SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

எந்த ஊருக்கு போனாலும் 'ஓகே' ; Rail One-ல் Unreserved டிக்கெட் புக் செய்தால் 3% Cash Back | How to

Unreserved கோச்சில் ரயில் டிக்கெட் புக் செய்யுங்கள்... உங்களுக்கு 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும் என்று சொன்னால், நம்ப முடிகிறதா? இது உண்மை தான்... நம்பித் தான் ஆக வேண்டும். Rail One ஆப்பில், டிஜிட்டல் பேமென்டுகள் மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்த ஆஃபர். டிஜிட்டல் பேமென்ட்டை ஊக்குவிக்க இந்தச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரயில் ஒன் | RailOne முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' - 3 காரணங்கள் என்ன? எப்போது முதல்... எப்படி? வருகிற ஜனவரி 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும். ரயில் ஒன் ஆப்பில் ஜி பே, Paytm, Phone pe போன்ற எந்த ஆன்லைன் டிஜிட்டல் மோடில் பேமென்ட் செய்து டிக்கெட் புக் செய்தாலும், 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். இது முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். R-Wallet மூலம் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஏற்கெனவே இந்தச் சலுகை இருந்து வந்தது. அது தொடரும். இது உள்ளூர், வெளியூர் என அனைத்து இடங்களுக்கும் செல்லும். சரி... அந்த ரயில் டிக்கெட்டை எப்படி புக் செய்வது என்பதைப் பார்ப்போம். > ரயில் ஒன் ஆப்பிற்கு செல்லவும். > Unreserved ஆப்ஷனை கிளிக் செய்யவும். > Outside Station, Inside Station என்கிற இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். ரயில் நிலையத்திற்கு வெளியே புக் செய்கிறீர்கள் என்றால் Outside Station-ஐ தேர்ந்தெடுக்கவும். > ரயில் நிலையத்திற்கு உள்ளே புக் செய்கிறீர்கள் என்றால் Inside Station-ஐ தேர்ந்தெடுக்கவும். கேஷ்பேக் | Cash Back 'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்? > அடுத்ததாக, எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை நிரப்பவும். > Proceed to Book கொடுத்து, எந்த வகையான ரயில் வேண்டும்... எத்தனை பேர் செல்கிறீர்கள் என்பதை பதிவிட்டு, 'Book Now'-ஐ கிளிக் செய்யுங்கள். > அடுத்ததாக, ஆன்லைன் பேமென்ட் செய்தால், உங்கள் டிக்கெட் புக் ஆகிவிடும். ஆனால், இந்தச் சலுகை வரும் 14-ம் தேதி முதல் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை! சென்னையிலும் கனமழை - எப்போது?

விகடன் 7 Jan 2026 1:43 pm

60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா!

வேலையின் நிமித்தமாகவும், வணிகத்தின் நிமித்தமாகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்து வருகிறார்கள், தமிழர்கள். ஒவ்வோர் ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அயலகத் தமிழர் மாநாடு இப்படி இடம் பெயர்ந்து செல்லும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னை, வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம்’ நடைபெற உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ம.வள்ளலார் ஐ.ஏ.எஸ்., “வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பது, துன்பத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுதல், அயல்நாடு முதலாளியிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதில் உதவுதல், வெளிநாடுகளில் இறக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிர்பாராத வகையில் நேரும் பிரச்னைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள அந்தந்த இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உதவுவது எனப் பல பணிகளை, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் சார்பில் மேற்கொண்டு வருகிறோம். அயலகத் தமிழர் மாநாடு புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனில் கவனம், அக்கறை கொண்டு, இத்துறையை உருவாக்கி, அதற்கு அமைச்சரையும் நியமித்துள்ளது, தமிழக அரசு. 2022-ம் ஆண்டு இத்துறை உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறையின் சார்பில் ‘அயலகத் தமிழர் தினம்’ வருகிற ஜனவரி 11, 12-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் தமிழர்கள் உயர் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். பல தொழில்களை கையில் எடுத்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். பல நாடுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஆலோசனைகளை கொடுத்து வழிநடத்தி வருகிறார்கள். மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்கள், அயலக அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்கிறார்கள். அயலகத் தமிழர் மாநாடு உணவு சார்ந்த அரங்குகள், கலாசாரம் சார்ந்த அரங்குகள், வணிகம் சார்ந்த அரங்குகள், கைவினைப் பொருள்கள், தமிழ் இலக்கியம் சார்ந்த அரங்குகள் என 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. தமிழ் உணவு சார்ந்தும், நம் தமிழ் கலாசார பண்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வு இருக்கும். பல்வேறு துறைகளில் கோலோச்சும் உலகத் தமிழர்களைச் சந்திக்கவும், இந்த விழா வாய்ப்பாக அமையும். இது உலகத் தமிழர்களுக்கான மேடை. மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் போன்ற தமிழ் கலைகள் மற்றும் கலாசாரம் குறித்த நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. உலகத் தமிழர்கள் ஓரிடத்தில் சங்கமிக்க இருக்கிறார்கள். தமிழால் இணைவோம், தமிழால் வளர்வோம். புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்ள மற்றும் அரங்குகள் அமைக்க விருப்பமுள்ளோர் https://nrtamils.tn.gov.in/nrtday/index என்ற தளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளவும். வள்ளலார் ஐ.ஏ.எஸ் அயலகத் தமிழர்கள் மட்டும் பங்குபெறும் இந்த விழாவில் தமிழ்நாட்டில் இருப்போர் தங்கள் தொழில், கலாசாரம், கைவினைபொருள்கள், உணவு உள்ளிட்டவற்றை வெளிநாடு வாழ் தமிழர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்நிகழ்வு வெளிநாடு மற்றும் வெளிமாநில தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். ஜனவரி 11 மற்றும் 12ம் தேதி(ஞாயிறு, திங்கள்) இரண்டு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வு காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அயலகத் தமிழர் தினத்தைக் கொண்டாட அனைவரையும் அழைக்கிறோம்” என்றார்.

விகடன் 6 Jan 2026 7:45 pm

புதுச்சேரி: தொடர் விடுமுறையால் 'White Town'-ல் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Photo Album

புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரி: அதிர வைக்கும் போலிமருந்து மோசடி; மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?

விகடன் 3 Jan 2026 2:50 pm

Railway: ஆதார் இணைக்கவில்லையா? 60 நாள்களுக்கு முன் 'நோ'டிக்கெட் புக்கிங்! இணைப்பது எப்படி?|How to

ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கும் நாளன்றே, நீங்கள் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? அப்போது இனி நீங்கள் கட்டாயம் ரயில்வே டிக்கெட் புக்கிங் கணக்குடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தற்போது ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் 60 நாள்களுக்கு முன்பு திறக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, வரும் மார்ச் 3-ம் தேதிக்கான ரயில்வே டிக்கெட் இன்று ஓபனாகி இருக்கிறது. அந்தத் தேதிக்கான டிக்கெட்டை இன்றே நீங்கள் பதிவு செய்ய வேண்டுமானால், டிக்கெட் புக் செய்யும் ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். ரயில் 2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா? கடந்த 29-ம் தேதி முதல், காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஆதார் எண் இணைத்திருப்பவர்களால் மட்டுமே அன்றைய ஓபனிங் டிக்கெட்டை புக் செய்ய முடியும். 12 மணிக்கு மேல் தான், ஆதார் இணைக்காதவர்களும் புக் செய்யத் தொடங்க முடியும். வரும் 5-ம் தேதி முதல், இந்தத் தேதி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அடுத்ததாக வரும் 12-ம் தேதி முதல், காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஆதார் இணைத்தவர்களால் மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். அதனால், உங்களது ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை உடனே இணைத்துவிடுவது நல்லது. ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? IRCTC வலைதளம் 1. உங்களது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு முகப்புப் பக்கத்திற்குள் செல்லவும். 2. முகப்புப் பக்கத்தில் உள்ள My Account > Authenticate User-ஐ கிளிக் செய்யவும். IRCTC 2025-ம் ஆண்டில் ஆசிய அளவில் மிகவும் வீழ்ந்த இந்திய ரூபாய்; 2026-ல் மீளுமா? - RBI அறிக்கை 3. இப்போது திறக்கப்படும் பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை பதிவிட்டு, உங்களது பெயர் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறை செக் செய்துகொள்ளுங்கள். 4. அடுத்ததாக, வலது பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் 'Save'-ஐ கிளிக் செய்யவும். 5. உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP வரும். இதை பதிவிட்டு 'Submit' கொடுத்தால் 'ALL DONE'. குறிப்பு: ஆதார் எண்ணிற்கு பதிலாக, பான் கார்டு எண்ணைக் கூட தரலாம். Railone ஆப் 1. Railone ஆப்பிற்குள் செல்லவும். 2. 'You'-ஐ கிளிக் செய்யவும். 3. 'Link Your Aadhaar'-ஐ கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை நிரப்பவும். பின்னர், 'Verify' கொடுக்கவும். 4. நீங்கள் ஆதார் இணைத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பி 'Submit'-ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ரயில்வே கணக்கு ரெடி. நீங்கள் ரிசர்வேஷன் ஓபனாகும் அன்றே சிக்கலின்றி டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!

விகடன் 2 Jan 2026 1:45 pm

எங்க நாடகக் கொட்டகையில் 200 ஆண்டுகளாகக் கைத்தட்டல் நிற்கவில்லை-AI யுகத்தில் ஓர் ஆச்சரியக் கிராமம்!

தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாளை தரிசிப்பார்கள். வைகுண்ட ஏகாதசி விழாவில் கண் விழிப்பதற்காக இக்கிராமத்தினர் சரித்தர நாடகங்கள் நடத்துவது வழக்கம். அதில் கிராம மக்களே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வேடமிட்டு நடிப்பது தனி சிறப்பு. கிட்டதட்ட 200 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இப்பழக்கம் அந்த ஊரின் அடையாளமாகி, பாரம்பர்யத்துடன் இந்த ஏஐ காலத்திலும் தொடர்வது ஆச்சர்யம். நாடகத்தில் நடிப்பவர்கள் பெரிய திரை, சின்னத்திரை, செல்போன் என டிஜிட்டல் யுகமாக மாறிவிட்ட இந்த காலக்கட்டத்திலும் வைகுண்ட ஏகாதசியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இரவில் சரித்திர நாடகம் போடுவதை சுற்றியுள்ள கிராமத்தினர் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். வள்ளி திருமணம், ருக்மாங்கதன், இராமாயணம், சத்தியவான் சாவித்ரி போன்ற சரித்திர நாடகங்கள் தான் இதில் இடம் பெறும். இதே போல் இந்த ஆண்டு ஏகாதசி விழா விமர்சையாக கொண்டாடி முடித்திருக்கின்றனர். சம்பூர்ண ராமாயணம், ருக்மாங்கதன் உள்ளிட்ட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதில் கொல்லாங்கரை கிராமத்தினர் மட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் வந்து விடிய விடிய கண்டு ரசித்தனர். இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரு நாட்கள் சரித்திர நாடகம் போடுவோம். 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறோம். இதற்காக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் இருந்து நாடகத்தில் நடிப்பதற்கான பயிற்சி எடுக்க தொடங்கி விடுவோம். இதில் எங்க ஊரைச் சேர்ந்த ஆண்கள், ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பார்கள். இந்த கனவு நிறைவேறுவதற்கு அனைவரும் தவம் கிடப்போம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 பேர் நடிப்பார்கள். ஆனால் இப்போது இதற்கான ஆர்வம் குறைந்தாலும் இதை தொடர்கிறோம். பெண் வேடமிட்டு நடிக்கும் ஆண்கள் தற்போது காலமாற்றத்தால், பலவிதமான பொழுது போக்கு வளர்ச்சி கண் முன்னே இருக்கிறது. இதனால் நாடகம் நடிப்பதில் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனால் இப்போதும் பத்து பேருக்கு மேல் நடிக்க வருகின்றனர். கையில் உள்ள கைபேசியில் அனைத்து விதமான பொழுது போக்கும் கிடைத்து விடுகின்றன. இருந்தாலும் எங்க ஊரில் இன்னமும் நாடகங்களை பார்த்து, ரசிப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். எங்கள் முன்னோர்கள் கடைபிடித்த இந்த பழக்கம், எங்கள் அடையாளமாகி விட்டது. இந்த பாரம்பரியத்தை நாங்க கைவிடாமல் தொடர்கிறோம். நாடகம் போடுவதற்கு ஏழு தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்வோம். நாடகத்தில் நடிப்பவர்கள் விரதம் இருந்து நடிப்பார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள். நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களும் நாங்க சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்கு நாடகம் தொடங்கினால் அதிகாலை 5 மணிக்கு முடியும். எங்க கிராமத்தினர், ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்து வழிபடுவோம். சரித்திர நாடகத்தை கண்டு ரசிக்கும் மக்கள் பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தில் எங்க கிராம மக்கள் 100 பேராவது கலந்து கொண்டு பாட்டுப்பாடி, தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி திரும்புவதை இப்போதும் கடைபிடிக்கின்றனர். நாங்க பிறவி நடிகர்கள் இல்லை, கலைஞர்கள் இல்லை. ஆனாலும் முழு திறமையை வெளிக்காட்டி நடிக்கும் போது கிராம மக்கள் கைத்தட்டி எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்பார்கள். எங்க ஊர் நாடக கொட்டகையில் 200 ஆண்டுகளாக கைத்தட்டல் நிற்கவில்லை. நாங்க, எப்போதும் நடிப்பை கைவிட மாட்டோம். அடுத்த தலைமுறைக்கும் இதை கடத்துவோம். ஒவ்வொரு ஏகாதசியிலும் எங்க ஊர் நாடக கொட்டகை சினிமா தியேட்டராக மாறி விடும், எங்களோட நடிப்பில் திருவிழா களைக்கட்டும் என்றார்.

