SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

'டிட்வா'புயல் : புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்!

சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல் சீற்றத்துடன் காணப்படும் கடல்

விகடன் 28 Nov 2025 4:57 pm

Cyclone Ditwah: புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்! - `டிட்வா'புயல் எப்போது கரையை கடக்கும்?

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவாகியிருக்கும் `டிட்வா' (Cyclone Ditwah) புயல் நவம்பர் 30-ம் தேதி அதிகாலை புதுச்சேரிக்கும், ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதையடுத்து புதுச்சேரிக்கு `ரெட் அலர்ட்' கொடுத்திருக்கும் வானிலை மையம், நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 29,30) அதிக கனமழை பெய்யும் என்று எச்சரித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை தந்திருக்கின்றன. ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், பேரிடர் மேலாண்மை துறை ஆணையருமான குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர் குலோத்துங்கன், ``முக்கியத் துறைகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். அது 24 மணி நேரமும் இயங்க வேண்டும். பொதுமக்கள் கேட்கும் அனைத்து உதவிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் இருக்கும் அடைப்புகளை வெள்ளிக்கிழமைக்குள் நீக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும், பொதுப்பணித்துறை தேவையான மோட்டார் பம்ப் செட்டுகளை அந்தந்த கொம்யூனிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் தாழ்வான பகுதிகளில் தேவையான உணவுகளைத் தயார் செய்து தர தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மின்துறை தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேவையான ஜென்செட்டுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடம் மீட்புக் குழுவுடன் ஆட்சியர் குலோத்துங்கன் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல்துறை முக்கிய நடைபாதைகளில் பொதுமக்கள் இரவு படுத்து தூங்குவதை இந்த மழை முடியும் வரை தவிர்க்க வேண்டும். மேலும், பாகூர், வில்லியனூரில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதைக் காவல்துறை கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்துறை தேவையான மருந்து மாத்திரைகளுடன் அந்தந்த கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார். புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: `மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்' - ஆட்சியர் எச்சரிக்கை

விகடன் 28 Nov 2025 2:57 pm

டித்வா புயல்: பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை; ராமேஸ்வரத்தில் பலத்த காற்றுடன் தொடர் மழை

இலங்கை அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக உருவெடுத்துள்ளது. ‘டித்வா’ என அழைக்கப்படும் இந்த புயல், இலங்கையின் வட பகுதியில் இருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல், வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் ஆந்திரக் கடலோர பகுதிகளில் கரையை கடந்துசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இந்த புயலின் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. காற்றுடன் இடைவிடாத மழையும் பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. அதே போல் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த நீர் இவற்றை அகற்றும் பணிகளில் நகராட்சி தலைவர் நாசர்கான் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மழை நீரால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியாக மாறியுள்ளன. புயல் காற்றினை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தின் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் புகுந்த மழை நீர் மேலும் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்புடன் கட்டுப்படுத்து நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார். சாலையில் சாய்ந்த மரம் இதனிடையே பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 63 கி.மீ. வேகத்தில் காற்று பதிவானதை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து செல்ல வேண்டிய மதுரை பயணிகள் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டது. சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை ராமேஸ்வரம் வர வேண்டிய 3 ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பயணிகள் பேருந்து மூலம் ராமேஸ்வரம் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டை நோக்கி நகரும் `Ditwah' புயல்; எப்போது வருகிறது? 2 நாள்கள் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை!

விகடன் 28 Nov 2025 9:43 am

தமிழ்நாட்டை நோக்கி நகரும் `Ditwah'புயல்; எப்போது வருகிறது? 2 நாள்கள் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 'இது தொடரும்' என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். சிவகங்கை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். மழை வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி? டித்வா புயல் தற்போது 'டித்வா' புயல் இலங்கை கடல் பகுதி மற்றும் வங்கக் கடலின் தென்மேற்கு திசையில் இருந்து வருகிறது. இது நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டை நோக்கி நகரும். இந்தப் புயல் வரும் 30-ம் தேதி, தமிழ்நாடு கடல் பகுதிகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பக்கம் வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால், நாளை (நவம்பர் 29, 2025), திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய தமிழ்நாட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யலாம். தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யலாம். மழை Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? நாளை மறுநாள் (நவம்பர் 30, 2025) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. Special Bulletin No.7 dated 28.11.2025 pic.twitter.com/PrJC6oh9Ra — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 27, 2025 pic.twitter.com/ylsE7syAbT — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 28, 2025

விகடன் 28 Nov 2025 8:09 am

Rain Alert: வங்கக் கடலில் உருவான 'டிட்வா'புயல் - எப்போது கரையைக் கடக்கும்?

தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும், அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருக்கிறது. இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள 'டிட்வா' என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. புயல் சென்னைக்கு 700 கி.மீ தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு, வட மேற்கு திசையை நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடல் வழியாக புயல் நகரும் என்று கூறப்படுகிறது. இந்தப் புயல் 30 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்திருக்கிறது.

விகடன் 27 Nov 2025 3:19 pm

Rain Alert: தமிழகத்தில் ரெட் அலர்ட்; உருவாகிறதா டிட்வா புயல்?

தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும், அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயலாக வலுப்பெறும் பட்சத்தில் ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள 'டிட்வா' என்ற பெயர் சூட்டப்படும் என்று கூறப்படுகிறது. சென்னைக்கு 730 கி.மீ தொலைவில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. புயல் இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (நவ.28) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 21 செ.மீக்கும் மிக அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த 2 நாட்கள் மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நவம்பர் 29-ம் தேதி தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். Rain Alert - மழை இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 30-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

விகடன் 27 Nov 2025 1:50 pm

டெல்லி: காற்று மாசினால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது - தலைமை நீதிபதி வருத்தம்!

டெல்லியில் காற்றுமாசு காரணமாக வழக்குகளை காணொலி காட்சி (Virtual) மூலம் விசாரிக்க வலியுறுத்திய இரண்டு வாரங்களுக்குள், வழக்குகளை விசாரிப்பது மட்டுமல்லாமல் டெல்லியில் வசிப்பதே அவதியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த். காலையில் நடைபயிற்சி செய்யும்போது தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறியுள்ளார். நீதிமன்றத்தில் காற்றுமாசு எதிரொலி தலைநகரில் தொடர்ந்து 12வது நாளாக காற்றின்தரம் 'மிகவும் மோசமான' நிலையில் நீடித்துவருகிறது. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற விசாரணைகளை விர்ச்சுவல் முறைக்கு மாற்றுவதற்கு வழக்கறிஞர் சங்கம் ஒப்புக்கொண்டால், நீதிமன்றம் ஒரு பொதுவான விதியை உருவாக்கலாம் என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்றம் முன்னதாக, மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, 60 வயதுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வருவதைத் தவிர்த்து, காணொலிக் காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார். நேற்று (நவ. 25), மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தொண்டை வலியால் தன்னால் பேசுவதற்குச் சிரமமாக இருப்பதாக நீதிமன்றத்தில் நகைச்சுவையாகத் தெரிவித்தபோது, அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், டெல்லியில் இப்போதெல்லாம் எல்லோருக்கும் இருக்கும் பிரச்னைதான் அது என்று கிண்டலாகக் கூறினார். முன்னதாக, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நிலைமை மிக மிக தீவிரமானது! ஏன் நீங்கள் அனைவரும் இங்கே நேரில் ஆஜராகிறீர்கள்? எங்களிடம் விர்ச்சுவல் விசாரணை வசதி உள்ளது. தயவுசெய்து அதைப் பயன்படுத்துங்கள். இந்த மாசுபாடு நிரந்தரமாக உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். கபில் சிபல் நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பல வழக்கறிஞர்கள் முகமூடி (Mask) அணிந்திருப்பதைச் சுட்டிக் காட்டியபோது, அதற்கு நீதிபதி நரசிம்மா, முகமூடிகள் கூடப் போதுமானதாக இருக்காது. அவை உதவாது. இது குறித்துத் தலைமை நீதிபதியிடமும் நாங்கள் விவாதிப்போம் என்று பதிலளித்தார். Delhi 'மிகவும் மோசமான' நிலையில் நீடிக்கும் காற்றின் தரம்! டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 353 ஆக இன்றும் 'மிகவும் மோசமான' நிலையிலேயே இருந்தது. இந்த நிலை தொடர்ச்சியாக 12-வது நாளாக நீடிக்கிறது. டெல்லி-க்கான காற்றுத் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (Air Quality Early Warning System), நவம்பர் 26 முதல் 28 வரை காற்றுத் தரம் மிகவும் மோசமாகவே இருக்கும் என்று கணித்துள்ளது. அதற்குப் பிந்தைய ஆறு நாட்களுக்கு, AQI மதிப்புகள் 'மிகவும் மோசமானது' (very poor) மற்றும் 'தீவிரம்' (severe) ஆகிய பிரிவுகளுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காற்றுமாசுக்கு காரணம் என்ன? இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (IITM) தரவுகளின்படி, டெல்லியின் காற்று மாசுபாட்டிற்குக் காரணமாக இருந்தவற்றில், வாகனங்களின் புகை வெளியேற்றம் செவ்வாய்க்கிழமை அன்று 19.6% பங்களித்தது. இது மற்ற அனைத்து மூலங்களை விடவும் அதிகமாகும். அதேசமயம், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்பட்ட பங்கு 1.5% ஆக இருந்தது. புதன்கிழமைக்கான கணிப்புகளின்படி, வாகனப் புகை வெளியேற்றம் 21.1% ஆக இருக்கும் என்றும், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் பங்கு 1.5% ஆகவே நீடிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், வரவிருக்கும் நாட்களில் காற்றுத் தரத்தின் நிலை சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், AQI 'தீவிரமான' அளவை எட்டும்போது மக்கள் குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Delhi Air Pollution: அபாயகர அளவில் காற்றுமாசு; அலுவலகங்களில் 50% Work From Home - அறிவுறுத்தும் அரசு

