ட்ரம்பிற்கு 'Chronic Venous Insufficiency'நோய் - ட்ரம்பின் பெர்சனல் மருத்துவர் கூறுவது என்ன?
வெள்ளை மாளிகையின் அறிக்கை படி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'Chronic Venous Insufficiency' என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட், சமீபத்திய வாரத்தில், அதிபர் ட்ரம்ப் காலின் கீழ் பகுதி வீங்கியிருந்தது. இதை பரிசோதித்தப்போது, அவருக்கு நாள்பட்ட சிரை பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். ட்ரம்ப் நாள்பட்ட சிரை பாதிப்பு என்றால் என்ன? கால்களில் உள்ள சிரை (Veins) ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு அனுப்ப முடியாத நிலை தான் நாள்பட்ட சிரை பாதிப்பு என்று கூறுப்படுகிறது. இது கால்களில் உள்ள நரம்புகள் பலவீனம் அடைவதால் அல்லது பாதிப்படைவதால் ஏற்படுகிறது. இதனால், ரத்தம் பெரும்பாலும் கால்களிலேயே தங்கிவிடும். அது இதயத்தை நோக்கி செல்லாது. இதன் அறிகுறி என்னென்ன? கணுக்கால் அல்லது கீழ் காலில் வீக்கம் வலி விரிசுருள் சிரை நோய் தோல் நிற மாற்றம் அரிப்பு கால் அல்சர் எதனால் ஏற்படும்? கர்ப்பம் அதிக எடை நீண்ட நேரம் அமர்ந்திருப்பது அல்லது நின்றுகொண்டே இருப்பது மரபணு கால்களில் காயம் முதுமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்ன செய்ய வேண்டும்? வாழ்க்கை முறை மாற்றுதல் உடற்பயிற்சி எடை குறைப்பு போன்றவை இந்த நோயை சரி செய்யலாம். இது அவ்வளவு பெரிய நோயா? இது மிகப்பெரிய நோய் இல்லை. சரியாக சிகிச்சை எடுத்துகொண்டால் பிரச்னை இருக்காது. ட்ரம்பிற்கு இது எந்த அளவு உள்ளது? ட்ரம்பின் மருத்துவர் சீன் பார்பபெல்லா, அவருக்கு இந்த நோய் மிக தீவிரமாக இல்லை. அவருக்கு தமனி பிரச்னை, இதய கோளாறு, சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட எந்த தீவிர பிரச்னையும் இல்லை. அவருக்கு இ.சி.ஜி எடுக்கப்பட்டது. அது அவர் நலமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
Doctor Vikatan: கண்களில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கண்தானம் செய்யலாமா?
Doctor Vikatan: கண்களில் ஏதோ காரணத்துக்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், கண்தானம் செய்யலாமா... உதாரணத்துக்கு, லேசர், ரெட்டினா அறுவை சிகிச்சை, கேட்டராக்ட் போன்றவற்றுக்குப் பிறகு கண் தானம் செய்யலாமா... கண் தானத்துக்கு ஒப்புதல் அளித்த பிறகு கண்களில் பிரச்னை வந்து ஆபரேஷன் செய்ய நேர்ந்தால் கண் தானம் மறுக்கப்படுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் கண்களில் செய்யப்படுகிற அறுவை சிகிச்சைக்கும் கண் தானத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் தாராளமாக கண் தானம் செய்யலாம். ஒருவர் இறந்ததும் அவரின் உறவினர்கள் மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்தால், மருத்துவக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து இரண்டு கருவிழிகளையும் அகற்றிவிட்டு, உள்ளே பஞ்சு வைத்து தைத்துவிட்டுச் செல்வார்கள். அப்படி தானமாகப் பெறப்படும் கண்களை இரண்டு பேர் அல்லது நான்கு பேருக்குப் பயன்படுத்தலாம். இறந்த பிறகு கண்களை தானமாகப் பெறுவது தொடர்பான தவறான புரிதல் பலருக்கும் இருக்கிறது. இறந்தவரின் கண்களை தானமாக எடுக்கும்போது மொத்த கண்களையும் அகற்ற மாட்டோம். கருவிழிகளை மட்டும்தான் அகற்றுவோம். என்ன நோய், எந்த டாக்டர்? 26-பார்வைக் குறைபாடு முதல் கண் தானம் வரை... இறந்தவரின் கண்களை தானமாக எடுக்கும்போது மொத்த கண்களையும் அகற்ற மாட்டோம். கருவிழிகளை மட்டும்தான் அகற்றுவோம். அதை 'கார்னியல் டிரான்ஸ்பிளான்ட்டேஷன்' (Corneal transplantation) என்று சொல்வோம். கருவிழியை அகற்றிய பிறகான வெள்ளைப் பகுதியை ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒருவேளை ஒரு நபர், மூளைக்காய்ச்சல், எய்ட்ஸ், செப்டிசீமியா (Septicemia) போன்ற காரணங்களால் இறந்திருந்தால், அவரின் கண்களை தானமாகப் பெற மாட்டோம். மற்றபடி, ஒருவருக்கு கண்களில் வேறெந்தப் பிரச்னை இருந்தாலும் அவரின் கண்களை தானமாகப் பெறலாம். அதில் சிக்கல் வராது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
அரிதான ரத்த வகையினர் அஞ்ச வேண்டுமா? - நிபுணர் விளக்கம்!
ந ம்மில் பலருக்கும் A, B, AB, O என நான்கு ரத்த வகைகளும், அவற்றில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இருபிரிவுகளும்பற்றியும் தெரியும். இன்னும் சிலருக்கு பாம்பே ரத்தவகைபற்றியும் தெரிந்திருக்கும். ஆனால், இதுவரை உலகம் முழுக்க 47 வகை ரத்தப்பிரிவுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. தவிர, ரத்த வகைகள் குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. அந்தவகையில், சில தினங்களுக்கு முன்னால், ஃபிரான்ஸை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு புதிய வகை ரத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பெண்மணி ஃபிரான்ஸில் இருக்கிற குவாடலூப் (Guadeloupe) என்ற தீவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அவருடைய ரத்தவகைக்கு 'குவாட நெகடிவ்’ (Gwada Negative) என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். இவருடைய ரத்தப்பிரிவை 48-வது ரத்தப்பிரிவாக சர்வதேச குருதியேற்றல் அமைப்பு ஏற்றுக்கொண்டது. இந்தத் தகவல்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே... blood donations இதுபோல புதிய வகை ரத்தப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு, மருத்துவ காரணங்களுக்காக திடீரென ரத்தம் தேவைபட்டால் என்ன செய்வது என சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் A.R.சாந்தியிடம் கேட்டோம். ஆர்.ஹெச். ஃபேக்டர் ( RH factor) என்பது வேறு! A, B, AB, O என்கிற ரத்தவகைகள் வேறு, அவற்றை பாசிட்டிவ், நெகட்டிவ் என பிரிக்கும் ஆர்.ஹெச். ஃபேக்டர் ( RH factor) என்பது வேறு. ஒருவருடைய ரத்தத்தில் ஆர்.ஹெச். ஃபேக்டர் இருந்தால், அவர்களின் ரத்தவகையுடன் நெகட்டிவ் சேரும். ரத்தத்தில் ஆர்.ஹெச். ஃபேக்டர் இல்லையென்றால், அவர்களின் ரத்தவகையுடன் பாசிட்டிவ் சேரும். இது அடிப்படை. டாக்டர் சாந்தி நம்முடைய உடம்பு அதிகபட்சமாக 25 சதவிகித ரத்த இழப்பை மட்டுமே தாங்கிக்கொள்ளும்! ரத்த வகைகளுக்கும், அதன் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பிரிவுக்கும் மருத்துவர்கள் நாங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்றால், ஓர் இயற்கை பேரிடர் அல்லது விபத்து மூலமாக ஒருவருக்கு ரத்த இழப்பு ஏற்பட்டால், நம்முடைய உடம்பு அதிகபட்சமாக 25 சதவிகித ரத்த இழப்பை மட்டுமே தாங்கிக்கொள்ளும். அதற்குமேல் இழப்பு ஏற்பட்டால், உடனடியாக அவருடைய அதே ரத்தவகையை நரம்பு வழியாக செலுத்தினால் மட்டுமே அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியும். இதுதான் அடிப்படை. தவிர, அவருக்கு செலுத்தப்படுகிற ரத்தத்தை தானமாக தந்தவருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; மருத்துவம் குறிப்பிடுகிற சில நோய்கள் அவருக்கு இருக்கக்கூடாது. இந்த அறிவியல் தகவல்கள்தான் தற்போது எல்லோருக்குமே தெரிந்திருக்கும். செயற்கை ரத்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சி! பெண்களுக்கு ரத்தத்தானத்தின் தேவை ஆண்களைக் காட்டிலும் அதிகம். குறிப்பாக பிரசவத்தின்போது, முன்னெச்சரிக்கையாக அவர்களின் ரத்தப்பிரிவை தயாராக வைத்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் நெகட்டிவ் போன்ற மிகவும் அரிதான ரத்த பிரிவுகளையும் இரண்டிலிருந்து 3 ஆண்டுகள் வரை பதப்படுத்தி சேமித்து வைக்க முடிகிறது. இன்னொரு பக்கம் செயற்கை ரத்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியும் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டுவருகிறது, அந்த ஆராய்ச்சி ஜப்பானில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது எனவும் தெரியவந்துள்ளது. ஒருவேளை அப்படி செய்ய முடிந்தால், இதுபோன்ற அரிதான ரத்த வகைகள் இன்னும்கூட இருப்பது தெரிய வரலாம். blood groups 10 நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் இருக்க வேண்டாம்! - மருத்துவர்கள் எச்சரிக்கை! ஏன் தெரியுமா? அரிதான ரத்தவகை கொண்டவர்களுக்கு திடீரென ரத்தம் தேவைப்பட்டால்... இந்த நிலையில் உலகிலேயே ஒரேயொரு பெண்மணிக்கு மட்டுமிருக்கும் ரத்தவகை போல, அரிதான ரத்தவகை கொண்டவர்களுக்கு திடீரென ரத்தம் தேவைப்பட்டால் என்ன செய்வதென்கிற கேள்வி பலருடைய மனதிலும் தோன்றும். நாம் ஒருவருக்கொருவர் ரத்த தானம் செய்துகொள்வோம். இவர் விஷயத்தில், முன்னெச்சரிக்கையாக அவருடைய ரத்தத்தை, மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு சரியான இடைவெளியில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இது ஒன்று மட்டுமே இப்போதைக்கு இவர்களை பாதுகாக்கும் ஒரே வழி என்பேன். காயத்தால் ரத்தம் வந்தால் வாயால் உறிஞ்சுவது சரியா.. என்ன செய்ய வேண்டும்? - விளக்கும் மருத்துவர் இதே ரத்த வகை கொண்டவர்களை... உலகிலுள்ள எல்லோருக்குமே தங்களுடைய ரத்த வகை எதுவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அத்தனை பேருமே பிளட் குரூப் தெரிந்துகொள்ளும் பரிசோதனையை செய்திருக்க முடியாதில்லையா? ஒருவேளை அப்படி செய்ய முடிந்தால், இதுபோன்ற அரிதான ரத்த வகைகள் இன்னும்கூட இருப்பது தெரிய வரலாம். ஒரு பெண்ணிடம் மட்டுமே இப்போது கண்டுபிடித்து இருப்பதால் இது அரிதான ரத்தமாக இருக்கிறது. இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்தால், இதே ரத்த வகை கொண்டவர்களை கண்டுபிடிக்க முடியும். அதற்கும் சாத்தியக்கூறு இருக்கிறது. அதனால், உலகின் அரிதான ரத்த வகை கொண்டவர்கள் அஞ்ச தேவையில்லை” என்கிறார் டாக்டர் சாந்தி. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
`ஆண்கள் விந்துப்பையைத் தொட்டுப் பார்க்க கூச்சப்படக்கூடாது. ஏன்னா...’ - காமத்துக்கு மரியாதை 249
வி ந்தணுக்களின் எண்ணிக்கைபற்றி, அதன் ஆரோக்கியம்பற்றி எல்லோருக்கும் நிறைய தகவல்கள் தெரிந்திருக்கும். ஆனால், அதை தாங்கியிருக்கும் விந்துப்பைகள்பற்றி எத்தனைபேருக்கு தெளிவாக தெரியும் என்பது சந்தேகமே... இன்றைக்கு விந்துப்பைப் பற்றியும், ஆண்கள் ஏன் விந்துப்பையை தொட்டுப்பார்க்க வேண்டும் என்பதுபற்றியும் விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் டாக்டர் காமராஜ். விந்தணு மாதிரி விந்துப்பை சிறியதாக இருந்தால்... ''விந்துப்பைகளின் அளவு மிக மிக முக்கியம். ஓர் ஆண் குழந்தைப் பிறக்கும்போது விந்துப்பைகள் ஒரு பாதாம் விதை அளவுக்கு இருக்கும். பிறகு, பிள்ளை பிள்ளை வளர விந்துப்பையும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஒரு வளர்ந்த ஆணுடைய விந்துப்பையில் இருக்கிற விந்தகங்களின் உயரம் 2.5-ல் இருந்து 3 செ.மீ வரைக்கும் இருக்கும். அகலவாக்கில் அதன் சுற்றளவு 2 முதல் 3 செ.மீ இருக்கும். விந்துப்பையின் அளவுபற்றி இந்தக் கட்டுரையின் கீழேயுள்ள வீடியோவிலும் விளக்கியிருக்கிறேன். அதையும் பார்த்தால், விந்துப்பை அளவுபற்றி உங்களுக்குத் தெளிவாக புரியும். நான் குறிப்பிட்ட அளவைவிட விந்துப்பை சிறியதாக இருந்தால், விந்தணுக்கள் குறைவாக இருக்கலாம். அல்லது விந்தணுக்கள் இல்லாமல் இருக்கலாம்'' என்றவர், எந்தெந்த நிலைகளில் விந்துப்பை சிறியதாக இருக்கலாம், விந்தணுக்கள் இல்லாமல் போகலாம் என்பனவற்றைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தார். விந்தணுக்களை உற்பத்தி செய்யவிருக்கிற எல்லா செல்களையும் அழிந்துவிடும்! ''நம் ஊரில் புட்டாலம்மை என்கிற 'பொன்னுக்கு வீங்கி' (mumps) அம்மை, சிறுவயதில் பலருக்கும் வந்திருக்கும். இந்த அம்மை வந்தால், வீட்டில் வேப்பிலையை சொருகிவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுவனின் கழுத்தில் தங்கச்சங்கிலியைப் போட்டு விடுவார்கள். அது தவறு. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடமோ அல்லது பாலியல் மருத்துவரிடமோ அழைத்து சென்று அந்த அம்மைக்கான சிகிச்சைகளை உடனே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், மம்ப்ஸுக்கு காரணமான வைரஸ், தாடையை தாக்கிவிட்டு, அடுத்து விந்துப்பையை தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்படித் தாக்கினால், விந்தணுக்களை உற்பத்தி செய்யவிருக்கிற எல்லா செல்களையும் அழிந்துவிடும். சில ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை பூஜ்யம் என்று வருவதற்கு முக்கியமானக் காரணம் இந்த மம்ப்ஸ் வைரஸ்தான். ஜீன்ஸ் காணாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது! அடுத்து இறுக்கமான உள்ளாடை போடுவது, இறுக்கமான ஜீன்ஸ் அணிவது, மடி மீது லேப்டாப் வைத்து வேலை செய்வது, செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பது, பால்வினை நோய்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு விளையாடும்போது விந்துப்பையில் அடிபட்டு அது சுருங்கி காணாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இரும்பைத்தொடுவதுபோல விந்துப்பை இருந்தால்... தவிர, விந்துப்பைப்பற்றிய இன்னொரு முக்கியமான விஷயம். விந்துப்பை கேன்சர் வயதானவர்களுக்கு வராது, 15 வயது முதல் 35 வயது வரையிலான சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும்தான் வரும். அதனால், பெண்களுக்கு எப்படி மார்பக பரிசோதனை அவசியமோ, அதேபோல 15-35 வயது ஆண்களுக்கு விந்துப்பை பரிசோதனை அவசியம். விந்துப்பையைத் தொட்டுப்பார்த்தால், விந்தகங்கள் கரடுமுரடாக இல்லாமல் ஸ்மூத்தாக இருக்க வேண்டும். இரும்பைத்தொடுவதுபோல விந்துப்பை (கல் மாதிரி) இருந்தால், கேன்சராக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறாது. ரொம்ப சாஃப்டாக, ஸ்பான்ஜை தொடுவதுபோல இருந்தால், விந்துப்பை முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்று அர்த்தம். விந்துப்பை தொடர்பான பிரச்னைகள் வருமுன் தடுக்க, ஆண்கள் விந்துப்பையை தொட்டுப்பார்க்க கூச்சப்படக்கூடாது'' என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
ஒவ்வொரு மாதமும் பெரிதாகும் மார்பகங்கள்; 22 வயது பெண்ணின் அரிய வகை பாதிப்பு; மருத்துவர்கள் விளக்கம்
பிரேசிலைச் சேர்ந்த 22 வயதான தைனாரா மார்க்கோண்டஸ் என்ற பெண் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மாதத்துக்கு ஒரு முறை அவரின் மார்பகங்கள் அளவில் பெரிதாகியிருக்கிறது. இதனால் அந்தப் பெண் கடுமையான வலியால் அவதிப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், அவரது மார்பக அளவு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் மீடியம் அளவிலான டி-ஷர்ட்களை அணிந்திருக்கிறார். ஒவ்வொரு மாதமும் சுமார் 750 கிராம் அளவுக்கு மார்பகங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆரம்பத்தில் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத, தைனாரா ஒரு நாள் கடைக்கு செல்லும்போது அவர் டி-ஷர்ட்டில் மறைத்து வைத்து பொருள்களை எடுத்துச் செல்வதாக கடைக்காரர்கள் எண்ணி உள்ளனர். அப்போதுதான் இது ஒரு அசாதாரண உணர்வு என்று அவர் புரிந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் அன்றாட வாழ்வும் அவருக்கு சவாலாக இருந்துள்ளது. முதுகு வலி, கழுத்து வலி ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இயல்பாக நடக்கும் விஷயங்களும் ஓடுவது, ஜிம்மிற்கு செய்வது போன்ற விஷயங்களும் அவரால் செய்ய முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அவர் மருத்துவரை அணுகியிருக்கிறார். அவர்கள் முதலில் இது புற்றுநோயாக இருக்கலாம் என்று எண்ணியுள்ளனர். அதற்கு பின்னர் அவர் ஜிகாண்டோமாஸ்டியா (Gigantomastia) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஜிகாண்டோமாஸ்டியா என்பது பெண்களின் மார்பகங்கள் அசாதாரணமாக பெரிய வளர்ச்சி அடையும் அரிய நிலையாகும். இது ஹார்மோன் சமநிலையின்மை, கர்ப்பம், உடல் பருமன் அல்லது சில மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளனர். அவருக்கு மார்பகத் திசுக்களை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. அறுவை சிகிச்சைகள் அவருக்கு செய்தாலும் தேவையான மருந்துகள் கொடுத்தாலும் திசு மீண்டும் வளரக்கூடியது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அந்தப் பெண் மேலும் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. View this post on Instagram A post shared by Portal SCC10 (@portalscc10)
Doctor Vikatan: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
Doctor Vikatan: சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆரோக்கிய உணவா... பொதுவாக ஜிம் செல்வோர், உடற்பயிற்சி செய்வோர்தான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதைப் பார்க்கிறோம். எல்லோரும் சாப்பிடலாமா, அதில் மாவுச்சத்தும் சர்க்கரைச்சத்தும் அதிகம்தானே... இனிப்பான அதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் கார்போஹைட்ரேட்டுக்கே மாற்றாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு மிகச் சிறப்பான ஓர் உணவு. அதாவது அரிசி சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக இதைச் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள்கூட சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம். வைட்டமின் ஏ, சி, மாங்கனீஸ் போன்ற சத்துகள் இதில் மிக அதிகம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதிலுள்ள ஆந்தோசயனின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட், நல்ல செல்களை சிதைக்கும் ஃப்ரீ ராடிக்கல்ஸை குறைக்கக்கூடியது. சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து மிக அதிகம் என்பதால் குடல்நலம் பாதுகாக்கப்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற வைட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை வலுப்படுத்துகிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கில் ஊதா நிறம், ஆரஞ்சு நிறம் என இரண்டு வகை இருக்கும். ஆரஞ்சுநிற கிழங்கு வெளிநாடுகளில் அதிகம் கிடைக்கும். அதில் பீட்டா கரோட்டின் அளவு இன்னும் அதிகம். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பொட்டாசியம் சத்தும் அதிகம். முதுமையில் சிலருக்கு சீக்கிரமே அல்சைமர் எனப்படும் மறதி பாதிப்பு வரும். அவர்களும் தினம் சிறிது சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம். குழந்தைகளுக்குக்கூட திட உணவை அறிமுகப்படுத்தும்போது சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகைவைத்து மசித்துக் கொடுக்கலாம். சர்க்கரைவள்ளிக்கிழங்கை ஆவியில் வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்தது. Doctor Vikatan: உருளைக்கிழங்கு மட்டுமே சாப்பிடும் மகள்... காய்கறிகள் சாப்பிடவைக்க என்ன செய்வது? விளையாட்டில் ஈடுபடுவோர் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதைப் பார்க்கலாம். அதற்குக் காரணம், அது கொடுக்கும் ஆற்றல் மற்றும் வைட்டமின் பி6 மற்றும் நயாசின் சத்துகள்தான். உடற்பயிற்சி செய்வோரும் ஆற்றலுக்காக சர்க்கரைவள்ளிக்கிழங்கை எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்கள் தினமும் 200 கிராம் அளவுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால், செல்கள் பழுதுபார்க்கும் திறன் மேம்படும். சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். சர்க்கரைவள்ளிக்கிழங்கை ஆவியில் வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்தது. வேகவைத்து மசித்து சப்பாத்தி போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம். சிப்ஸ் போன்று செய்து சாப்பிட்டால் அதிலுள்ள சத்துகள் வீணாக வாய்ப்புள்ளதால் அதைத் தவிர்க்கலாம். தோலுடன் வேகவைத்து முடிந்தால் தோலுடனேயே சாப்பிடலாம். கட்லெட் போன்றும் செய்து சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வெல்லம், ஏலக்காய் சேர்த்து போளியாகச் செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள், வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சாதத்தின் அளவைக் குறைத்துக்கொண்டு, சர்க்கரைவள்ளிக்கிழங்கைச் சேர்த்துக்கொள்ளலாம். அதிலுள்ளது காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் என்பதால் பிரச்னை வராது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம், மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டுமா?
Doctor Vikatan: ஒரு நாளைக்கு ஒரு நபர் எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். பச்சை முட்டை, வேகவைத்த முட்டை- இரண்டில் எது சிறந்தது, மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும் என்பது உண்மையா? முட்டை அதிகம் எடுப்பதால் புரதச்சத்து அதிகமாகி, கிட்னி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்வதற்கு முன், முட்டை ஒருவரது ஆரோக்கியத்தில் எப்படிப்பட்ட பங்கை வகிக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். முட்டையில் முழுமையான புரதச்சத்து கிடைக்கும் என்பதுதான் இதில் சிறப்பான விஷயமே. வேகவைத்த முட்டை ஒன்றில் 6 கிராம் புரதச்சத்து கிடைக்கும். அதில் 5 கிராம் அளவுக்கு கொழுப்புச்சத்து இருக்கும். புரதச்சத்து நிறைந்தது என்பதற்காக ஒருவர் அளவுக்கதிமாக முட்டை எடுத்துக்கொள்வது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். வயிற்று உப்புசம், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே, ஆரோக்கியமான ஒரு நபர், ஒரு நாளைக்கு 2 முதல் 3 முட்டைகள் வரை எடுத்துக்கொள்ளலாம். அதைத் தாண்டி போக வேண்டாம். egg பச்சை முட்டையா, வேக வைத்த முட்டையா என்று கேட்டால், வேகவைத்த முட்டைதான் சிறந்தது. பச்சை முட்டையில் கிருமிகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். தவிர, அது ஒவ்வாமையையும் ஏற்படுத்தக்கூடும். சரியாகச் சுத்தம் செய்யாமல் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், பச்சை முட்டை சாப்பிடுவோருக்கு அலர்ஜி ஏற்படலாம். வாந்தி, குடல் பாதிப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். அதுவே, முழுமையாக வேகவைத்த முட்டையில், இந்தப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், அதுவே பாதுகாப்பானதும்கூட. Doctor Vikatan: அதிக புரதச்சத்து கிட்னியை செயலிழக்கச் செய்யுமா... எந்த அளவு உணவில் சேர்க்கலாம்? பொதுவாகவே, முட்டையில் மஞ்சள் கருவைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவோம். மஞ்சள்கருவில் 5 கிராம் அளவு கொழுப்புச்சத்து உள்ளது. ஏற்கெனவே கொலஸ்ட்ரால் பாதிப்புக்குள்ளானவர்கள், இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், சாப்பிடும் கொழுப்பை எரிக்க இயலாதவர்கள் போன்றோருக்கு மஞ்சள் கருவால் கொழுப்பு அதிகமாகவும், ஏற்கெனவே உள்ள உடல்நல பாதிப்புகள் மேலும் தீவிரமடையவும் வாய்ப்புகள் அதிகம். முட்டை ஒருவரது எடைக்கேற்ப அவரது அன்றாட புரதச்சத்து தேவை நிர்ணயிக்கப்படும். உதாரணத்துக்கு, 60 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு 60 கிராம் அளவு புரதச்சத்து தேவை. அந்த 60 கிராம் புரதத்துக்கு மட்டுமன்றி, அதையும் தாண்டி 80 கிராம் அளவுக்குப் புரதச்சத்தை வெறும் முட்டையின் மூலம் மட்டுமே ஒருவர் உடலில் சேர்த்துக்கொள்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்நிலையில், புரதச்சத்தின் அளவு அதிகரித்து அது கிட்னியை பாதிக்கும் ஆபத்து உண்டு. இன்னொரு தரப்பினர், முட்டைகளையும் அதிக எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டு, வேறு உணவுகளின் மூலமும் புரதச்சத்தைச் சேர்த்துக்கொள்வார்கள். அதுவும் தவறானது. எடைக்கேற்ற புரதம் உடலில் சேரும்படி பார்த்துக்கொண்டால் போதும். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது முட்டைக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: டிரெண்டாகும் ஃப்ரெஷ் மஞ்சள் சமையல்.. எந்த அளவு ஆரோக்கியமானது?
Health: காபி நல்லதா; கெட்டதா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!
கா லை விடிந்ததும் காபியின் முன்புதான் பலர் கண்விழிக்கிறார்கள். ஒரு கப் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படிக்காவிட்டால் சிலருக்குத் தலையே வெடித்துவிடும். அன்றைய பொழுது, பொழுதாகவே இருக்காது. வீடாக இருக்கட்டும்; அலுவலகமாக இருக்கட்டும்... நம்மைச் சந்திக்கும் விருந்தினர்களையோ, நண்பர்களையோ உபசரிக்க முதலில் நாம் கேட்கும் கேள்வி, “காபி சாப்பிடுறீங்களா?” என்பதுதான். இப்படி, நம்முடைய வாழ்விலும், கலாசாரத்திலும், பழக்கவழக்கத்திலும் இரண்டறக் கலந்துவிட்டது காபி. காபி நல்லதா; கெட்டதா? காபி இன்று பலவகையான மாற்றங்களுக்குட்பட்டு இருக்கிறது. ஃபில்டர் காபி, டிகிரி காபி, டிகாக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, கிரீன் காபி என்று பல அவதாரங்களை காபி எடுத்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க, காபி குடிப்பது உடம்புக்கு நல்லது என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு சிலர் அது உடம்புக்குப் பல்வேறு தீமைகளை உருவாக்கும் என்கிறார்கள். காபி நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு விடை தெரியாமலே காபி பிரியர்கள் கப் கப்பாக காபியை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில், காபி நல்லதா? காபியில் என்னதான் இருக்கிறது? ஒரு நாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்? எவ்வளவு குடிக்கலாம்? எல்லா கேள்விகளையும் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். காபியில் என்னென்ன இருக்கிறது? காபியில், கெஃபைன் (caffeine) என்னும் வேதிப்பொருளும் பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்களும் உள்ளன. இவை தவிர பி காம்ப்ளெக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவையும் நிரம்பியிருக்கின்றன. காபி நல்லதா; கெட்டதா? கெஃபைன் என்ன செய்யும்? காபியில் உள்ள கெஃபைன், நரம்பு மண்டலத்தைத் தூண்டும் (Central Nervous System Stimulant) பொருளாகச் செயல்படுகிறது. அதாவது, மூளையில் அடினோசின் (Adenosine) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. மேலும் டோபமைன் (dopamine), நாரட்ரீனலின் (noradrenaline) போன்ற நியூரோ டிரான்ஸ் மிட்டர்கள் தூண்டப்படுகின்றன. அப்போது உடனே அட்ரினலின் (adrenaline), எஃபிநெஃப்ரின் (epinephrine) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இதனால், மூளை அலெர்ட் செய்யப்படுகிறது; இதயம் வேகமாகத் துடிக்கிறது; உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது; கண் பார்வை விரிகிறது; சுவாசக் குழாய் நன்கு திறக்கிறது; ரத்த நாளங்கள் சுருங்குகின்றன; ரத்த அழுத்தம் கூடுகிறது; தசைகளுக்கு அதிக ரத்தம் அனுப்பப்படுகிறது; தசைகள் இறுகி உடல் அவசர நிலைக்குத் தயாராகிறது. ஒரு காபி நம் உடலில் இத்தகைய மாற்றங்களையெல்லாம் சில நிமிடங்களில் நிகழ்த்திவிடுகிறது. காபி நல்லதா; கெட்டதா? ஒரு நாளைக்கு எத்தனை கப் அருந்தலாம்? ஒரு நாளைக்கு 250 மில்லி கிராம் கெஃபைன் உட்கொள்வது உடலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. கெஃபைனை ஏற்கும் அளவு, வயது, உடல்நிலை, வளரும் சூழலைப் பொறுத்து மாறுபடலாம். பொதுவாக, ஒரு கப் காபியில் 80-165 மி.லி கிராம் அளவு கெஃபைன் உள்ளது. ஒவ்வொரு வகையான காபியிலும், அதில் இருக்கும் கெஃபைன் அளவு மாறுபடுவதால், ஒருவர் இவ்வளவுதான் குடிக்கலாம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. காபி அருந்துவதால் நன்மைகள் உண்டா? காபி, வளர்சிதை மாற்றத்தையும் (Metabolism), குடல் அசைவுச் (Bowel Movement) செயல்பாடுகளையும் அதிகரிக்க உதவுகிறது. குடல் அசைவு அதிகரிப்பதால் மலம் எளிதாக வெளியேறும். ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும் தன்மை இருப்பதால், பல வலி நிவாரண மாத்திரைகளிலும் கெஃபைன் சேர்க்கப்படுகிறது. இதுதவிர, அல்சைமர் (Alzheimer), நரம்புத்தளர்ச்சி நோய் (Parkinson’s disease - PD), இதயநோய், சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் நோய்களைத் தடுக்கும் ஆற்றலும் காபிக்கு உண்டு. அதுமட்டுமல்ல, மனஅழுத்தத்தையும் குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இதுபற்றிய ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்க பால்தான் சிறந்தது. காபி அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? காபியில் இருக்கும் கெஃபைன் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, உடல்நலப் பாதிப்புக்குக் காரணியாகிறது. மேலும், காபிக்கு அடிமையாகி அதிகமாகக் குடிக்கும்போது, கெஃபைன் உடலில் அதிகமாக சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும். அது பல்வேறு பாதிப்புகள் ஏற்படக் காரணமாகிறது. குறிப்பாக, படபடப்பு, மன அமைதியற்ற நிலை, தூக்கமின்மை, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. பசியின்மை ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்குத் தலைச்சுற்றல் வரும் வாய்ப்புகள் அதிகம். பால், வெண்ணெய், நெய் - குழந்தைகளுக்கு எந்தளவில் தரலாம்? மனிதனின் அன்றாடத் தேவைக்கு 4-5 என்ற அளவில் பொட்டாசியம் தாது இருந்தால் போதுமானது. இது நம் அன்றாட உணவின் மூலமே கிடைத்துவிடும். காபியை அதிகமாக உட்கொள்ளும்போது, பொட்டாசியம் அளவு அதிகரித்துப் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்தால், Hyperkalemia, சிறுநீரகப் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம். டாக்டர். அருணாச்சலம் யார் குடிக்கக்கூடாது? 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்க பால்தான் சிறந்தது. அதேநேரத்தில், தேயிலையில் கெஃபைன் அளவு குறைவாக இருப்பதால் டீ குடிக்கலாம். அல்சர், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் காபி குடிப்பதைத் தவிர்த்தல் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் சர்க்கரை சேர்க்காமல் காபி சாப்பிடலாம். Health: தெரிந்த கிரீன் டீ, தெரியாத தகவல்கள்! எப்போது காபி குடிக்க வேண்டும்? காலையில் எழுந்ததும் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்போ, பின்போ குடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேர இடைவெளி அவசியம். தூங்குவதற்கு முன்பாகக் காபி குடிக்கக் கூடாது. மேலும் தூக்கம் குறைவாக உள்ளவர்கள் காபியைத் தவிர்ப்பது நல்லது. தலைவலி மாத்திரையைக் காபியுடன் விழுங்கக் கூடாது. மாத்திரைகளின் வீரியத்தைக் காபி குறைத்துவிடும். காபியும் ஒரு வகையான உணவுப்பொருள்தான் என்கிறார்கள். அதேநேரத்தில், கண்டிப்பாக காபி குடித்தே தீர வேண்டும் என்று எதுவுமில்லை. ஆனால், அளவோடு இருந்தால் தீங்கில்லை என்றே இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆக, நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் காபியை அளவுடன் பயன்படுத்தி வளமுடன் வாழ்வோம்'' என்கிறார் டாக்டர் அருணாச்சலம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Samosa and Jalebi: இனிமே சமோசாவும் ஜிலேபியும் சாப்பிடவே கூடாதா? - மருத்துவர் தரும் விளக்கம்
சா லையோரக் கடைகளில் நம் கண்ணெதிரே சுடச்சுட பொரித்து தரப்படும் சமோசாவும், ஜிலேபியும் பலருடைய ஆல் டைம் ஃபேவரிட் ஸ்நாக்ஸாக மாறி கிட்டத்தட்ட 20 வருடங்களாவது ஆகியிருக்கும். ஒரு கடி சமோசா, ஒரு கடி ஜிலேபி என சப்புக்கொட்டி ருசித்தவர்கள் எல்லாம் நேற்றைய தினத்தில் இருந்து பயந்துபோய் கிடக்கிறார்கள். காரணம் என்னத் தெரியுமா? . சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பதுபோல, விரைவில் சமோசா, ஜிலேபி பாக்கெட்டுகளின் மேலும் எச்சரிக்கை வாசகம் இடம்பெறவிருக்கிறது என இந்திய இதயவியல் சங்கத்தின் தலைவர் அமர் அமலே பேசியிருப்பதுதான். இதன் பின்னணியை அறிய சென்னையைச் சேர்ந்த 'மூத்த இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர்' டாக்டர் பாசுமணி அவர்களிடம் பேசினோம். samosa and jalebi சுமார் 50 கோடி பேர் உடல் பருமனா இருப்பாங்கன்னு கணிக்கப்பட்டிருக்கு! ''இன்னும் 25 வருடங்கள்ல, அதாவது 2050-ல இந்தியாவுல சுமார் 50 கோடி பேர் உடல் பருமனா இருப்பாங்கன்னு கணிக்கப்பட்டிருக்கு. தவிர, சிட்டியில வசிக்கிறவங்கள்ல ஐந்தில் ஒருத்தர் உடல் பருமனால அவதிப்பட்டுக்கிட்டிருக்கார். இதைவிட முக்கியமான விஷயம், ஜங்க்ஃபுட்ஸ், நோ எக்சர்சைஸ், ஒரே இடத்துல உட்கார்ந்து போன் பார்க்கிறதுன்னு சிறுபிள்ளைகளும் உடல்பருமன் பிரச்னையால பாதிக்கப்பட்டிருக்காங்க. இதனாலதான், உடல் பருமனை ஏற்படுத்துற அதிக மாவுச்சத்து மற்றும் அதிக எண்ணெய் கொண்ட உணவுப்பொருள்களைத் தவிர்க்கணும்னு மத்திய அரசு வலியுறுத்திக்கிட்டே இருக்கு. அதோட ஒரு பகுதியாதான் வட இந்தியாவுல ரொம்ப ஃபேமஸா இருக்கிற சமோசா, ஜிலேபி இரண்டுலேயும் அதிகமான மாவுச்சத்து, கொழுப்பு, சர்க்கரை இருக்கு. அவை உடல் பருமன்ல ஆரம்பிச்சு பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்னு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை செஞ்சிருக்கு'' என்றவர், சமோசா, ஜிலேபி குறித்து பேச ஆரம்பித்தார். இதே எச்சரிக்கை உணர்வு... ''சமோசா, ஜிலேபியில மட்டும்தானா மாவுச்சத்து, கெட்டக்கொழுப்பு, சர்க்கரை இருக்கு..? பிரெட், ஜெல், ஜாம், டோனட், வடை, பூரி, பாக்கெட் சிப்ஸ்னு நாம கிட்டத்தட்ட தினசரி சாப்பிடுற எல்லா உணவுகள்லேயும் இந்த மூணு கெடுதலும் இருக்கே... இந்தந்த உணவுகள்ல இவ்ளோ கெடுதல் இருக்குன்னு நாமதான் புரிஞ்சி நம்ம ஆரோக்கியத்தைக் காப்பாத்திக்கணும். உதாரணத்துக்கு, நம்ம வீடுகள்ல தினந்தோறும் பூரியும், உருளைக்கிழங்கு மசாலாவும் செய்ய மாட்டோம். வாரத்துக்கு ஒருமுறை செஞ்சாலே அதிகம். இதே எச்சரிக்கை உணர்வு சமோசா, ஜிலேபி சாப்பிடுறதுலேயும் நமக்கு இருக்கணும். டாக்டர் பாசுமணி Food & Health: நாம் ஏன் சிவப்பு அரிசி சாப்பிடணும்? -ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்! சிகரெட் பாக்கெட்ல எச்சரிக்கை வாசகம் இருந்தாலும்... உடல் பருமனால கஷ்டப்படுறவங்களுக்கு, என்ன சாப்பிடணும், என்ன சாப்பிடக்கூடாது, வாக்கிங் போங்க, உடற்பயிற்சி செய்யுங்கன்னு டாக்டர்ஸ் நாங்க ஆலோசனை சொன்னாலும், அவற்றை ஃபாலோ செய்யுறவங்களுக்கு மட்டும்தான் அதற்கான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். ஃபாலோ செய்யாதவங்களுக்கு கிடைக்காது. இதே மனப்பான்மை சிகரெட் விஷயத்துக்கும் பொருந்தும். சிகரெட் பாக்கெட்ல எச்சரிக்கை வாசகம் இருந்தாலும், அந்தப்பழக்கத்தை எல்லாரும் விடவில்லையே... எத்தனை வருத்தமான விஷயம் இது'' என்றவர் தொடர்ந்தார். Health: உங்கள் ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் தெரியுமா? எப்பவாவது ஆசைக்கு... ''நம்ம உடலுக்கு மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின், மினரல்ஸ் எல்லாமே தேவை. இதுக்கு தினமும் பேலன்ஸ் டயட் சாப்பிடுங்க. எப்பவாவது ஆசைக்கு சமோசா, ஜிலேபி, வடை, பூரி, கேசரின்னு சாப்பிடுங்க. நமக்குப் பிடிச்ச உணவை சாப்பிடுறப்போ சுரக்கிற மகிழ்ச்சி ஹார்மோன்கள் நமக்கு நல்லதுதான் செய்யும். ஆனா, அந்த மகிழ்ச்சி ஏற்படுத்துற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டா நீண்டகால உடல் ஆரோக்கியத்துக்கு என்னென்ன கெடுதல்கள் வரும்கிற விழிப்புணர்வோட இருங்க. கடைசியா ஒருவிஷயம் சொல்ல விரும்புறேன். கடையில வாங்கி சாப்பிடுற எந்த உணவா இருந்தாலும், அதுல என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கு; அது நம்ம ஆரோக்கியத்துக்கு நல்லதுதானான்னு தெரிஞ்சுக்கிட்டு சாப்பிடுங்க. நம்ம ஆரோக்கியத்துக்கு நாமதான் காவல்'' என்று பேசி முடித்தார் டாக்டர் பாசுமணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: டிரெண்டாகும் ஃப்ரெஷ் மஞ்சள் சமையல்.. எந்த அளவு ஆரோக்கியமானது?
