`ஓய்வுக்காலத்தில் மருத்துவம், பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம்' - எந்த நாடு பெஸ்ட்? ஆய்வு சொல்லும் தகவல்
இன்றைய காலகட்டத்தில், ஓய்வூதியம் என்பது பணியிலிருந்து விடைபெற்று ஒதுங்குவது மட்டுமல்ல; அது வாழ்க்கையின் புதிய தொடக்கமாக மாறிவிட்டது. சமீபத்தில் உலகளாவிய ஓய்வூதிய குறியீடு (Global Retirement Index) வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தை கிரீஸ் பிடித்துள்ளது. எப்போதும் டாப் இடங்களில் இருந்த போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளை பின்தள்ளி, ஏழாவது இடத்தில் இருந்த கிரீஸ் முதல் இடத்திற்கு வந்துள்ளது. இந்தக் குறியீடு, ஓய்வுக்காலத்திற்கு பிறகு தனிநபருக்கு கிடைக்கும் மருத்துவம், காலநிலை, பாதுகாப்பு, நிதி, வாழ்க்கைத் தரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான் கிரீஸ் முதல் இடத்தைப் பிடித்திருப்பதற்கு அங்குள்ள மலிவான வாழ்வாதாரச் செலவு முக்கிய காரணம். இது அந்த நாட்டில் உள்ள ஓய்வுபெற்றவர்களுக்கு மட்டும் அல்ல, பிற நாடுகளில் இருந்து அங்கு குடியேறும் ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும். கிரீஸ் நாட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய குடியிருப்புகள், கோல்டன் விசா திட்டம், குறைந்த செலவில் மருத்துவம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கின்றன. இந்தக் குறியீட்டில் அடுத்தடுத்த இடங்களில் அயர்லாந்து, நார்வே போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. US: `H-1B visa' மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி
`மன அழுத்தத்திற்கு குட்பை!'ஜென் Z இளைஞர்களை ஈர்க்கும் ஜப்பானிய `வாபி ஷாபி'தத்துவம் - அது என்ன?
சமூக வலைதளங்களில் எப்போதும் பாசிட்டிவான விஷயங்களை அல்லது வாழ்க்கையை மட்டுமே காட்ட வேண்டும் என்ற அழுத்தத்திற்கு மத்தியில், ஒரு புதிய தத்துவம் இளைய தலைமுறையினரிடையே வேகமாகப் பரவி வருகிறது. அதுதான் ஜப்பானின் ‘வாபி–ஷாபி’ (Wabi-Sabi) என்ற தத்துவம்.. தற்போது இது ஜென் Z தலைமுறையினரிடம் பரவி வருகிறது. அதாவது குறைகளை அழகாகக் கருதி, இயற்கையான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக்கொடுக்கும் இந்த தத்துவம், ஜென் Z தலைமுறையினரிடம் புதிய ட்ரெண்டாக உருவாகியுள்ளது. Gen Z இன்ஸ்டாகிராமிலும் டிக்டாக்கிலும் ஃபில்டர் போட்ட புகைப்படங்களும், பாசிட்டிவான வாழ்க்கை முறைகளை மட்டுமே காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான இளைஞர்கள், இப்போது 'வாபி-ஷாபி' என்ற தத்துவத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். எதுவும் பெர்ஃபெக்ட் இல்லை, குறைகளே இயல்பு, அதுவும் அழகுதான் என்ற இந்த தத்துவம் தற்போது ட்ரெண்ட் ஆனாலும் இது 400 ஆண்டுகள் பழமையான தத்துவம் தான், மீண்டும் இது இந்தாண்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 'வாபி-ஷாபி' 'வாபி-ஷாபி' என்பது ஜப்பானிய பௌத்தத்திலிருந்து உருவான ஒரு வாழ்க்கை முறை தத்துவம் என கூறப்படுகிறது. வாபி என்பதன் பொருள், குறைந்த வசதிகளோடு, எளிமையாக வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண்பது ஆகும். ஷாபி என்பதன் பொருள், காலம் செல்லச் செல்ல மனிதர்களுக்கும் ஏற்படும் மாற்றங்கள், குறைகள் ஆகியவற்றை அழகாகப் பார்ப்பது ஆகும். டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பெர்ஃபெக்ஷன் என்று பரவி வந்த கலாச்சாரத்திற்கு எதிர்வினையாக ஜென் Z இளைஞர்கள் 'வாபி-ஷாபி' தத்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் #my wabi-sabi சமூக வலைதளங்களில் பரவுவது எப்படி? டிக்டாக்கில் பயனர்கள் #my wabi-sabi என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கையின் உண்மையான பக்கங்களைப் பகிர்ந்து வருகின்றனர். கலைந்த படுக்கையறை, பழைய புத்தகம், செல்லப் பிராணியின் சேட்டைகள் என ஃபில்டர் செய்யப்படாத யதார்த்தமான காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர். இது மற்றவர்களுக்கு எல்லோரும் இப்படி தான் இயல்பாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அளிக்க உதவுகிறது. இந்த ட்ரெண்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் சொல்லுங்கள்! போனில் `ஹலோ' சொல்ல மறுக்கும் ஜென் Z தலைமுறையினர்; காரணம் என்ன? - விளக்கும் கம்யூனிகேஷன் ரிசர்ச்
நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை: மின்னொளியில் ஒளிரும் ஸ்டார்கள், குடில்கள், மரங்கள்.!
நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை |மின்னொளியில் ஒளிரும் ஸ்டார்கள், குடில்கள், மரங்கள்.!
அந்த நினைவுகள் ஏன் நினைவில் இருப்பதில்லை? - ஆய்வுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்
நம்மில் பலருக்கும் நமது குழந்தை பருவகாலங்கள் எப்படி இருந்தன என்பது துளியும் நினைவில் இருப்பதில்லை. சில காட்சிகள் மட்டுமே நினைவில் இருக்கும் அல்லவா? இதன் உலகம் என்று பல விஷயங்களை அவ்வபோதுதான் பார்த்திருப்போம், கற்றுக்கொண்டிருப்போம்.. ஆனால் ஏன் அந்த காலக்கட்ட நினைவுகள் மட்டும் முற்றிலும் நம் மனதிலிருந்து அழிந்துவிடுகின்றன? இந்தக் கேள்விக்கான விடையை ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். ஆயுட்கால உளவியல் துறையின் ஆராய்ச்சியாளரான சாரா பவர் கூற்றுப்படி, பொதுவாக நாம் மறந்துபோகும் இந்த விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கட்டங்களாகப் பார்க்கின்றனர். Brain மூன்று வயதுக்குட்பட்ட பருவத்தில் நடக்கும் சம்பவங்கள் முழுமையாக நினைவில் இருந்து நீங்குவதை 'இன்ஃபான்டைல் அம்னீஷியா' என்றும், மூன்று முதல் ஆறு வயது வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் கொஞ்சம் கொஞ்சம் நினைவுகளை 'சைல்ட்ஹுட் அம்னீஷியா' என்றும் அழைக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் நமது மூளை தகவல்களைப் பதிவு செய்தாலும், வளர்ந்த பிறகு அவற்றை மீண்டும் மீட்டெடுக்கும் திறனை இழந்துவிடுகிறது என்று கூறுகின்றனர். பலர் தங்களுக்கு இரண்டு வயதில் நடந்த பிறந்தநாள் விழா அல்லது சுற்றுலா சென்றது நினைவிருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் ஆய்வாளர் சாரா பவர் என்ன கூறுகிறார் என்றால், இது பெரும்பாலும் உண்மையான நினைவாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சிறுவயது புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதாலோ அல்லது பெற்றோர்கள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதைக் கேட்பதாலோ நமது மூளை தானாகவே ஒரு போலியான காட்சியை உருவாக்கிக்கொள்வதாகக் கூறுகிறார். இதனை 'போலி நினைவுகள்'என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு முறை நாம் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதும், நினைவுகள் வரும். ஆனால் நமக்கு நினைவிருப்பது உண்மையான சம்பவமா அல்லது புகைப்படத்தைப் பார்த்ததால் உருவான பிம்பமா என்பதைப் பிரித்தறிவது கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சாரா பவர் மற்றும் அவரது குழு இணைந்து, சுமார் 360 குழந்தைகளை வைத்து ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏன் மறக்கிறோம்? இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியமான காரணம், 'எபிசோடிக் மெமரி'எனப்படும் குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் வைக்கும் திறன், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முழுமையாக வளர்ச்சி அடைந்திருப்பதில்லை. அதனால்தான் நாம் எப்படி நடக்கக் கற்றுக்கொண்டோம், எப்படி பேசினோம் என்பது நினைவில் தங்குவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உங்களின் குழந்தை பருவம் நினைவில் இருக்கிறதா? என்று கமென்ட்டில் சொல்லுங்கள்!
ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பசுமையான இயற்கை அழகு, வனப்பகுதிகள், தெளிவான கடற்கரைகள் மற்றும் மலைகள் என இயற்கையின் அருளால் ஆசிர்வதிக்கப்பட்ட கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு விடுமுறை நாட்களில் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம். பசுமைக் காடுகளும், சலசலத்து ஓடும் அருவிகளும், நெடிதுயர்ந்த மலைச் சிகரங்களும், வண்ண மலர் கூட்டங்களும் நிறைந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இருக்கத் தோன்றும் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கேரளாவின் நீண்ட அழகிய கடற்கரைகள் நிறைந்த வர்கலாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சோழன் டிராவலைச் சேர்ந்த விஜய் மற்றும் ரவி செய்த உதவிகள் மறக்க முடியாதவை. வர்கலா, கேரள தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 51 கிமீ தொலைவில் அமைந்த அழகிய கடற்கரை நகரம். வட இந்தியாவுக்கு கோவா போல தென் இந்தியாவுக்கு வர்கலா என்று இங்குள்ள மக்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். கீச் கீச் என்று சப்தமிட்டபடி பறவைகள் பறந்து செல்ல. நம்மை சுற்றி பச்சை பசேல் என இருக்கும் இடத்தின் வழியே மலைக் குன்றுகள் சூழ காட்சியளிக்கும் அரபிக்கடல் கடற்கரையில் காலார நடந்து செல்லும் இனிமையான அனுபவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது ஒவ்வொருவரையும் நோயிலிருந்து ஆரோக்கியமாக மாற்றி, சுத்தமான மாசுபடாத காற்றைச் சுவாசிக்கச் செய்யும் ஒரு இடமாகும். நாரதர் தனது வல்கலமை (மரப் பட்டையால் செய்யப்பட்ட ஆடை) இந்த இடத்தில் எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. வல்கலம் எறியப்பட்ட இந்தக் கிராமத்திற்குச் சென்று வந்தால், பிரஜாபதிகளின் பாவம் நீங்கும் என்று நாரதர் கூறியபடியே, பிரஜாபதிகள் தங்கள் பாவத்தை நீக்கிக் கொண்டு, இந்தக் கிராமத்திற்கு வர்கலா என்று பெயரிட்டனராம். எனவே, இந்த இடம் ஆன்மீக நடைமுறைகள் மற்றும் இயற்கையான மூலிகைகளால் நிறைந்து, அனைவரையும் அமைதி நிலையில் வைத்திருக்க உதவுகிறது. வர்கலாவில் சிவகிரி மடம், ஜனார்த்தன ஸ்வாமி கோயில், வர்கலா பீச், பாபநாசம் பீச், கபில் ஏரி, வர்கலா சுரங்கப்பாதை, மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. வர்கலா பீச் அமைதியான அரபிக் கடலிலிருந்து வெண்நுரைகளுடன் கரையைத் தழுவிச் செல்லும் அலைகள், கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் சிறிய குன்றுகள், நீலநிற வானம் என்று இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பீச் சுற்றுலா .பயணிகளை ஈர்க்கிறது. வர்கலா கடற்கரையில் பாராசூட், படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம். ஜனார்தனன் கோயில் இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது. மிகவும் அமைதியான சூழவில் திருவிளக்குகளின் ஒளியிவ் பகவான் விஷ்ணுவை வணங்கியது பரவசமாக இருந்தது கபில் பீச் அமைதியான மற்றும் அழகான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். கூட்டம் அதிகம் இல்லாத கடற்கரையைத் தேடுபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். கடற்கரையும், அதன் அருகில் ஓடும் பேக்வாட்டர்ஸையும் ஒருங்கே கொண்டுள்ளது.. அழகான சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காணலாம்.. ஜடாயு பார்க் ராமாயணத்தில், ஜடாயு (ராட்சத அளவிலான பறவை) பெரும் அசுரனான ராவணனுடன் சண்டையிட்டு இந்த இடத்தில் விழுந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இயற்கை பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும். இங்கு பிரம்மாண்டமான ஜடாயு பறவையின் சிலை முக்கியமான ஈர்ப்பு., கேபிள் காரில் மேலே ஏறும் வசதியும் உள்ளது.. நாங்கள் ஜடாயு மலை உச்சிக்கும் பயணம் செய்தோம். கேபிள் கார் மூலம் மலையின் மீது ஏறுவது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஜடாயுவின் அற்புதமான அமைப்பு உண்மையிலேயே மனதைக் கவரக்கூடியது. இந்த இடம் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. இங்கு இயற்கையின் அழகை உண்மையிலேயே அனுபவிக்க முடியும். அடிக்கடி மழை பெய்யும் மற்றும் மலையைச் சுற்றி குளிர்ந்த காற்று வீசும். மலை உச்சியிலிருந்து பசுமையான விரிந்து பரந்த காடுகளைக் காணலாம். நாங்கள் இங்கு சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும்போது பெருமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. கேபிள் காருக்காக ஒரு இடத்தில் காத்திருந்தோம். எங்களுக்கு முன் சென்றவர்களின் கேபிள் கார் பழுதடைந்துவிடவே பாதியிலேயே நின்று விட்டது.. மேலும் மழையும் வலுக்கவே மற்ற கேபிள் கார்களையும் நிறுத்தி விட்டாகள். வெகு நேரம் மலையின் மேல் காத்திருந்தோம். வெகு நேரம் கழித்து ஒரு மினி வேனில் அந்த குறுகிய மலைப் பாதை வழியாக கீழே அழைத்துச் செல்லப்பட்டோம். கொட்டும் மழையில் மலைச் சரிவுகளின் குறுகிய பாதையில் வண்டி ஒரு பக்கமாக சாய்ந்தவாறு மெதுவாகக் கீழே இறங்கியது. எங்களுக்கு வண்டியிலிருந்து இறங்கும் வரை திகிலாக இருந்தது. அழகான கடற்கரைகள், அமைதியான வனப்பகுதி, எங்கும் பசுமையான இடங்கள், உயர்ந்த மலைகள் ,குன்றுகள், கோயில்கள் மற்றும் கேரள உணவுடன் உபசரிக்கும் மலையாள சேட்டன்கள் என சற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது வர்கலா.. -வி. ரத்தினா ஹைதராபாத் தேர்தல்
Relationship: கேஸ்லைட்டிங் செய்யும் வாழ்க்கைத்துணை; தீர்வு சொல்லும் நிபுணர்
