SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

Doctor Vikatan: ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்துமா Salt therapy?

Doctor Vikatan: சால்ட் தெரபி (Salt therapy) என்ற ஒன்று ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்தும் என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது என்ன சால்ட் தெரபி... அது உண்மையிலேயே ஆஸ்துமா பாதிப்பிலிருந்து நிவாரணம் தருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி. நுரையீரல் மருத்துவர் திருப்பதி சால்ட் தெரபி  (Salt therapy)  என நீங்கள் கேட்டிருப்பது உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பது பற்றியதா அல்லது வேறு ஏதேனுமா என்பது தெளிவாக இல்லை. உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளித்தால் சளி, இருமல் மட்டுப்படும், சரியாகி விடும் என்ற நம்பிக்கையும்  அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், தொண்டை வலியுடன் மருத்துவர்களை அணுகுபவர்களுக்குக்கூட  நாங்கள் உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பதை அறிவுறுத்துவதில்லை. ஏனெனில், ஏற்கெனவே  உப்பானது,  மியூகோசா (Mucosa) எனப்படும் சளிச்சவ்வை எரிச்சலடையச் செய்யலாம். அதற்கு பதில் உப்பு சேர்க்காத, வெதுவெதுப்பான நீரில் வாய்க் கொப்பளித்து, துப்பிவிடுவது சிறந்தது. மிக முக்கியமாக, உடலில் நீர்ச்சத்து குறையாதபடி, தொண்டைப்பகுதி வறண்டு போகாதபடி நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். வெதுவெதுப்பான சூட்டில் ஏதேனும் திரவமாக அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்கலாம். ஆஸ்துமாவுக்கு இன்றுவரை நிரூபிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை என்றால் இன்ஹேலர் மருந்துகள்தான். அதற்கு மாற்று என்பதே கிடையாது. Doctor Vikatan: பல வருடமாகத் தொடரும் இன்ஹேலர் உபயோகம்... அடிக்ஷனாக மாற வாய்ப்பு உண்டா? ஆஸ்துமாவுக்கு இன்றுவரை  நிரூபிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை என்றால் இன்ஹேலர் மருந்துகள்தான்.  அதற்கு மாற்று என்பதே கிடையாது. மருத்துவ ஆலோசனையோடு கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகளை இன்ஹேலர் வழியே எடுத்துக்கொள்வதுதான் பலன் தரும். காற்றுக்குழாய்களை விரிவடையச் செய்கிற  பிராங்கோடைலேட்டர் உள்ளிட்ட மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார். இதுதான் தீர்வு என்பது தெரியாமல், பலரும் தவறானதும் பலனற்றதுமான பல சிகிச்சைகளைப் பின்பற்றி, ஆஸ்துமா குணமாகாமல் போராடுகிறார்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 19 Jan 2026 6:49 am

கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

'கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார். காய்ச்சல்... வலி... தலைவலி என எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் பாராசிட்டமால் வாங்கி சாப்பிடுவது வழக்கம். ட்ரம்பின் இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது ட்ரம்பின் பேச்சு பொய்யானது... அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று 'The Lancet' இதழில் வெளியாகி உள்ள ஆய்வு தற்போது நிரூபித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained அந்த இதழில் வெளியாகி உள்ள தகவல்... பாராசிட்டமாலை முறையான மதிப்பாய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வு செய்ததில் கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம், மனநலக் கோளாறு ஏற்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை கடந்த ஆண்டு, ட்ரம்ப் இந்தக் கூற்றை கூறியதில் உலகம் முழுவதும்‌ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ட்ரம்பின் கூற்றிற்கு அப்போதே மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்புகளைக் கிளப்பியது. இப்போது மக்களுக்கு இந்த ஆய்வின் மூலம் உண்மை தெளிவாகி உள்ளது. வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

விகடன் 18 Jan 2026 11:57 am

Doctor Vikatan: சங்குப்பூ சேர்த்துத் தயாரிக்கப்படும் அழகு சாதனங்கள்; உண்மையிலேயே பலன் தருமா?

Doctor Vikatan: சங்குப்பூவை வைத்து சமீப காலமாக நிறைய அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதைக் கேள்விப்படுகிறோம். சங்குப்பூ என்பது சருமத்துக்கு உண்மையிலேயே நல்லதா? அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவத்தில் சங்குப்பூ உள்மருந்தாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிற முக்கிய மூலிகைகளில் ஒன்றாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பல கஷாயங்களில் சங்குப்பூ சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சங்குப்பூவின் மலர்களை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து டீயாகப் பருகும் வயலட் டீ (Violet Tea) இப்போது மிகவும் பரவலாகப் பழக்கத்தில் உள்ளது. சங்குப்பூவில் தயாரிக்கப்படும் தேநீர், கபம் தொடர்பான பிரச்னைகளைக் குறைப்பதற்குப் பெரிதும் உதவுகிறது.  சங்குப்பூவை இஞ்சிச் சாற்றுடன் சேர்த்து (அரை டீஸ்பூன் அளவு) எடுத்துக் கொள்ளும்போது, சளி மற்றும் இருமல் குறையும். இது  சிறந்த சிறுநீர் பெருக்கியாகச் (Diuretic) செயல்படுகிறது. இதனால் உடலில் தேவையற்ற நீர் கோப்பதால் ஏற்படும் வீக்கம் குறையும். Doctor Vikatan: கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி பலவீனமாகி கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டா? சங்குப்பூவின் மலர்களை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து டீயாகப் பருகும் வயலட் டீ (Violet Tea) இப்போது மிகவும் பரவலாக பழக்கத்தில் உள்ளது. சங்குப்பூச் செடியின் வேருக்கும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. குறிப்பாக, சங்குப்பூவின் வேர்கள் கழிச்சலை உண்டாக்கக் கூடிய (பேதி தூண்டும்) மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் (Liver Detoxification) செயல்முறைகளுக்காகத் தயாரிக்கப்படும் மருந்துகளிலும் இதன் வேர் முக்கியப் பங்கு வகிக்கிறது. வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுவதற்கான மருந்தாகவும் இதன் வேர்கள் பயன்படுகின்றன. வேர் மருத்துவத் தன்மை அதிகம் கொண்டது என்பதால், அதை மருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சித்த மருத்துவர்களின் பரிந்துரையோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  கிராமப்புறங்களில், சங்குப்பூ இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து, கட்டிகள் மீது தடவும் வழக்கம் இன்றும் உள்ளது. சங்குப்பூவின் இதழ்களைப் பிற மூலிகைகளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் (Face Pack) அல்லது ஸ்க்ரப்பர் (Scrubber) போல இன்று பயன்படுத்துகிறார்கள். சங்குப்பூ சருமத்திற்கு மென்மையைத் தருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சங்குப்பூவின் மலர்கள் பக்கவிளைவுகள் இல்லாதவை என்பதால், அவற்றை உணவு மற்றும் அழகுப் பராமரிப்பு என உள்மருந்தாகவும் வெளிமருந்தாகவும் தாராளமாகப் பயன்படுத்தலாம். சங்குப்பூவின் இதழ்களை பிற மூலிகைகளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் (Face Pack) அல்லது ஸ்க்ரப்பர் (Scrubber) போல இன்று பயன்படுத்துகிறார்கள். Doctor Vikatan: டீ, ஜூஸ் தயாரிப்பில் சங்குப்பூ... சாப்பிட உகந்ததா? மருத்துவ குணங்கள் உண்டா? ஆனாலும், சங்குப் பூக்களில் இயற்கையான நிறமிச் சத்துகள் (Pigments/Flavonoids) அதிகம் உள்ளன. அழகுப் பராமரிப்பில் இவற்றை எப்படிப் பயன்படுத்துகிறார்கள், எதில் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்து உபயோகிப்பது பாதுகாப்பானது.  தற்போது அழகு சார்ந்த தயாரிப்புகளில் இது குறித்து, பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் முடிவுகள் வெளியான பிறகு இது குறித்து முழுமையான தெளிவு கிடைக்கும் என நம்புவோம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 17 Jan 2026 7:15 am

`விரதம் இருந்தா கேன்சர் செல் செத்துப் போயிடும்'- அண்ணாமலையின் கருத்துகள் உண்மையா?

