விஜய் மீது வழக்கு: எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முடக்க நினைத்த அதே பாணி... - ஆதவ் அர்ஜுனா
சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச் சென்று பிரசாரத்தையும் வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். த.வெ.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று காலை முதல் அவரின் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக அதிகாலை முதலே வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்கிறார்கள். விஜய் கடந்த 10, 15 ஆண்டுகளாக தொகுதியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் இருப்பதை உணர முடிகிறது. 'விஜய் அண்ணன் ஆட்சிக்கு வர வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஆழமாக உள்ளது. சென்னை மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் தலைவர் அறிவித்த வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்து வருகின்றனர். பெரம்பூர்: அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்க; GEN Z கிட்ஸுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் - தவெக விஜய் நேற்று பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கலை முடித்துவிட்டு, கொளத்தூர் தொகுதி வழியாக தலைவர் பிரசாரத்திற்கு வந்தபோது, மக்கள் திரண்டு வந்தனர். இது கட்சியினரால் திட்டமிட்டு கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. தலைவரைப் பார்க்க மக்கள் தானாகவே முன்வந்து திரண்ட எழுச்சி அலை. ஆனால், ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இந்த மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, பாதுகாப்பு வழங்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் காரணமாக, தலைவர் விஜய் திட்டமிட்டபடி வில்லிவாக்கம் தொகுதிக்கு வர இயலவில்லை. கொளத்தூரில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே, திட்டமிட்டு சில இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. கரூர் மருத்துவமனை கரூரில் செந்தில் பாலாஜி முன்னெடுத்த சில நிகழ்வுகளால் எப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டதோ, அதேபோன்ற ஒரு நிலையை இங்கும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கரூரில் நடந்த சம்பவத்திற்குப் பயந்துதான் செந்தில் பாலாஜி இன்று கோயம்புத்தூர் தொகுதியில் தஞ்சம் புகுந்துள்ளார். அதே போன்றதொரு ஆபத்தான சூழல் கொளத்தூர் மக்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆளுங்கட்சியின் சதித்திட்டத்தை முன்கூட்டியே உணர்ந்ததால், மக்களின் பாதுகாப்பைக் கருதி எங்களது பிரசாரத்தை மிக விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் மிக விரைவில் வில்லிவாக்கத்தில் ஒரு பிரமாண்டமான பிரச்சாரத்தை மேற்கொண்டு உங்களை நேரில் சந்திப்பேன் என விஜய் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளைத் தாண்டி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முதல் கடமை என்பதை இதன் மூலம் பதிவு செய்கிறோம். இன்று காலை ஒரு பேரதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. எந்தத் தவறும் செய்யாத எங்கள் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு (FIR) செய்துள்ளது. மக்கள் தன்னிச்சையாகத் திரண்டு வருவதைத் தடுக்க முடியாது என்று தெரிந்தே, பொறாமையின் காரணமாகவும், பயத்தின் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா 26 கட்சிகள் கூட்டணி, பணபலம், 75 ஆண்டுக்காலப் பாரம்பர்யம் எனப் பெருமை பேசும் தி.மு.க, ஒரு புதிய கட்சியின் எழுச்சியைக் கண்டு இவ்வளவு பயப்படுவது ஏன்? எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை முடக்க நினைத்த அதே பாணியை இன்று விஜய் மீதும் தி.மு.க கையாள்கிறது. அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான ஊழல் புகார்கள் மற்றும் அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குச் சென்றது பற்றிய உண்மைகளை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம். தமிழக காவல்துறை இன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடிச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், காவல்துறையின் உயர் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகள் போலச் செயல்படுகிறார்கள். சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளை மாற்றாதவரை நியாயமான தேர்தல் நடக்காது. இது குறித்து தேர்தல் ஆணையர் அர்ச்சனா மீனா அவர்களிடம் நாங்கள் புகார் அளிப்போம் என்றார். நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி...' - சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா
விஜய் மீது வழக்கு: எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முடக்க நினைத்த அதே பாணி... - ஆதவ் அர்ஜுனா
சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச் சென்று பிரசாரத்தையும் வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். த.வெ.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று காலை முதல் அவரின் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக அதிகாலை முதலே வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்கிறார்கள். விஜய் கடந்த 10, 15 ஆண்டுகளாக தொகுதியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் இருப்பதை உணர முடிகிறது. 'விஜய் அண்ணன் ஆட்சிக்கு வர வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஆழமாக உள்ளது. சென்னை மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் தலைவர் அறிவித்த வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்து வருகின்றனர். பெரம்பூர்: அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்க; GEN Z கிட்ஸுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் - தவெக விஜய் நேற்று பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கலை முடித்துவிட்டு, கொளத்தூர் தொகுதி வழியாக தலைவர் பிரசாரத்திற்கு வந்தபோது, மக்கள் திரண்டு வந்தனர். இது கட்சியினரால் திட்டமிட்டு கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. தலைவரைப் பார்க்க மக்கள் தானாகவே முன்வந்து திரண்ட எழுச்சி அலை. ஆனால், ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இந்த மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, பாதுகாப்பு வழங்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் காரணமாக, தலைவர் விஜய் திட்டமிட்டபடி வில்லிவாக்கம் தொகுதிக்கு வர இயலவில்லை. கொளத்தூரில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே, திட்டமிட்டு சில இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. கரூர் மருத்துவமனை கரூரில் செந்தில் பாலாஜி முன்னெடுத்த சில நிகழ்வுகளால் எப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டதோ, அதேபோன்ற ஒரு நிலையை இங்கும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கரூரில் நடந்த சம்பவத்திற்குப் பயந்துதான் செந்தில் பாலாஜி இன்று கோயம்புத்தூர் தொகுதியில் தஞ்சம் புகுந்துள்ளார். அதே போன்றதொரு ஆபத்தான சூழல் கொளத்தூர் மக்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆளுங்கட்சியின் சதித்திட்டத்தை முன்கூட்டியே உணர்ந்ததால், மக்களின் பாதுகாப்பைக் கருதி எங்களது பிரசாரத்தை மிக விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் மிக விரைவில் வில்லிவாக்கத்தில் ஒரு பிரமாண்டமான பிரச்சாரத்தை மேற்கொண்டு உங்களை நேரில் சந்திப்பேன் என விஜய் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளைத் தாண்டி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முதல் கடமை என்பதை இதன் மூலம் பதிவு செய்கிறோம். இன்று காலை ஒரு பேரதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. எந்தத் தவறும் செய்யாத எங்கள் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு (FIR) செய்துள்ளது. மக்கள் தன்னிச்சையாகத் திரண்டு வருவதைத் தடுக்க முடியாது என்று தெரிந்தே, பொறாமையின் காரணமாகவும், பயத்தின் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா 26 கட்சிகள் கூட்டணி, பணபலம், 75 ஆண்டுக்காலப் பாரம்பர்யம் எனப் பெருமை பேசும் தி.மு.க, ஒரு புதிய கட்சியின் எழுச்சியைக் கண்டு இவ்வளவு பயப்படுவது ஏன்? எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை முடக்க நினைத்த அதே பாணியை இன்று விஜய் மீதும் தி.மு.க கையாள்கிறது. அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான ஊழல் புகார்கள் மற்றும் அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குச் சென்றது பற்றிய உண்மைகளை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம். தமிழக காவல்துறை இன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடிச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், காவல்துறையின் உயர் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகள் போலச் செயல்படுகிறார்கள். சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளை மாற்றாதவரை நியாயமான தேர்தல் நடக்காது. இது குறித்து தேர்தல் ஆணையர் அர்ச்சனா மீனா அவர்களிடம் நாங்கள் புகார் அளிப்போம் என்றார். நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி...' - சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா
Jai Bhim: இருளர் மக்களின் விடியல் எப்போது? - DMK, ADMK, TVK, NTK கண்டுகொள்ளுமா? | IPS On Road | #29
