SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
...

Fastag: 72 மணி நேரத்திற்குள் 'இந்த'தொகையை கட்டவில்லையா? இரண்டு மடங்கு அபராதம் - புதிய செக்

தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். டோல் கேட்டில் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், உங்கள் ஃபாஸ்ட் டேகில் போதிய பேலன்ஸ் இல்லை... அல்லது பேலன்ஸே இல்லை. இதனால், உங்களுக்கு ஒரு பிரச்னையும் ஏற்படாது. தாராளமாக அந்த டோல் கேட்டைக் கடந்து கொள்ளலாம். நீங்கள் இங்கே கட்டாமல் சென்ற தொகையின் பெயர், ' Unpaid User Fee '. நெடுஞ்சாலை ஈரானிய எண்ணெயை இந்தியா வாங்கப் போகிறதா? 'குறுக்கே' நிற்கும் இரண்டு காரணங்கள் என்ன? ஆனால், இதன் பின் சின்ன பிராசஸ் உள்ளது. அதில் மட்டும் அதிக கவனம் தேவை. போதிய பேலன்ஸ் இல்லாமல், நீங்கள் டோலில் கட்டாமல் போன தொகையை செலுத்தக் கூறி தேசிய நெடுஞ்சாலைத் துறை உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் ஒன்றை அனுப்பும். இந்த மெசேஜின் பெயர் ' இ-நோட்டீஸ் '. இந்த நோட்டீஸில் கட்டாமல் போன தொகை, வாகனத்தின் தகவல்கள் முதல் வலைதளத்தின் லிங்க் வரை அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இந்த ஃபீஸை இ-நோட்டீஸ் கிடைத்த 72 மணி நேரத்திற்குள் கட்டிவிட வேண்டும். அதை தாண்டினால், ஃபீஸ் இரண்டு மடங்கு அதிகமாக கட்ட வேண்டியதாக இருக்கும். ஃபாஸ்ட் டேக்கில் பேலன்ஸ் இல்லையென்றாலும், டோல் கேட்டைக் கடக்கலாம் என்பதெல்லாம் சூப்பர் தான். ஆனால், கொஞ்சம் மிஸ்ஸானாலும், இரண்டு மடங்கு அதிக தொகையைக் கட்ட வேண்டியதாக இருக்கும். இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க போதுமான பேலன்ஸை ஃபாஸ்ட் டேக்கில் எப்போதும் வைத்துக்கொள்வது நல்லது. இந்த நடைமுறை கடந்த 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது மக்களே. ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை

விகடன் 22 Mar 2026 2:44 pm

காளான் வளர்ப்பில் மாதம் 'ரெண்டு லட்சம் டேர்ன் ஓவர்' - கெத்துக் காட்டும் எம்.பி.ஏ பட்டதாரி கெளரி!

