சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு'அலர்ட்!
தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, மதுரை, தேனி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. மழை Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் ஏன் இன்னும் சென்னையில் மழை? தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது மெதுவாக நகர்ந்து வருகிறது. வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைக்கும், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்திற்கும் குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையின் தென்மேற்கு திசை நோக்கி மெல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6 மணிநேரத்திற்குள், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழந்து, நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெல்லாம் விடுமுறை? பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?
Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கும் டிட்வா புயல் (Cyclone Ditwah), தென்மேற்கு வங்கக் கடலில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி மணிக்கு சுமார் 3 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. டிட்வா புயல் - கடல் சீற்றம் டிட்வா புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோயம்பத்தூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதேபோல், வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Ditwah: சென்னையின் முக்கிய இடங்களில் தேங்கிய மழைநீர் | Spot Visit படங்கள்
Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?
> இனி உற்பத்தி ஆகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு ஆப்பான 'சஞ்சார் சாத்தி' கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். > இந்த ஆப்பை பயனாளர்கள் அன்இன்ஸ்டாலோ, டிஸ்ஏபிளோ செய்ய முடியாத மாதிரி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். > ஏற்கெனவே உற்பத்தியான ஸ்மார்ட் போன்கள் மற்றும் விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் இந்த ஆப்பை சாப்ட்வேர் அப்டேட் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டும். - இவை ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்திய அரசின் சமீபத்திய உத்தரவு என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. Sanchar Saathi - Cybersecurity App Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் இந்திய அரசு இப்படி வலியுறுத்தும் சஞ்சார் சாத்தி ஆப்பில் என்ன இருக்கிறது, என்னவெல்லாம் செய்யும் என்கிற பார்வை இதோ... இந்த ஆப் முக்கியமாக 5 விஷயங்களை வைத்து செயல்படுகிறது. முதலாவது, சந்தேக போன்கால்களை ரிப்போர்ட் செய்வது... லாட்டரி ஆஃபர், லோன் ஆஃபர், வேலை ஆஃபர், KYC அப்டேட் என ஏதாவது சந்தேகப்படுவது மாதிரியான போன்கால் வந்தால், காவல் நிலையத்திற்கோ, சைபர் கிரைமுக்கோ செல்ல வேண்டாம். இந்த ஆப்பில் உள்ள 'Report Suspected Fraud Communication' ஆப்ஷனில் எளிதாகப் புகாரளிக்கலாம். இரண்டாவது, தொலைந்த மொபைல் போனை பிளாக் செய்வது... மொபைல் போனில் முக்கிய தகவல்கள், போட்டோக்கள் உள்ளன. ஆனால், அது தொலைந்துவிட்டது. அந்தத் தகவல்களையோ, போட்டோகளையோ யாரும் ஆக்சஸ் செய்யாமல் இந்த ஆப்பிலேயே தடுத்துவிடலாம். இந்த ஆப்பில் இருக்கும் 'Block your Lost/Stolen Mobile Handset' ஆப்ஷன் மூலம், உங்கள் மொபைல் மற்றும் மொபைல் எண் குறித்த தகவல்களைக் கொடுத்து பிளாக் செய்துவிடலாம். மொபைல் போன் திரும்ப கிடைத்ததும், அன்பிளாக் செய்ய அலைய வேண்டாம். இதே ஆப்பிலேயே அதை எளிதாகச் செய்துவிடலாம். மொபைல் போன் WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி மூன்றாவது, உங்கள் பெயரில் எத்தனை மொபைல் எண்கள் பதிவாகி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது... இது இப்போது மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது. பிறரது