விகடன் 2 Jan 2026 12:42 pm

நாக்கை பயன்படுத்தி டைப்பிங்; 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து கணினி இயக்குநர் சாதனை!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் வசித்து வரும் சுரேஷ்குமார் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் ' இடம்பிடித்திருக்கிறார். இது குறித்து சுரேஷ்குமார் நம்மிடம் பேசும்போது, என்னுடைய அப்பா சிறுவயதில் சைக்கிளில் இன்ஜின் ஒன்றைச் சேர்த்து வண்டியைப் போல இயங்க வைத்தார். அவர் அந்த சைக்கிளில் போகும் போது, ஊர்மக்கள் எல்லோரும் அப்பாவையும் சைக்கிளையும் வியந்து பார்ப்பார்கள். ஒரு சாதாரண சைக்கிளை ஆக்சிலரேட்டர், பிரேக் போன்றவற்றை வைத்து டிவிஎஸ் 50 (TVS 50) வண்டி போல மாற்றிய என் அப்பாவின் கடின உழைப்புக்குக் கிடைத்த பெயரையும் பாராட்டுகளையும் பார்க்கும்போது, அவரைப் போலவே நானும் சாதனை புரிய வேண்டும் என 13 வயதிலிருந்தே எண்ணம் இருந்தது. நான் +2 படிக்கும் போது அப்பா இறந்துவிட்டதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி கணினித்துறையில் M.Phil வரை படித்தேன். அதன் பின்னர் வேலை, குடும்பம் என வாழ்க்கை அதற்குள்ளே சுழன்றது. திடீரென ஒருநாள் என் மனைவி வாட்ஸ்அப் குழு ஒன்றில் வந்த செய்தியில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது மூக்கை வைத்து டைப்பிங் செய்து சாதனை படைத்திருந்தார். அதைக் காட்டி, என்னை நாக்கை வைத்து முயற்சிக்கச் சொல்லிக் கேட்டார். முதலில் தயக்கம் இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என கடின பயிற்சிக்குப் பிறகு, 'மே' மாதத்தில் A-Z வரை டைப்பிங் செய்து 'அப்துல் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம்பிடித்தேன். அதைத் தொடர்ந்து பல முயற்சிக்குப் பின், A-Z முதல் Z-A என்று தொடர் டைப்பிங் செய்து 25.73 விநாடியில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம்பிடித்திருக்கிறேன். என்னுடைய இந்தச் சாதனையைக் கையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். மேலும், வரும் ஆண்டில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் நாக்கின் மூலம் டைப் செய்ய ஆசை இருக்கிறது என்று கூறினார் சுரேஷ்குமார்.

விகடன் 30 Dec 2025 10:13 pm

அடுத்தது என்ன...?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் வழக்கம் போல ஒரு மாறுபட்ட, சற்று வித்தியாசமான தலைப்பில் சிறிய இடைவெளிக்குப் பிறகு கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளேன். சரி அடுத்தது என்ன...- இப்படி யோசிச்சு ரொம்ப நாளாச்சு. மூளைக்கு வேலை கொடுக்காமல் விட்டால் அது சோம்பேறி ஆயிடும். அதன் விளைவே இந்த கட்டுரை. அடுத்தது என்ன... அடுத்தது என்ன... இப்படி சிந்தனை போய்க்கொண்டே இருந்தால் நமது மனம் புதிது புதிதாக சிந்திக்க ஆரம்பிக்கும். புதிய விஷயங்கள் நம்மைத் தேடி வரும். பூக்களை சுற்றிக்கொண்டு இருக்கும் பட்டாம்பூச்சி நம் அருகில் வந்து நலம் விசாரித்து செல்லும். நம் எண்ணங்கள் அதை கவர்ந்து இழுக்கிறது. வீட்டு தோட்டத்தில் ஒரு செடியை நட்டு தினம் தண்ணீர் விட்டுப்பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர ஆரம்பிக்கும். அடுத்த அடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டே இருக்கும். யார் அதற்கு சொல்லித் தருகிறார்கள். INBUILT ENERGY என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒன்று தாவரங்களுக்குள் இருக்கும். அது அவைகளை செயல்பட வைக்கிறது. அடுத்தது என்ன என்ற சிந்தனையே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள் கண்டுபிடிக்க காரணமாகியது. இந்த INBUILT ENERGY சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் அபரிமிதமாக இருக்கும். அடுத்தது என்ன என்று யோசிக்காமல் செயல்படுவார்கள். மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் செயல்படுவார்கள். சித்தர்களின் முதன்மையானவர் அகத்தியர். சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த போது அனைவரும் கைலாயத்தில் கூடிவிட்டதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து போனது. உலகம் மீண்டும் சமநிலை அடைய தென்திசைக்கு இறைவனால் அனுப்பப் பட்டார் அகத்தியர். அவர் ஒருவர் மட்டும் அங்கு சென்றால் சமநிலை அடையும் என்று இறைவன் உலகுக்கு உணர்த்தவே அவ்வாறு செய்தார். அவருடைய INBUILT ENERGY எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த காட்சியை அகத்தியர் படத்தில் 'உலகம் சமநிலை பெற வேண்டும்' என்ற பாடல் மூலம் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள் காட்டி இருப்பார்கள். 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று இறைவனிடம் வாதாடினாரே அவரும் இந்த நிலையில் உள்ளவர்தான். கவியரசர் கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி இவர்களுக்குள் இருந்த அந்த ENERGY பல பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. மெட்டு கொடுத்த அடுத்த வினாடியே அவர்களிடமிருந்து வரிகள் அருவி போல் கொட்டும். திரை இசை தாண்டியும் சாதித்துள்ளார்கள். அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம், வாலியின் பாண்டவர் பூமி , அவதார புருஷன் - காலத்தால் அழியாத காவியங்களை படைத்தவர்கள். திரைப்படங்களில் 'INTERVAL BLOCK ' என்று ஒன்று உண்டு. டைரக்டர்கள் அதற்காக நிறைய நேரம் செலவிடுவதுண்டு. அடுத்தது என்ன என்று இடைவேளை நேரத்தில் ரசிகர்களை சிந்திக்க விடுவதற்காக. டைரக்டர் பாக்யராஜ் அவர்கள் அதை சரியாக பயன்படுத்தி கதையில் முடிச்சு போட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்து வெற்றிகளைக் குவித்தார். நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் அது போன்ற சம்பவங்கள் வரும். பத்தாம் வகுப்பு முடித்ததும் அடுத்தது என்ன எடுப்பது... +2 முடித்ததும் நீட்டா...அல்லது இன்ஜினியரிங் அல்லது கல்லூரி படிப்பா...20 வயது முடியும் போது மீண்டும் அடுத்தது என்ன என்ற கேள்வி வரும். படித்தது பிரபல தனியார் கல்வி நிறுவனமாக இருந்தாலும் அரசு வேலை தான் மனதில் முதலில் வந்து நிற்கும். 18 வயது வந்ததும் அடுத்தது என்ன வந்து நின்று காதல் பற்றி சொல்லித் தரும். ஒரு சிலர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவார்கள். காதலில் அடுத்தது என்ன என்ற தேடலில் தீவிரமாகி கல்யாணம் வரை சென்று விடுவார்கள். இரு வீட்டார் சம்மதத்துடனா... ஒரு வீடு மட்டுமா..இரு வீட்டிலும் எதிர்ப்பா...அடுத்தது என்ன அங்கேயும் இடம் பெறும். அடுத்தது என்ன என்ற ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் LVM 3 (LAUNCH VEHICLE MARK 3) - இதன் செல்லப்பெயர் 'பாகுபலி' . இந்த பாகுபலி ராக்கெட் மூலமாக அமெரிக்காவின் புளுபேர்ட் -2 செயற்கைக்கோள் (6,100 கிலோ எடை கொண்டது) டிசம்பர் 24 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடையும். உயரமான மலைகள் அடர்ந்த காடுகள் ஆகிய இடங்களில் 5ஜி இணைய சேவைகள் பெற முடியும். விண்வெளியில் செலுத்திய இந்த செயற்கை கோள் தான் அதிக எடை கொண்டதாகும். இதன் மூலம் சர்வதேச சந்தையில் இஸ்ரோவின் வர்த்தக மதிப்பு உயர்ந்துள்ளது. நமது வாழ்க்கையில் 'அடுத்தது என்ன' என்பதை தெரிந்து கொள்ள நாம் ஆவலோடு இருப்போம். ஒவ்வொரு நாளும் நன்றாக விடிகிறது. புதுப்புது தேடல்களை தொடங்கி வைக்கிறது. நாள் நேற்று, இன்று, நாளை என்று மூன்று காலை நிலைகளாக இருக்கும். அடுத்தது என்ன மட்டும் ஒரே நிலை...என்றும் நிகழ்கால நிலையில்...நாளை நமதே என்று வாலி அவர்கள் புரட்சித் தலைவருக்கு (படம் :'நாளை நமதே') பாடினார். அதற்கு மாற்றாக 'நாளை என்ன நாளை.. இன்று கூட நமது தான்' என்று கவியரசர் நடிகர்திலகத்துக்காக (படம் : 'அவன் ஒரு சரித்திரம்') பாடினார். இரண்டுமே நம்மை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள எழுதப்பட்ட பாடல்கள். இன்றைய தொடக்கம் நாளைய இமாலய வெற்றி.'அடுத்தது என்ன' கேள்வி மனசுக்குள் இருந்து கொண்டே இருக்கும் வரையில் புதிய புதிய சாதனைகள் நம்மை நோக்கி அணிவகுத்து வரும். - திருமாளம் எஸ். பழனிவேல் தேர்தல்

விகடன் 30 Dec 2025 1:46 pm

காரைக்குடி: '5 தலைமுறைகள், 300 உறவினர்கள்' - நெகிழ வைக்கும் 'சின்னான் வீடு'நூற்றாண்டு விழா!

வீடு கட்டிய அன்றே, இந்த வீட்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று சொன்ன சி.ஆ.பெரியண்ணனின் ஆசையை நிறைவேற்ற வீட்டைப் பழமை மாறாமல் பராமரிக்கும் நோக்கில் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அப்படியே புதுப்பித்தனர். 12 ஆண்டுகள் வேலைப்பாடு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியில் அமைந்துள்ள சின்னான் வீடு என்று அன்போடு அழைக்கப்படும் இந்த வீட்டின் வேலை 1912-ல் பூஜை போட்டு தொடங்கப்பட்டு, 1926-ல் முழுவதுமாக கட்டி முடிந்துள்ளது. சுமார் 14 ஆண்டுகள் கலைநயத்தோடு கட்டப்பட்ட இந்த வீட்டில், 12 ஊர்களைச் சார்ந்த மக்கள் வேலை செய்துள்ளனர். தற்போது 99 ஆண்டை நிறைவு செய்து, 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இருப்பினும் அதே கம்பீரத்தோடு பழமை மாறாமல் இருக்கிறது என்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு ஐந்து தலைமுறை ஆண்டியப்பன், வள்ளி தம்பதியருக்குப் பிறந்த பெரியண்ணன் மற்றும் சுப்பையா ஆகிய அண்ணன் - தம்பி இருவரின் வாரிசுகளின் 60 குடும்பங்கள், 300 குடும்ப உறுப்பினர்கள் என, ஐந்து தலைமுறையினரும் ஒன்றுகூடி திருவிழாவைப் போல் நடத்தியது பார்ப்போர் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எல்லாம் இங்கதான் இது குறித்து குடும்ப உறுப்பினர் சுந்தர் கூறுகையில், இது வெறும் வீடு மட்டும் கிடையாது எங்களோட அடையாளம். எங்க யாரு வீட்டுல என்ன விசேஷமா இருந்தாலும் அத இங்கதான் கொண்டாடுவோம். கல்யாணம், காதுகுத்து, பொங்கல், சடங்கு என்று எல்லாமே இங்கதான் நடக்கும். அப்போவும் இதே மாதிரி எல்லோரும் வந்துருவோம். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு இன்னும் சொல்லனும்னா, எங்க குடும்பதுல எந்த ஒரு இறப்பு நடந்தாலும் இந்த வீட்ல வச்சுதான் இறுதிச்சடங்கு செய்வோம். அந்த அளவுக்கு எங்க உணர்வோட கலந்தது இந்த சின்னான் வீடு என்று அவர் கூறினார் கடல் கடந்து வரும் உறவுகள் இந்தக் குடும்பத்தில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதிலும் சிலர் வெளிநாட்டினரையே திருமணம் செய்துள்ளனர். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு மேலும் இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்காவில் இருந்து வருகை தந்துள்ளார்கள். அதிலும் இந்த நிகழ்வில் தமிழர்கள் பாரம்பரிய உடையில் இருப்பது காண்போரை ஆச்சரியப்படுத்துகிறது. நிகழ்ச்சி நிரல் இதில் அதிகாலை கணபதி ஹோமம், பின்பு இறைவணக்கம், பரதநாட்டியம், ஓவியப்போட்டி, பட்டிமன்றம், உணவு இடைவேளை, கலைநிகழ்ச்சிகள், இசைக்கருவி வாசித்தல், குடும்ப நேரம், நன்றியுரை என்று ஒரு விழாவைப் போல் இந்தச் சங்கமத்தை ஒருங்கிணைத்துள்ளனர். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு விழா மலர் இந்த நூற்றாண்டு விழாவில் முன்னோர்களை இன்றைய தலைமுறை நினைவுகூறும் வகையில், சரஸ்வதி என்பவர், 5 ஆம் தலைமுறை சின்னான் வீடு என்ற விழா மலரை எழுதி வெளியிட்டுள்ளார். 5 ஆம் தலைமுறை சின்னான் வீடு என்ற விழா மலர் இதில் ஓட்டன்–ஓட்டி முதல் தற்போது உள்ள உறவினர் வரையுள்ள 5 தலைமுறை குடும்ப உறுப்பினர்கள் பெயர் மற்றும் அவர்களின் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது போன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் செட்டிநாட்டுப் பகுதி, இன்றளவும் உறவுகளின் புகழிடமாக திகழ்கின்றது.

