SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதி நவக்கரை அருகே பெண் காட்டு யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பெண் யானை மருத்துவக் குழுவினர் யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில் யானையின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை என்று தெரியவந்தது. மேலும் இறந்த பெண் யானை கருவுற்ற நிலையில் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. அந்த யானையின் வயிற்றில் இருந்து 13 மாதங்களான சிசு எனக் கண்டறியப்பட்டது. இதே யானைதான் கடந்த வாரம் குப்பனூர் பகுதியில் சேற்றில் சிக்கியது. உயிரிழந்த யானைக்குச் சுமார் 50 வயதிருக்கும். மேலும் யானையின் உடல் உறுப்புகள் பல செயலிழந்துவிட்டன. ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; புதிய மைல்கல் - வனத்துறை நம்பிக்கை கோவை அதனால்தான் கடந்த சில வாரங்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது. வயிற்றில் குட்டியுடன் பெண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு – கேரளா எல்லையில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையாறு அருகே உள்ள வட்டப்பாறை பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் யஷ்வந்த்பூர் ரயில் வேகமாகச் சென்றுள்ளது. யானை அப்போது அந்த வழியே ஒரு யானைக் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்துள்ளது. இதில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி ஆண் யானை மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தென்காசி: யானை - மனித மோதல்களைத் தடுக்க பூர்வீகத் தாவரங்கள் நடவு; வனத்துறை திட்டத்தின் பின்னணி என்ன?

விகடன் 4 Feb 2026 2:59 pm

'குழந்தைகளுக்கு சோசியல் மீடியா கட்டுப்பாடு சட்டம்' - கருத்து கேட்கும் கேரள கல்வித்துறை அமைச்சர

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிப்போவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களை குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்க என்னச் செய்யலாம் என்பது குறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் கருத்து கேட்டுள்ளார். இதுகுறித்து கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... ``நவீன உலகில் தொழில்நுட்பம் தவிர்க்க முடியாதது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்று நமது குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சோசியல் மீடியாவுக்கு அடிமையாகும் நிலை குறித்து தீவிரமான விவாதம் தேவைப்படுகிறது. உலகின் பல வளர்ந்த நாடுகளும், இந்தியாவின் பல மாநிலங்களும் குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளன. இணையதள அறிவிலும், மொபைல் பயன்பாட்டில் முன்னிலையில் உள்ள கேரளாவிலும் அதுகுறித்த கலந்தாய்வு மிகவும் பொருத்தமானதாகும். நண்பர்களுடன் ஓடி விளையாட வேண்டியது குழந்தைப் பருவம், இப்போது சிறிய மொபைல் ஸ்கிரீன்களுக்குள் அடங்கிப்போகிறது. அதிக நேரத்தை ஸ்கிரீனுக்கு முன்னால் செலவிடுவதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சியையும், மன வளர்ச்சிகயையும் பாதிக்கும். குழந்தைகள் சமூகத்துடன் தொடர்பு ஏற்படாத மோசமான நிலையும் ஏற்படுத்துகிறது. டிஜிட்டல் ஸ்கிரீனுக்கு அடிமையான தலைமுறையால் நமது நாட்டின் எதிர்கால கட்டமைப்பு சவாலானதாக மாறும். அமைச்சர் சிவன்குட்டி அதற்காக இணையதளத்தை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்பது நம் கருத்து அல்ல. அதன் பயன்பாட்டை அறிவுப்பூர்வமாக செயல்படுத்துவது எப்படி என்பது பற்றி ஆலோசிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைபாடு. இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்காக கடுமையான சோசியல் மீடியா கட்டுப்பாடு சட்டம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா. அல்லது பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரிய அளவிலான விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டுமா. நம்முடைய குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைக்க அனைவரின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை தெரிவிக்க வேண்டும். பொது கல்வித்துறை அது குறித்து விரிவாக ஆய்வு செய்யும்.  அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அமைச்சர் சிவன்குட்டியின் பதிவுக்கு பல கருத்துகள் பின்னூட்டமாக வந்துள்ளன. அதில், 'முன்பு ரேடியோ பயன்படுத்த லைசென்ஸ் எடுப்பது அவசியமாக இருந்தது. அதுபோன்று மொபைல் போன் பயன்படுத்த மேஜர், மைனர் என்ற வகையில் லைசென்ஸ் வழங்கலாம். அவர்களின் வயதுக்கு ஏற்ப அந்த மொபைலில் அப்பிளிகேசன்கள் பயன்படுத்த விதிமுறை ஏற்படுத்தலாம்' என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 'ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை உள்ளது. அதுபோன்று கேரளாவிலும் தடை ஏற்படுத்தவேண்டும்' எனவும், கண்காணிப்பு வேண்டும் எனவும்  பல்வேறு கருத்துகளை பொதுமக்கள் தெரிவித்துவருகின்றனர். இது குறித்து உங்க கருத்துகளை கமென்டில் பதிவிடுங்கள் மக்களே..!

