SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

Happy Teeth: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு கலந்த டூத் பேஸ்ட் பயன்படுத்தலாமா?

ஆரோக்கியமாக பிரஷ் செய்வதற்கு டூத் பிரஷ், டூத் பேஸ்ட் ஆகியவற்றின் தேர்வு மிகவும் முக்கியம். கடைக்குச் சென்றதும் கண்ணில் தட்டுப்படும் பிரஷ், பேஸ்டை வாங்கிப் பயன்படுத்துவது, புதிய புதிய விளம்பரங்களைப் பார்த்து இவற்றைத் தேர்ந்தெடுப்பது எல்லாம் தவறானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Tooth brush Happy Teeth: பெட் காபி, பிரஷ் செய்வதற்கு முன்பாக மாத்திரை... சரியா? தவிர்க்க வேண்டியவை என்ன? டூத் பிரஷ், பேஸ்ட் எப்படித் தேர்வுசெய்ய வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா: குழந்தைகளுக்கு அவர்களுக்கென்று விற்பனை செய்யப்படும் டூத் பிரஷ், டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். பெரியவர்களுக்கு மென்மையான (Soft) அல்லது கூடுதல் மென்மையான (Extra Soft) முனைகள் இருக்கும் (Bristles) டூத் பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டும். முனைகளில் இருக்கும் இழைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதைப் போல உணர்ந்தால் 'மீடியம்' (Medium) முனை இருக்கும் பிரஷ்ஷை வாங்கி பயன்படுத்தலாம். கடினமான (Hard) முனைகள் இருக்கும் டூத் பிரஷ்ஷை பயன்படுத்தக்கூடாது. கடினமான முனைகள் இருக்கும் பிரஷ்ஷை பயன்படுத்தி அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்த்தால் ஈறு சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. Happy Teeth Doctor Vikatan: ஏசி குளிர்ச்சிக்குப் பழகிவிட்ட உடல்... குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா? நாம் கடைகளில் வாங்கும் பிரஷ் சுற்றப்பட்டிருக்கும் கவரின் ஏதாவது ஒரு மூலையில் Soft, Extra Soft, Medium, Hard என இவற்றில் ஏதாவது ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து பிரஷ்ஷை தேர்வுசெய்ய வேண்டும். டூத் பேஸ்ட் தேர்வு! பிரஷ்ஷை போலவே டூத் பேஸ்ட் தேர்வும் மிகவும் முக்கியமானது. அடிக்கடி வேறு வேறு டூத் பேஸ்டை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. பொதுவாகவே வயதானவர்களுக்கு ஈறு பிரச்னை, பல் தேய்மானம் போன்ற பிரச்னைகள் அதிகம் காணப்படும். எனவே, கிராம்பு போன்ற இயற்கையான பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும் டூத் பேஸ்டை அவர்கள் பயன்படுத்துவது நல்லது. Tooth paste Doctor Vikatan: செயற்கை கருத்தரிப்பில் முதல் குழந்தை... அடுத்த குழந்தைக்கும் சிகிச்சை தேவைப்படுமா? அனைத்து டூத் பேஸ்டிலும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். ஒரு டூத் பேஸ்ட் தயாரிப்பதற்கான முக்கியமான இடுபொருள்களில் உப்பும் ஒன்று. இனிப்பு உள்ள டூத் பேஸ்ட் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. பிரஷ் செய்துவிட்டு வாய் கொப்பளித்து துப்பிவிடுவதால் பேஸ்ட் வயிற்றுக்குள் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே அதைப் பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. Diabetes Doctor Vikatan: மழை நாள்களில் ஏற்படும் கை, கால் குடைச்சல்... காரணங்களும், தீர்வுகளும் என்ன? டூத் பேஸ்டில் பற்களை சுத்தப்படுத்துவதற்கான பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். கூடுதலாக உப்பு சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் உப்பு இருக்கிற டூத் பேஸ்ட்டை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எந்த அவசியமும் இல்லை. முறையாக பிரஷ் செய்வது எப்படி? காலையில் எழுந்ததும் கண்ணாடியில் பற்களை ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். எங்காவது உணவுத் துகள்கள் சிக்கியிருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும். டூத் பேஸ்டை வைப்பதற்கு முன்பாக பிரஷ்ஷை தண்ணீரில் நனைக்க வேண்டும். ஒரு பட்டாணி அளவு டூத் பேஸ்ட் மட்டும் எடுத்தால் போதுமானது. பல் மருத்துவர் ஏக்தா Doctor Vikatan: அடிக்கடி சளித்தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள்... ஆயுர்வேத சிகிச்சை பலன் தருமா? பேஸ்டை பிரஷ்ஷில் வைத்த பிறகு மீண்டும் பிரஷ்ஷை தண்ணீரில் நனைக்க வேண்டும். அப்போதுதான் பிரஷ் செய்யும்போது டூத் பேஸ்ட் நன்றாக நுரைக்கும். பிரஷ் செய்யும்போது விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல் இடமிருந்து வலமாகவோ வலமிருந்து இடமாகவோ கட்டாயம் பிரஷ் செய்யக்கூடாது. மேற்பற்களுக்கு மேலிருந்து கீழாக வழிப்பது போலவும் கீழ் பற்களுக்கு கீழிருந்து மேலாக வழிப்பது போலவும் பிரஷ் செய்ய வேண்டும். இந்த முறையில் பிரஷ் செய்ய இயலாத, பிரஷ் நுழையாத இடங்களில் வட்டவடிவ இயக்கத்தில் பிரஷ் செய்யலாம். இதைச் சரியாக செய்தால் 2 நிமிடங்களுக்குள் பிரஷ்ஷிங் முடிந்துவிடும். Happy Teeth Doctor Vikatan: சன் ஸ்கிரீன் உபயோகித்தால் முகத்தில் வெள்ளைப் படிமம் வருவது ஏன்... தீர்வு உண்டா? ஒருமுறை பிரஷ் செய்த உடனே டூத்பேஸ்ட்டை எடுத்து மீண்டும் பிரஷ் செய்யக்கூடாது. சரியான முறையில் ஒருமுறை பிரஷ் செய்வதுதான் சரியான பழக்கம். சிலருக்கு உப்பில் தோய்த்து பிரஷ் செய்யும் பழக்கம் இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. அது பற்களில் உள்ள எனாமலை பாதித்து, பற்கள் தேய்மானத்துக்கும் வழிவகுக்கும். உப்பை பயன்படுத் விரும்பினால் இளஞ்சூட்டிலுள்ள தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கலாம் என்றார்.

விகடன் 9 Dec 2023 6:00 pm

Doctor Vikatan: ஏசி குளிர்ச்சிக்குப் பழகிவிட்ட உடல்... குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா?

Doctor Vikatan: எனக்கு வேலையிடத்தில் ஏசியில் இருந்து பழகிவிட்டது. அதன் காரணமாக வீட்டிலும் அதே குளிர்ச்சியான சூழல் தேவைப்படுகிறது. குளிர்காலத்திலும் ஏ.சி அறையில் உறங்குவது நல்லதா...  ஏ.சி இல்லாமல் உறக்கம் வருவதில்லை. என்ன செய்யலாம்?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்       மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் Doctor Vikatan: செயற்கை கருத்தரிப்பில் முதல் குழந்தை... அடுத்த குழந்தைக்கும் சிகிச்சை தேவைப்படுமா? ஏசி செய்யப்பட்ட்ட சூழல்களால் சில பிரச்னைகள் வரக்கூடும்.  அதாவது ஏசியானது அந்தச் சூழலை வறட்சியாக்கி, ஈரப்பதமின்றி மாற்றிவிடும்.  அதன் விளைவாக நம் உடலிலும் நீர்வறட்சி ஏற்படும்.  ஏசியின் ஃபில்டர்களை குறிப்பிட்ட இடைவெளியில் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் அலர்ஜி பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு.  ஃபில்டரில் படியும் தூசு மற்றும் கிருமிகள் ஒவ்வாமை பாதிப்புகளுக்கு காரணமாகலாம்.  ஏசி செய்யப்பட்ட அறைகளுக்குள் இருக்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வெளிச்சமோ, காற்றோட்டமோ உள்ளே வர அனுமதிக்க மாட்டோம். வீடோ, பணியிடமோ... மூடப்பட்ட சூழலில், ஏசியும் இயங்கும்போது  பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் பெருக்கமும் பரவலும் அதிகரிக்கும் ஆபத்துகளும் உண்டு.   ஜலதோஷம் Doctor Vikatan: கருத்தரிப்பதை பாதிக்குமா ஃபைப்ராய்டு கட்டி? இந்தக் கிருமிகள் ஏசியின் ஃபில்டர்களில் போய் உட்கார்வது மட்டுமன்றி, அந்தச் சூழலில் இருப்போருக்கு காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி, அவை மற்றவர்களுக்கும் பரவக் காரணமாகும்.  வீட்டில் ஒருவர் உடல்நலமின்றி இருக்கும் நிலையில் ஏசி அறையில் அவரிடமிருந்து மற்றவர்களுக்கும் அந்த பாதிப்பு பரவும் வாய்ப்புகள் அதிகம். மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் குளிர்காலத்தில் அதிகம் தாக்கக்கூடும். வெளியிலுள்ள சூழலும் குளிர்ச்சியாக இருக்கும்நிலையில், தொண்டை வறட்சி, சரும வறட்சி, இருமல் போன்றவை அதிகமாகலாம். மழை மற்றும் குளிர்காலங்களில் ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவும்.  அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும். ஏசியால் சளி பிடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.  முன்னரே குறிப்பிட்டபடி, ஏசியின் ஃபில்டர்களை சரியாகச் சுத்தப்படுத்தாத நிலையில், அவற்றில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக் கிருமிகள் சேர்ந்து, அவற்றின் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இன்ஃபுளுயன்சா - வைரஸ் காய்ச்சல் Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்ட உடனே சளி பிடிப்பது ஏன்? ஏசி உபயோகிக்கும்போதெல்லாம் அதிலிருந்து கிருமிகள் பரவி, அலர்ஜி பாதிப்புக்குள்ளாகும் தன்மை கொண்டவர்களுக்கு சளி பிடிக்கலாம்.  வெப்பநிலையில் திடீர் மாற்றம் காரணமாக சிலருக்கு சளி பிடிக்கலாம். இது ஏசி அறைக்குள் இருப்பதால் மட்டுமன்றி, வானிலை மாற்றத்தாலும் நிகழலாம். அதனால்தான் வானிலை மாறும்போது சிலருக்கு சளி பிடிப்பது, மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் வருவதைப் பார்க்கிறோம். இது சளியாக கருதப்பட வேண்டியதல்ல... தற்காலிகமானதுதான். ஒருசில நாள்களில் சரியாகிவிடும். ஆனால் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் அடிக்கடி வரும்பட்சத்தில், அவை சளி பாதிப்பின் அறிகுறிகளா, அலர்ஜியா, தற்காலிக பாதிப்பா என்பதையெல்லாம்  மருத்துவ ஆலோசனையில் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுக்கலாம்.   கதவுகள் Doctor Vikatan: நுரையீரல் அடைப்பு, மூச்சுத்திணறல்... புகை, பாக்கு பழக்கங்கள் காரணமாகுமா? எனவே, குளிர்காலத்திலும் ஏசி வேண்டும் என்போர், ஏசி பயன்படுத்தாத நேரத்தில் அறைகளின் கதவு, ஜன்னல்களைத் திறந்துவைத்து வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ளே பரவ அனுமதிக்க வேண்டும்.  அதற்கு வாய்ப்பில்லாதவர்கள், வெளிக்காற்றை உள்ளே இழுக்கக்கூடிய வசதிகள் கொண்ட ஏசியை பொருத்தலாம்.  குறிப்பிட்ட இடைவெளியில் ஏசியை முறையாக சுத்தம் செய்வது, சர்வீஸ் செய்வது போன்றவற்றைச் செய்யத் தவறாதீர்கள்.  நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சருமம் வறண்டு போகாமலிருக்க மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும்.  முடிந்த அளவுக்கு குறைவான நேரத்துக்கு மட்டுமே ஏசியை பயன்படுத்தவும். தண்ணீர் Doctor Vikatan: காய்ச்சல் குணமானாலும் விடாமல் விரட்டும் இருமல்... என்னதான் தீர்வு? ஏசியின் குளிர்நிலையை குறைவாக வைத்துக்கொள்வதுதான் சரியானது. ரொம்பவும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்போதுதான் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் அதிகமாகும். ஓரளவு குளிர்ச்சியோடு வைத்துக்கொள்ளும்போது, தூக்கத்தில் பிரச்னைகள் இன்றி இருக்கும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 9 Dec 2023 9:00 am

``ஜான்சன் பேபி பவுடர் தினமும் சாப்பிடுறேன்; எந்தப் பிரச்னையும் வரலை - திகிலூட்டும் இளம்பெண்!

உணவுகளைத் தாண்டி சாப்பிடக் கூடாத சிலவற்றை உண்ணும் விநோதமான பழக்கம் சிலருக்கு இருக்கும். பல்பம், மணல், சாக்பீஸ், சுண்ணாம்பு என வித்தியாசமான பொருள்களை சிலர் சாப்பிடுவதுண்டு. அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது டிரேகா மார்ட்டின் என்ற பெண் சமீபத்தில் ஜான்சன் பேபி பவுடரை உண்ணும் விசித்திரமான போதைக்கு அடிமையானதாகக் கூறியுள்ளார். சென்னை வெள்ளம்: ``ஹோம் இன்ஷூரன்ஸ் முதல் வாகன இன்ஷூரன்ஸ் வரை - கவனிக்க வேண்டியவை என்ன? ஜான்சனின் `Aloe & Vitamin E' 623 கிராம் பாட்டில் பவுடரை தினமும் சாப்பிடுவதாகக் கூறியுள்ளார். இதற்காக இந்த ஆண்டு மட்டும் சுமார் 4,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 3,33,380 ரூபாய்) செலவு செய்துள்ளார். தோலுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பவுடர் என நிறுவனம் குறிப்பிட்டுள்ள போதும், இவர் அதைத் தின்பதைத் தொடர்கிறார். இந்தப் பழக்கத்தால் இதுவரையில் எந்த விதமான உடல்நல மற்றும் செரிமான பிரச்னைகளுக்கும் உள்ளாகவில்லை என்று கூறியுள்ளார். பெயின்ட் சில்லுகள், அழுக்கு, காகிதம் அல்லது முடி போன்ற உணவு அல்லாத பொருள்களை விரும்பி உண்ணும் `Pica’ எனும் உணவுக் கோளாறால் இவர் பாதிக்கப்பட்டு இருக்கலாம். தனது அசாதாரண பழக்கத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து, குறிப்பாக தன் மகனிடமிருந்து மறைக்க முயல்வதாகவும், ஒரு வேளை பவுடரை உண்ணும் பழக்கத்தை குறித்து கேள்விப்பட்டால் தன் மகனுக்கும் அந்த விருப்பம் வந்துவிடுமோ என்று அச்சப்படுவதாகவும் இவர் சொல்கிறார். பேபி பவுடர்! #Chroming Challenge: வாசனை திரவியத்தை மோந்ததால் உயிரிழந்த சிறுமி... எச்சரிக்கை பதிவு! இந்த விநோதமான பழக்கத்து அடிமையானதைப் பற்றி பேசியுள்ள டிரேகா மார்ட்டின், ``எனக்கு பேபி பவுடர் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஒரு கட்டத்திற்கு மேல் பேபி பவுடரையே உணவாக உண்ணும் அளவிற்கு அடிமையாகி விட்டேன். அது எப்படி வாசனை வீசுகிறதோ அப்படியே அதன் சுவையும் இருக்கிறது. அதைச் சாப்பிடுவது எனக்கு நன்றாக இருக்கிறது, மகிழ்ச்சியைத் தருகிறது.  பேபி பவுடரை உண்ணும் பழக்கத்தை நிறுத்துவது சவாலானதாக இருக்கிறது. நான் பேபி பவுடருக்கு அடிமையானதை ரகசியமாக வைத்திருக்க முயன்ற போதிலும், என் குடும்பத்தினர் பேபி பவுடர் பாட்டில்கள் விரைவாகக் குறைந்து வருவதைக் கவனிக்கத் தொடங்கினர், இது அவர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியது’’ என்று தெரிவித்துள்ளார்.

விகடன் 9 Dec 2023 8:00 am

Doctor Vikatan: செயற்கை கருத்தரிப்பில் முதல் குழந்தை... அடுத்த குழந்தைக்கும் சிகிச்சை தேவைப்படுமா?

Doctor Vikatan: என் வயது 36. திருமணமாகி பல வருடங்கள் குழந்தையில்லை. பிறகு சிகிச்சை எடுத்து செயற்கை கருத்தரிப்பு முறையில்தான் குழந்தை பெற்றோம். இப்போது இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறோம். முதல் குழந்தையை செயற்கை கருத்தரிப்பு முறையில் பெற்றிருந்தால், அடுத்த குழந்தையையும் அப்படித்தான் பெற வேண்டுமா.... இதை விளக்கிச் சொல்ல முடியுமா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: மழைநாள்களில் அதிகரிக்கும் சேற்றுப்புண்... குணப்படுத்த என்ன வழி? உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், எந்தெந்தக் காரணங்களால் ஒருவருக்கு குழந்தையின்மை பிரச்னை வருகிறது என்பதை முதலில்  தெரிந்துகொள்ள வேண்டும்.  இதில் ஆண், பெண் என இருவர் சம்பந்தப்பட்ட காரணங்களும் இருக்கலாம்.  ஆண்களைப் பொறுத்தவரை விந்தணுக் குறைபாடுகள், அதாவது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், அவற்றின் நகரும் தன்மையில் பிரச்னைகள் இருக்கலாம், அவற்றின் உருவத்தில் பிரச்னைகள் இருக்கலாம். பெண்களைப் பொறுத்தவரை கர்ப்பப்பையில் கட்டிகள், கர்ப்பப்பையில் வீக்கம், கருக்குழாய்களில் அடைப்பு போன்றவை  இருக்கலாம் அல்லது சினைப்பையில் கருமுட்டை வளர்ந்து வெளியேறுவதில் பிரச்னை இருக்கலாம். இப்படிப் பல்வேறு காரணங்களுக்காக செயற்கை கருத்தரிப்பு முறையில் சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. ஐவிஎஃப் Doctor Vikatan: கருத்தரிப்பதை பாதிக்குமா ஃபைப்ராய்டு கட்டி? செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில், மருந்துகள் மட்டும் கொடுத்து முட்டைகளை வளரச் செய்வதன் மூலம்கூட சிலர் கருத்தரிக்கலாம்.  இன்னும் சிலருக்கு ஐவிஎஃப் எனப்படும் டெஸ்ட் டியூப் சிகிச்சையும் தேவைப்படலாம்.  எனவே இவற்றில் ஒருவருக்கு எந்த மாதிரியான பிரச்னை இருந்தது என்று தெரிந்தால்தான் அவருக்கு மீண்டும் மீண்டும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை தேவைப்படுமா என்று சொல்ல முடியும்.  உதாரணத்துக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு அடுத்த முறையும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைதான் தேவைப்படும். ஏனெனில் குறைந்தபட்சம் 18 மில்லியன் விந்தணுக்கள் இருந்தால்தான் சிகிச்சை தேவையின்றி ஒருவரால் கருத்தரிக்க முடியும்.  கருத்தரிப்பு Doctor Vikatan: அடிக்கடி சளித்தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள்... ஆயுர்வேத சிகிச்சை பலன் தருமா? பெண்களைப் பொறுத்தவரை ஏதோ காரணத்துக்காக இருபக்க கருக்குழாய்களையும் அகற்றியிருந்தால் அவர்களுக்கு அடுத்த முறையும் ஐவிஎஃப் போன்ற சிகிச்சைகள் தேவைப்படும். அப்படியின்றி சாதாரண பிரச்னைகளின் காரணமாக கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தால், உதாரணத்துக்கு ஹார்மோன் பிரச்னை, பிசிஓடி பிரச்னை போன்றவை காரணமாக இருந்திருந்தால், மீண்டும் மீண்டும் அவர்கள் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை நாட வேண்டும் என்ற அவசியமில்லை.  பிசிஓடி பிரச்னை உள்ளவர்களுக்கு முதல்முறை செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை கொடுக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் உணவுக்கட்டுப்பாடு, வாழ்வியல் முறை மாற்றம் போன்றவற்றைப் பின்பற்றியதன் விளைவாக  அடுத்த முறை இயல்பாக, சிகிச்சை தேவையின்றி கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.  எனவே உங்கள் விஷயத்தில் முதல்முறை எந்தக் காரணத்துக்காக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை நாடினீர்கள் என்று தெரிந்தால்தான், அடுத்த முறை சிகிச்சை தேவையின்றி கருத்தரிக்க முடியுமா, முடியாதா என்று முடிவுசெய்ய முடியும். கரு | மாதிரிப்படம் Doctor Vikatan: ஆரோக்கியமான கர்ப்பம்... ஆண்களின் வயதும் கவனிக்கப்பட வேண்டுமா? சிலர் பிசிஓடி பிரச்னைக்காக வந்திருப்பார்கள். அவர்களுக்கு எல்லா சிகிச்சைகளையும் கொடுத்து கருத்தரித்திருப்பார்கள். அடுத்தமுறை அப்படி எந்தச் சிகிச்சையும் கொடுக்காமலேயே கருத்தரித்திருப்பார்கள். அது அந்த நபருக்கும் சரி, மருத்துவருக்கும் சரி ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கும். இதற்கான காரணம் என்ன என ஆராய்ந்தால் ஸ்ட்ரெஸ் என்பது தெரியவரும். முதல் குழந்தையைக் கருத்தரிக்க அவர்கள் பல சிகிச்சைகளை  மேற்கொண்டும் பலன் தராமல் ஸ்ட்ரெஸ்ஸுககு உள்ளாகியிருப்பார்கள். கடைசியாக ஐவிஎஃப் சிகிச்சையில் கருத்தரித்திருப்பார்கள்.  ஸ்ட்ரெஸ் Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் கணையத்தில் கல் உருவாகுமா? முதல் குழந்தையைப் பெற்றெடுத்ததும் அவர்களது ஸ்ட்ரெஸ் அளவு குறைவதால் அடுத்த முறை இயல்பாகவே கருத்தரிப்பதையும் பார்க்கிறோம். எனவே மிகத் தீவிரமான பிரச்னைகள் தவிர்த்து வேறு காரணங்களுக்காக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை நாடியவர்களுக்கு அடுத்தடுத்த முறையும் அந்தச் சிகிச்சைதான் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 8 Dec 2023 9:00 am

``16 மாதங்களில் 5 தடவை மாரடைப்பு; எனக்கு என்னதான் பிரச்னை... - வருந்தும் பெண்!

ஒரு மாரடைப்புக்கே செத்துப் பிழைத்து மீண்டு வரும்நிலையில் மும்பையைச் சேர்ந்த 51 வயதான பெயர் குறிப்பிடாத பெண் ஒருவருக்கு கடந்த 16 மாதங்களில் ஐந்து முறை மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஐந்து ஆஞ்சியோபிளாஸ்டி, ஒரு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளன. ஐந்து ஸ்டென்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இப்படி தொடர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் அந்தப் பெண் குழம்பி இருக்கிறார். உடல்பருமன் மழை, வெள்ளத்துக்குப் பின்: மொட்டைமாடி, கழிவறை, கட்டடம், தெரு... பாதுகாப்புக்குச் செய்ய வேண்டியவை! இப்பெண் நீரிழிவு, அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் போன்ற நாள்பட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். செப்டம்பர் 2022-ல் 107 கிலோ எடையோடு இருந்தவர், இதுவரையில் 30 கிலோ எடையைக் குறைத்து இருக்கிறார். இவருக்கு கொலஸ்ட்ராலை குறைக்கும் `பிசிஎஸ்கே9 இன்ஹிபிட்டர்' ஊசி போடப்பட்டுள்ளது.  இவரது நீரிழிவு பிரச்னை கட்டுப்பாட்டில் உள்ளபோதும், மாரடைப்பு ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. பிப்ரவரி, மே, ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் இவருக்கு தொடர்ச்சியாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் `எனக்கு என்னதான் பிரச்னைன்னே தெரியலையே’ என்று மிகவும் வருந்துகிறார். `இப்பெண்ணின் இதய பிரச்னைகளுக்கான காரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கையில், இது `vasculitis' நோயின் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.  Doctor உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்வது ஏன்? - மருத்துவர் விளக்கம்..! இந்த பாதிப்பில் ரத்த நாளங்கள் வீக்கமடையும் மற்றும் குறுகிப்போகும். ஆனால், சோதனை முடிவுகள் இதுவரை தெளிவான எந்த நோயறிதலையும் காட்டவில்லை.  மாரடைப்புக்கான அறிகுறிகள் மீண்டும் மீண்டும் இவருக்குத் தோன்றுகின்றன. இவருக்கு வெவ்வேறு இடங்களில் புதிய அடைப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. முதல் மாரடைப்பில் இடது தமனியில் 90% அடைப்பு ஏற்பட்டது. அடுத்த முறை  வலது கரோனரி தமனியில் 99% அடைப்பு ஏற்பட்டது' என இப்பெண்னின் இதய மருத்துவர் ஹஸ்முக் ராவத் கூறியுள்ளார்.   

விகடன் 7 Dec 2023 2:44 pm

மழை, வெள்ளத்துக்குப் பின்: மொட்டைமாடி, கழிவறை, கட்டடம், தெரு... பாதுகாப்புக்குச் செய்ய வேண்டியவை!

மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் அதன் பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளன. வீட்டிலும், வீட்டுக்கு வெளியேவும் இப்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்... சென்னை வெள்ளம் வெள்ளம் வடிந்த வீடு: சிலிண்டர், வாகனம், ஃபிரிட்ஜ், உணவுப் பொருள்கள்... பாதுகாப்பு டிப்ஸ்! * மொட்டை மாடியில், பார்க்கிங்கில், வீட்டுக்கு வெளியே திறந்த வெளியில் கிடக்கும் தேவையற்ற பொருள்களை அகற்றுங்கள். அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள், புழுக்கள் போன்றவை முட்டையிட்டு, பெருகி, நோயையும் பெருக்கும் அபாயமுண்டு. * வீட்டில் `ஹோம் செப்பல்’ அணிந்துகொள்ளலாம். இதனால் தண்ணீரில், தரையின் ஈரப்பதம் பாதங்களில் ஏறாமல் இருக்கும்; சேற்றுப்புண், பித்தவெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கும். மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது ஷாக் அடிக்காமலும் தடுக்கும். சென்னை வெள்ளம் மழைக்கால மின்கசிவு: காலிங் பெல், ஸ்விட்ச் போர்டு, மின்கம்பி, இடி, மின்னல்... இவற்றை செய்யாதீர்கள்! * சாலைகள் இப்போதுதான் சீரமைக்கப்பட்டு வருகின்றன. வெளியில் செல்லும்போது கவனமாகப் பயணிக்கவும். சாலையின் ஓரத்தில் செல்லாமல் நடுவில் செல்வது பாதுகாப்பானது. அது, சாலையோர பள்ளங்கள், அறுந்து விழுந்த மின்கம்பிகள், திறந்து கிடக்கும் மேன்ஹோல்களிடம் இருந்து காக்கும். * வெளியில் சென்று வந்தவுடன் சூடான நீரில் குளித்து உடைமாற்றுவது மழைக்கால நோய்களிலிருந்து காக்கும். * வீட்டில் உள்ள அனைவருமே குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந்துவது நல்லது. கூடுமானவரை சூடான நீரைப் பருகுவது சிறந்தது. அதேபோல், சமைத்த உணவுகளை சுடச்சுட உண்பது ஆரோக்கியத்துக்கும் நாக்கின் சுவை மொட்டுகளுக்கும் நல்லது. செரிமானத்துக்கு சற்றுக் கடினமான கீரை மற்றும் அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். சூடான கஞ்சி, காய்கறி சூப் போன்றவற்றை அதிகம் பருகலாம். வடபெரும்பாக்கம் | வெள்ளம் மழைக்காலத்தில் பாம்புகள்: வீட்டுக்குள் வருவது ஏன், வந்தால் என்ன செய்யலாம், வராமல் தடுப்பது எப்படி? * பயணங்களை, அந்த வழித்தடத்தில் போக்குவரத்து சீராகிவிட்டதா, வாகனங்கள் கிடைக்கின்றனவா, கிடைத்தாலும் நியாயமான கட்டணத்தில் உள்ளதா உள்ளிட்டவற்றை பரிசீலித்து முடிவெடுக்கவும். * கட்டடத்தின் மொட்டைமாடியில் மழைநீர் வடிகாலுக்காக வைக்கப்பட்டுள்ள குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும். ஏனென்றால், அதில் மரங்களிலிருந்து நிறைய காய்ந்த இலைகள் விழுந்து, அடைபட்டிருக்கும். அது நம் கவனத்துக்கு வராமல் போயிருக்க வாய்ப்புண்டு. சென்னை வெள்ளம் ``மனநலப் பிரச்னைக்கு மருந்து எடுத்துக்கொள்கிறேன்... ஓபனாக பேசிய பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர்! * வீட்டின் கழிவுநீர் மற்றும் மழைநீர்க் குழாய்களில் அடைப்பு இருக்கின்றனவா என ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். அப்படி இருக்கும் பட்சத்தில் உடனடியாக தண்ணீர் போவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும். * சொல்லப்போனால், மழை நேரத்தில் தண்ணீர் புகும் வீடுகளில், முதலில் அடைக்க வேண்டியது டாய்லெட்டை. இரண்டு மணல் மூட்டைகள் போட்டு அந்தத் துளையை அடைத்துவிட வேண்டும். தண்ணீர் வடிந்த பின்னர் முதலில் கவனம் கொடுக்கப்பட வேண்டியதும் அதுதான். அங்கிருந்து வீட்டுக்குள் கிருமிகள் பரவாமல் சுத்தம், சுகாதாரம் பேணவும். * மழை, வெள்ள பாதிப்பால் கட்டடத்தில் அதிகப்படியான ஈரப்பதம், பெரிய விரிசல்கள் இருக்கும் பட்சத்தில், பொறியாளரை அணுகி, சீரமைப்பு ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ளவும். * மழைநீர் தேங்கும் பகுதிகளில், அருகிலுள்ள மின்சார இணைப்புப் பெட்டிகள் அபாயகரமாக இருக்கும்பட்சத்தில். வடியாத நீர்த்தேக்கம் குறித்து உடனடியாக அருகிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்திலும் தெரிவிக்கவும். ஈரோட்டில் கனமழை | வெள்ளம் மழைக்காலத்தில் நோய், கொசுக்களை ஒழிக்க... ஆரோக்கியம் காக்க, வீட்டை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்..! * தண்ணீர் ஓடும், தேங்கி நிற்கும் தெருக்களை கவனியுங்கள். குப்பைகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் அடைத்துக் கொண்டு தண்ணீர் செல்லாமல் நின்றுகொண்டிருக்கும். அதற்கு மாநகராட்சியில் இருந்து வரும்வரை காத்திருந்தால், அவர்கள் வருவதற்குள் தண்ணீர் தேக்கத்தால் பிரச்னைகள் பெருகலாம். எனவே, உங்கள் தெருக்களில் ஒரு குழு அமைத்து, அல்லது தெருவில் உள்ளவர்கள் சேர்ந்து பணியாளர்களை நியமித்து தெருவில் நிற்கும் தண்ணீரை அகற்ற சிறு சிறு முயற்சிகள் எடுக்கலாம். பெரிய அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் வந்து சரிசெய்வார்கள். மீள்வோம் விரைவாக!

விகடன் 7 Dec 2023 1:00 pm

ஆண்கள் தொடக்கூடாத 2 இடங்கள்... காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -125

கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, நகம் கடிப்பது போன்ற கெட்ட பழக்கங்கள் சிலரிடம் இருக்கும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். இவற்றைப்போன்ற ஒரு கெட்ட பழக்கம் ஆண்களிடம் மட்டுமே இருக்கிறது என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்தப் பழக்கம் பற்றியும், அதனால் ஏற்படுகிற தேவையற்ற பயம் பற்றியும், அதை ஏன் செய்யவே கூடாது என்பது பற்றியும் இந்தக் கட்டுரையில் விளக்குகிறார். Sexologist Kamaraj பயமும் வேண்டாம்... அலட்சியமும் வேண்டாம்... காமத்துக்கு மரியாதை| சீஸன் 4 - 121 ''டாக்டர், என்னோட penis-ல யூரின் போற இடம் சிவப்பா இருக்கு. சம்டைம்ஸ் கட்டி இருக்கிற மாதிரி தோணுது. இதனால ஏதாவது பிரச்னை வருமா..?'' ''டாக்டர், என்னோட ஆணுறுப்புல ஒன்பாத்ரூம் போற இடத்துல வெள்ளை வெள்ளையா புள்ளிங்க இருக்கு. இது ஏதாவது பிரச்னையா..?'' ''டாக்டர், என்னோட உறுப்புக்குள்ள கறுப்பு கறுப்பா புள்ளிங்க இருக்கு. கேன்சரா இருக்குமோன்னு பயமா இருக்கு...'' ''மேலே சொன்ன சந்தேகங்களுடன் நிறைய ஆண்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். பல ஆண்களிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. சிறுநீர் வருகிற பாதையை அடிக்கடி பிரித்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எதற்காக அப்படிச் செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள்தான் ஆணுறுப்பு தொடர்பான சந்தேகங்களுடன் அடிக்கடி டாக்டர்களை சந்தித்துக்கொண்டிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை மிகவும் அபத்தமான விஷயமிது. ஆணுறுப்பின் உள்பகுதியில் லேசான கோழைப்படலம் இருக்கும். இதன் காரணமாகத்தான் அந்தப் பகுதி எப்போதும் சிவந்தே இருக்கும். அங்கு புள்ளிகள் இருந்தால், அவர்களுடைய தோலின் அமைப்பேகூட அப்படியிருக்கலாம். அதை தொற்றுநோய் என்று பயந்துவிடுவார்கள். அங்கிருக்கும் சதைப்பகுதியை புற்றுநோய்க் கட்டி என்று நினைத்து விடுவார்கள். Sex Education மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -123 ஒரு செக்ஸாலஜிஸ்ட்டாக சொல்கிறேன். ஆண்கள் தொடக்கூடாத இரண்டு இடங்கள், அவர்களுடைய கண்ணின் கருவிழிகளும் ஆணுறுப்பின் உள்பகுதியும்தாம்... கண்ணில் கருவிழியில் ரத்த ஓட்டமிருக்காது என்பதால், அந்தப் பகுதியைத் தொட்டால் விரல்களிலிருக்கும் கிருமிகள் கண்ணில் பிரச்னையை ஏற்படுத்தும். அதேபோல விரலில் இருக்கிற கிருமிகள், ஆணுறுப்பினுள்ளே சென்று தொற்றை ஏற்படுத்தலாம். இதுபோன்ற கெட்ட பழக்கத்தை இன்றே நிறுத்தி விடுங்கள். அதுதான் நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 6 Dec 2023 6:00 pm

Doctor Vikatan: மழைநாள்களில் அதிகரிக்கும் சேற்றுப்புண்... குணப்படுத்த என்ன வழி?

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே எனக்கு கால்களில் சேற்றுப்புண் அதிகமாகிவிடுகிறது. சமையலறையில் நின்று வேலை பார்க்க முடியவில்லை. இரவில் பெரும் அவஸ்தையாக இருக்கிறது. இந்தப் பிரச்னை அடிக்கடி வர என்னதான் காரணம்.... இதற்கு என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா Doctor Vikatan: கருத்தரிப்பதை பாதிக்குமா ஃபைப்ராய்டு கட்டி? சேற்றுப்புண் என்பது ஒருவகையான ஃபங்கல் இன்ஃபெக்ஷன்.... அதாவது பூஞ்சையால் ஏற்படும் தொற்று. இந்தத் தொற்று பாதிக்கும்போது கால் விரல்களுக்கு இடையில் கொப்புளங்கள் வருவது, சிவந்த செதில்கள் உருவாவது, அரிப்பு, எரிச்சல் போன்றவை இருக்கும். ஈரப்பதம் அதிகமுள்ள சூழலிலும், ஈரமான இடங்களில் நின்று வேலை செய்வதாலும் இந்தப் பிரச்னை தீவிரமாகும். அடிக்கடி சேற்றுப்புண் பிரச்னை வருகிறது என்றால் முதல் வேலையாக ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் இருப்பதையும், தண்ணீரில் நின்றபடி வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.  அது முடியாத பட்சத்தில் கைகளுக்கு கிளவுஸ், கால்களுக்கு ரப்பர் பூட்ஸ் போன்றவற்றை அணிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும்.  மாத்திரைகள் Doctor Vikatan: வீட்டுவேலைகளைச் செய்வதால் கைகளில் அரிப்பு, எரிச்சல், வறட்சி... தீர்வு என்ன? பிரச்னை வந்துவிட்டால் தானாக குணமாகும் என அலட்சியப்படுத்தாமல் சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில், ஆன்டி ஃபங்கல் க்ரீம், வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடிய மாத்திரைகள் என முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.   தொற்று முழுமையாக குணமாகும்வரை இந்த விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். உங்களுடைய உடைகள், காலணிகள், சாக்ஸ் போன்றவற்றை மற்றவருடன் பகிராமல் இருப்பதும் அவசியம். மேலும் இறுக்கமான காலணிகள்  அணிவதையும் தவிர்க்க வேண்டும். வெறுங்கால்களுடன் நடப்பதையும் தவிர்க்கவும். இந்தப் பிரச்னைக்கு சரும மருத்துவரை அணுகி முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். சுய மருத்துவம் உதவாது.   உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 6 Dec 2023 6:00 pm

சளி, இருமலைப் போக்க... உணவே மருந்தாகும் எளிய வீட்டு வைத்தியங்கள்!

மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பலரும் சளி, இருமல் என்று அவதிப்பட்டு வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு, அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது. சரி... சளி, இருமல் இவற்றுக்கு மூல காரணம் என்ன, அவற்றைப் போக்க என்ன செய்வது என்று பார்ப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. Healthy food வெள்ளம் வடிந்த வீடு: சிலிண்டர், வாகனம், ஃபிரிட்ஜ், உணவுப் பொருள்கள்... பாதுகாப்பு டிப்ஸ்! இளம் மற்றும் நடுத்தர வயதினரிடையே `Functional foods’ என்ற வார்த்தை மிகப் பிரபலமாகிவிட்டது. விதவிதமாகக் கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவதெல்லாம் இன்றைக்குப் போய்விட்டது. `பி.எம்.ஐ, பி.எம்.ஆர் குறைய என்ன செய்யலாம்?’, `பி.பி கூடாமல் இருப்பதற்கு வழி என்ன?’ என்பதையெல்லாம் கூகுளில் தேடுவது அதிகமாகிவிட்டது. அறிவியலின் நீட்சியும், இணையத்தின் வீச்சும் இதற்கு முக்கியக் காரணங்கள். இதில் எதிர்பாராத ஒரு பக்கவிளைவு, பழைய சமையல் பழக்கம் எல்லாம் சத்தில்லாதது என்கிற பொய் ஜோடனை உருவானதுதான். நம் பாரம்பர்ய உணவுகள் எல்லாமே ஃபங்ஷனல் ஃபுட்ஸ் என்பதுதான் உண்மை. ரொட்டி, கேக், பழத் துண்டுகள் மற்றும் இறைச்சி வகைகளைத் தவிர, பெரிதாக ஏதும் அறியாதது மேற்கத்தியம். தினமும் வைக்கும் நம் குழம்பு, கூட்டு, பொரியலில் இன்றைய அறிவியல் சொல்லும் உணவுக் கூறுகள், இன்னும் முழுமையாகச் சொல்லப்படாத மருத்துவ உண்மைகள் பொதிந்து இருப்பது பலருக்கும் தெரியாது. எப்போதாவது வரும் சளி இருமல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே அதை கவனித்துக்கொள்ளும். ஆனால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, காலை எழுந்ததும் அடுக்குத் தும்மல், நெஞ்சில் சளி, அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம். சளி மழைக்காலத்தில் பாம்புகள்: வீட்டுக்குள் வருவது ஏன், வந்தால் என்ன செய்யலாம், வராமல் தடுப்பது எப்படி? சளி இருமல் போக்க என்ன செய்யலாம்? * உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில நாள்களுக்குத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், தடியங்காய் (வெள்ளைப் பூசணி), மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றை சில வாரங்களுக்குத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக இவற்றைச் சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால், மிளகுத்தூள் தூவிச் சாப்பிடலாம். இதன் மூலமாக சளி, இருமல் தவிர்க்கலாம். * பால், தயிர், இனிப்பு மூன்றும் நுரையீரலில் கபத்தை (சளி) சேர்க்கக்கூடியவை. இவற்றையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்க்ரீம் வேண்டவே வேண்டாம். பழங்களில் எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை தவிர மற்றவற்றைச் சாப்பிடலாம். மிளகு மழைக்கால மின்கசிவு: காலிங் பெல், ஸ்விட்ச் போர்டு, மின்கம்பி, இடி, மின்னல்... இவற்றை செய்யாதீர்கள்! * மிளகு ஓர் அற்புதமான மருத்துவ உணவுப்பொருள். மிளகின் Immuno Modulating Effect காரணமாக, தும்மல், அலர்ஜியால் வரும் சளி (Sinusitis), ஆஸ்துமாவில் தங்கும் சளிக்கு உடனடியாகவும், நாள்பட்ட பலனையும் அளிக்கும். சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம். * குழந்தைக்கு இரவில் மட்டும் இருமல் ஏற்படுகிறதா? நான்கு மிளகை எடுத்து தூளாக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் உறங்குவதற்கு முன்னர் பருகக் கொடுக்கலாம். இருமல் நீங்கி, இதமான தூக்கம் கிடைக்கும். * பாசிப் பயறு கொஞ்சம் குளிர்ச்சியானது. குளிர்காலத்தில் இரவில் தவிர்க்கவும். ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள், இரவில் வெண்பொங்கல் சாப்பிடுவதைத் தவிர்த்தால், சளி, இருமல் தவிர்க்கலாம். ரசம் * மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மதியம் சாப்பிடும்போது, மணத்தக்காளி வற்றலை வறுத்துப்போட்டு, முதல் கவளத்தை சாப்பிட்டுவிட்டு, பிறகு குழம்பு, காய் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. * மோர் சளி தராது. எனவே, அதை தாராளமாகச் சாப்பிடலாம். தயிர்தான் நல்லதல்ல. தயிர் செரிமானத்தை மந்தப்படுத்தும். மோர் சீர்படுத்தும். தயிர் கபத்தை வளர்க்கும். மோர், பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும். * திப்பிலியை இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து தேனில் உணவுக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட்டால் சளி குறையும். * காலை காபிக்கு பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளைக் கஷாயமாக்கி, பனங்கருப்பட்டி சேர்த்துப் பருகிவந்தால், காலை வேளையில் ஏற்படும் இளைப்பு உடனடியாகக் குறையும். * பிரைமரி காம்ப்ளெக்ஸ் நுரையீரல் காசநோய் (Primary Complex - Pulmonary Tuberculosis) இருக்கும் குழந்தைகளுக்கு சத்துமாவு மிக அவசியம். புழுங்கல் அரிசி, பார்லி அரிசி, உளுந்து, கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச்சோளம், முளைகட்டிக் காயவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, முந்திரி, பாதாம் பருப்பு, ஏலக்காய் இவற்றை வறுத்து, மாவாகத் திரித்து சத்துமாவைச் செய்துகொள்ளலாம். கஞ்சி காய்ச்சிய பின் இனிப்புக்கு பனங்கருப்பட்டி அல்லது கற்கண்டு, சிறிது சுக்குத்தூள் சேர்த்து சூடாக அருந்தக் கொடுக்கவும். அசைவப் பிரியம் உள்ள குழந்தைக்கு, பால் நண்டு சமைத்துக் கொடுக்கலாம். மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்! மழைக்காலத்தில் நோய், கொசுக்களை ஒழிக்க... ஆரோக்கியம் காக்க, வீட்டை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்..! சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாயம். உணவு, மருந்துக்கு மாற்றல்ல. மருந்தை விரைவாகப் பணிபுரிய வைக்கவும், நோய் அணுகாமல் தடுத்து வைக்கவும், வந்த நோயை விரைவாக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு விரட்டவும் உணவால் மட்டுமே முடியும். இதை மனதில்கொள்வது நல்லது. தொகுப்பு: பாலு சத்யா

விகடன் 6 Dec 2023 12:38 pm

Doctor Vikatan: கருத்தரிப்பதை பாதிக்குமா ஃபைப்ராய்டு கட்டி?