விகடன் 30 Dec 2025 12:19 pm

பாரம்பரிய முறையில் மொற்பர்த் பண்டிகை காெண்டாடிய தாேடர் பழங்குடியினர்

மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த்

விகடன் 29 Dec 2025 3:03 pm

உங்கள் கோலத்துக்கு 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு! - கோலம் போடுங்க பரிசை வெல்லுங்க!

கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி

விகடன் 26 Dec 2025 6:14 pm

முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்'ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்'தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் 'வாரன் பஃபெட்'. இவர் 2001-ம் ஆண்டு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில், '20 ஸ்லாட் பன்ச் கார்டு' பற்றி பேசியது தற்போது செம்ம வைரல். அது என்ன '20 ஸ்லாட் பன்ச் கார்டு'? இதை வாரன் பஃபெட்டின் தியரி என்றே கூறலாம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் 500 வாய்ப்புகள் கிடைக்காது. குறைந்த வாய்ப்புகளே கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் '20 ஸ்லாட் பன்ச் கார்டு'. Warren Buffett - வாரன் பஃபெட் 'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'! அதாவது, ஒருவருக்கு வாழ்க்கையில் 20 வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போது, வாய்ப்புகள் குறைந்துகொண்டே வரும். ஒருமுறை ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி விட்டால், அதை மீண்டும் மாற்ற முடியாது. அதனால், ஒவ்வொரு முடிவையும் பார்த்து யோசித்து எடுக்க வேண்டும். ஏன் 20 முறை மட்டுமே? ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொண்டால் பல தவறான முடிவுகள் எடுக்கக்கூடும்... அவசர முடிவுகளும் எடுக்கக்கூடும். 20 வாய்ப்புகள் மட்டும் இருக்கும்போது, ஒவ்வொரு முடிவுகளையும் பார்த்து, நிதானமாக, யோசித்து எடுப்போம். இதனால், அந்த முடிவுகள் பெரும்பாலும் தவறாக வாய்ப்பில்லை. மேலும், அந்த முடிவுகள் நீண்ட கால அடிப்படையில் பலன் தர வேண்டும் என்பதனால் சரியாக முடிவு செய்து எடுப்போம். இந்த தியரி முதலீடுகளுக்கு மட்டுமல்ல... பிசினஸ் தொடங்கி அனைத்திற்குமே பொருந்தும். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இன்னும் ஐந்து நாள்களில் புத்தாண்டு. இனி உங்களது '20 ஸ்லாட் பன்ச்'சைத் தொடங்கி அடுத்தடுத்த முடிவுகளை சூப்பராக எடுங்க மக்களே. அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்:) வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க

விகடன் 26 Dec 2025 6:01 pm

Personal Finance: புத்தாண்டுச் சபதம் ஓகே... ஆனால் உங்கள் ஃபைனான்ஸ் பிளான் ரெடியா?

வணக்கம். புத்தாண்டு வரப்போகிறது. டிசம்பர் 31 இரவு கொண்டாட்டங்கள் முடியும். ஜனவரி 1 காலை விடியும். வழக்கம் போல ஒரு புதிய டைரியை வாங்குவோம். முதல் பக்கத்தில், இந்த வருடம் ஜிம்முக்குப் போவேன், கோபப்பட மாட்டேன், எடையைக் குறைப்பேன் இத்யாதி இத்யாதி... சில சபதங்களை மோட்டிவேஷன் பொங்க எழுதுவோம். பிப்ரவரி 15-ல் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். டைரி மூலைக்குப் போய்விடும். பழைய வாழ்க்கை தொடரும். ஏன் இப்படி? நமக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆனால் அதை அடைவதற்கான சரியான 'அஸ்திவாரம்' (Foundation) இல்லை. பிரச்னை: தெளிவற்ற பயணம் உங்கள் நிதி வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள். உங்களைப் போல ஒரு டிப் டாப் ஆசாமி, ரயில் நிலையத்திற்குப் போய், டிக்கெட் கவுண்டரில் நின்று எங்கேயாவது ஒரு டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போது பலரின் நிதி நிலைமை. பணம் வருகிறது. செலவாகிறது. இயற்கைதான் இல்லையா? சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் மாதக் கடைசியில் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. பிள்ளையின் படிப்புக்கு, என் ஓய்வுக்காலத்துக்கு என்று பெரிய கனவுகள் உண்டு. ஆனால் அதற்கான திட்டம்? கடவுள் விடுற வழி என்று விட்டுவிடுகிறோம். பணவீக்கம் உங்கள் சேமிப்பைத் திருடிக்கொண்டிருக்கிறது என்பது கூட நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இருந்தாலும் ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராய் அம்மா போல வெள்ளந்தியாக இருக்க கூடாது. இப்படித் திட்டமில்லாமல் போனால், 2026-ம் இன்னொரு சாதாரண வருடமாகவே கடந்து போய்விடும். பயமுறுத்துவதாக நினைக்க வேண்டாம். (ஆனால் கொஞ்சம் பயப்படுங்கள். தவறில்லை.) Confused Person தீர்வு: ஒரு தெளிவான வரைபடம் இந்தக் குழப்பத்தை உடைக்க, உங்களுக்குத் தேவை ஒரு தெளிவான வரைபடம் (Financial Roadmap). அதை உருவாக்கவே இந்தச் சிறப்பு அமர்வு. தலைப்பு: 2026 – உங்கள் கனவுகளுக்கு அடித்தளமிடுவது எப்படி? நாள்: டிசம்பர் 28, 2025 (ஞாயிறு) நேரம்: காலை 11:00 – 12:30 IST labham workshop இந்த 90 நிமிடங்களில் நாம் மேலோட்டமாகப் பேசப் போவதில்லை. ஆழமாக, ஆனால் எளிமையாக அணுகப்போகிறோம். நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது: இலக்கு நிர்ணயம்: ஆசைக்கும் இலக்குக்கும் வித்தியாசம் உண்டு. நிறைய பணம் வேண்டும் என்பது ஆசை. 2030-ல் 10 லட்சம் வேண்டும் என்பது இலக்கு. 2026-க்கான உண்மையான இலக்குகளை எப்படி செட் செய்வது என்று பார்க்கப்போகிறோம். SIP எனும் மந்திரம்: மாதம் 10,000 ரூபாய் சேமிப்பது எப்படி 15 வருடத்தில் ஒரு கோடியாக மாறும்? கூட்டு வட்டியின் (Compounding) சக்தியை உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்துவது? தவறுகள்: புத்தாண்டு உற்சாகத்தில் அவசரப்பட்டு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது, தேவையில்லாத பங்குகளை வாங்குவது போன்ற பொதுவான தவறுகளை எப்படித் தவிர்ப்பது? சமநிலை: இன்றைய ஆசைகளையும், நாளைய தேவைகளையும் (Savings vs Spending) எப்படிச் சமாளிப்பது? வழிகாட்டி யார்? திரு. A.R. குமார். (Chief of Content, Labham & Former Joint Editor, Nanayam Vikatan). நாணயம் விகடனில் பல ஆயிரம் கேள்விகளுக்குப் பதிலளித்து, சிக்கலான நிதி விஷயங்களை பாமரருக்கும் புரியும் வகையில் எழுதியவர். happy Family முடிவு: ஒரு புதிய ஆரம்பம் இந்த வகுப்பில் கலந்துகொண்ட பிறகு என்ன நடக்கும்? தெளிவு: அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருக்காது. அமைதி: உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை பிறக்கும். செயல்: சும்மா யோசித்துக்கொண்டிருக்காமல், முதல் அடியை எடுத்து வைப்பீர்கள். செபி (SEBI) போன்ற அமைப்புகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஒழுங்குபடுத்தி, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. சரியான அறிவுடன் அணுகினால், இது உங்கள் செல்வத்தை உருவாக்கும் சிறந்த கருவி. ​ வாழ்க்கை என்பது நாம் எடுக்கும் முடிவுகளின் தொகுப்பு. 2026-ஐ உங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த வருடமாக மாற்றும் முடிவு உங்கள் கையில். இடங்கள் குறைவு. இன்றே பதிவு செய்யுங்கள்.  பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் - https://labham.money/webinar-dec-28-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_dec28_2025 சிந்தியுங்கள். (உடனே) செயல்படுங்கள். - டீம் லாபம் Personal Finance: உங்கள் வீட்டு பட்ஜெட் சூப்பரா, சுமாரா, இல்ல டேஞ்சரா இருக்கா? நிதிச் சுதந்திரம் - 3

விகடன் 26 Dec 2025 7:18 am

தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 25 Dec 2025 6:39 pm

கோவை: இந்தியாவின் கலாசாரம், பண்பாடுகளை பிரதிபலிக்கும் சாரஸ் கண்காட்சி 2025! | Photo Album

சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025

விகடன் 24 Dec 2025 7:24 pm

கோவை : நெருங்கும் பொங்கல் பண்டிகை; மும்முரமாகத் தயாராகி வரும் பானைகள்! | Photo Album

பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் அடுப்புகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் & அடுப்புகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள்

விகடன் 24 Dec 2025 6:27 pm

நெல்லை: 5D, 7D தியேட்டர்கள்; கற்காலத் தங்கம்; பிரமிக்க வைக்கும் பொருநை அருங்காட்சியகம்! |Photo Album

பிரமிக்க வைக்கும் நெல்லை 'பொருநை'அருங்காட்சியகம்|5டி-7டி தியேட்டர்கள்|கற்கால தங்கம்! மனித எலும்புகள் `பொருநை நாகரிகத்தின் சான்று' - 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!

விகடன் 24 Dec 2025 7:30 am

பழையன கழிதலும், புதியன புகுதலும்! - ஒரு டிசம்பர் மேஜிக்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் டிசம்பர் மாதம் என்பது கொண்டாட்டங்களுக்கு மட்டுமானது அல்ல; அது நம் இல்லத்தையும் மனதையும் மறுசீரமைப்பதற்கான காலமும் கூட. தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது (Decluttering) உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்கி, வரும் புத்தாண்டை வரவேற்க உங்களைத் தயார்படுத்தும். 1. Kitchen & Pantry (சமையலறை மற்றும் உணவு மேலாண்மை): Expired Items: முதலில் உங்கள் Pantry-யைச் சோதித்து, காலாவதியான மசாலாப் பொடிகள் மற்றும் உணவுப் பொருட்களை அப்புறப்படுத்துங்கள்.   Kitchenware: மூடி இல்லாத Mismatched Containers, விரிசல் விழுந்த கண்ணாடி குவளைகள் மற்றும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தாத Kitchen Gadgets-களைத் தானம் செய்யுங்கள். Drawer Organization: துருப்பிடித்த கரண்டிகளை அகற்றி, சமையல் மேடையை (Kitchen Countertop) எப்போதும் காலியாக வைத்திருங்கள். 2. Clothing & Personal Care (ஆடை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு) Wardrobe Audit: கடந்த ஒரு வருடமாக நீங்கள் அணியாத ஆடைகளை வகைப்படுத்துங்கள். குறிப்பாக, தேவையற்ற குளிர்கால உடைகளை (Winter Clothes) ஏழைகளுக்குத் தானம் செய்யுங்கள். Toiletries: காலாவதியான அழகு சாதனப் பொருட்கள் (Expired Cosmetics) மற்றும் தரம் குறைந்த வாசனை திரவியங்களை அப்புறப்படுத்துங்கள். Medicine Cabinet: மருந்துப் பெட்டியைச் சோதித்து, காலாவதியான மருந்துகளைப் பாதுகாப்பாக அகற்றுங்கள். 3. Home Decor & Seasonal Items (வீட்டு அலங்காரம்) Holiday Decor: வேலை செய்யாத மின் விளக்குகள், உடைந்த பொம்மைகள் மற்றும் கசங்கிய Gift Wraps-களைச் சேர்த்து வைக்காதீர்கள். Sentimentals: பழைய வாழ்த்து அட்டைகளில் (Greeting Cards) மிகவும் நெருக்கமானவை தவிர மற்றவற்றை மறுசுழற்சிக்கு அனுப்புங்கள். Home Ambience: பழைய மெழுகுவர்த்திகள் மற்றும் கிழிந்த மிதியடிகளை மாற்றுவதன் மூலம் உங்கள் வீட்டிற்குப் புதிய பொலிவைத் தரலாம். 4. Leisure & Kids Area (பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் பகுதி) Bookshelf Clear-out: இனி படிக்கப்போவதில்லை என்று உறுதி செய்த புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்குங்கள்.  Toy Rotation: துண்டுகள் தொலைந்துபோன போர்டு கேம்கள் (Board Games) மற்றும் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்கள் பயன்படுத்தாத பொம்மைகளைத் தானம் செய்யுங்கள். 5. Digital Decluttering (மின்னணு மற்றும் டிஜிட்டல் தூய்மை) E-Waste: உடைந்த செல்போன்கள், வேலை செய்யாத சார்ஜர்கள் மற்றும் பயன்படாத ஒயர்களை (Cables) முறையாக அப்புறப்படுத்துங்கள். Digital Files: உங்கள் அலைபேசியில் உள்ள தேவையற்ற புகைப்படங்கள், செயலிகள் மற்றும் மின்னஞ்சல்களை (Unwanted Emails) நீக்குங்கள். இது மன அழுத்தத்தைக் குறைக்கும். 6. Home Office & Stationery (வீட்டு அலுவலகம் மற்றும் எழுதுபொருட்கள்) Paperwork: தேவையற்ற பழைய ரசீதுகள் (Receipts), வங்கி அறிக்கைகள் மற்றும் காலாவதியான இன்சூரன்ஸ் பேப்பர்களை அகற்றிவிட்டு, முக்கியமான ஆவணங்களை மட்டும் File செய்யுங்கள்.  Desk Essentials: எழுதாத பேனாக்கள், காய்ந்துபோன இங்க் பாட்டில்கள் மற்றும் பழைய டைரிகளை மேசையிலிருந்து அகற்றுங்கள்.  Planning: புதிய ஆண்டிற்கான New Planner மற்றும் நாட்காட்டிகளைத் தயார் செய்து, உங்கள் மேசையை நேர்த்தியாக (Organizedவையுங்கள்.  டிசம்பர் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய பகுதியைச் சுத்தப்படுத்துங்கள். தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவது என்பது உங்கள் வாழ்வின் புதிய தொடக்கத்திற்கான இடம் ஒதுக்குவதாகும். Simplify your home, simplify your life. தேர்தல்