Doctor Vikatan: சமீபகாலமாக நிறைய வீடியோக்களில், ரீல்ஸில் மஞ்சள் கிழங்கை வைத்துச் செய்கிற உணவுகளைப் பார்க்கிறோம். ஃப்ரெஷ்ஷான மஞ்சளை வைத்து ஊறுகாய் முதல் ஜூஸ் வரை ஏதேதோ தயாரிக்கிறார்கள். மஞ்சளை தூளாக உபயோகிக்கிறபோது மிகச் சிறிய அளவுதான் உபயோகிக்கிறோம். அப்படியிருக்கையில் மஞ்சள் கிழங்கை இவ்வளவு அதிகமாக உபயோகிக்கலாமா.... எந்த மஞ்சளை, எப்படி உபயோகிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் காலங்காலமாக சமையலில் மஞ்சளை எப்படிப் பயன்படுத்துவோமோ, அப்படிப் பயன்படுத்துவதுதான் சிறப்பானது. சாம்பார், ரசம் உள்ளிட்ட உணவுகளைத் தயாரிக்கும்போது எப்படிச் சேர்ப்போமோ, அதுவே போதுமானதுதான். பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். 'தங்கப்பால்' (கோல்டன் மில்க்) எனப்படும் இது வெளிநாடுகளில்கூட பிரபலமாகிவிட்டது. இப்படியும் மஞ்சளைப் பயன்படுத்தலாம். மஞ்சளில் ஊறுகாய் தயாரிப்பது பல மாநிலங்களிலும் வழக்கத்தில் இருக்கிறது. சமீபகாலமாக அது மிகவும் டிரெண்டாகி வருகிறது. ஊறுகாய் என்கிற போது இஞ்சி, மா இஞ்சி, மாங்காய் போன்ற ஏதேனும் ஒன்றை பிரதானமாக வைத்துக் கொண்டு, கூடவே சிறிது மஞ்சள் கிழங்கும் சேர்த்துச் செய்யலாம். இப்படித் தயாரிக்கிறபோது நாம் எடுத்துக்கொள்ளும் மஞ்சளின் அளவு குறைவாகத்தான் இருக்கும். மஞ்சள் நல்லது என்பதற்காகவோ, சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களைப் பார்த்தோ, மஞ்சளை அளவுக்கதிகமாக எடுப்பது நிச்சயம் தவறானதுதான். அப்படி எடுக்கும்போது வயிற்றுப் புண், குடல் அழற்சி போன்ற பிரச்னைகள் வரலாம். மஞ்சள் Doctor Vikatan: ஒருநாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்.. பால் குடித்தால் உடல் எடை கூடுமா? மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள் என்றாலும் அளவோடு எடுக்கும்போதுதான் அதன் நற்பலன்கள் முழுமையாகச் சேரும். மஞ்சளைப் பொறுத்தவரை, அதை அளவோடு எடுக்கும்போது, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது போன்ற பல நன்மைகளைத் தரும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கபத்தை நீக்கக்கூடிய தன்மையும் அதற்கு உண்டு. புதுமையாகச் சமைக்கிறோம் என்ற பெயரில் இதுபோன்ற மருத்துவ குணம் வாய்ந்த எந்தப் பொருளையும் அதன் தன்மை தெரியாமலும், அது செரிமானத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாமலும் முயற்சி செய்ய வேண்டாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Beauty: தாமரை இலை ஃபேஸ் மாஸ்க்; ட்ரெண்டிங்காகும் வீடியோவும் மருத்துவரின் ஆலோசனையும்..!
சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகன புகைகளுக்கு இடையேயான தூசுகளிலும் இருந்து நம் முகப்பொலிவை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக, க்ளென்சர், டோனர், சீரம், சன் ஸ்கிரீன், மாய்ஸ்ரைசர் என பல்வேறு வகையான ஸ்கின் கேர் முறைகளை பின்பற்றி வருகிறோம். இந்த நிலையில், நாங்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களையும் விட்டுவைப்பதில்லை என்பதற்கு ஏற்ப சீனாவில் ஒரு புதிய ஸ்கின் கேர் முறை முறை ட்ரெண்டாகி வருகிறது. அது தாமரை இலை மாஸ்க். தாமரை இலைகளை முகத்தின் மேல் போட்டுக் கொள்வதால் முகம் பொலிவுடன் இருப்பதாக கூறுகின்றனர். Lotus face mask தாமரை இலைகளை நேரடியாக முகத்திற்கு பயன்படுத்தலாமா; தாமரை இலை முகப்பொலிவை பாதுகாக்கும் இயல்பு கொண்டவையா என, சென்னையைச் சேர்ந்த ட்ரைக்காலஜிஸ்ட் டாக்டர் தலத் சலீம் அவர்களிடம் கேட்டோம். தாமரை இலையின் மருத்துவ குணங்கள்... ''தாமரை இலைகளை உபயோகிப்பதற்கு முன்னால் அதனுடைய மருத்துவக்குணங்களைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இதில் பாலிஃபீனால், ஃபிளேவனாய்டு நிறைந்துள்ளன. ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் அதிகம் இருப்பதால், முகத்தில் இறந்த செல்களின் எண்ணிக்கையைக் குறைத்து சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். இதில் நிறைந்துள்ள ஆல்கலாய்ட்களான நியோசிஃபரின் (neociferine), ரியோமெரின் (reomerine) ஆகியவை முகத்தில் அலர்ஜி, எரிச்சல் ஏற்படுவதை குறைக்கும். Lotus leaf பாரம்பரியமான சீன முறைகளில், தாமரை இலையை வேக வைத்து முகத்தில் வைத்து, முகத்துளைகளை மூடுவார்கள். இதன் மூலம் கருமை போகும். தாமரை இலையில் உள்ள பாலிசாச்சுரைட்ஸ், முகத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சூரியக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும். இத்தகைய காரணங்களினால்தான் தாமரை இலைச்சாறு, சீனா மற்றும் கொரியன் அழகு சாதனப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. தாமரை இலையை நேரடியாக ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்தலாமா? தாமரை இலையை நேரடியாக முகத்தில் மாஸ்க்காக பயன்படுத்தினால், அதில் இருக்கிற எந்த சத்துக்களையும் முகம் உறிஞ்சிக்கொள்ளாது. எனவே, நேரடியாக உபயோகிப்பதைத் தவிர்த்து, அதை சீரமாகவோ அல்லது தாமரை இலைச்சாறு சேர்க்கப்பட்ட அழகு சாதனப்பொருள்களையோ பயன்படுத்தலாம். View this post on Instagram A post shared by CHINA IN A MINUTE (@chinaminutes) இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா? தாமரை இலைகள் தோல் பராமரிப்பிற்கான பல்வேறு விதமான நன்மைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவற்றின் செயல்திறன் மிதமானதுதான். சரியான கெமிக்கல்களுடன் தாமரை இலைச்சாற்றை முறையாகப் பயன்படுத்தப்படும்போது, அவை எண்ணெய் சருமம், வறட்சி, கரும்புள்ளிகளை குறைத்து முகப்பொலிவு, சரும தெளிவு மற்றும் இளமையான தோற்றத்தை வழங்கும். ஒரு சிலருக்கு இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனென்றால், மனிதர்கள் மேல் பரிசோதிக்கப்பட்ட தாமரை இலைச்சாறு சேர்த்து கிரீம்களின் எண்ணிக்கை மிக குறைவு. தவிர, தாமரை இலைச்சாறுடன் சேர்க்கப்படுகிற கெமிக்கல்ஸை பொறுத்துதான் முகப்பொலிவு ஏற்படும். இதன் காரணமாகவும் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஒரு தோல் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு, தாமரை இலைச்சாறு சேர்க்கப்பட்ட க்ரீம்களை பயன்படுத்தலாம்'' என்கிறார் டாக்டர் தலத் சலீம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Lotus Seed: தாமரை விதையை எப்படி சாப்பிடுவது; அதன் மருத்துவ பலன்கள் என்னென்ன?
தே சிய மலரான தாமரை இந்தியாவில்தான் அதிகம் பயிராகிறது என்றாலும், தற்போது தெற்காசியக்கண்டத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தாமரை விதைகளின் மருத்துவக் குணங்கள் ஆச்சர்யமூட்டக் கூடியவை. பூவின் அடிப் பகுதியில் விதைகள் இருக்கும். சீனா மற்றும் கம்போடியாவில் தான் இவை அதிகமாகக் கிடைக்கின்றன. சீன மருத்துவத்தில் இந்த விதைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகவும், ஆரோக்கியமான உணவுப் பொருள்களாகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் இவற்றின் ஆரோக்கியப் பலன்கள் பற்றியும் எந்தளவுக்கு இவற்றை உண்ணலாம் என்பது பற்றியும் தெரியாமல் இருக்கின்றோம் என்பதே உண்மை. அவை குறித்து இங்கே சொல்கிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல். lotus seeds ஊட்டச்சத்தின் அளவு 100 கிராம் தாமரை விதைகளில் சுமார் 350 கலோரிகள், 63-68 கிராம் கார்போஹைட்ரேட், 17-18 கிராம் புரதம், 1.9-2.5 கிராம் கொழுப்பு ஆகியவை உள்ளன; மீதமுள்ளவை தண்ணீர் (சுமார் 13 சதவிகிதம்) மற்றும் தாதுக்கள். முக்கியமாகச் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில் நார்ச்சத்தும் வைட்டமின்களும் குறைவாகவே உள்ளன. வயிற்றுப்போக்கு நீண்ட, நாள்பட்ட வயிற்றுப்போக்கைத் தடுக்க உதவுகிறது. எனவே, மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் இதை உட்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். lotus seeds இதய நோய்கள் நமது உடலில் குறைந்தளவு மக்னீசியம் இருந்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. இதய நோய் ஆபத்துகளும் குறைகின்றன. தலைச்சுற்றல், இதய அழற்சி, எடையிழப்பு, வயிற்றுப்புண், அத்தனைக்கும் தீர்வு சொல்லும் இஞ்சி! ரத்த அழுத்தம் தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன. Anti aging ஆன்டிஏஜிங் பண்புகள் இவற்றில் செல் முதிர்ச்சி அடைவதைத் தாமதப்படுத்தும் என்சைம்கள் உள்ளன. மேலும், சேதமடைந்த புரதங்களுக்கு இந்த என்சைம்களை அளித்து உதவவும் செய்கின்றன. இதன் காரணமாக, பல அழகு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்களில் தாமரை விதையின் ஆன்டிஏஜிங் என்சைம்களைச் சேர்க்கின்றன. மனச்சோர்வு குறைக்கும் காரணி இவை மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன. அமைதியின்மை மற்றும் பதற்றத்துடன்கூடிய மனஅழுத்தம் ஆகியவற்றுக்குப் பாரம்பர்ய சிகிச்சைகளில் தாமரை விதை பயன்படுத்தப் படுகிறது. Lotus seeds உண்ணும் முறை தற்போது எல்லா மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் உலர்ந்த தாமரை விதைகள் கிடைக்கின்றன.அவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து சூப்புகள், சாலட்டுகள் அல்லது மற்ற உணவுகளில் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளலாம். உலர்ந்த தாமரை விதைகளை பாப்கார்னைப்போல வறுத்துச் சிற்றுண்டியாகவும் பயன்படுத்தலாம். Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: முளைகட்டிய பயறு, வேகவைத்தது... எது பெஸ்ட்? எப்படி சாப்பிடணும்?
Doctor Vikatan: முளைகட்டிய பயறு.... வேகவைத்த பயறு... இரண்டில் எதில் சத்துகள் அதிகம்.... முளைகட்டிய பயறு சாப்பிட்டால் வாயுத் தொந்தரவு வருமா... எந்தெந்தப் பயறுகளை முளைகட்டிச் சாப்பிடலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் வேகவைத்த பயறு வகைகளைவிட, ஊறவைத்து, முளைகட்டிய பயறு வகைகளே சிறந்தவை. முளைகட்டும்போது அவற்றில் ஈஸ்ட்ரோஜென் என்கிற என்ஸைம் அதிகரிக்கிறது. பயறுக்கே உரித்தான வாயுவை உண்டாக்கும் தன்மையும் முளைகட்டுவதால் நீங்கிவிடும். பயறு வகைகளை முளைகட்டச் செய்வதால் அவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸின் தன்மை அதிகரிக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துகள் சற்று அதிகமாகக் கிடைக்கும். முளைகட்டிய பயறில் நார்ச்சத்து அதிகம் என்பதால் எளிதில் செரிமானமாகிவிடும். பயறை சாதாரணமாகச் சாப்பிடும்போது செரிமான பிரச்னையை எதிர்கொள்வோருக்குக்கூட, அவற்றை முளைகட்டச் செய்து சாப்பிடும்போது செரிமான பிரச்னை வருவதில்லை. எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு முளைகட்டிய பயறு வகைகள் சிறந்த சாய்ஸ். சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வைத் தரும். விளையாட்டில் ஈடுபடுவோர், உடற்பயிற்சி செய்வோர், ஜிம் செல்வோரெல்லாம் கொண்டைக்கடலையை ஊறவைத்து, காலையில் சாப்பிடுவதைப் பார்க்கலாம். அது தசை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். அதையே முளைகட்டச் செய்து சாப்பிடும்போது, அதன் பலன்கள் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். முளைகட்டச் செய்வதால் அவற்றிலுள்ள புரதச்சத்து இன்னும் மேம்படுகிறது. பச்சைப்பயறு, காராமணி, கொள்ளு, கறுப்பு கொண்டைக்கடலை போன்றவற்றை முளைகட்டச் செய்யலாம். முடிந்தவரை எல்லா பயறு வகைகளையும் முளைகட்டச் செய்து சாப்பிடுவது மிகச் சிறந்தது. Doctor Vikatan: சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்து குறைபாடு ஏற்படுமா? பச்சைப்பயறு, காராமணி, கொள்ளு, கறுப்பு கொண்டைக்கடலை போன்றவற்றை முளைகட்டச் செய்யலாம். முடிந்தவரை எல்லா பயறு வகைகளையும் முளைகட்டச் செய்து சாப்பிடுவது மிகச் சிறந்தது. பச்சைப்பயறு போன்றவற்றை முதல்நாள் ஊறவைத்து, மறுநாள் நீரைவடித்து, சுத்தமான துணியில் மூட்டைகட்டி வைத்தால், அடுத்தநாளே முளைவிடும். மூட்டை கட்டி வைக்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை. ஊறவைத்த பயறை நீரை வடித்துவிட்டு, ஹாட் பாக்ஸில் போட்டு, மூடிவைத்துவிட்டால், அன்று மாலையே முளை வந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால், ராஜ்மா, வெள்ளை கொண்டைக்கடலை போன்ற சில வகைகள் முளைகட்ட நேரமெடுக்கும். ஆனாலும் முளைவரும். பெரிய அளவில் முளை வர வேண்டும் என அவசியமில்லை. சின்னதாக வந்தாலே அதன் ஆரோக்கிய பலன்கள் கூடும் என்பதால் அதையும் முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
இளமையான சருமம் முதல் மூட்டுகளுக்கு பலம் வரை.. எல்லாம் தரும் எலும்பு சூப்!
எப்போதாவது சாப்பிட்டாலும், அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது சூப். இன்றைக்கு உணவகங்களுக்குப் போனாலோ, உடல்நலமின்றி இருக்கும்போது டாக்டர்கள் பரிந்துரைத்தாலோதான் சூப்பை அருந்துகிறோம். மற்றபடி வெகு சிலர் மட்டுமே சூப் அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பின் மருத்துவப்பலன்கள் குறித்து சொல்கிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல். சூப் எலும்பு சூப் வெஜிடபிள் சூப், சிக்கன் சூப், மட்டன் சூப், ஹெர்பல் சூப்... எனப் பலவிதமான சூப் வகைகள் இருந்தாலும், எலும்பு சூப் தரும் பலன்கள் சிறப்பானவை. சிக்கன் மற்றும் மீன் எலும்புகளின் சூப் மருத்துவக் குணங்களுக்காக அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. எலும்பு சூப் ஊட்டச்சத்து நிறைந்தது; எளிதில் செரிமானமாகக்கூடியது. மூட்டுகளைப் பாதுகாக்கும் உடலால் எளிதாக உறிஞ்சப்படக்கூடிய நிலையில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் போன்ற கனிமங்கள் எலும்பு சூப்பில் உள்ளன. மூட்டுவலியைக் குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் மருந்தாகக் கொடுக்கப்படும் கான்ட்ராய்டின் சல்பேட் (Chondroitin sulfate) மற்றும் குளுக்கோசமைன் (Glucosamine) ஆகியவை எலும்பு சூப்பில் அடங்கி உள்ளன. மூட்டுவலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகியவற்றைக் குறைப்பதற்காக விலை உயர்ந்த மருந்துகளாக இந்த கான்ட்ராய்டின் சல்பேட், குளுக்கோசமைன் போன்றவை விற்கப்படுகின்றன. விலை உயர்ந்த இந்த மருந்துகளுக்குப் பணத்தைச் செலவழிப்பதற்குப் பதில் இந்த சூப்பைக் குடிப்பது நல்லது. மூட்டு வலி எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சூப், எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணியாகச் செயல்படும். சூப்பில் உள்ள அமினோ அமிலங்கள் சுவாச அமைப்பு மற்றும் செரிமான அமைப்புக்கு பலம் தருகின்றன. ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்துகின்றன. உடல் எடை குறைக்க உதவும் எலும்பு சூப்பில் உள்ள ஜெலட்டின், சூப் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துவதால் எடைக் குறைப்புக்கு உதவுகிறது. புரோபயாடிக்ஸ், ப்ரீபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலும்பு சூப்பில் உள்ள ஜெலட்டின், நம் வயிற்றில் உள்ள நன்மை பயக்கும் புரோபயாடிக் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சூப்பில் உள்ள அமினோ அமிலங்கள் குடல் பாதையில் உள்ள செல்களின் செரிமானச் செயல்பாடுகளை அதிகரிக்கும். வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும். சருமத்தைப் பாதுகாக்கும் எலும்பு சூப்பில் உள்ள கொலாஜன் ஆரோக்கியமான செல், செல் மறுசீரமைப்பு மற்றும் தோல் உறுதிப்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. தோலில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து, இளமையான தோற்றத்தையும் தருகிறது. சூப்பில் உள்ள கொழுப்பை நீக்க விரும்பினால், சூப்பைக் குளிரவைத்து, அதன் மேல் படர்ந்திருக்கும் கொழுப்பை ஸ்பூனால் அகற்றலாம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: மெனோபாஸில் எலும்புகள் பலவீனம்.. கால்சியம் மாத்திரையால் கிட்னி ஸ்டோன் வருமா?
Doctor Vikatan: என் வயது 49. மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. கை, கால்களில் வலியையும், பலவீனத்தையும் உணர்கிறேன். மருத்துவர் கால்சியம் மாத்திரை எழுதிக்கொடுத்தார். ஆனால், கால்சியம் மாத்திரை சாப்பிட்டால், கிட்னியில் கல் வரும் என்கிறாள் என் தோழி. அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மெனோபாஸ் காலத்தில் பெண் உடலின் மிக முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் வெகுவாகக் குறைந்துவிடும். அதனால் 50 ப்ளஸ் வயதில் எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். ஒருநாளைக்கு ஒரு பெண்ணுக்கு 500 முதல் 1000 மில்லிகிராம் கால்சியம் தேவை. சிலருக்கு அவர்களது உடல்நிலையைப் பொறுத்து இது 2,000 மில்லிகிராம்கூட தேவைப்படலாம். உணவின் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாது என்பதால் சப்ளிமென்ட் எடுக்க வேண்டும். மெனோபாஸில் கால்சியம் குறைபாடு காரணமாக, எலும்புகள் மென்மையாகும் ஆஸ்டியோபொரோசிஸ் என்கிற பிரச்னை, லேசாக இடறினாலோ, தடுக்கினாலோகூட எலும்பு முறிவது, கை, கால்களில் வலி, பலவீனம் போன்றவற்றை உணர்வார்கள். அதற்கு சப்ளிமென்ட் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்போம். கால்சியம் சப்ளிமென்ட்ஸ் எல்லாமே கிட்னி ஸ்டோன்ஸை ஏற்படுத்தாது. அதில் பல வகைகள் உள்ளன. யார், எந்த டோஸ், எத்தனை நாள்களுக்கு எடுத்துக்கொள்கிறார் என்பதும் இதில் முக்கியம். மருத்துவர் பரிந்துரைக்கும்போது பக்க விளைவுகளற்றதாகவே தருவார். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத்தான் கிட்னி ஸ்டோன்ஸ் வரும். ஏற்கெனவே கிட்னி ஸ்டோன்ஸ் இருந்தால், கால்சியம் சப்ளிமென்ட் எடுப்பதில் கவனம் தேவை. மெனோபாஸில் கால்சியம் குறைபாடு காரணமாக, எலும்புகள் மென்மையாகும் ஆஸ்டியோபொரோசிஸ் என்கிற பிரச்னை, லேசாக இடறினாலோ, தடுக்கினாலோகூட எலும்பு முறிவது, கை, கால்களில் வலி, பலவீனம் போன்றவற்றை உணர்வார்கள். கால்சியம் சப்ளிமென்ட்டை உணவுடன் சேர்த்து எடுக்கும்போது அது உட்கிரகிக்கப்படுவது சிறப்பாக இருக்கும். இத்தனை நாள்களுக்குத்தான் கால்சியம் எடுக்க வேண்டும் என கணக்கு இல்லை. பல வருடங்கள் தொடர்ந்து எடுத்தாலும் பிரச்னை வர வாய்ப்பில்லை. அதுவே, இரண்டு, மூன்று கால்சியம் மாத்திரைகள் எடுக்கும்போது அது பிரச்னையை ஏற்படுத்தலாம். பால், தயிர், மோர், பனீர், கீரை வகைகள் மூலம் இயற்கையாகவே கால்சியம் உடலில் சேரும். எல்லோருக்கும் சப்ளிமென்ட்ஸ் தேவையும் இல்லை. 50 ப்ளஸ் வயதில, எலும்புகள் வலிமையிழக்கும் நிலையில் தான் அது தேவை. கால்சியம் குறைபாட்டுடன், வைட்டமின் டி பற்றாக்குறையும் இருப்பது தெரிந்தால், குறிப்பிட்ட நாள்களுக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸையும் சேர்த்தே மருத்துவர் பரிந்துரைப்பார். எனவே, மருத்துவர் பரிந்துரைக்கும்போது பயமின்றி எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவது ஏன்?
Health: முதிர்ந்த கீரையைவிட 40 மடங்கு அதிக சத்துகள் கொண்ட மைக்ரோ கீரைகள்!
ஊ ட்டச்சத்து மூலம் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பும் மக்கள் கீரைகளில், குறிப்பாக மைக்ரோ கீரைகளைப் பயன்படுத்துவதில் சமீபமாக அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கூட்டு, பொரியல், மசியல், தோசை, சப்பாத்தி, சாண்ட்விச், சூப், சாலட், பர்கர், பீட்சா எனப் பல்வேறு உணவுகளிலும் மைக்ரோ கீரையைச் சேர்த்துச் சாப்பிடலாம். மைக்ரோ கீரைகளின் ஆரோக்கிய நன்மைகள் குறித்துப் பேசுகிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல். மைக்ரோ கீரைகள் மைக்ரோ கீரை என்றால் என்ன? காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் நாற்றுகளே (சிறிய செடி) மைக்ரோ கீரைகள் ஆகும். காய்கறிகளின் விதை வளரத் தொடங்கிவிட்டால் முளை என்று அழைக்கப்படுகிறது. முளை வளரத் தொடங்கியதும், அது மைக்ரோ கீரை என்று அழைக்கப்படுகிறது. முளைகளும் மைக்ரோ கீரையும் ஒன்றல்ல. முளைகள் பொதுவாகச் சுமார் இரண்டு முதல் மூன்று அங்குல உயரம் வரை வளரும். மைக்ரோ கீரை எட்டு முதல் பத்து அங்குலம் வரை வளர்க்கப்படுகிறது. முளை வளர்வதற்குச் சூரிய ஒளியும் மண்ணும் தேவையில்லை. ஆனால், மைக்ரோ கீரை மண்ணில் வளர்க்கப்படுவதால் சூரிய ஒளியும் தண்ணீரும் தேவைப்படுகின்றன. மைக்ரோ கீரைகளின் சுவையும் மணமும் அலாதியாக இருக்கும். இதுதவிர உண்ணும் உணவுக்கு மொறுமொறுப்பான (Crunchy) தன்மையைக் கொடுக்கிறது. கொத்தமல்லி, வெந்தயம், புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, கடுகுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை மற்றும் கோதுமைப்புல் ஆகியவை நம் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மைக்ரோ கீரைகள். மைக்ரோ கீரைகளின் நன்மைகள்! மைக்ரோ கீரைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் என்சைம்களும் நிறைந்தவை. மைக்ரோ கீரைகளை என்சைம்களின் 'ஸ்டோர் ஹவுஸ்’ என்று கூறலாம். இந்த என்சைம்கள் செல்களின் சரியான வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் அபிவிருத்திக்கும் அத்தியாவசியமானவை. மைக்ரோ கீரைகள் நீண்டநாள் இளமை ரகசியம்! மைக்ரோ கீரைகளில் நீண்டநாள் இளமையாக இருப்பதற்கான ரகசியம் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடல் எடை இழக்க விரும்புபவர்கள், தினமும் தங்கள் உணவுப் பட்டியலில், இதை ஒரு சிறிய அளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பிய மைக்ரோ கீரைகள் நோய் வருவதை தடுக்கும். இவற்றிலுள்ள புத்தம் புதிய குளோரோபில், சக்தி வாய்ந்த ரத்தச் சுத்திகரிப்பானாகச் செயல்படும். சிவப்பு முட்டைகோஸின் இளம் கீரைகளில்... சிவப்பு முட்டைகோஸின் இளம் கீரைகளில் வைட்டமின் 'சி', 'கே' மற்றும் 'இ' நிறைந்துள்ளன. கொத்தமல்லியில் கண்களுக்கு நலம் புரியும் லுடீன் (Lutein) மற்றும் பீட்டா கரோட்டின் (Beta Carotene) மிகுதியாக உள்ளன. மேலும், புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், புற்றுநோய்ச் செல்களின் செயல்பாட்டைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயக்கீரை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சிறந்தவை. வெந்தயக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தச்சோகை சரியாக உதவுகிறது. சிவப்பு முட்டைகோஸ் மைக்ரோ கீரை 40 மடங்கு அதிகளவு சத்துகள்..! சிவப்பு முட்டைகோஸ், கொத்தமல்லி மற்றும் முள்ளங்கி போன்ற மைக்ரோ கீரைகளில் முதிர்ந்த கீரைகளைவிட 40 மடங்கு அதிகளவு சத்துகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மைக்ரோ கீரை இரண்டு, மூன்று வாரங்களில் அறுவடை செய்யப்படுவதால், அவை வளரும் மண்ணுக்குப் பூச்சிக்கொல்லிகளோ அல்லது களைக்கொல்லிகளோ பயன்படுத்தத் தேவையில்லை. அதனால், இது ரசாயனம் இல்லாத மிகவும் ஆரோக்கியமான கீரைகளை உட்கொள்ள வழி செய்கிறது'' என்கிறார் சிவப்ரியா மாணிக்கவேல். Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Allulose: `சர்க்கரைக்கு பதிலாக அல்லுலோஸ்'நன்மையா? - புதிய ஆராய்ச்சியும் நிபுணர் கருத்தும்!
சி றியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் டயபடீஸ் பலரையும் பாதித்து வருகிறது. விளைவு, இன்று பலரும் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிய பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் டயபடீஸ் குறைப்பதற்காக ரத்தத்தில் எளிதில் கலக்காத செயற்கையான சர்க்கரை மாற்றுகளை தேர்ந்தெடுத்து உபயோகிக்கின்றார்கள். இந்த நிலையில், இதய மருத்துவர் ஆலாக் சோப்ரா என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அல்லுலோஸ் (Allulose) என்ற செயற்கையான சர்க்கரை மாற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததுள்ளதாகவும், இது ரத்த சர்க்கரையை உயர்த்தாது மற்றும் உடலில் கொழுப்புகள் சேருவதையும் கட்டுப்படுத்தும் என பதிவிட்டுள்ளார். அவருடைய இந்தப்பதிவு பரவி வரும் சூழலில், இது எந்த அளவிற்கு உண்மை மற்றும் அதனை பற்றிய தகவல்களை சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் மற்றும் நீரிழிவு ஆராய்ச்சியாளர் டாக்டர் மோகன் அவர்களுடன் கேட்டறிந்தோம். Coffee with sugar ‘’சர்க்கரைக்கு இயற்கையான மாற்றுகளாக ஸ்டிவியா, மேப்பிள் சாறு, தேங்காய் சர்க்கரை, பேரீச்சம்பழ சர்க்கரை போன்றவை அறியப்படுகின்றன. தவிர, சார்பிட்டால் (Sorbitol), சைலிட்டால் (Xylitol), லாக்டிடால் (Lactitol), மான்னிடால் (Mannitol), எரித்ரிட்டால் (Erythritol), மால்டிடோல் (Maltitol) போன்ற சர்க்கரை ஆல்கஹால்களும், அஸ்பார்டேம் (Aspartame), சுக்ரலோஸ் (Sucralose), சாக்கரின் (Saccharin), நியோடேம் (Neotame), அசிசல்ஃபம் பொட்டாசியம் (Acesulfame Potassium) போன்ற செயற்கை இனிப்பூட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் சர்க்கரையை விட 100 மடங்கு இனிப்பாக இருக்கும். இருப்பினும், இதனை சிறிய அளவில் எடுத்துக்கொண்டால்கூட இரைப்பை அலர்ஜி, கண்ணெரிச்சல், மாரடைப்பு மற்றும் திடீர் மரணம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. டாக்டர் மோகன் இயற்கையாகவே, கோதுமை, அத்திப்பழம், திராட்சை, வெல்லப்பாகு, மேப்பிள் சிரப், பலாப்பழம், கிவி, கேரமல், பழச்சாறுகள் மற்றும் காபி ஆகியவற்றில் அல்லுலோஸ் சிறிய அளவில் காணப்படுகிறது. இது சர்க்கரையை விட 70% மட்டுமே கூடுதல் இனிப்பாக இருக்கிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அல்லுலோஸ் பற்றி பெரிதாக எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. கனடா மற்றும் ஐரோப்பியாவில் இதற்கு தரச் சான்றிதழ்கள் அளிக்கப்படவில்லை. அமெரிக்காவில் இது GRAS (generally Regarded as safe) என்கிற சான்றிதழை மட்டுமே பெற்றுள்ளது. diabetes புதிதாக மாறுபட்ட ஒன்றை நாம் பயன்படுத்துவதற்கு முன்பு அதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அல்லுலோஸ் என்கிற இந்த மாறுபட்ட சர்க்கரை இன்னும் வணிக அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதற்கான ஆய்வுகளும் முழுமையாக செய்யப்படவில்லை. இதனை பயன்படுத்துவதில் கவனம் தேவை. நீண்டகால பயன்பாடுகளின்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி ஆராய்ச்சிகள் முழுமையாக நிறைவடைந்த பின் இதனை பயன்படுத்துவது சிறந்தது என்கிறார் டாக்டர் மோகன் அவர்கள். Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: டிராகன் ஃப்ரூட்டில் என்ன ஸ்பெஷல்; யாரெல்லாம் சாப்பிடலாம்.. நன்மைகள் என்ன?
Doctor Vikatan: முன்பெல்லாம் பெரிய கடைகளில், பணக்காரர்கள் வாங்கும் பழங்களில் ஒன்றாக இருந்தது டிராகன் ஃப்ரூட். இன்று அது சாலையோரக் கடைகளில், தள்ளுவண்டிக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்க முடிகிறது. டிராகன் ஃப்ரூட்டில் என்ன ஸ்பெஷல்... யாரெல்லாம் சாப்பிடலாம்... அதை எப்படிச் சாப்பிட வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகரான ப்ரீத்தா சங்கீத். பொதுவாக, நம் உடலில் 'ஃப்ரீ ரேடிக்கல்ஸ்' (Free Radicals) எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளும், அவற்றை நடுநிலையாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் எனப்படும் மூலக்கூறுகளும் இயற்கையாகவே இருக்கும். இந்த இரண்டும் சரியான சமநிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாகச் செயல்படுகிறது. உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸின் அளவு அதிகமாகி, அவற்றை நடுநிலையாக்கத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸின் அளவு குறைவாக இருக்கும்போது ஏற்படும் நிலையே ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ். டிராகன் ஃப்ரூட் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம். தவிர, இதற்கு ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து, நமது உடலை நோய்கள் மற்றும் முதுமையிலிருந்து பாதுகாக்கும் தன்மை உண்டு. இந்தப் பழத்திற்கு தனித்துவமான அழகான நிறத்தைக் கொடுப்பது பீட்டாலேயின்ஸ் (Betalains) எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட். இது புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பழத்திலுள்ள ஃப்ளேவனாய்ட்ஸும் (Flavonoids) நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் உருவாவதைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. டிராகன் ஃப்ரூட்டில் உள்ள கரோட்டினாய்ட்ஸ் (Carotenoids) கண் பார்வையைப் பாதுகாப்பதுடன், உடலின் செல்களை சேதத்திலிருந்து காக்கும் ஆற்றல் கொண்டவை. டிராகன் ஃப்ரூட் வைட்டமின் சி நிறைந்தது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். தொற்றுநோய்கள் அண்டாமல் காக்கும். அதிக நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் செரிமானத்தைச் சீராக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரையச் செய்வதால் இதயநோய் வராமல் தடுக்கும். கலோரி குறைவான பழம் என்பதால் டயட்டில் இருப்போருக்கு ஏற்றது டிராகன் ஃப்ரூட்டை தோல் நீக்கி அப்படியே மென்று சாப்பிடலாம். சருமத்தைப் பொலிவாக, இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவும். அதிக நார்ச்சத்து இருப்பதால், இது ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைத்து, ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அளவோடு எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படும் சில பழங்களில் டிராகன் ஃப்ரூட்டும் ஒன்று. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 100-150 கிராம் வரை இந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். டிராகன் ஃப்ரூட்டை தோல் நீக்கி அப்படியே மென்று சாப்பிடலாம். பால், தேன் சேர்த்து ஸ்மூதியாக எடுத்துக்கொள்ளலாம். பப்பாளி, மாதுளை, திராட்சை போன்ற பழங்களுடன் சேர்த்து சாலட் போல செய்து சாப்பிடலாம். தயிர், ஊறவைத்த சியா சீட்ஸுடன் சேர்த்துச் சாப்பிடலாம். மில்க் ஷேக்காக குடிக்க விரும்பினால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பயன்படுத்தலாம். இனிப்பைத் தவிர்ப்பது சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: சீசனில் கிடைக்கும் சீத்தாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம்?