Doctor Vikatan: என் வயது 30. தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. எனக்கு ஃபைப்ராய்டு கட்டி இருப்பதாகச் சொல்கிறார் மருத்துவர். இந்தக் கட்டி, கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா... இதற்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. Doctor Vikatan: மழை நாள்களில் ஏற்படும் கை, கால் குடைச்சல்... காரணங்களும், தீர்வுகளும் என்ன? ஃபைப்ராய்டு என்பது, கர்ப்பப்பை தசைகளில் வரக்கூடிய ஒரு வகை கட்டி. அந்தக் கட்டியானது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வைத்துதான், அது கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா, ஏற்படுத்தாதா என்று சொல்ல முடியும். ஒருவேளை இந்தக் கட்டியானது, கர்ப்பப்பையின் உள்ளே உள்ள எண்டோமெட்ரியம் எனப்படும் சவ்வுப் பகுதியில் இருந்தால் கண்டிப்பாக குழந்தை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால் அந்த எண்டோமெட்ரியம் பகுதியில்தான் கருவானது பதியும். கட்டி இருக்கும் பட்சத்தில் கரு அங்கே பதிவதிலேயே பிரச்னை இருக்கும். இதுபோன்ற கட்டியை மருத்துவ மொழியில் 'சப்மியூகோசல் ஃபைப்ராய்டு' (Submucosal fibroid) என்று சொல்வோம். இதுபோன்ற கட்டியை அவசியம் நீக்கியாக வேண்டும். ஹிஸ்ட்ரோஸ்கோப்பி எனப்படும் சிகிச்சை மூலம் இதை நீக்கிவிடலாம். அதுவே இந்தக் கட்டியானது கர்ப்பப்பையின் தசையில் இருந்தால் அதை 'இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்டு' (Intramural fibroid) என்று சொல்வோம். இந்தக் கட்டி, கர்ப்பப்பை சவ்விலிருந்து 2.8 செ.மீ தூரம் தள்ளி இருக்குமானால், அது கர்ப்பத்தை பாதிக்காது. இந்நிலையில் கட்டி சிறியதாக இருந்தால் காத்திருந்து பார்க்கலாம். ஆனால் அந்தக் கட்டியானது 4 செ.மீ அளவுக்கு மேல் பெரிதாக இருக்கும் பட்சத்தில் அதை நீக்கிவிட்டு, பிறகு குழந்தை பெற்றுக்கொள்வது தான் சரியானது. டாக்டர் டவுட் - கர்ப்பப்பை! Doctor Vikatan: நுரையீரல் அடைப்பு, மூச்சுத்திணறல்... புகை, பாக்கு பழக்கங்கள் காரணமாகுமா? கர்ப்பப்பையின் வெளியே உள்ள கட்டியை 'சப்சீரோசல் ஃபைப்ராய்டு' ( Subserosal Fibroid) என்று சொல்வோம். பொதுவாக இந்தக் கட்டி எந்தப் பிரச்னையையும் தராது. அதுவே அளவில் பெரிதாகி, கர்ப்பப்பையை அழுத்தினால் அந்தக் கட்டியையும் நீக்கியாக வேண்டும். எனவே உங்கள் விஷயத்தில் ஃபைப்ராய்டு கட்டி எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்துதான் அது உங்கள் கர்ப்பத்தை பாதிக்குமா இல்லையா என்று சொல்ல முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 6 Dec 2023 9:00 am

NCRB report: பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்...

`காலையில பேப்பரை திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இதே செய்திகள்தான் இருக்கின்றன’ எனப் புலம்பும் பலரை கண்டிருப்போம். `குற்றம் நடந்தது என்ன' எனக் குற்றம் நடந்த பின்னர் ஆராயப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டாலும் அல்லது விடுவிக்கப்பட்டாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. Crime ``இது பேய் நோய்... 5 வயசுல செத்துருவான்னு நினைச்சோம்... ஆனா...!'' நம்பிக்கை அளித்த நல்நிகழ்வு! அதிலும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் குற்றங்கள் 2022 என்ற தலைப்பில் தேசிய குற்ற ஆவண காப்பகம் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஏஜென்சிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4 சதவிகிதமும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 8.7 சதவிகிதமும், மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் 9.3 சதவிகிதமும், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான குற்றம் 13.1 சதவிகிதமும், பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றம் 14.3 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.   பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…  * 2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,45,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ல் 4,28,278 ஆக இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 4 சதவிகிதம் அதிகம். Abuse ஷபீனா உசேன்: 14 லட்சம் பெண் குழந்தைகளை பள்ளிக்கு மீட்டுவந்த சமூக சேவகர்; ரூ.4.16 கோடி பரிசு! * பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவர்களின் வாழ்க்கைத் துணை அல்லது உறவினர்களால் 31.4 சதவிகிதமும், கடத்தல் மூலமாக 19.2 சதவிகிதமும் மற்றும் பாலியல் தொல்லைகள் மூலமாக 7.1 சதவிகித வழக்குகளும் பதிவாகி உள்ளன. * 2022-ம் ஆண்டில் பதிவான மொத்த 31,516 வழக்குகளில் அதிகபட்சமாக 5,399 வழக்குகள் ராஜஸ்தானில் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 3,690 வழக்குகளும், மகாராஷ்டிராவில்  2,904 வழக்குகளும், ஹரியானாவில் 1,787 வழக்குகளும் பதிவாகி உள்ளன.  * டெல்லியில் கடந்த ஆண்டு 1,212 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன.  * ஒரு லட்சம் பெண்களுக்குப் பதிவு செய்யப்படும் குற்ற விகிதம் 2022-ல் 66.4 ஆக உள்ளது. 2021-ல் இந்த எண்ணிக்கை 64.5 ஆக இருந்தது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்… *2022-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான 1,62,449 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 8.7 சதவிகிதம் (1,49,404 வழக்குகள்) அதிகம். * குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பெரும்பாலானவை கடத்தல் மற்றும் கடத்தல் தொடர்பான வழக்குகளாக உள்ளன. * கடத்தல் தொடர்பாக 45.7 சதவிகித குற்றங்களும், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 39.7 சதவிகித குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தல் வயதானவர்களுக்கு எதிரான குற்றங்கள்… * வயதானவர்களுக்கு எதிரான குற்றங்கள் 2021-ல் 26,110 ஆக பதிவாகி உள்ளன. 2022-ல் இந்த எண்ணிக்கை 9.3 சதவிகிதம் அதிகரித்து 28,545 வழக்குகளாக உள்ளன. 7,805 வழக்குகள் அல்லது 27.3 சதவிகித குற்றங்கள் திருட்டோடு தொடர்புடையவை, 3,944 வழக்குகள் போலி ஆவண வழக்குகளோடு தொடர்புடையவை, 3,201 வழக்குகள் மோசடி மற்றும் ஏமாற்று வேலையோடு தொடர்புடையவை.  பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள்…  *பட்டியலினத்தவருக்கு (SC) எதிரான குற்றங்கள் 13.1 சதவிகிதம் அதிகரித்துள்ளன. 2021-ல் 50,900 வழக்குகளில் இருந்து கடந்த ஆண்டு 57,582 வழக்குகளாக உயர்ந்துள்ளன.  *பழங்குடியினருக்கு (ST) எதிரான குற்றங்கள் 14.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 8,802 வழக்குகளில் இருந்து 10,064 வழக்குகளாக உயர்ந்துள்ளன.  ஊழல் ``இந்த பொருள்களின் விலை குறையாது; காரணம் இதுதான்..! எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்! பிற குற்றங்கள்... *பொருளாதார குற்றங்கள் 11.1 சதவிகிதம் (1,74,013 வழக்குகள்) அதிகரித்துள்ளது. *2021-ல் 3,745 ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன; 2022-ல் 4,139 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 10.5 சதவிகிதம் அதிகம்.  * 2021-ல் 52,974 ஆக இருந்த சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 24.4 சதவிகிதம் அதிகரித்து, 65,893 வழக்குகளாக உயர்ந்துள்ளன. குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?...

விகடன் 5 Dec 2023 6:49 pm

மழைக்காலத்தில் நோய், கொசுக்களை ஒழிக்க... ஆரோக்கியம் காக்க, வீட்டை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்..!

மழைக்காலத்தில் தோன்றும் நோய்களும், உடல்நலத் தொந்தரவுகளும் எண்ணற்றவை. அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, சித்த மருத்துவர் அமுதா தாமோதரன் பகிர்ந்த சில வழிமுறைகள் இங்கே... நிலவேம்பு மழைக்கால மின்கசிவு: காலிங் பெல், ஸ்விட்ச் போர்டு, மின்கம்பி, இடி, மின்னல்... இவற்றை செய்யாதீர்கள்! ஏழு நாள்களுக்கு நிலவேம்புக் கஷாயம்... ஏழு நாள்களுக்கு காலை, மாலை என நிலவேம்புக் கஷாயத்தைக் குடிக்கலாம். கஷாயம் குடித்த அரை மணி நேரத்துக்கு வேறு எதையும் சாப்பிட வேண்டாம். 200 மி.லி தண்ணீரில் நிலவேம்புப் பொடி ஒரு டீஸ்பூன் கலந்து காய்ச்ச வேண்டும். நீர் கொதித்து 50 மி.லி-ஆக வற்றியதும் வடிகட்டி, மிதமான சூட்டில் பருகலாம். காய்ச்சல் குணமாகும். காய்ச்சல் வராதவர்களும் ஏழு நாள்கள் தொடர்ந்து அருந்த, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காய்ச்சல், சளி, வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். இரண்டு நாள்களுக்கு மேலும் காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை என்றாலோ, அதிகரித்தாலோ மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். தினம் தினம் உணவில்... சுக்கு, மிளகு, பூண்டு, வெந்தயம், மஞ்சள், சீரகம், கருஞ்சீரகம், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தனியா, இஞ்சி, திப்பிலி போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு அதிகரிக்கும், ஆரோக்கியம் மேம்படும். சென்னை மழை 2023 மழைக்காலத்தில் பாம்புகள்: வீட்டுக்குள் வருவது ஏன், வந்தால் என்ன செய்யலாம், வராமல் தடுப்பது எப்படி? மழையில் நனைந்த பின்... மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. கால்கள் மற்றும் நகங்களில் நன்றாக சோப் போட்டுக் கழுவ வேண்டும். நீரில் நனைந்த செருப்பையும் சுத்தம் செய்த பிறகே மறுநாள் அணிய வேண்டும். முடிந்த வரை இந்தப் பருவ காலத்தில் ஷூ, தோல் செருப்பு அணிவதைத் தவிர்ப்பது நல்லது. மழை, கால் அளவு தண்ணீர், இடுப்பளவு தண்ணீர், சேறு என நனைந்த உடைகளை, மற்ற உடைகளுடன் சேர்க்காமல், தனியே துவைக்க வேண்டும். வெளியில் செல்லும்போது, கட்டாயம் ரெயின் கோட், குடை, டிஷ்யூ பேப்பர் வைத்திருப்பது அவசியம். ஈரக் கால்களுக்கு இதமான மசாஜ்... என்னதான் ரெயின்கோட் போட்டிருந்தாலும், கால்கள் நனையத்தான் செய்யும். சாலையில் தேங்கிய நீரில் கால்களைப் பதிப்பதைத் தவிர்க்க முடியாது. பக்கெட்டில் பாதி அளவு வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் எப்சம் உப்பு போட்டு, அதில் 20 நிமிடங்கள் கால், பாதங்களை வைத்திருக்கலாம். இதனால் தொற்றுக்கள், அழுக்கு, கால் வலி, எரிச்சல் ஆகியவை நீங்கிவிடும். பாதம் `இன்னும் எத்தனை காலம்தான் இப்படி?' பெருமழையில் மூழ்கிய சிங்காரச் சென்னை: நிபுணரின் விளக்கம்! மழைக்கால நோய்கள்... மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்புகள் அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப்போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும். மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களும் வரலாம். எனவே, குடிதண்ணீரை கொதிக்கவைத்தே அருந்த வேண்டும். சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருள்களை உண்பதன் மூலம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து, வீட்டில் தயாரிக்கும் உணவை உண்ணலாம். உணவு, தண்ணீர் விஷயத்தில் குழந்தைகளுக்கு சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். கொசுத் தொல்லை நீங்க... டெங்கு, மலேரியா போன்றவை கொசுக்களால் பரவக்கூடியவை. வீட்டில், துளசி, நிலவேம்பு, லெமன் கிராஸ், நொச்சி, கற்பூரவல்லி, புதினா ஆகிய செடிகள் இருந்தால், கொசு ஓரளவுக்குத் தடுக்கப்படும். மண் சட்டியில் நொச்சி, நிலவேம்பு, துளசி ஆகியவற்றை எரித்து, புகையை வீட்டில் பரவவிட்டால் கொசுக்கள் ஓடிவிடும். தேங்காய் எண்ணெய், புங்க எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து, அதில் மண்ணெண்ணெயை எட்டில் ஒரு பங்கு கலந்து, நீர் தேங்கும் இடங்களிலும், வீட்டைச் சுற்றிலும் தெளிக்கலாம். இது கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும். கொசுவை அழிக்கும் எலெக்ட்ரானிக் பேட்களைப் பயன்படுத்துவதும் சிறந்த வழி. தரமான, வசதியான கொசுவலைகளைப் பயன்படுத்தலாம். கொசு மழைக்காலத்தில் பாம்புகள்: வீட்டுக்குள் வருவது ஏன், வந்தால் என்ன செய்யலாம், வராமல் தடுப்பது எப்படி? சுற்றுச்சூழலை சுத்தமாக்குவோம்... கொசு உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம். பிளாஸ்டிக் கப், தேங்காய்ச் சிரட்டை, பிளாஸ்டிக் கவர், டயர், ஆட்டுக்கல், பறவைகளின் உணவுப் பாத்திரம் போன்ற மழைநீர் தேங்கும் பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது தண்ணீர் தேங்காத வகையில், தலைகீழாக வைக்க வேண்டும். செடிகள் நிறைந்த வீட்டில், கூடுதல் கவனம் எடுத்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குப்பையைச் சேர்த்துவைக்காமல், உடனுக்குடன் அப்புறப்படுத்துவது நல்லது. கிணறு, தொட்டி ஆகியவற்றை மூடிவைத்திருப்பது அவசியம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்க... ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நெல்லி ஆகியவற்றின் சாற்றைக் குடிக்கலாம். மழைக்காலத்தில் சர்க்கரைக்குப் பதிலாக, உப்பு சேர்க்க சளி பிடிக்காது. காலையில் திரிகடுகம் என்ற சூரணத்தைப் பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து, நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இரவில் திரிபலா சூரணத்தை ஒரு டீஸ்பூன் கலந்து, வெல்லம் சேர்த்து, திரிபலா டீயாகப் பருகலாம். டெங்கு காய்ச்சலில் ரத்தக்கசிவு வராமல் இருக்க, உணவு உண்ட பிறகு, நெல்லி லேகியம், கரிசாலை லேகியம், இம்பூர லேகியம் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம். நோய்களை முறியடிக்கும் மூலிகை டீ! வெள்ளம் வடிந்த வீடு: சிலிண்டர், வாகனம், ஃபிரிட்ஜ், உணவுப் பொருள்கள்... பாதுகாப்பு டிப்ஸ்! வழக்கமான டீ-க்கு பதிலாக பின்வரும் மூலிகை டீ-களை பருக, ஆரோக்கியம் மேம்படும்... ஆவாரம் பூ ஆவாரம் பூக்களைத் தண்ணீரில் அலசிய பிறகு, தண்ணீரில் கொதிக்க வைத்து எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். செம்பருத்திப் பூ செம்பருத்திப் பூக்களின் இதழ்களைப் பிரித்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு, எலுமிச்சைச் சாறு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். துளசி துளசி இலைகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, ஏலக்காய் தட்டிப் போட்டு, கருப்பட்டி சேர்த்துப் பருகலாம். கொத்தமல்லி கொத்தமல்லித்தழைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, சிறிது சுக்கு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். புதினா புதினா இலைகளை நீரில் கொதிக்கவிட்டு, எலுமிச்சைப் பழச்சாறு, கருப்பட்டி கலந்து குடிக்கலாம். மூலிகை காபி சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா ஆகிய வற்றை அரைத்து, காபி பொடியாகப் பயன்படுத்தலாம். - ப்ரீத்தி

விகடன் 5 Dec 2023 3:27 pm

மாதவிடாய்: தரையில் அமர்ந்திருக்கும் மகள்; பெருமைப்படும் அம்மா... வைரல் வீடியோவிற்கு கண்டனங்கள்!

மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகள் இன்னும் பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. `தீட்டு' என்ற பெயரில் யாரையும் தொடக்கூடாது, தனி தட்டு, பாத்திரங்கள் என மாதவிடாய் சமயத்தில் மட்டும் ஒதுக்கி வைப்பது பரவலாகவே இருக்கிறது. மாதவிடாய் மாதவிடாய் நாள்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால் பட்டுப்போகுமா? உண்மை இதுதான்! இதற்கு உதாரணமாக இணையத்தில் ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. சூரத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ரூபல் மிதுல் ஷா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது குடும்பத்தோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகளை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனைவரும் டேபிளில் அமர்ந்து இருக்க, அவரின் மகள் மட்டும் சோகமான முகத்தோடு தரையில் உட்கார்ந்து இருக்கிறார். தரையில் அமர்ந்து சாப்பிடுமாறுசாப்பிடுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   `ஷிஃப்ட் செய்யப்பட்டதற்கு பின்னர் குடும்பமாக அமர்ந்து சாப்பிடும் முதல் மதிய உணவு' எனக் குறிப்பிட்டு, அதோடு `மாதவிடாய் தினங்களில் அந்த நபர் பிறரோடு தொடர்பு கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கிறோம். நானும் ஜான்வியும் அதைப் பின்பற்ற விரும்புகிறோம். மாதவிடாய் மாதவிடாய் தீட்டு, தனி வீடு... மகளிர் ஆணையங்கள் எங்கே? என் குடும்பத்தினர் காலங்காலமாக எடுத்த அந்த விருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம், இன்று வரை நாங்கள் அதை மிகவும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கிறோம்'..! என்று குறிப்பிட்டுள்ளார். பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த இந்தப் பதிவு, நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.  கலாசாரம், பண்பாடு எனக் கூறி ஏமாற்றப்பட்டு வருவதை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர்.  இந்தச் சம்பவம் குறித்து உங்களின் கருத்தென்ன?!... கமென்டில் சொல்லுங்கள்!  

விகடன் 5 Dec 2023 3:24 pm

Doctor Vikatan: மழை நாள்களில் ஏற்படும் கை, கால் குடைச்சல்... காரணங்களும், தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே எனக்கு கால் குடைச்சல் வந்துவிடுகிறது. லேசான ஈரப்பதம் கூட ஒத்துக்கொள்வதில்லை. பெயின்கில்லர் போட்டால்தான் சரியாகிறது. இதற்கு என்ன காரணம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் மருத்துவர் அருணாசலம் Doctor Vikatan: நுரையீரல் அடைப்பு, மூச்சுத்திணறல்... புகை, பாக்கு பழக்கங்கள் காரணமாகுமா? மழை மற்றும் குளிர்காலங்களில் superficial blood vessels எனப்படும் மேலோட்டமான ரத்தக் குழாய்கள் சுருங்கும். அதனால் நம் சரும நிறம் கூட சற்று வெளிறி காணப்படும். அதாவது, கோடைக்காலத்தில் இருப்பதைப் போல குளிர்காலத்தில் நம் சரும நிறம் அவ்வளவு கறுப்பாக இருக்காததற்கும் இதுதான் காரணம். குளிர்காலத்தில் கதகதப்பான உடைகளை அணியாவிட்டால், குளிரானது, எலும்புகள் வரை பாயும். ரத்த ஓட்டம் குறைவதுதான் கை, கால்களில் ஏற்படும் வலி மற்றும் குடைச்சலுக்கு முக்கிய காரணம். தவிர, குளிர்காலத்தில் உடல் மந்தமாக, சோம்பேறித்தனதமாக இருக்கும். உடற்பயிற்சி செய்ய உடல் ஒத்துழைக்காது. மழை மற்றும் குளிர்காலத்தில் உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்காமல், வீட்டுக்குள்ளேயேகூட செய்யலாம். இதன் மூலம் உடல் கதகதப்பாக இருக்கும். அது கை, கால் குடைச்சலை ஓரளவு குறைக்கும். அடுத்து குளிர் மற்றும் மழைக்காலத்தில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்துவிடுவார்கள் பலரும். ஆனால் தசைகளின் இயக்கத்துக்கு தண்ணீர் மிக முக்கியம். உடலில் நீர்வறட்சி ஏற்படும் போது கை, கால்களில் வலி, தசைப்பிடிப்பு, குடைச்சல் போன்றவை வரும். உடற்பயிற்சி Doctor Vikatan: அடிக்கடி சளித்தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள்... ஆயுர்வேத சிகிச்சை பலன் தருமா? உணவில் காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக, கை, கால் வலி, குடைச்சல் ஏற்படுவதைத் தடுக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 5 Dec 2023 9:00 am

மழைக்கால மின்கசிவு: காலிங் பெல், ஸ்விட்ச் போர்டு, மின்கம்பி, இடி, மின்னல்... இவற்றை செய்யாதீர்கள்!

மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் அவசியம். எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் தரும் அறிவுறுத்தல்கள் இங்கே... மழை வெள்ளம் தீவிரப் புயலாக உருமாறிய மிக்ஜாம் புயல்... தொடரும் கனமழை; மீட்புப் பணிகள் தீவிரம்! ``எக்காரணம் கொண்டும் உடைந்த சுவிட்சுகள், பிளக் பாயிண்ட்களை பயன்படுத்தாதீர்கள். மேலும், உங்கள் கைகள் ஈரமாக இருக்கும்போது ஸ்விட்ச்சை தொட்டால் கையில் உள்ள தண்ணீர் ஸ்விட்ச் போர்டின் உள்ளே உள்ள உலோகத்தாலான மின்சார பாகத்துக்குச் சென்றுவிடும். தண்ணீர் ஒரு சிறந்த மின்சாரக் கடத்தி என்பதால், மின்சாரம் நம் உடம்பில் பாயலாம். உள்ளே செல்லும் நீரின் அளவைப் பொறுத்து மின்சாரம் நம் மீது பாயும் அளவு தீர்மானிக்கப்படும். எனவே, கைகளில் ஈரம் இருந்தால் அதை உலர்த்திய பின்னரே ஸ்விட்ச்சை தொடவும். அலங்கார விளக்குகள் பெரும்பாலும் வீடுகளின் வெளிப்புறம் பொருத்தப்படுகின்றன. அலங்கார விளக்குகளைப் பொறுத்தவரை மதில் சுவரிலோ அல்லது, கதவுகளுக்கு மேலாகவோ இருக்கும்போது மழை நேரத்தில் அவை நிச்சயம் மழையில் நனைவதற்கு வாய்ப்பு அதிகம். இவ்வாறு நனைந்த மின்சாதனங்கள் மூலம் நிச்சயம் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படலாம். எனவே மழை நேரத்தில் வீட்டிற்கு வெளிப்புறம் இருக்கும் அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மின்சாரம் (Representational Image) மர இலையை தேசியக் கொடியில் கொண்ட நாடு எது தெரியுமா? வரலாறும் பின்னணியும்... அலங்கார விளக்குகள் போன்று தான் வீட்டின் அழைப்பு மணிகளும். பெரும்பாலும் அழைப்பு மணிகளுக்கான சுவிட்ச்சுகள் கதவுகளுக்கு வெளிப்புறம்தான் பதிக்கப்பட்டு இருக்கும். மழைத்தண்ணீர் இறங்கி சுவிட்ச் நனைந்திருக்கிறது எனில் கூடுமானவரை அழைப்பு மணிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். சுவரின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஆணி அடிப்பது, ஈரத்துணிகளைக் காயவைப்பது போன்ற செயல்பாடுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். மழைக்காலம் மின்கம்பத்திலோ அல்லது இணைப்புக் கம்பத்திலோ கால்நடைகளைக் கட்டுவது, துணிகளைக் காயவைப்பது, சிறுநீர் கழிப்பது, குழந்தைகளை விளையாட அனுமதிப்பது போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். மின் கம்பத்திற்கு மிக நெருக்கமாகச் செல்லாதீர்கள். உங்கள் பகுதியில் ஏதேனும் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதுடன் சமூக அக்கறையுடன் செயல்படுவதும் அவசியம். எனவே மின்கம்பிகள் அறுந்துள்ள பகுதியில் சிறிய தடுப்பு வைத்து தடுத்துவிட்டு, உடனே மின்சார வாரியத்திற்குத் தெரியப்படுத்துங்கள். அங்கு நடவடிக்கை எடுக்க தாமதமாகும் பட்சத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம். மின்கம்பி பள்ளத்தில் வீடுகள்... வெள்ளத்தில் வாழ்க்கை... வீட்டுமனை வாங்குபவர்களுக்கு மழைக்கால உஷார் டிப்ஸ்! மழைக்காலத்தில் மின்னல் அடிக்கும்போது அது மின்சார இணைப்பு மூலம் நம் வீட்டுக்குள் தீ விபத்தை ஏற்படுத்தலாம். வீட்டின் மின்சார இணைப்புகள் மண்ணுக்கு அடியிலும், வீட்டுக்கு மேலும் இருப்பதால், சுற்றுப்புறத்தில் மின்னல் பாய்ந்தால் அந்த இணைப்புகள் மூலம் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக மின்சாரப் பொருள்களின் இணைப்பைத் துண்டித்து வைப்பது பாதுகாப்பானது. மழைக்காலத்தில் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக மின்சார இணைப்புகளுக்கு அருகில் இருக்கும் ஜன்னல்கள் மூடியே இருக்க வேண்டும். இல்லையென்றால் மழைச் சாரல் மின்சார இணைப்புக்குள் செல்லும் அபாயம் உள்ளது. மழை குழந்தைகளுக்கு மின்சாரத்தின் அபாயம் பற்றி எடுத்துரைக்க வேண்டும். மின் வயர்களின் மேல் மரக்கிளைகள் இருந்தால் அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மின்னல், இடி ஜாக்கிரதை! இடி இடிக்கும்போது மின்சார சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். இடி இடிக்கும்போது மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம். மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகேயும் செல்லக் கூடாது. அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியின் அருகில் செல்லக் கூடாது. இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் நிற்காமல் உடனடியாக கான்கிரீட் கட்டடத்தில் தஞ்சம் அடைய வேண்டும். சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு மிக்ஜாம் புயல்: மிதக்கும் சென்னை... அனைத்துப் பகுதியிலும் கனமழையின் தாக்கம்... வீடியோ | Spot Visit குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது. இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இடம் இல்லாதபட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.''

விகடன் 4 Dec 2023 3:44 pm

How To: குழந்தைக்கு சரியாக தாய்ப்பாலூட்டுவது எப்படி? I How To Breastfeed Properly?

குழந்தைகளுக்கு பிறந்த முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே போதும். அதைப்போன்று ஊட்டமளிக்கும் உணவு வேறெதுவும் இல்லை. தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு குழந்தைக்குத் தேவையான அளவு பால் கிடைத்ததா, எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை பாலூட்ட வேண்டும், தாய்ப்பால் அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல சந்தேகஙக்ள் இருக்கும். தாய், குழந்தை தாய்ப்பால் புகட்டுவதில் இத்தனை விஷயங்களா... சந்தேகங்கள், தீர்வுகள்| #BreastFeedingWeek தாய்ப்பாலூட்டும் அம்மாக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, சரியான முறையில் பாலூட்டுவது எப்படி போன்ற விளக்கங்களை அளிக்கிறார், தாய்ப்பால் ஆலோசகர் (Lactation Consultant) டீனா அபிஷேக். புதிதாக குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு... தாய்ப்பால் கொடுப்பதில் அதிக குழப்பங்கள் வேண்டாம். பொதுவாக குழந்தைகள் அதிகமாக அழுதால் வீட்டில் இருப்பவர்கள், `குழந்தைக்குப் பால் பத்தலையோ’ என்பார்கள். அதோடு நிற்காமல், பசும்பாலில் தண்ணீர் கலந்து காய்ச்சிக் கொடுப்பது, பால் பவுடர் கொடுக்கச் சொல்வது என்று அறிவுரைகளை வழங்குவார்கள். இவற்றை எல்லாம் செய்யக்கூடாது. குழந்தையின் அழுகைக்கு உடல்நலக் காரணங்களும் இருக்கலாம். எனவே மருத்துவர் ஆலோசனையின்றி எதையும் செய்யக் கூடாது. எல்லாவற்றையும்விட, குழப்பங்களுக்கு ஆளாகாமல், `இது என் குழந்தை, இதை என்னால் பார்த்துக்கொள்ள முடியும், பாலூட்ட முடியும்’ என்று நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும். டீனா அபிஷேக் மொபைலுக்கு அடிமையாவதிலிருந்து மீள... இ-விரதம்! | மகிழ்ச்சி - 10 சிசேரியன் மூலம் பிரசவித்த அம்மாக்களுக்கு... இவர்களில் சிலருக்குத் தாய்ப்பால் சுரப்பு ஆரம்பிக்க, பிரசவம் முடிந்து சில மணி நேரம் முதல் ஒன்றிரண்டு நாள் வரை ஆகும் என்பதால் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். முதல் நாள் உங்களால் எழுந்து அமர்ந்து தாய்ப்பால் ஊட்ட முடியாது. இந்த நேரத்தில் அம்மா, உறவினர்கள் அல்லது செவிலியரின் உதவியை நாடலாம். அடுத்தடுத்த நாள்களில், குழந்தையை தையல் போட்டிருக்கும் இடங்களில் அழுத்தம் கொடுக்காத வகையில் பக்கவாட்டில் தலையணை வைத்துக் கிடத்தியபடி தாய்ப்பாலூட்டவும். தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க... குழந்தை பிறந்த முதல் மூன்று நாள்களுக்கு அதன் வயிற்றின் கொள்ளளவே 3 மி.லி முதல் 5 மி.லி அளவுதான் இருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக 30 மி.லிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்கும். அம்மாவுக்கு எந்தவிதமான ஹார்மோனல், உடல்நலப் பிரச்னையும் இல்லாத ஆரோக்கியமான நிலையில், குழந்தைக்குத் தேவையான பாலை உடல் தானாகச் சுரக்கும். தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ளதாக நினைக்கும் அம்மாக்கள், நல்ல ஆரோக்கியமான உணவு முறை, ஸ்ட்ரெஸ் இல்லாத மனநிலை என்று தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டும். தாய்மையின் பூரிப்பை பரிபூரணமாக உணர வேண்டும். அதற்கான சப்போர்ட் சிஸ்டமாக அவர்களின் குடும்பம், சுற்றம் இருக்க வேண்டும். தாய்ப்பால் அதிகம் சுரக்க.. நல்லுணவு. சின்னச் சின்ன ஆசை… பெரிய பெரிய துன்பம் | மகிழ்ச்சி - 8 பாலூட்டும்போது... ’குழந்தை வாய் வெச்சிருக்கு, ஆனா பால் குடிக்குதானே தெரியல’ என்பார்கள் சில அம்மாக்கள். தாடை அசைவை வைத்து குழந்தை பால் குடிக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். பெரியவர்கள் சாப்பிடுவதுபோல, அவர்களால் தொடர்ந்து பால் அருந்த முடியாது. எனவே, பால் குடித்துக்கொண்டிருக்கும்போதே தேவைப்படும்போது அவர்கள் ஒரு பிரேக் எடுத்துக்கொள்வார்கள். ஒருவேளை குழந்தை தூங்கிவிட்டால், உங்களுடைய மார்பின் மேல்பகுதிய பகுதியை லேசாக அழுத்தி விடலாம். அல்லது குழந்தையின் தாடைப் பகுதியில் மென்மையாக தேய்த்து விடவும். மாறாக, குழந்தையின் வாயில் மார்புக்காம்பை திணிப்பது, குழந்தையை அடித்து எழுப்புவது போன்றவற்றை செய்யக் கூடாது. குழந்தை தூங்கும்போது எழுப்பி பால் கொடுக்கலாமா? பச்சிளம் குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது அவசியம். பிறந்த முதல் 15 நாள்களுக்கு 2 - 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவு நேரம் தவிர, ஒரு நாளில் 4 - 5 மணி நேரம் வரை தொடர்ந்து தூங்க வைக்க வேண்டாம். குறிப்பிட்ட இடைவெளியில் எழுப்பி பால் கொடுங்கள். எழுப்ப வேண்டும் என்றால், குழந்தையை உருட்டிப் பிரட்டி எடுக்காமல், அவர்களுடைய முதுகு, வயிற்றுப் பகுதியில் மென்மையாகத் தேய்க்கவும். கூடவே தாடைப் பகுதியில் தேய்த்து விடவும். மடியில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதுவே அவர்களை மென்மையாக எழுப்பிவிடும். தாய்ப்பால் 70 வயதில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பெண்... ``குழந்தை இல்லாததால் கேலிக்கு உள்ளானேன் என உருக்கம் படுத்துக்கொண்டே தாய்ப்பால் கொடுக்கலாமா ? குழந்தை பிறந்த சில நாள்கள் வரை மிகவும் சோர்வாக உணர்கிற அம்மாக்கள் படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. குழந்தை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை மட்டும் பரிசோதித்து, பக்கவாட்டில் படுக்க வைத்துக் கொடுக்கலாம். ஆனால், இதை வழக்கமாக்கக் கூடாது. அம்மாக்களால் எழ இயலாத நேரங்களில் மட்டும் இப்படிக் கொடுக்கலாம். சரியான நேர இடைவெளியில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கவில்லை எனில், எடை குறைவு ஏற்படும். மேலும், நீர்ச்சத்து குறைபாடும் ஏற்படும. மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால் குழந்தைக்கு சரியான வேளையில், இடைவெளியில், தேவையான அளவு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தொகுப்பு: வெ.கௌசல்யா

விகடன் 4 Dec 2023 2:51 pm

`கையில் காப்பர் டி-யோட குழந்தை பிறக்கும்!' I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -124

பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனங்களே, சில அசாதாரண சூழல்களில் சிலருக்கு தொந்தரவாக அமைந்துவிடலாம். அப்படிப்பட்ட சில கேஸ் ஹிஸ்டரிகளை இன்றைய கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ''அந்த தம்பதி ரொம்பவே தயங்கி தயங்கி என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களுடைய பிரச்னை பற்றி தெரிந்தபோது, அவர்கள் தயக்கம் நியாயம்தான் என்று தோன்றியது. அந்த ஆணுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை இருந்திருக்கிறது. அத்துடன் காண்டம் அணிந்துகொண்டு தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருக்கிறார். விளைவு, காண்டம் கழன்று அவருடைய மனைவியின் பெண்ணுறுப்பிலேயே தங்கி விட்டிருக்கிறது. அவர்களால் எடுக்க முடியாத காரணத்தால், மருத்துவரை நாடி வந்திருக்கிறார்கள். Sexologist Kamaraj மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -123 சில நேரங்களில், காண்டம் கிழிந்து உள்ளேயேதங்கி விடலாம். இது சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக்கூட தெரியாமலே இருந்து விடலாம். அடிவயிற்றில் வலி என்று மருத்துவரிடம் வரும்போதுதான், இது தெரிய வரும். சிலருக்கு, காண்டம் கிழிந்து பெண்ணுறுப்பில் சிறு துண்டு இருக்கிறது என்பது தெரியும். ஆனால், அவர்களால் எடுக்க முடியாத அளவுக்கு உள்ளே சென்றுவிட்டிருக்கும். கேட்பதற்கும், படிப்பதற்கும் பயத்தை ஏற்படுத்துகிற இந்தப் பிரச்னைகள், மிகவும் இயல்பானவைதான். மருத்துவரிடம் சென்றால், ஃபோர்செப்ஸ் மூலம் பெண்ணுறுப்புக்குள் இருக்கிற காண்டமையோ, கிழிந்த காண்டம் துண்டையோ வெளியே எடுத்து விடுவார். இந்தியாவில் பல பெண்கள் கருத்தடைக்காக காப்பர் டி-யையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதுகூட எங்கோ ஒரு சிலருக்கு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். காப்பர் டி நகர்ந்து கருப்பைக்குள்ளே போய்விடலாம். என்றாலும், இதை எளிமையாக எடுத்து விடலாம். சில நேரம் கருப்பையை துளைத்து இன்னும் உள்நகர்ந்து சென்றுவிடலாம். அப்போது லேப்ரோஸ்கோபி மூலம்தான் வெளியே எடுக்க வேண்டும். ஆனால், இது அரிதாக மட்டுமே நிகழக்கூடியது. காப்பர் டி பொருத்தியிருந்தாலும், சில பெண்கள் இதையும் மீறி கர்ப்பமாகி விடுவார்கள். குழந்தை பிறக்கும்போதே கையில் காப்பர் டி-யைப் பிடித்தபடி பிறக்கும். Sex Education ``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122 கருத்தடை மாத்திரை சாப்பிட்ட அன்று வாந்தி எடுத்தால், அதனுடன் கருத்தடை மாத்திரையும் வெளியேறிவிடலாம். பேதியானாலோ, உடம்பால் கருத்தடை மாத்திரையின் மருத்துவ பலனை கிரகிக்க முடியாமல் போய்விடலாம். இதுபோன்ற நாள்களில் காண்டமையும் சேர்த்துப் பயன்படுத்துவது நல்லது. மேலே சொன்ன அத்தனை தகவல்களையும் கவனத்தில் வைத்துக்கொண்டால், கருத்தடை சாதனங்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 3 Dec 2023 6:00 pm

``இது பேய் நோய்... 5 வயசுல செத்துருவான்னு நினைச்சோம்... ஆனா...!''நம்பிக்கை அளித்த நல்நிகழ்வு!

ஹெச்.ஐ.வி தொற்று மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருப்பதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இயல்பாக வாழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான நிலை இல்லை. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் சொந்த குடும்பத்தாலேயே ஒதுக்கிவைக்கப்பட்டனர். குறிப்பாக ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. அப்படியான குழந்தைகளின் நல வாழ்வுக்காக 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது மருத்துவர் மனோரமா சென்னையில் நிர்வகித்து வரும் கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டி Community Health Education Society (CHES) என்கிற அமைப்பு. இந்த அமைப்பின் முன்னாள் மாணவர்களின் முதல் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ஹெச்.ஐ.வி வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பு: அக்வாபோனிக்ஸ் முறையில் மாதம் ரூ.30,000 ஈட்டும் தம்பதி! ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தையாக இந்த அமைப்புக்குள் வந்த பலர், அந்த நோயை எதிர்த்துப் போராடி இன்று நல்ல நிலையில் இருப்பதை அங்கு காண முடிந்தது. பலருக்கும் நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கக்கூடிய வகையில் இருந்த அந்த நிகழ்வில் பேசிய செஸ் (CHES) அமைப்பின் நிறுவனரான டாக்டர் மனோரமா, ``1993-ம் ஆண்டு நான் சென்னையில், சிறுவர் நலன் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 4 வயது பெண் குழந்தையும், 3 வயது ஆண் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். விசாரித்தபோதுதான் அந்தக் குழந்தைகள் ஆதரவற்ற இல்லத்திலிருந்து வந்திருப்பது தெரிந்தது. அது, ஹெச்.ஐ.வி பற்றி பல தவறான நம்பிக்கைகள் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்த காலம். பலரும் அதை ‘பேய் நோய்’ என்று கருதினார்கள். ஆகையால், பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தைகளின் அதிகபட்ச ஆயுட்காலம் 5 ஆண்டுகள்தான் என்று பலரும் நினைத்தனர். இரு குழந்தைகளும் மனதளவிலும் உடலளவிலும் பெரிய பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். 3 வயது ஆண் குழந்தையின் தாய் வாய் பேச முடியாத, காது கேளாத சூழலில், கூட்டுப் பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துவிட்டார். அதனால், அச்சிறுவனும் காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் இருக்கிறான் என்று நினைத்தோம். பெண் குழந்தைக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. அவ்விரு குழந்தைகளையும் மருத்துவமனையில் அனுமதித்த சம்பந்தப்பட்ட ஆதரவற்றோர் இல்லம், அவர்களை அதற்கடுத்து பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு யாரும் இல்லாத சூழலில், அவர்கள் எங்கே போவார்கள்? யார் அவர்களைப் பராமரிப்பார்கள் என்பது விடைதெரியாத கேள்வியாக இருந்தது. அப்போதுதான் நாம் ஏன் அதைச் செய்யக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. என் முடிவுக்கு குடும்பத்திலிருந்தும், சுற்றுவட்டாரத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், என் முடிவிலிருந்து நான் பின்வாங்கவில்லை. அக்குழந்தைகள் உயிருடன் இருக்கும் வரை நாமே பராமரித்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். முதலில் இந்தக் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு சற்று சிரமமாக இருந்தது. அதற்கு உதவியவர் ராஜம்மா என்பவர்தான். அவர்தான் இக்குழந்தைகளுக்கு முதல் ஆயாவாக பராமரித்துக்கொண்டார். இந்தத் தருணத்தில் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஹெச்.ஐ.வி ஆடித்தள்ளுபடி தெரியும்... `பிளாக் ஃப்ரைடே’ தள்ளுபடி தெரியுமா? எங்கே... எப்போது? குழந்தைகளை தொடுவதற்குகே நாங்கள் பயந்துகொண்டிருந்த நிலையில், `அதெல்லாம் ஒண்ணும் செய்யாது' என்று தைரியத்துடன் ராஜம்மாதான் அவர்களை கவனித்துக்கொண்டார். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டாலோ அல்லது அவர்களுடன் சேர்ந்திருந்தாலோ, அத்தொற்று நமக்கும் பரவிவிடும் என்பது பொய் என்பதை எங்களுக்குப் புரிய வைத்தவர் ராஜம்மாதான். ஒருகட்டத்தில் இதுபோன்று இன்னும் பல குழந்தைகள் இருப்பார்கள் அல்லவா... அவர்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. அப்போது எனக்கு உதவியாக இருந்த தோழி சொன்ன ஆலோசனையில்தான் இந்த CHES அமைப்பு உருவானது. என்கிறார் டாக்டர் மனோரமா. 3 வயதில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தை, வளர்ந்து தற்போது 32 வயதில், தன் மனைவி மற்றும் குழந்தையுடன் நலமாக இருக்கிறார் என்று சொல்லும்போது அனைவர் முகத்திலும் நம்பிக்கை சுடர்விட்டது. 5 வயதுக்கு மேல் வாழ வாய்ப்பில்லை என்று நம்பப்பட்ட அந்தக் குழந்தை மட்டுமல்ல, அதுபோல பல குழந்தைகளை அரவணைத்து படிக்க வைத்து ஆளாக்கியிருக்கின்றனர். அவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். கல்வி குறித்து டாக்டர் மனோரமா பேசியபோது “என்னுடைய 3 வயது மகன் பள்ளிக்குச் செல்லும்போது, அதே வயதுடைய சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. மேலும், இவர்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயன்றபோது, இவர்கள் பள்ளிகளில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டனர். அதனால் நாங்கள் எங்கள் அமைப்பிலேயே இவர்களுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினோம். ஆரம்பத்தில், பள்ளி பாடப் புத்தகங்களை வாங்கி இந்த அமைப்பில் இருக்கக்கூடிய ஊழியர்களே பாடம் கற்பிக்க ஆரம்பித்தோம். இப்போது CHES அமைப்பில் இருக்கக் கூடிய பள்ளியை சர்வ சிக்க்ஷா அபியான் (SSA) எனப்படும் மத்திய நிறுவனத்தால் ‘சிறப்பு பள்ளி’ (Special School) என்று அங்கீகரித்துள்ளது. 8- ஆம் வகுப்பு வரை இங்கு கற்பிக்கப்படுகிறது” என்று சொன்ன டாக்டர் மனோரமா, அங்கு முதலில் படித்த மாணவர்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். டாக்டர் மனோரமா 70's Vs 90's லூட்டீஸ்: ``நாங்கல்லாம் அந்தக் காலத்துல... முக்கியமாக CHES அமைப்பில் வளர்ந்தவர்களுக்கு தற்போது ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்பது குறித்தும் அதனை சரிசெய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அரசு போட்டித் தேர்வுகளுக்காக முயலும் ஒருவர், தமிழ்வழிக் கல்வி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருக்கிறது என்றார் பொறியியல் படித்து முடித்த ஒருவர் தன் பிறப்புச் சான்றிதழ் வாங்க முடியவில்லை. அதனால் மேற்கொண்டு வேலைகளுக்கு தன்னால் பதிவு செய்ய இயலவில்லை என்றார். கல்லூரி படிப்பை முடித்துள்ள 20- வயது பெண், என் தந்தையின் பெயர் பள்ளிச் சான்றிதழில் தவறாகப் பதிவாகியுள்ளது. சாதி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்றார். இந்தப் பிரச்னைகளை சரிசெய்ய உதவுவதாக அந்த அமைப்பினர் நம்பிக்கை அளித்தனர். இறுதியாக இந்நிகழ்வில் தனது கோரிக்கை ஒன்றை முன்வைத்தார் டாக்டர் மனோரமா “இவர்கள் அனைவரையும் நாங்கள் பள்ளிப் படிப்பை முடித்து மீண்டும் உறவினர்களிடம் சேர்க்கும்போது, இவர்களின் பெயரையும் தங்களது குடும்ப அட்டையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களை தனி நபராகப் பார்க்காமல், தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருத வேண்டும் என்றவர், அரசு பல சலுகைகள் வழங்கினாலும், இவர்களில் சிலருக்கு அவை முழுமையாகக் கிடைப்பதில்லை. எனவே இவர்களுக்கான சலுகைகள் சரியாகக் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விகடன் 3 Dec 2023 4:32 pm

Doctor Vikatan: அடிக்கடி சளித்தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள்... ஆயுர்வேத சிகிச்சை பலன் தருமா?