விகடன் 23 Dec 2025 10:37 pm

கீதம் உணவகம் நடத்தும் கோலப் போட்டி; 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு... நீங்க ரெடியா?!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 23 Dec 2025 7:25 pm

தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 22 Dec 2025 6:12 pm

கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

https://www.vikatan.com/editorial/geetham-hotel-conducts-kolam-poti-on-margazhi கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 20 Dec 2025 5:42 pm

`இந்த ஃபோட்டோஸ வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது; ஆனா ஒரு மனுசனா.!’ - நவீன்ராஜ் கவுதமன் அனுபவம்

நாம் இதுவரை பயணப்படாத காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் ஊடுருவி, அங்கு வாழும் அசலான மனிதர்களின் வாழ்வை, கொண்டாட்டங்களை படம்பிடிக்கிறது ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமனின் கேமரா. கையில் கேமராவுடன் காடுமேடுகளில் அலையும் இந்தப்பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிரத் தொடங்குகிறார். நவீன்ராஜ் கவுதமன் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கத்துல ஒட்டக்குடி கிராமம். இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வேலைப் பார்த்திட்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுட்டு இப்போ ஒரு 13 வருசமா தொடர்ந்து ஃபோட்டோகிராபி பண்ணிட்டு இருக்கேன். மனிதர்களையும் அவர்கள் சார்ந்திருக்கிற சூழல்களையும் படம் எடுக்கிறது புடிக்கும். கொரோனா நேரத்துல உண்டான மன உளைச்சலிருந்து மீள்றதுக்காக நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பழங்குடிகள் பத்தின ஆவணப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது அவங்களோட வாழ்க்கை முறை எப்படி இருக்கும்ன்னு ஆர்வம் வந்து கிளம்புனது தான் இந்தப்பயணம். கொரோனா காலக்கட்டம் நம்ம வாழ்க்கை முறையில இருந்து ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது. ஆனா பழங்குடிகளோட வாழ்க்கைமுறை இயல்பாகவே அப்படிதான் இருந்தது அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. இந்தப்பயணத்துல மூலமா பழங்குடிகளோட வாழ்க்கை முறை என்னவா இருக்கு. இயற்கையோட எந்த மாதிரி சார்ந்து வாழ்றாங்க.. எந்த மாதிரி கஷ்டப்படுறாங்கன்னு எல்லாத்தையும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. அவங்களோட கஷ்டக்காலங்களில் வாழ்க்கை நடத்தினாலும் அவங்க குடும்பத்திற்குள்ளயும் சுற்றி இருக்கிறவர்களையும் சார்ந்து வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமா கொண்டு போகுறாங்க. எப்போதுமே அவங்க வாழ்க்கை 'ஒரு இசையோடும், நடனத்தோடும் எதாவது ஒரு கலைவடிவத்தோடும் கலந்ததாகத்தான் இருக்கும்'. அவங்களோட ஒவ்வொரு நாளையும் எப்படி கொண்டாட்டமா வாழ்றாங்க என்கிற வியப்பில இருந்து என்னால இன்னும் மீளமுடியல” என்கிறார். ``பழங்குடிகள் சார்ந்த தகவலை எப்படி சேகரிக்கிறீங்க?” நம்ம எப்பயும் எந்தவொரு விஷயமும் தெரியாம அவங்க இப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்கன்னு எடுக்கக் கூடாதுன்றதுக்காக பழங்குடிகள் சார்ந்து இயங்கக்கூடிய ஆக்டிவிஸ்ட் கூட தொடர்ந்து உரையாட ஆரம்பிச்சேன். நிறைய டிராவல் பண்ணி அவர்கள் சார்ந்த புத்தகங்களும் அவங்க தொடர்பான தகவல்களும் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்பறம் தான் முதல்ல நம்ம அவர்களோட பண்டிகைகளையும் சடங்குகளையும் ஆவணப்படுத்தனும்ன்னு நினைச்சி தொடங்குனேன். பொதுவாகவே, ஃபோட்டோகிராபின்னு சொல்லிட்டு கேமரா தூக்கிட்டு போனாலே நிறைய இடத்துல பயப்பிடத்தான் செய்வாங்க. நம்ம போகிற இடத்துல யாராவது ஒருத்தர்கிட்ட நம்ம என்ன எடுக்குறோம், எதுக்காக எடுக்குறோம்ன்னு உட்கார்ந்து பேசும்போது அதைப் புரிஞ்சிக்கிறாங்க. நம்மள அவங்க நம்பணும் அவ்ளோ தான். உளுந்தூர்பேட்டை கிட்ட ஒரு பழங்குடிகள் இருக்கிறாங்க. கிட்டத்தட்ட ஏழுமுறைக்கு மேல அங்க போயிருக்கேன். எங்கிட்ட எப்போ போனாலும் நல்லா பேசுவாங்க ஆனா, இதுவரைக்கும் ஒரு ஃபோட்டோ கூட எடுக்க விட்டதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க எடுக்கக்கூடாதுன்னு சொன்னா எடுக்கக்கூடாது தான். எடுக்க மாட்டேன். அவங்களோட உணர்வுகளை நம்ம மதிக்கணும். அவங்களை நம்ம தொந்தரவு பண்ணிடக்கூடாது. இந்தப்பயணத்துல நீங்க கத்துக்கிட்ட விஷயம் ? அவங்க வாழ்க்கையில இருந்து நம்ம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஃபோட்டோஸ் வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது. ஆனா ஒரு மனுசனா அவங்களோட வாழ்க்கையில இருந்து நிறைய கத்துக்கணும்ன்னு நினைச்சேன். பெரும்பாலான பழங்குடிகள் காடுகள்ல தேன் எடுப்பாங்க. அப்படி அவங்க தேன் எடுக்கும் போது ஒரு தேனீக்கூட இறந்திடாம அதை முழுமையாகக்கூட எடுக்காம அவங்களுக்கு எவ்வளவு தேவையோ அதைமட்டும் தான் எடுப்பாங்க. அதைப்போல ஒருத்தங்க தேன் எடுக்கிறதுக்காக கல்லை அடையாளத்துக்கு வச்சிருந்தாங்கன்னா மற்றவங்க அதை எடுக்க மாட்டாங்க. பேச்சிப்பாறை அணையில இருக்கிற காணிப்பழங்குடிகள் தான் விளைவிக்கிற பயிர்களில் விலங்குக்கும் சேர்த்து தான் விளைவிப்போன்னு சொன்னாங்க. அதைக்கேட்கவே ஆச்சரியமா இருந்தது. காட்டை சாராத செயற்கையான விஷயங்களை சேர்க்கும் போது அந்தக்காடும் எந்த மாதிரி செயற்கையா மாறுங்கிறதைப் பத்தி சொன்னாங்க. அவங்களுக்கு தான் இருக்கிற சூழல் சார்ந்த அறிவு, வாழ்க்கை முறை எல்லாமே நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுத்திட்டே இருக்கும். அவங்களோட வாழ்க்கை முறையே அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்காம அவங்களுக்கு தேவையான பொருள்களை அவங்களை செய்துகிறாங்க, சமவெளியில் இருக்கிறவங்களை விட எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்குறாங்க. கல்யாண வாழ்க்கையில வரதட்சணை கிடையாது. ஒருத்தவங்களை பிடிச்சிருக்குன்னா அவங்களோட வாழ்றாங்க. பிடிக்கலன்னா பெரியவங்கட்ட சொல்லி விலகி இன்னொருத்தோட வாழ ஆரம்பிச்சிடுறாங்க. இயற்கையோடும் விலங்குகளோடும், பூச்சிகளோடும், மனிதர்களோடும் எவ்ளோ ஆத்மார்த்தமா நல்ல புரிதல்களோட வாழ்றாங்க. சுயம்புன்னு பெண்களையும் தனியா ஆவணப்படுத்துறீங்களாமே? ஆமா. நம்ம வாழ்க்கையோட அங்கமா இருக்கிற பெண்கள் கிட்ட பலதரப்பட்ட கதைகள் இருக்கும். சுயம்பா தன்னெழுச்சியாய் குடும்பத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய பெண்களை குறிப்பா அவங்களோட சிரிப்பை எடுக்கணும் ' சுயம்புங்கிற' பெயர்ல பெண்களை சிறுவர்கள் ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட பெண்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் அவங்க மனசுல இருந்து ஆத்மார்த்தமா சிரிக்கிறதை எடுத்தேன். அந்த பயணத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன். அப்போ சந்திச்ச பெண்களோட கதைகள் ஒவ்வொன்னு என் வாழ்க்கையோட பல நேரங்கள்ல துணை நின்னுருக்கு. பழங்குடிகள் நிறைய இடங்களில் இறப்பையே கொண்டாட்டமாத்தான் எடுத்துக்கிறாங்க. இன்னும் இன்னும் நிறைய மக்களை, அவங்க வாழ்வியலை தெரிஞ்சிக்கிறது தான் என்னோட முதன்மையான நோக்கமாகவே இருக்கு. சடங்கு மற்றும் பண்டிகைகள் நடக்குற நேரத்தில் தான் எல்லாரையும் சந்திக்க முடியுதுங்கிறதுனால அது சார்ந்து எடுத்துட்டு இருக்கேன். பழங்குடிகள் தங்களோட இருப்பிடத்தை விட்டு நகரும் போது அவங்களோட எல்லா விசயங்களும் மாறத்தொடங்கிவிடுகிறது. அவங்களுக்கான அடிப்படை பிரச்சனைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தனும்ன்னு ஆசை இருந்தாலும் எந்தவித புரிதலும் இல்லாம எடுக்கக்கூடாது. நமக்கு கிடைச்சிருக்கிற நேரத்தை வீணாக்கிடாம காலம் மாற மாற மாற்றங்களும் நடத்திட்டே இருக்கு. அதுக்குள்ள நம்மளும் பதிவு பண்ணி வச்சிக்குவோம்ன்னு தான் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கேன். வாழ்க்கையை இன்னும் இன்னும் வாழனுங்கிற ஆசையை இந்தப்பயணங்கள் தான் எனக்கு கொடுக்குது. என மனம் நெகிழ்கிறார் ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமன்.