கேன்சர் செல்களுக்கு சாதாரண செல்களைவிட 7 மடங்கு அதிக எனர்ஜி வேண்டும். அந்த எனர்ஜியை குறைச்சுட்டா கேன்சர் செல் செத்துப்போயிடும். வாரத்துல ஒருநாள் சாப்பிடாதீங்க. ஆட்டோமெட்டிக்கா உடம்புல இருக்கிற கேன்சர் செல் செத்துப் போயிடும். வருஷத்துக்கு ஒருக்கா ஏழு நாள் விரதம் இருங்க. மொத்த கேன்சர் செல்லும் இறந்துடும் என பாஜக-வின் முக்கிய நிர்வாகி அண்ணாமலை பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு ஆதரவாககவும் எதிராகவும் பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். cancer விரதம் இருப்பதற்கும் கேன்சர் செல்கள் அழிவதற்கும் தொடர்பிருக்கிறதா என்று விளக்குகிறார் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெ.கென்னி ராபர்ட். விரதம் இருப்பதற்கும் புற்றுநோய்க்கும் நேரடி தொடர்பிருக்கிறா என்று மனிதர்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான ஆய்வுகள் எதும் இதுவரை இல்லை. ஆனால், சிகிச்சைக்கு முந்தைய ஆய்வுகள், விலங்குகள் மீதான ஆய்வுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு இது ஓரளவு பயனளிக்கலாம் என்றும் இது தொடர்பான கூடுதல் ஆய்வுகள் தேவைப்படலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, புற்றுநோய் சிகிச்சைக்கான மாற்றாக இதைக் கருத முடியாது. மேலும் விரதம் இருப்பது மட்டுமே புற்றுநோய்க்கான தனி சிகிச்சையாகவும் கருத முடியாது. ஒவ்வொரு நபரின் உடலுக்குமான ஊட்டச்சத்து தேவைகள் வேறு வேறாக இருக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக எடை இழப்பு, ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்படும். எனவே, புற்றுநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையோ கீமோதெரபி சிகிச்சையோ கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் உடலில் குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் சிகிச்சையைத் தாங்கிக் கொள்ள முடியும். Fasting சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடுமா? புற்றுநோய் செல்கள் வேகமாக பல்கிப் பெருகக்கூடிவை. குளுக்கோஸ் (சர்க்கரை) மட்டும் சார்ந்து பெருகக்கூடிய கேன்சர் செல்களுக்கு இது பயனளிக்கலாம். ஆனால், அனைத்து கேன்சர் செல்களும் குளுக்கோஸை மட்டும் எடுத்துக்கொண்டு பெருகக்கூடியவை கிடையாது. காரணம், புற்றுநோய் என்பது ரத்தத்திலும் வரலாம், எலும்புகளுக்குள்ளும் வரலாம், உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். எனவே, சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடும் என்பதைப் பொதுவான கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும் கேன்சர் என்பது நாம் சாப்பிடும் உணவோடு மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. மரபணு மாற்றங்களும் காரணம். ஒருவர் விரதம் இருக்கும்போது உடலில் இருக்கும் கொழுப்பு, தசை உள்ளிட்டவற்றில் இருந்தும் செல்கள் ஆற்றலை எடுத்துக்கொள்ளும். ஒருநபர் விரதம் இருந்தாலும் கேன்சர் செல்கள் உடலில் இருக்கிற ஆற்றலை வைத்தே உயிர் வாழக்கூடியவை. புற்றுநோய் சிகிச்சையைப் பொறுத்தவரை முழுமையான, சம நிலையான சிகிச்சை முறைகளைத் தான் பின்பற்ற வேண்டும். புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெ.கென்னி ராபர்ட். புற்றுநோய் வராமல் தடுக்குமா? விரதம் இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் என்பதற்கும் இன்னும் பெரிய அளவில் ஆதாரங்கள் இல்லை. ஆனால், ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கும், உடலில் கூடுதல் கலோரி சேர்வதைத் தடுப்பதற்கு விரதம் உதவக்கூடும். ஆனால், இதுவும் எல்லாருக்கும் பொருந்தாது. காரணம், ஒவ்வொருவரின் உடல்வாகு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அறிவியல் என்பது நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சைக்கு பயனளிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டால், மருத்துவர்கள் அதைப் பரிந்துரைப்பார்கள். ஆனால், அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லாமல் அதை முயற்சிப்பது சரியல்ல. விரதம் புற்றுநோயாளிகளுக்கு விரதம் இருப்பது தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் அவரவர் சிகிச்சை பெறும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. சுயமாக எதையும் முயற்சிக்க வேண்டாம் என்கிறார் மருத்துவர் ஜெ. கென்னி ராபர்ட்.

விகடன் 14 Jan 2026 4:38 pm

பழைய சோறு கஞ்சியில் இத்தனை நன்மைகளா? - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆய்வும் மருத்துவர் விளக்கமும்!

