படபடவென பெய்த திடீர் மழை! - குளு குளு சென்னை!
சில விலங்குகள் தங்கள் குட்டிகளையே சாப்பிடுவது ஏன் தெரியுமா?
விலங்குகள் சில நேரங்களில் தங்கள் சொந்தக் குட்டிகளையே கொன்று தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. சுவீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அனீஷ் போஸ் இது குறித்துக் கூறுகையில், தங்கள் குட்டிகளையே உண்ணும் பழக்கம் விலங்குகளிடம் பரவலாகக் காணப்படுகிறது. இது அவற்றின் இனப்பெருக்க உத்திகளில் ஒன்றாகவே உள்ளது என்று கூறியிருக்கிறார். அனீஷ் போஸ் கூற்றுப்படி, ”எல்லா விலங்குகளும் இப்படிச் செய்வதில்லை. யானைகள், திமிங்கலங்கள் போன்ற விலங்குகள் நீண்ட காலத்திற்கு ஒரு குட்டியை மட்டுமே சுமந்து, அதைப் பாதுகாப்பாக வளர்க்கின்றன. எனவே, இவை தங்கள் குட்டிகளை உண்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் மீன்கள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான முட்டைகளையோ, குட்டிகளையோ ஈனுகின்றன. இவற்றிடம் தான் இந்தப் பழக்கம் அதிகம் காணப்படுகிறது” என்கிறார். Fish சில குட்டிகளை மட்டும் ஏன் உண்கின்றன? சிலந்தி, மீன் மற்றும் பூச்சி இனங்களில் இது அதிகம் நடக்கிறது. குட்டிகளுக்குப் போதுமான உணவு கிடைக்காத சூழலில், சில குட்டிகளைத் தாய் உண்பதன் மூலம், மீதமுள்ள குட்டிகளுக்குப் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்கிறது. நாய், பூனை மற்றும் பன்றி போன்ற விலங்குகள், தங்கள் குட்டிகளில் எவை பலவீனமாகவோ அல்லது இறந்து பிறந்தாலோ, அவற்றை உண்டுவிடும். பிரசவத்தின் போது இழந்த ஆற்றலை மீண்டும் பெறத் தாய் விலங்கு இப்படிச் செய்கிறது. மேலும் எலி மற்றும் முயல் போன்ற சிறிய பாலூட்டிகளில் இது அதிகம் காணப்படுவதாகவும் அனீஷ் கூறுகிறார்.
``பொன்னென மின்னும், கண்களைப் பறிக்கும்'' - 175 ஆண்டுகளுக்குப் பின் மாயப்பூ; ஆய்வாளர்கள் சொல்வதென்ன?
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மலைக்கு வருகை தந்திருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான ராபர்ட் வைட் என்பவர், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் ‘Campbellia aurantiaca’ என்ற ஒட்டுண்ணி தாவரம் ஒன்றை 1849ஆம் ஆண்டு கண்டறிந்து பதிவு செய்துள்ளார். பொன்னென மின்னி கண்களைப் பறிக்கும் அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பூத்துக் குலுங்கும் இந்த அரிய ஒட்டுண்ணி தாவரம் குறித்தும், வண்டுகளை ஈர்க்கும் தன்மை குறித்தும் தனது ஆய்வு குறிப்புகளில் எழுதி வெளியிட்டுள்ளார் ராபர்ட் வைட். அதன் பிறகு வேறு எங்கும் இந்த ஒட்டுண்ணி தாவரம் தென்பட்டதாக ஆய்வாளர்கள் பதிவு செய்யவில்லை. Campbellia aurantiaca மாயப்பூ என ஆய்வாளர்கள் தேடப்பட்டு வந்த இந்த ஒட்டுண்ணி தாவரத்தை கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர் குழுவினர். எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வாளர்கள், ஆலப்புழா தாவரவியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் சில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய இந்த குழுவினர், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்த அரிய தாவரத்தைக் கண்டறிந்துள்ளனர். 175 ஆண்டுகள் கழித்து தென்பட்ட இந்த மாயப்பூ, சர்வதேச அளவில் தாவரவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

24 C