SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

32    C
...

பிடிபட்ட 50 சிறுத்தை புலிகள்; அம்பானியின் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்பும் மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிராவில் சிறுத்தை புலிகள் அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து இரைதேடுகின்றன. இதனால் அவற்றை வனத்துறை அதிகாரிகள் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் சிறுத்தை புலிகள் பின்னர் வனப்பகுதியில் விடப்படுவது வழக்கம். ஆனால் அவ்வாறு பிடிபட்ட சிறுத்தை புலிகளை மாநில வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். அவற்றை தொடர்ந்து பராமரிப்பதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிறுத்தை புலிகளில் 50ஐ குஜராத்தில் இருக்கும் அம்பானியின் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், ``கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சில சிறுத்தைபுலிகள் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்பப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். வந்தாரா விலங்குகள் மையம் மனித-விலங்கு மோதலை குறைக்க பிடிபட்ட 67 சிறுத்தைகள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும், அவற்றில் 50 சிறுத்தைகள் வந்தாராவிற்கு மாற்றப்படும் என்றும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முடிவை விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து நாண்டெட்டை சேர்ந்து விலங்குகள் நல ஆர்வலர் நிதின் கூறுகையில், ''சிறுத்தைபுலிகளை இவ்வாறு உயிரியல் பூங்காவிற்கு அனுப்புவது தவறு. இந்த வேட்டையாடும் சிறுத்தை புலி இனங்களை அதன் சொந்த வன வாழ்விடங்களில் வளர அனுமதிக்கவேண்டும். அவற்றை ஒரு சிறிய மிருகக்காட்சிசாலை அல்லது வனவிலங்கு மையத்திற்கு அனுப்புவது இதற்கு தீர்வாகாது. கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள 21 சிறுத்தைபுலிகளை வனப்பகுதியில் விடும்படி கடந்த 3 மாதங்களாக வனத்துறை அதிகாரிகளிடம் கோரி வருகிறேன். ஆனால் அவர்கள் அதற்கு தயாராக இல்லை. வனப்பகுதியை மனிதர்கள் ஆக்கிரமிப்பதால் வனவிலங்குகள் வாழ போதிய இடம் கிடைப்பதில்லை''என்று தெரிவித்தார். வனசக்தி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான டி.ஸ்டாலின் இது குறித்து கூறுகையில்,''மனித-விலங்கு மோதல் பிரச்சினையைத் தவிர, சிறுத்தை புலிகள் காடுகளின் இயற்கையான பாதுகாவலர்கள் என்பதால், காடுகளுக்குள் சுதந்திரமாக சுரங்க பணிகளை மேற்கொள்ள பல சிறுத்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக உணர்கிறேன். முன்னதாக, சிறுத்தைகளை கருத்தடை செய்ய ஒரு வினோதமான திட்டம் இருந்தது என்று கூறினார்.

விகடன் 7 Mar 2026 10:11 am

சிங்கம் கூட சாதுதான்; 'இந்த 4'விலங்குகள் கிட்ட மனிதர்கள் மாட்டுனா அவ்வளவுதான்!

