'அவர்'மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ
ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின் ஒரு பேரறிஞர். இயக்குநர் ராம் கூறியதைப்போல, நாங்கள் எல்லோரும் அவருடைய மாணவர்கள். மாணவர்கள் என்றால் பின்தொடர்பவர்கள் அல்ல; விவாதிப்பவர்கள், உரையாடுபவர்கள், முட்டி மோதுபவர்கள். சு.வெங்கடேசன் `பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான் அவருடைய 'அந்நியமாதல்' புத்தகம் 20 வருடங்களாக எங்களைச் சுற்றிவருகிறது. அவர்மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா... ஒரு பேரறிஞருக்கு மகிழ்ச்சி என்பது விருது அல்ல; அவர் இயங்கிக்கொண்டிருப்பதுதான் மகிழ்ச்சி. இன்றைக்கு வரை இயங்கிக்கொண்டிருக்கிற ஒரு பேரறிஞர் எஸ்.வி.ஆர். மேலும், தமிழ் அறிவுச் சூழலில் ஒரு தசாப்தத்தின் வரலாற்றைத் தன் எழுத்துகளால் செதுக்கியவர். அதிகாரத்துக்கு எதிராகத் தொடர்ந்து ஒலிக்கும் அவரது குரல், இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி என்றார். `எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' - திருமாவளவன்
``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு
தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், ``இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டுடைய நிரந்தர டிரெண்ட் கருப்பு - சிவப்பு தான். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான். ஏழாவது முறையும் தி.மு.க ஆட்சிதான். திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை; ரொம்ப அடக்கத்தோடு, மிகுந்த பணிவோடு நம் அரசு செய்திருக்கின்ற சாதனைகள்மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையில் சொல்கிறேன். எல்லாவற்றுக்கும்மேலாக உடன் பிறப்புகளாகிய உங்கள் மீதான நம்பிக்கையிலும் சொல்கிறேன். வெற்றியைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிக்கத் தேவையில்லை. உங்களை வழிநடத்தி உங்களுக்கான டாஸ்க்கை ஒப்படைத்தாலே போதும். மீண்டும் உதயச்சூரியன் ஆட்சி உறுதி. இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தொகுதியும் தி.மு.க கோட்டை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும். 2026-ல் தி.மு.க-வின் வெற்றி என்பது, இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி உறுப்பினர்களை நாம் நியமித்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் பூத்கள் இருக்கிறது. இப்படி, ஒவ்வொரு பூத்திலும் நாம் செட் செய்திருக்கக்கூடிய மினிமம் டார்கெட் 350 வாக்குகள். இந்த டார்கெட்டை நாம் அச்சிவ் செய்தாலே 2.60 கோடி வாக்குகளுக்குமேல் நாம் வாங்கிவிடுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தலில், 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் நாம் வாங்கியே ஆக வேண்டும். இதை நடத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு. உங்களுக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் செய்துகொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. 2 கோடியே 50 லட்சமா? என்று யாரும் மலைக்க வேண்டாம்; யோசிக்கவும் வேண்டாம். இங்கு வந்திருக்கின்ற ஒவ்வொருத்தவரும் தலா 40 அல்லது 50 வாக்குகள் பொறுப்பேற்றுக்கொண்டால் அவ்வளவுதான். சிம்பிள். ஒவ்வொருத்தவரும் அவர்களுக்கு அசைன் செய்திருக்கின்ற 50 வாக்குகளைப் பெற்று தந்தாலே போதும். 200 தொகுதிகள் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கிறது தான் நம்முடைய லட்சியம். அதற்காக, 2 மாதங்கள் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்குள் நீங்கள் ஒவ்வொருத்தரும் 100 வாக்காளர்களை குறைந்தது 5 முறையாவது சந்திக்க வேண்டும். என்னதான் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று புதுபுது ஊடகங்கள் வந்தாலும், மக்களை நேரில் சந்தித்து பணிவாக வாக்கு கேட்கின்ற பிரசாரத்துக்கு ஈடாகாது. அதனால்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். பரம்பரைப் பரம்பரையாக தி.மு.க-வுக்கு வாக்களிக்கின்ற குடும்பங்களாக இருந்தாலும் சரி. இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பங்களாக இருந்தாலும் சரி. பிரசாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்க வேண்டும். இதை நீங்கள் ரிப்பீட்மோடில் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ரிப்பீட் ஆகும். 2021-ல் இருந்ததைவிட நமக்கான வரவேற்பும், ஆதரவும் இப்போது கூடியிருக்கிறது. 2021 தேர்தலின்போது, இதையெல்லாம் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம். இப்போது, சொன்னதையும் தாண்டி செய்துகொண்டிருக்கிறோம். அதனால், கெத்தாக மக்கள் முன்னாடி வந்து நிற்கிறோம். எனவே, மெத்தனமாக இருக்காமல், களத்தில் தொடர்ந்து உழைத்தால் சென்ற முறையைவிட பெரிய வெற்றி 100 சதவிகிதம் சாத்தியம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாம் வாங்கிய வாக்குகளைச் சட்டமன்றத் தொகுதி வாரியாக பார்த்தாலே, மிகத்தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 200 தொகுதிகளுக்குமேல் நாம்தான் வெல்லப் போகிறோம். நேற்று காலை விடிந்ததும், 1.31 கோடி பெண்கள் முகத்திலும் புன்னகையைக் கொண்டுவந்திருக்கிறோம். அவர்கள் காலையில் கேட்ட முதல் ரிங்டோன், `5 ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அக்கௌண்ட்டில் வந்திருக்கிறதா?’ என்கிற மெசேஜ் டோன் தான். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, `தேர்தல் நெருக்கத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும்’ என்று திட்டம் போட்டார்கள். ஒன்றிய பா.ஜ.க-வைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள். நல்லது செய்பவர்களையும் செய்யவிடமாட்டார்கள். தமிழ்நாட்டு மகளிருக்காக நான் கொடுத்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. அதற்கு தடைப்போட நான் விட்டு விடுவேனா? அதனால்தான் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல். மாநாடு ஓரவஞ்சனைக்கும், வஞ்சகத்துக்கும் உருவகம் இருந்தால், அதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு. இதுவரை தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டம் ஏதாவது அறிவித்திருக்கிறார்களா? நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். முறையாக பதில் சொல்ல, இதுவரையில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வரவில்லை. அதற்குப் பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை. பா.ஜ.க-வின் தலைமையில் இருந்தும் பதில் வரவில்லை. பா.ஜ.க-வின் கிளைச் செயலாளராக இருக்கிற பழனிசாமியிடம் இருந்தும் பதில் வரவில்லை. ஆமாம், பா.ஜ.க-வின் கிளைக் கழகமாக மாறிவிட்டது அ.தி.மு.க. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் பேசுவதற்குத் துணிவில்லாமல், முதுகெலும்பு இல்லாமல், கொத்தடிமை சேவகம் செய்துகொண்டிருக்கிற பழனிசாமி எனக்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார். இன்றைக்கும் ஒரு அரசியல்வாதி எப்படி எல்லாம் இருக்கக்கூடாது? என்பதற்கு அடையாளமாக சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. மாண்புமிகு பழனிசாமி அவர்களே, தவழ்ந்து தவழ்ந்து ஊழல் குற்றவாளியான அம்மையார் சசிகலா காலில் விழுந்து பதவியைப் பெற்றுவிட்டு, காலை வாரிவிட்டுவிட்டு, `நீ எனக்குப் பதவி கொடுத்தியா?’ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்டீர்களே, மறுக்க முடியுமா? சட்டம் - ஒழுங்குப் பிரச்னைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்குத் தார்மீக உரிமையாவது இருக்கிறதா? உங்கள் கட்சியின் உண்மையான பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள்... இதையெல்லாம் மறக்கடித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? பொல்லாத ஆட்சி பழனிசாமியின் ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளே சாட்சியாக, ஆறாத வடுவாக இருக்கிறதே. ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அமைதியாக ஊர்வலம் சென்ற அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லிவிட்டு, `டி.வி-யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று நாடகம்போட்டது மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவும், மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்டபோது, `அவர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்ததாக’ கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் சொன்னீர்களே, உங்களின் கல் மனதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்தீர்களா? பா.ஜ.க-வின் டப்பா என்ஜின் முன்னாடி நம்முடைய திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது. அண்மையில், ஒன்றிய அரசின் பட்ஜெட் வெளியிட்டார்களே. அதில் தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் அறிவித்தார்களா? இதை தட்டிக்கேட்கிற துணிச்சலோ, தைரியமோ பழனிசாமிக்கு இருக்கிறதா? அவரைப் பொறுத்தவரைக்கும் `தோப்புக்கரணம் போடு’ என்று சொன்னால், `ஸ்டாப்’ சொல்கிற வரைக்கும் `நான் ஸ்டாப்’பாக பல்டி அடிப்பார். எல்லா துரோகத்தையும் செய்துவிட்டு, `கூட்டணி தர்மத்துக்காகத்தான் தமிழ்நாடு உரிமைகளை அடகு வைத்தேன்’ என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்வார். இதையெல்லாம் நன்றாக உணர்ந்துதான் அவரின் தலைமையை, அவரின் கூட்டணியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லோரும் ஒரிஜினல் ஓனரான பா.ஜ.க-விடம் நேரடியாக சரண்டராகிறார்கள். தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்று துடிக்கிறவர்கள், தமிழ்நாட்டுக்குள் வந்தால் அவர்களின் சதி திட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று மக்களிடம் நீங்கள் புரிய வைக்க வேண்டும்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு
தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், ``இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டுடைய நிரந்தர டிரெண்ட் கருப்பு - சிவப்பு தான். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான். ஏழாவது முறையும் தி.மு.க ஆட்சிதான். திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை; ரொம்ப அடக்கத்தோடு, மிகுந்த பணிவோடு நம் அரசு செய்திருக்கின்ற சாதனைகள்மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையில் சொல்கிறேன். எல்லாவற்றுக்கும்மேலாக உடன் பிறப்புகளாகிய உங்கள் மீதான நம்பிக்கையிலும் சொல்கிறேன். வெற்றியைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிக்கத் தேவையில்லை. உங்களை வழிநடத்தி உங்களுக்கான டாஸ்க்கை ஒப்படைத்தாலே போதும். மீண்டும் உதயச்சூரியன் ஆட்சி உறுதி. இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தொகுதியும் தி.மு.க கோட்டை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும். 2026-ல் தி.மு.க-வின் வெற்றி என்பது, இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி உறுப்பினர்களை நாம் நியமித்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் பூத்கள் இருக்கிறது. இப்படி, ஒவ்வொரு பூத்திலும் நாம் செட் செய்திருக்கக்கூடிய மினிமம் டார்கெட் 350 வாக்குகள். இந்த டார்கெட்டை நாம் அச்சிவ் செய்தாலே 2.60 கோடி வாக்குகளுக்குமேல் நாம் வாங்கிவிடுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தலில், 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் நாம் வாங்கியே ஆக வேண்டும். இதை நடத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு. உங்களுக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் செய்துகொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. 2 கோடியே 50 லட்சமா? என்று யாரும் மலைக்க வேண்டாம்; யோசிக்கவும் வேண்டாம். இங்கு வந்திருக்கின்ற ஒவ்வொருத்தவரும் தலா 40 அல்லது 50 வாக்குகள் பொறுப்பேற்றுக்கொண்டால் அவ்வளவுதான். சிம்பிள். ஒவ்வொருத்தவரும் அவர்களுக்கு அசைன் செய்திருக்கின்ற 50 வாக்குகளைப் பெற்று தந்தாலே போதும். 200 தொகுதிகள் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கிறது தான் நம்முடைய லட்சியம். அதற்காக, 2 மாதங்கள் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்குள் நீங்கள் ஒவ்வொருத்தரும் 100 வாக்காளர்களை குறைந்தது 5 முறையாவது சந்திக்க வேண்டும். என்னதான் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று புதுபுது ஊடகங்கள் வந்தாலும், மக்களை நேரில் சந்தித்து பணிவாக வாக்கு கேட்கின்ற பிரசாரத்துக்கு ஈடாகாது. அதனால்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். பரம்பரைப் பரம்பரையாக தி.மு.க-வுக்கு வாக்களிக்கின்ற குடும்பங்களாக இருந்தாலும் சரி. இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பங்களாக இருந்தாலும் சரி. பிரசாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்க வேண்டும். இதை நீங்கள் ரிப்பீட்மோடில் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ரிப்பீட் ஆகும். 2021-ல் இருந்ததைவிட நமக்கான வரவேற்பும், ஆதரவும் இப்போது கூடியிருக்கிறது. 2021 தேர்தலின்போது, இதையெல்லாம் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம். இப்போது, சொன்னதையும் தாண்டி செய்துகொண்டிருக்கிறோம். அதனால், கெத்தாக மக்கள் முன்னாடி வந்து நிற்கிறோம். எனவே, மெத்தனமாக இருக்காமல், களத்தில் தொடர்ந்து உழைத்தால் சென்ற முறையைவிட பெரிய வெற்றி 100 சதவிகிதம் சாத்தியம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாம் வாங்கிய வாக்குகளைச் சட்டமன்றத் தொகுதி வாரியாக பார்த்தாலே, மிகத்தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 200 தொகுதிகளுக்குமேல் நாம்தான் வெல்லப் போகிறோம். நேற்று காலை விடிந்ததும், 1.31 கோடி பெண்கள் முகத்திலும் புன்னகையைக் கொண்டுவந்திருக்கிறோம். அவர்கள் காலையில் கேட்ட முதல் ரிங்டோன், `5 ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அக்கௌண்ட்டில் வந்திருக்கிறதா?’ என்கிற மெசேஜ் டோன் தான். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, `தேர்தல் நெருக்கத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும்’ என்று திட்டம் போட்டார்கள். ஒன்றிய பா.ஜ.க-வைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள். நல்லது செய்பவர்களையும் செய்யவிடமாட்டார்கள். தமிழ்நாட்டு மகளிருக்காக நான் கொடுத்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. அதற்கு தடைப்போட நான் விட்டு விடுவேனா? அதனால்தான் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல். மாநாடு ஓரவஞ்சனைக்கும், வஞ்சகத்துக்கும் உருவகம் இருந்தால், அதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு. இதுவரை தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டம் ஏதாவது அறிவித்திருக்கிறார்களா? நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். முறையாக பதில் சொல்ல, இதுவரையில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வரவில்லை. அதற்குப் பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை. பா.ஜ.க-வின் தலைமையில் இருந்தும் பதில் வரவில்லை. பா.ஜ.க-வின் கிளைச் செயலாளராக இருக்கிற பழனிசாமியிடம் இருந்தும் பதில் வரவில்லை. ஆமாம், பா.ஜ.க-வின் கிளைக் கழகமாக மாறிவிட்டது அ.தி.மு.க. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் பேசுவதற்குத் துணிவில்லாமல், முதுகெலும்பு இல்லாமல், கொத்தடிமை சேவகம் செய்துகொண்டிருக்கிற பழனிசாமி எனக்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார். இன்றைக்கும் ஒரு அரசியல்வாதி எப்படி எல்லாம் இருக்கக்கூடாது? என்பதற்கு அடையாளமாக சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. மாண்புமிகு பழனிசாமி அவர்களே, தவழ்ந்து தவழ்ந்து ஊழல் குற்றவாளியான அம்மையார் சசிகலா காலில் விழுந்து பதவியைப் பெற்றுவிட்டு, காலை வாரிவிட்டுவிட்டு, `நீ எனக்குப் பதவி கொடுத்தியா?’ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்டீர்களே, மறுக்க முடியுமா? சட்டம் - ஒழுங்குப் பிரச்னைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்குத் தார்மீக உரிமையாவது இருக்கிறதா? உங்கள் கட்சியின் உண்மையான பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள்... இதையெல்லாம் மறக்கடித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? பொல்லாத ஆட்சி பழனிசாமியின் ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளே சாட்சியாக, ஆறாத வடுவாக இருக்கிறதே. ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அமைதியாக ஊர்வலம் சென்ற அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லிவிட்டு, `டி.வி-யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று நாடகம்போட்டது மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவும், மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்டபோது, `அவர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்ததாக’ கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் சொன்னீர்களே, உங்களின் கல் மனதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்தீர்களா? பா.ஜ.க-வின் டப்பா என்ஜின் முன்னாடி நம்முடைய திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது. அண்மையில், ஒன்றிய அரசின் பட்ஜெட் வெளியிட்டார்களே. அதில் தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் அறிவித்தார்களா? இதை தட்டிக்கேட்கிற துணிச்சலோ, தைரியமோ பழனிசாமிக்கு இருக்கிறதா? அவரைப் பொறுத்தவரைக்கும் `தோப்புக்கரணம் போடு’ என்று சொன்னால், `ஸ்டாப்’ சொல்கிற வரைக்கும் `நான் ஸ்டாப்’பாக பல்டி அடிப்பார். எல்லா துரோகத்தையும் செய்துவிட்டு, `கூட்டணி தர்மத்துக்காகத்தான் தமிழ்நாடு உரிமைகளை அடகு வைத்தேன்’ என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்வார். இதையெல்லாம் நன்றாக உணர்ந்துதான் அவரின் தலைமையை, அவரின் கூட்டணியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லோரும் ஒரிஜினல் ஓனரான பா.ஜ.க-விடம் நேரடியாக சரண்டராகிறார்கள். தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்று துடிக்கிறவர்கள், தமிழ்நாட்டுக்குள் வந்தால் அவர்களின் சதி திட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று மக்களிடம் நீங்கள் புரிய வைக்க வேண்டும்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் நாங்கள் அதைத் தடுத்தோமா. வானதி சீனிவாசன் திமுகவினர் மக்களின் காதில் பூ சுற்ற முயற்சி செய்கிறார்கள். முதலமைச்சர் மகளிரின் பாதுகாவலர் போன்று ஒரு டிராமா செய்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக கோடை காலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கூட தராதவர்கள், தற்போது கோடைகால சிறப்பு நிதியாக ரூ. 2,000 கொடுக்கிறார்கள். பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் உரிமைத் தொகை வெளியில் சென்ற பெண்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று குடும்ப உறவுகள் பதற்றமாக இருக்கிறார்கள். ரூ.5,000 கொடுத்தால் அனைத்தையும் மறப்பார்கள் என்று நினைக்கிறார்கள். மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். நயினார் நாகேந்திரன் பொதுவாக மிகவும் அமைதியானர். பண்பாக பேசக்கூடியவர். சட்டசபையில் கூட மிகவும் நாகரிகமாக பேசுவார். எதற்காக த்ரிஷா பற்றி அப்படி பேசினார் என தெரியவில்லை. அவர் பேசியது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னுடைய கருத்தை அவரிடம் கூறுவேன். நயினார் நாகேந்திரன் அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு, இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள்” என்றார்.
'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் நாங்கள் அதைத் தடுத்தோமா. வானதி சீனிவாசன் திமுகவினர் மக்களின் காதில் பூ சுற்ற முயற்சி செய்கிறார்கள். முதலமைச்சர் மகளிரின் பாதுகாவலர் போன்று ஒரு டிராமா செய்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக கோடை காலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கூட தராதவர்கள், தற்போது கோடைகால சிறப்பு நிதியாக ரூ. 2,000 கொடுக்கிறார்கள். பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் உரிமைத் தொகை வெளியில் சென்ற பெண்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று குடும்ப உறவுகள் பதற்றமாக இருக்கிறார்கள். ரூ.5,000 கொடுத்தால் அனைத்தையும் மறப்பார்கள் என்று நினைக்கிறார்கள். மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். நயினார் நாகேந்திரன் பொதுவாக மிகவும் அமைதியானர். பண்பாக பேசக்கூடியவர். சட்டசபையில் கூட மிகவும் நாகரிகமாக பேசுவார். எதற்காக த்ரிஷா பற்றி அப்படி பேசினார் என தெரியவில்லை. அவர் பேசியது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னுடைய கருத்தை அவரிடம் கூறுவேன். நயினார் நாகேந்திரன் அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு, இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள்” என்றார்.
'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!'– காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா
``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...” புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் தொன்மையான மற்றும் இனிமையான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை என்பதற்காக முதலில் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இப்போது நான் புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, புதுச்சேரியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் எப்படியான வளர்ச்சித் திட்டங்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்பதைக் கூற வந்திருக்கிறேன். மற்றொன்று, புதுச்சேரியை ஏற்கெனவே ஆட்சி செய்தவர்களின் முகத்திரையைக் கிழித்திட வந்திருக்கிறேன். காரைக்கால் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கும் ஆளுநர் கைலாஷ்நாதன் மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாள்தோறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் அந்த அன்றாடத் தாக்குதல் குறித்து அப்போதைய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ வாய் திறக்க மாட்டார்கள். கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தார்கள். நாட்டுக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அதேசமயம் அந்தத் தாக்குதலுக்காக எதிரிகளின் இடத்திற்கே சென்று வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தோம். இரண்டாவதாக, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினோம். ``புதுச்சேரியில் 60% வாக்குகள்... 24 தொகுதிகள்...” இறுதியாக ஆபரேஷன் சிந்தூர் போன்ற துல்லியமான தாக்குதலால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நம் நாட்டுக்குப் பெருமையை மட்டும் தேடித் தரவில்லை, பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறார். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கைச் சரிசெய்து வளர்ச்சிப் பணியைத் தொடங்கியிருக்கிறோம். நம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடந்த 2021 தேர்தலில் 44% வாக்குகளைப் புதுச்சேரி மக்கள் வழங்கினார்கள். அந்த வகையில் வருகின்ற 2026 தேர்தலில் 60% வாக்குகளைப் பெற்று 24 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். பா.ஜ.க பொதுக்கூட்டம் புதுச்சேரியை இதற்கு முன்பு ஆட்சி செய்த நாராயணசாமி மிக மோசமாக ஆட்சியை நடத்தினார். அந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலால் ஒட்டுமொத்த புதுச்சேரிக்கும் சீர்குலைவு ஏற்பட்டது. புதுச்சேரியைக் காந்தி குடும்பத்துக்கான ஏ.டி.எம். இயந்திரமாக மாற்றி வைத்திருந்தார் நாராயணசாமி. கல்வி நிலையங்களை விற்ற அவர், எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைக் கூட ஏலம் விட்டுவிட்டார். அவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. போக்குவரத்து மாஃபியாக்களுக்குப் புதுச்சேரியை முழுமையாகத் திறந்துவிட்டவர் நாராயணசாமி. ``ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி...” வளர்ச்சித் திட்டங்களுக்காகப் புதுச்சேரிக்குக் கொடுக்கப்பட்ட நிதியில், சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு அவர் ஊழல் செய்திருப்பது சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. ரூ.15,000 கோடி என்பது புதுச்சேரி மாநிலத்தின் மூன்று ஆண்டுகளுக்கான பட்ஜெட் தொகை. அவரது ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் புதிதாக ஒரு தொழிற்சாலைகூடத் தொடங்கப்படவில்லை. நம்முடைய ஐந்து ஆண்டுகால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதுடன், சுயமாகச் செயல்படும் ஓர் அரசை உருவாக்கியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முக்கியத் துறைகளில் நாம் கவனம் செலுத்த இருக்கிறோம். நாராயணசாமி ஒன்று, புதுச்சேரி மீனவர்களின் பொருட்கள் உலக சந்தைகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது. இரண்டாவது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான இடமாகப் புதுச்சேரி மாநிலத்தை மாற்றுவது. அதன்மூலம் புதுச்சேரி இளைஞர்கள் அதிக அளவு வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதுச்சேரியில் ஏற்கெனவே ஜோஹோ அமைப்பு தங்களுடைய சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. அதேபோல் எஸ்.ஆர். நிறுவனம் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் லேப்டாப்கள் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருக்கிறது என்றார். புதுச்சேரி: ``பள்ளி மாணவர்கள் லேப்டாப் கொள்முதலில் ரூ.90 கோடி ஊழல்” – `பகீர்’ கிளப்பும் நாராயணசாமி
'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!'– காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா
``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...” புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் தொன்மையான மற்றும் இனிமையான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை என்பதற்காக முதலில் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இப்போது நான் புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, புதுச்சேரியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் எப்படியான வளர்ச்சித் திட்டங்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்பதைக் கூற வந்திருக்கிறேன். மற்றொன்று, புதுச்சேரியை ஏற்கெனவே ஆட்சி செய்தவர்களின் முகத்திரையைக் கிழித்திட வந்திருக்கிறேன். காரைக்கால் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கும் ஆளுநர் கைலாஷ்நாதன் மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாள்தோறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் அந்த அன்றாடத் தாக்குதல் குறித்து அப்போதைய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ வாய் திறக்க மாட்டார்கள். கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தார்கள். நாட்டுக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அதேசமயம் அந்தத் தாக்குதலுக்காக எதிரிகளின் இடத்திற்கே சென்று வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தோம். இரண்டாவதாக, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினோம். ``புதுச்சேரியில் 60% வாக்குகள்... 24 தொகுதிகள்...” இறுதியாக ஆபரேஷன் சிந்தூர் போன்ற துல்லியமான தாக்குதலால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நம் நாட்டுக்குப் பெருமையை மட்டும் தேடித் தரவில்லை, பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறார். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கைச் சரிசெய்து வளர்ச்சிப் பணியைத் தொடங்கியிருக்கிறோம். நம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடந்த 2021 தேர்தலில் 44% வாக்குகளைப் புதுச்சேரி மக்கள் வழங்கினார்கள். அந்த வகையில் வருகின்ற 2026 தேர்தலில் 60% வாக்குகளைப் பெற்று 24 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். பா.ஜ.க பொதுக்கூட்டம் புதுச்சேரியை இதற்கு முன்பு ஆட்சி செய்த நாராயணசாமி மிக மோசமாக ஆட்சியை நடத்தினார். அந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலால் ஒட்டுமொத்த புதுச்சேரிக்கும் சீர்குலைவு ஏற்பட்டது. புதுச்சேரியைக் காந்தி குடும்பத்துக்கான ஏ.டி.எம். இயந்திரமாக மாற்றி வைத்திருந்தார் நாராயணசாமி. கல்வி நிலையங்களை விற்ற அவர், எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைக் கூட ஏலம் விட்டுவிட்டார். அவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. போக்குவரத்து மாஃபியாக்களுக்குப் புதுச்சேரியை முழுமையாகத் திறந்துவிட்டவர் நாராயணசாமி. ``ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி...” வளர்ச்சித் திட்டங்களுக்காகப் புதுச்சேரிக்குக் கொடுக்கப்பட்ட நிதியில், சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு அவர் ஊழல் செய்திருப்பது சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. ரூ.15,000 கோடி என்பது புதுச்சேரி மாநிலத்தின் மூன்று ஆண்டுகளுக்கான பட்ஜெட் தொகை. அவரது ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் புதிதாக ஒரு தொழிற்சாலைகூடத் தொடங்கப்படவில்லை. நம்முடைய ஐந்து ஆண்டுகால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதுடன், சுயமாகச் செயல்படும் ஓர் அரசை உருவாக்கியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முக்கியத் துறைகளில் நாம் கவனம் செலுத்த இருக்கிறோம். நாராயணசாமி ஒன்று, புதுச்சேரி மீனவர்களின் பொருட்கள் உலக சந்தைகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது. இரண்டாவது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான இடமாகப் புதுச்சேரி மாநிலத்தை மாற்றுவது. அதன்மூலம் புதுச்சேரி இளைஞர்கள் அதிக அளவு வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதுச்சேரியில் ஏற்கெனவே ஜோஹோ அமைப்பு தங்களுடைய சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. அதேபோல் எஸ்.ஆர். நிறுவனம் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் லேப்டாப்கள் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருக்கிறது என்றார். புதுச்சேரி: ``பள்ளி மாணவர்கள் லேப்டாப் கொள்முதலில் ரூ.90 கோடி ஊழல்” – `பகீர்’ கிளப்பும் நாராயணசாமி
`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்
திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடிப்பார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம். இதனால், NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் சூழ்ச்சி செய்ய பார்க்கிறார்கள். அதையும் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சொல்லக்கூடிய அளவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரவேண்டிய மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால், அதையும் சேர்த்து யாரிடம் சொல்லாமல் உடனடியாக 5,000 ரூபாயை அறிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தர வேண்டும் என முதலமைச்சரும், துணை முதல்வரும் சொல்லியுள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வந்து சென்றதால் தான் நாங்கள் 40 இடங்களை தக்க வைத்தோம். அதேபோல், அவர்கள் அடிக்கடி வந்தால் கடந்த தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 இடங்களை கடந்து வெற்றி பெறுவோம். தி.மு.க-வுக்கு எதிராக என்.டி.ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களின் தேர்தல் ஸ்டன்ட்டைக் காட்டுகிறது என்றார்.
`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்
திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடிப்பார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம். இதனால், NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் சூழ்ச்சி செய்ய பார்க்கிறார்கள். அதையும் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சொல்லக்கூடிய அளவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரவேண்டிய மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால், அதையும் சேர்த்து யாரிடம் சொல்லாமல் உடனடியாக 5,000 ரூபாயை அறிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தர வேண்டும் என முதலமைச்சரும், துணை முதல்வரும் சொல்லியுள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வந்து சென்றதால் தான் நாங்கள் 40 இடங்களை தக்க வைத்தோம். அதேபோல், அவர்கள் அடிக்கடி வந்தால் கடந்த தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 இடங்களை கடந்து வெற்றி பெறுவோம். தி.மு.க-வுக்கு எதிராக என்.டி.ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களின் தேர்தல் ஸ்டன்ட்டைக் காட்டுகிறது என்றார்.
அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி
`ஆட்சியில் பங்கு' அரசியல் ஆடுபுலி 05 ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்கியுள்ளனர். கைகூடாத கனவு இதே போன்று 1952, 1980, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டன, ஆனால், கைகூடவில்லை. தமிழ்நாட்டு அரசியலில் இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த முதல் பொதுத்தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைந்திடும் வாய்ப்பு உருவானது. 1952 இல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு மூன்று மாத காலம் ஆட்சி அமைக்காமல் காத்திருந்தார்கள். ஒருவழியாக அரசியலே வேண்டாமென்று ஒதுங்கி இருந்த ராஜாஜி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 62 சட்டமன்ற உறுப்பினர்களோடு, உருவாக்கிய கூட்டணி அமைச்சரவைக் கனவு கைகூடவில்லை. தனிப்பெரும்பான்மை இல்லாமல், பிற கட்சிகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. 152 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது 200 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. அப்போது, ராஜாஜி அமைத்ததும் கூட்டணி அமைச்சரவை போன்றுதான். காமன்வீல் கட்சியைக் கலைத்துவிட்டு எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர் நிலவருவாய் துறையின் அமைச்சரானார். அக்கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களாக மாறினர். சிறிதுகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் 19 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியாக மாறினார்கள், அக்கட்சித் தலைவர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி உள்ளாட்சித் துறை அமைச்சரானார். ராஜாஜி ராஜாஜி அமைச்சரவையிலும், காமராஜர் அமைச்சரவையிலும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக மாறிய பின்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1980 தேர்தல் 1980 சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆடுபுலி ஆட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது. எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவோடு, இந்திய கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், மக்கள் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி, கவாய் குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ருசித்த திமுக – காங்கிரஸ் கூட்டணி அப்படியே தொடர்ந்தது. முஸ்லீம் லீக் கட்சி, தேசிய பார்வர்ட் பிளாக், பசும்பொன் தேவர் கட்சி, உழைப்பாளர் கட்சி, சக்திதாசன் இந்தியக் குடியரசுக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக் முன்னணியின் மற்றொரு பிரிவு உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியை ஆதரித்தனர். திமுக 109 தொகுதிகளிலும், காங்கிரஸ் 109 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஜனதா கட்சி 95 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. சமபலத்தோடு போட்டியிட்ட திமுக கூட்டணியில் யார் முதலமைச்சர் என்று பேச்சு எழுந்தது. திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எம்.பி.சுப்பிரமணியம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். திமுக, காங்கிரஸ் எந்தக் கட்சி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்களோ, அந்தக் கட்சிக்கு முதல்வர் பதவி என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்கினர். `கருணாநிதி தான் முதலமைச்சர்' - அறிவித்த இந்திரா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளர்களான ஆர்.வெங்கட்ராமன், ராம் கோபால் ரெட்டி போன்றவர்களும், ”தேர்தலுக்குப் பின்னர் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்” என்றார்கள். இதற்கிடையே, திமுகவின் வேண்டுகோளை ஏற்ற இந்திரா காந்தி, தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் கருணாநிதி தான் முதலமைச்சர் என்று அறிவித்தார். ஆனால், அமைச்சரவையில் காங்கிரஸ் பங்களிப்பது பற்றி, வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. 1980 மே 28 முதல் மே 31 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 1 அன்று அதிமுகவுக்கு சாதகமான முடிவுகளைத் தந்தது. ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் வென்று, மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். 128 இடங்களில் வென்ற அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. திமுக 38, காங்கிரஸ் 30 இடங்களில் மட்டுமே வென்றனர். தமிழக அரசியலில் இந்த முறையும் கூட்டணி ஆட்சி அமைத்திடும் கனவு கைவிட்டுப் போனது. கருணாநிதி - அண்ணா மைனாரிட்டி திமுக ஆட்சி 2006 ஆம் ஆண்டில், திமுக ஆட்சி அமைத்தாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுகவின் 96 உறுப்பினர்களோடு, காங்கிரஸ், பாமக ஆதரவு கிடைத்ததால் ஐந்தாண்டு காலம் திமுகவால் ஆட்சியை நடத்த முடிந்தது. இந்த காலகட்டத்தில்தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா விமர்சனம் செய்து வந்தார். 2006 – 2011 ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் போது, அவ்வப்போது அமைச்சரவையில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர். 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது, ஆட்சியில் பங்கு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில், “காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் ஆட்சியில் பங்கு பெறுவோம், முதன்மையான இடத்தில் இருப்போம்” என்று வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மத்திய அரசின் அமைச்சரவையில் திமுக எம்பிக்கள் அமைச்சர்களாக இருந்தனர். அதனால், திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில்தான் இருந்தது. திமுகவோடு கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியில், மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், கே.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. திமுகவின் சார்பாக, அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோரைக் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. அதிக தொகுதிகள் கேட்க வேண்டும், ஆட்சியில் பங்குபெற வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, 2011 பிப்ரவரி 20 ஞாயிறு அன்று மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் ஆட்சியில் பங்கு என்பதை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. `கூடுதல் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தையைத் தொடரலாம்' என்றனர். தொகுதிப் பங்கீட்டு குழுவினர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை முடிவுகளை விளக்கிச் சொன்னார்கள். காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு திமுக ஆட்சியில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புவதாகச் சொன்னார். கே.வி.தங்கபாலு காங்கிரஸின் ஆடுபுலி ஆட்டம்! திமுகவோ கடந்த 2006 தேர்தலில் 132 இடங்களில் போட்டியிட்டு, 96 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதனால் பெரும்பான்மை இடங்களான 117 கூட கிடைக்கவில்லை. அப்படியொரு சூழ்நிலை வந்துவிடக் கூடாது. அதனால், 2011 தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிடவேண்டுமென்று விரும்பினார்கள். திமுக கூட்டணியில் முதல் ஆளாக இணைந்திருந்த பாமக 31 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் போட்டிருந்தது. மீதமுள்ள 203 தொகுதிகளில் பிற கட்சிகளுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும். கூட்டணிப் பேச்சுவார்த்தை டெல்லியிலும் மறைமுகமாகத் தொடர்ந்தது, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, டெல்லியில் 2011 மார்ச் 8 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, ஆட்சியில் பங்கு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரவை தொடர்பாக தமிழகத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திமுகவோடு முடிவெடுப்போம் என்றும் கூறினார். சிபிஐ ஆனால், 2011 மார்ச் 11 அன்று திடீர் திருப்பமாக தமிழக அரசியலில் தேசியக் கட்சியான காங்கிரஸ் ஓர் ஆடுபுலி ஆட்டத்தை அரங்கேற்றியது. பிப்ரவரி 18 அன்று கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிப்ரவரி 20 அன்று திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதே போல மார்ச் 11 அன்று திமுக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, சிபிஐ விசாரணை அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நான்காவது நாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளோடு கருணாநிதி நேர்காணல் செய்து கொண்டிருந்தார். 2001: தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர்; `கிங் மேக்கர்' TTV; OPS எனும் நான்.! | அரசியல் ஆடுபுலி 03 மற்றொரு பகுதியில் திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அதே, அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கும் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து கலைஞர் டிவி இயக்குநர்களான அமிர்தம், தயாளு அம்மாள் ஆகியோரும் வந்தடைந்தனர். சிறிது நேரத்தில் 10.45 மணிக்கு டி.எஸ்.பி. , பெண் அதிகாரிகள் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் குழு அண்ணா அறிவாலயம் வந்தனர். மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்தின் பேராசிரியர் ஆய்வு நூலகத்தில் வைத்து தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தினர். திமுக - காங்கிரஸ் தொலைக்காட்சி அலுவலகத்தில் கனிமொழியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மூன்று மணி நேரமாக இந்த விசாரணை தொடர்ந்தது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் ஒரு பகுதியில் வேட்பாளர் நேர்காணல், இன்னொரு பகுதியில் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, மற்றொரு பகுதியில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணை என்று அறிவாலயமே தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் பிரதிநிதியாக ப.சிதம்பரம் இருந்தார். உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் தலைமையின் கீழ் செயல்படும் சிபிஐ அதிகாரிகள் இன்னொரு அறையில் திமுக தலைவரின் மனைவி மற்றும் மகளிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். விசாரணை முடிந்து சிபிஐ அதிகாரிகள் வெளியேறிய பின்னர் அறிவாயலம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவித்தனர். 60 முதல் 80 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் கிடைத்தது என்றனர். ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி அதன்பிறகு பேசவில்லை. சர்க்காரியா போய் ரே வந்தது; அதிமுக காங்கிரஸ் சேர்ந்தது! - திருப்பம் தந்த திருப்பத்தூர் | ஆடுபுலி 04 எடுபடாத வாதம் - ஆட்சியில் பங்கு! ஆனால், 2011 ஏப்ரல் 1 அன்று சேலத்தில் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசும்போது, ``திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஆவதுதான் எங்களது இலக்கு, ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து, தேர்தல் முடிந்தவுடன் பேசுவோம்” என்று கூறினார். ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அதிமுக அணியில் அதிக இடங்களைப் பிடித்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆட்சியில் பங்குபெறும் எண்ணம் இல்லையென்று அறிவித்தார். அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்கட்சியாகவும் செயல்பட்டனர். இந்த முறையும் தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி அமைச்சரவைக் கனவு கைகூடவில்லை.! இம்முறை கைகூடுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்)
அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி
`ஆட்சியில் பங்கு' அரசியல் ஆடுபுலி 05 ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்கியுள்ளனர். கைகூடாத கனவு இதே போன்று 1952, 1980, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டன, ஆனால், கைகூடவில்லை. தமிழ்நாட்டு அரசியலில் இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த முதல் பொதுத்தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைந்திடும் வாய்ப்பு உருவானது. 1952 இல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு மூன்று மாத காலம் ஆட்சி அமைக்காமல் காத்திருந்தார்கள். ஒருவழியாக அரசியலே வேண்டாமென்று ஒதுங்கி இருந்த ராஜாஜி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 62 சட்டமன்ற உறுப்பினர்களோடு, உருவாக்கிய கூட்டணி அமைச்சரவைக் கனவு கைகூடவில்லை. தனிப்பெரும்பான்மை இல்லாமல், பிற கட்சிகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. 152 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது 200 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. அப்போது, ராஜாஜி அமைத்ததும் கூட்டணி அமைச்சரவை போன்றுதான். காமன்வீல் கட்சியைக் கலைத்துவிட்டு எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர் நிலவருவாய் துறையின் அமைச்சரானார். அக்கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களாக மாறினர். சிறிதுகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் 19 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியாக மாறினார்கள், அக்கட்சித் தலைவர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி உள்ளாட்சித் துறை அமைச்சரானார். ராஜாஜி ராஜாஜி அமைச்சரவையிலும், காமராஜர் அமைச்சரவையிலும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக மாறிய பின்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1980 தேர்தல் 1980 சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆடுபுலி ஆட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது. எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவோடு, இந்திய கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், மக்கள் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி, கவாய் குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ருசித்த திமுக – காங்கிரஸ் கூட்டணி அப்படியே தொடர்ந்தது. முஸ்லீம் லீக் கட்சி, தேசிய பார்வர்ட் பிளாக், பசும்பொன் தேவர் கட்சி, உழைப்பாளர் கட்சி, சக்திதாசன் இந்தியக் குடியரசுக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக் முன்னணியின் மற்றொரு பிரிவு உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியை ஆதரித்தனர். திமுக 109 தொகுதிகளிலும், காங்கிரஸ் 109 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஜனதா கட்சி 95 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. சமபலத்தோடு போட்டியிட்ட திமுக கூட்டணியில் யார் முதலமைச்சர் என்று பேச்சு எழுந்தது. திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எம்.பி.சுப்பிரமணியம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். திமுக, காங்கிரஸ் எந்தக் கட்சி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்களோ, அந்தக் கட்சிக்கு முதல்வர் பதவி என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்கினர். `கருணாநிதி தான் முதலமைச்சர்' - அறிவித்த இந்திரா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளர்களான ஆர்.வெங்கட்ராமன், ராம் கோபால் ரெட்டி போன்றவர்களும், ”தேர்தலுக்குப் பின்னர் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்” என்றார்கள். இதற்கிடையே, திமுகவின் வேண்டுகோளை ஏற்ற இந்திரா காந்தி, தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் கருணாநிதி தான் முதலமைச்சர் என்று அறிவித்தார். ஆனால், அமைச்சரவையில் காங்கிரஸ் பங்களிப்பது பற்றி, வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. 1980 மே 28 முதல் மே 31 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 1 அன்று அதிமுகவுக்கு சாதகமான முடிவுகளைத் தந்தது. ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் வென்று, மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். 128 இடங்களில் வென்ற அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. திமுக 38, காங்கிரஸ் 30 இடங்களில் மட்டுமே வென்றனர். தமிழக அரசியலில் இந்த முறையும் கூட்டணி ஆட்சி அமைத்திடும் கனவு கைவிட்டுப் போனது. கருணாநிதி - அண்ணா மைனாரிட்டி திமுக ஆட்சி 2006 ஆம் ஆண்டில், திமுக ஆட்சி அமைத்தாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுகவின் 96 உறுப்பினர்களோடு, காங்கிரஸ், பாமக ஆதரவு கிடைத்ததால் ஐந்தாண்டு காலம் திமுகவால் ஆட்சியை நடத்த முடிந்தது. இந்த காலகட்டத்தில்தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா விமர்சனம் செய்து வந்தார். 2006 – 2011 ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் போது, அவ்வப்போது அமைச்சரவையில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர். 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது, ஆட்சியில் பங்கு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில், “காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் ஆட்சியில் பங்கு பெறுவோம், முதன்மையான இடத்தில் இருப்போம்” என்று வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மத்திய அரசின் அமைச்சரவையில் திமுக எம்பிக்கள் அமைச்சர்களாக இருந்தனர். அதனால், திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில்தான் இருந்தது. திமுகவோடு கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியில், மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், கே.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. திமுகவின் சார்பாக, அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோரைக் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. அதிக தொகுதிகள் கேட்க வேண்டும், ஆட்சியில் பங்குபெற வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, 2011 பிப்ரவரி 20 ஞாயிறு அன்று மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் ஆட்சியில் பங்கு என்பதை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. `கூடுதல் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தையைத் தொடரலாம்' என்றனர். தொகுதிப் பங்கீட்டு குழுவினர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை முடிவுகளை விளக்கிச் சொன்னார்கள். காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு திமுக ஆட்சியில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புவதாகச் சொன்னார். கே.வி.தங்கபாலு காங்கிரஸின் ஆடுபுலி ஆட்டம்! திமுகவோ கடந்த 2006 தேர்தலில் 132 இடங்களில் போட்டியிட்டு, 96 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதனால் பெரும்பான்மை இடங்களான 117 கூட கிடைக்கவில்லை. அப்படியொரு சூழ்நிலை வந்துவிடக் கூடாது. அதனால், 2011 தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிடவேண்டுமென்று விரும்பினார்கள். திமுக கூட்டணியில் முதல் ஆளாக இணைந்திருந்த பாமக 31 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் போட்டிருந்தது. மீதமுள்ள 203 தொகுதிகளில் பிற கட்சிகளுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும். கூட்டணிப் பேச்சுவார்த்தை டெல்லியிலும் மறைமுகமாகத் தொடர்ந்தது, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, டெல்லியில் 2011 மார்ச் 8 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, ஆட்சியில் பங்கு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரவை தொடர்பாக தமிழகத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திமுகவோடு முடிவெடுப்போம் என்றும் கூறினார். சிபிஐ ஆனால், 2011 மார்ச் 11 அன்று திடீர் திருப்பமாக தமிழக அரசியலில் தேசியக் கட்சியான காங்கிரஸ் ஓர் ஆடுபுலி ஆட்டத்தை அரங்கேற்றியது. பிப்ரவரி 18 அன்று கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிப்ரவரி 20 அன்று திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதே போல மார்ச் 11 அன்று திமுக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, சிபிஐ விசாரணை அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நான்காவது நாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளோடு கருணாநிதி நேர்காணல் செய்து கொண்டிருந்தார். 2001: தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர்; `கிங் மேக்கர்' TTV; OPS எனும் நான்.! | அரசியல் ஆடுபுலி 03 மற்றொரு பகுதியில் திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அதே, அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கும் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து கலைஞர் டிவி இயக்குநர்களான அமிர்தம், தயாளு அம்மாள் ஆகியோரும் வந்தடைந்தனர். சிறிது நேரத்தில் 10.45 மணிக்கு டி.எஸ்.பி. , பெண் அதிகாரிகள் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் குழு அண்ணா அறிவாலயம் வந்தனர். மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்தின் பேராசிரியர் ஆய்வு நூலகத்தில் வைத்து தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தினர். திமுக - காங்கிரஸ் தொலைக்காட்சி அலுவலகத்தில் கனிமொழியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மூன்று மணி நேரமாக இந்த விசாரணை தொடர்ந்தது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் ஒரு பகுதியில் வேட்பாளர் நேர்காணல், இன்னொரு பகுதியில் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, மற்றொரு பகுதியில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணை என்று அறிவாலயமே தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் பிரதிநிதியாக ப.சிதம்பரம் இருந்தார். உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் தலைமையின் கீழ் செயல்படும் சிபிஐ அதிகாரிகள் இன்னொரு அறையில் திமுக தலைவரின் மனைவி மற்றும் மகளிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். விசாரணை முடிந்து சிபிஐ அதிகாரிகள் வெளியேறிய பின்னர் அறிவாயலம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவித்தனர். 60 முதல் 80 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் கிடைத்தது என்றனர். ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி அதன்பிறகு பேசவில்லை. சர்க்காரியா போய் ரே வந்தது; அதிமுக காங்கிரஸ் சேர்ந்தது! - திருப்பம் தந்த திருப்பத்தூர் | ஆடுபுலி 04 எடுபடாத வாதம் - ஆட்சியில் பங்கு! ஆனால், 2011 ஏப்ரல் 1 அன்று சேலத்தில் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசும்போது, ``திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஆவதுதான் எங்களது இலக்கு, ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து, தேர்தல் முடிந்தவுடன் பேசுவோம்” என்று கூறினார். ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அதிமுக அணியில் அதிக இடங்களைப் பிடித்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆட்சியில் பங்குபெறும் எண்ணம் இல்லையென்று அறிவித்தார். அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்கட்சியாகவும் செயல்பட்டனர். இந்த முறையும் தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி அமைச்சரவைக் கனவு கைகூடவில்லை.! இம்முறை கைகூடுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்)
`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?
மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை புகுவிழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசுபவர் கிடையாது. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். திமுக ஐம்பதாயிரம் ரூபாய் அறிவித்தாலும் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்து விடும். விவசாயிகள் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் போராடி கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. தமிழ்நாட்டில் கூலிப்படைகள் உருவாகிற அளவிற்கு போதைப்பொருள்கள் பள்ளிக்கூடங்களின் அருகிலேயே கிடைக்கிறது. அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு விட்டதால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மடை மாற்றி பெண்களின் உரிமை தொகையாக கொடுத்திருக்கிறார்கள். இது தேர்தல் பயத்தையும், தோல்வி பயத்தையும் காட்டுகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாய கூட்டணிக்கு வருவது குறித்து ஓபிஎஸ்-தான் முடிவெடுக்க வேண்டும். அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும் எனச் சொன்னவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்துவிடும். அது யாராக இருந்தாலும் சரி. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் யாரெல்லாம் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்களோ அவர்கள் தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிரிந்து சென்ற அம்மாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இன்னும் ஒரு சிலர் வெளியில் இருக்கிறார்கள். அவர்களும் வர வேண்டும் என்றார்.
`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?
மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை புகுவிழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசுபவர் கிடையாது. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். திமுக ஐம்பதாயிரம் ரூபாய் அறிவித்தாலும் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்து விடும். விவசாயிகள் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் போராடி கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. தமிழ்நாட்டில் கூலிப்படைகள் உருவாகிற அளவிற்கு போதைப்பொருள்கள் பள்ளிக்கூடங்களின் அருகிலேயே கிடைக்கிறது. அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு விட்டதால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மடை மாற்றி பெண்களின் உரிமை தொகையாக கொடுத்திருக்கிறார்கள். இது தேர்தல் பயத்தையும், தோல்வி பயத்தையும் காட்டுகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாய கூட்டணிக்கு வருவது குறித்து ஓபிஎஸ்-தான் முடிவெடுக்க வேண்டும். அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும் எனச் சொன்னவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்துவிடும். அது யாராக இருந்தாலும் சரி. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் யாரெல்லாம் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்களோ அவர்கள் தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிரிந்து சென்ற அம்மாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இன்னும் ஒரு சிலர் வெளியில் இருக்கிறார்கள். அவர்களும் வர வேண்டும் என்றார்.
ஏழைகளின் இறைச்சி முதல் தீபாவளி பருப்பு வரை! - புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் டாப் 6 பருப்புகள்
உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள், மசாலாக்கள் போன்றவற்றிற்குப் பொதுவாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த புவிசார் குறியீடு இருந்தால் போலியான பொருள்கள் புழகத்திற்கு வர முடியாது. அதேசமயம் உண்மையான மற்றும் தரமான பொருள்கள் பாதுகாக்கப்படும். அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மதிப்பு கிடைப்பதுடன், உற்பத்தியில் லாபமும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அந்த ஊருக்குப் பெயர் கிடைக்கும். இந்த வகையில் இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற டாப் 6 பயறுவகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். புவிசார் குறியீடு நவாப்பூர் தூர் பருப்பு மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள நவாப்பூர் தாலுகாதான் நவாப்பூர் தூர் பருப்புக்குப் பிறப்பிடமாகும். சிறிய வெள்ளை விதைகள் கொண்ட இந்த தூர் பருப்பு, அதிக புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது. தீபாவளி காலத்தில் சந்தைக்கு வருவதால், மக்கள் இதை திவால் தூர் என்று அன்புடன் அழைக்கின்றனர். இது 2016 மார்ச் மாதம் புவிசார் குறியீடு பெற்றது. குல்பர்கா தூர் பருப்பு கர்நாடகாவின் கலபுரகி (குல்பர்கா) மாவட்டத்தின் மண் வளமே இந்த குல்பர்கா தூர் பருப்பு சுவைக்குக் காரணம். மிருதுவான மற்றும் இனிப்பு சுவை கொண்ட இந்த தூர் பருப்பு, 'பட்கா தால்' என்றும் அழைக்கப்படுகிறது. கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், தினசரி உணவுக்கு ஏற்றது. இது 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு பஹாரி தூர் பருப்பு மிருதுவான சுவை மற்றும் நீண்ட காலம் கெட்டுப்போகாத தன்மை உடைய பஹாரி தூர் பருப்பு, உத்தராகாண்ட் மலைப்பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்பு ஆகியவை அதிகம் உள்ளதால், இது ஆரோக்கிய உணவாகப் போற்றப்படுகிறது. பஹாரி மக்கள் இதை 'சௌன்சா' போன்ற பாரம்பரிய முறைகளில் சமைத்து வருகின்றனர். இது 2023 நவம்பரில் புவிசார் குறியீடு பெற்றது. அட்டப்பாடி துவாரா கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பழங்குடி மக்களின் பாரம்பர்ய பயறுதான் அட்டப்பாடி துவரை. பெரிய வெள்ளை விதைகள் மற்றும் கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் நிறைந்த இந்த பயறு, ஊட்டச்சத்து குறைபாடுகளைச் சரிசெய்யும் உணவாகப் பார்க்கப்படுகிறது. இது 2022 ஜூலையில் புவிசார் குறியீடு பெற்றது. கஹத் பருப்பு உத்தராகண்ட் ஹிமாலயப் பகுதியின் இயற்கை மருத்துவ உணவாகக் கருதப்படுவது கஹத் பருப்பு. இதில் இரும்பு மற்றும் புரதம் அதிகம் உள்ளதால், இது ஏழைகளின் இறைச்சி என்று அழைக்கப்படுகிறது. குமாவோனி மக்களின் சமையலில் கஹத் தால், பராத்தா, சூப் போன்ற பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது 2023ஆம் ஆண்டுபுவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் | கோப்புப் படம் தண்டூர் சிவப்புப் பயறு தெலங்கானாவின் தண்டூர் பகுதியில் விளைவிக்கப்படும் இந்த தண்டூர் சிவப்புப் பயறு 22–24% வரை புரதம் கொண்டது. இது மற்ற பயறு வகைகளைவிட மூன்று மடங்கு அதிக மகசூல் தருவதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் விளங்குகிறது. இது 2022ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு: கடலூர் கோட்டிமுளை கத்திரி உள்ளிட்ட 15 பொருள்களுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
`தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான்'திமுக மாவட்ட செயலாளரின் வாக்குறுதி; குழப்பத்தில் நிர்வாகிகள்!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி, எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற பல முன்னெடுப்புகளை செய்கிறார்கள். வெற்றியை குறி வைத்து வியூகங்கள் வகுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் எட்டு தொகுதிகளையும் கைபற்ற திமுக தலைமை முனைப்பு காட்டி வருகிறது. மேயர் சண்.இராமநாதன் வீட்டின் சுவற்றில் ஸ்டாலின், உதயநிதி சிற்பம் திமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சீட் கேட்டு காய் நகர்த்துகின்றனர். திமுக தலைமை யாருக்கு சீட் என்பதை இறுதி செய்யும் போது மாவட்ட செயலாளரின் பரிந்துரையும் முக்கியம் என்பதால் எம்.எல்.ஏ-வும், மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரனை வேட்பாளர் ரேஸில் இருப்பவர்கள் மொய்க்கின்றனர். அவரும் உனக்கு தான் சீட்னு ஒவ்வொருவரிடத்திலும் சொல்லி குஷி படுத்தி வருகிறாராம். இதனால் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது தெரியாமல் சஸ்பென்ஸ் நீடிப்பதால் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், `தஞ்சாவூர் தொகுதியில் திமுக-வில் போட்டியிடுவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் பலரும் முட்டி மோதி வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிட்ட டி.கே.ஜி. நீலமேகம் கிட்டதட்ட 45,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை வீழ்த்தினார். இந்த முறை அதிமுக-வில் என்.எஸ்.சரவணன் தான் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டது என்கிறார்கள். சரவணனும் தொகுதிக்குள் வலம் வருவதுடன் சத்தமில்லாமல் பிரச்சாரமும் செய்து வருகிறார். தஞ்சாவூர், திமுக-விற்கு சாதகமான தொகுதி என பேசப்படுவதால் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை செய்தால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர் கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று தொகுதிக்குள் பம்பரமாக சுழல்கிறார். நடிகர் துரை.சுதாகர் தஞ்சாவூர் தொகுதியை திமுக-வின் கோட்டை என்கிறார்கள், அந்த கோட்டையில் 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதையே தனக்கான பாசிட்டிவ் பாயிண்டாக எடுத்து கொண்டு களம் காண காத்திருக்கிறார் அதிமுக சரவணன். திமுக-வை பொறுத்தவரை மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பெரிய பட்டாளமே ரேஸில் உள்ளது. தொடக்கத்தில் இருந்தே மேயர் சண்.இராமநாதன் பெயர் பலமாக அடிப்பட்டது. தன்னுடைய வீட்டின் மாடியில் கட்சிக்கான அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார். அந்த அறையின் சுவற்றில் கருங்கல்லால் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உருவத்தை செதுக்கி பொருத்தியுள்ளார். இதை பாத்து வியந்த பலரும் அவரை பாராட்ட, தலைமுறைகளை கடந்தும் என் வீட்டில் இந்த சுவர் சிற்பம் இருக்கும், ராஜாஸ்தானில் இருந்து ஒரே கருங்கல்லை வாங்கி வந்து சிரத்தை எடுத்து இதை செய்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரும் என் தலைமுறைகளை கடந்தும் எங்களுக்கு தலைவர்கள் என்றாராம். தான் கட்சிக்கான விசுவாசி என்பதை உணர்த்துவதற்காக இராமாநாதன் இதை செய்துள்ளார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி நடிகர் துரை.சுதாகர் பண பலம் படைத்தவர் செலவுக்கு தயங்காதவர். நன்கொடைனு யார் கேட்டாலும் முகழ் சுழிக்காமல் செய்யக்கூடியவர். தனக்கு ஒரு பெயர், கூட்டத்துடன் வலம் வரக்கூடியவர். சினிமா தொடர்பு அதிகம். நடிகர், தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் தொகுதிக்குள் வலம் வரும் தனக்கு நெருக்கமான மேலிட வட்டம் மூலம் சீட்டுக்கு காய் நகர்த்துகிறார். சுதாகருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பேசுகின்றனர். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தஞ்சையில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் கவனம் பெற்றுள்ளார். இம்முறை தன்னை தலைவர் ஸ்டாலின் கைவிட மாட்டார் என்பது மட்டுமே அவரது நம்பிக்கை. பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்! செந்தமிழ்செல்வன் தஞ்சாவூரில் அடையாளமான குடும்பத்தை சேர்ந்தவர். துரை.சந்திரசேகரினின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். துரை.சந்திரசேகரன் பரிந்துரை இவருக்கு இருக்கும் என்கிறார்கள். இப்படியாக பலரும் சீட்டை முன் வைத்தே ஒவ்வொரு வைத்து முன்னெடுப்பை செய்கின்றனர். இதில் சண்.இராமநாதன், துரை.சுதாகர், செந்தமிழ்செல்வன் ஆகியோர் தனி தனியாக சந்திரசேகரனுடன் காரில் அவ்வப்போது ஒன்றாக செல்லும் போது உனக்கு தான் சீட் என்கிறாராம். இப்படி ஒவ்வொருவரிடத்திலும் சொல்ல அவர்கள் தனக்கு தான் சீட் என்கிற நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள். ஆதரவாளர்களுடன் தனியாக இருக்கும் போது ஒவ்வொருவரிடத்திலும் இதை சொல்ல அந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்து விட்டது. இப்பவும் யாருக்கு சீட் கிடைக்கும் என்கிற சஸ்பென்ஸ் நீள்கிறது. இதனால் கட்சியினரும் குழப்பத்தில் உள்ளதாக' தெரிவித்தனர். வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்
`தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான்'திமுக மாவட்ட செயலாளரின் வாக்குறுதி; குழப்பத்தில் நிர்வாகிகள்!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி, எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற பல முன்னெடுப்புகளை செய்கிறார்கள். வெற்றியை குறி வைத்து வியூகங்கள் வகுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் எட்டு தொகுதிகளையும் கைபற்ற திமுக தலைமை முனைப்பு காட்டி வருகிறது. மேயர் சண்.இராமநாதன் வீட்டின் சுவற்றில் ஸ்டாலின், உதயநிதி சிற்பம் திமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சீட் கேட்டு காய் நகர்த்துகின்றனர். திமுக தலைமை யாருக்கு சீட் என்பதை இறுதி செய்யும் போது மாவட்ட செயலாளரின் பரிந்துரையும் முக்கியம் என்பதால் எம்.எல்.ஏ-வும், மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரனை வேட்பாளர் ரேஸில் இருப்பவர்கள் மொய்க்கின்றனர். அவரும் உனக்கு தான் சீட்னு ஒவ்வொருவரிடத்திலும் சொல்லி குஷி படுத்தி வருகிறாராம். இதனால் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது தெரியாமல் சஸ்பென்ஸ் நீடிப்பதால் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், `தஞ்சாவூர் தொகுதியில் திமுக-வில் போட்டியிடுவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் பலரும் முட்டி மோதி வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிட்ட டி.கே.ஜி. நீலமேகம் கிட்டதட்ட 45,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை வீழ்த்தினார். இந்த முறை அதிமுக-வில் என்.எஸ்.சரவணன் தான் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டது என்கிறார்கள். சரவணனும் தொகுதிக்குள் வலம் வருவதுடன் சத்தமில்லாமல் பிரச்சாரமும் செய்து வருகிறார். தஞ்சாவூர், திமுக-விற்கு சாதகமான தொகுதி என பேசப்படுவதால் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை செய்தால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர் கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று தொகுதிக்குள் பம்பரமாக சுழல்கிறார். நடிகர் துரை.சுதாகர் தஞ்சாவூர் தொகுதியை திமுக-வின் கோட்டை என்கிறார்கள், அந்த கோட்டையில் 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதையே தனக்கான பாசிட்டிவ் பாயிண்டாக எடுத்து கொண்டு களம் காண காத்திருக்கிறார் அதிமுக சரவணன். திமுக-வை பொறுத்தவரை மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பெரிய பட்டாளமே ரேஸில் உள்ளது. தொடக்கத்தில் இருந்தே மேயர் சண்.இராமநாதன் பெயர் பலமாக அடிப்பட்டது. தன்னுடைய வீட்டின் மாடியில் கட்சிக்கான அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார். அந்த அறையின் சுவற்றில் கருங்கல்லால் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உருவத்தை செதுக்கி பொருத்தியுள்ளார். இதை பாத்து வியந்த பலரும் அவரை பாராட்ட, தலைமுறைகளை கடந்தும் என் வீட்டில் இந்த சுவர் சிற்பம் இருக்கும், ராஜாஸ்தானில் இருந்து ஒரே கருங்கல்லை வாங்கி வந்து சிரத்தை எடுத்து இதை செய்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரும் என் தலைமுறைகளை கடந்தும் எங்களுக்கு தலைவர்கள் என்றாராம். தான் கட்சிக்கான விசுவாசி என்பதை உணர்த்துவதற்காக இராமாநாதன் இதை செய்துள்ளார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி நடிகர் துரை.சுதாகர் பண பலம் படைத்தவர் செலவுக்கு தயங்காதவர். நன்கொடைனு யார் கேட்டாலும் முகழ் சுழிக்காமல் செய்யக்கூடியவர். தனக்கு ஒரு பெயர், கூட்டத்துடன் வலம் வரக்கூடியவர். சினிமா தொடர்பு அதிகம். நடிகர், தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் தொகுதிக்குள் வலம் வரும் தனக்கு நெருக்கமான மேலிட வட்டம் மூலம் சீட்டுக்கு காய் நகர்த்துகிறார். சுதாகருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பேசுகின்றனர். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தஞ்சையில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் கவனம் பெற்றுள்ளார். இம்முறை தன்னை தலைவர் ஸ்டாலின் கைவிட மாட்டார் என்பது மட்டுமே அவரது நம்பிக்கை. பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்! செந்தமிழ்செல்வன் தஞ்சாவூரில் அடையாளமான குடும்பத்தை சேர்ந்தவர். துரை.சந்திரசேகரினின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். துரை.சந்திரசேகரன் பரிந்துரை இவருக்கு இருக்கும் என்கிறார்கள். இப்படியாக பலரும் சீட்டை முன் வைத்தே ஒவ்வொரு வைத்து முன்னெடுப்பை செய்கின்றனர். இதில் சண்.இராமநாதன், துரை.சுதாகர், செந்தமிழ்செல்வன் ஆகியோர் தனி தனியாக சந்திரசேகரனுடன் காரில் அவ்வப்போது ஒன்றாக செல்லும் போது உனக்கு தான் சீட் என்கிறாராம். இப்படி ஒவ்வொருவரிடத்திலும் சொல்ல அவர்கள் தனக்கு தான் சீட் என்கிற நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள். ஆதரவாளர்களுடன் தனியாக இருக்கும் போது ஒவ்வொருவரிடத்திலும் இதை சொல்ல அந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்து விட்டது. இப்பவும் யாருக்கு சீட் கிடைக்கும் என்கிற சஸ்பென்ஸ் நீள்கிறது. இதனால் கட்சியினரும் குழப்பத்தில் உள்ளதாக' தெரிவித்தனர். வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்
நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே மதுரையில் நேற்று (பிப்.13) திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆட்சியில் பங்கு கிடையாது என காங்கிரஸுக்கு மீண்டும் தெரிவித்திருந்தார். ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நாங்கள் காங்கிரஸிடம் நிலைமையை சொல்கிறோம். நாம் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தான் நல்லது என்று சொல்கிறோம். அவ்வளவு தான் சொல்கிறோமே தவிர கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. ஆட்சியில் பங்கு கிடையாது என்று முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார். 93 இடம் தான் கலைஞர் வைத்திருந்தார், ஆனால் அப்போது ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி இப்போது கொடுக்க முடியும். 150-ல் இருந்து 160 தொகுதியில் உதயசூரியன் ஜெயிக்கும். நீங்கள் பாருங்கள். 170 தொகுதியில் நிப்போம், 150 தொகுதியில் இருந்து 160 தொகுதி வரை ஜெயிப்போம். உதயசூரியன் ஜெயிக்கும்” என்று பேசியிருந்தார். மாணிக்கம் தாகூர் இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 2021-ல் 173 -ல் போட்டியிட்டு 133 வெற்றி.. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில் 40 இடங்களை கேட்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
Vijay : தவெக vs சேகர் பாபு vs தவெக; துறைமுகம் தொகுதியின் முக்கோண மோதல்!
