SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது கடுமையான தலைவலி; என்ன கரணம், தீர்வு உண்டா?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி ஒரு வருடமாகிறது. கடந்த சில மாதங்களாக தாம்பத்திய உறவின் போது கடுமையான தலைவலியை உணர்கிறேன்.  சிறிது நேரத்தில் அது சரியாகிறது என்றாலும், இந்த வலியை நினைத்தால் தாம்பத்திய உறவே பயத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய தலைவலிக்கு என்ன காரணம், தீர்வுகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிடும் இந்தத் தலைவலி எல்லோருக்கும் வருவதில்லை. அதே சமயம், நீங்கள் பயப்படுகிற அளவுக்கு பிரச்னைக்குரிய ஒன்றும் இல்லை. இந்த வகை தலைவலியானது, சிலருக்கு தாம்பத்திய உறவுக்கு முன்பும் வரலாம், சிலருக்கு தாம்பத்திய உறவுக்குப் பிறகும் வரலாம். இன்னும் சிலருக்கு உறவின் போதான உச்சக்கட்டத்தின் போதும் வரலாம்.   இதற்கு 'ஆர்கஸம் ஹெட்டேக்' (Orgasm headache) என இன்னொரு பெயரும் உண்டு.  இந்தத் தலைவலி, சில நிமிடங்கள் தொடங்கி, சில மணி நேரம் வரை நீடிக்கலாம். தாம்பத்திய உறவின் போது கழுத்து மற்றும் தலைப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் வழக்கத்தைவிட அதிக டென்ஷனுக்கு உள்ளாவதுதான் இந்த வகை தலைவலிக்கு பிரதான காரணம்.  தாம்பத்திய உறவின் போது இயல்பாகவே ரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கலாம். அதுவும் தலைவலியை ஏற்படுத்தலாம். உங்களுக்கு ஏற்கெனவே மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளதா என்று தெரியவில்லை. ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கும் தாம்பத்திய உறவின்போது,  தலைவலி தூண்டப்படலாம். உறவுக்கு முன்பும் பிறகும் நிறைய தண்ணீர் குடியுங்கள். உறவின் நடுவில் தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டால், உடனடியாக தாம்பத்திய உறவை நிறுத்த வேண்டும். உறவை நிறுத்தியதும் தலைவலி குறையும் வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி இப்படி தலைவலி வருகிறது என்றால் மருத்துவ ஆலோசனை பெறவும்.  மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணிகளை உறவுக்கு முன்பே எடுத்துக்கொள்ளலாம். தாம்பத்திய உறவு என்பது கிட்டத்தட்ட உடற்பயிற்சி போன்றதுதான் என்பதால், அந்த நேரத்தில்  உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதன் காரணமாகவும் தலைவலி வரும். எனவே,  உறவுக்கு முன்பும் பிறகும் நிறைய தண்ணீர் குடியுங்கள்.  இவற்றை எல்லாம் கடந்து, தலைவலியோடு வாந்தி, பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொண்டால், உடனே மருத்துவரை அணுகுவதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது வலி; சிசேரியனால் ஏற்பட்ட பாதிப்பு.. தீர்வு உண்டா?

விகடன் 13 Sep 2025 9:00 am

பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா?

செல்போனை எந்த நேரத்தில் ஓப்பன் செய்தாலும், வைட்டமின் பி 12 குறைபாடு, அதன் அறிகுறிகள், தீர்வுகள் என ரீல்ஸாக கொட்டுகிறது. பி 12 வைட்டமின் நீரில் கரையக்கூடிய வைட்டமின். அப்படியென்றால், பி 12 நிறைந்த பாலில் தண்ணீர் கலந்தாலோ, ஆட்டு ஈரலை நீரில் அலசினாலோ அவற்றில் இருக்கிற வைட்டமின் கரைந்து போய்விடாதா? சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நோய் நிபுணர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம். B Vitamins கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை... ’’வைட்டமின் ஏ.டி.ஈ. மற்றும் கே ஆகிய நான்கும் கொழுப்பில் கரையக்கூடியவை. நம் உடலின் செல்களில், செல்களின் சுவர்களில் கொழுப்பு இருக்கிறது. இதனால், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை நம்முடைய உடம்பு அதிகமாகச் சேர்த்து வைக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. இதன் விளைவாக, உடலில் நச்சுத்தன்மை அதிகமாகி மூளையில் அழுத்தம் அதிகமாகி, கண் பார்வை பாதிக்கப்படலாம்; தோல் வறண்டு போகலாம். பி 12 போல நீரில் கரையும் வைட்டமின்கள் உடலுக்கு அதிமுக்கியமான வைட்டமின்கள்கூட அளவுக்கு மீறினால் பிரச்னை தருவதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அதனால்தான், இந்த வகை வைட்டமின் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையைப் பெற்று சாப்பிட வேண்டும் என்கிறோம். ஆனால், பி 12 போல நீரில் கரையும் வைட்டமின்கள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகத் தங்கி விஷத்தன்மையை ஏற்படுத்தாது. Mutton Liver Recipe ஒவ்வொரு செல்களுக்கும் பொதிந்திருக்கிறது. பாலில் அதிகமாகத் தண்ணீர் சேர்ப்பதாலோ அல்லது ஈரலை நீரில் சுத்தம் செய்வதாலோ பி 12 வீணாகாது. ஏனென்றால், இந்த வைட்டமின் பால் மற்றும் ஈரலின் ஒவ்வொரு செல்களிலும் பொதிந்திருக்கிறது. அதனால், பி 12 எப்படியும் நம் உடலுக்குள் சென்றுவிடும். நம்முடைய உடல்தான், அது அதிகமாகும்போது உடலில் இருக்கிற நீரில் கரைத்து வெளியேற்றிவிடும். Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! பி 12 மாத்திரையை நீண்ட காலம் சாப்பிடுபவர்கள்.. நீங்கள் பி 12 ஊசி போட்டுக்கொள்கிறீர்கள் என்றால், அதன் வீரியம் உங்கள் உடலில் எத்தனை காலம் இருக்கிறது என்பதைப் பொறுத்து மாதத்துக்கு ஓர் ஊசியோ அல்லது மூன்று மாதத்துக்கு ஓர் ஊசியோ போட்டுக்கொள்ளலாம். பி 12-ஐ மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அது மல்ட்டி வைட்டமின் மாத்திரையிலோ அல்லது பி காம்ப்ளெக்ஸ் மாத்திரையிலோ கலந்துதான் வரும். அதனால், பி 12 மாத்திரையை நீண்ட காலம் சாப்பிடுபவர்கள், வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டுக்கொண்டாலே போதும். ஊசியாகப் போட்டுக்கொள்ளும்போது, பி 12 நிச்சயம் உடலில் சேர்ந்துவிடும். மாத்திரையாகப் போடும்போதும் உடலில் சேர்ந்துவிடும் என்றாலும், பி 12 குறைபாட்டின் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், ஒருமுறை இதற்கான இரத்தப் பரிசோதனை செய்து பார்க்கலாம். Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும். பி12 வைட்டமினை ஊசியாக எடுத்துக்கொண்டாலும் சரி, மாத்திரையாக எடுத்துக்கொண்டாலும் சரி, ஓவர் டோஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை. உடல் அது தேவைக்கு உறிஞ்சியதுபோக, மீதத்தைச் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்’’ என்கிறார் டாக்டர் பாசுமணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 13 Sep 2025 7:08 am

Doctor Vikatan: 15 வயது மகளுக்கு தைராய்டு, கவனச் சிதறலை ஏற்படுத்தும் உடல்பருமன்; எடை குறையுமா?

Doctor Vikatan: என் மகளுக்கு 15 வயதாகிறது. சமீபத்தில் அவளுக்கு தைராய்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து வருகிறது. அதை நினைத்து அவளால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளது உடல் எடையைக் குறைக்க வாய்ப்பு உண்டா... எப்படிப்பட்ட பயிற்சிகள் தேவை... உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் பதின்ம வயதில் உடல் பருமன் கூடுகிறது என்றால்,  உடனே அவர்களுக்குக் கொடுக்கும் உணவின் அளவைக் குறைக்க நினைப்பதைவிட, கலோரி கணக்கீட்டில் கவனம் செலுத்துவது முக்கியம். அதாவது எந்தெந்த உணவுகளில் சத்துகள் அதிகம், எவற்றில் குறைவு, அவற்றின் மூலம் கிடைக்கும் கலோரிகள் எத்தனை என்று தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு உடற்பயிற்சியைக் கட்டாயமாக்குங்கள். வாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் என ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் அவரை தீவிரமாக ஈடுபடுத்தலாம். தற்காப்புக் கலைகளான கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகளைக் கூட கற்றுத் தரலாம். ஷட்டில் காக், பேட்மின்ட்டன் போன்றவற்றை விளையாட ஊக்கப்படுத்தலாம். வாய்ப்பிருந்தால் குடும்பத்தாரும் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடலாம்.  சோறு, இட்லி, தோசை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்களின் அளவைக் கூட்டலாம். ஒவ்வொரு வேளை உணவிலும் காய்கறிகள், பழங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸும் இடம் பெற வேண்டும்.  வாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் என ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தலாம் இப்படி உணவுப்பழக்கத்தை முறைப்படுத்திய பிறகு மாதந்தோறும் உடல் எடையை செக் செய்து கொண்டே வர வேண்டும். எடையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  எந்த உணவையும் வேண்டாம் என சொல்லிக் குழந்தையைக் கட்டுப்படுத்தவோ, கஷ்டப்படுத்தவோ கூடாது. அவரவருக்குப் பிடித்த உணவுகளை குறைந்த அளவில் சாப்பிட அனுமதிப்பதுதான் சரியே தவிர, அறவே கூடாது என்று சொல்லத் தேவையில்லை. பொதுவாக இனிப்புகள், சாக்லேட், கேக் போன்ற உணவுகளால்தான் உடல் எடை அதிகரிக்கும். அவற்றின் அளவைக் குறைத்து, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுத்துப் பழக்கலாம்.  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றுடன், தைராய்டுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் முறையாக எடுத்துக்கொண்டாலே போதுமானதாக இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Doctor Vikatan: தைராய்டு இருந்தால் வாய் துர்நாற்றம் வருமா?

விகடன் 12 Sep 2025 9:00 am

Lotus: தாமரைத்தண்டு இத்தனை ஆரோக்கியம் நிறைந்ததா? டயட்டீஷியன் விளக்கம்!

தாமரை விதையைப் போலவே அதன் தண்டையும் சமைத்து உண்ணலாம். அதன் ஆரோக்கியப் பலன்கள் குறித்து சொல்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர். ‘’கொடி வகையைச் சேர்ந்த தாமரைத்தண்டில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் சத்துகளும், வைட்டமின் பி, ஈ, கே உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன. கலோரி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. தாமரைத்தண்டு மற்ற தாவரங்களைவிட வைட்டமின் சி சத்து மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். மிருதுவான சருமத்துக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவும். எலும்புக் குறைபாடுகளைச் சரிசெய்யவும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும் தாமரைத்தண்டு உதவும். உடலின் ரத்த ஓட்டத்தை இது சீராக்கும். ரத்தச்சோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை தாமரைத்தண்டு சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணி பெண் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கால்சியம், இரும்புச்சத்து தேவைப்படும். அவர்களுக்கு தாமரைத்தண்டை உலரவைத்து வற்றல் செய்து கொடுப்பது வழக்கம். வாழைத்தண்டு கூட்டு செய்வதுபோல, தாமரைத்தண்டையும் கூட்டு செய்து சாப்பிடலாம். ஆனால், துவர்ப்புச் சுவை காரணமாகப் பலர் இதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் தாமரைத்தண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம். பஜ்ஜி வடிவில் உட்கொண்டாலும், தாமரைத்தண்டிலிருந்து கிடைக்கும் நார்ச்சத்தில் எந்தக் குறையும் இருக்காது. தாமரைத் தண்டை மெலிதாகச் சீவி, பஜ்ஜி செய்து பரிமாறினால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். தாமரை பஜ்ஜி சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகள், மலச்சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு. தாமரைத்தண்டில் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதால், இது மலச்சிக்கலை ஏற்படுத்தாது. ஆனால், இதய நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு, `ஷாலோ ஃப்ரை’ (Shallow Fry) எனப்படும் குறைந்த அளவு எண்ணெயில் பொரித்துக் கொடுக்கலாம். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! தாமரைத்தண்டு பஜ்ஜி எப்படிச் செய்வது? தேவையானவை: தாமரைத்தண்டு : ஒன்று (ஃப்ரெஷ்) கடலை மாவு : 50 கிராம் அரிசி மாவு : 50 கிராம் மைதா : ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு : தேவையான அளவு பெருங்காயத்தூள் : சிறிதளவு எண்ணெய் : 50 கிராம் மஞ்சள்தூள் : சிறிது தாமரைத்தண்டு பஜ்ஜி ''என் பையனோட பாக்கெட்ல காய்கறிகள்தான் இருக்கும்!'' - நடிகை ஶ்ரீஜா பகிரும் Healthy Habits செய்முறை முதலில் தாமரைத்தண்டை தோல் சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து ஊறவைக்கவும். இப்படிச் செய்வதால் தண்டிலுள்ள துவர்ப்புத் தன்மை நீங்கிவிடும். அரிசி மாவு, மைதா, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். சோடா மாவு சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிறகு மாவுக் கலவையில் தாமரைத்தண்டை முக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்தால், பஜ்ஜி தயார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 12 Sep 2025 6:33 am

சூப்பர் சென்னை 'Icon of the month'விருது - சென்னையின் மதிப்பை உயர்த்திய Dr. எஸ். சந்திரகுமார்

இந்த அங்கீகாரம், மருத்துவத் துறையில் டாக்டர் சந்திரகுமார் செய்த முன்னோடி பங்களிப்பையும், 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்' என சென்னையின் மதிப்பை உயர்த்திய அவரது முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது. இது, சென்னையை உலகின் மிக வாழத் தகுந்த நகரமாக மாறும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மருத்துவத் துறையை மாற்றியமைத்த தலைவர் : மருத்துவத் தொழில்முனைவோர், நிறுவனர், சிந்தனைத் தலைவர் எனப் பல்வேறு அடையாளங்களுடன் விளங்கும் டாக்டர் சந்திரகுமார், இந்தியாவில் நவீன மருத்துவ சேவையை மாற்றியமைத்த முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். அவரின் தலைமையில் காவேரி மருத்துவமனைகள் குழுமம், முன்னோட்டமான மருத்துவ அறிவியலை நோயாளி மையக் கண்ணோட்டத்துடன் இணைத்து, நாட்டின் மிகவும் மதிக்கப்படுகிற மருத்துவ வலையமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அவருடைய தொலைநோக்கு பார்வை, தரமான சிகிச்சையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு, சென்னை நகரை “சுகாதாரச் சிறப்பின் மையம்” என வலியுறுத்தி, அதன் உலகளாவிய மதிப்பையும் உயர்த்தியுள்ளது. இந்த விருதைப் பெற்றதையொட்டி டாக்டர் எஸ். சந்திரகுமார் கூறியதாவது: “இந்த அங்கீகாரம் எனக்கு ஊக்கமும் பணிவும் அளிக்கிறது. மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல – அது கருணை, அணுகல்தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது. உலகத் தரத்திலான மருத்துவத்தை ஒவ்வொரு நோயாளிக்கும் கொண்டு சேர்க்க தினமும் உழைக்கும் ஆயிரக்கணக்கான காவேரி மருத்துவமனையின் சக ஊழியர்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன். நாட்டின் மருத்துவத் தலைநகரமாக சென்னையின் ஊக்கமூட்டும் முன்னணியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். சென்னை உலகின் மிக வாழத்தக்க நகரமாக மாறும் கனவுக்குப் பங்களிப்பதில் நான் மகிழ்கிறேன்.” சூப்பர் சென்னை – நகர மாற்றத்தின் தூண் : இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சூப்பர் சென்னை நிர்வாக இயக்குநர் திரு. ரஞ்சீத் ரதோட் கூறியதாவது: “சூப்பர் சென்னை என்பது நம் நகரத்தை வலுவானதாகவும், பெருமைப்படத்தக்கதாகவும், வாழத் தகுந்ததாகவும் மாற்றிப் பார்ப்பதற்கான முயற்சி. எங்கள் ‘Icon of the Month’ நிகழ்வு, இத்தகைய மாற்றத்தின் உணர்வை எடுத்துக்காட்டும் நபர்களை கௌரவிக்கிறது. டாக்டர் சந்திரகுமாரை கௌரவிப்பதன் மூலம், நாங்கள் நவீன மருத்துவ முன்னோடியை மட்டுமல்ல, தினமும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தி, சென்னையின் உலகளாவிய மரியாதையை உயர்த்தும் மாற்றத்தின் முன்னோடியையும் அங்கீகரிக்கிறோம்.” சூப்பர் சென்னை-யின் ‘Icon of the Month’ முயற்சி, தொழில்முனைவோர், புதுமையாளர்கள், மாற்றத்தின் முன்னோடிகளை முன்னிறுத்துகிறது. முன்னதாக, இவ்விருது பெண்கள் தொழில்முனைவில் செய்த பங்களிப்புக்காக நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர் சி.கே. குமாரவேல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

விகடன் 11 Sep 2025 11:43 am

Doctor Vikatan: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 8 வயதாகிறது. அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் என பாதிக்கப்படுகிறாள். அவளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லையோ என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்... எப்படிப்பட்ட உணவுகள் கொடுக்கலாம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் சரிவிகித உணவு குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பேலன்ஸ்டு டயட் எனப்படும் சரிவிகித உணவுப்பழக்கத்தை அறிமுகம் செய்துவிட்டால், அப்போதிலிருந்தே நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருக்கும். ஓர் உணவில் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் இருக்க வேண்டும், சரியான அளவில் இருக்க வேண்டும். அதுதான் சரிவிகித உணவு. அந்த வகையில் பிரதானமாக இடம்பெற வேண்டியவை முழுத்தானியங்கள், சிறுதானியங்கள் போன்றவை. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என எல்லாவற்றிலும் முழுத்தானியங்கள் இருக்க வேண்டும். அவற்றில் நார்ச்சத்தும் ஓரளவு இருக்கும். இது குடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றதாக இருக்கும்.  புரதச்சத்து அடுத்தது, குழந்தைகளின் உணவில் புரதச்சத்து நிறைய இருக்க வேண்டும். புரதச்சத்துதான், உடலின் நோய் எதிர்ப்புக்கான செல்களை வளர்க்க உதவும்.  சிக்கன், மீன், முட்டை என அசைவ உணவுகளிலும், பால், பால் பொருள்கள், பருப்புகள் போன்ற சைவ உணவுகளிலும் புரதச்சத்து அதிகமிருக்கும்.  அடுத்தது குழந்தைகளுக்கு நிறைய காய்கறிகள், பழங்கள் கொடுத்துப் பழக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா, கேரட், புரொக்கோலி போன்றவற்றை அதிகம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு நிறைய காய்கறிகள், பழங்கள் கொடுத்துப் பழக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும். Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... ஆன்டிபயாட்டிக் பலன் தராதது ஏன்? தேவையான சத்துகள் தினமும் குறிப்பிட்ட அளவு பால் குடிக்க வேண்டும். அது வைட்டமின் டி மற்றும் கால்சியம்  தேவைக்கு உதவும். நட்ஸ், சீட்ஸ் போன்றவற்றில் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு, துத்தநாகச் சத்து போன்றவை உள்ளதால் அவற்றையும் சிறு வயதிலிருந்தே கொடுத்துப் பழக்க வேண்டும்.  இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளான இஞ்சி, மஞ்சள், துளசி போன்றவற்றை சமையலில் சேர்க்கலாம். குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். அதற்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். புரோபயாடிக் உள்ள யோகர்ட் போன்றவற்றையும் குழந்தைகளுக்குக் கொடுக்கவும். வெறும் உணவுகளால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக ஏற்படுத்திவிட முடியாது.  நல்ல தூக்கம், தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி போன்றவற்றையும் முறைப்படுத்துங்கள். இன்னும் சொல்லப் போனால், அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஏற்படாமலிருக்க சுகாதாரம் குறித்தும்  கற்றுக் கொடுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 11 Sep 2025 9:00 am

`ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே'மூணும் முக்கியம் ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 257

'' இது எய்ட்ஸ் அதிகரித்துவிட்ட காலகட்டம். முன் எப்போதையும்விட ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாகப் பார்க்கிறேன். காரணம் ஹேப்பி எண்டிங் என்ற பெயரில் ஆங்காங்கே கிடைக்கிற செக்ஸ் வாய்ப்புகள். ஹெச்.ஐ.வி தொற்று தவிர்க்கப்பட வேண்டுமென்றால், தாம்பத்திய உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் '' என்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார். தாம்பத்தியம் ஃபோர் பிளே ''ஒரு தம்பதியரிடையே தாம்பத்திய உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே ஆகிய மூன்று விஷயங்கள் மிக மிக முக்கியம். தாம்பத்திய உறவுக்கு முந்தைய ஃபோர் பிளே எரிச்சல், வலி இல்லாத தாம்பத்திய உறவு நிகழ்வதற்கு உதவும். 'ஃபோர் பிளே'வில் கணவன், மனைவி இருவருமே பங்கு பெற வேண்டுமா என்றால், ஆமாம். இதைக் கற்றுக்கொண்டுதான் செய்ய வேண்டும். Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing பிளே அடுத்தது பிளே . அதாவது, தாம்பத்திய உறவு. இதில் இருவரும் உச்சக்கட்டம் அடைவதுதான் முக்கியம். பெண்ணைத் திருப்திப்படுத்துவது தொடர்பாக ஆணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கணவனை எப்படித் தூண்டுவது என்பது மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்கள் மோட்டார் ஸ்விட்ச் போடுவதுபோல உச்சக்கட்டம் அடைந்துவிடுவார்கள். ஆனால், பெண் அடையும் உச்சக்கட்டம் என்பது விமானத்தில் இருக்கிற ஸ்விட்ச்களைப் போன்றது. அவர்களின் உடலில் உச்சக்கட்டம் அடைவதற்கான பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றைத் தூண்டாமல் பெரும்பாலான பெண்களால் வெறும் செக்ஸ் மூலமாக மட்டுமே உச்சக்கட்டம் அடைய முடியாது. இதுதான் உண்மை. யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256 ஆஃப்டர் பிளே. மூன்றாவதாக, ஆஃப்டர் பிளே. இருவருமே உச்சக்கட்டம் அடைந்திருக்க வேண்டும். ஒருவேளை அது நிகழவில்லை என்றால் ஆஃப்டர் பிளே கட்டாயம். ஃபோர் பிளே தெரிந்த அளவுக்கு பலருக்கும் ஆஃப்டர் பிளே பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் சொல்கிறேன். இந்த நேரத்தில் ரொமாண்டிக்காகப் பேசுதல், கூந்தலை வருடுதல், அணைத்தல், தழுவுதல் போன்று செய்யலாம். காமசூத்ரா கொடுத்த நாட்டில், முறையான செக்ஸைப்பற்றி தெரியவில்லையென்றால், அது விவாகரத்தில் முடிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. தவிர, தம்பதியரிடையே உறவு சரியாக இருந்தால், மூன்றாவது நபர் குறுக்கீட்டால் எதுவுமே செய்ய முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 10 Sep 2025 6:00 pm

Doctor Vikatan: தினசரி தலைக்குக் குளிக்க வேண்டுமா, வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாமா?

Doctor Vikatan: ஆண்கள் தினமும் தலைக்கு குளிக்கிறார்கள். பெண்களும் தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா... வெறும் தண்ணீரில் குளித்தால் போதுமா... ஷாம்பூ தேவையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா தினமும் தலைக்குக் குளிப்பது என்பது நிச்சயமாக நல்ல விஷயம்தான். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். தினமும் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறண்டு போகும், முடி உதிரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருமே, வாரத்தில் மூன்று முறையாவது தலைக்குக் குளிக்க வேண்டியது அவசியம். சிலர் தினமும் ஷாம்பூ உபயோகித்து தலைக்குக் குளித்தால் பிரச்னை என்ற எண்ணத்தில் வெறுமனே தலைக்குக் குளிப்பார்கள். அது தவறு. இன்னும் சொல்லப் போனால் ஷாம்பூ இல்லாமல் தலைக்குக் குளிக்காதீர்கள். அதே சமயம், மைல்டான  ஷாம்பூ உபயோகித்து அது முடியிலிருந்து முழுமையாக நீங்கும்படி நன்றாக அலசிக் குளித்துவிட வேண்டும். வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி ஹேர்வாஷ் செய்வது என்பது நல்ல விஷயமே இல்லை. வெறும் தண்ணீரில் அலசும்போது, தண்ணீர், தலையில் படிந்துள்ள அழுக்கு, எண்ணெய் எல்லாம் சேர்ந்து, முடியில் பிசுபிசுப்பு ஏற்படும். மண்டைப்பகுதியின் பிஹெச்  அளவை மாற்றி, கூந்தலின்  ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும். எனவே, மைல்டான ஷாம்பூ உபயோகிப்பதுதான் சரியானது. வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி ஹேர்வாஷ் செய்வது என்பது நல்ல விஷயமே இல்லை. Doctor Vikatan: தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியமா... எந்த ஷாம்பூ நல்ல ஷாம்பூ? ஹெல்மெட் பயன்பாடு, வாகனம் ஓட்டுவது, வெளியே அலைகிற வேலை, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்ற காரணங்களால் ஆண்களுக்கு தலைமுடி சீக்கிரமே அழுக்காகும். அவர்களுக்கு தினமும் தலைக்குக் குளிப்பது அவசியமாகிறது. அதுவே, கூந்தலின் நீளம் கருதி, தினசரி தலைக்குக் குளிப்பது பெண்களுக்கு சாத்தியமில்லை என்பதால், வாரத்தில் மூன்று நாள்களாகக் குறைத்துக்கொள்ளலாம். அவர்களும் தினமும் தலைக்குக் குளிக்க முடியும் என்று நினைத்தால் அதைச் செய்வது  சிறப்பானதுதான். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 10 Sep 2025 9:00 am

அடிக்கடி நெட்டி முறித்தால் கை விரல்கள் பலவீனமாகுமா?