பிசினஸ்ல தினம் தினம் சவால்களைச் சந்திக்கிறது சாதாரணமானது. பிரச்னைகளை எப்படி சமாளிக்றோங்கிறதுல இருக்கு நமக்கான வெற்றி. நிறைய நஷ்டங்களை சந்திச்சாச்சு. ஆனாலும், முயற்சிகள் தொடருது. முயற்சிகள் வெற்றியை நோக்கி நகர்த்துது உற்சாகம் பொங்கப் பேசுகிறார் கெளரி. காளான் வளர்ப்பு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கெளரி. எம்.பி. ஏ பட்டதாரியான இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக காளான் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டு வருகிறார். நெய்வேலியில் காளான் மூலம் தயாரிக்கும் பொருள்களை விற்கும் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அரியலூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் பல பெண்களை ஒருங்கிணைத்து தினமும் 100 கிலோ காளான் வரை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார். கடலூரில் சுமார் 750 சதுர அடி உள்ள அந்தப் பண்ணையில், அறுவடை செய்த காளான்களை எடை போடுவதில் பிஸியாக இருந்த கெளரியிடம் பேசினோம்.  எனக்குச் சொந்த ஊர் கடலூர், பெத்தாங்குப்பம் கிராமம். விவசாயக் குடும்பம். திருமணத்துக்குப் பிறகு என் கணவரோடு சிங்கப்பூரில் செட்டில் ஆயிட்டேன். அங்கேதான் பல வண்ண காளான்களைப் பார்த்தேன். அதனால காளான் வளர்ப்பில் ஈர்ப்பு வந்துச்சு. சிங்கப்பூரில் இருந்து கடலூர் வந்ததும் அரசாங்கம் சார்பா இலவசமாக  நடத்தப்பட்ட  காளான் வளர்ப்பு தொடர்பா பயிற்சி வகுப்பில் கலந்துக்கிட்டேன். காளான் வளர்ப்பை கத்துக்கிட்டு பிசினஸ் பண்ண ஆரம்பிச்சேன் என்ற கெளரி தொழில் தொடங்கியது பற்றிப் பேச ஆரமபித்தார்.  காளான் வளர்ப்பு ஒரு லட்ச ரூபாய் முதலீட்டுல 360 சதுர அடியில் 2017 - ம் வருஷம் காளான் வளர்ப்பை ஆரம்பிச்சேன். சிப்பிக் காளான், பால் காளான் வகைகளை வளர்க்கத் தொடங்கினேன். முதல் சில மாசங்கள்ல உழைப்பைக் கொட்டியும் நல்ல அறுவடை கிடைக்கல. விதை கொடுத்தவங்ககிட்ட கேட்டா, 'நீங்க ஒழுங்கா பராமரிக்கல'னு சொல்லிட்டாங்க. ஆனா, தரமான விதைகளைக் கொடுக்காம என்னை ஏமாத்திட்டாங்கன்னு லேட்டா தான் புரிஞ்சுது. பிசினஸ் ஆரம்பிச்ச சில மாசங்கள்லேயே கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாயை இழந்தேன். ஆனாலும் நம்பிக்கையை கைவிடல. பிறகு எங்க ஏரியாவுல உள்ள வேளாண் அறிவியல் மையத்துலேருந்து விதைகளை வாங்கி பிசினஸை தொடர்ந்தேன்.  காளான் வளர்க்கிறது லேசான காரியம் இல்ல. கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும் மொத்த காளானும் பூஞ்சைத்தொற்று வந்து வீணாகிடும்.  பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகுதான் காளான் வளர்ப்புல உள்ள சூட்சமங்கள் பிடிபட்டுச்சு. 2021-லேருந்து விதைகளையும் நானே உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன் என்ற கெளரி, பாலிதீன் பைகளில் வைக்கோலை அடைத்துக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.   காளான் வளர்ப்பு வெவ்வேறு ரகங்கள்ல உற்பத்தி பண்ண காளானின் முதல் அறுவடையை எங்க பகுதி மக்களுக்குதான் கொடுத்தேன். காளான்கள் பல்வேறு நிறங்கள்ல இருந்ததால செயற்கை கலர் எதுவும் பயன்படுத்திருக்கோம்னு நினைச்சு வாங்குறதுக்கு மக்கள் தயக்கம் காட்டுனாங்க. இது காளான்ல ஒரு ரகம்னு சொல்லிப் புரியவெச்சதும் வாங்கினாங்க. அடுத்தபடியா கடைகளுக்கு, வீடுகளுக்குனு விற்பனை பண்ண ஆரம்பிச்சேன். எங்க பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையம் மூலமாக நூற்றுக்கும் அதிகமானவங்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சிகள் கொடுத்திருக்கேன். என்கிட்ட பயிற்சி எடுத்தவங்க இன்னிக்கு காளான் உற்பத்தியை தங்களோட பிசினஸாக மாத்தியிருக்காங்க. அவங்களுக்கு உற்பத்தி மட்டுமில்லாம, விற்பனை, மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கும்  உதவுறேன். அவங்க உற்பத்தி பண்ற காளான்களை நானே கொள்முதல் பண்ணி விற்பனையும் பண்ணிக்கொடுக்குறேன். நாங்க உற்பத்தி பண்ற காளான்களை ஹோட்டல்கள், கடைகளுக்கு விற்பனைக்கு கொடுக்குறோம். கடந்த எட்டு மாசமா நெய்வேலியில் காளான் உணவு கடை ஒன்றை ஆரம்பிச்சிருக்கேன். காளான் சூப், கிரேவி, தோசை, பிரியாணினு காளான் மூலம் செய்யக்கூடிய உணவுகளை மட்டும் தயார் பண்ணி விற்பனை பண்ணிட்டு இருக்கேன். எங்க தேவைகள் போக மீதமுள்ள காளானில் பிஸ்கட், ஊறுகாய், சூப் மிக்ஸ்னு மதிப்புக்கூட்டல் செஞ்சும் விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கோம். காளான் வளர்ப்பு படுக்கைகள் ஒரு கிலோ காளான் 200 ரூபாய் வரை விலை போகுது. என் கணவரும் என்கூட சேர்ந்து காளான் வளர்ப்பு பிசினஸ்தான் பண்றாரு. ஆறுபேர் வேலைக்கும் இருக்காங்க. இப்போ என் பிசினஸ் மூலமா மாசம் ரெண்டு லட்சம் வரை டேர்ன் ஓவர் பண்றேன். 'எம்.பி. ஏ படிச்சுட்டு வைக்கோல் கொட்டகைனு தேவையில்லாத வேலை பார்க்குது'னு சொன்னவங்களுக்கு என் வெற்றி மூலமா பதில் கொடுத்திருக்கேன். உழைக்கத் தயாரா இருந்தா அதுக்கேத்த கூலி நிச்சயம் கிடைக்கும். எந்த வேலையும், உழைப்பால் கிடைக்கும் எந்த வருமானமும் வெற்றியின் வெளிப்பாடே'' என்று கெத்தாக சொல்கிறார் கெளரி. 