ஒரு காட்டிற்குள் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று நம் முன் ஒரு விலங்கு வருகிறது. என்ன செய்வோம்? 'அல்லுவிட்ரும்' அல்லவா... ஆனால், எல்லா வனவிலங்குகள் பார்த்தும் பயப்பட வேண்டாம் என்றும், வெறும் 4 விலங்குகள் தான் மனிதனை வேட்டையாடக் கூடும் என்று கூறுகிறார்கள். 'ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?' என்ன சேதி என்று தெரிந்துகொள்வோம். வாங்க... பொதுவாக வனவிலங்குகள் இயற்கையாகவே வேட்டையாடும் குணம் கொண்டவை. ஆனால் எல்லா விலங்குகளும் எப்போதும் மனிதர்களைத் தாக்குவதில்லை - பயந்து ஓடிவிடும் அல்லது கண்டுகொள்ளாமல் சென்றுவிடும். Forrest Galante ஈரான்: `இந்திய விருந்தாளி மீது தாக்குதல்; இருந்தும் மோடி மௌனம்' - கார்கேயின் `3' கேள்விகள்! அவற்றைத் தொந்தரவு செய்தாலோ, அதற்குப் பசி மிகுந்தாலோ, வேறு உணவு கிடைக்காத நிலையிலோ மட்டுமே மனிதர்களை இரையாக்கும். ஆனால் இந்த நான்கு விலங்குகள் மட்டும் வேறு - இவை மனிதர்களை தங்கள் உணவுப் பட்டியலில் இயல்பாகவே சேர்த்து வைத்திருக்கின்றன. இவை மனிதர்களைப் பார்த்தால் கண்டிப்பாக வேட்டையாடும். ஏனெனில் இவை மனிதர்களை இரையாகப் பார்க்கின்றன. இதை ஆராய்ச்சி செய்து தெளிவாகக் கூறியவர் Forrest Galante - அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வனவியல் ஆராய்ச்சியாளர், சாகசப் பயணி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பாளர். அவர் Extinct or Alive என்ற நிகழ்ச்சி மூலம் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் உயிரினங்களைத் தேடி உலகின் மிக ஆபத்தான பகுதிகளுக்குச் சென்றுள்ளார். பல நேர்காணல்களில் மனிதர்களை தீவிரமாக இரையாகக் கருதும் நான்கு விலங்குகள் மட்டுமே உள்ளன என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்து, அவர் நேரடியாகக் கள ஆய்வுகளில் பெற்ற அனுபவங்கள் மற்றும் பார்வைகளின் அடிப்படையிலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நான்கு விலங்குகள்... நைல் முதலை (Nile Crocodile) — ஆப்பிரிக்காவின் ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழும் இது மிகவும் ஆபத்தான முதலைகளில் ஒன்று. மனிதர்களை ஸ்டாக் (stalk) செய்து காத்திருந்து தாக்கும். நைல் முதலை சிறுத்தை அலோபதி, சித்தா மருந்துகளை ஒன்றாக சாப்பிடலாமா? - சிறுநீரகம், கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுமா? | Q&A ஒரே இடத்தில் தண்ணீரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்தும். இது ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாகிறதாம். சிறுத்தை (Leopard) — மிகவும் தந்திரமானவை. இரவில் மரங்களில் ஏறி ஒளிந்து கொண்டு மனிதர்களை எளிதாக வேட்டையாடும். இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் 'மேன்-ஈட்டர்' சிறுத்தைகள் பல உள்ளன - மனிதர்களை எளிதான இரையாகக் கருதித் தொடர்ந்து தாக்குமாம். புலி (Tiger) — உலகின் மிகப்பெரிய பூனை வகை விலங்கு. சில புலிகள் (குறிப்பாக இந்தியாவின் சண்டீர் புலிகள் போன்றவை) மனிதர்களை வேட்டையாடிப் பழக்கப்பட்டுள்ளன. அவை மனிதர்களை எதிரியாக அல்ல, உணவாகவே பார்க்கிறதாம். பனிக்கரடி (Polar Bear) — ஆர்க்டிக் பகுதியில் வாழும் இது மிகக் கொடூரமான வேட்டையாடி. உணவுக் குறைபாடு உள்ள இடங்களில் மனிதர்களை இயல்பான இரையாகப் பார்க்கும். இதனிடம் மாட்டிக்கொண்டால் அதைவிட மோசமான மரணம் இல்லை. புலி பனிக்கரடி Spain: ஈரான் போரில் அமெரிக்காவிற்கு 'நோ' சொல்லும் ஒரே ஐரோப்ப நாடு - காரணமோ 'சூப்பர்' ஏனெனில் இது மிகப்பெரிய வலிமை, வேகம் மற்றும் கொடூரமான வேட்டை முறையைக் கொண்டது. இந்த நான்கு விலங்குகள் மட்டுமே மனிதர்களை தீவிரமாகத் தேர்ந்தெடுத்து வேட்டையாடும் என்று கலாண்டே கூறுகிறார். மற்ற விலங்குகள் (சிங்கம், ஹைனா, உப்புநீர் முதலை போன்றவை) வாய்ப்பு கிடைத்தால் தாக்கலாம். ஆனால் இவைபோல மனிதர்களைத் தொடர்ந்து இரையாகக் கருதுவதில்லை. ஆஹா... அலர்ட் ஆகுடா ஆறுமுகம்! IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை' இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா

விகடன் 6 Mar 2026 3:29 pm

2026: AI உலகில் நடக்கப்போகும் மாற்றங்கள்! - இனி பேச்சு இல்ல, வீச்சுதான்!

கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகை ஒரு புயல் போல ஆக்கிரமித்திருந்த செயற்கை நுண்ணறிவின் (AI) மீதான அதீத மோகம், தற்போது 2026-ல் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டை உலகளாவிய தொழில்நுட்ப வல்லுநர்கள் Year of Truth for AI என்று அழைக்கிறார்கள். AI 2023 & 2024-ம் ஆண்டுகளில் AI ஒரு மந்திரக்கோல் போல பார்க்கப்பட்டது. ஆனால், 2026-ல் அந்த கற்பனைகள் விலகி, நிஜ உலகப் பயன்பாடுகள், லாப-நஷ்ட கணக்குகள் மற்றும் சட்ட ரீதியான சவால்களை AI நேருக்கு நேர் சந்தித்து வருகிறது. ஏன் 2026 ஆண்டை Year of Truth for AI என்று அழைக்கிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? 1. கடந்த ஆண்டுகளில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏ.ஐ (OpenAI) போன்ற நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை AI-க்காக செலவிட்டன. முதலீட்டாளர்கள், இந்தத் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவுக்கு லாபத்தைக் கொண்டு வருகிறது? (Return on Investment - ROI) என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினர். வெறும் வியப்பூட்டும் வீடியோக்களையும், படங்களையும், கவிதைகளையும் உருவாக்கும் AI-க்குப் பதிலாக, நிறுவனங்களின் செலவைக் குறைக்கும், விற்பனையை அதிகரிக்கும் `பயனுள்ள AI' மாடல்களுக்கே தற்போது சந்தையில் மதிப்பு உள்ளது. AI - செயற்கை நுண்ணறிவு 2. AI-ஆல் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் (Deepfake) வீடியோக்கள் மற்றும் போலி செய்திகளால் உலக அரசியலிலும் சமூகத்திலும் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் AI சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் இப்போது முழு வீச்சில் அமலுக்கு வந்துள்ளன. AI நிறுவனங்கள் இனி தன்னிச்சையாக இணையத்தில் உள்ள யாருடைய கட்டுரையையோ, ஓவியத்தையோ, குரலையோ திருடி தங்கள் AI-க்கு பயிற்சி அளிக்க முடியாது. காப்புரிமை வழக்குகளால் AI நிறுவனங்கள் பெரிய இழப்பீடுகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன. இது AI-க்கான மிகப்பெரிய ரியாலிட்டி செக் ஆகும். 3. `AI வந்துவிட்டால் மனிதர்களுக்கு வேலையே இருக்காது’ என்ற ஒரு மிகப்பெரிய பயம் கடந்த காலங்களில் இருந்தது. 2026-ல் மனிதர்களின் வேலையை AI முழுமையாகப் பறிக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. மாறாக, அது ஒரு உதவியாளராகவே (Co-pilot) செயல்படுகிறது. `AI மனிதர்களை வேலையிலிருந்து நீக்காது; ஆனால் AI-ஐ பயன்படுத்தத் தெரிந்த மனிதன், அதைத் தெரியாத மனிதனைப் பின்தள்ளுவான்’ என்ற தத்துவம் இப்போது யதார்த்தமாகிவிட்டது. AI - செயற்கை நுண்ணறிவு 4. AI-க்கான தரவு மையங்களை (Data Centers) இயக்குவதற்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவு மின்சாரமும், இயந்திரங்களைக் குளிரூட்ட பல லட்சம் லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. AI-யின் வளர்ச்சிக்கு அதன் அறிவாற்றல் தடையாக இல்லை; அதை இயக்குவதற்கான மின்சாரமும் தண்ணீரும்தான் இப்போது மிகப்பெரிய தடையாக உள்ளன. அதனால், மிகப்பெரிய அளவில் ஆற்றலை உறிஞ்சும் பிரமாண்டமான AI மாடல்களை விட, சிறிய அளவிலான ஆனால் குறிப்பிட்ட வேலைகளை மட்டும் சிறப்பாகச் செய்யும் Small Language Models (SLMs) இப்போது பிரபலமாகி வருகின்றன. 5. AI சில நேரங்களில் மிகவும் நம்பிக்கையுடன் பொய்களைச் சொல்லும் (AI Hallucination). ஆரம்பத்தில் இது ஒரு நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டாலும், மருத்துவத் துறையிலும், சட்டத் துறையிலும் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவித்தது. 2026-ல் நிறுவனங்கள் 99% சரியான பதில்களைத் தரும் AI-யை மட்டுமே நம்புகின்றன. `அனைத்தையும் தெரிந்த AI’ என்பதை விட, `தவறு செய்யாத பாதுகாப்பான AI’ என்பதுதான் இந்த ஆண்டின் தாரக மந்திரம். செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது நாம் இருக்கும் 2026-ம் ஆண்டு AI-யின் வீழ்ச்சி ஆண்டு அல்ல; அது AI முதிர்ச்சியடையும் ஆண்டு. ஆரம்பகால ஆச்சரியங்கள் முடிந்து, AI என்பது இணையம் அல்லது மின்சாரத்தைப் போல நமது அன்றாட வாழ்வின் ஒரு சாதாரண, ஆனால் அத்தியாவசியமான தொழில்நுட்பமாக மாறத் தொடங்கியுள்ள ஆண்டு இது. மாயைகள் முடிந்து, நிஜமான தொழில்நுட்பப் புரட்சி தொடங்கும் புள்ளிதான் இந்த Year of Truth. இறுதியாக, இது நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றுதான்: AI என்பது மனிதர்களுக்குப் மாற்றாக வரவில்லை; மாறாக, மனிதர்களின் திறனைப் பன்மடங்கு பெருக்கவே வந்துள்ளது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்தி இந்தத் தொழில்நுட்பத்தோடு இணைந்து பயணிப்போம்.

