Air pollution: மூச்சுவிட திணறும் டெல்லி; தூய காற்றுக்கு ஏங்கும் மக்கள்! - பிரச்னைகளும் தீர்வும்!
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகர அச்சுறுத்தலால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ``50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும். மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என உத்தரவிடும் அளவு, சூழல் கைமீறிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே டெல்லி அரசு பள்ளிகளில் குழந்தைகளின் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்திருக்கிறது. Delhi air pollution காற்றுத் தரக் குறியீடு இந்த சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒட்டுமொத்த தேசிய தலைநகரிலிருந்தும் (NCR) தரவுகளைச் சேகரித்து, சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் வானிலை அடிப்படையில், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. காற்றுத் தரக் குறியீடு (AQI) 201 - 300-க்குள் இருக்கும்போது GRAP 1 கட்டுப்பாடுகளும், 301 - 400-க்குள் இருக்கும்போது GRAP 2 கட்டுப்பாடுகளும் அமலுக்கு வரும். அதேசமயம், 401 - 450-க்குள் இருக்கும்போது GRAP 3, காற்றுத் தரக் குறியீடு 451-ஐத் தாண்டும்போது GRAP 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இப்போது டெல்லியில் GRAP 3 கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை காற்றுமாசை கட்டுப்படுத்த ஆளும் பா.ஜ.க அரசு முயன்றுவருகிறது. குறிப்பாக செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளது. Delhi air pollution ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல், இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறைக்கும் போராட்டக்காரங்களுக்கும் மத்தியில் தள்ளுமுள்ளுகூட ஏற்பட்டது. தலைநகரில் காற்று மாசு... கார்களுக்குத் தடை... பா.ஜ.க-வின் அதிரடி உத்தரவும், பின்வாங்கலும்! நடவடிக்கை போதாமை எனவே, பெரும் துயரை ஏற்படுத்தும் காற்றுமாசு தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் பேசினோம். அவர், `` அறுவடைக்குப் பிறகு, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீதமுள்ள பயிர் கழிவுகளை எரிக்கிறார்கள். அதனால்தான் காற்றுமாசுபாடு ஏற்படுகிறது என அரசு பழியை குறிப்பிட்ட மாநிலங்கள் மீது சுமத்துகிறது. அது மட்டும் காரணம் அல்ல. அரசின் நடவடிக்கையில் பெரிய போதாமை இருக்கிறது. இந்த காற்று மாசுக்கான முக்கியப் பிரச்னை அதிக வாகனப் பயன்பாடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள், பெரும் குப்பை எரியூட்டுதல் போன்றவைதான் காரணம். Delhi air pollution இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது வாகனப் பயன்பாடு. அதாவது சென்னை, மும்பை, கல்கத்தா என மூன்று நகரத்தில் இருக்கும் அளவுக்கான வாகனங்கள் டெல்லியில் பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில்தான் வெப்ப மின் நிலையங்கள், கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்யும் ஆலைகள், குப்பையை எரிக்கக்கூடிய உலைகள், சமீபத்தில் பட்டாசு வெடித்துக்கொண்டாடப்பட்ட தீபாவளி எனக் காரணங்களை வரிசைப்படுத்தலாம். இது எல்லாம் சேர்த்துதான் இப்போது இருக்கும் பிரச்னைக்கு காரணம். குளிர்காலத்தில் காற்று இடம்பெயர்வது மிக மிகக் குறைவு என்பதால், ஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லி தவிக்கிறது. என்னதான் தீர்வு? முதலில் டெல்லிவாசிகள் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். அன்றாடப் பணிகளுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரு பெரிய காரில் ஒருவர் மட்டுமே பயணிக்கும் சூழல் இருந்தால் அதை முற்றிலுமாக தவிர்க்கலாம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் பார்க்கிங் வசதிக்கான தொகையை அதிகரிப்பது, பொதுப் போக்குவரத்துக்கான சலுகைகளை வழங்குவது போன்ற நடவடிக்கையை எடுக்கலாம். அதனால் மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரிக்கும். அதே நேரம், அரசு செயல்படுத்தும் இரட்டை/ஒற்றை வாகன எண் திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாம் பெயருக்கு மட்டுமே. அதனால் எந்தப் பலனும் கிடைக்காது. காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மொத்தமாக மூடவோ அல்லது ஊருக்கு வெளியில் அமைக்கவோ உறுதியாக உத்தரவிடலாம். 'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள் மாசடைந்துள்ளன? மக்கள் தங்களின் குப்பை மேலாண்மையைக் சரியானப் பின்பற்றி, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது போன்ற நிலையை தவிர்க்க வேண்டும். தீபாவளிப் பட்டாசு வெடிப்பது முக்கியமான கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால், டெல்லியில் பா.