விகடன் 26 Nov 2025 8:26 pm

வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! - தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்?

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியது. அது இன்று வளிமண்டல மேலடக்கு சுழற்சியுடன் கூடிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் அது வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், அது மேலும் வலுப்பெற்று, 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி வரலாம். மழை - கோப்புப் படம் `இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு இதனால் சென்னை வானிலை மையம் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். நாளை மறுநாள் (நவம்பர் 28) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள கடலோர பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். வரும் நவம்பர் 29-ம் தேதி, வட தமிழ்நாட்டில் பல இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யலாம். ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. மழை இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். புதுக்கோட்டை, திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யலாம். வரும் நவம்பர் 30-ம் தேதி வட தமிழ்நாட்டில் பல இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யலாம். திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம். DAILY WEATHER REPORT FOR TAMILNADU, PUDUCHERRY & KARAIKAL AREA https://t.co/LOvDNF1Sqf pic.twitter.com/8npWkRvOWR — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 26, 2025

விகடன் 26 Nov 2025 3:37 pm

Fei-Fei Li: நிறுவனம் ஆரம்பித்த ஓரே ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்! - யார் இந்த AI உலகின் `ராஜமாதா'?

எங்கும் ஏஐ... எதிலும் ஏஐ... என தற்போது ஏஐ துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அந்தத் துறையில் முக்கியமான ஒருவர் தான் ஏஐ துறையின் 'ராஜமாதா' என்று அழைக்கப்படும் ஃபெய் - ஃபெய் லி. யார் இந்த ஃபெய் - ஃபெய் லி? சீனாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லி, பொருளாதார தேவைகளுக்காக தனது 15 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய இளம் வயதில் நியூ ஜெர்சியில் அவர்கள் குடும்பத்திற்கு இருந்த சொந்தமான சின்ன டிரைவாஷ் கடையில் உதவிகளை செய்து வந்தார். இங்கே வேலை செய்த நேரம் போக, மீதி நேரங்களில் அவர் இருப்பிடத்திற்கு அருகே இருந்த சீன உணவகங்களில் பணிபுரிந்துள்ளார். ஃபெய் - ஃபெய் லி Gold Rate: மீண்டும் உயரும் தங்கம் விலை; காரணம் என்ன? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? கல்லூரி படிப்பு வீட்டிற்கு உதவி, சின்ன சின்ன வேலைகள் என எது செய்து வந்தாலும், படிப்பை மட்டும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. லி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பையும், கலிஃபோர்னியாவில் உள்ள கால்டெக்கில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த பின், கூகுள் கிளவுட் நிறுவனத்தில் ஏஐ பிரிவில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். 2018-ம் ஆண்டு சில காரணங்களுக்காக அந்தப் பணியில் இருந்து விலக, ஏ.ஐ மீது அவருக்கு இருந்த பற்று கொஞ்சம் கூட குறையவில்லை. அதனால், அந்தத் துறையில் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். ஏ.ஐ-க்கே பயிற்சியளிக்கும் கருவி 2007-ம் ஆண்டு, லி தன்னுடன் வேலை பார்ப்பவர்களையும் சில மாணவர்களை இணைத்து 'இமேஜ்நெட்' என்கிற திட்டத்தை உருவாக்கினார். இது 14 மில்லியனுக்கும் அதிகமான லேபிள் இடப்பட்ட படங்களைக் கொண்டு மிகப்பெரிய தொகுப்பு ஆகும். இது தான் பின்னாளில் ஏ.ஐ-க்கே பயிற்சி அளிப்பதற்கான முக்கிய கருவியாக மாறியது. இமேஜ்நெட் வருவதற்கு முன், ஏஐ படங்களில் உள்ள பொருள்களை புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டது. ஆனால், இமேஜ்நெட்டிற்கு பின், ஆப்ஜெக்ட் டிடெக்‌ஷன், முகம் அடையாளம் காணுதல் போன்ற பல விஷயங்கள் ஏஐ-க்கு ஈசியாகின. 'குயின் எலிசபெத்' பட்டம் பெற்ற போது மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்! 'குயின் எலிசபெத்' ஃபெய் - ஃபெய் லி லியின் ஆர்வம் மற்றும் கடின முயற்சியால் கடந்த ஆண்டு 'World labs' என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஆரம்பித்த ஓராண்டிலேயே பெரிய பெரிய உயரங்களை தொட்டது இந்த நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே 1 பில்லியன் டாலர். நிறுவனத்தில் பணிபுரிவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இதுவரை சில பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள 'குயின் எலிசபெத்' பட்டத்தையும் பெற்றுள்ளார். வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி?