கடந்த வாரத்தில் துறைமுகம் தொகுதியில் திமுகவினருக்கும் தவெகவினற்கும் இடையே நடந்த மோதலின் சூடு இன்னமும் அந்தப் பகுதியில் தணியவில்லை. களமிறங்கி விசாரித்ததில் நமக்கும் தொகுதிக்குள் நிலவும் முக்கோண மோதல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது. தாக்குதல் நடந்த அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள் பிப்ரவரி 10 ஆம் தேதி தவெகவை சார்ந்த சிலர் துறைமுகம் தொகுதியின் 60 வது வார்டில் உள்ள அங்கப்பன் நாயக்கர் தெருவில் 2026 தேர்தல் சார்ந்த கருத்துக்கணிப்புகளை எடுக்க சென்றிருக்கின்றனர். அந்த சமயத்தில் அங்கே திமுக மற்றும் தவெகவினரிடையே மோதல் ஏற்படவே காவல்துறையினர் விரைந்து வந்து இருதரப்பையும் சமாதானம் செய்திருக்கின்றனர். இதில் திமுகவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி தவெகவை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உட்பட 6 ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை பார்க்க வந்த தவெகவின் முக்கிய நிர்வாகிகளான சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா போன்றோர் 'துறைமுகம் அமைச்சர் சேகர்பாபுவின் தொகுதி என்பதால் அவர்தான் ரவுடிகளை ஏவிவிட்டு தவெகவினரை தாக்கியிருக்கிறார்' எனக் குற்றஞ்சாட்டினர். 'இது ஒரு அராஜகத் தாக்குதல். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது' என தவெக தலைவர் விஜய்யும் ட்வீட் செய்திருந்தார். அமைச்சர் சேகர் பாபு திமுகவின் 60 வார்டு வட்டச் செயலாளர் கவியரசு மீதுதான் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவரை தொடர்புகொண்டு பேசினோம். 'தவெகவினர்தான் லோக்கல் காவல்துறையினுடைய அனுமதி கூட வாங்காமல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் எங்கள் பகுதி மக்களை மிரட்டியிருக்கின்றனர். கருத்துக்கணிப்பு எடுப்பவர்கள் எதற்கு கட்சித்துண்டை போட்டுக் கொண்டு வர வேண்டும்? தவெகவுக்கு ஓட்டு போடுவீர்களா மாட்டீர்களா என அதட்டும் தொனியில் எங்கள் பகுதி மக்களிடம் கேட்டிருக்கின்றனர். நிலைமை தீவிரமடைகையில்தான் பகுதி மக்கள் எனக்கு போன் செய்தனர். நானும் அமைச்சர் சேகர் பாபுவும் ஸ்பாட்டிலேயே இல்லை. ஒரு முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தோம். அங்கிருந்து முதலில் காவல்துறைக்குதான் தொடர்புகொண்டோம். அதற்குள் தவெகவினர் வெளியிலிருந்து ஆட்களை திரட்டி வன்முறையில் இறங்கிவிட்டனர். இதில் பாதிக்கப்பட்டது எங்கள் பகுதி மக்கள்தான். சேகர் பாபு அண்ணன் சொல்லி நாங்கள் தவெகவினரை தாக்கினோம் என்பதில் துளி கூட உண்மையில்லை. அவர்கள் தாக்கியதில்தான் எங்கள் பகுதி மக்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்' என்றார். சென்னை - சேகர் பாபு திமுகவினர் எங்களை தாக்கியது உண்மைதான். ஆனால், இந்த விவகாரத்தை திமுக Vs தவெக என்று மட்டும் பார்க்க முடியாது. இதற்கு கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலும் ஒரு முக்கிய காரணம்' என வேறொரு கோணத்தில் இந்தப் பிரச்னையைப் பற்றி விளக்கினர் லோக்கல் தவெகவினர். 'தொகுதிக்குள் சேகர்பாபுவின் ஆட்களால் எங்களுக்கு பிரச்னை இருப்பது உண்மைதான். தொகுதியில் உள்ள 6 வார்டுகளில் 19 கொடிக்கம்பங்களை நட்டிருந்தோம். அந்த கொடிக்கம்பம் நட இடம் கொடுத்தவர்களையெல்லாம் மிரட்டி திமுகவில் இணைய சொல்கிறார்கள். ஒரு தெருமுனை கூட்டத்தை கூட முறையாக நடத்த முடியவில்லை. காவல்துறையினர் எக்கச்சக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ஆனால், இந்த மோதல் கொஞ்சம் வித்தியாசமானது. கட்சிக்குள் இப்போது வரை 132 மா.செக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், முக்கியமான துறைமுகம் தொகுதிக்கு இன்னமும் மா.செ நியமிக்கப்படவே இல்லை. மூன்று கோஷ்டியினர் மா.செ பதவிக்காக அடித்துக் கொண்டிருக்கிறது. T. ராஜேஷ் மக்கள் இயக்கத்திலிருந்து நீண்ட காலமாக தளபதியோடு பயணிப்பவர். அவரும் மா.செ பதவி வேண்டும் என்கிறார். இன்னொரு ராஜேஷ் இருக்கிறார். அவரும் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். மூன்றாவதாக அட்வகேட் விஜயகுமார். இவர்தான் கடைசியாக தொகுதிக்குள் வந்தார். இவர் மா.செ + எம்.எல்.ஏ டிக்கெட் என இரண்டையும் எதிர்பார்க்கிறார். T. ராஜேஷ் இவர் வெளியாள் என்பதால் தொகுதிக்குள் பெரியளவில் ஆதரவு இல்லை. தனக்கு ஆதரவு இருப்பதைப் போல காட்டிக் கொள்ள ஒரு சிலரை சேர்த்துக் கொண்டு சர்வே என்ற பெயரில் வீடியோ போட்டு தன்னை பிரபலப்படுத்திக் கொள்கிறார். தொகுதிக்குள் பல வருடமாக வேலை பார்த்து வைத்திருக்கும் நிர்வாகிகள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தாமாக இப்படியான சுய விளம்பர வேலைகளில் இறங்கியதுதான் பிரச்னையே. இதற்கு முன்னரும் அவர் பல தடவை சர்வே எடுக்கிறேன் என போய் பிரச்னை ஆகியிருக்கிறது. இந்த முறைதான் வெளியில் தெரிகிறது. எங்களுக்கு அவர் மேல் உடன்பாடு இல்லையென்றாலும் தவெக பெயரை சொல்லி சென்றவருக்கு அடி விழுந்ததால் நாங்களும் மருத்துவமனைக்கு சென்று அவர்களுடன் நின்றோம். தலைமை திமுகவினரின் தாக்குதலுக்கு உடனடியாக ரியாக்ட் செய்ததிலும் மகிழ்ச்சிதான். ஆனால், தொகுதிக்குள் உண்மையான பிரச்னை என்னவென்பதை தலைமை உணர வேண்டும். தேர்தல் அறிவிப்பு 2-3 வாரங்கள்தான் இருக்கிறது. இன்னமும் தொகுதிக்கு மா.செவை நியமிக்கவில்லை. சேகர் பாபு தொகுதியில் கட்சி கட்டமைப்பே இல்லாமல் எப்படி வேலை செய்ய முடியும்? இப்போதே ஒவ்வொரு கோஷ்டியும் ஒவ்வொரு பக்கம் வேலை செய்து நெகட்டிவாகிறது. M.Rajesh தேர்தலின் போதும் இப்படி கோஷ்டியாகவே பிரிந்து நின்றால் எப்படி வேலை செய்ய முடியும்? பிரச்னை வீதிக்கு வந்த பிறகும் தலைமை நிர்வாகிகளை நியமிக்காமல் தாமதப்படுத்துவதில் வருத்தமே' என்கின்றனர் துறைமுக தவெக தொண்டர்கள் சிலர். சர்வே எடுக்க ஆட்களை கூட்டி சென்ற தவெக நிர்வாகி அட்வகேட் விஜயகுமாரிடம் பேசினேன். '20 நாட்களாக சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறேன். தொகுதிக்குள் தவெகவுக்கு இருக்கு பெரும் செல்வாக்கை திமுகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திட்டமிட்டு 100 ரவுடிகளை இறக்கி எங்களை தாக்கினார்கள். கட்சி விவகாரத்தைப் பொறுத்தவரை தலைமை சொல்லாமல் நான் எப்படி தேர்தல் வேலைகளை செய்ய முடியும்? தலைமைதான் மா.செ பதவியும் தொகுதியும் எனக்குதான் என்பதை உறுதியளித்து வேலை பார்க்க சொல்லியிருக்கிறது. அட்வகேட் விஜயகுமார் நீங்கள் சொல்லும் அந்த இரண்டு ராஜேஷ் மீதும் நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது. கட்சிக்குள் கமிட்டி அமைத்து விசாரிக்கப்பட்டு அந்த கமிட்டியே அவர்களை எனக்கு ஒத்துழைப்பு வழங்க சொல்லியிருக்கிறது' என்கிறார். 'திமுகவினர் தவெகவினரை தாக்கியதுதான் இங்கே பிரச்னை. ரவுடிகளை இறக்கி கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மற்றபடி எல்லா கட்சியிலும் இருக்கும் சின்னச்சின்ன மனமாச்சரியங்கள் இங்கேயும் இருக்கலாம். அதெல்லாம் சரியாகிவிடும்' என்கிறார் தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். திமுகவினருக்கும் தவெகவினருக்கும் சண்டை என நினைத்து துறைமுகம் தொகுதிக்குள் காதை கொடுத்தால், 'தவெக vs தவெக' என புதிய கதை ஓப்பன் ஆகிறது. 'கோஷ்டி பூசலுக்கு முடிவு கட்டவில்லையெனில் துறைமுகம் தொகுதியை மறந்துவிட வேண்டியதுதான்' என்கிற லோக்கல் தவெகவினரின் குரல் தலைமைக்கு கேட்குமா?.
Vijay : தவெக vs சேகர் பாபு vs தவெக; துறைமுகம் தொகுதியின் முக்கோண மோதல்!
கடந்த வாரத்தில் துறைமுகம் தொகுதியில் திமுகவினருக்கும் தவெகவினற்கும் இடையே நடந்த மோதலின் சூடு இன்னமும் அந்தப் பகுதியில் தணியவில்லை. களமிறங்கி விசாரித்ததில் நமக்கும் தொகுதிக்குள் நிலவும் முக்கோண மோதல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது. தாக்குதல் நடந்த அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள் பிப்ரவரி 10 ஆம் தேதி தவெகவை சார்ந்த சிலர் துறைமுகம் தொகுதியின் 60 வது வார்டில் உள்ள அங்கப்பன் நாயக்கர் தெருவில் 2026 தேர்தல் சார்ந்த கருத்துக்கணிப்புகளை எடுக்க சென்றிருக்கின்றனர். அந்த சமயத்தில் அங்கே திமுக மற்றும் தவெகவினரிடையே மோதல் ஏற்படவே காவல்துறையினர் விரைந்து வந்து இருதரப்பையும் சமாதானம் செய்திருக்கின்றனர். இதில் திமுகவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி தவெகவை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உட்பட 6 ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை பார்க்க வந்த தவெகவின் முக்கிய நிர்வாகிகளான சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா போன்றோர் 'துறைமுகம் அமைச்சர் சேகர்பாபுவின் தொகுதி என்பதால் அவர்தான் ரவுடிகளை ஏவிவிட்டு தவெகவினரை தாக்கியிருக்கிறார்' எனக் குற்றஞ்சாட்டினர். 'இது ஒரு அராஜகத் தாக்குதல். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது' என தவெக தலைவர் விஜய்யும் ட்வீட் செய்திருந்தார். அமைச்சர் சேகர் பாபு திமுகவின் 60 வார்டு வட்டச் செயலாளர் கவியரசு மீதுதான் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவரை தொடர்புகொண்டு பேசினோம். 'தவெகவினர்தான் லோக்கல் காவல்துறையினுடைய அனுமதி கூட வாங்காமல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் எங்கள் பகுதி மக்களை மிரட்டியிருக்கின்றனர். கருத்துக்கணிப்பு எடுப்பவர்கள் எதற்கு கட்சித்துண்டை போட்டுக் கொண்டு வர வேண்டும்? தவெகவுக்கு ஓட்டு போடுவீர்களா மாட்டீர்களா என அதட்டும் தொனியில் எங்கள் பகுதி மக்களிடம் கேட்டிருக்கின்றனர். நிலைமை தீவிரமடைகையில்தான் பகுதி மக்கள் எனக்கு போன் செய்தனர். நானும் அமைச்சர் சேகர் பாபுவும் ஸ்பாட்டிலேயே இல்லை. ஒரு முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தோம். அங்கிருந்து முதலில் காவல்துறைக்குதான் தொடர்புகொண்டோம். அதற்குள் தவெகவினர் வெளியிலிருந்து ஆட்களை திரட்டி வன்முறையில் இறங்கிவிட்டனர். இதில் பாதிக்கப்பட்டது எங்கள் பகுதி மக்கள்தான். சேகர் பாபு அண்ணன் சொல்லி நாங்கள் தவெகவினரை தாக்கினோம் என்பதில் துளி கூட உண்மையில்லை. அவர்கள் தாக்கியதில்தான் எங்கள் பகுதி மக்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்' என்றார். சென்னை - சேகர் பாபு திமுகவினர் எங்களை தாக்கியது உண்மைதான். ஆனால், இந்த விவகாரத்தை திமுக Vs தவெக என்று மட்டும் பார்க்க முடியாது. இதற்கு கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலும் ஒரு முக்கிய காரணம்' என வேறொரு கோணத்தில் இந்தப் பிரச்னையைப் பற்றி விளக்கினர் லோக்கல் தவெகவினர். 'தொகுதிக்குள் சேகர்பாபுவின் ஆட்களால் எங்களுக்கு பிரச்னை இருப்பது உண்மைதான். தொகுதியில் உள்ள 6 வார்டுகளில் 19 கொடிக்கம்பங்களை நட்டிருந்தோம். அந்த கொடிக்கம்பம் நட இடம் கொடுத்தவர்களையெல்லாம் மிரட்டி திமுகவில் இணைய சொல்கிறார்கள். ஒரு தெருமுனை கூட்டத்தை கூட முறையாக நடத்த முடியவில்லை. காவல்துறையினர் எக்கச்சக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ஆனால், இந்த மோதல் கொஞ்சம் வித்தியாசமானது. கட்சிக்குள் இப்போது வரை 132 மா.செக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், முக்கியமான துறைமுகம் தொகுதிக்கு இன்னமும் மா.செ நியமிக்கப்படவே இல்லை. மூன்று கோஷ்டியினர் மா.செ பதவிக்காக அடித்துக் கொண்டிருக்கிறது. T. ராஜேஷ் மக்கள் இயக்கத்திலிருந்து நீண்ட காலமாக தளபதியோடு பயணிப்பவர். அவரும் மா.செ பதவி வேண்டும் என்கிறார். இன்னொரு ராஜேஷ் இருக்கிறார். அவரும் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். மூன்றாவதாக அட்வகேட் விஜயகுமார். இவர்தான் கடைசியாக தொகுதிக்குள் வந்தார். இவர் மா.செ + எம்.எல்.ஏ டிக்கெட் என இரண்டையும் எதிர்பார்க்கிறார். T. ராஜேஷ் இவர் வெளியாள் என்பதால் தொகுதிக்குள் பெரியளவில் ஆதரவு இல்லை. தனக்கு ஆதரவு இருப்பதைப் போல காட்டிக் கொள்ள ஒரு சிலரை சேர்த்துக் கொண்டு சர்வே என்ற பெயரில் வீடியோ போட்டு தன்னை பிரபலப்படுத்திக் கொள்கிறார். தொகுதிக்குள் பல வருடமாக வேலை பார்த்து வைத்திருக்கும் நிர்வாகிகள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தாமாக இப்படியான சுய விளம்பர வேலைகளில் இறங்கியதுதான் பிரச்னையே. இதற்கு முன்னரும் அவர் பல தடவை சர்வே எடுக்கிறேன் என போய் பிரச்னை ஆகியிருக்கிறது. இந்த முறைதான் வெளியில் தெரிகிறது. எங்களுக்கு அவர் மேல் உடன்பாடு இல்லையென்றாலும் தவெக பெயரை சொல்லி சென்றவருக்கு அடி விழுந்ததால் நாங்களும் மருத்துவமனைக்கு சென்று அவர்களுடன் நின்றோம். தலைமை திமுகவினரின் தாக்குதலுக்கு உடனடியாக ரியாக்ட் செய்ததிலும் மகிழ்ச்சிதான். ஆனால், தொகுதிக்குள் உண்மையான பிரச்னை என்னவென்பதை தலைமை உணர வேண்டும். தேர்தல் அறிவிப்பு 2-3 வாரங்கள்தான் இருக்கிறது. இன்னமும் தொகுதிக்கு மா.செவை நியமிக்கவில்லை. சேகர் பாபு தொகுதியில் கட்சி கட்டமைப்பே இல்லாமல் எப்படி வேலை செய்ய முடியும்? இப்போதே ஒவ்வொரு கோஷ்டியும் ஒவ்வொரு பக்கம் வேலை செய்து நெகட்டிவாகிறது. M.Rajesh தேர்தலின் போதும் இப்படி கோஷ்டியாகவே பிரிந்து நின்றால் எப்படி வேலை செய்ய முடியும்? பிரச்னை வீதிக்கு வந்த பிறகும் தலைமை நிர்வாகிகளை நியமிக்காமல் தாமதப்படுத்துவதில் வருத்தமே' என்கின்றனர் துறைமுக தவெக தொண்டர்கள் சிலர். சர்வே எடுக்க ஆட்களை கூட்டி சென்ற தவெக நிர்வாகி அட்வகேட் விஜயகுமாரிடம் பேசினேன். '20 நாட்களாக சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறேன். தொகுதிக்குள் தவெகவுக்கு இருக்கு பெரும் செல்வாக்கை திமுகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திட்டமிட்டு 100 ரவுடிகளை இறக்கி எங்களை தாக்கினார்கள். கட்சி விவகாரத்தைப் பொறுத்தவரை தலைமை சொல்லாமல் நான் எப்படி தேர்தல் வேலைகளை செய்ய முடியும்? தலைமைதான் மா.செ பதவியும் தொகுதியும் எனக்குதான் என்பதை உறுதியளித்து வேலை பார்க்க சொல்லியிருக்கிறது. அட்வகேட் விஜயகுமார் நீங்கள் சொல்லும் அந்த இரண்டு ராஜேஷ் மீதும் நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது. கட்சிக்குள் கமிட்டி அமைத்து விசாரிக்கப்பட்டு அந்த கமிட்டியே அவர்களை எனக்கு ஒத்துழைப்பு வழங்க சொல்லியிருக்கிறது' என்கிறார். 'திமுகவினர் தவெகவினரை தாக்கியதுதான் இங்கே பிரச்னை. ரவுடிகளை இறக்கி கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மற்றபடி எல்லா கட்சியிலும் இருக்கும் சின்னச்சின்ன மனமாச்சரியங்கள் இங்கேயும் இருக்கலாம். அதெல்லாம் சரியாகிவிடும்' என்கிறார் தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். திமுகவினருக்கும் தவெகவினருக்கும் சண்டை என நினைத்து துறைமுகம் தொகுதிக்குள் காதை கொடுத்தால், 'தவெக vs தவெக' என புதிய கதை ஓப்பன் ஆகிறது. 'கோஷ்டி பூசலுக்கு முடிவு கட்டவில்லையெனில் துறைமுகம் தொகுதியை மறந்துவிட வேண்டியதுதான்' என்கிற லோக்கல் தவெகவினரின் குரல் தலைமைக்கு கேட்குமா?.
ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் - வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்
இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம். காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் நான்கு போட்டோக்களைப் பகிர்ந்து 'உங்களுக்காக' என்று பதிவிட்டுள்ளது. இங்கு 'உங்களுக்காக' என்று தெரிவித்திருப்பது ட்ரம்பை தான். வெள்ளை மாளிகை 'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained முதல் போட்டோவில், வெனிசுலா அதிபர் மதுரோ கைதுப் போட்டோவைப் பகிர்ந்து, 'நீங்கள் எனது இதயத்தைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்' என்றும்... இரண்டாவது போட்டோவில், ட்ரம்ப் கையெழுத்திட்ட 4547-வது நிர்வாக ஆணையைப் பகிர்ந்து, 'நீங்கள் என் காதலர்' என்றும்... மூன்றாவது போட்டோவில், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய வெளிநாட்டினரை ட்ரம்ப் வெளியேற்றியது குறித்து, 'ஜனநாயக கட்சியினருக்கு சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் மீது எத்தனை காதலோ, உங்கள் மீது அத்தனை காதல்' என்றும்... நான்காவது போட்டோவில், கிரீன்லேண்டை இதய வடிவில் உருவகப்படுத்தியும்... - பதிவிட்டிருக்கிறது. இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained 4547-வது நிர்வாக ஆணை என்பது 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்கு 1,000 டாலர்கள் வழங்கப்படுகிறது. PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to Made just for you pic.twitter.com/DhSgnGK1M6 — The White House (@WhiteHouse) February 14, 2026
ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் - வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்
இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம். காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் நான்கு போட்டோக்களைப் பகிர்ந்து 'உங்களுக்காக' என்று பதிவிட்டுள்ளது. இங்கு 'உங்களுக்காக' என்று தெரிவித்திருப்பது ட்ரம்பை தான். வெள்ளை மாளிகை 'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained முதல் போட்டோவில், வெனிசுலா அதிபர் மதுரோ கைதுப் போட்டோவைப் பகிர்ந்து, 'நீங்கள் எனது இதயத்தைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்' என்றும்... இரண்டாவது போட்டோவில், ட்ரம்ப் கையெழுத்திட்ட 4547-வது நிர்வாக ஆணையைப் பகிர்ந்து, 'நீங்கள் என் காதலர்' என்றும்... மூன்றாவது போட்டோவில், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய வெளிநாட்டினரை ட்ரம்ப் வெளியேற்றியது குறித்து, 'ஜனநாயக கட்சியினருக்கு சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் மீது எத்தனை காதலோ, உங்கள் மீது அத்தனை காதல்' என்றும்... நான்காவது போட்டோவில், கிரீன்லேண்டை இதய வடிவில் உருவகப்படுத்தியும்... - பதிவிட்டிருக்கிறது. இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained 4547-வது நிர்வாக ஆணை என்பது 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்கு 1,000 டாலர்கள் வழங்கப்படுகிறது. PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to Made just for you pic.twitter.com/DhSgnGK1M6 — The White House (@WhiteHouse) February 14, 2026
புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா! - கூட்டணிக்கு இழுத்தடிக்கும் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதனடிப்படையில் நேற்று திருச்சிக்கு வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று காரைக்காலுக்கு வருகிறார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்கும் அமித் ஷா, அங்கிருந்து கார் மூலம் நகராட்சி திடலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முதல்வர் ரங்கசாமி அதன்பிறகு திருநள்ளாறு சாலையிலுள்ள தனியார் விடுதியில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை சந்தித்துவிட்டு முதல்வர் ரங்கசாமியை சந்திக்கிறார். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டணியை இறுதி செய்யாமல் இழுத்தடித்து வரும் ரங்கசாமியிடம், அவரது கோரிக்கைகளையும், கருத்துகளையும் கேட்கிறார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அமித் ஷா வருகையையொட்டி ஏழு பட்டாலியன் துணை ராணுவப் படையினருடன், சுமார் 700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!
July Charter 2025: இனி பிரதமருக்கு அனைத்திற்கும் 'செக்' - புதிதாக உருமாறும் வங்கதேசம்!
நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) வங்கதேசம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வங்கதேசத்தில் மொத்தம் 300 தொகுதிகள் உள்ளன. ஆனால், 12-ம் தேதி 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 210 தொகுதிகளை வென்றுள்ளது வங்கதேச தேசிய கட்சியின் கீழ் அமைந்த கூட்டணி. ஆக, வங்கதேசத்தின் அடுத்த பிரதமர் வங்கதேச தேசிய கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கதேசத்தில் பிரதமராக பதவியேற்கும் முதல் ஆண் பிரதமர் இவர். தாரிக் ரஹ்மான் இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained வங்கதேசத்தில் கடந்த 12-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மட்டும் நடைபெறவில்லை... ' ஜூலை தேசிய சாசனம் 2025 (July National Charter, 2025) '-க்கான தேசிய வாக்கெடுப்பும் நடந்தது. இந்தத் தேசிய வாக்கெடுப்பிற்கு 60.26 சதவிகித மக்கள் சாதகமாக வாக்களித்துள்ளனர். அது என்ன 'ஜூலை தேசிய சாசனம் 2025'? இது வங்கதேசத்தின் ஆட்சி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றுவதற்கான புதிய சாசனம் ஆகும். இந்த சாசனத்தில் தேசிய கட்டமைப்பை மாற்றுவதற்கான 84 புள்ளிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சாசனத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் இதோ... > நீண்ட காலமாக ஒரே பிரதமர் நாட்டை ஆள்வதற்கு செக் வைக்கும் விதமாக, இனி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பிரதமர் ஆகலாம். > புதிதாக 100 மேல் சபை சீட்டுகள் உருவாக்கப்படும். இந்தச் சீட்டுகள் தேசிய வாக்குகளின் பங்கைப் பொறுத்து பிரித்துக்கொடுக்கப்படும். > பிரதமரிடம் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிவதைத் தடுக்க, ஜனாதிபதியின் அதிகாரம் வலுப்படுத்தப்பட உள்ளது. > நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு சார்ந்த அமைப்புகளில் அரசியல் செல்வாக்கு குறைக்கப்பட உள்ளது. > எதிர்க்கட்சிகளுக்கு உரிய அதிகாரம் கொடுத்தல் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு துணை சபா நாயகர் பதவி வழங்கப்படும். > நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட உள்ளது. PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to
July Charter 2025: இனி பிரதமருக்கு அனைத்திற்கும் 'செக்' - புதிதாக உருமாறும் வங்கதேசம்!
நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) வங்கதேசம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வங்கதேசத்தில் மொத்தம் 300 தொகுதிகள் உள்ளன. ஆனால், 12-ம் தேதி 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 210 தொகுதிகளை வென்றுள்ளது வங்கதேச தேசிய கட்சியின் கீழ் அமைந்த கூட்டணி. ஆக, வங்கதேசத்தின் அடுத்த பிரதமர் வங்கதேச தேசிய கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கதேசத்தில் பிரதமராக பதவியேற்கும் முதல் ஆண் பிரதமர் இவர். தாரிக் ரஹ்மான் இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained வங்கதேசத்தில் கடந்த 12-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மட்டும் நடைபெறவில்லை... ' ஜூலை தேசிய சாசனம் 2025 (July National Charter, 2025) '-க்கான தேசிய வாக்கெடுப்பும் நடந்தது. இந்தத் தேசிய வாக்கெடுப்பிற்கு 60.26 சதவிகித மக்கள் சாதகமாக வாக்களித்துள்ளனர். அது என்ன 'ஜூலை தேசிய சாசனம் 2025'? இது வங்கதேசத்தின் ஆட்சி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றுவதற்கான புதிய சாசனம் ஆகும். இந்த சாசனத்தில் தேசிய கட்டமைப்பை மாற்றுவதற்கான 84 புள்ளிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சாசனத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் இதோ... > நீண்ட காலமாக ஒரே பிரதமர் நாட்டை ஆள்வதற்கு செக் வைக்கும் விதமாக, இனி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பிரதமர் ஆகலாம். > புதிதாக 100 மேல் சபை சீட்டுகள் உருவாக்கப்படும். இந்தச் சீட்டுகள் தேசிய வாக்குகளின் பங்கைப் பொறுத்து பிரித்துக்கொடுக்கப்படும். > பிரதமரிடம் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிவதைத் தடுக்க, ஜனாதிபதியின் அதிகாரம் வலுப்படுத்தப்பட உள்ளது. > நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு சார்ந்த அமைப்புகளில் அரசியல் செல்வாக்கு குறைக்கப்பட உள்ளது. > எதிர்க்கட்சிகளுக்கு உரிய அதிகாரம் கொடுத்தல் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு துணை சபா நாயகர் பதவி வழங்கப்படும். > நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட உள்ளது. PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to
விஜய்யை விமர்சிக்க நடிகையின் பெயர்: `அவதூறு பேசுவது அழகல்ல'- நயினாரை கண்டித்த தமிழச்சி தங்கபாண்டியன்
சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய தவெக தலைவர் விஜய், ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை. கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். தவெக விஜய் இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரனிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், பாவம்..விஜய் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டை விட்டு அவர் வெளியில் வர வேண்டும். (ஒரு பெயரை சொல்லி)நடிகையிடம் இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும். நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கங்கள் பற்றி நல்லதாக அவர் பேச வேண்டும் என்று நடிகையின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். நயினாரின் இந்த விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. நயினார் நாகேந்திரன் அந்தவகையில் எம்.பி தமிழச்சி தங்கப் பாண்டியன் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
விஜய்யை விமர்சிக்க நடிகையின் பெயர்: `அவதூறு பேசுவது அழகல்ல'- நயினாரை கண்டித்த தமிழச்சி தங்கபாண்டியன்
சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய தவெக தலைவர் விஜய், ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை. கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். தவெக விஜய் இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரனிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், பாவம்..விஜய் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டை விட்டு அவர் வெளியில் வர வேண்டும். (ஒரு பெயரை சொல்லி)நடிகையிடம் இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும். நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கங்கள் பற்றி நல்லதாக அவர் பேச வேண்டும் என்று நடிகையின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். நயினாரின் இந்த விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. நயினார் நாகேந்திரன் அந்தவகையில் எம்.பி தமிழச்சி தங்கப் பாண்டியன் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்கிறது. ஆனால், அந்த அஸ்திரத்தை லாகவமாக எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய காங்கிரஸோ, கூட்டணியை சிதைக்கும் வேலைகளை கச்சிதமாக செய்துவருவதாக கொதிக்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்! பிரதமர் மோடி “2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கணிசமான வாக்கு சதவிகிதத்தை பா.ஜ.க பெற்றிருந்தாலும் அதனால் எந்தவித பயனும் இல்லை எனக் கருதியது டெல்லி பா.ஜ.க. அதனாலேயே 2026 ஏப்ரலில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, 2025 ஏப்ரல் 9-ம் தேதியே அ.தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதிசெய்தார் அமித் ஷா. மத்தியிலும் 16 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும்கூட அ.தி.மு.க கூட்டணியை வலுப்படுத்த கூட்டணி பேச்சுவார்த்தை, ராஜ்ய சபா ஆஃபர், கணிசமான ஸ்வீட் பாக்ஸ் என்று வாடிவாசலில் நின்று ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களைப் போல் சாதுர்யமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ சாணக்கியத்தனமாக இல்லாமல் ஆளும் கூட்டணி தலைமையான தி.மு.க-வை சீண்டிப் பார்க்கிறது” என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 10 எம்.பி-க்களையும், 17 எம்.எல்.ஏ-க்களையும் பெற்றிருக்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் வலிமைக்கும் கள செயல்பாடுகளுக்கும் இந்த எண்ணிக்கை சற்று அதிகம் என்பதே சக கூட்டணிக் கட்சியினரின் கருத்து. கட்சியை வலுப்படுத்தும் வேலையை செய்யாமல் கூடுதல் சீட், அதிகாரப் பகிர்வு என்று கம்பு சுற்றும் சில காங்கிரஸ் புள்ளிகள், தி.மு.க கூட்டணியை முறித்துக் கொண்டு த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்துவிட தீயாய் வேலை செய்துவருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சொல்லப்போனால், இந்தியாவிலேயே சமரசங்களின்றி பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் மாநிலக் கட்சிகளில் தி.மு.க முதன்மையானது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க சக இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் தயங்கின. ஆனால் முதல் ஆளாக ஏற்றுக்கொண்டது தி.மு.க-தான். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்’ என பா.ஜ.க ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையிலும் தங்கள் கூட்டணியில் காங்கிரஸை வைத்திருக்கிறது தி.மு.க. ஆனாலும், நேற்றைக்கு வந்த த.வெ.க-வுடன் கூட்டணிக்குப் போக வேண்டும் என ஆலோசனை நடத்திவருகிறார்கள். அது சாத்தியப்படுமானால், அதனால் பயனடையப் போவது என்.டி.ஏ கூட்டணிதான்” என பகீர் கிளப்பினர். த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா? கூட்டணி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸின் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இல்லாமல் பா.ஜ.க-வுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை நேரடியாகப் பார்த்தும் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி குறித்து ஆலோசிக்கிறது காங்கிரஸ் தலைமை. அதிலும் கட்சி ஆரம்பித்ததிலிருந்து பா.ஜ.க-வை கண்டித்து தெருமுனைக் கூட்டம்கூட நடத்தாத விஜய்யை நம்பி கூட்டணிக்குப் போக முடியுமா? மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைவித்த திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய்திறந்தாரா? மத்தியிலும் மாநிலத்திலும் பட்டியலின தலைவர்களை கொண்டிருக்கும் காங்கிரஸ், ஆணவக் கொலை விவகாரத்தில் நழுவிய த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா? விஜய் டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்? அவ்வளவு ஏன்... கரூர் விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு மாறியபோது ‘நீதி வென்றது’ என்றார் விஜய். `ஜனநாயகன்’ படத்தை பா.ஜ.க முடக்கி வைத்திருக்கும் சூழலில் பா.ஜ.க-வை கண்டிக்காமல், அதற்கு ராகுல் காந்தி குரல் கொடுத்தபோதும் நன்றிகூட சொல்ல பயந்த விஜய்யுடன் கைகோத்து பாசிசத்தை காங்கிரஸ் வீழ்த்தப் போகிறதா.. மறுபக்கம், ‘த.வெ.க-வுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது’ என்ற சர்வேக்களை நம்பி தி.மு.க கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியே போனால் தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த இஸ்லாமிய, பட்டியலின வாக்குகள் காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணிக்கு கணிசமாகப் பிரியும். அப்படிப் பிரிந்தால் என்.டி.ஏ கூட்டணிக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். அதை டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்.. ஆக, ‘நாமளும் தோற்கணும்.. தி.மு.க-வும் தோற்கணும்’ என்ற காங்கிரஸின் விநோத கணக்கு புரியாத புதிராகவே இருக்கிறது” என்றனர். ராகுல் காந்தியும்தான் பொறுப்பு! நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “பா.ஜ.க-வை வீழ்த்துவது தி.மு.க-வின் வேலை என்ற மனநிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. தி.மு.க கூட்டணியில் நிலவும் பிரச்னைக்கு ராகுல் காந்தியும்தான் பொறுப்பு. தி.மு.க உதவி இல்லாமல் ராகுல் காந்தி கூட்டத்துக்கு காங்கிரஸால் ஆள் திரட்ட முடியாத நிலைதான் அக்கட்சி உள்ளது” என்றார். கோபண்ணா இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்! காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். “பாசிச பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற புள்ளியில் ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினும் மிகத் தெளிவாக இருப்பதால்தான் நீண்டகாலமாக தி.மு.க-வும் காங்கிரஸும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதை புரிந்துகொள்ளாத ஒருசிலர் கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிவருகிறார்கள். அவர்கள் பேச்சுகள் இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்” என்றார். “ராகுல் காந்திக்கு ஆதரவாக, ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறாரா விஜய்?” - கேட்கிறார் ஆளூர் ஷாநவாஸ்!
பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்கிறது. ஆனால், அந்த அஸ்திரத்தை லாகவமாக எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய காங்கிரஸோ, கூட்டணியை சிதைக்கும் வேலைகளை கச்சிதமாக செய்துவருவதாக கொதிக்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்! பிரதமர் மோடி “2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கணிசமான வாக்கு சதவிகிதத்தை பா.ஜ.க பெற்றிருந்தாலும் அதனால் எந்தவித பயனும் இல்லை எனக் கருதியது டெல்லி பா.ஜ.க. அதனாலேயே 2026 ஏப்ரலில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, 2025 ஏப்ரல் 9-ம் தேதியே அ.தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதிசெய்தார் அமித் ஷா. மத்தியிலும் 16 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும்கூட அ.தி.மு.க கூட்டணியை வலுப்படுத்த கூட்டணி பேச்சுவார்த்தை, ராஜ்ய சபா ஆஃபர், கணிசமான ஸ்வீட் பாக்ஸ் என்று வாடிவாசலில் நின்று ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களைப் போல் சாதுர்யமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ சாணக்கியத்தனமாக இல்லாமல் ஆளும் கூட்டணி தலைமையான தி.மு.க-வை சீண்டிப் பார்க்கிறது” என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 10 எம்.பி-க்களையும், 17 எம்.எல்.ஏ-க்களையும் பெற்றிருக்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் வலிமைக்கும் கள செயல்பாடுகளுக்கும் இந்த எண்ணிக்கை சற்று அதிகம் என்பதே சக கூட்டணிக் கட்சியினரின் கருத்து. கட்சியை வலுப்படுத்தும் வேலையை செய்யாமல் கூடுதல் சீட், அதிகாரப் பகிர்வு என்று கம்பு சுற்றும் சில காங்கிரஸ் புள்ளிகள், தி.மு.க கூட்டணியை முறித்துக் கொண்டு த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்துவிட தீயாய் வேலை செய்துவருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சொல்லப்போனால், இந்தியாவிலேயே சமரசங்களின்றி பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் மாநிலக் கட்சிகளில் தி.மு.க முதன்மையானது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க சக இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் தயங்கின. ஆனால் முதல் ஆளாக ஏற்றுக்கொண்டது தி.மு.க-தான். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்’ என பா.ஜ.க ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையிலும் தங்கள் கூட்டணியில் காங்கிரஸை வைத்திருக்கிறது தி.மு.க. ஆனாலும், நேற்றைக்கு வந்த த.வெ.க-வுடன் கூட்டணிக்குப் போக வேண்டும் என ஆலோசனை நடத்திவருகிறார்கள். அது சாத்தியப்படுமானால், அதனால் பயனடையப் போவது என்.டி.ஏ கூட்டணிதான்” என பகீர் கிளப்பினர். த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா? கூட்டணி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸின் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இல்லாமல் பா.ஜ.க-வுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை நேரடியாகப் பார்த்தும் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி குறித்து ஆலோசிக்கிறது காங்கிரஸ் தலைமை. அதிலும் கட்சி ஆரம்பித்ததிலிருந்து பா.ஜ.க-வை கண்டித்து தெருமுனைக் கூட்டம்கூட நடத்தாத விஜய்யை நம்பி கூட்டணிக்குப் போக முடியுமா? மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைவித்த திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய்திறந்தாரா? மத்தியிலும் மாநிலத்திலும் பட்டியலின தலைவர்களை கொண்டிருக்கும் காங்கிரஸ், ஆணவக் கொலை விவகாரத்தில் நழுவிய த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா? விஜய் டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்? அவ்வளவு ஏன்... கரூர் விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு மாறியபோது ‘நீதி வென்றது’ என்றார் விஜய். `ஜனநாயகன்’ படத்தை பா.ஜ.க முடக்கி வைத்திருக்கும் சூழலில் பா.ஜ.க-வை கண்டிக்காமல், அதற்கு ராகுல் காந்தி குரல் கொடுத்தபோதும் நன்றிகூட சொல்ல பயந்த விஜய்யுடன் கைகோத்து பாசிசத்தை காங்கிரஸ் வீழ்த்தப் போகிறதா.. மறுபக்கம், ‘த.வெ.க-வுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது’ என்ற சர்வேக்களை நம்பி தி.மு.க கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியே போனால் தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த இஸ்லாமிய, பட்டியலின வாக்குகள் காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணிக்கு கணிசமாகப் பிரியும். அப்படிப் பிரிந்தால் என்.டி.ஏ கூட்டணிக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். அதை டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்.. ஆக, ‘நாமளும் தோற்கணும்.. தி.மு.க-வும் தோற்கணும்’ என்ற காங்கிரஸின் விநோத கணக்கு புரியாத புதிராகவே இருக்கிறது” என்றனர். ராகுல் காந்தியும்தான் பொறுப்பு! நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “பா.ஜ.க-வை வீழ்த்துவது தி.மு.க-வின் வேலை என்ற மனநிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. தி.மு.க கூட்டணியில் நிலவும் பிரச்னைக்கு ராகுல் காந்தியும்தான் பொறுப்பு. தி.மு.க உதவி இல்லாமல் ராகுல் காந்தி கூட்டத்துக்கு காங்கிரஸால் ஆள் திரட்ட முடியாத நிலைதான் அக்கட்சி உள்ளது” என்றார். கோபண்ணா இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்! காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். “பாசிச பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற புள்ளியில் ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினும் மிகத் தெளிவாக இருப்பதால்தான் நீண்டகாலமாக தி.மு.க-வும் காங்கிரஸும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதை புரிந்துகொள்ளாத ஒருசிலர் கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிவருகிறார்கள். அவர்கள் பேச்சுகள் இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்” என்றார். “ராகுல் காந்திக்கு ஆதரவாக, ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறாரா விஜய்?” - கேட்கிறார் ஆளூர் ஷாநவாஸ்!
சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ம.நீ.ம ஆகிய கட்சிகள்! 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்ப்பை காத்திருக்கும் சூழலில் தி.மு.க கூட்டணியில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிவருகிறது காங்கிரஸ் கட்சி. தி.மு.க - காங்கிரஸ் பஞ்சாயத்து ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, தங்களுக்கு தேவையான தொகுதி பட்டியலை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க-வின் இதர கூட்டணிக் கட்சிகள். அதன்படி வேளச்சேரி, மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்டாலின், கமல்ஹாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 33 ஆயிரம் வாக்குகளையும் வேளச்சேரி தொகுதியில் கிட்டதட்ட 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது. ம.நீ.ம-வுக்கு கிடைவுள்ள 2 - 3 தொகுதிகளில் இந்த இரண்டில் ஒரு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதிகாட்டுகிறது. அதேசமயம் மதுரவாயல் தொகுதியை பெற தி.மு.க-வுள்ளேயே இருவர் முட்டி மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி மீண்டும் களமிறங்க விரும்பும் நிலையில், தி.மு.க-வின் ஐடி விங் மாநில நிர்வாகி பத்மபிரியாவும் சீட் எதிர்பார்க்கிறார். மக்கள் நீதி மய்யம் தொகுதியை பெற தீவிரம் காட்டினாலும் தி.மு.க புள்ளிகளுக்குதான் சீட் என்பதே தற்போதைய நிலவரம். திமுக பத்மபிரியா அதேபோல், வேளச்சேரி தொகுதிக்கும் தி.மு.க கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. வி.சி.க வசமுள்ள திருப்போரூர் தொகுதியை தி.மு.க திரும்பப் பெற்றுக் கொண்டால் வேளச்சேரியை கேட்கலாம். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் ஒருவர் சென்னையில் களமிறங்க கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வில் துணை மேயர் மகேஷ் குமார், ராஜ்ய சபா எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் மல்லுக்கட்டி வருகிறார்கள். வேளச்சேரி சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கல்தா என்பதில் மட்டும் சந்தேகமில்லை என்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சென்னையில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. அவர்களது விருப்ப பட்டியலில் மதுரவாயல், பெரம்பூர் தொகுதிகள் இருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். வேளச்சேரி வி.சி.க-வுக்கு கிடைக்கவில்லை என்றால் ஆர்.கே நகர் தொகுதியை கேட்கும் மனநிலையிலும் இருக்கிறார்கள் சிறுத்தைகள். விசிக ஆளூர் ஷாநவாஸ் பொதுவாகவே சென்னை சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க கூட்டணிக் கட்சிகளை விட்டுதருவதில்லை. அதிலும் விஜய்யின் த.வெ.க நகர்பகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தும் என சர்வே முடிவுகள் சொல்வதால் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க-வே களமிறங்கவே வாய்ப்பு. மேலும் தலைநகர் வேட்பாளர்கள் பட்டியலில் கணிசமாக ஜூனியர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் ஆலோசனையில் இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். கூட்டணிக் கட்சிகளை தி.மு.க எப்படி சமாளிக்கப்போகிறதோ? பார்ப்போம்! “கூட்டணி நிச்சயம்... கூடுதல் சீட் லட்சியம்...” வி.சி.க டிமாண்ட்! - ஏற்குமா தி.மு.க?
சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ம.நீ.ம ஆகிய கட்சிகள்! 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்ப்பை காத்திருக்கும் சூழலில் தி.மு.க கூட்டணியில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிவருகிறது காங்கிரஸ் கட்சி. தி.மு.க - காங்கிரஸ் பஞ்சாயத்து ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, தங்களுக்கு தேவையான தொகுதி பட்டியலை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க-வின் இதர கூட்டணிக் கட்சிகள். அதன்படி வேளச்சேரி, மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்டாலின், கமல்ஹாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 33 ஆயிரம் வாக்குகளையும் வேளச்சேரி தொகுதியில் கிட்டதட்ட 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது. ம.நீ.ம-வுக்கு கிடைவுள்ள 2 - 3 தொகுதிகளில் இந்த இரண்டில் ஒரு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதிகாட்டுகிறது. அதேசமயம் மதுரவாயல் தொகுதியை பெற தி.மு.க-வுள்ளேயே இருவர் முட்டி மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி மீண்டும் களமிறங்க விரும்பும் நிலையில், தி.மு.க-வின் ஐடி விங் மாநில நிர்வாகி பத்மபிரியாவும் சீட் எதிர்பார்க்கிறார். மக்கள் நீதி மய்யம் தொகுதியை பெற தீவிரம் காட்டினாலும் தி.மு.க புள்ளிகளுக்குதான் சீட் என்பதே தற்போதைய நிலவரம். திமுக பத்மபிரியா அதேபோல், வேளச்சேரி தொகுதிக்கும் தி.மு.க கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. வி.சி.க வசமுள்ள திருப்போரூர் தொகுதியை தி.மு.க திரும்பப் பெற்றுக் கொண்டால் வேளச்சேரியை கேட்கலாம். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் ஒருவர் சென்னையில் களமிறங்க கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வில் துணை மேயர் மகேஷ் குமார், ராஜ்ய சபா எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் மல்லுக்கட்டி வருகிறார்கள். வேளச்சேரி சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கல்தா என்பதில் மட்டும் சந்தேகமில்லை என்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சென்னையில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. அவர்களது விருப்ப பட்டியலில் மதுரவாயல், பெரம்பூர் தொகுதிகள் இருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். வேளச்சேரி வி.சி.க-வுக்கு கிடைக்கவில்லை என்றால் ஆர்.கே நகர் தொகுதியை கேட்கும் மனநிலையிலும் இருக்கிறார்கள் சிறுத்தைகள். விசிக ஆளூர் ஷாநவாஸ் பொதுவாகவே சென்னை சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க கூட்டணிக் கட்சிகளை விட்டுதருவதில்லை. அதிலும் விஜய்யின் த.வெ.க நகர்பகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தும் என சர்வே முடிவுகள் சொல்வதால் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க-வே களமிறங்கவே வாய்ப்பு. மேலும் தலைநகர் வேட்பாளர்கள் பட்டியலில் கணிசமாக ஜூனியர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் ஆலோசனையில் இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். கூட்டணிக் கட்சிகளை தி.மு.க எப்படி சமாளிக்கப்போகிறதோ? பார்ப்போம்! “கூட்டணி நிச்சயம்... கூடுதல் சீட் லட்சியம்...” வி.சி.க டிமாண்ட்! - ஏற்குமா தி.மு.க?
PM RAHAT: 'இதற்கு'ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to
நேற்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட நான்கு கையெழுத்துகளில் ஒன்று - PM RAHAT (Road Accident Victims Hospitalisation and Assured Treatment) திட்டம். PM RAHAT எதற்கு? இந்த மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கீழ் வரும் திட்டம் ஆகும். விபத்து இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained யாருக்கு? இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அனைவருமே பயன்பெறலாம். பாதிக்கப்பட்டவருக்கு நிதிப் பின்னணி என்னவாக இருந்தாலும், அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவது எப்படி? > விபத்து நடந்த 24 மணிநேரத்திற்குள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY நெட்வொர்க்கின் கீழ் இருக்கும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். > எந்த மருத்துவமனை இந்த நெட்வொர்க்கின் கீழ் வரும் என்பதை தெரிந்துகொள்ள 112 என்கிற தொலைபேசி எண்ணுக்குப் போன்கால் செய்யலாம். > விபத்து குறித்து முதல் 24 மணிநேரத்தில் போலீஸாரிடம் புகாரளித்திருக்க வேண்டும். > பெரும்பாலும், அனுமதிக்கப்படும் மருத்துவமனையே போலீஸாரிடம் இந்த மாதிரியான விபத்துகளைத் தெரிவித்துவிடும். > மருத்துவமனை நிர்வாகமே குறிப்பிட்ட விபத்தை மத்திய போக்குவரத்துத் துறையில் e-DAR ( Electronic Detailed Accident Report)-ல் பதிவு செய்துவிடும். மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை பெற பாதிக்கப்பட்டவர் என்ன ஆவணங்கள் தர வேண்டும்? > அடையாள அட்டை > எஃப்.ஐ.ஆர் > காயம் சம்பந்தமான ஆவணங்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!
அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?- விஜய்க்கு அதிமுக பதிலடி
சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை. கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். தவெக விஜய் இந்நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் அங்கிள்? அப்பா மூலமா சினிமா உள்ள வந்தீங்க... வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார், புரட்சிக் கலைஞர், ஆகியோரைப் பார்த்து காப்பி பேஸ்ட்.... அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் மரபைத் திருடி, காப்பி பேஸ்ட்... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? எடப்பாடி பழனிசாமி இந்த முதல் காட்சி டிக்கெட்டெல்லாம் ரூ.2000-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 ஆண்டு கொள்ளை அனுபவம் இருக்கு தானே? என்று விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?- விஜய்க்கு அதிமுக பதிலடி
சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை. கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். தவெக விஜய் இந்நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் அங்கிள்? அப்பா மூலமா சினிமா உள்ள வந்தீங்க... வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார், புரட்சிக் கலைஞர், ஆகியோரைப் பார்த்து காப்பி பேஸ்ட்.... அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் மரபைத் திருடி, காப்பி பேஸ்ட்... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? எடப்பாடி பழனிசாமி இந்த முதல் காட்சி டிக்கெட்டெல்லாம் ரூ.2000-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 ஆண்டு கொள்ளை அனுபவம் இருக்கு தானே? என்று விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
? யார் இந்த Jaggi Vasudev? | Seriously! | EP - 12 | Vikatan TV
? யார் இந்த Jaggi Vasudev? | Seriously! | EP - 12 | Vikatan TV
ஈரோடு மாவட்ட தொகுதிகள் part 2 | ADMK, DMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு?| TN Elections 306 updates
ஈரோடு மாவட்ட தொகுதிகள் part 2 | ADMK, DMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு?| TN Elections 306 updates
இந்தியா மீது திடீர் 'ஐஸ்'மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained
இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி... ஆசிய நாடுகளிலேயே யார் டாப் இடத்தைப் பிடிப்பது என்கிற போட்டி பல தசாப்தங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறன. இதன் விளைவு தான் அடிக்கடி இந்தியா, சீனா இடையே நடக்கும் 'பங்காளி சண்டைகள்'. 2020-ம் ஆண்டு எல்லைப் பிரச்னைக்கு பிறகு இந்தியா, சீனா உறவில் பெரும் விரிசல் உண்டாகியது. இரு நாடுகளும் நேரடி விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு அந்த விரிசல் இருந்தது. பிரிக்ஸ் 'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained பிரிக்ஸ் ஆனால், கடந்த சில மாதங்களாக, இந்த விரிசலின் அளவு குறைந்து, உறவு கூட ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆரம்பம் 'பிரிக்ஸ்' அமைப்பிற்குப் பிரச்னை வந்தப் போது தொடங்கியது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய உலகில் உள்ள தென்னாடுகளின் கூட்டமைப்பு 'பிரிக்ஸ்'. அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் டார்கெட் செய்தவற்றில் 'பிரிக்ஸ்' முக்கியமான ஒன்று. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாணயத்தை உருவாக்க உள்ளது என்று குற்றம் சாட்டினார் ட்ரம்ப். இதனால், பிரிக்ஸ் நாடுகளின் மீது வரி விதிக்க உள்ளதாகவும் அச்சுறுத்தினார். இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகள் தங்களது ஒற்றுமையைக் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதையடுத்து, 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா சென்றார் இந்திய பிரதமர் மோடி. அதன் பிறகு, இரு நாடுகளின் உறவும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்கியதில் இருந்து மெல்ல மெல்ல சுமுக நிலைக்குத் திரும்பி வருகின்றன. ஆனால், திடீரென்று இப்போது இந்தியாவிற்கு ஆதரவாக பேசித் தள்ளுகிறது சீனா. > சீனாவின் நிர்வாக துணை வெளியுறவு அமைச்சர் மா சாவோக்சு. இவர் சமீபத்தில், 'இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்... பகையாளிகள் அல்ல' என்று கருத்து தெரிவித்துள்ளார். > ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இன்னும் உறுப்பு நாடல்ல. ஆனால், சீனா நிரந்தர உறுப்பினர் கடந்த 10-ம் தேதி, 'இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர சீட் பெற நினைப்பதை சீனா மதிக்கிறது... புரிந்துகொள்கிறது' என்று கருத்து தெரிவித்துள்ளது சீனா. மா சாவோக்சு - விக்ரம் மிஸ்ரி சந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் - என்ன காரணம்? இது தொடருமா? > இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குவதை முழுமையாக ஆதரித்துள்ளது சீனா. இவை எல்லாமே 'அட' ரகம் தான். 'இதெல்லாம் பெரிய விஷயமா?' என்று தோன்றலாம். ஆனால், போட்டி நாடான இந்தியாவிற்கு சீனா இதுபோல ஆதரவாகப் பேசுவது பெரிய விஷயமல்ல... மிகப்பெரிய விஷயம். ஆனால், இவற்றால் இந்தியா உடனே குளிர்ந்து போய்விடக் கூடாது. பின்னணி என்ன? 'இதன் பின்னணி என்ன?' என்பதை நிச்சயம் யோசிக்க வேண்டும். ட்ரம்ப்பின் வரியால் ஏற்கெனவே உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு சீனா விதிவிலக்கு அல்ல. இன்னொரு பக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தில் சில சீனப் பொருள்களுக்கு அதிக வரி. இது சீனாவிற்கு சற்று சிரமம் தான். அதனால், இந்தியா போன்ற பெரிய சந்தையைப் பிடிக்க நினைக்கிறது சீனா. ஏற்கெனவே இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருந்தது சீனா. ஆனால், 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, இந்தச் சப்ளை செயின் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதி-இறக்குமதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்! இந்தக் காலகட்டம் இந்தியாவிற்கும் மூலப்பொருள்கள் கொள்முதலை சிரமமாக்கியது. அதனால், மீண்டும் இந்திய சந்தையைத் தேடுகிறது சீனா. இந்தியா, அமெரிக்கா இடையே தற்போது ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது. இது இரு நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தலாம். சீனாவின் போட்டி நாடுகளில் முக்கியமான ஒன்று அமெரிக்கா. இந்தியா - அமெரிக்கா ஒற்றுமை சீனாவிற்கு ஆபத்து தான். ஆக, இந்த ஒற்றுமையைச் சற்று தணிக்கவே சீனாவின் இந்தப் பாசம் என்று எடுத்துக்கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைக்கு முழு ஆதரவை சீனா தெரிவித்திருக்கிறது என்று முன்பு பார்த்தோம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி கொடுக்கத் தொடங்கப்பட்டதே பிரிக்ஸ் அமைப்பு. மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிக்கு இணையாக அல்லது வளர்ச்சியைத் தாண்டி வளர வேண்டும் என்பது தான் இந்தியா, சீனாவின் கொள்கை. இதனால், பிரிக்ஸின் வலிமை தொடர வேண்டும் என்பதும் இந்தியாவிற்கு சீனா கொடுக்கும் ஆதரவிற்கு ஒரு காரணம். ஆக, சீனாவின் ஒவ்வொரு அசைவுகளுக்குப் பின் இருக்கும் காரணத்தையும் நிச்சயம் மறுக்க முடியாது... தவிர்க்க முடியாது. இதனால், சீனாவின் ஆதரவை இரு கரங்கள் விரித்து இந்தியா ஏற்றுக்கொண்டாலும், அதில் நிச்சயம் மிக மிக கவனம் தேவை! Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4 கையெழுத்துகள்
விஜய் என் நண்பர்தான்.. ஆனால்.. - எஸ்.பி. வேலுமணி கடும் விமர்சனம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. திமுக Vs அதிமுக என்றிருந்த தமிழக அரசியல் களம், இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது. விஜய் திமுக அதிமுக இரண்டு கட்சிகள் மீதும் தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் வைக்கிறார். பதிலுக்கு விஜய் மீது அதிமுகவினரும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, “புதிதாக சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம். வேலுமணி விஜய்யை பார்ப்பதற்காக அவரின் கட்சியினர் ஏராளமானோர் கரூர் வந்தனர். விஜய் கண் முன்னரே 41 மக்கள் கொத்து கொத்தாக விழுந்து இறந்தனர். விஜய் எதுவும் செய்யாமல் சென்னை ஓடினார். இப்போது வரை கரூர் செல்லவில்லை. அதிமுகவில் சாதாரண ஒரு தொண்டருக்கு அடிபட்டால் கூட உடனடியாக சென்று பார்க்கிறோம். கரூரில் இருந்து சென்னை ஓடிய விஜய் ஒரு மாதம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அவரை ஆதரிக்கலாமா. விஜய் எனக்கு நண்பர்தான். ஆனால் இது சினிமா இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சினிமாவில் கேமரா முன்பு நடித்து செல்வது போல, விஜய் கரூர் சம்பவத்தையும் அணுகியுள்ளார் அவருக்கு வாக்களித்து திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்து விட வேண்டாம்” என்றார்.
விஜய் என் நண்பர்தான்.. ஆனால்.. - எஸ்.பி. வேலுமணி கடும் விமர்சனம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. திமுக Vs அதிமுக என்றிருந்த தமிழக அரசியல் களம், இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது. விஜய் திமுக அதிமுக இரண்டு கட்சிகள் மீதும் தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் வைக்கிறார். பதிலுக்கு விஜய் மீது அதிமுகவினரும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, “புதிதாக சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம். வேலுமணி விஜய்யை பார்ப்பதற்காக அவரின் கட்சியினர் ஏராளமானோர் கரூர் வந்தனர். விஜய் கண் முன்னரே 41 மக்கள் கொத்து கொத்தாக விழுந்து இறந்தனர். விஜய் எதுவும் செய்யாமல் சென்னை ஓடினார். இப்போது வரை கரூர் செல்லவில்லை. அதிமுகவில் சாதாரண ஒரு தொண்டருக்கு அடிபட்டால் கூட உடனடியாக சென்று பார்க்கிறோம். கரூரில் இருந்து சென்னை ஓடிய விஜய் ஒரு மாதம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அவரை ஆதரிக்கலாமா. விஜய் எனக்கு நண்பர்தான். ஆனால் இது சினிமா இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சினிமாவில் கேமரா முன்பு நடித்து செல்வது போல, விஜய் கரூர் சம்பவத்தையும் அணுகியுள்ளார் அவருக்கு வாக்களித்து திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்து விட வேண்டாம்” என்றார்.
கோடை சிறப்புத் தொகை : Bihar மாடலா திராவிட மாடலா? | RAHUL BJP DMK | TVK VIJAY | IPS Vikatan
கோடை சிறப்புத் தொகை : Bihar மாடலா திராவிட மாடலா? | RAHUL BJP DMK | TVK VIJAY | IPS Vikatan
விஜய் அரசியல்வாதி ஆகவே முடியாது! அடித்து சொல்லும் கோடங்கி
விஜய் அரசியல்வாதி ஆகவே முடியாது! அடித்து சொல்லும் கோடங்கி
சந்தர்பவாததில் அதிமுக மற்றும் திமுக ? என்ன நடக்குது?
சந்தர்பவாததில் அதிமுக மற்றும் திமுக ? என்ன நடக்குது?
விஜய் அமைதியாக இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்!
விஜய் அமைதியாக இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்!
gen z விஜய் பக்கமா_ இது சந்தர்ப்பவாத அரசியல்
gen z விஜய் பக்கமா_ இது சந்தர்ப்பவாத அரசியல்
5,000 ரூபாய் அறிவிப்பு: `பென்'கொடுத்த அழுத்தம்; சீக்ரெட் வியூகம் அமைத்த அதிகாரி - செயலாக்கிய டீம்!
'இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்லாமல் அடுத்த 2 மாதம்… அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமைத்தொகை தவணைகளையும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும், கூடுதலாகக் கோடைக்காலச் செலவுகளை கருத்தில் கொண்டு, மேலும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்புத் தொகையும் சேர்த்து, இந்த பிப்ரவரி மாதம் 5 ஆயிரம் ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமை தொகையான ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்” என்று இன்று காலை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அவர் அறிவிக்கும் முன்பே அந்த தொகை பெண்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட, இந்த அறிவிப்பு தி.மு.க-வுக்கு தேர்தல் கால திருப்புமுனையாக அமையும் என அக்கட்சி தரப்பு முழுமையாக நம்புகிறது. ஸ்டாலின் | 5,000 ரூபாய் அறிவிப்பு பிப்ரவரி 17-ம் தேதி அன்று தமிழக அரசின் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படுவதால் இடைக்கால பட்ஜெட்டாகவே கருதப்படும். இந்த பட்ஜெட்டில் தேர்தலை மனதில் கொண்டு, பல்வேறு புதிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக மாதாந்திர மகளிர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து உயர்த்தும் அறிவிப்பு வரும் என்றே தலைமை செயலகத்தில் பேச்சு இருந்தது. இந்நிலையில் தான் 13-ம் தேதி காலை மகளிர் உதவித்தொகை பெறும் வங்கி கணக்குகளுக்கு 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதோடு இது குறித்து முதல்வர் பேசிய வீடியோவும் வெளியானது. ரகசிய திட்டம் ஏன்? மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளும் அப்செட்டாகி உள்ளார்கள். தேர்தலை மனதில் வைத்து தி.மு.க அரசு இப்படி திட்டத்தை கையில் எடுப்பது தெரிந்தால், நீதிமன்றத்தின் மூலம் இதற்கு தடையாணை பெற்றுவிடுவார்கள் என்று பணம் வங்கி கணக்கிற்கு வரும் வரை இந்த விசயம் லீக் ஆகாமல் அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள். இதுகுறித்து தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “அரசு புதிதாக எந்த திட்டத்தை அறிவிக்க இருந்தாலும், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் தரப்பில் அது குறித்த ஆலோசனைகள் நடந்தேறும். அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடக்கும் போதே அந்த விவகாரம் எதிர்கட்சிகளின் காதுக்கும் சென்றுவிடும். ஸ்டாலின் | 5,000 ரூபாய் அறிவிப்பு சமீபத்தில் இந்த மகளிர் உதவித்தொகையை அதிகரிக்கும் அறிவிப்பை சட்டமன்றத்தில் அறிவிக்க இருந்தார் முதல்வர். அந்த அறிவிப்பை வெளியிடும் முன்பே, அதுகுறித்த தகவல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி காதுக்கு சென்றுவிட்டது. அதனால் அவர் அவசரமாக அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மாதம் இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இது முதல்வர் தரப்பை கடும் அப்செட்டாக்கிவிட்டது. நாம் தீட்டும் திட்டம் எதிர்கட்சியினர் அறிந்து அறிவிப்பாக அவர்கள் வெளியிடுகிறார்களே? என்று அதிகாரிகளிடம் கடித்துக்கொண்டார அதன்பிறகே இந்த ஐயாயிரம் ரூபாய் குறித்த அறிவிப்பு வெளியே போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளது அதிகாரிகள் தரப்பு. இதற்கு மாஸ்டர் மைன்ட்டாக இருந்தவர் முதல்வரின் நம்பிக்கைகுரிய அதிகாரியான நிதித்துறையை சேர்ந்தவர் தான் என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின், மகளிரை கவரும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என்று சொன்னதும், அதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனையில் இறங்கினார்கள். மற்றொருபுறம், தமிழகத்தின் நிதி நிலை ஏற்கனவே கடனில் இருக்கிறது என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. கடனுக்காக திட்டங்களை எதுவும் நிறுத்த வேண்டாம் என்பதில் அதிகாரி உறுதியாக இருந்துள்ளாராம். தற்போது ஆயிரம் ரூபாய் என்று மாதத்திற்கு 1கோடியே முப்பது லட்சம் பேருக்கு வழங்குவதற்கு ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய்கும் அதிகமாக செலவாகிறது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரம் இதை 2000 ரூபாயாக அதிகரித்தால் அந்த நிதி சுமையை சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். இதையெல்லாம் நிதித்துறை தீவிரமாக ஆலோசித்து வந்தது. ஸ்டாலின் | 5,000 ரூபாய் அறிவிப்பு பென் நிறுவனம் கொடுத்த அழுத்தம் மற்றொருபுறம், தி.மு.க வுக்கு ஆதரவாக வியூகம் வகுத்து வரும் பென் நிறுவனம் இரண்டாயிரம் ரூபாய் உயர்த்தும் அறிவிப்பு ஒருபுறம் இருக்கட்டும், பெண்களுக்கு கணிசமான ஒரு தொகையை தேர்தலுக்கு முன்பாக கொடுத்துவிட வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்திற்கு அழுத்தம் கொடுத்தது. பீகார் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றிக்கு அந்த மாநில பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பத்தாயிரம் ரூபாய் பெரும் பங்கு வகித்தது. அதே பாணியை தி.மு.கவும் கையில் எடுக்க வேண்டும் என பென் நிறுவனம் திட்டத்தை வகுத்துக் கொடுத்தது. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000 இந்நிலையில் தான் முதல்வரிடம் ஆளுநர் உரைக்கு மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முடிந்தவுடன் நிதித்துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, `5000 ரூபாய் ஒரே கட்டமாக வழங்கிவிடலாம். 1 கோடியே 30 லட்சம் பயனாளிகளுக்கு ஒரே நாளில் இத் தொகையை செலுத்த அரசுக்கு 6,500 கோடி ரூபாய் வேண்டும்' என்கிற விவரங்களை கூறியிருக்கிறார். இந்த பணத்தை எந்த துறையிலிருந்து சரிக்கட்ட முடியும் என்கிற ஆலோசனையும் அதன்பிறகு நடந்துள்ளது. இதற்கு முதல்வர் ஒப்புதல் கிடைத்தவுடன், உடனடியாக களத்தில் இறங்கினார் அதிகாரி. தனக்கு நம்பகமாக நிதித்துறையின் டீமை மட்டும் வைத்து இது குறித்த திட்ட அறிக்கை தயார் செய்து, கடந்த வாரம் முதல்வரிடம் ஒப்புதல் பெற்று விட்டனர். வெள்ளிக்கிழமை அன்று வங்கி கணக்கில் போட்டால், உடனடியாக யாரும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என முதல்வரிடம் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். மற்றொருபுறம் இத்திட்டம் அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே இந்த திட்டம் குறித்த வீடியோ சூட்டை பென் நிறுவனம் நடத்தி முடித்துவிட்டது. ஆனால் எந்த பக்கமும் தகவல் கசியாமல் இதனை செய்து முடித்து எதிர்க்கட்சி தரப்புகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துது திமுக தரப்பு. இது தேர்தலில் கை கொடுக்குமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்து விடும்.! மகளிருக்கு ரூ.5,000: தோல்வி உறுதி என்று தெரிந்ததால், ஆட்சியைத் தக்கவைக்க..! - ஜெயக்குமார் காட்டம்
சீமான் வெற்றி பெறாததற்கு காரணம் என்ன_
சீமான் வெற்றி பெறாததற்கு காரணம் என்ன_
Vijay: தவெக தலைவர் விஜய்-ன் சேலம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் | Photo Album
மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது
Vijay: தவெக தலைவர் விஜய்-ன் சேலம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் | Photo Album
மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது மக்கள் சந்திப்பு நடைபெற்றது
அதிரடியாக அறிவித்த அண்ணாமலை! இது தான் காரணமா_
அதிரடியாக அறிவித்த அண்ணாமலை! இது தான் காரணமா_
நான் முடிவு பண்ணிட்டேன்! 2026 தேர்தலில் இது தான்
நான் முடிவு பண்ணிட்டேன்! 2026 தேர்தலில் இது தான்
Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4 கையெழுத்துகள்
இன்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார் இந்திய பிரதமர் மோடி. இந்த அலுவலகத்திற்கு 'சேவா தீர்த்' என்ற பெயரிடப்பட்டுள்ளது. சேவா தீர்த்தின் பொன்மொழியாக, 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. சேவா தீர்த் பகுதியில் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகங்கள், தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்தின் அலுவலகங்கள் ஆகியவை ஒன்றாக அமைந்திருக்கும். இதுவே இந்தப் புதிய மாற்றத்தின் சிறப்பம்சம். மோடி 'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன. இதனால், பல்வேறு நடைமுறைகள் இருந்தன. இதை சரிசெய்யவும்... அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை எளிதாக்கவும் இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது. புதிதாக திறந்துள்ள சேவா தீர்த்தில் நான்கு முக்கிய கையெழுத்துகளைப் போட்டுள்ளார் மோடி... 1. PM RAHAT திட்டம் - இந்தத் திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் காயம்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் சிகிச்சை இலவசம். 2. லட்சாதிபதி தீதி டார்கெட் - 2029-ம் ஆண்டிற்குள் 6 கோடி பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்க வேண்டும். 3. விவசாயக் கட்டமைப்பு நிதி: இந்த நிதி ரூ.1 லட்சம் கோடியில் இருந்து ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 4. ஸ்டார்ட் அப் இந்தியா நிதிகளின் நிதி: புதிய தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிதாக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் - என்ன காரணம்? இது தொடருமா?