பெயரையும், தகவல்களையும் வைத்து மோசடி பேர்வழிகள் மொபைல் எண் வாங்கிவிடுகின்றனர். ஆனால், அவர்கள் செய்யும் மோசடிகளுக்கு அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். இதை தடுக்க இந்த ஆப்பிலேயே உங்களது பெயரில் எத்தனை மொபைல் எண்கள் இணைந்திருக்கின்றன என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். நான்காவது, உங்களது மொபைல் போன் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்ப்பது... உபயோகிக்கும் மொபைல் போனிலோ, வாங்கும் மொபைல் போனிலோ எதாவது மோசடி ஆப்கள் உள்ளதா என்பதை IMEI நம்பரை வைத்தே கண்டுபிடிக்கலாம். ஐந்தாவது, இன்டர்நேஷனல் மொபைல் நம்பர் மோசடியைத் தடுப்பது... இன்டர்நேஷனல் மொபைல் நம்பரில் இருந்து போன்கால் வருவதுபோல இப்போது நிறைய மோசடிகள் நடக்கின்றன. அந்த நம்பர்களை இந்த ஆப் மூலம் ரிப்போர்ட் செய்துவிடலாம். சைபர் மோசடி Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? இந்த ஆப்பில் என்ன நன்மை? ஆன்லைன் மோசடி முதல் மொபைல் போன் திருட்டு வரை காவல் நிலையத்திற்கோ, சைபர் பாதுகாப்பு பிரிவிற்கோ சென்று அலையாமல், முதல் கட்ட நடவடிக்கையை இந்த ஆப்பிலேயே ஈசியா எடுக்க முடியும். அதுவும் பாதிக்கப்பட்ட நபரே எளிதாக செய்ய முடிகிறபோது, இது அவருக்குப் பெரிய நிம்மதியைத் தரும்... ஓரளவு மன உளைச்சலும் குறையும். இன்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கொடுத்துள்ள தகவலின் படி, இந்த ஆப் மூலம் இதுவரை... > 1.75 மோசடி மொபைல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. > கிட்டத்தட்ட 20 லட்சம் தொலைந்த மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. > 7.5 லட்சம் திருடப்பட்ட மொபைல்கள் உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. அப்புறம் என்ன பிரச்னை? இந்த ஆப் தேவைதான். ஆனால், இதைக் கட்டாயமாகத் திணிப்பது தவறு... இது தனிநபரின் உரிமை மீறல் என்பது எதிர்க்கட்சியின் குரலாக இருக்கிறது. ஆனால், இந்த ஆப்பை வேண்டாமென்றால் டெலீட் செய்துகொள்ளலாம் என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to
Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?
> இனி உற்பத்தி ஆகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு ஆப்பான 'சஞ்சார் சாத்தி' கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். > இந்த ஆப்பை பயனாளர்கள் அன்இன்ஸ்டாலோ, டிஸ்ஏபிளோ செய்ய முடியாத மாதிரி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். > ஏற்கெனவே உற்பத்தியான ஸ்மார்ட் போன்கள் மற்றும் விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் இந்த ஆப்பை சாப்ட்வேர் அப்டேட் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டும். - இவை ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்திய அரசின் சமீபத்திய உத்தரவு என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. Sanchar Saathi - Cybersecurity App Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் இந்திய அரசு இப்படி வலியுறுத்தும் சஞ்சார் சாத்தி ஆப்பில் என்ன இருக்கிறது, என்னவெல்லாம் செய்யும் என்கிற பார்வை இதோ... இந்த ஆப் முக்கியமாக 5 விஷயங்களை வைத்து செயல்படுகிறது. முதலாவது, சந்தேக போன்கால்களை ரிப்போர்ட் செய்வது... லாட்டரி ஆஃபர், லோன் ஆஃபர், வேலை ஆஃபர், KYC அப்டேட் என ஏதாவது சந்தேகப்படுவது மாதிரியான போன்கால் வந்தால், காவல் நிலையத்திற்கோ, சைபர் கிரைமுக்கோ செல்ல வேண்டாம். இந்த ஆப்பில் உள்ள 'Report Suspected Fraud Communication' ஆப்ஷனில் எளிதாகப் புகாரளிக்கலாம். இரண்டாவது, தொலைந்த மொபைல் போனை பிளாக் செய்வது... மொபைல் போனில் முக்கிய தகவல்கள், போட்டோக்கள் உள்ளன. ஆனால், அது தொலைந்துவிட்டது. அந்தத் தகவல்களையோ, போட்டோகளையோ யாரும் ஆக்சஸ் செய்யாமல் இந்த ஆப்பிலேயே தடுத்துவிடலாம். இந்த ஆப்பில் இருக்கும் 'Block your Lost/Stolen Mobile Handset' ஆப்ஷன் மூலம், உங்கள் மொபைல் மற்றும் மொபைல் எண் குறித்த தகவல்களைக் கொடுத்து