விகடன் 28 Feb 2026 6:42 pm

`அரசுப் பள்ளி மாணவர்களின் 50 நூல்கள்'இறையன்பு ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலில் சாதித்த கண்ணகி நகர்!

சென்னைக்குள் இருந்து வேர்பிடுங்கி எறியப்பட்ட அடித்தட்டு மக்களின் புகலிடமாக இருக்கிறது கண்ணகி நகர். இந்தப் பகுதியில் 1,20,000 பேர் வசிக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கல்வி, விளையாட்டு, என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது தமிழக அரசு.  கண்ணகி நகரில் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த ‘முதல் தலைமுறை அறக்கட்டளை‘ என்கிற அறக்கட்டளை தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகளும் தற்காப்புப் பயிற்சிகளும், இளைஞர்களுக்குத் தொழிற்திறன் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக இப்போது கண்ணகி நகரில் நானூறுக்கும் மேற்பட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள். பலர் வேலைவாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் ‘எழுதுக‘ என்கின்ற ஓர் அமைப்பின் மூலம் நூல்களை எழுதுவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, புத்தகங்களை எழுதி வெளியிடும் மகத்தான முயற்சி நடந்து வருகிறது. இந்த அமைப்பு, கண்ணகி நகரில் உள்ள மாணவர்களுடைய படைப்பாக்கத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு கோடை விடுமுறை முதல் பலருக்கும் பயிற்சி அளிக்க முன்னெடுப்புகளை எடுக்கத் தொடங்கியது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கண்ணகி நகருக்கு வந்து அங்கிருக்கும் முதல் தலைமுறை அறக்கட்டளை கட்டடத்தில் பயிற்சியை அளித்து வந்தனர். இதன் விளைவாக கண்ணகி நகரைச் சேர்ந்த 50 மாணவர்கள் எழுதிய நூல்கள் செம்மைபடுத்தப்பட்டு, 'நியூ செஞ்சுரி பதிப்பகம்' மூலம் புத்தங்களாக அச்சிடப்பட்டன. இன்று அந்த 50 புத்தகங்களும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கண்ணகி நகரின் மாணவர்கள் முன்பு வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு எழுதுக அமைப்பைச் சார்ந்த கிள்ளிவளவன் வரவேற்புரையும், ஜோசப் ராஜா நோக்க உரையும், பாலச்சந்திரன் வரவேற்புரையும் ஆற்றினர். அரசுப்பள்ளி மாணவர்கள் கண்ணகி நகர் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஆனந்தீஸ்வரி, மாணவர்கள் எழுதத் தொடங்கிய பிறகு அவர்கள் பண்பிலும் நடத்தையிலும் ஏற்பட்டிருக்கின்ற மாறுதல்களையும், தாக்கத்தையும் பற்றிப் பேசினார். நியூ செஞ்சுரி பதிப்பக மேலாண் இயக்குநர் திரு சந்தானம் பேசுகையில், இந்த மாணவர்கள் தொடர்ந்து நூல்களை எழுதி எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவார்கள் என்கின்ற நம்பிக்கையையும் தெரிவித்து மாணவர்களைப் பாராட்டினார். ‘எழுதுக‘ அமைப்பின் வழிகாட்டியாக இருந்து அமைப்பை நெறிபடுத்தி வருகிற முனைவர் இறையன்பு ஐ.ஏ.ஏஸ் பேசுகையில், நூல்களை எழுதுபவர்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். வாசிப்பை மேலும் தீவிரமாக்குவார்கள். கண்ணகி நகரின் மாணவர்கள் பல்வேறுவிதமான சூழல்களில் தங்களுடைய அனுபவங்களைப் பெறுகிறார்கள். அவர்கள் ஒன்றும் பாதுகாக்கப்பட்ட மாணவர்கள் அல்லர். பல இடர்பாடுகளைச் சந்தித்து வளர்கின்ற மாணவர்கள். அதன் காரணமாகச் செறிவான அனுபவங்கள் அவர்களிடம் குவிந்து கிடக்கின்றன. அவற்றை எழுதுகிறபோது இதுபோன்ற பகுதிகளில் வாழ்கின்றவர்கள் எத்தகைய சூழலில் வாழ்கிறார்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியகிறது. இறையன்பு இந்தியாவிலேயே இப்படி ஒரே ஒரு பகுதியில் 50 நூல்களை மாணவர்கள் எழுதி வெளியிடுவதும் அதை ஒரு தேர்ந்த பதிப்பகம் வெளியிடுவதும் மிகுந்த சிறப்பு. இந்த நிகழ்ச்சியின் மூலமாக கண்ணகி நகரின் மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற முயற்சி தமிழ்நாடு எங்கும் நிகழும் என்று நெகிழ்ச்சிப் பொங்க தெரிவித்தார். இறுதியாக மாணவர்கள் எழுதிய ஐம்பது நூல்களும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டபோது மாணவர்கள் தாங்கள் படைப்பாளிகளாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த மகிழ்ச்சியில் உற்சாகமடைந்தார்கள்.

