SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

பெரம்பூரிலிருந்து பிரசாரம் தொடக்கம்; தொண்டர்களுடன் போட்டோ ஷூட்! - விஜய்யின் Election பிளான் என்ன?

சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தவெக முகாம் முடுக்கிவிட தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, முதற்கட்டமாக 100 வேட்பாளர்களை உறுதி செய்திருக்கும் விஜய், அடுத்தக்கட்டமாக வேக வேகமாக பிரசாரத்தை தொடங்க ஆயத்தமாகி வருவதாகவும் கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர். TVK Vijay இதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகையில், 'தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் சென்னையிலுள்ள தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்திருக்கின்றனர். அதன்படி, தலைவர் அவர் போட்டியிட பெரம்பூர் தொகுதியை டிக் அடித்திருக்கிறார். வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலைகள் முடிவடையப் போகிறது. அடுத்தக்கட்டமாக மக்களிடம் சென்று வாக்கு கேட்பதுதான் முக்கியப் பணி. அதற்காக தலைவர் தன்னுடைய பிரசாரத்தை பெரம்பூர் மற்றும் ஆதவ் போட்டியிடும் வில்லிவாக்கத்திலிருந்து தொடங்கும் முடிவில் இருக்கிறார். வருகிற 24 அல்லது 25 ஆம் தேதியில் பெரம்பூருக்கு தலைவரை அழைத்து வரும் பணிகளை நிர்வாகிகள் செய்துகொண்டிருக்கின்றனர்' என்றனர். TVK - Vijay மேலும் பேசியவர்கள், 'அதுமட்டுமல்லாமல் மார்ச் 26 ஆம் தேதி 2000 க்கும் மேற்பட்ட வட்ட, ஒன்றிய நகராட்சி லெவல் நிர்வாகிகளை நேரில் அழைத்து அவர்களுடன் உரையாடி போட்டோ ஷூட்டும் நடத்தப் போகிறார். அடிமட்ட நிர்வாகிகள் உற்சாகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு' என விவரித்தனர்.

விகடன் 22 Mar 2026 3:21 pm

`சிபிஎம் கட்சிக்கு 5 அல்லது 6 சீட்டுகளா?'- ஸ்டாலின் சொன்னது என்ன? - பெ.சண்முகம் பேட்டி

திமுக கூட்டணியில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகு செய்தியாளர்களைச் சந்திருக்கிறார். திமுகவின் பேச்சுவார்த்தை குழுவுடன் சிபிஎம் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினோம். முதல்வர் ஸ்டாலின் “5 தொகுதிகளை நீங்கள் ஏற்க வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தொடர்வதற்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சந்திப்பதற்கும் அது கட்டாயம் பயன்படும். ஆகவே நீங்கள் இந்த 5 என்கிற எண்ணிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று முதல்வர் எங்களிடம் கேட்டுக்கொண்டார். முதலமைச்சருடைய கருத்தை கட்சியினுடைய மாநில செயற்குழுவில் விவாதித்து அதனுடைய முடிவு என்ன என்பதை நாங்கள் உரிய முறையில் தலைவருக்கு செய்திகள் அனுப்புகிறோம் என்பதைச் சொல்லி இருக்கிறோம். மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்துதான் 2026 சட்டமன்றத் தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்கும். தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது என்ற போராட்டத்தை நாங்கள் நடத்துவது என்பது வேறு. அதற்காக வேறுவிதமான முடிவுகள் எதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்லாது. எந்த நேரத்திலையும் அப்படிப்பட்ட ஒரு முடிவை நாங்கள் எடுக்க மாட்டோம். கூட்டணியை விட்டு செல்ல மாட்டோம். பெ.சண்முகம் எங்கள் நிலைப்பாட்டில் குழப்பமெல்லாம் ஒன்றும் இல்லை. 6 தொகுதி பெற வேண்டும் என்பதே மாநிலக்குழுவினுடைய முடிவு. முதல்வர் கூப்பிட்டுப் பேசி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிற நிலையில், அதைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டியது எங்களுடைய கடமை. நாங்க கட்டாயம் பரிசீலித்து முடிவைத் தெரிவிப்போம் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 22 Mar 2026 2:51 pm

`புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி'திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறி; பின்னணியில் ஸ்டாலின் பிளான்

``புதுச்சேரிக்கு திராவிட மாடல் ஆட்சி தேவை...” புதுச்சேரி 2021 சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும் வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. அதில் 13 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெற்றது. ஆனால் 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான் மற்றும் கமலக்கண்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டனர். இவற்றின் மூலம் புதுச்சேரி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க-வின் கை ஓங்கியது. புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் அதன் தொடர்ச்சியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுச்சேரி மாநில தி.மு.க-வின் அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.பி சிவக்குமாரின் மகன் திருமணம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான பட்டானூர் சங்கமித்ரா திருமண நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ``தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சி மலர்ந்திருக்கிறது. அதை `திராவிட மாடல் ஆட்சி' என இன்று பெருமையுடன் கூறுகிறோம். அப்படிப்பட்ட ஒரு திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது தேவைதான். எனக்கு முன்பு பேசியவர்கள் தங்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் கூறினார்கள். உங்களுக்கு மட்டுமா அந்த ஆசை இருக்கிறது? ``புதுச்சேரியில் காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி” எனக்கும்தான் இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட அந்த வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் போய்விட்டது. ஆனால் அதற்காகக் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே நாம் இங்கு ஆட்சியில் இருந்தவர்கள்தான். இதே புதுவை மாநிலத்தில் ஃபரூக் மரைக்காயர் தலைமையிலும், டி.ராமச்சந்திரன் தலைமையிலும், ஜானகிராமன் தலைமையிலும் நமது தி.மு.க ஆட்சி நடைபெற்றிருக்கிறது. அதனால் நிச்சயமாக தி.மு.க ஆட்சி புதுவை மாநிலத்தில் மீண்டும்  உதயமாகும். அதில் எந்தவிதச் சந்தேகமும் கொள்ள வேண்டாம். காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர்களாக இருந்த வைத்திலிங்கம், நாராயணசாமி போன்றவர்களுடன் நாம் கூட்டணி ஆட்சி நடத்தவில்லையா? ஆக... அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, ஆனால் உறுதியாக புதுவையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக் கூடாது என்று பேசிவிட்டுச் சென்றார். புதுச்சேரி தி.மு.க தலைவர்கள் அன்றிலிருந்து, `புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி' என்ற கோஷத்தை உயர்த்திப் பிடித்த தி.மு.க, 2026 தேர்தலில் கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமையேற்போம் என்றும் கூறி வந்தது தி.மு.க. `ஆளும் கட்சியாக இருந்த நம்மால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாமல் போய்விட்டதே…' என்று ஏற்கெனவே நொந்து கொண்டிருந்த காங்கிரஸ் தரப்பு, தி.மு.க-வின் இந்த கோஷங்களால் துவண்டுபோனது. ஒருகட்டத்தில் எரிச்சலான முன்னாள் முதல்வர் நாராயணசாமி, `` புதுச்சேரியில் காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி. இதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடக்கும் போராட்டங்கள் தி.மு.க தலைமையில் நடைபெறுவதாகத்தான் செய்திகள் வெளியாகின்றன. தனித்தனி போரட்டங்கள்... எதிரெதிர் திசையில் தி.மு.க - காங்கிரஸ் போராட்டங்களுக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் நாம் பங்கேற்கவேண்டிய அவசியமில்லை. கூட்டணிக் கட்சி ஒத்துழைக்காவிட்டால், காங்கிரஸ் சார்பில் தனித்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் மட்டும் நாம் இல்லை என்று கடுகடுத்திருந்தார். உடனே, ``தி.மு.க-வுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது. எங்கள் கொள்கையைக் கூறி கட்சியை வளர்க்கிறோம் என்று அதற்கு பதிலடி கொடுத்தார் தி.மு.க அமைப்பாளர் சிவா. அதன் தொடர்ச்சியாக மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ``புதுச்சேரியில் கூட்டணிக்குத் தலைமை என்பது காங்கிரஸ்தான். அப்படி ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கொந்தளித்திருந்தார். நாராயணசாமி அப்போதிலிருந்து காங்கிரஸுக்கும், தி.மு.க-வுக்கும் இடையேயான மோதல், உரசலுக்கும் விரிசலுக்கும் இடையில் தொடர்ந்து கொண்டு வருகிறது. காங்கிரஸ் முன்னெடுக்கும் போராட்டங்களை தி.மு.க-வும், தி.மு.க முன்னெடுக்கும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சியும் வெளிப்படையாக தவிர்த்து வந்தன. அந்த மோதல்தான், புதுச்சேரியில் தற்போது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நிலவும் இழுபறிக்குக் காரணம். ஆரம்பத்தில் இருபது தொகுதிகள் வேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ், அதன்பிறகு 16+12+2 என்ற கணக்கில் இறங்கியது. அதாவது காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்றது காங்கிரஸ். தொகுதிக்கு மட்டுமல்ல, வேட்பாளர்களுக்கும் ஸ்கெட்ச்! அதை ஏற்க மறுத்த தி.மு.க, வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்து 18 தொகுதிகளைக் கேட்டது. அப்படி ஆரம்பித்த பேரம் 14+14+2 என்ற கணக்கில் இறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை தொடங்கியது. கடந்த தேர்தலில் தி.மு.க போட்டியிட்ட ஐந்து தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. அந்தப் பட்டியலில் முதலில் இருப்பது முன்னாள் முதல்வர் நாராயணசாமி 2016-ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி. ஆனால் அது தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றிபெற்ற தொகுதி என்பதுடன், கடந்த தேர்தலில் வெறும் 400 வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட தொகுதி என்பதால் அதை கொடுக்க மறுக்கிறது தி.மு.க. அதேபோல ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட தொகுதிகளை கேட்டு வருகிறது காங்கிரஸ். புதுச்சேரி திமுக அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆனால் இந்த தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நினைக்கும் தி.மு.க, அந்தத் தொகுதிகளை தருவதற்கு மறுத்து வருகிறது. இந்தக் குழப்பம் நீடித்து வரும் நிலையில், `நமது மக்கள் கழகம்' என்ற புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கியிருக்கும் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ நேருவை சந்தித்திருக்கிறது காங்கிரஸ் தரப்பு. காங்கிரஸ் கட்சியின் இந்த `மூவ்' தி.மு.க-வை உஷ்ணமாக்கியிருக்கிறது. அதனால், `காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு நாம் தனித்துப் போட்டியிடலாம்' என்று ஆலோசனை செய்து வருகிறது தி.மு.க தரப்பு. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளில் அவர்களுக்கு வேட்பாளர்களே இல்லை. ஆனால் அந்த தொகுதிகளை எங்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கிருக்கும் எங்கள் வேட்பாளர்களையே வளைத்து நிற்க வைக்க திட்டமிடுகிறார்கள் என்றனர். புதுச்சேரி: `அபகரிப்பு’ புகாரில் திமுக அவைத்தலைவர் சிவக்குமார்; களமிறங்கிய கவர்னர்; பின்னணி என்ன?