மனிதாபிமான உதவி: இந்தியா வரவிருந்த விமானம் மீது தாக்குதல் - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பலமுனை மோதலாக உருவெடுத்துள்ளது. ஈரானிலிருந்து இந்தியாவிற்கு மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காகப் புறப்படவிருந்த விமானம் ஒன்று அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், 'மஹான் ஏர்' நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. அந்த விமானத்தில் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக டெல்லிக்கு வரவிருந்த இந்த விமானம், தாக்குதலுக்கு உள்ளானதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் தனது சுகாதாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், இந்திய உதவிப் பொருட்கள் ஈரானுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Mahan Air இந்த மோதல்களுக்கு மத்தியிலும், தனக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் தனது நன்றியைத் தெரிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளில், இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் செய்திகள் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியா அனுப்பிய முதற்கட்ட மனிதாபிமான உதவிகளை ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நன்றியறிவிப்பு ஒரு அடையாளச் செயலாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், ``ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாக வணிகத்திற்காகத் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை முற்றிலுமாகத் தகர்ப்போம். மேலும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும். ஈரானின் 47 ஆண்டுகால பயங்கரவாத ஆட்சிக்கு இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த நேரடி மோதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தடைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த மத்தியஸ்த முயற்சிகளை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்து போர் இன்னும் தீவிரமடையும் என்றே அஞ்சப்படுகிறது.
Iran war: Kharg Island-ஐ கைப்பற்ற US திட்டமா? | Trump | Israel | Decode | Vikatan
RAHUL - TVK - STALIN: TN ELECTION -ல் திருமா போட்டியிட 3 காரணங்கள்? | Vijay -க்கு DMK சவால்| Seeman
தன் Producer -க்காக ஏன் Vijay பேசல? | Director Perarasu Interview | Vikatan
மோடியின் வாயைப் பூட்டி, சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது - பிருந்தா காரத் காட்டம்
கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் முதல் ரவுண்ட் பிரசாரம் மேற்கொண்டனர். இரண்டாம் கட்டமாக அடுத்தும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின்போது பா.ஜ.க 'ஏ' டீம் எனக்கூறி சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளை அட்டாக் செய்தார். ராகுல் காந்தி பிரசாரத்தின்போது சபரிமலை தங்கம் கொள்ளை பற்றி பிரதமர் மோடி மறந்துவிட்டார் எனவும், கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர வேண்டும் என மோடி விரும்புவதாகவும் கூறியிருந்தார். மேலும், ரப்பருக்கு அடிப்படை ஆதாரவிலையை 250 ரூபாயாக நிர்ணயிப்பதாக 2016-ல் வாக்குறுதி அளித்த சி.பி.எம் அதை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதானி, அம்பானி மற்றும் அமெரிக்காவும்தான் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஏ' டீம். டொனால்ட் டிரம்ப் ஈரானை முதலில் தாக்கியபோதும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தைத் தாக்கியபோதும் மௌனம் காத்தவர் மோடி. மோடியின் வாயைப் பூட்டி அதன் சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது. பிருந்தா காரத் கேரளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் பா.ஜ.க மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுப்பவர்கள் சி.பி.எம் கட்சியினர். இதனை மறைத்து 'டீல்' என்று கூறி பா.ஜ.க-வும் காங்கிரஸும் பொய்ப் பிரசாரம் செய்கின்றன. பல விஷயங்களில் பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போன்று செயல்படுகின்றனர். கேரள மக்களுக்குச் சேர வேண்டிய நிதியை ஏன் மறுக்கிறீர்கள் என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம் சில மதப் பிரிவினரை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டது. பிருந்தா காரத் கர்நாடகாவும் தெலங்கானாவும் காங்கிரஸின் ஏ.டி.எம்-களாக மாறிவிட்டன. அங்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸால் நிறைவேற்ற முடியவில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பிறகுதான் ராகுல் காந்தி கேரளாவில் வந்து வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் வயநாடு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடு அமைத்து கொடுக்க எல்.டி.எஃப் அரசு டவுன்ஷிப் அமைத்து வருகிறது. இந்த நேரத்தில் வீடு கட்டித் தருவதாகச் சொல்லி வருபவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) மக்களிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலித்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?