2026 தேமுதிக மற்றும் OPS யார் கூட்டணியில்_
2026 தேமுதிக மற்றும் OPS யார் கூட்டணியில்_
அரசியலில் இதுவும் நடக்குமா_ இது எப்படி சாத்தியம்_
அரசியலில் இதுவும் நடக்குமா_ இது எப்படி சாத்தியம்_
வாய்த்தகராறில் ராகுல் மற்றும் மத்திய அமைச்சர்!
வாய்த்தகராறில் ராகுல் மற்றும் மத்திய அமைச்சர்!
அஜித் குமார் தாய் கொடுத்த பேட்டி! நடந்தது இதுதான்
அஜித் குமார் தாய் கொடுத்த பேட்டி! நடந்தது இதுதான்
மகளிருக்கு ரூ.5000 : அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம், பாட்டம் - முதல்வருக்கு நன்றி தெரிவித்த பெண்கள்
மகளிருக்கு ரூ.5000 : அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம், பாட்டம் - முதல்வருக்கு நன்றி தெரிவித்த பெண்கள்
திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் விலகல்_ என்ன நடக்கிறது?
திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் விலகல்_ என்ன நடக்கிறது?
இது மாதிரி எந்த கட்சிலயாவது நடந்திருக்கா
இது மாதிரி எந்த கட்சிலயாவது நடந்திருக்கா
Seat பேரத்தில் பிரச்சன்னையா_ என்ன நடக்குது_
Seat பேரத்தில் பிரச்சன்னையா_ என்ன நடக்குது_
'ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம்'ஊடகவியலாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்' என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் யாரும் எதிர்பாராத நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசியலை தொடர்ந்து கவனித்து வரும் ஊடகவியலாளர்கள் பார்வையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை எப்படி பார்க்கிறார்கள் எனக் கேட்டோம். மூத்த ஊடகவியலாளர் விஜயசங்கர் `விமர்சிப்பது வர்க்கப் பாசிசம்' முதலில் முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருப்பது சலுகை அல்ல, பெண்களின் 'உரிமை'. சமூகத்தில் பெண்கள் செய்யும் 'கண்ணுக்குத் தெரியாத உழைப்பு' இதுவரை பொருளாதாரக் கணக்கீட்டில் சேர்க்கப்படவே இல்லை. ஒரு ஆண் வெளியில் சென்று உழைப்பதற்குத் தேவையான அனைத்து பின்னணி வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்கள் 'இரட்டைப் பணி' செய்கிறார்கள். அவர்களின் இந்த உழைப்பை அங்கீகரிக்கும் ஒரு சிறு முயற்சியே இந்த உரிமைத் தொகை. ஊடகவியலாளர் விஜய சங்கர் ஆனால், இந்தத் தொகையை உயர் நடுத்தர வர்க்கத்தினர் சோம்பேறித்தனம் என்கிறார்கள். ஆனால், 90% பயன் பெறுபவர்கள் கூலி வேலை செய்பவர்கள் மற்றும் ஏழைப் பெண்கள். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இந்திய முதலாளிகளுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளாக வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் வரி 30%-லிருந்து 25%-ஆகக் குறைக்கப்பட்டது. இதனால் விலைவாசி குறைந்ததா? வேலைவாய்ப்பு பெருகியதா? என்றால் இல்லை. முதலாளிகளுக்குக் கோடி கோடியாக அள்ளிக் கொடுப்பதை யாரும் 'லஞ்சம்' என்று சொல்வதில்லை. ஆனால், ஏழைப் பெண்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பதை விமர்சிப்பது ஒரு வர்க்கப் பாசிசம். இந்தப் பணம் கணவர்களால் பறிக்கப்பட்டு டாஸ்மாக்கிற்குச் செல்ல வாய்ப்புள்ளதா என்றால், விதிவிலக்குகளை வைத்து விதியை உருவாக்க முடியாது. ஒரு சில இடங்களில் தவறுகள் நடக்கலாம். அதற்காகத் திட்டத்தையே முடக்குவது, இதற்குத் தீர்வாகது. நேரடியாகப் பணமாகக் கொடுக்காமல் ரேஷன் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களாக வழங்கலாம் என்ற மாற்றுச் சிந்தனைகளும் ஆராயப்பட்டு வருகிறது. பிகார் தேர்தலின் போது ரூ.10,000 வழங்கியபோது மௌனமாக இருந்தவர்கள், இப்போது இங்கே விமர்சனம் செய்வது அவர்களின் வயிற்றெச்சல் என்பேன். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இதையேதான் செய்வார்கள். இது ஒரு பொருளாதார முன்னெடுப்பு என்பதைத் தாண்டி, பெண்களுக்கு ஒரு சிறு 'நிதி சுதந்திரத்தை' வழங்குகிறது. எனவே இது வரவேற்கத்தக்கது. ஊடகவியலாளர் ஜெயராணி `எந்த தரவும் இல்லாமல் ஆதரிக்க முடியாது' ஜெயராணி மாதாந்திரமாகக் கொடுக்க வேண்டிய தொகையை ஒட்டுமொத்தமாக தேர்தல் நெருங்கும் நேரத்தில், 5,000 ரூபாயாகக் கொடுப்பது எதற்காக என்பது வெளிப்படையானது. அரசு இவ்வளவு பெரிய தொகையை தனி நபர்களுக்குச் சலுகையாக வழங்குவதற்குப் பதிலாக குடிநீர் வசதி, தரமான சாலைகள், தெரு விளக்குகள், பேருந்து வசதி, போதை ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். விளிம்புநிலை சமூகக் குடும்பங்களில் பெரும்பாலான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். பெண்களின் வங்கிக் கணக்குக்கு வந்திருக்கும் இந்த 5,000 ரூபாய மீண்டும் அரசுக்கே டாஸ்மாக் வழியாக செல்லக் கூடும். கடந்த சில ஆண்டுகளில் கொடுக்கப்படும் இந்த தொகை காரணமாக பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா? பாதுகாப்பு கிடைத்துள்ளதா? என்பது பற்றி ஆய்வு ரீதியான எந்த தரவும் இல்லாமல் இதை ஆதரிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை மக்களின் வரிப்பணம் முழுக்க, முழுக்க அவர்களின் எல்லா வகையான உரிமைக்கும் பாதுகாப்புக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தேர்தலை மையப்படுத்திய வண்ணமயமான சலுகைகளுக்காக அல்ல. ஊடகவியலாளர் கவிதா முரளிதரன் `பெண்களுக்குக் கிடைக்கும் நிதி சுதந்திரம்' டெல்லியில் இலவசத் திட்டங்களுக்கு எதிராக பா.ஜ.க உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அந்தத் தடை வருவதற்கு முன்பே விடியற்காலையிலேயே பணத்தை வரவு வைத்தது தமிழக அரசின் மிகச் சாமர்த்தியமான ஒரு நடவடிக்கை. பா.ஜ.க இதை முடக்க நினைத்த நிலையில், அந்த முயற்சியை முதலமைச்சர் ஸ்டாலின் முன்கூட்டியே முறியடித்துள்ளார். இலவசங்கள் என்பதை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை, ஆனால் இது ஒரு 'வெல்பேர் மாடல்'. குறிப்பாக, விலையில்லாப் பயணம், மகளிர் உரிமைத் தொகை ஆகிய இரண்டும் பெண்களின் சுதந்திரத்தைப் பரவலாக்குகிறது. ஒரு பெண் யாரிடமும் கணக்குக் காட்டத் தேவையில்லாத, யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத ஒரு சிறு தொகை கையில் இருப்பது அவர்களின் சுயமரியாதைக்கு மிக முக்கியம். கவிதா முரளிதரன் இந்தப் பணம் முழுவதும் டாஸ்மாக்குக்குதான் செல்லும் எனப் பொதுவாகச் சொல்ல முடியாது. ஒரு சில இடங்களில் அப்படி நடக்கலாம், ஆனால் அதைக் காரணமாகச் சொல்லி அனைத்துப் பெண்களுக்குமான வாய்ப்பையும் மறுப்பது ஏற்புடையதல்ல. எனவே, குடும்பப் பொறுப்பை உணர்ந்த குடும்பத் தலைவிகள், அவ்வளவு எளிதாகத் தங்கள் பிள்ளைகளின் உணவிற்கான பணத்தைத் டாஸ்மாக்கிற்குத் தரமாட்டார்கள். ஆண்கள் பெரும் தொகை கிடைத்தால் உடனடியாகச் செலவு செய்வார்கள், ஆனால் பெண்களுக்கு லாங்-டெர்ம் யோசனை உண்டு. ரவீந்திரன் துரைசாமி இந்த 5,000 ரூபாயை வைத்துத் தங்கள் குடும்பத்திற்குத் தேவையானதைச் சிறப்பாகத் திட்டமிடுவார்கள். மாநிலத்தில் அடிப்படை வசதிகள் தேவைதான், அதேபோல் கடன் சுமையும் உள்ளது. ஆனால், அதைக் காரணம்காட்டிப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தைத் தள்ளிப்போட முடியாது. ஒரு சிறு அளவிலாவது பெண்களுக்குக் கிடைக்கும் இந்த நிதி சுதந்திரத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். மூத்த ஊடகவியலாளர் ரவீந்திரன் துறைசாமி 'இலவம்: போட்டியில் ஸ்டாலின் வெற்றி' தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகையை ரூ. 5,000-ஆக அதிரடியாக உயர்த்தி வழங்கியுள்ளது, தி.மு.க-வின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' (Master Stroke). தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் நகர்வு. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு இலவசத் திட்டங்கள் மூலம் மிகப்பெரிய மக்கள் ஆதரவு வளையம் இருந்தது. இப்போது மகளிர் உரிமைத் தொகை மூலம் அந்த வளையம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அவர் அரசியல் ரீதியாகத் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தி.மு.க அரசு ரூ1,000 கொடுத்து வந்த நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2,000 ரூபாய் தருவோம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், ஸ்டாலின் மூன்று மாத நிலுவைத் தொகை ரூ3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ2,000 எனச் சேர்த்து 5,000 ரூபாயை ஒரே நேரத்தில் வழங்கியது, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பதற வைத்துள்ளது. இந்த இலவம் வழங்கும் போட்டியில் ஸ்டாலின் தற்போதைய நிலையில் வெற்றி பெற்றுவிட்டார். பிகாரில் நிதிஷ் குமார், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அந்தந்த அரசுகள் இத்தகைய திட்டங்கள் மூலம் பலன் அடைந்திருக்கின்றன. தமிழகத்திலும் இந்தத் திட்டம் தி.மு.க-வுக்குத் தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும். மகளிர் உரிமைத் தொகை பெறும் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஸ்டாலினின் பக்கம் திரும்புவார்கள். ஸ்டாலின் இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று நினைப்பவர்கள் நாம் தமிழர் கட்சியின் சீமானை நோக்கி நகர வாய்ப்புள்ளது. ஏனென்றால், மற்ற அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் இலவசங்களை ஆதரிப்பவை தான். மத்திய மோடி அரசு இந்தத் திட்டத்தை முடக்கப் பார்க்கிறது என்ற முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஒரு தெளிவான அரசியல் யுக்தி. 'இவ்வளவு அவசரமாக நான் ஏன் இந்தப் பணத்தைக் கொடுக்கிறேன்' என்பதை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்கும், அவர்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை உருவாக்குவதற்கும் ஸ்டாலின் இதைப் பயன்படுத்தியுள்ளார். ஊடகவியலாளர் நந்தகுமார் `இலவசம் மாடல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானது' இந்த 5,000 ரூபாய் கிடைத்ததற்கான 'எல்லா புகழும் எடப்பாடிக்கே' போய்ச் சேரும். எடப்பாடி பழனிசாமி 2,000 ரூபாய் தருவோம் என்று சொன்னதால்தான், வேறு வழியில்லாமல் தி.மு.க அரசு இப்போது அவசரமாக அட்வான்ஸ் தொகையைக் கொடுத்துள்ளது. இந்த ஆட்சியில் தமிழகம் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளது என்று ஒருபுறம் கூறும் முதல்வர் ஸ்டாலின், மறுபுறம் 1.31 கோடி பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுத்தால்தான் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்? இதில் எது உண்மை? திராவிட மாடல் வளர்ந்திருக்கிறதா அல்லது மக்களை ஏழையாகவே வைத்திருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. நந்தகுமார் ஐந்தாண்டு காலத்தில் 5 லட்சம் கோடி கடனை வாங்கிவிட்டு, இப்போது ஓட்டுக்காகப் பணத்தை வாரி வழங்குவது நீண்ட காலத்திற்குப் பயன் தராது. ஒரு நாளைக்கு வெறும் 31 ரூபாய் கொடுத்துவிட்டு, அதுதான் பெண்களின் உரிமையின் விலை என்று நிர்ணயிப்பது பெண்களை அவமானப்படுத்தும் செயல். 9.36 லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழக அரசு, கையில் காசு கொடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பணத்தைக் கொண்டு கிராமங்களில் தொழிலகங்களை உருவாக்கி பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, உற்பத்தியைப் பெருக்கும் கேப்பிட்டலாக மாற்றியிருக்கலாம். அதன்மூலம் பெண்கள் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிக்கும் நிலையை உருவாக்கியிருக்கலாம். காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகள் விலகிச் செல்லக்கூடும் என்ற அச்சத்திலும், எதிர்க்கட்சிகள் வலுப்பெற்று வருவதாலும், தி.மு.க இந்தத் தொகையை வழங்கியுள்ளது. இது சர்ப்ளஸ் பட்ஜெட்டில் இருந்து கொடுக்கப்படும் பணமல்ல, கடனாக வாங்கித் தேர்தலுக்காகக் கொடுக்கப்படும் லஞ்சம். பிகாரில் இதுபோலக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் தவறுதான். இலவசப் பணப்பரிமாற்ற மாடல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானது. இதில் உங்கள் கருத்து என்ன? கமென்ட்டில் பதிவிடுங்கள் மக்களே..! விஜய் : 'இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?' | மகளிருக்கு ரூ.5000
ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்' என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் யாரும் எதிர்பாராத நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசியலை தொடர்ந்து கவனித்து வரும் ஊடகவியலாளர்கள் பார்வையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை எப்படி பார்க்கிறார்கள் எனக் கேட்டோம். மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் `விமர்சிப்பது வர்க்கப் பாசிசம்' முதலில் முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருப்பது சலுகை அல்ல, பெண்களின் 'உரிமை'. சமூகத்தில் பெண்கள் செய்யும் 'கண்ணுக்குத் தெரியாத உழைப்பு' இதுவரை பொருளாதாரக் கணக்கீட்டில் சேர்க்கப்படவே இல்லை. ஒரு ஆண் வெளியில் சென்று உழைப்பதற்குத் தேவையான அனைத்து பின்னணி வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்கள் 'இரட்டைப் பணி' செய்கிறார்கள். அவர்களின் இந்த உழைப்பை அங்கீகரிக்கும் ஒரு சிறு முயற்சியே இந்த உரிமைத் தொகை. ஊடகவியலாளர் விஜய சங்கர் ஆனால், இந்தத் தொகையை உயர் நடுத்தர வர்க்கத்தினர் சோம்பேறித்தனம் என்கிறார்கள். ஆனால், 90% பயன் பெறுபவர்கள் கூலி வேலை செய்பவர்கள் மற்றும் ஏழைப் பெண்கள். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இந்திய முதலாளிகளுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளாக வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் வரி 30%-லிருந்து 25%-ஆகக் குறைக்கப்பட்டது. இதனால் விலைவாசி குறைந்ததா? வேலைவாய்ப்பு பெருகியதா? என்றால் இல்லை. முதலாளிகளுக்குக் கோடி கோடியாக அள்ளிக் கொடுப்பதை யாரும் 'லஞ்சம்' என்று சொல்வதில்லை. ஆனால், ஏழைப் பெண்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பதை விமர்சிப்பது ஒரு வர்க்கப் பாசிசம். இந்தப் பணம் கணவர்களால் பறிக்கப்பட்டு டாஸ்மாக்கிற்குச் செல்ல வாய்ப்புள்ளதா என்றால், விதிவிலக்குகளை வைத்து விதியை உருவாக்க முடியாது. ஒரு சில இடங்களில் தவறுகள் நடக்கலாம். அதற்காகத் திட்டத்தையே முடக்குவது, இதற்குத் தீர்வாகது. நேரடியாகப் பணமாகக் கொடுக்காமல் ரேஷன் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களாக வழங்கலாம் என்ற மாற்றுச் சிந்தனைகளும் ஆராயப்பட்டு வருகிறது. பிகார் தேர்தலின் போது ரூ.10,000 வழங்கியபோது மௌனமாக இருந்தவர்கள், இப்போது இங்கே விமர்சனம் செய்வது அவர்களின் வயிற்றெச்சல் என்பேன். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இதையேதான் செய்வார்கள். இது ஒரு பொருளாதார முன்னெடுப்பு என்பதைத் தாண்டி, பெண்களுக்கு ஒரு சிறு 'நிதி சுதந்திரத்தை' வழங்குகிறது. எனவே இது வரவேற்கத்தக்கது. பத்திரிகையாளர் ஜெயராணி `எந்த தரவும் இல்லாமல் ஆதரிக்க முடியாது' ஜெயராணி மாதாந்திரமாகக் கொடுக்க வேண்டிய தொகையை ஒட்டுமொத்தமாக தேர்தல் நெருங்கும் நேரத்தில், 5,000 ரூபாயாகக் கொடுப்பது எதற்காக என்பது வெளிப்படையானது. அரசு இவ்வளவு பெரிய தொகையை தனி நபர்களுக்குச் சலுகையாக வழங்குவதற்குப் பதிலாக குடிநீர் வசதி, தரமான சாலைகள், தெரு விளக்குகள், பேருந்து வசதி, போதை ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். விளிம்புநிலை சமூகக் குடும்பங்களில் பெரும்பாலான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். பெண்களின் வங்கிக் கணக்குக்கு வந்திருக்கும் இந்த 5,000 ரூபாய மீண்டும் அரசுக்கே டாஸ்மாக் வழியாக செல்லக் கூடும். கடந்த சில ஆண்டுகளில் கொடுக்கப்படும் இந்த தொகை காரணமாக பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா? பாதுகாப்பு கிடைத்துள்ளதா? என்பது பற்றி ஆய்வு ரீதியான எந்த தரவும் இல்லாமல் இதை ஆதரிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை மக்களின் வரிப்பணம் முழுக்க, முழுக்க அவர்களின் எல்லா வகையான உரிமைக்கும் பாதுகாப்புக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தேர்தலை மையப்படுத்திய வண்ணமயமான சலுகைகளுக்காக அல்ல. பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் `பெண்களுக்குக் கிடைக்கும் நிதி சுதந்திரம்' டெல்லியில் இலவசத் திட்டங்களுக்கு எதிராக பா.ஜ.க உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அந்தத் தடை வருவதற்கு முன்பே விடியற்காலையிலேயே பணத்தை வரவு வைத்தது தமிழக அரசின் மிகச் சாமர்த்தியமான ஒரு நடவடிக்கை. பா.ஜ.க இதை முடக்க நினைத்த நிலையில், அந்த முயற்சியை முதலமைச்சர் ஸ்டாலின் முன்கூட்டியே முறியடித்துள்ளார். இலவசங்கள் என்பதை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை, ஆனால் இது ஒரு 'வெல்பேர் மாடல்'. குறிப்பாக, விலையில்லாப் பயணம், மகளிர் உரிமைத் தொகை ஆகிய இரண்டும் பெண்களின் சுதந்திரத்தைப் பரவலாக்குகிறது. ஒரு பெண் யாரிடமும் கணக்குக் காட்டத் தேவையில்லாத, யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத ஒரு சிறு தொகை கையில் இருப்பது அவர்களின் சுயமரியாதைக்கு மிக முக்கியம். கவிதா முரளிதரன் இந்தப் பணம் முழுவதும் டாஸ்மாக்குக்குதான் செல்லும் எனப் பொதுவாகச் சொல்ல முடியாது. ஒரு சில இடங்களில் அப்படி நடக்கலாம், ஆனால் அதைக் காரணமாகச் சொல்லி அனைத்துப் பெண்களுக்குமான வாய்ப்பையும் மறுப்பது ஏற்புடையதல்ல. எனவே, குடும்பப் பொறுப்பை உணர்ந்த குடும்பத் தலைவிகள், அவ்வளவு எளிதாகத் தங்கள் பிள்ளைகளின் உணவிற்கான பணத்தைத் டாஸ்மாக்கிற்குத் தரமாட்டார்கள். ஆண்கள் பெரும் தொகை கிடைத்தால் உடனடியாகச் செலவு செய்வார்கள், ஆனால் பெண்களுக்கு லாங்-டெர்ம் யோசனை உண்டு. ரவீந்திரன் துரைசாமி இந்த 5,000 ரூபாயை வைத்துத் தங்கள் குடும்பத்திற்குத் தேவையானதைச் சிறப்பாகத் திட்டமிடுவார்கள். மாநிலத்தில் அடிப்படை வசதிகள் தேவைதான், அதேபோல் கடன் சுமையும் உள்ளது. ஆனால், அதைக் காரணம்காட்டிப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தைத் தள்ளிப்போட முடியாது. ஒரு சிறு அளவிலாவது பெண்களுக்குக் கிடைக்கும் இந்த நிதி சுதந்திரத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துறைசாமி 'இலவசம்: போட்டியில் ஸ்டாலின் வெற்றி' தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகையை ரூ. 5,000-ஆக அதிரடியாக உயர்த்தி வழங்கியுள்ளது, தி.மு.க-வின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' (Master Stroke). தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் நகர்வு. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு இலவசத் திட்டங்கள் மூலம் மிகப்பெரிய மக்கள் ஆதரவு வளையம் இருந்தது. இப்போது மகளிர் உரிமைத் தொகை மூலம் அந்த வளையம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அவர் அரசியல் ரீதியாகத் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தி.மு.க அரசு ரூ1,000 கொடுத்து வந்த நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2,000 ரூபாய் தருவோம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், ஸ்டாலின் மூன்று மாத நிலுவைத் தொகை ரூ3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ2,000 எனச் சேர்த்து 5,000 ரூபாயை ஒரே நேரத்தில் வழங்கியது, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பதற வைத்துள்ளது. இந்த இலவம் வழங்கும் போட்டியில் ஸ்டாலின் தற்போதைய நிலையில் வெற்றி பெற்றுவிட்டார். பிகாரில் நிதிஷ் குமார், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அந்தந்த அரசுகள் இத்தகைய திட்டங்கள் மூலம் பலன் அடைந்திருக்கின்றன. தமிழகத்திலும் இந்தத் திட்டம் தி.மு.க-வுக்குத் தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும். மகளிர் உரிமைத் தொகை பெறும் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஸ்டாலினின் பக்கம் திரும்புவார்கள். ஸ்டாலின் இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று நினைப்பவர்கள் நாம் தமிழர் கட்சியின் சீமானை நோக்கி நகர வாய்ப்புள்ளது. ஏனென்றால், மற்ற அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் இலவசங்களை ஆதரிப்பவை தான். மத்திய மோடி அரசு இந்தத் திட்டத்தை முடக்கப் பார்க்கிறது என்ற முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஒரு தெளிவான அரசியல் யுக்தி. 'இவ்வளவு அவசரமாக நான் ஏன் இந்தப் பணத்தைக் கொடுக்கிறேன்' என்பதை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்கும், அவர்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை உருவாக்குவதற்கும் ஸ்டாலின் இதைப் பயன்படுத்தியுள்ளார். பத்திரிகையாளர் நந்தகுமார் `இலவசம் மாடல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானது' இந்த 5,000 ரூபாய் கிடைத்ததற்கான 'எல்லா புகழும் எடப்பாடிக்கே' போய்ச் சேரும். எடப்பாடி பழனிசாமி 2,000 ரூபாய் தருவோம் என்று சொன்னதால்தான், வேறு வழியில்லாமல் தி.மு.க அரசு இப்போது அவசரமாக அட்வான்ஸ் தொகையைக் கொடுத்துள்ளது. இந்த ஆட்சியில் தமிழகம் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளது என்று ஒருபுறம் கூறும் முதல்வர் ஸ்டாலின், மறுபுறம் 1.31 கோடி பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுத்தால்தான் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்? இதில் எது உண்மை? திராவிட மாடல் வளர்ந்திருக்கிறதா அல்லது மக்களை ஏழையாகவே வைத்திருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. நந்தகுமார் ஐந்தாண்டு காலத்தில் 5 லட்சம் கோடி கடனை வாங்கிவிட்டு, இப்போது ஓட்டுக்காகப் பணத்தை வாரி வழங்குவது நீண்ட காலத்திற்குப் பயன் தராது. ஒரு நாளைக்கு வெறும் 31 ரூபாய் கொடுத்துவிட்டு, அதுதான் பெண்களின் உரிமையின் விலை என்று நிர்ணயிப்பது பெண்களை அவமானப்படுத்தும் செயல். 9.36 லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழக அரசு, கையில் காசு கொடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பணத்தைக் கொண்டு கிராமங்களில் தொழிலகங்களை உருவாக்கி பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, உற்பத்தியைப் பெருக்கும் கேப்பிட்டலாக மாற்றியிருக்கலாம். அதன்மூலம் பெண்கள் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிக்கும் நிலையை உருவாக்கியிருக்கலாம். காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகள் விலகிச் செல்லக்கூடும் என்ற அச்சத்திலும், எதிர்க்கட்சிகள் வலுப்பெற்று வருவதாலும், தி.மு.க இந்தத் தொகையை வழங்கியுள்ளது. இது சர்ப்ளஸ் பட்ஜெட்டில் இருந்து கொடுக்கப்படும் பணமல்ல, கடனாக வாங்கித் தேர்தலுக்காகக் கொடுக்கப்படும் லஞ்சம். பிகாரில் இதுபோலக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் தவறுதான். இலவசப் பணப்பரிமாற்ற மாடல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானது. இதில் உங்கள் கருத்து என்ன? கமென்ட்டில் பதிவிடுங்கள் மக்களே..! விஜய் : 'இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?' | மகளிருக்கு ரூ.5000
`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ - எடப்பாடி பழனிசாமி
தி ருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் பேசியதாவது, `` `சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது வடிகட்டிய பொய். ஏற்கெனவே 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் உரிமைத் தொகை வழங்கப்பட்டபோது, இப்போது மட்டும் எப்படி நிறுத்த முடியும்? தோல்வி பயம் காரணமாக, அதாவது `வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தோற்றுவிடுவோம்’ என்ற காரணத்தினால், ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதுவும், குடும்பத் தலைவிக்கு பிப்ரவரி மாத உரிமைத்தொகை தானாக கிடைக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் உரிமைத்தொகை கிடைத்துவிடும். இருந்தாலும், இந்த மூன்று மாதத் தொகையையும் முன்பணமாகக் கொடுத்து, அதோடு கோடைக்கால சிறப்புத் தொகுப்பு ஒன்றையும் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இப்படிப்பட்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் ஸ்டாலின். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி இதற்கு முன்பு 2022, 2023, 2024, 2025 ஆம் ஆண்டுகளிலும் கோடைக்காலம் வந்தது. ஆனால், தேர்தல் நடக்கின்ற 2026 ஆம் ஆண்டில் மட்டும் ஸ்டாலினுக்குக் கோடைக்காலம் எப்படிக் கண்ணுக்குத் தெரிந்தது? இது முழுக்க முழுக்கத் தேர்தலை மையமாகக்கொண்டு அறிவிக்கப்பட்டது. உரிமைத் தொகைப் பெறுகின்ற குடும்பத் தலைவிகள் படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க சார்பாக ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், `திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், 27 மாதகாலம் அந்த உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்திய பிறகே 28-வது மாதத்தில்தான் உரிமைத் தொகை கொடுக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம், அந்தப் பெண்கள் பாதிக்கப்படமாட்டார்களா? ஆக, வேண்டுமென்றே திட்டமிட்டு, தேர்தலை மையமாகக்கொண்டு அந்த பெண்களின் குடும்ப வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் அவர்களே பொய் சொன்னாலும் பொருந்துகிற மாதிரியும், மக்கள் நம்புகிற மாதிரியும் சொல்லுங்கள். மாணவர்களின் திறமையை மேலும் வலுப்படுத்துவதற்கும், விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அம்மாவின் சிந்தனையில் உதித்த அற்புதமான திட்டம்தான் லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 52.35 லட்சம் பேருக்கு நாங்கள் லேப்டாப் கொடுத்தோம். இந்த ஆட்சி வந்தபிறகு அந்தத் திட்டத்தை அப்படியே முடக்கிவிட்டார்கள். இப்போது, இளைஞர்களின் வாக்குகள் தேவை என்பதாலும், ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாலும் அவசர அவசரமாக கல்லூரி மாணவர்களுக்கு இப்போது லேப்டாப் கொடுக்கிறார்கள். லேப்டாப் கொடுத்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், எப்போது கொடுத்திருக்க வேண்டும். 2025-ல் கல்லூரி திறக்கின்றபோதே கொடுத்திருக்க வேண்டும். உரிய நேரத்தில் கொடுக்காததால் உபயோகமில்லாமல் போய்விட்டது. அ.தி.மு.க ஆட்சி மலர்ந்த உடனே, கனிமவளக் கொள்ளையில் யார் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ, அதற்குத் துணைப்போன அதிகாரிகள் மீதெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க 31 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த கட்சி. பொன்விழா கண்ட கட்சி. இன்றைக்குத் தமிழகம் இந்தியாவிலேயே இந்த அளவுக்கு உயர்ந்த நிலைக்கு வருவதற்குக் காரணமே அ.தி.மு.க தான். அ.தி.மு.க ஆட்சியில் எத்தனைக் கல்லூரிகள் திறந்திருக்கிறோம். எத்தனை மாவட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். இப்படி, எல்லா வகையிலும் அ.தி.மு.க ஆட்சியில்தான் நாட்டு மக்களுக்கு நன்மைக் கிடைத்திருக்கிறது. ஸ்டாலின் விஜய்க்கு என்னத் தெரியும்? ஒருப் பிரச்னை நடந்தது. 72 நாள்கள் வீட்டை விட்டே வெளியில் வரவில்லை. ஒருத் தலைவன் என்றால் பதில் சொல்லியாக வேண்டும். ஒருக் கட்சித் தொடங்கிவிட்டால், நிருபர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும், மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது அந்தக் கட்சித் தலைவரின் கடமை. அந்தக் கடமையைச் செய்தாரா விஜய்? 15 நாள்கள் அலுவலகத்தையே மூடிவிட்டுச் சென்றுவிட்டார். அப்புறம் எங்குப்போய் கட்சி நடத்தி, மக்களுக்கு நன்மைச் செய்யப்போகிறார். ஒருப் பிரச்னையை சந்திக்கக்கூடத் திறன் இல்லாதவர் விஜய். நாங்கள் யாரையும் குறைச்சொல்லவில்லை. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். மக்களைச் சந்திக்கலாம். மக்கள்தான் எஜமானவர்கள். மக்கள் கொடுக்கின்ற தீர்ப்பே இறுதியானது. எங்களைப் பொறுத்தவரை நிறையச் செய்திருக்கிறோம். நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு மக்களிடம்போய் சொல்கிறோம். நாங்கள் இரண்டு கட்டமாக கொடுத்திருக்கின்ற தேர்தல் அறிவிப்புகளைப் பார்த்து பயந்துதான் ஸ்டாலின் இப்போது விசித்தரமான அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்’’ என்றார் எடப்பாடி பழனிசாமி.