Doctor Vikatan: என்  மூத்த மகளுக்கு எட்டு வயதும், இரண்டாவது மகளுக்கு நான்கரை வயதும் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் அடிக்கடி சளித்தொல்லை இருந்து வருகிறது. ஆங்கில மருந்துகள் எடுத்தாலும் 15 நாள்களுக்குள் மீண்டும் சளி வந்துவிடுகிறது. கடந்த நான்கைந்து மாதங்களாக ஆயுர்வேத மருந்துகள் கொடுத்து வருகிறோம், இருப்பினும் முழுவதும் குணமாகவில்லை. . துளசி, கற்பூரவள்ளி, தும்பை, குப்பைமேனி, அப்பகோவை சாறும் கொடுத்தோம்.  உணவுமுறை மாற்றம் பயன் தருமா?  பதில் சொல்கிறார், கடையநல்லூரைச் சேர்ந்த தலைமை ஆயுர்வேத  மருத்துவர் அ. முகமது சலீம்  அ. முகமது சலீம் Doctor Vikatan: முறையற்ற மாதவிடாய் சுழற்சி; ஒரு வருடம் சிகிச்சை எடுத்தும் பலனில்லை... என்ன தீர்வு? குழந்தைகளுக்கு சளி பிடிப்பது சகஜம்தான். அதுவே வருட கணக்கில்  தொடர்ச்சியாக இருப்பது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். முதலில் பாரம்பர்ய பின்னணி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி எதுவும் இல்லை என்றால் சுற்றுச்சூழல் அல்லது உணவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா  என பார்க்க வேண்டும். எதுவாக இருந்தாலும் குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியையும் கவனத்தில் கொண்டு  சிகிச்சை அளிக்கும்போது கண்டிப்பாக குணப்படுத்த முடியும். பொதுவாக சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் குழந்தைகளிடம் அதிகம் காணப்படும். ஏனென்றால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெரியவர்களைவிடவும் குறைவாகவே இருக்கும். ஆயுர்வேதம் Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் கணையத்தில் கல் உருவாகுமா? ஆயுர்வேதத்தில் குழந்தைப் பருவம் என்பது வாழ்க்கையின் கபநிலையாகும். அதனால் குழந்தைப் பருவத்தில் கபம் மிகுதியாகக் காணப்படும். அப்படிப்பட்ட கபம் அதிகரிப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ஜீரண கோளாறு, நோய்த்தொற்று மற்றும் பலவிதமான ஒவ்வாமைகள் காரணமாகின்றன.  சளியை வெளியேற்றுவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை சரி செய்யவும், பாக்டீரியா மற்றும் வைரஸ் இன்பெக்ஷன் உள்ளிட்ட நோய்த்தொற்றுகளை குணப்படுத்தவும், டான்சிலைட்டிஸ் போன்ற பிரச்னையிலிருந்து சீக்கிரம் குணமடையவும், நோய் வராமல் தடுக்கவும் ஆயுர்வேதத்தில் பலவிதமான மருந்துகள் உள்ளன. கஷாயம் Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவையா? மேலும் ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்ட  ஸ்வர்ண பிராஷணம் என்ற ஆயுர்வேத சொட்டு மருந்தை   6 மாத குழந்தை முதல் 14 வயது குழந்தை வரை  தொடர்ந்து ஒரு வருடம் கொடுத்து வர குழந்தையின் நோய் எதிர்ப்புசக்தி, செரிமானம், அறிவுத்திறன் என பல விஷயங்களும் மேம்பட்டு அடிக்கடி சளி பிடிப்பது குறையும்,   குழந்தைகளுக்கு தொடர்ந்து சளி காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு தேவையற்ற  மருந்துகளை அதிகம் பயன்படுத்தாமல் வீட்டிலேயே துளசி, தூதுவளை, சுக்கு,மல்லி, ஏலக்காய் , அம்ருதோத்தரம், இந்துகாந்தம் சேர்த்து கஷாயம் வைத்து அருந்தி வர நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். கேக் Doctor Vikatan: நடிகர் விஜய்காந்த்துக்கு `ட்ரக்கியாஸ்டமி' சிகிச்சை... யாருக்கு, எப்போது தேவைப்படும்? முக்கியமாக  வயிற்றை மந்தமாக்காத உணவுப்பழக்கம் பின்பற்றப்பட வேண்டும்.  மைதா, பேக்கரி பொருள்கள், ஜங்க் ஃபுட், எண்ணெய் பலகாரங்கள் , கொதிக்க வைக்காத தண்ணீர், தாமதமாக உணவு உண்ணுதல் ஆகியவற்றைத் தவிர்த்தல் நல்லது.  ஆயுர்வேதத்தில் குழந்தைகளுக்காகவே ச்யவனபிராஷனம், தாளிச பத்திராதி வடகம், அமிர்தா அரிஷ்டம், அரவிந்த ஆசவம், ஆடாதோடை மணப்பாகு போன்ற சில மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. துளசி, கற்பூரவள்ளி, தும்பை, குப்பைமேனி போன்ற மூலிகைகளை  தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி  கொடுப்பது நல்லது. மூலிகைகள்! Doctor Vikatan: உண்மையிலேயே சரும அழகுக்கு உதவுமா குங்குமப்பூ? வீட்டு வைத்தியம் செய்யும்போது மருந்தின் அளவு , கொடுக்கபடும் கால அளவு, மருந்து கொடுக்கும் முறை , குழந்தையின் உடல்வாகு  போன்றவை  தெரிந்து கொடுப்பது  சிறந்த பலன் தரும். மிக முக்கியமாக குழந்தையின்  செரிமானத் திறனே, நோய் எதிர்ப்பு சக்தியின் அடிப்படை என்பதை  நீங்கள் உணர வேண்டியது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 3 Dec 2023 9:00 am

Happy Teeth: பெட் காபி, பிரஷ் செய்வதற்கு முன்பாக மாத்திரை... சரியா? தவிர்க்க வேண்டியவை என்ன?

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் என நமக்கு இருக்கும் அடிப்படையான கேள்விகளுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்க உள்ளது இந்தத் தொடர். Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும். oral health காலையில் எழுந்ததும் பிரஷ் செய்வது நம் அடிப்படையான பழக்கவழக்கம். எவ்வளவு நேரம் பிரஷ் செய்ய வேண்டும், எத்தனை முறை பிரஷ் செய்ய வேண்டும் உள்ளிட்டபல்வேறு சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா: காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பிரஷ் செய்துவிட வேண்டும். சிலர் காலையில் வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, கடைசியாக பிரஷ் செய்வார்கள். தாமதமாக பிரஷ் செய்யும்போது பற்களில் தங்கியிருக்கும் உணவுப் பொருள்கள் கூடுதல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். நமது எச்சிலில் காணப்படும் சில பாக்டீரியாக்கள் பற்களில் கறைகளை ஏற்படுத்தும். Brushing Doctor Vikatan: பலகாலமாகத் தொடரும் பல் கூச்சம்... சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட் தீர்வாகுமா? எவ்வளவு நேரம்? சிலர் வாயில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டே சுற்றி வருவார்கள். நீண்ட நேரம் பிரஷ் வாய்க்குள்ளாகவே இருக்கும். இது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. பிரஷ்ஷில் டூத் பேஸ்டை எடுத்து 2 நிமிடங்களுக்குள் பிரஷ்செய்து முடித்துவிட வேண்டும். சிறு குழந்தைகள் பிரஷ்ஷிங் கற்றுக்கொள்ளுவார்கள் என்பதால் சற்று அதிக நேரம் பிரஷ் செய்வதில் தவறில்லை. பெரியவர்கள் 2 நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை கட்டாயம் பிரஷ் செய்ய வேண்டும். இரவு நேர உறக்கத்துக்குப் பிறகு புத்துணர்வுடன் இருப்பதற்கும், துர்நாற்றம் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கும் காலையில் பிரஷ் செய்ய வேண்டும். Happy Teeth Doctor Vikatan: எத்தனை முறை பல் துலக்கினாலும் விலகாத வாய் துர்நாற்றம்; பிரச்னையின் அறிகுறியா? நாள் முழுவதும் நாம் சாப்பிடும் உணவு பற்களில் சிக்கிக்கொண்டு கிருமிகள் உருவாகாமல் இருப்பதற்கு இரவு பிரஷ் செய்வது அவசியம். இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்வதற்கு முன்பு பிரஷ் செய்வது நல்லது. சிலருக்கு அடிக்கடி பிரஷ் செய்யும் பழக்கம் இருக்கும். இரண்டு வேளைக்கும் அதிகமாக பிரஷ் செய்யும்போது ஈறுகள், வாசனையை உணர்வதற்கு உதவும் மண்டலம் உள்ளிட்ட பாகங்கள் பாதிக்கப்படும். அந்த பாகங்களில் எரிச்சலுணர்வு ஏற்பட்டு அவற்றின் செயல்பாடுகளைத் தூண்டும். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒருநாளைக்கு இரண்டு தடவைக்கும் மேலே பிரஷ் செய்வதால் பற்களில் மேல் இருக்கும் எனாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. Interdental brushing Doctor Vikatan: உப்பு வைத்துப் பல் துலக்கினால் மஞ்சள் கறை நீங்குமா? அடிக்கடி பிரஷ் செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் வெதுவெதுப்பான நீரில் வாய்க்கொப்பளித்தால் போதுமானது. பொது இடத்தில் வாய் கொப்பளிக்க வசதி இல்லை என்றால், அந்த நீரை அப்படியே விழுங்கிவிட்டாலும் தவறில்லை. வாய்க் கொப்பளிப்பது பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறந்த பழக்கம். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது நல்லது. பல் குத்தும் குச்சி, சேஃப்டி பின், பென்சில், பேனா என்று எந்தப் பொருளையும் பயன்படுத்தி பல்லைக் குத்தக்கூடாது. இவை பற்களின் ஆரோக்கியத்துக்கு கேடானது. வாய் சுகாதாரம் பேண நினைப்பவர்கள் அடிக்கடி வாய்க்கொப்பளித்தல், ஒருவகையான நூலைக் கொண்டு பற்களில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும் ஃப்ளாஸிங் (Flossing), `ஆயில் புல்லிங்’ எனும் எண்ணெய் கொப்பளிப்பு செய்வது நல்லது. பல் மருத்துவர் ஏக்தா Doctor Vikatan: நடிகர் விஜய்காந்த்துக்கு `ட்ரக்கியாஸ்டமி' சிகிச்சை... யாருக்கு, எப்போது தேவைப்படும்? ஃப்ளாஸிங் செய்வது பற்றி உங்கள் பல் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தவறான டெக்னிக்கில் ஃப்ளாஸிங் செய்தால் பற்கள் பாதிக்கப்படும். ஃப்ளாஸிங் செய்யத் தெரியாதவர்கள் இன்டர் டென்டல் பிரஷ் (Interdental Brush) பயன்படுத்தி பற்களைச் சுத்தப்படுத்தலாம். பற்களை சுத்தப்படுத்துவது பற்றி மற்றோர் அத்தியாயத்தில் விவரமாகப் பார்க்கலாம். பெட் காபி பிரஷ் செய்வதற்கு முன்பாக காபி, டீ, உணவு என சாப்பிட்டால் பற்களில் கறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, பிரஷ் செய்வதற்கு முன்பாக பெட் காபி அருந்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. Bed coffee Doctor Vikatan: பற்கள் விழுவது போன்ற கனவு... அடிக்கடி வருவதால் நிஜத்திலும் நடக்குமா? சிலருக்கு காலையில் வெறும் வயிற்றில் மாத்திரை போட வேண்டியதிருக்கும், அவர்கள் காலையில் எழுந்ததும் பிரஷ் செய்துவிட்டு மாத்திரை போடுவது நல்லது. இல்லையென்றால் வாயில் தேங்கியிருக்கும் எச்சில் மாத்திரை விழுங்கும்போது தண்ணீருடன் சேர்ந்து வயிற்றுக்குள் செல்லும். இதனால் வாய் துர்நாற்றம், பற்களில் கறை, எரிச்சலுணர்வு போன்றவை ஏற்படும். பிரஷ் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து தண்ணீர் அருந்திவிட்டு அதற்குப் பிறகு மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கலாம்.

விகடன் 2 Dec 2023 6:00 pm

Doctor Vikatan: நடிகர் விஜய்காந்த்துக்கு `ட்ரக்கியாஸ்டமி'சிகிச்சை... யாருக்கு, எப்போது தேவைப்படும்?

Doctor Vikatan: நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்காந்துக்கு சுவாசப் பிரச்னை இருப்பதாகவும் அதை குணப்படுத்த ட்ரக்கியாஸ்டமி என்ற சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம். ட்ராக்கியாஸ்டமி என்பது என்ன மாதிரியான சிகிச்சை.... அது யாருக்கு, எப்போது செய்யப்படும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்     மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் கணையத்தில் கல் உருவாகுமா? 'ட்ரக்கியா' என்றால் காற்றுக் குழாய், அதாவது சுவாசக்குழாய்...இந்தக் குழாயில் சிறிய துளை போட்டு, ஒரு டியூபை செருகி, சுவாசத்தை முறைப்படுத்தச் செய்வார்கள். சில நோயாளிகளை வென்டிலேட்டர் சிகிச்சைக்கு உட்படுத்துவார்கள். அப்படிச் செய்தபிறகு அதிலிருந்து அவர்களை எடுக்க முடியாது. அந்த நிலையில் ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை தேவைப்படும்.  நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குக்கூட ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இந்தச் சிகிச்சையை நரம்பியல் தொடர்பான  'நியூரோ மஸ்குலர்' பிரச்னைகளுக்கும் பயன்படுத்துவார்கள். அதாவது இந்த நிலையில் தசைகள் சரியாக வேலை செய்யாது. இது நம்முடைய சுவாசத்தையும் பாதிக்கலாம். சுவாசப்பாதையின் தசைகளை பாதிக்கும்போது நம்முடைய சுவாசமானது ஒழுங்காக இருக்காது.  ஜெயலலிதா அதன் விளைவாக இவர்களுக்கு உணவு விழுங்குவதில் சிக்கல் ஏற்படலாம். அதாவது உணவை விழுங்கும்போது உணவானது உணவுக்குழாய்க்குள் செல்வதற்கு பதில், சுவாசக்குழாய்க்குள் போய், அங்கிருந்து நுரையீரலுக்குள் போய்விடும்.  இதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமம் உண்டாவதுடன், நுரையீரலில் தொற்றும் ஏற்படும். சிலருக்கு சுவாசப் பகுதியின் தசைகள் கட்டுப்பாட்டில் இல்லாதநிலையிலோ, உணவுக்குழாயின் தசைகள் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையிலோ பிரச்னைகள் வரும். இவர்களுக்கும் ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். நுரையீரல் Doctor Vikatan: சத்தமாகப் பேசினாலோ, பலமாகச் சிரித்தாலோ வீஸிங் அதிகரிக்குமா? ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை என்பது நிரந்தரமானதாகவோ தற்காலிகமானதாகவோ எப்படியும் இருக்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்கு நிரந்தரமாக அது தேவைப்படும். சிலருக்கு  சில நாள்கள் முதல் சில மாதங்கள் வரை இந்தச் சிகிச்சையைத் தொடரச் செய்துவிட்டு, நோய் குணமானதும் அதை நீக்கிவிடுவார்கள்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 2 Dec 2023 9:00 am

பெரிதாகும் காது துளை... இது மட்டும்தான் நிரந்தர தீர்வு!

காதில் கம்மல் அணிவதற்காகப் போடப்படும் துளை பல்வேறு காரணங்களால் சிலருக்குப் பெரிதாகிவிடும். சிலர் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். சிலர் அதற்கான தீர்வைத் தேடிச் செல்வார்கள். அந்த வகையில் சென்னை சூளைப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காது துளையை அடைப்பதற்காக பியூட்டி பார்லரை அணுகி சிகிச்சை பெற்றுள்ளார். அதன் விளைவால் காது அழுகும் நிலைக்குச் சென்றுள்ளது. காது துளையை அடைப்பதற்காக பியூட்டி பார்லரில் கொடுத்த கிரீம் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தி உள்ளார். அந்த கிரீம் பயன்படுத்திய பிறகு அவருக்கு காதில் தொற்று ஏற்பட்டுள்ளது. கம்மல் உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேமிப்பேன்... ஏன் தெரியுமா? - உலகின் மிக நீளமான முடி உடைய பெண்..! தொற்று தீவிரமடைந்து காது அழுகத் தொடங்கி உள்ளது. ஒரு கட்டத்தில் தொற்று மிகவும் மோசமடைந்து அழுகி, காது அறுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். காது துளை பெரிதாவது என்பது பரவலாகக் காணப்படும் பிரச்னை. இதற்கு எப்படி தீர்வு காண வேண்டும், செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த காது - மூக்கு - தொண்டை மருத்துவர் சிவப்பிரியா: சூப் குடிப்பது ஆரோக்கியம் என நம்புபவரா நீங்கள்? இந்தத் தகவல்கள் உங்களுக்குதான்... |#ExpertOpinion துளையிடும் சமயத்தில் காதின் கீழ்ப்பகுதிகளில் துளையிட்டு கம்மல் அணியும்போது அங்கு தோல் மட்டுமே இருக்கும். ஆனால் காதுகளின் மேல் பகுதியில் துளையிடும்போது அங்கு குருத்தெலும்புகள் (Cartilage) இருக்கும். மேல் பகுதிகளில் துளையிடும் சமயத்தில்தான் தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. எனவே காதுகளில் துளையிடும் சமயத்திலேயே காதுகளை சுத்தம் செய்து உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் துளையிட வேண்டும். இது தொற்று ஏற்படுவதைத் தடுக்கும். வயதாக வயதாக காதுகளில் உள்ள தோல் விரிவடைந்து துளை பெரிதாகும். எடை அதிகமான கம்மல்களை தொடர்ந்து அணியும்போது காது துளை விரிவடைந்துவிடும். காது துளை பெரிதாகாமல் இருக்க எடை அதிகமாக உள்ள கம்மல்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ENT Dr. Sivapriya பூப்பெய்தாத பெண்கள்: காரணம், தீர்வு என்ன? திருமணம் செய்துகொள்ளலாமா? | Delayed Puberty துளைகள் பெரிதான பிறகு அதனை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதுதான் சரியான வழி. காது மடல்களில் எந்தத் துளையை அடைக்க வேண்டுமோ அதை இன்னும் சற்று பெரிதாக்கி, சுற்றியிருக்கும் தோல் அனைத்தையும் இணைத்து, தையல் போடுவதே இந்த அறுவை சிகிச்சையாகும். இப்படிச் செய்யும்போது பெரிதாக இருக்கும் துளையை முற்றிலும் அடைக்க முடியும். இரண்டு, மூன்று மாதங்கள் கம்மல் அணியாமல் உரிய முறையில் காயங்களை ஆற விட வேண்டும். அதன் பிறகு புதிய துளையிட்டு மீண்டும் கம்மல் அணிந்து கொள்ளலாம். இந்தச் சிகிச்சை மேற்கொள்ளும்போது தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படும். துளையை முற்றிலும் அடைக்காமல் பெரிய துளையை கொஞ்சம் மட்டும் சிறிதாக்குமாறு சிலர் கேட்பதும் உண்டு. அதுவும் இயலாத காரியமே. இந்த அறுவை சிகிச்சையை முறையான மருத்துவர்களை அணுகி எடுக்க வேண்டும். ear Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போனால், காது கேட்காமல் போக வாய்ப்பு உண்டா? இந்தச் சிகிச்சை முறை இல்லாமல், கிரீம் மூலம் காது துளைகளை இணைக்கலாம் என்றெல்லாம் பலர் கூறுகின்றனர். கம்மல் அணியும் பகுதி என்பது முற்றிலும் தோலால் சூழப்பட்ட இடம் என்பதால் கிரீம், க்ளூ பயன்படுத்தி எல்லாம் ஒட்ட முடியாது. அது சாத்தியமே இல்லாத சிகிச்சை. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.

விகடன் 1 Dec 2023 6:18 pm

அவசர சிகிச்சை, ஒன்றரை மணி நேரம் தாமதம்.... குழந்தை இறப்புக்கு காரணமான நிம்ஹான்ஸ் மருத்துவமனை..!

பெங்களூரூவின் நிம்ஹான்ஸ் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் உயிர் பறிபோனதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிக்கமகளூருவில் உள்ள பசவனகுடியைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் ஜோதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. வீட்டில் நான்கு அடி உயரத்தில் இருந்து குழந்தை விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முதலில் குழந்தையை ஹாசன் மருத்துவ அறிவியல் கழகத்திற்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ்க்கு (தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்) அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். மருத்துவர்கள் குடி போதையில் தகராறு, மூளைக்குள் சென்ற சாப்ஸ்டிக்கை... மருத்துவர்கள் அதிர்ச்சி! விரைவாக குழந்தையை நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல க்ரீன் காரிடார் (Green Corridor) அமைக்கப்பட்டது. 224 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 40 நிமிடங்களில் கடந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர். குழந்தையின் அட்மிஷன் மற்றும் அவசரநிலை குறித்து 29-ம் தேதியன்று நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு தொலைபேசியில் தெரிவித்து இருந்தனர். ஆம்புலன்ஸ் விரைவாக அங்கு சென்று சேர்ந்த பின்னரும் 90 நிமிடங்களுக்கு மேல் படுக்கை இல்லை என நிம்ஹான்ஸ் மருத்துவ ஊழியர்கள் காத்திருக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.  அதன்பின் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் ஊழியர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என நவம்பர் 30 அன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்டநேரம் வலியோடு குழந்தையை ஆம்புலன்ஸில் வைத்திருந்தது பொது மக்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.  ``நாங்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தோம். அவர்கள் ஒத்துழைத்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம். பெங்களூருக்கு வருவது இதுவே முதல் முறை. குழந்தை காப்பாற்றப்படும், இங்கு கொண்டுவந்தால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் வந்தோம். எனக்குப் படுக்கைகள் பற்றி தெரியாது; வந்து ஏதோ ஊசி போட்டார்கள். எங்களிடம் பேசவும் இல்லை, நாங்கள் பேசச் சென்ற போதும் எதுவும் பேசவில்லை'' என்றார் குழந்தையின் தந்தை வெங்கடேசன்.  Father and son (Representational Image) `பெற்றோர்' எனக் குறிப்பிடுங்கள்... குழந்தை பெற்ற முதல் திருநங்கை தம்பதி: நீதிமன்றத்தை நாடியது ஏன்?! இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நோயாளி இதயத் துடிப்பு குறைந்து போகும் bradycardia-வால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். மாலை 3 மணிக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் குழந்தையை உயிர்ப்பிக்க முடியவில்லை. குழந்தைக்குக் கடுமையான மூளைக் காயம் ஏற்பட்டது. மேலும் குணமடைதல் குறித்த முன்கணிப்பு மோசமாக இருப்பதால், குழந்தையை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்திற்கு (நிம்ஹான்ஸ்) மாற்ற வேண்டாம் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது'' என்று தெரிவித்துள்ளது.  நிம்ஹான்ஸின் ரெசிடென்ட் மெடிக்கல் ஆஃபீசர் டாக்டர் ஷஷிதர், சோதனைகளை நடத்துவதற்கு 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டார். குழந்தை மிகவும் மோசமாக இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதைப் பெற்றோருக்குப் புரிய வைக்க நாங்கள் முயன்றதால் தாமதம் ஏற்பட்டது என்று அவர் கூறியிருக்கிறார். “குழந்தையை நிம்ஹான்ஸுக்கு அழைத்து வந்தோம், ஏனென்றால் நாங்கள் அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்பட்டோம். குழந்தையை இங்கு கொண்டு வந்தவுடன் டாக்டர்கள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்க வேண்டும். ஆனால் டாக்டர்கள் ஆம்புலன்ஸ் வரை மட்டுமே வந்து குழந்தையைப் பார்த்து விட்டுச் சென்றனர். அவர்கள் எங்களிடம் கூட பேசவில்லை. அவர்கள் தங்களுக்குள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசிக்கொண்டு நோயாளி ஆம்புலன்சில் படுத்திருக்கும்போது உள்ளே சென்றார்கள்” என்று ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினார்.   இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்த சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், ``நிம்ஹான்ஸில் ஏற்பாடுகள் சரியாக இல்லை. அங்கு  கூட்டம் அதிகமாக உள்ளது. அழுத்தம் அதிகம் இருந்தபோதிலும் தரமான சிகிச்சையை ஊழியர்கள் உறுதி செய்கிறார்கள். அவர்களின் அழுத்தத்தை நாம் குறைக்க வேண்டும். குழந்தையின் மரணம் குறித்த கூடுதல் தகவல்களை நான் சேகரிப்பேன் என்று கூறினார்.

விகடன் 1 Dec 2023 1:01 pm

குடி போதையில் தகராறு, மூளைக்குள் சென்ற சாப்ஸ்டிக்கை... மருத்துவர்கள் அதிர்ச்சி!

வியட்நாமை சேர்ந்த 35 வயதான ஒருவர் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அவரது மூளையில் சாப்ஸ்டிக் (chopstick) இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில் சாப்ஸ்டிக் மூளையில் இருந்தது. சாப்ஸ்டிக் உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேமிப்பேன்... ஏன் தெரியுமா? - உலகின் மிக நீளமான முடி உடைய பெண்..! ஐந்து மாதங்களாகக் கடும் தலைவலி, மூக்கிலிருந்து நீர் வடியும் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அந்த நபர். சி.டி ஸ்கேன் செய்த பிறகு, ’மூளையில் அரிதான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான பிரச்னை’ என்று தெரிவித்துள்ளனர். ஆனால், எதனால் அந்தப் பிரச்னை என்பது பிடிபடவில்லை. இந்நிலையில் மருத்துவர்கள் அடுத்தடுத்த பரிசோதனையை மேற்கொண்டபோது அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. பாதிக்கப்பட்டவரின் மூளையில் ஜோடி சாப்ஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Brain தாயை மோசமாக நடத்திய மகன்... வீட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! இதுபற்றி அந்த நபரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, தனக்கு எதுவும் சரியாக நினைவு இல்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், 5 மாதங்களுக்கு முன்பு மது போதையில் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது மூக்கில் சாப்ஸ்டிக் வைத்து குத்தியதும் நினைவில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும், போதையில் இருந்ததால் சாப்ஸ்டிக் மூக்கின் உள்ளே நுழைந்தது பற்றி சரியாக நினைவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தகராறு நடைபெற்ற பிறகு மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மருத்துவர்கள் இதை கண்டறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். doctors found chopstick inside human brain `மூளை அறுவை சிகிச்சை; பெற்றோரால் அவமானம்’- இந்தியாவின் முதல் தன்பால் ஈர்ப்பாளர் இளவரசர் கோஹில் வேதனை இறுதியில் அறுவை சிகிச்சையின் மூலம் அவரது மூளையிலிருந்து இரண்டு சாப்ஸ்டிக் குச்சிகளும் அகற்றப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து வேடிக்கையான கமெண்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விகடன் 1 Dec 2023 9:44 am

Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் கணையத்தில் கல் உருவாகுமா?

Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு அதிகம் சாப்பிட்டால் கணையத்தில் கல் உருவாகும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் கணையத்தில் உருவாகும் கற்கள் (பான்க்ரியாட்டிக் ஸ்டோன்ஸ்) என்பவை குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் உருவாவதில்லை. உண்மையில் மரவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச் சத்து அதிகமுள்ளது.  எனவே அது கணையத்தில் கற்கள் உருவாக்க வாய்ப்பில்லை.  சிலருக்கு பித்தப்பையில் கற்கள் இருக்கும். அவை பித்தப்பையின் கிளைகளில் மாட்டிக்கொள்ளும். அதன் காரணமாகவே அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். சிலருக்கு தீவிர கணைய பாதிப்பு ஏற்படலாம்.  அதாவது அடிக்கடி கணையத்தில் வீக்கம் வரும். அதனால் கணைய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதனாலும் கணையத்தில் கற்கள் வரலாம். அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகள் செய்து பார்ப்போர், ரத்தச் சர்க்கரை அளவுகளோடு கொழுப்பு அளவுகளையும் டெஸ்ட் செய்து பார்ப்பார்கள்.  பித்தப்பை Doctor Vikatan: உப்பு வைத்துப் பல் துலக்கினால் மஞ்சள் கறை நீங்குமா? லிப்பிட் புரொஃபைல் எனப்படும் அந்தப் பரிசோதனையில் ஹெடிஎல், எல்டிஎல், ட்ரைகிளிசரைடு என வேறு வேறு கொழுப்புகளின் அளவுகளைக் குறிப்பிட்டிருப்பார்கள். இவற்றில் ட்ரைகிளிசரைடு என்பதுதான் ரத்தக் குழாய்களில் படிந்து, அடைப்பை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது. இந்த ட்ரைகிளிசரைடு அளவானது மிகவும் அதிகமாக இருப்பதும் கணையத்தில் கற்கள் உருவாகக் காரணமாகலாம். அதே போல ரத்தத்தில் கால்சியம் அதிகமிருப்பதும் ஒரு காரணமாகலாம்.  எனவே கணையத்தில் உருவாகும் கற்களுக்கும் உணவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஓட்டப் பந்தயத்தில் ஓடுவோர் போன்றோர், அதீத எனர்ஜி வேண்டும் என்பதற்காக மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட நிறைய கிழங்கு வகைகள் சாப்பிடுவதுண்டு.   ஓட்டம் Doctor Vikatan: நட்ஸை அப்படியே சாப்பிட வேண்டுமா... ஊறவைத்து, தோலுரித்துச் சாப்பிட வேண்டுமா? அந்த வகையில் மரவள்ளிக் கிழங்கு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய உணவுதான். பயமின்றி சாப்பிடலாம். அதைப் பொரித்தோ, எண்ணெய் நிறைய சேர்த்துச் சமைத்தோ சாப்பிடுவதை மட்டும் தவிர்க்கவும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 1 Dec 2023 9:00 am

உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேமிப்பேன்... ஏன் தெரியுமா? - உலகின் மிக நீளமான முடி உடைய பெண்..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் `மிக நீளமான முடியுடன் வாழும் நபர்’ (The longest hair on a living person) என கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். நீளமான முடி என்பது பலருக்கும் எட்டாக் கனியாகக் கூட இருக்கலாம். முடி வளர்வதற்காக பிறர் சொல்வது, சமூக ஊடகங்களைப் பார்த்து எண்ணெய், ஷாம்பூ என உபயோகிப்பது என பல முறைகளைக் கையாண்டாலும், முளைக்கவே மாட்டேன் என முடியும் மல்லுக்கு நிற்பதுண்டு.  ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா சருமமும் கேசமும் ஆரோக்கியமா இருக்க... இதையெல்லாம் பண்ணாதீங்க! | Skin And Hair Beauty Mistakes உத்தரப்பிரதேசத்தில் வசித்து வரும் 46 வயதான ஸ்மிதா  ஸ்ரீவஸ்தவா தனது 14 வயதில் இருந்து தலைமுடியை வெட்டாமலே வளர்த்து வருகிறார். இப்போது அவரது தலைமுடி (236.22 சென்டிமீட்டர்) 7 அடி 9 அங்குலம் நீளம் உள்ளது.  நீளமான முடியின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளவர், தனது தலைமுடியை வாரத்திற்கு இரண்டு முறை கழுவுவதாகக் கூறியுள்ளார். நீளமான முடியைக் கழுவவே 30 - 45 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனைத் தாண்டி தலையை உலர்த்தி, ஜடை போட மூன்று மணிநேரம் வரை பிடிக்கிறது. ஒரு நாள் எனக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டது. உதிரும் முடிகளை கீழே போடுவது என்னை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து நான் எனது உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேகரிக்கத் தொடங்கினேன். சுமார் 20 வருடங்களாக சேமித்து வருகிறேன். இப்போது என்னிடம் உதிர்ந்த நிறைய முடிகள் இருக்கின்றன. 1980-களில் இந்தி நடிகைகள் செய்து வந்த தனித்துவமான சிகை அலங்காரங்களால் ஈர்க்கப்பட்டேன். என் தலைமுடியைப் பார்க்கும் மக்கள் வியந்துபோவார்கள். சிலர் எனது தலைமுடியைத் தொட்டு என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். கூந்தல் பராமரிப்புக்காக நான் பயன்படுத்தும் பொருள்களை பற்றியும் கேட்கிறார்கள். ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா! முடி உதிர்வு... எது நார்மல், எது அப்நார்மல்? மருத்துவ விளக்கம்! இந்திய கலாசாரத்தில், தெய்வங்கள் பாரம்பர்யமாக மிக நீளமான முடியைக் கொண்டிருந்தன. நம் சமூகத்தில், முடி வெட்டுவது அபசகுணமாக கருதப்படுகிறது, அதனால்தான் பெண்கள் முடியை வளர்க்கிறார்கள். நீண்ட முடி பெண்களின் அழகை மேலும் அதிகரிக்கிறது. எனது தலைமுடியை இன்னும் வளர்க்க நான் ஆசைப்படுகிறேன். எவ்வளவு காலம் அதைப் பராமரிக்க முடியும் என்று பார்க்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.  

விகடன் 30 Nov 2023 6:31 pm

உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேமிப்பேன்... ஏன் தெரியுமா? - உலகின் மிக நீளமான முடி உடைய பெண்..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் `மிக நீளமான முடியுடன் வாழும் நபர்’ (The longest hair on a living person) என கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். நீளமான முடி என்பது பலருக்கும் எட்டாக் கனியாகக் கூட இருக்கலாம். முடி வளர்வதற்காக பிறர் சொல்வது, சமூக ஊடகங்களைப் பார்த்து எண்ணெய், ஷாம்பூ என உபயோகிப்பது என பல முறைகளைக் கையாண்டாலும், முளைக்கவே மாட்டேன் என முடியும் மல்லுக்கு நிற்பதுண்டு.  ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா சருமமும் கேசமும் ஆரோக்கியமா இருக்க... இதையெல்லாம் பண்ணாதீங்க! | Skin And Hair Beauty Mistakes உத்தரப்பிரதேசத்தில் வசித்து வரும் 46 வயதான ஸ்மிதா  ஸ்ரீவஸ்தவா தனது 14 வயதில் இருந்து தலைமுடியை வெட்டாமலே வளர்த்து வருகிறார். இப்போது அவரது தலைமுடி (236.22 சென்டிமீட்டர்) 7 அடி 9 அங்குலம் நீளம் உள்ளது.  நீளமான முடியின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளவர், தனது தலைமுடியை வாரத்திற்கு இரண்டு முறை கழுவுவதாகக் கூறியுள்ளார். நீளமான முடியைக் கழுவவே 30 - 45 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனைத் தாண்டி தலையை உலர்த்தி, ஜடை போட மூன்று மணிநேரம் வரை பிடிக்கிறது. ஒரு நாள் எனக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டது. உதிரும் முடிகளை கீழே போடுவது என்னை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து நான் எனது உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேகரிக்கத் தொடங்கினேன். சுமார் 20 வருடங்களாக சேமித்து வருகிறேன். இப்போது என்னிடம் உதிர்ந்த நிறைய முடிகள் இருக்கின்றன. 1980-களில் இந்தி நடிகைகள் செய்து வந்த தனித்துவமான சிகை அலங்காரங்களால் ஈர்க்கப்பட்டேன். என் தலைமுடியைப் பார்க்கும் மக்கள் வியந்துபோவார்கள். சிலர் எனது தலைமுடியைத் தொட்டு என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். கூந்தல் பராமரிப்புக்காக நான் பயன்படுத்தும் பொருள்களை பற்றியும் கேட்கிறார்கள். ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா! முடி உதிர்வு... எது நார்மல், எது அப்நார்மல்? மருத்துவ விளக்கம்! இந்திய கலாசாரத்தில், தெய்வங்கள் பாரம்பர்யமாக மிக நீளமான முடியைக் கொண்டிருந்தன. நம் சமூகத்தில், முடி வெட்டுவது அபசகுணமாக கருதப்படுகிறது, அதனால்தான் பெண்கள் முடியை வளர்க்கிறார்கள். நீண்ட முடி பெண்களின் அழகை மேலும் அதிகரிக்கிறது. எனது தலைமுடியை இன்னும் வளர்க்க நான் ஆசைப்படுகிறேன். எவ்வளவு காலம் அதைப் பராமரிக்க முடியும் என்று பார்க்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.  

விகடன் 30 Nov 2023 6:31 pm

சூப் குடிப்பது ஆரோக்கியம் என நம்புபவரா நீங்கள்? இந்தத் தகவல்கள் உங்களுக்குத்தான்... |#ExpertOpinion

ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளும் பலரின் சாய்ஸிலும் சூப் இருக்கும். தெருவோரங்களில் பெருகிவிட்ட சூப் கடைகளாலும் சில நிமிடங்களில் தயாரித்து அருந்தும் வகையில் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸ் விற்பனைக்கு வந்த பிறகு  சூப் அருந்தும் கலாசாரம்  இன்னும் அதிகரித்திருக்கிறது. சூப் நோய்க்கு குட்பை சொல்லும் பாதுகாப்பு வளையம்..! | மகிழ்ச்சி -7 `தினமும் ஒரு முறையேனும் சூப் குடித்துவிட வேண்டும்' என்ற உணவுமுறை மாற்றத்துக்கு பெரும்பாலானோர் பழகியிருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு முன் பசியை அதிகரிக்க சூப் குடிப்பது, மாலை வேளையில் ஆரோக்கிய பானமாக சூப் அருந்துவது என இந்தப் பழக்கம் பலவிதமாகப் பின்பற்றப்படுகிறது. பசியின்போது சாப்பாட்டுக்கு பதில் சூப் மட்டுமே குடிப்பவர்களும் இருக்கிறார்கள். தினமும் சூப் குடிப்பது சரிதானா, சூப்பில் என்னென்ன வகைகள் இருக்கின்றன, யார் எந்த சூப்பை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத். சின்னச் சின்ன ஆசை… பெரிய பெரிய துன்பம் | மகிழ்ச்சி - 8 மூன்று வகை சூப்கள்... *  Appetizer Soup  - இது, அடர்த்தி குறைவாக இருக்கும் சூப் வகை. பசியைத் தூண்டுவதற்கான சூப். *  Creamy Soup  - கான்ஃப்ளார், மைதா போன்றவை கொண்டு கெட்டியாகத் தயாரிக்கப்படும் சூப் வகை இது. *  Chowder soup  - காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்தி, உணவுக்கு ஈடானளவு ஊட்டச்சத்து கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகை இது. இதை அருந்தினாலே பசி அடங்கிவிடும் என்பதால், உணவுக்கு மாற்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். காய்கறி சூப் தயாரிக்கும்போது, அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். நன்மைகள் சூப் 50 வயதில் உடல் பசிக்கு என்ன பதில்..? | மகிழ்ச்சி - 6 உடலுக்கு வைட்டமின்கள், தாது உப்புகள், தேவையான அளவு கலோரிகள், புரதம் போன்றவை அதிகம் கிடைக்கும். சமைத்து சாப்பிடும் காய்கறிகளைவிடவும், சற்றே கூடுதலான பலன்களை சூப் குடிப்பதன் மூலம் பெறலாம். உடல் நலன் சார்ந்த பிரச்னையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருப்பவர்களுக்கு, உணவை மென்று சாப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கும். அப்படியானவர்களுக்கு, சூப் எளிமையான மற்றும் சத்தான மாற்று உணவாக இருக்கும். இவர்கள், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்றி சூப் எடுத்துக்கொள்ள வேண்டாம். சரியான முறையில் சூப் தயாரிக்க, சில குறிப்புகள்! * அதிகம் கொதிக்க வைத்தால் காய்கறிகளில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படலாம் என்பதால், காய்கறி சூப்பை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது. * அசைவ சூப் தயாரிக்கும்போது, அதை அதிக நேரம் கொதிக்க வைத்தல் அவசியம். காரணம், அப்போதுதான் கறியில் இருக்கும் சத்துகள் யாவும் சூப்பில் இறங்கும். செரிமான சிக்கல்களைத் தவிர்க்கலாம். சூப் இதை உணர்ந்துவிட்டால்... உங்கள் கவலைக்கு விடுதலை கொடுத்து விடுவீர்கள்! | மகிழ்ச்சி - 5 * சூப்பில் நறுமண இலைகள் சேர்க்கும்போது, அவற்றை அரைத்து உபயோகப்படுத்த வேண்டாம். அப்படியே இலைகளாக உபயோகப்படுத்தவும். முடிந்தால் அவற்றின் சாற்றை மட்டும் பயன்படுத்தவும். அரைத்துப் பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட அந்தப் பொருளின் மணமும் சுவையும் சூப்பில் அதிகரித்துவிடும். அது, சூப்பின் சுவையை மாற்றிவிடும். * காய்கறி சூப் தயாரிக்கும்போது, காய்கறி தேர்வில் கவனமாக இருக்கவும். எதிரெதிர் வண்ணங்களிலிருக்கும் காய்கறிகளை ஒரே சூப்பில் சேர்த்துவிடாதீர்கள். அது சுவை, மணம் என அனைத்தையும் கெடுத்துவிடும்! * சூப்பை திடமாக்க, வொயிட் சாஸ் உபயோகிப்பதுண்டு. சிலர் வெண்ணெய் பயன்படுத்துவார்கள். அவையெல்லாம் வேண்டாமென நினைப்பவர்கள், கான்ஃப்ளார் உபயோகிக்கலாம். தினமும் ரெடிமேட் சூப், நல்லதா கெட்டதா? நிச்சயம் நல்லதல்ல. வீட்டில் தயாரிக்கும் சூப் அளவுக்கு அவை ஆரோக்கியமானவையல்ல. ரெடிமேட் சூப் பவுடர்களில், நறுமணத்துக்காகவும் நிறத்துக்காகவும் நிறைய பொருள்களும் நிறமிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். கூடவே உப்புச்சத்து, கலோரி போன்றவையும் அளவுக்கு அதிகமாகவோ / மிகக்குறைவாகவோ இருக்கும். சூப் சூரியக் கதிர் பருகு… நோயைத் தூர விரட்டு! | மகிழ்ச்சி - 3 ஊட்டச்சத்து, நார்ச்சத்து போன்றவற்றைத் தாண்டி கெட்ட கொழுப்புச்சத்துக்கான சேர்க்கைகளும் அதில் இருக்கலாம். என்றாவது ஒரு நாள், ஒரே ஒரு வேளை, குளிருக்கு இதமாக ஏதேனும் குடிக்க வேண்டும் போலுள்ளது என்பவர்கள் மட்டும், ரெடிமேட் சூப் குடிக்கலாம். தினமும் சூப் குடிக்க வேண்டுமென முடித்துவெடுத்துவிட்டீர்கள் எனில், தாமதிக்காமல் தினமும் வீட்டில் தயாரித்து குடித்துப் பழகவும். அதுமட்டுமே ஆரோக்கியமானது. தினமும் சூப் குடிப்பதால் ஏதேனும் உடல்நல பிரச்னைகள் வருமா? எந்த வேளையில், என்ன வகை சூப்பை அருந்துகிறோம் என்ற தெளிவுடன் குடிப்பவர்களுக்கு நிச்சயம் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தத் தெளிவு இல்லாமல் க்ரீமி சூப்பை உணவுக்கு முன் அருந்துவது, சௌடர் சூப் குடித்தபின் பலமான உணவு உட்கொள்வதெல்லாம் ஆரோக்கியக் கேட்டுக்கே வழிவகுக்கும். உடல் எடை குறைக்க வேண்டியோ அல்லது வேறு ஏதேனும் உடல் நல மாற்றங்களுக்காகவோ சூப் குடிப்பவர்கள் நிபுணர் ஆலோசனையின்றி சூப் உட்கொள்ளக் கூடாது என்கிறார் அவர்.