ஜ.க ஆட்சி வருவதற்கு முன்புவரைக் கூட, தீபாவளிப் பட்டாசு வெடிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அது முழுதுமாக தகர்க்கப்பட்டது. Delhi air pollution நம் சென்னையிலேயே தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றுப் பாருங்கள். சிறு குழந்தைகள் மாஸ்க் அணிந்துகொண்டு சிகிச்சைக்கு வந்திருப்பார்கள். அப்படியானால் டெல்லியில் கற்பனை செய்து பாருங்கள். டெல்லியில், தீபாவளி முடிந்த மறுநாள் காற்றின் தரக்குறியீட்டில் 2000 இருந்தது. அதாவது 89 சிகரெட் புகைத்ததற்கு சமமான காற்று மாசு அது. டெல்லி மக்கள் அந்த அளவுக்கு மோசமான புகையை சுவாசித்தார்கள். அவங்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். அவர்களின் வாழ்நாளில் ஏழு ஆண்டுகள் குறையும். வாகன மாசுபாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்துவது,தொழில்துறை அளவில் தொழிற்சாலைகளின் உமிழ்வு அளவுகளைக் கட்டுப்படுத்தவும் பெரியளவில் முயன்றாலே தவிர எந்த மாற்றமும் ஏற்படாது. என்றார். டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?
Google Doppl: 'போட்டோ இருந்தாலே போதும்' - ஆடையை ட்ரையல் பார்க்கும் கூகுள் AI செயலி!
சோசியல் மீடியாவில் செலிபிரிட்டிஸ் அணியும் ஆடைகள் நமக்கு போட்டால் எப்படி இருக்கும்னு யோசித்து உடனே ஆர்டர் போடுகிறோம். ஆனால் வீட்டுக்கு வந்ததும் அந்த டிரஸ் செலிபிரிட்டிக்கு நல்லா இருந்து, நமக்கு ஒரு வேலை செட் ஆகாம போயிடுச்சுன்னா என்ன செய்வது...? அதுக்குத்தான் ஆடையை நேரில் ட்ரையல் பார்க்காமலேயே நமக்கு போட்டால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் இந்த 'Google Doppl' செயலி அறிமுகமாகியிருக்கு. Google Doppl 'Google Doppl' என்றால் என்ன..? நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் ஆடையை புகைப்படம் எடுத்தோ அல்லது மாடல்கள் அணிந்திருக்கும் ஆடைகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்தோ கூகுள் டோப்பல் செயலியில் பதிவேற்றம் செய்தால் மட்டும் போதும். பின்பு அந்த ஆடையை நீங்கள் அணிந்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக பார்க்கலாம். இந்த 'Google Doppl' செயலியை சோதனை செய்வதற்காக முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் பயன்படுத்தும் வகையில் கூகுள் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆம்! 'டோப்பல், ஏ.ஐ உதவியுடன் உங்கள் தோற்றம் புதிய புதிய ஆடைகளுடன் எப்படி இருக்கும் என்பதை ஸ்மார்ட் போனிலேயே காட்டுகிறது. உங்களின் புகைப்படங்களை கூட வீடியோவாக மாற்றி, ஆடைகளைத் தேர்வு செய்ய மேலும் ஒரு சிறந்த அனுபவத்தையும் தருகிறது. பயனர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு ஆடை புகைப்படத்தை பதிவேற்றுவது மட்டுமே.. மீதியை டோப்பல் செய்து விடுகிறது. Google Doppl எப்படி இருக்கிறது இந்த 'Google Doppl'? முதலில் கூகுள் டோப்பலை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் தங்களின் கூகுள் அக்கவுண்டை வைத்து லாகின் செய்து கொள்கிறார்கள். பின்பு அவர்களின் உடலின் வகை, அளவு மற்றும் அவர்களின் விருப்பத் தேர்வுகள் உட்பட அவர்கள் கேட்கும் விவரங்களை வழக்கம்போல கொடுத்துவிடுவதாக இருக்கிறது. இந்த விவரஙகளை வைத்து முதலில் அனிமேஷனாக உங்களின் அவதார் (avatar) உருவத்தை உருவாக்கிவிடுகிறது. பின்பு அவர்கள் விரும்பும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அதன் புகைப்படத்தை அப்லோட் செய்தால் போதும். அது அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்துகிறது. ஏன் அமெரிக்காவில் மட்டும்..? கூகுள் லேப்ஸ் (Labs) இன் ஒரு பகுதியாகவும் புது முயற்சியாகவும் இருக்கக்கூடிய இந்த செயலி, கூகுள் ஷாப்பிங்கில் ஏற்கனவே உள்ள 'virtual