வேலை செய்துகொண்டிருக்கும்போதே, விரல்களில் 'நெட்டி முறிக்கும்’ வழக்கம் பலருக்கும் இருக்கும். சிலர் இதை ‘சொடக்கு எடுத்தல்' என்றும் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது, எழும் சத்தம் தான் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சி கிடைத்த உணர்வை ஏற்படுத்துகிறது. அடிக்கடி நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல என்கிற எலும்பியல் மருத்துவர் ஆசிக் அமீன், அதுபற்றி விவரிக்கிறார். நெட்டி முறித்தல் நெட்டி முறிக்கும்போது அந்த சத்தம் எப்படி வருகிறது? விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே ‘சைனோவியல்’ (Synovial Fluid) என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய்போலச் செயல்படுகிறது. நீண்டநேரம் அசையாமலிருந்தால், குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக்கிடையே இந்தத் திரவம் மொத்தமாகச் சேர்ந்துவிடும். நெட்டி முறிக்கும்போது, எலும்பு இணைப்புகள் விரிவடைவதால், அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகரும்போது சொடக்குச் சத்தம் வெளிப்படுகிறது. நெட்டி முறித்தல் தூக்கத்தின்போது உடல் அசைவு மிகக் குறைவாக இருப்பதால், தூங்கி எழுந்ததும் நெட்டி முறித்தால் சொடக்குச் சத்தம் அதிகமாக இருக்கும். நெட்டி முறிக்கும்போது ஏற்படும் இந்தச் சத்தம்தான், பலரை மீண்டும் மீண்டும் அதைச் செய்யத் தூண்டுகிறது. நெட்டி முறித்தல் அடிக்கடி சொடக்கு எடுத்தால் அல்லது நெட்டி முறித்தால் என்ன ஆகும்? சைனோவியல்தான் நம் கை மற்றும் கால் விரல் இணைப்புகளில் உள்ள எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் ஒத்திசைவாகச் செயல்பட உயவு திரவமாகச் செயல்படுகிறது.  அடிக்கடி நெட்டி முறிக்கும்போது இந்தத் திரவம் குறைகிறது. மேலும், கை விரல்களில் டென்டன், லிகமென்ட், கேப்ஸ்யூல் என மூன்று அமைப்புகள் உள்ளன. அடிக்கடி ஒருவர் நெட்டி முறிக்கும்போது இவை மூன்றும் வலுவிழந்து விரல்கள் பலவீனமடையக்கூடும். Health: வலி போக்கும் 6 எண்ணெய்கள்..! ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யலாம். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி கை விரல்களில் சொடக்கு எடுத்துக்கொண்டே இருந்தால், கைகளில் பிடி வலிமையின்றிப் போவது, முழங்கை வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். சொடக்கு எடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட, குறிப்பிட்ட அந்தப் பகுதியை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்தவேண்டியது அவசியம். நெட்டி முறிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால், கைகளுக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யலாம். Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்? நெட்டி முறிப்பதற்கு பதில் ஓய்வு எடுக்கலாம். தொடர்ந்து டைப் செய்வது போன்று ஒரே மாதிரியான வேலையைக் கைகளுக்குக் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால் விரல்களில் நெட்டி முறிப்பதற்கு பதில், விரல்களுக்கு அவ்வப்போது இரண்டு நிமிடம் ஓய்வு எடுக்கலாம். தவிர, எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் நிறைந்த பால், முட்டை, கேழ்வரகு, கீரைகள், எள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால், நீண்ட நேரம் வேலை செய்தாலும் கை விரல்கள் வலிக்காது. நமக்கும் விரல்களில் நெட்டி முறிக்கவோ அல்லது சொடக்கு போடவோ தோன்றாது'' என்கிறார் டாக்டர் ஆசிக் அமீன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 10 Sep 2025 6:33 am

Doctor Vikatan: விபத்துக்குப் போட்ட TT ஊசி; நாய்க்கடிக்கும் அதுவே போதுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் முன்பு சிறிய விபத்து ஏற்பட்டது. உடனே டிடி ஊசி போட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் நாய் கடித்தது. அதற்கும் டிடி ஊசி போடச் சொன்னதால் போட்டுக் கொண்டேன். ஆனால் அதன் பிறகுதான், ஏற்கெனவே டிடி போட்டதால் மறுபடி தேவையில்லை என்று சிலர் சொன்னார்கள். டிடி ஊசி என்பது என்ன? அதை எப்போதெல்லாம், எந்த இடைவெளியில் போட்டுக் கொள்ள வேண்டும்? இருமுறை போட்டதால் எனக்கு ஏதேனும் பிரச்னை வருமா? டிடி ஊசியே, நாய் கடிக்கும் போது போதுமானதா? பதில் சொல்கிறார்: சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி டிடி  என்பது  டெட்டனஸ் டாக்ஸாயிடு (Tetanus Toxoid) என்பதன் சுருக்கம். டெட்டனஸ் என ஒரு நோய் உண்டு. தமிழில் அதை 'ரண ஜன்னி' என்று சொல்வார்கள்.  சற்றே மோசமான அந்த நோயை ஏற்படுத்தும் கிருமியை வரவிடாமல் தடுப்பதுதான் டிடி ஊசியின் வேலை. இந்தக் கிருமிகள், துருப்பிடித்த ஸ்டீல், கரடுமுரடான மேற்பரப்புகள்,  மண் தரையிலுள்ள தூசு போன்றவற்றில் அதிகமிருக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் துருப்பிடித்த இடங்களில் பட்டு அடிபட்டால் உடனே டிடி ஊசி போடச் சொல்லி அறிவுறுத்துகிறோம். அப்படித் தடுப்பூசி போடுவது உண்மையிலேயே பாதுகாப்பானது. விபத்து ஏற்பட்டு விழுந்ததும் டிடி ஊசி போட்டுக்கொண்டதாகச் சொல்கிறீர்கள், அதில் தவறில்லை. பொதுவாக மருத்துவர்கள், 2 வருடங்களுக்கொரு முறை டிடி ஊசி போட்டுக்கொண்டால் போதும் என்றே சொல்வோம். அதுவே, தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றோருக்கெல்லாம் ஆறு மாதங்களுக்கொரு முறை டிடி ஊசி போட்டுக்கொள்ளச்  சொல்வோம். அதாவது எங்கேயாவது அடிபட்ட நிலையில், அதற்கு முன் டிடி ஊசி போட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டால், மறுபடி ஒரு டோஸ் டிடி ஊசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது என்றே அறிவுறுத்துவோம். நாய்க்கடிக்கு 'ஏஆர்வி' எனப்படும் ஆன்டி ரேபிஸ் வாக்சின் (Anti-Rabies vaccine) தான் போட வேண்டும். Doctor Vikatan: நாய் கடித்தால் உணவுக்கட்டுப்பாடு அவசியமா, அசைவ உணவைத் தவிர்க்க வேண்டுமா? நாய்க்கடிக்கு டிடி ஊசி போட வேண்டிய அவசியமில்லை. நாய்க்கடிக்கு 'ஏஆர்வி' எனப்படும் ஆன்டி ரேபிஸ் வாக்சின் (Anti-Rabies vaccine)  தான் போட வேண்டும். சமீபகாலமாக பெரும் பிரச்னையாக உருவெடுத்துவரும் நாய்க்கடி பிரச்னைக்கு, எந்த மருத்துவமனையிலாவது டிடி ஊசி போட்டால், அது வேண்டாம் என்று சொல்லி ஆன்டி ரேபிஸ் தடுப்பூசி போடும்படி கேளுங்கள். இது எல்லா  அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார மையங்களிலும் போடப்படும். நாய்க்கடிக்கான தடுப்பூசியைப் போடத் தவறினால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ரேபிஸ் நோய் வராமல் தடுக்க ஏஆர்வியும், ஒருவேளை கடி மிகவும் மோசமாக இருந்தால், இம்யூனே குளோபுலின் ஊசியும் போட வேண்டியிருக்கும். பல பேர், இது போல நாய்க்கடிக்கு வெறும் டிடி ஊசியை மட்டும் போட்டுக்கொண்டு உயிரிழக்கும் சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். எனவே, கவனமாக இருக்கவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

விகடன் 9 Sep 2025 9:00 am

Doctor Vikatan: மார்பகங்களில் உருளும் கட்டிகள், கர்ப்ப காலத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்யலாமா?

Doctor Vikatan: என் தோழி இப்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறாள். திடீரென மார்பகங்களில் கட்டி மாதிரி உருள்வதாகச் சொல்கிறாள். அதே சமயம், கர்ப்ப காலத்தில் புற்றுநோய்க்கான டெஸ்ட் எடுப்பதே ஆபத்து என பயப்படுகிறாள். கர்ப்ப காலத்தில் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்வது பாதுகாப்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க சிகிச்சை மருத்துவர் எஸ்.பி. ராஜ்குமார் கர்ப்பகாலத்திலும் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்யலாம். ஆனால், தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில்  முக்கியமான  சில அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில், கர்ப்பகாலத்தில் செய்யக்கூடிய பாதுகாப்பான புற்றுநோய்ப் பரிசோதனைகள் பற்றி தெரிந்துகொள்வோம். மார்பக மருத்துவ பரிசோதனை (Clinical Breast Exam) மார்பக மருத்துவ பரிசோதனை, இதில் மருத்துவர், மார்பகத்தில் கட்டிகள் உள்ளனவா என்று பரிசோதனை செய்வார். பெண்களும் தாங்களாகவே சுய மார்புப் பரிசோதனை (Self-Breast Exam) செய்து, கட்டிகள் உள்ளனவா என கண்டுபிடிக்கலாம். இந்தப் பரிசோதனைகள் கர்ப்ப காலத்தில் முற்றிலும் பாதுகாப்பானவை. அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) அடுத்தது மார்புப் பகுதிக்கான அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) சோதனை. இது கட்டிகளை மதிப்பீடு செய்யவதற்கான பரிசோதனை. ஒலியலைகளைப் பயன்படுத்துகிறது என்பதால், இந்தச் சோதனை பாதுகாப்பானது. இதில் கதிர்வீச்சு இல்லை. Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக மாறுமா? மேமோகிராம் (Mammogram) மூன்றாவதாக மேமோகிராம் (Mammogram) சோதனை. கர்ப்ப காலத்தில் மிகமிக  அவசியமென்றால் மட்டும் மேற்கொள்ளப்படும். இதில் கதிர்வீச்சு இருக்கும். கர்ப்பிணியின் வயிற்றுப் பகுதியில் 'லெட் ஷீல்டு'  (lead shield) எனப்படும் கடினமான  உலோக ஷீல்டை வைத்து பாதுகாப்பு அளிக்கப்படும். மிகமிக அவசியம் என்றால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிற இந்தச் சோதனை, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கப்படுகிறது. கடைசியாக  பயாப்சி (Biopsy) பரிசோதனை. கட்டிகள்  இருந்தால் பயாப்சி சோதனை செய்யப்படும். இதுவும் பாதுகாப்பானதுதான். CT scan, PET scan கர்ப்பகாலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய சோதனைகள்: அதிக கதிர்வீச்சு உள்ளதால்  சிடி ஸ்கேன் (CT scan)   மற்றும் பெட் ஸ்கேன் (PET scan)  ஆகியவை கர்ப்பகாலத்தில் தவிர்க்கப்படுகின்றன. மிக மிக அவசர நிலைமையில் மட்டுமே செய்யப்படும். கர்ப்பத்தில் மார்பகங்கள் இயற்கையாகவே மாற்றமடையும் என்பதால், அந்தக் காலத்தில் கட்டிகளைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம். சி.டி ஸ்கேன் எப்படி இருப்பினும், மார்பகங்களில்  கட்டி, வலி, வடிவம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் கர்ப்பத்துடன் தொடர்பில்லாத எந்தப் பரிசோதனைக்குச் சென்றாலும், முதலில் மருத்துவரிடம் நீங்கள் கர்ப்பமாக உள்ளதைச் சொல்ல மறக்காதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 6 Sep 2025 9:00 am

Seasonal Fevers: பரவிக் கொண்டிருக்கும் காய்ச்சல்கள்; வராமல் தடுக்க, வந்தால் மீள மருத்துவர் ஆலோசனை!

'திடீர் காய்ச்சல்; உடல் அனலாய் கொதிக்கிறதே' என பக்கத்தில் இருக்கிற கிளினிக் போனால், காய்ச்சல் வந்தவர்களால் கிளினிக் நிரம்பி வழிகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நள்ளிரவுகளில் 24 மணி நேர மருத்துவமனைகளுக்கு செல்வதையும் பார்க்க முடிகிறது. மழையும் வெயிலும் மாறி மாறி வந்தால் காய்ச்சலும் வந்துவிடும். வருடத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போதும் ஊரெங்கும் காய்ச்சல், இருமல், சளித்தொல்லை என ஆரம்பித்துவிடும். தற்போதும் காய்ச்சல் காலம் ஆரம்பித்துவிட்டது. தற்போது என்னென்ன காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன; வராமல் எப்படித் தடுப்பது; அறிகுறிகள்; தீர்வுகள் என்ன என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம். Seasonal Fever என்னென்ன காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன? ''தமிழ்நாட்டில் பருவநிலை மாறும்போது வைரஸ் தொற்றுப்பரவும். விளைவாக காய்ச்சலும் வரும். தற்போது இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸ், அடினோ வைரஸ், ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ் (Respiratory syncytial virus), கொரோனா வைரஸ், சின்னம்மை வைரஸ், மம்ப்ஸ் எனப்படும் கூகைக்கட்டு அம்மை வைரஸ், மீசில்ஸ் எனப்படும் தட்டம்மை வைரஸ் ஆகியவை சுவாசப்பாதை வழி எளிதாகப் பரவுகின்றன. கூடவே, ஆங்காங்கு பன்றிக்காய்ச்சலும், டெங்குவும்கூட இருக்கிறது. இன்ஃபளூயன்சா மற்றும் அடினோ வைரஸ்..! இதில் இன்ஃபளூயன்சா மற்றும் அடினோ வைரஸ் வகையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்டால், 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சலடிக்கும். இதனுடன் தசைவலி, கடுமையான உடல் சோர்வு, சுவாசத்தொற்றுகளான தொண்டை வலி, வறட்டு இருமல், சளியுடன் இருமல் வருவது, தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் ஆகிய பிரச்னைகளும் வரும். Seasonal Fever இன்ஃப்ளூயன்சா மற்றும் ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ்கள்! இன்ஃப்ளூயன்சா மற்றும் ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ்கள், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு, குறிப்பாக ஒரு வயதுக்கும் குறைவான சிசுக்களுக்கு தீவிர நுரையீரல் தொற்றாக வெளிப்படலாம், கவனம். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு அதீத காய்ச்சலுடன் தீவிர நுரையீரல் தொற்றும் ஏற்பட்டால், அது நிம்மோனியா. பொதுவாக மூச்சு விடும்போது வயிற்றுப்பகுதி தசைகள் மேலே இழுக்காது. ஆனால், நிம்மோனியா வந்த குழந்தைகளுக்கு நெஞ்சுப்பகுதி தசைகள் சோர்வடைந்துவிடுவதால், வயிற்றுப்பகுதி தசைகளும் சேர்ந்து வேலை செய்யும். இதனால், குழந்தை குழந்தை மூச்சு விடுவதற்கு திணறும். இழுத்து இழுத்து மூச்சு விடும். இந்த நிலையில், குழந்தையின் மேல் சட்டையை நீக்கி, ஒரு நிமிடத்துக்கு 20 முதல் 40 முறைக்கு மேல் மூச்சு விடுகிறதா என கவனியுங்கள். அப்படியிருந்தால் குழந்தைக்கு 'நிம்மோனியா தொற்று இருக்கிறது; மூச்சுத்திணறல் பிரச்னையும் இருக்கிறது' என்று அர்த்தம். உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மம்ப்ஸ் இந்த வைரஸும் இருமல், தும்மல் வழியாகவே பரவும். இந்தத் தொற்றில் காய்ச்சலுடன் கழுத்தின் இருபுறமும் காதுகளுக்குக் கீழ் நெறிகட்டிக் கொண்டு வீக்கம் ஏற்படும். இது பெரும்பாலும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படுகிறது. Seasonal Fever மீசில்ஸ் எனும் தட்டம்மை இது மிக மிக எளிதாக சுவாசப்பாதை வழியாக பரவும். இந்தத் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இருமல், சளி, சிவந்த கண்கள், உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும், வாயினுள் நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போல வரும். இந்த நோய் வராமல் தடுப்பதற்காகத்தான் 9 மாத முடிவிலும் 16 முதல் 24 மாதங்களிலும் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போட வேண்டும் என்கிறோம். பன்றிக் காய்ச்சல்! இந்த நேரத்தில் பன்றிக்காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சற்று தீவிரத்துடன் வரலாம். இதைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இதை போட்டுக்கொள்ளலாம். காய்ச்சல் டெங்கு காய்ச்சல்! பருவமழை பொழியும் காலங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். விளைவு டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, காய்ச்சல் ஆரம்பிக்கும்போதே 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கடும் உடல்வலி, சோர்வு, சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, கண்களுக்குள் வலி, மூட்டுகளில் வலி ஆகியன இருக்கும். காலதாமதம் செய்யாதீர்கள்! டெங்குவைப் பொறுத்தவரை முதல் மூன்று நாள்கள் காய்ச்சல் இருந்து சரியாகும். அதன்பிறகுதான் சோர்வு, தூக்கம், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் குளிர்ந்துபோதல் போன்ற அறிகுறிகளைக் காட்டும். உடனே மருத்துவமனை சென்றுவிட வேண்டும். இல்லையென்றால், தட்டணுக்கள் குறைந்து உடலெங்கும் சிவப்பு புள்ளிகள், பல் ஈறுகளில் ரத்தம் வருதல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல் என உயிராபத்து வரை ஏற்படலாம். இவையெல்லாம் என்பது கடந்த சில வருடங்களாக எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அதனால், டெங்கு காய்ச்சல் விஷயத்தில் சற்று காலதாமதம் செய்யாதீர்கள். டெங்கு டெங்கு வராமல் தடுக்க இது வராமல் தடுக்க, வீட்டைச்சுற்றி நன்னீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைங்களுக்கு உடல் முழுக்க மறைக்கிறபடி ஆடை அணிவியுங்கள். கொசுவலைக்குள் தூங்க வையுங்கள். பெரியவர்களும் இதையே ஃபாலோ செய்யுங்கள். டெங்குவும் சுவாசப்பாதைத் தொற்றும் டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு, சுவாசப்பாதை வழியாக பரவுகிற வைரஸ் தொற்றும் ஏற்பட்டால் தீவிரமான காய்ச்சல் ஏற்படும். இவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். Protein வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி..? இந்த சீசனில் பரவும் வைரஸ் தொற்றுகள் இருமுவது மற்றும் தும்முவது மூலமே பரவுகின்றன. அதனால், தொற்று ஏற்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிருங்கள். இதன் மூலம் தொற்று பிறருக்குப் பரவுவதைத் தடுக்கலாம். அப்படியே செல்ல வேண்டிய சூழல் வந்தால், மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். கொரோனா வுக்கு செய்ததைப்போலவே இந்த நேரத்திலும் கைகளை சோப் அல்லது சானிட்டைஸர் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்துகொள்ளுங்கள். குழந்தைகளுக்கு வருகிற மழைக்கால காய்ச்சல்... காரணங்களும் தீர்வுகளும்! என்ன சாப்பிட வேண்டும்? பருவ மழை பொழிய ஆரம்பித்தவுடனே புரதச்சத்து நிரம்பிய முட்டை, மாமிசம், மீன், நட்ஸ், பயறு, கடலை, சோயா போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தியை நமக்குத் தரும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Dengue: மீண்டும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்... Do's & Don'ts..! மருத்துவர்களின் வழிகாட்டல்! கட்டாயம் இதை பின்பற்றுங்கள் பொதுவாக சீசனல் வைரஸ் காய்ச்சல் என்பது ஒரு வார காலம் வரை இருந்து, பின்னர் தானாக குறையும். பெரும்பாலும் உயிர் ஆபத்து ஏற்படாது. அதற்காக, எந்த காய்ச்சலாக இருந்தாலும் கைவைத்தியம் செய்துகொண்டு வீட்டிலேயே இருக்காதீர்கள். உடனடியாக மருத்துவரை நாடுங்கள். காய்ச்சல் வந்தால், உடலில் நீர்ச்சத்துக் குறையும் என்பதால் நிறைய நீர் அருந்துங்கள். தேவையென்றால், கொதிக்க வைத்து ஆறிய நீரில் ஓ.ஆர்.எஸ் கலந்து அருந்துங்கள். முக்கியமாக ஓய்வெடுங்கள்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா. டேக் கேர் மக்களே..! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 6 Sep 2025 7:39 am

செயற்கை இனிப்பு கொண்ட பானங்களை குடிப்பதால் மூளைக்கு வயதாகிறதா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பானங்களை உட்கொள்வது மூளையின் நினைவாற்றல் திறனை பாதிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லாவற்றுக்கும் செயற்கையான பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. அப்படி சந்தையில் கிடைக்கும் செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பொருள்களை உட்கொள்வதால் நினைவாற்றல் மற்றும் வார்த்தைகளை நினைவு கூறும் திறன்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக நியூராலஜி இதழில் வெளியாகியுள்ளது. beverages குறைந்த கலோரி சர்க்கரை ஒரு மாற்று வழியாக தற்போது பிரபலம் அடைந்தாலும், வழக்கமாக இதனை பயன்படுத்தும் போது ஆரோக்கியக் கேடுகள் விளைவிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆய்வின்படி அதிக அளவில் இதுபோன்று செயற்கையான இனிப்பூட்டிகள் உட்கொள்பவர்களில் 62 சதவிகிதம் பேருக்கு வேகமாக நினைவாற்றல் திறன் குறைவதாகவும், இது மூளையின் வயதை 1.6 ஆண்டுகள் அதிகரிப்பதற்கு சமம் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரேசிலில் சுமார் 13,000 பேர் கொண்ட குழுவிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அந்த தகவல் வெளியாகியுள்ளது. டயட் சோடா தவிர செயற்கை இனிப்பு கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் இது போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு குறிக்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு டீ குடிக்கலாமா? - இதனால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன? வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link :  https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடன் 5 Sep 2025 10:54 pm

Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விளக்கமும்

வேலைப்பளு காரணமாக, இன்றைக்கு பலரும் வார நாள்களில் குறைவாக தூங்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். இவர்கள் ரீல்ஸ் பார்த்து தூக்கத்தைக் கெடுத்துக்கொள்பவர்கள் அல்ல. இவர்கள் வேலை காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருபவர்கள்... இவர்கள் ஆஃபீஸ் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து அங்கும் சமைத்தல், துவைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், பாடம் சொல்லிக்கொடுத்தல் என அடுத்த ஷிஃப்ட் வேலை செய்பவர்கள். இப்படிப்பட்ட வேலைப்பளுவுடன் இருக்கிற ஆண்களாலும், பெண்களாலும் காலையிலும் சற்று நேரம் கூடுதலாக தூங்க முடியாது. அடுத்த நாள் வேலையை ஆரம்பிக்க வேண்டும். இதனால், இவர்களுக்கு வரக்கூடிய ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன; வாரநாள்களில் குறைகிற தூக்கத்தை வாரயிறுதிகளில் ஈடுகட்டினால் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன.? தூக்கவியல் மருத்துவர் என். ராமகிருஷ்ணன் விளக்குகிறார். Weekend Sleep வார நாள்களில் தூக்கக்குறைவால் அவதிப்படுகிறார்கள்! ''பெரியவர்கள் மட்டுமல்ல, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்கூட வார நாள்களில் தூக்கக்குறைவால் அவதிப்படுகிறார்கள். நம்முடைய உடலுக்கு தூக்கம் என்பது உணவு, தண்ணீர், காற்று போலவே அத்தியாவசியம். ஆனால், இன்றைய காலத்தில் வேலைப்பளு, படிப்பு தரும் அழுத்தம், தொழில் சுமைகள் காரணமாக வார நாள்களில் பலருக்கும் போதுமான தூக்கம் கிடைப்பதில்லை. அதனால்தான், பலரும் வாரயிறுதியில் தூங்கி, உடல் சோர்வை சரிசெய்ய முயற்சி செய்வார்கள். இதையே வாரயிறுதி தூக்கம் ‘Weekend Sleep’ என்று நாம் குறிப்பிடுகிறோம். 8 மணி நேரம், இருட்டு அறை, பகல் தூக்கம், கனவுகள்.. தூக்கம் தொடர்பான சந்தேகங்கள், தீர்வுகள்! தூக்கக் கடன்! பொதுவாக தொடர்ந்து தூக்கம் குறையும்போது ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய், பக்கவாதம் போன்ற வாழ்வியல் நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு 7 - 8 மணி நேர தூக்கம் அவசியம். ஒருநாளைக்கு தூங்க வேண்டிய நேரத்தைவிட குறைவாக தூங்கினால், உதாரணமாக தினமும் 5 மணி நேரம் தூங்குபவர்கள் 2 மணி நேரம் தூக்கக் கடனாளியாக மாறுகிறார்கள். இந்த 5 மணி நேர தூக்கம் ஐந்து நாட்கள் தொடர்ந்தால், தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 10 மணி நேரம் தூக்கக் கடன் இருக்கும். இந்த 10 மணி நேரத்தை பூர்த்தி செய்வதற்கு வாரயிறுதி தூக்கம் உதவியாக இருக்கும். Weekend Sleep Sleep: ஆழ்ந்து தூங்க என்ன செய்ய வேண்டும்? - தூக்கம் தொடர்பான A to Z தகவல்கள்! | In-Depth வாரயிறுதி தூக்கம் ஏன் அவசியம்? ஆய்வு ஒன்றில் (யூகே பயோபேங்க் - UK Biobank) 90,903 பேரை, சுமார் 14 ஆண்டுகள் கண்காணித்ததில், வாரயிறுதிகளில் அதிகமாக தூங்கியவர்களுக்கு, குறைவாக தூங்கியவர்களைவிட இதய நோய் ஏற்படும் ஆபத்து 20% குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இது அனைவருக்கும் பொதுவானது அல்ல. வார நாள்களில் குறைவான நேரம்‌ தூங்குபவர்கள், வாரயிறுதியில் நன்கு தூங்கி, இதய நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். வார நாள்களில் நன்றாக உறங்குபவர்கள், வாரயிறுதியிலும் 10 மணி நேரம் தூங்க வேண்டிய அவசியமில்லை'' என்று முடித்தார் டாக்டர் என். ராமகிருஷ்ணன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 5 Sep 2025 6:48 am

Diabetes: அடிக்கடி பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா?

பிறந்தநாள் விழா, திருமணம், அலுவலகக் கொண்டாட்டம் என கிட்டத்தட்ட எல்லா நிகழ்விலும் கேக், பிஸ்கட், சாக்லேட் போன்ற பேக்கரி ஐட்டம்ஸ் தவறாமல் இடம்பெயர்கின்றன. அதிக சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் நிரம்பியிருப்பதால், பேக்கரி ஐட்டம்ஸை அடிக்கடி உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தி, நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்குமா என சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம். Bakery Foods பேக்கரி உணவுப் பொருள்களை அடிக்கடி சாப்பிட்டால் நீரிழிவு வருமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு முன்னால், நீரிழிவு என்றால் என்ன, இன்சுலின் என்றால் என்ன என்பதை சிம்பிளாக சொல்லிவிடுகிறேன். அப்போதுதான் பேக்கரி உணவுகளை ஏன் அடிக்கடி சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு புரியும். நீரிழிவு நோய் என்றால் என்ன? இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று, உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் தேவையான ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவ்வாறு போதுமான அளவு குளுக்கோஸ் செல்களுக்கு கடத்தப்படாமல் இருக்கும் நிலையே நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய். இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்கு கடத்துவதற்கு இன்சுலின் தேவை. இன்சுலின் குறைந்தாலோ, அல்லது இன்சுலின் செல்களில் சென்று சேர்க்கக்கூடிய இன்சுலின் ரிசெப்டர்களின் அளவு குறைந்தாலோ, அல்லது அவை வேலை செய்யாவிட்டாலோ, நீரிழிவு ஏற்படும். diabetes இன்சுலின் என்றால் என்ன? நாம் உணவு உண்ணும்போது அதில் உள்ள மாவுச்சத்து செரிமானமடைந்து குளுக்கோஸாக மாறுகிறது. அந்த குளுக்கோஸ் இரத்தத்தில் கலந்து, உடலின் செல்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. இன்சுலினின் முக்கியப் பணி இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்குள் கடத்துவதுதான். நீரிழிவின் வகைகள்..! இரத்தத்தில் இன்சுலின் அளவு குறையும்போது, செல்களுக்கு குளுக்கோஸ் கடத்தப்படாமல், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இது டைப் 1 நீரிழிவு. சிலருக்கு இன்சுலின் சரிவர சுரந்தாலும் அல்லது அதிகமாக சுரந்தாலும், இன்சுலின் செல்களில் சென்று வேலை செய்யக்கூடிய இன்சுலின் ரிசெப்டர்கள் (Insulin receptors) சரிவர இயங்காமல் இருந்தால், ஏற்படுவது டைப் 2 நீரிழிவு. Bakery Items பேக்கரி உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால்... நாம் சாதாரணமாக உட்கொள்ளும் உணவில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும். அவை செரிமானமாகி, உடலுக்கு அத்தியாவசியமான குளுக்கோஸாக குடலில் உறிஞ்சப்படுகின்றன. நாம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது, அவை உடலுக்கு தேவையான குளுக்கோஸாக மாற சிறிது நேரம் எடுக்கின்றன. அப்போது உடலில் நிலையான குளுக்கோஸ் உறிஞ்சப்படும்; அதற்கேற்றபடி உடலில் இன்சுலின் உற்பத்தியாகும். இவை அனைத்தும் சாதாரணமாக நம் உடலில் நடைபெறும் இயல்பான செயல்கள். எப்போதாவது என்றால் பிரச்னை இல்லை! மாறாக, நாம் பேக்கரி உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போது, அவற்றில் உள்ள டைசாக்கரைடுகள் (Disaccharides) மற்றும் மோனோசாக்கரைடுகள் (Monosaccharides) எனப்படும் சிம்பிள் சுகர் வேகமாக செரிமானமாகி, இரத்தத்தில் உடனடியாக கலந்துவிடும். இதனால் இரத்தத்தில் திடீரென குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அந்த அதிகமான குளுக்கோஸை செல்களுக்குள் கடத்துவதற்கு இன்சுலின் உற்பத்தியும் அதிகரிக்கும். இது ஒருவேளை நடந்தால் பிரச்னையில்லை; ஆனால் தொடர்ந்து பேக்கரி உணவுகளை சாப்பிட்டால், இரத்தத்தில் திடீரென குளுக்கோஸ் அளவு அதிகரித்து, அதனால் இன்சுலின் உற்பத்தி அளவும் அதிகரிக்கும். உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தாலும், குளுக்கோஸ் வழக்கமான அளவு மட்டுமே செல்களுக்குள் செல்லும். இதுவே நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். டாக்டர் ராஜேஷ். `டிப்ரெஷன்தான் வில்லன்!' நீரிழிவு நோயாளிகளை டிப்ரெஷன் எப்படி பாதிக்கிறது? தினமும் பேக்கரி உணவுகள் சாப்பிட்டால்... தினமும் பேக்கரி உணவுகள் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்பவர்களுக்கும், உடல் உழைப்புக்கான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும், சாதாரண வளர்சிதை மாற்றம் மூலமாகவே எனர்ஜி எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் இவற்றை எதையும் செய்யாமல் இருப்பவர்களுக்கும், சில மரபுவழி காரணங்களாலும், அதிக உடல் எடை அல்லது மெட்டபாலிக் சிண்ட்ரோம் கொண்டவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதேபோல், எண்ணெய் மிகுந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? பேக்கரி உணவுகளுக்குப் பதில் வேறு என்னென்ன சாப்பிடலாம்? பேக்கரி உணவுகளுக்குப் பதிலாக காய்கறிகள், பழங்கள், சாலட், ஃபைபர் பிஸ்கட்டுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதிக இனிப்புகளை அடிக்கடி சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உட்கார்ந்த இடத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் சிஸ்டம் ஒர்க் செய்பவர்கள், பேக்கரி உணவுகளைச் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை கொடுப்பதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். ஒரு நாளில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வேகமாக நடப்பதும், உடற்பயிற்சி செய்வதும் நல்லது. பேக்கரி உணவுகளை எப்போதாவது சாப்பிடுவது உடலுக்கு கேடு செய்யாது; நீரிழிவு நோயும் வராது,'' என்கிறார் டாக்டர் ராஜேஷ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 4 Sep 2025 7:04 am

யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256

''வீடு தாண்டி வெளியிடங்களில், புதுநபர்களோட செக்ஸ் வைத்துக்கொள்வது சகஜமாகிக்கொண்டே இருக்கிறது. இதெல்லாம் இப்போதுதான் இருக்கிறதா என்றால், இது எல்லா காலத்திலும் இருந்ததுதான். ஆனால், பார்ட்டி, மது, போதை, பாதுகாப்பில்லாமல் புதுநபர்களுடன் செக்ஸ் என இப்போது அதிகரித்திருக்கிறதை அனுபவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். செக்ஸ் புதுநபர்களுடன் ஏன் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது? 'ஒரு த்ரில்லுக்காக, ஒரு சேஞ்சுக்காக புது இடத்துல புது நபரோட செக்ஸ் வெச்சுக்கிட்டேன் டாக்டர். எனக்கு ஏதாவது பால்வினை நோய் வந்திடுமா' என அச்சப்படுபவர்கள் ஒருபக்கம்... இன்னொருபக்கம் தாம்பத்திய வாழ்க்கை போரடித்துவிட்டதால், வெளியிடங்களில், புதுநபருடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். இது எந்தளவுக்கு ஆபத்தாக முடியலாம் என்பதை அறியாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்'' என்கிற சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், வெளியிடங்களில், புதுநபர்களுடன் யாரெல்லாம் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது; ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதை விளக்கினார். இடங்களை மாற்றுங்கள். செக்ஸ் சுவாரஸ்யமாக இருக்கும்! ''ஒரே அறைக்குள்ளே ஒரே மாதிரி செக்ஸ் செய்தால், தம்பதியருக்குள் எத்தனை காதல் இருந்தாலும் போரடித்துவிடும். அதனால், ஒருநாள் பெட்ரூமில், இன்னொரு நாள் ஹாலில், இன்னொரு நாள் பாத்ரூம் ஷவருக்கு கீழே என இடங்களை மாற்றுங்கள். செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். அல்லது புது இடங்களில், ஹோட்டல் அறைகளில் செக்ஸ் செய்யும்போது தம்பதியருக்கு த்ரில்லாக இருக்கும். இது இயல்பான ஒன்றுதான். த்ரில்லுக்காக, மாற்றத்துக்காக புது நபர்களுடன் செக்ஸ் கொள்வது பாதுகாப்பு கிடையாது. தாம்பத்தியம் அதிகப்படியான எக்சைட்மென்ட் காரணமாக... நடுத்தர வயதுகளில் இருப்பவர்கள் அல்லது வயதானவர்கள் அல்லது ஏற்கெனவே ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் புது இடங்களில், புது நபர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான எக்சைட்மென்ட் காரணமாக மனப்பதற்றமும், இதயத்துடிப்பு அதிகரிப்பும் ஏற்படலாம். இதனால், முதல்முறை ஹார்ட் அட்டாக் வருவதற்கோ அல்லது ஏற்கெனவே வந்தவர்களுக்கு இரண்டாவது முறை ஹார்ட் அட்டாக் வருவதற்கோ வாய்ப்பிருக்கிறது. வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதா? -நிபுணர் பதில் | காமத்துக்கு மரியாதை -254 முழுமையாக என்ஜாய் செய்துவிட வேண்டும் என்பதற்காக... ஒருசிலர், இப்படி வெளியிடங்களில் புது நபருடன் உறவுகொள்வதில் எந்தப் பின்னடைவும் வந்துவிடக்கூடாது; அந்த அனுபவத்தை முழுமையாக என்ஜாய் செய்துவிட வேண்டும் என்பதற்காக, வயாகரா மாத்திரை எடுத்துக்கொள்வார்கள். இது சிலருக்கு பிரச்னையாகி என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள். Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing சிலருக்கு அரிதிலும் அரிதாக... தவிர, ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக எங்கோ ஒருசிலருக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது மனப்பதற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது அவர்களுக்கு உடனே டாய்லெட் செல்கிற அளவுக்கு அசெளகர்யத்தைக் கொடுக்கும். சிலருக்கு அரிதிலும் அரிதாக ஹார்ட் அட்டாக்கும் வரலாம். அதனால், வெளியிடங்களில், புதுநபர்களுடன் செக்ஸை தவிர்ப்பதே நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 3 Sep 2025 6:00 pm

Doctor Vikatan: 10 வயது குழந்தைக்கு மலச்சிக்கல்; காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என்னுடைய 10 வயதுக் குழந்தைக்கு  மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வர என்ன காரணம், அதை எப்படிச் சரிசெய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் உணவுப்பழக்கம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது மிகவும் சகஜமாகப் பார்க்கிற விஷயமாக இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம், அவர்களது உணவுப்பழக்கம். நார்ச்சத்து அறவே இல்லாத அல்லது நார்ச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பாதிப்பு வரும். காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள் போன்றவை குழந்தைகளின் தினசரி உணவுப்பட்டியலில் இல்லை என்றால், அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். பால், தண்ணீர் குடிக்கும் அளவு பொதுவாகவே குழந்தைகளுக்கு அம்மாக்கள் நிறைய பால் கொடுப்பது வழக்கம். அதாவது தினமும் 300 முதல் 400 மில்லி பால் கொடுக்கிறார்கள்.  அதைவிட அளவு தாண்டும்போது, அதுவும் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு காரணமாகலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை தண்ணீர் குடிக்கும் அளவு குறைவாக இருக்கும். தண்ணீர் தவிர்த்து, சூப், ஜூஸ் போன்றவற்றையும் அதிகம் குடிக்க மாட்டார்கள்.  உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதுவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.  பால் கொடுக்கும் அளவைக் கண்காணிக்க வேண்டும். Doctor Vikatan: நீண்ட நாள்களாகத் தொடரும் மலச்சிக்கல்.. மூலநோயாக மாறுமா, தீர்வு என்ன? குழந்தைகளுக்கு கொடுக்கும் சப்ளிமென்ட்டுகளும் சில நேரங்களில் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு டாய்லெட் டிரெய்னிங் மிக முக்கியம்.  பள்ளிக்கூடங்களில்  கழிவறை பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். இயற்கை உபாதையை அடக்குவதாலும் மலச்சிக்கல் வரலாம். எனவே, குழந்தைகளின் உணவில் போதுமான நார்ச்சத்து இருக்க வேண்டும். ஆப்பிள், கொய்யா போன்று தோலுடன் சில பழங்களைக் கொடுக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக்க வேண்டும். ஏசி அறையில் இருந்தாலோ, குளிர் காலத்திலோ தாகம் எடுக்காது. அந்தத் தருணங்களில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொடுத்து, அதை காலி செய்யப் பழக்கலாம். பால் கொடுக்கும் அளவைக் கண்காணிக்க வேண்டும். அது அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 3 Sep 2025 9:00 am

Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் மருத்துவர்

பள்ளிக்கூடத்தில் அமீபா என்கிற ஒரு செல் உயிரியைப் பற்றி நாம் எல்லோருமே படித்திருப்போம். அதன்பிறகு உயிரியல் மாணவர்கள் அதைப்பற்றி விளக்கமாகப் படித்திருப்பார்கள். அதற்கு மேல் அமீபா பற்றி நாம் யாருமே யோசித்திருக்க மாட்டோம். ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் கேரளாவில் தொடர்கிற 'மூளை தின்னும் அமீபா' பற்றிய செய்திகளாகவே இருக்கிறது. சென்ற வருடம் 9 பேர் இந்த அமீபா தொற்று காரணமாக கேரளாவில் மரணமடைந்தார்கள். இந்த வருடம் இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. Brain Eating Amoeba ஏன் இந்தப் பெயர்? இது 'நிக்லேரியா ஃபவுலேரி' ( Naegleria fowleri) எனப்படும் அமீபா வகையைச் சேர்ந்தது. மருத்துவர்கள் இதை 'பிரைமரி அமீபிக் என்செஃபலைட்டிஸ்' (Primary Amoebic Encephalitis) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். அதனால், இதை 'மூளை தின்னும் அமீபா' என்கிறார்கள். இதை ஆஸ்திரேலியாவில் 1965-ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறிந்தார்கள். எங்கெல்லாம் இருக்கும் மூளை தின்னும் அமீபாக்கள்? வாழும் இடத்தைப் பொறுத்து, 8 மைக்ரோமீட்டர் முதல் 15 மைக்ரோமீட்டர் வரையான அளவில் இந்த அமீபா காணப்படுகிறது. பொதுவாக இவை வெதுவெதுப்பான நன்னீரில் அல்லது அழுக்கான ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில், குறிப்பாக குறைந்த அளவு நீர் மட்டம் கொண்ட நீர்நிலைகளில் வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல், முறையாக குளோரின் கலந்து கிருமி நீக்கம் செய்யப்படாத நீச்சல் குளங்கள், குழாய்த் தண்ணீர், கிணற்று நீர், வாட்டர் தீம் பார்க் நீர்விளையாட்டு பகுதிகள், ஸ்பா போன்ற இடங்களிலும் வாழக்கூடும். சுத்தமற்ற வெதுவெதுப்பான நீர்நிலைகள்தான் ‘மூளைத் தின்னும் அமீபா’ வாழ்வதற்கு ஏற்ற இடம். 115 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்கூட இந்த அமீபா உயிர்வாழ முடியும். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குழாய்த் தண்ணீர், நீச்சல் குள நீர் மற்றும் உப்புக் கடல் நீரில் இந்த அமீபா வாழ முடியாது என்று ApolloHospital.com தெரிவிக்கிறது. Brain Eating Amoeba மனிதர்களுக்குள் எப்படி நுழைகிறது? மூளைத் தின்னும் அமீபா மனிதர்களுக்குள் எவ்வாறு நுழைகிறது? அது நுழைந்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே பகிர்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா. அறிகுறிகள்..! இந்த அமீபாக்கள் வாழும் நீர்நிலைகளில் மூழ்கி குளிக்கும்போது, அந்த நீர் மூக்குக்குள் சென்று விடும். அப்படி சென்றுவிட்டால், மூக்கின் உள்ளே உள்ள ‘கிரிப்ரிஃபார்ம் பிளேட்’ (Cribriform Plate) எனப்படும் எலும்பில் இருக்கும் சிறு சிறு ஓட்டைகள் வழியாக, அது மூளை நோக்கி செல்கிறது. இதன்பிறகு, தீவிரமான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, குமட்டல், வாந்தி ஆகியவை ஆரம்பமாகும். அடுத்த பத்து நாள்களுக்குள், மூளை காய்ச்சலின் அறிகுறிகளான பின்கழுத்து இறுக்கம், தலைச்சுற்றல், வலிப்பு, கவனமின்மை, மூர்ச்சை, கோமா, இறப்பு ஆகியவை நிகழ்ந்துவிடும். Brain Eating Amoeba கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம்! மூளைத் தின்னும் அமீபா தொற்று அரிதானது என்பதாலும், இதன் அறிகுறிகள் ‘பாக்டீரியா’ எனும் மற்றொரு ஒற்றைச் செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சலைப் போன்றே இருப்பதாலும், பிரச்சினைக்குக் காரணம் மூளைத் தின்னும் அமீபாதான் என்பதை கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம். இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களைத் தின்று முடிப்பதற்கு முன்பே விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. அதனால்தான் இந்த அமீபா தொற்று ஏற்பட்டால் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதம் என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. இதற்கு சிகிச்சை இருக்கிறதா, பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பதையும் அவர் விளக்கினார். தமிழ்நாட்டில் ஒரு நபரை காப்பாற்றியிருக்கிறார்கள்! மூளைத் தின்னும் அமீபா தொற்று, பாக்டீரியா தொற்று போலத் தோன்றினாலும், பாக்டீரியா கொல்லிகள் என அழைக்கப்படும் ஆன்டிபயாட்டிக்குகளுக்கு (Antibiotics) அடங்காது. இதற்கு, கோவிட் காலத்தில் ஏற்பட்ட கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு பயன்படுத்திய ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ (Amphotericin B) சிகிச்சை பயனளிக்கிறது. இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உடனடியாகக் கணித்து, மூளைத் தண்டுவட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ சிகிச்சையை வழங்கினால், பாதிக்கப்பட்டவர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் 47 வயதான ஒரு நபரை இந்த முறையில் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் . அமீபா சரியான எண்ணிக்கை தெரிவதற்கு வாய்ப்பில்லை! வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், இதுவரை உலகளவில் 500-க்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 50-க்கும் குறைவான நபர்கள் இறந்ததாக மருத்துவ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், மூளைத் தின்னும் அமீபாவால் இறந்தவர்களை ‘மூளைக்காய்ச்சலால் இறந்தவர்கள்’ எனப் பதிவுசெய்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை நமக்குத் தெரியாமல் போகும். Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! பொது நீர்நிலைகளில் குளிக்காமல் இருங்கள்! மற்றபடி, இந்த அமீபா தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. அசுத்தமான தண்ணீர் குடிப்பதாலும் பரவாது. நீர்நிலைகளிலும், நீச்சல் குளங்களிலும் குளிக்கும் அனைவருக்கும் இந்த அமீபா தொற்று ஏற்படுவதில்லை. மிக அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது; அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் அமைகிறது. அதனால், இந்த அமீபா குறித்து அச்சம்கொள்வதைவிட, பொது நீர்நிலைகளில் மூழ்கி குளிப்பதைத் தவிர்க்கவும். நீச்சல் குளங்கள் முறையாக குளோரினேட் செய்து கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளனவா என உறுதி செய்து கொண்ட பிறகே அதற்குள் இறங்குங்கள். நீச்சல் பயிற்சி செய்யும் போது nose clip (நோஸ் க்ளிப்) அணிந்துகொள்ளுங்கள். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும் பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால்... ஒருவேளை, இந்த விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று 'பொது நீர்நிலையில் எத்தனை நாள்களுக்கு முன்னால் குளித்தீர்கள்' என்பதை தெரியப்படுத்துங்கள். உடனடியாக நோயைக் கண்டறிந்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 3 Sep 2025 6:55 am

பூச்சிக் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? - அவசர கால மருத்துவர் ஆலோசனை

வெயிலும் மழையும் மாறி மாறி வரும் சீசனில் பாம்புக்கடிகளைப் போலவே பூச்சிக்கடிகளும் அதிகரித்து விட்டது. இதனால் சிலர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்த 19 வயது சர்மிளா, சில மணி நேரத்துக்கு முன்னால் பூச்சிக் கடித்து இறந்திருக்கிறார். எந்த பூச்சி அல்லது எந்த வண்டு விஷமற்றது, லேசான விஷமுள்ளது, கதண்டுபோல உயிர் ஆபத்தையே ஏற்படுத்தக் கூடியது என்பது இன்றைக்கு பலருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாகவே பூச்சிக்கடி ஒவ்வாமை காரணமாக சில உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அது பூச்சியோ அல்லது வண்டோ அல்லது கதண்டு என்கிற குளவியோ எது கடித்தாலும் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என அவசரகால மருத்துவர் சாய் சுரேந்தர் விளக்கமாக சொல்கிறார். பூச்சிக் கடி முதலிடத்தில் இருக்கும் பூச்சி! மழையும் வெயிலும் மாறி மாறி வருகிற காலகட்டத்தில் பூச்சிக்கடிகளை விட அதிகப்படியாக நான் உங்களை எச்சரிக்க விரும்புவது கொசுக்கடிகளைப்பற்றி தான். இந்த காலகட்டத்தில் இலைகள் எல்லாம் உதிர்ந்து போய் கிடக்கின்றன. அவற்றில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மக்களை அதிகமாக கடிக்கின்றன. விளைவு டெங்கு காய்ச்சல் தற்போது அதிகரித்துவிட்டது. மனிதர்களைக் கொல்வதில் மற்ற எல்லா உயிர்களையும்விட பூச்சியினத்தைச் சேர்ந்த கொசுக்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றன. அதனால் கொசுக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். இனி பூச்சிக்கடிகளைப் பற்றி சொல்கிறேன். சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள்! பூச்சி மற்றும் வண்டுகளை பொறுத்தவரை எது நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்; எது நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாது; யாருக்கு ஒவ்வாமை ஏற்படலாம் என்கிற விஷயங்கள் எல்லாம் பிரச்னை வரும் வரையில் நமக்கு தெரிவதில்லை. அதனால், ஒரு பூச்சியோ அல்லது வண்டோ கடித்து விட்டால் அந்த இடத்தை உடனே சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள். டாக்டர் சாய் சுரேந்தர் ஒவ்வாமை ஏற்படலாம்! பூச்சி அல்லது வண்டு கடித்த இடத்தில் நடுவில் ஒரு புள்ளி அல்லது சிறு கொப்புளம் அதை சுற்றி சிவப்பானத் திட்டுக்கள் இருந்தால், உடனே அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு சென்று விடுங்கள். முடிந்தால் எமர்ஜென்சி மருத்துவரைக்கூட பார்த்து விடுங்கள். அங்கே உங்களுக்கு உடனே ஒவ்வாமை வராமல் தடுப்பதற்கான தடுப்பூசியைப் போட்டு விடுவார்கள். சிலருக்கு உடல் முழுக்க வீக்கங்கள் வரலாம். சிலருக்கு அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனக் கூடிய உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமை ஏற்பட்டு விடலாம். இதை மருத்துவர்கள் நாங்கள் கண்டறிந்து உடனே அதை தடுப்பதற்கான ஊசியை போட்டு விடுவோம். கடிபட்ட இடத்தில் மஞ்சள் அல்லது சுண்ணாம்பைத் தடவிக்கொண்டு, இன்னுயிரை இழக்காதீர்கள். கானாக்கடிக்கான சிகிச்சையை வழங்குவோம்! தேள், கதண்டு போன்ற விஷப்பூச்சிகளை நம்மால் அடையாளம் காண முடியும். அப்படிப்பட்டவை கடித்தால் அதற்கான சிகிச்சையை அளிப்போம். ஒருவேளை என்னப் பூச்சி கடித்தது என்பது தெரியவில்லை என்றால் கானாக்கடிக்கான சிகிச்சையை வழங்குவோம். வீட்டுத்தோட்டம் Snake: பாம்பு வீட்டுக்கு வருவது ஏன்? ஷூக்குள்ளே, மாடித்தோட்டத்துக்குள்ளே போகுமா? -நிபுணர் விளக்கம்! வீட்டுத் தோட்டத்தில் புதுவகை பூச்சியா? மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டத்தில் தோட்டம் போடுவதில் பலரும் ஆர்வமாக இருக்கிறோம். அப்படி தோட்டம் வைத்திருப்பவர்கள் அதை சுத்தமாக வைத்திருங்கள். குறிப்பாக, மழையும் வெயிலும் மாறி மாறி வருகிற இந்த சீசனில் தோட்டத்தில் குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவை பூச்சிகள், வண்டுகள் ஏன் பாம்பு, தேள்கூட வந்து ஒளிவதற்கான இடமாக இருக்கிறது. தோட்டத்தில் நீங்கள் நடப்பதற்கு சிமென்ட்டில் பாதை போட்டு வையுங்கள். வெறும் காலில் நடக்காதீர்கள். ஒருவேளை ஏதாவது புது வகையான பூச்சி அல்லது வண்டை வீட்டுத் தோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், அதை போட்டோ எடுத்து கூகுளிடம் கேட்டால், அது விஷம் உள்ளதா அல்லது விஷமற்றதா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை அது விஷம் உள்ளதாக இருந்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுங்கள். பழிவாங்குமா கதண்டுகள்; ஏன் கடிக்கின்றன; கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? | InDepth கை வைத்தியம் செய்யலாமா? சில வண்டுகள் காதுக்குள் சென்று விட்டால் காது கேளாமையைகூட ஏற்படுத்தி விடும் என்பதால், இப்படியொரு பிரச்னை வந்தது என்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவரை நாடுங்கள். மருத்துவர்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில் அல்லது மருத்துவமனை வெகு தூரத்திலிருந்த காலகட்டத்தில் கை வைத்தியங்களை நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள். அதில் சில உதவியும் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு தெருவுக்கு ஒரு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதனால், கை வைத்தியம் செய்து கொள்கிறேன் என உங்கள் உயிருக்கோ அல்லது உங்கள் குழந்தைகளின் உயிருக்கோ அவசியமற்ற பிரச்னைகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்’’ என்கிறார் டாக்டர் சாய் சுரேந்தர். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 2 Sep 2025 7:13 am

Doctor Vikatan: ஆசிரியர் வேலை, சாக்பீஸ் பயன்பாட்டால் தொண்டை எரிச்சல், வறட்டு இருமல்; தீர்வு என்ன?

Doctor Vikatan: நான் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். எனக்கு அடிக்கடி தொண்டை எரிச்சலும் வறட்டு இருமலும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சாக்பீஸ் அலர்ஜி என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்குமா? இதற்கு தீர்வு சொல்லுங்கள். பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன். தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை உங்களுடைய தொண்டை எரிச்சல் மற்றும் வறட்டு இருமல் பிரச்னைக்கு, சாக்பீஸ் அலர்ஜி நிச்சயம் ஒரு காரணமாக இருக்கும்.  மூடப்பட்ட அறை அல்லது  வகுப்பறை சூழலில் தொடர்ந்து சாக்பீஸ் பயன்படுத்தும்போது, அதிலிருந்து வெளிப்படும் சாக்பீஸ் துகள்கள் கண்டிப்பாக தொண்டை எரிச்சலை ஏற்படுத்தலாம். அதன் விளைவாக மூக்கு சிவந்துபோவது, நீர் வடிதல் போன்றவை இருக்கலாம். சாக்பீஸ் துகள்கள் உள்ளே போகும்போது சிலருக்கு அலர்ஜி ஏற்படும். அதனால் ஆஸ்துமா, வீஸிங்  போன்றவை வரலாம். சிலருக்கு இது தற்காலிகமாக பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சரியாகிவிடும். அதுவே நீண்டகாலமாக இதுபோன்ற சூழலில் இருப்பவர்களுக்கு, இன்டர்ஸ்ட்ஷியல் லங் டிசீஸ் (Interstitial Lung Disease) என்ற பிரச்னை வரலாம். நுரையீரலை பாதிக்கும் இந்தப் பிரச்னையிலும் மூச்சுத் திணறல் மற்றும் வறட்டு இருமல் ஆகியவை வரலாம். சாக்பீஸ் உபயோகம் தவிர்க்க முடியாது என்ற கட்டத்தில், அந்த வகுப்பறையில் ஜன்னல்கள் இருக்க வேண்டும், அவை திறந்திருக்க வேண்டும். வகுப்பறையில் சாக்பீஸ் பயன்பாடு Doctor Vikatan: நாள்பட்ட நுரையீரல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? வகுப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஈரமான சாக்பீஸை பயன்படுத்துவதும் தீர்வாக இருக்கும். வாய்ப்பிருந்தால், சாக்பீஸ் பயன்பாடு இல்லாத போர்டு உபயோகிக்க முடியுமா என்று அதற்கான மாற்றுவழிகளுக்கு சாத்தியமிருக்கிறதா என்று பாருங்கள். சாக்பீஸ் பயன்பாட்டால் எல்லோருக்கும் பாதிப்பு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால், மூச்சுத்திணறல் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். நுரையீரல் சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் நுரையீரல் செயல்திறனுக்கான பரிசோதனையைச் செய்வார்கள். சிலருக்கு சிடி ஸ்கேன் தேவைப்படலாம். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 1 Sep 2025 9:00 am

Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?

’’‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பழமொழி. எலும்பு வலிமை தேவைப்படும் அனைவருக்குமே எள்ளைப் பரிந்துரைக்கலாம். மூட்டுத் தேய்மானத்தைத் தடுப்பதற்கும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருப்பதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளைச் சீராக்குவதற்கும் உடலில் எண்ணெய்ச்சத்து அவசியம். எண்ணெய் வித்தின் தாவர வகையைச் சேர்ந்த எள், இதற்கு உதவிபுரியும். இன்று வழக்கத்திலிருக்கும் நல்லெண்ணெய்யின் அடிப்படையே எள்தான். sesame seeds இது, ஒருகாலத்தில் அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பிடித்திருந்தது. இன்றோ, பலரும் உடல் உஷ்ணத்தைக் காரணம் காட்டி, அன்றாட உணவில் அதைத் தவிர்க்கிறார்கள். அப்படியானவர்கள்கூட, சுவையான எள் துவையலைத் தட்டிக்கழிக்க முடியாது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் ஆர். பாலமுருகன், எள் துவையலின் பலன்கள் பற்றி விவரிக்கிறார். ரெசிபி செய்முறை சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார். தேவையானவை: எப்படி செய்வது? கறுப்பு எள் அல்லது வெள்ளை எள் : கால் கப் தேங்காய்க்கீற்று : 4 காய்ந்த மிளகாய் : 4 கட்டிப் பெருங்காயம் : சிறு துண்டு உளுத்தம்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் : ஒரு டீஸ்பூன் உப்பு : தேவையான அளவு தண்ணீர் : சிறிது புளி : சிறிய கோலிக்குண்டு அளவு எள் துவையல் செய்முறை: எள்ளைச் சுத்தம் செய்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அதில் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு சிறிது நேரம் வறுக்கவும். உளுத்தம்பருப்பு சிவந்ததும் தேங்காய் துண்டுகள், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஆறியதும், எள் மற்றும் தண்ணீர் (சிறிதளவு) சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுத்தால், எள் துவையல் ரெடி. ஈஸ்ட்ரோஜென் சமச்சீரின்மை உள்ள பெண்களா நீங்கள்? பலன்கள்... பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜென் குறைந்தால், ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். இதன் காரணமாக மாதவிடாயில் பல சிக்கல்கள் ஏற்படும். இது, ஈரல் பாதிப்புகள், இதயக் கோளாறு, ஹார்மோன் சமச்சீரின்மை எனப் பல பிரச்னைகளை உருவாக்கும். எனவே, மாதவிடாய் பிரச்னையுள்ள பெண்கள், முதல் நிலையிலேயே இது போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்னை உள்ளவர்கள், மெனோபாஸ் கடந்தவர்கள் அனைவருக்கும்கூட இந்த உணவு உதவும். sesame seeds பீரியட்ஸ் ரத்தம் அதிகமாக வெளியேறுமா? எள் சாப்பிடுவதால், மாதவிடாயின்போது ரத்த வெளியேற்றம் அதிகமாகுமோ என்ற பயம் சிலருக்கு இருக்கும். துவையலில் சேர்க்கப்பட்டிருக்கும் தேங்காயும் உளுத்தம்பருப்பும் எள்ளின் உஷ்ணத் தன்மையைக் குறைக்கும் என்பதால், அந்தப் பயம் அவசியமில்லை. Dry Grapes: குட்டியூண்டு பழம்... அதுக்குள்ள இவ்ளோ நன்மைகளா?! | Health வயிறு பிரச்னை சரியாகும் வயிற்றுப்புண், புளித்த ஏப்பப் பிரச்னை உள்ளவர்கள் ஏதேனும் ஒரு கஞ்சி வகையோடு எள் துவையலைச் சேர்த்துக்கொண்டால், அதுவும் சரியாகும். Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! எலும்பு வலுவாகும் எலும்பு மூட்டுப் பிரச்னைகளைத் தடுப்பதற்கும், எலும்பை வலுவாக்குவதற்கும் உதவும் என்பதால், பெண்கள் மட்டுமல்ல அனைவருமே எள் துவையலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 1 Sep 2025 6:52 am

Doctor Vikatan: மாத்திரை போட்டால் மட்டுமே வரும் மாதவிடாய், தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் வருவதில் சிக்கல் இருக்குமா? நான் 80 கிலோ எடை இருக்கிறேன். வயது 35. எனக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் சரியாக வருவதில்லை. மாத்திரை எடுத்துக்கொண்டால் மட்டுமே வரும், இல்லாவிட்டால் வராது. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி மாதவிடாய் பிரச்னைகளுக்கு உடல்பருமன் மிக முக்கியமான காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வயதையும் எடையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீங்கள் உடல்பருமன் பிரிவில்தான் வருவதாகத் தோன்றுகிறது.  உடல் பருமன் பிரச்னை என்பது மாதவிடாய் சுழற்சியை மாற்றுவது மட்டுமன்றி, தலை முதல் பாதம் வரை பல பிரச்னைகளுக்கும் காரணமாகும். இதிலிருந்து விடுபட நீங்கள் முதலில் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும். பகலில் தூங்குவதையும் அதிக உணவுகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்ப்பது, ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்ப்பது, செயற்கை நிறமி மற்றும் மணம் சேர்க்கும் உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். யோகாவும்  உதவும். உடலை இளைக்கச் செய்கிற உணவுகளைத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகள் தவிர்த்து, ஆவியில் வெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலை உணவுக்கு முளைக்கட்டிய தானியங்கள், அவல் போன்றவற்றை 50 கிராம் அளவு எடுத்துக்கொள்ளலாம். கூடியவரையில் சமைக்காமல் சாப்பிடுவது சிறந்தது.   உடல் பருமன் பிரச்னை Doctor Vikatan: இளம் பெண்களுக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ்; திருமணமானால் சரியாகிவிடுமா? உங்களுக்கு தைராய்டு பாதிப்பு இருக்கிறதா என்று டெஸ்ட் செய்து பார்க்கவும். ஒருவேளை இருந்தால் அதற்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். தைராய்டை குணப்படுத்தாமல் மாதவிடாய் பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கக்கூடாது. மாதவிடாயை முறைப்படுத்தக்கூடிய இயற்கையான மருத்துவமுறைகள் சித்தாவில் உள்ளன. இரண்டு பல் மலைப்பூண்டை, ஒரு கப் பாலில் வேகவைத்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். கறிவேப்பிலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் காலையில்  சாப்பிடுங்கள். முருங்கைக்கீரை, தினம் 2 எள்ளுருண்டைகள், கல்யாண முருங்கையில் அடை, தோசை போன்றவற்றை சாப்பிடுங்கள். மலைவேம்புச் சாற்றை மாதத்தில் மூன்று முறை 15 முதல் 20 மில்லி அளவுக்கு காலையில் குடிக்கலாம். கழற்சிக்காய் என்று சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதன் விதைகளை தினம் 5 என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தாலும் மாதவிடாய் சுழற்சி முறைப்படும். இவையெல்லாம் அடிப்படையான ஆலோசனைகள்.   மருத்துவரை அணுகினால், உங்களுக்குத் தேவைப்படுகிற பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். அவற்றில் தெரியும் விஷயங்களுக்கேற்பவும் உங்களுக்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.  எடைக்குறைப்பு, உணவுக்கட்டுப்பாடு, மருத்துவ சிகிச்சை என எல்லாம் சேரும்போது உங்கள் மாதவிடாய் சுழற்சி முறைப்படும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 31 Aug 2025 9:00 am

Doctor Vikatan: 40 வயது, இரண்டாம் திருமணம், பல வருடங்களாக குழந்தையில்லை; இனி சாத்தியம் ஆகுமா?

