடல்பாசி? இதுவும் குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்னையை உண்டாக்கும். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துகொண்டே வருவதாக உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. குழந்தையின்மைக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படும். சிகிச்சையும் ஒவ்வொரு தம்பதியின் பிரச்னைகளுக்கு ஏற்ற வகையில் மாறுபடும். தற்போது நிறைய மேம்பட்ட சிகிச்சை முறைகள் நம் நாட்டிலேயே நம் மாநிலத்திலேயே கூட இருக்கின்றன. ஆண்களுக்கு பொதுவான பிரச்னை என எடுத்துக் கொண்டால் விந்தணுக்கள் குறைவாக இருப்பதுதான். அதுபோன்ற சூழலில் விந்தணுக்களை அதிகப்படுத்த அவர்கள் வாழ்வியல் மாற்றங்கள் செய்ய வேண்டியது‌ இருக்கும். சத்தான உணவு எடுத்துக்கொள்வதோடு உடற்பயிற்சி செய்வது, மது,புகைப் பழக்கங்களைக் கைவிடவும் அறிவுறுத்தப்படுவர். இதுதவிர தேவைப்பட்டால் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். விந்தணு வெளிவரும் பாதையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சில சூழலில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மகப்பேறு மருத்துவரான அரவிந்த் சந்தோஷ் Doctor Vikatan: மனநல பிரச்னைகளுக்கான மருந்துகள்... ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா? பெண்களில் சிலருக்கு கரு உருவாவதிலேயே பிரச்னை இருக்கும். சிலருக்கு கரு உருவாகி அது நிலைத்து இருக்காது. அவர்களின் பிரச்னைக்கு ஏற்ற வகையில் சிகிச்சை முறை மாறுபடும். பாலியல் மருத்துவரின் உதவியோ அல்லது மனநல ஆலோசகரின் உதவியோ தேவைப்படலாம். செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்க இரண்டு முறைகள் உள்ளன. IUI-Intra uterine insemination என்ற சிகிச்சையில் ஆணின் விந்தணுக்கள் செயற்கை முறையில் மருத்துவ கண்காணிப்பில் பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படும். IVF- In Vitro fertilization சிகிச்சையில் பெண்ணின் கரு முட்டைகள் வெளியே எடுக்கப்பட்டு ஆய்வக சூழலில் கரு முட்டைக்குள் விந்தணுக்கள் செலுத்தப்படும். கரு உருவானபின் மீண்டும் அது பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படும். IUI சிகிச்சையை ஒப்பிடும்போது IVF சிகிச்சை அதீத கவனத்துடன் பல நிபுணர்களின் மேற்பார்வையில் நிகழ்த்தப்படும். குழந்தையின்மை சிகிச்சை குழந்தையின்மை சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் வரை கட்டணம்! - ஏழைகளுக்கு எட்டாக்கனியா மகப்பேறு? செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தற்போது நிறைய உருவாகிவிட்டன. அரசு மருத்துவமனைகளிலும் குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் IUI சிகிச்சை வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில் IVF சிகிச்சை முறையையும் தொடங்குவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தையின்மைக்கு சிகிச்சைகள், தீர்வுகள் நிறைய உள்ளன. அதை விட்டுவிட்டு தற்கொலை செய்யும் முடிவு அவசியமற்றது” என்றார்.

விகடன் 26 Mar 2024 6:35 pm

Sexual Wellness: எப்போதெல்லாம் செக்ஸுக்கு `நோ'சொல்ல வேண்டும்? | காமத்துக்கு மரியாதை -154