தன் குற்றத்தை மற்றொருவர்மீது சுமத்தி, 'நம்ம மேலதான் தப்போ?' என்று அவரையே நம்ப வைத்துவிடுவார்கள் சிலர். இப்படிப்பட்டவர்கள் வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என எல்லா இடத்திலும் இருப்பார்கள். வீட்டை எடுத்துக்கொண்டால், 'நீ எனக்கு கோபமூட்டியதால்தான் நான் உன்னை திட்டிவிட்டேன் என்றோ, அடித்துவிட்டேன் என்றோ சொல்லிவிடுவார்கள். பெரும்பாலும், இது கணவரிடமிருந்தே வரும். தன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாத மாதிரியும் ஆச்சு; அதை தூக்கி மனைவியின் மீது போட்ட மாதிரியும் ஆச்சு. Relationship அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், 'நீங்கள் ரிமைண்டர் மெசேஜ் போடாததால்தான் நான் அந்த வேலையை செய்யவில்லை' என்பார்கள். தன் மறதியை மறைத்ததுபோலவும் ஆச்சு; அந்தப்பழியைத் தூக்கி அடுத்தவர் மீது போட்ட மாதிரியும் ஆச்சு. நட்பு வட்டத்திலும் கிட்டத்தட்ட மேலே சொன்ன மாதிரிதான் நிகழும். இவர்கள் செய்வதை உளவியல் உலகம் 'கேஸ்லைட்டிங்' (Gaslighting) என்கிறது. இந்தச் சிக்கலால் வரும் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னையிடம் பேசினோம். யாரெல்லாம் கேஸ்லைட்டிங்கை அதிகம் பயன்படுத்துவார்கள்? சந்தேக குணம் அதிகம் உடையவர்கள், தாழ்வுமனப்பான்மை உடையவர்கள், தான்தான் உயர்ந்தவன் என்ற மனப்பான்மையுடன் இருப்பவர்கள், தனக்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், யாராக இருந்தாலும் தன் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், அடிக்கடி கோபமடைபவர்கள், கோபத்தில் தன்நிலை மறப்பவர்கள், அடிக்கடி வன்முறையில் ஈடுபடுபவர்கள், சிறுவயதில் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு சரியாகக் கிடைக்காமல் போனவர்கள், தம்பதியில் ஒருவர்மீது அதிகம் சந்தேகம் கொள்ளும் மற்றொருவர், சிறுவயதில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். Relationship விவாகரத்துக்கு முக்கிய காரணம் இதுதான்! பல உறவுமுறைக்குள் இந்தப் பிரச்னை இருந்தாலும், கணவன் - மனைவிக்குள் உருவாகும் 'கேஸ்லைட்டிங்' பிரச்னை மட்டும்தான் அதிக அளவில் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. காரணம், விவாகரத்துச் சிக்கலுக்கு `கேஸ்லைட்டிங்'கும் முக்கிய காரணமாக இருப்பதாலும், அதுகுறித்த செய்திகள் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், சமரசத் தீர்வு மையம், உளவியல் ஆலோசனை மையம், குடும்பம் மற்றும் நட்பு வட்டாரம் எனப் பல இடங்களிலும் இந்தச் சிக்கல் குறித்து அதிகம் பேசப்படுகிறது. பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சிக்கல் குறித்து கருத்துகளைப் பதிவிடுவதும், இதுகுறித்து இணையத்தில் தீர்வு தேடுவதாலும் 'கேஸ்லைட்டிங்' கவனம் பெறுகிறது. தீர்வு என்ன? கேஸ்லைட்டிங் பிரச்னைக்கு காரணமானவர்கள் பலரும், தங்களின் தவற்றை உணர எந்த முயற்சியும் எடுக்கவே மாட்டார்கள்.'தான் செய்ததுதான் சரி' என்று தன் தவற்றுக்கு நியாயம் மட்டுமே கற்பித்துக்கொண்டிருப்பார்கள். தன் கோபத்துக்கு காரணமான நபர்தான் தன் தவற்றை உணர்ந்து, தனக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணம் வேரூன்றிய நபரை, தொடர்ந்து கவுன்சலிங் கொடுப்பதால் மட்டுமே சகஜநிலைக்குக் கொண்டுவர முடியும். ஆனால், குற்றம் செய்பவர் அந்தத் தீர்வை அவ்வளவு எளிதில் நாட ஆர்வம் காட்ட மாட்டார்; தன் தவற்றையும் உணர மாட்டார். Relationship Relationship: இந்த 5 தீர்வையும் ஃபாலோ பண்ணா குடும்பத்துல பிரச்னையே வராது! 'நான் சொல்றதைக் கேட்டு நீ நடந்துக்கிட்டா, உனக்கு கவுன்சலிங் தேவைப்படாதே...' என்று பாதிக்கப்பட்டவர் மருத்துவரீதியாகத் தெளிவு பெறுவதற்கும் குற்றம் செய்யும் அந்த நபர் முட்டுக்கட்டை போடலாம். பாதிக்கப்பட்டவர் மட்டும் கவுன்சலிங் வரும்பட்சத்தில், 'நீங்கள் சரியாக இருக்கும்வரை, நீங்கள் எதற்காகவும் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டாம்' என்று, சொல்வோம். இது ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்குமே தவிர, பாதிக்கப்படும் அந்த நபருக்கான நிரந்தர தீர்வாக அமையாது. இந்தச் சிக்கலில் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே கவுன்சலிங் வருவதுடன், தவறு செய்தவர் தன் நிலையையும் தவற்றையும் முழுமையாக உணரும்போதுதான் தீர்வு கிடைக்கும். கேஸ்லைட்டிங் இயல்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது? பெற்றோர் வளர்ப்பு முறையும், வளர்ந்த சூழலும் சரியாக இல்லாதபட்சத்தில்தான் 'கேஸ்லைட்டிங்' செய்வதற்கான குணாதிசயம் ஒருவருக்குள் தலைதூக்கும். படிப்பில் இரண்டாம் இடம் பிடித்த குழந்தையிடம், 'நீ ஏன் முதல் மார்க் வாங்கல' என்று சிறுவயதிலேயே தாழ்வுமனப்பான்மையை விதைக்கும் பெற்றோர் ஒருரகம். தன் பிள்ளையின் நடத்தையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, பிள்ளை செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது போன்று அதீத சுதந்திரம் கொடுத்து பிள்ளை பொறுப்பற்றுச் செயல்பட காரணமாக இருக்கும் பெற்றோர் இன்னொரு ரகம். இது இரண்டுமே தவறுதான்! தவறு, சரி... இதைப் பகுத்தறிந்து செயல்படுவதற்கான நல்ல வழிகாட்டுதல்களை வழங்கி, நடுநிலையுடன் குழந்தையை வளர்ப்பதுதான் பெற்றோருக்கான தலையாய கடமை. Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதரப்பழசான இந்த இயல்பு! பாராட்டு, சுதந்திரம், கண்டிப்பு... இவையெல்லாம் குழந்தைக்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு இருக்க வேண்டும். பிறரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது; யாராக இருந்தாலும் மற்றவர்களையும் சமமாக நடத்த வேண்டும்; மற்றவர்கள் மதிக்கும் நிலைக்கு நம் நடத்தை இருக்க வேண்டும் என்ற தெளிவுடன் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும் பண்பு இருந்தால், 'கேஸ்லைட்டிங்' பிரச்னைக்கு நம் வாழ்வில் இடமே இருக்காது என்று முடித்தார் உளவியல் நிபுணர் நப்பின்னை.
வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த அந்த ஒரு உதவி! - ரஜினி அனுப்பிய போஸ்ட் கார்டு பின்னணி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் எனக்கு 63 வயது, யுனிலீவரில் இருந்து ஓய்வு பெற்று மாஸ்டர் டேட்டா மேனேஜ்மென்ட்டில் ஃப்ரீலான்ஸ் ஆலோசனை செய்கிறேன். 1981-ம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் சென்னை பச்சையப்பாவின் மாலை கல்லூரியில் B.Com படித்து வந்தேன். நான் நிதி ரீதியாக மிகவும் பலவீனமாக இருந்தேன், நான் பட்டம் பெறுவதை உறுதி செய்ய பகல் நேரத்தில் வேலை செய்ய வேண்டியிருந்தது. எனது சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், எனது மூன்றாம் ஆண்டு இறுதி செமஸ்டரில் சிக்கிக்கொண்டேன், ஏனெனில் எனது கட்டணத்திற்கு சுமார் ரூ .290 (ஆறு மாத செமஸ்டருக்கு) பணத்தை திரட்ட முடியவில்லை. என் எதிர்காலத்திற்கான ஒரே டிக்கெட் அதுதான் என்பதால் நான் என் படிப்பை முடிக்க வேண்டியிருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நான் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் வீணாகிவிட்டன. பில்லா ரஜினி அந்த நாட்களில் 'பேசும் படம்’ என்ற தமிழ் திரைப்பட இதழ் வந்தது, அதில் சினிமா நட்சத்திரங்களின் முகவரிகள் இருந்தன. நான் ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு, 10 போஸ்ட் கார்டுகளை (10 பைசா அட்டைகள்) வாங்கி, எனது கட்டணத்திற்கு உதவுமாறு ஒரு எளிய கோரிக்கையை எழுதி, ரஜினிகாந்த் உட்பட அன்றைய சில பிரபல நடிகர்கள் / நடிகைகளுக்கு அனுப்பினேன். சுமார் ஒரு வாரத்தில், பில்லா ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் இருந்து எனக்கு பதில் கிடைத்தது, குரோம்பேட் முகவரியுடன் (நான் தங்கியிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை) எனது அசல் சான்றிதழ்களுடன் அவர்களை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். உடனே அங்கு சென்றேன். அந்த இடம் ஓலைக் கூரையுடன் கூடிய ஒரு பெரிய 'குடிசை', அனைத்து பக்கங்களிலும் பல்வேறு ரஜினிகாந்த் திரைப்படங்களின் சுவரொட்டிகள் இருந்தன. சுமார் 20-22 வயதுடைய அரை டஜன் கரடுமுரடான தோற்றமுடைய சிறுவர்கள் அங்கு மிதந்து கொண்டிருந்தனர். உண்மையில் நான் அவர்களைப் பார்த்து பயந்தேன். ரஜினி மக்கள் மன்றம் நான் வருகை தரும் நோக்கத்தை சரிபார்த்து, எனது சான்றிதழ்களை சரிபார்த்தபோது, பாருங்கள், இந்த செமஸ்டருக்கான உங்கள் கட்டணத்திற்கு உங்களுக்கு உதவுமாறு ரஜினி சார் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஒரு நிபந்தனையின் பேரில். உங்கள் முடிவுகளுடன் நீங்கள் வந்து உங்கள் மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்துவீர்கள் என்று ஒரு ஆவணத்தில் நீங்கள் எங்களுடன் கையெழுத்திட வேண்டும், மேலும் நீங்கள் 60 அல்லது அதற்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றால் இது ஒரு கடன். அதேசமயம், நீங்கள் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால், இது ரஜினி சார் உங்களுக்கு வழங்கும் பரிசு, நீங்கள் நன்றாக சம்பாதிக்கத் தொடங்கும் போது தகுதியான ஒருவருக்கு அதே கட்டணத்தை செலுத்துவதாக மட்டுமே நீங்கள் உறுதியளிக்க வேண்டும். நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அதிர்ச்சியடைந்தேன், உடனடியாக காகிதத்தில் கையெழுத்திட்டேன். உடனடியாக எனக்கு பணம் கிடைத்தது, நான் பரீட்சைகளை எழுதினேன், நிச்சயமாக 60 க்கும் மேற்பட்ட தேர்ச்சி பெற்றேன். ரஜினி சார் மற்றும் அவரது ரசிகர் மன்றங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நல்ல தொழில்முறை கல்வி மற்றும் ஒரு சிறந்த கார்ப்பரேட் வாழ்க்கையுடன் இவ்வளவு தூரம் வந்த எனக்கு அவர் நிச்சயமாக முக்கிய கருவிகளில் ஒருவர். நிச்சயமாக நான் மனிதராக ரஜினி சார் அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன். கடவுள் அவருக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அமைதியையும் வழங்கட்டும். - பரிமள் குமார்
'அம்மன் கண், மரம், தங்கம், கரியர்' - சமந்தா வெட்டிங் சாரி சீக்ரெட்ஸ்
நடிகை சமந்தாவிற்கு இயக்குநர் ராஜ் நிதிமொரு என்பவருடன் நேற்று திருமணம் நடந்து முடிந்தது. சமந்தாவின் திருமண ஆடையில் உள்ள சிறப்பசம்ங்களை விளக்குகிறார் சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் பல்லவி. நடிகை சமந்தாவிற்கும், 'ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருக்கும் நேற்று கோவையில் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தா தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார். சமந்தா அணியும் ஆடைகளில் எப்போதும் தனித்துவம் இருக்கும். அதே போல் அவரின் திருமண ஆடையிலும் நிறைய நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதாக சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். Samantha - Raj Nidimoru சமந்தாவின் திருமணப் புகைப்படத்தில் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். அதில் கோல்டன் நிறத்தில் எம்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதற்கு மேட்சிங்காக கோல்டன் சோக்கர் மற்றும் அணிகலன்கள் அணிந்திருந்தார். சமந்தாவின் திருமண ஆடையை அவரின் 15 வருட தோழியும், செலிபிரெட்டி ஸ்டைலிஸ்ட்டுமான பல்லவி சிங் ஸ்டைலிங் செய்திருக்கிறார். ஜெயதி போஸ் மற்றும் செலிபிரெட்டி காஸ்டியூம் டிசைனர் ஆர்பிதா மேத்தா ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர். சமந்தாவின் சேலை ஸ்டைலிஸ்ட் பல்லவி பதிவிட்டுள்ள பதிவில், சமந்தா என்னுடைய 15 வருட தோழி, எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். சமந்தாவைப் பொறுத்தவரை ஆடை என்பது அழகுக்காக அணிவது என்பதைத் தாண்டி, அதில் உணர்வுப் பூர்வமான கனெக்ஷன் இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவரின் திருமண ஆடைகளிலும் அதனை கொண்டு வர வேண்டும் என்று எண்ணினேன். Samantha - Raj Nidimoru இந்த ஆடையை வடிவமைத்தவர் ஆர்பிதா மேத்தா. இதற்கு முன்பும் கூட நான், சமந்தா, ஆர்பிதா மூவரும் இணைந்து வேலை செய்திருக்கிறோம். அது மேஜிக் மொமன்ட்களை உருவாக்கியிருக்கிறது. இந்த முறையும் அதே கூட்டணி வேலை செய்திருக்கிறது. ஆடையில் உணர்வுப்பூர்வமான வடிவங்களை ஆடையில் கொண்டு வர வேண்டும் என்று எண்ணியதுமே எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் ஜெயதி போஸ். Tree of life ஜெயதி போஸ் ஒரு கதையை வடிவங்களாக உருவாக்கிக் கொடுப்பதில் வல்லவர். சமந்தாவின் திருமண ஆடையை வடிவமைக்க வேண்டும் என்றதும், சில நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொண்டார். 'Tree of life' ஒன்றை உருவாக்கி, அதில் அம்மனின் மூன்றாவது கண் இருப்பது போல் உருவாக்கலாம் என்று ஐடியா கொடுத்தார். Samantha - Raj Nidimoru அதாவது சமந்தாவின் கலைப்பயணம், வேர்கள், இன்றைய வளர்ச்சி, எதிர்கால ஆசீர்வாதம் ஆகியவற்றை விளக்கும் வகையில் மரம் ஒன்றையும், அதில் அம்மனின் மூன்றாவது கண் இருப்பதுபோல் வடிவமைத்தார். இதனை நாங்கள் சமந்தாவின் பிளவுஸ் டிசைன் ஆக்கியிருக்கிறோம். ராஜ் நிதிமொரு ஆடை அதே போல் ராஜ் நிதிமொரு ஆடையிலும் ஸ்பெஷல் இருக்கிறது. நான் பழகியதில் அவர் ஒரு நல்ல மனிதர். 'குணத்தில் தங்கம்' என்பதை குறிக்கும் விதமாக தங்க நிற ஆடையைத் தேர்வு செய்தோம் என்று பதிவிட்டிருக்கிறார். Samantha - Raj Nidimoru மோதிரம் சமந்தா அணிந்திருந்த மோதிரத்திலும் தனித்துவம் இருக்கிறது. சமந்தா அணிந்திருந்த மோதிரம், பெரிய டிசைன்களில் செய்யப்படாமல் சிம்பிள் லுக்கில் இருந்தது. இதற்கு அவர்களுடைய இயல்பான குணத்தையும், மனதின் தெளிவை எதிரொலிப்பதைப் போலவும் மோதிரம் சிம்பிள் லுக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
உங்கள் பயத்தை ஆசிரியராக மாற்றும் ரகசியம்! - மறந்துபோன பண்புகள் - 7