பிளாக் செய்துவிடலாம். மொபைல் போன் திரும்ப கிடைத்ததும், அன்பிளாக் செய்ய அலைய வேண்டாம். இதே ஆப்பிலேயே அதை எளிதாகச் செய்துவிடலாம். மொபைல் போன் WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி மூன்றாவது, உங்கள் பெயரில் எத்தனை மொபைல் எண்கள் பதிவாகி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது... இது இப்போது மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது. பிறரது பெயரையும், தகவல்களையும் வைத்து மோசடி பேர்வழிகள் மொபைல் எண் வாங்கிவிடுகின்றனர். ஆனால், அவர்கள் செய்யும் மோசடிகளுக்கு அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். இதை தடுக்க இந்த ஆப்பிலேயே உங்களது பெயரில் எத்தனை மொபைல் எண்கள் இணைந்திருக்கின்றன என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். நான்காவது, உங்களது மொபைல் போன் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்ப்பது... உபயோகிக்கும் மொபைல் போனிலோ, வாங்கும் மொபைல் போனிலோ எதாவது மோசடி ஆப்கள் உள்ளதா என்பதை IMEI நம்பரை வைத்தே கண்டுபிடிக்கலாம். ஐந்தாவது, இன்டர்நேஷனல் மொபைல் நம்பர் மோசடியைத் தடுப்பது... இன்டர்நேஷனல் மொபைல் நம்பரில் இருந்து போன்கால் வருவதுபோல இப்போது நிறைய மோசடிகள் நடக்கின்றன. அந்த நம்பர்களை இந்த ஆப் மூலம் ரிப்போர்ட் செய்துவிடலாம். சைபர் மோசடி Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? இந்த ஆப்பில் என்ன நன்மை? ஆன்லைன் மோசடி முதல் மொபைல் போன் திருட்டு வரை காவல் நிலையத்திற்கோ, சைபர் பாதுகாப்பு பிரிவிற்கோ சென்று அலையாமல், முதல் கட்ட நடவடிக்கையை இந்த ஆப்பிலேயே ஈசியா எடுக்க முடியும். அதுவும் பாதிக்கப்பட்ட நபரே எளிதாக செய்ய முடிகிறபோது, இது அவருக்குப் பெரிய நிம்மதியைத் தரும்... ஓரளவு மன உளைச்சலும் குறையும். இன்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கொடுத்துள்ள தகவலின் படி, இந்த ஆப் மூலம் இதுவரை... > 1.75 மோசடி மொபைல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. > கிட்டத்தட்ட 20 லட்சம் தொலைந்த மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. > 7.5 லட்சம் திருடப்பட்ட மொபைல்கள் உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. அப்புறம் என்ன பிரச்னை? இந்த ஆப் தேவைதான். ஆனால், இதைக் கட்டாயமாகத் திணிப்பது தவறு... இது தனிநபரின் உரிமை மீறல் என்பது எதிர்க்கட்சியின் குரலாக இருக்கிறது. ஆனால், இந்த ஆப்பை வேண்டாமென்றால் டெலீட் செய்துகொள்ளலாம் என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to
`வலுவிழந்த'காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னைக்கு 'மிக கனமழை'அலர்ட்; நாளை எந்த மாவட்டங்களில் மழை?
சென்னையையும், சென்னை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை இன்னும் விட்டப்பாடில்லை. இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, டிட்வா புயலின் எச்சமாக தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்துவிட்டது. தற்போது அது வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரைக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அது இன்னும் அடுத்த 12 மணிநேரத்திற்கு மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வரும். அதன் பிறகு, நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்தப் பகுதியாக பலவினமடைந்துவிடலாம். மழை சென்னையில் பாதியில் நின்ற மெட்ரோ: தடைப்பட்ட மின்சாரம்; பயணிகள் வெளியேற்றம் - என்ன நடந்தது? இன்று... திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இங்கே அதி கனமழை பெய்யலாம். சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கே மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கே கனமழை பெய்யலாம். நாளை கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கு மிக கனமழை பெய்யலாம். சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கனமழை பெய்யலாம். 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!