விகடன் 4 Feb 2026 10:23 am

'குழந்தைகளுக்கு சோசியல் மீடியா கட்டுப்பாடு சட்டம்' - கருத்து கேட்கும் கேரள கல்வித்துறை அமைச்சர

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிப்போவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களை குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்க என்னச் செய்யலாம் என்பது குறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் கருத்து கேட்டுள்ளார். இதுகுறித்து கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... ``நவீன உலகில் தொழில்நுட்பம் தவிர்க்க முடியாதது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்று நமது குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சோசியல் மீடியாவுக்கு அடிமையாகும் நிலை குறித்து தீவிரமான விவாதம் தேவைப்படுகிறது. உலகின் பல வளர்ந்த நாடுகளும், இந்தியாவின் பல மாநிலங்களும் குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளன. இணையதள அறிவிலும், மொபைல் பயன்பாட்டில் முன்னிலையில் உள்ள கேரளாவிலும் அதுகுறித்த கலந்தாய்வு மிகவும் பொருத்தமானதாகும். நண்பர்களுடன் ஓடி விளையாட வேண்டியது குழந்தைப் பருவம், இப்போது சிறிய மொபைல் ஸ்கிரீன்களுக்குள் அடங்கிப்போகிறது. அதிக நேரத்தை ஸ்கிரீனுக்கு முன்னால் செலவிடுவதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சியையும், மன வளர்ச்சிகயையும் பாதிக்கும். குழந்தைகள் சமூகத்துடன் தொடர்பு ஏற்படாத மோசமான நிலையும் ஏற்படுத்துகிறது. டிஜிட்டல் ஸ்கிரீனுக்கு அடிமையான தலைமுறையால் நமது நாட்டின் எதிர்கால கட்டமைப்பு சவாலானதாக மாறும். அமைச்சர் சிவன்குட்டி அதற்காக இணையதளத்தை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்பது நம் கருத்து அல்ல. அதன் பயன்பாட்டை அறிவுப்பூர்வமாக செயல்படுத்துவது எப்படி என்பது பற்றி ஆலோசிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைபாடு. இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்காக கடுமையான சோசியல் மீடியா கட்டுப்பாடு சட்டம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா. அல்லது பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரிய அளவிலான விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டுமா. நம்முடைய குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைக்க அனைவரின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை தெரிவிக்க வேண்டும். பொது கல்வித்துறை அது குறித்து விரிவாக ஆய்வு செய்யும்.  அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அமைச்சர் சிவன்குட்டியின் பதிவுக்கு பல கருத்துகள் பின்னூட்டமாக வந்துள்ளன. அதில், 'முன்பு ரேடியோ பயன்படுத்த லைசென்ஸ் எடுப்பது அவசியமாக இருந்தது. அதுபோன்று மொபைல் போன் பயன்படுத்த மேஜர், மைனர் என்ற வகையில் லைசென்ஸ் வழங்கலாம். அவர்களின் வயதுக்கு ஏற்ப அந்த மொபைலில் அப்பிளிகேசன்கள் பயன்படுத்த விதிமுறை ஏற்படுத்தலாம்' என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 'ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை உள்ளது. அதுபோன்று கேரளாவிலும் தடை ஏற்படுத்தவேண்டும்' எனவும், கண்காணிப்பு வேண்டும் எனவும்  பல்வேறு கருத்துகளை பொதுமக்கள் தெரிவித்துவருகின்றனர். இது குறித்து உங்க கருத்துகளை கமென்டில் பதிவிடுங்கள் மக்களே..!

