SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிரச்னை என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்பு ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகரின் விரைவான வளர்ச்சியால் பாறைக்குழியைச் சுற்றியுள்ள பகுதிகள் வீடுகளாக மாறிவிட்டன. இதனால் அங்கு குப்பை கொட்டுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். முதலியபாளையம் அருகே உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் உயர்நீதிமன்றம் அங்கு குப்பை கொட்ட தடை விதித்தது. இதற்கான மாற்று தீர்வாக, இடுவாய் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் குப்பையை கொட்டத் திட்டமிடப்பட்டது. திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள் ஆனால், அதற்கும் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகளை அகற்ற முடியாமல் நிர்வாகம் சிக்கலில் உள்ளது. இதனிடையே, ராயபுரம் ரோட்டரி பள்ளி அருகே நொய்யல் ஆற்றின் இருபுறங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும், திருப்பூர் ரயில் நிலையம் பின்புறமாக மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்திலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியது: “இந்த வழியேதான் நாங்கள் மெயின் ரோட்டுக்கு செல்வோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இதை கடந்து செல்கிறார்கள். இங்கிருந்து அதிக துர்நாற்றம் வீசுவதால் நடந்து செல்லவே முடியவில்லை. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி உடனடியாக இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள் இது குறித்து 36-ஆம் வார்டு கவுன்சிலரும் அந்தப் பகுதியின் மண்டல தலைவருமான திவாகரன் அவர்களிடம் கேட்டபோது, “குப்பை பிரச்சினைக்கு மாநகராட்சி விரைவில் நிரந்தர தீர்வு எடுக்கத் திட்டமிட்டு வருகிறது. மக்கள் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

விகடன் 25 Nov 2025 1:21 pm

அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது?

வரி... பிரச்னை... சமாதானம்... ரிப்பீட்டு - இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா - சீனா உறவு இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது... அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின... இரு நாடுகளும் அதை தான் சொன்னது. ட்ரம்ப் 'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது? அடுத்த பிரச்னை அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார். அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது. தொலைபேசி அழைப்பு இந்த நிலையில்தான், நேற்று ட்ரம்ப் - ஜின்பிங் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், நானும் ஜியும் உக்ரைன் விஷயம், ஃபென்டனைல், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். சீனா உடனான நம்முடைய உறவு மிகவும் வலுவாக உள்ளது. என்னை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஜிங்கிற்கு அதிபர் ஜி அழைத்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவரும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வருவதாக ஒப்புக்கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் - ஜி ஜின்பிங் 'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது? இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து வெளியுறவுத் துறையின் சீன செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜி ஜின்பிங் தைவானை சீனா உடன் இணைப்பது குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவு அப்படியே தொடருமா... அல்லது அடுத்து எதாவது பிரச்னை ஏற்பட்டு விரிசல் உண்டாகுமா... காலம் தான் பதிலளிக்கும். President Xi Jinping spoke with U.S. President Donald J. Trump on the phone. President Xi noted that since the Busan meeting, the China-U.S. relationship has generally maintained a steady and positive trajectory, and this is welcomed by the two countries and the broader… pic.twitter.com/OChLjr7PpL — Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) November 24, 2025

விகடன் 25 Nov 2025 1:03 pm

அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது?

வரி... பிரச்னை... சமாதானம்... ரிப்பீட்டு - இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா - சீனா உறவு இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது... அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின... இரு நாடுகளும் அதை தான் சொன்னது. ட்ரம்ப் 'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது? அடுத்த பிரச்னை அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார். அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது. தொலைபேசி அழைப்பு இந்த நிலையில்தான், நேற்று ட்ரம்ப் - ஜின்பிங் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், நானும் ஜியும் உக்ரைன் விஷயம், ஃபென்டனைல், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். சீனா உடனான நம்முடைய உறவு மிகவும் வலுவாக உள்ளது. என்னை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஜிங்கிற்கு அதிபர் ஜி அழைத்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவரும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வருவதாக ஒப்புக்கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் - ஜி ஜின்பிங் 'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது? இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து வெளியுறவுத் துறையின் சீன செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜி ஜின்பிங் தைவானை சீனா உடன் இணைப்பது குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவு அப்படியே தொடருமா... அல்லது அடுத்து எதாவது பிரச்னை ஏற்பட்டு விரிசல் உண்டாகுமா... காலம் தான் பதிலளிக்கும். President Xi Jinping spoke with U.S. President Donald J. Trump on the phone. President Xi noted that since the Busan meeting, the China-U.S. relationship has generally maintained a steady and positive trajectory, and this is welcomed by the two countries and the broader… pic.twitter.com/OChLjr7PpL — Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) November 24, 2025

விகடன் 25 Nov 2025 1:03 pm

`பிரதமர் மோடியை அன்று கடுமையாக எதிர்த்தவர், இன்று ஆதரிப்பது ஏன்?’ - பி.ஆர் பாண்டியன் எக்ஸ்க்ளூஸிவ்

`பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் இருப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் விரும்பவில்லை. கோவை இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலினை அழைக்க முயற்சி செய்த போதும், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என அனைத்து விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ளார். அவருடன் விகடன் சார்பில் பிரத்தியேக நேர்காணல் செய்யப்பட்டது. இனி கேள்விகளும் அவரின் பதில்களும்...! ``கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடி உங்களை புகழ்ந்து பாராட்டினார். அவர் உங்களிடம் என்ன கூறினார்?” ``பிரதமருடைய தமிழக வருகை விவசாயிகள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு இயற்கை விவசாயம் குறித்த திட்டங்களை பிரதமரிடம் நாங்கள் எடுத்துரைத்தோம். அரசியல் ரீதியிலாக கொள்கை ரீதியிலாக பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட, அவரை நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் அவரை அழைத்து பேசுவதற்கும், எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைப்பதற்கும் அந்த மேடையை நாங்கள் பயன்படுத்தினோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரை அழைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த விவசாயிகளுக்கு முழு உரிமை இருக்கிறது. பிரதமரும் அந்த மேடையை அரசியல் மேடையாக பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மேடையாகவே பயன்படுத்தினார். அது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. பிரதமருடைய இந்த பேச்சு ஒட்டுமொத்தமாக விவசாயத்தை இயற்கை விவசாயமாக மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் ஆவது இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். மேடை அலங்காரத்திற்காக எதையும் அவர் பேசாமல் எது வாய்ப்பு இருக்கிறதோ அதை அவர் பேசியுள்ளார்.” ``பிரதமர் பேசியதற்கு பிறகு உடனடியான மாற்றங்கள் எதுவும் தென்பட்டிருக்கிறதா?” ``இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சௌஹான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மலையடிவார கிராமங்களில் வசிக்கக்கூடிய நபர்கள் வனவிலங்குகளால் தாக்கப்பட்டாலோ கொல்லப்பட்டாலோ அதற்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதை உறுதி செய்து இருக்கிறார். மேலும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அரசாணையும் வெளியிட்டு இருக்கிறார். மாநாடு முடிந்த உடனேயே எங்களது கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் எங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.” ``பிரதமரின் இந்த வருகை அரசியல் சார்புடையது அல்ல என நீங்கள் சொன்னாலும், பிரதமரின் வருகையை ஒட்டி தமிழ்நாட்டில் ஏராளமான அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது பிரதமரின் இந்த வருகை அரசியல் ரீதியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்?” ``சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் நாங்கள் இந்த மாநாட்டை நடத்தவில்லை. நாங்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருக்கிறோம். ஆகஸ்ட் மாதமே இதை நடத்துவதாக இருந்தோம். ஆனால் கால சூழல் சேராததால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது. எனவே நாங்கள் இதை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. பிரதமர் கலந்து கொள்ள இருந்து அரங்கில் 3000 விவசாயிகளை அமர வைக்க திட்டமிட்டு இருந்தோம். அத்தனை பேர் வருவார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. ஆனால் 5000 விவசாயிகள் வந்திருந்தார்கள். நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் இதற்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்தமாக அரசியல் கலப்பில்லாமல் இதை செய்தோம் . உலகளாவிய அளவில் வலிமையான தலைவர் பிரதமர் என்பதால் அவரை வைத்து இப்படி ஒரு மாநாட்டை நடத்தினால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதை அணுகுகிறார்கள். காரணம் பிரதமருடைய வருகை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” ``நெல்லுக்கான ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அரசு சமீபத்தில் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி கோவை மாநாட்டிற்கு வந்திருக்கிறார். எனவே பிரதமர் மோடியின் வருகை வாக்கு வங்கியை குறிவைத்து தானே தவிர விவசாயிகளின் நலன் சார்ந்தது அல்ல என்ற விமர்சனங்கள் திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிறது இதை எப்படி பார்க்கிறீர்கள்?” ``குருவை நெல் கொள்முதல் என்பது செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி அம்மாத இறுதியில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. அக்டோபர் 15ஆம் தேதி வரை பருவமழை தொடங்கவில்லை. நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதுவரையிலும் கூட நெல் கொள்முதலை அரசு முறையாக செய்யவில்லை. அதனால் தான் மழையில் நெல் மூட்டைகள் நனைந்தன. ஆனால் ஆரம்பத்தில் இவர்கள் `நெல் மூட்டைகள் நனையவில்லை’ என சொன்னார்கள் அதை எதிர்த்து நாங்கள் செய்த போராட்டங்களை கொச்சைப்படுத்தினார்கள். ஆனால் நெல் நனையவில்லை என சொன்ன இவர்கள் தற்பொழுது ஈரப்பதத்தை அதிகரித்து மத்திய அரசு வழங்கவில்லை என சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசு ஏன் மறுத்தது என்பதை அரசு இன்னும் தெளிவாக சொல்லவில்லை. அதை முதல்வர் மு.க ஸ்டாலின் தெரியப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.” ``விவசாயிகள் பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் இடையே தொடர்ந்து சச்சரவு நீடிக்கும் நிலையில், கோவையில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினையும் ஒரே மேடையில் கொண்டு வந்திருந்தால் பிரச்சனைகள் ஓரளவுக்கு சுமுகமாக முடிந்திருக்குமே. அதற்கான முயற்சிகள் எதையும் எடுத்தீர்களா?” ``இந்த மாநாடு தென்னிந்திய அளவில் நடைபெற்ற மாநாடு. ஒரு மாநில முதல்வரை அழைத்து இன்னொரு மாநில முதல்வரை அழைக்கவில்லை என்றால் அது நன்றாக இருந்திருக்காது. இருந்தாலும் கூட தமிழ்நாடு முதல்வரிடம் இதற்கான அனுமதி என்பது கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சகம் இது தொடர்பாக எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.” ஸ்டாலின் ``விவசாயிகள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி என்பதால் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மறுப்பு தெரிவித்தாரா அல்லது பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் மறுப்பு தெரிவித்தாரா?” ``நாங்கள் கடந்த ஜனவரியில் இருந்து இதற்கான தயாரிப்பு பணிகளில் இருந்தோம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எங்களுடன் இதில் சுமூகமாக நடந்து கொள்ளவில்லை. அதை நாங்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக உணர்ந்து கொண்டோம். பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் தான் கலந்து கொள்ள முதல்வருக்கு மனம் இல்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் இயற்கை விவசாயம் சார்ந்த விவகாரங்களில் கொள்கை முடிவை பிரதமர் தான் எடுக்க முடியும் என்பதால், அவரது தலைமையில் மாநாட்டை நடத்தினோம். ஆனால் இதில் எந்த அரசியலும் கிடையாது. திமுக பார்வையில் இது அரசியலாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. இதை அரசியல் ஆக்க முயற்சிப்பது தவறு.” ``பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தவிர்ப்பதாக தொடர் விமர்சனங்கள் வருகிறது அதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?” ``பிரதமர் என்பவரோ முதல்வர் என்பவரோ அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவியில் இருப்பவர்கள். நாடு தழுவிய அளவில் கொள்கை முடிவுகளை எடுப்பவர் பிரதமர். மாநில அளவில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் மாநில முதல்வர்கள். எனவே இவர்கள் இணக்கமாக செயல்பட்டு, பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரும் பொழுது அந்த மாநில முதல்வர் அவரை சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் சமீப காலமாக அந்த கலாச்சாரம் பின்பற்றப்படாமல் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை இருக்கிறது. கொள்கைய அளவில் எதிர்ப்பது என்பது முக்கியம்தான். ஆனால் நிர்வாக ரீதியில் அந்த எதிர்ப்பை காட்டக்கூடாது. ஒருவேளை பிரதமரை தமிழ்நாடு முதல்வர் சந்திக்க முயற்சித்து அதற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி தரவில்லையா என்பதை தமிழ்நாடு முதல்வர் தான் விளக்க வேண்டும்.” ``மூன்று வேளாண் சட்டம் தொடங்கி பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்தவர் பி.ஆர் பாண்டியன். ஆனால் தற்பொழுது பிரதமரை ஆதரிப்பதன் பின்னணி என்ன? இதில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றதே?” ``தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் பேரழிவு திட்டத்தை 2011ல் கொண்டு வந்தது திமுக தலைமையிலான அரசு. பின்னர் அதன் பாதிப்புகளை தெரியாமல் நாங்கள் அனுமதி கொடுத்து விட்டோம் என விவசாய சங்கங்களான எங்களுடன் சேர்ந்து அதை எதிர்த்ததும் திமுக தான். எங்களுடைய போராட்டங்களில் அப்போதைய முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டார். இன்னும் சொல்லப்போனால் மூன்று வேளாண் சட்டங்கள் என்பது தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நடந்த முரசொலி மாறன் நினைவு நிகழ்ச்சியில் கூட தோகா மாநாட்டின் முடிவுகள் சிறப்பு வாய்ந்தது என முதல்வர் மு.க ஸ்டாலினே குறிப்பிட்டு இருக்கிறார். 50 ஆண்டுகால காவேரி பிரச்னை இன்னமும் கூட முடியவில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்ததற்கு பிறகும் கூட திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுகள் அதை அரசுதலில் வெளியிடாமல் இருந்தார்கள். பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் உச்ச நீதிமன்றத்தை நாடி அதை பெற்றுக் கொடுத்தார். இப்படி திமுகவின் செயல்பாடுகளையும் நிறைய சொல்ல முடியும். எனவே அதுபோல தான் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கிறது என தெரிந்து நாங்கள் பிரதமரை எதிர்த்தோம். ஆனால் பிரதமரை அழைத்து மாநாட்டை நடத்தினோம் என்பதற்காகவே வேண்டும் என்று வேண்டுமென்றே என் மீது அவதூறுகள் பரப்பப்படுகிறது. நான் மேடையிலேயே கூட சில விஷயங்களை போராடி தான் அரசுகளிடம் இருந்து பெற வேண்டி இருக்கிறது என பேசினேன் பிரதமர் இருக்கக்கூடிய ஒரு மேடையில் இதுவரை யாரும் இவ்வளவு வெளிப்படையாக பேசியதே கிடையாது. ஆனால் அதையும் கூட நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று தான் பிரதமர் பேசினார்.” ``இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. பாரத ரத்னா விருதை அரசியல் கருவியாக பாஜக பயன்படுத்துகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக முன் வைக்கும் நிலையில் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?” ``கொரோனா காலத்தில் எனது உயிரைக் காப்பாற்றியது இயற்கை விவசாய உணவுகள் தான் என பிரிட்டன் பிரதமரை ஒருமுறை தெரிவித்து இருக்கிறார். அவர் இந்திய விவசாயிகளுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் நஞ்சில்லா உணவு மண் மலட்டுத்தன்மை அடையாமல் இருப்பதை தடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் பெரும் புரட்சி செய்தவர் நம்மாழ்வார். எனவே அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் எனக் கேட்பது எங்களது உரிமை. அவருக்கு அப்படி ஒரு விருது வழங்கும் பட்சத்தில் இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்ல முடியும். angaadi உத்திரபிரதேசத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கும், பீகாரில் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூருக்கும் , தமிழ்நாட்டில் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட்டதில் அரசியல் இருக்கிறது என முன்வைக்கப்படும் விமர்சனங்களை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் எங்களுடைய பார்வையில் நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அந்த கோரிக்கையை பிரதமரிடம் நேரடியாக முன் வைத்துள்ளோம்.”

விகடன் 25 Nov 2025 11:52 am

`பிரதமர் மோடியை அன்று கடுமையாக எதிர்த்தவர், இன்று ஆதரிப்பது ஏன்?’ - பி.ஆர் பாண்டியன் எக்ஸ்க்ளூஸிவ்

`பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் இருப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் விரும்பவில்லை. கோவை இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலினை அழைக்க முயற்சி செய்த போதும், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என அனைத்து விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ளார். அவருடன் விகடன் சார்பில் பிரத்தியேக நேர்காணல் செய்யப்பட்டது. இனி கேள்விகளும் அவரின் பதில்களும்...! ``கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடி உங்களை புகழ்ந்து பாராட்டினார். அவர் உங்களிடம் என்ன கூறினார்?” ``பிரதமருடைய தமிழக வருகை விவசாயிகள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு இயற்கை விவசாயம் குறித்த திட்டங்களை பிரதமரிடம் நாங்கள் எடுத்துரைத்தோம். அரசியல் ரீதியிலாக கொள்கை ரீதியிலாக பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட, அவரை நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் அவரை அழைத்து பேசுவதற்கும், எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைப்பதற்கும் அந்த மேடையை நாங்கள் பயன்படுத்தினோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரை அழைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த விவசாயிகளுக்கு முழு உரிமை இருக்கிறது. பிரதமரும் அந்த மேடையை அரசியல் மேடையாக பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மேடையாகவே பயன்படுத்தினார். அது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. பிரதமருடைய இந்த பேச்சு ஒட்டுமொத்தமாக விவசாயத்தை இயற்கை விவசாயமாக மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் ஆவது இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். மேடை அலங்காரத்திற்காக எதையும் அவர் பேசாமல் எது வாய்ப்பு இருக்கிறதோ அதை அவர் பேசியுள்ளார்.” ``பிரதமர் பேசியதற்கு பிறகு உடனடியான மாற்றங்கள் எதுவும் தென்பட்டிருக்கிறதா?” ``இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சௌஹான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மலையடிவார கிராமங்களில் வசிக்கக்கூடிய நபர்கள் வனவிலங்குகளால் தாக்கப்பட்டாலோ கொல்லப்பட்டாலோ அதற்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதை உறுதி செய்து இருக்கிறார். மேலும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அரசாணையும் வெளியிட்டு இருக்கிறார். மாநாடு முடிந்த உடனேயே எங்களது கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் எங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.” ``பிரதமரின் இந்த வருகை அரசியல் சார்புடையது அல்ல என நீங்கள் சொன்னாலும், பிரதமரின் வருகையை ஒட்டி தமிழ்நாட்டில் ஏராளமான அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது பிரதமரின் இந்த வருகை அரசியல் ரீதியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்?” ``சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் நாங்கள் இந்த மாநாட்டை நடத்தவில்லை. நாங்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருக்கிறோம். ஆகஸ்ட் மாதமே இதை நடத்துவதாக இருந்தோம். ஆனால் கால சூழல் சேராததால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது. எனவே நாங்கள் இதை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. பிரதமர் கலந்து கொள்ள இருந்து அரங்கில் 3000 விவசாயிகளை அமர வைக்க திட்டமிட்டு இருந்தோம். அத்தனை பேர் வருவார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. ஆனால் 5000 விவசாயிகள் வந்திருந்தார்கள். நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் இதற்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்தமாக அரசியல் கலப்பில்லாமல் இதை செய்தோம் . உலகளாவிய அளவில் வலிமையான தலைவர் பிரதமர் என்பதால் அவரை வைத்து இப்படி ஒரு மாநாட்டை நடத்தினால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதை அணுகுகிறார்கள். காரணம் பிரதமருடைய வருகை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” ``நெல்லுக்கான ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அரசு சமீபத்தில் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி கோவை மாநாட்டிற்கு வந்திருக்கிறார். எனவே பிரதமர் மோடியின் வருகை வாக்கு வங்கியை குறிவைத்து தானே தவிர விவசாயிகளின் நலன் சார்ந்தது அல்ல என்ற விமர்சனங்கள் திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிறது இதை எப்படி பார்க்கிறீர்கள்?” ``குருவை நெல் கொள்முதல் என்பது செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி அம்மாத இறுதியில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. அக்டோபர் 15ஆம் தேதி வரை பருவமழை தொடங்கவில்லை. நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதுவரையிலும் கூட நெல் கொள்முதலை அரசு முறையாக செய்யவில்லை. அதனால் தான் மழையில் நெல் மூட்டைகள் நனைந்தன. ஆனால் ஆரம்பத்தில் இவர்கள் `நெல் மூட்டைகள் நனையவில்லை’ என சொன்னார்கள் அதை எதிர்த்து நாங்கள் செய்த போராட்டங்களை கொச்சைப்படுத்தினார்கள். ஆனால் நெல் நனையவில்லை என சொன்ன இவர்கள் தற்பொழுது ஈரப்பதத்தை அதிகரித்து மத்திய அரசு வழங்கவில்லை என சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசு ஏன் மறுத்தது என்பதை அரசு இன்னும் தெளிவாக சொல்லவில்லை. அதை முதல்வர் மு.க ஸ்டாலின் தெரியப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.” ``விவசாயிகள் பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் இடையே தொடர்ந்து சச்சரவு நீடிக்கும் நிலையில், கோவையில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினையும் ஒரே மேடையில் கொண்டு வந்திருந்தால் பிரச்சனைகள் ஓரளவுக்கு சுமுகமாக முடிந்திருக்குமே. அதற்கான முயற்சிகள் எதையும் எடுத்தீர்களா?” ``இந்த மாநாடு தென்னிந்திய அளவில் நடைபெற்ற மாநாடு. ஒரு மாநில முதல்வரை அழைத்து இன்னொரு மாநில முதல்வரை அழைக்கவில்லை என்றால் அது நன்றாக இருந்திருக்காது. இருந்தாலும் கூட தமிழ்நாடு முதல்வரிடம் இதற்கான அனுமதி என்பது கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சகம் இது தொடர்பாக எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.” ஸ்டாலின் ``விவசாயிகள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி என்பதால் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மறுப்பு தெரிவித்தாரா அல்லது பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் மறுப்பு தெரிவித்தாரா?” ``நாங்கள் கடந்த ஜனவரியில் இருந்து இதற்கான தயாரிப்பு பணிகளில் இருந்தோம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எங்களுடன் இதில் சுமூகமாக நடந்து கொள்ளவில்லை. அதை நாங்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக உணர்ந்து கொண்டோம். பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் தான் கலந்து கொள்ள முதல்வருக்கு மனம் இல்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் இயற்கை விவசாயம் சார்ந்த விவகாரங்களில் கொள்கை முடிவை பிரதமர் தான் எடுக்க முடியும் என்பதால், அவரது தலைமையில் மாநாட்டை நடத்தினோம். ஆனால் இதில் எந்த அரசியலும் கிடையாது. திமுக பார்வையில் இது அரசியலாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. இதை அரசியல் ஆக்க முயற்சிப்பது தவறு.” ``பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தவிர்ப்பதாக தொடர் விமர்சனங்கள் வருகிறது அதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?” ``பிரதமர் என்பவரோ முதல்வர் என்பவரோ அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவியில் இருப்பவர்கள். நாடு தழுவிய அளவில் கொள்கை முடிவுகளை எடுப்பவர் பிரதமர். மாநில அளவில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் மாநில முதல்வர்கள். எனவே இவர்கள் இணக்கமாக செயல்பட்டு, பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரும் பொழுது அந்த மாநில முதல்வர் அவரை சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் சமீப காலமாக அந்த கலாச்சாரம் பின்பற்றப்படாமல் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை இருக்கிறது. கொள்கைய அளவில் எதிர்ப்பது என்பது முக்கியம்தான். ஆனால் நிர்வாக ரீதியில் அந்த எதிர்ப்பை காட்டக்கூடாது. ஒருவேளை பிரதமரை தமிழ்நாடு முதல்வர் சந்திக்க முயற்சித்து அதற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி தரவில்லையா என்பதை தமிழ்நாடு முதல்வர் தான் விளக்க வேண்டும்.” ``மூன்று வேளாண் சட்டம் தொடங்கி பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்தவர் பி.ஆர் பாண்டியன். ஆனால் தற்பொழுது பிரதமரை ஆதரிப்பதன் பின்னணி என்ன? இதில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றதே?” ``தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் பேரழிவு திட்டத்தை 2011ல் கொண்டு வந்தது திமுக தலைமையிலான அரசு. பின்னர் அதன் பாதிப்புகளை தெரியாமல் நாங்கள் அனுமதி கொடுத்து விட்டோம் என விவசாய சங்கங்களான எங்களுடன் சேர்ந்து அதை எதிர்த்ததும் திமுக தான். எங்களுடைய போராட்டங்களில் அப்போதைய முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டார். இன்னும் சொல்லப்போனால் மூன்று வேளாண் சட்டங்கள் என்பது தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நடந்த முரசொலி மாறன் நினைவு நிகழ்ச்சியில் கூட தோகா மாநாட்டின் முடிவுகள் சிறப்பு வாய்ந்தது என முதல்வர் மு.க ஸ்டாலினே குறிப்பிட்டு இருக்கிறார். 50 ஆண்டுகால காவேரி பிரச்னை இன்னமும் கூட முடியவில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்ததற்கு பிறகும் கூட திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுகள் அதை அரசுதலில் வெளியிடாமல் இருந்தார்கள். பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் உச்ச நீதிமன்றத்தை நாடி அதை பெற்றுக் கொடுத்தார். இப்படி திமுகவின் செயல்பாடுகளையும் நிறைய சொல்ல முடியும். எனவே அதுபோல தான் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கிறது என தெரிந்து நாங்கள் பிரதமரை எதிர்த்தோம். ஆனால் பிரதமரை அழைத்து மாநாட்டை நடத்தினோம் என்பதற்காகவே வேண்டும் என்று வேண்டுமென்றே என் மீது அவதூறுகள் பரப்பப்படுகிறது. நான் மேடையிலேயே கூட சில விஷயங்களை போராடி தான் அரசுகளிடம் இருந்து பெற வேண்டி இருக்கிறது என பேசினேன் பிரதமர் இருக்கக்கூடிய ஒரு மேடையில் இதுவரை யாரும் இவ்வளவு வெளிப்படையாக பேசியதே கிடையாது. ஆனால் அதையும் கூட நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று தான் பிரதமர் பேசினார்.” ``இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. பாரத ரத்னா விருதை அரசியல் கருவியாக பாஜக பயன்படுத்துகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக முன் வைக்கும் நிலையில் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?” ``கொரோனா காலத்தில் எனது உயிரைக் காப்பாற்றியது இயற்கை விவசாய உணவுகள் தான் என பிரிட்டன் பிரதமரை ஒருமுறை தெரிவித்து இருக்கிறார். அவர் இந்திய விவசாயிகளுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் நஞ்சில்லா உணவு மண் மலட்டுத்தன்மை அடையாமல் இருப்பதை தடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் பெரும் புரட்சி செய்தவர் நம்மாழ்வார். எனவே அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் எனக் கேட்பது எங்களது உரிமை. அவருக்கு அப்படி ஒரு விருது வழங்கும் பட்சத்தில் இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்ல முடியும். angaadi உத்திரபிரதேசத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கும், பீகாரில் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூருக்கும் , தமிழ்நாட்டில் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட்டதில் அரசியல் இருக்கிறது என முன்வைக்கப்படும் விமர்சனங்களை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் எங்களுடைய பார்வையில் நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அந்த கோரிக்கையை பிரதமரிடம் நேரடியாக முன் வைத்துள்ளோம்.”