சென்னை: வெளுத்து வாங்கிய கனமழை; நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு கிழக்கே 40 கிமீ தூரத்தில் நீண்டநேரம் நிலைகொண்டிருக்கிறது. இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் குறிப்பாக சென்னையில் கடந்த 10 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. அடுத்த 24 மணி நேரம் இந்த நிலைத் தொடரும் எனக் கூறப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் மழை அதீதமாக இருக்கலாம் என்றும் தனியார் வானிலை ஆர்வலர்கள் கணித்திருக்கின்றனர். சென்னை மழை 2015ம் ஆண்டு போல பெருவெள்ளம் வரும் சூழல் ஏற்படாது எனக் கூறப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (டிச. 1) வழக்கம்போல பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (02.12.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Chennai: வெளுத்து வாங்கும் மழை சென்னையில் அதிகபட்சமாக இன்று (01.12.2025) எண்ணூரில் 19 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. அதேபோல மணலி வார்டு 18ல் 16 செ.மீ மழையும், பாரிஸில் 15 செ.மீ மழையும், ஐஸ் ஹவுஸில் 14 செ.மீ அளவிற்கு மழையும், விம்கோ நகரில் 13 செ.மீ அளவிற்கு மிக கனமழையும், வடபழனியில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன. சென்னையில் கனமழை பேசின் பிரிட்ஜ், சாலிகிராமம் மற்றும் மேடவாக்கத்தில் 12 செ.மீ அளவிற்கு மழை பொழிவும், காசிமேட்டில் 11 செ.மீ அளவிற்கு மழையும், நுங்கம்பாக்கம் மற்றும் சைதாபேட்டையில் 10.5 செ.மீ அளவிற்கு மழைப்பொழிவும், தண்டையார்பேட்டையில் 10.4 செ.மீ மழைப்பொழிவும் பதிவாகியிருக்கிறது. நெற்குன்றம், புழல், அமைந்தகரை மற்றும் வளசரவாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. பிற இடங்களில் 10 செ.மீ-க்கும் குறைவான மழை பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து சென்னையில் மணிக்கு 5 முதல் 15 மிமீ மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. TN Alert: APP மூலம் பருவமழை தகவல்களை ... மழை பாதிப்பை குறைக்குமா புதிய நடவடிக்கை?
தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆக உயர்வு
தென்கிழக்கு ஆசியா முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில், இந்தோனேசியாதான் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சென்யார் புயல் பாதிப்பும், அதே நேரத்தில் சக்திவாய்ந்த டிட்வா புயல் இலங்கை - இந்தியாவையும் தாக்கியுள்ளது. இந்தப் புயல், கனமழை காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியா வெள்ளம் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (BNPB) அளித்திருக்கும் தகவலின்படி, இந்தோனேசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவித்து வருகின்றனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுமத்ரா தீவின் சில பகுதிகளுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் நீடிக்கிறது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் ஆச்சே ஆகிய மூன்று மாகாணங்களில் 400-க்கும் மேற்பட்ட மக்களைக் காணவில்லை. வெள்ளம், நிலச்சரிவுகள், சேதமடைந்த சாலைகள், தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். உதவிக்காக ஜகார்த்தாவிலிருந்து இரண்டு போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. சுமத்ரா தீவில் உள்ள மத்திய தபனுலி மற்றும் சிபோல்கா ஆகிய இரண்டு நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போதுவரை நம்பிக்கையற்ற சூழ்நிலையே நிலவுகிறது. சவாலான வானிலை மற்றும் போதிய உபகரணங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்ட் அப்டேட்
