8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு - காரணம் என்ன?
இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செய்திகளையும், தவறான பிரசாரங்களையும் செய்து வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக 8 யூடியூப் சேனல்கள், ஒரு ஃபேஸ்புக் ஐடி, இரண்டு ஃபேஸ்புக் பதிவுகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021இன் கீழ் மத்திய அரசு முடக்கியுள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சேனலும் அடங்கும். இந்த சேனல்களுக்கு 85 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து கடந்த ஓராண்டில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்ததாக 102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்திய இறையான்மை, தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் ஆகியவை குறித்து தவறான தகவலை வெளியிடும் எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் படி மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக, கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747 வலைதள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம், 69ஏ பிரிவின் கீழ் முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.இதையும் படிக்க: இனி இன்ஸ்டா ரீல்ஸ் மூலமும் பணத்தை குவிக்கலாம்! இதோ இப்படித்தான்
அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என ஐஜத எம்எல்ஏ பகிரங்க புகார்.. சிக்கலில் நிதிஷ் குமார்!
பீகார் மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளார் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி. இதனால் அம்மாநில அரசியலில் மீண்டும் குழப்பம் நிலவுகிறது.பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி உடனான முரண்பாட்டை தொடர்ந்து கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார்.இதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கமும் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி, ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், தன்னைப் போன்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.இதற்கு பதில் அளித்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி கூறிய கருத்து தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் அவையில் இடம் வழங்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி பேசியிருக்கக் கூடாது என தெரிவித்துள்ள நிதிஷ்குமார், இத்தகைய தவறான செயல்பாடுகள் குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பீமா பாரதியை போலவே இன்னும் சில சட்டம்னற உறுப்பினர்களும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.- நிரஞ்சன் குமார்
Media பொண்ணுங்களே இப்படித்தான், இதுங்களுக்கெல்லாம் வாழவே தெரியாதுனு... Shalini's Painful Story|Meera
நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசிப் பேருந்து மும்பையில் இயக்கம்
நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம்: முதன்முறையாக முளைக்கட்டுத் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்!
ரா மநாதபுரம் அருகே மாடக்கொட்டான் தில்லைநாயகபுரம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மும்தாஜ் என்ற திருநங்கை சொந்தமாக வீடு கட்டி, அதில் 15 திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். இவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது பகுதியில் மணலில் முத்துமாரியம்மனுக்குக் கோயில் எழுப்பி, முளைக்கட்டுத் திருவிழா கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி முதலாம் ஆண்டு முளைக்கட்டுத் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். தினமும் கோயில் முன்பு கும்மி கொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பெண்களுடன் கும்மி கொட்டிய திருநங்கைகள் இதனைத் தொடர்ந்து நேற்று முளைப்பாரி, பால்குடத்துடன் மாடக்கொட்டான் பகுதியிலிருந்து இரண்டு கி. மீ தூரம் ஊர்வலமாக நடந்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது திருநங்கைகள் வேடமிட்டு நடனமாடியபடி வந்தனர். பின்னர் சுமந்து வந்த முளைப்பாரிகளை அங்குள்ள காட்டு ஊரணியில் கரைத்தனர். இந்த விழாவில் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விதமான பாரம்பர்யக் கலைகளுடன் திருநங்கைகள் பல்வேறு அபிஷேக ஆராதனையுடன் முத்துமாரி அம்மனுக்கு முதன்முறையா முளைக்கட்டுத் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மிதந்து வந்த மர்ம படகு... உள்ளே AK 47 ரக துப்பாக்கிகள், வெடி மருந்து - மும்பையில் பரபரப்பு!
மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள ராய்கட் மாவட்டம், ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் நேற்று காலை படகு ஒன்று மர்மமான முறையில் ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்தது. இது குறித்து மீனவர்கள் உள்ளூர் போலீஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே போலீஸாரும், கடலோர பாதுகாப்பு படையினரும் கடலில் மிதந்துவந்த படகை மீட்டு சோதித்தனர். அதில் 3 ஏகே 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 10 பாக்ஸ்களில் வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு... பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிகள் தனித்தனி பாகங்களாக பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் மகாராஷ்டிராவில் இன்றும், நாளையும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அடுத்த பத்து நாள்களில் கணபதி விழா கொண்டாடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் கடலில் மர்ம படகில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது போலீஸாரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ராய்கட் எம்.எல்.ஏ அதிதி தட்காரே தெரிவித்திருக்கிறார். மிதந்து வந்தபடகு விழாக்காலத்தில் படகில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பாதுகாப்பு குளறுபடியாக கருதுவதாக எம்.எல்.ஏ தெரிவித்தார். மும்பையிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்தச் சம்பவம் மும்பைக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது. இதையடுத்து மும்பை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு கடலோர பாதுகாப்பு படையினரும் கடலில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். தேவேந்திர பட்நவிஸ் இது குறித்துப் பேசிய துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ``16 மீட்டர் நீளமுள்ள சேதமடைந்த படகு ஆயுதங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. உயிர் காக்கும் படகு ஒன்றும் கடலில் மிதந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்து வரும் மாதங்களில் தீபாவளி வரை தொடர்ந்து மும்பை விழாக்கோலம் பூண்டிருக்கும். எனவே தீபாவளி வரை பாதுகாப்பை பலப்படுத்த மும்பை போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். ஏற்கெனவே மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து நடத்திய தீவிரவாத தாக்குதலின் வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கிறது. இந்த படகு ஓமனிலிருந்து கடலில் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர் என்றார். `ஒலியைவிட 10 மடங்கு வேகம்' - உக்ரைனை உருக்குலைக்க ரஷ்யா பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் என்னென்ன?!
ஓணம் பண்டிகைக்குத் தயாராகி வரும் கேரளம்
கரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட ஓணம் பண்டிகை இந்தாண்டு சிறப்பாகக் கொண்டாடக் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இப்படிப்பட்ட அரசியல் செய்ய வெட்கப்பட வேண்டாமா? - பிரதமருக்கு ராகுல் கேள்வி
பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பெண்களுக்கு பாஜகவின் அற்பமான மனநிலை தெரிவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இறுக அணைத்ததால் உடைந்த விலா எலும்புகள்... அலுவலக நண்பர்மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண்
சீனாவின் ஹூனான் மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் சக அலுவலக நண்பர்களுடன் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை இறுக அணைத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார். இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் அலுவலகத்தில் விடுமுறை சொல்லிவிட்டு, வீட்டிலேயே இருந்துவிட்டார். கட்டிப்பிடித்தல் பின்னர், வலி மிகுதியாக இருந்ததால்... மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்திருக்கின்றனர். அதில் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் பெரும் மருத்துவச் செலவில் சிகிச்சை பெற்றிருக்கிறார். இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த அந்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான தரவுகளைக் காட்டி பணம் கேட்டிருக்கிறார். நீதிமன்றம் அதற்கு அந்த நபர், ``நான் கட்டிப் பிடித்ததால்தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன இருக்கிறது? எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்திருக்கிறார். அதையடுத்து இளம்பெண் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அவர் மனுவை விசாரித்த நீதிபதிகள், ``இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் வேறு எங்கும் எலும்பை உடைத்துக்கொள்ளவில்லை. எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர். திருமணத்துக்கு அழைத்தது 70 பேர்; கலந்துகொண்டது ஒரேயொருவர்! - விரக்தியில் வேலையை ராஜினாமாசெய்த பெண்
மாணவி ஸ்ரீமதி வழக்கு: க்ரைம் எண் போடாமல் விசாரணை - சிபிசிஐடியிடம் கோர்ட் எழுப்பிய கேள்வி
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணவழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தது.
மே.வங்க பணி நியமன மோசடி: பாா்த்தா, அா்பிதாவுக்கு காவல் நீட்டிப்பு
மேற்கு வங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
``போஸ் கொடுத்தால் போதுமா.. கதறும் நாடோடியின பெண்ணுக்குக் கடன் கொடுக்க மாட்டீர்களா?” - ம.நீ.ம கேள்வி
``முதலமைச்சர் தனது கையால் ஒரு லட்சம் ரூபாய் லோனுக்கான காசோலை கொடுத்தார். ஆனால் அது இன்னும் கிடைக்கவில்லை. வீடு கட்டித் தருவதாக கூறினார்கள். அதுவும் இன்னும் கட்டித் தரவில்லை. கடை பற்றி கேட்டால் கேவலமாக பேசுகிறார்கள்” என நாடோடி சமூக பெண் அஸ்வினி ஒரு வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த நாடோடி சமூக பெண் அஸ்வினி கடந்த ஆண்டு கோயிலில் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து, முதல்வரே நேரில் சந்தித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால், அவர்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. கமல்ஹாசன் மேடையில் கடனுதவி கொடுப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். ஆனால், கடை இல்லை என்று கூறி, இதுவரை வங்கிக் கடன் தர மறுக்கிறார்கள் என்று அஸ்வினியும், மற்ற நாடோடி சமூக மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களிடம் முறையிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் மத்தியில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நாடோடி சமூக மக்களுக்கு கடனுதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது'' என தெரிவித்திருக்கிறார். `நான் வளர்ந்தா மட்டும் போதுமா; என் சமூகம்?' - நாடோடி பழங்குடியினப் பெண் சுனிதாவின் ஆதங்கம்
``10 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் விருது'' - ரஷ்ய தாய்மார்களுக்கு விளாடிமிர் புதின் அறிவிப்பு!
ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், அங்கே வசிக்கும் தாய்மார்களை, 10 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். kid 10 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களை ஊக்கப்படுத்த, சோவியத் ஆட்சிக்காலத்தில் ஜோசப் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘மதர் ஹீரோயின் (Mother Heroine)’ என்ற கௌரவ பட்டம் அளிக்கப்பட உள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது ரஷ்யா அதிகமான உயிரிழப்புகளை எதிர்கொண்டது. அதைச் சமன்செய்ய 1944-ம் ஆண்டில் ஜோசப் ஸ்டாலின் இந்த கௌரவ பட்டத்தைத் தொடங்கினார். அதன் பிறகு இந்த கௌரவப் பட்டத்தை 400,000-க்கும் மேற்பட்ட குடிமக்கள் பெற்றனர். ஆனால் 1991-ம் ஆண்டில் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் இந்த கௌரவப் பட்டம் அகற்றப்பட்டது. இந்நிலையில், நாட்டின் மக்கள்தொகை சரிவைத் தடுக்க, புதின் மீண்டும் இந்த விருதை உயிர்ப்பித்துள்ளார். Population மக்கள் தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் இது முதல்முறை..! - வாசகர் சொல்லும் தகவல் #MyVikatan அதாவது 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு, அந்த 10 -வது குழந்தை ஒரு வயதை அடையும் போது, ஒரே ஒரு முறை மட்டும் 1 மில்லியன் ரூபிள் (இந்திய மதிப்பில் 13 லட்சம்) வழங்கப்படும். அதுவும் அந்தத் தொகையைப் பெறுவதற்கு மற்ற 9 குழந்தைகளும் உயிருடன் இருந்தாக வேண்டும். ஒருவேளை தீவிரவாத செயல்கள் அல்லது ஆயுத மோதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் சில விதிவிலக்குகள் இருக்கும். `மதர் ஹீரோயின்’ என்ற இந்தப் பட்டத்தை வென்றவர்களுக்கு, ரஷ்யக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட தங்கப் பதக்கங்களும் வழங்கப்படும். மேலும் இந்த கௌரவ பட்டமானது ரஷ்யாவில் வழங்கப்படும் பிற பட்டங்களான ‘ஹீரோ ஆஃப் லேபர்’ மற்றும் ‘ஹீரோ ஆஃப் ரஷ்யா’ போன்ற பட்டங்களின் கௌரவத்திற்கு நிகரானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்றரை கி.மீ. நீள ‘வாசுகி’ சரக்கு ரயிலின் விடியோ
நாட்டிலேயே மிக நீளமான மற்றும் அதிக சரக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லக் கூடிய lsquo;சூப்பா் வாசுகி rsquo; சரக்கு ரயில் (3.5 கிமீ நீளம்) திங்கள்கிழமை வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது.
திருமா பிறந்தநாள் விழாவில் பாஜக-வை சீண்டிய ஸ்டாலின்... கூட்டணியைச் சமாளிக்கவா?! பின்னணி என்ன?
புதிதாக பதவியேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை புரிந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கவும் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லி செல்வதற்கு முன்பாக, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திருமாவளவனின் 60-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, பா.ஜ.க-வுக்கு எதிராக எகிறிவிட்டுத்தான் சென்றார் ஸ்டாலின். இதன் பின்னணி குறித்து, தி.மு.க முக்கியப்புள்ளி ஒருவரிடம் பேசினோம். திரௌபதி முர்முவுடன் ஸ்டாலின் ``கூட்டணியிலுள்ள கட்சியின் தலைவரின் பிறந்தநாள் விழாவுக்கு, ஆளுங்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. திருமா தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டபோதுகூட, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட சிலரை அனுப்பலாம் என்றுதான் இருந்தார் ஸ்டாலின். ஆனால், தொடர்ந்து பா.ஜ.க குறித்த விவகாரங்களில் தி.மு.க மென்மையாக கையாள்கிறது என்ற பிம்பம் ஏற்பட்டது. டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்கும்போது, பா.ஜ.க-வுடன் நெருக்கமாகவே தி.மு.க விரும்புகிறது என்ற எண்ணம் தோன்றும். அதனால்தான், டெல்லிக்குச் செல்வதற்கு முன்பாக திருமா பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் மனம் குளிரவைக்க வேண்டுமென ஸ்டாலின் முடிவுசெய்தார். அதனால்தான் அவ்விழாவில் அவரே நேரடியாகக் கலந்துகொண்டார். ஜெகதீப் தன்கருடன் ஸ்டாலின் ஜூ.வி இதழுக்குப் பேட்டியளித்த திருமா, `பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் குறைந்தபட்ச சமரசத்தை தி.மு.க கையாண்டால்கூட, தி.மு.க அணியில் பா.ஜ.க எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப்போய்விடும்’ என்று கூறியிருந்தார். அதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஸ்டாலின், `திருமாவளவன் கூறியதை முழுமையாக நான் ஏற்கிறேன். அவர் கூறியதுபோல் குறைந்தபட்ச சமரசத்தைக்கூட தி.மு.க செய்துகொள்ளாது. டெல்லிக்குக் காவடிதூக்க ஒன்றும் செல்லவில்லை. மத்திய அரசுடன் மாநில அரசு உறவுகொள்ளுமே தவிர, தி.மு.க-வுடன் பா.ஜ.க-வுக்கு எந்த உறவும் இல்லை’ என்று தெரிவித்தார். டெல்லிக்கு முதல்வர் செல்வதற்குச் சொல்லப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் திரௌபதி முர்மு, ஜெக்தீப் தன்கர் ஆகியோருக்கு வாக்களித்த பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரே இன்னமும் இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறவில்லை. அவர்கள் இருவருக்கும் எதிராக வாக்களித்த தி.மு.க-வின் தலைவர் வாழ்த்துக்கூறச் செல்வதற்குப் பின்னால் பலே அரசியலும் ஒழிந்திருக்கிறது என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பாஜக-வுடன் சமரசம் பேசச் செல்கிறார் என்றால், ஏன் பா.ஜ.க-வை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க வேண்டும்? என்ற கேள்வி எழும். பொதுவாகவே சமீப நாள்களாக பா.ஜ.க தமிழகத்தில் பதற்றமான அரசியலைச் செய்துகொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதியன்று பிரசித்திபெற்ற பாடலீஸ்வரர் கோயில் கோபுரத்தின் உச்சியில் ஏறி தேசியக்கொடியை பா.ஜ.க-வினர் ஏற்றினர். ஆகஸ்ட் 13-ம் தேதி பொள்ளாச்சி - கோவை சாலையின் வழியாக கேரளாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரிகளை மடக்கி, தமிழ்நாட்டின் கனிமவளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதாக ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதேதினத்தில், உயிரிழந்த ராணுவ வீரர் உடல் மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது, புரோடோகால் படி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று மரியாதை செலுத்தினர். திருமா மணிவிழாவில் ஸ்டாலின் தேவையின்றி அங்கு புகுந்த பா.ஜ.க-வினர் அமைச்சருடன் மல்லுக்கட்டியதுடன் செருப்பை அமைச்சரின் கார் மீது வீசியெறிந்தனர். ஆகஸ்ட் 11-ம் தேதி தருமபுரி பாப்பாரப்பட்டியில் சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திலுள்ள பாரதமாதா சிலைக்கு மரியாதை செலுத்துகிறோம் என்ற பெயரில் தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்குச் சென்ற கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பூட்டை உடைத்துச் சென்றனர். மேற்கண்ட விவகாரங்களில் உடனடியாக பா.ஜ.க-வினர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரச்னை பெரிதான பின்னர்தான் நடவடிக்கை எடுத்தனர். இச்செயல் கூட்டணிக் கட்சியினரிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. `சிண்ட்ரெல்லா செருப்பு’... அடுத்தகட்டம் நோக்கி நகர்கிறதா திமுக Vs பாஜக மோதல்? இப்படியான மனக்கசப்புடன் கூட்டணிக் கட்சிகள் இருக்கையில், மீண்டும் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது இன்னும் கசப்பைக் கூட்டும் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். அதனால்தான், இதற்கெல்லாம் மருந்திடும் விதமாகத்தான் ஸ்டாலின், திருமாவின் மணிவிழாவைப் பயன்படுத்திக் கொண்டார். இதேபோன்றுதான், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு பிரதமர் சென்னை வந்தபோது அவருடன் அளவளாவினார் ஸ்டாலின். மோடி படத்தை ஒட்டிய பா.ஜ.க-வினரை விட்டுவிட்டு, அதன்மீது கறுப்பு மை பூசியவர்களைக் கைதுசெய்தது காவல்துறை. அப்போது அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து அறிக்கையே வெளியிட்டார். செஸ் ஒலிம்பியாடில் மோடி - ஸ்டாலின் மற்றக் கூட்டணிக் கட்சிகள் மனதளவில் புழுங்கினர். அதனைச் சமாளிக்கும் விதமாகவே, செஸ் தொடக்க விழாவுக்கு மறுநாள் திருமா நடத்திய விருது வழங்கும் விழாவுக்கு வருகை புரிந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை அறிவாலயத்துக்கு வரவழைத்துச் சந்தித்தார். அதோடு, அதேநாள், கேரளாவில் நடைபெற்ற மனோரமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் காணொளியில் பங்கேற்று, கம்யூனிஸ்ட் கட்சியுண்டனானது கொள்கைக் கூட்டணி என்றும் அது உடையாது என்று மருந்துவைத்தார். ஒவ்வொரு முறையும் பா.ஜ.க-வுடனோ, மத்திய அரசுடனோ நெருங்கும்போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படும் வெறுப்பினை உடனே சில காரியங்களைச் செய்து கூட்டணி சிக்கல்களை சரி செய்வார் ஸ்டாலின். இதெல்லாம் அரசியலில் சாதாரணம்!” என்று முடித்தார்.
திருமா பிறந்தநாள் விழாவில் பாஜக-வை சீண்டிய ஸ்டாலின்... கூட்டணியைச் சமாளிக்கவா?! பின்னணி என்ன?