விகடன் 26 Nov 2025 11:07 am

Fei-Fei Li: நிறுவனம் ஆரம்பித்த ஓரே ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்! - யார் இந்த AI உலகின் `ராஜமாதா'?

எங்கும் ஏஐ... எதிலும் ஏஐ... என தற்போது ஏஐ துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அந்தத் துறையில் முக்கியமான ஒருவர் தான் ஏஐ துறையின் 'ராஜமாதா' என்று அழைக்கப்படும் ஃபெய் - ஃபெய் லி. யார் இந்த ஃபெய் - ஃபெய் லி? சீனாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லி, பொருளாதார தேவைகளுக்காக தனது 15 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய இளம் வயதில் நியூ ஜெர்சியில் அவர்கள் குடும்பத்திற்கு இருந்த சொந்தமான சின்ன டிரைவாஷ் கடையில் உதவிகளை செய்து வந்தார். இங்கே வேலை செய்த நேரம் போக, மீதி நேரங்களில் அவர் இருப்பிடத்திற்கு அருகே இருந்த சீன உணவகங்களில் பணிபுரிந்துள்ளார். ஃபெய் - ஃபெய் லி Gold Rate: மீண்டும் உயரும் தங்கம் விலை; காரணம் என்ன? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? கல்லூரி படிப்பு வீட்டிற்கு உதவி, சின்ன சின்ன வேலைகள் என எது செய்து வந்தாலும், படிப்பை மட்டும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. லி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பையும், கலிஃபோர்னியாவில் உள்ள கால்டெக்கில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த பின், கூகுள் கிளவுட் நிறுவனத்தில் ஏஐ பிரிவில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். 2018-ம் ஆண்டு சில காரணங்களுக்காக அந்தப் பணியில் இருந்து விலக, ஏ.ஐ மீது அவருக்கு இருந்த பற்று கொஞ்சம் கூட குறையவில்லை. அதனால், அந்தத் துறையில் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். ஏ.ஐ-க்கே பயிற்சியளிக்கும் கருவி 2007-ம் ஆண்டு, லி தன்னுடன் வேலை பார்ப்பவர்களையும் சில மாணவர்களை இணைத்து 'இமேஜ்நெட்' என்கிற திட்டத்தை உருவாக்கினார். இது 14 மில்லியனுக்கும் அதிகமான லேபிள் இடப்பட்ட படங்களைக் கொண்டு மிகப்பெரிய தொகுப்பு ஆகும். இது தான் பின்னாளில் ஏ.ஐ-க்கே பயிற்சி அளிப்பதற்கான முக்கிய கருவியாக மாறியது. இமேஜ்நெட் வருவதற்கு முன், ஏஐ படங்களில் உள்ள பொருள்களை புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டது. ஆனால், இமேஜ்நெட்டிற்கு பின், ஆப்ஜெக்ட் டிடெக்‌ஷன், முகம் அடையாளம் காணுதல் போன்ற பல விஷயங்கள் ஏஐ-க்கு ஈசியாகின. 'குயின் எலிசபெத்' பட்டம் பெற்ற போது மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்! 'குயின் எலிசபெத்' ஃபெய் - ஃபெய் லி லியின் ஆர்வம் மற்றும் கடின முயற்சியால் கடந்த ஆண்டு 'World labs' என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஆரம்பித்த ஓராண்டிலேயே பெரிய பெரிய உயரங்களை தொட்டது இந்த நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே 1 பில்லியன் டாலர். நிறுவனத்தில் பணிபுரிவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இதுவரை சில பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள 'குயின் எலிசபெத்' பட்டத்தையும் பெற்றுள்ளார். வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி?

