பிரியாணி மசாலாக்களின் மருத்துவப் பலன்கள் தெரியுமா? சித்த மருத்துவர் சொல்வது என்ன?
பி ரியாணி எல்லோருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது. விழாக்கால உணவாக இருந்த பிரியாணி, வார இறுதி நான்வெஜ் பிரியாணியாக மாறி, இப்போது மிட்நைட் பிரியாணியாக ஃபேமஸ் ஆகிவிட்டது. பிரியாணி அதிக கலோரியைக் கொடுக்கக்கூடிய உணவு என்பதால் தவிர்க்க வேண்டும் எனப் பலரும் அறிவுறுத்தும் நிலையில், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர். விக்ரம் குமார் பிரியாணியை மருத்துவ உணவு என்கிறார். அது எப்படி என்றோம் அவரிடம். பிரியாணி மசாலா ''முகலாயர் காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரியாணி அன்றைக்கு நோயிலிருந்து மீண்டவர்களுக்கு உடலை வலுவாக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதற்கும் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அது மாறிவிட்டது. இருப்பினும், அதில் சேர்க்கப்படும் மசாலாக்களின் மூலம் இன்றளவும் அதில் மருத்துவக் குணங்கள் உள்ளன. பிரியாணி மசாலாவில் இருக்கும் நறுமண மூட்டிகள் மற்றும் சுவையூட்டிகளான, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை, கிராம்பு என ஒவ்வொன்றும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. 1) பிரியாணி இலை வளைகுடா இலை என்று சொல்லக்கூடிய பிரியாணி இலை செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத்தை எளிதாக்கும். வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதில் இருக்கிற ரூட்டின் (Rutin) மற்றும் கெஃபைக் (caffeic) அமிலம் ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன், ரத்தக்கொதிப்பையும் கட்டுக்குள் வைக்கிறது. ஜாதிக்காய் Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? 2) ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி ஜாதிக்காய், ஜாதிக்காய் விதையை மூடியிருக்கும் லேயரான ஜாதிபத்திரி இரண்டுமே செரிமானத்தை மேம்படுத்துகிறது. செரிமான பாதையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்கிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஜாதிக்காயில் உள்ள வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை மேம்படுத்தும். பல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 'ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள். குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள். Lung Health: நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க... மருத்துவர் சொல்லும் வழி! 3) சோம்பு பிரியாணியில் சோம்பைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்கள் நமது உடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரத்தக்குழாய்களில் அழற்சி, அடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும். இதிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்க உதவும். திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை சோம்பில் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கருப்பைச் சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், மந்தம், இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்குச் சோம்பு சிறந்த தீர்வு தரும் எனச் சித்த மருத்துவப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை நவீன ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கற்பாசி Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன? 4) கற்பாசி செரிமான நொதிகளைத் தூண்டி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, அதிகப்படியான வாய்வு மற்றும் வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கிறது. மூட்டு வலி, தசை வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்னை களுக்குக் கற்பாசி சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதில் உள்ள ஆன்டிபயாடிக், சிறுநீர்ப்பாதை தொற்று மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கற்பாசிக்கு இருப்பதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக சரும நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களைச் சிதைத்து, தேகத்தைக் காக்கும் தன்மை கற்பாசிக்கு உண்டு. இதிலுள்ள வேதிப்பொருட்கள் கல்லீரலுக்குக் கவசமாகச் செயல்பட்டு, கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. வயிற்றுப் புண்களுக்குக் காரணமான `ஹெலிகோபாக்டர் பைலோரி ’யின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கற்பாசிக்கு இருக்கிறது. 5) ஏலக்காய் ஏலக்காய் செரிமானத்தைத் தூண்டும். வயிறு மற்றும் குடலில் உள்ள புண் மற்றும் வலியைப் போக்கும். வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், வீக்கம் ஆகியவற்றைச் சரி செய்யும். ஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் உள்ளதால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நம் உடலை ஆரோக்கியமானதாகவும், உள்ளுறுப்புகளைச் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும். சிறுநீரகத்தில் தேங்கும் கால்சியம் மற்றும் யூரியாவை வெளியேற்றுவதன் மூலம், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். ஏலக்காயின் முக்கிய கனிமமான பொட்டாசியம் ரத்தக் கட்டிகள், பக்கவாதம், ரத்தம் உறைதல் போன்றவற்றைத் தடுக்கும். Health: சாப்பிடும்போது ஏன் புரையேறுகிறது? எப்படி தவிர்ப்பது? கிராம்பு 6) கிராம்பு நறுமண மூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும் உதவுகிறது. மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக்கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, காது தொடர்பான நோய்கள், சரும நோய்கள் எனப் பலவற்றை நீக்கும் திறன் கொண்டது. வயிற்றுப்புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியாவுக்கு எதிராக, கிராம்பில் உள்ள `யுஜெனால்’ எனும் நறுமண எண்ணெய் செயல்படுவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது. வைரஸ்களை எதிர்க்கும் மருந்துகளுடன் கிராம்பின் சத்துகளைச் சேர்த்துக்கொடுத்தபோது, மருந்துகளின் வீரியம் அதிகரித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். கிராம்பு `ஹெபடைடிஸ்’ வைரஸ்களின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும். கிராம்பை வாயில் அடக்கிக்கொண்டால், மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் குறைவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7) இலவங்கப்பட்டை இலவங்கப்பட்டையில்லாமல் பிரியாணியா? வாய்ப்பே இல்லை! பிரியாணியைத் தாங்கிப்பிடிப்பதே பட்டையின் பிரத்யேக மணம்தான். பிரியாணிக்குள் தனது சாரத்தை இறக்கி, செரிமானத்தைத் தூண்டும் இனிமையான வஸ்து லவங்கப்பட்டை. லவங்கப்பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு வேதிப்பொருள் ஆன்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், வளர்சிதை மாற்றத்தைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. தவிர, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. பட்டை Summer Health: உடல் குளிர்ச்சி முதல் வெயிட் லாஸ் வரை.. இளநீரின் மருத்துவ பலன்கள்! 8) மராத்தி மொக்கு செரிமானத்தை மேம்படுத்தவும், இரைப்பை குடல் பிரச்னைகளைத் தணிக்கவும் உதவுகிறது. இரைப்பைக் குழாயில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், அஜீரணம் மற்றும் பிற வயிறு தொடர்பான நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவும். இதய ஆரோக்கியத்திற்கான ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால், கொழுப்பின் அளவைக் குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 9) அன்னாசிப்பூ நுரையீரல் தொடர்பான நோய்கள், வாதநோய்களுக்குச் சீன மருத்துவத்தில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கல்லீரலுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ஹெபடைடிஸ் வைரஸ்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வீரியம் இதில் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பசியைத் தூண்டக்கூடிய, வாயுவை அகற்றக்கூடிய உணவுப் பொருளாக நெடுங்காலமாக உணவுகளில் அன்னாசிப்பூ சேர்க்கப்படுகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். கருப்பைக் கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும். இதிலுள்ள மருத்துவக் கூறுகள், ஆழ்ந்த உறக்கத்தையும் வரவழைக்கும். அன்னாசிப்பூ! 10) கொத்தமல்லி விதைகள் அல்லது தனியா. வாய்ப்புண் உள்படப் பல்வேறு தோல் நோய்களைக் குணப்படுத்துகிறது. இதில் உள்ள லினோலிக் அமிலம் எரிச்சலைக் குறைக்கும் வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முடி உதிர்தலைக் குறைகிறது. கொத்தமல்லி விதைகளில் இருக்கிற ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாக்கள், அதற்குச் சுவையை அளிப்பதுடன் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. அதே நேரம், உணவே மருந்து என்பதை உணர்ந்து பிரியாணியை அளவோடு உண்டால் அதிலிருக்கிற மசாலாக்கள் நமக்குப் பல நன்மைகளைச் செய்யும் என்கிறார் டாக்டர் விக்ரம் குமார். Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு அலோபதி மருந்துடன் சித்த மருந்துகளையும் சேர்த்து எடுக்கலாமா?
Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 70 வயதாகிறது. அவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. ஒரு பக்கம் அலோபதி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் சித்த மருந்துகளையும் எடுக்கிறார். சர்க்கரைநோய்க்கு சித்த மருந்துகள் உதவுமா... அலோபதி மருந்துகள் எடுக்கும்போது கூடவே சித்த மருந்துகளையும் சேர்த்து எடுப்பது சரிதானா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார். vikram சர்க்கரைநோய்க்கு சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த தீர்வுகள் உள்ளன. இப்போது ஒருங்கிணைந்த மருத்துவம் குறித்து நிறைய பேசுகிறோம். அந்த வகையில் சித்த மருந்துகளோடு, அலோபதி மருந்துகளையும் சேர்த்துச் சாப்பிடலாமா என்பதை, உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவரும் அலோபதி மருத்துவரும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு. ஒருவேளை உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் சிகிச்சை மேற்கொள்ளும்போது, பலவித சிக்கல்களைக் குறைக்க முடியும். அதாவது சர்க்கரைநோயால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமன்றி, அந்த நோயால் ஏற்படக்கூடிய உப பாதிப்புகளான கால் எரிச்சல் போன்றவற்றைக் குறைக்க ஆவாரைக் குடிநீர், மதுமேக சூரணம் போன்ற மிகச் சிறந்த மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இத்தகைய மருந்துகளால் பலன் பெற்றவர்களின் அனுபவங்களே இதற்கு சாட்சி. எனவே, நீங்கள் அலோபதி, சித்தா என இரண்டு மருத்துவ முறைகளையும் பின்பற்றப் போகிறீர்கள் என்றால், அதற்கு முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம். அலோபதி மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் எடுக்கலாமா? Doctor Vikatan: தூக்கமின்மையை விரட்ட சித்த மருத்துவத்தில் மருந்துகள் உண்டா? மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாக இரண்டையும் பின்பற்றினால், உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவில் மாறுபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். திரிபலா சூரணம், மதுமேக சூரணம் போன்ற சிறந்த மருந்துகள், அரசு மருத்துவமனைகளிலேயே எப்போதும் கிடைக்கும். மருதம்பட்டை குடிநீர், ஆவாரை குடிநீர், வில்வம் மாத்திரை போன்ற பெரு மருந்துகள் பல உள்ளன. எனவே, உங்களுடைய வயது, ரத்தச் சர்க்கரையின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மருத்துவ ஆலோசனையோடு இவற்றைப் பின்பற்றினால் சர்க்கரைநோயை கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியமாக வாழ முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன?
கால் வலிக்கும், ரத்த நாளங்களின் அடைப்புக்கும் தொடர்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார், திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த வாஸ்குலர் அண்ட் எண்டோ வாஸ்குலர் சர்ஜன் டாக்டர் அருணகிரி விருத்தகிரி. விளக்கமாகச் சொல்லுங்கள் டாக்டர் என்றோம். கால் வலி... வாஸ்குலர் சர்ஜரி என்பதே புதிதாக இருக்கிறதே... அப்படியென்றால் என்ன? வாஸ்குலர் சர்ஜரி என்பது ரத்த நாளங்கள் அல்லது ரத்தக்குழாய்களுடன் தொடர்புடையது. மூளையில் ஆரம்பித்து பாதம் வரைக்கும் நம் உடலில் ரத்தநாளங்கள் இருக்கின்றன. இவற்றில் ஏற்படுகிற பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிப்பதுதான் வாஸ்குலர் சர்ஜரி. கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? இந்தத் தொடர்பு பற்றி விவரிப்பதற்கு முன்னால் தமனி மற்றும் சிரை பற்றி விளக்கி விடுகிறேன். தமனி என்பது, நம்முடைய இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்பவை. அந்த வகையில் தமனி கால்களுக்கான ரத்தத்தையும் கொண்டு செல்லும். இப்படி கால்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிற தமனியில் கொஞ்ச கொஞ்சமாக அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது திடீரென அடைப்பு ஏற்பட்டாலோ கால்களில் வலி ஏற்படும். இதயத்தில் அடைப்பு இருந்தாலோ அல்லது சிகரெட் பிடிப்பதால் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டாலோ, கால்களின் தமனியில் அடைப்பு ஏற்படலாம். ஸோ, வாஸ்குலர் பிரச்னை என்பது ரத்த நாளங்களில் ஏற்படுகின்ற அடைப்பு. கால்களுக்கு வருகிற ரத்த நாளத்தில் அந்த அடைப்பு ஏற்பட்டால், கால்களில் வலி ஏற்படும். இதுதான் கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு. சிகரெட் smoking பேசுகிறேன்... பேசுகிறேன்...2 உன் இதயம் பேசுகிறேன்..! அறிகுறிகள் என்னென்ன? அறிகுறிகளில் இரண்டு வகை இருக்கின்றன. முதலில் ஒரு காலில் தாங்க முடியாத வலி ஏற்படும். பிறகு அந்தக் கால் ஜில்லென்று ஆகி விடும். பிறகு உணர்வும் அசைவும் இல்லாமல் போய்விடும். இது திடீரென ஏற்படுவது. இதுவொரு வகை. இன்னொரு வகை, நீண்ட காலமாக நம்முடைய உடலில் இருக்கும். ஆனால், அது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் கவனிக்காமல் விட்டிருப்போம். அதைச் சற்று விளக்கமாகத்தான் சொல்ல வேண்டும். நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்! நீரிழிவு இருப்பவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை அதிகமாக வருகிறது. நீரிழிவு இருப்பவர்களுக்கு, அதீத சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு ரத்த நாளங்களில் தொடர்ந்து கொழுப்பு படிந்துப் படிந்து, ஒருகட்டத்துக்கு மேல் ரத்தக்குழாயில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டு விடும். நம்முடைய நாட்டில் நீரிழிவு இருப்பவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை அதிகமாக வருகிறது. 'திருப்பதிக்குப் போனேன். அங்க வெயில்ல நடந்தேன். கால் புண்ணாகிடுச்சு. புண்ணு ஆறலை. ஒரு மாசத்துல அழுகி விரலை எடுக்கிற அளவுக்குப் போயிடுச்சு டாக்டர்' என்று வருவார்கள். 'முள்ளு குத்திடுச்சு. முள்ளை எடுத்திட்டேன். ஆனா, நாலஞ்சு நாள்ல விரலே அழுகிப் போயிடுச்சு. விரலை எடுக்கணும்னு சொல்லிட்டாங்க டாக்டர்' என்றும் வருவார்கள். கொலஸ்ட்ரால் `எங்களை உட்காரச் சொல்லுங்கள்' - கவனிக்க மறந்த கதைகள்; கள ஆய்வு ரிப்போர்ட் கால் விரல்கள் கருப்பாவது, காலில் புண் இருப்பது இன்னும் சிலர், சில விரல்களை இழந்தப் பிறகே எங்களைப் போன்ற வாஸ்குலர் சர்ஜனிடம் வருவார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம், அன்றாட வேலைகளில் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியாமலே இருந்திருப்பார்கள். கால் விரல்கள் கருப்பாவது, காலில் புண் இருப்பது, 4 வாரங்களாகக் காலில் இருக்கிற புண் ஆறாமலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால், காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு உடனடியாக எங்களைச் சந்தித்தால் கால் இழப்பைத் தவிர்க்க முடியும். நரம்பு சுருட்டல் அடுத்து, பாதங்களில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு போகும் சிரைகளில் வரக்கூடிய 2 பிரச்னைகள் பற்றிப் பார்ப்போம். முதல் பிரச்சனை, வெரிகோஸ் வெயின் எனப்படும் நரம்பு சுருட்டல். இரண்டாவது பிரச்னை, ஆழமான சிரைகளில் ஏற்படுகின்ற ரத்த உறைவு ( Deep vein thrombosis). வெரிகோஸ் வெயின்ஸ் Health: பூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! வெரிகோஸ் வெயின் சிரைகள், பாதங்களில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு போகும் ரத்த நாளங்கள் என்று சொன்னேன் அல்லவா? அந்த ரத்த நாளங்கள் ஒன் வே டிராஃபிக் போல. அதாவது, பாதத்திலிருந்து இதயத்துக்கு ரத்தம் கொண்டு போவதை மட்டுமே அது செய்யும். அந்த ரத்தம் மறுபடியும் சிரைகள் வழியாகப் பாதங்களுக்குத் திரும்பி வராது. கதவு சரியாக மூடாமல் இருந்தால் அப்படி திரும்பி வராமல் இருப்பதற்காகச் சிரைகளில் ஒரு வால்வு இருக்கும். அதை ஒரு கதவு என்று வைத்துக்கொள்வோம். அந்த கதவு சரியாக மூடாமல் இருந்தால், இதயம் நோக்கி மட்டுமே செல்ல வேண்டிய ரத்தம், கீழ் நோக்கி பாய ஆரம்பிக்கும். இப்படி பாய ஆரம்பிக்கையில், அதன் தாக்குப்பிடிக்கும் தன்மையைத்தாண்டும்போது அழுத்தம் அதிகமாகி, அந்த சிரைகள் (ரத்த நாளங்கள்) வீங்கி, சுருள ஆரம்பிக்கும். சமையல் கலைஞர்கள், பரோட்டா மாஸ்டர், கண்டக்டர், டிராஃபிக் போலீஸ் போல நீண்ட நேரம் நின்றபடியே வேலை பார்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. varicose பொதுவான அறிகுறி 'கிச்சன்ல ரொம்ப நேரம் நின்னா கால் வலிக்குது டாக்டர். கொஞ்ச நேரம் படுத்து காலை தூக்கி வெச்சிக்கிட்டா வலி பரவாயில்லை டாக்டர்' என்று சொல்வார்கள். இதுதான் வெரிகோஸ் வெயின் வரப்போவதற்கான பொதுவான அறிகுறி. பிரச்னை அதிகமாகும்போது கணுக்கால் அருகே கருப்பாகும். தொடர்ந்து புண் ஏற்பட்டு, அது ஆறாத அல்சராக மாறும். இதுவும், வெரிகோஸ் வெயின்தான் டெலிவரிக்குப் பிறகு நிறைய பெண்களுடைய தொடையில் நரம்புகள் சுருட்டிக்கொண்டு இருக்கும். இதுவும், வெரிகோஸ் வெயின் என்கிற நரம்பு சுருட்டல் பிரச்னைதான். இதனால், பெரும்பாலும் பெரியளவில் பிரச்னை ஏற்படாது. leg pain ஆழமான நரம்புகளில் ஏற்படுகிற ரத்த உறைவு பிரச்னை Lung Health: நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க... மருத்துவர் சொல்லும் வழி! இது திடீரென வரக்கூடிய பிரச்னை. 'நல்லா தான் இருந்தேன் டாக்டர். காலையில ஒரு கால் வீங்கிப்போச்சு. காலை தரையில ஊணவே முடியல. வலி தாங்க முடியல' என்றபடி வருவார்கள். 'அமெரிக்காவுல இருந்து இந்தியா வந்தேன் டாக்டர். கால் வீங்கிடுச்சு. வந்து இறங்கினவுடனே மூச்சுத்திணறல் வந்துடுச்சு' என்பார்கள். உடல் பருமன், தொலை தூர பயணம், நீண்ட நேரம் கால்களில் அசைவே இல்லாமல் வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பக்கவாதம் வந்து கால்களில் அசைவு இல்லாமல் படுத்திருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். ஐ.வி.எஃப் சிகிச்சையாலும் ஆட்டோமெட்டிக் கார்களை ஓட்டும்போது, க்ளச், பிரேக் போட வேண்டிய அவசியமிருக்காது. இதனால், 7-8 மணி நேரம் கால்களுக்கு அசைவே இல்லாமல் இருப்பார்கள். இந்த வகை கார் ஓட்டுபவர்களுக்கும் இந்தப் பிரச்னை தற்போது அதிகமாக வருகிறது. கருத்தரிப்புக்கான ஐ.வி.எஃப் சிகிச்சையில் ஹார்மோன் கொடுத்துதான் ட்ரீட்மென்ட் செய்கிறார்கள். அதன் காரணமாகவும், ஆழமான நரம்புகளில் ரத்த உறைவு பிரச்னை ஏற்படலாம். டாக்டர் அருணகிரி விருத்தகிரி மூச்சுத்திணறல் 'கால் சிரைகளில் ரத்தம் உறைந்தால், ஏன் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது' என்று சிலருக்குக் கேள்வி எழலாம். காலில் ரத்தம் உறைந்தால், அது ரத்த நாளங்கள் வழியாக நுரையீரலுக்குள் சென்று அடைத்துவிடும். அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இவர்கள் உடனடியாக அருகே இருக்கிற மருத்துவமனையை நாட வேண்டும். தீர்வுகள் * காலில் திடீரென வலி, கால் சில்லிட்டு விடுகிறது என்றால், அந்தக் காலில் நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துவிட்டு உடனடியாக ஒரு வாஸ்குலர் சர்ஜனை பாருங்கள். அவர், ரத்தக்குழாய்க்குள் இருக்கிற அடைப்பை உறிஞ்சி வெளியே எடுக்கிற சிகிச்சையைச் செய்துவிடுவார். பெரும்பாலும் சர்ஜரிதான் தீர்வாக இருக்கும். இதன் மூலம் உங்கள் கால்களை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். Summer Health Care: வியர்க்குரு முதல் நீர்க்கடுப்பு வரை; வராமல் தடுக்க என்னென்ன செய்யலாம்?! அடைப்பின் நீளத்தைப் பொறுத்து *நாள்பட்ட அடைப்பு என்றால், அந்த அடைப்பு எங்கிருக்கிறது என்பதைப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, ஓப்பன் சர்ஜரி அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு இதயம் அல்லது சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு, அடைப்பின் நீளத்தைப் பொறுத்து என்ன சிகிச்சை தரலாம் என்பதைத் தீர்மானிப்போம். வெரிகோஸ் வெய்ன் ஆரம்ப நிலை என்றால் * வெரிகோஸ் வெயினில், தொடையில் மட்டும் சிலந்தி வலை போல இருக்கிறது. வேறு பிரச்னை இல்லையென்றால், அவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சையளிக்க வேண்டியதில்லை. வெரிகோஸ் வெய்ன் ஆரம்ப நிலை என்றால், நீண்ட நேரம் நிற்க வேண்டாம். பாதத்திலிருந்து முட்டி வரை ஸ்டாக்கிங்ஸ் போட்டுக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவோம். ஆபரேஷன் ஓப்பன் சர்ஜரி கால் வீங்குகிறது, கருப்பாகி விட்டது, புண் வந்துவிட்டது என்றால் சிகிச்சையளித்தே ஆக வேண்டும். ஓப்பன் சர்ஜரி செய்யலாம். எண்டோவெனஸ் லேசர் அப்லேஷன் (Endovenous laser ablation) செய்தால், மறுநாளே வீட்டுக்குச் சென்றுவிடலாம். சீக்கிரமாகத் தங்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். சர்ஜரியைவிட இது நல்லது. மருந்து கொடுத்தே சரி செய்துவிடலாம் * ஆழமான நரம்புகளில் ஏற்படுகிற ரத்த உறைவு பிரச்னையை 80 சதவிகிதம் மருந்து கொடுத்தே சரி செய்துவிடலாம். ஒருவேளை மருந்துகொடுத்தும் முன்னேற்றம் தெரியவில்லை என்றால், அடைப்பு இருக்கிற ரத்தக்குழாய்க்குள் ஒரு மெல்லிய டியூப் விட்டு, அதன் மூலம் மருந்தை அனுப்பி அந்த அடைப்பைக் கரைய வைப்போம். Summer Health: உடல் குளிர்ச்சி முதல் வெயிட் லாஸ் வரை.. இளநீரின் மருத்துவ பலன்கள்! Nervous System சிகிச்சை அளித்தப் பிறகும் மேலே சொன்ன பிரச்னைகள் வருமா? நீரிழிவு, ரத்த அழுத்தம், ஸ்டிரெஸ் இந்த மூன்றும்தான் ரத்தக்குழாய் அடைப்புக்கு முக்கியமான காரணங்கள். இவற்றை கட்டுக்குள் வையுங்கள். மோசமான உணவுகள் ரத்தக்குழாய்க்கு எதிரி. அவற்றைத் தள்ளி வையுங்கள். தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இவற்றுடன் சிகிச்சை செய்துகொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து எடுக்க வேண்டும். பாதியில் மருந்தை நிறுத்தினால், ரத்த நாள அடைப்பு மறுபடியும் வரலாம். திடீர் அடைப்பு, நாள்பட்ட அடைப்பு இரண்டுக்குமே இது பொருந்தும். வெரிகோஸ் வெயின் பிரச்னையைச் சரிசெய்துவிட்டால் 90 சதவிகிதம் திரும்ப வராது'' என்கிறார் டாக்டர் அருணகிரி விருத்தகிரி. பாதங்களைப் பராமரிப்போம்; நலமுடன் வாழ்வோம். கால் பராமரிப்பு திருச்சி காவேரி மருத்துவமனையில் வாஸ்குலர் அண்ட் எண்டோ வாஸ்குலர் அறுவை சிகிச்சையில் மூத்த ஆலோசகரான பணியாற்றும் டாக்டர் அருணகிரி விருதகிரி, வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் மற்றும் வாஸ்குலர் நிலைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் நிபுணர். மேலேயுள்ள கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள வாஸ்குலர் சார்ந்த பிரச்னைகள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கும்பட்சத்தில், டாக்டர் அருணகிரி விருதகிரியிடம் ஆலோசனை பெறுவதற்கான அப்பாயின்ட்மென்ட் லிங்க் இதோ: https://www.kauveryhospital.com/doctors/trichy-tennur/vascular-surgery/dr-arunagiri-viruthagiri/ How To: உதடு வறட்சியை சரிசெய்வது எப்படி? | How To Heal Dry Lips? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மதுரை: ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு உணவு; அரசு மருத்துவமனை வருபவர்களுக்காகச் சேவை; அசத்தும் அமைப்பு
தென் தமிழகத்தின் பெரிய மருத்துவமனையான மதுரையிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். அப்படி வருகின்றவர்களுக்குத் தினமும் 3 ஆயிரம் வீதம் கடந்த ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு உணவு, குடிநீர், பழங்கள் வழங்கி அரிய பணியைச் செய்து பாராட்டப்பட்டு வருகிறது நட்சத்திர நண்பர்கள் அமைப்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது பல்வேறு துறைகளிலுள்ள தன்னார்வலர்களை இணைத்து தொழில் நிறுவனம் நடத்திவரும் குருசாமி என்பவரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் நட்சத்திர நண்பர்கள் அமைப்பு இந்த சீரிய பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறது. பல்வேறு சேவை அமைப்புகள் மதுரையில் பல்வேறு தளத்தில் செயல்பட்டாலும் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும், அவர்களுக்குத் துணையாக வருபவர்களும் உணவுக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த 'நட்சத்திர நண்பர்கள்' கடந்த ஆண்டு முதல் உணவு வழங்கத் தொடங்கினார்கள். இப்போது தினமும் ராஜாஜி மருத்துவமனை வாசலில் மதியம் 12 மணியிலிருந்து சுவையான உணவு தயாரித்து, பேக்கிங் செய்து சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் தன்னார்வலர்கள் மூலம் உணவுப் பொதிகளை விநியோகம் செய்துவிட்டுச் செல்கிறார்கள். உணவு வழங்கும்போது இதுமட்டுமின்றி மதுரை மாநகருக்குள் செல்லும் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் ஆற்றின் இரு கரைகளிலும் 350-சி.சி.டி.வி கேமராக்களை நிறுவிக் கண்காணித்து வருகின்றனர். வைகை ஆற்றில் படர்ந்து நீரோட்டத்தைத் தடுத்து ஆபத்தை உண்டாக்கும் ஆகாயத் தாமரைகளை இயந்திரம் மூலம் அகற்றி வருவதையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். சாலை ஓரத்தில் வியாபாரம் செய்பவர்கள், வெய்யில் மழையிலிருந்து காத்துக்கொள்ளப் பெரிய குடைகளை வழங்கியும், வீடின்றி நடைபாதையில் வசிப்பவர்களுக்குப் போர்வை, கம்பளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர். Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்? இன்னொரு பக்கம் அரசுப் பள்ளிகளுக்கு நவீன கழிவறைகளையும் அமைத்துக் கொடுத்து வசதியற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் வழங்கி வருகின்றனர். அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். மதுரையில் இந்த பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். இது குறித்து நட்சத்திர நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் ஸ்டார் குருசாமி கூறும்போது, நாங்கள் இப்பணியை விளம்பரத்துக்காகவோ, வேறு நோக்கத்துக்காகவோ செய்யவில்லை. எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உண்மையான அர்ப்பணிப்புடன் செயல்படுவதால்தான் தினமும் உணவு, குடிநீர், பழ வகைகளை வழங்குவது இரண்டாவது ஆண்டாகத் தொடர்கிறது. இதுவரை நாங்கள் 10 லட்சத்துக்கும் அதிகமாக உணவு, குடிநீர், பழ வகைகளை வழங்கியுள்ளோம். இந்த சேவையில் நாங்கள் மிகுந்த மன நிறைவு அடைகிறோம். நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது குருசாமி இந்த சேவையில் நாங்கள் மிகுந்த மன நிறைவு அடைகிறோம். தற்பொழுது கோடைக் காலம் என்பதால் மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் இனி வரும் நூறு நாட்களுக்குத் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்கும் திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம். சமூக வலைத்தளங்கள் மூலம் எங்களது உண்மையான சேவை உலகெங்கிலும் சென்றடைந்துள்ளது. பசி என்பது ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்கு வருவதாகும். அந்த பசியைப் போக்குவதற்காகத்தான் நாங்கள் மழை, வெயில், குளிர் பாராது அனைத்து நாட்களிலும் சுகாதாரமான சுவையான உணவு, குடிநீர், பழங்களை மக்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். உணவு கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக் கூடாது, அவர்களுக்கு உணவளிப்பதே எங்களது இலக்கு எனச் செயல்பட்டு வருகிறோம் என்றார். குழந்தைகள், பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவம்... இந்த மருத்துவமனைகளில் என்ன ஸ்பெஷல் தெரியுமா..? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
Doctor Vikatan: 10 வயதுக் குழந்தைக்கு பழைய சாதம் கொடுக்கலாமா, அதனால் சளி பிடிக்குமா?
Doctor Vikatan: என்னுடைய மகளுக்கு 10 வயதாகிறது. பெரும்பாலும் காலையில் எதையும் சாப்பிட மறுக்கிறாள். வீட்டில் நானும் என் கணவரும் தினமும் காலையில் பழையசாதம் சாப்பிடுகிறோம். அதையே என் மகளுக்கும் கொடுக்கலாமா, குழந்தைகளுக்கு பழைய சாதம் கொடுத்தால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன். ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் பெரியவர்கள் சாப்பிடுவதைப் போல, குழந்தைகளுக்கும் பழைய சாதம் கொடுக்கலாம். அதில் ஒரு பிரச்னையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இப்போது வாட்டிவதைக்கும் வெயிலின் பாதிப்பிலிருந்தும் குழந்தைகளை அது காக்கும். பழைய சாதம் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் உள்ளன. பழைய சாதத்தில் லாக்டிக் ஆசிட் பாக்டீரியாக்கள் (Lactic Acid Bacteria) அதிகமாக உள்ளன. இந்த பாக்டீரியாக்கள் பழைய சாதத்தை நொதிக்கச் செய்து, அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கின்றன. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றன, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அதன் விளைவாக மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் எனப்படும் நுண்ணூட்டச்சத்துகள், தாதுச்சத்துகள் போன்றவை உடலில் அதிகரிக்கும். குழந்தைகளுக்குப் பழைய சாதம் கொடுக்கும்போது, அத்துடன் ஃப்ரெஷ்ஷான தயிர் சேர்த்துக் கொடுக்கலாம். அதன் மூலம் குடலுக்கு நன்மை செய்யும் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் உணவாகவும் பழைய சாதம் உள்ளது. காலை உணவை சாப்பிட மறுக்கும் பட்சத்தில் உங்கள் மகளுக்கு தயிர் சேர்த்த பழைய சாதம் கொடுப்பது நல்ல சாய்ஸ். பழைய சாதம் Doctor Vikatan: வீஸிங் பிரச்னை உள்ளவர்கள் சம்மரில் பழைய சாதம் சாப்பிடலாமா? இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்போது, எந்த உணவு எடுத்தாலும் அது பேலன்ஸ்டு உணவாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பழைய சாதத்துடன் தயிர் மட்டுமன்றி, காய்கறிகளையும் சேர்த்துக் கொடுத்தால் அது முழுமையான உணவாக இருக்கும். மற்றபடி பழைய சாதம் கொடுப்பதால் குழந்தைகளுக்கு சளி பிடிக்க வாய்ப்பில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Summer Health: உடல் குளிர்ச்சி முதல் வெயிட் லாஸ் வரை.. இளநீரின் மருத்துவ பலன்கள்!
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் கத்தரி வெயிலும் தொடங்கப் போகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க, ஆண்டு முழுவதும் கிடைக்கிற இளநீரே சுவையான தீர்வு. இளநீரின் ஆரோக்கிய பலன்கள் பற்றி சொல்கிறார்கள் நிபுணர்கள். இளநீர் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்! - இயற்கை மற்றும் யோகா மருத்துவர் ஜெ.எம்.ஜெனிபர் டயானா ''நமக்குத் தேவையான பல சத்துகளைத் தன்னுள்ளே கொண்டிருப்பது இளநீர். குறைந்த அளவு, வெறும் 46 (சுமார்) கலோரிகளைக் கொண்டது. இதனடிப்படையில் உடல் பருமனைக் குறைக்க இளநீரைவிட சிறந்தது வேறு எதுவுமில்லை. நல்ல கொழுப்பை அதிகரித்து (HDL) கெட்டக் கொழுப்பைக் (LDL) குறைக்க உதவும்; உடலின் வளர்சிதை மாற்றத்தின் அளவை (Metabolic rate) அதிகரிக்கும், இதனால் தைராய்டு சுரப்பிகூட நன்றாக வேலை செய்யத் தொடங்கும். நார்ச்சத்தும் இருக்கிறது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்; இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும். இரண்டாம் உலகப் போரின்போது காயம்பட்டவர்களுக்கு சலைனுக்குப் பதில் இளநீர் செலுத்தினார்கள் என்பது வரலாறு. பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களில் நார்ச்சத்து கிடையாது. ஆனால், ஒரு டம்ளர் இளநீரில் சுமார் மூன்று கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்ச்சத்து, உணவு சட்டென்று குடலில் உறிஞ்சப்படுவதைத் தவிர்த்து, உணவு மிக மெதுவாகச் செரிமானமாகி உறிஞ்ச உதவும். எனவே, குறைந்த இடைவெளியில் பசி ஏற்படுவதையும் தவிர்க்கும். வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தாமல், வயிற்றை நிரப்புவதில் இளநீருக்கு நிகர் ஏதுமில்லை. பசி ஏற்படுவதையும் தவிர்க்கும் இளநீர் மிக முக்கியமான கனிமச் சத்துக்களில் ஒன்று பொட்டாசியம். அது இளநீரில் அதிகமிருக்கிறது. சாப்பிடும் உணவைச் சக்தியாக மாற்றும் திறன் கொண்டது. இளநீரில் சுமார் இரண்டு கிராம் புரதம் இருக்கிறது. இது, பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது.'' Summer Hair Care: புதினா, வெள்ளரிக்காய், வாழைப்பழம்; கூந்தல் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்? கிட்னி ஸ்டோன் வராது! - ஊட்டச்சத்து நிபுணர் வாணி. ''கொழுப்புச்சத்தே இல்லாதது இளநீர் . இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்கின்றன. பகலில் பழச்சாறுகள் குடிப்பவர்கள், அதற்குப் பதிலாக தினமும் இளநீர் குடிப்பது நல்லது. பழச்சாறுகளில்கூட வெள்ளைச் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டு, பழத்தின் முழுச்சத்துகளும் கிடைக்காமல் போகலாம். இளநீரில் அது போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை. கிட்னி ஸ்டோன் இளநீர் குடிப்பது, உடலில் வறட்சி, சருமப் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க உதவும். மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும். இளநீரின் வழுக்கைப் பகுதியை ஒதுக்கிவிடக் கூடாது. தினமும் இளநீர் குடிப்பதால் சிறுநீரகக்கல், கீல்வாதம், அழற்சி போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். கர்ப்பிணிகள் இளநீர் குடித்தால் ஃபோலேட் (Folate) சத்து கிடைக்கும். Summer Skin Care டிப்ஸ்: தயிர், தேன், தேங்காய்ப்பால்.. சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்? உடல் எடையை குறைக்க உதவும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் தங்கள் உணவில் உள்ள கலோரிகள் அனைத்தையும் ஒதுக்கத் தொடங்குவார்கள். அரிசி வகை உணவுகளைத் தவிர்ப்பார்கள்; சர்க்கரையை ஒதுக்குவார்கள்; ஜூஸ் குடிப்பார்கள். உண்மையில் 117 கலோரி வரை இருக்கும் ஜூஸை குடிப்பதற்குப் பதிலாக, சுமார் 46 கலோரிகள் வரையிருக்கும் இளநீரை தினமும் குடிப்பது, கொழுப்புச்சத்து ஏற்படாமல் உடலைக் காக்கும். உடல் பருமன் குறைக்கும் இளநீரிலிருந்து கிடைக்கும் சத்துகளில் முக்கியமானது, நார்ச்சத்து. இளநீர் ஒன்றில் 2.6 கிராம் வரை நார்ச்சத்து இருக்கிறது. `ஒருவர் அதிகளவு நார்ச்சத்து எடுத்துக்கொண்டால், அவருடைய உடல் எடை குறையத் தொடங்கும்’ என்பது ஆய்வு ஒன்றின் முடிவு. உணவிலிருந்து கொழுப்புச்சத்தைத் தவிர்க்க விரும்புபவர்கள் இளநீரை மட்டும் அருந்தலாம். Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்? பக்க விளைவுகள் இல்லாதது உடற்பயிற்சி செய்பவர்கள், தங்களது பயிற்சியை முடித்ததும், ஆற்றல் கிடைக்க குளிர்பானங்களைக் குடிப்பார்கள். சில குளிர்பானங்கள் வாந்தி, வயிற்றுப்போக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால், இந்தப் பிரச்னையை எந்தப் பக்கவிளைவும் இல்லாமல் சரிசெய்யக்கூடிய அருமருந்து, இளநீர். இளநீர் கவனமாக இருக்க வேண்டியவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த இளநீரால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இது சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சத்து அதிகம் கொண்டது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே இளநீர் அருந்த வேண்டும். இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுடன் இருப்பவர்களுக்கு பொட்டாசியம் சத்து அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இவர்களும் அடிக்கடி இளநீர் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.''
Summer Skin Problems: வியர்வை, வேனல்கட்டி, அரிப்பு, படர்தாமரை... தீர்வு என்ன?
கோடைக்காலத்தில் சருமம் மற்றும் கூந்தல் சார்ந்து ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த சருமநோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு. SUMMER Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்? இந்த ஆடைகளுக்கு நோ “கோடைக்காலத்தில் வியர்வை அதிகம் சுரக்கும். அதனால் எண்ணெய்ப்பசையும் அதிகமாகும். வியர்க்குரு ஏற்படும். இந்த நாள்களில் இரு வேளை குளிப்பது அவசியம். இரண்டு வேளையும் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டுமே தவிர வெந்நீரில் குளிக்கக் கூடாது. பெண்கள் லெக்கிங்ஸ் மற்றும் ஆண்கள் ஜீன்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பனியன் மெட்டீரியலைக் கூடத் தவிர்த்துவிட்டு காட்டன் உடுத்த வேண்டும். காட்டனுக்குத்தான் வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்கிறது. Summer Health Care: வியர்க்குரு முதல் நீர்க்கடுப்பு வரை; வராமல் தடுக்க என்னென்ன செய்யலாம்?! சன் ஸ்கிரீன் சருமத்துக்கு சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். எஸ்.பி.எஃப் 30-க்கு மேல் உள்ள சன் ஸ்கிரீனாக பார்த்து வாங்க வேண்டும். பரு இருந்தால் க்ரீம் வடிவிலான சன் ஸ்கிரீனைவிட ஜெல் வடிவிலான சன் ஸ்கிரீன் பயன் படுத்த வேண்டும். சன் ஸ்கிரீன் போட்டுவிட்டால் எப்படி வேண்டுமானாலும் வெயிலில் உலவலாம் என்று நினைத்து விடக்கூடாது. சன் ஸ்கிரீன் என்பது 30 சதவிகிதம் மட்டுமே பாதுகாப்பு தரும் என்பதால் வெயிலில் வண்டி ஓட்டிக்கொண்டு வெளியே செல்கிறவர்கள் கிளவுஸ் அணிய வேண்டும். முகத்தில் கண் தவிர மற்ற பகுதிகளிலெல்லாம் துப்பட்டாவால் சுற்றிச் செல்லும் பழக்கம் நிறைய பெண்களுக்கு இருக்கிறது. அது இந்த சீசனுக்கு மிகவும் நல்லது. வெயிலில் வெளியே தெரியும் கைகள் மற்றும் முகத்தை ஏதாவது வகையில் மூடிக்கொள்வதன் வழியே சூரியனின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். சன் ஸ்கிரீன் Summer Skin Care டிப்ஸ்: தயிர், தேன், தேங்காய்ப்பால்.. சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்? படர்தாமரை கோடையில் படர்தாமரை அதிகமாகும். அக்குள் மற்றும் தொடையிடுக்குகளில் பூஞ்சைத்தொற்று அதிகமாக ஏற்படும். அந்த இடங்களில் காட்டன் டவலால் ஈரம் இல்லாமல் துடைத்துவிட வேண்டும். மென்மையான காட்டன் டவலையே பயன்படுத்த வேண்டும். அவசரமாகக் குளித்து விட்டுக் கிளம்புபவர்கள் நன்றாகத் துடைக்காமல் ஈரத்திலேயே துணி உடுத்துவார்கள். இந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். உடலில் ஈரம் இல்லாது உலர்ந்த பிறகுதான் உடை மாற்ற வேண்டும். ஷூ பயன்படுத்துகிறவர்கள் தினமும் சாக்ஸை துவைத்தே பயன்படுத்த வேண்டும். படர்தாமரை இருக்கிறவர்கள் குளிக்காமல் இறுக்கமான ஆடைகளை அணியும்போது வியர்வை பட்டு அது மேலும் அதிகமாகி விடும். அதேபோல சொறிவதன் மூலமும் அது பெருகும். கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் தவறுதான். சொறிவதன் மூலம் அதிகம் பரவும் என்பதால் அதற்கான பவுடர் மற்றும் லோஷன் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அதற்கும் கேட்கவில்லையென்றால் சரும மருத்துவரை அணுக வேண்டும். வியர்வை, வியர்க்குரு, அரிப்பு... அரிப்பு வெயில் நாள்களில் அரிப்பும் பலருக்கு பிரச்னையாக இருக்கும். அரிப்பிலேயே பல வகைகள் இருக்கின்றன. ‘பாலிமார்பிக் லைட் எரப்ஷன்’ (Polymorphic light eruption) என்கிற ஒவ்வாமை கோடைக்காலத்தில் அதிகம் ஏற்படும். சிறு வயதிலிருந்தே வெயில்பட்டு வளர்வதால் முகம், கழுத்து, கைகள் உள்ளிட்டவை வெயிலைத் தாங்கும் தன்மை கொண்டிருக்கும். அந்தத் தன்மை இல்லாமல் போவதே இப்பிரச்னைக்கான காரணம். இந்த ஒவ்வாமை உள்ளவர்களால் ஐந்து நிமிடங்கள்கூட வெயிலில் நிற்க முடியாது. அவர்கள் வெயிலில் நடமாடுவதை முழுவதுமே தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரையிலான வெயிலை உள்வாங்கவே கூடாது. சூரிய ஒளி மிகவும் நல்லது, அதிலிருந்துதான் வைட்டமின் டி கிடைக்கிறது என்று சொல்வதெல்லாம் காலை இளம் வெயிலுக்குத்தான் பொருந்தும். உச்சிவெயிலில் நின்று கொண்டு சூரிய ஒளியை உள்வாங்குவதால் பாதிப்புகள்தான் ஏற்படும். எனவே, காலை 8 மணி வரை அல்லது மாலை 4 மணிக்கு மேல் வெயிலில் நிற்பதுதான் நல்லது. எண்ணெய்ப்பசையும் முடி உதிர்தலும் கோடையில் வியர்வை, எண்ணெய்ப் பசையின் காரணமாக முடி அதிகம் கொட்டும். தினசரி தலைக்குக் குளிப்பது நல்லது. இல்லையென்றால் வாரத்துக்கு மூன்று முறையேனும் தலைக்குக் குளிக்க வேண்டும். தலையின் ஈரம் காய நேரமெடுக்கும் என தினசரி தலைக் குளியலைத் தவிர்க்க நினைப்போர், தினசரி அரை மணி நேரம் முன்னதாகவே தயாராகிக் குளித்துவிட்டு தலையைக் காய வைக்க அரை மணி நேரத்தை ஒதுக்கலாம். இதனால் தலையில் உள்ள எண்ணெய்ப்பசை நீங்கி விடும். Hair வேனல் கட்டி வெயில் காலத்தில் சிலருக்கு வேனல் கட்டி வரும். இது உடல் சூடாவதால் ஏற்படுவதல்ல. கோடைக்காலத் தொற்றின் காரணமாக ஏற்படுவது. வெயில் காலத்தில் வருவதால் அதனை சூட்டுக்கட்டி என்கிறார்கள். நீர்ச்சத்துள்ள பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் வேனல் கட்டிகள் வராமல் தடுக்கலாம்’’ என்கிறார். Summer Health Care: வியர்க்குரு முதல் நீர்க்கடுப்பு வரை; வராமல் தடுக்க என்னென்ன செய்யலாம்?!