Doctor Vikatan: நாங்கள் இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்கள். நான்  40 வயது பெண். எனக்கு கருத்தடை ஊசிபோட்டு இருக்கிறார்கள். 18 வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை. எங்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை வேண்டும்.  அதற்கு சாத்தியம் இருக்கிறதா? -Jothi basu, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் உங்கள் கேள்வியில் சில விஷயங்களில் தெளிவில்லை. 40 வயது என்கிறீர்கள், குழந்தை வேண்டும் என்கிறீர்கள், கருத்தடை ஊசி போட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். ஒன்றுக்கொன்று முரணாகத் தெரிகிறது.  உங்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்குமானால், முதலில் கருத்தடை முறைகளை நிறுத்த வேண்டும்.  கருத்தடை முறையை நிறுத்தினால்தான் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு மீண்டும் நிகழும். அதன் பிறகு கருத்தரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகும். உங்கள் கணவரின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. உங்களுக்கு 40 வயது என்பதால் ஒவேரியன் ரிசர்வ் எனப்படும் முட்டை இருப்பு குறைந்துகொண்டே வரும். அதை 'ஏ.எம்.ஹெச்' (Anti-Mullerian Hormone) எனப்படும் டெஸ்ட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  அதை வைத்து உங்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக 35 வயதுக்குப் பிறகு இந்த முட்டைகளின் இருப்பு குறையத் தொடங்கும்.  40 வயதில் அது இன்னும் குறைந்திருக்கும். இயற்கையான முறையில் குழந்தை பெறும் முயற்சிக்கு பதிலாக ஐவிஎஃப் சிகிச்சையை நீங்கள் நாடுவது சிறப்பு. Doctor Vikatan: கருமுட்டைகளின் தரத்தை டெஸ்ட்டில் தெரிந்துகொள்ள முடியுமா? 18 வருடங்களாக உங்களுக்குக் குழந்தை இல்லை என குறிப்பிட்டுள்ளீர்கள். 18 வருடங்கள் என்பது நீண்டகாலம் என்பதால், உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பரிசோதனைகள் அவசியம். ஹார்மோன் டெஸ்ட், ஸ்கேன், விந்தணுப் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை என எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இயற்கையான முறையில் குழந்தை பெறும் முயற்சிக்கு பதிலாக ஐவிஎஃப் சிகிச்சையை நீங்கள் நாடுவது சிறப்பு. உங்களுடைய வயது இந்த விஷயத்தில் தடையாக இருக்க வாய்ப்புள்ளதால், கருமுட்டைகளின் தரம் சோதிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் கருமுட்டை தானம் பெற வேண்டி வரலாம். எனவே, இனியும் தாமதிக்காமல் முதல் வேலையாக குழந்தையின்மை சிகிச்சை மருத்துவரை அணுகுங்கள். அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை உடனே செய்யுங்கள். இயற்கை முறையில் குழந்தைபெற முயற்சி செய்ய நினைத்து, இன்னும் சில வருடங்களை வீணடித்துவிட்டால், பிறகு ஐவிஎஃப் சிகிச்சையும் கைகொடுக்காமல் போகலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 30 Aug 2025 9:00 am

Soda: செரிமானத்துக்கு உதவுமா; வயிறு உப்புசத்தை சரியாக்குமா சோடா?

பல வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் வாங்கிய கையோடு, காற்றடைத்த குளிர்பானங்களையும் வாங்கி வந்து ஃபிரிட்ஜில் வைப்பார்கள். மதியம் வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்தவுடன், குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை சாப்பிட்டது செரிமானம் ஆக அந்த குளிர்பானத்தைக் குடிப்பார்கள். சிலர், பலமான விருந்து சாப்பிட்டப் பிறகு வருகிற எதுக்களித்தல் மற்றும் வயிறு உப்புசம் சரியாக சோடா குடிப்பார்கள். சிறிது நேரத்தில் ஏப்பம் வந்தவுடன், செளகர்யமாக உணர்வார்கள். இது சரியா என சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம். Soda இரைப்பைக்குள் ஒரு காற்றுக்குமிழாக மாறும்! ''இரைப்பையில் உணவு, தண்ணீர், காற்று மூன்றும் இருக்கும் என அனைவருக்குமே தெரியும். இவை, அதனதன் அளவில் இருந்தால் பிரச்னை இல்லை. அளவுக்கு மீறி பிரியாணியை ஒரு பிடி பிடித்தால், காற்று இருப்பதற்கு போதுமான இடமில்லாமல் போகும். இந்த நிலையில், அந்தக்காற்றானது இரைப்பைக்குள் ஒரு காற்றுக்குமிழாக மாறும். அந்தக் காற்றுக்குமிழ் வயிற்றுக்குள்ளும் நெஞ்சகத்திலும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் இதயம் படபடக்க ஆரம்பித்துவிடும்! அந்தக் காற்றுக்குமிழால் ஏப்பமாக வெளியேறவும் முடியாமல், அபானவாயுவாக வெளியேறவும் முடியாமல் இருக்கும். இந்தக் காற்றானது உதரவிதானத்தை அழுத்தினால், மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும். சிலருக்கு இந்த நேரத்தில் இதயம் படபடக்க ஆரம்பித்துவிடும். இந்த நேரத்தில் காற்று நிரம்பிய குளிர்பானத்தையோ அல்லது சோடாவையோ குடித்தால், இரைப்பைக்குள் இருக்கிற காற்றுக்குமிழியின் வடிவம் மாறி, அது ஏப்பமாக வெளியேறி விடும். அளவுக்கதிகமான உணவு ஒரு தப்பை இன்னொரு தப்பால் இதில் உண்மை என்னவென்றால், நீங்கள் அளவாக சாப்பிடாதது ஒரு தவறு. காற்று நிரம்பிய பானத்தைக் குடித்ததும் தேவையில்லாததுதான். அதிகமாக சாப்பிட்ட தவறை, காற்று நிரம்பிய பானத்தைக் குடித்தல் என்னும் இன்னொரு தவறை செய்து ஏப்பமாக காற்றை வெளியேற்றி சரி செய்துவிட்டீர்கள். Stomach Health: இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க... எதுக்களிப்பு பிரச்னை வரவே வராது! ஏப்பத்தை செயற்கையாக வரவழைத்தது நீங்கள்தான்! சிலர், சோடா குடித்து ஏப்பம் விட்டால்தான் நன்கு செரிமானம் ஆவதாக நம்புவார்கள். அதையே தொடரவும் செய்வார்கள். இவர்களுக்கு ஏப்பம் விட்டால்தான் திருப்தியாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒருகட்டத்தில், 'டாக்டர் எப்போ பார்த்தாலும் ஏப்பம் ஏப்பமா வருது; சங்கடமா இருக்கு' என்பார்கள். சோடா குடித்து ஏப்பத்தை செயற்கையாக வரவழைத்தது நீங்கள்தான். இப்போது அதற்கு உங்களைப் பிடித்துவிட்டது என்பேன் நகைச்சுவையாக. ஆனால், சோடா குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி இந்தப் பிரச்னைக்கு சிகிச்சையளித்தால் சரி செய்துவிடலாம். Curd: வயிறு, முகம், தலைமுடி... மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்! சீரகத்தண்ணீர், ஓமத்தண்ணீர் தவிர, காற்று நிரம்பிய குளிர்பானங்களில் இருக்கிற சர்க்கரை உடலுக்கு நல்லதும் அல்ல. தேவைப்பட்டால் ரசம் குடிக்கலாம். உங்கள் வீட்டில் செரிமானமாவதற்கு சீரகத்தண்ணீர், ஓமத்தண்ணீர் குடிக்கிற வழக்கம் இருந்தால், அவற்றையும் அருந்தலாம். மற்றபடி, செரிமானம் ஆவதற்கும், வயிறு உப்புசத்தை சரிசெய்வதற்கும் சோடா குடித்தல் என்பது வேண்டாத பழக்கம்'' என்கிறார் டாக்டர் பாசுமணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 30 Aug 2025 6:39 am

Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing

தன்னுடைய உறுப்பு பெரிதாக இல்லை என்கிற எண்ணம் கிட்டத்தட்ட 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. இதில் சிலர் ஆணுறுப்பை மசாஜ் செய்து பெரிதாக்கி விடலாம் என்கிற நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மைதானா; இந்த முறை சரிதானா என சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் அவர்களிடம் கேட்டோம். தாம்பத்தியம் ஜெல்கிங் ( jelqing ) ''தன்னுறுப்பு சிறியதாக இருப்பதாக நம்புகிற பல ஆண்கள், இந்த மசாஜ் முறையை கையாளுகிறார்கள். இதை ஜெல்கிங் ( jelqing ) என்போம். இந்த முறையில், ஆணுறுப்பை இழுக்கக்கூடிய உபகரணங்களை பயன்படுத்துகிறார்கள். என்னைக் கேட்டால், இப்படி செய்யாதீர்கள் என்றுதான் சொல்வேன். தேவையில்லாமல் இழுத்து விடும்போது ஆணுறுப்புக்குள் வடுக்கள் ஏற்பட்டு பைரோனி போன்ற வியாதிகள் வரலாம். இதனால் ஆணுறுப்பு வளைந்து விடும். `ஆண்கள் விந்துப்பையைத் தொட்டுப் பார்க்க கூச்சப்படக்கூடாது. ஏன்னா...’ - காமத்துக்கு மரியாதை 249 உறுப்பைப்பற்றிய அதீத கவனம் எடுத்தால்... இன்னும் சிலர் ஜெல்கிங் செய்ததால், 'எனக்கு விறைப்புத்தன்மை குறைந்துவிட்டது, ஆண்மைத்தன்மை குறைந்துவிட்டது' என வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஆண்கள் தங்கள் உறுப்பைப்பற்றிய அதீத கவனம் எடுத்தால், அந்த உறுப்பில் பிரச்னை ஏற்படத்தான் அதிகம் வாய்ப்பிருக்கிறது. Chem Sex: இளைஞர்களை ஆபத்தில் தள்ளிக்கொண்டிருக்கும் கெம் செக்ஸ்! - காமத்துக்கு மரியாதை 252 நீளமான ஆணுறுப்புதான் தாம்பத்திய வாழ்க்கைக்கு முக்கியமா? தன் துணைக்கு முழுமையான திருப்தியை தர வேண்டும் என்பதற்காகத்தான், ஆண்கள் இப்படி அளவு தொடர்பான மன உளைச்சலில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் பெண்ணுறுப்பில் 2 முதல் 3 செ.மீ வரைதான் சென்சிட்டிவ் ஆக இருக்கும். இதைத்தாண்டி ஆழமாக போகும்போது, அங்கு சென்சிட்டிவிட்டி குறைவாகவே இருக்கும். அதனால், நீளமான ஆணுறுப்புதான் தாம்பத்திய வாழ்க்கைக்கு முக்கியம் என நினைத்துக்கொண்டு, ஏதோவொரு எண்ணெயைத் தடவி மசாஜ் செய்வது, உபகரணங்களை வைத்து இழுத்து மசாஜ் செய்வதெல்லாம் தேவையில்லாதவை'' என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 29 Aug 2025 5:55 pm

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எந்த எண்ணெய் உகந்தது?

Doctor Vikatan: இந்தத் தலைமுறை பிள்ளைகள் பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விரும்புவதே இல்லை.   எண்ணெய்க் குளியல் உண்மையிலேயே அவசியம்தானா, என் 17 வயது மகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. எண்ணெய்க் குளியல் எடுத்தால் முடி உதிர்வது நிற்கும் என்று சொன்னால் கேட்க மறுக்கிறாள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உண்மையிலேயே முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எண்ணெய்க் குளியலுக்கு எந்த எண்ணெய் உகந்தது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் சிகிச்சை மருத்துவர் தலத் சலீம் தலத் சலீம் எண்ணெய்க் குளியல் என்பது பலகாலமாக நம்மிடையே தொடரும் மிகச் சிறந்த பாரம்பர்யம். அது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடலைக் குளிர்ச்சியாக்கி, தசைகளை வலுவாக்கி, சரும ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது.  ஆனால், இந்தக் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதையோ, எண்ணெய்க் குளியல் எடுப்பதையோ பலரும் விரும்புவதில்லை. எண்ணெய்க் குளியலை வாழ்வியல் முறையாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது.   வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது கூந்தலை மட்டுமன்றி, ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். ரிலாக்ஸ் செய்யும். எண்ணெய்க் குளியல் எடுப்பதால் முடி உதிர்வு குறையும் என்பது உண்மைதான். ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு கூந்தல் உதிர்வும் அதிகமிருக்கும். எனவே, உங்கள் மகளை ஜங்க் உணவுகளைத் தவிர்த்து புரதச்சத்து அதிகமுள்ள பருப்புகள், தானியங்கள், முளைகட்டிய பயறு வகைகள், விதைகள் போன்றவற்றைச் சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். தூக்கமின்மையும் முடி உதிர்வுக்கு காரணம் என்பதால் சரியான நேரத்துக்கு சரியான அளவு தூக்கமும் அவசியம். எண்ணெய்க் குளியலுக்கு சுத்தமான, கலப்படமில்லாத தேங்காய் எண்ணெயே போதுமானது. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் வேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைத்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். முடி உதிர்வு Doctor Vikatan: தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியமா... எந்த ஷாம்பூ நல்ல ஷாம்பூ? ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் - மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும்.  அதே அளவு தேங்காய் எண்ணெயில் சிறிது வெந்தயம் சேர்த்து வெடிக்கும்வரை காய்ச்சவும். பிறகு அந்த எண்ணெயை மற்ற எண்ணெய்க் கலவையோடு சேர்த்து ஆற வைத்து, பாட்டிலில் நிரப்பவும். தேவைப்படும்போது இந்த எண்ணெயைத் தலையில் தடவி மிதமான மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிக் குளிக்கவும். நல்லெண்ணெயில் வேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம்.  கரிசலாங்கண்ணிக் கீரை, துளசி, பொடுதலை, செம்பருத்தி இலை, மருதாணி எல்லாம் தலா ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். மற்ற இலைகளை முதலில் அரைத்துவிட்டு, கடைசியாக செம்பருத்தி இலை சேர்த்து அரைத்துச் சாறு எடுக்கவும். ஒரு கப் சாற்றுக்கு 3 கப் அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெயை சூடுபடுத்தி, அதில் சாறு சேர்த்துக் கொதிக்க ஆரம்பிக்கும்போது உலர்ந்த ரோஜா இதழ்கள் 2 டேபிள்ஸ்பூன், சிறிது எலுமிச்சைத் தோல் விழுது சேர்த்து, எண்ணெய் பிரிந்துவரும்வரை நன்கு கொதிக்க விடவும்.  இரண்டு, மூன்று நாள்களுக்கு அப்படியே வைத்திருந்து, வடிகட்டி உபயோகிக்கவும். கூந்தல் உதிர்வுக்கு இதுவும் நல்ல தீர்வளிக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 29 Aug 2025 8:23 am

Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்!

''உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இவையிரண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்றால், சில வைட்டமின்கள் நமக்கு தேவை. இதேபோல், இளம் தலைமுறையினர் அதிகம் சொல்கிற மூட் ஸ்விங் (mood swings). உண்மையில் மனித மனத்தின் உணர்வுகள் மகிழ்ச்சி, துக்கம் போன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஊசலாட்டத்தன்மையுடன் இருக்கும்படிதான் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒருசிலர் மகிழ்ச்சி வந்தால் தலை கால் புரியாமல் இருப்பார்கள். துக்கம் வந்தால், ஒரு சிலர் சாப்பிடக்கூட செய்யாமல் துக்கத்தில் சுருண்டுபோய் விடுவார்கள். இப்படி இல்லாமல் நடுநிலைமையுடன் நடந்துகொள்ளவும் சில சத்துக்கள் தேவைப்படுகின்றன'' என்கிற மனநல மருத்துவர் டாக்டர் சுபா சார்லஸ், அவைபற்றி விவரித்தார். வைட்டமின் மாத்திரை வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 12 ''நடுத்தர வயதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, தைராய்டு போன்றவற்றை பரிசோதனை செய்கையில், கூடவே வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 12 போதுமான அளவு இருக்கிறதா என்றும் பரிசோதிக்க சொல்கிறார்கள், இந்தக் கால மருத்துவர்கள். அந்தளவுக்கு இந்த வைட்டமின்கள் உடலுக்கு மட்டுமல்லாமல் மனநலனுக்கும் அவசியமாக இருக்கிறது. சூரிய ஒளி உடல் மேல் படுவதே குறைந்துவிட்டது. அந்தக் காலத்தில் விவசாயம் செய்கையில், தினமும் நம் மீது சூரிய ஒளி பட்டது. அதனால் வைட்டமின் டி-யை போதுமான அளவுக்கு உடம்பே தயாரித்துக்கொண்டது. ஆனால், இன்றைக்கு சூரிய ஒளி உடல் மேல் படுவதே குறைந்துவிட்டது. பெரும்பாலும் மூடிய ஏ.சி அறைகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய இதய நலனில் ஆரம்பித்து மனநலன் வரைக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், வைட்டமின் டி அவசியம். சூரிய ஒளி வைட்டமின் பி 12 அவசியம். தற்போது உடலுழைப்புக் குறைந்துவிட்டதும், மூளை உழைப்பு அதிகரித்துவிட்டதும் நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். இந்த மூளை நலமாக இருக்க வேண்டுமென்றால், வைட்டமின் பி 12 அவசியம். இந்த வைட்டமின் குறைந்தால் உடலில் இரும்புச்சத்தும் குறையும்; ரத்தசோகையும் வரும். சுயமாக கால்சியம் சப்ளிமென்ட் சாப்பிடக்கூடாது... ஏன் தெரியுமா? எவ்வளவு நாள், என்ன அளவு? இந்த 2 வைட்டமின்களுமே நம்முடைய மனதை நிலைப்படுத்துபவை என்பதால், இவற்றை மெடிக்கல் ஷாப்களில், 'ஓவர் த கவுன்ட்டர்' வாங்கி சாப்பிட முடியும். அந்தளவுக்கு முக்கியமான மாத்திரைகள் இவை. அதனால், உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வாக உணர்ந்தீர்களென்றால், அருகில் இருக்கும் மருத்துவரை சந்தித்து பிரச்னைகளை சொன்னீர்களென்றால், எவ்வளவு நாள், என்ன அளவில் இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என ஆலோசனை வழங்குவார்கள். தவிர, இந்த இரண்டு வைட்டமின் மாத்திரைகளையும் ஒரு மாதம், இரண்டு மாதம் என சாப்பிட்டு விட்டு நீங்களாகவே நிறுத்தி விடக்கூடாது. இதனால், மறுபடியும் இந்த வைட்டமின் குறைபாடு உங்கள் உடலில் ஏற்படலாம். அதனால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள். Health: மனநிலை, இதயம் சீராக இயங்க உதவும் மெக்னீஷியம்.. உங்கள் உணவில் இருக்கிறதா? மெக்னீஷியம் தொழிற்சாலை பயன்பாட்டுக்குச் சென்று விடுகிறது. மனதை நிலைப்படுத்துவதில் மேலே சொன்ன இரண்டு வைட்டமின்களைப்போலவே மெக்னீஷியம் சத்தும் அவசியம். அந்தக் காலத்தில், விவசாயத்தில் மெக்னீஷியம் சல்பேட் அல்லது எப்சம் சால்ட் உரமாக பயன்படுத்தப்பட்டது. கடலில் உப்பளங்களில் உப்பு விளையும். உப்பை அறுவடை செய்தவுடன், கீழே எப்சம் சால்ட் படிந்திருக்கும். அதை பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், கடந்த 50 வருடங்களாக இந்த எப்சம் சால்ட்டில் இருக்கிற மெக்னீஷியம் தொழிற்சாலை பயன்பாட்டுக்குச் சென்று விடுகிறது. இதனால், நம்முடைய உணவுகளில் மெக்னீஷியம் சத்து குறைந்துவிட்டது. விளைவு மூட் ஸ்விங். இதற்கு மெக்னீஷியம் நிறைந்த நட்ஸ், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறிய பிரச்னைக்கும் மனதளவில் ஒடுங்கிப் போய்விடுகிறீர்கள் என்றால், மருத்துவரின் ஆலோசனைப்பெற்று சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்கிறார் டாக்டர் சுபா சார்லஸ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 29 Aug 2025 6:39 am

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா? - அமைச்சர் மா.சு விளக்கம்

மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு என்பது தொற்றுநோய் அல்ல என்று மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்திற்கும் பாதிப்பு இருக்குமா? என்பது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், மாசடைந்த நீர்நிலைகளில் குளிக்கும்போது மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான தலைவலியும், காய்ச்சலும், கழுத்துவலியும், மயக்கம் போன்றவையும் இருக்கும். அமீபா வைரஸ் கேரள அரசாங்கம் இதற்கு தேவையான சிகிச்சைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கேரள எல்லையிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு அச்சமும் பாதிப்பும் ஏற்படும் நிலை இல்லை. இது தொற்றுநோய் அல்ல. இருந்தாலும், தமிழகத்தில் கூட மாசுபட்ட குளம், குட்டைகளில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பராமரிப்பு இன்றி இருக்கும் நீச்சல் குளங்களிலும் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. நாம் பெரிதாகப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, என்று அவர் விளக்கம் அளித்தார். குழந்தைகளை பாதித்த `மூளை தின்னும் அமீபா தொற்று' இளைஞர்களுக்கும் பரவல்... கேரளாவில் அதிர்ச்சி..! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 28 Aug 2025 1:54 pm

Doctor Vikatan: 8 வயதுக் குழந்தைக்கு டான்சில்ஸ் பாதிப்பு; ஆபரேஷன் இல்லாமல் குணமாகுமா?

Doctor Vikatan:  எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகனுக்கு டான்சில்ஸ் பாதிப்பு பாடாகப் படுத்தியதால், 9 வயதில் ஆபரேஷன் செய்தோம். இளையவனுக்கும் அதே பிரச்னை. அடிக்கடி சளி, காய்ச்சல் பிரச்னைகளால் அவதிப்படுகிறான். அவசரப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டாம் என்று சிலரும், ஆபரேஷன்தான் சரியான தீர்வு என சிலரும் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி.    நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி நம் உடலில் 'டான்சில்' என்றோர் உறுப்பு உண்டு. வாய்க்கும் உணவுக்குழாய்க்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள பாதுகாப்பு உறுப்பு அது, சுற்றுப்புற மாசிலுள்ள கிருமிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் அந்த உறுப்புதான்.  தண்ணீர் குடிக்கும்போதும், உணவு உண்ணும்போதும் டான்சில் வழியேதான்  கிருமிகள் உடலுக்குள் செல்லும். குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்காதபடி டான்சில் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும். அதனால் அந்தப் பகுதி வீக்கமடையும். அதனால்  தீங்கு விளைவிக்கும் அந்தக் கிருமி, குழந்தையின் நுரையீரல், வயிறு உள்ளிட்ட வேறு எந்தப் பகுதிக்கும் செல்லாமல் தடுக்கப்படும். குழந்தைகளின் 11 வயது வரை இந்தப் பிரச்னை இருக்கும். அதன் பிறகு குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க ஆரம்பிக்கும். எனவே நோய்க்கு எதிராக டான்சில் முன் அளவுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. டான்சில் வீக்கம் ஒருவகையில் நல்லது என்றே சொல்லலாம்.  சில குழந்தைகளுக்கு டான்சில் வீக்கம் தீவிரமாக இருக்கும். வீக்கம் அதிகரித்த காரணத்தால் சரியாகச் சாப்பிட முடியாது.தண்ணீர் கூட குடிக்க முடியாது. மூச்சு விட சிரமமாக இருக்கும்.  அதை 'ஃபரின்ஜியல் டான்சில்ஸ்' (pharyngeal tonsils)  என்று சொல்வோம். இந்தப் பிரச்னை வந்தால் சிலருக்கு காய்ச்சல் அதிகரிக்கும், சரியாகச் சாப்பிட முடியாது, தொற்று பாதிப்பும் அதிகரிக்கும். டான்சில் பழுத்து வீங்கும். அதற்கு ஆன்டிபயாடிக் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். டான்சில்ஸ் பாதிப்பு... ஆபரேஷன் இல்லாமல் குணமாகுமா? Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு ஃபிட்ஸ், வளர்ந்த பிறகும் தொடருமா? குழந்தைகள் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, இருப்பிடம் என அனைத்தும் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அடிக்கடி தொற்று வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொண்டையில் வீக்கம் வந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எப்போதும் ஃபிரெஷ்ஷான, சூடான உணவுகளைக் கொடுப்பது, கொதிக்கவைத்து ஆறவைத்த நீர், சுத்தமான காற்றை சுவாசிக்கும்படியான சூழல் போன்றவற்றின் மூலம் குழந்தைக்கு டான்சில் வீக்கம் வராமல் பாதுகாக்கலாம். இப்போதெல்லாம் பெரும்பாலும் அறுவை சிகிச்சையே தேவையின்றி டான்சில் வீக்கத்தைச் சரிசெய்ய முடியும். ஆனால், ஒரு மாதத்தில் மூன்று முறைக்கு மேல் குழந்தைக்கு இப்படி வருகிறது, மிகவும் அவதிப்படுகிறது என்ற நிலையில் அறுவைசிகிச்சையைப் பரிந்துரைப்போம். அதற்கு 'டான்சிலெக்டமி' (Tonsillectomy) என்று பெயர்.  உங்கள் குழந்தைக்கு இப்படி வருகிறதா என்பதை உறுதிசெய்து கொண்டு மருத்துவர் சொல்வதற்கேற்ப முடிவெடுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 28 Aug 2025 9:00 am

Health: என்ன செய்தும் எடை குறையவில்லையா? காரணங்கள் இவைதான்!

இனிப்பையும் கொழுப்பையும் தவிர்ப்பார்கள். கலோரிகளைக் கணக்குப் பார்த்துச் சாப்பிடுவார்கள். எடை விஷயத்தில் இப்படியெல்லாம் அக்கறை எடுத்துக்கொண்டும் உடல் பருமன் குறையவில்லை என்று புலம்புவார்கள். மேலே சொன்னவை தவிர்த்து வேறு சில விஷயங்களும் எடையைக் கூட்டலாம். அப்படியான விஷயங்கள் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர் முத்தையா. Obesity டிஜிட்டல் திரைகளைப் பார்த்தபடி சாப்பிட வேண்டாமே! டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும்போது, வேறு வேலைகளின் மீது கவனம் இருக்காது. திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை இடைவெளிவிடாமல் பார்க்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்போது என்ன சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே பலர் அளவுக்கதிகமாகச் சாப்பிட்டு விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது போன்ற நேரங்களில் உணவின் அளவில் அவர்களுக்கு கவனம் இருக்காது. திரைகளைப் பார்த்தபடி சாப்பிடும் ஒருவர் சராசரியாக ஐந்து முதல் பத்து மடங்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது தெரியவந்திருக்கிறது. ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பதால் மூன்று வேளை உணவில் ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பதால், உடலின் வளர்சிதை மாற்றம் குறையத் தொடங்கும். இதனால் பசி அதிகரித்து, அடுத்த வேளை உணவை இரண்டு மடங்காக உட்கொள்ளவேண்டிய சூழல் உருவாகலாம். இரண்டு வேளைக்கான உணவை ஒரே நேரத்தில் உட்கொள்வது ஆபத்தானது. சிலர் பசியைப் பொறுக்க முடியாமல், நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவார்கள். அதுவும், தவறான பழக்கமே. சரியான நேரத்துக்கு, சரியான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, உடல் பருமன் ஏற்படும். காலை உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது. good fat நல்ல கொழுப்பை நழுவவிடாதீங்க! கொழுப்புச்சத்தில், நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன. நல்ல கொழுப்புள்ள உணவுகளில், கலோரியின் அளவு குறைவாக இருக்கும். மேலும் அவை, உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புச் சத்துகளையும் எளிதில் கரைத்துவிடும். எனவே, அவற்றை எந்தச் சூழலிலும் தவிர்க்கக் கூடாது. நட்ஸ், அவகேடோ, ஆலிவ் ஆயில், மீன் உணவுகள் போன்றவை நல்ல கொழுப்புச்சத்துள்ள உணவுகள். அவசரம் வேண்டாம்! அவசர அவசரமாகச் சாப்பிடுவது செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும். அப்படிச் சாப்பிடும்போது, உணவை மெல்லாமல் அப்படியே விழுங்கவேண்டியிருக்கும். அதனால் எவ்வளவு சாப்பிட்டாலும், பசியுணர்வு குறையாது. எனவே, பசி அடங்கும்வரை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில், அளவுக்கதிகமாகச் சாப்பிடுவார்கள். தொடர்ந்து சில தினங்கள் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினால், செரிமானக் கோளாறுகள் அதிகரித்து உடல் சார்ந்த கோளாறுகள், நெஞ்செரிச்சல், உடல் பருமன் போன்றவை ஏற்படும். stress ``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்வறிக்கை சொல்வதென்ன? மனஅழுத்தத்துக்கு இடம் கொடுக்காதீங்க! மனஅழுத்தம் அதிகரிப்பதால், உடலிலுள்ள ‘கார்டிசால்’ (Cortisol) ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஹார்மோன், உடலின் இன்சுலின் அளவை அதிகரித்து, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்துவிடும். ரத்தச் சர்க்கரை அளவு குறையும்போது, பசியுணர்வு அதிகரிக்கும். மேலும், உடல் வளர்ச்சிக்குத் தேவையான டெஸ்டோஸ்டீரான் (Testosterone) ஹார்மோனையும் குறைத்துவிடும். இவையெல்லாம், உடல் பருமனுக்கு மறைமுகக் காரணங்களாகலாம். Obesity: உடல் பருமனைக் குறைக்கிறதுக்கான பெஸ்ட் டயட் இது! மாவுச்சத்து உணவுக்கு `நோ’ சொல்லுங்க! மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகள் அவற்றைக் கூடுதலாகச் சாப்பிடும் எண்ணத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும். எனவே, அத்தகைய உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் வகைகள், பேக்கரி உணவுகள் போன்றவை தவிர்க்கப்படவேண்டியவை. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 28 Aug 2025 6:55 am

Juice: ஒரே நேரத்தில் முக்கால் லிட்டர் ஜூஸ் குடிக்கலாமா?

