Diwali : காட்டன் டிரெஸ் தீப்பிடிக்கும்; ஆனால், பட்டாசு வெடிக்கையில் அதையே உடுத்த வேண்டும் - ஏன்?
நாளை தீபாவளி என்பதாலேயே இரவெல்லாம் தூங்காமல் கனவு கண்டு, அலாரம் இல்லாமலேயே காலையில் எழுந்து, குளித்து புத்தாடைகளெல்லாம் அணிந்து, நேராக நாம் போகும் இடம் எங்கே..? வீட்டு வாசலுக்குத்தான். இந்த தீபாவளிக்கென்றே எக்ஸ்குளூசிவ் ஆக வாங்கிய பட்டாசுகளை வெடிக்க வேண்டாமா..? அதே நேரம், ஆசையாக வாங்கிய பட்டாசுகளை கவனமாக வெடிக்கவில்லை என்றால் ஆபத்தில் முடியக்கூடும். Deepavali ஏன் பட்டாசு வெடிக்கும்போது காட்டன் உடை உடுத்த வேண்டும் என, சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப கழகத்தில் கைத்தறி தொழில்நுட்பம் மற்றும் துகிலியல் துறையில் (Handloom and Textile Technology) பணியாற்றி வரும் பேராசிரியர் முனைவர் த.கோபி கண்ணன் சொல்வதைக் கேளுங்கள்! தீக்காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க உகந்த துணி ''பொதுவாகவே தீபாவளிக்கு விலையுயர்ந்த, ஆடம்பரமான, அதிக வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் உடுத்துபவர்கள் உண்டு. அதில் தவறில்லை. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது உடலில் தீக்காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க உகந்த துணி, நம் எல்லாருக்கும் தெரிந்த காட்டன் எனப்படும் பருத்திதான். காட்டன் உடைகளும் எளிதாக தீ பற்றி எரியக்கூடியதே என்றாலும் அதை அணிவதே பாதுகாப்பு. Deepavali காட்டன்தான் விரைவாக தீ பிடிக்கக்கூடியது. ஆனால்... எடுத்துக்காட்டாக, தீபாவளி அன்று ஒருவர் காட்டன் உடை அணிந்தும், மற்றொருவர் synthetic fabric வகையில் ஒன்றான பாலியஸ்டர் உடையை அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிக்கிறாரென்று வைத்துக்கொள்வோம். இவை இரண்டில், காட்டன்தான் விரைவாக தீ பிடிக்கக்கூடியது. ஆனால், காட்டன் டிரெஸ்ஸில் தீப்பிடித்து பரவும் நேரத்திற்குள் பாலியஸ்டர் உருக தொடங்கிவிடும். காட்டன் அணிந்திருப்பவரின் உடையில் தீப்பிடிக்க தொடங்கியவுடன் தீ உடையில் பரவி பிறகுதான் தோலைத் தொடும். ஆனால், பாலியஸ்டர் அணிந்திருப்பவருக்கு அப்படி அல்ல. அந்தத் துணி ஒரு மெழுகு போல் உருகி தோலின் மீது படிந்து கொப்பளங்களை உருவாக்கும். தோலை உரிக்கக்கூடும். அதனால், காட்டனைக் காட்டிலும் பாலியஸ்டர் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். பட்டும் இயற்கையில் இருந்து கிடைக்கும் இழைதான். பட்டாடையையும் பட்டாசு வெடிக்கும்போது உடுத்தலாம். ஆனால், அதைவிட காட்டன் உடுத்துவதே சிறந்தது'' என்கிறார். பட்டாசால் தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஐஸ்வர்யா கூறுவதையும் கேளுங்கள். டாக்டர் ஐஸ்வர்யா மற்றும் பேராசிரியர் முனைவர் த.கோபி கண்ணன் ``தீபாவளி லேகியம் கேக்குறா கீர்த்தி சுரேஷ்!’’ - மேனகா சுரேஷ் கைகள், முகத்தில்தான் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் தீபாவளி அன்றைக்கு நிறைய மக்களுக்கு தீக்காயங்கள் ஏற்படுகின்றன. மக்கள் சற்று விழிப்புணர்வோடு இருந்தால், இதைத் தடுக்கலாம். பெரும்பாலும் சேலையின் முந்தானை, துப்பட்டா, வேட்டி போன்றவற்றில் தீ பிடிப்பதுதான் அதிகமாக இருக்கிறது. அதிலும் பாலியஸ்டர் உடை அணிவதால் ஏற்படும் தீக்காயங்கள்தான் அதிகம். சின்ன பிள்ளைகளுக்கு பெரும்பாலும் கைகள், முகத்தில்தான் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. Diwali: எண்ணெய்க் குளியலும் அரப்புத்தூளும்..! | Nostalgia + Health நச்சுத்தன்மை வாய்ந்த வெடி மருந்துகள் பட்டாசு வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், உடனே அதை தண்ணீர் கொண்டு அணைத்துவிட்டு, தீக்காயம் பட்ட இடத்தில் தண்ணீர் (Running Water) கொண்டு நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் அந்த பட்டாசுகளில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த வெடி மருந்துகள்/ ரசாயனங்கள் நம் உடலுக்குள் நுழைவதை தடுக்க முடியும். சிலர், முதலுதவி என்று நினைத்து தீக்காயம் மீது 'டூத் பேஸ்ட்' தடவுகிறார்கள். இதை கண்டிப்பாக செய்யக்கூடாது. Deepavali: பலகாரங்களோடு சாப்பிட வேண்டிய தீபாவளி லேகியம் - வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்! மாஸ்க்கும் கண்ணாடியும்... பலத்த காயமாக இருந்தால், நிச்சயமாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது. தவிர, பிள்ளைகள் பட்டாசு வெடிக்கையில் மூக்கை மறைக்கும்படி மாஸ்க் அணிவது நல்லது. முடிந்தால் கண்களை மறைக்க சிறுவர்களுக்கான கண்ணாடிகூட அணியலாம்'' என்கிறார். அரசு குறிப்பிட்டிருக்கும் விதிமுறைகளை மதித்து, கவனமாக தீப ஒளித் திருநாளை கொண்டாடுவோம்..!
Doctor Vikatan: இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு; ஆஞ்சியோ, சிடி ஆஞ்சியோ எது பெஸ்ட்?
Doctor Vikatan: இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதை ஆஞ்சியோகிராம் மூலம் கண்டுபிடிக்கிறோம். இந்த டெஸ்ட்டுக்கு பதில் சிடி ஆஞ்சியோ செய்யலாம், ஸ்கேன் மாதிரி சுலபமான டெஸ்ட் அது என்கிறார்களே! அது உண்மையிலேயே துல்லியமானதுதானா? அது பற்றி விளக்கவும். பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் ஆஞ்சியோகிராம் என்பது இதயத்தின் ரத்தக்குழாய்களில் நேரடியாக கான்ட்ராஸ் டை (Contrast dye ) எனப்படும் திரவத்தைச் செலுத்தி, எக்ஸ்ரே போன்ற மெஷினை வைத்துப் பார்த்து, மேற்கொள்ளப்படுகிற சோதனை. இது மிகவும் துல்லியமானது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், ரத்தக்குழாய் அடைப்பு அதிகமாக இருப்பது தெரிந்தால், பலூன் வைத்து அந்தக் குழாயை விரிவுபடுத்தி, ஸ்டென்ட் எனப்படும் உலோக கருவியை உள்ளே பொருத்திவிடுவார்கள். இதை ஆஞ்சியோபிளாஸ்டி என்கிறோம். எனவே, ஆஞ்சியோகிராம் செய்கிறபோது, உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டியும் செய்துவிட முடியும். பிபி, சுகர், கொலஸ்ட்ரால், குடும்ப பின்னணியில் உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள், இதயத்தின் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரிந்தவர்கள், அடிக்கடி நெஞ்சுவலியை உணர்பவர்கள், எக்கோ பரிசோதனையில் மாறுதல்கள் இருப்பவர்கள் போன்றோருக்கெல்லாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்வதுதான் சரியானது. ஏனென்றால், டெஸ்ட் செய்த உடனேயே அதற்கான தீர்வையும் காண முடியும். இதயத்தின் ரத்தக்குழாய் Doctor Vikatan: 60 வயது கணவருக்கு ரத்தக்குழாய் அடைப்பு, 20 வயது மகனுக்கும் டெஸ்ட் அவசியமா? அதுவே, ஒரு நபருக்கு 35-40 வயதுதான் ஆகிறது, இசிஜியில் மாறுதல்கள் தெரிகின்றன, வலியும் இருக்கிறது, பிபி, சுகர போன்ற ரிஸ்க் காரணிகள் இல்லாதவர், குடும்ப பின்னணியில் இதய நோய் இல்லாதவர் என்ற நிலையில், இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சிடி ஆஞ்சியோ டெஸ்ட் செய்து பார்க்கலாம். இது ஸ்கேன் செய்வது போன்ற எளிமையான பரிசோதனைதான். இதற்காக மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டியதில்லை. புறநோயாளியாகவே சென்று டெஸ்ட் செய்து கொண்டு வீடு திரும்பலாம். இந்த டெஸ்ட்டுக்கு முன் கையில் இன்ஜெக்ஷன் ஒன்று போடுவார்கள். பிறகு இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம். சிடி ஆஞ்சியோவில் நார்மல் என ரிசல்ட் வந்தால், அது 99.5 சதவிகிதம் நம்பகமானது. அதுவே, அடைப்பு இருப்பதாக ரிசல்ட் வந்தால், அது 70 முதல் 75 சதவிகிதம்தான் நம்பகமானது. எனவே, அடைப்பு இருப்பது உறுதியானால், ரெகுலர் ஆஞ்சியோதான் செய்ய வேண்டியிருக்கும். ஆஞ்சியோ, சிடி ஆஞ்சியோ எது பெஸ்ட்? எனவே, அடைப்பு இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே சிடி ஆஞ்சியோ பரிசோதனையைப் பரிந்துரைப்போம். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் அட்மிட் ஆகி, கைவழியே ஊசி போடப்பட்டு, இன்வேசிவ் முறையில் ரெகுலர் ஆஞ்சியோ செய்வதுதான் சிறந்தது. இதற்காக 4 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
'ORS'லேபிள் ஒட்டுவதற்கு எதிராகப் போராடி வென்ற பெண் டாக்டர்; அதிர்ச்சியான காரணம் இதோ!
ஒரு மருத்துவரின் போராட்டமும் தடை உத்தரவும்... வாந்தி மற்றும் பேதியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளைத்தான் (ORS - Oral Rehydration Solution). மருத்துவர்கள் முதல் சாமானியர்கள் வரை ஓ.ஆர்.எஸ் உயிர் காக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கையில், சர்க்கரை பானங்களுக்கெல்லாம் 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் வணிக நோக்கம் கொண்டவர்கள். அதற்குள் இருப்பது சர்க்கரை மட்டுமே; உயிர் காக்கும் எலக்ட்ரோலைட்ஸ் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார், ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ். இதன் நல்ல விளைவாக, இனி சர்க்கரை பானங்களுக்கு 'ORS' லேபிளைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்திருக்கிறது. ors water 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யக்கூடாது! பாட்டில்களில் விற்கப்படும் பழச்சாறுகள், காற்று அடைக்கப்பட்ட பானங்கள் உள்பட எந்தவொரு பானத்திற்கும் இனிமேல், 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யக்கூடாது. அப்படிச் செய்வது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ஐ மீறுவதாகும். இது அந்தப் பானங்களை நம்பி வாங்குகிற நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாகும் என, அந்தத் தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யப்படும் பானங்களில்... உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு லிட்டர் ORS கரைசலில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட் மற்றும் 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால், 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யப்படும் பானங்களில் ஒரு லிட்டருக்கு 120 கிராம் சர்க்கரை இருந்திருக்கிறது. தவிர, பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பைத் தடுக்கும் எலக்ட்ரோலைட்ஸ் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது என்பதை நிரூபித்த டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், சர்க்கரை பானங்களில் 'ORS' லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகிறார். Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க! குழந்தை குழந்தைளின் உயிரிழப்புக்கும் காரணமாகலாம். ’’இந்தியாவில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு ஒரு முக்கியமான காரணம் வயிற்றுப்போக்கு. பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றும் மருத்துவ உதவிகளில் ஒரு முக்கிய இடத்தில் 'ORS' பானம் இருக்கிறது. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களில் 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்தால், அதைக் குடிக்கிற குழந்தைகளின் நிலைமை இன்னுமே மோசமாகும். அது அந்தக் குழந்தைகளின் உயிரிழப்புக்கும் காரணமாகலாம். Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா? மக்களுக்குக் கிடைத்த வெற்றி அதனால்தான், இதை எதிர்த்து தொடர்ந்து போராடினேன். இனிமேல், சர்க்கரை பானங்களுக்கு 'ORS' லேபிளைப் பயன்படுத்தக்கூடாது என இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்திருக்கிறது. இந்த வெற்றி என்னுடன் துணை நின்று போராடிய பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியும் கண்ணீருமாய் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ். View this post on Instagram A post shared by Dr Sivaranjani Santosh (@drsivaranjanionline) தும்மல், காய்ச்சல், உடல் வலி... பயப்பட வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன? கவனமாக இருங்கள். வயிற்றுப்போக்குப் பிரச்னை வந்தால் மருத்துவரை நாடுங்கள். உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்திய 'ORS' பாக்கெட்டுகளை வாங்கி நீரில் கரைத்துக் குடியுங்கள். வண்ண வண்ண பாட்டில்களில் அடைக்கப்பட்ட சர்க்கரைத் தண்ணீரை வாங்கி உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கொடுக்காதீர்கள். இனி மழைக்காலம் என்பதால், வாந்தியும் வயிற்றுப்போக்கும் வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. 'ORS' லேபிள் ஒட்டப்பட்ட பானங்களிடத்தில் கவனமாக இருங்கள்.
Doctor Vikatan: சீக்கிரமே உடல் பருமனைக் குறைக்க உதவுமா சித்த மருந்துகள்?
Doctor Vikatan: நான் பல வருட காலமாக உடல் எடையைக் குறைக்கப் போராடிக் கொண்டிருக்கிறேன். உடல் எடையைக் குறைக்க உதவுவதாகச் சொல்லும் மாத்திரைகள்கூட பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், எதிலுமே எனக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், சித்த மருத்துவத்தில் வெயிட்லாஸுக்கென்றே நிறைய மருந்துகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் உடல் எடையைக் குறைப்பதற்கு எப்போதுமே மருந்துகளைத் தீர்வாக நாடாமல், மருந்துகளை துணை ஆதரவாக வைத்துக்கொள்வதுதான் சிறந்தது. அதாவது, உடல் எடையைக் குறைப்பதில் கூட்டு சிகிச்சை முறைதான் சிறந்தது. நல்ல உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றோடு கொழுப்புச்சத்தைக் குறைப்பதற்கான மருந்துகள், குறிப்பாக, கெட்ட கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை வெகுவாகக் குறையும். சித்த மருத்துவத்திலும் அதற்கு நிறைய தீர்வுகள் உள்ளன. உதாரணத்துக்கு, திரிபலா சூரணம். ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும், கொழுப்பு அதிகரிக்காமல் இருக்கவும் திரிபலா பயன்தரும். அதேபோல நத்தைச்சூரி சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதயத்தின் செயல்பாடுகளைச் சிறப்பாக்கும் மருதம்பட்டைச் சூரணம், வெண் தாமரை சூரணம் போன்ற மருந்துகளையும், சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளலாம். திரிபலா பொடி வராது... ஆனா, வரும்!- 1: குழந்தைப்பருவ உடல் பருமன்... அடுத்த 5 வருடங்களில் காத்திருக்கும் ஆபத்து... புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்க்காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, மதிய உணவுக்கு புரோபயாடிக் சத்து நிறைந்த பானகம், பழைய சாத நீர், மோர் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம். செரிமான மண்டலத்துக்கு நலம் செய்யக்கூடிய கிருமிகளை அதிகரித்தாலே உடல் பருமன் வராமல் தடுக்கலாம் என்ற கருத்தும் சமீபகாலமாக வலுப்பெற்று வருகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்கு குறுக்கு வழிகளே கிடையாது. உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சி மிகமிக முக்கியம். உணவுக்கட்டுப்பாடும் அவசியம். மருந்துகள் என்பவை கூடுதலாகப் பலன் தரும், அவவ்ளவுதான். மருந்துகளை மட்டுமே நம்பி, அவை மட்டுமே உடல் பருமனில் இருந்து தீர்வளிக்கும் என்று நினைக்க வேண்டாம். உடல் பருமன் வராமல் தடுக்கும் கொள்ளு சட்னி, கொள்ளு துவையல், கொள்ளு ரசம் போன்ற இயற்கையிலேயே உடலில் வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதும் பலன் தரும். கொள்ளு குழம்பு இன்றைய டிஜிட்டல் உலகில், உடல் பருமனைக் குறைப்பதாக உத்தரவாதம் தரும் மருந்துகளின் விளம்பரங்களை அதிகம் பார்க்க முடிகிறது. அவை, மலமிளக்கி போல செயல்படும். அதனால் உடல் எடை குறைந்தது போன்ற ஒரு மாயை ஏற்படும். மற்றபடி அது நிரந்தர தீர்வாகாது. தினமும் மலமிளக்கி எடுத்துக்கொள்வதெல்லாம் சரியான விஷயமல்ல. நீரைப் பெருக்கும் மருந்துகளும் அப்படித்தான்... உடலை லேசாக்கியது போல உணர்வோம். ஆனால், அவை உடல் எடையைக் குறைக்காது. எனவே, எந்தக் குறுக்கு வழியையும் நாடாமல், மருத்துவரின் வழிகாட்டுதலோடு இந்த விஷயத்தை அணுகுவதுதான் நிரந்தர பலன் தரும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்ய மருத்துவ உணவுகள்!
`ஆலப்போல், வேலப்போல்'- எந்த மரத்தின் குச்சி என்ன பலன் தரும் நம் பற்களுக்கு?
கருவேல மரக்குச்சியில் பல் துலக்கினால், பற்கள் மட்டுமல்ல ஈறுகளும் சேர்ந்து திடமாகும்; வேப்ப மரத்தின் குச்சியைக் கொண்டு பல் துலக்கினால், பற்கள் தூய்மையாகும். நீர் புலா மரக்குச்சியால் பல் துலக்கினால், ஆண்மை விருத்தியாகும்; நாயுருவி வேரால் பல் துலக்கினால், பற்பசைகளில் வரும் நுரைகளைப்போல அதிக அளவு நுரை வரும். இந்த நுரை பல் அழுக்குகளைப் போக்கி, பற்களை அழகாக்குவதுடன் முகத்தில் வசீகரத்தையும் உண்டாக்கும் என்கிறது பதார்த்தகுண சிந்தாமணி பாடல். சரி, எந்தெந்த மரத்தின் குச்சியால் பல் துலக்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று முழுமையாக தெரிந்துகொள்ள சித்த மருத்துவர் வேலாயுதம் அவர்களிடம் பேசினோம். எந்தெந்த மரங்களின் குச்சிகளை பல் துலக்க பயன்படுத்தலாம்? ஆவாரம்பூக்களையும் பல் துலக்கப் பயன்படுத்தலாம்! ''பல் துலக்குவதற்கு மேற்குறிப்பிட்ட குச்சிகள் மட்டுமின்றி `மா, நாவல், விளா, நொச்சி மற்றும் புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தலாம்’ என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு போன்றவற்றைப் பொடியாக்கிப் பல் துலக்கப் பயன்படுத்தலாம். வேப்பங்கொழுந்து, கருவேலமரக் கொழுந்து மற்றும் ஆவாரம்பூக்களையும் பல் துலக்கப் பயன்படுத்தலாம். கிருமிநாசினியாகச் செயல்படும்! பல் துலக்கப் பயன்படுத்தும் மரக்குச்சிகள் சுண்டு விரல் அளவு தடிமனாகவும், ஒரு சாண் அளவு நீளமானதாகவும் இருக்க வேண்டும். குச்சியை உடைத்து அவற்றை நீரில் கழுவி, ஒரு பக்க நுனியைப் பற்களால் கடித்தோ, தட்டியோ பிரஷ்போலச் செய்துகொள்ள வேண்டும். இதைக்கொண்டு பற்கள் மற்றும் அவற்றின் இடுக்குப் பகுதிகளிலும் ஈறுகளிலும் மென்மையாகத் தேய்த்து பற்களைச் சுத்தம் செய்யலாம். அத்துடன் அதே குச்சியால் மேலும் கீழும், இடதும் வலமுமாகப் பற்களை மென்மையாகச் சுத்தப்படுத்தலாம். குச்சிகளை வாய்ப் பகுதியில் வைத்ததுமே, உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து கிருமிநாசினியாகச் செயல்பட்டு உடனடியாக தம் பணியைத் தொடங்கிவிடும். பற்களில் பாக்டீரியாக்களை அண்ட விடாது! பற்களில் பாக்டீரியாக்களை அண்ட விடாது! ஆலங்குச்சி, நாவல்குச்சி, கருவேலங்குச்சி போன்றவை துவர்ப்புச் சுவையுடையவை. வேப்பங்குச்சி கசப்புச் சுவையுடையது. இப்படி ஒவ்வொரு குச்சியும் வெவ்வேறு சுவைகொண்டது. துவர்ப்புச் சுவை உடைய குச்சிகள் ஈறுகளில் ஏற்படும் புண், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு தரும். கசப்புச் சுவை உடைய குச்சிகள், பற்களில் பாக்டீரியா கிருமிகளை அண்டவிடாமல் பாதுகாப்பாக விளங்கி, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தூய்மைப்படுத்தவும் உதவும். மனிதனைக் கடித்து இறந்த பாம்பு; வேப்பங்குச்சியால் பல் துலக்கியதுதான் காரணமா? - நிபுணர்கள் சொல்வதென்ன? உப்புச் சுவைக்கு உடல் கிருமிகளை அழிக்கும் வல்லமை உண்டு! உப்புச் சுவைக்கு உடல் கிருமிகளை அழிக்கும் வல்லமை உண்டு. திரிபலா சூரணத்தைத் தினமும் பற்பொடியாகப் பயன்படுத்தினால், பற்கூச்சம் நீங்கும்; பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும். கடுக்காய்ப் பொடியால் பல் துலக்கினால், ஈறுகளில் ஏற்படும் வலி, புண், ரத்தக்கசிவு குணமாகும். உப்புச் சுவைக்கு உடல் கிருமிகளை அழிக்கும் வல்லமை உண்டு! காலை உணவை முடித்துவிட்டுதான் பல் துலக்கணுமா? - விளக்குகிறார் மருத்துவர்! நாக்கு மழித்தல் நாக்குப் பகுதியில்தான் பெரும்பாலானோருக்கு நாற்றமடிக்கும். எனவே, வாயைச் சுத்தப்படுத்தும் ஒவ்வொரு தடவையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். நாக்கின் மேற்பரப்பில் வெள்ளை நிறத்தில் படிந்திருக்கும் அழுக்கில் பாக்டீரியாக்கள் வசிக்கும். இது போன்ற வெள்ளை நிறப் படிமானம் அஜீரணக் குறைபாட்டைக் குறிக்கும். இது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளின் செயல்பாட்டை மந்தப்படுத்திவிடும் என்பதால், மரக்குச்சிகளை இரண்டாகப் பிளந்து நாக்கை மழிக்கலாம். மரக்குச்சிகளின் நாரைக் கொண்டு நாக்கை மழிப்பதால், கிருமிகள் அகற்றப்படும்; நாக்கிலுள்ள சுவை மொட்டுகளின் செயல்பாடு தூண்டப்படும். அத்துடன் வாயிலுள்ள செரிமான நொதிகளின் வேலைகள் தூண்டப்படும். வாய் கொப்புளித்தல் பல் துலக்கியதும் நாக்கை மழித்தபிறகு வாயில் 12 முறை நீர் நிரப்பிக் கொப்புளிப்பதுடன், காறி உமிழ வேண்டும். அப்போது தொண்டைவரை நீரை இறக்கி, ஒக்காளமிட்டு துப்ப வேண்டும். ஆனால், இன்றைக்குக் காறி உமிழ்தல் அநாகரிமாகப் பார்க்கப்படுகிறது. காறி உமிழ்வதால், கழுத்திலுள்ள கோழைப் பொருளில் கிருமிகள் சேராமல் பார்த்துக்கொள்ளலாம். மேலும், தொண்டை சுத்தமாகும்; கசடுகள் நீங்கும். வாய் கொப்புளித்ததும், பற்களையும் ஈறுகளையும் மென்மையாக அழுத்திவிட வேண்டும். இதைத்தான் இன்றைக்கு ‘கம் மசாஜ்’ என்கிறார்கள். அக உறுப்புகளின் நுழைவுவாயில் வாய் தான்! பல் துலக்குதல் என்பது பற்களின் ஆரோக்கியத்துக்கு மட்டுமானதல்ல. அது ஒட்டுமொத்த வாய் சுகாதாரத்தையும் காக்கக்கூடியது. அத்துடன் பற்கள், ஈறுகள், நாக்கு, தொண்டை, உமிழ்நீர்ச் சுரப்பி, சுவை மொட்டுகளின் ஆரோக்கியத்தைக் காத்து, அவற்றின் செயல்பாட்டுக்குப் புத்துணர்வு கொடுக்கக்கூடியது. `இரவில் பல் துலக்கினால் போதும் காலை எழுந்ததும் பல் துலக்கத் தேவையில்லை’ என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது; இது தவறானது. `ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்’ என்கிறது சித்த மருத்துவம். அன்றாடம் உடல் அழுக்கு நீங்க குளிப்பதையும், உள் அழுக்கு நீங்க கழிவுகளை வெளியேற்றுவதையும் எப்படி ஒரு கடமையாகச் செய்கிறோமோ, அதேபோல அக உறுப்புகளின் நுழைவுவாயிலாக இருக்கும் வாய் சுகாதாரத்தைப் பாதுகாக்க பல் துலக்குவோம்'' என்கிறார் மருத்துவர் வேலாயுதம்.
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வயிற்றைச் சுற்றி கடுமையான அரிப்பு; காரணமும் தீர்வுகளும் என்ன?
Doctor Vikatan: நான் இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். வயிற்றைச் சுற்றிலும் அரிப்பு ஆரம்பித்திருக்கிறது. நாளாக ஆக இது அதிகரிக்கிறது. சொரிந்து சொரிந்து புண்ணாவதுதான் மிச்சம். இப்படிச் செய்தால் தழும்புகள் அதிகமாகும் என்கிறார்கள் சிலர். கர்ப்பகாலத்தில் இப்படி வயிற்றைச் சுற்றி அரிப்பு ஏற்பட என்னதான் காரணம். இதைக் கட்டுப்படுத்த வழிகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படுகிற அரிப்பானது பொதுவான ஓர் அறிகுறியே. கர்ப்பத்தின் 6-வது மாதத்துக்குப் பிறகு இந்த அரிப்பு ஆரம்பமாகும். அதாவது வயிறு பெரிதாகத் தொடங்கும்போது, மெள்ள மெள்ள அரிப்பும் ஆரம்பமாகும். குழந்தை வளர, வளர வயிற்றுப் பகுதியில் உள்ள சருமம் விரிவடைகிறது. அதனால் சருமம் வறட்சியடையும். அதன் விளைவாக அரிப்பும் இருக்கும். தேங்காய் எண்ணெயோ, தரமான மாய்ஸ்ச்சரைசரோ தடவினாலே, இந்த அரிப்பிலிருந்து மீள முடியும். கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதியில் அதிகமான அரிப்புடன் உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளிலும் அரிப்பு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.இது 'கோலிஸ்டேசிஸ்' (Cholestasis) என்ற பிரச்னையாக இருக்கலாம். இது கல்லீரலில் ஏதோ பிரச்னை இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரலால் சில பொருள்களை வெளித்தள்ள முடியாதநிலையில், அந்தப் பொருள்கள் கல்லீரலில் சேகரமாகத் தொடங்கும். அதை 'பைல் ஆசிட்' (Bile acids) என்று சொல்வோம். இதன் அளவு அதிகமாகும்போதும் அரிப்பு இருக்கலாம். இதை ரத்தப் பரிசோதனையின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். இந்தப் பிரச்னை கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும் என்பதால், இத்தகைய அரிப்பு அறிகுறியை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம். அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, தினமும் இருவேளை குளிக்க வேண்டும். பாலிமார்பிக் எரப்ஷன் (Polymorphic eruption) என்ற பாதிப்பு கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் வரும். இதனாலும் அரிப்பு இருக்கலாம். குழந்தை பிறந்ததும் இந்தப் பிரச்னை தானாகச் சரியாகிவிடும். இப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற பெரும்பாலான அரிப்பு, குழந்தை பிறந்து, தொப்புள்கொடி இணைப்பைத் துண்டித்ததும் தானாகச் சரியாகிவிடும். அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, தினமும் இருவேளை குளிக்க வேண்டும். குளிர்ந்த நீர்தான் பெஸ்ட். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். தளர்வான உடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளை ஒரு சைஸ் பெரிதாக வாங்கி அணிவது சௌகர்யமாக இருக்கும். கற்றாழை, மென்தால் உள்ள மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Myths and Facts: கர்ப்பிணிகள் டூ வீலர் ஓட்டலாமா?
Doctor Vikatan: 20 வருடங்களாக சுகர் மாத்திரை, சுகர் குறைய இனி இன்சுலின் போட வேண்டுமா?
Doctor Vikatan: எனக்கு 20 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு இருக்கிறது. இத்தனை வருடங்களாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். என்னுடைய நண்பர் இனியும் மாத்திரை வேலை செய்யாது, இன்சுலினுக்கு மாறுங்கள் என்கிறார். இனி எனக்கு மாத்திரைகள் பலனளிக்காதா, நான் இன்சுலினுக்கு மாற வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி 20 வருடங்களாக நீரிழிவுக்கு மாத்திரைகள் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று சொல்லவில்லை. 20 வருடங்கள் அல்ல, 40 வருடங்களாக நீரிழிவு இருந்தாலும், அதை நீங்கள் எந்த அளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் இதில் முக்கியம். ரத்தச் சர்க்கரை அளவானது, சாப்பாட்டுக்கு முன் 100-க்கு கீழும், சாப்பாட்டுக்குப் பிறகு அது 150-க்குக் கீழும் இருக்க வேண்டும். தவிர, ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்று மாத சராசரி சர்க்கரை அளவானது 7-க்குக் கீழும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இருப்பதாக அர்த்தம். கூடவே, நீரிழிவுடன் தொடர்புடைய பிற சிக்கல்கள் இல்லாமல் இருக்கிறீர்களா என்பதும் முக்கியம். உதாரணத்துக்கு, கால்களில், கண்களில், சிறுநீரகங்களில், இதயத்தில் இப்படி எந்தப் பிரச்னையும் இல்லாதபட்சத்தில், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. ரத்தச் சர்க்கரை அளவு அதே சமயம், மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தாலும், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றாலோ, நீரிழிவால் வேறு பிரச்னைகள் புதிதாகச் சேர்ந்துகொண்டிருந்தாலோ உங்கள் சிகிச்சையில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்குத்தான் இன்சுலின் தேவைப்படும். அது எல்லோருக்கும் அவசியப்படாது. கணையத்தில் இன்சுலின் சுரப்பு எப்படியுள்ளது என்பதைப் பார்த்துவிட்டுதான் அது முடிவு செய்யப்படும். பொதுவாக, டைப் 1 நீரிழிவு பாதித்தோருக்கும், நீரிழிவால் வேறு சிக்கல்கள் இருப்போருக்கும் இன்சுலின் பரிந்துரைக்கப்படலாம். இன்சுலின் சுரப்பு அறவே இல்லாதவர்களுக்கும் அது பரிந்துரைக்கப்படும். மற்றபடி எல்லோருக்கும் தேவையில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கண் ஆபரேஷனுக்காக இன்சுலின் ஊசிக்கு மாற்றம்: இனி ஊசியா, மாத்திரையா.. எதைத் தொடர்வது?
Hair Dye & Hair Colouring: பின்பற்ற வேண்டிய எச்சரிக்கை வழிமுறைகள்! - நிபுணர் கைடன்ஸ்
ஹேர் கலரிங், இதனை சிலர் அழகிற்காக பயன்படுத்துகிறார்கள். சிலர் ஆசைக்காக பயன்படுத்துகிறார்கள். இதில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இருக்கின்றன என தெரிந்தும், பின்விளைவுகளைத் தெரியாமல் பலர் பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் வெள்ளை முடியின் நிறம் மாறுவதற்காக ஹேர் டை பயன்படுத்தினார்கள். தற்போது உடையின் நிறத்திற்கு ஏற்றவாறு ஹேர் கலரிங் செய்கிறார்கள். ஹேர் கலரிங் மற்றும் ஹேர் டை குறித்த நமது கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக். Hair Dye & Hair Colour ஹேர் கலரிங் செய்யும்போது நமது கூந்தலுக்கு என்ன ஆகிறது? நம்முடைய கூந்தலில் இயற்கையாகவே எண்ணெய் உற்பத்தி இருக்கும். ஹேர் கலரிங் செய்யும்போது, முடியின் இயற்கை நிறம் மாறி, தனது பளபளப்பு தன்மையை இழந்துவிடுகிறது. இவற்றில் இருக்கிற ரசாயனங்கள் முடியின் வேர்க்கால்களில் ஊடுருவி, அதன் இயற்கை நிறத்தையும் இயற்கை தன்மையையும் மங்கச் செய்துவிடும். அதன் பிறகு இந்த ரசாயனங்கள் கூந்தலில் வண்ண நிறங்களில் தெரியத் துவங்கும். ஹேர் கலரிங் செய்த பிறகு கூந்தலின் இயற்கை நிறத்தை திரும்பப் பெற முடியுமா? முன்பெல்லாம் வெள்ளை நிறத்தை மறைக்கவே ஹேர் டை பயன்படுத்துவார்கள். ஆனால், தற்போது இதனை ஒரு அழகுசாதனப் பொருளாகவே மாற்றிவிட்டார்கள். ஹேர் கலரிங்கில் வயலட், ப்ளூ, கிரீன், யெல்லோ என எண்ணிலடங்காத நிறங்கள் உள்ளன. தொடர்ந்து ஹேர் கலரிங் பயன்படுத்திக்கொண்டே இருக்கும்போது கூந்தலின் இயற்கை நிறத்தை அந்த ரசாயனக் கலவை எடுத்தபிறகே நாம் கூந்தலில் தடவிய கலரிங்கின் நிறம் தெரியத் துவங்கும். எனவே, முடியின் இயற்கை நிறத்தை மீண்டும் பெறுவது சாத்தியமற்றது. Hair Dye & Hair Colour தொடர்ந்து ஹேர் டை, ஹேர் கலரிங் உபயோகித்தால் என்ன ஆகும்? முதலில் மூச்சுத்திணறல், தோலில் எரிச்சல் உணர்வு, பார்வை சார்ந்த பிரச்னைகள் ஏற்படக்கூடும். தொடர்ந்து பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கான அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது. யார் ஹேர் டை, ஹேர் கலரிங் பயன்படுத்தக்கூடாது? உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சிறுநீரகம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், மூச்சு சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், சிறுவர்கள், ஏதேனும் அலர்ஜி உள்ளவர்கள் இதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கெமிக்கல் ஹேர் டை எவ்வாறு நல்ல 'ஹேர் டை'யை கண்டறிவது? அமோனியா ஃப்ரீ (Ammonia Free) ஹேர் டை பாதுகாப்பானது. அதே அளவு பிபிடி ஃப்ரீ (PPD Free) ஹேர் டையாக இருக்க வேண்டியதும் முக்கியமானது. பாராபினலைன்டயாமின் (Paraphenylenediamine) என்பதன் சுருக்கமே பிபிடி (PPD). இவை ஸ்ட்ராங்க் கெமிக்கல்ஸ் என அழைக்கப்படும். இவை கூந்தலுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். இவற்றுக்கு பதில், மெடிக்கல் கிரேடு ஹேர் டையை வாங்கிப் பயன்படுத்தலாம். இளநரை உடையவர்கள் ஹேர் டை பயன்படுத்தலாமா? இளநரை உள்ளவர்கள் முதலில் அதன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலும் அம்மா, அப்பாவிற்கு இளநரை இருந்தால் பரம்பரை வழியாகவோ அல்லது இரும்புச்சத்து, புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவோ இளநரை ஏற்படக்கூடும். இன்னும் சிலருக்கு ஹேர் அயர்னிங் செய்வதன் காரணமாக, கூந்தல் அதன் தன்மையை இழந்து, நிறம் மாறத் தொடங்கிவிடும். எனவே இளநரைக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டாலே இதனைக் கட்டுப்படுத்திவிடலாம். இதற்காக ஹேர்டை பயன்படுத்தினால் உடல் சார்ந்த பிரச்னைகளை அதிகம் ஏற்படுத்தக்கூடும். மேலும் இவை நிரந்தரமான தீர்வல்ல. Eyes ஹேர் டை, ஹேர் கலரிங் பயன்படுத்தினால் கண்களுக்கு ஆபத்து வருமா? இவற்றில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்க்கால்கள் மூலம் உடலுக்குள் ஊடுருவி கண்களைச் சுற்றியுள்ள பகுதிக்கும், கண்களில் உள்ள நரம்பிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால், கண்பார்வை மங்கத் தொடங்கிவிடும். அப்படி இல்லையேல் இவற்றை பயன்படுத்திய பிறகு கூந்தலை சுத்தம் செய்யும்போது அந்த வேதிப்பொருட்கள் கண்களில் பட்டு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஹேர் டை பயன்படுத்தினால் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? எப்போதாவது பயன்படுத்தினால் இதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் வராது. ஆனால், தொடர்ந்து பயன்படுத்தினால் கண்பார்வை மங்குதல், நரம்புத்தளர்ச்சி, மூச்சுத்திணறல், முகத்தில் சுருக்கம், சுவாசக்கோளாறு, புற்றுநோய் போன்றவை வரக்கூடும். கர்ப்ப காலத்தில் ஹேர் டை பயன்படுத்தலாமா? கர்ப்ப காலத்தில் ஹேர் டை பயன்படுத்தலாமா? கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, குழந்தை பிறந்த பிறகும் ஹேர் டை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவை தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்குப் பதிலாக இயற்கை வழியில் மருதாணியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேர் டை பயன்படுத்தினால் முடி உதிருமா? நமது உடலில் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும், முதலில் அது கூந்தல் உதிர்வதன் வழியேதான் தெரிய ஆரம்பிக்கும். தலைவலி, வயிற்று வலியிலிருந்து ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என அனைத்திற்குமே முதல் அறிகுறி முடி உதிர்தலே ஆகும். உடலில் சிறிய பாதிப்பு என்றாலே முடி உதிரத் துவங்கிவிடும், அதிலும் எண்ணில் அடங்காத வேதிப்பொருட்களை முடியில் பயன்படுத்தினால் கூந்தல் உதிராதா என்ன? நிச்சயம் உதிரும். பாதிப்பு இல்லாத ஹேர் பேக் உண்டா? பாதிப்பு இல்லாத ஹேர் பேக் உண்டா? ஹேர் பேக்கைப் பொறுத்தவரை இயற்கையானது, ரசாயனம் கலந்தது என இரு வகையாகப் பிரிக்கலாம். இயற்கையைப் பொறுத்தவரையில் மருதாணி, அவுரி போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை கூந்தலுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ரசாயனத்தைப் பொறுத்தவரை தற்காலிகமானது, நிரந்தரமானது என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அனைத்து நிரந்தரமான ஹேர் கலரிங் பேக்கிலும் அமோனியம் ஹைட்ராக்சைடு நிச்சயம் இடம்பெற்றிருக்கும். இவை கூந்தலுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும். இயற்கையாக நாமே வீட்டில் தயாரிக்கும் ஹேர் பேக் மட்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்காது. Summer Hair Care: புதினா, வெள்ளரிக்காய், வாழைப்பழம்; கூந்தல் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்? ரெடிமேட் ஹேர் டை வாங்கி வீட்டிலேயே பயன்படுத்தலாமா? இதனால் உங்களுக்கு பலன் கிடைப்பதைவிட பிரச்னை கிடைப்பதே அதிகமாக இருக்கும். ஹேர் டையைப் பொறுத்தவரை, அதில் உள்ள வேதிப்பொருட்களில் பல வேதிப்பொருள்கள் ஆக்டிவேட்டராகச் செயல்படும். இவையே கூந்தலுக்கு நிறங்களைக் கொடுப்பவை. அதிகமாக ஹேர் டை பயன்படுத்தினால் அதிகமாக நிறம் வரும் என நினைத்து, அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இது முற்றிலும் தவறானது. Hair fall: கொத்து கொத்தாக முடி உதிர்ந்தால் மறுபடியும் வளர வைக்க முடியுமா? பயிற்சிபெற்ற ஒருவரிடம் ஹேர் டையைக் கூந்தலில் அப்ளை செய்யச் சொல்லலாம். ஏனெனில் அவர்களுக்கு எந்த ரசாயனத்தை எந்த அளவிற்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரியும். தவிர, ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் என்னென்ன பராமரிப்புகளைச் செய்ய வேண்டும் என்பதும் நிபுணர்களுக்கு நன்கு தெரியும். இதன் மூலம் முடியில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம். எனவே நாம் எந்த ஒரு ரெடிமேட் ஹேர் பேக்கையும் வீட்டிலேயே பயன்படுத்தக் கூடாது'' என்கிறார் அரோமா தெரப்பிஸ்ட் கீதா அசோக்.