புதிதாக பதவியேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை புரிந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கவும் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லி செல்வதற்கு முன்பாக, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திருமாவளவனின் 60-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, பா.ஜ.க-வுக்கு எதிராக எகிறிவிட்டுத்தான் சென்றார் ஸ்டாலின். இதன் பின்னணி குறித்து, தி.மு.க முக்கியப்புள்ளி ஒருவரிடம் பேசினோம். திரௌபதி முர்முவுடன் ஸ்டாலின் ``கூட்டணியிலுள்ள கட்சியின் தலைவரின் பிறந்தநாள் விழாவுக்கு, ஆளுங்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. திருமா தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டபோதுகூட, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட சிலரை அனுப்பலாம் என்றுதான் இருந்தார் ஸ்டாலின். ஆனால், தொடர்ந்து பா.ஜ.க குறித்த விவகாரங்களில் தி.மு.க மென்மையாக கையாள்கிறது என்ற பிம்பம் ஏற்பட்டது. டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்கும்போது, பா.ஜ.க-வுடன் நெருக்கமாகவே தி.மு.க விரும்புகிறது என்ற எண்ணம் தோன்றும். அதனால்தான், டெல்லிக்குச் செல்வதற்கு முன்பாக திருமா பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் மனம் குளிரவைக்க வேண்டுமென ஸ்டாலின் முடிவுசெய்தார். அதனால்தான் அவ்விழாவில் அவரே நேரடியாகக் கலந்துகொண்டார். ஜெகதீப் தன்கருடன் ஸ்டாலின் ஜூ.வி இதழுக்குப் பேட்டியளித்த திருமா, `பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் குறைந்தபட்ச சமரசத்தை தி.மு.க கையாண்டால்கூட, தி.மு.க அணியில் பா.ஜ.க எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப்போய்விடும்’ என்று கூறியிருந்தார். அதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஸ்டாலின், `திருமாவளவன் கூறியதை முழுமையாக நான் ஏற்கிறேன். அவர் கூறியதுபோல் குறைந்தபட்ச சமரசத்தைக்கூட தி.மு.க செய்துகொள்ளாது. டெல்லிக்குக் காவடிதூக்க ஒன்றும் செல்லவில்லை. மத்திய அரசுடன் மாநில அரசு உறவுகொள்ளுமே தவிர, தி.மு.க-வுடன் பா.ஜ.க-வுக்கு எந்த உறவும் இல்லை’ என்று தெரிவித்தார். டெல்லிக்கு முதல்வர் செல்வதற்குச் சொல்லப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் திரௌபதி முர்மு, ஜெக்தீப் தன்கர் ஆகியோருக்கு வாக்களித்த பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரே இன்னமும் இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறவில்லை. அவர்கள் இருவருக்கும் எதிராக வாக்களித்த தி.மு.க-வின் தலைவர் வாழ்த்துக்கூறச் செல்வதற்குப் பின்னால் பலே அரசியலும் ஒழிந்திருக்கிறது என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பாஜக-வுடன் சமரசம் பேசச் செல்கிறார் என்றால், ஏன் பா.ஜ.க-வை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க வேண்டும்? என்ற கேள்வி எழும். பொதுவாகவே சமீப நாள்களாக பா.ஜ.க தமிழகத்தில் பதற்றமான அரசியலைச் செய்துகொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதியன்று பிரசித்திபெற்ற பாடலீஸ்வரர் கோயில் கோபுரத்தின் உச்சியில் ஏறி தேசியக்கொடியை பா.ஜ.க-வினர் ஏற்றினர். ஆகஸ்ட் 13-ம் தேதி பொள்ளாச்சி - கோவை சாலையின் வழியாக கேரளாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரிகளை மடக்கி, தமிழ்நாட்டின் கனிமவளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதாக ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதேதினத்தில், உயிரிழந்த ராணுவ வீரர் உடல் மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது, புரோடோகால் படி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று மரியாதை செலுத்தினர். திருமா மணிவிழாவில் ஸ்டாலின் தேவையின்றி அங்கு புகுந்த பா.ஜ.க-வினர் அமைச்சருடன் மல்லுக்கட்டியதுடன் செருப்பை அமைச்சரின் கார் மீது வீசியெறிந்தனர். ஆகஸ்ட் 11-ம் தேதி தருமபுரி பாப்பாரப்பட்டியில் சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திலுள்ள பாரதமாதா சிலைக்கு மரியாதை செலுத்துகிறோம் என்ற பெயரில் தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்குச் சென்ற கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பூட்டை உடைத்துச் சென்றனர். மேற்கண்ட விவகாரங்களில் உடனடியாக பா.ஜ.க-வினர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரச்னை பெரிதான பின்னர்தான் நடவடிக்கை எடுத்தனர். இச்செயல் கூட்டணிக் கட்சியினரிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. `சிண்ட்ரெல்லா செருப்பு’... அடுத்தகட்டம் நோக்கி நகர்கிறதா திமுக Vs பாஜக மோதல்? இப்படியான மனக்கசப்புடன் கூட்டணிக் கட்சிகள் இருக்கையில், மீண்டும் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது இன்னும் கசப்பைக் கூட்டும் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். அதனால்தான், இதற்கெல்லாம் மருந்திடும் விதமாகத்தான் ஸ்டாலின், திருமாவின் மணிவிழாவைப் பயன்படுத்திக் கொண்டார். இதேபோன்றுதான், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு பிரதமர் சென்னை வந்தபோது அவருடன் அளவளாவினார் ஸ்டாலின். மோடி படத்தை ஒட்டிய பா.ஜ.க-வினரை விட்டுவிட்டு, அதன்மீது கறுப்பு மை பூசியவர்களைக் கைதுசெய்தது காவல்துறை. அப்போது அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து அறிக்கையே வெளியிட்டார். செஸ் ஒலிம்பியாடில் மோடி - ஸ்டாலின் மற்றக் கூட்டணிக் கட்சிகள் மனதளவில் புழுங்கினர். அதனைச் சமாளிக்கும் விதமாகவே, செஸ் தொடக்க விழாவுக்கு மறுநாள் திருமா நடத்திய விருது வழங்கும் விழாவுக்கு வருகை புரிந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை அறிவாலயத்துக்கு வரவழைத்துச் சந்தித்தார். அதோடு, அதேநாள், கேரளாவில் நடைபெற்ற மனோரமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் காணொளியில் பங்கேற்று, கம்யூனிஸ்ட் கட்சியுண்டனானது கொள்கைக் கூட்டணி என்றும் அது உடையாது என்று மருந்துவைத்தார். ஒவ்வொரு முறையும் பா.ஜ.க-வுடனோ, மத்திய அரசுடனோ நெருங்கும்போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படும் வெறுப்பினை உடனே சில காரியங்களைச் செய்து கூட்டணி சிக்கல்களை சரி செய்வார் ஸ்டாலின். இதெல்லாம் அரசியலில் சாதாரணம்!” என்று முடித்தார்.
8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு - காரணம் என்ன?
இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செய்திகளையும், தவறான பிரசாரங்களையும் செய்து வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக 8 யூடியூப் சேனல்கள், ஒரு ஃபேஸ்புக் ஐடி, இரண்டு ஃபேஸ்புக் பதிவுகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021இன் கீழ் மத்திய அரசு முடக்கியுள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சேனலும் அடங்கும். இந்த சேனல்களுக்கு 85 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து கடந்த ஓராண்டில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்ததாக 102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்திய இறையான்மை, தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் ஆகியவை குறித்து தவறான தகவலை வெளியிடும் எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் படி மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக, கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747 வலைதள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம், 69ஏ பிரிவின் கீழ் முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.இதையும் படிக்க: இனி இன்ஸ்டா ரீல்ஸ் மூலமும் பணத்தை குவிக்கலாம்! இதோ இப்படித்தான்
அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆர்டிஓ வீட்டை சோதனை செய்யச் சென்ற பொருளாதார குற்றத் தடுப்பு நடவடிக்கைக் குழுவினருக்குத்தான் பெரிய சோதனையாக இருந்தது.
தில்லியின் பள்ளி மாடலை பின்பற்ற விரும்பும் பிகார் அமைச்சர்: கேஜரிவால் வரவேற்பு
தில்லியின் பள்ளி மாதிரியைப் பின்பற்ற விரும்பும் பிகாரின் கல்வி அமைச்சர் சந்திரசேகருக்கு வரவேற்பு அளித்துள்ளார் முதல்வர் கேஜரிவால்.
பாஜக இதை செய்தால் இந்தியாவிற்கு பாகிஸ்தானின் நிலை வரும்: அசோக் கெலாட்
ஆளும் பாஜக இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற நினைத்தால் இந்தியாவிற்கு பாகிஸ்தானின் நிலை தான் உருவாகும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
உடலுறவுக்கு மறுத்த மனைவி; கொன்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய கணவன்... இறுதியில் சிக்கியது எப்படி?
பீகாரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பிருத்வி ராஜ் சிங் என்பவர், தன் மனைவியுடன் பெங்களூருவில் வசித்துவந்திருக்கிறார். பிருத்வி ராஜ் சிங்கின் மனைவி, அவரைவிடவும் 10 வயது பெரியவர் என்று கூறப்படுகிறது. கணவன்-மனைவி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, பிருத்வி ராஜ் மனைவி அவருடன் உடலுறவு கொள்ள மறுப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பிருத்வி ராஜ் சிங், தன் மனைவியைக் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார். கொலை அதன்படி ஆகஸ்ட் 3-ம் தேதியன்று உடாபிக்கு பிருத்வி ராஜ் சிங், தன் மனைவியுடன் காரில் சென்றிருக்கிறார். பின்னர் வழியிலேயே தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மனைவியைக் கொலைசெய்துவிட்டு, ஷீரடி காட் பகுதியில் உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார். அதன்பிறகு பிருத்வி ராஜ் சிங் தாமாகவே, தன் மனைவி காணாமல் போய்விட்டதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார். இதில் சந்தேகமடைந்த போலீஸார், பிருத்வி ராஜ் சிங்கை கைதுசெய்து விசாரித்தனர். கைது விசாரணையில் பிருத்வி ராஜ் சிங், ``எங்களின் திருமணத்தின்போது அவளுக்கு 28 வயது என்றுதான் சொன்னார்கள். பின்னர்தான் அவள் என்னைவிட 10 வயது பெரியவள் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவள் ஒருபோதும் உடலுறவுக்கு இணங்கவேயில்லை. அதுமட்டுமல்லாமல் என்னையும், என் பெற்றோரையும் கடுமையாக அவமானப்படுத்தினாள் என்று கூறினார். இறுதியில் பிருத்வி ராஜ் சிங்கின் மனைவி கொலைசெய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த போலீஸார், அழுகிய நிலையில் உடலை மீட்டனர். அதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக உடலை, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செல்போனில் ஆபாச படம் காட்டி, சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை! - போக்சோவில் லோடுமேன் கைது
ஓடும் ரயிலில் 12 சிறுவர்கள் மீட்பு; கடத்திச் சென்ற 7 பேர் கைது
பிகார் மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 12 சிறுவர்களை ரயில்வே காவலர்கள் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...! அடுத்து வாங்கப்போகும் நிறுவனம் இதுதான்..!!