Physical Vs chemical sunscreen: எது சருமத்திற்கு பாதுகாப்பானது? - Doctor Tips
ஸ்கின் கேரில் முக்கியமான ஒன்று சன் ஸ்கிரீன். வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படுவதில் ஒன்று இந்த சன் ஸ்கிரீன். இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் சருமத்திற்கு ஏற்ற சமஸ்கிரீனை எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். எந்த வகையான சன் ஸ்கிரீன் சருமத்திற்கு பாதுகாப்பானது? எதனை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா கூறுகிறார். தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா சன் ஸ்கிரீன்கள் பல வகைகளில் உள்ளன. கெமிக்கல் சன்ஸ்கிரீன், பிசிகல் சன்ஸ்கிரீன் குறித்து பார்க்கலாம். கெமிக்கல் சன்ஸ்கிரீன்கள் கெமிக்கல் சன்ஸ்கிரீன்கள் சூரியனின் கதிர்களால் வெப்பம் ஆகி சருமத்தில் உறிஞ்ச நேரிடும். இதில் சில பாதுகாப்பான இன்க்ரிடியன்ட்ஸ் உள்ள கெமிக்கல் சன் ஸ்கிரீன்களை மருத்துவர் கூறியிருக்கிறார். Bimotrizinol அல்லது tinosorb s இருக்கும் சன் ஸ்கிரீனை நீங்கள் தேர்வு செய்யலாம் என்று கூறுகிறார். endocrine disruption-octinoxate, oxybenzone,octocrylene போன்ற மூலப் பொருள்கள் இருக்கும் சன் ஸ்கிரீனை நீங்கள் தவிர்க்கலாம் என்று மருத்துவர் கூறுகிறார். ஃபிசிகல் சன்ஸ்கிரீன் இந்த வகை சன் ஸ்கிரீன் உங்கள் சருமத்திற்கு ஒரு கேடயமாக செயல்படுகிறது. புற ஊதா கதிர்களைத் தடுத்து அவற்றை அப்படியே திருப்பி விடுகிறது. சருமத்திற்குள் செல்லாது. Zinc oxide,Titanium dioxide போன்றவை ஃபிசிகல் சன் ஸ்கிரீனில் பாதுகாப்பானது என்று கூறுகிறார் மருத்துவர். இவற்றை முகத்தில் பயன்படுத்தும் போது ஒயிட் காஸ்ட் எனப்படும் வெள்ளை பூசியது போன்று காணப்படும், இதுதான் முகத்திற்கு ஒரு கேடயமாக செயல்பட்டு அப்படியே சூரிய கதிர்களை திருப்பி விடுகிறது என்கிறார் மருத்துவர். எனவே இதனை பயன்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பானது என்கிறார் மருத்துவர் கோல்டா. Sunscreen: இந்த சம்மருக்கு உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி?!
கொளுத்தும் வெயிலுக்கு டீ குடிக்கலாமா? - இதனால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன?
கோடை வெயிலாக இருந்தாலும் சரி, மழை மேகமாக இருந்தாலும் சரி, சிலர் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக சூடான சம்மரில் எப்படி டீ குடிக்கிறார்கள் என்று யோசித்திருப்போம். ஆனால் கோடை காலத்தில் டீ குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஒருவருக்கு அந்த நாளே டீ-யில் தான் தொடங்கும். டீ குடித்தால் தான் ஒரு வேலையை செய்ய முடியும் என்று நம்புவார்கள். இந்தக் கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் அப்போதுதான், சூட்டை தணிக்க முடியும் என்று கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் டீ குடிப்பதாலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோடை காலத்தில் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது. ஒல்லி ஜே வெளியிட்ட ஒரு ஆய்வில் உடல் சூடான பானத்தை உட்கொண்ட பிறகு இருக்கும் வெப்ப சேமிப்பு, குளிர்பானங்கள் அருந்திய பிறகு இருக்கும் வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் தேநீர் அருந்தியுடன், அவரது உடலில் வெப்பம் அதிகரித்து வியர்வை சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. அதன் பின்னர் அந்த வியர்வை ஆவியாகி உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது. உதாரணமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு பானம் உடலுக்குள் செல்கிறது என்றால், 570 மில்லி வியர்வை ஏற்படுகிறது. ஆவியாதல் காரணமாக உடலில் உள்ள வெப்பம் குறைகிறது. அதே வேலையில் குளிர்பானங்கள் அல்லது குளிர்ச்சியாக ஏதேனும் சாப்பிட்டால் உடலில் வெப்பம் அதிகரிக்க செய்கிறது. அதாவது குளிர்ச்சியான பானத்தை உட்கொண்ட பிறகு தோலின் மேற்பரப்பிலிருந்து வியர்வை ஆவியாதல் குறைவதால் வெப்பம் உடலில் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. உடலின் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் சகிப்புத்தன்மையை குறைப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கோடை காலத்திலும் டீ தாராளமாக அருந்தலாம்! Summer: கறுப்பு நிற ஆடை அணிந்தால் உடலில் வெப்பம் அதிகரிக்குமா? | சம்மர் டிப்ஸ்!
Doctor Vikatan: மாத்திரை போட்டால் மட்டுமே வரும் periods; சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?
Doctor Vikatan: என் வயது 35. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனக்கு உடல் பருமன் பிரச்னை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக periods வருவதில் பிரச்னை இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கொரு முறை மருத்துவரைப் பார்த்து அவர் கொடுக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் பீரியட்ஸ் வரும். இல்லாவிட்டால் வராது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு... சித்த மருத்துவம் உதவுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி உங்களுடைய கேள்வியிலேயே உங்கள் பிரச்னைக்கான பதிலும் இருக்கிறது. மாதவிடாய் பிரச்னைகளுக்கு உடல் பருமன் மிக முக்கியமான காரணம். உடல் பருமனைக் குறைத்தாலே மாதவிடாய் சுழற்சி சீராவதை உணர்வீர்கள். Doctor Vikatan: Irregular Periods-மாத்திரைகள் இன்றி, இயற்கையான முறையில் முறைப்படுத்த வழிகள் உண்டா? மாத்திரை எடுத்தால்தான் பீரியட்ஸ் வருவதாகச் சொல்கிறீர்கள்.. மருத்துவரிடம், அதற்கான காரணம் கேட்டீர்களா, எதற்காக மாத்திரை என்று சொன்னாரா என்ற தகவல்கள் இல்லை. உடல் பருமனைக் குறைக்க நீங்கள் முதலில் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும். பகலில் தூங்குவதையும் அதிக உணவுகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்ப்பது, செயற்கை நிறமி மற்றும் மணம் சேர்க்கும் உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். யோகாவும் உதவும். உடலை இளைக்கச் செய்கிற உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகள் தவிர்த்து, ஆவியில் வெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலை உணவுக்கு முளைக்கட்டிய தானியங்கள், அவல் போன்றவற்றை 50 கிராம் அளவு எடுத்துக்கொள்ளலாம். கூடியவரையில் சமைக்காமல் சாப்பிடுவது சிறந்தது. மாதவிடாயை முறைப்படுத்தக்கூடிய இயற்கையான மருத்துவமுறைகள் சித்தாவில் உள்ளன. Doctor Vikatan: High BP-ஐ குறைக்க சித்த மருத்துவம் உதவுமா? உங்களுக்கு தைராய்டு பாதிப்பு இருக்கிறதா என்று டெஸ்ட் செய்து பார்க்கவும். ஒருவேளை இருந்தால் சித்தாவிலோ, அலோபதியிலோ அதற்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். தைராய்டை குணப்படுத்தாமல் மாதவிடாய் பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கக்கூடாது. மாதவிடாயை முறைப்படுத்தக்கூடிய இயற்கையான மருத்துவமுறைகள் சித்தாவில் உள்ளன. இரண்டு பல் மலைப்பூண்டை, ஒரு கப் பாலில் வேகவைத்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். கறிவேப்பிலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் காலையில் சாப்பிடுங்கள். முருங்கைக்கீரை, தினம் 2 எள்ளுருண்டைகள், கல்யாண முருங்கையில் அடை, தோசை போன்றவற்றைச் செய்து சாப்பிடுங்கள். மலைவேம்புச் சாற்றை மாதத்தில் மூன்று முறை 15 முதல் 20 மில்லி அளவுக்கு காலையில் குடிக்கலாம். கழற்சிக்காய் என்று சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதன் விதைகளை தினம் 5 என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தாலும் மாதவிடாய் சுழற்சி முறைப்படும். இவையெல்லாம் பொதுவான ஆலோசனைகள். எந்தச் சிகிச்சையாக இருந்தாலும் முறைப்படி மருத்துவரை சந்தித்து, அவர் பரிந்துரையோடு மருந்துகளை எடுத்துக்கொள்வதுதான் சரி. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Apollo Cancer Centre: கோல்ஃபிட் (ColFit) என்ற பெயரில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) அறிமுகம்
இந்தியாவெங்கும் மலக்குடல் புற்றுநோய் (CRC) நேர்வுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் விதத்தில் ஆரம்ப நிலையிலேயே மலக்குடல் புற்றுநோயைக் கண்டறியவும் மற்றும் அது உருவாகாமல் தடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு விரிவான நோயறிதல் (ஸ்க்ரீனிங்) செயல்திட்டத்தை கோல்ஃபிட் (ColFit) என்ற பெயரில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) அறிமுகம் செய்திருக்கிறது. Apollo Cancer Centre நோயாளிகளின் உயிர்பிழைப்பு விகிதங்களை மேம்படுத்துவதும், சிகிச்சை செலவுகளை குறைப்பதும் மற்றும் தற்போது மோசமான விளைவுகளுக்கும் மற்றும் அதிக அளவிலான உடல்நல பராமரிப்பு செலவுகளுக்கும் வழிவகுக்கின்ற முதிர்ச்சியடைந்த நிலையில் நோயறிதல் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதும் இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும்போது, சிகிச்சையில் குணப்படுத்தக்கூடிய மற்றும் அதிக அளவு வராமல் தடுக்கப்படக்கூடியதாக மலக்குடல் புற்றுநோய் இருப்பினும்,இந்தியாவில் கணிசமான நபர்களுக்கு அது வளர்ந்து முதிர்ச்சியடைந்த நிலைகளில் தான் அடையாளம் காணப்படுகிறது. இதன் காரணமாக, அத்தகைய நபர்கள் உயிர்பிழைப்பு விகிதங்கள் குறைகின்றன மற்றும் சிகிச்சை செலவுகள் அதிகரிக்கின்றன. வயது முதிர்ந்த மற்றும் இளவயதுள்ள நபர்கள் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் மலக்குடல் புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் செயல்பாட்டை விரிவாக்குவது மீது கோல்ஃபிட் சிறப்பு கவனம் செலுத்துகிறது; ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. மலக்குடல் புற்றுநோய்க்கு இந்தியாவில் வயது - தரநிலைப்படுத்தப்பட்ட விகிதம் (ASR) என்பது, ஒவ்வொரு 100,000 ஆண்களுக்கு 7.2 மற்றும் ஒவ்வொரு 1,00,000 பெண்களுக்கு 5.1 என ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள போதிலும், ஒரு மில்லியனுக்கும் அதிகமாக நமது நாட்டின் மக்கள் தொகை இருக்கும் நிலையில், இந்நோய் பாதிப்பிற்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை கணிசமானது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். மலக்குடல் புற்றுநோய்க்கு இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு உயிர்பிழைக்கும் விகிதம் என்பது அதிகம் அச்சுறுத்துவதாக 40% - க்கும் குறைவானதாக இருக்கிறது; உலகளவில் மிகக் குறைவான விகிதங்களுள் இதுவும் ஒன்றாகும். குறிப்பிட்ட சில இந்திய பதிவகங்களில் மலக்குடல் புற்றுநோய்க்கு 5 ஆண்டுகளுக்கு உயிர்பிழைக்கும் விகிதங்கள் கவலை ஏற்படுத்தும் வகையில், சரிவடைந்து வருவதை CONCORD-2 ஆய்வு மேலும் சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான நேரங்களில் மலக்குடல் புற்றுநோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும்; ஆனால், இவைகளை உதாசீனம் செய்யக்கூடாது. மலம் கழிப்பு பழக்கவழக்கங்களில் நிலையான மாற்றங்கள் (தொடர்ந்து நடிக்கும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்றவை), குதப் பகுதியில் இரத்தக்கசிவு அல்லது மலத்தில் இரத்தம், காரணம் விளக்கப்பட இயலாதவாறு உடல் எடை குறைதல் மற்றும் தொடர்ந்து அடிவயிற்றில் அசௌகரியம் அல்லது தசைப் பிடிப்புகள் ஆகியவை இந்த அறிகுறிகளுள் உள்ளடங்கும். குறைவான நார்ச்சத்துள்ள உணவு, உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, உடற்பருமன், மரபியல் ரீதியில் பாதிப்பிற்கு ஆளாகும் நிலை மற்றும் குடும்பத்தில் பிறருக்கு மலக்குடல் புற்றுநோய் இருந்த வரலாறு ஆகியவை முக்கியமான இடர் காரணிகளாக இருக்கின்றன. இந்த அறிகுறிகளையும், இடர்க்காரணிகளையும் அறிந்திருப்பது, பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும் மற்றும் வராமல் தடுப்பதற்கும் மிகவும் இன்றியமையாதவை. அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் - ன் கோல்ஃபிட் செயல்திட்டம், மலக்குடல் புற்றுநோயைக் கண்டறிவதில் ஒரு புரட்சிகர அணுகுமுறையை அறிமுகம் செய்கிறது; மலக்குடல் புற்றுநோய்க்கு ஆரம்பநிலை சுட்டிக்காட்டல் அம்சமாக இருப்பது மலத்தில் மறைந்திருக்கும் இரத்தம். இதை அடையாளம் காண்பதற்கு ஊடுருவல் அல்லாத, அதிக துல்லியமான ஸ்க்ரீனிங் கருவியான (FIT) என்பதனை கோல்ஃபிட் செயல்திட்டம் ஒரு அங்கமாக கொண்டிருக்கிறது. FIT - க்கு ஒரேயொரு மாதிரி மட்டும் போதுமானது. அதிக அளவிலான கண்டறியும் திறனை வழங்கும் இச்சோதனை, உணவுமுறை கட்டுப்பாடுகளுக்கான தேவையை நீக்கி விடுகிறது; இதனால், நோயாளிகளுக்கு தோழமையான, சௌகரியமான விருப்பத்தேர்வாக இது இருக்கிறது. கோல்ஃபிட் ஸ்க்ரீனிங் செயல்முறை கீழ்வரும் கட்டமைப்பு படிமுறையைப் பின்பற்றுகிறது; 1. பதிவு மற்றும் இடர்வாய்ப்பு நிலையில் வரிசைப்படுத்தல்: நோயாளிகள், அவர்களது இடர்வாய்ப்பு அளவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றனர். சராசரி இடர்வாய்ப்பு நபர்கள் (குடும்பத்தில் பாதிப்பு வரலாறு இல்லாத 45+ வயதுள்ள நபர்கள்) FIT மற்றும் மலப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதிக இடர்வாய்ப்புள்ள நோயாளிகள் (குடும்பத்தில் பாதிப்பு இருந்த வரலாறு, மரபியல் ரீதியிலான நோய்க்குறிகள் அல்லது அழற்சியுள்ள மலக்குடல் நோய்) - க்கு FIT மற்றும் கொலனோஸ்கோப்பி சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 2. பகுப்பாய்வு மற்றும் நோயறிதல் முடிவு: இயல்புக்கு மாறான சோதனை முடிவுகள், மல மாதிரிகளில் மறைந்திருக்கும் இரத்தம் அல்லது டிஎன்ஏ பிறழ்வுகளுக்காக மேலதிக பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன; பவளமொட்டுகள் (பாலிப்ஸ்) அல்லது புற்றுக்கட்டிகளுக்காக கொலனோஸ்கோப்பியின் முடிவுகள் செய்யப்படுகின்றன. மீளாய்வு 3.பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை: நெகட்டிவ் (எதிர்மறை) சோதனை முடிவுகள் உள்ள நபர்களுக்கு குறித்த காலஅளவுகளில் பின்தொடர் சோதனை / சிகிச்சை (1-10 ஆண்டுகள்) அறிவுறுத்தப்படுகிறது. பாசிட்டிவ் சோதனை முடிவுகள் உள்ள நபர்களுக்கு அவசியமானால், பயாப்சி எனப்படும் திசு ஆய்வு உட்பட, மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஸ்க்ரீனிங் செயல்முறைக்குப் பிறகு வாழ்க்கை முறை திருத்தங்கள், தனிப்பயனாக்கப்பட்ட ஸ்க்ரீனிங் திட்டங்கள் மற்றும் அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு மரபணு ரீதியிலான ஆலோசனை ஆகியவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. அப்போலோவின் கோல்ஃபிட் திட்டத்தை உள்ளடக்கிய இந்த விரிவான அணுகுமுறை, மலக்குடல் புற்றுநோய் வராமல் திறம்பட தடுக்கிறது; ஆரம்ப நிலையிலேயே பாதிப்பு கண்டறியப்படுவதையும், உடனடியான சிகிச்சை நடவடிக்கைகளையும் உறுதி செய்வதால், மலக்குடல் புற்றுநோய் மேலும் வளர்ச்சியடையும் இடர்வாய்ப்பை கணிசமான அளவு குறைக்கிறது. அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மலக்குடல் மற்றும் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை மருத்துவரான டாக்டர். வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் இது தொடர்பாக கூறியதாவது: மலக்குடல் புற்றுநோய்க்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு சிகிச்சை என்பதிலிருந்து சுய விருப்பத்துடன் முன்னதாகவே ஸ்க்ரீனிங் செய்யும் செயல்முறைக்கு நாம் மாறியாக வேண்டும். மோசமான உணவுமுறை, உடலுழைப்பற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் உடற்பருமன் போன்ற வாழ்க்கை முறை காரணிகள், அதிகரித்து வரும் மலக்குடல் புற்றுநோய் நேர்வுகளுக்கு முக்கியப் பங்களிப்பாளர்களாக இருக்கின்றன. இந்நோய் வராமல் தடுப்பதற்கு அதிக நார்ச்சத்துள்ள உணவு, தவறாமல் உடற்பயிற்சி, தன்முனைப்புடன் ஸ்க்ரீனிங் சோதனைகளை செய்து கொள்வது ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். கோல்ஃபிட் திட்டத்தைக் கொண்டு சிக்கல்களை கணிசமாக குறைத்து, சிகிச்சை விளைவுகளை அதிகரிக்கக்கூடிய ஒரு எளிமையான ஊடுருவல் இல்லாத பரிசோதனையான FIT வழியாக ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பு கண்டறியப்படுவதை நாங்கள் ஏதுவாக்குகிறோம் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மலக்குடல் மற்றும் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை மருத்துவரான டாக்டர். செந்தில் குமார் கணபதி பேசுகையில், இந்தியாவில் மலக்குடல் புற்றுநோய் இளவயது நபர்கள் மற்றும் முதியவர்கள் என இரு தரப்பினரையும் அதிக அளவில் பாதித்து வருகிறது. எனினும், பாதிப்பிற்கு பின் உயிர்பிழைப்பு விகிதங்கள் பயமுறுத்தும் விதத்தில் மிகக் குறைவாகவே இருக்கின்றன. காலம் தாழ்த்தி நோய் முற்றிய நிலையில் கண்டறியப்படுவதே இதற்குக் காரணம். சிறப்பான ஸ்க்ரீனிங் செயல்திட்டங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் மேம்பட்ட சிகிச்சை விளைவுகள் உறுதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலோ 50% மலக்குடல் புற்றுநோய் நிகழ்வுகள் முற்றிய நிலைகளில் கண்டறியப்படுகின்றன மற்றும் கூடுதலாக, 20% நோயாளிகள், புற்றுநோய் உடலின் பிற பகுதிகளுக்கு பரவிய நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த அச்சுறுத்தும் போக்கை மாற்றுவதற்கு ஆரம்ப நிலையிலேயே ஸ்க்ரீனிங் செய்வதும் இந்நோய் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதும் மிக முக்கியமானது. அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் - ல் நோயாளிகளின் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தவும் மற்றும் இந்தியாவில் மலக்குடல் புற்றுநோயின் சுமையைக் குறைக்கவும் கோல்ஃபிட் வழியாக தொடக்க நிலையிலேயே நோய் கண்டறிதல் மற்றும் துல்லியமான சிகிச்சைகளை வழங்கல் மீது நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். என்று கூறினார். அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரண் பூரி, அப்போலோவின் செயல்திட்டம் குறித்துப் பேசுகையில், புற்றுநோய்க்கான மேம்பட்ட சிகிச்சையில் முன்னணி வகிக்கும் எமது இலக்கு என்பது, சிகிச்சையளிப்பது மட்டுமல்ல; வராமல் தடுக்கக்கூடிய மலக்குடல் புற்றுநோயின் தன்மை குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வை அதிகரிப்பதாகவும் இருக்கிறது. நவீன சிகிச்சை மற்றும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்த அணுகுமுறை வழியாக உயிர்பிழைப்பு விகிதங்களையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்ற துல்லிய சிகிச்சை பராமரிப்பை நாங்கள் வழங்குகிறோம். நோயாளிகளின் தனித்துவமான, தேவைகளுக்குப் பொருந்துகிறவாறு தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களை உருவாக்க நோயாளிகளுடன் எமது குழுவினர் நெருக்கமாக செயல்படுகிறோம். கோல்ஃபிட் வழியாக, தொடக்க நிலையிலேயே கண்டறிவதையும், சிறப்பான சிகிச்சை விளைவுகள் கிடைப்பதையும் உறுதி செய்வதன் வழியாக தங்களது ஆரோக்கியத்தின் மீதான கட்டுப்பாட்டை தனிநபர்கள் பெறுமாறு செய்வதே எமது நோக்கமாகும். ஸ்க்ரீனிங் முதல், சிகிச்சை வரையிலான பாதையை எளிமையாக்குவதன் வழியாக, இந்தியாவில் மலக்குடல் புற்றுநோயை குறைக்கும் நோக்கத்தோடு நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். என்று கூறினார். மலக்குடல் புற்றுநோய் என்பது, தொடக்க நிலையிலேயே கண்டறியப்படும்போது, சிகிச்சையளித்து குணப்படுத்தக்கூடிய புற்று நோயாகவும் மற்றும் வராமல் தடுக்க அதிக சாத்தியம் கொண்ட நோயாகவும் இருக்கிறது. தனிநபர்களை, குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் குடும்பத்தில் இருந்த வரலாறை அல்லது அறிகுறிகள் விடாப்பிடியாக தொடர்ந்து இருக்கின்ற நபர்கள் குறித்த காலஅளவுகளில் ஸ்க்ரீனிங் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அப்போலோ கேன்சர் சென்டர் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது, உரிய நேரங்களில் FIT சோதனைகள், கொலனோஸ்கோப்பி போன்ற தன்முனைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதும் அதிகரித்து வரும் மலக்குடல் புற்றுநோயின் போக்கை தடுத்து நிறுத்தவும் மற்றும் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றவும் நிச்சயம் உதவும். அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது. இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது.
Aruna cardiac care-Tirunelveli: அதிநவீன தொழில்நுட்பம் சர்வதேச தரம்; நெல்லை அருணா கார்டியாக் கேர்
நெல்லை அருணா கார்டியாக் கேர் ( Aruna cardiac care - Tirunelveli) அதிநவீன தொழில்நுட்பத்தை சர்வதேச தரத்துடன் அறிமுகப்படுவதில் தமிழகத்தில் முன்னோடி மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட OCT யை தென் தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி தென் ஆசியாவில் அதிக 'precision' ஆஞ்சியோபிளாஸ்டியை, நெல்லையை சுற்றியுள்ள மக்களுக்கு செய்துவரும் அருணா கார்டியாக் கேர் தனது அடுத்த அதிநவீன தொழில்நுட்பமான இருதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கான லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியை அறிமுகம் செய்துள்ளது. Aruna cardiac care-Tirunelveli லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்பது இதயத்திலுள்ள அடைப்புகளை நீக்கும் டிரான்ஸ் கதீட்டர் செயல்முறையாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்பது, இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களுக்குள் உருவாகியிருக்கும் இரத்த உறை கட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்ற பயன்படுத்துகிறது. மேலும் லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி குறிப்பிட்ட இலக்குகளுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்த்து, பாதுகாப்பான சிகிச்சையை அளிப்பதில் அருணா கார்டியாக் கேர் பெருமிதம் கொள்கிறது. இது குறித்து அருணா கார்டியாக் கேர் சேர்மன் இதயவியல் துறை தலைவர் டாக்டர்.E.அருணாசலம் கூறும்போது, இருதய இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Stenting) மூலம் சரிசெய்யப்பட்ட நோயாளிகள் சிலருக்கு 5% மீண்டும் ஸ்டென்ட் சுருக்கம்(Instent Restenosis) ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் சுருக்கங்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையை தவிர்த்து மிகவும் துல்லியமான முறையில் மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலம் சரிசெய்ய லேசர் கதிர்வீச்சு கொண்ட நவீன ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை மிகச்சிறந்த பயன்பாட்டை அளிக்கிறது. Aruna cardiac care-Tirunelveli லேசர் தொழில் நுட்பமானது உறைக்கட்டிகளை துல்லியமாக கண்டறிந்து உடைத்து துகளாக்குவதற்கு பதிலாக ஆவியாக்கி அகற்றுவதால், நோயாளிகள் விரைவாக குணமடைகின்றனர். இரத்த குழாய்களில் கொழுப்பு கட்டிகள் படிந்த கால்சியமாக உருமாற்றம் ஏற்பட்டு அடைக்கும் தருவாயில் வழக்கமான ஆஞ்சியோபிளாஸ்ட்டியை காட்டிலும் லேசர் கதீர்வீச்சின் மூலம் எளிமையாக அடைப்பை நீக்கலாம் என்றார். மேலும் டாக்டர்.E.அருணாசலம் கூறும்போது “இருதய இரத்த குழாய் மட்டுமின்றி பெரிபரல் ஆஞ்சியோபிளாஸ்ட்டி எனப்படும் கால்களுக்கு செல்லக்கூடிய இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை அகற்ற செய்யப்படும் சிகிச்சையிலும் லேசர் பயன்பாடு மேன்மையாக உள்ளது. Aruna cardiac care-Tirunelveli இரத்தம் உறையும் தன்மை கொண்ட நோயாளிகளுக்கு ஏற்படும் இருதய இரத்த குழாய் அடைப்பு மற்றும் கை கால்களுக்கான இரத்தக்குழாய்களின் அடைப்பு (Critical Limb Ischemia) ஆகியவற்றை லேசர் கதிர்வீச்சு சரிசெய்ய பேருதவி செய்கிறது. இவ்வகை லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையை தென்தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது” என்றார். அருணா கார்டியாக் கேர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்வர்ணலதா “இதய சுகாதாரத்தில் அதி நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மக்கள் நலத்திற்கு அருணா கார்டியாக் கேர் அர்ப்பணித்து வருகின்றது. புதிய லேசர் தொழில்நுட்பத்தால் இதய நோயாளிகள் இனி மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான சிகிச்சையை பெறலாம்” என்று கூறினார். Aruna cardiac care-Tirunelveli செங்கோல் ஆதீனம் 103 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய ஸ்வாமிகள், அருணா கார்டியாக் கேரில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை மையத்தை துவங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் தலைவர் DR.E.அருணாசலம், நிர்வாக இயக்குனர் DR.ஸ்வர்ணலதா அருணாசலம், துணை தலைவர் A.S.தர்ஷன், DR.விஜேஷ் ஆனந்த், DR.துளசி ராம், DR.மாதவன், DR.சங்கமித்ரா, DR.கணபதி சக்திவேல், DR.ஜெயக்குமார், DR.ராமசுப்பிரமணியன், DR.பத்ரி ஸ்ரீனிவாசன், , DR.கீதா, DR.கருணாகரன் மற்றும் அனைத்து ஊழியர்கள் பங்கேற்றனர். விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
Sexual Wellness: `கற்பனையிலும் இதை செய்யாதீர்கள்' -எச்சரிக்கும் மருத்துவர் | காமத்துக்கு மரியாதை-236
கா ற்றின் மொழி படத்தில், ஆர்.ஜே-வாக வேலைபார்க்கும் ஜோதிகாவிடம் 'பெண்களோட மார்பை பார்க்கிறேன்' என்று வருத்தப்படுவார் ஓர் ஆண். அதாவது, சம்பந்தப்பட்டப் பெண்களுக்கு உடலளவில் எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார். ஆனால், 'தான் நாகரீகமற்ற ஒரு செயலை செய்கிறோம்' என்பது அவருக்கே தெரிந்திருக்கும். இதைவிட பதற்றம் தருகிற நாகரீகமற்ற இன்னொரு விஷயம், வயது, உறவுமுறை, மரியாதைக்குரியவர்கள் என்கிற எந்தக் கட்டுப்பாடும் அற்று, தன் கண்களுக்குப் பிடித்த பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவது அல்லது வைத்துக்கொள்வதைபோல கற்பனை செய்து பார்ப்பது. இதுபற்றி விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ். Sexual Wellness மனதுக்குள் கற்பனை செய்துகொள்வார்கள் ''தனக்கு அறிமுகமான பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வதைப்போல கற்பனை செய்கிற பிரச்னை, ஆண்கள் மத்தியில் எல்லா காலங்களிலும் இருக்கிறது. முன்பெல்லாம் தங்களுக்குப் பிடித்த நடிகைகளை, மாடல்களை இப்படி மனதுக்குள் கற்பனை செய்துகொள்வார்கள். ஆனால், அது ஆண்கள் வட்டத்தைத்தாண்டி பெரும்பாலும் வெளியே தெரியாது. 'தெரியுமா, இவன் அந்த நடிகையோட பயங்கரமான ஃபேன்' என்று ஒருவருக்கொருவர் கேலி செய்துகொள்வதோடு அது நின்றுவிடும். அதனால், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை தருகிற அளவுக்கு, அந்த அத்துமீறலான கற்பனைகள் பிரச்னை ஏற்படுத்தியதில்லை. குற்றவுணர்ச்சியாக இருக்கிறது டாக்டர் ஆனால், சமீபகாலமாக இந்தப் பிரச்னையுடன் இருக்கிற ஆண்களை அதிகம் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை இப்போது போர்ன் வீடியோ ஸ் உள்ளங்கையிலேயே கிடைத்துவிட்டதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 'என் தோழியை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், காதல் அளவுக்கு யோசித்ததில்லை. அவளுடன் உறவு வைத்துக்கொள்வதைபோல மனதுக்குள் பலமுறை நினைத்துப்பார்த்துவிட்டேன். அவளை நேரில் பார்க்கும்போதெல்லாம் எனக்கு குற்றவுணர்ச்சியாக இருக்கிறது டாக்டர்' என்றார் இளைஞர் ஒருவர். Sexologist Kamaraj அந்தக் கற்பனையை இன்று முதல் செய்யாதீர்கள் ஒருதலையாக காதலிக்கிற பெண்ணை, நண்பனின் மனைவியை அல்லது காதலியை, உடன் பணிபுரிகிற பெண்ணை என்று இந்த நாகரீகமற்ற கற்பனை இன்னும் நீண்டது. அந்த இளைஞரிடம், 'அந்தக் கற்பனையை இன்று முதல் செய்யாதீர்கள். என்னை நம்பி என்னுடன் நட்பாக இருக்கும் பெண்ணின் மரியாதையை கற்பனையிலும் கெடுக்க மாட்டேன்' என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். நேரில் பார்க்கையில் இப்படிப்பட்ட கற்பனைகள் வருகின்றன என்றால், தோழியுடன் போனில் மட்டும் நட்பை தொடருங்கள்' என்றேன். `இவரை நம்பி எப்படி செக்ஸ் வெச்சுக்கிறது?' - மணமகள் கேள்வியும் தீர்வும் | காமத்துக்கு மரியாதை - 234 கற்பனை செய்வது அல்லது செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவது இன்னோர் இளைஞர், 'என்னுடைய சகோதரி உறவில் இருக்கிற பெண்ணுடன் அடிக்கடி கற்பனையில் தவறாக நடந்துகொள்கிறேன் டாக்டர். எனக்கே அது தவறு என தெரிகிறது. என்றாலும், அந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரை நேரில் பார்க்கும்போதெல்லாம் கூச்சமாக இருக்கிறது. இந்த கற்பனையில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அழுதார். நான் மேலே குறிப்பிட்ட ஆணுடைய பிரச்னையும் இவருடையதும் வேறு வேறு. சகோதரி முறை பெண்ணுடன் கற்பனையில் உறவு வைத்துக்கொள்வதை மருத்துவர்கள் (இன்செஸ்ட் incest) என்போம். இன்செஸ்ட் என்றால், சமூக கட்டமைப்பின்படி உறவு வைத்துக்கொள்ளக்கூடாத உறவுகளிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதுபோல கற்பனை செய்வது அல்லது செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவது. Men `3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு மரியாதை - 235 பெண்களின் மரியாதையை கற்பனையிலும் கெடுக்காதீர்கள் அரிதிலும் அரிதாக, 'கோயிலில் சாமி கும்பிடும்போது செக்ஸ் உணர்வு வருகிறது. அம்மாவைப் பார்க்கையில் எனக்கு அந்த உணர்வு வருகிறது' என்று கதறி அழுகிற ஆண்களையும் சந்தித்திருக்கிறேன். இதுவும் இன்செஸ்ட் தான். உலக அளவில் பாலியல் மருத்துவர்கள், இந்த எண்ணங்கள் வருவது வரைக்கும் தவறில்லை. ஆனால், இந்த விருப்பத்தை செயல்படுத்த முயற்சி செய்தால், அது சட்டப்படி தவறு என்று அறிவுறுத்துவோம். கூடவே, அந்தக் கற்பனையை மறுபடியும் செய்யாமல் இருப்பதுதான் உங்கள் குற்றவுணர்விலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி என்று எடுத்து சொல்வதுடன், அவர்களுக்குத் தேவையான கவுன்சலிங்கும் கொடுத்து அனுப்புவேன். உங்களுடன் உறவில் இல்லாத பெண்களின் மரியாதையை கற்பனையிலும் கெடுக்காதீர்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும் வலி உயிரே போகிறது. பிறகு மெள்ள மெள்ள வலி குறைகிறது. திடீரென இப்படிப்பட்ட வலி ஏற்பட என்ன காரணம், இந்த வலி சில நாள்களில் சரியாகிவிடுமா, தொடருமா? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறியை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ளது பிளான்ட்டர் ஃபாசிடிஸ் (Plantar Fasciiitis) என்ற பாதிப்பாக இருக்கலாம் என்றே தெரிகிறது. பிளான்ட்டர் ஃபாஸியா (Plantar Fascia) என்பது பாதத்தின் அடிப்பகுதியில் இயங்கும் தடிமனான ஒரு திசு. இந்தத் திசுவானது குதிகால் எலும்பை கால்விரல்களுடன் இணைக்கிறது. பாதத்தின் வளைவுக்கு உறுதியையும் வழங்குகிறது. கால்களின் வடிவத்தைப் பராமரிக்கவும், வாக்கிங், ஜாகிங் மேற்கொள்ளும்போது அந்த இயக்கத்தை எளிதாக்கவும் வில்லின் நாண் போல ஊக்கசக்தியாக பிளான்ட்டர் ஃபாசியா செயல்படுகிறது. இந்தப் பகுதி பாதிக்கப்படும்போது கால்களில் வலி உண்டாகும். அதையே பிளான்ட்டர் ஃபாசிடிஸ் (Plantar Fasciiitis) என்கிறோம். Heel Pain: குதிகால் வலி போக்கும் எருக்கு இலை...எப்படி பயன்படுத்துவது? உடல் பருமன்தான் இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம். அது தவிர, செருப்போ, ஷூவோ நம் கால்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கும்போது குதிகால் வலி வரும். கால்களைக் கோணலாக வைத்து நடப்பதாலும் வரும். புதிதாக ஹீல்ஸ் அணிய ஆரம்பித்திருப்போருக்கும் குதிகால் வலி வரும். குதிகால் பகுதிகளில் உப்பு படிமானம் சேர்கிறதா என்பதையும் செக் செய்ய வேண்டும். குதிகால் வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற தீர்வை நாட வேண்டும். பிளான்ட்டர் ஃபாசிடிஸ் பாதிப்பின் விநோத தன்மையே, காலையில் எழுந்து முதல் அடி வைக்கும்போது கடுமையாக வலிப்பதுதான். அதாவது நீண்ட ஓய்வுக்குப் பிறகு எடுத்து வைக்கும் முதல் அடியில் தீவிர வலியை உணர முடியும். இந்த அதிகாலை வலியானது பெரும்பாலும் குதிகாலில் கூர்மையான ஒரு பொருளால் குத்துவது போன்ற உணர்வை உண்டாக்கும். அமர்ந்திருத்தல், உறங்குதல் போன்ற செயலற்ற காலங்களில் பிளான்ட்டர் ஃபாசியா தசைகள் இறுக்கமடைந்து, சுருங்குவதால் இந்த வலி உண்டாகிறது. திடீரென காலில் எடை விழும்போதும் வலி, இறுக்கம் மற்றும் எரிச்சல் அதிகரிக்கும். பிளான்ட்டர் ஃபாசியா மற்றும் அதனுடன் தொடர்புடைய தசைகளை பலப்படுத்த துண்டு (Towel) உதவியுடன் செய்யும் நீட்சி பயிற்சியையும் கற்றுக்கொடுப்பார். Doctor Vikatan: அடிபடுவது, வலி, வீக்கம்... ஒரே ointment-ஐ எல்லாவற்றுக்கும் உபயோகிக்கலாமா? மருத்துவரை அணுகினால், உங்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் அறிந்து சிகிச்சை அளிப்பார். பிளான்ட்டர் ஃபாசியா மற்றும் அதனுடன் தொடர்புடைய தசைகளை பலப்படுத்த துண்டு (Towel) உதவியுடன் செய்யும் நீட்சி பயிற்சியையும் கற்றுக்கொடுப்பார். பிளான்ட்டர் ஃபாசியாவில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும், சரியான கால் சீரமைப்பை ஊக்கப்படுத்தவும் போதுமான ஆதரவு கொண்ட காலணிகளைத் தேடுங்கள். ஷாக் அப்சார்பர் (Shock absorber) போல அதிர்ச்சியை உறிஞ்சி, குதிகால் அழுத்தத்தைக் குறைக்க குதிகால் மற்றும் முன்கால் பகுதிகளில் போதுமான குஷனிங் கொண்ட காலணிகள் பலன் தரும். சாதாரண காலணிகளை அணிந்தால் பாத வலி இன்னும் அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். இது நிச்சயம் குணப்படுத்தக் கூடியதே. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 'பாதமே நலமா?' | Pattimandram Raja Speech | R.K Diabetic foot & podiatry institute | Awareness Video Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Summer: கறுப்பு நிற ஆடை அணிந்தால் உடலில் வெப்பம் அதிகரிக்குமா? | சம்மர் டிப்ஸ்!
கோடைகாலம் வந்தவுடன் நம்முடைய இயல்பு வாழ்க்கையின் அன்றாட விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது வெயிலின் தாக்கத்துக்கு ஏற்ப உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, நீர் ஆதாரங்களை எடுத்துக் கொள்வதுடன், சன் ஸ்கிரீன் போன்ற ஸ்கின் கேர் விஷயங்களையும் பின்பற்ற வேண்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆடைகளில் சில மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும். கோடை காலத்திற்கு ஏற்ப காட்டன் உடைகளை அணிய வேண்டும் என்று கூறுகிறார், தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா. இதிலும் குறிப்பாக பல வருடங்களாக கேள்விப்பட்டிருக்கும் விஷயம், கறுப்பு உடை அணிந்தால் உடலில் வெப்பம் அதிகம் ஆகும் என்பதுதான். உண்மையில் கறுப்பு உடை அணிந்தால் உடல் வெப்பம் ஆகுமா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். மருத்துவர் கோல்டா கூற்றுப்படி, பொதுவாக அனைத்து துணிகளும் உடலால் வெளிப்படும் அகச்சிவப்பு கதிர்வீச்சை ஓரளவு உள்வாங்கிக் கொள்கிறது. இது குளிர்காலத்தில் நம்மை சூடாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் வெப்ப நாள்களில் இது உகந்ததாக நமக்கு இல்லை. பருத்தி, நைலான் போன்ற ஓரளவு காற்று உட்புகும் ஆடை வகைகளை அணிவது அவசியம். இவை வியர்வை மற்றும் வெப்பத்தை வெளியேற்ற அனுமதிக்கின்றன. நிறம் என்று எடுத்துக் கொண்டால், பெரும்பாலான மக்கள் கோடையில் வெள்ளை நிற ஆடைகளை அணிவார்கள் ஏனென்றால் வெள்ளை நிறம், கறுப்பு நிறத்தைப்போல ஒளியை உறிஞ்சுவதற்கு பதிலாக அப்படியே பிரதிபலிக்கிறது. சூரியனிடமிருந்து மட்டுமல்லாது நம் உடலில் இருந்து வரும் வெப்பத்தை வெள்ளை ஆடைகள் அப்படியே திரும்ப பிரதிபலிக்கிறது. இந்த வெயில் காலத்தில் ஓரளவுக்கு தங்களை தற்காத்துக் கொள்ள தளர்வான ஆடைகளையும், வெள்ளை நிற ஆடைகளையும் அணிவது நல்லது. தளர்வான, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வையை வெளியேற்றவும் உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும் என்கிறார் மருத்துவர். Sunscreen: இந்த சம்மருக்கு உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி?!