சுகப்பிரசவம்; சிசேரியன் - எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262
குழந்தை பிறந்த பிறகு எத்தனை நாள் அல்லது எத்தனை வாரம் அல்லது எத்தனை மாதம் கழித்து உறவுக்கொள்ளலாம் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதற்கான பதிலை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். நார்மல் டெலிவரி; சிசேரியன்; எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? ''இது முதலில் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. உறவுகொள்வது நல்லதுதான். செய்யாமல் இருந்தாலும் கெடுதல் இல்லை'' என்றவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். வெறி நாய் கடிக்கும் - ஆணுறுப்புக்கும் என்ன தொடர்பு? விளக்கும் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 260 பயந்து போய் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை... ''சிசேரியனோ அல்லது நார்மல் டெலிவரியோ, பெண்ணுறுப்பில் காயங்கள் ஆறுவதற்கும், அறுவை செய்த காயம் ஆறுவதற்கும், பெண்ணுறுப்பு இயல்பான அளவுக்கு வருவது வரைக்கும் உறவு கொள்ளாமல் இருப்பது நல்லது. இதற்கு ஒன்றரை மாதம், அதாவது, 6 வாரங்கள் இடைவெளிவிட வேண்டும். அதன்பிறகு, வழக்கம்போல தாம்பத்திய உறவில் இயல்பாக ஈடுபடலாம். ஒருவேளை பெண் களைத்துப் போயிருந்தாலோ அல்லது உடல் பலவீனமாக இருந்தாலோ அல்லது மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலோ தவிர்த்து விட வேண்டும். பயந்து போய் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை. கணவன், மனைவி இருவருக்குமே உதவும் வைப்ரேட்டர் காண்டம்! - காமத்துக்கு மரியாதை 261 கணவன், மனைவியின் மனநிலையைப் பொறுத்தது! இன்னொரு முக்கியமான விஷயம், தாம்பத்திய உறவு என்றாலே பெனிட்ரேட் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரல் செக்ஸ், பரஸ்பரம் சுய இன்பம் செய்துகொள்வது என்றும் இருக்கலாம். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, இது சம்பந்தப்பட்ட கணவன், மனைவியின் மனநிலையைப் பொறுத்தது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சுத்திணறலுக்கு உடனடி தீர்வளிக்குமா தாளிசாதி எனும் சித்த மருந்து?
Doctor Vikatan: ஆஸ்துமா (Asthma) மற்றும் மூச்சுத்திணறல் (Shortness of Breath) உள்ளவர்கள், சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் தாளிசாதி மாத்திரையோ, சூரணமோ தினமும் எடுத்துக்கொண்டாலே பிரச்னை சரியாகும் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா, இதனால் உடனடி நிவாரணம் கிடைக்குமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் ஆஸ்துமாவின் தீவிரத்தைப் பொறுத்துதான் அதற்கான சித்த மருந்தை முடிவு செய்ய வேண்டும். ஆஸ்துமா பாதிப்புக்கு தாளிசாதி சூரணம் மிகவும் நல்ல மருந்து என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்துமா பாதித்தவர்கள், வளர்ந்த, பெரியவர்களாக இருக்கும்பட்சத்தில், தாளிசாதி சூரணத்தை அரை டீஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்துக் கொடுக்கலாம். நீங்கள் குறிப்பிட்டிருக்கிற மூச்சுத்திணறல் என்பது எந்தக் காரணத்தால் ஏற்பட்டது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். வீஸிங் காரணத்தால் ஏற்பட்டதா, இதயத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதா என்பதை எல்லாம் பார்த்துதான் அதற்கான சரியான மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும். அதாவது, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப்பாதை தொடர்பான பிரச்னைகளுக்கு தாளிசாதி சூரணம் நன்கு வேலை செய்யும். வேறு காரணங்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு தாளிசாதி வேலை செய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள், மருத்துவரின் ஆலோசனையோடு, தாளிசாதி சூரணம் சாப்பிடலாம். வெந்நீரில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தேனில் கலந்து சாப்பிடும்போது அதன் பலன் சிறப்பாக இருக்கும். தாளிசாதி சூரணம் தாளிசாதியின் காரத்தன்மையை, தேனின் இனிப்பு குறைத்து, கேஸ்ட்ரைட்டிஸ் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் என்பதே காரணம். தொண்டைக் கமறல், எரிச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால், சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் என்ற மாத்திரை இருக்கிறது. அதை வாயில் வைத்து சப்பி சாப்பிடலாம். பயணம் செல்லும்போது ஏற்படும் தொண்டை பிரச்னைகளுக்கு மாத்திரைகளைத் தேடி ஓடாமல், தாளிசாதி வடக மாத்திரைகள் இரண்டை சப்பி சாப்பிட்டாலே பிரச்னை உடனே குறைவதைப் பார்க்க முடியும். இதே தாளிசாதி வடகத்தை இடித்து, வாய்க் கொப்பளிக்கவும் பயன்படுத்தலாம். தொண்டை எரிச்சலின் ஆரம்பநிலையிலேயே இதையெல்லாம் செய்தால், பாதிப்பு தீவிரமாகாமல் சரியாவதைப் பார்க்க முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். அருமருந்தான திரிபலா சூரணம்; யார், எப்படி பயன்படுத்த வேண்டும்?
அகர்பத்தி புகை: மூக்குக்கு வாசனையா, நுரையீரலுக்கு வேதனையா?
வீடுகளில் ஆரம்பித்து ஆன்மிகத் தலங்கள் வரைக்கும் அனைத்து இடங்களிலும் அகர்பத்தி பயன்பாடு இருக்கிறது. அகர்பத்தி புகை நம் ஆரோக்கியத்தில் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துமா என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம். அகர்பத்தி புகை ''வாசனைப் பொருள், மரத்தூள், பொட்டாசியம் நைட்ரேட், கரி மற்றும் கோந்து ஆகியவற்றை வைத்துதான் அகர்பத்தி தயாரிக்கிறார்கள். இந்த அகர்பத்தியை எரிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைட், ஃபார்மால்டிஹைட், நைட்ரஜன் டை ஆக்சைடு, பாலி அரோமேட்டிக் காம்பவுண்ட், பாலி சைக்ளிக் அரோமாட்டிக் காம்பவுண்ட், வொல்லாட்டைல் ஆர்கானிக் காம்பவுண்ட், பார்ட்டிகுலேட் மேட்டர் அனைத்தும் ஒரே நேரத்தில் வெளிவருகின்றன. இவற்றை நாம் சுவாசிக்கும்போது சிலருக்கு ஒவ்வாமை நிகழலாம். சிலருக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய உணர்வு தோன்றலாம். சிகரெட்டுடன் ஒப்பீடு! சிகரெட்டை பயன்படுத்தும்போது, புகையிலை எரிக்கப்பட்டு கார்பன் டை ஆஸ்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற தேவையற்ற வாயுக்களை நம் நுரையீரலுக்கு கொண்டு செல்கிறோம். இதனால் நுரையீரலுக்குள் எரிச்சல் ஏற்படுகிறது. இதேபோல தான், நாம் அகர்பத்திப் புகையை சுவாசிக்கும்போதும் தேவையற்ற நச்சுக்களை சுவாசப்பாதையின் மூலம் நுரையீரலுக்குக் கொண்டு செல்கிறோம். இதுவும் நுரையீரலுக்கு எரிச்சலையே உண்டாக்குகிறது. ஒவ்வாமை ஆரோக்கிய பாதிப்புகள்! வீட்டில் அகர்பத்தியை தொடர்ந்து ஏற்றிக்கொண்டு வந்தால், அதை நுகரும் நபர்களுக்கு சுவாசப்பாதை சார்ந்த பிரச்னைகள், ஒவ்வாமை, எரிச்சல், தோல் மற்றும் கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த பிரச்னையான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease) ஆகியவை ஏற்படும். இவ்வளவு ஏன், நுரையீரல் புற்று வருவதற்குகூட வாய்ப்புள்ளது. அலர்ஜி இருப்பவர்கள் அகர்பத்திப் புகையை நுகர்வதால் உடனடியாக இருமல், தும்மல், கண் எரிச்சல், மூச்சு விடுதலில் சிரமம், ஏற்கனவே ஆஸ்துமா இருப்பின் மூச்சுத்திணறல், இளைப்பு நோய் ஆகியவை ஏற்படும். தவிர்க்க வேண்டிய சூழல்கள் வீட்டில் குழந்தைகள் குறிப்பாக ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியோர்கள், ஏற்கெனவே ஆஸ்துமா, அலர்ஜி இருப்பவர்கள் இருந்தால் வீட்டில் கட்டாயமாக சாம்பிராணியோ, அகர்பத்தியோ கொளுத்தக்கூடாது. அது அவர்களுக்கு தீவிர ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா மாற்று வழிகள்! அடைத்திருக்கும் அறைகளிலோ, வீடுகளிலோ அகர்பத்தியை ஏற்றுவது தவறானது. வீட்டில் அகர்பத்தி எரிக்கும்போது கதவு, ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். அந்தப் புகை வெளியேறுவதற்கான வாய்ப்புகளை நாம்தான் ஏற்படுத்த வேண்டும். சிறிய அறைகளில் ஏற்றுவதைக் காட்டிலும் நல்ல காற்றோட்டமான அறைகளில் அகர்பத்தியை ஏற்றலாம். Health: கிருமி நாசினி திரவம்... எப்படிப் பயன்படுத்துவது? இதற்குப்பதில், வீடு நறுமணமாக இருப்பதற்கு பூக்களைப் பயன்படுத்தலாம். பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட நறுமண எண்ணெய்களை பயன்படுத்தலாம். பூச்சிக் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? - அவசர கால மருத்துவர் ஆலோசனை மருத்துவ பரிசோதனை நீண்ட காலமாக அகர்பத்தி புகையை நுகர்ந்துகொண்டிருந்தீர்கள் என்றால், நுரையீரல் சிறப்பு நிபுணரை சந்தித்து உங்கள் நுரையீரல் தனது பணியை சரியாக செய்கிறதா என்று பரிசோதித்து கொள்ளவேண்டும். நுரையீரல் தன் பணியை சரியாக செய்யாதபட்சத்தில் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.
Doctor Vikatan: இதயத்தில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட் நகருமா, எவ்வளவு பாதுகாப்பானது?
Doctor Vikatan: இதயத்தில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட்டை பிற்காலத்தில் அகற்ற முடியுமா, நடக்கும்போதும், ஓடும்போதும் ஸ்டென்ட் வேறு இடத்துக்கு நகர்ந்துபோக வாய்ப்பிருக்கிறதா?மெட்டலால் செய்யப்பட்டதுதானே ஸ்டென்ட் (stent). அது உடலுக்குள் இருப்பது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் நம்மில் பலரும் ஸ்டென்ட் பொருத்திக்கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. ஆனாலும், அதைக் கேட்டால் யார், என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் அப்படிக் கேட்பதைத் தவிர்க்கிறார்கள். அவர்கள் எல்லோரின் சார்பாகவும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். stent இதயத்தின் ரத்தக்குழாய்க்குள் ஸ்டென்ட் எனப்படும் கருவியை ஒருமுறை பொருத்திவிட்டால், அதை மீண்டும் வெளியே எடுப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுதான் உண்மை. அப்படியானால், அந்த ஸ்டென்ட் அங்கேயே இருக்குமா என்றால், ஆமாம்... அங்கேயேதான் இருக்கும். ஸ்டென்ட்டுகளில் லேட்டஸ்ட்டாக, தானாக உறிஞ்சப்படும், 'பயோ அப்சார்பபிள்' ஸ்டென்ட்டுகள் (bioabsorbable stent) வந்துள்ளன. அந்த வகை ஸ்டென்ட்டை உள்ளே பொருத்திவிட்டால், அது 6 முதல் 8 மாத காலத்திற்குள் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால், இந்த வகை ஸ்டென்ட்டில் சில சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பரிந்துரைப்பதில்லை. இது எதிர்பார்த்த அளவு ரிசல்ட்டையும் கொடுப்பதில்லை. தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது. அது உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிற உலோகம் என்பதால் பெரும்பாலும் பிரச்னைகளைத் தருவதில்லை. இதயத்தின் ரத்தக் குழாயில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட், நடப்பது, ஓடுவது, உடற்பயிற்சிகள் செய்வது போன்றவற்றால் நகர வாய்ப்பே இல்லை. பொதுவாக, ஸ்டென்ட்டை உள்ளே வைத்து, பலூன் மூலம் விரிவடையச் செய்து, ரத்தக் குழாயினுள் நன்கு பதியும்படி செய்வதால், அது நகர்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்கள், அது குறித்த அறியாமையில் பயம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இதயநோயாளிகளுக்கு ‘ஸ்டென்ட்’சிகிச்சை, அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்களா பணத்தாசை பிடித்த மருத்துவர்கள்?
எதற்கெடுத்தாலும் எரிச்சல் படுகிறீர்களா? காரணம் இதுதான்! - விளக்குகிறார் நிபுணர்
சூரிய ஒளியால் உடலுக்கும் சருமத்துக்கும் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பலரும் கூறி இருப்பதை நாம் கேட்டிருப்போம். ஆனால், சூரிய ஒளிக்கும் மனநலத்திற்கும் எவ்வளவு தூரம் தொடர்பு இருக்கிறது என்பதையும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இயற்கை தரும் அற்புதமான சூரிய ஒளியை மறந்ததால் நாம் சந்திக்கும் மனநல பிரச்னைகளையும் பற்றிப் பேசுகிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஸ்ரீநிதி. மனதுக்கும் சூரிய ஒளிக்கும் என்னத் தொடர்பு? தட்டி எழுப்பும் சூரிய ஒளி ஓர் உயிரினம் சுற்றுச்சூழுடன் ஒத்துப்போய் வாழ்வதற்கு அந்த உயிரினத்திற்குள் சில உடல்ரீதியான மாற்றங்கள் நிகழ வேண்டும். அந்த மாற்றங்கள் என்பது தானாகவே நிகழக்கூடியதாகவே (Rhythmic) அமைந்திருக்கிறது. 24 மணிநேரம் ரிதம் என்று கொல்லக்கூடிய சர்க்காடியன் ரிதம் (Circadian rhythm) ஒன்று நம் உடலில் செயல்படுகிறது. இந்த ரிதம்தான் நம்முடைய மெட்டபாலிசம், உறக்கம், உடல் வெப்பம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஒரு முக்கியமான தூண்டுதல் இந்த ரிதத்திற்கும் நம் உணர்ச்சிகளுக்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன. எப்படி என்றால், இந்த ரிதமை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நம் மூளையின் ஹைப்போதலாமஸில் உள்ள ஒரு சிறுபகுதியான சுப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸ் (Suprachiasmatic Nucleus) நன்றாக செயல்படுவதுதான் முதலில் முக்கியம். இது நன்றாக செயல்படுவதற்கு வெளியில் இருந்து சில தூண்டுதல்கள் வேண்டும். அதில் ஒரு முக்கியமான தூண்டுதல் லைட் இண்டிகேட்டர் (light indicator). அதாவது, சூரியன். சூரிய ஒளி - ஒரு வரம்..! அந்த நாள் முழுவதும் கொஞ்சம் டல்லாகவே இயங்கும்! காலையில் சூரியன் உதயமாகும் பொழுதே நாமும் எழுந்து அந்த வெளிச்சத்தை நம் உடல் வாங்கும்போது, 'இது காலை நேரம்; நீ உற்சாகமாக வேண்டும்; வேலை செய்ய வேண்டும்' என்று நம்மை தட்டியெழுப்பும் சூரிய ஒளி. இதுவே, நம் உடல் சூரிய ஒளியில் படாமல் இருக்கும்போது 'இன்னும் நமக்கு விடியவில்லை' என்றே நம் உடல் நினைத்துக்கொள்ளும். இதனால், அந்த நாள் முழுவதும் கொஞ்சம் டல்லாகவே இயங்கும். எதற்கெடுத்தாலும் எரிச்சல்... மனச்சோர்வு... சூரியன் மறையும்போது நாம் இரவு உணவை முடித்துவிட்டு மெள்ள மெள்ள தூங்குவதற்காக தயாராக வேண்டும் என்று பலரும் கூறி கேட்டிருப்போம். அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், நாம் நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காகவே சுரக்கக்கூடிய மெலட்டோனின் (melatonin) ஹார்மோன் இருட்டில்தான் சுரக்கும். அதாவது, சூரியன் மறைந்த பின் ஏற்படக்கூடிய இருட்டில்தான் சுரக்கும். ஆனால், நாம் அறையில் விளக்குகளை அணைக்காமல் வைத்திருந்தாலோ, அல்லது நள்ளிரவு வரை செல்போனை நோண்டிக்கொண்டே இருந்தாலோ மெலட்டோனின் ஹார்மோன் சரியாக சுரக்காது. விளைவு, தூக்கமின்மை பிரச்னை வரும் அல்லது ஆழ்ந்த தூக்கம் வராது. இதனால், மறுநாள் எதற்கெடுத்தாலும் எரிச்சல், மனச்சோர்வு போன்றவை இருக்கும். உளவியல் நிபுணர் ஸ்ரீநிதி சூரிய ஒளி - ஒரு வரம்! பொதுவாக ஈக்வேட்டர்க்கு அருகில் (Near the equator) வாழும் மக்களுக்கு பகல் அதிக நேரம் நீடிக்கும். அதனால், அவர்களுக்கு நன்றாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. அதனால், அவர்களுடைய 24 மணி நேரம் சைக்கிளில் (Circadian rhythm) அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால், போல்ஸுக்கு அருகில் (Near the poles) வாழும் மக்களுக்கு சில மாதங்களுக்கு குளிர்காலமே நீடித்து இருக்கும். எனவே, இரவு நீடிக்கும்; பகல் சுருங்கிவிடும். இதனால் 'Seasonal affective disorder ' என்று சொல்லக்கூடிய ஒருவிதமான மனஅழுத்தம்கூட இவர்களுக்கு நேரிடலாம். ஆனால், நாம் இயற்கையாகவே சூரியஒளி நன்றாக கிடைக்கும் பகுதிகளில்தான் வாழ்கிறோம் என்பது ஒரு வரம். அதை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு மனநல பிரச்னைகளை தவிர்க்கலாம். மன அழுத்தம் நமக்கு நன்மைகளும் செய்யுமா? விளக்கும் நிபுணர்! குறைந்தபட்சம் 10 நிமிடம்! சூரியன் எழும்போது நாமும் எழுந்து, அது மறையும்போது நாமும் தூங்குவது என்பது நம் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல் மனநலத்துக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. இதனால், ஹேப்பி ஹார்மோன்ஸ் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. சூரியஒளியில் தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாக தொடர்ந்து நின்று வருவதினால் நம்முடைய ரிதம் செட் ஆக இது உதவுகிறது. அது மட்டுமல்லாமல், மன அழுத்தம், எதிர்மறையான சிந்தனைகள் போன்றவை குறைகின்றன. அலட்சியமாக நினைக்க மாட்டோம்! நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்ததால் சூரியஒளிக்கு என்று அவர்கள் மெனக்கெடாவிட்டாலும் அவர்களுக்கு அது கிடைத்தது. ஆனால், இப்போது நாம் இருக்கும் பிஸியான வாழ்க்கையில் இதற்கென்று அதிகாலையில் கொஞ்சம் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும். சூரிய ஒளியால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியமான மனநலம் பற்றி நமக்குத் தெரிந்தால் நாம் சூரிய ஒளியை என்றுமே அலட்சியமாக நினைக்க மாட்டோம்'' என்கிறார் உளவியல் நிபுணர் ஸ்ரீநிதி. Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்!
Doctor Vikatan: அதிகாலை முதுகுவலி, தூங்கி எழுந்த பிறகும் நீடிக்கிறது - தீர்வு என்ன?
Doctor Vikatan: நான் 35 வயது ஆண். எனக்கு தினமும் அதிகாலை 4 மணிக்கு முதுகுவலி வருகிறது. தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்வரையும் சில நேரங்களில் தூங்கி எழுந்திருந்த பிறகும் வலி தொடர்கிறது. தூக்கம் கெட்டுப்போனால் வலி இன்னும் அதிகரிக்கிறது. எனக்கு சுகர், பிபி போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த வலியிலிருந்து மீள எனக்கு ஆலோசனை சொல்வீர்களா? - Krishnan Mani , விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் வலிகளில் பல வகை உண்டு. இன்ஃபெக்ஷனால் (Infection), அதாவது, கிருமித்தொற்றால் ஏற்படும் வலி, அடிபடுவதால் ஏற்படும் வலி, இன்ஃபளமேஷன் (Inflammation) எனப்படும் அழற்சி காரணமாக ஏற்படும் வலி என மூன்றாகப் பிரிக்கலாம். அடிபடுவதால் ஏற்படும் வலி, ஓய்வெடுக்கும் போது சரியாகிவிடும். அசைவுகளின் போது வலி இருக்கும். இன்ஃபெக்ஷனால் வரும் வலியில், அசைவுகளின் போதும் இருக்கும்... ஓய்வெடுக்கும் போதும் இருக்கும். அழற்சியின் காரணமாக ஏற்படும் வலி, ஓய்வில் இருக்கும்போது அதிகமாகவும், அசைவுகளின் போது குறைவாகவும் இருப்பதாக வித்தியாசமான அறிகுறியைக் காட்டும். இவற்றை வைத்துதான் வலியின் தன்மையைப் பிரிப்போம். அழற்சியின் காரணமாக ஏற்படும் வலி Doctor Vikatan: சிசேரியனுக்கு பிறகு அதிகரித்த முதுகுவலி, தீர்வு உண்டா? அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலி, அழற்சியால் ஏற்பட்டது போல தெரிகிறது. இதற்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படும். முதுகுத்தண்டை சுற்றியுள்ள தசைகள் இறுகியிருக்கின்றனவா, அழற்சியால் ஏற்படும் ஸ்பாண்டிலைட்டிஸ் (Spondylitis) பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த டெஸ்ட்டுகளை பார்த்துவிட்டு, அழற்சி தான் காரணம் என உறுதியானால், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை இல்லாத பட்சத்தில், இதை எளிதாக குணப்படுத்தி விடலாம், கவலை வேண்டாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: பல காலமாகச் செய்கிற, தெரிந்த வேலையில் திடீர் கவனமின்மையும் ஆர்வமின்மையும் ஏன்?
Doctor Vikatan: தெரிந்த பணிகளைச் செய்வதில் சில நேரங்களில் கவனமின்மையும் ஆர்வமின்மையும் ஏற்படுகின்றன. இதற்கு என்ன காரணம். இயல்பானதுதானா, எப்படித் தவிர்ப்பது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயம், அனேக நபர்கள் எதிர்கொள்வதுதான். அது குறித்துப் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. மனது எப்போதும் புதுமையைத் தேடக்கூடியது. கிரியேட்டிவ் திங்கிங்கை எதிர்பார்க்கும் மனதுக்கு, தெரிந்த வேலையும், பல காலமாகப் பார்த்த வேலையும் சலிப்பை ஏற்படுத்துவது சகஜம்தான். தங்கள் தொழிலுக்காக பெரும்பான்மை நேரத்தைச் செலவழித்து, அதில் சிறந்த பெயரைப் பெற்ற பல நபர்கள், பொழுதுபோக்குக்காக ஹாபிஸ் என்ற பெயரில் பல விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவதைப் பார்க்கலாம். இது அவர்களுடைய தொழிலை சலிப்பின்றி தொடர, ஒருவித தெம்பையும் மனத்தெளிவையும் கொடுக்கும். பல திறமைகள் கொண்ட மனித மூளைக்கு, அவ்வப்போது ஒரு சவால் தேவைப்படுகிறது. வேலையில் சலிப்பு - ஏன்? Doctor Vikatan: வேலை ஸ்ட்ரெஸ்... ஒரு நாளைக்கு 8 முதல் 9 காபி, டீ... ஏதேனும் பிரச்னையா? இப்படிப்பட்ட கிரியேட்டிவ்வான, இலகுவான விஷயங்களில் கவனம் செலுத்தும்போது அந்தச் சவாலை எதிர்கொள்ள மூளை பழகுகிறது. அதன் செயல்திறன் பெருகிறது.தொழிலோ, வேலையோ... அதில் தொடர்ந்து 10 வருடங்கள் ஈடுபடும்போது அதில் ஒரு நிபுணத்துவம் ஏற்படுகிறது. சில இளைஞர்கள் கஷ்டப்பட்டு பல வருடங்கள் செலவழித்து மருத்துவம் படிப்பார்கள். பிறகு அதில் மேற்படிப்பும் படித்து போராடி, வாழ்க்கையில் முன்னேறி குறிப்பிட்ட மருத்துவப் பிரிவில் ஸ்பெஷலைஸ் செய்வார்கள். எல்லாம் முடிந்து, வாழ்க்கையில் செட்டில் ஆகும் அந்த நேரம் அவர்களுக்குத் தன் துறையில் ஒரு சலிப்பு தட்டும். மனது எதற்காகவோ ஏங்கும். கடன் வாங்கி மருத்துவமனை கட்டுவார்கள். சிலர் பங்குச் சந்தையில் ஈடுபடுவார்கள். அரசியலில் ஈடுபட்டு, புது அனுபவங்களைப் பெறுவார்கள். இப்படி ஏதேனும் விஷயங்களில் தங்களைத் திசைதிருப்பி கொண்டு, மீண்டும் தங்களுடைய பழைய பணியில் இன்னும் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். வேலையில் சலிப்பு ஏற்படும்போது தற்காலிக திசைத்திருப்பலுக்காக கேம்ஸ் விளையாடுவோரைப் பார்க்கலாம். இதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சகஜம்தான். ஆங்கிலத்தில் 'த்ரில் சீக்கிங் பிஹேவியர்' (Thrill-Seeking Behavior ) என்போம். வேலையில் போரடிக்காமல் இருக்க அதாவது, மனித மனமானது எப்போதும் சவாலான, வித்தியாசமான எதையோ தேடிக்கொண்டே இருக்கும். எனவே, வேலையில் சலிப்பு தட்டும்போது, அதை உங்கள் திறமைக்கும் செயல்திறனுக்குமான எண்ட் கார்டாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. உங்களை, உங்கள் மூளையை அப்டேட் செய்து கொள்ள, ரெஃப்ரெஷ் செய்துகொள்ள ஏதேனும் விஷயத்தில் கவனத்தைத் திருப்பி, எனர்ஜி பெற்று மீண்டும் உங்கள் வேலையைத் தொடரலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ரெட் ஒயின் குடித்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?
Doctor Vikatan: என் உறவினருக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. அவருக்கு உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. ரெட் ஒயின் குடித்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என அவருக்கு யாரோ அறிவுறுத்தியதன் பேரில் இப்போது அடிக்கடி ரெட் ஒயின் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். இது உண்மையா, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க வேண்டும் என்றால் முதலில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகமிக முக்கியம். அடுத்தது இதயத்துக்கு நலம் சேர்க்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். அவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். மீன்கள், நட்ஸ், சீட்ஸ், தேங்காய் எண்ணெய், நார்ச்சத்துக்காக நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை முறைப்படி சேர்த்துக்கொண்டாலே, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் கெட்ட கொழுப்பு உள்ள உணவுகள், பேக்கரி உணவுகள், சர்க்கரை சேர்த்த உணவுகள், ஜூஸ் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். சுகர்ஃப்ரீ உணவுத்தேர்வுக்கு மாறுவது நல்லது. குடிக்கும் பானம், உண்ணும் உணவு என எல்லாவற்றிலும் சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது. தினமும் 30 முதல் 45 நிமிங்கள் ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை அவசியம் செய்ய வேண்டும். அது வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங் என எதுவாகவும் இருக்கலாம். உடல்பருமன் அதிகரிக்காமல், பி.எம்.ஐ அளவுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சில கிலோ எடை குறைவதுகூட உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றங்களைக் காட்டும். Brisk Walking அவள் பதில்கள் - 37 - ரெட் ஒயின் குடித்தால் சருமம் பளபளக்குமா? புகைப்பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்துங்கள். அந்தப் பழக்கம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை கட்டாயம் குறைத்துவிடும். குடிப்பழக்கமும் அப்படித்தான். ஆறு மாதங்களுக்கொரு முறை உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை டெஸ்ட் செய்து பாருங்கள். அது அதிகரிக்கும்போது இதயநோய் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். ரெட் ஒயின் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்பதற்கு நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், ரெட் ஒயினில் பாலிஃபினால் (Polyphenol) எனும் தாவர வேதிப்பொருளின் அளவு கணிசமாக உள்ளது. அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், உங்கள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க ஓரளவு உதவலாம். ஆனால், அதை மட்டுமே எடுத்துக்கொண்டால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் அளவுக்கதிகமாக எடுப்பதும் ஆபத்தானது. இது குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து, பிறகு முடிவெடுப்பதுதான் பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
சிறுநீர்ப்பாதைத் தொற்று வராமல் தடுக்குமா டாய்லெட் சீட் சானிட்டைசர்?
பொதுக்கழிவறைகள் என்றாலே அதில் கிருமிகள் அதிகமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தினால், சிறுநீர்ப்பாதைத் தொற்று கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்பதுதான் நம் எல்லோருடைய எண்ணமும். அது உண்மையும்கூட. அதே நேரம், இப்போது சிலர் டாய்லெட் சீட் மேல் அதற்கென தயாரிக்கப்படுகிற சானிட்டைசரை ஸ்பிரே செய்துவிட்டு பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதுபற்றி சென்னையைச் சேர்ந்த டாக்டர் மலர்விழி அவர்களிடம் பேசினோம். பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தினால் சிறுநீர்ப்பாதைத் தொற்று வருமா? பெண்களுக்கு இந்த நோய் தொற்றிக் கொள்வது சுலபம். பலரும் கழிப்பறைகளால் பரவும் என நம்பிக்கொண்டிருக்கும் சிறுநீர்ப் பாதைத் தொற்று (urinary tract infection or UTI) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். E.coli, Staphylococcus, Streptococcus போன்ற பாக்டீரியாக்கள் நம் சிறுநீர்ப்பாதைக்குள் நுழையும்போது ஏற்படுவதுதான் சிறுநீர்ப் பாதைத் தொற்று. அங்கிருந்து சிறுநீர்ப்பையைத் தாக்கி, அதிலிருந்து சிறுநீரகம் வரைக் கூட பரவ வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு இந்த நோய் தொற்றிக்கொள்வது சுலபம். ஏனெனில் அவர்களின் சிறுநீர்க் குழாய் ஆண்களை விடச் சிறியது, மற்றும் ஆசனவாய் அருகில் உள்ளது. இதனால் கிருமிகள் ஊடுருவும் வாய்ப்பும் அதிகம். நம் உடலுக்குள்ளேதான் இவை அதிகம் வாழ்கின்றன. ஆனால், இந்த பாக்டீரியாக்கள் பற்றி நாம் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு கழிப்பறை இருக்கையின் மீது இருப்பதைவிட, நம் உடலுக்குள்ளேதான் இவை அதிகம் வாழ்கின்றன. ஆம்! நமது மலத்தில்தான் இந்த பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கின்றன. நாம் நம்மை சரியாக சுத்தம் செய்துகொள்ளாத நிலையில் நமது மலம் நம் சிறுநீர்க்குழாய்க்குள் செல்ல வாய்ப்புண்டு. இப்படி பலமுறை நடந்து, சற்று நேரத்திற்கு மலம் அங்கேயே இருந்தால்தான் இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. டாக்டர் மலர்விழி நீண்ட நேரம் அடக்கி வைத்தால் அது இல்லாமல் மற்றொரு காரணம் என்னவென்றால், நாம் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருந்தாலும் இந்த நோய் ஏற்பட வாய்ப்புண்டு. நம் உடலுக்குள் வரும் கிருமிகள் மலம், சிறுநீர் போன்ற கழிவுகள் மூலமாகவும், மூச்சுக்காற்று மூலமாகவும் தான் வெளியேற்றப்படுகின்றன. இதை சிறுநீர்ப் பாதையில் நீண்ட நேரம் அடக்கி வைத்தால் ஆபத்து. நேரத்திற்கு கழிவறைக்குச் சென்று, சுத்தமாகப் பராமரித்துக் கொண்டால், அச்சம் தேவையில்லை. பால்வினை தொற்று: `இதை மறைக்கக்கூடாது' - எப்படியெல்லாம் பரவும்? நிபுணர் விளக்கம் பல கிருமிகளால் பிழைக்கக்கூட முடியாது. இப்போது பொதுக் கழிவறைகளுக்கு வருவோம். ஆம், கிருமிகள் அக்கழிவறைகளில் இருக்கின்றனதான். ஆனால், நாம் அதை உபயோகிக்கும் சில நொடிகளில் அவற்றால் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது. ஏன், பல கிருமிகளால் மனிதருடைய உடலை விட்டு வெளியே வந்துவிட்டால் பிழைக்கக்கூட முடியாது. கோட்பாட்டளவில் கழிப்பறை இருக்கையில் இருந்து பரவக்கூடிய நோய்களின் சதவீதம் மிக மிகக் குறைவு. ஒருவேளை சிறுநீர்ப் பாதைத் தொற்று இருக்கும் ஒருவரின் சிறுநீர் அந்தக் கழிவறை இருக்கையில் மீதம் இருக்கும் பட்சத்தில் வாய்ப்புண்டு. Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீர்வு என்ன? ஆய்வகங்களில் கிருமிகளை கொல்வதற்கு பயன்படும்! இப்போது சானிட்டைசர் ஸ்பிரே பற்றி சொல்கிறேன். இந்த ஸ்பிரேவில் இருப்பது, ஐசோபுராப்பைல் ஆல்கஹால் (isopropyl alcohol or IPA). இது அறிவியல் படித்தவர்களுக்கு பரிச்சயமான பெயராகும். ஏனெனில் ஆய்வகங்களில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கொல்வதற்கு (sterilization) பயன்படுத்தப்படும் பொருள் இதுவே. இதில் வாசனைப் பொருட்களை சேர்த்து, ஸ்பிரே பாட்டிலில் அடைத்து மக்களிடம் விற்பனை செய்கிறார்கள். இந்த ஸ்பிரேவை பயன்படுத்துவதால் பயனே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், கழிவறை இருக்கைகளை தண்ணீரால் நன்கு சுத்தம் செய்தாலே போதும். இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுக் கழிவறைகளின் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். கழிவறைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். தனி மனிதர்களின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் மறந்தால், நாடும் குப்பை மேடு தான்'' என்கிறார் டாக்டர் மலர்விழி. Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகமானால்தானே ஆபத்து; குறைந்தாலும் மூளையைப் பாதிக்குமா?
Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகமானால்தானே ஆபத்து; குறைந்தாலும் மூளையைப் பாதிக்குமா?
Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வருவது ஏன்? பொதுவாக, கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் என எல்லா பாதிப்புகளும் வரும் என்று சொல்வார்கள். ஆனால், கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என ஒரு செய்தியில் படித்தேன். இந்த இரண்டில் எது உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம். நீங்கள் கேள்விப்பட்ட இரண்டு தகவல்களுமே உண்மைதான். கொலஸ்ட்ரால் அதிகரிப்பதும் ஆபத்துதான், அது ஒரேயடியாகக் குறைவதும் பிரச்னைதான். மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. நம்முடைய பேச்சு, கை, கால் அசைவு, பார்வை, கேட்பது, உணர்வது என எல்லாச் செயல்களும் மூளையின் மூலமே நடக்கின்றன. மூளையின் ரத்தக்குழாய்களில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தடை ஏற்படும்போது, அதன் தாக்கத்திற்கேற்ப நம் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். உதாரணத்துக்கு, பேச்சில் பிரச்னை வரலாம், பார்வையில் பாதிப்பு வரலாம். கை, கால்களில் லேசான மரத்துப்போன உணர்வு ஏற்படலாம். பலவீனமாக உணரலாம். அதுவே ரத்தக்குழாய்களில் பாதிப்பு தீவிரமாக இருக்கும்போது உடலின் ஒரு பக்கம் முழுவதுமோ, இரு பக்கங்களுமோ செயலற்றுப் போகலாம். பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகள் கிட்டத்தட்ட மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைப் போன்றவை தான். மூளைக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் குழாயில் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து இப்படி மிகச் சாதாரணமானது முதல் மிக மோசமானது வரை பாதிப்பு எப்படியும் இருக்கலாம். சமீபகாலமாக இள வயதினரிடம் பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகள் கிட்டத்தட்ட மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைப் போன்றவைதான். நான்கரை மணி நேரம் மட்டுமே அவகாசம், BE FAST எச்சரிக்கை! பக்கவாதம், காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்! வயதாகும்போது பக்கவாத பாதிப்பு அதிகரிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் இந்த ரிஸ்க் அதிகரிக்கிறது. புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல்பருமன், உடல் இயக்கமற்ற வாழ்க்கைமுறை, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருப்பது போன்ற எல்லாமே பக்கவாத ரிஸ்க்கை அதிகரிக்கும் காரணிகள். மூளை எனவே, இவை தவிர்த்த ஆரோக்கிய வாழ்வியல் முறை பின்பற்றப்பட வேண்டும்.கெட்ட கொலஸ்ட்ரால் மூளைக்கு எப்படி ஆபத்தானதோ, அதேபோல கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக இருப்பதும் மூளைக்கு ஆபத்தானதுதான். அது குறிப்பிட்ட அளவைவிட குறையும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஜப்பானியர்களிடம் மூளையில் ஏற்படும் இந்த பாதிப்பு மிக அதிகம். காரணம், அவர்களது அதீத ஆல்கஹால் பழக்கமும், மிகக் குறைவான கொலஸ்ட்ரால் அளவும்தான். இந்த விஷயங்களாலும் ஒருவருக்கு பக்கவாத பாதிப்பு வரலாம். எனவே, கொலஸ்ட்ரால் சரியான அளவில் தக்கவைத்துக் கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம். அவ்வப்போது இந்த அளவுகளை டெஸ்ட் செய்து பார்த்துக்கொள்வது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Health: 'மூளை உழைப்பு... உடல் உழைப்பு...' - எத்தனை மணி நேரம் செய்யலாம்?