சென்னைக்கு அருகில் 'டிட்வா'; தொடரும் மழை - புயல் இப்போது எங்கே இருக்கிறது?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காரணம் என்ன? டிட்வா புயல் வங்கக் கடற்கரையின் தென்மேற்கு திசையில் உள்ளது. அது தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையின் வடக்குத் திசையில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மழை H-1B Visa திட்டத்தை நிறுத்த வேண்டுமா? இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யும் எலான் மஸ்க் அடுத்த 24 மணி நேரத்தில், இந்தப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைக்கு அருகிலும் இணையாகவும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் மற்றும் மாலை நேரத்தில் டிட்வா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைக்கு முறையே 70 கிலோ மீட்டர் தொலைவிலும், 30 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கலாம். இது வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அப்டேட். சென்னையில் மழை... தற்போது சென்னை வானிலை மையம் திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கியுள்ளது. இங்கே 115.6 - 204.4 மி.மீ அளவில் மழை பெய்யலாம். ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுத்துள்ளது. இங்கே 64.5 - 115.5 மி.மீ அளவில் மழை பெய்யலாம். pic.twitter.com/PfKJ499zX4 — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 1, 2025 Gold Rate: மீண்டும் 'சூப்பர்' ஏற்றத்தில் தங்கம், வெள்ளி - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தாய் புலியை பிடித்துச்சென்ற வனத்துறை, ஆதரவின்றித் தவித்த 4 குட்டிகள்; மீட்கப்பட்ட பின்னணி
வனப்பகுதிகளில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக மாநிலம் விளங்கி வருகிறது. அதே வேளையில், புலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது முதல் வாகனங்களில் அடிபட்டு இறப்பது வரை புலிகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கையும் கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மீட்கப்பட்ட புலி குட்டிகள் இந்த நிலையில், கர்நாடக மாநிலம் நாஹரோலே புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய பெண் புலி ஒன்று கவுடனகட்டே குடியிருப்புப் பகுதிகளில் எதிர்கொள்ளல்களை ஏற்படுத்தி வந்துள்ளது. உடனடியாக அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடுமையான அழுத்தம் கொடுத்த நிலையில், வனத்துறையினர் அந்தப் பெண் புலியைக் கடந்த 27- ம் தேதியன்று மயக்க ஊசி செலுத்திப் பிடித்துள்ளனர். அந்தப் புலியை நான்கு குட்டிகளுடன் பார்த்ததாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், உடனடியாக குட்டிகளை மீட்கும் பணியில் களமிறங்கியுள்ளனர். கவுடனகட்டே சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்குள்ள விளைநிலம் மீட்கப்பட்ட புலி குட்டிகள் ஒன்றில் நான்கு குட்டிகளும் ஆதரவின்றி பரிதவித்து வந்ததைக் கண்டறிந்து உடனடியாக மீட்டுள்ளனர். பிறந்து சுமார் மூன்று மாதங்களேயான அந்த நான்கு புலிக்குட்டிகளையும் நேற்று தாயிடம் சேர்த்துள்ளனர். மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் இந்தப் புலிகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விடுவிப்பதற்கான ஆலோசனைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை'செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்நாப்சாட், ஷேர்சாட் உள்ளிட்ட ஆப்கள் பயன்பாட்டிற்கு புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது மத்திய அரசு. அவை என்ன? > இந்த ஆப்களை எந்த மொபைல் போன் நம்பரில் இயக்குகிறோமோ, அதன் சிம் கார்டு, நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் கட்டாயம் இருக்க வேண்டும்... அதுவும் ஆக்டிவாக இருக்கவேண்டும். இல்லையென்றால், இந்த ஆப்களை பயன்படுத்த முடியாமல் போகலாம். > ஒருவேளை, இந்த ஆப்களை கணினியில் பயன்படுத்தினால், இனி ஒவ்வொரு ஆறு மணிநேரத்திற்கும் தானாகவே 'லாக் அவுட்' ஆகும். அதன் பின், நம் கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து 'லாக் இன்' செய்துகொள்ள வேண்டும். மெசேஜிங் ஆப்கள் Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? சமூக வலைதள நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்? மத்திய அரசின் இந்தச் சட்டத்தின் படி, சமூக வலைதள நிறுவனங்கள் தங்களது ஆப் வைத்திருக்கும் பயனாளர்கள், ஆப்பில் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணை வைத்திருக்கிறார்களா... அது ஆக்டிவாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அடுத்த 90 நாள்களுக்குள் எடுக்க வேண்டும். இது குறித்த அறிக்கையை சமூக வலைதள நிறுவனங்கள் அடுத்த 120 நாள்களுக்குள் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கெடுபிடிகளின் நன்மை என்ன? சைபர் குற்றங்களைப் பெருமளவு குறைக்கலாம். சம்பந்தப்பட்ட நபரை தவிர பிறர் மெசேஜிங் ஆப்களை பயன்படுத்துவதைத் தடுக்கலாம். என்ன பிரச்னை? ஒரே மொபைல் எண் வைத்து பல சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இது பெரிய பிரச்னை. ஒவ்வொரு ஆறு மணிநேரத்திற்கும் 'லாக் அவுட்' ஆனால், இது பயனாளர்களுக்கு அசௌகரியமாக அமையலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்ன? மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்யாமல்... ஆக்டிவாக வைத்திருக்காமல், நம்பரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்களா? சீக்கிரம் ரீசார்ஜ் செய்து ஆக்டிவ் ஆக்குங்கள். இந்த மாற்றங்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே? கமென்ட்ல சொல்லுங்க! Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to
WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை'செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்நாப்சாட், ஷேர்சாட் உள்ளிட்ட ஆப்கள் பயன்பாட்டிற்கு புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது மத்திய அரசு. அவை என்ன? > இந்த ஆப்களை எந்த மொபைல் போன் நம்பரில் இயக்குகிறோமோ, அதன் சிம் கார்டு, நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் கட்டாயம் இருக்க வேண்டும்... அதுவும் ஆக்டிவாக இருக்கவேண்டும். இல்லையென்றால், இந்த ஆப்களை பயன்படுத்த முடியாமல் போகலாம். > ஒருவேளை, இந்த ஆப்களை கணினியில் பயன்படுத்தினால், இனி ஒவ்வொரு ஆறு மணிநேரத்திற்கும் தானாகவே 'லாக் அவுட்' ஆகும். அதன் பின், நம் கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து 'லாக் இன்' செய்துகொள்ள வேண்டும். மெசேஜிங் ஆப்கள் Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? சமூக வலைதள நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்? மத்திய அரசின் இந்தச் சட்டத்தின் படி, சமூக வலைதள நிறுவனங்கள் தங்களது ஆப் வைத்திருக்கும் பயனாளர்கள், ஆப்பில் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணை வைத்திருக்கிறார்களா... அது ஆக்டிவாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அடுத்த 90 நாள்களுக்குள் எடுக்க வேண்டும். இது குறித்த அறிக்கையை சமூக வலைதள நிறுவனங்கள் அடுத்த 120 நாள்களுக்குள் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கெடுபிடிகளின் நன்மை என்ன? சைபர் குற்றங்களைப் பெருமளவு குறைக்கலாம். சம்பந்தப்பட்ட நபரை தவிர பிறர் மெசேஜிங் ஆப்களை பயன்படுத்துவதைத் தடுக்கலாம். என்ன பிரச்னை? ஒரே மொபைல் எண் வைத்து பல சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இது பெரிய பிரச்னை. ஒவ்வொரு ஆறு மணிநேரத்திற்கும் 'லாக் அவுட்' ஆனால், இது பயனாளர்களுக்கு அசௌகரியமாக அமையலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்ன? மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்யாமல்... ஆக்டிவாக வைத்திருக்காமல், நம்பரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்களா? சீக்கிரம் ரீசார்ஜ் செய்து ஆக்டிவ் ஆக்குங்கள். இந்த மாற்றங்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே? கமென்ட்ல சொல்லுங்க! Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to
`பிடிப்பட்ட ஆண் புலி' - விடுவிக்க வனத்துறை தேர்வு செய்த இடத்துக்கான காரணம் இதுதான்!