விகடன் 26 Nov 2025 11:07 am

முதுமலை: 391 இடங்களில், 782 ஆட்டேமெட்டிக் கேமராக்கள் - டிஜிட்டல் முறையில் புலிகள் கணக்கெடுப்பு!

தமிழ்நாட்டின் முதுமலை, சத்தியமங்கலம் , கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் மற்றும் கேரளாவின் முத்தங்கா வன உயிர் சரணாலயம் ஆகிய வனங்களை உள்ளிடக்கிய பகுதியே உலக அளவில் வங்கப் புலிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்டிருக்கும் பகுதியாக இருந்து வருகிறது. கண்காணிப்பு கேமிரா பொருத்தம் ஒருங்கிணைந்த இந்த வனப்பரப்பில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வந்தாலும், காடு போதாமை, மனித செயல்பாடுகள், பெருகி வரும் களைத் தாவரங்கள் போன்றவை பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டிகளின் அடிப்படையில் புலிகள் காப்பகங்களில் உள்ள புலிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி ஒவ்வொரு புலியையும் அதன் பிரத்யேக வரிகளைக் கொண்டு அடையாளம் காண்பதுடன் எண்கள் அடிப்படையில் அடையாளம் சூட்டி தரவுகளை டிஜிட்டல் முறையில் பரமாரித்து வருகின்றனர். இந்த நிலையில் 2026 - ம்‌ ஆண்டுக்கான ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன. கண்காணிப்பு கேமிரா பொருத்தம் டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 391 இடங்களை தேர்வு செய்து 782 ஆட்டேமெட்டிக் கேமராக்களை பொருத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 30 நாள்களில் இந்த கேமராக்களில் பதிவாகும் புலிகள் அடையாளம் கண்டு அதன் தரவுகளை பதிவேற்றம் செய்ய உள்ளனர். இதன் மூலம் புலிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி அதன் வாழிட எல்லை, இணை, உடல்நிலை உள்ளிட்ட பல தரவுகளையும் துல்லியமாக அறிய என்கிறது முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம்.

விகடன் 26 Nov 2025 10:09 am

நெல்லை: கனமழை, அணைகள் திறப்பு; தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு | Photo Album

நெல்லை:கனமழை|அணைகள் திறப்பு|தாமிரபரணி வெள்ளப்பெருக்கு|இடிந்து விழுந்த வீடுகள்#Rain Alert 2025-26