Doctor Vikatan: திடீர் நெஞ்சு வலி என்ன காரணம்? | Heart Attack
Doctor Vikatan: தெரிந்த நண்பருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை (Bypass surgery) செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, உயிர் பிரிந்ததாக கூறுகின்றனர். இப்படி ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒரு நபர் திடீரென உயிரிழக்க பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஹார்ட் அட்டாக் பாதிப்பும் ஒன்று. உங்கள் நண்பர் விஷயத்தில் அவரது உடல்நலம் எப்படியிருந்தது, எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தன என்ற விவரங்கள் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்குத்தான் தெரியும். அவரது இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படி இருந்தது என்பது முதல் கேள்வி. இதயத்தின் பம்ப்பிங் திறன் குறிப்பிட்ட அளவைவிட குறையும்போது திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிர் போகும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வென்ட்ரிகுலர் டக்கிகார்டியா (Ventricular tachycardia) அல்லது வென்டிகுலர் ஃபிப்ரிலேஷன் (Ventricular fibrillation) எனப்படுகிற மிக மோசமான இதயத்துடிப்பு நிலை. இதயத்தின் செயல்பாடு குறைவாக இருக்கும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த பிறகும்கூட ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பைபாஸ் கிராஃப்ட் திடீரென மூடிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. பைபாஸ் கிராஃப்ட் என்பது இதய பைபாஸ் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறை. இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, இதயத்திற்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் போகும். இதனால் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம். ஹார்ட் அட்டாக் Doctor Vikatan: இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு... ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க முடியுமா? இவற்றை சரி செய்ய, அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள வேறு சில ரத்த நாளங்களை எடுத்து அடைபட்ட ரத்த நாளங்களுக்கு பதிலாக பொருத்துவார்கள். இவ்வாறு அடைப்பைத் தவிர்த்து, ரத்த ஓட்டத்தை சீராக்கப் பயன்படும் இந்த ரத்த நாள சிகிச்சைதான் பைபாஸ் கிராஃப்ட். இது திடீரென மூடிக்கொள்ளும் நிலையில், மீண்டும் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம். இவற்றையெல்லாம் பொதுவான கருத்தாகச் சொல்லலாமே தவிர, உங்கள் நண்பர் விஷயத்தில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பைபாஸ் செய்த ஒரே வாரத்தில் மரணம் நிகழ்ந்திருப்பதால் இந்த விஷயங்கள் காரணமாக இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் heart attack அதிகம் ஏற்பட என்ன காரணம்? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Sleep: ஆழ்ந்து தூங்க என்ன செய்ய வேண்டும்? - தூக்கம் தொடர்பான A to Z தகவல்கள்! | In-Depth
ஆ ரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் அவசியம் என்பது எல்லோருக்குமே தெரிந்துவிட்டது. ஆனால், அவரவர் சூழல் காரணமாக, நம்மில் பலரால் தினமும் 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்க முடிவதில்லை என்பதே நிஜம். தூக்கம் பற்றிய சில கூடுதல் வழிகாட்டல்களை தந்தால், இன்னும் பலர் 'ஒரு நல்ல ஆழ்ந்த தூக்க'த்துக்கு முயற்சி செய்வார்கள் என்பதற்காகவே இந்தக் கட்டுரை. தூக்கம் தொடர்பான வழிகாட்டல்களை இங்கே வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த தூக்கவியல் மருத்துவர் ஜெயராம். Sleep தூங்கும்போது நம்முடைய உடலில் நடக்கிற நல்ல விஷயம் நம்முடைய உடலில் நல்ல ஹார்மோன்களும் சுரக்கின்றன. கெட்ட ஹார்மோன்களும் சுரக்கின்றன. ஆழ்ந்த தூக்கத்தின்போதுதான், இந்த ஹார்மோன்கள் சமநிலைப்பட்டு, நல்ல ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். கெட்ட ஹார்மோன்களின் சுரப்பு குறையும். இதுதான் நாம் தூங்கும்போது நம்முடைய உடலில் நடக்கிற நல்ல விஷயம். ஒருவேளை தொடர்ச்சியாக ஆழ்ந்த தூக்கம் இல்லையென்றால், கெட்ட ஹார்மோன்கள் அதிகம் சுரந்து கட்டுக்கடங்காத நீரிழிவில் ஆரம்பித்து உயர் ரத்தக்கொதிப்பு, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், கேன்சர் செல்களின் பெருக்கம் என ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பிக்கும். புற்றுநோய் உருவாவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில், தொடர்ந்து தூக்கம் குறைவதும் ஒன்று. இது ஆராய்ச்சிப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தூக்கமும் நோய் எதிர்ப்புச்சக்தியும் தூக்கம் குறைந்தால் நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். விளைவு, அடிக்கடி இருமல், தும்மல், சளி, காய்ச்சலில் ஆரம்பித்து உயிருக்கு ஆபத்தான நோய்கள் வரை வரலாம். Sleep 3 தூண்களில் முக்கியமான தூண் உணவு, உடற்பயிற்சி, தூக்கம்...இந்த மூன்றும்தான் ஆரோக்கியத்தின் 3 தூண்கள். இந்த மூன்றில் எது ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியமானது என்று ஆராய்ச்சி செய்ததில், தூக்கம்தான் அந்த இன்றியமையாத ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக தெரிவித்துவிட்டார்கள். எது நல்ல தூக்கம்? இரவு 10 அல்லது 10.30-க்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்; படுத்த 10 முதல் 20 நிமிடங்களுக்குள் உறங்கிவிட வேண்டும்; தூக்கத்துக்கு இடையே திடீரென விழித்துக்கொள்வது, சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது போன்ற எந்த இடையூறும் இல்லாமல் காலை 5 முதல் 6 மணி வரை நன்கு உறங்க வேண்டும். தூங்கி எழுந்தபின் மறுபடியும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் வரக் கூடாது. சோர்வாக உணரக் கூடாது. தலை வலிக்கக் கூடாது. இவையெல்லாம்தான் நல்ல தூக்கத்தின் அறிகுறி. தூக்கம் எது கெட்ட தூக்கம்? குறட்டை விடுவது, தூக்கத்தின்போது மூச்சுத்திணறி விழித்துக்கொள்வது, தூக்கம் வராமல் தவிப்பது, அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்துக்கொள்வது ஆகியவை இருந்தால், அவர்கள் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் தூங்கி எழுந்த பிறகும் புத்துணர்ச்சியாக உணர மாட்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று யோசிப்பார்கள். தூங்கி எழுந்த பிறகு தலைவலிக்கும். மனச்சோர்வும், நெகட்டிவ் எண்ணங்களும் தலை தூக்கும். Sleep: பயணங்களில் தூக்கம், பகல் தூக்கம், குறட்டை... வர காரணம் என்ன? இருட்டு அறையும் தூக்கமும் தூங்கும் அறை இருட்டாக இருக்க வேண்டும்; சத்தமில்லாமல் இருக்க வேண்டும்; இதமான குளிர்ச்சியுடன் இருக்க வேண்டும். மெலட்டோனின் என்பது தூக்கத்தை வரவழைக்கும் ஒரு ஹார்மோன். இது, இருட்டான அறையில் நீங்கள் தூங்கும்போதுதான் நன்கு சுரக்கும். வெளிச்சமான அறையில், போதுமான மெலட்டோனின் சுரக்காதபட்சத்தில், தூக்கம் வராது. அப்படியே தூங்கினாலும் அது முழுமையான தூக்கமாக இருக்காது. sleep | தூக்கம் Sleep guidance: இரும்புக்கட்டிலா; மரக்கட்டிலா... எது நல்லது? தூக்கத்தைக் கெடுக்கும் விஷயங்கள் மசாலா அதிகம் சேர்த்த உணவுகளை சாப்பிடுவது; டீ, காபி அருந்துவது; வயிறு நிறைய சாப்பிடுவது; மது குடிப்பது, புகைப்பது, கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது, டிவி மற்றும் செல்போன் பார்ப்பது போன்றவற்றை மாலை 6 அல்லது 7 மணிக்கு மேல் செய்தீர்களென்றால், உங்கள் தூக்கம் கெடும். உங்கள் தூக்கத்தை எது கெடுக்கிறது என்பதைக் கண்டறிந்து தவிர்ப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்கள் மெலோடியான இசை கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது, பால் அருந்துவது, வாழைப்பழம் சாப்பிடுவது, வெதுவெதுப்பான நீரில் 3 டீஸ்பூன் எப்சம் சால்ட் போட்டு அதில் 10 நிமிடம் கால்களை வைத்திருப்பது போன்றவை தூக்கத்துக்கான ஹார்மோன்களைத் தூண்டி தூக்கத்தை வரவழைக்கும். தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னால் இவற்றில் ஒன்றை செய்யலாம். டயபடீஸ் இல்லாதவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். இவற்றுடன் முழுமையான செக்ஸும் தூக்கத்தை வரவழைக்கும் என அமெரிக்க ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியுள்ளன. தூக்கம் பாதி கண்கள் மூடி தூங்குவது நல்ல தூக்கமா? இப்படித் தூங்கும்போது, அறையில் இருக்கிற லேசான வெளிச்சமும் கண் நரம்புகள் வழியாக மூளைக்குச் சென்று, அங்கு சுரக்கிற தூக்கத்துக்கான ஹார்மோன்களை தடுக்கும். ஆனால், இந்தப் பிரச்னை எங்கோ ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். சின்ன சத்தத்துக்குக்கூட விழித்துக்கொள்வது பிரச்னையா? தூக்கமின்மை பிரச்னைக்கு 2 காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, உடல் நலம் குன்றுவதால் வருகிற தூக்கமின்மை. இரண்டாவது, காரணம் தெரியாத தூக்கமின்மை . சின்ன சத்தத்துக்குக்கூட விழித்துக்கொள்வது, காரணம் தெரியாத தூக்கமின்மை பிரச்னைக்கான ஆரம்ப அறிகுறி. sleep எது சரியான உறங்கும் முறை? வலதுப்பக்கம் அல்லது இடதுப்பக்கம் படுத்து உறங்குவதுதான் சரியான முறை. மல்லாந்து படுத்து தூங்குவது, குப்புறப்படுத்து தூங்குவது சில பிரச்னைகளை ஏற்படுத்தும். மல்லாந்து படுத்தால், நாக்கு உள் சென்று மூச்சுப்பாதை குறுகும். இதனால் குறட்டை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தூக்கத்தின் இடையிடையே விழித்துக்கொள்ளுதல் போன்ற பிரச்னை வரும். குப்புறப்படுத்து தூங்கும்போது கழுத்து மற்றும் முதுகுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலிக்க ஆரம்பிக்கும். படுத்தவுடனே தூங்குதல் நல்ல விஷயமா? படுத்தவுடன் தூங்குவது மிக மிக நல்ல விஷயம். ஒருவர், படுக்கைக்குச் சென்ற 20 அல்லது 25 நிமிடங்களில் தூங்கிவிட வேண்டும். இது 5 அல்லது 10 நிமிடங்களில் கூடக்குறைய இருக்கலாம். இதுதான் சரியான முறை. படுக்கையில் படுத்து ஒரு மணி நேரம் கழித்தும் தூக்கம் வரவில்லையென்றால், அதுவும் ஒருவகை தூக்கமின்மை பிரச்னைதான். இதற்கு இதமான இசை கேட்பது, யோக நித்ரா பயிற்சி என தீர்வுகள் இருக்கின்றன. அலாரம் எத்தனை மணி நேர தூக்கம் நல்லது? சிலர் 6 மணி நேரம் உறங்கினாலே புத்துணர்ச்சியாக இருப்பார்கள். சிலருக்கு 8 மணி நேரம் தூங்கினால்தான் புத்துணர்ச்சிக் கிடைக்கும். சிலர் 5 மணி நேரம் தூங்கினால்கூட புத்துணர்ச்சியாக இருப்பார்கள். இது தனி மனிதர்களைப் பொறுத்த விஷயம். மெக்னீஷியத்துக்கும் தூக்கத்துக்கும் என்ன தொடர்பு? மெக்னீஷியம் மிக மிக முக்கியமான தாது உப்பு. இது நாம் சாப்பிடுகிற பல உணவுப்பொருள்களிலும் இருக்கிறது. மெக்னீஷியமும், தூக்கத்துக்கான அமினோ ஆசிட் புரோட்டீனும் நம் உடலில் போதுமான அளவு இருந்தால் தூக்கம் நன்றாக வரும். முட்டை, பால், சீஸ், தயிர், நட்ஸ் போன்றவற்றில் இந்த தாது உப்பும் அமினோ ஆசிடும் இருக்கின்றன. இவை மூளையில் இருக்கிற தூக்கத்துக்கான ஹார்மோன் சுரப்பதற்கு உதவும். இதேபோல, வைட்டமின் டி-யும் தூக்கத்துக்கு அவசியமான ஒரு சத்துதான். Dr. Jayaram மெனோபாஸ் நேரத்து தூக்கமின்மை இந்த நேரத்தில் பெண்களுடைய உடலில் பல மாற்றங்கள் நிகழும். அதில் தூக்கமின்மையும் ஒன்று. இதற்கு மகப்பேறு மருத்துவரின் அறிவுரைப்படி ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். தைராய்டும் தூக்கமும் ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை இருக்கும். இதனால், சோர்வாக இருப்பார்கள். அதனால்தான், தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்களுக்கு தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வோம். sunday ஞாயிறுக்கிழமை இரவு ஏன் தூக்கம் வருவதில்லை? சனிக்கிழமை இரவில், 'நாளைக்கு சண்டே. மெதுவா எழுந்தா போதும். அதனால, இன்னிக்கு (சனிக்கிழமை) லேட்டா தூங்கலாம்' என்று நினைக்கிறார்கள். அந்த ஒரு நாள் தூக்க ஒழுங்கு மாறுவதால், மறுநாள் இரவு தூக்கம் சரியான நேரத்துக்கு வராது. கூடவே, மறுநாள் (திங்கள்) செய்ய வேண்டிய வேலைகளை யோசித்துக்கொண்டே இருப்பதாலும் தூக்கம் கெடும். அதனால், சனிக்கிழமையும் வழக்கமான நேரத்தில் தூங்கினால்தான், நம் உடலில் இருக்கிற பயலாஜிக்கல் கிளாக் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் அதே நேரத்தில் தூக்கத்தை வரவழைக்கும். Lung Health: நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க... மருத்துவர் சொல்லும் வழி!
Doctor Vikatan: 18 வயது பெண்ணுக்கு நரைமுடி வருவதை தடுக்க முடியுமா? இளநரை பிரச்னைக்கு தீர்வு என்ன?
Doctor Vikatan: என் மகளுக்கு 18 வயதுதான் ஆகிறது. அதற்குள் அவளுக்கு தலையில் நிறைய வெள்ளைமுடிகள் இருக்கின்றன. இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் மொத்த தலையும் நரைத்துவிடுமோ என பயமாக உள்ளது. இதைத் தடுக்க ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்கள். பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் நரைமுடியைப் பொறுத்தவரை ஒருமுறை வந்துவிட்டால் அதை மீண்டும் கறுப்பாக்குவது சாத்தியமில்லை. ஆனால், சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை எடுத்தால், நரை மேலும் அதிகமாகாமல் தடுக்க முடியும். உங்கள் மகளுக்கு தினமும் நெல்லிக்காய் ஜூஸ் கொடுப்பதை வழக்கப்படுத்துங்கள். ஜூஸாக கொடுக்க முடியாவிட்டால் நெல்லிக்காய் லேகியம் கொடுக்கலாம். கறிவேப்பிலையை முடிந்த அளவுக்கு உணவில் சேருங்கள். பொடியாகவோ, துவையலாகவோ... வாய்ப்பிருக்கும் வகையில் எல்லாம் தினமும் கறிவேப்பிலை உடலுக்குள் சேரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மகளை வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் எடுக்கச் சொல்லுங்கள். முளைக்கட்டிய பயறு வகைகளை அடிக்கடி சாப்பிடச் சொல்லுங்கள். வெளி உணவுகளைக் கூடியவரை தவிர்ப்பது நல்லது. எப்போதாவது ஒருநாள் சாப்பிடுவதில் பிரச்னையில்லை. அது அடிக்கடி நிகழ்கிற வழக்கமாக இருக்க வேண்டாம். நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிடச் சொல்லுங்கள். இளநரை பிரச்னைக்கு இஞ்சித்தேன் மிகச் சிறந்த மருந்தாகச் செயல்படும். இதை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். Myths and Facts: ஒரு முடியைப் பிடுங்கினால் நரை அதிகரிக்குமா? இளநரை பிரச்னைக்கு இஞ்சித்தேன் மிகச் சிறந்த மருந்தாகச் செயல்படும். இதை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். இஞ்சியின் மேல் தோலைச் சீவிவிட்டு, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அதில் குண்டூசி கொண்டு சிறு சிறு ஓட்டைகள் போட்டு, மலைத் தேனில் ஊற வைக்கவும். அடுத்த நாள் முதல் தினம் ஒரு துண்டு என்ற ரீதியில் காலையில் சாப்பிட்டு வரலாம். இந்த இஞ்சித் தேனை முறையாகச் சாப்பிட்டு வந்தால் நரை தோன்றுவது தள்ளிப் போகும்; தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வயதும் தள்ளிப் போகும்! நோய்களுக்குத் தடை விதிக்கும். தேவைக்கு ஏற்ப அளவோடு தயாரித்துப் பயன்படுத்தலாம். மலைத்தேன் என்பது விவசாயிகளிடமிருந்தோ, மலைவாழ் மக்களிடமிருந்தோ கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்தவும். சித்த மருத்துவத்தில் கரிசாலை கற்பம் என்ற மாத்திரையும் இளநரை பிரச்னைக்கு உதவும். மருத்துவர் பரிந்துரையோடு அதையும் கொடுக்கலாம். உங்கள் மகளை நிறைய நீர்மோர் குடிக்கச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இளநரை தடுக்கலாம், தலைமுடி பிளவுபடுதல் குறைக்கலாம்! - கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்!
Summer Hair Care: புதினா, வெள்ளரிக்காய், வாழைப்பழம்; கூந்தல் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்?
அ திகப்படியான வியர்வை, உடல் சூடு, தலையில் படியும் அழுக்குகள் எனக் கோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்னைகள் ஏராளம். அவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உண்டா என்பது பற்றி பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசந்தரா. Hair care கற்றாழை * கற்றாழையிலிருக்கும் நுங்கு போன்ற சதைப்பகுதி நான்கு டீஸ்பூன், பெரிய நெல்லிக்காய் சாறு நான்கு டீஸ்பூன் எடுத்து தலையில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் சூட்டினால் ஏற்படும் முடிகொட்டுதல் பிரச்னை நீங்கி, தலைமுடி பளபளப்பாக இருக்கும். தயிர் * வறட்சியால் முடி உதிர்கிறது எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி உறுதியோடு இருக்கும். உதிர்வதும் நிற்கும். வாரம் இருமுறை இப்படிச் செய்து வர வேண்டும். bathing புதினா *தலைக்குக் குளிக்கும் நீரில் புதினா ஜூஸ் 10 டீஸ்பூன் கலந்து குளிக்கலாம் அல்லது தண்ணீரை லேசாகக் கொதிக்க வைத்து சிறிது வேப்பிலையை அதில் சேர்த்து அடுப்பை அணைத்து ஆறவிடவும். அரை மணி நேரம் கழித்து சாறு இறங்கிய தண்ணீரை நீங்கள் குளிக்கும் டப்பில் ஊற்றி கூடுதலாக தண்ணீர் சேர்த்து குளித்தால் பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம். வாழைப்பழம் * அவகாடோ, வாழைப்பழம் இரண்டையும் சம அளவில் எடுத்துக் குழைத்து தலையில் மாஸ்க் போன்று போட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால், கூந்தல் பட்டுபோல மிருதுவாக இருக்கும். கூந்தலின் உறுதித்தன்மையும் அதிகரிக்கும். வசுந்தரா Heat Stroke: உயிரையும் பறிக்கும் வெயில்; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பு டிப்ஸ் வெள்ளரி * வெள்ளரிக்காய் ஜூஸை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் வெயிலினால் தலை யில் உருவாகும் சிறுகட்டிகள் மறையும். Summer: வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி முதல் வெள்ளரிக்காய்ப் பாயசம் வரை... வெயில் கால உணவுகள்! 3 எண்ணெய் * கடலை எண்ணெய் , தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணய் மூன்றையும் சம அளவில் எடுத்து சுத்தமான பாட்டிலில் ஊற்றி 10 நாள்கள் அதை வெயில் படும் இடத்தில் வைக்கவும். பிறகு வாரம் ஒருமுறை தலை மற்றும் உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். எண்ணெய் தேய்த்த அன்று ஷாம்பு, சீயக்காய் போட்டு குளிப்பதைவிட, மறுநாள் உபயோகித்தால் முடி உறுதியுடன் இருக்கும். ஷாம்பு Summer Skin Care டிப்ஸ்: தயிர், தேன், தேங்காய்ப்பால்.. சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்? பூந்திக்கொட்டை * தினமும் ஷாம்பு பயன்படுத்துவதால் இளவயதிலேயே நரை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஷாம்புக்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக்கொட்டையை வாங்கி சுடுநீரில் ஊறவைத்து ஒரு மணிநேரம் கழித்து அந்தத் தண்ணீரை வடிகட்டி தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
`3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு மரியாதை - 235
''தா ம்பத்திய உறவுதொடர்பான ஒரு சந்தேகத்துக்கு தீர்வு பெற, பெண் ஒருவர் ஆன்லைனில் தொடர்புகொண்டார். 'எனக்கு சுகப்பிரசவம்தான் நடக்க வேண்டுமென விரும்புகிறேன் டாக்டர். மூன்றாவது டிரைமெஸ்டரில் உறவு வைத்துக்கொண்டால், சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மையா டாக்டர்' என்று கேட்டார். உண்மைதான் என்றேன்'' என்கிற செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ், அதற்கான மருத்துவ விளக்கத்தை பகிர ஆரம்பித்தார். ''பொதுவாகவே தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும்போது மூளையில் இருந்து மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும். இந்த மகிழ்ச்சிக்காகத்தான், மனிதர்கள் காதலிக்கிறார்கள்; தாம்பத்திய உறவும் வைத்துக்கொள்கிறார்கள். இப்போது கர்ப்பிணிகளுக்கு வருவோம். கர்ப்பமாக இருக்கும்போது உறவுகொண்டால், கணவன், மனைவிக்கு மட்டுமல்லாது அவருடைய வயிற்றில் இருக்கும் கருவுக்கும் நல்லது. உறவு வைத்துக்கொள்ளும்போது மூளையில் இருந்து மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும் என்று சொன்னேன் அல்லவா? அந்த ஹார்மோன் சுரப்பு தாய்க்கு மட்டுமல்லாது அவர் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் நல்லது. மூன்றாவது டிரைமெஸ்டரில், பெண்ணின் வயிறு நன்கு மேடிட்டு இருக்குமென்பதால், ஆண், மனைவியின் வயிற்றில் அழுத்தம் கொடுக்காமல் கவனமாக உறவுகொள்ள வேண்டும். தாம்பத்திய உறவும் சுகப்பிரசவமும் இப்போது, தாம்பத்திய உறவு சுகப்பிரசவத்துக்கு எப்படி உதவ முடியும் என்கிற அந்தப்பெண்ணின் கேள்விக்கு வருகிறேன். கர்ப்பம் உறுதியானவுடனே 'இந்த மாதம், இந்த தேதியில் பிரசவம் நிகழ வாய்ப்பிருக்கிறது' என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துவிடுவார்கள். 'டாக்டர் சொன்ன அதே மாசம், அதே தேதியில கரெக்டா டெலிவரியாகிடுமா' என்று பலருக்கும் கேள்வி எழும். அந்தத் தேதிக்கு முன்னாலும் பிரசவம் நிகழலாம், பின்னாலும் நிகழலாம். 'தேதி ஓகே; மாசம்கூடவா டாக்டர் மாறும்' என்றும் சிலருக்கு கேள்வி எழும். அதுவும் மாறலாம். எப்படியென்றால், அக்டோபர் முதல் வாரத்தின் ஒரு தேதியில் குழந்தைப் பிறக்கலாம் என மருத்துவர் குறிப்பிட்டிருப்பார். ஆனால், குழந்தை செப்டம்பர் மாதத்தின் இறுதியிலேயே பிறந்துவிடலாம். ஒருவேளை,மகப்பேறு மருத்துவர் குறித்துக்கொடுத்த தேதியைத் தாண்டியும் பிரசவ வலி ஏற்படவில்லையென்றால், அதற்கான தீர்வாக தாம்பத்திய உறவு பயன்படலாம். கருத்தரிப்பை Pull Out முறை 100 சதவிகிதம் தடுக்குமா? | காமத்துக்கு மரியாதை - 215 குறிப்பிட்ட டெலிவரி தேதி தாண்டியும் பிரசவ வலி வரவில்லையென்றால், தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு, ஒருசில நாள்கள் மகப்பேறு மருத்துவர்கள் காத்திருப்பார்கள். ஒருவேளை, குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் குறைந்துவிட்டால் அது குழந்தையின் உயிருக்கே கூட ஆபத்தாகிவிடலாம். இதுபோன்ற நேரத்தில், சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளுக்கு புரோஸ்டாகிளாண்டின்ஸ் (prostaglandins) என்ற மருந்தைத் தந்து சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இந்த மருந்து கருப்பையின் வாயை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது. இதே புரோஸ்டாகிளாண்டின்ஸ் ஆணின் விந்திலும் இருக்கிறது. பிரசவ தேதி நெருங்கும்போதும் தம்பதியர் உறவுகொண்டால், விந்தில் இருக்கிற புரோஸ்டாகிளாண்டின்ஸ் கருப்பையின் வாயை விரிவடையச் செய்து, பிரசவ வலியை ஏற்படுத்திவிடும். இதனால், சுகப்பிரசவம் நிகழவும் வாய்ப்பிருக்கிறது. மூன்றாவது டிரைமெஸ்டரில் உறவு வைத்துக்கொண்டால் சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருப்பதாக நீங்கள் கேள்விபட்டது மருத்துவரீதியாக உண்மைதான் மேடம்'' என்று அவருக்கு தெளிவுபடுத்தினேன். சுகப்பிரசவம் கருத்தடை சாதனங்களின் வகைகள்; யாருக்கு எது பொருந்தும்... பக்க விளைவுகள் என்ன? - கம்ப்ளீட் தகவல்கள்! ''மற்றவர்களுக்கு இன்னும் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்ப காலம் முழுவதும் தாம்பத்திய உறவு கொள்ளலாம். அதனால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், தாய்க்கும் சேய்க்கும் இணைப்பாக இருக்கும் நஞ்சு (பிளாசன்டா) கீழே இறங்கியிருந்தால், அதாவது கருப்பை திறக்கும் இடத்தில் அந்த நஞ்சு இருந்தால் உறவைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களும் கர்ப்ப கால செக்ஸை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் லேசான ரத்தப்போக்கு இருக்கிற பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம். இப்படிப்பட்ட பெண்களும் உறவைத் தவிர்ப்பதே நல்லது. 'கருப்பையில் கிருமித்தொற்று ஏற்படலாம்' என்று அறிவுறுத்தப்பட்ட கர்ப்பிணிகளும் செக்ஸை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் கர்ப்ப காலம் முழுதும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Adolescence: வளரிளம் பருவத்தினரின் `இரட்டை வாழ்க்கை' - பெற்றோர் அறியாத அபாயங்கள்! | Explained
நான் உரையாடல்களில் வளர்ந்தேன்; இவர்கள் எமோஜிகளில் பேசுகின்றனர். நான் புத்தகங்கள் படித்தேன் ; இவர்கள் ரீல்ஸ் பார்க்கின்றனர். நான் சுய தேடலில் வளர்ந்தேன்; இவர்கள் ஒப்பிடல்களால் சூழ்ந்திருக்கின்றனர். இந்த தொற்றுநோய் வந்துவிட்டது, நாம் அதை பார்க்காமல் இருக்கிறோம். நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ஆங்கில லிமிடட் சீரிஸ் அடலசன்ட்ஸ் பற்றிய பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர். அடலசன்ட்ஸ் சிரீஸின் கதாசிரியர், இது அனைத்து பள்ளிகளிலும் காட்டப்பட வேண்டும், நாட்டின் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட வேண்டும் எனக் கூறுகிறார். ஏனென்றால், இந்த கதை பேசும் விஷயம் மிகவும் முக்கியமானது, நாளுக்குநாள் மோசமாகிவருவது. உனடியாக தீர்வைக் கோருகின்றது. ஜேமியின் வாழ்க்கை சகாக்களின் அழுத்தம், நச்சு-ஆண்மை (toxic masculinity) , ஆன்லைன் தீவிரமயமாக்கல் (Online Radicalization), உணர்ச்சி கொந்தளிப்பு, தாழ்வுமனப்பான்மை, குழப்பம், வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்திருக்கிறது. Adolescence ஒவ்வொரு தலைமுறையிலும் அடுத்த தலைமுறை பற்றிய கவலைகள் எழுவது சாதாரணமானதுதான். சொல்லப்போனால் முந்தைய தலைமுறையில் பெற்றோர்களிடம் இப்படி கவலைப்பட தேவையில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் இந்தமுறை விஷயம் வேறுமாதிரியானது. கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் சில ஆயிரம் அல்காரிதம், தொழில்நுட்ப இஞ்சினியர்கள் கையில் பலகோடி உலக மக்களிடம் தாக்கம் செலுத்தும் சக்தி இருக்கும் முதல் தலைமுறை இது. Adolescence அடலசன்ஸ் தொடரில் ஒரு சிறுவன் கொலை குற்றத்தில் ஈடுபடுகிறான். அவன் கொலை செய்த காரணம் உளவியல் ரீதியாக ஆராயப்படுகிறது. கொலை கத்திக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது தொழில்நுட்பத்தின் கோரமுகம். ஜேமி மில்லர் தனது 13-வது வயதில் இருக்கிறான். பதின் பருவம் என்பது நாம் வளரும் காலகட்டம் மட்டும்மல்ல, நாம் எப்படிப்பட்ட வளர்ந்த மனிதனாக உருவாக்கப்போகிறோம் என்பதை வடிவமைக்கும் காலகட்டம். சுய தேடல், உருமாற்றம், சின்ன சின்ன புரட்சிகள், உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் ஆராயும் ஆர்வம், திறமைகளை வளர்த்துக்கொள்ளும் முடுக்கம், உறவுகளை புரிந்துகொள்ளுதல் என கழியவேண்டியது 10 - 19 வயதுக்கு இடையிலான நாள்கள். இதில் உடல் மாற்றங்கள், பாலியல் வளர்ச்சி, அடையாள நெருக்கடி (Identity Crisis) எனப் பலவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். ஜேமியின் வாழ்க்கை சகாக்களின் அழுத்தம், நச்சு-ஆண்மை (toxic masculinity) , ஆன்லைன் தீவிரமயமாக்கல் (Online Radicalization), உணர்ச்சி கொந்தளிப்பு, தாழ்வுமனப்பான்மை, குழப்பம், வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்திருக்கிறது. இது அத்தனையையும் பதின் பருவத்தில் நடக்கும் சாதாரண நிகழ்வுகள் என நாம் கடந்துவிட முடியாது. அப்படிக் கடந்ததன் வெளிப்பாடுதான் 2020-ல் நடந்த பாய்ஸ் லாக்ரும் சம்பவம். பிரிவிலேஜ் நிறைந்த சில டெல்லி சிறுவர்கள் (அனைவருக்கும் கிட்டத்தட்ட 15 வயது) ஆபாச படங்கள், பெண்கள், வகுப்பில் உடன் படிக்கும் பெண்கள் பற்றி மிகவும் இழிவாக கருத்துகளைப் பேசியிருந்தனர். பாலியல் வன்கொடுமைகளை மிகவும் நார்மலாக அந்த சிறுவர்கள் பேசியிருந்தது மொத்த சமூகத்தையும் அதிரவைத்தது. வளரிளம் பருவத்தினர் பெற்றோருக்கு முன் ஒரு வாழ்க்கையும், சமூக வலைத்தளங்களில் மற்றொரு வாழ்க்கையும் வாழ்கின்றனர் என்பதை இந்த சம்பவம் துல்லியமாக சுட்டிக்காட்டியது. ஆனால் அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன? பெற்றோர்கள் ஏற்படுத்திய மாற்றம் என்ன? பள்ளிகள் இந்த பிரச்னைக்கான தீர்வுகளைத் தேடியதா? பாலியல் தொடர்பான எந்த பிரச்னையாக இருந்தாலும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எத்தனை பரவலாக இருந்தாலும், அதை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் எதுவும் நடக்காதது போல கடந்து சொல்லும் சமூகத்துக்கு மற்றொரு அபாய சங்கை ஊதியிருக்கிறது அடலசன்ஸ். வளரிளம் பருவ குழப்பங்கள்; நாம் செய்ய வேண்டியது என்ன? சமூக வலைத்தளங்களும் டீனேஜர்களும் ஆபத்தான காம்பினேஷன்! சமூக வலைத்தளங்களின் மிக முக்கிய நோக்கம் மனிதர்களை கனக்ட் செய்வது அல்ல, அதன் முதலாளிகள் பணம் சம்பாதிக்க உதவுவது. எல்லாருக்குமே தெரிந்ததைப் போல தொழில்நுட்ப வியாபாரத்தில் பயனர்கள்தான் விற்பனைப் பொருட்கள். 6 வயது குழந்தை என்றாலும், 40 வயது நபர் என்றாலும் அவரை அடிமைப்படுத்துவதுதான் (Addict) அல்காரிதத்தின் ஒரே நோக்கம். உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப மூளைகள், அவற்றில் பலகோடி டாலர்கள் கொட்டப்பட்டு உருவான அல்காரிதத்தை எதிர்த்து பாசிடிவ்வான சமூக வலைத்தள பயன்பாடு என்ற ஒன்றை செயல்படுத்துவது பெரியவர்களாலேயே முடியாத காரியம் எனும்போது வளரிளம் பருவத்தில் வாழ்க்கையின் வேட்க்கைக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் நிலை என்ன? Adolescence தொடரைப் பார்த்தபிறகு இந்த ஹைப்பர் கனக்டிவிட்டி தொழில்நுட்பங்களும், வாழ்க்கையில் தினம் தினம் த்ரில் தேடும் வாலிபர்களும் இணையும்போது ஏற்படும் பிரச்னைகள் பற்றி ஆயாசமாக புரிந்துகொள்ள உளவியாளர் அபிநயாவிடம் பேசினேன். அபிநயா குழந்தைகளின் பண்பை தீர்மானிப்பது யார்? அபிநயா பேசியபோது, குழந்தைகள் சராசரியாக 8 வயது முதல் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. நம் சமூகங்களிலும் இந்த நிலை எதிரொலிக்க அதிக காலம் எடுக்காது. 10 வயதுக்குள்ளேயே ஆபாசப்படங்கள் கிடைக்கத் தொடங்கிவிடுகிறது. அந்த குழந்தைகளுக்கு அதை பற்றி எந்தவித புரிதலும் கிடையது. குழந்தைகளுக்காக மொபைலின் செட்டிங்களை மாற்றிக்கொடுக்கும் விழிப்புணர்வு பல பெற்றோர்களுக்கு கிடையாது. பள்ளிகளில் வீட்டுப்பாடங்களை வாட்ஸ்அப்பில் அனுப்புவது, கூகுளில் தேட சொல்வது என மொபைல் பயன்பாட்டை இன்றியமையாததாக ஆக்குகின்றனர். டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே எளிதாக கிடைப்பதனால் குழந்தைகளுக்கு தேடுவது, முயற்சி செய்வது போன்ற பழக்கங்கள் இல்லாமல் போய்விடுகிறது. Adolescence வீட்டுப்பாடங்களை கூகுளில் தேடுகின்றனர், சாட் ஜிபிடியில் விடைகளை காப்பி அடிக்கின்றனர், சுயமாக சிந்திப்பதும் கிரியேட்டிவாக இருப்பதும் குறைந்துவிடுகிறது. சமூக ஊடகங்களால் ஏற்படும் முக்கிய பிரச்னை, அவர்கள் பத்து ரீல்ஸ் பார்க்கிறார்கள், எல்லாரையும், எல்லாவற்றையும் அந்த பத்து ரீல்களின் அடிப்படையில் ஜட்ஜ் செய்கிறார்கள். இந்த ரீல்ஸ்களில் கிடைக்கும் டோபமைனுக்காக தொடர்ந்து பார்க்கின்றனர். அது அவர்களின் ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ரீல்ஸ்தான் தீர்மானிக்கிறது. குழந்தைகள் அவர்களின் சுயத்தை இழக்கின்றனர் எனப் பேசினார். பெற்றோர்கள் குழந்தைங்களின் வெற்றியை குறிவைக்கிறார்கள், ஆனால் வாழ்க்கையை கவனிக்க மறுக்கிறார்கள். 12 - 17 வயதில் இருக்கும் சிறுவர், சிறுமியர் வெளிப்புறங்களில் இருந்து சொல்லப்படும் விஷயங்களை எளிதாக நம்பவும் சோதித்துப்பார்க்கவும் செய்வார். அது ஒரு நண்பராக இருக்கலாம், ஆசிரியராக இருக்கலாம், தொலைக்காட்சியில் வரும் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் இப்போது பெரும்பாலும் ரீல்ஸ் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது. எப்படியாவது தங்கள் வீடியோ லட்சக்கணக்கில் லைக்குகளை பெறவேண்டும் என நினைக்கும் இன்ஃபுளூயன்சர்கள். 2021ம் ஆண்டில், யூடியூபில் ஆபாசமாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட 'கேமிங் யூடியூபரின்' சப்ஸ்கிரைபர்களில் பலர் பதின்பருவத்தினர் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம். வளரிளம் பருவ வயது வரம்பை 16 -ஆக மாற்றலாமா? -ஓர் அலசல்! வீட்டிலிருந்துதான் மாற்றம் ஏற்பட வேண்டும் மேலும் தொடர்ந்த அபிநயா, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது யார் யாரோ கிண்டல் செய்வதையும், கேலிக்கு உட்படுவதையும் இன்னும் பல நெகட்டிவிட்டிகளையும் சமாளிக்கும் திறன் வேண்டும். இதில் சமூக வலைத்தளங்களைத் தாண்டி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வெற்றி தோல்வியை, நிராகரிப்பை எதிர்கொள்ள கற்றுத்தர வேண்டும். பெற்றோர்கள் பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் என்ன செய்தாலும் கைதட்ட வேண்டும் என அவசியம் இல்லை. பல பெற்றோர்கள் குழந்தைகள் தோல்வியடையும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல், முகத்தை திருப்பிக்கொள்கின்றனர் (Adolacence தொடரில் வரும் தந்தையைப் போல). குழந்தைகளும் சரி பெற்றோரும் சரி, ரியாலிட்டியை எதிர்கொள்ள வேண்டும். அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். என்றார். வீடு கட்ட வேண்டும், வேலை வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், கல்யாணம் பண்ண வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் பெற்றோர்தான் சக பெண்களை மதிக்க சொல்லிக்கொடுக்க வேண்டும். இளம் ஆண்கள் பெண்களுக்கு எதிராக திரும்புவது, பெண்களை ஆபாசமாக, இழிவாக பேசுவது வீட்டில் இருந்தே தவிர்க்கப்பட வேண்டிய சமாச்சாரம். எனக்கு ஒரு 18 வயது மகன் இருக்கிறான். அவன் எங்கள் வீட்டு பெண்களையும் பிற எதிர்பாலினத்தவரையும் மரியாதையாக பார்க்க நான் கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்கள் மீதான மரியாதை இல்லாதபோது. அவர்களை ஒரு போக பொருளாக மட்டும் பார்க்கும் நிலை இருக்கும்போதுதான் சிறுவர்கள் மோசமான எண்ணங்களுக்குள் தள்ளப்படுகின்றனர். இன்றைய சமூகத்தில் பாலியல் கல்வியை தவறானதாக காட்சிப்படுத்துகின்றனர். அது எதிர்பாலினத்தவரின் உடல் உறுப்புகளையும் உணர்வுகளையும் கற்றுக்கொள்வது. பாலியல் கல்வியும் போர்ன் வீடியோக்களும் ஒன்று என நினைத்துக்கொள்கின்றனர். kid using mobile அந்த பருவத்தில் கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்காதபோது பெண் குழந்தைகளை விட ஆண்கள் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளலாம். இது எல்லாவற்றுக்குமான மாற்றம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். வீடு கட்ட வேண்டும், வேலை வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், கல்யாணம் பண்ண வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் பெற்றோர்தான் சக பெண்களை மதிக்க சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுடன் மனம் திறந்து பேசுவதுதான் இதற்கான தீர்வு. பெற்றோர்கள் சொல்வதற்கு குழந்தைகள் கீழ்ப்படிய வேண்டும் என நினைத்தால், அவர்கள் அதிகமாக ரசியங்களைக் காப்பார்களே தவிர அவர்கள் வாழ்க்கையில் நடப்பதை உங்களால் யூகிக்கவே முடியாது. குழந்தைகளுக்கு எப்போதும் வழிகாட்டதான் பெரியவர்கள் தேவை, பருவயதினருக்கு வழங்கும் ஆலோசனைகளால் எந்த மாற்றமும் ஏற்படாது! Women Safety: வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், சவால்கள்.. தீர்வு தான் என்ன? நான் எல்லாவற்றுக்கும் சமூக வலைத்தளங்களை குறைசொல்ல மாடடேன். எப்போதும் புதிய தொழில்நுட்பங்களால்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். வீட்டில் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு நன்னெறிகளை கற்றுக்கொடுக்க வேண்டும். நம் சமூகத்தில் இருக்கும் பெற்றோர்கள் குழந்தைங்களின் வெற்றியை குறிவைக்கிறார்கள், ஆனால் வாழ்க்கையை கவனிக்க மறுக்கிறார்கள். பதின் பருவ குழந்தைகள் மற்றவர்களின் அங்கிகாரத்துக்கு ஏங்க தொடங்கிவிடுகின்றனர். இதுதான் அவர்கள் கேலிக்கு ஆளாகும்போது மனம் உடைந்துபோக காரணம். பெற்றோர்கள் சுய அன்பை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். Self Love குழந்தைகளை பல பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்! என்கிறார். மெட்டா மங்கீஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம், De-centralized தொழில்நுட்ப உலகம், மாற்று தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என பல விஷயங்களை பேசிவருகிறார் விஜய் வரதராஜ். பல ஆண்டுகள் யூடியூபராக இருக்கும் அவரிடம் குழந்தைகளில் தாக்கம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றி பேசினேன். விஜய் வரதராஜ் இணையம் ✅ சமூக வலைத்தளம் ❌ ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் 16 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடைசெய்யும் விதமாக சட்டம் இயற்றினர். இதற்கு எதிராக பல கருத்துகள் எழுந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தகவல்களில் எந்த கட்டுப்பாடும் இல்லை, அவர்கள் பார்க்கும் எல்லாமும் அவர்களை மீறி அவர்களுக்கு காட்டப்படுவதால்தான் தடை செய்வதாக கூறினர். அதில் முக்கியமாக குறிப்பிடப்பட்ட ஒரு பிரச்னை குழந்தைகள் ஆன்லைனில் கேலிக்கு உள்ளாவது. குறிப்பிட்ட குழந்தையை யாரும் கேலி செய்ய வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை, ஏதோ ஒரு மீமில் பகிரப்படும் கருத்துக்கூட அதை தொடர்புபடுத்திக்கொள்ளும் குழந்தையை பாதிக்கும். யூடியூபைத் தவிர வேறு எந்த நிறுவனமும் குழந்தைகளுக்கான எந்தவித முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. ஏனெனில் ஏதுவும் குழந்தைகளுக்கானது அல்ல! சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவான விஷயங்களை விட நெகட்டிவான கண்டெண்ட்கள்தான் அதிகம் பார்க்கப்படும். எது அதிகம் பார்க்கப்படுகிறதோ அதைத்தான் அல்காரிதம் முந்தித்தரும். இன்ஃபுளூயன்சர்கள் சில ரீலிஸ் சரியாக பார்ஃபாம் செய்யவில்லை என்றால் நெகட்டிவான கன்டென்டை எடுத்துக்கொள்வர். இங்கு வியாபாரமே இப்படித்தான் இயங்குகிறது. இணையதளம் 1990 முதல் 2000 வரை மிக நன்றாக De-centralized ஆக இருந்தது. யார் வேண்டுமானாலும் ஒரு பக்கத்தைத் தொடங்கி மையமாக செயல்பட முடியும். நாம் என்ன தேடுகிறோம் என்ற தெளிவுடன் டாட்காம்களை தேட வேண்டும். ஆனால் இப்போது மெட்டா, கூகுள், அமேசான், எக்ஸ் ஆகிய பெரும் நிறுவனங்கள்தான் மொத்த இணையத்தையும் கட்டுப்படுத்துகின்றன. எல்லா ஆப்களும் இவற்றின் ஆதிக்கத்துக்கு உள்தான் இருக்கின்றன. குழந்தைகளுக்கான தொழில்நுட்பம்? என் மகள் இப்போது ரீல்ஸ் பார்க்கிறார். அதில் கலர்கலரான பொம்மைகளுடன் வரும் ஒரு வெளிநாட்டு பையன் வைத்திருக்கும் பொம்மைகள் வேண்டும் என்கிறாள். அவளைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண குழந்தை அப்படித்தான் பொம்மைகளுடன் இருக்கும். ஆனால் ஷூட்டிங்காக எடுக்கப்பட்டது என்பது அவளுக்கு புரியவில்லை. இதை எப்படி சமாளிப்பது என எனக்கும் தெரியவில்லை. நாம் சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதே பெரிய அழுத்தமாகிவிடும். யூடியூப் கிட்ஸ் என்றொரு ஆப் உள்ளது. அதில் குழந்தைகளுக்கான வீடியோக்கள் மட்டும் வரும். ஆனால் என் குழந்தை அதை பார்ப்பது இல்லை, மொபைலை எடுத்ததும் ரீல்ஸ் பார்க்கத் தொடங்கிவிடுகிறாள். குழந்தைகளுக்கு எந்த செயலியில் எல்லாவற்றையும் பார்க்க முடியும் எனது தெரிகிறது. யூடியூபைத் தவிர வேறு எந்த நிறுவனமும் குழந்தைகளுக்கான எந்தவித முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. ஏனெனில் ஏதுவும் குழந்தைகளுக்கானது அல்ல, எல்லா சமூக வலைத்தளங்களும் பயனர்கள் எல்லாரையும் அடிமைப்படுத்தத்தான் முயற்சி செய்யும். பதின்பருவ சிறார்கள் பலரும் வயதைக் கூட்டித்தான் அக்கவுண்ட் தொடங்குகிறார்கள். இன்று அதனை மிக எளிமையாக தடுக்கலாம், ஆனால் அப்படிச் செய்வது வியாபாரத்தை பாதிக்கும் என்பதனால் எல்லா சமூக வலைத்தளங்களும் சிறார்கள் எல்லா கண்டெண்ட்களையும் பார்க்க அனுமதிக்கின்றன. ஃபேக் ஐடிகள் தான் அவர்கள் வியாபாரத்தின் முக்கிய பகுதி. Kid watching youtube குழந்தைகளை அடிமைப்படுத்துவதாக செயல்படும் சமூக வளைத்தளங்களில் அவர்களை அனுமதித்துவிட்டு, அதனை நல்லதுக்கு பயன்படுத்த முடியும் என நினைப்பது தவறு. ஆஸ்திரேலியாவில் உள்ளதைப் போல எல்லா நாடுகளிலும் சட்டம் கொண்டுவருவது உதவக்கூடும். ஏனென்றால் சமூக வலைத்தளங்கள் என்பவை வேறு, இணையதளம் என்பது வேறு. இணையத்தில் குழந்தைகள் படிப்பதற்கும் தெரிந்துகொள்ளவும் பல டாட்காம்கள் இருக்கின்றன. இணையதளம் குழந்தைகள் கல்வியில் உதவலாம், ஆனால் சமூக வலைத்தளங்களுக்கு அடிமைப்படுத்துவதுதான் நோக்கம். ஆனால் இங்கு பெற்றோர்களே குழந்தைகள் ரீலிஸ் செய்வதை ஊக்குவிக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இரண்டு வாரம் போதும். ஆனால் அதன்பிறகு தினமும் ஸ்டோரி, போஸ்ட் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். நாம் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதே பெரிய அழுத்தமாகிவிடும். இன்ஸ்டாகிராமுக்காக அல்லாமல் சுயமாக செய்யும் ஒரு விஷயத்தை போஸ்ட் செய்து, அதற்கு சரியாக லைக் வரவில்லை என்றால், நம்மிடம் எதோ தவறு இருக்கிறது என்ற எண்ணம் வந்துவிடும் ஆபத்து உள்ளது. என்கிறார். Toxic Masculinity jordan peterson என்ற சைக்காலஜிஸ்ட் உலகம் முழுவதும் அறியப்படுபவர். தொடர்ந்து நச்சு-ஆண்மைக்கு (Toxic Masculinity) ஆதரவாக பேசுகிறார் என அவர்மீது குற்றம் சுமத்தப்படுவதுண்டு. இவர் இண்டெலெக்சுவலாக பேசுபவர். ஆண்கள் மன அழுத்தத்தில் இருக்கக் கூடாது, பெண்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க கூடாது எனப் பேசுவார். பெண்கள் என்றால் அடங்கி இருக்க வேண்டும், ஆண்கள் என்றால் சண்டையிட வேண்டும், அழக்கூடாது, கோபப்பட வேண்டும், விட்டுக்கொடுக்க கூடாது போன்ற கருத்துகளை பரப்பும் பல இன்ஃபுளூயன்சர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். இவர்களது டார்கெட் ஆடியன்ஸ் பதின் பருவத்தினரும், லவ் ஃபெயிலியரில் இருப்பவர்களும்தான். சரியாக எப்போது யாருக்கு இவர்களது வீடியோக்களைக் காட்ட வேண்டும் எனபது அல்காரிதத்துக்கு தெரியும்! Man using Social Media ஒருவர் தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீள மோட்டிவேஷனல் வீடியோக்களை பார்க்கத் தொடங்குவார், அங்கிருந்து ஜிம் வீடியோக்கள் பார்க்க ஆரம்பிப்பார், சில ரீல்களில் ஒரு ஆண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என Toxic Masculinity பேசும் ஒரு வீடியோவை அல்காரிதம் அவருக்கு காட்டும். அது Toxic Masculinity என்பதை புரிந்து கொள்வதற்குள் ஆழ்மனதில் அந்த கருத்துகள் பதிந்துவிடும். நாம் பலவீனமாக இருக்கலாம், அழலாம், தோற்றுப்போகலாம் இயற்கையில் இது எல்லாமும் ஆண்களுக்கு இருக்கக் கூடியதுதான் என நான் பாட்காஸ்ட்டில் பேசி வருகிறேன். என் கமெண்டில் பேசுபவர்கள், ஆணாக இருக்கும் இவனுக்கு ஆன்லைனில் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்துப் பேசியிருக்கின்றனர். நம் ஊரில் சமூக வலைத்தளங்களைத் தாண்டி, சுற்றி இருப்பவர்களே இதுபோன்ற கருத்துகளைத் திணிப்பதும் உண்டு. குறிப்பாக சாதிய கருத்துகள் சமூகத்தில் இருந்து சமூக வலைத்தளங்களுக்குள் நுழைந்து, மாணவர்களை மேனிபுலேட் செய்கின்றன. Parenting: குழந்தை வளர்ப்பு உங்கள் மூளையை மழுங்க செய்யுமா? - அறிவியல் சொல்வது என்ன? ஆபாச படங்களைத் தடுக்க முடியாது! Porn வீடியோக்கள்தான் இணையதளத்துக்கே விளம்பரம் செய்தன. அப்போது யாரிடமும் பாலியல் கல்வி குறித்த சிறிய புரிதல் கூட கிடையாது. இணையத்தில் ஆபாசப்படம் பார்ப்பது எளிமையானதாகவும் இல்லை. ஆனால் இப்போது கையில் மொபைல் இருப்பதனால் அளவில்லாமல் ஆபாசப்படங்களை பார்க்க முடிகிறது. இன்றும் நாம் பாலியல் கல்வி குறித்து பேசாத தயங்கும் சமூகமாகத்தான் இருப்போம் என்றால், தீவிரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இன்றைய பதின்பருவத்தினருக்கு எப்படி காதலிக்க வேண்டும் என்றே தெரியாததற்கு காரணம் ஆபாசப்படங்கள்தான். ஆபாசப்படங்களை தடுக்கவும் முடியாது. கூகுளில் தடை செய்தால் டெலிகிராமில் பரவும், டெலிகிராமில் தடை செய்தால் ட்விட்டரில் வரும். ஆபாசப்படங்களைத் தாண்டி நம் உடலில் உணர்வுகளில் இருக்கும் இன்பம் குறித்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இதற்கு பள்ளிகள் முன்வர வேண்டும். செக்ஸ் என்ற வார்த்தையை கேடடாலே வீட்டில் அடிப்பார்கள், திட்டுவார்கள் என்றால் சிறுவர்கள் எல்லாவற்றையும் மறைத்து வைக்கவே செய்வர். அது நிச்சயம் அவர்களது மனதை பாதிக்கும். என்றார். porn movies வீடு ஆரோக்கியமான சூழலில் இருக்க வேண்டும் தெரிந்தவர்களின் குழந்தை ஒன்றுக்கு 5 வயதுவரை பேச்சு வரவில்லை என மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். டாக்டர் குழந்தை நன்றாக இருக்கிறது எந்த பிரச்னையும் இல்லை எனக் கூறிவிட்டார். பொறுமையாக பார்த்தால், அந்த குழந்தை ரீல்ஸ் மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. வீட்டில் அதனிடம் பேச யாரும் இல்லை. யாரையாவது கூப்பிட வேண்டுமென்றால் கையால் தட்டி கூப்பிடுகிறது. இந்த அளவு மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசாத நிலை ஏற்பட்டுள்ளது. அல்காரிதம் நேரடியாக நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறது. நீங்கள் இன்று ஒரு கார் வீடியோ பார்த்தால், அன்று முழுவதும் உங்களுக்கு கார் வீடியோக்களை காட்டி பார்க்க வைக்கும். உலகமே கார் வீடியோக்கள் பார்ப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருந்தால், கடைசியில் நாம் மட்டும்தான் அந்த கார் வீடியோவைப் பார்த்திருப்போம். தனியனாக! சிலர் இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இது உங்களை தனிமைப்படுத்தும் ஆபத்தான போக்கு. பெற்றோர் குழந்தைகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். கண்காணிப்பதாக அல்லாமல் உடன் பயணிக்க வேண்டும். உங்கள் மகன் / மகள் செய்த ரீல்ஸ் லைக் வாங்கவில்லை என்றால் உங்களிடம் வந்துதான் அழ வேண்டும். 'வீட்டில் தொல்லையாக இருப்பதால்தான் சமூக வலைத்தளங்களுக்கு வருகிறேன்' எனக் கூறிக்கொண்டு ஒரு பதின்பருவ சிறுவன் மொபைலை எடுக்கிறான் என்றால் அவனை யாராலும் காப்பாற்ற முடியாது. வீடு எப்போதும் ஆரோக்கியமான சூழலில் இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருக்கும்போது மற்றவர்களின் அங்கீகாரத்துக்கு ஏங்கும் மனநிலையும் இருக்காது. எனக் கூறினார். டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: வீடியோக்களை நீக்குக - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் பப்பாளிப்பழம் சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?
Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே பப்பாளிப்பழம் மிகவும் பிடிக்கும். இப்போது நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பிணிகள் பப்பாளிப்பழம் சாப்பிடக்கூடாது என்ற நம்பிக்கை காலங்காலமாக இருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மை... பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்று சொல்லப்படுவது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மாலா ராஜ் கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா, கூடாதா என்ற கேள்வி காலங்காலமாக தொடர்ந்து வருகிற நம்பிக்கையாகவே இருக்கிறது. சிலர் சாப்பிடலாம் என்பார்கள்... இன்னும் சிலர் சாப்பிடக்கூடாது என்பார்கள். இதில் எது சரி, எதைப் பின்பற்றுவது என்ற குழப்பம் கர்ப்பிணிகளுக்கு இன்றுவரை தொடர்கிறது. Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வாய்க்குப் பிடிச்சதை சாப்பிடலாமா... சரியான உணவு முறை எது? நம்மிடம் பப்பாளி தவிர்த்து எத்தனையோ பழங்கள் இருக்கின்றன. பப்பாளியைவிடவும் நல்ல தன்மைகள் கொண்ட, ஆரோக்கியமான பழங்கள் எத்தனையோ இருக்கின்றன. அப்படியிருக்கையில், சர்ச்சைக்குரிய பப்பாளியை சாப்பிடலாமா, வேண்டாமா என பட்டிமன்றம் நடத்துவது தேவையே இல்லை. பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்பது மூட நம்பிக்கையாகவும் இருக்கலாம். பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்றாலும் பப்பாளியில் 'பப்பாயின்' (Papain) என்றொரு என்ஸைம் இருக்கிறது. இந்த என்ஸைம், சிலருக்கு ப்ளீடிங்கை ஏற்படுத்தலாம். அதனால் அபார்ஷன் ஆகவும் வாய்ப்புகள் உண்டு. பப்பாளி மட்டுமல்ல, அன்னாசிப் பழத்தையும் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, மற்ற பழங்களை உங்கள் விருப்பப்படி சாப்பிடலாம். கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுகிறவர்களில் யாருக்கு ப்ளீடிங் ஏற்படும், யாருக்கு கருக்கலைப்பு நிகழும் என்பதையெல்லாம் அறிவியல்ரீதியாகச் சொல்லவே முடியாது. கர்ப்ப காலத்தில் எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், பிரசவம் நல்லபடியாக நிகழ வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமாகவும் இருக்கும். அதனால் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்லியே பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. பப்பாளி மட்டுமல்ல, அன்னாசிப் பழத்தையும் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, மற்ற பழங்களை உங்கள் விருப்பப்படி சாப்பிடலாம். கர்ப்பகால நீரிழிவு உள்ள பெண்கள் மட்டும் பழங்கள் சாப்பிடுவது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் சுகப்பிரசவம் நிகழுமா? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Summer Skin Care டிப்ஸ்: தயிர், தேன், தேங்காய்ப்பால்.. சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்?
''கோ டை காலத்தில் சருமம் தடித்துக் காணப்படுதல், முகமும் சருமமும் கருமை நிறமடைதல் போன்ற சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்படும். சிலருக்கு இயற்கையாகவே சரும வறட்சி (Dry Skin) இருக்கும். கோடையில் அவர்களது நிலைமை மிகவும் சிரமம். ஏற்கெனவே சருமப் பிரச்னை உள்ளவர்கள் சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம். எந்த ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம்'' என்பது பற்றியெல்லாம் சொல்கிறார் இயற்கை மருத்துவர் யோ.தீபா. எலுமிச்சை, தக்காளி கறுமையான சருமத்துக்கு * சருமம் எந்த இடத்தில் கறுத்திருக்கிறதோ, அந்த இடத்தில் எலுமிச்சைச் சாறு - தயிர் - தக்காளி பேஸ்ட் அல்லது எலுமிச்சைச் சாறு - உருளைக்கிழங்கு பேஸ்ட் போன்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். எலுமிச்சையிலுள்ள ஆல்ஃபா-ஹைட்ராக்சில் அமிலம் (Alpha hydroxyl acids), வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் (Citric acid) போன்றவை சரும நிறம் மாற்றமடைவதைச் சரிசெய்யும். Health: தர்பூசணி தண்ணிப்பழமா, வியாதிகளைத் தடுக்கும் பழமா? பளிச் முகத்துக்கு அன்னாசிப்பழம் * முகத்தை `பளிச்'சென ஆக்குவதற்கு, பலரும் பிளீச்சிங் செய்வார்கள். அதற்கு தேன் சிறந்த தீர்வு. வெறும் தேனையோ, பப்பாளிச் சாறு கலந்த தேனையோ தினமும் சருமத்தில் தேய்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழத்தை தேனில் கலந்தும் தேய்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழத்திலிருக்கும் புரோமலைன் (Bromelain) என்ற என்சைம், தோலிலிருக்கும் இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சென மாற்றும். அன்னாசிப்பழம்-தேன் கலவையை இரண்டு மூன்று முறை தேய்த்துக்கொள்வது நல்லது. FacePack Heat Stroke: உயிரையும் பறிக்கும் வெயில்; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பு டிப்ஸ் புளித்த தோசை மாவும் தக்காளியும் * சிலருக்கு கண், மூக்கு, உதடு பகுதிகளைச் சுற்றிக் கருவளையம் இருக்கும். புளித்த தோசை மாவுடன் தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சரும த்தைப் (Eventone) பெறலாம். இன்ஸ்டன்ட் பிளீச்சராக ( Instant Bleacher) இது இருக்கும். தக்காளி - தயிர் பேஸ்ட், தக்காளி - கடலை மாவு - கற்றாழை பேஸ்ட் போன்றவை மிகவும் நல்லவை. சந்தனமும் தேங்காய்ப்பாலும் * தேங்காய்ப்பாலில் அதிக கொழுப்புச்சத்து இருப்பதால், சருமத்துக்கு நீர்ச்சத்து கிடைக்கவும், நிறம் கருமையாவதையும் தடுக்கும். ஆண்கள், கற்றாழைச் சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து முகத்தில் தேய்த்துக்கொள்ளலாம். சந்தனத்துடன் தேங்காய்ப்பால் கலந்து, ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது முகப்பொலிவை அதிகரிக்கும். வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்தால் சிரமப்படுபவர்கள், சந்தனத்தைத் தேய்த்துக்கொண்டாலே அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்டுவிடலாம். முல்தானி மட்டி கடலை மாவு, ரோஸ் வாட்டர், முல்தானி மட்டி * முகத்துல எண்ணெய் வழியுது’ என்பவர்கள் கடலை மாவு, ரோஸ் வாட்டர், முல்தானி மட்டி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் ஆக்கி, தினமும் முகத்தில் தேய்த்து வந்தால், அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முகத்தைப் பளிச்சென மாற்றிவிடும். தயிர், உடலுக்கு மட்டுமன்றி சருமத்துக்கும் நல்லது. தயிரை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, தக்காளியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சுப் பழத்தின் தோலை அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்தும் பூசலாம்’’ என்கிறார் இயற்கை மருத்துவர் யோ. தீபா. Health: தெரிந்த கிரீன் டீ, தெரியாத தகவல்கள்! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Dandruff: `பொடுகு அதிகமா இருக்கா?'தலைக்கு எண்ணெய் வைக்கலாமா; மருத்துவர் சொல்வெதன்ன?
பெரும்பாலானோருக்குத் தலையில் பொடுகு அதிகமாக இருக்கும். உச்சந்தலையில் ஏற்படும் இந்தப் பிரச்னை மலாசீசியா எனப்படும் பூஞ்சையின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். இரண்டு வகையான பொடுகுத் தொல்லை உள்ளன. ஆரம்பத்திலேயே வெள்ளை நிறத்தில் இருக்கும் பொடுகுத் தொல்லையைப் பார்த்துவிட்டால் விரைவில் குணப்படுத்தலாம். அதுவே அதிகமானால் சிவப்பு நிறத்தில் மாறிவிடும் இதற்கு மாத்திரைகூட எடுத்துக்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கோல்டா. தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா அதிகமாக பொடுகு இருந்தால் தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது என்றும் தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா எச்சரிக்கின்றார். மருத்துவர் கூற்றுப்படி, தலையில் அதிகமாக பொடுகு இருக்கும் பட்சத்தில் இரவு முழுக்க எண்ணெயைத் தேய்த்து வைக்கக்கூடாது. இதனால் பொடுகு அதிகமாக தான் செய்யும். தலைக்கு எண்ணெய் வைக்காவிட்டால், உலர்ந்த தலையைப் போன்று உணர்கிறீர்கள் என்றாலும், தலைவலி போன்ற பிரச்னை ஏற்படும் என்றாலும், உச்சந்தலையில் எண்ணையை தேய்க்காமல் முடியில் மட்டும் தேய்த்து வைத்து விட்டு குளிப்பது நல்லது. பொடுகு தொல்லை இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது தலைக்கு ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். பொடுகுக்கான ஷாம்புவைப் பயன்படுத்திவிட்டு இரவு முழுக்க உச்சந்தலையில் எண்ணெய் வைத்தால் அந்த ஷாம்பு பயனளிக்காது. சீக்கிரமாகவே உச்சந்தலை எண்ணெய் பசை ஆகிவிடும் என்பவர்கள், தினமும் தலைக்குக் குளிக்கவேண்டும். பொடுகு தொல்லை அதிகம் இருப்பவர்கள் முகத்திற்கு தனி டவல், தலைக்கு தனி டவல் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் கோல்டா. Sunscreen: இந்த சம்மருக்கு உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி?!
Doctor Vikatan: நீரிழிவு; புண்கள் ஆறிவிட்டால், diabetes இல்லை என்று அர்த்தமா?
Doctor Vikatan: நீரிழிவு நோய் வந்தால், உடலில் ஏற்படும் காயங்கள் சீக்கிரம் ஆறாது என்பார்கள். அப்படியென்றால், டாக்டர்களால் நீரிழிவு நோய் வந்துள்ளது என்று சொல்லப்படுபவர்களுக்கு அல்லது சர்க்கரையின் அளவு குறிக்கப்பட்டதைவிட தாண்டி இருப்பவர்களுக்கு வரும் காயங்கள், புண்கள் நீரிழிவு நோய் இல்லாத மற்றவர்களைப் போல ஆறிவிட்டால், அவர்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்று அர்த்தமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி மருத்துவர் சஃபி பொதுவாக புண்கள் ஆறுவது என்பது நான்குவிதமான படிநிலைகளைக் கொண்டது. முதல்நிலை ஹீமோஸ்டாஸிஸ் (hemostasis ) எனப்படும். இதில் அடிபட்டதும் ரத்தம் வரும். சில நொடிகளில் அல்லது நிமிடங்களில், நாம் அழுத்திப் பிடிப்பதாலோ அல்லது பேண்ட் எய்டு போடுவதாலோ, அந்த ரத்தக்கசிவு நிற்கும் நிலை இது. இரண்டாவது படிநிலையை இன்ஃப்ளமேஷன் (inflammation) என்கிறோம். அடிபட்ட இடத்தில் ஏற்படுகிற வீக்கத்தைக் குறிப்பது. இந்த நிலையில்தான் காயம்பட்ட இடத்தில் அல்லது புண் உண்டான இடத்தில் உள்ள சின்னச் சின்ன திசுக்கள் ஒன்றுசேர்ந்து, அந்தப் புண் ஆறுவதற்கான வழிகளைச் செய்யும். மூன்றாவது படிநிலையை 'புராலிஃபெரேஷன்' (proliferation) என்று சொல்கிறோம். இந்த நிலையில், புண் உள்ள இடத்தில் உள்ள திசுக்கள் ஒன்றுசேர்ந்து அங்குள்ள தசையை வளரவைக்கும். அப்போதுதான் அந்த இடம் மூடும், சேரும். நான்காவது நிலையை 'ரீமாடலிங் ஆஃப் ஸ்கார்' (remodeling of scar) என்கிறோம். புண் ஏற்பட்ட இடத்தின் மேல் கறுப்பாக ஒரு படலம் ஏற்படுவதும், சில நாள்களில் அது உதிர்ந்து, அந்தப் பகுதி வெள்ளையாக மாறுவதும் இந்த நிலையில்தான் நடக்கும். புண்கள் ஆறுவதில் இந்த நான்கு நிலைகளும் எல்லோருக்கும் நிகழ்பவை. புண்ணை சரியாகப் பராமரிக்காவிட்டால், அதாவது அதற்கான மருந்து தடவாமல், ஆன்டிபயாட்டிக் எடுக்காமல் விட்டால், இன்ஃப்ளமேஷன் நிலை தொடரும். Doctor Vikatan: அதிக இனிப்பு சாப்பிட்டால் நீரிழிவு நோய் பாதிக்குமா? அதுவே நீரிழிவாளர்களுக்கு முதல் நிலையான ஹீமோஸ்டாஸிஸ் உடனே நடந்துவிடும். அடுத்த நிலையான இன்ஃப்ளேமேஷனில்தான் அவர்களுக்குப் பிரச்னையே ஆரம்பிக்கும். இந்த நிலை அவர்களுக்கு 24 முதல் 72 மணி நேரம் வரை தொடரும். இந்தக் கட்டத்தில் அந்தப் புண்ணை சரியாகப் பராமரிக்காவிட்டால், அதாவது அதற்கான மருந்து தடவாமல், ஆன்டிபயாட்டிக் எடுக்காமல் விட்டால், இன்ஃப்ளமேஷன் நிலை நீளும். இன்ஃப்ளமேஷன் நிலை எந்த அளவுக்கு நீட்சி அடைகிறதோ, அதே அளவுக்கு அடுத்தடுத்த நிலைகளும் நீளும். உதாரணத்துக்கு, ஒரு புண் 4 முதல் 6 நாள்களில் ஆறக்கூடியது என்ற நிலையில், இன்ஃப்ளமேஷன் நிலை நீளும்போது, அதே புண்ணானது ஆறுவதற்கு 7 முதல் 21 நாள்கள், சிலருக்கு 3 மாதங்கள் வரைகூட ஆகலாம். இன்னும் சிலருக்கு ஆறாமலே இருக்கவும் வாய்ப்பு உண்டு. இது சம்பந்தப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தது. நீரிழிவாளர்களுக்கு பொதுவாகவே நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். சருமத்தின் அடியிலுள்ள ஈரப்பதமும் குறைவாக இருக்கும். இந்த இரண்டும் சேரும்போது, இன்ஃப்ளமேஷன் நிலை நீளும். சில நீரிழிவாளர்களுக்கு அரிதாக நோய் எதிர்ப்பாற்றலும் சிறப்பாக இருக்கும், சருமத்தின் ஈரப்பதமும் நன்றாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு புண்கள் ஆறுவதும் சீக்கிரமே நடக்கும். எனவே, நீரிழிவாளர்களின் நோய்நிலை என்பது எல்லோருக்கும் ஒன்றுபோல இருக்காது. நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு உறுப்புகள் பாதிக்கப்படலாம். சிலருக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் பாதிப்பு இருக்காது. அது அவரவர் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டைப் பொறுத்தது. வெறும் அறிகுறிகளை மட்டுமே வைத்து நீரிழிவை முடிவு செய்ய முடியாது. இது வளர்சிதை மாற்றம் தொடர்பான ஒரு பிரச்னை. Doctor Vikatan: நீரிழிவு பாதித்த எல்லோருக்கும் பார்வையில் பிரச்னைகள் வருமா?! எனவே, புண் சீக்கிரம் ஆறுவதைவைத்தோ, அடிக்கடி தாகம் எடுப்பதில்லை என்பதை வைத்தோ, அடிக்கடி சிறுநீர் கழிப்பதில்லை என்பதை வைத்தோ, தலைச்சுற்றல் இல்லை என்பதை வைத்தோ, சருமத்தில் அரிப்போ, வெடிப்போ இல்லை என்பதை வைத்தோ, தனக்கு சர்க்கரை நோயே இல்லை என முடிவுக்கு வரக்கூடாது. அதாவது வெறும் அறிகுறிகளை மட்டுமே வைத்து நீரிழிவை முடிவு செய்ய முடியாது. இது வளர்சிதை மாற்றம் தொடர்பான ஒரு பிரச்னை. எனவே, அதைப் புரிந்துகொண்டு ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Doctor Vikatan: BCCI; கிரிக்கெட் பந்தை எச்சில் தொட்டு பளபளப்பாக்குவது சரியா? ஆரோக்கியக் கேடு ஆகாதா?
Doctor Vikatan: கிரிக்கெட் பந்தை எச்சில் தொட்டு பளபளப்பாக்குவது பலகாலமாக பழக்கத்தில் இருக்கிறது. பந்தின் ஒரு பக்கத்தை எச்சில் தொட்டு பளபளப்பாக்குவதன் மூலம் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்று சொல்வார்கள். கொரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக இந்த மரபுக்குத் தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்தத் தடையை நீக்கி, எச்சில் தொட்டு பந்தை பளபளப்பாக்க பிசிசிஐ ( BCCI) மீண்டும் அனுமதி அளித்துள்ளதாகச் செய்தி பார்த்தேன். எச்சில் தொட்டு பந்தை பளபளப்பாக்குவது, பணத்தை எண்ணுவது, பஸ்ஸில் டிக்கெட் கிழித்துக் கொடுப்பதெல்லாம் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் காலங்காலமாகப் பழக்கத்தில் இருந்தாலும் எச்சில் தொட்டு கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்கும் செயல் நிச்சயம் தவறானதுதான். கொரோனா காலத்தில் மட்டுமல்ல, எந்தக் காலத்திலுமே இந்தச் செயல் அனுமதிக்கப்படக் கூடாது. எச்சில் தொட்டு பந்தை பளபளப்பாக்கும்போது அதைச் செய்கிற நபருக்கும் தொற்று பரவும். அந்தப் பந்தை கேட்ச் செய்பவருக்கும், அதைக் கையாள்பவருக்கும் தொற்று பரவும். அதாவது பந்திலிருந்து வாய் வழியே ஒருவருக்கு தொற்று பரவும். அவரது எச்சில் பட்டுப் பறக்கும் பந்தின் மூலம் இன்னொருவருக்கும் பரவும். எச்சில் தொட்டு பணத்தை எண்ணுவது, நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களைத் திருப்புவது என எல்லாமே இத்தகைய செயல்கள்தான். இவற்றின் மூலமும் தொற்று பரவும் ஆபத்துகள் உள்ளன. எச்சில் தொட்டுச் செய்கிற இந்த விஷயங்கள் தவறானவை என குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்படுவதும் இதனால்தான். எச்சில் தொட்டு பணத்தை எண்ணுவது, நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களைத் திருப்புவது என எல்லாமே இத்தகைய செயல்கள்தான். எச்சில் மூலம் பரவும் பலவகையான தொற்றுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். குடல்-வயிற்றுப் பகுதியில் தொற்று ஏற்பட்டு, பேதி, மஞ்சள் காமாலை, டைபாய்டு, காய்ச்சல் போன்றவை எச்சில் மூலம் பரவக்கூடியவையே. அடுத்து ஃப்ளூ காய்ச்சல் பரவும் சீசனில் ஃப்ளூ, கொரோனா, அடினோவைரஸ், மைக்கோபிளாஸ்மா உள்ளிட்ட தொற்றுகள் பரவலாம். அடுத்து கோடைக்காலத்தில், எச்சில் மூலம் சின்னம்மை, தட்டம்மை போன்றவை பரவலாம். கோடைக்காலத்தில் வயிற்றுப்போக்கு பிரச்னை அதிகரிக்கும். எச்சில் மூலம் இதுவும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவும். அடுத்து 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கன்ஜங்டிவைட்டிஸ் (Conjunctivitis) பாதிப்பும் ஒருவரது எச்சில் மூலம் மற்றவருக்குப் பரவலாம். எனவே, எச்சிலைத் தொட்டுப் பொருள்களைக் கையாள்வதை எந்த நிலையிலும் தவிர்ப்பதே ஆரோக்கியமானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Happy Teeth: வாய் உலர்வுக்கு வழங்கப்படும் செயற்கை உமிழ்நீர் சிகிச்சை பற்றி தெரியுமா? வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
Eye twitching: கண்கள் ஏன் துடிக்கின்றன?
க ண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது கண் துடித்தால் வெளியூர் பயணம். வலது கண் துடித்தால், வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. கண் இமைகள் துடிப்பதையே கண் துடிக்கிறது என்கிறோம். இதன் காரணம் என்ன? விளக்குகிறார் பொது மருத்துவர் முருகேஷ். Sudden Eye Twitching கண் இமைகள் ஏன் துடிக்கின்றன? கண்ளின் இமைப்பகுதி, வெளிப்புற நரம்பு மண்டலம், உடலில் செல்லும் மின்னோட்டம், மின்னணுக்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பில் மிக நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ரத்த ஓட்டம் எப்படிச் சீராகச் செல்லுமோ அதுபோல, உடலுக்குத் தேவையான மின்னோட்டமும் அனைத்து உறுப்புகளுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும். இதில் வெளிப்புற நரம்பு மண்டலத்தில் செல்லும் நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய மின்னணுக்களில் (Electrons) மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கும். சில சமயங்களில், ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கண் இமைகள் துடித்துவிட்டு நின்றுவிடும். சிலருக்கு இடை இடையே கண் தொடர்ந்து துடித்துக்கொண்டேயிருக்கும். இதற்கு பயப்படத் தேவை இல்லை. Health: மைக்ரேன் முதல் மலச்சிக்கல் வரை... பூக்களிலும் தீர்வு இருக்கு! எப்படி மின்சாரத்தில் வோல்டேஜ் குறைந்து உயர்கிறதோ, அதுபோல நரம்புகளுக்கும மின்னணுக்களுக்கும் இடையில் நடக்கும் செயல்பாட்டில் மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கின்றன . நாம் கூர்ந்து கவனித்தால், சில சமயங்களில் தொடை, முதுகு, தலை போன்ற இடங்களில்கூட சில தசைகள் துடிப்பதை உணரலாம். கண்கள் அழகுக் கண்கள்... அடர்ந்த புருவங்கள்... ஆசையா? என்ன காரணம்? மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதிக மன அழுத்தம், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு, முக்கிய சதை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள் (Biochemical changes) ஊட்டச்சத்துக் குறைபாடு, தொடர்ந்து கணினி மற்றும் ஸ்மார்ட்போன் என அதிக கதிர்வீச்சுகள்கொண்ட பொருள்களைப் பார்ப்பது, கண்களில் ஈரப்பதம் குறைவது, சிலருக்குக் கண்களில் நீர் வழிவது, எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்ற காரணங்களால் கண் இமைகள் துடிக்கக்கூடும். தீர்வு என்ன? கண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவே நாம் கண்களைச் சிமிட்டுகிறோம். கண் சிமிட்டுதல், இதயம் துடித்தல் போன்றவை நம் உடலில் நடக்கும் இயல்பான செயல்பாடுகள். கண் இதற்கு எந்த சிகிச்சையும் தேவை இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடாது. ஏனெனில் இது சிகிச்சை செய்யக்கூடிய நோய் அல்ல. கைவைத்தியமோ, மாத்திரை மருந்துகளை உட்கொள்வதோ கூடாது. ஒரு நாளைக்கு கண் இமைகள் 10 முறை துடித்தால்கூட நார்மல்தான். அதுவே விட்டு விட்டு 25 முறைக்கு மேல் துடித்துக்கொண்டிருந்தால், அதாவது நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறாக துடித்துக்கொண்டே இருந்தால் என்ன பிரச்னை என மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம். கண்களுக்கும், நரம்பு மண்டலத்துக்கும் என்ன பிரச்னை என மருத்துவர் பரிசோதனை செய்து சிகிச்சையை அளிப்பார். வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை; விபரீதத்தில் முடிந்த இளைஞரின் முயற்சி - நடந்ததென்ன?
நீண்ட நேர வயிற்று வலியைப் பொறுக்காமல், உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் யூடியூபைப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். ராஜபாபு குமார் என்ற இளைஞர் இதற்காக கடந்த புதன் அன்று மாலையில் வீட்டில் ஒரு அறையில் தன்னைத் தானே பூட்டிக்கொண்டுள்ளார். அறுவை சிகிச்சை கருவிகள் அறுவை சிகிச்சைக்கு முன்பு மரத்துப்போகச் செய்யும் ஊசியைப் போட்டுக்கொண்டுள்ளார். தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்வதற்காக வயிற்றின் கீழ் வலதுபுறத்தில் 7 செ.மீ அளவில் கீறல் போட்டுள்ளார். அறுவை சிகிச்சை கத்தி நினைத்ததை விட ஆழமாக வெட்டியதால் அதீத வலி ஏற்பட்டதுடன், ரத்தம் சொட்டத் தொடங்கியுள்ளது. ராஜபாபு உடனடியாக அவரே காயத்தைத் தைக்கத் தொடங்கியுள்ளார். ஆனாலும் ரத்தம் கொட்டுவது நிற்காததால், குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ராஜபாபு கூறியதைக் கேட்டு அதிர்ந்த குடும்பத்தினர் உடனடியாக மதுரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். Representational / Canva மருத்துவமனையை அடைந்த உடனேயே அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதை மருத்துவர்கள் அறிந்துகொண்டுள்ளனர். ஆக்ராவில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அவரை மாற்றினர். . வியாழக்கிழமை வரை ராஜபாபு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துள்ளார். மருத்துவ அதிகாரி கூறியதென்ன? மதுரா மருத்துவமனையில் இருந்த ஷஷி ராஜன் என்ற மருத்துவ அதிகாரி, ராஜபாபு 7 க்கு 1 செ.மீ என்ற அளவில் வயிற்றின் வலதுபக்கம் கீழ் பகுதியில் துளையிட்டுள்ளார். 10-12 தவறான தையல்களும் போட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு சரியான தையல் போட்ட பிறகு சிகிச்சைக்காக ஆக்ரா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம் எனக் கூறியுள்ளார். ராஜபாபு தனக்கு ஏற்கெனவே குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அதே இடத்தில் மீண்டும் வலி ஏற்படுவதாகவும் சமீபமாக கூறிவந்துள்ளார் Jammu Mystery Deaths: 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்; தனிமைப்படுத்தப்பட்ட ஜம்மு கிராமம்
Doctor Vikatan : பிள்ளைகளிடமிருந்து பெற்றோருக்கு வருமா ஆட்டிசம் பாதிப்பு? | Autism
Doctor Vikatan: என்னுடைய தோழியின் 8 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது. அதற்கான சிகிச்சைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேறு பிரச்னைகளுக்காக மனநல மருத்துவரை சந்திக்கச் சென்றிருந்தாள் என் தோழி. அப்போது அவளுக்கும் ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். பொதுவாக பெற்றோருக்கு ஒரு பாதிப்பு இருந்தால் அது அவர்களின் குழந்தைகளுக்கும் வருவது இயல்பு... ஆனால், குழந்தையின் ஆட்டிசம் பாதிப்பு எப்படி பெற்றோரை பாதிக்கும்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மருத்துவர் சொன்ன தகவலை உங்கள் தோழியும் நீங்களும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. முதலில் அதில் தெளிவு பெறுங்கள். அதாவது, ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு சில பெற்றோர்கள் தங்களுக்கு ஆட்டிசம் இருப்பதை உணர்வது என்பது இயல்பானதுதான். ஆட்டிசம் என்பது ஒருவித மரபியல் குறைபாடு. ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருந்தால், பெற்றோர்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ ஆட்டிசம் தொடர்பான பண்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். முந்தைய தலைமுறையில் ஆட்டிசம் குறித்த விழிப்பு உணர்வு குறைவு. பலரும் தமக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அதுவே, பின்னாளில் அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரியவரும். அதன் தொடர்ச்சியாக மருத்துவருடனான உரையாடலில், பரிசோதனையில், பெற்றோருக்கும் அந்த பாதிப்பு ஏற்கெனவே இருந்ததை மருத்துவர் சொல்வார். இன்னும் சில பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருப்பது தெரிந்ததும், அது தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவார்கள். அப்போது அவர்கள் கேள்விப்படுகிற, பார்க்கிற பல அறிகுறிகள், நடத்தை பிரச்னைகள் தங்களுக்கும் ஏற்கெனவே இருந்ததை உணர்வார்கள். தங்களுக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பெற்றோர்கள், முதலில் அதை ஏற்றுக்கொண்டு, தங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். Doctor Vikatan: இரண்டு வயதுக் குழந்தையிடம் ஆட்டிசம் அறிகுறிகள்... பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? குழந்தைகளுக்கு வெளிப்படும் அறிகுறிகளைப் போல அல்லாமல் பெற்றோர்கள் மிதமான அறிகுறிகளோடு வாழ்ந்திருப்பார்கள். எனவே, பிற்காலத்தில் இது தெரியவரும்போது, 'ஆட்டிசமா... எனக்கா.... நான் நல்லாத்தானே படிச்சேன்... நல்லாத்தானே வேலை பார்த்தேன்...' என்று அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். தங்களுக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பெற்றோர்கள், முதலில் அதை ஏற்றுக்கொண்டு, தங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் குழந்தையையும் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். தேவைப்பட்டால் பெற்றோரும் உளவியல் ஆலோசனை அல்லது சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி இது குறித்து குற்ற உணர்வு கொள்வதோ, குழம்புவதோ தேவையில்லாதது. 'என்னைப் போல ஒருவன் அல்லது ஒருத்தி' என குழந்தையை அரவணைத்து, சிறப்பாக வளர்க்க முயற்சி செய்வதுதான் சரியான அணுகுமுறை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Summer & Nannari Sarbath: இதுதான் ஒரிஜினல் நன்னாரி சர்பத்..!
கோ டையின் வெயில் தாக்கத்தை குறைப்பதற்காக பருகப்படும் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதனீர் ஆகியவற்றின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது ‘நன்னாரி சர்பத்.’ கிராமப்புறங்களில் கோடைக் காலங்களில் தவிர்க்கமுடியாத பானம் இது. இனிப்பும் சிறுகசப்பும் கலந்த நன்னாரி சர்பத்தை ஒவ்வொரு மடக்காக பொறுமையாக குடித்து விட்டு டம்ளரை கீழே வைக்கும் போதுதான் தெரியும் அதன் சுவையும் இதமும். நன்னாரி வேர்கலந்த மணப்பாகு ஊற்றி சர்பத் குடித்த காலம் மாறி தற்போது சர்பத் தயாரிப்பில் எசன்ஸ் என்ற பெயரில் எதையோ கலக்கிறார்கள். இதனால் நன்னாரி வேரின் பயன் மறைக்கப்பட்டு வெறும் இனிப்புக் குளிர்பானமாக மாறிவிட்டது. இந்த சர்பத்தில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என பல வண்ணங்களில் கலக்கப்படும் எசன்ஸ் ஒரிஜினல்தானா..? சுத்தமான நன்னாரியின் நிறம் எப்படி இருக்கும்? மணப்பாகை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறார். திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்தமருத்துவர் மைக்கேல் செயராசு. நலம் தரும் நன்னாரி! ‘’நல்ல நாற்றம், அதாவது நல்ல மணம் தருவதால்தான் இதை ‘நன்னாரி’ன்னு சொல்றோம். நறுநீண்டி, நறுக்குமூலம், நறுநெட்டி, பாற்கொடி, கிருஷ்ணவல்லி, பாதமூளி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது உடல் வெம்மையைக் குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பசியையும் தூண்டும் ஒருவகைத் தாவரம். நன்னாரியின் வேரை தண்ணீரில் ஊறவைத்துக் குடித்து உடல் உஷ்ணத்தை குறைத்து வந்தனர் முன்னோர்கள். நாளடைவில் வேர் ஊறிய நீருடன் சுவை கூட்ட வெல்லப்பாகு கலந்து குடித்து வந்ததால் இது ‘நன்னாரி சர்பத்’ என்றானது. ஆனால், தற்போதைய கோடைகாலத்தில் தெருவுக்குத் தெரு முளைத்துள்ள சர்பத் கடைகளில் எசன்ஸ் என்ற பெயரில் கலக்கப்படுவது ஒரிஜினல் நன்னாரி மணப்பாகு இல்லை. ஒரு லிட்டர் மணப்பாகு தயார் செய்ய, ஒருகிலோ நன்னாரி வேரை ஒன்றிரண்டாக (பவுடராக இடிக்காமல்) உரல் அல்லது மிக்ஸியில் இடித்து, அதை 6 லிட்டர் வெந்நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். வெந்நீரின் சூடு மிதமாக இருந்தால் போதும். Muskmelon: முலாம் பழம் குளிர்ச்சி தரும்; குடல் புழுக்களைக் கொல்லும்; அல்சரை குணப்படுத்தும்! மறுநாள் காலையில் அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒன்றரை லிட்டராக வற்ற வைத்து இறக்கி வடிகட்டி, அதனுடன் ஒரு கிலோ சீனிக்கற்கண்டை தூளாக்கிப் போட்டு மீண்டும் அடுப்பில் வைத்து பாகு அல்லது தேன் பதம் வந்தவுடன் இறக்கி உடனே வேறொரு பாத்திரத்தில் ஊற்றிவிட வேண்டும். சூடு ஆறியதும் இதைக் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்துக்கொள்ளலாம். இதுதான் நன்னாரி மணப்பாகு தயாரிப்பு முறை. வெந்நீரில் வேரை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டியதிருப்பதால் இந்த தயாரிப்பை மாலையில் செய்ய ஆரம்பிக்கலாம். நன்னாரி வேர் எல்லா நாட்டுமருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இந்த மணப்பாகு இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதுதான் நன்னாரியின் ஒரிஜினல் நிறம். நன்னாரி சர்பத் Health: தர்பூசணி தண்ணிப்பழமா, வியாதிகளைத் தடுக்கும் பழமா? ஆனால், கடைகளில் பாட்டில்களில் விற்கப்படும் நன்னாரி சிரப் அல்லது எசன்ஸில் இனிப்பிற்காக சாக்கிரீமும், மஞ்சள், சிவப்பு, அடர்சிவப்பு, ஆரஞ்சு என பல வண்ணங்களில் எசன்ஸை மாற்ற பலவகை சாயப்பொடிகளும் இதோடு சில வேதியல் பொருட்களும் கலக்கப்படுகின்றன. இது உடலுக்கு நல்லதல்ல. இப்படி வீட்டிலேயே நன்னாரி மணப்பாகு தயாரித்து ஒரு டம்ளரில் இரண்டு ஸ்பூன் அளவு நன்னாரி மணப்பாகு ஊற்றி, அதில் அரைத்துண்டு எலுமிச்சை பழம் பிழிந்து பற்றாக்குறைக்கு மண்பானை தண்ணீர் ஊற்றி ஸ்பூனால் கலக்கி குடிக்கலாம். வெறும் தண்ணீர் ஊற்றி ஐஸ்கட்டி போட்டு குடித்தால் தொண்டையில் தொற்று வர வாய்ப்பிருப்பதால் மண்பானை தண்ணீர் ஏற்றது. இதுதவிர, 10 லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையில் தண்ணீருக்குள் 10 கிராம் நன்னாரி வேர், 10 கிராம் வெட்டி வேர் இரண்டையும் ஒரே துணியில் கட்டிப்போட்டு தாகத்திற்கு அந்தத் தண்ணீரையும் குடித்து வரலாம். ஆனால், தினமும் தண்ணீரையும் வேரையும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதுதவிர ஒருலிட்டர் தண்ணீரில் 50 கிராம் புளியைக் கரைத்து, அதில் 500 கிராம் பனைவெல்லத்தை போட்டு இதனுடன் எலுமிச்சை அரை பழம் கலந்தும் குடிக்கலாம். தேவைப்பட்டால் கூடுதல் சுவைக்காக இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு நன்னாரி மணப்பாகையும் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் கூட சர்பத் குடித்து வரலாம்’’ என்றார். சித்த மருத்துவர் சொன்னது போல வீட்டிலேயே நன்னாரி மணப்பாகை தயாரித்து வைத்துக்கொண்டு தினமும் நன்னாரி சர்பத் குடித்து கோடையின் வெப்பத்தைக் குறைப்போம். நன்னாரி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி.... வெயிலைச் சமாளிக்க 4 விதமான பாப்சிகல்ஸ்... வீக் எண்டு ரெசிப்பீஸ்!