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் துணிவு என்றால் என்ன? துணிவு என்பது பயம் இல்லாமல் இருப்பதல்ல, பயம் இருந்தபோதிலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நாம் எடுக்கும் முடிவே துணிவு. இன்று தோல்வி அடைந்தாலும் நாளை நான் மீண்டும் முயற்சிப்பேன் என்று சொல்லும் அந்த அமைதியான உள் குரல் தான் அது. நாம் பெரும்பாலும் துணிவு என்றால் போரில் போராடுவது, யாரையாவது ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது போன்ற வீரச் செயல்களுடன் ஒப்பிடுகிறோம் ஆனால் அன்றாட வாழ்வில் துணிவு என்பது உண்மையை பேசுவது, நேர்மையாக நடந்து கொள்வது, புதிய வாய்ப்புகளை கண்டு அஞ்சாமல் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முயற்சிப்பது. துணிவின் முக்கியத்துவம்: துணிவு இருந்தால் தான் நம்மிடம் இருக்கும் மற்ற அனைத்து நற்குணங்களும் ஒளிர்ந்து வெளிப்படும். உங்கள் வாழ்வில் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்படும் போது அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுகிறது துணிவு. மனதளவிலான உறுதியையும், சுயமரியாதையையும் அது வளர்க்கிறது. ஒரு துணிவான செயல் பலரையும் ஊக்குவிக்கிறது. துணிவு இருந்தால், பயம் உங்கள் எதிரியாக இல்லாமல், ஒரு ஆசிரியராக மாறும். ஒருவர் கூறுவதை பொறுமையாக கேட்க முடியாமல் போனது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 3 இன்றைய காலத்தில் ஏன் மக்கள் துணிவை இழக்கிறார்கள்? நாம் ஏதாவது துணிச்சலாக செய்து அது தவராகிவிட்டால் என்ன செய்வது என்ற தோல்வியின் பயம் பலரிடம் இருக்கிறது. நாம் செய்கின்ற செயல்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் நம்மை எப்படி மதிப்பிடுவார்கள் என்ற மதிப்பீட்டின் பயம். அதீத சிந்தனை, எப்போதும் இதை செய்யலாமா வேண்டாமா என்று சிந்தித்து கொண்டு காலத்தை கடத்துவது, அது மட்டுமல்லாமல் நடக்கவே நடக்காத எதிர்மறை முடிவுகளை மனதில் உருவாக்கி கொண்டு வருந்துவது. தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது, இது என்னால் முடியாது, இந்த துணிச்சல் என்னிடம் இல்லை என்ற எண்ணம் ஒருபோதும் நம்மை முன்னேற விடுவதில்லை. சரி எப்படி துணிவை வளர்ப்பது? துணிவை வளர்க்கும் வழிகள்: உங்களுடைய சிறிய சிறிய பயங்களை கண்டறியுங்கள், சிலருக்கு கூட்டத்தில் பேசுவதற்கு பயமாக இருக்கலாம், புதிதாக ஒன்றை முயற்சிக்க பயம் இருக்கலாம், சில நேரங்களில் இல்லை, இப்போது என்னால் அது முடியாது என்று சொல்வதற்கு பயமாக இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் சரி, துணிவாக அவற்றை எதிர்கொள்ளுங்கள். தனக்கு கீழ் வேலை செய்கின்ற ஒருவரின் சிறந்த யோசனையை ஏற்க மறுப்பது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 2 எப்படி எதிர்கொள்வது என்று கேட்கிறீர்களா? உதாரணத்திற்கு, மேடை பேச்சு என்றாலே எனக்கு பயம் என்று கூறுபவர்கள் அதை பயிற்றுவிக்கும் அமர்வுகளில் கலந்து கொள்ளலாம், அதை முறையாக கற்றுக் கொள்ளலாம். அங்கே கொடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளில் நீங்கள் பயந்தாலும் உங்களை மேடையில் ஏற்றி விடுவார்கள் நீங்கள் பேசி தான் ஆக வேண்டும். யோசித்து பாருங்கள் முதல் முறை உங்கள் பயத்தை தாண்டி துணிவுடன் நீங்கள் விரும்பும் செயலை செய்வது எத்தகைய உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்தும். துணிவின் பாதையில் நீங்கள் பயணிக்க எடுத்து வைக்கும் முதல் படி பயத்தை எதிர்கொள்வது தான். இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6 உங்கள் தோல்வியை ஏற்று கொள்ளுங்கள், எப்போதுமே ஒருவரால் வெற்றியை மட்டுமே அனுபவிக்க முடியாது, நீங்கள் தோல்வி அடையவில்லை என்றால் எப்படி ஒன்றை கற்றுக் கொள்வீர்கள். தொடக்கம் எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆம், நான் இந்த முறை தோற்றுவிட்டேன் நான் என்ன தவறு செய்தேன் ஏன் இப்படி நடந்தது என்று ஆராய்ந்து தவறுகளை சரி செய்து முன்னேறுங்கள். இன்று செயற்கை நுண்ணறிவு பாதையில் உலகம் நுழைந்துவிட்டது, அட இது என்ன புதிதாக இருக்கிறதே இதை எப்படி கற்றுக்கொள்ள முடியும் என்று அச்சப்பட்டு அதை கற்றுக்கொள்ளவோ, பயன்படுத்தவோ மறுப்பவர்கள் இருக்கும் இடத்திலேயே தேங்கி விடுவார்கள் ஆனால், இந்த புதிய மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அதை கற்றுக் கொண்டு சரியாக பயன்படுத்துபவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். உடல் வலிமையாக இல்லை அதனால் என்மீதே எனக்கு நம்பிக்கை இல்லை, எப்போதுமே ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தேவையற்ற பயம் என்று தான் உங்களுக்கு நான் சொல்லுவேன். உடல் வலிமையை விட மனவலிமை அதிகமாக உள்ளவர்களே வெற்றியை சுவைக்கிறார்கள். நீங்கள் எப்போதெல்லாம் பயம் கொள்கிறீர்களோ அப்போதெல்லாம் அதை தாண்டி வெற்றி அடைவதுபோல சிந்தனை செய்து பாருங்கள், இது நீங்கள் பயத்தை மீறி செயலில் இறங்க உங்களை ஊக்குவிக்கும். துணிவு என்பது நேர்மை, வளர்ச்சி மற்றும் தலைமைத்துவத்தின் அடித்தளம். ஒரு துணிவான நபர் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதோடு, மற்றவர்களும் தங்கள் வாழ்வில் வலிமையை கடைபிடிக்க உதவுகிறார். செய்முறை பயிற்சி: உங்களின் பயம் என்ன ? பயத்தின் காரணம் என்ன ? அதை எப்படி எதிர்கொள்ளலாம் ? மேலே இருக்கும் கேள்விகளுக்கு சிந்தித்து உங்கள் பதிலை எழுதுங்கள், பின் உடனே செயலில் இறங்குங்கள். வெற்றி பெறுங்கள். நன்றி, நரேந்திரன் பாலகிருஷ்ணன். தேர்தல்
எத்தனை வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டக்கூடாது?
’என் குழந்தை சரியாவே சாப்பிடுறதில்லை; ரொம்ப அடம் பண்ணுது’ என்பதே இன்று பல பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும், குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகளைக் கூறுகிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகள்! * முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக பலரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த மகிழ்ச்சியான சூழலில், ஒரு தட்டில் உருட்டிவைத்த சாப்பாட்டு உருண்டைகளை தாங்களே எடுத்துச் சாப்பிட, குழந்தைகளைப் பழக்கப்படுத்தியிருப்பார்கள். இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. இன்றைய நியூக்ளியர் குடும்பச்சூழலில், கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் பெரும்பாலும் தனித்தனியேதான் சாப்பிடுகின்றனர். இதனால்கூட, சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் குறையலாம். எனவே, குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். * ஒன்றரை முதல் இரண்டு வயதுவரை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டும். பிறகு அவர்களாகவே சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போது குழந்தைகள் அடம்பிடித்தால் நான்கைந்து வாய் ஊட்டிவிடலாமே தவிர, முழுமையாக நாமே ஊட்டிவிடக் கூடாது. அப்போதுதான் குழந்தைகள் தங்கள் பசிக்குப் பிறரை எதிர்பார்க்காமல், தாங்களே சாப்பிடுவார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகள்! * குழந்தைக்கு மணிக்கணக்கில் சாப்பாடு ஊட்டிவிடுவது தவறு. ‘ஒழுங்கா சாப்பிட்டா சாக்லேட் தர்றேன்; செல்போன் தர்றேன்’ எனச் சொல்வதும் தவறு. சாப்பாட்டு விஷயத்தில் அதிகச் செல்லம் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால்தான், குழந்தைகள் மேற்கொண்டு சாப்பிடாமல் அடம்பிடிப்பார்கள். குழந்தைகள் தங்கள் பசிக்கு ஏற்பச் சாப்பிடட்டும். சாப்பிடாமல் அடம்பிடித்தால், அமைதியாக அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். பசியெடுத்தால், தானாகச் சாப்பிட வருவார்கள். `அடம்பிடிப்பது பயன் தராது’ என்ற எண்ணம் குழந்தைகளின் மனதில் நன்கு பதிய வேண்டும். * குழந்தைகளுக்கு அடிக்கடி எதையாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருக்கக் கூடாது. கேட்ஜெட்டுகளில் விளையாடுவதை ஊக்கப்படுத்தாமல், குழந்தைகளை ஓடியாடி விளையாடவிட வேண்டும். அதனால் இயல்பாகவே அவர்களுக்குப் பசியெடுத்துவிடும். குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகள்! * ஆரோக்கியமான உணவு, பழங்கள் என எதுவானாலும் முதலில் அதைச் சாப்பிட்டுத் துப்பினாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ உடனே, ‘இது குழந்தைக்குப் பிடிக்காது/சேராது’ என்று நினைக்கக் கூடாது. அது அன்றையச் சூழல் மட்டுமே. அடுத்த நாள் பழத்தை ஜூஸ் அல்லது சாலட் என மாற்று வழிகளில் கொடுத்துச் சாப்பிடப் பழக்க வேண்டும். அப்பா மாதிரியே கண்ணு; அம்மா மாதிரியே மூக்கு... மரபணு மேஜிக்! * குழந்தைகள் எப்போதும் புதுமையை, வண்ணமயமான விஷயங்களை அதிகம் விரும்புவார்கள். எனவே, தினமும் வழக்கமான முறையில் இட்லி செய்வதைத் தவிர்த்து, மாற்று வடிவங்களில் செய்து கொடுக்கலாம். ஏ, பி, சி, டி வடிவங்களில் தோசை செய்து கொடுக்கலாம். பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளின் இயற்கைச் சாற்றை உணவுகளில் சேர்த்து வண்ணமயமாக்கிக் கொடுக்கலாம். * பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் நேரம்தான் குழந்தைகளுக்கு அதிகமாகப் பசி இருக்கும். அப்போது பெரும்பாலான பெற்றோர்கள், காபி, டீ, பிஸ்கட், பிரெட் என்று கொடுப்பார்கள். இது தவறு. அப்போது சாதம், பொரியல் அல்லது டிபன் வகைகள் என ஹெவி உணவாகக் கொடுக்க வேண்டும். பிறகு சில மணி நேரம் கழித்து பால்/டீ/காபி கொடுக்கலாம். பெரியவர்கள் எதிர்பார்க்கும் அளவு குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். ’போதும் மம்மி’ என்றால் விட்டுவிடலாம். மாறாக, ’முழுசா சாப்பிட்டுத்தான் ஆகணும்’ எனத் திட்டினால், குழந்தைகளுக்குச் சாப்பாட்டின் மீது வெறுப்புதான் வரும். அட... பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் போடுவாங்களா? - குழந்தைகள் நல மருத்துவர் சொல்வதென்ன?