விகடன் 22 Mar 2026 1:56 pm

'என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.!' - பாஜகவுக்கு கெடு விதித்த சரத்குமார்

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமாருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து பேசினர். சரத்குமார் ஆதரவாளர்கள் மத்தியில் சரத்குமார் பேசியவை, 'உங்களின் ஆதங்கத்தையெல்லாம் மனதில் வைத்திருக்கிறேன். எடுக்கிற முடிவு எல்லாருக்கும் சாதகமாக இருக்க வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்தோம் என்று இருக்கக்கூடாது. கட்சியினரான நீங்கள்தான் என் குடும்பத்தினர். 'இப்போதும் பாருங்கள். இரவில் மனைவியிடம் கேட்டு ஒரு முடிவெடுப்பார்' என கிண்டலடிக்கிறார்கள். அவர்களெல்லாம் முட்டாள்கள். - என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நான் யாருக்கும் பயந்தவன் கிடையாது. நம் கட்சி சார்பில் முன்னோடிகள் பாஜக மாநிலத் தலைவரிடம் கடிதம் கொடுத்து கோரிக்கை வையுங்கள். கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் என்ன செய்வதென பார்ப்போம். நம் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய நீரோட்டத்தில் இணைந்தேன். அண்ணாமலை, நயினார் நாகேந்திரனிடம் நாம் பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம். SarathKumar அவர்களுக்கு எதோ தடங்கல் இருக்கிறது. ஆனால், இதற்கு மேல் தாமதப்படுத்தினால் நன்றாக இருக்காது. அத்தனை தகுதியும் உடைய எனக்கு ஏன் அங்கீகாரம் இல்லை? என்னுடைய மனைவி அறிவு, திறமை, ஆற்றல் மிக்கவர். திமுகவுக்காக பிரசாரம் செய்தவர். அப்படிப்பட்டவரிடம் கருத்து கேட்காமல் யாரிடம் கேட்பது? சமூகவலைதளங்களில் தற்குறிகளாக இருக்கிறார்கள். 41 பேரை கொன்றுவிட்டு அவர்களின் வீட்டாரை ஹோட்டலுக்கு அழைத்து துக்கம் விசாரித்த கூட்டம் இது. நம்முடைய கோரிக்கையை பாஜகவுக்கு தெரியப்படுத்துவோம். அதன்பிறகு முடிவெடுப்போம்.' என்றார். -

விகடன் 22 Mar 2026 1:38 pm

'பரப்புரை குழுவில கூட நாட்டாமை பெயர் இல்லை' -பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கும் சரத்குமார் ஆதரவாளர்கள்!

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமாருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து பேசினர். சரத்குமார் சரத்குமார் முன்னிலையில் பேசிய ஆதரவாளர்கள், 'நாட்டாமை கட்சியில் சேர்ந்த உடனேயே நம் எல்லாருக்குமே பதவி வாங்கி கொடுக்க வேண்டுமென நினைத்தார். பலமுறை பாஜகவில் அதற்காக போராடினார். கடுமையான போராட்டத்துக்கு பிறகுதான் மாநில அளவில் 19 பொறுப்புகளையும் மற்ற பொறுப்புகளில் 80 பேருக்கும் மட்டுமே வாங்கி கொடுக்க முடிந்தது. தலைவர் நம் சார்பில் 257 பேருக்கு பதவி வழங்கக் கோரி பாஜகவுக்கு லிஸ்ட் கொடுத்தார். ஆனால், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நமக்கு கிடைத்தது. பாஜகவில் 68 மாவட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு நான்கு இடங்கள் நம்முடைய கட்சியினருக்கு கிடைத்திருக்க வேண்டும். அதையும் பாஜக கொடுக்கவில்லை. பெரும் இன்னல்களுக்கு பிறகுதான் சொற்ப ஆட்களையாவது தலைவர் பாஜகவில் பதவிக்கு கொண்டு வந்தார். ஆதரவாளர்களுடன் சரத்குமார் ஆனால், அப்படிப்பட்ட தலைவருக்கு பாஜக 2 ஆண்டுகளாக எந்த பதவியும் கொடுக்கவில்லை. எங்களுக்கு பதவி கிடைக்கிறதோ இல்லையோ, தலைவருக்கு தேசிய அளவில் பதவி வேண்டும். அவர் அதிகாரத்துக்கு வர வேண்டும். பாதுகாவலர்களோடு சைரன் வைத்த வண்டியில் அவர் செல்ல வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் கொண்டு சேர்த்தவர் நம்முடைய தலைவர்தான். அவரை எல்லா ஊர் நிகழ்ச்சிகளுக்கும் பேச அழைக்கிறார்கள். ஆனால், என்ன பதவியில் என்ன பொறுப்பில் இருக்கிறோம் என கூறிக்கொண்டு தலைவரால் கூட்டத்துக்கு செல்ல முடியும்? இன்று காலை பாஜகவில் பரப்புரை குழு என ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். அதில் கூட தலைவர் பெயர் இல்லை. தென் மாவட்டங்களில் தலைவர் இறங்கினால் கூட்டம் அள்ளும். ஆனால், அதற்கு கூட தலைவரை பயன்படுத்தாமல் முடக்கிவிட்டார்கள். நம்முடை கட்சியை நாம் கலைத்திருக்கக்கூடாது' என்றனர். மேலும் முன்னாள் தலைவர் அண்ணாமலை நாட்டாமைக்கும் அவருடைய ஆதரவாளர்களான நமக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்குமென உறுதி கொடுத்தார். நயினார் நாகேந்திரன் ஏன் தலைவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை? தலைவர் பிரசாரம் செய்தால்தான் நயினார் நாகேந்திரனே வெல்ல முடியும். என்றும் கொந்தளித்தனார்

விகடன் 22 Mar 2026 12:19 pm

திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் இருந்தது. அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான் இந்த அதிருப்திக்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி தலைவர் வேல்முருகன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். வேல்முருகன் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், சட்டமன்றத்தில் ஒற்றை ஆளாய் போராடி இருக்கிறேன். நாங்கள் முன்வைத்த எங்கள் கோரிக்கைகளை திமுக அரசு பொருட்படுத்தவில்லை. திமுக எங்களை புறகணித்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அரசு அதிகாரிகளே திமுகவிடம் கூறியிருக்கின்றனர். சமூக நீதிக்கு எதிரான தீய சக்திகளை திமுக உடன் வைத்திருக்கிறது. இந்நிலையில் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 22 Mar 2026 11:29 am

எரிபொருள் விலையேற்றம்: 'டிக்கெட் கட்டணங்களுக்கு லிமிட் இல்லை' - விமானப் பயணம் செய்பவர்கள் கவனம்!

கடந்த டிசம்பர் மாதம், இண்டிகோ விமான நிறுவனம் விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பற்றாக்குறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், பல இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ நிறுவனத்தின் இந்தப் பிரச்னையால், பயணிகள் வேறு விமான நிறுவனங்களை நோக்கி நகர்ந்தனர். விமானம் ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை செக் விலக்கு... அந்தச்‌ சமயத்தில் விமான நிறுவனங்கள் டிக்கெட்டிற்கு அதிக கட்டணங்களை விதிக்கக்கூடாது என்று மத்திய அரசு செக் ஒன்றை வைத்தது. அதன் படி, விமான நிறுவனங்கள் எகனாமிக் வகுப்பு ஒரு வழி பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ.18,000 வரை தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று எல்லை வகுத்திருந்தது. மேலும், தேவைப்பட்டால் டிமாண்ட் அடிப்படையில் டிக்கெட் விலை உயர்த்தலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், நாளை முதல் இந்தக் கெடுபிடிகள் விலக்கப்பட உள்ளது. என்ன காரணம்? இதற்கு முக்கிய காரணம், மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் மற்றும் அதனால், ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம். எரிபொருள் விலையேற்றத்தை விமான நிறுவனங்கள் சமாளிக்கவே மத்திய அரசு இந்த விலக்கை அளித்துள்ளது. ஆனால், விமான நிறுவனங்கள் டிக்கெட்டிற்கு அதிக கட்டணம் விதித்தால், மீண்டும் டிக்கெட் விலையின்‌ எல்லை நிர்ணயிக்கப்படும் என்று செக் வைத்துள்ளது மத்திய‌ அரசு. '48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை' மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?' சீறும் ஈரான்

விகடன் 22 Mar 2026 10:02 am

இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையம் இருக்கும் நகரில் ஈரான் ஏவுகணை தாக்குதல்; 47 பேர் காயம்!

ஈரானுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா இந்த போரில் முடிக்கவேண்டிய வேலைகளை முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் அமெரிக்கா இப்போரில் இருந்து வெளியேறும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் அமெரிக்கா கூடுதல் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானில் எந்த இடத்தை குறிவைத்து தாக்கினாலும் உடனே ஈரான் அது போன்ற இடங்களை இஸ்ரேலில் குறிவைத்து தாக்கி வருகிறது. கடந்த வாரம் ஈரானில் உலகின் மிகப்பெரிய எரிவாயு மண்டலங்களில் ஒன்றாக கருதப்படும் தெற்கு பார்ஸ் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள எரிவாயு மையங்களில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்கா தலையிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என்று இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது இஸ்ரேல் நேற்று ஈரானில் உள்ள நடன்ஸ் நகரில் இருக்கும் ஷாஹித் அஹ்மதி-ரோஷன் அணு ஆராய்ச்சி மையத்தில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் இஸ்ரேலில் உள்ள டிமோனா நகரில் ஈரான் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியது. இந்த நகரில் இஸ்ரேலின் அணு ஆராய்ச்சி மையம் இருக்கிறது. ஈரான் அனுப்பிய ஏவுகணையை இஸ்ரேல் வான் தடுப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்த தவறிவிட்டன. இதனால் ஏவுகணை குடியிருப்பு வளாகத்தில் விழுந்து கட்டடங்கள் இடிந்ததில் 47 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேலின் தேசிய அவசர மருத்துவச் சேவை பிரிவு அதிகாரி மேகன் டேவிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''தாக்குதலில் காயமடைந்த 36-க்கும் மேற்பட்டோருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏவுகணைத் துண்டுகள் விழுந்தும், பாதுகாப்பு அரண்களை நோக்கி ஓடும்போதும் இந்த காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர். குறிப்பாக 10 மற்றும் 12 வயது சிறார்கள் காயம் அடைந்துள்ளனர்''என்றார். வான் பாதுகாப்பு ஏவுகணையை தடுக்க தவறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு ஆராய்ச்சி மையங்கள் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. டிமோனா நகரம் குட்டி இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேலில் வாழும் இந்திய யூதர்களின் முக்கிய மையமாகும். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர்ந்த இந்திய யூதர்கள் ஆவர். சுமார் 7,500 இந்திய வம்சாவளியினர் இங்கு வாழ்கின்றனர். இது அந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும். கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை தாக்குவோம் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா (PBUH) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கையில், முந்தைய எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, ஒருவேளை எதிரிகளால் ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு சொந்தமான அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், மற்றும் கடல்நீரை சுத்திகரிக்கும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்''என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஜப்பான் கப்பல்களை அனுமதிக்க ஈரான் பரிசீலித்து வருகிறது.