தூத்துக்குடி: 24 மணிநேர அவசரகால ஊர்தி; தமிழ்நாட்டிலேயே முதல் முறை; தொடங்கிய சேவை
ஹிந்துஸ்தான் லைப் கேர் லிமிடெட் (HLL) நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் NHAI உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இலவச அவசர கால ஊர்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊர்தியினை முதற்கட்டமாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோருக்காக செயல்படுத்தப்படுகிறது. சேவையை விளக்கும் பயிற்சியாளர் `அம்மா... எந்திரிம்மா...' - திடீரென இறந்த தாய்; அப்பாவைக் காப்பாற்ற தேர்வெழுதிய மகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் (NHAI) மூலம் மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊர்தியினை முதற்கட்டமாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இது குறித்துப் பேசிய அவர், “இந்த மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊர்தியில் கார்டியாக் மானிட்டர் (இருதயத்துடிப்பு பரிசோதனை), வென்டிலேட்டர் (செயற்கை சுவாசக் கருவி), டீபிப்ரிலேட்டர் (Defibrillator), தீவிர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்பபணிகளை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவக்குழு பணியில் இருப்பார்கள். பொதுமக்கள் இந்த மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊர்தி சேவையை பயன்படுத்திக்கொள்ள ” 1033” என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இந்த ஊர்தியானது மதுரை- தூத்துக்குடி (NH-38) தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டிருக்கும். இலவச அவசர கால ஊர்தி சேவை தொடக்கம் இந்நிலையத்தில் இருந்து இருபுறமும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேவை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (இந்திய தேசிய நெடுஞ்சாலை) சிவம் சர்மா, மண்டல திட்ட அலுவலர் (HLL, HLFPPT) ஜெகதீசன், தளப்பொறியாளர்கள் (இந்திய தேசிய நெடுஞ்சாலை) ஏ.கலைச்செல்வன், வீர ராஜேஸ்மணி, அவசர கால ஊர்தி பயிற்சியாளர் யுகேஷ் (HLL, HLFPPT), அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Doctor Vikatan: கர்ப்ப காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும்போதும் பாராசிட்டமால் எடுக்கலாமா?
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் காய்ச்சலோ, உடல் வலியோ வந்தால் பாராசிட்டமால் மாத்திரை எடுக்கலாமா.... எந்த மாத்திரையும் எடுக்கக்கூடாது, அது குழந்தையை பாதிக்கும் என்கிறார் என் மாமியார். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய மருந்துகளை ஏ, பி, சி, டி, மற்றும் எக்ஸ் என பல வகைகளாகப் பிரிக்கலாம். 1979-ம் வருடமே, எஃப்.டி.ஏ (FDA) எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்தான் மருந்துகளை இப்படி வகைப்படுத்தி உள்ளது. அதன்படி ஏ வகை மருந்துகளை மனிதர்களின் மீது சோதனை செய்ததில், அவை கருவிலுள்ள குழந்தைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிந்தது. பி வகை மருந்துகள், மனிதர்கள்மீது சோதனை செய்யப்படவில்லை. ஆனாலும், விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்டபோது, கருவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிந்திருக்கிறது. சி வகை மருந்துகள் மனிதர்கள், விலங்குகள்மீது சோதனை செய்யப்படாதவை என்பதால், அவற்றின் வீரியம், விளைவுகள் எப்படியிருக்கும் என்பது தெரியாது. டி வகை மருந்துகள், ரிஸ்க்கானவை என்றாலும், அவற்றிலும் சில பலன்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வாய்க்குப் பிடிச்சதை சாப்பிடலாமா... சரியான உணவு முறை எது? உதாரணத்துக்கு, அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில், இந்த டி வகை மருந்தைக் கொடுக்க வேண்டியிருக்கும். எக்ஸ் வகை மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பிரச்னையைத் தரக்கூடியவை... அந்த வகை மருந்துகளால் கர்ப்பிணிக்கு எந்த நன்மையும் கிடையாது என்பதால் அவற்றைத் தவிர்த்தே ஆக வேண்டும். எனவே, கர்ப்ப காலத்தில் ஏ மற்றும் பி வகை மருந்துகளைக் கொடுக்கலாம். சி வகை மருந்துகள் சந்தேகத்துக்குரியவை. தாயைக் காப்பாற்ற வேண்டிய தருணத்தில் டி வகை மருந்துகளைத் தரலாம். எக்ஸ் வகை மருந்துகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திலும் சரி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சரி, எந்த மருந்தை எடுத்தாலும், மருத்துவரின் ஆலோசனையின்றி எடுக்கக்கூடாது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது பாராசிட்டமால் மருந்தானது பி வகையில் வருகிறது. அது ஓரளவு பாதுகாப்பானது. ஆனாலும், அதை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும். அதைத் தாண்டும்போது கல்லீரல் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இன்று 80 சதவிகிதத்துக்கும் மேலான கர்ப்பிணிகள், மருத்துவர் பரிந்துரையின்றி, ஓவர் த கவுன்ட்டர் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இது கிராமப் பகுதிகளில் இன்னும் அதிகம். எனவே, கர்ப்ப காலத்திலும் சரி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சரி, எந்த மருந்தை எடுத்தாலும், மருத்துவரின் ஆலோசனையின்றி எடுக்கக்கூடாது. கருவானது வளர்ந்துகொண்டிருக்கிற நேரத்தில் இப்படி சில மருந்துகளை எடுக்கும்போது குழந்தையின் உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். எக்ஸ் வகையின் கீழ் வரும் எந்த மருந்துகளையும் இவர்கள் எடுக்கவே கூடாது. அது மட்டுமன்றி, வலிப்பு மாதிரியான சில பிரச்னைகளுக்கு நீங்கள் ஏற்கெனவே மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், கர்ப்பத்துக்காகத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அந்த மருந்துகளுக்கு மாற்று கேட்டுப் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள் ஏதேனும் பிரச்னைகளைத் தருமா என்றும் மருத்துவரிடம் உறுதிசெய்துகொள்ள வேண்டும். கர்ப்பம் உறுதியான பிறகு இந்த மருந்துகளை நிறுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. ஏற்கெனவே எடுத்துக்கொண்ட மருந்துகளின் தாக்கம் உங்கள் உடலில் இருக்கும். எனவே, கர்ப்பத்துக்கு திட்டமிடுவதில் இருந்தே மருந்துகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நீரிழிவு உள்ள அம்மாக்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?
Lung Health: நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க... மருத்துவர் சொல்லும் வழி!
நு ரையீரல், நம் உடலின் ராஜ உறுப்புகளில் ஒன்று. இது ஆரோக்கியமாக இல்லையென்றால், நம் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் கேள்விக்குறிதான். அதனால், நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் தடுப்பது எப்படி என்று சொல்கிறார், காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோய் நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ராமச்சந்திரன். lungs நுரையீரலில் எந்தப் பிரச்னையும் இல்லாத ஒரு நபர் மாஸ்க் இல்லாமல் தொடர்ந்து சிக்னலில் நிற்கும்போது அவருக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம்? ''தொடர்ந்து பல வருடங்களாக பிசியான சிக்னல்களில் நின்று புகை நிரம்பிய அந்தக் காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு, நுரையீரல் காற்றுக்குழாய்களில் அடைப்பு வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றன. பொதுவாக இந்தப் பிரச்னை புகை பிடிப்பவர்களுக்கு வரும். இப்போது மாசுபட்ட காற்றைத் தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்கும் வருகிறது. தொடர்ந்து மாசடைந்த காற்றைச் சுவாசித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அதிகமாகிவிடும். தொடர்ந்து மாசு படிந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கும்போது கண்ணுக்கே தெரியாத துகள்கள் நுரையீரலில் படிந்து ரத்தத்தில் கலந்து விடும். இது கேன்சர் போன்ற பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். தவிர, இந்த துகள்கள் ரத்தத்திலும் கலந்துவிடுவதால், அது மூளை அல்லது இதயத்துக்குள் செல்லும்போது அங்கும் சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இந்தத் துகள்கள் 2.5 மைக்ரன்ஸ் மட்டுமே இருக்கும் என்பதால், மூக்கின் உள்ளே இருக்கிற சளிப்படலத்தாலோ, முடியாலோ அதைத் தடுக்க முடியாது. இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி வண்டி ஓட்டும்போதும், பயணிக்கும்போதும் மாஸ்க் அணிவது மட்டும்தான். நுரையீரலில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்... சம்பந்தப்பட்ட நபருக்குச் சளி, இருமல் தொந்தரவுகள் இருக்காது என்றாலும் மூச்சு வாங்கும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொடர்ந்து இருமல் இருப்பது... அந்த இருமல் எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் இருப்பது... சோர்வாக உணர்வது... உடல் எடை குறைந்து கொண்டே வருவது... ஒருவேளை துரதிஷ்டவசமாக நுரையீரலில் கேன்சர் வந்துவிட்டது என்றால், அதற்கான அறிகுறிகளான பசியின்மை, திடீர் உடல் எடை குறைதல், இருமும் போது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் வரலாம். தவிர, நெஞ்சு வலி, கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்கள் வரைக்கும் அவர்களுடைய இயல்பான குரலிலிருந்து மாற்றமடைந்து இருக்கும். சிலருக்கு உணவு விழுங்குவதும் கஷ்டமாக இருக்கும். Dr. M. V. Ramachandran, Consultant Pulmonologist நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்! புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலில் என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம்..? புகைப்பிடிப்பவர்களை ஃபர்ஸ்ட் ஹாண்ட் ஸ்மோக், செகண்ட் ஹேண்ட் ஸ்மோக், தர்ட் ஹேண்ட் ஸ்மோக் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். புகைப்பிடிப்பவர்கள் முதல் பிரிவின் கீழ் வருவார்கள். இவர்களுக்கு சினிமா தியேட்டர்களில் படம் வருவதற்கு முன் புகைப்பிடிப்பதால் வரக்கூடிய பிரச்னைகளை விளம்பரம் செய்வார்கள் இல்லையா... அந்தப் பிரச்னைகள் வரும். இந்தப் பிரச்னைகள் வந்துவிட்டால் சரி செய்ய முடியாது. ஆனால், வருவதற்கு முன் தடுக்க முடியும். சிகரெட் புகையில் இருக்கிற கண்ணுக்குத் தெரியாத சிறு, சிறு துகள்களும்கூட நுரையீரலில் படிந்து ரத்தத்தில் கலக்கக்கூடியதுதான். இதனாலும் இதயத்தில் பிரச்னைகள், நுரையீரலில் புற்றுநோய் வரலாம். இப்போது இரண்டாவது பிரிவினருக்கு வருவோம். இவர்கள் புகைப்பிடிப்பவர்களின் அருகே இருக்கிற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். புகைப்பிடிப்பவர்களுக்கு இதய நோய், புற்றுநோய் வருவது எப்படி எளிதானதோ, அதுபோலவே புகைப்பிடிப்பவர்களின் அருகே இருப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் எளிதாக வந்துவிடும். ஏனென்றால், சிகரெட்டுக்குள் இருக்கிற பொருள்களில் 200 முதல் 300 வரை வகையான புற்றுநோய் வரவழைக்கக்கூடிய கார்சினோமா இருக்கின்றன. இந்தத் துணுக்குகள் நுரையீரலுக்குள் சென்றால் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். பேசுகிறேன்... பேசுகிறேன்... 1 - உன் நுரையீரல் பேசுகிறேன்... புகைப்பிடிப்பவர்களுக்குப் புகையை வெளிவிடத் தெரியும். ஆனால், அவர்களுக்கு அருகே இருப்பவர்களுக்கு அதை வெளிவிடத் தெரியாது. அதனால், புகைப்பிடிப்பவர்களைவிட அவர்களின் அருகே இருப்பவர்களுக்குத்தான் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுவது உண்மைதானா..? Health: வெயில் காலத்தில் ஏன் பழைய சோறு சாப்பிட வேண்டும்? இதில் உண்மை இல்லை. அருகே இருப்பவர்களைவிட புகைப்பிடிப்பவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் மொத்தமாகப் புகையை உள்ளே இழுக்கிறார்கள். இதனால், அருகே இருப்பவர்களைவிட புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலில்தான் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான துணுக்குகள் நிறைய படித்திருக்கும். இதற்கென இருக்கிற உபகரணத்தைப் பயன்படுத்தி நுரையீரலைப் பரிசோதித்துப் பார்த்தால், நீண்ட காலமாகப் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலில் கருந்திட்டுகளாகப் புகை படிந்து போய் இருக்கும். புகைப்பிடிப்பவர்களைவிட அருகே இருப்பவர்களுக்குப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைவுதான் என்றாலும், அவர்களுக்கும் பிரச்னை வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை நான் இங்கே அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். Smoking lungs புகைப்பிடிப்பதில் மூன்றாவதாக ஒரு பிரிவினர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இப்போது மூன்றாவது பிரிவினரைப் பார்ப்போம். அதாவது புகைப்பிடிக்கிற முதல் பிரிவினரின் உடைகளிலும், அவர்களுக்கு அருகே இருப்பவர்களின் உடைகளிலும் படிந்திருக்கிற சிகரெட் புகையின் வாடையை நுகர்பவர்கள்தான் இந்த மூன்றாவது பிரிவினர். இவர்களுக்கும் முதலிரண்டு பிரிவினர்களுக்கு வரக்கூடிய அதே பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சமீபத்திய சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஆய்வுகள் நடந்துகொண்டே கொண்டிருக்கின்றன என்பதையும் இங்கே நான் பதிவிட விரும்புகிறேன். புகைப்பிடிப்பதால் வரக்கூடிய நுரையீரல் புற்றுநோய்க்கும் சளி, இருமல், மூச்சுத்திணறல், இருமும்போது ரத்தம் வெளிப்படுதல் போன்றவைதான் அறிகுறிகள். புகைப்பிடிப்பவர்களுக்குக் காலையில் எழுந்தவுடன் சளி அதிகமாக வெளியேறும். எந்த அளவுக்கு என்றால் நுரையீரலில் பிரச்னை இல்லாத ஒரு நபருக்குக் காலையில் 30 எம்.எல் வரை சளி வெளியேறும் என்றால், இவர்களுக்கு 60 எம்.எல் வரை வெளியேறும். இனி நுரையீரலில் வரக்கூடிய ஆஸ்துமா பற்றிப் பார்ப்போம். ஆஸ்துமா ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை தற்போது வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆஸ்துமா என்பதும் ஒரு வகையான அலர்ஜிதான். குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அது மற்றவர்களுக்கும் வரலாம். தாத்தா - பாட்டிக்கோ அல்லது பெற்றோருக்கோ ஆஸ்துமா இருந்தால், அது அவர்களுடைய பிள்ளைகளுக்கோ அல்லது பேரன் - பேத்திக்கோ வரலாம். மற்றபடி, ஆஸ்துமா என்பது ஒரு வியாதி கிடையாது. அது ஒரு நிலைதான். சிலருக்குப் பூவாசம் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு சென்ட் வாசம், சிலருக்கு பாடி ஸ்பிரே வாசம் ஒத்துக்கொள்ளாது. பூவில் இருக்கிற மகரந்தத்தைச் சுவாசித்துவிட்டால் அவர்களுடைய மூச்சுக்குழாயில் இறுக்கம் ஏற்பட்டு மூடிக்கொள்ளும். அந்த அலர்ஜிக்கான எதிர்வினை அது. இப்படி ஆஸ்துமாவைத் தூண்டிவிடக் கூடிய காரணிகளைக் கண்டறிந்து அதைத் தவிர்த்து விட்டாலே, அந்தக் காரணங்களால் ஆஸ்துமா வருவதை தடுத்து விடலாம். அந்தக் காரணிகளைத் தவிர்ப்பதுதான் ஆஸ்துமாவுக்கு முதல் சிகிச்சை. Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..! ஆஸ்துமா கெமிக்கல் தயாரிக்கும் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அதன் காரணமாக ஆஸ்துமா வரலாம். அந்த வேலையைத் தவிர்த்துவிட்டாலே அவர்களுக்கு ஆஸ்துமா வருவதை தடுத்துவிடலாம். சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது ஆஸ்துமா வரலாம். இவையெல்லாம் ஆஸ்துமா வருவதற்கான தெரிந்த காரணங்கள்... தெரியாத காரணங்கள் நிறைய இருக்கலாம். நான் ஏற்கனவே சொன்னதுபோல ஆஸ்துமா என்பது ஒரு நிலை. அந்தப் பிரச்னை வரும்போது சுவாசக்குழாய் சுருங்கும். அதற்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் சுவாசக்குழாய் விரிந்து விடும். பனிக்காலத்தில்தான் ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகுமா? உண்மைதான். பனிக்காலத்தில் இருக்கிற குளிர் சீதோஷ்ணமே ஆஸ்துமாவைத் தூண்டி விட்டுவிடும். பனிக்காலத்தில் நிறைய வைரஸ்கள் காற்றில் பரவி இருக்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் வைரஸ் காய்ச்சல்கள் அதிகமாக வரும். அதிகாலையிலோ அல்லது இரவிலோ வெளியே சென்றால் அந்த வைரஸ் தொற்று உங்களையும் தொற்றிக் கொள்ளும். இதனால், ஆஸ்துமா தூண்டிவிடப்படும் அல்லது இன்னும் அதிகமாகும். ஆஸ்துமா ஆஸ்துமா குணப்படுத்தக்கூடிய பிரச்னையா அல்லது கட்டுக்குள் வைக்கக்கூடிய பிரச்னையா? ஆஸ்துமா வியாதி அல்ல என்பதால் அதைக் குணப்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது. அது ஒரு நிலை என்பதால், அதை தூண்டி விடக்கூடிய காரணிகளைத் தடுத்துவிட்டால் ஆஸ்துமா வராமல் தடுக்க முடியும். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஏதோ ஒரு உணவுப்பொருள் உங்களுக்கு அலர்ஜி என்றால் அதை நாம் வியாதி என்று சொல்ல மாட்டோம். அந்த உணவுப்பொருளைச் சாப்பிட மாட்டோம் அவ்வளவுதான். இதே நிலைதான் ஆஸ்துமாவுக்கும் பொருந்தும். காரணிகளைத் தடுத்துவிட்டால் அது வாழ்நாள் முழுக்க வராது அவ்வளவுதான். ஆஸ்துமா எப்படி வரும் என்றால், குழந்தைப் பருவத்தில் ஆஸ்துமா வந்திருக்கும். பிறகுச் சரியாகி இருக்கும். பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து மறுபடியும் அதே காரணி தூண்டும்போது ஒரு எபிசோட் போல மறுபடியும் ஆஸ்துமா வரும். Health: சாலையோரக் கடைகளில் காளான் சாப்பிடப்போறீங்களா? ஊட்டச்சத்து நிபுணர் சொல்றத கேளுங்க! ஆஸ்துமாவை மூச்சுப்பயிற்சி தடுக்குமா? தடுக்கும். என்றாலும், அதை சிகிச்சையாக எடுத்துக்கொள்ள முடியாது. மூச்சுப்பயிற்சி என்பது நுரையீரலுக்கான ஒரு பயிற்சி. அதை சிகிச்சை என்று சொல்லமுடியாது. ஆஸ்துமா என்பது மூச்சுக்குழாய் மூடிக்கொள்வது. அதை திறப்பதற்கு வேண்டுமானால் மூச்சுப்பயிற்சி உதவலாமே தவிர, அதை சரி செய்வதற்கு உதவாது. மூச்சுப்பயிற்சி செய்தால் நுரையீரலின் செயல் திறன் நன்றாக இருக்கும். இதனால் மூச்சு வாங்கும்போது நெஞ்சுக்கூடு உள்ளே சென்று சென்று வருவது குறையும். மூச்சுப்பயிற்சி ஆஸ்துமா நோயாளிகள் அனைவரும் பஃப் பயன்படுத்தலாமா? குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை பஃப் பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அவர்களாகவே மெடிக்கல் ஷாப்பில் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. ஆஸ்துமாவுக்கான மாத்திரை சாப்பிடும்போது அது உணவுடன் செரிமானமாகி ரத்தத்தில் கலந்து நுரையீரலில் இருக்கிற ஆயிரக்கணக்கான காற்று அறைகளுக்குள் செல்வது மிகவும் கடினம். அதற்காகத்தான் மருத்துவர்கள் நாங்கள் பஃப் பயன்படுத்த சொல்கிறோம். மாத்திரை பயன்படுத்தினால் ஆஸ்துமா கட்டுப்பட நீண்ட நாட்கள் எடுக்கும். சிறு குழந்தைகளுக்குச் சளி அதிகமாகிவிட்டால், மருத்துவமனைகளில் வைக்கிற நெபுலைசரும் பஃபும் ஒரே மாதிரியான மருந்துதான். ஒரே மாதிரியான சிகிச்சைதான். குழந்தைகளால் பஃபில் இருக்கும் மருந்தை உள்ளிழுக்கத் தெரியாது என்பதால் நெபுலைசர் வைக்கிறோம். ஆஸ்துமா இருக்கும்போது சூடான பானங்களை அருந்துவது, நீராவிப்பிடிப்பது உதவியாக இருக்குமா? இருக்கும். இது, குளிர்ந்த சூழலில் இருக்கும்போது சூடாக ஒன்று சாப்பிட்டால் கொஞ்சம் பெட்டராக உணர்வதுபோல. இது அவர்களுடைய மனம் சம்பந்தப்பட்டது. இதனால் எந்தக் கெடுதலும் நிகழப் போவதில்லை. அதே நேரம் நீராவிப்பிடிக்கும் நீரில் எதையும் சேர்க்காமல் வெறும் தண்ணீரை ஆவி பிடித்தாலே போதும். நீராவி Health: பூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! நுரையீரலைச் சுத்தமாக்குமா மூலிகைச்சாறுகள்? சோஷியல் மீடியாக்களில் வருவதுபோல, இந்த ஜூஸ் குடித்தால் நுரையீரல் சுத்தமாகும் என்பதில் எல்லாம் உண்மையில்லை. நல்லக் காற்றைச் சுவாசிப்பது, நிறைய தண்ணீர் குடிப்பதுதான் நுரையீரலைச் சுத்தம் செய்ய நல்ல வழிகள். தவிர, ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்த ஆரஞ்சு, மாதுளம் பழம் போன்றவற்றைச் சாப்பிட்டு வந்தாலும் நுரையீரல் நன்றாக இருக்கும். அடுத்து, நுரையீரலைப் பாதிக்கக்கூடிய காசநோய் பற்றிப் பார்ப்போம். காசநோய் காற்றில் பரவுகிற ஒரு நோய். இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். மக்கள் நெருக்கமாக வசிக்கிற இடங்களில் சிலருக்குக் காசநோய் இருந்தாலும், பலருக்கும் அது பரவி விடும். காசநோய் வந்தவர்களில் பாதி பேர் சிகிச்சை எடுப்பதில்லை. அப்படியே எடுப்பவர்களும் சிகிச்சையைப் பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். இவர்கள் முகக்கவசமும் அணிவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தெருவிலேயே எச்சில் துப்புகிறார்கள். அதில் இருக்கிற கிருமிகள் நம்மையும் தொற்றிக்கொள்ளும். நமக்கு வயதாகும்போதோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போதோ காச நோய் வந்துவிடலாம். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் அதிகமாக இருப்பதால்தான் அரசாங்கம் அவர்களுக்கு இலவசமாக மருந்து தருகிறது. போன் செய்து மாத்திரை போட்டீர்களா என்றுகூட விசாரிக்கிறது. காசநோய் வந்தவர்களுக்கு மாதம் 500 ரூபாய் தருகிறது அரசாங்கம். ஆனாலும் காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. காசநோய் குழந்தைகளுக்கு வருகிற பிரைமரி காம்ப்ளக்ஸ் பின்னாளில் காசநோய் வருவதற்கான அறிகுறியா..? குழந்தைகளுக்குத் தொடர் இருமல், காய்ச்சல் இருக்கும்போது ’பிரைமரி காம்ப்ளக்ஸ்' பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிய மாண்டோ பரிசோதனை மற்றும் நெஞ்சுப்பகுதி எக்ஸ்ரே எடுப்பார்கள். மாண்டோ பரிசோதனை (Mantoux Test) என்பது, காசநோய் பாக்டீரியாவை ஊசி வழியாக குழந்தைகளின் கையின் மேல் தோலில் செலுத்துவது. குழந்தைக்குத் தொற்று இருந்தால் ஊசிப்போட்ட இடத்தில் வீங்கிய சிவப்பு நிறத்திட்டு ஏற்படும். அதை வைத்து குழந்தைக்குத் தொற்று வந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியுமே தவிர்த்து காசநோய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அந்தப் பரிசோதனை பாசிட்டிவாக இருந்தால் காசநோய் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. நெகட்டிவ் என்றால் காசநோய் இல்லை என்றும் அர்த்தமில்லை. இந்தியாவில், காசநோய்க்கு எதிரான பி சி ஜி தடுப்பூசி குழந்தைகளுக்குப் போடப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்’’ என்கிறார் டாக்டர் ராமச்சந்திரன். நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிப்பதில், சேலம் காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோய் நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் எம்.வி. ராமச்சந்திரன் மிகச்சிறந்த அனுபவமிக்கவர். மேலேயுள்ள கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கும்பட்சத்தில், டாக்டர் எம்.வி. ராமச்சந்திரனிடம் ஆலோசனை பெறுவதற்கான அப்பாயின்ட்மென்ட் லிங்க் இதோ - https://www.kauveryhospital.com/doctors/salem/pulmonology/dr-m-v-ramachandran/ Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்... தீர்வு இருக்கிறதா? வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
`பரபரப்பாக வேலை செய்யும் ஆண்களே!'இந்தச் சத்து குறைவாக இருக்கிறதா? - வெளிவந்த ஆய்வு
இவ்வுலகில் கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அனைவரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிற்பதற்குக்கூட நேரம் இல்லாமல் வேலை நிமித்தம் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் அவரவர் உடல் நிலையை கவனிப்பதற்கு நேரமே ஒதுக்குவதில்லை. இதனால் பல்வேறு விதமான உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, நுண் ஊட்டச்சத்துக்கள்(micro nutrients) என்று சொல்லக்கூடிய விட்டமின்ஸ், மினரல்ஸ் போன்றவற்றின் குறைபாடுகள்தான் பல உடல்நலப்பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. வைட்டமின் பி 12 இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் சுகாதார நிறுவனமான மெடிபடி (MediBuddy) தனது சமீபத்திய ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைசெய்யும் ஆண்களில் 57% க்கும் அதிகமானோர் வைட்டமின் பி12 குறைபாட்டுடன் உள்ளார்கள் எனக் கூறியிருக்கிறது. இந்த ஆய்வு 40 முதல் 50 வயதுடைய 4,400 கார்ப்பரேட் ஊழியர்களை வைத்து நடத்தப்பட்டது. இதில் 3,338 பேர் ஆண்கள். பெண்கள் 1,059. பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாக இருப்பதை அந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதாவது, 57.16 சதவிகித ஆண்களும் 49.9 சதவிகித பெண்களும் வைட்டமின் பி12 குறைபாட்டுடன் உள்ளார்கள் எனத் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. கார்ப்பரேட் ஊழியர்களுக்கிடையே வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களாக, அவர்களின் தொடர்ந்த கடினமான வேலைகள், ஆரோக்கியமற்ற மற்றும் ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், அதிகமாக மன அழுத்தம் ஆகியவை இருக்கலாம் எனவும், இது பெரும்பாலும் அத்தியாவசிய ஊட்டச்சத்தை புறக்கணிக்க வழிவகுக்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது. Health: பச்சையா, வறுத்ததா, வேக வைத்ததா... வேர்க்கடலையில் எது நல்லது? வைட்டமின் பி12 அல்லது கோபாலமின், நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டி.என்.ஏ தொகுப்பு, ரத்த சிவப்பணு உருவாக்கம், நரம்பியல் செயல்பாடு மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றம், மூளையின் செயல்பாடுகள் என நம் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. Health: மல்டி வைட்டமின் மாத்திரைகள்... யார், எவ்வளவு நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?! உடல் போதுமான அளவு பி12 பெறாதபோதும், உணவு மூலங்களிலிருந்து போதுமான வைட்டமின் பி12-ஐ உறிஞ்ச முடியாதபோதும் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வைட்டமின் பி12 குறைபாடு உடல், நரம்பியல் மற்றும் உளவியல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் படிப்படியாக வெளிப்பட்டு காலப்போக்கில் மோசமடையக்கூடும். சிலரில் வைட்டமின் பி12 குறைபாடு எந்தவித அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடு பொதுவாக ரத்த சோகையை ஏற்படுத்தும். ரத்த சோகை இல்லாத நபர்களில் நரம்பியல் அறிகுறிகளைக் காட்டும். உடலில் பி12 குறைந்துவிட்டால், சோர்வு, குமட்டல், பசியின்மை, எடையிழப்பு, வாய்ப்புண் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறுதல், கைகால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, பார்வைக்குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு மற்றும் நடக்கவோ, பேசவோ சிரமம், கூடுதலாக, மனச்சோர்வு, எரிச்சல் மனநிலை நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை ஏற்படும். இவை நபருக்கு நபர் மாறுபடும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால், ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம். வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் இருக்க கோழி, முட்டை, பால், மீன் மற்றும் தயிர் போன்ற பி12 நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவும். முக்கியமாக குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெற்று பி12 மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.
Doctor Vikatan: ஹுசைனியை பாதித்த `ஏபிளாஸ்டிக் அனீமியா': ரத்தப் புற்றுநோயாக மாறியது எப்படி?
Doctor Vikatan: பிரபல கராத்தே வீரர் ஹுசைனிக்கு ஏபிளாஸ்டிக் அனீமியா என்ற பிரச்னை பாதித்திருத்திருப்பதாகவும், அது பிளட் கேன்சர் எனப்படுகிற ரத்தப் புற்றுநோயாக மாறியதால், அவர் வாழ்நாள்களை எண்ணிக்கொண்டிருப்பதாகவும் பேட்டிகள் கொடுக்கிறார். அதென்ன ஏபிளாஸ்டிக் அனீமியா... அது எப்படி புற்றுநோயாக மாறும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன். புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன். ஒரு நபருக்கு ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் மூன்றும் குறைவாகக் காணப்படுகிற ஒரு நிலையே 'ஏபிளாஸ்டிக் அனீமியா' (Aplastic anemia) எனப்படுகிறது. அரிதாக சிலருக்கே அது புற்றுநோயாக மாறும். போன் மேரோ (bone marrow) எனப்படுகிற எலும்பு மஜ்ஜையிலிருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகின்றன. மேற்குறிப்பிட்ட மூன்று அணுக்களும் எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகிறவைதான். எலும்பு மஜ்ஜையில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டால் அதன் காரணமாக ஏபிளாஸ்டிக் அனீமியா வரலாம். அது சில மருந்துகள் அல்லது ரசாயனங்களால், வைரஸ் தொற்றால் அல்லது சம்பந்தப்பட்ட நபரின் நலிந்த நோய் எதிர்ப்பாற்றல் காரணமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான தருணங்களில் இந்தப் பிரச்னைக்கான காரணம் இதுதான் என்று தெரியாது. அதை நாம் 'இடியோபதிக்' என்று சொல்வோம். ஹீமோகுளோபின், தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் ஏபிளாஸ்டிக் அனீமியாவில் அதீத களைப்பு இருக்கும். பலவீனமாக உணர்வார்கள். இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். தொற்றின் காரணமாக அப்படி இதயத்துடிப்பு வேகமாக இருக்கலாம். அடிக்கடி தொற்று பாதிப்புக்கு உள்ளாவார்கள். பிளேட்லெட்ஸ் எனப்படும் தட்டணுக்கள் குறைவதால் எளிதில் ரத்தப்போக்கு ஏற்படும். அடிபட்டால் ரத்தம் நிற்காமலிருக்கலாம். சிறுநீர், மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம். கம்ப்ளீட் பிளட் கவுன்ட் எனப்படும் ரத்தப் பரிசோதனையில் இதைக் கண்டுபிடிக்கலாம். அதில் ஹீமோகுளோபின், தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் மூன்றுமே குறைந்திருப்பதை வைத்து உறுதிசெய்யலாம். அதாவது அந்த வயதுக்கு இருக்க வேண்டியதைவிட குறைவாக இருக்கும். Doctor Vikatan: கொளுத்தும் கோடைக்காலத்திலும் ஜலதோஷம் பிடிப்பது ஏன்? அடுத்ததாக, போன் மேரோ பயாப்சி (bone marrow biopsy) என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதில் ஸ்டெம் செல்கள் அசாதாரணமாக இருக்கின்றனவா என கண்டுபிடித்து அதைவைத்து ஏபிளாஸ்டிக் அனீமியாவை உறுதிசெய்வார்கள். காரணத்தைக் கண்டுபிடித்த பிறகு அதற்கேற்ற சிகிச்சை முடிவு செய்யப்படும். உதாரணத்துக்கு, மருந்துகளின் விளைவால் வந்திருந்தால் அந்த மருந்துகளை நிறுத்த வேண்டும். அடிக்கடி தொற்று ஏற்படுவதால் அதற்கேற்ற மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். ஹீமோகுளோபின் குறைவதால் ரத்தம் ஏற்ற வேண்டி வரலாம். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ரத்தம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். இம்யூனோ சப்ரசென்ட் மருந்துகள் தேவைப்படலாம். பொதுவாக இது புற்றுநோயாக மாறாது. அரிதாக சிலருக்கு இது ரத்தப் புற்றுநோயாக மாறவும் கூடும். ஏபிளாஸ்டிக் அனீமியாவின் தீவிரத்தைப் பொறுத்தும் சிகிச்சை வேறுபடலாம். மிகத் தீவிரமானது, தீவிரமானது, மிதமானது என இதை மூன்று நிலைகளாகப் பிரிப்போம். முதல் இரண்டு நிலைகளுக்கு போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட்டேஷன் எனப்படும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்படலாம். 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரத்யேக ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளான்ட்டேஷன் சிகிச்சை தேவைப்படலாம். ஆரோக்கியம் குறைவானவர்களுக்கு சப்போர்ட்டிவ் சிகிச்சைதான் கொடுக்கப்படும். பொதுவாக இது புற்றுநோயாக மாறாது. அரிதாக சிலருக்கு இது ரத்தப் புற்றுநோயாக மாறவும் கூடும். மற்றபடி ரத்த செல்களின் குறைபாடு காரணமாக ஏற்படுகிற நோய் இது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: உடல் பருமனுடன் உள்ளவர்கள் ஆரோக்கியமற்றவர்கள் என்று அர்த்தமா?
Vikatan Explainer: வெறும் தண்ணீரில் ஆரம்பித்து மட்டன் வரை... எத்தனை டயட்? அத்தனையும் பாதுகாப்பானதா?
'வெயிட் லாஸ் செய்யணும்', 'மாவுச்சத்தைக் குறைக்கணும்', 'புரதம் அதிகமிருக்கிற உணவுகள் சாப்பிடணும்', 'நல்ல கொழுப்பு கட்டாயம் சாப்பிடணும்', 'கலர்ஃபுல்லா சாப்பிட்டா கேன்சர் வராம தடுக்கலாம்' - இப்படி உடல் எடை குறித்த விழிப்புணர்வும், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் கிட்டத்தட்ட எல்லோருக்குமே வந்துவிட்டது. இது நல்ல விஷயம்தான். ஆனால், இதற்கான டயட் வழிகாட்டுதலைச் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் பெறாமல், கூகுளில் தேடியோ அல்லது செயற்கை நுண்ணறிவிடம் கேட்டோ ஃபாலோ செய்கிறார்கள். அதன் விளைவுதான், சில நாள்களுக்கு முன்னால் இளம் பெண் ஒருவர் 'வாட்டர் டயட்' என்கிற பேரில் தண்ணீர் மட்டுமே அருந்தி உயிரிழந்தது. இந்தக் கட்டுரை எந்த டயட் என்ன பலனை அளிக்கிறது; எவையெல்லாம் தவிர்க்க வேண்டிய ஆபத்தான டயட்; ஒரு டயட்டை ஃபாலோ செய்வதற்கு முன்னால் ஏன் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்று சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். 1. இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) Intermittent Fasting) ஒருநாளின் 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் சாப்பிடுவதற்கானது. மீதம் 16 மணி எதுவும் சாப்பிடக்கூடாது. இந்த டயட்டின் அடிப்படையே இதுதான். இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. ஆனால், இரவு தாமதமாகத் தூங்கி காலையில் தாமதமாகக் கண் விழிப்பவர்கள், எழுந்துகொண்டதும் அலுவலகம் கிளம்பி விடுகிறார்கள். விளைவு, காலை உணவைத் தவிர்த்து விட்டு, 'நான் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் இருக்கிறேன். அதனால் 16 மணி நேரம் சாப்பிட மாட்டேன்' என்கிறார்கள். இது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். இவர்கள் எப்படி ஃபாஸ்டிங் இருக்க வேண்டுமென்றால், முதல் நாள் மாலை 4.45-க்கு மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து என எல்லாமும் இருக்கும் சரிவிகித சாப்பாட்டை முடித்துவிட்டு 5 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 9 மணிவரை டயட் இருக்கலாம். இவர்கள் காலை 9 மணிக்குக் காலை உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பவர்கள், தாங்கள் சாப்பிடும் 8 மணி நேரத்தில் இரண்டு முழு உணவுகள் (meals), ஒரு ஸ்நாக்ஸ் (snacks) கட்டாயம் சாப்பிட வேண்டும். அவர்கள் தட்டில் ஒரு கால் பாகத்தில் அரிசிச் சாதம் அல்லது சிறுதானியம் அல்லது சப்பாத்தி; இரண்டாவது கால் பாகத்தில் பயறு, பருப்பு, முட்டை, இறைச்சி எனப் புரத உணவுகள்; மீதமிருக்கிற பாதி தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பவர்களின் இரண்டு முழு உணவுகளும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஸ்நாக்ஸில் பழங்கள், நட்ஸ் சாப்பிடலாம். டயட் இருக்கிற 8 மணி நேரத்தில் பால், லஸ்ஸி, மோர், காபி, டீ, ஜீரோ கலோரி லைம் ஜூஸ், க்ரீன் டீ, இஞ்சி டீ என அருந்தலாம். பிளாக் டீ, பிளாக் காபி கூடாது. அதிகமான கொழுப்பையும், உடல் பருமனையும் குறைப்பதற்குத்தான் இந்த டயட். அதே நேரம், இந்த டயட்டை சரியான முறையில் எடுக்கவில்லையென்றால் தசை இழப்பு ஏற்படும் என்பதால், டயட்டை ஆரம்பிப்பதற்கு முன்னால் டயட்டீஷியனின் ஆலோசனையைக் கட்டாயம் பெற வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள், அசிசிட்டி பிரச்னை இருப்பவர்கள் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றக்கூடாது. Healthy Food: இதயம் தொடங்கி வயிறு வரைக்கும் நல்லதே செய்யும் பாசிப்பருப்பு! 2. பேலியோ டயட் (Paleo Diet) Paleo Diet இந்த டயட்டில் மாவுச்சத்து, இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறமூட்டிய உணவுகள், தேநீர், ஆல்கஹால் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இறைச்சி உணவுகள், நட்ஸ், கொழுப்புச்சத்து நிறைந்த எண்ணெய், பச்சைக்காய்கறிகள் ஆகியவைதான் இந்த டயட்டின் ஹைலைட். காலையில் 100 பாதாம் பருப்புகள், மதியம் கால் கிலோ சிக்கன் அல்லது மட்டன் என்று சாப்பிடுவார்கள். இதனால், நீரிழிவு கட்டுக்குள் வருவதாகப் பலனடைந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். உடலில் கொழுப்பு சேர்வதற்கும், உடல் பருமனாவதற்கும் மாவுச்சத்துதான் காரணம். அந்த மாவுச்சத்தைத் தவிர்ப்பதன் மூலம் உடல் எடை குறைகிறது. அப்படியென்றால், 'இந்த டயட்டில் சாப்பிடும் கொழுப்பு உணவுகளால் உடல் எடை அதிகரிக்காதா' என்று கேள்வி எழலாம். இந்தக் கொழுப்பு தினசரி தேவைக்குப் பயன்படுத்தப்படும். எனவே, எடை அதிகரிக்கும் என்கிற பயம் தேவையில்லை. குறைவான உடலுழைப்பு, நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலைபார்ப்பது, வியர்வையே வராத வாழ்க்கை முறை என்று இருப்பவர்களுக்கு பேலியோ டயட்டின் கீழ் வருகிற உணவுகளைச் செரிமானம் செய்வதிலேயே பிரச்னை ஏற்படும். தவிர, ஏற்கெனவே கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்து, அதுதெரியாமல் இந்த டயட்டை ஃபாலோ செய்தார்களென்றால், அது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடலாம். அதனால், இந்த டயட்டை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஆரம்பிக்கவே கூடாது. Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும் ஒரு காய்! 3. மாவுச்சத்தே இல்லாத 'நோ கார்ப் டயட்' (No Carb Diet) No Carbs Diet டயட் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் 'நோ கார்ப் டயட்ல இருக்கேன்' என்கிறார்கள். நூறு கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்டவர்களுக்கு இந்த டயட் நிச்சயம் வரப்பிரசாதம்தான். எழுந்து நடப்பதற்கே சிரமமாக இருக்கும் அளவுக்கு உடல் பருமன் கொண்டவர்கள், திடீரென சில கிலோ எடை குறையும்போது 'நம்மாலும் வெயிட் லாஸ் செய்ய முடியும்' என்று நம்பிக்கையாக உணர்வார்கள். நம் ஊரில் அரிசி, கோதுமை என மாவுச்சத்து நிறைந்த உணவுகளைத்தான் அதிகம் சாப்பிடுகிறோம். அவற்றை திடீரென பெருமளவில் தவிர்க்கும்போது உடல் எடை குறைவது இயல்புதான். இந்த டயட்டை எடுப்பவர்களுக்கு நீரிழிவு இருந்தாலோ அல்லது கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்தாலோ அவை கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. ஆனால், மாவுச்சத்து மூளையில் ஆரம்பித்து மொத்த உடம்புக்கும் எனர்ஜியைத் தருகிற ஒரு முக்கியமான உணவுப்பொருள். அதை மொத்தமாக நிறுத்தும்போது சோர்வு, கடகடவென உடல் எடை குறைவதால் தோல் சுருக்கம் எனப் பக்க விளைவுகளால் அவதிப்பட நேரிடும். இந்த டயட்டை ஃபாலோ செய்வதற்கு முன்னால் டயட்டீஷியனை சந்தித்து அவருடைய ஆலோசனையைக் கேட்பதுதான் பாதுகாப்பு. Health: வெயில் காலத்தில் ஏன் பழைய சோறு சாப்பிட வேண்டும்? 4. மாவுச்சத்துக் குறைவான லோ கார்ப் டயட் (Low Carb Diet) Low Carbs Diet மாவுச்சத்தே இல்லாத டயட்டைவிட மாவுச்சத்துக் குறைவான டயட் ஓகே. இந்த டயட்டை பொறுத்தவரை மாவுச்சத்தைக் குறைப்பதால், புரதச்சத்து மிகுந்த உணவுகளைக் கூட்டி, கூடவே தேவையான கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் டயட்டில் சேர்த்தால், உடல் பருமன் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். புரதச்சத்துள்ள உணவுகளையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் சற்று கூடுதலாகச் சாப்பிடும்போது, அவற்றைச் செரிமானம் செய்வதற்கு நார்ச்சத்து மிகுந்த காய்கறி, பழங்கள், கீரைகளைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடல் எடையைப் பொறுத்தே எந்தளவுக்கு மாவுச்சத்தைக் குறைக்க வேண்டும் என்பதாலும், உங்கள் கிட்னி மற்றும் இதய நலத்தைப் பொறுத்தே புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க வேண்டுமென்பதால், இதையும் டயட்டீஷியன் ஆலோசனைப் பெறாமல் செய்யாதீர்கள். 5. கீட்டோ டயட் (Keto diet) Keto diet இதுவும் மாவுச்சத்தைக் குறைத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்கிற டயட் தான். இந்த டயட்டை பொறுத்தவரை உங்கள் உடலானது, அது செயல்படுவதற்கான ஆற்றலை மாவுச்சத்திலிருந்து பெறாமல் கொழுப்புச்சத்திலிருந்து பெற்றுக்கொள்ளும். இந்த டயட்டில் வைட்டமின்-சி நிறைந்த காய்கறிகள், முட்டை, அவகேடோ, இறைச்சி வகைகள், தேங்காய் எண்ணெய் போன்ற உணவுகள்தான் முக்கியமானவை. பால், பருப்பு எடுத்துக்கொள்ளக்கூடாது. நாமெல்லாம் அரிசி, பருப்பு, பால் என்று சாப்பிடுபவர்கள். கீட்டோ டயட் என்ற பெயரில், திடீரென்று அரிசி, பருப்பு, பால் இவற்றையெல்லாம் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும் என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. வெளிநாட்டினர் உணவில் இறைச்சி உணவுகளுக்கு அதிக இடம் உண்டு. ஒரு நேர உணவிலேயே மீன், இறைச்சி, இரண்டு வகை காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடுவார்கள். நமக்கு இப்படிச் சாப்பிட்டு பழக்கம் கிடையாது என்பதால் இதைச் சரியாகப் பின்பற்ற முடியாது. விளைவு, நீங்கள் விரும்பிய எடையிழப்பு நடக்கவே நடக்காது. தவிர, உங்கள் கல்லீரலும் பித்தப்பையும் நீங்கள் உட்கொள்ளும் கொழுப்பு உணவுகளைச் செரிமானம் செய்ய முடியாமல் திணறும். இந்த டயட்டில் தண்ணீர் மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால் நீர்ச்சத்து குறைவால் நம் உடலில் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. உங்கள் கல்லீரல் பலவீனமாக இருந்தாலோ அல்லது பித்தப்பையில் கற்கள் இருந்தாலோ இந்த டயட் அந்தப் பிரச்னையை இன்னும் அதிகப்படுத்தி விடும். Health: சாலையோரக் கடைகளில் காளான் சாப்பிடப்போறீங்களா? ஊட்டச்சத்து நிபுணர் சொல்றத கேளுங்க! 6. வீகன் டயட் (The Vegan Diet) The Vegan Diet இந்த டயட்டில் அசைவ உணவுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும். கூடவே, விலங்குகளிடமிருந்து பெறப்படுவதால், பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்றவற்றுக்கும் இந்த டயட்டில் இடம் கிடையாது. தேனீக்களிடமிருந்து பெறப்படுவதால் தேனும் சாப்பிடக்கூடாது. வீகனை பொறுத்தவரைப் பால் கிடையாது, இறைச்சி கிடையாது, முட்டையும் கிடையாது என்பதால், புரதச்சத்துக்குப் பருப்பு வகைகள், பயறு வகைகள், முழு தானியங்கள். கொட்டை வகைகளை (நட்ஸ்) உணவில் நிறையச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய உணவு முறையே இட்லி தோசையில் உளுந்து, பொங்கலில் பாசிப்பருப்பு என்று இருப்பதால், புரதச்சத்தை ஈடுகட்டி விடலாம். அரிசிக்குப் பதில் பாரம்பர்ய அரிசி, சிறுதானியம் என்று எடுத்துக்கொண்டால் இன்னமும் ஆரோக்கியமாக இருக்கும். பால் இல்லாமல் இருப்பது கடினம் என்பவர்கள் தேங்காய்ப்பால், பாதாம் பால், வேர்க்கடலைப்பால், சோயா பால் போன்றவற்றை மாற்றாகப் பயன்படுத்தலாம். இந்தப் பாலில் தயிரும் தயாரிக்கலாம். பால் சேர்த்த டீ, காபிக்குப் பதிலாக மூலிகை டீ அருந்தலாம். இறைச்சிக்குப் பதிலாகக் காளான், சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் டோஃபு எடுத்துக்கொள்ளலாம். சிலர் வீகனுடன் சேர்த்து லோ கார்ப் டயட்டும் ( Vegan plus low carbs Diet ) எடுக்கிறார்கள். அசைவ உணவுகளையும் தவிர்த்து, மாவுச்சத்து உணவுகளையும் குறைவாக எடுத்துக்கொள்பவர்கள் நிறையக் காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும். வைட்டமின் பி 12 அசைவ உணவுகளில்தான் இருக்கிறது. அதை முற்றிலுமாக தவிர்ப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வைட்டமின் பி 12 குறைபாடு வரலாம். பி 12 குறைவது நரம்பு மண்டலத்துக்கு நல்லதல்ல. வீகன் அல்லது வீகன் ப்ளஸ் லோ கார்ப் டயட்டை ஃபாலோ செய்ய விரும்புபவர்கள், அதை ஆரம்பிப்பதற்கு முன்னால் தங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. Health: பூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! 7. ரெயின்போ டயட் ( Rainbow diet) Rainbow diet பலவித நிறங்களில் இருக்கிற காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளும் டயட் இது. இதை தனியொரு டயட்டாக பார்க்க முடியாது. வழக்கமாகச் சாப்பிடும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவற்றுடன் ரெயின்போ டயட்டையும் சேர்த்து எடுத்தால், நார்ச்சத்து நிறைய கிடைக்கும். ஆய்வுகளின்படி புற்றுநோய் வருவதையும் தவிர்க்க முடியும். இது ஆரோக்கியமானது, எல்லோருக்கும் அவசியமானதும்கூட. நீரிழிவு இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்பெற்று கொய்யா, கிவி, டிராகன் ஃப்ரூட், க்ரீன் ஆப்பிள், முழுதாகப் பழுக்காத பப்பாளி போன்றவற்றை ரெயின்போ டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். 8. லிக்விட் டயட் (Liquid diet) Liquid diet தண்ணீர் அல்லது பழச்சாறு மட்டும் அருந்திவிட்டு, உணவு சாப்பிடாமல் இருப்பது உண்ணாவிரதம். இதை டயட் என்று சொல்ல முடியாது. இந்த விரதத்தை அதிகபட்சமாக 2 நாள் இருக்கலாம். அதுவுமே, இரண்டு நாள் சாப்பிடாமல் இருக்கக்கூடிய அளவுக்கு நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்; உணவுக்குப் பிறகு மாத்திரைகள் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய பிரச்னைகள் இல்லாமல் இருக்கிறீர்கள் என்றால் மட்டுமே இதை கடைபிடிக்கலாம். முக்கியமாக, ஹீமோகுளோபின் அளவு 10 g/dL-க்கு கீழ் இருந்தாலோ, ஊட்டச்சத்துக்குறைபாடு இருந்தாலோ உண்ணாவிரதமே இருக்கக்கூடாது. யூடியூப் பார்த்து தண்ணீர் மட்டுமே அருந்தி விரதமிருந்த ஓர் இளம்பெண், சமீபத்தில் மரணமடைந்தது எல்லோருக்குமே தெரியும். அந்தப் பெண்ணுக்கு இருந்தது அனோரெக்ஸியா நெர்வோசா (anorexia nervosa) என்கிற உளவியல் பிரச்னை. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் 'குண்டாகி விடுவோமோ' என்கிற பயத்தில் சாப்பிடாமலே இருப்பார்கள். உருவக் கேலி போன்ற ஏதோவொரு காரணத்தால்தான் அந்தப்பெண் வாட்டர் ஃபாஸ்ட்டிங் இருந்திருக்க வேண்டும். உளவியல் ஆலோசனை தந்திருந்தால் அந்த இளம்பெண்ணைக் காப்பாற்றியிருக்கலாம் என்பதே உண்மை. சிலர் பழச்சாறு மட்டுமே அருந்தி விரதம் இருப்பார்கள். வைட்டமின்கள், தாது உப்புகள் தவிர, வேறு அடிப்படை சத்துக்கள் இதில் கிடைப்பது கடினம். தண்ணீரோ, பழச்சாறோ ஒருநாள் இருந்தால், ஒரு கிலோ உடல் எடை குறையலாம். அதைத் தவிர்த்து இவற்றில் வேறு நன்மை இல்லை. டயட்டீஷியனிடம் ஆலோசனை பெற்று லோ கிளைசமிக் பழங்களுடன் கேரட், கீரை போன்றவற்றை சேர்த்து அரைத்து ஜூஸாக பருகலாம். இதுவும் ஒருநாளைக்குத்தான். இதற்கு மேல் பழச்சாறு விரதம் இருந்தால், நீரிழிவு இருப்பவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும், கவனம். Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ..! வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
Doctor Vikatan: கொளுத்தும் கோடைக்காலத்திலும் ஜலதோஷம் பிடிப்பது ஏன்?