``ஸ்லீப்பர் கோச்சுக்கும் தலையணை, பெட்ஷீட்'' - பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் புதிய சலுகை என்ன?
சென்னைக்கு ரயிலில் பயணிப்பவர்களுக்கு சூப்பர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம். வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், ஸ்லீப்பர் கோச்சில் சென்னை அல்லது மங்களூருக்கு பயணிப்பவர்களுக்கு பெட்ஷீட், தலையணை, தலையணை உரை வழங்கப்பட உள்ளது. 'இலவசம்' என்று நினைத்துவிடாதீர்கள். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் எவ்வளவு? பெட்ஷீட், தலையணை, தலையணை உரை வேண்டுமென்றால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பெட்ஷீட் மட்டும் போதுமென்றால் ரூ.20 கட்ட வேண்டும். தலையணை, தலையணை உரை மட்டும் போதுமென்றால் ரூ.30 செலுத்த வேண்டும். பெட்ஷீட், தலையணை, தலையணை உரை ரயில் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்க... இந்த டிரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க மக்களே..! ஏ.சி கோச் இதுவரை ஏ.சி கோச்களுக்கு மட்டுமே தலையணை, தலையணை உரை, பெட்ஷீட் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது ஸ்லீப்பர் கோச்சிற்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஏ.சி கோச்களுக்கு அவை இலவசம் (அதாவது டிக்கெட் கட்டணத்துடனேயே சேர்க்கப்பட்டுவிடும்) என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இனி ரயில் தனியாக பயணத்திற்கு தலையணை, தலையணை உரை, பெட் ஷீட் கொண்டுபோக வேண்டியதாக இருக்காது. ஹேப்பி ஜர்னி மக்களே! மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?
புனித மண், இயற்கை அழகு… ஆனால் நீடிக்கும் வேதனை: கொடைக்கானலின் பழமை வாய்ந்த கிராமத்தின் மறுபக்கம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் கொடைக்கானல் என்றாலே குளு குளு காலநிலையும், மேப்பல் மரங்களும், நட்சத்திர ஏரியும்தான் நம் நினைவுக்கு வரும். சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான அந்தப் பனிமலைப் பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள், வெளியுலகின் ஆரவாரங்கள் எதுவும் எட்டாத, காலத்தின் உறை நிலையில் ஒரு கிராமம் அமைந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அதுதான் வெள்ளகவி! கொடைக்கானல் வெள்ளகவி நூற்றாண்டுகள் கடந்தும் தொடரும் நடைபயணம் கொடைக்கானல் மலையகத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான, தனித்துவமான கிராமங்களில் ஒன்று வெள்ளகவி. சுமார் 300 முதல் 500 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது இந்தக் குடியிருப்பு. பழங்குடியின மக்களும், பின்னர் குடியேறிய விவசாயக் குடும்பங்களும் இணைந்து உருவாக்கிய ஒரு சிறப்புமிக்க சமூகக் கட்டமைப்பு இது. ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டிலும், டிஜிட்டல் இந்தியாவின் வெளிச்சம் முழுமையாகப் படாத ஒரு பகுதியாகவே இது இருக்கிறது. காரணம்? சாலை வசதி இல்லை! இந்த கிராமம் முழுமையாகக் கொடைக்கானல் வனப் பாதுகாப்பு மண்டலத்தின் உள்ளே அமைந்திருப்பதால், சாலை அமைப்பதற்கான அனுமதி பல ஆண்டுகளாகக் கானல் நீராகவே உள்ளது. ஒற்றையடிப் பாதையும், கரடுமுரடான கால்நடை வழியும்தான் இவர்களின் 'தேசிய நெடுஞ்சாலை'. வெளியுலகை அடைய வேண்டுமென்றால், செங்குத்தான மலைகளில் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரக் கடுமையான நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். அவசர சிகிச்சைக்கு வழியில்லை! சாலை இல்லாத துயரம், வெள்ளகவி மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு அவசர மருத்துவ உதவி என்றால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலை இங்கு தொடர்கிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அந்த செங்குத்தான மலைப்பாதையில் அவர்கள் ஏறி இறங்குவதைக் கற்பனை செய்து பாருங்கள். அது மருத்துவமனைக்கான பயணம் அல்ல; உயிருடன் நடத்தும் போராட்டம். பல நேரங்களில் அடிப்படை சிகிச்சைகூட உரிய நேரத்தில் கிடைக்காமல் போவதுதான் நிதர்சனம். கல்வியும் ஒரு போராட்டமே! கல்விக்காக இங்கிருக்கும் சிறு குழந்தைகள் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தினமும் குன்றுச்சரிவுகளையும், அடர்ந்த காட்டுப் பாதைகளையும் கடந்துதான் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு சாகசப் பயணம்தான். வீட்டிற்குத் தேவையான ஒரு குண்டூசி முதல் அரிசி மூட்டை வரை எதுவாக இருந்தாலும், கொடைக்கானல் நகருக்கு நடைப்பயணமாகச் சென்று, தலைச்சிறையாகச் சுமந்து வர வேண்டிய நிலையே இன்றும் தொடர்கிறது. செருப்பு அணியாத பூமி! இத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும், வெள்ளகவி ஒரு ஆன்மீகப் பூமியாகத் திகழ்கிறது. கிராமத்தின் மையத்தில் பழங்காலம் தொட்டு வழிபாட்டில் இருக்கும் காளிகாம்பாள் மற்றும் தாதையார் கோவில்கள், இவர்களின் ஆதித் தமிழ்க் கலாச்சாரத்தின் சாட்சிகள். ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இந்தச் சின்னஞ்சிறிய மலைக் கிராமத்தில் சுமார் 24 முதல் 25 கோவில்கள் வரை உள்ளன. இந்த கிராமம் முழுவதுமே புனிதப் பகுதியாகக் கருதப்படுவதால், ஊருக்குள் காலணிகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை என்ற பழக்கவழக்கம் இன்றளவும் அங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பசுமை சூழ்ந்த இயற்கை எழில், சத்தமில்லாத அமைதியை விரும்புவோருக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. வைரலான வீடியோவும்... விடியாத வாழ்வும்! வெளியுலகின் கண்களில் படாமல் மறைந்து கிடந்த இந்த மலைக் கிராமத்தின் நிஜ முகத்தை, சமீபத்தில் வெளியான ஒரு யூ டியூப் வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியது. இன்ஃப்ளூயன்சர் தமிழரசன் உருவாக்கிய வெள்ளகவி கிராமம் பற்றிய வீடியோ 97 லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலானது. அந்த வீடியோ மூலம்தான் வெள்ளகவி மக்களின் துயரமும், வாழ்வியலும், தேவைகளும் பொதுமக்கள் மத்தியிலும், அதிகாரிகளிடமும் சென்றடைந்தது. இதன் பின்னர் அரசுத் துறைகளின் கவனம் இந்தப் பக்கம் திரும்பியதாகச் சொல்லப்பட்டாலும், நடைமுறை மாற்றங்கள் என்னவோ மிக மிக மெதுவாகவே நகர்கின்றன என்பதுதான் கிராம மக்களின் ஆதங்கம். காத்திருக்கும் நம்பிக்கை! வெள்ளகவி மக்கள் கேட்பதெல்லாம், அடிப்படை வசதிகள் தான். அவசர மருத்துவ சேவைகளுக்கான துரிதமான அணுகல். தற்போதைய காட்டுப்பாதைகளைப் பாதுகாப்பான படிக்கட்டுகள், கைப்பிடி தடுப்புகளுடன் மாற்றுதல். முறையான கல்வி, மின்சாரம், தூய்மையான குடிநீர் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள். நீண்ட காலமாகச் சாலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலைக் கிராம மக்களின் இந்த அடிப்படைக் கோரிக்கைகள் விரைவில் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கையை அவர்கள் இன்னமும் கைவிடவில்லை. சாலை என்பது இவர்களுக்கு ஒரு சொகுசு வசதி அல்ல; அடிப்படை உரிமை! அந்த உரிமைக்காக நூற்றாண்டுகளாகக் காத்திருக்கும் வெள்ளகவி மக்களின் குரல், உரியவர்களின் செவிகளை எட்டுமா? தேர்தல்
லாட்டரி வெற்றியை மனைவியிடம் மறைத்து, ஆடம்பர வாழ்க்கை - மனஉளைச்சலில் முடிந்த ஜப்பானிய முதியவரின் கதை
கனவில் கூடக் காண முடியாத ஒரு அதிர்ஷ்டம், கோடிக்கணக்கான பணம் ஒருவருக்குக் கிடைத்தால், அவர் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போவார். ஆனால், ஜப்பானில் 66 வயதான ஒருவருக்குக் கிடைத்த லாட்டரி வெற்றி, நிம்மதியைக் கொடுக்காமல், தனிமையையும், மன உளைச்சலையும் மட்டுமே பரிசளித்தது. மனைவியிடம் மறைக்கப்பட்ட அந்தக் கோடீஸ்வர ரகசியம் ஒரு சாபமாக மாறிய கதை இதுதான். ஜப்பானைச் சேர்ந்த 66 வயதான அந்த முதியவர் எஸ், லாட்டரியில் 600 மில்லியன் யென் (சுமார் 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 34 கோடி) என்ற மிகப்பெரிய தொகையை வென்றார். 'எஸ்'ஸும் அவரது மனைவியும் டோக்கியோவில் ஒரு உற்பத்தி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் இருவரும் மாதம் தோராயமாக $2,000 கூட்டு ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தனர். அவரது மனைவி தீவிரச் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர். ஜப்பானிய குடும்பம் மனைவியின் குணம்... மறைந்த `எஸ்’ மனைவியின் இந்த எல்லைமீறிய சிக்கன குணம் காரணமாக, தான் இவ்வளவு பெரிய தொகையை வென்ற உண்மையை அவரிடம் வெளிப்படுத்த 'எஸ்' அஞ்சினார். உண்மையைச் சொன்னால், அவள் நிச்சயமாக அந்தப் பணத்தைக் கடுமையாக கட்டுப்படுத்துவாள் என்று அவர் நம்பினார். எனவே, தன் மனைவியிடம் தான் வெறும் 5 மில்லியன் யென் (சுமார் $32,000) மட்டுமே வென்றதாகவும், அந்தப் பணத்தை வீட்டைப் பழுதுபார்க்கப் பயன்படுத்தப் போவதாகவும் பொய்யுரைத்து, உண்மையான அதிர்ஷ்ட தனக்குள்ளேயே பூட்டிவைத்தார். அந்தப் பொய்யை மறைத்துக்கொண்டு, 'எஸ்' ரகசியமாகத் தன் ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். அவர் அந்தப் பணத்தைக் கொண்டு விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான பல கார்களை வாங்கினார். ஜப்பான் முழுவதும் உள்ள உயர்தர ரிசார்ட்டுகளில் (Hot Spring Resorts) ரகசியமாகத் தங்கினார், மற்றும் தனியாகப் பயணம் செய்தார். முதல் ஆறு மாத காலத்திற்குள் அவர் சுமார் $116,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 95 லட்சம்) தொகையைச் செலவழித்திருந்தார். தன் ரகசிய வாழ்க்கையை மறைக்க, அவர் வெளியே செல்லும்போதும், வீட்டில் இருக்கும்போதும் பழைய ஆடைகளையே அணிந்தார். புதிய கார்களை ஓட்டும்போது, சந்தேகத்தைத் தவிர்க்க வேண்டி, அவர் முதலில் பூமிக்கு அடியில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்று அங்கிருந்து அவற்றை ஓட்டிச் சென்றார். இருப்பினும், இந்த இரகசிய ஆடம்பர வாழ்க்கை 'எஸ்'ஸுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மாறாக, தான் தன் குடும்பத்திற்குச் செய்த துரோகம் என்ற குற்ற உணர்ச்சியும், தான் சம்பாதித்த பணத்தைக்கூடத் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பகிர முடியவில்லையே என்ற கடும் தனிமையும் அவரை ஆட்கொண்டது. இந்த ரகசியமும், மன உளைச்சலும் சேர்ந்து அவரைப் பெரும் உளவியல் சிக்கலுக்குத் தள்ளின. என் வாழ்க்கையை ஆட்டம் காண வைக்கிறது! இந்த பணம் என் சொந்த முயற்சியால் சம்பாதித்திருந்தால், நான் பெருமைப்பட்டிருப்பேன். ஆனால் முயற்சி இல்லாமல் கிடைத்த செல்வம் விரும்பத்தகாத நினைவுகளைத் தூண்டி, என் வாழ்க்கையை ஆட்டம் காண வைக்கிறது, என்று அவர் பின்னர் வேதனையுடன் குறிப்பிட்டார். இறுதியில், இந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியாத 'எஸ்' ஒரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்டார். அதன் அடிப்படையில், அவர் வென்ற தொகையில் சுமார் 500 மில்லியன் யென் ($3.2 மில்லியன்) ஐ காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தார். மேலும், அந்தக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான பயனாளிகளாகத் தன் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரிட்டார். இந்தச் செயலின் மூலம், தன் மறைவுக்குப் பிறகு இந்தப் பணம் தன் குடும்பத்தினரின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அவர் நம்புவதாக தெரிவித்திருக்கிறார்,
தேக்கடி: முல்லைப் பெரியாறு அணை; பசுமை சூழலில் படகு பயணம் | Photo Album
முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்
கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது.
பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்
கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது.
பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்
கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது.
பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்
கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது.
பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்
கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது.
திறப்பு விழாவுக்கு தயாராகும் கோவை செம்மொழிப் பூங்கா எப்படி இருக்கிறது?
கோவை செம் மொழிப் பூங்காவை வரும் நவம்பர் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், செம் மொழிப் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
திறப்பு விழாவுக்கு தயாராகும் கோவை செம்மொழிப் பூங்கா எப்படி இருக்கிறது?
கோவை செம் மொழிப் பூங்காவை வரும் நவம்பர் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், செம் மொழிப் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
திறப்பு விழாவுக்கு தயாராகும் கோவை செம்மொழிப் பூங்கா எப்படி இருக்கிறது?
கோவை செம் மொழிப் பூங்காவை வரும் நவம்பர் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், செம் மொழிப் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
திறப்பு விழாவுக்கு தயாராகும் கோவை செம்மொழிப் பூங்கா எப்படி இருக்கிறது?