Flower Tea: பூக்களில் தேநீர்; எதில் என்ன மருத்துவப்பலன்? - சொல்கிறார் சித்த மருத்துவர்!
பூக்களில் தேநீர் போடுவது இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. பூக்கள் டீ பேக் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிறது. என்னென்ன பூக்களை பயன்படுத்தலாம்; எப்படி பயன்படுத்த வேண்டும்; அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்ன என்பனப் பற்றி திருவள்ளூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர். சுப்பிரமணி அவர்களிடம் கேட்டோம். ''சித்த மருத்துவத்தில் பலவிதமான பூக்களை பயன்படுத்தி கஷாயமாகத் தயாரித்து பருகி வந்துள்ளனர். அதை இன்று ஃபிளவர் டீயாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பூவுக்கும் தனித்துவமான மருத்துவ குணங்கள் உண்டு. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனம் தேவை. செம்பருத்தி Flower Tea துவர்ப்பு சுவையுடைய செம்பருத்தி வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை உடையது. உடல் சூட்டை தணிக்கும். செம்பருத்திப் பூவை பயன்படுத்தி தொடர்ந்து தேநீர் வைத்து குடித்துவர பித்ததினால் ஏற்படும் உடல் உபாதைகள் குறையும். உஷ்ணத்தினால் ஏற்படும் முகப்பருக்கள், வியர்க்குரு போன்றவற்றையும் குறைக்கும் தன்மையுடையது செம்பருத்தி தேநீர். செம்பருத்திப் பூவில் உள்ள கிளைக்கோஸைடுகள் இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பதாக ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில், செம்பருத்திப்பூ சாறுடன், எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து டானிக்காக கிடைக்கிறது. செம்பருத்திப்பூ இதழுடன் எலுமிச்சை தோல் சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து ஹெர்பல் டீயாகவும் குடித்து வர இதய ஆரோக்கியம் மேம்படும். இதை சித்த மருத்துவத்தில் 'செம்பருத்திப்பூ சர்பத்' என்பார்கள். ஆவாரம் பூ ஆவாரை பூ 'ஆவாரம் பூ பூத்திருக்க, சாவாரை கண்டதுண்டோ' என்ற பழமொழிக்கேற்ப இச்செடியில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நோய்களுக்கு அருமருந்து ஆகிறது. குறிப்பாக, துவர்ப்பு சுவையுடைய ஆவாரம் பூ தேநீரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிப்பது முழுமையான புத்துணர்ச்சியைத் தரும். சித்த மருத்துவத்தில் அகத்தியர் குணவாகடத்தில் இந்தப்பூ நீரிழிவு பிரச்னையில் எந்தளவுக்கு பலன் அளிக்கும் என்பது பற்றி பேசியிருக்கிறார். இந்த தேநீர், உடலில் வரக்கூடிய கற்றாழை நாற்றம் என்று சொல்லக்கூடிய ஒருவகையான துர்நாற்ற பிரச்னையை சரி செய்யக்கூடிய தனித்துவமான தன்மையை கொண்டது. தாமரை flower tea சித்த மருத்துவத்தில் கஷாயமாக பயன்படுத்தப்படுகிறது. இதை தேநீராகவும் குடிக்கலாம். தாமரை இதழ், தாமரை மகரந்தப்பொடி இரண்டும் சேர்த்து தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர ஆண் மலட்டுத்தன்மை நீங்கும். அதிக உடல் சூடு, பித்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் வெண்தாமரை இதழில் தேநீர் வைத்து பருகி வர குணமாகும். மல்லிகை flower tea இதில் உள்ள நறுமணம் நம் மூளைக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இலையை காய வைக்கும்போது அதனுடன் மல்லிகையும் சேர்த்து காயவைத்து பயன்படுத்துகின்றனர். சீனாவில் கிரீன் டீ தயாரிப்பில் இந்த முறையை பின்பற்றுகின்றனர். ரோஜா flower tea ரோஜாவின் இதழில் உள்ள நிறமிகள் தேநீருக்கு சிறந்த நிறத்தை தருவதுடன் நம் மூளைக்கு ஏற்பிகளாக செயல்பட்டு மன அழுத்தத்தை குறைக்கின்றன. காய வைத்த இதழ்களுடன், சீரகம், சோம்பு மற்றும் கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக பருகி வர, பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களும் தூக்கமின்மை பிரச்னையும் தீரும். குங்குமப்பூ flower tea குங்குமப்பூ தேநீரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் சரும பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. தூக்கமின்மை, மன அழுத்தம், பதற்றம், மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்கின்றன. கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ தேநீர் தொடர்ந்து குடித்து வருவது ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும். இலுப்பைப் பூ சித்த மருத்துவர் சுப்பிரமணி 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என பழங்காலத்தில் சர்க்கரைக்கு மாற்றுப் பொருளாக இலுப்பைப் பூவை பயன்படுத்தி உள்ளனர். உடல் மெலிந்தவர்கள் பாலுடன் இலுப்பைப் பூவை சேர்த்து தேநீர் வைத்து அருந்தி வர உடல் தேறும். மாதவிடாய் பிரச்னைகள், ஆண்மை குறைபாடு பிரச்னைகள் நீங்கும். நுணா பூ நுணா நுணா பூ பயன்படுத்தி தேநீர் வைத்து குடிப்பது உடல் வெப்பத்தை தணித்து வீக்கத்தைக் குறைக்கவும், மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளை நீக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், மாதவிடாய் காலத்தை சீர் செய்யவும், மூட்டு வலியைப் போக்கவும் உதவும். இலவங்கப் பூ இலவங்கம் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இலவங்கப் பூ தேநீர் உள்ளது. பூவுடன், சீரகம், தேன் சேர்த்து தேநீராக பருகி வர பசியின்மை, வயிற்று எரிச்சல் பிரச்னைகள் சரியாகும். சளி, இருமலுக்கும் சிறந்த மருந்து இந்தப் பூ. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?
Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து சப்பாத்தி சாப்பிடுவது சரியானதா. இன்னொரு பக்கம், சப்பாத்தி சாப்பிடுவதால்தான் அதில் உள்ள குளூட்டன் காரணமாக பலருக்கும் சர்க்கரைநோய் வருகிறது என்றும் சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சண்முகம். சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும் என்பது தவறான கருத்து. அரிசி உணவுகளிலும் கோதுமை உணவுகளிலும் சம அளவு சர்க்கரைச்சத்து தான் இருக்கும். எனவே, அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் அதே வாய்ப்பு, கோதுமை உணவுகளைச் சாப்பிடுவதிலும் இருக்கிறது. நீரிழிவு பாதித்தவர்கள் எந்த உணவைச் சாப்பிட்டாலும், அதில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். அடுத்தது உணவின் அளவும் முக்கியம். உதாரணத்துக்கு, சப்பாத்தி என எடுத்துக்கொண்டாலும், அவரவர் உடல் எடை, உயரத்தைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். சப்பாத்தி நல்லது என்ற எண்ணத்தில் ஆறு, ஏழு என்று சாப்பிட்டால், அது நிச்சயம் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதேபோல எந்த நேரத்தில் சாப்பிடுகிறார்கள் என்பதும் முக்கியம். இரவு தாமதமாக சப்பாத்தி சாப்பிட்டிருந்தால், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சுகர் டெஸ்ட் செய்து பார்த்தால் நிச்சயம் அதிகமாகத்தான் காட்டும். இது சப்பாத்திக்கு மட்டுமல்ல, அரிசி உணவுகளுக்கும் பொருந்தும். இரவு தாமதமாக சப்பாத்தி சாப்பிட்டிருந்தால், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சுகர் டெஸ்ட் செய்து பார்த்தால் நிச்சயம் அதிகமாகத்தான் காட்டும். சப்பாத்தி செய்யப் பயன்படுத்தும் கோதுமை மற்றும் மைதாவில் குளூட்டன் அதிகமிருப்பதாகவும், அதனால்தான் சப்பாத்தி சாப்பிடுவோருக்கும் சர்க்கரைநோய் வருவதாகவும் ஒரு கருத்து மக்களிடம் இருக்கிறது. கோதுமை, மைதா மாவில் குளூட்டன் இருக்கிறது. அந்த குளூட்டன் சர்க்கரைநோயை உருவாக்குவதில்லை. குளூட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருக்கும். அதாவது வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற உணர்வுகள் வரலாம். குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கோதுமை, மைதா உள்ளிட்ட குளூட்டன் உள்ள உணவுகளைத் தவிர்ப்பதுதான் சரியானது. சப்பாத்தியோ, சாதமோ, இட்லி, தோசையோ... எந்த உணவானாலும் அளவு முக்கியம். ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அளவைத் தாண்டி எடுத்துக்கொள்ளும்போதுதான் பிரச்னையே. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். `இளமை திரும்புதே...' சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!
Andropause: ஆண்ட்ரோபாஸ்; அறிகுறிகள், வாழ்வியல் மாற்றங்கள், தீர்வுகள் என்னென்ன?
''ஆ ண்களுக்கு ஏற்படக்கூடிய மெனோபாஸை `ஆண்ட்ரோபாஸ்’ என்பார்கள். `ஆண்ட்ரோபாஸ்’ பற்றி அறிந்துகொள்வதற்குமுன் `டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஆண்களின் உடலில் சுரக்கக்கூடிய, ஆண்களுக்கான முக்கியப் பாலியல் ஹார்மோனான இது, விந்தகத்தில் சுரக்கிறது. ஆண்களின் உடல் மற்றும் முகத்தில் முளைக்கும் முடி, எலும்புகளின் அடர்த்தி, தசைப் பருமன், வலிமை, பாலியல் நாட்டம், விந்தணுக்களின் உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு முக்கியமானது. ஒற்றை வரியில் சொல்வதென்றால் ஆண்கள் ஆண் தன்மையோடு இருப்பதற்குக் காரணமே `டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன்தான். Andropause பொதுவாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்டிரோன்’ அளவு குறைவாக இருக்கும். இந்த நிலையே ‘ஆண்ட்ரோபாஸ்’ (Andropause) எனப்படுகிறது. அதேநேரத்தில் `ஆண்ட்ரோபாஸ்’ காலகட்டம் அவரவர் உடல்நிலையைப் பொறுத்து 50 வயதிலோ, அல்லது அதன் பிறகோகூட அமையலாம்'' என்கிற நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், `ஆண்ட்ரோபாஸ்’ அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கினார். அறிகுறிகள் * உடல் சோர்வு * எலும்புகள் தொடர்பான பிரச்னை (ஆஸ்டியோபோரோசிஸ்) * மனஅழுத்தம் * உடல் எடை அதிகரித்தல் * தசைகள் வலுவிழத்தல் * தூக்கமின்மை (இன்சோம்னியா) * செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை Andropause Menopause: சிவப்பரிசிப் புட்டு முதல் முருங்கைப் பூ கூட்டு வரை... மெனோபாஸ் உணவுகள்! தீர்வுகள் (வாழ்வியல் மாற்றங்கள்) * ஆரோக்கியமான உணவுகளை உண்பது * கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது * எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்வது * தினமும் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் * உடல்பருமன், சர்க்கரைநோய், மனஅழுத்தம் தவிர்த்தல் * 7 மணி நேரம் தூக்கம் அவசியம் *சரியான நேரத்துக்கு உணவு உண்ணுதல் * போதிய அளவு ஓய்வெடுத்தல் * தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்வது Menopause: மனைவிக்கு மெனோபாஸ்; கணவன் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை... | காமத்துக்கு மரியாதை - 213 சிகிச்சைகள் என்ன? `டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன் சிகிச்சை தேவைப்படலாம். ஆனால், அதில் சில பக்க விளைவுகளும் உள்ளன. தவிர்க்க முடியாதபட்சத்தில், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் ஊசி வடிவங்களில் கிடைப்பவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: தயிரையும் மீனையும் சேர்த்துச் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுவது ஏன்?
Doctor Vikatan: என் மகனுக்கு எல்லா உணவுகளோடும் தயிர் சேர்த்துச் சாப்பிடுவது வழக்கம். சைவ உணவுகளுக்கு ஓகே... ஆனால், மீன் போன்ற அசைவ உணவுகளை தயிருடன் சேர்த்துச் சாப்பிடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை... அதேபோல இரவில் தயிர் சாப்பிடுவது சரியானதா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் தயிர் என்பது பொதுவாக சற்று மந்தத்தை உருவாக்கக்கூடிய உணவு. அதாவது செரிமானத்தை மந்தமாக்கும் உணவு. தயிர் சாப்பிடும்போது, கூடவே, மீன் அல்லது புரதச்சத்துள்ள உணவுகளை எடுக்கும்போது அவற்றின் சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படாமல் போகவும வாய்ப்பு உண்டு. தயிருடன் மீன் மட்டுமல்ல, கடல் உணவுகள் எதையுமே எடுத்துக்கொள்வது சரியல்ல. தயிருடன் மீன் சேர்த்துச் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. குறிப்பாக, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம் என்று சொல்லப்படுகிறது. தயிரில் உள்ள வேதிப்பொருள்களும், மீனில் உள்ள சத்துகளும் எதிர்வினையாற்றுகின்றனவா என்பதை ஆய்வுபூர்வமாகப் பார்க்க வேண்டும். தயிரிலும் சத்துகள் அதிகம்... மீனிலும் சத்துகள் அதிகம் என்பதால் இரண்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது, அதிக அளவிலான ஊட்டம் சேரும் என்பதற்காகவும் இந்த காம்பினேஷனை தவிர்க்கச் சொல்வதுண்டு. தயிர் Doctor Vikatan: தயிர் சூடு என்கிறார்களே... வெயில் காலத்தில் தினமும் தயிர்சாதம் சாப்பிடுவது சரியானதா? மீன் உள்ளிட்ட கடல் உணவுகளைச் சரியாகச் சமைக்காவிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில் தயிரும் எடுக்கும்போது, செரிமானம் இன்னும் மந்தமாகி, அசௌகர்யத்தைக் கொடுக்கலாம். வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம் என்பதற்காகவும் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இரவில் தயிர் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதும், அது ஏற்படுத்தும் மந்தத்தன்மையின் காரணமாகச் சொல்லப்பட்டதுதான். இரவில் எப்போதும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றே சொல்வோம். இரவில் தயிர் சாப்பிடுவதால், மந்தத்தன்மை கூடி, எதுக்களித்தல் பிரச்னையோ, ஏற்கெனவே சாப்பிட்ட பிற உணவுகள் சரியாக செரிக்காதது, அடுத்த நாள் வயிற்று உப்புசம் உள்ளிட்ட பாதிப்புகள் வரலாம். குளிர்காலத்தில் பொதுவாகவே இரவில் தயிர் உணவுகளைத் தவிர்க்கச் சொல்வோம். அது லேசான குளிர்ச்சியைக் கொடுக்கும் என்பதுதான் காரணம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டயபடீஸ்: ’சுகர் போர்ட்’ எச்சரிக்கை; பெற்றோர்களுக்கு நிபுணர் அட்வைஸ்!
பெ ரியவர்களை மட்டுமே அதிகம் பாதித்துக்கொண்டிருந்த நீரிழிவு, தற்போது குழந்தைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், குழந்தைகளில் நீரிழிவு டைப் 2 கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. தவிர, இந்தப் பிரச்னையை சமாளிக்க மற்றும் வருமுன் தடுக்க, தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஒரு முக்கிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதாவது, சிபிஎஸ்இ பள்ளிகளில் 'சுகர் போர்ட்' (Sugar Boards) என்கிற திட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளிடையே அதிகரிக்கும் டயபடீஸ் ’சுகர் போர்ட்’ இந்தப் பலகையில், மாணவர்கள் தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்; அவர்கள் தினமும் சாப்பிடுகிற ஸ்நாக்ஸ் மற்றும் கூல்ட்ரிங்ஸில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது; அதிகப்படியான சர்க்கரை எடுத்துக்கொண்டால் உடலில் வரக்கூடிய பிரச்னைகள் ஆகியவை இருக்கும். தவிர, ஸ்கூல் கேண்டீன்களில் ஆரோக்கியமான உணவுகளையே விற்பனை செய்ய வேண்டும் என்கிற இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) இந்த ’சுகர் போர்ட்’ முயற்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திட்டம் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான 7 முக்கிய கவலை தரும் காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கு பெற்றோர்கள் இப்போதே செய்ய வேண்டியவைப்பற்றி, நீரிழிவு சிறப்பு மருத்துவரான டாக்டர், வி. மோகன் நம்மிடம் பகிர்ந்துக்கொள்கிறார். குழந்தைகளிடையே அதிகரிக்கும் டயபடீஸ் இதுவொரு வளர்ந்து வரும் பொது சுகாதாரப் பிரச்னை “குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் இனி அரிதான ஒரு பிரச்னையல்ல. இதுவொரு வளர்ந்து வரும் பொது சுகாதாரப்பிரச்னையாக மாறியுள்ளது. இதுவரை டைப் 1 நீரிழிவு, தன்னுடல் தாக்க நோயாக, குழந்தைகளிடையே பொதுவாகக் கண்டறியப்பட்டது. ஆனால், சமீப ஆண்டுகளில், முதிர்ந்தவர்களிடையே காணப்படுகிற டைப் 2 நீரிழிவு, குழந்தைகளிடையேயும் காணப்பட ஆரம்பித்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது! இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆரோக்கியமற்ற உணவுகள், உடலுழைப்பின்மை மற்றும் குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பு ஆகியவை இந்தப் போக்கை துரிதப்படுத்துகின்றன. அதே நேரத்தில், உலகளவில் டைப் 1 நீரிழிவு நோய்களின் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு மரபணு மற்றும் நோய் எதிர்ப்பு சம்பந்தப்பட்ட காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அதிகரிப்புக்கு காரணமானவற்றைப் புரிந்துகொள்வது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்க உதவும்’’ என்கிற டாக்டர் மோகன், குழந்தைகளிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களையும், அவற்றைத் தடுக்க குடும்பங்கள் செய்ய வேண்டியவற்றையும் பற்றி விளக்கமாக பேச ஆரம்பித்தார். குழந்தைகளிடையே அதிகரிக்கும் டயபடீஸ் 1. உடல் உழைப்பின்மை வாழ்க்கை முறை மாற்றங்கள்: இந்தக்கால குழந்தைகள் தொலைக்காட்சி, ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மொபைல் கேம்களில் முன்பை விட அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்த டிஜிட்டல் வாழ்க்கைமுறை, உடல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு செலவிடப்படும் நேரத்தை பெருமளவு குறைத்துள்ளது. ஒரு நாளைக்கு 60 நிமிட உடல் விளையாட்டு, ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குப்படுத்தி, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும். ஆனால், உடல் இயக்கமின்மை, எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. இவை டைப் 2 நீரிழிவுநோய்க்கு முக்கிய காரணிகளாக உள்ளன. 2. ஆரோக்கியமற்ற உணவு மற்றும் சர்க்கரை உட்கொள்ளல் அதிகரிப்பு பதப்படுத்தப்பட்ட, அதிக கலோரி மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் பல குழந்தைகளின் உணவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சர்க்கரை பானங்கள், பொரித்த சிற்றுண்டிகள், வெள்ளை ரொட்டி மற்றும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்றவை இன்றைய உணவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை குறைத்தே விட்டன. இந்த உணவுப்பழக்கங்கள் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், டைப் 1 நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை சிக்கலாக்கி விடுகின்றன. வீட்டில் சமைத்த உணவுகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட ஊக்குவிப்பது, பெற்றோர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும். குழந்தைகளிடையே அதிகரிக்கும் டயபடீஸ் 3. குழந்தைகளின் உடல்பருமன் அதிகரிப்பு உடல்பருமன், டைப் 2 நீரிழிவு நோய்க்கு மிகவும் வலுவான ஆபத்தானக் காரணிகளில் ஒன்றாகும். உடல்பருமனால் உடலில் அதிகரிக்கும் கொழுப்பு செல்கள், இன்சுலினின் ரத்த சர்க்கரையை ஒழுங்குப்படுத்தும் திறனைத் தடுக்கின்றன. அதிக எடையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இன்சுலின் எதிர்ப்பு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. BMI கண்காணிப்பு, சமநிலையான உணவு மற்றும் தினசரி உடல் இயக்கம் ஆகியவை ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலேயே தீர்க்க உதவும். 4. சுற்றுச்சூழல் நச்சுகள் மற்றும் ஹார்மோன் குறுக்கீடுகள் இன்றைய குழந்தைகள், விளம்பரங்களைக் கண்டு, ஆசைப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளில் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், வளர்சிதை மாற்ற செயல்களையும் இன்சுலின் ஒழுங்குபடுத்துதலையும் தடுக்கலாம். சுற்றுச்சூழல் நச்சில் காற்று மாசுபாடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியுடன் தொடர்புடையது. இவை இரண்டும் வளர்சிதை மாற்ற செயலிழப்புக்கு பங்களிக்கின்றன. பிளாஸ்டிக்கில் உணவை மைக்ரோவேவ் செய்வதைத் தவிர்ப்பது, கரிம உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்துவது ஆகியவை குழந்தைகளிடையே நீரிழிவு வராமல் தடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். குழந்தைகளிடையே அதிகரிக்கும் டயபடீஸ் 5. மரபணு மற்றும் குடும்ப வரலாறு குடும்பத்தில் நீரிழிவு நோய் வரலாறு இருந்தால், குழந்தைக்கும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய். இதேபோல், டைப் 1 நீரிழிவு நோய்க்கும் வலுவான மரபணு மற்றும் தன்னுடல் தாக்க நோய்கள் காரணமாக உள்ளன. ஆனால், மரபணுக்கள் பிரச்னையின் ஒரு பகுதி மட்டுமே. வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இதைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் குடும்பத்தின் மருத்துவப் பின்னணியை அறிந்து, கண்காணிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். 6. தாயின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் எடை பிறக்கும்போதே குறைந்த எடை, கர்ப்ப காலத்தில் தாயின் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை பிற்காலத்தில் நீரிழிவை ஏற்படுத்தலாம். தவிர, தாய்மார்களுக்கு கர்ப்பகால நீரிழிவு இருந்தால், குழந்தைக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தாய்மையின் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பது, தாய்ப்பால் கொடுப்பது மற்றும் ஆரம்பகால குழந்தைப் பருவத்தில் நல்ல ஊட்டச்சத்து ஆகியவை ஆரோக்கியமான வளர்சிதை மாற்ற எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமைகின்றன. Pregnancy Diabetes 7. மன அழுத்தத்தால் தூண்டப்படும் நீரிழிவு நோய்: வாழ்கைசார்ந்த பிரச்னைகள் மற்றும் NEET, JEE மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கடுமையான மனஅழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இந்தத் தீவிர மனஅழுத்தம், குறிப்பாக நீண்டகாலமாக தொடரும்போது, கார்டிசோல் மற்றும் பிற மனஅழுத்த ஹார்மோன்களின் அளவை உயர்த்தி, இன்சுலின் எதிர்ப்பைத் தூண்டலாம், இது டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. தேர்வு அழுத்தம், தூக்கமின்மை மற்றும் மோசமான உணவுப் பழக்கங்களுடன் இணைந்து, இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், தியானம், யோகா, வழக்கமான இடைவெளிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம் மனஅழுத்த மேலாண்மை உத்திகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். பெற்றோர்கள் இப்போதே செய்ய வேண்டியவை.. • உடற்பயிற்சியை குடும்பத்தின் வழக்கமாக மாற்றவும். • முழு, பதப்படுத்தப்படாத உணவுகளைத் தேர்ந்தெடுத்து, சர்க்கரை சிற்றுண்டிகள் மற்றும் பானங்களைகட்டுப்படுத்தவும். • டி.வி., போன் போன்ற செயலற்ற பொழுதுபோக்குகளை வெளிப்புற விளையாட்டுகளுடன் மாற்றவும். • எடை, BMI மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகளை கண்காணிக்கவும். Diabetes • ஹார்மோன் பிரச்னைகளைத் தூண்டும் பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிர்க்கவும். இயற்கையானப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும். • நல்ல உணவு, ஓய்வு மற்றும் இயக்கத்தின் மதிப்பை அவர்களுக்கு கற்பிக்கவும். • ஹார்மோன் சமநிலை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு தூக்கம் அவசியம். • தேர்வு அழுத்தத்தைக் கையாள தியானம், யோகா அல்லது ஆலோசனைகளை அறிமுகப்படுத்தவும், மற்றும் சமநிலையான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கவும். குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் அதிகரிப்பு ஒரு மருத்துவப்பிரச்னை மட்டுமல்ல... இது குடும்பங்களுக்கு ஒரு வாழ்க்கை முறை எச்சரிப்பாகும். டைப் 1 நீரிழிவுநோயைத் தடுக்க முடியாவிட்டாலும், ஆரம்பகால மேலாண்மை முக்கியமானது. இதற்கிடையில், டைப் 2 நீரிழிவு நோயை வருமுன் தடுக்கலாம். டாக்டர் மோகன் குழந்தைகளுக்கிடையேயான நீரிழிவைத் தடுக்க, பெற்றோர்கள் உடனே செயல்பட வேண்டும். அறிகுறிகளுக்காக காத்திருக்க வேண்டாம். இன்றே நடவடிக்கை எடுங்கள். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகளில் அமைத்ததை போன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளிலும் சர்க்கரை போர்ட் (sugar board) அமைப்பதை அரசு பரிசீலனை செய்யலாம். அதன் மூலம், சர்க்கரை உட்கொள்ளும் அளவு மற்றும் புரிதல் குழந்தைகளுக்கு கிடைக்கும்’’ என்கிறார் டாக்டர் மோகன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
``அரசுப் பள்ளிகளில் நவீன வசதி; வளரிளம் பெண்களுக்கு தடுப்பூசி..'' - ரோட்டரி ஆளுநர் தகவல்
மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் நவீன வசதியுடன் கழிப்பிடம், டிஜிட்டல் வகுப்பறைகள், வளர் இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி என ரூ.20 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளதாக ரோட்டரி ஆளுநர் தெரிவித்துள்ளனர். ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் கார்த்திக் மதுரை வந்திருந்த 'ரோட்டரி மாவட்டம் 3000'- இன் ஆளுநர் ஜே.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசும்போது, மதுரை, திருச்சி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய எட்டு மாவட்டங்கள் சேர்ந்து 'ரோட்டரி மாவட்டம் 3000' என அழைக்கப்படுகிறது. 150 கிளப்களோடு, 7,000 உறுப்பினர்கள் உள்ளனர். 2025 ஜூலை 1 முதல், அடுத்த ஆண்டு ஜூன் 30 வரையிலான காலத்தை 'ரோட்டரி ட்ரீம் ஆண்டு' என பெயரிடப்பட்டுள்ளது. 'சமூக வளர்ச்சிக்கான எதிர்கால கனவுகளை முன்னோக்கி எடுத்துச் சென்று, செயல்படுத்த வேண்டும்' என்பது இந்த ஆண்டின் நோக்கம். இந்தாண்டில், மேற்கண்ட 8 மாவட்டங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சமூக நலப்பணிகள் செய்யப்பட உள்ளன. சமீபகாலமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதன் அங்கமாக, 15 ஆயிரம் வளரிளம் பெண்களுக்கு, 'கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி' செலுத்தப்பட உள்ளது. இந்த ஊசி ஒவ்வொன்றும் ரூபாய் 4,000 மதிப்புடையது. 15,000 வளரிளம் பெண்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில், பள்ளி கல்லூரிகளில் முகாம்கள் நடத்தி இந்த ஊசி செலுத்தப்பட உள்ளது. 7 நிமிடத்துக்கு ஓர் இறப்பு... கர்ப்பப்பை வாய் புற்றுநோய், தடுப்பது சுலபம்!பூப்பு முதல் மூப்பு வரை-27 மேலும், அரசுப்பள்ளி மாணவர்களின் ஆரோக்கியம், சுகாதாரத்தை மேம்படுத்த, 50 பள்ளிகளில் அதிநவீன வசதிகளோடு கழிப்பறைகள் கட்டித் தரப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.7.50 லட்சம் வீதமாக 3.75 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடக்க உள்ளன. அதேபோல, பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் வீதம் 50 பள்ளிகளில், ரூ1.25 கோடி செலவில் அதி நவீன டிஜிட்டல் தொடுதுறை பலகைகள் அமைத்து தரப்பட உள்ளன. தனியார் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு இணையாக இந்த வசதிகள் மேம்படுத்தி தரப்பட உள்ளன. பொறுப்பேற்ற புதிய ரோட்டரி நிர்வாகிகள் மேலும் 10 கோடி ரூபாய் மதிப்பில் நவீன தகன எரிவாயு மையம், பல்வேறு விளையாட்டுகளையும் ஒருங்கிணைத்த உள் விளையாட்டு அரங்கம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மலிவு வாடகையில் சமுதாயக்கூடம் மற்றும் மாணவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்த கலந்தாய்வு, கருத்தரங்குகள் நடத்த ஆடிட்டோரியமும் கட்டித் தரப்பட உள்ளது. இதற்கான இடங்கள் விரைவாக தேர்வு செய்யப்பட முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. இது தவிரவும் மாணவர் நலம், பெண்கள் நலம், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு 7 மாதங்களில், 7 சமூக நல திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு இந்த ஓராண்டில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சமூக நலத்திட்ட பணிகளை ரோட்டரி சங்கம் மூலமாக செய்ய இருக்கிறோம். ரோட்டரி உறுப்பினர்களின் நிதி பங்களிப்போடு இப்பணிகள் செய்யப்பட உள்ளன. உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தி, இந்த ஆண்டில் மட்டும் 1,500 -க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களோடு பல்வேறு கிளப்புகளும் உருவாக்கப்பட உள்ளது என்றார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய், முதன்முறையாக இந்தியா தயாரிக்கும் தடுப்பூசி; முக்கியத்துவம் இதுதான்!
Doctor Vikatan: டயாபட்டீஸ்-மாத்திரை, இன்சுலின் எடுக்கத் தொடங்கினால், ஆயுள் முழுக்க தொடரவேண்டுமா?
Doctor Vikatan: டயாபட்டீஸ் வந்தவர்கள் அவசியம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா... மாத்திரைகளையோ, இன்சுலின் ஊசியோ எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், ஆயுள் முழுக்க அதை நிறுத்த முடியாது, தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். ஒருவரது ரத்தச் சர்க்கரை அளவுக்கேற்பவே நீரிழிவுக்கு மாத்திரைகளையோ, இன்சுலினையோ மருத்துவர்கள் பரிந்துரைப்போம். ரத்தச் சர்க்கரை அளவு எக்குத்தப்பாக எகிறியிருந்தாலோ, உணவுப்பழக்கம் சரியாக இல்லாவிட்டாலோ, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தாலோ, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அதுவே உணவுப்பழக்கத்தைச் சரியாகப் பின்பற்றி, உடற்பயிற்சிகள் செய்து, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், அவர்கள் ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருக்கும் மாத்திரை அளவுகளைக் குறைத்துவிடலாம். சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுக்க ஆரம்பித்தால் காலம் முழுக்க தொடர்ந்தாக வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. அதே சமயம், 3 மாதங்களுக்கொரு முறை ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்துப் பார்த்து அது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். இன்சுலினை பொறுத்தவரை, மருத்துவர் எதற்காக அதைப் பரிந்துரைக்கிறார் என்பது முக்கியம். கர்ப்பகால சர்க்கரைநோய்க்கு இன்சுலின்தான் கொடுக்க வேண்டியிருக்கும். தீவிர இன்ஃபெக்ஷன் ஏற்பட்ட நிலையிலோ, கண்கள், இதயம், கால்களில் தீவிர பாதிப்பு இருந்தாலோ இன்சுலின் கொடுக்கப்படும். கர்ப்ப காலம் முடிந்துவிட்டாலோ, கண்கள், இதயம், கால்களில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து வெளியே வந்துவிட்டலோ, இன்ஃபெக்ஷன் சரியாகிவிட்டாலோ, இன்சுலினை நிறுத்திவிடலாம். எந்த மாத்திரை, மருந்தாலும், இன்சுலினை சுரக்கச் செய்ய முடியாத நிலை ஏற்படும். அந்த நிலையில் அவர்களுக்கு இன்சுலின்தான் கொடுத்தாக வேண்டும். சிலருக்கு உடலில் இன்சுலின் சுரப்பே இருக்காது. அதாவது நீரிழிவு பாதித்து 20-25 வருடங்கள் ஆன நிலையில் சிலருக்கு இன்சுலின் சரியாகச் சுரக்காது. எந்த மாத்திரை, மருந்தாலும், இன்சுலினை சுரக்கச் செய்ய முடியாத நிலை ஏற்படும். அந்த நிலையில் அவர்களுக்கு இன்சுலின்தான் கொடுத்தாக வேண்டும். உடலுக்குள் இன்சுலின் சுரக்காததால், வெளியிலிருந்து இன்சுலின் கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அவசியம் வருமா?
Awareness: பிறந்த குழந்தையைப் பார்க்கப் போறீங்களா? இதை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!
உ ங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, குழந்தையைப் பார்க்கச் செல்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக சளி, காய்ச்சல், தொடர் இருமல், தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையைப் பார்க்கச் செல்ல வேண்டாம். குழந்தை பெ ர்ஃப்யூம், சென்ட், சிகரெட், மது ஆகியவற்றை குழந்தையைப் பார்க்கச் செல்லும்போது தவிர்க்கவேண்டும். கு ழந்தை பிறந்து 24 மணி நேரம் கழித்த பிறகு பார்க்கச் செல்வது நல்லது. இதனால், தாய்க்கும் சேய்க்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். 15 நிமிடத்துக்குள் குழந்தையைப் பார்த்துவிட்டு, வெளியில் வந்து விடுங்கள். நீண்ட நேரம் இருப்பது, குழந்தைக்கும் தாய்க்கும் அசௌகர்யத்தை ஏற்படுத்தும். அ திக சத்தத்துடன் பேசுவது, அரட்டை அடிப்பது போன்றவற்றைக் குழந்தை முன் செய்யக்கூடாது. ஆ சையாகக் குழந்தையை அழுத்திக் கிள்ளுவது, முத்தமிடுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம். நெ ட் (வலைப்பின்னல்), கற்கள், மணிகள் வைத்த ஆடைகளைக் குழந்தைக்குப் பரிசாகத் தரவேண்டாம். பருத்தி ஆடைகளை வாங்கித் தரலாம். தாய்ப்பால் I சித்திரிப்பு படம் கு ழந்தைக்கு, தாயார் பால் கொடுக்கும் நேரமாக இருந்தால், சிறிது நேரம் வெளியே காத்திருந்த பின் குழந்தையைப் பார்க்கச் செல்லலாம். கு ழந்தைகாகப் பவுடர், சோப், பேபி மசாஜ் எண்ணெய் போன்றவற்றை வாங்கித் தராதீர்கள். ஏற்கெனவே நிறைய பேர் அவற்றை வாங்கித் தந்திருப்பார்கள். நட்ஸ், விதைகள், பழங்கள் போன்ற சத்தான ஆகாரங்களை வாங்கித் தரலாம். இதனால், தாய் ஆரோக்கியமாவார்; தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். Health: 20களில் கருத்தரித்தால்தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா? மருத்துவர் சொல்வது என்ன? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Heart: `லேசர் தொழில்நுட்பம் மூலம் இதய அடைப்புகளை நீக்கலாம்' - புதிய கண்டுபிடிப்பு!