அலுமினிய பாத்திரங்களில் சமைப்பதில் என்னதான் பிரச்னை? நிபுணர் விளக்கம்!
அலுமினிய பாத்திரங்கள் இல்லாத இந்திய சமையலறையே இல்லை என்று கூறக்கூடிய அளவிற்கு அலுமினிய குக்கர்களும், வாணலிகளும் நமது அன்றாட வாழ்வில் பங்களித்து வருகின்றன. குறைவான எடை, மலிவான விலை என அலுமினியப் பொருட்களை வாங்க வரிசையாக காரணங்களை அடுக்கலாம். ஆனால், அலுமினிய பாத்திரங்கள் வாங்கும்போதும், பயன்படுத்தும்போதும் கவனம் மிக முக்கியம். குக்கர் அங்கீகாரமில்லாத அலுமினிய குக்கர் மும்பையைச் சேர்ந்த ஐம்பது வயது நபர் ஒருவர், சமீபத்தில் மறதி, சோர்வு, காலில் வலி மற்றும் உணர்வின்மை போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில், அவரது ரத்தத்தில் ஒரு டெசிலிட்டருக்கு 22 மைக்ரோகிராம் அளவு லெட் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த உலோகம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர் விசாரித்ததில், அவரின் மனைவி இந்தியத் தர நிர்ணயப் பணியகத்தின் (Bureau of Indian Standards - BIS) அங்கீகாரமில்லாத அலுமினிய குக்கர் ஒன்றை இருபது வருடங்களாகப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்துவது குறித்த கவலைகள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம், அலுமினியப் பயன்பாட்டாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்தலாமா? அப்படிப் பயன்படுத்தினால் எப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நீரிழிவு நோய் நிபுணர் பவித்ரா தமிழரசன் விளக்குகிறார். நீரிழிவு நோய் நிபுணர் பவித்ரா தமிழரசன் பழைய அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும்போது “அலுமினிய பாத்திரங்களில் சமைப்பதில் ஆபத்து இருக்கிறது என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முடிந்தவரை அலுமினிய பாத்திரங்களைத் தவிர்த்துவிட்டு இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற உலோகங்களுக்கு மாறிவிடுவது நல்லது. பழைய அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும்போது தேய்மானம், உணவில் இருக்கும் அமிலம் ஆகிய காரணங்களால் அலுமினிய துகள்கள் உணவில் கலக்கின்றன. அது உடலில் சிறிது சிறிதாக சேர்ந்து நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் அதிக அளவு அலுமினியம் கலக்கும்போது, எலும்பு, சிறுநீரகம், மூளை போன்ற பாகங்களை பாதிக்கிறது. மேலும், மறதி, குழப்பம், பேசுவதில் சிக்கல், வலிப்பு, நரம்பியல் நோய்கள், ரத்தசோகை, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, கோமா என்று உயிரிழப்புவரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கிரே வாட்டர், ஒயிட் வாட்டர், பிளாக் வாட்டர்... தண்ணீர் சிக்கனத்துக்குச் சில வழிகள்! #SaveWater செய்யப்பட வாய்ப்புள்ளது. சான்றிதழ் பெறாத அலுமினிய குக்கர்களில் லெட் கலப்படம் லெட் அளவு ரத்தத்தில் அதிகமானால், இந்த பாதிப்புகள் கூடவே மலட்டுத்தன்மையும் ஏற்படும். பொதுவாக அலுமினிய குக்கரில் லெட் இருக்காது. அது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. BIS சான்றிதழ் பெறாத அலுமினிய குக்கர்களில் லெட் கலப்படம் செய்யப்பட வாய்ப்புள்ளது. லெட் போன்ற மிகவும் நச்சுத்தன்மை கொண்ட உலோகங்கள் சமையல் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவது மிகவும் அபாயம் வாய்ந்தது. முறையான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படாத அலுமினிய குக்கர்களில் உள்ள அலுமினியம் மறுசுழற்சி செய்யப்பட்டவை. அவற்றில் லெட் போன்ற உலோகக் கலப்படங்கள் இருக்க வாய்ப்பு அதிகம். முறையான தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதே இதற்கான சரியான தீர்வாக இருக்கும்'' என்றவர், அதுவரை நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள பின்பற்றவேண்டிய வழிமுறைகளையும் சொன்னார். ``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்வறிக்கை சொல்வதென்ன? வேண்டும். அலுமினியம் ஃபாயில் பயன்பாட்டையும் குறைத்துக்கொள்ள · BIS முத்திரையுள்ள அலுமினிய சமையல் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். · பாத்திரத்தில் தேய்மானம், கீறல்கள் தென்பட்டால் உடனே அதனை மாற்றிவிட வேண்டும். · அலுமினிய பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது எலுமிச்சை பயன்படுத்தி அழுத்தி தேய்த்து கழுவுவதை தவிர்க்க வேண்டும். · குளிர்சாதனப்பெட்டியில் அலுமினிய பாத்திரங்களில் உணவுகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். · அலுமினியம் ஃபாயில் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். · இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்றவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.
Apollo: பரம்பரை புற்றுநோய்; விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சியில் அப்போலோ கேன்சர் சென்டர்
புற்றுநோய் சிகிச்சையில் இந்தியாவின் முதன்மை வலையமைப்பாகத் திகழும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC), பரம்பரை புற்றுநோய் விழிப்புணர்வு வார அனுசரிப்பின்போது, மரபணுக்கள் காரணமாக ஏற்படும் பரம்பரை புற்றுநோய்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு சிகிச்சைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது. மரபணு சோதனை மற்றும் தன்முனைப்புடன் மேற்கொள்ளப்படும் அடிப்படை ஸ்க்ரீனிங் பரிசோதனைகள் வழியாக ஆரம்ப நிலையிலேயே இத்தகைய புற்றுநோயைக் கண்டறிவதை வலியுறுத்துவது மீது இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பரம்பரை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் சாத்தியமுள்ள குடும்பங்களுக்கு இது குறித்த அறிவை வழங்குவதும், அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்கான திறனை வழங்குவதும் இந்த விழிப்புணர்வு திட்டத்தின் நோக்கமாகும். உரிய நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது உயிரைப் பாதுகாக்கும் என்பதை வலியுறுத்துவது இந்த பரப்புரை திட்டத்தின் ஒரு அங்கமாகும். பரம்பரை புற்றுநோய்கள், பெற்றோர்களிடமிருந்து அவர்களின் பிள்ளைகளுக்குக் கடத்தப்படுகிற பரம்பரையான மரபணு பிறழ்வுகளினால் உருவாகின்றன. இந்த மரபணு பிறழ்வுகள், புற்றுநோய் ஏற்படுவதற்கான இடர்வாய்ப்பை அதிகரிக்கின்றன என்ற போதிலும், அவற்றை உறுதி செய்வதில்லை. இத்தகைய மரபணு பிறழ்வுகள், நம் உடலில் செல் வளர்ச்சி, பழுதுநீக்கல் மற்றும் புற்றுக்கட்டியை ஒடுக்குவதற்குப் பொறுப்பான மரபணுக்களைச் சீர்குலைக்கின்றன. உலக அளவில் பரம்பரை புற்றுநோய்கள், ஒட்டுமொத்த புற்றுநோய்களில் ஏறக்குறைய 5–10% பங்கினைக் கொண்டிருக்கின்றன ( PMC.NCBI ). பெரும்பாலான புற்றுநோய்கள் வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் காரணிகள் அல்லது யதேச்சையான பிறழ்வுகளின் காரணமாக ஏற்படுகின்றன. பொதுவான பரம்பரை புற்றுநோய் நோய்த்தொகுப்புகளில் பரம்பரை மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் (HBOC) , லிஞ்ச் சிண்ட்ரோம் மற்றும் குடும்ப ரீதியிலான நாளக்கட்டிகள் ஆகியவை உள்ளடங்கும். இந்தியாவில் 2020-ம் ஆண்டில் (குளோபோகேன் அறிக்கை) மார்பக புற்றுநோய் 1,78,361 நபர்களுக்கும் மற்றும் கருப்பை புற்றுநோய் 45,701 நபர்களுக்கும் கண்டறியப்பட்டது. இவற்றுள் 10%-க்கும் அதிகமானவை BRCA1 மற்றும் BRCA2 மரபணு பிறழ்வுகளுடன் தொடர்புடையவை. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்தப் பிறழ்வுகளின் விகிதம் 2.9% லிருந்து 28% ( IJMIO ) வரை மாறுபடுகிறது. HBOC உடன் தொடர்புடைய பிற மரபணு பிறழ்வுகள் தொடர்ந்து குறைவாகவே அறியப்படுகின்றன. மலக்குடல் புற்றுநோய்களில் 2-3 % ஐ ஏற்படுத்தும் லிஞ்ச் சிண்ட்ரோம் ( ScienceDirect ), கருப்பை உள்வரிச்சவ்வு, வயிறு, கணையம், கருவகம், சிறுநீர்ப்பாதை மற்றும் இன்னும் பலவற்றில் புற்றுநோய்களுக்கு அதிகரித்த இடர்வாய்ப்புகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது. குடும்ப ரீதியான நாளக்கட்டிகள் (FAP) என்பது, ஒரு அரிதான, மரபு வழியான பாதிப்பாகும்; எண்ணற்ற முன்பெருங்குடல் கட்டிகளை இது விளைவிப்பதோடு, 40 வயதிற்குள் மலக்குடல் புற்றுநோய்க்கு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட இடர்வாய்ப்பை இது விளைவிக்கிறது. இது குறித்து இந்தியாவில் மிகக்குறைவான தரவுகளே கிடைக்கப்பெறுகிறது ( NCBI ). cancer cells இந்த பின்னணியில், சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிகிச்சை நிகழ்வை கையாண்டது. இதில் கௌஹாத்தியைச் சேர்ந்த, இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களுக்கு 'லிஞ்ச் சிண்ட்ரோம்' (Lynch syndrome) தொடர்பான புற்றுநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தாயாரான திருமதி நமிதா டே, 2011-ம் ஆண்டில் தனது 50 -வது வயதில் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றார். அவரது மகள், திருமதி தீபா கோஷ், தனது 26வது வயதில் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2012-ல் சிகிச்சை பெற்றார். மிக சமீபத்தில், அவரது மற்ற இரு பிள்ளைகளான திருமதி ஷிகா சர்க்கார் மற்றும் திரு. மதுரா நாத் டே ஆகிய இருவரும் தங்களது 40-வது வயதில் வலது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2024-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த நால்வரும் தற்போது நலமாக உள்ளனர். சரியான நேரத்தில் செய்யப்படும் இடையீட்டு நடவடிக்கையும், அறுவை சிகிச்சை பராமரிப்பும் சிகிச்சை விளைவுகளை சிறப்பானதாக ஆக்குகின்றன; ஒரு சிறந்த, தரமான வாழ்க்கையை வாழ உரிய நேரத்தில் பெறப்படும் சிகிச்சை வழிவகுக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த குடும்ப நபர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து பேசிய சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் வெங்கட் P கூறியதாவது, “புற்றுநோய் எப்போதும் தற்செயலாக ஏற்படுவதில்லை என்பதை இந்த நேர்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இது பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியது மற்றும் தலைமுறைகளாக குடும்ப உறுப்பினர்களுக்கு கடத்தப்படக் கூடியது. ஒரு குடும்பத்தில் பல உறுப்பினர்கள் பாதிக்கப்படும்போது, மரபணு காரணிகள் இதில் பங்கு வகிக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு வலுவான அறிகுறியாகும். இதுபோன்ற அதிக இடர்வாய்ப்புள்ள குடும்பங்களில், மரபணு ஆலோசனை மற்றும் முன்னெச்சரிக்கையாக தன்முனைப்புடன் செய்யப்படும் பரிசோதனைகள் விலைமதிப்பற்றவையாக அமைகின்றன. நோய் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியக்கூறு உள்ள நபர்களை அடையாளம் காண உதவுவதோடு, தடுப்பு அல்லது ஆரம்ப சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவை வழிவகுக்கின்றன. இதன் மூலம் நோயாளிகள் குணமடைவதற்கும், உயிர்வாழ்வதற்கும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதற்கும் சிறந்த வாய்ப்பை இவை வழங்குகின்றன.” சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பிரியா கபூர் பேசுகையில், “ மலக்குடல், கருப்பை அல்லது கருப்பை உள்வரிச்சவ்வில் புற்றுநோய்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கும் குடும்பங்கள் அவர்களின் மருத்துவ வரலாற்றை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் மற்றும் இந்த புற்றுநோய் பாதிப்புகளை யதேச்சையானது என்று அலட்சியம் செய்யக்கூடாது. ஒரே குடும்பத்தில் பலருக்கு புற்றுநோய் வந்த வரலாறு, மரபணு ரீதியில் ஏற்படும் பரம்பரை புற்றுநோய் நோய்க்குறியின் முதல் சுட்டிக்காட்டல் அம்சமாக பெரும்பாலும் இருக்கிறது. இத்தகைய இடர்வாய்ப்பில் இருப்பவர்களை அடையாளம் காண்பதில் அத்தியாவசியமான முதல் நடவடிக்கையாக மரபியல் பரிசோதனையும் மற்றும் கட்டமைக்கப்பட்ட கண்காணிப்பு திட்டங்களும் இருக்கிறது. திட்டமிட்ட கால அளவுகளில் கொலனோஸ்கோப்பி, உரிய நேரத்தில் நாளக்கட்டிகளை அகற்றுவது மற்றும் சில நேர்வுகளில் முன்தடுப்பு அறுவைசிகிச்சைகளை மேற்கொள்வது, புற்றுநோய்கள் முழுமையாக வளர்ந்து பெரிதாவதற்கு முன்பு இடையீட்டு சிகிச்சையை வழங்க எங்களுக்கு உதவுகிறது. இதன்மூலம் உயிர்களை காப்பாற்ற உதவ முடியும். குடும்பங்கள் மீது சுமத்தப்படும் உணர்வு ரீதியான மற்றும் உடல் ரீதியான கடும் சுமையைக் குறைக்க முடியும்.” என்று கூறினார். இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நோயாளி இது குறித்து கூறியதாவது: “புற்றுநோயானது எங்களது குடும்பத்தில் ஒருவரை மட்டுமின்றி, எங்கள் நால்வரையும் பாதித்தபோது பெரும் அச்சுறுத்தலாக எங்களை மிரள வைத்தது. ஆனால், அப்போலோ கேன்சர் சென்டரில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சையின் மூலம் உதவுவதோடு, தங்களது பணியை மட்டுப்படுத்தாமல், எமது சிகிச்சை பயணத்தில் ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டலையும், கனிவையும் வழங்கினர். இன்றைக்கு நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம்; இதற்கு முன்பு இருந்த அச்சத்திற்குப் பதிலாக, நம்பிக்கையையும், தைரியத்தையும் கொண்டவர்களாக நாங்கள் வாழ்கிறோம். குடும்பங்களில் பரம்பரை நோயாக புற்றுநோய் ஏற்பட்டாலும், உரிய நேரத்தில் பெறப்படும் சிகிச்சை அதன் பாதிப்பை அகற்றி, மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கும் என்பதை அப்போலோவின் சிகிச்சை எங்களுக்கு காட்டியிருக்கிறது.” cancer சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் – ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு, கரண் பூரி பேசுகையில், “அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் – ல் எமது அர்ப்பணிப்பும், பொறுப்புறுதியும் மேம்பட்ட நவீன சிகிச்சையை வழங்குவது என்பதையும் கடந்து பயணிப்பதாக இருக்கிறது. மரபியல் ரீதியாக, பரம்பரை நோயாக வரக்கூடிய புற்றுநோய்கள் மீது சரியான தகவலை வழங்கி, விழிப்புணர்வை பரப்புவதும் எமது பொறுப்பு என்று நாங்கள் கருதுகிறோம். பெரும்பாலான நேரங்களில், தங்களது குடும்பங்களில் பல உறுப்பினர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் வரை தங்களது மரபணுக்களில் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை உருவாக்கும் மரபணு பிறழ்வுகள் இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. இது குறித்த விழிப்புணர்வு உரிய நேரத்தில் எடுக்கப்படும் சிகிச்சை நடவடிக்கையோடு இணையும்போது புற்றுநோயை வெல்வதற்கான வலுவான ஆயுதமாக அது மாறுகிறது.” என்று கூறினார். பரம்பரை புற்றுநோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதில் ACC – ன் இந்த நிகழ்வு முன்னிலைப்படுத்தியது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர்களின் விளக்க உரைகளும் மற்றும் நோயாளிகளின் நிஜ வாழ்க்கை வரலாறுகளின் பகிர்வுகளும் இதில் இடம்பெற்றன. இந்த சீரிய முயற்சிகளின் வழியாக, பரம்பரை புற்றுநோய் குறித்த கல்வியறிவை வழங்குவதிலும் மரபணு ரீதியிலான இடர்வாய்ப்பு பற்றி விழிப்புணர்வை அதிகரிப்பதிலும், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது மற்றும் தன்முனைப்புடன் சிகிச்சைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதிலும் தனது தலைமைத்துவ நிலையை ACC தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது; இந்தியாவெங்கிலும் நோயாளிகளுக்கான சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பையும் இந்த முன்னெடுப்புகளின் மூலம் அது நிரூபிக்கிறது. cancer disease புற்றுநோயை வெல்வோம் அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https://apollocancercentres.com/ புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 400-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது. Apollo cancer centres இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது. அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம்.
SIMS: தென்னிந்தியாவில் முதன் முறையாக பெருந்தமனி வால்வின் அடைப்பை சரி செய்த சிம்ஸ் மருத்துவமனை
30 வயதிற்கு கீழ்ப்பட்ட நோயாளிகளில் பளிங்கு (கால்சியம் படிந்த) பெருந்தமனி மற்றும் பெருந்தமனி வால்வில் அடைப்பு ஆகியவற்றின் கலவை கண்டறியப்படுவது மிகவும் அரிதாகும். ஏறக்குறைய ஒரு முட்டைப்போல எளிதில் உடையக்கூடிய அதிக கால்சியம் படிந்த வால்வில் ஒட்டுவதும், தையலிடுவதும் மிக கடினமானது; அதிக ஆபத்து வாய்ந்ததும் கூட. சென்னை, அக்டோபர் 07, 2025 : ஒரு அரிதான, உயிருக்கு அதிக ஆபத்தான இதய பாதிப்பால் அவதிப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 28 வயதான பொறியியல் துறை மாணவரின் உயிரை ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவ சாதனையாக சிம்ஸ் மருத்துவமனையின் நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கின்றனர். சிம்ஸ் மருத்துவமனை இரு மாதங்களாக கடுமையான சுவாசப் பிரச்சனைகள் இந்த இளைஞருக்கு இருந்திருக்கின்றன. கேரளாவில் பல மருத்துவமனைகளுக்கு சென்றபோது பளிங்கு பெருந்தமனி (கடுமையாக இறுகி, கடினமான மற்றும் எளிதில் நொறுங்கக்கூடிய முக்கிய இரத்தக்குழாய்) மற்றும் “ஒடுங்கிய பெருந்தமனி வால்வு” (இதயத்திலிருந்து இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற வால்வு குறுகியிருப்பது) என்ற இரண்டு கடுமையான இதயப் பிரச்சனைகள் அரிதாக ஒருங்கிணைந்திருப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டன. இதற்கான அறுவைசிகிச்சையின் சிக்கலான தன்மை மற்றும் உயிருக்கு அதிக ஆபத்துக்கான வாய்ப்பின் காரணமாக, கேரளாவின் உள்ளூர் மருத்துவமனைகள் அறுவைசிகிச்சையை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தன. இருப்பினும் நம்பிக்கையை கைவிடாத இந்த இளம் நோயாளி, சென்னையின் சிம்ஸ் மருத்துவமனையில் பெருந்தமனியில் இரத்தநாள அழற்சிக்கான சிகிச்சை மையத்திற்கு வருகை தந்தார். இங்கு பணியாற்றும் நிபுணத்துவம் மிக்க இதய அறுவைசிகிச்சை மருத்துவர்களின் குழு, நம்பிக்கையோடும், தைரியத்தோடும் இந்த சவாலை எதிர்கொள்ள முடிவு செய்தது. மிக அதிகமாக கால்சியம் படிந்த பெருந்தமனி மீது தான், பெருந்தமனி வால்வு இருக்கிறது. கால்சியம் படிந்த கடினமான பெருந்தமனியில் தையலிடும் அசாதாரண சவாலை எதிர்கொண்ட நிபுணர்களின் குழு ஒரு மெக்கானிக்கல் பெருந்தமனி வால்வு மாற்றும் செயல்முறையை திறம்பட மேற்கொண்டது. பளிங்கு பெருந்தமனி என்ற நிலையானது, தூளாக நொறுங்கக்கூடியதால், அதில் அறுவைசிகிச்சை செய்வது சிரமமானதாகவும், அதிக சவாலானதாகவும் இருப்பதால் இந்த இளைஞருக்கான சிகிச்சை அதிக ஆபத்தானதாகவே இருந்தது. ஐந்து மணி நேரங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை, இதய மற்றும் பெருந்தமனி நோய்களுக்கான சிகிச்சை மையத்தின் இயக்குனரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். வி.வி. பாஷி மற்றும் இதய மார்பறை அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். முகமது இத்ரீஸ் ஆகியோர் வெற்றிகரமாக மேற்கொண்டனர். உணர்விழப்பு மருந்தியல் நிபுணர்களான இதய மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். அஜு ஜேக்கப், மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர். ஏ. அருண்குமார் ஆகியோரின் சிறப்பான ஆதரவோடு செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் குழுவின் பங்களிப்பும் இந்த சிகிச்சையின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. டாக்டர். பாஷி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “உடலின் மிகப்பெரிய தமனியான பெருந்தமனி, இதயத்திலிருந்து ஆக்சிஜன் செறிவான இரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது. பெருந்தமனி வால்வு, சீரான இரத்த ஓட்டத்தையும் உறுதி செய்வதுடன், இரத்தம் பின்னோக்கிப் பாய்வதை தடுக்கிறது. இந்த இளம் நோயாளிக்கு இந்த வால்வு மிக கடுமையாக சுருங்கி ஒடுங்கியிருந்தது; பெருந்தமனியும், அதிக கால்சியம் படிந்து பளிங்கு போல ஆகியிருந்தது. ஒடுங்கிய பெருந்தமனி வால்வு மற்றும் பளிங்குபோல் கால்சியம் படிந்த பெருந்தமனி ஆகியவற்றின் இரட்டை இடர்வாய்ப்பின் காரணமாக, இது அதிக சிக்கலான பாதிப்பாக இருந்தது. இளவயது நபர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவது மிகவும் அரிதானது. பெருந்தமனி வால்வு ஒடுக்கம் என்பது, வயது முதிர்ந்த நபர்களில் பொதுவானது. பல ஆண்டுகளாக கால்சியம் படிப்படியாக படிவதன் காரணமாக இந்த பாதிப்பு வழக்கமாக உருவாகும். ஆனால், 30 வயதிற்கு கீழ்ப்பட்ட ஒரு நபருக்கு இது இருப்பது உண்மையிலேயே மிக அரிது. அதைப் போலவே, பளிங்கு பெருந்தமனி என்பதும், இளவயது நோயாளிகளிடம் கண்டறியப்படுவது மிக அசாதாரணமானது. இயல்பான இதய இயக்கத்தை திரும்ப கொண்டு வரும் அதே வேளையில், நோயாளியின் உயிர் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக எமது குழுவினர், ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகளை மிக கவனமாக மதிப்பாய்வு செய்து சிகிச்சை திட்டத்தை துல்லியமாக வகுத்து அதனை செயல்படுத்தினர்.” என்று கூறினார். இதய மார்பறை அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். முகமது இத்ரீஸ் பேசுகையில், “இந்நோயாளிக்கு ஒரு மெக்கானிக்கல் வால்வு மாற்றும் செயல்முறையை செய்வது அவசியமாக இருந்தது. இதில் பெருந்தமனி வால்வு மற்றும் பெருந்தமனி ஆகிய இரண்டிலும் தையல் போடுவது தேவைப்படும். இருப்பினும், பளிங்கு போன்ற பெருந்தமனியானது, அதிக கால்சியம் படிந்திருந்ததால் அதன் சுவர்கள் ஒரு முட்டை ஓடு போல எளிதில் உடையக்கூடியதாக இருந்தன. கால்சியம் படிந்த இத்தகைய திசுவை வெட்டுவது அல்லது தையல் போடுவதில் கணிசமான ஆபத்துகள் இருக்கின்றன. கால்சியத்தின் சிறு துகள்கள் உடைந்து வெளியே இரத்த ஓட்டத்திற்குள் நுழையுமானால், பக்கவாதம் அல்லது பிற கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டு விடும். தையலிடும் செயல்முறை தொழில்நுட்ப ரீதியாக வெற்றிகரமாக இருந்தால் கூட, இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு அதிக இடர்வாய்ப்பு இருக்கும். இந்த நுட்பமான சவால்களின் காரணமாக, இந்த அறுவைசிகிச்சை அதிக ஆபத்தானது என்று கருதிய கேரளாவின் இரண்டு முக்கிய மருத்துவமனைகள் இந்த அறுவைசிகிச்சையை தவிர்த்தன. சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள எமது குழு, கவனமாக திட்டமிடல் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இடர்வாய்ப்புகளை குறைப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த பிறகு மிக துல்லியமாக இந்த மருத்துவ செயல்முறையை மேற்கொண்டது. சிகிச்சைக்குப் பிறகு இந்த இளம் நோயாளி இப்போது நன்றாக மீண்டு குணமடைந்து வருகிறார். அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய முறையான பராமரிப்போடு, இயல்பான வாழ்க்கையை இவர் வாழ்வாரென்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறினார். சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து , இச்சாதனை நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கையில், “எமது அறுவைசிகிச்சை நிபுணர்களது குழுவின் இச்சாதனை, மருத்துவ செயல்தளத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றே கருதப்படுகிறது. இந்த சிக்கலான சவால் நிறைந்த அறுவைசிகிச்சைக்கு மிக அதிக திறன் தேவையாக இருந்தது. ஏறக்குறைய ஒரு ‘முட்டை ஓடு’ போன்று கால்சியம் படிந்த பெருந்தமனி வால்வு மற்றும் பளிங்கு போன்று மாறிய பெருந்தமனி ஆகிய மிக அரிதான இரு ஆபத்தான நிலைகளின் கலவையை கொண்டிருந்த 28 வயதான இந்த நோயாளிக்கு வெற்றிகர அறுவைசிகிச்சையை செய்திருப்பது, நிச்சயமாக பெருமிதம் அடையக்கூடிய சிறந்த சாதனையாகும். அதிக சிக்கலான இதய பாதிப்பு சூழல்களில் , எமது அறுவைசிகிச்சை நிபுணர்களின் நிபுணத்துவம், விடாமுயற்சி மற்றும் சமயோஜித திறன் ஆகியவை இந்த இளம் நோயாளியின் உயிரை காப்பாற்றியிருக்கிறது; அதே வேளையில், இதய சிகிச்சை உத்திகளின் ஒரு புதிய தர அளவுகோலை உருவாக்கியிருக்கிறது. சிம்ஸ் மருத்துவமனையின் நோயாளிகளின் நலவாழ்வு மீது நாங்கள் கொண்டிருக்கின்ற அர்ப்பணிப்பிற்கும், நிபுணத்துவம் மிக்க உயர் சிகிச்சைக்கும் ஒரு புதிய அர்த்தத்தை இந்த மருத்துவ சாதனை தந்திருக்கிறது.” என்று கூறினார்.
Doctor Vikatan: குடும்பநல மருத்துவர்; சரியான நபரை எப்படித் தேர்ந்தெடுப்பது?
Doctor Vikatan: குழந்தைகள் முதல் வீட்டிலுள்ள பெரியவர்கள்வரை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்படும்போது, உடனே அணுகும்படி குடும்பநல மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். குடும்பநல மருத்துவரை எப்படித் தேர்வு செய்வது... அவர் சரியான நபர்தான் என்பதை எப்படி உறுதிசெய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் புதிதாக ஓரிடத்துக்குக் குடிபோகிறீர்கள் என்றால், அந்தப் பகுதியில் மக்கள் அதிகம் நாடிச்செல்லும் மருத்துவர், நிச்சயம் நம்பகமான குடும்பநல மருத்துவராக இருப்பார். ஒரே ஏரியாவில் இரண்டு, மூன்று மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் சிகிச்சை பெற்றுதான் எந்த மருத்துவர் பெஸ்ட் என முடிவு செய்ய வேண்டும். நோயாளியின் நலனில் அக்கறை செலுத்துபவராக இருக்க வேண்டியது முக்கியம். தேவைப்படும் பட்சத்தில் முன்கூட்டியே டெஸ்ட் எடுக்கச் சொல்வது, அந்த டெஸ்ட் எடுக்கப்படுவதன் நோக்கம் சொல்வது, நோய் குறித்து விளக்குவது, அது வராமல் தடுப்பதற்கான வழிகளைச் சொல்வது போன்றவற்றை எல்லாம் புரியும்படி சொல்பவர், நிச்சயம் நல்ல மருத்துவராகவே இருப்பார். மிக முக்கியமாக, நோயாளியை பயமுறுத்தாமல், அதே சமயம் நோய் குறித்த தெளிவை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். சரியான குடும்பநல மருத்துவரிடம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் சிகிச்சை பெறலாம். என்ன நோய்... எந்த டாக்டர்? - 1 - உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு ஏற்கெனவே சொன்னபடி, ஒரே பகுதியில் இரண்டு, மூன்று மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றால், உங்களுக்கு அவர்களில் யாரைப் பிடிக்கிறது என்று பார்த்து முடிவு செய்யலாம். சிலர் நிறைய பேசுவது உங்களுக்குப் பிடிக்கலாம். சிலருக்கு அதுவே பிடிக்காமல் போகலாம். எனவே, அது உங்கள் தனிப்பட்ட தேர்வு. நீங்கள் தேர்வு செய்கிற மருத்துவர், விலை அதிகமான மருந்துகளைப் பரிந்துரைக்கிறாரா, விலை மலிவான மருந்துகளைக் கொடுக்கிறாரா, அவரது சிகிச்சையில் உடனே உடல்நலம் பெறுகிறதா என்றெல்லாம் பாருங்கள். ஊசி தேவையில்லை எனும் பட்சத்தில் அதைத் தவிர்ப்பவர் நல்ல மருத்துவராக இருக்கலாம். மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்பதில், மக்களுடைய மிகப் பெரிய கவலையே மருத்துவர் கட்டணம்தான். எனவே, உங்கள் ஏரியாவில் உள்ள மருத்துவர்களில் யார் நியாயமான கட்டணம் வாங்குகிறார்கள் என்று பார்த்தும் தேர்ந்தெடுக்கலாம். எனவே, மருத்துவரை அணுகும்போது அவர் உங்களை எப்படி நடத்துகிறார், அவரது சிகிச்சை உங்களுக்கு எந்த அளவுக்கு நிறைவைத் தருகிறது என்றெல்லாம் பாருங்கள். Doctor குடும்பநல மருத்துவர் என்பவர், நல்ல சிகிச்சையைக் கொடுப்பவர் மட்டுமல்ல, இந்தப் பிரச்னைக்கு இந்த மருத்துவரைப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என பரிந்துரைப்பவராகவும் இருக்க வேண்டும். அப்படி அவர் பரிந்துரைக்கும் மருத்துவரும் நன்றாகப் பேசக்கூடிய, நோய் குறித்து விளக்கக்கூடிய, குறைவான கட்டணம் வாங்கக்கூடியவராக இருப்பார். சரியான குடும்பநல மருத்துவரிடம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் சிகிச்சை பெறலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மாரத்தான் ஓடும்போதே மரணம்; வராமல் தடுக்க முடியும்! - இதய மருத்துவரின் டேக் கேர் அட்வைஸ்!
உடற்பயிற்சி செய்யும்போது, நடனமாடும்போது சிலர் ஹார்ட் அட்டாக் வந்து இறப்பதை அவ்வப்போது பார்க்கிறோம். அக்டோபர் 5-ம் தேதி, சென்னையைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் மாரத்தான் போட்டியில் ஓடிக்கொண்டிருக்கையில் சுருண்டு விழுந்து மரணமடைந்திருக்கிறார். மாரத்தான் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில், கடந்த 5-ம் தேதி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த 24 வயதான பரமேஷ் என்பவரும் கலந்துகொண்டிருக்கிறார். இவருக்கு ஓட்டப்பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உண்டென்றும், அதனால் ஏற்கெனவே பல மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முறை ஓடிக்கொண்டிருக்கும்போது சுருண்டு விழுந்திருக்கிறார். மருத்துவ உதவிக்காக, மாரத்தான் ஓடியவர்களை ஆம்புலன்சில் பின்தொடர்ந்த மருத்துவ ஊழியர்கள், உடனடியாக பரமேஷுக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்னரே பரமேஷ் இறந்துவிட்டிருக்கிறார். பரமேஷ் மரணத்துக்கு எவை காரணங்களாக இருந்திருக்கலாம்? இளம் வயதினரான பரமேஷ் மரணத்துக்கு எவை காரணங்களாக இருந்திருக்கலாம் என சென்னையைச் சேர்ந்த மூத்த இதய நோய் நிபுணர் சொக்கலிங்கம் அவர்களிடம் கேட்டோம். ''சில நாள்களுக்கு முன்னால்தான், கனடா, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்குச் சென்று வந்தேன். இந்தியா உள்பட இந்த நாடுகளில் எல்லாம் இருபதுகளிலும் முப்பதுகளிலும் ஹார்ட் அட்டாக்கால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. உலகளவில், ஒரு மணி நேரத்துக்கு 90 பேர் இள வயதில் ஹார்ட் அட்டாக்கால் மரணமடைகிறார்கள். இதில் ஆண், பெண் வித்தியாசமெல்லாம் இல்லை. மாரடைப்பு ஹார்ட் அட்டாக்கை நிச்சயம் தடுக்க முடியும் என்னுடைய அறுபது வருட மருத்துவ அனுபவத்தில், 80 அல்லது 70 வயதில் வந்த ஹார்ட் அட்டாக் 50, 40 என முன்கூட்டியே வந்து இப்போது 30, 20 என வந்து நிற்கிறது. ஆனாலும், இதற்காகப் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால், சிறு வயது ஹார்ட் அட்டாக்கை நிச்சயம் தடுக்க முடியும்'' என்றவர், தொடர்ந்தார். கொலஸ்ட்ரால் குறித்து அச்சம்கொள்ளாதீர்கள். ''ரத்தத்தில் இருக்கிற மொத்த கொலஸ்ட்ராலை எடுக்கிறோம் என்று வைத்துக்கொண்டால், அடுத்த நொடி நம் உயிர் போய்விடும். அந்தளவுக்கு கொலஸ்ட்ரால் நமக்குத் தேவையான ஒன்று. அதனால், கொலஸ்ட்ரால் குறித்து அச்சம்கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறபட்சத்தில் இந்த கொலஸ்ட்ரால் ரத்தத்தில் மட்டும் இருந்து உங்களை 100 வயது வரைகூட வாழ வைக்கும். கொலஸ்ட்ரால் குறைந்தது 20 அல்லது 25 வருடங்கள் ஆகும். இதயத்தில் இருக்கிற ரத்தக்குழாய்களில் 70 முதல் 80 சதவிகிதம் கொழுப்புப் படிந்து, அவை ரத்தக்குழாய்களை முழுமையாக அடைப்பதற்கு குறைந்தது 20 அல்லது 25 வருடங்கள் ஆகும். அதற்குள் நம்முடைய உணவையும் லைஃப் ஸ்டைலையும் ஹெல்த்தியாக மாற்றிக்கொண்டீர்கள் என்றால், இதயத்துக்கு எந்தப் பிரச்னையும் வராது. ஓப்பன் ஹார்ட் சிரிப்பு, டக் ஆஃப் வார் சிரிப்பு... சிரிப்பு யோகாவின் வகைகளும் பலன்களும்! எந்த அறிகுறியும் தெரியாது. மகிழ்ச்சியை இழக்கும்போது அட்ரினலில் இருந்து கார்டிசால் சுரக்க ஆரம்பிக்கும். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன். இதனால், இதய ரத்தக்குழாய்களுக்குள் கொலஸ்ட்ரால் படிந்து ரத்தக்குழாய்கள் தடிமனாகும். இப்படி கொலஸ்ட்ரால் படிவது 80 சதவிகிதம் ஆகிற வரைக்கும்கூட எந்த அறிகுறியும் தெரியாது. ஈசிஜி, எக்கோ, ட்ரெட் மில் டெஸ்ட் எல்லாமே நார்மலாக இருக்கும். இந்தப் பிரச்னையை Atherosclerosis என்போம். அதனால், மகிழ்ச்சியாக இருங்கள். உடற்பயிற்சி ஓப்பன் ஹார்ட் சிரிப்பு, டக் ஆஃப் வார் சிரிப்பு... சிரிப்பு யோகாவின் வகைகளும் பலன்களும்! வெறியுடன் உடற்பயிற்சி செய்தால், மாரத்தான் ஓடினால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதோ அல்லது மாரத்தானில் ஓடுவதோ, அதை நம் மகிழ்ச்சிக்காக செய்ய வேண்டும். அப்போதுதான் எண்டார்பின் என்கிற மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும். இது ரத்தக்குழாயில் கொலஸ்ட்ராலை படிய விடாது. இதுவே ஆத்திரத்துடன், ஆவேசத்துடன், அவசரத்துடன், ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியுடன் உடற்பயிற்சி செய்தால்... மாரத்தான் ஓடினால்... கார்டிசால் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் என்ன நடக்கும் தெரியுமா? இதய ரத்தக் குழாய்களுக்குள் மட்டுமல்ல, உடலிலுள்ள எல்லா ரத்தக்குழாய்களுக்குள்ளும் மென்மையான லைனிங் இருக்கும். இதை எண்டோத்தீலியம் என்போம். கார்டிசால் சுரக்கும்போது, இந்த எண்டோத்தீலியத்தில் சிறியதாக கீறல் விழும். உடனே அந்த இடத்தில் ரத்தம் உறைய ஆரம்பித்துவிடும். இது இதய ரத்தக்குழாய்க்குள் ரத்த ஓட்டத்தை தடுத்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட நபருக்கு 2 நிமிடத்தில் ஹார்ட் அட்டாக் வந்து விடும். அதனால், மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும்படி வாழுங்கள். மாரத்தான் ஓடியவருக்கு மேலே சொன்ன பிரச்னைகள் இருந்தனவா? 20-களிலேயே ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ஈசிஜி, எக்கோ ஆகிய 5 பரிசோதனைகளை 5 வருடத்துக்கு ஒருமுறை 40 வயது வரை செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு 50 வயது வரை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு வருடா வருடம் செய்ய வேண்டும். குறிப்பாக, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு மூன்றும் ஒரு நபரை சத்தமில்லாமல் கொன்றுவிடும். முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் ஹார்ட் அட்டாக் வராமல் தடுத்துவிட முடியும். மாரத்தான் ஓடியவருக்கு மேலே சொன்ன பிரச்னைகள் இருந்தனவா என்று தெரியவில்லை. இவர்களுக்கும் இதுபோல திடீரென அட்டாக் வரலாம். தவிர, சிலருக்கு இதயத்தின் தசைச் சுவர்களில் இடது வென்ட்ரிக்கிள் தடிமனாகிவிடும். சிலருக்கு, பிறவிலேயே இதய ரத்தக்குழாய்களுக்குள் ஏதேனும் இயல்புக்கு மாறான மாற்றங்கள் இருந்திருக்கலாம். இவை தெரியாமல், தீவிரமாக உடற்பயிற்சி செய்தலோ அல்லது ஓடினாலோ இவர்களுக்கும் இதுபோல திடீரென அட்டாக் வரலாம். ஹார்ட் அட்டாக்குக்கு முந்தைய வலியை வாயுத்தொல்லை என்றுகூட இவர் அலட்சியப்படுத்தியிருக்கலாம். மகிழ்ச்சியாக இருங்கள்; 8 மணி நேரம் தூங்குங்கள்; உங்கள் உடல் நலத்தில் அக்கறையாக இருங்கள்; எதையோ சாதிக்க வேண்டும் என ஓடி உங்கள் உயிரையே இழந்துவிடாதீர்கள்'' என்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.
Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை; இன்ஹேலர், நெபுலைசர் இரண்டில் எது பெஸ்ட்?
Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர் உபயோகிப்பதற்கும் நெபுலைசர் உபயோகிப்பதற்கும் என்ன வித்தியாசம். இரண்டையுமே உபயோகிக்கலாமா, எது வேகமான நிவாரணம் தரும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை மருத்துவர் திருப்பதி நுரையீரல் மருத்துவர் திருப்பதி ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் 'நாள்பட்ட நுரையீரல் அழற்சி' பாதிப்பு போன்றவை உள்ளோருக்கு இன்ஹேலர் பரிந்துரைப்பது வழக்கம். இன்ஹேலர் என்பது மருந்தை, கேஸ் வடிவில் நோயாளிக்குக் கொடுப்பது. இன்ஹேலர் என்பதை மூன்று வடிவங்களில் கொடுக்கலாம். 'டிரை பவுடர் இன்ஹேலர்' என்பதில் கேப்ஸ்யூல் இருக்கும். அதை இன்ஹேலர் கருவியில் போட்டுச் சுழற்றினால், அந்த கேப்ஸ்யூல் உடைந்துவிடும். அதை சம்பந்தப்பட்ட நோயாளி, வேகமாக இழுக்க வேண்டும். அடுத்தது 'மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்' (metered dose inhaler) எனப்படும். இதிலும் கேஸ் வடிவில்தான் மருந்து உள் செலுத்தப்படும். பஃப் என்றும் சொல்வோம். பொதுவாக, இதையே இன்ஹேலர் என்று நாம் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். மூன்றாவது, நெபுலைஸர் ( Nebulizer). இதில் திரவ வடிவில் உள்ள மருந்தை உள்ளே விட வேண்டும். திரவ மருந்தானது கேஸ் வடிவ துகள்களாக மாறி உள்ளிழுக்க வசதியாக இருக்கும். ஆஸ்துமா ஆக, இந்த மூன்றிலுமே மருந்தை கேஸ் வடிவில்தான் கொடுக்கிறோம். கொடுக்கும் விதம் மட்டுமே வேறுபடும். யாருக்கு, எது சரியானது என்பது பல காரணிகளை வைத்துத் தீர்மானிக்கப்படும். அதாவது நோயாளியின் வயது, இன்ஹேலர் பயன்படுத்துவதை அவர் புரிந்துகொள்ளும் தன்மை, வேகமாக காற்றை உள்ளிழுக்கும் திறன், அழுத்தும்போது கேஸை சரியாக உள்ளிழுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் மருந்து வீணாகிவிடும். 'பல மாசமா இன்ஹேலர் யூஸ் பண்றோம்... பிரச்னை சரியாகலை' என்று சொல்லும் பலரைப் பார்க்கலாம். காரணம், அவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்தாததுதான். முதலில் குறிப்பிட்ட பவுடர் வடிவ இன்ஹேலரை பயன்படுத்துவதில் அதை வேகமாக உள்ளிழுப்பது மட்டும்தான் சவால். அந்தத் திறன் உள்ளவர்களுக்கு டிரை பவுடர் இன்ஹேலர்தான் பெஸ்ட். அது சூழலுக்கும் உகந்தது. 'மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்' பயன்படுத்தும்போது 'க்ளுரோஃப்ளுரோ கார்பன்' (Chlorofluorocarbons) என்ற நச்சுப் பொருளும் வெளியாவதால், அது சூழலுக்கு ஏற்றதல்ல. வயதானவர்களால் டிரை பவுடர் இன்ஹேலரை சரியாகப் பயன்படுத்த முடியாது. முழுமையாக உள்ளிழுக்க மாட்டார்கள். அதனால் மருந்தானது வாய்க்கும் தொண்டைக்கும் தான் போகுமே தவிர, நுரையீரல் வரை போகாது. அவர்களுக்கு, அதிக மெனக்கெடல் இருக்கக்கூடாது, அதே சமயத்தில் மருந்தும் முழுமையாக உள்ளே போக வேண்டும் என்பதால் 'மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்' பரிந்துரைப்போம். அதை அழுத்தும்போது சரியாக உள்ளிழுக்காவிட்டால் மருந்தெல்லாம் வெளியேறிவிடும். இதைப் பயன்படுத்தும்போது சரியாக அழுத்தி, சரியாக உள்ளிழுத்து, 10 நொடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, பிறகு மூச்சை விட வேண்டும். இது பிடிபடாமல்தான் பலரும் அவதிப்படுகிறார்கள். இந்தச் சிக்கலை எதிர்கொள்ள ஸ்பேஸர் பயன்படுத்தலாம். Nebulizer முதல் இரண்டு வகை இன்ஹேலர்களையும் பயன்படுத்த முடியாத நிலையிலோ, எமர்ஜென்சியிலோ, தீவிர மூச்சுத்திணறலுக்கு நெபுலைஸர் பயன்படுத்துவோம். இதிலும் மைனஸ் இல்லாமல் இல்லை. குறிப்பிட்ட நேரம் இதைப் பயன்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும்போது சிறிதளவு மருந்து வீணாகும். இந்தக் கருவியைச் சுமந்துகொண்டு செல்வதும் சிரமம். எல்லா மருந்துகளையும் இதில் பயன்படுத்த முடிவதில்லை. பராமரிப்பும் முக்கியம். நெபுலைஸர் பயன்படுத்தும்போது மாஸ்க் உள்ளிட்ட இணைப்புகளை முறையாகச் சுத்தம் செய்தே மறுபடி பயன்படுத்த வேண்டும். ஒருவர் பயன்படுத்திய மாஸ்க்கை இன்னொருவர் பயன்படுத்தக்கூடாது. நெபுலைஸர் பயன்படுத்தி முடித்ததும் வாய்க் கொப்புளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மருந்து தொண்டையில் வெள்ளையாகப் படிந்து பிரச்னையைத் தரும். எதைப் பயன்படுத்தினாலும் மருந்தின் அளவு, நோயாளியின் வயது, நோயின் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து, மருத்துவரின் அறிவுரையோடுதான் பயன்படுத்த வேண்டும். இன்ஹேலரின் முழுமையான பலன் என்பது அதை எந்த அளவுக்குச் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் உள்ளது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: பல வருடமாகத் தொடரும் இன்ஹேலர் உபயோகம்... அடிக்ஷனாக மாற வாய்ப்பு உண்டா?
தண்ணீர் கலந்த பாலில் சத்தே இருக்காதா? டயட்டீஷியன் விளக்கம்!
பால் ஏன் அவசியம் அருந்த வேண்டும்; அதில் என்னென்ன சத்துகள் உள்ளன; பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்கலாமா; பாலில் தண்ணீர் கலக்கலாமா; யாரெல்லாம் பாலைத் தவிர்க்க வேண்டும் என சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். பால் ஏன் அவசியம்? பால் ஏன் அவசியம்? மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு பால் இன்றியமையாத பங்காற்றுகிறது. கால்சியம், புரோட்டீன், பாஸ்பரஸ், கொழுப்புச்சத்து, வைட்டமின் டி, பி 12 உள்ளிட்ட பல்வேறு சத்துகள் பாலில் உள்ளன. இவை, எலும்புகள் மற்றும் பற்களின் உறுதித்தன்மைக்கும், சரும பொலிவுக்கும் பங்காற்றுகின்றன. எந்தப் பால் சிறந்தது? பசும்பாலில் 3 - 3.5 சதவிகிதம் கொழுப்புச்சத்தும், எருமைப்பாலில் 6 - 8 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் உள்ளன. அதிகமான கொழுப்புச்சத்து இருப்பதால், எருமைப்பால் செரிமானமாக கூடுதல் நேரமெடுக்கும். உடலுழைப்பு குறைவாக இருப்பவர்கள், அடிக்கடி எருமைப்பாலைப் பயன்படுத்தி வந்தால், உடல் பருமன், மந்தத்தன்மை உள்ளிட்ட சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, எருமைப்பாலைத் தினமும் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அதேசமயம், கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால், பசும்பாலைத் தினமும் பயன்படுத்தலாம். கடைகளில் பல்வேறு விதமான கொழுப்புச்சத்து அளவுகளில் பால் விற்கப்படுகிறது. அதில், 3.5 சதவிகிதம் கொழுப்புச்சத்துள்ள பால் (Toned milk) தினசரி தேவைக்கு ஏற்றது. எந்தப் பால் சிறந்தது? பால் உணவுகள் தினமும் தேவையா? மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு புரோட்டீன் சத்து மிகவும் முக்கியமானது. பருப்பு போன்ற புரோட்டீன் அதிகமுள்ள தானியங்களை, அரிசி போன்ற மாவுச்சத்து உணவுடன் சேர்த்துப் பயன்படுத்தினால்தான் முழுமையான பலன் கிடைக்கும். பாலில் திறன் வாய்ந்த புரோட்டீன் (High biological value protein) இருக்கிறது. இதனால், பாலை நேரடியாகவும் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், பிற உணவுகளுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். தலா 100 மில்லிலிட்டர் பசும்பால் மற்றும் எருமைப்பாலிலும், அதிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிரிலும் சராசரியாக 3.2 கிராம் புரோட்டீன் இருக்கிறது. பால், தயிர், மோர், குறைவான அளவில் பனீர் என விருப்பமான உணவுப் பொருளாகத் தினமும் 400 மில்லிலிட்டர் அளவில் பால் உணவுகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. இதனால், தினமும் 12 கிராம் புரோட்டீன் கிடைக்கும். தயிரில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகளவில் இருக்கின்றன. தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய 400 மில்லிலிட்டர் பால் உணவுகளில், குறைந்தபட்சம் 100 மில்லிலிட்டராவது தயிரைப் பயன்படுத்துவது நல்லது. கூடுமானவரை, தயிரை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்துவது சிறந்தது. milk பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்கலாமா? கண்டிப்பாகக் கூடாது. பாலில் கிருமித்தொற்றுகள் எளிதில் ஊடுருவக்கூடும். பால் பண்ணை அல்லது பால் ஃபேக்டரியிலேயே பால் பதப்படுத்தப்பட்டு (Pasteurization), குளிர்விக்கப்படுகிறது. இருப்பினும், அந்தப் பால் நம் பயன்பாட்டுக்கு வந்து சேரும் வரை போதிய அளவிலான குளிர்ச்சியுடன் இருப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, கடையில் வாங்கினாலும் சரி, வீட்டிலேயே பசு அல்லது எருமைகளை வளர்த்தாலும் சரி, பாலைக் காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும். பாலில் தண்ணீர் கலக்கலாமா? வீடுகள் முதல் டீக்கடைகள் வரை பெரும்பாலான இடங்களிலும் பாலில் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. பாலிலுள்ள கொழுப்புச்சத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காகவும், செலவைக் குறைப்பதற்காகவும் பாலில் தண்ணீர் கலக்கப்படுகிறது. பாலில் எந்த அளவுக்குத் தண்ணீர் சேர்க்கிறோமோ அந்த அளவுக்கு, அதிலுள்ள புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் உட்பட எல்லா சத்துகளுமே குறைய ஆரம்பிக்கும். இதனால், பாலில் இருந்து நமக்குக் கிடைக்கும் பயன்கள் முழுமையாகக் கிடைக்காது. பால் சேர்த்த டீ 3 - 3.5 சதவிகிதம் கொழுப்புச்சத்துள்ள பாலைப் பயன்படுத்தும்பட்சத்தில், தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் காய்ச்சி குடிக்கலாம். 'அப்படியென்றால், பால் உணவுகள் எதிலுமே தண்ணீர் சேர்க்கக் கூடாதா?' என்ற கேள்வி எழலாம். கூடுமானவரை தண்ணீர் சேர்க்காமல் பயன்படுத்தினால், எடுத்துக்கொண்ட பாலிலுள்ள சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். இதுவே, டீ அல்லது காபியில் டிகாக்ஷன் தயாரித்துப் பயன்படுத்தும்போது அதில் தண்ணீர் சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் டீ அல்லது காபியில் பாலுடன் தண்ணீர் கலந்திருக்கும். அதனால், எந்தச் சிக்கலும் இல்லை. அதேசமயம், நாம் பயன்படுத்தும் ஒரு கப் டீ அல்லது காபியில் தண்ணீர் கலக்காத பால் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவு பாலுக்கு ஏற்ற சத்துகள் மட்டுமே நமக்குக் கிடைக்கும். பாலில் தண்ணீர் கலக்கலாமா? வயதானவர்களுக்குப் பால் உகந்ததா? பால் செரிமானமாக அதிக நேரமெடுக்கும். அப்போது, 'பால் உணவுகள் வயதானவர்களுக்கு செரிமான பாதிப்பை ஏற்படுத்தாதா?' என்ற கேள்வி வரக்கூடும். செரிமானம் என்பது வயதைப் பொறுத்தது அன்று. மாறாக, அவரவர் உடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானமாகும் திறனைப் பொறுத்தது. வயதானவர்களுக்கு செரிமான பாதிப்புகள் இருந்தால், பால் உணவுகளைத் தவிர்க்கலாம். அல்லது, மோர் மட்டும் போதிய அளவில் கொடுக்கலாம். இதுவே, வயதானவர்களுக்கு செரிமான பாதிப்பு இல்லாத பட்சத்தில், பால், தயிர், மோர் போன்றவற்றை அவரவர் உடல் திறனுக்கு ஏற்ப கொடுக்கலாம். யாருக்கெல்லாம் பால் தேவையில்லை? சர்க்கரை, உடல் பருமன் மற்றும் இதய பாதிப்பு உள்ளவர்கள் உட்பட எல்லோருமே பால் மற்றும் பால் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். பால் அலர்ஜி (Lactose intolerance) இருப்பவர்கள் மற்றும் செரிமான பாதிப்புள்ளவர்கள், பாலைத் தவிர்க்கலாம். அவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்படி, தயிர், மோர், பனீர் போன்ற பிற உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம் என்று முடித்தார் தாரிணி கிருஷ்ணன்.
இருமல் மருந்து குடித்து 14 குழந்தைகள் மரணம், தப்பிய தமிழ்நாடு - எச்சரிக்கும் Dr. Rex Sargunam
மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் Coldfrif cough Syrup கொடுக்கப்பட்ட 14 குழந்தைகள் மரணமடைந்திருப்பது இந்திய அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தினை தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் தடை செய்துள்ளன. இந்த மருந்தினை தயாரிக்க தடைவிதித்துள்ள தமிழக அரசு, தயாரிப்பு நிறுவனமான Sresan Pharmaceuticals நிறுவனத்தின் உரிமையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்நிலையில் அதுகுறித்து மருத்துவர் ரெக்ஸ் சற்குணத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
காலை உணவை முடித்துவிட்டுதான் பல் துலக்கணுமா? - விளக்குகிறார் மருத்துவர்!
ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது நம் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதை எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை துலக்குவது? அதிலும் குறிப்பாக, இரவுக்கு உணவுக்குப் பின்பு பல் துலக்குவதுபோல, காலையில் சிற்றுண்டி எடுத்துக்கொண்ட பிறகு பல் துலக்கலாமா? சமீபமாக, சிலர் காலை உணவுக்கு முன்னால் பற்கள் சாஃப்ட்டாக இருக்கும். அதனால், நாங்கள் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்ட பிறகுதான் பல் தேய்ப்போம் என்கிறார்கள். இது சரியா? இதற்குப் பின்னால் என்ன அறிவியல் இருக்கிறது என்பதைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் பிரபாகர் ஜோசப் அவர்களிடம் கேட்டோம். காலை உணவை முடித்துவிட்டுதான் பல் துலக்கணுமா? சரியா... தவறா..? ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்க வேண்டும் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், 12 மணி நேரத்திற்கு ஒருமுறை பல் துலக்க வேண்டும் என்பதுதான். இரவு பல் துலக்குகிறார்கள் என்றால் படுக்கைக்குச் செல்லும் முன் பல் துலக்குங்கள் என்றே கூறுகிறோம். காலை பல் துலக்கும்போது அது காலை உணவுக்கு முன்போ அல்லது பின்போ, அவரவர்களுடைய விருப்பம். காலை உணவை முடித்துவிட்டு பல் துலக்குவதில் பெரிதாக தவறொன்றும் இல்லை. ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். 12 மணி நேரத்திற்குள் நம் பற்களில் பிளாக் (plaque) என்ற ஒன்று படியும்; அது பார்ப்பதற்கு நீர்போல், நம் பற்களோடு ஒட்டிக்கொண்டு இருக்கும். 12 மணி நேரத்திற்கு ஒருமுறை நாம் பல் துலக்கவில்லை எனும்போது, இது இன்னும் படிந்து கடினமாகும். பல் மருத்துவர் பிரபாகர் ஜோசப். ரீல்ஸில் பிரபலமாகும் teeth whitening strips நல்லதா, கெட்டதா? – மருத்துவர் விளக்கம்! அறிவியல் என்ன சொல்கிறது...? காலை எழுந்தவுடன் பற்களின் மேல்பகுதியான எனாமல் சாஃப்ட்டாக இருப்பதினால், நாங்கள் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்குவது இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. தவிர, காலை எழுந்தவுடன் பற்களின் எனாமல் சாஃப்ட்டாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. தூங்கி எழுந்தவுடன் நம் பற்களில் படிந்திருக்கும் பிளாக் தான் நமக்கு எனாமல் சாஃப்ட்டாக இருப்பதுபோன்று தோன்றுகிறது. இதை தவறாக புரிந்துகொண்டு எனாமல் தேய்ந்து போய்விடும் என்று நினைத்துகொண்டு, சிலர் காலையில் வாய்க்கொப்பளித்து சாப்பிட்டுவிட்டு, பிறகு பல் துலக்குகிறார்கள். மனிதனைக் கடித்து இறந்த பாம்பு; வேப்பங்குச்சியால் பல் துலக்கியதுதான் காரணமா? - நிபுணர்கள் சொல்வதென்ன? சாப்பிட்டப் பிறகு பல் துலக்கினால் பிரச்னை வருமா? ஆமாம். காலையில் சாப்பிட்டப் பிறகு பல் துலக்கினால், வாயில் அசிடிட்டி உருவாகும். அதன் விளைவாகத்தான் எனாமல் பாதிப்படையும். இதே, பல் துலக்கி விட்டு சாப்பிடும்போது அசிடிட்டி உருவாகாது. அதனால் காலை உணவிற்கு முன்பு பல் துலக்குவதே ஆகச் சிறந்தது. அது மட்டுமல்லாமல், காலையில் பல் துலக்குவது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று இரவு தூங்குவதற்கு முன்பு பல் துலக்குவதும் முக்கியமே என்கிறார் பல் மருத்துவர் பிரபாகர் ஜோசப். காலை உணவை முடித்துவிட்டுதான் பல் துலக்கணுமா?
Doctor Vikatan: குழந்தைகளுக்கு இருமல், ஆயுர்வேத இருமல் மருந்துகள் பாதுகாப்பானவையா?
Doctor Vikatan: இருமல் மருந்து குடித்த பல குழந்தைகள் மரணமடைந்தது குறித்து சமீபத்தில் செய்தியில் பார்த்தோம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் அதை எப்படி அணுக வேண்டும். ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி ஒருவருக்கு என்ன நோய் வந்தாலும், முதலில் அறிகுறிகளைக் காட்டும். அந்த வகையில், குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகளுக்கு இருமல் என்பது மிக முக்கியமான அறிகுறி. குழந்தைகளுக்கு இருமல் வரும்போது, அது சுவாசக்குழாயில் உள்ள அடைப்பின் காரணமாக வருகிறதா அல்லது நெஞ்சில் சளி கட்டியிருப்பதால் இருமல் வருகிறதா அல்லது நிமோனியா அல்லது பிராங்கோ நிமோனியா அல்லது பிராங்கோலைட்டிஸ் போன்ற பிரச்னைகளின் காரணமாக சளி கட்டியதால் இருமல் வருகிறதா, சாதாரண வைரஸ் தொற்றின் காரணமாக, பருவகால தொற்றின் காரணமாக இருமல் வருகிறதா அல்லது அலர்ஜி எனப்படும் தொடர் ஒவ்வாமையால் இருமல் வருகிறதா, ஆஸ்துமாவின் அறிகுறிகள் தென்படுவதால் இருமல் வருகிறதா என்ற விஷயங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைக்கு ஏற்பட்டது எந்த வகையான இருமல் என்பதை குழந்தைகள் நல மருத்துவர்தான் தீர்மானிப்பார். அதற்கு எந்த வகையான மருந்து கொடுக்க வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார். இருமலை உடனடியாக நிறுத்தும் சிரப்பை 'ஆன்டி டிஸ்ஸிவ்' சிரப் என்று சொல்வோம். இருமலை அப்படி உடனடியாக நிறுத்தக்கூடாது. அது எந்தவகையான இருமல் என்று கண்டறிந்து, அதற்கான மூல காரணமான நோயைத்தான் நாம் சரிசெய்ய வேண்டும். எந்தவகையான இருமல் என்று கண்டறிந்து, அதற்கான மூல காரணமான நோயைத்தான் நாம் சரிசெய்ய வேண்டும். உதாரணத்துக்கு, பொதுவான தொற்று, தூசு அலர்ஜி, வைரஸ் தொற்று என எந்தக் காரணத்தால் ஏற்பட்டதோ அதைக் குணப்படுத்த வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்காமல், டிராப்ஸ் தருவோம். அதுவும் அனுபவம் வாய்ந்த மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும். ஆயுர்வேத இருமல் மருந்து என்பவை எந்த அளவுக்குத் தரமாக, முறையாகத் தயாரிக்கப்படுகின்றன என்ற விவரங்கள் தெரிய வேண்டும். எனவே, அதெல்லாம் தெரியாமல் ஆயுர்வேத மருந்துகள் என்றாலே பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையில் அவற்றைக் கொடுக்க வேண்டாம். மற்றபடி குழந்தைகளுக்கு தினமும் காலையில் சிறிதளவு சுத்தமான தேன் கொடுத்தாலே போதுமானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: 10 வயதுச் சிறுவனுக்கு அடிக்கடி சளி, இருமல்... சித்த மருத்துவம் உதவுமா?
தலையணை உறையா அல்லது பாக்டீரியா காலனியா? எச்சரிக்கும் மருத்துவர்!
தூங்கும்போது தலையணை எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதேபோல் அதன் தூய்மையும் இன்றியமையாதது. அமெரிக்காவின் நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், ஒரு வாரம் துவைக்காமல் பயன்படுத்தப்படும் தலையணை உறைகளில், கழிப்பறை சீட்டைவிட 17 ஆயிரம் மடங்கு அதிகமாக கிருமிகள் சேர்ந்துவிடுகின்றன என்பது தெரியவந்துள்ளது. எனவே, இவ்வளவு பாக்டீரியாக்கள் ஏன் சேர்கின்றன? இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா என சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம். தலையணை உறை ’’பெட் மற்றும் பெட்ஷீட்டிலும் பாக்டீரியாக்கள் இருக்கும் என்றாலும், தலையணையில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏதுவான ஆர்கானிக் மேட்டர் (Organic matter) அதிகமாக இருக்கும். பாக்டீரியாக்கள் வருவதற்கு இந்த ஆர்கானிக் மேட்டர்தான் அவசியம். அதென்ன ஆர்கானிக் மேட்டர்? மனிதர்கள் உறங்கும்போது தலையில் இருந்து வழியும் எண்ணெய் போன்ற (Sebaceous secretion) திரவங்களும், திரும்பிப் படுக்கும்போது வாயிலிருந்து வெளிவரும் எச்சிலும் இந்த பாக்டீரியாக்கள் வளர்வதற்குத் தேவையான ஆர்கானிக் மேட்டராக அமைகிறது. மனித எச்சிலில் ஏற்கெனவே பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும். அது தலையணை உறைகளின் மீது தொடர்ந்து படும்போது, பாக்டீரியாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். டாக்டர் ராஜேஷ். அதென்ன பயோஃபிலிம்? பாக்டீரியாக்களில் வெவ்வேறு இனங்கள் இருக்கின்றன. நீண்ட நாள் பாக்டீரியாக்கள் படியத் தொடங்கினால் பயோஃபிலிம் (biofilms) உருவாகத் தொடங்கும். பயோஃபிலிம் என்பது பாக்டீரியாக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு காலனி போல வாழத் தொடங்கும். அதில் ஒரேவிதமான பாக்டீரியாக்களும் இருக்கலாம், பலவிதமான பாக்டீரியாக்களும் இருக்கலாம். பாக்டீரியாவைத் தவிர மற்ற மைக்ரோ ஆர்கானிசங்களும் அடுக்கடுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும். தலையணைக்கும் கழுத்து வலிக்கும் தொடர்பு இருக்கிறதா? ஒருமுறை மாற்ற வேண்டும்? தலையணை உறைகளை எத்தனை நாளுக்கு தினமும் தூய்மைப்படுத்தி அல்லது மாற்றிப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வது சிரமமாக இருக்கும்பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது தூய்மைப்படுத்திப் பயன்படுத்துவது பாக்டீரியாக்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும். பயோஃபிலிம் படிந்துவிட்டால் அவற்றை நீக்குவது சிரமம். இந்த வகையான பாக்டீரியாக்கள் கடுமையான சூழ்நிலைகளையும் தாங்கி உயிர் வாழக்கூடியவை. இரண்டு வாரங்கள் வரையில் தலையணை உறை துவைக்காமல் இருந்தால் இவ்வகை பாக்டீரியாக்கள் உருவாகத் தொடங்கிவிடும் , கவனம். Sleep guidance: இரும்புக்கட்டிலா; மரக்கட்டிலா... எது நல்லது? என்னென்ன பிரச்னைகள் வரும்? பாக்டீரியாக்கள் வாழும் தலையணையால் குழந்தைகளுக்கு மூக்கு மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு நிறப் புண்கள் ஏற்படும். தோல் ஒவ்வாமை, நுகர்தல் மூலமாக வரும் ஒவ்வாமை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கெனவே இந்தப் பிரச்னைகள் இருந்தால், அதிகமாவதற்கான வாய்ப்புகள் அதிகம். தலையணை உறைகளையும் படுக்கைகளையும் முறையாகத் தூய்மைப்படுத்தி வெயிலில் நன்றாகக் காய வைத்துப் பயன்படுத்துங்கள்’’ என்கிறார் டாக்டர் ராஜேஷ்.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு காப்பர்-டி பாதுகாப்பானதா? - தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!
பிரேசிலில் தனது தாயின் கருத்தடை சாதனத்தை (காப்பர்-டி) கையில் ஏந்தியபடி ஒரு குழந்தை பிறந்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தையும் சமூக ஊடகங்களில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. குயிடி என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாக காப்பர்-டி சாதனத்தைப் (IUD) பயன்படுத்தி வந்துள்ளார். 99%க்கும் மேல் கருத்தரிப்பதைத் தடுக்கும் திறன் கொண்டது என நம்பப்படும் இந்த சாதனம் இருந்தபோதிலும், அவர் கருவுற்றார். வழக்கமான பரிசோதனையின்போதே தனது கர்ப்பம் குறித்து அவர் அறிந்துகொண்டார். கர்ப்ப காலத்தில் கருப்பையில் இருந்த காப்பர்-டியை அகற்றினால், கருச்சிதைவு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததால், சாதனம் அகற்றப்படவில்லை. இதனால், கர்ப்ப காலம் முழுவதும் அவருக்கு இரத்தப்போக்கு போன்ற சில சிக்கல்கள் இருந்தன. அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஒரு ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார். பிரேசில் சம்பவம் பலரையும் காப்பர்-டி குறித்து சிந்திக்க வைத்துள்ளது. இது மிகவும் நம்பகமான கருத்தடை முறைகளில் ஒன்றாக இருந்தாலும், அது குறித்த முழுமையான புரிதல் அவசியம். பிரசவத்திற்குப் பிறகு எப்போது காப்பர்-டி போடலாம்? பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது ஏற்றதா? பக்கவிளைவுகள் என்னென்ன? காப்பர் டி குறித்து தவறான நம்பிக்கைகள் என்னென்ன என்பது குறித்து மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் சாரதா சக்திராஜன் விகடனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ”99 சதவீதம் கருத்தடை சாதனம், கர்ப்பத்தை தடுக்க உதவும் என்றாலும் மீதி ஒரு சதவீதம் இது போன்ற அரிதான நிகழ்வுகள் நடைபெறும். காப்பர் டி சில சமயங்களில், தானாக விழுந்து விடும். அவர்கள் கருத்தடை சாதனம் இருப்பதாக எண்ணிக் கொள்வார்கள். இதனாலே சிலருக்கு கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்கும். சிலருக்கு பொருத்தப்பட்ட காப்பர் டி, அதன் இடத்திலிருந்து நகர்ந்து இருக்க வாய்ப்பிருக்கும், அதனால் கர்ப்பம் தரிக்க நேரிடலாம். ஆனால் பிரேசிலில் நடந்தது மிகவும் அரிதான ஒன்று என்று கூறுகிறார் மருத்துவர் சாரதா சக்தி ராஜன். அதன் பின்னர், காப்பர் டி குறித்து பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கும் கேள்விகள் குறித்து விளக்கியிருக்கிறார் மருத்துவர் சாரதா சக்தி ராஜன். டாக்டர் சாரதா சக்திராஜன் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் பிரசவத்திற்குப் பிறகு எப்போது காப்பர்-டி போடலாம்? ``பிரசவத்திற்குப் பிறகு நஞ்சுக்கொடி வெளியேறிய பின் காப்பர் டி போடலாம். சிசேரியனாக இருந்தால், அறுவை சிகிச்சையின்போதே பொருத்திக்கொள்ளலாம். பிரசவம் முடிந்து 48 மணி நேரம் முதல் 4 வாரங்களுக்குள் பொருத்திக்கொள்ளலாம்.அல்லது பிரசவத்திற்குப் பிறகு 4 முதல் 6 வாரங்கள் கழித்து, கருப்பை மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு பொருத்திக்கொள்ளலாம். பிரசவம் அல்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் முடிந்து 5 நாட்களில் இந்த காப்பர் டி பொருத்திக்கொள்ளலாம். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது ஏற்றதா? காப்பர்-டி ஹார்மோன்கள் இல்லாத ஒரு கருத்தடை சாதனம். எனவே, இது தாய்ப்பாலின் சுரப்பையோ, அதன் தரத்தையோ எந்த விதத்திலும் பாதிக்காது. பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகவும் பாதுகாப்பான மற்றும் சிறந்த தேர்வாக இருக்கும். இது எவ்வளவு காலம் செயல்படும்? காப்பர்-டியின் வகை மற்றும் பிராண்டைப் பொறுத்து, அதன் ஆயுட்காலம் மாறுபடும். பொதுவாக, இது 5 முதல் 10 ஆண்டுகள் வரை கர்ப்பத்தைத் தடுக்கும் திறன் கொண்டது. பக்கவிளைவுகள் என்னென்ன? அதிக மாதவிடாய் தான் பொதுவான பக்கவிளைவு. காப்பர்-டி பொருத்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிடாயின்போது அதிக இரத்தப்போக்கு, நீண்ட நாட்கள் நீடிக்கும் இரத்தப்போக்கு மற்றும் அதிக வலி ஏற்படலாம். மாதவிடாய் நாட்களுக்கு இடையில் லேசான இரத்தக் கசிவு இருக்கலாம்.சில சமயங்களில் கருப்பை சுருங்கி விரிவதால், சாதனம் தானாகவே கருப்பையை விட்டு வெளியேறிவிட வாய்ப்புள்ளது. அதேபோன்று, காப்பர் டி இருப்பது எப்படி தெரிந்து கொள்வது என்பதையும் மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு அதனை அவ்வப்போது பரிசோதிப்பது நல்லது. யாருக்கு காப்பர்-டி போடக்கூடாது? கர்ப்பமாக இருக்கும் அல்லது கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளவர்களுக்கு காப்பர்-டி போடக்கூடாது. கருப்பை புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் உடலுறவால் ஏற்படும் ஒவ்வாவை இருப்பவர்களுக்கும் இது பொருத்தப்படக்கூடாது. தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும் காப்பர்-டி, கருவை கலைக்கிறது என்பது உண்மையல்ல. இது கருப்பையைச் சேதப்படுத்தும் என்பதும் உண்மையல்ல. இதை அகற்றிய உடனேயே, ஒரு பெண்ணின் கருவுறும் திறன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இது எதிர்கால குழந்தைப்பேற்றை எந்த வகையிலும் பாதிக்காது. சரியான மருத்துவ ஆலோசனையுடன் காப்பர்-டியைப் பயன்படுத்தும்போது, அது நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கருத்தடை முறையாக விளங்குகிறது என்கிறார் மருத்துவர் சாரதா சக்தி ராஜன்.
அழகு என்ற சொல்லுக்கு தேங்காய்! | Beauty tips
தேங்காய், எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கையான அழகூட்டி. முற்றிய தேங்காயைத் துருவி, அதை நன்றாக அரைத்து, வடிகட்டி, காய்ச்சி எடுக்கும்போது எண்ணெய் பிரியும். இந்த சுத்தமான தேங்காய் எண்ணெயை, பிறந்த குழந்தைகளுக்குக்கூட உச்சந்தலையில் தடவலாம். அடிக்கடி இளநீர் குடித்துவந்தால், சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கை உணவான தேங்காயின் மூலம், நாம் பெறக்கூடிய அழகு பலன்களை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. coconut oil குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மூன்று டீஸ்பூன் எடுத்து, குழந்தையின் உடலில் தேய்த்து பக்குவமாக மசாஜ் செய்து, ரப்பர் ஷீட்டில் படுக்க வைக்கவும். அரை மணி நேரம் கழித்து 2 டீஸ்பூன் கடலை மாவை 1 டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்துக் குழைத்து, சருமத்தில் பூசி குழந்தை யைக் குளிக்கவைக்க, சருமம் வறட்சி நீங்கி பொலிவு பெறும். இதை வாரம் ஒரு முறை செய்துவரலாம். கடலை மாவுக்குப் பதில் பயத்தம் மாவும் சேர்த்துக்கொள்ளலாம். இளம் பெண்களுக்கு... `பளிச்' அழகுக்கு: தேங்காய்ப் பாலுடன் மஞ்சள்தூள் கலந்து கொண்டு, சோப்புக்குப் பதிலாக இந்தக் கலவையை முகம் கழுவ பயன்படுத்தி வர, முகத்தில் உள்ள மாசு நீங்கி `பளிச்' அழகு கிடைக்கும். தேங்காய் எண்ணெய் உடல் குளிர்ச்சி பெற: தேங்காய் வழுக்கை, கஸ்தூரி மஞ்சளுடன் வேப்பந்தளிர் சேர்த்து நன்கு அரைத்து, உடல் முழுதும் பூசிக் குளிக்கவும். இது தழும்புகளையும் மறையச் செய்யும். கூந்தல் கருகருவென வளர: அரை கப் தேங்காய்ப் பாலை தலையில் தடவவும். பின்னர் தலைமுடியை நன்றாக சீவி, 15 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வந்தால், கூந்தல் நீளமாக வளர்வதோடு அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்கும். தேங்காய் எண்ணெய் குழந்தை பெற்ற பெண்களுக்கு: கால் கப் தேங்காய் எண்ணெயுடன் 20 கிராம் கிழங்கு மஞ்சள்தூள் சேர்த்துக் குழைத்து, வயிற்றுப் பகுதியில் பூசி, பின்னர் கைபொறுக்கும் சூட்டில் உள்ள வெந்நீரை அங்கு பீய்ச்சி அடித்தால்... ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மறையும். வறண்ட கூந்தலுக்கு: தேங்காய் எண்ணெயால் தலைக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் சிகைக்காய் தூளுடன் தண்ணீருக்குப் பதில் சிறிதளவு இளநீர் சேர்த்துக் குழைத்து, தலையில் தேய்த்து அலசி வரவும். தலைக்கு எண்ணெய் முகம், கழுத்து நிறம் சீராக அமைய: 2 டீஸ்பூன் தேங்காய்ப்பால், 2 டீஸ்பூன் அரைத்த கசகசா, 2 டீஸ்பூன் பால், 1 டீஸ்பூன் கடலை மாவு... இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து முகம், கழுத்தில் `பேக்' போடவும். 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகமும் கழுத்தும் ஒரே நிறமாக `ஈவன் டோன்' பெறும். சரும வறட்சி உள்ளவர்கள் தேங்காய்ப்பால் குடித்துவர, தேகம் வனப்பு பெறும்! மரு, பரு நீங்க: 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் பயத்தம் மாவு, 1 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் தேங்காய்ப்பால் இவை அனைத்தையும் சேர்த்துக் கலந்து, வெளியில் சென்றுவந்ததும் முகத்துக்கு `பேக்' போடவும். இது கரும்புள்ளிகள், மரு, பரு அனைத்தையும் நீக்கி க்ளியர் ஸ்கின் கிடைக்கச் செய்யும். கருவளையம் மறையும்! கருவளையத்துக்கு: தேங்காய் வழுக்கையுடன் வெள்ளரிச் சாறு சேர்த்து கண்களுக்கு பேக் போட, கருவளையங்களுக்கு `குட் பை' சொல்லிவிடலாம். Health: 'செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஏன் கலர் கலராக இருக்கு?' - சித்த மருத்துவர் சொல்லும் விளக்கம் கண் எரிச்சலுக்கு: தேங்காய்ப்பாலில் ஒரு மெல்லிய காட்டன் துணியை நனைத்து, அதை கண்களுக்கு மேல் வைத்து 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கண் எரிச்சல் ஏற்படும்போதெல்லாம் இவ்வாறு செய்துவர, சோர்வும், அதனால் ஏற்படும் எரிச்சலும் நீங்கும். தலைக்கு கடுகு எண்ணெய்... அரோமோதெரபிஸ்ட் சொல்லும் டிப்ஸ்! தலை அரிப்பு நீங்க: 3 முதல் 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 6, 7 அரைத்து பொடிசெய்த மிளகை சேர்த்து சூடு செய்து, கைபொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தலை முடியை அலசினால் தலை அரிப்பு நீங்கும். இதை 10 வயது முதல் செய்யலாம்.
Doctor Vikatan: சித்த மருந்துகளில் போலி; தரமான மருந்துகளை எங்கே வாங்குவது, எப்படி உறுதிசெய்வது?