`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ - எடப்பாடி பழனிசாமி
தி ருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் பேசியதாவது, `` `சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது வடிகட்டிய பொய். ஏற்கெனவே 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் உரிமைத் தொகை வழங்கப்பட்டபோது, இப்போது மட்டும் எப்படி நிறுத்த முடியும்? தோல்வி பயம் காரணமாக, அதாவது `வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தோற்றுவிடுவோம்’ என்ற காரணத்தினால், ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதுவும், குடும்பத் தலைவிக்கு பிப்ரவரி மாத உரிமைத்தொகை தானாக கிடைக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் உரிமைத்தொகை கிடைத்துவிடும். இருந்தாலும், இந்த மூன்று மாதத் தொகையையும் முன்பணமாகக் கொடுத்து, அதோடு கோடைக்கால சிறப்புத் தொகுப்பு ஒன்றையும் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இப்படிப்பட்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் ஸ்டாலின். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி இதற்கு முன்பு 2022, 2023, 2024, 2025 ஆம் ஆண்டுகளிலும் கோடைக்காலம் வந்தது. ஆனால், தேர்தல் நடக்கின்ற 2026 ஆம் ஆண்டில் மட்டும் ஸ்டாலினுக்குக் கோடைக்காலம் எப்படிக் கண்ணுக்குத் தெரிந்தது? இது முழுக்க முழுக்கத் தேர்தலை மையமாகக்கொண்டு அறிவிக்கப்பட்டது. உரிமைத் தொகைப் பெறுகின்ற குடும்பத் தலைவிகள் படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க சார்பாக ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், `திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், 27 மாதகாலம் அந்த உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்திய பிறகே 28-வது மாதத்தில்தான் உரிமைத் தொகை கொடுக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம், அந்தப் பெண்கள் பாதிக்கப்படமாட்டார்களா? ஆக, வேண்டுமென்றே திட்டமிட்டு, தேர்தலை மையமாகக்கொண்டு அந்த பெண்களின் குடும்ப வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் அவர்களே பொய் சொன்னாலும் பொருந்துகிற மாதிரியும், மக்கள் நம்புகிற மாதிரியும் சொல்லுங்கள். மாணவர்களின் திறமையை மேலும் வலுப்படுத்துவதற்கும், விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அம்மாவின் சிந்தனையில் உதித்த அற்புதமான திட்டம்தான் லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 52.35 லட்சம் பேருக்கு நாங்கள் லேப்டாப் கொடுத்தோம். இந்த ஆட்சி வந்தபிறகு அந்தத் திட்டத்தை அப்படியே முடக்கிவிட்டார்கள். இப்போது, இளைஞர்களின் வாக்குகள் தேவை என்பதாலும், ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாலும் அவசர அவசரமாக கல்லூரி மாணவர்களுக்கு இப்போது லேப்டாப் கொடுக்கிறார்கள். லேப்டாப் கொடுத்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், எப்போது கொடுத்திருக்க வேண்டும். 2025-ல் கல்லூரி திறக்கின்றபோதே கொடுத்திருக்க வேண்டும். உரிய நேரத்தில் கொடுக்காததால் உபயோகமில்லாமல் போய்விட்டது. அ.தி.மு.க ஆட்சி மலர்ந்த உடனே, கனிமவளக் கொள்ளையில் யார் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ, அதற்குத் துணைப்போன அதிகாரிகள் மீதெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க 31 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த கட்சி. பொன்விழா கண்ட கட்சி. இன்றைக்குத் தமிழகம் இந்தியாவிலேயே இந்த அளவுக்கு உயர்ந்த நிலைக்கு வருவதற்குக் காரணமே அ.தி.மு.க தான். அ.தி.மு.க ஆட்சியில் எத்தனைக் கல்லூரிகள் திறந்திருக்கிறோம். எத்தனை மாவட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். இப்படி, எல்லா வகையிலும் அ.தி.மு.க ஆட்சியில்தான் நாட்டு மக்களுக்கு நன்மைக் கிடைத்திருக்கிறது. ஸ்டாலின் விஜய்க்கு என்னத் தெரியும்? ஒருப் பிரச்னை நடந்தது. 72 நாள்கள் வீட்டை விட்டே வெளியில் வரவில்லை. ஒருத் தலைவன் என்றால் பதில் சொல்லியாக வேண்டும். ஒருக் கட்சித் தொடங்கிவிட்டால், நிருபர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும், மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது அந்தக் கட்சித் தலைவரின் கடமை. அந்தக் கடமையைச் செய்தாரா விஜய்? 15 நாள்கள் அலுவலகத்தையே மூடிவிட்டுச் சென்றுவிட்டார். அப்புறம் எங்குப்போய் கட்சி நடத்தி, மக்களுக்கு நன்மைச் செய்யப்போகிறார். ஒருப் பிரச்னையை சந்திக்கக்கூடத் திறன் இல்லாதவர் விஜய். நாங்கள் யாரையும் குறைச்சொல்லவில்லை. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். மக்களைச் சந்திக்கலாம். மக்கள்தான் எஜமானவர்கள். மக்கள் கொடுக்கின்ற தீர்ப்பே இறுதியானது. எங்களைப் பொறுத்தவரை நிறையச் செய்திருக்கிறோம். நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு மக்களிடம்போய் சொல்கிறோம். நாங்கள் இரண்டு கட்டமாக கொடுத்திருக்கின்ற தேர்தல் அறிவிப்புகளைப் பார்த்து பயந்துதான் ஸ்டாலின் இப்போது விசித்தரமான அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்’’ என்றார் எடப்பாடி பழனிசாமி.
TVK: விஜய்யின் சேலம் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சேலம், சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,000 பேர் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற சுராஜ் (35) என்ற நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. தவெக நிர்வாகிகள் கூட்டம் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றபோது சுராஜ் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார். பிறகு தவெக கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுராஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்தவர் மஹாராஷ்டிராவைப் பூர்விகமாகக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சேலம் பகுதியில் பட்டறையில் பணிபுரிந்து வந்த அவர், இன்று விஜய் சந்திப்புக் கூட்டத்துக்குச் சென்ற இடத்தில், இத்தகைய அசம்பாவிதம் நடந்திருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
TVK: விஜய்யின் சேலம் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சேலம், சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,000 பேர் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற சுராஜ் (35) என்ற நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. தவெக நிர்வாகிகள் கூட்டம் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றபோது சுராஜ் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார். பிறகு தவெக கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுராஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்தவர் மஹாராஷ்டிராவைப் பூர்விகமாகக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சேலம் பகுதியில் பட்டறையில் பணிபுரிந்து வந்த அவர், இன்று விஜய் சந்திப்புக் கூட்டத்துக்குச் சென்ற இடத்தில், இத்தகைய அசம்பாவிதம் நடந்திருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த'அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. அதன் கீழ், சில நடைமுறைகள் மாறும் அல்லவா? அப்படிப் பான் கார்டு எங்கெங்கு தேவை என்பதைப் பார்க்கலாம்... வாங்க... 1. முன்பு, ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் பான் கார்டு தேவை. ஆனால், இனி ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது 10 லட்சத்திற்கு மேல் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தால்தான் பான் கார்டு தேவை. பான் கார்டு 'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained 2. முன்பு, எந்த வாகனம் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் அவசியம். ஆனால், வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், நீங்கள் வாங்கும் வாகனத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்தைத் தாண்டினால் மட்டுமே பான் கார்டு அவசியம். மேலும், அதிக மதிப்புள்ள இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போதும் பான் கார்டு அவசியம். இதற்கு டிராக்டர்கள் மட்டும் விதிவிலக்கு. 3. புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ஹோட்டல், உணவகங்கள், அரங்குகள், ஈவென்ட் மேனேஜர்களுக்குக் கொடுக்கும் பேமென்ட் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும். தற்போதைய நடைமுறையில் பேமென்டில் ரூ.50,000 தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும். 4. ரியல் எஸ்டேட்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாகப் பெற்றாலோ பான் கார்டு தேவை. முன்பு, இந்த லிமிட் ரூ.10 லட்சமாக இருந்தது. 5. இனி அனைத்து காப்பீட்டுத் திட்டங்களுக்கும் பான் கார்டு கட்டாயம் தேவை. சந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் - என்ன காரணம்? இது தொடருமா?
'வரி வேண்டாம்'சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்'மிரட்டும் ட்ரம்ப் |Explained
'தன் கையே கண்ணைக் குத்திய கதை போலத் தான் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. உலக நாடுகளைத் தனக்குப் பணிய வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையிலெடுத்த அஸ்திரம் 'வரி'. இதற்கு ட்ரம்பின் 51-வது அமெரிக்க நாடான கனடா மட்டும் விதிவிலக்கு ஆகுமா என்ன? ஆம்... கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் கனடாப் பொருள்களுக்கு 35 சதவிகித வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிக வரிக்கு ட்ரம்ப் சொன்ன காரணம் - ஃபென்டனைல் போதைப் பொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. ட்ரம்ப் - மார்க் கார்னி சந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் - என்ன காரணம்? இது தொடருமா? சீனா, கனடா Vs அமெரிக்கா அடுத்ததாக, சீனா - கனடா முன்பு அவர்களுக்குள் இருந்த வர்த்தக பிணக்குகளை மாற்றி, சமரச ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டன. ஆனால், ட்ரம்ப்போ, 'சீனா உடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் போடுகிறது. இது நடந்தால் கனடா மீது 100 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று எச்சரித்திருந்தார். ஆனால், ட்ரம்பின் இந்தக் கூற்றிற்கு கனடாவின் பிரதமர் கார்னி, சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அதிக வரி, வர்த்தக தடைகள் குறித்து தான் பேசியிருக்கிறோம் என்று நாசூக்காக பேக் அடிக்க, 100 சதவிகித வரியில் இருந்து தப்பித்தது கனடா. இதெல்லாம் முன் கதை. இப்போதைய கதைக்கு வரலாம். நேற்று முன்தினம் (புதன்கிழமை - பிப்ரவரி 11), அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள கீழ் சபையில் கனடா மீதான ட்ரம்ப் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா ஒன்று கொண்டு வரப்பட்டது. ட்ரம்ப் போடும் வரி எல்லாமே அமெரிக்கா அவசர நிலை சட்டத்திற்குக் கீழ் கொண்டு வரப்படுவதாகும். கனடா மீதான வரியுமே அந்த வகை தான். இந்த வரிக்கு ஆதரவு தெரிவித்து 219 பேரும்... எதிர்ப்பு தெரிவித்து 211 பேரும் வாக்களித்திருந்தனர். அமெரிக்க நாடாளுமன்றம் Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா? இந்த வாக்கெடுப்பில் தான் ஒன்றைக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. 219 ஆதரவு வாக்குகளில் 6 வாக்குகள் ட்ரம்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. அதாவது, ட்ரம்பின் சொந்த கட்சியினரே அவரது வரிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மிரட்டல் ட்ரம்ப் என்றாலே அதிரடிதான். சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக வாக்களித்தால், சும்மா விட்டுவைப்பாரா என்ன? இந்த வாக்களிப்பிற்குப் பின் தனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு, எனக்கு எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் சமயத்தில் கடும் விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ரத்தாகாது! சரி... அதெல்லாம் இருக்கட்டும்... வரிக்கு எதிராக வாக்கெடுப்பில் பாசிட்டிவ் விஷயம் நடந்துள்ளது. அப்போது, கனடா மீதான வரி ரத்து செய்யப்பட்டுவிடுமா என்று கேட்டால், 'அது தான் இல்லை'. தற்போது இந்த வாக்கெடுப்பு கீழ் சபையான 'ஹவுஸ் ஆஃப் ரெப்ரஸ்டென்டேட்டிவ்ஸ்'-ல் தான் நடந்துள்ளது. அடுத்தது, இந்த வாக்கெடுப்பு மேல் சபையான செனட்டிற்கு செல்லும். அங்கேயும் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்குகள் குவிந்தால், அடுத்து அதிபர் அதாவது ட்ரம்ப்பிடம் செல்லும். அந்த மசோதாவில் கையெழுத்துப் போடவும், மறுக்கவும் ட்ரம்பிற்கே முழு உரிமை. ட்ரம்ப் நினைத்தால், இந்த மசோதாவை ரத்துக்கூடச் செய்யலாம். அவரிடம் Veto பவர் உள்ளது. ட்ரம்ப் சந்தையில் எப்போதுமே 'இது' ஒன்றுக்கு வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும்; ஃபோக்கஸ் பண்ணுங்க! செய்யக் கூடாது என்றால்? ஒருவேளை, ட்ரம்ப்பால் ரத்து செய்யப்பட்டு விடக் கூடாது என்றால், அந்த மசோதாவிற்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் வேண்டும். அதாவது, இப்போது இந்த மசோதாவிற்கு ஆதரவாக 290 வாக்குகள் கிடைத்திருந்தால், ட்ரம்பால் இந்த மசோதாவை ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால், தற்போதைய நிலை அப்படி இல்லை அல்லவா? அடுத்து என்ன நடக்கும்? இப்போது கீழ் சபையில் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து இந்த மசோதா செனட்டிற்குச் செல்லும். அங்கே 51 வாக்குகள் இருந்தாலே போதும். அடுத்தது அதிபரின் மேசைக்கு இந்த மசோதா செல்லும். ஆனால், இந்த வாக்குகள் எளிதாக கிடைத்துவிடும். ஏனெனில், ஏற்கெனவே ட்ரம்ப் வரிக்கு எதிரான மனநிலை தான் அங்கே நிலவி வருகிறது. மேலும், இரு முறை செனட்டில் வரிக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் பிறகு தான் காத்திருக்கிறது 'செக்' - ட்ரம்ப்பின் மேசை. ஒருவேளை, செனட்டைக் கடந்து ட்ரம்ப்பின் மேசைக்கு இந்த மசோதா சென்றால், அவரது முடிவு என்னவாக இருக்கும்? என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்! `பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A
'வரி வேண்டாம்'சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்'மிரட்டும் ட்ரம்ப் |Explained
'தன் கையே கண்ணைக் குத்திய கதை போலத் தான் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. உலக நாடுகளைத் தனக்குப் பணிய வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையிலெடுத்த அஸ்திரம் 'வரி'. இதற்கு ட்ரம்பின் 51-வது அமெரிக்க நாடான கனடா மட்டும் விதிவிலக்கு ஆகுமா என்ன? ஆம்... கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் கனடாப் பொருள்களுக்கு 35 சதவிகித வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிக வரிக்கு ட்ரம்ப் சொன்ன காரணம் - ஃபென்டனைல் போதைப் பொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. ட்ரம்ப் - மார்க் கார்னி சந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் - என்ன காரணம்? இது தொடருமா? சீனா, கனடா Vs அமெரிக்கா அடுத்ததாக, சீனா - கனடா முன்பு அவர்களுக்குள் இருந்த வர்த்தக பிணக்குகளை மாற்றி, சமரச ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டன. ஆனால், ட்ரம்ப்போ, 'சீனா உடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் போடுகிறது. இது நடந்தால் கனடா மீது 100 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று எச்சரித்திருந்தார். ஆனால், ட்ரம்பின் இந்தக் கூற்றிற்கு கனடாவின் பிரதமர் கார்னி, சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அதிக வரி, வர்த்தக தடைகள் குறித்து தான் பேசியிருக்கிறோம் என்று நாசூக்காக பேக் அடிக்க, 100 சதவிகித வரியில் இருந்து தப்பித்தது கனடா. இதெல்லாம் முன் கதை. இப்போதைய கதைக்கு வரலாம். நேற்று முன்தினம் (புதன்கிழமை - பிப்ரவரி 11), அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள கீழ் சபையில் கனடா மீதான ட்ரம்ப் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா ஒன்று கொண்டு வரப்பட்டது. ட்ரம்ப் போடும் வரி எல்லாமே அமெரிக்கா அவசர நிலை சட்டத்திற்குக் கீழ் கொண்டு வரப்படுவதாகும். கனடா மீதான வரியுமே அந்த வகை தான். இந்த வரிக்கு ஆதரவு தெரிவித்து 219 பேரும்... எதிர்ப்பு தெரிவித்து 211 பேரும் வாக்களித்திருந்தனர். அமெரிக்க நாடாளுமன்றம் Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா? இந்த வாக்கெடுப்பில் தான் ஒன்றைக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. 219 ஆதரவு வாக்குகளில் 6 வாக்குகள் ட்ரம்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. அதாவது, ட்ரம்பின் சொந்த கட்சியினரே அவரது வரிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மிரட்டல் ட்ரம்ப் என்றாலே அதிரடிதான். சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக வாக்களித்தால், சும்மா விட்டுவைப்பாரா என்ன? இந்த வாக்களிப்பிற்குப் பின் தனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு, எனக்கு எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் சமயத்தில் கடும் விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ரத்தாகாது! சரி... அதெல்லாம் இருக்கட்டும்... வரிக்கு எதிராக வாக்கெடுப்பில் பாசிட்டிவ் விஷயம் நடந்துள்ளது. அப்போது, கனடா மீதான வரி ரத்து செய்யப்பட்டுவிடுமா என்று கேட்டால், 'அது தான் இல்லை'. தற்போது இந்த வாக்கெடுப்பு கீழ் சபையான 'ஹவுஸ் ஆஃப் ரெப்ரஸ்டென்டேட்டிவ்ஸ்'-ல் தான் நடந்துள்ளது. அடுத்தது, இந்த வாக்கெடுப்பு மேல் சபையான செனட்டிற்கு செல்லும். அங்கேயும் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்குகள் குவிந்தால், அடுத்து அதிபர் அதாவது ட்ரம்ப்பிடம் செல்லும். அந்த மசோதாவில் கையெழுத்துப் போடவும், மறுக்கவும் ட்ரம்பிற்கே முழு உரிமை. ட்ரம்ப் நினைத்தால், இந்த மசோதாவை ரத்துக்கூடச் செய்யலாம். அவரிடம் Veto பவர் உள்ளது. ட்ரம்ப் சந்தையில் எப்போதுமே 'இது' ஒன்றுக்கு வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும்; ஃபோக்கஸ் பண்ணுங்க! செய்யக் கூடாது என்றால்? ஒருவேளை, ட்ரம்ப்பால் ரத்து செய்யப்பட்டு விடக் கூடாது என்றால், அந்த மசோதாவிற்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் வேண்டும். அதாவது, இப்போது இந்த மசோதாவிற்கு ஆதரவாக 290 வாக்குகள் கிடைத்திருந்தால், ட்ரம்பால் இந்த மசோதாவை ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால், தற்போதைய நிலை அப்படி இல்லை அல்லவா? அடுத்து என்ன நடக்கும்? இப்போது கீழ் சபையில் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து இந்த மசோதா செனட்டிற்குச் செல்லும். அங்கே 51 வாக்குகள் இருந்தாலே போதும். அடுத்தது அதிபரின் மேசைக்கு இந்த மசோதா செல்லும். ஆனால், இந்த வாக்குகள் எளிதாக கிடைத்துவிடும். ஏனெனில், ஏற்கெனவே ட்ரம்ப் வரிக்கு எதிரான மனநிலை தான் அங்கே நிலவி வருகிறது. மேலும், இரு முறை செனட்டில் வரிக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் பிறகு தான் காத்திருக்கிறது 'செக்' - ட்ரம்ப்பின் மேசை. ஒருவேளை, செனட்டைக் கடந்து ட்ரம்ப்பின் மேசைக்கு இந்த மசோதா சென்றால், அவரது முடிவு என்னவாக இருக்கும்? என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்! `பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A
TVK: `` விக்கிரவாண்டி மாநாட்டில் ஆட்சியில் பங்கு என குண்டு வீசி இருந்தேன்; அது இப்போ..! - விஜய்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை தவெக விஜய் நடத்தி வருகிறார். கடந்த 2ஆம் தேதி பனையூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார். தவெக விஜய் இந்நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெறுகிறது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,000 பேர் பங்கேற்று இருக்கின்றனர். மேடைக்கு வந்தடைந்த விஜய் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற இருக்கிறார். `அரசியலுக்கு வந்தது தப்பா?' - தவெக விஜய் விஜய் பேசுகையில், ``தைரியம்தான் எல்லாத்துக்கும் அடிப்படை. நம்மை குறைத்து மதிப்பிடும்போதுதான் நம்மை யார் என நிரூபித்துக் காண்பிப்பதற்கான உத்வேகம் பிறக்கும். விஜய்யே வீட்டை விட்டு வெளியே வா...பனையூரை விட்டு வெளியே வா என்கிறார்கள். என்னுடைய வீடு எங்கே இருக்கிறது தெரியுமா? இந்த தமிழ்நாடு மற்றவர்களுக்குதான் மாநிலம். தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு எனக்கு ஒரு வீடு. என் வீட்டில் 8 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் நான் உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கேன். இந்த விஜய் என்னங்க தப்பு பண்ணான். தன்னை நேசிச்ச மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தப்பா? நான் போய் மக்களை சந்திக்க உரிய இடம் கூட கொடுக்கமாட்டாங்க. இது என்னங்க நியாயங்க? என்றார். `வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்புங்க' விஜய், ``செல்பே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு. அதெல்லாம் வேலையே ஆகாது. வண்டி வண்டியா பணத்தை கொட்டுவாங்க, அத வாங்கிகோங்க. அதெல்லாம் உங்க பணம். வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்புங்க. வெறுப்பு அரசியல் பண்ண நான் வரல. மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியலுக்கு வந்திருக்கேன். அனுபவம் இல்லாதவர்கள் என்று தவெகவை விமர்சிக்கிறார்கள். உங்க அனுபவம் என்னனு சொல்லட்டுமா... கட்சி தொடங்கிய அண்ணாவை எம்.ஜி.ஆரை மறந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்துதான் உங்க அனுபவம். ஆமா எங்களுக்கு அனுபவம் இல்லை தான். கொள்ளை அடிக்க அனுபவம் இல்லை. சுட்டுப்போட்டாலும் அது வராது. என்றார், விஜய், ``அடுத்தவங்க ஆரம்பிச்ச கட்சியில அடுத்தவங்களோட அட்ரஸ்ல வாழ்றவங்க தனியா கட்சி ஆரம்பிச்சு 1% வாக்கையாவது வாங்க தகுதி இருக்கா? கட்சி ஆரம்பித்த அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும் இவர்கள் மறந்துவிட்டார்கள். நமக்கு அனுபவம் இல்லையாம். ஆம், நமக்கு கொள்ளையடிப்பதில் அனுபவமில்லைதான்..சரண்டர் ஆவதில் அனுபவம் இல்லைதான். நல்லாட்சி கொடுக்க மெத்தப் படித்த மேதாவிகள் தேவைகள் இல்லை. காமராஜர், எம்.ஜி.ஆர் போல என்னால் நல்லாட்சி கொடுக்க முடியும். ஆட்சிக்கு வந்த நான்கு வருஷதுக்கு அப்புறம் மக்கள் கனவை கேட்குறாரு முதல்வர். நான்கரை ஆண்டுகள் முடிந்த பிறகு வீடு வீடாக கதவை தட்டி 'உங்களின் கனவு என்ன?' என கேட்கிறார்கள். மக்களின் கனவு என்னவென உங்களுக்கு தெரியுமா சி.எம் சார்? 2019, 2021,2024 என மக்கள் உங்களை நம்பி வாக்களித்ததற்கு மக்கள் விரோத ஆட்சியை நடத்தினீர்களே. உங்களை தூக்கியெறிந்து விட்டு தவெகவை ஆட்சியில் அமர்த்துவதுதான் மக்களின் கனவு.. மக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தால் ஆசிரியர்கள், விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள் என அத்தனை தரப்பும் எதற்காக போராடுகிறீர்கள்? என்றார். `கோவை மாணவிக்கு ஏன் பாதுகாப்பு இல்லை?' விஜய், ``முதல்வர் சொல்வதெல்லாம் அண்ட புழுகு, ஆகாச புழுகு. பெண்கள் எல்லா இடத்திலும் பாதுகாப்பாக இருக்கிறார்களாம். அப்படியெனில்,அண்ணா யுனிவர்சிட்டியில் பெண்ணுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை? கோவை மாணவிக்கு ஏன் பாதுகாப்பு இல்லை? முதலில் தமிழ்நாட்டுக்கு ஒரு டிஜிபியை போடுங்க சார். அப்போதாவது சட்டம் ஒழுங்கு சரியாகிறதா என பார்ப்போம். சேலம் மக்களே விஜய்யை நம்புறீங்களா? ஸ்டாலினை நம்புறீங்களா? ஒரு தேர்வை ஒழுங்கா நடத்த தெரியல. உலக நாடோ போட்டிப் போட போறங்களாமா? என்றார். ``அவ்ளோ தான். கதம் கதம் விஜய் பேசுகையில், ``ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயங்களை வாக்குறுதிகளாக தரமாட்டேன். நம்ம வாக்குறுதிகள் தயாராகிட்டு இருக்கு. தெளிவான தேர்தல் அறிக்கை தயராகி வருகிறது. அது ஏமாற்றம் அளிக்காத வகையில் இருக்கும். விஜய் ஒரு கட்சியை மட்டுமே எதிர்க்கிறார். விஜய் இன்னொரு கட்சியைப் பற்றி பேசுவதில்லை. என்கிறார்கள். இந்த தேர்தல் யாருக்கான தேர்தல்? சட்டமன்றத் தேர்தல் இது. மக்கள் விரோத திமுக வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல். அப்படியிருக்க மக்கள் ஏற்கனவே டெலீட் செய்த கட்சிகளைப் பற்றி ஏன் பேச வேண்டும்? நீங்க சொல்லுங்க திமுக வேண்டுமா இந்த விஜய் வேண்டுமா? என்று கேட்க தொண்டர்கள் விஜய் என்று சொல்ல, விஜய், ``அவ்ளோ தான். கதம் கதம் என்றார் `விக்கிரவாண்டி மாநாட்டில் ஒரு குண்டு வீசி இருந்தேன்' ``ஆட்சியில் பங்கு என விக்கிரவாண்டி மாநாட்டில் ஒரு குண்டு வீசி இருந்தேன். அந்த கருத்து இப்போது தமிழக அரசியலில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. சி.எம் சார் பதறி போய் இருக்கார். நம்மளோட நம்மை மக்கள் இருக்காங்க. இதுக்கு மேல என்ன வேணும். நம்பிக்கையா இருங்க. வெற்றி நிச்சயம். என்றார்.
TVK: `` விக்கிரவாண்டி மாநாட்டில் ஆட்சியில் பங்கு என குண்டு வீசி இருந்தேன்; அது இப்போ..! - விஜய்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை தவெக விஜய் நடத்தி வருகிறார். கடந்த 2ஆம் தேதி பனையூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார். தவெக விஜய் இந்நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெறுகிறது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,000 பேர் பங்கேற்று இருக்கின்றனர். மேடைக்கு வந்தடைந்த விஜய் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற இருக்கிறார். `அரசியலுக்கு வந்தது தப்பா?' - தவெக விஜய் விஜய் பேசுகையில், ``தைரியம்தான் எல்லாத்துக்கும் அடிப்படை. நம்மை குறைத்து மதிப்பிடும்போதுதான் நம்மை யார் என நிரூபித்துக் காண்பிப்பதற்கான உத்வேகம் பிறக்கும். விஜய்யே வீட்டை விட்டு வெளியே வா...பனையூரை விட்டு வெளியே வா என்கிறார்கள். என்னுடைய வீடு எங்கே இருக்கிறது தெரியுமா? இந்த தமிழ்நாடு மற்றவர்களுக்குதான் மாநிலம். தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு எனக்கு ஒரு வீடு. என் வீட்டில் 8 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் நான் உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கேன். இந்த விஜய் என்னங்க தப்பு பண்ணான். தன்னை நேசிச்ச மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தப்பா? நான் போய் மக்களை சந்திக்க உரிய இடம் கூட கொடுக்கமாட்டாங்க. இது என்னங்க நியாயங்க? என்றார். `வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்புங்க' விஜய், ``செல்பே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு. அதெல்லாம் வேலையே ஆகாது. வண்டி வண்டியா பணத்தை கொட்டுவாங்க, அத வாங்கிகோங்க. அதெல்லாம் உங்க பணம். வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்புங்க. வெறுப்பு அரசியல் பண்ண நான் வரல. மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியலுக்கு வந்திருக்கேன். அனுபவம் இல்லாதவர்கள் என்று தவெகவை விமர்சிக்கிறார்கள். உங்க அனுபவம் என்னனு சொல்லட்டுமா... கட்சி தொடங்கிய அண்ணாவை எம்.ஜி.ஆரை மறந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்துதான் உங்க அனுபவம். ஆமா எங்களுக்கு அனுபவம் இல்லை தான். கொள்ளை அடிக்க அனுபவம் இல்லை. சுட்டுப்போட்டாலும் அது வராது. என்றார், விஜய், ``அடுத்தவங்க ஆரம்பிச்ச கட்சியில அடுத்தவங்களோட அட்ரஸ்ல வாழ்றவங்க தனியா கட்சி ஆரம்பிச்சு 1% வாக்கையாவது வாங்க தகுதி இருக்கா? கட்சி ஆரம்பித்த அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும் இவர்கள் மறந்துவிட்டார்கள். நமக்கு அனுபவம் இல்லையாம். ஆம், நமக்கு கொள்ளையடிப்பதில் அனுபவமில்லைதான்..சரண்டர் ஆவதில் அனுபவம் இல்லைதான். நல்லாட்சி கொடுக்க மெத்தப் படித்த மேதாவிகள் தேவைகள் இல்லை. காமராஜர், எம்.ஜி.ஆர் போல என்னால் நல்லாட்சி கொடுக்க முடியும். ஆட்சிக்கு வந்த நான்கு வருஷதுக்கு அப்புறம் மக்கள் கனவை கேட்குறாரு முதல்வர். நான்கரை ஆண்டுகள் முடிந்த பிறகு வீடு வீடாக கதவை தட்டி 'உங்களின் கனவு என்ன?' என கேட்கிறார்கள். மக்களின் கனவு என்னவென உங்களுக்கு தெரியுமா சி.எம் சார்? 2019, 2021,2024 என மக்கள் உங்களை நம்பி வாக்களித்ததற்கு மக்கள் விரோத ஆட்சியை நடத்தினீர்களே. உங்களை தூக்கியெறிந்து விட்டு தவெகவை ஆட்சியில் அமர்த்துவதுதான் மக்களின் கனவு.. மக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தால் ஆசிரியர்கள், விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள் என அத்தனை தரப்பும் எதற்காக போராடுகிறீர்கள்? என்றார். `கோவை மாணவிக்கு ஏன் பாதுகாப்பு இல்லை?' விஜய், ``முதல்வர் சொல்வதெல்லாம் அண்ட புழுகு, ஆகாச புழுகு. பெண்கள் எல்லா இடத்திலும் பாதுகாப்பாக இருக்கிறார்களாம். அப்படியெனில்,அண்ணா யுனிவர்சிட்டியில் பெண்ணுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை? கோவை மாணவிக்கு ஏன் பாதுகாப்பு இல்லை? முதலில் தமிழ்நாட்டுக்கு ஒரு டிஜிபியை போடுங்க சார். அப்போதாவது சட்டம் ஒழுங்கு சரியாகிறதா என பார்ப்போம். சேலம் மக்களே விஜய்யை நம்புறீங்களா? ஸ்டாலினை நம்புறீங்களா? ஒரு தேர்வை ஒழுங்கா நடத்த தெரியல. உலக நாடோ போட்டிப் போட போறங்களாமா? என்றார். ``அவ்ளோ தான். கதம் கதம் விஜய் பேசுகையில், ``ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயங்களை வாக்குறுதிகளாக தரமாட்டேன். நம்ம வாக்குறுதிகள் தயாராகிட்டு இருக்கு. தெளிவான தேர்தல் அறிக்கை தயராகி வருகிறது. அது ஏமாற்றம் அளிக்காத வகையில் இருக்கும். விஜய் ஒரு கட்சியை மட்டுமே எதிர்க்கிறார். விஜய் இன்னொரு கட்சியைப் பற்றி பேசுவதில்லை. என்கிறார்கள். இந்த தேர்தல் யாருக்கான தேர்தல்? சட்டமன்றத் தேர்தல் இது. மக்கள் விரோத திமுக வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல். அப்படியிருக்க மக்கள் ஏற்கனவே டெலீட் செய்த கட்சிகளைப் பற்றி ஏன் பேச வேண்டும்? நீங்க சொல்லுங்க திமுக வேண்டுமா இந்த விஜய் வேண்டுமா? என்று கேட்க தொண்டர்கள் விஜய் என்று சொல்ல, விஜய், ``அவ்ளோ தான். கதம் கதம் என்றார் `விக்கிரவாண்டி மாநாட்டில் ஒரு குண்டு வீசி இருந்தேன்' ``ஆட்சியில் பங்கு என விக்கிரவாண்டி மாநாட்டில் ஒரு குண்டு வீசி இருந்தேன். அந்த கருத்து இப்போது தமிழக அரசியலில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. சி.எம் சார் பதறி போய் இருக்கார். நம்மளோட நம்மை மக்கள் இருக்காங்க. இதுக்கு மேல என்ன வேணும். நம்பிக்கையா இருங்க. வெற்றி நிச்சயம். என்றார்.