விகடன் 25 Nov 2025 11:52 am

`இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

நேற்று உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் நீதிபதி சூர்யா காந்த். தலைமை நீதிபதியாக பதவியேற்ற அதே நாளில் வழக்கறிஞர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார் சூர்யா காந்த். அந்த உத்தரவு படி, இனி வழக்குகளை 'அர்ஜென்ட் லிஸ்டிங்' செய்ய முடியாது. அர்ஜென்ட் லிஸ்டிங் என்றால் என்ன? ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் எந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என்று பட்டியலிடப்படும். அந்தப் பட்டியலில் இல்லாத வழக்குகள் அன்று விசாரிக்கப்படாது. ஆனால், அர்ஜென்ட் லிஸ்ட் செய்யப்படும் வழக்குகளின் விசாரணை அன்று இல்லையென்றால், பெயருக்கு ஏற்ற மாதிரி 'அவசரம்' எனக் கருதி குறிப்பிட்ட தினம் விசாரிக்கப்படும். இது தான் இனி கிடையாது என்று நீதிபதி சூர்யா காந்த் கூறியுள்ளார். சூர்யா காந்த் 'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது? விதிவிலக்கு உண்டு ஆனால், இந்த உத்தரவிற்கும் சில விதிவிலக்குகள் உண்டு. மரணத் தண்டனை, தனிப்பட்ட சுதந்திரம் சார்ந்த வழக்குகள் போன்ற அசாதரண சூழல்களுக்கு சரியான காரணத்துடன் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தால் அந்த வழக்கு 'அர்ஜென்ட் லிஸ்டிங்' ஆக கருதப்படும். அன்று விசாரிக்கப்படும் என்று சூர்யா காந்த் கூறியுள்ளார். எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?

விகடன் 25 Nov 2025 11:01 am

'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது?

என்ன மக்களே... இந்நேரத்திற்கு உங்கள் வீடு தேடி சிறப்பு தீவிர திருத்தப் (SIR) படிவம் வந்திருக்கும். சிலர் அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுத்திருப்பீர்கள். சிலர் இன்னும் அந்தப் படிவத்தை பூர்த்தி செய்யாமல் கூட இருக்கலாம். உங்களுக்கான நினைவூட்டல் தான் இது. வருகிற டிசம்பர் 4-ம் தேதி தான், எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி. இன்னும் 9 நாள்கள் தான் இருக்கின்றன. அதற்கு மேல், உங்களது படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று இதை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்படாது என்று கூறியுள்ளார். அதனால், விரைவில் சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள். அந்தப் படிவத்தில் கேட்டிருக்கும் தகவல்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் வாக்குச்சாவடி அலுவலரின் உதவியை நாடலாம். எஸ்.ஐ.ஆர் படிவம் சம்பந்தமாக நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய தேதிகள் உங்கள் கவனத்திற்காக... டிசம்பர் 4, 2025 - சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி. டிசம்பர் 9, 2025 - ஜனவரி 8, 2026 - நீங்கள் கொடுத்த தகவல்களை சரிபார்த்து ஒரு பட்டியல் தயார் செய்யப்படும். அந்தப் பட்டியல் குறிப்பிட்ட இந்தத் தேதிகளில் உங்களுக்கு கொடுக்கப்படும். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், இந்தக் காலக்கட்டத்தில் ஆட்சேபனை செய்யலாம்... மேல்முறையீடு செய்யலாம். வாக்காளர் பட்டியல் திருத்தம் SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to டிசம்பர் 9, 2025 - ஜனவரி 31, 2026 - தேர்தல் ஆணையம் நீங்கள் செய்த ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டை சரிபார்க்கும். பிப்ரவரி 7, 2026 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆக, மக்களே சீக்கிரம் படிவத்தை நிரப்பி, சமர்ப்பியுங்கள். வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A

விகடன் 25 Nov 2025 10:20 am

Delhi Air Pollution: அபாயகர அளவில் காற்றுமாசு; அலுவலகங்களில் 50% Work From Home - அறிவுறுத்தும் அரசு

டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமாக அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தலைநகர்ப் பிராந்தியத்தில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) நிர்ணயிக்கும் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் 3 (GRAP-3)-ன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Work From Home முன்னதாக டெல்லி அரசு பள்ளிகளில் குழந்தைகளின் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு அதிகமாக இருக்கும்போது பின்பற்றவேண்டிய சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. GRAP 1,2,3,4 என்பவை என்ன? சமீபத்திய ஆண்டுகளில் குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தைப் பொறுத்து, நகரில் எந்த அளவிற்குப் பாதிப்புகளைச் சமாளிக்க முடியும் என்பதைக் கண்டறிய டெல்லி அரசு இந்தப் 'GRAP' அளவீடுகளை நம்பியுள்ளது. காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM), ஒட்டுமொத்த தேசிய தலைநகர்ப் பிராந்தியத்திலிருந்தும் (NCR) தரவுகளைச் சேகரித்து, சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் வானிலை நிலைமைகளின் அடிப்படையில், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. air pollution in delhi காற்றுத் தரக் குறியீடு (AQI) 201 முதல் 300-க்குள் இருக்கும்போது GRAP 1 கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். 301 முதல் 400-க்குள் இருக்கும்போது GRAP 2 கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். அதேசமயம், 401 முதல் 450-க்குள் இருக்கும்போது GRAP 3 அமலுக்கு வருகிறது. காற்றுத் தரக் குறியீடு 451-ஐத் தாண்டும்போது GRAP 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. Delhi மக்களுக்கு கோரிக்கை கடந்த சனிக்கிழமையன்றும் (நவ. 22), இதே GRAP-3-ன் கீழ் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனியார் அலுவலகங்களில் 50 சதவிகிதப் பணியாளர்களை மட்டுமே அலுவலகத்தில் அனுமதித்து, மீதமுள்ளவர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த ஆலோசனையும் CAQM-ன் வழிகாட்டுதலின் பேரில்தான் வழங்கப்பட்டது. குப்பைகள் மற்றும் உயிரிப் பொருட்களை (biomass) திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்குமாறும், தூசி மாசுபாடு குறித்து விழிப்புடன் இருக்குமாறும், விதிமீறல்களை 'கிரீன் டெல்லி செயலி' (Green Delhi app) மூலம் புகாரளிக்குமாறும் அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன?

விகடன் 25 Nov 2025 10:12 am

Delhi Air Pollution: அபாயகர அளவில் காற்றுமாசு; அலுவலகங்களில் 50% Work From Home - அறிவுறுத்தும் அரசு

டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமாக அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தலைநகர்ப் பிராந்தியத்தில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) நிர்ணயிக்கும் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் 3 (GRAP-3)-ன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Work From Home முன்னதாக டெல்லி அரசு பள்ளிகளில் குழந்தைகளின் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு அதிகமாக இருக்கும்போது பின்பற்றவேண்டிய சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. GRAP 1,2,3,4 என்பவை என்ன? சமீபத்திய ஆண்டுகளில் குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தைப் பொறுத்து, நகரில் எந்த அளவிற்குப் பாதிப்புகளைச் சமாளிக்க முடியும் என்பதைக் கண்டறிய டெல்லி அரசு இந்தப் 'GRAP' அளவீடுகளை நம்பியுள்ளது. காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM), ஒட்டுமொத்த தேசிய தலைநகர்ப் பிராந்தியத்திலிருந்தும் (NCR) தரவுகளைச் சேகரித்து, சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் வானிலை நிலைமைகளின் அடிப்படையில், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. air pollution in delhi காற்றுத் தரக் குறியீடு (AQI) 201 முதல் 300-க்குள் இருக்கும்போது GRAP 1 கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். 301 முதல் 400-க்குள் இருக்கும்போது GRAP 2 கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். அதேசமயம், 401 முதல் 450-க்குள் இருக்கும்போது GRAP 3 அமலுக்கு வருகிறது. காற்றுத் தரக் குறியீடு 451-ஐத் தாண்டும்போது GRAP 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. Delhi மக்களுக்கு கோரிக்கை கடந்த சனிக்கிழமையன்றும் (நவ. 22), இதே GRAP-3-ன் கீழ் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனியார் அலுவலகங்களில் 50 சதவிகிதப் பணியாளர்களை மட்டுமே அலுவலகத்தில் அனுமதித்து, மீதமுள்ளவர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த ஆலோசனையும் CAQM-ன் வழிகாட்டுதலின் பேரில்தான் வழங்கப்பட்டது. குப்பைகள் மற்றும் உயிரிப் பொருட்களை (biomass) திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்குமாறும், தூசி மாசுபாடு குறித்து விழிப்புடன் இருக்குமாறும், விதிமீறல்களை 'கிரீன் டெல்லி செயலி' (Green Delhi app) மூலம் புகாரளிக்குமாறும் அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன?

விகடன் 25 Nov 2025 10:12 am

'கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது, திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது' - நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்கிற பிரசார பயணம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா இரண்டு முதலமைச்சர்களை கொடுத்த ஊர் என்பதால் தான் தேனியை தனி மாவட்டமாக அறிவித்து அரசு மருத்துவ கல்லூரியும் கொடுத்திருக்கிறது அதிமுக. தேனியில் எல்லா இடங்களிலும் மணல் திருட்டு, லஞ்சம், ஊழல் தான் தற்போது நடக்கிறது. 58 ஆம் கால்வாய் இன்னமும் திறக்கவில்லை. இதைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. அவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே நோக்கம், இந்த ஒன்றைத் தவிர திமுகவிற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. நயினார் நாகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள், கடந்த வாரத்தில் மட்டும் 4 பாலியல் வன்கொடுமைகள், 8 கொலைகள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது?. எல்லா கிராமங்களிலும் கஞ்சா போதை தான் இருக்கிறது. திமுகவின் கூட்டம் கூடினால் அங்குள்ள டாஸ்மாக் கடையில் வருமானம் அதிகமாகும். 'இந்த முறை திமுகவை விட 10 சதவீத ஓட்டுக்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் என கருத்து கணிப்புகள் சொல்கின்றன. கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பற்ற முடியாது'. பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மக்கள் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் ஒன்றைரை லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கபட்டுள்ளது. தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ரயில் நிலையங்கள் புதுப்பிப்பக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றார். அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி - நயினார் நாகேந்திரன்

விகடன் 25 Nov 2025 9:39 am

ADMK: ``டிசம்பர் 15-ம் தேதி எடுக்கின்ற முடிவு- எடப்பாடியை எச்சரித்த ஓ.பன்னீர் செல்வம்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, 'அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் குழுவின் பெயர் 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்' என மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, ``சமுதாய சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார், தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நடப்பதற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா, ஏழை தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். எடப்பாடி பழனிசாமி இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல், ஆகிய குணங்களை ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மாதான். இந்த இயக்கத்தை தன்னுயிர் தந்து வரலாற்றுச் சிறப்புக்க இயக்கமாக உருவாக்கித் தந்தார்கள். ஜெயலலிதா மறையும்போது `எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் ஆட்சி செய்யும் நிலை இருக்க வேண்டும்' என்ற அபிப்பிராயத்தைச் சொன்னார்கள். அந்த இயக்கம் இன்றைக்கு சில சுயநலவாதிகள், சர்வாதிகார போக்கோடு இந்த இயக்கத்தை வழிநடத்தத் துணிந்ததால் ஏற்பட்ட விளைவு, தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. எவ்வளவோ சொன்னோம் கேட்கவில்லை. தான்தோன்றித்தனமாக இந்த இயக்கத்தை வழிநடத்தி தமிழக மக்களுடைய நம்பிக்கையை இழந்துவிட்டோம். எனவே, நம்முடைய கழகத்தை மீட்டெடுப்பதற்காகத்தான் 'தொண்டர் உரிமை மீட்புக் குழு' இன்றைக்கு கழகமாக மாற்றியிருக்கிறோம். மோடி எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கையின் அடிப்படையில் சிலர் எடுத்த முடிவு, கழகத்தினுடைய பொதுச்செயலாளர் பதவியால் சிதைந்தது. இன்றைக்கு நாமெல்லாம் கண்ணீர் விட்டு அழுகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அதன் அடிப்படையில், எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பதனை நாம் வகுத்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் தலைமை கழகத்தினுடைய கூட்டமும் மாவட்ட கழகத்தினுடைய கூட்டமும் கூட்டப்பட்டு கழகம் இனிமேல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவு எடுக்கப்படும். கழகம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அப்படி நடைபெறவில்லை எனில், வேறு முடிவுகளுக்கு எங்களை நீங்கள் தள்ளி விடாதீர்கள், அந்தப் பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள் என்பதை மட்டும் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். டிசம்பர் 15-ம் தேதி நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். பல்வேறு பிரச்னைகளுக்குள் நான் உள்ளே சென்று, மீண்டும் அதை பூதாகரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. எனவே, திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்றார். பற்றவைத்த ஆளுநர்... ஃபைல் கொடுத்த எடப்பாடி... ‘ஓ.கே’ சொன்ன மோடி!

விகடன் 25 Nov 2025 9:32 am

ADMK: ``டிசம்பர் 15-ம் தேதி எடுக்கின்ற முடிவு- எடப்பாடியை எச்சரித்த ஓ.பன்னீர் செல்வம்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, 'அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் குழுவின் பெயர் 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்' என மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, ``சமுதாய சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார், தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நடப்பதற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா, ஏழை தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். எடப்பாடி பழனிசாமி இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல், ஆகிய குணங்களை ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மாதான். இந்த இயக்கத்தை தன்னுயிர் தந்து வரலாற்றுச் சிறப்புக்க இயக்கமாக உருவாக்கித் தந்தார்கள். ஜெயலலிதா மறையும்போது `எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் ஆட்சி செய்யும் நிலை இருக்க வேண்டும்' என்ற அபிப்பிராயத்தைச் சொன்னார்கள். அந்த இயக்கம் இன்றைக்கு சில சுயநலவாதிகள், சர்வாதிகார போக்கோடு இந்த இயக்கத்தை வழிநடத்தத் துணிந்ததால் ஏற்பட்ட விளைவு, தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. எவ்வளவோ சொன்னோம் கேட்கவில்லை. தான்தோன்றித்தனமாக இந்த இயக்கத்தை வழிநடத்தி தமிழக மக்களுடைய நம்பிக்கையை இழந்துவிட்டோம். எனவே, நம்முடைய கழகத்தை மீட்டெடுப்பதற்காகத்தான் 'தொண்டர் உரிமை மீட்புக் குழு' இன்றைக்கு கழகமாக மாற்றியிருக்கிறோம். மோடி எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கையின் அடிப்படையில் சிலர் எடுத்த முடிவு, கழகத்தினுடைய பொதுச்செயலாளர் பதவியால் சிதைந்தது. இன்றைக்கு நாமெல்லாம் கண்ணீர் விட்டு அழுகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அதன் அடிப்படையில், எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பதனை நாம் வகுத்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் தலைமை கழகத்தினுடைய கூட்டமும் மாவட்ட கழகத்தினுடைய கூட்டமும் கூட்டப்பட்டு கழகம் இனிமேல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவு எடுக்கப்படும். கழகம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அப்படி நடைபெறவில்லை எனில், வேறு முடிவுகளுக்கு எங்களை நீங்கள் தள்ளி விடாதீர்கள், அந்தப் பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள் என்பதை மட்டும் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். டிசம்பர் 15-ம் தேதி நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். பல்வேறு பிரச்னைகளுக்குள் நான் உள்ளே சென்று, மீண்டும் அதை பூதாகரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. எனவே, திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்றார். பற்றவைத்த ஆளுநர்... ஃபைல் கொடுத்த எடப்பாடி... ‘ஓ.கே’ சொன்ன மோடி!

விகடன் 25 Nov 2025 9:32 am

ADMK: ``டிசம்பர் 15-ம் தேதி எடுக்கின்ற முடிவு- எடப்பாடியை எச்சரித்த ஓ.பன்னீர் செல்வம்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, 'அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் குழுவின் பெயர் 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்' என மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, ``சமுதாய சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார், தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நடப்பதற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா, ஏழை தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். எடப்பாடி பழனிசாமி இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல், ஆகிய குணங்களை ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மாதான். இந்த இயக்கத்தை தன்னுயிர் தந்து வரலாற்றுச் சிறப்புக்க இயக்கமாக உருவாக்கித் தந்தார்கள். ஜெயலலிதா மறையும்போது `எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் ஆட்சி செய்யும் நிலை இருக்க வேண்டும்' என்ற அபிப்பிராயத்தைச் சொன்னார்கள். அந்த இயக்கம் இன்றைக்கு சில சுயநலவாதிகள், சர்வாதிகார போக்கோடு இந்த இயக்கத்தை வழிநடத்தத் துணிந்ததால் ஏற்பட்ட விளைவு, தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. எவ்வளவோ சொன்னோம் கேட்கவில்லை. தான்தோன்றித்தனமாக இந்த இயக்கத்தை வழிநடத்தி தமிழக மக்களுடைய நம்பிக்கையை இழந்துவிட்டோம். எனவே, நம்முடைய கழகத்தை மீட்டெடுப்பதற்காகத்தான் 'தொண்டர் உரிமை மீட்புக் குழு' இன்றைக்கு கழகமாக மாற்றியிருக்கிறோம். மோடி எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கையின் அடிப்படையில் சிலர் எடுத்த முடிவு, கழகத்தினுடைய பொதுச்செயலாளர் பதவியால் சிதைந்தது. இன்றைக்கு நாமெல்லாம் கண்ணீர் விட்டு அழுகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அதன் அடிப்படையில், எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பதனை நாம் வகுத்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் தலைமை கழகத்தினுடைய கூட்டமும் மாவட்ட கழகத்தினுடைய கூட்டமும் கூட்டப்பட்டு கழகம் இனிமேல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவு எடுக்கப்படும். கழகம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அப்படி நடைபெறவில்லை எனில், வேறு முடிவுகளுக்கு எங்களை நீங்கள் தள்ளி விடாதீர்கள், அந்தப் பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள் என்பதை மட்டும் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். டிசம்பர் 15-ம் தேதி நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். பல்வேறு பிரச்னைகளுக்குள் நான் உள்ளே சென்று, மீண்டும் அதை பூதாகரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. எனவே, திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்றார். பற்றவைத்த ஆளுநர்... ஃபைல் கொடுத்த எடப்பாடி... ‘ஓ.கே’ சொன்ன மோடி!

விகடன் 25 Nov 2025 9:32 am

'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை'இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

அனைவருக்கும் பசுமை வணக்கம் “இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிகரிக்கின்றன” என்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் ரொம்பப் பிரமாதமாகப் பேசியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. அவர் பேசியதையெல்லாம் பார்க்கப் பார்க்கப் புல்லரிக்கத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், எரிச்சல்தான் எட்டிப் பார்க்கிறது. காரணம்... அவருடைய ஆட்சியின் கடந்தகால செயல்பாடுகள்தான். ‘பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா’ என்று இயற்கை விவசாயத்துக்கென்றே 2015-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ‘ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இது, இப்போது, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’யாகி விட்டது. 2019 மத்திய பட்ஜெட்டில் வெளியான, ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்’ என்ற அறிவிப்பு, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே கிடக்கிறது. ‘வேஸ்ட் டீ கம்போஸர்’ என்ற இயற்கை உர வளர்ச்சியூக்கி, 20 ரூபாய்க்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை விவசாயிகளிடம் பெருவாரியாகக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அந்தத் தயாரிப்பு உரிமையே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்படி முன்னெடுப்புகளெல்லாம் ஒருபக்கம் தூங்கிக் கொண்டிருக்க, ‘விவசாயிகளே இயற்கை விவசாயம் செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி. உண்மையிலேயே இயற்கை விவசாயத்தின் மீது 100% ஆர்வம் இருந்தால், அவர்தான் முதலில் களத்தில் குதிக்கவேண்டும், விவசாயிகள் அல்ல! ஆம், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ‘வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ். சுவாமிநாதன், மூலமாக, ‘பசுமைப் புரட்சி’ என்கிற பெயரில் ரசாயன விவசாயத்தை 100% கட்டாயமாகப் புகுத்தியது, மத்திய அரசுதான். ரசாயன உரங்களை விவசாயிகள் ஏற்க மறுத்த நிலையில், வேளாண் அலுவலர்கள், இரவோடு இரவாக விவசாயிகளின் வயல்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ரசாயன உரங்களைக் கொட்டினார்கள். அந்த இடங்களில் மட்டும் பயிர்கள் வழக்கத்தைவிட செழிப்பாக வளர்ந்து நிற்பதைக் காட்டி, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பிடியில் சிக்க வைத்தனர். ஆக, அரசாங்கத்தின் கைகளில்தான் அத்தனையுமே இருக்கின்றன. 100% இயற்கை விவசாயம்... 100% சாத்தியமே. இதற்கு, இந்திய துணைக் கண்டத்திலேயே முன்னுதாரணமாக 100% இயற்கை விவசாயம் என்பதை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது, சிக்கிம் மாநிலம். கோவையில், பிரதமர் மோடி பேசியது 100% உண்மை என்றால், ‘இனி, இந்தியாவில் 100% இயற்கை விவசாயம்’ என்று உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை விவசாயம், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு, அதன் முன்னோடியான நம்மாழ்வார் மீதிருக்கும் மரியாதை, இதன் விளைவாக உருவாகியிருக்கும் எழுச்சி என எல்லாவற்றையும் ‘அறுவடை’ செய்வதற்காக நடத்தப்பட்ட ‘தேர்தல் நாடக’மாகவே இருக்கும். - ஆசிரியர்

விகடன் 25 Nov 2025 6:01 am

'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை'இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

அனைவருக்கும் பசுமை வணக்கம் “இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிகரிக்கின்றன” என்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் ரொம்பப் பிரமாதமாகப் பேசியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. அவர் பேசியதையெல்லாம் பார்க்கப் பார்க்கப் புல்லரிக்கத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், எரிச்சல்தான் எட்டிப் பார்க்கிறது. காரணம்... அவருடைய ஆட்சியின் கடந்தகால செயல்பாடுகள்தான். ‘பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா’ என்று இயற்கை விவசாயத்துக்கென்றே 2015-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ‘ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இது, இப்போது, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’யாகி விட்டது. 2019 மத்திய பட்ஜெட்டில் வெளியான, ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்’ என்ற அறிவிப்பு, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே கிடக்கிறது. ‘வேஸ்ட் டீ கம்போஸர்’ என்ற இயற்கை உர வளர்ச்சியூக்கி, 20 ரூபாய்க்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை விவசாயிகளிடம் பெருவாரியாகக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அந்தத் தயாரிப்பு உரிமையே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்படி முன்னெடுப்புகளெல்லாம் ஒருபக்கம் தூங்கிக் கொண்டிருக்க, ‘விவசாயிகளே இயற்கை விவசாயம் செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி. உண்மையிலேயே இயற்கை விவசாயத்தின் மீது 100% ஆர்வம் இருந்தால், அவர்தான் முதலில் களத்தில் குதிக்கவேண்டும், விவசாயிகள் அல்ல! ஆம், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ‘வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ். சுவாமிநாதன், மூலமாக, ‘பசுமைப் புரட்சி’ என்கிற பெயரில் ரசாயன விவசாயத்தை 100% கட்டாயமாகப் புகுத்தியது, மத்திய அரசுதான். ரசாயன உரங்களை விவசாயிகள் ஏற்க மறுத்த நிலையில், வேளாண் அலுவலர்கள், இரவோடு இரவாக விவசாயிகளின் வயல்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ரசாயன உரங்களைக் கொட்டினார்கள். அந்த இடங்களில் மட்டும் பயிர்கள் வழக்கத்தைவிட செழிப்பாக வளர்ந்து நிற்பதைக் காட்டி, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பிடியில் சிக்க வைத்தனர். ஆக, அரசாங்கத்தின் கைகளில்தான் அத்தனையுமே இருக்கின்றன. 100% இயற்கை விவசாயம்... 100% சாத்தியமே. இதற்கு, இந்திய துணைக் கண்டத்திலேயே முன்னுதாரணமாக 100% இயற்கை விவசாயம் என்பதை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது, சிக்கிம் மாநிலம். கோவையில், பிரதமர் மோடி பேசியது 100% உண்மை என்றால், ‘இனி, இந்தியாவில் 100% இயற்கை விவசாயம்’ என்று உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை விவசாயம், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு, அதன் முன்னோடியான நம்மாழ்வார் மீதிருக்கும் மரியாதை, இதன் விளைவாக உருவாகியிருக்கும் எழுச்சி என எல்லாவற்றையும் ‘அறுவடை’ செய்வதற்காக நடத்தப்பட்ட ‘தேர்தல் நாடக’மாகவே இருக்கும். - ஆசிரியர்

விகடன் 25 Nov 2025 6:01 am

``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிச்சாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுகவை துண்டு துண்டாக்கியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! இந்த சூழலில், இன்று சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள். தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவுகள் போன்ற நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது அதிமுக. எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும். அந்த வகையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ம் தேதி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படுமா என்று பார்ப்போம். TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

விகடன் 24 Nov 2025 10:18 pm

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. ஆனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். இபிஎஸ், ஓபிஎஸ் `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! இதையடுத்து ஆட்டம் சூடு பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், இன்னும் ஒரு மாதத்தின் உள்ளாக அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும். ஓ. பன்னீர் செல்வத்தின் தலைமையில் அந்த புதிய கட்சி உருவாக்கப்படும் என்று பேசி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. எதுவாகினாலும், இந்த நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 15ம் தேதிக்குள் இந்த அதிமுக பிரச்னைக்கு ஒரு முடிவுக்கு வரும்; இல்லையெனில் இரு கட்சியாக உடையும் என்று கூறுகிறார்கள். TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

விகடன் 24 Nov 2025 9:42 pm

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. ஆனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். இபிஎஸ், ஓபிஎஸ் `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! இதையடுத்து ஆட்டம் சூடு பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், இன்னும் ஒரு மாதத்தின் உள்ளாக அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும். ஓ. பன்னீர் செல்வத்தின் தலைமையில் அந்த புதிய கட்சி உருவாக்கப்படும் என்று பேசி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. எதுவாகினாலும், இந்த நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 15ம் தேதிக்குள் இந்த அதிமுக பிரச்னைக்கு ஒரு முடிவுக்கு வரும்; இல்லையெனில் இரு கட்சியாக உடையும் என்று கூறுகிறார்கள். TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

விகடன் 24 Nov 2025 9:42 pm

``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்

கடந்த நவ. 2ம் தேதி இரவு 11 மணியளவில், 20 வயது மாணவி கோவை விமான நிலையம் பின்புற பகுதியில் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து அவர்கள் காரை அடித்து நொறுக்கியது, காதலனை தாக்கி, அந்தக் கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று தொடர்ந்தும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் வழக்கு இந்தக் குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை தனிப்படையை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கி, தப்பி ஓட முயன்ற குற்றவாளிகள் மூவரையும் தற்காப்புக்காக துப்பாக்கியால் கால், கையில் சுட்டு உயிருடன் பிடித்தது. இந்தச் சம்பவம் நாட்டின் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று கோவை சென்றிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்துப் பேசுகையில், டாஸ்மாக், போதை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. இந்தக் கொடுமையான சூழலில் யாரையும் நம்பாமல் பெண்கள் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசு, பெற்றோர்கள், காவல்துறை என எல்லாரும் 24 மணிநேரமும் நம்மைப் பாதுகாக்க மாட்டார்கள். எதாவது நடந்தால் நமது வாழ்க்கைதான் பாதிக்கப்படும். பெண்கள் சக்தியின் ரூபம். நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நானும் ஒரு பெண் என்பதால் உரிமையுடன் சொல்கிறேன்: தனியாக யாரையும் நம்பாமல், நள்ளிரவில் தனிமையான, பாதுகாப்பற்ற இடத்திற்குச் செல்லாதீர்கள். கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி இரவில் விமான நிலையத்திற்கு பின்னால் இருக்கும் பாதுகாப்பற்ற இடத்திற்கு ஏன் செல்ல வேண்டும்? தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்? நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். என்றைக்கும் ஒரு பெண் தனியாக இரவில் செல்கிறாரோ, அன்றைக்குத்தான் நாடு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம் என்று காந்தியடிகள் காலத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தினமும் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான நாடாக மாறும் வரை, பெண்களாகிய நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். `இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety

விகடன் 24 Nov 2025 9:12 pm

S.I.R : 'அனைத்துக்கட்சி கூட்டத்தில் கப்சிப்; இரட்டை வேடம் போடுகிறதா திமுக?' - குமுறும் கட்சிகள்!