எங்கு பார்த்தாலும் 750 ml பழச்சாறுக்கடைகள் கண்களில் தென்படுகின்றன. பொதுவாக பழச்சாறு ஆரோக்கியமானதுதான். ஆனால், இப்படி 600 ml, 700 ml, 750 ml என ஜூஸ் குடிப்பதும், அதை அடிக்கடி குடிப்பதும் எந்தளவுக்கு நல்லது என்று டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம். Juice பழச்சாறுகளைக் குடித்தால்... சர்க்கரையைக் கொட்டி அரை லிட்டர், முக்கால் லிட்டர் என ''இன்றைக்கு பழச்சாறுகளை மக்கள் அதிகம் அருந்துகிறார்கள். அமிர்தமே என்றாலும் அளவுதான். அதே நேரம், சர்க்கரையைக் கொட்டி அரை லிட்டர், முக்கால் லிட்டர் என பழச்சாறுகளைக் குடித்தால், உடலில் கலோரிகள்தான் அதிகமாகும். ஒரு தர்பூசணித் துண்டுதான் சாப்பிட முடியும். ஆனால் தவிர, பழமாக சாப்பிட்டோம் என்றால், உதாரணத்துக்கு, நம்மால் ஒரு தர்பூசணித் துண்டுதான் சாப்பிட முடியும். ஆனால், இப்படி 600 , 700 என்று ஜூஸாக குடித்தால், ஒரே நேரத்தில் மூன்று, நான்கு துண்டுகளை ஜூஸாக அருந்திவிடுவோம். கூடவே, நார்ச்சத்தும் கிடையாது. Juice யாருக்குமே நல்லதல்ல... சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சில், அவற்றின் மொத்த நார்ச்சத்தையும் நீக்கி விட்டுதான் கொடுக்கிறார்கள். இந்த ஜூஸ்களில் சர்க்கரை சேர்க்காமலும் அருந்த முடியாது. இது நீரிழிவு மற்றும் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே நல்லதல்ல. ஏற்கெனவே போட்டு வைத்துக் கொடுத்தால் பழச்சாறுகளில் நமக்கு முக்கியமாக கிடைப்பது வைட்டமின் சி. நம் கண் முன்னே ஃபிரெஷ்ஷாக போட்டுத் தருகிற ஜூஸில்தான் வைட்டமின் சி நமக்கு முழுமையாக கிடைக்கும். அதை ஏற்கெனவே போட்டு வைத்துக் கொடுத்தால், வைட்டமின் சி மிக மிக குறைவாகவே கிடைக்கும் அல்லது கிடைக்கவே கிடைக்காது. Juice Health: வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? இதுவும் ஜங்க் ஃபுட் போலத்தான். சிலர் சாப்பாட்டுக்கு பதில் இந்த முக்கால் லிட்டர் ஜூஸை அருந்துகிறார்கள். இதனால், அந்த நாளுக்குத் தேவையான புரதமோ, நல்ல கொழுப்போ கிடைப்பது கடினம். டெட்ரா பாக்கெட்டுகளில் கிடைக்கிற ஜூஸ்களில், பார்ப்பதற்கு ஈர்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதுவும் ஜங்க் ஃபுட் போலத்தான். Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? 300 ml வரை அருந்தலாம். எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், 750 ml juice குடிப்பது தேவையில்லாத அளவு. 300 ml வரை அருந்தலாம். அதிலும் சுகர் சிரப் விட்டெல்லாம் வேண்டவே வேண்டாம். முடிந்தவரை எல்லோருமே பழங்களைச் சாப்பிடுங்கள். பழச்சாறுகளைத் தவிருங்கள்'' என்கிறார் டயட்டீஷியன் தாரிணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 27 Aug 2025 7:45 am

Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 65 வயதாகிறது. அவருக்கு லேசான காய்ச்சல் அடித்தாலே உடனே பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரைப் பார்க்கலாம் என்று சொன்னால் கேட்க மாட்டார். இப்படி காய்ச்சல் அடித்தால் உடனே பாராசிட்டமால் போடுவது சரியா அல்லது உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டுமா? பதில் சொல்கிறார்  சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் காய்ச்சலைத் தணிக்க பாராசிட்டமால்தான் சிறந்த மருந்து. அது அவரவர் எடைக்கேற்ப எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.  காய்ச்சல் 102 டிகிரியை தாண்டினால் உடல்வலி,  எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு பலவீனம், தண்ணீர்கூட குடிக்கப் பிடிக்காதது போன்றவை  சேர்ந்துகொள்ளும்.  காய்ச்சலுக்கான உணவு தண்ணீர்கூட பிடிக்கவில்லை என்பதற்காக அதை அறவே தவிர்ப்பது ஆபத்தானது. 'நான்- கார்பனேட்டடு' (Non-Carbonated )  பானங்களை, குளிர்ச்சியின்றி குடிக்கலாம்.   மாம்பழம், லிச்சி, க்ரான்பெர்ரி என வாய்க்குப் பிடித்த  சுவையில் இதைக் குடிக்கலாம். டீ, பால், அரிசி நொய்க் கஞ்சி போன்றவற்றையும் சிறந்த உணவுகள். நீர்ச்சத்து அவசியம் காய்ச்சல் குறையும்போது வியர்க்கும். அந்த வியர்வையின் மூலம் நாம் இழக்கும் நீர்ச்சத்து மற்றும் உப்பை ஈடுகட்டவும் திரவ உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். காய்ச்சலின்போது தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படையான விஷயம். அதனால்தான் காய்ச்சல் மிக அதிகமாகி, உடல் சோர்வாகி மருத்துவரை அணுகும்போது குளுக்கோஸ் ஏற்ற அறிவுறுத்துகிறார்கள். குளுக்கோஸ் ஏற்றியதும்  உடல் இன்ஸ்டன்ட் எனர்ஜி பெறுவதை உணர்வதன் பின்னணியும் இதுதான். காய்ச்சல் Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... ஆன்டிபயாட்டிக் பலன் தராதது ஏன்? மருந்து ஆரம்பநிலை காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். 5 நாள்களுக்கும் மேல் காய்ச்சல் தொடர்ந்தாலோ,  102  டிரிக்கு மேல் காய்ச்சல் அதிகரித்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்து கொள்வதுதான் சரியானது. மருத்துவர் அந்தந்த சீசனில் பரவும் காய்ச்சலின் தன்மைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து டெங்கு, மலேரியா, டைபாய்டு, கொரோனா போன்றவற்றுக்கான பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். டெங்கு காய்ச்சலில் தட்டணுக்கள் குறையும். அது ஆபத்தான நிலை என்பதால் காய்ச்சல் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் பிளட் கல்ச்சர், யூரின் கல்ச்சர் டெஸ்ட்டுகளும் பரிந்துரைக்கப்படும்.   உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 26 Aug 2025 9:00 am

SIMS: மண்டையோடு மற்றும் உச்சந்தலை தோல் புற்றுக் கட்டி; வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை

தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஒரு இளம் நிபுணரை பாதித்திருந்த 'டெர்மடோஃபைப்ரோசர்கோமா புரோட்யூபரன்ஸ்' (DFSP) என்ற அரிதான மற்றும் தீவிரமான தோல் புற்றுநோய்க்கு சிம்ஸ் மருத்துவமனையின் பலதுறைகளை உள்ளடக்கிய மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. இந்த வகை புற்றுநோய், தசை மற்றும் எலும்பு உட்பட சுற்றியுள்ள திசுக்களுக்கு வேகமாகப் பரவக்கூடியது. இந்நோயாளிக்கு ஏற்பட்டிருந்த, புற்றுநோய் அவரது உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கடுமையாகப் பாதித்து மோசமான நிலைமையை எட்டியிருந்தது. சிம்ஸ் மருத்துவமனை தற்போது வழங்கப்பட்டிருக்கும் சிகிச்சையின் மூலம், ஆரோக்கியமான மற்றும் நிலையான திசுக்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. நோய் மீண்டும் வருவதை முன்கூட்டியே கண்டறிய, தொடர் மருத்துவப் பரிசோதனைகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு மற்றும் உச்சந்தலைக்கு சிறப்பான சுகாதார பராமரிப்பு ஆகியவை இந்நோயாளிக்கு தேவைப்படும். புற்றுக்கட்டி அகற்றப்பட்ட பிறகு, நோயாளியின் மண்டையோடு மறுசீரமைக்கப்பட்டது. அதன்பின்னர், தோல் ஒட்டுகள், திசு மடிப்பு, திசு விரிவாக்கம் பயன்படுத்தி உச்சந்தலை பல கட்டங்களாகச் சரிசெய்யப்பட்டது. இறுதிச் சீரமைப்பு சிகிச்சையானது, நோயாளியின் தொடையிலிருந்து எடுக்கப்பட்ட திசுவின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி செய்யப்பட்டது. இந்த செயல்முறையின் போது, நுரையீரலுக்குப் பரவியிருந்த புற்றுநோய் முடிச்சு ஒன்றும் அகற்றப்பட்டது. சிம்ஸ் மருத்துவமனை டெர்மடோஃபைப்ரோசர்கோமா புரோட்யூபரன்ஸ் (DFSP) என்று அழைக்கப்படும் பாதிப்பு மிகவும் அரிதானது; பத்து லட்சம் பேரில் 1 முதல் 5 நபர்களை மட்டுமே இது பாதிக்கிறது. ஆரம்பத்தில் வலியற்ற தோல் கட்டி அல்லது தடிப்பாக இது தோன்றும், சிகிச்சையளிக்கப்படாமல் இது விடப்படுமானால், தோல், தசை மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் அபாயம் கணிசமாக அதிகரிக்கும். இந்த நோயாளி, இதற்கு முன்பு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்திருந்த போதிலும், 8 ஆண்டுகளுக்கும் மேலாக திரும்பத்திரும்ப ஏற்பட்ட இந்நோய் பாதிப்பு பிரச்சனையோடு கடும் போராட்டத்தை எதிர்கொண்டு வந்திருக்கிறார். இந்த நேர்வு குறித்து, மண்டைமுகத் தசை, அழகியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தின் (ICAPS) முன்னாள் இயக்குநரும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “இது ஒரே கட்டத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை அல்ல. உச்சந்தலை மற்றும் மண்டையோடு இரண்டையும் புற்றுக்கட்டி அரித்திருந்ததால், மூளைப் பாதுகாப்பு, மண்டையோடை சரிசெய்தல் முதல் தலைமுடி தாங்கும் உச்சந்தலை மறுசீரமைப்பு வரையிலான ஒவ்வொரு கட்டமும் மிகவும் சிக்கலானதாக இருந்தது. பாதுகாப்பான மற்றும் நீடித்த பலனை அடைவதற்கு, கவனமான திட்டமிடல், பலகட்ட செயல்முறைகள் மற்றும் துல்லியமான ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கியமாக இருந்தன,” என்றார். மண்டைமுகத் தசை, அழகியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தின் (ICAPS) சிறப்பு நிபுணர் டாக்டர் ஷ்யாம்நாத் கிருஷ்ண பாண்டியன் K. கூறியதாவது, “இந்த நோயாளிக்கான சிகிச்சை நேர்வில், கட்டியை முழுமையாக அகற்றுவதற்கும் பாதுகாப்பான மறுசீரமைப்பிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதுதான் மிகப்பெரிய சவலாக இருந்தது. புற்றுநோய், மண்டையோடு போன்ற முக்கிய கட்டமைப்புகளில் ஊடுருவி, மூளைக்கு மிக அருகில் அபாயகரமான நிலையில் இருந்தது. இதன் காரணமாக, பலகட்ட மருத்துவ செயல்முறைகள், சிக்கலான மறுசீரமைப்பு சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய் மீண்டும் வராமல் தடுப்பது உட்பட ஒவ்வொரு படிநிலையும் அதிக ஆபத்து நிறைந்ததாக இருந்தது.” வரலாற்று சிறப்புமிக்க இச்சாதனை குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கருத்து தெரிவிக்கையில், “இந்த மகத்தான சாதனை, எங்கள் மருத்துவமனையின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருப்பதைக் குறிக்கிறது. மேலும், தரம் மற்றும் சிறந்த மருத்துவ சேவையில் புதுமையான உத்திகளை கையாள்வதில் எங்களுக்கு இருக்கும் தளராத அர்ப்பணிப்பையும், சிறப்பான திறனையும் இது வெளிப்படுத்துகிறது. மண்டையோடு மற்றும் உச்சந்தலை மறுசீரமைப்பு செய்யப்பட்ட இந்த சிகிச்சை செயல்பாட்டை மேற்கொள்வதில் எமது மருத்துவக் குழுவினர் மிக நேர்த்தியான அறுவை சிகிச்சைத் திறனையும், மனஉறுதியையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையை வழங்கும் எமது பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்றார்.

விகடன் 25 Aug 2025 9:30 pm

Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுஏன்?

Doctor Vikatan:  சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிறு எரிவது போன்று உணர்வது ஏன், சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை சாப்பிட்ட பிறகோ, சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டியதை சாப்பாட்டுக்கு முன்போ எடுப்பது தவறா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி பொதுவாக, ஒவ்வொரு மருந்துக்கும் ஒவ்வொருவித தன்மைகள் இருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக் மாத்திரைகளின் தன்மை வேறு. வலி நிவாரணிகளின் தன்மை வேறு. ஒவ்வொரு மருந்தும் ஒவ்வோர் இடத்தில் செயலாற்றும். சாப்பிட்டதும் எல்லா மருந்துகளுமே  நம் வயிற்றின் லைனிங் எனப்படும் உள்சுவர் பகுதியில்தான் உட்கிரகிக்கப்படும். சில மருந்துகள் வயிற்றின் லைனிங் பகுதியை எரிச்சலடையச் செய்யும். உதாரணத்துக்கு, தைலம் தடவும்போது அந்த இடத்தில் லேசான எரிச்சலை உணர்வோமில்லையா, அதுபோல வயிற்றுப் பகுதியில் சில மருந்துகள் எரிச்சலை ஏற்படுத்தும். அதைத்தான் வலியாக உணர்கிறார்கள். பொதுவாக வலி நிவாரணிகளுக்கு இதுபோன்ற பிரச்னை இருக்கலாம். அதேபோல தைராய்டு மருந்துகளுக்கு, வலிப்பு மருந்துகளுக்கு இத்தகைய குணம் இருப்பதால், அவற்றை எடுத்துக்கொள்ளும்போது வயிற்றில் ஒருவித எரிச்சல் உணர்வை ஏற்படுத்தலாம். வயிற்று வலி சில மருந்துகளை சாப்பாட்டுக்கு முன்பும் சில மருந்துகளை சாப்பாட்டுக்குப் பிறகும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவதன் பின்னணியிலும் காரணங்கள் உண்டு. சில மருந்துகள் சாப்பாட்டுக்கு முன்புதான் உட்கிரகிக்கப்படும் திறன் கொண்டதாகவும், சில மருந்துகள் சாப்பிட்ட பிறகு உட்கிரகிக்கப்படும் திறன் கொண்டதாகவும் இருக்கும். இதைத் தவறவிட்டு மாற்றிச் சாப்பிடும்போது, அந்த மருந்து பலனளிக்காமல் போகலாம். அந்த வகையில் கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது. எதை, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ, அப்போதுதான் எடுக்க வேண்டும். சர்க்கரைநோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்தில் ஒன்றை, உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொல்வோம். ஒரு வாய் உணவு சாப்பிட்டு, உடனே மாத்திரையை எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு சாப்பிடச் சொல்வோம். அந்த வகையில் உணவுக்கும் மருந்துகளுக்கும் தொடர்புண்டு. கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது. உங்களுக்கு ஏற்கெனவே அல்சர் மாதிரி வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் இருந்தால், அதை மருத்துவரிடம் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். மருத்துவர் அதற்கேற்ப மருந்துகளைப் பரிந்துரைப்பார். டிரக் இன்டர்ஆக்ஷன் எனப்படும் மருந்துகள் ஒன்றோடு ஒன்று வினையாற்றாதபடி துணை மருந்துகளையும் பரிந்துரைப்பார்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Doctor Vikatan: மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்குமா?

விகடன் 25 Aug 2025 9:00 am

Health: உங்க பசி உண்மையானதா, போலியானதா?

‘வயிறு நிறைய சாப்பிடக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, சாப்பாட்டைப் பார்த்ததும் கட்டுப்படுத்த முடியலை...’ - டயட்டை சரியாகப் பின்பற்ற முடியாமல் அவதிப்படும் பலரின் புலம்பல் இது. பசி எடுக்கும்போது, அதற்கேற்ற அளவு சாப்பிடுவது சரியான பழக்கம்தான் என்றாலும், பசி உணர்வு உண்மையானதா, போலியானதா என்பதைக் கண்டறியவேண்டியது அவசியம். பசி ‘போலியான பசி உணர்வு’ பசி உணர்வென்பது, எல்லா நேரத்திலும் உடல் சார்ந்த மாற்றங்கள் (Physiological Factors) காரணமாக மட்டுமே ஏற்படுவதில்லை. சில நேரங்களில் மனரீதியான மாற்றங்களாலும் (Psychological Factors) ஏற்படுகிறது’ என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகையப் பசி உணர்வை ‘போலியான பசி உணர்வு’ (False Hunger) என்று கூறுகிறார்கள். உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறையத் தொடங்கும்போது பசி ஏற்படுவது இயல்பு. அப்படி இல்லாமல், சில காரணங்களால் பசி உணர்வு செயற்கையாகத் தூண்டப்படுகிறது. அது ஏன், அதை எப்படித் தடுப்பது, போலியான பசி உணர்வை எப்படிக் கண்டறிவது? விளக்கமாகப் பேசுகிறார் குடல், இரைப்பை மருத்துவர் சந்திரமோகன். ''பசி உண்டாகச் சில காரணங்களைச் சொல்ல முடியும். அவை: hunger நேரம்: சிலர் அட்டவணை போட்டு, நேரத்துக்குச் சாப்பிடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே சாப்பிட்டுவிட்டால், சாப்பாட்டு நேரம் வந்தவுடன் காரணமே இல்லாமல் மீண்டும் அவர்களுக்கு பசியெடுக்கத் தொடங்கிவிடும். பரிமாறும் விதம்: `சாப்பாடு வேண்டாம்’ என்று நினைப்பவர்கள்கூட அழகாகவும் புதுமையாகவும் பரிமாறப்படும் உணவைப் பார்த்ததும், தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டுவிடுவார்கள். Greens & Health: எந்தப் பிரச்னைக்கு என்ன கீரை சாப்பிடணும்? மீண்டும் பசி * சாப்பாட்டின் மணம்: பசி இல்லையென்றாலும், உணவின் வாசனையே சிலருக்குப் பசி உணர்வைத் தூண்டிவிடும். * அதிக கார்போஹைட்ரேட்: உணவில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதனால், சாப்பிட்ட அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மீண்டும் பசியெடுக்கத் தொடங்கிவிடும். Salt: `கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு' - உப்பின் பலன்கள்! | Health Tips குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டால் குளிர்ச்சியான சூழலில் சாப்பிடுவது: பசி எடுக்கும்போது, உடலின் கலோரி அளவு குறையத் தொடங்கி, உடலின் வெப்பநிலை குறையும். பசி அடங்கியதும், வெப்பம் சீரான நிலைக்கு வந்துவிடும். குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிப்பது மிகவும் மெதுவாக நடக்கும். பசி அடங்குவதற்கான நேரமும் அதிகமாகும். இதனால் குறிப்பிட்ட அளவையும் மீறி, அதிகமாகச் சாப்பிட நேரிடும். மேலும் தூக்கமின்மை, மனஅழுத்தம், ஹார்மோன் பிரச்னைகள், ஏற்கெனவே உட்கொண்ட தரமற்ற உணவு அல்லது குறைவான அளவு உட்கொண்டிருப்பது போன்றவைகூட போலியான பசி உணர்வை ஏற்படுத்தும். ஆக, போலியாகப் பசி ஏற்படும்போது, உணவு உண்ணாமல் நிறுத்திக்கொள்வது நல்லது.’’ சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 25 Aug 2025 6:57 am

Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அறிகுறியா?

Doctor Vikatan: என் மகள் இப்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த சில நாள்களாக இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் அடிக்கடி வலிப்பதாகச் சொல்கிறாள். இதனால் அபார்ஷன் அறிகுறியாக இருக்குமோ, கரு கலைந்துவிடுமோ என்றும் பயப்படுகிறாள். இந்த வலிக்கு என்ன காரணம், இதற்கு சிகிச்சை தேவையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் இடுப்பும் தொடையும் சேருமிடத்தில், கர்ப்பத்தின் 3 அல்லது 4-வது மாதங்களில் சில பெண்களுக்கு திடீரென கடுமையான வலி வரும். அதை மருத்துவ மொழியில் 'ரவுண்ட் லிகமென்ட் பெயின்' (Round Ligament pain) என்று சொல்வோம். அந்த வலிக்கும் அபார்ஷனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ரவுண்ட் லிகமென்ட் என்பது ஒயர் போன்ற ஓர் அமைப்பு. இது கர்ப்பப்பையிலிருந்து, இடுப்பும் தொடையும் சேருமிடத்தில் இணைந்திருக்கும். கர்ப்பத்தின் 3- 4 மாதங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையில் உள்ள கரு வளர, வளர, இந்த ரவுண்ட் லிகமென்ட் அமைப்பானது ஸ்ட்ரெச் ஆகும். அப்படி ஸ்ட்ரெச் ஆவதால் உணரப்படும் வலிதான் ரவுண்ட் லிகமென்ட் பெயின் எனப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் இந்த வலியை உணர்வார்கள். சில பெண்கள் இதை தீவிர வலியாக உணர்வார்கள். மருத்துவரின் ஆலோசனையோடு யோகா மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொண்டாலே ரவுண்ட் லிகமென்ட் பெயின் குறைந்துவிடும். திடீரென இருமும்போது, தும்மும்போது, சத்தமாகச் சிரிக்கும்போது, படுக்கையிலிருந்து திடீரென பக்கவாட்டில் திரும்பும்போது, படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்கும்போது இந்த வலியை உணர்வார்கள். வழக்கமாக இரண்டு பக்கங்களிலும் வலி இருக்கும். ஆனாலும், இடது பக்கத்தில் இந்த வலி ஏற்படுவது மிகவும் சகஜமானது. இந்த வலியை உணர்ந்தால் உடனே பயப்படத் தேவையில்லை. ஒருமுறை இந்த வலி வந்தால், அந்தப் பெண் எல்லா வேலைகளையும் நிதானமாகவே செய்ய வேண்டும். Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் ப்ளீடிங்; அபார்ஷன் அறிகுறியாக இருக்குமா? வேகமாக நடக்க வேண்டாம். உட்கார்ந்திருக்கும்போதோ, படுத்திருக்கும்போதோ திடீரென  எழுந்திருப்பது போன்றவை வேண்டாம். ரிலாக்ஸாகவே எதையும் செய்யச் சொல்லுங்கள். இந்த வலி வந்தாலும் ஒன்றிரண்டு நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும். அப்படி ஒன்றிரண்டு நிமிடங்கள் தாண்டியும் வலி தொடர்ந்தாலோ, அடிக்கடி இந்த வலி வந்தாலோ, நடக்கவே முடியாவிட்டாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பம் சிறுநீரகத் தொற்றின் காரணமாக ஏற்பட்ட வலியா என்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சிறுநீர்த் தொற்றின் காரணமாக ஏற்பட்ட வலி என்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை உணர்வது, காய்ச்சல் வருவது போன்ற அறிகுறிகளும் இருக்கும்.  அந்த வலிக்கான சிகிச்சைகள் வேறு மாதிரி இருக்கும் என்பதால் இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையோடு யோகா மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொண்டாலே ரவுண்ட் லிகமென்ட் பெயின் குறைந்துவிடும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 24 Aug 2025 9:00 am

மூளையை ஆரோக்கியமாக வைக்கும் 5 விஷயங்கள்!

அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. `உலகின் மிகப் பெரிய இயந்திரம் மூளை’ என்றே சொல்லலாம். மூளைதான் மனித உடலின் தலைமைச் செயலகமாகச் செயல்படுகிறது. பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது, மூச்சுவிடுவது, பல்வேறு நினைவுகள், உணர்வுகள், இதயத்துடிப்பு, வளர்ச்சி… ஏன், உயிரும்கூட மூளையைச் சார்ந்துதான் இருக்கிறது. மூளையானது அனைத்து அதிகாரத்துடன் அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரியாக இயங்குகிறது. Brain நம் மூளையில், தோராயமாக 8,600 கோடி நியூரான்கள் உள்ளன. உடலில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் இந்த நியூரான்களின் இயக்கம்தான் காரணம். மூளையில் உள்ள நியூரான் என்ற செல்கள்தான் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் நடக்கும் விஷயங்களைத் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்பச் செயல்படும்படி உடலிலுள்ள தசைகளுக்கும் உத்தரவு கிடைக்கிறது. மூளையில் 2 வயதில்தான் மிக அதிக செல்கள் உருவாகின்றன.18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக்கொள்கிறது. பிறந்த குழந்தையின் மூளையானது 400 கிராம் வரை எடை இருக்கும். வளர்ந்த ஒரு மனிதனின் மூளை ஒன்றரை கிலோ எடையுடன் காணப்படும். ஒவ்வொரு நொடியும் நமது மூளையில் ஒரு லட்சம் வரைக்குமான அமில மாற்றங்கள் நடக்கின்றன. மூளைக்கு 10 நொடிகள் ரத்தம் பாயவில்லை என்றால் மயக்கம் வந்துவிடும். Brain உணவுகள் மூளையின் ஆரோக்கியத்துக்கு... 1 முட்டை, பச்சைக்காய்கறிகள், பூண்டு, கேரட், வல்லாரைக்கீரை, வால் நட், பாதாம், மீன், வைட்டமின் சி, டி மற்றும் பி 12, ஒமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள். மனஅழுத்தம் குறைத்தல்! மூளையின் ஆரோக்கியத்துக்கு... 2 மனஅழுத்தத்தின்போது சுரக்கும் கார்ட்டிசால் (Cortisol) என்ற ஹார்மோன் மூளையை பாதிக்கும். `இதனால் ஞாபகசக்தி குறையும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். மனஅழுத்தம் குறைக்கும் விஷயங்களில் நேரத்தைச் செலவழிப்பது நல்லது. Brain Health போதுமான தூக்கம்! மூளையின் ஆரோக்கியத்துக்கு... 3 தூக்கம், மூளையின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம், மூளையின் கற்றல் திறனையும் அதிகரிக்கும். மூளையைக் கூர்மையாக்கும் பயிற்சிகள் மூளையின் ஆரோக்கியத்துக்கு... 4 சுடோகு, குறுக்கெழுத்து போன்றவை நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவை மூளையைக் கூர்மையாக்கும். செஸ் Health: 'மூளை உழைப்பு... உடல் உழைப்பு...' - எத்தனை மணி நேரம் செய்யலாம்? உடற்பயிற்சி அவசியம் மூளையின் ஆரோக்கியத்துக்கு... 5 உடற்பயிற்சி உடலை மட்டுமின்றி மூளையின் செயல்திறனையும் அதிகரிக்கச் செய்யும். பார்கின்சன் போன்ற மூளை சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்க, உடற்பயிற்சி பெரிதும் உதவும். யோகாசனம் செய்வது மனதுக்கும் மூளைக்கும் அமைதியைத் தரும். Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும் தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையை பாதிக்கின்றன. இன்றைக்கு, பார்கின்சன், அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு மூளை நரம்பு தொடர்பான நோய்கள்தான் மிகப் பெரிய பிரச்னை. 1,000-க்கும் மேற்பட்ட மூளை தொடர்பான பிரச்னைகள் உள்ளதாக `சொசைட்டி ஆஃப் நியூரோசயின்சஸ்' சொல்கிறது. மூளையை பாதுகாப்பது வாழ்க்கையைப் பாதுகாப்பதுபோல. கவனமுடன் கையாள்வோம் வாழ்க்கையையும் மூளையையும். தகவல்: டாக்டர் சவுண்டப்பன் (மேலும் விரிவான தகவல்களுக்கு விகடன் பிரசுர வெளியீடான ‘மூளை A to Z’ புத்தகத்தைப் படிக்கவும்) சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 24 Aug 2025 7:48 am

Doctor Vikatan: நெஞ்சு கரித்தல், எதுக்களித்தல் பிரச்னை; செரிமான மருந்துதான் ஒரே தீர்வா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக சாப்பிட்டதும் நெஞ்சு கரித்தல் பிரச்னையும், உணவு எதுக்களித்தல் பிரச்னையும் இருக்கிறது. பல காலமாக இதற்கு ஆண்டாசிட் சிரப் அல்லது மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.  இதைத் தவிர்த்து, இயற்கையான முறையில் இந்தப் பிரச்னை சரியாக ஏதேனும் தீர்விருந்தால் சொல்லவும். பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், மூலிகைமணி அபிராமி சித்த மருத்துவர் அபிராமி நெஞ்சு கரித்தல் மற்றும் எதுக்களித்தல் பிரச்னைக்கான முக்கிய காரணம், இரவில் தாமதமாகச் சாப்பிடுவது.  அடுத்து அதிக காபி, டீ குடிப்பவர்களுக்கும் இந்த இரண்டு பிரச்னைகளும் இருக்கும். வயிற்றில் சுரக்கும் அமிலமானது அதிகரிக்கும்போது, நம் உணவுக்குழலுக்குள் உள்ள எலாஸ்டிக் மாதிரியான வால்வு பகுதியைச் சேதப்படுத்துவதால், அமிலமானது மேலே ஏற ஆரம்பிக்கும். 'ஆசிட் ரெஃப்ளெக்ஸ்' எனப்படும் இந்தப் பிரச்னையில், வறட்டு இருமல் வரும். இரவுத் தூக்கம் பாதிக்கப்படும். எனவே, இந்தப் பிரச்னை வராமலிருக்க, இரவில் சீக்கிரமே சாப்பிட்டு விட வேண்டும்.  உணவில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளும் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.  நெஞ்சு கரித்தல் பிரச்னைக்கு அற்புதமான மருந்து சீரகம்.  அகத்தை சீராக வைப்பதுதான் சீரகம்.  100 கிராம் அளவு சீரகத்தை எடுத்து, அது மூழ்கும் அளவுக்கு எலுமிச்சைப்பழச் சாற்றில் ஊற வைக்கவும்.  இதை இரண்டு நாள்கள் வெயிலில் காய வைக்கவும். சீரகம் எலுமிச்சைப்பழச் சாறு முழுவதையும் இழுத்துக்கொண்டிருக்கும். இப்படிச் செய்கிற சீரகத்துக்கு 'பாவனை சீரகம்' என்று பெயர். பாவனை செய்வது என்றால் ஊறவைப்பது.  எலுமிச்சைப் பழச்சாற்றில் ஊற வைத்த சீரகத்தைப் பொடித்துக்கொள்ளவும். இத்துடன் சம அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளவும். எப்போதெல்லாம் நெஞ்சு கரிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பொடியில் சிறிதளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்டால், உமிழ்நீர் நன்கு சுரக்கும்.  அப்படிச் சுரக்கும்போதே  நெஞ்சு கரித்தல்,  அசிடிட்டி போன்ற பிரச்னைகள் சரியாகிவிடும்.  சீரகம் சீரகத்தை ஊறவைத்துப் பொடித்து, இப்படியெல்லாம் செய்ய நேரமில்லை என்றால், சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஏலாதி சூரணத்தைப் பயன்படுத்தலாம்.  ஏலாதி என்றால், ஏலக்காயை ஆதியாக, அதாவது முதல் மருந்தாக வைத்துச் செய்யப்பட்ட சூரணம். சுக்கு, மிளகு போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மிகப் பாதுகாப்பான சித்த மருந்து இது. இந்தச் சூரணத்தில் அரை  டீஸ்பூன் அளவு வாயில் போட்டுக் கொண்டு, இளம் சூடான நீர் குடித்துவிட்டால், அசிடிட்டி உடனே சரியாகிவிடும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் மஞ்ஜிஷ்டா சோப், ஆயில் - அப்படி என்ன ஸ்பெஷல்?