விகடன் 19 Dec 2025 1:30 pm

`இந்த ஃபோட்டோஸ வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது; ஆனா ஒரு மனுசனா.!’ - நவீன்ராஜ் கவுதமன் அனுபவம்

நாம் இதுவரை பயணப்படாத காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் ஊடுருவி, அங்கு வாழும் அசலான மனிதர்களின் வாழ்வை, கொண்டாட்டங்களை படம்பிடிக்கிறது ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமனின் கேமரா. கையில் கேமராவுடன் காடுமேடுகளில் அலையும் இந்தப்பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிரத் தொடங்குகிறார். நவீன்ராஜ் கவுதமன் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கத்துல ஒட்டக்குடி கிராமம். இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வேலைப் பார்த்திட்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுட்டு இப்போ ஒரு 13 வருசமா தொடர்ந்து ஃபோட்டோகிராபி பண்ணிட்டு இருக்கேன். மனிதர்களையும் அவர்கள் சார்ந்திருக்கிற சூழல்களையும் படம் எடுக்கிறது புடிக்கும். கொரோனா நேரத்துல உண்டான மன உளைச்சலிருந்து மீள்றதுக்காக நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பழங்குடிகள் பத்தின ஆவணப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது அவங்களோட வாழ்க்கை முறை எப்படி இருக்கும்ன்னு ஆர்வம் வந்து கிளம்புனது தான் இந்தப்பயணம். கொரோனா காலக்கட்டம் நம்ம வாழ்க்கை முறையில இருந்து ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது. ஆனா பழங்குடிகளோட வாழ்க்கைமுறை இயல்பாகவே அப்படிதான் இருந்தது அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. இந்தப்பயணத்துல மூலமா பழங்குடிகளோட வாழ்க்கை முறை என்னவா இருக்கு. இயற்கையோட எந்த மாதிரி சார்ந்து வாழ்றாங்க.. எந்த மாதிரி கஷ்டப்படுறாங்கன்னு எல்லாத்தையும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. அவங்களோட கஷ்டக்காலங்களில் வாழ்க்கை நடத்தினாலும் அவங்க குடும்பத்திற்குள்ளயும் சுற்றி இருக்கிறவர்களையும் சார்ந்து வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமா கொண்டு போகுறாங்க. எப்போதுமே அவங்க வாழ்க்கை 'ஒரு இசையோடும், நடனத்தோடும் எதாவது ஒரு கலைவடிவத்தோடும் கலந்ததாகத்தான் இருக்கும்'. அவங்களோட ஒவ்வொரு நாளையும் எப்படி கொண்டாட்டமா வாழ்றாங்க என்கிற வியப்பில இருந்து என்னால இன்னும் மீளமுடியல” என்கிறார். ``பழங்குடிகள் சார்ந்த தகவலை எப்படி சேகரிக்கிறீங்க?” நம்ம எப்பயும் எந்தவொரு விஷயமும் தெரியாம அவங்க இப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்கன்னு எடுக்கக் கூடாதுன்றதுக்காக பழங்குடிகள் சார்ந்து இயங்கக்கூடிய ஆக்டிவிஸ்ட் கூட தொடர்ந்து உரையாட ஆரம்பிச்சேன். நிறைய டிராவல் பண்ணி அவர்கள் சார்ந்த புத்தகங்களும் அவங்க தொடர்பான தகவல்களும் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்பறம் தான் முதல்ல நம்ம அவர்களோட பண்டிகைகளையும் சடங்குகளையும் ஆவணப்படுத்தனும்ன்னு நினைச்சி தொடங்குனேன். பொதுவாகவே, ஃபோட்டோகிராபின்னு சொல்லிட்டு கேமரா தூக்கிட்டு போனாலே நிறைய இடத்துல பயப்பிடத்தான் செய்வாங்க. நம்ம போகிற இடத்துல யாராவது ஒருத்தர்கிட்ட நம்ம என்ன எடுக்குறோம், எதுக்காக எடுக்குறோம்ன்னு உட்கார்ந்து பேசும்போது அதைப் புரிஞ்சிக்கிறாங்க. நம்மள அவங்க நம்பணும் அவ்ளோ தான். உளுந்தூர்பேட்டை கிட்ட ஒரு பழங்குடிகள் இருக்கிறாங்க. கிட்டத்தட்ட ஏழுமுறைக்கு மேல அங்க போயிருக்கேன். எங்கிட்ட எப்போ போனாலும் நல்லா பேசுவாங்க ஆனா, இதுவரைக்கும் ஒரு ஃபோட்டோ கூட எடுக்க விட்டதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க எடுக்கக்கூடாதுன்னு சொன்னா எடுக்கக்கூடாது தான். எடுக்க மாட்டேன். அவங்களோட உணர்வுகளை நம்ம மதிக்கணும். அவங்களை நம்ம தொந்தரவு பண்ணிடக்கூடாது. இந்தப்பயணத்துல நீங்க கத்துக்கிட்ட விஷயம் ? அவங்க வாழ்க்கையில இருந்து நம்ம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஃபோட்டோஸ் வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது. ஆனா ஒரு மனுசனா அவங்களோட வாழ்க்கையில இருந்து நிறைய கத்துக்கணும்ன்னு நினைச்சேன். பெரும்பாலான பழங்குடிகள் காடுகள்ல தேன் எடுப்பாங்க. அப்படி அவங்க தேன் எடுக்கும் போது ஒரு தேனீக்கூட இறந்திடாம அதை முழுமையாகக்கூட எடுக்காம அவங்களுக்கு எவ்வளவு தேவையோ அதைமட்டும் தான் எடுப்பாங்க. அதைப்போல ஒருத்தங்க தேன் எடுக்கிறதுக்காக கல்லை அடையாளத்துக்கு வச்சிருந்தாங்கன்னா மற்றவங்க அதை எடுக்க மாட்டாங்க. பேச்சிப்பாறை அணையில இருக்கிற காணிப்பழங்குடிகள் தான் விளைவிக்கிற பயிர்களில் விலங்குக்கும் சேர்த்து தான் விளைவிப்போன்னு சொன்னாங்க. அதைக்கேட்கவே ஆச்சரியமா இருந்தது. காட்டை சாராத செயற்கையான விஷயங்களை சேர்க்கும் போது அந்தக்காடும் எந்த மாதிரி செயற்கையா மாறுங்கிறதைப் பத்தி சொன்னாங்க. அவங்களுக்கு தான் இருக்கிற சூழல் சார்ந்த அறிவு, வாழ்க்கை முறை எல்லாமே நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுத்திட்டே இருக்கும். அவங்களோட வாழ்க்கை முறையே அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்காம அவங்களுக்கு தேவையான பொருள்களை அவங்களை செய்துகிறாங்க, சமவெளியில் இருக்கிறவங்களை விட எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்குறாங்க. கல்யாண வாழ்க்கையில வரதட்சணை கிடையாது. ஒருத்தவங்களை பிடிச்சிருக்குன்னா அவங்களோட வாழ்றாங்க. பிடிக்கலன்னா பெரியவங்கட்ட சொல்லி விலகி இன்னொருத்தோட வாழ ஆரம்பிச்சிடுறாங்க. இயற்கையோடும் விலங்குகளோடும், பூச்சிகளோடும், மனிதர்களோடும் எவ்ளோ ஆத்மார்த்தமா நல்ல புரிதல்களோட வாழ்றாங்க. சுயம்புன்னு பெண்களையும் தனியா ஆவணப்படுத்துறீங்களாமே? ஆமா. நம்ம வாழ்க்கையோட அங்கமா இருக்கிற பெண்கள் கிட்ட பலதரப்பட்ட கதைகள் இருக்கும். சுயம்பா தன்னெழுச்சியாய் குடும்பத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய பெண்களை குறிப்பா அவங்களோட சிரிப்பை எடுக்கணும் ' சுயம்புங்கிற' பெயர்ல பெண்களை சிறுவர்கள் ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட பெண்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் அவங்க மனசுல இருந்து ஆத்மார்த்தமா சிரிக்கிறதை எடுத்தேன். அந்த பயணத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன். அப்போ சந்திச்ச பெண்களோட கதைகள் ஒவ்வொன்னு என் வாழ்க்கையோட பல நேரங்கள்ல துணை நின்னுருக்கு. பழங்குடிகள் நிறைய இடங்களில் இறப்பையே கொண்டாட்டமாத்தான் எடுத்துக்கிறாங்க. இன்னும் இன்னும் நிறைய மக்களை, அவங்க வாழ்வியலை தெரிஞ்சிக்கிறது தான் என்னோட முதன்மையான நோக்கமாகவே இருக்கு. சடங்கு மற்றும் பண்டிகைகள் நடக்குற நேரத்தில் தான் எல்லாரையும் சந்திக்க முடியுதுங்கிறதுனால அது சார்ந்து எடுத்துட்டு இருக்கேன். பழங்குடிகள் தங்களோட இருப்பிடத்தை விட்டு நகரும் போது அவங்களோட எல்லா விசயங்களும் மாறத்தொடங்கிவிடுகிறது. அவங்களுக்கான அடிப்படை பிரச்சனைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தனும்ன்னு ஆசை இருந்தாலும் எந்தவித புரிதலும் இல்லாம எடுக்கக்கூடாது. நமக்கு கிடைச்சிருக்கிற நேரத்தை வீணாக்கிடாம காலம் மாற மாற மாற்றங்களும் நடத்திட்டே இருக்கு. அதுக்குள்ள நம்மளும் பதிவு பண்ணி வச்சிக்குவோம்ன்னு தான் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கேன். வாழ்க்கையை இன்னும் இன்னும் வாழனுங்கிற ஆசையை இந்தப்பயணங்கள் தான் எனக்கு கொடுக்குது. என மனம் நெகிழ்கிறார் ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமன்.

விகடன் 19 Dec 2025 1:30 pm

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 18 Dec 2025 8:17 am

`திருந்துவார் என நினைத்தேன்’ ; ஹோட்டலில் மீண்டும் வேறொருவருடன் மனைவி - GPS மூலம் சிக்க வைத்த கணவன்

பஞ்சாப் மாநிலம் அமர்தசரஸில் திருமணமாகி 15ஆண்டுகள் கழித்த பிறகு பெண் ஒருவர் மாற்றான் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கி இருந்ததை அவரது கணவர் கண்டுபிடித்துள்ளார். ரவி குலாதி என்ற அந்த நபருக்கு ஹாமினி என்பவருடன் 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றனர். 2018ம் ஆண்டு ரவியின் மனைவி வேறு ஒரு நபருடன் ஹோட்டலில் தங்கி இருந்ததை அவரது கணவர் கண்டுபிடித்தார். அந்நேரம் ரவி தனது மனைவியின் பெற்றோரை வரவழைத்து இது குறித்து பேசினார். இப்பேச்சுவார்த்தையில் மனைவியின் பெற்றோரும், மனைவியும் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இதனால் ரவி தனது குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார். மனைவி திருந்துவிடுவார் என்று நினைத்தார். ஆனாலும் மனைவியின் மீது ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் ரவி தனது மனைவி அடிக்கடி பயன்படுத்தும் ஸ்கூட்டியில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்தி மனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் மனைவி மீண்டும் தனது ஸ்கூட்டரில் பிற்பகலில் புறப்பட்டு சென்றார். மாலை வரை வீடு திரும்பவில்லை. எனவே ரவி தொடர்ந்து தனது மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் மனைவி போனை எடுத்து பேசவில்லை. 15 முதல் 20 முறை போன் செய்தபிறகும் போனை எடுக்காத காரணத்தால் வேறு வழியில்லாமல் ஸ்கூட்டரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் வண்டி எங்கு இருக்கிறது என்று பார்த்தார். அந்த ஜி.பி.எஸ்.கருவி இருக்கும் இடத்தை நோக்கி சென்றபோது அது ஒரு ஹோட்டலுக்குள் சென்றது. அங்கு சென்று பார்த்தபோது ரவியின் மனைவி வேறு ஒரு ஆடவருடன் இருந்ததை கையும் களவுமாக ரவி கண்டுபிடித்தார். இது குறித்து ரவி கூறுகையில், ''நான் 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். 2018ம் ஆண்டு ஹோட்டலில் வேறு ஒருவருடன் எனது மனைவியை பார்த்தேன். இதனால் அவரது பெற்றோரை அழைத்து எச்சரித்து மன்னித்து ஏற்றுக்கொண்டேன். தவறு நடப்பது புதிதல்ல என்று நினைத்துவிட்டேன். ஆனால் இன்று அவர் பிற்பகல் 3 மணிக்கு வெளியில் கிளம்பிச்சென்றார். 15 முதல் 20 முறை போன் பண்ணியும் எடுத்து பேசவில்லை. எனவே ஸ்கூட்டியில் இருந்த ஜி.பி.எஸ் சாதனத்தை சோதித்து பார்த்தபோது ஸ்கூட்டி ஹோட்டல் ஒன்றில் நிற்பது தெரிய வந்தது'' என்றார். ரவியின் தந்தை பர்வேஷ் குலாதி இது குறித்து, ''இந்த பிரச்னை பல ஆண்டுகளாக இருக்கிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ஹோட்டலில் எனது மருமகள் வேறு ஒருவருடன் இருந்த போது பிடிபட்டார். அப்போது இரு குடும்பமும் எம்.எல்.ஏ. ஒருவர் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டோம். பிரச்னை முடிந்துவிட்டதாக நினைத்தோம். ஆனால் இப்போது மீண்டும் அதே போன்று நடந்திருக்கிறது. இப்போது ரவியுடன் வாழ முடியாது என்று மருமகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளார். இப்போது ஹோட்டலில் அவருடன் பிடிபட்ட நபர் எங்களது வீட்டிற்கு அடிக்கடி வருபவர். அவர் எனது மருமகளின் சகோதரன் என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் வந்தார். இப்போது எனது மருமகளின் பெற்றோர் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வர மறுக்கின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடன் 16 Dec 2025 4:22 pm