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் இன்று நடத்திய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மற்ற கட்சியினர் பல்வேறு ஆட்சேபனைகளை முன்வைக்க, திமுகவின் பிரதிநிதி பெரிதாக எதையும் பேசாமல் கப்சிப்பென அமர்ந்திருந்த சம்பவம் ஏனைய கட்சியினரை குழப்பத்தியில் ஆழ்த்தியிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் - சென்னை சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் S.I.R குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை ரிப்பன் பில்டிங்கில் நடத்தியிருந்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, நாதக, தேமுதிக கட்சிகளின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் S.I.R நடைமுறை குறித்து பல்வேறு ஆட்சேபனைகளை முன்வைத்தனர். 'இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயரை நீக்குவதில் தெளிவில்லை. இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்கான படிவத்தை இப்போதுதான் கொடுக்கிறார்கள். BLO க்கள் திமுகவினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.' என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தார். 'தூய்மைப் பணியாளர்களை BLO க்களாக பயன்படுத்துகிறார்கள்.' என பாஜகவும் குற்றஞ்சாட்டியது. 'குறுகிய காலத்தில் செய்வதால்தான் இப்படியொரு குழப்பம். தேர்தல் அதிகாரிகள் சொல்வது BLO க்களுக்கு சென்று சேரவில்லை. ஆளுக்கொரு அதிகாரம் செய்கிறார்கள்.' என நாதக குற்றஞ்சாட்டியது. ஜெயக்குமார் S.I.R யை ஆதரிக்கும் அதிமுக, பாஜக கூட இன்றைக்கு சில ஆட்சேபனைகளை முன்வைக்க, திமுக மற்றும் காங்கிரஸை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் அலுவலரிடம் S.I.R குறித்து எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்காதது கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற கட்சிகளையே குழம்ப வைத்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் S.I.R குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் S.I.R யை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருந்தனர். SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' - திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல! ஆனால், இன்று ரிப்பன் பில்டிங் கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சந்துரு S.I.R க்கு எதிராகவோ அல்லது அதிலுள்ள சிக்கல்கள் குறித்தோ களத்திலுள்ள சிரமங்கள் குறித்தோ எதைப் பற்றியுமே பேசியிருக்கவில்லை. இதுதொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலரிடம் பேசினோம். 'திமுகவினர் பொதுவெளியில் S.I.R யை கடுமையாக எதிர்க்கின்றனர். S.I.R அமல்படுத்தப்படுவதற்கு முன்பு தேர்தல் அலுவலர் நடத்திய கூட்டத்தில் கூட நிறைய விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். ஆனால், இன்றைய கூட்டத்தில் அவர்கள் S.I.R குறித்து எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை பற்றியும் பேசவில்லை. கராத்தே தியாகராஜன் கடந்த கூட்டத்திலேயே மாநகராட்சி ஆணையர் S.I.R படிவத்தில் முதல் பத்தியை மட்டும் நிரப்பினால் கூட போதும் எனக் கூறிவிட்டார். ஆனால், களத்தில் BLO க்களுக்கு அந்த விஷயம் போய் சேரவே இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புரிந்துகொண்டு குழப்பத்தோடு வேலை செய்கிறார்கள். அதேமாதிரி, இந்த S.I.R குறித்து BLO க்களுக்கும் கட்சிகளின் BLA க்களுக்கும் மண்டபங்களில் பயிற்சி முகாம்களை நடத்தினார்கள். தேர்தல் ஆணைய தரப்புக்கும் கட்சிகளின் பிரதிநிதிகல் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு அந்தக் கூட்டங்கள் கூட முறையாக நடக்கவில்லை. இப்போது வாக்காளர் உதவி மையங்கள் என ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கிறது. இது எதையுமே திமுக பேசவில்லை. மாறாக, BLO க்களை அதிகப்படுத்துங்கள் மற்றும் உதவி மையங்களை நீட்டியுங்கள் என பொதுவான கோரிக்கைகளை வைத்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள். களத்தில் திமுக செய்யும் தில்லுமுல்லுகளைப் பற்றி மற்ற கட்சியினர் பேசுகையில் மட்டுமே மறுத்து ஓங்கிப் பேசினர். மற்றபடி முழுக்க மௌனமாகவே இருந்தனர். தேசியளவில் தீவிர திருத்தத்தை எதிர்க்கும் காங்கிரஸூம் இங்கே சத்தம் காட்டவில்லை. வெளியில் அத்தனை தீவிரமாக இதை எதிர்த்துவிட்டு உள்ளரங்கில் பம்முவதை பார்த்தால் திமுக இரட்டை வேடம் போடுகிறதோ எனும் சந்தேகம்தான் வருகிறது.' என்றனர். புரியாத புதிர்! S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' - கடுமையாக சாடும் அதிமுக, நாதக

விகடன் 24 Nov 2025 8:26 pm

``எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே?'' -மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல் விழி இன்று (நவ.24) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சீமான் வெளியிட்டிருக்கும் பதிவில், கசிந்து உள்ளம் உருகும் காதலின் மெய்ப்பொருளும் நீயே..! நசிந்து போகாது நாளும் காக்கும் வாழ்வின் முதற்பொருளும் நீயே..! மணக்கோலம் பூண்ட நாள் முதலாக போர்க்காலம் என்றாலும் பூக்காலம் என்றாலும் நீ தருகின்ற அன்பினில் குறையேதும் வைத்ததில்லையே..! சீமான் தன் மனைவி கயல்விழியுடன் எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே? இடம்மாற்றி கொண்ட இதயத்தில் இருப்பவளே! தடுமாறும் பொழுதிலும் தடுத்தாளும் பரம்பொருளே ! இனமானப் பெரும்பணியில் இடர்பாடுகள் யாவையும் ஏற்றும் சுமந்தும் யாதுமாகி நின்றாய் நீயே..! எனக்கு நீ இன்னொரு தாயே! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்னுயிரே..! என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?

விகடன் 24 Nov 2025 6:07 pm

``எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே?'' -மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல் விழி இன்று (நவ.24) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சீமான் வெளியிட்டிருக்கும் பதிவில், கசிந்து உள்ளம் உருகும் காதலின் மெய்ப்பொருளும் நீயே..! நசிந்து போகாது நாளும் காக்கும் வாழ்வின் முதற்பொருளும் நீயே..! மணக்கோலம் பூண்ட நாள் முதலாக போர்க்காலம் என்றாலும் பூக்காலம் என்றாலும் நீ தருகின்ற அன்பினில் குறையேதும் வைத்ததில்லையே..! சீமான் தன் மனைவி கயல்விழியுடன் எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே? இடம்மாற்றி கொண்ட இதயத்தில் இருப்பவளே! தடுமாறும் பொழுதிலும் தடுத்தாளும் பரம்பொருளே ! இனமானப் பெரும்பணியில் இடர்பாடுகள் யாவையும் ஏற்றும் சுமந்தும் யாதுமாகி நின்றாய் நீயே..! எனக்கு நீ இன்னொரு தாயே! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்னுயிரே..! என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?

விகடன் 24 Nov 2025 6:07 pm

``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொலந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம்பட்டு மக்கள்

இந்த ரோட்டுல போறதே, இரண்டு மூன்று பஸ்கள் தான்.. எப்பவாது லோடு வாகனம் போகும். அதுக்கே இப்படின்னா, என்ன சொல்றது நீங்களே பாருங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு எனும் கிராமத்தில் புதிதாய் போடப்பட்ட தார்சாலையின் நிலையை நம்மை அழைத்து காட்டினார்கள். இந்த சாலை விரியூர் ஊராட்சி, அரசராம்பட்டு கிராமத்தில் தொடங்கி மையனூர் கிராமம் வரை 4 கிலோமீட்டர் புதிதாக போட்டுள்ளனர். தொடங்கிய இடத்திலிருந்து இருபது, முப்பது மீட்டர் தொலைவிலேயே குண்டும் குழியுமான உள்ளது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். இதைப்பற்றி அங்கு வசிக்கும் கிராமவாசிகளிடம் கேட்கும் போது அவர்களின் பதில், “என்னத்தங்க சொல்ல சொல்றீங்க! எவ்வளவு வருது, எவ்வளவு போகுது. எல்லாம் கமிஷன் தாங்க!, தோ! கிட்டதட்ட ஆறு வருசத்துக்கு அப்புறம் இந்த ரோடு இப்பதா போட்டானுவ, முழுசா இரண்டு மாசம் கூட வரல! அதுக்குள்ளவே இப்பபடினா, இனிமே என்ன பாடு படனுமோ! என்னத்த சொல்ல” என்று அவ்வளவு சலிப்பாக தன் வருத்தத்தை அவர் கூறினார். இன்னுமொருவர், “ ரோடுனா என்னங்க! அது ஒரு அடையாளம் இல்லைங்கலா! ஒரு ரோடுதாங்க ஒரு ஊரோட வளர்ச்சிய சொல்லுது! புரியலனா, இப்படியே ஒரு ஊருக்குள்ள போங்க, அந்த ஊர்ல ரோடு மோசமா இருந்துச்சினா அந்த ஊர, இங்க இருக்குரவ எவனுமே கண்டுக்கலனு அர்த்தம். அந்த ஊருக்கு பஸ் இருக்காது, ஒழுங்கான பள்ளிக்கூடம் இருக்காது, கடகனினு ஏதும் இருக்காது. இன்னமும் சொல்ல போன அந்த ஊர்ல இருக்குறவங்க எல்லோருமே பக்கத்து ஊர நம்பிதான் இருப்பாங்க. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். ஆன, ஒரு ஊர்ல சரியான போக்குவரத்து வசதியும், சாலை பராமரிப்பும் ஒழுங்கா இருந்தா அந்த ஊர்ல எல்லாமே இருக்கும். முக்கியமா கிராமம் அப்படினு வரும்போது ஊருக்குள்ள வருவதே ஒரு ரோடு தாங்க! தெருவுனு பாத்தா எல்லாம் சிமெண்ட் ரோடு தான் இருக்கும். அப்படிபாத்தா, ஒவ்வொரு கிராமத்துக்கும் “எப்பவாச்சும் தான்” அப்படின்ற அடிப்படையில போடப்பட்ட இந்த ரோடு ஒழுங்கா இல்லையினா என்ன பன்றது நீங்களே சொல்லுங்களேன்” என்று கேட்டார். Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன் சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை கிராமப்புற வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி. ஒரு தரமான சாலை இல்லாமல் இன்னல்களில் தவிக்கும் பல கிராமங்கள் நம் கண்களில் படுகின்றன. அது மட்டுமா? மழைகாலங்களில் நீர் நிரம்பிய குழிகள், சேறும் சகதியுமாய் மாறி நிற்கும் மேடுகள் என ஒரு தரமற்ற சாலைகளில் பாதுகாப்பாய் யாரால் தான் பயணிக்க முடியும்? தேர்தல் என்றால் தான் புதிய சாலைகள் ஆங்காங்கு போடுகிறார்கள். பிரசாரம் செய்யவும், ஓட்டு வாங்கவும், கொடுத்த வாக்கை காப்பாற்றவும் என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையோ தான் இந்த கிராமப்புற சாலைகள் சீர்திருத்தம் நடைபெறுகிறது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். அப்படிபட்ட சூழலில், போடப்பட்ட இந்த புதிய சாலையின் அவலம்தான் இது! என்று அவர்கள் குறிப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சாலை அமைக்கும் போது நீங்கள் பார்த்தீர்களா? சரிவர அவர்கள் சாலையை அமைத்தார்களா? என்ற கேள்விக்கு, இப்படி கேட்டா என்னப்பா சொல்லட்டும்! கிட்டதட்ட இந்த ரோடு போடவே இரண்டு மாசம் இழு இழுனு இழுத்துட்டாங்க. இழுத்த இழுவுக்கு முழுசா ரண்டு மாசம் கூட வரல! இதுல, ஒரு ஒருவாரத்துக்கு மேல வெறும் ஜல்லி கல்லு மேலத்தா அந்த பஸ்லாம் போயிட்டு இருந்துச்சி. அப்புறம் அப்படி இப்படினு 10-15 நாளுல அதுக்கு மேல மண்ணு கொட்டி அப்புறம் அப்படியே கிடந்துச்சி. விட்டு விட்டுத்தாப்பா போட்டங்க. ஆனா, தார் ஊத்த ஆரம்பிச்சதும் 2-3 நாளுக்குள்ளயே எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சிப்பா. இதுல எப்படி ஒழுங்கா போட்டாங்கனு சொல்றது?” என்று அவர் கூறினார். இன்னொருவர் கூறுகையில், அவர்கள் நாள்களை இழுத்து இழுத்து செய்தலும், இரண்டு நாளிலேயே வேலையை நன்றாகவே முடித்திருந்தாலும், ஒரு முறைக்கு இருமுறை நீர் ஊற்றி ரோடு போடுவதற்கு என்ன என்ன வேலைகள் இருக்கிறதோ எல்லாவற்றையும் சரிவர செய்தாலும், ஒரு பஸ் போனதுக்கு இப்படி பிளந்து குண்டும் குழியும் ஆகுமா? ஒரு நியாயம் வேண்டாமா? என்று மன வருத்தத்தை கொட்டினார். புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். இதை பற்றி மீண்டும் உரிய அதிகாரிகளிடம் தெரியபடுத்த முயற்சி செய்தீர்களா? என்ற கேள்விக்கு, “எங்க போய் யார்கிட்டப்பா சொல்ல சொல்ற! நமக்கு கொடுத்த ஒரு வேலைய நல்லா சுத்தமா நாம செய்தோம் அப்படினா ஒரு சந்தோஷம் நமக்கு இருக்கும். ஆனா, அது நம்ம வேலையா இருக்கனும். தோ! இந்த மாதிரி யாருக்கோனு நினைச்சிட்டு இப்படி ரோடு பொட்டுட்டு போயிட்டா, மறுபடியும் அவுங்க வந்து ரோடு எப்படி இருக்கு? நல்லா இருக்கா? தரமா இருக்கா அப்படினுலாம் யார் பாக்குறாங்க? ஏதோ, கொடுத்த நேரத்துக்குள்ள முடிச்சிட்டா போதும்னு பாக்குறாங்க. இதுவே பெரிய பெரிய ஊர்னா விடுவாங்களா? இது சும்மா கிராமம் தானே! இங்க யார் கண்டுக்க போறானுத்தா இப்படிலாம் பன்றாங்களோ என்னவோ” என்று அவர் பேசியதில் புரிந்தது என்னவோ, நாம் செய்யும் ஒரு வேலையின் தரமானது பிற்காலத்தில் நம் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று நினைத்து செய்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் யாருக்கும் வரப்போவதில்லை அல்லவா. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். மேலும் இது தொடர்பான அதிகாரிகள் மீண்டும் இவ்விடத்தை ஆய்வு செய்து குண்டும் குழியுமான இடங்களையும், ஆங்காங்கு பிளவுபட்டு கிடக்கும் இடத்தையும் மீண்டும் ஒரு முறை தரமாக அமைத்து தர மக்கள் வலியுறுத்துகிறார்கள். ``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!'' - நிதின் கட்கரி

விகடன் 24 Nov 2025 3:54 pm

``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொலந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம்பட்டு மக்கள்

இந்த ரோட்டுல போறதே, இரண்டு மூன்று பஸ்கள் தான்.. எப்பவாது லோடு வாகனம் போகும். அதுக்கே இப்படின்னா, என்ன சொல்றது நீங்களே பாருங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு எனும் கிராமத்தில் புதிதாய் போடப்பட்ட தார்சாலையின் நிலையை நம்மை அழைத்து காட்டினார்கள். இந்த சாலை விரியூர் ஊராட்சி, அரசராம்பட்டு கிராமத்தில் தொடங்கி மையனூர் கிராமம் வரை 4 கிலோமீட்டர் புதிதாக போட்டுள்ளனர். தொடங்கிய இடத்திலிருந்து இருபது, முப்பது மீட்டர் தொலைவிலேயே குண்டும் குழியுமான உள்ளது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். இதைப்பற்றி அங்கு வசிக்கும் கிராமவாசிகளிடம் கேட்கும் போது அவர்களின் பதில், “என்னத்தங்க சொல்ல சொல்றீங்க! எவ்வளவு வருது, எவ்வளவு போகுது. எல்லாம் கமிஷன் தாங்க!, தோ! கிட்டதட்ட ஆறு வருசத்துக்கு அப்புறம் இந்த ரோடு இப்பதா போட்டானுவ, முழுசா இரண்டு மாசம் கூட வரல! அதுக்குள்ளவே இப்பபடினா, இனிமே என்ன பாடு படனுமோ! என்னத்த சொல்ல” என்று அவ்வளவு சலிப்பாக தன் வருத்தத்தை அவர் கூறினார். இன்னுமொருவர், “ ரோடுனா என்னங்க! அது ஒரு அடையாளம் இல்லைங்கலா! ஒரு ரோடுதாங்க ஒரு ஊரோட வளர்ச்சிய சொல்லுது! புரியலனா, இப்படியே ஒரு ஊருக்குள்ள போங்க, அந்த ஊர்ல ரோடு மோசமா இருந்துச்சினா அந்த ஊர, இங்க இருக்குரவ எவனுமே கண்டுக்கலனு அர்த்தம். அந்த ஊருக்கு பஸ் இருக்காது, ஒழுங்கான பள்ளிக்கூடம் இருக்காது, கடகனினு ஏதும் இருக்காது. இன்னமும் சொல்ல போன அந்த ஊர்ல இருக்குறவங்க எல்லோருமே பக்கத்து ஊர நம்பிதான் இருப்பாங்க. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். ஆன, ஒரு ஊர்ல சரியான போக்குவரத்து வசதியும், சாலை பராமரிப்பும் ஒழுங்கா இருந்தா அந்த ஊர்ல எல்லாமே இருக்கும். முக்கியமா கிராமம் அப்படினு வரும்போது ஊருக்குள்ள வருவதே ஒரு ரோடு தாங்க! தெருவுனு பாத்தா எல்லாம் சிமெண்ட் ரோடு தான் இருக்கும். அப்படிபாத்தா, ஒவ்வொரு கிராமத்துக்கும் “எப்பவாச்சும் தான்” அப்படின்ற அடிப்படையில போடப்பட்ட இந்த ரோடு ஒழுங்கா இல்லையினா என்ன பன்றது நீங்களே சொல்லுங்களேன்” என்று கேட்டார். Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன் சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை கிராமப்புற வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி. ஒரு தரமான சாலை இல்லாமல் இன்னல்களில் தவிக்கும் பல கிராமங்கள் நம் கண்களில் படுகின்றன. அது மட்டுமா? மழைகாலங்களில் நீர் நிரம்பிய குழிகள், சேறும் சகதியுமாய் மாறி நிற்கும் மேடுகள் என ஒரு தரமற்ற சாலைகளில் பாதுகாப்பாய் யாரால் தான் பயணிக்க முடியும்? தேர்தல் என்றால் தான் புதிய சாலைகள் ஆங்காங்கு போடுகிறார்கள். பிரசாரம் செய்யவும், ஓட்டு வாங்கவும், கொடுத்த வாக்கை காப்பாற்றவும் என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையோ தான் இந்த கிராமப்புற சாலைகள் சீர்திருத்தம் நடைபெறுகிறது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். அப்படிபட்ட சூழலில், போடப்பட்ட இந்த புதிய சாலையின் அவலம்தான் இது! என்று அவர்கள் குறிப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சாலை அமைக்கும் போது நீங்கள் பார்த்தீர்களா? சரிவர அவர்கள் சாலையை அமைத்தார்களா? என்ற கேள்விக்கு, இப்படி கேட்டா என்னப்பா சொல்லட்டும்! கிட்டதட்ட இந்த ரோடு போடவே இரண்டு மாசம் இழு இழுனு இழுத்துட்டாங்க. இழுத்த இழுவுக்கு முழுசா ரண்டு மாசம் கூட வரல! இதுல, ஒரு ஒருவாரத்துக்கு மேல வெறும் ஜல்லி கல்லு மேலத்தா அந்த பஸ்லாம் போயிட்டு இருந்துச்சி. அப்புறம் அப்படி இப்படினு 10-15 நாளுல அதுக்கு மேல மண்ணு கொட்டி அப்புறம் அப்படியே கிடந்துச்சி. விட்டு விட்டுத்தாப்பா போட்டங்க. ஆனா, தார் ஊத்த ஆரம்பிச்சதும் 2-3 நாளுக்குள்ளயே எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சிப்பா. இதுல எப்படி ஒழுங்கா போட்டாங்கனு சொல்றது?” என்று அவர் கூறினார். இன்னொருவர் கூறுகையில், அவர்கள் நாள்களை இழுத்து இழுத்து செய்தலும், இரண்டு நாளிலேயே வேலையை நன்றாகவே முடித்திருந்தாலும், ஒரு முறைக்கு இருமுறை நீர் ஊற்றி ரோடு போடுவதற்கு என்ன என்ன வேலைகள் இருக்கிறதோ எல்லாவற்றையும் சரிவர செய்தாலும், ஒரு பஸ் போனதுக்கு இப்படி பிளந்து குண்டும் குழியும் ஆகுமா? ஒரு நியாயம் வேண்டாமா? என்று மன வருத்தத்தை கொட்டினார். புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். இதை பற்றி மீண்டும் உரிய அதிகாரிகளிடம் தெரியபடுத்த முயற்சி செய்தீர்களா? என்ற கேள்விக்கு, “எங்க போய் யார்கிட்டப்பா சொல்ல சொல்ற! நமக்கு கொடுத்த ஒரு வேலைய நல்லா சுத்தமா நாம செய்தோம் அப்படினா ஒரு சந்தோஷம் நமக்கு இருக்கும். ஆனா, அது நம்ம வேலையா இருக்கனும். தோ! இந்த மாதிரி யாருக்கோனு நினைச்சிட்டு இப்படி ரோடு பொட்டுட்டு போயிட்டா, மறுபடியும் அவுங்க வந்து ரோடு எப்படி இருக்கு? நல்லா இருக்கா? தரமா இருக்கா அப்படினுலாம் யார் பாக்குறாங்க? ஏதோ, கொடுத்த நேரத்துக்குள்ள முடிச்சிட்டா போதும்னு பாக்குறாங்க. இதுவே பெரிய பெரிய ஊர்னா விடுவாங்களா? இது சும்மா கிராமம் தானே! இங்க யார் கண்டுக்க போறானுத்தா இப்படிலாம் பன்றாங்களோ என்னவோ” என்று அவர் பேசியதில் புரிந்தது என்னவோ, நாம் செய்யும் ஒரு வேலையின் தரமானது பிற்காலத்தில் நம் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று நினைத்து செய்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் யாருக்கும் வரப்போவதில்லை அல்லவா. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். மேலும் இது தொடர்பான அதிகாரிகள் மீண்டும் இவ்விடத்தை ஆய்வு செய்து குண்டும் குழியுமான இடங்களையும், ஆங்காங்கு பிளவுபட்டு கிடக்கும் இடத்தையும் மீண்டும் ஒரு முறை தரமாக அமைத்து தர மக்கள் வலியுறுத்துகிறார்கள். ``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!'' - நிதின் கட்கரி