மோடியின் வாயைப் பூட்டி, சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது - பிருந்தா காரத் காட்டம்
கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் முதல் ரவுண்ட் பிரசாரம் மேற்கொண்டனர். இரண்டாம் கட்டமாக அடுத்தும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின்போது பா.ஜ.க 'ஏ' டீம் எனக்கூறி சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளை அட்டாக் செய்தார். ராகுல் காந்தி பிரசாரத்தின்போது சபரிமலை தங்கம் கொள்ளை பற்றி பிரதமர் மோடி மறந்துவிட்டார் எனவும், கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர வேண்டும் என மோடி விரும்புவதாகவும் கூறியிருந்தார். மேலும், ரப்பருக்கு அடிப்படை ஆதாரவிலையை 250 ரூபாயாக நிர்ணயிப்பதாக 2016-ல் வாக்குறுதி அளித்த சி.பி.எம் அதை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதானி, அம்பானி மற்றும் அமெரிக்காவும்தான் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஏ' டீம். டொனால்ட் டிரம்ப் ஈரானை முதலில் தாக்கியபோதும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தைத் தாக்கியபோதும் மௌனம் காத்தவர் மோடி. மோடியின் வாயைப் பூட்டி அதன் சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது. பிருந்தா காரத் கேரளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் பா.ஜ.க மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுப்பவர்கள் சி.பி.எம் கட்சியினர். இதனை மறைத்து 'டீல்' என்று கூறி பா.ஜ.க-வும் காங்கிரஸும் பொய்ப் பிரசாரம் செய்கின்றன. பல விஷயங்களில் பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போன்று செயல்படுகின்றனர். கேரள மக்களுக்குச் சேர வேண்டிய நிதியை ஏன் மறுக்கிறீர்கள் என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம் சில மதப் பிரிவினரை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டது. பிருந்தா காரத் கர்நாடகாவும் தெலங்கானாவும் காங்கிரஸின் ஏ.டி.எம்-களாக மாறிவிட்டன. அங்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸால் நிறைவேற்ற முடியவில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பிறகுதான் ராகுல் காந்தி கேரளாவில் வந்து வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் வயநாடு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடு அமைத்து கொடுக்க எல்.டி.எஃப் அரசு டவுன்ஷிப் அமைத்து வருகிறது. இந்த நேரத்தில் வீடு கட்டித் தருவதாகச் சொல்லி வருபவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) மக்களிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலித்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?
வேலூர் தவெக வேட்பாளர் பின்னணி: மினி டிரக்; 7 கார்கள்; கைகொடுத்த பிசினஸ் - வெளியான சொத்து மதிப்பு
பி ரசாரம், பேரணி, வாக்குசேகரிப்பு எனத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. களத்தில் நேருக்குநேர் மோதும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதன்படி, வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஆகிய இருவரும் நேற்றைய தினம் தங்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். உறுதிமொழி பத்திரத்துடன் அவர்கள் கணக்கு காட்டியுள்ள சொத்து மதிப்பும், தற்போது வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன் தேர்தல் களத்துக்கு முதல்முறையாக வந்திருக்கிறார். தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.1,49,29,432 மதிப்பில் இருப்பதாகவும், தனது மனைவி எழிலரசி பெயரில் 54,94,436 ரூபாய் மதிப்பிலும், மகள் ஸ்ரீவித்யா பெயரில் 7,00,400 ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். வேலூர் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் கையில் ரொக்கமாக தன்னிடம் 1,25,550 ரூபாயும், தன் மனைவியிடம் 10,000 ரூபாய் இருப்பதாகவும், தனது பெயரில் ஒரு மினி டிரக் மற்றும் 7 கார்கள் இருக்கின்றன எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இவை அனைத்தும், அசையும் சொத்துகள் பட்டியலில் அடக்கமாகிறது. அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் ரூ.62,68,000 மதிப்பிலும், தனது மனைவி மற்றும் தனது மகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக 2,73,92,268 ரூபாய்க்கு இருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். கொளத்தூர்: அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை அதேபோல, தனது பெயரிலும் தன் மனைவி பெயரிலும் சேர்த்து தொழில் ரீதியாக 1,12,03,537 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். இதில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், வினோத் கண்ணனின் பின்னணி க்ளியராக இருக்கிறது. எந்தவொரு வழக்கு விவகாரங்களிலும் அவரின் பெயர் இதுநாள் வரை பதிவாகவில்லை. `அலமா அபாகஸ்’ கல்வி பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் வினோத் கண்ணன். அவரின் மனைவி எழிலரசி `ஶ்ரீ மெமென்டோஸ்’ விற்பனையகம் நடத்துகிறார். பூர்வீக சொத்து இல்லாமல், படிப்படியாக பிசினஸ் கைகொடுத்ததால் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, வேலூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தையும் தொடங்கி, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் வினோத் கண்ணன். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா வேலூர் தொகுதியில் களமிறங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஓர் இல்லத்தரசி. அவரின் கணவர் விஜய் வாகன ஓட்டுநராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு மனைவியை உயர்க்கல்வி படிக்கவைக்க விருப்பப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பி.ஏ தமிழ் பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார். வரும் 2026-2027 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டு செல்லவிருக்கிறார் சோனியா. இந்த நிலையில், அசையும் சொத்து தனது பெயரில் 8,57,000 ரூபாய் மதிப்பிலும், தன் கணவர் பெயரில் ரூ.20,30,000 மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அசையா சொத்துகள் எதுவுமே இல்லை எனவும், தனது வங்கிக் கணக்கில் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே வைப்புத் தொகையாக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார் சோனியா. Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்
வேலூர் தவெக வேட்பாளர் பின்னணி: மினி டிரக்; 7 கார்கள்; கைகொடுத்த பிசினஸ் - வெளியான சொத்து மதிப்பு
பி ரசாரம், பேரணி, வாக்குசேகரிப்பு எனத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. களத்தில் நேருக்குநேர் மோதும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதன்படி, வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஆகிய இருவரும் நேற்றைய தினம் தங்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். உறுதிமொழி பத்திரத்துடன் அவர்கள் கணக்கு காட்டியுள்ள சொத்து மதிப்பும், தற்போது வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன் தேர்தல் களத்துக்கு முதல்முறையாக வந்திருக்கிறார். தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.1,49,29,432 மதிப்பில் இருப்பதாகவும், தனது மனைவி எழிலரசி பெயரில் 54,94,436 ரூபாய் மதிப்பிலும், மகள் ஸ்ரீவித்யா பெயரில் 7,00,400 ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். வேலூர் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் கையில் ரொக்கமாக தன்னிடம் 1,25,550 ரூபாயும், தன் மனைவியிடம் 10,000 ரூபாய் இருப்பதாகவும், தனது பெயரில் ஒரு மினி டிரக் மற்றும் 7 கார்கள் இருக்கின்றன எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இவை அனைத்தும், அசையும் சொத்துகள் பட்டியலில் அடக்கமாகிறது. அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் ரூ.62,68,000 மதிப்பிலும், தனது மனைவி மற்றும் தனது மகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக 2,73,92,268 ரூபாய்க்கு இருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். கொளத்தூர்: அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை அதேபோல, தனது பெயரிலும் தன் மனைவி பெயரிலும் சேர்த்து தொழில் ரீதியாக 1,12,03,537 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். இதில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், வினோத் கண்ணனின் பின்னணி க்ளியராக இருக்கிறது. எந்தவொரு வழக்கு விவகாரங்களிலும் அவரின் பெயர் இதுநாள் வரை பதிவாகவில்லை. `அலமா அபாகஸ்’ கல்வி பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் வினோத் கண்ணன். அவரின் மனைவி எழிலரசி `ஶ்ரீ மெமென்டோஸ்’ விற்பனையகம் நடத்துகிறார். பூர்வீக சொத்து இல்லாமல், படிப்படியாக பிசினஸ் கைகொடுத்ததால் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, வேலூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தையும் தொடங்கி, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் வினோத் கண்ணன். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா வேலூர் தொகுதியில் களமிறங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஓர் இல்லத்தரசி. அவரின் கணவர் விஜய் வாகன ஓட்டுநராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு மனைவியை உயர்க்கல்வி படிக்கவைக்க விருப்பப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பி.ஏ தமிழ் பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார். வரும் 2026-2027 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டு செல்லவிருக்கிறார் சோனியா. இந்த நிலையில், அசையும் சொத்து தனது பெயரில் 8,57,000 ரூபாய் மதிப்பிலும், தன் கணவர் பெயரில் ரூ.20,30,000 மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அசையா சொத்துகள் எதுவுமே இல்லை எனவும், தனது வங்கிக் கணக்கில் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே வைப்புத் தொகையாக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார் சோனியா. Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்
வந்தவாசி: பத்து தோல்வி பழனிசாமியை, மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ - உதயநிதி
தி ருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தனித் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது உதயநிதி பேசுகையில், ``இந்தியாவில் வளர்ந்து வருகிற மாநிலங்களில் 11.19 சதவிகித வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு நமக்குத் துணை நிற்கிறதா? நிதி உரிமை, கல்வி உரிமை என மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு, புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்தார்கள். அதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால், தமிழ்நாடு மட்டும் ஏற்கவில்லை. ஏன்? புதிய கல்விக் கொள்கையை அனுமதித்தால் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க முயற்சிப்பார்கள். வந்தவாசி தனித் தொகுதி நமக்கு வரவேண்டிய 2,500 கோடி ரூபாய் கல்வி நிதி, இப்போதுவரை வரவில்லை. `புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி கொடுப்போம்’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சொல்கிறார். `2500 கோடி ரூபாய் அல்ல; பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்கள்மீது திணிக்க மாட்டேன்’ என்று நம்முடைய முதலமைச்சர் சொல்கிறார். இப்படி, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒவ்வொரு விஷயத்திலும் துரோகம் செய்துகொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக, எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக்கொண்டு இன்றைக்கு மக்களைச் சந்திக்க வருகிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் சாதிப்பாரா உதயநிதி? `ஜாடிக்கேற்ற மூடி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல, மோடிக்கேற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார். அரசியலில் முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவே எடப்பாடி பழனிசாமியின் ரூபத்தில் ஒரு முரட்டு அடிமையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இவர்களுக்குச் சரியான பாடத்தைச் சொல்லித் தர வேண்டும். பொதுவாக, ஒரு ப்ராடக்ட் பெரிய ஹிட்டானால், அதே மாதிரி போலி ப்ராடக்டை லான்ச் செய்வார்கள். `சைனீஸ் மேக் டூப்ளிகேட்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதுமாதிரிதான் இன்றைக்கு டெல்லியில் அ.தி.மு.க கூட்டணி அரேஞ்ச் செய்யப்பட்டிருக்கிறது. கீழ்பென்னாத்தூர் தொகுதி சைனா மேக் மாதிரி டெல்லி மேக்காக அ.தி.மு.க உங்களிடம் வருகிறது. நிச்சயமாக, அந்தக் கூட்டணிக்கு கேரன்டியும் கிடையாது; வாரன்டியும் கிடையாது. தேர்தல் முடிந்தவுடன் அதனுடைய பியூஸைப் பிடுங்கிவிடுவார்கள். அ.தி.மு.க கட்சியைப் போன தேர்தலின்போது பா.ஜ.க-விடம் வாடகைக்கு விட்டிருந்தார். இன்றைக்கு மொத்தமாக பா.ஜ.க-விடம் விற்றுவிட்டார். இந்தத் தேர்தல், மோடியா? நம்முடைய தலைவரா? என்று கேட்கக்கூடிய தேர்தல். இன்றைக்கு பா.