அறிவைத் தேடுங்கள், செல்வத்தை அல்ல : காலம் கடந்து நிற்கும் சாக்ரடீஸ் பொன் மொழிகள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் தத்துவஞானி. ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த சாக்ரடீஸ் கி.மு.470இல் பிறந்தார். மேற்கத்திய தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்தவர் சாக்ரடீஸ் என்று சொல்லலாம். “உன்னை அறிந்து கொள்” என்பது அவர் இளைஞர்களுக்கு அளித்த அறுவுரை. தன்னைப் பற்றி, தன்னால் செய்யக்கூடியது என்ன, அபிலாஷைகள் என்ன என்று அறிந்தவன் மட்டுமே புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க முடியும் என்பது அவரது கருத்து.  Socrates இளைஞர்களின் மனதில் நச்சுப் போன்ற கருத்துகளை விதித்தாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரே நாள் விசாரணையில் சாக்ரடீஸூக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. கி.மு 399 ஆம் ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட்டு அவர் இறந்தார். ஆனால், அவர் விட்டுச் சென்ற பொன்மொழிகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றன. உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதில்தான் உண்மையான மெய்யறிவு உள்ளது. சாக்ரடீஸ், பெருவாரியான மக்கள் சாதாரணமாக நினைத்த விஷயங்களைக் கூடக் கேள்வி கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர். ஒருவர், ஒரு விஷயத்தைப் பற்றித் தனக்கு முழுமையாகத் தெரியும் என்று கருதினால் “எல்லாம் எனக்குத் தெரியும்” என்ற மனநிலையில், அதைப் பற்றியப் புதிய கண்ணோட்டங்களை செவி மடுக்க மாட்டார். மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்க மாட்டார். “எல்லாம் எனக்குத் தெரியும்” என்ற மன நிலை, புதிய சிந்தனைக்கு தடை விதிக்கும். நிச்சலமான மனதுடன் எந்த விஷயத்தையும் அணுகுவதே சாலச் சிறந்தது. 2. செல்வத்தை விட அறிவை விரும்புங்கள். ஏனென்றால் ஒன்று நிலையற்றது. மற்றது நிரந்தரமானது. செல்வம் நிலையற்றது. அழியும் தன்மையுடையது. சம்பாதித்த செல்வம் செலவழிக்கும் நிலையில் குறையும். ஆனால், அறிவு நிலையானது. மற்றவர்களுடன் உங்கள் அறிவுச் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது அது குறைவதில்லை. மாறாக மற்றவர்களின் கருத்துக்களால் அறிவு மேம்படுகிறது. தன்னுடைய செல்வ நிலையில் மன நிறைவு கொள்கின்ற செல்வந்தர், புதியதாக எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமில்லாதவராக இருப்பார். ஆனால், அறிவை வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாக கருதும் நபர், அவருடைய நிதி நிலைமையை பொருட்படுத்தாமல், மேலும் கற்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார். ஒருவனுடைய செல்வம் பரம்பரைச் சொத்தாக இருக்கலாம். ஆனால், அறிவு பரம்பரைச் சொத்தல்ல. அறிவு இடை விடாத முயற்சியின் மூலம் பெறப்பட்டது. ஆகவே, நிரந்தரமான அறிவைப் போற்ற வேண்டும்.   கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை ஒருவனுக்கு கல்வியே உயர்ந்த செல்வம். மற்ற செல்வங்கள் நிலையானவை அல்ல. (திருக்குறள்) 3. ஆராயப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது. அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு சுய பரிசோதனை தேவை என்பது சாக்ரடீஸின் முக்கியமான கொள்கை. மனிதன் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது அவர் கருத்து. சாக்ரடீஸ் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளத தவறியதில்லை. நான் ஏன் இந்த முடிவை எடுத்தேன். இதனால் அடைந்தது அல்லது அடையப் போவது என்ன என்று ஆராயும் போது, நாம் நடந்து வந்த பாதையை ஆராய்கிறோம். இந்த சுய பரிசோதனை எதிர் காலத்தில் நாம் எடுக்க வேண்டிய முடிவிற்கு வழி செய்யும். மலர்கள் நிறைந்த தோட்டத்தை கடக்கும் ஒருவன், சற்றே நின்று பூக்களின் அழகை ரசிக்காமல் கடந்து சென்றால், இயற்கையின் அழகை இழக்கிறான் அது போலவே, சுய பரிசோதனை செய்யாதவன், வாழ்க்கை நமக்களித்த பாடத்தை மறக்கிறான். 4. தெளிந்த அறிவு ஆச்சரியத்தில் தொடங்குகிறது. நுண்ணறிவு அல்லது தெளிந்த அறிவு ஆச்சரியத்தில் தொடங்குகிறது. ஆச்சரியம் கற்றலைத் தூண்டுகின்ற தீப்பொறி. வங்கிக்குச் சென்று பணம் எடுப்பவன், வங்கிக்குச் செல்லாமல், தானியங்கி இயந்திரத்தில் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்க முடிகிறதே, அது எப்படி சாத்தியமாகிறது என்று ஆச்சரியப்பட்டால், அது எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து கொள்கிறான். வான வில்லின் வர்ணங்களை ரசிக்கும் குழந்தை, ஆச்சரியத்துடன் இது எப்படி ஏற்படுகிறது என்று கேட்கத் துவங்கும் போது அந்த குழுந்தையின் அறிவு மேம்படுகிறது.  ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகள் அறிவுக் கதவுகளைத் திறக்கும் திறவுகோல் 5. ஒரே நன்மை அறிவு. ஒரே தீமை அறியாமை. இதன் பொருள் அறிவு நன்மையை வளர்க்கிறது. ஆனால், அறியாமை தீமைக்கு வழி வகுக்கிறது. ஒரு விஷயத்தைப் பற்றி சரியான புரிதலிருந்தால் அவனுடைய அறிவு அதன் நன்மை தீமைகளை ஆராயும். இது தேவை அல்லது தேவையில்லை என்ற முடிவை எடுப்பதற்கு வழி வகுக்கும். ஆனால், அதனைப் பற்றிய புரிதல் இல்லாத அறியாமை, அவனிடம் தவறான எண்ணத்தை உருவாக்கும். அந்த தவறான எண்ணம் மற்றவர்களிடையே பரவும் போது அது வன்முறைக்கு வித்திட வழி வகுக்கிறது. இதனால், அறியாமை சமுதாயத்திற்கு தீமை என்கிறார் சாக்ரடீஸ்.  அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் ஏதும் இல்லாதவர் ஆனாலும் அறிவுடையார் எல்லாம் உடையவர் எல்லாம் உடையவர் ஆனாலும், அறிவிலார் ஏதும் இல்லாதவர். (திருக்குறள்) - கே.என்.சுவாமிநாதன், சென்னை தேர்தல்

விகடன் 16 Dec 2025 11:03 am

Parenting: உங்க குழந்தை `I hate you'னு சொன்னா என்ன அர்த்தம்?

இந்த உலகில் அதிகம் கவனிக்கப்படாத வார்த்தைகள், குழந்தைகளின் வார்த்தைகளாகத்தான் இருக்கும். காரணம், எவ்வளவு சீரியஸாக குழந்தை நம்மிடம் ஒரு விஷயத்தைப் பேசவந்தாலும் அதற்குக் காதுகொடுக்காமல் சென்றுவிடுபவர்கள் பலர். அப்படியே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும், அதன் வீரியம் உணராமல், `குழந்தை ஏதோ சீரியல், சினிமாவைப் பாத்துட்டு பேசுதுபோல', 'ஏதோ தெரியாம இப்படிப் பேசியிருக்கும்' என்றே நம்மில் பலரும் அவர்களை நொடிகளில் கடந்துவிடுகிறோம். அவ்வளவு பரபரப்பு நமக்கு! Parenting என்றாலும், சில வார்த்தைகளைக் குழந்தைகள் சொல்லக்கேட்கும்போது மட்டும், `இதை இவர்கள் தெரிந்துதான் பேசுகிறார்களா' என யோசிப்போம். அந்த அளவுக்கு வீரியமுள்ள வார்த்தைகளாக அவை இருக்கும். அப்படியானவைதான், `ஐ ஹேட் யூ' என்ற வார்த்தைகள். `ஹேட்', அதாவது வெறுப்பு என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்தையும் குழந்தைகள் உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், அவர்கள் அதைப் பேசுகிறார்கள் எனும்போது, கவனம் செலுத்தவேண்டிய விஷயம் அது. குழந்தை 'ஐ ஹேட் யூ' எனச் சொன்னால், அதன் அர்த்தம் என்ன? குழந்தைக்கு நம்மீது ஏற்படும் வெறுப்பை எப்படி அணுகலாம்? சில யோசனைகள் சொல்கிறார், மனநல மருத்துவர் பூங்கொடி பாலா. என்ன அர்த்தம்? * வயதுக்கேற்றபடி இதன் பொருள் மாறும். அந்த வகையில், பேச ஆரம்பித்த முதல் சில வருடங்களிலுள்ள குழந்தை எனில், குழந்தைக்கு விருப்பமான ஏதோவொரு பொருளை நீங்கள் கொடுக்கவில்லை என்பதால் அப்படிச் சொல்லியிருக்கலாம். அது, குழந்தை விளையாடும் சிறுபொருளாகக்கூட இருக்கலாம். நீங்கள் தடாலடியாக அதைப் பறித்துக்கொண்டீர்கள் என்ற கோபத்தைத்தான், குழந்தை அப்படிக் குறிப்பிடும். இந்த வயதிலுள்ள குழந்தைகளுக்கு, உங்கள் வார்த்தையின் பின்னுள்ள நியாயத்தை தெளிவாகப் புரியவைக்க முடியாது என்றாலும், `ஐ ஹேட் யூ' என்பது தவறான வார்த்தைப் பிரயோகம் எனச் சொல்லிக்கொடுக்க முடியும். ஆகவே, பெற்றோர் தரப்பில் அதை முயலலாம். Parenting * சற்றே வளர்ந்த குழந்தை என்றால், அவர்களுக்கு விருப்பமான ஒரு பொழுதுபோக்கு விஷயத்தை நீங்கள் செய்யவிடவில்லை என்பதால் அவர்கள் இப்படிப் பேசியிருக்கலாம். அந்தப் பொழுதுபோக்கு, குழந்தையின் நேரத்தை வீணடிக்கிறது என்பதால்கூட நீங்கள் அப்படிச் சொல்லியிருக்கலாம். பிரச்னை என்னவெனில், உங்கள் நிராகரிப்புக்குப் பின்னாலுள்ள நியாயத்தைக் குழந்தைக்கு நீங்கள் புரியவைக்கவில்லை. * டீன் ஏஜ் குழந்தை என்றால், அவர்களுக்குப் பிடித்த மாதிரி அவர்கள் செயல்பட நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், இப்படிப் பேசுவார்கள். அதற்காக, அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் அமைதிகாக்க வேண்டும் என்றில்லை. தவறு இருப்பின், அதை முறையாக சுட்டிக்காட்டலாம். இருப்பினும், விஷயத்தைப் பொறுமையாகவும் நிதானமாகவும் அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நிச்சயம் புரிந்துகொள்வார்கள். Parenting * பெரும்பாலான நேரங்களில், குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லும் `ஐ ஹேட் யூ' என்பது, `ஐ மிஸ் யூ', `எனக்கு வேண்டியதை நீ கொடுக்கவில்லை', `எனக்குப் பிடிச்ச மாதிரி செயல்பட நீ அனுமதிக்கவில்லை' போன்ற வருத்தத்தின், கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். ஏதோவோர் இடத்தில், நீங்கள் உங்கள் குழந்தைக்கு உறுதுணையாக இல்லை, அல்லது முன்பிருந்ததுபோல இப்போது இல்லை என்பதையே இது குறிக்கும். எனவே இனி வரும் நாள்களில், குழந்தையுடன் நீங்கள் செலவழிக்கும் குவாலிட்டி நேரத்தில், அவர்களுடனான நெருக்கமான உறவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குழந்தையை அணுகும் முறை * கீழ்க்காணும் கேள்விகளை குழந்தையிடம் கேட்டு, விடைக்கேற்றபடி உங்களைச் சரிசெய்துகொள்ளுங்கள். நான் செய்த எந்த விஷயம் உன்னைக் காயப்படுத்தியது? உனக்கு இப்போது கோபமாக உள்ளதா, வருத்தமாக உள்ளதா? நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? நீ ஸ்ட்ராங்கான குழந்தை என்ற உண்மையை, இப்போது நீ உணர்கிறாயா? Parenting * புரிந்துகொள்ளும் வயதில் இருக்கும் குழந்தை என்றால், வெறுப்பு என்ற வார்த்தையின் வீரியத்தை அவர்களுக்குச் சொல்லுங்கள். அந்த வார்த்தையை உங்களை நோக்கி அவர்கள் சொன்னதால், உங்களுக்கு மனத்தளவில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் கூறுங்கள். * குழந்தையை, அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் செலவழிக்க அனுமதியுங்கள். ஒரு விடுமுறை நாளில், ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பொறுமையாக அமர்ந்து பேசுங்கள். Parenting: இந்த வகை பெற்றோர்களின் குழந்தைகளே சமூகத்துக்கு வரம்! மீண்டும் குழந்தையுடன் பேசும்போது, கீழ்க்காணும் விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அவை... பூங்கொடி பாலா வார்த்தைகளில் கவனமாக இருப்பது ஏன் அவசியம்? உங்களிடம் ஹேட் யூ சொல்லும் குழந்தையிடம், கீழ்க்காணும் விஷயங்களை அன்பாகச் சொல்லுங்கள். * 'எங்களுக்கு நீ ரொம்ப முக்கியம். எங்கள் வாழ்வின் பொக்கிஷம் நீதான். உன்னுடைய செய்கைகள், உணர்வுகளெல்லாம் எங்களுக்குப் புரிகின்றன. நாங்கள் எப்போதும் உனக்காக, உன்னோடு உடனிருப்போம்! வீ லவ் யூ லாட்!' Parenting: குழந்தைகளை 2 வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? * 'ஹேட் யூ' வார்த்தை உபயோகம், தவறென சொல்லிக்கொடுங்கள்! * பெற்றோர்கள் சிலர், `ஐ ஹேட் யூ' என்று குழந்தைகள் சொன்னால் ரசிக்கிறார்கள். தன் வயதுக்கு மீறிய அந்த வார்த்தைகளைக் குழந்தை சொன்னவுடன், 'குட்டி எப்படியெல்லாம் பேசுது பாரு' என்று சிரித்து மகிழ்கிறார்கள். இப்படிச் செய்வதை பெற்றோர் தவிர்த்தால் மட்டுமே, குழந்தைகள் அதைச் சொல்வதை நிறுத்துவார்கள். எனவே பெற்றோரே... அடுத்த முறை நீங்கள் கவனமாக இருங்கள்! சொல்லிக்கொடுங்கள் பெற்றோரே! கோபத்தை மற்றவர்களின் மீது வெறுப்புக்கொள்ளாமல் எப்படி வெளிப்படுத்தலாம் எனக் பெற்றோர் அல்லாத வேறொரு நபரைப் பார்த்து 'ஐ ஹேட் ஹிம்/ஹெர்' எனக் கூறினால், பெற்றோர் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நபரால் குழந்தைக்கு ஏதாவது அசௌகர்யம் ஏற்பட்டிருந்தால்தான் குழந்தை அப்படிக் குறிப்பிடும். ஆகவே, 'ஏன்டா அவரைப் பார்த்து அப்படிச் சொன்ன? அவர் என்ன பண்ணினார்?' என்று குழந்தையிடம் கவனமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார் பூங்கொடி பாலா.