''விருப்பமிருந்தால் வாழ்நாளின் இறுதிவரை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம். ஏன் மாதவிலக்கு நாள்களில், கர்ப்ப காலத்தில்கூட தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம் என்று பல கட்டுரைகளிலும் காணொளிகளிலும் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதே நேரம், எப்போது செக்ஸ் கூடாது; யாருடன் செக்ஸ் கூடாது; எந்தச் சூழ்நிலைகளில் செக்ஸ் கூடாது என்பது பற்றியும் சொல்ல வேண்டியது அவசியம்'' என்ற பாலியல் மருத்துவர் காமராஜ், அவை பற்றி விளக்க ஆரம்பித்தார். Sexual Wellness Premature ejaculation: விந்து முந்துதா... உங்ககிட்டேயே தீர்வு இருக்கு..! - காமத்துக்கு மரியாதை 153 இதுவே பாதுகாப்பு! ஒரு பார்ட்னருடன் மட்டும் உறவில் இருப்பது எப்போதும் நல்லது. இதை நான் ஒழுக்கம் சார்ந்த விஷயமாகச் சொல்லவில்லை. ஏனென்றால், மனம் ஒத்துப் போகாமல் பிரிந்து, அதன் பின்னர் மற்றொரு துணையைத் தேர்ந்தெடுத்து வாழ்பவர்களின் நிலைமை என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். முதல் மணமோ, மறுமணமோ, நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஒரு பார்ட்னருடன் வாழ்வது உறவுச்சிக்கல்களிலிருந்தும், பால்வினை நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். இதை என்னுடைய மருத்துவ அனுபவத்திலிருந்து சொல்கிறேன். மைனரா..? நோ! சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்வது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் சிறுமியரை குரூமிங் செய்து அவர்கள் சம்மதத்துடன் பாலுறவில் ஈடுபடுகிறார்கள். இரண்டுமே குற்றம்தான். சம்பந்தப்பட்ட பெண்ணே உறவுகொள்ள விருப்பம் தெரிவித்தாலும், அவர் மைனராக இருந்தால் நோ செக்ஸ். மீறி உறவுகொள்வது சட்டப்படி குற்றம். தண்டனையும் கிடைக்கும். திருமணம் தாண்டிய உறவா? ஒரு திருமண பந்தத்திலிருந்து வெளியே வந்த பிறகு, விருப்பப்படி இன்னொரு துணையுடன் வாழலாம். ஆனால், ஒரு திருமண உறவுக்குள் இருக்கும்போதே `இன்னோர் உறவில்' இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதை நோக்கி யாராவது உங்களைத் தூண்டினாலும் அதற்கு அழுத்தமாக நோ சொல்லுங்கள். உங்களுடைய தயக்கம் எதிராளிக்கு சம்மதம் தெரிவித்தது போலாகிவிடும். ஆண், பெண் இருவருமே திருமணமாகும்போதே `எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையரை தவிர்ப்போம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம். Sexual Wellness Sexual Wellness: `ச்சீ, என் பிள்ள சுயஇன்பம் செய்யுறானே'ன்னு கோபப்படறீங்களா?| காமத்துக்கு மரியாதை 153 மனைவியே என்றாலும்... மனைவியே என்றாலும் அவருக்கு உடல்நலம் சரியில்லாதபோதும், விருப்பமில்லாதபோதும் உறவுக்கு வற்புறுத்துதல் மனிதப் பண்பல்ல. மாதவிலக்கின்போதும் உறவுகொள்ளலாம்; கருவுற்றிருக்கும்போதும் உறவுகொள்ளலாம் என்று நான் பலமுறை சொல்லியிருந்தாலும், இதில் மனைவிக்கும் விருப்பமிருந்தால் மட்டுமே ஈடுபட வேண்டும். வற்புறுத்துவதும் மிரட்டுவதும்... மனைவியைத் தவிர மற்ற பெண்களை, செக்ஸுக்கு வற்புறுத்துவது அல்லது மிரட்டி உறவுகொள்ள வைப்பது அல்லது `அதுக்கு பதிலா இது' என்று பண்டமாற்றுக்கு முயல்வதும் கூடவே கூடாது. தொற்றுநோய் இருந்தால்... ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவக்கூடிய கொரோனா, காசநோய் போன்ற தொற்றுநோய்கள் இருக்கையில் செக்ஸை தவிர்ப்பது இருவருக்குமே பாதுகாப்பு. Dr. Kamaraj Premature ejaculation: விந்து முந்துதா... உங்ககிட்டேயே தீர்வு இருக்கு..! - காமத்துக்கு மரியாதை 153 பால்வினை நோய்கள் இருந்தால்... பால்வினை நோய்கள் இருந்தால், வாழ்க்கைத்துணையே என்றாலும், அவர்கள் குணமான பிறகுதான் தாம்பத்திய உறவுகொள்ள வேண்டும். தனக்கு பால்வினை நோய் இருப்பது தெரிந்த பிறகு வாழ்க்கைத்துணையுடன் மட்டுமல்லாமல், மற்றவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். இந்த வகை உறவுகளுக்கும் 'நோ' சொல்லுங்க! மற்ற விஷயங்களைப் போலவே பாலியலும் உலகமயமாகிவிட்டது. அதனால், வெளிநாடுகளைப் போல இங்கும் `குரூப் செக்ஸ்', `ஓர் இரவுக்கு மட்டும்' என்று மக்களின் மனப்பான்மை மாறிவருகிறது. இவையும் தவிர்க்கப்பட வேண்டியவையே...''