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் மனித- வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்தாலும் அவற்றுக்கான வாழிட போதாமை என்பது மிகப்பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. வனத்தை விட்டு வெளியேறும் புலிகள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டு வருகிறது. கூண்டுக்குள் சிக்கிய புலி இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக நடமாடி வந்த புலி ஒன்று 40- க்கும் அதிகமான கால்நடைகளைத் தாக்கிவந்தது. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடிவரும் அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி உள்ளூர் மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வனத்துறையினர் கூண்டு அமைத்து கண்காணித்து வந்தனர். தொடர்ந்து கால்நடைகளைத் தாக்கி வந்த குறிப்பிட்ட அந்தப் புலி நேற்று முன்தினம் அதிகாலை கூண்டுக்குள் சிக்கியது. சுமார் மூன்று வயதுடைய அந்த ஆண் புலியின் உடல் நிலையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், மீண்டும் வனப் பகுதிக்குள் விடுவிக்க முடிவு செய்தனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் ஆண் புலிகளின் நடமாட்டம் இல்லாத பகுதியை ஆய்வுகளின் மூலம் தேர்வு செய்த வனத்துறையினர், நேற்று நள்ளிரவு அந்தப் புலியை பத்திரமாக விடுவித்துள்ளனர். வனத்துறை கேமரா மற்றும் கூண்டில் சிக்கிய புலி. ஆண் புலிகள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வடுவித்ததன் பின்னணி குறித்து பகிர்ந்த வனத்துறையினர் , அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட புலிகள் இன்றைக்கு காப்பாற்றப்பட்டு அதன் எண்ணிக்கை மெல்ல மீண்டு வருவதற்கு மிக முக்கிய காரணமாக 'புராஜெக்ட் டைகர்' எனப்படும் புலிகள் பாதுகாப்பு திட்டம் தேசிய அளவில் கை கொடுத்திருக்கிறது. புலிகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை என்.டி.சி.ஏ என்று அழைக்கப்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலே பின்பற்றப்படுகிறது. அண்மையில் கூடலூரில் பிடித்த ஆண் புலியை விடுவிப்பதற்கான முதுமலை வனப்பகுதியைத் தேர்வு செய்ததுடன், அந்த பகுதியில் வேறெந்த ஆண் புலியின் நடமாட்டமும் இல்லை என்பதை ஆய்வுத் தரவுகளின் படி உறுதி செய்த பின்னரே விடுவித்தோம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண் புலியும் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள எல்லையை தனக்கான வாழிடமாக தகவமைத்துக் கொள்ளும். அந்த எல்லைக்குள் வேறு ஆண் புலிகளை வாழ அனுமதிக்காது. வனத்துறையினர் மீறி நுழைந்தால் இரண்டு புலிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே ஆண் புலி நடமாட்டம் இல்லாத வாழிட எல்லையைக் கண்டறிந்து அந்த பகுதிக்குள் பத்திரமாக விடுவித்துள்ளோம். இந்த இளம் ஆண் புலி தனக்கான எல்லையை வகுத்துக் கொள்வதுடன் அதற்குத் தேவையான இரை, இணை, நீர்நிலைகள் போன்றவையும் ஏற்படுத்திக்கொள்ள ஏதுவான வாய்ப்புகள் உள்ளன
சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்ட் அப்டேட்
வங்கக் கடலுக்கு தென்மேற்கு திசையிலும், வட தமிழ்நாடு (சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள்), புதுச்சேரி கடற்கரைக்கு அருகேயும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது டிட்வா புயலின் மீதமுள்ள பகுதி ஆகும். இது வடக்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. (இது நேற்று நள்ளிரவு 2.30 மணிநேரப்படி) இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கே நகர்ந்து இன்று மதியத்திற்குள் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. 'டித்வா' புயல் - சித்தரிப்புப் படம் வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி? எங்கே மழை? இதையொட்டி, சென்னை வானிலை மையம் கொடுத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்... இன்று காலை 10 மணி வரை தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. Special Bulletin No. 25 pic.twitter.com/xAAXjnTGnQ — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 30, 2025 pic.twitter.com/jLY8zQdHPP — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 1, 2025 பான் கார்டு முதல் பென்சன் வரை: நெருங்கும் கடைசி தேதி; உடனே `இவற்றை' செஞ்சுடுங்க!