விகடன் 6 Mar 2026 1:54 pm

2026: AI உலகில் நடக்கப்போகும் மாற்றங்கள்! - இனி பேச்சு இல்ல, வீச்சுதான்!

கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகை ஒரு புயல் போல ஆக்கிரமித்திருந்த செயற்கை நுண்ணறிவின் (AI) மீதான அதீத மோகம், தற்போது 2026-ல் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டை உலகளாவிய தொழில்நுட்ப வல்லுநர்கள் Year of Truth for AI என்று அழைக்கிறார்கள். AI 2023 & 2024-ம் ஆண்டுகளில் AI ஒரு மந்திரக்கோல் போல பார்க்கப்பட்டது. ஆனால், 2026-ல் அந்த கற்பனைகள் விலகி, நிஜ உலகப் பயன்பாடுகள், லாப-நஷ்ட கணக்குகள் மற்றும் சட்ட ரீதியான சவால்களை AI நேருக்கு நேர் சந்தித்து வருகிறது. ஏன் 2026 ஆண்டை Year of Truth for AI என்று அழைக்கிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? 1. கடந்த ஆண்டுகளில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏ.ஐ (OpenAI) போன்ற நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை AI-க்காக செலவிட்டன. முதலீட்டாளர்கள், இந்தத் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவுக்கு லாபத்தைக் கொண்டு வருகிறது? (Return on Investment - ROI) என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினர். வெறும் வியப்பூட்டும் வீடியோக்களையும், படங்களையும், கவிதைகளையும் உருவாக்கும் AI-க்குப் பதிலாக, நிறுவனங்களின் செலவைக் குறைக்கும், விற்பனையை அதிகரிக்கும் `பயனுள்ள AI' மாடல்களுக்கே தற்போது சந்தையில் மதிப்பு உள்ளது. AI - செயற்கை நுண்ணறிவு 2. AI-ஆல் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் (Deepfake) வீடியோக்கள் மற்றும் போலி செய்திகளால் உலக அரசியலிலும் சமூகத்திலும் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் AI சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் இப்போது முழு வீச்சில் அமலுக்கு வந்துள்ளன. AI நிறுவனங்கள் இனி தன்னிச்சையாக இணையத்தில் உள்ள யாருடைய கட்டுரையையோ, ஓவியத்தையோ, குரலையோ திருடி தங்கள் AI-க்கு பயிற்சி அளிக்க முடியாது. காப்புரிமை வழக்குகளால் AI நிறுவனங்கள் பெரிய இழப்பீடுகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன. இது AI-க்கான மிகப்பெரிய ரியாலிட்டி செக் ஆகும். 3. `AI வந்துவிட்டால் மனிதர்களுக்கு வேலையே இருக்காது’ என்ற ஒரு மிகப்பெரிய பயம் கடந்த காலங்களில் இருந்தது. 