வடித்த சாதம் வீணாவதைத் தடுக்க நம் முன்னோர்கள் மீதி இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கஞ்சி போல குடிக்கும் பாரம்பரியப் பழக்கத்தை வைத்திருந்தனர். தமிழர்களின் பாரம்பரிய உணவில் இன்றும் முக்கிய இடம் பழைய சோறு கஞ்சிக்கு உண்டு. சாதத்தை இரவு இயற்கையாக மண் பானையில் புளிக்க வைத்து மறுநாள் சாப்பிடும் இந்த உணவு, எளிமையும் சத்தும் மிகுந்தது. பழங்காலத்தில் விவசாயிகளும் உழைப்பாளர்களும் உடல் சக்தி பெறவும், வெயில் காலங்களில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் பழைய சோறு கஞ்சியை எடுத்துக் கொள்வது வழக்கம். பழைய சோறு கஞ்சி செரிமானத்திற்கு எளிதானது மற்றும் நொதித்தல் முறையில் உருவாகும் பழைய சோறு கஞ்சியில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பழைய சோறு கஞ்சி நம் முன்னோரின் உணவே மருந்து என்னும் கருத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பழைய சோறு கஞ்சி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பழைய சோறு கஞ்சியின் மருத்துவ நன்மைகளை அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளன. புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, மாப்பிள்ளை சம்பா மற்றும் பொதுவிநியோகத் திட்ட அரிசி போன்றவற்றைச் சமைத்து, மண் பானையில் 8 முதல் 14 மணி நேரம் வரை புளிக்க வைப்பதன் மூலம், உடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர்கள் உருவாகின்றன. இந்தப் புளிப்புச் செயல்முறையில் புரோபயாட்டிக்ஸ் மற்றும் போஸ்ட்பயாட்டிக்ஸ் எனப்படும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாகுகின்றன. இது குறித்து டாக்டர் ஃபாரூக் அப்துல்லாவிடம் பேசினோம்... ``பழைய சோறானது நொதித்தல் முறைக்கு உள்ளாகும்போது Lactobacillus, Lactococcus lactis, Weisella, Pediococcus போன்ற நல்ல பாக்டீரியாக்கள் குடல் இயக்கத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகின்றன. டாக்டர் ஃபாரூக் அப்துல்லா நீண்ட காலமாகக் குடலில் ஏற்படும் அழற்சி (inflammation) காரணமாக உருவாகும் Inflammatory Bowel Disease (IBD) நோய் மற்றும் வாய் முதல் மலவாய் வரை செரிமானப் பாதையின் எந்தப் பகுதியிலும் அழற்சி ஏற்படுத்தி உருவாகும் Crohn's Disease போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அளவு பழைய சோறு கஞ்சியை எடுத்துக் கொண்டால் நல்ல பாக்டீரியாக்களின் விளைவுகளின் மூலம் நோயின் தன்மையையும் அறிகுறியையும் கட்டுப்படுத்தலாம். சாதாரணமாக அரிசியில் இருக்கும் இரும்புச்சத்தை விட நொதிக்க வைக்கும்போது அவை 20 மடங்கு அதிக இரும்புச்சத்தாக உயர்கிறது. பொருளாதார நலிவுற்ற மக்கள் மற்றும் கர்ப்பகால இரத்தக்குறைபாடு (anaemia) பிரச்சினையைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் சரியான அளவு, அதாவது தினசரி 100 கிராம் அளவு எடுத்துக் கொள்வதால் இரும்புச் சத்து உயரும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் கவனிக்க வேண்டியது, இதனை கூடுதலான உணவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மாத்திரைகளுக்கு மாற்றாக அல்ல. அறிந்துகொள்ள வேண்டியவை! என்னதான் பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோலவே பழைய சோற்றிலும் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்கள் அதிகமாகவே உள்ளதால், என்னதான் இரும்புச்சத்து அதிகமாக இருந்தாலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நோயை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும். ஹீமோகுளோபின் A1c -8 க்குக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகள் பழைய சோறு கஞ்சியின் நன்மைகள் அறிந்து சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது. ஹீமோகுளோபின் A1c -8 க்கும் அதிகமாக இருப்பவர்கள் அதிகமாகப் பழைய கஞ்சியை உட்கொள்ளும்போது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகள் குறைவான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பழைய சோறு கஞ்சியின் நன்மைகளை அனுபவித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் ஃபாரூக் அப்துல்லா தன் கருத்தைத் தெரிவிக்கிறார். Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக் கூடாது என்று சொல்லப்படுவது உண்மையா?!

விகடன் 6 Jan 2026 1:55 pm

Doctor Vikatan: பிரசவ தேதியைத் தாண்டியும் குழந்தை பிறக்காவிட்டால் காத்திருக்கலாமா?

Doctor Vikatan: கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பிரசவ தேதியைக் குறித்துக்கொடுக்கிறார்கள். சில பெண்களுக்கு அந்தத் தேதியில் பிரசவம் நடப்பதில்லை. அதைத் தாண்டிப் போவதும் நடக்கிறது. மருத்துவர்கள் குறித்துக்கொடுத்த  தேதியில் பிரசவம் நடக்கவில்லை என்றால் அதற்காகக் காத்திருப்பதில் என்ன பிரச்னை...  அப்படி எத்தனை நாள்கள் காத்திருக்கலாம்?  பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி   மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பிரசவ தேதியைத் துல்லியமாகக் கணிக்க வேண்டுமென்றால் கர்ப்பம் உறுதியான காலகட்டமும் சரியாக கணிக்கப்பட வேண்டும். மாதவிலக்கு சுழற்சி முறையாக இருக்கும் பட்சத்தில், கடைசி மாதவிலக்கான நாளின் அடிப்படையில் பிரசவ தேதியைக் கணக்கிடலாம்.   ஒருவேளை முறைதவறிய மாதவிலக்கு சுழற்சி கொண்டவர்கள் என்றால், முதல் 3 மாத கர்ப்பதில் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் அடிப்படையில் பிரசவ தேதியை கணிக்கலாம்.  8 முதல் 12 வாரங்களில் செய்யப்படும் ஸ்கேனை 'டேட்டிங் ஸ்கேன்' (Dating scan) என்று சொல்வோம். 37 வாரங்கள் முடிவடைந்த நிலையில் அதை நிறைமாத கர்ப்பம் என்று சொல்வோம். கர்ப்பிணிகள் பொதுவாக 37 முதல் 40 வாரங்களில் குழந்தை பெற்றாக வேண்டும். பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு 37 முதல் 40 வாரங்களில் பிரசவம் நிகழ்ந்துவிடும். அவர்களில் 5 சதவிகிதம் பேருக்கு இப்படி பிரசவ தேதியைத் தாண்டியும் பிரசவம் ஆகாமலிருக்கலாம். 40 வாரங்களைக் கடந்துவிட்ட நிலையில் குழந்தைக்கும் தாய்க்கும் சில சிக்கல்கள் ஏறட்படலாம். குழந்தை தொடர்ந்து பெரிதாக வளர்ந்துகொண்டே போகும். குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம். Doctor Vikatan: ஏற்கெனவே இருமுறை சிசேரியன்... மூன்றாவது சிசேரியன் செய்வது பாதுகாப்பானதா? அதன்படி, குழந்தைக்கு.... குழந்தை தொடர்ந்து பெரிதாக வளர்ந்துகொண்டே போகும். குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம். குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் குறைந்து பிரச்னைகளை ஏற்படுத்தலாம். குழந்தை தாயின் வயிற்றிலேயே மலம் கழிக்கலாம். அரிதாக சில குழந்தைகள் தாயின் கர்ப்பப்பைக்குள்ளேயே இறந்தும் போகலாம். அம்மாவுக்கு.... பெரிய குழந்தையைப் பிரசவிக்கும் முயற்சியில் தாயின் வெஜைனா மற்றும் வெஜைனாவுக்கும் ஆசனவாய்க்கும் இடையிலான பகுதிகளில்  காயங்கள் ஏற்படலாம். சிசேரியனுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். பிரசவ தேதி கடந்துவிட்ட நிலையில், குழந்தையின் நிலையைக் கண்காணிக்க, 'பயோபிசிகல் புரொஃபைல்' எனும் ஸ்கேன் செய்யப்படும். 40 வாரங்களில் கர்ப்பிணியின் இடுப்பெலும்புப் பகுதியை சோதனை செய்து பார்த்து, கர்ப்பப்பையின் வாயானது பிரசவிக்க ஏற்றதாக இருக்கிறதா என்று பார்ப்போம். சில மருத்துவர்கள் பிரசவ வலி வருவதற்காக 41 வாரங்கள்கூட காத்திருப்பதுண்டு. கர்ப்பப்பை வாய் பிரசவிக்கத் தயார்நிலையில் இருப்பது தெரிந்தால் செயற்கையாக பிரசவ வலியைத் தூண்ட கர்ப்பிணிக்கு மருந்துகள் கொடுப்போம். குழந்தை மிகவும் பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பை வாய் சாதகமாக இல்லாமலிருந்தாலோ, தாய் மற்றும் குழந்தையின் நலன் கருதி, சிசேரியன் செய்ய முடிவெடுப்போம். Doctor Vikatan: அம்மாவுக்கு சிசேரியன், மகளுக்கும் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லையா? கர்ப்பப்பை வாயானது சாதகமாக இல்லாத நிலையில் NST ( non stress test), AFI (Amniotic fluid index), BPP (biophysical profile) போன்ற டெஸ்ட்டுகளின் மூலம் குழந்தையைக் கண்காணிப்போம். இந்த டெஸ்ட் எல்லாம் நார்மல் என்ற நிலையிலோ, கர்ப்பிணிக்கு வலி வரும் பட்சத்திலோ உடனடியாக டெலிவரி பார்ப்போம். ஒருவேளை குழந்தை மிகவும் பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பை வாய் சாதகமாக இல்லாமலிருந்தாலோ, தாய் மற்றும் குழந்தையின் நலன் கருதி, சிசேரியன் செய்ய முடிவெடுப்போம். எனவே, மருத்துவர் குறித்துக்கொடுத்த தேதியில் பிரசவம் நிகழவில்லை என்றால் அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 5 Jan 2026 6:33 am