விகடன் 30 Nov 2023 6:29 pm

பூப்பெய்தாத பெண்கள்: காரணம், தீர்வு என்ன? திருமணம் செய்துகொள்ளலாமா? | Delayed Puberty

பூப்பெய்தாமை... அரிதினும் அரிதாக சிலருக்கே இந்தப் பிரச்னை நிகழ்கிறது. இது ஏன் நடக்கிறது, இதற்குத் தீர்விருக்கிறதா? ``இன்றைக்கு 50+ ல் உள்ள பல பெண்கள் 15 அல்லது 16 வயதில் பூப்பெய்தியிருப்பார்கள். இவர்களின் மகள்கள் 12 அல்லது 13 வயதில் பூப்பெய்தியிருப்பார்கள். இந்தக் காலச் சிறுமிகளில் சிலர் பத்து வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். மரபணு, உணவு, சுற்றுச்சூழல் என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 14 வயதுக்கும் மேல் உங்கள் மகள் பூப்பெய்தவில்லை என்றால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைப் பார்க்க வேண்டும். பூப்பெய்தாமை என்பது அரிதான பிரச்னை என்றாலும், பெரும்பாலும் இதைச் சரி செய்து விடலாம்...’’ என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் சிறுநீரகவியல் நிபுணருமான ராஜ மகேஸ்வரி பகிர்ந்த தகவல்கள் இங்கே... Teen girl பெண் குழந்தைகள் நலனில் அக்கறை... செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தமிழகம் 2-வது இடம்! ``சினை முட்டை வெளிப்படுதல் சரிவர நிகழவில்லையென்றால் ஹார்மோன் செயல்பாடுகளும் சரியாக இருக்காது. இந்தப் பிரச்னை உள்ள சிறுமிகள் பூப்பெய்த மாட்டார்கள். மருந்து, மாத்திரைகள் மூலமே ஹார்மோன் பிரச்னையை சரிசெய்து, இவர்களை பூப்பெய்த வைத்துவிடலாம். சில சிறுமிகளுக்கு கர்ப்பப்பை, சினைப்பை இரண்டின் வளர்ச்சியும் இயல்பாக இருக்கும். ஹார்மோன் சுரப்பும் சரியாக இருக்கும். ஆனாலும் பூப்பெய்த மாட்டார்கள். உண்மையில் இவர்கள் பூப்பெய்தி யிருப்பார்கள். ஆனால், மாதவிடாய் உதிரப்போக்கு வெளியேற இயலாமல் கர்ப்பப்பையிலும், கர்ப்பப்பைக் குழாய்களிலும், சிறுநீர்ப் பைக்கும் மலம் வெளியேறும் பகுதிக்கு இடையிலும் சேகரமாகிக்கொண்டிருக்கும். பிறப்புறுப்பில் ஜவ்வுப்படலமோ அல்லது அடைப்போ இருப்பதுதான் காரணம். இந்தச் சிறுமிகள், மாதந்தோறும் உடலுக்குள் மாதவிடாய் வெளிப்படும்போது ‘பீரியட்ஸ் வலி’யையும் உணர்வார்கள். உடலுக்குள் மாதவிடாய் உதிரம் சேர்ந்துகொண்டே இருப்பதால், ஒருகட்டத்துக்கு மேல் அது கட்டிபோல மாறி சிறுநீர்ப்பையை அழுத்த ஆரம்பிக்கும். விளைவு ‘பொண்ணு யூரின் போக முடியாம கஷ்டப்படுறா டாக்டர்’ என்று அழைத்து வருவார்கள். மாதவிடாய் நாள்களில் காபி அருந்தக் கூடாதா? எந்த உணவுகள் உகந்தவை? - மருத்துவர் விளக்கம் பிறப்புறுப்பில் ஜவ்வுப்படலம் இருந்து, அதன் காரணமாக மாதவிடாய் உதிரம் வெளிவராமல் இருந்தால் சிறிய அறுவை சிகிச்சை செய்து, தேங்கியுள்ள உதிரத்தை வெளியேற்றி விடுவோம். அதன்பிறகு சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மாதந்தோறும் மாதவிடாய் வர ஆரம்பித்துவிடும். ஏற்கெனவே உடலுக்குள் தேங்கியிருக்கிற உதிரமும் படிப்படியாக வெளியேறிவிடும். சில சிறுமிகளுக்குப் பிறப்புறுப்பில் சதை அடைப்பு இருப்பதோடு, கர்ப்பப்பையுடனும் தொடர்பில் இருக்காது. இவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் சதை அடைப்பை நீக்கி, கர்ப்பப்பையுடன் பாதையை உருவாக்கி விடுவோம். சிலருக்கு, இரண்டு கர்ப்பப்பை, அவற்றுக்கு ஒன்றாகவோ, தனித்தனியாகவோ வாய்ப்பகுதி இருக்கும். இதில் ஒரு கர்ப்பப்பை வாய் மட்டும் பிறப்புறுப்புடன் தொடர்பில் இருக்கும். அதன் வழியாக மாதவிடாய் வெளியேறிக்கொண்டிருக்கிற அதே நேரம் இன்னொரு கர்ப்பப்பையிலும் சிறிதளவு மாதவிடாய் உதிரம் சேகரமாகிக் கொண்டிருக்கும். இந்தச் சிறுமிகளும் பூப்பெய்திய சில வருடங்களில் வயிற்றுவலி, சிறுநீர் கழிக்க இயலாத பிரச்னையுடன் மருத்துவமனைக்கு வருவார்கள். இவற்றையும் சரி செய்துவிடலாம்’’ என்றவர், சிறுமிகளின் உடலுக்குள் பூப்பெய்தல் நிகழ்ந்திருந்தால் அதை எப்படிக் கண்டறிவது என்பதையும் விளக்குகிறார். பூப்பெய்தல் மாதவிடாய்: அவசியம் அறிய வேண்டிய அடிப்படை உண்மைகள்! | #VisualStory ‘`உங்கள் மகள் 14 வயதாகியும் பூப்படையவில்லை என்றாலும், அந்த வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சியும், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு ரோம வளர்ச்சியும் இருந்தால், பூப்பெய்தல் நிகழ்ந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டு உடனடியாக மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்’’ என்கிறார். பூப்பெய்தவில்லை... திருமணம் செய்துகொள்ளலாமா? கர்ப்பப்பை வளர்ச்சியின்மையால் பூப்பெய்தல் நிகழவில்லை என்றாலும், பிறப்புறுப்பில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதற்கான பாதையிருக்கிறது என்றால் தாராளமாகத் திருமணம் செய்துகொள்ளலாம். Couple மாதவிடாய்... விடுப்பு கேட்பது பலவீனமல்ல...! ஒருவேளை பிறப்புறுப்பில் சதை அடைத்துக்கொண்டு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வழியே இல்லையென்றால், அறுவை சிகிச்சை மூலம் பாதையை உருவாக்கிய பிறகு திருமணம் செய்துகொள்ளலாம். பாதையை உருவாக்க முடியவில்லையென்றால், குடலின் சிறு பகுதியை எடுத்து வைக்கும் அறுவைசிகிச்சையின் மூலம் சரி செய்துவிடலாம். டர்னர் சிண்ட்ரோமும் பூப்பெய்தலும்..! சென்னையைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் ஸ்ருதி, ``சில பெண் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே பூப்பெய்தலுக்கான குரோமோசோம் இருக்காது. இதை `டர்னர் சிண்ட்ரோம்' (Turner Syndrome) என்போம். இவர்கள் வயதுக்கேற்ற வளர்ச்சியுடன் இருக்க மாட்டார்கள். இந்தப் பிரச்னையை சிறுவயதிலேயே கண்டறிந்து ஹார்மோன் சிகிச்சையளிப்பதன் மூலம் கர்ப்பப்பையை வளரவைத்து, மாதவிடாயையும் வரவழைக்கலாம். மார்பகங்களும் வளர்ச்சிபெறும். ஆனால், கரு முட்டைகள் உருவாகாது என்பதால் குழந்தைப்பேறு இருக்காது’’ என்கிறார். Girl Child கருப்பை இல்லாத பெண்... குழந்தை பெற்ற ஆச்சர்யம்..! சென்னையில் மருத்துவ அதிசயம் இவையும் இயற்கைதான்! சில சிறுமிகளுக்குக் கர்ப்பப்பை வளர்ச்சியடையாமல் மிளகு சைஸில் இருக்கும். சிலருக்கு சினைப்பைக்குப் பதிலாக விதைப்பை இருக்கும். இவையிரண்டும் அரிதிலும் அரிதானவை என்றாலும் இயற்கையே. இவர்களால் பூப்பெய்த இயலாது என்றாலும், மருத்துவ ஆலோசனை பெற்று திருமணம் செய்துகொள்ளலாம். மருத்துவம் வளராத காலகட்டத்தில் பூப்பெய்தாமை பெரிய பிரச்னையாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அறிவியலும் மருத்துவமும் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் அது அவசியமில்லை.

விகடன் 30 Nov 2023 1:31 pm

பூப்பெய்தாத பெண்கள்: காரணம், தீர்வு என்ன? திருமணம் செய்துகொள்ளலாமா? | Delayed Puberty

பூப்பெய்தாமை... அரிதினும் அரிதாக சிலருக்கே இந்தப் பிரச்னை நிகழ்கிறது. இது ஏன் நடக்கிறது, இதற்குத் தீர்விருக்கிறதா? ‘``இன்றைக்கு 50+ ல் உள்ள பல பெண்கள் 15 அல்லது 16 வயதில் பூப்பெய்தியிருப்பார்கள். இவர்களின் மகள்கள் 12 அல்லது 13 வயதில் பூப்பெய்தியிருப்பார்கள். இந்தக் காலச் சிறுமிகளில் சிலர் பத்து வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். மரபணு, உணவு, சுற்றுச்சூழல் என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 14 வயதுக்கும் மேல் உங்கள் மகள் பூப்பெய்தவில்லை என்றால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைப் பார்க்க வேண்டும். பூப்பெய்தாமை என்பது அரிதான பிரச்னை என்றாலும், பெரும்பாலும் இதைச் சரி செய்து விடலாம்...’’ என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் சிறுநீரகவியல் நிபுணருமான ராஜ மகேஸ்வரி பகிர்ந்த தகவல்கள் இங்கே... Teen girl பெண் குழந்தைகள் நலனில் அக்கறை... செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தமிழகம் 2-வது இடம்! ``சினை முட்டை வெளிப்படுதல் சரிவர நிகழவில்லையென்றால் ஹார்மோன் செயல்பாடுகளும் சரியாக இருக்காது. இந்தப் பிரச்னை உள்ள சிறுமிகள் பூப்பெய்த மாட்டார்கள். மருந்து, மாத்திரைகள் மூலமே ஹார்மோன் பிரச்னையை சரிசெய்து, இவர்களை பூப்பெய்த வைத்துவிடலாம். சில சிறுமிகளுக்கு கர்ப்பப்பை, சினைப்பை இரண்டின் வளர்ச்சியும் இயல்பாக இருக்கும். ஹார்மோன் சுரப்பும் சரியாக இருக்கும். ஆனாலும் பூப்பெய்த மாட்டார்கள். உண்மையில் இவர்கள் பூப்பெய்தியிருப்பார்கள். ஆனால், மாதவிடாய் உதிரப்போக்கு வெளியேற இயலாமல் கர்ப்பப்பையிலும், கர்ப்பப்பைக் குழாய்களிலும், சிறுநீர்ப் பைக்கும் மலம் வெளியேறும் பகுதிக்கு இடையிலும் சேகரமாகிக்கொண்டிருக்கும். பிறப்புறுப்பில் ஜவ்வுப்படலமோ அல்லது அடைப்போ இருப்பதுதான் காரணம். இந்தச் சிறுமிகள், மாதந்தோறும் உடலுக்குள் மாதவிடாய் வெளிப்படும்போது ‘பீரியட்ஸ் வலி’யையும் உணர்வார்கள். உடலுக்குள் மாதவிடாய் உதிரம் சேர்ந்துகொண்டே இருப்பதால், ஒருகட்டத்துக்கு மேல் அது கட்டிபோல மாறி சிறுநீர்ப்பையை அழுத்த ஆரம்பிக்கும். விளைவு ‘பொண்ணு யூரின் போக முடியாம கஷ்டப்படுறா டாக்டர்’ என்று அழைத்து வருவார்கள். மாதவிடாய் நாள்களில் காபி அருந்தக் கூடாதா? எந்த உணவுகள் உகந்தவை? - மருத்துவர் விளக்கம் பிறப்புறுப்பில் ஜவ்வுப்படலம் இருந்து, அதன் காரணமாக மாதவிடாய் உதிரம் வெளிவராமல் இருந்தால் சிறிய அறுவை சிகிச்சை செய்து, தேங்கியுள்ள உதிரத்தை வெளியேற்றி விடுவோம். அதன்பிறகு சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மாதந்தோறும் மாதவிடாய் வர ஆரம்பித்துவிடும். ஏற்கெனவே உடலுக்குள் தேங்கியிருக்கிற உதிரமும் படிப்படியாக வெளியேறிவிடும். சில சிறுமிகளுக்குப் பிறப்புறுப்பில் சதை அடைப்பு இருப்பதோடு, கர்ப்பப்பையுடனும் தொடர்பில் இருக்காது. இவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் சதை அடைப்பை நீக்கி, கர்ப்பப்பையுடன் பாதையை உருவாக்கி விடுவோம். சிலருக்கு, இரண்டு கர்ப்பப்பை, அவற்றுக்கு ஒன்றாகவோ, தனித்தனியாகவோ வாய்ப்பகுதி இருக்கும். இதில் ஒரு கர்ப்பப்பை வாய் மட்டும் பிறப்புறுப்புடன் தொடர்பில் இருக்கும். அதன் வழியாக மாதவிடாய் வெளியேறிக்கொண்டிருக்கிற அதே நேரம் இன்னொரு கர்ப்பப்பையிலும் சிறிதளவு மாதவிடாய் உதிரம் சேகரமாகிக் கொண்டிருக்கும். இந்தச் சிறுமிகளும் பூப்பெய்திய சில வருடங்களில் வயிற்றுவலி, சிறுநீர் கழிக்க இயலாத பிரச்னையுடன் மருத்துவமனைக்கு வருவார்கள். இவற்றையும் சரி செய்துவிடலாம்’’ என்றவர், சிறுமிகளின் உடலுக்குள் பூப்பெய்தல் நிகழ்ந்திருந்தால் அதை எப்படிக் கண்டறிவது என்பதையும் விளக்குகிறார். பூப்பெய்தல் மாதவிடாய்: அவசியம் அறிய வேண்டிய அடிப்படை உண்மைகள்! | #VisualStory ‘`உங்கள் மகள் 14 வயதாகியும் பூப்படையவில்லை என்றாலும், அந்த வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சியும், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு ரோம வளர்ச்சியும் இருந்தால், பூப்பெய்தல் நிகழ்ந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டு உடனடியாக மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்’’ என்கிறார். பூப்பெய்தவில்லை... திருமணம் செய்துகொள்ளலாமா? கர்ப்பப்பை வளர்ச்சியின்மையால் பூப்பெய்தல் நிகழவில்லை என்றாலும், பிறப்புறுப்பில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதற்கான பாதையிருக்கிறது என்றால் தாராளமாகத் திருமணம் செய்துகொள்ளலாம். Couple மாதவிடாய்... விடுப்பு கேட்பது பலவீனமல்ல...! ஒருவேளை பிறப்புறுப்பில் சதை அடைத்துக் கொண்டு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வழியே இல்லையென்றால், அறுவை சிகிச்சை மூலம் பாதையை உருவாக்கிய பிறகு திருமணம் செய்துகொள்ளலாம். பாதையை உருவாக்க முடியவில்லையென்றால், குடலின் சிறு பகுதியை எடுத்து வைக்கும் அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்துவிடலாம். டர்னர் சிண்ட்ரோமும் பூப்பெய்தலும்..! சென்னையைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் ஸ்ருதி, ’’சில பெண் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே பூப்பெய்தலுக்கான குரோமோசோம் இருக்காது. இதை `டர்னர் சிண்ட்ரோம்' (Turner Syndrome) என்போம். இவர்கள் வயதுக்கேற்ற வளர்ச்சியுடன் இருக்க மாட்டார்கள். இந்தப் பிரச்னையை சிறுவயதிலேயே கண்டறிந்து ஹார்மோன் சிகிச்சையளிப்பதன் மூலம் கர்ப்பப்பையை வளரவைத்து, மாதவிடாயையும் வரவழைக்கலாம். மார்பகங்களும் வளர்ச்சிபெறும். ஆனால், கரு முட்டைகள் உருவாகாது என்பதால் குழந்தைப்பேறு இருக்காது’’ என்கிறார். Girl Child கருப்பை இல்லாத பெண்... குழந்தை பெற்ற ஆச்சர்யம்..! சென்னையில் மருத்துவ அதிசயம் இவையும் இயற்கைதான்! சில சிறுமிகளுக்குக் கர்ப்பப்பை வளர்ச்சியடையாமல் மிளகு சைஸில் இருக்கும். சிலருக்கு சினைப்பைக்கு பதிலாக விதைப்பை இருக்கும். இவையிரண்டும் அரிதிலும் அரிதானவை என்றாலும் இயற்கையே. இவர்களால் பூப்பெய்த இயலாது என்றாலும், மருத்துவ ஆலோசனை பெற்று திருமணம் செய்துகொள்ளலாம். மருத்துவம் வளராத காலகட்டத்தில் பூப்பெய்தாமை பெரிய பிரச்னையாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அறிவியலும் மருத்துவமும் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் அது அவசியமில்லை.

விகடன் 30 Nov 2023 1:31 pm

`தோழிகளுக்குப் பிடிக்கல, எனக்கும் மாப்பிள்ளையப் பிடிக்கல'... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

``பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு… பூவை தொடுத்து சேலை உடுத்தி பொண்ணும் வந்தாச்சு''… அப்புறம் என்ன கல்யாணம் தான் என்று நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை.  அங்குதான் ட்விஸ்டே இருக்கிறது. பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்களில், திருமணம் செய்து கொள்ளும் ஜோடியைத் தாண்டி அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பிடித்து இருந்தால்தான் திருமணம் நல்லபடியாக நடந்து முடியும். நல்ல விஷயத்தை குறித்து பேச்சு எடுத்தாலே அதுவரை இல்லாத சொந்தபந்தங்கள் கூட பத்திரிகை முதல் பந்தி வரை குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். தாலி கட்டும் கடைசி நேரத்தில் கூட `நிறுத்துங்க’ என்று ஸ்லோமோஷனில் யாராவது ஓடிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. marriage call off (Representational image) நேரத்தை மிச்சப்படுத்தும் ரெடி டு குக் உணவுகள்... ஆபத்தை அறிவீர்களா? `கோபம் அதிகமாக வருகிறது’, `சாப்பாடு சரியில்லை’, `சீர் பத்தவில்லை’, `மாப்பிள்ளை மணமேடையில் குடித்து இருக்கிறார்’ எனப் பல காரணங்களுக்காக இறுதி வரை சென்ற திருமணங்கள் கூட நின்றுள்ளன.  பல காரணங்களுக்காக திருமணங்கள் நின்றிருந்தாலும், தன்னுடைய `தோழிகளுக்குப் பிடிக்கவில்லை' என பெண் ஒருவர் தனது திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்.  ராணிப்பேட்டை நெமிலி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த பெயர் குறிப்பிடாத இளம் பெண்ணுக்கும், அவரின் உறவினர் மகனுக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்குள்ள கோயிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்க, 27-ம் தேதியன்று கடைக்குச் சென்று வருகிறேன் என்று கூறிச்சென்ற பெண் வீடு திரும்பவே இல்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால், மணப்பெண் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். விசாரணையில் தோழிகள் மாப்பிள்ளை சரியில்லை என்று கூறினர். அதனால் எனக்கும் மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். Friends (Representational Image) Doctor Vikatan: அடிக்கடி வரும் கோபம்; உறவுகளால் உதாசீனம்... தவிர்க்க என்ன வழி? குடும்பத்தினரை அழைத்து அப்பெண்ணுடன் பேச்சு வாரத்தை நடத்தியும் திருமணம் செய்து கொள்வதற்கு அப்பெண் உடன்பட மறுத்துவிட்டார். `பெற்றோர் பார்க்கும் வேறொரு மாப்பிள்ளையை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்கிறேன்; இவர் வேண்டாம்' என்று விடாப்பிடியாக இருந்து விட்டார். தோழிகளுக்குப் பிடிக்கவில்லை என்பதால் தனக்கு மணமகனைப் பிடிக்கவில்லை என பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் மக்களிடையே கவனம் பெற்று வருகிறது. திருமணங்கள் இறுதி வரை சென்று கடைசியில் நின்றுபோவது குறித்து உங்களின் கருத்தென்ன?!... கமென்ட்டில் சொல்லுங்கள்!

விகடன் 30 Nov 2023 11:46 am

புதுச்சேரி: ``கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்!” - அதிகரிக்கும் காய்ச்சலால் சுகாதாரத்துறை அறிவுரை

காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே அருகிலுள்ள சுகாதார மையத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறது, புதுச்சேரி சுகாதாரத்துறை. இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், `கடந்த சில நாள்களாக வட சீனாவிலுள்ள குழந்தைகளிடையே சுவாச நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்திய அரசும் சுவாச நோய் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. புதுச்சேரியில் சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு ஏற்ப, தயார் நிலையில் மருத்துவ வசதிகளை அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. புதுச்சேரியில் பருவகால காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்தாலும், சுவாச நோய்களில் அசாதாரண அதிகரிப்பு இல்லை. பருவகால காய்ச்சல் என்பது பெரும்பாலும் காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இல்லாமலேயே வரும் லேசான சுவாச நோயாகும். நாள்பட்ட நோய் உள்ளவர்கள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், சுவாசத்தில் சிரமம் போன்றவற்றின் அறிகுறிகளால் பாதிக்கப்படுபவர்கள், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தை அணுக வேண்டும். பொதுமக்கள் மத்தியில் தும்மல் மற்றும் இருமல் இருப்பதினால், நெரிசலான இடங்களுக்குச் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணியவதை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். புதுச்சேரி அரசு நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தால், காய்ச்சலைத் தடுக்க முடியும். அரசு பொது மருத்துவமனை, கோரிமேடு சுவாச மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் நோயாளிகளுக்குப் போதுமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. முறையான கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவை தொற்றுநோயைத் தடுக்க உதவும். முகக்கவசம் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இது போன்ற அறிகுறிகளோடு வருபவர்களுக்கு, சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இயக்குநரகம் செய்திருக்கிறது. இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. பருவகால சுவாச நோய்த்தொற்றுகளைக் கையாள புதுச்சேரி பிராந்தியம் போதுமான அளவு தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார். தொடர் மழைக்குப் பிறகு, சுற்றுலாப்பயணிகளால் மீண்டும் களைகட்டிய புதுச்சேரி கடற்கரை!

விகடன் 30 Nov 2023 9:00 am

Doctor Vikatan: உப்பு வைத்துப் பல் துலக்கினால் மஞ்சள் கறை நீங்குமா?

Doctor Vikatan: பற்களில் உள்ள கறையைப் போக்க, உப்பு கொண்டு பல் துலக்கலாமா... டூத்பேஸ்ட்டிலும் உப்பு இருப்பதாகத் தானே விளம்பரப்படுத்துகிறார்கள்... பற்களின் மஞ்சள் கறையைப் போக்க என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக்    பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் | சென்னை Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவையா? பற்களின் இடுக்குகளில், ஈறுகளுக்கும் பற்களுக்கும் பின்னால் உள்ள பகுதிகளில் வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் சேர்கிற படிமத்தை பற்காரை என்கிறோம். இதை ஆங்கிலத்தில் 'ப்ளாக்' ( Plaque  ) என்று சொல்கிறோம். இது மிருதுவாக இருக்கும்போது ப்ளாக் எனப்படும். அதாவது ஒருநாள் பல் துலக்கவில்லை, அதனால் பற்களில் வெள்ளையாகவோ, மஞ்சளாகவோ ஒரு படிமம் படிகிறது என்றால் அது ப்ளாக் எனப்படும்.  அதுவே ஒரு வாரம், அதைத் தாண்டி பற்களைச் சுத்தப்படுத்தாததால் காரை சேர்ந்து நம் உமிழ்நீரில் உள்ள கால்சியம், தாதுக்கள் போன்றவையும் அத்துடன் சேர்ந்து அது கடினமாக, சிமென்ட் மாதிரி மாறும். அதற்கு  'கால்குலஸ்' (Calculus ) அல்லது 'டார்ட்டர்' (Tartar) என்று பெயர். வாய் துர்நாற்றம், பல் துலக்கும்போது ரத்தம் கசிவது போன்றவற்ற்றுக்கும்  கடினமான இந்தக் காரைதான் காரணம்.  பற்களில் கறை படிய பல காரணங்கள் இருக்கலாம். காபி, டீ அதிகம் குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவற்றால் உருவாகும் கறை ஒரு வகை. காரை படிவதால் ஏற்படும் கறை இன்னொரு ரகம்.  உப்பு நீர் Doctor Vikatan: உண்மையிலேயே சரும அழகுக்கு உதவுமா குங்குமப்பூ? உப்பு என்பது இயற்கையான கிருமிநாசினி. அதற்காக சாதாரண உப்பை பயன்படுத்தி கறை மற்றும் காரைகளைப் போக்க முடியாது. நாள்பட்ட கறை, காரையை உப்பால் நீக்க முடியாது. சாப்பிட்ட பிறகு மவுத்வாஷ்  உபயோகிக்கிறோம். அதிலுள்ள அதே தன்மை கடல் உப்பில் இருக்கும். காரை இருக்கும்போது வாயில் உள்ள பிஹெச் அளவு குறையும். அதனால் வாயிலுள்ள  கிருமிகள் அதிகமாக வேலைசெய்து சொத்தைப் பற்கள் உருவாகும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.  உப்பு வைத்து வாய்க் கொப்பளிக்கும்போது பிஹெச் அளவின் சமநிலையைத் தக்கவைத்து, சொத்தை உருவாகும் வாய்ப்பைத் தவிர்க்கும். இந்த வகையில்தான் உப்பு பயன்படும்.  உப்பை பயன்படுத்தி பல் துலக்கும்போது பற்களின் எனாமல் தேய்ந்துபோகும். எனாமல் தேய்ந்துபோனால் உள்ளே உள்ள டென்ட்டின் என்ற லேயர் வெளியே வரும். அப்படி வந்தால் பற்களில் கூச்சம் அதிகரிக்கும்.  பற்களை பாதிக்கும்.  உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய்க் கொப்பளிப்பதால் ஒருநாள் பல் துலக்காததால் உருவான மென்மையான படிமம் சுத்தமாகும். த் பேஸ்ட் Doctor Vikatan: ஆரோக்கியமான கர்ப்பம்... ஆண்களின் வயதும் கவனிக்கப்பட வேண்டுமா? உப்பு என்பது டூத் பேஸ்ட்டுக்கு மாற்றே இல்லை. பேஸ்ட்டிலும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் சுத்தத்துக்கும் உதவக்கூடிய தாதுச்சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக ஃப்ளூரைடு என்ற சத்து சொத்தை வராமல் தடுக்கும்.  உப்பு சேர்த்துத் தயாரிக்கப்படுகிற டூத் பேஸ்ட்டில் உப்பு மிக மிக சன்னமாகப் பொடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும். அதை வைத்து பல் துலக்கும்போது பற்களின் எனாமல் பாதிக்கப்படாது. ஆனால் வீட்டில் நாம் பயன்படுத்தும் டேபிள் சால்ட்கூட பற்களைப் பெரிய அளவில் பாதிக்கும்.  உப்பு வைத்து பல் துலக்குவது வாயை வறட்சியாக்கி, கிருமிகள் பெருக வழிசெய்து, சொத்தையை அதிகரிக்கும். கடினமான காரையை பல் மருத்துவரிடம் முறையாக அகற்றிக் கொள்ள வேண்டும். ஸ்கேலிங் என்ற முறையில் இதைச் சுத்தப்படுத்தி நீக்குவார்கள். இந்தச் சிகிச்சையில் பற்கள் தேயாது. ஸ்கேலிங் செய்ததும் பற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதாகத் தெரியும். ஆனால் உண்மையில் காரையை அகற்றியதால் ஏற்பட்ட இடைவெளிதான் அது. தானாகச் சரியாகிவிடும். மீண்டும் மீண்டும் காரை படியாமலிருக்க  வருடம் ஒருமுறை ஸ்கேலிங் செய்து கொள்ளலாம். ஈறுகளின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். பல் சார்ந்த பிரச்னைகள் Doctor Vikatan: துருத்திக்கொண்டு நிற்கும் முன்வரிசை பற்கள்... இன்விசிபிள் க்ளிப் உதவுமா? அடுத்ததாக ஏர் பாலிஷிங் என்ற முறையில் பற்களின் காரை நீக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. ஸ்கேலிங்கைவிட இந்த முறையை வசதியானதாக உணர்வதாக மக்கள் சொல்கிறார்கள். கறை அதிகமுள்ள பற்களை சுத்தப்படுத்த இது சிறந்த முறை.  எனவே வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய்க் கொப்பளிக்கலாமே தவிர, பல் தேய்க்க உப்பு பயன்படுத்துவது மிகவும் தவறானது.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 30 Nov 2023 9:00 am

எண்ணெய் கொப்புளங்கள் போல் வலியை ஏற்படுத்தும் `ஷிங்கிள்ஸ்'... யாருக்கு வரும்?

சமீப காலமாக செய்தித்தாள், ரேடியா, டிவி என அனைத்திலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'ஷிங்கிள்ஸ்' (Shingles) பாதிக்கலாம். எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு வெளிவந்து கொண்டே இருக்கிறது. 'ஷிங்கிள்ஸ்' என்றால் என்ன, அது பாதிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் உமாபதி. fever Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்? 50 வயது கடந்தவர்களுக்கு 'அக்கி' என்ற சொல்லப்படும் சருமத்தில் உருவாகும் எரிச்சலுடன் கூடிய கொப்புளங்கள்தான் 'ஷிங்கிள்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது வெரிசெல்லா ஸோஸ்டர் (Varicella zoster) என்ற வைரஸ் வகையினால் வரக்கூடிய நோய். வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை பெரும்பாலும் இந்தத் தொற்று பாதிக்கும். வயதாக ஆக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். ஷிங்கிள்ஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நரம்பியல் சார்ந்த வலி ஏற்படும். நெஞ்சுப்பகுதி, முதுகு, முகம், இடுப்பு மற்றும் கால் பகுதியில் இந்தக் கட்டி உருவாகலாம். pain Doctor Vikatan: உண்மையிலேயே சரும அழகுக்கு உதவுமா குங்குமப்பூ? பிற வைரல் தொற்றுகளைப் போலவே காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தோன்றும். மேலும் சருமத்தில் கொதிக்கும் எண்ணெய் தெளித்தால் ஏற்படுவதைப் போன்ற கொப்புளங்கள் ஏற்படும். இந்தக் கொப்புளங்களில் இருக்கும் நீர் மற்றவர் மீது பட்டால் அவர்களுக்கும் தொற்று பரவும். கொப்புளங்களின் மேல் தோல் ஆறிவிட்டால் பிறகு பரவாது. கொப்புளங்கள் ஆறிய பின்னரும் சில நாள்களுக்கு வலி நீடித்துக் கொண்டே இருக்கும். இந்த வலியைத் தாங்க முடியாமல் தற்கொலை எண்ணத்துக்கு தள்ளப்பட்டவர்கள் கூட உண்டு. அந்த அளவுக்கு தாங்க முடியாத வலியாக இருக்கும். மருத்துவர் உமாபதி Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவையா? இந்தக் கொப்புளங்கள் உருவானதும் ஊசி வைத்துக் குத்துவது போல் தாங்கிக் கொள்ளவே முடியாத அளவுக்கு வலி ஏற்படும். அம்மை நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஷிங்கிள்ஸ் தொற்று ஏற்பட அதிக சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இந்தத் தொற்று ஒரு நபரிடம் 12 முதல் 14 நாள்கள் வரை நீடிக்கலாம். பிரச்னை தீவிரமடைந்தால் பார்வை இழப்பு ஏறப்படவும் வாய்ப்புள்ளது. ஷிங்கிள்ஸ் தொற்று ஏற்பட்டால் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். Vaccine Doctor Vikatan: மெதுவாக நடந்தாலும் முதியோர் அதிகம் சறுக்கி விழுவது ஏன்? தடுப்பூசி இந்த வைரஸ் தொற்றுக்கு Shingrix என்ற தடுப்பூசி உள்ளது. இரண்டு தவணைகளாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பூசியை அனைவருமே எடுத்துக் கொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசி எடுத்து ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒரு தடுப்பூசியின் விலை சுமார் ரூபாய் 10,000 வரை இருக்கும். மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு செய்யலாம் என்றார்.

விகடன் 29 Nov 2023 6:53 pm

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -123

மாதவிடாய் காலத்து செக்ஸ் பற்றிய பயம் அறிவியல் வளர்ந்த இந்தக் காலக்கட்டத்திலும் இருக்கிறது என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரியை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறார். ''மாதவிடாய் நாள்களில், அறிவியல் படித்த மருத்துவர்களும் பூஜையறைக்குச் செல்ல தயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்தைப்போல, மாதவிடாய் ஆன பெண்கள் சமையலறைக்குள் செல்லக்கூடாது; அவர்கள் தனியறையில் இருக்க வேண்டுமென்கிற வழக்கம் இன்றைக்கும் சில குடும்பங்களில் இருக்கிறது. மேற்படிப்பெல்லாம் முடித்து, வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள்கூட 3 நாள்கள் மனைவியை தனியறையில் உட்கார வைக்கிறார்கள். அமெரிக்காவில் வாழும் இந்தியர் ஒருவர், மாதவிடாய் ஆன மனைவியை இரவு முழுவதும் பால்கனியில் உட்கார வைத்த சம்பவங்களைக்கூட கேள்விப்பட்டிருக்கிறேன். Dr. Kamaraj பயமும் வேண்டாம்... அலட்சியமும் வேண்டாம்... காமத்துக்கு மரியாதை| சீஸன் 4 - 121 நம் ஊர் கிராமங்களில், மாதவிடாயின்போது மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட ஆண்களை 'ஜன்னி வந்துடும். செத்துப்போயிடுவே' என்று பயமுறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள் வீட்டுப் பெரியவர்கள். மருத்துவர்களும், 'இவர்களிடம் மாதவிடாய் பற்றிய அறிவியலை எடுத்துச்சொன்னாலும் கேட்க மாட்டார்கள்' என்று வேறுவழியில்லாமல் பி-காம்ப்ளெக்ஸ் ஊசியைப்போட்டு அனுப்பி வைப்பார்கள். அந்த ஆண் எம்.டெக் முடித்து ஐ.டி.யில் வேலைபார்க்கிறார். அவருடைய மனைவியும் நன்கு படித்தவர். குழந்தையின்மை சிகிச்சைக்காக எங்களிடம் வந்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு செக்ஸ் தெரபி கொடுத்துக்கொண்டிருந்தேன். மனைவிக்கு பீரியட்ஸ் வந்தால் இருவரும் சிகிச்சைக்கு வர மாட்டார்கள். 'மாதவிடாய் ரத்தம் அசுத்தம் கிடையாது. அதிலிருப்பது ஸ்டெம் செல்கள். அதை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தலாம் என்று ஈரானின் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று சொல்லியிருக்கிறது. மத நம்பிக்கைகள் அதிகமான, கட்டுப்பாடுகள் நிறைந்த ஈரானிலேயே அறிவியல் சிந்தனைகள் வளர்ந்துவிட்டன. எம்.டெக் படித்த நீங்கள் இப்படி சிந்திக்கலாமா' என்று புரிய வைக்க முயற்சி செய்தாலும், வீட்டுப் பெரியவர்கள் சொல்கிற மாதவிடாய், ஜன்னி வந்து விடும் என்பதையே நம்பிக் கொண்டிருந்தார்கள் கணவன், மனைவி இருவரும். Sex Education அடிக்கடி பெண்ணுறுப்பில் இன்ஃபெக்‌ஷன்... என்ன காரணம்..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 119 இப்போதும், 'பீரியட்ஸ் அப்போ செக்ஸ் வெச்சுக்கிட்டா ஜன்னி வந்துடுமா டாக்டர்' என்கிற கேள்வியை வாரத்துக்கு ஒருமுறையாவது சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அறிவியல் அடிப்படையிலான விளக்கத்தைச் சொல்லி அனுப்புகிறேன். மாதவிடாயின்போது உறவுகொள்வதில் ஒர் எச்சரிக்கையை மட்டும் ஆண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பாலியல் நோய்கள் இருக்கிற பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்டால், அந்த நோய்கள் ஆண்களுக்கும் வரும். மற்றபடி, மாதவிடாய் நேரத்து செக்ஸால் எந்தப் பிரச்னையும் வராது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 29 Nov 2023 6:00 pm

நேரத்தை மிச்சப்படுத்தும் ரெடி டு குக் உணவுகள்... ஆபத்தை அறிவீர்களா?

வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட மாதிரியும் இருக்க வேண்டும்... அதேசமயம் அதிக வேலையும் வைக்கக்கூடாது என எதிர்பார்க்கும் பலரின் சாய்ஸ் 'ரெடி டு குக்' உணவுகள். பிரியாணி முதல் கிரேவி வரை அனைத்துக்கும் இன்று இன்ஸ்டன்ட் மிக்ஸ் கிடைக்கிறது. சமைக்கப்படாத ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டாக்கள், இட்லி, தோசைக்கான பாக்கெட் மாவுப் பொருள்கள், பணியாரம், வடை, பஜ்ஜி மாவுகள் போன்றவற்றின் விற்பனை சூப்பர் மார்கெட்டுகளில் அமோகமாக இருக்கிறது. ஆனால், பதப்படுத்தப்பட்ட இத்தகைய உணவுப்பொருள்களை வாங்கி சமைப்பதால் ஏற்படும் கேடுகள் பல என்கின்றனர், ஊட்டச்சத்து நிபுணர்கள். பாக்கெட் உணவுகள் மற்றும் ரெடி டு குக் வகை உணவுப்பொருள்களால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பட்டியலிடுகிறார் கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம் வினோத் சருமமும் கேசமும் ஆரோக்கியமா இருக்க... இதையெல்லாம் பண்ணாதீங்க! | Skin And Hair Beauty Mistakes பிளாஸ்டிக் பேக்கேஜ் அபாயம்! * ''பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மாவுப் பொருள்கள், ரெடி டு குக் சப்பாத்தி, பரோட்டாக்கள் எல்லாம் பல நாள்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றைப் பதப்படுத்தியிருப்பார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடும்போது, உடல் இயக்கம் பாதிக்கப்படும். உதாரணத்துக்கு, தாகம் குறைவது, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். அதிக அளவு உப்பும் ஆபத்தே! * பாக்கெட் உணவுகள் அனைத்திலுமே, சோடியம் அதிகமாகச் சேர்த்திருப்பார்கள். உணவு கெட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்வார்கள். ஒரு நாளைக்கு ஒருவர் 2.300 மி.கிராம் அளவுக்குத்தான் உப்பு சேர்க்க வேண்டும் என்பது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் பரிந்துரை. நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் உப்பு மட்டும் பயன்படுத்தவும் என்பதே, ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரையாகவும் இருக்கும். ஆனால் பதப்படுத்தப்பட்ட ரெடி டு குக் சப்பாத்தி ஒன்றில் மட்டுமே, நாங்கள் குறிப்பிடும் அளவைவிட அதிக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். உணவில் உப்பு அதிகமாகச் சேர்ப்பதால், ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம். உப்பு உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்வது ஏன்? - மருத்துவர் விளக்கம்..! எண்ணெய் அபாயம்! * ரெடி டு குக் உணவுப் பொருள்கள் எல்லாம் எந்த எண்ணெயில், எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிய மாட்டோம். ஒருவேளை சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை எனில், நீர் வழி நோய் ஏற்படலாம். சத்தில்லா உணவுகள்! * ரெடி டு குக் உணவுகள் எதிலும், நார்ச்சத்து இருக்காது. அதே நேரம், கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். மற்ற ஊட்டச்சத்துகள் மிகக்குறைவாக இருக்கும். இதனால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவை அடிக்கடி ஏற்படும். தொடர்ச்சியாக ஏற்படும் இப்படியான பாதிப்புகள் சிறுநீரகப் பிரச்னைகள், குடல் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றுக்கு வழி வகுக்கும். பரோட்டா `நொறுக்குத் தீனிக்காக கோடிக் கணக்கில் செலவு செய்யும் இந்தியர்கள்'! - ஆய்வுத் தகவல்! சோடா உப்பு எச்சரிக்கை! * இன்ஸ்டன்ட் சப்பாத்தி, பரோட்டாக்கள் சமைக்கும்போது உப்பி வர வேண்டும் என்பதற்காக, தயாரிக்கும்போது அதில் சோடா உப்பு, பேக்கிங் பவுடர், மோனோசோடியம் குளுட்டமேட் போன்றவற்றைச் சேர்ப்பார்கள். இவை யாவும், சிறுநீரகப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மைதா கலப்படம் * பரோட்டாக்களைப் பொறுத்தவரை, வீட்டில் செய்து சாப்பிட்டாலே தீமைதான். காரணம், மைதா. மைதாவின் அளவுக்கதிகமான கலோரி, உடலை எளிதில் சோர்வடையச் செய்துவிடும். செரிமானச் சிக்கல்களையும் ஏற்படுத்தும். பாக்கெட் உணவுகளில் அதன் தீமை இன்னும் அதிகரிக்கும். சில பாக்கெட் கோதுமை உணவுப்பொருள்களிலும்கூட, மைதா கலப்படம் இருக்கலாம் என்பதால் கவனம் தேவை. தேதிகளில் அபாயம்... * பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால், இதயப் பிரச்னைகள், சர்க்கரைநோய் போன்ற வாழ்வியல் சிக்கல்கள் எல்லாம் இள வயதிலேயே ஏற்படலாம். `எல்லாம் சரி. ஆனால், நாங்கள் விருப்பப்பட்டு இந்த உணவை நாடுவதில்லை. எங்களுக்கு நேரமில்லை. அதனால்தான் இதை வாங்கி உபயோகிக்கிறோம்' என்பார்கள் சிலர். இப்படியானவர்களுக்கான சில மாற்று யோசனைகள், இதோ... டயட் வாரக் கடைசியிலேயே ரெடி பண்ணிக்கோங்க! * சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில், அடுத்த வார மெனுவுக்கான அடிப்படைத் தேவைகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு வாரத்துக்கான காய்கறிகளை வாங்கி, அவற்றில் தேவையானவற்றை வெட்டி ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்வது, இட்லி, தோசை, அடை, ராகி மாவு போன்றவைக்கு வீட்டிலேயே மாவு தயாரித்து ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்வது, சப்பாத்திக்குத் தேவையான கோதுமை மாவைத் தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்வது... இப்படி. சுவை, ஊட்டச்சத்து, ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுக்க, இதையெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..! - மருத்துவர் அறிவுறுத்தல்! சிறுதானியங்களுக்கு வெல்கம் சொல்லுங்க! * ரெடி டு குக் உணவுகளுக்கு பதில், ரெடிமேட் சிறுதானியங்கள், சேமியா பாக்கெட்டுகள், ராகி மாவு, கம்பு மாவு போன்றவற்றை வாங்கி உபயோகப்படுத்தலாம். இவற்றையுமேகூட வீட்டில் வாங்கி அரைத்து உபயோகப்படுத்துவது நல்லது. இருப்பினும் நேரமில்லை என்பவர்களுக்கு, வேறு உணவுகள் இல்லை என வரும்போது, இவை பரிந்துரைக்கத்தக்கவை. குறைந்தபட்ச நன்மைகளாவது கிடைக்கும், தீமைகள் தவிர்க்கப்படும். வீட்டில் செய்து சாப்பிடுங்கள்! * கோதுமை பரோட்டா உடலுக்கு நல்லது என நினைத்து, அதைத் தேடிப்பிடித்து வாங்கி சாப்பிடுவார்கள் சிலர். ரெடி டு குக் உணவுப் பொருள்கள், எந்த வகையிலும் பரிந்துரைக்கத்தக்கவை இல்லை. எனவே, கோதுமை சாப்பிட நினைப்பவர்களுக்கு ரெடிமேடு சப்பாத்தியோ, ரெடிமேடு கோதுமை பரோட்டாவோ அவர்கள் நினைப்பதுபோல நன்மையைச் செய்யாது. தரமான கோதுமை மாவை வாங்கி வீட்டிலேயே சப்பாத்தி, பரோட்டா செய்து சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கான வழி.''