விகடன் 16 Dec 2025 6:35 am

மின்னல் தாக்கி செல்போன் வெடிக்குமா?

சருமப் பராமரிப்பு என்பது இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டியதா? - கே.ராஜலட்சுமி, புதுச்சேரி பதில் சொல்கிறார், ஆரணியைச் சேர்ந்த சரும மருத்துவர் ஜெகன் ராமன். சருமம் என்பது நாம் வெளியில் பார்க்கும் தோல் மட்டும் கிடையாது. அது நம் உடல் வெப்பத்தை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் வெயிலில் சென்று வந்தால் சருமம் நிறம் மாறியிருப்பதை கவனித்திருப்போம், அது சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்களை நம் உடலுக்குள் இறக்காமல் இருப்பதற்காக, மெலனோ சைட்ஸ் எனப்படும் நிறமிகளை சருமத்தின் மேற் பகுதிக்குக் கொண்டுவரும் ஒருவித பாதுகாப்பு நடவடிக்கையே. இப்படி சருமத்துக்கு நிறைய பணிகள் உண்டு. எனவே, சருமப் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். தினமும் சருமப் பராமரிப்பைப் பின்பற்றுவது அவசியம் என்றாலும், அதை அளவுக்கு அதிகமாகச் செய்வதும் தேவையற்றது. உதாரணத்துக்கு, சிலர், பாதுகாப்பு கருதி, குழந்தைகளை வெளியே விடாமலேயே வைத்திருப்பார்கள். அப்படியெல்லாம் செய்ய வேண்டியதில்லை. நம் ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு தன்மையில் இருக்கும். அதற்கேற்றவாறு தான் சருமப் பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். சன் ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்ச்சரைசர் இரண்டும் மிக முக்கியம். வெயிலில் செல்லும்போது தலையில் தொப்பி அணிவது, உடல் முழுவதும் மூடும்படியான ஆடைகள் அணிவது போன்றவற்றால் வெளிப்புற காரணிகளால் சருமம் பாதிப்படை வதைத் தடுக்கலாம். சருமத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். அடிக்கடி பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக சருமத்தை அடிக்கடி கிளென்ஸ் செய்ய வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். எனவே, சருமப் பராமரிப்பு என்பது எப்போதும் பின்பற்றப்பட வேண்டியதுதான். மொட்டைமாடியில் நின்று செல்போன் பேசியபோது மின்னல் தாக்கி, செல்போன் வெடித்து ஓர் இளைஞர் உயிரிழந்ததாக செய்தி படித்தேன். இது எப்படி சாத்தியம... ? மழை பெய்யும்போது செல்போன் பேசக்கூடாதா? - மல்லிகா அன்பழகன், சென்னை-78 பதில் சொல்கிறார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த `அஃறிணை இன்னோவேஷன்' நிறுவனர் முனைவர் விக்னேஷ் கிருஷ்ணன். மின்சாதன பொருளாகவே இருந்தாலும் செல்போனுக்கு மின்னலை ஈர்க்கும் தன்மை கிடையாது. அதனால் மொட்டைமாடியில் நின்று செல்போன் பேசும்போது, அது வெடிக்கும் என்பதும், அதனால் மனிதர்கள் இறப்பார்கள் என்பதும் தற்போது வரை நிரூபிக்கப்படாதவை. எப்போதும் மின்னல் வரும்போது அது பூமியை நோக்கி இறங்கும். அப்போது வரும் வேகத்தில் மின்கடத்தும் பொருள்கள் ஏதேனும் இருந்தால் அதன்வழியே இறங்கிவிடும். அதனால்தான் பெரிய பெரிய கட்டடங்களில் கூர்மையான முனை போன்ற பகுதியும், மின்னலைத் தாங்கும் அமைப்பும் கொண்டும் கட்டுகின்றனர். மொட்டைமாடியில் நாம் நிற்கும்போது மொட்டைமாடியைவிட அதிக உயரத்தில் நாம் இருப்போம். நம்முடைய உடலும் மின்னலைக் கடத்தும் தன்மையுடையது. அதனால் மின்னல் நம் உடல் வழியே பூமிக்குள் இறங்கும். அதனால்தான் மின்னல் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கின்றனர். மனித உடலில் பாயும் மின்னல், அதிக வோல்டேஜ் உடன் இறங்கும். அப்போது ஏற்கெனவே கையில் இருக்கும் செல்போன் போன்ற மின்சாதன பொருளில், அந்த அதிக வோல்டேஜால் வெடிக்கும். இதனால்தான் மழை பெய்யும்போது உயரமான இடங்களில் இருக்க வேண்டாம் என கூறப்படுகிறது. இடி என்பது வெறும் சத்தம் தான், மின்னல்தான் பூமியில் இறங்குவது. அதனால் இதனை `மின்னல்தாங்கி' என்றே கூற வேண்டும். அப்படித்தான் ஆரம்பத்தில் கூறினார்கள். பேச்சு வழக்கில் அது `இடிதாங்கி' என மாறிவிட்டது.

விகடன் 16 Dec 2025 5:38 am

ரஜினி கண்டிப்பா பூமர்இல்லை! - 90's கிட்ஸ்-இன் நீங்காத நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த திரைப்படம் சந்திரமுகி. அக்காலத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் இத்திரைப்படம் நீங்காத நினைவுகள் கொடுத்திருக்கிறது. அப்படத்தில் வெளியான “தேவுடா.. தேவுடா..” பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு பெற்றது. தினமும் தொலைக்காட்சி பெட்டியில் இப்பாட்டை பார்த்து ரசித்திருப்போம்‌. 90 களில்‌ பிறந்தவர்களின் முதல் மின்னணு விளையாட்டுச் சாதனமான பொம்மை தொலைபேசியில் இப்பாடலை வைத்து விளையாடி இருப்போம். பள்ளிகளில் தனித் திறமைகளை காட்டுவதற்கு இப்படத்தின் பாடல்களையும் வசனங்களையும் பயன்படுத்தி கைத்தட்டல்கள் வாங்குவோம். இவ்வாறு இப்படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. அதில் ஒருநாள் நான், என் அண்ணன் மற்றும் தங்கை மூவரும் அடம்பிடித்து சந்திரமுகி படத்தை காண திரையரங்கிற்கு சென்றோம்.  HBD Rajini | ரஜினி 75 அதிகாலையில் முதல் பேருந்தைப் பிடித்து 30 மைல் பயணம் செய்து திரையரங்கை வந்தடைந்தோம். அவரது ரசிகர்களின் விசில் சத்தம் காதுகளை துளைத்துக் கொண்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயர் திரையில் தோன்றிய போது சத்தம் மேலும்‌ அதிகரித்தது. படம் ஆரம்பித்த உடனே நாங்கள் விரும்பிய தேவுடா..தேவுடா..பாடல் திரையில் தோன்றியது. அந்த பாடலை‌ மனப்பாடம் செய்த என் தங்கை பாடலை சத்தமாக பாடிக் கொண்டிருந்தாள். பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும் போது பாடலில் திடீரென நிறுத்தம் ஏற்பட்டது. பாடலை ஆடியோவாக கேட்ட போது நிறுத்தம் ஏதும் இருக்காது. இது தெரியாத என் தங்கை ஹரே ஹரே ஹரே.. என்று சத்தமாக பாடி விட்டாள். அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்‌. இவ்வாறு அந்தத் திரைப்பட அனுபவம் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கிறது. ரஜினிகாந்த் அவர்களின் படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைக்கும் படங்களாக உள்ளது. எனவே அவரது படங்கள் வசூலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அவரை பின் தொடரும் நடிகர்களும் இவர் பாணியில் படங்கள் தயாரிப்பார்கள். ஒரு படத்திற்கு ஐந்து‌ பாடல்கள் மற்றும் ஐந்து சண்டைக் காட்சிகள் வைத்திருப்பார்கள். ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் நீதி, நியாத்திற்காக சண்டையிடுவது போல் காட்சியமைத்திருப்பர். அவர் படங்களில் வரும்‌ பெரும்பாலான பாடல்கள் தத்துவப் பாடல்கள் ஆகும். அவருடைய ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் யதார்த்த படங்களாக இருந்தன. அவருடைய கதைத் தேர்வு பார்ப்பவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது. அவருடைய பல படங்களில் வழிகாட்டுதல்கள் இல்லாத இளைஞராக நடித்திருப்பார். புவனா ஒரு கேள்விக்குறி வறுமையிலும் நேர்மை தவறாத மனிதராக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பார். அவருடைய ‘ புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் சாலையோர வியாபாரியாக இருந்து வறுமையில் தவறான வாழ்க்கை வாழ்வதை தடுக்கும் விதமாக நடித்திருப்பார். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ஒருவரின் இளமை காலத்தில் ஏற்படும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு சரியான பாதையில் சென்றால் இறுதியில் வெற்றி நிச்சயம் என்ற செய்தியை சொல்லி விட்டுச் சென்றிருப்பார். ரஜினி இன்றைய தலைமுறை இயக்குனர்கள் போதை பொருட்களை எதிர்க்கும் படங்களில் காட்டப்படும் Code Red கருத்தியலுக்கு படிக்காதவன் படத்தில் சாதாரண டாக்ஸியில் எரியும் சிவப்பு வண்ண விளக்கில் பதிவு செய்திருப்பார். முந்தைய தலைமுறையில் பிறந்தவர்கள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டாததால் பூமர்கள் என்று சிலரால் ஏளனமாக அழைக்கப்படுகின்றனர். எல்லா காலங்களிலும் இளைஞர்களை கவர்ந்து வழிநடத்தும் ரஜினிகாந்த் அவர்கள் என்றும் ‘சூப்பர் ஸ்டார் தான்.   -சுபி தாஸ்  

விகடன் 15 Dec 2025 3:49 pm

`ஓய்வுக்காலத்தில் மருத்துவம், பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம்' - எந்த நாடு பெஸ்ட்? ஆய்வு சொல்லும் தகவல்

இன்றைய காலகட்டத்தில், ஓய்வூதியம் என்பது பணியிலிருந்து விடைபெற்று ஒதுங்குவது மட்டுமல்ல; அது வாழ்க்கையின் புதிய தொடக்கமாக மாறிவிட்டது. சமீபத்தில் உலகளாவிய ஓய்வூதிய குறியீடு (Global Retirement Index) வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தை கிரீஸ் பிடித்துள்ளது. எப்போதும் டாப் இடங்களில் இருந்த போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளை பின்தள்ளி, ஏழாவது இடத்தில் இருந்த கிரீஸ் முதல் இடத்திற்கு வந்துள்ளது. இந்தக் குறியீடு, ஓய்வுக்காலத்திற்கு பிறகு தனிநபருக்கு கிடைக்கும் மருத்துவம், காலநிலை, பாதுகாப்பு, நிதி, வாழ்க்கைத் தரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான் கிரீஸ் முதல் இடத்தைப் பிடித்திருப்பதற்கு அங்குள்ள மலிவான வாழ்வாதாரச் செலவு முக்கிய காரணம். இது அந்த நாட்டில் உள்ள ஓய்வுபெற்றவர்களுக்கு மட்டும் அல்ல, பிற நாடுகளில் இருந்து அங்கு குடியேறும் ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும். கிரீஸ் நாட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய குடியிருப்புகள், கோல்டன் விசா திட்டம், குறைந்த செலவில் மருத்துவம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கின்றன. இந்தக் குறியீட்டில் அடுத்தடுத்த இடங்களில் அயர்லாந்து, நார்வே போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. US: `H-1B visa' மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி

விகடன் 11 Dec 2025 12:30 pm

`மன அழுத்தத்திற்கு குட்பை!'ஜென் Z இளைஞர்களை ஈர்க்கும் ஜப்பானிய `வாபி ஷாபி'தத்துவம் - அது என்ன?