விகடன் 23 Aug 2025 9:00 am

Whatsapp Call-ஐ பார்த்து வீட்டிலேயே பிரசவம்; வெளியில் காத்திருந்த மருத்துவர்கள்; என்ன நடந்தது?

திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (32), நத்தம் கோபால்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஓசூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருவரும் திண்டுக்கல், கோபால்பட்டி எல்லாநகர்ப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பின்பு சத்யா (26) கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக எந்த ஒரு மருத்துவமனையிலும் கர்ப்பம் தொடர்பான சிகிச்சை பெறாமல் கணவரும் மனைவியும் தங்களுக்குள்ளாகவே சொந்தமாகச் சிகிச்சை அளித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக நேரில் வந்து கணவன், மனைவி இருவரையும் சந்தித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தினர். வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர் ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து தாங்கள் வீட்டிலேயே சொந்தமாகப் பிரசவம் பார்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான சத்யாவிற்கு நேற்று பிரசவ வலி வந்ததாகவும் அவர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதாக தகவல் பரவியது. உடனே கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையில் நடமாடும் ஆம்புலன்ஸ்லில் மருத்துவக் குழுவினர், மற்றும் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் மற்றும் போலீசார், பொதுமக்கள் ஆகியோர் சத்யா வீட்டின் முன் குவிந்தனர். கஜேந்திரன்- சத்யா தம்பதியினரிடம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கணவர் கஜேந்திரன் மனைவி சத்யா ஆகிய இருவரும் வீட்டு அறையை மூடிக்கொண்டுள்ளனர். கஜேந்திரன் தனது செல்போனில் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக யாரிடமோ பேசி அவர்கள் கொடுக்கும் கட்டளைப்படி சொந்தமாகப் பிரசவம் பார்த்துள்ளார். வீட்டில் பிரசவம் பார்த்த கணவர் இரவு 7 மணி அளவில் வீட்டின் கதவை கஜேந்திரன் திறந்ததுள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 3 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்திருந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருந்தாலும் இருவரின் பாதுகாப்பு கருதி சத்யாவின் வீட்டிற்கு வெளியே ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். வீட்டில் பிரசவம் பார்ப்பதற்குச் சில வாட்ஸப் குழுக்கள் ஊக்குவிப்பதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் மூன்று வாட்ஸ்அப் குரூப்களை ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டிலேயே பிரசவம்... விலையாகக் கொடுக்கப்பட்ட தாய் - சேய் உயிர்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 22 Aug 2025 6:19 pm

Doctor Vikatan: கண் களிக்கம்  எனும் சித்த மருந்து; கண் நோய்கள் அனைத்துக்கும் தீர்வாகுமா?

Doctor Vikatan: கண் களிக்கம் என்ற பெயரில் புழக்கத்தில் இருக்கும் சித்த மருந்து, கண் சம்பந்தப்பட்ட பல  நோய்களுக்குத் தீர்வு தரும் என்று சொல்கிறார்களே, அது எந்த அளவுக்கு உண்மை? -மனோபாலா, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் நவீன மருத்துவ முறைகள் அறிமுகமாவதற்கு முன்னரே, சித்த மருத்துவத்தில் கண் மருத்துவத்துக்கு தனி இடம் இருந்திருக்கிறது. அதற்கான குறிப்புகள் சித்த மருத்துவப் புத்தகங்களிலும் இருக்கின்றன.  கண் மை அந்தக் காலத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகளின் நீட்சியை இன்று பார்க்கிறோம். உதாரணத்துக்கு, களிக்கம் போடுவது, அஞ்சனம் இட்டு கண் நோய்களை குணப்படுத்துவது  போன்றவை அப்போதிருந்து தொடர்கின்றன. கண்களுக்குத் தீட்டும் மையைக் கூட கெமிக்கல் சேர்க்கை இல்லாமல்,  கரிசலாங்கண்ணி இலைகளைப் பயன்படுத்தித் தயாரித்துப் பயன்படுத்துவார்கள்.  உண்மையில், அதுதான் ஒரிஜினல் கண் மையும்கூட. அதேபோல தேங்காய் சிரட்டையில் மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கும் கண் மை, நந்தியாவட்டையிலிருந்து தயாரிக்கும் கண் மை என நிறைய இருந்தன. மூலிகைகள் கலந்த கண் மை பயன்படுத்தியதால் அந்தக் காலத்தில் கண் நோய்கள் அவ்வளவாக இருந்ததில்லை. இன்று கரிசாலை வைத்துத் தயாரித்த மை பயன்படுத்துவோரெல்லாம் அரிதாகிவிட்டார்கள்.  கரிசாலையின் மகத்துவம் தெரிந்தவர்கள், கிராமத்தில் வசிப்பவர்கள், வெள்ளைக் கரிலாங்கண்ணியைக் கண்டுபிடித்து  சாறெடுத்து மை தயாரித்தால் தான் அதைப் பார்க்க முடியும். கண் மருத்துவம் என்பது மிக மிக ஜாக்கிரதையாக அணுகப்பட வேண்டும். களிக்கம் களிக்கம் என்பது சொட்டு மருந்து மாதிரியானது. இதிலும் நிறைய வகை மருந்துகள் உள்ளன. நந்தியாவட்டை மாதிரியான மலர்களில் இருந்து சாறு எடுத்துத் தயாரிக்கிறார்கள் என்றால் பிரச்னையில்லை. கண்களுக்கான மருந்துகள் எந்த அளவு சுத்தமானவை என்பது முக்கியம். ஏதேனும் கிருமிகள் இருந்து, அந்த மருந்தை கண்களுக்குப் பயன்படுத்தினால் பிரச்னைகள் வரலாம். இந்த மாதிரியான மருந்துகளை பாரம்பர்யமான, படித்த, அனுபவமுள்ள சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது ஓகே. சித்த மருந்துகளை பற்றிய தெளிவில்லாமல் யாரோ பரிந்துரைப்பதைப் பயன்படுத்த வேண்டாம். கண் மருத்துவம் என்பது மிக மிக ஜாக்கிரதையாக அணுகப்பட வேண்டும்.  சிறிய அலட்சியம்கூட கண்களை பெரிய அளவில் பாதிக்கலாம் என்பதுதான் காரணம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?

விகடன் 22 Aug 2025 9:00 am

Less eating: தொடர்ந்து குறைவாகவே சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கும் மருத்துவர்!

இன்றைய வாழ்க்கைச்சூழல், நம் அன்றாட பணிகளைக்கூடச் சுமைகளாக மாற்றிவிட்டது. உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, செய்தித்தாள் படிக்க நேரமில்லை, குழந்தைகளோடு விளையாட நேரமில்லை, புத்தகம் வாசிக்க நேரமில்லை. இப்போது சாப்பாடுவரை வந்து நிற்கிறது நேரமின்மை. உணவைத் தட்டிக்கழிக்க நேரமின்மை, பசியின்மை, ஆரோக்கியத்தின்மீது காட்டும் அலட்சியம் போன்றவையே முக்கியமான காரணங்கள். Less eating நீண்ட நாள் போதுமான உணவு உட்கொள்ளவில்லையென்றால் சாப்பிடாமல் இருப்பதைவிட ஆபத்தானது, பசியிருந்தும் போதுமான அளவுக்குச் சாப்பிடாததும் அரைகுறையாகச் சாப்பிடுவதும். இதை `Hangry’ என்று மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்கள். வயது, பாலினம், உடலுழைப்பு, வயது இவற்றையெல்லாம் பொறுத்து ஒருவருக்குத் தேவைப்படும் கலோரிகளின் அளவு மாறுபடும். என்றாலும், நீண்ட நாள்களுக்குப் போதுமான அளவு உணவு உட்கொள்ளவில்லையென்றால் என்னென்னவோ விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். எந்தெந்த உறுப்புகளில் என்னென்ன பாதிப்புகள் உதாரணமாக, ஹார்மோன் குறைபாடுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது (Hypoglycemia), வைட்டமின் குறைபாடுகள், ரத்தச்சோகை, தலைவலி, மனநிலையில் மாற்றங்கள், இதய நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரலில் பிரச்னை, ரத்த ஓட்டம் சீர்கெடுவது இப்படிப் பல பிரச்னைகள் ஏற்படலாம். போதுமான அளவுக்குச் சாப்பிடாவிட்டால் எந்தெந்த உறுப்புகளில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் எனப் பட்டியலிடுகிறார் குடல் மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணன். Eating மூளை: தலைவலி, மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படலாம். இதயம்: சில நாள்களிலேயே இதயமும், தசைகளும், உள்ளுறுப்புகளும் குளுகோஸ் உற்பத்தி செய்வதைப் படிப்படியாகக் குறைத்து விடலாம். கல்லீரல்: உங்கள் கல்லீரலில் குளுகோஸ் அளவு குறையும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Hypoglycemia) குறையும். Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும் ஒரு காய்! சருமம்: உங்கள் உடல் வறட்சி நிலையை அடையத் தொடங்கும். உடலில் சோடியம், பொட்டாசியம், நீர்ச்சத்து மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் எல்லாமே குறையும். அடிவயிற்றுப் பகுதி: ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். பெண்களுக்கு, இதன் காரணமாக முறையற்ற மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படலாம். Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? உண்பதில் வேண்டாமே ஒப்பீடு! புத்திசாலித்தனமாகச் சாப்பிடுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவரின் உடல்வாகும் வேறுபடும். எனவே, மற்றவர்களின் சாப்பாட்டு அளவோடு உங்களுடையதை ஒப்பிடக் கூடாது. உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரிகள் தேவைப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டு அதிலிருந்து ஆரம்பியுங்கள். கலோரி அளவைத் தெரிந்துகொள்ள, கலோரி கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். உடல் எடையை அப்படியே பராமரிக்க நினைப்பவர்கள் மட்டும், இதைப் பின்பற்றலாம். உடல் எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ நினைப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு உணவுமுறையில் மாற்றம் செய்துகொள்ளலாம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 22 Aug 2025 6:59 am

செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை Pick-up & Drop செய்முறை பற்றி தெரியுமா? | பூப்பு முதல் மூப்புவரை

ஆச்சர்யமான அறிவியல் பயணம்... கருத்தரிப்பு நிகழ்வு என்பதே இயற்கையில் நிகழும் ஓர் அழகிய பயணம் என்றிருக்க, செயற்கை கருத்தரிப்பில் இந்தப் பயணத்தை முழுமையாக்கிட உதவுகிறது ஒரு பிக்-அப்  அண்ட் ட்ராப்.!  ஆம், 'Oocyte Retrieval' எனும் கருமுட்டைகளின் 'பிக்-அப்', அதற்குப் பின் ஆய்வகத்தில் உருவான கருவை கருப்பைக்குள் வைத்திடும்  'ட்ராப்' ஆகியன குறித்த ஓர் ஆச்சர்யமான அறிவியல் பயணத்தைத் தான் இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். கருமுட்டை குழந்தைப்பேறின்மையில் மேற்கொள்ளப்படும் ஐ.யூ.ஐ, ஐ.வி.எஃப், இக்ஸி போன்ற செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளின் முதல்படியான 'சூப்பர் ஓவுலேஷன்' எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டலில், மாதவிடாய் சுழற்சி தொடங்கிய 2-3 நாள்களிலிருந்து மருந்துகள் (சினைப்பைத் தூண்டல் மாத்திரைகள் அல்லது ஊசிகள்) பெண்ணுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு, ஃபாலிக்குலர் ஸ்கேனிங் மூலமாக, சினைப்பையின் நுண்ணறைகளின் வளர்ச்சி அன்றாடம் கண்காணிக்கப்பட்டு, அவை தகுந்த எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி நிலையை எட்டியபிறகு, ஹெச்சிஜி தூண்டல் ஊசி அப்பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. இவையனைத்தும், தம்பதியினர் இருவருக்கும் தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு, முறையான ஒப்புதலும் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படுகின்றன. 30 முட்டைகள்; 30 நிமிடங்கள் ஹெச்சிஜி ஊசி செலுத்தப்பட்ட 34-36 மணிநேரத்தில் பொதுவாக முட்டைகள் வெளியேறும் என்பதால், Oocyte Retrieval எனும் சினைமுட்டை 'பிக்-அப்', ஹெச்சிஜி ஊசி வழங்கப்பட்ட 36 மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், சிகிச்சை மேற்கொண்டிருக்கும் பெண்ணை இதற்கெனத் தயார்படுத்துதல் அவசியமாகிறது. இது ஒரு சிறிய அறுவை சிகிச்சை என்பதால், சிகிச்சைக்கு வருமுன், குறைந்தது 4-6 மணிநேர உணவு உண்ணாமை (ஃபாஸ்ட்டிங்) அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது. கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன் Health: ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகள்... தேவை... கவலையல்ல, கவனம்! பூப்பு முதல் மூப்பு வரை- 10 செயற்கை கருத்தரிப்பு கிளினிக் அல்லது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, தக்க ஆயத்தங்களுடன், பிரத்யேக அறுவை அரங்கில், மயக்கவியல் நிபுணரால் வலி நிவாரண மருந்து வழங்கப்படும். பின் ட்ரான்ஸ் வெஜைனல் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் உதவியுடன், யோனிப்பாதை வழியாக, ஒரு சிறிய ஊசி கொண்டு, வளர்ச்சி அடைந்த சினைப்பை நுண்ணறைகளிலிருந்து, திரவத்துடன் கூடிய கருமுட்டைகளை தக்க அழுத்தம் தந்து, ஒரு பிரத்யேக உறிஞ்சு-குழாய்க்குள் செயற்கை கருத்தரிப்பு நிபுணர் சேகரிக்கிறார். பொதுவாக 10-15 கருமுட்டைகள் கிடைக்கப்பெறும் இந்த பிக்-அப்பில் 25-30 முட்டைகள் வரையில் கிடைக்கக்கூடும். அதேபோல, அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்தச் சிகிச்சைக்கு மருத்துவமனை உள்-அனுமதி  பொதுவாகத் தேவையில்லை. பிக்-அப் சிகிச்சை முடிந்த 5-6 மணிநேரத்தில் அவர் வீடு திரும்பவும், இயல்பு நிலைக்குத் திரும்பவும் இந்த எளிய சிகிச்சை உதவுகிறது. என்றாலும், சிலரில் மட்டும், சிகிச்சைக்குப் பின் அதிக வலியோ, சிறுநீர்த் தேக்கமோ அல்லது வயிற்றுக்குள் ரத்தக்கசிவோ ஏற்படக்கூடும் என்பதையும், அதன் காரணமாக சிகிச்சை நேரம் நீடிக்கக்கூடும் என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். வரலாற்றின் பக்கங்களை சிறிது திரும்பிப் பார்த்தோமேயானால், உண்மையில் இந்த oocyte retrieval எனும் சினைமுட்டை பிக்-அப், நமது அன்றாட பிக்-அப்  அண்ட் ட்ராப் வாகன சேவைகளைக் காட்டிலும், பற்பல மாற்றங்களை சந்தித்துள்ளது எனலாம். ஆரம்பநிலையில் லேப்ராட்டமி அல்லது லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் வாயிலாக மட்டுமே இந்த பிக்-அப் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வயிற்றைக் கிழித்து அல்லது சிறுதுளை வழியாக சினைப்பை முற்றிலுமாகவோ அல்லது அதன் ஒருபகுதி மட்டும் நீக்கப்பட்டு, அதிலிருந்து சினை முட்டைகள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே சேகரிக்கப்பட்டன. செயற்கை கருத்தரிப்பு அதனைத் தொடர்ந்து, லேப்ராஸ்கோப்பி சிகிச்சை வாயிலாக, தேர்ந்த ஊசி கொண்டு, சினைப்பையின் நுண்ணறைகளில் உள்ள ஃபாலிக்குலர் திரவமும், அதிலிருந்து கருமுட்டைகளும் சேகரிக்கப்பட்டன. உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையான லூயி பிரவுன் பிறந்ததும் இந்த வகை சிகிச்சையில் தான்.1980-களில் ஸ்கேனிங் நுட்பம் எளிமையாக்கப்பட, அறுவை சிகிச்சையின்றி, வயிற்றுப்பகுதி வழியாக (Trans abdominal) ஸ்கேனிங் மூலமாக ஊசி செலுத்தி சினைமுட்டைகளைச் சேகரிப்பதும், அதற்குப்பின் ஸ்கேனிங் நுட்பம் இன்னும் மேம்பட, தற்சமயம் மருத்துவர்கள் பயன்படுத்தி வரும் ட்ரான்ஸ் வெஜைனல் பிக்-அப் சிகிச்சையும் நடைமுறைக்கு வந்துள்ளது. சற்று சிக்கலான பிக்-அப் சிகிச்சைகளில், டாப்ளர் (Doppler scan) எனும் ரத்த ஓட்ட ஸ்கேனிங் பலனளிக்கிறது என்கிறார்கள் செயற்கை கருத்தரிப்பு நிபுணர்கள். மாதவிடாய் சுகாதாரம்... அவசரம், அவசியம் தேவைப்படுவது இதுதான்! | பூப்பு முதல் மூப்பு வரை -24 தரம் பிரித்து, தயார்படுத்தி. இப்படி, பிக்-அப் சிகிச்சையில் சேகரிக்கப்பட்ட கருமுட்டைகளை, Embryologist எனும் கருவியல் நிபுணர், அதற்கான பிரத்யேக ஆய்வகத்திற்கு உடனடியாக மாற்றி, ஃபாலிக்குலர் திரவத்திலிருந்து முட்டைகளைப் பிரித்து, வெளித்தோல் போன்ற க்யூமுலஸ் (denudation of cumulus) அவற்றின் தரத்தை ஆய்வு செய்து, அடுத்த கட்ட நிகழ்வான கருக்கட்டல்/ கருவாக்கத்திற்கு (Fertilization) கருமுட்டைகளைத் தயார்படுத்துகிறார். செயற்கை கருத்தரிப்பு பிக்-அப் சிகிச்சைக்கு ஓரிரு மணிநேரங்களுக்கு முன்னரே, ஆணின் விந்தணுக்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தச் சேகரிப்புக்கு முன், குறைந்தது மூன்று நாள்களாவது பாலுறவைத் தவிர்ப்பது அவசியமாகிறது. சமயத்தில் முன்னரே எடுத்து உறைநிலையில் காக்கப்பட்ட விந்தணுக்கள் (Frozen semen sample) அல்லது தானமாகப் பெற்ற விந்தணுக்கள் (Donor sperms) இதில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, கருவாக்கம் நிகழ்வுக்கு முன்னரே, விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அவற்றில் அல்லவை நீக்கி, நல்லவை மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு (sperm processing) சிகிச்சைக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன. இப்படி, ஏற்கெனவே தயார்நிலையில் உள்ள ஆணின் விந்தணுக்களை, ஐவிஎஃப் சிகிச்சையில் பிக்-அப் செய்த 3-4 மணிநேரத்திற்குள் நான்கைந்து கருமுட்டைகளுடன் மில்லியன் கணக்கில் விந்தணுக்கள் ஒன்றுசேர பெட்ரி-டிஷ் (petri dish) எனும் தட்டையான கிண்ணத்தில், பிரத்யேக இன்குபேட்டரில் (Incubator) வைக்கப்படுகின்றன. இக்‌ஸி சிகிச்சை முறையில் முந்தைய பதிவில் குறிப்பிடப்பட்டது போல, ஒற்றைக் கருமுட்டையும், ஒரே ஒரு விந்தணுவும் மூன்று மணிநேர அவகாசத்திற்குள் கருவாக்கப்படுகின்றன. இதில் ஐவிஎஃப், இக்‌ஸி என எந்தவகையான சிகிச்சை என்றாலும், ஆய்வகத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் உபயோகிக்கப்படும் திரவங்கள் ஆகியன, முற்றிலும் அப்பெண்ணின் இனப்பெருக்க அமைப்பையும், சூழலையும், தட்பவெப்பத்தையும் பிரதிபலிக்கும் வகையில்தான் வடிவமைக்கப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கருவாக்க நிகழ்வின் கனியாக உருவாகும் கருவை, எம்பிரியோ (embryo) என அழைக்கும் கருவியல் நிபுணர்கள், பிக்-அப் மற்றும் கருக்கட்டல் நிகழ்ந்த 24 மணிநேரத்தில் கருவாக்கத்தை மைக்ரோஸ்கோப் மூலம் உறுதி செய்கின்றனர். இந்த முதல் நாளிலிருந்து ஐந்து நாள்கள்வரை, கருவின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன், கருவின் தரமும் A-D வரிசையில் வரையறுக்கப்படுகிறது. பொதுவாக, கிரேட் ஏ என்பது அதிகத் தரம் கொண்ட கரு என்றால், கிரேட் பி சற்றே குறைவானது என்றும், கிரேட் டி என்பது மிகவும் தரம் குறைந்த கரு என்றும் நாம் புரிந்துகொள்ளலாம். பிக்-அப் செய்து, தரம் பிரித்து, இப்போது நல்ல கருவை ட்ராப் செய்ய வேண்டுமல்லவா? அது எங்கு, எப்போது, எப்படி என்பதை அடுத்து தெரிந்து கொள்வோம்.! பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது.! டீன் ஏஜில் மனநலம்... இந்த மூன்று பேருக்கும் உண்டு பொறுப்பு... பூப்பு முதல் மூப்பு வரை!

விகடன் 21 Aug 2025 12:50 pm

வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதா? -நிபுணர் பதில் | காமத்துக்கு மரியாதை -254

கணவனைவிட மனைவி வயது கூடுதலாக இருப்பது தற்போது சகஜமாகிக்கொண்டு வருகிறது. அந்தக் காலத்தில் உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக இது பெற்றோர்களாலே நடத்தி வைக்கப்பட்டது. இந்தக் காலத்தில் காதல் திருமணங்களில் இது சகஜமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் சிலருக்கு வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதோ என்கிற சந்தேகம் இருக்கிறது. அதற்கான பதிலை இங்கே சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். Fertility கூடவே, அந்த ஆணுடைய பெற்றோரும் ''அந்த இளம் தம்பதியர் என்னை சந்திப்பதற்கு வந்திருந்தனர். கூடவே, அந்த ஆணுடைய பெற்றோரும். தங்கள் மகன் அவனைவிட வயது அதிகமானப் பெண்ணை திருமணம் செய்ததால்தான், அவர்களுக்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லை என்றார்கள். அவர்களை வெளியே அமர சொல்லிவிட்டு, அந்த இளம் தம்பதியரிடமும் தனித்தனியாகப் பேசினேன். அந்தப்பெண், கணவனைவிட 3 வயது மூத்தவள்! அவர்களுக்குத் திருமணமாகி ஜஸ்ட் ஒரு வருடம்தான் ஆகியிருக்கிறது. அந்தப்பெண், கணவனைவிட 3 வயது மூத்தவள். காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார்கள். இந்த வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி திருமணத்தை தடைசெய்ய முயற்சி செய்திருக்கிறார்கள் கணவனின் வீட்டார். ஆனால், இவர்கள் உறுதியாக இருந்து திருமணம் செய்திருக்கிறார்கள். இப்போது திருமணமாகி ஒருவருடம் ஆன நிலையில், 'நம்ம குடும்பத்துல எல்லாம் கல்யாணமான ஒரு வருஷத்துலேயே பொண்ணுங்க கர்ப்பமாகிடுவாங்க. ஆனா, உன் மனைவி உன்னைவிட மூத்தவங்கிறதாலதான் அவ இன்னும் கர்ப்பமாகலை'ன்னு சொல்லியிருக்காங்க. Couple fight உங்கள் மகனையும் செக் செய்ய சொல்லுங்கள்! இந்த விஷயம் தெரிய வந்ததும், அந்தப் பெண் உடனே மகப்பேறு மருத்துவரைப் பார்த்து, அவர் குழந்தைப் பெறுவதற்கான உடல் ஆரோக்கியத்தோடுதான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தியதோடு அதை கணவர் வீட்டாரிடம் தெரிவித்திருக்கிறார். கூடவே, 'என்னிடம் எந்தக் குறையும் இல்லை. உங்கள் மகனையும் செக் செய்ய சொல்லுங்கள்' என்றிருக்கிறார். அதனால்தான், குடும்பமாக வந்திருக்கிறார்கள். தினமும் உறவுகொள்ளுங்கள்! உங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆகியிருப்பதால், இவ்வளவு சீக்கிரம் குழந்தைப்பற்றி யோசிக்காமல் உங்கள் செக்ஸ் லைஃபை நன்றாக என்ஜாய் செய்யுங்கள். தினமும் உறவுகொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு குழந்தைப்பேறை ஏற்படுத்தி கொடுத்துவிடும் என்றேன். 'என்னைவிட என் மனைவியின் வயது அதிகமாக இருப்பதால்தான் இன்னும் கருத்தரிக்கவில்லை என்கிறார்களே' என்றவரிடம், விளக்கமாக பேசினேன். Sexual wellness கணவனைவிட மனைவி வயது கூடுதலாக இருப்பது நம்முடைய சமூகத்தில் பெரும்பாலும் மனைவியைவிட கணவன் வயது அதிகமானவராக இருப்பார். கணவனைவிட மனைவிக்கு வயது குறைவாக இருந்தால், 'நம்மளைவிட சின்னவ' என்று கணவன் மனைவியின் குறைகளை அனுசரித்துப் போவான். மனைவி கணவரிடம் 'நம்மளவிட பெரியவர்' என்கிற மரியாதையுடன் நடந்துகொள்வார். இதனால், குடும்பத்தில் பிரச்னை வராது என நம்பி நம் முன்னோர்கள் இதை செய்திருக்கலாம். வீட்டுப் பொறுப்பு, குழந்தைகள் வளர்ப்பு, கூடவே கணவனையும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால், மனைவி வயதில் சிறியவராக இருந்தால்தான் முடியும் என்கிற ஆணாதிக்க மனப்பான்மைகூட இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், இன்றைக்கு கணவனும் மனைவியும் சம வயதாக இருப்பதும், கணவனைவிட மனைவி வயது கூடுதலாக இருப்பதும் சகஜமாகி விட்டது. Chem Sex: இளைஞர்களை ஆபத்தில் தள்ளிக்கொண்டிருக்கும் கெம் செக்ஸ்! - காமத்துக்கு மரியாதை 252 மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும்! கணவனுக்கு வயது அதிகமாகவும், மனைவிக்கு வயது குறைவாகவும் இருக்கையில் எப்படி குழந்தைப் பிறக்குமோ, அதேபோல கணவனுக்கு வயது குறைவாகவும் மனைவிக்கு வயது அதிகமாகவும் இருந்தால்கூட குழந்தைப் பிறக்கும். அதற்கு உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும் என்றேன். இளம் வயதில் போதைப்பழக்கம்; பிற்கால தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்? - காமத்துக்கு மரியாதை 253 மகிழ்ச்சியாக இருங்கள்! குழந்தையில்லாத பிரச்னையை என் பெற்றோர் எழுப்புவதற்கு முன்னால் வரை, நாங்கள் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம் டாக்டர் என்றவருக்கு, விறைப்புத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை எல்லாமே நார்மலாகவே இருந்தன. மகிழ்ச்சியாக இருங்கள் என்று வாழ்த்தி அனுப்பினேன் என்றார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 21 Aug 2025 10:48 am

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் மஞ்ஜிஷ்டா சோப், ஆயில் - அப்படி என்ன ஸ்பெஷல்?