விகடன் 22 Mar 2026 9:42 am

ஈரானின் 'இந்த'ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை

அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் தொடுக்க, ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி கொண்டே தான் இருக்கிறது. தற்போது இஸ்ரேலின் டிமோனா நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஏன் இவ்வளவு பரபரப்பு? டிமோனாவில் தான் இஸ்ரேல் வெளியில் சொல்லாத அணு ஆயுதத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நகரம் இஸ்ரேலின் இதயம் என்று அழைக்கப்படுகிறது. இப்படியான இஸ்ரேலின் முக்கிய நகரத்தைத் தான் ஈரான் தற்போது தாக்கியுள்ளது. இந்த நகரத்தைத் தாக்கிய ஏவுகணைகளை இஸ்ரேலின் தடுப்பு கட்டமைப்புகளால் கூட தடுக்க முடியவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன. முக்கியமாக,‌ இந்தத் தாக்குதலுக்கு ஈரான் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி உள்ளது. ஈரான் போர் '48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை' மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?' சீறும் ஈரான் இஸ்ரேல் என்ன சொல்கிறது? இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... ஈரானிய தீவிரவாத ஆட்சி நீண்ட தூர ஏவுகணையை ஏவுவது இதுவே முதல்முறை. இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 4,000 கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கும். 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த ஆபரேஷன் ரைஸிங் லயனின் போதே, ஈரான் இப்படியான ஏவுகணையைத் தயாரிக்கும் திட்டம் வைத்துள்ளது என்பதை நாங்கள் தெரிவித்தோம். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு அபாயம் என்றும் கூறினோம். ஆனால், இதை ஈரான் மறுத்தது. ஈரானிய தீவிரவாத ஆட்சி உலகத்திற்கே ஆபத்து என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறோம். இந்த ஏவுகணைகள் லண்டன், பாரிஸ், பெர்லின் வரை செல்லும். ஈரானிய தீவிரவாத ஆட்சி இதுவரை அந்தப் பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அவர்களது எல்லைக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய திறனையும் வளர்த்து வருகிறது. 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail

விகடன் 22 Mar 2026 9:07 am

'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' - ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா'வாக்குறுதிகள்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திருந்தது. இதில் பேசிய மரிய வில்சன் தொகுதி மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி பேசியிருந்தார். பொதுக்கூட்டம் மரிய வில்சன் பேசியதாவது, ''கடந்த 8 நாட்களாக ஆர்.கே.நகரைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். எல்லா மக்களிடமும் உரையாடியிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரிய துரோகத்தை இரண்டு கட்சிகளுக்கும் இந்த மக்களுக்கு நிகழ்த்தியிருக்கிறது. நான் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு இலவச கல்வியும், முதியோருக்கு வீடு தேடி ரேஷனும் கொடுப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தத் தொகுதியிலிருந்து எக்கச்சக்க கலெக்டர்களும் மருத்துவர்களும் வர வேண்டும். மரிய வில்சன் தொகுதியில் ஓராண்டுக்கு கணவரை இழந்த 25 பெண்களின் குழந்தைகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பேன். ஆண்டுக்கு 25 பேரை ஹஜ் மற்றும் ஜெருசலேம் பயணத்துக்கு அனுப்பி வைப்பேன். இன்னும் இந்தத் தொகுதியில் நிறைய சுற்றி வருவேன். உங்களின் பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பேன். நம்பிக்கையோடு இருங்கள்'' என்றார். மார்ச் 10 ஆம் தேதி தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் இறுதி செய்து அவர்களை நேரில் அழைத்து வாழ்த்தியிருந்தார். அப்போதுதான் மரிய வில்சனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியையும் ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

விகடன் 21 Mar 2026 9:46 pm

திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை - திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். பொதுக்கூட்டம் ஆதவ் பேசியதாவது, ''திமுக கூட்டணியில் மதிமுக சுய கௌரவத்தை இழந்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று வரைக்கு சீட் வாங்க முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறது. ஜவாஹிருல்லாவின் கட்சியை திமுக அழித்துவிட்டது. திமுகவுக்கு தலித்துகளும் சிறுபான்மையினரும் அதிகாரத்துக்கு வருவது பிடிக்காது. இவர்களை நம்பாதீர்கள் எனத் திருமா அண்ணனிடம் எவ்வளவோ சொன்னேன். 'நம்மை வளரவிட மறுக்கிறார்கள். நாம் எந்த விதத்திலும் வலிமை பெறக்கூடாது என நினைக்கிறார்கள்' என மனம் வருந்தி திருமா அண்ணன் பேசியிருக்கிறார். திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. வேங்கைவயல் சம்பவத்தில் திருமா திமுக-வுக்கு எவ்வளவோ துணையாக இருந்தார். ஆனால், இப்போது 5 தொகுதியைக் கொடுத்து, 'இருந்தால் இரு போனால் போ' என்கின்றனர். ஆதவ் திமுகவின் பண்ணையார்த்தனம்தான் இது. விசிகவை அழிக்க திமுக தயாராகிவிட்டது. திருமா அண்ணனின் வலி எங்களின் வலி. திருமாவின் கண்ணீருக்காகவே ஸ்டாலினுக்கு ஒரு முடிவை மக்கள் கொடுப்பார்கள்' என்றார். கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

விகடன் 21 Mar 2026 9:42 pm

கரூரில் 'ஜனநாயகன்'பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா கரூரில் சூட்டிங் நடத்தப்பட்டது என முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கூறி பேசியிருந்தார். பொதுக்கூட்டம் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, ''திமுக மாலை 4-6 மணிக்குத்தான் கள்ள ஓட்டைப் போடுவார்கள். அப்போதுதான் நாம் இன்னமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வட சென்னையை திமுகவும் அதிமுகவும் எப்போதும் ஏழ்மையாகவே வைத்திருக்கிறார்கள். அண்ணா நகருக்கும் ஆர்.கே.நகருக்கும் அத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன. 2014 இல் திமுக 40-40லும் தோல்வியடைந்த சமயத்தில்தான் நான் திமுகவில் வேலை செய்ய ஆரம்பித்தேன். `தவெக விஜய்யுடன் பேசுவோம்!’ - விலக நினைக்கும் ரங்கசாமி; வளைக்கத் துடிக்கும் பாஜக தினமும் முதல்வரைச் சந்தித்து வியூகங்களை வகுத்து கடுமையாக உழைத்தேன். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அத்தனை போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். அப்படிப்பட்டவனுக்கு அங்கே முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு சரியான எதிரியை திமுக பார்க்கவில்லை. அதனால்தான் தலைவர் 6 மாவட்டங்களுக்குச் சென்றவுடனேயே கரூர் சம்பவம் நடந்தது. ஆளும் தரப்பு எடுக்கும் சர்வேக்களே திமுகவை நடுங்க வைத்தது. அதனால்தான் நம்மைப் பிரசாரம் செய்ய விடாமல் முடக்கினார்கள். திருவாரூரில் தலைவருக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்தே திமுக பயந்துவிட்டது. கடந்த 15 நாட்களாக தவெக - பாஜகவுடன் கூட்டணிக்குச் செல்கிறது என்கிற செய்தி பரப்பப்பட்டது. திமுக, அதிமுகவும் சேர்ந்து பரப்பிய செய்தி அது. மிரட்டுபவர்கள்தான் கோழை. அமைதியாக இருப்பவன்தான் வீரன். அதேமாதிரி, காலை - மாலை எனப் பேசிக் கொண்டிருப்பவனே அரசியல் தெரியாதவன். ஆதவ் குஜராத் கலவரத்தை கலைஞர் அந்த மாநிலப் பிரச்னை எனக் குறிப்பிட்டார். மதச்சார்பின்மை பேசும் ஸ்டாலின் அப்போது கலைஞரிடம் கேள்வி கேட்டிருக்கலாமே? பணமும் அதிகாரமும் கிடைத்தால் திமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணிக்குச் சேரும். பாஜகவுடன் கூட்டணி பேசியிருந்தால் ஜனவரி 10 ஆம் தேதியே ஜனநாயகன் ரிலீஸ் ஆகியிருக்கும். பராசக்தி படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகியது. ஜனநாயகன் இன்றைக்கு வரைக்கும் ரிலீஸ் ஆகவில்லை. கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் இதைக் கவனிக்க வேண்டும். மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து வெளியேறியிருந்தால் டெல்லியே தலைவரை முதல்வர் ஆக்கியிருக்கும். ஆனால், தலைவர் கொள்கைப் பிடிப்போடு உறுதியாக நிற்கிறார். உதயநிதி நம்மை பார்த்து கொள்கை என்ன எனக் கேட்கிறார். அவரை நான் நேரடி விவாதத்துக்கு அழைத்தேன் இன்னும் வரவில்லை. கூட்டணிக்கு நாம் செல்லவில்லை என்றவுடன் அதிமுக நம்மை விமர்சிக்கத் தொடங்குகிறது. கரூரில் ஷூட்டிங் நடத்தியதாக பொய் பிரசாரத்தை முன்னெடுக்கிறார்கள். தலைவர் கூப்பிட்டால் எங்கு வேண்டுமானாலும் கூட்டம் கூடும். எதற்காக கரூரில் சூட்டிங் நடத்த வேண்டும்? அது முழுக்க முழுக்க பொய் பிரசாரம். நாம் சமீபத்தில் எடுத்த சர்வேயில் திமுகவை விட 2% வாக்குகள் அதிகமாக எடுக்கிறோம். அதிமுக மூன்றாம் இடத்துக்குச் செல்கிறது. அதனால்தான் நம்மை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள்'' என்றார். 'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்

விகடன் 21 Mar 2026 9:34 pm

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வே லூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான லஞ்சக் குற்றம்’ மற்றும் `பி.என்.எஸ் 132 - அரசு அலுவலர்களை அவர்களின் அலுவல் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல்’ ஆகிய இரு பிரிவுகளின்கீழ் சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். நேற்றைய தினம், TN 23 DK 9579 பதிவெண் கொண்ட மேயரின் டொயோட்டா கிளான்ஸா காரையும் போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். எம்.எல்.ஏ கார்த்திகேயன் - மேயர் சுஜாதா இந்த நிலையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், விளக்கமளிக்கவும் மார்ச் 23-ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகுமாறும் மேயர் சுஜாதாவுக்கு சத்துவாச்சாரி போலீஸார் இன்று சம்மன் அனுப்பியிருக்கின்றனர். அதேபோல, வழக்கில் தொடர்புடைய தி.மு.க கவுன்சிலர் உட்பட மற்ற இருவருக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது. வேலூர் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், தி.மு.க மாநகரச் செயலாளருமான கார்த்திகேயனின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார் மேயர் சுஜாதா. எனவே, `பரிசுப் பொருள் வழங்கியதில் கார்த்திகேயனுக்கும் தொடர்பிருக்கிறதா?’ என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தேர்தல் விதி மீறி பரிசுப் பொருள்; வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் - ஓட்டுநர் மீது வழக்கு பதிவு

விகடன் 21 Mar 2026 7:21 pm

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி முதல்வர் ரங்கசாமிக்குத் தற்போதைய கையிருப்புத் தொகை ரூ.33,339/-. மேலும் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் ரூ.49,632/-, ஹெச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கில் ரூ.98,241/- இருக்கிறது. இவற்றுடன் இரண்டு யமஹா பைக்குகளும், ஹோண்டா சிட்டி, கியா கார்னிவல் என இரண்டு கார்களும் இருக்கின்றன. மேலும் தலா 12 கிராமில் ஒரு செயின், ஒரு மோதிரம் என ரூ.21,25,752/- மதிப்புடையவை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல்வர் ரங்கசாமி அதேபோல தட்டாஞ்சாவடி பகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் 20,000 சதுர அடியில் ஒரு இடமும், ரூ.12 கோடி மதிப்பில் 25,000 மற்றும் 40,000 சதுர அடியில் இரண்டு இடங்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில் 2,400 சதுர அடியில் ரூ.28 லட்சம் மதிப்பில் ஒரு கட்டிடம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.27.78 கோடி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல கோகுலகிருஷ்ணன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட இருவரிடம் ரூ.35 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. என்டிஏ கூட்டணி உறுதி… `லாட்டரி’ சார்லஸ் லஜகவுக்கு இரண்டு சீட்! - பாஜக-வுடன் தொடர்கிறார் ரங்கசாமி