விகடன் 4 Feb 2026 10:23 am

`என்னது ரூ.1.3 லட்சத்தில் 50 கிமீ மைலேஜுடன் RE பைக்கா?' - ஹைபிரிட், எலெக்ட்ரிக்னு ராயல் அப்டேட்ஸ்!

ராயல் எ-ன்ஃபீல்டின் ‛டபு டுபு’ எனும் அந்த எக்ஸாஸ்ட் பீட்டே கொஞ்சம் ‛நச்’சென்று மனதில் நிற்கத்தான் செய்யும். ஆனால், பராமரிப்பு - மைலேஜ் என்று வரும்போது ‛ப்ச்’ கொட்டத்தான் வேண்டும்.  இந்தக் குறையைச் சரிக்கட்டத்தான் ராயல் என்ஃபீல்டு ஒரு முடிவு கட்டப் போகிறது. ஆம், ஒரு 250 சிசி பைக் ஒன்றின் வேலைப்பாட்டில் ரகசியமாக ராயல் என்ஃபீல்டு இறங்கியிருப்பதாகத் தகவல். சொல்லப்போனால், இது கொஞ்சம் பழைய நியூஸ்தான். போன ஆண்டு 2025 மே மாதமே ராயல் என்ஃபீல்டு அந்த 250 சிசி பைக்கைக் கொண்டு வரப்போவதாகச் சொன்னார்கள். இப்போது மீண்டும் பேச்சு அடிபடுகிறது. அது ஒரு ஹைபிரிட் பைக் என்பதுதான் ஸ்பெஷல். யமஹா போன்ற நிறுவனங்கள் எப்போதோ ஹைபிரிட்டில் இறங்கிவிட்டன. இப்போது ராயல் என்ஃபீல்டும் ஹைபிரிட் ப்ளாட்ஃபார்மில் கை வைக்கப் போகிறது. இதற்காக அவர்கள் CFMoto எனும் சீன ஆட்டோமொபைல் உற்பத்தியாளருடன் கூட்டு வைக்கப் போவதாக ஏற்கெனவே தகவல் வந்திருந்தது. இதன் Code Name கூட V என்பதாகத் தகவல். சென்னைத் தொழிற்சாலையில்தான் இது தயாரிக்கப்படப் போவதாகவும் தகவல்.  இந்தியாவில் இப்போது டூவீலர்களுக்குக் கடுமையாகப் பின்தொடரப்படும் BS-6 Phase-2 எமிஷன் ஸ்டாண்டர்டு மற்றும் CAFE (Corporate Average Fuel Efficiency) போன்ற நார்ம்ஸ்களுடன் ஒத்துப் போக வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு காலதாமதம் என்கிறார்கள்.  CFMoto bike ‛என்னது, சீனக் கம்பெனியோட பார்ட்னர்ஷிப்பா’ என்று உச் கொட்டத் தேவையில்லை. ஜம்மென்ற மோட்டார் பைக்குகள், ஆல் டெரெயின் வாகனங்கள், 250 முதல் 800 சிசி இன்ஜின்கள் வரை ரெடி செய்வதில் எக்ஸ்பெர்ட் இந்த CFMoto. இந்த CFMoto நிறுவனத்தின் இன்ஜின்கள் காம்பேக்ட் ஆனவை, நல்ல மைலேஜ் கொடுக்கக் கூடிய அளவில் ஹைபிரிட் இன்ஜீனியரிங்குடன் Fuel Efficient-க்குப் பெயர் பெற்றவை. இப்போதைக்கு இந்த CFMoto-வின் இன்ஜினுடன்தான் வருமா? மைல்டு ஹைபிரிட்டா அல்லது ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜினில் இந்த 250 சிசி பைக் வருமா என்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு ப்ளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் பைக்காக இருக்காது. எப்படி இருந்தாலும் 50 கிமீ மைலேஜ் என்பது உறுதி என்று சொல்லப்படுகிறது.  CFMoto bike ஹைபிரிட் என்பதால் இதில் ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பம் இருக்கும். எக்ஸ்ட்ரா டார்க் அசிஸ்ட்டுக்கு சின்ன எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுத்திருப்பார்கள்.  இது ஹன்ட்டர் 350-க்குக் கீழே பொசிஷன் செய்யப்படப் போகிறது. அதனால் இதன் எக்ஸ் ஷோரூம் விலை வெறும் 1.30 லட்சத்துக்குள் இருக்கலாம். இந்த V பைக் வந்தால், இதுதான் ராயல் என்ஃபீல்டின் அதிக மைலேஜ் தரப் போகும், விலை குறைவான பைக்காக இருக்கும்.  அடுத்து எலெக்ட்ரிக்கிலும் ராயல் என்ஃபீல்டு ப்ளக் சொருகப் போவது உங்களுக்குத் தெரியும். அப்படியே அந்த Flying Flea C6 எலெக்ட்ரிக் பைக் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ராயல் என்ஃபீல்டில் இருந்து வரும் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த Flying Fleaதான் மேற்கொள்ளும். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் துணை பிராண்டாக இயங்கப் போவதுதான் ஃப்ளையிங் ஃப்ளியா (Flying Flea). இதிலிருந்து C6, S6 எனும் 2 எலெக்ட்ரிக் பைக்குகள் வரப்போவதாக ஏற்கெனவே சொல்லியிருந்தோம். FLying Flea அதென்ன ஃப்ளையிங் ஃப்ளியா?  இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட ஒரு பைக்கின் பெயர்தான் ஃப்ளையிங் ஃப்ளியா. அதை இன்ஸ்பயர் செய்துதான் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ஏற்கெனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு Electrik 01 என்கிற கான்செப்ட் மாடல் பைக் ஒன்றைக் காட்சிப்படுத்தி இருந்தது. அது ஒரு மாதிரியான பாபர் ஸ்டைல் பைக். சிங்கிள் சீட்தான் அதில் இருக்கும். அதில் பழைய மாடலான Girder Fork இருந்தது. அதாவது, இப்போதிருக்கும் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளை விடப் பழைய மாடல் அது. இந்த எடை குறைந்த கிர்டர் ஃபோர்க்தான், இந்த C6 பைக்கின் ஹைலைட்டே! இதன் அலுமினியம் ஃப்ரேமும் இந்த லைட்வெயிட் பைக்கின் இன்னொரு சிறப்பம்சம்!  லோ ஸ்லங் க்ரூஸர் ஸ்டைலில் இருக்கும் இந்த பைக்கில் சிங்கிள் சீட்தான் இருப்பதால், சோலோ ரைடர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். காதலர்களுக்கு ஏற்றபடி டூயல் சீட் ஆப்ஷனும் கிடைக்கும்படிதான் இது மார்க்கெட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது. இது 120 கிலோ எடைக்குள் ஹேண்ட்லிங் பக்காவாக இருக்கும் என்று தெரிகிறது. C6-க்கு பெல்ட் டிரைவும், S6-க்கு செயின் டிரைவும் இருக்கும். FLying Flea இந்த C6 பைக்கின் Primary Vehicle Control Unit (PVCU) மொத்தமாக இன்டர்நெல்லாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பைக்கின் பேட்டரி மற்றும் மோட்டார் போன்ற டெக்னிக்கல் விவரங்கள் இன்னும் பெரிதாகச் சொல்லப்படவில்லை. ஆனால் கார்னரிங் ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல், ட்ராக்ஷன் கன்ட்ரோல் போன்ற எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் இதில் நிச்சயம் உண்டு. கூடவே, நம் வீட்டில் நார்மலாகப் போடக்கூடிய 3 பின் பிளக் பாயின்ட்டில் இதை சார்ஜ் போடும்படியான கட்டமைப்பில்தான் இந்த C6 வரப்போகிறது. எல்இடி லைட்டிங் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே, மொபைல் ரியல்டைம் கனெக்டிவிட்டி வசதிகள், Qualcomm’s Snapdragon QWM2290 சிப்செட் போன்றவை இருக்கும். அதாவது - நம் மொபைல் போனையே சாவியாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பமும் இதில் வரும். டச்ஸ்க்ரீன் TFT டிஸ்ப்ளே, புது ஸ்விட்ச் கியர்கள், ஆஃப்ரோடுக்கு ஏற்ற லாங் டிராவல் சஸ்பென்ஷன், ஒல்லியான ஸ்போக் வீல்கள், டூயல் பர்ப்பஸ் டயர்கள், பென்ச் ஸ்டைல் சீட் என ஒரு மாதிரி க்ளாஸியாக வரப் போகிறது C6. லடாக்கில் இந்த இ-பைக்கை டெஸ்ட் டிரைவெல்லாம் முடித்துவிட்டார்கள். இது 2026 நடுவில் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது. இது 2 - 3 லட்சம் விலையில் இருக்கலாம். இதுபோக ஹிமாலயனில் 750 சிசி பைக் டெஸ்ட் ரைடு போய்க் கொண்டிருப்பதாகவும் தகவல். C6-ல் 5 ரைடிங் மோடுகளும் உண்டு. அது சரி; ராயல் என்ஃபீல்டு என்றாலே அந்த ‛டபு டுபு டபு டுபு’ எக்ஸாஸ்ட் பீட்தான். அதை மிஸ் செய்வீர்கள்தானே!