Doctor Vikatan:  ஒரு காலத்தில் குங்குமாதி தைலத்துக்கு இருந்தது போல இப்போது பலரும் மஞ்சிஷ்டா எண்ணெய், மஞ்சிஷ்டா சோப் என தேடித்தேடி உபயோகிக்கிறார்கள். மஞ்சிஷ்டா என்பது என்ன, அது எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளுமா, எப்படி உபயோகிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், மூலிகைமணி அபிராமி சித்த மருத்துவர் அபிராமி சம்ஸ்கிருதத்தில் 'மஞ்ஜிஷ்டா' என்றும் தமிழில் 'மஞ்சட்டி' என்றும் இதைச் சொல்வோம். மஞ்சட்டியின் வேர், சிவப்பு நிறத்தில் இருக்கும். அதிலுள்ள சிவப்பு நிறமிக்காக அந்தக் காலத்தில் டெக்ஸ்டைல் பிரின்ட்டிங், பெயின்ட் போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை நிறைய தைலங்கள் மற்றும் வெளிப் பிரயோக மருந்துகளில் பயன்படுத்துவதுண்டு. மஞ்ஜிஷ்டா என்பது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஒருவகையான வேர். மலைப்பிரதேசத்தில் விளையக்கூடிய காபி போன்ற செடியின் வேர் இது. சருமத்துக்கான தைலங்கள் மற்றும் புண்களை ஆற்றும் தைலங்களில் வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்துவோம்.  பிக்மென்ட் எனப்படும் மங்கு பாதிப்பைக் குறைக்கும் ஆற்றல்  மஞ்ஜிஷ்டாவுக்கு உண்டு என்பதால்தான் சமீப காலமாக இதற்கான வரவேற்பு அதிகமிருக்கிறது. மஞ்சட்டி வேரைப் பயன்படுத்த ஆரம்பித்தால், சரும நிறம் சீராகும். மஞ்ஜிஷ்டா வேர் சேர்த்த தைலத்தை சருமத்தில் பயன்படுத்த ஆரம்பித்தால், ஆங்காங்கே காணப்படும் சரும கருமை மாறும். சரும அழகு Doctor Vikatan: சரும அழகுக்கு மஞ்சள் மட்டுமே போதுமா, ஃபேஷியல் செய்வது தேவையற்றதா? வீட்டிலேயே தயாரிக்கப்படும் சோப் மற்றும் தைலங்களில் மஞ்ஜிஷ்டா பயன்படுத்துவது சோஷியல் மீடியாவிலும் பிரபலமாகி வருகிறது. கால்களில் புண்களை ஏற்படுத்தி, நிறத்தை மாற்றும் வேரிகோஸ் வெயின்ஸ் பிரச்னைக்கும் இந்த வேர் பயன்படும். சித்த மருத்துவத்தில் இந்த வேரை உள்ளுக்குக் கொடுக்கும் சில மருந்துகளிலும் பயன்படுத்துவோம். ஆனால், அந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தவே கூடாது. 100 கிராம் தேங்காய் எண்ணெயில் 10 கிராம் மஞ்ஜிஷ்டா வேரை நசுக்கிச் சேர்த்து சூடு செய்ய வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துதான் காய்ச்ச வேண்டும். எண்ணெய் தீய்ந்துவிடக்கூடாது. காய்ச்சிய எண்ணெயை ஆறவைத்து சருமத்தில் தடவி வரலாம். இப்படிச் செய்யவெல்லாம் நேரமில்லை என்பவர்கள்,  சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் சிவப்பு குக்கிலி எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதில் மஞ்சட்டி மட்டுமன்றி, குங்கிலியம், தேன்மெழுகு போன்ற வேறு சில பொருள்களையும் சேர்த்திருப்பார்கள். சரும அழகு இதில் சில துளிகளை சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு குளித்து வந்தால் சரும அழகு மேம்படும். மெனோபாஸ் காலத்தில் நிறைய பெண்களுக்கு சருமத்தில் மங்கு பிரச்னை வரும். அவர்கள் இந்த எண்ணெயை உபயோகிக்கலாம். அதே போல வெயில் பட்டுக் கருத்துப்போன சருமத்தின் நிறத்தை மாற்றவும் பயன்படுத்தலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்: அதற்கான பதில்கள் தினமும் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 21 Aug 2025 9:00 am

Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்!

நடைப்பயிற்சி எனும் வாக்கிங் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம், எப்படி நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப்பலனும் கிடைக்கும் என்கிற விழிப்புணர்வு பலருக்கும் இருக்காது. அந்த விழிப்புணர்வை இந்தக் கட்டுரையில் ஏற்படுத்தவிருக்கிறார் ஃபிட்னஸ் டிரெய்னர் ஒலிம்பியா ஜெய். Walking எங்கும் நடக்கலாம்! பீச்சில் நடப்பது மட்டுமல்ல வாக்கிங். அங்கும் நடக்கலாம். வீட்டுக்கு அருகில் உள்ள பார்க்கிலும் நடக்கலாம்; வீட்டைச் சுற்றி நடக்கலாம்; மொட்டை மாடியில்கூட நடக்கலாம், எல்லாமே வாக்கிங்தான். எவ்வளவு நேரம்; எத்தனை நாள்? ஒருநாளைக்கு 30 நிமிடம் வாக்கிங் செல்வது நல்லது. வாரத்துக்கு குறைந்தபட்சம் 5 நாள்களாவது வாக்கிங் செல்ல வேண்டும். உங்களுக்கு விருப்பம் என்றால், உங்களால் முடியுமென்றால் 7 நாளும்கூட வாக்கிங் போகலாம். அரை மணி நேரம் வாக்கிங் செல்வது என்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. அதே நேரம், இன்றைக்குத்தான் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கிறீர்கள் என்றால், முதல் நாளே அரை மணி நேரம் நடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. முதல் நாள் 10 நிமிடம், அடுத்த நாள் 15 நிமிடம் என மெதுவாக நடந்து, நடைப்பயிற்சியை உங்கள் உடலுக்கு அறிமுகப்படுத்துங்கள். பிறகு மெள்ள மெள்ள நேரத்தை அதிகரித்து நாளொன்றுக்கு 30 நிமிடம் வரை நடக்கலாம். ஒருவேளை 30 நிமிடம் வாக்கிங் செல்ல முடியவில்லையென்றால், காலையில் 15 நிமிடம், மாலையில் 15 நிமிடம் என பிரித்து வாக்கிங் போகலாம். Walking ஏன் அதிகாலையில் வாக்கிங் செல்வது நல்லது? அதிகாலை 5 மணியில் இருந்து 6:30 மணிக்குள் வாக்கிங் சென்றால், காற்று சுத்தமாக இருக்கும் அல்லது காற்றில் மாசுபாடு குறைவாக இருக்கும். ஏற்கெனவே ஆஸ்துமா போன்ற பிரச்னையுடன் இருப்பவர்கள் காற்று மாசு அதிகமாக இருக்கிற மாலை நேரத்தில் வாக்கிங் சென்றால், அது அவர்களுடைய பிரச்னையை அதிகப்படுத்தலாம். ஒருவேளை நீங்க வசிக்கிற பகுதியில் காற்று சுத்தமாக இருந்தால், மாலையிலோ அல்லது இரவிலோகூட வாக்கிங் போகலாம். வாக்கிங்கும் வலியும்! புதிதாக வாக்கிங் செல்ல ஆரம்பித்தவர்களுக்கு, பயன்படுத்தாத தசைகளை திடீரென பயன்படுத்துவதால் கட்டாயம் கால்களில் வலி ஏற்படும். அது நடப்பதால் உண்டான வலி என்றால், தூங்கி எழுந்தாலே சரியாகி விடும். இவர்கள் அடுத்த நாளும் வாக்கிங் செல்லலாம். ஓய்வு எடுக்க வேண்டிய அவசியமில்லை. வாக்கிங் செல்பவர்கள் தங்கள் உடம்பு கொடுக்கிற ஃபீட் பேக்கை கவனிக்க வேண்டும். கால்வலி, முட்டி வலி ஏற்பட்டால் உடலுக்கு ஒய்வு கொடுக்க வேண்டும். வலியுள்ள இடங்களில் ஐஸ்கட்டி ஒற்றடம் கொடுக்க வேண்டும். வெந்நீர் ஒற்றடம் கொடுக்கக்கூடாது. முட்டி வலி 50, 60 வயதில் வாக்கிங் செல்ல ஆரம்பித்தாலும்... ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் போன்ற பிரச்னை இருப்பவர்கள் வாக்கிங் சென்று, அதனால் வலி ஏற்பட்டு, 'எழவே முடியவில்லை; நடக்கவே முடியவில்லை' என்றால், கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். 50, 60 வயதில் வாக்கிங் செல்ல ஆரம்பித்தாலும், முட்டிகளில் வலி ஏற்படவே செய்யும். இருந்தாலும் இந்த வயதுக்காரர்கள் நடப்பதே நல்லது. இளவயதில் இருந்தே ஜிம்முக்கு சென்றவர்கள் 50, 60-களிலும் செல்வார்கள். ஆனால், அந்தப் பழக்கம் இல்லாதவர்களால் வயதானப்பிறகு பெரும்பாலும் புதிதாக ஜிம்முக்கு செல்ல முடியாது. அதனால், அவர்கள் குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். மற்றபடி எல்லோரும் நடக்கலாம்; எந்த வயதிலும் நடக்கலாம். நடைப்பயிற்சியை கடமையாக செய்யக்கூடாது; லவ் பண்ணி வாக்கிங் செல்ல வேண்டும். சாப்பிட்டப் பிறகு வாக்கிங் போகலாமா? சாப்பிட்டப் பிறகு வாக்கிங் போகலாமா? தாராளமாக போகலாம். ஆனால், மெதுவாக, ரிலாக்ஸாக நடக்க வேண்டும். இது செரிமானத்துக்கு உதவும் என்பது நிரூபணமாகியிருக்கிறது. காலை எடுத்து வைப்பதில் சில ரூல்ஸ்! நடப்பதற்கென்றால் வலது காலை எடுத்து முதலில் வைப்போம். அந்தக் காலை தொப்பென்று வைக்கக்கூடாது. அதேபோல, காலின் நுனிப்பகுதி முதலில் தரையில் படக்கூடாது. குதிகால் பகுதிதான் முதலில் தரையில்பட வேண்டும். பிறகு வலது காலுக்கு அழுத்தம்கொடுத்து நின்று, பிறகு இடதுகாலை எடுக்க வைத்து வேண்டும். இதற்கும் 'தொப்பென்று வைக்கக்கூடாது; நுனிப்பகுதி முதலில் தரையில் படக்கூடாது; குதிகால்தான் முதலில் பட வேண்டும் என்கிற அதே விதிகளை பின்பற்ற வேண்டும். இப்படி நடக்கும்போது, இரண்டாவது இதயம் எனச் சொல்லப்படுகிற கெண்டைக்கால் தசைகள் ரத்தத்தை இதயத்துக்கு சரியாக பம்ப் செய்யும். இதனால், இதயமும் நுரையீரலும் நன்றாக இயங்கும். நடைப்பயிற்சி நடைப்பயிற்சியில் குறுநடையின் முக்கியத்துவம் என்ன? நடைப்பயிற்சியைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமானது கிடையாது. கூழாங்கல் மீது வாக்கிங்? நம் உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் பல அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளன. அவை பல உள்ளுறுப்புகளுடன் தொடர்புடையதாக அக்குபஞ்சர் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால், கூழாங்கற்கள் மீது நடந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். கூழாங்கல் மீது வாக்கிங் 8 வாக்கிங்; ஏன் முக்கியம்; எப்படி நடக்க வேண்டும்? இதை 'முடிவிலாத நடை' எனச் சொல்வார்கள். 8 வடிவ வாக்கிங்கிலும் அரைமணி நேரம் நடக்க வேண்டும். இதில் முதல் 15 நிமிடங்கள் கிளாக் வைஸில் நடக்க வேண்டும். அடுத்த 15 மணி நிமிடங்கள் ஆன்டி கிளாக் வைஸில் நடக்க வேண்டும். 8 வடிவத்தில் வாக்கிங் செல்லும்போது, ஃபோகஸாக நடக்க வேண்டி வரும். பக்கத்தில் இருப்பவருடன் பேசிக்கொண்டு நடந்தால், 8 வடிவத்தை விட்டு வெளியே வந்துவிடுவோம் என்பதால், மிக கவனமாக நடப்போம். இதனால், உடம்பின் பேலன்ஸ் மேம்படும். பேலன்ஸ் மேம்பட்டால், தடுமாற்றம் இருந்தாலும் கட்டுக்குள் வரும். தவிர, 8 வடிவத்தின் வளைவில் நீங்கள் அடிக்கடி திரும்ப வேண்டி வருதால், இடுப்புப்பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும். இதனால், உடற்பகுதியின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் அமைந்துள்ள முக்கியமான தசைகள் வலுவாகி வயதான காலத்தில் கீழே விழுவது தவிர்க்கப்படும். வாக்கிங் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்..! வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள்கூட, ஹாலுக்கும், பெட்ரூமுக்கும், கிச்சனுக்கும் 5 ஆயிரம் ஸ்டெப்ஸ்கூட நடந்துவிட முடியும். இது ஒரு நாள் கூடும், ஒரு நாள் குறையும். அதனால் இதை ஒரு நடைப்பயிற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. இதற்கென தனியாகத்தான் வாக்கிங் செல்ல வேண்டும். பத்தாயிரம் அடிகள் நடந்தே தீர வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். இப்படி ஓவராக வாக்கிங் செல்லும் போது பாத வலி அல்லது பாதை எலும்புகளில் கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய விரிசல்கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  தவிர, வாக்கிங் செல்கையில் உங்கள் உடம்பின் கீழப்பகுதிக்கு மட்டுமே பயிற்சி கிடைக்கும். அதனால் 5000 அடிகள் நடந்துவிட்டு, உடலின் மேல்பகுதிக்கான சில பயிற்சிகளை செய்யலாம். இதனால் மொத்த உடம்பும் வலுவாகும்; உடல் வடிவமும் அழகாகும்.  ஃபிட்னஸ் டிரெய்னர் ஜெய். ஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு! பின்நோக்கி நடத்தல்! நடைப்பயிற்சியில் இது பெஸ்ட். பின்னோக்கி நடக்கும்போது மனமும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படும். மூளை எப்படி நடக்க வேண்டும் என்று சொல்ல, உடல் அதைக் கேட்டு அப்படியே செய்யும். பின்னோக்கி நடப்பதால் மனம் ஒருமுகப்படும். இது நம்முடைய மற்ற வேலையிலும் வெளிப்படும். பின்னோக்கி நடக்க நடக்க தொடையின் தசைகள் இயல்பைவிட வேறு மாதிரி இயங்குவதால் அது இன்னும் பலப்படும்.  தவிர, வழக்கமான நடைப்பயிற்சியில் தொடையின் முன்பகுதி தசைகள் மட்டுமே வலுப்பெறும். பின்பகுதி தசைகள் அந்தளவுக்கு வலுவாக இருக்காது. அடிக்கடி நீங்கள் பின்நோக்கி நடக்கவும் செய்தீர்களென்றால், தொடையின் அனைத்து தசைகளும் வலுவாகும். நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்! வாக்கிங் செல்கையில் நம் உடம்பு எப்படி இருக்க வேண்டும்? நன்றாக நிமிர்ந்து நடக்க வேண்டும். கீழே மட்டுமே பார்த்துக்கொண்டு நடக்கக்கூடாது. மேல் முதுகு முன்னாடியோ அல்லது பின்னாடியோ சாயக்கூடாது. கீழ் முதுகு திடமாக இருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம். வாக்கிங் அற்புதமான எக்ஸர்சைஸ் என்றாலும், தொடர்ந்து நடப்பது என முடிவெடுத்துவிட்டீர்களென்றால், நல்ல தரமான நடைப்பயிற்சிக்கான ஷூவை அணிவது மிக மிகக் கட்டாயம். கூடவே ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீரும், தேவைப்பட்டால் முகம் துடைக்க சிறு டவலும் எடுத்துச் செல்லுங்கள். மற்றபடி தனியாக நடப்பது, மற்றவர்களுடன் பேசாமல் நடப்பது நடைப்பயிற்சியை ஒருமனதாக செய்ய வைக்கும். இந்த வழிமுறைகளை ஃபாலோ செய்து வாக்கிங் சென்றால், என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்'' என்கிறார் ஜெயக்குமார். நடப்போம்; நலமாக இருப்போம்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 20 Aug 2025 7:08 am

சேலம்: நாய் போல் செய்கை; தண்ணீர் குடிக்கச் சிரமம்; ரேபிஸ் நோய்க்குச் சிகிச்சை எடுக்காத தொழிலாளர் பலி

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்துள்ள இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (43) தறித் தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள பலரை அந்த நாய் கடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குப்புசாமியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த குப்புசாமி தன்னுடைய வளர்ப்பு நாயை அடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குப்புசாமியின் காலில் நாய் கடித்துள்ளது. நாய்க் கடி பாதிப்பிற்கு மருத்துவச் சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடாமல் குப்புசாமி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்புசாமியின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குடிக்க முடியாமல், நாய் போலவே பல்வேறு செய்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். நாய் இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு குப்புசாமியைப் பரிசோதனை செய்த போது ரேபிஸ் நோய்ப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைத்தனர். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். தீவிர மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார். வளர்ப்பு நாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்காததால் தறித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. `நாய் கடித்ததும் சோப்பு வைத்து கழுவினாலே ரேபிஸ் வைரஸ் இறந்துவிடும்'- அம்பிகா சுக்லா சர்ச்சை கருத்து Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 19 Aug 2025 5:17 pm

காவல்துறை பணியாளர்களுக்கு உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி வழங்கிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை

மருத்துவ அவசரநிலைகளை திறம்பட எதிர்கொள்வதில் எப்போதும் தயாராக இருப்பதற்கான ஒரு முன்னோடித்துவ நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் மதுரை மாவட்ட காவல்துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் (MMHRC) இணைந்து ஒரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது; மதுரை மாவட்ட காவல்துறை பணியாளர்களுக்கு CPR (Cardio-Pulmonary Resuscitation) மற்றும் BLS (Basic Life Support) ஆகியவற்றில் மாவட்ட அளவிலான பயிற்சியளிப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி திடீரென ஏற்படும் cardiac arrest மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான அவசர நிலைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு உயிர்காக்கும் அவசரநிலை சிகிச்சை உத்திகளில் மாவட்டத்தின் ஒட்டுமொத்த காவல்துறையினரும் முறைப்படி பயிற்சியளிக்கப்படுவது தமிழ்நாடு மாநிலத்தில் இதுவே முதன்முறையாகும். தொடர்ந்து வரும் 18 சனிக்கிழமைகளில், மதுரை மாவட்டம் முழுவதிலும் பணியாற்றுகிற காவல்துறையினருக்கு இதில் சிறப்பான பயிற்சியளிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இது தொடர்பான முதல் நேரடி அமர்வு மதுரையிலுள்ள SS மஹாலில் நடைபெற்றது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை குழுவினர், CPR மற்றும் BLS ஆகியவற்றைப் பற்றித் தெளிவான விளக்கம் மற்றும் செயல்முறை பயிற்சிகளை வழங்கினர். போக்குவரத்து விபத்துகள், திடீரென ஏற்படும் மருத்துவ அவசரநிலைகளின் போது உதவி வழங்கும் முதல் நபர்களாக காவல்துறை அதிகாரிகளே பெரும்பாலும் இருப்பதால் இந்த பயிற்சி பெற்றவர்களாக அவர்கள் இருப்பது மிக முக்கியம். மருத்துவ உதவி வந்து சேரும் வரை, “Golden Hour” என அழைக்கப்படுகிற நேரத்தை, “சிகிச்சைக்கான நேரமாக” மாற்றுவது இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும். மீனாட்சி மிஷன் மருத்துவமனை இந்த பயிற்சி அமர்வில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் , MMHRC-ன் அவசர சிகிச்சை பிரிவின் இயக்குநர் திரு. நரேந்திர நாத் ஜெனா மற்றும் இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் சிறப்பு மருத்துவர்களான டாக்டர். S. பிரபு, டாக்டர். ஷீமா கண்மணி மற்றும் டாக்டர். நான்சி ஆகியோருடன் மார்க்கெட்டிங் பொது மேலாளர் திரு. சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விகடன் 18 Aug 2025 1:41 pm

Health: சூப்பர் மார்க்கெட்ல கொடுக்கிற பில்லை கையில வெச்சுக்கிறீங்களா? இத படிங்க!

கடைகள்ல, சூப்பர் மார்க்கெட்கள்ல மற்றும் மால்கள்ல கொடுக்கிற பேப்பர் பில்களை ரொம்ப நேரம் கையில வெச்சுக்கிறீங்களா? அந்த தெர்மல் பேப்பர்கள்ல இருக்கிற ரசாயனம் ஆண், பெண் ரெண்டு பேரோட இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கும்னு சமீபத்திய சில ஆய்வுகள் எச்சரிக்கை செஞ்சிருக்கு. உண்மையைத் தெரிஞ்சுக்க சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லாவிடம் பேசினோம். thermal paper பிஸ்பெனால் ஏ (BPA), பிஸ்பெனால் எஸ் (BPS) ’’இந்தியா மற்றும் வளர்ந்த நாடுகளில் இருக்கிற கடைகள், சூப்பர் மார்க்கெட்ஸ் மற்றும் பெரிய மால்களில் தரப்படுகிற 90 சதவீத பில்கள் மற்றும் ரசீதுகள் தெர்மல் பேப்பர் கொண்டு உருவாக்கப்படுபவைதான். இந்த தெர்மல் பேப்பரின் மேல், பிஸ்பெனால் ஏ (BPA), பிஸ்பெனால் எஸ் (BPS) என்கிற ரசாயனங்கள் தடவப்படுகின்றன. இவை தெர்மல் பேப்பர்களில் மட்டுமில்லை, எளிதில் தீப்பிடிக்கக்கூடாத பெயிண்ட்களில், குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகளில், வீட்டில் இருக்கும் சோபாக்களின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. கையில் நீண்ட நேரம் வைத்திருந்தால் இதனால் நமக்கு ஏற்படுகிற பாதிப்பு என்னவென்றால், நேரடியாக இந்த தெர்மல் பேப்பர்களை பயன்படுத்தும்போதோ, சிறிது நேரம் கையில் வைத்திருந்தாலோ, அதில் இருக்கிற ரசாயனங்கள் நம் உடலில் எளிதில் ஊடுருவி விடுகிறது. கையில் நீண்ட நேரம் வைத்திருந்தால் உடலில் ஊடுருவி ரத்தத்தில் கலந்து விடுகிறது. இந்த ரசாயனங்கள் நம் உடலில் பரவிய பிறகு சுமார் பத்து மணி நேரம் வரை ரத்தத்தில் அதிகமாக இருக்கும். பின் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிறுநீர் மூலம் வெளியேறிவிடும். Super market என்னென்னப் பிரச்னைகள் வரும்? தொடர்ந்து தெர்மல் பேப்பரை தொடுகிற சூழலில் இருப்பவர்களுக்கு, உடலில் உள்ள தீங்கு செய்யக்கூடிய பாக்டீரியாக்களின் அளவு அதிகமாகவும், நல்ல பாக்டீரியாவின் அளவு குறையவும் வாய்ப்புள்ளது. உடல் பருமன், கல்லீரலில் கொழுப்பு, ரத்த கொழுப்பு அளவுகளில் சீர்கேடு, மகப்பேறின்மை போன்ற பாதிப்புகளும் வர வாய்ப்பிருக்கிறது. தவிர, உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் செயல்களையும் பாதிக்கிறது. முக்கியமாக, ஆண், பெண் இருவருடைய இனப்பெருக்க நலனையுமே பாதிக்கிறது. ஆண்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும்? ஆண்களைப் பொறுத்தவரையில் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் நிலையிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் உடலில் உள்ள விந்தணு செல்களான லேடிக், செர்ட்டோலி மற்றும் ஜெர்ம் செல்களை (Leydig cells, Sertoli cells, and germ cells) பாதித்து டெஸ்ட்டோஸ்டீரான் உற்பத்தியைக் குறைக்கிறது. விந்தணுக்களின் அளவு மற்றும் உருவ அமைப்பை பாதிக்கிறது. விந்தணுக்கள் முன்னோக்கி செல்வதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை மட்டுமா, விந்தணுக்களுக்குள் இருக்கும் டி. என்.ஏ-வையும் தெர்மல் பேப்பரில் இருக்கிற ரசாயனங்கள் பாதிக்கின்றன. டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா பெண்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும்? பெண்களைப் பொறுத்தவரையில், இந்த பிஸ்பெனால் ரசாயனம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் போலவே இருப்பதால் ஈஸ்ட்ரோனுக்கு எதிராக செயல்பட்டு, கருமுட்டை வளர்ச்சி நடக்காமல் தடுத்து விடுகிறது. தவிர, கருமுட்டை வெளிவராமல் கருமுட்டை சிதைவுறுதல் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்வறிக்கை சொல்வதென்ன? தப்பிக்க என்ன வழி? தெர்மல் பேப்பரைத் தொட்ட கையை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி இந்த தெர்மல் பேப்பர்களை எடுத்துப் பார்ப்பதும், சேமித்து வைப்பதும், குப்பையாக பர்ஸுகளில் குவித்து வைப்பதையும் தவிர்த்துவிட்டு அவற்றை குப்பைத்தொட்டியில் போடுவது நல்லது. ஆல்கஹால் சானிடைசர் பயன்படுத்துவது அதிகமாக பிஸ்பெனாலை உள்வாங்கும் தன்மையை ஏற்படுத்துகிறது. கைகள் வழவழப்பாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்போது வேகமாக பிஸ்பெனாலை உள்வாங்கும் தன்மை கொண்டது. தெர்மல் பேப்பர்களைத் தொடுகிற பணியில் இருப்பவர்கள் கையில் க்ளவுஸ் போட்டுக்கொள்ளலாம். ’பிஸ்பெனால் ஃப்ரீ’ தெர்மல் பேப்பர்களை பயன்படுத்தலாம். டிஜிட்டல் பில்களுக்கு மாறலாம். செல்போன் மூலம் விவரங்களை அறிந்து கொள்ளலாம்’’ என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா. 50 வயதுக்கு மேல அதிகரிக்கும் டைவர்ஸ்; இன்டர்நேஷனல் ரிசர்ச் சொல்வதென்ன? | காமத்துக்கு மரியாதை - 219 சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 18 Aug 2025 6:45 am

Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வது எப்படி?

Doctor Vikatan: எனக்கு 55 வயதாகிறது. தினமும் வீட்டு வேலைகளை முடித்த பிறகு, மதியம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தூங்குகிறேன். இந்தத் தூக்கத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆனால், இது என் இரவுத் தூக்கத்தைக் கெடுக்கிறது. இரவில் என்னால் சரியாகத் தூங்க முடிவதில்லை, மிகவும் தாமதமாகவே படுக்கைக்குச் செல்கிறேன். இதை நான் எப்படிச் சமநிலைப்படுத்துவது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். இரவில் தூக்கமின்மை பகலில் சிறிது நேரம் தூங்குவது என்பது அவ்வளவு மோசமான விஷயமெல்லாம் இல்லை. ஆனால், அந்தத் தூக்கமானது அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. 20 நிமிடங்களைத் தாண்டாத பகல் தூக்கம் உண்மையில், நம் மூளையைப் புத்துணர்வடையச் செய்யும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக களைப்பாக உணர்பவர்களுக்கு, அதிலிருந்து மீண்டு, உடலும் மனமும் சகஜ நிலையை அடைய உதவும். 20 நிமிடங்களைத் தாண்டிய தூக்கம் என்பது சரியான விஷயமல்ல. அப்படி நீளும் தூக்கம், நிச்சயம் இரவுத் தூக்கத்தை பாதிக்கும். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் பகலில் தூங்கும் வழக்கம் உள்ளோர், 2 மணிக்குள் தூங்கி எழும்படி பார்த்துக்கொண்டால், இரவுத் தூக்கம் பாதிக்கப்படாது. அதுவே 3- 4 மணிக்கு மேல் தூங்கினாலோ, மணிக்கணக்கில் தூங்கினாலோ, இரவுத் தூக்கம் நிச்சயம் பாதிக்கப்படும். அதன் விளைவாக அடுத்தநாள் வேலைகளில் தொய்வு ஏற்படும். தூக்க சுழற்சி பாதிக்கப்படும். அது தொடர்கதையாக மாறும். சிலர், வார நாள்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருப்பதால், வார இறுதி நாள்களை வெளியே செல்வது, படம் பார்ப்பது போன்றவற்றுக்காகச் செலவழிப்பார்கள். அதனால் வழக்கமான தூக்க நேரம் தள்ளிப்போகும். அது ஆரோக்கியமான விஷயமல்ல. வார நாள்களோ, விடுமுறை நாள்களோ, எல்லா நாள்களிலும் ஒரே நேரத்தில் தூங்குவதைப் பின்பற்றுவதுதான் ஆரோக்கியமானது. ஒரே நேரத்தில் தூங்குவதைப் பின்பற்ற வேண்டும். Doctor Vikatan: விடுமுறை நாள்களில் சாப்பாடு, தூக்கம்; மறுபடி சாப்பாடு, ரிப்பீட் மோடு சரியானதா? உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 17 Aug 2025 9:00 am

உணவில் உப்பே சேர்க்கவில்லை என்றால் என்னவாகும்? - AI அறிவுரையும் மருத்துவர் விளக்கமும்..!