Doctor Vikatan: பெயின் கில்லர் இல்லாமல் பீரியட்ஸ் வலியை சமாளிக்க முடியாதா?

Doctor Vikatan: என் வயது 24. பீரியட்ஸ் நாள்களில் எனக்குக் கடுமையான வயிற்றுவலி, இடுப்புவலி, முதுகுவலி ஏற்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பெயின்கில்லர் மாத்திரைகள் போட்டுக்கொண்டுதான் சமாளிக்கிறேன். பெயின்கில்லர் எடுக்கக்கூடாது என்றே பலரும் அட்வைஸ் செய்கிறார்கள். பீரியட்ஸ் வலியை பெயின்கில்லர் இல்லாமல் சமாளிக்க ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லவும். பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் . மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி மற்றும் முதுகு வலி போன்றவை பல பெண்களுக்கும் சவாலான விஷயமாக இருக்கலாம். இதற்கு உடனடியாக வலி நிவாரண மாத்திரைகளை (Painkillers) நாடாமல், இயற்கையான மற்றும் எளிய முறைகளின் மூலம் வலியைக் குறைக்க முடியும்.     ஹாட் வாட்டர் பேக் (Hot water bag) கொண்டு அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது தசைகளைத் தளர்த்தி வலியைக் குறைக்கும். இரவில் படுக்கச் செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலுக்கு இதமான உணர்வையும், நல்ல உறக்கத்தையும் தரும். மாதவிடாய் நாள்களில் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்றொரு பொதுக்கருத்து உள்ளது. ஆனால், அதை அப்படியே பின்பற்றாமல், அவரவர் உடல் ஒத்துழைத்தால் தாராளமாக வொர்க் அவுட்செய்யலாம். உடற்பயிற்சி செய்யும்போது சுரக்கும் எண்டார்ஃபின் (Endorphin) ஹார்மோன் இயற்கையான வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. அதேபோல சிலவகை யோகாசனங்களும் ( (Cat-Cow pose, Child’s pose) பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் வலியைக் குறைக்கும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep breathing) செய்வதன் மூலம் மன அழுத்தமும் வலியும் குறையும். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி (Deep breathing) செய்வதன் மூலம் மன அழுத்தமும் வலியும் குறையும். Doctor Vikatan: வேலையை பாதிக்கும் அளவுக்கு தலைவலி... பெயின் கில்லரால் சமாளிப்பது சரியா? பீரியட்ஸ் வலியைக் குறைப்பதில் உணவுகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. மெக்னீசியம் சத்து அதிகம் உள்ள வாழைப்பழம், கீரை, நட்ஸ், டோஃபு போன்றவற்றைச் சாப்பிடலாம். ஒரு துண்டு டார்க் சாக்லேட் மற்றும் சூடான சூப் குடிப்பது இதமாக இருக்கும்.  அதிகப்படியான கஃபைன் (Caffeine), ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் சீஸ் (Cheese) போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. போதுமான அளவு ஓய்வும் ஆழ்ந்த உறக்கமும் உடலைத் தளர்த்தி, வலியைக் குறைக்கும். அன்றாட வேலைகளைச் செய்யவே முடியாத அளவுக்கு வலித்தாலோ, மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வலி ஆரம்பித்தாலோ, ஃபைப்ராய்டு (Fibroids) எனப்படும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிந்தாலோ, சுய வைத்தியங்களைச் செய்துகொண்டிருக்காமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகமிக அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: நரக வேதனையைத் தரும் வறட்டு இருமல்,தொண்டைப்புண்...  இருமலை நிறுத்த வழி உண்டா?

விகடன் 2 Jan 2026 8:59 am

Doctor Vikatan: நரக வேதனையைத் தரும் வறட்டு இருமல்,தொண்டைப்புண்...  இருமலை நிறுத்த வழி உண்டா?

Doctor Vikatan: என் வயது 55. எனக்கு கடந்த ஒரு மாதமாக கடுமையான வறட்டு இருமல் இருக்கிறது. பாட்டில், பாட்டிலாக இருமல் மருந்து குடித்தும் இருமல் நிற்கவில்லை. இருமி இருமி, தொண்டை புண்ணானதுதான் மிச்சம். இருமல் அடங்கும்வரை நரக வேதனையை அனுபவிக்கிறேன். இதற்கு என்னதான் காரணம்... இந்த இருமலை நிறுத்த என்னதான் வழி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்      மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் இருமல் எதனால் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதற்கான சிகிச்சையை முடிவு செய்ய முடியும். வைரஸ் தொற்றால் ஏற்பட்டதா, பாக்டீரியா தொற்றால் ஏற்பட்டதா, பிற காரணங்களால் ஏற்பட்டதா என்று பார்க்க வேண்டியது அவசியம்.     வறட்டு இருமலுக்கு மிக முக்கியமான காரணம் வைரஸ் தொற்றுதான். இந்தத் தொற்றால் ஏற்படும் இருமலானது, பொதுவாக இரண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம். ஒருவேளை தொற்று மிகவும் தீவிரமாக இருந்தால், வறட்டு இருமலானது  நான்கு வாரங்கள் வரைகூட நீடிக்கலாம். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் வரும் இருமலுக்கு, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் 'Cough Suppressants'  மருந்துகள் எடுத்தால் போதும்.  தொடர்ந்து இருமுவதால் தொண்டையில் எரிச்சலும், அசௌகர்யமும் ஏற்படலாம். இதைத் தவிர்க்கவே இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இருமல், பெரும்பாலும் வறட்டு இருமலை ஏற்படுத்தாது. இதற்கு மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் வரும் இருமலுக்கு, 'Cough Suppressants' மருந்துகள் எடுத்தால் போதும். Doctor Vikatan: சில வகை இருமல் மருந்துகளைக் குடித்தால் கை, கால் நடுக்கம் ஏற்படுவது ஏன்? சில நேரங்களில் பாக்டீரியா தொற்று குணமானாலும், அதன் பிறகு ஒருவித வறட்டு இருமல் சில நாள்கள் இருக்கலாம்.  அதைக் குறைக்க  Cough Suppressants மற்றும்  ஆன்டி-ஹிஸ்டமைன் (Anti-histamines) மருந்துகள் பரிந்துரைக்கப்படும். தொண்டை எரிச்சலையும் அதனால் ஏற்படும் அவதியையும் குறைக்கவே, வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.  வறட்டு இருமல் ஏற்பட  வேறு  காரணங்களும் இருக்கலாம். உதாரணத்துக்கு,  ஒவ்வாமை (Allergies), மூக்கடைப்பு (Post-nasal drip), நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி (Gastritis), மற்றும் ஆஸ்துமா போன்றவையும் வறட்டு இருமலை உண்டாக்கலாம். இருமல் மருந்துகள்  தற்காலிக நிவாரணமாக  மட்டுமே செயல்படும். இருமல் எதனால் ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணத்தைக் (Underlying cause) கண்டறிந்து அதற்குச் சிகிச்சை அளிப்பது மிக அவசியம். எனவே, காரணம் அறியாமல் மருந்துகள் எடுத்தால் இருமல் கட்டுப்படாது. நீங்களாக மருந்து வாங்கிப் பயன்படுத்துவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம், கவனம்! உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 1 Jan 2026 8:48 am