Doctor Vikatan: சித்த மருந்துகளை வாங்கும்போது, பல கடைகளிலும் போலியான மருந்துகளைக் கொடுத்து ஏமாற்றுவதாகக் கேள்விப்படுகிறோம். அரசு அங்கீகாரம் பெற்ற மையங்களில் மட்டுமே சித்த மருந்துகளை வாங்க வேண்டுமா? அவற்றின் தரத்தை எப்படி உறுதிசெய்வது? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சித்த மருந்து தயாரிப்பைப் பொறுத்தவரை, அவற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மூலிகைகளில் தொடங்கி, உப பொருள்கள் வரை அனைத்தின் தரமும் பரிசோதிக்கப்படும். பாரம்பர்ய சித்த மருத்துவர்களுக்கு இது குறித்த விழிப்பு உணர்வும் தெளிவான பார்வையும் இருப்பதால் அவர்கள் இவற்றைச் சரியாகப் பின்பற்றுவார்கள். போலி மருத்துவர்களால் பிரச்னைகளே வருகின்றன. தரமற்ற, விலை மலிவான மூலிகைகளையும் பொருள்களையும் பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும்போதுதான் சித்த மருந்துகளில் பிரச்னைகள் வருகின்றன. யார் மருந்து தயாரிக்கலாம் என்ற வரைமுறை மீறப்படும்போதுதான் சிக்கல் எழுகிறது. அரசு மருந்து நிலையம் அல்லது பதிவுபெற்ற மருந்து நிலையத்திலிருந்து தயாராகி வரும் மருந்துகள், தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகளை (Standard Operating Procedures) நிச்சயம் பின்பற்றியிருப்பார்கள். மருந்தின் லேபிளில் அது எப்போது தயாரிக்கப்பட்டது, அதன் காலாவதி தேதி, என்னென்ன மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் சேர்க்கப்பட்டிருந்தால், பயமின்றி பயன்படுத்தலாம். அலோபதியில் போலி மருத்துவர்கள் உள்ளதுபோல சித்த மருத்துவத்திலும் இருக்கிறார்கள். டாம்ப்கால், இம்ப்காப்ஸ் போன்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, மருந்துகள் லேபிளுடன் வரும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தரக்கட்டுப்பாட்டையும் பின்பற்றியிருப்பார்கள் என்று நம்பலாம். எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், மருந்து தயாரிப்பில் ஏமாற்று வேலைகளைச் செய்வோரிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நிலவேம்பு உதாரணத்துக்கு, நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்வோம். அதில் முறையாகச் சேர்க்க வேண்டிய பொருள்களை, சரியான பக்குவத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், சந்தனம் விலை அதிகம் என்பதால் அதைச் சேர்க்காமல் விடுவோரும் இருக்கிறார்கள். இதுபோல விலை அதிகம் என்பதற்காக, அவசியமான பொருள்களையே தவிர்ப்பது போலி மருத்துவர்களிடம் நடக்கும். அப்படித் தயாராகும் மருந்துகள் நமக்குப் பலன் கிடைக்காது. அதேபோல, போலி மருத்துவர்களாக இருப்போர், விலை மலிவான, சாதாரண சித்த மருந்தைக் கூட பல மடங்கு விலை வைத்து விற்பார்கள். அவர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார்களே, அது உண்மையா?
Exercise: உடற்பயிற்சி நல்லதுதான்; ஆனால் - இந்த 3 விஷயங்களில் கவனமா இருங்க!
உடலில் நோய் வராமல் இருக்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும்தான் உடற்பயிற்சி செய்கின்றோம். கூடவே, உடல் எடையைக் குறைக்கவும் உடற்பயிற்சி செய்கிறோம். அப்படிப்பட்ட உடற்பயிற்சியைச் சரியான முறையில் அல்லது சூழலில் செய்யாவிட்டாலோ அல்லது அளவுக்கதிகமாகச் செய்துவிட்டாலோ பிரச்னைகள் வரலாம் என்று நாம் அறிந்திருக்க மாட்டோம். அது பற்றிக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் ராஜேஷ். உடற்பயிற்சி மூன்று ஆற்றல்கள்..! ''உடலில் ஏற்படும் அழுத்தங்களில் மிகவும் அதிகமானது உடற்பயிற்சியால் ஏற்படும் அழுத்தமே. உடற்பயிற்சி செய்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன. அது நம் உடலின் ஊட்டச்சத்து அளவைப் பொருத்தது. 1. உங்களுக்கு அடினோசின் ட்ரைபாஸ்பேட் (Adenosine triphosphate) பற்றித் தெரியுமா? நம் உடலில் அனைத்து செயல்பாட்டுக்கும் ஆற்றலைத் தருகிற மூலக்கூறு இதுதான். இது நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சேமிப்பு ஆற்றலாக மாறும்போது இரண்டு நொடிகள் மட்டுமே இருக்கும். உதாரணத்துக்கு, உங்களுடைய ஒரு கையை உயர்த்துவதற்கு இது உதவும். 2. அடுத்து, பாஸ்போக்ரியாடின் (phosphocreatine). இது விரைவாக ஆற்றலை உருவாக்க உதவும் ஒரு மூலக்கூறு ஆகும். இது நமக்கு தரும் ஆற்றலை 6 முதல் 7 நொடிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். 3. இந்த இரண்டையும் தவிர்த்து, நம் தசைகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற குளுக்கோஸும் நமக்கு ஆற்றலை அளிக்கும். இந்த ஆற்றலை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் பயன்படுத்தலாம். Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க! உடற்பயிற்சி ஒரு மணி நேரத்திற்கு மேலாக உடற்பயிற்சி செய்தால்... இனி உடற்பயிற்சிக்கு வருவோம். உடற்பயிற்சி என்பதே நம் உடலில் உள்ள ஆற்றலைப் பயன்படுத்துவதுதான். நம் உடலில் உள்ள ஆற்றல்களை மற்ற வேலைகள் செய்வதற்குப் பயன்படுத்திய பின்னும், உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள கொழுப்புகள் எரிந்து அதிலிருந்து ஆற்றல் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும். ஒரு சாதாரண மனிதனால் உடற்பயிற்சியை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மட்டும்தான் செய்ய இயலும். அதுவரை மட்டுமே குளுக்கோஸ் தரும் ஆற்றல் கைகொடுக்கும். அதற்குப் பிறகு உடலின் கொழுப்பைப் பயன்படுத்தும். ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் உடற்பயிற்சி செய்தால் உடல் சோர்வடையும். வெப்பம் உருவாகிக்கொண்டே இருக்கும்... நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் ஆற்றல் பயன்படுவதால், உடலில் எப்போதும் ஒரு வகையான வெப்பம் உருவாகிக்கொண்டே இருக்கும். அதை நம்முடைய உடலே சமநிலையில் வைத்துக்கொள்ளும். ஒருவேளை உடலில் வெப்பம் அதிகமாக உருவாகும்போதோ அல்லது சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும்போதோ, நம் உடல் தன் வெப்பத்தைத் தணிக்க வேறொரு வழியை கையாளும். அதுதான் வியர்வை. Walking உடலின் குளிர்ச்சி செயல்முறையைத் தாண்டிவிட்டால்... இந்த வியர்வை ஆவியானால்தான் உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படும். ஒருவேளை உடலில் அதிகளவு வெப்பம் உற்பத்தியாகி, உடலின் குளிர்ச்சி செயல்முறையைத் தாண்டிவிட்டால், வெப்ப வாதம் (Heat Stroke) என்கிற பிரச்னை வரும். வெப்ப வாதம் வந்தால் வாந்தி, குழப்பம், வலிப்பு போன்ற அறிகுறிகள் வரும் வாய்ப்பு உண்டு. உடனடியாகச் சிகிச்சையளிப்பதும் அவசியம். இதயத்தின் தாளம் மாறலாம் சிலருக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே இதயத்தின் ஒரு பகுதியில் மட்டும் தசை அதிகம் வளர்ந்து இருக்கும். இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை எந்த அறிகுறியும் தெரியாது. அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது இதயத்தின் தாளம் (heart rhythm) மாறி, அரித்மியா (Arrhythmia) என்கிற பிரச்னை ஏற்படும். உடனடியாகச் சிகிச்சை அளிக்கவில்லை என்றால், உயிருக்கே ஆபத்தாக அமையலாம். டாக்டர் ராஜேஷ். Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா? அளவிற்கு அதிகமாக தசை வளர்ச்சி இருந்தாலும்... இது மட்டுமின்றி, உடல் எடையை அதிகரிக்கவும் சிலர் உடற்பயிற்சி செய்வார்கள். உடல் எடை ஏறுவதென்பது உடலிலுள்ள தசைகளின் வளர்ச்சிதானே... அளவிற்கு அதிகமாக தசை வளர்ச்சி இருந்தாலும் ஆபத்துதான். அதிக தசை வளர்ச்சியினால் உடல் உறுப்புகளுக்கு ரத்தமும் அதிகம் தேவைப்படும். இதனால் இதயத்தின் வேலை அதிகமாகும். விளைவு ரத்த அழுத்தம் ஏற்படும். Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர் விளக்கம் உடற்பயிற்சி நல்லதுதான். அதே நேரம்... உடற்பயிற்சி நல்லதுதான். அதே நேரம், அதிக வெப்பம் இருக்கும் நேரங்களில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்ய, உடல் எடை குறைக்க என்று எது செய்தாலும், சரியான அளவு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். தவிர, முதன்முதலில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போதே, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று துவங்கக்கூடாது. முதலில் பத்து நிமிடம், பிறகு 15 நிமிடம் என்று சிறிது சிறிதாகவே உடற்பயிற்சி நேரத்தை அதிகரிக்க வேண்டும். கடினமான உடற்பயிற்சிகள் செய்வது, அதிக எடை தூக்குவது போன்றவற்றில் ஒரு சில தசைகள் மட்டுமே செயல்படும். இவற்றைக் காட்டிலும் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். இதில் அனைத்து தசைகளும் செயல்படும். மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் சுறுசுறுப்பான நடைப்பயிற்சியையே'' என்கிறார் டாக்டர் ராஜேஷ்.
Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது'என்கிறார்களே, அது உண்மையா?
Doctor Vikatan: எனக்குக் குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகின்றன. தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். தாய்ப்பால் கொடுக்கும் வரை பீரியட்ஸ் வராது என்றும், அந்தக் காலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருத்தரிக்காது என்றும் சொல்கிறார்களே, அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பிரசவமான புதிதில், அதாவது 6-8 மாதங்களுக்கு கருத்தரிக்காது என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். அது 100 சதவிகிதம் நம்பகமானதல்ல. குழந்தை பிறந்த முதல் மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு நிகழாது. அதனால் பீரியட்ஸ் வராது. இதை மருத்துவத்தில் 'லாக்டேஷன் அமெனோரியா' (Lactation amenorrhea) என்று குறிப்பிடுகிறோம். அந்த நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பில்லைதான். ஆனால், நடைமுறையில் குழந்தை பிறந்த முதல் சில வாரங்களில் யாரும் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த 3- 4 வாரங்களுக்குப் பிறகு அண்டவிடுப்பு நிகழ்வு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். தாய்ப்பால் கொடுக்கும் போது ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும். அதன் விளைவாக, மற்ற பெண் ஹார்மோன்களின சுரப்பு சற்று குறையும். அதனால் பீரியட்ஸ் வராது. 'பீரியட்ஸ் தான் வரலையே, தாம்பத்திய உறவு வெச்சுக்கிட்டா சேஃப்தான்' என சிலர் நினைப்பார்கள். ஆனால், ஓவுலேஷன் நடந்துகொண்டிருப்பதால், பீரியட்ஸ் வராவிட்டாலும் இவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டு. பிரசவமான பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் வரை கருத்தரிக்காது என்று நினைக்க வேண்டாம். 'குழந்தைக்கு பால் கொடுத்துட்டுதான் இருக்கேன். இன்னும் பீரியட்ஸும் வரலை. ஆனா, வாந்தி, தலைச்சுற்றல் அறிகுறிகள் இருந்ததால டெஸ்ட் பண்ணிப் பார்த்தோம். பிரெக்னன்சி பாசிட்டிவ்னு வந்திருக்கு' என்று வருபவர்களை நிறைய பார்க்கிறேன். இதற்காகவே பிரசவம் முடிந்ததுமே காப்பர்டி பொருத்திக்கொள்ளவோ, காண்டம் உபயோகிக்கவோ, புரொஜெஸ்ட்ரான் மட்டும் உள்ள மாத்திரைகள் (பிரசவமான பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உள்ள மாத்திரைகள் தர மாட்டோம்) எடுத்துக் கொள்ளவோ அறிவுறுத்துவோம். ஊசி வடிவ மருந்துகளும் இருக்கின்றன. எனவே, பிரசவமான பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் வரை கருத்தரிக்காது என்று நினைக்க வேண்டாம். பீரியட்ஸ் வரவில்லை என்றால், அந்த இடைப்பட்ட நாள்களில் தாம்பத்திய உறவு நிகழ்ந்திருக்கும்பட்சத்தில், கருத்தரிப்புக்கான டெஸ்ட் செய்து பார்ப்பது பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?
வயிறு உப்புசம் முதல் ரத்தக்குழாய் சுத்தம் வரை; எலுமிச்சையின் வாவ் பலன்கள்!
திருஷ்டி கழிக்கப் பயன்படுத்தப் படும் எலுமிச்சைக்கே திருஷ்டி சுற்றித்தான் போட வேண்டும். அந்த அளவுக்கு எலுமிச்சை பலன் நிறைந்தது. எலுமிச்சையின் ஏழு பலன்கள் இங்கே... சொல்கிறார் சித்தமருத்துவர் பத்மப்ரியா. எலுமிச்சையின் மருத்துவ பலன்கள் • வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றைக் கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது. • பொதுவாக, புளிப்புத் தன்மைகொண்ட பழங்கள், ரத்தக் குழாயைச் சுத்தப்படுத்தும். எலுமிச்சை, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ஆன்டிபாக்டீரியலாகவும் இருப்பதால், சரும நோய்களை அண்டவிடாது. • காலையில் வெந்நீரில் 5 - 10 மி.லி எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலுமிச்சையின் மருத்துவ பலன்கள் • வாய் துர்நாற்றம், பல்லில் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்கச் சரியாகும். • கபம் அதிகம் இருந்தால், காலையில் எழுந்ததும் சளியுடன் கூடிய எச்சில், வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். இவர்கள், 10 மி.லி எலுமிச்சைச் சாற்றுடன் ஐந்து மி.லி இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். சட்டென நிவாரணம் கிடைக்கும். Juice: ஒரே நேரத்தில் முக்கால் லிட்டர் ஜூஸ் குடிக்கலாமா? • சிலருக்கு, வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்தமாக இருக்கும். இதற்குச் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம். சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும். மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது. Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? • மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும்.
வெறி நாய் கடிக்கும் - ஆணுறுப்புக்கும் என்ன தொடர்பு? விளக்கும் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 260
வெறி நாய்க்கடிக்கும் ஆணுறுப்புக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது என்கிற, சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் அதுபற்றி இங்கே விளக்குகிறார். ரேபிஸ் வைரஸுக்கும் ஆணுறுப்புக்கும் என்னத் தொடர்பு? பிரையாப்பஸ் என்பவர் கிரேக்க கடவுள். ’’வெறி நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசிப்போட வேண்டுமென்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி போடாதவர்கள் மரணமடையும் முன்னர் அவர்களுடைய ஆணுறுப்பில் கடுமையான விறைப்புத்தன்மை இருக்கும். இதற்கு பிரையாப்பிசம் (Priapism) என்று பெயர். பிரையாப்பஸ் என்பவர் கிரேக்க கடவுள். இவருடைய ஆணுறுப்பு எப்போதும் விறைப்புத்தன்மையுடன் இருக்கும் என்பதால், அவருடைய பெயரால் இந்தப் பிரச்னை அழைக்கப்படுகிறது. ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி நாய் கடித்திருக்கும். வளர்ப்பு நாய்தானே என்றோ அல்லது நாய்க்கு ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருக்கிறதே என்றோ, அலட்சியமாக விட்டிருப்பார்கள். இவர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி, ஆணுறுப்பு எப்போதும் விறைப்புத்தன்மையுடன் இருப்பதுதான். ஆண்மைக்கான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைக்காமல் வாங்கிச் சாப்பிடலாமா? - காமத்துக்கு மரியாதை - 259 ஒன்றிரண்டு ஊசி மட்டும் போட்டதோடு நிறுத்திவிட்டார். நான் ராயப்பேட்டை மருத்துவமனையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, ரோட்டில் படுத்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொத்த பேரையும் வெறி நாய் ஒன்று கடித்துவிட்டது. அந்தக் காலத்தில் நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசி போட வேண்டும். தினமும் மொத்தக் குடும்பத்தினரும் ஊசிப் போட்டுக்கொள்ள வருவார்கள். ஆனால், அந்த குடும்பத்தலைவன் மட்டும் ஒன்றிரண்டு ஊசி மட்டும் போட்டதோடு நிறுத்திவிட்டார். விசாரித்ததில் வேலைக்கு சென்றுவிட்டார் என்றார்கள். கடைசியில் அவர் மட்டும் அந்த குடும்பத்தில் இறந்துபோனார். இப்படி ரேபிஸ் வந்து இறப்பவர்களுக்கு, முதலில் ஆணுறுப்பில் தொடர்ந்து விறைப்புத்தன்மை இருக்கும். வளர்ப்பு நாயோ அல்லது தெரு நாயோ, எது கடித்தாலும் காலதாமதம் செய்யாமலும் அலட்சியம் செய்யாமலும், உடனே தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: மன அழுத்தம், மனப் பதற்றம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க டெஸ்ட் உள்ளதா?
Doctor Vikatan: சாதாரண வருத்தம் தொடங்கி, மன அழுத்தம், பதற்றம் போன்ற உளவியல் பிரச்னைகள் பலருக்கும் இருக்கின்றன. இவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவோ, குணப்படுத்தவோ மருத்துவ சிகிச்சைகள் உள்ளனவா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் சுபா சார்லஸ் மன வருத்தம், மனப் பதற்றம், மனக் குழப்பம், பரபரப்பு என மனநலம் தொடர்பான பிரச்னைகள் பலவிதம். இவற்றை அறிகுறிகளை வைத்து மட்டும்தான் கண்டறிய முடியும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ் ரே, ஸ்கேன் மாதிரி எந்தச் சோதனையிலும் கண்டுபிடிக்கவே முடியாது. நியூரோகெமிக்கல் சமநிலையின்மையே (Neurochemical Imbalance) இதற்கான முக்கிய காரணம். நியூரோகெமிக்கல் சமநிலையின்மை என்பது, நமது மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு (நியூரான்கள்) இடையே தகவல்களைக் கடத்தும் வேதிப்பொருள்களின் (Chemical Messengers) அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வைக் குறிக்கிறது. இந்த வேதிப்பொருள்களை நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் (Neurotransmitters) என்று அழைக்கிறோம். மனதை வாட்டும் அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்னைகளை வேறுவிதமாக அணுகலாம். குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். சிரித்துக்கொண்டும், பேசிக் கொண்டும், துள்ளிக்கொண்டும் இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. ஆனால், அதைக் கட்டுப்படுத்தி, ஒரே இடத்தில் உட்கார வைத்து, பிஞ்சிலேயே மன அழுத்தத்துக்கான விதையை ஊன்றுகிறோம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் பெரியவர்களுக்கு உடற்பயிற்சி. இவற்றின் மூலம்தான் மூளையின் நியூரோகெமிக்கல் சமநிலையின்மையை சரிப்படுத்த முடியும். குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். மன அழுத்தம், ரத்த அழுத்தம், ஹார்மோன் கோளாறு: ஓர் உற்சாக பயணமே உங்களுக்கு மாமருந்து! வாழ்தல் இனிது பழங்கள் சாப்பிடுவதை எல்லோரும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். பழங்களில் 'ஃபீல் குட் ஃபேக்டர்ஸ்' எனச் சொல்லப்படுகிற செரட்டோனின் போன்ற கெமிக்கல்கள் உள்ளன. அவை மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படுத்தும். மனிதனை சமூக விலங்கு என்றே சொல்கிறோம். அவனைச் சுற்றி நிறைய உறவுகளும் நட்புகளும் இருக்க வேண்டும். சக மனிதர்களுடன் கலந்து பேசி, பழகும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெயில் படாத பகுதியிலேயே இருப்போருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. வெயில் வெளிச்சம் தொடர்ந்து பட்டுக்கொண்டிருந்தாலே மன அழுத்தம் பாதியாகக் குறையும். கட்டுப்படுத்த முடியாத மன அழுத்தம் என்றால் மனநல மருத்துவரை அணுகி கவுன்சலிங்கும், தேவைப்பட்டால் மருந்துகளும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
இத்தனை நன்மைகள் செய்யுமா நீவுதல் சிகிச்சை? விளக்கும் இயற்கை மருத்துவர்!
’’வெகுஜன வழக்கில் நீவுதல் சிகிச்சையானது `மசாஜ்’ என்று அழைக்கப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே நீவுதல் சிகிச்சை பயன்பாட்டில் இருந்துள்ளது. மெசபடோமியர்கள் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தியிருக்கின்றனர். கிரேக்க நாட்டிலும் இந்தச் சிகிச்சை முறை பிரதானமாக இருந்துள்ளது. உடல் சோர்வைப் போக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சிகிச்சை, பிற்காலத்தில் மூட்டு மற்றும் தசைகளைப் பலப்படுத்தப் பயன்பட்டது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் நீவுதல் சிகிச்சை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்தன. இன்று உலகம் முழுவதும் 100 விதமான நீவுதல் சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன’’ என்கிறார் இயற்கை மருத்துவர் யோ. தீபா. நீவுதல் சிகிச்சை நமக்குச் செய்யும் நன்மைகளை அவர் பட்டியலிடுகிறார். நீவுதல் சிகிச்சை சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். * நீவுதல் சிகிச்சை என்பது அணுக்கள் மற்றும் திசுக்களைப் புதுப்பித்து, வலி மற்றும் நோயில் இருந்து நிவாரணம் தரக்கூடியது. * சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத்துடிப்பைச் சரி செய்யும். மூட்டு வலி, இடுப்பு வலி குணப்படுத்தும்! * என்டோர்பின் ஹார்மோன்களைச் (endorphin hormone) சுரக்கச் செய்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும்; இதனால், மன அழுத்தம் குறையும். * மூட்டு வலி, இடுப்பு வலி, வாதநோய் உள்ளிட்ட மூட்டு தொடர்பான எல்லாப் பிரச்னைகளையும் இதன்மூலம் குணப்படுத்த முடியும். நீவுதல் சிகிச்சை மாதவிடாய் வலியை சரிசெய்யும்! * நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு நெஞ்சுப்பகுதியில் கொடுக்கப்படும் நீவுதல் சிகிச்சை நல்ல தீர்வைக் கொடுக்கும். * சிறுநீரகப் பிரச்னைகளை இதன்மூலம் குணப்படுத்த முடியும். உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நீரையும் தேவையற்ற உப்புச்சத்துகளை வெளியேற்றவும், மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலியைச் சரி செய்யவும் நீவுதல் சிகிச்சைப் பயன்படும். சிறப்புக் குழந்தைகளுக்கு பலன் தரும் * க்ரானியோ சேக்ரல் (cranio sacral) நீவுதல் சிகிச்சை தலைமுடி வளரவும் தண்டுவடப் பிரச்னைகளைச் சரிசெய்யவும் பயன்படுகிறது. * மூளையில் உள்ள நிணநீர் ஓட்டத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரிசெய்யும். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், ஹைபர் ஆக்டிவிட்டியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளுக்கு இந்தச் சிகிச்சை பலன் தரும். நீவுதல் சிகிச்சை தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். * மனித உடலில் லிம்ப் (Lymph) என்ற ஒருவகை திரவத்தை வெளியேற்றும் ஓட்டப்பாதை இருக்கும். அதுதான் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். இதற்கு லிம்பாடிக் (Lymphatic) நீவுதல் சிகிச்சை பெரிதும் உதவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கும். காசநோய், புற்றுநோய் வராமல் தடுக்கலாம்! * லிம்ப் திரவம் வெளியேறாமல் தேக்கமடைவதால் ஏற்படக்கூடியதே நெறிகட்டுதலும் வலியும். லிம்பாடிக் நீவுதல் சிகிச்சைமூலம் இதைக் குணப்படுத்தலாம். லிம்ப் திரவம் சரியாக வெளியேறாவிட்டால் நாளடைவில் காசநோய் (டி.பி), புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. ஆகவே, தொடக்க நிலையிலேயே இந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் விளைவுகளைத் தடுக்கலாம். Reflexology massage வீக்கம், சுளுக்கு, தசைப்பிடிப்பு சரிசெய்யும்! * தசைகள், திசுக்கள், மூட்டு இணைப்புகளில் வரக்கூடிய பிரச்னைகளைச் சரிசெய்ய மயோஃபேஷியல் (myofascial) நீவுதல் சிகிச்சை உதவும். இது வீக்கம், சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்றவற்றைச் சரிசெய்யும். * பொலாரிட்டி நீவுதல் சிகிச்சை (Polarity Massage) என்பது உடலுக்குச் சக்தி தரக்கூடியது. மார்பக ஆரோக்கியம்: பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? ரிஃப்ளெக்சாலஜி நீவுதல் சிகிச்சை! * கால் பாதங்கள், உள்ளங்கால்களில் முக்கியப் புள்ளிகள் உள்ளன. இவற்றைத் தூண்டும் பணிக்கு ரிஃப்ளெக்சாலஜி நீவுதல் சிகிச்சை (Reflexology massage) உதவும். இதன்மூலம் நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் சிறப்பாக இயங்கும். ரோல்ஃபிங் நீவுதல் சிகிச்சை! * தசைகளை இழுத்து, இயல்பாக்க ரோல்ஃபிங் நீவுதல் சிகிச்சை (Rolfing massage) அளிக்கப்படும். நாய், பூனை போன்ற விலங்கினங்கள் தூங்கி எழுந்ததும் கைகால்களை நெட்டி முறிக்கும். இதுவும் ஒருவகை ரோல்ஃபிங் நீவுதல் சிகிச்சை. பொதுவாக கூன் விழுதல், கைகால் பிறழ்தல், முகம் கோணலாவது போன்ற பிரச்னைகளைச் சரிசெய்ய இந்த நீவுதல் சிகிச்சை உதவும். Health: தினமும் தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா?
`டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கான உணவுகள்' - பரிந்துரை செய்யும் நிபுணர்
''பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆண் குழந்தைகளுக்கோ இப்படிச் சிறப்பு உணவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், பதின்பருவத்தை எட்டியவுடன், ஆண் குழந்தைகளுக்கான உணவையும் அம்மாக்கள் பார்த்துப் பார்த்தே கொடுக்க வேண்டும்'' என்கிறார் டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார். Foods for Teenage boys உயரம், எடை - ஈடுகொடுக்கும் உணவு அடுத்த தலைமுறைக்கான உயிரணுக்களின் உற்பத்தி உடலில் ஆரம்பிக்கும் பருவத்தில், ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில் அம்மாக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த வயதில் அவர்கள் திடீரென்று அதிகமாகச் சாப்பிடத் தொடங்குவார்கள். அடிக்கடி `பசி, பசி' எனச் சாப்பிடக் கேட்பார்கள். அவர்கள் பருவமடையும் வளர்ச்சியை எட்டுவதே இதற்குக் காரணம். இந்த மாற்றங்கள் 12 வயதில் தொடங்கி 18 வயதுவரை தொடரும். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான மாற்றங்கள் தோன்றும். 12 வயதில் சுமார் 40 முதல் 50 கிலோ எடையில் இருக்கும் ஆண் குழந்தைகள், அடுத்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 முதல் 80 கிலோ எடையை அடைந்திருப்பார்கள். உயரத்திலும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவார்கள். ஐந்து அடியில் இருந்து சுமார் ஆறு அடி உயரத்தை எட்டுவார்கள். இந்த உடல் வளர்ச்சிகளுடன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். Foods for teen age boys எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி மற்றும் ரத்த உருவாக்கத்துக்கு, இந்த வளர்ச்சிப் பருவத்தில் ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். சரியான ஊட்டச்சத்து கிடைக்கத் தவறினால், அவர்களின் முழுமையான வளர்ச்சி பாதிக்கப்படும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இந்தப் பருவத்தில் சத்துகள் மிகுந்த உணவுகளைக் கொடுக்கத் தவறினால் பின்னாளில் மலட்டுத்தன்மைகூட ஏற்படும். என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும்? பதின்பருவத்தில் ஆண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க 2,500 கலோரி உணவு தேவைப்படும். அதுவே விளையாட்டில் அதிகம் பங்கேற்கும் ஆண் குழந்தைகளுக்கு 3,000 - 4,000 கலோரி உணவு தேவைப்படும். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின், மினரல் என அனைத்துச் சத்துகளும் சரிவிகித அளவில் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சிறுதானியங்கள் மாவுச்சத்து ஆண் குழந்தைக்குத் தேவைப்படும் எனர்ஜியை அளிக்கும் மாவுச்சத்து, அனைத்து வகை தானியங்களிலும் கிடைக்கும். அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கும் சாதம், ரொட்டி, அடை, தோசை, உப்புமா ஆகிய மாவுச்சத்து உணவுகளை, தினமும் மூன்று அல்லது நான்கு வேளைகளுக்குக் கொடுக்கலாம். Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா? கொழுப்புச்சத்து பதின்பருவ ஆண் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கும் ஹார்மோன் தேவைகளுக்கும், நல்ல கொழுப்புச்சத்தை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றில் இருந்து நல்ல கொழுப்பு கிடைக்கிறது. சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய், பால், தயிர் மற்றும் அசைவ உணவுகளிலும் கொழுப்புச் சத்து உள்ளது. இவற்றைக் குறிப்பிட்ட அளவில் உணவில் சேர்க்க வேண்டும். Fish food for teen age boys ’’உணவு கொடுக்கப் போறப்போ சின்னப் பசங்கள கூட்டிட்டுப் போவோம்; ஏன்னா...’’ - இது மதுரை மனிதாபிமானம்! புரதச்சத்து உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் முக்கியம். பதின்பருவ ஆண் குழந்தையின் எடை கூடவும், எலும்பு, தசை வளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியம். இது பருப்பு வகைகள், சுண்டல், பால், தயிர், சீஸ் (பாலாடைக்கட்டி), முட்டை, மீன், பிற அசைவ உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் கிடைக்கிறது. தினமும் ஒரு கப் சுண்டல், ஒரு கப் பருப்பு, 300 - 500 மில்லி பால் அல்லது தயிர், இவற்றுடன் முட்டை அல்லது மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சைவம் எனில், பருப்பின் அளவை அதிகப்படுத்த வேண்டும். Health: உங்கள் ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் தெரியுமா? வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் ஆண் குழந்தையின் வளர்ச்சியை முழுமையடையச் செய்ய, பலவிதமான வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அவசியம். முக்கியமாக கால்சியம், அயோடின் மற்றும் இரும்புச்சத்து. காய்கறிகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகளிலிருந்து இந்தச் சத்துகளைப் பெறலாம். கால்சியம் அதிகமாகக் கிடைக்க பால், தயிர், பருப்பு வகைகள், கொட்டை வகைகளை அதிகம் உணவில் சேர்க்கலாம். இரும்புச்சத்துக்கு கீரை, கொட்டை வகைகள், முட்டை மற்றும் அசைவ உணவுகளைக் கொடுக்கலாம். உணவில் சில தவறுகள்... * ஆண் குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆரோக்கிய உணவின் அவசியம் குறித்து அறியாமல் இருக்கும் அம்மாக்கள், `நூடுல்ஸ் செஞ்சு தர்றேன் சாப்பிடு', `பிரெட் வாங்கிட்டு வந்து சாப்பிடு' என்று அவர்களின் பசிக்கு நல்லுணவு கொடுப்பதிலிருந்து தவறுகிறார்கள். இதனால், உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் கிடைக்காது. மேலும், தேவையற்ற உப்பு, கொழுப்பு உடலில் சேரும். உடல்பருமன் முதல் பலவிதமான பாதிப்புகளுக்கும் ஆளாவார்கள். ஆண் குழந்தைகளுக்கு வளர்ச்சியில் இருந்து தன்னம்பிக்கை வரை இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்க வேண்டியது அவசியம். * பெரும்பாலான சிறுவர்கள் காய்கறி, பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதனால் வைட்டமின், மினரல் சத்து குறைபாட்டுக்கு ஆளாகின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். உடல்பருமன் அடைவார்கள். சோர்வாகக் காணப்படுவார்கள். கவனம் செலுத்துதல் மற்றும் நினைவாற்றலும் பாதிக்கப்படும். எனவே, காய்கறிகளும் பழங்களும் மிகவும் அவசியம்.
Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?
Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத் தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்து வந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்குமாறும் சொல்கிறார். இது உண்மையா? பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தம் சுண்டிப்போகுமா என்ற கேள்விக்கு நேரடியான பதில் 'இல்லை' என்பதுதான். ஆனால், அப்படிச் சொல்லப்படுவதன் பின்னால் பல விஷயங்கள் உள்ளன. தரையில் படுப்பது நல்லதா, கெட்டதா என்பது அவரவர் வயது, உடல்நிலை, எப்படிப் படுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொறுத்து மாறுபடும். பொதுவாக, வெறும் தரையில் படுக்கும்போது, தரையின் குளிச்சியின் காரணமாக கால்கள் மரத்துப்போகும். கடினமான தரைப்பகுதி என்றால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு நரம்பு அழுத்தம் ஏற்படலாம். இதுவும் கால்களை மரத்துப்போக வைக்கும். தரை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்போது, நம் உடலில் உள்ள சூடு, தரையோடு கனெக்ட் ஆகும். அப்போதும் மரத்துப்போவது சீக்கிரமே நடக்கும். இந்தக் காரணங்களுக்காக, நீரிழிவு உள்ளோரை வெறும் தரையில் படுக்க வேண்டாம் என அறிவுறுத்துவோம். முதுகுவலி உள்ளவர்கள், ஏற்கெனவே சயாட்டிகா போன்ற பிரச்னை உள்ளவர்கள் போன்றோர் குஷன் இல்லாமல் படுக்கும்போது அவர்களது வலி அதிகரிக்கக்கூடும். வெறும் தரையில் படுக்கும்போது கவனிக்க வேண்டியவை மரத்துப்போவது என்ற பிரச்னையை ரத்த ஓட்டம் குறைதல் என் கணக்கில் புரிந்துகொள்வதால்தான், வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகும் என்று சொல்கிறார்கள். உண்மையில், ரத்தம் சுண்டிப்போவதில்லை. ஆனால், மரத்துப்போவது நிச்சயம் நடக்கும். எனவே, எப்போதும் மெலிதான படுக்கை அல்லது கனமான போர்வையை விரித்து அதன் மேல் படுத்தால் மேற்குறிப்பிட்ட பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முதுகுவலி உள்ள சிலருக்கு தரையில் படுக்கும்படி அறிவுறுத்துவோம். அப்போதும் வெறும் தரையில் படுக்காமல், இப்படி ஏதேனும் விரிப்பின் மேல்தான் படுக்கச் சொல்வோம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கழுத்து வலி உள்ளவர்கள் தலையணை இல்லாமல் உறங்க வேண்டுமா?
காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
காலை முதல் இரவுவரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. பல் துலக்குவது தொடங்கி இரவில் உறங்கச் செல்வதுவரை ஒவ்வொன்றுக்கும் சில வரையறைகள் உள்ளன. அவற்றை மீறாமல் அந்தச் செயல்களைச் செய்தால் ஆரோக்கியம் மேம்படும். எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும். விளக்குகிறார் பொது மருத்துவர் சிவராமக் கண்ணன். எதை, எப்போது செய்ய வேண்டும்? காலை 7:00 குறைந்தது 15 நிமிடங்கள் உடல்மீது வெயில்படுமாறு நிற்க வேண்டும். இது நம் உடலியக்கக் கடிகாரத்தைச் சரியாக இயங்கவைக்கும். சரியான நேரத்தில் தூங்கவும், கண் விழிக்கவும் உதவும். காலை 7:15 தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்தால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். மன அழுத்தங்களிலிருந்தும் விடுபடலாம். எதை, எப்போது செய்ய வேண்டும்? காலை 7:30 காலை உணவு எடுத்துக்கொள்ளத் தகுந்த நேரம் இது. காலை உணவைத் தவிர்த்தால், சர்க்கரைநோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம். காலை 8:30 ‘காலை உணவைச் சாப்பிட்டதும், தசைகளுக்கான சிறிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேலை காலை 11:00 மிகவும் சவாலான செயல்களைச் செய்யவும், துல்லியமான முடிவுகளை எடுக்கவும் உகந்த நேரம் இது. இந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்தாலும் மிகவும் திறமையாகச் செயல்பட முடியும். மதியம் 1:00 புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைத்திருக்க இது உதவும். உடலிலுள்ள செல்களுக்கு நிலையான ஆற்றலைக் கொடுக்கும். Eating மதியம் 1:30 மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும், 30 நிமிடங்கள் நடப்பது அவசியம். இதனால், தேவையற்ற மன அழுத்தம் நீங்கும்; மதிய நேரத்தில் செய்யும் பணிகளை சிறப்பாகச் செய்யவும் இது உதவும். மாலை 6:00 தசைகள் மிகச் சூடான நிலையிலிருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் யோகா போன்ற உடற்பயிற்சிகளைச் செய்தால், உடல் சூடு நீங்கும்; இரவில் நன்றாகத் தூக்கம் வரும். உடற்பயிற்சி இரவு 7:30 இரவு உணவை 7:30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அப்போதுதான் நிம்மதியான உறக்கம் வரும். இரவு 8:30 எழுதுவது, ஓவியம் வரைவது, கைவினைப் பொருள்கள் செய்வது போன்ற ஆக்கபூர்வமான, படைப்புத்திறன் சார்ந்த வேலைகளைச் செய்ய உகந்த நேரம். குறிப்பாக, புதிய சிந்தனைகள் உதிக்கும் நேரம் இது. எதை, எப்போது செய்ய வேண்டும்? ஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு! இரவு 9:00 ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற மின்னணுக் கருவிகளை ஆஃப் செய்ய வேண்டிய நேரம் இது. அவற்றிலிருந்து வெளிப்படும் யு.வி விளக்கொளி, தூக்கத்துக்கு உதவும் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியைக் கெடுத்துவிடும். Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? இரவு 10:00 தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர், குளிக்க வேண்டும். இது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். நல்ல தூக்கம் வர வழி செய்யும். Sleep
Doctor Vikatan: சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயம்; சுவைக்கா, ஆரோக்கியத்திற்கா?