இந்தியாவிலேயே முதல்முறையாக நாக்பூரில் ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பினை நீக்குவதற்காக புதிய வகை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு லேசர் சிகிச்சை என பெயரிட்டுள்ளனர். இதன் மூலமாக அதிக வலிமை கொண்ட வெளிச்சத்தினை கேத்திட்டர் மூலமாக ரத்தக்குழாய்க்குள் செலுத்தி, அங்கு உள்ள அடைப்புகளை ரத்த குழாய்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு நீக்க முடியும். இதயம் பொதுவாக இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு குறிப்பாக ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு ஸ்டண்ட் அல்லது ஆஞ்சியோ பிளாஸ்டிக் மூலமாக சிகிச்சை மேற்கொள்வர். அவற்றிற்கு மாற்றுவழியாகவே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லேசர் தொழில்நுட்ப சிகிச்சை என்பது ஒருவகை அறுவை சிகிச்சையாகும். இதன் மூலம் சக்தி வாய்ந்த லேசரினை வைத்து ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை ஆவியாக மாற்றி அவற்றை நீக்கிவிடுவார்கள். இதுவரை 55 நோயாளிகளுக்கு இந்த முறை அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வாறு லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் நோயாளிகளுக்கு பெரும்பாலும் ஸ்டண்ட் வைக்க வேண்டிய தேவை இருக்காது. மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்டண்ட் வைக்கவேண்டிய தேவையிருந்தால் அவர்களுக்கு பலூனை ரத்தக்குழாய்களில் அனுப்பி அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் ஸ்டண்டினை சரியான இடத்தில் வைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. ஒருசில நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்த பிறகு ரத்தக்குழாயின் அளவு குறைந்து காணப்படும். இதனால், ரத்த ஓட்டம் குறைந்து உயிர் பிரிவதற்குகூட அதிக வாய்ப்புள்ளது. இவற்றிற்கு மாற்றுவழியாகவே லேசர் சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லேசர் சிகிச்சை இந்த லேசர் தெரபி மிகவும் எளிமையாகவும் பயனுள்ள வகையிலும் துல்லியமாகவும் செயல்படுகிறது. மேலும், இவை நோயாளிக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கினை குறைத்து உடல் விரைவில் சீராக செயல்பட உதவுகிறது. இதனால், இவை நீண்ட காலங்களுக்கு பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆஞ்சியோ பிளாஸ்டி செய்வதன் மூலமாக உடலில் உள்ள ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னையும் கண்டறியலாம். மேலும், எந்தப்பகுதியில் அடைப்பை ஏற்பட்டுள்ளது என்பதை துல்லியமாக அடையாளம் கண்டு சிகிச்சை செய்யவும் மிகவும் உதவுகிறது எனவும் கூறுகின்றனர் மருத்துவர்கள். பொதுவாக அதிகம் எண்ணெய் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதால், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடும். இவற்றினை பிளேக் என குறிப்பிடுவர். இவை ரத்தக்குழாய்களில் படிய தொடங்கினால் காலப்போக்கில் அதிகமாக படிந்து ரத்தக்குழாயின் இருபக்கமும் மலைபோல காட்சியளிக்கும். இதனால், இதயத்திற்கும் உடல்பாகங்களுக்கும் செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவும் சத்துக்களின் அளவு குறைந்து நெஞ்சுவலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவற்றை சரிசெய்ய அந்த அடைப்பினை நீக்குவது மிக அவசியம். அதற்காக மருத்துவர்கள் ஒரு மெல்லிய ஒயர் போன்ற அமைப்பினை உள்ளே அனுப்புவர். அல்லது இடுப்புப்பகுதியில் சிறிதாக கிழித்து அதன் உள்ளே லேசரினை அனுப்புவர். அவை அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியினை சென்றடைந்த பிறகு லேசர் மூலமாக அந்த அடைப்பினை அகற்றுவதற்கு உதவும். இதனால் ரத்தக்குழாய்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது. பிறகு அந்த லேசரினை அகற்றி வெளியேற்றுவர். அந்த இடத்தினை தையல் போட்டு மூடிவிடுவர். இது மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த முறையில் சிகிச்சை செய்தால், நோயாளிகள் விரைவில் குணமடைவதால் அவர்கள் மருத்துவமனையில் அதிக காலம் இருக்க வேண்டிய தேவை குறையும் என்கின்றனர் மருத்துவர்கள். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: மருந்துகள் எடுக்கும்போது சிறுநீரின் நிறம் மாறுவது ஏன்?
Doctor Vikatan: ஏதேனும் உடல்நலக் கோளாறுகளுக்காக மருந்து, மாத்திரைகள் எடுக்கும்போது சிறுநீரின் நிறம் மாறுவது ஏன்? இது சாதாரணமானதுதானா அல்லது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி. குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி பொதுவாகவே நம் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்க வேண்டும். இதை straw-colour அல்லது pale yellow colour என குறிப்பிடுவதுண்டு. சில மருந்துகளை எடுக்கும்போது அவற்றில் உள்ள கலரிங் ஏஜென்ட்டுகள், நிறமிகளின் காரணமாக, சிறுநீரின் நிறம் மாறலாம். சில வகை மருந்துகளை எடுக்கும்போது சிலருக்கு அடர் மஞ்சள் நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ, பிங்க் நிறத்திலோ கூட சிறுநீர் வெளியேறலாம். மருந்துகளின் தன்மையைப் பொறுத்து ஆரஞ்சு அல்லது வயலட் நிறத்தில்கூட சிறுநீர் வெளியேறுவதைப் பார்க்கலாம். மருந்துகள் எடுக்கும்போது அவற்றிலுள்ள நிறமிகளும் பிற சேர்க்கைகளும் நம் கல்லீரலில் நடக்கும் ரசாயன மாற்றத்தில் உருமாறி, ரத்தத்தில் கலந்து சிறுநீர் வழியே வெளியேறும். இப்படி சிறுநீர் நிறம் மாறி வெளியேறுவதால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மருந்துகள் எடுக்கும்போது மட்டும் சிறுநீரின் நிறம் மாறி வெளியேறுகிறதா அல்லது சாதாரணமாகவே அப்படித்தான் வெளியேறுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஒருவேளை சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி ரத்தம் கலந்து வெளியேறினால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மருந்துகளை நிறுத்தியதும் சிறுநீர் வழக்கமான நிறத்துக்கு மாறிவிடும் என்பதால் இந்த நிறமாற்றம் தற்காலிகமானதுதான். அது குறித்துக் கவலை கொள்ள வேண்டாம். ஆனால், மருந்துகளை நிறுத்திய பிறகும் அதே நிறம் தொடர்ந்தால் மட்டும் மருத்துவ ஆலோசனை பெறலாம். மருந்துகள் எடுக்கும்போது அவற்றிலுள்ள நிறமிகளும் பிற சேர்க்கைகளும் நம் கல்லீரலில் நடக்கும் ரசாயன மாற்றத்தில் உருமாறி, ரத்தத்தில் கலந்து சிறுநீர் வழியே வெளியேறும். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, எந்த மருந்துகளும் எடுக்காமலேயே சிறுநீர் சிவப்பு, ஆரஞ்சு, கோலா நிறம், கறுப்பு நிறத்தில் எல்லாம் வெளியேறினால், அதை அலட்சியப்படுத்த வேண்டாம். மருத்துவரை அணுகி, சிறுநீர்ப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு பிறகு அது என்ன பிரச்னை, என்ன சிகிச்சை தேவை என்பது குறித்து முடிவு செய்யலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: அதிக குளிரில் ஏசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல், ஏதாவது பாதிப்பு வருமா?
Doctor Vikatan: ஃபேஷியல் செய்வதற்கு முன் முகத்துக்கு ப்ளீச் செய்வது சரியானதா?
Doctor Vikatan: முன்பெல்லாம் பியூட்டி பார்லர் சென்று ஃபேஷியல் செய்துகொண்டால், அடுத்தடுத்த நாள்களில் முகம் பளிச்சென காட்சியளிக்கும். ஆனால், இப்போதெல்லாம் ஃபேஷியல் செய்தால் அதன் பலன் தெரிவதே இல்லை. ஃபேஷியல் செய்யும் முறை மாறிவிட்டதா அல்லது ஃபேஷியல் சிகிச்சையே பலன் தராது என அர்த்தமா... ஃபேஷியல் தேவைதானா இல்லையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா முன்பெல்லாம் ஃபேஷியல் செய்துகொள்ள பார்லர் போனால், ஃபேஷியலுக்கு முன் ப்ளீச்சிங் செய்வார்கள். அப்படிச் செய்வதால், முகத்திலுள்ள ரோமங்கள் எல்லாம் பூனைமுடி மாதிரி மாறும். சருமம் பளிச்சென நிறம் கூடியது மாதிரி தெரியும். இப்போது ப்ளீச்சிங் பொருள்களில் பல தடை செய்யப்பட்டுள்ளன. ப்ளீச் செய்து சரியா, தவறா என்றால், அது நிச்சயம் தவறுதான். அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் சருமத்துக்கு மிகவும் கெடுதலானவை. எனவே, ப்ளீச் செய்வதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. பல இடங்களிலும் ப்ளீச் செய்வதில்லை என்பதால்தான் ஃபேஷியல் செய்த பிறகு அதன் வித்தியாசத்தை உங்களால் உணர முடிவதில்லை. அதே சமயம் ஃபேஷியல் செய்து சரியா என்றால், சரியானதுதான். அது ஒருவகையில் நம் சருமத்தின் இறந்த செல்களை அகற்றுவது போன்றதுதான். சருமத்தின் செல்கள் 14 நாள்களுக்கொரு முறை வளர்ந்துகொண்டே இருக்கும். அந்த செல்கள் உதிர்ந்து, மீண்டும் புதிய செல்கள் உருவாகும். வயதாக, ஆக இறந்த செல்கள் உதிராமல், சருமத்திலேயே தேங்கி நிற்கும். அதை நீக்கிவிட ஃபேஷியல் செய்வது அவசியமாகிறது. ஃபேஷியல் செய்த அடுத்த நாளே உங்கள் முகத்தில் வித்தியாசத்தை எதிர்பார்க்கக்கூடாது. ஃபேஷியல் செய்வதென முடிவு செய்துவிட்டால், அதை மருத்துவர்களிடம் செய்துகொள்வதுதான் பாதுகாப்பானது. பியூட்டி பார்லர்களில் செய்யும்போது யாருடைய சருமம் எந்த வகையிலானது, அந்தச் சருமத்துக்கு எந்தப் பொருள் பொருந்தும் என்றெல்லாம் பார்த்துச் செய்கிறார்களா என்பது சந்தேகமே. என்ன பிராண்டு அழகு சாதனங்களை உபயோகிக்கிறார்கள் என்பதும் சந்தேகம்தான். அதையெல்லாம் கவனிக்கத் தெரிந்த நிபுணர்கள் அங்கே இருக்கிறார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டும். எனவே, சரும மருத்துவர்களிடம் ஃபேஷியல் செய்துகொள்வதுதான் சிறந்தது. அதையும் எளிமையான ஃபேஷியலாக வைத்துக்கொள்வது இன்னும் சிறப்பு. ஃபேஷியல் செய்த அடுத்த நாளே உங்கள் முகத்தில் வித்தியாசத்தை எதிர்பார்க்கக்கூடாது. அதுவும் கிட்டத்தட்ட ஜிம் சென்று உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது போன்றதுதான். ஜிம்மில் சேர்ந்த அடுத்த நாளே, உடல் சரியான வடிவத்துக்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படித் தவறானதோ, அதைப் போலத்தான் ஃபேஷியலும். மாதம் ஒருமுறையாவது ஃபேஷியல் செய்துகொள்ள வேண்டும். முறையாகச் செய்யப்படும் பட்சத்தில் உங்கள் சருமம் பொலிவிழக்காமல், பளிச்சென இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: எந்த வயதிலிருந்து ஃபேஷியல் செய்துகொள்ளலாம்?
Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
கணையம், நம் உடலில் உள்ள பெரிய சுரப்பி இதுதான். சுமார் 6-10 இன்ச் அளவில் இருக்கும். முக்கிய ஹார்மோன்களையும் என்ஸைம்களையும் சுரக்கச் செய்து, செரிமானத்துக்கு உதவுகிறது. மீன் போன்ற வடிவில், பஞ்சு போல மென்மையாக இருக்கக் கூடிய உறுப்பு. பல நன்மைகளைத் தரக்கூடிய கணையத்தைப் பாதுகாப்பது அவசியம். கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனில் சமச்சீரான, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவேண்டியது அவசியம். அந்த வகையில் கணையத்தைப் பாதுகாக்கும் சில உணவுகளைப் பற்றிய தொகுப்பு இங்கே…. வழங்கியவர் இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் பிரசன்னா. மஞ்சள் மஞ்சள் மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் சத்து, புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. தினமும் உணவில் சிறிதளவு மஞ்சத்தூளைச் சேர்ப்பதால், நாம் புற்றுநோய்ப் பிடியிலிருந்து தப்பிக்கலாம். மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இரவில், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கலந்த பாலை தினமும் அருந்தி வருவது நல்லது. செர்ரி ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பொக்கிஷம் இந்தச் செர்ரி. செல்களின் பாதிப்பைத் தடுக்கும். பீட்டாகரோட்டின், வைட்டமின் சி, அந்தோசியானின், குவர்சிடின் போன்றவை இருப்பதால் புற்றுநோயை எதிர்க்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும். கணையப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். கணையம் காக்கும் உணவுகள்! திராட்சை இதில் உள்ள ரெஸ்வெரட்ரோல் (Resveratrol) எனும் சத்து, ஃப்ரீ-ரேடிக்கல்ஸ் போன்ற கெட்ட அணுக்களிலிருந்து கணையத்தைப் பாதுகாக்கும். பருவகாலச் சமயங்களில் கிடைக்கும் திராட்சைகளைத் தவறாமல் சாப்பிட்டு வருவது நல்லது. சர்க்கரை சேர்க்காத திராட்சை ஜூஸாகவும் குடிக்கலாம். ஆரஞ்சு மிட் மார்னிங் எனப்படும் காலை நேரத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி முதலிய பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது, கணையத்தைப் பலப்படுத்தும். அதேபோல, மதிய வேளையில், கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், கீரை ஆகியவற்றை ஜூஸாகவோ, சூப்பாகவோ சாப்பிடலாம். புரோக்கோலி புரோக்கோலி புரோக்கோலியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, கணையப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதை ‘ஸ்டீம் குக்’ முறைப்படி நீராவியில் வேக வைத்து சாப்பிடுவது நல்லது. புரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு கணையத்தின் தோற்றம் போலவே இருக்கக் கூடிய கிழங்கு இது. ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது. இதன் அடர்நிறத்தோலில் இருந்து பெறப்படும் பீட்டாகரோட்டின் எனும் சத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சு, மஞ்சள், இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ள காய்கறி வகைகளில் பீட்டா கரோட்டின் சத்து அதிகமாகவே இருக்கும். இந்த வகைச் சத்துகள் கொண்ட காய்கறிகள் புற்றுநோயில் இருந்து கணையத்தைப் பாதுகாக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு கணையத்தை நோய், நொடியில்லாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? - மருத்துவர் விளக்கம்! தயிர் இது, கணையத்தில் நோய்த்தொற்றுகளைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கணையத்தை வலிமைப்படுத்தும். புரோபயாடிக் எனும் நல்ல நுண்ணுயிரிகளைக் கொண்ட தயிர், செரிமானத்துக்கு உதவும். கணையத்தின் மிக முக்கிய வேலை செரிமானம். எனவே தயிர் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சர்க்கரை சேர்க்காத தயிராகச் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதாவது, லஸ்ஸியாகக் குடிப்பதைத் தவிர்க்கலாம். புற்றுநோய்கள் வராமல் தடுக்குமா கொழுப்பு அமிலங்கள்? - ஆய்வு முடிவு சொல்வதென்ன? பூண்டு பூண்டில் உள்ள அலிசின் (Allicin) எனும் பயோஆக்டிவ் சத்து, கணையத்தில் உருவாகும் கட்டிகளைத் தடுக்கும் வல்லமை கொண்டது. உணவில் பூண்டு சேர்ப்பதால், காயங்கள் மற்றும் கட்டிகளிலிருந்து கணையத்தை முழுமையாகப் பாதுகாத்து, பலப்படுத்தும். அன்றாட உணவுகளில் சிறிதளவு பூண்டு சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்பதால், இன்சுலினைச் சரியாகச் சுரக்க உதவுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: நீண்ட நாள்களாகத் தொடரும் மலச்சிக்கல்.. மூலநோயாக மாறுமா, தீர்வு என்ன?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. சமீப காலமாக மூலநோய் அறிகுறி போலவும் உணர்கிறேன். நீண்டநாள் மலச்சிக்கல் பிரச்னையானது பிற்காலத்தில் மூலநோயாக மாறும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா... நான் மலச்சிக்கலுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் பள்ளிக்கூடம் போகும் வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டியதன் அவசியத்தையும், தினமும் காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டியதன் அவசியத்தையும் சொல்லித் தர வேண்டும். ஒரு யானையானது தினமும் 450 கிலோ எடையுள்ள காய்கறிகளைச் சாப்பிடக்கூடியது. அப்போதுதான் அதற்குத் தேவையான வலிமை கிடைக்கும். காய்கறிகளில் எல்லா சத்துகளும் உள்ளன என்பது யானைக்குத் தெரிந்த அளவுக்குக்கூட மனிதர்களுக்குத் தெரிவதில்லை. அரிசி உணவுகளை அதிக அளவில் எண்ணெயும் மசாலாவும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதில் தென்னிந்தியர்களையும் வட இந்தியர்களையும் மிஞ்ச முடியாது. வெறும் நுனிப்புல்லை மட்டுமே மேயும் முயலுக்கு உடலின் எடையைத் தூக்கித் தாவிச் செல்லும் அளவுக்கு சக்தி இருக்கிறது. மான் உள்ளிட்ட எத்தனையோ உயிரினங்களை இதுபோல உதாரணம் சொல்லலாம். மனிதர்கள்தான் உணவுப்பழக்கத்தில் தவறு செய்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்னைக்கான முக்கிய காரணமே, உணவுகளை அதிக எண்ணெய், மசாலா சேர்த்து அளவுக்கதிகமாக வறுத்துப் பொரித்துச் சாப்பிடுவதுதான். அடுத்து போதிய அளவு தண்ணீர் குடிக்காதது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 40 கிலோ எடையுள்ள ஒருவர் தினம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக எண்ணெய், மசாலா சேர்த்த உணவுகளை சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னைக்கான முக்கிய காரணம். 7 மணி நேரம் தூங்க வேண்டும். தினம் 5 வேளை காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும். குடலின் அசைவை சரிசெய்து, அதன் மூலம் மலச்சிக்கலை குணமாக்கும் மருந்துகள்தான் நவீன மருத்துவத்தில் கொடுக்கப்படும். சிலர் பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டால், மலம் வெளியேறி, குடல் சுத்தமாகிவிடும் என நினைத்துக்கொண்டு அடிக்கடி அவற்றை எடுத்துக்கொள்வோர் இருக்கிறார்கள். இதில் உடலிலுள்ள நீர்ச்சத்தும் வெளியேறி விடும். இது மிகவும் தவறு. வருடம் ஒரு முறை டீவேர்மிங் எனப்படும் குடல்புழு நீக்க மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். விளம்பரங்களில் வரும் மலச்சிக்கல் மருந்துகளை சாப்பிட்டால்தான் மலம் வெளியேறும் என நம்பும் இடத்துக்கு மக்கள் வந்துவிட்டார்கள். குடல் என்பது மனிதர்களுக்கு தொங்கும் உறுப்பு. எனவே, காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் குடல் அசைந்து மலச்சிக்கல் சரியாகும். வயதானவர்கள் குறைந்த அளவு உணவு உட்கொள்வதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வரும். குறைந்த அளவு சாப்பிடுவோரும் நிறைய காய்கறி, பழங்கள் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். குடலின் அசைவை சரிசெய்து, அதன் மூலம் மலச்சிக்கலை குணமாக்கும் மருந்துகள்தான் நவீன மருத்துவத்தில் கொடுக்கப்படும். தண்ணீரே குடிக்காத பட்சத்தில் மலக்குடலில் மலம் சேரும்போது, அதிலுள்ள தண்ணீரையெல்லாம் குடல் உறிஞ்சிக்கொள்ளும். அதனால் மலம் இறுகிவிடும். மலம் கல் போல இறுகி, மலக்குழாய் வழியே கிழித்துக்கொண்டு வெளியே வரும்போது உள்மூலம், வெளிமூலம் பிரச்னைகளாக மாறும். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களும் மலத்தை இறுகாமல் பார்த்துக்கொள்ளும். Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா? ரத்தம் வரும் அளவுக்கு அது கிழித்துக்கொண்டு வெளியே வரும்போது மூலநோயாகிறது. தண்ணீர் நிறைய குடித்தால் மலம் மிருதுவாக மாறும். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களும் மலத்தை இறுகாமல் பார்த்துக்கொள்ளும். எனவே, மூன்று வேளை உணவுகளிலும் காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும். இடைப்பட்ட வேளையிலும் பழங்கள், சுண்டல், சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்னையை இப்படி இயற்கையான உணவுப்பழக்கத்தின் மூலம் குணப்படுத்துவதுதான் சரி. மருந்துகளின் உதவியை நாடுவது சரியானதல்ல. சர்க்கரை நோய் ஆரம்பநிலையில் உள்ளவர்களும், ஏற்கெனவே சர்க்கரை நோய் வந்தவர்களும் பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
பிரசவமும் பெண்ணுறுப்பில் சில மாற்றங்களும்... நிபுணர் வழிகாட்டல்! | காமத்துக்கு மரியாதை - 247
பிரசவத்திற்குப் பிறகு பெண்ணுறுப்பு என்பது பழைய நிலையிலேயே இருக்க முடியாது. சில மாற்றங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதற்கு ஏற்றபடி, எப்போது, எப்படி தாம்பத்திய உறவுகொள்ள வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா இங்கே சில தகவல்களைப் பகிர்கிறார். பிரசவம் ''சுகப்பிரசவம் நல்லது. ஆனால், சுகப்பிரசவத்தின்போது பிறப்புறுப்பில் தையல் போடப்பட்டிருந்தால் அது ஆறுகிறவரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். சிசேரியன் மூலமாக பிரசவம் நடந்திருந்தால், தையல்போட்ட இடம் ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும். தவிர, ஒருசில மாதங்கள்வரை மனைவியின் வயிற்றை அழுத்தாமல் உறவுகொள்வது நல்லது. குழந்தை பெரிதாக இருந்து, சுகப்பிரசவமாகியிருந்தால் பிறப்புறுப்பு தளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, வாக்குவம், ஃபோர்செப்ஸ் என்று உபகரணங்கள் உதவியுடன் சுகப்பிரசவம் நடந்திருந்தாலோ, பிறப்புறுப்பில் அதிக தையல்கள் போட்டிருந்தாலோ பிறப்புறுப்பு தளர்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால், உறவுகொள்ளும்போது முன்பிருந்த இறுக்கம் கிடைக்காமல் போகலாம். இது இயல்பான ஒன்றுதான். பிரசவம் சிசேரியன் செய்தாலுமே ஹார்மோன் மாற்றங்களால் பிறப்புறுப்பில் சில மாறுதல்கள் ஏற்படவே செய்யும். இதனாலும் தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, 'பிரசவத்துக்குப் பிறகு தாம்பத்திய உறவில் திருப்தியில்லை' என்பதை உணர்கிற பெண்களும், அதை வெளிப்படையாகச் சொல்கிற பெண்களும் குறைவு. அபூர்வமாக சில பெண்கள் அப்படிச் சொன்னால், அந்த இடத்து தசையை இறுக்கமாக்கும் கெகல் பயிற்சி செய்ய வேண்டும். கெகல் பயிற்சி என்பது, பிறப்புறுப்பை இறுக்கமாக்கி, தளர்த்துகிற ஒரு பயிற்சி. இந்தப் பயிற்சியை ஏதாவது வேலை செய்யும்போதுகூட செய்யலாம். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்துவர பிறப்புறுப்பு இறுக்கமாகும். கூடவே, தாம்பத்திய உறவிலும் திருப்தி கிடைக்கும். அது படுக்கையறை, ஓட்டப்பந்தய மைதானம் கிடையாது; அதனால் ஆண்களே..! | காமத்துக்கு மரியாதை - 244 சில பெண்களுக்குத் தும்மினால், இருமினால் சிறுநீர் கசியும். இதற்கும், குழந்தை பெரிதாக இருப்பதும் உபகரணங்கள் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுப்பதும்தான் காரணங்கள். இப்படிப்பட்டவர்களை, அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை சிறுநீரை அடக்கி வைத்து, பிறகு வெளியேற்றச் சொல்வோம். இந்தப் பயிற்சியிலேயே பிரச்னை சரியாகிவிடும். சரியாகவில்லை என்றால், சிறுநீர்ப்பையைச் சற்று மேலே ஏற்றித் தைக்கிற அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்போம். சிலருக்கு பிறப்புறுப்பு வழியாக காற்று வருவதாகச் சொல்வார்கள். பிரசவத்துக்குப் பிறகு வயிறு தளர்வதுதான் இதற்குக் காரணம். குழந்தை பிறந்து கர்ப்பப்பை சுருங்கியவுடன், அதுவரை ஒதுங்கியிருந்த குடல்பகுதி மறுபடியும் அதனுடைய இடத்துக்கு வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் வயிற்றைத் தொட்டால் சத்தம் வருவதுபோல இருக்கும். இதைத்தான் 'காத்து வயித்துக்குள்ள போயிடுச்சு' என்கிறார்கள். உடற்பயிற்சி செய்து வயிறு உள்நோக்கிச் சென்றாலே, இது சரியாகிவிடும். குழந்தை பிறந்தவுடனே தாயின் வயிற்றுக்குள் காற்று போய்விடுமென துணியால் வயிற்றை இறுக்கிக் கட்டுற பழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. இதனால், குடல் திரும்ப தன்னுடைய இடத்துக்கு வருவதற்கு வழியில்லாமல் மேல் நோக்கி நகர ஆரம்பிக்கும். விளைவு, நெஞ்சடைப்பதுபோல இருக்கும்... கவனம்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர் விஜயா. Sexual Health: ஏன் சில ஆண்களும் பெண்களும் ஆர்கசமே அனுபவிப்பதில்லை? - காமத்துக்கு மரியாதை 246 சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
நாய்க்குட்டி கடித்து கபடி வீரர் உயிரிழந்த சோகம்; ரேபிஸ் பாதிப்பால் கடும் துயரம்..
உத்தரப்பிரதேசத்தில் மாநில அளவில் கபடி வீரராக இருந்தவர் பிரிஜேஷ் சோலங்கி. இவர் அங்குள்ள புலந்த்ஷஹர் மாவட்டத்தில் இருக்கும் பரானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாக்கடையில் கிடந்த நாய்க்குட்டி ஒன்றை மீட்டார். அப்படி மீட்ட போது அந்த நாய்க்குட்டி சோலங்கியை கடித்துவிட்டது. அந்த நாய்க்குட்டி கடித்ததை சோலங்கி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தடுப்பூசியும் போடாமல் அலட்சியமாக இருந்துவிட்டார். கடந்த 26-ம் தேதி சோலங்கி சக வீரர்களுடன் மைதானத்தில் கபடி விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். உடனே அலிகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சோலங்கியை நாய் அல்லது குரங்கு கடித்திருக்கவேண்டும் என்று கூறி அவரை உடனே அலிகர் மருத்துவ கல்லூரி அல்லது டெல்லிக்கு கொண்டு செல்லும் படி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறினர். இது குறித்து சோலங்கியின் சகோதரர் சந்தீப் கூறுகையில், ''சோலங்கியை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றோம். ஆனால் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். அதோடு சிகிச்சையும் கொடுக்கவில்லை'' என்றார். கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது? அவரை வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்து சிகிச்சை கொடுத்து வந்தனர். அவருக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி தொற்று ஏற்பட்டு அவரது நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வந்தது. தனி அறையில் அவரை அடைத்திருந்தனர். அவர் படுக்கையில் இருந்து கொண்டு மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். அவரை கட்டுப்படுத்த மற்றவர்கள் முயன்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்து போனார். தெரு நாய் சோலங்கி கபடி போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று இருக்கிறார். இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அக்கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வெறிநாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டனர். இது குறித்து சோலங்கியின் பயிற்சியாளர் பிரவீன் இது குறித்து கூறுகையில்,'' சோலங்கி தனது உடம்பில் இருந்த காயத்தை விளையாட்டில் ஏற்படக்கூடிய ஒன்றுதான் என்றும், வலி விளையாட்டால் ஏற்படுகிறது என்று கவனக்குறைவாக இருந்துவிட்டார்''என்றார். வெறிநாய்க்கடி எனப்படும் ரேபிஸ் தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரேபிஸ் பொதுவாக இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை எந்த வித அறிகுறியையும் வெளிப்படுத்தாது. இது ஒரு வாரம் முதல் ஒரு வருடம் வரை இருக்கலாம். இது தொற்று ஏற்பட்ட இடம் மற்றும் வைரஸின் அளவு போன்றவற்றை பொறுத்து மாறுபடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தெரு நாய்கள் தொல்லை: 85 வயதில் நாய் போலக் குறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சந்தானம்!
Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவது ஏன்?
Doctor Vikatan: மெனோபாஸ் வயதில் இருக்கும் பெண்களை பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி மருத்துவர்களும் டயட்டீஷியன்களும் அறிவுறுத்துவது ஏன், பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக உடல்எடை அதிகரிக்கும். அதே சமயம், அந்த நாள்களில் பெண்களுக்கு அதிக அளவு புரதச்சத்து தேவைப்படும். அதற்கு பொட்டுக்கடலை சிறந்த சாய்ஸ். எண்ணெய் இல்லாமல் வறுத்தது என்பதால் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது. பொட்டுக்கடலை என்பது எளிதில் செரிமானமாகக்கூடிய ஓர் உணவு. காரணம், அதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து. மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் தினமும் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை சாப்பிடலாம். பொட்டுக்கடலையில் உள்ள புரதமானது, புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுக்கும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். மெனோபாஸுக்கு பிறகு புற்றுநோய் தாக்கும் ரிஸ்க் அதிகரிப்பதால், பெண்கள் இதைத் தவறாமல் பின்பற்றலாம். மெனோபாஸ் காலத்தில் பல பெண்களுக்கும் ப்ளீடிங் சற்று அதிகமிருக்கும். இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் பெண்கள், பீரியட்ஸின்போது தினமும் காலையில் சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதால், ப்ளீடிங்கின் அளவு குறையும். 100 கிராம் வேர்க்கடலையில் 24 கிராம் புரதச்சத்து இருக்கிறது. 100 கிராம் பொட்டுக்கடலையில் 21 கிராம் புரதச்சத்து இருக்கிறது. 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதற்கும் அதே அளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதற்கும் வித்தியாசம் உண்டு. வேர்க்கடலையில் இருப்பதைவிட பாதி அளவு கொழுப்புச்சத்துதான் பொட்டுக்கடலையில் இருக்கிறது. எனவே, ஒப்பீட்டளவில் ஆரோக்கியத்திலும் வேர்க்கடலையைவிட பொட்டுக்கடலை சிறந்தது. மெனோபாஸ் Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில், பீரியட்ஸை தள்ளிப்போடும் மாத்திரைகள் எடுக்கலாமா? வேர்க்கடலை சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுவலி வரலாம். பொட்டுக்கடலையில் அந்தப் பிரச்னையும் இல்லை. பருப்பு வைத்து சாம்பார் செய்யும்போது சிலருக்கு வாயுத் தொந்தரவு வரலாம். அவர்கள், பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையை மிக்சியில் பொடித்து சாம்பாருக்குப் பயன்படுத்தலாம். இதைச் செய்வதும் சுலபம், செரிமானத்துக்கும் நல்லது. மெனோபாஸ் காலத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளைக் குறைக்கச் சொல்வோம். இயல்பாகவே அந்த நாள்களில் அவர்களுக்கு கொழுப்பு அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னை வரலாம். அதைத் தவிர்க்க, பொட்டுக்கடலை சட்னி, பொட்டுக்கடலை சாம்பார் போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Kids hair care: குழந்தைகளுக்கான தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்!
இப்போதெல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே இளநரை வந்துவிடுகிறது. அதனால், குழந்தைப்பருவத்தில் இருந்தே தலைமுடியை நன்கு பராமரிக்க வேண்டும் என்கிற சரும நோய் நிபுணர் சந்தன், அதற்கான டிப்ஸையும் பகிர்கிறார். Children hair care * மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களது சருமவகைக்கு ஏற்ப குழந்தை நல நிபுணரின் பரிந்துரையின் பேரில் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். * ஒருநாள்விட்டு ஒருநாளாவது குழந்தையைத் தலைக்குக் குளிக்கவைக்க வேண்டும் * குழந்தைகளைக் குளிக்கவைக்க மிதமான சூடான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். அதிகமாகக் குளிர்ந்த அல்லது சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது. * இன்று சந்தையில் குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் பெருகிவிட்டன. தோல் தடிப்பு, சரும ஒவ்வாமை ஏற்பட்டால் ஷாம்பூ பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். baby soap * குழந்தைகளின் சருமத்துக்குப் பயன்படுத்தும் சோப்பைத் தலைக்கும் பயன்படுத்தலாம். குழந்தையின் சருமத்துக்கு ஏற்ற சோப்பின் டி.எஃப்.எம் அளவு மற்றும் பி.ஹெச் அளவைக் குழந்தை நல மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சோப்பைத் தேர்வுசெய்ய வேண்டும். * குழந்தைகளுக்கு அவர்களுக்கான பிரத்யேகமான ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளிக்கவைக்கும்போது, ஷாம்பூ தலையில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்படி நன்கு கழுவ வேண்டும். Beauty: பாட்டி வைத்தியம் முதல் பியூட்டி பார்லர் வரை... இயற்கை அழகி முல்தானி மட்டி! * குழந்தைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஷாம்பூவை, பெரியவர்கள் பயன்படுத்தக் கூடாது. * குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்ய சுத்தமான நல்லெண்ணையைப் பயன்படுத்தலாம். நல்லெண்ணெயை கண், காது, மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தி * குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையின் தலையில் எண்ணெய் தேய்ப்பதால், க்ராடில் கேப் (Cradle cap) என்கிற பிரச்னை ஏற்பட்டு முடி உதிர்வு ஏற்படும். * குழந்தைகளுக்கு முடி எந்தப் பக்கம் போகிறதோ, அதன் போக்கில்தான் குழந்தைகளுக்கான சீப்பில் தலை சீவ வேண்டும். அதற்கு எதிர்த்திசை நோக்கி சீவக் கூடாது. இதனால், முடி உதிர்வு ஏற்படும். Herbal Hair Care: முடி வளர்ச்சிக்கு 4 மூலிகைத் தைலம்! அத்திப்பழ ஸ்மூத்தி அத்திப்பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. அத்திப்பழத்தோடு, அரை கப் பால், அரை கப் ஆரஞ்சு ஜூஸ், நறுக்கிய வாழைப்பழம், தேங்காய், பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கலக்கி, ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்த பின், இந்த ஸ்மூதியை வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதனால், அவர்களது முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: அம்மாவுக்கு சிசேரியன், மகளுக்கும் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லையா?
Doctor Vikatan: என் அம்மாவுக்கு இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள். இப்போது நான் 8 மாத கர்ப்பிணி. வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். எல்லா வேலைகளையும் வழக்கம்போல செய்கிறேன். எனக்கு சுகப்பிரசவம் நிகழுமா? அம்மாவுக்கு சிசேரியன் ஆனதால் எனக்கும் சிசேரியன்தான் ஆகும் என்கிறார்கள் சிலர். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் எட்டு மாத கர்ப்பத்திலும் எல்லா வேலைகளையும் செய்வதாகவும், வேலைக்கும் சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். அது உண்மையிலேய மிகவும் நல்ல செய்தி. ஏனெனில், இன்றைய தலைமுறை பெண்கள் பலரும் சொகுசான வாழ்க்கையையே வாழ விரும்புகிறார்கள். கர்ப்பகாலத்திலும் அவர்களிடம் அதே மனநிலையைப் பார்க்க முடிகிறது. உண்மையில் கர்ப்பகாலத்தை நினைத்து அவ்வளவாக பயப்படத் தேவையில்லை. கருவில் இருக்கும் குழந்தையானது மிகமிக பத்திரமாக, பாதுகாப்பாகவே இருக்கும். சில பெண்களுக்கு மருத்துவர்களே ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியிருப்பார்கள். அந்தப் பெண்கள் மட்டும் அதிக வேலைகள் செய்யாமல், உடலை வருத்திக்கொள்ளாமல் ஓய்வில் இருந்தால் போதும். உதாரணத்துக்கு, நஞ்சுக்கொடி கீழே இருப்பதாகச் சொல்லப்பட்ட கர்ப்பிணிகள், ஏற்கெனவே கர்ப்ப காலத்தில் ப்ளீடிங் ஆன அனுபவம் உள்ளவர்கள், ப்ளீடிங் ஆக வாய்ப்புள்ளதாக மருத்துவரால் எச்சரிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு மருத்துவர்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்துவோம். மற்றபடி எல்லோருக்கும் அது அவசியமில்லை. Representational Image நீங்கள் சாதாரணமாக வேலை செய்பவராக இருந்தால் உங்களுடைய வழக்கமான வேலைகளை எப்போதும்போல தொடரலாம். அதிக எடை தூக்குவது, உடலை வருத்திச் செய்கிற வேலைகளை மட்டும் தவிர்க்கவும். வேலை செய்வதாலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். உங்கள் அம்மாவுக்கு இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள் என்பதால் உங்கள் விஷயத்திலும் அப்படித்தான் நிகழ வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுடைய உடல் அமைப்பு வேறு, உங்கள் அம்மாவின் உடல் அமைப்பு வேறு. வலியைத் தாங்கும் திறன் உங்களுக்கு உங்கள் அம்மாவைவிட சற்று அதிகமாக இருக்கலாம். 'எபிடியூரல் அனஸ்தீசியா' (Epidural anesthesia) கொடுத்து உங்கள் வலியைக் குறைக்கச் செய்யும் வசதிகள் இன்று உள்ளன. அதாவது 50 முதல் 60 சதவிகித வலியை இதன் மூலம் குறைக்கலாம். எனவே, அம்மாவின் சிசேரியனை நினைத்து தேவையின்றி நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஏற்கெனவே இருமுறை சிசேரியன்... மூன்றாவது சிசேரியன் செய்வது பாதுகாப்பானதா?
Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முடியுமா?
Doctor Vikatan: என் அம்மாவுக்கு 60 வயதாகிறது. எப்போது எந்தப் பிரச்னைக்காக மருத்துவரைப் பார்க்கப் போனாலும் அவருக்கு BP அளவு தாறுமாறாக அதிகரிக்கிறது. மருத்துவர் BP பார்த்துவிட்டு, குறைத்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்புகிறார். மற்ற நேரங்களில் அம்மாவுக்கு BP அளவு நார்மலாகவே இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது, இதற்கு சிகிச்சை தேவையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி. குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தத்தில் 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension), 'நான்எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Non-essential hypertension), 'வொயிட்கோட் ஹைப்பர்டென்ஷன்' (White coat hypertension) என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது. இதில் நீங்கள் குறிப்பிடுவது 'வொயிட்கோட் ஹைப்பர் டென்ஷன்' வகையில் வருவது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு இயல்பாக BP அளவு நார்மலாகவே இருக்கும். ஆனால், கிளினிக் அல்லது ஹாஸ்பிட்டலுக்கு வரும்போது மட்டும் BP அளவு சற்று அதிகரித்துக் காணப்படும். அதற்காக அது ரொம்ப அதிகமாகவெல்லாம் போகாது. நார்மல் அளவைவிட சற்று அதிகரிக்கும், அவ்வளவுதான். உதாரணத்துக்கு, நார்மல் அளவில், இதயத்துடிப்பின்போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் சிஸ்டாலிக் (Systolic pressure) பிரஷர் 120 என்றும், இதயத்துடிப்புக்கு இடையே ஏற்படும் டயஸ்டாலிக் (Diastolic blood pressure) பிரஷர் 80 என்றும் வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணத்தில் மட்டும் 120 என்பது 130-140 என்ற அளவிலும், 80 என்ற அளவு 85-90 என்ற அளவிலும் அதிகரிக்கலாம். முதல்முறை ஒரு மருத்துவரைச் சந்திக்க வரும் நோயாளியின் பிபி அளவை வைத்து மருத்துவர் எந்த முடிவுக்கும் வர மாட்டார். அதனால்தான் முதல்முறை ஒரு மருத்துவரைச் சந்திக்க வரும் நோயாளியின் பிபி அளவை வைத்து மருத்துவர் எந்த முடிவுக்கும் வர மாட்டார். அந்த நோயாளிக்கு பிபி அதிகமாக இருக்கும்பட்சத்தில், முதலில் அவரது உடல்பருமனைப் பார்ப்போம். உடல் எடை அதிகமிருந்தால் அதைக் குறைக்க அறிவுறுத்துவோம். உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள அறிவுறுத்துவோம். கூடவே, ஜங்க் ஃபுட்ஸை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருப்பது போன்ற வாழ்வியல் மாற்ற அறிவுரைகளைக் கொடுப்போம். Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தம்... வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா? முதல் விசிட்டிலேயே ஒரு நபரின் பிபி அளவு அதிகரித்துக் காணப்படுவதை வைத்து அதைக் குறைக்க எந்த மருத்துவரும் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்க மாட்டார். அதுவே, அந்த நபர், தலைச்சுற்றல், தலைவலி, முதுமை, இணை நோய்கள் என அறிகுறிகள் மற்றும் பிரச்னைகளுடன் வரும்போதும், பிபி அளவு 150-160க்கும் மேல் இருப்பது என்ற நிலையில் மட்டும் மருந்துகள் கொடுப்போம். BP சம்பந்தப்பட்ட நோயாளிளை இரண்டு-மூன்று வாரங்கள் கழித்து வரச் சொல்வோம். அப்போதும் பிபி குறையாமல் அப்படியே இருந்தால் இரண்டு கைகள், இரண்டு கால்களில் செய்யப்படுகிற 'ஃபோர் லிம்ப் பிளட் பிரஷர்' (Four-limb blood pressure) அளவைப் பார்ப்போம். அதிலும் அசாதாரணம் தெரிந்தால், பிற ரத்தப் பரிசோதனைகள், கொலஸ்ட்ரால், கிரியாட்டினின் அளவுகளைப் பரிசோதிக்கச் சொல்வோம். அதற்கேற்பவே மருந்துகள் கொடுப்போம். அதுவும் வயதுக்கேற்ப வேறுபடும். எனவே, 'வொயிட்கோட் ஹைப்பர்டென்ஷன்' என்பது பரவலான பிரச்னையல்ல. பயப்பட வேண்டிய பிரச்னையும் அல்ல. மேற்குறிப்பிட்ட முறைகளில் அதை அணுகலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: BP மாத்திரைகள்; ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால் ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா?
Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
''பு த்தம்புதிய, பசுமையான பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள் மற்றும் முளைவிட்ட பயறுகளை ‘உயிர் உள்ள உணவுகள்’ (live foods) என்று கூறுகிறோம். ஏனெனில், அவை சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன. மனிதனின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலுக்குப் பசுமையான உணவு மிக அவசியமானதாகும். இந்த ‘உயிர் உணவு’ கருத்தாக்கம் நேற்று, இன்று தொடங்கியது அல்ல... உயிர் உணவுகளின் தேடல் என்பது ஆதிமனிதன் காலத்திலேயே தொடங்கிவிட்டது. உயிர் உள்ள உணவுகளை, அவற்றின் இயல்பான நிலையில் உண்ணும்போது அதிகபட்ச ஊட்டச்சத்தினைப் பெறலாம்'' என்கிற உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல் அதுபற்றி விரிவாகப் பேசினார். உயிருள்ள உணவுகள் Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! ''உயிர் உணவின் நன்மைகள்! பசுமையான உணவுகள் தங்கள் செல் கட்டமைப்பில் ஆக்சிஜன் வளம் நிறைந்ததாக உள்ளன. தாவரங்கள், சூரிய ஒளியில் இருந்து தங்களுக்குத் தேவையான ஆற்றலைத் தயாரித்துக்கொள்வதை ஒளிச்சேர்க்கை (photosynthesis) என்று சொல்கிறோம். இப்படி, தனக்கான ஆற்றல் மற்றும் ஆக்சிஜன் நிறைந்தவை இந்த உயிர் உணவுகள். இவற்றைச் சமைக்கும்போது, அவற்றில் உள்ள ஆக்சிஜனோடு ஊட்டச்சத்துகளும் வெளியேறிவிடுகின்றன. சமைக்கும்போது அனைத்து வைட்டமின்கள், தாதுஉப்புகள், நுண்ஊட்டச்சத்துகள் என அனைத்தும் விரயமாகின்றன! உணவு என்சைம்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டுவரும், ஹோவெல் என்ற ஆராய்ச்சியாளர், ‘உயிர் உள்ள உணவுகளில் உள்ள ஆக்சிஜன், சத்துகளை நன்றாகச் செறிக்கவும், உறிஞ்சவும் உதவுகின்றன’ என்று கண்டறிந்துள்ளார். புத்தம் புதிய, சமைக்காத உணவுப் பொருள்களில் உள்ள என்சைம்களை ‘லைஃப் ஃபோர்ஸ்’ என்கிறார் அவர். அவற்றைச் சாப்பிடும்போது, அந்த மூலக்கூறுகளை நம்முடைய உடல் முழுமையாகப் பெற்றுக்கொள்கிறது. அதுவே, சமைக்கும்போது, அவற்றில் உள்ள உயிர்த்தன்மை, அனைத்து வைட்டமின்கள், தாதுஉப்புகள், நுண்ஊட்டச்சத்துகள் என அனைத்தும் விரயமாகின்றன அல்லது வேறு உருவம் பெற்று படிப்படியாக அழிந்துபோகின்றன என்கிறார் அவர். காய்கறிகள் Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்! உணவில் உள்ள இயற்கையான சத்துகள், ஃபைட்டோகெமிக்கல்கள், (phytochemicals) மற்றும் அந்த உணவில் உள்ள தூய, வடிகட்டப்பட்ட தண்ணீர் நம்மைத் துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கச் செய்கின்றன. இவை, நோய் எதிர்ப்புச்சக்தியை வழங்குவதுடன், உடலில் காலம்காலமாகத் தேங்கியிருக்கும் நச்சுகளையும் அகற்றி நம் உடலைப் பாதுகாக்கின்றன' என்றும் அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவில் தெரிவித்திருக்கிறார். இளமையாகவும் வலிமையாகவும் நம்மால் உணரமுடியும்! உயிர் உணவுகளை நமது உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நாம் மிக எளிதாக நம் எடையைக் குறைக்கலாம். உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் உடல் எடை குறைக்க எளிதான வழி இது. இந்த உணவுகள் முதுமையைத் தாமதப்படுத்துகின்றன. மேலும், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நாளடைவில் குறைந்து, சருமமும் பளபளப்பு அடைகிறது. இளமையாகவும் வலிமையாகவும் நம்மால் உணரமுடியும். தானியங்கள் உயிர் உணவுகள் பல நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், ஒற்றைத்தலைவலி, ஆஸ்துமா, மூட்டுவலி, ஒவ்வாமை, பெருங்குடல் அழற்சி, மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் பல இவற்றுள் அடங்கும். Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன? உயிர் உள்ள உணவுகளின் பட்டியல்! * கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, கோஸ், செலரி, கோதுமைப் புல், எலுமிச்சைப் புல் போன்ற கீரைகள். * கேரட், பீட்ரூட், தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், வெள்ளரிக்காய், புரொக்கோலி, வெண்டைக்காய், முள்ளங்கி, குடமிளகாய், காலிஃபிளவர், மஞ்சள் பூசணி போன்ற காய்கறிகள். * முளைவிட்ட தானியம், பயறு வகை உணவுகள், வைட்டமின்கள், தாதுஉப்புகள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்களின் உறைவிடமாக இருக்கின்றன. * அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். * பாதாம், வால்நட், பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ் வகைகள் மற்றும் ஆளிவிதை, சூரியகாந்தி விதை போன்ற எண்ணெய் வித்துகளில் உயிர்சத்து நிறைவாக உள்ளது. இவ்வளவு ஆற்றல்மிக்க உயிர் உணவுகளுக்குத் திடீரென்று மாறுவது என்பது கடினமான செயல்தான். ஒரே நாளில் மாறுவதும் முடியாத ஒன்று. உணவுப்பழக்கத்தில் படிப்படியாக மாறுதல் கொண்டுவருவோம். அதையும் இன்றே தொடங்குவோம். ஆரோக்கியமான ஆனந்தமான வாழ்க்கை, நம் வசப்படும்'' என்கிறார் சிவப்ரியா மாணிக்கவேல். Health Insurance: எல்லா மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சை பெறலாமா? புதிய விதிகள் என்ன சொல்கின்றன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?
Doctor Vikatan: குளிப்பதில் எது சரியான முறை? சிலர் காக்கா குளியல் குளித்துவிட்டு வருவதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் மணிக்கணக்காக ஊறி, தேய்த்துக் குளிப்பதைப் பார்க்கிறோம். நீண்டநேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பதால் சருமத்தில் ஒருவித சுருக்கம் ஏற்படுவது போல உணர்கிறேன். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா சிலருக்கு நீண்ட நேரம் ஷவரின் அடியிலோ, குழாயின் அடியிலோ, ஆறு, குளத்திலோ நின்று குளிப்பது மிகவும் பிடிக்கும். அது மிகவும் தவறானது. அதிகபட்சம் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் குளித்து முடித்துவிட வேண்டும். தலைக்குக் குளிப்பதானால், ஷாம்பூ உபயோகிப்பது, பிறகு கண்டிஷனர் உபயோகிப்பது என எல்லாவற்றுக்கும் சேர்த்து 10 நிமிடங்கள் போதும். அதிக நேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பது சரும ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரே சரியானது. குளிர்காலத்தில்கூட அதிக சூடான நீர் உபயோகிக்கக்கூடாது. வெயில்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது. வெந்நீரில் குளித்தால் சருமத்தின் துவாரங்கள் திறந்து இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் வெளியேறிவிடும். சிலர் கொகொரவென்ற ஸ்கிரப் உபயோகித்தோ, பிரஷ் உபயோகித்தோ தேய்த்துக் குளிப்பார்கள். ஒவ்வொரு முறை இப்படித் தேய்க்கும்போதும், அது சருமத்தில் உராய்வை, கீறல்களை ஏற்படுத்தும். சருமத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அந்த இடம் எப்படி நிறம் மாறி, பிறகு சரியாகுமோ, தேய்த்துக் குளிக்கும்போதும் அப்படித்தான் ஏற்படும். தேவையில்லாமல் நீங்களே பிக்மென்ட்டேஷன் பிரச்னையை வரவழைப்பதற்குச் சமம் இது. குளிப்பதற்கு சோப் அல்லது பாடி வாஷ் சிறந்தது. குளிப்பதற்கு சோப் அல்லது பாடி வாஷ் சிறந்தது. முகத்துக்கு ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். முகத்தின் சருமமும் உடலின் சருமமும் வேறு வேறானவை. எனவே, உடலுக்கு உபயோகிக்கிற சோப்பையோ, பாடி வாஷையோ முகத்துக்கு உபயோகிக்கக்கூடாது. குளித்த பிறகு சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசை சற்று வெளியேறியிருக்கும். அதை திரும்பப் பெறும்வகையில் குளித்து முடித்ததும் முகம், கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுத்தாலே ஜலதோஷம்... தவிர்ப்பதுதான் ஒரே வழியா?
Immune Drinks: நோய் எதிர்ப்பு சக்தி தரும் சாறுகள்!
கொரிமேட்டோ ஜூஸ் கொரிமேட்டோ ஜூஸ் தேவையானவை: கொத்தமல்லி இலை - 1 கப், தக்காளி - 4, புதினா - 1 கைப்பிடி, எலுமிச்சைப்பழச் சாறு - 2 டீஸ்பூன், சீரகத்தூள், உப்பு - தலா 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு அல்லது தேன் - தேவையான அளவு. செய்முறை: கொத்தமல்லி, தக்காளி, புதினா, எலுமிச்சைப்பழச் சாறு, சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இறுதியாக, வடிகட்டிய சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கிப் பரிமாறவும். பலன்கள்: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. இவை, நம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கும். புதினா இலையில் உள்ள வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து, காய்ச்சல், காமாலை போன்றவற்றைக் குணமாக்கும். கொத்தமல்லியில் உள்ள ஏ,பி,சி சத்துக்கள், மாலைக்கண் நோய், சிறுநீரகக் கோளாறு முதலியவற்றைப் போக்கும். கேட்டி - டாட்டி மிராக்கிள் கேட்டி - டாட்டி மிராக்கிள் தேவையானவை: கேரட் துருவல் - 1 கப், தக்காளி - 3, நறுக்கிய வெள்ளரிக்காய் - 1 கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பனங்கற்கண்டு - தேவையான அளவு. செய்முறை: கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சைப்பழச் சாறு, பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். பின், வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காலை நேர உணவுடன் எடுத்துக்கொள்ளலாம். பலன்கள்: வைட்டமின் ஏ, சி நிறைந்த ஜூஸ் இது. எளிதில் செரிமானம் ஆகும். காசநோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களைக் குணமாக்கும். கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் கண்புரை நோய் வராமல் பாதுகாக்கும். வெள்ளரி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, சிறுநீர் வெளியேற உதவும். கண்பொங்குதல் பிரச்னை நீங்கும். ஆப்பிள் - கேரோ பன்ச் ஆப்பிள் - கேரோ பன்ச் தேவையானவை: தோல், விதை நீக்கிய ஆப்பிள் - 1 கப், கேரட் துருவல் - 1/2 கப், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், பட்டைத்தூள் - 1 சிட்டிகை, இஞ்சி - சிறு துண்டு, தேன் - தேவையான அளவு. செய்முறை: கேரட், இஞ்சி, பட்டைத்தூள் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின், ஆப்பிளுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து வடிகட்டி, சாறு எடுக்க வேண்டும். இப்போது, இரண்டு சாறுகளையும் ஒன்று சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், தேன் விட்டு, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து அருந்தலாம். இனிப்பு வேண்டாம் என்பவர்கள் தேன் சேர்க்காமலே அருந்தலாம். பலன்கள்: கேரட்டில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும். ரத்தப் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும். இஞ்சி, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மெத்தத்தில் இந்த ஜூஸ், இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்கும், சருமத்தைப் பொலிவாக்கும். தேங்காய்ப்பால் கூலர் தேங்காய்ப்பால் கூலர் தேவையானவை: தேங்காய்த் துருவல் - 1 கப், வெள்ளரிக்காய் - 1/2 கப், பனங்கற்கண்டு - தேவையான அளவு. செய்முறை: தேங்காய்த் துருவல், வெள்ளரிக்காய், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை வடிகட்டி, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். பலன்கள்: முகம் பளபளப்பு பெற வெள்ளரிக்காய் உதவுகிறது. தேங்காய்த் துருவல், வாய்ப்புண் மற்றும் குடல்புண்ணைக் குணமாக்க உதவுகிறது. தேங்காயில் அதிக அளவு மாங்கனீஸ் நிறைந்து உள்ளது. இதில் உள்ள தாமிரம் மற்றும் வைட்டமின் சி, சருமத்தை மென்மை அடையச் செய்கிறது. ரத்தசோகையைச் சரிசெய்யும். உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும். ஸ்ட்ராபெர்ரி - திராட்சை மிக்ஸ்டு ஜூஸ் ஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ் தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 200 கிராம், திராட்சை - 50 கிராம், தேன் - சிறிதளவு. செய்முறை: ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். குளிர்ச்சிக்காக, சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம். பலன்கள்: திராட்சை, ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான, அந்தோசயனின் (Anthocyanin) மற்றும் எல்லாஜிக் அமிலம் (Ellagic Acid) இதில் அதிக அளவில் உள்ளன. நியாசின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின் முதலான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் இதில் அதிக அளவில் இருக்கின்றன. மாங்கனீஸ், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், கால்சியம் ஆகிய தாதுஉப்புகள் ஓரளவு கிடைக்கும். தொடர்ந்து சீரான இடைவேளைகளில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால், இதய நோய்கள் வராது. இளமைப் பொலிவு கிடைக்கும். அன்னாசி - புதினா ஜூஸ் அன்னாசி - புதினா ஜூஸ் தேவையானவை: அன்னாசிப் பழத்துண்டுகள் - 200 கிராம், புதினா - 10 கிராம், சர்க்கரை அல்லது தேன், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு. செய்முறை: அன்னாசி, புதினா, சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி அருந்த வேண்டும். பலன்கள்: வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்த ஜூஸ். பீட்டாகரோட்டின் மற்றும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுஉப்புகள் இதில் உள்ளன. புதினா, இருமலுக்கும் ஆஸ்துமாவுக்கும் மிகவும் நல்லது. தொண்டைக் கமறல், முகப்பரு இருப்பவர்கள், இந்த ஜூஸில் புதினாவை அதிக அளவு சேர்த்துப் பருகலாம். தோல் வறட்சி இருப்பவர்கள், உடலில் உள்ள நச்சுக்கள், மலச்சிக்கல் நீங்க, இந்த ஜூஸைப் பருகலாம். ஓர் உணவு வேளைக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்தலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் இந்த ஜூஸுக்கு உண்டு. ப்ரைம்ஸ்டோன் ஜுஸ் ப்ரைம்ஸ்டோன் ஜுஸ் தேவையானவை: மாம்பழம் - 1, தோல், விதை நீக்கிய ஆரஞ்சு, சாத்துக்குடி - தலா அரைப் பழம், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு. செய்முறை: ஆரஞ்சு, சாத்துக்குடிச் சுளைகளை மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். இதனுடன், மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கிப் போட்டு, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். பலன்கள்: வைட்டமின் ஏ மற்றும் ஃபிளேவனாய்டு இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம் சத்து, இதயம் சீராகச் செயல்பட உதவும். இந்த ஜூஸில் உள்ள தாமிரம், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும். அதிக நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். செரிமானப் பிரச்னை இருப்பவர்களும் இந்த ஜூஸ் அருந்தலாம். மூட்டுவலி, இதய நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், இந்த ஜூஸை அடிக்கடி பருகலாம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும்
செ யற்கை நுண்ணறிவு (AI), இதுதான் இன்றைய உலகின் அதி பிரபலமான தொழில்நுட்பமே. கல்வி கற்பிப்பது தொடங்கி, உயிர் காக்கும் மருத்துவத்துறை வரை இதன் வளர்ச்சி அளப்பரியது. மனிதர்களின் வேலையை சுலபமாக மாற்றுகிறது என்ற பிளஸ் பாயிண்ட் இருந்தாலும், மனிதர்களின் வேலை இழப்பிற்கு காரணமாக அமைகிறது என்ற எதிர்மறை கருத்துக்களும் AI தொழில்நுட்பத்தை பின்தொடரவே செய்கிறது. இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த MIT நிறுவனம் நடத்திய ஆய்வில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்கள் பெறுபவர்களுக்கு Cognitive Debt போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். cognitive debt Cognitive Debt பற்றிய ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது; ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன என்பதை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாஷ் பிரபாகரன். ’’AI தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைகளை மிகவும் எளிதாக்கக்கூடிய ஒரு பயனுள்ள தொழில்நுட்பம்தான். இந்த ஆராய்ச்சியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதவர்களைவிட, AI தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு Cognitive debt பிரச்னை அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர். மூளை அதென்ன Cognitive Debt? ஒரு தகவல் அல்லது விஷயத்தைப்பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்ளலாமல், ஏதேனும் ஒரு விடை கிடைத்தால் போதும் என்கிற மனப்பான்மை.. அந்த விடை ஏன் வந்தது; எப்படி வந்தது; அது சரியா என்பதை ஆராயாத அல்லது யோசிக்காத நிலையைத்தான் Cognitive debt என்போம். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் மூளைக்கு வேலை கொடுத்து யோசிப்பதை நிறுத்திவிட்டு, AI தொழில்நுட்பத்தையே முழுவதுமாக நம்பி இருப்பதுதான் இந்த Cognitive debt. இது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு. மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்ட நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சுயமாக யோசித்து எழுதுபவர்கள் ஒரு குழுவினர்களாகவும். மற்றொரு குழு சுயமாக யோசித்து தேவைக்கு ஏற்ப கூகுள் தேடுபொறிகளை பயன்படுத்தி எழுதுபவர்களாகவும், மூன்றாவது குழு முழுவதுமாக AI உதவியை நாடி எழுதுபவர்களாகவும் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் AI தொழில்நுட்பத்தை மட்டுமே முழுவதுமாக பயன்படுத்தி கட்டுரையை எழுதுபவர்களுக்கு, Cognitive debt பிரச்னை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூளையின் செயல்பாடுகளை கண்டறியும் EEG (Electroencephalogram) தொழில்நுட்பத்தின் மூலம் இதனை கண்டறிந்துள்ளார்கள். Chatgpt user இப்படியே AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தகவலை பெற்றுக்கொண்டிருந்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? நாம் புத்திக்கூர்மை வாய்ந்தவர்களா, இல்லையா என்பதை முடிவு செய்வதென்பது மூளையில் உள்ள நம்முடைய நியூரான்களின் அமைப்புதான் . நாம் ஏதேனும் ஒன்றினைப் பற்றி சிந்திக்கும்போது நம்முடைய நியூரான்களுக்கு இடையேயான ’சினாப்சிஸ்’ ( சினாப்சிஸ் என்பது ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு இடையேயான கனெக்ஷன்) மற்றும் புதிய புரதங்கள் உருவாவது அதிகரிக்கும். இந்த நியூரான் சினாப்சிஸ் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய நினைவாற்றல், கற்பனைத்திறன், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் போன்றவை அதிகரிக்கும். ஆனால், நாம் சிந்திக்காமல் முழுவதுமாக AI உதவியை நாடியிருக்கும்போது சினாப்சிஸ் அதிகரிக்காது. இது எதிர்காலத்தில் நினைவாற்றல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. AI-யை பயன்படுத்தினாலும் நாம் தகவல்களை கேட்டோ, படித்தோ தானே தெரிந்து கொள்கிறோம். அவை, ஏன் நம் நினைவில் நிற்பதில்லை? இந்த ஆய்வில் இது குறித்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. AI-யை பயன்படுத்தி கட்டுரைகளை எழுதியவர்களுக்கு பின்னர் அந்தக் கட்டுரையை படிக்கும்போதும், அதனை சார்ந்த கேள்விகளை கேட்கும்போதும், அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், மூளையை பயன்படுத்தி யோசித்து கட்டுரையை எழுதியவர்களுக்கு, அது குறித்த கேள்விகளை கேட்கும்போது 100% அவர்கள் என்ன எழுதினார்கள் என்பது அவர்கள் நினைவில் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். மாணவர்கள் நமது மூளையில் ’பேப்பர் சர்க்யூட்மென்ட்’ என்று ஒன்று உள்ளது. இது, நாம் ஒன்றினைப் பற்றி பார்க்கும்போதும், படிக்கும்போதும் அதனை பதிவு செய்துகொள்ளும். பின் நாம் அதை சார்ந்து சிந்திக்கும்போது, இரண்டு அல்லது மூன்று சூழற்சிகளுக்கு பின்பு நம் நினைவிற்கு அவற்றை அனுப்பும். AI பயன்படுத்தும்போது நாம் மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. அதனை அப்படியே எழுதுவதில்தான் கவனம் செலுத்துகிறோம். அதனால், அந்த தகவல்கள் நம் மூளையில் பதிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. `அப்பா மாதிரி கண்ணு; அம்மா மாதிரி மூக்கு..!' - ஜெனிட்டிக் மேக்கப் தெரியுமா? தற்போதைய காலகட்டத்தில் 26 சதவீத மாணவர்கள் வீட்டுப்பாடத்தினை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்வதாகவே சில தரவுகள் தெரிவிக்கின்றன. வீட்டுப்பாடம் கொடுப்பதே நம் பள்ளியில் படித்ததை, ரீ கால் செய்துபார்ப்பதற்காகவும், அதைச்சார்ந்து யோசிப்பதற்காகவும்தான். அவற்றையும் AI உதவியுடன் செய்யும்போது யோசிப்பதற்கான வாய்ப்புகளே அங்கே இருக்காது. இது எதிர்காலத்தில் மாணவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். மருத்துவர் பிரபாஷ் Health: 'மூளை உழைப்பு... உடல் உழைப்பு...' - எத்தனை மணி நேரம் செய்யலாம்? AI பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டுமா? எந்த ஒரு தொழில்நுட்பம் என்றாலும், அதை பயன்படுத்துபவரின் முறையை பொறுத்தே அவை நன்மையாகிறதா, தீமையாகிறதா என்பது முடிவு செய்யப்படும். AI தொழில்நுட்பம் என்பது மனிதர்களுக்கு ஒரு மிகப்பெரிய பலம்தான். அதிலிருந்து பல்வேறு தகவல்களை நம்மால் பெற முடியும். ஆனால், யோசிப்பதற்கே நேரம் கொடுக்காமல் அனைத்து தகவல்களையும் பெற AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தவறான விஷயம். AI-ல் தகவல்களை பெறுவதற்கு முன் அதைச் சார்ந்து நாம் யோசிக்க வேண்டும். யோசித்து ஒரு கட்டமைப்பை செய்தபிறகு AI நுட்பத்தின் உதவியை நாட வேண்டும். இப்படி செய்தால் நம்முடைய சுய சிந்தனை மற்றும் AI தொழில்நுட்பத்தின் உதவியால் ஆகச் சிறந்த தகவல்களை கொடுக்க முடியும்’’ என்கிறார் மருத்துவர் பிரபாஷ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
`திட்டங்களுக்கும் பெண்களுக்கும் இடையே இடைவெளி; பாலம் போடும் விகடன்!'விருதுநகரில் விழிப்பு உணர்வு!
அவள் விகடன் இதழ், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய 'பெண்ணால் முடியும்' பெண்கள் சுயமுன்னேற்ற திருவிழா இன்று சிறப்பாக நடந்தது. பவர்டு பை ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் மற்றும் சத்யா ஏஜென்சீஸ். அசோசியேட் ஸ்பான்சர் STRI நிதி நிறுவனம், ஹைஜின் பார்ட்னர் பெல்லா - பெண்களுக்கான ஆரோக்கியப் பொருள்கள் நிறுவனம், கிஃப்ட் பார்ட்னர்ஸ் சௌபாக்யா கிச்சன் அப்ளயன்சஸ், கயல் அக்ரோ ஃபுட்ஸ், சக்தி மசாலா மற்றும் சேவரைட் பாஸ்தா. விழா மேடையில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நடந்த இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஐ.ஏ.எஸ், விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும், சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையருமான முனைவர் ஜெயசீலன் ஆகியோர் தலைமை வகிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பேசும்போது, பெண்களின் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்கு மாநில அரசும், மத்திய அரசும் பல திட்டங்களை வழங்குகின்றன. அதே நேரம், பெண்களுக்கும் திட்டங்களுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருக்கிறது. அதனை இணைக்கும் பாலம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு பாலத்தை அமைக்கும் விகடன் குழுமத்திற்கு நன்றி என்று கூறி சிறப்புரை ஆற்றினார். விழா அரங்கம் சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன் பேசும்போது, பெண்களுக்கு இருக்கக்கூடிய வலிமையை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதில் இடைவெளி இருக்கிறது என நாம் தொடர்ச்சியாகப் பேசி வருகிறோம். பெண்கள் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தக்கூடிய விழிப்புணர்வு இங்கு இல்லை. அதை கொடுக்க வேண்டியது முக்கியம். அதனை விகடன் குழுமம் இன்று செய்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கான மிக முக்கியமான வலிமை, பொருளாதார சுதந்திரம். அது உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று ஊக்கமூட்டினார். சாதனைப் பெண்களுக்குப் பாராட்டு குடும்ப நல நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் பேசும்போது, பெண்களின் தன்னம்பிக்கை என்பது கல்வியும், அதன் மூலம் வரும் வேலையும் தான். தன் ஊதியத்தில் நூறு ரூபாய் செலவு செய்ய யாரிடமும் அனுமதி கேட்காமல் வாழ்வதுதான் பொருளாதார சுதந்திரம். பெண்கள் மாதத்தின் முதல் நாளை ‘சேமிப்பு முதல்‘ என்பதாக வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதனை கூட்டு வட்டி முறையில் சேமிக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகச் சொல்லும் திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது. ஆடம்பரச் செலவுக்காக கடன் வாங்கக் கூடாது என்று வழிகாட்டினார். நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பேசும்போது, விருதுநகர் போன்ற சிறு நகரங்களில் இதுபோன்ற பெண்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சியை நடத்தும் அவள் விகடனுக்கு நன்றி. பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள், சிரிக்க நேரம் ஒதுக்காதவர்கள் மருத்துவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும், சிரித்து வாழ்பவர்கள் நீண்டகாலம் வாழ்வார்கள் என்று கூறி தனது நகைச்சுவை பெர்ஃபார்மன்ஸை எடுத்துவிட, ஆர்ப்பரித்தது அரங்கம். தொடர்ந்து, பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர் ஜெயஶ்ரீ ஷர்மாவும், பெண்களின் சட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழக்கறிஞர் செல்வகோமதியும் சிறப்பாக வழங்கினார்கள். கல்வி, சேவை, சாகசம், சுய உதவிக்குழுக்கள் எனப் பல்துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாதனைப் பெண்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்துப் பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட, மனதில் ஏறிய தன்னம்பிக்கையுடன் விடைபெற்றனர் மகளிர்! சர்வதேச விருதுகள் பெற்ற 3 வயது தமிழ்ச் சிறுமி... கொண்டாடிய மும்பைத் தமிழ்ச் சங்கம் + ‘அவள் விகடன்’!
Doctor Vikatan: நாவல் பழங்கள் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்?
Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்? ஜலதோஷம் பிடிக்குமா, நாவல்பழ கொட்டைகளை பொடியாக்கி, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மையா? அதை எப்படி சரியான பக்குவத்தில் தயாரித்து எப்படி, எவ்வளவு உபயோகிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் நாவல்பழம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்பட காரணம் அதன் துவர்ப்புச்சுவை. பாக்கு சாப்பிட்டால் எப்படி நாக்கு லேசாகத் தடிக்கிறதோ, அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடும்போது தொண்டையில் லேசான இறுக்கம் ஏற்படும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளின் தன்மைகளில் இதுவும் ஒன்று. தினமும் 7 முதல் 8 எண்ணிக்கையில் நாவல் பழங்கள் சாப்பிடலாம். அதில் லேசாக உப்பும் மிளகுத்தூளும் தூவி சாப்பிட்டால், தொண்டை இறுக்கம் தவிர்க்கப்படும். நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தொண்டைக்கட்டு, தற்காலிகமானது. சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். தொண்டை கட்டும், ஜலதோஷம் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பலரும் இந்தப் பழங்களைத் தவிர்க்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. இப்போது நாவல் பழ சீசன். அது முடிவதற்குள் முடிந்தவரை இந்தப் பழங்களைச் சாப்பிடுவது அவசியம். நாவல்பழத்தில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமி, புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் மற்றும் அதன் கொட்டை என இரண்டையுமே எடுத்துக்கொள்ளலாம். நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை வெயிலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ளவும். தினமும் காலையில் அதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறையும். ஆனால், இதை மட்டுமே செய்துவிட்டு ரத்தச் சர்க்கரை அளவு குறையும் என எதிர்பார்க்கக்கூடாது. இதை கூடுதலாக ஒரு சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய் இல்லாதவர்களும் நாவல் பழப் பொடியை வாரம் ஒரு முறை தேநீர் போலத் தயாரித்துக் குடிக்கலாம். Doctor Vikatan: சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்குமா நாவல் பழமும் வெந்தயமும்? சர்க்கரை நோய் இல்லாதவர்களும் நாவல் பழப் பொடியை வாரம் ஒரு முறை தேநீர் போலத் தயாரித்துக் குடிக்கலாம். இதிலுள்ள ஜம்போலின் என்ற வேதிப்பொருள், ரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. அது குறித்த தகவல்கள் சித்த மருத்துவத்திலும் சொல்லப்பட்டுள்ளன. 'நாவல் ஊற்று நீர்' பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாவல் மரங்களுக்கு அடியில் ஏதேனும் ஊற்றோ, சிற்றாறோ இருந்தால், அதிலிருக்கும் தண்ணீரைக் குடித்தாலே இனிப்பும் துவர்ப்புமாக அவ்வளவு ருசியாக இருக்கும். அந்தக் காலத்தில் இதை சர்க்கரை நோய்க்கான பானமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். நாவல் பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. எது கிடைத்தாலும் சாப்பிடலாம். நாம் சாப்பிட மறந்த சுவைகளில் துவர்ப்புச் சுவை முக்கியமானது. அதை ஈடுகட்டும்வகையில் சீசனில் கிடைக்கும் நாவல் பழங்களை தவறவிடாமல் சாப்பிடுவது மிகச் சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா?
Doctor Vikatan: நான் ஐடி வேலையில் இருக்கிறேன். எனக்கு கடந்த சில மாதங்களாக சரியான தூக்கம் இல்லை. மக்னீசியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா.... யார் வேண்டுமானாலும் அதை எடுத்துக்கொள்ளலாமா... உணவின் மூலம் மக்னீசியம் பெற என்ன வழி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இண்டர்னெல் மெடிசின் சிறப்பு மருத்துவரான ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். தூக்கத்தை வரவழைப்பதில் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள் ஓரளவு உதவும். மார்க்கெட்டில் பலவிதமான மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள் கிடைக்கின்றன. இருந்தாலும், உங்கள் தூக்கப் பிரச்னைக்கான காரணம் அறிந்து, அதைச் சரிசெய்ய நினைப்பதுதான் சரியான வழியே தவிர, எதையுமே யோசிக்காமல் நேரடியாக சப்ளிமென்ட் உபயோகிக்க நினைப்பது சரியல்ல. நீங்கள் தினமும் சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்கிறீர்களா, தூங்கச் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, கேட்ஜெட்ஸை ஆஃப் செய்கிறீர்களா, தூக்கத்தில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறீர்களா என்ற விஷயங்களை முதலில் செக் செய்யுங்கள். தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு, மூளையை அமைதிப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, சருமப் பராமரிப்பு, இசை கேட்பது என எதை வேண்டுமானாலும் செய்யலாம். வேலை பார்த்து முடித்த அடுத்த நிமிடமே தூங்கிவிட வேண்டும் என நினைக்கக்கூடாது. செயற்கை வெளிச்சத்தில் உட்கார்ந்திருப்பதால், சூரியன் அஸ்தமனம் ஆனதும் மூளைக்குத் தெரிய வாய்ப்பில்லை. தவிர, கேட்ஜெட்ஸ் உபயோகித்திருக்கும் பட்சத்தில் அவற்றின் ப்ளூ லைட்ஸின் தாக்கத்தால் மூளையில் மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்பட்டிருக்கும். தூங்கச் செல்கிற நேரமானது மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 10- 15 நிமிடங்கள் வேறுபடலாம், மற்றபடி அதிக வித்தியாசமில்லாமல் பார்த்துக்கொள்ளவும். இவற்றை எல்லாம் சரிசெய்யாமல், சப்ளிமென்ட்ஸ் எடுப்பதில் பலனிருக்காது. கேட்ஜெட்ஸ் உபயோகித்திருக்கும் பட்சத்தில் அவற்றின் ப்ளூ லைட்ஸின் தாக்கத்தால் மூளையில் மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்பட்டிருக்கும். தூக்கத்துக்கான சப்ளிமென்ட்டுகளில் மெலட்டோனின் மிக முக்கியமானது. அது சர்கேடியன் ரிதம் எனப்படும் நம்முடைய உடல் கடிகாரத்தைக்கூட முறைப்படுத்தி, தூங்குவதற்கு உதவும். தூங்கச் செல்வதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்பு இதை எடுத்துக்கொள்ள வேண்டும். மக்னீசியம் சப்ளிமென்ட்டும் உதவும். சரிவிகித உணவுகள் சாப்பிட்டாலே மக்னீசியம் உடலில் சேரும். நட்ஸ், சீட்ஸ், முழுத்தானியங்கள் போன்றவற்றில் மக்னீசியம் இருக்கிறது. உங்களுக்கு எப்படிப்பட்ட சப்ளிமென்ட் சரியானது என்பதை மருத்துவ ஆலோசனை கேட்டுப் பின்பற்றலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தூக்கமின்மை இதயத்தை பாதிக்குமா?