Doctor Vikatan: குளிர்காலத்தில் பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: குளிர்காலத்தில் பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று எனக்கு சிறு வயது முதல் சொல்லப்பட்டதால் நானும் இத்தனை வருடங்களாக அதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். அப்படியெல்லாம் இல்லை, பழங்களால் ஒன்றும் ஆகாது என ஒரு சாரார் சொல்வதையும் கேட்கிறேன். இந்த இரண்டில் எது தான் உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என்பது தவறான கருத்து. உண்மையில், பழங்களில் உள்ள வைட்டமின்-C (Vitamin-C) நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கவே உதவுகிறது. இருப்பினும், சிலருக்கு குறிப்பிட்ட பழங்கள் ஒவ்வாமையை (Allergy) ஏற்படுத்தி, உடல்நலத்தில் சில மாற்றங்களை உருவாக்கலாம். ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஆரஞ்சு, திராட்சை மற்றும் தர்பூசணி போன்ற சிட்ரஸ் பழங்கள் உடலில் கோழையை (Phlegm) அதிகப்படுத்தலாம். சிலருக்கு வாழைப்பழம் சாப்பிடும்போது தொண்டையில் சளி கட்டுவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் தற்காலிகமாக அதைத் தவிர்க்கலாம். சளித்தொந்தரவு இருப்பவர்கள் மலை வாழைப்பழம், செவ்வாழை அல்லது நேந்திரம் பழம் போன்றவற்றை முயற்சி செய்யலாம்; இவை பொதுவாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. பழங்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவது போல் தோன்றினால், நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா? பழங்களை நல்ல வெயில் இருக்கும் பகல் நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. பழங்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவது போல் தோன்றினால், நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. ஃப்ரிட்ஜில் (Fridge) வைத்த ஜில்லிப்பான பழங்களையோ அல்லது வெட்டி வைத்த பழைய பழங்களையோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவை தொண்டையில் அலர்ஜியை ஏற்படுத்தி சளியை உருவாக்கும். பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், உங்கள் உடலுக்கு எந்தப் பழம் ஏற்றுக்கொள்கிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சரியான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 30 Dec 2025 7:00 am

Doctor Vikatan: ஜெல் டூத்பேஸ்ட் ஆரோக்கியமானதா: இனிப்பான டூத்பேஸ்ட் சர்க்கரையை அதிகரிக்குமா?

Doctor Vikatan: டூத் பேஸ்ட்டில் ஜெல் வடிவ டியூப்கள் நிறைய வருகின்றன. கண்களைப் பறிக்கும் நிறத்தில் அவற்றைப் பார்த்ததுமே உபயோகிக்கத் தோன்றுகிறது. வழக்கமான வெள்ளை நிற பேஸ்ட் அல்லது கலர்கலரான ஜெல்... இரண்டில் பற்களுக்கு ஆரோக்கியமானது எது... சில டூத் பேஸ்ட், ஜெல்களில் இனிப்புச்சுவை அதிகமாக இருக்கிறதே... நீரிழிவு உள்ளவர்களுக்கு அது ரத்தச் சர்க்கரை அளவை அதிகப்படுத்துமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி    பல் மருத்துவர் மரியம் சஃபி டூத் பேஸ்ட்டா, டூத் ஜெல்லா என்று கேட்டால், பேஸ்ட்தான் சிறந்தது. அதன் சுத்தப்படுத்தும் திறன் ஜெல்லைவிட சிறந்ததாக இருக்கும். பேஸ்ட் வைத்துப் பல் துலக்கும்போது வாயும் பற்களும் சுத்தமான உணர்வு கிடைக்கும்.  பளபளப்பான கிரிஸ்டல்  துகள்கள் சேர்த்தாலும், மின்ட் போன்ற ஃப்ளேவர்கள் சேர்க்கப்படுவதாலும்  டூத் ஜெல் என்பது சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது.  ஒருவரின் பல் ஆரோக்கியம், வாய் சுகாதாரம் மற்றும் பல் பிரச்னைகளைப் பொறுத்து அ வருக்கு எந்த மாதிரியான டூத் பேஸ்ட் சரியாக இருக்கும் என்பதை பல் மருத்துவர் பரிந்துரைப்பார்.  குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு எளிதில் சொத்தைப் பல் பிரச்னை வரும் என்பதால் அதைத் தவிர்ப்பதற்கு ஃப்ளூரைடு கலந்த டூத் பேஸ்ட்டை பரிந்துரைப்பார்.  அதுவே வயதானவர்களுக்கும், நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கும், பல் கூச்சம் பிரச்னை உள்ளவர்களுக்கும்  பொட்டாசியம் நைட்ரேட் (Potassium nitrate)  அல்லது ஸ்ட்ரான்ஷியம் குளோரைடு (Strontium Chloride)  உள்ள டூத் பேஸ்ட்டுகளை பரிந்துரைப்பார். எனவே ஒரு டூத் பேஸ்ட் எல்லோருக்கும் ஏற்றதாக இருக்காது.  தினமும் இருவேளை பல் துலக்குவதை வழக்கமாக்குவது அதில் அடிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள். Doctor Vikatan: கூர்மையான பற்கள்... வாய்ப்புண், வாய்ப் புற்றுநோய்க்குக் காரணமாகுமா? பொதுவாக டூத் பேஸ்ட்டுகளில் மற்ற சேர்க்கைகளின் வீரியத்தை மட்டுப்படுத்துமபடிதான் சார்பிட்டால் (Sorbitol) என்பதைச் சேர்ப்பார்கள். இது டூத் பேஸ்ட்டுகளில் ப்ரிசர்வேட்டிவ்வாகவும் இனிப்பூட்டியாகவும்  பயன்படுத்தப்படுகிறது. இது சேர்க்கப்பட்ட பேஸ்ட்டை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடாது.  டூத் பேஸ்ட்டோ, மவுத் வாஷோ உபயோகித்ததும் வாய்க் கொப்பளித்துத் துப்பிவிடுவோம். எனவே. அது உடலுக்குள் போக வாய்ப்பில்லை. ரத்தச் சர்க்கரை அளவையும் அதிகரிக்க வாய்ப்பில்லை.  எந்த பேஸ்ட் சிறந்தது என்பதைவிட முக்கியமானது நீங்கள் எப்படி உங்கள் வாய் சுகாதாரத்தைப் பராமரிக்கிறீர்கள் என்பது. தினமும் இருவேளை பல் துலக்குவதை வழக்கமாக்குவது அதில் அடிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 29 Dec 2025 5:39 am