Rain Update: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? Cyclone Ditwah Update
டிட்வா புயல் வட தமிழக கடற்கரையோர பகுதியில் கடலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் சிகப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். சென்னையிலிருந்து 220 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலால் நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிறது மழை. இன்றும் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் - கடல் சீற்றம் Ditwah புயல் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) குறைய வாய்ப்புள்ளது. எனினும் புதுச்சேரி மாநிலத்துக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, அரியலூர் மாவட்டங்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வானிலை ஆய்வு மையம் வெளியீடு முன்னதாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புயல் தமிழகத்தைத் தாண்டி தெற்கு ஆந்திரப் பிரதேசத்துக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. நாளை (நவ. 1) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நிலையற்ற வானிலை நிலவுவதால் இதில் மாற்றங்கள் ஏற்படலாம். டிட்வா புயல்: தொடர் மழையால் வெள்ளக்காடான டெல்டா வயல்கள்; 1 லட்சம் ஏக்கர் நெற் பயிர் மூழ்கிய வேதனை
Cyclone Ditwah: இலங்கையில் 153 பேர் மரணம்; சென்னைக்கு எச்சரிக்கை; டிட்வா புயலின் அடுத்த நகர்வு என்ன?
இலங்கையில் டிட்வா புயல் தாக்கத்தால் வானிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, சூறைக் காற்று போன்றவற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. Cyclone Ditwah: உயிரிழப்பு, இடப்பெயர்வு, பாதிப்பு... இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 எனக் கூறப்படுகிறது. 190க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. Cyclone Ditwah: உயிரிழப்பு, இடப்பெயர்வு, பாதிப்பு... தீராத கனமழை தீவு முழுவதும் அன்றாட வாழ்க்கையைப் புறட்டிப்போட்டுள்ளது. பேரிடம் மேலாண்மை மையம் கூறுவதன்படி, 25 மாவட்டங்களில் 774,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100,000க்கும் மேற்பட்டோர் 798 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Ditwah: இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு; அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு இந்திய - இலங்கை குழுக்களின் மீட்புப் பணிகள் நிலச்சரிவால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. நிலையில்லாத வானிலையும் இலங்கையின் இயற்கை சூழலும் மீட்புப் பணிகளுக்குச் சவாலாக இருக்கின்றன. மீட்புப் பணிகளில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த விமான, தரைப்படைகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. வெள்ளத்தால் முற்றிலும் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருப்போருக்கு அவசர உதவிப்பொருட்களை வழங்குகின்றனர். ஆபத்தான இடங்களில் தவிப்போரைப் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றுகின்றனர். Under #OperationSagarBandhu , Chetak helicopters from @IN_R11Vikrant carried out Search and Rescue sorties in today, supporting people affected by #CycloneDitwah . stands firmly with in this difficult time, working together to save lives and extend timely relief.… pic.twitter.com/E1FyKk9QGC — India in Sri Lanka (@IndiainSL) November 29, 2025 ஆபரேஷன் சாகர் நடவடிக்கையின் கீழ் இந்திய ராணுவம் மீட்புப் பணிகளில் இறங்கியிருக்கிறது. பன்னாலா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 8 பேரை இந்தியக் கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. டிட்வா புயல்: 'படகுப் படை, மோப்ப நாய்கள்' - புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |Photo Album விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் இந்தியப் பயணிகள் பலர் சிக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கி வருகிறது இந்தியத் தூதரகம். டிட்வா புயல் இன்று (நவ. 30) அதிகாலை நிலவரப்படி, ஜாஃப்னாவிலிருந்து 80 கி.மீ வடகிழக்கே மையம் கொண்டுள்ளது. அங்கிருந்து வடக்கு-வடமேற்கு திசையில் சென்னையை நோக்கி நகர்கிறது. தெற்கு ஆந்திரா முதல் புதுச்சேரி வரையிலான இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழை புயலின் தீவிரம் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) குறைய வாய்ப்புள்ளது. எனினும் வட தமிழகத்தில் கடலூர் மாவட்டத்துக்கும் புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிட்வா புயல்: தொடர் மழையால் வெள்ளக்காடான டெல்டா வயல்கள்; 1 லட்சம் ஏக்கர் நெற் பயிர் மூழ்கிய வேதனை டெல்டா, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சம் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் 80 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. TN Alert: APP மூலம் பருவமழை தகவல்களை ... மழை பாதிப்பை குறைக்குமா புதிய நடவடிக்கை?

25 C