விகடன் 29 Nov 2023 4:34 pm

சருமமும் கேசமும் ஆரோக்கியமா இருக்க... இதையெல்லாம் பண்ணாதீங்க! | Skin And Hair Beauty Mistakes

சருமம் மற்றும் கேசத்தை பொறுத்தவரை, செய்யக் கூடாத பியூட்டி மிஸ்டேக்ஸை நிறைய இருக்கு. பியூட்டி தெரபிஸ்ட் லலிதா சுட்டிக்காட்டின சில தவறுகள் இங்க... * முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை மென்மையாதான் கையாளணும். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்கிரப் பயன்படுத்தினா போதும். Pimples (Representational Image) How to: முகப் பருக்களைத் தவிர்ப்பது எப்படி? | How to avoid pimples? * எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது. அப்படிச் செய்றதால அது போயிடவும் செய்யாது. அதுக்குள்ள இருக்குற நுண்ணுயிர் இன்னும் ஆழமாகச் சென்று பாதிப்பு அதிகமாகவே செய்யும். * உறங்கச் செல்லும் முன்பு மேக்கப் ரிமூவ் செய்றதுல சோம்பேறித்தனம் கூடவே கூடாது. மேக்கப் உடன் தூங்கினா உங்க சருமத்துக்கு சில மடங்கு வேகமா வயசாகிடும்னு சொல்றாங்க சரும நிபுணர்கள். Cosmetics * ரசாயனங்களால் ஆன ப்ளீச்... அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கணும். மாறா, தேன், உருளைக்கிழங்கு, தயிர் போன்ற இயற்கை பொருள்களை பயன்படுத்தலாம். * உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீர்ல ஊறவெச்சு, தினமும் காலையில சாப்பிட்டு வந்தா சருமத்துக்கு கிடைக்கும் நேச்சுரல் பிளஷ். உலர் திராட்சை! * நீங்க பயன்படுத்தும் துண்டை மூன்று நாள்களுக்கு ஒருமுறை துவைக்கணும். தலையணை உறைகளை ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை மாற்றணும். ஏன்னா, இதுலயெல்லாம் இருக்கும் நுண்ணுயிர்கள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். * வெந்நீரில் குளிப்பது நல்லதுதான்னாலும், கூந்தலை அலச வெந்நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கணும். அது கேசத்தின் வேரை பாதிப்பதோடு, பலவீனமாக்கும். உதடுகள் * மேல் உதடு, தாடையில் ரோம வளர்ச்சி ஹார்மோனல் இம்பேலன்ஸ்னால ஏற்படக்கூடும். அது அழகு பிரச்னை இல்ல, ஆரோக்கியப் பிரச்னைனு புரிஞ்சுக்கிட்டு மருத்துவ ஆலோசனை பெறணும். * சில யூடியூப் வீடியோக்கள்ல ‘ஸ்கின் வொயிட்டனிங்க்கு பேக்கிங் சோடா’னு பார்த்துட்டு, அதை டிரை செய்யக்கூடாது. சோடா சருமத்தை அதிகமா உலரச் செய்யும்; பருக்கள், அரிப்பு, வீக்கம்னு பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம். * கேசத்தை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணும்போது அந்த ஹீட் வேர்களைப் பாதிக்கும். முடி உதிர்வதும் அதிகரிக்கும். அதனால அதைத் தவிர்ப்பதே பரிந்துரைக்கத்தக்கது. angaadi Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா ஹேர் சீரம்ஸ்? இறுதியா ஒரு விஷயம். என்னதான் பியூட்டி புராடக்ட்ஸ் பயன்படுத்தினாலும், ஃபேஸ் பேக்ஸ் போட்டாலும் கிடைக்காத பொலிவு... ஒரு விஷயத்தைப் பண்ணினா கிடைச்சிடும். அது, சத்தான உணவை சாப்பிடுறது, நிறைய தண்ணி குடிக்கிறது. அதுதான் குளோயிங் ஸ்கின்னுக்கான ஓப்பன் சீக்ரெட்!

விகடன் 29 Nov 2023 2:42 pm

Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவையா?

Doctor Vikatan: என்  அம்மாவிற்கு வயது 60 ஆகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, கீழே விழுந்ததன் காரணமாக முதுகுத்தண்டுவட எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு நான்கு மாதங்களாக ஓய்வில் இருந்தார். நான்கைந்து நாள்களாக தலைச்சுற்றல் இருந்தது, ரத்தப் பரிசோதனை செய்ததில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது தெரிய வந்தது. மருத்துவர் அறிவுரையின்படி இப்போது மாத்திரை எடுத்து வருகிறார். ஒருமுறை சர்க்கரை மாத்திரை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டுமா அல்லது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் மாத்திரைகளை நிறுத்திவிடலாமா? - Agomathi, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி   டாக்டர் .சஃபி,M. சுலைமான் உங்கள் அம்மாவின் வயது இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணம். தவிர முதுகுத்தண்டில் அடிபட்டதாகச் சொல்கிறீர்கள். அது இன்னொரு காரணம். ஒருவேளை அவர் உடலியக்கம் இல்லாமல் படுக்கையிலேயே இருந்தால் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துவ மொழியில் இதை 'நான் ஆம்புலன்ட் டயாபட்டீஸ்' ( Non Ambulant Diabetes ) என்று சொல்வோம். முதுமை Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்? நீரிழிவில் ஆம்புலன்ட் டயாப்ட்டிக், நான் ஆம்புலன்ட் டயாபட்டிக் என இருவகை உண்டு. அதாவது நீரிழிவு பாதித்த ஒரு நபர், நடமாடும் நிலையில் இருக்கிறார் என்றால் முறையான நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் செய்யவைத்து அவரது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். அதாவது வாழ்வியல் முறைகளைப் பின்பற்றச் செய்ய முடியும்.  அதுவே 'நான் ஆம்புலன்ட் டயாபட்டிக்' நிலையில் சம்பந்தப்பட்ட நபர் நடமாட முடியாத நிலையில் இருப்பார். மிகவும் வயதானவராக இருக்கலாம். அவருக்கு கால்களில் புண்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களை உடயலிக்கம் மூலமாக ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கச் செய்வது சாத்தியமில்லை.  நடைபயிற்சி Doctor Vikatan: காய்ச்சலின்போதான உடல்வலி... பெயின் கில்லர் எடுப்பது சரியா? அந்த வகையில் உங்கள் அம்மாவுக்கும் உடலியக்கத்தின் மூலம் சர்க்கரையின் தீவிரத்தைக் குறைக்க வாய்ப்பில்லை. எனவே உங்கள் அம்மாவுக்கு நிச்சயம் முறையான  நீரிழிவு சிகிச்சை தேவை. உங்கள் அம்மாவுக்கு சிறுநீரக ஆரோக்கியம், தைராய்டு பாதிப்பு, இதய ஆரோக்கியம் போன்றவற்றைப் பார்த்து, கொலஸ்ட்ரால்  அளவு டெஸ்ட் செய்யப்பட்டு, அதற்கேற்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரை சந்தித்து மருந்துகளில் மாற்றம் தேவையா என்பதையும் கேட்டுப் பின்பற்ற வேண்டும். மருந்துகளே இல்லாமல் சமாளிக்க நினைப்பது சரியானதில்லை. அது வேறு பெரிய பிரச்னைகளுக்கு காரணமாகலாம். நோயின் தன்மைக்கேற்ற சிகிச்சைதான் உங்கள் அம்மாவுக்கு சரியானது. ரத்தப் பரிசோதனை Doctor Vikatan: தொடர்ந்து குறைந்துகொண்டே போகும் உடல்எடை... நீரிழிவுக்கு முந்தைய நிலைதான் காரணமா? சர்க்கரை நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவையா என்பது நோயின் தன்மையைப் பொறுத்தது.  பலருக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவைப்படலாம். சரியான வாழ்க்கைமுறை மற்றும் கட்டுப்பாடு இருந்தால் மாத்திரைகள் இல்லாமலும் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 29 Nov 2023 9:00 am

உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்வது ஏன்? - மருத்துவர் விளக்கம்..!

சமீப காலமாக ஜிம், உடற்பயிற்சி, பாடி பில்டிங் என்று ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் இன்றைய தலைமுறையினர் இதை வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றிவிட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள ஜிம் ஒன்றில் எடைக் குறைப்புக்கான உடற்பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு 26 வயது பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார். Gym (Representational Image) Doctor Vikatan: உண்மையிலேயே சரும அழகுக்கு உதவுமா குங்குமப்பூ? உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்படுவதையும் இளவயதில் மாரடைப்பு ஏற்படும் செய்திகளையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். மேற்கூறிய சம்பவத்தில் உயிரிழந்தவர் மருத்துவராக இருந்த நிலையில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதை கவனிக்கத் தவறினாரா என்ற கேள்வியுடன் மதுரையைச் சேர்ந்த இதய மருத்துவர் ஜெயபாண்டியனிடம் பேசினோம்: ''அவருக்கு நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டு இருக்கக்கூடும். அது மாரடைப்பு என்று உணர்வதற்குள் மரணம் நிகழ்திருக்கலாம். எனினும் பிரேதப் பரிசோதனையில் முழு விவரங்களைக் கண்டறிய முடியும். மாரடைப்பு பணக் கஷ்டமே இல்லாத வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு..! உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏன்? மாரடைப்பு நிகழ்வதில் மூன்று விதங்கள் உள்ளன. முதலாவது, ரத்தக்குழாயில் திடீரென அடைப்பு ஏற்படுதல். ஏற்கெனவே மிதமான அளவில் சில இடங்களில் அடைப்புகள் இருந்திருக்கலாம். உடற்பயிற்சி செய்யும்போது அந்த அடைப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் பொட்டாசியம் குறைபாடு ஏற்படும்போது இதயம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. மூன்றாவது வகையானது மிகவும் அரிதானது. அதாவது பெருந்தமனியி்ல் ஏற்படும் அழுத்தம் அல்லது முறிவு காரணமாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே உடற்பயிற்சியின் போது திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. இதய மருத்துவர் ஜெயபாண்டியன் Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்? இளம் வயதினருக்கு உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்படுவது என்பது கணிக்க முடியாத ஒன்று. அவர்களின் நெஞ்சுப்பகுதியில் சிறிது வலி ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனையை நாடுவதே சிறந்தது. உடற்பயிற்சி செய்வதற்கென்று சில வரையறைகள் உண்டு. குறிப்பிட்ட நேரம் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீண்ட நேரத்துக்கு, அதிக சிரமத்துடன் உடற்பயிற்சி செய்யும்போது, ஏற்கெனவே ரத்தத்தில் அடைப்பு இருந்தால் மாரடைப்பு ஏற்படலாம். அதிகப்படியான மனஅழுத்தத்தோடு உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. மாரடைப்பு 33 வயதில் இரட்டை மாரடைப்பு: பிரபல ஃபிட்னெஸ் இன்ஃப்ளூயன்சர் திடீர் மரணம்! படிப்பு, வேலை, சமூக வாழ்வியல் தரும் அழுத்தம் என மனஅழுத்தம், மனச்சோர்வு அதிகரித்திருப்பதால் பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க மனநிலை, உடல் ஆரோக்கியம், உணவு என அனைத்திலும் சமநிலையைப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

விகடன் 28 Nov 2023 5:05 pm

`குரல் முக்கியம் பிகிலு!' - மாஸ்டர் வாய்ஸ் செக் அப்: சென்னையில் புதிய முயற்சி..!

'அவங்க குரல் கிளி மாதிரி இருக்கும்', 'அவரு பேசுனாலே கணீர்னு இருக்கும்', 'தொண்டை கட்டிடுச்சு...அதனால தான் குரல் இப்படி இருக்கு' என்று நம்மை அறியாமலே குரல் மீது அதிக ஈர்ப்பும், கவனமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இப்படிப்பட்ட குரலைப் பராமரிக்க சென்னையில் உள்ள 'The Base ENT' மருத்துவமனையில் புதியதாக 'Voice Wellness Clinic' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ENT சர்ஜன் டாக்டர் நரேந்திரன் ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுக்க, இதையெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..! - மருத்துவர் அறிவுறுத்தல்! Voice Wellness Clinic குறித்தும், குரல் பராமரிப்பு குறித்தும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் நரேந்திரன் கூறுகிறார்... ''எல்லாருக்கும் குரல் என்பது மிக முக்கியம். அதுவும் மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு குரல் இல்லாமல் வேலையே இல்லை. அதனால் இவர்களுக்கு தொண்டை கட்டல், தொண்டை அடைத்தல், தொடர்ந்து பேசும்போது இருமல், குரல் கம்மல் ஆகிய பிரச்னைகள் இருந்துகொண்டே தான் இருக்கும். இந்தப் பிரச்னைகள் மிகவும் மோசமாகும்போது தான் இவர்கள், டாக்டர்களிடமே செல்வார்கள். இந்த மாதிரி இல்லாமல் குரல் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும், எந்தப் பிரச்னையும் வராமல் தடுக்கவும் மாஸ்டர் வாய்ஸ் செக் அப் எடுப்பது தான் வாய்ஸ் வெல்னெஸ் கிளினிக்கின் முக்கிய நோக்கம். எதனால் குரல் பாதிப்பு ஏற்படுகிறது? Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்? எதனால் குரல் பாதிப்பு ஏற்படுகிறது? பலரும் உடலுக்கு தரும் முக்கியத்துவத்தை குரலுக்குத் தருவதில்லை. சரியான நேரத்திற்கு சாப்பிடாதது, அதிக சத்தத்துடன் பேசுவது, அதிகம் பேசுவது, மது குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவை குரல் பாதிப்பதற்கு முக்கிய காரணங்கள். நாம் சரியாக சாப்பிடாத போது, வயிற்றில் சுரக்கும் அமிலம் தொண்டைக்கு ஏறி குரல் வளையை பாதித்து, குரலை மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ், வெந்நீர்... ஐஸ்கிரீம் சாப்பிட்டால்...கூல் டிரிங்க்ஸ் குடித்தால் அனைவருக்கும் குரல் பாதிக்கும் என்பதில்லை. ஆனால் குரல் பாதித்தால் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக குரல் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு குரல் நன்றாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம். அதனால் இவர்கள் குளிர்ந்த உணவுகள், கார உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். சுடுதண்ணீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் சுடு தண்ணீர் அப்போதைக்குதான் தீர்வைத் தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். ஐஸ்கிரீம் குரலை பாதிக்குமா? Doctor Vikatan: காய்ச்சலின்போதான உடல்வலி... பெயின் கில்லர் எடுப்பது சரியா? வாய்ஸ் வெல்னெஸ் கிளினிக் என்றதும் சிகிச்சை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது மாஸ்டர் வாய்ஸ் செக் அப் செய்வதற்கான இடம். கிளினிக்கிற்கு வந்தால் குரலைப் பரிசோதித்து, அவர்களுடைய லைஃப்ஸ்டைலை கேட்டறிந்து உணவுமுறை ஆலோசனைகள் கொடுக்கப்படும். மேலும் ஒவ்வொருவரின் குரல் சம்பந்தமான ரெக்கார்டும் பராமரிக்கப்படும் என்று விளக்கினார்.

விகடன் 28 Nov 2023 4:32 pm

Doctor Vikatan: உண்மையிலேயே சரும அழகுக்கு உதவுமா குங்குமப்பூ?

Doctor Vikatan: பிறக்கும் குழந்தை நிறமாக இருக்க வேண்டும் என்பதற்காக கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ எடுத்துக்கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது. குங்குமப்பூவுக்கு வேறு மருத்துவ பலன்கள் உண்டா.... அது உண்மையிலேயே சரும அழகுக்கு உதவுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி Doctor Vikatan: ஆரோக்கியமான கர்ப்பம்... ஆண்களின் வயதும் கவனிக்கப்பட வேண்டுமா? குழந்தை அழகாக, சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக, கர்ப்ப காலத்தில் மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளப்படுகிற குங்குமப்பூவுக்கு வேறு சில பலன்களும் உள்ளன. மிக முக்கியமாக நரம்பியல் மண்டலத்தைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது குங்குமப்பூ. வலிப்புநோய் மாதிரியான தீவிர பாதிப்புக்குள்ளானவர்களுக்குக்கூட இது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு குங்குமப்பூவை பாலில் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள், வெற்றிலையோடு சிறிது குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்துச் சாப்பிட்டால் பசி உணர்வு தூண்டப்படும். சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மாத்திரைகளையும் வெற்றிலையோடு சேர்த்துச் சாப்பிடலாம். நுண்ணூட்டச்சத்துகளை உடல் முழுமையாக கிரகித்துக்கொள்ள குங்குமப்பூ உதவும். வளர்சிதை மாற்ற இயக்கத்தைச் சீராக வைக்கும். சுவாசப்பாதை கோளாறுகள் உள்ளவர்கள், வீஸிங் பிரச்னை உள்ளவர்கள் வெற்றிலையோடு குங்குமப்பூவும் மிளகும்  சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். நீர்க்கோவை மாத்திரை போல குங்குமப்பூவை அரைத்து  பற்றுப்போட தலைவலி குணமாகும். குங்குமப்பூ! Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்? சிலர் எப்போதும் அதீத சிந்தனையில் இருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. ஸ்ட்ரெஸ்ஸும் இருக்கும். எந்தக் காரணத்துக்காக தூக்கம் இல்லாவிட்டாலும் குங்குமப்பூ உதவும் என அர்த்தமில்லை. நரம்பு தொடர்பான பிரச்னைகளால் தூக்கமின்றி தவிப்போருக்கு குங்குமப்பூ நல்ல, ஆழ்ந்த உறக்கத்தையும் அமைதியையும் தரும். சருமப் பளபளப்புக்கான தன்மைகள் கொண்டது குங்குமப்பூ. வைட்டமின் ஈ, குளுட்டோதயாமின் போன்ற சரும அழகுக்கான தன்மைகள் உள்ளதால், சருமத்தை மென்மையாக்கும். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் குங்குமாதி லேபம் என்பது மிகவும் பிரபலம். குங்குமப்பூவிலிருந்து தயாரிக்கப்படும் அந்தத் தைலத்தை வெளிப்பூச்சாகப் பூசிக்கொள்ளும்போது சருமம் பளபளப்பாக மாறும். கர்ப்பிணிகள் குங்குமப்பூவை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இரண்டு, மூன்று இதழ்களில் தொடங்கி, 15 இதழ்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.  பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்க உதவும்... Doctor Vikatan: பூண்டும், மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்தைக் காக்குமா? பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்கவும் ப்ளீடிங் அதிகரிக்காமல் இருக்கவும் குங்குமப்பூ உதவும். இத்தனை நல்ல தன்மைகள் இருந்தாலும் குங்குமப்பூவில் நிறைய கலப்படங்கள் வருகின்றன. தேங்காய்ப்பூவை சாயமேற்றி குங்குமப்பூ என்ற பெயரில் விற்கிறார்கள். தரமான குங்குமப்பூவை, அளவோடு உபயோகிக்கும்போது அது அருமருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 28 Nov 2023 9:00 am

ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுக்க, இதையெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..! - மருத்துவர் அறிவுறுத்தல்!

மழைக்காலம் என்பதால் தமிழகத்தில் காய்ச்சல், இருமல், சளித் தொந்தரவு போன்ற பிரச்னைகள் பரவலாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில், ``தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஃப்ளூ காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். மழை Doctor Vikatan: நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்தால் சளி பிடிப்பதேன்? அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று என்று தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஃப்ளூ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின்றன. ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் விஷால். ''குளிர்காலத்தில் அதிகமாகத் தொற்று நோய்கள் பரவக்கூடும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாதிக்கலாம். cold and fever Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்? Influenza- A, B, மற்றும் C வைரஸ் மூலமாக இந்த நோய் பரவுகிறது. இது வைரஸ் நோய்த்தொற்று என்பதால் உடல் சோர்வு, சளி, மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். தற்போது இன்ஃப்ளூயென்சா வைரஸ் மட்டுமன்றி H1N1 மற்றும் H3N2 ஆகிய வைரஸ் மூலமாகவும் ஃப்ளூ காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இந்த வைரஸ் காய்ச்சலானது, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது. ஒருவர் இருமும்போதும் தும்மும்போதும் வைரஸ் வேகமாகப் பரவுகிறது. பொதுவாக ஏழு நாள்களுக்கு காய்ச்சலின் தாக்கம் இருக்கும். தும்மல் Doctor Vikatan: காய்ச்சலின்போதான உடல்வலி... பெயின் கில்லர் எடுப்பது சரியா? உயர் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, இதயநோய் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது மிகவும் அவசியம் ஆகும். ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகள்: 1. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. 2. தொண்டை வலி இருந்தால் வெந்நீரில் உப்பு போட்டு வாய்க் கொப்பளிக்க வேண்டும். அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதை தவிர்த்துவிடுவது நல்லது. Doctor Vikatan: வயிற்று உப்புசம், வாயு பிரிதல், பணியிடத்தில் தர்மசங்கடம்... தவிர்க்க வழிகள் உண்டா? 3. வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகு வீட்டிற்குள் நுழைய வேண்டும். அடிக்கடி கை கழுவுவதும் நல்லது. 4. வைட்டமின்- சி மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 5. முக்கியமாக வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்துகொண்டால் நோய் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். 6. இருமும்போதும் தும்மும்போதும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். மருத்துவர் விஷால் Doctor Vikatan: டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் நார்மல்... அதன் பிறகு ஹார்ட் அட்டாக் எப்படி வந்தது..? 7. இந்தியாவில் இன்ஃப்ளூயென்சா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை. இருப்பினும் முதியோர், இதயநோய், HIV தொற்று, சர்க்கரைநோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தேவைப்பட்டால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். உடல்வலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்பதால் போதிய ஓய்வு எடுக்க வேண்டும். mask Doctor Vikatan: காய்ச்சல் குணமானாலும் விடாமல் விரட்டும் இருமல்... என்னதான் தீர்வு? தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் தொற்று நோய்கள் பரவுவதைத் தவிர்க்கலாம். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்றபடி செயல்பட்டால் இம்மாதிரியான நோய்கள் பரவுவதைத் தவிர்க்கவும், பாதிப்பு ஏற்பட்டால் எளிதில் குணமடையவும் முடியும் என்றார்.

விகடன் 27 Nov 2023 3:10 pm

Doctor Vikatan: ஆரோக்கியமான கர்ப்பம்... ஆண்களின் வயதும் கவனிக்கப்பட வேண்டுமா?

Doctor Vikatan: கருத்தரிப்பதில் பெண்ணின் வயது முக்கியம் என பலமுறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதி பெண்களுக்கு மட்டும்தானா.... ஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்துகொண்டாலும், குழந்தைபெற , குறிப்பாக ஆரோக்கியமான குழந்தை பெற தகுதியானவர்களாக இருப்பார்களா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்? ஒரு குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, தாயின் வயது மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது. உண்மையில், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதில் பெண்ணின் வயது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஆணின் வயதும் முக்கியமே. இந்தக் காலத்தில் ஆண்கள், பெண்கள் இருவருமே வேலை, பொருளாதார ரீதியான நிறைவு, வாழ்க்கையில் செட்டிலாவது  என பல காரணங்களுக்காக திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். அதன் விளைவாக குழந்தைப்பேறும் தள்ளிப்போகிறது. பெண்களுக்கு வயதாக, ஆக கருமுட்டைகளின் இருப்பு எப்படி குறைந்துகொண்டே வருமோ, ஆண்களுக்கும் சில விஷயங்களில் பிரச்னை ஏற்படும். குழந்தை Doctor Vikatan: காய்ச்சலின்போதான உடல்வலி... பெயின் கில்லர் எடுப்பது சரியா? அதாவது, வயதாக ஆக, உயிரணுக்களின் தரம் குறையும். விந்தணுக்களின் அளவும் குறையத் தொடங்கும். அது மட்டுமன்றி உயிரணுக்களில் மரபணு ரீதியான திரிபு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவாக, உருவாகும் கருவானது தரமற்றதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். வயது முதிர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள் வரலாம். லுகிமியா உள்ளிட்ட புற்றுநோய்கள் தாக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஸ்கீஸோஃபெர்னியா, ஆட்டிசம் போன்ற நரம்பியல் பாதிப்புகளுக்கும் அந்தக் குழந்தை உள்ளாகலாம். குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்படலாம்.  தாய்க்கு குறைப் பிரசவம் நிகழலாம். குழந்தை அவள் பதில்கள் 69 - உறுத்தும் காப்பர் டி நூல்... கட் செய்தால் வலிக்குமா? எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு, சரியான வயதில் உள்ள ஆணைத் திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 27 Nov 2023 9:15 am

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 உங்களுக்கு ஓர் ஆச்சர்யமான விஷயத்தை சொல்கிறேன். இந்தக் காலத்திலும், 'முதலிரவில் என் மனைவிக்கு ரத்தம் வரவில்லை' என்ற புகாருடன் வருடத்துக்கு குறைந்தது பத்து கணவர்களாவது என்னிடம் வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும், ரத்தம் வராததற்கான அறிவியல் காரணங்களை எடுத்துச்சொல்லி அனுப்பி வைக்கிறேன். திருமணமாகாத இளைஞர்களுக்கு ஒரு விஷயம். எல்லா பெண்களுக்குமே பிறப்புறுப்பு இறுக்கமாக இருக்காது. சிலருக்கு பிறப்புறுப்பே தளர்வாகத்தான் இருக்கும். இதற்கு அப்படியே எதிராக 5 சதவிகித பெண்களுக்கு பிறப்புறுப்பு மிகவும் இறுக்கமாக இருக்கும். எப்படி வண்டி ஓட்டுவதாலும், விளையாட்டுகளில் ஈடுபடுவதாலும் கன்னித்திரை கிழியுமோ, அதேபோல பெண்ணுறுப்பு சற்று தளர்வதும் சில பெண்களுக்கு நிகழும். சுய இன்பம் செய்கிற பெண்களுக்கும் பெண்ணுறுப்பு தளர்வாக இருக்கும். இவையெல்லாமே இயல்பானவைதான். Sex Education ``தப்பு பண்ண பார்க்கறியா... வெளியே போடா... '' - காமத்துக்கு மரியாதை|சீஸன் 4 - 120 சமூகத்தில் கன்னித்திரை பற்றி ஓரளவு விழிப்புணர்வு வந்துவிட்டது என்றாலும், இந்தத் தளர்வு தொடர்பான சந்தேகங்கள் இன்றைய இளைஞர்களிடம் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கும் கன்னித்திரை கிழிவதற்கான அதே காரணங்களே பொருந்தும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவையில்லாமல் சந்தேகப்பட்டு, திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே அதை அழித்துக்கொள்ளாதீர்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 26 Nov 2023 6:00 pm

Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்?

Doctor Vikatan: நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சத்துக் குறைபாடு இருப்பதைப் பார்க்கிறோம். ஏதேனும் பிரச்னைக்காக மருத்துவர்களிடம் செல்லும்போது அவர்கள், சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.  எல்லோருக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    ஸ்பூர்த்தி அருண் தினமும் சரிவிகித உணவு உட்கொள்வோருக்கு சத்து மாத்திரைகள் தேவையே இல்லை. சரிவிகித உணவு உட்கொள்ளும் பட்சத்திலும் சில ஊட்டச்சத்துகள் தேவைப்படலாம். அதில் மிக முக்கியமானது வைட்டமின் டி. குறிப்பாக இந்தியாவில் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவுகள் பெரிதாகக் கிடைப்பதில்லை. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே கிடைக்கக்கூடியது வைட்டமின் டி. வெயில் காலத்தில் சருமத்தைக் காக்கவும் சருமப் புற்றுநோய் வராமல் தடுக்கவும் சன் ஸ்கிரீன் உபயோகிக்கிறோம். அதனால் நமக்குப் போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை. சூரிய ஒளி Doctor Vikatan: கீரை சமைக்கும் போது சத்துகள் வீணாகாமல் தடுப்பது எப்படி..? இந்தியாவை பொறுத்தவரை வைட்டமின் டி குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 1000 முதல் 2000 இன்டர்நேஷனல் யூனிட் அளவுள்ள வைட்டமின் டி சப்ளிமென்ட் அல்லது குறைந்தபட்சமாக 800 இன்டர்நேஷனல் யூனிட் அளவுள்ள மல்டி வைட்டமின் சப்ளிமென்ட் தினமும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் டி-க்கு இணையான இன்னொரு முக்கிய சப்ளிமென்ட் வைட்டமின் பி 12. சைவ உணவுக்காரர்களுக்கு, குறிப்பாக வீகன் உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்தச் சத்து மிக முக்கியமானது. ஏனென்றால் வைட்டமின் பி 12 சத்தானது பெரும்பாலும் அசைவ உணவுகளில் இருந்தே கிடைக்கக்கூடியது. பால், முட்டை போன்றவற்றைக்கூட சாப்பிடாத கறார் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு தீவிரமான வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவர்களும் வைட்டமின் பி 12 அளவுகளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, மருத்துவரின் பரிந்துரையோடு அதற்கான சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். புளிக்கவைக்கப்பட்ட உணவுகள், கடல்பாசி போன்ற சில சைவ  உணவுகளில்தான் வைட்டமின்  பி 12 இருக்கிறது. சப்ளிமென்ட்டாக எடுக்க விருப்பமில்லாதவர்கள் மேற்குறிப்பிட்ட உணவுகளை தினமும் உங்கள் மெனுவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகள் Doctor Vikatan: காய்ச்சல் குணமானாலும் விடாமல் விரட்டும் இருமல்... என்னதான் தீர்வு? இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது ஒமேகா 3 கொழுப்பு அமிலம். இது இதய நலனுக்கு மிக நல்லது. எனவே மருத்துவ ஆலோசனையோடு ஒமேகா 3 சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அடுத்த முக்கிய சத்தான ஆன்டி ஆக்ஸிடன்ட் பழங்கள் மற்றும் காய்கறிகளில்தான் பிரதானமாக இருக்கும். அந்த உணவுகள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்போதுதான் அவற்றின் முழுப் பலன்களையும் பெற முடியும்.  புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா உள்ள தயிர், யோகர்ட் போன்றவை உங்கள் குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ரெஸ்வெரட்டால் என்பதும் மிக முக்கியமான ஒரு சப்ளிமென்ட். புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல்படும். இதயத்துக்கும் நல்லது. திராட்சை, பெர்ரி போன்றவற்றில் இந்தச் சத்து அதிகம் உள்ளது.  தயிர் Doctor Vikatan: உயிரையே பறிக்குமா வீகன் உணவுகள்? எனவே எந்த சப்ளிமென்ட்டையும் மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாகப் பின்பற்ற வேண்டாம். தேவை இருப்பின் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு, பரிந்துரைக்கும் நாள்களுக்கு மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 26 Nov 2023 9:00 am

பிக்பாஸ் மாயாவுக்கு ADHD Syndrome - என்றால் என்ன? அறிகுறிகள், சிகிச்சைகள் - மருத்துவர் விளக்கம்!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டதில் இருந்து அங்கு நடக்கும் பல விஷயங்கள் மக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.  யாரை வீழ்த்த வேண்டும், யாரை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சிந்தித்து காய் நகர்த்தி ஆட்டத்தை விறுவிறுவாக்குபவர் மாயா. என்னதான் ஹவுஸ்மேட்ஸ் சொல்வது போல் இவர் விரிக்கும் வலைக்குள் இவரே விழுந்தாலும் ஆட்டத்தை கச்சிதமாகப் புரிந்து கொண்டவர்களில் மாயாவும் ஒருவர். இவர் உள்ளே இருக்கும்வரை ட்விஸ்ட்களுக்கு பஞ்சமில்லை என்றே தோன்றுகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்குப் பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வெற்றி, தோல்வி, சிறந்த பர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் அவர்களுக்கு ஸ்டார்கள் வழங்கப்படும். மாயா Doctor Vikatan: காய்ச்சல் குணமானாலும் விடாமல் விரட்டும் இருமல்... என்னதான் தீர்வு? சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் `பூகம்பம் டாஸ்க்’ விளையாடப்பட்டது. போட்டியாளர்கள் தங்களது வாழ்வை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வை சக போட்டியாளார்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  பூகம்பம் டாஸ்க்கில், மாயா தனது கல்லூரி வாழ்க்கை, அம்மாவின் உடல்நலச் சிக்கல், படிப்பதில் ஏற்பட்ட சிரமம் போன்றவற்றை பேசி இருந்தார். அப்போது, தனக்கு சிறுவயதில் ஏடிஹெச்டி சிண்ட்ரோம் (ADHD Syndrome) இருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார். ஏடிஹெச்டி பாதிப்பு ஏற்பட என்ன காரணம், அதன் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்த விரிவான விளக்கத்தை மனநல மருத்துவர் பூங்கொடி பாலா பகிர்கிறார்... ``ஏடிஹெச்டி மூளையின் கட்டுப்பாடோடு தொடர்புடைய பிரச்னை. இதை டெவெலப்மென்டல் கன்டிஷன் (Developmental Condition) என்போம். பிறந்ததில் இருந்தே இந்தப் பிரச்னை இருக்கும்.  மனநல மருத்துவர் பூங்கொடி பாலா! Doctor Vikatan: கீரை சமைக்கும் போது சத்துகள் வீணாகாமல் தடுப்பது எப்படி..? AD என்பது கவனக்குறைவு (Attention Deficit); HD என்பது ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Hyperactivity disorder). ஏடிஹெச்டி பாதிப்புள்ள குழந்தைகளுக்குக் கவனக் குறைவு இருக்கும். எளிதாக டிஸ்ட்ராக்ட் ஆகி விடுவார்கள். துறுதுறுவென இருப்பார்கள். ஹைப்பர் ஆக்டிவிட்டி அதிகமாக இருக்கும். மற்ற குழந்தைகள் அரை மணிநேரம் உட்கார்ந்து பாடத்தை கவனித்தால், இந்தக் குழந்தைகள் 10 நிமிடம் கூட உட்கார மாட்டார்கள். எழுந்து ஓடிக் கொண்டே இருப்பார்கள். அதோடு சட்டெனெ கட்டுப்பாடு இல்லாமல் ரியாக்ட் (Impulsivity) செய்து விடுவார்கள். உதாரணத்திற்கு தவறு எனத் தெரிந்தால் உடனடியாக கோபமடைவது, எதையாவது தூக்கி வீசுவது போன்றவற்றைச் செய்வார்கள். அதன்பிறகு மன்னிப்பும் கேட்பார்கள். சில நேரங்களில் கடகடவெனப் பேசுவார்கள்.   லேசான மற்றும் கடுமையான தீவிர நிலைகள் இதில் இருக்கின்றன. லேசான நிலையில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர், அந்தச் சூழலோடு ஒத்துப்போய் படிப்படியாக குணமடைவார்கள். தீவிர நிலையில் இடையூறு விளைவிக்கும் நடத்தையோடு (Disruptive Behaviour) இருக்கும்பட்சத்தில்,  மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குழந்தைக்கான மனநல மருத்துவர்  இவர்களை பரிசோதித்து ஆக்குபேஷனல் தெரபி (Occupational therapy) வழங்குவார். இந்த தெரபியில் குழந்தை உட்காராமல் ஓடிக்கொண்டே இருந்தால், சிறிது நேரம் உட்காரும் அளவிற்குப் பயிற்சி கொடுக்கப்படும். அவர்களின் நிலையைப் பொறுத்து சில நேரங்களில் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். மருந்துகளை பொறுத்தவரையில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்படும். அவர்களின்  நிலைக்கு ஏற்ப தெரபி அல்லது மருந்துகள் கொடுக்கப்பட்டும். இயற்கையாகவே குழந்தை வளர வளர ஹைப்பர் ஆக்டிவிட்டி குறைந்துவிடும். அதுவே கவனம் மேம்படுமா என்றால் சிலருக்கு மாறலாம், சிலருக்கு படிப்பதில் பிற்காலத்தில் பிரச்னை வரலாம். ஃபோகஸ் குறையலாம். இரண்டு விஷயங்களைச் சொன்னால் ஒன்றை மறந்து ஒன்றை மட்டும் செய்யலாம்.   இவர்களுக்குக் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களோடு இருந்தால் எளிதாக கவனச் சிதறல் ஏற்படலாம். மருந்து, அல்லது கவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.   குழந்தை Doctor Vikatan: சிறுநீர் கழிக்காமல் அழும் குழந்தை... சிறுநீர் துவார அடைப்புக்கு ஆபரேஷன்தான் தீர்வா? முதலில் பெற்றோர்கள் இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் பலரும் இப்படி இருக்கும் குழந்தைகளை `குறும்புக்கார குழந்தை’ என்றுதான் சொல்லுவார்கள். குழந்தைக்கு இதுபோன்ற பிரச்னை உள்ளது என்று புரிந்து கொள்ள மாட்டார்கள். எனர்ஜி அதிகமாக இருக்கும் குழந்தைகளை, `தூங்குவதே இல்லை, இரவெல்லாம் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள்' எனப் பெற்றோர்கள் கூறுவதுண்டு. அவர்களை நன்றாக விளையாட விடலாம். அப்போது எனர்ஜி குறைந்து தூங்குவார்கள்.  இந்த பாதிப்பு ஏற்பட பல காரணிகள் இருக்கலாம். பரம்பரையாக வரலாம், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வரலாம், பிறக்கும் போது உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், மூளையில் உள்ள சில ரசாயனங்கள் குறையும்போதும், ரசாயனங்கள் சமநிலையில் இல்லாத போதும் வரலாம், பிறக்கும்போது அல்லது பிறந்த பிறகு மூளையில் டேமேஜ் (brain damage)  ஏற்பட்டாலும் வரலாம்.   இது தவிர ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள், IQ குறைவாக உள்ள குழந்தைகள், படிப்பதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகளோடு கூடுதலாக ஏடிஹெச்டி பாதிப்பும் வரலாம்’’ என்றார். அனைத்து மனிதர்களின் பின்னும் ஒரு கதை இருக்கிறது, கஷ்டம் இருக்கிறது. அவையே பல நேரங்களில் அந்த மனிதரின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்திருக்கிறது. நம்பிக்கையோடு இருப்போம்... பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை தாக்குப்பிடிப்பார் என்று நீங்கள் நினைப்பது யாரை? கமென்டில் சொல்லுங்கள்!

விகடன் 25 Nov 2023 7:56 am

Doctor Vikatan: டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் நார்மல்... அதன் பிறகு ஹார்ட் அட்டாக் எப்படி வந்தது..?

Doctor Vikatan: என் நண்பனுக்கு வயது 49. கடந்த சில  மாதங்களுக்கு முன்பு அவனுக்கு ஹெல்த் செக்கப் செய்தபோது டிரெட்மில் டெஸ்ட்டும் செய்திருக்கிறார்கள். அதில் நார்மல் என்றே வந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் அறிகுறி வந்து மருத்துவரிடம் சிகிச்சை பெற்றான். டிரெட்மில் டெஸ்ட்டில் நார்மல் என்று வந்த பிறகு இப்படி வருமா... ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் டிரெட்மில் டெஸ்ட் செய்யவே கூடாது என்பது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருவருக்கு நெஞ்சுவலியோ, மூச்சுவிடுவதில் சிரமமோ, களைப்போ இருப்பதாக உணரும்பட்சத்தில், இதயநோய் மருத்துவர், அந்த நபரை டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்க்க அறிவுறுத்துவார். டிரெட்மில் டெஸ்ட்டில் சம்பந்தப்பட்ட நபரை டிரெட்மில்லில் குறிப்பிட்ட வேகத்தில், குறிப்பிட்ட நிமிடங்களுக்கு நடக்கச் சொல்வார்கள். பிறகு அந்த வேகம் அதிகரிக்கப்படும். டிரெட்மில்லின் பொசிஷனும் மாற்றப்பட்டு அதில் நடக்கச் சொல்வார்கள். ஹார்ட் அட்டாக் வந்த பிறகு அவர்களுக்கு 'சிம்ப்டம் லிமிடெட் டிரெட்மில் டெஸ்ட்' என்ற ஒன்றைச் செய்யச் சொல்வோம். ஹார்ட் அட்டாக் Doctor Vikatan: வயிற்று உப்புசம், வாயு பிரிதல், பணியிடத்தில் தர்மசங்கடம்... தவிர்க்க வழிகள் உண்டா? இவை தவிர, ஒரு நபர் திடீரென தீவிரமான உடலியக்க வேலையில் ஈடுபடப் போகிறார் என்ற நிலையில், (உதாரணத்துக்கு டிரெக்கிங் போகப் போகிறார் என வைத்துக்கொள்வோம்) அவருக்கு ஏதேனும் ரிஸ்க் இருக்கும் என்ற சந்தேகப்பட்டால், டிரெட் மில் டெஸ்ட் செய்து பார்க்கச் சொல்வோம். சில நேரங்களில் மூச்சுவிடுதலில் மாற்றம் ஏற்பட்டதையே உணராமல் இருப்பார்கள் சிலர். அது வயதுக்கேற்ப இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் டிரெட்மில் டெஸ்ட் செய்ய வேண்டி வரலாம். டிரெட்மில் டெஸ்ட் உடன், இசிஜி பரிசோதனையும் சேர்த்துச் செய்யும்போது இன்னும் துல்லியமாக பிரச்னைகளைத் தெரிந்துகொள்ள முடியும். ECG Doctor Vikatan: அதிகாலையில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது ஏன்... தூக்கம் தவிர்த்தால் தப்பிக்கலாமா? டிரெட்மில் டெஸ்ட்டில் நார்மல் என வந்துவிட்டதால், அந்த நபருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளே இல்லை என எடுத்துக்கொள்ள முடியாது. டிரெட்மில் டெஸ்ட் என்பது சில நேரங்களில் மட்டும்தான் அசாதாரணமாக காட்டும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஓரளவுக்கு மேல் அடைப்பு இருக்கும் பட்சத்தில் டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் அசாதாரணம் என்று ரிசல்ட்டில் தெரியவரலாம். அதே நேரம் நார்மல் என்ற ரிசல்ட்டை வைத்து ஒருவரின் இதயம் 100 சதவிகிதம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்லவே முடியாது. இதயநோயாளிகள் அதற்கான ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சையையோ, அறுவை சிகிச்சையையோ மேற்கொண்ட பிறகு டிரெட்மில் டெஸ்ட் செய்யவே கூடாது என்றொரு கருத்து பலரிடம் இருக்கிறது. அதுவும் தவறு. மாரடைப்புக்குப் பிறகும் சில காரணங்களுக்காக டிரெட்மில் டெஸ்ட் செய்யச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்துவார். எனவே இதய ஆரோக்கியத்தில் இப்படி அடுத்தவர் சொல்கிற தகவல்களைக் கேட்டு அலட்சியமாக இருக்காதீர்கள். சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரிடம் தெளிவு பெறுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 24 Nov 2023 9:00 am

சீனாவில் என்ன நடக்கிறது..? குழந்தைகளை பாதிக்கும் மர்ம நோய்கள்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்..!

கோவிட் தொற்றின் பேரழிவு தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத சீனா மீண்டும் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. சீனாவில் மர்மமான நிமோனியா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான மக்கள், குறிப்பாக குழந்தைகள் அதிகளவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவிட் நிமோனியா கசப்புத் தக்காளி, பக்வீட், கினோவா, டெப், தினை... லாபம் கொடுக்கும் சர்வதேச பயிர்கள்! சாகுபடி எப்படி? பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் உள்ள மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வந்தவண்ணம் உள்ளனர். ஏற்கெனவே கோவிட் தொற்றுப்பரவல் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பரவியதால் இந்த பாதிப்பும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர். சீனாவில் பரவும் மர்ம நோய்... இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர் சந்திப்பில், ``மக்களிடையே சுவாச நோய்கள் அதிகரித்து வருகின்றன. கோவிட் தொற்றை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளின் மூன்று வருட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், சீனாவில் தற்போது காய்ச்சல் போன்ற நோய்களின் அதிகரிப்பு உள்ளது.   கோவிட்-19 மட்டுமன்றி இன்ஃப்ளுயென்ஸா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற பிற நோய்க்கிருமிகளும் பரவுவதற்கு கோவிட் நோய்த் தொற்றின் தளர்வு நடவடிக்கைகள் காரணமாக அமைந்ததுள்ளன'' என்று நோய்ப் பரவலுக்கு தளர்வு நடவடிக்கைகளை காரணமாகச் சுட்டிக் காட்டி உள்ளனர். நிமோனியா Doctor Vikatan: ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா நிமோனியா தொற்று? நோய் எவ்வாறு பரவுகிறது, ஆய்வக முடிவுகள், குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டுள்ளது.  அதேசமயம் மக்களிடையே நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கான பொது சுகாதார ஆலோசனையையும் வழங்கி உள்ளது. ஏற்கெனவே கோவிட் தொற்று சமயத்தில் சீனாவின் வெளிப்படையற்ற தன்மை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து இருந்தது. தற்போது சீனாவிடம் கேட்டுள்ள விவரங்கள் அளிக்கப்படுமா என்பதை வரும் நாள்களில் தான் பார்க்க வேண்டும்.

விகடன் 23 Nov 2023 6:41 pm

`தவறாக விளம்பரம் செய்தால் ரூ.1 கோடி அபராதம்’ - பாபா ராம்தேவ்க்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!