விகடன் 25 Feb 2026 10:02 am

`அன்னைக்கு நானே நடந்த மாதிரி சந்தோஷப்பட்டேன்; ஒரு நாளைக்கு 1,500 ரூபா.!' - நெகிழும் `நம்பிக்கை'ராஜா

திருச்சி மாவட்டம், மேலப்புதூரில் உள்ள கான்வென்ட் ரோடு. பள்ளிக் குழந்தைளை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் பரபரப்பாக இருந்தது அந்தச் சாலை. காலை ஒன்பது மணிக்கு, தன் வண்டியில் வந்து இறங்கினார் அந்த ஆண். கால்கள் இரண்டும் போலியோவால் பாதிக்கப்பட்டு இருந்தது. வண்டியில் இருந்து ஊர்ந்து சென்று கடைக்குள் சென்றவர் டூவீலர் சீட்டிற்கான துணிகளை மரக்குச்சியால் தூக்கி ஆணியில் மாட்டினார். டெய்லர் ராஜா தவழ்ந்து சென்று, தையல் மெஷினுக்கு நேராக இருந்த சிமென்ட் திண்டில் ஏறி அமர்ந்து சீட் கவர்களை வெட்டுவது, தைப்பது என பரபரப்பாகினார். தன் உடல் குறை சார்ந்த எந்த எண்ணமும் அவரிடம் இல்லை. கால்களில் பலம் இல்லாத போதும் அவரின் கால் கட்டை விரல் மெஷினுக்கு அழுத்தம் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. வாடிக்கையாளர்களிடம் பேசுவது, சின்னச் சின்ன விஷயங்களையும் நேர்த்தியாக செய்வது என நம்மை வியப்பில ஆழ்த்தியவரிடம் பேச்சுக் கொடுத்தோம். என் பேரு ராஜா. 'பிளாட்டினம் சீட் கவர்'ங்கிறது என் கடை பேரு. இந்த ஏரியால 14 வருஷமா கடை வெச்சிருக்கேன். டூ விலர்களுக்கு வாடிக்கையாளர்கள் என்ன டிசைன்ல சீட், டேங்க கவர் கேட்டாலும் பண்ணிக் கொடுத்திருவேன். என்னுடைய தொழில் நேர்த்தியை பார்த்துட்டு, வாய்வழி விளம்பரம் மூலமா வாடிக்கையாளர்கள் தினமும் அதிகரிச்சுட்டே இருக்காங்க. தொழில் நல்லபடியா போகுதும்மா என தன் தொழிலை அறிமுகப்படுத்தியவர் சீட் கவர்களை ஊசி முனைக்குத் தள்ளிக்கொண்டே தொடர்ந்தார்.  டெய்லர் ராஜா எனக்கு சொந்த ஊர் திருச்சி. அண்ணன், அக்கானு நாங்க அஞ்சு பேரு. அப்பா - அம்மா ரெண்டு பேரும் கூலி வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. எனக்கு ஒரு வயசுல போலியோ அட்டாக் ஆயிருச்சு. கால் ரெண்டும் நடக்கும் திறனை இழந்திருச்சு. விவரம் தெரியுறதுக்கு முன்னாடியே போலியோ பாதிப்பு வந்ததால, சின்ன வயசிலேயே எல்லா வேலைகளையும் ஊர்ந்து, தவழ்ந்து செய்யக் கத்துக்கிட்டேன். எனக்கு சின்ன வயசா இருக்கும் போதே அப்பா தவறிட்டாரு. எங்க அம்மா ஒரு ஆள் வேலைக்குப் போயி எங்க அஞ்சு பேரை பார்த்துக்குச்சு. கூலி வேலைக்குப் போகும், சித்தாள் வேலை செய்யும், ஸ்கூல்ல கேண்டின்ல வேலை செய்யும். எங்க அஞ்சு பேரோட பசியை போக்க எங்க அம்மா படாத கஷ்டம் இல்ல. இப்போ 85 வயசு ஆச்சு. மூணு அக்காங்களுக்கும் ரொம்ப சிரமப்பட்டுதான் கல்யாணம் பண்ணி வெச்சுது. நான் எட்டாவது வரைக்கும் படிச்சேன். பள்ளிக்கூடத்துக்குப் போனா எல்லாரும் என் உடல் குறையை வெச்சு கிண்டல் பண்ற மாதிரி ஃபீல் ஆச்சு. எல்லாத்துக்கும் யாரோ ஒருத்தர் உதவிய எதிர்பார்த்துட்டே இருந்த மாதிரி இருந்துச்சு. அதனால படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டேன். டெய்லர் ராஜா நிறைய இடத்துல வேலை கேட்டேன். எல்லாரும் உடம்புல இருந்த குறையை பார்த்துட்டு வேலை தர யோசிச்சாங்க. தெரிஞ்ச ஒரு அண்ணன் சீட் கவர் தைக்கிற கடையில வேலைக்குச் சேர்த்து விட்டாரு. ஒரு நாளைக்கு 15 ரூபா சம்பளம். உண்மையைச் சொல்லணும்னா குறையெல்லாம் மறந்து திறமையை வளர்த்துக்கிட்டேன். சீட் கட் பண்றது, அளவு எடுக்குறது, பின் அடிக்கிறது இந்த வேலைகள் எல்லாம் அத்துப்படி. மெஷின் சத்தம் என் மனசை என்னமோ பண்ணிட்டே இருந்துச்சு. ஏறி உட்கார்ந்து தைக்கணும்னு ஆசை. என்னால தனியா நிக்க முடியாது. நடக்க முடியாது. ஆனா, ஏதோ ஒரு தைரியத்துல மெஷின்ல ஏறி உட்கார்ந்தேன். நம்பிக்கை கால்களுக்கு பலம் கொடுத்துச்சு. விரலால பெடலை அழுத்தி நான் தைக்க ஆரம்பிச்சப்போ மெஷின்னோட அந்த சத்தத்தை கேட்கும் போது, அது தான் என் காலடி சத்தங்கிற அளவுக்கு சந்தோஷம் இருந்துச்சு. அன்னைக்கு நான் நடந்த மாதிரி சந்தோஷப்பட்டேன் என்றவரின் கண்கள் மகிழ்ச்சியில் குளம் ஆகியது. சிரித்துக் கொண்டே ' இந்த கேட்குது பாருங்க. என் காலடி சத்தம்' என மீண்டும் மெஷின்களின் பெடல்களை அழுத்திக்காட்டினார். டெய்லர் ராஜா பத்து வருசத்துல தொழிலை நல்லாக் கத்துக்கிட்டேன். இடைப்பட்ட காலத்துல ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறதா சொன்னாங்க. அவங்க காதலை சொல்லும் போது, எனக்கு பயமாதான் இருந்துச்சு. இது எப்படி சரியா வரும்னு யோசிச்சேன். ஆனா அவங்க, 'கட்டுனா உன்னத்தான் கட்டிப்பேன்'னு சொல்லிட்டாங்க. கல்யாணத்துக்கு அவங்க வீட்ல சம்மதிக்கல. எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். குழந்தை பிறக்குற வரைக்கும் ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு. குறை இல்லாம பொறக்கணும்னு வேண்டாத சாமி இல்ல. தேவதை மாதிரி ரெண்டு பொண்ணுங்க எங்களுக்கு. பெரிய பொண்ணு காலேஜ் படிக்கிறாங்க. சின்ன பொண்ணு பிளஸ் டூ படிக்கிறாங்க. என் மனைவி வீட்ல இருந்தே டெய்லரிங் பண்ணி சம்பாதிக்கிறாங்க. குச்சிதான் துணையா இருக்கும்னு நினைச்ச எனக்கு கடவுள் அழகான குடும்பத்தைக் கொடுத்து அழகு பார்த்தாரு. கிடைக்காததுக்கு வருத்தப்படுறதைவிட, கிடைச்சதை கொண்டாடணும். நான் சொல்றது சரிதானம்மா என்றவர் தன் குறைகளை மறந்து சிரித்த போது அவரின் தையல் மெஷின் இன்னும் வேகமெடுத்திருந்தது. தினமும் காலையில ஒன்பது மணிக்கு கடைக்கு வந்தா ராத்திரி எட்டு மணி வரை வேலை இருக்கும். என் கடையில ரெண்டு பேர் வேலையும் செய்றாங்க. ஒரு நாளைக்கு 1,500 ரூபா வரை சம்பாதிக்கிறேன். வாழ்க்கையில எந்தக் குறையும் இல்ல. கால் இல்லாதவன்'னு சொன்னவங்க முன்னாடி கெளரவமா வாழுற வாழ்க்கையை, உழைப்பு உருவாக்கி கொடுத்திருக்கு தம்ஸ் அப் செய்து விடைபெறுகிறார் ராஜா அண்ணா.!

விகடன் 25 Feb 2026 9:00 am

காலத்தால் அழியாத நற்பெயரையும் புகழையும் ஈட்டுவது எப்படி? - மனிதத்தின் உண்மையான முகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் காலத்தின் நவரசங்கள் வாழ்க்கையாக இருக்கலாம். அந்த நவரசங்களில் ஒன்று கூடினாலோ குறைந்தாலோ வாழ்வது தான் கடினம். சுதந்திரமாக பறக்கும் பறவைகளுக்கு எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்ற இலக்கு இருக்கும். இலக்கு இல்லாத வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. இங்கு வாழ்கின்ற உயிர்களும் சரி.. மனிதனும் சரி.. வாழ்க்கையின் ஆழத்திற்கு சென்று மீண்டு வரும்போது தான் வாழ்க்கைக்கான அர்த்தத்தையே புரிந்துக் கொள்ள முடிகிறது. மனிதன் என்பவன் யார்? மனிதம் என்பது என்ன?  பூ‌ விற்கும் மூதாட்டி ஒருவர், பூக்களை விற்பனை செய்வோரிடம் புன்னகை பூத்த முகத்துடன் நீடுழி வாழ்க என்று சொல்லும் போது, ஒரு வித உவகையோடு அன்றைய நாள் இருக்கும். இது தான், அவர்கள் நம்மிடம் காண்பிக்கும் மனிதம். இது போன்ற உள்ளம் கொண்டவர்களே மனிதர்களாகிறார்கள்.‌ மனிதம் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை புரிந்து கொள்பவனே மனிதன். கிட்டத்தட்ட மனிதன் - மனிதம் இரண்டும் ஒரே ‌அர்த்தமாக தான் இருக்க முடியும். மனித விழுமியத்தின் கதவை திறந்து பார்த்தாலே, ஒழுக்கமும் வாழ்வும் சீர்படும். விழுமியம் என்பது ஒரு மனிதனின் எண்ணம், நம்பிக்கை, கருத்து போன்றவற்றை சரியான பாதையில் பின்பற்றுவது.  பணம் என்றால் பிணம் கூட வாய் பிளக்கும் என்று ஒரு பழமொழி உண்டு.. சமூகத்தில் சராசரி ஒரு மனிதனின் மதிப்பு அவனிடம் உள்ள பணத்தை பொறுத்து  தீர்மானிக்கப்படுகிறது.  தனக்காக மட்டுமின்றி மற்றவர்களின் நலனுக்காகவும் உழைப்பவர்கள் மாமனிதர் ஆகிறார்கள். இவர்கள் தான் இளைஞர்கள் பட்டாளத்திற்கு தூண்டுதலாகவும், முன்னோடியாகவும் விளங்குகிறார்கள்.  இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. நாம் விட்டு சென்ற எழுத்துகளையும், மதிப்பையும்,  புகழையும் தவிர.. மீதம் எல்லாமே தற்காலிகம் தான். அன்பு, மகிழ்ச்சி போன்றவையெல்லாம் தற்காலிகம் என்ற  போது தான் வருத்தமாக இருக்கும். நரை முதிர்ந்த பாட்டியின் பாதத்தில் முள் குத்திவிடுகிறது. தன்  பார்வை மங்கிய கண்களால் கைகளில் உள்ள சிறிய ஊசியினால் அதை தடவி கணவன் எடுக்கின்ற போது, அவர்களது இருவரது மனதிலும் ஆழமான அன்பு அழகாய் தோன்றும். மகிழ்ச்சியே வாழ்க்கையின் அர்த்தமும் நோக்கமும், மனித இருப்பின் முழு நோக்கமும் முடிவும் ஆகும் என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. மகிழ்ச்சி வகை ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். ஒருவனே பல வடிவங்களில் மகிழ்ச்சியை உணர்கின்றான். உதாரணமாக, ஒருவருக்கு சுற்றுலா செல்வது மகிழ்ச்சியைத் தரும்.. இது ஒரு வகை மகிழ்ச்சி.. யாருடன் செல்வது கூடுதல் மகிழ்ச்சியைத் தரும்? என்பது வடிவம்.. எப்போதுமே புன்னகை முகத்துடனே இருக்கின்ற ஒரு முதியவரிடம், ஒரு இளைஞன் கேட்கிறான்: உங்களுக்கு துன்பம் என்பதே கிடையாதா? நீங்கள் தான் மகிழ்ச்சியான மனிதராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதற்கு முதியவரின் பதில், புண்பட்டவனின் மனதை அவனே சமாதானப்படுத்தும் கருவி தான் புன்னகை. ஒருவன் எவ்வளவு மெனளமாக புன்னகை புரிகிறனோ? அவ்வளவு அதிகமாக துன்பத்தை அனுபவித்திருப்பான். ஒரு சிலருக்கு அந்த முகம் இயற்கையாகவே இருக்கிறது.. அது கடவுள் கொடுத்த வரம் என்று புன்னகைத்து  கொண்டே கூறினார். அனுபவமே சிறந்த ஆசான் என்று கூறுவார்கள். அனுபவம் நமது தவறுகளை திருத்திக் கொள்ளவும் செய்கிறது. ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளவும் செய்கின்றது. இதைத் தான் அனுபவ அறிவு என்கிறோம். ஒருவன் வளர்கின்ற சூழ்நிலை, கற்றுக்கொள்ளும் செயல், மனதில் உள்வாங்கும் விஷயம் இவற்றை பொறுத்தே, அவன் நல்ல அனுபவங்களை பெற்றிருப்பானா? என்பதை கூற முடியும். நல்ல அனுபவங்களை பெற்றிருந்தால் மட்டுமே சிறந்த அனுபவசாலியாக இருக்க முடியும். ஒரு மனிதனின் அனுபவம் அவன் இலக்கை அடைய துணை புரிகிறதா? என்று கேட்டால் நிச்சயம் துணை புரியும். பூப்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் விளையாடுகின்ற போது, அவர் பலமுறை தோல்வி அடைந்துள்ளார். சர்வதேச அளவில் அவர் விளையாடிய போது வெற்றி பெற்று விட்டார். அப்போ, அவர் தோல்வி அடைந்த போது, தான் பெற்ற அனுபவத்தையும், தோற்றதற்கான காரணத்தை ஆராய்ந்த தால் தான், சர்வதேச அளவில் வெற்றியும் பெற்றார். நம் கண்களில்  உள்ள லேக்ரிமல் சுரப்பி சுரக்கின்ற கண்ணீரில் வலி மிகுந்த பாதையின் பயணங்கள் நிறைந்திருக்கும். வலி மிகுந்த பாதையிலும் நல்ல எண்ணங்களே நம்மை வலிமை படைத்தவனாக வைத்திருக்கும். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்தால் வாழ்வின் பயணம் இனிதாய் இருக்கும்.  சி. ஹரிசுவேதா., சேலம் மாவட்டம். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 24 Feb 2026 2:53 pm

'படிக்காத மேதை படைத்த பள்ளிக்கூடம்' - பழ வியாபாரியின் பத்மஸ்ரீ பயணம் தெரியுமா?

ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் எழுந்து வேலைக்குச் செல்லும்போது, நமக்கு இன்னும் வசதிகள் இருந்திருக்கலாமோ என்றோ அல்லது நம்மால் இவ்வளவுதான் முடியும் என்றோ பல நேரங்களில் பலர் நினைப்பதுண்டு. ஆனால், எதுவுமே இல்லாத மனிதர் ஒருவர் நினைத்தால் ஒரு ஊரின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்பதற்கு வாழும் உதாரணம், கர்நாடகாவைச் சேர்ந்த ஹரேகளா ஹஜப்பா (Harekala Hajabba). ஆரஞ்சு பழங்களைச் சுமந்து, தனியாளாக விற்று, ஒரு பள்ளிக்கூடத்தையே உருவாக்கிய இந்தச் சாதாரண மனிதரின் கதை, உங்களின் இன்றைய தினத்தைச் சிறப்பாகத் தொடங்க ஒரு மிகச்சிறந்த உந்துதலாக இருக்கும். Hajabba கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள `நியூபடுப்பு' (Newpadupu) என்ற குக்கிராமம்தான் ஹஜப்பாவின் சொந்த ஊர். அந்த ஊரில் பள்ளிக்கூடம் என்ற ஒன்றே கிடையாது. வறுமையின் காரணமாக ஹஜப்பாவும் பள்ளிக்கூடத்துப் பக்கம் சென்றதில்லை. மங்களூர் நகரப் பேருந்து நிலையத்தில் ஒரு கூடை நிறைய ஆரஞ்சு பழங்களைச் சுமந்து சென்று விற்பதுதான் அவருடைய தினசரி பிழைப்பு. ஒரு நாளைக்குச் சுமார் 150 ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கும். ஒருநாள், வெளிநாட்டவர் இருவர் ஹஜப்பாவின் கூடையிலிருந்த பழங்களைப் பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் அதற்கான விலையைக் கேட்டனர். ஹஜப்பாவிற்கு ஆங்கிலம் புரியவில்லை. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று தெரியாமல் ஹஜப்பா திருதிருவென முழிக்க, அந்த வெளிநாட்டவர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டனர். அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி... மகள் டாக்டர்... மகன் ரயில்வே ஊழியர்... விதியை வென்ற கல்வி! அந்தச் சம்பவம் ஹஜப்பாவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எனக்குப் படிக்கத் தெரியாததால்தானே எனக்கு இந்த அவமானம் நேர்ந்தது? என் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருந்திருந்தால் நான் படித்திருப்பேனே. எனக்கு நேர்ந்த இந்த நிலைமை என் ஊரில் உள்ள எந்தக் குழந்தைக்கும் வரக்கூடாது, என்று அந்த நிமிடத்தில் ஒரு சபதம் எடுத்தார். ஒரு நாளைக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஒருவரால் பள்ளிக்கூடம் கட்டுவது என்பது சாதாரண கனவு அல்ல. இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் பலரும் அந்தப் பேச்சை காதுகொடுத்துக் கூட கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் ஹஜப்பாவின் வைராக்கியம் பெரிதாக இருந்தது. Hajabba அன்றிலிருந்து தான் சம்பாதிக்கும் அந்தச் சிறிய தொகையிலிருந்து ஒரு பகுதியைத் தன் கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகச் சேமிக்கத் தொடங்கினார். பல வருடங்கள் அந்தச் சேமிப்பு தொடர்ந்தது. ஆரம்பத்தில் தன் ஊரில் உள்ள ஒரு சிறிய மசூதியின் நிர்வாகிகளிடம் பேசி, அங்குள்ள ஒரு சிறிய அறையில் 28 குழந்தைகளுடன் ஒரு தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். அதன்பிறகு, ஊர் மக்களின் சிறு உதவிகளோடும், தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொண்டும் தன் கிராமத்திலேயே ஒரு நிலத்தை வாங்கி, 2004-ஆம் ஆண்டு `தட்சிண கன்னடா ஜில்லா பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளி' என்ற அரசாங்கப் பள்ளியைக் கட்டி முடித்தார். பள்ளிக்கூடம் கட்டியதோடு ஹஜப்பா நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தப் பள்ளிக்குச் சென்று, வகுப்பறைகளைக் கூட்டிச் சுத்தம் செய்து, பள்ளியின் பராமரிப்பு வேலைகளையும் அவரே தன் கைகளால் செவ்வனே செய்து வந்தார். அந்த ஊர் மக்கள் அவரை `அட்சர சந்த்' (எழுத்துச் சித்தர் / Saint of Letters) என்று அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள். அவரது இந்த தன்னலமற்ற மாபெரும் சேவையை அங்கீகரிக்கும் வகையில், 2020-ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ` பத்மஸ்ரீ ' விருதை அறிவித்தது. ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது - முதல்வர் ஸ்டாலின் Hajabba விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் கூடியிருந்த அந்த மாபெரும் சபையில், ஒரு சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்து, காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் காலோடு நடந்து சென்று அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டார் ஹஜப்பா. அந்த ஒரு காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் எழுந்து நின்று கைதட்ட வைத்தது. நமக்குத் தேவையான வளங்கள் இல்லை, பின்புலம் இல்லை, நேரம் இல்லை என்று பல காரணங்களை நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், எதைக் கண்டும் சோர்வடையாமல் தன்னிடம் இருந்ததை மட்டுமே வைத்து ஒரு மாபெரும் கல்விப் புரட்சியைச் செய்துள்ளார் ஒரு பழ வியாபாரி. எந்த ஒரு பெரிய மாற்றமும், ஒரு தனி மனிதனின் சிறிய முடிவில் இருந்தே தொடங்குகிறது என்பதற்கு ஹஜப்பா ஓர் உதாரணம். Hajabba உங்களின் இன்றைய நாள், ஹஜப்பாவைப் போல ஒரு சிறிய, ஆனால் உறுதியான முன்னெடுப்போடு தொடங்கட்டும்! 'கல்வி மட்டும் இருந்தால் போதும்' - 3 அடி உயரம் கொண்ட 'வைரல்' டாக்டர் கணேஷின் வைராக்கிய கதை!

விகடன் 24 Feb 2026 7:56 am