Doctor Vikatan: பல வீடுகளிலும் வெங்காயம் என்பது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வெங்காயத்தில் சல்பர் தவிர வேறு சத்துகள் இருக்கின்றனவா, வெங்காயத்தைச் சுவைக்காகச் சேர்த்துக்கொள்கிறோமா அல்லது அதில் உண்மையிலேயே மருத்துவ குணங்கள் உள்ளனவா, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டில் எது பெஸ்ட்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் வெங்காயத்தை வெறும் சுவைக்காகவோ, மணத்துக்காகவோ மட்டும் சமையலில் சேர்ப்பதில்லை. அதற்கென பிரத்யேக மருத்துவக் குணங்கள் இருப்பதை மறுக்க முடியாது. வெங்காயத்தில் நார்ச்சத்து மிக அதிகம். தவிர அதில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி தன்மையானது, உடலில் புண்கள் வந்தால் ஆற்றுவதற்கு உதவும். பொட்டாசியம் சத்தும், வைட்டமின் சி சத்தும் இதில் அதிகம். ஃபோலேட் எனப்படும் இரும்புச்சத்தும் இதில் உண்டு. சின்ன வெங்காயத்துக்கும் பெரிய வெங்காயத்துக்கும் ஊட்டச்சத்துகளில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. எந்த வெங்காயமாக இருந்தாலும் அதைச் சமைத்துச் சாப்பிடும்போது, அதிலுள்ள வைட்டமின் சி சத்து வீணாகிவிடும். எனவே, வெங்காயத்தை பச்சையாக சாலடாக சாப்பிடுவதுதான் சிறந்தது. எந்த வெங்காயமாக இருந்தாலும் அதைச் சமைத்துச் சாப்பிடும்போது, அதிலுள்ள வைட்டமின் சி சத்து வீணாகிவிடும். வெங்காயத்துக்கு ரத்தம் உறைதலைத் தடுக்கும் பிளட் தின்னிங் தன்மையும் உண்டு. வெங்காயத்தில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. புற்றுநோய் சிகிச்சையில் இருப்போருக்கு, குறிப்பாக, பேலியேட்டிவ் கேர் சிகிச்சையில் இருக்கும்போது அவர்களுக்கு வெங்காயம் சேர்த்த உணவுகள், சாலட் போன்றவை கொடுப்பது சிறந்தது. வெங்காயத்தில் உள்ள கிளிசரைடு எனப்படும் சத்தானது, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலில் பூஞ்சைத்தொற்று ஏற்படாமல் காக்கும். அதனால்தான் பொடுகு உள்ளவர்களுக்கு, இன்ஃபெக்ஷன் பாதித்தவர்களுக்கெல்லாம் வெங்காயச் சாறு பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்தால், மார்பகங்கள் தளர்ந்து போகுமா?
எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?
’’இது காய்ச்சல் காலம். வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கப் போற நேரத்துல, இந்த மாதிரி காய்ச்சல் வர்றது வருஷம்தோறும் வழக்கமா நடக்குற விஷயம்தான். அதனால யாரும் பயப்படத் தேவையில்லை’’ என்று எல்லோருக்கும் தைரியம் சொல்லிவிட்டு, தற்போது பலரையும் படுத்திக்கொண்டிருக்கும் காய்ச்சலின் அறிகுறிகள், தீர்வுகள் குறித்து பேசுகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவ மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா. Seasonal Fever சுவாசப்பாதை தொற்று..! ’’பருவ காலம் மாறுகிற இந்த நேரத்துல சுவாசப்பாதையில தொற்று ஏற்படுத்துற சில வைரஸ்கள் பரவ ஆரம்பிக்கும். இதனால சளி, இருமல், தும்மல், மூக்கொழுதல், மூக்கடைப்பு என்று பிரச்னைகள் வரிசைக்கட்டி வர ஆரம்பிக்கும். சுவாசப்பாதை தொற்றுங்கிறதால பள்ளிக்கூடங்கள்ல, வேலைபார்க்கிற இடங்கள்ல, கூட்டமா இருக்கிற இடங்கள்ல ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்கு சுலபமா பரவவும் ஆரம்பிச்சுடும். இதனால ஒரு அவுட் பிரேக் சூழல் வந்து, எல்லாருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வந்த பிறகு, அப்படியே அடங்கிடும். இந்த நேரத்துல, இன்ஃப்ளுவன்சா ஏ, ஹெச்1 என்1, ஹெச்3 என்2 வைரஸ்களும் அட்டாக் பண்ண ஆரம்பிக்கும். கூடவே கொசுவால வர்ற சிக்கன் குனியா, டெங்கு மாதிரியான காய்ச்சல்களும் வர ஆரம்பிக்கும். Seasonal Fever அறிகுறிகள்..! சுவாசப்பாதை தொற்று வந்திருந்தால், காய்ச்சல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, கழுத்துல ரெண்டு பக்கமும் நெறி கட்டுறது ஆகியவை இருக்கும். காய்ச்சல் வந்த 48 மணி நேரம் நல்லா ஓய்வு எடுக்கணும். நிறைய தண்ணி குடிக்கணும். கஞ்சி, பழச்சாறு மாதிரி நீர் ஆகாரங்கள் நிறைய எடுத்துக்கணும். காய்ச்சல் அடிக்கிறப்போ சிறுநீர் சரியா போகணும். இந்த விஷயத்துல எல்லாருமே கவனமா இருக்கணும். திடீரெனப் பரவும் காய்ச்சல்... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! எச்சரிக்கைகள்..! எச்சரிக்கைகள் என்று பார்த்தீங்கன்னா மூணு நாளைக்கு மேல விடாம காய்ச்சல் அடிச்சாலும், மூச்சுத்திணறல் இருந்தாலும் உடனே ஹாஸ்பிடல் போயிடனும். ஏன்னா, சுவாசத்தொற்று வர்றதுனால நுரையீரல்ல நிமோனியா தொற்று ஏற்படலாம். குழந்தைகளும் சரி, வளர்ந்தவங்களும் சரி, எதுவுமே சாப்பிட முடியாம சோர்வா இருப்பாங்க. சிலருக்கு சிறுநீர் சரியா போகாது. இந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனே ஹாஸ்பிடல் போயிடணும். அங்கு பரிசோதனைகள் மூலம் வந்திருக்கிறது நிம்மோனியான்னு தெரிஞ்சுதுன்னா அதற்கான சிகிச்சைகளை கொடுக்க ஆரம்பிப்பாங்க. நிம்மோனியா விஷயத்துல ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை ரொம்ப கவனமா பாத்துக்கணும். முதியவர்கள்ல சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல்ல பிரச்னை இருக்கிறவங்களும் கவனமா இருக்கணும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Dengue: மீண்டும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்... Do's & Don'ts..! மருத்துவர்களின் வழிகாட்டல்! காய்ச்சல் சரியானதும்... காய்ச்சல் சரியானதும் புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்க ஆரம்பிக்கணும். காய்கறி சூப், அசைவ சூப், பழங்கள் சாப்பிட்டு காய்ச்சலால பலவீனமான உடம்பை தேத்தணும். மத்தபடி இந்த காய்ச்சல் சம்பந்தமா யாரும் பயப்பட தேவையில்லை. இது சாதாரணமா வருஷாவருஷம் வந்து போற காய்ச்சல்தான்’’ என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.
ராமநாதபுரம்: நாய் கடித்து வாலிபர் உயிரிழப்பா? முன்னெச்சரிக்கையாக 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி
ராமநாதபுரம் அண்ணா நகர் குருவிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் ராஜ பிரகாஷ் (17). இவர் ராமநாதபுரத்தில் உள்ள கறிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வேலை முடித்து வீடு திரும்பிய இவரை தெருநாய் ஒன்று கடித்துள்ளது. ஆனால் அதற்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. ராஜ பிரகாஷ் இந்நிலையில் அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்படவே ராமநாதபுரம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குத் தனி அறையில் தங்கி சிகிச்சை பெற வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர் ராமநாதபுரம் திரும்பி விட்டார். 'நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டாலும் ரேபிஸ் தொற்று ஏற்படுமா? - விளக்கும் அவசரக்கால சிகிச்சை நிபுணர் இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் ராஜ பிரகாஷ் இறந்த நிலையில் அவரது உடலை குடும்பத்தினர் எரியூட்டினர். இதனால் நாய்க் கடிக்கு உள்ளாகி இறந்த ராஜ பிரகாஷ் ரேபிஸ் நோய் தாக்கி இறந்தாரா என்பதை சுகாதாரத் துறையினரால் உறுதி செய்ய முடியவில்லை. ராஜ பிரகாஷ் இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா நகரில் வசிக்கும் மக்களின் அச்சத்தினைப் போக்க, ராஜ பிரகாஷ் வீடு அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. தெரு நாய்க் கடிக்கு உள்ளான வாலிபர் ரேபிஸ் நோய் தாக்கத்தினால் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மபி: உன் நாய் என் பூனையைக் கடிக்குது - ஒன்று சேர்த்து வைத்த பிராணிகளால் விவாகரத்து கோரும் தம்பதி
``பீர்க்கங்காயும் அதன் தோலும்'' - மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்!
''பார்க்க கரடு முரடாக இருந்தாலும் சுவையிலும், அது தரும் ஆரோக்கியத்திலும் பீர்க்கங்காயை அடித்துக்கொள்ள முடியாது. நீர்ச்சத்து நிறைந்தவை என்பதால், கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, இதை வாரத்தில் மூன்று நாள்கூட சாப்பிடலாம். பீர்க்கங்காயின் தோலில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அதையும் தவிர்க்க வேண்டாம். அது துவர்ப்புத் தன்மை நிறைந்தது என்பதால், சமையலில் அப்படியே பயன்படுத்த முடியாது. துவையலாக செய்து சாப்பிடலாம்'' என்கிற டயட்டீஷியன் அம்பிகா சேகர், பீர்க்கங்காயின் மருத்துவ குணங்களையும், அதன் தோலை எப்படி துவையல் செய்வது என்பதையும் விளக்குகிறார். பீர்க்கங்காய் பலன்கள்: • பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், வாழ்வியல் நோய்களான சர்க்கரைநோய், இதய பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட மிகவும் நல்லது. தவிர, உடலில் தாது உப்புக்களின் சமநிலையின்மை ஏற்படாமல் தடுத்து, உடலை தேவையான நீர்ச்சத்துடன் பராமரிக்கும். • இதிலுள்ள வைட்டமின் பி, சி செரிமானத்தை எளிதாக்கும். • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பீர்க்கங்காய் மிகவும் நல்லது. காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, பருப்புடன் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொடுக்கலாம். • பீர்க்கங்காயின் சுவைக்காக சிலர் அதை ஊறுகாயாகச் செய்து சாப்பிடுவதுண்டு. ஊறுகாயாகச் சாப்பிடும்போது சத்துகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றாலும்கூட, கலோரிகள் அதிகரிக்கும். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம். எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், அவர்களும் பீர்க்கங்காய்த் தோல் துவையலைச் சாப்பிடலாம். பீர்க்கங்காயும் அதன் தோலும்; மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்! • சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாக இது செயல்படும் என்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் பாதித்தவர்களும், அதிலிருந்து மீண்டுகொண்டிருப்பவர்களும்கூடத் தயக்கமின்றி இதைச் சாப்பிடலாம். • கர்ப்ப காலத்தில் வாந்தி உணர்வு ஏற்படுபவர்கள், பீர்க்கங்காயைத் தவிர்ப்பது நல்லது. • சர்க்கரைநோய் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு, உணவில் உப்பு குறைவாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவதுண்டு. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ எனப் பழகியவர்களுக்கு, உப்பு குறைவாகச் சாப்பிடுவது அதிக சிரமத்தைக் கொடுக்கும். மனதளவில், முழுமையாகச் சாப்பிட்ட திருப்தியே அவர்களுக்கு ஏற்படாது. ஆனால், பீர்க்கங்காய்த் தோல் ரெசிபியில் இந்தப் பிரச்னை கிடையாது. காரணம், பீர்க்கங்காயின் தோல் பகுதி உப்புச்சுவை கொண்டது. அதனால், ரெசிபியில் உப்பு குறைவாகச் சேர்த்தாலும் மாற்றம் எதுவும் தெரியாது. பீர்க்கங்காய்த் தோல் துவையல் பீர்க்கங்காய்த் தோல் துவையல் தேவையானவை: பீர்க்கங்காய்த் தோல்: ஒரு கப் உளுத்தம்பருப்பு: ஒரு டேபிள்ஸ்பூன் தனியா: அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய்: 4 தேங்காய்த்துருவல்: ஒரு டீஸ்பூன் புளி: எலுமிச்சை அளவு கறிவேப்பிலை மற்றும் உப்பு : தேவையான அளவு Dates: பேரீச்சம் காய், பாய், பழம்... ஆரோக்கிய பலன்கள் என்னென்ன..? செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு, பீர்க்கங்காய்த் தோல் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கும்போதே, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். தோல் நன்கு வதங்கியதும் புளி, துருவிய தேங்காயைச் சேர்த்து அரைக்க வேண்டும். அரைக்கும்போது, குறைந்த அளவே தண்ணீர் பயன்படுத்தவும். பீர்க்கங்காய் தோல் துவையலில், பீர்க்கங்காயின் தோல் பகுதியை மட்டுமே வதக்குவதால், அதிலுள்ள அனைத்துச் சத்துகளும் அழியாமல் முழுமையாகக் கிடைக்கும். குறிப்பு பீர்க்கங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து வாங்குங்கள். அடர் பச்சை நிறத்திலுள்ள காயை வாங்குவது சிறப்பு. சில காய்களில், அடிப்பகுதி மட்டும் அடர்த்தியாக இருக்கும். அப்படியில்லாமல், காய் முழுவதும் ஒரே அளவில் இருக்குமாறு பார்த்து வாங்கவும். காயின் மேலுள்ள நரம்புகளின் நிறத்தைப் பார்த்து வாங்க வேண்டும். அது வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தாலோ, காயின் காம்புப் பகுதி வறண்டிருந்தாலோ அந்தக் காய் முற்றல் என்று அர்த்தம். அதை வாங்க வேண்டாம். பீர்க்கங்காய்த் தோலைச் சுத்தம் செய்யும்போது, கடினமான நரம்புள்ள தோல் பகுதிகளை அப்புறப்படுத்தவும். தோல் பகுதியைக் கழுவிய பிறகே சமையலுக்குப் பயன்படுத்தவும். Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும் ஒரு காய்!
Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்தால், மார்பகங்கள் தளர்ந்து போகுமா?
Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே மார்பகங்கள் பருத்துக் காணப்படும். உடல் பருமன் இருப்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். எடையைக் குறைத்தால் மார்பகங்கள் தளர்ந்துபோகும் என்பது உண்மையா? அதனால் என் தோற்றமே மாறிப்போகுமா? தளர்ச்சியைச் சரியாக்க அறுவை சிகிச்சைதான் தீர்வா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் ஷீபா தேவராஜ் எடைக்குறைப்பு என்பது ஒட்டுமொத்த உடல் சம்பந்தப்பட்டது. உடலில் எங்கெல்லாம் கொழுப்பு இருக்கிறதோ, எடையைக் குறைக்கும்போது அங்கெல்லாம் கொழுப்பு குறைவது இயல்பு. மார்பகங்களும் அப்படித்தான். மார்பகங்கள் என்பவை சதைப்பகுதிகளால் ஆனவை. எனவே நீங்கள் சரியான பயிற்சிகளைச் செய்து, கொழுப்பைக் குறைக்கும்போது அவற்றின் அளவும் குறையும். மார்பக அளவுகளைக் குறைக்கவோ, கூட்டவோ என பிரத்யேகப் பயிற்சி எதுவும் இல்லை. தளர்ந்துபோன மார்பகத் தசைகளை எடை நிர்வாகத்தின் மூலம் ஓரளவு சரிசெய்யலாம். முதல் வேலையாக சரியான நிபுணரின் வழிகாட்டுதலோடு எடையைக் குறைத்து, பாஸ்ச்சரை சரிசெய்து, உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றத் தொடங்கினாலே உடலளவில் உறுதியாக உணர்வீர்கள். எடையைக் குறைத்து, பாஸ்ச்சரை சரிசெய்து, உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றத் தொடங்கினாலே உடலளவில் உறுதியாக உணர்வீர்கள். எடை அதிகரிப்புக்கான காரணம் அறிந்து, அதைக் குறைப்பதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். உங்களுடைய உணவுப்பழக்கம் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். முடிந்தால் ஃபிட்னெஸ் பயிற்சியாளரை நேரில் அணுகி, உங்களுக்கான எடைக்குறைப்புத் திட்டத்தை அமைத்துக்கொடுக்கச் சொல்லி, இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உணவும் உடற்பயிற்சிகளும் முறைப்படுத்தப்பட்டாலே, உங்களுடைய உடலமைப்பு சரியாகும். அவசரப்பட்டு அறுவைசிகிச்சை முடிவுகளை எடுக்காதீர்கள். அதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். மார்பகங்களைத் தளரவிடாமல் உறுதியாக வைக்கவென்றே பிரத்யேக உள்ளாடைகள் உள்ளன. அவற்றையும் முயற்சி செய்யுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?
Doctor Vikatan: சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு; பாதுகாப்பானதா, பக்க விளைவுகளைத் தருமா?
Doctor Vikatan: சித்த மருந்துகள் தயாரிப்பில் உலோகங்கள் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை. இப்படி உலோகங்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் எந்த அளவுக்கு உடலுக்குப் பாதுகாப்பானவை? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சித்த மருந்துகளைப் பொறுத்தவரை பல விஷயங்களில் இருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படும். அப்படிப் பார்த்தால் அடிப்படையில், மூலிகைகள், அடுத்து தாதுப்பொருள்கள் என்று சொல்லக்கூடிய உலோகங்கள், பிறகு விலங்கினங்களிடம் இருந்து பெறப்படும் பொருள்கள் என எல்லாவற்றிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுவதுண்டு. சித்த மருந்துகளைப் பொறுத்தவரை மூலிகைகள்தான் அடிப்படை. 'வேர்ப்பாரு தழைப்பாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரு' என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு. அதாவது முதலில் மூலிகைகளை முயற்சி செய்து பாருங்கள்... அவற்றில் பலன் கிடைக்காதபோது உலோகங்களை முயற்சி செய்து பாருங்கள் என்பது இதன் அர்த்தம். சித்த மருந்துகளில் உலோகங்கள் பயன்படுத்துவது உண்டு என்றாலும், பலரும் நினைக்கிற மாதிரி, மருந்துகளுக்குள் நேரடியாக உலோகங்களைப் புகுத்திக் கொடுக்க மாட்டார்கள். இங்குதான் சித்த மருத்துவ தத்துவமும் அறிவியலும் உண்மையாகிறது. மருந்துகளுக்கு உலோகங்களைப் பயன்படுத்தும்போது அது பலகட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, புடம் போடுவது, எரிப்பது போன்றவை. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் உலோகத்தின் தன்மை மாறும். இதன் பின்னணியில் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது. அதன் பிறகுதான் அது மருந்தாகவே உருவாகும். சித்த மருந்து ஓர் உலோகத்தைச் சுத்திகரிப்பது எப்படி, அதை நானோ துகள்களாக, பற்பமாக மாற்றுவது எப்படி என பல கட்டங்கள் நடைபெறும். பெரும்பாலும் உலோகங்களை வைத்துச் செய்யப்படும் மருந்துகள், பற்பம் அல்லது செந்தூரமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த மருந்துகளை தேன் கலந்தோ, கஷாயத்துடனோ சாப்பிட வேண்டியிருக்கும். உலோகம் என்பது தனியே இருக்கும்போது அதன் தன்மைகள் வேறாக இருக்கும். அதுவே மருந்தாக மாறும்போது வேறு தன்மைகள் பெறும். அதனால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல், உடலுக்கு நல்லதை மட்டுமே தரும். அதுதான் சித்த மருந்துகளின் சிறப்பே. கேன்சர் போன்ற பெரிய நோய்களுக்குக்கூட செந்தூரம் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவது, அவர்களது ஆயுளை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்பே, ஹெச்ஐவி நோய்க்கு செந்தூர மருந்துகள் கொடுத்து சோதிக்கப்பட்டுள்ளன. பெரு மருந்துகள் எனப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் இப்படி உலோகங்கள் பயன்படுத்திச் செய்யப்படுபவையாக இருக்கும். எனவே, அவை பாதுகாப்பானவைதான். பயம் வேண்டாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: வயதான அப்பாவுக்கு வருடம் முழுக்க சளி, இருமல்; சித்த மருத்துவம் உதவுமா?
பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்
மாதவிடாய் நாள்களின் அவதிகள் அதிகரிக்க, அந்த நாள்களில் உண்ணும் சில உணவுகளும் காரணமாகலாம். வலியிலிருந்து விடுபட, தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் நித்யஸ்ரீ. Periods pain Vs fatty foods கொழுப்பு உணவுகள். உடலில் வாயு உற்பத்தியை அதிகரிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, மன அழுத்தம் அதிகரிக்கலாம். அடிவயிற்றில் வலியை ஏற்படுத்துவதுடன், வயிற்றுப்போக்கையும் உண்டாக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள். உப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள். உடலில் வாயு உற்பத்தியை அதிகரிப்பதுடன், மாதவிடாய்க்கால வலியையும் தீவிரமாக்கும். Periods pain Vs Salty foods மசாலா உணவுகள். வறுத்த, அதிக மசாலா சேர்த்த உணவுகள் அழற்சிப் பிரச்னையை அதிகப்படுத்தும். மாதவிடாய்க்கால வலியைத் தீவிரமாக்கும். சர்க்கரை உணவுகள். உடலில் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால், மனநலனில் மாற்றங்கள் ஏற்படும். பதற்றம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி சமச்சீரற்று இருக்கும். Periods pain Vs Coffee காபி. இதிலுள்ள கஃபைன், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயத்துடிப்பின் இயல்பு மாறலாம். பதற்றமும் அடிவயிற்றுப் பகுதியில் வலியும் அதிகரிக்கும். Sex during periods: மாதவிடாயின்போது உறவு... 100% பாதுகாப்பானதா..? காமத்துக்கு மரியாதை - 149 குளிர்பானங்கள். இவற்றின் கார்பனேட்டட் தன்மை, வாயு உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் மாதவிடாய்க்கால வலி அதிகமாகும். Periods pain Vs Cool drinks Periods: பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது? ; அந்த வலியை வராமல் தடுக்க முடியுமா? | சந்தேகங்களும் தீர்வும்! உப்பு, மசாலா, எண்ணெய்க் குறைவான உணவுப்பொருள்களை சாப்பிட்டால், மாதவிடாய் வலி வராது.
Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதில் மென்மையான பெண் குரல்; இதை சிகிச்சையால் சரி செய்ய முடியுமா?
Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதாகிறது. அவனுக்கு குரல் மிக மென்மையாக, பெண் தன்மையுடன் இருக்கிறது. இதனால் நண்பர்கள் மத்தியில் கிண்டல், கேலிக்கு உள்ளாகிறான். தாழ்வு மனப்பான்மை கொள்கிறான். இதை சிகிச்சையில் சரி செய்ய முடியுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா பியூபர்ஃபோனியா (Puberphonia) ஒருவரின் குரலின் தன்மை என்பது அவரது குரல் நாணின் நீளத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் மகனுக்கு இருப்பதாகச் சொல்லும் இந்தப் பிரச்னைக்கு மருத்துவத்தில் 'பியூபர்ஃபோனியா' (Puberphonia) என்று பெயர். இந்தப் பிரச்னைக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் தீர்வும் இருக்கிறது. சிகிச்சை ஸ்பீச் தெரபியோ, அறுவை சிகிச்சையோ கொடுக்கப்பட்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். சிகிச்சையைத் தொடங்கும்முன், எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்து, குரல் நாணின் நிலை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ள, வேறு சில டெஸ்ட்டுகளும் மேற்கொள்ளப்பட வேண்டி வரலாம். டெஸ்ட்டுகளின் ரிசல்ட்டை பொறுத்துதான் எப்படிப்பட்ட சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். பெண்ணாக இருந்து குரலில் ஆண்தன்மை தெரிவதாகவோ, ஆணாக இருந்து குரலில் பெண் தன்மை தெரிவதாகவோ உணர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் 18 வயது வரை காத்திருக்கலாம். எண்டோஸ்கோப்பி பரிசோதனை ஸ்பீச் தெரபி தியேட்டர் போன்று நடிப்புத் துறைகளில் உள்ள பலரும் தங்கள் குரல் வளத்தை மேம்படுத்திக்கொள்ள ஸ்பீச் தெரபி எடுப்பதைப் பார்க்கலாம். சரியான நேரத்தில், சரியான மருத்துவரை சந்தித்து, சரியான சிகிச்சையை எடுத்தால் 3 முதல் 6 மாதங்களுக்குள் சிகிச்சையின் பலனை உணர முடியும். சிலருக்கு ஸ்பீச் தெரபி பலனளிக்காமலும் போகலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அறுவை சிகிச்சையின் மூலம் அந்த நீளத்தைச் சரிசெய்வதன் மூலம் குரலின் தன்மையையும் மாற்ற முடியும். தன்னம்பிக்கை இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் உங்கள் மகனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பேசுங்கள். குரல் மட்டுமே ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிக்கும் விஷயமல்ல என புரிய வையுங்கள். தேவைப்பட்டால் கவுன்சலிங் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஜலதோஷத்துக்குப் பிறகு நிரந்தரமாக மாறிப்போன குரல்.. பழையபடி மாறுமா?
இளமையையும், அழகையும் குறைக்குமா சர்க்கரை? டயட்டீஷியன் சொல்வது என்ன?
’’சர்க்கரை விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அழகு தொடங்கி ஆரோக்கியம் வரை பல பிரச்னைகளை சர்க்கரை ஏற்படுத்தும்’' என எச்சரிக்கிறார் டயட்டீஷியன் சுஜாதா. சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்லை. சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்லை. ’’ `ஒருவர் நாளொன்றுக்கு ஐந்து டீஸ்பூன் வரை சர்க்கரை பயன்படுத்தலாம்’ என்று அறிவுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம். அதிகமாகச் சேர்த்துக்கொண்டால், அதிலுள்ள குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் உடலில் சேர்ந்து தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கார்பனேட்டட் பானங்கள், குளிர்பானங்கள், பேக்கரி உணவுகள் என நாம் அன்றாடம் சாப்பிடும் பல்வேறு உணவுகளில் சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்லை. எவ்வளவு சாப்பிட்டாலும், அடுத்த சில மணி நேரத்திலேயே பசியா..? * அளவுக்கு மீறி சர்க்கரை சேர்த்துக்கொள்ளும்போது, பசி உணர்வு அதிகரிக்கும். சர்க்கரையிலிருக்கும் ஃப்ரக்டோஸ்தான் அதற்குக் காரணம். ‘எவ்வளவு சாப்பிட்டாலும், அடுத்த சில மணி நேரத்திலேயே பசி எடுக்கிறது’ என்பவர்கள், சர்க்கரையின் அளவை கவனிக்க வேண்டும். அடிக்கடி செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டாலும், உணவில் சர்க்கரையின் அளவை கவனிக்க வேண்டும். இளம் வயதில் சருமத்தில் தளர்ச்சியா..? இளம் வயதில் சருமத்தில் தளர்ச்சியா..? * அதிகப்படியான சர்க்கரை, சரும ஆரோக்கியத்துக்கான `கொலாஜென்’ மற்றும் `எலாஸ்டின்’ போன்ற புரதங்களின் தரத்தைக் குறைக்கும். இதனால் சருமம் பொலிவிழந்து தளர்ச்சியடையும். இளம் வயதில் சருமத்தில் தளர்ச்சியை உணர்ந்தால் சர்க்கரையின் அளவை உடனடியாகக் குறைக்க வேண்டும். ''என் பையனோட பாக்கெட்ல காய்கறிகள்தான் இருக்கும்!'' - நடிகை ஶ்ரீஜா பகிரும் Healthy Habits பற்களில் அடிக்கடி பிரச்னையா..? * தினமும் அளவுக்கதிகமாக சர்க்கரை சேர்த்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு பல் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். பற்களில் அடிக்கடி பிரச்னையா..? Palm Sugar: அது எலும்பை அரிக்கும்; இது எலும்பை வலுவாக்கும்! | health tips அடிவயிற்றுப் பகுதி பருத்துவிட்டதா..? * அதிக அளவு சர்க்கரையால் உடலின் பல பகுதிகளில் கெட்ட கொழுப்பு சேரும். இதனால், இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகள் பருத்து, தொப்பை ஏற்படலாம்.
பாராசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் வருமா? - ட்ரம்ப் கருத்தும், நிபுணர்கள் மறுப்பும்!
பாராசிட்டமால் அல்லது அசட்டாமினோபென் என அழைக்கப்படும் மாத்திரை, உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி, காய்ச்சல் குறைப்பு மருந்து ஆகும். சமீபத்தில் இந்த மருந்து குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. ட்ரம்ப் பேசியதென்ன? கர்ப்பமாக இருக்கும் பெண்கள் 'டைலெனால்' மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற அவர், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம் பிரச்னை ஏற்படுவதுடன் தொடர்புடையது எனக் கூறியுள்ளார். paracetamol டைலெனால் என்பது அமெரிக்காவில் பாராசிட்டமாலுக்கு வழங்கப்படும் ஒரு பிராண்ட் பெயர் ஆகும் (இந்தியாவில் டோலோ போல). ட்ரம்ப்பின் இந்தக் கூற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் அறிவியலுக்கு முரணாக பேசுவதாக விமர்சித்துள்ளனர். ட்ரம்ப்பின் கருத்து பொறுப்பற்றது 'அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கல்லூரி'யின் தலைவர், ட்ரம்பின் கருத்துக்களை பொறுப்பற்றது மற்றும் தீங்கு விளைவிக்கும் மற்றும் குழப்பமான செய்தி என விமர்சித்துள்ளார். குழந்தை மருத்துவரும் முன்னாள் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானியுமான, டாக்டர் சௌமியா சுவாமிநாதன் என்.டி.டி.வி தளத்துக்கு அளித்த பேட்டியில், பாராசிட்டமாலை ஆட்டிசத்துடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை. எனக் கூறியுள்ளார். டாக்டர் சௌமியா சுவாமிநாதன் மேலும், பாராசிட்டமாலை அதிகப்படியாக எடுத்துக்கொள்வது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளும்போது எந்த பாதிப்பும் வராது எனக் கூறியுள்ளார். பராசிட்டமால்: தீங்கை விட பலன்கள் அதிகம் பாராசிட்டமாலால் வரும் பாதிப்புகளை விட பலமடங்கு அதிகமான பலன்களை பெறுவதனால் அதைப் பயன்படுத்துவதுதான் அறிவார்ந்த தேர்வு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் கூட்டமைப்பு (FIGO), பாராசிட்டமாலை பாதுகாப்பான மருந்துகளில் ஒன்று எனக் கூறுவதுடன் அதன் பயன்பாட்டைப் பரிந்துரைக்கிறது. அமெரிக்க அதிபரின் கருத்தால் பொதுமக்கள் அச்சப்பட அவசியமில்லை என்கின்றனர் நிபுணர்கள். Trump: நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக அவதூறு வழக்கு; ரூ.1.3 லட்சம் கோடி இழப்பீடு கேட்கும் ட்ரம்ப்!
சுபான்ஷு சுக்லா: விண்வெளியில் மருத்துவ எமர்ஜென்சி வந்தால் எப்படி சிகிச்சை கொடுக்கப்படும்?
பூமியில் உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்ல முடியும், சிசிச்சை பெற முடியும். ஆனால், விண்வெளியில் உடல்நிலை பாதித்தால், விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதிலைக் கடந்த ஜூன் மாதம், இந்தியா சார்பில் விண்வெளி சென்று வந்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தருகிறார். விண்வெளியில் ஆம்புலன்ஸ், மருத்துவமனை, எமர்ஜென்சி ரூம் கிடையாது. அப்போது எப்படி விண்வெளி வீரர்கள் மருத்துவ எமர்ஜென்சிகளில் இருந்து பிழைக்கிறார்கள்? விண்வெளி வீரர்கள் சி.பி.ஆர் எப்படிச் செய்வோம் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றார் சுபான்ஷு சுக்லா விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது... தொடர் ஒத்திகை விண்வெளியில் மருத்துவ எமர்ஜென்சி என்பது பூமியில் ஏற்படுவதுப்போல இருக்காது. அங்கு மருத்துவமனை எதுவும் இல்லை என்பதால் விண்வெளி வீரர்களே தங்களுடைய சொந்த மருத்துவர்களாகவும், செவிலியர்களாகவும் தங்களை ட்ரெயின் செய்துகொள்ள வேண்டும். அவர்கள் பல மணிநேரம் செய்த ஒத்திகைகள் மற்றும் சில திறமையான நுட்பங்களை நம்பியே அங்கு வாழ்வும், மரணமும் இருக்கிறது. விண்வெளியில் டாக்டர்கள், நர்ஸ்கள் யார்? சுக்லா: விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது, உதவி வராது என்பது நமக்கு தெளிவாகத் தெரியும். அங்கு மருத்துவமனை இருக்காது, எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன்கள் இருக்கமாட்டார்கள். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை மிக வேகமாக நீங்கள்தான் உறுதி செய்ய வேண்டும். சூழலைப் பொறுத்து, நீங்கள் டாக்டராகவோ, நர்ஸாகவோ, சப்போர்ட்டிங் ஸ்டாபாகாவவோ மாற வேண்டும். எதற்கும் நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 'எது வேண்டுமானாலும் நடக்கலாம்?' என்கிற பட்டியலில் முதலில் இருப்பது, 'மெடிக்கல் எமர்ஜென்சி'தான். நாங்கள் தொடர்ந்து ஒத்திகை செய்துகொண்டே இருப்போம் என்றார். விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது... Health: உங்க பசி உண்மையானதா, போலியானதா? எப்படிப் பயிற்சி எடுப்பீர்கள்? Mannequin (மனித உருவ பொம்மை) வைத்துதான் பயிற்சி எடுப்போம். விண்வெளி சிகிச்சையில் ட்விஸ்ட் இருக்கிறது. ரத்த அழுத்தம் குறைந்தால், பூமியைப் போலவே, அங்கேயும் நரம்புகள் பாதிப்படையும். ஆனால், விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்களுக்கு எலும்பு மஜ்ஜைகள் மூலம் மருத்துகளை ஏற்றுவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும் There’s no ambulance in space. No hospital. No ER. So how do astronauts survive medical emergencies? How we do CPR is going to blow your mind!!!! Medical emergencies in space are unlike anything on Earth. With no hospital around the corner, astronauts train to become their own… pic.twitter.com/eJVUO4Srh9 — Shubhanshu Shukla (@gagan_shux) September 22, 2025 விண்வெளி நிலையத்தின் கூரை மேல் CPR அங்கே ஒருவருடைய மார்பை அழுத்தி சிகிச்சை தருவது என்பது எளிதானது அல்ல. ஜீரோ புவியீர்ப்பில் இருவருமே மிதந்துகொண்டு இருப்பார்கள். அதனால், மார்ப்பைக் கீழே அழுத்த முடியாது. எனவே, தலைகீழாகப் புரட்டி, விண்வெளி நிலையத்தின் கூரையில் உங்களது கால்களை உறுதியாக ஊன்றி, சிகிச்சை தர வேண்டும் என்றார். ஜீரோ புவியீர்ப்பில், கூரை மேல் நின்றுகொண்டு, தலைகீழாக ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதை யோசித்து பாருங்கள். விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது... Health: என்ன செய்தும் எடை குறையவில்லையா? காரணங்கள் இவைதான்! விண்வெளி மருத்துவம் என்பது அறிவியல் மற்றும் களரி போன்ற கலைகளுக்குச் சமமானதாகும். சி.பி.ஆர் என்பது சுவர் புஷ்-அப்ஸ் போன்றதாகும். மருந்துகள் எலும்பு மஜ்ஜைகள் மூலம் உள்ளே செல்கின்றன. மேலும் ஒவ்வொரு பயிற்சிகளும் உயிர் வாழ்வதற்கான பயிற்சி ஆகும். விண்வெளி காட்டுத்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார். விண்வெளியில் உடல்நல பிரச்னை ஏற்பட்டால் என்ன ஆகும்? | FAQ விண்வெளியில் உடல் நல பிரச்னை ஏற்பட்டால் உடனடி உதவி கிடைக்குமா? இல்லை. விண்வெளியில் மருத்துவ அவசர நிலைகள் ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது. அங்கு இருப்பவர்களே மருத்துவ கடமைகளை ஏற்றுக் கொள்கிறார்கள். விண்வெளி வீரர்கள் மருத்துவப் பயிற்சி பெறுகிறார்களா? ஆம். விண்வெளி வீரர்கள் மருத்துவ அவசர உதவி பற்றிய பயிற்சிகளை mannequinகளைப் பயன்படுத்தி பலமுறை செய்கிறார்கள். Cardiac arrest ஏற்பட்டால் என்ன செய்கிறார்கள்? CPR செய்கிறார்கள்; Automated External Defibrillator (AED) மூலம் இதயத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயல்கிறார்கள். சூழல் மாறுபாடு (microgravity) இந்தச் சிகிச்சைகளை எப்படிச் சிக்கலாக்குகிறது? மாறுபாடு காரணமாக மார்பை அழுத்தி சிகிச்சை அளிப்பது (chest compressions) சவாலாக இருக்கும். Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
கறிவேப்பிலை பயன்கள் : கேச வளர்ச்சி, கட்டுக்குள் சர்க்கரை, கல்லீரலுக்குக் காவல் - விரிவான தகவல்கள்
கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை; ஆனால், அத்தகைய கறிவேப்பிலையை நாம் உண்ணாமல் ஒதுக்கி வைப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறோம். கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், நீர்மோர் சகலத்திலும் கறிவேப்பிலை இடம் பெற்றிருந்தாலும் உணவு உண்ணும் போது ஒதுக்கி வைக்கும் அளவுக்கு கறிவேப்பிலை என்றாலே பலருக்கும் கசக்கிறது. `உணவே மருந்து’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கறிவேப்பிலை. அதனால்தான் நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்தினார்கள். `இது மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது; தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது என்பதே மருத்துவர்களின் வாதம். மணம் நிறைந்த, மகத்துவம் மிகுந்த கறிவேப்பிலையில் உள்ள சத்துகளையும், மருத்துவக் குணங்களையும் பார்க்கலாம். கறிவேப்பிலை `ப்ளீஸ் என்னை தூக்கிப் போடாதீங்க!' கறிவேப்பிலை - மூலிகை ரகசியம் - 3 அட, இவ்வளவு சத்துகளா... கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள் (Glycosides), ஃபிளேவனாய்டுகள் போன்றவை உள்ளன. மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியத் தாதுச்சத்துகளும் உள்ளன. கொழுப்புச்சத்து 100 கிராமுக்கே 0.1 கிராம் என்ற அளவில்தான் உள்ளது. வயிற்றுக்கோளாறுகள் வராது... கறிவேப்பிலையில் உள்ள கார்பாசோல் அல்கலாய்டு (Carbazole Alkaloids) வயிற்றுப்போக்கைத் தடுக்கக்கூடிய ஆன்டி- டயாரியல் (Anti-Diarrheal properties) பண்பைக் கொண்டுள்ளதாக பல ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. இதனால், கறிவேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அதை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை மைய அரைத்துச் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் அருந்தலாம். ஆயுர்வேதத்தில் இது, வயிற்றுக்கோளாறுகளை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஜூஸாக மிக்ஸியில் அடித்து, அதனுடன் எலுமிச்சைப்பழச் சாற்றைக் கலந்து குடிக்கலாம் அல்லது அரைத்த கறிவேப்பிலையை மோருடன் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம். இது செரிமானத்தை அதிகரிப்பதுடன், வயிற்றுக்கோளாறுகளை நீக்கும். அஜீரணம், பசியின்மையையும் போக்கும். நீரிழிவு உணவு 360 டிகிரி - 10 - இலை முதல் ஈர்க்கு வரை... மருந்தாகும் கறிவேப்பிலை! சர்க்கரைநோயாளிகளுக்கு வரப்பிரசாதம்! கறிவேப்பிலை ஆன்டி - கிளைசிமிக் வகை உணவு என்பதால், ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். இதனால், சர்க்கரைநோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை ( LDL-low density lipoprotein) குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலான ஹெச்.டி.எல்லை (HDL - High Density Lipoprotien) உயர்த்த உதவுகிறது. கறிவேப்பிலையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால், இது அனீமியா எனப்படும் ரத்தச்சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும். கல்லீரலின் காவலன்! கறிவேப்பிலையில் லுகேமியா (Leukemia), புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் தடுக்கும் பீனால் என்னும் வேதிப்பொருள் உள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் கல்லீரல் செல்கள் அழிவைக் கட்டுப்படுத்தி, கல்லீரல் பாதிப்பைக் குறைக்கும். மேலும், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். இது ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் படிவதைக் குறைப்பதால், ரத்தம் ஓட்டம் தங்கு தடையின்றி சீராக இருக்கும். கல்லீரல் அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை கண் ஆரோக்கியம் காக்கும் இதில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டினாய்டுகள் (Carotenoids) கார்னீயா பாதிப்பைக் கட்டுப்படுத்தும். பார்வை இழப்பு, மாலைக்கண் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும். முடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலையை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பொடுகு, பேன் தொல்லைகள் போகும். தலைமுடி நன்றாக வளரும். கருமையாக வளரும். கறிவேப்பிலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம். கறிவேப்பிலை – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) 1. கறிவேப்பிலையை நாம் சாப்பிடாமல் ஒதுக்குவதன் காரணம் என்ன? பலருக்கு கறிவேப்பிலை வாயில் கசப்பாகத் தோன்றுவதால் உணவு உண்ணும் போது ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால், உண்மையில் அதில் நிறைய சத்துக்கள் உள்ளன. 2. கறிவேப்பிலையில் என்னென்ன சத்துகள் உள்ளன? கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் A, B, C, E, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃபிளேவனாய்டுகள் ஆகியவை உள்ளன. கூடவே இரும்பு, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. 3. கறிவேப்பிலை வயிற்றுக்கோளாறுகளை குணப்படுத்துமா? ஆம். கறிவேப்பிலையில் உள்ள Carbazole Alkaloids வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணத்தைத் தடுக்க உதவுகிறது. இதை ஜூஸாகவோ, மோர் கலந்த பேஸ்டாகவோ எடுத்தால் செரிமானத்தையும் மேம்படுத்தும். 4. சர்க்கரை நோயாளிகளுக்கு கறிவேப்பிலை நல்லதா? ஆம். கறிவேப்பிலை ஒரு ஆன்டி-கிளைசிமிக் உணவு . இது இரத்தத்தில் குளூக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதேசமயம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கிறது. 5. கறிவேப்பிலை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு எப்படித் துணைபுரிகிறது? கறிவேப்பிலையில் உள்ள பீனால் மற்றும் கார்பாசோல் ஆல்கலாய்டுகள் புற்றுநோயைத் தடுக்கும். வைட்டமின் A & C கல்லீரல் செல்களை பாதுகாக்கும். கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். 6. கறிவேப்பிலை கண் ஆரோக்கியத்திற்கு உதவுமா? ஆம். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் A மற்றும் கரோட்டினாய்டுகள் பார்வை இழப்பு, மாலைக்கண் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். பார்வைத்திறனை அதிகரிக்கவும் உதவும். 7. முடி வளர்ச்சிக்காக கறிவேப்பிலை பயன்படுத்த முடியுமா? முடியும். கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சைச் சாறை அரைத்து தலைமுடிக்கு தேய்த்து குளித்தால் பொடுகு, பேன் தொல்லைகள் குறையும். கறிவேப்பிலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகப் பயன்படுத்தினால் தலைமுடி கருமையாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
Doctor Vikatan: மன அழுத்தத்துக்கான சைக்யாட்ரிக் மருந்துக்கு மாற்றாகுமா ‘அமுக்கரா சூரணம்’?