விகடன் 3 Feb 2026 4:19 pm

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்... அழகு பொருட்களாக மாறும் குப்பைகள் | Tyre Recycling Technology | Eco India Season 2 | #EP2 இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா.... இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...! வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா,  அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..! > வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும் > வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.! > வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…

விகடன் 3 Feb 2026 2:27 pm

அடிப்படை வேரியன்ட்களிலும் அசத்தல் பாதுகாப்புத் தொழில்நுட்பம்!

கார் பிரியர்களுக்குக் கோலாகலமாக மலர்ந்திருக்கிறது 2026. மஹிந்திரா XEV 9e, மஹிந்திரா XUV 7XO, ஸ்கோடா குஷாக், டொயோட்டா eபெல்லா (மாருதி சுஸூகி eVitara-வின் டொயோட்டா வெர்ஷன்), ரெனோ டஸ்ட்டர் போன்ற கார்கள் துவங்கி ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ ஆகிய கார் கம்பெனிகளும் ஒன்றன் பின் ஒன்றாக பல கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றன. பஜாஜ், இந்த ஆண்டுக்கான தனது கணக்கைத் தொடங்கிவிட்ட நிலையில், மற்ற இருசக்கர வாகனக் கம்பெனிகள் புது அறிமுகங்களோடு சுறுசுறுப்பாகி வருகின்றன. புதுக் கார்கள் மட்டும் அறிமுகமாகவில்லை. புதுப் புது தொழில்நுட்பங்களையும் தினம் தினம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன ஆட்டோமொபைல் கம்பெனிகள். அதிலும் குறிப்பாக தனது XUV 7XO காரில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் DaVinci dampers தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தி இருக்கிறது. முன்பதிவு ஆரம்பமான முதல் நாளிலேயே டாடா சியராவுக்கு 70,000 முன்பதிவுகள் வந்ததும், மஹிந்திராவின் XEV 9s மற்றும் XUV 7XO கார்களுக்கு 90,000-த்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்ததும் வாடிக்கையாளர்களின் எழுச்சிக்குச் சான்றாக விளங்குகின்றன. விலை உயர்ந்த கார்களில் இருக்கும் தொழில்நுட்பங்களை, வணிக நுட்பத்தின் துணை கொண்டு நடுத்தரக் கார்களிலும் கொடுக்க முடியும் என்பதை மஹிந்திராவின் கார்கள் நிரூபித்து வருகின்றன. அந்த வகையில் பெரிய ஆல் வீல் டிரைவ் கார்களின் வல்லமையை, ஃப்ரன்ட் வீல் டிரைவ் கொண்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவிகளிலும் கொடுக்க முடியும் என்று டாடா மோட்டார்ஸ் நிரூபித்திருக்கிறது. ஒரு காலத்தில் செல்வந்தர்கள் மற்றும் அதிகாரமிக்கவர்கள் ஆகியோரிடம் மட்டுமே இருந்த தொலைபேசி, இப்போது அனைவரையும் வந்து சேர்ந்திருப்பதைப்போல அதிக விலை கொண்ட கார்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களும் வசதிகளும், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் கார்களுக்கும் வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. - ஆசிரியர்

விகடன் 1 Feb 2026 4:54 am