விகடன் 26 Mar 2024 6:23 pm

Baby loss Certificate: கருவில் இறக்கும் குழந்தையை அங்கீகரிக்க சான்றிதழ்... வரவேற்கும் பெண்கள்!

கருவுறும் பெண்கள் அனைவரும் குழந்தையைப் பெற்றெடுப்பதில்லை. எதிர்பாராத விதமாக சில குழந்தைகள் கருவிலேயே இறந்துவிடுகின்றன. காலங்கள் போகப் போக இறந்த குழந்தையின் நினைவுகள் பெற்றோரைத் தாண்டி யாருக்கும் தெரிவதில்லை.  தோன்றாமலே மறைந்து போன உயிரின் நினைவுகள் யாரும் அறியாமலேயே மறைந்து போகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அரசு`Baby loss Certificate’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  Miscarriage Rani Mukerji: ``என்னால் இரண்டாவது குழந்தை பெற முடியவில்லை''... மனம் வருந்திய நடிகை! 24 வாரங்களுக்கு முன்பு வரை கர்ப்பமாக இருந்து, குழந்தையை இழந்த பெற்றோருக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நேரிடும் குழந்தையின் இழப்பை முறையாக அங்கீகரிக்க இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  `Baby loss Certificate’ பெறத் தகுதியானவர்கள் யார்?! கர்ப்பமாகி 24 வாரங்களுக்கு முன்பு குழந்தையை இழந்த இங்கிலாந்து பெண்கள் தங்கள் குழந்தையை நினைவுகூர்வதற்கான சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கலாம். இச்சான்றிதழைப் பெற 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும். அதோடு சான்றிதழுக்காக விண்ணப்பிப்பவர்கள் செப்டம்பர் 1, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு குழந்தையை இழந்திருக்க வேண்டும்.  இதற்காக எந்தவித மருத்துவ ஆதாரத்தையும் வழங்கத் தேவையில்லை. குழந்தையின் இழப்பானது மருத்துவக் குழு  அல்லது மருத்துவரால் பதிவு செய்யப்படாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி பெண்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.  10 செ.மீ வாலோடு பிறந்த குழந்தை... வாலை அகற்ற முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டம்: ஏன் தெரியுமா?! என் நினைவுபெட்டியில் சிறு உயிரை சேமிக்கிறேன்... இது குறித்து கர்ப்பமாக இருந்தபோது குழந்தையை இழந்த லாரா என்ற பெண் கூறுகையில், ``2020-ல் எனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. இது என்னையும் என் கணவரையும் பாதித்தது, இது நாங்கள் அடிக்கடி பேசும் விஷயமல்ல. ஆனால், இறந்த என் குழந்தையை என்னால் மறக்கவே முடியாது. அந்த இழப்பு என்னில் ஒரு பகுதி. கர்ப்பத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்து என் குழந்தைகளுடன் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேச விரும்புகிறேன். என்னை மகனுக்கு தற்போது 6 வயதாகிறது. எனது வயிற்றில் ஒரு சிறிய குழந்தை, அவனது சகோதரன் அல்லது சகோதரி இருந்தது அவனுக்குத் தெரியும். நம் குழந்தை இருந்ததை நிரூபிக்கும் அதிகாரபூர்வ ஆவணத்தை வைத்திருப்பது, வரவிருக்கும் ஆண்டுகளில் பேசுவதற்கும், நம் நினைவகப் பெட்டியில் வைத்திருப்பதற்கும் முக்கியமானது’’ என்றார்.  வெல்ஷ் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்கள் குழந்தை இழப்பு சான்றிதழ்களை அறிமுகப்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது... Baby loss Certificate குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!