Doctor Vikatan: அமுக்கரா சூரணம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுமா, இதை யார் சாப்பிடலாம், யார் தவிர்க்க வேண்டும்? மன அழுத்தத்துக்கான ஆங்கில சைக்யாட்ரிக் மருந்துகளுக்கு பதில் இதை எடுப்பது பாதுகாப்பானது என்கிறார்களே, உண்மையா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். அமுக்கரா சூரணம் என்பது மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய மிகச் சிறந்த மருந்து. அடிப்படையில், மன அமைதியைக் கொடுக்கக்கூடிய மனநல மருந்துகளில் முக்கியமானதும்கூட. ஒருவர் தீவிரமான மனநல பிரச்னைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்றால், திடீரென அதை நிறுத்திவிட்டு, சித்த மருந்துகளுக்கு மாற வேண்டாம். ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கும் ஆங்கில மருந்துகளோடு, சித்த மருந்துகளையும் சேர்த்து ஒருங்கிணைந்த மருத்துவமாக எடுத்துக்கொள்ளும்போது, ஆங்கில மருந்துகளின் அளவு குறைய வாய்ப்பு உண்டு. ஆரம்பகட்ட மனநல பிரச்னைகள் என்றால், சித்த மருந்துகளை, குறிப்பாக அமுக்கரா சூரணம் எடுத்துக்கொள்ளலாம். Doctor Vikatan: சர்க்கரை நோயை சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா? அதுவே ஆரம்பகட்ட மனநல பிரச்னைகள் என்றால், சித்த மருந்துகளை, குறிப்பாக அமுக்கரா சூரணம் எடுத்துக்கொள்ளலாம். தீவிர மனநல பாதிப்பில் வெறும் அமுக்கரா சூரணம் மட்டுமே உதவும் நிலையில் சம்பந்தப்பட்ட நபர் இருக்க மாட்டார். சித்த மருத்துவத்திலும் சரி, ஆயுர்வேதத்திலும் சரி, 'காம்பினேஷன் டிரக்ஸ்' என்ற கான்செப்ட்டில் புதிய புதிய மருந்துகளைக் கலந்து நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுவதுண்டு. அவற்றில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் சரி, மன அமைதியைக் கொடுப்பதற்கும் சரி, அமுக்கராவைக் கொடுக்கிறார்கள். இதிலுள்ள வித்தனலாய்டு (Withanolide) எனப்படும் ஆல்கலாய்டுதான், மன அழுத்தம் குறைத்து மன அமைதியைத் தருகிறது. மன அழுத்தத்துக்கு மருந்தாகுமா அமுக்கரா சூரணம்? பெரியவர்கள் தாராளமாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்குத் தாம்பத்திய உறவின்போது வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் அமுக்கரா மருந்துக்கு உண்டு. உடல் மெலிந்தோர், பலவீனமானோர், சோர்வுற்ற குழந்தைகள், (10 வயதுக்கு மேல்) இதை ஊட்ட மருந்தாகவும் எடுத்துக்கொள்ளலாம். பாலில் அரை டீஸ்பூன் அமுக்கரா சூரணம் கலந்து குடிக்கலாம். அமுக்கரா சூரணம் எடுப்பதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், எந்த மருந்தையும் தகுந்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுப்பதுதான் பாதுகாப்பானது, சரியானதும்கூட. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ஒரு பக்கம் கொசுத்தொல்லை; மறுபக்கம் வீஸிங் - கொசுவிரட்டிக்கு என்னதான் மாற்று?
Doctor Vikatan: நாங்கள் வசிக்கும் பகுதியில் கொசுத்தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, இரவில்... இதற்காக மாலை 5 மணிக்கெல்லாம் கொசுவத்திச் சுருள் ஏற்றிவைக்கிறோம். அதைத் தாண்டி, இரவு படுக்கும்போது மின்சாரத்தில் இயங்கும் லிக்விட் கொசுவிரட்டியும் பயன்படுத்துகிறோம். ஆனால், என் அப்பாவுக்கு வீஸிங் இருப்பதால், இவை எதுவுமே ஏற்றுக்கொள்வதில்லை. அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை வருகிறது. கொசுக்களிலிருந்தும் தப்பிக்க வேண்டும், வீஸிங்கும் வரக்கூடாது என்றால் என்னதான் செய்வது... மூலிகை கலந்த கொசுவிரட்டிகள் பாதுகாப்பானவையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி நுரையீரல் மருத்துவர் திருப்பதி மாசு என்பது வெளிப்புறத்தில் இருந்து வருவதை மட்டும் குறிப்பதில்லை. வீட்டுக்குள்ளிருந்தும் மாசு பாதிப்பு ஏற்படலாம். அதை 'இண்டோர் பொல்யூஷன்' என்கிறோம். இண்டோர் ஏர் பொல்யூஷன் என்பது சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அடுப்பெரிப்பதில் தொடங்கி பல விஷயங்கள் வாயிலாகப் பாதிக்கக்கூடியது. குறிப்பாக, இந்த வகை மாசானது, சிஓபிடி (Chronic Obstructive Pulmonary Disease ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பாதிப்பு கொண்டவர்களுக்கு நோய் பாதிப்பைத் தீவிரப்படுத்தக்கூடியது. இது மட்டுமன்றி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஊதுவத்தி, சாம்பிராணி, கொசுவத்திச் சுருள் போன்றவையும் இதே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே. இவற்றைப் பயன்படுத்தும்போது புகை வருகிறது. இவற்றில் கெமிக்கல்தான் பயன்படுத்தியிருப்பார்கள். கொசுவத்திச் சுருள், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவை வெளியிடும் புகை மற்றும் ரசாயனங்கள், சிகரெட் புகைக்கு இணையான ஆபத்து கொண்டவை. கொசுவத்திச் சுருள், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவை வெளியிடும் புகை மற்றும் ரசாயனங்கள், சிகரெட் புகைக்கு இணையான ஆபத்து கொண்டவை. இவற்றின் வாடையும் ஆஸ்துமாவைத் தூண்டக்கூடும். வீஸிங் பிரச்னை உள்ளவர்களுக்கு இவை ஆகவே ஆகாது. வீஸிங், ஆஸ்துமா நோயாளிகள் வீட்டை தூசு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எந்த அளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் வாசனையையும் புகையையும் கிளப்பக்கூடிய சாம்பிராணி, ஊதுவத்தி, கொசுவத்தி, ரூம் ஸ்பிரே போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியதும். பலரும் கொசுவத்திச் சுருள்தான் புகையை வெளியிடும், திரவ வடிவிலான கொசுவிரட்டியும் மேட் வடிவிலானதும் பாதுகாப்பானவை என நினைக்கிறார்கள். இவையும் கொசுவத்திச் சுருள் போன்றவைதான். மிக முக்கியமாக இவை எவையுமே விளம்பரங்களில் காட்டுவது போல கொசுக்களைக் கொல்லப் போவதில்லை. கொசுக்களை வெளியே தள்ள முயலும், அவ்வளவுதான். கொசுக்களிடமிருந்து தப்பிக்க கதவுகள், ஜன்னல்களுக்கு நெட் பொருத்துவதுதான் மிகப் பாதுகாப்பான முறை. கொசுக்களிடமிருந்து தப்பிக்க கதவுகள், ஜன்னல்களுக்கு நெட் பொருத்துவதுதான் மிகப் பாதுகாப்பான முறை. வேறு வழியே இல்லை, கொசுவிரட்டி உபயோகித்தே ஆக வேண்டும் என்பவர்கள், திரவ வடிவிலான கொசுவிரட்டியை உபயோகிக்கலாம். அதை ஆன்செய்துவிட்டு தூங்கக்கூடாது. மலை 6 முதல் இரவு 10 மணி வரை ஆன் செய்துவிட்டு, பிறகு அணைத்துவிட்டே தூங்க வேண்டும். நொச்சி இலை, வேப்பிலை என ஆர்கானிக் பொருள்களே ஆனாலும் அவற்றைக் கொளுத்தும்போது வெளிவரும் புகையானது ஆஸ்துமா, வீஸிங் நோயாளிகளுக்கு நல்லதல்ல. பிரச்னை உள்ளவர்கள் அவற்றைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. எனவே, மூலிகை கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதிலும் கவனம் அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஊதுவத்தியும் சாம்பிராணிப் புகையும் நுரையீரலை பாதிக்குமா?
Doctornet: சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு; உதவிக்கரம் நீட்டும் 'டாக்டர் நெட்'இயக்கம்
சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பு செப்டம்பர் 21 2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை டாக்டர் நெட் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. டாக்டர்நெட் இந்தியா, தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் தக்க விழிப்புணர்வு கிடைக்காத மக்களுக்கும் மருத்துவ வசதிகளை அணுகுவதற்கு, இலாப நோக்கமற்ற அமைப்பாகச் செயல்படுகிறது. டாக்டர்நெட், 600-க்கும் மேற்பட்ட அனுபவமுடைய சேவை நோக்கம் கொண்ட மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து, அரசு காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது மானியங்களின் கீழ் மருத்துவமனைகளில் ஆலோசனை/சிகிச்சை பெறுவதற்கு அவர்களுக்கு வழிகாட்டுகிறது. Doctornet சந்திப்பு டாக்டர்நெட்டின் முக்கிய பலம், சிகிச்சை காலத்தில் வழங்கப்படும் உணர்வுப்பூர்வமான ஆதரவாகும். சுகாதார சேவைகளைப் பின்தங்கிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனம் DoctorNet India, கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தின் 25 மாவட்டங்களில் 2,500க்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடைந்து வருகிறது. “அனைவருக்கும் சுகாதாரம்” என்ற பார்வையுடன் செயல்படும் இந்நிறுவனம், 25க்கும் மேற்பட்ட அடிப்படை சுகாதார மையங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவமனைகள், உளவியல் நிபுணர்களின் தன்னார்வப் பங்களிப்புடன் கிராமப்புற மக்களுக்கு (80%) சிகிச்சை ஆலோசனைகள் வழங்கி வருகிறது. Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்? கோவிட் காலத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 150க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தொலைப்பேசி மருத்துவ ஆலோசனை மற்றும் மனநலம் சார்ந்த சேவைகள் வழங்கப்பட்டதுடன், கர்ப்பிணிப் பெண்கள், புற்றுநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மனப்பூர்வ ஆதரவும் வாழ்வாதார ஆலோசனைகளும் அளிக்கப்பட்டன. சமூகத்தின் பாராட்டைப் பெற்றுள்ள DoctorNet India, சுகாதார சேவைகளில் தமிழகத்தில் சுகாதார சமத்துவத்திற்கு முக்கிய பாலமாகத் திகழ்கிறது. Doctornet சந்திப்பு சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பு, பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள ஒரு சிறிய ஆக்டிவிட்டியுடன் தொடங்கியது. பின்னர், டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவர்களுடைய கேர் டேக்கர் தங்கள் எண்ணங்கள், மற்றவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களைப் பகிர்ந்து கொண்டனர். Health Insurance: மருத்துவக் காப்பீடு பாலிசி எடுக்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய விதிமுறைகள்! அதைத் தொடர்ந்து, சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிறுநீரக நிபுணர் டாக்டர் மதுசங்கர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் – இது இரண்டையும் ஒப்பிடுகையில் ஏன் மக்கள் பெரும்பாலும் அறுவை சிகிச்சை காட்டிலும் டயாலிசிஸ் தேர்வு செய்கிறார்கள் என்பதற்கு மூன்று காரணங்களாகத் தக்க விழிப்புணர்வில்லாமை, செலவில் ஏற்படும் வேறுபாடுகள், சிறுநீரகம் கிடைக்காமை போன்றவற்றைக் கூறினார். Doctornet சந்திப்பு மேலும், 'இந்த இரண்டின் மூலம் வாழ்நாளை நீட்டித்த பிறகு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக எவ்வாறு வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வது நம்முடைய கையில்தான் இருக்கிறது. எனவே காலத்தில் நம் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும்' என்பன குறித்து விரிவாகப் பேசினார். எளிமையான முறையில் வழங்கிய அவரது விளக்கங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு எளிதில் புரிந்தன. நிகழ்ச்சி, கடினமான காலங்களில் உதவியவர்களுக்குப் பங்கேற்பாளர்கள் நன்றி தெரிவித்த நெகிழ்ச்சியான நன்றி அமர்வுடன் முடிவடைந்தது. Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போனால் சூடான எண்ணெய் விடுவது சரியா?!
Doctor Vikatan: தூங்கும்போது சில நேரங்களில் காதுக்குள் பூச்சி புகுந்துவிடுவது நடக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் காதுக்குள் சூடான எண்ணெய் விட்டால் பூச்சி வெளியே வந்துவிடும் என்கிறார்களே, அது சரியா... பூச்சி போனால் வேறு ஏதேனும் பிரச்னை வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ். காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை காதுக்குள் பூச்சி சென்றுவிட்டால் அதற்கான சரியான தீர்வு, காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் சென்று அதை அப்புறப்படுத்துவதுதான். அது நடைமுறையில் சாத்தியம் இல்லாதபோது முதலுதவி செய்து நிவாரணம் பெறலாம். மிதமான சூடுநீரில் உப்பு கலந்து காதுக்குள் விடலாம் அல்லது மிதமான சூட்டில் சுத்தமான எண்ணெய் விடலாம். நீர் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். அதிகம் சூடு இல்லாமல் இருப்பது மிக அவசியம். இவ்வாறு செய்வதால் பூச்சி வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்; அப்படி பூச்சி வெளியேறாவிட்டாலும் அது இறந்து விடுவதால் காது ஜவ்வைக் கடிப்பது போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. மருத்துவரிடம் சென்று காண்பிக்கும் வரை நமக்கு சிறிது நேரம் கிடைக்கும். பூச்சி வெளியேறாவிட்டாலும் அது இறந்து விடுவதால் காது ஜவ்வைக் கடிப்பது போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. Doctor Vikatan: ஸ்பீக்கர் சத்தத்தில் அடைத்துக்கொண்ட காது... பிரச்னையாகுமா, தடுக்க முடியுமா? காதிலிருந்து சீழ் அல்லது நீர் ஏற்கெனவே வந்திருந்தாலோ அல்லது காது ஜவ்வில் ஓட்டை இருப்பது மருத்துவர் மூலம் தெரிந்திருந்தாலோ, காதுக்குள் நீர் அல்லது எண்ணெய் ஊற்றாமல் இருப்பது மிக அவசியம். மருத்துவர் பரிந்துரையின் பேரில் வாங்கிவைத்த, காதுக்குள் விடும் சொட்டு மருந்து இருந்தால் அதை எமர்ஜென்சியாக பயன்படுத்தலாம். காதுக்குள் பூச்சிகள் செல்வதால் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எறும்பு, சின்ன வண்டு போன்ற பூச்சிகள் காதுக்குள் சென்று காது ஜவ்வு அல்லது சருமப் பகுதியைக் கடிப்பதால் வலி அல்லது ரத்தக் கசிவு ஏற்படலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
அழகு முதல் ஆரோக்கியம் வரை; சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காதீங்க!
வெளிநாட்டிலிருந்து தினம் ஓர் உணவு நம்மூருக்கு வருகிறது. ஆனாலும் நம்மூர் சாதம் வடித்த கஞ்சிக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. இரண்டு வெங்காயம் அல்லது கொஞ்சம் துவையலோடு கஞ்சி இருந்தால் வரம். “கஞ்சி என்பது வெறும் ஆகாரம் மட்டுமல்ல... ஆரோக்கிய பானமும்கூட. முகப்பொலிவு, கூந்தல் பராமரிப்புக்கும்கூட உதவும்’’ என்கிறார் டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ். சாதம் வடித்த கஞ்சியின் ஆரோக்கிய பலன்கள் சாதம் வடித்த கஞ்சியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? ''சாதம் வடித்த கஞ்சியில் மாவுச்சத்து அதிகம். புரதச்சத்தும் சிறிதளவு இருக்கிறது. அதே நேரம், தவிடு சேர்ந்த அரிசியில் வடித்த கஞ்சியில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி, இனோசிட்டால், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன. சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி சாதத்தில் செய்யப்பட்ட கஞ்சியில், வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. சாதம் வடித்த கஞ்சியைப் புளிக்கவைத்து மறுநாள் சாப்பிட்டால், அது கூடுதல் நன்மைகளைத் தரும். யாரெல்லாம் சாதம் வடித்த கஞ்சியை அருந்தலாம்? திரவ உணவாக இருப்பதால் மென்று சாப்பிட வாய்ப்பில்லாமல் அப்படியே விழுங்குவோம்; அது மிக விரைவாக செரிமானமாகிவிடும். மென்று சாப்பிட முடியாதவர்கள், விழுங்க முடியாதவர்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் உடல்நலமில்லாதவர்கள் மட்டுமே சாதம் வடித்த கஞ்சியை அருந்த வேண்டும். உடனடி எனர்ஜி கிடைக்கும். சாதம் வடித்த கஞ்சியும் அழகும்... சாதம் வடித்த கஞ்சியும் அழகும்... ரசாயனம் தெளிக்கப்படாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசியில் வடித்த கஞ்சியைத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாகும். இந்தக் கஞ்சியை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகும். சாமந்தி முதல் செம்பருத்தி வரை.. சருமம், கேசத்துக்கு அழகு தரும் பூக்கள்! I Visual Story இதில் கவனமாக இருங்கள்..! ஆரோக்கியமான உடல்நலத்தோடு இருப்பவர்கள் கஞ்சி குடித்ததும், அதற்கேற்ப உடல் உழைப்பு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கொழுப்பு சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! யார் சாதம் வடித்த கஞ்சியைக் குடிக்கக்கூடாது? 'கிளைசெமிக் இண்டெக்ஸ்’ அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மட்டும் கண்டிப்பாக கஞ்சியைத் தவிர்க்க வேண்டும். பருமனாக இருப்பவர்களும் கஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.'' சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: நடிகர் ரோபோ சங்கரை பாதித்த மஞ்சள் காமாலை பயங்கர நோயா? - தீர்வு என்ன?
Doctor Vikatan: மஞ்சள் காமாலை தீவிரமாகி, நடிகர் ரோபோ சங்கர் இறந்திருக்கிறார். மஞ்சள் காமாலை பாதிப்பில் உயிரிழக்கும் நபர்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது அவ்வளவு பயங்கர நோயா... வராமல் தடுக்க, வந்த பின் குணப்படுத்த என்ன வழி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி நோய்களில் எதுவும் சாதாரணமானதோ, பயங்கரமானதோ கிடையாது. சாதாரண இருமல், சளி, காய்ச்சல்கூட மிகத் தீவிரமான நோயாக மாறலாம். மிகத் தீவிரமான நோய்கள், சில சமயங்களில் சாதாரணமாக கடந்து போகலாம். இரண்டுமே நம் உடலியக்கம் சார்ந்தவை. நடிகர் ரோபோ சங்கர், தனக்கு மஞ்சள் காமாலை பாதித்தது குறித்து பல இடங்களில் பேசியிருக்கிறார். மஞ்சள் காமாலையை ஆங்கிலத்தில் 'ஹெப்படைட்டிஸ்' ( Hepatitis) என்று சொல்வோம். வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் இந்த பாதிப்பில், ஹெப்படைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ என பல வகைகள் உள்ளன. இவற்றில் ஹெப்படைட்டிஸ் ஏ பாதிப்புதான், பரவலாக காணப்பட்டது. அதுதான் நாம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய மஞ்சள் காமாலை பாதிப்பு. இது குடிநீர் சுத்தமாக இல்லாததால் பாதிக்கக்கூடியது. உடல் மெலிவது, வாந்தி வருவது, பசியின்மை, கண்களும் நகங்களும் மஞ்சளாக மாறுவது போன்ற அறிகுறிகளைக் காட்டும். இந்த வகை பாதிப்புக்கு இன்று தடுப்பூசி வந்துவிட்டது. பெரும்பாலானவர்கள் அதைத் தவறாமல் போட்டுக்கொள்கிறார்கள். உடல் மெலிவது, வாந்தி வருவது, பசியின்மை, கண்களும் நகங்களும் மஞ்சளாக மாறுவது போன்ற அறிகுறிகளைக் காட்டும். ஹெப்படைட்டிஸின் மற்ற பிரிவுகள் ரத்தம் மூலம் பரவக்கூடியவை. உதாரணத்துக்கு, ஹெப்படைட்டிஸ் பி பாதித்த ஒருவருக்குப் பயன்படுத்திய அதே ஊசியை இன்னொருவருக்கும் பயன்படுத்தும்போது அவருக்கும் அந்த நோய் பரவும். இந்த பாதிப்புக்கும் தடுப்பூசி இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் எல்லோருக்கும் இந்தத் தடுப்பூசியும் போடப்படுகிறது. அதேபோல மருத்துவத் துறையில் முன்களப் பணியாளர்களாக வேலை செய்வோருக்கும் இந்தத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெப்படைட்டிஸ் சி, டி, இ போன்றவை பாதித்தால், குணப்படுத்துவது மிகமிக சிரமம். இவற்றுக்கான மருந்துகளும் குறைவு. இவற்றை எல்லாம் தாண்டி, இன்னொரு வகை பாதிப்பும் உண்டு. அது 'ஆல்கஹாலிக் ஹெப்படைட்டிஸ்' (Alcoholic hepatitis) எனப்படும். குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு வரக்கூடிய பிரச்னை இது. குடிப்பழக்கம் அதிகரித்து வருவதால், இந்த பாதிப்பும் இன்று பலரையும் பாதிப்பதைப் பார்க்கிறோம். அதனால் ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ் (Alcoholic liver disease) எனப்படும் இந்த பாதிப்பும் இப்போது பரவலாகி வருகிறது. இது தீவிரமானால், நாளடைவில் 'சிரோசிஸ்' (Cirrhosis) எனப்படும் கல்லீரல் சுருக்க நோயை ஏற்படுத்தலாம். குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு வரக்கூடிய பிரச்னை இது. Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பது ஏன்... எப்போது சரியாகும்? இந்த பாதிப்பு வந்துவிட்டால், ரிவர்ஸ் செய்யவே முடியாது. சிரோசிஸ் பாதித்தால், கல்லீரல் தொடர்பான பிற பாதிப்புகளும் தாக்கலாம். உதாரணத்துக்கு, Hepatitis encephalopathy என்ற பாதிப்பு வரலாம். இதில் மூளையின் செயல்பாடுகள் குறையும். வலிப்பு வரலாம். மல்ட்டி ஆர்கன் ஃபெயிலியர் எனப்படும் உடலின் பிற உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும். அதேபோல, சிரோசிஸ் பாதித்தவர்களுக்கு hepatocellular carcinoma எனப்படும் கல்லீரல் புற்றுநோய் தாக்கும் ரிஸ்க்கும் உண்டு. எனவே, சாதாரண மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் வரை கொண்டு போகலாம். அடுத்தது கல்லீரலில் கொழுப்பு படியும் 'ஃபேட்டி லிவர்' பாதிப்பு. இது நாளடைவில், 'நாஷ்' (Non-alcoholic steatohepatitis -NASH) பிரச்னையை ஏற்படுத்தலாம். நீரிழிவு உள்ளோர், உடல் பருமனால் பாதிக்கப்பட்டோர், உணவுப்பழக்கம் முறையற்று இருப்போர் போன்றோருக்கு ஃபேட்டி லிவர் பாதிப்பு வரலாம். ஃபேட்டி லிவர், நாளடைவில், நாஷ் பாதிப்பாக மாறும். அது சிரோசிஸ் அல்லது புற்றுநோய் பாதிப்புகளில் கொண்டுவிடலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. கல்லீரல் பாதிப்பு குடல் நலம் 29: குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பது ஏன்? எனவே, மஞ்சள் காமாலை வந்தால் பச்சிலை வைத்தியம் செய்வது, மூலிகை ஜூஸ் குடிப்பது போன்றவை உதவாது. மஞ்சள் காமாலை என்பது பல பிரிவுகளை உள்ளடக்கியது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவித அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். அது எந்த வகை பாதிப்பு என்பதை முறையான மருத்துவரிடம் ஆலோசித்து, சரியான சிகிச்சையை எடுப்பதுதான் பாதுகாப்பானது. அலட்சியம் காட்டினால், ஆபத்து என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vitamin Tale: நம்ம உடம்புக்குள்ள இருக்கிற ஓர் இளவரசியோட கதை இது!