பாபா ராம்தேவ் ’பதஞ்சலி’ என்ற பிராண்டில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து வருகிறார். இது தவிர சோப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களையும் விற்பனை செய்து வருகிறார். சில குறிப்பிட்ட தீர்க்க முடியாத நோய்களை தனது கம்பெனியின் மருந்துகள் குணப்படுத்துவதாகவும் ராம்தேவ் விளம்பரம் செய்கிறார். அதோடு நவீன மருந்து மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக ராம்தேவ் கருத்துகளை கூறி வருவதோடு விளம்பரமும் செய்து வருகிறார். இந்நிலையில், மருத்துவர்களை மோசமாக சித்திரித்தும், அவர்களை கொலைகாரர்களாக விளம்பரங்களில் காட்டுவதாகவும் கூறி அவருக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளது. சர்க்கரையைக் குறைக்க; சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் வழி உண்டு! சாரு நிவேதிதாவின் ஆச்சர்ய அனுபவம்! இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும், பாபா ராம்தேவிற்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ''இந்த பாபா ராம்தேவிற்கு என்ன ஆனது? யோகாவில் பிரபலமானவர் என்பதால் அவரை மதிக்கிறோம். அதற்காக மற்ற சிஸ்டத்தை குறை சொல்லக்கூடாது. பாபா ராம் பின்பற்றும் ஆயுர்வேதம் நோய்களை குணப்படுத்துகிறது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? உங்களது விளம்பரங்கள் அனைத்தும் டாக்டர்களை கொலைகாரர்களாக சித்திரிக்கும் விதத்தில் இருக்கிறது. தவறான பதாஞ்சலி விளம்பரங்கள் மற்றும் பிரசாரங்கள் உடனே நிறுத்தப்படவேண்டும். இவ்விவகாரத்தில் கோர்ட் உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நவீன மருத்துவ முறைக்கு எதிராக விளம்பரம் செய்வதையும், பதாஞ்சலி மருந்து குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்தும் என்று பொய்யான விளம்பரங்கள் செய்வதையும் உடனே நிறுத்தவேண்டும். குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்தும் என்று கூறி பதஞ்சலி விளம்பரம் செய்தால் ஒரு பொருளுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்'' என்று நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் பொய்யான விளம்பரங்கள் பிரச்னைக்கு தீர்வு காணும்படி மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். ``நீங்கள் இதைப் படிக்கும்போது நான் இறந்திருப்பேன் - கேன்சரால் இறந்த பெண்ணின் கடைசி ஆசை! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள பாபா ராம்தேவ்,''எனது பொருள்கள் குறித்து தவறான விளம்பரங்களையோ, பிரசாரத்தையோ செய்யவில்லை. நாங்கள் அவ்வாறு செய்வதை சுப்ரீம் கோர்ட் கண்டுபிடித்தால் மரண தண்டனை கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். பதஞ்சலி நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கிறோம். நாங்கள் தவறான விளம்பரங்கள் அல்லது பிரசாரங்களை செய்தால், நீதிமன்றம் கோடிக்கணக்கான அபராதம் விதித்தாலும் அல்லது எங்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் எந்த ஆட்சேபனையும் இல்லை. பாபா ராம்தேவ் சின்னச் சின்ன ஆசை… பெரிய பெரிய துன்பம் | மகிழ்ச்சி - 8 நாங்கள் பொய்ப் பிரசாரம் செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நூற்றுக்கணக்கான யோகா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், பஞ்சகர்மா, ஷட்கர்மா, நோன்பு மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஆஸ்துமா, மூட்டுவலி, உடல் பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களிலிருந்து குணப்படுத்தி இருக்கிறோம். பாரம்பர்ய சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிக்காக, உலகின் சிறந்த ஆயுர்வேத ஆராய்ச்சி மையம் எங்களிடம் உள்ளது. அதில் நூற்றுக்கணக்கான உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். செயற்கை மருந்துகளால் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை ஒப்புக்கொண்டாலும், குணப்படுத்த முடியாது என்று கூறுகிறது. ஆனால் யோகா - ஆயுர்வேதத்தில் அது போன்ற ஒரு பிரச்னை இல்லை'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் 23 Nov 2023 11:20 am

சர்க்கரையைக் குறைக்க; சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் வழி உண்டு! சாரு நிவேதிதாவின் ஆச்சர்ய அனுபவம்!

‘‘அகத்திய முனியால் அறிமுகப்படுத்தப்பட்ட சித்த மருத்துவம் பன்னெடுங்காலமாக இங்கே மக்களின் பிணி தீர்க்கும் பணியைச் செய்து வருகிறது. ஆனால் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு சித்த மருத்துவத்தின் புகழ் மங்கி விட்டதை நாம் அறிவோம். இழப்பு நமக்குத்தானே தவிர அந்த மருத்துவ முறைக்கு அல்ல. அதே சமயம் நான் அலோபதி மருத்துவ முறையை எதிர்ப்பவன் அல்ல. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது என் உயிரைக் காப்பாற்றியது அலோபதி முறைதான். ஆனால் சித்த மருத்துவத்தின் பெருமை என்னவென்றால், ஹார்ட் அட்டாக்கே வராமல் ஆக்குவதுதான். உதாரணமாக, சர்க்கரை வியாதி என்று எடுத்துக் கொண்டால் அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்குத்தான் அலோபதி முறை உதவுகிறதே தவிரச் சர்க்கரை வியாதியே வராமல் தடுக்க அலோபதியில் வழி இல்லை. சித்த மருத்துவத்தில் சர்க்கரையைக் குறைக்கவும் வழி உண்டு. சர்க்கரை வியாதியே வராமல் தடுக்கவும் வழி உண்டு. பாஸ்கரனைப் பற்றி யோசிக்கும்போது இவர் மருத்துவரா, மந்திரவாதியா என்று வியந்திருக்கிறேன். இவரைப் பற்றி எழுதியிருக்கும் நண்பரும் அதேபோல் ஆச்சரியப்பட்டதாகச் சொல்கிறார். அகத்திய முனி அவருடைய தாயாரின் நாள்பட்ட சர்க்கரை வியாதியைத் தீர்த்து விட்டதாக எழுதியிருக்கிறார். இவ்வளவு ஏன் எழுதுகிறேன் என்றால், நான் பார்க்கும் பல இளைஞர்கள் இன்று உடம்பு சரியில்லை என்றே எப்போதும் புலம்புகிறார்கள். ஒருத்தர் தூக்கமே வரவில்லை என்கிறார். ஒருத்தர் எப்போது பார்த்தாலும் ஜுரம் என்கிறார். மாதம் ஒருமுறை ஜுரம். இவர்கள் அனைவரும் இளைஞர்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களைப் பார்த்தால் ஏதோ மரணத் தேவனிடம் கிளம்பி விட்டது போல் பீதியுடன் வாழ்கிறார்கள். ஹல்வா சாப்பிடுங்களேன் என்றால் ஏதோ விஷம் போல் பார்க்கிறார்கள். என்னய்யா இது, ஹல்வா எப்போது விஷம் ஆயிற்று? முறுக்குச் சாப்பிடுங்கள் என்றால் ஐயோ எண்ணெய் இருக்கும், கொலஸ்ட்ரால் என்கிறார்கள். ஆப்பம் தேங்காய்ப் பால் என்றால், ஐயோ தேங்காயில் கொலஸ்ட்ரால் என்கிறார்கள். 98 வயது கிழவன் மாதிரி எல்லாவற்றுக்கும் பயம். இவர்கள் அத்தனை பேரும் நாட வேண்டியது அகத்திய மாமுனியை. அகத்தியர் இப்போது இல்லை. நம்மிடையே வாழும் சித்த மருத்துவர்களின் ரூபத்தில் வாழ்கிறார் அகத்தியர். அவர்களின் ஒருவர் பாஸ்கரன். இதை நீங்கள் பிரச்சாரம் என்று நினைத்தாலும் பரவாயில்லை. இதை நான் மருத்துவர் பாஸ்கரன் பற்றி எழுதுவதாக நினைக்கவில்லை. போகர், கோரக்கர் பற்றி எழுதுவதாகவே நினைக்கிறேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் தன் இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா. சித்த மருத்துவர் பாஸ்கரன் பஸ்திரிகா, நாடிசுத்தி, பிராமரி, கபாலபதி... மழைக்கால நோய்களிலிருந்து காக்கும் மூச்சுப்பயிற்சிகள்! #HealthTips இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான். சமூக ஊடகங்களில் சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றித் தினம், தினம் யாராவது எழுதிக் கொண்டுள்ளார்கள். அப்படி என்னதான் செய்கிறார் என்று அறிய, சென்னை மேற்கு மாம்பலம், பாரதி தெருவில் பகுதியில் உள்ள அவரின் மருத்துவ மனைக்குச் சென்றால், பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. சாரு, குறிப்பிட்டதை வாசித்தவுடன் அகத்தியர் முனிவர் போல, காவி உடுத்தி, தாடியுடன் சித்த மருத்துவர் பாஸ்கரன் இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், சாப்ட்வேர் கம்பெனி சி.இ.ஓ போல, துள்ளும் இளமையுடன் இருந்தார், அந்த சித்த மருத்துவர். இதோ சித்த மருத்துவர் பாஸ்கரன் நம்முடன் பேசுகிறார், கேளுங்கள்... ‘‘பழநி மலையில் நவபாஷாண முருகனை பிரதிஷ்டை செய்தவர் சித்தர் போகர் என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் போகரின் குருவானவர் புற்று மகரிஷி என்று அழைக்கப்படும் காளங்கிநாதர். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலின் மூலஸ்தானத்தைப் பிரதிஷ்டை செய்தவர் இவர் தான். எங்களின் மூல குரு இவரே. புற்று மகரிஷியை குருவாக ஏற்றுக் கொண்டு குரு வழி பாரம்பரியமாக 48-வது பரம்பரையினராக இந்தச் சித்த மருத்துவத்தைச் செய்து வருகின்றோம். தாய், தந்தையினர் வழியாக வருவது கருவிழி பரம்பரையாகும். சித்தர்களை, மகான்களைக் குருவாக ஏற்றுக்கொண்டு அவர்கள் வழியைப் பின்பற்றி வருவது குருவழிப் பரம்பரையாகும். அவ்வகையில், நாங்கள் புற்று மகரிஷி வழிப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். அப்பரம்பரை வழி வந்த முன்னத்தி ஏர்களில் எனது பெரியப்பா வைத்தியர் கே.பி.அர்ச்சுணன் ஐயா, எனது தந்தையார் எலும்பு முறிவு வைத்தியர் கே.பி.டம்பாச்சாரி ஆகியோர்தான் எனது குருக்கள். இவர்கள் தந்தை, எனது தாத்தா பரசுராமன் அவர்களும் வைத்தியர், அவரது முன்னோர்களும் வைத்தியர்களே. காலம்காலமாக இப்படி நீளும் புற்றுமகரிஷி குழுவழி பாரம்பரியத்தின் 48-வது வாரிசு நான். வைத்திய குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் எனது இளம்பிராயத்திலேயே நாடி பிடித்து நோய் அறியும் பயிற்சியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மருத்துவம் செய்வதிலும் பயிற்சி மேற்கொள்ளத்தொடங்கிவிட்டேன். பெரியப்பாவும் அப்பாவும் எனக்குப் பயிற்சிகள் கொடுத்தார்கள். மருத்துவ ஆலோசனை மணப்பாகு மருந்து... சித்த மருத்துவத்தின் சிறப்பு! எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சித்த மருத்துவத்தைச் சேவையாகவே செய்து வந்தார் பெரியப்பா. கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை, ஏலகிரி மலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வனத்துறையினரின் ஒத்துழைப்போடு இலவச மருத்துவச் சிகிச்சை முகாம்கள் நடத்துவார் பெரியப்பா. அவ்வாறான மருத்துவ முகாம்களின் தொடக்கக் காலத்தில் எனக்கு ஐந்து - ஆறு வயது இருக்கும். மருத்துவ முகாம்களுக்கு என்னையும் அழைத்துச் செல்வார் பெரியப்பா. நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது என்னையும் அருகே இருக்கச் செய்வார். அப்போதிலிருந்தே எனது சித்த மருத்துவப் பயணம் தொடங்கிவிட்டது. பெரியப்பாவுக்குப் பின்னர் நானும் அப்பாவும் மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தியுள்ளோம். ஆயிரக்கணக்கான எளிய மக்களுக்கு நோயறிந்து சிகிச்சை அளித்திருக்கிறோம். என் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அடுத்து என்ன படிப்பது என்ற கேள்வி ஏற்பட்டது. பெரியப்பாவிடம் பாரம்பரிய மருத்துவப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த மருத்துவர்கள் பலரும், ‘நம் பாஸ்கரன் சிறு வயதிலிருந்தே உங்களுடன் இருக்கிறார். நாடி பிடித்து வைத்தியம் பார்ப்பதில் சிறப்பாகவும் தேறியிருக்கிறார். அவரைச் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க வையுங்கள். நமது பாரம்பரிய வைத்தியத்தை இன்னும் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல அது உகந்ததாக இருக்கும்’ என்று பெரியப்பாவிடம் வலியுறுத்தினார்கள். அதன் காரணமாகத் தொடர்ந்து ஶ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.எம்.எஸ். பட்டப்படிப்பையும் படித்து முடித்தேன். இன்று பாரம்பரிய சித்த மருத்துவப் பரம்பரையில் பட்டதாரி சித்த மருத்துவராகவும் இருக்கிறேன்.’’ சித்த மருத்துவம் Doctor Vikatan: ஆறு மாதங்களுக்கொருமுறை பீரியட்ஸ்; முறைப்படுத்த சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா? சித்த மருத்துவர் பாஸ்கரன் நோயாளிகளிடம், என்ன பிரச்னை என்று கேட்பதில்லை. நாடி பிடித்துப் பார்த்துவிட்டு, ‘‘அவ்வப்போது தலைவலிக்கும், உடல் சோர்வாக இருக்கும், பித்தம் அதிகமாக உள்ளது...’’ என்று உடலை ஸ்கேன் செய்தது போல, நாடிப் பிடித்துப் பார்த்துவிட்டு உடல் பிரச்னைகளைப் பட்டியல் இட்டுச் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார். ‘‘நாடி என்பது பல்ஸ் பார்த்தல் அல்ல. ஸ்தூல, சூக்கும மற்றும் காரண உடல்கள் என்ற மூவித உடல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆராய்வதாகும். நாடி குறித்து அறிந்து கொள்ள வேண்டுமெனில் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள தச நாடிகள் மற்றும் ஆறு ஆதாரங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் நாடி பார்த்தல் என்பது உடலில் உள்ள வாத, பித்த, கப ஓட்டங்களின் அளவை அறிந்து அதன்வழி தச நாடி, தச வாயுக்கள், ஆறு ஆதாரங்கள் ஆகியவற்றின் நிலைமை குறித்துக் கணக்கிட்டு அதனடிப்படையில் நோயைக் கணித்தல் ஆகும். ஆணுக்கு வலது கையிலும் பெண்ணுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டும். உடலில் நோய் ஏதும் இல்லாமல் சம நிலையில் இருக்கிறது என்றால் வாத ஒட்டம் ஒரு அலகு ஆகவும், பித்த ஓட்டம் அந்த அலகில் பாதியாகவும், கப ஓட்டம் அதனினும் பாதியாகவும் இருக்கும். அதாவது வாத, பித்த, கபம் அளவு முறையே 1-1/2-1/4 என்று இருக்கும். வேலூரில் நடைபெற்ற மூலிகை கண்காட்சியில் உலகம் அங்கீகரிக்கும் சித்த மருத்துவம்! இதுவே ஆரோக்கியமான உடலுக்கான இயல்பு நிலையாகும். நாடி பார்ப்பதன் மூலம் வாத, பித்த, கப அளவுகளைக் கணக்கிடும் சித்த மருத்துவர் இதில் எது மிகுந்துள்ளது, எது குறைந்துள்ளது என்று கணக்கிட்டு எதற்குள் எது விரிந்துள்ளது என்றும் கண்டறிகின்றார். அதன்பின்னர் வயது, கிழமை, நாள், நேரம், மாதம், ஆண்டு ஆகியவற்றுக்கு ஏற்ப வாத, பித்த, நாடிகள் மீண்டும் கணக்கிடப்படும். நோய்கள், நோய்க்கான மூலகாரணம், அறிகுறிகள் எனச் சகலமும் நாடி பார்த்தலில் தெரிந்துவிடும். பல ஆயிரம் ரூபாய்கள் செலவழித்து முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதற்குச் சமம் நாடி மூலம் அனைத்தையும் சட்டென அறிந்துகொள்வது’’ என்று சொல்லும் பாஸ்கரன், தான் நாடி பார்த்துச் சொல்லியவற்றை, ஒப்பீட்டு பார்க்கப் பரிசோதனைக் கூடங்களுக்குச் சென்று பரிசோதனை பார்த்து வரவும் பரிந்துரை செய்கிறார். நாடிப்பார்த்துச் சொல்லியவையும் பரிசோதனை அறிக்கையும் துல்லியமாக உள்ளதைக் கண்டு, மருத்துவம் பார்க்க வந்தவர்கள் வியந்து போகிறார்கள். சரி, ஒரு மனிதன் நோயில்லாமல் நலமாக வாழ நீங்கள் கூறும் வழிமுறைகள் என்ன? என்று கேட்டோம், சித்த மருத்துவர் பாஸ்கரனிடம் கேட்டோம். அவர் சொல்லிய அற்புதமான பதிலை அடுத்தப் பகுதியில் பார்ப்போம். சித்த மருத்துவர் பாஸ்கரனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளையும் இங்கே, குறிப்பிடுங்கள். அவரிடம் பதில் பெற்று வெளியிடுகிறோம்.

விகடன் 23 Nov 2023 10:00 am

Doctor Vikatan: சன் ஸ்கிரீன் உபயோகித்தால் முகத்தில் வெள்ளைப் படிமம் வருவது ஏன்... தீர்வு உண்டா?

Doctor Vikatan: நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். காலையில் வேலைக்குக் கிளம்பும் முன் சன் ஸ்கிரீன் உபயோகிக்கிறேன். அதன் பலன் சில மணி நேரம்தான் நீடிக்கும் என்றும்  குறிப்பிட்ட இடைவேளையில் மீண்டும் மீண்டும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்களே... அது உண்மையா? சன் ஸ்கிரீன் உபயோகித்தால் முகத்தில் வெள்ளைப் படிமம் தங்காமல் இருக்க என்னதான் தீர்வு? வீட்டுக்குள் இருக்கும்போதும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்கிறார்களே... அது தேவையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா Doctor Vikatan: கீரை சமைக்கும் போது சத்துகள் வீணாகாமல் தடுப்பது எப்படி..? 'வீட்டுக்குள்ளேயே இருக்கிறேன். எனக்கெதற்கு சன் ஸ்கிரீன்' என்ற கேள்வி பலருக்கும் உண்டு. உண்மையில் வீட்டுக்குள்ளும் நிறையவே சூரியவெளிச்சம் வரும். அது பலருக்கும் தெரிவதில்லை. உதாரணத்துக்கு ஒரு புத்தகம் படிக்க லைட் தேவைப்படாத அளவுக்கு வீட்டுக்குள் வெளிச்சம் இருக்கிறது என்றாலே, அங்கே சூரிய ஒளி அதிகமிருப்பதாகவே அர்த்தம். அந்தச் சூழ்நிலையில் நீங்கள் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டியது மிக அவசியம். வீட்டுக்குள் இருக்கும்போது குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கொரு முறை சன் ஸ்கிரீன் உபயோகிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம் ஒருமுறை உபயோகித்தால் போதுமானது.  வெளியே செல்வோர், குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை சன் ஸ்கிரீனை ரீ அப்ளை செய்ய வேண்டும்தான்... ஆனால் நடைமுறையில் அது பலருக்கும் சாத்தியமில்லை. வீட்டில் இருப்பதால் சன் ஸ்கிரீன் தேவையில்லை என பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல.... துணி உலர்த்த, தோட்டத்தைப் பராமரிக்க, அருகிலுள்ள கடைக்குச் செல்ல.... இப்படி ஏதேனும் காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வருவோம்.  சன்ஸ்கிரீன் Doctor Vikatan: காய்ச்சல் குணமானாலும் விடாமல் விரட்டும் இருமல்... என்னதான் தீர்வு? காலையில் 7 மணிக்கு வாக்கிங் செல்வதானால்கூட சன் ஸ்கிரின் தடவுவது அவசியம். அதை மறுபடி மறுபடி தடவிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. அதுவே நீங்கள் மிகவும் இருட்டான அறையில்தான் இருப்பீர்கள் என்றால் அந்தச் சூழலில் சன் ஸ்கிரீன் தேவைப்படாது. சன் ஸ்கிரீனில் சேர்க்கப்படும் ஸிங்க்தான் நீங்கள் சொல்கிற அந்த வெள்ளைப் படலத்துக்குக் காரணம். கிரிக்கெட் வீரர்கள் பலரும் முகத்தில் வெள்ளையாக ஏதோ தடவிக் கொண்டு விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். அது சன் ஸ்கிரீன்தான். அவர்களுக்கு அந்த அளவுக்கு பாதுகாப்பு தேவை என்பதுதான் காரணம். வௌளைப்படலம் வருவது பிடிக்கவில்லை என்றால் 'டின்ட்டடு சன் ஸ்கரீன்' உபயோகிக்கலாம். அதில் அந்தப் பிரச்னை இருக்காது. மாய்ஸ்ச்சரைசர் Doctor Vikatan: கிளாஸ் ஸ்கின் (Glass skin) எனப்படும் கண்ணாடி சருமம் எல்லோருக்கும் சாத்தியமா? சன் ஸ்கிரீன் உபயோகிக்கும் முன் மாய்ஸ்ச்சரைசர் உபயோகித்துவிட்டு அதன் மேல் சன் ஸ்கிரீன் உபயோகிப்பது சரியானது. காலையில் சன் ஸ்கிரீன் தடவியாயிற்று.... மறுபடி இடையில் வெளியே செல்ல வேண்டிய நிலையில் இன்னொரு முறை முகத்தைச் சுத்தப்படுத்தி சன் ஸ்கிரீன் உபயோகிப்பது சாத்தியமில்லை என்பவர்கள், பவுடர் வடிவ சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 23 Nov 2023 9:00 am

இந்திய இளைஞர்களின் திடீர் மரணங்கள்... கோவிட் தடுப்பூசி காரணமா?! - விளக்கும் ஆய்வுத் தகவல்!

புதிதாக தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்போது அதனை செலுத்திக் கொள்ளலாமா வேண்டாமா என்ற அச்ச உணர்வு பெரும்பாலான மக்களிடையே எழும். இதுதான் கோவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போதும் நிகழ்ந்தது. இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு விடுமோ, உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்து உண்டாகுமோ என்றெல்லாம் மக்கள் அச்சப்பட்டனர். சிலர் அரசின் கட்டாய அறிவிப்பு வரும் வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். இன்று வரை கூட சிலர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கலாம்.  Corbevax vaccine for COVID-19 (Representational Image) கண்ணீர் துடைக்க; கட்டிப்புடி வைத்தியம் செய்ய ஆண்கள் வாடகைக்கு... ஜப்பானில் புதிய சேவை..! 2021 அக்டோபர் 1 முதல்  2023 மார்ச் 31-க்கு இடைப்பட்ட காலத்தில் 18 - 45 வயதுடைய இளைஞர்கள் விவரிக்கப்படாத காரணங்களால் திடீரென இறந்தனர். இந்த இறப்புகள் கோவிட் தடுப்பூசிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டன.  கோவிட்-19 தடுப்பூசிகள் 2020-ல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் (ICMR), 2021 முதல் ஆரோக்கியமான இளைஞர்களிடையே அதிகரித்த திடீர் இறப்பு குறித்து ஆய்வு செய்தது. இறந்த நபர்களின் 729 கேஸ்களும் ஆய்வு செய்யப்பட்டன.     பெரிய ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள 47 மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன. ஓராண்டு, 5 மாத காலம் நீடித்த இந்த ஆய்வு முடிவுகள் நவம்பர் 21 வெளியிடப்பட்டன.  அதில் கோவிட் தடுப்பூசியால் இளைஞர்களிடையே திடீர் மரண அபாயம் அதிகரிக்கவில்லை, இதற்கு மாறாக திடீர் மரணம் ஏற்படும் அபாயம் குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஆய்வின் முடிவில், ``கோவிடின் இரண்டு தடுப்பூசிகள் விவரிக்கப்படாத திடீர் மரணத்தின் முரண்பாடுகளைக் குறைத்து இருக்கின்றன. அதே நேரத்தில் ஒரு தடுப்பூசியில் இந்த நிலை இல்லை.  கோவிட் தடுப்பூசியைத் தவிர்த்து இளைஞர்களின் விவரிக்க முடியாத திடீர் மரணத்துடன் தொடர்புடைய சில காரணிகள் உள்ளன. covid death RT-PCR சோதனையைவிட துல்லியமாக கோவிட் தொற்றைக் கண்டறியும் மோப்ப நாய்கள்; ஆய்வு சொல்லும் தகவல் என்ன?! கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, திடீர் மரணங்களின் குடும்ப வரலாறு,  இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன் மது அருந்துவது, மருந்துகளின் பயன்பாடு, இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பழக்கமில்லாத தீவிர செயல்பாடு போன்றவை திடீர் மரணம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளன. இளைஞர்களின் திடீர் மரண விளைவுகளில் வாழ்க்கை முறை, உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளின் பங்கை இது வலுப்படுத்துகிறது. இளைஞர்களின் திடீர் மரண காரணத்திற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் இடையே உள்ள இடைவெளியை இது காட்டுகிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசி குறித்து பயம் கொள்ள வேண்டாம்!

விகடன் 22 Nov 2023 5:51 pm

கண்ணீர் துடைக்க; கட்டிப்புடி வைத்தியம் செய்ய ஆண்கள் வாடகைக்கு... ஜப்பானில் புதிய சேவை..!

அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு மனஅழுத்தம் உண்டாவதுண்டு. இதனைச் சரிசெய்ய ஜப்பானின் டோக்கியோ நகரில் புதிய அணுகுமுறையைக் கையாள்கிறார்கள்.  அதாவது ஹேண்ட்சம் வீப்பிங் பாய்ஸ் (Handsome Weeping Boys) என குறிப்பிடப்படும் அழகான ஆண்களை Ikemeso Danshi என்ற சேவையின் மூலம் அழைக்கிறார்கள். Ikemeso Danshi என்பதற்கு `அழுகின்ற நல்ல தோற்றமுடைய மனிதர்கள்' என்று பொருள். மனஅழுத்தம் ``15 சிகரெட்டுகளை விட மோசமானது தனிமை எச்சரிக்கும் மருத்துவர்... தீர்வு என்ன? இதற்கான ஆன்லைன் தளத்தில் தங்களுக்கு வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுத்து 7,900 யென் செலுத்துகிறார்கள். அதாவது இந்திய மதிப்பில் 4,400 ரூபாய்.  இந்த ஆண்கள் புலம்பல்களையும் மனவருத்தங்களையும் கேட்பது மட்டுமன்றி கண்ணீரைத் துடைக்கவும், அவர்களுக்காக கண்ணீர் வடிக்கவும் செய்கிறார்கள். கண்ணீரைத் துடைக்கும் இந்தச் சேவை டோக்கியோவின் பெரும்பாலான அலுவலகங்களில் பிரபலமடைந்து வருகிறது.  இந்தச் சேவையை நிறுவிய ஹிரோகி டெராய், ``உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும்போது அதனை பொறுத்துக் கொள்வதை மட்டும் செய்யாமல், தழுவி அரவணைக்கப்பட வேண்டும் என நினைக்கிறன். ஜப்பானியர்கள் வீட்டில் மட்டுமல்ல, பணியிடத்திலும் கண்ணீர் சிந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் வேலையில் அழும்போது, மிகவும் எதிர்மறையான கருத்து உருவாகலாம். சக ஊழியர்கள் கூட உங்களை அணுகத் தயங்கலாம். அழுகை (சித்தரிப்பு படம்) Doubt of common man: தீயணைப்பு வாகனங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்த முடியுமா? தொழில்சார் சூழல்களில் பாதிப்பை ஏற்றுக்கொள்வது எமோஷனல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். இது பொது இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் உள்ள சமூக சிக்கல்களையும் எதிர்கொள்ளும்’’ என்று கூறியுள்ளார். இது தவிர்த்து பாலியல் இல்லாத அரவணைப்பு சேவைகள் மற்றும் வாடகை நண்பர் சேவைகள் போன்ற வித்தியாசமான சேவைகளும் டோக்கியோவில் அதிகரித்து வருகின்றன.  இது போன்று நீங்கள் கேள்விப்பட்ட வித்தியாசமான சேவைகள் உண்டா?... கமென்ட்டில் கூறுங்கள்!

விகடன் 22 Nov 2023 5:30 pm

``துப்பட்டா இல்லாம போனா, கேர்ள்ஸே என்னைப் பார்த்து சிரிச்சாங்க'' -காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

தன்னுடைய மார்பக அளவு தொடர்பான பெருமிதமோ அல்லது மன வருத்தமோ பெரும்பான்மை பெண்களிடம் இருக்கிறது. அதன் காரணமாகவே அந்த உறுப்பில் சிறியதாக ஒரு பிரச்னையோ அல்லது மாற்றமோ இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்கள் தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இது போன்றதொரு கேஸ் ஹிஸ்டரியை செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் சொல்லக் கேட்போமா..? Sexologist Kamaraj விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! - காமத்துக்கு மரியாதை - 12 ''மார்பக அளவு காரணமாக மட்டுமல்ல, மார்பக வடிவத்தில் ஏற்படும் வித்தியாசம் காரணமாகவும் பல பெண்கள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மார்பகம் சிறியதாக இருக்கிறது என்கிற பிரச்னையுடன் வருபவர்களுக்கு, 'மார்பக அளவுக்கும் திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி விடுவேன். ஒரு மார்பகத்தைவிட இன்னொரு மார்பகம் சற்று பெரிதாகவோ அல்லது சற்று சிறியதாகவோ இருக்கிறது என்று சிகிச்சைக்கு வருகிற பெண்களையும்கூட 'வெளிப்படையாகத் தெரிகிற அளவுக்கு இல்லையென்றால் எந்தச் சிகிச்சையும் தேவையில்லை' என்று கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி விடுவேன். ஆனால், மார்பகங்களுக்கிடையேயான வித்தியாசம் பெரியளவில் இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களை சமாதானப்படுத்துவது கடினம். அவர்களுக்குத் தேவை தீர்வு மட்டுமே... அந்தப் பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இரண்டு மார்பகங்களுக்கும் இடையிலிருந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது. அதன் காரணமாகவே அவர் பல வருடங்களாக திருமணத்தைத் தள்ளிப்போட்டு கொண்டே வந்திருக்கிறார். 'ஸ்கூல் டேஸ்ல லேசா தான் வித்தியாசம் தெரிஞ்சுது டாக்டர். வளர வளர சரியா போயிடும்னு வீட்ல எல்லாரும் சொன்னாங்க. நானும் அதை நம்பிட்டு நிம்மதியா இருந்தேன். தவிர, யூனிஃபார்ம்ல துப்பட்டா போடுறதால இந்த வித்தியாசம் பெருசா யாருக்கும் தெரியலை. ஆனா, காலேஜ் போறப்போ மார்டர்னா துப்பட்டா இல்லாம டிரெஸ் போட ஆரம்பிச்சேன். கூடப் படிக்கிற கேர்ள்ஸே என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சாங்க. அப்போ தான், என்னோட பிரெஸ்ட் வித்தியாசம் ரொம்ப வெளிப்படையா தெரியுதுங்கிறது எனக்குப் புரிஞ்சுது. அன்னிக்கு காலேஜ் பாத்ரூமுக்குள்ள போய் அழுதேன். அதுக்கப்புறம் ஷால் இல்லாம நான் டிரெஸ் பண்றதே இல்ல. இப்போ நான் வொர்க் பண்ணிட்டிருக்கேன். எப்பவாவது புடவை கட்டணும்னாலே பயமா இருக்கும். பிளவுஸ் தைக்கக் கொடுக்கிறப்போ பிரெஸ்ட் வித்தியாசம் டெய்லருக்கு தெரிஞ்சிடுமோன்னு பதற்றமா இருக்கும். இதுக்கு பயந்துகிட்டே கல்யாணத்தையும் தள்ளிப் போட்டுட்டே வர்றேன். எனக்கு ஹெல்ப் பண்ணுங்க டாக்டர்' என்று கண்கலங்கினார். Sex Education கணவனிடமே நிர்வாணத்துக்கு மனைவி `நோ' சொல்வது ஏன்? அவருக்குத் தேவை அறுவை சிகிச்சை. பெரிதாக இருக்கிற மார்பகத்தின் பகுதியில் சிறிய அளவில் கட் செய்து, சிறிதளவு கொழுப்புப்பகுதியை நீக்கித் தையலிட்டோம். இந்தப் பகுதியில் அறுவை செய்தால், வெளியே தெரியாது. பாலுறுப்புகள் தொடர்பான பிரச்னைகளுக்கும் தேவையான மருத்துவ தீர்வுகள் இருக்கின்றன. பிரச்னைகளை மனதில் வைத்துப் புழுங்கிக்கொண்டே இருக்காமல், திருமணத்தைத் தள்ளிப்போடாமல், மருத்துவ உதவியை உடனடியாக நாடுங்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 22 Nov 2023 4:08 pm

``15 சிகரெட்டுகளை விட மோசமானது தனிமைஎச்சரிக்கும் மருத்துவர்... தீர்வு என்ன?

தனித்து வாழ்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விவேக் மூர்த்தி என்ற மருத்துவர் தனிமை பற்றி சமர்ப்பித்த தனது அறிக்கையில், தனிமை என்பது மோசமான ஓர் உணர்வு. அது தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. இதயநோய், டிமென்ஷியா, பக்கவாதம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. தனிமை முதுமைக்கு மரியாதை -25 - முதுமையில் தனிமை… ‘முதலுதவிகளை’க் கற்போம், முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்! ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பை தனிமை உருவாக்குகிறது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக உருமாறி வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மருத்துவர் டெட்ராஸ் அதானோம், உலகம் முழுவதும் தனிமை என்பது உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. போதுமான சமூக தொடர்புகள் இல்லாதவர்கள் மனச்சோர்வு, தற்கொலை எண்ணம் போன்ற ஆபத்துகளில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். தனிமை ஆபத்தானதா, இதற்குத் தீர்வு என்ன என்பது பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பூர்ணசந்திரிகா. “ஜப்பானில் 2018-ம் ஆண்டு தனித்து வாழ்பவர்களின் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு அமைச்சர் பதவியும் உருவாக்கப்பட்டது. அந்த அளவுக்கு கண்காணிக்க வேண்டிய விஷயமாக தனிமை உள்ளது. Loneliness சின்னச் சின்ன ஆசை… பெரிய பெரிய துன்பம் | மகிழ்ச்சி - 8 மனிதன் ஒரு சமூக விலங்கு. பண்டைய காலம் முதல் மனிதன் கும்பலாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. கடந்த 10 வருடங்களாக மனநலம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தனிமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின்போதே மக்கள் தனிமைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். வயதானவர்கள் தனிமையாக இருக்கும்போது டிமென்ஷியா பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு 50% ஆக உள்ளது. மேலும் இதயநோய் போன்ற ரத்த நாள பிரச்னைகள் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் 30% அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தனிமை இதை உணர்ந்துவிட்டால்... உங்கள் கவலைக்கு விடுதலை கொடுத்து விடுவீர்கள்! | மகிழ்ச்சி - 5 தனிமை இரண்டு வகைப்படும். சூழ்நிலையினால் தனிமை படுத்தப்படுவது, மற்றொன்று மனநோயினால் ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது. இது தவிர, தானாக விரும்பி தனிமைப்படுத்திக்கொள்வது ஒரு வகை. முதல் வகையைப் பொறுத்தவரை அந்தச் சூழல் மாறினாலோ, சரியானாலோ சரியாகிவிடும். மனநோயினால் தனிமையில் இருப்பவர்களுக்கு அதற்கான சிகிச்சை எடுத்தால் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். தானாக விரும்பி தனிமைப்படுத்திக்கொள்வதை பற்றி கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். தனிமை சூரியக் கதிர் பருகு… நோயைத் தூர விரட்டு! | மகிழ்ச்சி - 3 இளம் தலைமுறையினர் தனிமைக்குத் தள்ளப்படுவதற்கு சமூக வலைதளங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாகத் திகழ்கின்றன. தனிமைமோசமான ஓர் உணர்வு. இது தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும். இதயநோய், மறதி, பக்கவாதம், மனச்சோர்வு, பதற்றம் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைகிறது தனிமை. தனிக்குடும்பம், 'லிவிங் டு கெதர்' போன்ற கலாசாரம் தற்போது இந்தியாவிலும் பரவலாகிவிட்டது. இவற்றினால் ஏற்படும் பிரச்னைகளைப் பார்த்து பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்வதைத் தேர்ந்தெடுக்கின்றனர். மனநல மருத்துவர் பூர்ணசந்திரிகா ஞானம் அடைவதற்கு அறிவு மட்டும் போதாது, வேறு ஒன்றும் வேண்டும்... என்ன அது?! | மகிழ்ச்சி- 1 தீர்வு என்ன? விரும்பித் தேர்ந்தெடுக்கும் தனிமையை சிகிச்சை மூலம் சரி செய்ய இயலாது. தாங்களாகவே அதிலிருந்து வெளியே வருவதற்கு முயல வேண்டும். எடுத்துக்காட்டாக, சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், விருப்பமான கிளப் அல்லது குழுக்களில் சேர்தல், ஒத்த சிந்தனை உடையவர்களுடன் நேரம் செலவிடுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். அப்போது தனிமை மெதுவாக விலகத் தொடங்கும். புதிய நபர்களைச் சந்திக்கும்போதும், புதிய விஷயங்களைக் காணும்போதும் தனிமை என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வர முடியும். கூடுதலாக, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல தூக்கம் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதால் தனிமையினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கலாம். இந்தப் பழக்கவழக்கங்கள் தற்கொலை, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது போன்ற எண்ணங்கள் வராமல் தடுக்கும். சமூகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். Counseling உதவியை நாடுவது தவறில்லை! தனிமையின் அலைகளால் தாக்கப்படும்போது யாரிடமாவது பேசுவது நல்லது - அது நண்பராக இருக்கலாம் அல்லது மனநல ஆலோசகராக இருக்கலாம். தனிமை ஒருவரை அழுத்தும்போது தகுந்த உதவியை நாடுவதில் தவறில்லை என்றார் அவர்.

விகடன் 22 Nov 2023 1:48 pm

Doctor Vikatan: கீரை சமைக்கும் போது சத்துகள் வீணாகாமல் தடுப்பது எப்படி..?

Doctor Vikatan: என் சிறு வயதில் கீரை வகைகளைத் திறந்து வைத்துச் சமைக்க வேண்டும் எனவும் அப்போது தான் அதில் உள்ள வேண்டாத அமிலங்கள் வெளியேறும் எனவும் படித்திருக்கிறேன். இப்போது அவற்றை குக்கரில் வெயிட் போட்டு சமைக்கும் முறை பற்றி பல சமையல் குறிப்புகளில் பார்க்கிறேன். கீரைகளை எப்படிச் சமைக்க வேண்டும்.... அவற்றின் நிறம் மாறாமலிருக்க என்ன வழி ? -meenakshi mohan, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்    கற்பகம் Doctor Vikatan: காய்ச்சல் குணமானாலும் விடாமல் விரட்டும் இருமல்... என்னதான் தீர்வு? கீரைகளைச் சமைக்கும்போது அவற்றிலுள்ள வைட்டமின் சி உள்ளிட்ட சில அத்தியாவசிய சத்துகள் இழக்கப்படும். எனவே அவற்றின் இழப்பைக் குறைக்கும்படி சமைக்க வேண்டியது அவசியம். கீரைகள் மட்டுமல்ல, புரொக்கோலி, லெட்டூஸ் போன்றவற்றை வேகவைக்கும்போது அவற்றிலுள்ள 50 சதவிகித வைட்டமின் சி இழக்கப்படும். வைட்டமின் சி என்பது நீரில் கரையும் தன்மை கொண்டது என்பதால் கொதிநிலையில் அந்தச் சத்தானது பறிபோகும் வாய்ப்புகள் மிக அதிகம். புரொக்கோலி Doctor Vikatan: சிறுநீர் கழிக்காமல் அழும் குழந்தை... சிறுநீர் துவார அடைப்புக்கு ஆபரேஷன்தான் தீர்வா? ஆவியில் வேகவைப்பதன் மூலம் கீரைகளில் உள்ள ஊட்டச்சத்துகளை ஓரளவு தக்கவைக்க முடியும். துளி உப்பு சேர்த்த சிறிதளவு வெந்நீரில் கீரைகளைச் சமைக்கலாம். கீரை வேக அதிக நேரம் எடுக்காது, சில நிமிடங்களில். அதாவது 3-5 நிமிடங்களில் வெந்து மென்மையாகிவிடும். மிகக்குறைந்த அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் கீரைகளை வதக்கி எடுப்பது இன்னொரு முறை. இந்த முறையிலும் கீரை மிருதுவாக வெந்துவிடும். `ஃபுட் ரெவல்யூஷன் நெட்வொர்க்'கின் தகவலின்படி, கீரைகளை ஆவியில் வைத்துச் சமைப்பதன் மூலம் அவற்றிலுள்ள ஆக்ஸாலிக் அமிலம் 5 முதல் 53 சnlk'தவிகிதம்வரை குறைவதாகத் தெரியவந்திருக்கிறது.  தவிர அந்த முறையில் சமைப்பதால் கீரைகளில் உள்ள ஃபோலேட் சத்து (டிஎன்ஏ உற்பத்திக்கு உதவக்கூடிய ஒருவகை பி வைட்டமின்) தக்க வைக்கப்படுகிறது என்று தெரிகிறது. கீரை சமையல் Doctor Vikatan: நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்தால் சளி பிடிப்பதேன்? கொதிக்கும் நீரில் கீரைகளை சில நொடிகள் போட்டு வைத்து, உடனே குளிர்ந்த நீரில் கழுவுவதும் ஆக்ஸலேட் அளவை கிட்டத்தட்ட 40 சதவிகிதம்வரை குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. காய்கறிகளில் உள்ள சத்துகளைத் தக்கவைக்க அவற்றை மூடிவைத்தே சமைக்க வேண்டும். அது சமைக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.  சமைக்கும் உணவின் நிறம், மணம் மற்றும் ஊட்ட்ச்சத்துகளையும் வெளியேறாமல் காக்கும். அதுவே கீரைகளை மூடிவைத்துச் சமைப்பதன் மூலம், அவற்றிலுள்ள அமிலங்களின் செறிவை அதிகரிப்பதுடன், நிற மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். ஹோட்டல்கள் மற்றும் கேட்டரிங் சர்வீஸில் கீரையின் நிறத்தைத் தக்கவைக்க சமைக்கும்போது பேக்கிங் சோடா சேர்ப்பதுண்டு. அது மிகவும் தவறானது.  கீரை அவள் பதில்கள் 71: 700 மில்லி ஜூஸ்... அடிக்கடி குடிப்பது ஆரோக்கியமானதா? பேக்கிங் சோடா சேர்ப்பதால் காய்கறிகள், கீரைகள் மென்மையாக வேகும். ஆனால் அவற்றின் உண்மையான வாசனையை மாற்றி, அவற்றிலுள்ள தயாமின் சத்தையும், வைட்டமின் சி சத்தையும் அழித்துவிடும். கீரையின் நிறத்தைத் தக்கவைக்க, சமைக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும். ஆவியில் வேகவைப்பது, ஸ்டிர் ஃப்ரை முறையில் சமைப்பது போன்றவற்றைப் பின்பற்றலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 22 Nov 2023 9:00 am

Doctor Vikatan: காய்ச்சல் குணமானாலும் விடாமல் விரட்டும் இருமல்... என்னதான் தீர்வு?