விகடன் 24 Nov 2025 3:54 pm

S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' - கடுமையாக சாடும் அதிமுக, நாதக

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக இன்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்திருந்தது. அதில், சென்னையில் S.I.R நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றி அதிமுக, பா.ஜ.கவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'இது காலங்கடந்த கூட்டம். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் தெளிவில்லை. தகவல்களை அப்லோட் செய்யும் சர்வர் சரியில்லை எனக் கூறியிருக்கிறோம். இறந்தோர் மற்றும் இடப்பெயர்வு சம்பந்தப்பட்ட பார்ம் 58, பார்ம் 59 க்களை இப்போதுதான் கொடுக்கின்றனர். எல்லா மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்குமே கடந்த வாரமே இந்த பார்ம் சென்றுவிட்டது. ஆனால், சென்னை மாவட்டத்தில் மட்டும் ஆணையர் இப்போதுதான் பார்மை கொடுக்கிறார். சரி, இந்த பார்மை யாரிடம் நிரப்பிக் கொடுப்பது? BLO க்கள் இதை வாங்குவதில்லை. BLO க்களும் இந்த பார்மை வாங்கச் சொல்லி அறிவுறுத்த கேட்டிருக்கிறோம். பார்மில் புகைப்படம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் வாக்காளர்களின் விருப்பம். ஆனால், கட்டாயம் புகைப்படம் கேட்கிறார்கள். ஜெயக்குமார் பல இடங்களில் BLO க்கள் திமுக டேபிளில் உட்காந்து வேலை செய்கிறார்கள். அதைப் பற்றி புகார் கொடுத்தும் பலனில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்ம்களை கொடுப்பதில்லை. கீழேயே போட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். கல்வித்தகுதியே இல்லாதவர்களை BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். BLO க்களின் பெயர் பட்டியலையும் அவர்களின் கல்வித்தகுதியையும் வழங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான பார்ம் எங்கே என்றால் முழிக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு மட்டுமே முறையான தகவல்களைக் கொடுக்கிறார்கள்.' என்றார். பா.ஜ.க சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன் பேசுகையில், 'பாஜகவின் BLA2 க்களை இன்னும் அங்கீகரிக்கவில்லை. விண்ணப்பப் படிவத்தில் முதல் பத்தியை மட்டும் நிரப்பினால் போதும். அதன்பிறகு, தொகுதியின் தேர்தல் அலுவலர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார். அதன்பிறகு அந்த 13 ஆவணங்களின் எதோ ஒன்றைக் கொடுத்தால் வாக்கு கிடைத்துவிடும். இதைத்தான் தேர்தல் அலுவலரும் கூறுகிறார். கராத்தே தியாகராஜன் கொசு மருந்து அடிப்பவர்களையும் சத்துணவு ஊழியர்களையும் BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், அப்படியில்லை.வாக்காளர் உதவி மையங்களை இன்னும் நீட்டிக்க கேட்டிருக்கிறோம்.' என்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சங்கர் பேசுகையில், 'அதிகாரிகள் சொல்லும் தகவல்கள் கீழே இருக்கும் BLO க்களுக்கு சென்று சேரவில்லை. BLO க்கள் அவர்களே தங்களுக்கு தாங்களாக விதிகளை வகுத்துக் கொள்கிறார்கள். ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு சில இடங்களில் ஆதார் எண் கட்டாயம் என்கிறார்கள். மேலும், சில இடங்களில் ஆதார், ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் எல்லாம் கேட்கிறார்கள். BLO க்களுடன் தேர்தல் அலுவலரின் அங்கீகாரம் பெறாத நபர்களெல்லாம் செல்கிறார்கள். இது BLO க்களுக்கு கூடுதல் அச்சத்தைக் கொடுக்கிறது. இந்த நடைமுறை குறுகிய காலத்தில் நடத்தப்படுவது பெரும் குழப்பத்தைக் கொடுக்கிறது. சங்கர், நாதக வழக்கறிஞர் அணி 68000 BLO க்கள் தகவல்களை வெப்சைட்டில் அப்லோட் செய்வதால்தான் வெப்சைட் டவுண் ஆவதாகக் கூறுகின்றனர். அதைக்கூட இவர்கள் சரியாக ஏற்பாடு செய்யவில்லை. சென்னையில் இதுவரை 70% படிவங்கள்கூட கொடுக்கவில்லை. 10% பார்ம் கூட திரும்பப்பெறவில்லை என்கிறார்கள். எனில், எப்படி டிசம்பர் 4 க்குள் இந்தப் பணிகளை முடிப்பார்கள்?' என்றார். S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம்

விகடன் 24 Nov 2025 3:50 pm

S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' - கடுமையாக சாடும் அதிமுக, நாதக

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக இன்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்திருந்தது. அதில், சென்னையில் S.I.R நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றி அதிமுக, பா.ஜ.கவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'இது காலங்கடந்த கூட்டம். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் தெளிவில்லை. தகவல்களை அப்லோட் செய்யும் சர்வர் சரியில்லை எனக் கூறியிருக்கிறோம். இறந்தோர் மற்றும் இடப்பெயர்வு சம்பந்தப்பட்ட பார்ம் 58, பார்ம் 59 க்களை இப்போதுதான் கொடுக்கின்றனர். எல்லா மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்குமே கடந்த வாரமே இந்த பார்ம் சென்றுவிட்டது. ஆனால், சென்னை மாவட்டத்தில் மட்டும் ஆணையர் இப்போதுதான் பார்மை கொடுக்கிறார். சரி, இந்த பார்மை யாரிடம் நிரப்பிக் கொடுப்பது? BLO க்கள் இதை வாங்குவதில்லை. BLO க்களும் இந்த பார்மை வாங்கச் சொல்லி அறிவுறுத்த கேட்டிருக்கிறோம். பார்மில் புகைப்படம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் வாக்காளர்களின் விருப்பம். ஆனால், கட்டாயம் புகைப்படம் கேட்கிறார்கள். ஜெயக்குமார் பல இடங்களில் BLO க்கள் திமுக டேபிளில் உட்காந்து வேலை செய்கிறார்கள். அதைப் பற்றி புகார் கொடுத்தும் பலனில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்ம்களை கொடுப்பதில்லை. கீழேயே போட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். கல்வித்தகுதியே இல்லாதவர்களை BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். BLO க்களின் பெயர் பட்டியலையும் அவர்களின் கல்வித்தகுதியையும் வழங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான பார்ம் எங்கே என்றால் முழிக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு மட்டுமே முறையான தகவல்களைக் கொடுக்கிறார்கள்.' என்றார். பா.ஜ.க சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன் பேசுகையில், 'பாஜகவின் BLA2 க்களை இன்னும் அங்கீகரிக்கவில்லை. விண்ணப்பப் படிவத்தில் முதல் பத்தியை மட்டும் நிரப்பினால் போதும். அதன்பிறகு, தொகுதியின் தேர்தல் அலுவலர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார். அதன்பிறகு அந்த 13 ஆவணங்களின் எதோ ஒன்றைக் கொடுத்தால் வாக்கு கிடைத்துவிடும். இதைத்தான் தேர்தல் அலுவலரும் கூறுகிறார். கராத்தே தியாகராஜன் கொசு மருந்து அடிப்பவர்களையும் சத்துணவு ஊழியர்களையும் BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், அப்படியில்லை.வாக்காளர் உதவி மையங்களை இன்னும் நீட்டிக்க கேட்டிருக்கிறோம்.' என்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சங்கர் பேசுகையில், 'அதிகாரிகள் சொல்லும் தகவல்கள் கீழே இருக்கும் BLO க்களுக்கு சென்று சேரவில்லை. BLO க்கள் அவர்களே தங்களுக்கு தாங்களாக விதிகளை வகுத்துக் கொள்கிறார்கள். ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு சில இடங்களில் ஆதார் எண் கட்டாயம் என்கிறார்கள். மேலும், சில இடங்களில் ஆதார், ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் எல்லாம் கேட்கிறார்கள். BLO க்களுடன் தேர்தல் அலுவலரின் அங்கீகாரம் பெறாத நபர்களெல்லாம் செல்கிறார்கள். இது BLO க்களுக்கு கூடுதல் அச்சத்தைக் கொடுக்கிறது. இந்த நடைமுறை குறுகிய காலத்தில் நடத்தப்படுவது பெரும் குழப்பத்தைக் கொடுக்கிறது. சங்கர், நாதக வழக்கறிஞர் அணி 68000 BLO க்கள் தகவல்களை வெப்சைட்டில் அப்லோட் செய்வதால்தான் வெப்சைட் டவுண் ஆவதாகக் கூறுகின்றனர். அதைக்கூட இவர்கள் சரியாக ஏற்பாடு செய்யவில்லை. சென்னையில் இதுவரை 70% படிவங்கள்கூட கொடுக்கவில்லை. 10% பார்ம் கூட திரும்பப்பெறவில்லை என்கிறார்கள். எனில், எப்படி டிசம்பர் 4 க்குள் இந்தப் பணிகளை முடிப்பார்கள்?' என்றார். S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம்

விகடன் 24 Nov 2025 3:50 pm

SIR: ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம் - செல்லூர் ராஜூ ஆதங்கம்

SIR பணியில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், SIR கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழுமையாகச் செயல்படவில்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள், சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். SIR மதுரையில் பல பகுதிகளில் SIR கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை, வாக்காளரிடம் வழங்கப்பட்ட SIR படிவங்கள் பல இடங்களில் திரும்பப் பெறவில்லை, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளிலும் SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அப்லோட் செய்துள்ளனர். இதில் எவ்வளவு படிவங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை. பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு SIR ஆப் செயல்படுத்த தெரியவில்லை. சிலருக்கு நெட் வசதி இல்லை, பலருக்கு ஆப் பயன்படுத்தும் வகையில மொபைல்போன்கள் இல்லை. கட்சி முகவர்கள்தான் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இறந்து போனவர்களையும், இரண்டு வாக்கு உள்ளவர்களையும் நீக்க வேண்டும் என்பதுதான் வாக்காளர் திருத்தப் பட்டியலின் நோக்கம். கணக்கெடுக்கும் பணி இப்படி நடந்தால் அந்த நோக்கமே நிறைவேறாது. செல்லூர் ராஜூ மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறி வருகிறார். போலி வாக்காளர்களை வைத்து திமுக வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது, SIR கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்திவருகிறது, தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

விகடன் 24 Nov 2025 3:18 pm

திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது - டிடிவி தினகரன்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம். அதில், வாக்காளர்கள் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்து விடலாம். இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம். மத்திய அரசு விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஏற்றுக் கொள்வதுதான் நன்றாக இருக்கும். இது, விவசாயிகளின் கோரிக்கை, தி.மு.க-வின் கோரிக்கை அல்ல. அதை மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கும், கோவைக்கும் வருவதற்கு அனுமதி தராமல் இருப்பது, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவதைப் போல தெரிகிறது. எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் எனச் சிலர் சிரிப்பாகக் கூறுவது கண்டனத்துக்குரியது. நம் நாட்டில் 15 நொடிக்கு ஒரு கார் விற்பனையாவதாக செய்திகள் வெளி வருகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும். அது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவியாக இருக்கும். போதைப்பொருள் பழக்கவழக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவது, கொலைகள், கொள்ளைகள் அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், துரிதமாகச் செயல்பட்டு தடுக்கவில்லை என்றால், அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும். டிடிவி தினகரன் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை கூட்டணி அமைத்தவுடன் சொல்வதுதான் நாகரிகமாக இருக்கும். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளோம். அதற்கும், தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. தி.மு.க-வினருக்கு த.வெ.க என்றால் ஒரு உறுத்தலாக இருக்கிறது என்பதை அவர்களது பேச்சிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் எது வெற்றிக் கூட்டணி என்பதை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தும். இந்த முறை அ.ம.மு.க பங்கேற்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

விகடன் 24 Nov 2025 3:03 pm

திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது - டிடிவி தினகரன்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம். அதில், வாக்காளர்கள் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்து விடலாம். இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம். மத்திய அரசு விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஏற்றுக் கொள்வதுதான் நன்றாக இருக்கும். இது, விவசாயிகளின் கோரிக்கை, தி.மு.க-வின் கோரிக்கை அல்ல. அதை மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கும், கோவைக்கும் வருவதற்கு அனுமதி தராமல் இருப்பது, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவதைப் போல தெரிகிறது. எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் எனச் சிலர் சிரிப்பாகக் கூறுவது கண்டனத்துக்குரியது. நம் நாட்டில் 15 நொடிக்கு ஒரு கார் விற்பனையாவதாக செய்திகள் வெளி வருகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும். அது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவியாக இருக்கும். போதைப்பொருள் பழக்கவழக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவது, கொலைகள், கொள்ளைகள் அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், துரிதமாகச் செயல்பட்டு தடுக்கவில்லை என்றால், அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும். டிடிவி தினகரன் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை கூட்டணி அமைத்தவுடன் சொல்வதுதான் நாகரிகமாக இருக்கும். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளோம். அதற்கும், தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. தி.மு.க-வினருக்கு த.வெ.க என்றால் ஒரு உறுத்தலாக இருக்கிறது என்பதை அவர்களது பேச்சிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் எது வெற்றிக் கூட்டணி என்பதை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தும். இந்த முறை அ.ம.மு.க பங்கேற்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

விகடன் 24 Nov 2025 3:03 pm

`உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது’ - சாடும் அண்ணாமலை

திருச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்திப்பதே இல்லை. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் முதலமைச்சருக்கு உள்ளது. அதனால் தான், விரிவான திட்ட அறிக்கையை சரியாக சமர்ப்பிக்கவில்லை. அப்படி, சரியாக சமர்ப்பித்ததாக இருந்தால் தமிழகம் வந்து பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும். தற்பொழுது டெல்லி சென்று பிரதமரை பார்ப்பேன் எனக் கூறுவது அரசியலுக்காக தான். மெட்ரோ தரவே மாட்டோம் என மத்திய அரசு கூறவில்லை. விரிவான திட்ட அறிக்கையில் தான் குறைபாடு உள்ளது. எனவே, அதை தான் மத்திய அரசு நிராகரித்துள்ளது. சரியான திட்ட அறிக்கையை தயாரித்து மீண்டும் மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். மெட்ரோ ரயில் விவகாரத்தில் தமிழக அரசு தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறதே தவிர, நாங்கள் செய்யவில்லை. மோடி அண்ணாமலை தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் பா.ஜ.க ஆட்சியில் தான் தமிழகத்திற்கான நிதி பகிர்வு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மெட்ரோ திட்டத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கியது சென்னை மெட்ரோ திட்டத்திற்கு தான். நான்காண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பணி செய்துள்ளார் என கூற முடியாத நிலையில் தான் கனிமொழி உள்ளார். மத்திய அரசை குறை கூறிக்கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு சரியாக பராமரிப்பது கிடையாது. விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை கொண்டு வந்தாலும், அதை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. நெல் ஈரப்பதம் இல்லாமல் கொண்டு வருவதற்கு மத்திய அரசு கொடுத்த பணத்தை சரியாக தமிழக அரசு செலவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆனால், பிரதமர் மீது அபாண்டமாக அவர் பழி சுமத்துகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது டி.ஜி.பி நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பொய் சொல்கிறார்கள். டி.ஜி.பி நியமன நடைமுறை குறித்து அமைச்சர் ரகுபதிக்கு எதுவும் தெரியவில்லை. தமிழக அரசு அனுப்பும் ஐந்து பேரில் மூன்று பேரை யு.பி.எஸ்.சி, டி.ஜி.பி-யாக தேர்வு செய்து கொள்ளலாம் என தமிழக அரசிடம் தெரிவிக்கும். அந்த மூவரில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி-யாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தற்பொழுது அனுப்பிய மூன்று பேரும் நேர்மையான அதிகாரிகளாக இருப்பதால் அவர்களை டி.ஜி.பி-யாக நியமிப்பதில் முதல்வருக்கு விருப்பமில்லை. அதனால், அவருக்கு விருப்பமான நபரை நியமிக்கும் முறைக்கு அவர் காத்திருக்கிறார். டி.ஜி.பி நியமிக்கப்படாததால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. annamalai உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது. அவருக்கு என்ன பேசுகிறோம் என்பதே தெரியவில்லை. பீகாரில் 6.5% போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் அதேபோல, தமிழ்நாட்டிலும் பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர்கள் உள்ளார்கள். எனவே, அனைவரும் சேர்ந்து வாக்காளர் பட்டியலில் சுத்தம் செய்ய வேண்டும். எஸ்.ஐ.ஆர் பணியை அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக செய்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க தான் அரசியல் செய்கிறது. தி.மு.க-வுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. வரும் தேர்தலில் மக்கள் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள். கனிமவளக் கொள்ளையில் தி.மு.க-வின் தலைவர்களும், தொண்டர்களும் தான் ஈடுபட்டுள்ளார்கள். தொழில் முதலீடு எனக் கூறி சிறு சிறு நிறுவனங்களை தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்கிறார்கள். தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில்லை என்றார். அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

விகடன் 24 Nov 2025 2:52 pm

`உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது’ - சாடும் அண்ணாமலை

திருச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்திப்பதே இல்லை. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் முதலமைச்சருக்கு உள்ளது. அதனால் தான், விரிவான திட்ட அறிக்கையை சரியாக சமர்ப்பிக்கவில்லை. அப்படி, சரியாக சமர்ப்பித்ததாக இருந்தால் தமிழகம் வந்து பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும். தற்பொழுது டெல்லி சென்று பிரதமரை பார்ப்பேன் எனக் கூறுவது அரசியலுக்காக தான். மெட்ரோ தரவே மாட்டோம் என மத்திய அரசு கூறவில்லை. விரிவான திட்ட அறிக்கையில் தான் குறைபாடு உள்ளது. எனவே, அதை தான் மத்திய அரசு நிராகரித்துள்ளது. சரியான திட்ட அறிக்கையை தயாரித்து மீண்டும் மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். மெட்ரோ ரயில் விவகாரத்தில் தமிழக அரசு தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறதே தவிர, நாங்கள் செய்யவில்லை. மோடி அண்ணாமலை தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் பா.ஜ.க ஆட்சியில் தான் தமிழகத்திற்கான நிதி பகிர்வு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மெட்ரோ திட்டத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கியது சென்னை மெட்ரோ திட்டத்திற்கு தான். நான்காண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பணி செய்துள்ளார் என கூற முடியாத நிலையில் தான் கனிமொழி உள்ளார். மத்திய அரசை குறை கூறிக்கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு சரியாக பராமரிப்பது கிடையாது. விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை கொண்டு வந்தாலும், அதை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. நெல் ஈரப்பதம் இல்லாமல் கொண்டு வருவதற்கு மத்திய அரசு கொடுத்த பணத்தை சரியாக தமிழக அரசு செலவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆனால், பிரதமர் மீது அபாண்டமாக அவர் பழி சுமத்துகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது டி.ஜி.பி நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பொய் சொல்கிறார்கள். டி.ஜி.பி நியமன நடைமுறை குறித்து அமைச்சர் ரகுபதிக்கு எதுவும் தெரியவில்லை. தமிழக அரசு அனுப்பும் ஐந்து பேரில் மூன்று பேரை யு.பி.எஸ்.சி, டி.ஜி.பி-யாக தேர்வு செய்து கொள்ளலாம் என தமிழக அரசிடம் தெரிவிக்கும். அந்த மூவரில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி-யாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தற்பொழுது அனுப்பிய மூன்று பேரும் நேர்மையான அதிகாரிகளாக இருப்பதால் அவர்களை டி.ஜி.பி-யாக நியமிப்பதில் முதல்வருக்கு விருப்பமில்லை. அதனால், அவருக்கு விருப்பமான நபரை நியமிக்கும் முறைக்கு அவர் காத்திருக்கிறார். டி.ஜி.பி நியமிக்கப்படாததால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. annamalai உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது. அவருக்கு என்ன பேசுகிறோம் என்பதே தெரியவில்லை. பீகாரில் 6.5% போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் அதேபோல, தமிழ்நாட்டிலும் பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர்கள் உள்ளார்கள். எனவே, அனைவரும் சேர்ந்து வாக்காளர் பட்டியலில் சுத்தம் செய்ய வேண்டும். எஸ்.ஐ.ஆர் பணியை அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக செய்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க தான் அரசியல் செய்கிறது. தி.மு.க-வுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. வரும் தேர்தலில் மக்கள் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள். கனிமவளக் கொள்ளையில் தி.மு.க-வின் தலைவர்களும், தொண்டர்களும் தான் ஈடுபட்டுள்ளார்கள். தொழில் முதலீடு எனக் கூறி சிறு சிறு நிறுவனங்களை தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்கிறார்கள். தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில்லை என்றார். அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

விகடன் 24 Nov 2025 2:52 pm

``நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? - எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பேரில், மத்திய குழு தமிழகம் வந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தி சென்றனர். ஆனால், இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதனால், கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நவம்பர் 18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். விவசாயிகள் போராட்டம் ஆனால், நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று தஞ்சாவூரில் தி.மு.க விவசாய அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை? என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள். நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நயினார், எடப்பாடி பழனிசாமி போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா? மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது! எனக் குறிப்பிட்டிருக்கிறார். திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?

விகடன் 24 Nov 2025 2:44 pm

``நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? - எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பேரில், மத்திய குழு தமிழகம் வந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தி சென்றனர். ஆனால், இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதனால், கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நவம்பர் 18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். விவசாயிகள் போராட்டம் ஆனால், நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று தஞ்சாவூரில் தி.மு.க விவசாய அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை? என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள். நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நயினார், எடப்பாடி பழனிசாமி போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா? மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது! எனக் குறிப்பிட்டிருக்கிறார். திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?

விகடன் 24 Nov 2025 2:44 pm

அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தைப் பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம். இயற்கை வளத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவதற்கான பணிகளில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளோம். நெட் தேர்வில், ஆசிரியர்களின் முதன்மை பாடத்திலிருந்துதான் கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்து, ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்தவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். கூட்டத்திற்குப் பின் அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து வைத்தோம். ஒரு பக்கம் சட்ட போராட்டம், மறுபக்கம் நம்முடைய ஆசிரியர்கள் ஒருவரைக் கூட கைவிட்டு விடாமல், அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்காமல், என்ன பணிகளைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவருகிறோம். இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தமிழக முதல்வர் எடுக்கும் முன்னெடுப்புகள், மிகப்பெரிய நன்மை செய்தியாக அமையும். உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லை என அண்ணாமலை விபரம் தெரியாமல் கூறியுள்ளார். இன்றைய இளைய சமுதாயத்தினரின் திறன் மேம்பாட்டிற்கு துணை முதலமைச்சர் எடுத்துவரும் முன்னெடுப்புகளைப் பாருங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என இன்று பலரும் போற்றுகின்றனர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி படித்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக வேலைவாய்ப்பு பெற தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் துணை புரிகின்றன. ‘நான் முதல்வன் திட்டம்’ சார்ந்த பணிகளைப் பற்றி அண்ணாமலை தெரிந்து கொண்டு பேசவேண்டும். எங்கள் கூட்டணிதான் பலமான கூட்டணி என அண்ணாமலை கூறியுள்ளார். அது சரியா என்பது இன்னும் 4 மாதத்தில் தெரிந்து விடும். கடந்த 10 ஆண்டு காலமாக ஒரு வளமான, வலுவான கூட்டணியை தி.மு.க தலைமை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதில், ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா எனப் பலரும் ஏங்கி வருகின்றனர். அதற்கு, ஒருகாலத்திலும் தமிழக முதல்வர் வழி விடமாட்டார் என்றார். கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் நான் அழுதது நாடகமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

விகடன் 24 Nov 2025 2:13 pm

Surya Kant: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்ய காந்த்; மோடி, அமித் ஷா பங்கேற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். நீதிபதி சூர்ய காந்த்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய 370-வது பிரிவு ரத்து வழக்கு, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் வழக்கு, பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு போன்ற இந்தியாவின் மிக முக்கியமான வழக்குகளில் நீதிபதி காந்த் ஒரு பகுதியாக இருந்துள்ளார். பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் வழக்கை விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்த நீதிபதிகள் அமர்விலும் இவர் இருந்தார். சூர்ய காந்த் (Surya Kant) கடந்து வந்தப் பாதை: நீதிபதி காந்த் பிப்ரவரி 10, 1962 அன்று ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். 2011-ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தில் 'முதல் வகுப்பு' இடத்தைப் பிடித்தார். அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பிப்ரவரி 9, 2027 வரை, அதாவது அவரின் 65 வயது வரை சுமார் 15 மாதங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர்வார். `உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?

விகடன் 24 Nov 2025 2:13 pm

Surya Kant: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்ய காந்த்; மோடி, அமித் ஷா பங்கேற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். நீதிபதி சூர்ய காந்த்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய 370-வது பிரிவு ரத்து வழக்கு, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் வழக்கு, பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு போன்ற இந்தியாவின் மிக முக்கியமான வழக்குகளில் நீதிபதி காந்த் ஒரு பகுதியாக இருந்துள்ளார். பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் வழக்கை விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்த நீதிபதிகள் அமர்விலும் இவர் இருந்தார். சூர்ய காந்த் (Surya Kant) கடந்து வந்தப் பாதை: நீதிபதி காந்த் பிப்ரவரி 10, 1962 அன்று ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். 2011-ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தில் 'முதல் வகுப்பு' இடத்தைப் பிடித்தார். அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பிப்ரவரி 9, 2027 வரை, அதாவது அவரின் 65 வயது வரை சுமார் 15 மாதங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர்வார். `உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?