விகடன் 26 Mar 2024 11:55 am

Doctor Vikatan: எடைக்குறைப்புக்கு உதவுமா சைனா கிராஸ் எனப்படும் கடல்பாசி?

Doctor Vikatan: இஸ்லாமியர்களின் உணவுகளில் பிரதானமாக இடம்பெறும் கடல்பாசியை எல்லோரும் சாப்பிடலாமா....  அது உடல் எடையைக் குறைக்குமா... நோன்பிருக்கும்போது அதைச் சாப்பிடுவதால் என்ன பலன்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் Doctor Vikatan: மனநல பிரச்னைகளுக்கான மருந்துகள்... ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா? சைனா கிராஸ் எனப்படும் சீனப்புல் வகையைச் சேர்ந்ததுதான் கடல்பாசி. இதை எல்லோருமே சாப்பிடலாம்.  வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.  ரமலான் நோன்பிருப்பவர்களின் உணவுப் பட்டியலில் கடல்பாசி கட்டாயம் இடம்பெறும். கடல்பாசி இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு அவர்கள் தினமுமே இதைச் சேர்த்துக் கொள்வார்கள். நாள் முழுவதும் நோன்பிருந்துவிட்டு, உணவு சாப்பிடும்போது, வயிறு புண்ணாகாமல் தடுக்க, கடல்பாசி சேர்த்துக்கொள்வார்கள்.  இதில் கலோரி பெரியதாக இல்லை என்பதால் இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என எந்த வரையறையும் இல்லை.  கடல்பாசி என்பது நம் குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். சிறுகுடலைத் தூண்டிவிட்டு, செரிமான இயக்கத்தை எளிதாக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராமலிருக்கவும் கடல்பாசி உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னைக்கு மருந்துகள், மலமிளக்கிகள் எடுத்துக்கொள்வோர், அவற்றுக்கு பதில் கடல்பாசி எடுத்துக் கொள்ளலாம். எந்தவிதப் பக்கவிளைவும் இல்லாமல், மலத்தை இளக்கி வெளியேறச் செய்வதில் கடல்பாசி பெரிய அளவில் உதவும். கடல்பாசி Doctor Vikatan: பனீர் சாப்பிட்டால் எடை கூடுமா... தினமும் சாப்பிடலாமா...? சீன மக்கள் பசி உணர்வைக் கட்டுப்படுத்த கடல்பாசி பயன்படுத்துவார்கள். கடல்பாசியில் கலோரி மிகக் குறைவு என்பது இதன் இன்னொரு ப்ளஸ். இளநீர் சேர்த்து புட்டிங் போன்று செய்து சாப்பிடலாம். ஆரோக்கியத்துக்கும் நல்லது, கலோரியும் கூடாது. கடல்பாசி என்பது எடைக்குறைப்புக்கு உதவுமா என்பது குறித்து இன்னும் முழுமையான ஆய்வு முடிவுகள் வரவில்லை.  கடல்பாசியை நாம் எப்படிச் சமைத்துச் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது அது. பால், சர்க்கரை  போன்றவை சேர்த்துச் செய்து சாப்பிடும்போது எடையை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 26 Mar 2024 9:00 am