Doctor Vikatan: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டதில் காய்ச்சலும் ஜலதோஷமும் குணமாகிவிட்டன. ஆனால் ஒரு மாதமாகியும் இருமல் மட்டும் விட்டபாடாக இல்லை. இருமல் மருந்து எடுத்துக்கொண்டும் பலனில்லை. இதற்கு என்ன காரணம்....  இருமலுக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் கடல்காற்று 12 மணியிலிருந்தே வீச ஆரம்பிக்கிறது. அதனால் நகரத்தில் குளிர்ச்சியான ஒரு சூழல் நிலவுகிறது. சூடான காற்றுதான் மேல்நோக்கிப் போகும். இப்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதாலும், தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரித்திருப்பதாலும் பகல் 12 மணிக்கு மேல் தூசு, வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசு போன்றவற்றின் காரணமாகவும் காற்று மேல்நோக்கிப் போகாமல் கீழேயே தங்கி இருக்கும்.  போக்குவரத்து நெரிசல் `தற்போது பரவிக்கொண்டிருக்கும் காய்ச்சல்... A to Z தகவல்கள்.'Dr. Arunachalam Explains குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் சிக்னலில் நிற்போருக்கு கிட்டத்தட்ட வாயு மண்டலத்தில் நிற்பது போன்றுதான் இருக்கும். வெயில் காலத்தில் அதே போக்குவரத்து நெரிசலில் நிற்கும்போது புகை, காற்றெல்லாம் மேலே போய்விடும். மழை மற்றும் குளிர்காலங்களில் அந்தக் காற்றானது கீழேயே சுற்றிக்கொண்டிருக்கும். ஏற்கெனவே வாகனங்கள் விட்டுச்சென்ற புகையும் தூசும் மாசும் அங்கேயேதான் இருக்கும்.  எனவே வாகனங்களில் பயணிப்போர் மாஸ்க் அணிவது, ஃபில்டர் வைத்த ஹெல்மெட் அணிவது போன்றவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்யாததால் காற்றின் தாக்கம் காரணமாகவே நீண்டகால இருமலும் சளியும் நீடிக்கின்றன. 'ஈஸ்னோஃபிலிக் காஃப்' (eosinophilic cough) என்று சொல்லக்கூடிய இருமல் ஒவ்வாமையால் ஏற்படுவது. இதற்கென தனியே மருந்துகள் இருக்கின்றன. மாஸ்க் Doctor Vikatan: நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்தால் சளி பிடிப்பதேன்? குடும்பநல மருத்துவர் பெரும்பாலும் 3 நாள்களுக்குத்தான் மருந்துகளைப் பரிந்துரைப்பார். அதன் பிறகு காய்ச்சல் குணமாகிவிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதாவது சளியும் காய்ச்சலும் போய்விட்டால், உங்களுடைய கிருமித்தொற்று பாதியாகக்  குறைந்திருக்கக்கூடும். ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரிடம் செல்வோருக்கு 3-4 நாள்களிலேயே கிருமித்தொற்று முற்றிலும் குணமாகிவிடும்.  சிலருக்கு இருமல் தொடரலாம். இருமும்போது சளி சேர்ந்து வந்தால் தொற்று முற்றிலும் குணமாகவில்லை என்றே அர்த்தம்.   இருமல் மருந்து Doctor Vikatan: அதிகாலையில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது ஏன்... தூக்கம் தவிர்த்தால் தப்பிக்கலாமா? அந்த இருமல் தானாகச் சரியாகும் என்று அலட்சியமாக இருப்பதோ, எப்போதோ மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்தை மீண்டும் எடுத்துக்கொள்வதோ மிகவும் தவறு. இருமல் தொடரும் பட்சத்தில் மீண்டும் மருத்துவரை சந்தித்து அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சை எடுப்பதுதான் தீர்வு. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 21 Nov 2023 9:00 am

Doctor Vikatan: சிறுநீர் கழிக்காமல் அழும் குழந்தை... சிறுநீர் துவார அடைப்புக்கு ஆபரேஷன்தான் தீர்வா?

Doctor Vikatan: கடந்த இரண்டு தினங்களுக்கு முன் என்னுடைய இரண்டு வயது ஆண் குழந்தை மாலை தூங்கி எழுந்ததும் ஒரே அழுகை. சமாதானப்படுத்த முடியாமல் தவித்தேன். இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் கழிந்த பிறகே அழுகை நின்றது. இதே நிலை அடுத்த நாளும் தொடரவே அவனை  மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர், 'ஆண் குறியில் சிறுநீர் வரும் கழிக்கும் இடத்தில்  இருக்கும் துவாரம் சிறியதாக இருக்கும் அல்லது அடைப்பு இருக்கலாம்' என்று கூறி சில மருந்துகளைக் கொடுத்தார். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் குழந்தையின் ஆண்குறியில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்கிறார். அவர் சொல்வது உண்மையா... அறுவை சிகிச்சை இல்லாமல் இந்தப் பிரச்னையை குணப்படுத்த முடியாதா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ் எஸ். ஸ்ரீநிவாஸ் Doctor Vikatan: நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்தால் சளி பிடிப்பதேன்? குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது அழுவது அல்லது சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்படுவது அல்லது சிறிது சிறிதாக சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்னைகள் சிறுநீர்ப்பாதையிலோ, சிறுநீர்ப்பையிலோ அல்லது சிறுநீரகங்களிலோ கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். எனவே நீங்கள் குழந்தைக்கு சிறுநீர்ப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அந்தப் பரிசோதனைகளின் மூலம் கிருமித் தொற்று உள்ளதா என்றும், அப்படி இருந்தால் எந்த இடத்தில் தொற்று உள்ளது என்றும், எந்த வகையான கிருமித்தொற்று என்றும் தெரிய வரும். சிறுநீர் அந்தப் பரிசோதனை முடிவுகளை வைத்து, பிரச்னைக்கு எந்த ஆன்டிபயாடிக் கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் முடிவுசெய்து பரிந்துரைப்பார். ஆண்குறியின் முன்தோல் (foreskin) துவாரம் சிறியதாக இருப்பது, அடைப்பு  (Phimosis)   ஏற்படவும், சிறுநீர்க் கிருமித் தொற்று ஏற்படவும், பொதுவான காரணமாக இருக்கும்.  அறுவை சிகிச்சை Doctor Vikatan: இரண்டு வயதுக் குழந்தையின் பேச்சிலும் வளர்ச்சியிலும் மந்தநிலை... சிகிச்சை தேவையா? இந்தப் பிரச்னையை முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை (Circumcision) எனப்படும் எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். அடிக்கடி சிறுநீர்த் தொற்று பிரச்னை ஏற்பட்டாலோ, அடைப்பு  (Tight Phimosis) அதிகமாக இருந்தாலோ மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 20 Nov 2023 9:00 am

பயமும் வேண்டாம்... அலட்சியமும் வேண்டாம்... காமத்துக்கு மரியாதை| சீஸன் 4 - 121

இன்றைக்கு உடல்நலம் மற்றும் மருத்துவம் தொடர்பாக கிட்டத்தட்ட எல்லோருக்குமே நிறைய விஷயங்கள் தெரிகின்றன. எல்லாம் கூகுள் டாக்டர் உபயம்தான். ஆனால், அவர்களுக்குத் தெரிந்த தகவல்கள் அத்தனையும் நூறு சதவிகிதம் உண்மை என்று சொல்ல முடியாது. நாள்பட்ட இருமல் என்று டைப் செய்தால், 'தொண்டை புற்றுநோயாக இருக்கலாம்' என்று பயம் காட்டி விடுகிறது கூகுள். இதனால் இல்லாத பிரச்னைகளை இருப்பதாக நினைத்துக்கொண்டு, பலரும் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். Dr. Kamaraj வளைந்த ஆணுறுப்பு; இயல்பானதா, மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? #VisualStory ''நீரிழிவு வந்தவர்களுக்கு ஆணுறுப்பு விறைப்புத்தன்மையிலும் பிரச்னை வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், அது நீரிழிவு வந்த அனைவருக்குமே வந்துவிடாது. ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்காதவர்களுக்கே வரும். தவிர,  நீரிழிவு வந்தவர்களுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை வருவதற்கு 5 வருடங்கள் வரை ஆகும். இது தெரியாமல் பல ஆண்களும் பயந்துகொண்டிருக்கிறார்கள். அந்த ஆணுக்கு 35 வயதுதான். டயாபடீஸ் ஆரம்பநிலை என்று ரத்தப்பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் பற்றி கூகுளில் தேடியிருக்கிறார்கள். அது, '60 சதவிகிதம் நீரிழிவு நோயாளிகளுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை வரும்... ஆண்மை குறைந்துபோகும்...' என்று சொல்லியிருக்கிறது. அவ்வளவுதான், தனக்கும் ஆண்மைக்குறைபாடு வரப்போகிறது என்று பயப்பட ஆரம்பித்திருக்கிறார். 'செக்ஸ் வெச்சுக்கிட்டாதானே இது தெரியும்' என்று யோசித்து தாம்பத்திய உறவையும் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். விளைவு, நீரிழிவால் மட்டுமல்லாமல் பயம் காரணமாகவும் விறைப்புத்தன்மையில் பிரச்னை வர ஆரம்பித்திருக்கிறது. நீரிழிவு வந்தவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், அவர்களுக்கு ஆண்மைக்குறைவு உண்மையிலும் நிகழலாம். உளவியல் பிரச்னையாலும் நிகழலாம். சிலருக்கு இந்த இரண்டு காரணங்களாலும் நிகழலாம். அந்த ஆணுக்கு விறைப்புத்தன்மைக்கான மருந்து, மாத்திரைகளோடு பயத்தைப் போக்கும் ஆலோசனைகளும் தந்து அனுப்பினேன். Sex Education கர்ப்பிணி மனைவியுடன் உறவு கொள்ளலாமா? - காமத்துக்கு மரியாதை S2 E20 இன்னோர் ஆண். அவருக்கும் நீரிழிவு இருக்கிறது. 'நான் வாக்கிங் போறேன்... டயட் ஃபாலோ பண்றேன். நீரிழிவு என்னை ஒண்ணும் செய்யாது' என்று தைரியமாக இருந்திருக்கிறார். விளைவு, 45 வயதில் பக்கவாதம் வந்து, உடனடியாக சிகிச்சை செய்ததால் ஓரளவு நடமாட்டத்துடன் இருக்கிறார். 50 வயதில் ஆண்மைக்குறைவு என்று என்னிடம் வந்தார்.  சிகிச்சையும், ஆலோசனையும் தந்து அனுப்பினேன். நீரிழிவைப் பொறுத்தவரை அதிகப்படியான பயமும் தேவையில்லை... அலட்சியமும் தேவையில்லை... விறைப்புத்தன்மையில் பிரச்னை வந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், விறைப்புத்தன்மைக்கான மாத்திரைகள் ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் என்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது, ரத்த அழுத்தம் வராது, பக்கவாதம் வராது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 19 Nov 2023 6:00 pm

``எங்கள் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் இதுதான்..! - 100வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்..!

இங்கிலாந்தில் உள்ள இரட்டை சகோதரிகள் தங்களின் 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர் நகரத்தில் வசித்து வரும் ஆனி பிரௌன் மற்றும் புளோரன்ஸ் பாய்காட் இருவரும் இரட்டை சகோதரிகள். இவர்கள் சமீபத்தில் தங்களது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். தி ஃபிர்ஸ் குடியிருப்பு இல்லத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், ஐந்து தலைமுறையினர் சூழ குடும்பத்தினர் நண்பர்கள் என அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.   cake இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திய `பார்பி' திரைப்படம் - எப்படி தெரியுமா?! #barbie பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பழைய நினைவுகளை அசைபோட்ட பிரௌன், ``எங்களது அப்பாவால் கூட எங்களிடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. அவர் இந்த விஷயத்தில் நம்பிக்கையற்றவராக இருந்தார்.  நாங்கள் மிகவும் நெருக்கமாக எப்போதும் ஒன்றாகவே இருந்தோம், ஒருவர் இல்லாமல் மற்றவர் இருந்தது இல்லை. எனக்கு 50 வயதாகும் போது எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் உணர்கிறேன். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. தொடங்கிய செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள், சீக்கிரமாகவே உறங்கச் சென்று விடுங்கள்... இதுவே நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் ஊர்ந்து கொண்டே பல ஆண்டுகளைக் கடந்து வருகிறோம். இப்போது நூறுக்கு வந்திருக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.    Twins (Representational Image) மூன்று பிள்ளைகளின் தொடர் மரணம்... இழப்பை மறக்க 1,609 கி.மீ சைக்கிள் பயணம் செய்த அம்மா! புளோரன்ஸ் பாய்காட்டின் மகள் கேத்தி லிண்ட்சே கூறுகையில், ``ஐந்து மகன்கள் மற்றும் ஐந்து மகன்கள் பிறந்த குடும்பத்தில், இவர்கள் இரட்டையர்கள். அவர்கள் இளமையாக இருந்தபோது முற்றிலும் ஒரே மாதிரியாக இருந்தார்கள். அவர்களது குரலும் ஒருபோலவே இருக்கும்’’ என்று கூறியுள்ளார். 100 வயது என்பது வெறும் வயது மட்டுமல்ல. அது வாழ்வில் அவர்கள் பெற்ற கோடி அனுபவங்களும் கூட. அனுபவத்திற்கு வயது 200... வாழ்த்துவோம்!

விகடன் 18 Nov 2023 7:58 pm

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா... மணமகள்களுக்கான சிறப்பு ஸ்கின் கேர் ரொட்டீன்..!

நம் வீட்டில் ஒருவருக்கு கல்யாணம் என்று தெரிந்தாலே போதும், புதுச் சேலை எடுப்பதிலிருந்து, ஃபேஷியல் செய்வது வரை அனைத்தும் பெர்ஃபெக்ட்டாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம், இல்லையா! அப்போது மணமேடையில் அமரப்போகும் கல்யாணப் பெண் ஒரு கதாநாயகியாக மிளிர எவ்வளவு மெனக்கெடுவாள்…? வாழ்நாள் முழுவதும் நம் நினைவில் இருக்கப்போகும் நாளல்லவா ஒருவரின் திருமண நாள். பார்வைகள் முதல் பரிகாசங்கள் வரை அனைத்துமே நூறு வருடங்கள் ஆனாலும் மறக்காதே. அப்படி இருக்க உங்கள் துணைவரின் கண்களுக்கு நீங்கள் தேவதையாக காட்சி தர வேண்டாமா!? ஸ்கின் ஃபாஸ்டிங் ஹேர் கட் பண்ணப் போறீங்களா கேர்ள்ஸ்? லாங்கா... ஷார்ட்டா...மீடியமா... உங்க சாய்ஸ் எது? கல்யாணத்துக்கு தேதி குறித்து விட்டாலே, அப்போதிலிருந்து உங்களின் உடல்நிலை, தலைமுடி, சரும மேன்மை என அனைத்திலும் கூடுதல் கவனம் கொள்ளவேண்டியது அவசியம். குறிப்பாக, உங்களின் சருமத்தை மெருகேற்ற உங்கள் கல்யாணத்திற்கு 6 மாதங்களுக்கு முன்பே அதற்கான பராமரிப்பு நடைமுறைகளை முறையாகச் செய்யத் தொடங்கியிருக்க வேண்டும். காரணம், கல்யாணம் நெருங்கும்போது நாம் செய்யும் பிரைடல் ஃபேஷியலின் முழுப் பலனை பெறுவதற்கு, முன்கூட்டியே கடைப்பிடிக்கப்படும் பராமரிப்பு வழிமுறைகளும் நமக்கு கைகொடுக்கும். வேகமே விவேகம்: முதற்கட்டமாக, உடனே ஒரு சரும மருத்துவரை அணுகித் தனிப்பட்ட முறையில், உங்களின் சரும வகை என்ன, சருமத்தில் இயற்கையாகவே இருக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர்களுடன் இணைந்து உங்களுக்கான ஸ்கின் கேர் ரொட்டீனுக்கான கால அட்டவணையை உருவாக்க வேண்டும். மேலும், அவர்கள் பரிந்துரை செய்யும் கிளென்சர்கள், மாய்ஸ்ச்சரைசர்கள், சீரம்களையே உபயோகப்படுத்தவேண்டும். பளிச் சருமம் சருமம், கேசம்... உள்ளிருந்தே ஊட்டமளிக்கும் உணவுகள்! பளிங்குபோல் பளிச் சருமம் சாத்தியமா? உங்கள் சருமத்தின் தன்மையை மேம்படுத்த, வெறும் வெளிப்பூச்சுகள் மட்டுமே போதாது. உணவு முறை, உடலின் செயல்பாடு, வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியம். அத்துடன், மருத்துவர்கள் பரிந்துரை செய்த சருமப் பராமரிப்பு பொருள்களை தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சருமத்தைத் துன்புறுத்தும் கெமிக்கல்ஸ் அற்ற கிளென்சரை தேர்வு செய்து, நாளுக்கு இரண்டு முறை (காலை-மாலை) முகத்தை சுத்தம் செய்யவும். முகத்தை கிளென்சரை கொண்டு சுத்தம் செய்த பிறகு, முகத்தின் டோனரை தடவவேண்டும், அதற்கு பின் மாய்ஸ்ச்சரைசர் தடவ வேண்டும், இதன் மூலம் முகத்தில் ஈர்ப்பதத்தைத் தக்கவைக்க முடியும். மேலும், உங்களின் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதற்கு வாரம் 2 முறை முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளலாம் அல்லது பால், கடலைமாவு போன்ற வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே சில பராமரிப்பு வழிமுறையை மேற்கொள்ளலாம். குறிப்பாக, வெளியே செல்லும்போது சன்ஸ்க்ரீனை உபயோகப்படுத்த மறந்துவிடாதீர்கள். முகத்தின் பொலிவை மேலும் கூட்டுவது எப்படி? நேரம் தவறாமல், முகத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு 2-3 முறை கழுவ வேண்டும். இதுவே, உங்கள் முகத்திலிருக்கும் மாசை அகற்றி, முகத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவும். கூடுதலாக, ஃபேஸ் சீரம் அல்லது எண்ணெயைக் கொண்டு முகத்தைத் தொடர்ந்து மசாஜ் செய்வதன் மூலம், முகத்தில் ரத்த ஓட்டம் பெருகி, சரும செல்கள் சீராகி முகம் பொலிவு பெரும். வைட்டமின்-C, ரெட்டினொல் (Retinol), நியாசினமைட் (Niacinamide), ஆல்பா- ஹைட்ராக்ஸி ஆசிட் (alpha-hydroxy acids) அடங்கிய சருமப் பராமரிப்பு பொருள்களை உபயோகப்படுத்துவதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் மறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் காட்சி தரும். அதோடு, முகத்தின் நிறம் சீரடையும். நீங்கள் முதல் முறை இத்தகைய பொருள்களை சருமத்தில் தடவப்போகும் பட்சத்தில், பேட்ச் டெஸ்ட் (Patch test) செய்தபின் அந்தப் பொருளை வாங்குவது நல்லது. சருமப் பொலிவு... ஹேர் டை, ஹேர் கலரிங் செய்யும்போது... இவற்றில் எல்லாம் கவனம்! தூக்கம் முக்கியம் பிகிலு! கல்யாணத் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது, தலைக்கு மேல் ஆயிரம் வேலைகள் இருக்கின்றன என்றாலும், குறைந்தது 7-8 மணி நேரமாவது கட்டாயம் உறங்க வேண்டும். ஒருவரின் உடல்நலனையும் மன நலனையும் இணைக்கும் ஒரே துடுப்பு... தூக்கம் மட்டுமே. சீரான தூக்கம் உடலையும் உள்ளத்தையும் எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆழ்ந்த உறக்கம் பெறுவதற்கு, உறங்கும் முன் தியானம் செய்யலாம், வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம், அல்லது அமைதியான மெட்டு பாடல்களைக் கேட்கலாம். ஆழமான சருமப் பிரச்னைகள் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆழமான சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள், சரும மருத்துவரின் பரிந்துரைக்கு இணங்க, அட்வான்ஸ்டு ஃபேஷியல், கெமிக்கல் பீல், சருமத்திற்கான லேசர் சிகிச்சைகள், மைக்ரோடெர்மாப்ரேஷன் (Microdermabrasion) போன்ற சிகிச்சைகள் செய்து உங்கள் முகத்தின் அமைப்பை சரி செய்துகொள்ளலாம். மாதக்கணக்கில், உங்களை நீங்களே முறையாகப் பராமரித்து வந்ததன் விளைவு, கல்யாண மேடையேறும்போது, அனைவரின் கண்களையும் கண நேரத்தில் ஆட்கொண்ட பெருமை உங்களையே சேரும். அதை மனதில் வைத்து ஆனந்தமாக வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தயாராகுங்கள்.

விகடன் 18 Nov 2023 10:59 am

Doctor Vikatan: குளித்து முடித்ததும் வியர்வை... இருக்கை நனையும் தர்மசங்கடம்... தீர்வு உண்டா?

Doctor Vikatan: குளித்து முடித்து உடலை நன்றாகத் துடைத்துவிட்டு வந்தாலும் தொடை இடுக்குகளில் அளவுக்கு அதிகமாக வியர்வை கசிகிறது. சில நேரத்தில் நாற்காலியை விட்டு எழுந்தால் அந்த இடம் ஈரமாகிவிடுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா இப்படி அளவுக்கு அதிகமாக வியர்வை சுரக்கும் பிரச்னையை 'ஹைப்பர் ஹைட்ரோசிஸ்' (Hyperhidrosis)  என்று பெயர். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கு, உள்ளங்கைகள், பாதங்கள் போன்ற இடங்களில் அதிகம் வியர்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பொதுவாகவே இப்படி வியர்வை சுரப்பு அதிகம் இருப்பவர்கள், தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் அளவுகளை சரிபார்ப்பது அவசியம். ஹார்மோன் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டாலே, இந்தப் பிரச்னை தானாக குணமாகும். இதைத் தாண்டி தினசரி கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். சிலருக்கு வருடத்தின் எல்லா நாள்களிலும் வெந்நீரில் குளித்தால்தான் நிம்மதியாக உணர்வார்கள். அதிக சூடான நீரில் குளிப்பது கூடாது. வெதுவெதுப்பான நீரிலோ, சாதாரண தண்ணீரிலோ குளிப்பதுதான் எப்போதும் சிறந்தது. குளியல் Doctor Vikatan: அதிகாலையில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது ஏன்... தூக்கம் தவிர்த்தால் தப்பிக்கலாமா? பென்ஸாயில் பெராக்ஸைடு (Benzoyl peroxide) போன்ற ஆன்டிசெப்டிக் சோப் உபயோகித்துக் குளிப்பது நல்லது. இந்த மாதிரியான சோப்புகள், பாக்டீரியா கிருமிகள் உடலில் தங்காமல் பார்த்துக்கொள்ளும்.  வியர்வையுடன் பாக்டீரியா கிருமிகள் சேரும்போதுதான் துர்நாற்றம் வருகிறது. ஆன்டிசெப்டிக் சோப் பயன்படுத்துவது இதற்குத் தீர்வாக அமையும். அலுமினியம் ஹைட்ராக்ஸைடு (Aluminum hydroxide) கலந்த ஆன்டிபெர்ஸ்பிரன்ட் (Antiperspirant ) உபயோகிக்கலாம். இது வியர்வை சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி,  அதிக வியர்வை சுரப்பதைத் தடுக்கும். இதை, தற்காலிகமாகப் பயன்படுத்தலாம்.  உட்காரும்போதும் இருக்கை நனைகிற அளவுக்கு வியர்க்கிறது என்றால் அதற்கான காரணத்தை மருத்துவரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வேறு ஏதேனும் பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா, தைராய்டு சுரப்பு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதா, வேறு  ஹார்மோன் பிரச்னைகள் உள்ளனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.  வியர்வை Doctor Vikatan: வீட்டில் பாசிட்டிவ், மருத்துவமனையில் நெகட்டிவ்: பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா? உடை விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வியர்வையை உறிஞ்சுகிற மாதிரியான காட்டன் உள்ளாடைகள், உடைகள் அணிவது சிறந்தது. சிந்தெடிக் உள்ளாடைகள் மற்றும் உடைகளால் வியர்வையை உறிஞ்ச முடியாது. எனவே அந்த இடத்தில் வியர்வை தேங்கி, துர்நாற்றம் வீசுவதோடு, சூட்டுக்கட்டி உள்ளிட்ட பலவித சரும பிரச்னைகள் வரவும் வாய்ப்புகள் அதிகம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 18 Nov 2023 9:00 am

வெளிநாட்டில் உறவினர்; AI குரல் மோசடியில் ரூ1.4 லட்சம் ஏமாந்த பெண்... உஷார் மக்களே!

செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில்நுட்பங்கள் ஒருபுறம் மனிதர்களுக்கு உதவி வரும் நிலையில், அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதும் அதிகரித்துள்ளது.  அந்தவகையில் 59 வயதுடைய பெயர் குறிப்பிடப்படாத பெண் ஒருவருக்கு, இரவு நேரத்தில் கனடாவில் இருக்கும் தன் மருமகனிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. நள்ளிரவு ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், அந்தக் காரணத்திற்காக சிறையில் அடைக்கப்படவிருப்பதாகவும் கூறியுள்ளார்.  mobile phone அதிகரிக்கும் AI குரல் மோசடிகள்; பணத்தை இழந்த 83% இந்தியர்கள்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்! இதனைத் தடுக்க உடனடியாக குறிப்பிட்ட தொகையை அனுப்புமாறும், யாருக்கும் சொல்லாமல் இந்த விஷயத்தில் ரகசியம் காக்கும்படியும் கூறியுள்ளார். பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பண பரிமாற்றம் செய்திருக்கிறார், அந்தப் பெண். `இது ஃப்ராடு கால்' என அவர் உணரும் முன்னரே தனது அக்கவுன்ட்டில் இருந்து 1.4 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி இருக்கிறார்.  ஏஐ மூலம் தொலைபேசியில் பேசியவர் அப்படியே தனது வீட்டில் பஞ்சாபியில் எப்படி தானும் தன் மருமகனும் உரையாடிக் கொள்வார்களோ அப்படியே பேசினார் எனவும் அதனால் சந்தேகமே வரவில்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள சைபர் நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி மையத்தின் செயல்பாட்டு இயக்குநராக இருக்கும் பிரசாத் பதிபண்ட்லா கூறுகையில், ``பொது தளங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் இருந்தும் அல்லது மோசடி குழுவினரால் மேற்கொள்ளப்படும் சேல்ஸ் காலில் இருந்தும் குரல்களை எடுக்கிறார்கள். Cyber crime! வாட்ஸ்அப் அழைப்பில் சக ஊழியரின் புகைப்படம்... 40,000 ரூபாய் அபேஸ்; ஏஐ-யால் நிகழ்ந்த சோகம்! இதனை ஏஐ குரல் இமிடேட்டிங் கருவிகள் மூலமாக வெளிநாட்டில் துயரமான சூழல் அவசர நிலையைப் பிரதிபலிக்கிற வகையில் ஒரு நபரின் குரலைத் துல்லியமாக மாற்றுகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார். `கனடா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் உறவினர்களைக் கொண்ட தனிநபர்கள் இதுபோன்ற மோசடிகளால்அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.’ என ஏஐ குரல் மோசடிகள் குறித்து சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

விகடன் 17 Nov 2023 1:25 pm

Doctor Vikatan: இரண்டு வயதுக் குழந்தையின் பேச்சிலும் வளர்ச்சியிலும் மந்தநிலை.... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: பெரிய மகனுக்கு இரண்டாவது ஆண் குழந்தையும் சின்ன மகனுக்கு முதல் பெண் குழந்தையும் அடுத்த மாதங்களில் பிறந்தார்கள். இருவரும் ஒரே வீட்டில் வளர்கிறார்கள். தற்போது குழந்தைகளுக்கு இரண்டு வயதாகிறது. பெண் குழந்தை, ஓரிரு வார்த்தைகள் பேசுகிறாள். நாம் சொல்வதைப் புரிந்து செயல்படுகிறாள். ஆண் குழந்தையின் வளர்ச்சியும் நடவடிக்கைகளும் குறைவாகவே உள்ளன.  இப்படி ஆண் - பெண் குழந்தைகளில் வளர்ச்சி மாறுபடுமா... ஆண் குழந்தையின் வளர்ச்சிக்கு சிகிச்சை தேவைப்படுமா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ் எஸ். ஸ்ரீநிவாஸ் Doctor Vikatan: அதிகாலையில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது ஏன்... தூக்கம் தவிர்த்தால் தப்பிக்கலாமா? பேச்சு மற்றும் பிற வளர்ச்சிப் படிநிலைகள் (Developmental milestones) ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு வேகமாக இருக்கும் என்றொரு நம்பிக்கை இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இந்தத் தகவலில் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை.  2 வயதுடைய குழந்தைக்கு  தோராயமாக 50 வார்த்தைகளையாவது, அர்த்தத்துடன் பேசத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்து சிறு சிறு வாக்கியங்களை அமைத்துப் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். குழந்தை! Doctor Vikatan: சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்குமா நாவல் பழமும் வெந்தயமும்? இதற்கு குறைவாகப் பேசினால், பேச்சுத்திறனில் குறைபாடு (speech delay) இருப்பதாக அர்த்தம். மேலும் இரண்டு வயதுள்ள குழந்தை, மாடிப்படிகளில் ஏறி, இறங்கும் அளவுக்கு நன்றாக நடக்கவும் ஆரம்பித்திருக்க வேண்டும். புத்தகத்தின் பக்கங்களை விரல்களால் ஒவ்வொன்றாகப் புரட்டத் தெரிந்திருக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் விளையாடப் பழகியிருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு குழந்தைகளுக்கும் வயதுக்கேற்ற பேச்சுத்திறன் வளர்ச்சி இல்லை என்றே தெரிகிறது. தவிர, மற்ற வளர்ச்சிப் படிநிலைகளும் பின்தங்கி இருப்பதாகவே தெரிகிறது. எனவே, உடனடியாக குழந்தைகள்நல மருத்துவரிடம் காட்டி, காரணங்களைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 17 Nov 2023 9:00 am

கோவிட் 19: அச்சுறுத்தும் 2 புதிய வேரியன்ட்கள்... உலக நாடுகளில் எங்கெல்லாம் பாதிப்பு?!

ஒரு நீண்ட அமைதிக்குப் பின்னர் கோவிட் தொற்று மீண்டும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. கோவிட் வைரஸின் தாக்கம் குறைந்தாலும் அதிலிருந்து புதிய வேரியண்ட்கள் ஆட்டத்தை தொடங்கி விடுகின்றன. தற்போது அமெரிக்காவில் JN.1 மற்றும் HV.1 என்ற இரண்டு புதிய கோவிட் வேரியன்ட்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் எச்சரித்துள்ளது.  கோவிட்-19 கோவிட் 19-ஐ விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு - WHO எச்சரிக்கை புதிய வேரியன்ட்டான JN.1-ன் பாதிப்பு அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. தற்போது இந்த நோயின் பாதிப்பு இங்கிலாந்து, அமெரிக்கா, ஐஸ்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 11 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. HV.1 கோடைக்காலத்தின் நடுப்பகுதியில் தோன்றி செப்டம்பர் மாதத்தில் வேகமாக மக்களிடையே பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் கிட்டத்தட்ட 20% பாதிப்பை இந்த வேரியன்ட்கள் ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.   ``JN.1 என்பது BA.2.86 என்பதன் வழித்தோன்றல் என்பதால், அது அதிகமாகப் பரவக்கூடியதாக இருக்கலாம் என்ற கவலை உள்ளது. அப்டேட்டட் கோவிட் தடுப்பூசிகள் BA.2.86 க்கு எதிராகப் பாதுகாக்க உதவும். எனவே அப்டேட்டட் தடுப்பூசி நமது பழைய தடுப்பூசியை விட JN.1க்கு எதிராகச் செயல்படுகிறது’’ என்று நியூயார்க்கில் உள்ள பஃபேலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவருமான தாமஸ் ருஸ்ஸோ கூறியுள்ளார்.  கோவிட் மீண்டும் கோவிட் பரவுமா? எச்சரிக்கும் WHO... தரவுகளைப் பகிர உலக நாடுகளுக்கு அறிவுறுத்தல்! இது குறித்து நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் கூறுகையில், ``நம்மிடம் கோவிட் 19 இருக்கும்வரை புதிய வேரியன்ட்கள் வந்து கொண்டே தான் இருக்கும். முந்தைய வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள புதிய வேரியன்ட்கள் சிறிய மாற்றங்களைக் கொண்டுள்ளன. தடுப்பூசிகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் புதிய வேரியன்ட்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை சிடிசி மற்றும் பிற ஏஜென்சிகள் கண்காணிக்கின்றன. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் விரைவாக எச்சரிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவித்துள்ளது.    

விகடன் 16 Nov 2023 3:45 pm

இரண்டு கருப்பைகள், இரண்டிலும் கரு... மருத்துவ உலகத்தை ஆச்சர்யப்படுத்திய அமெரிக்கப் பெண்!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது கெல்சி ஹேட்சர் என்ற பெண், பிறக்கும்போதே மிக அரிய நிலையான `யூட்ரஸ் டைடெல்பிஸ்' (Uterine Didelphys) என்ற மருத்துவச் சொற்களில் அழைக்கப்படும் இரட்டை கருப்பைகளோடு பிறந்தார். கெல்சி - காலப் தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் நான்காவதாகக் கருவுற்றார். எட்டாவது வார பரிசோதனையின்போது கெல்சியின் இரண்டு கருப்பைகளிலும் கரு இருப்பது தெரிய வந்தது. கெல்சி - காலப் தம்பதி் ``சூனியம் செய்கிறார் எலுமிச்சைப் பழத்தை நசுக்கியவருக்கு மரண அடி... நடுரோட்டில் நடந்த சோகம்..! யூட்ரஸ் டைடெல்பிஸ் பிறக்கும்போதே மிக அரிதாக ஒரு சில பெண் குழந்தைகள் இரண்டு கருப்பை அல்லது இரண்டு கருப்பை வாயுடன் பிறப்பார்கள். இதையே மருத்துவ உலகில் `யூட்ரஸ் டைடெல்பிஸ்' என்று குறிக்கின்றனர். 17 வயதிலிருந்தே தனக்கு இரட்டை கருப்பை இருப்பதை கெல்சி அறிந்திருந்தார். முந்தைய மூன்று கர்ப்பத்திலும் ஒரு கருப்பையில் மட்டுமே கரு உருவாகியிருந்ததால் எவ்வித சிக்கலும் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். கெல்சி தற்போது சிகிச்சை பெற்று வரும் அலபாமா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் பர்மிங்காம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மையம், இரண்டு கருப்பைகளிலும் ஒரே சமயத்தில் கருத்தரிப்பது பத்து லட்சத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே நடக்கும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய கருவியல் மருத்துவர் ரிச்சர்ட் டேவிஸ், ``கெல்சியின் நிலை மிகவும் தனித்துவம் வாய்ந்தது மற்றும் அரிதானது. ஆயிரத்தில் மூன்று பெண்கள் இரண்டு கருப்பைகளோடு, கருப்பை வாய்களுடன் பிறக்கின்றனர். pregnancy எல்லாம் AI செயல்... ``ஹார்ட் அட்டாக் வருவதை 10 ஆண்டுகளுக்கும் முன்பே அறியலாம் - ஆய்வுத் தகவல்! ஆனால், இந்த முறை இரண்டு கருப்பையில் ஒவ்வொரு கரு உருவாகியிருந்தது. தனித்தனி கருமுட்டைகளிலிருந்து வளரும் இக்குழந்தைகளைச் சகோதர இரட்டையர்கள் (fraternal twins) என்று குறிப்பிடலாம். தனித்தனி கருப்பைகளில் வளரும் குழந்தைகளைக் குறிப்பதற்கு பிரத்தியேக மருத்துவ சொல் இல்லை. இந்த முறை கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் மிகவும் சோர்வாக இருந்ததாக கெல்சி தெரிவித்தார். பிரசவத்தின்போது இரண்டு கருப்பைகளும் தனித்தனியாகச் சுருங்கும்.‌ எனவே, கருப்பைகளின் அசைவுகளைக் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை இதுபற்றிப் பேசிய கெல்சி, ``கடந்த இரண்டு வாரங்களில் என் இரண்டு கருப்பைகளும் பிரிந்திருப்பதை உணர முடிந்தது. எங்களின் இரட்டைக் குழந்தைகளையும் கிறிஸ்துமஸ் அன்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். கெல்சியின் நிலையை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

விகடன் 16 Nov 2023 12:30 pm

``தப்பு பண்ணப் பார்க்கறியா... வெளியே போடா... '' - காமத்துக்கு மரியாதை|சீஸன் 4 - 120

பழைய திரைப்படங்களில், மனநலம் பாதிக்கப்பட்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ 'திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகி விடும்' என்று வீட்டின் பெரியவர்கள் சொல்வதுபோல காட்சிகள் வரும். அவை நிஜத்திலும் நடக்கின்றன... அதுவும், இந்தக் காலத்திலும் நடக்கின்றன என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியை நம்முடன் பகிர்ந்து கொண்டார். ''சோகமாக இருந்த ஓர் இளைஞரை அரவணைத்தபடி ஒரு குடும்பம் என்னை சந்திக்க வந்தது. அந்த இளைஞனுக்கு சில தினங்களுக்கு முன்னால்தான் திருமணம் நடந்திருந்தது. பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். 'பொண்ணு ரொம்ப அழகா இருக்கா' என்ற மகிழ்ச்சியுடன் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். இது மாப்பிள்ளைக்கும் அவருடைய குடும்பத்துக்கும் திருமண நாள் வரை தெரியாமல் இருப்பதற்காக, 'பொண்ணு ரொம்ப கூச்ச சுபாவி. அதனால, அவளுக்கு ஃபிரெண்ட்ஸ்கூட கிடையாது. ஆம்பளைப் பசங்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டா' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டாரும் 'பொண்ணை எவ்ளோ அடக்க ஒடுக்கமா வளர்த்திருக்காங்க ' என்று நம்பி, திருமணம் செய்து தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். Sexologist Kamaraj மாதவிடாய் ரத்தத்தை உள்ளிழுக்கும் ஆணுறுப்பு! Couples கவனத்துக்கு... முதலிரவு.... மாப்பிள்ளை ஆசை ஆசையாக மனைவியின் அருகே சென்றிருக்கிறார். அந்தப் பெண் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்திருக்கிறார். கணவர் கை மேலே பட்டவுடன் கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்திருக்கிறார். கணவர் மிரண்டு போய் மனைவியைப் பார்க்க, 'தப்பு பண்ணப் பார்க்கிறியா... வெளியே போடா ...........' என மறுபடியும் தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்திருக்கிறார். வேறு வழியில்லாமல் மாப்பிள்ளை அறையை விட்டு வெளியேற, அந்தப் பெண் கெட்ட வார்த்தைகள் சொல்லி மாப்பிள்ளையைத் திட்டுவதை, வீட்டிலிருந்த அத்தனை உறவினர்களும் கேட்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை கூனிக் குறுகிப் போயிருக்கிறார். தாம்பத்திய உறவு பற்றியே தெரியாத இந்தப் பிரச்னை, மன வளர்ச்சி குன்றியவர்களிடம் இருக்கும். உளவியல் பிரச்னை இருப்பவர்களிடமும் இருக்கலாம். பிரச்னையை மறைத்து பெரியவர்கள் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். விளைவு, ஆணோ அல்லது பெண்ணோ பாதிக்கப்படுவார். Sex Education ஆணுறுப்பு சின்னதா இருக்குனு நினைக்கிறீங்களா? அதை இப்படி அளவிடுங்க! - காமத்துக்கு மரியாதை - 5 உளவியல் பிரச்னை என்றால், கணவரும் மனைவியும் சேர்ந்து சில பயிற்சிகள் செய்தாலே படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால், ஒருவரை ஏமாற்றி, மனவளர்ச்சி குன்றிய பெண்ணையோ/ஆணையோ திருமணம் செய்து வைப்பது குற்றம். நான் சொன்ன சம்பவத்தில் ஏமாற்றப்பட்ட அந்த ஆண், அந்தப் பெண்ணை சட்டப்படி பிரிந்துவிட்டார். கூச்ச சுபாவி, ஆம்பளைப் பசங்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டா என்ற வார்த்தைகளை அப்படியே நம்பாதீர்கள்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 15 Nov 2023 6:00 pm

Doctor Vikatan: சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்குமா நாவல் பழமும் வெந்தயமும்?

Doctor Vikatan: என்னுடைய நண்பனுக்கு 45 வயதாகிறது. அவனுக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. அதற்காக மருத்துவரை அணுகாமல் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பது, வெந்தயம் சாப்பிடுவது, நாவல் பழம் சாப்பிடுவது என சுயவைத்தியங்களை மட்டுமே பின்பற்றி வருகிறான். இந்த உணவுகள் எல்லாம் உண்மையிலேயே ரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். சண்முகம் Doctor Vikatan: மருந்து, மாத்திரை உதவியின்றி மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து மீள முடியாதா? நீங்கள் குறிப்பிட்டுள்ள வெந்தயம், நாவல் பழ விதை, வெண்டைக்காய் என எல்லாவற்றிலும் நார்ச்சத்து உள்ளது. கசப்புத்தன்மையும் நார்ச்சத்தும் உள்ள எல்லா உணவுகளுக்கும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை இருக்கும். நாவல்பழத்தில் சர்க்கரை இருக்கும். ஆனால் அதன் விதையில் நார்ச்சத்து இருப்பதால் அதைப் பொடித்துச் சாப்பிடலாம். பலாப்பழத்தில் சர்க்கரை அதிகம் என்பதால்தான் சர்க்கரை நோயாளிகள் அதைச் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் பலாக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். வெந்தயத்திலும், சீரகத்திலும் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவற்றையும் சர்க்கரைநோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவை மட்டுமே ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயாளிகளை ஆரோக்கியமாக வைத்துவிடும் என்று சொல்வதற்கில்லை. வெந்தயம் Doctor Vikatan: வீட்டில் பாசிட்டிவ், மருத்துவமனையில் நெகட்டிவ்: பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா? இவை எல்லாமே 20 சதவிகிதம் வரை சர்க்கரை அளவைக் குறைக்கும். அதற்காக ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொள்வதால் தலா 20 சதவிகிதம் சர்க்கரை குறையும் என அர்த்தமில்லை. தனித்தனியாக எடுத்துக்கொண்டாலும், சேர்த்து எடுத்துக்கொண்டாலும் இவற்றால் 20 சதவிகிதம் வரை மட்டுமே சர்க்கரை அளவு குறையும். இவை எல்லாம் நீரிழிவுக்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டிஸ் ஸ்டேஜில் இருப்பவர்களுக்கு ஓகே. அதாவது ப்ரீ டயாபட்டிஸ் என உறுதியான நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவோருக்கு இத்தகைய உணவுகள் ஓரளவு கைகொடுக்கும். அதுவே சர்க்கரைநோயாளியாக மாறியவர்கள் இவற்றை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பது தவறு. இந்த உணவுகள் எல்லாம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உதவும் என்றாலும் இவை மட்டுமே மருந்தாகாது என்பதை சர்க்கரை நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்க்கரைநோய் Doctor Vikatan: தீபாவளி... ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா?  சர்க்கரை அளவை பரிசோதித்து மருந்துகள் எடுத்துக்கொள்வதோடு, கூடவே இந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.  உங்கள் நண்பர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார். அவருக்கு இதைப் புரியவைத்து மருத்துவ ஆலோசனை பெறச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 15 Nov 2023 9:00 am

Doctor Vikatan: வீட்டில் பாசிட்டிவ், மருத்துவமனையில் நெகட்டிவ்: பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா?