விகடன் 21 Mar 2026 5:45 pm

நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி - கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ். சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசியல் களத்திலும் சரி, மீடியா வட்டாரத்திலும் சரி கடந்த சில மாதங்களாகவே இவர் தான் ஹாட் டாபிக். தமிழ் நாட்டுக்காரரான இவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரது தொகுதிகளின் எஸ்.ஐ.ஆர் கண்காணிப்பு அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்ததிலிருந்தே, 'கெரோ', 'போராட்டம்', 'கோ பேக் கோஷம்' என இவருக்கு எதிராக ரவுண்டு கட்டத் தொடங்கிய‌து திரிணாமுல் காங்கிரஸ். மம்தா பானர்ஜி ஆக்ஸ்போர்டு உரையின்போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூபா மொய்த்ரா 'குயிக் கன் முருகன்' பட போஸ்டரைத் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, 'உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்படும் முருகனைத் தயவு செய்து கட்டுப்படுத்துங்கள்' எனத் தேர்தல் ஆணையத்தை டேக் செய்தார். 'அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்ட அளவுக்கு என்னிடம் துப்பாக்கிகள் இல்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் நாலரை ஆண்டுகள் காவல்துறையில் இருந்தபோது பல ரக துப்பாக்கிகளைக் கையாள பயிற்சி பெற்றிருப்பதுடன், சட்டபூர்வமாகத் திறம்பட அவற்றைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்' என அவருக்குப் பதில் தந்தார் முருகன். பரபரப்பான தேர்தல் பணியிலிருந்தவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''என்னுடைய ஊர் சாத்தூர் பக்கம் கத்தாள‌ம்பட்டி. அப்பா சின்ன கோவிந்தன் தீவிர திமுககாரர். அம்மா அப்பா நான், தங்கைனு அளவான குடும்பம். மகிழ்ச்சியா போயிட்டிருந்த என் பால்யத்தைப் புரட்டிப் போட்டது சாத்தூரில் நிகழ்ந்த ஜாதிக் கலவரம். கலவரத்தில் அப்பா உயிர் போயிடுச்சு. அப்ப 10வது படிச்சிட்டிருந்த நான் குலதெய்வக் கோவிலுக்குப் போயிருந்ததால் அன்னைக்கு நான் தப்பிச்சேன். இல்லாட்டி அன்னைக்கே என்னையும் கொலை செய்திருப்பாங்க. ஏன்னா அப்பெல்லாம் கவுன்ட் காட்ட கொலை பண்ணிட்டிருந்தாங்க. அப்பாவும் முன்னாடி அரிவாள் தூக்கினவர்தான். மம்தா பானர்ஜி இருந்த இடத்தைச் சுத்தி கலவரம், கொலைன்னு பார்த்துப் பார்த்து வளர்ந்ததுல பயம் போயிடுச்சு. ஆனா 'இதுதான் வாழ்க்கையா'ங்கிற கேள்வி எழ, படிச்சு பெரிய பதவிகளுக்குப் போனாதான் குடும்பச் சூழலை மாத்த முடியும்கிற ஒரு வைராக்கியம் மனசுக்குள் வந்தது. போட்டித் தேர்வுகள் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினேன். கல்லூரிப் படிப்பு முடியறதுக்குள்ளாகவே ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியில் புரபஷனரி ஆபீஸர் பணிக்குத் தேர்வானேன். கேரளாவில் முதல் வேலை. வேலையையும் பார்த்துகிட்டே மீதிப் படிப்பையும் முடிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிச்சது. பிறகு தமிழ்நாட்டுக்குப் போகலாம்னு டி.என்.பி.எஸ்.சி எழுதினேன். SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்! குரூப் 1 க்ளியர் ஆகி, காவல்துறைப் பணி கிடைக்க வங்கி வேலையை விட்டுட்டு சென்னை வந்து ஆவடி டி.எஸ்.பி. ஆனேன். அந்தச் சமயத்தில் தவறே செய்யாம உயரதிகாரிகள் ரெண்டு பேர் முன்னாடி குற்றவாளி போல நிக்க வேண்டிய சம்பவம் ஒண்ணு நிகழ்ந்தது. அந்த ரெண்டு அதிகாரிகளும் நேரடி ஐ.பி.எஸ் அதிகாரிகள். அன்னைக்குத்தான் சிவில் சர்வீஸ் எழுதணுங்குற உந்துதல் உண்டாச்சு. சம்பளமில்லா விடுப்பு எடுத்துகிட்டு டெல்லி போய் யு.பி.எஸ்.சி-க்குத் தயார் செய்ததுக்குப் பலன் கிடைச்சது. மேற்கு வங்க கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியா 2007ம் ஆண்டு பணியைத் தொடங்கினேன்'' என்றவரிடம், முருகன் ஐஏஎஸ் முதல்வர் மம்தா பானர்ஜியுடனான மோதல் போக்கு குறித்துக் கேட்டோம். நான் பணியில் சேர்ந்த 4 வது வருஷம் அவங்க முதல்வரானாங்க. தொடர்ந்து மூணு முறை அவங்க ஆட்சிதான். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. ஆனா நேர்மையா சட்டப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகள் என்னை அவருக்கு எதிரியாக்கிடுச்சுனு நினைக்கேன். அதனால எங்காச்சும் என்னைப் பார்த்தால், நான் வணக்கம் வச்சாக் கூட பதிலுக்கு வணக்கம் சொல்ல மாட்டாங்க. நீங்கள் 'இதற்காக' வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை' மம்தா பதில் முக்கியத்துவம் இல்லாத துறைகளையே ஒதுக்குவாங்க. மோதல் போக்கின் உச்சமா ஒரு விஷயம் நடந்தது. என் மகனுக்கு ஆட்டிசம் பிரச்னை ப்ளஸ் பேச்சு சரியா வராம இருந்தது. தாய்மொழி புழங்குகிற இடத்துல இருந்து சிகிச்சை தந்தா சரியாகும்னு அங்க இருக்கிற டாக்டர்கள் பரிந்துரைச்சாங்க. 'தமிழ்நாட்டுக்கு  டெபுடேஷனில் போய் வர்றேன்'னு கேட்டேன். அனுமதி தரலை. ஒரு ஐஏஎஸ் அதிகாரியா இருந்தும் மகனுக்குத் தேவைப்படுகிற ஒரு சிகிச்சையைத் தரமுடியாமப் போச்சேங்கிற அந்தக் குற்ற உணர்ச்சி எனக்கு இப்பவும் இருந்துட்டே இருக்கு'' என்கிறார். மேற்கு வங்கம் 'பாஜக மம்தாவுக்கு எதிராக உங்களைப் பயன்படுத்துவதாகச் சிலர் சொல்கிறார்களே?' எனக் கேட்டதற்கு, தேர்தல் நேரத்துல ஆளுங்கட்சிக்குச் சாதகமா நடக்கிற அதிகாரிகள், நடுநிலையோட செயல்படுகிற அதிகாரிகள்னு பட்டியல் தயார் செய்து அதனடிப்படையில்தான் தேர்தல் கமிஷன் பணி ஒதுக்கும். தேர்தல் கமிஷன் போட்ட உத்தரவை பா.ஜ.க கட்சியோட தொடர்பு படுத்தி நான் பார்க்கலை. நான் சரியா வேலையைச் செய்வேன்னு நம்பி தந்தாகவே நினைக்கிறேன். நாளை பாஜகவே இங்க ஆட்சிக்கு வந்தாலும் அப்ப நான் மாநிலப் பணியில இருந்தா அவங்களுக்கும் ஆகாத ஆளாகவே இருப்பேன்னுதான் நினைக்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் இது சாதாரணம் என்றார். LPG விலை உயர்வு: ``உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது... - மம்தா பானர்ஜி எழுப்பும் கேள்வி!