விகடன் 24 Nov 2025 2:13 pm

டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல் இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சுத்தமான காற்றை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வாகனங்கள் செல்ல இடையூராக இருப்பதாகக் கூறி அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி போலீஸார் கூறினர். அதோடு அவர்கள் சாலைக்கு வராமல் தடுப்புகளையும் அமைத்திருந்தனர். இந்தியா கேட் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். திடீரென தடுப்புகளைத் தாண்டி சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து முடங்கியது. போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். பெருகும் காற்று மாசு; `ரூ.858 கோடி கொடுத்தும் ஏன் 1% கூட பயன்படுத்தவில்லை'- நாடாளுமன்றக் குழு கேள்வி போராட்டக்காரர்கள் மேல் போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் மிளகாய்ப் பொடி மற்றும் மிளகு ஸ்பிரேயரை போலீஸார் மீது பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். மிளகாய்ப் பொடி போட்டதைச் சற்றும் எதிர்பாராத போலீஸார் போராட்டக்காரர்களைக் கையாள மிகவும் சிரமப்பட்டனர். சில போலீஸாருக்கு கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். டெல்லி காற்று மாசு இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்துவதோடு, மக்களை வெளியேற்றும் வகையிலான மோசமான வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்துவதால்தான் காற்று மாசுபடுவதாகப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் மிளகுப் பொடியைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 9ம் தேதியும் இதே இந்தியா கேட் பகுதியில் சிலர் கூடி சுத்தமான காற்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர். டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன?

விகடன் 24 Nov 2025 2:02 pm

டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல் இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சுத்தமான காற்றை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வாகனங்கள் செல்ல இடையூராக இருப்பதாகக் கூறி அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி போலீஸார் கூறினர். அதோடு அவர்கள் சாலைக்கு வராமல் தடுப்புகளையும் அமைத்திருந்தனர். இந்தியா கேட் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். திடீரென தடுப்புகளைத் தாண்டி சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து முடங்கியது. போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். பெருகும் காற்று மாசு; `ரூ.858 கோடி கொடுத்தும் ஏன் 1% கூட பயன்படுத்தவில்லை'- நாடாளுமன்றக் குழு கேள்வி போராட்டக்காரர்கள் மேல் போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் மிளகாய்ப் பொடி மற்றும் மிளகு ஸ்பிரேயரை போலீஸார் மீது பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். மிளகாய்ப் பொடி போட்டதைச் சற்றும் எதிர்பாராத போலீஸார் போராட்டக்காரர்களைக் கையாள மிகவும் சிரமப்பட்டனர். சில போலீஸாருக்கு கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். டெல்லி காற்று மாசு இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்துவதோடு, மக்களை வெளியேற்றும் வகையிலான மோசமான வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்துவதால்தான் காற்று மாசுபடுவதாகப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் மிளகுப் பொடியைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 9ம் தேதியும் இதே இந்தியா கேட் பகுதியில் சிலர் கூடி சுத்தமான காற்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர். டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன?

விகடன் 24 Nov 2025 2:02 pm

பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல் - சாடும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு தேர்தல் குறி. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை. பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய் எங்களுக்கு போட்டியும் யாரும் இல்லை. களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு அரசியல் எதிரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடு எந்த பகைமையும் கிடையாது. தமிழகத்தை வாழ வைக்க தி.மு.க-வால் தான் முடியும். பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய். த.வெ.க என்பது பா.ஜ.க-வின் சி டீம். ஒரு காலத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். ragupathi எல்லாவற்றையும் முடிவெடுத்து தான் நாங்கள் சொல்கிறோம். தேர்தல் அறிக்கையை கொடுக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களில் கொடுத்த டி.வி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் பின்பு கொடுத்தவர்கள் கொடுத்தவை தகர டப்பா ஆகிவிட்டது. அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை திராவிட இயக்கத்தின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறைகள் அறிய செய்வது என்பதை வலியுறுத்தி நாங்கள் நடத்திய திருவிழாவே. அவர்களுக்கு அவற்றையெல்லாம் பற்றிய புரிதல் எல்லாம் கிடையாது. அக்கறை கிடையாது. அவர்களுடைய ஒரே நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான். தமிழ் மக்கள் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றைப் பற்றியோ கொள்கைகளைப் பற்றியோ கோட்பாட்டை பற்றிய எதைப் பற்றியும் அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தங்களைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றி நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்?. ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும், காங்கிரஸில் இருந்து எங்களோடு பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு கூட்டணி குறித்த கேள்வி தேவை இல்லாதது. சிண்டு மூட்டுகிற வேலையை யார் செய்தாலும் அது எங்கும் எடுபடாது என்றார்.

விகடன் 24 Nov 2025 1:43 pm

பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல் - சாடும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு தேர்தல் குறி. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை. பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய் எங்களுக்கு போட்டியும் யாரும் இல்லை. களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு அரசியல் எதிரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடு எந்த பகைமையும் கிடையாது. தமிழகத்தை வாழ வைக்க தி.மு.க-வால் தான் முடியும். பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய். த.வெ.க என்பது பா.ஜ.க-வின் சி டீம். ஒரு காலத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். ragupathi எல்லாவற்றையும் முடிவெடுத்து தான் நாங்கள் சொல்கிறோம். தேர்தல் அறிக்கையை கொடுக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களில் கொடுத்த டி.வி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் பின்பு கொடுத்தவர்கள் கொடுத்தவை தகர டப்பா ஆகிவிட்டது. அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை திராவிட இயக்கத்தின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறைகள் அறிய செய்வது என்பதை வலியுறுத்தி நாங்கள் நடத்திய திருவிழாவே. அவர்களுக்கு அவற்றையெல்லாம் பற்றிய புரிதல் எல்லாம் கிடையாது. அக்கறை கிடையாது. அவர்களுடைய ஒரே நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான். தமிழ் மக்கள் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றைப் பற்றியோ கொள்கைகளைப் பற்றியோ கோட்பாட்டை பற்றிய எதைப் பற்றியும் அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தங்களைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றி நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்?. ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும், காங்கிரஸில் இருந்து எங்களோடு பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு கூட்டணி குறித்த கேள்வி தேவை இல்லாதது. சிண்டு மூட்டுகிற வேலையை யார் செய்தாலும் அது எங்கும் எடுபடாது என்றார்.

விகடன் 24 Nov 2025 1:43 pm

மகாராஷ்டிரா: மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும் - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஷ் அகாடியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். ஆனால் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை இக்கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு தாங்கள் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராஜ் தாக்கரே தனது கட்சியின் கொங்கன் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசுகையில், பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், ''மராத்தி பேசாத மக்களால் மும்பை மாநகராட்சித் தேர்தலின் அரசியல் சூழல் மேலும் மேலும் பதட்டமடைந்து வருகிறது. ராஜ் தாக்கரே எனவே மராத்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் வசிக்கும் மராத்தியர்களுக்கு இது மிகவும் முக்கியமான கடைசி தேர்தலாக இருக்கும். நாம் கவனக்குறைவாக இருந்தால் மும்பை நம் கையை விட்டு சென்றுவிடும். அப்படி நடந்தால் அது மராத்தி மக்களுக்குப் பேரழிவாக அமையும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. எனவே வாக்காளர்கள் உண்மையானவர்களா அல்லது போலியா என்பதை மக்கள் கவனத்தில் கொள்வது அவசியம். மக்கள் இதில் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டார். நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு ராஜ் தாக்கரே கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் கட்சியை பா.ஜ.க அதன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று ராஜ் தாக்கரே எதிர்பார்த்தார். ஆனால் ராஜ் தாக்கரே கட்சியை பா.ஜ.க கழற்றிவிட்டது. இதனால் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே இப்போது உத்தவ் தாக்கரேயுடன் ராஜ் தாக்கரே கைகோர்த்து இருக்கிறார். ராஜ் தாக்கரேயை எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் சரத்பவார் ஆதரவாகவே இருக்கிறார். ஆனால் இது தொடர்பாக சரத்பவார் தனது முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. மும்பையில் கான் யாரையும் மேயராக்க விடமாட்டோம் என்றும், இந்து ஒருவர்தான் மும்பைக்கு மேயராவார் என்றும் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார். `ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

விகடன் 24 Nov 2025 1:32 pm

மகாராஷ்டிரா: மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும் - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஷ் அகாடியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். ஆனால் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை இக்கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு தாங்கள் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராஜ் தாக்கரே தனது கட்சியின் கொங்கன் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசுகையில், பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், ''மராத்தி பேசாத மக்களால் மும்பை மாநகராட்சித் தேர்தலின் அரசியல் சூழல் மேலும் மேலும் பதட்டமடைந்து வருகிறது. ராஜ் தாக்கரே எனவே மராத்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் வசிக்கும் மராத்தியர்களுக்கு இது மிகவும் முக்கியமான கடைசி தேர்தலாக இருக்கும். நாம் கவனக்குறைவாக இருந்தால் மும்பை நம் கையை விட்டு சென்றுவிடும். அப்படி நடந்தால் அது மராத்தி மக்களுக்குப் பேரழிவாக அமையும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. எனவே வாக்காளர்கள் உண்மையானவர்களா அல்லது போலியா என்பதை மக்கள் கவனத்தில் கொள்வது அவசியம். மக்கள் இதில் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டார். நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு ராஜ் தாக்கரே கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் கட்சியை பா.ஜ.க அதன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று ராஜ் தாக்கரே எதிர்பார்த்தார். ஆனால் ராஜ் தாக்கரே கட்சியை பா.ஜ.க கழற்றிவிட்டது. இதனால் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே இப்போது உத்தவ் தாக்கரேயுடன் ராஜ் தாக்கரே கைகோர்த்து இருக்கிறார். ராஜ் தாக்கரேயை எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் சரத்பவார் ஆதரவாகவே இருக்கிறார். ஆனால் இது தொடர்பாக சரத்பவார் தனது முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. மும்பையில் கான் யாரையும் மேயராக்க விடமாட்டோம் என்றும், இந்து ஒருவர்தான் மும்பைக்கு மேயராவார் என்றும் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார். `ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

விகடன் 24 Nov 2025 1:32 pm

`அமைச்சர் தொகுதியில், படம் போட்டு பரிசு பொருள் விநியோகம்’ - கோவி.செழியன் மீது எழுந்த புகார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் (தனி) தொகுதி. இங்கு தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி.செழியன் தற்போது உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். வரும் 2026 தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் வேட்பாளர் கோவி.செழியன் தான் என திமுகவினரால் பரவலாக பேசப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் கோவி.செழியன் தரப்பில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக எவர் சில்வர் பாத்திரம் மற்றும் புடவை வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. டிராக்டரில் பரிசு பொருள் வரும் தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்காளர்களை கவரும் வகையில் அமைச்சர் கோவி.செழியன் தரப்பு முன்கூட்டியே திட்டமிட்டு பரிசுப்பொருள்களை வழங்கி வருகின்றனர். பாஜகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சதீஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இதையடுத்து பரிசுப்பொருள் கொடுப்பதை நிறுத்தி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் டிராக்டரில் பொருள்களை எடுத்து சென்று வழங்கி வருவதாக சொல்லப்படுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பா.ஜ.க-வின் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் தலைவர் சதீஷ்குமாரிடம் பேசினோம், ``உயர்க் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வரும் சட்டமன்ற தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் நான்காவது முறை போட்டியிட இருப்பதாக திமுகவினர் மத்தியில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக அமைச்சர் தரப்பு வீடு வீடாக டிராக்டரில் எடுத்து சென்று எவர் சில்வர் பாத்திரம் மற்றும் புடவை வழங்கி வருகின்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கோவி.செழியன் படம் அச்சிடப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் சுமார் 2.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். திருவிடைமருதூரில் பரிசு பொருள் கிட்டதட்ட கட்சி பாகுபாடின்றி ரேஷன் கார்டின் படி வீடு தோறும் பரிசுப்பொருள் வழங்கும் பணியில் சில மாதங்களாக ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைதியாக இருந்தவர்கள் தற்போது மீண்டும் கொடுத்து வருகின்றனர். சுமார் ரூ.600 மதிப்புள்ள பொருளை கோவி.செழியன் தரப்பு வழங்குகிறார். அமைச்சர் கோவி.செழியனுக்கு தொகுதிக்குள் பெரிதாக நல்ல பெயர் இல்லை என்பதால் பரிசு பொருள் கொடுத்து அதை சரி செய்து வாக்கை பெறுவதற்கு இதை செய்கின்றனர். பெரும்பாலானவர்களுக்கு கொடுத்து விட்ட நிலையில் எதிர்ப்பு கிளம்பியது உள்ளிட்டவையால் பலருக்கு கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில் விடுப்பட்டவர்களுக்கும் தற்போது கொடுத்து வருகின்றனர். அரசு அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்ட யாரும் இதை கண்டு கொள்ளவில்லை, தடுக்கவும் இல்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்தால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும், தேர்தல் செலவில் கணக்கில் ஏற்றி விடுவார்கள் என்பதற்காக அமைச்சர் திட்டமிட்டு முன்கூட்டியே கொடுக்கிறார். இதற்கு கோடி கணக்கில் செலவு செய்திருக்கிறார். அந்த பணம் எங்கிருந்து வந்தது, யாருடையது என்பது எங்கள் கேள்வி. எவர் சில்வர் பாத்திரம் தேர்தல் சட்டப்படி இது தவறு. எனவே கோவி.செழியன் மற்றும் பரிசு பொருள் வழங்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன் பொருள் எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்ய வேண்டும்” என்றார். அமைச்சர் தரப்பில் சிலரிடம் பேசினோம், ``திமுக நிர்வாகிகள் பொங்கல் பண்டிகைக்காக இதனை வழங்கி வருகின்றனர். தேர்தலுக்காக இதை வழங்கவில்லை. அமைச்சர் கோவி.செழியனுக்கு தொகுதியில் செல்வாக்கு இருப்பதால் பரிசு பொருள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கும் அமைச்சருக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை” என்றனர்.

விகடன் 24 Nov 2025 1:27 pm

புதுச்சேரி: விஜய் ஒரு சின்ன குழந்தை; சினிமா வசனத்தை மேடையில் பேசுகிறார் - ஜெகத்ரட்சகன் காட்டம்

புதுச்சேரியில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதன்படி நவம்பர் 23-ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.பி ஜெகத்ரட்சன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகத்ரட்சகன், ``தமிழகத்தைப் போல புதுச்சேரியையும் சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தற்போது 21 தொகுதிகளில் தீவிர சேர்க்கை படிவத்தைத் தந்து உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாதத்துக்குள் மற்ற தொகுதிகளிலும் இந்தப் பணிகளை நிறைவேற்றுவோம். ஜெகத்ரட்சகன் 85% சதவீதம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் தகவல் முற்றிலும் தவறானது. அந்தப் படிவம் பட்டம் படித்தவர்களும், வழக்கறிஞர்களும் கூட நிரப்ப முடியாத அளவுக்கு கடினமானதாக இருக்கிறது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பீகாரைப் போல் தேர்தலை நடத்த நினைக்கிறது தேர்தல் ஆணையம். பீகாரில் வேண்டுமானால் அது நடக்கலாம். தமிழகம், புதுச்சேரியில் அவர்களின் திட்டம் எடுபடாது. திட்டங்களுக்கு அனுமதி தராமல் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. புதுச்சேரியில் தற்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் புதுச்சேரியை ஆட்சி செய்யும் தகுதி இல்லை. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் புதுச்சேரியை டெல்லியில் இருந்துதான் ஆட்சி செய்கிறார்கள். புதுச்சேரியில் என்ன அதிகாரம் இருக்கிறது ? முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் எங்கள் தத்துவம். மக்களின் உணர்வு என்ன என்பது எங்களுக்குத்தான் தெரியும். வடநாட்டில் இருந்தவர்களை வைத்து ஆட்சி செய்ய வைப்பது என்ன ஜனநாயகம்? புதுச்சேரியை புதுச்சேரியில் உள்ளவர்கள்தான் ஆள வேண்டும் என்பதை தி.மு.க முன்வைக்கிறது” என்றவரிடம், தி.மு.க-வுக்கு கொள்கை கிடையாது; கொள்ளையடிக்கத்தான் தெரியும் என்று த.வெ.க தலைவர் விஜய் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். விஜய் அதற்குப் பதிலளித்த அவர், ``நடிகர் விஜய் பாவம். அவர் சின்ன குழந்தை. விஜய் சொல்வதை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஒரு சினிமா நடிகர். சினிமாவில் பேசும் வசனத்தைப் போல மேடையில்  பேசுகிறார்” என்றார். அதையடுத்து, நீட் தேர்வை நீக்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, ஏதும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``விஜய்க்கு சட்டம் தெரியவில்லை. நீட் தேர்வு மத்திய அரசு கையில் உள்ளது. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீட் தேர்வை நீக்குவது தி.மு.க-வின் உயிர்மூச்சுக் கொள்கை. அதில் ஒரு விழுக்காடுகூட பின்வாங்காமல் செயல்படுகிறோம். எங்கள் எதிரில் எதிரிகளே இல்லை. அதேசமயம் மக்கள் ஆதரவு உள்ளது. லாட்டரி அதிபர்கள் புதுச்சேரிக்குச் சுற்றுலாவினராக வந்திருக்கின்றனர்” என்றார். புதுச்சேரி முதல்வர் பதவிக்குக் குறி... அறிவாலயத்தில் காய்நகர்த்தும் ஜெகத்ரட்சகன்!

விகடன் 24 Nov 2025 1:04 pm

புதுச்சேரி: விஜய் ஒரு சின்ன குழந்தை; சினிமா வசனத்தை மேடையில் பேசுகிறார் - ஜெகத்ரட்சகன் காட்டம்

புதுச்சேரியில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதன்படி நவம்பர் 23-ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.பி ஜெகத்ரட்சன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகத்ரட்சகன், ``தமிழகத்தைப் போல புதுச்சேரியையும் சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தற்போது 21 தொகுதிகளில் தீவிர சேர்க்கை படிவத்தைத் தந்து உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாதத்துக்குள் மற்ற தொகுதிகளிலும் இந்தப் பணிகளை நிறைவேற்றுவோம். ஜெகத்ரட்சகன் 85% சதவீதம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் தகவல் முற்றிலும் தவறானது. அந்தப் படிவம் பட்டம் படித்தவர்களும், வழக்கறிஞர்களும் கூட நிரப்ப முடியாத அளவுக்கு கடினமானதாக இருக்கிறது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பீகாரைப் போல் தேர்தலை நடத்த நினைக்கிறது தேர்தல் ஆணையம். பீகாரில் வேண்டுமானால் அது நடக்கலாம். தமிழகம், புதுச்சேரியில் அவர்களின் திட்டம் எடுபடாது. திட்டங்களுக்கு அனுமதி தராமல் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. புதுச்சேரியில் தற்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் புதுச்சேரியை ஆட்சி செய்யும் தகுதி இல்லை. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் புதுச்சேரியை டெல்லியில் இருந்துதான் ஆட்சி செய்கிறார்கள். புதுச்சேரியில் என்ன அதிகாரம் இருக்கிறது ? முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் எங்கள் தத்துவம். மக்களின் உணர்வு என்ன என்பது எங்களுக்குத்தான் தெரியும். வடநாட்டில் இருந்தவர்களை வைத்து ஆட்சி செய்ய வைப்பது என்ன ஜனநாயகம்? புதுச்சேரியை புதுச்சேரியில் உள்ளவர்கள்தான் ஆள வேண்டும் என்பதை தி.மு.க முன்வைக்கிறது” என்றவரிடம், தி.மு.க-வுக்கு கொள்கை கிடையாது; கொள்ளையடிக்கத்தான் தெரியும் என்று த.வெ.க தலைவர் விஜய் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். விஜய் அதற்குப் பதிலளித்த அவர், ``நடிகர் விஜய் பாவம். அவர் சின்ன குழந்தை. விஜய் சொல்வதை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஒரு சினிமா நடிகர். சினிமாவில் பேசும் வசனத்தைப் போல மேடையில்  பேசுகிறார்” என்றார். அதையடுத்து, நீட் தேர்வை நீக்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, ஏதும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``விஜய்க்கு சட்டம் தெரியவில்லை. நீட் தேர்வு மத்திய அரசு கையில் உள்ளது. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீட் தேர்வை நீக்குவது தி.மு.க-வின் உயிர்மூச்சுக் கொள்கை. அதில் ஒரு விழுக்காடுகூட பின்வாங்காமல் செயல்படுகிறோம். எங்கள் எதிரில் எதிரிகளே இல்லை. அதேசமயம் மக்கள் ஆதரவு உள்ளது. லாட்டரி அதிபர்கள் புதுச்சேரிக்குச் சுற்றுலாவினராக வந்திருக்கின்றனர்” என்றார். புதுச்சேரி முதல்வர் பதவிக்குக் குறி... அறிவாலயத்தில் காய்நகர்த்தும் ஜெகத்ரட்சகன்!

விகடன் 24 Nov 2025 1:04 pm

ஆச்சரியக்குறி, தற்குறி... எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய குறி தேர்தல் குறிதான். விஜய் தனது தரத்தைக் குறைத்துக்கொள்வது அவரது விருப்பம். தமிழக வெற்றிக் கழகம் விஜய் அதற்கு நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது. களத்தில் இருக்கும் எல்லோரும் எங்கள் எதிரிகள் தான். எதிரிகள் என்றால் அவர்கள் எல்லோரும் வெறும் அரசியல் எதிரிகள் மட்டும் தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடும் எந்தப் பகைமையும் கிடையாது. அரசியலிலே தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கமுடியும் என்று சொன்னால் அது திராவிட ஆட்சியால் மட்டும்தான் முடியும். அதனை இந்த 5 ஆண்டுகளிலே நிரூபித்தும் காட்டி இருக்கிறோம். நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம். அமைச்சர் ரகுபதி செய்வதைத் தான் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. எந்த ஏமாற்று வேலைகளும் தமிழக மக்கள் மத்தியில் எடுப்படாது என்று பேசியிருக்கிறார்.

விகடன் 24 Nov 2025 11:59 am

ஆச்சரியக்குறி, தற்குறி... எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய குறி தேர்தல் குறிதான். விஜய் தனது தரத்தைக் குறைத்துக்கொள்வது அவரது விருப்பம். தமிழக வெற்றிக் கழகம் விஜய் அதற்கு நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது. களத்தில் இருக்கும் எல்லோரும் எங்கள் எதிரிகள் தான். எதிரிகள் என்றால் அவர்கள் எல்லோரும் வெறும் அரசியல் எதிரிகள் மட்டும் தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடும் எந்தப் பகைமையும் கிடையாது. அரசியலிலே தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கமுடியும் என்று சொன்னால் அது திராவிட ஆட்சியால் மட்டும்தான் முடியும். அதனை இந்த 5 ஆண்டுகளிலே நிரூபித்தும் காட்டி இருக்கிறோம். நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம். அமைச்சர் ரகுபதி செய்வதைத் தான் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. எந்த ஏமாற்று வேலைகளும் தமிழக மக்கள் மத்தியில் எடுப்படாது என்று பேசியிருக்கிறார்.

விகடன் 24 Nov 2025 11:59 am

'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை'உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?

வரி விதிப்பு, எச்சரிக்கை, மிரட்டல்... - இப்படி என்ன செய்து பார்த்தும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தியபாடில்லை. இந்தப் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓயாமல் முயன்று வருகிறார். ஆனால், அவரது எந்த முயற்சிக்கும் இதுவரை பலனே இல்லை. ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி தாக்குதல் நடத்திகொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில் தான், ட்ரம்ப் தற்போது உக்ரைன், ரஷ்யாவை கடுமையாக சாடியுள்ளார். ட்ரம்ப் `ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ - இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு தனது ட்ரூத் பக்கத்தில், உக்ரைன் தலைமையை சாடி, உக்ரைனின் தலைமை இதுவரை அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எந்த நன்றியையும் காட்டவில்லை. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கிகொண்டே தான் இருக்கிறது. அமெரிக்கா இன்னமும் உக்ரைனுக்கு வழங்க நேட்டோவிற்கு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆயுதங்களை விற்று வருகிறது. இந்தப் போர் தொடங்கும்போது, நான் அதிபராக இருந்திருந்தால், புதின் உக்ரைனை தாக்கியிருக்கவே முடியாது என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். உக்ரைன் பதில் ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு உடனடியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி கூறி எதிர்வினையாற்றி உள்ளார். ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்காவிற்கும், அனைத்து அமெரிக்க இதயங்களுக்கும், தனிப்பட்ட முறையில் அதிபர் ட்ரம்பிற்கு உக்ரைன் நன்றி கடன்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார். உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

விகடன் 24 Nov 2025 10:30 am

'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை'உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?

வரி விதிப்பு, எச்சரிக்கை, மிரட்டல்... - இப்படி என்ன செய்து பார்த்தும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தியபாடில்லை. இந்தப் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓயாமல் முயன்று வருகிறார். ஆனால், அவரது எந்த முயற்சிக்கும் இதுவரை பலனே இல்லை. ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி தாக்குதல் நடத்திகொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில் தான், ட்ரம்ப் தற்போது உக்ரைன், ரஷ்யாவை கடுமையாக சாடியுள்ளார். ட்ரம்ப் `ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ - இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு தனது ட்ரூத் பக்கத்தில், உக்ரைன் தலைமையை சாடி, உக்ரைனின் தலைமை இதுவரை அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எந்த நன்றியையும் காட்டவில்லை. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கிகொண்டே தான் இருக்கிறது. அமெரிக்கா இன்னமும் உக்ரைனுக்கு வழங்க நேட்டோவிற்கு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆயுதங்களை விற்று வருகிறது. இந்தப் போர் தொடங்கும்போது, நான் அதிபராக இருந்திருந்தால், புதின் உக்ரைனை தாக்கியிருக்கவே முடியாது என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். உக்ரைன் பதில் ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு உடனடியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி கூறி எதிர்வினையாற்றி உள்ளார். ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்காவிற்கும், அனைத்து அமெரிக்க இதயங்களுக்கும், தனிப்பட்ட முறையில் அதிபர் ட்ரம்பிற்கு உக்ரைன் நன்றி கடன்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார். உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

விகடன் 24 Nov 2025 10:30 am

'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை'உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?