try-on' தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் டோப்பல் ஒரு சோதனை திட்டம் என்பதால் அமெரிக்காவில் மட்டுமே தற்போது பயன்படுத்தமுடியும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Google Doppl இந்தச் சோதனை மூலம் இதன் செயல்திறனை சரிபார்த்து வருகிறார்கள். ஆடையை டிரையல் பார்க்காமலேயே நமக்கு போட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வைத் தரும் இந்த செயலி, எதிர்காலத்தில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கூகுள் இதுவரை வெளியிடவில்லை. இந்த ஐடியா ஃபேஷன் ஸ்டைல், ஷாப்பிங் உலகில் பெரும் வரவேற்பைப் பெறும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Google Doppl: 'போட்டோ இருந்தாலே போதும்' - ஆடையை ட்ரையல் பார்க்கும் கூகுள் AI செயலி!
சோசியல் மீடியாவில் செலிபிரிட்டிஸ் அணியும் ஆடைகள் நமக்கு போட்டால் எப்படி இருக்கும்னு யோசித்து உடனே ஆர்டர் போடுகிறோம். ஆனால் வீட்டுக்கு வந்ததும் அந்த டிரஸ் செலிபிரிட்டிக்கு நல்லா இருந்து, நமக்கு ஒரு வேலை செட் ஆகாம போயிடுச்சுன்னா என்ன செய்வது...? அதுக்குத்தான் ஆடையை நேரில் ட்ரையல் பார்க்காமலேயே நமக்கு போட்டால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் இந்த 'Google Doppl' செயலி அறிமுகமாகியிருக்கு. Google Doppl 'Google Doppl' என்றால் என்ன..? நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் ஆடையை புகைப்படம் எடுத்தோ அல்லது மாடல்கள் அணிந்திருக்கும் ஆடைகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்தோ கூகுள் டோப்பல் செயலியில் பதிவேற்றம் செய்தால் மட்டும் போதும். பின்பு அந்த ஆடையை நீங்கள் அணிந்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக பார்க்கலாம். இந்த 'Google Doppl' செயலியை சோதனை செய்வதற்காக முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் பயன்படுத்தும் வகையில் கூகுள் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆம்! 'டோப்பல், ஏ.ஐ உதவியுடன் உங்கள் தோற்றம் புதிய புதிய ஆடைகளுடன் எப்படி இருக்கும் என்பதை ஸ்மார்ட் போனிலேயே காட்டுகிறது. உங்களின் புகைப்படங்களை கூட வீடியோவாக மாற்றி, ஆடைகளைத் தேர்வு செய்ய மேலும் ஒரு சிறந்த அனுபவத்தையும் தருகிறது. பயனர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு ஆடை புகைப்படத்தை பதிவேற்றுவது மட்டுமே.. மீதியை டோப்பல் செய்து விடுகிறது. Google Doppl எப்படி இருக்கிறது இந்த 'Google Doppl'? முதலில் கூகுள் டோப்பலை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் தங்களின் கூகுள் அக்கவுண்டை வைத்து லாகின் செய்து கொள்கிறார்கள். பின்பு அவர்களின் உடலின் வகை, அளவு மற்றும் அவர்களின் விருப்பத் தேர்வுகள் உட்பட அவர்கள் கேட்கும் விவரங்களை வழக்கம்போல கொடுத்துவிடுவதாக இருக்கிறது. இந்த விவரஙகளை வைத்து முதலில் அனிமேஷனாக உங்களின் அவதார் (avatar) உருவத்தை உருவாக்கிவிடுகிறது. பின்பு அவர்கள் விரும்பும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அதன் புகைப்படத்தை அப்லோட் செய்தால் போதும். அது அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்துகிறது. ஏன் அமெரிக்காவில் மட்டும்..? கூகுள் லேப்ஸ் (Labs) இன் ஒரு பகுதியாகவும் புது முயற்சியாகவும் இருக்கக்கூடிய இந்த செயலி, கூகுள் ஷாப்பிங்கில் ஏற்கனவே உள்ள 'virtual try-on' தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் டோப்பல் ஒரு சோதனை திட்டம் என்பதால் அமெரிக்காவில் மட்டுமே தற்போது பயன்படுத்தமுடியும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Google Doppl இந்தச் சோதனை மூலம் இதன் செயல்திறனை சரிபார்த்து வருகிறார்கள். ஆடையை டிரையல் பார்க்காமலேயே நமக்கு போட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வைத் தரும் இந்த செயலி, எதிர்காலத்தில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கூகுள் இதுவரை வெளியிடவில்லை. இந்த ஐடியா ஃபேஷன் ஸ்டைல், ஷாப்பிங் உலகில் பெரும் வரவேற்பைப் பெறும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?
கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் (நவம்பர் 23) எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமன் நாடுகளில் பரவி, தற்போது வடக்கு அரேபிய கடல் பகுதிக்கு வந்துள்ளது. அதையும் தாண்டி, இந்த சாம்பல்கள் கொஞ்சம் கொஞ்சமாக டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு - சாம்பல் இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A டெல்லி பாதிப்பு ஏற்கெனவே, டெல்லி கடும் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அரசாங்கம் சரி செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த சாம்பல்களும் டெல்லியின் சுற்றுச்சூழலை மேலும் பாதிக்கலாம். இதில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், இந்த சாம்பல் மேகங்கள் வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கும் என்பதால் பாதிப்பிற்கான வாய்ப்பு சற்று குறைவே. மத்திய அரசின் அறிவுறுத்தல் இந்த சாம்பல்கள் இந்தியாவை பாதிக்கலாம் என்பதால் ஆகாசா ஏர், இண்டிகோ, கே.எல்.எம் ஆகிய விமானங்கள் தங்களது சில விமான சேவைகளை ரத்து செய்துள்ளனர். விமான சேவை ரத்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விமான நிறுவனங்களை சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும், அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றவும், எரிப்பொருள் நிரப்புவதற்கான இடங்களை தேவைப்பட்டால் மாற்றவும் அறிவுறுத்தி உள்ளது. ஒருவேளை விமானங்களில் ஏதேனும் சாம்பல் பாதிப்பு இருந்தாலோ, இருப்பதாகவோ நினைத்தாலோ உடனே தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு; வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் - விமான சேவைகள் பாதிப்பு
எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு; வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் - விமான சேவைகள் பாதிப்பு
எத்தியோப்பியாவில் நிகழ்ந்த மாபெரும் எரிமலை வெடிப்பால், கண்ணூரில் இருந்து அபுதாபிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 1433, திங்கள்கிழமை அன்று குஜராத்தின் அஹமதாபாத் நகருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட மிகவும் அசாதாரணமான வெடிப்புகளில் ஒன்று என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதனால் விமானப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஏர்லைன்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமான சேவை | indigo அஹமதாபாத்தில் தரையிறங்கிய பயணிகளை கண்ணூருக்குத் திரும்ப அழைத்துச் செல்ல மாற்று விமான சேவையை இண்டிகோ நிறுவனம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் அலர்ட்! சுமார் 10,000 ஆண்டுகளில் முதல் முறையாக, எத்தியோப்பியாவின் ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) அன்று வெடித்ததில் ஏற்பட்ட சாம்பல் புகை மண்டலம் வட இந்தியாவை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி வழியாகச் செல்லும் விமானப் பாதைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் இன்று மாலை முதல் விமானப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சில விமானங்கள் ஏற்கெனவே சாம்பல் புகையைத் தவிர்க்க தங்கள் வழித்தடங்களை மாற்றியுள்ளன. Here we observe the ash plume from the first recorded volcanic eruption from Hayli Gubbi Volcano in Ethiopia in 10,000+ years! This is the northern end of the East African Rift Valley, a geologic spreading center driven by the Great African Superplume. pic.twitter.com/wksMnbfEI4 — Stefan Burns (@StefanBurnsGeo) November 23, 2025 அகாசா ஏர் நிறுவனம் (Akasa Air) ஒரு ஆலோசனையில், சர்வதேச விமானப் போக்குவரத்து நெறிமுறைகளின் படி எரிமலை செயல்பாட்டை கூர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்புதான் தங்களின் 'முதன்மையான முன்னுரிமை' என்றும் அது கூறியுள்ளது. US Doomsday Planes: அணு ஆயுத போரில் அதிபரை பாதுகாக்கும் விமானம்... இதன் தனித்துவம் என்ன? ஓரிரு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் வெடிப்பு! எத்தியோப்பியாவின் எர்டா அலெ மலைத்தொடரில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை, ஞாயிற்றுக்கிழமை காலை வானத்தில் உயரமாகச் சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு வாயுவின் தூண்களைக் கக்கியுள்ளது. துலூஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (Toulouse Volcanic Ash Advisory Centre) செயற்கைக்கோள் மூலம் நடத்திய மதிப்பீடுகளில், இந்த சாம்பல் புகை 10 கி.மீ முதல் 15 கி.மீ உயரம் வரை எழுந்து செங்கடலைக் கடந்து கிழக்கு நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது. இந்தச் சாம்பல் மேகம் ஏற்கனவே ஓமன் மற்றும் எமான் பிராந்தியங்களைப் பாதித்துள்ளது; மேலும், சுற்றுச்சூழல் மற்றும் விமானப் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்! 'கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓமன் சுற்றுச்சூழல் ஆணையம் (Oman’s Environment Authority) எரிமலை வாயு மற்றும் சாம்பலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. எரிமலையின் இருப்பிடம் வெகு தொலைவில் இருந்தாலும், வலுவான வெடிப்பினால் சாம்பல் புகை வணிக விமானங்கள் பயணிக்கும் உயரத்தை எட்டியுள்ளது. ஏமன் மற்றும் ஓமன் முழுவதும் பரவி மேலும் கிழக்கு நோக்கிச் செல்வதால், இந்தியாவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விடாமுயற்சி : '4000 ஆண்டுகள் அணையாமல் எரியும் தீ' - Azerbaijan பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
யானை: `57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி' - பன்னா புலிகள் காப்பகம் மகிழ்ச்சி
சம காலத்தில் நிலத்தில் வாழும் பேருயிரான யானைகள் சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. சில சமயங்களில் 80 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான ஆண்டுகளும் அரிதாக வாழ்கின்றன. அதேபோல் பாலூட்டிகளில் மிக நீண்ட காலமாக கருவைச் சுமக்கும் உயிரினமாகவும் யானைகள் தான் உள்ளன. இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை கிட்டத்தட்ட 22 மாதங்கள் யானைகளின் கர்ப்ப காலமாக இருக்கிறது. யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுப்பதும் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 57 வயதான அனார்கலி என்ற பெண் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகள் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றெடுப்பது அரிதான நிகழ்வாக உள்ள நிலையில், 57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை மற்றும் குட்டிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை இது குறித்து தெரிவித்துள்ள பன்னா புலிகள் காப்பக நிர்வாகம், சோனாபூர் கண்காட்சியில் இருந்து 1986 - ம் கொண்டு வரப்பட்ட அனார்கலி பெண் யானையை பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரித்து வருகிறோம். 57 வயதான இந்த யானை அண்மையில் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றது. இரண்டுமே நல்ல நிலையில் உள்ளன. யானைகளைப் பொறுத்தவரை இது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பன்னா புலிகள் காப்பக யானைகள் முகாமின் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. சிதைக்கப்படும் யானை வழித்தடங்கள்... ஆண்டுக்கொரு யானை பலியாகும் பரிதாபம்!
நெல்லை: தொடரும் கனமழை; அருவி சுற்றுலாத் தலங்கள் மூடல்; வாழை பயிர்கள் சேதம் #Rain Alert 2025-26
நெல்லை: கொட்டி தீர்க்கும் கனமழை|அருவி சுற்றுலா தலங்கள் மூடல்| வாழைகள் சேதம் |#Rain Alert 2025-26 நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை; தாமிரபரணியில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
Rain Alert: தமிழ்நாட்டில் இந்த வாரம் முழுவதும் மழை; சென்னைக்கு 'ஆரஞ்சு அலர்ட்' - எப்போது தெரியுமா?
இந்த வாரத்திற்கான வானிலை அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம். இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இன்று தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. மழை 'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது? நாளை(நவம்பர் 25) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (நவம்பர் 26) நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 27-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 28-ம் தேதி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 29-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி?
ஸ்ரீவில்லிபுத்தூர்: செண்பகத்தோப்பு மீன்வெட்டிபாறையில் கடும் வெள்ளப்பெருக்கு; பொதுமக்கள் செல்ல தடை
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடையறாத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, சாலைகள் பாதிப்பு, அவ்வப்போது மின்விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், மலைப்பகுதிகளிலிருந்து ஓடைகள் வழியாக திடீர் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக செண்பகத்தோப்புப் பகுதியில் உள்ள மீன்வெட்டிபாறை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீன்வெட்டிபாறை திடீர் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக செண்பகத்தோப்பு பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. அதேபோல், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் வழிபாட்டிற்காக ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். பெய்து வரும் கனமழையால் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சதுரகிரி செல்லும் பாதையில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சதுரகிரி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை - தூத்துக்குடி : 2வது நாளாக கொட்டித்தீர்க்கும் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் நீடிக்கும் காற்றின் சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாளாக கன மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகரில் நேற்று முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் வண்ணார்பேட்டை, டவுண், பாளையங்கோட்டையின் முக்கிய சாலையில் தண்ணீர் தேங்கியது. கரைப்புரண்டு ஓடும் வெள்ளம் இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோயில் முழுவதும் மூழ்கும் நிலையில் உள்ளது. சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நிலையில் இருந்த சுமார் 2 லட்சம் வாழைகள் கனமழையுடன் வீசிய சூறைக்காற்றினால் முறிந்து விழுந்துள்ளது. இதனால், 2 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் விவசாயிகள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கனமழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் மட்டம், ஒரே நாளில் 7அடி உயர்ந்து 130 அடியாக உள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளம் சேர்வலாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 141.27 அடியாக உயர்ந்துள்ளது. இந்த இரண்டு அணைகளுக்கும் வினாடிக்கு 6,178 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. மலைப்பகுதியில் தொடரும் மழையால் அணைப்பகுதிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் சற்று அதிகமாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரும் தாமிரபரணியில் கலப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சில பகுதிகளில் தரைப்பாலங்களை மூழ்கடித்தும் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கடலோரப் பகுதிகளான திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதியில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவில் கனமழை பெய்துள்ளது. முறிந்து விழுந்த வாழைகள் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதிகள் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடதிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன் வளத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் அடவிநயினார், குண்டாற்றில் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில், நேற்று பரவலாக பெய்த மழையால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மூன்று மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. சென்னையிலிருந்து மாநில பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 75 பேர் தூத்துக்குடிக்கு வந்தடைந்தனர். போலீஸார் பாதுகாப்பு இவர்களில் 25 பேர் கொண்ட ஒரு அணியினர், நெல்லைக்கு வந்தடைந்தனர். மீதமுள்ள 2 அணியினர் வெள்ளப்பெருக்கு மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் ராதாபுரத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர், பாபநாசம், முக்கூடல் ஆகிய பகுதிகளில் நவீன உபகரணங்களுடன் முகாமிட்டு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.
Rain Alert: உருவாகும் சென்யார் புயல்; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இது வரும் புதன்கிழமை (26-ம் தேதி) அன்று புயலாக வலுப்பெறும் எனவும், இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள, 'சிங்கம்' எனப் பொருள்படும் ‘சென்யார்' எனப் பெயரிடப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், குமரிக்கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மழை. குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (24-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களின் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ``அரசின் முன்னேற்பாட்டால் மழை பாதிப்பு இல்லை, பாசன நீர் உறுதி'' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
Rain Alert: உருவாகும் சென்யார் புயல்; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இது வரும் புதன்கிழமை (26-ம் தேதி) அன்று புயலாக வலுப்பெறும் எனவும், இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள, 'சிங்கம்' எனப் பொருள்படும் ‘சென்யார்' எனப் பெயரிடப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், குமரிக்கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மழை. குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (24-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களின் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ``அரசின் முன்னேற்பாட்டால் மழை பாதிப்பு இல்லை, பாசன நீர் உறுதி'' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை; தாமிரபரணியில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தென்குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக பிற பகுதிகளில் இருந்து ஆற்றுப்பகுதிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் படித்துறையையும் கல்மண்டபங்களையும் மூழ்கடித்துச் செல்கிறது. தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு இதனால், ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு பாபநாசம் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டவுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 130 அடியைத் தாண்டியதால் ஆற்றில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் இருந்து சுமார் 15,250 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 11,060 கன அடி தண்ணீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கடலில் கலக்கிறது. நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்! மற்ற அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதேபோல கோரம்பள்ளம் கண்மாயில் இருந்து சுமார் 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு குறிப்பாக ஏரல், ஆத்தூர் பாலங்களுக்கு அருகில் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியது. கம்பாநதி காமாட்சி அம்மன் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. திருச்செந்தூர் முருகன் கோயில், சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் வளாகத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் சுமார் 2 முதல் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தாமிரபரணி ஆறு: ”தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலா?” - ஐகோர்ட் கேள்வி சில இடங்களில் சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் வெள்ளநீர் கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்ப்பிடிப்புக் குளத்தின் கரைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல கயத்தார், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய், ஊரணிகளும் பெய்து வரும் மழையால் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு சில தாழ்வான பகுதிகள், பாலங்கள் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு கருதி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி படுகொலை நினைவு தினம்: மாஞ்சோலை புரட்சியாளர்களுக்கு வீரவணக்கம் -இயக்குநர் மாரி செல்வராஜ்!
நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்!
நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்.!

27 C