2026-ல் மனிதர்களின் வேலையை AI முழுமையாகப் பறிக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. மாறாக, அது ஒரு உதவியாளராகவே (Co-pilot) செயல்படுகிறது. `AI மனிதர்களை வேலையிலிருந்து நீக்காது; ஆனால் AI-ஐ பயன்படுத்தத் தெரிந்த மனிதன், அதைத் தெரியாத மனிதனைப் பின்தள்ளுவான்’ என்ற தத்துவம் இப்போது யதார்த்தமாகிவிட்டது. AI - செயற்கை நுண்ணறிவு 4. AI-க்கான தரவு மையங்களை (Data Centers) இயக்குவதற்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவு மின்சாரமும், இயந்திரங்களைக் குளிரூட்ட பல லட்சம் லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. AI-யின் வளர்ச்சிக்கு அதன் அறிவாற்றல் தடையாக இல்லை; அதை இயக்குவதற்கான மின்சாரமும் தண்ணீரும்தான் இப்போது மிகப்பெரிய தடையாக உள்ளன. அதனால், மிகப்பெரிய அளவில் ஆற்றலை உறிஞ்சும் பிரமாண்டமான AI மாடல்களை விட, சிறிய அளவிலான ஆனால் குறிப்பிட்ட வேலைகளை மட்டும் சிறப்பாகச் செய்யும் Small Language Models (SLMs) இப்போது பிரபலமாகி வருகின்றன. 5. AI சில நேரங்களில் மிகவும் நம்பிக்கையுடன் பொய்களைச் சொல்லும் (AI Hallucination). ஆரம்பத்தில் இது ஒரு நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டாலும், மருத்துவத் துறையிலும், சட்டத் துறையிலும் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவித்தது. 2026-ல் நிறுவனங்கள் 99% சரியான பதில்களைத் தரும் AI-யை மட்டுமே நம்புகின்றன. `அனைத்தையும் தெரிந்த AI’ என்பதை விட, `தவறு செய்யாத பாதுகாப்பான AI’ என்பதுதான் இந்த ஆண்டின் தாரக மந்திரம். செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது நாம் இருக்கும் 2026-ம் ஆண்டு AI-யின் வீழ்ச்சி ஆண்டு அல்ல; அது AI முதிர்ச்சியடையும் ஆண்டு. ஆரம்பகால ஆச்சரியங்கள் முடிந்து, AI என்பது இணையம் அல்லது மின்சாரத்தைப் போல நமது அன்றாட வாழ்வின் ஒரு சாதாரண, ஆனால் அத்தியாவசியமான தொழில்நுட்பமாக மாறத் தொடங்கியுள்ள ஆண்டு இது. மாயைகள் முடிந்து, நிஜமான தொழில்நுட்பப் புரட்சி தொடங்கும் புள்ளிதான் இந்த Year of Truth. இறுதியாக, இது நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றுதான்: AI என்பது மனிதர்களுக்குப் மாற்றாக வரவில்லை; மாறாக, மனிதர்களின் திறனைப் பன்மடங்கு பெருக்கவே வந்துள்ளது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்தி இந்தத் தொழில்நுட்பத்தோடு இணைந்து பயணிப்போம்.

விகடன் 6 Mar 2026 1:54 pm

உங்கள் Gmail பாதுகாப்பாக இருக்கிறதா? - ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க 2 எளிய வழிகள்!

இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் Gmail என்பது வெறும் மின்னஞ்சல் சேவை மட்டுமல்ல; அது நமது டிஜிட்டல் அடையாளத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அப்படிப்பட்ட Gmail கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்வதில் Recovery Phone Number மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உங்கள் பாஸ்வேர்டு மறந்துவிட்டாலோ அல்லது யாராவது உங்கள் கணக்கை அனுமதியின்றி அணுக முயன்றாலோ, இந்த எண் மூலமே கணக்கை மீண்டும் மீட்டெடுக்க முடியும். தகவல் திருட்டு வழிமுறைகள் முதலில் myaccount.google.com சென்று, உங்கள் Gmail முகவரியில் லாக்-இன் செய்யவும். மெனுவில் Security and sign-in ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Recovery phone ஆப்ஷன் இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக, கூகுள் மீண்டும் உங்கள் பாஸ்வேர்டு கேட்கும். பிறகு, Add recovery phone என்பதில் நீங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கும் மொபைல் எண்ணை உள்ளிடவும். அடுத்து Get code என்பதைக் க்ளிக் செய்தால் உங்கள் மொபைல் எண்ணிற்கு 6 இலக்க OTP வரும். அதை உள்ளிட்டு Verify செய்யவும். ஏன் Recovery phone எண் அவசியம்? பாஸ்வேர்டு மறந்தாலோ, உங்கள் அனுமதி இல்லாமல் வேறு யாராவது லாக்-இன் செய்ய முயற்சி செய்தாலோ, கூகுள் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும். சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளால் கணக்கு முடக்கப்பட்டால், அதை எளிதாக மீட்டெடுக்கலாம். இது உங்கள் கணக்கிற்கு ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்காகச் செயல்படுகிறது. Cyber Security கூடுதலாக, அதே செட்டிங்ஸில் இருக்கும் 2-Step Verification வசதியையும் ஆன் செய்து கொள்ளலாம். இதுவும் உங்கள் Gmailக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. யாராவது உங்கள் கடவுச்சொல்லைத் தெரிந்து வைத்திருந்தாலும், உங்கள் மொபைல் போன் இல்லாமல் அவர்களால் உங்கள் கணக்கிற்குள் நுழைய முடியாது. ஹேக்கர்கள் மற்றும் இணையத் திருடர்கள் நமது தனிப்பட்ட தகவல்களைத் திருட எப்போதும் காத்திருக்கிறார்கள். உங்கள் கணக்கு முடக்கப்பட்ட பிறகு வருந்துவதை விட, இப்போதே சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த பாதுகாப்புமுறைகளைச் செய்து தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

விகடன் 5 Mar 2026 3:53 pm

ECO India : அலையாத்தி காடுகளை காக்கும் தமிழர்க |வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.!