ஜ.க ஒரு டீமாக வந்திருக்கிறது. பா.ஜ.க-வின் ஏ டீம், பி டீம், சி டீம் என்று களத்துக்குப் பலபேர் வந்திருக்கிறார்கள். எத்தனை டீம் வந்தாலும், நம்முடைய தலைவர்தான் சாம்பியன்’’ என்றார். அதைத்தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கு.பிச்சாண்டியை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அங்கு பேசுகையில், ``இன்றைக்கு `மக்களைக் காப்போம்; தமிழ்நாட்டை மீட்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் இருந்து மீட்க வேண்டும். பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ என்றார். ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்
வந்தவாசி: பத்து தோல்வி பழனிசாமியை, மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ - உதயநிதி
தி ருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தனித் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது உதயநிதி பேசுகையில், ``இந்தியாவில் வளர்ந்து வருகிற மாநிலங்களில் 11.19 சதவிகித வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு நமக்குத் துணை நிற்கிறதா? நிதி உரிமை, கல்வி உரிமை என மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு, புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்தார்கள். அதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால், தமிழ்நாடு மட்டும் ஏற்கவில்லை. ஏன்? புதிய கல்விக் கொள்கையை அனுமதித்தால் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க முயற்சிப்பார்கள். வந்தவாசி தனித் தொகுதி நமக்கு வரவேண்டிய 2,500 கோடி ரூபாய் கல்வி நிதி, இப்போதுவரை வரவில்லை. `புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி கொடுப்போம்’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சொல்கிறார். `2500 கோடி ரூபாய் அல்ல; பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்கள்மீது திணிக்க மாட்டேன்’ என்று நம்முடைய முதலமைச்சர் சொல்கிறார். இப்படி, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒவ்வொரு விஷயத்திலும் துரோகம் செய்துகொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக, எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக்கொண்டு இன்றைக்கு மக்களைச் சந்திக்க வருகிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் சாதிப்பாரா உதயநிதி? `ஜாடிக்கேற்ற மூடி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல, மோடிக்கேற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார். அரசியலில் முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவே எடப்பாடி பழனிசாமியின் ரூபத்தில் ஒரு முரட்டு அடிமையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இவர்களுக்குச் சரியான பாடத்தைச் சொல்லித் தர வேண்டும். பொதுவாக, ஒரு ப்ராடக்ட் பெரிய ஹிட்டானால், அதே மாதிரி போலி ப்ராடக்டை லான்ச் செய்வார்கள். `சைனீஸ் மேக் டூப்ளிகேட்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதுமாதிரிதான் இன்றைக்கு டெல்லியில் அ.தி.மு.க கூட்டணி அரேஞ்ச் செய்யப்பட்டிருக்கிறது. கீழ்பென்னாத்தூர் தொகுதி சைனா மேக் மாதிரி டெல்லி மேக்காக அ.தி.மு.க உங்களிடம் வருகிறது. நிச்சயமாக, அந்தக் கூட்டணிக்கு கேரன்டியும் கிடையாது; வாரன்டியும் கிடையாது. தேர்தல் முடிந்தவுடன் அதனுடைய பியூஸைப் பிடுங்கிவிடுவார்கள். அ.தி.மு.க கட்சியைப் போன தேர்தலின்போது பா.ஜ.க-விடம் வாடகைக்கு விட்டிருந்தார். இன்றைக்கு மொத்தமாக பா.ஜ.க-விடம் விற்றுவிட்டார். இந்தத் தேர்தல், மோடியா? நம்முடைய தலைவரா? என்று கேட்கக்கூடிய தேர்தல். இன்றைக்கு பா.ஜ.க ஒரு டீமாக வந்திருக்கிறது. பா.ஜ.க-வின் ஏ டீம், பி டீம், சி டீம் என்று களத்துக்குப் பலபேர் வந்திருக்கிறார்கள். எத்தனை டீம் வந்தாலும், நம்முடைய தலைவர்தான் சாம்பியன்’’ என்றார். அதைத்தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கு.பிச்சாண்டியை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அங்கு பேசுகையில், ``இன்றைக்கு `மக்களைக் காப்போம்; தமிழ்நாட்டை மீட்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் இருந்து மீட்க வேண்டும். பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ என்றார். ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

28 C