சோடா பாட்டில் மூடியில் 22, 23 விளிம்புகள் இல்லாமல் 21 விளிம்புகள் மட்டுமே இருப்பது ஏன் தெரியுமா?
குளிர்பான பாட்டிலைத் திறக்கும்போது, அதன் மூடியில் இருக்கும் விளிம்புகளை கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு கண்ணாடி பாட்டில் மூடியிலும் சரியாக 21 விளிம்புகள் மட்டுமே இருக்குமாம். சில காரணங்களுடன் தான் இவ்வாறு 21 விளிம்புகள் மட்டும் கொண்டு குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. முதலில் 24 விளிம்புகள் இருந்தது 1892ஆம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் வில்லியம் பெயிண்டர் என்பவர் குரூன் கார்க் காப் என்ற இந்த மூடி வகையை உருவாக்கியிருக்கிறார். அப்போது அதில் 24 விளிம்புகள் இருந்துள்ளன. பழைய கார்க் மூடிகளை விட இந்த மூடி நன்றாக மூடியிருக்கிறது. ஆனால் பிரச்னையும் இருந்துள்ளது. தானியங்கி இயந்திரங்களில் பாட்டில்களை மூடும் போது, இந்த 24 விளிம்புகள் மிகவும் இறுக்கமாக இருந்ததால் பாட்டில்கள் உடைந்து போயிருக்கின்றன. இயந்திரங்களும் அடிக்கடி ஜாம் ஆகியிருக்கின்றன. பின்னர் பொறியாளர்கள் 23 மற்றும் 22 விளிம்புகளுடன் சோதனை செய்தனர். ஆனால் இவை சரியாக வேலை செய்யவில்லை. நிறைய சோதனைகளுக்குப் பிறகு 21 விளிம்புகள் தான் இதற்கு சரியான தீர்வு என கண்டுபிடித்துள்ளனர். 21 விளிம்புகள் ஏன்? சோடா மற்றும் பீர் போன்ற பானங்களில் கார்பன் டை ஆக்சைடு வாயு அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த அழுத்தத்தை உள்ளேயே வைத்திருக்க முழுவதும் காற்று புகாத மூடி தேவை. 21 விளிம்புகள் பாட்டிலின் கழுத்துப் பகுதியை சரியாக பிடித்து, அழுத்தத்தை சமமாக பகிர்ந்து கொள்ளுமாம். அதிக விளிம்புகள் இருந்தால் மூடி மிகவும் இறுக்கமாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் திறக்கும் போது பாட்டில் உடையலாம். குறைவான விளிம்புகள் இருந்தால் நன்றாக மூடாது, கசிவு ஏற்படும். இப்படி பல பிரச்னைகளுக்கு 21 விளிம்புகள் என்பது சரியான சமநிலையாக இருந்துள்ளது. 1900களின் ஆரம்பத்தில் பாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகள் இந்த 21 விளிம்புகள் கொண்ட மூடியை விரும்பின. இன்று உலகம் முழுவதும் பீர் அல்லது சோடா பாட்டில் போன்றவற்றில் இதே 21 விளிம்புகள் கொண்ட மூடியைத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த அந்த ஒரு உதவி! - ரஜினி அனுப்பிய போஸ்ட் கார்டு பின்னணி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் எனக்கு 63 வயது, யுனிலீவரில் இருந்து ஓய்வு பெற்று மாஸ்டர் டேட்டா மேனேஜ்மென்ட்டில் ஃப்ரீலான்ஸ் ஆலோசனை செய்கிறேன். 1981-ம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் சென்னை பச்சையப்பாவின் மாலை கல்லூரியில் B.Com படித்து வந்தேன். நான் நிதி ரீதியாக மிகவும் பலவீனமாக இருந்தேன், நான் பட்டம் பெறுவதை உறுதி செய்ய பகல் நேரத்தில் வேலை செய்ய வேண்டியிருந்தது. எனது சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், எனது மூன்றாம் ஆண்டு இறுதி செமஸ்டரில் சிக்கிக்கொண்டேன், ஏனெனில் எனது கட்டணத்திற்கு சுமார் ரூ .290 (ஆறு மாத செமஸ்டருக்கு) பணத்தை திரட்ட முடியவில்லை. என் எதிர்காலத்திற்கான ஒரே டிக்கெட் அதுதான் என்பதால் நான் என் படிப்பை முடிக்க வேண்டியிருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நான் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் வீணாகிவிட்டன. பில்லா ரஜினி அந்த நாட்களில் 'பேசும் படம்’ என்ற தமிழ் திரைப்பட இதழ் வந்தது, அதில் சினிமா நட்சத்திரங்களின் முகவரிகள் இருந்தன. நான் ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு, 10 போஸ்ட் கார்டுகளை (10 பைசா அட்டைகள்) வாங்கி, எனது கட்டணத்திற்கு உதவுமாறு ஒரு எளிய கோரிக்கையை எழுதி, ரஜினிகாந்த் உட்பட அன்றைய சில பிரபல நடிகர்கள் / நடிகைகளுக்கு அனுப்பினேன். சுமார் ஒரு வாரத்தில், பில்லா ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் இருந்து எனக்கு பதில் கிடைத்தது, குரோம்பேட் முகவரியுடன் (நான் தங்கியிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை) எனது அசல் சான்றிதழ்களுடன் அவர்களை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். உடனே அங்கு சென்றேன். அந்த இடம் ஓலைக் கூரையுடன் கூடிய ஒரு பெரிய 'குடிசை', அனைத்து பக்கங்களிலும் பல்வேறு ரஜினிகாந்த் திரைப்படங்களின் சுவரொட்டிகள் இருந்தன. சுமார் 20-22 வயதுடைய அரை டஜன் கரடுமுரடான தோற்றமுடைய சிறுவர்கள் அங்கு மிதந்து கொண்டிருந்தனர். உண்மையில் நான் அவர்களைப் பார்த்து பயந்தேன். ரஜினி மக்கள் மன்றம் நான் வருகை தரும் நோக்கத்தை சரிபார்த்து, எனது சான்றிதழ்களை சரிபார்த்தபோது, பாருங்கள், இந்த செமஸ்டருக்கான உங்கள் கட்டணத்திற்கு உங்களுக்கு உதவுமாறு ரஜினி சார் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஒரு நிபந்தனையின் பேரில். உங்கள் முடிவுகளுடன் நீங்கள் வந்து உங்கள் மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்துவீர்கள் என்று ஒரு ஆவணத்தில் நீங்கள் எங்களுடன் கையெழுத்திட வேண்டும், மேலும் நீங்கள் 60 அல்லது அதற்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றால் இது ஒரு கடன். அதேசமயம், நீங்கள் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால், இது ரஜினி சார் உங்களுக்கு வழங்கும் பரிசு, நீங்கள் நன்றாக சம்பாதிக்கத் தொடங்கும் போது தகுதியான ஒருவருக்கு அதே கட்டணத்தை செலுத்துவதாக மட்டுமே நீங்கள் உறுதியளிக்க வேண்டும். நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அதிர்ச்சியடைந்தேன், உடனடியாக காகிதத்தில் கையெழுத்திட்டேன். உடனடியாக எனக்கு பணம் கிடைத்தது, நான் பரீட்சைகளை எழுதினேன், நிச்சயமாக 60 க்கும் மேற்பட்ட தேர்ச்சி பெற்றேன். ரஜினி சார் மற்றும் அவரது ரசிகர் மன்றங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நல்ல தொழில்முறை கல்வி மற்றும் ஒரு சிறந்த கார்ப்பரேட் வாழ்க்கையுடன் இவ்வளவு தூரம் வந்த எனக்கு அவர் நிச்சயமாக முக்கிய கருவிகளில் ஒருவர். நிச்சயமாக நான் மனிதராக ரஜினி சார் அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன். கடவுள் அவருக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அமைதியையும் வழங்கட்டும். - பரிமள் குமார்
'அம்மன் கண், மரம், தங்கம், கரியர்' - சமந்தா வெட்டிங் சாரி சீக்ரெட்ஸ்
நடிகை சமந்தாவிற்கு இயக்குநர் ராஜ் நிதிமொரு என்பவருடன் நேற்று திருமணம் நடந்து முடிந்தது. சமந்தாவின் திருமண ஆடையில் உள்ள சிறப்பசம்ங்களை விளக்குகிறார் சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் பல்லவி. நடிகை சமந்தாவிற்கும், 'ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருக்கும் நேற்று கோவையில் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தா தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார். சமந்தா அணியும் ஆடைகளில் எப்போதும் தனித்துவம் இருக்கும். அதே போல் அவரின் திருமண ஆடையிலும் நிறைய நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதாக சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். Samantha - Raj Nidimoru சமந்தாவின் திருமணப் புகைப்படத்தில் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். அதில் கோல்டன் நிறத்தில் எம்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதற்கு மேட்சிங்காக கோல்டன் சோக்கர் மற்றும் அணிகலன்கள் அணிந்திருந்தார். சமந்தாவின் திருமண ஆடையை அவரின் 15 வருட தோழியும், செலிபிரெட்டி ஸ்டைலிஸ்ட்டுமான பல்லவி சிங் ஸ்டைலிங் செய்திருக்கிறார். ஜெயதி போஸ் மற்றும் செலிபிரெட்டி காஸ்டியூம் டிசைனர் ஆர்பிதா மேத்தா ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர். சமந்தாவின் சேலை ஸ்டைலிஸ்ட் பல்லவி பதிவிட்டுள்ள பதிவில், சமந்தா என்னுடைய 15 வருட தோழி, எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். சமந்தாவைப் பொறுத்தவரை ஆடை என்பது அழகுக்காக அணிவது என்பதைத் தாண்டி, அதில் உணர்வுப் பூர்வமான கனெக்ஷன் இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவரின் திருமண ஆடைகளிலும் அதனை கொண்டு வர வேண்டும் என்று எண்ணினேன். Samantha - Raj Nidimoru இந்த ஆடையை வடிவமைத்தவர் ஆர்பிதா மேத்தா. இதற்கு முன்பும் கூட நான், சமந்தா, ஆர்பிதா மூவரும் இணைந்து வேலை செய்திருக்கிறோம். அது மேஜிக் மொமன்ட்களை உருவாக்கியிருக்கிறது. இந்த முறையும் அதே கூட்டணி வேலை செய்திருக்கிறது. ஆடையில் உணர்வுப்பூர்வமான வடிவங்களை ஆடையில் கொண்டு வர வேண்டும் என்று எண்ணியதுமே எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் ஜெயதி போஸ். Tree of life ஜெயதி போஸ் ஒரு கதையை வடிவங்களாக உருவாக்கிக் கொடுப்பதில் வல்லவர். சமந்தாவின் திருமண ஆடையை வடிவமைக்க வேண்டும் என்றதும், சில நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொண்டார். 