Doctor Vikatan: பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலங்களில்தானே பலருக்கும் ஜலதோஷம் பிடிக்கும்.... எனக்கோ, எல்லா சீசன்களிலும் ஜலதோஷம் இருக்கிறது. கொளுத்தும் கோடைக்காலத்தில்கூட ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதனால் என்னால் ஐஸ்கிரீம், கூல்டிரிங்க் போன்ற எதையும் சாப்பிட முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்.... என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி மருத்துவர் சஃபி ஜலதோஷம் என நீங்கள் குறிப்பிடுவது சாதாரண அறிகுறியா, சளி, இருமலுடன் கூடிய அறிகுறியா அல்லது தும்மல் என்பதை வைத்துச் சொல்கிறீர்களா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஜலதோஷம் என்பது எந்த சீசனில் வேண்டுமானாலும் பிடிக்கலாம். குளிர்காலம், மழைக்காலம், வெயில்காலம் என எல்லாக் காலங்களிலும் ஜலதோஷம் பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் தொற்றுதான். இது 'ரெஸ்பிரேட்டரி சின்சிஷியல் வைரஸ்' (Respiratory syncytial virus ) அல்லது 'அடினோ வைரஸ்' ( Adenovirus) என எந்த வைரஸாகவும் இருக்கலாம். சிலர் எளிதில் இதுபோன்ற தொற்றுக்குள்ளாகிறவர்களாக இருப்பார்கள். அதாவது அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் எந்த சீசனிலும் தொற்றுக்குள்ளாகிவிடுவார்கள். சூழல் காரணிகளாலும் ஜலதோஷம் வரலாம். இதுபோன்ற தொற்றுகள் வராமலிருக்கத்தான் வருடந்தோறும் ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அது சளி, காய்ச்சல் பாதிப்பு தாக்காமல் பாதுகாப்பு கொடுக்கும். கடிதத்தில் உங்கள் வயது குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை, சிறு வயதுக் குழந்தைக்கு இதுபோன்ற பாதிப்பு வருகிறது என்றால், குழந்தைக்கு அலர்ஜி தொடர்பான பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா, ஆஸ்துமா பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பார்க்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள சூழல் காரணிகளாலும் இப்படி ஏற்படலாம்.; உதாரணத்துக்கு, வீட்டுக்குள் வளர்க்கும் செல்லப்பிராணிகள், சாம்பிராணிப் புகை, தொழிற்சாலை புகை.... இப்படிப் பல காரணிகள் இந்த பாதிப்பைத் தூண்டலாம். எனவே, நீங்கள் உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகி, உங்கள் அறிகுறிகளைச் சொல்லி, ஜலதோஷம் பிடிப்பதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை பெறலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: 10 வயதுச் சிறுவனுக்கு அடிக்கடி சளி, இருமல்... சித்த மருத்துவம் உதவுமா? வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்... தீர்வு இருக்கிறதா?
து ம்மல் என்பது இயல்பான ஒன்று. ஆனால், சிலர் பக்கத்தில் இருப்பவர்கள் பதறும் அளவுக்கும், வீடே அதிரும் அளவுக்கும் தும்முவார்கள். இது காலம், காலமாகவே இருந்து வரும் பிரச்னைதான். வயது முதிர்ந்தவர்களுக்கே அதிர வைக்கும் தும்மல் பிரச்னை அதிக அளவில் காணப் படுகிறது. இப்படி தும்மல் அதீத சத்தத்துடன் வெளிப்படுவதற்கு என்ன காரணம், அடுக்கடுக்கான தும்மல் எதனால் ஏற்படுகிறது, இதனால் உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் எழலாம். எந்தப் பிரச்னையையும் எளிதில் சமாளிக்க வழி இருக்கிறது'' என்கிறார் சென்னை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் பாலமுருகன். தும்மல் 'நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு கிருமியோ, தூசியோ நம் சுவாசம் வழியாக உடலுக்குள் ஊடுருவும்பட்சத்தில், உடனடியாக அதை வெளியேற்றும் தற்காப்பு நடவடிக்கைதான் தும்மல். இது நொடிப்பொழுதில் நடக்கும் செயல்பாடு. எதிர்பாராத நேரத்தில் தோன்றும் இதன் வேகம் காரணமாகத்தான் சமாளிக்க முடியாமல் சிலர் அதிக சத்தத்துடன் தும்முகின்றனர். அத்துடன் தும்மலிட அதிகம் சிரமப்படுபவர்களும் அதிக சத்தத்துடன் தும்முவார்கள். இது ஒவ்வொருவரின் உடல் இயல்பைப் பொறுத்து மாறுபடும். அதிக சிரமப்பட்டு தும்மும்போது, காது வலியும் ஏற்படலாம். மூக்குக்கும் காதுக்கும் தொடர்பு இருப்பதால் மூக்கில் இருக்கும் சைனஸ் பிரச்னையின் தாக்கம் காது வரைக்கும் பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால்தான் சின்னக் குழந்தைகளிடம் மூக்கைப் பொத்திக்கொண்டு தும்மக்கூடாது என்பார்கள்! Health: மஞ்சள் பூசணி விதையில இத்தனை மருத்துவ குணங்களா? அன்றாட வாழ்வில் நாம் தூசி படிந்த காற்றையே சுவாசித்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக சுவாசப் பகுதியில் அலர்ஜி ஏற்பட்டு மூக்கின் உட்பகுதியில் சிவந்து வீக்கம் உண்டாகலாம். இதனால் சுவாசப் பிரச்னை மற்றும் தும்மலின்போது அதிக சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மூக்கில் இருந்து நீர் வடிதல், தொடர்ச்சியான அதீத தும்மல் மற்றும் மூக்கு அடைப்பு போன்றவை இதன் முதல் அறிகுறிகள். நாளடைவில், இதுவே சைனஸ் பிரச்னையாக மாறி, சிறிது தூசி பட்டால்கூட தொடர்ச்சியான தும்மலை ஏற்படுத்திவிடும்' என்கிற டாக்டர் பாலமுருகன், சிகிச்சை முறைகளையும் கூறுகிறார். தும்மல் 'தும்மல் நிகழ்வின் வளர்ச்சியைத் தடை செய்வதே முதலாம் கட்ட மருத்துவம். தினமும் காலை மூச்சுப் பயிற்சி செய்வது, வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து சுத்தமற்ற காற்றை சுவாசிப்பதைத் தவிர்ப்பது, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தலையணை உறையை மாற்றுவது, தூசி படியும் பொருள்களைப் படுக்கை அறையில் வைக்காதிருப்பது, வீட்டை சுத்தப்படுத்தும் போது மூக்கை துணியால் கட்டிக்கொள்வது, கை நகத்தை சுத்தமாக வைத்திருப்பது என செய்தால் தும்மல் வருவதற்கான காரணங்களை 50 சதவிகிதம் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். தவிர, அதிக எண்ணெய் ஆகாரங்கள், கொழுப்புச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அதிக எடை காரணமாக, தொண்டை மற்றும் மூச்சுப்பகுதியில் உள்ள சதைப்பற்று தடிமனாகலாம். இதுவும் சுவாசப் பிரச்னைக்கும், தும்மலின்போது அதிக சிரமத்துக்கும் வழிவகுக்கும். தும்மல் பிரச்னை அதிகமாகும்பட்சத்தில் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். எண்டோஸ்கோப்பி மூலம் சுவாசப் பகுதியில் அலர்ஜி எந்த அளவுக்கு உள்ளது, இதன் விளைவால் மூக்கின் உட்புறச் சதைகள் எந்த அளவுக்கு வீங்கி இருக்கிறது என்பதையும் பரிசோதித்துப் பார்த்து சரிப்படுத்த முடியும். Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
Doctor Vikatan: அதிக புரோட்டீன் உணவுகள் ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துமா?
Doctor Vikatan: என்னுடைய நண்பனுக்கு 38 வயதாகிறது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவான். சமீபகாலமாக அவன் உணவில் அதிக அளவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்கிறான். ஒருநாளைக்கு 5-6 முட்டைகள், சிக்கன், புரோட்டீன் பவுடர் என சாப்பிடுகிறான். கேட்டால் புரோட்டீன் உணவுகள்தான் தசைகளை வலுவோடு வைத்திருக்கும், தசைகளின் அடர்த்தி குறையாமல் பார்த்துக்கொள்ளும் என்கிறான். புரோட்டீன் அதிகம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா.... என் நண்பன் செய்வது சரியா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஆரோக்கியமான உடல் கட்டமைப்புக்கும் செயல்பாட்டுக்கும் புரதச்சத்து என்பது மிகமிக முக்கியம். ஆனால், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதைப் போல புரதச்சத்தும் அளவு தாண்டும்போது ஆபத்தானது. நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். அளவுக்கதிக புரோட்டீன் உணவுகள் உங்கள் இதயநலனை பாதிக்கலாம், ஹார்ட் அட்டாக் ரிஸ்க்கை கொடுக்கலாம். அளவுக்கதிக புரோட்டீன் உடலுக்குள் போகும்போது இதயநோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகரிப்பதாக நிறைய ஆய்வுகள் வந்திருக்கின்றன. புரத உணவுகளில் உள்ள லூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் அதிகரிக்கும். குறிப்பாக, அசைவ உணவுகளில் இருந்து உடலுக்குச் சேரும் புரதச்சத்தில் இந்த ஆபத்து இருக்கிறது. அதாவது ஒரு வேளைக்கு 25 கிராமுக்கும் அதிகமாக அசைவ புரதம் எடுக்கும்போது இந்த ரிஸ்க் இன்னும் அதிகம். இதய தமனிகளின் சுவர்களில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருள்கள் படிவதால் ஏற்படும் ஒரு நிலையை அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis) என்று சொல்கிறோம். இது இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற தீவிர உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புரத உணவுகளில் உள்ள லூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் அதிகரிக்கும். எனவே, உடல் எடைக்கேற்ற அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தைவிட, சைவ உணவுகளின் மூலம் கிடைக்கும் புரதம்தான் சிறந்தது, பாதுகாப்பானது. ஒருவேளை உணவில் 25 கிராமுக்கும் அதிகமாக புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டாம். இவற்றை எல்லாம் உங்கள் நண்பருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவரது உடல் எடை, உயரம், வாழ்க்கைமுறை போன்றவற்றுக்கு எவ்வளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பின்பற்றச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஸ்டீம்பாத் (Steam bath) எடுத்தால் ஹார்ட் அட்டாக் வருமா? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Tretinoin: டிரெண்டிங்கில் இருக்கும் ட்ரெடினோயின் கிரீம்; மருத்துவர் எச்சரிப்பது என்ன?
சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ட்ரெடினோயின் க்ரீம், எப்படிச் சாதாரண மக்கள் மத்தியிலும் இன்ஃப்ளூயன்சர், சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பரிச்சயமானது. எதற்காக இவ்வளவு ஹைப் கொடுக்கிறார்கள், இந்த க்ரீம் அப்படி என்ன செய்கிறது, ட்ரெடினோயின் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். ட்ரெடினோயின் என்றால் என்ன? ட்ரெடினோயின் என்பது ஒரு வகை ரெட்டினாய்டு ஆகும். பலரும் இதனை ஸ்டீராய்டு என்று கூறுகின்றனர். ஆனால் இது வைட்டமின் ஏ அடிப்படையிலான தயாரிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. டிரெடினோயின் ஸ்டீராய்டு இல்லை ஸ்டீராய்டு கிரீம்கள் சருமத்திற்கு ஏற்றவை இல்லை. இவற்றை நீண்ட காலம் பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஸ்டீராய்டு கிரீம்களின் வகை, அளவு, சிகிச்சை காலம், வயது ஆகியவற்றைப் பொறுத்து பக்க விளைவுகளின் அபாயம் மாறுபடும். தோல் அரிப்பு, சிவத்தல், வீக்கம், தொண்டைப் புண், கரகரப்பான குரல். ஏன்.. தோல் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் கூட ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் டிரெடினோயின் ஸ்டீராய்டு இல்லை. தோல் வறட்சி, வெடிப்பு அமெரிக்கத் தோல் மருத்துவ அகாடமி சொல்வதென்ன? இது முகப்பருவுக்குச் சிகிச்சையளிக்கவும், சருமத்தின் தோல் மற்றும் அமைப்பை மேம்படுத்தவும், சுருக்கங்களைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்று அமெரிக்கத் தோல் மருத்துவ அகாடமி (ஏஏடி) தெரிவித்துள்ளது. 1971 ஆம் ஆண்டில், முகப்பருவிற்கான மேற்பூச்சு சிகிச்சைக்காக (topical treatment ) அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (எஃப்டிஏ) அங்கீகரிக்கப்பட்ட முதல் ரெட்டினாய்டு 'டிரெடினோயின்' ஆனது என்று ஏஏடி தெரிவித்துள்ளது. டிரெட்டினோயின் யாரெல்லாம் பயன்படுத்தலாம்? மார்கெட்களில் பல ரெட்டினாய்டுகள் உள்ளன. ஆனால் இந்த ட்ரெடினோயின் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், இது எல்லோரும் பயன்படுத்தப் பரிந்துரைக்க மாட்டோம் என்றும் கூறுகிறார் தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா ராகுல். டிரெட்டினோயின் பல தசாப்தங்களாகத் தோல் மருத்துவச் சிகிச்சையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. மேலும் இது பல ஆண்டுகளாக நாங்கள் பரிந்துரைத்து வருகிறோம், என்று மருத்துவர் கோல்டா கூறுகிறார். ஆக்னி இருப்பவர்களுக்கும், ஆயிலி ஸ்கின் இருப்பவர்களுக்கும் இந்த டிரெட்டினோயின் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம். காரணம் சருமத்தின் எண்ணெய்ப் பசை தன்மையை இந்த மூலக்கூறு குறைக்கிறது. தோலில் சுருக்கம் இருப்பவர்களுக்கும் இதனைப் பரிந்துரைக்கிறோம். 30 வயதிற்குப் பிறகு ஆன்ட்டி ஏஜிங் கிரீமாக ரெட்டினால், டிரெட்டினோயின் பயன்படுத்த வலியுறுத்துகிறோம். ஆனால் 25 வயதிலேயே ஒருவருக்கு வயசான தோற்றம் ஏற்படுமானால் இந்த மூலக்கூற்றைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றோம். டாக்டர் கோல்டா ராகுல் Skin Health: மரு... அழகுப் பிரச்னையா? ஆரோக்கியப் பிரச்னையா? மேலும் இது சருமத்தின் ஆழமான அடுக்குகளில் கொலாஜனை உருவாக்க உதவுகிறது. கொலாஜனை உருவாக்குவதன் மூலம் முகப்பரு வடுக்கள் மற்றும் சுருக்கங்களுக்குச் சிகிச்சையளிக்க ட்ரெடினோயின் உதவுகிறது. அதிகமாக வெயிலில் செல்பவர்கள், மென்மையான தோல் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்தக்கூடாது. இதனைப் பயன்படுத்திவிட்டு வெயிலில் செல்பவர்களுக்கு அதிகமான கருமையை ஏற்படுத்தும். இந்த ட்ரெடினோயின் பயன்படுத்தும் சிலருக்குச் சருமம் எரிச்சல் ஏற்படும். அப்போது அதன் மீது கேரட் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தேய்க்கும் போது முகம் முன்பு இருந்ததை விட மேலும் கருமையாக மாறக்கூடும் என்கிறார் மருத்துவர் கோல்டா. டிரெட்டினோயின் ஜெல், கிரீம் மற்றும் லோஷன் வடிவங்களில் கிடைக்கிறது. அதிலும் வெவ்வேறு சதவீதங்களில் வழங்கப்படுகிறது. இது பல்வேறு வகையான தீர்வையும், விளைவையும் கொடுக்கிறது என்கிறார். ட்ரெடினோயினின் நன்மைகள் முகப்பருக்குச் சிகிச்சை, மேம்படுத்தப்பட்ட ஹைப்பர் பிக்மென்டேஷன், போட்டோடேமேஜ் (இளம் வயதிலேயே வயசான தோற்றம்), சுருக்கங்கள் உட்பட வயதான அறிகுறிகள் குறைதல். டாக்டர் கோல்டா கூற்றுப்படி, ட்ரெடினோயின் என்பது முகப்பரு மற்றும் வெயிலால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல பொதுவான தோல் பிரச்னைகளை நிவர்த்தி செய்யப் பயன்படும் மிகவும் பயனுள்ள மருந்து ஆகும். ட்ரெடினோயின் தோல் செல்களின் உற்பத்தியை விரைவுபடுத்துவதால், உடலில் கொலாஜனின் தொகுப்பை இது தூண்டுகிறது. ட்ரெடினோயின் முகப்பரு சிகிச்சையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தாலும் ஆன்ட்டி ஏஜிங்கிலும் சிறப்புப் பங்கு வகிக்கிறது. முகப்பருவை விரட்டுவதோடு மட்டுமல்லாமல், வைட்டமின் ஏ சேதமடைந்த சருமத்தை உரிக்கவும் அனுமதிக்கிறது. இதனால் சருமத்தின் பழைய தோல் உரிந்து முகம் பொழிவு பெறுகிறது. ட்ரெடினோயின் பக்க விளைவுகள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த ட்ரெடினோயின் பயன்படுத்தக்கூடாது என்கிறார் மருத்துவர் கோல்டா. இதனைப் பயன்படுத்திய முதல் வாரங்களில் சருமத்தில் வறட்சி, சிவத்தல் மற்றும் தோல் எரிச்சல் போன்றவை ஏற்படும் என்கிறார் டாக்டர் கோல்டா. சரியான முறையில் குறைந்த அளவில் பயன்படுத்துவதால் மட்டுமே ஆரோக்கியமான ஸ்கின் பெற முடியும், தங்களின் தோல் பிரச்னைகளையும் சரிசெய்ய முடியும் என்கிறார் மருத்துவர். ஒவ்வொரு நபரின் சருமமும் வேறுபட்டது, ட்ரெடினோயினை பொறுத்துக்கொள்ளும் திறன் மாறுபடும். பக்க விளைவுகளைக் குறைக்க, முதல் இரண்டு வாரங்களுக்கு (உங்கள் மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும்) ஒவ்வொரு இரவும் அல்லது ஒவ்வொரு இரண்டு இரவும் மட்டுமே ட்ரெடினோயினை பயன்படுத்தலாம் என்கிறார். சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால், தோல் எரிச்சல் ஏற்படும். இதனால் ஹைப்பர் பிக்மென்டேஷன் கூட ஏற்படும். எரிச்சலால் உருவாகும் சருமத்தின் திட்டுகள் கருமையாக மாறக் கூடும். ஹைப்பர் பிக்மென்டேஷனைத் தவிர்க்க, ட்ரெடினோயின் சிகிச்சையை மெதுவாகத் தொடங்குங்கள். அதை மாய்ஸ்சரைசருடன் பயன்படுத்தவும். அதிகமான அல்லது குணமடையாத தோல் எரிச்சல் என்றால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார். கர்ப்ப காலத்தில் ட்ரெடினோயின் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? ட்ரெடினோயின் போன்ற கிரீம் வடிவ ரெட்டினாய்டுகள், ஐசோட்ரெடினோயின் போன்ற வாய்வழி (oral) ரெட்டினாய்டைப் போல உடலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அதனைக் கர்ப்பமாக இருக்கும் அல்லது பாலூட்டும் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் கோல்டா. கர்ப்ப காலத்தில் ட்ரெடினோயின் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த எந்த ஆய்வும் இல்லை. எனவே, நீங்கள் கருத்தரிக்க முயல்கிறீர்கள் என்றாலும் சரி, கர்ப்ப காலத்திலும் சரி, ட்ரெடினோயின் போன்ற ரெட்டினோயிக் அமிலங்களைப் பயன்படுத்துவதை மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என்று கோல்டா கூறுகிறார். இதுபோன்ற ரெட்டினாய்டுகள் கர்ப்ப காலத்தில் மாத்திரையாகவோ, மருத்தாகவோ வாய்வழியே எடுத்துக்கொள்ளும் போது அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும். உதடுகளில் ஓட்டை அல்லது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும் என்கிறார். Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..! pregnancy எப்போது, எப்படி Tretinoin பயன்படுத்த வேண்டும்? அதிக சக்தி வாய்ந்த மூலக்கூறு என்பதால் சருமத்திற்குப் படிப்படியாகப் பயன்படுத்துவது நல்லது. வாரத்திற்கு மூன்று முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தலாம். முதலில் பத்து நிமிடம். அதன் பின்னர் 30 நிமிடம் என நேரத்தை உங்கள் சருமத்திற்கு ஏற்ப செட் செய்து கொள்ளலாம். தினசரி இவற்றைப் பயன்படுத்தினால் சருமம் அதிக வறட்சியாகும். குறிப்பாக, சருமத்திற்குச் சரியான சன்ஸ்க்ரீன், மாய்ஸ்ரைசர் பயன்படுத்த வேண்டும். காலையில் அதனைப் பயன்படுத்து வேண்டாம் என்று கூறுகின்றனர். காரணம் இது சூரிய ஒளிக்கு அதிக உணர்த்திறன் கொண்டதாக மாறக்கூடும். அதன் செயல் திறனும் குறைவாக இருக்கக்கூடும். எனவே பகலில் அல்லாமல் இரவில் Tretinoin பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். AHA - ட்ரெடினோயின் உங்களுக்கு ட்ரெடினோயின் பரிந்துரைக்கப்பட்டிருந்தால், மற்ற சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதாவது அஸ்ட்ரிஜென்ட்கள் அல்லது ஆஃப்டர் ஷேவ் லோஷன்கள் போன்றவை எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய AHAகள் அல்லது லாக்டிக் போன்ற தயாரிப்புகளை ட்ரெடினோயின் உடன் சேர்த்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் கோல்டா. மேயோ கிளினிக்கின் படி, பென்சாயில் பெராக்சைடு (சில சந்தர்ப்பங்களில் பென்சாயில் பெராக்சைடு கொண்ட ட்ரெடினோயின் தயாரிப்பைப் பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைக்கலாம்), சாலிசிலிக் அமிலம் மற்றும் சல்பர் போன்ற உரித்தல் தன்மை கொண்ட தயாரிப்புகளைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எப்படி சோசியல் மீடியாவில் பிரபலமானது? மருத்துவர் கோல்டா ராகுல் கூற்றுப்படி, இந்த ட்ரெடினோயின் தயாரிப்புகள் சோசியல் மீடியாவில் பிரபலமானதற்குக் காரணமே எளிதில் கிடைப்பதால் தான். இந்த கிரீம் எளிதில் எல்லாராலும் வாங்கி பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாமல் இதன் விலையும் குறைவு என்பதாலும் பயனர்கள் இதனை நாடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் இதனைப் பயன்படுத்தும் போது விரைவாகவே அவர்களது சருமத்தில் மாற்றங்கள் ஏற்படும். இரண்டு முதல் நான்கு வாரங்களிலேயே மாற்றங்கள் ஏற்படும் என்பதாலும் இதனைப் பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். சோசியல் மீடியாவில் சொல்கிறார்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்று வெறுமன ஒரு கிரீமை பயன்படுத்தாமல் உங்கள் ஸ்கின் குறித்து மருத்துவரிடம் அணுகி முறையான மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் கோல்டா. இளைய தலைமுறையினரிடம் ஸ்கின் கேர் குறித்த பயன்பாடும் அதிகம் உள்ளது. தங்களது சருமத்தைப் பளபளவென்று வைத்திருக்கப் பல விஷயங்களைச் செய்கின்றனர். ஆனால் இந்த ஸ்கின் கேரின்போது விழிப்புணர்வும் தேவை என்கின்றனர் மருத்துவர்கள். ஏதோ ஒரு கிரீமை சருமத்திற்குப் பயன்படுத்தி பலன் கிடைப்பதற்குப் பதிலாகச் சரியான ஆரோக்கியமான முறையில் தங்களது சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். Ice Cube For Face: ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறுமா? அழகியல் மருத்துவர் சொல்வெதன்ன? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Health: சாலையோரக் கடைகளில் காளான் சாப்பிடப்போறீங்களா? ஊட்டச்சத்து நிபுணர் சொல்றத கேளுங்க!
சா லையோரக் கடைகளில் காளான் உணவுகள் அதிகரித்துவிட்டது. 'ஒரு காளான்' என்றால், எண்ணெய் மிதக்கும் காளான் கிரேவியைச் சூடான தவாவில் போட்டு சூடாக்கி, கொதிக்கக் கொதிக்க பேப்பர் பிளேட்டில் போட்டு மேலே பொரிந்த கார்னை தூவிக் கொடுக்கிறார்கள். காளான் நல்லது. ஆனால், சாலையோரக் கடைகளில் கிடைக்கும் இந்தக் காளான் நல்லதா? சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தில்ஷத் பேகம் அவர்களிடம் கேட்டோம். சாலையோர கடைகள் “சாலையோரக் கடைகளில் விற்கப்படும், எந்த உணவும் சுகாதாரமானது என்று உறுதியளிக்க முடியாது. காளான்கள் சத்துமிகுந்ததாக இருப்பினும், சாலையோரக் கடைகளில் உண்பதைத் தவிர்த்துவிடுவதே நல்லது. ஏனெனில், சாலையோரக் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும், தரமற்ற காளான்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. தரமான காளான்களை வீட்டில் வாங்கி சமைப்பது நல்லது. எப்படி வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடலாம். Health: சாலையோரம் அறுகம்புல் சாறு... குடித்தால் பலன் கிடைக்குமா? காளான்களில் புரதச்சத்து மிகுதியாக உள்ளது. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே அதிகமாகக் கிடைக்கக்கூடிய வைட்டமின் டி, பி சத்துக்கள் மற்றும் செலினியம் எனும் தாதுப்பொருளும் இதில் உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்டாகவும் செயல்படுகிறது காளான். தவிர, இதில் உள்ள ஆன்டி-கார்சினோஜெனிக் (Anti-carcinogenic), கேன்சர் வராமல் தடுக்கும் காரணி. இது நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதில் கொழுப்புச் சத்தும் மிகக் குறைவு. அதனால், காளான் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. காளான் Mushroom: காளான்களை ஏன் அடிக்கடி சாப்பிடணும்..? காரணம் சொல்லும் நிபுணர்கள்! காளான்கள் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். சில வகை காளான்கள் விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். இவற்றைச் சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறு, சுவாசப் பிரச்னை, வாந்தி, பேதி போன்றவை ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகூட ஏற்படலாம். சில வகை காளான்கள் (Inocybe species) உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புள்ளது. தரமான காளான்கள் வாங்கினால், அவை நிச்சயம் ஆரோக்கியத்தைக் கூட்டும்'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தில்ஷத் பேகம். Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
'சுடு நீரினை மட்டும் குடித்து வந்துள்ளார்' - Youtube பார்த்து டயட்; 18 வயது பெண் உயிரிழந்த பரிதாபம்!
கே ரள மாநிலம், கண்ணூர் அடுத்த கூத்துபரம்பாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா. 18 வயது இளம்பெண்ணான ஸ்ரீ நந்தா அதிக அளவில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது எடை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ நந்தா, உணவு உட்கொள்வதையே முற்றிலும் தவிர்த்துள்ளார். இவை குறித்து ஸ்ரீ நந்தாவின் குடும்பத்தினர், கடந்த ஆறு மாதங்களாகவே அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்காக யூ டியூப் பார்த்து உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்திருக்கிறார். இதை தனது குடும்பத்தினரிடம் மறைத்திருக்கிறார். பல மாதங்களாக தனது பெற்றோர் கொடுத்த உணவு ஏதும் உட்கொள்ளாமல் அந்த யூ டியூபில் சொன்னபடி சுடுநீரினை மட்டும் குடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பலகட்ட உடல் பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் ஸ்ரீநந்தாவின் பெற்றோர்களிடம் அவருக்கு போதுமான உணவு வழங்குமாறு அறிவுறுத்தினார்கள். மேலும் அவரை மனநல நிபுணரிடம் அழைத்துச்செல்லுமாறும் கூறினார்'' என்கிறார்கள். இரண்டு வாரத்திற்கு முன்பு ஸ்ரீநந்தாவின் உடல் மிகவும் பாதிக்கப்பட்டு ரத்தத்தின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தது. மேலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரை அருகில் உள்ள தலச்சேரி கார்ப்பரேட்டிவ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஸ்ரீ நந்தாவை பரிசோதித்த மருத்துவர் நாகேஷ் மனோகர் பிரபு , சரியாக 12 நாட்களுக்கு முன்னால் உடல்நிலை பிரச்னையால் அவசர சிகிச்சைப் பிரிவில் ஶ்ரீநந்தா அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதிக்கையில் அதிர்ந்து போனோம். ஏனெனில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது. மேலும் அவர் ஏற்கெனவே படுத்தப்படுக்கையாக இருந்ததும் தெரிய வந்தது. அவரது உடலில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை காற்று பொருத்தப்பட்டது. ஆனாலும் அவரது உடல் சீராகவில்லை'' என வருத்தமுடன் கூறியிருக்கிறார். This or That 19: வெயிட் லாஸ்...Low carb, Low Fat டயட்... எது சிறந்தது? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Doctor Vikatan: சோஷியல் மீடியாவை பார்த்து எடை குறைத்த மகள்: ஆரோக்கியமானதா, அனுமதிக்கலாமா?
Doctor Vikatan: என்னுடைய 13 வயது மகள் மிகவும் அதிக உடல் பருமனுடன் இருந்தாள். கடந்த சில நாள்களாக திடீரென சோஷியல் மீடியாவை பார்த்து அவளாகவே ஏதோ டயட்டை பின்பற்றுகிறாள். அந்த டயட்டை பின்பற்ற ஆரம்பித்த பிறகு உடல் எடை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதை அப்படியே அனுமதிக்கலாமா.... எடை குறைந்தால் ஆரோக்கியமானதுதானே...? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் டயட் என்பது நாமாக முடிவுசெய்தோ, மற்றவர்கள் சொல்வதை, பின்பற்றுவதைப் பார்த்தோ செய்வது என்பது சரியான விஷயமே இல்லை. குறிப்பாக, சோஷியல் மீடியாவை பார்த்து அதன் தாக்கத்தில் மற்றவர்கள் சொல்வதைப் பின்பற்றுவது நிச்சயம் தவறானது. உங்கள் டீன் ஏஜ் மகள் இந்த வயதிலேயே ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்குப் பழகுவது நல்ல விஷயம்தான். ஆனால், டயட் விஷயத்தில் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகர் என நிபுணரின் வழிகாட்டுதலோடு பின்பற்றுவதுதான் சரியானது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். முறையற்ற டயட், ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தலாம். வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். சோஷியல் மீடியாவில் தகவல்கள், அனுபவங்கள் பகிர்கிறவர்கள் பெரும்பாலும் நிபுணர்களோ, முறைப்படி அந்தத் துறை குறித்துப் படித்தவர்களோ இல்லை. எனவே, அவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது. உங்கள் வீட்டில் குழந்தை திடீரென சரியாகச் சாப்பிடுவதில்லை, எடையும் குறைகிறது என்றால், உடனே அதைக் கண்காணியுங்கள். மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள், எடையைக் குறைத்த பிறகும், சாப்பிட பயப்படுவார்கள். எதைச் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்குமோ என பயப்படுவார்கள். நடிகர் அஜித்தின் திடீர் எடைக் குறைப்பு... நட்சத்திரங்களின் வெயிட்லாஸ் சீக்ரெட்... இதுதானா? டீன் ஏஜ் குழந்தைகளிடம் சமீப காலமாக ஈட்டிங் டிஸ் ஆர்டர் (Eating Disorder) எனப்படும் உண்ணுதல் குறைபாடு அதிகரித்து வருகிறது. ஆனால், அது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஈட்டிங் டிஸ் ஆர்டர் என்பது இரண்டு வகையாக இருக்கலாம். ஒரு வகையில் எதையுமே சாப்பிட மாட்டார்கள் அல்லது மிகக் குறைந்த அளவே சாப்பிடுவார்கள். இன்னொரு வகையில் சாப்பிட்டதை வேண்டுமென்றே வாந்தி எடுத்து வெளியேற்றுவார்கள். இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள், எடையைக் குறைத்த பிறகும், சாப்பிட பயப்படுவார்கள். எதைச் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்குமோ என பயப்படுவார்கள். இது ஒருவிதமான உளவியல் பிரச்னையும்கூட. எனவே, உங்கள் மகளுக்கு இது போன்ற பிரச்னை ஏதேனும் இருக்கிறதா, அதனால் எடை குறைகிறதா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றும் பாருங்கள். உங்கள் மகளின் நடவடிக்கைகளில் அசாதாரண மாற்றங்களை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. அவராக எந்த டயட்டையும் பின்பற்ற அனுமதிக்காதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வாய்க்குப் பிடிச்சதை சாப்பிடலாமா... சரியான உணவு முறை எது?
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகள் தவிர்த்து, புதிது புதிதாக ஏதேதோ உணவுகளைச் சாப்பிடும் தேடல் இயல்பாகவே அதிகரிக்கும். 'வாய்க்குப் பிடிச்சதை சாப்பிடு' என்பார்கள் வீடுகளில். ஆனால், மருத்துவர்களோ, கண்டதையும் சாப்பிடக்கூடாது... பார்த்துப் பார்த்துதான் சாப்பிட வேண்டும்' என்பார்கள். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தனக்காக மட்டுமல்லாமல், தன் கருவில் வளரும் குழந்தைக்காகவும் சேர்த்துச் சாப்பிடுகிறாள். அதனால், எந்த உணவைச் சாப்பிட்டாலும் அதை கவனமாகப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும். அதாவது குழந்தைக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாகப் போய்ச் சேர வேண்டும். அதே சமயத்தில் அம்மாவுக்கும் சிக்கல்கள் தராத உணவாக இருக்க வேண்டும். அதாவது அம்மா சாப்பிடும் உணவுகள், பிபி, சுகர் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோ, ஊசிகளோ பரிந்துரைக்கப்படுவதில்லை. ஒருவேளை அந்தப் பெண் ரத்தச்சோகை எனப்படும் அனீமியாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுக்க மாட்டோம். அப்படிக் கொடுத்தால் கர்ப்பிணிகள் வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்பதே காரணம். எனவே, அந்த முதல் 3 மாதங்களில் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளாகச் சாப்பிட வேண்டும். அந்த வகையில் நிறைய காய்கறிகள், கீரைகள், பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளச் சொல்வோம். முதல் 3 மாதங்களில் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளாகச் சாப்பிட வேண்டும். அந்த வகையில் நிறைய காய்கறிகள், கீரைகள், பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளச் சொல்வோம். இரும்புச்சத்தைப் போலவே கால்சியம் சத்தும் கர்ப்பிணிகளுக்கு மிகமிக முக்கியம். அதனால் பால் மற்றும் பால் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளச் சொல்வோம். இந்தச் சமயத்தில் கர்ப்பிணிகளுக்கு புரதச்சத்தும் மிக முக்கியம். எனவே, கார்போஹைட்ரேட் உணவுகளை மிதமாக எடுத்துக்கொண்டு, கொழுப்பைத் தவிர்த்துவிட்டு, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குழந்தையின் உடல் உறுப்புகள் முதல் 12 வாரங்களில்தான் உருவாகத் தொடங்கும். பிறக்கும் குழந்தை புத்திசாலியாக இருந்தால், அதற்கு அந்த அம்மா முதல் 3 மாதங்களில் சாப்பிட்ட உணவுகள்தான் காரணம். ஆனால், பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கும் முதல் 3 மாதங்களில்தான் வாந்தி உணர்வு மிக அதிகமாக இருக்கும். அதனால் சாப்பிடவே தோன்றாது. எனவே, அந்த நாள்களில் அவர்களுக்குப் பிடித்த உணவுகளையே ஆரோக்கியமாக சமைத்துக்கொடுத்துச் சாப்பிட வைக்கலாம். முளைகட்டிய பயறு, முட்டையின் வெள்ளைக் கரு, சிக்கன், குட்டி மீன்கள் (பெரிய மீன்களில் பாதரசம் அதிகமிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது) போன்றவற்றைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும். தினம் ஒரு கப் தயிர், நட்ஸ், உலர் பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். நட்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸை அப்படியே சாப்பிடப் பிடிக்காவிட்டால் பாலுடன் சேர்த்து அரைத்து வாழைப்பழமும் சேர்த்து மில்க் ஷேக்காக குடிக்கலாம். Doctor Vikatan: கர்ப்பத்தின் கடைசி மாதத்திலும் நிற்காத வாந்தி... என்னதான் தீர்வு? கர்ப்பிணிகள் கட்டாயம் தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும். பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு புரோட்டீன் பவுடரை மருத்துவர் பரிந்துரைப்பார், அந்த பவுடரை சூடான பாலில் கலக்காமல், வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்க வேண்டும். தினம் ஒரு கப் தயிர், நட்ஸ், உலர் பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். நட்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸை அப்படியே சாப்பிடப் பிடிக்காவிட்டால் பாலுடன் சேர்த்து அரைத்து வாழைப்பழமும் சேர்த்து மில்க் ஷேக்காக குடிக்கலாம். உப்பு, சர்க்கரை அளவைக் குறைத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் ரத்த அழுத்தமும் கர்ப்பகால நீரிழிவும் வராமல் தடுக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..!