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்... அலையாத்தி காடுகளை காக்கும் தமிழர்கள் | வீட்டுத் தோட்டம் இனி சுலபம் | Eco India S2 EP-6 இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா.... அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க... CLICK HERE இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...! வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா,  அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..! > வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும் > வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.! > வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…

விகடன் 4 Mar 2026 7:04 pm

Raptee HV T30: 'கார் பாதி, பைக் பாதி' - ராப்டீ நிறுவனத்தின் HV வாகனம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

'மனிதன் பாதி மிருகம் பாதி' என்பதுபோல 'கார் பாதி பைக் பாதி' சேர்ந்து செய்த கலவை ஒன்று உள்ளது. அதன் பெயர் அனேகமாக உங்களுக்கே தெரிந்திருக்கும். அதன் பெயர் ராப்டீ HV. HV எனும் எழுத்துக்கு High-Voltage என அர்த்தம். இது ஒரு எலெக்ட்ரிக் பைக்தான். ஆனால், சாதாரணன எலெக்ட்ரிக் பைக் அல்ல. 7 ஆண்டுகள் கருவில் (R&D) வளர்ந்து சாலையை அலங்கரிக்க வந்திருக்கும் இதுதான் CCS2 தொழில்நுட்பம் கொண்ட முதல் பைக். அதாவது எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் அதே தொழில்நுட்பத்தில் இந்த பைக்கையும் சார்ஜ் செய்துகொள்ளலாம். பைக்கை வாங்கிய வாடிக்கையாளர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ராப்டீ நிறுவனம் T30 எனும் தனது முதல் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்தது. கருவில் மட்டுமே இருந்த ஒன்றை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு அது. இதைப் பற்றி ராப்டீ நிறுவனத்தின் CEO தினேஷ் அர்ஜுனிடம் பேசினோம், எங்கள் 7 ஆண்டுக்கால உழைப்பை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்திலேயே பல வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்பின்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறும் நாள் இது. விரைவில் இந்தியா முழுவதும் உள்ள சாலைகளை அலங்கரிக்கும் என்றார். `என்னது ரூ.1.3 லட்சத்தில் 50 கிமீ மைலேஜுடன் RE பைக்கா?' - ஹைபிரிட், எலெக்ட்ரிக்னு ராயல் அப்டேட்ஸ்! இந்த பைக்கை முதல்முறை பார்த்தபோதே வாங்கவேண்டும் என முடிவுசெய்துவிட்டேன். டெஸ்ட் ட்ரைவும் செய்து பார்த்தேன். பர்ஃபாமன்ஸ், டிசைன், ஸ்பீடு என எல்லாமே இந்த பைக்கில் பிடித்துபோய்விட்டது. உடனே புக் செய்துவிட்டேன். இப்போது முதல் டெலிவரியில் இந்த பைக்கைப் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் ஒரு வாடிக்கையாளர்.  ஏற்கனவே, இந்த ராப்டீ. HV T30-ல் 19 நாட்களில் 7,530 கிமீ தூரம் பயணம் மேற்கொண்டு ஆல் இந்தியா ரைடை முடித்துள்ளார், சென்னை MCC கல்லூரியின் துணைப் பேராசிரியர் பால மணிகண்டன். ராப்டீ HV இந்த பைக்கின் அமைப்பு அதிசய தரத்தில் உள்ளதாக 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்தது. 8 வருட பேட்டரி வாரன்டியும், 3 வருட வாகன வாரன்டியுடனும் இந்த T30 பைக்குகள் 10 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.39 லட்சம்.  'இவ்வளவு விலையா!' என ஆச்சரியப்படாதீர்கள். முதல் பேட்ஜ் டெலிவரி முடிந்து இரண்டாம் பேட்ஜ் டெலிவரிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கின்றன T30 பைக்குகள்.  ரிவர் இண்டீ ஃபேக்டரி விசிட்: யமஹாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தயாரிப்பது ரிவர்தான்!

விகடன் 4 Mar 2026 3:01 pm