பொ துவாக நாம் தினசரி உணவில் பயன்படுத்தப்படும் உப்பு, சோடியம் மற்றும் குளோரைடால் ஆனது. இது உடலில் சோடியத்தின் அளவை சரியாக வைத்துக் கொள்ளவும், ரத்தத்தின் குளோரைடு அளவை பராமரிக்கவும் உணவில் சேர்க்கப்படுகிறது. இது ஓர் அத்தியாவசிய தாது உப்பு. இதுதான் உடலின் திரவ மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. உடலுக்கு இன்றியமையாத உப்பின் நன்மைகளைப்பற்றி அறியாமல், அது உடலில் அதிகமானால் என்னென்னக் கெடுதல்கள் ஏற்படும் என்பதைப்பற்றி மட்டும் வாசித்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர். உப்பு செயற்கை நுண்ணறிவிடம் அட்வைஸ்! அதோடு நிற்காமல், உணவில் இருந்து உப்பை எவ்வாறு நீக்குவது என்று செயற்கை நுண்ணறிவிடம் கேட்டிருக்கிறார். பிறகு அது சொன்னபடி, உப்புக்குப் பதிலாக சோடியம் ப்ரோமைடு என்ற பொருளை ஆன்லைனில் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். விளைவு உடல் நலப்பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் பேசினோம். உணவில் இருந்து நீக்கக்கூடாது! ’’மனித உடலில் குளோரைடு சராசரியாக 130- 133 (mEq/L) வரை இருக்க வேண்டும். இதற்கு சோடியம் குளோரைடு உதவியாக உள்ளது. சோடியம் குளோரைடை, அதாவது உப்பை முழுமையாக உணவில் இருந்து நீக்கக்கூடாது. உப்பில்லாத உண்வு எந்த அவசியமும் கிடையாது! கல்லீரல் நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் உடலில் ஏதேனும் நோய் இருந்தால் மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவில் உணவில் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி நலமாக இருப்பவர்கள் உணவில் சோடியம் குளோரைடை அளவை தேவையைவிட குறைக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. தவிர, அது உடலுக்கு ஆபத்தானதும்கூட. ஹைபோநெட்ரீமியா (Hyponatremia) ரத்தத்தில் சோடியம் அளவு குறைவதை ஹைபோநெட்ரீமியா (Hyponatremia) என்போம். சாதாரணமாக உடலில் 143 (mEq/L) என்ற அளவில் சோடியம் இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால் குமட்டல், தலைவலி மற்றும் குழப்பம் போன்றவை ஏற்படும்.130 (mEq/L)-க்கு கீழே போக ஆரம்பித்தால், உடலில் மூளை சம்பந்தப்பட்ட நோய்க்கான அறிகுறிகளை உண்டாகும். 120-110 (mEq/L)-க்கு கீழே சோடியம் அளவு சென்றால் வறட்சி, உணர்வு குறைவது, ஏன் கோமா வரைகூட செல்ல வாய்ப்புள்ளது. நீண்ட நாள் உணவில் உப்பு சேர்க்கவில்லை என்றால், உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம். பொதுநல மருத்துவர் ராஜேஷ் Health: வெள்ளரி, கொய்யாவில் உப்பு, மிளகாய்த்தூள் தூவி சாப்பிடலாமா? சோடியம் குளோரைடை தவிர்த்தால்... சோடியம் குளோரைடுக்கு பதிலாக சோடியம் ப்ரோமைடு எடுத்துக் கொள்ளும்போது மனக்குழப்பம், மயக்கம், பிரம்மை , மன நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், தடிப்பு, கொப்பளங்கள் போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். Salt: `கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு' - உப்பின் பலன்கள்! | Health Tips மருத்துவ ஆலோசனைக் கேட்பது பாதுகாப்பு கிடையாது! இணையதளங்கள் மற்றும் Chatgpt போன்றவற்றை தகவல்கள் தெரிந்து கொள்ளப் பயன்படுத்தலாம். மற்றபடி, அவற்றிடம் மருத்துவ ஆலோசனைகளைக் கேட்பதோ அல்லது அந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவதோ பாதுகாப்பு கிடையாது. சில நேரங்களில் இணையதளங்கள் கொடுக்கும் விவரங்கள் சரியானதாகக்கூட இருக்கலாம். ஆனால், அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்; எதற்கு பயன்படுத்த வேண்டும்; ஏன் பயன்படுத்த வேண்டும் என்பனவற்றை மருத்துவர்களால்தான் வழிகாட்ட முடியும். தேவையற்ற பயத்தை... உடலின் அறிகுறிகளைச் சொல்லி செயற்கை நுண்ணறிவிடம் மருத்துவ ஆலோசனைக் கேட்பது அதிகரித்துவிட்டது. அதுவும் செயற்கை நுண்ணறிவுப் பட்டியலிடுகிற நோய்கள் தங்களுக்கு இருப்பதாக நம்பி மக்கள் தேவையற்ற பயத்தை மனதுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். இதுவும் மக்களுக்கு நல்லதல்ல’’ என்கிறார் டாக்டர் ராஜேஷ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 17 Aug 2025 7:47 am

வைட்டமின் சி முதல் இதய ஆரோக்கியம் வரை முருங்கைக்காய் தரும் நற்பலன்கள்!

முருங்கைக்கீரை சூப்பர் ஃபுட் எனக் கொண்டாடுகிறோம். முருங்கைக்காயும் நமக்கு ஆரோக்கியம் தருவதில் சிறப்பானதுதான் என்கிற உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல், அதன் பலன்களையும் சில முருங்கைக்காய் ரெசிபிகளையும் இங்கே பகிர்கிறார். முருங்கைக்காய் தரும் நற்பலன்கள்! ஒலீயிக் அமிலம் ’’நம் நாட்டில் பரவலாகக் கிடைக்கும் முருங்கைக்காயின் சதை, அதிக மருத்துவப் பண்புகளைக் கொண்டது; எண்ணற்ற ஊட்டச்சத்துகளை உடையது. ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய்களை அண்டவிடாமல் நம்மைக் காக்க வல்லது. மிகுதியான பி காம்பிளக்ஸ், வைட்டமின் சி மற்றும் தாதுச்சத்துகள் இதில் உள்ளன. பிஞ்சு முருங்கைக் காய்களில் ஒலீயிக் அமிலம் மிக அதிகமாக உள்ளது. இதை அடிக்கடி உட்கொள்வதால் இதய நோய் அபாயத்தைத் தடுக்கலாம். அதிக நார்ச்சத்தும், எண்ணிலடங்கா பைட்டோ கெமிக்கல்களும்... முருங்கைக்காய்களில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிபயாடிக் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. முருங்கையில் உள்ள அதிக நார்ச்சத்தும், எண்ணிலடங்கா பைட்டோ கெமிக்கல்களும் நீரிழிவு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதோடு, வயிற்றுப்புண்ணை ஆற்றவல்ல ஒரு மருந்தாகவே இது செயல்படுகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்குப் பயன்தரும் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ள அருமையான இயற்கை டானிக் இது! முருங்கைக்காய் சூப் முருங்கைக்காய் சூப் செய்முறை: முருங்கைக்காய் வேகவைத்த தண்ணீர் ஒரு கப், பருப்பு வேகவைத்த தண்ணீர் ஒரு கப், 2 டீஸ்பூன் முருங்கை சதைப்பகுதி என மூன்றையும் ஒன்றாகக் கலந்து மசிக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் ஊற்றி கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் எடுத்து வைத்திருக்கும் முருங்கைத் தண்ணீர்க் கலவையைக் கலந்து, இத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். இறக்கும்முன் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான சூப் ரெடி. Health: சோர்வே போ போ.. எனர்ஜியே வா வா..! டாக்டர் கைடன்ஸ்! முருங்கைக்காய் சதைப் பிரட்டல் செய்முறை: முருங்கைக்காயைக் கழுவி, சிறு துண்டுகளாக்கவும். பிறகு, ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், முருங்கைக்காய் சேர்த்து 3-5 விசில் வரும்வரை வேக விட்டு எடுக்கவும். பிறகு குக்கரைத் திறந்து, ஒரு ஸ்பூனால் முருங்கையின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து மசித்துத் தனியாக எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். பிறகு, முருங்கை யின் சதைப்பகுதி, தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும். (தேவையெனில், சிறிதளவு துருவிய தேங்காய், கரம் மசாலாத் தூள் சேர்த்து இறக்கலாம்). இந்தப் பிரட்டலைச் சூடான சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால், சுவை அள்ளும். முருங்கைக்காய் சதைப் பிரட்டல் முருங்கைக்காய் சதைக் கூட்டு செய்முறை: ஒரு கப் முருங்கை சதை, கால் கப் வேகவைத்த பாசிப்பருப்பு எடுத்து, தனியாக மசித்து வைக்கவும். தேங்காய், சீரகம், வெங்காயத்தை நன்கு அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறி வேப்பிலை தாளித்து, பருப்பு - முருங்கை சதை கலவையைக் கலக்கவும். இத்துடன் அரைத்த தேங்காய் - சீரகம் - வெங்காயக் கலவையைச் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு கலந்து கொதிக்கவிடவும். கலவை தளதள என்று கொதிக்கும் பதத்தில் இறக்கிவிடவும்.’’ முருங்கைக்காய்களை எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க! Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 16 Aug 2025 6:33 am

திண்டுக்கல்: 176 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 3,256 மாணவிகள் இணைந்து உலக சாதனை! | Photo Album

உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்புறமாக நியமிக்க ஜிப்மர் திட்டமிடுகிறது’ - எச்சரிக்கும் திமுக Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 15 Aug 2025 4:31 pm

Doctor Vikatan: கண்களில் Cataract; அறுவை சிகிச்சையைத் தவிர்த்து வேறு தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: கேட்டராக்ட் பிரச்னையின் அறிகுறிகள் எப்படியிருக்கும், கேட்டராக்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே அறுவை சிகிச்சை செய்ய முடியாதா, எத்தனை வருடங்களுக்குள் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சையைத் தவிர்த்துவிட்டு வேறு சிகிச்சைகள் உள்ளனவா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்புக்குள்ளானால், சம்பந்தப்பட்ட நபருக்கு முதலில் பார்வை மங்கத் தொடங்கும்.  அதாவது பார்வை தெளிவாகத் தெரியாது. இதை  'Blurred vision' என்று சொல்கிறோம்.  குறிப்பாக இவர்களுக்கு இரவில் பார்வையில் தெளிவு இருக்காது. விளக்கு வெளிச்சத்தில்கூட பார்வை தெளிவாகத் தெரியாது. விளக்கைச் சுற்றிலும் அலைஅலையாகத் தெரியலாம். நிறங்கள் பளிச்செனத் தெரியாமல், அவையும் மங்கலாகத் தெரியும். ஏற்கெனவே கண்ணாடி அணிந்தவர் என்றால், கண்புரை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாவதன் காரணமாக, அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டியிருக்கும். ஏர்லி (early) கேட்டராக்ட், இம்மெச்சூர் (immature ) கேட்டராக்ட், மெச்சூர் (mature) கேட்டராக்ட் மற்றும் ஹைப்பர்மெச்சூர் (hypermature) கேட்டராக்ட் என கண்புரை பாதிப்பில் நிறைய ஸ்டேஜ் உண்டு.  இவற்றில் ஏர்லி கேட்டராக்ட் இருந்தால் உடனடியாக அறுவைசிகிச்சை தேவையில்லை. சம்பந்தப்பட்ட நபருக்கு பார்வையில் பிரச்னை இல்லாதவரை அவர்களை அப்படியே இருக்க அனுமதிக்கலாம். பார்வை மங்கத் தொடங்கினால் மட்டுமே கவலைப்பட வேண்டும். ஏற்கெனவே கண்ணாடி அணிந்தவர் என்றால், கண்புரை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாவதன் காரணமாக, அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டியிருக்கும். Doctor Vikatan: கேட்டராக்ட் ஆபரேஷனுக்கு பிறகு கண்களில் ஏற்பட்ட வலி... காரணமும் தீர்வும் என்ன? கேட்டராக்ட் பாதித்த நபருக்கு சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களது கண்புரை பாதிப்பானது சீக்கிரமே தீவிரமடைய ஆரம்பிக்கும். மெச்சூர் கேட்டராக்ட் மற்றும் ஹைப்பர்மெச்சூர் கேட்டராக்ட் நிலைகளில் பார்வை பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம். உலகிலேயே கேட்டராக்ட் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு. வேறு சிகிச்சைகள் கிடையாது. லேட்டஸ்ட்டாக லேசர் மற்றும் ஃப்ளாக்ஸ் (FLACS or Femtosecond Laser-Assisted Cataract Surgery) என நவீன சிகிச்சைகள் இருக்கின்றன. எளிதாகச் செய்யப்படும் இந்தச் சிகிச்சைகளில் சுலபமாக கண்களுக்குள் லென்ஸை பொருத்திவிடலாம். கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு லென்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா என்று நிறைய பேர் கேட்பதுண்டு. கேட்டராக்ட் ஆபரேஷன் என்றாலே லென்ஸை எடுத்துவிட்டு வேறு புதிய லென்ஸ் வைப்பதுதான். கண்புரை பாதித்த லென்ஸை அகற்றிவிட்டு, புதிய லென்ஸ் வைப்போம்.  அதற்கு முன் பயோமெட்ரிக் டெஸ்ட் செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எத்தகைய லென்ஸ் பொருத்தமாக இருக்கும் என்று பார்த்து வைப்போம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 15 Aug 2025 9:00 am

Thyroid Reversal: தைராய்டு தானாகவே ரிவர்ஸ் ஆகுமா? உண்மையை உடைக்கும் மருத்துவர்கள்! | InDepth

தைராய்டு ரிவர்சல் அடிக்கடி சோஷியல் மீடியாக்களில் கண்களில்படுகிற விளம்பரம் இது. 'உங்க தைராய்டு ரிவர்சல் ஆகணுமா? இத சாப்பிடுங்க; இத சாப்பிடாதீங்க; இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க' என்று ரீல்ஸ் வரும். கூடவே, முழு வீடியோவையும் க்ளிக் பண்ணி பாருங்க என்று ஆர்டரும் போடுவார்கள். உண்மையிலேயே தைராய்டை ரிவர்ஸ் செய்ய முடியுமா என்று, நாளமில்லா சுரப்பி நிபுணர் உஷா, சித்த மருத்துவர் செல்வ சண்முகம், இயற்கை மருத்துவர் யோ. தீபா, ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா ஆகியோரிடம் கேட்டோம். தைராய்டு நாளமில்லா சுரப்பியல் நிபுணர் உஷா! '' 'தைராய்டு ரிவர்சல்' என்பதே சரியான வார்த்தை கிடையாது என்றே சொல்லலாம். தைராய்டில் பிரச்னை என்றால், தேவையைவிட அது குறைவாக சுரக்கிறது அல்லது தேவைக்கும் அதிகமாக சுரக்கிறது என்று அர்த்தம். அது இயற்கையாகவே நிகழ்கிறது! இதில் தைராய்டு அதிகமாக வேலை பார்ப்பதற்கு 3 அல்லது 4 பொதுவான காரணங்கள் இருக்கின்றன. இதற்கான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொண்டால், ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் அது தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்பதுதான் அடிப்படை. இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 10-ல் 8 பேருக்கு ஹைப்பர் தைராய்டு காரணமாக அவர்களுக்கு வருகிற அறிகுறிகளுக்கு மட்டும் மருத்துவ உதவி செய்தால், தைராய்டு பிரச்னை தானாகவே சரியாகி விடும். மீதமுள்ள 2 பேர் மட்டுமே தொடர்ந்து மாத்திரை எடுக்க வேண்டி வரலாம். குணமாகும் 8 பேரிலும் சிலருக்கு தைராய்டு பிரச்னை திரும்ப வராது. சிலருக்கு திரும்ப வரலாம். இதில் குணமானவர்களுக்கு தைராய்டு ரிவர்சல் என்று தனியாக எதுவும் செய்வதில்லை. அது இயற்கையாகவே நிகழ்கிறது. ஒருவேளை தைராய்டு சுரப்பியில் காய்ட்டர் (கட்டிபோல) வந்தால், அதற்கான சிகிச்சைகள் கட்டாயம் தேவைப்படும். நாளமில்லா சுரப்பியல் நிபுணர் உஷா! எல்லோரும் சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை! தைராய்டு அதிகம் சுரப்பதில் மற்றும் குறைவாக சுரப்பதில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று, சப் கிளினிக்கல் ஹைப்பர்/ஹைப்போ தைராய்டிசம். இரண்டு, முழுமையான ஹைப்பர்/ஹைப்போ தைராய்டிசம். இந்த சப் கிளினிக்கல் ஸ்டேஜில், தைராய்டு பிரச்னை இருப்பது தெரிய வந்தால், எல்லோரும் சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இதை சற்று விளக்கமாக சொல்கிறேன். TSH மற்றும் T 3, T 4 அளவு மருத்துவரீதியாக சரியாக இருந்தால் அது நார்மல். TSH சற்றுக்கூடுதலாக இருந்து T 3, T 4 நார்மலாக இருந்தால் அது சப் கிளினிக்கல் ஹைப்போ தைராய்டிசம். TSH அதிகமாக இருந்து T 3, T 4-ம் அதிகமாக இருந்தால் அது முழுமையான ஹைப்போ தைராய்டிசம். தைராய்டு பரிசோதனை இதேபோல், TSH சற்றுக்குறைவாக, ஆனால் T 3, T 4 நார்மலாக இருந்தால் சப் கிளினிக்கல் ஹைப்பர் தைராய்டிசம், TSH சற்றுக்குறைவாக, ஆனால் T 3, T 4 அதிகமாக இருந்தால் முழுமையான ஹைப்பர் தைராய்டிசம். 100 பேருக்கு தைராய்டு பரிசோதனை செய்தால்... உதாரணத்துக்கு சப் கிளினிக்கல் ஹைப்போ தைராய்டிசத்தை எடுத்துக்கொண்டால், 100 பேருக்கு தைராய்டு பரிசோதனை செய்தால், அதில் ஒரு சிலருக்கு அந்த நேரத்தில் TSH சற்றுக்கூடுதலாக இருக்கும். அப்போது உடனே சிகிச்சையை ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் ஒன்றிரண்டு மாதங்கள் மாத்திரை சாப்பிட்டுவிட்டு நிறுத்தி விடுவார்கள். சில மாதங்களோ அல்லது வருடங்களோ கழித்து மறுபடியும் அவர்கள் தைராய்டு பரிசோதனை செய்துபார்த்தால், நார்மலாக இருக்கும். உடனே தைராய்டு ரிவர்ஸ் ஆகி விட்டது என்பார்கள். அதனால்தான், எங்களைப்போன்ற எண்டோகிரனாலஜிஸ்ட், ஒரு நபருக்கு தைராய்டுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் ரத்த பரிசோதனையில் மட்டும் தைராய்டு இருப்பதாக தெரிய வந்தால், 3 வாரம் முதல் 6 மாதம் கழித்து வரை அவர்களை மறுபடியும் தைராய்டு பரிசோதனை செய்துபார்க்க சொல்வோம். தைராய்டு பாதிப்பு தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்! இதில் இன்னொரு வகையும் இருக்கிறது. தைராய்டு சுரப்பி ஏதோவொரு காரணத்தால் இரிட்டேட் ஆகலாம். அப்படியாகும்போது தைராய்டு சுரப்பு குறையலாம் அல்லது அதிகமாகலாம். இதுவும் சில காலம் கழித்து தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். இதுபற்றியும் தெரியாமல், தைராய்டு ரிவர்ஸ் ஆகிவிட்டது என்கிறார்கள். உண்மை என்னவென்றால், தைராய்டு வந்தவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு தானாகவே சரியாகிவிடுகிறது. இதற்குக்காரணம் இயற்கைதான். இது தெரியாமல், தைராய்டை ரிவர்ஸ் செய்கிறேன் என்று சொல்பவர்களை நம்பாதீர்கள்.'' Thyroid Reversal சித்த மருத்துவர் செல்வ சண்முகம் ''தைராய்டு சுரப்புக் குறைபடுகள் சீராதல் என்பது பெரும்பாலும் சாத்தியம்தான். அதையும் மருந்தில்லா முறையிலேயே சாத்தியப்படுத்த முடியும். யோகா, உணவு முறை, வாழ்க்கை முறை ஆகிய மூன்றையும் முறையாக பின்பற்றினால் பெரும்பாலானவர்களுக்கு தைராய்டு இயற்கை முறையிலேயே சரியாகிவிடும் என்பதுதான் உண்மை. ஜங்க் ஃபுட்ஸை தொடர்ந்து சாப்பிட்டால் குணமாகாமலே போவதற்கும் வாய்ப்பிருக்கிறது! முதலில் உணவைப் பற்றி சொல்லி விடுகிறேன். தைராய்டு விஷயத்தில் ஒத்துக்கொள்ளாத உணவுகளான மைதா, கோதுமை, ரவை, ஓட்ஸ், வெள்ளை சர்க்கரை, பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் போன்ற உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். தவிர, உடலுக்கு எந்த வகையிலும் ஆரோக்கியம் வழங்காத மற்றும் ஆரோக்கியத்தைக் கெடுக்கிற செறிவான இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்கள், சுவையூட்டப்பட்ட பாக்கெட் உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். 'நாங்க இந்த உணவுகளை சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கோம். இருந்தாலும் எங்களுக்கு தைராய்டு இல்லையே' என்று சிலர் வாதிடலாம். பொதுவாக இதுபோன்ற ஆரோக்கியத்துக்கு ஒவ்வாத உணவுகள் உடனடியாக தன்னுடைய கெடுதல் முகத்தை வெளிப்படுத்தாது. பலகாலம் தொடர்ந்து இந்த வகை உணவுகளை சாப்பிடும்போதுதான் உடலின் 'ஆட்டோஇம்யூன் ஃபங்க்ஷனில்' கோளாறுகளை ஏற்படுத்தி அதுதொடர்பான வாழ்வியல் நோய்களையும் வரவழைக்கும். ஒருவேளை, ஏற்கனவே தைராய்டு பிரச்னை இருப்பவர்கள், ஒவ்வாத உணவை ( ஜங்க் ஃபுட்ஸை) தொடர்ந்து சாப்பிட்டால், அது குணமாகாமலே போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சித்த மருத்துவர் செல்வ சண்முகம் உடலியல் கடிகாரமும் தைராய்டும்..! இரண்டாவதாக வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால், சரியான தூக்கத்தைத்தான் முதலில் சொல்வேன். பகலில் தூங்கி இரவில் வேலைபார்ப்பவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றபடி எந்த நேரத்தில் உண்பது, எப்படி அறையை இருட்டாக்கிக்கொண்டு தூங்குவது உள்ளிட்ட தீர்வுகளை சொல்லித் தருவோம். ஆனால், பகலில் வேலைபார்ப்பவர்கள்கூட விடியற்காலை இரண்டு மணிக்கு தூங்கி காலை 8 அல்லது 9 மணிக்கு கண் விழிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை 'நாங்க 7 மணி நேரம் தூங்கிட்டோமே' என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் உடலுக்குள் இருக்கிற சர்க்காடியன் ரிதம் (Circadian rhythm) என்கிற உடலியல் கடிகாரத்தின்படி, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒவ்வொரு உறுப்பு வேலைபார்க்கும். அந்த நேரத்தில் நாம் விழித்துக்கொண்டிருந்தால் நம் உடல் உறுப்புகளால் சரிவர வேலை செய்ய முடியாமல் போகும். இது தொடர்ந்துகொண்டே இருந்தால் தைராய்டு பிரச்னை போன்ற வாழ்வியல் பிரச்னையை ஏற்படுத்தி விடும். அதனால், இரவில் நேரத்துக்கு படுத்து காலை ஆறு மணிக்கு முன்பாக கண் விழிக்க பழகுங்கள். உடலியல் கடிகாரமும் ஒழுங்காக வேலைபார்க்கும். தைராய்டும் வராது. ஒருவேளை வந்தாலும் அதனால் தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள முடியும். தூக்க ஒழுக்கம்! தூக்க ஒழுக்கம் இல்லையென்றால், அது நேரடியாக மூளையில் நிகழ்கிற வளர்சிதை மாற்றத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். நரம்புகளில் வெளியிடப்படுகிற வேதிப்பொருள்களில் மாறுபாடு ஏற்படலாம். இதனால், மெலடோனின், செரடோனின் மற்றும் டோபமைன் போன்ற ஹார்மோன்களில் பிரச்னை ஏற்படலாம். தவிர, மூளையில் இருக்கிற ஹைப்போதாலமஸிலும் பிரச்னை ஏற்படலாம். இது தொடர்ந்துகொண்டே இருக்கும்பட்சத்தில் நாளடைவில் தைராய்டின் வேலை ஒழுங்கற்றுப் போகும். எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம் என்பது தைராய்டு பிரச்னை வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. Thyroid Reversal தைராய்டு வந்த பின்பும் குணமாவதற்கு வாயப்பிருக்கிறது! இதனுடன் வாரம் இருமுறை எண்ணெய்க்குளியல், வருடம் இருமுறை குடல் சுத்தம், குடலுக்குள் இருக்கிற நுண்ணுயிர்களைப் பாதுகாக்கும் உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றை ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் உடல் தன்மைக்கு ஏற்றபடி பின்பற்றி வர வேண்டும். குடலில் நுண்ணுயிர்கள் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இருந்தால் தைராய்டு பிரச்னை மட்டுமல்ல மற்ற ஹார்மோன் பிரச்னைகள்கூட வராமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இதில், தைராய்டு வந்த பின்பும் குணமாவதற்கு வாயப்பிருக்கிறது. சித்த மருத்துவம் என்று எடுத்துக்கொண்டால், காயகல்ப மூலிகைகள் என்று சொல்லக்கூடிய துளசி, அமுக்கிரா, மஞ்சள், நெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகியவை உங்கள் உணவில் இருப்பதுபோல பார்த்துக் கொள்ளுங்கள். Thyroid கடற்பாசி போன தலைமுறை சமையல்கட்டில் இருந்த கடற்பாசி இப்போது இல்லை. குழம்பில் போட, தாளிக்க என்று நம் பாட்டிமார்கள் பயன்படுத்தி வந்த கடற்பாசியும் தைராய்டை குணமாக்குவதில் சிறந்த பங்கு வகிக்கிறது. தவிர கடற்படு திரவியங்கள் என்று சொல்லப்படுகிற சில தாது உப்புகளும் தைராய்டை குணப்படுத்துவதில் சிறந்த பங்கு வகிக்கின்றன. இந்தத் தீர்வுகள் எல்லாம் நபருக்கு நபர் மாறுபடும். உணவு, வாழ்வியல் மாற்றம், இவற்றுடன் சித்த மருந்துகளும் எடுத்துக்கொண்டால் பெரும்பாலானவர்களுக்கு தைராய்டை குணப்படுத்தி விடலாம்.'' ஆயுர்வேத மருத்துவர் பிரீத்தா நிலா ''ஆயுர்வேதத்தை பொருத்தவரை உடலில் வரக்கூடிய எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணம். உடலில் இருக்கிற கழிவு என்கிற நச்சுத்தன்மைதான். அதனால், சீரற்ற தைராய்டுக்கான மருத்துவம் என்று எடுத்துக்கொண்டால், முதலில் சம்மந்தப்பட்டவர்களின் உடலை சுத்தி எனப்படுகிற கழிவு நீக்கம் செய்வோம். இது சம்பந்தப்பட்டவர்களின் வயது, உடல் எடை, தாங்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். ஆயுர்வேத மருத்துவர் பிரீத்தா நிலா கஷாயம், சூரணம் போன்றவற்றை வழங்குவோம். மருந்து கட்டாயம் தேவைப்படுகிறது என்பவர்களுக்கு மட்டுமே இதில் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிற ஒரு தகவல் என்னவென்றால், தைராய்டு பிரச்னையை அவரவர் உடல் தன்மைக்கு ஏற்ப உணவின் மூலமே கட்டுக்குள் கொண்டு வர முடியும் அல்லது குணப்படுத்த முடியும். ஹார்மோன் பிரச்னை இருப்பவர்கள் சூர்ய அஸ்தமனத்திற்கு பிறகு உணவு சாப்பிடக்கூடாது என்பதுதான் ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை. இது தைராய்டுக்கும் பொருந்தும். மருந்து கட்டாயம் தேவைப்படுகிறது என்பவர்களுக்கு மட்டுமே கஷாயம், சூரணம் போன்றவற்றை வழங்குவோம். தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைக்கேட்டு அவர்களின் உடல் தன்மைக்கேற்ப உணவு முறையையும் வாழ்வியல் முறையையும் உறுதியாக கடைபிடித்து வந்தால், பெரும்பாலானவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மட்டுமல்ல வேறு எந்த மருந்துகளுமே தேவைப்படாது என்பதுதான் உண்மை.'' Thyroid Reversal இயற்கை மருத்துவர் யோ தீபா ''தைராய்டில் ஹைபோ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரண்டு வகைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு உடல் குளிர்ச்சித்தன்மையுடன் இருக்கும்; உடல் எடை கூடும்; மந்தத் தன்மையுடன் இருப்பார்கள். ஹைப்பர் தைராய்டு இருப்பவர்களுக்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும்; உடல் எடை குறையும்; பதற்றமாகவே இருப்பார்கள். ஆசனங்கள்..! அடுத்து ஆசனங்கள்... தைராய்டு சுரப்பை சீர்ப்படுத்துவதில் முக்கியமான ஆசனம் விபரீதகரணி. அடுத்தடுத்த இடங்களில் இருப்பவை உஸ்ட்ராசனம், சர்வாங்காசனம், புஜங்காசனம். இயற்கை மருத்துவத்தில் யோகாசனம் வழியாகத்தான் தைராய்டு பிரச்னையை 80 சதவிகிதம் கட்டுக்குள் வைக்கிறோம் மற்றும் குணப்படுத்துகிறோம். இயற்கை மருத்துவர் யோ. தீபா நெக் பேக் அடுத்தது சின் முத்திரையும், ஜலந்தர பந்தாவும். சின் முத்திரை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ஜலந்தர பந்தாவை ஆங்கிலத்தில் இதை 'Chin Lock' என்று கூறுவார்கள். இது, கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் உள்ள இறுக்கத்தை தளர்த்தி, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்கும். ஹைப்போ தைராய்டு இருப்பவர்கள், கழுத்தில் 'Cold neck pack' போட வேண்டும். ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள் கழுத்தில் 'Warm neck pack' போட்டு வந்தால் தைராய்டு கட்டுக்குள் இருக்கும். பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தைராய்டு வருவது ஏன்? மருத்துவ விளக்கம் கழுத்தில் மசாஜ் அடுத்தது மசாஜ். ஹைப்போ தைராயடு இருப்பவர்களுக்கு தொண்டைப்பகுதியில் அரோமா ஆயில் தடவி மென்மையாக மசாஜ் செய்வோம். ஹைப்பர் தைராய்டு இருப்பவர்களுக்கு கழுத்து மற்றும் முதுகெலும்பு பகுதியில் மசாஜ் செய்வோம். இது அவர்களுக்கு இருக்கக்கூடிய ஆங்சட்டியை சரி செய்யும். Thyroid: தைராய்டு இருந்தா முட்டைகோஸ் சாப்பிடக்கூடாதா..? பேசுகிறேன்-13 சரிவிகித உணவு சாப்பிடாதவர்களுக்கு... இவை தவிர, உணவில் போதுமான செலினியம், அயோடின், வைட்டமின் பி 12 சத்து, புரோபயோட்டிக் இருக்க வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். உடலில் போதுமான இரும்புச்சத்தும் இருக்க வேண்டும். கல் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். வாழைப்பழமும் முக்கியம். சுகர் ஃப்ரீ, குளூட்டன் ஃப்ரீ உணவுகளுக்கு மாறுங்கள். சரிவிகித உணவு சாப்பிடாதவர்களுக்கும் தைராய்டு பிரச்னை வரலாம் என்பதால், உங்கள் உணவில் கவனமாக இருங்கள்.'' தைராய்டு ரிவர்ஸ் ஆகட்டும்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 15 Aug 2025 7:38 am