விஜய் : 'இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?' | மகளிருக்கு ரூ.5000
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார். ஸ்டாலின் மக்களிடையே இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றிருந்திருந்தாலும் எதிர்கட்சிகள் இதனை விமர்சனம் செய்துவருகின்றனர். அந்தவகையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார். தவெக தலைவர் விஜய் எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள். நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டிருக்கிறார்.
விஜய் : 'இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?' | மகளிருக்கு ரூ.5000
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார். ஸ்டாலின் மக்களிடையே இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றிருந்திருந்தாலும் எதிர்கட்சிகள் இதனை விமர்சனம் செய்துவருகின்றனர். அந்தவகையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார். தவெக தலைவர் விஜய் எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள். நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டிருக்கிறார்.
மகளிருக்கு ரூ.5000: பயத்தில் வந்த அறிவிப்பு; பெண்கள் நம்பி விடுவார்களா என்ன? - எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார். ஸ்டாலின் மக்களிடையே இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றிருந்திருந்தாலும் எதிர்கட்சிகள் இதனை விமர்சனம் செய்துவருகின்றனர். அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ஸ்டாலினினை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 28 மாதங்களாக 1000 ரூபாய் கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து கோடைக்கால சிறப்புத் தொகை கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு.ஸ்டாலின் அவர்களே? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது தேர்தல் நேரத்து பணம் வரவு வைக்கும் இந்த Patchwork வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன? செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே ரூ.3,50,000! இதை #விடியா ஆட்சி வீட்டு Billலே சாட்சி என்று வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு? இப்போது மாதம் 2000 ரூபாய் என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது. எடப்பாடி பழனிசாமி பாருங்கள் மக்களே... யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. அனைத்து குடும்ப அட்டைக்கும் என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி , 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள். தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு குல விளக்குத் திட்டம் முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2000 என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
`சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது?' - தேர்தல் கால சுவர்களும் போஸ்டர்களும் | நினைவுச் சுவடுகள் 5
இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன் , தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்! அரசியலைப் பேசிய சுவர்களும் போஸ்டர்களும்! நினைவுச் சுவடுகள் தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் பிரசாரம் என்பது ஊடக அரங்குகளையும், டிஜிட்டல் மீடியாக்களையும், சமூக வலைத்தளங்களையுமே வெகுவாக சார்ந்துள்ளது. ஆனால், இவையெல்லாம் வருவதற்கு முன்னர், அரசியல் பிரசாரம் என்பது தலைவர்களின் மேடைப் பேச்சுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் போன்றவற்றைத் தாண்டி, பல தசாப்தங்களாக சுவர்களில்தான் வெகுவாக மேற்கொள்ளப்பட்டது. தொலைக்காட்சி வீடுகளுக்குள் நுழைவதற்கும், கைபேசிகள் கைகளுக்குள் வருவதற்கும் முன்னர், இந்தச் சுவர்கள்தான் பலதரப்பட்ட அரசியலையும் பேசியது. அவை, அந்த நேரத்து நிகழ்கால அரசியலைப் பிரதிபலித்ததோடு மட்டுமல்ல; அதை உருவாக்கியும் வந்தன. கடை வீதிகளிலும் மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும், அமைதியாக வீற்றிருந்த சுவர்களே, அரசியல் கட்சிகளின் கருத்துகள், அடையாளங்கள், அதிகாரம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்ற “மௌன பரப்புரையாளர்களாக” செயல்பட்டன. மக்களின் முதல் ஊடகமாக மாறிய சுவர்கள் 1951 அக்டோபர் முதல் 1952 பிப்ரவரி வரை பல கட்டங்களாக நடைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சிகளுக்கு ஒரு பெரிய சவால் ஏற்பட்டது. பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். வாசிப்புத் திறன் குறைவு. செய்தித்தாள்களும் வானொலியும் அனைவருக்கும் கிடைக்கவில்லை. அந்தச் சூழலில்தான், அரசியல் கட்சிகளுக்கு சுவர்கள் ஒரு எளிய தீர்வாக மாறின. 1950களின் நடுப்பகுதியில், தமிழ்நாடு முழுவதும் சுவர் எழுத்துகள் பொதுவான காட்சியாக மாறத்தொடங்கின. அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்கள், தேர்தல் சின்னங்கள், கட்சியின் முழக்கங்கள், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் சுருக்கமான வாசகங்கள், சுண்ணாம்பும் பிரகாசமான நிறக்கலவைகளும் கொண்டு சுவர்களில் எழுதப்பட்டன. இதைப் படிக்க யாருக்கும் அழைப்பு விடுக்கவோ விளக்கம் அளிக்கவோ தேவையில்லை. எழுதப்படும் சுவரின் உரிமையாளரிடம் மட்டும் முன்கூட்டியே அனுமதி வாங்கிக்கொள்ள வேண்டும். சில இடங்களில் அனுமதி வாங்காமலேயே எழுதிவிடுவார்கள். எழுதும் நபர்களின் பின்புலம் செல்வாக்குமிக்கதாக இருந்தால், சுவருக்கு உரிய வீட்டு உரிமையாளர்கள் 'வம்பு' ஏன் என வாயை மூடிக்கொண்டுவிடுவதும் உண்டு. மீறி கேட்பவர்கள், சண்டை போடத் தயாராக இருக்க வேண்டும். மேலும், எழுதப்படும் கட்சி அல்லது வேட்பாளர் நாளை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அவர்களிடம் பகைத்துக்கொண்டு காலம் தள்ள முடியுமா என்கிற அச்சத்திலும், சுவர் உரிமையாளர்கள் எதுவும் கேட்காமல் விட்டுவிடுவார்கள். சில இடங்களில், குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருக்கும் வீட்டு உரிமையாளர்கள், தாங்களாகவே முன்வந்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, தங்கள் வீட்டுச் சுவர்களில் எழுதச் சொல்வதும் உண்டு. ஆனால், கட்சி விளம்பரங்கள் எழுதப்படும் சுவர்கள், எளிதில் அனைவரின் பார்வையை ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பது அவசியம். இவை தவிர, அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டடங்கள் போன்றவற்றின் சுவர்களிலும் இந்த விளம்பரங்கள் இடம்பிடிக்கும். ஆனால், முன்கூட்டியே இந்த இடத்தைப் பிடிக்க கட்சிகளுக்குள் போட்டா போட்டி நடக்கும். இந்தச் சுவர் விளம்பரங்கள் யாராலும் பார்த்துப் புரிந்துகொள்ள முடிந்ததாக இருந்ததால், எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்குக் கூட, தலைவர்களின் படமும் சின்னமும் மனதில் பதிந்து, சம்பந்தப்பட்ட கட்சிக்கு ஆதரவான வாக்குகளைப் பெற்றுத்தர உதவின. திறம்படப் பயன்படுத்திக்கொண்ட திராவிட இயக்கங்கள் இந்த சுவர் எழுத்துப் பிரசாரங்களைத் திறம்படப் பயன்படுத்திக்கொண்டது திராவிட இயக்கங்கள்தான். குறிப்பாக திமுக, சுவர்களைப் பெரிதும் பயன்படுத்தியது. சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு, தமிழ் மொழி அடையாளம் போன்ற கருத்துகள், சுவர் எழுத்துகள் மூலம் மக்களிடம் சென்றடைந்தன. அதிலும் சொல்லில் சிலம்பம் ஆடிய அண்ணா, கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களின் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்த திமுகவினருக்கு, சுவர்களில் தங்களது கருத்துகளை எழுதுவதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? எதுகை மோனையில் புகுந்து விளையாடினார்கள். 1956–57 ஆம் ஆண்டுகளிலும், பின்னர் 1965 ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்திலும், இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் சுவர்களில் எழுதப்பட்டன. தெருக்கள் அரசியல் பாடசாலைகளாக மாறின. கருணாநிதி - அண்ணா சுவர் அரசியலுக்கு வாதங்கள் தேவைப்படவில்லை. மக்களின் பார்வையில் மீண்டும் மீண்டும் தெரிந்ததால், அது நன்றாகவே வேலை செய்தது. ஒரு கட்சியின் முழக்கம் (slogan), அது தன்னை உயர்த்தியோ அல்லது எதிர்க்கட்சியை விமர்சித்தோ, எப்படி எழுதப்பட்டிருந்தாலும், ஒருமுறை பார்த்தால் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால், தினமும் வேலைக்குச் செல்லும் வழியில், கடைவீதிக்குச் செல்லும் பாதையில், குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் வீதியில் தொடர்ந்து பார்த்தால், பார்க்கும் மக்களுக்கு அது முதலில் பழகி, பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இறுதியில் அவர்களின் மனதில் பதிந்தது. இவ்வாறு சுவர்கள், கூட்டாட்சி, சமூக சமத்துவம் போன்ற சிக்கலான அரசியல் கருத்துகளை, தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றின. செய்தித்தாள்களைப் போல நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டிய அவசியமின்றி, சுவர்கள் உடனடியாக “பேசின”. அவை விளக்கவில்லை; மாறாக நேரடியாகக் கருத்தைத் திணித்தன. சுவர்களை ஆளத் தொடங்கிய தேர்தல் சின்னங்கள் சுவர் பிரசாரங்களில் தேர்தல் சின்னங்கள் முக்கியப் பங்காற்றின. குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அவை மிகப் பெரிய அடையாளமாக இருந்தன. உதயசூரியன் (திமுக), கை (காங்கிரஸ்), அரிவாள்–சுத்தி (கம்யூனிஸ்ட் கட்சிகள்), பின்னர் இரட்டை இலை (அதிமுக) போன்ற சின்னங்கள் சுவர்களில் தெளிவாக வரையப்பட்டன. 1967 பிப்ரவரி மாத சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டி, திமுக ஆட்சியைப் பிடித்தபோது, அரசியல் அடையாளம் என்பதே சின்னங்களோடு ஒன்றாகிவிட்டது. வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பே, மக்கள் சுவர்களில் பார்த்தே கட்சிகளை அடையாளம் கண்டார்கள். அந்த வகையில் அரசியல், முதலில் காட்சியாக மாறியது. பின்னர்தான் அது வார்த்தைகளாக மாறியது. சின்னங்கள் (1970–1980) எம்.ஜி.ஆரை உயர்த்திப்பிடித்த போஸ்டர்கள் 1970களிலிருந்து, எழுத்துகளை விட போஸ்டர்கள் சுவர்களை அதிகமாக ஆளத் தொடங்கின. சுவர் எழுத்துகள் கருத்துகளைப் பரப்பினால், போஸ்டர்கள் தலைவர்களின் உருவத்தை உருவாக்கின.1972 அக்டோபரில் எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கிய பின்னர் வெளியான 'உழைக்கும் கரங்கள்', மீனவ நண்பன்', நேற்று இன்று நாளை, 'சிரித்து வாழவேண்டும்', 'இதயக்கனி', 'பல்லாண்டு வாழ்க', 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' போன்ற திரைப்படங்களின் காட்சி அமைப்புகளும் பாடல்களும் எம்.ஜி.ஆரையும் அதிமுகவையும் உயர்த்திப் பிடிப்பதாகவும், மறைமுகமாக திமுகவை சவாலுக்கு அழைப்பதாகவும் இருந்தன. இதில் 'உழைக்கும் கரங்கள்', 'மீனவ நண்பன்', 'இதயக்கனி' போன்ற படங்களெல்லாம் எம்.ஜி.ஆரை ஏழைகளைக் காப்பாற்ற வந்த இரட்சகராகவும், மீட்பராகவும், அள்ளி அள்ளி வழங்கும் கொடை வள்ளலாகவும், நேர்மையானவராகவும் காட்டின. மீனவ நண்பன்' படத்தில் இடம்பெற்ற நேருக்கே நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்... என்கிற பாடல் கருணாநிதியை 'அட்டாக்' செய்யும் வகையில் இருப்பதாக கூறி, அப்போது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தங்களுக்குள் மகிழ்ந்துகொண்டனர்.அதேபோன்று 'நேற்று இன்று நாளை' படத்தில் இடம்பெற்ற தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று... என்கிற பாடலில் வரும் தெருத் தெருவாய் கூட்டுவது பொது நலத் தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் என்கிற வரிகள், திமுகவினரை நையாண்டி செய்ய எழுதப்பட்டதாகவும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அப்போது பேசியதுண்டு. எம்.ஜி.ஆர் மேலும், 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே... என்கிற பாடலில் வரும், விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பை தரப்போகுது என்கிற வரிகளும், அடுத்து எம்.ஜி.ஆர்தான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார் என்பதற்கு கட்டியம் கூறுவதாகவும் ரசிகர்கள் மகிழ்ந்தனர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, 'இதயக்கனி' படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற... என்கிற பாடலில், அதில் இடம் பிடித்த என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே என்கிற கோரஸ் வரிகளும், அப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள் போன்ற வரிகளெல்லாம், எம்.ஜி.ஆர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தவை. அந்த வகையில், எம்.ஜி.ஆரின் இமேஜை உயர்த்திப் பிடித்த இத்தகைய படங்களின் போஸ்டர்களும் அவரது அரசியல் பிரசாரத்துக்கு கைகொடுத்து வந்தன. இது, நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற வாக்காளர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு, ஜெயலலிதாவும் இதே உத்தியைப் பின்பற்றினார். போஸ்டர்கள் அவரை அடுத்த வலிமை மிக்க தலைவராக காட்டும் கருவியாக மாறின. இவ்வாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் எப்போதும் மக்களுக்கு அருகில் இருப்பவர்களாக சுவர்கள் மாற்றின. தெருக்கள், சந்தைகள், குடியிருப்புப் பகுதிகள் என எங்கும் தலைவர்களின் முகங்கள் தொடர்ந்து மக்களின் கண்பார்வையில் பதிந்துகொண்டே இருந்தன. நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! (1975–1977) மௌன புரட்சி செய்த சுவர்கள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் 1975 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை அமலில் இருந்த நெருக்கடி நிலை காலத்தில், பத்திரிகைகள் கடும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவது மிகவும் கடினமானதாக மாறியது. சுவர் எழுத்துகளும் கண்காணிக்கப்பட்டன. ஆனாலும், மறைமுக வாசகங்கள், சின்னங்கள், குறியீட்டு சொற்கள் சுவர்களில் தோன்றின. நேரடியாகச் சொல்ல முடியாத கருத்துகள், சுவர் எழுத்துகள் வழியாக சொல்லப்பட்டன. சில இடங்களில், சுவர்களின் வெறுமையும் அரசின் அடக்குமுறையை உணர்த்தும் அரசியல் செய்தியாக மாறியது. நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததும், சுவர் அரசியல் மீண்டும் வேகமடைந்து, அரசியல் எதிர்ப்பையும் விடுதலையையும் வெளிப்படுத்தியது. தொடர்ந்து 1980களிலும் 1990களிலும், சுவர்கள் அரசியலுக்கான களமாக மாறின. ஒரு சுவரைக் கைப்பற்றுவது என்பது, ஒரு கட்சி அந்தப் பகுதியில் தங்களின் இருப்பை உறுதி செய்வது போல இருந்தது. ஏற்கெனவே இருந்த முழக்கத்தை அழித்து, புதிய முழக்கத்தை எழுதுவது என்பது எதிர்க்கட்சிக்கு சவால் விடுவது போன்று கருதப்பட்டது. மேற்கொண்டு அந்தச் சுவரில் வேறு யாரும் எதுவும் எழுதிவிடாதவாறு, சம்பந்தப்பட்ட கட்சித் தொண்டர்கள் சுவர்களைக் கண்காணித்துக் காத்தனர். மீறி ஏதாவது எழுதப்பட்டாலும், இரவோடு இரவாக அதை அழித்துவிட்டு, மீண்டும் தங்களது கட்சிக்கான முழக்கங்களை அந்தச் சுவர்களில் எழுதி வைத்தனர். அந்த வகையில், சுவர்கள் ஒரு அரசியல் சொத்தாக பார்க்கப்பட்டன. பல இடங்களில், எந்தக் கட்சியின் முழக்கங்கள் அதிக நாட்கள் சுவர்களில் நீடித்தன என்பதைப் பொறுத்தே, அந்தப் பகுதி யாருடைய அல்லது எந்தக் கட்சியின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதற்கான அளவுகோலாக மதிப்பிடப்பட்டது. இந்தப் போட்டிகள், பல நேரங்களில் இருதரப்பு மோதல்களையும் பதற்றங்களையும் உருவாக்கின. பின்னாளில், இந்தச் சுவர் அரசியலின் கடுமையான பக்கத்தை சினிமா வலுவாகப் பதிவு செய்தது. சுவர் அரசியலைப் பேசிய 'மெட்ராஸ்' திரைப்படம் (2014) கார்த்தி நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம், சுவர் அரசியலை நேரடியாகப் பேசிய முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. இந்த படம் 2014 செப்டம்பரில் வெளியானது. கதை வடசென்னைப் பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பை மையமாகக் கொண்டது. அதன் மையத்தில் இருப்பது ஒரு சுவர். அந்தச் சுவரில் எந்தக் கட்சியின் போஸ்டர்கள், முழக்கங்கள் இருப்பது என்பதே அந்தப் பகுதியின் அரசியல் ஆதிக்கத்தை தீர்மானிக்கிறது. ஒரு சாதாரண போஸ்டர் போட்டியாகத் தொடங்கும் மோதல், பின்னர் வன்முறைக்கும் கொலைக்கும் சென்று முடிகிறது. இந்தக் கதை கற்பனை அல்ல. தமிழகத்தின் பல்வேறு நகர்ப்புறங்களில் நடக்கும் உண்மையான அரசியல் அனுபவங்களிலிருந்து உருவானது. உள்ளாட்சி அரசியல், வீட்டு உரிமை, மரியாதை போன்றவை, இங்கே சுவர்களின் வழியாகவே பேசப்படுகின்றன. அந்த வகையில், 'மெட்ராஸ்' படத்தில் சுவர்கள் அலங்காரத்துக்கானதாக அல்லாமல் அதிகாரத்துக்கான கருவிகள் என்பதை அப்பட்டமாக உணர்த்தியது. நினைவுச் சுவடுகள் 03: `திமுக வசனங்கள் டு காப்பி எடுத்த அதிமுக' - மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்! முக்கியமாக, சாதாரண மக்கள் எப்படி அரசியல் உணர்வு பெறுகிறார்கள் என்பதையும் இந்தப் படம் காட்டியது. ஒரு வகையில் சொல்லப்போனால் புத்தக வாசிப்பு, மேடைப் பேச்சுகளைத் தாண்டி, சாதி, வர்க்கம், ஒதுக்கி வைப்பது போன்ற அநீதியை நேரில் அனுபவிப்பதன் வழியாகவே மக்கள் அரசியல் உணர்வு பெறுகிறார்கள் என்பதை உணர்த்தியது. பா.ரஞ்சித் பல நேர்காணல்களில், 'மெட்ராஸ்' என்பது மிகைப்படுத்தப்பட்ட கதை அல்ல; சமூக சமத்துவமின்மை மற்றும் உள்ளூர் அதிகாரப் போராட்டங்களின் பிரதிபலிப்பு என்றே கூறியுள்ளார். அந்த வகையில், இந்தப் படம் சுவர் அரசியல் நீண்ட காலமாக சொல்லி வந்த உண்மைகளை உறுதிப்படுத்தியது என்றே கூறவேண்டும். சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது? சுவர்கள் எளிதாகக் கடக்க முடியாதவை. கவனத்துக்கு உரிய ஓர் இடத்தில் இருந்தாலே போதும். அதில் காணப்படும் எழுத்துகளோ அல்லது சின்னமோ அல்லது தலைவர்களின் படமோ, எதுவானாலும் சொல்ல வந்த விஷயத்தை மக்களிடத்தில் எளிதில் கடத்திவிடும். அதற்குப் பெரிய அளவில் வாசிப்புத் திறனோ அல்லது தொழில்நுட்ப அறிவோ தேவையில்லை. அதனால்தான், சுவர் அரசியல், படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவரையும் ஒரே நேரத்தில் சென்றடைந்தது. திரைகளில் அரசியல் தோன்றுவதற்கு முன்பே, அது சுவர்களில் வாழ்ந்தது. இன்றும், அது முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஏனெனில் அதிகாரம், எப்போதும் கண்ணுக்குப் புலப்படும் இடத்தையே தேடும். இன்றைய இணையதள அல்காரிதங்கள் (Algorithms) அரசியல் நினைவுகளை வடிவமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, சுவர்கள் மக்களின் மனதில் அரசியலைப் பதித்துவிட்டன. இன்றும், தேர்தல் நெருங்கும்போது புதிதாக எழுதப்படும் சுவர் எழுத்துகள், அந்த நீண்ட அரசியல் மரபை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.! (தொடரும்..) நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!
`சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது?' - தேர்தல் கால சுவர்களும் போஸ்டர்களும் | நினைவுச் சுவடுகள் 5
இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன் , தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்! அரசியலைப் பேசிய சுவர்களும் போஸ்டர்களும்! நினைவுச் சுவடுகள் தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் பிரசாரம் என்பது ஊடக அரங்குகளையும், டிஜிட்டல் மீடியாக்களையும், சமூக வலைத்தளங்களையுமே வெகுவாக சார்ந்துள்ளது. ஆனால், இவையெல்லாம் வருவதற்கு முன்னர், அரசியல் பிரசாரம் என்பது தலைவர்களின் மேடைப் பேச்சுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் போன்றவற்றைத் தாண்டி, பல தசாப்தங்களாக சுவர்களில்தான் வெகுவாக மேற்கொள்ளப்பட்டது. தொலைக்காட்சி வீடுகளுக்குள் நுழைவதற்கும், கைபேசிகள் கைகளுக்குள் வருவதற்கும் முன்னர், இந்தச் சுவர்கள்தான் பலதரப்பட்ட அரசியலையும் பேசியது. அவை, அந்த நேரத்து நிகழ்கால அரசியலைப் பிரதிபலித்ததோடு மட்டுமல்ல; அதை உருவாக்கியும் வந்தன. கடை வீதிகளிலும் மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும், அமைதியாக வீற்றிருந்த சுவர்களே, அரசியல் கட்சிகளின் கருத்துகள், அடையாளங்கள், அதிகாரம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்ற “மௌன பரப்புரையாளர்களாக” செயல்பட்டன. மக்களின் முதல் ஊடகமாக மாறிய சுவர்கள் 1951 அக்டோபர் முதல் 1952 பிப்ரவரி வரை பல கட்டங்களாக நடைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சிகளுக்கு ஒரு பெரிய சவால் ஏற்பட்டது. பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். வாசிப்புத் திறன் குறைவு. செய்தித்தாள்களும் வானொலியும் அனைவருக்கும் கிடைக்கவில்லை. அந்தச் சூழலில்தான், அரசியல் கட்சிகளுக்கு சுவர்கள் ஒரு எளிய தீர்வாக மாறின. 1950களின் நடுப்பகுதியில், தமிழ்நாடு முழுவதும் சுவர் எழுத்துகள் பொதுவான காட்சியாக மாறத்தொடங்கின. அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்கள், தேர்தல் சின்னங்கள், கட்சியின் முழக்கங்கள், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் சுருக்கமான வாசகங்கள், சுண்ணாம்பும் பிரகாசமான நிறக்கலவைகளும் கொண்டு சுவர்களில் எழுதப்பட்டன. இதைப் படிக்க யாருக்கும் அழைப்பு விடுக்கவோ விளக்கம் அளிக்கவோ தேவையில்லை. எழுதப்படும் சுவரின் உரிமையாளரிடம் மட்டும் முன்கூட்டியே அனுமதி வாங்கிக்கொள்ள வேண்டும். சில இடங்களில் அனுமதி வாங்காமலேயே எழுதிவிடுவார்கள். எழுதும் நபர்களின் பின்புலம் செல்வாக்குமிக்கதாக இருந்தால், சுவருக்கு உரிய வீட்டு உரிமையாளர்கள் 'வம்பு' ஏன் என வாயை மூடிக்கொண்டுவிடுவதும் உண்டு. மீறி கேட்பவர்கள், சண்டை போடத் தயாராக இருக்க வேண்டும். மேலும், எழுதப்படும் கட்சி அல்லது வேட்பாளர் நாளை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அவர்களிடம் பகைத்துக்கொண்டு காலம் தள்ள முடியுமா என்கிற அச்சத்திலும், சுவர் உரிமையாளர்கள் எதுவும் கேட்காமல் விட்டுவிடுவார்கள். சில இடங்களில், குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருக்கும் வீட்டு உரிமையாளர்கள், தாங்களாகவே முன்வந்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, தங்கள் வீட்டுச் சுவர்களில் எழுதச் சொல்வதும் உண்டு. ஆனால், கட்சி விளம்பரங்கள் எழுதப்படும் சுவர்கள், எளிதில் அனைவரின் பார்வையை ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பது அவசியம். இவை தவிர, அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டடங்கள் போன்றவற்றின் சுவர்களிலும் இந்த விளம்பரங்கள் இடம்பிடிக்கும். ஆனால், முன்கூட்டியே இந்த இடத்தைப் பிடிக்க கட்சிகளுக்குள் போட்டா போட்டி நடக்கும். இந்தச் சுவர் விளம்பரங்கள் யாராலும் பார்த்துப் புரிந்துகொள்ள முடிந்ததாக இருந்ததால், எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்குக் கூட, தலைவர்களின் படமும் சின்னமும் மனதில் பதிந்து, சம்பந்தப்பட்ட கட்சிக்கு ஆதரவான வாக்குகளைப் பெற்றுத்தர உதவின. திறம்படப் பயன்படுத்திக்கொண்ட திராவிட இயக்கங்கள் இந்த சுவர் எழுத்துப் பிரசாரங்களைத் திறம்படப் பயன்படுத்திக்கொண்டது திராவிட இயக்கங்கள்தான். குறிப்பாக திமுக, சுவர்களைப் பெரிதும் பயன்படுத்தியது. சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு, தமிழ் மொழி அடையாளம் போன்ற கருத்துகள், சுவர் எழுத்துகள் மூலம் மக்களிடம் சென்றடைந்தன. அதிலும் சொல்லில் சிலம்பம் ஆடிய அண்ணா, கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களின் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்த திமுகவினருக்கு, சுவர்களில் தங்களது கருத்துகளை எழுதுவதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? எதுகை மோனையில் புகுந்து விளையாடினார்கள். 1956–57 ஆம் ஆண்டுகளிலும், பின்னர் 1965 ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்திலும், இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் சுவர்களில் எழுதப்பட்டன. தெருக்கள் அரசியல் பாடசாலைகளாக மாறின. கருணாநிதி - அண்ணா சுவர் அரசியலுக்கு வாதங்கள் தேவைப்படவில்லை. மக்களின் பார்வையில் மீண்டும் மீண்டும் தெரிந்ததால், அது நன்றாகவே வேலை செய்தது. ஒரு கட்சியின் முழக்கம் (slogan), அது தன்னை உயர்த்தியோ அல்லது எதிர்க்கட்சியை விமர்சித்தோ, எப்படி எழுதப்பட்டிருந்தாலும், ஒருமுறை பார்த்தால் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால், தினமும் வேலைக்குச் செல்லும் வழியில், கடைவீதிக்குச் செல்லும் பாதையில், குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் வீதியில் தொடர்ந்து பார்த்தால், பார்க்கும் மக்களுக்கு அது முதலில் பழகி, பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இறுதியில் அவர்களின் மனதில் பதிந்தது. இவ்வாறு சுவர்கள், கூட்டாட்சி, சமூக சமத்துவம் போன்ற சிக்கலான அரசியல் கருத்துகளை, தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றின. செய்தித்தாள்களைப் போல நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டிய அவசியமின்றி, சுவர்கள் உடனடியாக “பேசின”. அவை விளக்கவில்லை; மாறாக நேரடியாகக் கருத்தைத் திணித்தன. சுவர்களை ஆளத் தொடங்கிய தேர்தல் சின்னங்கள் சுவர் பிரசாரங்களில் தேர்தல் சின்னங்கள் முக்கியப் பங்காற்றின. குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அவை மிகப் பெரிய அடையாளமாக இருந்தன. உதயசூரியன் (திமுக), கை (காங்கிரஸ்), அரிவாள்–சுத்தி (கம்யூனிஸ்ட் கட்சிகள்), பின்னர் இரட்டை இலை (அதிமுக) போன்ற சின்னங்கள் சுவர்களில் தெளிவாக வரையப்பட்டன. 1967 பிப்ரவரி மாத சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டி, திமுக ஆட்சியைப் பிடித்தபோது, அரசியல் அடையாளம் என்பதே சின்னங்களோடு ஒன்றாகிவிட்டது. வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பே, மக்கள் சுவர்களில் பார்த்தே கட்சிகளை அடையாளம் கண்டார்கள். அந்த வகையில் அரசியல், முதலில் காட்சியாக மாறியது. பின்னர்தான் அது வார்த்தைகளாக மாறியது. சின்னங்கள் (1970–1980) எம்.ஜி.ஆரை உயர்த்திப்பிடித்த போஸ்டர்கள் 1970களிலிருந்து, எழுத்துகளை விட போஸ்டர்கள் சுவர்களை அதிகமாக ஆளத் தொடங்கின. சுவர் எழுத்துகள் கருத்துகளைப் பரப்பினால், போஸ்டர்கள் தலைவர்களின் உருவத்தை உருவாக்கின.1972 அக்டோபரில் எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கிய பின்னர் வெளியான 'உழைக்கும் கரங்கள்', மீனவ நண்பன்', நேற்று இன்று நாளை, 'சிரித்து வாழவேண்டும்', 'இதயக்கனி', 'பல்லாண்டு வாழ்க', 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' போன்ற திரைப்படங்களின் காட்சி அமைப்புகளும் பாடல்களும் எம்.ஜி.ஆரையும் அதிமுகவையும் உயர்த்திப் பிடிப்பதாகவும், மறைமுகமாக திமுகவை சவாலுக்கு அழைப்பதாகவும் இருந்தன. இதில் 'உழைக்கும் கரங்கள்', 'மீனவ நண்பன்', 'இதயக்கனி' போன்ற படங்களெல்லாம் எம்.ஜி.ஆரை ஏழைகளைக் காப்பாற்ற வந்த இரட்சகராகவும், மீட்பராகவும், அள்ளி அள்ளி வழங்கும் கொடை வள்ளலாகவும், நேர்மையானவராகவும் காட்டின. மீனவ நண்பன்' படத்தில் இடம்பெற்ற நேருக்கே நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்... என்கிற பாடல் கருணாநிதியை 'அட்டாக்' செய்யும் வகையில் இருப்பதாக கூறி, அப்போது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தங்களுக்குள் மகிழ்ந்துகொண்டனர்.அதேபோன்று 'நேற்று இன்று நாளை' படத்தில் இடம்பெற்ற தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று... என்கிற பாடலில் வரும் தெருத் தெருவாய் கூட்டுவது பொது நலத் தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் என்கிற வரிகள், திமுகவினரை நையாண்டி செய்ய எழுதப்பட்டதாகவும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அப்போது பேசியதுண்டு. எம்.ஜி.ஆர் மேலும், 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே... என்கிற பாடலில் வரும், விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பை தரப்போகுது என்கிற வரிகளும், அடுத்து எம்.ஜி.ஆர்தான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார் என்பதற்கு கட்டியம் கூறுவதாகவும் ரசிகர்கள் மகிழ்ந்தனர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, 'இதயக்கனி' படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற... என்கிற பாடலில், அதில் இடம் பிடித்த என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே என்கிற கோரஸ் வரிகளும், அப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள் போன்ற வரிகளெல்லாம், எம்.ஜி.ஆர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தவை. அந்த வகையில், எம்.ஜி.ஆரின் இமேஜை உயர்த்திப் பிடித்த இத்தகைய படங்களின் போஸ்டர்களும் அவரது அரசியல் பிரசாரத்துக்கு கைகொடுத்து வந்தன. இது, நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற வாக்காளர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு, ஜெயலலிதாவும் இதே உத்தியைப் பின்பற்றினார். போஸ்டர்கள் அவரை அடுத்த வலிமை மிக்க தலைவராக காட்டும் கருவியாக மாறின. இவ்வாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் எப்போதும் மக்களுக்கு அருகில் இருப்பவர்களாக சுவர்கள் மாற்றின. தெருக்கள், சந்தைகள், குடியிருப்புப் பகுதிகள் என எங்கும் தலைவர்களின் முகங்கள் தொடர்ந்து மக்களின் கண்பார்வையில் பதிந்துகொண்டே இருந்தன. நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! (1975–1977) மௌன புரட்சி செய்த சுவர்கள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் 1975 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை அமலில் இருந்த நெருக்கடி நிலை காலத்தில், பத்திரிகைகள் கடும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவது மிகவும் கடினமானதாக மாறியது. சுவர் எழுத்துகளும் கண்காணிக்கப்பட்டன. ஆனாலும், மறைமுக வாசகங்கள், சின்னங்கள், குறியீட்டு சொற்கள் சுவர்களில் தோன்றின. நேரடியாகச் சொல்ல முடியாத கருத்துகள், சுவர் எழுத்துகள் வழியாக சொல்லப்பட்டன. சில இடங்களில், சுவர்களின் வெறுமையும் அரசின் அடக்குமுறையை உணர்த்தும் அரசியல் செய்தியாக மாறியது. நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததும், சுவர் அரசியல் மீண்டும் வேகமடைந்து, அரசியல் எதிர்ப்பையும் விடுதலையையும் வெளிப்படுத்தியது. தொடர்ந்து 1980களிலும் 1990களிலும், சுவர்கள் அரசியலுக்கான களமாக மாறின. ஒரு சுவரைக் கைப்பற்றுவது என்பது, ஒரு கட்சி அந்தப் பகுதியில் தங்களின் இருப்பை உறுதி செய்வது போல இருந்தது. ஏற்கெனவே இருந்த முழக்கத்தை அழித்து, புதிய முழக்கத்தை எழுதுவது என்பது எதிர்க்கட்சிக்கு சவால் விடுவது போன்று கருதப்பட்டது. மேற்கொண்டு அந்தச் சுவரில் வேறு யாரும் எதுவும் எழுதிவிடாதவாறு, சம்பந்தப்பட்ட கட்சித் தொண்டர்கள் சுவர்களைக் கண்காணித்துக் காத்தனர். மீறி ஏதாவது எழுதப்பட்டாலும், இரவோடு இரவாக அதை அழித்துவிட்டு, மீண்டும் தங்களது கட்சிக்கான முழக்கங்களை அந்தச் சுவர்களில் எழுதி வைத்தனர். அந்த வகையில், சுவர்கள் ஒரு அரசியல் சொத்தாக பார்க்கப்பட்டன. பல இடங்களில், எந்தக் கட்சியின் முழக்கங்கள் அதிக நாட்கள் சுவர்களில் நீடித்தன என்பதைப் பொறுத்தே, அந்தப் பகுதி யாருடைய அல்லது எந்தக் கட்சியின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதற்கான அளவுகோலாக மதிப்பிடப்பட்டது. இந்தப் போட்டிகள், பல நேரங்களில் இருதரப்பு மோதல்களையும் பதற்றங்களையும் உருவாக்கின. பின்னாளில், இந்தச் சுவர் அரசியலின் கடுமையான பக்கத்தை சினிமா வலுவாகப் பதிவு செய்தது. சுவர் அரசியலைப் பேசிய 'மெட்ராஸ்' திரைப்படம் (2014) கார்த்தி நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம், சுவர் அரசியலை நேரடியாகப் பேசிய முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. இந்த படம் 2014 செப்டம்பரில் வெளியானது. கதை வடசென்னைப் பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பை மையமாகக் கொண்டது. அதன் மையத்தில் இருப்பது ஒரு சுவர். அந்தச் சுவரில் எந்தக் கட்சியின் போஸ்டர்கள், முழக்கங்கள் இருப்பது என்பதே அந்தப் பகுதியின் அரசியல் ஆதிக்கத்தை தீர்மானிக்கிறது. ஒரு சாதாரண போஸ்டர் போட்டியாகத் தொடங்கும் மோதல், பின்னர் வன்முறைக்கும் கொலைக்கும் சென்று முடிகிறது. இந்தக் கதை கற்பனை அல்ல. தமிழகத்தின் பல்வேறு நகர்ப்புறங்களில் நடக்கும் உண்மையான அரசியல் அனுபவங்களிலிருந்து உருவானது. உள்ளாட்சி அரசியல், வீட்டு உரிமை, மரியாதை போன்றவை, இங்கே சுவர்களின் வழியாகவே பேசப்படுகின்றன. அந்த வகையில், 'மெட்ராஸ்' படத்தில் சுவர்கள் அலங்காரத்துக்கானதாக அல்லாமல் அதிகாரத்துக்கான கருவிகள் என்பதை அப்பட்டமாக உணர்த்தியது. நினைவுச் சுவடுகள் 03: `திமுக வசனங்கள் டு காப்பி எடுத்த அதிமுக' - மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்! முக்கியமாக, சாதாரண மக்கள் எப்படி அரசியல் உணர்வு பெறுகிறார்கள் என்பதையும் இந்தப் படம் காட்டியது. ஒரு வகையில் சொல்லப்போனால் புத்தக வாசிப்பு, மேடைப் பேச்சுகளைத் தாண்டி, சாதி, வர்க்கம், ஒதுக்கி வைப்பது போன்ற அநீதியை நேரில் அனுபவிப்பதன் வழியாகவே மக்கள் அரசியல் உணர்வு பெறுகிறார்கள் என்பதை உணர்த்தியது. பா.ரஞ்சித் பல நேர்காணல்களில், 'மெட்ராஸ்' என்பது மிகைப்படுத்தப்பட்ட கதை அல்ல; சமூக சமத்துவமின்மை மற்றும் உள்ளூர் அதிகாரப் போராட்டங்களின் பிரதிபலிப்பு என்றே கூறியுள்ளார். அந்த வகையில், இந்தப் படம் சுவர் அரசியல் நீண்ட காலமாக சொல்லி வந்த உண்மைகளை உறுதிப்படுத்தியது என்றே கூறவேண்டும். சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது? சுவர்கள் எளிதாகக் கடக்க முடியாதவை. கவனத்துக்கு உரிய ஓர் இடத்தில் இருந்தாலே போதும். அதில் காணப்படும் எழுத்துகளோ அல்லது சின்னமோ அல்லது தலைவர்களின் படமோ, எதுவானாலும் சொல்ல வந்த விஷயத்தை மக்களிடத்தில் எளிதில் கடத்திவிடும். அதற்குப் பெரிய அளவில் வாசிப்புத் திறனோ அல்லது தொழில்நுட்ப அறிவோ தேவையில்லை. அதனால்தான், சுவர் அரசியல், படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவரையும் ஒரே நேரத்தில் சென்றடைந்தது. திரைகளில் அரசியல் தோன்றுவதற்கு முன்பே, அது சுவர்களில் வாழ்ந்தது. இன்றும், அது முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஏனெனில் அதிகாரம், எப்போதும் கண்ணுக்குப் புலப்படும் இடத்தையே தேடும். இன்றைய இணையதள அல்காரிதங்கள் (Algorithms) அரசியல் நினைவுகளை வடிவமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, சுவர்கள் மக்களின் மனதில் அரசியலைப் பதித்துவிட்டன. இன்றும், தேர்தல் நெருங்கும்போது புதிதாக எழுதப்படும் சுவர் எழுத்துகள், அந்த நீண்ட அரசியல் மரபை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.! (தொடரும்..) நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!