விகடன் 21 Mar 2026 5:23 pm

நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி - கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ். சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசியல் களத்திலும் சரி, மீடியா வட்டாரத்திலும் சரி கடந்த சில மாதங்களாகவே இவர் தான் ஹாட் டாபிக். தமிழ் நாட்டுக்காரரான இவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரது தொகுதிகளின் எஸ்.ஐ.ஆர் கண்காணிப்பு அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்ததிலிருந்தே, 'கெரோ', 'போராட்டம்', 'கோ பேக் கோஷம்' என இவருக்கு எதிராக ரவுண்டு கட்டத் தொடங்கிய‌து திரிணாமுல் காங்கிரஸ். மம்தா பானர்ஜி ஆக்ஸ்போர்டு உரையின்போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூபா மொய்த்ரா 'குயிக் கன் முருகன்' பட போஸ்டரைத் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, 'உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்படும் முருகனைத் தயவு செய்து கட்டுப்படுத்துங்கள்' எனத் தேர்தல் ஆணையத்தை டேக் செய்தார். 'அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்ட அளவுக்கு என்னிடம் துப்பாக்கிகள் இல்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் நாலரை ஆண்டுகள் காவல்துறையில் இருந்தபோது பல ரக துப்பாக்கிகளைக் கையாள பயிற்சி பெற்றிருப்பதுடன், சட்டபூர்வமாகத் திறம்பட அவற்றைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்' என அவருக்குப் பதில் தந்தார் முருகன். பரபரப்பான தேர்தல் பணியிலிருந்தவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''என்னுடைய ஊர் சாத்தூர் பக்கம் கத்தாள‌ம்பட்டி. அப்பா சின்ன கோவிந்தன் தீவிர திமுககாரர். அம்மா அப்பா நான், தங்கைனு அளவான குடும்பம். மகிழ்ச்சியா போயிட்டிருந்த என் பால்யத்தைப் புரட்டிப் போட்டது சாத்தூரில் நிகழ்ந்த ஜாதிக் கலவரம். கலவரத்தில் அப்பா உயிர் போயிடுச்சு. அப்ப 10வது படிச்சிட்டிருந்த நான் குலதெய்வக் கோவிலுக்குப் போயிருந்ததால் அன்னைக்கு நான் தப்பிச்சேன். இல்லாட்டி அன்னைக்கே என்னையும் கொலை செய்திருப்பாங்க. ஏன்னா அப்பெல்லாம் கவுன்ட் காட்ட கொலை பண்ணிட்டிருந்தாங்க. அப்பாவும் முன்னாடி அரிவாள் தூக்கினவர்தான். மம்தா பானர்ஜி இருந்த இடத்தைச் சுத்தி கலவரம், கொலைன்னு பார்த்துப் பார்த்து வளர்ந்ததுல பயம் போயிடுச்சு. ஆனா 'இதுதான் வாழ்க்கையா'ங்கிற கேள்வி எழ, படிச்சு பெரிய பதவிகளுக்குப் போனாதான் குடும்பச் சூழலை மாத்த முடியும்கிற ஒரு வைராக்கியம் மனசுக்குள் வந்தது. போட்டித் தேர்வுகள் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினேன். கல்லூரிப் படிப்பு முடியறதுக்குள்ளாகவே ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியில் புரபஷனரி ஆபீஸர் பணிக்குத் தேர்வானேன். கேரளாவில் முதல் வேலை. வேலையையும் பார்த்துகிட்டே மீதிப் படிப்பையும் முடிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிச்சது. பிறகு தமிழ்நாட்டுக்குப் போகலாம்னு டி.என்.பி.எஸ்.சி எழுதினேன். SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்! குரூப் 1 க்ளியர் ஆகி, காவல்துறைப் பணி கிடைக்க வங்கி வேலையை விட்டுட்டு சென்னை வந்து ஆவடி டி.எஸ்.பி. ஆனேன். அந்தச் சமயத்தில் தவறே செய்யாம உயரதிகாரிகள் ரெண்டு பேர் முன்னாடி குற்றவாளி போல நிக்க வேண்டிய சம்பவம் ஒண்ணு நிகழ்ந்தது. அந்த ரெண்டு அதிகாரிகளும் நேரடி ஐ.பி.எஸ் அதிகாரிகள். அன்னைக்குத்தான் சிவில் சர்வீஸ் எழுதணுங்குற உந்துதல் உண்டாச்சு. சம்பளமில்லா விடுப்பு எடுத்துகிட்டு டெல்லி போய் யு.பி.எஸ்.சி-க்குத் தயார் செய்ததுக்குப் பலன் கிடைச்சது. மேற்கு வங்க கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியா 2007ம் ஆண்டு பணியைத் தொடங்கினேன்'' என்றவரிடம், முருகன் ஐஏஎஸ் முதல்வர் மம்தா பானர்ஜியுடனான மோதல் போக்கு குறித்துக் கேட்டோம். நான் பணியில் சேர்ந்த 4 வது வருஷம் அவங்க முதல்வரானாங்க. தொடர்ந்து மூணு முறை அவங்க ஆட்சிதான். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. ஆனா நேர்மையா சட்டப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகள் என்னை அவருக்கு எதிரியாக்கிடுச்சுனு நினைக்கேன். அதனால எங்காச்சும் என்னைப் பார்த்தால், நான் வணக்கம் வச்சாக் கூட பதிலுக்கு வணக்கம் சொல்ல மாட்டாங்க. நீங்கள் 'இதற்காக' வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை' மம்தா பதில் முக்கியத்துவம் இல்லாத துறைகளையே ஒதுக்குவாங்க. மோதல் போக்கின் உச்சமா ஒரு விஷயம் நடந்தது. என் மகனுக்கு ஆட்டிசம் பிரச்னை ப்ளஸ் பேச்சு சரியா வராம இருந்தது. தாய்மொழி புழங்குகிற இடத்துல இருந்து சிகிச்சை தந்தா சரியாகும்னு அங்க இருக்கிற டாக்டர்கள் பரிந்துரைச்சாங்க. 'தமிழ்நாட்டுக்கு  டெபுடேஷனில் போய் வர்றேன்'னு கேட்டேன். அனுமதி தரலை. ஒரு ஐஏஎஸ் அதிகாரியா இருந்தும் மகனுக்குத் தேவைப்படுகிற ஒரு சிகிச்சையைத் தரமுடியாமப் போச்சேங்கிற அந்தக் குற்ற உணர்ச்சி எனக்கு இப்பவும் இருந்துட்டே இருக்கு'' என்கிறார். மேற்கு வங்கம் 'பாஜக மம்தாவுக்கு எதிராக உங்களைப் பயன்படுத்துவதாகச் சிலர் சொல்கிறார்களே?' எனக் கேட்டதற்கு, தேர்தல் நேரத்துல ஆளுங்கட்சிக்குச் சாதகமா நடக்கிற அதிகாரிகள், நடுநிலையோட செயல்படுகிற அதிகாரிகள்னு பட்டியல் தயார் செய்து அதனடிப்படையில்தான் தேர்தல் கமிஷன் பணி ஒதுக்கும். தேர்தல் கமிஷன் போட்ட உத்தரவை பா.ஜ.க கட்சியோட தொடர்பு படுத்தி நான் பார்க்கலை. நான் சரியா வேலையைச் செய்வேன்னு நம்பி தந்தாகவே நினைக்கிறேன். நாளை பாஜகவே இங்க ஆட்சிக்கு வந்தாலும் அப்ப நான் மாநிலப் பணியில இருந்தா அவங்களுக்கும் ஆகாத ஆளாகவே இருப்பேன்னுதான் நினைக்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் இது சாதாரணம் என்றார். LPG விலை உயர்வு: ``உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது... - மம்தா பானர்ஜி எழுப்பும் கேள்வி!

விகடன் 21 Mar 2026 5:23 pm

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' - மதூர் சத்யா சிக்கியது எப்படி?

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர் சத்யா எப்படி சிக்கினார்? மதூர் சத்யா பெண்களை ஏமாற்றி அவர்களுடன் அந்தரங்க வீடியோக்களை எடுத்து வெளியில் பரப்பியதாக மதூர் சத்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் மீதான புகாரைப் பாதிக்கப்பட்ட பெண்கள் முதலில் சி.பி.ஐ கட்சிக்கே எடுத்து சென்றிருக்கின்றனர். 58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி சி.பி.ஐ யின் முக்கிய நிர்வாகிகள் கூடிப் பேசி புகார் மற்றும் ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன்பிறகே அவரை கட்சியை விட்டு நீக்கியதோடு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் பற்றி அறிய இந்த விவகாரத்தைக் கையாண்ட சி.பி.ஐ-யைச் சேர்ந்த பாரதி மற்றும் ரஞ்சனி கண்ணம்மாவிடம் பேசினோம். அந்த நபர் மீது புகார் வந்தவுடன் எங்களுக்கே முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் தத்துவம். மதூர் சத்யா அதன்படி பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அவர்களின் தனியுரிமையை மதித்து விசாரித்தோம். மார்ச் 13 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், எங்கள் அமைப்பின் தோழர் ஒருவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மனம் நொந்துப் பேசி புகார் கூறியிருக்கிறார். அன்று மாலையே முக்கிய நிர்வாகிகளெல்லாம் ஆன்லைன் வழியாகக் கூடி புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, முகாந்திரம் இருப்பின் மதூர் சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டோம். புகார் கூறிய பெண் பெரும் மன உளைச்சலிலும் பதற்றத்திலும் இருந்தார். அவரைத் தேற்றி தைரியமூட்டி, அவரின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வோம் என உத்தரவாதம் கொடுத்தோம். அதன்பிறகுதான் அந்தப் பெண் கொஞ்சம் நம்பிக்கையாக தன்னிடம் இருந்த வீடியோக்களை எங்களிடம் ஒப்படைத்தார். பாலியல் குற்றச்சாட்டு: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது! வெளியேவே பகிரமுடியாத அந்தரங்க வீடியோக்கள் அவை. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, நட்பாகப் பழகும் பெண்களிடம் நம்பிக்கை கொடுத்து உறவில் இருந்திருக்கிறார். அவர்களுடன் தனிமையில் அந்தரங்கமாக இருக்கும் போது அவற்றை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். எடுத்த வீடியோவை வெளியில் மற்ற பெண்களுக்கும் பகிர்ந்து, வேறு சில பெண்களையும் ஏமாற்ற முயன்றிருக்கிறார். தங்களின் வீடியோ அவரின் மூலம் வெளியில் பரவுவது தெரிந்த பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அழுத்தத்துக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியிருக்கின்றனர். மதூர் சத்யா இது எல்லாமே அமைப்புக்கு வெளியே இருக்கும் பெண்கள். அமைப்புக்குள் இருக்கும் பெண்கள் ஒரு சிலருக்கும் தவறான எண்ணத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்திருக்கிறார். அதன் ஸ்க்ரீன் ஷாட்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது வரைக்கும் 8 பாதிக்கப்பட்ட பெண்கள் கமிட்டியில் புகாரளித்திருக்கின்றனர். 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். மதூர் சத்யா அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதாலும் பிரபலமானவர் என்பதாலும் அவர் மீது புகார் கொடுக்க பெண்கள் தயங்கினர். அவர்களைத் தேற்றி புகாரளிக்க செய்து, அவர்களுக்கான சட்ட உதவிகளையும் பார்த்துக் கொள்ள சி.பி.ஐ தயாராக இருக்கிறது என்றனர். உன் கணவர் இறந்துவிடுவார் - போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்

விகடன் 21 Mar 2026 5:07 pm

கேரளம்: பாஜக - சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு - குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தாமதமாக வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இன்றும், திங்கள் கிழமையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கால அவசாகம் உள்ளது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாக தாமதமாவதற்குக் காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுவதற்காக தலைமையில் சீட் கேட்டதுதான் காரணம் எனச் சொல்லப்பட்டது. பின்னர் அவர்கள் இருவருக்குமே சீட் வழங்கப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் சீட் வழங்காததற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் வி.டி.சதீசன் செய்த சதிதான் காரணம் என்று அக்கட்சிக்குள்ளேயே சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே வி.டி.சதீசன் அளித்த பேட்டியில், கே.சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோரின் பெயர்களை நீக்குவதால் எனக்கு என்ன லாபம். அவர்களின் பெயரை நீக்கும் அளவுக்கு நான் அவ்வளவு பெரிய தலைவரா? எம்.பி-க்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது முழுமையாக ஹைகமாண்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவர்கள் எடுத்த முடிவுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது. கே.சுதாகரன் போன்ற ஒரு தலைவர் காங்கிரஸின் மிகப்பெரிய சொத்து. அவருக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு உண்டு. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், களத்தில் செயல்படுபவர்களையும் தாக்கிப் பேசுவது எதிர்த்தரப்பினரின் வழக்கம்.  சி.பி.எம் - பா.ஜ.க இந்தப் பிரச்னைகளை உருவாக்கியது ஊடகங்கள்தான். கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸுக்கு எதிராகப் பல செய்திகளைப் பரப்பினார்கள். இப்போது எல்லாம் காணாமல் போய்விட்டது. ஊடகங்களின் அஜெண்டாவைக் கூட சி.பி.எம் மாநிலத் தலைமையகமான ஏ.கே.ஜி சென்டர்தான் தீர்மானிக்கிறது. கே.என்.பணிக்கர் மறைவு: கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர் - பினராயி விஜயன் இரங்கல் காங்கிரஸில் கலவரம் நடப்பதாகச் சித்தரித்து, தேர்தலில் பலனடையப் பார்க்கிறார்கள். இந்தியாவில் மிகவும் விலைவாசி அதிகமான மாநிலம் கேரளமாகும். கடந்த பத்து ஆண்டுகளில் கேரள மக்கள் இடதுசாரி ஆட்சியை வெறுத்துவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலிருந்து தப்பிப்பதற்காக இல்லாத கதைகளை உருவாக்குகிறார்கள். காங்கிரஸில் சரியான நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும். வி.டி.சதீசன் பினராயி விஜயன் முதல்வர் ஆவதற்காக வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு சீட் மறுக்கப்பட்ட வரலாறு கேரளாவுக்குத் தெரியும். தொண்டர்கள் கொதித்தெழுந்த பிறகுதானே அவருக்கு சீட் கொடுத்தார்கள். கேரளாவில் ஆட்சிக்கு வருவதுதான் காங்கிரஸின் ஒரே இலக்கு. கேரளாவில் சி.பி.எம் - பா.ஜ.க கட்சிகளிடையே திரைமறைவில் தேர்தல் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது உண்மை என்பதை நிரூபிக்க இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே போதும். சுமார் பத்து இடங்களில் பா.ஜ.க - சி.பி.எம் இடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார். Kerala: 'அவர் 3 முறை MLA; 4-வதாக மனைவிக்கு சீட்டா?' - சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி

விகடன் 21 Mar 2026 4:54 pm

கேரளம்: பாஜக - சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு - குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தாமதமாக வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இன்றும், திங்கள் கிழமையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கால அவசாகம் உள்ளது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாக தாமதமாவதற்குக் காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுவதற்காக தலைமையில் சீட் கேட்டதுதான் காரணம் எனச் சொல்லப்பட்டது. பின்னர் அவர்கள் இருவருக்குமே சீட் வழங்கப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் சீட் வழங்காததற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் வி.டி.சதீசன் செய்த சதிதான் காரணம் என்று அக்கட்சிக்குள்ளேயே சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே வி.டி.சதீசன் அளித்த பேட்டியில், கே.சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோரின் பெயர்களை நீக்குவதால் எனக்கு என்ன லாபம். அவர்களின் பெயரை நீக்கும் அளவுக்கு நான் அவ்வளவு பெரிய தலைவரா? எம்.பி-க்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது முழுமையாக ஹைகமாண்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவர்கள் எடுத்த முடிவுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது. கே.சுதாகரன் போன்ற ஒரு தலைவர் காங்கிரஸின் மிகப்பெரிய சொத்து. அவருக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு உண்டு. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், களத்தில் செயல்படுபவர்களையும் தாக்கிப் பேசுவது எதிர்த்தரப்பினரின் வழக்கம்.  சி.பி.எம் - பா.ஜ.க இந்தப் பிரச்னைகளை உருவாக்கியது ஊடகங்கள்தான். கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸுக்கு எதிராகப் பல செய்திகளைப் பரப்பினார்கள். இப்போது எல்லாம் காணாமல் போய்விட்டது. ஊடகங்களின் அஜெண்டாவைக் கூட சி.பி.எம் மாநிலத் தலைமையகமான ஏ.கே.ஜி சென்டர்தான் தீர்மானிக்கிறது. கே.என்.பணிக்கர் மறைவு: கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர் - பினராயி விஜயன் இரங்கல் காங்கிரஸில் கலவரம் நடப்பதாகச் சித்தரித்து, தேர்தலில் பலனடையப் பார்க்கிறார்கள். இந்தியாவில் மிகவும் விலைவாசி அதிகமான மாநிலம் கேரளமாகும். கடந்த பத்து ஆண்டுகளில் கேரள மக்கள் இடதுசாரி ஆட்சியை வெறுத்துவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலிருந்து தப்பிப்பதற்காக இல்லாத கதைகளை உருவாக்குகிறார்கள். காங்கிரஸில் சரியான நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும். வி.டி.சதீசன் பினராயி விஜயன் முதல்வர் ஆவதற்காக வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு சீட் மறுக்கப்பட்ட வரலாறு கேரளாவுக்குத் தெரியும். தொண்டர்கள் கொதித்தெழுந்த பிறகுதானே அவருக்கு சீட் கொடுத்தார்கள். கேரளாவில் ஆட்சிக்கு வருவதுதான் காங்கிரஸின் ஒரே இலக்கு. கேரளாவில் சி.பி.எம் - பா.ஜ.க கட்சிகளிடையே திரைமறைவில் தேர்தல் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது உண்மை என்பதை நிரூபிக்க இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே போதும். சுமார் பத்து இடங்களில் பா.ஜ.க - சி.பி.எம் இடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார். Kerala: 'அவர் 3 முறை MLA; 4-வதாக மனைவிக்கு சீட்டா?' - சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி

விகடன் 21 Mar 2026 4:54 pm

CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை? - ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது அங்கங்கே பயணம், பிரசாரம் என அரசியல் களப் பரபரப்பிற்குச் சொல்லவே வேண்டாம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்னால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். என்.டி.ஏ கூட்டணியின் அடுத்தடுத்த டெல்லி பயணங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமித்ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் டிடிவி தினகரன். அமித்ஷா தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! அப்போது அவர் பேசியதாவது... நாங்கள் எல்லாம் டெல்லி வந்தாலே முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார். 'தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியைப் பெற்று தரமாட்டார்களா?' என்று எங்களைக் கேட்கிறார். சரியான புரிதல் இல்லாமல் டெல்லியோடு நீங்கள் குழாய் அடி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸிற்குப் பிறகு நாங்கள் எப்படி நிதியைப் பெற்று தரமுடியும்? இது தேர்தல் காலம். அதனால், திமுகவை எப்படி விழ்த்துவது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி... நிதி... என்று கூறுகிறார்கள். ஆனால், கடந்த 12 ஆண்டுகளில், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 12 லட்சம் கோடி வழங்கியிருக்கிறது. 2004-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை, காங்கிரஸ் ஆட்சியில் 3 லட்சம் கோடி தான் நிதி வந்திருக்கிறது. எஸ்.சி, எஸ்.டிக்கான நிதியை ரூ.5,000-க்குச் செலவு செய்துவிட்டார். இது 'கடை தேங்காயை வழி பிள்ளையாருக்கு உடைத்தது போல' இருக்கிறது. தமிழ்நாடு அரசு நிதி ஆளுகையைச் சரியாக செய்யவில்லை. ஸ்டாலின் விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும் - திருமா சி.எஸ்.கேவிற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை? பணியிடை மாற்றம், போஸ்டிங் எனக் கிட்டத்தட்ட ரூ.2,500 ஊழலை அமலாக்கத் துறை கண்டுபிடித்திருக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், சென்னை உயர் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க சொல்லி தமிழ்நாட்டு அரசின் தலையில் குட்டியிருக்கிறது. தவறு செய்தால் டெல்லியைக் கண்டு பயப்பட தான் செய்வார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சி.எஸ்.கே-விற்குத் தலைமை தாங்குவது தோனி. அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்? இதற்கு சென்று முதலமைச்சர் போராடச் சொல்லுங்கள். பஞ்ச பாண்டவ கூட்டணி டெல்லி, தமிழ்நாடு என்று கூறி இனி மக்களை ஏமாற்ற முடியாது. டெல்லியில் இவர்கள் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு எத்தனை கெட்ட பெயர், அவமானம் என்று அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாகத் தோற்கடிக்கும். அதற்கான ஸ்ட்ரேட்டஜியைப் பேசதான் வந்தேன். பீகாரைப் போல எல்லாரும் ஒற்றுமையாக இருந்து, ஒவ்வொரு தொகுதியிலும் பூத் லெவலில் ஒற்றுமையாக உழைப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக என்பதை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் மறுத்துவிட்டார்கள். ராமதாஸ் - சசிகலா அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன் - சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன? ராமதாஸ் - சசிகலா கூட்டணியைச் சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. இப்போது நாங்கள் முழுமையாக உள்ளோம். திமுக என்னும் துரியோதன கூட்டணியை வீழ்த்த எங்களது பஞ்ச பாண்டவ கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். திமுகவிற்கான ஒரே மாற்று அதிமுக தலைமையிலான எங்களது கூட்டணி. தமிழ்நாட்டிற்கான நிதி வரவில்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். மத்திய அரசிடம் இருந்து எளிதாக நிதி பெற்றுத்தரக் கூடியது எங்களது கூட்டணி.

விகடன் 21 Mar 2026 3:27 pm

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், “நான் அண்ணா தி.மு.கவிலிருந்து, அண்ணா தொடங்கிய தி.மு.கவில் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் இவர்கள்தான் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள். எடப்பாடி பழனிசாமியும், நானும் முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள். ஓ.பி.எஸ் வருகை பழனிசாமி ஊர்ந்து சென்று முதல்வரானார். தன்னை முதல்வர் ஆக்கியவர்களுக்கே விசுவாசமாக இல்லாதவர். வாக்களிக்கும் மக்களுக்கு விசுவாசமாக இருப்பாரா? பழனிசாமியைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. உங்களுக்கே தெரியும். அவர் உடன் இருப்பது உதயகுமார். நான் முந்தைய மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டபோது 6 ஒ.பன்னீர்செல்வத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார் உதயகுமார். சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் போன்றோரை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? `பா.ஜ.க-வை டென்சனாக்கிய இருவர் அணி' - கடைசி நேரத்தில் `நோ' சொன்ன விஜய்! தலையைப் பிய்த்துக் கொண்டு பேய் பிடித்தது போல பழனிசாமி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார். கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க 7 இடங்களில் டெபாசிட் காலி ஆனது. 14 இடங்களில் மூன்றாம் இடம் பெற்றது. பழனிசாமியும், உதயகுமாரும் அ.தி.மு.க-வைக் குழி தோண்டி புதைத்து விட்டனர். எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதியை ரத்து செய்து, பொதுச்செயலாளர் ஆகி உள்ளார் பழனிசாமி. கூட்டத்தில் ஓ.பி.எஸ் 10 மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிய வேண்டும் என்றால் பணம் வாங்காமல் இருப்பார்களா? இனி அ.தி.மு.கவில் மிட்டா மிராசுதார்தான் பொதுச் செயலாளராக வர முடியும். சபாநாயகர் கூட சில நேரம் எதிர்க்கட்சி உறுப்பினரைக் கண்டித்தாலும், முதல்வர் பேச விட்டு, பதில் அளிப்பார். தி.மு.க கூட்டணியிலிருந்து ஒரு கட்சிகூட வெளியேறாததற்கு, கூட்டணிக் கட்சிகளை முதல்வர் கண்ணியத்துடன் நடத்துவதே காரணம்” என்றார். 'நான் ஜெயிச்சா மட்டும் போதாது...' - விஜய்-ன் அடுத்தக்கட்ட '50' வேட்பாளர்கள் இவர்கள்தான்?

விகடன் 21 Mar 2026 1:22 pm

அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன் - சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். 'இது சுமூக பேச்சுவார்த்தைக்கான முயற்சியோ' என்று அரசியல் களத்தில் பேச்சு ஒன்று எழுந்தது. இதற்கு வைகோவே பதிலளித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் காம்ரேட் பேபி மாநிலங்களவையில் எனக்கு சக உறுப்பினர் மட்டுமல்ல. என் மீது எல்லையற்ற வாஞ்சையும், அன்பும் கொண்டிருப்பவர். M A பேபி விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும் - திருமா அண்மையில் நான் திருவனந்தபுரம் சென்றிருந்தேன். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நான் ஆற்றிய ஆங்கில உரைகளைத் தொகுத்து அதற்கு அணிந்துரை வழங்க கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தேன். அப்போது விமான நிலையத்திற்கே தொழிற்சங்கத் தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினரையும் அனுப்பி, நானும், என்னோடு வந்தவர்களும் அரசு விடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார் பேபி. ஒற்றுமை எனக்கும், அவருக்கும் ஒரு ஒற்றுமை. பழைய பாடல்களைக் கேட்பது எனக்கும், அவருக்கும் பொழுதுபோக்கு. இப்போது கூட, அவருடன் உணவருந்தும் போது, பாசமலர், திருவிளையாடல், பாவ மன்னிப்பு போன்ற திரைப்படங்களின் பாடல்களைக் கேட்டோம். 'செம்மீன் பாடல்களைக் கேட்போம்' என்று கூறினேன். அதையும் கேட்டோம். எங்கள் இருவருக்கிடையில் அப்படிப்பட்ட நட்பு. அதனால், அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை தொலைகாட்சியில் பார்த்தேன். உடனே புறப்பட்டு வந்தேன். வைகோ அவர்கள் முக்கியமான கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவரைச் சந்திக்க வந்தேன். தேர்தலுக்குப் பிறகு இங்கு வரும்போது, வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்று அழைத்தேன். அதன் பின், அவர் கூட்டத்திற்குச் சென்றுவிட்டார். இதுதான் நடந்தது. இதைத் தவிர, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்திற்குள் எந்த அரசியலையும் பேசமாட்டேன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

விகடன் 21 Mar 2026 1:08 pm

58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அசோக் கராட் என்பவர் தன்னிடம் ஜோதிடம் கேட்க வரும் பெண்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். தன்னை ஓய்வு பெற்ற கப்பல் அதிகாரி என்று கூறிக் கொண்டு, கேப்டன் என்ற அடையாளத்துடன் அப்பகுதியில் செயல்பட்டு வந்தார். ஆன்மீக நடைமுறைகள் என்ற போர்வையில் பெண்களை உணர்ச்சிப்பூர்வமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அசோக் கராட்டை இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அப்பென் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், கராட் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, மயக்க மருந்து கலந்த பானங்களை கொடுத்து 2022 முதல் டிசம்பர் 2025 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று தெரிவித்திருந்தார். அசோக் கராட்டிற்கு அரசியல் தலைவர்கள் மத்தியிலும், முக்கிய பிரமுகர்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் மாநில மகளிர் அணித்தலைவரும், மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் தலைவருமான ரூபாலி சாகங்கருக்கு ஜோதிடருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சிவசேனா(உத்தவ்) குற்றம் சாட்டி இருந்தது. இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்) நிர்வாகி சுஷ்மா அந்தாரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தோம்ப்ரே ஆகியோர் அளித்திருந்த பேட்டியில், சாகங்கர் கைதான ஜோதிடர் கராத்துடன் இணைந்து பில்லி சூனியம் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினர். கராட் தலைமையிலான கோயில் அறக்கட்டளையில் உறுப்பினராக சாகங்கர் இருந்துள்ளார். கராட் கைதை தொடர்ந்து, கராட்டின் கால்களைக் கழுவுவது போன்றும், கராட் சாகங்கருக்கு உணவளிப்பது போன்றும், சூரிய ஒளியில் இருந்து காப்பாற்ற கராடிற்கு குடையைப் பிடித்துக் போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. மேலும் ஒரு காணொளியில் கராடை விட்டல் பகவானுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் போன் இது குறித்து சுஷ்மா அந்தாரே கூறுகையில்,''ஜோதிடரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பல பெண்களை சாகங்கர் மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் என்னிடம் கூறினார். அதோடு புகார் அளிக்க வேண்டாம் என்று கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகச் சிலர் என்னிடம் கூறியுள்ளனர். மற்றவர்களிடம் குற்றத்தைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாக என்னிடம் தெரிவித்தனர். சாகங்கர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கராட் ஆகியோரின் போன் அழைப்பு விபரங்களை காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார். திரவம்? சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா இது குறித்து கூறுகையில்,'' கராடின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை தன்னுடன் ஒரு உள் நபர் பகிர்ந்து கொண்டார். கராட் 'ஓஷ்னோ ஜல்' என்ற திரவத்தை தயாரிப்பதாக அவர் கூறினார். இது வயாக்ராவை போன்றதுஆகும். கராடின் வாடிக்கையாளர்களில் பல மூத்த அரசியல்வாதிகள் மற்றும் ஒரு மத அறக்கட்டளையின் அறங்காவலர் இருக்கிறார். மேலும் அவர்கள் நாசிக்கில் இருந்து 'ஜல்' சேகரிக்க தங்கள் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பினர். அவர்களில் பலர் தங்களது வலிமையை அதிகரிக்க உதவும் 'ஓஷ்னோ ப்ரே' மற்றும் 'சித்தா பிரார்த்தனை' செய்ய கராடின் உதவியை நாடியதாக அவர் கூறினார். இப்புகார்களையடுத்து சாகங்கரை அழைத்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். இதில் உடனே பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டார். உடனே சாகங்கர் துணை முதல்வர் சுனேத்ரா பவாரை சந்தித்து பேசிவிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார். இது குறித்து சாகங்கர் கூறுகையில், `கராட்டை குருவாகத்தான் நினைத்தேன். அவர் மீதான புகார் பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்று தெரிவித்தார்.

விகடன் 21 Mar 2026 12:44 pm

விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும் - திருமா

திமுக கூட்டணி 'வலிமை'யான கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளில் தொகுதி பங்கீட்டில் இன்னமுமே இழுப்பறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், வேட்பாளர் நேர்காணலுக்கான வீடியோவை வெளியிட்டுள்ளார் திருமாவளவன். அதில் தொகுதி பங்கீடு குறித்து அவர் பேசியிருப்பதாவது... மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோது 25 தொகுதிகள் கிடைத்தது. அப்போது என்னால் சுதந்திரமாக முடிவெடுக்க முடிந்தது. திருமாவளவன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! 10-க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் போது, நீண்ட காலமாக காத்திருப்பவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மேலும், அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் கருத்தாக உள்ளது. அதை நாம் ஒவ்வொரு தேர்தல்களிலும் எதிர்கொள்கிறோம். ஏன் தோற்றோம்? -திமுக பதில் 'அரக்கோணத்தில் ஏன் தோற்றோம்?' என்று கேட்டபோது, திமுக, 'நீங்கள் வெளியில் இருந்து ஆளை இறக்குகிறீர்கள். அந்த ஊரை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தவில்லை' என்று கூறியது. வானூர் தோல்விக்கும் இது தான் கூறப்பட்டது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், நாம் போட்டியிட்ட 6 தொகுதிகளிலுமே தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு பகுதி ஆள்களைத் தான் போட்டியிட வைத்தோம். வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் கட்சி தலைமைக்கு நெருக்கடி, அழுத்தம் இல்லாமல் சுதந்திரத்தோடு முடிவு எடுக்கும் வாய்ப்பை இயக்கத் தோழர்கள் நமக்கு வழங்க வேண்டும். தொகுதி பங்கீட்டை போராடி பெற வேண்டியதாக இருக்கிறது. தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டிய நிதியை என்னுடைய தோழமைகளிடம் பேசி பெறுகிறேன். நெருக்கடிக்கு நடுவே வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறேன். இப்படி அனைத்தையும் நானே செய்கிறேன். 25 ஆண்டுகளைக் கடந்தும், இந்தக் களம் இன்னும் நமக்கு புதிதாகவே இருக்கிறது. தேர்தல் தங்கம் விலை குறையுதுதான்; ஆனால், சரியவில்லை! - இப்போ 'இந்த' தப்பை மட்டும் பண்ணீடாதீங்க | Gold வளர்ச்சிக்கு தடை நாம் எந்தவிதத்திலும் வலிமை பெற்றுவிடக் கூடாது என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை தான் இங்கே அதிகம்... அரசியல் சக்தியாக பரிணமித்துவிடக்கூடாது என்று எண்ணக்கூடியவர்கள் தான் இங்கே பெரும்பான்மை. இவர்கள் வளர வேண்டும் என்று ஊக்குவிக்க பெரிதாக யாரும் இல்லை என்பது தான் யதார்த்தம். இருந்தாலும், 25 ஆண்டுகளாக தாக்குப்பிடித்து நிற்கிறோம். தவிர்க்க முடியாத சக்தியாகவும் உருமாறி உள்ளோம். ஊடகங்கள் திருமாவளவனை 'கேம் சேஞ்சர்' என்று சொல்கின்றன... திருமாவளவன் நினைத்தால் தமிழ்நாடு அரசியலின் திசை வழிப்போக்கை ஒரு சில நிமிடங்களில் மாற்றிவிட முடியும் என்று சமூக வலைதளங்களில் பேசுகின்றனர். ஆனாலும் கூட, அப்படிப்பட்ட ஒரு அரசியலை நமக்கு செய்ய விருப்பமில்லை. இங்கு புதிய மரபு மற்றும் நாகரிகமான அரசியல் செய்து வருகிறோம். திருமாவளவன் 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப் இந்த அணுகுமுறைகள் எல்லாம் சரி வராது என்று பலர் நினைக்கலாம். அனைவரும் அறிந்த பல வாய்ப்புகள் வந்தும் நாம் முன்னிறுத்தக்கூடிய அரசியலை பாதுகாக்க... விசிக வலிமையை தக்க வைக்கவும் இன்று நாம் மத சார்பற்ற கூட்டணியில் இணைந்து நிற்கிறோம். தொகுதி பங்கீட்டில் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறோம். தற்காலிகமாக வெற்றிகரமான அணுகுமுறை என்று தோன்றினாலும், காலத்திற்கும் போற்றக்கூடிய வெற்றிகரமான யுத்தி. அதனால், எத்தனை தொகுதிகளைப் பெற்றாலும் நம்முடைய எதிர்காலத்தோட வெற்றி. இன்று நம்பகத்தன்மை இழந்து பெறும் வெற்றி ஆகும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும். அதற்காக இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நமது யுக்தியை மாற்றி, 'இது தான் வெற்றிகரமான யுக்தி' என்று நினைத்துக்கொண்டிருக்க முடியாது. எனவே, மிகக் குறைவான எண்ணிக்கையைப் பெற்றால் கூட, நமது அரசியல் நிலைப்பாட்டை மேலும் வலிமையாக்குவதாக இருக்கும். என்றிருக்கிறார். HDFC தலைவர் ராஜினாமா: சந்தை கடும் சரிவு; வங்கியின் 'இந்த' செயல் காரணமா? முதலீட்டாளர்கள் இனி?

விகடன் 21 Mar 2026 11:47 am

`இனி அமெரிக்கா அதை செய்யாது, இலக்கை நெருங்கி விட்டோம்' - ஈரான் போரிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானில் நடத்தி வரும் போர் மூன்றாவது வாரத்திற்கு வந்திருக்கிறது. இத்தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்கா 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களை கப்பல்களில் அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே வளைகுடாவில் 50 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். புதிதாக வரும் கப்பல் மத்திய கிழக்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இத்தாக்குதலை ஆரம்பத்தில் இருந்தே முன்னெடுத்தது இஸ்ரேல்தான். எனவேதான் இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ஈரான் தங்களது பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதால் அந்த வழியாக வர்த்தக கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நேட்டோ நாடுகளிடம் போர்க்கப்பல்களை அனுப்பும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் எந்த நாடும் போர்க்கப்பலை அனுப்ப மறுத்திவிட்டது. இதனால் நேட்டோ அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே இந்த போர் அமெரிக்காவிற்கு தேவையில்லாதது என்று அமெரிக்க மக்கள் நம்புகின்றனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மற்றொரு புறம் போரை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்காவிற்கு கடுமையான பொருட்செலவாகிறது. இதையடுத்து போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகிறது. இது தொடர்பாக அவர் தற்போது தனது சமூக தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய நெருங்கிவிட்டதாகவும், இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிரான ராணுவ முயற்சிகள் அதன் நோக்கத்தை எட்டிவிட்டன. ஈரானின் ஏவுகணைத் திறன், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில் கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. ஈரானின் கடற்படை மற்றும் வான்படை அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெறாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நட்பு நாடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மறுபுறம் இருப்பவர்களை நாம் முழுமையாக அழித்துக் கொண்டிருக்கும்போது போர்நிறுத்தம் செய்ய முடியாது என்று கூறி, உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த அவர் மறுத்துவிட்டார். ஹார்முஸை கைவிட்ட ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணை தொடர்பான தனது செய்தியில், `அந்தப் பாதையைச் சார்ந்துள்ள நாடுகள் அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் மற்ற நாடுகள், தேவைக்கேற்ப அதன் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா இனி அதைச் செய்யாது. அமெரிக்கா இதற்கு உதவ முடியும் என்றாலும், அது அவசியமற்றது. உதவி கேட்கப்பட்டால், ஹார்முஸ் தொடர்பான முயற்சிகளில் அந்த நாடுகளுக்கு நாங்கள் உதவுவோம். ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகு அது தேவையாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். இந்த பணி எளிதானது என்று விவரித்த ட்ரம்ப், அந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பாதுகாப்பது, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒரு எளிதான ராணுவ நடவடிக்கையாக இருக்கும் என்றும் கூறினார். ட்ரம்பின் இந்த கருத்துகள், மத்திய கிழக்கில் பதற்றங்கள் இன்னும் தணியாத நிலையிலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சூழலிலும், மூன்று வாரங்களாகத் தீவிரமாக நடத்தி வந்த தனது நேரடி ராணுவ தாக்குதலை அமெரிக்கா குறைக்கத் தயாராகி வருவதைக் காட்டுகின்றன. இது அமெரிக்காவின் உத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

விகடன் 21 Mar 2026 10:45 am

'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத'அமெரிக்கா?