Doctor Vikatan: என் வயது 28. திருமணமாகி ஒரு வருடமான நிலையில், பீரியட்ஸ் தள்ளிப்போனது. மெடிக்கல் ஷாப்பில் பிரெக்னன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்த்தேன். அதில் இரண்டு கோடுகள் வந்ததை அடுத்து நான் கர்ப்பம் என தெரிய வந்தது. மகிழ்ச்சியோடு மருத்துவரை சந்திக்கப் போனேன். அங்கே அவர் செய்த பரிசோதனையில் கர்ப்பம் இல்லை என வந்தது. இதை எப்படிப் புரிந்துகொள்வது.... பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா அல்லது வேறு என்ன நடந்திருக்கும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்னையை 'பயோகெமிக்கல் பிரெக்னன்சி' அல்லது 'கெமிக்கல் பிரெக்னன்சி' என சொல்வோம். சிலருக்கு பீரியட்ஸ் தள்ளிப்போயிருக்கும். உங்களைப் போலவே அவர்கள் பிரெக்னன்சி கிட் வைத்து வீட்டிலேயே  டெஸ்ட் செய்து பார்த்திருப்பார்கள். அதில் இரண்டு கோடுகள் வந்திருக்கும். அதைவைத்து கர்ப்பமானதாக நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள்.  அடுத்தகட்டமாக மருத்துவரைப் பார்க்க வருவார்கள். மருத்துவர் அந்தப் பெண் கர்ப்பமானதை மீண்டும் உறுதிசெய்ய பிளட் டெஸ்ட் செய்வார். அதாவது பிளட் பீட்டா ஹெச்.சி.ஜி ஹார்மோன் டெஸ்ட் செய்து அதை உறுதிசெய்வார். இந்த பீட்டா ஹெச்.சி.ஜி அளவானது 100-க்கு மேல் இருந்தால்தான் அந்தப் பெண் கர்ப்பம் என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்வோம். ரத்தப் பரிசோதனை Doctor Vikatan: மருந்து, மாத்திரை உதவியின்றி மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து மீள முடியாதா? அதுவே  பீட்டா ஹெச்.சி.ஜி அளவானது 100-க்கு கீழ் இருந்தால் அதை கர்ப்பம் என உறுதிசெய்ய முடியாது. ஒருவேளை   பீட்டா ஹெச்.சி.ஜி அளவானது 80-90 என்ற அளவில் இருந்தால், இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அந்த டெஸ்ட்டை  செய்துபார்க்கச்  சொல்வோம். சிலருக்கு 100- 110 என பார்டர் அளவில் இந்த  பீட்டா ஹெச்.சி.ஜி இருக்கும்.  எனவே இரண்டு, மூன்று நாள்கள் காத்திருந்து மீண்டும் டெஸ்ட் செய்யும்போது, பெரும்பாலும் அதன் அளவானது இரண்டு மடங்காகி இருக்கும்.  இப்படி  பீட்டா ஹெச்.சி.ஜி அளவு இரண்டு மடங்காக ஆரம்பித்தாலே, அந்தக் கருவானது நன்றாக வளர ஆரம்பித்துவிட்டதாக அர்த்தம். அதுவே  அடுத்தடுத்த நாள்களில் அந்த அளவானது இன்னும் குறையத் தொடங்கினால், அதை நாம்  'பயோகெமிக்கல் பிரெக்னன்சி' என்று சொல்வோம். இந்தப் பிரச்னையில் கரு உருவாகியிருக்கும். ஆனால் ஹார்மோன் பிரச்னை, சிறுநீரகப் பகுதியின் அசாதாரண நிலை உள்ளிட்ட ஏதோ காரணங்களால் கரு வளர்வதில் சிக்கல் இருக்கும். கருத்தரிப்பு Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்துபோன வெஜைனா: அறுவை சிகிச்சையில்லாமல் தீர்வு உண்டா? பிரெக்னன்சி கிட்டில் செய்துபார்த்த சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானதைக் காட்டியிருக்கும். ஆனால் அடுத்து அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்வதற்குள்ளேயே அந்தக் கரு கலைந்திருக்கும். இதை நாம் சாதாரண கர்ப்பமாகக் கருத முடியாது. அதாவது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் ஹார்மோன் பிரச்னை காரணமாக அந்தக் கரு தொடர்ந்து  வளர்வதில் சிக்கல் இருக்கிறது என புரிந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கு ஹார்மோன் சிகிச்சை கொடுத்து, இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியும். அவர்களால் சீக்கிரமே கருத்தரிக்க முடியும். எனவே   'பயோகெமிக்கல் பிரெக்னன்சி' குறித்து பயப்படத் தேவையில்லை. தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 14 Nov 2023 9:00 am

Doctor Vikatan: மருந்து, மாத்திரை உதவியின்றி மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து மீள முடியாதா?

Doctor Vikatan: என் வயது 34. எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. இதன் காரணமாக வெளியூர் பயணங்களைக்கூட தவிர்க்கிறேன். எப்போதாவது மலச்சிக்கல் தீவிரமாகும்போது மருந்து, மாத்திரைகள் எடுத்தால்தான் அதிலிருந்து மீள முடிகிறது. இந்தப் பிரச்னைக்கு வேறு எளிய தீர்வுகளே இல்லையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: தீபாவளி... ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா? மலச்சிக்கல் பிரச்னை உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு இம்சை தருமானால், நீங்கள் மிக முக்கியமாக மூன்று விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். முதல் வேலையாக தினமும் தவறாமல் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி மிகவும் நல்லது. வேகமாக நடக்கும்போது குடலின் இயக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்னையை குணப்படுத்தும் வழியைச் செய்யும். பலரும் நவீன வாழ்க்கையில் இந்தியன் டாய்லெட்டை தவிர்த்து வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகித்துப் பழகிவிட்டார்கள்.  எனவே மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தியன் டாய்லெட்டே சிறந்தது. தவிர அந்த பொசிஷனில் உட்கார்ந்தபடி பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வேறு வேலைகள் செய்வதெல்லாம்கூட மலச்சிக்கல் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். அதாவது ஸ்குவாட்டிங் பொசிஷன் என்று சொல்லக்கூடிய இந்த பொசிஷன், குடல்பகுதியின் அசைவுகளைத் தூண்டி, மலச்சிக்கல் இல்லாமல் வைத்திருக்க உதவும். காய்கறிகள், பழங்கள்! Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு ஓட்ஸ் கஞ்சி... உடல் எடையை அதிகரிக்குமா? அடுத்தது நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கத்துக்கு மாறுவது. வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசி, வெள்ளை அவலுக்கு பதில் சிவப்பரிசி அவல், நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். உங்கள் சாப்பாட்டுத் தட்டில் ஒரு கப் சாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று கப் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளின் மூலம் மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து மிக எளிதாக வெளியே வரலாம். தினமும் நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.  போதிய அளவு தண்ணீர் குடிக்காததாலும் மலச்சிக்கல் பிரச்னை வரும். தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் நீர்ச்சத்து வறண்டுபோவதுடன்,மலம் இறுகி வெளியேறுவதிலும் சிக்கல் உண்டாகும். தண்ணீர் மட்டுமன்றி, கிரீன் டீ, ரசம், சூப், இளநீர், நீர்மோர் போன்றவற்றையும் அதிகம் குடிக்க வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 13 Nov 2023 9:00 am

அடிக்கடி பெண்ணுறுப்பில் இன்ஃபெக்‌ஷன்... என்ன காரணம்..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 119

அந்தரங்கப் பகுதியில் வஜைனல் வாஷ், பெர்ஃபியூம் பயன்படுத்துகிற பழக்கம் தற்போது பலரிடமும் இருக்கிறது. இதன் காரணமாக வரக்கூடிய பிரச்னைகளை ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ''அவர் திருமணமான இளம்பெண். திருமணத்துக்கு முன்பிருந்தே பெண்ணுறுப்பில் அடிக்கடி இன்ஃபெக்‌ஷன் வருமாம். அதனால், விலை அதிகமான வஜைனல் வாஷ் மற்றும் வாசனைத் திரவியங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால், இன்ஃபெக்‌ஷன் அதிகமாகி கெட்ட வாடையுடன் வெள்ளைப்பட ஆரம்பித்திருக்கிறது. மகப்பேறு மருத்துவரை சந்தித்ததோடு, என்னையும் சந்திக்க வந்திருந்தார். Sexologist Kamaraj மாதவிடாய் ரத்தத்தை உள்ளிழுக்கும் ஆணுறுப்பு! Couples கவனத்துக்கு...|காமத்துக்கு மரியாதை - S 3 E 1 பெண் உடம்பின் ஹார்மோன் சுரப்பு மற்றும் வியர்வை சுரப்புக்கெல்லாம் தனி வாசனை உண்டு. அந்த வாசனை ஆணை ஈர்க்கும். ஆண் விலங்குகள் இப்போதும்தான் இப்படித்தான் இருக்கின்றன. ஆனால், மனிதர்கள் இதிலிருந்தெல்லாம் வெகுதூரம் தள்ளி வந்துவிட்டோம். இயல்பான வாடையை வாஷ், வாசனைத்திரவியங்கள் மூலம் அப்புறப்படுத்த ஆரம்பித்து, இப்போது நம்முடைய வாடை நமக்கே பிடிக்காமல் போய்விட்டது. அந்தப் பெண், வஜைனல் வாஷ் ஆரோக்கியமானது; நம்முடைய இன்ஃபெக்‌ஷனை சரி செய்யும் என்று நம்பி பயன்படுத்தியிருக்கிறார். பெண்களுக்கு வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை பிறப்புறுப்பில் இன்ஃபெக்‌ஷன் வருவது இயல்பான ஒன்றுதான். அதிலும் தாம்பத்திய உறவுகொள்ளும் பெண்களுக்கு இன்ஃபெக்‌ஷன் வருவது இன்னமும் இயல்பான விஷயம்தான். இதில் வெட்கப்படுவதற்கும், மறைப்பதற்கும் தேவையே இல்லை. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செய்த தவறே அதுதான். மருத்துவரை அணுகி, இன்ஃபெக்‌ஷனுக்கான காரணத்தைக் கண்டறிந்து, முறையான சிகிச்சை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், வாஷ், வாசனைத்திரவியம் என மேலோட்டமான தீர்வை நாடியிருக்கிறார். விளைவு, அவற்றிலிருக்கிற ரசாயனங்கள் பெண்ணுறுப்பில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்களை கொன்றுவிட்டன. அந்த நல்ல பாக்டீரியாக்களும், அங்கு இயற்கையாக இருக்கிற அமிலத்தன்மையும்தான் பெண்ணுறுப்பில் தீவிரமான தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். அவற்றையே நீக்கிவிட்டதால், அங்கு புதிதான கிருமிகள் வந்து, இன்ஃபெக்‌ஷன் அதிகமாகி கெட்ட வாடையுடன் வெள்ளைப்பட ஆரம்பித்திருக்கிறது. லேசான வெள்ளைப்படுதல் நார்மல். ஆனால், கெட்ட வாடை மற்றும் அரிப்புடன் வருவது இயல்பானது கிடையாது. முறையான சிகிச்சையெடுக்காமல் இருந்தால், இன்ஃபெக்‌ஷன் மேலேறி கருக்குழாய் வரைக்கும் பாதித்து, குழந்தையில்லாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதை பெல்விக் இன்ஃப்ளமேட்ரி டிசீஸ் (Pelvic inflammatory disease) என்போம். நல்லவேளை, அந்தப் பெண்ணுடைய விஷயத்தில் பிரச்னை அந்தளவுக்கு பெரிதாகவில்லை. அதற்குள் முறையான சிகிச்சையெடுக்க ஆரம்பித்துவிட்டார். Sex Education கர்ப்பிணி மனைவியுடன் உறவு கொள்ளலாமா? - காமத்துக்கு மரியாதை S2 E20 அந்தப் பெண்ணுக்கு இன்ஃபெக்‌ஷன் வந்ததற்கான ஆரம்ப காரணம் என்ன தெரியுமா..? அவர் எப்போதுமே நைலான் உள்ளாடைகள்தான் அணிவாராம். இரவு நேரங்களிலும் இதே உள்ளாடையுடன் தூங்குகிற பழக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது. எந்நேரமும் காற்றோட்டமில்லாத, ஈரத்தைக் காயவிடாத நைலான் உள்ளாடையை அணிந்தால், இன்ஃபெக்‌ஷன் வரத்தான் செய்யும். காற்றோட்டமான உள்ளாடைகளை அணியுங்கள். தேவையற்ற கெமிக்கல்களை அந்த இடத்தில் பயன்படுத்தாதீர்கள். எல்லாவற்றுக்கும் மேல், பெண்ணுறுப்பில் இன்ஃபெக்‌ஷன் வந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 12 Nov 2023 6:00 pm

Doctor Vikatan: அடிக்கடி வரும் யூரினரி இன்ஃபெக்ஷன்.... கிட்னியை பாதிக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படுகிறது.   பணியிடம், வெளியிடங்களில்  கழிவறை சுகாதாரம் பார்த்துதான் உபயோகிக்கிறேன். நிறைய தண்ணீர் குடிக்கிறேன். ஆனாலும் மூன்று மாதங்களுக்கொரு முறை இந்த இன்ஃபெக்ஷன் வருகிறது. இதனால் கிட்னி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டா? ஒருமுறை மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாடிக்கை அடுத்தடுத்த முறையும் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: தீபாவளி... ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா? யூரினரி ட்ராக்ட் எனப்படும் சிறுநீர்ப்பாதை, கிட்னி, சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் என எல்லாம் சேர்ந்தது. இதில் லோயர் யூரினரி ட்ராக்ட் மற்றும் அப்பர் யூரினரி ட்ராக்ட் என இரண்டு உண்டு. பொதுவாக யூரினரி இன்ஃபெக்ஷன் லோயர் யூரினரி ட்ராக்ட்டில்தான் பெரும்பாலும் வரும். அதாவது சிறுநீர் சேமிக்கப்படும் சிறுநீர்ப்பையிலும் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் குழாய்ப்பகுதிலும்தான் இன்ஃபெக்ஷன் அதிகம் வரும். இந்தப் பிரச்னையை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், தொற்றானது, லோயர் யூரினரி ட்ராக்ட்டில் இருந்து அப்பர் யூரினரி ட்ராக்ட்டுக்கு போய் சிறுநீரகங்களையும் பாதிக்க வாய்ப்பு உண்டு.  எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அவசரமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு, ரத்தம் கலந்து சிறுநீர் வெளியேறுவது, மங்கலான நிறத்தில் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும்போது கெட்ட வாடை, அடிவயிற்றில் வலியோடு சிறுநீர் கழிப்பது போன்றவை எல்லாம் சிறுநீர்த்தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். அதுவே அப்பர் யூரினரி ட்ராக்ட்டில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டால் அடிமுதுகு, வயிறு போன்றவற்றில் வலி இருக்கலாம். காய்ச்சல், குளிர், வாந்தி போன்றவையும் இருக்கலாம்.  சிறுநீர்ப் பாதை தொற்று Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா? பொதுவாகவே பெண்களுக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பெண்களின் சிறுநீர்க்குழாய் மிகச் சிறியதாக இருப்பதே காரணம். அதனால் வெஜைனா அல்லது ஆசனவாய்ப் பகுதிகளில் எந்த இன்ஃபெக்ஷன் ஏற்பட்டாலும், அது எளிதாக சிறுநீர்க்குழாய்க்குள் போய் யூரினரி இன்ஃபெக்ஷ னை ஏற்படுத்தலாம்.  முதுமையின் காரணமாகவும் மெனோபாஸ் காலத்திலும், ஏதோ அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீண்டகாலம் ஓய்வெடுப்பதாலும், சிறுநீரகக் கற்கள் பாதித்திருந்தாலும், சிறுநீர்ப்பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும், மிக அரிதாக சிறுநீர்ப்பையில் கட்டியோ, புற்றோ இருந்தாலும் அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். ஏதோ காரணத்துக்காக சிறுநீரை வெளியேற்றும் கதீட்டர் போடப்பட்டிருந்தாலும் இன்ஃபெக்ஷன் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும், நீரிழிவு நோயும்கூட இதற்கான காரணங்களாக இருக்கலாம். கர்ப்பகாலத்திலும் தொற்று  வரலாம். பிளட் டெஸ்ட் (Representational Image) Doctor Vikatan: தினமும் ஆளிவிதை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உதவுமா? பிறவியிலேயே சிறுநீர்ப்பாதையானது அசாதாரண வளர்ச்சியோடு இருப்பதும் ஒரு காரணம். செக்ஸ் உறவுக்குப் பிறகு தொற்று வருவதும் சகஜம். மலம் கழித்த பிறகு ஆசனவாயைக் கழுவும்போது பின்னாலிருந்து முன்பக்கமாகக் கழுவாமல், முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாகக் கழுவ வேண்டும். பின்னாலிருந்து கழுவும்போது ஆசனவாயிலுள்ள கிருமிகள், வெஜைனா வழியே சிறுநீர்க்குழாய்க்குள் போய், இன்ஃபெக்ஷ னை ஏற்படுத்தலாம். மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறையத் தொடங்குவதால், வெஜைனா பகுதியில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாவெல்லாம் குறையத் தொடங்கும். அதனாலும் அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் வரும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். முதல்வேலையாக அவர் யூரின் ரொட்டீன் டெஸ்ட் செய்யச் சொல்வார். தேவைப்பட்டால் யூரின் கல்ச்சர் டெஸ்ட்டும் செய்யப்பட்டு, எந்தக் கிருமியால் தொற்று ஏற்பட்டது என்பது கண்டுபிடிக்கப்படும். யூரின் கல்ச்சர் டெஸ்ட் செய்வதால், எந்த ஆன்டிபயாடிக் கொடுத்தால் பிரச்னை குணமாகும் என்பது தெரியவரும். அதற்கேற்ற மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார். எக்ஸ்ரே Doctor Vikatan: வாந்தி எடுப்பதால் காலை உணவை மறுக்கும் குழந்தை... செரிமான பிரச்னைக்குத் தீர்வு என்ன? ஒரு முறை மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாடிக்கையே ஒவ்வொரு முறை இன்ஃபெக்ஷன் வரும்போதும் எடுக்கக்கூடாது. ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் இந்தத் தொற்றானது ரத்தத்தில் கலந்திருக்கிறதா என்பதையும் கண்டறிய முடியும். தேவைப்பட்டால் சிலருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்படும். அதன் மூலம் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். சில நேரங்களில் ஐவிபி ( Intravenous pyelogram ) எனப்படும் எக்ஸ்ரே எடுக்கச் சொல்வார்கள். சிஸ்டோஸ்கோப்பி (Cystoscopy) டெஸ்ட்டின் மூலம் சின்ன கேமராவை உள்ளே செலுத்தி, சிறுநீர்ப்பையில் ஏதேனும் வளர்ச்சி இருக்கிறதா, அடிக்கடி இன்ஃபெக்ஷன் வர காரணம் என்ன என்பதெல்லாம் கண்டறியப்படும். சிலருக்கு சிடி ஸ்கேனும் தேவைப்படலாம். ஒருவருக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் வந்தால் அதை 'ரெக்கரன்ட் யூரினரி ட்ராக்ட் இன்ஃபெக்ஷன்'  (Recurrent Urinary Tract Infections) என்று சொல்வார்கள். அதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் யூரினரி இன்ஃபெக்ஷன் வந்தால் அதன் விளைவாக குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.   ஒருவருக்கு ஒரு வருடத்தில் 3 முதல் 6 முறை இன்ஃபெக்ஷன் வந்தால் அவசியம் மருத்துவ ஆலோசனையும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 12 Nov 2023 9:00 am

பப்பாளி இலைச்சாறு டெங்கு காய்ச்சலை குணப்படுத்துமா..? - வாட்ஸ்அப் தகவலும் மருத்துவ விளக்கமும்!

டெங்கு காய்ச்சலின் வீரியம் சில நாள்களாக உயர்ந்து வருகிறது. 'இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியலப்பா' என்று அசால்ட்டாக கொசுவைத் தட்டிவிடும் நிலை மாறி ஆக்ரோஷமடைந்து கொசுவை நசுக்கித் தூக்கியெறியும் மனநிலைக்கு மாறிவிட்டோம். நம் உடலில் நோய்யெதிர்ப்பு சக்தி உருவானாலும் அதனை தடுத்து டெங்கு வைரஸ் வீரியமாகப் பரவி நம் உடலின் நீர்ச்சத்தைக் குறைத்து சோர்வை ஏற்படுத்திவிடுகிறது. கொசு தீபாவளி கொண்டாட்டம்; மாடுகளுக்கு லட்டு கொடுக்கலாமா? கால்நடை மருத்துவர் விளக்கம்! இதனால் காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஏற்பட்டு நம் வேலைகளை முடக்கிவிடுகிறது. மேலும், ரத்தத்தில் நீர்ச்சத்தைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களையும் (பிளேட்லெட்) பாதிக்கிறது. தட்டணுக்கள் பாதிக்கப்படுவதால் ரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்பட்டு ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதை டெங்குவின் அபாயகட்டம் எனலாம். சாதாரணமாக ஒருவருக்கு ஒன்றரை லட்சம் முதல் நான்கு லட்சம் வரை தட்டணுக்கள் ரத்தத்தில் மிதந்து கொண்டிருக்கும். டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இந்தத் தட்டணுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கை 10 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்துவிடுகிறது. இது நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது. சமூக வலைதள பக்கத்தில் 'டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பப்பாளி இலைச்சாற்றை எடுத்துக்கொண்டால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை 68,000-லிருந்து, 2,00,000 வரை அதிகரித்து விரைவில் நோயாளிகள் குணமாகிவிடுவார்கள்' என்ற தகவல் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம். சித்த மருத்துவர் விக்ரம்குமார் Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு ஓட்ஸ் கஞ்சி... உடல் எடையை அதிகரிக்குமா? பப்பாளி இலைச்சாறு தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் உடையது என்பது உண்மைதான். ஆனால், நம் உடலில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துவிட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சிகிச்சை பெற்றுக்கொள்ளும்போது மருத்துவரின் பரிந்துரைப்படி இந்தத் திரவத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். பிளேட்லெட்டுகள் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்கள் சித்த மருத்துவர் அல்லது அலோபதி மருத்துவரின் ஆலோசனை பெற்று அவர்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பது நல்லது. கிராமப்புற பகுதிகளில் பலரும் இதனை மட்டுமே நம்பி எடுத்துக்கொண்டு, நோய் தீவிரமான பிறகும்கூட முறையான சிகிச்சை எடுக்காமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அது மிகவும் ஆபத்தானது. நோயின் தீவிர நிலையில் மருத்துவரின் ஆலோசனை முக்கியம். பப்பாளி இலைச்சாறை 10 மில்லி அளவு எடுத்துக்கொண்டால் போதுமானது. இதில் கசப்புத்தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கு குமட்டாமல் இருப்பதற்கு பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்கலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். பப்பாளி இலைச்சாறு போல் ஆடாதொடா கஷாயம், ஆடாதொடா மணப்பாகு போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம் என்றார். -ஜே.பி.ரேகாஸ்ரீ

விகடன் 12 Nov 2023 8:00 am

Doctor Vikatan: தீபாவளி... ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் மாமனார், மாமியார், கணவர் என எல்லோரும் நீரிழிவு நோயாளிகள். தீபாவளி மாதிரியான பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு செய்யாமல் இருக்க முடியாது. அவர்கள் அதைச் சாப்பிடுவதையும் தவிர்க்க முடியாது.  `எப்போதாவது ஒருநாள்தானே சாப்பிடுகிறோம்... சாப்பிட்டுவிட்டு, எக்ஸ்ட்ராவாக ஒரு சுகர் மாத்திரை போட்டுக்கொண்டால் போதும்...' என்பதே அவர்களது வாதமாக இருக்கிறது. இப்படி இனிப்பு சாப்பிடுகிற அன்று கூடுதலாக சுகர் மாத்திரை போட்டுக்கொள்வது சரியானதா... சர்க்கரை நோயாளிகள் இனிப்பே சாப்பிடக்கூடாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். சண்முகம் Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா? என்றோ ஒரு நாள் ஒரே ஒரு துண்டு ஸ்வீட் சாப்பிட்டாலும் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவே செய்யும். அப்படி அதிகரித்த ரத்தச் சர்க்கரை அளவானது குறைவதற்கு இரண்டு, மூன்று நாள்களாவது ஆகும். அப்படியானால் சர்க்கரை நோயாளிகள், பண்டிகை நாள்களில்கூட இனிப்பே சாப்பிடக்கூடாதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. நியாயமான கேள்விதான்... அப்படிப்பட்ட நாள்களில் நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும் உணவை, அது சாதமோ, சப்பாத்தியோ, அதன் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துக்கொண்டு, கூடவே நிறைய காய்கறிகள் வைத்துச் சாப்பிடுவதோடு, ஆசைக்கு ஒரு துண்டு ஸ்வீட்டும் சாப்பிடலாம். ஆனால்,  இந்த அட்வைஸ், ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்போருக்கு மட்டும்தானே தவிர, எல்லோருக்குமானது அல்ல. காய்கறி பொரியல் Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு ஓட்ஸ் கஞ்சி... உடல் எடையை அதிகரிக்குமா? அதாவது நீங்கள் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவு குறைவாகவும் நார்ச்சத்தின் அளவு அதிகமாகவும் இருக்க வேண்டும். ஒரு ஸ்வீட்டோ, ஒரு கப் பாயசமோ சாப்பிட்டுவிட்டு ஒரு மாத்திரை எக்ஸ்ட்ரா போட்டுக்கொண்டால், ரத்தச் சர்க்கரை அளவு ஏறாது என நினைப்பதும் தவறானது. உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவை கணக்கிட்டு, அதற்கேற்ற மருந்துகளை, அதற்கேற்ற வேளைகளுக்கே உங்கள் மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். அந்த அளவை நீங்களாக அதிகரிப்பதோ, குறைப்பதோ, மாற்றுவதோ சரியானதல்ல. அது உங்கள் உடலில் வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். நீரிழிவு நோய் Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் பச்சரிசிக்குப் பதில் புழுங்கலரிசி சோறுதான் சாப்பிட வேண்டுமா? ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், இனிப்பு சாப்பிட விரும்புவோர், வீட்டில் தயாரிக்கும் இனிப்புகளை மட்டும் சாப்பிடவும். கடைகளில் வாங்குவதையோ, கல்யாண வீடுகளில் பரிமாறப்படுவதையோ சாப்பிட வேண்டாம். அவற்றில் சேர்க்கப்படும் பொருள்களின் அளவு, தரம் போன்றவை நமக்குத் தெரியாது என்பதால் வீட்டுத் தயாரிப்புகள் மட்டுமே பாதுகாப்பானவை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 11 Nov 2023 9:00 am

தீபாவளி: பட்டாசு, புகை, காற்று மாசு... ஆஸ்துமா, நுரையீரல் நோயாளிகள் கவனத்துக்கு!

தீப ஒளித் திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகையில் தீபமும் ஒளியும் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் ஒலியும் காற்று மாசும் இருக்கும். அதிக சத்தத்தில் பட்டாசுகளை வெடிக்கவிட்டு ஒலி மாசை ஏற்படுத்துவதுடன் செல்லப் பிராணிகளையும் நடுங்க வைத்துவிடுகிறோம். பட்டாசு டெல்லியில் அதிகரித்த காற்று மாசு; அதிக அளவில் குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்... அதே போல அதிக புகையை வெளியிடும் பட்டாசுகளைக் கொளுத்தி காற்று மாசை ஏற்படுத்துவது பலரின் உடல்நலத்தையும் மோசமாக்கிவிடுகிறது. குறிப்பாக, ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டாசு புகை பிரச்னையைத் தீவிரப்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பட்டாசு புகையினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அதிலிருந்து நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி தங்களைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்றும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் திருப்பதி. பட்டாசுப் புகை ஆன்லைன் வகுப்பு; பள்ளி விடுமுறை; வொர்க் ஃப்ரம் ஹோம்... டெல்லியில் காற்று மாசு கட்டுக்குள் வருமா? பொதுவாகவே நம் நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி போன்ற நகரங்களில் தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பிலிருந்தே பட்டாசு புகை, வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை போன்ற பெருநகரங்களில் டெல்லியைப்போல அதிக காற்று மாசுபாடு இல்லை என்றாலும் கணிசமான மாசுபாடு காணப்படுவதை மறுப்பதற்கில்லை. ஆஸ்துமா நோயாளிகள் மாசடைந்த காற்றுடன் பட்டாசுப்புகை சேரும்போது காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவு நேரடியாக நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆஸ்துமா, பிஓபிடி (Persistent Obstructive Pulmonary Disease) போன்ற பாதிப்புகள் இருப்பவர்களுக்கு பட்டாசுப் புகை ஒவ்வாமையை அதிகரித்து, மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் இருமல், மூச்சடைப்பு, அதிகமாக சளி உருவாகுதல் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும். சில பட்டாசுகள் மிக அதிக அளவிலான புகையை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு பாம்பு மாத்திரை, மத்தாப்பு போன்றவை. இவையெல்லாம் சத்தத்துடன் வெடிக்கும் வகையைச் சேர்ந்த பட்டாசுகள் இல்லை என்பதால் உடலுக்கும் நல்லது என்று நினைக்கிறோம். நுரையீரல் மருத்துவர் திருப்பதி `காற்று மாசுபட்ட சூழலில், 5 நாள் இருந்தாலே பக்கவாதம் ஏற்படலாம்' - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்! அதிக ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளைவிட அதிக காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக அமைவது இந்த வகைப் பட்டாசுகள்தான். ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள், அதிக நுரையீரல் பாதிப்புக்கு ஆக்ஸிஜன் பயன்படுத்துபவர்கள் ஆகியோர் பட்டாசு வெடிக்கும் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது மிகவும் நல்லது. நுரையீரல் பாதிப்புள்ளவர்கள் வீட்டில் இருக்கும்போது மத்தாப்பு போன்ற அதிக புகையை வெளியிடும் பட்டாசுகளை கொளுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதே போல நுரையீரல் பிரச்னை இருப்பவர்களும் பட்டாசுகள் கொளுத்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பட்டாசுப் புகை ஒருவேளை பட்டாசு கொளுத்துவதாக இருந்தாலும் வீட்டுக்குள் வைத்துக் கொளுத்தக்கூடாது. நல்ல காற்றோட்டமான இடத்தில் மட்டுமே கொளுத்த வேண்டும். நீண்டநேரம் பட்டாசு புகையில் இருப்பதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் தீபாவளி போன்ற அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் காலங்களில் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளைத் தவறவிடக் கூடாது. மேலும் பிரச்னைக்கான நிவாரண மருந்து மற்றும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் என அனைத்தையும் கூடுதலாக கையிருப்பு வைத்திருக்க வேண்டும். நுரையீரல் பாதுகாப்பு ஒட்டுமொத்தத்தில் நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் புகையை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் கொளுத்துவதைத் தவிர்த்துவிட்டு உறவினர்களோடு உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் தீபாவளியைக் கொண்டாடலாம் என்றார் அவர்.

விகடன் 11 Nov 2023 8:28 am

தீபாவளி கொண்டாட்டம்: வெடிக்கும் பட்டாசுகள்... கண்களில் காயம் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

குழந்தைகளையும் பட்டாசையும் பிரிக்க முடியாது. முதல்முறை பட்டாசு வெடிக்கும்போது பயப்படும் குழந்தைகளும் சில மணி நேரத்தில் பட்டாசுப் பிரியர்களாக மாறிவிடுவார்கள். பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. குறிப்பாக கண்களில் ஏற்படும் காயங்கள்... பட்டாசு வெடிக்கும்போது கண்களில் பட்டு காயம் ஏற்பட்டால் அதை எப்படி அணுக வேண்டும், எத்தகைய முதலுதவி அளிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் வசுமதி வேதாந்தம். பட்டாசு விற்பனை தீபாவளி கொண்டாட்டம்; மாடுகளுக்கு லட்டு கொடுக்கலாமா? கால்நடை மருத்துவர் விளக்கம்! ''வேறெந்த நாள்களைவிடவும், தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசு வெடிப்பதால் கண்களில் காயம் ஏற்பட்டு, மருத்துவரை அணுகுவோர் அதிகம். வெடி வெடித்து கை, கால்களில் அடிபடுவதற்கு இணையாக, கண்களிலும் காயம் பட்டு பாதிக்கப்படுவோரைப் பார்க்கிறோம். தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, வெடிப்பவர்களுக்குப் பக்கத்தில் இருப்பவர்களின் கண்களையும் பதம் பார்க்கக்கூடியவை பட்டாசுகள். கண்களுக்குள் பட்டாசுத்துகள் பட்டுவிட்டால் கண்களைத் தேய்க்கவே கூடாது. கண்களை உடனடியாக குளிர்ந்த நீரால் மிக மென்மையாகக் கழுவ வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் கண்களுக்குள் விழுந்த மத்தாப்புத்துகள், பட்டாசுத்துண்டுகள் போன்றவை வெளியேறிவிடும். கண்களைக் கழுவிவிட்டோமே, சரியாகிவிடும் என அப்படியே விட்டுவிடாமல், கண் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியதும் அவசியம். அப்போதுதான் கண்களில் பட்டாசுகளால் ரசாயன ரியாக்ஷன் ஏற்பட்டு, பாதிப்பு பெரிதாகாமல் தடுக்கப்படும். சிறப்பு மருத்துவர் வசுமதி மதுரை: சுங்குடி சேலை, இனிப்பு - காரம், செக்கு எண்ணெய்.. சிறைவாசிகளின் தீபாவளி சந்தை! கண்களில் பிளவு இருப்பது போலத் தெரிந்தால், அவர்கள் கண்களைக் கழுவுவதைத் தவிர்த்து, சற்றும் தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுகுவதுதான் பாதுகாப்பானது. கண்களில் பிளவு ஏற்பட்ட நிலையில், கண்களைக் கழுவினால், அந்தத் தண்ணீர் கண்களுக்குள் போய், 'எண்டோதால்மிட்டிஸ் ' (Endophthalmitis) என்ற பிரச்னையை ஏற்படுத்தலாம். கண்களின் உள் பகுதியில் ஏற்படும் ஒருவகை வீக்கம் இது. கண்களில் வலி, சிவந்துபோவது, இமைகளில் வீக்கம் மற்றும் பார்வை மங்குதல் என பல பிரச்னைகளுக்கு அது காரணமாகலாம். கண்களில் பட்டாசு அல்லது வெடி பட்டு பிளவு ஏற்பட்ட நிலையில், மருத்துவரை அணுகும்வரை கண்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் பாதுகாப்பானது. கண்களைச் சுற்றி துணியோ, பேண்டேஜோ கட்டக்கூடாது. கைகளைக் கழுவிய பிறகு, கைகளாலேயே கண்களைக் குவித்து மூடியபடி மருத்துவரிடம் செல்ல வேண்டும். கண்களில் எண்ணெய், ஐ டிராப்ஸ், ஆயின்மென்ட் என எதையும் உபயோகிக்கக்கூடாது. மருத்துவர் பார்த்துவிட்டு, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். பட்டாசு தீபாவளி 2023: ஆக்ஸிஸ் வங்கி, டிஎல்எஃப், பவர் கிரிட் உள்ளிட்ட 5 பங்குகள் பரிந்துரை! கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், பட்டாசு வெடிக்கும்போது அவற்றைக் கழற்றிவிட்டு, கண்ணாடி அணிந்துகொள்ளலாம். வெடிகளைக் கொளுத்தும்போது குறைந்தபட்சம் 5 மீட்டர் இடைவெளி இருக்கும்படி நின்றுகொண்டு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்து முடித்ததும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பட்டாசுகளைத் தொட்ட கையால் கண்களைத் தொட வேண்டாம். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்கவைக்கும் முயற்சியில் முகத்தை வெடிக்கு அருகில் கொண்டுசெல்வதைத் தவிர்க்க வேண்டும். திடீரென வெடித்தாலோ, புகைந்தாலோ அது கண்களில் பட்டு காயத்தை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் கண்களுக்கு கண்ணாடி, நீளமான ஊதுவத்தி பயன்படுத்துவது, இடைவெளி விட்டு நிற்பது, வெடிகளைக் கையில் கொளுத்தி விளையாடுவதைத் தவிர்ப்பது போன்றவற்றைப் பின்பற்றினால், தீபாவளி பண்டிகை பாதுகாப்பாகவும், நிஜமான கொண்டாட்டமாகவும் இருக்கும்'' என்கிறார் கண் மருத்துவர் வசுமதி. - ராஜலட்சுமி

விகடன் 10 Nov 2023 4:50 pm

How to: பெண்ணுறையைப் பயன்படுத்துவது எப்படி? | How to use female condom?

Female condom என்று சொல்லப்படக்கூடிய பெண்ணுறையை எப்படிப் பயன்படுத்துவது என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் பெண்ணுறையை உட்செலுத்துதல் மற்றும் வெளியே எடுத்தல் ஆகியவை குறித்த கையாளும் முறையைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினி ஏழுமலை விளக்குகிறார். ``நமது நாட்டில் பெண்ணுறையின் பயன்பாடு மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கிறது. ஏனென்றால், ஆணுறையைப் போலவே பெண்களுக்கென்று பெண்ணுறை இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதனை எவ்விதம் கையாள்வது என்பது தெரியாததால் பலரும் அதனைப் பயன்படுத்துவதில்லை. பெண்ணுறை (Representational Image) இப்படியிருந்தா செக்ஸ்ல திருப்தி இல்லாமப் போகலாம்... காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 118 பெண்ணுறை என்பது குழாய் போன்றிருக்கும். அதன் இரு முனைகளிலும் உள் வளையம், வெளி வளையம் ஆகிய இரண்டு வளையங்கள் இருக்கும். உள் வளையத்தை விரல்களில் பிடித்துக் கொண்டு பெண்ணுறுப்புக்குள் நுழைத்து கர்ப்பப்பை வாய் வரை கொண்டு செலுத்த வேண்டும். வெளி வளையம் பெண்ணுறுப்பின் முகப்பில் இருக்கும். இன்றைக்கு நாப்கினைப் போலவே டாம்பூன் மற்றும் மென்ஸ்ட்ரேஷன் கப் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே முறையில்தான் பெண்ணுறையை உட்செலுத்த வேண்டும். டாம்பூன் மற்றும் மென்ஸ்ட்ரல் கப் பயன்படுத்துகிறவர்கள் பெண்ணுறையை எளிதாகக் கையாளலாம். அதனைப் பயன்படுத்ததாதவர்களுக்கும் பெண்ணுறை பயன்படுத்துவது கடினமான செயல் இல்லை. ஆணுறையைப் பொறுத்தவரை உறவு முடிந்த பிறகு விறைப்புத்தன்மை போய்விடும் என்பதால் அதனை உடனே கழற்ற வேண்டியிருக்கும். பெண்ணுறையில் அந்த அவசியம் இல்லை. அதேபோல, உறவுக்கு சில மணி நேரம் முன்னரே செலுத்திக் கொள்ளலாம். பால்வினைத் தொற்றுகளிலிருந்து முழுமையான பாதுகாப்பு அளிக்கும். Sperms (Representational Image) மனைவியை திருப்திசெய்ய இப்படிப் பண்ணலாமா? - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 115 பெண்ணுறையை உட்செலுத்துவதைப் போலவே வெளியே எடுப்பதும் எளிதான செயல்தான். உறவுக்குப் பின் பெண்ணுறைக்குள் தங்கியிருக்கும் விந்து வெளியே சிந்தி விடாதபடி வெளிவளையத்தை முடிச்சு போடுவதைப்போல நன்றாகச் சுற்றிக்கொள்ள வேண்டும் (ஆணுறையையும் அப்படித்தான் சுற்றி முடிச்சு போடுவார்கள்). அதன் பிறகு உள்ளே விரல் விட்டு வெளிவளையத்தைப் பிடித்துக் கொண்டு அதனை உருவி எடுத்துவிடலாம். இதனைப் பயன்படுத்துவது எளிது என்பதோடு பாதுகாப்பு என்பதால் தாராளமாக அனைவரும் பயன்படுத்தலாம்.” என்கிறார் நந்தினி ஏழுமலை. - ஜிப்ஸி

விகடன் 10 Nov 2023 10:53 am

Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு ஓட்ஸ் கஞ்சி... உடல் எடையை அதிகரிக்குமா?

Doctor Vikatan: நான் தினமும் காலை உணவுக்கு ஓட்ஸ் கஞ்சி குடித்துக்கொண்டிருந்தேன். இப்படிச் செய்ய ஆரம்பித்த  ஒரு மாதத்திலேயே உடல் எடை ஒரு கிலோ அதிகரித்து விட்டது. ஓட்ஸ் கஞ்சியில், ஊறவைத்த வேர்க்கடலையும், தாமரை விதைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறேன். தவிர, வெங்காயம் , தக்காளி , மக்காச்சோளமும்  சேர்த்துக்கொள்கிறேன். இந்த உணவுமுறை உடல் எடையைக் கூட்டுமா??? -Kathir, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்    கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர் ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் தரத்தையும அளவையும் பொறுத்துதான் அந்த ஆரோக்கியத்தை கணிக்க முடியும்.  அதாவது இன்ஸ்டன்ட் ஓட்ஸில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அதை அடிக்கடி எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை அதிகரிக்கலாம். நீங்கள் ஓட்ஸ் கஞ்சியில் சேர்த்துக் கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கும் வேர்க்கடலை. தாமரைவிதை, சோளம் போன்றவற்றின் அளவும் இந்த விஷயத்தில் முக்கியம்.  Peanut Doctor Vikatan: தினமும் ஆளிவிதை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உதவுமா? ஓட்ஸில் நிறைய வகைகள் உள்ளன. ரோல்டு ஓட்ஸ் அல்லது ஸ்டீல் கட் குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் போன்றவை ஆரோக்கியமானவை. இவற்றில் ஒன்றை 30 கிராம் அளவு எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் சாப்பிடலாம். தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதும் உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். வேர்க்கடலையில் நல்ல புரதம் அதிகம் உண்டு என்றாலும் அதில் கலோரிகள் மிக அதிகம்.  சோளத்திலும் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அதையும் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.  உங்களுக்கு வயிற்று உப்புசமோ, வாயு பிரிவதோ இருந்தாலும், வயிறு அழுத்தமாக இருப்பது போன்றோ உணர்ந்தாலும் ஓட்ஸ் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள் அல்லது குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் வாங்கிப் பயன்படுத்துங்கள். தயிர் ஓட்ஸ் Doctor Vikatan: வறுத்த வேர்க்கடலை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? 30 கிராம் ஓட்ஸை வேகவைத்து, அதில் அரை கப் தயிர் சேர்த்து, வெங்காயம், தக்காளித் துண்டுகள் சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே காலை உணவுக்குச் சாப்பிடலாம்.  இப்படிச் சாப்பிடப் பிடிக்காதவர்கள், 30 கிராம் ஓட்ஸ், ஏதேனும் ஒரு பழம், ஒரு டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ், இரண்டு பாதாம், இரண்டு வால்நட்ஸ், ஒரு டீஸ்பூன் பூசணி விதைகள்எல்லாம் சேர்த்து ஸ்மூத்தி போன்று எடுத்துக் கொள்ளலாம்.  எனவே நீங்கள் சாப்பிடும் அதே ஓட்ஸை; இப்படி வேறு வேறு வகைகளில் மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள்.... ஆரோக்கியமாகவும் உணர்வீர்கள், எடையும் அதிகரிக்காது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 10 Nov 2023 9:00 am

`ஸ்மார்ட்வாட்ச்சால் உயிர்பிழைத்த சிஇஓ'... மாரடைப்பின் இறுதி தருணத்தில் இருந்து மீண்டது எப்படி?!

ஸ்மார்ட்வாட்ச்சுகள் பல சந்தர்ப்பங்களில் உயிர் மீட்பராக செயல்பட்டுள்ளன. இதயத் துடிப்பு, இசிஜியை அளவிடும் ஸ்மார்ட்வாட்ச், அதனைப் பயன்படுத்துவோரின் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்னைகளை அறிந்து உயிர்களைக் காப்பாற்றிய பல சம்பவங்கள் உள்ளன. இங்கிலாந்தில் உள்ள 42 வயது நபர் பால் வாப்ஹம் (Paul Wapham), ஹாக்கி வேல்ஸின் சிஇஓ- ஆகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்வான்சீயின் மோரிஸ்டன் பகுதியில் உள்ள இவரது வீட்டில் இருந்து காலை ரன்னிங் பயிற்சி செய்கையில், இவருக்கு மார்பில் கடுமையான வலி உண்டாகி உள்ளது. Heart attack பல் வலிக்கு Root Canal சிகிச்சை, மூன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு... மாரடைப்பு காரணமா? என்ன செய்வதென்று தெரியாத நிலையில் ஸ்மார்ட்வாட்ச் மூலம் தன் மனைவியைத் தொடர்பு கொண்டுள்ளார். உடனடியாக அங்கு வந்த அவரின் மனைவி மருத்துமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.  அங்கு அவருக்கு தமனியில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதை மருத்துவர்கள் அறிந்தனர். தமனியில் உள்ள அடைப்பை அகற்றுவதற்கான சிகிச்சைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.  இது குறித்து அவர் கூறுகையில், ``நான் வழக்கம் போல காலை 7 மணிக்கு ரன்னிங் சென்றேன், ரன்னிங் சென்ற ஐந்து நிமிடங்களிலேயே எனக்கு மார்பில் பெரும் வலி ஏற்பட்டது. எனது மார்பு இறுக்கமாக இருந்தது. சாலையில் கைகள் மற்றும் முழங்கால்களை ஊன்றியபடி சரிந்தேன். இறுக்கமாக இருந்த வலி பின்னர் பிழிவதைப் போல மாறியது.  Treatment (Representational Image) ஸ்மார்ட்பாேன், ஸ்மார்ட்வாட்ச் வரிசையில் ஸ்மார்ட் பல்பு அறிமுகம்! என் மனைவி லாராவுக்கு போன் செய்ய என் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்தினேன். அதிர்ஷ்டவசமாக, நான் வீட்டில் இருந்து ஐந்து நிமிட தூரத்தில் இருந்தேன். அதனால் அவள் ஓடி வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். மருத்துவர்கள் விரைவாகச் செயல்பட்டனர். நான் அதிக எடை கொண்டவன் அல்ல, என்னைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயல்பவன், அதனால் எனக்கு ஆபத்து காரணிகள் எதுவும் இல்லை என்றே நம்பினேன். எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இது என் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த நேரத்தில் ஸ்மார்ட்வாட்ச் பெரிதும் உதவியாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.  நீங்கள் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துபவரா?! உங்களுக்கு எந்த வகையில் ஸ்மார்ட்வாட்ச் உதவியாக உள்ளது. கமென்ட்டில் சொல்லுங்கள்!...

விகடன் 9 Nov 2023 3:40 pm