சேலத்தில் இன்று பேசுகிறார் விஜய் - சீலநாயக்கன்பட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த நிகழ்ச்சி இன்று சேலத்தில் நடைபெறுவது அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தவெக கூட்டம் கரூர் சம்பவ வழக்கு, சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் வெளியிடுவதில் சிக்கல் என்று பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், பரப்புரை செய்யவும் தவெக தலைவர் விஜய் இன்று சேலம் வருகிறார். விமானம் மூலம் இன்று மதியம் சேலம் வரும் விஜய், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வாகனத்தில் வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலையிலிருந்தே சேலத்தில் தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறையின் அனுமதியை பெற்ற தவெக தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். சேலம் தவெக கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் நிர்வாகிகள் அமரும் வகையிலும் அவர்களுக்கு ஸ்நாக்ஸ் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கு கட்சி நிர்வாகிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பாதைகளுடன், தலைமை நிர்வாகிகள் மற்றும் விஜய் வந்து செல்ல தனிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. வருகின்றவர்ளுக்கு உதவவும், கூட்டத்தினரை நெறிப்படுத்தவும் ஆயிரக்கணக்கான பாதுகாவலர்களும், தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆம்புலன்ஸ்களுடன் 15 டாக்டர்கள் கொண்ட டீம் முதலுதவி சிகிச்சை செய்வதற்காக தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃகியூ ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும், அனுமதி இல்லாதவர்களும் பொதுமக்களும் வர வேண்டாம்' என்று மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்தில் இன்று பேசுகிறார் விஜய் - சீலநாயக்கன்பட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த நிகழ்ச்சி இன்று சேலத்தில் நடைபெறுவது அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தவெக கூட்டம் கரூர் சம்பவ வழக்கு, சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் வெளியிடுவதில் சிக்கல் என்று பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், பரப்புரை செய்யவும் தவெக தலைவர் விஜய் இன்று சேலம் வருகிறார். விமானம் மூலம் இன்று மதியம் சேலம் வரும் விஜய், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வாகனத்தில் வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலையிலிருந்தே சேலத்தில் தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறையின் அனுமதியை பெற்ற தவெக தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். சேலம் தவெக கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் நிர்வாகிகள் அமரும் வகையிலும் அவர்களுக்கு ஸ்நாக்ஸ் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கு கட்சி நிர்வாகிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பாதைகளுடன், தலைமை நிர்வாகிகள் மற்றும் விஜய் வந்து செல்ல தனிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. வருகின்றவர்ளுக்கு உதவவும், கூட்டத்தினரை நெறிப்படுத்தவும் ஆயிரக்கணக்கான பாதுகாவலர்களும், தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆம்புலன்ஸ்களுடன் 15 டாக்டர்கள் கொண்ட டீம் முதலுதவி சிகிச்சை செய்வதற்காக தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃகியூ ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும், அனுமதி இல்லாதவர்களும் பொதுமக்களும் வர வேண்டாம்' என்று மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகளிருக்கு ரூ.5,000: தோல்வி உறுதி என்று தெரிந்ததால், ஆட்சியைத் தக்கவைக்க..! - ஜெயக்குமார் காட்டம்
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். முதல்வர் ஸ்டாலின் பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்' என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புகொண்டு பேசினோம். அவர், ``இப்போது தி.மு.க அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை தேர்தல் பயத்தின் வெளிப்பாடு. ஏற்கனவே நாங்கள் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.2000 கொடுப்போம் என அறிவித்திருந்தோம். இப்போது ஸ்டாலினும் அதேபோல் அறிவிக்கிறார். மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து ரூ.5000 கொடுத்திருக்கிறார். ஆனால், அரசு கருவூலமே காலியானாலும் சரி, கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் சரி, இனி தி.மு.க-வுக்கு ஓட்டு விழாது. இது முழுக்க முழுக்க தேர்தலைக் கண்டு வந்த பயம். தோல்வி உறுதி என்று தெரிந்ததால், எப்படியாவது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வாரி வழங்குகிறார். கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு மானியம், டீசல் விலை குறைப்பு போன்றவை என்னவானது? கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ஒழிப்பு, ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் என எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இன்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். குறைகளை தீர்ப்போம் எனப் பெட்டி வைத்து மனுக்களை வாங்கினாரே ஸ்டாலின், அந்த மனுக்கள் எல்லாம் இப்போது எங்கே? கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ.25,000 வரை கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணத்தை இரண்டு முறை உயர்த்தியது, சொத்து வரி, வீட்டு வரி உயர்வு என மக்களின் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, இப்போது தேர்தல் நேரத்தில் ரூ.1000, ரூ்.2000 எனக் கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல். இது கடந்த நான்கரை வருடம் காயத்தை ஏற்படுத்திவிட்டு, கடைசியில் மருந்து தடவுவதைப் போன்றது. ஸ்டாலினுக்குச் சொந்த புத்தியும் கிடையாது, சுய புத்தியும் கிடையாது. பிகாரில் சொன்னதைதான் செய்தார்கள். ஆனால் இங்கே ட்ராக் ரெக்கார்ட் (Track Record) சரியில்லை. இப்போது தேர்தல் நேரத்தில் அனுதாபம் தேடுவதற்காக, 'திட்டங்களை முடக்கப் பார்க்கிறார்கள்' என்று கூச்சல் போடுகிறார் ஸ்டாலின். இவரைத் தமிழக மக்கள் தான் முடக்குவார்களே தவிர வேறுயாரும் இல்லை. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு இன்று அமைதி இழந்துவிட்டது. ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர் கஞ்சா புழக்கம், போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. எனவே, எல்லா இடத்திலும் தோல்வி ஆட்சியால் தி.மு.க-வின் இந்த கடைசி நேரச் சலுகைகள் வந்திருக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும், அ.தி.மு.க ஆட்சி அமைவது உறுதி. திமுக-வின் இந்த செயல்பாடு உள்நோக்கமுடையது. என்றார்.
வங்கதேசம்: ஆவாமி லீக் இல்லா தேர்தல்; மேஜிக் நம்பரைத் தாண்டிய பிஎன்பி - தாரிக் ரஹ்மான் பிரதமர்?
வங்க தேசத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் எழுச்சி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று, ஆவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா, 2024 ஆகஸ்டில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர். ஹசீனாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாணவர் போராட்டக் குழுவினர் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. வங்கதேசத் தேர்தல் இடைக்கால அரசு, ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சர்வாதிகாரத்தைத் தடுக்கவும் 'ஜூலை சாசனம்' (July Charter) என்ற பெயரில் `பிரதமரின் அதிகாரத்தைக் குறைத்தல், பதவிக் கால நிர்ணயம்' போன்ற புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்மொழிந்தது. இந்த நிலையில்தான் வங்கதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 300 நாடாளுமன்றத் தொகுதியில், வங்க தேசத்தில் ஆட்சி அமைக்க 151 இடங்களில் வெற்றிப்பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தலைமையிலான கூட்டணியும், ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) தலைமையில், 2024 மாணவர் எழுச்சியில் உருவான தேசிய குடிமக்கள் கட்சி (NCP) உள்ளிட்ட கட்சிகள் இணைந்த கூட்டணி என இரு கூட்டணிகள் நேருக்கு நேர் மோதின. நேற்று (12-ம் தேதி) காலை 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 4:30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவின் போது நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை என சுமார் 10 லட்சம் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வங்கதேசத் தேர்தல் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி, இரவு முழுவதும் நடைபெற்றது. பிப்ரவரி 13 (இன்று) காலைக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமான இறுதி முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போதுவரை அறிவிக்கப்பட்ட முடிவில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கத் தயாராகியுள்ளது. வங்க தேச ஊடகங்கள் வழங்கிவரும் தகவலின்படி வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான 151 இடங்கள் என்ற பெரும்பான்மை அளவைத் தாண்டி, 185 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி தலைமை வகித்தக் கூட்டணி 56 இடங்களை வென்றுள்ளது. இன்னும் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது. தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் கூறினாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 14 தனித்தனி வன்முறைச் சம்பவங்களில் 72 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமாத்-இ-இஸ்லாமி கடந்த 30 ஆண்டு வங்க தேச அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஆவாமி லீக் கட்சி போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலுடன் சேர்த்து 'ஜூலை சாசனம்' குறித்த மக்கள்தீர்ப்பு வாக்கெடுப்பும் (Referendum) நடைபெற்றது. அதில் பெரும்பாலான மக்கள் (சுமார் 70% மேல்) 'ஆம்' (Yes) என்று வாக்களித்துள்ளனர். இது அரசியலமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் எனக் கருதப்படுகிறது. SIR: ``எங்களை காயப்படுத்தாதீர்கள், காயமடைந்த புலி மிகவும் ஆபத்தானது'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா
வங்கதேசம்: ஆவாமி லீக் இல்லா தேர்தல்; மேஜிக் நம்பரைத் தாண்டிய பிஎன்பி - தாரிக் ரஹ்மான் பிரதமர்?
வங்க தேசத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் எழுச்சி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று, ஆவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா, 2024 ஆகஸ்டில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர். ஹசீனாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாணவர் போராட்டக் குழுவினர் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. வங்கதேசத் தேர்தல் இடைக்கால அரசு, ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சர்வாதிகாரத்தைத் தடுக்கவும் 'ஜூலை சாசனம்' (July Charter) என்ற பெயரில் `பிரதமரின் அதிகாரத்தைக் குறைத்தல், பதவிக் கால நிர்ணயம்' போன்ற புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்மொழிந்தது. இந்த நிலையில்தான் வங்கதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 300 நாடாளுமன்றத் தொகுதியில், வங்க தேசத்தில் ஆட்சி அமைக்க 151 இடங்களில் வெற்றிப்பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தலைமையிலான கூட்டணியும், ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) தலைமையில், 2024 மாணவர் எழுச்சியில் உருவான தேசிய குடிமக்கள் கட்சி (NCP) உள்ளிட்ட கட்சிகள் இணைந்த கூட்டணி என இரு கூட்டணிகள் நேருக்கு நேர் மோதின. நேற்று (12-ம் தேதி) காலை 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 4:30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவின் போது நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை என சுமார் 10 லட்சம் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வங்கதேசத் தேர்தல் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி, இரவு முழுவதும் நடைபெற்றது. பிப்ரவரி 13 (இன்று) காலைக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமான இறுதி முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போதுவரை அறிவிக்கப்பட்ட முடிவில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கத் தயாராகியுள்ளது. வங்க தேச ஊடகங்கள் வழங்கிவரும் தகவலின்படி வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான 151 இடங்கள் என்ற பெரும்பான்மை அளவைத் தாண்டி, 185 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி தலைமை வகித்தக் கூட்டணி 56 இடங்களை வென்றுள்ளது. இன்னும் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது. தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் கூறினாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 14 தனித்தனி வன்முறைச் சம்பவங்களில் 72 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமாத்-இ-இஸ்லாமி கடந்த 30 ஆண்டு வங்க தேச அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஆவாமி லீக் கட்சி போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலுடன் சேர்த்து 'ஜூலை சாசனம்' குறித்த மக்கள்தீர்ப்பு வாக்கெடுப்பும் (Referendum) நடைபெற்றது. அதில் பெரும்பாலான மக்கள் (சுமார் 70% மேல்) 'ஆம்' (Yes) என்று வாக்களித்துள்ளனர். இது அரசியலமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் எனக் கருதப்படுகிறது. SIR: ``எங்களை காயப்படுத்தாதீர்கள், காயமடைந்த புலி மிகவும் ஆபத்தானது'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா
மகளிருக்கு ரூ.5000: `பாராளுமன்ற தேர்தல் போதும்கூட முடக்கப்படவில்லை' - கொந்தளிக்கும் தமிழிசை
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்' என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் எந்தவித உண்மையும் இல்லை இந்த நிலையில், தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும். ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை. இது தர்மத்திற்கு எதிரானது. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மகளிர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்காக மட்டுமே செய்கிறார்கள். ஏனென்றால், சென்ற முறை பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் இல்லை, இப்பொழுது கொடுத்தால் மக்கள் மறந்து விடுவார்கள் அதனால் தேர்தல் ஆண்டு கொடுக்கலாம் என்று சொன்னவர்கள் தான் தி.மு.க அறிவாலயம். இவர்கள் அதைத்தான் இப்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இன்று ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள், ஏன் இந்த திட்டம் அறிவித்த பின்பு இரண்டு ஆண்டுகள் கொடுக்காமல் இருந்துவிட்டு பின்பு கொடுத்தார்கள்? இன்று தேர்தலுக்காக ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் ஆரம்பிப்பதற்கு முன்னால் உள்ள தொகையை சேர்த்து மக்களுக்கு கொடுக்கவில்லை? அதுவே மக்களை ஏமாற்றுவது தானே. அதுமட்டுமல்ல டாஸ்மாக் மூடுவதை பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உரிமைத் தொகையை உயர்த்திக் கொடுப்பதில் என்ன பலன்? நிதிஷ் குமார் - மோடி இங்கு அப்படி இல்லை ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், குடிக்கும் பழக்கம் உள்ள நபரால் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் 6 ஆயிரம் ரூபாய்.. டாஸ்மாக்கிற்காக செலவழிக்கிறது என்கிறது. டாஸ்மாக் மூலமாக 45,000 கோடியை இந்த அரசாங்கம் சம்பாதிக்கிறது. ஆக குடும்பங்களை குலைத்துவிட்டு, குடும்பப் பெண்களுக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறது இந்த அரசு. எல்லோரும் பீகாரை உதாரணம் காண்பிக்கிறார்கள். ஆனால் பீகாரில் பெண்களுக்கு கொடுக்கும் பணம் அந்த குடும்பத்திற்கு மட்டுமே செலவழிக்கப்படும். ஏனென்றால், அங்கே பூரண மதுவிலக்கு இருக்கிறது. இங்கு அப்படி இல்லை. அதுமட்டுமல்ல பெண்கள் எல்லோரும் தொழில் முனைவோராக வேண்டும், முதலாளிகளாக வேண்டும் என்பதற்காகத்தான் மரியாதைக்குரிய பிரதமர் மோடி முத்ரா திட்டத்தை கொண்டு வந்து, அதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர் பலனடைந்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல சாலையோர வியாபாரிகளில் குறிப்பாக பெண்களுக்கு, அவர்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கு உதவி கடன் உடனே கொடுக்கப்படுகிறது. ஆக இந்த தி.மு.க அரசு பெண்களுக்கான தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாமல், தொல்லை நோக்கு திட்டத்தை தான் வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் மகளிரும் தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் அறிவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழிசை செளந்தரராஜன் இதற்கு அடுத்தால் வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களுக்கு இதைவிட சுய சார்பானவர்களாக அவர்களை மாற்றுவதற்கும், சுய கௌரவம் உள்ளவர்களாக அவர்களை மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது மட்டுமல்ல, ஏற்கனவே அண்ணன் எடப்பாடியார் அவர்கள் உரிமை தொகை 2000 ஆக உயர்த்தப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள் என்பதை என் சகோதரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல மரியாதைக்குரிய பாரத பிரதமர் கொண்டு வந்து டிஜிட்டல் இந்தியா மூலமாகத்தான் இவர்கள் நினைத்தாலும் விடியா அரசு விடிவதற்குள் உடனே பெண்களுக்கு போட முடிகிறது என்பதற்கும் பிரதமரை இவர்கள் பாராட்டியாக வேண்டும். முதல்வர் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார். பாராளுமன்ற தேர்தல் அப்பொழுது கூட இந்த திட்டம் முடக்கப்படவில்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனப் பதிவிட்டிருக்கிறார். கலைஞர் உரிமைத் தொகை: ``வங்கி கணக்கில் ரூ.5000 - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மகளிருக்கு ரூ.5000: `பாராளுமன்ற தேர்தல் போதும்கூட முடக்கப்படவில்லை' - கொந்தளிக்கும் தமிழிசை
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்' என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் எந்தவித உண்மையும் இல்லை இந்த நிலையில், தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும். ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை. இது தர்மத்திற்கு எதிரானது. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மகளிர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்காக மட்டுமே செய்கிறார்கள். ஏனென்றால், சென்ற முறை பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் இல்லை, இப்பொழுது கொடுத்தால் மக்கள் மறந்து விடுவார்கள் அதனால் தேர்தல் ஆண்டு கொடுக்கலாம் என்று சொன்னவர்கள் தான் தி.மு.க அறிவாலயம். இவர்கள் அதைத்தான் இப்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இன்று ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள், ஏன் இந்த திட்டம் அறிவித்த பின்பு இரண்டு ஆண்டுகள் கொடுக்காமல் இருந்துவிட்டு பின்பு கொடுத்தார்கள்? இன்று தேர்தலுக்காக ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் ஆரம்பிப்பதற்கு முன்னால் உள்ள தொகையை சேர்த்து மக்களுக்கு கொடுக்கவில்லை? அதுவே மக்களை ஏமாற்றுவது தானே. அதுமட்டுமல்ல டாஸ்மாக் மூடுவதை பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உரிமைத் தொகையை உயர்த்திக் கொடுப்பதில் என்ன பலன்? நிதிஷ் குமார் - மோடி இங்கு அப்படி இல்லை ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், குடிக்கும் பழக்கம் உள்ள நபரால் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் 6 ஆயிரம் ரூபாய்.. டாஸ்மாக்கிற்காக செலவழிக்கிறது என்கிறது. டாஸ்மாக் மூலமாக 45,000 கோடியை இந்த அரசாங்கம் சம்பாதிக்கிறது. ஆக குடும்பங்களை குலைத்துவிட்டு, குடும்பப் பெண்களுக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறது இந்த அரசு. எல்லோரும் பீகாரை உதாரணம் காண்பிக்கிறார்கள். ஆனால் பீகாரில் பெண்களுக்கு கொடுக்கும் பணம் அந்த குடும்பத்திற்கு மட்டுமே செலவழிக்கப்படும். ஏனென்றால், அங்கே பூரண மதுவிலக்கு இருக்கிறது. இங்கு அப்படி இல்லை. அதுமட்டுமல்ல பெண்கள் எல்லோரும் தொழில் முனைவோராக வேண்டும், முதலாளிகளாக வேண்டும் என்பதற்காகத்தான் மரியாதைக்குரிய பிரதமர் மோடி முத்ரா திட்டத்தை கொண்டு வந்து, அதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர் பலனடைந்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல சாலையோர வியாபாரிகளில் குறிப்பாக பெண்களுக்கு, அவர்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கு உதவி கடன் உடனே கொடுக்கப்படுகிறது. ஆக இந்த தி.மு.க அரசு பெண்களுக்கான தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாமல், தொல்லை நோக்கு திட்டத்தை தான் வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் மகளிரும் தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் அறிவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழிசை செளந்தரராஜன் இதற்கு அடுத்தால் வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களுக்கு இதைவிட சுய சார்பானவர்களாக அவர்களை மாற்றுவதற்கும், சுய கௌரவம் உள்ளவர்களாக அவர்களை மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது மட்டுமல்ல, ஏற்கனவே அண்ணன் எடப்பாடியார் அவர்கள் உரிமை தொகை 2000 ஆக உயர்த்தப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள் என்பதை என் சகோதரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல மரியாதைக்குரிய பாரத பிரதமர் கொண்டு வந்து டிஜிட்டல் இந்தியா மூலமாகத்தான் இவர்கள் நினைத்தாலும் விடியா அரசு விடிவதற்குள் உடனே பெண்களுக்கு போட முடிகிறது என்பதற்கும் பிரதமரை இவர்கள் பாராட்டியாக வேண்டும். முதல்வர் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார். பாராளுமன்ற தேர்தல் அப்பொழுது கூட இந்த திட்டம் முடக்கப்படவில்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனப் பதிவிட்டிருக்கிறார். கலைஞர் உரிமைத் தொகை: ``வங்கி கணக்கில் ரூ.5000 - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கலைஞர் உரிமைத் தொகை: ``வங்கி கணக்கில் ரூ.5000 - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கதில் அறிவிப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், ``தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு! தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச்,… pic.twitter.com/n7VrMqcrb7 — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 13, 2026 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'துண்டுச் சீட்டை பார்த்து வாசிக்கும் ரோபோ!' - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடும் ஆதவ் அர்ஜூனா
அமெரிக்கா: அதிகாரியால் விபத்தில் கொல்லப்பட்ட இந்திய மாணவி; ரூ. 260 கோடி இழப்பீடு வழங்க முடிவு
அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஜாஹ்னவி கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. 23 வயதான ஜாஹ்னவி கண்டுலா, சியாட்டிலில் உள்ள Northeastern University-யில் தகவல் அமைப்பு துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சியாட்டில் நகர சாலையைக் கடக்கும்போது காவல் துறை அதிகாரி கெவின் டேவ் இயக்கிய ரோந்து வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார். ஜாஹ்னவி கண்டுலா விசாரணையில், 25 மைல் வேக வரம்பு கொண்ட பகுதியில் அதிகாரி மணிக்கு 74 மைல் வேகத்தில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. அவர் போதை மருந்துக் கடத்தல் குறித்த அழைப்பு வந்ததை அடுத்து இந்த வேகத்தில் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் சென்றபோது அவசரகால விளக்குகளையும் சைரனையும் பயன்படுத்தியுள்ளார். உடன் இருந்த மற்றொரு அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவில், ஜாஹ்னவியின் உயிரை அவமதிக்கும் வகையில் சிரித்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியதையடுத்து பல போராட்டங்கள் வெடித்தன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து 2025ல் விபத்தை ஏற்படுத்திய அதிகாரி கெவின் டேவ் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப் போதிய ஆதாரம் இல்லை என்று கிங் கவுண்டி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜாஹ்னவி கண்டுலா “ஜாஹ்னவி கண்டுலாவின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த நிதி தீர்வு அவரது குடும்பத்திற்கு ஓரளவு மனநிறைவைத் தரும் என நம்புகிறோம். அவரது வாழ்க்கை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் முக்கியமானது,” என்று நகர வழக்கறிஞர் எரிகா எவன்ஸ் தெரிவித்துள்ளார். 2023-ல் நடந்த இந்தச் சம்பவம், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது?
அமெரிக்கா: அதிகாரியால் விபத்தில் கொல்லப்பட்ட இந்திய மாணவி; ரூ. 260 கோடி இழப்பீடு வழங்க முடிவு
அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஜாஹ்னவி கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. 23 வயதான ஜாஹ்னவி கண்டுலா, சியாட்டிலில் உள்ள Northeastern University-யில் தகவல் அமைப்பு துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சியாட்டில் நகர சாலையைக் கடக்கும்போது காவல் துறை அதிகாரி கெவின் டேவ் இயக்கிய ரோந்து வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார். ஜாஹ்னவி கண்டுலா விசாரணையில், 25 மைல் வேக வரம்பு கொண்ட பகுதியில் அதிகாரி மணிக்கு 74 மைல் வேகத்தில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. அவர் போதை மருந்துக் கடத்தல் குறித்த அழைப்பு வந்ததை அடுத்து இந்த வேகத்தில் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் சென்றபோது அவசரகால விளக்குகளையும் சைரனையும் பயன்படுத்தியுள்ளார். உடன் இருந்த மற்றொரு அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவில், ஜாஹ்னவியின் உயிரை அவமதிக்கும் வகையில் சிரித்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியதையடுத்து பல போராட்டங்கள் வெடித்தன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து 2025ல் விபத்தை ஏற்படுத்திய அதிகாரி கெவின் டேவ் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப் போதிய ஆதாரம் இல்லை என்று கிங் கவுண்டி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜாஹ்னவி கண்டுலா “ஜாஹ்னவி கண்டுலாவின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த நிதி தீர்வு அவரது குடும்பத்திற்கு ஓரளவு மனநிறைவைத் தரும் என நம்புகிறோம். அவரது வாழ்க்கை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் முக்கியமானது,” என்று நகர வழக்கறிஞர் எரிகா எவன்ஸ் தெரிவித்துள்ளார். 2023-ல் நடந்த இந்தச் சம்பவம், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது?

24 C