வரி விதிப்பு, எச்சரிக்கை, மிரட்டல்... - இப்படி என்ன செய்து பார்த்தும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தியபாடில்லை. இந்தப் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓயாமல் முயன்று வருகிறார். ஆனால், அவரது எந்த முயற்சிக்கும் இதுவரை பலனே இல்லை. ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி தாக்குதல் நடத்திகொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில் தான், ட்ரம்ப் தற்போது உக்ரைன், ரஷ்யாவை கடுமையாக சாடியுள்ளார். ட்ரம்ப் `ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ - இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு தனது ட்ரூத் பக்கத்தில், உக்ரைன் தலைமையை சாடி, உக்ரைனின் தலைமை இதுவரை அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எந்த நன்றியையும் காட்டவில்லை. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கிகொண்டே தான் இருக்கிறது. அமெரிக்கா இன்னமும் உக்ரைனுக்கு வழங்க நேட்டோவிற்கு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆயுதங்களை விற்று வருகிறது. இந்தப் போர் தொடங்கும்போது, நான் அதிபராக இருந்திருந்தால், புதின் உக்ரைனை தாக்கியிருக்கவே முடியாது என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். உக்ரைன் பதில் ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு உடனடியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி கூறி எதிர்வினையாற்றி உள்ளார். ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்காவிற்கும், அனைத்து அமெரிக்க இதயங்களுக்கும், தனிப்பட்ட முறையில் அதிபர் ட்ரம்பிற்கு உக்ரைன் நன்றி கடன்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார். உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

விகடன் 24 Nov 2025 10:30 am

TVK Vijay: ``விஜய் வாக்குறுதிகள்: முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - ஜெயக்குமார் பதில்

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இதயக்கனி. தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்ட உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி திரைப்படத்தை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இதயக்கனி, தற்போது 150 நாட்கள் ஓடுகிறது. இப்போதும் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு அண்ணாதான், ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான், ஒரே ஒரு ஜெயலலிதா தான். வேறுயாராலும் அந்த இடத்துக்கு வரமுடியாது. தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் அறிஞர் அண்ணாவை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறது தி.மு.க. நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுகிறார்கள் என்கிறீர்கள். வானுக்கு ஒரே ஒரு சந்திரன் தான், அதுபோல ஒரே ஒரு எம்.ஜி.ராமச்சந்திரன்தான். அவரோடு யாரையும் ஒப்பிட முடியாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் புரட்சித் தலைவரின் பெயரை உச்சரிக்காமல் கட்சி நடத்த முடியாது. அந்த வகையில்தான் விஜய் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்திருக்கிறார். அத்தைக்கு மீசை முளைக்கட்டும் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததின் நோக்கமே அ.தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதானே. அந்த நோக்கம் இந்த தேர்தலில் நிறைவேறும். விஜய் அவரின் பேச்சில் தேர்தல் வாக்குறுதிகளாக சில அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். அதைக் கேட்கும்போது 'முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்' என்ற வாசகம்தான் நினைவுக்கு வந்தது. ஒ.பி.எஸ் என்.டி.ஏ கூட்டணியில் சேருவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார் என்றால், அது குறித்து என் நண்பர் நயினார்தான் பதிலளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் எனவே, என்.டி.ஏ கூட்டணி குறித்து பேச முடியாது என்றார். நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய்

விகடன் 24 Nov 2025 9:39 am

TVK Vijay: ``விஜய் வாக்குறுதிகள்: முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - ஜெயக்குமார் பதில்

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இதயக்கனி. தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்ட உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி திரைப்படத்தை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இதயக்கனி, தற்போது 150 நாட்கள் ஓடுகிறது. இப்போதும் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு அண்ணாதான், ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான், ஒரே ஒரு ஜெயலலிதா தான். வேறுயாராலும் அந்த இடத்துக்கு வரமுடியாது. தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் அறிஞர் அண்ணாவை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறது தி.மு.க. நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுகிறார்கள் என்கிறீர்கள். வானுக்கு ஒரே ஒரு சந்திரன் தான், அதுபோல ஒரே ஒரு எம்.ஜி.ராமச்சந்திரன்தான். அவரோடு யாரையும் ஒப்பிட முடியாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் புரட்சித் தலைவரின் பெயரை உச்சரிக்காமல் கட்சி நடத்த முடியாது. அந்த வகையில்தான் விஜய் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்திருக்கிறார். அத்தைக்கு மீசை முளைக்கட்டும் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததின் நோக்கமே அ.தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதானே. அந்த நோக்கம் இந்த தேர்தலில் நிறைவேறும். விஜய் அவரின் பேச்சில் தேர்தல் வாக்குறுதிகளாக சில அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். அதைக் கேட்கும்போது 'முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்' என்ற வாசகம்தான் நினைவுக்கு வந்தது. ஒ.பி.எஸ் என்.டி.ஏ கூட்டணியில் சேருவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார் என்றால், அது குறித்து என் நண்பர் நயினார்தான் பதிலளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் எனவே, என்.டி.ஏ கூட்டணி குறித்து பேச முடியாது என்றார். நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய்

விகடன் 24 Nov 2025 9:39 am

அடுத்த 6 மாதம் பிரதமருக்கு தமிழ்நாடு சாப்பாடும், கலாசாரமும்தான் பிடிக்கும் - கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த இலங்கை எம்பி ஜீவன் தொண்டமான் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியபோது, பீகார் முதல்வராக நிதீஷ் குமார் எவ்வளவு காலம் நீடிப்பார் என்பது காலம்தான் பதில் சொல்லும். கார்த்தி சிதம்பரம் தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பொதுவானதைப் பேசுவது கொள்கை கிடையாது. அவருடைய ஒவ்வொரு விஷயத்திலும் தங்களது கொள்கையை விளக்குவார்கள் என நம்புகிறேன். SIR திட்டத்தை ஒரு வருடத்திற்கு முன்னரே நடத்தியிருக்க வேண்டும். இதில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இணையச் சேவை இல்லாததால் பல இடங்களில் SIR படிவங்களைப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. குறுகிய காலத்தில் இப்பணியைச் செயல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும். 30 நாட்களுக்குள் வாக்காளர்கள் நீக்கல் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பது செய்ய முடியுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. SIR FAQ : How to Fill Enumeration Form? - Full Details | Tamil | Decode SIR பணியினை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு இதுகுறித்தான போதிய பயிற்சி இல்லை, மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க அவர்களால் முடியவில்லை. தமிழகத்தில் 2026 இல் சட்டமன்றத் தேர்தல் வருவது தேர்தல் ஆணையத்திற்கு முன்கூட்டியே தெரிந்தும், போதிய கால அவகாசம் இன்றி வெளிப்படைத்தன்மை இல்லாமல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடி பீகார் பிரசாரத்தின் போது பீகாரிகளை தமிழர்கள் தாக்குவதாகக் கூறினார். இப்போது தமிழகம் வரும்போது தமிழ் கற்று கொள்ளவில்லை என்று கூறுகிறார். அடுத்த 6 மாதத்திற்கு தமிழ்நாடு, கேரளா சாப்பாடுதான் பிடிக்கும், கலாசாரம்தான் அவருக்குப் பிடிக்கும் என்று கூறுவார். என்னுடைய புரிதலின்படி தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் வெற்றி அடையும், பிற இடங்களில் தோல்வியைத்தான் தழுவும். ஆக்ராவில் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. ‘மெட்ரோ கிடையாது போங்க...’ - கைவிரித்த பா.ஜ.க... கொந்தளிக்கும் கோவை, மதுரை! எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை. ஆனால், மத்திய அரசு தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்காமல் பாரபட்சமாகச் செயல்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. பிரதமர் மோடி பீகாரில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் திட்டங்களைக் கொண்டு வருவதாகக் கூறினார், அது எந்தக் காலத்தில் வரப்போகிறது எனப் பார்ப்போம், மோடி கூறுவதை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மோடி தேர்தல் வரும்போது அந்த மாநில மொழியினை நேசிப்பதாகவும், அந்தக் கலாசாரத்தை நேசிப்பதாகவும், நிதி தருவதாகவும், கூறுவார், ஆனால், உண்மையில் ஒன்றும் இருக்காது. பீகார் பிரசாரத்தில் மோடி! பீகார் தேர்தல் முடிவுக்கும், தமிழ்நாட்டுத் தேர்தலுக்கும், அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம்தான், வேறு எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஒவ்வொரு மாநில தேர்தலிலும், கூட்டணி மற்றும் அரசியல் சூழ்நிலை அடிப்படையில்தான் முடிவுகள் இருக்கும். தமிழகத்தில் மும்முனை மற்றும் அதற்கு மேற்பட்ட கூட்டணிகள் போட்டியிட்டால் திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும் என்றார். Cibil: `எமதர்மனுக்கு சித்ரகுப்தர் போல நமக்கு சிபில்'- சிபில் ஸ்கோரை சாடிய கார்த்திக் சிதம்பரம்

விகடன் 24 Nov 2025 7:20 am

அதிமுக ஒன்றிணைப்பு: செங்கோட்டையன், தினகரனுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன் - ஓ. பன்னீர்செல்வம்

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, அதிமுக தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கின்ற குழுவாகச் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது குழுவின் கருத்து, தமிழக மக்களின் கருத்து அதிமுக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். எஸ்ஐஆர் ஒவ்வொருவருக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனைப் பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்னை இல்லை. SIR ஆனால் எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. மத்திய அரசு கூர்ந்து கவனித்து பாமர மக்களும் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் அமைக்கப்பட வேண்டும். எஸ்ஐஆர் காலக்கெடு நீட்டிக்க வேண்டும். இது மக்களின் கோரிக்கை. கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பது எனது கருத்து என்றார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?' என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் எங்களுக்கும் தனிக் கொள்கை உள்ளது. அந்தக் கொள்கையின் வடிவில் எங்களுக்கு வாய்ப்பு தந்தால், இணைவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கோட்டையனுடனும், தினகரனுடனும் தினம்தோறும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைய அதிகமான வாய்ப்புள்ளது எனக் கூறினார். ``2011-ல் எங்களுக்கு செய்த தவறுக்காக தான் இப்போது அனுபவிக்கிறார்'' - ஓபிஎஸ் குறித்து வைகோ

விகடன் 24 Nov 2025 6:56 am

அதிமுக ஒன்றிணைப்பு: செங்கோட்டையன், தினகரனுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன் - ஓ. பன்னீர்செல்வம்

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, அதிமுக தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கின்ற குழுவாகச் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது குழுவின் கருத்து, தமிழக மக்களின் கருத்து அதிமுக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். எஸ்ஐஆர் ஒவ்வொருவருக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனைப் பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்னை இல்லை. SIR ஆனால் எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. மத்திய அரசு கூர்ந்து கவனித்து பாமர மக்களும் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் அமைக்கப்பட வேண்டும். எஸ்ஐஆர் காலக்கெடு நீட்டிக்க வேண்டும். இது மக்களின் கோரிக்கை. கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பது எனது கருத்து என்றார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?' என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் எங்களுக்கும் தனிக் கொள்கை உள்ளது. அந்தக் கொள்கையின் வடிவில் எங்களுக்கு வாய்ப்பு தந்தால், இணைவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கோட்டையனுடனும், தினகரனுடனும் தினம்தோறும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைய அதிகமான வாய்ப்புள்ளது எனக் கூறினார். ``2011-ல் எங்களுக்கு செய்த தவறுக்காக தான் இப்போது அனுபவிக்கிறார்'' - ஓபிஎஸ் குறித்து வைகோ

விகடன் 24 Nov 2025 6:56 am

அட்டைப்படம்

விகடன் 24 Nov 2025 6:29 am

'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' - கு.பாரதி குற்றச்சாட்டு!

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இன்று இரவோடு இரவாக கைது செய்ய காவல்துறை முயற்சிப்பதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி குற்றஞ்சாட்டியிருக்கிறார். போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் போராடி கைதாகியிருந்தனர். போராட்டம் நூறாவது நாளை நெருங்குகையில் மெரினா கடலில் இறங்கியும் கூட போராடியிருந்தனர். இதன்பிறகுதான் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மைப் பணியாளர்கள் அமைதியான முறையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து வசந்தி, ஜெனோவா, கீதா, பாரதி என 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர் கு.பாரதி உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டம் 7 வது நாளை எட்டியிருக்கிறது. இந்நிலையில், சில நிமிடங்களுக்கு முன் போராட்டம் நடக்கும் இடத்திலிருந்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், 'எங்களின் பெண் தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற நிபந்தனைகள் அத்தனையையும் கடைபிடித்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! 7 நாட்களாக எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இன்று போராடும் பெண்களை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர்கள் நால்வரையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்கின்றனர். உடனே அம்பத்தூர் காவல் ஆய்வாளர் மருத்துவர்களின் அறுவுறுத்தல்படி அவர்களை மருத்துவமனையில் சேருங்கள் என நோட்டீஸ் அனுப்புகிறார். நீதிமன்றம் மருத்துவர்களை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றெல்லாம் உத்தரவில் இல்லை. மேலும், ஒருவர் பலவீனமாகி மருத்துவமனையில் சேர்ந்தால் அவருக்கு பதில் இன்னொருவரை போராட்டத்தில் பங்கேற்க செய்யலாம். அதுவும் தீர்ப்பில் இருக்கிறது. ஜெனோவா, பாரதி, வசந்தி, கீதா ஆனால், நாளை அம்பத்தூர் தொழிற்பேட்டை நிகழ்ச்சிக்கு உதயநிதி வருவதால், அதற்குள் எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்களோ எனும் அச்சம் எழுகிறது. அலுவலக கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளே போராடிக் கொண்டிருக்கிறோம். நள்ளிரவில் இந்தப் பெண்கள் கைது செய்யப்படலாம். அப்படி எதுவும் நடந்தால் நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வோம்.' எனக் கூறியிருக்கிறார். https://www.facebook.com/share/v/17oecW6wyg/

விகடன் 23 Nov 2025 10:08 pm

புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?

தமிழகம், புதுச்சேரியில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், `அந்த திட்டமே சரியில்லாத திட்டம். சாலைகளை சீரமைத்தாலே பயனுள்ளதாக இருக்கும்’ என்றார். செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த சீமான் தொடர்ந்து, `அது வளர்ச்சித் திட்டம்தானே…’ என்று நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, `உனக்கு அந்த வளர்ச்சி வேண்டும் என்றால் நீ போய் போராடி வாங்கிக்க…’ என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார் சீமான். அதையடுத்து SIR குறித்து மற்றொரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு, `SIR-ஐ மம்தா எதிர்க்கிறார். ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? SIR-ஐ செயல்படுத்தும் கட்சி எது ? அங்கன்வாடியில் வேலை செய்பவர்களையும், சத்துணவுக் கூடத்தில் வேலை செய்பவர்களையும் BLO-வாக நியமித்தது கணக்கெடுக்க அனுப்பியது யார்... தி.மு.க தானே…?’ என்றார் சீமான். அப்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிருபர், `தேர்தல் ஆணையம் சொல்வதைத்தானே அரசு செய்கிறது? அதேசமயம் தி.மு.க SIR-ஐ எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறதே?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, `அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா ? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்க வேண்டுமா ?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்த சீமான், அந்த செய்தியாளரை ஒருமையிலும், அருவருக்கத்தக்க தகாத வார்த்தையிலும் திட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து, `ஒரு மைக்கையும், கேமராவையும் எடுத்துட்டு வந்துட்டா நீ வெங்காயமா ?’ என்று கேட்டவாரே அந்த செய்தியாளரை அடிக்கப் பாய்கிறார். பத்திரிகையாளர்கள் புகார் அதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அந்த நிருபரை சூழ்ந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்கள். அத்துடன், `எங்கள் தலைவரிடம் இப்படியான கேள்விகளைக் கேட்டால் தீர்த்துக் கட்டிவிடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தனர். அதையடுத்து தாக்குதலுக்குள்ளான அந்த நிருபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நிருபர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று, பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.   செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்தது?

விகடன் 23 Nov 2025 8:11 pm

புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?

தமிழகம், புதுச்சேரியில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், `அந்த திட்டமே சரியில்லாத திட்டம். சாலைகளை சீரமைத்தாலே பயனுள்ளதாக இருக்கும்’ என்றார். செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த சீமான் தொடர்ந்து, `அது வளர்ச்சித் திட்டம்தானே…’ என்று நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, `உனக்கு அந்த வளர்ச்சி வேண்டும் என்றால் நீ போய் போராடி வாங்கிக்க…’ என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார் சீமான். அதையடுத்து SIR குறித்து மற்றொரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு, `SIR-ஐ மம்தா எதிர்க்கிறார். ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? SIR-ஐ செயல்படுத்தும் கட்சி எது ? அங்கன்வாடியில் வேலை செய்பவர்களையும், சத்துணவுக் கூடத்தில் வேலை செய்பவர்களையும் BLO-வாக நியமித்தது கணக்கெடுக்க அனுப்பியது யார்... தி.மு.க தானே…?’ என்றார் சீமான். அப்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிருபர், `தேர்தல் ஆணையம் சொல்வதைத்தானே அரசு செய்கிறது? அதேசமயம் தி.மு.க SIR-ஐ எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறதே?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, `அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா ? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்க வேண்டுமா ?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்த சீமான், அந்த செய்தியாளரை ஒருமையிலும், அருவருக்கத்தக்க தகாத வார்த்தையிலும் திட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து, `ஒரு மைக்கையும், கேமராவையும் எடுத்துட்டு வந்துட்டா நீ வெங்காயமா ?’ என்று கேட்டவாரே அந்த செய்தியாளரை அடிக்கப் பாய்கிறார். பத்திரிகையாளர்கள் புகார் அதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அந்த நிருபரை சூழ்ந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்கள். அத்துடன், `எங்கள் தலைவரிடம் இப்படியான கேள்விகளைக் கேட்டால் தீர்த்துக் கட்டிவிடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தனர். அதையடுத்து தாக்குதலுக்குள்ளான அந்த நிருபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நிருபர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று, பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.   செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்தது?

விகடன் 23 Nov 2025 8:11 pm

`மதுரைக்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனையெல்லாம் அதிமுக ஆட்சியில்தான் வரும்!'- ராஜன் செல்லப்பா

திமுக நிர்வாகி சுட்டுக் கொல்லப்படுகிறார், திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் வழக்கு என ஒரே நாளில் ஊடகங்களில் பல செய்திகள் வருகிறது என்று திமுக குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியுள்ளார். ராஜன் செல்லப்பா மதுரை அவனியாபுரத்தில் அதிமுக 54 ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பேசும்போது, திமுக செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டும், திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு என ஒரே நாளில் பல செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் ரோப் கார் அமைக்க கடந்த ஆண்டு 23 கோடி ஒதுக்கப்பட்டும் வேலைகள் இன்னும் நடைபெறவில்லை. மதுரை வரும் முதலமைச்சர், ஒரு லட்சம் பேருக்கு பட்டா கொடுக்கப் போகிறாராம், முதலில் நீண்டகாலமாக பட்டா இல்லாத இப்பகுதி மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுங்கள். மெட்ரோ ரயில் திட்டம் வராததற்கு யார் காரணம்? விரிவான திட்ட அறிக்கையில் சரியான தகவலை கொடுத்திருந்தால் மெட்ரோ திட்டம் மதுரைக்கு வந்திருக்கும், மத்திய அரசு கூடுதல் தகவல் கேட்டு அறிக்கையை திருப்பி அனுப்பி உள்ளது. அதிமுக ஆட்சி வந்த பின்னர் மதுரையில் மெட்ரோ திட்டம் வந்தே தீரும், சந்தேகம் வேண்டாம். எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில்தான் வருகிறது, மூன்றாண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னேன், ஆனால் ஆளுகின்ற வாய்ப்பு இழந்துவிட்டதால், அதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். எடப்பாடி முதலமைச்சராக வந்த பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும். இன்னும் இரண்டு மாதங்களில் விடுபட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க போகிறார்களா? இன்னும் சில மாதங்களில் ஆட்சி முடிவடையப் போகிறது, அப்புறம் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாது. காவல்துறையை மிரட்ட முடியாது, பொய் வழக்கு போட முடியாது, மோசமான திமுக அரசுக்கு முடிவு காலம் வந்துவிட்டது. திமுக ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி பீடத்தில் இருந்ததாக வரலாறு இல்லை ஆனால், அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்துள்ளது. திமுகவிடம் நிர்வாகத் திறமையில்லை, போட்டோ சூட் மட்டும் எடுக்கிறார்கள். முதல்வர் பாதுகாப்புடன் நடுரோட்டில் செல்கிறார், ரெடிமேடாக பத்து கல்லூரிப் பெண்களை வரவழைத்து வணக்கத்தை போட்டுக்கொண்டு செல்கிறார், மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதே அவருக்கு தெரியவில்லை. பெண்களுக்கு இலவச பேருந்து என்றார்கள், பல இடங்களில் பேருந்தே ஓடவில்லை, 10 பேருந்துதான் மதுரையில் ஓடுகிறது, அதுவும் ஓட்டை பேருந்தாக உள்ளது. தயவுசெய்து இந்த வாரத்திற்குள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து விடுங்கள், எங்கள் நிர்வாகிகள் அதற்கு உதவி பண்ணுவார்கள். சாதாரணமாகவே திமுக-காரர்கள் மக்களை மதிக்க மாட்டார்கள், அதிலும் ஓட்டு இல்லையென்றால் கொஞ்சமும் மதிக்க மாட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மாதம்தோறும் உதவித் தொகை கொடுப்போம் என்றார்கள், கொடுத்தார்களா? உள்ளூர் மாடுகளை மதிப்பதில்லை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது உள்ளூர்காரர்களுக்கு டோக்கன் கொடுப்பதில்லை. இதற்கெல்லாம் முடிவு கட்ட அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.

விகடன் 23 Nov 2025 8:00 pm

காரைக்குடி: போராட்டத்தால் பூட்டப்பட்ட மதுக்கடை - மீண்டும் திறக்கப்படலாமென மக்கள் அச்சம்!

கடந்த 14 ஆம் தேதி காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் 'டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் துயரம் அடைகிறார்கள்' என்று பள்ளி மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்த, துணை முதல்வரோ அம்மாணவியை பாராட்டி பரிசளித்தார். பூட்டப்பட்ட கடை இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி காரைக்குடி பர்மா காலனி பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து வருவதாக அரசு கூறினாலும் இன்னொருபுறம் புதிதாக மதுக்கடைகளைத் திறந்து கொண்டிருக்கிறார்கள். மதுக்கடை அமைப்பதற்கான விதிகளும் பல இடங்களில் மீறப்படுகிறது. கல்வியிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்கும் காரைக்குடியில், சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு நகரில் அதிகரித்து வரும் மதுக்கடைகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் அடர்த்தியாக வாழும் பர்மா காலனிப் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி புதிய மதுக்கடை திறக்கப்பட்டதை பார்த்து பொதுமக்கள் பொங்கி எழுந்தனர். அவர்களுடன் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய மக்கள் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்விக்கூடங்கள், குடியிருப்புகள் அதிகமுள்ள அப்பகுதியில் மதுக்கடையை திறக்கக் கூடாது என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு வந்த அதிகாரிகள் கடையை மூட உத்தரவிட்டனர். ஆனால் அதை மதிக்காமல் அன்று மாலையே கடைக்காரர் மது விற்பனை செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமன்றி இலவசமாகவும் மது விநியோகம் செய்தார். இதனால் கோபமான மக்கள் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி, ரேசன் அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைப்போம் என்று அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து சப் கலெக்டர், டி.எஸ்.பி ஆகியோர் வந்து நிலைமையை புரிந்துகொண்டு மதுக்கடைக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றனர். இதில் நம்பிக்கை இல்லாத மக்கள் தங்கள் பங்குக்கு ஒரு பூட்டை போட்டுள்ளனர். நிரந்தரமாக மதுக்கடையை அங்கிருந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிடாததாலும், கடை உரிமையாளர் ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிகளுடன் செல்வாக்குள்ள நபர் என்பதாலும் எப்போதும் வேண்டுமானலும் மதுக்கடை திறக்கப்படலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள்.

விகடன் 23 Nov 2025 7:37 pm

காரைக்குடி: போராட்டத்தால் பூட்டப்பட்ட மதுக்கடை - மீண்டும் திறக்கப்படலாமென மக்கள் அச்சம்!

கடந்த 14 ஆம் தேதி காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் 'டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் துயரம் அடைகிறார்கள்' என்று பள்ளி மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்த, துணை முதல்வரோ அம்மாணவியை பாராட்டி பரிசளித்தார். பூட்டப்பட்ட கடை இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி காரைக்குடி பர்மா காலனி பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து வருவதாக அரசு கூறினாலும் இன்னொருபுறம் புதிதாக மதுக்கடைகளைத் திறந்து கொண்டிருக்கிறார்கள். மதுக்கடை அமைப்பதற்கான விதிகளும் பல இடங்களில் மீறப்படுகிறது. கல்வியிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்கும் காரைக்குடியில், சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு நகரில் அதிகரித்து வரும் மதுக்கடைகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் அடர்த்தியாக வாழும் பர்மா காலனிப் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி புதிய மதுக்கடை திறக்கப்பட்டதை பார்த்து பொதுமக்கள் பொங்கி எழுந்தனர். அவர்களுடன் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய மக்கள் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்விக்கூடங்கள், குடியிருப்புகள் அதிகமுள்ள அப்பகுதியில் மதுக்கடையை திறக்கக் கூடாது என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு வந்த அதிகாரிகள் கடையை மூட உத்தரவிட்டனர். ஆனால் அதை மதிக்காமல் அன்று மாலையே கடைக்காரர் மது விற்பனை செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமன்றி இலவசமாகவும் மது விநியோகம் செய்தார். இதனால் கோபமான மக்கள் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி, ரேசன் அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைப்போம் என்று அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து சப் கலெக்டர், டி.எஸ்.பி ஆகியோர் வந்து நிலைமையை புரிந்துகொண்டு மதுக்கடைக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றனர். இதில் நம்பிக்கை இல்லாத மக்கள் தங்கள் பங்குக்கு ஒரு பூட்டை போட்டுள்ளனர். நிரந்தரமாக மதுக்கடையை அங்கிருந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிடாததாலும், கடை உரிமையாளர் ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிகளுடன் செல்வாக்குள்ள நபர் என்பதாலும் எப்போதும் வேண்டுமானலும் மதுக்கடை திறக்கப்படலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள்.

விகடன் 23 Nov 2025 7:37 pm

`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!' - பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தெளிவாக அறிவிக்கப்படும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று நான் பேசியதை தவெக தலைவர் விஜய்யை பற்றி பேசியதாக சிலர் திரித்து விட்டனர். அவர் மட்டும்தான் சமீபத்தில் கட்சி தொடஙகியுள்ளாரா? இன்னும் சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜய் எங்கள் வீட்டுப் பையன் என்று எல்லா இடஙகளிலும் கூறி வருகிறேன். தற்போது அவர் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். அவர் தன்னை நிரூபித்து சாதிக்க வேண்டும். கரூர் சம்பவம் எல்லோர் மனதிலும் நீங்காத சோக வடுவை ஏற்படுத்தி உள்ளது. இனி எப்படி அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்க உள்ளோம். வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் பிரதிபலிக்குமா என்று என்னால் சொல்ல முடியாது. பீகாரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக ப.சிதம்பரம் கூறுகிறார், தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெறுகிறீர்கள், அதை மறுக்க முடியுமா? இந்த தேர்தல் நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும், வாக்குத் திருட்டு நடக்கக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.

விகடன் 23 Nov 2025 7:30 pm

`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!' - பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தெளிவாக அறிவிக்கப்படும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று நான் பேசியதை தவெக தலைவர் விஜய்யை பற்றி பேசியதாக சிலர் திரித்து விட்டனர். அவர் மட்டும்தான் சமீபத்தில் கட்சி தொடஙகியுள்ளாரா? இன்னும் சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜய் எங்கள் வீட்டுப் பையன் என்று எல்லா இடஙகளிலும் கூறி வருகிறேன். தற்போது அவர் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். அவர் தன்னை நிரூபித்து சாதிக்க வேண்டும். கரூர் சம்பவம் எல்லோர் மனதிலும் நீங்காத சோக வடுவை ஏற்படுத்தி உள்ளது. இனி எப்படி அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்க உள்ளோம். வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் பிரதிபலிக்குமா என்று என்னால் சொல்ல முடியாது. பீகாரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக ப.சிதம்பரம் கூறுகிறார், தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெறுகிறீர்கள், அதை மறுக்க முடியுமா? இந்த தேர்தல் நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும், வாக்குத் திருட்டு நடக்கக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.

விகடன் 23 Nov 2025 7:30 pm

`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!' - பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தெளிவாக அறிவிக்கப்படும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று நான் பேசியதை தவெக தலைவர் விஜய்யை பற்றி பேசியதாக சிலர் திரித்து விட்டனர். அவர் மட்டும்தான் சமீபத்தில் கட்சி தொடஙகியுள்ளாரா? இன்னும் சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜய் எங்கள் வீட்டுப் பையன் என்று எல்லா இடஙகளிலும் கூறி வருகிறேன். தற்போது அவர் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். அவர் தன்னை நிரூபித்து சாதிக்க வேண்டும். கரூர் சம்பவம் எல்லோர் மனதிலும் நீங்காத சோக வடுவை ஏற்படுத்தி உள்ளது. இனி எப்படி அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்க உள்ளோம். வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் பிரதிபலிக்குமா என்று என்னால் சொல்ல முடியாது. பீகாரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக ப.சிதம்பரம் கூறுகிறார், தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெறுகிறீர்கள், அதை மறுக்க முடியுமா? இந்த தேர்தல் நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும், வாக்குத் திருட்டு நடக்கக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.

விகடன் 23 Nov 2025 7:30 pm

TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் தவெகவினரை திமுகவினர் மற்றும் சில கட்சிகள் 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு விமர்சிப்பது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் விஜய். இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், நம்ம தவெக இளம் தோழர்கள், GEN Z கிட்ஸ் தவெக தோழர்களை எல்லாம் ‘தற்குறிகள்’ என சொல்லி நல்லா வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் அவர்கள் தற்குறிகள் அல்ல, நம்ம பசங்க - திமுக எம்.எல்.ஏ எழிலன் சொல்லும் லாஜிக்! சமீபத்துல ‘அறிவுத் திருவிழா’னு ஒன்னு நடத்துனாங்க. சாரி, அது ‘அவதூறு திருவிழா’. அதுல இப்போ, ‘அவங்க தற்குறிகள் இல்லை. அவங்கள அப்படி சொல்லாதீங்க. அங்க ஒன்னும் சங்கிகள் கிடையாது’னு ஒரு குரல். அவங்க கட்சியோட அறிவுக் கண்ணை திறந்து வைக்கிற மாதிரி பேசியிருக்கிறார் அவங்களோட எம்.எல்.ஏ. யாருடா அதுனு பார்த்தா, அவர் நம்ம தவெக கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாள் அவர்களோட சொந்தக்காரராம். அவர் நமக்கு ஆதரவாகப் பேசுகிறார். அந்த ஆதரவுக் குரல் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுலையும் இனி எதிரொலிக்கும். சும்மா பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டுதான்.  ‘மர்மயோகி’ படத்துல எம்.ஜி.ஆர் ‘குறி வைத்தால் தவறவிடமாட்டேன். தவறு என்றால் குறியே வைக்க மாட்டேன்’ என்பார். அப்படித்தான் இந்த விஜய்யும். ‘ஏன்டா இந்த விஜய்யை தொட்டோம். ஏன்டா விஜய் கூட இருக்க அந்த மக்களை தொட்டோம்’ என நினைச்சு நினைச்சு வருத்தப்பட போறாங்க.  அரசியல் புரிதல் நமக்கு இல்லைனு சொல்றாங்க. நான் ஒன்னு கேட்குறேன், ‘மக்கள் எல்லாரும் உங்களுக்குத் தற்குறிகளா?’.  எங்களுக்கு ஓட்டு போடுகிற மக்கள் தற்குறிகள் என்றால், அதே மக்கள்தானே இவ்வளவுநாள் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. அவங்க தற்குறிகளா? மக்களுக்கு நீங்க கொடுக்கிற மரியாதை இதுதானா? `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்! இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்க அரசியலையே கேள்விக் குறியாக்க போறாங்க. இவங்க எல்லாம் தற்குறிகள் இல்லை, தமிழ்நாட்டின் ஆச்சர்யக் குறிகள். மாற்றத்திற்கான அறிகுறிகள்.  சும்மா லாஜிக்கே இல்லாம ‘தற்குறி தற்குறி’னு சொல்லிட்டு இருக்கக் கூடாது என்று 'தவெக' வினரை 'தற்குறிகள்' என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துப் பேசியிருக்கிறார் விஜய்.

விகடன் 23 Nov 2025 3:08 pm

TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் தவெகவினரை திமுகவினர் மற்றும் சில கட்சிகள் 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு விமர்சிப்பது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் விஜய். இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், நம்ம தவெக இளம் தோழர்கள், GEN Z கிட்ஸ் தவெக தோழர்களை எல்லாம் ‘தற்குறிகள்’ என சொல்லி நல்லா வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் அவர்கள் தற்குறிகள் அல்ல, நம்ம பசங்க - திமுக எம்.எல்.ஏ எழிலன் சொல்லும் லாஜிக்! சமீபத்துல ‘அறிவுத் திருவிழா’னு ஒன்னு நடத்துனாங்க. சாரி, அது ‘அவதூறு திருவிழா’. அதுல இப்போ, ‘அவங்க தற்குறிகள் இல்லை. அவங்கள அப்படி சொல்லாதீங்க. அங்க ஒன்னும் சங்கிகள் கிடையாது’னு ஒரு குரல். அவங்க கட்சியோட அறிவுக் கண்ணை திறந்து வைக்கிற மாதிரி பேசியிருக்கிறார் அவங்களோட எம்.எல்.ஏ. யாருடா அதுனு பார்த்தா, அவர் நம்ம தவெக கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாள் அவர்களோட சொந்தக்காரராம். அவர் நமக்கு ஆதரவாகப் பேசுகிறார். அந்த ஆதரவுக் குரல் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுலையும் இனி எதிரொலிக்கும். சும்மா பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டுதான்.  ‘மர்மயோகி’ படத்துல எம்.ஜி.ஆர் ‘குறி வைத்தால் தவறவிடமாட்டேன். தவறு என்றால் குறியே வைக்க மாட்டேன்’ என்பார். அப்படித்தான் இந்த விஜய்யும். ‘ஏன்டா இந்த விஜய்யை தொட்டோம். ஏன்டா விஜய் கூட இருக்க அந்த மக்களை தொட்டோம்’ என நினைச்சு நினைச்சு வருத்தப்பட போறாங்க.  அரசியல் புரிதல் நமக்கு இல்லைனு சொல்றாங்க. நான் ஒன்னு கேட்குறேன், ‘மக்கள் எல்லாரும் உங்களுக்குத் தற்குறிகளா?’.  எங்களுக்கு ஓட்டு போடுகிற மக்கள் தற்குறிகள் என்றால், அதே மக்கள்தானே இவ்வளவுநாள் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. அவங்க தற்குறிகளா? மக்களுக்கு நீங்க கொடுக்கிற மரியாதை இதுதானா? `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்! இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்க அரசியலையே கேள்விக் குறியாக்க போறாங்க. இவங்க எல்லாம் தற்குறிகள் இல்லை, தமிழ்நாட்டின் ஆச்சர்யக் குறிகள். மாற்றத்திற்கான அறிகுறிகள்.  சும்மா லாஜிக்கே இல்லாம ‘தற்குறி தற்குறி’னு சொல்லிட்டு இருக்கக் கூடாது என்று 'தவெக' வினரை 'தற்குறிகள்' என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துப் பேசியிருக்கிறார் விஜய்.

விகடன் 23 Nov 2025 3:08 pm

`எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் 2026ம் ஆண்டு தேர்தலில் வென்றால் தவெக என்னென்ன செய்யும் என்றும் அதன் வாக்குறுதிகள் குறித்தும் பேசியிருக்கிறார் விஜய். இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், நம்ம ஆட்சிக்கு வந்தால்…. அதென்ன வந்தால். நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி ‘தவெக; வை ஆட்சி அமைக்க வைப்பாங்க. அப்படி மக்கள் அமைக்கும் நம்ம ஆட்சியில மக்களுக்கான நல்லது மட்டுமே செய்வோம். தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் எங்களுடைய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படை இவைதான் எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கணும். கார் இருக்கணும் என்பது எதிர்கால லட்சியம். அதுக்கான வசதி வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் உண்டாக்கணும். ஒவ்வொரு வீட்ல இருக்குறவங்களும் குறைந்தபட்சம் டிகிரி படிச்சிருக்கிறத உறுதி செய்வோம். ஒவ்வொரு வீட்டுலையும் குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது நிரந்தர வருமானம் இருக்கணும். அதுக்கான வேலைவாய்ப்பு, கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். எந்த பயமுமின்றி மக்கள் அரசு மருத்துவமனைக்குப் போகிற மாதிரி மாற்ற வேண்டும். பருவமழை காலத்துல மக்களும், விவசாயமும் பாதுகாக்கப்படனும். அதுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான பாதுகாப்புத் திட்டத்த உருவாக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சட்ட ஒழுங்கை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்; எல்லாருக்கும் பவர் ஃபுல்லான பாதுகாப்பை உண்டாக்க வேண்டும்.  நம்ம வீட்டு பெண்கள் பயமே இல்லாமல் சமூகத்தில் வாழ வேண்டும். தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்! இவையெல்லாம் எப்படி செயல்படுத்த போறோம் என்கிற விவரத்தை தவெக தேர்தல் வாக்குறுதியில் விரிவாக, தெளிவாகச் சொல்வோம். நல்லது செய்வது மட்டும்தான் தவெகவின் அஜெண்டா. வேறெந்த அஜெண்டாவுமில்லை எங்களுக்கு. இந்த விஜய் ஒன்னு சொன்னா அதைச் செய்யாமல் விடமாட்டான். அது மக்களுக்கும் நல்லா தெரியும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Nov 2025 2:49 pm

`எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் 2026ம் ஆண்டு தேர்தலில் வென்றால் தவெக என்னென்ன செய்யும் என்றும் அதன் வாக்குறுதிகள் குறித்தும் பேசியிருக்கிறார் விஜய். இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், நம்ம ஆட்சிக்கு வந்தால்…. அதென்ன வந்தால். நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி ‘தவெக; வை ஆட்சி அமைக்க வைப்பாங்க. அப்படி மக்கள் அமைக்கும் நம்ம ஆட்சியில மக்களுக்கான நல்லது மட்டுமே செய்வோம். தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் எங்களுடைய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படை இவைதான் எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கணும். கார் இருக்கணும் என்பது எதிர்கால லட்சியம். அதுக்கான வசதி வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் உண்டாக்கணும். ஒவ்வொரு வீட்ல இருக்குறவங்களும் குறைந்தபட்சம் டிகிரி படிச்சிருக்கிறத உறுதி செய்வோம். ஒவ்வொரு வீட்டுலையும் குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது நிரந்தர வருமானம் இருக்கணும். அதுக்கான வேலைவாய்ப்பு, கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். எந்த பயமுமின்றி மக்கள் அரசு மருத்துவமனைக்குப் போகிற மாதிரி மாற்ற வேண்டும். பருவமழை காலத்துல மக்களும், விவசாயமும் பாதுகாக்கப்படனும். அதுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான பாதுகாப்புத் திட்டத்த உருவாக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சட்ட ஒழுங்கை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்; எல்லாருக்கும் பவர் ஃபுல்லான பாதுகாப்பை உண்டாக்க வேண்டும்.  நம்ம வீட்டு பெண்கள் பயமே இல்லாமல் சமூகத்தில் வாழ வேண்டும். தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்! இவையெல்லாம் எப்படி செயல்படுத்த போறோம் என்கிற விவரத்தை தவெக தேர்தல் வாக்குறுதியில் விரிவாக, தெளிவாகச் சொல்வோம். நல்லது செய்வது மட்டும்தான் தவெகவின் அஜெண்டா. வேறெந்த அஜெண்டாவுமில்லை எங்களுக்கு. இந்த விஜய் ஒன்னு சொன்னா அதைச் செய்யாமல் விடமாட்டான். அது மக்களுக்கும் நல்லா தெரியும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Nov 2025 2:49 pm

கோவை செம்மொழி பூங்கா விதிமீறல் புகார் - டென்ஷன் ஆன நேரு, செந்தில் பாலாஜி

கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.212 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. 1,000  பேர் அமரக்கூடிய அரங்கம், நூற்றுக்கணக்கான தாவர வகைகள், செயற்கை நீர் வீழ்ச்சியுடன் மலைக் குன்று, வன விலங்குகள் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. கோவை செம்மொழி பூங்கா இந்த பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற நவம்பர் 25-ம் தேதி திறந்துவைக்கிறார். பெரும்பாலான பணிகள் முடிவடையாத நிலையில், தேர்தல் காரணமாக அவசர அவசரமாக பூங்கா திறக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள், ஊழியர்களையும் செம்மொழி பூங்கா பணிகளுக்கு முடுக்கிவிட்டுள்ளதாகவும்,  விதிமீறல் நடந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள். இந்நிலையில் செம்மொழி பூங்கா பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். நேரு செந்தில் பாலாஜி ஆய்வு அப்போது செய்தியாளர்கள் அந்தப் புகாரை பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு நேரு மற்றும் செந்தில் பாலாஜி பதில் அளிக்க முடியாமல் தடுமாறினார்கள். “பசுமை பரப்பளவு குறைவாக உள்ளதோ?”, “டெண்டர் விதிமீறல் நடந்துள்ளதாக கூறுகிறார்களே?”, “அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்களே?” என்று அடுத்தடுத்து கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இதில் கடுப்பான நேரு, “வேலை மெதுவாக இருந்தால் மந்தம் என்கிறீர்கள், அவசரமாக செய்தால் முறைகேடு என்கிறீர்கள். கோவை செம்மொழி பூங்கா ஏங்க சும்மா எங்களையே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.” என்றார். செந்தில் பாலாஜி, “கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் கேட்கக் கூடாது.”  என்று டென்ஷன் ஆகி செய்தியாளர் சந்திப்பை முடித்து சென்றனர்.

விகடன் 23 Nov 2025 2:28 pm

TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்!

கரூர் சம்பவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் மக்களை சந்தித்திருக்கிறார் விஜய். காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியின் உள்ளரங்கில் நடந்த கூட்டத்தில் அரைமணி நேரம் மக்கள் முன்பு பேசியிருக்கிறார். திமுக எதிர்ப்பை இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கிறார். 2026 இல் ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார். Vijay திமுகவுடன் கூட்டணி பேச காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்திருக்கும் நிலையில், அதிமுகவையும் பாஜகவையும் விமர்சிப்பதை தவிர்த்திருக்கிறார். விஜய்யின் காஞ்சி மக்கள் சந்திப்பின் ஹைலைட்ஸூம் சொதப்பல்களும் என்ன? கரூர் சம்பவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு விஜய் வெளியுலகுக்கு தலைகாட்டாமல் இருந்தார். கட்சியின் செயல்பாடுகளும் முழுமையாக முடங்கியிருந்தது. சரியாக ஒரு மாதம் கழித்து கரூர் குடும்பத்தினரைச் சந்தித்தார். நவம்பர் 5 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழுவையும் நடத்தியிருந்தார். இதைத் தாண்டி பெரிதாக எந்தச் செயல்பாடும் இல்லை. இந்நிலையில்தான் திடீரென காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தனர். Vijay கரூருக்கு பிறகு உடனடியாக வெளி மாவட்டங்களுக்கு செல்லாமல், சென்னைக்கு அருகே இருக்கும் மாவட்டங்களிலிருந்து மக்கள் சந்திப்புகளை தொடங்கலாம் என்றே விஜய்யின் வியூக தரப்பு திட்டமிட்டது. அதன்படியே தவெகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் கல்விப் புள்ளியின் கல்லூரி ஒன்றை மக்கள் சந்திப்புக்காக தேர்வு செய்தனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் தலைமையில் கட்சி சார்பில் ஒரு குழுவை அமைத்தனர். இந்த குழு கட்சியின் தொண்டர் அணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சார்ந்து பயிற்சியளிப்பதுதான் திட்டம். அதன்படி கடந்த நான்கு நாட்களாக காஞ்சியில் உள்ள அதே தனியார் கல்லூரியில் தொண்டரணிக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொண்டரணியினர்தான் இன்றைய நிகழ்ச்சிக்கு பாதுகாப்பையும் வழங்கியிருக்கின்றனர். மதிமுக, தேமுதிகவுக்கு இருந்ததைப் போல ஒரு தொண்டரணியை களப்பயிற்சியோடு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்பது தவெகவின் திட்டம். அதற்கான தொடக்கமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். Vijay காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயிகள்,நெசவாளர்கள், மாணவர்கள் என பல தரப்பினருக்கும் நிர்வாகிகள் கடந்த இரண்டு நாட்களாக பாஸை விநியோகித்து நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கின்றனர். நிகழ்ச்சிக்கு கைக்குழந்தையோடு வந்த பெண்களை ஆனந்த் வழிமறுத்து கட்டாயமாக குழந்தையோடு வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். கரூர் சம்பவம் கொடுத்த படிப்பினை இது. அதேமாதிரி, நிகழ்வு காலை 11 மணிக்கு தொடங்குமென தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய்யும் சரியாக 11 மணிக்கு நிகழ்விடத்தை அடைந்துவிட்டார். 11:10 மணிக்கு ராஜ்மோகன் மைக்கை பிடித்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க விஜய் மேடையேறிவிட்டார். கரூரில் விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்தது அவர்மீது கடும் விமர்சனங்களை உண்டாக்கியது. அதனாலயே நேர விஷயத்தில் மிக உன்னிப்பாக கவனமாக இருந்திருக்கிறார் விஜய். கிட்டத்தட்ட 26 நிமிடங்களுக்கு விஜய் பேசியிருந்தார். காஞ்சிபுரத்தையும் அண்ணாவையும் கனெக்ட் செய்து பேச்சை ஆரம்பித்தவர், அண்ணா தொடங்கிய அந்த கட்சியின் இப்போதைய நிலை எப்படியிருக்கிறது என நேரடியாக திமுகவை அட்டாக் செய்ய ஆரம்பித்தார். பொய் சொல்லி திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என்றார். பாலாறு மணற்கொள்ளை, காஞ்சி பேருந்து நிலையம், காஞ்சி நெசவாளர்கள் பிரச்னை போன்றவற்றை முன்வைத்தும் திமுகவை கடுமையாக அட்டாக் செய்தார். திமுகவை குடும்பக் கட்சி, வாரிசு கட்சி என தவெக ஆரம்பத்திலிருந்தே கடுமையாக விமர்சித்து வருகிறது. 'எங்க கட்சி ஒன்னும் சங்கரமடம் கிடையாதுன்னு சொன்னது யாரு...' என்று முதல்வரின் குடும்பத்துக்கு எதிராக நேரடியாக திரி கொளுத்தினார். அதேமாதிரி, விஜய்யின் அந்த சனிக்கிழமை சந்திப்புகளில் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அதாவது அந்த வாரம் முழுவதும் விஜய்யின் மீது விழும் விமர்சனங்களுக்கு அந்த பிரசாரத்தில் பதில் கொடுப்பார். அதே டெம்ப்ளேட்தான் இங்கேயும். எம்.ஜி.ஆரையும் கூத்தாடிதான்னு சொன்னீங்க என தன்னை எம்.ஜி.ஆரோடு ஒப்புமைப்படுத்திப் பேசினார். Vijay தவெகவினர் 'தற்குறி' என இணையதளங்களில் விமர்சிக்கப்படுவதையும், அதற்கு எதிராக திமுக எம்.எல்.ஏ எழிலன் பேசியதையும் குறிப்பிட்டு அதற்கும் பதில் கூறினார். 26 நிமிடம் முழுவதும் திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்திருந்தார். மதுரை மாநாட்டில் ஸ்டாலின் அங்கிள் என நக்கலாக பேசியிருந்தார். அதற்கு கொஞ்சம் கலவையான விமர்சனம் வரவே அடுத்தக் கூட்டத்திலிருந்தே ஸ்டாலின் சார் என மாற்றிக் கொண்டார். ஆனால், இந்தக் கூட்டத்தில் மீண்டும் 'ஸ்டாலின் அங்கிள்!' என நக்கல் தொனியில் பேசியிருந்தார். கடைசியில் வழக்கம்போல ரெண்டே ரெண்டு பேருக்கு இடையிலதான் போட்டியே என முடித்தார். இதன்மூலம் திமுக தங்களை நோக்கி இன்னும் கடுமையாக எதிர்வினையாற்றும், அதன்வழி திமுக vs தவெக என களத்தை மாற்ற வேண்டும் என விஜய் நினைக்கிறார். `என்னை மன்னிச்சிருங்க; சூழல் சரியில்ல...' - கரூர் குடும்பத்தினரிடம் விஜய் உருக்கம்! 2026 இல் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றார். அரசியல் எதிரி, கொள்கை எதிரி என இரண்டிலும் தெளிவாக இருக்கிறோம் என்றார். ஆனால் அதிமுக, பாஜகவை பெயருக்கு கூட எங்கேயும் விமர்சிக்கவில்லை. அண்ணா காலத்தில் கட்டிய காஞ்சி பேருந்து நிலையத்தை இன்னும் புதுப்பிக்கவில்லை என்றார். ஆனால், இடையில் எத்தனையோ ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்ததை வசதியாக மறந்துவிட்டார். 'பாசிச பாஜக' என்றும் எங்கேயும் பேசவில்லை. S.I.R க்கு எதிராக கட்சியினரை ஆர்ப்பாட்டமெல்லாம் செய்ய வைத்தார். அதுகுறித்தும் இங்கே வாய்திறக்கவில்லை. TVK நேற்றுதான் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்காக காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்து விஜய்யுடன் கூட்டணி பேசவில்லை என உறுதியாக தெரியப்படுத்தியிருக்கிறது. பீகார் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸின் பார்வை நம் பக்கமாக திரும்பும் என பனையூர் வட்டாரத்தினர் காத்திருந்தனர். பீகார் தேர்தல் காங்கிரஸ் பேரிடியாக அமையவே, அறிவாலயத்தோடு மேலும் நெருக்கமாகிவிட்டனர் கதர் சட்டையினர். இந்த நேரத்தில் நடக்கும் நிகழ்வில் விஜய் அதிமுக, பாஜகவை விமர்சிக்காமல் போவதை கட்டாயம் கவனத்தில் கொண்டேதான் ஆக வேண்டும். டிசம்பருக்கு பிறகுதான் கூட்டணி குறித்த தெளிவான உறுதியான முடிவை எடுப்போம் என தவெகவின் முக்கிய நிர்வாகிகளும் ஊதுபத்தி கொளுத்துகின்றனர். TVK உள்ளரங்கில் நடக்கும் மக்கள் சந்திப்புகளில் கட்சித் தலைவர்கள் மக்களுடன் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிவது வழக்கம். தேர்தலின் போது சம்பிரதாயத்துக்காவது அதை செய்வார்கள். ஆனால், விஜய் அதையும் செய்யவில்லை. 2000 பேரை திரட்டி உட்கார வைத்து அவர்கள் முன் வழக்கம் போல ஆவேச வசனங்களை மட்டும் பேசிவிட்டு சென்றிருக்கிறார். அவர் பேசுவதற்கு கைத்தட்டி விசிலடிப்பதற்காக மட்டுமே அந்த மக்களை திரட்டி வைத்ததைப் போல இருந்தது. ஆனால் மக்களிடம் செல், மக்களிடம் வாழ் என்கிற வசனத்தை மட்டும் சரியாக பேசிவிடுகிறார். TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள்

விகடன் 23 Nov 2025 2:01 pm

TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்!

கரூர் சம்பவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் மக்களை சந்தித்திருக்கிறார் விஜய். காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியின் உள்ளரங்கில் நடந்த கூட்டத்தில் அரைமணி நேரம் மக்கள் முன்பு பேசியிருக்கிறார். திமுக எதிர்ப்பை இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கிறார். 2026 இல் ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார். Vijay திமுகவுடன் கூட்டணி பேச காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்திருக்கும் நிலையில், அதிமுகவையும் பாஜகவையும் விமர்சிப்பதை தவிர்த்திருக்கிறார். விஜய்யின் காஞ்சி மக்கள் சந்திப்பின் ஹைலைட்ஸூம் சொதப்பல்களும் என்ன? கரூர் சம்பவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு விஜய் வெளியுலகுக்கு தலைகாட்டாமல் இருந்தார். கட்சியின் செயல்பாடுகளும் முழுமையாக முடங்கியிருந்தது. சரியாக ஒரு மாதம் கழித்து கரூர் குடும்பத்தினரைச் சந்தித்தார். நவம்பர் 5 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழுவையும் நடத்தியிருந்தார். இதைத் தாண்டி பெரிதாக எந்தச் செயல்பாடும் இல்லை. இந்நிலையில்தான் திடீரென காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தனர். Vijay கரூருக்கு பிறகு உடனடியாக வெளி மாவட்டங்களுக்கு செல்லாமல், சென்னைக்கு அருகே இருக்கும் மாவட்டங்களிலிருந்து மக்கள் சந்திப்புகளை தொடங்கலாம் என்றே விஜய்யின் வியூக தரப்பு திட்டமிட்டது. அதன்படியே தவெகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் கல்விப் புள்ளியின் கல்லூரி ஒன்றை மக்கள் சந்திப்புக்காக தேர்வு செய்தனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் தலைமையில் கட்சி சார்பில் ஒரு குழுவை அமைத்தனர். இந்த குழு கட்சியின் தொண்டர் அணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சார்ந்து பயிற்சியளிப்பதுதான் திட்டம். அதன்படி கடந்த நான்கு நாட்களாக காஞ்சியில் உள்ள அதே தனியார் கல்லூரியில் தொண்டரணிக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொண்டரணியினர்தான் இன்றைய நிகழ்ச்சிக்கு பாதுகாப்பையும் வழங்கியிருக்கின்றனர். மதிமுக, தேமுதிகவுக்கு இருந்ததைப் போல ஒரு தொண்டரணியை களப்பயிற்சியோடு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்பது தவெகவின் திட்டம். அதற்கான தொடக்கமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். Vijay காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயிகள்,நெசவாளர்கள், மாணவர்கள் என பல தரப்பினருக்கும் நிர்வாகிகள் கடந்த இரண்டு நாட்களாக பாஸை விநியோகித்து நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கின்றனர். நிகழ்ச்சிக்கு கைக்குழந்தையோடு வந்த பெண்களை ஆனந்த் வழிமறுத்து கட்டாயமாக குழந்தையோடு வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். கரூர் சம்பவம் கொடுத்த படிப்பினை இது. அதேமாதிரி, நிகழ்வு காலை 11 மணிக்கு தொடங்குமென தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய்யும் சரியாக 11 மணிக்கு நிகழ்விடத்தை அடைந்துவிட்டார். 11:10 மணிக்கு ராஜ்மோகன் மைக்கை பிடித்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க விஜய் மேடையேறிவிட்டார். கரூரில் விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்தது அவர்மீது கடும் விமர்சனங்களை உண்டாக்கியது. அதனாலயே நேர விஷயத்தில் மிக உன்னிப்பாக கவனமாக இருந்திருக்கிறார் விஜய். கிட்டத்தட்ட 26 நிமிடங்களுக்கு விஜய் பேசியிருந்தார். காஞ்சிபுரத்தையும் அண்ணாவையும் கனெக்ட் செய்து பேச்சை ஆரம்பித்தவர், அண்ணா தொடங்கிய அந்த கட்சியின் இப்போதைய நிலை எப்படியிருக்கிறது என நேரடியாக திமுகவை அட்டாக் செய்ய ஆரம்பித்தார். பொய் சொல்லி திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என்றார். பாலாறு மணற்கொள்ளை, காஞ்சி பேருந்து நிலையம், காஞ்சி நெசவாளர்கள் பிரச்னை போன்றவற்றை முன்வைத்தும் திமுகவை கடுமையாக அட்டாக் செய்தார். திமுகவை குடும்பக் கட்சி, வாரிசு கட்சி என தவெக ஆரம்பத்திலிருந்தே கடுமையாக விமர்சித்து வருகிறது. 'எங்க கட்சி ஒன்னும் சங்கரமடம் கிடையாதுன்னு சொன்னது யாரு...' என்று முதல்வரின் குடும்பத்துக்கு எதிராக நேரடியாக திரி கொளுத்தினார். அதேமாதிரி, விஜய்யின் அந்த சனிக்கிழமை சந்திப்புகளில் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அதாவது அந்த வாரம் முழுவதும் விஜய்யின் மீது விழும் விமர்சனங்களுக்கு அந்த பிரசாரத்தில் பதில் கொடுப்பார். அதே டெம்ப்ளேட்தான் இங்கேயும். எம்.ஜி.ஆரையும் கூத்தாடிதான்னு சொன்னீங்க என தன்னை எம்.ஜி.ஆரோடு ஒப்புமைப்படுத்திப் பேசினார். Vijay தவெகவினர் 'தற்குறி' என இணையதளங்களில் விமர்சிக்கப்படுவதையும், அதற்கு எதிராக திமுக எம்.எல்.ஏ எழிலன் பேசியதையும் குறிப்பிட்டு அதற்கும் பதில் கூறினார். 26 நிமிடம் முழுவதும் திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்திருந்தார். மதுரை மாநாட்டில் ஸ்டாலின் அங்கிள் என நக்கலாக பேசியிருந்தார். அதற்கு கொஞ்சம் கலவையான விமர்சனம் வரவே அடுத்தக் கூட்டத்திலிருந்தே ஸ்டாலின் சார் என மாற்றிக் கொண்டார். ஆனால், இந்தக் கூட்டத்தில் மீண்டும் 'ஸ்டாலின் அங்கிள்!' என நக்கல் தொனியில் பேசியிருந்தார். கடைசியில் வழக்கம்போல ரெண்டே ரெண்டு பேருக்கு இடையிலதான் போட்டியே என முடித்தார். இதன்மூலம் திமுக தங்களை நோக்கி இன்னும் கடுமையாக எதிர்வினையாற்றும், அதன்வழி திமுக vs தவெக என களத்தை மாற்ற வேண்டும் என விஜய் நினைக்கிறார். `என்னை மன்னிச்சிருங்க; சூழல் சரியில்ல...' - கரூர் குடும்பத்தினரிடம் விஜய் உருக்கம்! 2026 இல் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றார். அரசியல் எதிரி, கொள்கை எதிரி என இரண்டிலும் தெளிவாக இருக்கிறோம் என்றார். ஆனால் அதிமுக, பாஜகவை பெயருக்கு கூட எங்கேயும் விமர்சிக்கவில்லை. அண்ணா காலத்தில் கட்டிய காஞ்சி பேருந்து நிலையத்தை இன்னும் புதுப்பிக்கவில்லை என்றார். ஆனால், இடையில் எத்தனையோ ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்ததை வசதியாக மறந்துவிட்டார். 'பாசிச பாஜக' என்றும் எங்கேயும் பேசவில்லை. S.I.R க்கு எதிராக கட்சியினரை ஆர்ப்பாட்டமெல்லாம் செய்ய வைத்தார். அதுகுறித்தும் இங்கே வாய்திறக்கவில்லை. TVK நேற்றுதான் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்காக காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்து விஜய்யுடன் கூட்டணி பேசவில்லை என உறுதியாக தெரியப்படுத்தியிருக்கிறது. பீகார் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸின் பார்வை நம் பக்கமாக திரும்பும் என பனையூர் வட்டாரத்தினர் காத்திருந்தனர். பீகார் தேர்தல் காங்கிரஸ் பேரிடியாக அமையவே, அறிவாலயத்தோடு மேலும் நெருக்கமாகிவிட்டனர் கதர் சட்டையினர். இந்த நேரத்தில் நடக்கும் நிகழ்வில் விஜய் அதிமுக, பாஜகவை விமர்சிக்காமல் போவதை கட்டாயம் கவனத்தில் கொண்டேதான் ஆக வேண்டும். டிசம்பருக்கு பிறகுதான் கூட்டணி குறித்த தெளிவான உறுதியான முடிவை எடுப்போம் என தவெகவின் முக்கிய நிர்வாகிகளும் ஊதுபத்தி கொளுத்துகின்றனர். TVK உள்ளரங்கில் நடக்கும் மக்கள் சந்திப்புகளில் கட்சித் தலைவர்கள் மக்களுடன் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிவது வழக்கம். தேர்தலின் போது சம்பிரதாயத்துக்காவது அதை செய்வார்கள். ஆனால், விஜய் அதையும் செய்யவில்லை. 2000 பேரை திரட்டி உட்கார வைத்து அவர்கள் முன் வழக்கம் போல ஆவேச வசனங்களை மட்டும் பேசிவிட்டு சென்றிருக்கிறார். அவர் பேசுவதற்கு கைத்தட்டி விசிலடிப்பதற்காக மட்டுமே அந்த மக்களை திரட்டி வைத்ததைப் போல இருந்தது. ஆனால் மக்களிடம் செல், மக்களிடம் வாழ் என்கிற வசனத்தை மட்டும் சரியாக பேசிவிடுகிறார். TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள்

விகடன் 23 Nov 2025 2:01 pm

பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் இந்த மக்கள் சந்திப்பு என்பதால் பலத்த பாதுகாப்புடன் சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் தொழில்நுட்ப தனியார் கல்லூரி வளாகத்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பவுன்சர்கள் பணியில் நிறுத்தப்பட்டு இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. விஜய் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் விஜய் சொல்லும் காஞ்சிபுர பகுதி பிரச்னைகள் இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் காஞ்சிபுரம் பகுதியில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசியிருக்கும் விஜய், நமக்கு எப்பவும் மக்கள் பிரச்னைதான் முக்கியம். காஞ்சிபுரத்தில் மக்கள் பிரச்னை நிறைய இருக்கு. பாலாறு மணல் கொள்ளை பாலாறு ஆற்றை கொள்ளையடித்து, சுரண்டி அழிச்சுட்டாங்க. இதை ஆதாரத்தோடுதான் சொல்றேன். சட்டம் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி 22லட்சத்து 70 ஆயிரம் யூனிட் ஆற்று மணல் கொள்ளை அடிச்சிருக்காங்க. இதுல 4,730கோடி கொள்ளை அடிச்சிருக்காங்க. இதற்கான ஆதாரம் அமலாக்கத்துறையிடமே இருக்கு.  பட்டு - கைத்தறி நெசவாளர்கள் காஞ்சிபுரம் பட்டின் பெருமை உலகத்திற்கே தெரியும். அதை செய்யுற நெசவாளர்கள் வறுமை, கந்துவட்டி கொடுமையால பாதிக்கப்பட்டிருக்காங்க. பட்டு கைத்தறி, பருத்தி கைத்தறி தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. சாயத் தொழில், தறிப்பட்டறை தொழில்னு இங்க நிறைய இருக்கு.  அவங்களோட ஒருநாள் ஊதியம் 500 ரூபாய்தான். கூலியை உயர்த்தித் தர கோரிக்கை வைத்து எவ்வளவோ போராடியும் ஒன்னும் நடக்கல. இதுபோக அவங்க மழையாலும் பாதிக்கப்பட்டிருக்காங்க. இதுவரை எதற்குமே அவர்களை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.  விஜய் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 60 ஆண்டுக்கு முன்னாடி அண்ணா ஆட்சியில் கட்டிய காஞ்சிபுரம் பேருந்து நிலையம். அது ரொம்ப பாழடைந்து இருக்கு. காஞ்சிபுரத்திற்கு ஒரு நல்ல பஸ் ஸ்டாண்ட்கூட  இதுவரையிலும் கட்டித்தரல.  வாலாஜாபாத் அவளூர் ஏரி வாலாஜாபாத் அவளூர் ஏரி பாலாற்றை விடவும் உயரமாக இருக்கு. அதனால ஆற்றுத் தண்ணி ஏரிக்கு போக முடியல. அத சரி பண்ணி, அங்க ஒரு தடுப்பு அணை கட்டினால் அந்த ஏரி நிறைய தண்ணீர் நிற்கும். அதனால அந்தப் பகுதியை சுற்றியிருக்கும் பல கிராமங்கள், விவசாயம் செழிப்பாக இருக்கும்.  பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் விவசாய நிலத்தில் விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தவெக ஆரம்பத்திலிருந்து மக்கள் பக்கம் நிற்கிறது. அதை எதிர்த்து என்றும் தவெக மக்களுடன் நிற்போம் என்றார்.

விகடன் 23 Nov 2025 1:10 pm

பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் இந்த மக்கள் சந்திப்பு என்பதால் பலத்த பாதுகாப்புடன் சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் தொழில்நுட்ப தனியார் கல்லூரி வளாகத்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பவுன்சர்கள் பணியில் நிறுத்தப்பட்டு இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. விஜய் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் விஜய் சொல்லும் காஞ்சிபுர பகுதி பிரச்னைகள் இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் காஞ்சிபுரம் பகுதியில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசியிருக்கும் விஜய், நமக்கு எப்பவும் மக்கள் பிரச்னைதான் முக்கியம். காஞ்சிபுரத்தில் மக்கள் பிரச்னை நிறைய இருக்கு. பாலாறு மணல் கொள்ளை பாலாறு ஆற்றை கொள்ளையடித்து, சுரண்டி அழிச்சுட்டாங்க. இதை ஆதாரத்தோடுதான் சொல்றேன். சட்டம் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி 22லட்சத்து 70 ஆயிரம் யூனிட் ஆற்று மணல் கொள்ளை அடிச்சிருக்காங்க. இதுல 4,730கோடி கொள்ளை அடிச்சிருக்காங்க. இதற்கான ஆதாரம் அமலாக்கத்துறையிடமே இருக்கு.  பட்டு - கைத்தறி நெசவாளர்கள் காஞ்சிபுரம் பட்டின் பெருமை உலகத்திற்கே தெரியும். அதை செய்யுற நெசவாளர்கள் வறுமை, கந்துவட்டி கொடுமையால பாதிக்கப்பட்டிருக்காங்க. பட்டு கைத்தறி, பருத்தி கைத்தறி தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. சாயத் தொழில், தறிப்பட்டறை தொழில்னு இங்க நிறைய இருக்கு.  அவங்களோட ஒருநாள் ஊதியம் 500 ரூபாய்தான். கூலியை உயர்த்தித் தர கோரிக்கை வைத்து எவ்வளவோ போராடியும் ஒன்னும் நடக்கல. இதுபோக அவங்க மழையாலும் பாதிக்கப்பட்டிருக்காங்க. இதுவரை எதற்குமே அவர்களை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.  விஜய் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 60 ஆண்டுக்கு முன்னாடி அண்ணா ஆட்சியில் கட்டிய காஞ்சிபுரம் பேருந்து நிலையம். அது ரொம்ப பாழடைந்து இருக்கு. காஞ்சிபுரத்திற்கு ஒரு நல்ல பஸ் ஸ்டாண்ட்கூட  இதுவரையிலும் கட்டித்தரல.  வாலாஜாபாத் அவளூர் ஏரி வாலாஜாபாத் அவளூர் ஏரி பாலாற்றை விடவும் உயரமாக இருக்கு. அதனால ஆற்றுத் தண்ணி ஏரிக்கு போக முடியல. அத சரி பண்ணி, அங்க ஒரு தடுப்பு அணை கட்டினால் அந்த ஏரி நிறைய தண்ணீர் நிற்கும். அதனால அந்தப் பகுதியை சுற்றியிருக்கும் பல கிராமங்கள், விவசாயம் செழிப்பாக இருக்கும்.  பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் விவசாய நிலத்தில் விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தவெக ஆரம்பத்திலிருந்து மக்கள் பக்கம் நிற்கிறது. அதை எதிர்த்து என்றும் தவெக மக்களுடன் நிற்போம் என்றார்.

விகடன் 23 Nov 2025 1:10 pm

Nigeria: நைஜிரியாவில் ஒரே பள்ளியில் 315 பேர் கடத்தல்! - பெரும் அச்சத்தில் மக்கள்

நைஜிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜிரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய கடத்தல் சம்பவம் இதுதான் எனவும் கூறப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நைஜிரிய கிறிஸ்துவ சங்கம் முதலில் 227 நபர்கள் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தது. Nigeria people பின்பு, எண்ணிக்கை சரிபார்க்கையில் மொத்தமாக 303 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருப்பதாக உறுதி செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட மாணவர்களுக்கு எட்டு முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை இப்படியான மூன்று கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை குறித்தான அச்சமும் எழுந்திருக்கிறது. நைஜிரியாவின் நைஜர் மாநிலத்திலுள்ள செயின்ட் ஆகஸ்டின் பள்ளியின் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அருகிலிருக்கும் மற்றொரு பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தி 25 மாணவிகளை கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து நைஜர் மாநில ஆளுநர் மொஹம்மது உமர் பாகோ, “போலீசார் எத்தனை பேர் மொத்தமாக கடத்தப்பட்டிருக்கிறார்கள் என சரிபார்த்து வருகிறார்கள். நைஜர் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டிருக்கிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தற்போது அரசின் முதன்மை நடவடிக்கையாக உள்ளது. அருகிலுள்ள பல மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதேபோன்ற உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளோம்.” என்று தெரிவித்தார். இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்த தனது வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்திருக்கிறார். நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் பணத்திற்காகத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் இந்தக் கடத்தல் கும்பல் தொடர்ந்து இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்போது நைஜர் மாநிலத்தில் நடந்திருக்கும் இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய நைஜர் மாநில காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நைஜிரியாவில் தொடர்ந்து கிறிஸ்துவர்கள் கொலைச் செய்யப்பட்டு வருவது குறித்து சமீபத்தில் பேசிய டிரம்ப், நைஜீரியா அரசு கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை தொடர்ந்து அனுமதித்தால், அமெரிக்கா தன்னுடைய அனைத்து உதவி, ஆதரவுகளையும் உடனடியாக நிறுத்தும். மேலும், தேவையானால், அமெரிக்கா அந்த நாட்டுக்குள் நுழைந்து, இந்த கொடூர தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகளை முற்றிலும் ஒழித்துவிடவும் செய்யும். என எச்சரித்து இருந்தார்.

விகடன் 23 Nov 2025 12:49 pm

Nigeria: நைஜிரியாவில் ஒரே பள்ளியில் 315 பேர் கடத்தல்! - பெரும் அச்சத்தில் மக்கள்

நைஜிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜிரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய கடத்தல் சம்பவம் இதுதான் எனவும் கூறப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நைஜிரிய கிறிஸ்துவ சங்கம் முதலில் 227 நபர்கள் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தது. Nigeria people பின்பு, எண்ணிக்கை சரிபார்க்கையில் மொத்தமாக 303 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருப்பதாக உறுதி செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட மாணவர்களுக்கு எட்டு முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை இப்படியான மூன்று கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை குறித்தான அச்சமும் எழுந்திருக்கிறது. நைஜிரியாவின் நைஜர் மாநிலத்திலுள்ள செயின்ட் ஆகஸ்டின் பள்ளியின் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அருகிலிருக்கும் மற்றொரு பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தி 25 மாணவிகளை கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து நைஜர் மாநில ஆளுநர் மொஹம்மது உமர் பாகோ, “போலீசார் எத்தனை பேர் மொத்தமாக கடத்தப்பட்டிருக்கிறார்கள் என சரிபார்த்து வருகிறார்கள். நைஜர் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டிருக்கிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தற்போது அரசின் முதன்மை நடவடிக்கையாக உள்ளது. அருகிலுள்ள பல மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதேபோன்ற உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளோம்.” என்று தெரிவித்தார். இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்த தனது வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்திருக்கிறார். நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் பணத்திற்காகத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் இந்தக் கடத்தல் கும்பல் தொடர்ந்து இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்போது நைஜர் மாநிலத்தில் நடந்திருக்கும் இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய நைஜர் மாநில காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நைஜிரியாவில் தொடர்ந்து கிறிஸ்துவர்கள் கொலைச் செய்யப்பட்டு வருவது குறித்து சமீபத்தில் பேசிய டிரம்ப், நைஜீரியா அரசு கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை தொடர்ந்து அனுமதித்தால், அமெரிக்கா தன்னுடைய அனைத்து உதவி, ஆதரவுகளையும் உடனடியாக நிறுத்தும். மேலும், தேவையானால், அமெரிக்கா அந்த நாட்டுக்குள் நுழைந்து, இந்த கொடூர தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகளை முற்றிலும் ஒழித்துவிடவும் செய்யும். என எச்சரித்து இருந்தார்.

விகடன் 23 Nov 2025 12:49 pm

நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய்

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு என்பதால், பலத்த பாதுகாப்புடன் சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் தொழில்நுட்ப தனியார் கல்லூரி வளாகத்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பவுன்சர்கள் பணியில் நிறுத்தப்பட்டு இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட ஓய்வு பெற்ற காவல்துறையினர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சார்பில் கடந்த நான்கு நாட்களாக தவெகவின் தொண்டரணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அந்தத் தொண்டரணியினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியிருக்கும் விஜய், 'நாட்டுக்காக உழைக்கவே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில்தான் நாள் முழுக்க கண்ணா இருந்தார்' என்று எம்.ஜி.ஆர் அண்ணாவைப் பற்றி பாடலில் சொன்னார். அப்படிப்பட்ட அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். அறிஞர் அண்ணா ஆரம்பிச்ச கட்சியை, அவருக்குப் பிறகு கைப்பற்றி இப்போ என்னவெல்லாம் பண்றாங்கனு எல்லாரும் பார்த்துகிட்டுதான் இருக்காங்க. நான் எந்தக் கட்சியை சொல்றேனு எல்லாரும் தெரியும்னு நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவங்களுக்கும், எங்களுக்கும் எந்த சண்டையும், வன்மமும் இல்லை. ஆனால், மக்களை நம்பவச்சு நம்மள ஓட்டு போட வச்சு துரோகம் பண்றவங்கள, நாடகம் ஆடுறவங்கள எப்படி கேள்வி கேட்கமால் இருக்க முடியும். பேரறிஞர் அண்ணா, 'மக்களிடம் செல், மக்களுக்கு சேவை செய்' என்றார். அதை மறந்துவிட்டார்கள் அவர்கள். நாம்தான் அதைச் செய்கிறோம். கொள்கை இல்லைனு சொல்றாங்க. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ, சமூகநீதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எங்கள் தவெக கட்சி. CAA எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நிதிமன்றம்வரை நீதி கேட்டு போனோம், கல்விய மாநில பட்டியல்ல சேர்க்கனும்னு சொன்னோம், சமத்துவம், சமவாய்ப்பு என நீதிகேட்ட தவெக விற்கு கொள்கை இல்லையா? விஜய் கொள்கைய வெறும் பேச்சுல மட்டும் பேசிட்டு இருக்காங்க. இவங்க கொள்கையே கொள்ளைதானே. 'எங்க கட்சி சங்கர மடம் இல்லைனு' சொன்னது யாரு? யார் சொன்னாங்க, எதுக்கு சொன்னாங்க. இப்போ உங்க கட்சியில என்ன நடக்குதுனு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அதுனால 'பாப்பா பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாத பாப்பா. நீ நல்லவர்களைப் போல நடிப்பதைப் பார்த்து நாடே **** பாப்பா' னு சொன்னதையே இன்னும் சீர்யஸ எடுத்துகிட்டு இருக்கீங்க. நாங்க இன்னும் உங்கள விமர்சனம் பண்ணாவே ஆரம்பிக்கல. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே. அதுக்குல்ல அலறுனா எப்படி? என்று 'திமுக' வை தாக்கிப் பேசியிருக்கிறார் விஜய்.

விகடன் 23 Nov 2025 11:50 am

நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய்

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு என்பதால், பலத்த பாதுகாப்புடன் சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் தொழில்நுட்ப தனியார் கல்லூரி வளாகத்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பவுன்சர்கள் பணியில் நிறுத்தப்பட்டு இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட ஓய்வு பெற்ற காவல்துறையினர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சார்பில் கடந்த நான்கு நாட்களாக தவெகவின் தொண்டரணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அந்தத் தொண்டரணியினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியிருக்கும் விஜய், 'நாட்டுக்காக உழைக்கவே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில்தான் நாள் முழுக்க கண்ணா இருந்தார்' என்று எம்.ஜி.ஆர் அண்ணாவைப் பற்றி பாடலில் சொன்னார். அப்படிப்பட்ட அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். அறிஞர் அண்ணா ஆரம்பிச்ச கட்சியை, அவருக்குப் பிறகு கைப்பற்றி இப்போ என்னவெல்லாம் பண்றாங்கனு எல்லாரும் பார்த்துகிட்டுதான் இருக்காங்க. நான் எந்தக் கட்சியை சொல்றேனு எல்லாரும் தெரியும்னு நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவங்களுக்கும், எங்களுக்கும் எந்த சண்டையும், வன்மமும் இல்லை. ஆனால், மக்களை நம்பவச்சு நம்மள ஓட்டு போட வச்சு துரோகம் பண்றவங்கள, நாடகம் ஆடுறவங்கள எப்படி கேள்வி கேட்கமால் இருக்க முடியும். பேரறிஞர் அண்ணா, 'மக்களிடம் செல், மக்களுக்கு சேவை செய்' என்றார். அதை மறந்துவிட்டார்கள் அவர்கள். நாம்தான் அதைச் செய்கிறோம். கொள்கை இல்லைனு சொல்றாங்க. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ, சமூகநீதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எங்கள் தவெக கட்சி. CAA எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நிதிமன்றம்வரை நீதி கேட்டு போனோம், கல்விய மாநில பட்டியல்ல சேர்க்கனும்னு சொன்னோம், சமத்துவம், சமவாய்ப்பு என நீதிகேட்ட தவெக விற்கு கொள்கை இல்லையா? விஜய் கொள்கைய வெறும் பேச்சுல மட்டும் பேசிட்டு இருக்காங்க. இவங்க கொள்கையே கொள்ளைதானே. 'எங்க கட்சி சங்கர மடம் இல்லைனு' சொன்னது யாரு? யார் சொன்னாங்க, எதுக்கு சொன்னாங்க. இப்போ உங்க கட்சியில என்ன நடக்குதுனு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அதுனால 'பாப்பா பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாத பாப்பா. நீ நல்லவர்களைப் போல நடிப்பதைப் பார்த்து நாடே **** பாப்பா' னு சொன்னதையே இன்னும் சீர்யஸ எடுத்துகிட்டு இருக்கீங்க. நாங்க இன்னும் உங்கள விமர்சனம் பண்ணாவே ஆரம்பிக்கல. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே. அதுக்குல்ல அலறுனா எப்படி? என்று 'திமுக' வை தாக்கிப் பேசியிருக்கிறார் விஜய்.

விகடன் 23 Nov 2025 11:50 am