கோவை செம் மொழிப் பூங்காவை வரும் நவம்பர் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், செம் மொழிப் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
திறப்பு விழாவுக்கு தயாராகும் கோவை செம்மொழிப் பூங்கா எப்படி இருக்கிறது?
கோவை செம் மொழிப் பூங்காவை வரும் நவம்பர் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், செம் மொழிப் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு!
இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு!
இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு!
இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு!
இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
``ரயில்வே பணிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் வரணும்'' - வழிகாட்டி புத்தகம் வெளியிட்ட 23 வயது இளைஞர்
`ரயில்வே தேர்வு வழிகாட்டி' நூலை தமிழில் உருவாக்கி, திண்டுக்கல்லில் உள்ள 100 நூலகங்களுக்கு 60 ஆயிரம் மதிப்புள்ள அந்த நூலை இலவசமாக வழங்கினார் 23 வயது இளைஞர் திருஞானசம்பந்தர். இதைப் பற்றி கேட்ட போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் பொதுவாக ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் ரயில்வே பணிக்கு யாருமே விண்ணப்பிப்பதில்லை. ரயில்வே போட்டித் தேர்வு அந்த நிலையை மாற்றுவதற்காக, சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த இளைஞர் பாண்டுரங்கன் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நானும் அவருடன் இணைந்து முயற்சித்தேன். நான் 10, 12ஆம் வகுப்பு பள்ளி பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன். எனக்கு ரயில்வே பணிக்கு செல்ல வேண்டும் என்பது இலக்காக இருந்தது. அதற்காக பாண்டுரங்கன் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்று நினைத்து அவருடன் சேர்ந்தேன். ரயில்வே தேர்வுகளின் முக்கியத்துவம், மத்திய அரசு வழங்கும் சலுகைகள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, அதற்காக தங்களை எப்படி தயார்படுத்துவது போன்ற விஷயங்களை தமிழகம் முழுவதும் உள்ள ஐடிஐக்கள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு பரப்புரை செய்து வந்தோம். எங்களுடைய முக்கிய நோக்கம் டிஎன்பிஎஸ்சி போல ரயில்வே பணிக்கும் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுதான். போட்டித் தேர்வுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்; கலங்கரை விளக்கமாகும் கரூர் மாவட்ட பொது நூலகத்துறை ரூ 60 ஆயிரம் புத்தகம் ரயில்வே பணியை இலக்காகக் கொண்டு செயல்பட்ட நான் தமிழ்நாட்டு மாணவர்களும் ரயில்வே பணிக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்கி வந்தேன். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளில் ரயில்வே தேர்வில் வினாவை சேகரித்து முக்கியமான கேள்விகளை எடுத்து பெரும் முயற்சிக்கு பிறகு பாண்டுரங்கனுடன் இணைந்து இணைந்து ரயில்வே கணிதம் என்ற ரூபாய் 600 மதிப்புள்ள ரயில்வே தேர்வு வழிகாட்டி நூலை வெளியிட்டேன். அதனை அனைவரும் பயன்பெறும் வகையில் எனது சொந்த ஊரான திண்டுக்கல்லில் உள்ள 100 நூலகங்களுக்கு இலவசமாக வழங்கினேன். இதுவே எனது முதல் வெற்றியாக இருந்தது. பாண்டுரங்கனுடன் திருஞானசம்பந்தர் 100 படிகள் இலவசமாக வழங்கியுள்ளோம் தமிழ்நாட்டு மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி மட்டுமே இலக்காகக் கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எல்லாரும் ரயில்வே தேர்வுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக நானும் பாண்டுரங்கனும் இணைந்து இந்தரயில்வே கணிதம் நூலை உருவாக்கினோம். தமிழகத்தில் உள்ள நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரயில்வே, எஸ் எஸ் சி, வங்கி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தேவையான நூல்கள் அதிகளவு உள்ளன. கல்லூரி படிக்கும் போது போட்டி தேர்வுகளுக்கு அனைவரும் தயாராக வேண்டும். இந்த ரயில்வே கணிதம் புத்தகத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் இதுதான் எங்க ஆசை! ரயில்வே கணிதம்: திண்டுக்கல் அருகில், சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நூலகங்களுக்கு எங்களுடைய ரயில்வே கணிதம் நூலை இலவசமாக வழங்கியுள்ளோம். 3 மாதத்திற்கு முன்பு சேலம் அரசு ஐடிஐயில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினோம். எங்களது ரயில்வே விழிப்புணர்வு பேச்சை கேட்ட பிறகு, சேலம் மாவட்ட மாணவர்கள் ரயில்வே போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தேவையான வசதிகளை தற்போது அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அனைத்து அரசு ஐடிஐ-யில் பயிலும் மாணவர்கள் ரயில்வே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் என்று சுற்றறிக்கைகளை அனுப்பி எங்களை ஊக்குவித்தனர். இனிய வழியில் சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு பல்வேறு போட்டி தேர்வு விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டு மாணவர்கள் ரயில்வே துறை பணிகளை கைப்பற்றுவதுதான் எங்களது வெற்றி: தொடர்ந்து பேசிய திருஞானசம்பந்தர், நானும் பாண்டுரங்கனும் தற்போது கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். நான் ரயில்வே பணிக்கு போக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். இன்னும் நான் ரயில்வே பணிக்கு போகவில்லை. ஆனா என்னால மத்த இளைஞர்கள் ரயில்வே பணிக்கு போகிறார்கள் என்று நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. தமிழ்நாட்டு மாணவர்கள் ரயில்வே துறை பணிகளை கைப்பற்றுவதுதான் எங்களுடைய இந்த முயற்சிக்கான வெற்றியாக அமையும் என்று கூறினார். UPSC/TNPSC: போட்டித் தேர்வு பயிற்சி முகாமில் சிறப்புரையாற்றும் திருச்சி எஸ்.பி செல்வநாகரத்தினம் IPS
Office Romance-ல் இந்தியா 2வது இடமா... ஆய்வு சொல்வதென்ன?
நவீன காலத்தில் அலுவலகத்தில் ஆண்களும் பெண்களும் பழகி காதல் கொள்வது இயல்பானதாக மாறியிருக்கிறது. ஆனால் இது இந்தியர்கள் மத்தியில் மிகவும் பரவலானதாக மாறியிருக்கிறது. புத்திசாலித்தனமான உறவுகள் பற்றிய ஆஷ்லே மேடிசன் தளத்தின் சமீபத்திய சர்வதேச ஆய்வு, பணியிடத்தில் காதல் கொண்டவர்கள் அல்லது தற்போது உறவில் இருப்பதை ஒப்புக்கொள்பவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. Indian Office இந்த ஆய்வு YouGov உடன் இணைந்து 11 முக்கிய நாடுகளில் நடந்துள்ளது. இதில் மெக்சிகோ முதலிடம் பிடித்திருக்கிறது. ஆய்வு நடந்த நாடுகள் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா. இதில் 13,581 வயது வந்த நபர்கள் பங்கேற்றுள்ளனர். Dating இந்தியாவில் Office Romance இந்திய அலுவலக சூழல்களில் பணியிட எல்லைகள், நடத்தைகள் மற்றும் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் பணியிட காதல் என்பது சகஜமாகவே இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. 10ல் நான்கு இந்தியர்கள் பணியிடத்தில் டேட்டிங் செய்திருக்கலாம் அல்லது செய்துகொண்டிருக்கலாம் என்கிறது ஆய்வு. மெக்ஸிகோவைப் பொறுத்தவரை, பதிலளித்தவர்களில் 43 விழுக்காடு பேர் சக ஊழியருடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியிருக்கின்றர், அதே நேரத்தில் 40 விழுக்காடு இந்தியர்கள் அதை கூறியுள்ளனர். இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும், அங்கு இந்த எண்ணிக்கை 30 விழுக்காடு உள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக உலகில் இளைய தலைமுறையினர் பணியிட உறவு குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-24 வயதுடையோரில் 34% பேர் அத்தகைய உறவுகள் தங்கள் கேரியரை பாதிக்கக்கூடும் எனக் கருதுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. Sexsomnia: ``ஒப்புதல் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டவர் குற்றமற்றவர் என தீர்ப்பு'' - ஏன்?
ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் - ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம்
சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது.
ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் - ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம்
சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது.
ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் - ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம்
சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது.

25 C