ஈரான் போரும் முடிந்தபாடில்லை. ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்க நட்பு நாடுகள் கப்பல்களுக்கு திறப்பதில்லை. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகள் எரிப்பொருள் தட்டுப்பாடால் திணறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா. ஈரான் எண்ணெய்க்கு அனுமதி இது குறித்து அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கருவூலம் அனுமதி அளிக்கிறது. இது குறுகிய கால அனுமதி மட்டுமே. தற்போது, குறைந்த விலைக்கு தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்கி சீனா பதுக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்காட் பெசென்ட் `அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய Air India விமானம்! இப்படி ஏற்கெனவே கப்பலில் இருக்கும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதிப்பதன் மூலம், உலக சந்தைக்குள் கிட்டத்தட்ட 140 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அமெரிக்கா கொண்டு வருகிறது. சப்ளை மீது ஈரான் ஏற்படுத்தியுள்ள தற்காலிக அழுத்தத்தையும் குறைக்கிறது. ஈரான் எண்ணெயை அனுமதித்து உலக அளவில் எண்ணெய் விலையைக் குறைப்பதோடு, போரைத் தொடர்ந்தும் டெஹ்ரானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுப்போம். அமெரிக்காவின் செயல் ஈரான் எண்ணெய்க்கான தற்காலிக அனுமதி ஏற்கெனவே கப்பல்களில் உள்ள ஈரான் எண்ணெய்களுக்கு மட்டுமே... புதிதாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கோ, புதிதாக வாங்கவோ அல்ல. மேலும், ஈரான் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்த முடியாதப்படி, அமெரிக்கா அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும். இதுவரை, உலக சந்தைக்கு ட்ரம்ப் அரசாங்கம் 440 மில்லியன் கூடுதல் பேரல்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில் தடை விதித்திருந்த ரஷ்ய எண்ணெய்களுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா. இப்போது ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது. ஈரான் போரில் உலக அளவிலான எண்ணெய் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குக் கடும் நெருக்கடியாக உள்ளது. 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்

விகடன் 21 Mar 2026 10:31 am

'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத'அமெரிக்கா?

ஈரான் போரும் முடிந்தபாடில்லை. ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்க நட்பு நாடுகள் கப்பல்களுக்கு திறப்பதில்லை. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகள் எரிப்பொருள் தட்டுப்பாடால் திணறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா. ஈரான் எண்ணெய்க்கு அனுமதி இது குறித்து அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கருவூலம் அனுமதி அளிக்கிறது. இது குறுகிய கால அனுமதி மட்டுமே. தற்போது, குறைந்த விலைக்கு தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்கி சீனா பதுக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்காட் பெசென்ட் `அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய Air India விமானம்! இப்படி ஏற்கெனவே கப்பலில் இருக்கும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதிப்பதன் மூலம், உலக சந்தைக்குள் கிட்டத்தட்ட 140 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அமெரிக்கா கொண்டு வருகிறது. சப்ளை மீது ஈரான் ஏற்படுத்தியுள்ள தற்காலிக அழுத்தத்தையும் குறைக்கிறது. ஈரான் எண்ணெயை அனுமதித்து உலக அளவில் எண்ணெய் விலையைக் குறைப்பதோடு, போரைத் தொடர்ந்தும் டெஹ்ரானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுப்போம். அமெரிக்காவின் செயல் ஈரான் எண்ணெய்க்கான தற்காலிக அனுமதி ஏற்கெனவே கப்பல்களில் உள்ள ஈரான் எண்ணெய்களுக்கு மட்டுமே... புதிதாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கோ, புதிதாக வாங்கவோ அல்ல. மேலும், ஈரான் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்த முடியாதப்படி, அமெரிக்கா அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும். இதுவரை, உலக சந்தைக்கு ட்ரம்ப் அரசாங்கம் 440 மில்லியன் கூடுதல் பேரல்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில் தடை விதித்திருந்த ரஷ்ய எண்ணெய்களுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா. இப்போது ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது. ஈரான் போரில் உலக அளவிலான எண்ணெய் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குக் கடும் நெருக்கடியாக உள்ளது. 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்

விகடன் 21 Mar 2026 10:31 am

திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! - காரணம் என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை மார்ச் 23-ம் தேதி திருத்தணியிலிருந்து தொடங்குகிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, மாநாடு, வேட்பாளர் அறிவிப்பு, வாக்குறுதிகள் வெளியீடு என அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. இச்சூழலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் பிரசாரத்தையும் தொடங்குகிறார். நம்மிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்கள் சிலர் பிப்ரவரி 21-ம் தேதி மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்தி அந்த மேடையிலேயே 234 வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டோம். கடந்த ஒருமாதமாக வேட்பாளர்கள் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறார்கள். சீமான் தேர்தல் பிரசாரம் இதற்கிடையில், நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும், வேளாண்மை, ஆடு, மாடு வளர்த்தல் போன்றவை அரசு வேலையாக அறிவிக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை, முழுமையான பூரண மதுவிலக்கு, உழவர்களே உணவு பொருட்களுக்கு விலை தீர்மானிக்கும் உரிமை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறோம். இச்சூழலில்தான் பிரசாரத்துக்கு கிளம்புகிறார் அண்ணன் சீமான் என்றார். நம்மிடம் பேசிய அக்கட்சி நிர்வாகிகள் சிலர், பொதுவாக கன்னியாகுமரியில் திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்திவிட்டு பிரசாரத்தையோ, மாநில சுற்றுப் பயணத்தையோ அண்ணன் சீமான் தொடங்குவார். குமரியில் தொடங்கி சென்னையில் முடிப்பதே வழக்கமான பிரசார ரூட். இம்முறையும் அதற்கான வேலைகள் நடந்தன. ஆனால், 'தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளிலிருந்து பிரசாரத்தை தொடங்கிட வேண்டும்' என்பது அண்ணனின் விருப்பமாக இருந்தது. திருத்தணி முருகன் கோவில் கடந்த மூன்று ஆண்டுகளாக முப்பாட்டன் முருகனின் தீவிர பக்தராகவே மாறிவிட்டார். மேலும் மார்ச் 23-ம் தேதி தேய்பிறை அஷ்டமி என்பதால் அன்று அறுபடை வீடான திருத்தணியில் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என முடிவெடுத்தோம். மார்ச் 23-ம் தேதி காலை திருத்தணி முருகன் கோவில் வழிபாட்டோடு பிரசாரம் தொடங்கும். திருத்தணியில் தொடங்கி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பிரசாரங்களை முதற்கட்டமாக முடிக்கிறோம். ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று இடங்களில் பேசுகிறார். பிறகு மார்ச் 30ம் தேதி அவர் போட்டியிடும் காரைக்குடி தொகுதிக்கு செல்கிறார். வேட்புமனு தாக்கல் பணிகள் நிறைவடைந்த பிறகு இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்குவார். பிரசாரத்தில் எல்.இ.டி திரைமூலம் நாம் தமிழர் அரசு எப்படி இருக்கும் என காணொளி வாயிலாக விளக்க உள்ளார். பிறகு திராவிடக் கட்சிகள் அட்டாக், பாடல்கள் என கலவையாக இருக்கும் என்றனர். திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான்

விகடன் 21 Mar 2026 10:23 am

'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்

ஈரான் போர் தொடங்கி இன்றோடு நான்காவது வாரம் தொடங்குகிறது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் என எந்த நாடும் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இல்லை. போர் நிறுத்தம் வேண்டாம் 'விரைவில் போர் முடிவுக்கு வரும்' என்று நேற்று முன்தினம் (மார்ச் 19), அமெரிக்கா சொன்னதில், உலகம் கொஞ்சம் ஆசுவாசமாகியது. ஈரான் போர் தங்கம் விலை குறையுதுதான்; ஆனால், சரியவில்லை! - இப்போ 'இந்த' தப்பை மட்டும் பண்ணீடாதீங்க | Gold ஆனால், அதற்கும் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். எதிரியை நாம் அடியோடு அழிக்கும் போது, போர் நிறுத்தம் செய்யமாட்டோம் என்று உங்களுக்கு தெரியும் தானே' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கு ஈரான் போரில் உள்ள மிகப்பெரிய பிரச்னையே 'ஹார்முஸ் ஜலசந்தி மூடலே'. இதை சரிசெய்ய தங்களது போர்க்கப்பலை அனுப்ப சொல்லி சீனா, ஜப்பான், நேட்டோ நாடுகளிடம் ட்ரம்ப் கேட்டார். சிலர் மறுத்துவிட்டனர்... சிலர் வாயைக் கூட திறக்கவில்லை. நேட்டோ நாடுகள் - 'கோழைகளே' இதை தற்போது கடுமையாக சாடியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்கா இல்லையென்றால், NATO வெறும் காகிதப் புலிதான். அணு ஆயுதம் கொண்ட ஈரானுடன் சண்டையிட நேட்டோ நாடுகள் வரவில்லை. இந்த நாடுகளுக்குக் குறைந்த ஆபத்தோடு ராணுவ ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஈரான் உடனான போரில் உதவாத அவர்கள், எண்ணெய் விலை உயர்வை பற்றிப் புகார் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவ மறுக்கிறார்கள். கோழைகள்... உங்களை மறக்கமாட்டோம் என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். HDFC தலைவர் ராஜினாமா: சந்தை கடும் சரிவு; வங்கியின் 'இந்த' செயல் காரணமா? முதலீட்டாளர்கள் இனி?

விகடன் 21 Mar 2026 8:24 am

அமெரிக்க எங்களிடம் அனுமதி கோரியது, ஆனால் நாங்கள்.!- அநுர குமார திசாநாயக்க சொல்வது என்ன?

ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி கொண்டே இருக்கிறது. அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் விநியோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​ சில நாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். மார்ச் 4 ஆம் தேதி 8 கப்பல்கள் மற்றும் இரண்டு போர் விமானங்களை இலங்கையில் அனுமதிக்கக்கோரி அமெரிக்கா கேட்டது. ட்ரம்ப் ஆனால் அந்தக் கோரிக்கையை நாங்கள் நிராகரித்துவிட்டோம். எந்த அழுத்தமும் வந்தாலும், நம் நாடு நடுநிலை வகிக்கும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 21 Mar 2026 7:06 am