சமூக வலைதளங்களில் எப்போதும் பாசிட்டிவான விஷயங்களை அல்லது வாழ்க்கையை மட்டுமே காட்ட வேண்டும் என்ற அழுத்தத்திற்கு மத்தியில், ஒரு புதிய தத்துவம் இளைய தலைமுறையினரிடையே வேகமாகப் பரவி வருகிறது. அதுதான் ஜப்பானின் ‘வாபி–ஷாபி’ (Wabi-Sabi) என்ற தத்துவம்.. தற்போது இது ஜென் Z தலைமுறையினரிடம் பரவி வருகிறது. அதாவது குறைகளை அழகாகக் கருதி, இயற்கையான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக்கொடுக்கும் இந்த தத்துவம், ஜென் Z தலைமுறையினரிடம் புதிய ட்ரெண்டாக உருவாகியுள்ளது. Gen Z இன்ஸ்டாகிராமிலும் டிக்டாக்கிலும் ஃபில்டர் போட்ட புகைப்படங்களும், பாசிட்டிவான வாழ்க்கை முறைகளை மட்டுமே காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான இளைஞர்கள், இப்போது 'வாபி-ஷாபி' என்ற தத்துவத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். எதுவும் பெர்ஃபெக்ட் இல்லை, குறைகளே இயல்பு, அதுவும் அழகுதான் என்ற இந்த தத்துவம் தற்போது ட்ரெண்ட் ஆனாலும் இது 400 ஆண்டுகள் பழமையான தத்துவம் தான், மீண்டும் இது இந்தாண்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 'வாபி-ஷாபி' 'வாபி-ஷாபி' என்பது ஜப்பானிய பௌத்தத்திலிருந்து உருவான ஒரு வாழ்க்கை முறை தத்துவம் என கூறப்படுகிறது. வாபி என்பதன் பொருள், குறைந்த வசதிகளோடு, எளிமையாக வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண்பது ஆகும். ஷாபி என்பதன் பொருள், காலம் செல்லச் செல்ல மனிதர்களுக்கும் ஏற்படும் மாற்றங்கள், குறைகள் ஆகியவற்றை அழகாகப் பார்ப்பது ஆகும். டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பெர்ஃபெக்ஷன் என்று பரவி வந்த கலாச்சாரத்திற்கு எதிர்வினையாக ஜென் Z இளைஞர்கள் 'வாபி-ஷாபி' தத்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் #my wabi-sabi சமூக வலைதளங்களில் பரவுவது எப்படி? டிக்டாக்கில் பயனர்கள் #my wabi-sabi என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கையின் உண்மையான பக்கங்களைப் பகிர்ந்து வருகின்றனர். கலைந்த படுக்கையறை, பழைய புத்தகம், செல்லப் பிராணியின் சேட்டைகள் என ஃபில்டர் செய்யப்படாத யதார்த்தமான காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர். இது மற்றவர்களுக்கு எல்லோரும் இப்படி தான் இயல்பாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அளிக்க உதவுகிறது. இந்த ட்ரெண்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் சொல்லுங்கள்! போனில் `ஹலோ' சொல்ல மறுக்கும் ஜென் Z தலைமுறையினர்; காரணம் என்ன? - விளக்கும் கம்யூனிகேஷன் ரிசர்ச்

விகடன் 10 Dec 2025 1:23 pm

நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை: மின்னொளியில் ஒளிரும் ஸ்டார்கள், குடில்கள், மரங்கள்.!

நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை |மின்னொளியில் ஒளிரும் ஸ்டார்கள், குடில்கள், மரங்கள்.!

விகடன் 10 Dec 2025 12:09 pm

அந்த நினைவுகள் ஏன் நினைவில் இருப்பதில்லை? - ஆய்வுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்

நம்மில் பலருக்கும் நமது குழந்தை பருவகாலங்கள் எப்படி இருந்தன என்பது துளியும் நினைவில் இருப்பதில்லை. சில காட்சிகள் மட்டுமே நினைவில் இருக்கும் அல்லவா? இதன் உலகம் என்று பல விஷயங்களை அவ்வபோதுதான் பார்த்திருப்போம், கற்றுக்கொண்டிருப்போம்.. ஆனால் ஏன் அந்த காலக்கட்ட நினைவுகள் மட்டும் முற்றிலும் நம் மனதிலிருந்து அழிந்துவிடுகின்றன? இந்தக் கேள்விக்கான விடையை ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். ஆயுட்கால உளவியல் துறையின் ஆராய்ச்சியாளரான சாரா பவர் கூற்றுப்படி, பொதுவாக நாம் மறந்துபோகும் இந்த விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கட்டங்களாகப் பார்க்கின்றனர். Brain மூன்று வயதுக்குட்பட்ட பருவத்தில் நடக்கும் சம்பவங்கள் முழுமையாக நினைவில் இருந்து நீங்குவதை 'இன்ஃபான்டைல் அம்னீஷியா' என்றும், மூன்று முதல் ஆறு வயது வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் கொஞ்சம் கொஞ்சம் நினைவுகளை 'சைல்ட்ஹுட் அம்னீஷியா' என்றும் அழைக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் நமது மூளை தகவல்களைப் பதிவு செய்தாலும், வளர்ந்த பிறகு அவற்றை மீண்டும் மீட்டெடுக்கும் திறனை இழந்துவிடுகிறது என்று கூறுகின்றனர். பலர் தங்களுக்கு இரண்டு வயதில் நடந்த பிறந்தநாள் விழா அல்லது சுற்றுலா சென்றது நினைவிருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் ஆய்வாளர் சாரா பவர் என்ன கூறுகிறார் என்றால், இது பெரும்பாலும் உண்மையான நினைவாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சிறுவயது புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதாலோ அல்லது பெற்றோர்கள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதைக் கேட்பதாலோ நமது மூளை தானாகவே ஒரு போலியான காட்சியை உருவாக்கிக்கொள்வதாகக் கூறுகிறார். இதனை 'போலி நினைவுகள்'என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு முறை நாம் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதும், நினைவுகள் வரும். ஆனால் நமக்கு நினைவிருப்பது உண்மையான சம்பவமா அல்லது புகைப்படத்தைப் பார்த்ததால் உருவான பிம்பமா என்பதைப் பிரித்தறிவது கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சாரா பவர் மற்றும் அவரது குழு இணைந்து, சுமார் 360 குழந்தைகளை வைத்து ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏன் மறக்கிறோம்? இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியமான காரணம், 'எபிசோடிக் மெமரி'எனப்படும் குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் வைக்கும் திறன், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முழுமையாக வளர்ச்சி அடைந்திருப்பதில்லை. அதனால்தான் நாம் எப்படி நடக்கக் கற்றுக்கொண்டோம், எப்படி பேசினோம் என்பது நினைவில் தங்குவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உங்களின் குழந்தை பருவம் நினைவில் இருக்கிறதா? என்று கமென்ட்டில் சொல்லுங்கள்!

விகடன் 9 Dec 2025 12:37 pm

ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பசுமையான இயற்கை அழகு, வனப்பகுதிகள், தெளிவான கடற்கரைகள் மற்றும் மலைகள் என இயற்கையின் அருளால் ஆசிர்வதிக்கப்பட்ட கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு விடுமுறை நாட்களில் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம். பசுமைக் காடுகளும், சலசலத்து ஓடும் அருவிகளும், நெடிதுயர்ந்த மலைச் சிகரங்களும், வண்ண மலர் கூட்டங்களும் நிறைந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இருக்கத் தோன்றும் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கேரளாவின் நீண்ட அழகிய கடற்கரைகள் நிறைந்த வர்கலாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சோழன் டிராவலைச் சேர்ந்த விஜய் மற்றும் ரவி செய்த உதவிகள் மறக்க முடியாதவை. வர்கலா, கேரள தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 51 கிமீ தொலைவில் அமைந்த அழகிய கடற்கரை நகரம். வட இந்தியாவுக்கு கோவா போல தென் இந்தியாவுக்கு வர்கலா என்று இங்குள்ள மக்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். கீச் கீச் என்று சப்தமிட்டபடி பறவைகள் பறந்து செல்ல. நம்மை சுற்றி பச்சை பசேல் என இருக்கும் இடத்தின் வழியே மலைக் குன்றுகள் சூழ காட்சியளிக்கும் அரபிக்கடல் கடற்கரையில் காலார நடந்து செல்லும் இனிமையான அனுபவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது ஒவ்வொருவரையும் நோயிலிருந்து ஆரோக்கியமாக மாற்றி, சுத்தமான மாசுபடாத காற்றைச் சுவாசிக்கச் செய்யும் ஒரு இடமாகும். நாரதர் தனது வல்கலமை (மரப் பட்டையால் செய்யப்பட்ட ஆடை) இந்த இடத்தில் எறிந்ததாகச் சொல்லப்படுகிறது.  ​வல்கலம் எறியப்பட்ட இந்தக் கிராமத்திற்குச் சென்று வந்தால், பிரஜாபதிகளின் பாவம் நீங்கும் என்று நாரதர் கூறியபடியே, பிரஜாபதிகள் தங்கள் பாவத்தை நீக்கிக் கொண்டு, இந்தக் கிராமத்திற்கு வர்கலா என்று பெயரிட்டனராம்.  ​எனவே, இந்த இடம் ஆன்மீக நடைமுறைகள் மற்றும் இயற்கையான மூலிகைகளால் நிறைந்து, அனைவரையும் அமைதி நிலையில் வைத்திருக்க உதவுகிறது.   வர்கலாவில் சிவகிரி மடம்,  ஜனார்த்தன ஸ்வாமி கோயில்,  வர்கலா பீச், பாபநாசம் பீச், கபில் ஏரி,  வர்கலா சுரங்கப்பாதை, மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. வர்கலா பீச் அமைதியான அரபிக் கடலிலிருந்து வெண்நுரைகளுடன் கரையைத் தழுவிச் செல்லும் அலைகள், கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் சிறிய குன்றுகள்,  நீலநிற வானம் என்று இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பீச் சுற்றுலா .பயணிகளை ஈர்க்கிறது. வர்கலா கடற்கரையில் பாராசூட், படகு  சவாரி போன்ற  பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம். ஜனார்தனன் கோயில் இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது. மிகவும் அமைதியான சூழவில் திருவிளக்குகளின் ஒளியிவ் பகவான் விஷ்ணுவை வணங்கியது பரவசமாக இருந்தது  கபில் பீச் அமைதியான மற்றும் அழகான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். கூட்டம் அதிகம் இல்லாத கடற்கரையைத் தேடுபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். கடற்கரையும், அதன் அருகில் ஓடும் பேக்வாட்டர்ஸையும் ஒருங்கே கொண்டுள்ளது.. அழகான சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காணலாம்.. ஜடாயு பார்க் ராமாயணத்தில், ஜடாயு (ராட்சத அளவிலான பறவை) பெரும் அசுரனான ராவணனுடன் சண்டையிட்டு இந்த இடத்தில் விழுந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இயற்கை பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும். இங்கு பிரம்மாண்டமான ஜடாயு பறவையின் சிலை முக்கியமான ஈர்ப்பு., கேபிள் காரில் மேலே ஏறும் வசதியும் உள்ளது.. நாங்கள் ஜடாயு மலை உச்சிக்கும் பயணம் செய்தோம். கேபிள் கார் மூலம் மலையின் மீது ஏறுவது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ​ ஜடாயுவின் அற்புதமான அமைப்பு உண்மையிலேயே மனதைக் கவரக்கூடியது. இந்த இடம் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. ​இங்கு இயற்கையின் அழகை உண்மையிலேயே அனுபவிக்க முடியும். அடிக்கடி மழை பெய்யும் மற்றும் மலையைச் சுற்றி குளிர்ந்த காற்று வீசும். ​மலை உச்சியிலிருந்து பசுமையான விரிந்து பரந்த காடுகளைக் காணலாம். நாங்கள் இங்கு சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும்போது பெருமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. கேபிள் காருக்காக ஒரு இடத்தில் காத்திருந்தோம். எங்களுக்கு முன் சென்றவர்களின் கேபிள் கார் பழுதடைந்துவிடவே பாதியிலேயே நின்று விட்டது.. மேலும் மழையும் வலுக்கவே மற்ற கேபிள் கார்களையும் நிறுத்தி விட்டாகள். வெகு நேரம் மலையின் மேல் காத்திருந்தோம். வெகு நேரம் கழித்து ஒரு மினி வேனில் அந்த குறுகிய மலைப் பாதை வழியாக கீழே அழைத்துச் செல்லப்பட்டோம். கொட்டும் மழையில் மலைச் சரிவுகளின் குறுகிய பாதையில் வண்டி ஒரு பக்கமாக சாய்ந்தவாறு மெதுவாகக் கீழே இறங்கியது. எங்களுக்கு வண்டியிலிருந்து இறங்கும் வரை திகிலாக இருந்தது. அழகான கடற்கரைகள், அமைதியான வனப்பகுதி, எங்கும் பசுமையான இடங்கள், உயர்ந்த மலைகள் ,குன்றுகள், கோயில்கள் மற்றும் கேரள உணவுடன் உபசரிக்கும் மலையாள சேட்டன்கள் என சற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது வர்கலா.. -வி. ரத்தினா ஹைதராபாத் தேர்தல்

விகடன் 8 Dec 2025 6:07 pm