'Tree of life' ஒன்றை உருவாக்கி, அதில் அம்மனின் மூன்றாவது கண் இருப்பது போல் உருவாக்கலாம் என்று ஐடியா கொடுத்தார். Samantha - Raj Nidimoru அதாவது சமந்தாவின் கலைப்பயணம், வேர்கள், இன்றைய வளர்ச்சி, எதிர்கால ஆசீர்வாதம் ஆகியவற்றை விளக்கும் வகையில் மரம் ஒன்றையும், அதில் அம்மனின் மூன்றாவது கண் இருப்பதுபோல் வடிவமைத்தார். இதனை நாங்கள் சமந்தாவின் பிளவுஸ் டிசைன் ஆக்கியிருக்கிறோம். ராஜ் நிதிமொரு ஆடை அதே போல் ராஜ் நிதிமொரு ஆடையிலும் ஸ்பெஷல் இருக்கிறது. நான் பழகியதில் அவர் ஒரு நல்ல மனிதர். 'குணத்தில் தங்கம்' என்பதை குறிக்கும் விதமாக தங்க நிற ஆடையைத் தேர்வு செய்தோம் என்று பதிவிட்டிருக்கிறார். Samantha - Raj Nidimoru மோதிரம் சமந்தா அணிந்திருந்த மோதிரத்திலும் தனித்துவம் இருக்கிறது. சமந்தா அணிந்திருந்த மோதிரம், பெரிய டிசைன்களில் செய்யப்படாமல் சிம்பிள் லுக்கில் இருந்தது. இதற்கு அவர்களுடைய இயல்பான குணத்தையும், மனதின் தெளிவை எதிரொலிப்பதைப் போலவும் மோதிரம் சிம்பிள் லுக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
உங்கள் பயத்தை ஆசிரியராக மாற்றும் ரகசியம்! - மறந்துபோன பண்புகள் - 7
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் துணிவு என்றால் என்ன? துணிவு என்பது பயம் இல்லாமல் இருப்பதல்ல, பயம் இருந்தபோதிலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நாம் எடுக்கும் முடிவே துணிவு. இன்று தோல்வி அடைந்தாலும் நாளை நான் மீண்டும் முயற்சிப்பேன் என்று சொல்லும் அந்த அமைதியான உள் குரல் தான் அது. நாம் பெரும்பாலும் துணிவு என்றால் போரில் போராடுவது, யாரையாவது ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது போன்ற வீரச் செயல்களுடன் ஒப்பிடுகிறோம் ஆனால் அன்றாட வாழ்வில் துணிவு என்பது உண்மையை பேசுவது, நேர்மையாக நடந்து கொள்வது, புதிய வாய்ப்புகளை கண்டு அஞ்சாமல் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முயற்சிப்பது. துணிவின் முக்கியத்துவம்: துணிவு இருந்தால் தான் நம்மிடம் இருக்கும் மற்ற அனைத்து நற்குணங்களும் ஒளிர்ந்து வெளிப்படும். உங்கள் வாழ்வில் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்படும் போது அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுகிறது துணிவு. மனதளவிலான உறுதியையும், சுயமரியாதையையும் அது வளர்க்கிறது. ஒரு துணிவான செயல் பலரையும் ஊக்குவிக்கிறது. துணிவு இருந்தால், பயம் உங்கள் எதிரியாக இல்லாமல், ஒரு ஆசிரியராக மாறும். ஒருவர் கூறுவதை பொறுமையாக கேட்க முடியாமல் போனது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 3 இன்றைய காலத்தில் ஏன் மக்கள் துணிவை இழக்கிறார்கள்? நாம் ஏதாவது துணிச்சலாக செய்து அது தவராகிவிட்டால் என்ன செய்வது என்ற தோல்வியின் பயம் பலரிடம் இருக்கிறது. நாம் செய்கின்ற செயல்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் நம்மை எப்படி மதிப்பிடுவார்கள் என்ற மதிப்பீட்டின் பயம். அதீத சிந்தனை, எப்போதும் இதை செய்யலாமா வேண்டாமா என்று சிந்தித்து கொண்டு காலத்தை கடத்துவது, அது மட்டுமல்லாமல் நடக்கவே நடக்காத எதிர்மறை முடிவுகளை மனதில் உருவாக்கி கொண்டு வருந்துவது. தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது, இது என்னால் முடியாது, இந்த துணிச்சல் என்னிடம் இல்லை என்ற எண்ணம் ஒருபோதும் நம்மை முன்னேற விடுவதில்லை. சரி எப்படி துணிவை வளர்ப்பது? துணிவை வளர்க்கும் வழிகள்: உங்களுடைய சிறிய சிறிய பயங்களை கண்டறியுங்கள், சிலருக்கு கூட்டத்தில் பேசுவதற்கு பயமாக இருக்கலாம், புதிதாக ஒன்றை முயற்சிக்க பயம் இருக்கலாம், சில நேரங்களில் இல்லை, இப்போது என்னால் அது முடியாது என்று சொல்வதற்கு பயமாக இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் சரி, துணிவாக அவற்றை எதிர்கொள்ளுங்கள். தனக்கு கீழ் வேலை செய்கின்ற ஒருவரின் சிறந்த யோசனையை ஏற்க மறுப்பது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 2 எப்படி எதிர்கொள்வது என்று கேட்கிறீர்களா? உதாரணத்திற்கு, மேடை பேச்சு என்றாலே எனக்கு பயம் என்று கூறுபவர்கள் அதை பயிற்றுவிக்கும் அமர்வுகளில் கலந்து கொள்ளலாம், அதை முறையாக கற்றுக் கொள்ளலாம். அங்கே கொடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளில் நீங்கள் பயந்தாலும் உங்களை மேடையில் ஏற்றி விடுவார்கள் நீங்கள் பேசி தான் ஆக வேண்டும். யோசித்து பாருங்கள் முதல் முறை உங்கள் பயத்தை தாண்டி துணிவுடன் நீங்கள் விரும்பும் செயலை செய்வது எத்தகைய உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்தும். துணிவின் பாதையில் நீங்கள் பயணிக்க எடுத்து வைக்கும் முதல் படி பயத்தை எதிர்கொள்வது தான். இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6 உங்கள் தோல்வியை ஏற்று கொள்ளுங்கள், எப்போதுமே ஒருவரால் வெற்றியை மட்டுமே அனுபவிக்க முடியாது, நீங்கள் தோல்வி அடையவில்லை என்றால் எப்படி ஒன்றை கற்றுக் கொள்வீர்கள். தொடக்கம் எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆம், நான் இந்த முறை தோற்றுவிட்டேன் நான் என்ன தவறு செய்தேன் ஏன் இப்படி நடந்தது என்று ஆராய்ந்து தவறுகளை சரி செய்து முன்னேறுங்கள். இன்று செயற்கை நுண்ணறிவு பாதையில் உலகம் நுழைந்துவிட்டது, அட இது என்ன புதிதாக இருக்கிறதே இதை எப்படி கற்றுக்கொள்ள முடியும் என்று அச்சப்பட்டு அதை கற்றுக்கொள்ளவோ, பயன்படுத்தவோ மறுப்பவர்கள் இருக்கும் இடத்திலேயே தேங்கி விடுவார்கள் ஆனால், இந்த புதிய மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அதை கற்றுக் கொண்டு சரியாக பயன்படுத்துபவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். உடல் வலிமையாக இல்லை அதனால் என்மீதே எனக்கு நம்பிக்கை இல்லை, எப்போதுமே ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தேவையற்ற பயம் என்று தான் உங்களுக்கு நான் சொல்லுவேன். உடல் வலிமையை விட மனவலிமை அதிகமாக உள்ளவர்களே வெற்றியை சுவைக்கிறார்கள். நீங்கள் எப்போதெல்லாம் பயம் கொள்கிறீர்களோ அப்போதெல்லாம் அதை தாண்டி வெற்றி அடைவதுபோல சிந்தனை செய்து பாருங்கள், இது நீங்கள் பயத்தை மீறி செயலில் இறங்க உங்களை ஊக்குவிக்கும். துணிவு என்பது நேர்மை, வளர்ச்சி மற்றும் தலைமைத்துவத்தின் அடித்தளம். ஒரு துணிவான நபர் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதோடு, மற்றவர்களும் தங்கள் வாழ்வில் வலிமையை கடைபிடிக்க உதவுகிறார். செய்முறை பயிற்சி: உங்களின் பயம் என்ன ? பயத்தின் காரணம் என்ன ? அதை எப்படி எதிர்கொள்ளலாம் ? மேலே இருக்கும் கேள்விகளுக்கு சிந்தித்து உங்கள் பதிலை எழுதுங்கள், பின் உடனே செயலில் இறங்குங்கள். வெற்றி பெறுங்கள். நன்றி, நரேந்திரன் பாலகிருஷ்ணன். தேர்தல்
எத்தனை வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டக்கூடாது?
’என் குழந்தை சரியாவே சாப்பிடுறதில்லை; ரொம்ப அடம் பண்ணுது’ என்பதே இன்று பல பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும், குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகளைக் கூறுகிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகள்! * முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக பலரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த மகிழ்ச்சியான சூழலில், ஒரு தட்டில் உருட்டிவைத்த சாப்பாட்டு உருண்டைகளை தாங்களே எடுத்துச் சாப்பிட, குழந்தைகளைப் பழக்கப்படுத்தியிருப்பார்கள். இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. இன்றைய நியூக்ளியர் குடும்பச்சூழலில், கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் பெரும்பாலும் தனித்தனியேதான் சாப்பிடுகின்றனர். இதனால்கூட, சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் குறையலாம். எனவே, குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். * ஒன்றரை முதல் இரண்டு வயதுவரை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டும். பிறகு அவர்களாகவே சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போது குழந்தைகள் அடம்பிடித்தால் நான்கைந்து வாய் ஊட்டிவிடலாமே தவிர, முழுமையாக நாமே ஊட்டிவிடக் கூடாது. அப்போதுதான் குழந்தைகள் தங்கள் பசிக்குப் பிறரை எதிர்பார்க்காமல், தாங்களே சாப்பிடுவார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகள்! * குழந்தைக்கு மணிக்கணக்கில் சாப்பாடு ஊட்டிவிடுவது தவறு. ‘ஒழுங்கா சாப்பிட்டா சாக்லேட் தர்றேன்; செல்போன் தர்றேன்’ எனச் சொல்வதும் தவறு. சாப்பாட்டு விஷயத்தில் அதிகச் செல்லம் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால்தான், குழந்தைகள் மேற்கொண்டு சாப்பிடாமல் அடம்பிடிப்பார்கள். குழந்தைகள் தங்கள் பசிக்கு ஏற்பச் சாப்பிடட்டும். சாப்பிடாமல் அடம்பிடித்தால், அமைதியாக அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். பசியெடுத்தால், தானாகச் சாப்பிட வருவார்கள். `அடம்பிடிப்பது பயன் தராது’ என்ற எண்ணம் குழந்தைகளின் மனதில் நன்கு பதிய வேண்டும். * குழந்தைகளுக்கு அடிக்கடி எதையாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருக்கக் கூடாது. கேட்ஜெட்டுகளில் விளையாடுவதை ஊக்கப்படுத்தாமல், குழந்தைகளை ஓடியாடி விளையாடவிட வேண்டும். அதனால் இயல்பாகவே அவர்களுக்குப் பசியெடுத்துவிடும். குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகள்! * ஆரோக்கியமான உணவு, பழங்கள் என எதுவானாலும் முதலில் அதைச் சாப்பிட்டுத் துப்பினாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ உடனே, ‘இது குழந்தைக்குப் பிடிக்காது/சேராது’ என்று நினைக்கக் கூடாது. அது அன்றையச் சூழல் மட்டுமே. அடுத்த நாள் பழத்தை ஜூஸ் அல்லது சாலட் என மாற்று வழிகளில் கொடுத்துச் சாப்பிடப் பழக்க வேண்டும். அப்பா மாதிரியே கண்ணு; அம்மா மாதிரியே மூக்கு... மரபணு மேஜிக்! * குழந்தைகள் எப்போதும் புதுமையை, வண்ணமயமான விஷயங்களை அதிகம் விரும்புவார்கள். எனவே, தினமும் வழக்கமான முறையில் இட்லி செய்வதைத் தவிர்த்து, மாற்று வடிவங்களில் செய்து கொடுக்கலாம். ஏ, பி, சி, டி வடிவங்களில் தோசை செய்து கொடுக்கலாம். பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளின் இயற்கைச் சாற்றை உணவுகளில் சேர்த்து வண்ணமயமாக்கிக் கொடுக்கலாம். * பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் நேரம்தான் குழந்தைகளுக்கு அதிகமாகப் பசி இருக்கும். அப்போது பெரும்பாலான பெற்றோர்கள், காபி, டீ, பிஸ்கட், பிரெட் என்று கொடுப்பார்கள். இது தவறு. அப்போது சாதம், பொரியல் அல்லது டிபன் வகைகள் என ஹெவி உணவாகக் கொடுக்க வேண்டும். பிறகு சில மணி நேரம் கழித்து பால்/டீ/காபி கொடுக்கலாம். பெரியவர்கள் எதிர்பார்க்கும் அளவு குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். ’போதும் மம்மி’ என்றால் விட்டுவிடலாம். மாறாக, ’முழுசா சாப்பிட்டுத்தான் ஆகணும்’ எனத் திட்டினால், குழந்தைகளுக்குச் சாப்பாட்டின் மீது வெறுப்புதான் வரும். அட... பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் போடுவாங்களா? - குழந்தைகள் நல மருத்துவர் சொல்வதென்ன?
``ஸ்லீப்பர் கோச்சுக்கும் தலையணை, பெட்ஷீட்'' - பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் புதிய சலுகை என்ன?
சென்னைக்கு ரயிலில் பயணிப்பவர்களுக்கு சூப்பர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம். வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், ஸ்லீப்பர் கோச்சில் சென்னை அல்லது மங்களூருக்கு பயணிப்பவர்களுக்கு பெட்ஷீட், தலையணை, தலையணை உரை வழங்கப்பட உள்ளது. 'இலவசம்' என்று நினைத்துவிடாதீர்கள். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் எவ்வளவு? பெட்ஷீட், தலையணை, தலையணை உரை வேண்டுமென்றால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பெட்ஷீட் மட்டும் போதுமென்றால் ரூ.20 கட்ட வேண்டும். தலையணை, தலையணை உரை மட்டும் போதுமென்றால் ரூ.30 செலுத்த வேண்டும். பெட்ஷீட், தலையணை, தலையணை உரை ரயில் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்க... இந்த டிரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க மக்களே..! ஏ.சி கோச் இதுவரை ஏ.சி கோச்களுக்கு மட்டுமே தலையணை, தலையணை உரை, பெட்ஷீட் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது ஸ்லீப்பர் கோச்சிற்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஏ.சி கோச்களுக்கு அவை இலவசம் (அதாவது டிக்கெட் கட்டணத்துடனேயே சேர்க்கப்பட்டுவிடும்) என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இனி ரயில் தனியாக பயணத்திற்கு தலையணை, தலையணை உரை, பெட் ஷீட் கொண்டுபோக வேண்டியதாக இருக்காது. ஹேப்பி ஜர்னி மக்களே! மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?
லாட்டரி வெற்றியை மனைவியிடம் மறைத்து, ஆடம்பர வாழ்க்கை - மனஉளைச்சலில் முடிந்த ஜப்பானிய முதியவரின் கதை
கனவில் கூடக் காண முடியாத ஒரு அதிர்ஷ்டம், கோடிக்கணக்கான பணம் ஒருவருக்குக் கிடைத்தால், அவர் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போவார். ஆனால், ஜப்பானில் 66 வயதான ஒருவருக்குக் கிடைத்த லாட்டரி வெற்றி, நிம்மதியைக் கொடுக்காமல், தனிமையையும், மன உளைச்சலையும் மட்டுமே பரிசளித்தது. மனைவியிடம் மறைக்கப்பட்ட அந்தக் கோடீஸ்வர ரகசியம் ஒரு சாபமாக மாறிய கதை இதுதான். ஜப்பானைச் சேர்ந்த 66 வயதான அந்த முதியவர் எஸ், லாட்டரியில் 600 மில்லியன் யென் (சுமார் 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 34 கோடி) என்ற மிகப்பெரிய தொகையை வென்றார். 'எஸ்'ஸும் அவரது மனைவியும் டோக்கியோவில் ஒரு உற்பத்தி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் இருவரும் மாதம் தோராயமாக $2,000 கூட்டு ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தனர். அவரது மனைவி தீவிரச் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர். ஜப்பானிய குடும்பம் மனைவியின் குணம்... மறைந்த `எஸ்’ மனைவியின் இந்த எல்லைமீறிய சிக்கன குணம் காரணமாக, தான் இவ்வளவு பெரிய தொகையை வென்ற உண்மையை அவரிடம் வெளிப்படுத்த 'எஸ்' அஞ்சினார். உண்மையைச் சொன்னால், அவள் நிச்சயமாக அந்தப் பணத்தைக் கடுமையாக கட்டுப்படுத்துவாள் என்று அவர் நம்பினார். எனவே, தன் மனைவியிடம் தான் வெறும் 5 மில்லியன் யென் (சுமார் $32,000) மட்டுமே வென்றதாகவும், அந்தப் பணத்தை வீட்டைப் பழுதுபார்க்கப் பயன்படுத்தப் போவதாகவும் பொய்யுரைத்து, உண்மையான அதிர்ஷ்ட தனக்குள்ளேயே பூட்டிவைத்தார். அந்தப் பொய்யை மறைத்துக்கொண்டு, 'எஸ்' ரகசியமாகத் தன் ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். அவர் அந்தப் பணத்தைக் கொண்டு விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான பல கார்களை வாங்கினார். ஜப்பான் முழுவதும் உள்ள உயர்தர ரிசார்ட்டுகளில் (Hot Spring Resorts) ரகசியமாகத் தங்கினார், மற்றும் தனியாகப் பயணம் செய்தார். முதல் ஆறு மாத காலத்திற்குள் அவர் சுமார் $116,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 95 லட்சம்) தொகையைச் செலவழித்திருந்தார். தன் ரகசிய வாழ்க்கையை மறைக்க, அவர் வெளியே செல்லும்போதும், வீட்டில் இருக்கும்போதும் பழைய ஆடைகளையே அணிந்தார். புதிய கார்களை ஓட்டும்போது, சந்தேகத்தைத் தவிர்க்க வேண்டி, அவர் முதலில் பூமிக்கு அடியில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்று அங்கிருந்து அவற்றை ஓட்டிச் சென்றார். இருப்பினும், இந்த இரகசிய ஆடம்பர வாழ்க்கை 'எஸ்'ஸுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மாறாக, தான் தன் குடும்பத்திற்குச் செய்த துரோகம் என்ற குற்ற உணர்ச்சியும், தான் சம்பாதித்த பணத்தைக்கூடத் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பகிர முடியவில்லையே என்ற கடும் தனிமையும் அவரை ஆட்கொண்டது. இந்த ரகசியமும், மன உளைச்சலும் சேர்ந்து அவரைப் பெரும் உளவியல் சிக்கலுக்குத் தள்ளின. என் வாழ்க்கையை ஆட்டம் காண வைக்கிறது! இந்த பணம் என் சொந்த முயற்சியால் சம்பாதித்திருந்தால், நான் பெருமைப்பட்டிருப்பேன். ஆனால் முயற்சி இல்லாமல் கிடைத்த செல்வம் விரும்பத்தகாத நினைவுகளைத் தூண்டி, என் வாழ்க்கையை ஆட்டம் காண வைக்கிறது, என்று அவர் பின்னர் வேதனையுடன் குறிப்பிட்டார். இறுதியில், இந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியாத 'எஸ்' ஒரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்டார். அதன் அடிப்படையில், அவர் வென்ற தொகையில் சுமார் 500 மில்லியன் யென் ($3.2 மில்லியன்) ஐ காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தார். மேலும், அந்தக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான பயனாளிகளாகத் தன் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரிட்டார். இந்தச் செயலின் மூலம், தன் மறைவுக்குப் பிறகு இந்தப் பணம் தன் குடும்பத்தினரின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அவர் நம்புவதாக தெரிவித்திருக்கிறார்,
தேக்கடி: முல்லைப் பெரியாறு அணை; பசுமை சூழலில் படகு பயணம் | Photo Album
முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு
தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்
கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது.
பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்
கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது.
பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்
கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது.
பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்
கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது.
பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்
கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது.
திறப்பு விழாவுக்கு தயாராகும் கோவை செம்மொழிப் பூங்கா எப்படி இருக்கிறது?
கோவை செம் மொழிப் பூங்காவை வரும் நவம்பர் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், செம் மொழிப் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
திறப்பு விழாவுக்கு தயாராகும் கோவை செம்மொழிப் பூங்கா எப்படி இருக்கிறது?
கோவை செம் மொழிப் பூங்காவை வரும் நவம்பர் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், செம் மொழிப் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
திறப்பு விழாவுக்கு தயாராகும் கோவை செம்மொழிப் பூங்கா எப்படி இருக்கிறது?
கோவை செம் மொழிப் பூங்காவை வரும் நவம்பர் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், செம் மொழிப் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
திறப்பு விழாவுக்கு தயாராகும் கோவை செம்மொழிப் பூங்கா எப்படி இருக்கிறது?
கோவை செம் மொழிப் பூங்காவை வரும் நவம்பர் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், செம் மொழிப் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு!
இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு!
இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு!
இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு!
இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு!
இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு!
இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!
பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
``ரயில்வே பணிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் வரணும்'' - வழிகாட்டி புத்தகம் வெளியிட்ட 23 வயது இளைஞர்
`ரயில்வே தேர்வு வழிகாட்டி' நூலை தமிழில் உருவாக்கி, திண்டுக்கல்லில் உள்ள 100 நூலகங்களுக்கு 60 ஆயிரம் மதிப்புள்ள அந்த நூலை இலவசமாக வழங்கினார் 23 வயது இளைஞர் திருஞானசம்பந்தர். இதைப் பற்றி கேட்ட போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் பொதுவாக ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் ரயில்வே பணிக்கு யாருமே விண்ணப்பிப்பதில்லை. ரயில்வே போட்டித் தேர்வு அந்த நிலையை மாற்றுவதற்காக, சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த இளைஞர் பாண்டுரங்கன் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நானும் அவருடன் இணைந்து முயற்சித்தேன். நான் 10, 12ஆம் வகுப்பு பள்ளி பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன். எனக்கு ரயில்வே பணிக்கு செல்ல வேண்டும் என்பது இலக்காக இருந்தது. அதற்காக பாண்டுரங்கன் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்று நினைத்து அவருடன் சேர்ந்தேன். ரயில்வே தேர்வுகளின் முக்கியத்துவம், மத்திய அரசு வழங்கும் சலுகைகள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, அதற்காக தங்களை எப்படி தயார்படுத்துவது போன்ற விஷயங்களை தமிழகம் முழுவதும் உள்ள ஐடிஐக்கள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு பரப்புரை செய்து வந்தோம். எங்களுடைய முக்கிய நோக்கம் டிஎன்பிஎஸ்சி போல ரயில்வே பணிக்கும் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுதான். போட்டித் தேர்வுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்; கலங்கரை விளக்கமாகும் கரூர் மாவட்ட பொது நூலகத்துறை ரூ 60 ஆயிரம் புத்தகம் ரயில்வே பணியை இலக்காகக் கொண்டு செயல்பட்ட நான் தமிழ்நாட்டு மாணவர்களும் ரயில்வே பணிக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்கி வந்தேன். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளில் ரயில்வே தேர்வில் வினாவை சேகரித்து முக்கியமான கேள்விகளை எடுத்து பெரும் முயற்சிக்கு பிறகு பாண்டுரங்கனுடன் இணைந்து இணைந்து ரயில்வே கணிதம் என்ற ரூபாய் 600 மதிப்புள்ள ரயில்வே தேர்வு வழிகாட்டி நூலை வெளியிட்டேன். அதனை அனைவரும் பயன்பெறும் வகையில் எனது சொந்த ஊரான திண்டுக்கல்லில் உள்ள 100 நூலகங்களுக்கு இலவசமாக வழங்கினேன். இதுவே எனது முதல் வெற்றியாக இருந்தது. பாண்டுரங்கனுடன் திருஞானசம்பந்தர் 100 படிகள் இலவசமாக வழங்கியுள்ளோம் தமிழ்நாட்டு மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி மட்டுமே இலக்காகக் கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எல்லாரும் ரயில்வே தேர்வுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக நானும் பாண்டுரங்கனும் இணைந்து இந்தரயில்வே கணிதம் நூலை உருவாக்கினோம். தமிழகத்தில் உள்ள நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரயில்வே, எஸ் எஸ் சி, வங்கி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தேவையான நூல்கள் அதிகளவு உள்ளன. கல்லூரி படிக்கும் போது போட்டி தேர்வுகளுக்கு அனைவரும் தயாராக வேண்டும். இந்த ரயில்வே கணிதம் புத்தகத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் இதுதான் எங்க ஆசை! ரயில்வே கணிதம்: திண்டுக்கல் அருகில், சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நூலகங்களுக்கு எங்களுடைய ரயில்வே கணிதம் நூலை இலவசமாக வழங்கியுள்ளோம். 3 மாதத்திற்கு முன்பு சேலம் அரசு ஐடிஐயில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினோம். எங்களது ரயில்வே விழிப்புணர்வு பேச்சை கேட்ட பிறகு, சேலம் மாவட்ட மாணவர்கள் ரயில்வே போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தேவையான வசதிகளை தற்போது அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அனைத்து அரசு ஐடிஐ-யில் பயிலும் மாணவர்கள் ரயில்வே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் என்று சுற்றறிக்கைகளை அனுப்பி எங்களை ஊக்குவித்தனர். இனிய வழியில் சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு பல்வேறு போட்டி தேர்வு விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டு மாணவர்கள் ரயில்வே துறை பணிகளை கைப்பற்றுவதுதான் எங்களது வெற்றி: தொடர்ந்து பேசிய திருஞானசம்பந்தர், நானும் பாண்டுரங்கனும் தற்போது கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். நான் ரயில்வே பணிக்கு போக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். இன்னும் நான் ரயில்வே பணிக்கு போகவில்லை. ஆனா என்னால மத்த இளைஞர்கள் ரயில்வே பணிக்கு போகிறார்கள் என்று நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. தமிழ்நாட்டு மாணவர்கள் ரயில்வே துறை பணிகளை கைப்பற்றுவதுதான் எங்களுடைய இந்த முயற்சிக்கான வெற்றியாக அமையும் என்று கூறினார். UPSC/TNPSC: போட்டித் தேர்வு பயிற்சி முகாமில் சிறப்புரையாற்றும் திருச்சி எஸ்.பி செல்வநாகரத்தினம் IPS
Office Romance-ல் இந்தியா 2வது இடமா... ஆய்வு சொல்வதென்ன?
நவீன காலத்தில் அலுவலகத்தில் ஆண்களும் பெண்களும் பழகி காதல் கொள்வது இயல்பானதாக மாறியிருக்கிறது. ஆனால் இது இந்தியர்கள் மத்தியில் மிகவும் பரவலானதாக மாறியிருக்கிறது. புத்திசாலித்தனமான உறவுகள் பற்றிய ஆஷ்லே மேடிசன் தளத்தின் சமீபத்திய சர்வதேச ஆய்வு, பணியிடத்தில் காதல் கொண்டவர்கள் அல்லது தற்போது உறவில் இருப்பதை ஒப்புக்கொள்பவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. Indian Office இந்த ஆய்வு YouGov உடன் இணைந்து 11 முக்கிய நாடுகளில் நடந்துள்ளது. இதில் மெக்சிகோ முதலிடம் பிடித்திருக்கிறது. ஆய்வு நடந்த நாடுகள் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா. இதில் 13,581 வயது வந்த நபர்கள் பங்கேற்றுள்ளனர். Dating இந்தியாவில் Office Romance இந்திய அலுவலக சூழல்களில் பணியிட எல்லைகள், நடத்தைகள் மற்றும் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் பணியிட காதல் என்பது சகஜமாகவே இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. 10ல் நான்கு இந்தியர்கள் பணியிடத்தில் டேட்டிங் செய்திருக்கலாம் அல்லது செய்துகொண்டிருக்கலாம் என்கிறது ஆய்வு. மெக்ஸிகோவைப் பொறுத்தவரை, பதிலளித்தவர்களில் 43 விழுக்காடு பேர் சக ஊழியருடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியிருக்கின்றர், அதே நேரத்தில் 40 விழுக்காடு இந்தியர்கள் அதை கூறியுள்ளனர். இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும், அங்கு இந்த எண்ணிக்கை 30 விழுக்காடு உள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக உலகில் இளைய தலைமுறையினர் பணியிட உறவு குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-24 வயதுடையோரில் 34% பேர் அத்தகைய உறவுகள் தங்கள் கேரியரை பாதிக்கக்கூடும் எனக் கருதுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. Sexsomnia: ``ஒப்புதல் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டவர் குற்றமற்றவர் என தீர்ப்பு'' - ஏன்?
ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் - ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம்
சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது.
ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் - ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம்
சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது.
ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் - ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம்
சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது.
ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் - ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம்
சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது.
ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் - ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம்
சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது.
கலாச்சார தூதராக முதுகுளத்தூர் விவசாயியின் மகள் தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு, அல்லிராணி தம்பதியின் மகள் ஜோதிமலர் (28).
கலாச்சார தூதராக முதுகுளத்தூர் விவசாயியின் மகள் தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு, அல்லிராணி தம்பதியின் மகள் ஜோதிமலர் (28).
கலாச்சார தூதராக முதுகுளத்தூர் விவசாயியின் மகள் தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு, அல்லிராணி தம்பதியின் மகள் ஜோதிமலர் (28).
US: ``இந்திய CEO-க்கள் சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர்'' - ஊழியர் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் H1-B விசாவில் பணியாற்றி வரும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் தான் பணியாற்றும் அமெரிக்க நிறுவனமும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் தன்னை கட்டாயப்படுத்தி அதிகம் வேலை வாங்குவது, கூலித் திருட்டு மற்றும் சாதி அடிப்படையிலான சுரண்டலுக்கு உட்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். Worklife Descrimination பிரெய்ட்பார்ட் நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அம்ருதேஷ் வல்லபனேனி என்ற ஊழியருக்கு கிரீன் கார்ட் பெற்றுத்தருவதாக அவரது நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அவர் மீது அதீத அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களது நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என மிரட்டியிருக்கின்றனர். அம்ருதேஷ் வல்லபனேனி வழக்கு தொடர உதவிய ஆலோசகர் ஜெய் பால்மர், இந்திய தொழிலாளர்களின் முக்கிய இலக்கு அமெரிக்காவில் தங்குவதாக இருப்பதால், இது அவர்களுக்கு ஸ்க்விட் கேம் போன்றது. என ஊடகத்தில் பேசியுள்ளார். மேலும் அவர், இந்திய சி.இ.ஓக்கள் அவர்களின் சொந்த நாட்டு சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர். இது மிகவும் கொடிய சுரண்டல் கலாச்சாரம் என்றும் பேசியுள்ளார். பால்மர் இதற்கு முன் சில தொழிலாளர் கடத்தல் குற்றங்களையும் ஊழல்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். America சிரிசாஃப்ட் என்ற நிறுவனம் வல்லபனேனியை ஹெச்-1பி விசா தருவதாகக் கூறி வேலைக்கு சேர்த்துள்ளது. பின்னர், அவரை வெவ்வேறு நிறுவனங்களில் அரசு நிர்ணயிக்கும் அடிப்படை ஊதியத்தில் கான்ட்ராக்ட் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறது. கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, தொழிலாளர் கடத்தல் மற்றும் விசா ஆவணங்களை நிறுத்தி வைப்பது போன்ற குற்றங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக வல்லபனேனியின் வழக்கில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், வழக்கமான கட்டணத்தை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான இதுபற்றிய அறிக்கைக்கு சிரிசாஃப்ட் (Siri Software Solutions) நிறுவனம் எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை. அமெரிக்கா: 6000 மாணவர்கள் விசா ரத்து; ட்ரம்ப் நிர்வாகம் சொல்லும் காரணம் என்ன?
கலாச்சார தூதராக முதுகுளத்தூர் விவசாயியின் மகள் தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு, அல்லிராணி தம்பதியின் மகள் ஜோதிமலர் (28).
செல்ஃபோன் பயன்பாட்டால் இளம் வயதினருக்கு அதிகரிக்கும் சர்க்கரை நோய் - மதுரை ஆய்வு சொல்வது என்ன?
வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாட்டால் வளர் இளம் பருவத்தினரிடைய சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக மதுரை அரசு மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது
செல்ஃபோன் பயன்பாட்டால் இளம் வயதினருக்கு அதிகரிக்கும் சர்க்கரை நோய் - மதுரை ஆய்வு சொல்வது என்ன?
வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாட்டால் வளர் இளம் பருவத்தினரிடைய சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக மதுரை அரசு மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது
செல்ஃபோன் பயன்பாட்டால் இளம் வயதினருக்கு அதிகரிக்கும் சர்க்கரை நோய் - மதுரை ஆய்வு சொல்வது என்ன?
வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாட்டால் வளர் இளம் பருவத்தினரிடைய சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக மதுரை அரசு மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது
செல்ஃபோன் பயன்பாட்டால் இளம் வயதினருக்கு அதிகரிக்கும் சர்க்கரை நோய் - மதுரை ஆய்வு சொல்வது என்ன?
வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாட்டால் வளர் இளம் பருவத்தினரிடைய சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக மதுரை அரசு மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது
செல்ஃபோன் பயன்பாட்டால் இளம் வயதினருக்கு அதிகரிக்கும் சர்க்கரை நோய் - மதுரை ஆய்வு சொல்வது என்ன?
வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாட்டால் வளர் இளம் பருவத்தினரிடைய சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக மதுரை அரசு மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது
கமல் படம் ஃப்ளாப் ஆகணும்னு பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணம்! - 70ஸ் பெண்ணின் பால்ய நினைவுகள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அதிகாலைப் பொழுது 'மை விகடன்' ' தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்த்த அனுபவம்'... உறங்கிக் கொண்டிருந்த நினைவலைகளைத் தட்டி எழுப்பியது. ஒன்றா இரண்டா .. நினைவு தெரிந்த நாள் முதலா பட்டாசு, இனிப்பு பலகாரங்கள் அவ்வளவு ஏன் புது டிரஸ் எடுக்காவிட்டால் கூட பரவாயில்லை தீபாவளியை சினிமா இல்லாமல் கடந்ததில்லை நான்! தீபாவளி அன்று நிச்சயம் படம் பார்த்தே ஆக வேண்டும் . இல்லாவிட்டால் அது தீபாவளியே இல்லை என்பதுதான் என்னுடைய கொள்கை. என் அப்பா எனக்காக திரையரங்கில் அலுவலக ஊழியரிடம் சொல்லி டிக்கெட் வாங்கி தந்து விடுவார். 78 தீபாவளி.. தாய் மீது சத்தியம் திரைப்படம்.. தலைவர் மனதிற்குள் நுழைந்த தருணம். 83 தங்கமகன் 84 நல்லவனுக்கு நல்லவன் 85 படிக்காதவன் 86 மாவீரன்... இப்படி பிடித்த தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களை பார்த்த தருணங்களை அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது. இதில் ஒரு வேடிக்கை என்னன்னா எப்போதெல்லாம் ரஜினி படம் ரிலீஸ் ஆகிறதோ அப்போதெல்லாம் கமல் படமும் ரிலீஸ் ஆகும். நான் ரஜினியின் பரம ரசிகை என்பதால் கமல் படம் ஃப்ளாப் ஆகணும்னு பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணங்கள் போட்டதையெல்லாம் இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும் நிகழ்வுகள். .. இப்படி சினிமா பைத்தியமான எனக்கு அமைந்த புகுந்த வீடோ சினிமாவே பிடிக்காதவீடு. . திருமணத்தின் போது நினைத்தேன் தலை தீபாவளிக்கு அப்பா வீட்டுக்கு போறப்ப அப்பா நிச்சயம் நமக்கு தீபாவளி ரிலீஸ் படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுப்பார். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் எதிர்பாரவிதமா அப்பா தவறியதால் அந்த வருடம் தலை தீபாவளி இல்லை. புகுந்த வீட்டில் தான் அந்த வருடதீபாவளி . மனசு முழுக்க அப்பா தவறிய சோகம் ஒரு பக்கம் தீபாவளி ரிலீஸ் படம் பார்க்காத வருத்தம் ஒரு பக்கம். ஏதோ ஒப்புக்கு வீட்டில் பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்கச் சென்றுவிட்டேன். மாலை 4 மணி இருக்கும் என்னவர் என்னை எழுப்பி ,கிளம்பு வெளியே செல்லலாம் என்றார். நான் வரலைன்னு சொல்ல , ஒரு மாறுதலுக்காகவாது வெளியில் சென்று வரலாம் ன்னு கூப்பிட அரைகுறை மனதோடு எங்கு செல்கிறோம் என்று கூட கேட்காமல் ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்தேன். வழி நெடுக ஏதேதோ சிந்தனைகள். வீதியெங்கும் பட்டாசு வெடிகளின் சத்தம் , புகைகளுக்கு நடுவில் கதாநாயகனும் கதாநாயகியும் பயணிப்பது போல் .. வடபழனி கமலா தியேட்டரில் வண்டி நிற்க, அவர் இறங்கச் சொல்ல ,நிமிர்ந்து பார்க்கையில் இயக்குனர் சிகரத்தின் 'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படபோஸ்டர். அப்பொழுதுதான் அன்பு எனும் சொல்லின் அர்த்தம் அறிந்தேன் அவர் கையிலிருந்த டிக்கெட் டுகளில்..! வாழ்வியல் உறவுகளைப் பேசிய புதுப்புது அர்த்தங்கள்.. திரைப்படம் எனக்குள் எதை எதையோ கற்பித்தது. அன்புக்கும் வெறுப்பிற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் உண்டு.. சற்று தாண்டினாலும் .. அது வேறொரு அர்த்தத்தை கொடுத்து விடும் என்பதை துல்லியமாக இயக்குனர் சிகரம் சொல்லி இருந்த விதம்.. கவிதை! கணவன் மேல அளவுக்கு மீறி பாசம் வச்ச கீதா, பொஸசிவ்னஸ் கொண்ட மனைவிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் ரகுமான், விசுவாசமான பி .ஏ விவேக்கின் 'இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்' அழியாத தத்துவமான டயலாக், முதிய வயதிலும் பரஸ்பர அன்புடன் வாழும் பூர்ண விஸ்வநாதன் சௌகார் ஜானகி தம்பதிகள், ரொமான்ஸ் குறும்புகளோடு ஜனகராஜ், காக்கிநாடா காஞ்சனா அம்மா ஜெயசித்ராவின் கண்டிப்பா மிகுந்த கட்டுப்பாடு, சித்தாராவின் வெள்ளந்தி சிரிப்பு, இசைஞானியின் பாடல்கள்... தீபாவளி இனிப்புகளை போல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய். மறக்கவில்லை. குறிப்பாக குருவாயூரப்பா பாடலில் புகைப்படங்கள் ஃப்ரீசாகும் விதம் வேற லெவல்.. கைதட்டி ரசித்த தருணம் இன்னமும் நெஞ்சுக்குள் ... படத்தில் ஒரு இடத்தில்' நீ சிரிக்கிறப்ப தெரியற அந்த தெத்துப்பல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ன்னு பூரணம் விஸ்வநாதன் சித்தாராவை பார்த்து குறிப்பிடுவார்.அந்த டயலாக்கை இவர் சொல்லி நான் கேட்டது அப்ப நினைவுக்கு வந்து இதழ்களில் புன்னகை பூக்கச் செய்தது தனிக்கதை. 'அழகான நொடிகளுக்குள்ளேயே பயணிக்கிறது சில திரைப்படங்கள்.. அழகிய நினைவலைகளாய்' எனக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சு இன்ப அதிர்ச்சி கொடுத்த என்னவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எது எப்படியோ இன்னமும் தொடர்கிறது எனது தீபாவளி ரிலீஸ் திரைப்பட கொண்டாட்டங்கள். இப்பொழுது சற்று வித்தியாசமாக.. திரைப்படம் பார்த்து விமர்சனம் எழுதும் அளவிற்கு ... இனியும் தொடரும்! சினிமாவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பது முக்கியம். சினிமா பார்ப்பது பிடிக்கும்ன்னா அதுவே உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் விஷயமாக இருக்கும். அதை ஒரு அலுப்புடனோ, சலிப்புடனோ, பார்த்தால் மன அழுத்தமாக மாறும்; பிடித்து செய்தால் எந்த காரியமும் நம் அழுத்தத்தை நம் மன அழுத்தத்தை போக்கக்கூடியதுதான்' . என்னைப் பொறுத்தவரை என்னுடைய stressbuster திரைப்படங்கள் பார்ப்பது தான். பி.கு(இந்த வருட தீபாவளி ரிலீஸ்? உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. Dude பார்த்தேன்.. விமர்சனம் செய்யும் அளவுக்கு அந்தப் படத்தில் எதுவும் இல்லை.முடியலடா சாமி ! தீபாவளிரிலீஸ்.. படம் பார்த்த அனுபவம்.. தலைப்பு கொடுத்த மை விகடனுக்கு ஒரு கிலோ 'மைசூர்பா 'பார்சல் என்றென்றும் அன்புடன் ஆதிரை வேணுகோபால். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
செல்ஃபோன் பயன்பாட்டால் இளம் வயதினருக்கு அதிகரிக்கும் சர்க்கரை நோய் - மதுரை ஆய்வு சொல்வது என்ன?
வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாட்டால் வளர் இளம் பருவத்தினரிடைய சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக மதுரை அரசு மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது
72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள்
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், மாதமங்கலத்தை சேர்ந்தவர் சரோஜினி (72). அதே பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (72).
72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள்
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், மாதமங்கலத்தை சேர்ந்தவர் சரோஜினி (72). அதே பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (72).
72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள்
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், மாதமங்கலத்தை சேர்ந்தவர் சரோஜினி (72). அதே பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (72).
72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள்
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், மாதமங்கலத்தை சேர்ந்தவர் சரோஜினி (72). அதே பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (72).
72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள்
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், மாதமங்கலத்தை சேர்ந்தவர் சரோஜினி (72). அதே பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (72).
``அனைவரும் படிக்க வேண்டும்'' - நூலகம் அமைக்க நிலத்தை தானம் அளித்த கரந்தைத் தமிழ்ச்சங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் 1 கோடி மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலரான இரா.சுந்தரவதனம் அவர்களிடம் இதைப் பற்றி பேசியபோது, கரந்தை தமிழ்ச் சங்கம் 1911 ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி உமா மகேஸ்வரனார் பிள்ளை தலைமையில் நிறுவப்பட்டது. இது ஐந்தாம் சங்கமாக கொண்டாடப்படுகிறது. உமா மகேஸ்வரபிள்ளை ஒரு சிறந்த வழக்கறிஞர். படித்தது வழக்கறிஞராக இருந்தாலும் தமிழ் மொழி மீது அதிகப் பற்றுடையவர் உமா மகேஸ்வரனார். எங்களுக்கு இந்த இடத்துல வேறொரு கல்வி நிறுவனத்தையோ அல்லது வேறு ஒரு கட்டிடத்தையோ கட்ட முடியும். ஆனா இந்த இடத்துல நூலகம் தான் கட்ட வேண்டும் என்று இப்போ முடிவு செய்யவில்லை. முன்னாடியே உமா மகேஸ்வர பிள்ளை முடிவு செய்தது தான். அத இப்ப நாங்கள் நிறைவேத்துறோம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலர் இரா.சுந்தரவதனம் தஞ்சாவூரில் எந்த இடத்துல வேணாலும் புதுப்புது நூலகம் கட்டலாம். ஆனா கரந்தை தமிழ்ச்சங்கத்தில் நூலகம் அதுவும் தமிழக அரசால் ஒரு நூலக அமைக்கப்படுவது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாக இருக்கிறது. கரந்தை தமிழ்ச் சங்கம் ஒருபுலவர் கல்லூரி யாக தான் இருந்தது. இங்க வராத அறிஞர்களை கிடையாது. பாரதியார், பாரதிதாசன், கலைஞர் என இன்னும் ஏராளமான அறிஞர்கள் கால் பதித்த இடம் இந்த கரந்தைத் தமிழ் சங்கம். அப்படிப்பட்ட பழமையான இடத்துல நூலகம் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்னு நம்புறோம். இங்குே ஏன் நூலகம் கட்ட வேண்டும்? கரந்தைத் தமிழ்ச்சங்கம் இப்போது சங்கமாக மட்டுமல்லாமல். தமிழவேள் உமாமகேஸ்வரனார் கரந்தைக் கலைக் கல்லூரியாக இன்றளவும் சிறந்து இருக்கிறது. இங்குு தமிழ், ஆங்கிலம், வேதியியல், தொழில்நுட்பவியல், விலங்கியல் என அனைத்து பிரிவுகளும் உள்ளடக்கிய ஒரு கலை அறிவியல் கல்லூரி யாக கரந்தை தமிழ்ச்சங்கம் விளங்குகிறது. இது மட்டும் இல்லாமல் 1 முதல் 12ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என பள்ளிகளும் இருக்கிறது. இந்த இடத்துல நூலகம் அமைத்தால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு படிக்க மிகவும் ஏதுவாக இருக்கிறது. மாணவர் நலனுக்காகவும் இங்க நூலகம் கட்டுகிறோம். புத்தகங்கள் யார் தருவாங்க? கரந்தையில் 1965 ஆம் ஆண்டு ஒரு கிளை நூலகம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் பல நூறு மாணவர்கள் பயனடைந்து தான் இன்றளவும் இருக்காங்க. இவ்வளவு ஏன் எங்க பள்ளி கல்லூரி ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இந்த நூலகத்தில் தான் படித்தாங்க. இந்த நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த பழமை வாய்ந்த நூலகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. அதை புதுப்பிக்கும் வகையில் அந் நூலகத்தை தமிழ்ச்சங்க வளாகத்துக்குள் வைக்கிறோம். அங்குள்ள புத்தகங்களை இங்கு புதுப்பித்து வைக்கிறோம். கரந்தைத் தமிழ்ச்சங்கம் நூலகம் அமைக்க தானம் அளித்த நிலம் போட்டித் தேர்விற்கு பயன் தரும் வகையில் அமையும்: கரந்தை கலைக் கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் பிற கல்லூரி மாணவர்கள், படித்து முடித்த மாணவர்கள் என போட்டி தேர்விற்காக பலர் படித்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இங்கு போட்டி தேர்விற்கு என தனி பிரிவையும் ஏற்படுத்தியுள்ளோம். இதுதான் எங்க முக்கிய நோக்கமாகும். இக்கால இளைஞர்கள் எல்லாம் எதிர்காலத்தில் அரசு ஊழியராக அமைய வேண்டும் என்பதே எங்களது ஆசையாகும். அதற்கு ஏற்றார் போல இந் நூலகம் கண்டிப்பாக அமையும். ``என் வாசிப்புக்கு ஆசிரியர்களே காரணம்!'' - நெகிழ்ச்சியூட்டும் 60 ஆண்டுகால `புத்தக மனிதர்' மோகன்தாஸ்! இந்த இடத்தை ஏன் தருகிறோம் என்றால், நூலகம் கட்ட கரந்தையில் ஏராளமான இடம் இருக்கிறது. ஆனால் நாங்க ஏன் இந்த இடத்தை தருகிறோம் என்றால், இச்சங்கத்தை நிறுவிய உமா மகேஸ்வரனார் தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் அதிகளவு போராடிய ஒரு புரட்சிவாதி ஆவார். 1920 இல் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க 1 கோடி கையெழுத்தை ஏற்படுத்தி தமிழ் மொழியை செம்மொழியாக மாற்றியவர் ஆவார். 1921 இல் தமிழ் பல்கலைக்கழகம் வேண்டும் என்று தீர்மானத்தை முன் வைத்தவர் ஆவார். 1925 இல் எழுத்தறிவு இதழான தமிழ் பொழில் என்ற இதழைத் தொடங்கி வைத்தவர் ஆவார். திருவையாறு சமஸ்கிருத கல்லூரியை தமிழ் அரசுக் கல்லூரியாக மாற்றியவர் ஆவார்.மத நல்லிணக்கத்திற்கு போராடியவர் ஆவார். எவ்வித மத வேறுபாடும் இன்றி அனைவருக்கும் கல்வி வேண்டும் என்று போராடிய உன்னத மனிதர். இவ்வாறாக தமிழ் மொழிக்காக போராடிய உமாமகேசுவரனார் கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு நூலகம் அமைத்தால் நூலகத்தின் பழமையும், கல்லூரியின் பழமையும் அனைவரும் அறிவார்கள். இவ்வாறாகப்பட்ட தமிழ் அறிஞர் வாழ்ந்த இடத்தில் நூலகம் அமைப்பது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதனாலதான் இவ்விடத்தில் நூலகம் அமைக்க ஆசைப்பட்டோம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலர் இரா.சுந்தரவதனம் இங்கு நூலகம் அமைக்க முக்கிய காரணம்: தஞ்சையில் பழமையான இடமாக பல இடங்கள் இருந்தாலும் படிப்பதற்கான இடம் என்றால் அது கரந்தைத் தமிழ்ச்சங்கம். ஏராளமான ஆளுமைகள், கவிஞர்கள், அறிஞர்கள், புரட்சிவாதிகள் என பல அறிஞர்களின் பாதங்கள் பதிந்த இடம் இக்கரந்தைத் தமிழ்ச்சங்கம் இப்படிப்பட்ட இடத்தில் நூலகம் அமைக்க முக்கிய காரணம், தமிழ்ச்சங்கத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் படிக்க வேண்டும் என்பதுதான். ஒரு புத்தகம்தான் நமது வாழ்வை முன்னேற்றும். இப்பொழுதுள்ள இளைஞர்கள் புத்தகத்தை எடுத்து படிப்பதே இல்லை. அனைவரும் படிக்க வேண்டும், தங்களுடைய பகுத்தறிவை வளர்க்க வேண்டும். படிப்பு ஒன்றுதான் நம்மை மாற்றும். கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி அனைத்துப் பொதுமக்களும் இந்நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும். இதுதான் எங்கள் முக்கிய நோக்கமாக இருக்கிறது. விரைவில் இங்கு நூலகம் கட்டி முடிப்போம். எல்லோரும் படிக்க வேண்டும். இளைஞர்கள் அரசு அதிகாரியாக மாற வேண்டும். இதுதான் எங்கள் ஆசை. நூலகம் கட்டுவதற்கு முக்கிய காரணம் இதுதான் என்றார் கல்லூரி செயலர். ``வாசிப்பு ஒருவனின் வாழ்க்கையையே மாற்றி விடும் - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி - 20
விழிப்புணர்வு முக்கியம்! - இன்றைய பெற்றோர் தெரிந்துக் கொள்ள வேண்டிய வளர்ப்பு முறை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர். அதில் ஒன்றாக “விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறை” (Mindful Parenting) வேகமாக பிரபலமாகி வருகிறது. இது குழந்தையை புரிந்துகொண்டு, அமைதியாகவும் அன்புடனும் வளர்க்க உதவும் தற்கால வழிமுறை. பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவது ஏன்? இன்றைய குழந்தை வளர்ப்பு ஒரு போட்டியாக மாறிவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை புத்திசாலி, திறமையானவர், நல்லொழுக்கமுடையவர் என இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். “சிறந்த பெற்றோர்” ஆக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பலருக்கு மனஅழுத்தம், குற்ற உணர்வு, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிரமாண்ட பிறந்தநாள் விழாக்கள், பெரிய பள்ளியில் படிக்க வைப்பது, போட்டோஷூட்கள் நடத்துவது உள்ளிட்டவற்றை பார்க்கும்போது, நாமும் அதேபோல் செய்ய வேண்டும் என்ற மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனால் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வும் ஏற்பட்டு குழந்தையுடன் உள்ள பிணைப்பும் குறைகிறது. விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறை என்றால் என்ன? குழந்தையுடன் இருக்கும் போது முழு கவனத்துடனும், உணர்வோடும், பொறுமையோடும் நடந்துகொள்வதே Mindful Parenting. குழந்தையின் நடத்தையை கோபத்துடன் எதிர்கொள்ளாமல், அமைதியாக பதிலளிப்பதே இதன் அடிப்படை. எளிமையாகச் சொன்னால், குழந்தையுடன் பேசும் போது அல்லது விளையாடும் போது, நம் மனமும் கவனமும் முழுவதுமாக அவர்கள்மீது இருக்க வேண்டும். இந்த வழிமுறை பெற்றோர்களுக்கு பொறுமையையும் புரிதலையும், குழந்தைகளுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் கற்பிக்கிறது. விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறையின் பலன்கள் குடும்பத்தில் அமைதி, நம்பிக்கை, புரிதல் அதிகரிக்கும். குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்வார்கள். வீட்டில் மரியாதையும் பாசமும் நிறைந்த சூழல் உருவாகும். பெற்றோர்கள் சிந்தித்து பேசும் பழக்கத்திற்கு மாறுவார்கள். குழந்தைகளும் தங்கள் உணர்வுகளை அச்சமின்றி வெளிப்படுத்த கற்றுக்கொள்வார்கள். ஏன் இது முக்கியம்? முந்தைய தலைமுறைகளில், குழந்தை வளர்ப்பில் கட்டுப்பாட்டும் கட்டளைகளும் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைய குழந்தைகள் சுயமாக சிந்தித்தல், மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள். அவர்களுக்கு கண்டிப்பு மட்டுமல்ல, புரிதல், உரையாடல், மரியாதை தேவை. அதனால்தான் இன்றைய பெற்றோர்கள், அன்பும் அமைதியும் அடிப்படையாகக் கொண்ட வளர்ப்பு முறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு இடைவெளி விடுவது பெரிய மாற்றம் தரும் குழந்தை தவறு செய்தாலும், உடனே கோபப்படாமல் ஒரு நிமிடம் மூச்சு விட்டு ரிலாக்ஸ் ஆகுங்கள். அந்த சிறிய இடைவெளி நம்மை தெளிவாக யோசிக்கச் செய்து, சரியான பதிலைத் தர வழி காட்டும். இது குழந்தையையும் அதேபோல் அமைதியாகவும் பொறுமையுடனும் நடக்கச் செய்கிறது. நிஜ வாழ்க்கையில் எப்படி பின்பற்றலாம்? 1. சிறந்த முன்மாதிரியாக இருங்கள்: பெற்றோர் தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை குழந்தைகள் கவனிக்கிறார்கள். உங்கள் செயல் அவர்களுக்கு பாடமாகிறது. 2. முழு கவனம் செலுத்துங்கள்: குழந்தை பேசும் போது, அலைபேசி கீழே வைத்துவிட்டு. அந்த நேரத்தில் முழு கவனம் அவர்கள்மீது இருக்கட்டும். 3. பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்: குழந்தைகள் சிறிய முயற்சியைக் கூட பாராட்டுங்கள். அது அவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். 4. ஒப்பிடுவதை தவிர்க்குங்கள்: “அவன் பார்த்தியா?” என்ற வாக்கியம் குழந்தையின் மனத்தில் காயத்தை ஏற்படும். ஒப்பீடு அல்ல, ஊக்கத்தை கொடுங்கள். 5. கோபத்தை கட்டுப்படுத்துங்கள்: குழந்தைகளிடத்தில் கத்துவதற்கு முன் ஒரு நிமிடம் நின்று, ஆழமாய் மூச்சு விடுங்கள். 6. பொறுப்புகளை கொடுங்கள்: வயதுக்கு ஏற்ற சிறிய வேலைகளை ஒப்படையுங்கள் — அது பொறுப்புணர்ச்சியை வளர்க்கும். 7. உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: குழந்தை அழுதால் அல்லது கோபப்பட்டால், அதைத் தடுத்து நிறுத்தாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். 8. சுவாசப் பயிற்சி மற்றும் தியானம் செய்யுங்கள்: மனஅழுத்தத்தைக் குறைக்க இது உதவும். அமைதி பரவும். 9. அன்பும் இரக்கமும் வெளிப்படுத்துங்கள்: “நான் உன்னை நேசிக்கிறேன்” என்ற வார்த்தை குழந்தைக்கு பாதுகாப்பான உலகத்தை அளிக்கிறது. 10. அவர்களுடனான தருணங்களை ரசியுங்கள்: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
திடீரென்று ஒரு சைரன் சத்தம்! - அந்நிய மண்ணில் ஒரு அபாய அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இரவில் கலைந்த தூக்கத்தை இழுத்துப் பிடித்துப் பின் ஓரளவு நிம்மதியாகவும் ஆழமாகவும் தூங்க ஆரம்பிக்கும் நேரம்தான் விடிகாலை. இந்த நேரத்தை நான் யாருக்கும் எதற்காகவும் விட்டுத் தருவதில்லை. சிட்னி நகரில் அப்படிப்பட்ட ஒரு ஆஸ்வாசமான விடிகாலை நேரம். திடீரென்று ஒரு சைரன் சத்தம் ...ட் முதலில் , கனவோ என்று அசட்டையாக புரண்டு படுத்த என்னை, அந்த அபாய சங்கு பிடிவாதமாக அலறி , உலுக்கி எழுப்பி விட்டது. கூடவே ஆங்கிலத்தில் கனமான எச்சரிக்கை குரல், Emergency...Evacuate now... என்று வீட்டில் உள்ள இரண்டு smoke detectors மூலம் ,விடாமல் துரத்தியது. தூக்கம் கலையாத அந்த விடி காலையில் இந்த ஓலம் பயமாகவும், கூடவே வெறுப்பாகவும் இருந்தது. முதலில் நான், உடனே மனைவி, உள்ளே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக, மகன் என்று எல்லோரும் எழுந்து விட்டார்கள். மருமகள் ஒண்ணரை வயதுக் குழந்தையை தூக்கிக் கொண்டு பயத்துடன் வந்தாள். குழந்தை , ஏதோ விளையாட்டு என்று நினைத்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே, சைரனைத் தொடர்ந்து அதுவும் சைரன் போல கத்திக் கொண்டு வீடு முழுக்க ஓடிக் கொண்டிருந்தது . நல்ல வேளை, அழவில்லை.. இந்த ஆர்த்ரடிஸ் காலை வைத்துக் கொண்டு 9வது மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக இறங்க வேண்டுமே என்ற கவலை என் வயிற்றில் புளியைக் கரைத்தது. எதையும் சிந்திக்க விடாமல், அபாய சங்கு ஒலியுடன் evacuate , emergency என்ற குரல் விடாமல் அலறிக் கொண்டே இருந்தது. இந்த நால்வரில் மனோ தைரியமும் , உடல் வலுவும் கொண்ட என் மகன், எல்லோரும் இங்கேயே இருங்கள். நான் கீழே போய் நிலைமையை பார்த்து விட்டு உங்களுக்கு ஃபோன் செய்கிறேன். அப்புறம் வேகமாக வந்தால் போதும் ..அதற்குள் நீங்கள் தயாராக இருங்கள் என்று கூறிவிட்டு வேகமாக படியில் இறங்கி சென்றார். காலையில் எழுந்த மறு நிமிடமே டீ போடப் போகும் மனைவி, இன்றும் அவசரமா ஒரு டீ போட்டு விடவா? என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் ஒரே குரலில் இந்த நேரத்தில் அடுப்பு ஏற்ற வேண்டாம் என்று தடுத்து விட்டோம். நான் அவசரம் அவசரமாக எங்களின் பாஸ்போர்ட், பர்ஸ், அனைவரின் charge செய்யப்பட்ட மொபைல் ஃபோன், வீட்டு, கார் சாவிகள், முக்கியமான வங்கி ஆவணங்களை எல்லாம் ஒரு பையில் பதுக்கினேன். ஷூ போட நேரம் ஆகும் என்பதால் ஷூவையு ம் போட்டுக் கொண்டு மெள்ள மெள்ள கீழே இறங்கத் தயாராகி விட்டேன். என் மனைவியும் அவசரமாக ஆடை மாற்றிக் கொண்டு ஒரு சின்ன பையில், கையில் சிக்கிய பழம், ரொட்டி, எனர்ஜி பார் எல்லாம் நிரப்பி ரெடியாகி விட்டார். மருமகள் குழந்தைக்கான அத்தியாவசிய பொருட்களை சேகரித்துக் கொண்டார். விடாமல் அபாய அறிவிப்பும், சைரனும் தொடர்ந்து, ஒரு பக்கம் பதட்டத்தையும் பயத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்தன. வெளியே எட்டிப் பார்த்தபோது சிலர் சிறு பைகளை முதுகில் சுமந்து கொண்டு, கிடு கிடு என்று படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் முகத்தில் பயத்துடன், எங்களைப் போல வாசலில் தயங்கி நின்று கொண்டிருந்தார்கள். கீழே சென்ற மகன் ஃபோனில், பயப்பட ஒன்றுமில்லை என்று ' கண்டேன் சீதையை..' என்பது போல சொல்லிவிட்டு , மீதியை சொன்னார். Fire engine உடனே வந்து விட்டது. அவர்கள் எல்லாவற்றையும் சோதித்து விட்டு , not serious , you can go home என்று சொல்லிவிட்டார்கள். இதோ நான் லிஃப்ட் மூலம் மேலே வருகிறேன்.. என்றார். அபாய சங்கும் தன் அலறலை நிறுத்திக் கொண்டது. எல்லாம் சுபம். மனைவி காலை டீ போட சென்றுவிட்டார். நானும் ஷூவை கழற்றி விட்டு இயல்பு உடைகளுக்கு மாறி படுக்கையில் மீண்டும் சாய்ந்தேன். அனுபவம் தந்த பாடம்: - எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.. - பதட்டம் இல்லாமல் evacuation ( வெளியேற்றம்) நிலைமையை எப்படி எதிர்கொள்வது... - எந்த பொருட்களை உடனே எடுத்து செல்லவேண்டும் என்று சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும். அது கொஞ்சமாகவும் முக்கியமானதாகும் இருக்க வேண்டும் - false alarm என்று நாமே முடிவு செய்யக் கூடாது. ' புலி வருது ' கதை ஆகக் கூடாது. சில தகவல்கள்: அபாய அறிவிப்பின் காரணம் என்னவென்று தெரியவில்லை. நிச்சயம் technical fault என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இங்கு அடிக்கடி இந்த புகை நெருப்பு எச்சரிக்கை ( smoke detection and fire alarm system) அமைப்பின் வன்பொருள் ( hardware) மென்பொருள் ( software) இரண்டும் அடிக்கடி பரிசோதிக்கப் படுகிறது. எந்த பிளாட்டில் என்ன புகையோ தெரியவில்லை. சாதாரண புகை என்றால் கொஞ்ச நேரம் இந்த அபாய சங்கு ஊதிவிட்டு அடங்கிவிடும். இதை false alarm என்று சொல்வார்கள். இல்லை கனமான புகை, அல்லது நெருப்புடன் கூடிய அபாயம் என்றால் இந்த smoke detector ( வீட்டில் பொருத்தப் பட்ட, புகையை உணரும் sensor) இன்னொரு fire alarm சிஸ்டத்தை முடிக்கி விட்டு கட்டிடம் முழுதும் அலற விடும். எல்லோரும் உடனடியாக படி வழியாக கீழே ஓடவேண்டும். சில இடங்களில் தீயின் தீவிரத்தை பொறுத்து இந்த fire alarm தானாகவே தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்து விடும். தீ எரியும் இடத்தில் sprinklers என்னும் கருவி தண்ணீரைத் தெளித்து தீயை அடக்க முயற்சி செய்யும். சமையல் செய்யும்போது அஜாக்கிரதையாக புகையவிட்டு அதனால் automated fire alarm முடுக்கப்பட்டு தீ அணைப்பு படையினர் அனாவசியமாக வர நேர்ந்தால் நாம் ஒரு பெரும் தொகையை அபராதம் கட்ட வேண்டி வரும். - ராஜன் விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
கோவை குற்றாலம் செல்ல நாளை முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்த காரணத்தால் நாளை முதல் கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை குற்றாலம் செல்ல நாளை முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்த காரணத்தால் நாளை முதல் கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை குற்றாலம் செல்ல நாளை முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்த காரணத்தால் நாளை முதல் கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை குற்றாலம் செல்ல நாளை முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்த காரணத்தால் நாளை முதல் கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை குற்றாலம் செல்ல நாளை முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்த காரணத்தால் நாளை முதல் கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்
இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார்.
மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்
இளைஞர் ஒருவர் தனது முதல் சம்பளத்தை பெற்றோரிடம் கொடுத்த பிறகு அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை படம் பிடித்து ‘எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்
இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார்.
மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்
இளைஞர் ஒருவர் தனது முதல் சம்பளத்தை பெற்றோரிடம் கொடுத்த பிறகு அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை படம் பிடித்து ‘எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்
இளைஞர் ஒருவர் தனது முதல் சம்பளத்தை பெற்றோரிடம் கொடுத்த பிறகு அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை படம் பிடித்து ‘எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்
இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார்.
மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்
இளைஞர் ஒருவர் தனது முதல் சம்பளத்தை பெற்றோரிடம் கொடுத்த பிறகு அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை படம் பிடித்து ‘எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்
இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார்.
மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்
இளைஞர் ஒருவர் தனது முதல் சம்பளத்தை பெற்றோரிடம் கொடுத்த பிறகு அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை படம் பிடித்து ‘எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்
இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார்.
மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்
இளைஞர் ஒருவர் தனது முதல் சம்பளத்தை பெற்றோரிடம் கொடுத்த பிறகு அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை படம் பிடித்து ‘எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
KYV முடிக்காமல், Fastag பயன்படுத்துவதில் சிக்கலா? இனி கவலை வேண்டாம்; NHAI-ன் புதிய மாற்றங்கள் இதோ!
KYV முடிக்காதவர்களுக்கு ஃபாஸ்ட் டேக் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தச் சிக்கல்களைக் களையும் விதமாக, ஃபாஸ்ட் டேக் நடைமுறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை. > இதுவரை வாகனங்களுக்கு KYV (Know Your Vehicle) நடைமுறையை முடிக்கவில்லை என்றால், ஃபாஸ்ட் டேக்கை பயன்படுத்த முடியாது... அதன் செயல்பாடு நிறுத்தப்படும். ஆனால், இனி அப்படியில்லை KYV-ஐ முடிக்கவில்லை என்றாலும், ஃபாஸ்ட் டேக் பயன்பாட்டில் இருக்கும். அதை அப்டேட் செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும். நெடுஞ்சாலை FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass > KYV நடைமுறையின் போது, வாகனத்தின் பல கோண புகைப்படங்களை அப்லோடு செய்ய வேண்டும் என்பதில்லை. வாகனத்தின் நம்பர் பிளேட், ஃபாஸ்ட் டேக் தெரிவது போன்ற, வாகனத்தின் முன்பக்க போட்டோ மட்டும் அப்லோடு செய்தால் போதுமானது. > இந்த நடைமுறை Vahan என்கிற தேசிய வாகன தரவுகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், KYV நடைமுறையின் போது, வாகனத்தின் எண், சேசிஸ் எண் அல்லது மொபைல் எண்ணை நிரப்பினாலே, தானாக ஆர்.சி வந்துவிடும். அதை சரிபார்த்தால் மட்டும் போதுமானது. > ஒரே மொபைல் எண்ணில் பல வாகனங்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், KYV நடைமுறையின் போது, குறிப்பிட்ட வாகனத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். > KYV நடைமுறைக்கு முன்பு, ஃபாஸ்ட் டேக் பெற்றவர்கள் தொடர்ந்து அதே ஃபாஸ்ட் டேக்கை பயன்படுத்தலாம். தவறாக பயன்படுத்தப்பட்டாலும், வங்கிகள் ஏதேனும் புகார்களைப் பெற்றாலும் தான், அந்த ஃபாஸ்ட் டேக் சேவை ரத்து செய்யப்படும். > KYV நடைமுறைகளில் ஏதேனும் சிக்கலை சந்தித்தால், வங்கிகள் பயனாளர்களுக்கு இந்த நடைமுறைகளில் உதவலாம். > KYV முடிக்கவில்லை என்றாலும், உங்களது ஃபாஸ்ட் டேக்குகள் பயன்படுத்தப்படும் போது, உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ்கள் வரும். உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

25 C