தி னமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது என்கிறார் வேலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர் ச. இளங்கோ. சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம். உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது. Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்க வைப்பது சின்ன வெங்காயம். சின்ன வெங்காயம் வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம். அம்மை நோய் வராமல் தடுக்கவும் வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். கறிவேப்பிலை, தக்காளி, வெங்காயம் ஒதுக்குபவர்கள், அதைச் சாப்பிட வைக்க ட்ரிக்ஸ்! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
`இவரை நம்பி எப்படி செக்ஸ் வெச்சுக்கிறது?' - மணமகள் கேள்வியும் தீர்வும் | காமத்துக்கு மரியாதை - 234
’’இ ளம் தம்பதிகளை பேரண்ட்ஸ் கூட்டிக்கிட்டு கிளினிக் வர்றாங்கன்னாலே, தம்பதிகளின் பிரச்னைகளோட வீட்டுப் பெரியவங்களோட ஈகோவும் ஒண்ணு சேர்ந்திடுச்சுன்னு அர்த்தம். இந்த மாதிரி சூழல்ல பெரிவங்களை வெளியே இருக்க சொல்லிட்டுதான், தம்பதிகள்ல கிட்ட பேசுவோம். அன்னிக்கும் அதே மாதிரிதான் செஞ்சேன்’’ என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்த கேஸ் ஹிஸ்டரிப்பற்றி விவரிக்க ஆரம்பித்தார். ``அந்த தம்பதிகளுக்கு கல்யாணமாகி ஒரு மாசம்கூட ஆகலை. பெரியவங்க பார்த்து செஞ்சு வெச்ச திருமணம்தான். கல்யாணத்தன்னிக்கு, ரெண்டு வீட்டாருக்கு இடையில கருத்து வேறுபாடுல ஆரம்பிச்சு சண்டை வரைக்கும் நிகழாத திருமணங்கள் ரொம்ப ரொம்ப குறைச்சல். இவங்க கல்யாணத்தன்னிக்கும் இதே மாதிரி நடந்திருக்கு. ரெண்டு வீட்டாரும் ஒருத்தர் மேல ஒருத்தர் ஏகப்பட்ட புகார்களை சொல்ல, மாப்பிள்ளைக்கு பொண்ணு வீட்டார் மேல தான் தப்புன்னு தோணியிருக்கு. பொண்ணுக்கோ, மாப்பிள்ளை வீட்டார் மேல தான் தப்புன்னு தோணியிருக்கு. ’இவர் என்ன ஃபேமிலியை பேச விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டிருக்காரு’ன்னு பொண்ணுக்கும், ’இவளாவது இவ குடும்பத்தைத் தடுக்கிறாளா பாருன்னு பையனுக்கும் எரிச்சல் வந்திருக்கு. ஸோ, ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஈர்ப்பு வர்றதுக்கு முன்னாடியே எரிச்சல் வந்திடுச்சு. அப்புறம் சொந்தக்காரங்க சமாதானப்படுத்த, ரெண்டு வீட்டுக்காரங்களும் ‘கல்யாணம்னா நாலு பிரச்னை வரத்தான் செய்யும்’னு கூலாகிட்டாங்க. ஆனா, பொண்ணு - மாப்பிள்ளை மனசுல இது சங்கடமாவே இருந்திருக்கு. தம்பதி பொண்ணு கல்யாண வாழ்கைக்கு ஃபிட் இல்ல; மாப்பிள்ளைக்கு ஆண்மை இல்ல அன்னிக்கே முதலிரவு வெச்சிருக்காங்க. மனசு முழுக்க எரிச்சல் இருந்ததால பெண்ணால உறவுக்கு இணங்க முடியலை. வெறுப்பான மாப்பிள்ளை தள்ளிப்படுத்திட்டான். இதுவே அடுத்தடுத்த நாள்கள்லேயும் தொடர, கோவத்துல மாப்பிள்ளை விஷயத்தை ஹால்ல போட்டு உடைச்சிட்டான். மறுபடியும் ரெண்டு குடும்பமும் சண்டை போட்டு ’பொண்ணு கல்யாண வாழ்கைக்கு ஃபிட் இல்ல; மாப்பிள்ளைக்கு ஆண்மை இல்லை’ன்னு வார்த்தைகளைக் கொட்ட, யாரோ ஒரு நண்பரோட வழிகாட்டுதாலால என்கிட்ட வந்திருந்தாங்க. வீட்டுப் பெரியவங்களை ரிசப்ஷன்ல இருக்க சொல்லிட்டு, தம்பதி கிட்ட பேச ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட உறுப்பே இல்லை... கலங்கி நின்ற கணவன், துணை நின்ற மனைவி! | காமத்துக்கு மரியாதை - 233 ’அதனாலதான் செக்ஸை அவாய்ட் செஞ்சேன்’ ’முதலிரவுபத்தி எவ்வளவோ கனவுகளோட இருந்தேன் டாக்டர். எதுவுமே நடக்கல. அதான் டென்ஷன்ல வீட்ல சொல்லிட்டேன்னு மாப்பிள்ளை சொன்னார். ’கல்யாணத்தன்னிக்கு அவ்ளோ பெரிய பிரச்னை நடக்குது. இவர் ஒரு வார்த்தைகூட பேசலை. இவரை நம்பி இவர்கூட நான் எப்படி செக்ஸ் வெச்சுக்கிறது; இவரும் இவர் ஃபேமிலியும் இதே மாதிரிதான் இருப்பாங்கன்னா, அந்த வீட்ல நான் எப்படி வாழ முடியும்; அதனாலதான் செக்ஸை அவாய்ட் செஞ்சேன்’னு பொண்ணு ஸ்ட்ராங்கா தன்னோட நியாயத்தை சொன்னாங்க. செக்ஸ் வாழ்க்கை உங்க கணவருக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்க... நீங்க ரெண்டு பேரும் ஒரு குடும்பம். அதனால, உங்க பிறந்த வீடுகளோட சண்டையை, ஈகோவை உங்க செக்ஸ் லைஃபுக்கு நடுவுல கொண்டு வராதீங்க. முதல்ல, மனைவிக்கு உங்க மேல காதலும் நம்பிக்கையும் வர மாதிரி நடந்துக்கோங்க. அதுக்கு நீங்க ரெண்டு பேரும் நிறைய பேசணும். உடனடியா, எங்கியாவது ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க. ரெண்டு பேருக்கு நடுவுல காதல் வந்தப்பிறகு ஃபோர் பிளே, அப்புறம் செக்ஸுன்னு படிப்படியா போங்கன்னு சில செக்ஸுவல் டிப்ஸ் கொடுத்தேன். முடிஞ்சா தனிக்குடித்தனம் போங்க. அப்போ தான் வீட்டாரோட ஈகோ உங்க தாம்பத்தியத்துக்கு இடையில வராதுன்னு மாப்பிள்ளைக்கு அட்வைஸ் செஞ்சேன். அந்தப் பெண்ணிடம், குடும்பத்தினரோட ஈகோவுக்காக உங்க வாழ்க்கையை இழந்துடாதீங்க. உங்க கணவருக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்கன்னு சொல்லி அனுப்பினேன். கொஞ்ச நாள்லேயே சின்னதா ஒரு ட்ரிப், மனைவி வீட்ல ஒரு வாரம் தங்கியிருந்ததுன்னு மனைவியோட மனசை மாத்த கணவர் நிறைய முயற்சி எடுத்திருக்கார். ’ஏங்க பையன் மொத்தமா பொண்டாட்டி வீட்டுப்பக்கமா சாய்ஞ்சுடப்போறான்’கிற பயத்துல, பையன் வீட்டாரும் மருமகள்கிட்ட அனுசரணையா நடக்க ஆரம்பிச்சிருக்காங்க. இனிமே நம்ம வீட்டுப் பெரியவங்க சண்டை போட்டாலும், அது நம்மோட உறவை பாதிக்காதுங்கிறதை செயல்ல கணவர் காட்ட ஆரம்பிச்சதும், மனைவி மனசு இளக ஆரம்பிச்சிருக்கார். மனைவி கர்ப்பமானதும் சந்தோஷமா தகவல் சொன்னார். அது காதல் கல்யாணமோ, பெற்றோர் பார்த்து வெச்ச கல்யாணமோ, பெரியவங்களோட ஈகோவுக்கு உங்க தாம்பத்தியத்தை பலி கொடுத்திடாதீங்க இளைஞர்களே’’ என்கிறார் டாக்டர் காமராஜ். Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Ice Cube For Face: ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறுமா? அழகியல் மருத்துவர் சொல்வெதன்ன?
செலிப்ரிட்டி முதல் இன்ஃப்ளூயன்சர் வரை ஸ்கின் கேர் குறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த ஐஸ் க்யூப் ஸ்கின் கேர் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்ட வருகிறது. நடிகை வரலட்சுமி கூட அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் ஐஸ் பாத் சேலஞ்ச் என்று பதிவிட்டு இருந்தார். உண்மையிலேயே இந்த ஐஸ் பாத் சேலஞ்ச் முகத்திற்கு பொலிவை உண்டாக்குகிறதா? இதனால் கிடைக்கும் நன்மை என்ன? என்று இங்கு தெரிந்துக்கொள்வோம். ஒரு பௌலில் ஐஸ் கியூப்களை நிரப்பி அதில் தங்களின் முகங்களை 10 முதல் 15 நிமிடம் வரை வைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இரத்த ஓட்டம் மேம்பட்டு முகப் பொலிவு ஏற்படுகிறது. ஆனால் தினமும் இவ்வாறு செய்வதால் முகத்திற்கு பொலிவு உண்டாக்குமா என்று கேட்டால் இல்லை என்கிறார் தோல் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர் கோல்டா ராகுல். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி முகத்தில் மசாஜ் செய்யலாமே தவிர, இவ்வாறு முகம் முழுவதையும் ஐஸ் கட்டிகளில் முக்கி வைப்பதால் சிவந்த தோல் உண்டாக்கும், அந்த சமயத்திற்கு முகம் பொலிவாகத் தெரியுமே தவிர இது ஒரு நிரந்தர தீர்வு இல்லை என்கிறார் மருத்துவர் கோல்டா. ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவர் Dr.கோல்டா விகடனுக்குப் பகிர்ந்துள்ளார். ``அதில் ஐஸ் கட்டிகளை முகத்திற்குப் பயன்படுத்துவதால் ரத்த ஓட்டம் மேம்பட்டு முகம் தற்காலிகப் பொலிவுபெறும். முகத்தில் இருக்கும் போர்ஸை எல்லாம் தற்காலிகமாக இறுகச் செய்யும். கண்களைச் சுற்றியிருக்கும் வீக்கத்தை அந்த சமயத்திற்குக் குறையும். முகப்பருவால் ஏற்படும் எரிச்சலை இந்த ஐஸ்கட்டி மசாஜ் குறைக்கும். ஆனால் இதனை தினமும் செய்ய வேண்டாம் என்கிறார் மருத்துவர் கோல்டா ராகுல்.
Doctor Vikatan: பள்ளியில் மயங்கி விழுந்த டீன்ஏஜ் மகள்; எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
Doctor Vikatan: என் மகள் பத்தாவது படிக்கிறாள். கடந்த வருடம் வயதுக்கு வந்தது அவளுக்கு முதல் அதிக ப்ளீடிங் இருக்கிறது. மாதவிடாய் நாள்களில் பள்ளிக்குச் செல்ல முடியாத அளவுக்கு களைப்பாகி விடுகிறாள். மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்தபோது அவளுக்கு ஹீமோகுளோபின் அளவு 8 தான் இருக்கிறது என்று சொன்னார். இந்நிலையில் சமீபத்தில் அவள் பள்ளியிலேயே மயங்கி விழுந்துவிட்டாள். நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது. அவளை எப்படி ஆரோக்கியமாக மாற்றுவது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது உங்கள் மகள் தீவிர அனீமியாவால், அதாவது ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஒரு பெண் வயதுக்கு வரும்போது அவளின் மாதவிடாய் சுழற்சி முறையற்று இருக்கும். அதாவது தொடர்ந்து 20 நாள்கள்வரை ரத்தப் போக்கு இருக்கலாம் அல்லது இரண்டு, இரண்டரை மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரலாம். Doctor Vikatan: அதென்ன `ஐ பிரஷர்..' பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா அது? சிலருக்கு அதிக ரத்தப்போக்கு இருக்கலாம். சினைப்பையிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களும், மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகிய எல்லாம் ஒரே அலைவரிசைக்கு வரும். இவை எல்லாம் ஒழுங்கானால்தான் அந்தப் பெண்ணுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் முறையாக வரும். சரியான நாளில் வரும். சினைப்பையிலிருந்து கருமுட்டையும் வெளியே வரும். ஒரு பெண் வயதுக்கு வந்து, அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் இவையெல்லாம் ஒழுங்குக்கு வரும். இந்த நாள்களில் ஒரு பெண்ணுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து அனீமியா எனப்படும் ரத்தச்சோகை வராமலிருக்க நல்ல சத்துள்ள ஆகாரங்களைக் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகளையும் கொடுக்கலாம். சினைப்பையிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களும், மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகிய எல்லாம் ஒரே அலைவரிசைக்கு வரும். இவை எல்லாம் ஒழுங்கானால்தான் அந்தப் பெண்ணுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் முறையாக வரும். உங்களுடைய மகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னை இருக்கிறது என்று கேள்விப்படும்போது அவருக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்கு காரணம் சினைப்பைகளின் முறையற்ற இயக்கம். பாலிசிஸ்டிக் ஓவரீஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கலாம். உங்கள் மகளின் லைஃப்ஸ்டைல் சரியில்லாமல், அதாவது ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் சாப்பிடுபவராக இருக்கலாம். அடிக்கடி வெளியில் சாப்பிடுபவராக இருக்கலாம். பருமன் பிரச்னை அல்லது தைராய்டு பிரச்னை இருக்கலாம். Doctor Vikatan: பித்தப்பை கற்களைக் கரைக்குமா பேக்கிங் சோடா? அவருக்கு ப்ளீடிங் டிஸ்ஆர்டர் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தக் கசிவு, எங்கேயாவது அடிபட்டால் அந்தக் காயம் ஆறுவதற்கு நேரமெடுப்பது போன்றவை இருந்தால் ரத்தப் பரிசோதனைகளின் மூலம் அதை உறுதி செய்யலாம். முதல் கட்ட சிகிச்சையாக ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி மருந்துகள் கொடுக்க வேண்டும். இவை வலியையும் அதிக ப்ளீடிங்கையும் ஓரளவு கட்டுப்படுத்தும். அடுத்து ஹார்மோன்கள் கலக்காத மருந்துகள் கொடுத்து ப்ளீடிங்கை கட்டுப்படுத்தலாம். அதிலும் குணம் தெரியாவிட்டால் ஹார்மோன் மருந்துகள் கொடுக்க வேண்டி வரலாம். ஹீமோகுளோபின் அளவு 8 என்றிருப்பதால் ப்ளீடிங்கும் அதிகமிருக்கும். உடல் பருமன் அதிகமிருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். உங்கள் மகளுக்கு ஹீமோகுளோபின் அளவு 8 என்றிருப்பதால் ப்ளீடிங்கும் அதிகமிருக்கும். இது ஒரு சுழற்சி மாதிரி. இதை ஏதோ ஓரிடத்தில் நாம் நிறுத்த வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மகளை உடற்பயிற்சிகள் செய்ய ஊக்கப்படுத்துங்கள். சத்தான உணவுகளைக் கொடுங்கள். உணவு மற்றும் வாழ்க்கைமுறை மூலம் இந்தப் பிரச்னையை சரிசெய்வதுதான் நிரந்தர தீர்வளிக்கும் என்பதால் இப்போதே அவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: டூவீலர் ஓட்டுவதால் ஏற்படும் முதுகுவலிக்கு என்னதான் தீர்வு? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Doctor Vikatan: அதென்ன `ஐ பிரஷர்..'பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா அது?
Doctor Vikatan: என் நண்பனுக்கு 55 வயதாகிறது. சமீபத்தில் கண்டெஸ்ட்டுக்கு போனபோது, மருத்துவர் அவனுக்கு கண்களில் பிரஷர் அதிகமாக உள்ளதாகவும், அதை இப்போதே பார்த்து சரிசெய்யாவிட்டால், பார்வையே பறிபோகலாம் என்றும் பயமுறுத்தி அனுப்பியிருக்கிறார். கண்களுக்கும் பிரஷர் உண்டா... பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தான பிரச்னையா அது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் கண்களை பாதிக்கும் இந்தப் பிரச்னைனையை 'கிளக்கோமா' (Glaucoma) என்கிறோம். இத்தகைய கண் அழுத்த நோய், அறிகுறியே இல்லாமல் பார்வையைப் பறித்து விடக்கூடிய சைலன்ட் பாதிப்பு இது. இந்தப் பிரச்னையை 'சைலன்ட் திருடன்' என்று குறிப்பிடுவோம். இதனால்தான் 40 வயதுக்குப் பிறகு ரெகுலர் கண் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. ஐ பிரஷர் என குறிப்பிடப்படுகிற இந்தப் பிரச்னை இருப்பதை கண் மருத்துவரால் மட்டுமே கண்டுபிடித்து உறுதி செய்ய முடியும். கண் அழுத்த பாதிப்பானது பரம்பரையாக ஒருவரை பாதிக்கலாம். கண்களுக்குள் 'ஏக்யுயஸ் ஹ்யூமர்' (Aqueous humor) என்றொரு திரவம் சுரக்கும். இந்தத் திரவம் கண்ணின் ஒரு பகுதி வழியே உள்ளே சென்று இன்னொரு பகுதி வழியே வெளியேற வேண்டும் அப்படி வெளியேற வேண்டிய பகுதி அடைபடும்போது திரவம் வெளியேற முடியாமல் அழுத்தம் சேர்வதால் ஏற்படும் பிரச்னையே 'கண் அழுத்த நோய்'. முறையான கண் பரிசோதனையில் இதைக் கண்டுபிடித்து, பிரச்னை உறுதியானால், மருத்துவப் பரிந்துரையின் பேரில் கண்களுக்கான டிராப்ஸ் உபயோகிக்க வேண்டியிருக்கும். பிரச்னை உறுதியானால், மருத்துவப் பரிந்துரையின் பேரில் கண்களுக்கான டிராப்ஸ் உபயோகிக்க வேண்டியிருக்கும். அந்த டிராப்ஸில் பிரஷர் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதையே தொடர்ந்து உபயோகிக்கலாம். ஒருவேளை பிரஷர் கட்டுக்குள் வரவில்லை என்றால் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் கண் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும். அதற்கேற்ப உங்கள் மருத்துவர் சிகிச்சையை மாற்றித் தருவார். இதையும் தாண்டி, கண் பிரஷரை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றால் Trabaculectomy என்ற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். கிளக்கோமோ பாதிப்பில் பார்வை நரம்பு பாதிக்கப்படலாம். அந்தப் பிரச்னை சரிசெய்ய முடியாதது. எனவே இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை அடிக்கடி மருத்துவரை அணுகி, தேவையான சோதனைகளை மேற்கொண்டு சரியான சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டும். கவனிக்காமல் விட்டு, கண் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் பார்வை இழப்பு ஏற்படலாம். பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து தேவைப்பட்டால் மருத்துவர் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தவிர்க்க முடியாத கம்ப்யூட்டர் பயன்பாடு; வறண்டுபோகும் கண்கள்... மீள வழிகள் உண்டா?
Doctor Vikatan: பித்தப்பை கற்களைக் கரைக்குமா பேக்கிங் சோடா?
Doctor Vikatan: பித்தப்பை கற்களைக் கரைக்கும் வீட்டு சிகிச்சைகள் ஏதேனும் உள்ளனவா என கூகுளில் தேடியபோது, பேக்கிங் சோடாவுக்கு அந்தத் தன்மை இருப்பதாக நிறைய செய்திகளைப் பார்த்தேன். அது எந்த அளவுக்கு உண்மை...? உண்மை எனில் அதை எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும்? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் வயிற்று உப்புசம், தசைப்பிடிப்பு போன்றவற்றுக்கு பேக்கிங் சோடா எடுத்துக்கொள்வதை பலரும் பின்பற்றுவதைக் கேள்விப்படுகிறோம். இத்தகைய வீட்டு சிகிச்சை முறைகள் சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் முடியலாம். Doctor Vikatan: மன அழுத்தம், கவலையால் முடி கொட்டுமா? மனநலனுக்கும் தலைமுடிக்கும் தொடர்பு உண்டா? பேக்கிங் சோடாவின் பிஹெச் அளவில் ஆல்கலைன் தன்மை அதிகமிருக்கும். அதனால் அசிடிட்டி பிரச்னையை இது சற்று குணப்படுத்தக்கூடும். பேக்கிங் சோடாவில் சோடியம் அளவு மிக மிக அதிகமிருக்கும். எனவே, ரத்த அழுத்தத்துக்கு மருந்துகள் எடுப்போர், வேறு பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுப்போர், சப்ளிமென்ட்டுகள் எடுப்போர் எல்லாம் பேக்கிங் சோடாவை பயன்படுத்தக்கூடாது. கிட்னி தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களும் எடுக்கக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். வீட்டு சிகிச்சைகள், கை வைத்தியங்கள் என்ற பெயரில், கண்டதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற நினைப்பது சரியாதல்ல. அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நலனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இன்னும் சிலர், இதுபோன்ற வீட்டு வைத்தியங்களை ஒருமுறை பின்பற்றிப் பழகிவிட்டால், அடிக்கடி செய்துகொண்டே இருப்பார்கள். சோஷியல் மீடியாவில் சொல்கிறார்கள் என்பதை மட்டுமே நம்பி, எதையும் பின்பற்ற வேண்டாம். பித்தப்பை கற்கள் உருவாக என்ன காரணம், அதற்கான முறையான சிகிச்சை என்ன என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசித்துப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது. இவை ஏற்படுத்தும் பின்விளைவுகள் வேறு பிரச்னைகளுக்கு காரணமாகலாம் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். குடல்நலம் 18 - பித்தப்பை கற்கள்... பித்தப்பையை அகற்றுவதுதான் தீர்வா? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Health: வெயில் காலத்தில் ஏன் பழைய சோறு சாப்பிட வேண்டும்?
'ந ம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்தது பழைய சாதம். காலையில் ஒரு முட்டி கஞ்சியை, வெங்காயம், பச்சை மிளகாயோடு சேர்த்துக் குடித்துவிட்டுதான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப் பழஞ்சோறுதான் கொடுத்தது' என்கிற பயோடெக்னாலஜி பேராசிரியர் உஷா, அதுபற்றி விளக்குகிறார். '’சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறுநாள் காலையில் அது பழைய சாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். மண்பானை பழைய சாதத்தில்தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது. பழைய சோறு வெயில் காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு! ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடுசெய்து சாப்பிடுவதைவிட சிறந்தது சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும்போது அதில் நுண்ணுயிர்கள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால்தான் அதில் புளிப்புச்சுவை ஏற்படுகிறது. நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், 'பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது. புரதமும் மாவுச்சத்தும் (ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம். சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடுசெய்து சாப்பிடுவதைவிட, தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச்சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது. பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான். மேலும், பழைய சாதம் சாப்பிட்டால் எடை கூடும், தூக்கம் வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை. எந்த உணவையும் வயிறுமுட்ட சாப்பிட்டால்தான் தூக்கம் வரும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போதுதான் எடை கூடும். வெறும் பழையது மட்டும் சாப்பிடாமல், கூடவே துவையல் அல்லது காய்கறிப் பொரியல் ஏதாவது சேர்த்து, 'பேலன்ஸ்டு’ உணவாக சாப்பிட வேண்டும். பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அதற்குமேல் பழைய சாதத்தை அறையின் வெப்பநிலையில் வைக்கக்கூடாது. சர்க்கரை நோயாளிகள், அளவோடு சாப்பிடலாம். பழைய சாதம் சாப்பிட்டால் எடை கூடும், தூக்கம் வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை. பழைய சோறு வன்முறையைக் கட்டுப்படுத்தும்! ''பழைய சாதம் பற்றி, நம் பாரம்பரிய மருத்துவம் என்ன சொல்கிறது?'' என்று சித்த மருத்துவர் திருநாராயணனிடம் கேட்டோம். 'அகத்தியர் குண வாகடம்’ என்னும் மருத்துவ நூலில் பழஞ்சோற்றின் பெருமை பற்றி, ஒரு பாடலே இருக்கிறது. பொதுவாகவே, வெயில் காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும். பித்தம் என்பது நெருப்பின் குணம். அதனால், பித்தம் சார்ந்த நோய்களும் அதிகமாக ஏற்படும். செரிமான நெருப்பு (Digestive Fire) அதிகரிப்பதால், பெரும் பசி எடுக்கும். உடல் எரிச்சல் ஏற்படும். இவை எல்லாவற்றையும் 'நியூட்ரலைஸ்’ செய்து, உடம்பின் தேஜஸைக் கூட்டுகிறது பழைய சோறு. மனநிலைக் குறைபாடுகள், வன்முறையைத் தூண்டும் ஆக்ரோஷம் ஆகிய உணர்வுகளை இந்த உணவு கட்டுப்படுத்தும். பித்தத்தைக் கட்டுப்படுத்துவதால், அதன் எதிர்க்குணமான உடலில் கபத்தின் தன்மை அதிகரிக்கிறது. அதனால்தான், பழையது சாப்பிட்டதும் நமக்குக் குளுமையான உணர்வு ஏற்படுகிறது. Health: வெயில் காலத்தில் ஏன் கூழ் குடிக்க வேண்டும்? - முக்கியத்துவத்தை விளக்கும் மருத்துவர்! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
பிரியாணி சாப்பிட்ட பெண்ணின் தொண்டையில் சிக்கிய எலும்பு; 8 மணி நேரம் போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்
மும்பை குர்லாவைச் சேர்ந்த ரூபி ஷேக் (34) என்ற பெண் தனது வீட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கன் பிரியாணியை குடும்பத்தினருடன் அமர்ந்து ஆசையாக சாப்பிட்டார். அவர் பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் இருந்த எலும்பு துண்டையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டார். அவர் சாப்பிட்ட எலும்பு துண்டு தொண்டையில் சிக்கிக்கொண்டது. எலும்பு துண்டு தவறான வழித்தடத்தில் சென்று எங்கும் நகரமுடியாமல் வழியில் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பெண்ணுக்கு மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். டாக்டர்கள் அவரை மருத்துவமனையில் சேரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் மருத்துவமனையில் சேர மறுத்து வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு வந்த பிறகு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அவரது தொண்டை பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது எலும்பு துண்டு மிகவும் சிக்கலான பகுதியில் சிக்கி இருந்தது. அதனை அகற்றுவது மிகவும் சிரமமான ஒன்றாகும். அதற்கு 8 லட்சம் வரை செலவாகும் எனக் கூறியிருக்கின்றனர். அந்த அளவுக்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தால் செலவு செய்ய முடியாத நிலையில் இருந்தனர். இதையடுத்து நன்கொடை மூலம் அச்சிகிச்சைக்குத் தேவையான பணத்தை மருத்துவமனை நிர்வாகமே ஏற்பாடு செய்தது. இதையடுத்து எலும்பு துண்டை அகற்ற டாக்டர்கள் அப்பெண்ணிற்கு தொண்டையில் ஆப்ரேசன் செய்தனர். மொத்தம் 8 மணி நேரம் டாக்டர்கள் ஆபரேசன் செய்த பிறகே தொண்டையில் சிக்கி இருந்த எலும்பு துண்டை அப்புறப்படுத்தினர். பெண் சிகிச்சையில் இருந்த 21 நாள்களும் பைப் மூலம் உணவு வழங்கப்பட்டது. இது குறித்து ரூபிஷேக் கூறுகையில், ``மோசமான அனுபவத்தால் இனிமேல் பிரியாணியே சாப்பிடமாட்டேன் என்று தெரிவித்தார். தனது கணவரிடமும் இனி மேல் வீட்டில் பிரியாணி சமைக்க மாட்டேன் என்று தெளிவாக சொல்லிவிட்டார். ரூபியிடம் ஒரு மாதம் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர். மனைவி, மாமியார் சித்ரவதையால் தொழிலதிபர் விபரீத முடிவு... `பிணத்தைப் போல் வாழ்கிறேன்' -தாயார் கண்ணீர்
Doctor Vikatan: தள்ளிப்போகும் முதலிரவு... இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை, என்ன தீர்வு?
Doctor Vikatan: எனக்கு சமீபத்தில்தான் திருமணமானது. முதலிரவின்போது என்னால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை. உடல் இறுகிவிட்டது போல உணர்ந்தேன். 'முதல்முறை... அப்படித்தான் இருக்கும்... பயப்படாதே... பதற்றப்படாதே....' என கணவரும் ஆறுதல் சொன்னார். ஆனால், திருமணமாகி 4 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பிரச்னை தீர்ந்த பாடாக இல்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது... என்னுடைய வித்தியாசமான பிரச்னைக்குத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நித்யா ராமச்சந்திரன் முதல்முறை தாம்பத்திய உறவின்போது, உறவுக்கு உங்கள் உடல் ஒத்துழைக்காத நிலையை 'வெஜைனிஸ்மஸ்' (Vaginismus) என்று குறிப்பிடுவோம். உங்களுடைய அறிகுறிகளும் அப்படித்தான் தெரிகின்றன. இந்தப் பிரச்னையில் வெஜைனாவின் தசைகள் சுருங்கிக் கொள்ளும். 'வெஜைனிஸ்மஸ்' பிரச்னையானது தாம்பத்திய உறவின்போது மட்டும்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போது, மருத்துவர் அந்தரங்க உறுப்பை டெஸ்ட் செய்ய முனையும்போது சிலர் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள். Doctor Vikatan: மன அழுத்தம், கவலையால் முடி கொட்டுமா? மனநலனுக்கும் தலைமுடிக்கும் தொடர்பு உண்டா? திருமணமாகாத பெண்ணாக இருந்து, பீரியட்ஸின்போது டாம்பூன் அல்லது மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிக்க நினைத்தாலும் அதற்கு அவர்கள் உடல் ஒத்துழைக்காது. கஷ்டப்பட்டு அதைப் பொருத்திக்கொள்ள முனையும்போது எரிச்சலும் வலியும்தான் மிஞ்சும். இந்த அறிகுறிகளை வைத்து உங்களுக்கு 'வெஜைனிஸ்மஸ்' இருப்பதை உறுதிசெய்யலாம். சிறுவயதில் நீங்கள் சந்தித்த பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், முதல்முறை தாம்பத்திய உறவு ஏற்படுத்திய கசப்பான அனுபவம், செக்ஸ் உறவை நினைத்தாலே வெறுப்பும் பதற்றமும் ஏற்படுவது, வெஜைனா, கர்ப்பவாய்ப் பகுதி போன்றவற்றில் ஏதேனும் தொற்று இருப்பது போன்று இப்பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கலாம். வெஜைனிஸ்மஸ் பிரச்னையை 95 சதவிகிதம் குணப்படுத்த முடியும். மருத்துவரை அணுகி முதலில் உங்கள் பிரச்னை பற்றி பேச வேண்டும். தாம்பத்திய உறவு குறித்த உங்களது பயம், பதற்றம் போன்றவற்றைப் போக்கவும் சிகிச்சை அவசியம். அடுத்து மருத்துவர் உங்களுக்கு சில பயிற்சிகளைக் கற்றுத் தருவார். அதாவது தாம்பத்தியத்துக்கு ஒத்துழைக்காத வெஜைனா தசைகளைத் தளர்த்துவதற்கான பயிற்சிகள் அவை. மருத்துவரை அணுகி, பிரச்னை பற்றி பேச வேண்டும். உங்களுடைய கடந்தகால கசப்பான அனுபவங்களைப் பேசவைத்து உங்களை அந்தக் கசப்பிலிருந்து மீட்கவும் தெரபி வழங்கப்படும். அடுத்து, பிரத்யேக கருவிகள் கொண்டு அளிக்கப்படும் புரொக்ரசிவ் டீசென்சிட்டைசேஷன் தெரபி (Progressive desensitization therapy) கொடுக்கப்படும். இந்தப் பிரச்னையை வெளியே சொல்லத் தயங்கிக் கொண்டு, அமைதி காப்பது உங்கள் திருமண உறவை மட்டுமல்ல, உங்கள் மனநலனையும் உடல்நலனையும்கூட பாதிக்கும். கணவருக்கும் உங்களுடைய இந்த நிலை குறித்துத் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் சிகிச்சைக்குச் செல்லும்போது அவரையும் உடன் அழைத்துச் செல்லலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: அதிக குளிரில் ஏசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல், ஏதாவது பாதிப்பு வருமா?
Health: தர்பூசணி தண்ணிப்பழமா, வியாதிகளைத் தடுக்கும் பழமா?
இ யற்கையின் கொடையாக, கோடைக் காலத்தில் மட்டுமே சில பழங்கள் கிடைக்கின்றன. அவற்றுள், கோடை வந்ததுமே சாலையோரத்தை நிறைக்கும், நீர் நிறைந்த தர்பூசணிப் பழத்தை விரும்பாதவர் இருக்க முடியுமா? தர்பூசணிப் பழத்தின் சிறப்புகள் பற்றி, ஹோம் சயின்ஸ் துறை பேராசிரியர் சாந்தி மற்றும் டயட்டீஷியன் சுபஸ்ரீ செல்வகுமாரிடம் கேட்டோம். ''வெயில் காலத்துக்கு ஏற்ற பழம் மட்டுமல்ல... புத்துணர்ச்சியைத் தரும் பழமும் தர்பூசணிதான். தாகத்தைத் தணிக்கும் நல்ல நீராகாரம். இதில், வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைவாக உள்ளன. தர்பூசணி சாப்பிடுவதால் உடலின் வெப்பநிலை குறைவதுடன், உயர் ரத்த அழுத்தமும் கட்டுப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கட்டி, ஆஸ்துமா, வீக்கம், சர்க்கரை நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்றவற்றையும் வராமல் தடுக்கிறது. தர்பூசணி வெயில் காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு! ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தர்பூசணியைக் கடித்தும் சாப்பிடலாம், பழச்சாறாகவும் அருந்தலாம். சாறு எடுத்து உண்ணும்போது கல்லடைப்பு நீங்கும். சர்க்கரை வியாதியும் கட்டுப்படும். இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுடன் போராடி வெற்றிபெறும் தன்மைகொண்டது. இதில், பொட்டாசியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தர்பூசணி பழத்தின் விதையிலும் அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்... சன் ஸ்ட்ரோக் உங்கள் குழந்தைகளை அண்டவே அண்டாது! கொழுப்பு அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் (Citrulline) என்ற சத்துப் பொருள், கொழுப்புச் சேர்வதைத் தடுக்கிறது. ரத்தத்தில் இந்த சிட்ரூலின் கலந்ததும், சிறுநீரகத்தின் உதவியுடன் 'அர்ஜனைன்’ (Arginine) என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜனைன், கொழுப்பு செல்களைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. இதுதவிர காயம், புண் உள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. காயம்பட்ட பகுதியில் நல்ல ரத்த ஓட்டம் காரணமாக ஆக்சிஜன் அளவு அதிகரித்து, புண் விரைவில் குணமாக உதவுகிறது. புண் உள்ள பகுதியில் புதிய திசுக்கள் உற்பத்திக்கும் அர்ஜனைன் காரணமாகிறது. தர்பூசணி மகிழ்ச்சிக்கான 'டோபோமைன்’ என்ற ரசாயனம் சுரக்க உதவும், தர்ப்பூசணியில், 'ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ என்ற சத்து உள்ளது. இது, உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது. தினமும் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் அளவை 23 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடியும். இதில், மகிழ்ச்சிக்கான 'டோபோமைன்’ என்ற ரசாயனம் சுரக்க உதவும், வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. எல்லோருக்கும் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், தர்பூசணியை எந்த வயதினரும் சாப்பிடலாம். இந்தப் பழம் உடலில் உள்ள நீரின் அளவினைச் சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும். தர்பூசணி தர்பூசணி ஜூஸ் 4 பெரிய தர்பூசணித் துண்டுகளைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அதில் சிறிது தேன், ஒரு சிட்டிகை மிளகுத்தூள், கால் டீஸ்பூன் சுக்குத் தூள், அரை சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு வடிகட்டி, ஐஸ் கட்டிகள் சேர்த்தோ, சேர்க்காமலோ அருந்தலாம். தர்பூசணிப் பழத்தை மிக்ஸியில் அரைத்து, சிறிது எலுமிச்சம் பழச் சாறு சேர்த்துக் குடிக்கலாம் அல்லது காய்ச்சி, குளிரவைத்த பாலைச் சேர்த்தும் அருந்தலாம். Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Summer: வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி முதல் வெள்ளரிக்காய்ப் பாயசம் வரை... வெயில் கால உணவுகள்!
வெந்தயப் பணியாரம் வெந்தயப் பணியாரம் தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், உளுந்து - 6 டீஸ்பூன், வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய் - 2, நெய் - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன், சோடா உப்பு - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்டவும். ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாக கிரைண்டரில் அரைக்கவும். மாவை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும். இதை புளிக்க வைத்துள்ள மாவில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் பொடித்த ஏலக்காய், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைத்து, பணியாரக் குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். எலுமிச்சை - புதினா இஞ்சி ஜூஸ் எலுமிச்சை - புதினா இஞ்சி ஜூஸ் தேவையானவை: எலுமிச்சை - ஒன்று, நாட்டுச் சர்க்கரை - 6 டீஸ்பூன், புதினா - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு (2 அங்குல அளவு), உப்பு - சிறிதளவு, தண்ணீர் - 300 மில்லி. செய்முறை: புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். இத்துடன் நாட்டுச்சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டினால் லெமன் மின்ட் ஜூஸ் ரெடி. வெள்ளைப்படுதல், யூரினரி இன்ஃபெக்ஷன் போக்கும். பெண்களின் தோழி பாதாம் பிசின்! வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், தேங்காய் - ஒரு மூடி (சிறியது), பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 7 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன்தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், பட்டை - 2 சிறியது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, புதினா இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். சோம்பு மற்றும் பூண்டுப்பபல்லை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், பட்டை சேர்த்துத் தாளித்து, பூண்டு, சோம்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, புதினா இலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு 6 பங்கு தண்ணீர் என்கிற அளவில் அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, பருப்புக் கலவையும் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி பத்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். ஆறியதும் வெந்தய கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவிப் பரிமாறவும். சம்மர் கிளாஸோ, பாட்டி வீடோ...குழந்தைகளுக்கு அவசியம் இதைப் பழக்குங்கள்! #GoodParenting கம்மங் கூழ் கம்மங் கூழ் தேவையானவை: கம்பு - கால் கிலோ, மோர் - அரை லிட்டர், உப்பு - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 20, தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வெயிலில் காய விடவும். பிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். கம்பு 10 நிமிடம் கொதித்ததும் உப்பு போட்டு கரண்டியால் கலக்கி இறக்கவும். கூழ் சிறிது கெட்டியாக இருப்பது போல் இருந்தால், தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளலாம். பரிமாறும் போது மோர் ஊற்றிக் கலக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பருகுவதற்குக் கொடுக்கவும். வெள்ளரிக்காய்ப் பாயசம் வெள்ளரிக்காய்ப் பாயசம் தேவையானவை: வெள்ளரிக்காய் - ஒன்று (பெரியது), பால் - 250 மில்லி, சர்க்கரை - தேவையான அளவு, அரிசி மாவு - 3 டீஸ்பூன், பாதாம் மிக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் (தூளாக்கிக் கொள்ளவும்) - 2, முந்திரி - தேவையான அளவு செய்முறை: வெள்ளரிக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, பாதாம் மிக்ஸை சிறிது தண்ணீரில் ஒன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ளவும். முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெள்ளரிக்காயை மீதமிருக்கும் நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இத்துடன் அரிசி மாவுக்கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறிய பால், முந்திரி சேர்த்துப் பரிமாறவும். நுங்குப் பால் நுங்குப் பால் தேவையானவை: நுங்கு - 10, பால் - 200 மில்லி, மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன் செய்முறை: நுங்கை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ச்சிய பாலில் மில்க் மெய்ட் மற்றும் அரைத்த நுங்குக் கலவையும் சேர்த்தால் சுவையான ‘நுங்குப்பால்’ ரெடி. பிரிட்ஜில் வைத்தும் பருகலாம். இனிப்பு அதிகம் வேண்டும் என்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். இளநீர்ப் பாயசம் இளநீர்ப் பாயசம் தேவையானவை: இளநீர் - ஒன்று, பால் - அரை லிட்டர், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன். செய்முறை: இளநீரைத் தனியாகவும், வழுக்கையைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரை லிட்டர் பாலை 400 மில்லி ஆக குறையும் வரை சுண்ட காய்ச்சவும். மில்க்மெய்டையும் சுண்டிய பாலில் சேர்த்துக் கலக்கவும். இளநீரில் உள்ள வழுக்கையை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி பால் கலவையில் சேர்த்து இளநீரையும் கலந்து கொள்ளவும். லேசாக சூடானதும் இறக்கிப் பரிமாறவும். இனிப்பு வேண்டுமென்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம். பாலை இறக்கிவிட்டு, இளநீரை ஊற்றிக் கலக்கிய பிறகும் கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம். Health: வெயில் காலத்தில் ஏன் கூழ் குடிக்க வேண்டும்? - முக்கியத்துவத்தை விளக்கும் மருத்துவர்! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
IVF சிகிச்சை செயற்கையா? குழந்தை உருவாக புதிய நம்பிக்கை!!