விகடன் 26 Nov 2025 6:34 am

Air pollution: மூச்சுவிட திணறும் டெல்லி; தூய காற்றுக்கு ஏங்கும் மக்கள்! - பிரச்னைகளும் தீர்வும்!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகர அச்சுறுத்தலால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ``50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும். மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என உத்தரவிடும் அளவு, சூழல் கைமீறிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே டெல்லி அரசு பள்ளிகளில் குழந்தைகளின் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்திருக்கிறது. Delhi air pollution காற்றுத் தரக் குறியீடு இந்த சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒட்டுமொத்த தேசிய தலைநகரிலிருந்தும் (NCR) தரவுகளைச் சேகரித்து, சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் வானிலை அடிப்படையில், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. காற்றுத் தரக் குறியீடு (AQI) 201 - 300-க்குள் இருக்கும்போது GRAP 1 கட்டுப்பாடுகளும், 301 - 400-க்குள் இருக்கும்போது GRAP 2 கட்டுப்பாடுகளும் அமலுக்கு வரும். அதேசமயம், 401 - 450-க்குள் இருக்கும்போது GRAP 3, காற்றுத் தரக் குறியீடு 451-ஐத் தாண்டும்போது GRAP 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இப்போது டெல்லியில் GRAP 3 கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை காற்றுமாசை கட்டுப்படுத்த ஆளும் பா.ஜ.க அரசு முயன்றுவருகிறது. குறிப்பாக செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளது. Delhi air pollution ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல், இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறைக்கும் போராட்டக்காரங்களுக்கும் மத்தியில் தள்ளுமுள்ளுகூட ஏற்பட்டது. தலைநகரில் காற்று மாசு... கார்களுக்குத் தடை... பா.ஜ.க-வின் அதிரடி உத்தரவும், பின்வாங்கலும்! நடவடிக்கை போதாமை எனவே, பெரும் துயரை ஏற்படுத்தும் காற்றுமாசு தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் பேசினோம். அவர், `` அறுவடைக்குப் பிறகு, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீதமுள்ள பயிர் கழிவுகளை எரிக்கிறார்கள். அதனால்தான் காற்றுமாசுபாடு ஏற்படுகிறது என அரசு பழியை குறிப்பிட்ட மாநிலங்கள் மீது சுமத்துகிறது. அது மட்டும் காரணம் அல்ல. அரசின் நடவடிக்கையில் பெரிய போதாமை இருக்கிறது. இந்த காற்று மாசுக்கான முக்கியப் பிரச்னை அதிக வாகனப் பயன்பாடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள், பெரும் குப்பை எரியூட்டுதல் போன்றவைதான் காரணம். Delhi air pollution இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது வாகனப் பயன்பாடு. அதாவது சென்னை, மும்பை, கல்கத்தா என மூன்று நகரத்தில் இருக்கும் அளவுக்கான வாகனங்கள் டெல்லியில் பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில்தான் வெப்ப மின் நிலையங்கள், கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்யும் ஆலைகள், குப்பையை எரிக்கக்கூடிய உலைகள், சமீபத்தில் பட்டாசு வெடித்துக்கொண்டாடப்பட்ட தீபாவளி எனக் காரணங்களை வரிசைப்படுத்தலாம். இது எல்லாம் சேர்த்துதான் இப்போது இருக்கும் பிரச்னைக்கு காரணம். குளிர்காலத்தில் காற்று இடம்பெயர்வது மிக மிகக் குறைவு என்பதால், ஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லி தவிக்கிறது. என்னதான் தீர்வு? முதலில் டெல்லிவாசிகள் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். அன்றாடப் பணிகளுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரு பெரிய காரில் ஒருவர் மட்டுமே பயணிக்கும் சூழல் இருந்தால் அதை முற்றிலுமாக தவிர்க்கலாம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் பார்க்கிங் வசதிக்கான தொகையை அதிகரிப்பது, பொதுப் போக்குவரத்துக்கான சலுகைகளை வழங்குவது போன்ற நடவடிக்கையை எடுக்கலாம். அதனால் மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரிக்கும். அதே நேரம், அரசு செயல்படுத்தும் இரட்டை/ஒற்றை வாகன எண் திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாம் பெயருக்கு மட்டுமே. அதனால் எந்தப் பலனும் கிடைக்காது. காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மொத்தமாக மூடவோ அல்லது ஊருக்கு வெளியில் அமைக்கவோ உறுதியாக உத்தரவிடலாம். 'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள் மாசடைந்துள்ளன? மக்கள் தங்களின் குப்பை மேலாண்மையைக் சரியானப் பின்பற்றி, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது போன்ற நிலையை தவிர்க்க வேண்டும். தீபாவளிப் பட்டாசு வெடிப்பது முக்கியமான கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால், டெல்லியில் பா.ஜ.க ஆட்சி வருவதற்கு முன்புவரைக் கூட, தீபாவளிப் பட்டாசு வெடிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அது முழுதுமாக தகர்க்கப்பட்டது. Delhi air pollution நம் சென்னையிலேயே தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றுப் பாருங்கள். சிறு குழந்தைகள் மாஸ்க் அணிந்துகொண்டு சிகிச்சைக்கு வந்திருப்பார்கள். அப்படியானால் டெல்லியில் கற்பனை செய்து பாருங்கள். டெல்லியில், தீபாவளி முடிந்த மறுநாள் காற்றின் தரக்குறியீட்டில் 2000 இருந்தது. அதாவது 89 சிகரெட் புகைத்ததற்கு சமமான காற்று மாசு அது. டெல்லி மக்கள் அந்த அளவுக்கு மோசமான புகையை சுவாசித்தார்கள். அவங்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். அவர்களின் வாழ்நாளில் ஏழு ஆண்டுகள் குறையும். வாகன மாசுபாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்துவது,தொழில்துறை அளவில் தொழிற்சாலைகளின் உமிழ்வு அளவுகளைக் கட்டுப்படுத்தவும் பெரியளவில் முயன்றாலே தவிர எந்த மாற்றமும் ஏற்படாது. என்றார். டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?

விகடன் 25 Nov 2025 2:55 pm