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் டுவிட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்
பீகார்: ``அரசு இதை செய்தால் பிரசாரத்தை வாபஸ் பெற தயார்..! - பிரசாந்த் கிஷோர் சொல்வதென்ன?
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க உடனான கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது. நிதிஷ் குமார் அண்மையில் சுதந்திர தின உரையின்போது, ``பீகார் மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்து வேலை வாய்ப்புகளை வழங்குவோம். வளர்ந்த மாநிலங்கள் வரிசையில் பீகாரை இடம் பெறச் செய்வதே எங்கள் இலக்கு” எனப் பேசியிருந்தார். நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் இந்த நிலையில், நிதிஷ் குமாரின் பேச்சு தொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களிடையே பேசிய பிரசாந்த் கிஷோர் , ``பீகாரில் அமைந்திருக்கும் புதிய அரசாங்கம் 2 ஆண்டுகளில் 5-10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கினால், நான் என்னுடைய ‘ஜன் சூரஜ் அபியான்’ பிரசாரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரவு அளிப்பேன். பிரசாந்த் கிஷோர் நான் பீகாரில் அரசியல் களத்தில் இறங்கி மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. மாநிலத்தின் அரசியல் 180 டிகிரி திருப்பத்தைப் பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் மேலும் பல அரசியல் எழுச்சிகளை இந்த மாநிலம் சந்திக்கும்'' என்றார். ``எதிர்காலத்தில் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்” - பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்
டெல்லி தான் இதில் நம்பர் 1: இதுக்கு வெக்கப்படணும் சென்றாயன்!
உலகளவில் காற்று மாசுபாடான நகரங்களில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.
``எடப்பாடியாரை அழைக்க ஓ.பி.எஸ்-ஸுக்கு எந்த தகுதியும் கிடையாது! - ராஜன் செல்லப்பா காட்டம்
பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியால் அமைப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா ஓ.பி.எஸ்-ஸை விமர்சித்து கடுமையாகப் பேசியிருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் மதுரையில் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``எடப்பாடியாருக்கு வலிமைமிக்க தீர்ப்பினை, கழகத் தொண்டர்கள் ஏற்கெனவே வழங்கிவிட்டனர். எடப்பாடியாருக்குப் பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதிக மெஜாரிட்டியாக 2,663 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடியாரை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வுசெய்திருக்கின்றனர். இந்த நிலையில் சிலர் இடைக்கால தீர்ப்பை பெற்று சில அறிக்கைகளை விடுகின்றனர். இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை. அதில் மேல்முறையீடு இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். மேலும் அந்த தீர்ப்பில் பொதுக்குழுதான் உயர்ந்தது என்று நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. கசப்பை மறக்கவேண்டும் என்று ஓ.பி.எஸ் கூறுகிறார். ஆனால், தி.மு.க-வுடன் தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்? இனி வசந்த காலம் என்கிறார். தி.மு.க-வுடன் தொடர்பிலிருப்பவர்களை எப்படி வசந்த காலம் என்று ஏற்கமுடியும்? ஓ.பன்னீர்செல்வம் ஒ.பி.எஸ்-ஸை இதுவரை யாரும் ஆதரிக்கிறோம் என்று சொல்லவில்லை. இன்றைக்கு எடப்பாடியார் பின்னால் ஆடாமல், அசையாமல், வலுவோடு இந்த இயக்கம் இருக்கிறது. மிகச்சிறந்த தலைமையாக எடப்பாடியார் இருக்கிறார். தி.மு.க-வை எதிர்க்கக்கூடிய தலைமையாக எடப்பாடியார் இருக்கிறார். எடப்படியார், புரட்சித்தலைவி அம்மாவால் அடையாளம் கண்டு 1989-ம் ஆண்டு சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளைப் பெற்று தன் உழைப்பால் உயர்ந்தார். எந்த தவறும் செய்யாதவர், புரட்சித்தலைவி அம்மா எங்களுக்கு எடப்பாடியாரை மறைமுகமாக அடையாளம் காட்டினார்கள். தீர்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு கட்சியை வளர்க்க முடியாது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு மூலம் இறுதியான தீர்ப்பை பெறலாம். நீதிமன்றம் கட்சிகளை நடத்த முடியாது. கட்சி விவகாரங்களில் தலையிடாது என்பது நாடறிந்த உண்மை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ் எடப்பாடியாரை அழைக்கிறார். அவருக்கு அழைக்க எந்த தகுதியும் இல்லை, அழைத்தது தவறு. அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று கூறுகிறார். தி.மு.க-வுக்கு ஓ.பி.எஸ் ஆதரவு தெரிவிக்கிறார். நாங்கள் தி.மு.க-வை எதிர்க்கிறோம், நாங்கள் எப்படி ஒன்று சேரமுடியும்? கூட்டுத் தலைமை என்று ஓ.பி.எஸ் கூறுகிறார்... நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை தேர்ந்தெடுக்க பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன. யாரும் கூட்டுத் தலைமையை விரும்பவில்லை, இரட்டைத் தலைமையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் யாரும் இல்லை. சசிகலாவை அ.தி.மு.க -வில் இணைக்கும் ஒ.பி.எஸ்-ஸின் எண்ணம் தோல்வி அடையும். தி.மு.க தற்போது 15 சதவிகிதம் தாழ்வை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. இதனால் எடப்பாடியாருக்கு தேர்தல் காலங்களில் தன்னிச்சையாக வெற்றிபெற வாய்ப்புள்ளது. எப்போதெல்லாம் தீர்ப்பு தனக்குச் சாதகமாக வருகிறதோ, அப்போதெல்லாம் தென் மாவட்டங்களுக்கு ஓ.பி.எஸ் வருகிறார், இதன் மூலம் தென் மாவட்ட பகுதிகளை உரிமைகொண்டாட முயற்சி செய்கிறார். தென் மாவட்டம் என்பது சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. ஓ.பி.எஸ்-ஸுக்குத் தனி செல்வாக்கு என்பது கிடையாது. ராஜன் செல்லப்பா இலங்கைக்கு 50 லட்ச ரூபாய் நிதி வழங்குகிறார். அதை தமிழ்நாடு அரசு மூலம் வழங்குகிறார். கட்சி சார்பாக கொடுக்கவில்லை, கட்சியிடமும் அவர் அனுமதி பெறவில்லை. ஜானகி அம்மாள் புரட்சித்தலைவியிடம் கட்சியை விட்டுக்கொடுத்தார்கள். ஆனால் ஓ.பி.எஸ் அப்படி இல்லை. பசுத்தோல் போர்த்திய புலி. நாங்கள் ஓ.பி.எஸ்-ஸுடன் ஒன்று சேர வழியே இல்லை. தென் மாவட்ட மக்களும், கழகத்தினரும் எடப்பாடியார்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். காரணம், தென்பகுதிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மக்கள் கேட்காமலே வழங்கியவர், அதனால்தான் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டுக்கு சொந்தக்காரராக எடப்பாடியார் உள்ளார். நிச்சயம் வெற்றிபெற்று இந்த இயக்கத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடியார் வருவார். எங்களின் தலைமையாக திகழும் எடப்பாடியாரின் கட்டளையை ஏற்று, தொடர்ந்து கழகப்பணியில் நாங்கள் செயல்படுவோம் என்றார். ``தர்மத்தை நம்பினேன்... கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்!'' - ஓபிஎஸ்
ஜெ.,மந்திரத்துக்கும், பகட்டு அரசியலுக்கும் நடுவே சிக்கிய எலியாக ஈபிஎஸ்..!
ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியலால் எடப்பாடி பழனிசாமி சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது
8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு - காரணம் என்ன?
இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செய்திகளையும், தவறான பிரசாரங்களையும் செய்து வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக 8 யூடியூப் சேனல்கள், ஒரு ஃபேஸ்புக் ஐடி, இரண்டு ஃபேஸ்புக் பதிவுகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021இன் கீழ் மத்திய அரசு முடக்கியுள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சேனலும் அடங்கும். இந்த சேனல்களுக்கு 85 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து கடந்த ஓராண்டில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்ததாக 102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்திய இறையான்மை, தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் ஆகியவை குறித்து தவறான தகவலை வெளியிடும் எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் படி மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக, கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747 வலைதள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம், 69ஏ பிரிவின் கீழ் முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.இதையும் படிக்க: இனி இன்ஸ்டா ரீல்ஸ் மூலமும் பணத்தை குவிக்கலாம்! இதோ இப்படித்தான்
உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லிக்கு முதலிடம்
உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில்ன் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 2 வது இடத்தில் உள்ளது.
உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லிக்கு முதலிடம்
உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில்ன் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 2 வது இடத்தில் உள்ளது.