IVF சிகிச்சை தோல்வி அடைந்த தம்பதியர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லையா? - மருத்துவர் ரம்யா ராமலிங்கம் ஆலோசனை. நவீன மருத்துவ உலகில் குழந்தையின்மைக்கு என ஏராளமான சிகிச்சைகள் வந்துவிட்டன. இருப்பினும், குழந்தையில்லாத தம்பதிகளுக்கு அதிக அளவில் வெற்றி விகிதத்தை வழங்கி வரும் நம்பகமான சிகிச்சையாக IVF உள்ளது.IVF தொடர்பாக தம்பதிகளுக்கிடையே எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கத்தை தொடர்பு கொண்டோம். அவருடனான உரையாடல் இதோ... IVF சிகிச்சை என்றால் என்ன? இதற்கான முழு விளக்கம் கூறுங்கள் டாக்டர், IVF என்பது இன்-விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (In Vitro Fertilization). இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் சிரமம் உள்ள தம்பதியர்களுக்கு, பெண்ணின் கருமுட்டையையும், ஆணின் விந்தணுவையும் செயற்கையாக ஒரு ஆய்வகத்தில் Test Tube / dish-ல் இணைத்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வளர வைத்து, நன்றாக வளரும் கருவை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, குழந்தையை பிரசவிக்க வைப்போம். குழந்தை இல்லாத நிறைய தம்பதிகளுக்கு இது வரப்பிரசாதம். குறிப்பாக இயற்கையான முறையில் கருத்தரிக்கவே முடியாது என்ற சிக்கலில் உள்ள நிறைய தம்பதிகளுக்கு IVF சிகிச்சை மூலமாக குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம். கருக்குழாய் அடைப்பு (Tubal Block), எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis), விந்தணு குறைபாடு உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு IVF சிகிச்சை மூலமாக குழந்தைப்பேறு அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக விந்தணு குறைபாடு அதிகம் உள்ள ஆண்களுக்கு, எவ்வளவோ சிகிச்சைகளை முயற்சி செய்தும் பலனில்லை என்றால், IVFல் உள்ள அட்வான்ஸ்டு சிகிச்சையான ICSI மூலமாக அவர்களுடைய சொந்தக் குழந்தையை உருவாக்க முடியும். இதேபோல் பல ஆண்டுகளாக குழந்தை இல்லை, ஆனால் அனைத்துவிதமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளையும் முயன்று பல தோல்விகளைச் சந்தித்த தம்பதிகளுக்கும் (Un explained Infertility) IVF சிகிச்சை குழந்தைப்பேறுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. IVF சிகிச்சை மூலமாக பெறப்படும் குழந்தை இயற்கையான முறையில் பிறந்தது தானா? டெஸ்ட் டியூப் பேபி என்பதாலேயே, IVF சிகிச்சை செயற்கையானது என்கிற எண்ணம் முற்றிலும் தவறானது. IVF என்பது கருத்தரிக்க முடியாத தம்பதிகள், இயற்கையான முறையில் கருத்தரிக்க உதவக்கூடிய ஒரு சிகிச்சை. சம்பந்தப்பட்ட ஆணின் விந்தணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் ஆய்வகத்தில் வைத்து கருவை உருவாக்கினால் கூட, அது கருப்பையில் இணைந்து வளர வேண்டும். அந்த கருவை கர்ப்பப்பை ஏற்றுக் கொள்வதற்காகவும், அடுத்தடுத்து வளர்வதற்காகவும் மருத்துவர்கள் சில ஹார்மோன் ஊசிகள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தினாலும், அந்த கருவானது கர்ப்பப்பையில் பொருந்தி வளருவது என்பது முழுக்க, முழுக்க இயற்கையின் கையில் தான் உள்ளது. இந்த விஷயத்தில் இயற்கையை மீறி நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. IVF சிகிச்சைக்கு தயாராகும் தம்பதி என்னென்ன மாதிரியான பரிசோதனைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும்? IVF சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக பெண்ணின் உடல் கருத்தரித்தலுக்கு தயாராக இருக்கிறதா என்பதை பரிசோதிப்போம். அதாவது சினைக்கருவை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், வளர்க்கும் தகுதியும் கருப்பைக்கு உள்ளதா என பரிசோதிப்போம். அதன்பின்னர் உடல் எடை, நீரிழிவு நோய், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்படும். ஒருவேளை நீரிழிவு நோய் அல்லது தைராய்டு இருப்பது கண்டறியப்பட்டால், அதனை கட்டுப்படுத்தும் செயல்பாடுகள் தொடங்கப்பட்ட பின்னரே, ஐ.வி.எஃப். செய்யப்படும். ஆணிடம் விந்தணுவின் தரம், இயக்கம், அளவு சரியாக உள்ளதா என பரிசோதிப்போம். கருப்பையின் உள்பகுதி ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஹிஸ்ட்ரோஸ்கோபி பரிசோதனை செய்யப்படும். ஒருவேளை கருப்பையில் ஏதாவது சிறிய அளவிலான பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக அப்போதே சரி செய்யப்படும். அதேபோல் வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம், மன அழுத்தமின்மை போன்றவற்றையும் ஐ.வி.எஃப் சிகிச்சைக்கு முன்னதாக கட்டாயம் பின்பற்ற வேண்டும். IVF சிகிச்சையின் வெற்றி அளவு என்ன? அதனைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை? IVF வெற்றி விகிதம் என்பது தம்பதிகளின் வயதைப் பொறுத்தது. 35 வயதைக் கடந்த பெண்களுக்கு IVF மூலம் கருத்தரித்தலுக்கான விகிதம் சற்று குறையத் தொடங்குகிறது. அதுவே 35 வயதிற்கு முன்னதாகவே IVF சிகிச்சைக்கு முயலும் பெண்ணிடம் தரமான கருமுட்டைகள் உற்பத்தியாகும். இதனால் இவர்களுக்கான வெற்றி விகிதமும் அதிகரிக்கிறது. அதேபோல் ஆணின் விந்தணுவும் தரமானதாக இருந்தால் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். IVF சிகிச்சையைப் பொறுத்தவரை நீங்கள் எந்த மாதிரியான IVF Centre அல்லது மருத்துவமனையைத் தேர்வு செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் பெண்ணிற்கு சரியான ஊசிகள் மூலம் தரமான சிகிச்சைகள் செய்து கருமுட்டையை வளர வைத்து எடுக்க வேண்டும். அதனுடன் தரமான விந்தணுவை சேர்த்து ஆய்வகத்தில் சினைக்கருவை உருவாக்க வேண்டும். இதற்கு தேவையான அத்தனை அதிநவீன வசதிகளும் நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனையில் இருக்க வேண்டும். அப்போதுதான் சினைக் கருக்கள் நல்ல தரத்துடன் உருவாகும். சரியான கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை மேற்கொண்டால் முதல் முறையிலேயே மகப்பேறு அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடுத்ததாக ஐ.வி.எஃப் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பது பெண்ணின் கர்ப்பப்பையின் ஆரோக்கியமாகும். சினைக் கருக்கள் தயாரானதும், மிக முக்கியமான செயல்பாடான எம்ப்ரியோ டிரான்ஸ்ஃபர் (Embryo transfer) எனப்படும் பெண்ணின் கருப்பைக்குள் சினைக் கரு செலுத்தப்படுகிறது. அதன் பின்னர், சினைக் கரு கருப்பையில் பதியமாக வேண்டும், படிப்படியாக நன்றாக வளர வேண்டும் IVF சிகிச்சை தோல்வி அடைந்த தம்பதியர்களுக்கு அடுத்து செய்ய வேண்டியது என்ன? குழந்தை இல்லாத தம்பதியருக்கு IVF சிகிச்சை வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. ஒருவேளை இந்த சிகிச்சை முறையில் முதல் முறை தோல்வி அடைந்தால் தம்பதி, மன அழுத்தத்திற்கு ஆளாகவோ, இனி குழந்தையே பிறக்காது என விரக்தி அடையவோ தேவையில்லை. சரியான IVF நிபுணரை அணுகும் பட்சத்தில் அவர்கள் IVF சிகிச்சை தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன, அடுத்து என்ன மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம், தோல்வி அடைந்த IVF சிகிச்சையில் நடந்த தவறுகளை எவ்வாறு சரி செய்வது என ஆராய்ந்து சிகிச்சை வழங்குவார்கள். தற்போது IVF சிகிச்சை முறையில் பல நவீன செயல்முறைகள் சேர்க்கப்பட்டு பல்வேறு சிகிச்சை முறைகள் இப்போது செயல்பாட்டில் இருக்கின்றன. கர்ப்பப்பை குழந்தையை ஏற்றுக்கொள்வதற்கான தன்மை உள்ளதா, சினைக்கரு வளராததற்கு மரபணு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என கண்டறியும் பரிசோதனைகளும், IMSI போன்ற அதிநவீன முறைகளைப் பயன்படுத்தி தரமான விந்தணுவை சேகரிப்பது போன்ற வழிமுறைகளும் உள்ளன. இந்த மாதிரியான பல அட்வான்ஸ்டு டெக்னாலஜிகள் இருப்பதால் தம்பதிகள் IVF நிபுணரின் அறிவுரையைப் பெற்று என்ன மாதிரியான பிரச்சனை இருக்கிறது என கண்டுபிடிக்க முடியும். இதனால் IVF சிகிச்சையில் வெற்றி விகிதத்தை அதிகரிக்க முடியும். மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மையத்தில் IVF, ICSI, IUI போன்ற அதிநவீன சிகிச்சைகளுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
Blood Donation: 24 லட்சம் உயிர்களை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன்... இவர் இரத்தத்தில் என்ன ஸ்பெஷல்?
தங்க கரம் கொண்ட மனிதர்' என்று போற்றப்பட்ட ஆஸ்திரேலிய நபர் ஜேம்ஸ் ஹாரிசன், தனது 88-வது வயதில் மரண மடைந்துள்ளார். இவரது வாழ்க்கையில் 1,100 முறைக்கும் மேலாக இரத்த தானம் செய்ததே இவரது சிறப்பு பெயருக்குக் காரணம். இவரது இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மா 2.4 மில்லியன் டோஸ் ஆன்டி-டி மருந்துகளில் பயன்படுத்தப்பட்டுள்ளாது. இந்த மருந்துகள் ஆபத்தில் இருந்த பல லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளன. blood donations தனிச்சிறப்பு வாய்ந்த ரத்தம்! ஹாரிசனின் இரத்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது என ஆஸ்திரேலியா ரெட்கிராஸ் கூறுகின்றது. அவரது இரத்தத்தில் உள்ள அரிதான மதிப்புமிக்க ஆன்டிபாடி, ஆன்டி-டி ஊசிகள் தயாரிக்க அவசியமானது. ஆன்டி-டி ஊசிகள் ஆர்.ஹெச்டி நெகடிவ் (RhD - nehative) உள்ள அம்மாக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த தன்மை உள்ள தாய்மார்களின் ரத்தமே கருவை தாக்கக் கூடும். இந்த ஊசிகள் போடாவிட்டால் கருவில் இருக்கும் அல்லது பிறந்த குழந்தைக்கு ரத்த சிதைவு நோய் (HDFN) ஏற்பட்டு, மரணத்துக்கு வழிவகுக்கும். Blood Test செய்யறதுக்கு முன்னாடி இந்த 10 விஷயங்கள்ல கவனமா இருங்க... ஹாரிசன் 1954-ம் ஆண்டு முதன்முதலாக ரத்த தானம் செய்துள்ளார். 2018ம் ஆண்டு அவரது 81 வயது வரை செய்து வந்துள்ளார். ஹாரிசனுக்கு அவரது 14 வயதில் நுரையீரல் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அப்போது பல இரத்த மாற்றங்களைப் பெற்றதனால், அவருக்கும் ரத்த தானம் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. Australian Red cross 1960களில் ஆன்டி-டி மருந்துகள் கண்டிபிடிக்கப்பட்டதனால் HDFN காரணமாக குழந்தைகள், அம்மாக்கள் பாதிக்கப்படுவது முடிவுக்கு வந்தது. அதுவரை கரு மற்றும் தாயின் இரத்தம் பொருந்தவில்லை என்றால் கரு சிதைவு ஏற்படும் அல்லது குழந்தை இறந்தே பிறக்கும். இப்போது அந்த பிரச்னை ஒரு ஊசியின் மூலம் தீர்வு பெறுவதாக மாறிவிட்டது. இதில் உள்ள ஒரே ஒரு சிக்கல், ஹாரிசன் போன்ற ரத்த தன்மை கொண்டவர்கள் மிகவும் அரிது. 1999-ம் ஆண்டு ஹாரிசனுக்கு ஆஸ்திரேலியாவின் மெடல் ஆஃப் ஆர்டர் விருது வழங்கப்பட்டது. ஹாரிசன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தவறாமல் இரத்ததானம் வழங்கினாராம். எந்த செலவும், வலியும் இல்லாமல் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் செயலை அவர் பெருமையுடன் செய்துவந்ததாக அவரது மகள் தெரிவித்துள்ளார். அவர் எப்போதும் தான் காப்பாற்றப்போகும் குழந்தை யார் எனத் தெரிந்துகொண்டிருக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு முறை ஒரு குழந்தை காப்பாற்றப்படும் செய்தியும் அவருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளன. James Harrison ஆண்டுக்கு 45,000 குழந்தைகள்! ஆஸ்திரேலுயாவில் 200-க்கும் குறைவான ஆன்டி-டி தானம் செய்பவர்களே உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 45,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைக் காக்கின்றனர். 2 மில்லியன் ஊசிகளுக்கும் மேல் ஹாரிசனின் ரத்தம் பயன்படுத்தப்பட்டிருப்பதைத் தாண்டி, இன்றும் அவரது இரத்தத்தை சேமித்து வைத்துள்ளனர். ஆன்டி-டி ஆன்டிபாடிக்களை ஆய்வகத்திலியே உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளுக்கும் ஹாரிசனின் ரத்தம் உதவியாக இருக்கிறது. Cassowary : `உலகின் ஆபத்தான பறவை இனம்' - ஒரே மிதியில் மனிதர்களை வீழ்த்திவிடுமா?! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
யார் Coffee அருந்தக் கூடாது? - ஆய்வில் மருத்துவர்கள் சொல்லும் விரிவான தகவல்கள்!
ஒரு பிசினஸ் முடுடிவு எடுக்கும்போது ரொமாண்டிக் மனநிலைக்கு செல்லும்போதும் காலை விழிக்கையிலும் சோர்வான நாளிலிருந்து விடுபடவும் நமக்கு உதவுகிறது காபி. நம்மில் பலரது தினசரிகளில் காலை அல்லது பணிக்கு இடையில் அல்லது உணவுக்குப்பிறகு காபி அருந்துவது சடங்காகிவிட்டது. ஒவ்வொருமுறை அளவுக்கு அதிகமாக காபி அருந்துவது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கும்போதும் நாம் நிறுத்தத்தான் நினைக்கிறோம். ஆனால், நம் அன்றாட உயிர் பிழைத்திருத்தலுக்கே அவசிமானதாகிவிட்டது காபி. காபி நம் உடலுக்கு நன்மைகளையும் வழங்குகிறது என்பதையும் மறுக்கமுடியாது, குறிப்பாக கடுங்காப்பி (Black Coffee). Coffee Group எனினும் சிலர் அவர்களது ஆரோக்கியத்தைக் காக்க நிச்சயமாக காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். யாரெல்லாம் என்பதை அறிந்துகொள்ளும் முன்பு, காபி உடல் நலத்துக்கு தீங்கானதா என்ற நீண்ட விவாதத்துக்கு விடை தேடலாம். இந்தியா டுடே தளத்தின் அறிக்கைப்படி, நிபுணர்கள் காபி உடல் நலத்துக்கு அரக்க வில்லன் இல்லை என்றும் அளவான காபி பெரும்பாலானவர்களுக்கு நன்மையே செய்யும் என்றுமே கூறியிருக்கின்றனர். சாப்பிட்ட பிறகு ஏன் Coffee, Tea குடிக்க கூடாது? | Diet to Increase Your Hemoglobin Level | Anemia 40,000 பெரியவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் தினமும் காலை மட்டும் காபி அருந்துவது எந்த காரணத்தினால் மரணம் ஏற்படுவதையும் 16% குறைக்கும் என்றும் இயதநோயால் மரணமடைவதை 31% குறைக்கும் என்றும் கண்டறிந்துள்ளனர். காபியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இயநோய், கருப்பை கேன்சர், பார்கின்சன் நோய் மற்றும் மன அழுத்த அபாயத்தைக் கூட குறைக்கும் என்கின்றனர். காபி நமக்கு உற்சாகம் அளிக்கக் கூடியது, நம் செயல்பாடுகளை முடுக்குவதுடன், நரம்பு மண்டலத்தைத் தூண்டும் என்பதால் அளவாக காலையில் மட்டும் ஒரு காபி அருந்துவது நமக்கு நல்லதே என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும் காபியில் பால் சேர்க்கப்படுவது, சர்க்கரை சேர்க்கப்படும் வீதம் மாற்றத்தை ஏற்படுத்தலாம். Coffee யார் காபி அருந்தக் கூடாது? ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு, காபி குடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும், சிலர் தவிர்க்க வேண்டும் என்கிறார் இரைப்பை குடல் நோய் மருத்துவர் விகாஸ் பாரதி. யாரெல்லாம் காபி குடிக்க கூடாது என்பது குறித்து அவர் கூறுகையில், 1. உங்களுக்கு பதட்டம் (Anxiety) அல்லது தூக்கமின்மை (Insomnia) இருந்தால் நீங்கள் காபி அருந்தக் கூடாது. காபியில் இதுக்கும் கஃபின் இந்த அறிகுறிகளை மேலும் மோசமாக்கலாம். அமைதியின்மையும், தூக்கத்தில் இடையூறுகளும் ஏற்படலாம். 2. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். காபி இரத்த அழுத்தத்தை தற்காலிகமாக உயர்த்துவதனால் கவனமாக இருக்க வேண்டும். 3. கர்ப்பமாக இருப்பவர்கள் காபி அருந்துவதை தவிர்க்கலாம் அல்லது முடிந்தவரை குறைத்துக்கொள்ளலாம். அது கரு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். Doctor Vikatan: காபி குடித்தால் தலைவலி சரியாவது உண்மையா, பழக்கத்தின் காரணமாக உணரப்படுவதா? 4. இதய நோய் இருப்பவர்கள் மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு உள்ளவர்கள் காபி அருந்துவதைக் குறைக்க வேண்டும். கஃபின் படபடப்பை அதிகரிக்கும். 5. கஃபின் உணர்சிமிக்கவர்கள் (Caffeine - Sensitive) மற்றும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் காபி அருந்துவதைக் குறைக்க வேண்டும். 6. குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு உள்ளவர்கள், செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள், IBD, IBS போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு காபி அசௌகரியம் ஏற்படுத்தலாம். 7. காபி அருந்தும்போது நடுக்கம் ஏற்படுவதாக உணர்பவர்களும் காபி பழக்கத்தை நிறுத்த வேண்டும். என்று தெரிவித்துள்ளார். Coffee Chat காபியின் பக்கவிளைவுகள் காபி ஆற்றலை அதிகரித்தாலும், அதிகமாக உட்கொள்ளும்போது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஒருநாளுக்கு 400-600 மில்லி கிராமுக்கு அதிகமாக கஃபின் உட்கொள்ளும்போது, அது இரும்பு சத்து உறிஞ்சும் திறனை குறைக்கும், எலும்பு தடிமனை குறைக்கும், இயல்பை விட விரைவாக வயதாகும், படபடப்பு, தூக்கமின்மையை ஏற்படுத்தும். உங்களால் தினமும் கஃபின் இல்லாமல் செயல்பட முடியவில்லை என்றால், உங்களுக்கும் தலைவலி, சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற caffeine withdrawal symptoms ஏற்படலாம். ஒரு அராபிகா காபி கொட்டையில் 6 மில்லிகிராம் கஃபின் உள்ளது என்கின்றனர். ஒரு முறை காபி குடிக்கும் அளவில் 200 மில்லிகிராம் கஃபினுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாள் காபி பயன்பாட்டில் 400 மில்லிகிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். பால் காபி - கடுங்காப்பி எது சிறந்தது? இந்த கேள்விக்கு அப்பட்டமாக பதிலளிக்க முடியாது. தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் உணவு தேவைகளைப் பொருத்தது. ஆனால் பால் காபியை விட கடுங்காப்பியில் கலோரிகள் குறைவு, ஆண்டிஆக்சைடுகள் அதிகம். Black Coffee and Milk Coffee காபியின் அப்பட்டமான கலப்பற்ற சுவையை விரும்புபவராக, கலோரிகள் குறைந்த காபியை விரும்பினால், நீங்கள் கடுங்காப்பியை தேர்ந்தெடுக்கலாம். பால் காபி குடிப்பதற்கு க்ரீமியாக இருப்பதுடன், கால்சியம் மற்றும் புரத சத்தை வழங்குகிறது. நீங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நபராக இல்லை என்றால் உங்கள் வயிற்றில் பால் காபியே எளிமையாக செரிக்கும். காபியின் அமிலத்தன்மையை பால் குறைக்கும். ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நபராகவே இருக்கின்றனர். உங்கள் காபி ஏதோ இனிப்பு பண்டம் போல சர்க்கரையும், கிரீமும் சேக்காதவரை இரண்டுமே நல்லதுதான். Credits : India Today Coffee: மார்னிங் காபி உடல் நலனுக்கு நல்லதா? - புதிய ஆய்வு செல்வதென்ன?
Health: வெயில் காலத்தில் ஏன் கூழ் குடிக்க வேண்டும்? - முக்கியத்துவத்தை விளக்கும் மருத்துவர்!
வெ யில் காலம் சீக்கிரமே ஆரம்பித்துவிட்டது. அதனால், கூழ் வியாபாரமும் களைகட்டி விட்டது. இந்தக் கூழில் அப்படி என்னதான் ஆரோக்கிய பலன்கள் இருக்கின்றன..? விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அரீஷ்குமார். ''தமிழர்களின் பாரம்பர்ய உணவுகளில் சிறுதானியங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. அதில் கேழ்வரகுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. வெயில் காலத்தில் நம் உடலில் வெப்பம் அதிகரிக்கும். இதனால், உடல் வறட்சி, செரிமானக்கோளாறுகள் ஏற்படலாம். இக்காலத்தில் திட உணவைவிட திரவ உணவே உகந்தது என்பதை அறிந்து கேழ்வரகை கூழாகப் பருகினார்கள் நம் முன்னோர்கள். முந்தைய நாள் கரைத்துப் புளிக்க வைத்த ராகி மாவை அடுப்பில் வேகவிட்டு, பதம் வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, மோர், சின்ன வெங்காயம் சேர்த்துப் பருகினால், அக்கூழ் மருந்தாகவே மாற்றமடைகிறது. கூழ் உடல் ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கூழ் அதிகரிக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும். கூழ் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதல்ல. கடும் உடலுழைப்பு செய்வோரின் ஆற்றல் குறையாமல் இருக்க இது உதவியாக இருக்கும். Obesity: உடல் பருமனைக் குறைக்கிறதுக்கான பெஸ்ட் டயட் இது! இந்த மாவை அப்படியே உபயோகித்தால் வயிற்றுக்கோளாறு, சரும பிரச்னை போன்றவை வரும். எனவேதான் அதைப் புளிக்க வைத்து உபயோகப்படுத்துகிறோம். வெயில் காலத்தில் வாதம் அதிகரிக்கும். இது அதிகரித்தால் இனிப்பு, புளிப்பு, உப்பு போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். அதனாலேயே கூழைப் புளிக்க வைத்து உப்பு சேர்த்து வாதத்தைத் தணிக்கும் உணவாக மாற்றி உள்ளனர். கூழிலில் சேர்க்கப்படும் மோர், சின்ன வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும். கேப்பைக் கூழ் வெயில் காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு! இதில் காணப்படும் பாலிபினால் (poly phenol) நோய் வருவதற்கு காரணமான ஃப்ரீ ரேடிகல்ஸை (free radicals) தடுக்கிறது. மேலும் புற்றுநோய் வராமல் காத்துக் கொள்வதற்கும் (reduce oxidative stress) உதவுகிறது. இதிலுள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் (probiotics ) நம் உடலை வலுப்பெறச் செய்து செரிமான கோளாறைப் போக்கி உடலைக் காக்கின்றன. அதனால், இந்த வெயில் காலத்தில் உங்கள் உணவில் கூழ் கட்டாயம் இருக்கட்டும்'' என்கிறார் மருத்துவர் அரீஷ்குமார்.
Sesame: உச்சி முதல் பாதம் வரை... எள் நல்லது!
எள் வயல் வெள்ளை எள்ளைக் காட்டிலும் நமது நாட்டில் விளையும் கறுப்பு எள்ளில்தான் அதிக சத்துகள் உள்ளன. மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் தடுக்கும். எள் பைட்டோஸ்டீரால் (Phytosterols) எனப்படும் அரிய வகைச் சத்து இதில் இருக்கிறது. இது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். எள் செஸமைன் (Sesamine), செஸமொலின் (Sesamolin) ஆகிய லிக்னன் வகை சத்துகள் எள்ளில் இருந்து பிரிக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு மாத்திரை வடிவத்தில் அயல்நாடுகளில் கொடுக்கப்படுகிறது. எள் + எண்ணெய் = நல்லெண்ணெய் எள்ளில் இருக்கும் பைட்டிக் அமிலம் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. தாமிரம் மிக அதிக அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில், ஒரு நாளின் தேவையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இது ஆர்த்ரைட்டிஸ் முதலான முடக்குவாத நோய்களைத் தடுக்கும், எலும்புகளைப் பலப்படுத்தும். கல்லீரல் மது அருந்துவதால் உடலில் சேரும் நச்சுக்கள், கல்லீரலைச் சிதைக்கும். எள் சாப்பிட்டுவந்தால் நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் சிதைவு தவிர்க்கப்படும். கால்சியம் 25 கிராம் எள்ளில், ஒரு கிளாஸ் பாலைவிட அதிக அளவில் கால்சியம் உள்ளது. இதனால், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் எடுத்துக்கொள்வது எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். தூக்கம் தயமின் (Thiamin) சத்து எள்ளில் அதிகம் இருப்பதால், எள் உணவுகளைச் சாப்பிட்டதும் நன்றாகத் தூக்கம் வரும். தூக்கத்தின்போது உடலில் வலிகள் நீங்கும், மகிழ்ச்சியைத் தூண்டும் செரட்டோனின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால், மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாக இருக்கிறது எள். கொழுப்பு துத்தநாகத்தை அதிகம் கொண்டிருக்கக்கூடிய உணவு எள். இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Mono Unsaturated Fatty Acid) அதிகம் இருப்பதால், கெட்ட கொழுப்பு குறையும். நல்ல கொழுப்பு அதிகரிக்கும். பக்கவாதம் வருவதவற்கான வாய்ப்பு குறையும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கும். நல்லெண்ணெய் நல்லெண்ணெயில் இருக்கும் துத்தநாகம், தோல் புற்றுநோயைத் தடுக்கும். மேலும், தோல் வறட்சியையும் தடுக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்வது, தோல் அரிப்புப் பிரச்னையைத் தடுக்கும். இட்லிப்பொடி! எள்ளு மிகவும் அதிக கலோரி கொண்டது. நல்ல கொழுப்பு நிறைந்தது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என இரண்டு பிரிவினரும், நாள் ஒன்றுக்கு 25 கிராம் மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். எள் உருண்டை, எள்ளு சாதமாகச் சாப்பிடலாம். இட்லிப் பொடி அரைக்கும்போது, எள் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். அலர்ஜி நட்ஸ் சாப்பிட்டால் சிலருக்கு உதடு வீக்கம், தும்மல், மூச்சிரைப்பு, சளி, தொண்டைக் கரகரப்பு, குரல் கம்முதல், திடீரென ரத்த அழுத்தம் குறைவது, அடிவயிற்று வலி போன்ற அலர்ஜி இருக்கலாம். அவர்கள் எள் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை... வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா?
Doctor Vikatan: என் தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு தலையில் முடியே இல்லை. இது குறித்து அவளுக்கு பெருங்கவலை. குழந்தை வளர்ந்த பிறகும் இப்படியே இருந்துவிட்டால் என்ன செய்வது என புலம்புகிறாள். குழந்தைகள், இப்படி முடி இல்லாமல் பிறப்பது சகஜம்தானா.... பிற்காலத்தில் சரியாகிவிடக் கூடிய பிரச்னையா இது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம் சரும நல சிகிச்சை மருத்துவரும், கப்பிங் தெரபி நிபுணருமான தலத் சலீம் குழந்தைகள் பிறக்கும்போது இருக்கும் தோற்றத்தை வைத்து, அவர்களின் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். முடி வளர்ச்சி குறித்த விஷயமும் இப்படித்தான். சில குழந்தைகள் கருகருவென அடர்த்தியான தலைமுடியுடன் பிறப்பார்கள். இன்னும் சில குழந்தைகள் தலையில் முடியே இல்லாமலும் பிறக்கலாம். இரண்டுமே சகஜம்தான். எப்படியிருப்பினும் இந்த முடியானது உதிர்ந்து மறுபடி வளரும். அதுதான் இயற்கை என்பதால் அது குறித்து பயப்படத் தேவையில்லை. Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... ஆன்டிபயாட்டிக் பலன் தராதது ஏன்? குழந்தையின் முடி வளர்ச்சி என்பது கருவிலிருக்கும் போதான நிலை, பிரசவத்துக்குப் பிறகான நிலை என இரண்டு கட்டங்களைக் கொண்டது. பிரசவத்துக்குப் பிறகான குழந்தையின் முடி வளர்ச்சியானது 18 மாதங்களில்கூட ஆரம்பிக்கலாம். இரண்டாம்கட்ட வளர்ச்சியானது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம். ஒரு சில குழந்தைகளுக்கு முதல் கட்ட வளர்ச்சி முடிவதற்கு முன்பே, இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கும். அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இன்னும் சில குழந்தைகளுக்கு முதல்கட்ட முடி வளர்ச்சியானது முற்றிலும் உதிர்ந்து, அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகே இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பமாகும். சில குழந்தைகளுக்கு முதல்கட்ட முடி வளர்ச்சியானது முற்றிலும் உதிர்ந்து, அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகே இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பமாகும். இந்த இடைப்பட்ட காலத்தில் சில மாதங்களுக்கோ, சில வருடங்களுக்கோ கூட குழந்தையின் மண்டையில் முடியே இல்லாமல் இருப்பதையும் பார்க்கலாம். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டது. தேவையற்ற ஒப்பீடுகளால் உங்கள் நிம்மதியைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தைக்கு குறிப்பிட்ட மாதங்கள்வரை தாய்ப்பால் கொடுப்பது, அதன் பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் சரிவிகித உணவுகளைப் பழக்குவது என ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியமாக வளர்க்கப் பாருங்கள். முடி வளர்ச்சியும் ஆரோக்கியமாகவே இருக்கும். பிறந்த குழந்தையை நினைத்து சந்தோஷப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, தேவையற்ற இந்தப் பிரச்னை குறித்து கவலைகொள்வது அனாவசியமானது என உங்கள் தோழிக்குச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Myths & Facts: அம்மாவுக்கு வயிற்றில் அரிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு முடி அதிகம் வளருமா? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Health: `எக்ஸ்ட்ரா’ நோய் எதிர்ப்பு சக்திக்கு 10 டிப்ஸ்!
வாழ்க்கை முறை ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன்மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதாவது, உணவில் அதிக அளவு காய்கறி, பழங்கள், முழு தானியங்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல் எடையை ஒரே சீராகப் பராமரிக்கவேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்கக்கூடாது. இவற்றைச் செய்தாலே நோயற்ற வாழ்வு நம் வசம். இதேபோல், நாம் வாழும் வாழ்க்கையும் சுற்றுப்புறச் சூழலும் நம் உடல் நலத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. தூசு மாசு படிந்த சூழ்நிலையில், முகக் கவசங்கள் அணிவதன் மூலம் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். சகலமும் மாறி விட்ட வேகமான வாழ்க்கை முறையில் நாம் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களே நம்மை நோயிலிருந்து காக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தி உணவு முறை நோய் எதிர்ப்புப் போர் வீரர்கள், அவர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தைக் கொண்டே நடைபோடுகின்றனர். எனவே, அவர்களுக்கு நல்ல, போதுமான, தொடர் ஊட்டச் சத்துக்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்படி செய்ய வேண்டும். வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது அவசியம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புரதச்சத்து அதிகமுள்ள உணவு, கொழுப்புச்சத்துக் குறைவான உணவு, மாவுச்சத்து சம அளவில் உள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். சிறுதானியங்கள், பழங்கள், பால் முதலியவற்றை உட்கொள்வதன் மூலம் வைட்டமின்கள், தாது உப்புக்கள் தானாக உடலில் சேர்ந்து சக்தி கொடுக்கும். நிம்மதியான தூக்கம் தூக்கம் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கிறது. தூக்கத்தின்போது நம்முடைய நோய் எதிர்ப்பு மேம்படுகிறது. தூக்கத்தின்போது நோய்க்கிருமிகள் மற்றும் உடலினுள் ஏற்படக்கூடிய வீக்கங்ளுக்கு எதிராக நம்முடைய எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படுகிறது. தூக்கம் தடைபடும்போது நோய்க்கிருமிகள் ஊக்கம் பெறுகின்றன. ஒருநாள் தூக்கம் தடைபடுவதால் பிரச்னை இல்லை. பல நாட்களாக சரியாக தூங்கவில்லை என்றால் பிரச்னை ஆரம்பிக்கிறது. இதைத் தவிர்க்க, இரவு 10 அல்லது 11 மணிக்குள் படுக்கைக்குச் சென்று அதிகாலையில் 6 மணிக்கு எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தூக்கம் உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். இது இதயம், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது. பல்வேறு வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது. காலை எழுந்ததும் மன அமைதிக்காக பத்து நிமிட தியானம், உடல் அமைதிக்காக யோகா, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியோ அல்லது வீட்டிலிருந்தே எளிய உடற்பயிற்சியோ செய்யலாம். இது கலோரிகளை எரிக்க உதவும். மாலையில் சிறிது நடைப்பயிற்சி, நீச்சல் போன்றப் பயிற்சிகளைத் தொடர்ந்து கடைப் பிடித்து வந்தால் உடல் கட்டுக்குள் அடங்கி, கட்டுக்கோப்பாக இருப்பது மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளும் சரியான முறையில் இயங்கும். Food & Health: நாம் ஏன் சிவப்பு அரிசி சாப்பிடணும்? -ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்! இனிப்பை தவிர்க்கலாம் இனிப்புப் பலகாரங்கள் பெரும்பாலும் எண்ணெய்ப் பலகாரங்களாகவே இருப்பதால் அவை, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு தீங்கை விளைவிக்கின்றன. மேலும் பலகாரங்களைப் பதப்படுத்துவதற்காகக் கலக்கப்படும் பொருட்களால் உடலுக்குக் கூடுதல் தீங்கு. அதிரசமும், எள்ளுருண்டையும் இதற்கு விதிவிலக்கு. அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் இவற்றின் மகத்துவத்தைக் கூறியுள்ளனர். எனவே இது போன்ற பலகாரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான சக்தியும் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மன அழுத்தம் தவிர்த்துவிடலாம் மன அழுத்தத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மன அழுத்தம் அதிகரிக்கும்போது அது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதித்து, நோய் எதிர்ப்பு சக்தியை கீழ்நோக்கிக் கொண்டு செல்லும். எனவே, மன அழுத்தத்தைத் தவிர்க்கக்கூடிய வழிமுறைகளைக் கற்று, அதைப் பின்பற்றுங்கள். நேரத்தைத் திட்டமிட்டு, திட்டமிட்ட நேரத்தில் வேலையை முடிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? ஊட்டச்சத்துகள் பலருக்கு வைட்டமின் டி குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என்ற உண்மை தெரிவதில்லை. நம் ஊரில்தான் வைட்டமின் டி குறைபாடு அதிகம் உள்ளவர்களும் உள்ளனர். எனவே, ஒரு நாளைக்குத் தேவையான அளவு வைட்டமின் டி-யை சூரியன் மற்றும் உணவில் இருந்து பெறுகிறோமா என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரையின்பேரில் சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். இதேபோல துத்தநாகம் (ஸிங்க்) புற்றுநோய் செல்லைக்கூட எதிர்த்து போராடும் ஆற்றலை அளிக்கக்கூடியது. நாள் ஒன்றுக்கு 12 மி.கி. அளவுக்கு துத்தநாகம் தேவை. இதை முந்திரி, தயிர், நண்டு, இறைச்சி போன்ற உணவில் இருந்து பெறமுடியும். துத்தநாகம் ஊட்டச்சத்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், ஒரு நாளைக்கு 15 மி.கி.க்கு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். துத்தநாகம் அதிகமானாலும், மற்ற ஊட்டச்சத்து மற்றும் தாது உப்புக்களை உடல் கிரகிப்பதில் குறைபாடு ஏற்படும். எண்ணெய் சத்து நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. எனவே, கெட்ட கொழுப்பு நிறைந்த 'ரெட் மீட்’ உணவுகளுக்குப் பதில் இந்த மீனைச் சாப்பிடலாம். மீன் சாப்பிடப் பிடிக்காதவர்கள், சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். நோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் கை சுத்தம் தருமே சுகாதாரம் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட பொது சுகாதாரம் மிக முக்கியம். உணவைச் சமைப்பதற்கு முன்பும் சாப்பிடுவதற்கு முன்பும் பலர் கை கழுவுவது இல்லை. கை கழுவுவதில் நுணுக்கமே உள்ளது. சமைப்பதற்கு முன்பு, சமைத்த பின், உணவுப் பொருளைத் தொடுவதற்கு முன்பு, தொட்ட பிறகு, கழிப்பறைக்கு சென்று வந்த பிறகு கை கழுவுவது மிகவும் அவசியம். வெறும் தண்ணீர் ஊற்றி கழுவாமல், சோப் அல்லது பிரத்யேக கை கழுவும் திரவத்தைப் பயன்படுத்தி கையின் மேல் பகுதி, அடிப்பகுதி, நகங்கள், விரல் இடுக்குகள் என கையின் அனைத்துப் பகுதிகளையும் தேய்த்து சுத்தமாகக் கழுவ வேண்டும். 'க்ளென்சிங் ஏஜன்ட்’ கொண்டு மேலே சொன்ன முறைப்படி கழுவினாலே, 90 சதவிகிதக் கிருமிகள் நம்மை அண்ட விடாமல் விரட்டி விடலாம். Greens & Health: எந்தப் பிரச்னைக்கு என்ன கீரை சாப்பிடணும்? வெள்ளைப்பூண்டும் வெங்காயமும் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்லதோர் மருந்து. நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை பூண்டுக்கு உண்டு. பாக்டீரியாவுக்கு எதிராக செயலாற்றும் தன்மை பூண்டுக்கு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கொழுப்பைக் குறைக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் இருப்பதால் கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதில் 'ஆன்டி ஆக்சிடன்ட்’ இருப்பதால் உடலுக்கு கூடுதல் நலம். வெங்காயம், பூண்டு தண்ணீர் அவசியம் உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உடலின் எதிர்ப்பு சக்திக்கும் தண்ணீர் மிக அவசியம். போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்துக் குறைந்து உடல் நலம் கெட வாய்ப்புள்ளது. எனவே சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். Health: வீணாகும் விதைகளில் இத்தனை மருத்துவ பயன்களா..? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Doctor Vikatan: `பி.எம்.ஐ நார்மல், ஆனால், உடலில் கொழுப்பு அதிகம்'காரணமென்ன, தீர்வுகள் உண்டா?
Doctor Vikatan: என் வயது 40. நான் என் உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறேன். அதாவது என்னுடைய பி.எம்.ஐ சரியாகவே இருக்கிறது. ஆனாலும், எனக்கு கொழுப்பு அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். பி.எம்.ஐ சரியாக இருக்கும்போதும் கொழுப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டா? இதற்கு என்ன காரணம், எப்படிக் குறைப்பது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் உங்கள் மருத்துவர் சொன்னதுபோல ஒருவருக்கு பி.எம்.ஐ (BMI) சரியாக இருந்தாலும், அவருக்கு உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சமீபத்தில் நீங்கள் எடைக்குறைப்பு முயற்சியில் இருந்தீர்களா... அப்படியானால், வேகமாக எடையைக் குறைக்கும் டயட் முறையைப் பின்பற்றி, எடையை மட்டுமன்றி, தசைகளின் அடர்த்தியையும் வெகுவாக இழந்திருக்கலாம். Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் வயிற்று உப்புசம்... என்னதான் காரணம், எப்படி சரிசெய்வது? அதீதமான உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி, எடையைக் குறைத்தீர்களா என்று யோசியுங்கள். அடுத்து உங்களுக்கு தைராய்டு பாதிப்போ, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பிரச்னையோ இருக்கக்கூடும். அதுவும் இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். உடலியக்கமற்ற வாழ்க்கைமுறையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். சிலர் தினமும் ஜிம்முக்கு செல்கிறவராக இருப்பார்கள். ஜிம்மில் செலவழிக்கும் அந்த அரை மணி நேரம், ஒரு மணி நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் உடல் இயக்கமே இல்லாமல் இருப்பார்கள். அதுவும் உடலில் கொழுப்புகூட காரணமாகலாம். புரதச்சத்து இருந்தால்தான் தசைகளின் அடர்த்தி தக்கவைக்கப்படும்.நார்ச்சத்து இருந்தால்தான் தேவையற்ற கொழுப்பு வெளியேறும். உங்களுடைய தூக்க ஒழுக்கம் எப்படியிருக்கிறது என்றும் பாருங்கள். சரியான நேரத்துக்குப் போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால், அது உங்கள் ஹார்மோன்களின் சமநிலையை பாதிக்கும். அதனாலும் கொழுப்பு அதிகரிக்கும். கடைசியாக, உங்கள் உணவுப்பழக்கத்தில் போதுமான அளவு புரதச்சத்தும் நார்ச்சத்தும் இருக்கின்றனவா என்று பாருங்கள். புரதச்சத்து இருந்தால்தான் தசைகளின் அடர்த்தி தக்கவைக்கப்படும். நார்ச்சத்து இருந்தால்தான் தேவையற்ற கொழுப்பு வெளியேறும். எனவே, இந்த எல்லா விஷயங்களையும் கவனித்து உங்களுக்கு கொழுப்பு அதிகரிக்க எது காரணமாக இருக்கலாம் என யோசியுங்கள். தேவைப்பட்டால் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் விஷயங்களைப் பின்பற்றுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கும் கொழுப்பு இருக்கும் என்பது உண்மையா? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Eye Care: தினமும் கண்களில் மை வைக்கலாமா? - அழகுக்கலை நிபுணர் சொல்வதென்ன?
அ ந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண்மை கரிசலாங்கண்ணி போன்ற இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. தற்போது கண்களை அழகுபடுத்த காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் என்று எத்தனையோ அழகு சாதனப்பொருள்கள் வந்துவிட்டன. இவற்றில் உள்ள ரசாயனப் பொருள்களைக் கணக்கிட்டோம் என்றால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும். இவற்றைத் தவிர்த்தும் கண்களை வசீகரப்படுத்த முடியாது. எனவே பாதுகாப்பாகக் கண்களை அழகுபடுத்திப் பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றி அழகுக்கலை நிபுணர் வசுந்தரவிடம் பேசினோம். அவர் கொடுத்த அழகுக் குறிப்புகள் இதோ உங்களுக்காக... Eyes 1) காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் போன்ற அழகு சாதனப் பொருள்களில் உள்ள ரசாயனங்கள் கண்களைப் பாதிக்காமல் பாதுகாப்பது எப்படி? வெளியில் செல்லும்போது இதுபோன்ற பொருள்களைப் பயன்படுத்தி கண்களை அலங்கரித்துக் கொள்வோம். அதில் தவறில்லை. ஆனால் இரவு தூங்கச் செல்லும் முன் கண்களை முழுவதுமாகக் குளிர்ந்த நீரில் கழுவி, தூய்மை செய்து விட வேண்டும். இதனால் காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் போன்றவற்றால் கண்களில் ஏற்படும் அழற்சிகளைத் தடுக்கலாம். இப்போது கடைகளில் நிறைய மேக்-அப் ரிமூவர்கள் திரவ வடிவத்திலேயே கிடைக்கின்றன. இதில் சில துளிகளைச் சிறிதளவு மென்மையான பஞ்சில் நனைத்து முகத்தையும், கண்களையும் லேசாகத் துடைத்தாலே போதும் நாம் செய்த அலங்காரங்கள் கலைந்துவிடும். விளக்கெண்ணெய்யையும் மேக்-அப் ரிமூவராக பயன்படுத்தலாம். பிறகு சாதாரண நீரில் முகத்தைக் கழுவிய பின்பு தூங்கச் செல்லலாம். இவ்வாறில்லாமல் கண்களுக்குப் பயன்படுத்திய மையைக் கலைக்காமலேயே தூங்கும் போது கருவளையம், கண் தொற்று போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! 2) கண்களில் ஏற்படும் கருவளையங்களை எவ்வாறு நீக்கலாம்? போதிய நேரம் தூங்காமலிருந்தாலோ அல்லது அதிக நேரம் கணினியைப் பயன்படுத்தினாலோ கண்ணில் கருவளையம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண்களுக்குப் பயன்படுத்தும் மையைக் கலைக்காமலிருந்தாலும் கருவளையம் ஏற்படலாம். இதனை நீக்க சில எளிமையான வழிகளைக் கடைப்பிடித்தாலே போதும். வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்குகளைப் பயன்படுத்தியே கருவளையங்களை நீக்கலாம். இவற்றை வட்டமாக வெட்டி தினமும் தூங்கப் போகும் முன் ஐந்து நிமிடங்கள் கண்களிலும், கருவளையம் உள்ள இடத்திலும் வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். கருவளையங்கள் மறைந்துவிடும். கருவளையம் Beauty: பாட்டி வைத்தியம் முதல் பியூட்டி பார்லர் வரை... இயற்கை அழகி முல்தானி மட்டி! 3) கண்ணுக்கான அழகு சாதனப் பொருள்களை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்? கண்களுக்கான அழகுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் போது அதிக கவனம் தேவை. விலை குறைவாக உள்ள தரம் இல்லாத எந்தவொரு பொருளையும் வாங்கி பயன்படுத்தக்கூடாது. கடைகளில் இவற்றை வாங்கும் போது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் போன்றவற்றைக் கண்டிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும். குறிப்பாக ஒருவர் பயன்படுத்திய கண் மை, காஜல் போன்றவற்றை மற்றொருவர் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. 4) தினமும் கண்களுக்கு மை அலங்காரம் செய்து கொள்ளலாமா? தினமும் செய்வதில் தவறில்லை. ஆனால் எப்போதும் அழியாமல் இருக்கும் வாட்டர் ஃபுரூப் கண் மை, மஸ்காரா போன்றவற்றைத் தினமும் பயன்படுத்தக் கூடாது. இவை அதிக நேரம் கண்களிலேயே இருக்கும்போது கண் சிவப்பு, வீக்கம் ஏற்படலாம். இதனால் தினமும் கண்களுக்கு மையிடுவதை ஓரளவு தவிர்க்கலாம். ஐ மேக்கப் 5) கண்களின் ஆரோக்கியத்திற்கு எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்? வைட்டமின் ஏ உள்ள உணவுகள் கண்களுக்கு மிகவும் நல்லது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் உள்ள மாம்பழம், ஆரஞ்சு, கேரட், பூசணிக்காய் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இவை கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் பார்வைத்திறனையும் மேம்படுத்துகின்றன. Eye Health: `கண்கள் துடிச்சா கெட்டது நடக்கும்' -இதுக்கு மருத்துவ அர்த்தம் என்ன? வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள். Click here: https://bit.ly/VikatanWAChannel