Pimple free face: முகப்பரு இல்லாத முகத்துக்கு சில டிப்ஸ்!
முகத்தின் அழகைக் கெடுப்பது முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ்க்கட்டிகள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். இவை வருவதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டீர்கள் என்றால், அவற்றில் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்கிற ஒரு ஐடியா உங்களுக்குக் கிடைத்துவிடும். Pimples (Representational Image) * அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. * சிலருக்கு, உடல் வெப்பம் அதிகம் இருக்கும். உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். * காற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அடிக்கடி தண்ணீரால் முகம் கழுவலாம். * பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். எனவே, படுக்கும்போது தலையணையின் மேல் டவல் விரித்துப் படுக்கலாம். * பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். பூப்பெய்துதல், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு முகப்பருக்கள் ஏற்படும். முகப்பருக்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன்தான். dandruff treatment * அதிக வியர்வையினாலும் பருக்கள் வரலாம். தலைமுடி முகத்தில் படும்போது, அதைச் சரிசெய்வதால் ஏற்படும் கீறல்களினாலும் பருக்கள் வரும். * தூங்கும்போது ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் (Androgen Hormone), முகத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. அதிக எண்ணெய் சுரப்பின் காரணமாகவும் பருக்கள் வரலாம். Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீர்வு என்ன? * அழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருள்களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். அப்படிப்பட்ட செயற்கை அழகு சாதனங்களைத் தவிர்த்து விடுங்கள். * ஐஸ்க்ரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும். பால், தயிர், முளைகட்டிய பயறு வகைகள், பொன்னாங்கண்ணிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்வது முகப்பருக்கள் வராமல் தடுக்கச் சிறந்த வழி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Vaccine: இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போடவில்லையா? - அதிர்ச்சி தரும் ஆய்வு!
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் சவாலை எதிர்கொள்ளும் தெற்காசிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது. நாடுமுழுவதும் 2023-ம் ஆண்டு 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாமல் இருந்ததாக லான்சென்ட் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. 1980 முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் வழக்கத்தால் பல மில்லியன் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. எனினும் கோவிட் 19 பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதுமே தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது சரிந்துள்ளது. இது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Germs தெற்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. உலகளாவிய நோய் சுமை தரவு 2023 (the Global Burden of Disease 2023 data)-ன் அடிப்படையிலான இந்த ஆய்வு, 1980 முதல் 2023 வரை தடுப்பூசிகள் எவ்வளவு பரவலாக செலுத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்தன. இந்த ஆய்வு டிப்தீரியா, தட்டம்மை, போலியோ, காசநோய், நிமோனியா மற்றும் ரோட்டா வைரஸ் ஆகிய நோய்களுக்கு எதிரான 11 முக்கிய தடுப்பூசிகளை கருத்தில்கொண்டு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பேரிடரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2.3 கோடி குழந்தைகள்! - தமிழகத்தின் நிலை என்ன? 1974-ம் ஆண்டு உலக சுகாதார மையம், நோய்த்தடுப்பு மருந்து குறித்த அத்தியாவசிய திட்டத்தைத் தொடங்கியதில் இருந்து 15.4 கோடி குழந்தைகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால் சமீப ஆண்டுகளாக குறிப்பாக கோவிட்டுக்குப் பிறகு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது குறைந்துள்ளது. Covid 19 (Representational Image) ஜீரோ-டோஸ் குழந்தைகள் இந்த ஆய்வில் அடிப்படையான முதல் டிடிபி தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளத குழந்தைகள் ஜீரோ-டோஸ் குழந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். 1980 முதல் 2019 வரை பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களின் விளைவாக ஜீரோ-டோஸ் குழந்தைகளின் எண்ணிக்கை உலக அளவில் 75% ஆக குறைக்கப்பட்டிருந்தது. அது முழுவதுமாக மாறி, 2021-ம் ஆண்டு உலக அளவில் 1.86 கோடி குழந்தைகள் ஒரு தடுப்பூசி கூட போடவில்லை என்ற நிலை வந்துள்ளது. பட்ஜெட்டில் இடம்பிடித்த தடுப்பூசி; அதன் பலன்கள் என்னென்ன? - மருத்துவர் விளக்கம்! | Explainer 2023-ம் ஆண்டு உலகம் முழுவதும் 15.7 கோடி ஜீரோ டோஸ் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 8 நாடுகளிலேயே உள்ளனர். அவை, நைஜீரியா, இந்தியா, காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், இந்தோனேசியா மற்றும் பிரேசில். Vaccine இந்தியாவில் மட்டும் 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசிக்கூட போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இதனால் இந்த பட்டியலில் நைஜீரியாவுக்குப் பிறகு இரண்டாம் இடம் பிடிக்கிறது நம் நாடு. கோவிட் 19 தாக்கம் கொரோனா வைரஸ் பரவல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை வெகுவாக பாதித்தது. டிடிபி, தட்டம்மை (MCV1), மற்றும் போலியோ ஆகியவை தடுப்பூசிகள் செலுத்துவதில் வீழ்ச்சியை எதிர்கொண்டனர். இன்றுவரை கோவிட்டுக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப முடியாத நிலையே தொடர்கிறது. அதிக வருமானம் கொண்ட நாடுகளும் கூட இதில் தப்பவில்லை. இப்போதிருந்து முழு அர்பணிப்புடன் செயல்பட்டால் மட்டுமே 2023-க்குள் டிடிபி3 (இறுதி டிடிபி தடுப்பூசி) 90% குழந்தைகளுக்கு செலுத்தபடுவதற்கான இலக்கை அடைய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு அணுகல் குறைவான ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று சேவையாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால் பல லட்சம் குழந்தைகளின் உயிர்கள் அபாயாத்தில் தள்ளப்படுமென்றும் எச்சரித்துள்ளனர். `Cocomelon’ முதல் `Free Fire’ வரை... நம் குழந்தைகளுக்கு நல்லதை கொடுக்கிறோமா? - ஓர் அலசல்
Dream & Psychology: கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறதா? உளவியல் நிபுணர்கள் சொல்வதென்ன?
க னவு காணாத மனிதர்களே இல்லை. அறிவியல் என்னதான் பல மடங்கு முன்னேறிவிட்டாலும், கனவு பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கனவுக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு இல்லை. உண்மையில், கனவுகள் நம் விழிப்போடு தொடர்பு உடையவை. நம் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இவை பலதரப்பட்டவை. வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவுகளும் மாறுபடும். இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் ராமன். தூக்கம் கனவுகள் ஏன் ஏற்படுகின்றன? கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான கொள்கைகள் இல்லை. பல்வேறு கருத்துரைகள், சிந்தனைகள் நிலவுகின்றன. கனவுகள் ஒருவரின் ஆழ்மனதின் வெளிப்பாடு. நாம் தூங்கும்போது, `ரெம்’ (Rapid eye movement - REM) எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் கனவுகள் வருகின்றன. இந்த நிலையில், உடலின் அனைத்துப் பகுதிகளும் சுயகட்டுப்பாட்டை இழந்து, முழுமையாக மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும். டீன் ஏஜில் மனநலம்... இந்த மூன்று பேருக்கும் உண்டு பொறுப்பு... பூப்பு முதல் மூப்பு வரை! எவை கனவாகின்றன? கனவு உருவாக்கம் என்பது மூளையின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று. கனவுகள் உருவாகும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு இடம், பொருள், முகம் தெளிவாகத் தெரியலாம். சிலருக்குக் கனவுகள் தெளிவற்றதாக புகைமூட்டமானதாகத் தோன்றும். பொதுவாக, நம் நிகழ்கால ஏக்கங்கள், கவலைகள், பிரச்னைகள் கனவின் மூலம் வடிவம் பெறுகின்றன. ஒரு சில நேரங்களில், நம் நிகழ்காலப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகள், கனவு மூலமாகக் கிடைக்கலாம். கனவுகள் நம்மில் பலராலும் கனவுகளை எளிதில் நினைவுபடுத்த முடியாது. தூக்கம் கலைவது தன்னிச்சையாக நடந்தால், அவற்றை நினைவுக்குக் கொண்டுவருவது சுலபமாகிவிடும். மனஅழுத்தம், மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு, கனவுகள் கவலைக்குரியதாகவும், அதிர்ச்சி ஏற்படுத்தும் விதங்களிலும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்குத் தாயின் பிரிவு பற்றியும், முதியோருக்கு உடல்நிலை மற்றும் இறப்புப் பற்றியும் கனவுகள் வரலாம். ஒரு சிலருக்குக் கனவு காண்பதால் பதற்றம் அதிகரிக்கும். உளவியல் நிபுணர் இவான் வாலஸ் (Ian Wallace) என்பவர், தன்னுடைய 30 ஆண்டுகால உளவியல் அனுபவத்தில், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட கனவுகளைப் பற்றி கேட்டு, அவற்றில் இருந்து மிக முக்கியமான கனவுகளை வகைப்படுத்தியிருக்கிறார். சில முக்கியமான, அடிக்கடி ஏற்படக்கூடிய கனவுகள் பற்றியும் அவற்றுக்கான பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம். கனவுகள் * நிர்வாணமாக இருப்பது: உங்கள் பலவீனத்தை மற்றவர் அறிந்துகொள்கிறார்கள் என்று உங்கள் உள்மனம் அச்சப்படுவதைத் குறிக்கும். * விமானம், ரயில், பஸ் வாகனங்களைத் தவறவிடுவது: நீங்கள் ஏராளமான பொறுப்புக்களைக் கையில் எடுத்து இருப்பீர்கள்; அதை முடிக்க முடியுமா, முடியாதா என்ற அச்சத்தின் வெளிப்பாடு. * பற்கள் உடைவது அல்லது விழுவது: ஒருவர் தங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் குறிக்கும். * குழந்தைகள் கனவில் வருவது: அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறீர்கள் என்பதைக் குறிக்கும். Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன? * உறவினர்கள், நண்பர்கள் இறப்பதுபோல் கனவு: இனம் புரியாத பயம் அல்லது புதிய மாறுதல் ஒன்றைக் குறித்த அச்சம் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது. * கீழே விழுவது: நமக்குக் கவலைகள் அதிகமாக இருப்பதையும் மனக்கட்டுப்பாட்டை இழப்பதையும் குறிக்கும். * உணவுப் பொருட்கள் கனவில் வருவது: புத்திக்கூர்மை அடைவதைக் குறிக்கும். பொதுவாக, உணவு, நம் உடலுக்கும் மூளைக்கும் ஊட்டத்தை அளிக்கிறது. கனவுகள் * கைகள் வருவது: வெறும் கைகளைப் பார்ப்பது, நம்மால் எந்தப் பயனும் இல்லை என்ற சிந்தனையைக் குறிக்கும். கைகளைக் கழுவது போல் கனவு வருவது, தனிமையைக் குறிக்கும். கைகளை மூடி இருப்பதுபோல் வந்தால், நீங்கள் செல்லும் பாதை, தெளிவானது, சரியானது என்பதை உணர்த்தும். * வீடு அல்லது கட்டடம்: ஆழ்மனதின் எண்ணங்களைக் குறிக்கும். மேலும், ஒவ்வொரு தளம் மற்றும் அறையாக வருவது, வித்தியாசமான உணர்ச்சிகள், பழைய நினைவுகள் மற்றும் ஆழ்மனதைப் பாதித்த உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தும். * மிருகம் துரத்துவது: நிகழ்காலப் பிரச்னைகளில் இருந்து விலகி ஓடும் மனப் பான்மை உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வரலாம். Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 டிப்ஸ்! * பறப்பது: சுதந்திரம், பிரச்னைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளல் ஆகியவை காரணமாக இருக்கலாம். * பணம்: சுயமதிப்பைக் குறிக்கும். பணப் பரிமாற்றம் செய்வதுபோன்ற கனவு வந்தால், நீண்ட நாள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிறைவேறப் போவதை அறிவுறுத்தும். * பாதைகள் அல்லது வெற்றுச் சாலைகள்: வாழ்க்கைப் பயணம் செல்லும் திசையை அறிவுறுத்தும். மேலும், உங்களுடைய வாழ்க்கைப் பாதை சரியாகத்தான் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பும். கனவுகள் * தண்ணீர்: பல விதங்களில் தண்ணீர் கனவில் வரலாம். அவற்றின் பொதுவான குறிப்பு, உணர்ச்சி மற்றும் மயக்கநிலை. மிகவும் அமைதியான சூழலில் குளத்தில் நீர் உள்ளது போன்ற கனவு, உங்களுடைய ஆழ்மனதைப் பிரதிபலிக்கும். கடல் போன்ற நீண்ட நீர்ப்பரப்பு, நீங்கள் எடுத்துள்ள வேலை அல்லது காரியத்தின் பலத்தைப் பிரதிபலிக்கும்; அவற்றை முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிவுறுத்தும். * உச்சியிலிருந்து கீழே விழுவது: தோல்வி பயம் காரணம். ''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை கனவுக்கும் எதிர்காலத்துக்கும் தொடர்பு உண்டா? சிலருக்கு தாங்கள் அழுவது போல் கனவு வரலாம். அது நிகழ்கால வாழ்வில், அதிகப்படியான மனஅழுத்தத்துடன் இருப்பதால் வரும். தூக்கத்தில் கண்ணீர்த்துளி வருவது, விரும்பிய ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வது அல்லது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும். மீண்டும் மீண்டும் ஒரே கனவு வரலாம். இது சிலருக்கு பயத்தைக் கொடுக்கும். ஏதேனும் ஒரு நிகழ்வு குறித்து, கவலை அல்லது துக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு இது போன்ற கனவுகள் வரலாம். தெரியாத நபரின் முகம் மீண்டும் மீண்டும் கனவில் வரலாம். அவர், உங்களின் ஆழ்மனதில் பதிவாகி உள்ள நிகழ்வுகளுடன் தொடர்புடை யவராக இருக்கலாம். பொதுவாக பாம்பைக் கனவில் காண்பவர்கள், ஏதோ ஒரு விஷயத்தை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள் என்பதைக் குறிக்கும். ஓடுவதுபோல் கனவு வரலாம். அது, நீங்கள் ஏதோ ஒன்றிலிருந்து விடுபட நினைக்கிறீர்கள் அல்லது ஒதுங்க நினைக்கிறீர்கள் என்பதைக் குறிக்கும். அது உங்களுக்கு அச்சம் அல்லது சங்கடமான சூழலை ஏற்படுத்தலாம்'' என்கிறார் டாக்டர் ராமன். 8 மணி நேரம், இருட்டு அறை, பகல் தூக்கம், கனவுகள்.. தூக்கம் தொடர்பான சந்தேகங்கள், தீர்வுகள்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: சரும அழகுக்கு மஞ்சள் மட்டுமே போதுமா, ஃபேஷியல் செய்வது தேவையற்றதா?
Doctor Vikatan: என் வயது 18. என்னுடன் படிக்கும் பலரும் பார்லர் சென்று ஃபேஷியல், ப்ளீச் போன்ற சிகிச்சைகளைச் செய்து கொள்கிறார்கள். ஆனால், என் வீட்டில் அதற்கெல்லாம் அனுமதி இல்லை. 'மஞ்சள் தேய்ச்சுக் குளி, ஃபேஷியல் தராத பளபளப்பை அது தரும்' என்கிறார் அம்மா. அவர் சொல்வது எந்த அளவுக்கு உண்மை. ஃபேஷியலுக்கு பதிலாக மஞ்சள் தேய்த்துக் குளிப்பது மட்டுமே சருமத்தை அழகாக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா . சருமநல மருத்துவர் பூர்ணிமா மஞ்சளுக்கும் சந்தனத்துக்கும் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை உண்டு. 'அந்தக் காலத்துல மஞ்சள் யூஸ் பண்ணலையா' என்று பலரும் கேட்கலாம். முன்பு இந்த அளவுக்கு சூழல் மாசு இல்லை. இன்று சூழல் மாசு அதிகரித்திருக்கிறது. காலநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் மஞ்சள் தேய்த்துக் குளித்துவிட்டு வெயிலில் சென்று வந்தால், சருமம் கறுத்துப்போவதற்கான வாய்ப்பு முன்பைவிட 10 மடங்கு அதிகம். மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதை மறுப்பதற்கில்லை. மஞ்சளை உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும்போது அதிலுள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள், மஞ்சளின் முழுப்பலனும் கிடைக்கும். மஞ்சளுடன் துளி மிளகுத்தூளும் சேர்த்து எடுத்துக்கொள்வது இன்னும் சிறப்பு. எனவே, உள்ளுக்கு சாப்பிடக்கூடிய பொருளாக இருக்கும்பட்சத்தில், அதை வெளிப்பூச்சாக உபயோகிப்பதைவிட, சாப்பிடுவதன் மூலம் அதன் முழுப் பலனையும் பெற முடியும். இயற்கையான பொருள் எதுவானாலும் அதற்கு குறிப்பிட்ட அளவு புராசஸிங் தேவை. உதாரணத்துக்கு, எலுமிச்சைப்பழத்தில் நிறைய வைட்டமின் சி சத்து உள்ளது. அதற்காக அதை நேரடியாக சருமத்தில் தேய்த்தால் எரிச்சல் உணர்வு வரும். அதுவே அதை புராசெஸ் செய்து, வைட்டமின் சி சீரமாக உபயோகிக்கும்போது, சருமத்தின் உள்ளே முழுமையாக ஊடுருவும், எரிச்சலும் இருக்காது. ரோஜா இதழ்கள், பயத்தமாவு, மஞ்சள் என எல்லாமே இப்படித்தான். இயற்கையான இவையெல்லாம் சருமத்துக்கு நல்லது என நினைத்து உபயோகிக்கும்போது, அவற்றின் கொரகொர தன்மையால் சருமத்தில் உராய்வு ஏற்பட்டு, எரிச்சல், அரிப்பெல்லாம் ஏற்படும் என்பதால் இவற்றை நேரடியாக சருமத்தில் உபயோகிப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது. சருமத்திலுள்ள செல்கள் 14 நாள்களுக்கொரு முறை உதிர்ந்து புதிதாக உருவாகும். வயதாக, ஆக இந்தச் செயல் சற்று மந்தமாகும். அந்நிலையில் இறந்த செல்களை அகற்ற ஃபேஷியல் உதவும். ஜான்வி கபூர் முதல் ராஷ்மிகா மந்தனா வரை... அழகு சிகிச்சையில் டிரெண்டாகும் ஐவி தெரபி..! சருமத்திலுள்ள செல்கள் 14 நாள்களுக்கொரு முறை உதிர்ந்து புதிதாக உருவாகும். வயதாக, ஆக இந்தச் செயல் சற்று மந்தமாகும். அந்நிலையில் இறந்த செல்களை அகற்ற ஃபேஷியல் உதவும். ஆனால், மருத்துவர்களிடம் ஃபேஷியல் செய்துகொள்வது பாதுகாப்பானது. பார்லர்களில் என்ன பிராண்ட் உபயோகிக்கிறார்கள், வாடிக்கையாளரின் சருமத்தின் தன்மையை செக் செய்து அதற்கேற்ற பொருளை வைத்து ஃபேஷியல் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியே. ஃபேஷியல் செய்வது ஜிம்முக்கு செல்வது போன்றதுதான். ஜிம் போன அடுத்த நாளே உடலில் வித்தியாசம் தெரிந்துவிடாது, ஃபேஷியலும் அப்படித்தான். 15 நாள்களுக்கொரு முறை ஃபேஷியல் செய்து கொள்ளலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மாதம் ஒருமுறை செய்து கொள்ளலாம். சருமத்துக்கான எந்த அழகு சிகிச்சையையும் 18 வயதுக்குப் பிறகே தொடங்க வேண்டும். அதுவரை மாய்ஸ்ச்சரைசரும் சன் ஸ்கிரீனும் மட்டுமே போதும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Fitness: முதல் முறை ஜிம்முக்குப் போகப் போறீங்களா? - ஒரு நிமிஷம் ப்ளீஸ்!
ம ருத்துவம், ஃபிட்னஸ் எல்லோருக்கும் ஒரேமாதிரியாகப் பொருந்துவது இல்லை. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப இரண்டுமே மாறுபடும். குழுவாக இணைந்து எந்த ஒரு வேலையும் செய்யும்போது உற்சாகத்துடன் செய்ய முடியும். என்றாலும், அது ஃபிட்னஸுக்கு ஒத்துவருமா என்பது சந்தேகமே. இன்றைக்கு குழுவாக இணைந்து செய்யும் யோகா முதல் ஸும்பா ஃபிட்னஸ் நடனம் வரை குரூப் எக்சர்ஸைஸ் செல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. அதேபோல், ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்யச் செல்பவர்கள் பலரும், ஒரு வாரம், அதிகபட்சம் ஒரு மாதம் வரை கூட தாக்குப்பிடிப்பது இல்லை. ஜிம், ஒர்க்அவுட் மிஸ்டேக்ஸ் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் இந்த பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்கிறார் உடற்பயிற்சியாளர் விஜய் ஸ்டீபன். 1. வார்ம் அப் Fitness பயிற்சியாளர்கள் சொன்னாலும் சரி, பத்திரிகைகளில் படித்தாலும் சரி பலர் உடற்பயிற்சிக்கு முன் வார்ம் அப் செய்வதை தவிர்க்கின்றனர். நமது உடல் உடற்பயிற்சிக்கு தயாராக, நாம் மனதளவில் தயாரானால் மட்டும் போதாது, நமது உடலும் தயாராக வேண்டும். அதற்கு வார்ம் அப் பயிற்சிகள் அவசியம். ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகக் கூடிய வார்ம் அப் பயிற்சியைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக உடற்பயிற்சிகள் செய்வதால், தசைகள் பாதிக்கப்படும். தசைகளில் ஏற்படும் வலியால் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையானது, ஜிம்மில் சேர்ந்த இரண்டு, மூன்று நாட்களிலேயே குறைந்துவிடுகிறது. 2. முதல் நாள் ரிசல்ட் Fitness ஜிம்மில் சேர்ந்தவுடன், முதல் நாளே உடல் ஃபிட்டாகி விட வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். பலர் முதல் நாளே ஜிம்மில் உள்ள எல்லா கருவிகளையும் உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டும் என நினைப்பார்கள். பயிற்சியாளர்களை கலந்து ஆலோசிக்காமல் முதல் நாளே இப்படிச் செய்வது தவறு. 3. ஆன்லைன் ஒர்க்அவுட் ஆன்லைன், யூடியூப், ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்களில், பயிற்சி வீடியோக்களை பார்த்து பலர் வீட்டிலேயே பயிற்சிகளை செய்ய முயற்சிக்கிறார்கள். இவை எல்லாம், பயிற்சி செய்யத் தூண்டுபவையே தவிர, முன்மாதிரி அல்ல. ஒவ்வொருவர் உடல்நிலை, அவரது ஃபிட்னஸ் ஆகியவற்றைப் பொறுத்து பயிற்சிகள் வேறுபடும். எனவே உடற்பயிற்சியாளரை நேரில் பார்த்து, பரிசோதித்து, அவர் வழிகாட்டுதலின்படி பயிற்சி பெற வேண்டும். நன்கு பயிற்சி பெற்றபிறகு வீட்டில் சுயமாக செய்யலாம். 4. டிரெட்மில் தவறுகள் fitness Health: ஆரோக்கியமா இருக்கணுமா? சைக்கிளிங் செய்யுங்க... ஏனெனில்?! முதன் முதலில் ஜிம்முக்கு பயிற்சி செய்ய வருபவர்களுக்கு குறிப்பிட்ட நேரம், குறைவான வேகத்தில் டிரெட்மில்லில் நடக்கச் சொல்வார்கள் டிரெய்னர்கள். ஒரு சிலர் முதல் நாளே ஜிம்மில், நல்ல ஸ்பீடு வைத்து ஓட ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அடுத்த 10 நிமிடத்திலேயே களைப்படைந்து எந்தவித பயிற்சியும் செய்ய முடியாமல் வீட்டுக்குத் திரும்புவார்கள். ஒருவருக்கு அவரது ஃபிட்னஸை பொறுத்துதான் எவ்வளவு நேரம், எவ்வளவு கிலோ மீட்டர் வேகத்தில் ஜிம்மில் நடக்கலாம் அல்லது ஓடலாம் என முடிவு செய்ய முடியும். திடீரென சாகசங்களை செய்ய எப்போதுமே, ஆசைப்படக் கூடாது. படிப்படியாகத்தான் பயிற்சிகள் செய்ய வேண்டும். 5. ரெகுலராக வர வேண்டும் fitness பத்தில் ஆறு அல்லது ஏழு பேர் ஜிம்முக்கு சேர்ந்த சில நாட்களில், ஏதேதோ சாக்கு போக்குளைச் சொல்லி ஜிம்முக்கு வருவதை நிறுத்திவிடுகிறார்கள். வாழ்க்கையில் முதன் முதலாக ஜிம்முக்கு செல்லும்போது, அங்கே சில பயிற்சிகளைச் செய்வதால், தசைகளில் சிறு சிறு காயங்கள், தசைப்பிடிப்பு, தொடை வலி, தோள்பட்டை வலி போன்றவை ஏற்படுவது சகஜம். அவர்கள் சிறு ஓய்வுக்குப் பிறகு ரெகுலராக ஜிம்முக்கு வர வேண்டியது அவசியம். குறைந்தபட்சம், ஆறு மாதங்கள் தொடர்ந்து லீவு போடாமல் ஜிம்முக்கு வந்தால் மட்டுமே ஃபிட்னஸ் மேம்படும். 6. வருத்திக்கொண்டு பயிற்சி செய்வது fitness உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது அல்ல. சிலர், மிக வேகமாக ஃபிட்டான தோற்றத்தைப் பெற வேண்டும் என்பதற்காக உடலை வருத்தி பயிற்சிகள் செய்யத் தொடங்குவர். இதனால், வெகுவிரைவில் உடல் சோர்ந்துவிடும். உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும். 7. ஜூம்போ டான்ஸ்/ ஏரோபிக்ஸ் ஜூம்போ டான்ஸ்/ ஏரோபிக்ஸ் ஜூம்போ டான்ஸ் போன்றவை இப்போது ஜிம்களிலேயே கற்றுத் தரப்படுகின்றன. ஒரு மணி நேரம் ஜூம்போ டான்ஸ் செய்வதால் ஐநூறு முதல் இரண்டாயிரம் கலோரிகள் வரை கூட எரிக்க முடியும். ஆனால், பல இடங்களில் 30 - 40 பேர் கூட்டம் கூட்டமாக டான்ஸ் செய்யும்போது ஒரு சிலருக்கு முழு பலன்கள் கிடைப்பதில்லை. ஜூம்போ டான்ஸ்/ ஏரோபிக்ஸ் தெரியாதவர்கள் எப்போதும் டிரெய்னருக்கு முன் வரிசையில், அவர் சொல்லித் தருகிறபடி படிப்படியாக ஒவ்வொரு நிலையாக ஏரோபிக்ஸ் பயிற்சிகளை செய்ய வேண்டும். ஏதோ ஒரு வரிசையில், டிரெய்னரின் பார்வையில்படாமல் நின்று பயிற்சி செய்தால், சரியான ஸ்டெப்ஸ்களை கற்றுக்கொள்ள முடியாது. அதோடு நேர விரயம், பண விரயம்தான் ஏற்படும். ஏரோபிக்ஸ் பயிற்சிக்கு நன்றாக பழக்கப்பட்டவர்கள் பின் வரிசைகளில் குழுவோடு சேர்ந்து பயிற்சி செய்வதில் தவறில்லை. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Plastic: `இதயத்தைப் பாதிக்கும் ஷாம்பூ பாட்டில்'- அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு; விரிவான தகவல்கள்!
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சந்தேகத்துக்கு உட்படுத்துகிறது இந்த ஆய்வு. நம் இதயத்தை பலவீனமடைய செய்து மரணத்துக்கு வழிவகுக்கும் வில்லன், ஒரு வேதிப்பொருள், நாம் விரும்பி பயன்படுத்தும் ஷாம்பூவிலும், ஆசையாக போடும் மேக்கப்பிலும், சமையலறையில் இருக்கும் டப்பா அல்லது பிற பொருட்களிலோ இருக்கலாம் என அந்த ஆய்வு கூறுகிறது. நீண்டநாட்களாக நம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக நாம் அச்சம் கொள்ளும் பிளாஸ்டிக், நம் உடலிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கண்டறிந்துள்ள ஆய்வு, eBiomedicine இதழில் வெளியாகியிருக்கிறது. பித்தலேட்டுகள் எனப்படும் சிந்தடிக் வேதிப்பொருட்கள் நம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கின்றன. இவை இதய நோய்களால் மரணம் ஏற்படுவதை அதிகரிக்கின்றன. plastic food package 2018ம் ஆண்டு உலகம் முழுவதும் 55-64 வயதினருக்கு இதய நோய்களால் ஏற்பட்ட இறப்புகளில் 13.5% மரணங்களுக்கு இந்த வேதிப்பொருட்கள் காரணமாயிருந்திருப்பதாக ஆய்வில் கூறுகின்றனர். பிளாஸ்டிக்குகளை மென்மையானதாகவும், நீண்டநாள் உழைப்பதாகவும், நெகிழ்வானதாகவும் வைத்திருக்க பித்தலேட்டுகள் சேர்க்கப்படுகின்றன. இவை இதய தமனிகளில் (கரோனரி) வீக்கத்தை ஏற்படுத்தி இதய நோயால் மரணம் ஏற்பட காரணமாகின்றன. இதய நோயால் அதிக மரணங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. பித்தலேட்டுகள் இதற்கு முன்னரே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களாக எச்சரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஆண்களின் இனப்பெருக்கத் திறனை குறைக்கும் எனக் கூறப்பட்டு வந்தது. இவை விந்தணுக்கள் எண்ணிக்கையையும் டெஸ்டோஸ்டிரோன் அளவையும் குறைத்து பிறப்புறுப்பில் குறைபாட்டை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது ஆஸ்துமா, குழந்தைகள் உடல்பருமன் மற்றும் புற்றுநோயுடனும் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதய நோய்களை தீவிரப்படுத்தி மரணத்தை ஏற்படுத்துவதில் டை(2-எத்தில்ஹெக்சைல்) என்ற குறிபிட்ட பித்தலேட் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை DEHP என்று அழைக்கின்றனர். பித்தலேட்டுகள் பரவல் உலகம் முழுவதும் உள்ளது. 2018ம் ஆண்டு கிட்டத்தட்ட 200 நாடுகளில் 3.5 லட்சம் மரணங்களுக்கு பித்தலேட்டுகள் காரணமாக இருந்துள்ளன. இவற்றில் தெற்காசியா, மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் அதிக மரணங்கள் ஏற்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. Plastic in Production ஆபிரிக்காவில் இதய பாதிப்பால் ஏற்பட்ட மரணங்களில் 30% பித்தலேட்டுகளுடன் தொடர்புள்ளவை. மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் இது 25% ஆக உள்ளது. இதய நோயால் அதிக மரணங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே நமக்கு இந்த வேதிப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம். நியூயார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வு நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் லியனார்டோ ட்ரசாண்டே மற்றும் அவரது குழுவினர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். DEHP என்ற வேதிப்பொருளாலின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் எத்தனை இதய நோயாளிகள் மரணமடைந்துள்ளனர் என்பதைக் கண்டறிவதே அவர்களது ஆய்வின் நோக்கமாக இருந்தது. இதன் மூலம் DEHP தாக்கம் எத்தனை வலிமையாக இருக்கிறது என்பதை அறிய முடியும். இதற்காக 2018ம் ஆண்டில் இதய நோயால் மரணமடைந்த 55 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டோரின் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதய நோயால் இறப்பவர்களின் தரவுகளை IHME நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளனர். மக்கள் எந்த அளவு DEHP வேதிப்பொருளுக்கு வெளிப்படுகின்றனர் என்ற தரவுகளையும் மக்கள் தொகை பற்றிய தரவுகளையும் சேகரித்துள்ளனர். முந்தைய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு DEHP எவ்வளவு ஆபத்தானது என்பதை கணக்கிட்டுள்ளனர். 2008ம் ஆண்டு DEHP பாதிப்பு எந்த அளவில் இருந்துள்ளது என்பதை கண்டறிய உடலில் உள்ள ரசாயனங்களை அளவிடும் ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர். 2018ம் அந்த பாதிப்பால் நிலைமை எந்த அளவு மோசமாகியிருக்கிறது என்பதையும் அளவிட்டுள்ளனர். உடலில் உள்ள DEHP அளவுக்கும் அது இதய நோயாளிகளில் மரணத்தை ஏற்படுத்துவதற்குமான விகிதத்தைக் கணக்கிட்டிருக்கின்றனர். நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் லியனார்டோ ட்ரசாண்டே ஆய்வின் முடிவில் நம் உடலில் DEHP வேதிப்பொருள் இருப்புக்கு 98% நெகிழி (Plastic) பயன்பாடுதான் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அதிக மக்கள் தொகை மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். 2018ம் ஆண்டு இந்தியாவில் 103,587 மரணங்களுக்கு DEHP காரணமாக இருந்திருக்கிறது. இந்த வேதிப்பொருளால் அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்துள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. மக்கள் தொகையைக் கடந்து அதிகப்படியான பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மோசமான பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை இதற்கு காரணம் என்கின்றனர். DEHP என்பது என்ன? எல்லா பித்தலேட்டுகளும் பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கக் கூடிய நாப்தலீன் அல்லது ஓ-சைலீனில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. DEHP (di-2-ethylhexyl phthalate) நெகிழ்வானதாகவும் கொழுப்பில் கரையக்கூடியதாகவும் இருக்க, புரோப்பிலீன் போன்ற பெட்ரோலியத்திலிருந்தே கிடைக்கக் கூடிய ஆல்ஹால் சேர்க்கப்படுகிறது. பெரும்பாலும் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களே இதைத் தயாரிக்கின்றன. இயற்கையில் இந்த வேதிப்பொருளே கிடையாது. பிவிசி உள்ளிட்ட மென்மையான வெகுமக்கள் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்குகளில் இது பயன்படுத்தப்படுகிறது. கட்டுமானப் பொருட்கள், உணவு பேக்கேஜிங், மருத்துவ உபகரணங்கள், நுகர்வு பொருட்களில் DEHP உள்ளது. இந்த வேதிப்பொருள் முன்னரே கூறியதுபோல பிளாஸ்டிக்குக்கு நெகிழ்வுத் தன்மையும் மென்மையும் நீண்டநாள் உழைக்கும் தன்மையும் வழங்கினாலும், இது பிளாஸ்டிக்குடன் வேதியல் பிணைப்பைக் கொண்டிருப்பதில்லை. அதாவது பிளாஸ்டிக் மூலக்கூறுகளுடன் ஒட்டியிருக்காமல், சப்பாத்திக்கு மாவில் எண்ணெய் கலப்பதுபோல, பிளாஸ்டிக்குடன் கலக்கப்படுகிறது. இதனால் இது பிளாஸ்டிக்கில் இருந்து பிரிந்து நம் உடலுக்குள் செல்வது எளிமையாகிறது. குறிப்பாக உணவு டப்பாளில் எண்ணெய்ப்பாங்கான பொருட்கள் இருந்தால் எளிதாக அதில் கலந்துவிடும். Plastic நீண்டநாட்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும் அதிலிருந்து கசிந்தோ, காற்றுடன் கலந்தோ, மற்ற பொருட்கள் தேய்த்தோ DEHP வெளியேறிவிடும். ஆனாலும் பிளாஸ்டிக்குக்கு குறைந்த செலவில் நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும் இந்த வேதிப்பொருளைச் சேர்ப்பதுதான் லாபகரமானதென்பதால் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. Baobab: ஆப்பிரிக்காவின் ``Tree of Life தமிழகம் வந்தது எப்படி? - அதிசய மரம் பற்றிய அடடே தகவல்கள்..! மருத்துவர் சொல்வது என்ன? DEHP உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் பா.கவின், டி.எச்.இ.பி என்பது நெகிழிப் பொருள்களுக்கு மென்மையூட்டியாக பயன்படுத்தப்படுகின்றது. இப்பொருள் நம் அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழல் காரணியாக நம் உடலை ஏதோ ஒரு வகையில் வந்தடைகின்றது. பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ், பாட்டில், உணவைப் பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள், வீட்டு டைல்ஸ், வயர், கேபிள், அழகுப் பொருட்கள், சில ஷாம்பூ என்று பல காரணிகள் உள்ளன. நாளமில்லா சுரப்பிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த டி.எச்.இ.பி நம் உடலை மூன்று வகையில் அணுகுகின்றது: சுவாசப் பாதை மூலமாகவும், வாய் வழியாகவும் மற்றும் தோல் வழியாகவும். உடலுக்குள் DEHP அப்படியே இருப்பதில்லை, வளர்சிதை மாற்றம் மூலம் MEHP, MEHHP, MEOHP, MECPP ஆகிய உயிரினக்கழிவுகளாக (metabolites) மாறுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த வேதிப்பொருட்களின் அளவை வைத்தே ஒருவரின் உடல் எந்தளவுக்கு DEHP -க்கு வெளிப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவார்கள். Blood சீனாவில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளின் உடல் பருமனுக்கு ஒரு காரணியாகவும் இந்த டி.எச்.இ.பி அமைகின்றது. இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை (oxidative stress) ஏற்படுத்தி DNA-வைப் பாதித்து 'P53' என்று கூறப்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. NHANES என்ற அமைப்பு 2011 முதல் 2018 வரை நடத்திய ஆய்வில் பல புற்றுநோயாளிகளின் உடலில் இந்த வேதிப்பொருள் அதிகமாக உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் இது கருவுற்றிருக்கும் தாய் மூலம் குழந்தைகளுக்கும் இந்த வேதிப்பொருள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாவதில் பிரச்னையை விதைப்பை, விந்தணுக்களில் பிரச்னையும், பெண்களுக்குக் கருமுட்டை வளர்ச்சியில் பிரச்னை என்று பாதிப்பை ஏற்படுத்துகின்றது. என்றார். மேலும், விலங்குகளில் ஏற்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் விதைப்புற்று, மார்பகப்புற்று, பிராஸ்டேட் புற்று ஆகியவற்றிற்கு காரணியாக இந்த டீஹெச்இபி அமைந்துள்ளது. கருக்குழந்தைகள் கருவில் இருக்கும் வேளையில் இந்த வேதிப்பொருள் அவர்களைப் பாதித்தால், பிற்கால வாழ்வில் புற்று வருவது விலங்குகளில் கண்டறியப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பிகளின் சுரப்பைப் பாதிக்கின்றது. மனிதர்களுக்கு லூயி பாடி டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய் உள்ளவர்களின் மூளை தண்டுவள நீரில் (cerebro spinal fluid) டிஹெச்இபி-யின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதய தசைகள், செல்கள், ரத்த நாளங்கள் ஆகியவற்றிற்கும் பாதிப்பை ஏற்படுத்தி, பல இதய கோளாறுகளுக்கு ஒரு அடித்தளமாக இது அமைகின்றது. சில மணிநேரங்கள் முதல் ஒன்றிரண்டு நாட்கள் வரை உடலில் இருக்கும் DEHP-ல் இருந்து வரும் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள், சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். ஆனால் அதனால் ஏற்பட்ட பாதிப்பு நீண்ட நாட்களுக்கு இருக்கும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் DEHP-உடன் தொடர்புகொள்வதுதான் தீவிர பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பொது மருத்துவர் பா.கவின் இன்டர்நேஷனல் ஏஜென்சி ஆஃப் ரிசர்ச் ஆன் கேன்சர் IARC இந்த டிஹெச்இபி-யை கிளாஸ் 3 காரணியாகக் கூறுகின்றது. அதாவது விலங்குகளில் இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதாகவும், மனிதர்களுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அது கூறுகின்றது. ஆனால் பல ஆராய்ச்சியாளர்கள் இந்த டிஹெச்இபி மனித இனத்திற்கு கேடு விளைவிப்பதாக அறிவிக்க வேண்டும் என்ற கூற்றை முன்வைக்கின்றனர். நாம் நம் அன்றாட வாழ்வில் எப்படி இந்த டிஹெச்இபி-யைத் தவிர்ப்பது என்று பார்த்தால், பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும். இது 1958 ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வேதிப்பொருளாக இருந்தாலும், இது குறித்த ஆராய்ச்சிகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றார். எந்தெந்த பொருட்களில் DEHP அபாயம் அதிகம்? மருத்துவத்துறையில் பயன்படுத்தக் கூடிய டியூப்கள், பைகள் மூலம் DEHP உடலில் எளிதாக நுழைய முடியும். இதய நோயாளிகளுக்கு இந்த பொருட்களைப் பயன்படுத்துவது அபாயத்தை அதிகரிக்கிறது. உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைப்பது, பிளாஸ்டிக் கவரில் ( PVC cling wrap) சுற்றி வைப்பது, உணவு பரிமாற பயன்படுத்தும், உணவு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் உணவில் இந்த வேதிப்பொருள் கலக்கிறது. குறிப்பாக கொழுப்பு நிறைந்த, சூடான உணவுப்பொருட்கள் மூலம் எளிதாக உடலுக்குள் நுழைகிறது. Plastic Toys அன்றாடம் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள், ஷாம்பு, லோஷன், வாசனைப் பொருட்கள், தரையில் ஒட்டும் ஃப்ளோரிங் ஸ்டிக்கர்கள், காரில் இருக்கும் சீட் கவர்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளும் கூட இந்த வேதிப்பொருளைக் கொண்டிருக்கின்றன. அபாயத்தை தவிர்ப்பது எப்படி? பிவிசி பிளாஸ்டிக்குகளைத் தவிர்ப்பது அவசியம். இதனை மறுசுழற்சி குறியீடு எண் 3 என இருப்பதைக் கொண்டு அறியலாம். குழந்தைகள் இதனால் எளிதாக பாதிக்கப்படலாம் என்பதால், குழந்தைகளுக்கு மர விளையாட்டு சாமான்களைக் கொடுக்கலாம். தண்ணீர் பாட்டில்கள், உணவு டப்பாக்களுக்கு பிளாஸ்டிக் அல்லாத பொருட்களைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக செராமிக், கண்ணாடி பொருட்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக மைக்ரோவேவில் சூடுபடுத்தும்போது பிளாஸ்டிக் கூடவே கூடாது. லோஷன்கள், சலவைப் பொருட்கள், சுத்தப்படுத்தும் பொருட்களில் மணமற்றவற்றைத் தேர்வு செய்யலாம். உணவுப் பொருட்களை வைக்க கண்ணாடி, செராமிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், மர பெட்டகங்களைப் பயன்படுத்தலாம். பெட்டிகளில் அடைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகளுக்கு பதிலாக ஃப்ரெஷ்ஷானவற்றை வாங்கலாம். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். Air Freshener -களைத் தவிர்க்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பிளாஸ்டிக் மாசு உடலுக்குள் நுழைவதைத் தடுக்கும். மறுசுழற்சி குறியீடு எண் 6 மற்றும் 7 என இருக்கும் பிளாஸ்டிக்குகளையும் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகளில் DEHP-free உபகரணங்கள் இருக்கிறதா எனக் கேட்கலாம். ஷாம்பு, லோஷன், வாசனை திரவியம், நெயில் பாலிஷ்களில் வாசனை இல்லாத, பித்தலேட்டுகள் இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். குழந்தைகள், கர்பிணி பெண்கள் மற்றும் முதியோர்களை அதிக கனவத்துடன் கவனித்துக்கொள்ளலாம். உலகளாவிய அரசுகள் பித்தலேட்டுகள் தயாரிப்பை தடை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பிளாஸ்டிக் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் இந்த ஆய்வு முன்மொழியப்படும் எனக் கூறப்படுகிறது. சுருக்கமாக பிளாஸ்டிக்கில் கலக்கப்படும் செயற்கையான DEHP வேதிப்பொருள், நாம் நெகிழிப்பொருட்களைப் பயன்படுத்தும்போதெல்லாம் நம் உடலுக்குள் நுழைந்து ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. ஒரு நாளில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும் இதன் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, தினசரி எல்லாவற்றுக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். சென்டினல் தீவு: கால் வைத்த அமெரிக்கர் கைது; இந்த தீவின் ரகசியங்கள் என்ன?