Doctor Vikatan: தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிற அளவுக்கு வலி! - காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என் வயது 28. சமீபத்தில்தான் திருமணமானது. எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த எனக்கு, அது கசப்பான அனுபவங்களையே கொடுத்திருக்கிறது. தாம்பத்திய உறவின்போது எனக்குக் கடுமையான வலி ஏற்படுகிறது. அது தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிறது. என்னால் உடலளவில் அதற்கு ஒத்துழைக்க முடியவில்லை. ஒருவேளை நான் இதில் விருப்பமின்றி, என் கணவரைத் தவிர்க்க இப்படிச் செய்கிறேனோ என அவருக்கு ஓர் எண்ணம் இருப்பதும் தெரிகிறது. இப்படிப்பட்ட வலிக்கு என்ன காரணம்... இதற்குத் தீர்வுகள், சிகிச்சைகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.   மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலிக்கு, 'டிஸ்பெரூனியா' (Dyspareunia ) என்று பெயர். அதாவது தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது ஏற்படுகிற ஒருவித வலி.  இந்த வலியின் பின்னணியில் உளவியல் மற்றும் உடலியல் காரணங்கள் எதுவும் இருக்கலாம். தாம்பத்திய உறவு குறித்து சிலருக்கு மனத்தடைகளும் தயக்கங்களும் இருக்கலாம்.  குழந்தைப்பருவத்தில் சந்தித்த பாலியல் வன்முறையால் ஏற்பட்ட நீங்கா நினைவுகளால் ஏற்பட்ட பயம் அல்லது முந்தைய உறவில் ஏற்பட்ட மோசமான பாலியல் உறவு அனுபவங்களால் ஏற்பட்ட வலி என ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம்.  அடுத்தது, அவர்களால் உடலியல் ரீதியாக தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலை இருக்கலாம். தாம்பத்திய உறவின் போது எதிர்கொள்கிற இத்தகைய வலிக்கு, வெஜைனல் வறட்சியே பரவலான காரணமாக இருக்கிறது. புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். அதேபோல மெனோபாஸ் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கும் வெஜைனாவில் வறட்சி ஏற்படுவது சகஜம். எண்டோமெட்ரியோசிஸ் என்கிற பிரச்னை உள்ள பெண்களுக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும். ஹார்மோனல் இம்பேலன்ஸ் எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மையும் இதற்கு முக்கியமான காரணம். சில பெண்களுக்கு வெஜைனாவில் கசிவு இல்லாததாலும் வறட்சியும் தாம்பத்திய உறவின்போதான வலியும் இருக்கும்.  வெஜைனாவில் ஏற்படுகிற தொற்று, இடுப்பெலும்பு பகுதியில் ஏற்படுகிற தொற்று போன்றவை இருந்தாலும், அந்தப் பெண்களுக்கு தாம்பத்திய உறவின்போது வலி இருக்கும்.  எண்டோமெட்ரியோசிஸ் என்கிற பிரச்னை உள்ள பெண்களுக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும். கர்ப்பப்பையின் லைனிங்கானது, கர்ப்பப்பையையும் தாண்டி சினைப்பை, சினைக்குழாய்கள், சிறுநீர்ப்பை, மலக்குடல் என உடலின் எந்தப் பகுதியிலும் படிவதையே 'எண்டோமெட்ரியோசிஸ்'  என்கிறோம். 20 முதல் 40 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது அடுத்தது வெஜைனிஸ்மஸ் (vaginismus) என்ற பாதிப்பு. முதல்முறை தாம்பத்திய உறவின்போது, உறவுக்கு  உடல் ஒத்துழைக்காது. வெஜைனா தசைகள் சுருங்கிக் கொள்ளும். இந்த விஷயத்தில் கணவரின் ஒத்துழைப்பும்,  அவர் தன் மனைவியைப் புரிந்துகொள்ள வேண்டியதும் மிக முக்கியம்.  'வெஜைனிஸ்மஸ்' பிரச்னையானது, தாம்பத்திய உறவின்போது மட்டும்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போது, மருத்துவர் அந்தரங்க உறுப்பை டெஸ்ட் செய்ய முனையும்போது சம்பந்தப்பட்ட பெண் அதற்கு ஒத்துழைக்க மாட்டார். தவிர, ஃபைப்ராய்டு, சினைப்பை கட்டிகள் உள்ள நிலையில், மிகவும் தீவிரமான தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி ஏற்படலாம்.  மன அழுத்தமும் முக்கிய காரணம்.  Doctor Vikatan: தாம்பத்திய உறவு, நீண்ட நேரம் ஈடுபடுவது பிரச்னையின் அறிகுறியா? இவை எல்லாவற்றுக்குமே தீர்வுகள் உண்டு. வெஜைனா வறட்சிக்கு, லூப்ரிகேஷன் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படும். மெனோபாஸ் காலத்து வறட்சியால் ஏற்பட்ட பிரச்னைக்கு, ஈஸ்ட்ரோஜென் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படும்.  வெஜைனிஸ்மஸ் பாதிப்புக்கும் பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. இதற்கெல்லாம் முன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். தாம்பத்திய உறவின் போது வலியை உணர்வதாகச் சொன்னால், அந்தப் பெண்கள் பொய் சொல்வதாக நினைக்கக்கூடாது. அதற்கு கவனம் கொடுத்து மருத்துவரை அணுகினால், சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 28 Dec 2025 7:30 am

Pink Parking: தாய்மைக்கு 'ரெட் கார்பெட்'வரவேற்பு; இந்தியாவில் வைரலாகும் பிங்க் பார்க்கிங் மேஜிக்!