எத்தனையோ கதைகளைப் படிச்சிருப்பீங்க. ஒரு வைட்டமினோட கதையைப் படிச்சிருக்கீங்களா..? இன்னிக்கு ஒரு வைட்டமினோட கதையை சொல்லப் போறோம். அதுவோர் அழகான பிங்க் நிற இளவரசி. இந்தக் கதையை சொன்னவர் சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் பாசுமணி. இனி கதைக்குள்ள போவோமா..? Vitamin Tale பிங்க் நிறத்துல அவ்ளோ அழகாக இருக்கும்! அந்த அழகான இளவரசியோட பேரு வைட்டமின் பி 12. முழுப்பேர் கோபாலமின். இந்த உலகத்துலேயே மிக அழகான மெட்டல் இந்த கோபாலமின்தாங்க. பிங்க் நிறத்துல மாணிக்கம் மாதிரி அவ்ளோ அழகாக இருக்கும். நம்மளோட ரெண்டு முன்னோர்கள் வைட்டமின் பி 12-ஐ உற்பத்தி பண்றாங்க. ஒண்ணு நட்சத்திரங்கள். இன்னொண்ணு பாக்டீரியாக்கள். நாம நட்சத்திரங்கள் பக்கமா போயிடுவோம். அதுதாங்க மிகப்பெரிய த்ரில்லர் கதை! ஏதோவொரு காலத்துல சில நட்சத்திரங்கள் உப்பி உடையுறப்போ, வெளிப்பட்ட துகள்கள்லதான் கோபால்ட் அப்படிங்கிற தனிமம் இருந்துச்சு. எப்படி தங்கம் ஒரு குறிப்பிட்ட அளவுதான் மண்ணுல இருக்குதோ, அதே மாதிரி இந்த கோபால்ட்டும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருக்கும். மண்ணுல வளர்ற புல்லுல, தாவரங்கள்ல இந்த கோபால்ட்டும் இருக்கும். ஆடு, மாடு மாதிரி தாவரங்களைச் சாப்பிட்டு உயிர் வாழுற உயிர்கள், அவற்றுல இருக்கிற கோபால்ட்டை எடுத்து கோபாலமினை உற்பத்தி பண்ணும். அந்த கால்நடைகளோட பாலையோ அல்லது இறைச்சியையோ அல்லது அதுங்களோட ஈரலையோ நாம சாப்பிடுறது மூலமா நமக்கு கோபாலமின் கிடைக்குது. இந்தளவுக்கு பொக்கிஷமா கிடைக்கிற பி 12- ஐ நம்ம உடம்பு கிரகிக்கப் படுற பாடு இருக்கே... அதுதாங்க ஒரு மிகப்பெரிய த்ரில்லர் கதை. Vitamin Tale இளவரசியோட பயணம் வைட்டமின் பி 12-ங்கிற இளவரசி நம்ம உணவுல இருக்கிறப்போ, பள்ளிப் பருவத்துல இருக்கிறா. இந்த இளவரசி நம்ம இரைப்பைக்குள்ள போகணும்னா, நம்ம உமிழ்நீர்ல இருக்கிற 'ஆர் ஃபேக்டர்' அப்படிங்கிற ஒரு பள்ளிப்பருவத் தோழனோட உதவி வேணும். ஏன் தெரியுமா..? இரைப்பைங்கிற அமில தொழிற்சாலைக்குள்ள அரைச்ச உணவுகள்ல இருக்கிற வைட்டமின் பி 12 இளவரசி, அதுல இருந்து பிரிஞ்சி தனியா அம்போன்னு நிற்பா. தனியா நிற்கிற பி 12 இளவரசியோட கையை இந்த 'ஆர் ஃபேக்டர்'-ங்கிற விளையாட்டுத்தோழன் பிடிச்சிக்கிட்டா தான், இளவரசியோட பயணம் தொடரும். இல்லைன்னா, இளவரசியோட வாழ்க்கை அந்த இடத்துலேயே முடிஞ்சிடும். தோழன் 'ஆர் ஃபேக்டர்' இரைப்பைக்குள்ள தன்னோட தோழன் 'ஆர் ஃபேக்டரோட' பாதுகாப்புல இருக்கிற பி 12 இளவரசி, கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் கழிச்சி, அவனோடவே சேர்ந்து சிறுகுடலோட ஆரம்ப பகுதிக்கு வருவா. இந்த இடம் பி 12-ஓட கல்லூரிப்பருவம். அங்க சிறுகுடலைவிட பல பல கோடிக்கணக்குல பாக்டீரியா வில்லன்கள் இருக்கும். அங்க போயிட்டா பி 12 இளவரசி கதை முடிஞ்சு போச்சி. இங்கதான் ட்விஸ்ட்டே. மறுபடியும் தனியா நிற்பா இளவரசி. இந்த இடத்துல வேற சில ஆபத்துகள் காத்திருக்கும் பி 12 இளவரசிக்கு. கணையத்துல சுரக்கிற நீர் இவளை அழிச்சிடலாம். பித்த நீர் சுரந்து வர்றதால சூழ்நிலை மாறலாம். இந்தப் போராட்டத்துல, தன்னோட பள்ளிப்பருவ தோழனை இழந்து மறுபடியும் தனியா நிற்பா பி 12 இளவரசி. இளவரசியும், பெஸ்ட்டியும் மீட் பண்ணியிருக்க மாட்டாங்க. இந்த நேரத்துல பெஸ்ட்டி ஒருத்தர் வருவார். அவர் பேரு இன்டென்சிவ் ஃபேக்டர். இவரும் ஓர் இன்ட் ரஸ்ட்டிங் கேரக்டர்தான். இரைப்பையில இருக்கிற அமிலங்கள் உணவுல இருக்கிற பி 12-ஐ பிரிச்செடுக்கும் இல்லியா..? அதே அமிலங்கள்ல இருந்து உற்பத்தியானவர்தான் இந்த பெஸ்ட்டி. ஆனா, இரைப்பையில இருக்கிறப்போ பி 12 இளவரசியும், இந்த பெஸ்ட்டியும் ஒருத்தரையொருத்தர் மீட் பண்ணியிருக்க மாட்டாங்க. சில படங்கள்ல ஹீரோ, ஹீரோயின் பக்கத்து பக்கத்து வீட்லேயே இருப்பாங்க. ஆனா, பாதி படம் வரைக்கும் மீட் பண்ணியிருக்க மாட்டாங்க. அந்த மாதிரி வெச்சுக்கலாம். ஆனா, இவர் பெஸ்ட்டி. Vitamin Tales இளவரசியை சாப்பிட கோடிக்கணக்குல வில்லன்கள் இருக்கும். சரி, இரைப்பையில இருந்து சிறுகுடலோட ஆரம்ப பகுதிக்கு இளவரசி வருவான்னு மேலே இருக்கிற பத்தியில சொல்லியிருந்தேன் இல்லியா..? 7 முதல் 8 மீட்டர் நீளம் இருக்கிற சிறுகுடல்ல எக்கச்சக்க சுரப்புகள் நடக்கும். கூடவே, ஸ்கேட்டிங் மாதிரி சும்மா சர்ரு சர்ருன்னு ஏகப்பட்ட அலைபாயல்கள் வேற இருக்கும். கூடவே பி 12 இளவரசி கிடைச்சா சாப்பிட்டு ஏப்பம் விடுறதுக்கு கோடிக்கணக்குல வில்லன்கள் வேற இருக்கும்க. எல்லாம் பாக்டீரியாக்கள் தாங்க. இத்தனை ஆபத்துகள்ல இருந்தும் பி 12 இளவரசியைக் காப்பாத்துறது இந்த பெஸ்ட்டிதான். இப்படியே இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா கையைப் பிடிச்சிக்கிட்டு சிறுகுடலோட கடைசிப்பகுதி வரைக்கும் போவாங்க. இங்க தான் செம்ம க்ளைமேக்ஸ் இருக்கு..! Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! இளவரசியை மட்டும் அது கண்டுக்கவே கண்டுக்காது. உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மாதிரியான சத்துகளை தன்னோட ஆரம்ப பகுதியிலேயே சிறுகுடல் எடுத்துக்கும். ஆனா, அழகான, அரிதான இந்த பி 12 இளவரசியை மட்டும் அது கண்டுக்கவே கண்டுக்காது. சிறுகுடலைத் தாண்டி பெருங்குடல்ல பி 12 இளவரசி குதிச்சிட்டா, இதுவரைக்கும் பட்ட கஷ்டம் எல்லாமே வீணா போயிடும். ஏன்னா, அதுவோர் உப்புக்கடல். அங்க சிறுகுடலைவிட பல பல கோடிக்கணக்குல பாக்டீரியா வில்லன்கள் இருக்கும். அங்க போயிட்டா பி 12 இளவரசி கதை முடிஞ்சு போச்சி. இங்கதான் ட்விஸ்ட்டே. Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா? 'வாங்க இளவரசி'னு உள்ளே கூப்பிடும். சிறுகுடலோ கடைசிப்பகுதியில பி 12-க்காகவே காத்துக்கிட்டிருக்கிற இன்னொரு ரெசப்டார், தன்னோட கதவுகளைத் திறந்து 'வாங்க இளவரசி. உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம்'னு உள்ளே கூப்பிடும். தன் பெஸ்ட்டியோட அதுக்குள்ளே நுழையும் பி 12. ஆனா, இளவரசிக்கூட அதுக்கு மேல டிராவல் பண்ற வாய்ப்பு பெஸ்ட்டிக்கு கிடையாது. பெஸ்ட்டியை உடல் அழிச்சிடும். அங்க 'டிரான்ஸ்கோபாலமைன்' அப்படிங்கிற ஒரு ஹீரோ இருப்பார். அவர்கூட கைகோத்துக்கிட்டு ரத்தத்துல பயணம் பண்ணி, கல்லீரலுக்கு வந்து சேருவாங்க பி 12 இளவரசி. இதுக்கப்புறம் கல்லீரல் இளவரசியை பத்திரமா சேமிச்சு வெச்சுக்கிட்டு, மூளைக்கும், ரத்த செல்களை உற்பத்தி செய்ய எலும்பு மஜ்ஜைக்கும் அனுப்பும். ஸோ, நட்சத்திர வெடிப்புல ஆரம்பிச்சு நம்மோட கல்லீரல் வரைக்கும் வந்து சேர பி 12 இத்தனை கஷ்டங்களை சந்திக்குது. அது நமக்கு சத்தா கிடைக்க நம்ம உடம்பு அதைவிட படாத பாடு படுது. இதுதான் பி 12 இளவரசியோட கதை. இந்த இளவரசி இருக்கிற உணவுகளை சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு
ம னித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல். நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, பொருத்தி மறுவாழ்வு பெற முடியும். இவ்வளவு சிறப்புகளை உடைய கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் கல்லீரல் சிகிச்சை மருத்துவர் விவேக். விலா எலும்பின் வலதுபுறத்தில் 1.2 முதல் 1.5 கிலோவரையிலான எடையுடன் கல்லீரல் அமைந்திருக்கும். இதில் 50 சதவிகித அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள் வெளியே தெரியும். மஞ்சள்காமாலை, கால் வீக்கம், வயிற்று வீக்கம், ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், 50 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். 50 சதவிகிதத்துக்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தானே சரிசெய்துகொள்ள கல்லீரல் போராடும். மதுப்பழக்கத்தால் கல்லீரல்நோய் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டாலே கல்லீரல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். கல்லீரலின் வேலை என்ன? உ டலில் 500 வகையான வேலைகளை இது செய்கிறது. செரிமானத்துக்கு உதவும் பித்தநீரும், ரத்தம் உறைவதற்கான ரசாயனமும் கல்லீரலிலிருந்துதான் சுரக்கின்றன. நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துகளைச் சேகரித்துவைக்கும் தன்மை கல்லீரலுக்கு உண்டு. சில நேரங்களில் உணவுகளைத் தவிர்க்கும்போதும் உண்ணாவிரதம், நோன்பு இருக்கும்போதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை, சேமித்துவைத்திருக்கும் சத்துகளிலிருந்து அளித்து ஈடுசெய்யும். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்வதால் கல்லீரலை, `பெரிய தொழிற்சாலை’ என்றே குறிப்பிடலாம். கல்லீரலை பாதிக்கும் நோய்கள் ந ம் நாட்டில் 100 சதவிகித கல்லீரல் நோயாளிகளில் 75 சதவிகிதம் பேருக்கு மது குடிப்பதால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. `ஹெபடைட்டிஸ்’ வைரஸ்களால் (Hepatitis A,B,C,D,E) `கல்லீரல் அழற்சிநோய்’ (Hepatitis), `கல்லீரல் கொழுப்புநோய்’ (Fatty Liver Disease), கல்லீரல் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தாமிரத்தை வெளியேற்ற முடியாதநிலையான `வில்சன் நோய்’ (Wilson’s Disease), இரும்புச்சத்து அதிகமாகச் சேரும் ‘அயர்ன் மெட்டபாலிஸம்’ (Iron Metabolism) எனக் கல்லீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் இருக்கின்றன. காசநோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி உட்கொண்டாலும் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. சில வகை விஷங்களும் கல்லீரலைக் கடுமையாக பாதிக்கும். கல்லீரல் அழற்சி நோய் பொ துவாக, ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பு, `கல்லீரல் அழற்சி’ எனப்படுகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, ஈ என ஐந்து வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்கள் பரவும் முறை, தடுப்பு முறை, சிகிச்சை முறைகள் ஒன்றாக இருக்கும். அதேபோல ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவுவதிலிருந்து அனைத்தும் ஒன்றாக இருக்கும். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் இ ந்த இரண்டு வைரஸ்களும் அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுவழியாகப் பரவக்கூடியவை. மஞ்சள்காமாலை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஓரிரு வாரங்களில் குணமாகிவிடும். இந்த வைரஸ் தாக்குதலால் `கல்லீரல் செயலிழப்பு’ (Acute Liver Failure) அரிதாகவே ஏற்படும். பாதிப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் ஈ-க்கு தடுப்பூசி கிடையாது. ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் ஹெ படைட்டிஸ் பி, சி ஆகிய இரண்டும் மிகக்கொடிய வைரஸ்கள். உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். சுகாதாரமற்ற ரத்தத்தை ஏற்றுவது, ஒரே ஊசியைப் பலருக்குப் போடுவது, ஒரே ஊசியைக்கொண்டு பலருக்குப் பச்சை குத்துவது, ஒருவர் பயன்படுத்திய டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர் போன்ற பொருள்களை மற்றவர் பயன்படுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற காரணங்களால் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். பா திக்கப்பட்ட தாயிடமிருந்தும் குழந்தைக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த இரு வைரஸ்களும் ஒருமுறை உடலுக்குள் சென்றுவிட்டால் அவற்றை அகற்றவே முடியாது. கல்லீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் சுருக்கத்துக்கான (Cirrhosis) மூல காரணமாக ஹெபடைட்டிஸ் பி, சி போன்ற வைரஸ்கள் இருக்கின்றன. இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம் பேர் இந்த இருவகை வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை தாக்கினால் எந்தவித அறிகுறியும் தென்படாது. ரத்தப் பரிசோதனை மூலம்தான் கண்டறிய முடியும். இந்த இரு வைரஸ்களுமே கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புகளை மாத்திரை, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் சி பாதிப்பைத் தடுக்க, தடுப்பூசி கிடையாது. கல்லீரல் சுருக்கம் (Cirrhosis) க ல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் அதிகரிக்கும்போது கல்லீரலிலிருக்கும் செல்கள் செயலிழந்துவிடும். அந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டு கல்லீரலை இழுக்க ஆரம்பிக்கும். இதனால் அது சுருங்கத் தொடங்கும். இதுதான் கல்லீரல் சுருக்கநோய். கல்லீரல் சுருக்கத்துக்கு முந்தையநிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த நிலையில் உடல் சோர்வு, பசியின்மை, மன அழுத்தம், வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். `ஃபைப்ரோ ஸ்கேன்’ மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்க முடியும். கல்லீரலில் சுருக்கம் தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். கல்லீரல் கொழுப்புநோய் க ல்லீரலின் உள்ளே கொழுப்பு அதிகமாகப் படிவதால் ஏற்படுவது கல்லீரல் கொழுப்புநோய். ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொள்வது, அதிக அளவு உணவு உட்கொள்வது, உடற்பயிற்சியில் ஈடுபடாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள். போதிய உடற்பயிற்சி இல்லாததால், சாப்பிடும் உணவு கொழுப்பாக மாறி கல்லீரலுக்குள் சேரும். கொழுப்பின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அதில் வீக்கம் ஏற்படும். இது `நாஷ்’ (Nonalcoholic Steatohepatitis - NASH) என்று அழைக்கப்படுகிறது. இ ந்தியர்கள் பெரும்பாலும் அரிசி, மைதா, சர்க்கரை உள்ளிட்ட உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இந்த உணவுகளிலிருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறி கல்லீரலில் படியும். கல்லீரலைப் பரிசோதித்து, அதில் வீக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவந்தால், கல்லீரலிலுள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால் பாதிப்புகள் சரியாக வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் வீக்கத்துக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. சர்க்கரை நோயாளிகளுக்கு வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அதன் தீவிரமும் அதிகமாக இருக்கும். கல்லீரல் புற்றுநோய் இ ந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் 15 நோய்களின் பட்டியலில் கல்லீரல் புற்றுநோய் 8-வது இடத்தில் இருக்கிறது. கல்லீரலில் ஏதாவது ஒரு மூலையில் புற்றுநோய் தோன்றும். இதைத் தொடக்கநிலையிலேயே கண்டறிவது மிகவும் கடினம். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10-ல் 9 பேர் நோய் முற்றியநிலையில்தான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஏற்கெனவே கல்லீரலில் பாதிப்பு இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிக்க 70 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டால் புற்றுநோய் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்படும். கல்லீரல் சுருங்க ஆரம்பித்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்கேனும் செய்ய வேண்டியது அவசியம். அதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும். வில்சன் நோய் ம னிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துகளும் உலோகங்களும் மிகவும் அவசியம். ஆனால், இவை தேவையான அளவு மட்டுமே இருக்க வேண்டும். உலோகங்களின் அளவு அதிகரிக்கும்போதும் வெவ்வேறு பாதிப்புகள் உண்டாகும். உடலில் தாமிரம் (Copper) தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்பே `வில்சன் நோய்.’ முதன்முதலில் இந்த பாதிப்பைக் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன். அவரது பெயரிலேயே இந்த பாதிப்பும் அழைக்கப்படுகிறது. நா ம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மூலம் உடலுக்குத் தேவையான தாமிரம் கிடைத்துவிடும். அது ரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையும். கல்லீரலில் உற்பத்தியாகும் `செருலோபிளாஸ்மின்’ (Ceruloplasmin) எனும் புரதம் உடலுக்குத் தேவையான தாமிரத்தை எடுத்துக்கொண்டு, மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும். இந்தப் புரதம் சரியான அளவு சுரக்காவிட்டால் கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் ஆகியவற்றில் தாமிரம் ஆங்காங்கே தங்கிவிடும். கல்லீரலில் தாமிரம் அதிகமாகச் சேரும்போது மஞ்சள்காமாலை, வாந்தி, அடிவயிற்றில் நீர்கோத்தல், கால்வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். க ல்லீரல் செயலிழப்பு 10, 15 வயதிலேயே ஏற்பட்டால் அதற்கு வில்சன் நோய்தான் மூல காரணமாக இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டு கல்லீரல் சுருக்கம் உருவாவதற்கு முன்னரே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், குறிப்பிட்ட சில மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம். பிரச்னை தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மாற்றிப் பொருத்தப்படும் புதிய கல்லீரலில் `செருலோபிளாஸ்மின்’ சரியாகச் சுரந்து, தாமிரம் படிவது தடுத்து நிறுத்தப்படும். அயர்ன் மெட்டபாலிஸம் சி லருக்குப் பிறக்கும்போதே மரபணு பிரச்னைகளால் இதயம், கணையம், கல்லீரல், மூட்டு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து சேர ஆரம்பித்துவிடும். இதைத்தான் `அயர்ன் மெட்டபாலிஸம்’ என்கிறோம். அதனால் இதயம், கணையம், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், சர்க்கரைநோய் ஆகியவை ஏற்படும். சருமம் கறுத்துப்போதல், கால் மற்றும் வயிற்று வீக்கம், மஞ்சள்காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படும். இவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இரும்புச்சத்து அதிகமாகச் சேர்வதைத் தடுக்க `டிஃபெராக்ஸமைன்’ (Deferoxamine) என்ற மருந்து பரிந்துரைக்கப்படும். இந்தப் பிரச்னையால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்போது குறிப்பிட்டகால இடைவெளிகளில் குறிப்பிட்ட அளவு ரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். கல்லீரல் மாற்று சிகிச்சை எப்போது அவசியம்? பி ரச்னைக்கான அறிகுறிகள் வெளியே தெரிந்தாலே 50 சதவிகிதத்துக்கும் மேல் கல்லீரல் பாதிப்படைந்துவிட்டது என்று பொருள். இத்தனை சதவிகிதம் பாதிப்புக்குத்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. ரத்த வாந்தி, வயிற்றில் நீர்க்கோத்தல், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் பிரச்னையால் சிறுநீரகம் பாதிப்படைவது (Hepatorenal Syndrome) மற்றும் நுரையீரல் பாதிப்பு (Pulmonary Syndrome) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். `மெல்டு ஸ்கோர்’ ஒ ரு நோயாளியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையைக்கொண்டு கல்லீரல் பாதிப்புக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். அது `மெல்டு ஸ்கோர்’ (Meld Score - Model for End Stage Liver Disease) என்று அழைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் வரம்பு 6 - 40வரை இருக்கும். அதில் நோயாளியின் மதிப்பெண் 15-ஐத் தாண்டிவிட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான வெற்றி விகிதம் 90 சதவிகிதமாக இருக்கிறது. மூ ளைச்சாவு அடைந்த நபரிடம் தானம் பெற்று அல்லது உயிருடன் இருப்பவர்களிடமிருந்து தானம் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. உயிருடன் இருப்பவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளைப் பரிசோதனை செய்து, ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே கல்லீரலை தானம் பெற முடியும். தானம் அளிப்பவர்களிடமிருந்து 65 சதவிகிதம் கல்லீரல் பெறப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்படும். கல்லீரல் தானம் கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் மூன்று வாரங்களிலேயே கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும். மஞ்சள்காமாலை ம ஞ்சள்காமாலை என்பது நோயல்ல. கல்லீரல் புற்றுநோய், பித்தப்பையில் கற்கள், பித்தக்குழாயில் புற்றுநோய், கணையத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறிகுறி. கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் அடைத்துக்கொள்வோருக்கும், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புக்குள்ளானோருக்கும், காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சிலருக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். மதுப்பழக்கம் உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், விஷம் உட்கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படலாம். ரத்தப் பரிசோதனைகள் மூலம் மஞ்சள்காமாலை பாதிப்பு உறுதிசெய்யப்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு! ர த்த செல்கள் உடைவதால், பிறந்த குழந்தைகளுக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு `போட்டோதெரபி’ (Phototherapy) எனப்படும் ஒளி சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சிகிச்சையில் பாதிப்பு சரியாகவில்லையென்றால் `பைலரி அட்ரீசியா’ (Biliary Atresia) என்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். உடலில் கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேற ஒரு குழாய் உண்டு. அதை, `பித்தக்குழாய்’ என்போம். அந்தக் குழாய் குடலில் சென்று இணையும். சில குழந்தைகளுக்கு கல்லீரலின் உள்ளே இருக்கும் பித்தக்குழாய் சரியாக வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால், வெளியே இருக்கும் பித்தக்குழாய் வளர்ச்சியடையாமல் காணப்படும். இதனால் கல்லீரலுக்குள்ளேயே பித்தம் தங்கிவிடும். க ல்லீரலிலிருந்து குடலுக்குப் பித்தம் வெளியேற்றப்படாது என்பதால், குழந்தையின் மலம் வெளிறிய நிறத்தில் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், ‘ஹைடா ஸ்கேன்’ (HIDA Scan) செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு குழந்தை பிறந்து 100 நாள்களுக்குள் கல்லீரலுக்கு வெளியே இருக்கும் பித்தக்குழாயை குடலுடன் இணைக்கும் `கசாய்’ (KASAI) என்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தை பிறந்து 100 நாள்கள் தாண்டிவிட்டன அல்லது கசாய் சிகிச்சை பலனளிக்கவில்லையென்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. மதுப்பழக்கமும் கல்லீரலும்! இ யல்பாகவே கல்லீரலுக்கு சகிப்புத் தன்மை உண்டு. அதனால் மது அருந்தும்போது அதை மருந்தாகக் கருத்தில்கொண்டு வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்திவிடும். அளவுக்கு மீறிக் குடிக்கும்போது கல்லீரலிலுள்ள செல்கள் அழிந்துபோகும். இதனால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு கல்லீரலில் வீக்கம் ஏற்படும். இந்த நிலையை `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ (Alcoholic Liver Disease) என்கிறோம். இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். கல்லீரல் கொழுப்புநோயைப்போலவே `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ பாதிப்பிலிருந்தும் முழுமையாக மீள்வதற்கு வாய்ப்பு உண்டு. கல்லீரலில் வீக்கம் இருப்பது தெரியவந்தால் குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். அப்போது அழிந்துபோன செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்கி கல்லீரல் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும். இந்த வாய்ப்பைக் கல்லீரலுக்கு வழங்க வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஒரு துளிகூட மது அருந்தாமல் தவிர்த்தால், ஆரோக்கியமான கல்லீரலைத் திரும்பப் பெறலாம். சோஷியல் டிரிங்கிங் மே ற்கத்திய நாடுகளில் வார இறுதி நாள்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் (சோஷியல் டிரிங்கிங்) உண்டு. மேற்கத்திய கலாசாரம் இந்தியாவிலும் பரவி, அதேபோல மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களைவிட இந்தியர்கள் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் இந்தியர்களிடையே கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் நகரத்திலுள்ள பெண்களையும் மதுப்பழக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். தவிர்க்க வேண்டியவை கா ர்போஹைட்ரேட் நிறைந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, மைதா போன்ற உணவு வகைகளைக் குறைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த பூரி, வடை போன்ற பதார்த்தங்கள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். கல்லீரல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லீரலில் பிரச்னை இருக்கும்போது வேறு பாதிப்புகளுக்கு மருந்து எடுக்க வேண்டியிருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே அவற்றைச் சாப்பிட வேண்டும். இரவில் தாமதமாகச் சாப்பிடுவது கல்லீரலை பாதிக்குமா? கல்லீரல் கொழுப்புநோய் வருவதற்கான முக்கியக் காரணமே இரவில் தாமதமாகச் சாப்பிடுவதுதான். ‘காலையில் அரசனைப்போலவும், இரவில் பிச்சைக்காரனைப்போலவும் சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடையைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, இரவில் எளிதாகச் செரிமானமாகும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு வருமா? கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மதுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். இத்தகையோர் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களாகவோ, உடற்பயிற்சி செய்யாதவர்களாகவோ இருந்தால் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் கொழுப்புநோய் ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவையே கல்லீரலைப் பாதுகாக்கும் வழிகள். கீழாநெல்லி வேர் மஞ்சள்காமாலையை குணப்படுத்துமா? `மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி வேர் மருந்து’ என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் கீழாநெல்லி வேர் என்பது ஆதரவு மருந்தாகத்தான் (Supportive Medicine) வழங்கப்படுகிறது என்பதால் அதைச் சாப்பிடலாம். ஆனால், கடைகளில் விற்கப்படும் கீழாநெல்லி மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. இத்தகைய மருந்துகளில் ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுவதால், அவை கல்லீரலை பாதிக்கும். கல்லீரலைப் பாதுகாக்கும் உணவுகள்! பு ரொக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்: இவற்றை `குரூசிஃபெரஸ் காய்கறிகள்’ (Cruciferous Vegetables) என்று குறிப்பிடுவார்கள். இவற்றில் `குளூக்கோசினோலேட்’ (Glucosinolate), சல்ஃபர் (Sulfur) போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்துள்ளன. இவை கொழுப்பைக் குறைப்பதுடன், கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, நொதிகளை அதிகம் சுரக்கவைக்கும். முட்கள் நிறைந்த பேரிக்காய்: முட்கள் நிறைந்த பேரிக்காய் கல்லீரலை பலப்படுத்தி நோய்கள் வராமல் காக்கும். இதில் ‘பெக்டின்’ (Pectin) எனும் மாவுச்சத்து அதிகளவில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் `எல்.டி.எல்’ (LDL Cholesterol) எனும் கெட்ட கொழுப்பையும், மது அருந்துவதால் கல்லீரலில் சேரும் நச்சுகளையும் வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும். அவகேடோ: அவகேடோவில் `குளூட்டதியோன்’ (Glutathione) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளது. இது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவும். திராட்சை : சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள் கல்லீரலைப் பாதுகாக்கக்கூடியவை. இவற்றிலுள்ள `ரெஸ்வெரட்ரால்’ (Resveratrol) எனும் வேதிப்பொருள் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியைத் தடுக்கும். நிறைய விதைகளுள்ள திராட்சைகளைச் சாப்பிடுவது நல்லது. நார்த்தம்பழம்: நார்த்தம்பழத்தில் `நாரின்ஜெனின்’ (Naringenin) எனும் வேதிப் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. கல்லீரலின் உள்ளே படியும் கொழுப்பைக் குறைக்கவும், கல்லீரலில் சுரக்கும் நொதிகளை அதிகரிக்கவும் இது உதவும். பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய்: கல்லீரலைப் பாதுகாப்பதில் பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய் மூன்றும் முக்கியமானவை. இவற்றில் ‘மோனோஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம் (Monounsaturated Fatty Acid) அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இவற்றிலுள்ள வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும். பூண்டு: வெள்ளைப்பூண்டில் `அலிசின்’ (Allicin) எனும் வேதிப் பொருள் உள்ளது. `செலினியம்’ (Selenium) தாதுவும் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடல் எடையைக் குறைக்கும். கல்லீரலில் சேரும் கொழுப்பை நீக்கி, நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும். மீன்: மீன்களில் `ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ (Omega 3 Fatty Acid) அதிகம் உள்ளது. இது உடலில் எங்கே நச்சுப் பொருள்கள் இருந்தாலும், அவற்றை வெளியேற்ற உதவும். கல்லீரல் வீக்கம், அழற்சி போன்றவற்றைத் தடுக்கும். மீனை எண்ணெயில் பொரித்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். காபி: காபியிலுள்ள `கஃபைன்’ (Cafeine), `பாராஸான்தைன்’ (Paraxanthine) எனப்படும் வேதிப்பொருளையும், `காவியோல்’ (Kahweol), `கேஃப்ஸ்டோல்’ (Cafestol) அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது. இவை மூன்றும் கல்லீரலைப் பாதுகாப்பதுடன், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன. இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ஹெபடைட்டிஸ் டி’ வைரஸ்! ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹெபடைட்டிஸ் டி வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நீடித்த ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள ஐந்து சதவிகிதம் பேருக்கு, டி வைரஸ் பாதிப்பு ஏற்படும். இது மிகவும் அரிதான தொற்று வைரஸ். பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கும், உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும். ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். பி மற்றும் டி வைரஸ் இணை, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொண்டால் டி வைரஸைத் தடுக்கலாம். - கிராபியென் ப்ளாக்உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள். உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.
மஞ்சள் காமாலை : எதனால் ஏற்படுகிறது, குணப்படுத்துவது எப்படி? - விரிவான தகவல்கள்
க ல்லீரல்... மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. 75 சதவிகிதம் பாதிப்புக்குள்ளானாலும்கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருக்கும். ஏறக்குறைய, பாதியளவு பாதிக்கப்பட்ட பின்னர்தான் இதன் பாதிப்பே வெளியில் தெரியவரும். அதுவும், ஒரு சில அறிகுறிகளின் மூலமாகவே தெரியவரும். அதில் ஒரு முக்கியமான அறிகுறிதான் மஞ்சள் காமாலை. ``கல்லீரல் ஒழுங்காகச் செயல்படாததால் ஏற்படக்கூடிய மஞ்சள் காமாலை, கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடுவதால் வரக்கூடியது என, இரண்டுவிதமான காமாலைகள் உண்டு என்கிறார் மருத்துவர் விவேகானந்தன். பித்தம் ``கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும். பித்தப்பைக் கல், பித்தப்பைப் புற்றுநோய், பித்தக்குழாய் புற்றுநோய், கணையப் புற்றுநோய், குடலின் முதற்பகுதியான டியோடினம் (Duodenum) பகுதியில் புற்றுநோய் போன்ற பாதிப்புகளால் பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடும். அப்படிப் பாதிக்கப்படும்போது காமாலை உண்டாகும். கல்லீரலில் இருக்கிற செல்கள் செயல்படாததால் வரக்கூடிய மஞ்சள் காமாலையை 'ஹெப்பட்டோ செல்லுலர் ஜான்டிஸ் (Hepatocellular jaundice)' என்று சொல்வார்கள். இதை 'மெடிக்கல் ஜான்டிஸ்' என்றும் அழைக்கலாம். இது வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 'ஹெப்படைட்டிஸ்' வைரஸ் கிருமிகளின் பாதிப்பு, மது அருந்துதல் போன்ற காரணங்களால் வரலாம். சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் பூச்சி மருந்து குடிப்பார்கள். அவர்களுக்கும் வரலாம். டி.பி போன்ற பாதிப்புகளுக்கு மாத்திரை சாப்பிட்டு கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கும் இந்த வகை காமாலை வரும். நம் நாட்டைப் பொறுத்தவரை, வைரஸ், மது, கொழுப்பு சார்ந்த ஈரல் நோய்கள், சில மாத்திரை மருந்துகளால் இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. மஞ்சள் காமாலை 'ஹெப்படைட்டிஸ்' வைரஸ் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும், கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். பாதிப்பு அதிகமாகிவிட்டால் பித்தப்பை உப்புக்கள் தோலில் படிந்து அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை குறித்து நம் மக்களிடத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை. 'ஹெப்படைட்டிஸ்' வைரஸ் கிருமித் தொற்றால் உருவாகக்கூடிய மஞ்சள் காமாலையால் அதிகமான மக்கள் உயிரிழக்கிறார்கள். இது எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களைவிட அதிகம். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டதட்ட 90 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். மஞ்சள் காமாலை பாதிப்பு இருக்கும் பலர், அதை அறியாமல் வெறும் உடல் சூடுதான் என்று கவனிக்காமல் இருந்துவிடுகிறார்கள். வெயிலால், உடல் சூட்டால் சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் ஒரு நாளில் சரியாகிவிடும். கண்கள் மஞ்சளாக மாறாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசோனிக் பரிசோதனைகளின் மூலமாக இதைக் கண்டறிய முடியும். Liver functioning test 'ரத்தப் பரிசோதனையின் மூலமாக, பாதிப்பு எவ்வளவு இருக்கிறது', 'கல்லீரல் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது' (Liver functioning test) என்பதைக் கண்டறியலாம். அதுதவிர, எந்த வகை என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். ஹெப்படைட்டிஸ்-ஏ அல்லது இ வைரஸ் பாதிப்பால் உருவாகும் மஞ்சள் காமாலை ஒருவாரத்தில் சரியாகிவிடும். சி - வைரஸ் பாதிப்பு என்றால் குறைந்தது மூன்று மாதங்களாவது மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஹெப்படைட்டிஸ்- பி வைரஸ் பாதிப்பு என்றால் ஒரு வருடத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் வாழ்நாள் முழுவதும்கூட சாப்பிட வேண்டிய சூழல்வரும். மது அருந்தியதால் உண்டான மஞ்சள் காமாலை என்றால் மது அருந்துவதை நிறுத்தினால் நான்கிலிருந்து ஆறு மாதத்துக்குள் சரியாகிவிடும். கொழுப்பு காரணமாக உருவான மஞ்சள் காமாலை என்றால் அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, உடற்பயிற்சிகள் செய்தால் பாதிப்பைக் குறைக்க முடியும். கல்லீரலுக்குத் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இருந்தாலும், அது பாதிக்கப்பட்டிருக்கும்போது மேலும் பாதிப்பை அதிகரிக்கக்கூடிய எந்தச் செயலையும் செய்யாமல் இருக்க வேண்டும். முறையான மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றினால் மஞ்சள் காமாலை பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் விவேகானந்தன்.
Doctor Vikatan: வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா?
Doctor Vikatan: ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா, எந்த மாதிரி பயிற்சிகள் செய்வோர் புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டும்?யாரெல்லாம் தவிர்க்க வேண்டும், வே புரோட்டீன் என்பது எல்லோருக்கும் ஏற்றதா, இது தவிர்த்து வேறு என்ன புரோட்டீன் சாப்பிடலாம்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர் புரோட்டீன் பவுடர் அல்லது சப்ளிமென்ட் என்பது எல்லோருக்கும் தேவைப்படுவதில்லை. ஒருவருடைய தினசரி உணவுத்தேவையே அதைப் பூர்த்தி செய்துவிடும் பட்சத்தில் தனியே புரோட்டீன் பவுடரோ, சப்ளிமென்ட்டோ அவசியமில்லை. அதாவது ஒருவரது தினசரி உணவில் சிக்கன், முட்டை, மீன், பருப்பு வகைகள், டோஃபு போன்றவை போதுமான அளவு இடம்பெற்றால், புரதக் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. உணவுகள் தாண்டி, புரோட்டீன் சப்ளிமென்ட்டும் எடுக்க வேண்டாம். சிலருக்கு சரியான நேரத்துக்கு, சரியாகச் சாப்பிட முடியாமல் போகலாம். சாப்பிடாமலேயே இருப்பதற்கு பதில், புரோட்டீன் பவுடர் குடிப்பது அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கும். அதேபோல சைவ உணவுக்காரர்கள், வீகன் உணவுப்பழக்கமுள்ளோருக்கெல்லாம் உணவின் மூலம் போதுமான புரோட்டீன் கிடைக்காதபோதும், புரோட்டீன் பவுடர் உதவும். பாடி பில்டர்களுக்கும் இது அவசியமாகலாம். வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா? Doctor Vikatan: அதிக புரோட்டீன் உணவுகள் ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துமா? ரெகுலராக ஜிம் செல்பவர்களுக்கு, மஸுல் பில்டிங் செய்வோருக்கு, கொழுப்பைக் குறைத்து, தசை அடர்த்தியைத் தக்கவைக்க நினைப்போருக்கெல்லாம் வே புரோட்டீன் தேவைப்படலாம். ஏதேனும் உடல்நலக் கோளாறிலிருந்து மீண்டவர்களுக்கும், அடிபட்டு குணமானவர்களுக்கும் இந்தப் புரதம் நிச்சயம் உதவியாக இருக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு புரதத் தேவை குறைவாகவே இருக்கும் என்பதால் அவர்கள் இவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். வே புரோட்டீன் என்பது பாலில் இருந்து பெறப்படுவது. எனவே, லாக்டோஸ் இன்டாலரென்ஸ் எனப்படும் பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வே புரோட்டீனை பரிந்துரைக்க மாட்டோம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே, எந்தவிதமான புரோட்டீன் சப்ளிமென்ட்டையும் எடுத்துக்கொள்வது சிறந்தது. புரோட்டீன் பச்சைப் பட்டாணியிலிருந்து பெறப்படும் Pea protein இவர்களுக்கான சிறந்த மாற்றாக இருக்கும். அதே போல ஹெம்ப் புரோட்டீன், சோயா புரோட்டீன் என நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. அசைவ உணவுக்காரர்களுக்கு பெரும்பாலும் உணவின் மூலமே போதுமான புரோட்டீன் கிடைத்துவிடும். சைவ உணவுக்காரர்களுக்கு புரத உணவுகளே இல்லை என அர்த்தமல்ல. பருப்பு வகைகள், பனீர், டோஃபு என புரதம் அதிகமுள்ள உணவுகளைத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்து வேண்டும்?
இவை ஆபத்தான சுய இன்பங்கள்; எச்சரிக்கும் பாலியல் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 258
எப்போதும் ’சுய இன்பம் நல்லதுதான். இதனால் அவர்களுடைய உடலுக்கு எந்த பாதிப்பும் வராது’ என்பார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். அவர், ஆண், பெண் இருவருக்குமான ஆபத்தான செயல்களால் சிக்கலுக்கு ஆளாகி அவரிடம் சிகிச்சை வந்தவர்கள் பகிர்ந்தவற்றைத் தொகுத்து இந்தக் கட்டுரையில் எச்சரிக்கிறார். ஆபத்தான சுய இன்பங்கள் ஆணுறுப்பு துண்டாகலாம். ஆபத்தான சுய இன்பங்களை ஆண்கள் அதிகம் செய்கிறார்கள். கண்ணாடி பாட்டிலை ஆணுறுப்பில் மாட்டும் போது கண்ணாடி உடைந்து ஆணுறுப்பு துண்டாகலாம். சிலர் ஆணுறுப்பில் கம்பியை சொருகியும் பிளாஸ்டிக் குச்சிகளை சொருகியும் சுய இன்பம் அடைய முயற்சி செய்வார்கள். ஆணுறுப்பு கழுத்து நெரிக்கப்பட்டதுபோல இருக்கும். சிலர் விரலில் இருக்கிற மோதிரத்தை ஆணுறுப்பில் மாட்டி சுய இன்பம் செய்வார்கள். சிலர் மெட்டல் வளையங்களை வைத்தும் இப்படி செய்வார்கள். இப்படி செய்யும் போது ஆணுறுப்பு விறைப்பு அடைந்த நிலையில் மோதிரத்தை கழட்ட முடியாது. மோதிரம் மாட்டி இருப்பதால் ஆணுறுப்புக்கு வந்த ரத்த ஓட்டம் திரும்ப முடியாமலும் விறைப்பு தன்மையும் குறையாமலும் இருக்கும். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து கூட இன்னும் விறைப்பு தன்மை குறையவில்லை என வருவார்கள். ஆணுறுப்பு கழுத்து நெரிக்கப்பட்டதுபோல இருக்கும். மோதிரத்தை கட் செய்தால் தான் ஆணுறுப்பை காப்பாற்றவே முடியும். சுய இன்பம் கூச்சத்தையும் மன உளைச்சலையும்... இதே போன்ற ஆபத்தான சுய இன்பங்களை பெண்களும் செய்கிறார்கள். உடையக்கூடிய கண்ணாடி பொருள்களை வைத்து செய்வது... ஏதோ ஒரு காய்கறி, உதாரணத்துக்கு கேரட், கத்தரிக்காய், வாழைக்காய், வெள்ளரிக்காய் என்று காய்கறிகளை வைத்து சுய இன்பம் செய்வது என முயற்சி செய்யும் போது காய்கறி உடைந்து உறுப்புக்கள் மாட்டிக்கொண்டால் எமர்ஜென்சியாக மருத்துவரை பார்க்க நேரிடும். அது அவர்களுக்கு கூச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும். யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256 சிறுநீரகத்தொற்று சில பெண்கள் சின்னச் சின்ன மெட்டல் உருண்டைகளை பெண்ணுறுப்புக்குள் போட்டு விடுவார்கள். இது அவர்களுடைய சிறுநீரக பைக்குள் போய் விழுந்து எப்போதும் சிறுநீரகத்தொற்றுடனே அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். `ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே' மூணும் முக்கியம் ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 257 ஒரு எமர்ஜென்சி நிலை... உச்சகட்டம் போலவே சுய இன்பமும் நல்ல விஷயம்தான். அதனால் எந்தக் கெடுதலும் வராதுதான். என்றாலும் இப்படி வினோதமான ஆபத்தான முறைகளில் ஈடுபடாதீர்கள். அது, உங்களுக்கு நீங்களே தீங்கு செய்து, ஒரு எமர்ஜென்சி நிலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்’’ என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சீர்காழி: அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நல பாதிப்பு - நடந்தது என்ன?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசின் தாய் சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 27 கர்ப்பிணிகள் மற்றும் 20 பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சையில் இருக்கும் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து 9 கர்ப்பிணிகள் மற்றும் 18 பிரசவித்த தாய்மார்கள் என 27 பேருக்கு நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. சீர்காழி அரசு மருத்துவமனை இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் விரைந்து வந்து மாற்று மருந்து செலுத்தினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் குணமடைந்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பிணி ஒருவர் மட்டும் உடல்நிலை சரியாகாமல் இருக்க அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அரசு தாய், சேய் நல மையத்தில் சிகிச்சை பெறும் பெண்களின் குடும்பத்தினர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில்: 10% மூலதனம் போதும், பிணையம் இல்லை; 3% வட்டியில் 2 கோடி வரை கடன்! இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி அரசு ஆய்வு செய்த மையத்தில் ஆய்வு நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்துள்ளார். இந்நிலையில், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பானுமதி தலைமையில் 5 டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான மருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மருந்து கொடுத்த பிறகு உடல் நிலை பாதிப்பு மேலும் ஆய்வு முடிவு வரும் வரை சீர்காழி அரசு மருத்துவமனையில் தற்போது இருப்பு உள்ள நோய் எதிர்ப்பு மருந்தை நோயாளிகளுக்கு செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருந்து செலுத்தப்பட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைவரது உடல்நிலை சீராக இருப்பதாக அரசு தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சிலர் கூறுகையில், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுத்தனர். அதன் பிறகும் உடல்நிலை சீராகாதவர்கள் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றனர். தீபாவளியை ஜாம் ஜாம் என்று கொண்டாட சூப்பர் பிளான் வேணுமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
நகம் பெயர்ந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
வி ரல்களுக்கு அழகுசேர்ப்பது நகம். அது பெயர்ந்தாலோ, அடிபட்டாலோ ஏற்படும் வலி இருக்கிறதே... தாங்க முடியாதது; வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. அதோடு, கை கால்களின் அழகும் பாதிக்கப்பட்டுவிடும். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து சின்னதாக ஒரு கல் தடுக்கினால், ஒரு கனமான பொருள் விழுந்தால் நகம் பெயர்ந்துவிடும் அல்லது அதில் அடிபடும். இந்தச் சூழலில் என்னென்ன சிகிச்சைகள் செய்யலாம், எப்படிப் பராமரிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்... நகம் பெயர்வதற்கு எத்தனையோ காரணங்களிருந்தாலும், அடிபடுவதுதான் மிக முக்கியக் காரணம். இது மட்டுமில்லாமல், எந்த வலியும் இல்லாமல் நகம் ஒடிந்து, தானாகவே விழுவதும் (Onycholysis) உண்டு. இதற்கு பூஞ்சைத்தொற்று (Fungal Infection), சொரியாசிஸ் (Psoriasis) போன்ற பிரச்னைகளும் காரணமாகின்றன. அடிபடுதல்! சாலை விபத்துகள், கனமான பொருள் காலின் மேல் விழுதல், விளையாடும்போது அடிபடுவதாலும்கூட நகம் பெயர்ந்துவிடலாம். அடிபட்டதில் நகத்துக்கு அடியில் பாதிப்புகள் இருந்தால், அங்கே ரத்தம் தேங்கி உறைந்து, பின்னர் கறுத்துப்போய்விடும். சாலை விபத்துகளில் அல்லது பெரிய அளவில் அடிபட்டு நகம் பெயர்ந்திருந்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது. நகத்தில் சின்னதாக ஏற்படும் பாதிப்புகளுக்கு வீட்டிலேயே சில சிகிச்சைகளைச் செய்து சரிசெய்துவிடலாம். விமானத்தை இழுத்து வந்த யானைகள் : அந்தக் காலத்து யானைக் கதைகள் - ஆச்சர்ய வரலாறு நகத்தில் அடிபட்டால் செய்யவேண்டியவை என்னென்ன? * அடிபட்ட இடத்தைச் சோப் போட்டு, சுத்தமான நீரில் கழுவவும். * அடிபட்ட கால் அல்லது கைப் பகுதியை உயர்த்தி வைத்துக்கொள்ளவும். * நகத்தில் கட்டுப்போட்டு ரத்தம் வராமல் பார்த்துக்கொள்ளவும். * விரலிலிருந்து பெயர்ந்த நகத்தை ட்ரிம் (Trim) செய்யவும் அல்லது வெட்டிவிடவும். * நகம் பெயர்ந்த இடம் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். * அடிபட்ட நகம் மீண்டும் வளர்வதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை அதே இடத்தில் மேலும் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். (Fungal Infection) நகத்தின் அடிப்பகுதியில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டாலும், அது பெயர்ந்துகொள்ளும். அதை குணப்படுத்துவதும் கடினம். முதியவர்கள், சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு அடிபட்டால், நகத்தில் பூஞ்சைத்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. பூஞ்சைத்தொற்றுக் காரணமாக நகம் பெயர்வதற்கான சில அறிகுறிகள்... * நகம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்துக்கு மாறும். * நகத்தின் நுனிப்பகுதி வீக்கமடையும். * சிலருக்கு அந்த இடத்தில் சீழ் வடியவும் வாய்ப்பு உண்டு. * நகம் மிக எளிதாக உடையும் தன்மையிலிருக்கும். இதை குணப்படுத்த பூஞ்சைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் அறுவைசிகிச்சைகூட செய்யவேண்டி வரலாம். பூஞ்சைத்தொற்றிலிருந்து தப்பிக்க சில வழிகள்... * நகத்துக்கு அடியில் மண் அல்லது தூசிகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும். * வளரும் நகங்களை முறையாக அவ்வப்போது வெட்டி விடவும். * கால்களை ஈரமில்லாமல் அவ்வப்போது உலர்வாக வைத்துக்கொள்ளவும். * கை, கால் நகத்தில் அடிபட்டால் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவும். சொரியாசிஸ் சொரியாசிஸ், நீண்ட காலத்துக்கு நோய்தடுப்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாட்டால் உண்டாவது. சிலருக்கு வரும் சொரியாசிஸ் நகங்களையும் பாதிக்கலாம். இந்த நோயில் நகத்துக்கு அடியிலிருக்கும் தோல் செல்கள் இறந்துபோவதால், நகம் தனியாகப் பிரிந்து, சில நாள்களில் விழுந்துவிடும். சொரியாசிஸுக்கு சிகிச்சை செய்துகொள்வதோடு, நகங்களை அவ்வப்போது வெந்நீரில் நனைப்பது அதைக் காப்பாற்ற உதவும். நகத்தை எப்போது நீக்குவது? நகம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருக்கும்போது அதை முழுமையாக நீக்க முயற்சிக்கக் கூடாது. அது வளரும்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் தொடங்கும். அப்போது, விடுபட்ட பகுதியை மட்டும் நீக்கி, பெயர்த்துக்கொண்டுவரும் நகத்தின் முனைப்பகுதியை மென்மையாக்கிவிட வேண்டும். மேலும் அதோடு அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெயர்ந்த நகத்தை முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால் அங்கே நோய்தொற்று ஏற்பட்டு, காயத்தை ஆறவிடாமல் தடுத்துவிடும். நகத்தில் நோய்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள்... * சீழ் வருதல் * காய்ச்சல் * அதிகமாக வலித்தல் * வீக்கம், சிவந்துபோதல். நகத்தில் நோய்தொற்று ஏற்பட்டால், நகத்தை முழுமையாக இழக்கவும் நேரிடலாம். எனவே நகங்களை முறையாக வீட்டில் பராமரிப்பது சிறந்தது. Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?