Sexual Health: ஏன் சில ஆண்களும் பெண்களும் ஆர்கசமே அனுபவிப்பதில்லை? - காமத்துக்கு மரியாதை 246
தன் உடலை நேசிக்காதவர்களும், தன் உடல் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதவர்களும் தாம்பத்திய உறவில் ஆர்கசம் அடைவதில் சிக்கல் ஏற்படலாம் என்கிறார், சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். அது எப்படி என்று அவரிடம் கேட்டோம். Sex education செக்ஸ் ஆபாசம், அசிங்கம் என்கிற பிற்போக்கு எண்ணங்கள் வேக வேகமாக மாறிக்கொண்டே வருகிறது! ''உச்சக்கட்டம் அல்லது ஆர்கசம் என்கிற வார்த்தைகூட தெரியாமல் இருந்தது ஒருகாலத்து தலைமுறை. அது தெரிந்த பிறகும், அது ஆண்களுக்கான விஷயம்போலவே இருந்து வந்தது. செக்ஸில் ஆர்வம் காட்டுகிற பெண்கள் மோசமான கேரக்டர் என்கிற பொதுபுத்தியும் சமூகத்தில் இருந்தது. இப்போதும் இதன் மிச்சம் நம் குடும்பங்களில் இருக்கவே செய்கிறது. ஆனால், கடந்த 10 வருடங்களில் செக்ஸ் ஆபாசம், அசிங்கம் என்கிற பிற்போக்கு எண்ணங்கள் வேக வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. இது மிக மிக ஆரோக்கியமான விஷயம். இந்த நேரத்தில், ஒரு கணவனும் மனைவியும் ஆர்கசம் அடைவதைத் தடை செய்யும் ஒரு விஷயத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்'' என்றவர் தொடர்ந்தார். பிரெஸ்ட்டை மட்டும் தொட விடாமல் தடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்! ''எல்லா காலத்திலும் பெரும்பாலான ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, தங்களுடைய அந்தரங்க உறுப்பு குறித்த ஏதோவொரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். உதாரணத்துக்கு, சில சம்பவங்கள். அவர்களுக்கு திருமணமான புதிது. உறவின்போது, கணவரை பிரெஸ்ட்டை மட்டும் தொட விடாமல் தடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார் மனைவி. அது பிடிக்கவில்லையா; அங்கே ஏதாவது பிரச்னையா என்று கணவர் வற்புறுத்திக் கேட்ட பிறகுதான், 'தன்னோட பிரெஸ்ட் சிறியதாக இருப்பதால்தான் அப்படி தடுத்ததாகத்' தெரிவித்திருக்கிறார். Sex education இன்னொரு சம்பவத்தில், மார்பகக்காம்பைச் சுற்றி ரோம வளர்ச்சி அதிகமாக இருந்ததால், அந்தப் பெண் கூச்சப்பட்டுக்கொண்டு உறவைத் தவிர்த்து வந்திருக்கிறார். இன்னுமொரு சம்பவத்தில், ஓர் ஆண் 'தன்னுடைய உறுப்பு சிறிதாக இருக்கிறது என்கிற தாழ்வு மனப்பான்மையில்' மனைவியிடம் நெருங்காமலே இருந்தார். Sexual Health: ஆண்மை என்றால் என்ன? - பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி! | காமத்துக்கு மரியாதை - 160 அவர்களால் ஆர்கசம் அனுபவிக்கவே முடியாது! தன் உடல் மீதான தாழ்வு மனப்பான்மை காரணமாக உறவைத் தவிர்ப்பவர்கள் ஒருவகை என்றால், முதல் சம்பவம்போல தன் உடலின் சில பகுதிகளை மட்டும் மறைப்பவர்கள் இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகையினர் உறவுகொள்ளும்போதும், தங்களுடைய உடல் குறைபாடு தன் வாழ்க்கைத்துணைக்கு தெரிந்துவிடுமோ என்கிற அச்சத்திலேயே இருப்பார்கள். இந்த அச்சம் காரணமாக அவர்களால் ஆர்கசம் அனுபவிக்கவே முடியாது. சில ஆண்களும், பெண்களும் உச்சக்கட்டம் அடையாமல் போவதற்கு இது முக்கியமான காரணம். Dr. Kamaraj Sexual Health: எதிர் பாலினம் மீது ஈர்ப்பு இல்லாதவர்களும் இருக்கிறார்கள்... ஏன் இந்த நிலைமை? கொழு கொழு பெண்கள்தான் செக்ஸி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்! உடல் அழகு தொடர்பான கருத்துகள் சமூகத்தில் மாறிக்கொண்டே இருக்கின்றன. 20, 25 வருடங்களுக்கு முன்னால் கொழு கொழு பெண்கள்தான் செக்ஸி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது ஸ்லிம்மாக இருப்பதுதான் செக்ஸி என்கிறார்கள். ஆண்களை எடுத்துக்கொண்டால், எத்தனை பேர் கட்டுமஸ்தான உடலுடன் இருக்கிறார்கள்? உங்கள் உடல் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்; நேசியுங்கள்... ஆணோ, பெண்ணோ ஆரோக்கியமான உடலுடன் இருந்தாலே தாம்பத்திய உறவு இனிமையாக இருக்கும்; ஒவ்வொரு உறவிலும் ஆர்கசமும் கிடைக்கும்'' என்கிறார் டாக்டர் காமராஜ். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்தியம்; வெஜைனல் க்ரீம் நிஜமாகவே உதவுமா?
Doctor Vikatan: என் வயது 48. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வெஜைனா வறட்சி மிகவும் சிரமத்தைக் கொடுக்கிறது. இதற்கு க்ரீம் உபயோகிக்கலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையிலேயே பலன் தருமா.. தொடர்ந்து உபயோகித்தால் பக்க விளைவுகள் ஏதும் வருமா..? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மெனோபாஸின்போது வெஜைனா பகுதியில் வறட்சியும் எரிச்சலும் ஏற்படுவது சகஜம். இதனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதில் சிரமம் இருக்கும். மருந்துக் கடைகளில் கிடைக்கும் லூப்ரிகன்ட்ஸை வாங்கி தாம்பத்திய உறவுக்கு முன் பயன்படுத்தி இந்த அவதியிலிருந்து விடுபடலாம். பெரிமெனோபாஸிலும் சரி மெனோபாஸிலும் சரி, பிறப்புறுப்பில் திரவக்கசிவு இருக்கும். 'வெஜைனல் எட்ரோஃபி' (Vaginal atrophy) என்ற பிரச்னையாலும் இப்படி இருக்கலாம். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் வெஜைனா பகுதியில் வறட்சி அதிகமாகும். அந்த நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் வெஜைனாவிலிருந்து கசிவு ஏற்படலாம். அந்தக் கசிவானது நீர்த்து, மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் வெளிப்பட்டால் வெஜைனா பகுதி ஆல்கலைனாக மாறிவிட்டதாக அர்த்தம். அதன் விளைவாக அங்கே பாக்டீரியா கிருமிகள் வளர்வது அதிகரிக்கும். அது வெஜைனா பகுதியில் இன்ஃபெக்ஷன் ஏற்படவும் காரணமாகும். அதற்கு சிகிச்சை அவசியம். தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கசிவு என்று தெரிந்தால் வெஜைனல் லூப்ரிகன்ட் அல்லது வெஜைனல் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஹார்மோன் க்ரீம், ஹார்மோன் தெரபி போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். வெஜைனல் க்ரீம் உதவுமா? Doctor Vikatan: மெனோபாஸ் வந்த பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை அவசியமா? மெனோபாஸ் வயதில் இருக்கும் பல பெண்களும், 'கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறார்... எனக்கு விருப்பமும் இல்லை. வலியும் அதிகமாக இருக்கிறது...' என்ற புலம்பலோடு வருவார்கள். இவர்கள், மருத்துவ ஆலோசனையோடு ஜெல், க்ரீம், ஹார்மோன் மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சிலருக்கு திடீரென லேசான ப்ளீடிங் வரலாம். வெஜைனா சருமமானது வறண்டும் மெலிந்தும் போய் விடும். இந்த இரண்டையும் சரிசெய்ய ஈஸ்ட்ரோஜென் க்ரீம் உதவும். இவை எல்லாமே ஒரு பெண்ணின் வளர்சிதை மாற்றத்தோடு தொடர்புடையவை. எனவே, இந்தச் சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் காலகட்டத்தைத் தாண்டி எடுக்கக்கூடாது. அப்படித் தொடர்ந்தால் கல்லீரல் கூட பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ ஆலோசனையின்றி எதையும் உபயோகிக்காதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மனிதனைக் கடித்து இறந்த பாம்பு; வேப்பங்குச்சியால் பல் துலக்கியதுதான் காரணமா? - நிபுணர்கள் சொல்வதென்ன?
பாம்பு கடித்து மனிதர்கள் இறந்த செய்தியை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சில தினங்களாக மனிதனைக் கடித்தப் பாம்பு இறந்த செய்தி ஒன்று வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பாம்புக்கடி சச்சின் நாக்பூரே மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாலகாட் மாவட்டத்தில் உள்ள சச்சின் நாக்பூரே (25) என்ற இளைஞர், தற்செயலாக விஷப்பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அதனால், அந்தப் பாம்பு அவரை கடித்துள்ளது. சிறிது நேரத்தில் சச்சினைக் கடித்த அந்தப் பாம்பு அங்கேயே உயிரிழந்துள்ளது. பாம்பு கடிப்பட்ட சச்சின் நாக்பூரே, 'கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே நான் வேப்பங்குச்சி, மா குச்சி போன்றவற்றைக் கொண்டுதான் பல் துலக்கி வருகிறேன். அதனால்தான் அந்தப் பாம்பு கடித்தவுடன் எனக்கு அதன் விஷம் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அந்தப் பாம்பின் விஷமே அதைக் கொன்றுவிட்டது' எனப் பேசியிருந்தார். அவர் பேசிய அந்த செய்தி சில நாள்களாக பரவலாகப் பேசிப்பட்டு வருகிறது. பாம்பின் விஷமே பாம்பினைக் கொல்லுமா? உண்மையில் மனிதர்களைக் கடித்தால் பாம்பு இறந்துபோவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா; பாம்பின் விஷமே பாம்பினைக் கொல்லுமா; அவர் சொன்னதுபோல வேப்பங்குச்சி, மாமரக்குச்சி போன்றவற்றால் பல் துவக்கினால் விஷக்கடியில் இருந்து உயிர்ப்பிழைக்க முடியுமா..? அலசுகிறது இந்தக் கட்டுரை. ஆராய்ச்சி இயக்குநர் கலையரசன் மனிதனின் நோய் எதிர்ப்புத் திறன் ஒரு விஷப்பாம்பைக் கொல்லுமா? உண்மையில் மனிதனின் நோய் எதிர்ப்புத் திறன் ஒரு விஷப்பாம்பைக் கொல்லுமா என்பதை விவரிக்கிறார் சென்னை பாம்பு பூங்கா அறக்கட்டளையின் ஆராய்ச்சி இயக்குனர் வி.கலையரசன். அவர் பேசுகையில், மனிதனைக் கடித்ததால் பாம்பு இறந்து விட்டது என்பது ஒரு கட்டுக் கதையாகத்தான் இருக்கும். இதுவரை இப்படியொரு நிகழ்வு நடக்கும் என எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆய்வும் சொல்லவில்லை. மனிதர்களுக்கு தானாகவே பாம்புக் கடிக்கான நோய் எதிர்ப்புத்திறன் உண்டாவதற்கு வாய்ப்புகள் இல்லை. உலகிலேயே குதிரைகளுக்கு மட்டும்தான், பாம்பக்கடிக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் கொண்ட எதிர்விஷ புரதங்களை உருவாக்கக்கூடிய தன்மை உண்டு. அதனால்தான் பாம்புக் கடிக்கு எதிரான 'Anti venom' (எதிர்விஷம்) மருந்து தயாரிப்பில் குதிரைகள் பயன்படுத்தப்படுகிறது . பாம்பு கொன்ற மனிதர்களைவிட மனிதன் கொன்ற பாம்புகள்தான் அதிகம்..! - வந்ததும்... வாய்த்ததும்..! அந்த செத்துப்போன பாம்பை ஆய்வு செய்தால் மட்டுமே... அந்த மனிதரை கடித்தவுடன் பாம்பு இறந்து போனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அந்தப் பாம்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம். பாம்புகளுக்கு அதனுடைய வாய்ப்பகுதியிலோ, விஷப்பற்களிலோ தொற்று பாதிப்பு ஏற்படும். அவ்வாறு தொற்று ஏற்பட்டிருக்கும்போது பாம்புகள் உணவு உட்கொள்ளாமல் சிறிது காலத்திலேயே இறந்துவிடும். அந்த இறந்த பாம்பிற்கும் அந்தப் பிரச்னை இருந்திருக்கலாம். எந்த ஒரு மனிதனும் பாம்பு கடிக்கிறது என்றால் அமைதியாக நின்றுகொண்டிருக்க மாட்டார்கள். அதை அடிப்பது, மிதிப்பது போன்று தொந்தரவுகளை ஏற்படுத்தவே செய்வார்கள். பாம்புகளின் தலையை அழுத்தமாக மிதித்தால்கூட இறந்துவிடும். அந்த நபர் பதற்றத்தில் அதன் தலையை மிதித்து இருப்பார். அதனால்கூட அந்தப் பாம்பு இறந்திருக்கலாம். அதை ஆய்வு செய்தால் மட்டுமே, அது இறந்ததற்கான உண்மையானக் காரணத்தைக் கண்டறிய முடியும்'' என்கிறார் கலையரசன். வேப்ப மரங்கள் இயற்கை குச்சிகளால் பல் துலக்குவதால் விஷமுறிவு தன்மை ஏற்படுமா? வேப்பங்குச்சி, மாமரக்குச்சி போன்ற இயற்கை குச்சிகளைப் பயன்படுத்தி பல் துலக்குவதால் மனித உடலில் விஷமுறிவு தன்மையை ஏற்படுமா என்பதை விளக்குகிறார் திருப்பூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார். ''அந்தப் பாம்பு இறந்துபோனதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். மா,வேம்பு போன்ற மரத்தின் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கியதால்தான் இந்த பாம்பு இறந்து இருக்கும் என கூறியிருப்பது புரிதல் இல்லாமல் கூறியிருக்கும் ஒரு தவறான தகவல். சித்த மருத்துவர் விக்ரம் குமார் ஆலமரம், வேப்பமரம், புங்கை மரம், நாயுறுவி, மருதம், நாவல்மரம் ஆலமரம், வேப்பமரம், புங்கை மரம், நாயுறுவி, மருதம், நாவல்மரம் போன்றவற்றின் குச்சிகளையோ, வேர்களையோ கொண்டு பல் துலக்கும்போது பற்கள், ஈறுகள் வலுப்பெறும். வாய்ப்பகுதியில் இருக்கும் கிருமிகள் முற்றிலும் அழிந்துவிடும். நாக்கு சுத்தமடையும். தவிர, இதுபோன்ற இயற்கைப்பொருள்களை கொண்டு பல் துலக்குமபோது அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்தான். அது சில கிருமிகள் உடலுக்குள் செல்வதையோ, பல்கி பெருகுவதையோ தடுக்கும்தான். ஆனால், கொடிய பாம்புகளின் விஷத்தன்மையை முறிக்கும் அளவுக்கு பலன் தராது. Snake: பாம்பு வீட்டுக்கு வருவது ஏன்? ஷூக்குள்ளே, மாடித்தோட்டத்துக்குள்ளே போகுமா? -நிபுணர் விளக்கம்! சித்த மருத்துவத்தில் குறிப்பிடவில்லை. 'இந்த இயற்கை பொருள்களைக் கொண்டு பல் துலக்குவதால் விஷ முறிவு தன்மை உடலில் உருவாகும்' என இதுவரை சித்த மருத்துவத்தில் குறிப்பிடவில்லை. ஆனால், விஷக்கடி சிகிச்சைக்கான புத்தகத்தில் 'நிம்பை எண்ணெய் உள்ளிருந்தால் விஷக்கடி ஒடும் அன்றோ' என்று குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது, வேப்ப எண்ணெய் எடுத்துக்கொள்ளும்போது விஷக்கடியோட குறி குணங்கள் இல்லாமல் போகும் என்பது அதன் அர்த்தம். மேலும் விஷக்கடிகளின் குறி குணங்களுக்கு ஏற்ப அவற்றை குணப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகளும் சித்த மருத்துவத்தில் உள்ளது. Fact Check: தக்காளியைக் கடிக்கும் பாம்பு; வைரலாகும் வீடியோ; உண்மை என்ன? பாம்பு கடித்தால் உடனே மருத்துவரை பாருங்கள்! ஆனால், அந்த வைரல் செய்தியைப் படித்துவிட்டு, யாராவது 'நானும் வேப்பமரம், ஆலமரம் போன்ற இயற்கைக்குச்சிகளில்தான் பல் துலக்குகிறேன். எனக்கும் விஷமுறிவுத்தன்மை ஏற்பட்டிருக்கும்' என நம்பிக்கொண்டு பாம்பு கடித்தாலும் டாக்டரைப் பார்த்து சிகிச்சை எடுக்காமல் இருக்கக்கூடாது. விஷப்பாம்போ, விஷமற்ற பாம்போ எதுவாயினும் பாம்பு கடித்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
தி ராட்சை முதல் தர்பூசணி வரை எல்லாப் பழங்களுமே விதைகளின்றி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றின் விலை சற்று அதிகம் என்றாலும் விதைகளைக் கடித்துத் துப்பவேண்டிய அவசியம் இல்லை என்பதால் விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். சீட்லெஸ் பழங்கள் ஆரோக்கியமானவைதானா என்கிற கேள்வியை மருத்துவர்களின் முன்வைத்தோம். விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிலையைக் குறைக்கிறது. சீட்லெஸ் தொழில்நுட்பம் இயற்கையின் சமச்சீர் சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசியபோது, “அடிப்படையிலேயே சீட்லெஸ் பழங்கள், அவற்றிலுள்ள இனிப்புச் சுவைக்காக வணிக நோக்கில் கொண்டு வரப்பட்ட வீரிய ஒட்டு ரகங்கள். தற்போது சந்தையில் திராட்சை, பப்பாளி போன்றவை விதையில்லாமல் ஒட்டுரக விதைகளால் விளைவிக்கப்படுகின்றன. சீட்லெஸ் பழங்களைக் கொண்டு வந்ததற்கான காரணம், அதிக லாபம் ஈட்டவும், அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யவும்தான். ஆனால், இந்த விதையிழப்பு என்கிற சீட்லெஸ் தொழில்நுட்பம் இயற்கையின் சமச்சீர் நிலையைக் குறைக்கிறது. ஒரு கனி எப்படி அமைய வேண்டும் என்பதை இயற்கைதான் தீர்மானிக்கும். தோற்றம் கொண்ட விதைகள் காணப்படும். நாட்டு வாழைப்பழங்களில் கடுகு வடிவிலான இயற்கை தீர்மானிக்கும் ஒரு விஷயத்தை மனிதன் தன்னுடைய தேவைக்காக மாற்றியமைக்கக் கூடாது. இதனால் சமச்சீரற்ற நிலை உருவாகி, நோய்த்தாக்குதல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். காலச்சூழ்நிலையில் மரபணுக்கள் மாற்றம் அடைந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழைப்பழத்தில் பெரிய அளவிலான விதைகள் இருந்தன. இன்றும், கடைகளில் விற்பனை செய்யப்படும் நாட்டு வாழைப்பழங்களில் கடுகு வடிவிலான தோற்றம் கொண்ட விதைகள் காணப்படும். காலத்திற்கேற்ப அந்தத் தாவரம் இயல்பாகவே தனது தன்மையை மாற்றிக்கொண்டு வருகிறது. ஆனால், மனிதன் தனது அவசரத் தேவைகளுக்காக விதையை நீக்கம் செய்வது இயற்கைக்குப் புறம்பானது. விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? விற்கப்படுகின்றன. திராட்சையின் விதைகள் கிலோ 1200 டாலருக்கு . பன்னீர் திராட்சையை விதைகளுடன் உண்ணும்போது விதையிலுள்ள ‘ரிசர்வெட்டால்’ என்கிற பொருள் புற்றுநோயைக் குணப்படுத்தும் என்கின்றன ஆராய்ச்சிகள். வெளிநாட்டுச் சந்தையில் திராட்சையின் விதைகள் கிலோ 1200 டாலருக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும், உடலுக்கு நன்மை தராத சீட்லெஸ் திராட்சை வாங்கவே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். விதைகளுக்கு கார்ப்பரேட்டுகளிடம்தான் கையேந்த வேண்டும். ஒவ்வொரு விதைக்கும் ஒரு பயன் கட்டாயம் இருக்கும். ஒரு விதை ஒரு தாவரத்தை உருவாக்க கூடிய தன்மை, தானாக மகரந்தச்சேர்க்கைக்கு உட்பட்டுக் கனியாகும் தன்மை எனப் பல சிறப்புத் தன்மைகளைப் பெற்றிருக்கும். ஒட்டுமொத்தமாக சீட்லெஸ் விதைகளையோ அல்லது பழங்களையோ பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், விதைகளுக்கு கார்ப்பரேட்டுகளிடம்தான் கையேந்த வேண்டும். முன்பெல்லாம் விவசாயிகள் வீட்டிலேயே விதைகளைத் தேவைக்கு ஏற்ப எடுத்து வைத்துக்கொள்வது வழக்கம். சீட்லெஸ் பழங்களைத் தொடர்ந்து விளைவிக்கும்போது விவசாயி விதைக்கு கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தும் நிலைதான் ஏற்படும். விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? பல உணவுத்தொழில் நுட்பங்கள், ரசாயனங்கள் இங்கே புகுத்தப்பட்டதற்கான காரணம் ‘உணவுத்தேவை’தான். அதற்காகத் தொழில்நுட்பமே வேண்டாம் எனச் சொல்லவில்லை. நீண்ட காலத்திற்கு நீடிக்கக் கூடிய தொழில்நுட்பமும், அனைவருக்கும் நன்மை தரக்கூடிய தொழில்நுட்பங்களும்தான் இங்கு தேவை. எனவே விதையுள்ள பழங்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது’’ என்கிறார். Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்! சதைப்பகுதியை அதிகமாக்கிக் கொடுத்துவிடும். பழங்களில் விதை உருவாவதைத் தடுத்து உணவியல் நிபுணர் விமலா அவர்கள், “இயற்கையாகவே விதையுள்ள பழங்கள்தாம் உடலுக்கு நன்மை தரக்கூடியவை. விதையில்லா திராட்சை, பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் இன்று விதையில்லாமல் கிடைக்கின்றன. வீரிய ரக விதைகளைக் கொண்டு விளைவிக்கப்படும் இவற்றில் ஆக்சின்(auxin) என்ற ரசாயனம் கலக்கப்படும். இந்த முறைக்கு ‘பார்த்தினோ கார்பிக்’ என்று பெயர். இத்தொழில்நுட்பத்தின் மூலம், பழங்களில் விதை உருவாவதைத் தடுத்து சதைப்பகுதியை அதிகமாக்கிக் கொடுத்துவிடும். ஆனால், பழங்களின் இயற்கைத்தன்மையே விதைகளைக் கொண்டிருப்பதுதான். விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? சீட்லெஸ் பழங்களுக்கு இனிப்புச் சுவை அதிகம் உண்டு. ஆனால்... விதையில்லாப் பழங்கள் அதிகமாக வருவதற்குக் காரணம், மக்கள் பழங்களை முழுமையாக உண்டு அதன் இனிப்புச் சுவையை மட்டுமே பெற விரும்புவதுதான். மேலும், ஜூஸ் கடைகளிலும், விதையில்லாத (சீட்லெஸ்) பழங்கள் அதிகமாக வாங்கப்படுகின்றன. காரணம் விதையுள்ள பழங்களில் ஜூஸ் பிழிவதால் விதை கலந்து ஜூஸ் கசந்துபோக வாய்ப்பு உண்டு. பழக்கடைகளிலும் விதையில்லாத பழங்கள் மக்கள் அதிகமாக விரும்பிக் கேட்பதால் அதிக அளவில் விற்பனை செய்கின்றனர். சீட்லெஸ் பழங்களுக்கு இனிப்புச் சுவை அதிகம் உண்டு. ஆனால், ஆரோக்கியமானவை அல்ல. Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! சீட்லெஸ் பழங்களால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக... சீட்லெஸ் பழங்களில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயனங்கள் பழங்களை சீக்கிரம் கெட்டுப்போக விடாது. மேலும், உடலுக்கு எந்த விதமான சத்துகளையும் கொடுக்காது. இதுதவிர, சீட்லெஸ் பழங்களால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அறிவியல் ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சீட்லெஸ் பழங்கள் மட்டுமே சாப்பிடும் ஒருசில மக்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தபோது அவர்களுக்குத் தொற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அலர்ஜியும் வரலாம்! இந்த சீட்லெஸ் விதைகளில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயனங்களினால் சிலருக்கு அலர்ஜியும் வரலாம். இதுதவிர சீட்லெஸ் விதைகளில் ஜீன்களின் கட்டமைப்பு மாற்றப்படுவதால், அவ்விதைகளில் உருவாகும் பழங்களை உண்பதால், உண்பவர்களின் ஜீன்களிலும் படிப்படியாக மாற்றம் நிகழலாம். நிரந்தரமாக உடலில் தங்கும் நோய்களைக்கூட இந்த சீட்லெஸ் பழங்கள் ஏற்படுத்தும். நமக்குக் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆர்கானிக் வகையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. அதேபோல, விதையுள்ள பழங்களை அதிகமாக உண்பதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது” என்றார். Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 டிப்ஸ்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
உலக யோக தினம்: புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி | Photo Album
உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி A. KURUZ THANAMA. KURUZ THANAM
மணிக்கணக்கில் இயர்போன் பயன்படுத்திய பெண்; காது கேளாமையால் பாதிக்கப்பட்டது எப்படி?
வயர்லெஸ் இயர்போன்களை பலரும் இன்று பயன்படுத்தி வருகின்றனர். பயணத்தின் போதும், ஓய்வு நேரங்களிலும் அல்லது சத்தம் வெளியே வரக்கூடாது என்பதற்காகவும் இயர்போன்களை தினமும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இயர்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை வரை பாதிப்பு ஏற்படும் என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஒப்பனை கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்தியதால் கிட்டத்தட்ட 45% காது கேட்கும் திறனை இழந்ததாக கூறியிருக்கிறார். ஆருசி என்ற பெண்ணின் பதிவின்படி, டெல்லிக்கு செல்லும்போது அவர் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் தனது இயர்போன்களை பயன்படுத்தி இருக்கிறார். மறுநாள் காலையில் அவரது இடது காது, கேட்கும் திறனை இழந்ததாக குறிப்பிட்டார், ஆரம்பத்தில் அதை நிராகரித்தவர் இரண்டு நாள்களுக்குப் பிறகு மருத்துவரை அணுகி பரிசோதித்திருக்கிறார். இயர்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தியதால் அவரது இடது காதில் 45% காது கேளாமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். திடீரென ஏற்பட்ட காதுகேளாமையை சரி செய்ய மருத்துவரிடம் அணுகியபோது அவருக்கு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. காதில் ஸ்டெராய்டுகள் செலுத்தியதாகவும், ஊசி போன்ற சிகிச்சைகள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். முன்னெச்சரிக்கையாக ஸ்பீக்கர்களையோ அதிகமான சத்தங்கள் இருக்கும் இடங்களையோ தவிர்க்க மருத்துவர் பரிந்துரைத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இடையில் ஏற்பட்ட காதுகேளாமையை, சிகிச்சை பெற்று சரி செய்யலாம் என்று நம்பிக்கையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மீண்டும் செவித்திறன் கிடைத்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் காது கேளாமையில் இருந்து மீள முடியாது என்று குறிப்பிட்டார் அந்த பெண். இதனை ஒரு விழிப்புணர்வு பதிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் எச்சரித்து பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு பலரின் கவனத்தை பெற்று வருகிறது. View this post on Instagram A post shared by Aarushi Oswal (@aarushimakeupartist) புரிதல், அன்பு, உறவுக்காக AI-ஐ விரும்பும் மனிதர்கள்.. சரியான தேர்வா? - உளவியல் நிபுணர் சொல்வதென்ன?