``பொய்களால் மக்களை திசை திருப்புகிறார் மோடி - இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா காட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது மாநில மாநாடு, புதுவையில் உள்ள தனியார் திருமண மண்டப அரங்கத்தில் நேற்றும் இன்றும் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் பேசியபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அக்டோபர் 14ம் தேதி, ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் நடக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் மாநாடு நடத்தப்படுகிறது. புதுவையில் இன்று மாநாடு தொடங்குகிறது. எங்கள் கட்சி மாநாடுகளில், அரசியல் தீர்மானம் விவாதத்திற்கு வந்துள்ளது. இந்தியாவின் நிலைமை, உலக நிலைமையை ஆய்வு செய்து கட்சியின் கடமைகளை, மக்கள் முன் உள்ள சவால்களை விளக்கி வருகிறோம். மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு... மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. மாநில உரிமைகளை பறித்து வருகிறது. சமூக நல்லிணக்கத்தை குலைத்து மோதல்களை பெருக்கி வருகிறது. பாண்டிச்சேரி இந்த சூழலில் இந்தியாவை காப்பாற்றவும், அரசியல் சட்டத்தை, ஜனநாயகத்தை காப்பாற்றவும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என எங்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. மோடி, தான் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. 2 கோடி பேருக்கு வேலை தரப்படும் என்றார். தற்போது வேலையில்லா திண்டாட்டம் தான் அதிகரித்து வருகிறது. பொய்களை அள்ளி வீசி மக்களை திசை திருப்ப மோடி முயற்சி செய்கிறார். இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் மீது அடக்குமுறை, கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பட்டியலின, பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சமூகரீதியாக கொந்தளிப்பு நிலை இந்தியாவில் உருவாகியுள்ளது. அரசியல், பொருளாதார நெருக்கடி ஒருபுறம், சமூகரீதியான கொந்தளிப்பு ஒருபுறம் ஏற்பட்டுள்ளது. புதுவை - விழுப்புரம்: 15 நாள்களில் 4 மடங்கு அதிகரித்த மதுபான கடத்தல்! உள்ளாட்சித் தேர்தல் எதிரொலியா? நாட்டின் ஜனநாயகம், கூட்டாட்சி நெறிமுறை, அரசியல் சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை எங்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என எங்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. நிதிஷ்குமார் பாஜகவுடன் உறவை முறித்து வெளியேறியுள்ளார். புதிய ஆட்சியை பீகாரில் ஏற்படுத்தியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடி இது இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 தேர்தலில் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் கவர்னர் அலுவலகம் அரசியல் மையமாக செயல்படுகிறது. மக்கள் தேர்வு செய்த மாநில அரசை புறக்கணித்து கவர்னர் அலுவலம் மூலம் ஆதிக்கத்தை திணிக்க பாஜக முயற்சி செய்கிறது. மாநில உரிமை, நலன் பறிக்கப்படுகிறது. சட்டமன்றம் செயல்பட முடியாத அளவுக்கு பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. அதிமுக கொள்கை இல்லாத நிலையில் சீர்குலைந்து வருகிறது. இதை பாஜக பயன்படுத்தி வருகிறது. இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
ரோஹிங்கயா அகதிகளுக்கு குடியிருப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை: மணீஷ் சிசோடியா
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரம்: ஆளில்லாத படகிலிருந்து ஏகே - 47 துப்பாக்கிகள் பறிமுதல்
மகாராஷ்டிரத்தில் ஆளில்லா படகிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் உறவே வேண்டாம்: எடப்பாடிக்கு தெற்கில் பெருகும் ஆதரவு அலை!
திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமியை அழைக்க எந்த தகுதியும் இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ள வி.வி.ராஜன் செல்லப்பா எடப்பாடி பழனிசாமி சிறந்த தலைமையாக உள்ளதாக கூறியுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அருகே கடல் பகுதியில் ஒதுங்கிய படகில் ஆயுதங்கள் பறிமுதல்
மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அருகே கடல் பகுதியில் ஒதுங்கிய படகில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் கரை ஒதுங்கிய படகில் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்
பீகார்: டெல்லியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ், நேற்று பீகார் திரும்பினார். அவரை பீகார் முதல்வர் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், உடல் நிலை பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி, பிரதான கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் இடம் பெற்றுள்ளது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகி இருக்கிறார். பீகாரில் தனது கட்சியின் ஆட்சி அமைந்துள்ளதை தொடர்ந்து, டெல்லியில் இருந்து பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று லாலு பிரசாத் யாதவ் திரும்பினார். இந்நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் போது லாலுவின் மகன்கள் உடனிருந்தனர்.
மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
திருவனந்தபுரம்: மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவதும் கொடுமைதான். அதை எந்தப் பெண்ணும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்று கூறிய கேரள உயர் நீதிமன்றம், இளம்பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஏற்றுமானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். எம்சிஏ படித்த 2 பேரும் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.திருமணம் முடிந்த அதே வருடம் நவம்பர் 2ம் தேதி, விவாகரத்து கோரி ஏற்றுமானூர் குடும்ப நீதிமன்றத்தில் இளம்பெண் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்தது: திருமணம் முடிந்து 40 நாட்கள் மட்டுமே நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம்.மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னிடம் கணவர் கொடூரமாக நடந்து கொண்டார். திருமணம் முடிந்த ஒரு சில வாரங்களிலேயே தன்னுடைய எண்ணத்தில் உள்ள பெண்ணைப் போன்ற அழகு எனக்கு இல்லை என்று கூறி கொடுமைப்படுத்தினார்.தனக்குத் தெரிந்த சில பெண்களை பற்றிக் கூறி அவர்களைப் போல அழகு எனக்கு இல்லை என்றும், தாயின் வற்புறுத்தலினால் தான் என்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறினார். உடல்ரீதியாகவும் என்னுடன் உறவு வைத்துக் கொள்ள மறுத்து விட்டார். எனவே கணவரிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனுவை விசாரித்த ஏற்றுமானூர் நீதிமன்றம், அவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவரது கணவர் கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், சுதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.கடந்த சில வருடங்களாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் இளம்பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந்தது: உடல் ரீதியாக மட்டுமில்லாமல் மனரீதியாகவும், கடுமையான சொற்களை பயன்படுத்துவதும் கொடுமைதான். மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவதும் கொடுமையாகும். அதை எந்தப் பெண்ணும் பொறுத்துக்கொள்ள மாட்டார். இவர்களுடைய பந்தம் மீண்டும் இணைக்க முடியாத அளவுக்கு சிதிலமடைந்து விட்டது.இதை நீதிமன்றம் கவனிக்காமல் விட்டால் அது சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். மனரீதியாக கொடுமைப்படுத்தியதால் தனது உடல் நிலையும் பாதிக்கப்பட்டதாக இளம்பெண் கூறுவதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். எனவே அவருக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...
திருவனந்தபுரம் : கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். விழிஞ்சம் துறைமுகம் என்பது சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்கும் பணி விழிஞ்சம் கடற்கரையில் துவங்கியுள்ளது. ஏற்கனவே, இந்த திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியில் அமைக்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்ட போது பெரும்பாலான மீனவர்கள் எதிரிப்பு தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து கேரளாவிற்கு இடம் பெயர்ந்தது. அங்கு விழிஞ்சம் பகுதியில் துறைமுகத்திற்கு ஆரம்ப கட்டத்தில் எதிர்ப்பு இல்லாத நிலையில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த கட்டுமான பணியை தொடங்கிய பிறகு கடற்கரை கிராமங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகள் முழுவதுமாக கடல் சீற்றத்தால் மிகவும் சேதம் அடைந்து வருகிறது. எனவே, நாளுக்கு நாள் இந்த திட்டத்தின் பணி நடைபெற்று வருவதால் கடற்கரை ஓரங்களில் உள்ள கிராமங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும் என்பதால் கடந்த 3 நாட்களாக மீனவர்கள் விழிஞ்சம் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் அதானி குழுமத்திற்கு எதிராகவும் இந்த போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஒட்டுமொத்த கிறிஸ்தவ பாதிரியார்களும், கிறிஸ்துவ மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த போராட்டத்திற்கு கரிக்குளம், பூவார், பொழியூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் விழிஞ்சம் நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர். இதனால், விழிஞ்சம் கடற்கரையில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த திட்டத்தை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் அதானி குழுமத்தின் துறைமுக கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நான் யாரென்று தெரிகிறதா? -பிடிஆர் காட்டிய இன்னொரு முகம்.. . நொந்து போன பாஜக!
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் காரின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்துக்கு விலையாக கட்சியின் முக்கிய நிர்வாகியை விலையாக கொடுத்துள்ளது பாஜக. மதுரை மாநகர பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணனை பிடிஆர் அன்கோ தட்டித் தூக்கியது எப்படி என்பதுதான் திமுக Vs பாஜக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் ட்வீட்!
ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை? நோட் பண்ணிக்கோங்க!
தமிழ்நாடு, புதுச்சேரிக்கு அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசன் நடைமுறையையும் தடை செய்ய உத்தரவிட கோாி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசீர் ஹீனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குழந்தையுடன் இருட்டில் பரிதவித்த ரயில் பயணி -டிக்கெட் பரிசோதகர் செய்த உதவி
ரயிலில் பயணி ஒருவர் குழந்தையை வைத்துக்கொண்டு இருட்டில் சிரமப்படுவதை பார்த்த டிக்கெட் பரிசோதகர், அவரை வெளிச்சம் உள்ள வேறொரு இருக்கைக்கு மாற்றினார். சமீபத்தில் விசாக் கிருஷ்ணா என்பவர் தனது ஒரு வயது குழந்தையுடன் கேரளா மாநிலம் கண்ணூர் செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் இருந்த பி1 கோச் பெட்டியில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாத இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் இருட்டறையில் இருந்ததுபோல் இரவில் குழந்தையை வைத்துக்கொண்டு கிருஷ்ணா சிரமத்துடன் பயணம் செய்து வந்துள்ளார். அச்சமயத்தில் அந்த கோச்சுக்கு வந்த டிக்கெட் பரிசோதகர், குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பயணி இருட்டில் சிரமப்படுவதை பார்த்து, கிருஷ்ணாவை வெளிச்சம் உள்ள வேறொரு இருக்கைக்கு மாற்றினார். அதன்பிறகே கிருஷ்ணா நிம்மதி பெருமூச்சு விட்டு குழந்தையுடன் தூங்கினார். அந்நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் நினைத்திருந்தால் கண்டும் காணாததுபோல் சென்றிருக்கலாம். ஆனால் குழந்தையுடன் பயணி ஒருவர் இருட்டில் கஷ்டப்படுவதைப் பார்த்து உதவிவிட்டு சென்றது விசாக் கிருஷ்ணாவுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ரயிலில் தனக்கு சீட் மாற்றப்படுவதற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும், மாற்றியப்பின் எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு, அந்த டிக்கெட் பரிசோதகரின் சேவைக்கு கிருஷ்ணா நன்றி தெரிவித்தார். ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியை டேக் செய்து அந்த பதிவினை வெளியிட்டிருந்தார். இதையடுத்து கிருஷ்ணாவின் ட்விட்டுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சகம், ''உங்களுக்கும் குழந்தைக்கும் இந்த பயணம் சவுகரியமானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்காக சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்'' எனக் கூறியது. டிக்கெட் பரிசோதகரின் இந்த அக்கறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதையும் படிக்க: மார்க் ஜுக்கர்பெர்க்கின் முகச்சாயலில் குழந்தை இயேசு சிலை-பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
வெளிநாட்டவர்கள் விரும்பும் நகரங்கள்: பெங்களூரு 6-வது இடம்
வெளிநாட்டவர்கள் தொழில் சார்ந்து புலம்பெயர்வதற்கு ஏற்றதாக உருவாகி வரும் உலக நகரங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது.
திரிபுரா மஹாராஜ் கல்லூரியின் பிளாட்டினம் விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு?
திரிபுராவின் மஹாராஜ் பிர் பிர்காம் கல்லூரியில் நடைபெறும் பிளாட்டினம் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்று கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்தார்.
டெல்லி, கொல்கத்தா, ஷாங்காய் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய பெரிய நகரங்களில் மோசமான அளவில் காற்று மாசு
இந்தியாவின் டெல்லி, கொல்கத்தா, சீனாவின் ஷாங்காய் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ நகரங்களில் காற்று மாசின் அளவு உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது.
பெண்ணுரிமை ட்வீட்; 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை - சவுதி பெண்ணுக்கு வலுக்கும் ஆதரவுக் குரல்கள்!
ட்விட்டரில் சமூக ஆர்வலர்களைப் பின்தொடர்ந்து, ட்வீட்செய்த சவுதி பெண்ணுரிமை ஆர்வலருக்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. 33 வயதாகும் சல்மா அல்-ஷெஹாப் சவுதி அரேபியாவிலுள்ள இளவரசி நூரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். சல்மா இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பயின்றுவருகிறார். சல்மா அல்-ஷெஹாப் முன்னதாக கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் ட்விட்டரில் சல்மா அல்-ஷெஹாப் செய்த ட்வீட் ஒன்றுக்கு, `பொது அமைதியின்மை மற்றும் சிவில் மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்க' இணைய வலைதளத்தைப் பயன்படுத்தியதாக அரசு தரப்பில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சல்மா, மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு மனு கடந்த திங்களன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சல்மாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், சிறைத் தண்டனையை 34 ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டது. சிறை இந்த நிலையில் சல்மாவுக்கு விதிக்கப்பட்ட இந்த சிறைத் தண்டனையை எதிர்த்து மனித அமைப்புகள் பலவும் அவரை விடுதலை செய்யுமாறு அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து `The Freedom Initiative' என்ற அமைப்பு, ``சல்மாவை விடுவிக்குமாறு சவுதி அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளவும், இங்கிலாந்தில் அவரின் படிப்பை பாதுகாப்பாக முடிக்கவும் அவரை விடுதலை செய்யவேண்டும். பெண்களின் உரிமை குறித்து ஆர்வலர்களுடன் ட்வீட் செய்வது குற்றமல்ல என அறிக்கை வெளியிட்டிருக்கிறது. சவுதி: $500b பட்ஜெட், ஜீரோ கார்பன் நகரமாக 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் உருவாகும் பிரமாண்ட நகரம்!
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் பயணிக்க தனி பயணச்சீட்டு வாங்கணுமா? ரயில்வே விளக்கம்!
ரயில்களில் 1 முதல் 4 வயதுள்ள குழந்தைகளுக்கு தனியாக பயணச்சீட்டு வாங்க வேண்டும் என வெளியான தகவல்கள் தவறு என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக கடந்த மார்ச் 6, 2020-ல் ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டது. அதன்படி இப்போதுவரை 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகள் இலவசமாக பயணித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தனி படுக்கையோ அல்லது இருக்கையோ வழங்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.இந்நிலையில் குழந்தைகளுக்கான இச்சலுகை ரயில்வே மாற்றியுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகினது. இதுதொடர்பாக சுற்றறிக்கை வழியாக ரயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை வழியாக தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் `குழந்தைகளின் ரயில் பயணம் தொடர்பாக விதிமுறைகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை’ என்றும் ரயில்வே கூறியுள்ளது.மேலும் ரயில்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு இல்லை என்றும் தேவைப்பட்டால் பணம் செலுத்தி தனி படுக்கை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே உள்ள விதிமுறையையும் ரயில்வே சுட்டிக்காட்டியுள்ளது.
பிஹார் புதிய சட்ட அமைச்சருக்கு எதிராக ஆள் கடத்தல் வழக்கில் கைது வாரன்ட்
பிஹாரின் புதிய சட்ட அமைச்சர் கார்த்திகேய சிங்குக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பிஹார் புதிய சட்ட அமைச்சருக்கு எதிராக ஆள் கடத்தல் வழக்கில் கைது வாரன்ட்
பிஹாரின் புதிய சட்ட அமைச்சர் கார்த்திகேய சிங்குக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
டெல்லி, கொல்கத்தா, ஷாங்காய் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய பெரிய நகரங்களில் மோசமான அளவில் காற்று மாசு
இந்தியாவின் டெல்லி, கொல்கத்தா, சீனாவின் ஷாங்காய் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ நகரங்களில் காற்று மாசின் அளவு உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது.
வெளிநாட்டவர்கள் விரும்பும் நகரங்கள்: பெங்களூரு 6-வது இடம்
வெளிநாட்டவர்கள் தொழில் சார்ந்து புலம்பெயர்வதற்கு ஏற்றதாக உருவாகி வரும் உலக நகரங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது.
முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசன் நடைமுறையையும் தடை செய்ய உத்தரவிட கோாி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசீர் ஹீனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லிக்கு முதலிடம்
உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில்ன் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 2 வது இடத்தில் உள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் பயணிக்க தனி பயணச்சீட்டு வாங்கணுமா? ரயில்வே விளக்கம்!
ரயில்களில் 1 முதல் 4 வயதுள்ள குழந்தைகளுக்கு தனியாக பயணச்சீட்டு வாங்க வேண்டும் என வெளியான தகவல்கள் தவறு என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக கடந்த மார்ச் 6, 2020-ல் ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டது. அதன்படி இப்போதுவரை 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகள் இலவசமாக பயணித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தனி படுக்கையோ அல்லது இருக்கையோ வழங்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.இந்நிலையில் குழந்தைகளுக்கான இச்சலுகை ரயில்வே மாற்றியுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகினது. இதுதொடர்பாக சுற்றறிக்கை வழியாக ரயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை வழியாக தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் `குழந்தைகளின் ரயில் பயணம் தொடர்பாக விதிமுறைகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை’ என்றும் ரயில்வே கூறியுள்ளது.மேலும் ரயில்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு இல்லை என்றும் தேவைப்பட்டால் பணம் செலுத்தி தனி படுக்கை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே உள்ள விதிமுறையையும் ரயில்வே சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தையுடன் இருட்டில் பரிதவித்த ரயில் பயணி -டிக்கெட் பரிசோதகர் செய்த உதவி
ரயிலில் பயணி ஒருவர் குழந்தையை வைத்துக்கொண்டு இருட்டில் சிரமப்படுவதை பார்த்த டிக்கெட் பரிசோதகர், அவரை வெளிச்சம் உள்ள வேறொரு இருக்கைக்கு மாற்றினார். சமீபத்தில் விசாக் கிருஷ்ணா என்பவர் தனது ஒரு வயது குழந்தையுடன் கேரளா மாநிலம் கண்ணூர் செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் இருந்த பி1 கோச் பெட்டியில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாத இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் இருட்டறையில் இருந்ததுபோல் இரவில் குழந்தையை வைத்துக்கொண்டு கிருஷ்ணா சிரமத்துடன் பயணம் செய்து வந்துள்ளார். அச்சமயத்தில் அந்த கோச்சுக்கு வந்த டிக்கெட் பரிசோதகர், குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பயணி இருட்டில் சிரமப்படுவதை பார்த்து, கிருஷ்ணாவை வெளிச்சம் உள்ள வேறொரு இருக்கைக்கு மாற்றினார். அதன்பிறகே கிருஷ்ணா நிம்மதி பெருமூச்சு விட்டு குழந்தையுடன் தூங்கினார். அந்நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் நினைத்திருந்தால் கண்டும் காணாததுபோல் சென்றிருக்கலாம். ஆனால் குழந்தையுடன் பயணி ஒருவர் இருட்டில் கஷ்டப்படுவதைப் பார்த்து உதவிவிட்டு சென்றது விசாக் கிருஷ்ணாவுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ரயிலில் தனக்கு சீட் மாற்றப்படுவதற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும், மாற்றியப்பின் எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு, அந்த டிக்கெட் பரிசோதகரின் சேவைக்கு கிருஷ்ணா நன்றி தெரிவித்தார். ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியை டேக் செய்து அந்த பதிவினை வெளியிட்டிருந்தார். இதையடுத்து கிருஷ்ணாவின் ட்விட்டுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சகம், ''உங்களுக்கும் குழந்தைக்கும் இந்த பயணம் சவுகரியமானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்காக சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்'' எனக் கூறியது. டிக்கெட் பரிசோதகரின் இந்த அக்கறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதையும் படிக்க: மார்க் ஜுக்கர்பெர்க்கின் முகச்சாயலில் குழந்தை இயேசு சிலை-பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
`கருணாநிதியை எதிர்த்துத் தேர்தலில் போட்டி; ஸ்டாலினைப் புகழ்ந்த தருணம்'- நெல்லை கண்ணன் நினைவலைகள்
பேச்சாளரும் தமிழ் மொழி மீது தணியாக் காதல் கொண்டவருமான நெல்லை கண்ணன் உடல் நலக் குறைவால் தன்னுடைய 77 வது வயதில் இன்று காலமானார். நெல்லை கண்ணன் வீடு திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவில் அருகே தான் இவரது பூர்வீக வீடு இருக்கிறது. தமிழ் மீது தீராப் பற்றுக் கொண்டவர். பேச்சாளராகியதும் 'நெல்லை' இவரது பெயருக்கு முன் சேர்ந்து கொள்ள பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்கள் என தமிழில் முழங்கினார். இலக்கியப் பேச்சு என்றாலும் சரி, ஆன்மிக மேடை என்றாலும் சரி, இவரது பேச்சுக்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அரசியலில் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி இவரை ஈர்த்தது. 1996 ல் நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டார். பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசினார். தொடர்ந்து வந்த தேர்தலில் அதிமுகவை ஆதரித்து தமிழகம் முழுக்க இவரைப் பிரச்சாரம் செய்யக் கேட்டுக் கொண்டார் ஜெ. நெல்லை கண்ணன் பிறகு சில காலம் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தவரை பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருந்தச் சட்டம் மீண்டும் அரசியல் பேச வைத்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியில் நடந்த ஆரப்பாட்ட மேடை ஒன்றில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்து இவர் பேசிய பேச்சுகள், கைது நடவடிக்கையில் கொண்டு போய் நிறுத்தியது. கைதாகி சில நாட்கள் சிறையிலும் இருந்தார். கடைசியாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இவருக்கு காமராசர் விருதை வழங்கிய நிகழ்வில் மேடை ஏறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் பேசிய அந்த நிகழ்ச்சியில், அரசியலில் தான் அநாதை ஆகி விட்டதாகக் கண்ணீர் சிந்தினார். மேலும் 'இந்தத் தலைமுறைக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை' என முதல்வரைப் பார்த்தும் நா தழுதழுக்கப் பேசியது நினைவிருக்கலாம். மறைந்த நெல்லை கண்ணனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சுகா திரைத்துறையில் பணி புரிய இரண்டாவது மகன் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.
இலவசங்களுக்கு பதில் கண்ணியமாக வருவாய் ஈட்டக்கூடிய நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலவசங்களுக்கு பதில் கண்ணியமாக வருவாய் ஈட்டக்கூடிய நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆப்கன்: மசூதியில் தொழுகையின்போது பயங்கர குண்டு வெடிப்பு - 20-க்கும் அதிகமானோர் பலி எனத் தகவல்!
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஒரு மசூதி யில் நேற்று மாலை நேரத்தில் தொழுகை நடைபெற்றது. அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டு வெடித்ததில் மசூதி இடிந்து விழுந்ததோடு, அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஆப்கன் - கோப்புப் படம் இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தாலிபன் உளவுத்துறை அதிகாரி ஒருவர், ``இந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சுகிறோம். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன'' என்று கூறியிருக்கிறார். அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான்: ``எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம்! - தாலிபன் அரசு
இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி..! - வைரலாகும் கோவை குசும்பு போஸ்டர்!
கோவை மாவட்டம், அன்னூர் அருகே இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி மதப்பிரச்சாரம் செய்யவும், மதக் கூட்டங்கள் நடக்கவும் அனுமதி இல்லை என பேனர் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: கல்வி மற்றும் கலாச்சாரப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள துருக்கி மாணவர்களுக்கு சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலா வரும் மாணவர்கள், அம்மாநிலத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்கின்றனர். அந்த வகையில் துருக்கி நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள 15க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள், பாரம்பரிய கலையான சுடு களிமண் பொம்மை செய்யும் பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுப்பெற்ற முனுசாமி பயிற்சி அளித்தார். யானை, குதிரை, விநாயகர் உள்ளிட்ட பொம்மைகளை செய்து மாணவர்கள் அசத்தினர். இதனை தொடர்ந்து கிராமப்புறங்களுக்கு செல்லவிருக்கும் துருக்கி மாணவர்கள், அங்குள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து தெரிந்துகொள்ள உள்ளனர்.
ஆரணி: ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரம் பறிப்பு! - முறைகேடு புகாரால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
தி ருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்துக்குட்பட்ட இரும்பேடு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தரணி. இவர் கணவர் வெங்கட்ராமன், தி.மு.க-வைச் சேர்ந்தவர். இந்த ஊராட்சியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டி மக்கள் வீதிக்குவந்து அடிக்கடி போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு முறைகேடாக நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற அப்ரூவல் வழங்கியதாகவும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளிடம் பணம் பெற்றதாகவும் ஊராட்சி மன்றத் தலைவர் தரணி குறித்து அடுக்கடுக்கான புகார்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்குச் சென்றன. அதோடு, தெருவிளக்குகளை கொள்முதல் செய்வதிலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. தரணி இதனையடுத்து, தரணிக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் பறிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இது குறித்து, ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, ``ஊராட்சி மன்றத் தலைவர் தரணி, பஞ்சாயத்து நிர்வாகத்தின் கணக்கு விவரங்களை சரிவர பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. போலி ஒப்புதல்கள், வரி ரசீதுகள் என பலவற்றில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானதால், அவருக்கு வழங்கப்பட்டிருந்த ‘செக் பவர்’ அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருக்கிறார். தரணிமீது கூறப்பட்டிருக்கும் வெவ்வேறு புகார்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.
அதிமுக அலுவலக சாவி விவகாரம்: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
சென்னை: டெல்லி: அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உட்சபட்ச மோதல் எழுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அன்றைய தினம் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் உள்ளே நுழைந்தார்.மேலும் அங்கு நடந்த வன்முறையில் பொதுமக்கள் வாகனங்கள் உள்பட பல அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து சட்டம் -ஒழுங்கு பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை ஆட்சியர் சீல் வைத்தார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் இடைக்கால தடை விதிக்க வேண்டுமென்ற ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தார். அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில், இடைக்கால தடை விதிக்க முடியாது. விரிவான விசாரணை மேற்கொள்ளாமல், எந்த இடைக்கால உத்தரவையும், பிறப்பிக்க முடியாது̣. வழக்கை ஒரு வாரத்துக்கு பிறகு விசாரிப்பதாகவும், எதிர்மனுதாரர்கள் மற்றும் சீல் வைத்த வருவாய்த் துறையினருக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.
முத்தத்தில் மாற்றப்பட்ட போதைப்பொருள்; சிறை விசிட்டில் காதலியின் நூதன முயற்சியால் இறந்த இளைஞர்!
அமெரிக்காவின் டென்னிஸீ (Tennessee) பகுதியில் உள்ள சிறையில், ஜோசுவா பிரவுன் என்பவர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 11 ஆண்டுகள் தண்டனைப்பெற்று சிறையிலிருந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் திடீரென ஜோசுவா பிரவுன் இறந்துவிட்டார். ஜோசுவா சிறையிலேயே இறந்ததால் சிறை அதிகாரிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டது. ஜோசுவா பிரவுன் இறப்புக்கு என்ன காரணம் என காவல்துறை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது. சிறைக் கைதிகள் யாரேனும் கொலைசெய்துவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. ஆனால், ஜோசுவா பிரவுன் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. ஜோசுவா பிரவுன் இறப்பதற்கு முன்னர் இறுதியாகப் பார்க்க வந்தவர் அவரின் காதலி ரேச்சல் டொலார்ட்தான். அவர் வந்து சென்ற சில மணி நேரங்களில்தான் ஜோசுவா இறந்தார். ஆனால், அவர் சிறைக்குள்ளே வரும்போது எந்த பொருள்களும் கொண்டுவரவில்லை. உணவுப் பொருள்கள்கூட சிறையில் அனுமதிக்கப்படாத நிலையில், எப்படி இறந்திருப்பார் என காவல்துறை செய்வதறியாது திகைத்தது. ரேச்சல் டொலார்ட் - ஜோசுவா பிரவுன் அப்போதுதான் காதலர்கள் இருவரும் முத்தமிட்டுக்கொண்டது தெரியவந்தது. அதையடுத்து, ஜோசுவாவின் மரணத்துக்கு அவர் காதலி காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது கிடைத்த தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம்...! இது தொடர்பாக ஊடகங்களிடம் காவல்துறையினர், ``ஜோசுவாவைச் சந்திக்கவந்த அவர் காதலி ரேச்சல் டொலார்ட் தன் காதலனுக்காக வாயில் போதைப் பொருளைக் கொண்டுவந்திருக்கிறார். அதை ரகசியமாக முத்தத்தின் மூலம் கொடுத்திருக்கிறார். போதைப்பொருள் இதை எதிர்பார்க்காத ஜோசுவா பிரவுன் முழுவதுமாக உட்செலுத்திக்கொண்டிருக்கிறார். அதன் விளைவாக... அவர் இறந்துவிட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைக் கைதிகளைச் சந்திக்க வருபவர்களின் உடலையும் ஸ்கேன்செய்ய புதிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் உயிரிழந்த இளைஞரின் காதலிமீது நாங்கள் கொலை வழக்கு பதிவுசெய்து... அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறோம் எனத் தெரிவித்தனர். போதை மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறல்; ஜானி டெப்பின் முன்னாள் காதலி குற்றச்சாட்டு!
வங்கி கொள்ளையில் `திடீர்'திருப்பம் - இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் 3.5 கிலோ தங்கம் சிக்கியது!
சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டனில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் கடந்த 13-ம் தேதி பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களைக் கட்டிப்போட்டும் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் என்பவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வுசெய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வங்கி கொள்ளை தனிப்படை போலீஸாரின் தேடுதல் வேட்டையில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்(30), அவரின் நண்பர் பாலாஜி (28) ஆகியோர் 14-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கொள்ளை சம்பவத்தில் மாஸ்டர் மைன்ட்டாக செயல்பட்ட சென்னை பாடியைச் சேர்ந்த அதே வங்கியில் கஸ்டமர் கேர் மேலாளராக இருந்த முருகன், திருமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரையும் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கொள்ளையடித்த தங்க நகைகளை கோவையில் விற்க சென்ற முருகனின் கூட்டாளியான சூர்யாவையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் 31 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் இன்னும் சிலரை போலீஸார் தேடி வந்தனர். இந்தநிலையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளைவழக்கில் திடீர் திருப்பமாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சரம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் அமல்ராஜிக்கு தொடர்பிருக்கும் ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று மேலிடத்திலிருந்து க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கைதானவர்கள் கொடுத்த தகவலின்படி அச்சரம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் வீட்டுக்கு தனிப்படை போலீஸார் சென்றனர். அவரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தங்க நகைகள் குறித்து இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை: கட்டிபோடப்பட்ட வங்கி ஊழியர்கள்.. கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகள்! - அதிர்ச்சி சம்பவம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``தமிழக காவல் துறையில் கடந்த 1999-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக அமல்ராஜ் பணிக்குச் சேர்ந்துள்ளார். இவர், மேல்மருவத்தூர், கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூர் ஆகிய இடங்களில் பணியாற்ற்யுள்ளார். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. 2022 மே மாதம் முதல் தற்போது வரை அச்சரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார் என்றார். வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``இன்ஸ்பெக்டர் அமல்ராஜிக்கும் கொள்ளை வழக்கில் கைதானவர்களுக்கும் எந்தவகையில் தொடர்பு என்று விசாரணை நடத்தப்பட்டது. அதில், இந்த வழக்கில் கைதான சந்தோஷ் என்பவரின் உறவினர் தான் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் தான் அவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமல்ராஜிடம் விசாரித்த போது அவர் அமைதியாகவே இருக்கிறார். அதனால்தான் தகவல்களை சேகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
'எங்களை இழிவுபடுத்துவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை' - தேஜஸ்வி யாதவ்
எங்களை இழிவுபடுத்துவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை என்று பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
மனைவியை வேறு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசுவது கொடுமை - கேரள உயர் நீதிமன்றம் கருத்து
மனைவி கேட்ட விவாகரத்தை வழங்கிய குடும்ப நல நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து கணவர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
ரோஹிங்கியாக்களுக்கு வீடு? - மத்திய உள்துறை மறுப்பு
இந்தியாவில் தஞ்சமடைந்த மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். டெல்லியை அடுத்த பக்கர்வாலா பகுதியில் அமைந்துள்ள அரசு குடியிருப்புகளில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்
ரோஹிங்கியாக்களுக்கு வீடு? - மத்திய உள்துறை மறுப்பு
இந்தியாவில் தஞ்சமடைந்த மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். டெல்லியை அடுத்த பக்கர்வாலா பகுதியில் அமைந்துள்ள அரசு குடியிருப்புகளில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்
மனைவியை வேறு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசுவது கொடுமை - கேரள உயர் நீதிமன்றம் கருத்து
மனைவி கேட்ட விவாகரத்தை வழங்கிய குடும்ப நல நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து கணவர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.
இலவசங்களுக்கு பதில் கண்ணியமாக வருவாய் ஈட்டக்கூடிய நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிஹார் புதிய சட்ட அமைச்சருக்கு எதிராக ஆள் கடத்தல் வழக்கில் கைது வாரன்ட்
பிஹாரின் புதிய சட்ட அமைச்சர் கார்த்திகேய சிங்குக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
டெல்லி, கொல்கத்தா, ஷாங்காய் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய பெரிய நகரங்களில் மோசமான அளவில் காற்று மாசு
இந்தியாவின் டெல்லி, கொல்கத்தா, சீனாவின் ஷாங்காய் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ நகரங்களில் காற்று மாசின் அளவு உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது.
வெளிநாட்டவர்கள் விரும்பும் நகரங்கள்: பெங்களூரு 6-வது இடம்
வெளிநாட்டவர்கள் தொழில் சார்ந்து புலம்பெயர்வதற்கு ஏற்றதாக உருவாகி வரும் உலக நகரங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது.
முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசன் நடைமுறையையும் தடை செய்ய உத்தரவிட கோாி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசீர் ஹீனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அங்கன்வாடி பணியாளருக்கு ஐஎஸ் மிரட்டல் - 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு
உ.பி.யில் தங்கள் பகுதி மக்களுக்கு தேசியக் கொடி விநியோகம் செய்த அங்கன்வாடி பணியாளருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்ததால், அவரது குடும்பத்தினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளருக்கு ஐஎஸ் மிரட்டல் - 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு
உ.பி.யில் தங்கள் பகுதி மக்களுக்கு தேசியக் கொடி விநியோகம் செய்த அங்கன்வாடி பணியாளருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்ததால், அவரது குடும்பத்தினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு.. 30 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று மாலை நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக தலைமையகத்தை இபிஎஸ்-யிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: இன்று தீர்ப்பு!
அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரணை செய்ய உள்ளது.சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் இன்றே உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. காலை 11.30மணிக்குள் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னதாக நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் விசாரணை முடிவில், `அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டமும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லாமல் போனது.நேற்றைய தீர்ப்பு ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக வெளியான நிலையில், இன்றைய தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் பயணிக்க தனி பயணச்சீட்டு வாங்கணுமா? ரயில்வே விளக்கம்!
ரயில்களில் 1 முதல் 4 வயதுள்ள குழந்தைகளுக்கு தனியாக பயணச்சீட்டு வாங்க வேண்டும் என வெளியான தகவல்கள் தவறு என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக கடந்த மார்ச் 6, 2020-ல் ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டது. அதன்படி இப்போதுவரை 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகள் இலவசமாக பயணித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தனி படுக்கையோ அல்லது இருக்கையோ வழங்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.இந்நிலையில் குழந்தைகளுக்கான இச்சலுகை ரயில்வே மாற்றியுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகினது. இதுதொடர்பாக சுற்றறிக்கை வழியாக ரயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை வழியாக தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் `குழந்தைகளின் ரயில் பயணம் தொடர்பாக விதிமுறைகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை’ என்றும் ரயில்வே கூறியுள்ளது.மேலும் ரயில்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு இல்லை என்றும் தேவைப்பட்டால் பணம் செலுத்தி தனி படுக்கை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே உள்ள விதிமுறையையும் ரயில்வே சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தையுடன் இருட்டில் பரிதவித்த ரயில் பயணி -டிக்கெட் பரிசோதகர் செய்த உதவி
ரயிலில் பயணி ஒருவர் குழந்தையை வைத்துக்கொண்டு இருட்டில் சிரமப்படுவதை பார்த்த டிக்கெட் பரிசோதகர், அவரை வெளிச்சம் உள்ள வேறொரு இருக்கைக்கு மாற்றினார். சமீபத்தில் விசாக் கிருஷ்ணா என்பவர் தனது ஒரு வயது குழந்தையுடன் கேரளா மாநிலம் கண்ணூர் செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் இருந்த பி1 கோச் பெட்டியில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாத இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் இருட்டறையில் இருந்ததுபோல் இரவில் குழந்தையை வைத்துக்கொண்டு கிருஷ்ணா சிரமத்துடன் பயணம் செய்து வந்துள்ளார். அச்சமயத்தில் அந்த கோச்சுக்கு வந்த டிக்கெட் பரிசோதகர், குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பயணி இருட்டில் சிரமப்படுவதை பார்த்து, கிருஷ்ணாவை வெளிச்சம் உள்ள வேறொரு இருக்கைக்கு மாற்றினார். அதன்பிறகே கிருஷ்ணா நிம்மதி பெருமூச்சு விட்டு குழந்தையுடன் தூங்கினார். அந்நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் நினைத்திருந்தால் கண்டும் காணாததுபோல் சென்றிருக்கலாம். ஆனால் குழந்தையுடன் பயணி ஒருவர் இருட்டில் கஷ்டப்படுவதைப் பார்த்து உதவிவிட்டு சென்றது விசாக் கிருஷ்ணாவுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ரயிலில் தனக்கு சீட் மாற்றப்படுவதற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும், மாற்றியப்பின் எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு, அந்த டிக்கெட் பரிசோதகரின் சேவைக்கு கிருஷ்ணா நன்றி தெரிவித்தார். ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியை டேக் செய்து அந்த பதிவினை வெளியிட்டிருந்தார். இதையடுத்து கிருஷ்ணாவின் ட்விட்டுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சகம், ''உங்களுக்கும் குழந்தைக்கும் இந்த பயணம் சவுகரியமானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்காக சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்'' எனக் கூறியது. டிக்கெட் பரிசோதகரின் இந்த அக்கறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதையும் படிக்க: மார்க் ஜுக்கர்பெர்க்கின் முகச்சாயலில் குழந்தை இயேசு சிலை-பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பெண் பயணிகளை முறைத்து பார்க்க கூடாது: மீறினால் ஜெயில் தான்!
அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு - 237 கிராமங்களில் மக்கள் தவிப்பு
ஒடிசாவில் மகாநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்களில் வசிக்கும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு - 237 கிராமங்களில் மக்கள் தவிப்பு
ஒடிசாவில் மகாநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்களில் வசிக்கும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
குஜராத் தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
கேரளாவில் செயற்கை சுவாச உதவியுடன் தனித்தேர்வு எழுதிய 50 வயது பெண்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட் டம், வைக்கப்ரயார் பகுதியைச் சேர்ந்தவர் சிமிமோள்(50). இவர் கடுதுருத்தி பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு நிலையிலான தனித்தேர்வு எழுதினார்.
உத்தரபிரதேச சிறைச்சாலைகளில் ஆங்கிலேயர் கால விதிமுறைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு பல்வேறு புதிய வசதிகளை அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.