பெங்களூரு போன்ற பரபரப்பான பெருநகரங்களில், ஒரு வணிக வளாகத்திற்குச் செல்வதே சில நேரங்களில் பெரும் சவாலாக மாறிவிடும். அதிலும் குறிப்பாக, நெரிசல் மிகுந்த வாகன நிறுத்துமிடங்களில் இடத்தைத் தேடி அலைவதும், பின் அங்கிருந்து நீண்ட தூரம் நடந்து மாலுக்குள் செல்வதும் சாதாரண மனிதர்களுக்கே சோர்வைத் தரும். இந்த நிலையில், கர்ப்பிணித் தாய்களின் சிரமத்தை உணர்ந்து, பெங்களூருவில் உள்ள நெக்ஸஸ் மால் (Nexus Mall) எடுத்துள்ள ஒரு சிறு முயற்சி இன்று பலரது இதயங்களை வென்றுள்ளது. பொதுவாக, பார்க்கிங் பகுதிகளில் உள்ள இருட்டும், வாகனப் புகையும், இடப்பற்றாக்குறையும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகுந்த அசௌகரியத்தைத் தரும். இதனைப் போக்கும் விதமாக, அந்த மாலில் பிரத்யேகமாக 'Mothers-to-be' (எதிர்காலத் தாய்மார்கள்) என்ற வாசகத்துடன் பிங்க் நிறத்தில் பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Pink Parking இது வெறும் ஒரு பார்க்கிங் வசதி மட்டுமல்ல; ஒரு பெண்ணின் தாய்மைப் பயணத்திற்கு அந்தச் சமூகம் கொடுக்கும் மரியாதையாகவும், அங்கீகாரமாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த 'பிங்க் பார்க்கிங்' பகுதி மிகவும் வெளிச்சமாகவும், மாலின் நுழைவு வாயிலுக்கு மிக அருகிலும் இருப்பதை நாம் காண முடிகிறது. View this post on Instagram A post shared by Akshay Raina (@moniakshaylove12) பெங்களூருவின் நெக்ஸஸ் மால் சமீபத்தில் இந்தத் திட்டத்திற்காகப் பாராட்டுகளைப் பெற்றாலும், கேரளாவின் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மால் (Lulu Mall) இந்த விஷயத்தில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. மேலும், 'பிங்க்' நிற மையக்கருத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பகுதி, கூட்ட நெரிசலில் எளிதாக அடையாளம் காணும் வகையில் உள்ளது. பார்க்கிங்கில் இடத்தைத் தேடி அலைவதே ஒரு பெரிய மன உளைச்சல், இந்த வசதி என் நாளை அழகாக்கிவிட்டது என ஒரு கர்ப்பிணித் தாய் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஒரு வணிக வளாகம் லாபத்தைத் தாண்டி, தனது வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் உணர்வுகளில் காட்டும் இந்த அக்கறை உண்மையிலேயே போற்றுதலுக்குரியது. எதிர்காலத்தில் இது போன்ற வசதிகள் எல்லா பொது இடங்களிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. Pink October: தயக்கத்தையும் கூச்சத்தையும் தள்ளி வையுங்கள்; மார்பகப் புற்றுநோயையும் தள்ளி வைக்கலாம்!

விகடன் 27 Dec 2025 4:01 pm

Nala dental: அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை; மருத்துவ சிகிச்சைக்கான முக்கிய இடமாக மாறி வரும் மதுரை

உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயர்தர சிகிச்சை பெற தமிழகத்தை நோக்கி படை எடுக்கிறார்கள். அதில் மதுரை நகரம் வெளிநாட்டவர்களுக்கு விருப்பமான மருத்துவ சிகிச்சை நகரமாக மாறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பலர் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்கு வருகிறார்கள் என்கிறார்கள், அரவிந்த் கண் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா மற்றும் நாலா டெண்டல் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜே. கண்ணா பெருமான்.  Nala dental hospital டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா கூறுகையில், மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் சுமார் 1,200 முதல் 1,500 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். பெரும்பாலும் ஓமன், நைஜீரியா, புர்கினா ஃபாசோ, தான்சானியா, சியரா லியோன், பங்களாதேஷ், மாலத்தீவுகள், மலேசியா, கானா, பெனின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக நோயாளிகள் வருகிறார்கள். பிறவியிலேயே வரும் குளோக்கோமா, கண் உறை நோய்கள், கடுமையான ரெட்டினா நோய்கள் போன்ற சிக்கலான கண் பிரச்னைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  மருத்துவர்களின் பரிந்துரை ஒரு சில நோயாளிகள் முன்பு சிகிச்சை பெற்றவர்களின் பரிந்துரையால், தங்கள் நாட்டில் உள்ள கண் மருத்துவர்களின் பரிந்துரையால் இங்கு வருகிறார்கள்.  அரவிந்த் மருத்துவமனை இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள பல மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. நைஜீரியாவில் உள்ள கண் மருத்துவர்களில் சுமார் 15 சதவிகிதம் பேர் அரவிந்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை வெளிநாட்டு நோயாளிகளுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. விமானப் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை ஒப்பிடுகையில், சிகிச்சை செலவு மிகவும் குறைவாக உள்ளது. சில நாடுகளில் அரசே தங்கள் குடிமக்களுக்கு அரவிந்தில் சிகிச்சை பெற பயணச் செலவையும் சிகிச்சை செலவையும் ஏற்றுக் கொள்கிறது. பெரும்பாலான வெளிநாட்டு நோயாளிகள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சேவைகளுக்கு அவர்கள் மிகவும் நன்றியுடன் இருக்கிறார்கள் என்றார்.  டென்டல் இம்பிளான்ட் சிகிச்சைக்காக மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகமான நோயாளிகள் நாலா டெண்டல் மருத்துவமனைக்கு வருகிறார்கள். பெரும்பாலும் நோயாளிகளுடன் ஒருவரோ இருவரோ உடன் வந்து, சுமார் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்று விட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்கிறார்கள். பல் சிகிச்சைக்கான செலவு இங்கு குறைவாக இருப்பதே வெளிநாட்டவர்களின் வருகைக்கு முக்கிய காரணம் என்கிறார் மருத்துவர் ஜே. கண்ணா பெருமான்.  டிராவல் கிளப், மதுரையின் நிறுவனர் மற்றும் ஹோட்டல் ஃபார்ச்சூன் பாண்டியன் இயக்குனரான ஜி. வாசுதேவன் கூறுகையில், மதுரையில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பெரும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முதன்மையாக, நேரடி விமான சேவை அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடி விமானங்கள் தொடங்கப்பட வேண்டும். இது நோயாளிகளின் பயண நேரத்தை எளிதாக்கும்.  மேலும், வெளிநாடுகளில் மதுரையை ஒரு தனி மருத்துவ நகரமாக அறிமுகப்படுத்த, ரோடு ஷோ மூலம் விளம்பர படுத்த வேண்டும். அத்துடன், வெளிநாடுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மதுரையின் தூதர்களாக செயல்பட வேண்டும். அதன் மூலம் அவர்களின் உலகளாவிய தொடர்புகள் மதுரைக்கு பெரிய ஆதரவாக அமையும். அரசு, மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் விமான சேவை துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், மதுரை ஒரு சிறந்த மருத்துவ சுற்றுலா மையமாக நிச்சயம் உருவாகும் என்றார்.

விகடன் 24 Dec 2025 5:51 pm

Doctor Vikatan: எப்போதும் காதுகளில் அரிப்பு; பட்ஸ் உபயோகித்தால் மட்டுமே தீர்வு: என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 56. எனக்கு எப்போதும் காதுகளில் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அப்படி அரிக்கும்போது, பட்ஸ் வைத்துக் குடைந்தால்தான் அரிப்பு நிற்கிறது. இது தினசரி வாடிக்கையாகவே இருக்கிறது. காதுகளில் அரிப்பு ஏற்பட என்ன காரணம்... இதற்கு சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை  சிகிச்சை மருத்துவர் தீபிகா.   காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது குடைவது என்பது பலருக்கும் ஒரு பழக்கம் போல மாறிவிடுகிறது. ஆனால், இது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் காதுகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய சிக்கலாக மாறலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். காது அரிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கு அவற்றில் எது காரணமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில்,  காதில் சுரக்கும் மெழுகு (Ear wax) ஒருவித பாதுகாப்பு அடுக்காகச் செயல்படும். அதை நாம் அடிக்கடி சுத்தம் செய்வதால், காதுகளின் உட்பகுதி வறண்டு அரிப்பு உண்டாகிறது. குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் செல்வதால் அல்லது அதிக வியர்வை காரணமாக பூஞ்சைக் கிருமிகள் வளர்வதால் அரிப்பை ஏற்படலாம். ஜலதோஷம் அல்லது காது அடைப்பு காரணமாக நடுக்காதில் ஏற்படும் அழுத்த மாறுபாடும் அரிப்பைத் தூண்டும். சோப், ஷாம்பூ அல்லது காதணிகள் காரணமாக ஏற்படும் அலர்ஜியாலும் அரிப்பு வரலாம். சோப், ஷாம்பூ அல்லது காதணிகள் காரணமாக ஏற்படும் அலர்ஜியாலும் அரிப்பு வரலாம். காரணம் என்னவாக இருந்தாலும், காதுகளைக் குடைவது அரிப்பைத் தீர்க்காது/ மாறாக,  பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும். பட்ஸ் (Ear buds), சேஃப்டி பின் அல்லது குச்சிகளைப் பயன்படுத்தும்போது காதுகளின் மென்மையான சருமம் கிழிந்து ரத்தம் வரலாம். கைகளில் உள்ள கிருமிகள், காதுக்குள் சென்று 'ஓடிடிஸ் எக்ஸ்டர்னா' (Otitis Externa) போன்ற வெளிக்காது அழற்சியை உண்டாக்கலாம். காது குடையும்போது, தவறுதலாக, காதுத் திரையை (Ear drum) குத்தினால் நிரந்தரமாக  காது கேளாமை ஏற்பட வாய்ப்புள்ளது. அரிப்பு ஏற்படும்போது உடனடியாகக் குடையாமல் கீழ்க்காணும் விஷயங்களைப் பின்பற்றலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிய பஞ்சு உருண்டையை நனைத்து, அதிகப்படியான எண்ணெயைப் பிழிந்துவிட்டு காதின் நுழைவாயிலில் மென்மையாக வைக்கலாம். இது வறட்சியை நீக்கி இதம் தரும். காது தானாகவே மெழுகை வெளியேற்றும் தன்மை கொண்டது. எனவே, பட்ஸ் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் காது விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காது குடைவதால் ஏற்படும் சிறிய காயம் கூட, Malignant Otitis Externa எனப்படும் மிகக் கடுமையான எலும்புத் தொற்றுக்கு வழிவகுக்கும். இது குணமடைய நீண்டகாலம் எடுக்கும் என்பதால், நீரிழிவு நோயாளிகள் காது குடையக்கூடாது. மருத்துவர் காதுக்குள் கேமரா (Otoscopy) மூலம் பார்த்து, அது பூஞ்சைத் தொற்றா அல்லது வறட்சியா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார். Doctor Vikatan: காதுக்குள் ஒலிக்கும் சத்தம்... குணப்படுத்த முடியுமா? அரிப்புடன் சேர்ந்து காதில் நீர் அல்லது சீழ் வடிந்தாலோ, காதில் வலி அல்லது வீக்கம் இருந்தாலோ, கேட்கும்  திறன் குறைவது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ காது-மூக்கு-தொண்டை மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மருத்துவர் காதுக்குள் கேமரா (Otoscopy) மூலம் பார்த்து, அது பூஞ்சைத் தொற்றா அல்லது வறட்சியா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

விகடன் 24 Dec 2025 7:00 am

Doctor Vikatan: ஆணுறுப்பின் முன்தோல் நீக்கம்... குழந்தைகளுக்கு ஏன் அவசியம்?

Doctor Vikatan: என் நண்பன், தன் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளான். குழந்தைப்பருவத்திலேயே அதைச் செய்வது பிற்காலத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமானது என்றும் சொல்கிறான்.  குழந்தைகளுக்கு ஆணுறுப்பில் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை செய்வது அவசியமா.... பிரச்னை வந்தால் செய்தால் போதாதா? பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மருத்துவர் சஃபி   நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி ஆணுறுப்பின் முன்தோல் நீக்குவது என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. முன்தோல் இருப்பது ஆரோக்கியமற்றது என்பதிலும் முன்தோலை நீக்குவது ஆரோக்கியமானது என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆணுறுப்பின் முன்னுள்ள தோல் பகுதியை மருத்துவத்தில் 'rudimentary organ' என்று சொல்வோம். அதாவது காலப்போக்கில் செயலிழந்தது என்று அர்த்தம் கொள்ளலாம்.  குடல்வால் எனச் சொல்லப்படும் அப்பெண்டிக்ஸ்கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். இப்படிப்பட்ட உறுப்புகளால் நம் உடலில் எந்தச் செயலும் நடப்பதில்லை. அப்படித்தான் ஆணுறுப்பின் முன்தோலும் அவசியமில்லாத ஒன்று. 'பைமோசிஸ்' (phimosis) என்ற நிலை உள்ள ஆண் குழந்தைகளுக்கு அதை நீக்க வேண்டியிருக்கும். அதாவது அந்தத் தோல் பகுதியை, பின்னோக்கி இழுக்க முடியாத நிலை இது. ஆண் குழந்தைகள் சிலருக்கு ஆணுறுப்பின் முன்தோல் பகுதியானது ஒட்டிக்கொண்டது போலிருக்கும்.  ஆண் குழந்தைகள் சிலருக்கு ஆணுறுப்பின் முன்தோல் பகுதியானது ஒட்டிக்கொண்டது போலிருக்கும். Doctor Vikatan: குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் - வீட்டு வைத்தியங்களைச் செய்யலாமா? இப்படிப்பட்ட நிலையிலும் அந்தக் குழந்தைகளுக்கு முன்தோல் நீக்கம் செய்வது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆணுறுப்பின் முன்தோலில் இன்ஃபெக்ஷன் வரும் வாய்ப்புகள் உண்டு. முன்தோலை நீக்குவதன் (circumcision) மூலம் இந்தத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். பொதுவாகவே ஆண்களுக்கு ஆணுறுப்பின் முன்தோலில் நிறைய கிருமிகள் இருப்பது இயல்பானது.  கிருமித்தொற்றின் காரணமாக சிறுநீர்த் தொற்றும் வரலாம்.  அந்தப் பகுதியில் அப்படி பாக்டீரியாவோ, பூஞ்சையோ சேரவிடாமல் பார்த்துக்கொள்வது சிறந்தது. அதற்காக முன்தோலை நீக்குவது உண்டு. உங்கள் நண்பர் சொன்னது மருத்துவ ரீதியாக சரிதான். ஆனாலும், அதைச் செய்வதும் தவிர்ப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. உங்கள் குழந்தைக்கு மருத்துவர் அதை அவசியம் எனப் பரிந்துரைத்தால், செய்வதில் தவறில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 22 Dec 2025 7:30 am