Apollo: இளம் குழந்தைகள் மீண்டும் வலுவுடன் மீண்டெழ தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம்
சென்னை, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை [Apollo Children's Hospital, Chennai], இன்று தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் [Tamil Nadu's first Centre of Excellence in Pediatric Orthopedics and Trauma Care] தொடங்குவதாக அறிவித்தது. குழந்தைகள் விளையாட்டில் அடையும் வழக்கமான காயங்கள் முதல் பிறக்கும் போதே இருக்கும் சிக்கலான நிலைமைகள் வரை, சிறப்பு எலும்பியல் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கான மாநிலத்தின் முதன்மையான சிகிச்சை மையமாக இது செயல்படும். அப்போலோ மருத்துவமனையின் சென்னை வளாகத்தில் அனுபவம் வாய்ந்த குழந்தை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மறுவாழ்வு பராமரிப்பு குழுக்களை [pediatric orthopedic surgeons, trauma specialists, rehabilitation teams] இந்த சிறப்பு சிகிச்சை மையம் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது. அப்போலோ மருத்துவமனை குழந்தை மருத்துவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதற்கு அடையாளமாக இந்த குழந்தை எலும்பியல் மருத்துவம், அவசரகால சிகிச்சை மையம் அமைந்திருக்கிறது. மேலும் தென்னிந்தியா முழுவதிலும் குழந்தைகளின் எலும்பு மற்றும் மூட்டு பிரச்சினைகளுக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர்களுக்கு அதிகரித்து வரும் தேவையை இம்மையம் பூர்த்தி செய்யும் விதமாக செயல்படும். சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் எலும்பியல் தொடர்பான மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சென்னையிலுள்ள குழந்தை மருத்துவ நிபுணர்கள், விளையாட்டு மைதானங்களில் ஏற்படும் காயங்கள் முதல் உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படும் கிளப்ஃபுட் மற்றும் இடுப்பில் ஏற்படும் ஹிப் டிஸ்ப்ளாசியா [clubfoot & hip dysplasia] போன்ற பிறவிலேயே இருக்கும் நிலைமைகள் வரையிலான பிரச்சினைகள் உள்ள குழந்தைகளை அதிகம் எதிர்கொண்டு வருகின்றனர். இதை சமாளிக்கும் வகையில் விரைவான மற்றும் பயனுள்ள குழந்தை சார்ந்த எலும்பியல் பராமரிப்புக்கான தேவையை இந்த சிறப்பு சிகிச்சை மையம் பூர்த்தி செய்கிறது. பிறவியிலேயே இருக்கும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி கோளாறுகள், மூட்டு குறைபாடுகள், நரம்புத்தசை பிரச்சினைகள், காயங்கள், தொற்றுகள் மற்றும் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் கட்டிகள் [pediatric orthopedic conditions, including congenital and developmental disorders, limb deformities, neuromuscular issues, injuries, infections, tumors] உள்ளிட்ட குழந்தை எலும்பியல் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த சிறப்புக்குழு நிபுணத்துவம் பெற்றது. இந்த சிகிச்சைகளில் முதுகெலும்பு குறைபாடுகள் மற்றும் நடப்பதில் இருக்கும் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. அப்போலோ குழந்தைகள்மருத்துவமனையின்மூத்தஆலோசகர்குழந்தைஎலும்பியல்மற்றும்முதுகெலும்புஅறுவைசிகிச்சைநிபுணர்டாக்டர்ஆர். சங்கர் [Dr. R. Sankar, Sr. Consultant Pediatric Orthopedic & Spine Surgeon, Apollo Children’s Hospitals] கூறுகையில், இந்தசிறப்புசிகிச்சைமையத்தின்அறிமுகமானது, தமிழ்நாட்டில்குழந்தைதசைக்கூட்டுபராமரிப்பில் [pediatric musculoskeletal care] ஒருகுறிப்பிடத்தக்கமுன்னேற்றத்தைக்குறிக்கும்வகையில்அமைந்திருக்கிறது. காயங்கள்அல்லதுகுறைபாடுகளுக்குசிகிச்சையளிப்பதுமட்டுமல்ல, ஒவ்வொருகுழந்தையும்வழக்கமானமுழுசெயல்பாடுகளைமேற்கொள்ளசெய்வதையும், உடல்அசைவுகளிலானஇயக்கத்தைபெறுவதிலும், முழுநம்பிக்கையுடன்திரும்புவதையும்உறுதிசெய்வதேஎங்களுடையகுறிக்கோளாகஇருக்கிறது. மிகவும்மேம்பட்டநவீனஅறுவைசிகிச்சைதொழில்நுட்பங்கள்மற்றும்பன்னோக்குசிறப்புசிகிச்சைநிபுணர்களின்ஆதரவையும்பெற்றிருப்பதால், வழக்கமானவிளையாட்டுகாயங்கள்முதல்குழந்தைகளில்காணப்படும் மிகவும் சிக்கலான எலும்பியல் பிரச்சினைகள் வரை அனைத்தையும் திறம்பட கையாள நாங்கள் தயாராக உள்ளோம். என்றார். அப்போலோ மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, CEO - Chennai Region, Apollo Hospitals] கூறுகையில், ‘’குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற, அவர்களை அக்கறையுடன் கவனித்து கொள்ளும் முறை மற்றும் நவீன மருத்துவ பராமரிப்பை ஒருங்கிணைத்திருப்பது இந்த சிறப்பு சிகிச்சை மையம் மற்ற சிகிச்சை மையங்களிலிருந்து தனித்துவமிக்கதாக மாற்றியிருக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தங்கியிருக்கும் அறைகளில், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்கள் ஈடுபடக்கூடிய அம்சங்களைக் கொண்ட சுவர்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அதே நேரம், உடல்ரீதியான சிகிச்சைகளுக்கான பகுதிகள், சிகிச்சை அறைகளைப் போல் இல்லாமல், குழந்தைகள் விளையாட்டைப் போல் உணரும் வகையிலான மருத்துவ உபகரணங்கள் இருப்பதால், குழந்தைகளின் மறுவாழ்வு பயிற்சிகளை எளிதில் செய்யத் தூண்டுகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆழ்ந்த அனுபவமிக்க நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய அக்கறை இவை இரண்டும், குழந்தை மருத்துவத்தில் வரையறைக்கான ஒரு அளவுகோலாக எங்களது மையத்தை முக்கியத்துவம் பெறச் செய்திருக்கிறது’’ என்றார். இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் குழந்தை மருத்துவ நடைமுறைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு உபகரணங்கள் உள்ளன. இதில் சிறிய நோயாளிகளுக்கு ஏற்றவகையில் திறம்பட செயல்படும் இமேஜிங் சிஸ்டம்கள் மற்றும் குழந்தைகளின் உடற்கூறியல் அளவிற்கு ஏற்ற அளவிலான அறுவை சிகிச்சை கருவிகள் ஆகியவையும் அடங்கும். அறுவை சிகிச்சை அரங்குகளில் மேம்பட்ட காட்சிப்படுத்தல் தொழில்நுட்பம் உள்ளது. இத்தொழில்நுட்பம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மென்மையான, வளரும் திசுக்களில் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய உதவுகிறது. இந்த மையம் மாதந்தோறும் 140 மருத்துவ நடைமுறைகளைக் கையாளக் கூடிய திறன் பெற்றது. மேலும் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் என்னென்ன சிகிச்சைகள் தேவை என்பது பற்றி விவாதிக்கக்கூடிய ஆலோசனைகளும் அடங்கும். அவசரகால விபத்து சேவைகளில் குழந்தை நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகளும் உள்ளன. எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தவிர, நிபுணர்கள் குழுவில் மென்மையான திசு தொடர்பான சிக்கலான சிகிச்சைகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்த ஓட்டம் பிரச்சினைகளுக்கான வாஸ்குலர் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது இளம் நோயாளிகளை நிர்வகிப்பதில் அனுபவம் வாய்ந்த குழந்தை மயக்க மருந்து நிபுணர்கள் என பல்துறை நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர். தமிழ்நாட்டின் முன்னணி குழந்தை மருத்துவ சுகாதார நிறுவனம் என்ற நற்பெயரை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்த புதிய சிறப்பு சிகிச்சை மையம், தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்ற இடமாக, தனது முக்கியத்துவத்தை மேலும் மேலும் வளர்த்தெடுத்து வருகிறது.. மேலும் சவாலான காலங்களில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றிய உண்மையான புரிதலுடன் மருத்துவ நிபுணத்துவத்தை துல்லியமாக அளிப்பதால் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அப்போலோ மருத்துவமனை பற்றி: 1983-ல்டாக்டர்பிரதாப்சிரெட்டிசென்னையில்இந்தியாவிலேயேமுதல்முறையாகமிகப்பெரியகார்ப்பரேட்மருத்துவமனையைத்தொடங்கியதன்மூலம்ஒருமுன்னோடிமுயற்சியைமேற்கொண்டார். அப்போதுஇந்தியாவில்அப்போலோஒருமிகப்பெரியமருத்துவப்புரட்சியைஏற்படுத்தியது. இன்றுஆசியாவிலேயேமிகவும்நம்பகமானஒருங்கிணைந்தமருத்துவநலகுழுமமாகதிகழும்அதில், உலகம் முழுவதும் 10,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், சுமார் 6600 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 2182 மருத்துவ பரிசோதனை மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது. ஒவ்வொரு 4 நாட்களுக்கு அப்போலோ மருத்துவமனை குழுமம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை முறைகளை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதையே தனது தொலைநோக்குப் பார்வையாக கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.
Yoga Day: கோவையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி; மத்திய அதிவிரைவுப்படையினர் பங்கேற்பு | Photo Album
மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மனதாலும் உடலாலும் அடிக்கடி சோர்ந்துபோகிறீர்களா... உங்களுக்கான இலவச மருத்துவர் இதோ! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மதுரை: சர்வதேச யோகா தினத்தை பள்ளி குழந்தைகளோடு கொண்டாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி | Photo Album
சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் Yoga Day: யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை - பிரதமர் மோடி பேச்சு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: BP மாத்திரைகள்; ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால் ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா?
Doctor Vikatan: ஒருமுறை ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கினால், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா... என் ரத்த அழுத்தம் குறைந்தாலும் மாத்திரைகள் அவசியமா அல்லது கட்டுக்குள் வந்தவுடன் மாத்திரைகளை நிறுத்திவிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண் ரத்த அழுத்தத்தைப் பல வழிகளில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். மிக முக்கியமாக, வாழ்க்கைமுறை மாற்றங்களால் கட்டுக்குள் கொண்டுவர முடியும். உதாரணத்துக்கு, உப்பு குறைவான உணவுப்பழக்கம், எடைக்குறைப்பு, ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, போதுமான அளவு தூங்குவது போன்றவை.. தேவைப்பட்டால் மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் நீங்கள் உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், பிபி (BP) மருந்துகள் எடுத்துக்கொள்வதை மெள்ள மெள்ள நிறுத்திவிடலாம். ஆனால், உங்களுக்கு மாத்திரைகளின் உதவியால்தான் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற நிலையில், மருந்துகளை நிறுத்திவிட்டால், மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். மருந்து, மாத்திரைகளின் உதவியின்றி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால் முதல் வேலையாக, ஒரு நாளைக்கு உணவில் 2 கிராமுக்கு மேல் உப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தினமும் 7- 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் இருப்பதையும் உறுதிபடுத்த வேண்டும். பர்சனல், வேலையிடம் என எல்லாவிதமான ஸ்ட்ரெஸ்ஸையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். உடல் எடையில் 8 முதல் 10 சதவிகிதத்தைக் குறைத்தாலே, ரத்த அழுத்தம் குறையும். 'கொஞ்சூண்டுதான் ஜாஸ்தியா இருக்கு... அதனால ஒண்ணும் ஆகாது' என்ற சமாதானத்தோடு, பிபியை அலட்சியமாக அணுகாதீர்கள். சிலருக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களோடு, மாத்திரைகளும் தேவைப்படும். வாழ்க்கைமுறை மாற்றங்களை ஒழுங்காகப் பின்பற்றுவோருக்கு மாத்திரைகள் குறைந்த அளவே தேவைப்படும். மாத்திரைகளின் பக்கவிளைவுகளுக்கு பயந்துகொண்டு பலரும், ரத்த அழுத்தம் அதிகமானாலும் பரவாயில்லை என அலட்சியமாக இருக்கிறார்கள். பிளட் பிரஷர் என்பது ஒருவித சைலன்ட் கில்லர். 'கொஞ்சூண்டுதான் ஜாஸ்தியா இருக்கு... அதனால ஒண்ணும் ஆகாது' என்ற சமாதானத்தோடு, பிபியை அலட்சியமாக அணுகாதீர்கள். ரத்தக்குழாய்களின் அடர்த்தி அதிகரிக்கும் நிலையானது, நீங்கள் குறிப்பிடுகிற 'கொஞ்சூண்டு ஜாஸ்தி' என்ற கட்டத்திலேயே தொடங்கிவிடும். அந்த நேரத்தில் அறிகுறிகள்கூட இருக்காது. எனவே, தேவைப்படும் பட்சத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே, வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றுங்கள். உங்கள் பிபி அளவானது கட்டுக்குள் வந்தபிறகு, மருத்துவரே மாத்திரைகளை படிப்படியாகக் குறைக்கச் சொல்வார். தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தேவையிருக்காது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?
Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!
இது மாம்பழம் சீசன். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? மாம்பழம் கோடையில்தான் சீசன் என்பதால், 'மாம்பழம் சூடு; வெயில் காலத்துல அதைச் சாப்பிட்டா கட்டி வந்துடும்' என்கிற பேச்சு ரொம்ப காலமாகவே நமக்கு மத்தியில் இருக்கிறது. அது உண்மைதானா என, சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் மருத்துவர் விஷால் அவர்களிடம் கேட்டோம். மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? ''மாம்பழம் சாப்பிடுவதால் கட்டி வராது. மாம்பழத்தில் வைட்டமின் A, C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு நன்மைதான் அளிக்கும். இருப்பினும், சிலருக்கு மாம்பழம் உட்கொள்ளும்போது உடலில் உஷ்ணம் அதிகரித்து, சருமத்தில் எண்ணெய்ப்பசை (sebum) உற்பத்தி அதிகமாகி, கட்டி ஏற்படுவதாக ஒரு கருத்து பரவி வருகிறது. இது அனைவருக்கும் பொருந்தாது. தவிர, அறிவியல்ரீதியாக இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. மாம்பழம் சாப்பிடுவதால் கட்டி வருவதைவிட உணவு ஒவ்வாமை, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சரும பராமரிப்பு பழக்கங்கள், அல்லது அதிக எண்ணெய் உள்ள உணவுகளை உட்கொள்வதால் முகப்பரு, கட்டிகள் ஏற்படலாம். உங்களுக்கு மாம்பழம் சாப்பிட்ட பிறகு கட்டி வருவதாக உணர்ந்தால், உணவியல் நிபுணர் ஒருவரை அணுகி ஆலோசனைப் பெறலாம். Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா? சில ஆயுர்வேத மருத்துவர்கள் மாங்காய் உஷ்ணம் என்றும், அது கட்டிகள் வரக் காரணமாகலாம் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் உற்பத்தியாகும்; இதனால் சில ஹார்மோன்கள் சுரப்பதால், சிலருக்கு முகப்பரு வரலாம். சில நேரங்களில் மாம்பழத்தில் இருக்கிற வேதிப்பொருள் வாய் மற்றும் முகத்தில் பட்டால் ஒவ்வாமை ஏற்படலாம். பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர் விஷால் `மேங்கோ குல்ஃபி' சச்சின்,`கீற்று மாங்காய்' தீபிகா... பிரபலங்களின் மாம்பழ லவ்! மற்றபடி, மாங்காய் சாப்பிடும் அனைவருக்கும் கட்டிகள் வராது. ரசாயனம் தெளித்த பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களைச் சாப்பிட்டால் உடலில் சில அழற்சிகள் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க, மாங்காயைச் சில நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவிய பிறகு உண்ணலாம். முடிந்தவரைப் பதப்படுத்தப்பட்ட மாங்காய் உணவுகளைச் சாப்பிடக்கூடாது. முகத்தைத் தினமும் இருமுறை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்; மாம்பழம் பிடிக்கும் என்றாலும் அளவாகச் சாப்பிடுங்கள். கட்டி, முகப்பருவெல்லாம் வராது'' என்கிறார் மருத்துவர் விஷால். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: பருப்பு உணவுகளைச் சாப்பிட்டாலே வாயுத்தொல்லை.. புரதச்சத்துக்கு என்னதான் வழி?
Doctor Vikatan: நான் சைவ உணவுப்பழக்கம் உள்ளவன். முட்டைகூட சாப்பிட மாட்டேன். புரதச்சத்துக்கு பருப்பு வகைகளை மட்டும்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், சமீப காலமாக எந்தப் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டாலும் எனக்கு வாயுத் தொல்லை வருகிறது. துவரம் பருப்புகூட ஏற்றுக்கொள்வதில்லை. எந்தப் பருப்பு வாயுத் தொந்தரவை ஏற்படுத்தாது... புரதச்சத்து தேவைக்கு வேறு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் பருப்பு வகைகளில் பாசிப்பருப்பு நார்ச்சத்து நிறைந்தது. அது வாயுத் தொந்தரவை ஏற்படுத்தாது. மற்றபடி துவரம் பருப்பு, கடலைப்பருப்பை சற்று குறைத்துக்கொள்ளலாம். கறுப்பு உளுந்து ஓரளவு சேர்த்துக்கொள்ளலாம். பச்சைப் பயறைப் பொறுத்தவரை, தோலுடன் சேர்த்துக்கொள்ளலாம். மொச்சைக் கொட்டை போன்றவற்றைத் தவிர்க்கவும். பருப்பு என்பது புரதச்சத்து நிறைந்த உணவு. குறிப்பாக, சைவ உணவுக்காரர்களுக்கு பருப்பின் மூலம்தான் புரதச்சத்தின் தேவை பூர்த்தி செய்யப்படும். ஒவ்வொருவரும் அவரவர் உடல் எடைக்கேற்ப புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 50 கிலோ எடை உள்ள ஒருவர், 50 கிராம் புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். புரதச்சத்துக்காக பருப்பு வகைகளை எடுக்கும்போது நிறைய பேருக்கு வாயுத் தொல்லை வருகிறது. அப்படிப்பட்டவர்கள் மட்டும் பருப்பு வகைகளை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அடை, பயறு தோசை போன்ற புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை காலை உணவுக்குச் சாப்பிடுவது சிறந்தது. இரவு உணவுக்கு அவற்றைத் தவிர்க்கவும். காலையில் சாப்பிடும்போது, அன்றைய தினம் முழுவதும் வேலை செய்வதால், உணவு முழுமையாக செரிமானமாகிவிடும். வயிற்றையும் பதம் பார்க்காது. பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்றவற்றை ஊறவைத்து, முளைகட்டச் செய்து சாப்பிடும்போது, வாயுவை உற்பத்தி செய்கிற தன்மை அவற்றில் குறையும். Doctor Vikatan: சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்து குறைபாடு ஏற்படுமா? பருப்பு சேர்த்த உணவுகளைச் சமைக்கும்போது அவற்றுடன் இஞ்சி, பூண்டு சேர்த்துச் சமைப்பது செரிமானத்தை சீராக்கும். உதாரணத்துக்கு, அடை செய்யும்போதும் அந்த மாவில் கொஞ்சம் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். வாயுப் பிரச்னைகளைத் தவிர்க்க, பயறு வகைகளை முளைகட்டச் செய்து சாப்பிட வேண்டும். பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்றவற்றை ஊறவைத்து, முளைகட்டச் செய்து சாப்பிடும்போது, வாயுவை உற்பத்தி செய்கிற தன்மை அவற்றில் குறையும். முளைகட்டச் செய்வதால், வைட்டமின் ஈ சத்தும் சற்று கூடுதலாகக் கிடைக்கும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும். பருப்போடு சேர்த்து எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதும் இதில் முக்கியம். பஜ்ஜி, போண்டா மாதிரியான உணவுகள்தான் வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும். அவைதான் அசிடிட்டி பிரச்னையை ஏற்படுத்தும். கேஸ்ட்ரைட்டிஸ் எனப்படும் செரிமான கோளாறுக்கும் அதுதான் காரணம். எனவே, கூடியவரையில் எண்ணெய் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
இ ன்று பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்னை மனப்பதற்றம். 'ஒரே ஆங்சைட்டியா இருக்கு' என்று பயத்துடன் சொல்கிறார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தி அதைச் சரிசெய்ய முயற்சிப்பார்கள்; சிலர் அதற்கான நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவார்கள்; மீதமுள்ளவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இது சரியா; மனப்பதற்றம் ஏன் ஏற்படுகிறது; அறிகுறிகள்; அதனால் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன; தீர்வுகள் இருக்கின்றனவா என்பனப்பற்றி சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் டாக்டர் லட்சுமிபாய் நம்மிடம் விளக்குகிறார். Anxiety ''மனப்பதற்றம் ஏன் ஏற்படுகிறது? மனப்பதற்றம் அல்லது ஆங்சைட்டி ஏற்படுவதற்கு, மரபணுவும் ஒரு காரணம். சம்பந்தப்பட்டவரின் சூழ்நிலை இன்னொரு காரணம். சிலர், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை தன்னுடன் பொருத்திக்கொண்டு, 'அவங்களுக்கு நடந்த மாதிரி எனக்கும் ஃபிளைட் ஆக்ஸிடெண்ட் நடந்திடுமோ' என்றெல்லாம் மனப்பதற்றம் அடைவார்கள். இப்படி மூளையில் ஆங்சைட்டி ஏற்படும் பகுதிக்கு யாரெல்லாம் அதிகமாக வேலை கொடுக்கிறார்களோ, அவர்கள் பல நோய்களுக்கு வெல்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் வரவேற்கிறார்கள் என்று அர்த்தம். என் மருத்துவமனைக்கு வரும் பெண்களில் பலரும், சமீபத்தில் யாருக்கோ நடந்த பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவை தங்களுக்கும் நிகழ்ந்துவிடுமோ என்ற மனப்பதற்றத்துடன் வருகிறார்கள். மனப்பதற்றத்தின் அறிகுறிகள்... மனப்பதற்றம் இருப்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம், நடுக்கம், கை-கால் உதறல், வேகமான இதயத்துடிப்பு, அதிகமாக வியர்வை போன்றவை ஏற்படும். சிலருக்கு இதயம் இருக்கும் இடத்தில் லேசான வலி போன்றதொரு உணர்வும் ஏற்படும். வயிறு உப்புசம், எதுக்களித்தல், வயிற்றில் ஒருவித அசௌகரியம், எப்போதும் சிறுநீர் அல்லது மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவையும் மனப்பதற்றத்தின் அறிகுறிகள்தான். இதயத்துடிப்பு வேகமாக இதயத்துடிப்பு மற்றும் இதயத்தில் வலிப்பதுபோல உணர்பவர்கள், 'ஹார்ட் பிராப்ளமாக இருக்குமோ' என பயந்துகொண்டு ECG, Echo, Treadmill போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். மனப்பதற்றம் மட்டுமே இருப்பவர்களுக்கு எல்லா ரிப்போர்ட்களும் இயல்பாகவே இருக்கும். மனநலப் பிரச்னைகளும் இன்ஸ்டாகிராம் ஐடிகளும்... என்ன நடந்துகொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்களில்..? அதனால் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? மனப்பதற்றம் இருப்பவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பார்கள். குடும்பத்துடன் நேரம் செலவிட மாட்டார்கள். எப்போதும், எந்த வேலையைச் செய்தாலும், அவர்களது மனதில் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) ஓடிக்கொண்டே இருக்கும். விளைவு, மனதில் பிரச்னை; குடும்பத்தில் பிரச்னை; அலுவலகத்தில் பிரச்னை என தவித்துப்போவார்கள். டாக்டர் லட்சுமிபாய் Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது? மனப்பதற்றத்துக்கு சிகிச்சை எடுக்காமல் இருப்பது சரியா? மனப்பதற்றத்தைப் பொருட்படுத்தாமல, அதற்கு சிகிச்சை எடுக்காமல் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை (Quality of Life) தவற விடுகிறார்கள் என்றே சொல்வேன். இந்தப் பிரச்னையை, பாதிக்கப்பட்டவர்களால் தனியாக சமாளிக்க முடியாது. அது அவசியமும் இல்லை. ஏனென்றால், இன்றைக்கு மனப்பதற்றத்துக்கு உளவியல்ரீதியாக நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. அதைப் பெற்று, மனப்பதற்றம் நீங்கி நிம்மதியாக வாழுங்கள்'' என்கிறார் டாக்டர் லட்சுமிபாய். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?
Doctor Vikatan: எனக்கு வயது 50. பீரியட்ஸ் தொடர்பான பிரச்னை இருப்பதால் கர்ப்பப்பையை அகற்றிவிடும்படி சொல்கிறார் மருத்துவர். எனக்குத் தெரிந்த சிலர், கர்ப்பப்பை அறுவை சிகிச்சையைச் செய்துகொண்ட பிறகு எக்கச்சக்கமாக உடல் எடை அதிகரித்திருக்கிறார்கள். கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டால், உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்கவே முடியாது என்று சொல்லப்படுவது உண்மையா... அதைத் தவிர்க்க முடியுமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் கர்ப்பப்பையை நீக்கும் 'ஹிஸ்டெரெக்டமி' (hysterectomy) அறுவை சிகிச்சையானது, ப்ளீடிங் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், ஃபைப்ராய்டு கட்டிகள், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களுக்காகச் செய்யப்படலாம். Doctor Vikatan: பீரியட்ஸில் அளவுக்கு அதிகமாக வெளியேறும் ப்ளீடிங்... கர்ப்பப்பை நீக்கம்தான் தீர்வா? பொதுவாகவே, கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிக்குமோ என்ற பயம் பலருக்கும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கர்ப்பப்பையை நீக்கும்போது, சிலருக்கு ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் சேர்த்து நீக்கிவிடுவார்கள். சினைப்பைகளை நீக்கிவிட்டால், ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு இருக்காது. அதன் விளைவாக கால்சியம் குறைபாடு ஏற்படும். ஆஸ்டியோபொரோசிஸ் (osteoporosis) எனப்படும் பாதிப்பு வரும். இதில், எலும்புகள் ஸ்பான்ஜ் போல மென்மையாக மாறி, வலுவிழக்கும். அதனால்தான் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட எல்லாப் பெண்களையும், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள மருத்துவர் அறிவுறுத்துவார். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வந்துவிட்டால், பலருக்கும் கை, கால் வலி, மூட்டுவலியும் சேர்ந்துகொள்ளும். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் இயக்கம் என்பது குறையத் தொடங்கும். அதன் தொடர்ச்சியாகவே சிலருக்கு உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வந்துவிட்டால், பலருக்கும் கை, கால் வலி, மூட்டுவலியும் சேர்ந்துகொள்ளும். முன்பெல்லாம் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை வயிற்றைக் கிழித்து ஓப்பன் சர்ஜரி முறையில்தான் அதிகம் செய்தார்கள். அந்த ஆபரேஷனுக்கு பிறகு மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படும். அதனாலும் அந்தப் பெண்களின் உடல் இயக்கம் குறையும். உடல் எடை அதிகரிக்கும். அப்படியானால், கர்ப்பப்பை நீக்க ஆபரேஷன் செய்துகொள்கிற எல்லோருக்குமே உடல் எடை அதிகரிக்குமா என்றால் நிச்சயம் இல்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் அறிவுரைக்கேற்ப கால்சியம் சப்ளிமென்ட்டுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால், எடை கூடாது. இப்போதெல்லாம் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை லேப்ராஸ்கோப்பி முறையில் செய்துவிடுகிறார்கள். இந்த முறையில் ஆபரேஷன் செய்யும்போது, விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். உடற்பயிற்சிகளையும் செய்ய முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். என்ன நோய்... எந்த டாக்டர்? 9 - எலும்பும், எலும்பு சார்ந்த பிரச்னைகளும்...
கணவனுக்கும் மனைவிக்கும் இது தெரிந்தால் விவாகரத்து நிகழாது - காமத்துக்கு மரியாதை - 245
ஒ ரு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுடைய தாம்பத்திய உறவு எப்படி இருக்க வேண்டும்; திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா..? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். தாம்பத்தியம் ''இன்றைக்கு இளம் வயதில் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்கு வருபவர்களில் பலரும், தாம்பத்திய வாழ்க்கையில் சரியான இன்பத்தை அனுபவிக்காதவர்களாக இருக்கிறார்கள். அஃப்கோர்ஸ் இந்தப் பிரச்னை காரணமாகத்தான், அவர்கள் விவாகரத்தையே நாடுகிறார்கள். ஒரு திருமணத்தில் கணவனும் சரி, மனைவியும் சரி, ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக தெரிந்துகொண்டுதான் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்பேன் நான். தன் மனைவியை எப்படி திருப்திப்படுத்துவது என்று கணவனுக்கும், உறவின்போது கணவனை எப்படித்தூண்ட வேண்டும் என மனைவிக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான மருத்துவர்களின் வீடியோக்களைப் பார்த்து அல்லது செக்ஸாலஜிஸ்ட்டின் ஆலோசனைப் பெற்று இதைத் தெரிந்துகொள்ளலாம். காமசூத்ரா எழுதிய மண்ணில் இந்த நிலைமை வந்ததற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது என்றாலும், இதுதான் இன்றைய யதார்த்தம். தாம்பத்தியம் `என்னோட தாழ்வு மனப்பான்மை போக ஜீவிதாதான் காரணம்!'' - நடிகர் டாக்டர் ராஜசேகர் #AangalaiPurindhuKolvom விந்து வெளியேற்றினாலே ஆண் ஆர்கசம் அடைந்து விடுவான். ஆனால், பெண் நிலைமை அப்படிக் கிடையாது என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். பெண்கள் ஆர்கசம் அடைய 14 நிமிடங்கள் வரை ஆகும். அதுவரை எந்தெந்த உடல் பாகங்களைத்தொட்டால் அவர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தப்பகுதிகளைக் கணவன் தூண்ட வேண்டும். இதையே தான் மனைவியும் கணவனுக்கு செய்ய வேண்டும். தாம்பத்திய உறவு என்பது 'நீ பாதி நான் பாதி' ஷேரிங் தான். அதனால், 'நான் ஏதாவது செய்தால் கணவர் தப்பாக நினைத்துக்கொள்வாரோ' என்று எண்ணாமல் செக்ஸை எப்படி சுவாரஸ்யமாக கொண்டு செல்லவேண்டும் என மனைவிக்கும் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஆண்களும் மார்பைத்தொட்டால் உணர்வெழுச்சி அடைவார்கள்'' என்றவர் தொடர்ந்தார். ``ஆண் மனது கலப்படத்துடன்தான் இருக்கிறது! - ஆண்களின் காதல் பற்றி பட்டுக்கோட்டை பிரபாகர் திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா என்றால், 'அது பாதுகாப்பானது' என்றே சொல்வேன் நான். இன்றைக்கு செக்ஸ் டூரிசம் அதிகமாகி விட்டது. எங்கே போனாலும் மசாஜ் பார்லர், அங்கே ஹேப்பி எண்டிங் என உறவுகொள்கிற வாய்ப்புகள் அதிகமாகி விட்டன. இந்த வாய்ப்புகளை அனுபவித்தவர்கள், திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய்கள் இருக்கின்றனவா என பரிசோதித்துக்கொள்வது நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ். டாக்டர் காமராஜ் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: இரவு தூக்கத்தில் இழுத்துக்கொள்ளும் விரல்கள்; நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா?
Doctor Vikatan: இரவு தூங்கும்போது கால் விரல்கள் இழுத்துக்கொண்டு போவது போல் ஆகிவிடுகிறது. குறிப்பாக, ஏசி போட்டாலோ குளிரான காலநிலையிலோ இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. அந்தப் பகுதியை நீவி விட்டால் விரல்கள் இயல்புக்கு வந்துவிடுகின்றன. இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா இருக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் நீங்கள் குறிப்பிடும் இந்தப் பிரச்னையை 'நைட் கிராம்ப்ஸ்' (night cramps) என்று சொல்வோம். இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததுதான். வெயில் அதிகமுள்ள நாள்களிலும் சரி, குளிர்ச்சியான நாள்களிலும் சரி, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக முக்கியம். தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, போதுமான அளவு உப்புச்சத்து எடுக்காமல் விட்டாலும் பிரச்னைதான். அதாவது வெயில் காலத்தில், வியர்வையின் மூலம் வெளியேறும் உப்புச்சத்தை ரீப்ளேஸ் செய்ய வேண்டும். மழை நாள்களிலும், குளிர் நாள்களிலும் தாகம் அதிகமிருக்காது. ஆனாலும், அப்போதும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் நைட் கிராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு, நரம்புகள் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வுகள் வரலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் நைட் கிராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு, நரம்புகள் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வுகள் வரலாம். அடுத்து உங்கள் உடலில் நுண்ணூட்டச் சத்துகள் குறையும்போதும் இந்தப் பிரச்னை வரலாம். வைட்டமின் குறைபாடு இருந்தாலும் இப்படி வரலாம். அடுத்த காரணம், அதிக நேரம் உழைப்பது அல்லது அளவுக்கதிகமாக ஓய்வெடுப்பது. அதாவது நீண்டநேரம் நின்றதன் விளைவாகவும் விரல்கள் இழுத்துப் பிடிப்பது போல இருக்கலாம். அல்லது கொஞ்சம்கூட உழைப்பே இல்லாமல் ஓய்விலேயே இருந்திருந்தாலும் அதன் விளைவாக இப்படி ஏற்படலாம். உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்கள் அறிகுறிகளைப் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் வைட்டமின் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார். நீர்வறட்சி ஏற்பட்டிருப்பது தெரிந்தால் ஓஆர்எஸ் பவுடரை பரிந்துரைப்பார். தவிர, காலையில் தூங்கி எழுந்ததும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கற்றுத் தருவார். இவற்றை எல்லாம் சரியாகப் பின்பற்றினாலே உங்களுடைய பிரச்னையிலிருந்து மீள்வீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி அடிக்கடி வர காரணம் என்ன... எப்படி சரிசெய்யலாம்?
Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீர்வு என்ன?
கோ டைக்காலங்களில் இடுக்குத்தொடை பிரச்னை அதிகமாக ஏற்படும். தொடையும் அதையொட்டிய இடுக்குப்பகுதியும் உரசி உரசி அரிப்பு ஏற்படும். சொரிந்தால் புண்ணாகி விடும்; எரிச்சல் ஏற்படும்; நடப்பதற்கே சிரமமாக இருக்கும். இப்படி அசௌகரியத்தை ஏற்படுத்தும் இடுக்குத்தொடை பிரச்னை ஏன் வருகிறது; அதனால் என்ன பாதிப்பு ஏற்படும், சரிசெய்ய என்ன வழி என்பதைப்பற்றி விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சக்தி சரண்யா. Fungal Infection ''இடுக்குத்தொடை பிரச்னை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பூஞ்சைத்தொற்றுதான். தொடை இடுக்கில் உருவாகும் அதிக வியர்வையின் ஈரப்பதத்தால் இந்த பூஞ்சைத்தொற்று உருவாகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்படலாம். மேலும் தொடை இடுக்கில் உள்ள தசைப்பகுதிகள் ஒன்றோடு ஒன்று உராயும்போது, அந்த இடத்தில் இருக்கும் தோல் செல்களின் தடுப்பு செயல்பாடு பாதிக்கப்படும். தோல் செல்களின் தடுப்பு செயல்பாடு என்பது, நம் தோலின் ஈரத்தன்மையை காப்பதுடன், வெளியிலிருந்து வரும் கிருமிகள் உடலுக்குள் செல்லாமல் ஒரு பாதுகாப்பு கோட்டையாக செயல்படும். இறுக்கமான உடைகள் பெரும்பாலும் உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படலாம். காரணம் அவர்களுக்கு தொடைப்பகுதியில் அதிகளவு தசை மடிப்புகள் இருக்கும். அந்த மடிப்புகளில் காற்று புகாமல் வியர்வை ஈரப்பதம் உலராமல் எப்போதும் இருப்பதால் பூஞ்சை ஏற்பட்டு இந்த பாதிப்பு ஏற்படும். காற்று நுழையாத அளவுக்கு தடிமனான உடைகள் அணியும்போதும், இறுக்கமாக உடைகள், உள்ளாடைகள் அணியும்போதும் கூட இந்த பிரச்னை ஏற்படலாம். Doctor Vikatan: `பசங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை' - skin care என்பது பெண்களுக்கு மட்டும்தானா? சிகிச்சை என்ன? வெயில் காலத்தில் சிலருக்கு அதிகளவு வியர்க்கும். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தால், ஈரமில்லாமல் உடலைத் துடைத்து பின் ஈரமில்லாத துணிகளை அணிந்தால் இந்த பிரச்னை வராமல் தடுக்கலாம். ஒருவேளை வந்துவிட்டால், இதற்கென இருக்கிற சோப்பை பயன்படுத்தலாம். அப்படியும் குணமாகவில்லை எனில், தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது கட்டாயம். தவிர, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வந்தால், அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது நல்லது. டாக்டர் சக்தி சரண்யா. தீவிர பிரச்னையை ஏற்படுத்துமா இடுக்குத்தொடை? பெரும்பாலும் இந்தத்தொற்று ஓரிரு நாள்களில் சரியாகிவிடும். அப்படி குணமாகவில்லை என்றால் மருத்தவரை அணுகி தொற்றின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இது உடல் முழுக்க பரவக்கூடும். அப்படி நிகழ்ந்தால் குணப்படுத்துவது சற்று கடினமாக இருக்கும். இந்த தொற்று பிறருக்கும் பரவக்கூடியது என்பதால், பாதிக்கப்பட்டவரின் உள்ளாடைகளை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. Summer Skin Problems: வியர்வை, வேனல்கட்டி, அரிப்பு, படர்தாமரை... தீர்வு என்ன? தொற்று பாதித்திருக்கும்போது உடலுறவு கொள்வது சரியா? தொடைப்பகுதி என்பதால் உடலுறவில் ஈடுபடும்போது துணைக்கும் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம். எனவே தொற்று பாதிப்பு இருக்கும்போது உடலுறவைத் தவிர்த்தால் தொற்று பரவலை தவிர்க்க முடியும்'' என்கிறார் டாக்டர் சக்தி சரண்யா. தொற்று பாதித்திருக்கும்போது உடலுறவுக் கொள்வது சரியா? Skin Health: மரு... அழகுப் பிரச்னையா? ஆரோக்கியப் பிரச்னையா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY