Email இயக்கம் நடத்தும் TN Congress - TVK உடன் கூட்டணியா? | NDA -வில் DMDK | DMK BJP | IPS Vikatan
Email இயக்கம் நடத்தும் TN Congress - TVK உடன் கூட்டணியா? | NDA -வில் DMDK | DMK BJP | IPS Vikatan
முதல்வரின் அறைக்குள் முடிவாகும் அறிவிப்புகள்! - பின்னணியில் `நால்வர் அணி'
அடுத்த முறையும் ஆட்சி தொடர்ந்திட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு எதிர்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துவருகிறது. அரசு துறையின் மூலம் அறிவிப்புகள் வெளியானாலும், அதை கட்டமைக்கும் பணியை நான்கு அதிகாரிகளின் பங்கு பிரதானம் என்கிறார்கள் தலைமை செயலக ஊழியர்கள். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். தி.மு.க அளித்த வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், பிற வாக்குறுதிகளில் ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியா வாக்குறுதிகளாக 60 வாக்குறுதிகள் இருப்பதாக தி.மு.க தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. இன்னும் சில வாக்குறுதிகள் செயல்பாட்டில் இருக்கிறது என்கிற விவரங்களையும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் மகளிர் உரிமை தொகையாக 5000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது பெரும் பேசுப்பொருளாக மாறியது. ``இந்த அறிவிப்பே வாக்காளர்களை கவரும் அறிவிப்பு என்றும், இத்தனை ஆண்டுகளாக கோடைகால சிறப்புதொகை வழங்காமல் இப்போது வழங்குவதே தேர்தலை மனதில் வைத்தே” என எதிர்கட்சிகள் ஒருபுறம் விமர்சனத்தை முன்வைத்தன. ஆனால், தி.மு.க தரப்பு பெரும் சாதனையை நிகழ்த்தியதாக இந்த அறிவிப்பை கொண்டாடி வருகிறது. மற்றொருபுறம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 இரண்டு கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கியது. அதற்கு முன்பாக கடந்த டிசம்பர் மாதம் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணினி வழங்கும் வேலையை துவக்கியது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட இந்த திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் கொடுக்கப்பட்டு இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் முதல் கட்டமாக பத்து லட்சம் மாணவர்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் இறுதிக்குள் இருபது லட்சம் மாணவர்களுக்கும் கணினி வழங்க வேண்டும் என அரசு வேலையை முடக்கிவிட்டுள்ளது. மற்றொருபுறம், தமிழகம் முழுவதும் அரசு அறிவித்து செயல்பாட்டில் இருந்த திட்டங்களை அதிவேகத்தில் நிறைவு செய்யும் பணிகள் நடந்துவருகிறது. இப்படி தேர்தலை மனதில் வைத்து அசுர வேகத்தில் திட்டங்களையும், பணிகளை முடித்துவரும் அரசுக்கு பின்புலமாக இருப்பதே குறிப்பிட்ட சில அதிகாரிகள்தான் என்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு துறையிலும் அரசு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், புதிய பணிகள் குறித்த விவரங்களை அமைச்சர்கள் ஒப்புதலுக்கு முன்பாகவே துறையின் செயலாளர்கள் நிதித்துறை மற்றும் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். துறை ரீதியாக வரும் பட்டியலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அதில் சிறப்பான திட்டங்களுக்கு உடனடியாக முதல்வர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்றுவிடுகின்றனர். குறிப்பாக, “நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், முதல்வரின் செயலாளர்களாக உள்ள உமாநாத், சண்முகம், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகிய நான்கு பேர்தான் இப்போது முதல்வரின் ஆஸ்தான ஆலோசகர்களாக உள்ளார்கள். எந்த துறையிலிருந்து புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வந்தாலும், அதை கச்சிதமாக செயல்பாட்டுக்கு கொண்டுவருவதே இவர்கள்தான். கடந்த ஐந்து ஆண்டுகளாக சத்தமில்லாமல் இவர்களே முதல்வரின் நம்பிக்கைக்குரிய நபர்களாக இருந்து வருகிறார்கள்” என்கிறார் மூத்த அதிகாரி ஒருவர். தமிழக அரசு ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ஒரே நாளில் 6500 கோடி ரூபாயை எப்படி செலவு செய்தார்கள் என்று கேள்வி எழுந்த நிலையில்?... பொதுநிதியிலிருந்து அதை செயல்படுத்தினோம் என்கிற ஒற்றை விளக்கம் மட்டுமே அரசு தரப்பில் கொடுக்கப்பட்டது. எந்த நிதியிலிருந்து இதற்கான தொகையைப் பயன்படுத்தினார்கள்? இந்த செலவை ஈடு செய்யும் யுக்தி என்ன? போன்ற எந்த விவரங்களும் தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பலருக்கும் தெரியவில்லை. அதே போல் தான் பொங்கல் தொகைக்கான பணமும் உடனடியாக வெளியானது. இப்படி அரசு இயந்திரத்தை சத்தமில்லாமல் இயக்கும் இந்த நால்வர் படைதான் இப்போது முதல்வரின் நம்பிக்கைக்குரிய படையாக மாறியுள்ளது. இவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அடுத்த நிலையில் தமிழக அரசு நியமித்துள்ள பொருளாதார ஆலோசனை குழுவும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையும் உள்ளது. இந்த நால்வர் அணி சொல்லும் திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது, அதன் செலவை எப்படி ஈடுகட்டுவது என்கிற ஆலோசனைகளை இந்த குழுவில் உள்ளவர்கள் மூலம் அறிந்துக்கொள்கிறார்கள். இவற்றை ஒழுங்குபடுத்தி முதல்வர் அறையில் வைத்தே திட்டத்திற்கான ஒப்புதலையும் பெற்றுவிடுகிறார்கள். பல திட்டங்கள் துறைகளின் அமைச்சர்களுக்கு தெரியும் முன்பே, இவர்களுக்கு தெரிந்துவிடுவதால் அமைச்சர்களையும் எரிச்சலடைய செய்துள்ளது. அதனால் அமைச்சர்கள் பலரும், `முதல்வர் அமைச்சர்களான எங்களிடம் பெயரளவில் தான் கருத்துக்களை கேட்கிறார். அதன்பிறகு இந்த அதிகாரிகளின் கருத்துக்களையே முழுமையாகக் கேட்டு அதன்படியே திட்டங்களையும் அறிவிக்கிறார்' என்று புகைச்சலுடன் சொல்லிவந்தார்கள். அமைச்சர்களின் புகைச்சலை முதல்வரும் கண்டுக்கொள்வது இல்லை. அதனால் இந்த அதிகாரிகளின் படையே முதல்வரின் முதுகெலும்பாக இறுதிகட்டத்தில் இப்போது களமாடி வருகிறது. தேர்தல் நெருக்கத்தில் இந்த அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்கிற தகவலும் வருவதால், அதற்கு முன்பாக அரசு நிறைவேற்றிட நினைக்கும் திட்டங்களை இவர்களை வைத்து நிறைவேற்றிட நினைக்கிறார் முதல்வர். இந்த அதிகாரிகள் படைதான் இடைக்கால பட்ஜெட்டையும் இறுதி செய்துள்ளது. அதனாலே எதிர்க்கட்சிகளும் இந்த நால்வர் அணி மீதே ஏக கடுப்பில் உள்ளார்கள். `ஆட்சி மாற்றம் நடக்கட்டும் இவர்களை பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது என்றனர் விரிவாக.
முதல்வரின் அறைக்குள் முடிவாகும் அறிவிப்புகள்! - பின்னணியில் `நால்வர் அணி'
அடுத்த முறையும் ஆட்சி தொடர்ந்திட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு எதிர்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துவருகிறது. அரசு துறையின் மூலம் அறிவிப்புகள் வெளியானாலும், அதை கட்டமைக்கும் பணியை நான்கு அதிகாரிகளின் பங்கு பிரதானம் என்கிறார்கள் தலைமை செயலக ஊழியர்கள். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். தி.மு.க அளித்த வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், பிற வாக்குறுதிகளில் ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியா வாக்குறுதிகளாக 60 வாக்குறுதிகள் இருப்பதாக தி.மு.க தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. இன்னும் சில வாக்குறுதிகள் செயல்பாட்டில் இருக்கிறது என்கிற விவரங்களையும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் மகளிர் உரிமை தொகையாக 5000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது பெரும் பேசுப்பொருளாக மாறியது. ``இந்த அறிவிப்பே வாக்காளர்களை கவரும் அறிவிப்பு என்றும், இத்தனை ஆண்டுகளாக கோடைகால சிறப்புதொகை வழங்காமல் இப்போது வழங்குவதே தேர்தலை மனதில் வைத்தே” என எதிர்கட்சிகள் ஒருபுறம் விமர்சனத்தை முன்வைத்தன. ஆனால், தி.மு.க தரப்பு பெரும் சாதனையை நிகழ்த்தியதாக இந்த அறிவிப்பை கொண்டாடி வருகிறது. மற்றொருபுறம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 இரண்டு கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கியது. அதற்கு முன்பாக கடந்த டிசம்பர் மாதம் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணினி வழங்கும் வேலையை துவக்கியது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட இந்த திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் கொடுக்கப்பட்டு இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் முதல் கட்டமாக பத்து லட்சம் மாணவர்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் இறுதிக்குள் இருபது லட்சம் மாணவர்களுக்கும் கணினி வழங்க வேண்டும் என அரசு வேலையை முடக்கிவிட்டுள்ளது. மற்றொருபுறம், தமிழகம் முழுவதும் அரசு அறிவித்து செயல்பாட்டில் இருந்த திட்டங்களை அதிவேகத்தில் நிறைவு செய்யும் பணிகள் நடந்துவருகிறது. இப்படி தேர்தலை மனதில் வைத்து அசுர வேகத்தில் திட்டங்களையும், பணிகளை முடித்துவரும் அரசுக்கு பின்புலமாக இருப்பதே குறிப்பிட்ட சில அதிகாரிகள்தான் என்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு துறையிலும் அரசு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், புதிய பணிகள் குறித்த விவரங்களை அமைச்சர்கள் ஒப்புதலுக்கு முன்பாகவே துறையின் செயலாளர்கள் நிதித்துறை மற்றும் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். துறை ரீதியாக வரும் பட்டியலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அதில் சிறப்பான திட்டங்களுக்கு உடனடியாக முதல்வர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்றுவிடுகின்றனர். குறிப்பாக, “நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், முதல்வரின் செயலாளர்களாக உள்ள உமாநாத், சண்முகம், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகிய நான்கு பேர்தான் இப்போது முதல்வரின் ஆஸ்தான ஆலோசகர்களாக உள்ளார்கள். எந்த துறையிலிருந்து புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வந்தாலும், அதை கச்சிதமாக செயல்பாட்டுக்கு கொண்டுவருவதே இவர்கள்தான். கடந்த ஐந்து ஆண்டுகளாக சத்தமில்லாமல் இவர்களே முதல்வரின் நம்பிக்கைக்குரிய நபர்களாக இருந்து வருகிறார்கள்” என்கிறார் மூத்த அதிகாரி ஒருவர். தமிழக அரசு ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ஒரே நாளில் 6500 கோடி ரூபாயை எப்படி செலவு செய்தார்கள் என்று கேள்வி எழுந்த நிலையில்?... பொதுநிதியிலிருந்து அதை செயல்படுத்தினோம் என்கிற ஒற்றை விளக்கம் மட்டுமே அரசு தரப்பில் கொடுக்கப்பட்டது. எந்த நிதியிலிருந்து இதற்கான தொகையைப் பயன்படுத்தினார்கள்? இந்த செலவை ஈடு செய்யும் யுக்தி என்ன? போன்ற எந்த விவரங்களும் தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பலருக்கும் தெரியவில்லை. அதே போல் தான் பொங்கல் தொகைக்கான பணமும் உடனடியாக வெளியானது. இப்படி அரசு இயந்திரத்தை சத்தமில்லாமல் இயக்கும் இந்த நால்வர் படைதான் இப்போது முதல்வரின் நம்பிக்கைக்குரிய படையாக மாறியுள்ளது. இவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அடுத்த நிலையில் தமிழக அரசு நியமித்துள்ள பொருளாதார ஆலோசனை குழுவும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையும் உள்ளது. இந்த நால்வர் அணி சொல்லும் திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது, அதன் செலவை எப்படி ஈடுகட்டுவது என்கிற ஆலோசனைகளை இந்த குழுவில் உள்ளவர்கள் மூலம் அறிந்துக்கொள்கிறார்கள். இவற்றை ஒழுங்குபடுத்தி முதல்வர் அறையில் வைத்தே திட்டத்திற்கான ஒப்புதலையும் பெற்றுவிடுகிறார்கள். பல திட்டங்கள் துறைகளின் அமைச்சர்களுக்கு தெரியும் முன்பே, இவர்களுக்கு தெரிந்துவிடுவதால் அமைச்சர்களையும் எரிச்சலடைய செய்துள்ளது. அதனால் அமைச்சர்கள் பலரும், `முதல்வர் அமைச்சர்களான எங்களிடம் பெயரளவில் தான் கருத்துக்களை கேட்கிறார். அதன்பிறகு இந்த அதிகாரிகளின் கருத்துக்களையே முழுமையாகக் கேட்டு அதன்படியே திட்டங்களையும் அறிவிக்கிறார்' என்று புகைச்சலுடன் சொல்லிவந்தார்கள். அமைச்சர்களின் புகைச்சலை முதல்வரும் கண்டுக்கொள்வது இல்லை. அதனால் இந்த அதிகாரிகளின் படையே முதல்வரின் முதுகெலும்பாக இறுதிகட்டத்தில் இப்போது களமாடி வருகிறது. தேர்தல் நெருக்கத்தில் இந்த அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்கிற தகவலும் வருவதால், அதற்கு முன்பாக அரசு நிறைவேற்றிட நினைக்கும் திட்டங்களை இவர்களை வைத்து நிறைவேற்றிட நினைக்கிறார் முதல்வர். இந்த அதிகாரிகள் படைதான் இடைக்கால பட்ஜெட்டையும் இறுதி செய்துள்ளது. அதனாலே எதிர்க்கட்சிகளும் இந்த நால்வர் அணி மீதே ஏக கடுப்பில் உள்ளார்கள். `ஆட்சி மாற்றம் நடக்கட்டும் இவர்களை பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது என்றனர் விரிவாக.
Hair Transplant Scam: முடிக்காக உயிரை பணையம் வைக்காதீர்கள் | எச்சரிக்கும் மருத்துவர்
மேற்கு வங்கம்: தனித்து போட்டியிடும் காங்கிரஸ்; உருவாகும் நான்கு முனைப்போட்டி - பாஜக-வுக்கு சாதகமா?
மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி 19 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்ன? இந்த முடிவு யாருக்கு சாதகமாக அமையும்? காங்கிரஸிற்கு இதனால் ஏற்படும் சிக்கல் என்ன? ஓர் அலசல்! மம்தா பானர்ஜி மம்தாவின் தொடர் வெற்றி! மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரலில் தேர்தல் நடக்க இருக்கிறது. தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று 15 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மம்தா தனது நான்காவது வெற்றிக்காகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். தனித்து களம் காணும் காங்கிரஸ் மறுபக்கம் கடந்த 2021 தேர்தலில் 77 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த பாஜக, இந்த முறை ‘ Asali Poriborton’ (உண்மையான மாற்றம்) என்ற முழக்கத்துடன் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மேற்குவங்க அரசியலில் 34 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாக இருந்த இடதுசாரிகள், கடந்த சில தேர்தல்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்து இருக்கும் இடமே தெரியாமல் இருக்கின்றனர். இந்தச் சூழலில்தான் கடந்த தேர்தல்களில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, 294 தொகுதிகளிலும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து களம் காண முடிவு செய்திருக்கிறது. ராகுல் காந்தி - காங்கிரஸ் வாக்கு வங்கி குறைவு டெல்லியில் மேற்குவங்க காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2001 தேர்தலில் 17 இடங்களில் வென்ற காங்கிரஸ் 2006-ல் 21 இடங்களையும், 2011-ல் 41 இடங்களையும், 2016-ல் 44 இடங்களையும் வென்றிருந்த நிலையில், 2021-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. தவிர கட்சியின் வாக்கு வங்கியும் 3.03 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதிரடி முடிவுக்கு காரணம் என்ன? இடதுசாரிகளின் கூட்டணியால் கட்சியின் சொந்த செல்வாக்கை இழந்து வருவதாக மேற்கு வங்க காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையிடம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், கட்சியை மீட்டெடுக்கும் முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கி இருக்கிறது. அதுமட்டுமன்றி சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீடு செய்வதில் காங்கிரஸுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. அதனாலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் மேலும் பாஜக-வை எதிர்க்க மம்தா பானர்ஜி ஒருவரால் மட்டுமே முடியும் என்ற பிம்பத்தை உடைக்க காங்கிரஸ் விரும்புகிறது. பாஜக-வுக்கும் திரிணாமுல்லுக்கும் மாற்றாக தங்களை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. தவிர மால்டா மற்றும் முர்ஷிதாபாத், உத்தர தினாஜ்பூர் போன்ற மாவட்டங்களில் காங்கிரஸுக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கிறது. தனித்து போட்டியிட்டால் இன்னும் வலுபெற முடியும் என காங்கிரஸ் நினைக்கிறது. பாஜக-விற்கு சாதகமா? காங்கிரஸின் இந்த முடிவால் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. காங்கிரஸின் இந்த முடிவால் எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி சிதறும். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்-இடதுசாரி மோதலில், பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறினால், அது பாஜக-வுக்கு நேரடி லாபமாக அமையும். பாஜக மம்தாவுக்கு பின்னடைவு அதேபோல மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் மம்தா பானர்ஜியின் மிகப்பெரிய பலம். காங்கிரஸ் தனித்து நின்று தீவிரமாகப் பிரசாரம் செய்தால், மால்டா, முர்ஷிதாபாத் போன்ற பகுதிகளில் இந்த வாக்குகள் காங்கிரஸுக்குத் திரும்பும். இது மம்தாவின் வெற்றிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். காங்கிரஸிற்கு என்ன பாதிப்பு? 2021-ல் ஒரு இடத்தில்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இந்தச் சூழலில் தனித்து நிற்கும்போது, பல தொகுதிகளில் டெபாசிட் வாங்குவதே பெரிய சவாலாக இருக்கும். 294 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தும்போது தேர்தல் பிரசாரம், விளம்பரங்கள் மற்றும் பூத் கமிட்டி செலவுகளுக்குப் பெரும் நிதி தேவைப்படும். ராகுல் காந்தி - காங்கிரஸ் கேள்விக்குறியாகும் நம்பிக்கை... கூட்டணி இருந்தால் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால் தனித்துப் போட்டியிடும்போது முழுச்சுமையும் கட்சியின் மேலிடத்திற்கே சேரும். தவிர மத்தியில் 'இந்தியா' கூட்டணியில் மம்தாவுடன் கைகோத்துவிட்டு, மாநிலத்தில் அவருக்கு எதிராகப் போட்டியிடுவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இது காங்கிரஸின் நம்பகத்தன்மையை மக்களிடையே கேள்விக்குறியாக்கலாம்.
`இந்த ஆபாசமான, அருவருக்கத்தக்க வீடியோவை வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான்.!'கொந்தளித்த ஜோதிமணி
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் கரூர் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில் நாதன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் தவறாக பேசினார். அவர் உரையாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பகிரப்பட்டது. இது குறித்து எம்.பி.ஜோதிமணி தன் முகநூல் பக்கத்தில், ``பா.ஜ.கவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் என்னைப் பற்றிப் பேசிய இந்த ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, வீடியோவை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான் இங்கு வெளியிடுகிறேன். அப்பொழுதுதான் சமூகம் இப்படிப்பட்ட அழுகிப்போன மனநிலை உள்ள ஆண்களுக்கு எதிராக காட்டமான எதிர்வினையாற்ற முடியும். கரூர் பாஜக போராட்டம் இவரைப் பொறுத்தவரையில் வீட்டுப் படிதாண்டி, பொதுவெளியில் பொதுவாழ்வில் பங்கேற்கிற பெண்கள் எல்லோருமே வேசிகள் தான். அவர்களுக்கு சொந்த திறமை, உழைப்பு, அனுபவம், கண்ணியம் எதுவுமே இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைக்கிறார். ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனியொரு தாயால் கண்ணியத்தோடும், நேர்மையோடும், துணிச்சலோடும், மதிப்பீடுகளோடும் வளர்க்கப்பட்ட ஒரு பெண் நான். எங்கள் குடும்பத்தில் யாரும் பொதுவாழ்வில் இருந்ததில்லை. அரசியல் என்றாலே அச்சப்படுகின்ற எத்தனையோ குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. நான் எனது 21 வயதில் துணிச்சலோடு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தேன். ஒரு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அநீதிக்கு எதிராக, மக்களுக்காகப் போராடும் போராட்டக்குணத்தால், சமரசமற்ற நேர்மையால், ஒரு பெண் என்பதால், அரசியல் பின்னணியோ, பெரிய அளவிலான பொருளாதார பலமோ இல்லாத காரணத்தால், வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையால் எத்தனையோ இடர்ப்பாடுகளை, தடைகளை, கடினமான காலகட்டங்களை எதிர்கொண்டிருக்கிறேன். இன்னும் எதிர்கொள்கிறேன். ஆனால் எதற்காகவும் தேங்கிவிடாமல் எனக்கு முன்பு இந்த கடினமான பாதையில் பயணித்து, சாதித்த எத்தனையோ கோடி பெண்களைப் போல, நானும் தடைகளை உடைத்துக் கொண்டு எனது பயணத்தை தொடர்கிறேன். கரூர் பாஜக போராட்டம்: செந்தில் நாதன் பத்தாண்டு காலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், அடுத்த பத்தாண்டு காலம் இளைஞர் காங்கிரசின் தேசிய பொது செயலாளர் உடபட பல்வேறு மாநிலங்களில் கட்சிப்பணி, ஐந்து ஆண்டு காலம் அரசியல் வனவாசம், சமூகப் பணி. 20 ஆண்டு கால கடுமையான , நேர்மையான அர்ப்பணிப்பு மிகுந்த அரசியல், சமூகப்பணிக்குப் பின்பே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்புக் கிடைத்தது. எங்கள் கட்சியிலேயே கூட பணம் இல்லை என்பதால் எனக்கு நாடாளுமன்ற தேரதலில் போட்டியிட வாய்ப்பளிக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் எனது தலைவர் சாதாரண கட்சி தொண்டர்களின் உழைப்பை மதிக்கக்கூடியவர். பத்தாண்டு காலம் எனது கடும் உழைப்பை, சமரசமற்ற துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளை நேரில் பார்த்தவர். எனது மக்கள் பணியை, கொள்கை நிலைப்பாட்டை, சமூக அக்கறையைப் புரிந்துகொண்டவர். அதனால் கரூரில் போட்டியிடக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கினார். எமது மக்கள், தேர்தல் களத்தில், பொதுவாழ்வில் உடன் பயணிக்கும் தோழர்கள் என் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்தனர். அதனால் ஏழாண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்தி ஒரு நாளில் குறைந்தது 15 மணி நேரம் பணி புரிய வேண்டும். வருடத்தில் 365 நாட்களில் 50 நாட்கள் கூட விடுப்பு எடுக்க முடிவதில்லை. எனது தாயின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு அனைத்துப் பொறுப்புகளையும், பிரச்சினைகளையும் தனித்தே கையாள வேண்டிய சூழல். ஆனாலும் சோர்வற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். போராடிக் கொண்டிருக்கிறேன். பெண் என்பதால் இந்த தகுதி, திறமை, உழைப்பு, அறிவு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இவரைப் போன்றவர்களைப் பொறுத்தவரை பெண் என்றாலே வெறும் உடல், பாலியல் பொருள் அவ்வளவே. எனக்கு நடந்தது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இந்த நாட்டில் பொது வெளிகளில் நுழையும் பெண்கள் காலம்காலமாக தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரே மாதிரியான, தனிமனித, ஆபாசத் தாக்குதல்களின் தொடர்ச்சியே இது. பெண்கள் பொது இடத்திற்கு வந்தால், நம் குரலை உயர்த்தினால், அதிகாரத்தை கேள்வி கேட்டால், மௌனமாக இருக்க மறுத்தால் அதற்கான எதிர்வினை இப்படித்தான் இருக்கிறது. பெண்களுக்கு பொது வாழ்க்கையில் காலடி வைப்பது எப்போதும் எளிதானது அல்ல. நாம் செய்த செயல்களுக்காக அல்லாமல் நாம் ஒரு பெண் என்பதற்காகவே ஆபாசத் தாக்குதல் அவமதிப்பு, கண்ணியச் சிதைப்பு, பாலியல் அவமானம், மிரட்டல்கள் என அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கரூர் பாஜக தலைவர் செந்தில் நாதன் வாதங்கள் தோல்வியடையும் தருணத்தில், நம் கண்ணியம் தாக்கப்படுகிறது. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதபோது, நம் ஒழுக்கம் திட்டமிட்டு அவமதிக்கப்படுகிறது. பாலியல் இழிவுபடுத்தும் மொழியும், மிரட்டல்களும், பொது மேடைகளில் செய்யப்படும் அவமானங்களும் தவறுதலாக நிகழ்பவை அல்ல. இவை ஆண்டாண்டுகாலமாக பெண்களுக்கு எதிராகத் திட்டமிட்டு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள். பெண்களை மௌனமாக்க, பொது வெளிகளில் இருந்து, அரசியலிலிருந்து, தலைமைத்துவத்திலிருந்து வெளியேற்றவே இந்த ஆபாசத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இப்படித்தான் பொது வெளிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறுகின்றன. இப்படித்தான் பெண்கள் பின்னடைய வைக்கப்படுகிறார்கள். இதை கட்டுப்படுத்தாமல் விட்டால், இது ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாதிக்காது. பல பெண்களின் குரலை மௌனமாக்கும், அச்சுறுத்தும். இந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் பொது வெளிகளைச் சுருக்கும். பெண்களை வெறும் உடலாக, பாலியல் பொருளாக, பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்ப்பது, பெண்களை அவமதிப்பது ஆபாசத் தாக்குதலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது இதுதான் பாஜக, ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம். பா.ஜ.க மாநிலத்தலைவர் துவங்கி, மாவட்ட தலைவர் வரை இதைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அதற்காக அவர்கள் வெட்கப்படுவதில்லை. நம்மை வெட்கித் தலைகுனிய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு பெண்ணாக நாம் வெட்கப்படுவதற்கோ, அச்சப்படுவதற்கோ ஒன்றுமில்லை. அவர்கள் தான் வெட்கப்பட வேண்டும், அதற்காகவே இதை பொதுவெளியில் வெளியிடுகிறேன். பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு சமூகமாக இதுபோன்ற இழிசெயல்களை, அழுகிப்போன மனநிலையை, ஆபாச தாக்குதல்களை, பெண்களுக்கு எதிரான அரசியல் சித்தாந்தங்களை நாம் எதிர்க்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும். அப்பொழுதான் பெண்களுக்கு எதிரான ஆபாசத்தாக்குதலை ஒரு ஆயுதமாகக் கையில் எடுப்பதை நாம் தடுத்து நிறுத்தமுடியும். பொதுவெளியில் நமது உரிமையை,கண்ணியத்தை நிலை நாட்ட முடியும். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் நடிகர் விஜயுடன் பிரபல நடிகையை இணைத்துப் பேசிய விவகார சலசலப்பு அடங்கிய நிலையில், கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவரின் பேச்சு மீண்டும் விவாதகளத்துக்கு வந்திருக்கிறது `திமுக ஆட்சி தேர்தலுக்கான ஆட்சி; தனிநபர் தாக்குதலில்..!' - நயினார் நாகேந்திரன்
`இந்த ஆபாசமான, அருவருக்கத்தக்க வீடியோவை வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான்.!'கொந்தளித்த ஜோதிமணி
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் கரூர் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில் நாதன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் தவறாக பேசினார். அவர் உரையாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பகிரப்பட்டது. இது குறித்து எம்.பி.ஜோதிமணி தன் முகநூல் பக்கத்தில், ``பா.ஜ.கவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் என்னைப் பற்றிப் பேசிய இந்த ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, வீடியோவை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான் இங்கு வெளியிடுகிறேன். அப்பொழுதுதான் சமூகம் இப்படிப்பட்ட அழுகிப்போன மனநிலை உள்ள ஆண்களுக்கு எதிராக காட்டமான எதிர்வினையாற்ற முடியும். கரூர் பாஜக போராட்டம் இவரைப் பொறுத்தவரையில் வீட்டுப் படிதாண்டி, பொதுவெளியில் பொதுவாழ்வில் பங்கேற்கிற பெண்கள் எல்லோருமே வேசிகள் தான். அவர்களுக்கு சொந்த திறமை, உழைப்பு, அனுபவம், கண்ணியம் எதுவுமே இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைக்கிறார். ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனியொரு தாயால் கண்ணியத்தோடும், நேர்மையோடும், துணிச்சலோடும், மதிப்பீடுகளோடும் வளர்க்கப்பட்ட ஒரு பெண் நான். எங்கள் குடும்பத்தில் யாரும் பொதுவாழ்வில் இருந்ததில்லை. அரசியல் என்றாலே அச்சப்படுகின்ற எத்தனையோ குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. நான் எனது 21 வயதில் துணிச்சலோடு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தேன். ஒரு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அநீதிக்கு எதிராக, மக்களுக்காகப் போராடும் போராட்டக்குணத்தால், சமரசமற்ற நேர்மையால், ஒரு பெண் என்பதால், அரசியல் பின்னணியோ, பெரிய அளவிலான பொருளாதார பலமோ இல்லாத காரணத்தால், வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையால் எத்தனையோ இடர்ப்பாடுகளை, தடைகளை, கடினமான காலகட்டங்களை எதிர்கொண்டிருக்கிறேன். இன்னும் எதிர்கொள்கிறேன். ஆனால் எதற்காகவும் தேங்கிவிடாமல் எனக்கு முன்பு இந்த கடினமான பாதையில் பயணித்து, சாதித்த எத்தனையோ கோடி பெண்களைப் போல, நானும் தடைகளை உடைத்துக் கொண்டு எனது பயணத்தை தொடர்கிறேன். கரூர் பாஜக போராட்டம்: செந்தில் நாதன் பத்தாண்டு காலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், அடுத்த பத்தாண்டு காலம் இளைஞர் காங்கிரசின் தேசிய பொது செயலாளர் உடபட பல்வேறு மாநிலங்களில் கட்சிப்பணி, ஐந்து ஆண்டு காலம் அரசியல் வனவாசம், சமூகப் பணி. 20 ஆண்டு கால கடுமையான , நேர்மையான அர்ப்பணிப்பு மிகுந்த அரசியல், சமூகப்பணிக்குப் பின்பே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்புக் கிடைத்தது. எங்கள் கட்சியிலேயே கூட பணம் இல்லை என்பதால் எனக்கு நாடாளுமன்ற தேரதலில் போட்டியிட வாய்ப்பளிக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் எனது தலைவர் சாதாரண கட்சி தொண்டர்களின் உழைப்பை மதிக்கக்கூடியவர். பத்தாண்டு காலம் எனது கடும் உழைப்பை, சமரசமற்ற துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளை நேரில் பார்த்தவர். எனது மக்கள் பணியை, கொள்கை நிலைப்பாட்டை, சமூக அக்கறையைப் புரிந்துகொண்டவர். அதனால் கரூரில் போட்டியிடக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கினார். எமது மக்கள், தேர்தல் களத்தில், பொதுவாழ்வில் உடன் பயணிக்கும் தோழர்கள் என் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்தனர். அதனால் ஏழாண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்தி ஒரு நாளில் குறைந்தது 15 மணி நேரம் பணி புரிய வேண்டும். வருடத்தில் 365 நாட்களில் 50 நாட்கள் கூட விடுப்பு எடுக்க முடிவதில்லை. எனது தாயின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு அனைத்துப் பொறுப்புகளையும், பிரச்சினைகளையும் தனித்தே கையாள வேண்டிய சூழல். ஆனாலும் சோர்வற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். போராடிக் கொண்டிருக்கிறேன். பெண் என்பதால் இந்த தகுதி, திறமை, உழைப்பு, அறிவு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இவரைப் போன்றவர்களைப் பொறுத்தவரை பெண் என்றாலே வெறும் உடல், பாலியல் பொருள் அவ்வளவே. எனக்கு நடந்தது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இந்த நாட்டில் பொது வெளிகளில் நுழையும் பெண்கள் காலம்காலமாக தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரே மாதிரியான, தனிமனித, ஆபாசத் தாக்குதல்களின் தொடர்ச்சியே இது. பெண்கள் பொது இடத்திற்கு வந்தால், நம் குரலை உயர்த்தினால், அதிகாரத்தை கேள்வி கேட்டால், மௌனமாக இருக்க மறுத்தால் அதற்கான எதிர்வினை இப்படித்தான் இருக்கிறது. பெண்களுக்கு பொது வாழ்க்கையில் காலடி வைப்பது எப்போதும் எளிதானது அல்ல. நாம் செய்த செயல்களுக்காக அல்லாமல் நாம் ஒரு பெண் என்பதற்காகவே ஆபாசத் தாக்குதல் அவமதிப்பு, கண்ணியச் சிதைப்பு, பாலியல் அவமானம், மிரட்டல்கள் என அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கரூர் பாஜக தலைவர் செந்தில் நாதன் வாதங்கள் தோல்வியடையும் தருணத்தில், நம் கண்ணியம் தாக்கப்படுகிறது. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதபோது, நம் ஒழுக்கம் திட்டமிட்டு அவமதிக்கப்படுகிறது. பாலியல் இழிவுபடுத்தும் மொழியும், மிரட்டல்களும், பொது மேடைகளில் செய்யப்படும் அவமானங்களும் தவறுதலாக நிகழ்பவை அல்ல. இவை ஆண்டாண்டுகாலமாக பெண்களுக்கு எதிராகத் திட்டமிட்டு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள். பெண்களை மௌனமாக்க, பொது வெளிகளில் இருந்து, அரசியலிலிருந்து, தலைமைத்துவத்திலிருந்து வெளியேற்றவே இந்த ஆபாசத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இப்படித்தான் பொது வெளிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறுகின்றன. இப்படித்தான் பெண்கள் பின்னடைய வைக்கப்படுகிறார்கள். இதை கட்டுப்படுத்தாமல் விட்டால், இது ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாதிக்காது. பல பெண்களின் குரலை மௌனமாக்கும், அச்சுறுத்தும். இந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் பொது வெளிகளைச் சுருக்கும். பெண்களை வெறும் உடலாக, பாலியல் பொருளாக, பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்ப்பது, பெண்களை அவமதிப்பது ஆபாசத் தாக்குதலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது இதுதான் பாஜக, ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம். பா.ஜ.க மாநிலத்தலைவர் துவங்கி, மாவட்ட தலைவர் வரை இதைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அதற்காக அவர்கள் வெட்கப்படுவதில்லை. நம்மை வெட்கித் தலைகுனிய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு பெண்ணாக நாம் வெட்கப்படுவதற்கோ, அச்சப்படுவதற்கோ ஒன்றுமில்லை. அவர்கள் தான் வெட்கப்பட வேண்டும், அதற்காகவே இதை பொதுவெளியில் வெளியிடுகிறேன். பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு சமூகமாக இதுபோன்ற இழிசெயல்களை, அழுகிப்போன மனநிலையை, ஆபாச தாக்குதல்களை, பெண்களுக்கு எதிரான அரசியல் சித்தாந்தங்களை நாம் எதிர்க்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும். அப்பொழுதான் பெண்களுக்கு எதிரான ஆபாசத்தாக்குதலை ஒரு ஆயுதமாகக் கையில் எடுப்பதை நாம் தடுத்து நிறுத்தமுடியும். பொதுவெளியில் நமது உரிமையை,கண்ணியத்தை நிலை நாட்ட முடியும். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் நடிகர் விஜயுடன் பிரபல நடிகையை இணைத்துப் பேசிய விவகார சலசலப்பு அடங்கிய நிலையில், கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவரின் பேச்சு மீண்டும் விவாதகளத்துக்கு வந்திருக்கிறது `திமுக ஆட்சி தேர்தலுக்கான ஆட்சி; தனிநபர் தாக்குதலில்..!' - நயினார் நாகேந்திரன்
நடிகை குறித்த பேச்சு: `அன்றைக்கு தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது'- நயினார் நாகேந்திரன் வருத்தம்!
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக தலைவர் விஜய் பற்றி விமர்சிக்கும்போது, நடிகை பற்றி பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்கள். பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களும்கூட தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட நடிகை தன் வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், ``எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது. பொதுவெளியில் தனிப்பட்ட கருத்துக்களை பேசவோ தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்கவோ வேண்டாம் எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். நயினார் நாகேந்திரன் இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், ``என்னுடைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தவரை எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை... பேசியதுமில்லை. அன்றைக்கு தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது. அது குறித்து வானதி சீனிவாசன் ஏற்கெனவே என்னிடம் பேசி இருந்தார். நேற்றுகூட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டுக்குச் சென்றபோது, அவரும் குறித்து இது குறித்து என்னிடம் பேசினார். எனவே, உண்மையிலேயே யாரேனும் இதில் வருத்தப்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை, மனப்பூர்வமாகத் தெரிவித்து கொள்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். அருவருப்பான கருத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கவில்லை.! - த்ரிஷாவின் வழக்கறிஞரின் அறிக்கை
மயிலாடுதுறை: `அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை' - குமுறும் நோயாளிகள்!
மயிலாடுதுறை மாவட்டம், அரசு பெரியார் தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அனைத்து பேரூராட்சி, நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உயர்மட்ட சிகிசைக்கு பரிந்துரைத்து அனுப்புவது, தலைமை மருத்துவமனைக்கு மட்டுமே. மயிலாடுதுறை மக்களின் முக்கிய மருத்துவ ஆதாரமாக விளங்குவதும் இந்த தலைமை மருத்துவமனை தான். ஆனால் அந்த மருத்துவமனைக்கு வெளியே பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் காத்திருப்பு நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. தரை பெயர்ந்து அங்கு நிற்கவே முடியாத அளவுக்கு அசௌகர்ய நிலையை ஏற்படுத்துகிறது. மேலும் பயணிகள் அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகளும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இல்லாதது, பெரும் குறையாக இருக்கிறது! இது குறித்து அங்கிருந்த மக்களிடம் பேசியபோது, நாங்களே உடம்பு முடியலன்னுதான் ஆஸ்பத்திரி வர்றோம். இங்க வரிசையில நிக்க முடியாம, நின்னு காமிச்சிட்டு வர்றோம். அப்படி காமிச்சிட்டு பஸ் ஏற வந்தா, அந்த பஸ் ஸ்டாப்ல உக்காரவே முடியாது. எவ்வளவு நேரமானாலும் நின்னுக்கிட்டுதான் இருக்கணும். அடிக்கிற வெயில்லகூட நாங்க நின்னுக்கிட்டு தான் இருப்போம். ஏன்னா அந்த பஸ் ஸ்டாப்புக்குள்ள போயி நிக்கக்கூட முடியாது. அந்த அளவு போட்டுக் இருக்குற டைல்ஸ் எல்லாம் உடைஞ்சு காலுலாம் கிழிக்கிற மாறி இருக்கு. நாங்க மட்டும் இல்ல, மாசமா இருக்குறவங்க, குழந்தை வச்சி இருக்குறவங்க, கை கால் முடியாதவங்கன்னு இப்படி உடம்பு முடியாத எல்லாருமே மணிக்கணக்குல கால் கடுக்க நின்னுதான் பஸ் ஏற வேண்டியதா இருக்கு. அதுலயும் சிலரு நின்னு நின்னு பாப்பாங்க, கால் வலி தாங்க முடியாம அப்படியே படியிலே உக்காந்துருவாங்க. வயசானவங்க எப்படி இருந்தாலும் பரவாயில்லன்னு அதுலேயே படுத்தும் இருப்பாங்க. அத பாக்கவே ரொம்ப கொடுமையா இருக்கும். நாங்களும் ஒவ்வொரு முறையும் ஆஸ்பத்திரி வரும்போதெல்லாம் இந்த பஸ் ஸ்டாப் சரி பண்ணி இருப்பாங்கன்னுதான் நெனச்சிட்டு வருவோமே. ஆனா, வந்து பாத்தாதான் தெரியுது, நாளுக்கு நாள் மோசமா தான் ஆகுதுன்னு. நோயாளிகளுக்கு இன்னும் கூடுதல் சிரமம் ஏற்படுத்துற மாதிரி, பஸ்ஸையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு கொஞ்சம் தூரம் முன்னாடியே நிறுத்திடுறாங்க. அதனால அங்க இருந்து வேற, ஆஸ்பத்திரிக்கு நடந்து போக வேண்டியிருக்கு. ஆஸ்பத்திரிக்கு ஒட்டியிருக்குற இந்த பஸ் ஸ்டாப்'ல நிறுத்துனா ரொம்பா உதவியா இருக்கும். இங்க பக்கத்துலதான் எம்.எல்.ஏ வீடும் இருக்கு. அவரும் தினமும் இந்த வழியாதான் வருவாரு... போவாரு. ஆனாலும் அவருக்கும் இந்த பஸ் ஸ்டாப்-பை சீரமைக்கணுங்கிற எண்ணமே இல்லைபோல. உடல்நலம் நல்லா இருக்குறவங்களா ஆஸ்பத்திரிக்கு வரப் போறாங்க? எல்லாருமே உடல்ல ஏதோ பிரச்னைன்னு தான் முடியாம வர்றாங்க. அதனால சம்பந்தப்பட்ட அதிகாரிங்க இந்த பஸ் ஸ்டாப்பை உடனடியா சீரமைச்சுக் கொடுக்கணும். பஸ்ஸும் இங்க ஆஸ்பத்திரி நிறுத்தத்துலயே சரியா நிற்கணும். இதுதான் எங்களோட கோரிக்கை என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரர் நம்மிடம் பேசுகையில், ``அரசுப் பெரியார் தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பயனாளிகளும், ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் பயனாளிகளும் வந்து செல்கின்றனர். ஆனால், அங்குள்ள பேருந்து நிழற்குடை பயனாளிகள் அமர்வதற்கு ஏதுவாக இன்றி, மிகவும் மோசமான நிலையில் மூன்று மாதகாலமாக உள்ளது. பேருந்து ஏறும் பயனாளிக்கு மட்டுமன்றி, இரவு நேரத்தில் வீடற்றோர் தங்கிக்கொள்ளவும் செய்தனர். இப்போது அவர்களும் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். அரசு அதிகாரிகள் இவ்வழியே செல்லும் போதெல்லாம் கண்டும் காணாமல் கண்மூடிக்கொண்டு செல்கின்றனர். அரசு விரைந்து சீர்செய்யும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றார். இது குறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டு பேச முயன்றோம். ஆனால் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. நோயாளிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, அதிகாரிகள் அந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சீரமைத்து, பேருந்துகள் சரியாக அங்கு நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
மயிலாடுதுறை: `அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை' - குமுறும் நோயாளிகள்!
மயிலாடுதுறை மாவட்டம், அரசு பெரியார் தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அனைத்து பேரூராட்சி, நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உயர்மட்ட சிகிசைக்கு பரிந்துரைத்து அனுப்புவது, தலைமை மருத்துவமனைக்கு மட்டுமே. மயிலாடுதுறை மக்களின் முக்கிய மருத்துவ ஆதாரமாக விளங்குவதும் இந்த தலைமை மருத்துவமனை தான். ஆனால் அந்த மருத்துவமனைக்கு வெளியே பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் காத்திருப்பு நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. தரை பெயர்ந்து அங்கு நிற்கவே முடியாத அளவுக்கு அசௌகர்ய நிலையை ஏற்படுத்துகிறது. மேலும் பயணிகள் அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகளும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இல்லாதது, பெரும் குறையாக இருக்கிறது! இது குறித்து அங்கிருந்த மக்களிடம் பேசியபோது, நாங்களே உடம்பு முடியலன்னுதான் ஆஸ்பத்திரி வர்றோம். இங்க வரிசையில நிக்க முடியாம, நின்னு காமிச்சிட்டு வர்றோம். அப்படி காமிச்சிட்டு பஸ் ஏற வந்தா, அந்த பஸ் ஸ்டாப்ல உக்காரவே முடியாது. எவ்வளவு நேரமானாலும் நின்னுக்கிட்டுதான் இருக்கணும். அடிக்கிற வெயில்லகூட நாங்க நின்னுக்கிட்டு தான் இருப்போம். ஏன்னா அந்த பஸ் ஸ்டாப்புக்குள்ள போயி நிக்கக்கூட முடியாது. அந்த அளவு போட்டுக் இருக்குற டைல்ஸ் எல்லாம் உடைஞ்சு காலுலாம் கிழிக்கிற மாறி இருக்கு. நாங்க மட்டும் இல்ல, மாசமா இருக்குறவங்க, குழந்தை வச்சி இருக்குறவங்க, கை கால் முடியாதவங்கன்னு இப்படி உடம்பு முடியாத எல்லாருமே மணிக்கணக்குல கால் கடுக்க நின்னுதான் பஸ் ஏற வேண்டியதா இருக்கு. அதுலயும் சிலரு நின்னு நின்னு பாப்பாங்க, கால் வலி தாங்க முடியாம அப்படியே படியிலே உக்காந்துருவாங்க. வயசானவங்க எப்படி இருந்தாலும் பரவாயில்லன்னு அதுலேயே படுத்தும் இருப்பாங்க. அத பாக்கவே ரொம்ப கொடுமையா இருக்கும். நாங்களும் ஒவ்வொரு முறையும் ஆஸ்பத்திரி வரும்போதெல்லாம் இந்த பஸ் ஸ்டாப் சரி பண்ணி இருப்பாங்கன்னுதான் நெனச்சிட்டு வருவோமே. ஆனா, வந்து பாத்தாதான் தெரியுது, நாளுக்கு நாள் மோசமா தான் ஆகுதுன்னு. நோயாளிகளுக்கு இன்னும் கூடுதல் சிரமம் ஏற்படுத்துற மாதிரி, பஸ்ஸையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு கொஞ்சம் தூரம் முன்னாடியே நிறுத்திடுறாங்க. அதனால அங்க இருந்து வேற, ஆஸ்பத்திரிக்கு நடந்து போக வேண்டியிருக்கு. ஆஸ்பத்திரிக்கு ஒட்டியிருக்குற இந்த பஸ் ஸ்டாப்'ல நிறுத்துனா ரொம்பா உதவியா இருக்கும். இங்க பக்கத்துலதான் எம்.எல்.ஏ வீடும் இருக்கு. அவரும் தினமும் இந்த வழியாதான் வருவாரு... போவாரு. ஆனாலும் அவருக்கும் இந்த பஸ் ஸ்டாப்-பை சீரமைக்கணுங்கிற எண்ணமே இல்லைபோல. உடல்நலம் நல்லா இருக்குறவங்களா ஆஸ்பத்திரிக்கு வரப் போறாங்க? எல்லாருமே உடல்ல ஏதோ பிரச்னைன்னு தான் முடியாம வர்றாங்க. அதனால சம்பந்தப்பட்ட அதிகாரிங்க இந்த பஸ் ஸ்டாப்பை உடனடியா சீரமைச்சுக் கொடுக்கணும். பஸ்ஸும் இங்க ஆஸ்பத்திரி நிறுத்தத்துலயே சரியா நிற்கணும். இதுதான் எங்களோட கோரிக்கை என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரர் நம்மிடம் பேசுகையில், ``அரசுப் பெரியார் தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பயனாளிகளும், ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் பயனாளிகளும் வந்து செல்கின்றனர். ஆனால், அங்குள்ள பேருந்து நிழற்குடை பயனாளிகள் அமர்வதற்கு ஏதுவாக இன்றி, மிகவும் மோசமான நிலையில் மூன்று மாதகாலமாக உள்ளது. பேருந்து ஏறும் பயனாளிக்கு மட்டுமன்றி, இரவு நேரத்தில் வீடற்றோர் தங்கிக்கொள்ளவும் செய்தனர். இப்போது அவர்களும் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். அரசு அதிகாரிகள் இவ்வழியே செல்லும் போதெல்லாம் கண்டும் காணாமல் கண்மூடிக்கொண்டு செல்கின்றனர். அரசு விரைந்து சீர்செய்யும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றார். இது குறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டு பேச முயன்றோம். ஆனால் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. நோயாளிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, அதிகாரிகள் அந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சீரமைத்து, பேருந்துகள் சரியாக அங்கு நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
மயிலாடுதுறை: `அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை' - குமுறும் நோயாளிகள்!
மயிலாடுதுறை மாவட்டம், அரசு பெரியார் தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அனைத்து பேரூராட்சி, நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உயர்மட்ட சிகிசைக்கு பரிந்துரைத்து அனுப்புவது, தலைமை மருத்துவமனைக்கு மட்டுமே. மயிலாடுதுறை மக்களின் முக்கிய மருத்துவ ஆதாரமாக விளங்குவதும் இந்த தலைமை மருத்துவமனை தான். ஆனால் அந்த மருத்துவமனைக்கு வெளியே பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் காத்திருப்பு நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. தரை பெயர்ந்து அங்கு நிற்கவே முடியாத அளவுக்கு அசௌகர்ய நிலையை ஏற்படுத்துகிறது. மேலும் பயணிகள் அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகளும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இல்லாதது, பெரும் குறையாக இருக்கிறது! இது குறித்து அங்கிருந்த மக்களிடம் பேசியபோது, நாங்களே உடம்பு முடியலன்னுதான் ஆஸ்பத்திரி வர்றோம். இங்க வரிசையில நிக்க முடியாம, நின்னு காமிச்சிட்டு வர்றோம். அப்படி காமிச்சிட்டு பஸ் ஏற வந்தா, அந்த பஸ் ஸ்டாப்ல உக்காரவே முடியாது. எவ்வளவு நேரமானாலும் நின்னுக்கிட்டுதான் இருக்கணும். அடிக்கிற வெயில்லகூட நாங்க நின்னுக்கிட்டு தான் இருப்போம். ஏன்னா அந்த பஸ் ஸ்டாப்புக்குள்ள போயி நிக்கக்கூட முடியாது. அந்த அளவு போட்டுக் இருக்குற டைல்ஸ் எல்லாம் உடைஞ்சு காலுலாம் கிழிக்கிற மாறி இருக்கு. நாங்க மட்டும் இல்ல, மாசமா இருக்குறவங்க, குழந்தை வச்சி இருக்குறவங்க, கை கால் முடியாதவங்கன்னு இப்படி உடம்பு முடியாத எல்லாருமே மணிக்கணக்குல கால் கடுக்க நின்னுதான் பஸ் ஏற வேண்டியதா இருக்கு. அதுலயும் சிலரு நின்னு நின்னு பாப்பாங்க, கால் வலி தாங்க முடியாம அப்படியே படியிலே உக்காந்துருவாங்க. வயசானவங்க எப்படி இருந்தாலும் பரவாயில்லன்னு அதுலேயே படுத்தும் இருப்பாங்க. அத பாக்கவே ரொம்ப கொடுமையா இருக்கும். நாங்களும் ஒவ்வொரு முறையும் ஆஸ்பத்திரி வரும்போதெல்லாம் இந்த பஸ் ஸ்டாப் சரி பண்ணி இருப்பாங்கன்னுதான் நெனச்சிட்டு வருவோமே. ஆனா, வந்து பாத்தாதான் தெரியுது, நாளுக்கு நாள் மோசமா தான் ஆகுதுன்னு. நோயாளிகளுக்கு இன்னும் கூடுதல் சிரமம் ஏற்படுத்துற மாதிரி, பஸ்ஸையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு கொஞ்சம் தூரம் முன்னாடியே நிறுத்திடுறாங்க. அதனால அங்க இருந்து வேற, ஆஸ்பத்திரிக்கு நடந்து போக வேண்டியிருக்கு. ஆஸ்பத்திரிக்கு ஒட்டியிருக்குற இந்த பஸ் ஸ்டாப்'ல நிறுத்துனா ரொம்பா உதவியா இருக்கும். இங்க பக்கத்துலதான் எம்.எல்.ஏ வீடும் இருக்கு. அவரும் தினமும் இந்த வழியாதான் வருவாரு... போவாரு. ஆனாலும் அவருக்கும் இந்த பஸ் ஸ்டாப்-பை சீரமைக்கணுங்கிற எண்ணமே இல்லைபோல. உடல்நலம் நல்லா இருக்குறவங்களா ஆஸ்பத்திரிக்கு வரப் போறாங்க? எல்லாருமே உடல்ல ஏதோ பிரச்னைன்னு தான் முடியாம வர்றாங்க. அதனால சம்பந்தப்பட்ட அதிகாரிங்க இந்த பஸ் ஸ்டாப்பை உடனடியா சீரமைச்சுக் கொடுக்கணும். பஸ்ஸும் இங்க ஆஸ்பத்திரி நிறுத்தத்துலயே சரியா நிற்கணும். இதுதான் எங்களோட கோரிக்கை என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரர் நம்மிடம் பேசுகையில், ``அரசுப் பெரியார் தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பயனாளிகளும், ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் பயனாளிகளும் வந்து செல்கின்றனர். ஆனால், அங்குள்ள பேருந்து நிழற்குடை பயனாளிகள் அமர்வதற்கு ஏதுவாக இன்றி, மிகவும் மோசமான நிலையில் மூன்று மாதகாலமாக உள்ளது. பேருந்து ஏறும் பயனாளிக்கு மட்டுமன்றி, இரவு நேரத்தில் வீடற்றோர் தங்கிக்கொள்ளவும் செய்தனர். இப்போது அவர்களும் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். அரசு அதிகாரிகள் இவ்வழியே செல்லும் போதெல்லாம் கண்டும் காணாமல் கண்மூடிக்கொண்டு செல்கின்றனர். அரசு விரைந்து சீர்செய்யும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றார். இது குறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டு பேச முயன்றோம். ஆனால் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. நோயாளிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, அதிகாரிகள் அந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சீரமைத்து, பேருந்துகள் சரியாக அங்கு நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
மயிலாடுதுறை: `அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை' - குமுறும் நோயாளிகள்!
மயிலாடுதுறை மாவட்டம், அரசு பெரியார் தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அனைத்து பேரூராட்சி, நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உயர்மட்ட சிகிசைக்கு பரிந்துரைத்து அனுப்புவது, தலைமை மருத்துவமனைக்கு மட்டுமே. மயிலாடுதுறை மக்களின் முக்கிய மருத்துவ ஆதாரமாக விளங்குவதும் இந்த தலைமை மருத்துவமனை தான். ஆனால் அந்த மருத்துவமனைக்கு வெளியே பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் காத்திருப்பு நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. தரை பெயர்ந்து அங்கு நிற்கவே முடியாத அளவுக்கு அசௌகர்ய நிலையை ஏற்படுத்துகிறது. மேலும் பயணிகள் அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகளும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இல்லாதது, பெரும் குறையாக இருக்கிறது! இது குறித்து அங்கிருந்த மக்களிடம் பேசியபோது, நாங்களே உடம்பு முடியலன்னுதான் ஆஸ்பத்திரி வர்றோம். இங்க வரிசையில நிக்க முடியாம, நின்னு காமிச்சிட்டு வர்றோம். அப்படி காமிச்சிட்டு பஸ் ஏற வந்தா, அந்த பஸ் ஸ்டாப்ல உக்காரவே முடியாது. எவ்வளவு நேரமானாலும் நின்னுக்கிட்டுதான் இருக்கணும். அடிக்கிற வெயில்லகூட நாங்க நின்னுக்கிட்டு தான் இருப்போம். ஏன்னா அந்த பஸ் ஸ்டாப்புக்குள்ள போயி நிக்கக்கூட முடியாது. அந்த அளவு போட்டுக் இருக்குற டைல்ஸ் எல்லாம் உடைஞ்சு காலுலாம் கிழிக்கிற மாறி இருக்கு. நாங்க மட்டும் இல்ல, மாசமா இருக்குறவங்க, குழந்தை வச்சி இருக்குறவங்க, கை கால் முடியாதவங்கன்னு இப்படி உடம்பு முடியாத எல்லாருமே மணிக்கணக்குல கால் கடுக்க நின்னுதான் பஸ் ஏற வேண்டியதா இருக்கு. அதுலயும் சிலரு நின்னு நின்னு பாப்பாங்க, கால் வலி தாங்க முடியாம அப்படியே படியிலே உக்காந்துருவாங்க. வயசானவங்க எப்படி இருந்தாலும் பரவாயில்லன்னு அதுலேயே படுத்தும் இருப்பாங்க. அத பாக்கவே ரொம்ப கொடுமையா இருக்கும். நாங்களும் ஒவ்வொரு முறையும் ஆஸ்பத்திரி வரும்போதெல்லாம் இந்த பஸ் ஸ்டாப் சரி பண்ணி இருப்பாங்கன்னுதான் நெனச்சிட்டு வருவோமே. ஆனா, வந்து பாத்தாதான் தெரியுது, நாளுக்கு நாள் மோசமா தான் ஆகுதுன்னு. நோயாளிகளுக்கு இன்னும் கூடுதல் சிரமம் ஏற்படுத்துற மாதிரி, பஸ்ஸையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு கொஞ்சம் தூரம் முன்னாடியே நிறுத்திடுறாங்க. அதனால அங்க இருந்து வேற, ஆஸ்பத்திரிக்கு நடந்து போக வேண்டியிருக்கு. ஆஸ்பத்திரிக்கு ஒட்டியிருக்குற இந்த பஸ் ஸ்டாப்'ல நிறுத்துனா ரொம்பா உதவியா இருக்கும். இங்க பக்கத்துலதான் எம்.எல்.ஏ வீடும் இருக்கு. அவரும் தினமும் இந்த வழியாதான் வருவாரு... போவாரு. ஆனாலும் அவருக்கும் இந்த பஸ் ஸ்டாப்-பை சீரமைக்கணுங்கிற எண்ணமே இல்லைபோல. உடல்நலம் நல்லா இருக்குறவங்களா ஆஸ்பத்திரிக்கு வரப் போறாங்க? எல்லாருமே உடல்ல ஏதோ பிரச்னைன்னு தான் முடியாம வர்றாங்க. அதனால சம்பந்தப்பட்ட அதிகாரிங்க இந்த பஸ் ஸ்டாப்பை உடனடியா சீரமைச்சுக் கொடுக்கணும். பஸ்ஸும் இங்க ஆஸ்பத்திரி நிறுத்தத்துலயே சரியா நிற்கணும். இதுதான் எங்களோட கோரிக்கை என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரர் நம்மிடம் பேசுகையில், ``அரசுப் பெரியார் தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பயனாளிகளும், ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் பயனாளிகளும் வந்து செல்கின்றனர். ஆனால், அங்குள்ள பேருந்து நிழற்குடை பயனாளிகள் அமர்வதற்கு ஏதுவாக இன்றி, மிகவும் மோசமான நிலையில் மூன்று மாதகாலமாக உள்ளது. பேருந்து ஏறும் பயனாளிக்கு மட்டுமன்றி, இரவு நேரத்தில் வீடற்றோர் தங்கிக்கொள்ளவும் செய்தனர். இப்போது அவர்களும் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். அரசு அதிகாரிகள் இவ்வழியே செல்லும் போதெல்லாம் கண்டும் காணாமல் கண்மூடிக்கொண்டு செல்கின்றனர். அரசு விரைந்து சீர்செய்யும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றார். இது குறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டு பேச முயன்றோம். ஆனால் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. நோயாளிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, அதிகாரிகள் அந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சீரமைத்து, பேருந்துகள் சரியாக அங்கு நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
Exclusive `பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை ரகசியமாக சந்தித்தது இதனால்தான்.!’ - உடைத்துப் பேசும் கோபண்ணா
`அதிக சீட், ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். பா.ஜ.க அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை முழுவீச்சில் எதிர்க்க வேண்டிய காங்கிரஸ், மாறாக தன் நிலையை தக்க வைக்க திமுக-வுடன் போராடிக்கொண்டிருக்கிறது. கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு ஒத்து வராது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெளிவாகச் சொல்லிவிட்ட நிலையில், இந்தப் பிரச்னை இன்னும் பெரிதாக வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடருமா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் தேசிய முரசு இதழின் ஆசிரியருமான கோபண்ணா அவர்களை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்… கோபண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, துணை தலைவர் ``பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மீது ஒரு பகை இருக்கிறது. அந்தப் பகையை தீர்த்துக்கொள்ள இந்த கூட்டணியை முறிக்க வேண்டும் என்று நினைக்கிறார். காங்கிரஸ் - திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறதே? ``இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய பிரச்னை. பிப்ரவரி 22 ஆம் தேதி, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதாக திமுக அறிவித்திருக்கிறது. அதன் பிறகு, இந்தப் பிரச்சனை பேசி முடிக்கப்படும். அப்போதும் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை என்றால் தலைவர் ராகுல் காந்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏதோ ஒரு வகையில பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும். ஏனென்றால், எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக-வுக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. தேச நலன் சார்ந்த இந்தக் கூட்டணி காலத்தின் கட்டாயம். மாநில அளவில திமுக தலைமையில் ஆட்சி இருக்கிறது. நாளை பாஜக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய அளவில் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மதசார்பற்ற ஒரு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதை நோக்கமாகக் கொண்டுதான் இந்தக் கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ராகுல் காந்தி, ஸ்டாலின் ``காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை, தமிழக நிர்வாகிகளை பலமுறை டெல்லிக்கு அழைத்துப் பேசியிருக்கிறார்கள். ஆனாலும், இந்தப் பிரச்னை ஓயவில்லையே? ``தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து, தனித்தனியாக கருத்துக்களைக் கேட்டிருக்கிறது தேசிய தலைமை. அதில் அனைவருமே திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆட்சியில் பங்கு அதிக இடங்கள் என்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என்று திமுக தலைமை சொல்லிவிட்டார்கள். ஏனென்றால், 1967-லில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் திமுக தொடர்ந்து கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கிறது. கூட்டணி அமைகும்போதே, அவர்கள் தனிப்பெரும்பான்மை பெறுகிற அளவுக்கான தொகுதிகளை முடிவு செய்துதான் போட்டியிடுகிறார்கள். ஆகையால், கூட்டணி ஆட்சி என்பது அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காதபோதுதான் ஏற்படும். அப்படியான சூழலில்தான் கூட்டணி ஆட்சி வரும் என்ற எண்ணத்தில்தான் முதலமைச்சர், `கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு சரி வராது’ என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார். கூட்டணி என்பது திமுக-வுடன்தான் என்பது முடிவாகிவிட்டது. ஆனால், அந்தக் கூட்டணி எந்த அடிப்படையிலான கூட்டணி என்பதுதான் இப்போது முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம். இது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும்.’’ ``திமுக-வுடன்தான் கூட்டணி என்பதில் மாற்றம் இல்லை என்றால் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் பொதுவெளியில் தொடர்ந்து பொதுவெளியில் கருத்துக்களை பகிர்வது ஏன்?’’ ``தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆலந்தூர் பாரதியும் அதை வலியுறுத்தியுள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியில ஒரு அதீத ஜனநாயகம் இருக்கிறது. ஆகையால், சில பேர் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கிறார்கள். அந்த உரிமை காங்கிரஸ் கட்சியில் இருக்கிறது. அது சில நேரங்கள் வரம்பு மீறியும் போகிறது. அப்படியான கருத்து தெரிவிக்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கவில்லை. அது வந்து இந்த கூட்டணியை வந்து ஒரு பாதிக்கிற நிலைக்கு வந்திருக்கிறது அது விரைவில் அதற்கு ஒரு முடிவு கட்டப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.” பிரவீன் சக்கரவர்த்தி ``யார் வரம்பு மீறி கருத்து தெரிவிக்கிறார்கள். யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்கள்?” ``மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியின் நலன் கருதிதான் பேசுகிறார். அவர் உரிமையோடு சில விஷயங்களை சொல்லுகிறார். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்பதை பெரிய தவறாக நாம் சொல்ல முடியாது. அது இருந்தால்தான் காங்கிரஸ் வளரும் என்ற கருத்து காங்கிரஸ் கட்சியில் வலுவாக இருக்கிறது. 58 ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சியில் இல்லை என்றால் அந்தக் கட்சி மக்களோடு தொடர்பில்லாமல் போய்விடுகிறது. அதற்காக அந்த கருத்து முன்வைக்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் மாணிக்கம் தாகூர் பேசுகிறார். ஆனால், பிரவீன் சக்கரவர்த்தி திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கருத்து கூறுகிறார். கூட்டணியை முறித்து தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். அதனால்தான் அவர் விஜய்யை ரகசியமாக பார்த்தார், தொடர்ந்து அதை மையமாக வைத்து கருத்து கூறுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் விவகாரங்களில் தலையிடுதற்கு பிரவீன் சக்கரவர்த்திக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆல் இந்தியா ப்ரொஃபஷனல் காங்கிரஸில் பொறுப்பில் இருக்கும் அவர், அந்தப் பணியை செய்யாமல், தமிழ்நாட்டிற்கு வந்து அடிக்கடி வந்து, ஊடகங்களில் பேட்டி கொடுப்பதற்கு இவர் யார்? பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மீது ஒரு பகை இருக்கிறது. அந்தப் பகையை தீர்த்துக்கொள்ள இந்த கூட்டணியை முறிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூலம் மேலிடத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ``பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மீது தனிப்பட்ட பகை என்கிறீர்கள். ஆனால், அவரோ `குறிப்பிட்ட நாற்பது ஐம்பது பேர் தொடர்ந்து பதவியில் இருப்பதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியை நடத்த முடியாது. கட்சியை வளர்க்க வேண்டும்’ என்கிறாரே?” ``தமிழ்நாடு காங்கிரஸ் விவகாரங்களில் பிரவீன் சக்கரவர்த்தி சொல்கிற கருத்துக்கள் யாருமே ஏற்கக் கூடியது அல்ல. தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை மக்களவையில் 10 உறுப்பினர்கள் இருக்கிறோம். சட்டசபையில் 25 பேர் போட்டியிட்டு 18 வெற்றிபெற்றுள்ளோம். பிரவீன் சக்கரவர்த்தி சொல்வதைக் கேட்டால், இருப்பதும் போய்விடும். எதுவுமே இல்லாத ஒரு அவல நிலைக்கு காங்கிரஸ் செல்ல வேண்டிய ஒரு சூழலைதான் பிரிவின் சக்கரவர்த்தி ஏற்படுத்த முனைகிறார். அவர் சொல்வது தோல்விக்கான கூட்டணி. வெற்றிக்கான வாய்ப்பே இல்லாத ஒரு கூட்டணியக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார் அவர். தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற முடியாமல் தடுக்க வேண்டும் என்றால் திமுக- காங்கிரஸ் கூட்டணி அவசியம். தமிழகத்தில் பாஜக கால் பதிப்பதை தவெக கூட்டணி மூலம் தடுக்க முடியாது. . ஏனென்றால், பாஜக-வை எதிர்த்து சேலம் கூட்டத்தில் கூட ஒரே ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. அவர் எதிர்ப்பது திமுக-வை மாட்டும்தான். வேறு யாரையும் நான் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அரசியல் எதிரி கொள்கை எதிரி என்று சொன்னவர் கொள்கை எதிரியை விட்டுட்டார். ஏனென்றால், அவருக்கு கொள்கையே கிடையாது. அரசியல் எதிரியை எதிர்த்துதான் கருத்து கூறி இருக்கிறார். பாஜகவை எதிர்க்க அவருக்கு தயக்கம். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை இருக்கிறது. ஜனநாயகன் படப் பிரச்சனை இருக்கிறது. இவ்வளவு பாதிப்புக்கு உள்ளான நிலையில் கூட, அவர் பாஜகவை எதிர்ப்பதற்கு எந்த நிலையிலும் தயாராக இல்லை. அப்படிப்பட்டவரை நம்பி எப்படி கூட்டணி வைக்க முடியும்? பாஜக எதிர்ப்பை முதன்மையான நோக்கமாக கொண்டு, நாள்தோறும் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரிமை குரலுக்காக போராடுகிறார். ராகுல் காந்தி எந்த பாஜகவை எதிர்த்து போராடுகிறாரோ அந்த பாஜகவை எதிர்த்து கருத்து கூற துணிவற்ற விஜய்யை காங்கிரஸ் கட்சியும் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரிப்பார்கள் என்று சொல்லுவதை என்னால் கற்பனையில கூட நினைத்து பார்க்க முடியவில்லை” ``திமுகவின் நிலைப்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், மீண்டும் மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும்தான் எதிர்வினையாற்றுகிறார்கள். இவ்வளவு பிரச்னைகளுக்கும் மத்தியில் ராகுல் காந்தி அமைதி காக்கிறாரே?’’ ``திமுக - காங்கிரஸ் கூட்டணி எந்த அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர்தான். இவர்கள் யாரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன கருத்துக்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை முடிவு செய்யட்டும், திமுக தலைமையோடு பேசட்டும். இந்தக் கூட்டணியில் விரிசலோ முறிவோ ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்தக் கூட்டணிக்கு தேசிய அளவிலான நிர்பந்தம் இருக்கிறது. இந்தப் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்.’’ ``நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால், களத்தில் பிரச்சனை வந்து எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸுக்கு பூத் கமிட்டி அமைக்ககூட ஆள் இல்லை என்கிறார் திமுக எம்எல்ஏ தளபதி, அமைச்சர் ராஜ கண்ணப்பன் காங்கிரஸ் வந்தா வரட்டும் வராட்டி போகட்டும் என்கிறார்? ``இரு தரப்பிலுமே கருத்து கூறுகிறார்கள். எதிர்வினை ஆற்றுகிறார்கள். அது ஊடகங்களில் வெளிவருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் செயல்படுகிறார்கள். இப்படி தொடர்ந்து நடக்கிறது. இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்டப்படும். ஒரு சில நாட்கள்ல எல்லாம் சரியாகிவிடும். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இதெல்லாம் பழைய கதையாகி எல்லாம் ஒதுக்கப்படும்” முழு பேட்டியைப் பார்க்க கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்!
அவதூறு வழக்கு: ``டி.ஆர் பாலுவை குறுக்கு விசாரணை செய்தேன் - அண்ணாமலை
அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோது திமுக ஃபைல்ஸ் என்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, திமுக தலைவர்களின் சொத்து விவரம் என்றப் பெயரில் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி டி.ஆர்.பாலு-வின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டி.ஆர் பாலு இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரான தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``நீதியின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சாமானிய மனிதர்கள் நம்முடைய உரிமைக்காகப் பேசும் பொழுது, நம்முடைய வழக்கை நாமே எடுத்து வாதாட முடியும் என்பதற்கு இன்று நடந்த சம்பவம் ஒரு சாட்சி. எவ்வளவு பெரிய மனிதர்களாக, எப்படிப்பட்ட பொறுப்புகளில் இருந்தாலும் கூட, ஒரு சாமானிய மனிதன், தான் சொல்லியிருக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், வாதாடலாம். இன்று நீதிமன்றத்தில் டி.ஆர் பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்தோம். வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதால் அனைத்து விவரங்களையும் சொல்ல முடியாது. இருப்பினும், சேதுசமுத்திரத் திட்டம், சாராய ஆலைகள், குடும்பம் நடத்தக்கூடிய நிறுவனங்கள், இன்று அவர் நீதிமன்றத்திற்கு வந்த கார் எந்த நிறுவனத்தின் பெயரில் இருக்கிறது, அவருடைய கடன் போன்ற பல கேள்விகளை கேட்டுள்ளோம் அண்ணாமலை விசாரணையின் போது, நான் என் மனைவியின் பெயரில் சொத்து வாங்கியிருப்பதாக ஒரு புதிய அவதூறை டி.ஆர்.பாலு கிளப்பினார். என் மனைவி என்ன படித்துள்ளார், எங்கே வேலை பார்க்கிறார், அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று எதுவுமே தெரியாமல், நான் ஊழல் செய்து சொத்து வாங்கியதாகக் கூறினார். நாங்கள் வாங்கியிருப்பது ஒரு விவசாய நிலம். அதற்கு முறையான வருமான வரி கட்டப்பட்டுள்ளது, வங்கியில் 2.5 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. எதுவுமே தெரியாமல் என் மனைவி மீது அவதூறு பரப்பியதற்காக, அவர் மீது நாளை மற்றுமொரு புதிய அவதூறு வழக்கை எனது வழக்கறிஞர்கள் மூலமாகத் தொடுக்க இருக்கின்றேன். அந்த வழக்கின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் நானும் என் மனைவியும் சம்பாதித்த சம்பளம், வாங்கிய கடன் என அனைத்து வங்கி விவரங்களையும் பொதுவெளியில் வெளியிடப் போகிறேன். நான் சென்னையில் தங்கி இருப்பதற்கு நண்பர்கள் வாடகை கொடுக்கிறார்கள் என்பதையும் அவர் அவதூறாகச் சொன்னார். நான் சென்னையில் இருப்பது பாஜக மாநிலத் தலைவர் என்கின்ற பொறுப்பினால் மட்டுமே. எனக்குச் சென்னையில் தொழிலோ வீடோ கிடையாது. கட்சிப் பணிக்காக நண்பர்கள் கொடுத்த பணத்தைக் கட்சி எப்படிச் செலவு செய்தது என்பதை அந்தப் புதிய வழக்கின் மூலம் தெளிவுபடுத்துவேன். நேர்மையான அரசியலுக்காக இந்தக் கடினமான பாதையில் பயணித்துத்தான் ஆக வேண்டும். நம்முடைய ஒற்றை இலக்கு திமுக-வை வீழ்த்துவது மட்டுமே. அந்தப் பணியில் இருந்து கவனம் சிதறக் கூடாது. டி.ஆர்.பாலுவுக்கு மார்ச் மாதம் முழுவதும் நாடாளுமன்றப் பணிகள் இருப்பதால், ஏப்ரல் 7-ம் தேதிக்கு அடுத்த குறுக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. என்றார். `தவெக நாடக கம்பெனி; நம்ம பிள்ளைகளுக்கு நாம்தான் புத்திமதி சொல்ல வேண்டும்' - மதுக்கூர் ராமலிங்கம்
அவதூறு வழக்கு: ``டி.ஆர் பாலுவை குறுக்கு விசாரணை செய்தேன் - அண்ணாமலை
அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோது திமுக ஃபைல்ஸ் என்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, திமுக தலைவர்களின் சொத்து விவரம் என்றப் பெயரில் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி டி.ஆர்.பாலு-வின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டி.ஆர் பாலு இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரான தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``நீதியின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சாமானிய மனிதர்கள் நம்முடைய உரிமைக்காகப் பேசும் பொழுது, நம்முடைய வழக்கை நாமே எடுத்து வாதாட முடியும் என்பதற்கு இன்று நடந்த சம்பவம் ஒரு சாட்சி. எவ்வளவு பெரிய மனிதர்களாக, எப்படிப்பட்ட பொறுப்புகளில் இருந்தாலும் கூட, ஒரு சாமானிய மனிதன், தான் சொல்லியிருக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், வாதாடலாம். இன்று நீதிமன்றத்தில் டி.ஆர் பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்தோம். வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதால் அனைத்து விவரங்களையும் சொல்ல முடியாது. இருப்பினும், சேதுசமுத்திரத் திட்டம், சாராய ஆலைகள், குடும்பம் நடத்தக்கூடிய நிறுவனங்கள், இன்று அவர் நீதிமன்றத்திற்கு வந்த கார் எந்த நிறுவனத்தின் பெயரில் இருக்கிறது, அவருடைய கடன் போன்ற பல கேள்விகளை கேட்டுள்ளோம் அண்ணாமலை விசாரணையின் போது, நான் என் மனைவியின் பெயரில் சொத்து வாங்கியிருப்பதாக ஒரு புதிய அவதூறை டி.ஆர்.பாலு கிளப்பினார். என் மனைவி என்ன படித்துள்ளார், எங்கே வேலை பார்க்கிறார், அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று எதுவுமே தெரியாமல், நான் ஊழல் செய்து சொத்து வாங்கியதாகக் கூறினார். நாங்கள் வாங்கியிருப்பது ஒரு விவசாய நிலம். அதற்கு முறையான வருமான வரி கட்டப்பட்டுள்ளது, வங்கியில் 2.5 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. எதுவுமே தெரியாமல் என் மனைவி மீது அவதூறு பரப்பியதற்காக, அவர் மீது நாளை மற்றுமொரு புதிய அவதூறு வழக்கை எனது வழக்கறிஞர்கள் மூலமாகத் தொடுக்க இருக்கின்றேன். அந்த வழக்கின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் நானும் என் மனைவியும் சம்பாதித்த சம்பளம், வாங்கிய கடன் என அனைத்து வங்கி விவரங்களையும் பொதுவெளியில் வெளியிடப் போகிறேன். நான் சென்னையில் தங்கி இருப்பதற்கு நண்பர்கள் வாடகை கொடுக்கிறார்கள் என்பதையும் அவர் அவதூறாகச் சொன்னார். நான் சென்னையில் இருப்பது பாஜக மாநிலத் தலைவர் என்கின்ற பொறுப்பினால் மட்டுமே. எனக்குச் சென்னையில் தொழிலோ வீடோ கிடையாது. கட்சிப் பணிக்காக நண்பர்கள் கொடுத்த பணத்தைக் கட்சி எப்படிச் செலவு செய்தது என்பதை அந்தப் புதிய வழக்கின் மூலம் தெளிவுபடுத்துவேன். நேர்மையான அரசியலுக்காக இந்தக் கடினமான பாதையில் பயணித்துத்தான் ஆக வேண்டும். நம்முடைய ஒற்றை இலக்கு திமுக-வை வீழ்த்துவது மட்டுமே. அந்தப் பணியில் இருந்து கவனம் சிதறக் கூடாது. டி.ஆர்.பாலுவுக்கு மார்ச் மாதம் முழுவதும் நாடாளுமன்றப் பணிகள் இருப்பதால், ஏப்ரல் 7-ம் தேதிக்கு அடுத்த குறுக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. என்றார். `தவெக நாடக கம்பெனி; நம்ம பிள்ளைகளுக்கு நாம்தான் புத்திமதி சொல்ல வேண்டும்' - மதுக்கூர் ராமலிங்கம்
'இல்லாத ஊருக்கு போகாத வழி' - காங்கிரஸ் கோரிக்கை குறித்து வைகோ விமர்சனம்!
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி மதிமுக தலைவர் வைகோ தொடர்ந்த வழக்கு விசாரணை, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ``கடந்த 2013-ல் தொடர்ந்த ரிட் மனு, இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று, வரும் 26-ஆம் தேதி பிற்பகல் 2:15 மணிக்கு எனது வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டாண்டுகளாக இருந்த இந்தத் தடை தற்போது ஐந்தாண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த எனது சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகிறேன். RSS தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதற்கிடையில் இந்துத்துவ சக்திகளும், சனாதன கூட்டமும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கூட்டமும் எப்படி சிந்தனையாளர்களை கர்நாடகத்திலும், மராட்டியத்திலும் படுகொலை செய்தார்களோ, அதேபோல இப்ரான் ஹபீப் என்கின்ற 93 வயது நிரம்பிய ஆய்வாளர், சிந்தனையாளர், அறிஞர் உரையாற்றிக் கொண்டிருந்த மண்டபத்துக்குள்ளேயே நுழைந்து அவரை கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். இதற்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காது. ஏனெனில், அவர்கள் எல்லையைத் தாண்டி, கற்பனை செய்ய முடியாத அக்கிரமங்களை செய்ய துணிந்து விட்டார்கள். இந்திய அரசியல் நிர்ணய சபையில், அம்பேத்கர் தலைமையில் வந்தே மாதரம் என்ற பாடலை, தேசிய கீதமாக ஏற்று கொள்வதா வேண்டாமா என வாதம் நடந்தது. பெரும்பான்மையான உறுப்பினர்களும், அண்ணல் அம்பேத்கரும் `அந்தப் பாடலில் இந்து மத கடவுள்களை வணங்குவதாக வரிகள் இருக்கிறது. இதை கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட பிற மதத்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த வரிகளை நீக்குவது மட்டுமல்ல, மற்ற வரிகளையும் கூட நாட்டினுடைய தேசிய கீதக்கோடு சேர்த்து பாடுவதற்கு வழிவகை செய்யக் கூடாது' என்று முடிவெடுத்து நிராகரிக்கப்பட்டது. அம்பேத்கர் அந்தப் பாடலை தற்போது நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள மிருகத்தனமான பெரும்பான்மையைப் பயன்படுத்தி பா.ஜ.க கட்டாயமாக்கியுள்ளது. இது சிறுபான்மையினரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் செயல். ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை நீக்குவது, டெல்லி தலைநகரத்தை மாற்றி வாரணாசியை தலைநகராக மாற்றுவது உள்ளிட்ட அஜெண்டா வைத்திருப்பதாக தகவல்கள் இருக்கின்றன. பெரும் விபரீதத்துக்குள்ளே இந்த நாடு பிரவேசிக்கப் போகிறது. நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும். குரூரமாக சனாதன கோட்பாட்டை நிலைநாட்ட முயற்சிப்பதால், எதிர் விளைவுகள் கண்டிப்பாக ஏற்படும். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை கண்டிப்பாக இருக்கும். காந்தி பெயரை வேலை திட்டத்தில இருந்து நீக்கினார்கள். பிரிட்டிஷ் சர்க்காரிடம் இரண்டு முறை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, மாத உபகார சம்பளம் வாங்கிய துரோகி சாவர்கர் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்தார்கள். மோடி, அமித் ஷா, பா.ஜ.க Amit Shah, modi சாவர்கர் படத்துக்கு பிரதமர் பூக்களை தூவுகிற அந்த கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. திராவிட இயக்க பூமியில் திராவிட இயக்கத்தையே நாங்கள் தகர்ப்போம் என்று நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கே வந்து மமதையோடு பேசினார். தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று கருதித்தான் மோடி, பாரதியார் பாடல்களை, திருக்குறளில் ஒன்று என இந்தியில் எழுதி தமிழ்நாட்டை மதிப்பதாக வேடம் போடுகிறார்கள். தி.மு.க-வுடன் எங்களின் இந்த தோழமை, எல்லா சூழ்நிலையிலும் தொடரும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். நடிகை தொடர்பாக நயினார் பேசியது விவாதமாகியிருக்கிறது. நயினார் நாகேந்திரன் பண்புள்ள, அமைதியானவர். அவர் ஏன் இப்படி பேசினார் என்பது தெரியாது. பொதுவாக தனிநபர் விமர்சனத்தை நான் தவிர்த்துக் கொள்கிறவன். அப்படி தனிநபர் விமர்சனம் செய்வதை தவிர்த்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். அ.தி.மு.க பா.ஜ.க-வுக்கு அடிமை என்ற முதல்வரின் விமர்சனம் உண்மை. அதுதான் அவர்களுக்கு சுடுகிறது. காங்கிரஸ் கேட்கும் கூட்டணி ஆட்சி 'இல்லாத ஊருக்கு போகாத வழி'. என்னை பொறுத்தவரை அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டினுடைய கோடிக்கணக்கான தாய்மார்கள் மகளிர் வாக்குச்சாவடிக்கு போனால் தி.மு.க-வுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்பதிலேயே தீர்மானமாக இருக்கிறார்கள். எனக் குறிப்பிட்டார். ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் படம் - மத்திய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை
'இல்லாத ஊருக்கு போகாத வழி' - காங்கிரஸ் கோரிக்கை குறித்து வைகோ விமர்சனம்!
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி மதிமுக தலைவர் வைகோ தொடர்ந்த வழக்கு விசாரணை, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ``கடந்த 2013-ல் தொடர்ந்த ரிட் மனு, இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று, வரும் 26-ஆம் தேதி பிற்பகல் 2:15 மணிக்கு எனது வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டாண்டுகளாக இருந்த இந்தத் தடை தற்போது ஐந்தாண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த எனது சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகிறேன். RSS தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதற்கிடையில் இந்துத்துவ சக்திகளும், சனாதன கூட்டமும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கூட்டமும் எப்படி சிந்தனையாளர்களை கர்நாடகத்திலும், மராட்டியத்திலும் படுகொலை செய்தார்களோ, அதேபோல இப்ரான் ஹபீப் என்கின்ற 93 வயது நிரம்பிய ஆய்வாளர், சிந்தனையாளர், அறிஞர் உரையாற்றிக் கொண்டிருந்த மண்டபத்துக்குள்ளேயே நுழைந்து அவரை கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். இதற்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காது. ஏனெனில், அவர்கள் எல்லையைத் தாண்டி, கற்பனை செய்ய முடியாத அக்கிரமங்களை செய்ய துணிந்து விட்டார்கள். இந்திய அரசியல் நிர்ணய சபையில், அம்பேத்கர் தலைமையில் வந்தே மாதரம் என்ற பாடலை, தேசிய கீதமாக ஏற்று கொள்வதா வேண்டாமா என வாதம் நடந்தது. பெரும்பான்மையான உறுப்பினர்களும், அண்ணல் அம்பேத்கரும் `அந்தப் பாடலில் இந்து மத கடவுள்களை வணங்குவதாக வரிகள் இருக்கிறது. இதை கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட பிற மதத்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த வரிகளை நீக்குவது மட்டுமல்ல, மற்ற வரிகளையும் கூட நாட்டினுடைய தேசிய கீதக்கோடு சேர்த்து பாடுவதற்கு வழிவகை செய்யக் கூடாது' என்று முடிவெடுத்து நிராகரிக்கப்பட்டது. அம்பேத்கர் அந்தப் பாடலை தற்போது நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள மிருகத்தனமான பெரும்பான்மையைப் பயன்படுத்தி பா.ஜ.க கட்டாயமாக்கியுள்ளது. இது சிறுபான்மையினரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் செயல். ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை நீக்குவது, டெல்லி தலைநகரத்தை மாற்றி வாரணாசியை தலைநகராக மாற்றுவது உள்ளிட்ட அஜெண்டா வைத்திருப்பதாக தகவல்கள் இருக்கின்றன. பெரும் விபரீதத்துக்குள்ளே இந்த நாடு பிரவேசிக்கப் போகிறது. நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும். குரூரமாக சனாதன கோட்பாட்டை நிலைநாட்ட முயற்சிப்பதால், எதிர் விளைவுகள் கண்டிப்பாக ஏற்படும். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை கண்டிப்பாக இருக்கும். காந்தி பெயரை வேலை திட்டத்தில இருந்து நீக்கினார்கள். பிரிட்டிஷ் சர்க்காரிடம் இரண்டு முறை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, மாத உபகார சம்பளம் வாங்கிய துரோகி சாவர்கர் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்தார்கள். மோடி, அமித் ஷா, பா.ஜ.க Amit Shah, modi சாவர்கர் படத்துக்கு பிரதமர் பூக்களை தூவுகிற அந்த கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. திராவிட இயக்க பூமியில் திராவிட இயக்கத்தையே நாங்கள் தகர்ப்போம் என்று நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கே வந்து மமதையோடு பேசினார். தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று கருதித்தான் மோடி, பாரதியார் பாடல்களை, திருக்குறளில் ஒன்று என இந்தியில் எழுதி தமிழ்நாட்டை மதிப்பதாக வேடம் போடுகிறார்கள். தி.மு.க-வுடன் எங்களின் இந்த தோழமை, எல்லா சூழ்நிலையிலும் தொடரும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். நடிகை தொடர்பாக நயினார் பேசியது விவாதமாகியிருக்கிறது. நயினார் நாகேந்திரன் பண்புள்ள, அமைதியானவர். அவர் ஏன் இப்படி பேசினார் என்பது தெரியாது. பொதுவாக தனிநபர் விமர்சனத்தை நான் தவிர்த்துக் கொள்கிறவன். அப்படி தனிநபர் விமர்சனம் செய்வதை தவிர்த்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். அ.தி.மு.க பா.ஜ.க-வுக்கு அடிமை என்ற முதல்வரின் விமர்சனம் உண்மை. அதுதான் அவர்களுக்கு சுடுகிறது. காங்கிரஸ் கேட்கும் கூட்டணி ஆட்சி 'இல்லாத ஊருக்கு போகாத வழி'. என்னை பொறுத்தவரை அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டினுடைய கோடிக்கணக்கான தாய்மார்கள் மகளிர் வாக்குச்சாவடிக்கு போனால் தி.மு.க-வுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்பதிலேயே தீர்மானமாக இருக்கிறார்கள். எனக் குறிப்பிட்டார். ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் படம் - மத்திய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை
யார் இந்த அஜித் பவார்_ மகாராஷ்டிர அரசியலில் அசைக்க முடியாத ஆளுமை
யார் இந்த அஜித் பவார்_ மகாராஷ்டிர அரசியலில் அசைக்க முடியாத ஆளுமை
விஜய் அரசியல் இப்படி தான் இருக்கும்! அடித்து சொன்ன விஜய்
விஜய் அரசியல் இப்படி தான் இருக்கும்! அடித்து சொன்ன விஜய்
கூட்டணி ஆட்சி...திமுக முடிவு...தவெகவுக்கு நல்லது
கூட்டணி ஆட்சி...திமுக முடிவு...தவெகவுக்கு நல்லது
கொங்கு தேசத்தில் அதிமுகவின் கை இந்த முறை ஓங்குமா_ Explained
கொங்கு தேசத்தில் அதிமுகவின் கை இந்த முறை ஓங்குமா_ Explained
திமுக மேல என்ன கோபம்? ஆவேசமாக பேசிய trichy Velusamy
திமுக மேல என்ன கோபம்? ஆவேசமாக பேசிய trichy Velusamy
திருச்சி கிழக்கில் விஜய்? பொதுமக்கள் கருத்து என்ன?
திருச்சி கிழக்கில் விஜய்? பொதுமக்கள் கருத்து என்ன?
காங்கிரஸ்- விஜய் கட்சி கூட்டணி தான் வேணும்
காங்கிரஸ்- விஜய் கட்சி கூட்டணி தான் வேணும்
'ஆட்சியில் பங்கு டு வாரியங்கள்.!' - தலைமைக்கு தமிழக காங். நிர்வாகிகள் அனுப்பிய கடிதம் வெளியானதா?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்டாலின் திட்டவட்டம் கடந்த வாரம் தனியார் ஊடகத்தின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஸ்டாலின் ' ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும் என்று காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும். ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை தெளிவுப்படுத்தியிருந்தார். மாணிக்கம் தாகூர் எதிர்வினை ஸ்டாலினின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை... 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான் என்று பதிவிட்டு தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வந்தார். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் இப்படி திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில்... மல்லிகார்ஜுன கார்கே நான்கு கோரிக்கைகள் * ஆட்சியில் உறுதியான பங்கு வேண்டும் * கூடுதல் சட்டமன்ற தொகுதிகளை உறுதி செய்ய வேண்டும் * வாரியங்கள் முதல் கூட்டுறவு சங்கங்கள் வரை பங்கு வழங்கப்பட வேண்டும் * உள்ளாட்சி தேர்தல்களிலும் கணிசமான பங்கு வேண்டும் என அந்தக் கடித்தடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கடிதம் தொடர்பாக காரங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. அதேசமயம் இதனை அவர்கள் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் வைத்த புதிய டிவிஸ்ட்...இது தான் அடுத்த டார்கெட்?
விஜய் வைத்த புதிய டிவிஸ்ட்...இது தான் அடுத்த டார்கெட்?
திருச்சி கிழக்கு தொகுதியை கைப்பற்ற முடியுமா விஜய்?
திருச்சி கிழக்கு தொகுதியை கைப்பற்ற முடியுமா விஜய்?
whistle -க்கு தடை! காரணம்_ மக்கள் யார் பக்கம்_ திமுகவுக்கு பயமா_
whistle -க்கு தடை! காரணம்_ மக்கள் யார் பக்கம்_ திமுகவுக்கு பயமா_
இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! இது தான் டர்னிங் பாயிண்ட்!
இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! இது தான் டர்னிங் பாயிண்ட்!
அமைச்சர் கே.என் நேருவின் மறுபக்கம்...உடைத்து பேசிய S.M மூர்த்தி
அமைச்சர் கே.என் நேருவின் மறுபக்கம்...உடைத்து பேசிய S.M மூர்த்தி
புது strategy-யுடன் களத்தில் திமுக! 2026 களம் யாருக்கு_
புது strategy-யுடன் களத்தில் திமுக! 2026 களம் யாருக்கு_
நாம் தமிழர் vs தமிழக வெற்றிக் கழகம் _ seeman vs vijay
நாம் தமிழர் vs தமிழக வெற்றிக் கழகம் _ seeman vs vijay
தவெகவுக்கு களத்தில் உள்ள உண்மை ஆதரவு என்ன_
தவெகவுக்கு களத்தில் உள்ள உண்மை ஆதரவு என்ன_
master plan போடும் தலைவர்கள்_ புது வியூகத்துடன் 2026
master plan போடும் தலைவர்கள்_ புது வியூகத்துடன் 2026
`தவெக நாடக கம்பெனி; நம்ம பிள்ளைகளுக்கு நாம்தான் புத்திமதி சொல்ல வேண்டும்' - மதுக்கூர் ராமலிங்கம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக்கழகம் என்ன கட்சி என்பதே தெரியவில்லை. நம்ம வீட்டுப் பிள்ளைகள் அந்தக் கட்சியில் லேசாக எட்டிப் பார்க்கிறார்கள். அதற்கு நாம்தான் புத்திமதி சொல்ல வேண்டும். விஜய் அரசியல் விமர்சனத்தில் விஜய்யின் அரசியல் பற்றிதான் பேச வேண்டுமே தவிர, அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசக்கூடாது. பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் தலைவர்களுட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். விஜய் வந்தால் வெடி போடுங்கள். விசில் ஊதுங்கள். ஆனால், அவர் வரும் பிரசார வாகனத்திற்கு மட்டும் வெடி போட்டு விசில் ஊதுகிறார்கள். விஜய் வரும் பிரசார வாகனத்தைப் பார்த்தால் எமன் ஏறும் எருமை மாடு போலத் தெரிகிறது. கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய்தான். கோட்டையைப் பிடிக்கிறேன், பிடிக்கிறேன் என்று சொல்லி இத்துப் போன செங்கோட்டையனை பிடித்துள்ளார் விஜய். இது ஒரு நாடகக் கம்பெனி போல ஓடிக் கொண்டிருக்கிறது. பஞ்ச் டயலாக் எழுதி வந்து ஆவேசமாகப் பேசுவது அரசியல் அல்ல. தி.மு.க எங்களின் அரசியல் எதிரி. பா.ஜ.க கொள்கை எதிரி என்று கூறும் த.வெ.க தலைவர் விஜய், சேலத்தில் நடந்த கூட்டத்தில்கூட ஸ்டாலின் சார், முதல்வர் சார் என்று பேசிய விஜய், ஏன் எஸ்.ஐ.ஆர் பற்றி பேசவில்லை? மதுக்கூர் ராமலிங்கம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதிராக இவ்வளவு வஞ்சகத்தை மோடி செய்கிறாரே? விஜய் ஒரு வார்த்தை பேசியிருக்கலாமே? உங்களுக்கு டயலாக் எழுதிக் கொடுத்தவர் எழுதித்தரவில்லையா? உங்களுக்கு உங்கள் அரசியல் எதிரிதான் முக்கியமா? இல்லை சித்தாந்த எதிரி முக்கியமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியதிருக்கிறது” என்றார்.
அடங்க மறுக்கும் காங்கிரஸ் அசராத திமுக அடுத்து என்ன?
அடங்க மறுக்கும் காங்கிரஸ் அசராத திமுக அடுத்து என்ன?
சென்னையில் திமுக வின் சவாலான தொகுதிகள்
சென்னையில் திமுக வின் சவாலான தொகுதிகள்
காசு குடுத்து ஓட்டு வாங்கிடலாம்ணு இருக்காங்க
காசு குடுத்து ஓட்டு வாங்கிடலாம்ணு இருக்காங்க
`இரவினில் ஆட்டம்; பகலில் தூக்கம்; இதுதான் துணை முதல்வர் உலகம் - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் அதிமுக, பாஜக-வுக்கு அடிமை என்றும், அதிமுக பாஜக-வின் கிளை அமைப்பு என்றும் அவதூறுகளைப் பரப்பி வருகிறார். அதிமுக சொந்தக்காலில் நிற்கும் கட்சி. உழைப்பாளிகள், இளைஞர்கள் நிறைந்த கட்சி. அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. ஆனால், திமுக-தான் காங்கிரஸுக்கு அடிமையான கட்சி. காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோது, அறிவாலயத்தின் முதல் மாடியில் ரெய்டும், தரைத் தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி எடப்பாடி பழனிசாமி இதுதான் அடிமைத்தனம். தமிழக வரலாற்றிலே பொய் பேசி விளம்பரத்தை நம்பி ஆட்சி நடத்தும் முதல்வர் உண்டு என்றால், அது ஸ்டாலின் தான். தினம் ஒரு பெயர், போட்டோஷூட் நடத்துகிறார். ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் எங்கள் ஆட்சியில் நடைபெற்ற தவறை சுட்டிக்காட்டுங்கள், பதில் சொல்கிறோம். அதில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், பாஜகவுக்கு அடிமை, ஊர்ந்து போய் பதவி வாங்கினார் என்று பேசுவதைத் தவிர்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. சட்டையைக் கிழித்துக்கொண்டு போனார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது முதல்வர் ஸ்டாலின் என்னவெல்லாம் நாடகம் நடத்தினார். அதிமுக மீதான பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சட்டையைக் கிழித்துக்கொண்டு போனார். கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது கூட ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியைக் கொடுக்கவில்லை.அவர் தந்தையே அவரை நம்பி பதவி கொடுக்கவில்லை. ஸ்டாலினும், நீங்களும் ஒரே மேடையில் விவாதத்திற்கு முன்வருவீர்களா?என்று கேட்டார்கள். நான் தயார் என்று சொன்னேன், நான் வருகிறேன், அதிமுக ஆட்சியின் சாதனைகளைச் சொல்கிறேன். நீங்களும் சொல்லுங்கள் என்றேன். இதுவரை பதிலே இல்லை. இபிஎஸ் கடையை திறந்து வைத்து கூவி அழைக்கிறார் யாரும் வரவில்லை என்று இரண்டு மாதத்திற்கு முன்பு ஸ்டாலின் சொன்னார். கூட்டணி தானாக அமைய வேண்டும். கனி தானாக பழுக்க வேண்டும். அப்போதுதான் சுவை. இப்போது தே.ஜ.கூட்டணி அமைத்துவிட்டது. வலிமையான கூட்டணி. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஆட்டம் கண்டுவிட்டது. எடப்பாடி பழனிசாமி தினமும் திமுக காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி இருக்குமா? என்பது சந்தேகம். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். இப்போது கூட உரிய மரியாதை கிடைக்காவிட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்.பி சொல்கிறார். கூட்டணி நிலைக்குமா தெரியவில்லை. இன்னொரு பக்கம் திருமா ஆட்சியில் பங்கு கேட்கிறார். கூட்டணியில் குழப்பம். துணை முதல்வர் உதயநிதி அவ்வப்போது அதிமுக பற்றி அவதூறு பரப்புகிறார். இரவினில் ஆட்டம் பகலில் தூக்கம் இதுதான் துணை முதல்வர் உலகம். பகலில் நாட்டு மக்களை பார்க்காதவர், இன்ஸ்டாவில் நள்ளிரவில் லைக் போடுகிறார். இப்படிப்பட்ட துணை முதல்வர் தேவையா? ஸ்டாலினின் 5 ஆண்டு சாதனை 1000 ஆண்டு வரலாறு பேசும் என்கிறார். 5 ஆண்டு ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களை கடனாளியாக்கிவிட்டார் என்பதைத்தான் மக்கள் பேசுவார்கள். அந்த கடனை நாம் தான் கட்டணும். வரி போட்டுத் தான் அடைக்கணும். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய், ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகால கடன் சுமை அதிகம், 5 லட்சம் கோடி. இதைத்தான் பேசுவார்கள். அதிமுக ஆட்சியில் ஊழல் என்கிறார். உங்கள் ஆட்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறையில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னொன்று டிரான்ஸ்பாரம் ஊழல், செந்தில் பாலாஜி, ஊழல். டிரான்ஸ்பார்ம்க்கு 32 டெண்டர் ஒரே ரேட் போட்டனர். இந்தியாவில் எங்கும் இப்படி நடந்ததில்லை. இதுவும் நீதிமன்றத்தில் இருக்கிறது, தேர்தல் நேரத்தில் எங்கு இருக்க வேண்டுமோ, அங்க இருப்பார்கள். யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்றார்.
சேலம் கூட்டத்துல தவெக மேல எந்த தப்பும் இல்ல
சேலம் கூட்டத்துல தவெக மேல எந்த தப்பும் இல்ல
`திமுக ஆட்சி தேர்தலுக்கான ஆட்சி; தனிநபர் தாக்குதலில்..!' - நயினார் நாகேந்திரன்
மதுரையில் உள்ள மண்டோலா நகரில் மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக முகூர்த்தகால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது, “இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிற அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பொதுகூட்டமா அல்லது மாநாடா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். தனிநபர் தாக்குதலில் யாருடைய மனதும் புண்படக்கூடாது என்பது என் எண்ணம். விஜய்க்கு ஏதாவது கொள்கை இருக்கிறதா? இதிலெல்லாம் பாஜகவுடன் முரண்படுகிறோம் என எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா?. கொள்கை என வெறும் பேப்பரில் மட்டும் எழுதி வைத்திருக்கிறார்கள். திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் தினமும் பேட்டி கொடுக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது யாருடைய கூட்டணி பலவீனமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருக்குமா? இருக்காதா? என்பதே சந்தேகம் தான். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கிறது. இதில் யார் நன்றாக ஆட்சி செய்தார் என்றுதான் பார்க்க வேண்டும். ஈபிஎஸ் அல்லது மு.க.ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்தாரா என்பதை தான் பார்க்க வேண்டும். திமுக 525 தேர்தல் அறிக்கைகளை கொடுத்தது 90 தேர்தல் வாக்குறுதிகளை தவிர மற்ற எதுவுமே நிறைவேற்றவில்லை. எதிலுமே முற்று பெறாத ஆட்சி இது. நாட்டில் சட்டம் ஒழுங்கு முக்கியம். ஆனால் இவர்களால் ஒரு டிஜிபியை கூட நியமனம் செய்ய முடியவில்லை. பள்ளிக்கூடத்தில் கஞ்சா விற்கிற நிலைமைதான் உள்ளது. மதுரையில் NDA பொதுக்கூட்டம் எடப்பாடி பழனிசாமி 2000 ரூபாய் அறிவித்தார். அதை காப்பியடித்து திமுக 5000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 5 வருடம் கோடைக்காலம் வந்தது அப்போதெல்லாம் கொடுக்கவில்லை. மகளிருக்கு 1000 ரூபாயே பாராளுமன்ற தேர்தலின் போது தான் கொடுத்தார்கள். அதே போல பொங்கல் பரிசு தொகுப்பு 3000 ரூபாய் இந்த வருடம் தான் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் தேர்தலுக்கானது. இவர்களுடைய ஆட்சி தேர்தலுக்கான ஆட்சி” என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் திட்டம் என்ன? நெருங்கும் தேர்தல், குழப்பும் நிலைப்பாடு
ஓ.பன்னீர்செல்வம் திட்டம் என்ன? நெருங்கும் தேர்தல், குழப்பும் நிலைப்பாடு
``இமய மலையாய் நிமிர வேண்டியவன், அதிமுக-வால் பாதாளத்துக்குச் சென்றேன் - மனம் வெதும்பி பேசிய வைகோ
ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர், கடந்த காலத்தில் நான் சில பிழைகளைச் செய்திருக்கிறேன். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன். என் அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மையை சுக்கு நூறாக்கியது. அதிமுக பொதுச் செயலாளரான மறைந்த ஜெயலலிதா என்னை 19 மாதங்கள் சிறையில் அடைத்தார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதே அதிமுக-வுடன் உடன்பாடு வைத்தததை போன்ற பிழையான, தவறான, மன்னிக்க முடியாத ஒரு முடிவு. நாம் திமுக-வுடன் கூட்டணி அமைத்தால் ஒரு இடம்கூட ஜெயிக்க முடியாது என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. 205 தொகுதிகளில் அதிமுக ஜெயிக்க போகிறது. அவர்களோடு கூட்டு வைத்தால் 25 எம்எல்ஏ-க்களுக்கு குறையாமல் நாம் சட்டசபைக்குள் பிரவேசிக்கலாம். கட்சி புத்துயிர் பெறும். இதை விட்டுவிட்டால் சந்தர்ப்பம் மீண்டும், மீண்டும் நம் கதவை தட்டாது. இந்த வாய்ப்பை விட்டு விட்டால் எதிர்காலமே நமக்கு கிடையாது என்று அதிமுக-வினர் ஆணித்தரமாக சொன்னபோது, திருச்சி திமுக மாநாட்டில் பேசுவதற்காக எனது குறிப்புகளை பெட்டியிலே வைத்து, மலைக்கோட்டை ரயிலுக்கு பயணத்தையும் உறுதி செய்துவிட்டு, தலைமை நிர்வாகிகள் என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள். வைகோ, ஜெயலலிதா அப்போதுதான் அந்த முடிவை எடுக்க நேர்ந்தது. கலை உலகிலே பிரமாண்டமான திரைப்படங்கள் தந்த பாலச்சந்தரின் அரங்கேற்றம் படத்தின் கதாநாயகி போல ஆகிவிட்டேன். என் நம்பகத்தன்மையை அழித்துக் கொண்டு இந்த முடிவுக்கு வந்தேன் என்று நான் சொன்னேன். இன்று இமயமாய் நிமிர வேண்டிய நான், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் படு பாதாளத்திற்கு போனேன். மீண்டும் அப்படி நான் ஆளாகி விடக்கூடாது என்பதற்காக திமுக-வுடன் கூட்டணியுடன் வலுவான தோழமை சக்தியாக உள்ளேன் என்றார். அதிமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக? ஈஷா சிவராத்திரி விழாவில் பிரேமலதா - வேலுமணி சந்திப்பு
full சினிமா dialogue!-விஜயை வறுத்தெடுத்த VCK சங்கத்தமிழன்
full சினிமா dialogue!-விஜயை வறுத்தெடுத்த VCK சங்கத்தமிழன்
எங்க கட்சில விஜய் மட்டும் தான், நானே விஜய் தான்_ _ Jaleel Exclusive Interview _ #tvkvijay
எங்க கட்சில விஜய் மட்டும் தான், நானே விஜய் தான்_ _ Jaleel Exclusive Interview _ #tvkvijay
சமூக நீதி எங்கே_ இஸ்லாமியர்கள் கேள்வி
சமூக நீதி எங்கே_ இஸ்லாமியர்கள் கேள்வி
காமராஜர் : அடித்தளமிட்ட சாத்தூர்; `முதல்’ தேர்தலிலேயே அன்னபோஸ்ட்டாக வென்றது எப்படி? | முதல் களம் 06
(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர்.) முதல் தேர்தலில் காமராஜர்! முதல் 06 கல்வித் தந்தை, கிங் மேக்கர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் காமராஜர். பணக்கார பின்னணியோ, உயர்குடி பரம்பரை பெருமையோ இல்லாமல், எளிய பின்புலத்திலிருந்து அரசியலுக்கு வந்த காமராஜரின் முதல் தேர்தல் வெற்றி எங்கு, எப்போது அமைந்தது, அவர் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி, இந்திய அளவில் கிங் மேக்கராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் அவர் அரசியலில் அடைந்த உச்சத்தின் பின்னணி போன்றவற்றைத் தெரிந்துகொள்ள, நாட்டின் விடுதலைக்கு முந்தைய 1930-ஆம் ஆண்டுகளுக்குள் பயணிக்கலாம்... காமராஜர் தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட இளைஞன் 1903-ல் பிறந்த காமராஜர், தந்தையை இழந்ததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி, குடும்பத்தை காப்பாற்ற கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அந்த வேலைதான் அவரை, பின்னாட்களில் அரசியலுக்கு வர தயார்படுத்தியது என்றே சொல்லலாம். விருதுநகரின் சந்தைகளில் நடக்கும் அரசியல் உரையாடல்களும், பொதுக்கூட்டங்களும், நாளிதழ்களில் இடம்பெற்ற செய்திகளும், அவருள் தீவிர தேசபக்தியை விதைத்தன. 1919-ல் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையும், பிரிட்டிஷாருக்கு எதிரான காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அழைப்பும் அவரை முழுமையாக மாற்றின. படிப்போ பணமோ இல்லையென்றாலும், நாட்டு விடுதலைக்காக காங்கிரஸ் விடுத்த அழைப்பு அவரை ஈர்த்தது. 1920-களிலேயே துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது, நிதி திரட்டுவது, சைக்கிளில் கிராமம் கிராமமாக சுற்றி மக்களைத் திரட்டுவது எனத் தீவிரமாக இயங்கத் தொடங்கினார். அதே சமயம், அவரிடம் காணப்பட்ட ஒழுக்கமும் நேர்மையும் அவரை, மற்ற இளைஞர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டியது. காங்கிரஸில் கிடுகிடு வளர்ச்சி காங்கிரஸ் கட்சியில் அவரது வளர்ச்சி, படிப்படியாக சீராக உயர்ந்தது. பல ஆண்டு காலமாக, கட்சியின் அமைப்புகளைப் பலப்படுத்த மேற்கொண்ட அயராத உழைப்புதான் அவருக்கு அந்த உயர்வைத் தேடித்தந்தது. தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பயணம் செய்து, உள்ளூர் காங்கிரஸ் கமிட்டிகளை நிறுவியதோடு, இளைஞர்கள் காங்கிரஸில் சேர ஊக்குவித்தார். சாமானிய மக்களுடன் நெருக்கமாக கலந்துரையாடும் அவரது திறமையும், எளிமையும், அச்சமற்ற பண்பும், மூத்த தலைவர்களின் விருப்பத்துக்குரியவராக அவரை மாற்றின. காங்கிரஸ் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களில் அவர் பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் போராட்டத்துக்கு ஆதரவு, 1930 ல் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றார். இதன்மூலம், 1930-களில் தென் தமிழக காங்கிரஸின் நம்பிக்கைக்குரிய தலைவராக உருவெடுத்தார் காமராஜர். காமராஜர் திருப்புமுனையாக அமைந்த சாத்தூர் தொகுதி தேர்தல் இந்திய ஆட்சியமைப்புச் சட்டம் 1935 நடைமுறைக்கு வந்த பிறகு, மாகாணத் தேர்தல்களுக்கு வழி பிறந்தது. இதனையடுத்து மதராஸ் மாகாணத்தில் பரவலாக தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்தது. 1937-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காமராஜரின் திறமையான செயல்பாடுகளையும், மக்களிடையே இருந்த செல்வாக்கையும் நன்கு அறிந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அவரை சட்டசபை தேர்தலில் நிறுத்த முடிவு செய்தனர். அதே சமயம், அவரை எந்தத் தொகுதியில் நிறுத்துவது என்கிற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டபோது, சாத்தூர் தொகுதி என்பது முடிவானது. சாத்தூர் — அவரது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் பகுதி என்பதாலும், பல ஆண்டுகளாக அவர் காங்கிரஸ் வலையமைப்பை உருவாக்கிய இடம் என்பதாலும், அந்தத் தொகுதி மிகச் சரியான தேர்வாக அமைந்தது. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? காமராஜரின் அரசியல் வாழ்க்கையில் மிக சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், அவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே, சாத்தூர் தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். இப்படியான ஒரு நிகழ்வு என்பது, சாதாரணமான ஒன்றல்ல. அப்படியென்றால் இது எப்படி நடந்தது? சாத்தூர் தொகுதி, பெரும்பாலும் கிராமப்புற மக்களைக் கொண்ட தொகுதி. காங்கிரஸ் ஆதரவும் இங்கு வலுவாக இருந்தது. இந்தப் பகுதி மக்களுக்கும் காமராஜர் நன்கு அறிமுகமானவராக திகழ்ந்தார். அங்குள்ள வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் என எல்லோருக்கும் காமராஜர் நன்கு அறிமுகமானவராக இருந்தார். காமராஜரின் சேவை மனப்பான்மை மற்றும் அவரிடம் காணப்பட்ட எளிமை போன்றவை காரணமாக காங்கிரஸ் பணியாளர்களும், தயக்கமின்றி அவருக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தனர். காமராஜர் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்ட சாத்தூர் தொகுதியின் உள்ளூர் பிரமுகர்கள், காமராஜருக்கு எதிராக வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தனர். இதனால், காமராஜருக்கு எதிராக வேறு எந்த வேட்பாளரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராஜரின் தனிப்பட்ட உறவுகளும், அவர் உருவாக்கிய நன்மதிப்பும் இதற்கு முக்கிய காரணிகளாக இருந்தன. முதலில் போட்டியிட திட்டமிட்டிருந்த மாற்று கட்சி அல்லது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காமராஜர் ஆதரவாளர்களின் பேச்சுவார்த்தைகளாலும், அவர் பல வருடங்களாக ஆற்றிய பொதுத் தொண்டுகளின் மீதான மரியாதையாலும், போட்டியிலிருந்து விலகத் தயங்கவில்லை. நாட்டின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு, சிறைவாசம் அனுபவித்து, தியாகம் செய்த காமராஜருக்கு எதிராக நிற்பது மரியாதையல்ல” என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்ட நிலையில், மீறி போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இல்லை என்கிற யதார்த்த நிலைமையையும் போட்டியாளர்கள் புரிந்துகொண்டதால், அவர்கள் போட்டியிலிருந்து விலகிக்கொண்டனர். இவை அனைத்தும், முற்றிலும் சுமூகமான முறையிலேயே நடைபெற்றன. இதன் விளைவாக, வேட்புமனு தாக்கல் நடைபெற்ற ஜனவரி மாதமே, காமராஜர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு வாக்கு கூட போடப்படாமல், மதராஸ் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். இந்த நிகழ்வு, அவரின் தேர்தல் அரசியலுக்கான அதிகாரபூர்வமான நுழைவாக அமர்ந்த ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. காமராஜர் மாபெரும் தலைவராக உருவெடுத்த காமராஜர் 1937 தேர்தலுக்குப் பிறகு, காமராஜரின் அரசியல் வாழ்க்கை மிக வேகமாக விரிவடைந்தது. சட்டசபையில் அவர் தீவிரமாகவோ ஆவேசமாகவோ பேசக்கூடியவராகவோ அல்லாமல், அமைதியாகவும் பயனுள்ளதாகவும் செயல்படும் உறுப்பினராக அனைவராலும் மதிக்கப்பட்டார். மூத்த தலைவர்கள் அவரது நேர்மையை நம்பினர். எளிதில் சந்திக்க முடியும் என்கிற காரணத்தால் கட்சிப் பணியாளர்கள் அவரை பெரிதும் விரும்பினர். 1942-ல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்தியா விடுதலை பெறும் நேரத்தில், தமிழ்நாட்டு காங்கிரஸின் அசைக்க முடியாத தலைவராக அவர் உருவெடுத்திருந்தார். தேடி வந்த முதலமைச்சர் பதவி 1954 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்துக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு மற்றும் மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் காங்கிரஸ் கட்சிக்கும் அரசுக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தியது. குலக்கல்வி திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் அதிருப்தியும் காணப்பட்டது. இதனால், ராஜாஜி ராஜினாமா செய்வதற்கான நெருக்கடி உருவானது. காங்கிரஸ் கட்சிக்குள் அப்போது ராஜாஜி ஆதரவாளர்கள், அவருக்கு எதிரானவர்கள் என இரண்டு பெரிய கோஷ்டிகள் இருந்தன. ராஜாஜியின் கொள்கைகள் தொடர்ந்தால், கட்சிக்கு பெரும் சேதம் ஏற்படும் என உணர்ந்த காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், முதலமைச்சர் பதவிக்கு புதிய, மோதல் போக்கு இல்லாத, நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு தலைவரைத் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் எனக் கருதினர். அந்த வகையில், கட்சிக்குள் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர் யார் என்பதை பார்த்தபோது, காமராஜர் மிகச் சிறந்த தேர்வாக அமைந்தார். ஊழலற்றவர், அனைத்து பிரிவு மக்களாலும் மதிக்கப்படுபவர், காங்கிரஸ் அமைப்பு பணியை முழுமையாக அறிந்தவர் எனக் கருதப்பட்டதால், அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய முதலமைச்சராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்திரா - காமராஜர் - மொரார்ஜி `கிங் மேக்கர்’ ‘கிங் மேக்கர்’ என்கிற பட்டத்தை இந்திய அரசியலில் பெற்ற மிகச் சில தலைவர்களில் முக்கியமானவர் காமராஜர். 1963-ஆம் ஆண்டு அவர் முன்வைத்த 'கே பிளான்' என்கிற திட்டத்தின் மூலம், ஆட்சிப் பொறுப்பில் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்து, கட்சியின் வேர்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது இந்த முடிவு, அந்தக்கால அரசியலை முழுமையாக மாற்றியது. அதன் பின்னர் பிரதமர் பதவிக்கான தேர்வில், லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா காந்தியையும் ஆதரித்து, தேசிய அரசியலில் பல தலைவர்கள் உருவாவதற்கான பாதையை அவர் அமைத்துக் கொடுத்தார். நேரடியாக அதிகாரத்தை நாடாமல், யார் நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதை அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் தீர்மானிக்கக் கூடிய அந்தத் திறன் காரணமாகவே ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்பட்டார் காமராஜர். காமராஜர்! அந்தவகையில்,1937-ஆம் ஆண்டு சாத்தூர் தொகுதியில் காமராஜர் பெற்ற எதிர்ப்பில்லா வெற்றி, சாதாரண தேர்தல் நிகழ்வைத் தாண்டிய ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளாக மக்களுக்காக அவர் மேற்கொண்ட அயராத உழைப்பும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும், பொதுமக்களிடம் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக அது அமைந்தது. இந்த வெற்றிதான், அவரது அரசியல் பாதையை மேலும் விரிவாக்கி, அடுத்த நிலைகளுக்கு அவரை வழி நடத்தும் வலுவான அடித்தளமாக மாறியது. (தொடரும்)
தஞ்சை மாவட்ட தொகுதிகள் Part 2 | DMK, ADMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு? | TN Election 360 updates
தஞ்சை மாவட்ட தொகுதிகள் Part 2 | DMK, ADMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு? | TN Election 360 updates
தஞ்சாவூர்: ``அந்த கூட்டத்தால் யாராலும் எதுவும் சாதிக்க முடியாது - விஜயை சாடிய உதயநிதி
திமுக-வில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, கோவி.செழியன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது, ``இளைஞர் அணி நிர்வாகிகளாகிய உங்களை எல்லாம் ஒரே இடத்தில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தஞ்சாவூருக்கு நானே நேரில் வந்து உங்களை எல்லாம் நேரில் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளேன். நன்றி சொல்வதற்கும் வந்துள்ளேன். திமுக இளைஞர் அணி சந்திப்பு நிகழ்ச்சி கடந்த ஜனவரி 26-ம் தேதி இதே திடலில், `வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கின்ற டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இன்று இளைஞர் அணி சார்பாக அதே போன்ற ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு பக்கம் இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு, மறுபக்கம் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு. இந்த நிகழ்வுக்கெல்லாம் வரும் எழுச்சியான கூட்டத்தைப் பார்க்கும்போது எல்லாரும் இளைஞர்கள் எந்தப் பக்கம்? மகளிர் எந்தப் பக்கம்? என்று கேட்கிறார்கள். நான் சொல்கிறேன், இளைஞர்கள் எங்கள் பக்கம், மகளிர் அணி எங்கள் பக்கம். டெல்டாக்காரன் தஞ்சாவூர் மாவட்டம், என்றைக்குமே தி.மு.க-வின் கோட்டை என்பதை, மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்ற மாவட்டம். நம்முடைய தலைவர் அடிக்கடி ``நான் ஒரு டெல்டாக்காரன்’ என்று பெருமையோடு சொல்வார். இன்று அவர் வழியில் நானும் ஒரு `டெல்டாக்காரன்’ என்ற பெருமையோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன். 1962-ல் திமுக சந்தித்த இரண்டாவது சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் இதே தஞ்சாவூர் தொகுதியில் நின்றுதான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அப்படிப்பட்ட பல்வேறு பெருமைகளைப் பெற்ற தஞ்சை மண்ணில் உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு. திமுக இளைஞர் அணி சந்திப்பு நிகழ்ச்சியில் உதயநிதி இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்துள்ளோம். கிட்டத்தட்ட 15,000 நிர்வாகிகள் இந்தக் கூட்டத்துக்கு வந்துள்ளீர்கள். 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளோம். இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சியின் சார்பு அணிக்கும் இப்படி ஒரு வலுவான கட்டமைப்பு நிச்சயம் கிடையாது. இன்று பல கட்சிகள் வாக்குச்சாவடிக் குழு அமைப்பதற்கே போராடுகிறார்கள். ஆள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஆனால், நாம் இளைஞர் அணிக்கு இன்று பாகம் வரை நிர்வாகிகள் நியமித்துள்ளோம். உங்களைப் போன்ற இளைஞர் அணியினரால் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் 76 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி, இன்று மிக மிக முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் பலர், நம்முடைய இளைஞர் அணியில் பயிற்சி எடுத்துக்கொண்டு சென்றவர்கள்தாம். இன்னும் பெருமையோடு சொல்லப்போனால், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கொடுத்ததும் திமுக-வின் இளைஞர் அணிதான். அப்படிப்பட்ட இளைஞர் அணியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை. இன்று நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்துப் பாராட்டிக்கொண்டு இருக்கிறது. மகளிருக்கு விடியல் பயணம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு, அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவிகளுக்குப் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்குத் தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திட்டம். ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. மகளிருக்கு உரிமைத் தொகை சென்று சேர்வது பாசிச சக்திகளுக்கும் அடிமைகளுக்கும் பிடிக்கவில்லை. எப்படியாவது இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். பா.ஜ.க-வைச் சேர்ந்த வழக்கறிஞரான அஷ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்து சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு எப்படியாவது உரிமைத் தொகையை நிறுத்த வேண்டும் என்று முயற்சித்தார். இந்தச் செய்தி தலைவருக்கு வந்த உடனே, நீ என்னுடைய தமிழ்நாட்டு மகளிருக்கு ரூ.1,000 கொடுப்பதைத் தடுக்கிறாயா? நான் 5,000 கொடுக்கிறேன்’’ என்று இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கியுள்ளார். பொங்கலுக்கு 3,000, மகளிர் உரிமைத் தொகை 1,000 என கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தம் 9,000 தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். திமுக இளைஞர் அணி சந்திப்பு நிகழ்ச்சி பாசிசவாதிகளும் அடிமைகளும் இன்று வயிற்றெரிச்சலில் இருக்கிறார்கள், என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் தமிழ்நாட்டில் அமையப் போவது திராவிட மாடல் அரசுதான். மகளிருக்கு வழங்கும் ரூ1,000 உரிமைத் தொகையை 2,000 உயர்த்திக் கொடுப்பேன் என்று நம் முதலமைச்சர் உறுதிமொழி அளித்துள்ளார். இப்பொழுது ஒட்டுமொத்த சங்கிக் கூட்டமும் அடிமைக் கூட்டமும் கதறிக்கொண்டு இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கும் பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொடுத்துள்ளது. முரட்டு அடிமையை எங்காவது பார்த்ததுண்டா? இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்கு எல்லா வகையிலும் தொல்லை கொடுக்கிறது. நிதி உரிமையைப் பறிக்கிறார்கள், மொழி உரிமையைப் பறிக்கிறார்கள், கல்வி உரிமையைத் தடுத்து நிறுத்துகிறார்கள். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் திணிக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டத்தைக் கூட அறிவிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பட்ஜெட்டை முழுமையாகப் படித்து முடிப்பதற்கு முன்னரே வாழ்த்துச் சொல்கிறார். இவரைப் போன்ற ஒரு முரட்டு அடிமையை எங்காவது பார்த்ததுண்டா? தேர்தல் வருவதால் பா.ஜ.க-வினர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார்கள், ஆனால் நிதி வராது. மோடி, அமித் ஷா, உங்களுடைய பருப்பு வடநாட்டில் வேகலாம், ஆனால் தமிழ்நாட்டில் ஒருபோதும் வேகவே வேகாது. கூட்டணியில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் எப்படிப் புகழ்ந்தார்கள் என்று பாருங்கள். ஒரு காலத்தில் எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதற்குத் தூக்கில் தொங்கிவிடலாம் என்று சொன்னார்கள். இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டுக்கு இரட்டை எஞ்சின் அரசு வேண்டும் என்று மோடி சொல்கிறார். மோடி அவர்களே முதலில் உங்கள் வண்டியின் டயரைப் பாருங்கள். தமிழ்நாட்டில் நீங்கள் கூட்டணி வைத்துள்ள அனைவரும் பஞ்சரான டயர்கள். உங்கள் வண்டியின் எஞ்சினும் பழுதாகிவிட்டன. டயர்களும் பஞ்சராகிவிட்டன. அவை தமிழ்நாட்டில் என்றைக்கும் ஓடாது. எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வின் மிகப்பெரிய அடிமையாக வலம் வருகிறார். இவர்கள் இப்படி என்றால், இன்னொரு பக்கம் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஒரு கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவுமே இல்லாமல், அப்படி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அரசியல் என்றால் ஏதோ பொழுதுபோக்கு என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் என்பது மக்கள் பணிதான், பொழுதுபோக்கு கிடையாது, அது ஒரு அர்ப்பணிப்பு, அது ஒரு தியாகம் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்த அர்ப்பணிப்பும் தியாகமும் இல்லாத அந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும் எதுவும் சாதிக்க முடியாது. ஆகவே, இப்படிப் பாசிஸ்ட்டுகளையும் பழைய, புதிய அடிமைகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கப்போகின்ற போர்தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் என்பதை நாம் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இந்தப் போரில் தமிழ்நாட்டைக் காக்கப் போகின்ற முன்களப் பணியாளர்கள், வீரர்கள் நீங்கள்தான். வரும் சட்டமன்றத் தேர்தல் சமூக நீதிக்கும் சமூக அநீதிக்கும் இடையில் நடக்கப் போகின்ற தேர்தல். தமிழ்மொழிக்கும் இந்தி மொழித் திணிப்புக்கும் இடையில் நடக்கப் போகின்ற ஒரு தேர்தல். தமிழ்நாடு என்றைக்குமே தலைகுனியாது என்று டெல்லிக்கு நாம் தெரிவிக்க வேண்டிய தேர்தல். தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்குக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது (Out of control) என்பதைத் தெரிவிக்க வேண்டிய தேர்தல். தேர்தலுக்கு இன்னும் 50 நாட்கள்தான் இருக்கின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியாகத் திட்டமிட்டு உங்களுடைய பணிகளை நீங்கள் வகுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்துப் பேசுங்கள். மக்களிடம் தைரியமாகச் சென்று நம்முடைய சாதனைகளையும் வரலாற்றையும் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரத்தை நம்முடைய முதலமைச்சர் நிச்சயம் உங்களுக்குத் தருவார். தமிழ்நாட்டை டெல்லியிடமிருந்து நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணப்படும் அன்று எல்லா வாக்குச்சாவடிகளிலும் நிச்சயம் உதயசூரியன் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நம்முடைய தோழமைக் கட்சிகளையும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வைக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் மோடி வந்ததும் உதயசூரியன் மலர்ந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு பொய்யைக் கூறிக்கொண்டு இருக்கிறார். எங்களின் உதயசூரியன் என்பது ஏதோ வெறும் சுவரில் உள்ள வரைபடம் கிடையாது. எங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் ரத்தத்திலும் ஊறிப் போன சின்னம் உதயசூரியன். அரசியல் அறிவே இல்லாத அடிமைகளும் அட்டைகளும் என்னதான் உளறினாலும் புலம்பினாலும் களத்தில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது உதயசூரியன். வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தலைவர் நமக்கு ஓர் இலக்கு கொடுத்திருக்கிறார். அந்த இலக்கை நோக்கி ராக்கெட் வேகத்தில் உழைக்க வேண்டும். 200 தொகுதிகள் போதாது, அதைவிட அதிகமான தொகுதிகளில் திமுக நிச்சயம் வெற்றிப் பெற்று காட்டும். அதற்கான தொடக்கமாக இந்தத் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய எட்டுத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் வெற்றிப் பெற்றால், தமிழ்நாடு வெற்றியடைந்ததற்கு சமம். நாம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், நம் தலைவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்றால், நாம் அனைவரும் ஒற்றுமையோடும் உறுதியோடும் உழைப்போம் என்றார்.
சசிகலா: `ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சி தொடங்க திட்டம்?' - பசும்பொன்னில் பந்தல்கால் நட்ட ஆதரவாளர்கள்!
மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி, பின்னர் தமிழரசி என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து மறைந்த நடராஜனின் மனைவி வி.கே.சசிகலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்து வந்த சசிகலா ஒரு கட்டத்தில், அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக மாறினார். சசிகலா மற்றும் அவரது சொந்தங்களின் பிடியில் அ.தி.மு.க வின் நிர்வாகம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக முடிவு செய்த சசிகலா, ஜெயலலிதா போன்றே தனது தோற்றத்தை மாற்றினார். சசிகலா ஆனால் அப்போது முதல்வர் பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக மறுக்கவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்தார் சசிகலா. அதுவரை பவ்யமாக இருந்து வந்த பழனிசாமி முதல்வரான பின்னர் தனது கட்சியிலும் ஆட்சியிலும் தனது ஆளுமையை செலுத்தினார். இதனால் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என அ.தி.மு.க சிதறிபோனது. இடையில் அ.ம.மு.க என்ற கட்சியை தொடங்கினார் டி.டி.வி.தினகரன். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் அ.தி.மு.க என்ற கட்சி சிதறி போனதால் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க தோல்வியயே தழுவியது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி உருவானது. இந்நிலையில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விரும்பினர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தினகரனை மட்டும் தனது கூட்டணிக்குள் சேர்த்து கொண்டு சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சி மற்றும் கூட்டணிக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். பந்தல்கால் நடும் விழா இந்நிலையில்தான் தனிக்கட்சி துவங்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வருகிற 24-ம் தேதி சசிகலா தலைமையில் நடக்க உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இதற்கான அறிவிப்பினை சசிகலா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி விழாவிற்கான பந்தல்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை பசும்பொன் கிராமத்தில் நடைபெற்றறது. சசிகலா ஆதரவாளர்கள் ஆலோசனை சசிகலா ஆதரவாளரும், பசும்பொன் ஊராட்சி முன்னாள் தலைவருமான டி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த விழாவில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டும் முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான வெள்ளத்துரை மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சசிகலா ஆதரவாளர்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய இவர்கள், சசிகலா பங்கேற்க உள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா குறித்து ஆலோசனை நடத்தினர். சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு அ.தி.மு.க-வினர் மட்டுமின்றி அவர்கள் தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா: `ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சி தொடங்க திட்டம்?' - பசும்பொன்னில் பந்தல்கால் நட்ட ஆதரவாளர்கள்!
மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி, பின்னர் தமிழரசி என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து மறைந்த நடராஜனின் மனைவி வி.கே.சசிகலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்து வந்த சசிகலா ஒரு கட்டத்தில், அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக மாறினார். சசிகலா மற்றும் அவரது சொந்தங்களின் பிடியில் அ.தி.மு.க வின் நிர்வாகம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக முடிவு செய்த சசிகலா, ஜெயலலிதா போன்றே தனது தோற்றத்தை மாற்றினார். சசிகலா ஆனால் அப்போது முதல்வர் பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக மறுக்கவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்தார் சசிகலா. அதுவரை பவ்யமாக இருந்து வந்த பழனிசாமி முதல்வரான பின்னர் தனது கட்சியிலும் ஆட்சியிலும் தனது ஆளுமையை செலுத்தினார். இதனால் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என அ.தி.மு.க சிதறிபோனது. இடையில் அ.ம.மு.க என்ற கட்சியை தொடங்கினார் டி.டி.வி.தினகரன். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் அ.தி.மு.க என்ற கட்சி சிதறி போனதால் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க தோல்வியயே தழுவியது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி உருவானது. இந்நிலையில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விரும்பினர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தினகரனை மட்டும் தனது கூட்டணிக்குள் சேர்த்து கொண்டு சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சி மற்றும் கூட்டணிக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். பந்தல்கால் நடும் விழா இந்நிலையில்தான் தனிக்கட்சி துவங்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வருகிற 24-ம் தேதி சசிகலா தலைமையில் நடக்க உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இதற்கான அறிவிப்பினை சசிகலா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி விழாவிற்கான பந்தல்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை பசும்பொன் கிராமத்தில் நடைபெற்றறது. சசிகலா ஆதரவாளர்கள் ஆலோசனை சசிகலா ஆதரவாளரும், பசும்பொன் ஊராட்சி முன்னாள் தலைவருமான டி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த விழாவில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டும் முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான வெள்ளத்துரை மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சசிகலா ஆதரவாளர்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய இவர்கள், சசிகலா பங்கேற்க உள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா குறித்து ஆலோசனை நடத்தினர். சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு அ.தி.மு.க-வினர் மட்டுமின்றி அவர்கள் தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை: உதயநிதி கலந்துகொண்ட திருமணம்; போன் செய்த கே.என்.நேரு? அகற்றப்பட்ட பேனர்களால் பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழஞ்சூர் செல்வம். இவர் திமுக-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில வர்த்தக அணி துணைத் தலைவராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு அமைச்சர் கே.என்.நேரு மூலம் காய்நகர்த்தி வருகிறார். பட்டுக்கோட்டையில் பழஞ்சூர் செல்வத்தின் மகன் திருமணம் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். உதயநிதி, நேரு, அன்பில் மகேஸ் இதற்காக உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்களை வரவேற்கும் விதமாக விமரிசையான ஏற்பாட்டை பழஞ்சூர் செல்வம் செய்திருந்தார். அலங்கார பந்தல் நுழைவாயில், திமுக கொடி, தோரணம் எனப் பட்டுக்கோட்டை நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக பல கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையோரத்தில் பத்துக்குப் பத்து அளவில் ஸ்டாண்டிங் ப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். இதனை கட்சியினர் தட்டி என்பார்கள். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சாலையோரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் போட்டோவுடன் வரவேற்று வைக்கப்பட்ட தட்டியை அகற்றி வெளியே தெரியாமல் திருப்பி போடப்பட்டது. ''நாளைதான் திருமணம் (நேற்று) ஏன் அதற்குள் தட்டியை அகற்றுகிறார்கள்'' என்பது தெரியாமல் கட்சியினர் குழப்பமடைந்தனர். இந்தச் சம்பவம் பட்டுக்கோட்டை முழுக்க பேசுபொருளாயிற்று. ”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின் இது குறித்து சிலரிடம் பேசினோம். ''பழஞ்சூர் செல்வம் மகன் திருமணத்தில் துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறைந்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு பெரிய கட்அவுட் வைத்து சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருந்தார் பழஞ்சூர் செல்வம். இதே போல் அமைச்சர்களை வரவேற்று அமைச்சர்கள் போட்டோவுடன் ஸ்டாண்டிங் தட்டி வைத்திருந்தார். பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கிட்டத்தட்ட 400 தட்டிகள் வைத்திருந்தாகச் சொல்கிறார்கள். திமுகவினரை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் ஒரு தரப்பு இந்தத் தட்டியில் அமைச்சர்கள் போட்டோ பெரிதாகவும் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் படத்தைச் சிறிதாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். பழஞ்சூர் செல்வத்தின் பிரமாண்டமான இந்த ஏற்பாட்டைப் பொறுக்க முடியாத காழ்ப்புணர்ச்சி அடைந்தவர்கள் இது குறித்து உதயநிதி உதவியாளர் மூலம் உதயநிதிக்குத் தெரியப்படுத்தி உள்ளனர். உடனே அவர் உதவியாளரிடம் தட்டியை அகற்றச் சொல்லிடுங்கள் எனச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேருவுக்கு போன் செய்த உதவியாளர் விவரத்தைக் கூறியிருக்கிறார். Vijay: அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுகவை ஆரம்பித்தார் - விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில் பின்னர், பழஞ்சூர் செல்வத்திற்கு போன் செய்த நேரு, எல்லாத் தட்டிகளையும் எடுத்து விடுயானு சொல்ல உடனே அந்தப் பணியில் பழஞ்சூர் செல்வம் தரப்பு ஈடுபட்டது. தட்டியைக் கழற்றி அதே இடத்தில் அப்படியே தட்டி தெரியாத வகையில் தலைகுப்புற பழஞ்சூர் செல்வம் தரப்பு போட்டு விட்டனர். இதையடுத்து அகற்றிய தட்டிகளை நேற்றுதான் வாகனத்தில் எடுத்து சென்றனர். பழஞ்சூர் செல்வத்தின் விமரிசையான இந்த ஏற்பாடு தேர்தல் சமயம் என்பதால் விமர்சனத்திற்கு உள்ளாகும் எனச் சிலர் சொன்னதாகவும், அதனால் உதயநிதி எடுக்க சொன்னார் என்றும் பட்டுக்கோட்டை திமுக-வில் சிலர் சொல்கிறார்கள். திருப்பிக் கிடக்கும் பேனர் பழஞ்சூர் செல்வம் கட்சிக்குச் செலவு செய்வதற்குத் தயங்காதவர் அவரது இந்த ஏற்பாடு முக்கிய நிர்வாகிகள் பலருக்கு எரிச்சலைத் தந்துள்ளது. உடனே அவர்கள்தான் இதைத் திரித்துச் சொல்லி எடுக்க வைத்து விட்டனர் என்றும் கட்சியினர் மத்தியில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதை பழஞ்சூர் செல்வம் தரப்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எதனால் மேலிடத்தில் இருந்து தட்டியை எடுக்கச் சொன்னார்கள் என்கிற காரணமும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தால் பழஞ்சூர் செல்வம் அப்செட் ஆகிவிட்டார்'' என்றனர். நாகப்பட்டினம்: `ஸ்டாலின் பாராட்டிய ஒருவர் vs உதயநிதி பாராட்டிய ஒருவர்' - திமுகவில் சீட் யாருக்கு?
ஈரோடு: 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்'பயணம்; புதிய தேர்தல் வாக்குறுதியை அறிவித்த EPS |Photos
மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் `ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ - எடப்பாடி பழனிசாமி
ஈரோடு: 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்'பயணம்; புதிய தேர்தல் வாக்குறுதியை அறிவித்த EPS |Photos
மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் `ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ - எடப்பாடி பழனிசாமி
அதிமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக? ஈஷா சிவராத்திரி விழாவில் பிரேமலதா - வேலுமணி சந்திப்பு
தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு திமுகவும், அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தேமுதிக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பாமக ராமதாஸ் அணி உள்ளிட்ட சிலர் மட்டுமே கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கிறார்கள். தேர்தல் இன்னும் சில நாள்களில் கூட்டணிகள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வேலுமணி பிரேமலதா சந்திப்பு மேலும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோரும் ஈஷா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். முக்கியமாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டார். எஸ்.பி. வேலுமணி தான், பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார். கடந்தாண்டு நடைபெற்ற ஈஷா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, வேலுமணி கலந்து கொண்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அதன் பிறகு அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. அதே நிகழ்வில் இந்த முறை வேலுமணியுடன் பிரேமலதா கலந்திருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக? ஈஷா சிவராத்திரி விழாவில் பிரேமலதா - வேலுமணி சந்திப்பு
தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு திமுகவும், அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தேமுதிக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பாமக ராமதாஸ் அணி உள்ளிட்ட சிலர் மட்டுமே கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கிறார்கள். தேர்தல் இன்னும் சில நாள்களில் கூட்டணிகள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வேலுமணி பிரேமலதா சந்திப்பு மேலும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோரும் ஈஷா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். முக்கியமாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டார். எஸ்.பி. வேலுமணி தான், பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார். கடந்தாண்டு நடைபெற்ற ஈஷா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, வேலுமணி கலந்து கொண்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அதன் பிறகு அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. அதே நிகழ்வில் இந்த முறை வேலுமணியுடன் பிரேமலதா கலந்திருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
`அன்று கருணாநிதி ஒழிக; இன்று ஸ்டாலின் வாழ்க’ - கட்சித் தாவிய அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர்
இ ருக்கிற இடம் தெரியாதபடி ஒரு குழந்தை இருந்தால், `சமத்து’ என்பார்கள். அதுபோல, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் `இப்படியொரு மந்திரி இருந்தாரா?’ என்பதே தமிழகத்தில் பலருக்குத் தெரியாது. அப்படியிருந்தும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ஐந்து வருடங்களை அசால்ட்டாகக் கடந்தவர்தான் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்த நிலோஃபர். பக்கத்து தொகுதியான ஜோலார்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணியுடன் நீடித்த மோதல் காரணமாகவே, 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் சீட் எதிர்பார்த்த நிலோஃபருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபத்தில், ``தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் கே.சி.வீரமணி `மாமா... மச்சான்’ உறவில் பழகுகிறார்’’ என்று பொதுவெளியில் பேட்டி கொடுத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பினார் நிலோஃபர். இதையடுத்து, 2021 மே 21-ம் தேதி அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிலோஃபரை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. நிலோஃபர் இதைத்தொடர்ந்து, லைம்லைட்டில் இல்லாமலிருந்துவந்த நிலோஃபர் 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்தான் தலைகாட்டினார். அப்போது, தி.மு.க சார்பாக மீண்டும் களமிறங்கிய கதிர் ஆனந்துக்காக வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குள் வேலை செய்யவும் ஆர்வம் காட்டினார் நிலோஃபர். ஆனால், வாணியம்பாடி தி.மு.க நகரச் செயலாளர் வி.எஸ்.சாரதிகுமாருடன் ஏற்கெனவே நிலோஃபருக்கு இருந்த முட்டல், மோதலாலும்... பொதுவெளியில் துரைமுருகனை விமர்சித்திருந்ததாலும் நிலோஃபரைத் தி.மு.க-வுக்குள் சேர்த்துக்கொள்ள தி.மு.க-வில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால், அ.தி.மு.க-வின் அனுதாபியாக வலம் வரத் தொடங்கினார் நிலோஃபர். ஆனாலும், அ.தி.மு.க நிகழ்ச்சிகளில் அவரை அனுமதிக்கவில்லை கே.சி.வீரமணி. ரீ-என்ட்ரி கொடுத்த நிலோஃபர்... வீராப்பு காட்டிய வீரமணி - அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கைகோத்த பின்னணி இந்த நிலையில்தான் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கிய சூழலில் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் நிலோஃபர். முதுமை காரணமாக, தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனால் முன்புபோல ஆக்டிவ்வாகச் செயல்பட முடியவில்லை. இதனால், நிலோஃபரைச் சேர்த்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற முடிவு தி.மு.க வடக்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலுவிடம் கொடுக்கப்பட்டது. அவர் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட துரைமுருகன் தரப்பு ஆதரவாளர்களை அழைத்து சமாதானம் செய்த பிறகே நேற்று ஜோலார்பேட்டை மண்டலவாடியில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் நிலோஃபர். நிலோஃபர் இந்த நிலையில், தி.மு.க-வில் இணைந்த நிலோஃபர் மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள் அ.தி.மு.க-வினர். அதேபோல, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போனபோது நிலோஃபர் வாணியம்பாடி வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி, பழக்கடைகளைச் சூறையாடுவதுபோல ஒரு வீடியோ வைரல் ஆனது. அதைப் பகிர்ந்து, ``அன்று `கருணாநிதி ஒழிக..’ என்று முழக்கமிடும் நிலோஃபர், இன்று `ஸ்டாலின் வாழ்க..’ என்று முழங்குகிறார். அ.தி.மு.க-வில், வாணியம்பாடி நகர்மன்றத் தலைவராக பத்து ஆண்டுகள், அதைத்தொடர்ந்து அமைச்சராக ஐந்து ஆண்டுகள் என அதிகாரமிக்க பதவிகளை அனுபவித்துவிட்டு, இன்று தி.மு.க-வுக்குச் சென்றிருக்கும் நிலோஃபர் ஒரு ஊர்க்குருவி. உயரப் பறந்தாலும், அவர் பருந்தாக முடியாது’’ எனவும் காட்டமாக விமர்சிக்கிறார்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வினர். ‘‘துக்கடா பசங்க போட்ட சாலை இப்படித்தான் இருக்கும்!’’ - ஒப்பந்ததாரரைப் பிடிபிடித்த நிலோஃபர் கபில்
திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை - பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன?
தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கூட்டணி குறித்து பரபரப்பான கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாதது எனவும் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூட்டணி தொடர்பாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகவும் பேசியிருந்தார். திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, இனி யாரும் கூட்டணி ஆட்சி குறித்து பேசமாட்டார்கள். உரிமைத் தொகை ரூ.5000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியும். அதனால், இனி யாரும் அது பற்றி பேசமாட்டார்கள். எங்களுடைய தலைவர் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். காங்கிரஸில் இருந்து ராகுல் காந்தி, கார்கே, செல்வப் பெருந்தகை கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம் எனப் பேட்டியளித்திருந்தார். மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது ஆனால், அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி… https://t.co/Ag5F49gE4z pic.twitter.com/e8wYKzEoDL — Praveen Chakravarty (@pravchak) February 15, 2026 இந்தப் பேட்டியை ரீட்வீட் செய்து காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் பிரவீன் சக்ரவர்த்தி, மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூட நம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வியடைந்தன எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருகிறார். தொகுதி பங்கீடு: மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் - கொதிக்கும் மாணிக்கம் தாகூர்
திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை - பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன?
தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கூட்டணி குறித்து பரபரப்பான கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாதது எனவும் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூட்டணி தொடர்பாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகவும் பேசியிருந்தார். திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, இனி யாரும் கூட்டணி ஆட்சி குறித்து பேசமாட்டார்கள். உரிமைத் தொகை ரூ.5000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியும். அதனால், இனி யாரும் அது பற்றி பேசமாட்டார்கள். எங்களுடைய தலைவர் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். காங்கிரஸில் இருந்து ராகுல் காந்தி, கார்கே, செல்வப் பெருந்தகை கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம் எனப் பேட்டியளித்திருந்தார். மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது ஆனால், அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி… https://t.co/Ag5F49gE4z pic.twitter.com/e8wYKzEoDL — Praveen Chakravarty (@pravchak) February 15, 2026 இந்தப் பேட்டியை ரீட்வீட் செய்து காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் பிரவீன் சக்ரவர்த்தி, மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூட நம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வியடைந்தன எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருகிறார். தொகுதி பங்கீடு: மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் - கொதிக்கும் மாணிக்கம் தாகூர்
தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு விவகாரம்: இப்ப என்ன அவசரம்? - மூத்த தலைவர் புஜ்பால் கேள்வி
மகாராஷ்டிராவில் சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சி 2023 ஆம் ஆண்டு இரண்டாக உடைந்தது. சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களுடன் சென்று ஒட்டுமொத்த கட்சியையும் தன்வசப்படுத்திக் கொண்டார். ஆனால் தற்போது அஜித்பவார் விமான விபத்தில் காலமாகிவிட்டார். அவர் உயிரோடு இருந்தபோது மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேசியவாத காங்கிரஸின் இரண்டு பிரிவுகளும் புனே மாவட்டத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதோடு தேர்தலுக்குப் பிறகு இரண்டு அணிகளை இணைக்க அஜித்பவார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அஜித்பவார் பிப்ரவரி 12ம் தேதி இரு அணிகளையும் இணைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது அஜித்பவார் இல்லாத காரணத்தால் அந்த இணைப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை. அதோடு அஜித்பவார் மரணத்திற்குப் பிறகு அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார். சுனேத்ரா பவார் இப்போது இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அஜித்பவார் கட்சியில் சில மூத்த தலைவர்கள் இரு அணிகளின் இணைப்புக்குச் சாதகமாக இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் அஜித்பவார் மனைவியை கட்சியின் தேசியத் தலைவராக மாற்ற அவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பால் அளித்த பேட்டியில், ''இப்போது சுனேத்ரா பவாரை கட்சியின் தேசியத் தலைவராக்குவதுதான் கட்சியின் முக்கிய திட்டம். சுனேத்ரா துணை முதல்வராகப் பதவியேற்கும்போதே கேள்வி எழுப்பினார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைவதில் என்ன அவசரம்? அது இன்றோ நாளையோ அல்லது மூன்று மாதம் கழித்தோ நடக்கலாம். எதற்காக அதற்கு நிர்ப்பந்தம் கொடுக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை இப்போது இரு அணிகளும் இணைவது தொடர்பான திட்டம் இல்லை. இப்போதுதான் சுனேத்ரா பவார் துணை முதல்வராகி இருக்கிறார். அவர் விரைவில் கட்சித் தலைவராக மாறுவார். இது 100 சதவீதம் நடக்கும்'' என்று தெரிவித்தார். சுனேத்ரா பவாருக்கு அரசியலில் அனுபவம் இல்லாத காரணத்தால் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் உட்பட சிலர் கட்சியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அஜித்பவார் இருந்தபோது இரு அணிகளும் இணைய அஜித்பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக சரத்பவாரும் குறிப்பிட்டு இருந்தார். மகாராஷ்டிரா: அஜித் பவார் மரணம், தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பைத் தடுக்க பாஜக தூதர் ஆனாரா அதானி?!
”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி.செழியன், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு உதயநிதியை வரவேற்கும் விதமாக சாலையின் ஒரு பகுதியை இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாழை மரங்கள் மற்றும் கரும்பால் அலங்காரம் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தும் முடியாமலும் வாழைத்தார் மற்றும் கரும்பை பலர் எடுத்துச் சென்றனர். இதில் உதயநிதி பேசியதாவது, ''பட்டுக்கோட்டை மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட ஊர். மிக வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாகத் திகழ்கிறது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவில் உதயநிதி ஆனால், இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் ஒரு பேருந்து நிலையம் இல்லை. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இந்நகரின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம்தான் இந்தப் பேருந்து நிலையம். இந்நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி, இந்தப் பேருந்து நிலையம் தாராளமான இட வசதியோடு, அதிநவீனமான கட்டமைப்பு வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வரைப் பொறுத்தவரைக்கும், எல்லா ஊருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் அனைத்து ஊர்களிலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000 தஞ்சாவூர் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக 30 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். 60 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது. 32,000 மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். 35,000 கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்லாத் திட்டங்களையும் விட முக்கியமான ஒரு திட்டம் உள்ளது, அதுதான் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் இன்றைக்கு இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப் பலர் திட்டமிட்டனர், இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் முதல்வர் தகர்த்தெறிந்து, இன்றைக்கு ரூ.5,000 மகளிருக்குக் கொடுத்துள்ளார். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் ரூ.2,000 மாதந்தோறும் வழங்கப்படும் என முதல் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் அறிவித்துள்ளார். இப்படி மக்கள் நலத் திட்டங்களாக இருந்தாலும் சரி, பேருந்து நிலையம் போன்ற உட்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும் சரி, தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. Budget 2025-26: மகளிர் உரிமைத் தொகை டு பெண்கள் விடுதி வரை! - மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்? இந்த மாதிரியான வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும், தமிழ்நாடு மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர வேண்டும்'' என்றார். முன்னதாக திமுக பிரமுகர் பழஞ்சூர் செல்வம் இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியது, ''தமிழ்நாடு இந்தியாவிலேயே 11.19% வளர்ச்சியோடு இன்றைக்கு முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அரசு எவ்வளவோ சதித் திட்டங்களைத் தீட்டுகிறது. நிதி உரிமையைப் பறிக்கின்றார்கள். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம்கூட கிடையாது. ஆனால் இந்தப் பட்ஜெட்டை அதிமுகவினர் வரவேற்கின்றனர். உதயநிதி எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு இந்தியாவிலேயே பாஜகவுடைய 'முரட்டு அடிமை'. ஜாடிக்கு ஏத்த மூடின்னு சொல்லுவாங்க, இன்றைக்கு மோடிக்கு ஏத்த மூடியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். இனிமேல் 10 தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் என்னதான் பாடுபட்டாலும் தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நம்பிக்கையைப் பெற முடியாது. எனவே, மீண்டும் அமையப் போறது திமுக அரசுதான்'' என்றார். மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000: ஆன்லைன் மோசடி; போனில் விவரங்களைப் பகிர வேண்டாம்! பெண்களே உஷார்..!
”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி.செழியன், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு உதயநிதியை வரவேற்கும் விதமாக சாலையின் ஒரு பகுதியை இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாழை மரங்கள் மற்றும் கரும்பால் அலங்காரம் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தும் முடியாமலும் வாழைத்தார் மற்றும் கரும்பை பலர் எடுத்துச் சென்றனர். இதில் உதயநிதி பேசியதாவது, ''பட்டுக்கோட்டை மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட ஊர். மிக வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாகத் திகழ்கிறது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவில் உதயநிதி ஆனால், இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் ஒரு பேருந்து நிலையம் இல்லை. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இந்நகரின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம்தான் இந்தப் பேருந்து நிலையம். இந்நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி, இந்தப் பேருந்து நிலையம் தாராளமான இட வசதியோடு, அதிநவீனமான கட்டமைப்பு வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வரைப் பொறுத்தவரைக்கும், எல்லா ஊருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் அனைத்து ஊர்களிலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000 தஞ்சாவூர் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக 30 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். 60 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது. 32,000 மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். 35,000 கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்லாத் திட்டங்களையும் விட முக்கியமான ஒரு திட்டம் உள்ளது, அதுதான் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் இன்றைக்கு இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப் பலர் திட்டமிட்டனர், இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் முதல்வர் தகர்த்தெறிந்து, இன்றைக்கு ரூ.5,000 மகளிருக்குக் கொடுத்துள்ளார். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் ரூ.2,000 மாதந்தோறும் வழங்கப்படும் என முதல் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் அறிவித்துள்ளார். இப்படி மக்கள் நலத் திட்டங்களாக இருந்தாலும் சரி, பேருந்து நிலையம் போன்ற உட்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும் சரி, தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. Budget 2025-26: மகளிர் உரிமைத் தொகை டு பெண்கள் விடுதி வரை! - மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்? இந்த மாதிரியான வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும், தமிழ்நாடு மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர வேண்டும்'' என்றார். முன்னதாக திமுக பிரமுகர் பழஞ்சூர் செல்வம் இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியது, ''தமிழ்நாடு இந்தியாவிலேயே 11.19% வளர்ச்சியோடு இன்றைக்கு முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அரசு எவ்வளவோ சதித் திட்டங்களைத் தீட்டுகிறது. நிதி உரிமையைப் பறிக்கின்றார்கள். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம்கூட கிடையாது. ஆனால் இந்தப் பட்ஜெட்டை அதிமுகவினர் வரவேற்கின்றனர். உதயநிதி எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு இந்தியாவிலேயே பாஜகவுடைய 'முரட்டு அடிமை'. ஜாடிக்கு ஏத்த மூடின்னு சொல்லுவாங்க, இன்றைக்கு மோடிக்கு ஏத்த மூடியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். இனிமேல் 10 தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் என்னதான் பாடுபட்டாலும் தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நம்பிக்கையைப் பெற முடியாது. எனவே, மீண்டும் அமையப் போறது திமுக அரசுதான்'' என்றார். மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000: ஆன்லைன் மோசடி; போனில் விவரங்களைப் பகிர வேண்டாம்! பெண்களே உஷார்..!
தொகுதி பங்கீடு: மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் - கொதிக்கும் மாணிக்கம் தாகூர்
மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணியில் கூடுதல் தொகுதி ஒதுக்கீடு, கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மாணிக்கம் தாகூர் மேலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்தும் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கின்றன. மோடி அரசு ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். பாராளுமன்றத்தில் யார் பலமாகச் சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிக்கொண்டுப் போய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்குக் கிடையவே கிடையாது. மாணிக்கம் தாகூர் காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம். காங்கிரஸைச் சாதாரணமாக நினைத்துப் பேசுகின்றனர். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம். எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனக் கூறியிருக்கிறார். நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
உக்ரைன் - ரஷ்யா: 20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் வரும் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. Munich Security Conference 2026 இந்த நிலையில், ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference 2026) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``உக்ரைனின் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டப்பூர்வமாக வலுவான ஒப்பந்தங்கள் அவசியம். அமெரிக்கா தற்போது 15 ஆண்டுகாலப் பாதுகாப்பு ஏற்பாட்டை முன்மொழிந்துள்ள நிலையில், அதனை 20 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும். 2027-ம் ஆண்டிற்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உறுதியான தேதியை ஐரோப்பிய நாடுகள் அறிவிக்க வேண்டும். எங்கள் மக்கள் அங்கே வாழ்கிறார்கள். அதேநேரம், அமைதிக்காக டான்பாஸ் (Donbas) பிராந்தியத்திலிருந்து உக்ரைன் பின்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்க முடியாது. அமைதிக்கான சமரசங்கள் பெரும்பாலும் உக்ரைன் தரப்பிலிருந்தே எதிர்பார்க்கப்படுவது அதிருப்தியளிக்கிறது. ஜெலன்ஸ்கி மேலும், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களும் கவலையளிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த அழுத்தம் கொடுத்து வருகிறார். எப்போது போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே உக்ரைன் தேர்தல்களை நடத்த முடியும். எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார். ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம்
கோவையில் செந்தில் பாலாஜியை முந்திய வேலுமணி; ஹாட் பாக்ஸுடன் இறங்கிய அதிமுக; வீடு தேடி வரும் பரிசுகள்
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிடினும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகதான் வென்றது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் களப்பணியும் அவர்களுக்குப் பெரியளவுக்கு கைக்கொடுத்தது. செந்தில் பாலாஜி, வேலுமணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்ற வேலுமணி பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளார். மறுபக்கம் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளனர். 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை ஹாட்பாக்ஸ், கொலுசு ஆகியவற்றைக் கொடுத்து கோவை மாவட்டம் முழுவதையும் திமுக வசமாக்கினார் செந்தில் பாலாஜி. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் கோவையில் பணத்திற்கும், பரிசுப் பொருள்களுக்கும் பஞ்சமிருக்காது. வேலுமணி திமுக மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கினால், மறுபக்கம் கோவையில் செந்தில் பாலாஜியை ஓவர்டேக் செய்து வேலுமணி ஸ்கோர் செய்துள்ளார். அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள். ஆட்சி மாறியதால் கடந்த 4 ஆண்டுகளாக அது வழங்கப்படவில்லை. வருகிற பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இது தேர்தல் ஆண்டு என்பதால் அதிமுக சார்பில் 10 தொகுதிகளுக்கும் பரிசு வழங்க வேலுமணி முடிவு செய்தார். அதிமுக பரிசுப் பொருள்கள் கடந்த சில மாதங்களாகவே இதற்காக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் நிறைவடைந்து தற்போது பரிசுப் பொருள்கள் விநியோகம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஹாட்பாக்ஸ், பெரிய தட்டு, வேட்டி சட்டை மற்றும் சேலை கொடுக்கப்பட்டு வருகின்றன. வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் சற்று ஸ்பெஷல். அங்கு மேற்சொன்ன பரிசுப் பொருள்களுடன் ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் குடை வழங்கி வருகின்றனர். பரிசுப் பொருள் விநியோகம் அதிமுக தெருமுனைக் கூட்டங்களில் முதற்கட்டமாக பரிசுகளை வழங்கினார்கள். மேலும் பரிசுப் பொருள்களை வீடு வீடாகக் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்பு டீம்களையும் அமைத்துள்ளனர். ஒரு சில நாள்களில் இந்தப் பணிகளை முடிக்க வேலுமணி உத்தரவிட்டுள்ளார். ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000
கோவையில் செந்தில் பாலாஜியை முந்திய வேலுமணி; ஹாட் பாக்ஸுடன் இறங்கிய அதிமுக; வீடு தேடி வரும் பரிசுகள்
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிடினும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகதான் வென்றது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் களப்பணியும் அவர்களுக்குப் பெரியளவுக்கு கைக்கொடுத்தது. செந்தில் பாலாஜி, வேலுமணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்ற வேலுமணி பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளார். மறுபக்கம் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளனர். 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை ஹாட்பாக்ஸ், கொலுசு ஆகியவற்றைக் கொடுத்து கோவை மாவட்டம் முழுவதையும் திமுக வசமாக்கினார் செந்தில் பாலாஜி. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் கோவையில் பணத்திற்கும், பரிசுப் பொருள்களுக்கும் பஞ்சமிருக்காது. வேலுமணி திமுக மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கினால், மறுபக்கம் கோவையில் செந்தில் பாலாஜியை ஓவர்டேக் செய்து வேலுமணி ஸ்கோர் செய்துள்ளார். அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள். ஆட்சி மாறியதால் கடந்த 4 ஆண்டுகளாக அது வழங்கப்படவில்லை. வருகிற பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இது தேர்தல் ஆண்டு என்பதால் அதிமுக சார்பில் 10 தொகுதிகளுக்கும் பரிசு வழங்க வேலுமணி முடிவு செய்தார். அதிமுக பரிசுப் பொருள்கள் கடந்த சில மாதங்களாகவே இதற்காக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் நிறைவடைந்து தற்போது பரிசுப் பொருள்கள் விநியோகம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஹாட்பாக்ஸ், பெரிய தட்டு, வேட்டி சட்டை மற்றும் சேலை கொடுக்கப்பட்டு வருகின்றன. வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் சற்று ஸ்பெஷல். அங்கு மேற்சொன்ன பரிசுப் பொருள்களுடன் ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் குடை வழங்கி வருகின்றனர். பரிசுப் பொருள் விநியோகம் அதிமுக தெருமுனைக் கூட்டங்களில் முதற்கட்டமாக பரிசுகளை வழங்கினார்கள். மேலும் பரிசுப் பொருள்களை வீடு வீடாகக் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்பு டீம்களையும் அமைத்துள்ளனர். ஒரு சில நாள்களில் இந்தப் பணிகளை முடிக்க வேலுமணி உத்தரவிட்டுள்ளார். ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000
Vijay: அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுகவை ஆரம்பித்தார் - விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில்
கடந்த வாரம் விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதை நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், மகளிர் உதவித்தொகை கொடுக்கவே முடியாது எனச் சொன்னார்கள். அதையும் கொடுத்திருக்கிறோம். தற்போது மகளிர் உதவித் தொகையுடன் சிறப்பு தொகுப்பாக ரூ. 5000 கொடுத்திருப்பது பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது'' என்றார். சேலத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, யார் கூட்டத்தை நடத்தினார்களோ அவர்கள்தாம் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தாம் பதில் சொல்ல வேண்டும்'' என்றார். விஜய், உதயநிதி தன்னுடைய அரசியலின் தாக்கத்தால்தான் உரிமைத் தொகையை அரசு தருவதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுக கட்சியை ஆரம்பித்தார் தெரியுமா? எனத் துணை முதலமைச்சர் உதயநிதி கிண்டலாகப் பேசினார். நாகப்பட்டினம்: `ஸ்டாலின் பாராட்டிய ஒருவர் vs உதயநிதி பாராட்டிய ஒருவர்' - திமுகவில் சீட் யாருக்கு?
பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதே RSS, BJP-இன் சித்தாந்தம் - நயினார் மீது ஜோதிமணி காட்டம்
பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், பொதுவாழ்வில் ஒரு கட்சித் தலைவர் மீது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்தால் கருத்து ரீதியாக அவரை எதிர்கொள்ளுங்கள். விமர்சனம் செய்யுங்கள். அதைச் செய்ய முடியாமல் ஒரு பெண்ணை ஆபாசமாகப் பொதுவெளியில் பேசுவது பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், பார்க்கலாம், விமர்சிக்கலாம் என்கிற ஆபத்தான, அருவருக்கத்தக்க மனநிலையின் உச்சம். கடுமையான கண்டனத்துக்குரியது. கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 'நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்
இலவச சட்ட சேவை பெறும் உரிமை எல்லோருக்கும் உண்டு; ஆனால் எப்படி? | How To?
'நீதிமன்றம்' என்பது பொதுவானதுதான் என்றாலும், அதன் வாசல் ஏறி நீதி கோருவதற்கு இங்கு பொருளாதாரமும், அறியாமையும் பெரிய தடையாய் இருக்கின்றன. அதன் காரணமாகவே, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கான நம்பிக்கையாய் சட்டப்பணிகள் ஆணையக்குழு உருவானது. மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படைச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நம் எல்லோருக்குமே இலவச சட்ட சேவை பெறும் உரிமை உண்டு. அதை எப்படி பெறுவது ? என்பது பற்றி தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவினரிடம் கேட்டோம். அனைவருக்கும் நீதி: ``இந்திய அரசியலமைப்பின் 39A பிரிவு, பொருளாதார அல்லது பிற குறைபாடுகளின் காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதி பெறுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பொருத்தமான சட்டம் அல்லது திட்டங்கள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ இலவச சட்ட உதவியை வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது. இதன் அடிப்படையில் சட்ட சேவைகள் ஆணையச் சட்டம்,1987 (Legal Services Authorities Act, 1987) இயற்றப்பட்டு அது 09.11.1995 அன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தை நிறைவேற்ற தேசிய அளவில் – புதுதில்லியில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மற்றும் தாலுக்காக்களில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு என்று நீதியை சமூகத்தின் பலவீனப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு முழு அமைப்பு உருவானது. சட்ட உதவி பெற தகுதிகள் அதன் விளைவாக இன்று பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள், மலைவாழ் மக்கள், பெண்கள், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், சிறைவாசிகள், காவலில் உள்ளவர்கள், மனிதக் கடத்தல், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- வரம்புக்குள் உள்ளவர்கள், மூத்த குடிமகன்கள், முன்னாள் படைவீரர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் HIV/AIDS நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முற்றிலும் இலவசமாக சட்டம் சார்ந்த அனைத்து தேவைகளையும் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் நிறைவேற்றி தருகிறது. மேலும் சமூகத்தின் கடைநிலை நபருக்கும் அவருடைய இருப்பிடத்திற்கே சட்ட உதவி சென்று சேரும் வகையில் மிக சிறப்பாக மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, புதுப்புது திட்டங்கள் வகுத்து மாநில, மாவட்ட, வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் “அனைவருக்கும் நீதி” என்ற அரசியலமைப்பு இலக்கை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. சட்ட விழிப்புணர்வு முகாம்கள் பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், சிறைவாசிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமகன்கள் ஆகியோருக்கு தங்களது உரிமைகள் மற்றும் கடமைகள், அரசின் நல திட்டங்கள் மற்றும் மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நல திட்டங்கள், மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை சட்டங்கள் குறித்து தெளிவுபடுத்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், விபத்து நஷ்டஈடு, தொழிலாளர் உரிமைகள், மூத்த குடிமக்கள் உரிமைகள் மற்றும் அனைத்து அடிப்படை சட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. சட்ட ஆலோசனை மையங்கள் சட்ட உதவி தேவைப்படுவோர் நேரடியாக அணுகும் வகையில் அவரவர் பகுதிகளிலேயே “சட்ட உதவி மையங்கள்” நடந்துவருகிறது. இதனால் ஒரு சட்ட ஆலோசனை/சட்ட உதவி பெற நீதிமன்றம் வரை வர வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள சட்ட உதவி மையங்கள் வாயிலாகவே சட்ட உதவியை பெற முடியும். சேலத்தில் சிறைகள், தாலுகா அலுவகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 25 சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. 24×7 சட்ட உதவி மையங்கள் மாண்புமிகு நீதியரசர் M. சுந்தர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முன்னாள் செயல்தலைவர் அவர்களின் முன்னெடுப்பில் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு (NALSA)- வின் பல்வேறு திட்டங்களின் கீழ் 24x7 மணி நேரமும் செயல்படும் சட்ட சேவை மையத்தை (Legal Services Clinics) சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவர் மாண்புமிகு நீதியரசர் சூர்யகாந்த் அவர்கள் கடந்த 23 ஆகஸ்ட் 2025 அன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். சட்ட தன்னார்வ தொண்டர்கள் சட்ட உதவி சேவைகள் கிராம மக்களுக்கும் எளிய முறையில் சென்றடைய சட்ட தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers) நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கு சட்ட தகவல்களை வழங்கி, தேவையுள்ளவர்களை சட்டப் பணிகள் ஆணைக்குழுவுடன் இணைக்கும் முக்கிய பாலமாக செயல்படுகின்றனர். சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு Legal Aid Defense Counsel System (LADCS) சிறைகளில் உள்ள கைதிகளுக்கும் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. வழக்கு நிலை, ஜாமீன், மேல் முறையீடு, தண்டனை குறைப்பு போன்ற விவகாரங்களில் இலவச சட்ட ஆலோசனை வழங்கப்பட்டு, கைதிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் குற்றம் சாட்டப்பட்ட சமூகத்தின் பலவீனப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு தரமான இலவச சட்ட உதவி வழங்கும் புதிய முறையை மாண்புமிகு தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு “Legal Aid Defense Counsel System - சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு” அதை தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் சோதனை முயற்சியாக இரண்டு வருடங்கள் செயல்படுத்தி பார்த்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் Legal Aid Defense Counsel System (LADCS)/சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழக்கறிஞர்களை 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கி வருகிறது. இது மிகச்சீரான, முழுநேர பாதுகாப்பு சேவை அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் முதல் நீதிமன்றத்தின் இறுதி நிலை வரை முழுமையான சட்ட உதவி வழங்குவதே இதன் நோக்கம். ஜாமீன், மேல்முறையீடு, விசாரணை, ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய அனைத்திற்கும் ஒரே குழு பொறுப்பேற்கும். இது வழக்குகளில் தகுதியான மற்றும் தரமான சட்ட உதவியை வழங்கி, நீதி, சமத்துவம் நிலைநிறுத்த உதவுகிறது. நீதியின் கதவைத் திறக்க ஒரே ஒரு உதவி எண் - 15100 உங்களுக்கோ, உங்கள் அருகிலுள்ளவர்களுக்கோ சட்ட உதவி தேவைப்பட்டால்,தயங்காமல் அருகிலுள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழுவையோ அல்லது அருகிலுள்ள சட்ட உதவி மையத்தையோ அணுகுங்கள். நீதியின் கதவைத் திறக்க ஒரே ஒரு உதவி எண்ணை அழைத்தாலே போதும். அது தான் NALSA-வின் 15100 - இந்தியாவில் எங்கிருந்தாலும், எந்த நேரத்திலும், யாரும் இந்த 15100 எண்ணுக்கு தொடர்பு கொண்டு இலவச சட்ட உதவி பெறலாம். உங்களுக்கோ, உங்கள் அருகிலுள்ளவர்களுக்கோ சட்ட உதவி தேவைப்பட்டால், தயங்காமல் அருகிலுள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழுவையோ அல்லது அருகிலுள்ள சட்ட உதவி மையத்தையோ அணுகுங்கள். என்றனர் விரிவாக.

23 C