SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

`2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவி வேண்டும்'- ஹோட்டலில் கவுன்சிலர்கள்... பாஜக-விடம் பேரம் பேசும் ஷிண்டே!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 89 வார்டுகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. மேயர் தேர்தலில் வெற்றி பெற 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாகும். ஆனால் அந்த அளவுக்கு பா.ஜ.கவிடம் கவுன்சிலர்கள் இல்லை. இதையடுத்து கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே)வின் ஆதரவை பெற வேண்டிய நிலைக்கு பா.ஜ.க தள்ளப்பட்டுள்ளது. சிவசேனா(ஷிண்டே) மும்பை மாநகராட்சி தேர்தலில் 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு கட்சி கவுன்சிலர்களையும் சேர்த்தால் 118 பேரின் ஆதரவு கிடைக்கிறது. இது தவிர தனித்து போட்டியிட்ட அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பட்னாவிஸ் தற்போது தங்களது துணை இல்லாமல் மேயர் பதவியை பா.ஜ.கவால் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஏக்நாத் ஷிண்டே, தங்களது கட்சிக்கு 2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுவும் முதல் 2.5 ஆண்டுகள் தங்களுக்கு வேண்டும் என்றும், அடுத்த 2.5 ஆண்டுகளை பா.ஜ.க எடுத்துக்கொள்ளட்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது கட்சி கவுன்சிலர்கள் அடியோடு பா.ஜ.கவில் சேர்ந்துவிடக்கூடும் என்று என்ற அச்சத்தில் அனைத்து கவுன்சிலர்களையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏக்நாத் ஷிண்டே தங்க வைத்துள்ளார். அவர்களை ஹோட்டலில் தங்க வைத்த பிறகுதான் ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் பேரம் பேச ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் கட்சி கவுன்சிலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக அவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி கொடுக்கப்படுவதாகவும், அதற்காகத்தான் அவர்கள் ஹோட்டலில் தங்கி இருப்பதாக ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா தெரிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ''சிவசேனா கவுன்சிலர்களை எங்கள் பக்கம் இழுக்கும் பேச்சுக்கே இடமில்லை. நான் எங்களது கட்சியின் புனே கவுன்சிலர்களை சந்தித்து பேசியது போல் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி கவுன்சிலர்களை சந்தித்து பேசி இருக்கலாம். மும்பையில் எங்களது கூட்டணியான மஹாயுதியை சேர்ந்த மேயர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் நான், ஏக்நாத் ஷிண்டே மற்றும் இரு கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு எடுக்கப்படும். இதில் எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை''என்று தெரிவித்தார். இது குறித்து சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''மேயரின் பதவிக் காலத்தை 2.5 வருடங்கள் எங்களுக்கு கேட்கிறோம். இது முதல் 2.5 வருடங்களாக இருக்க வேண்டும். பாஜக இரண்டாவது 2.5 வருடங்களை எடுத்துக் கொள்ளலாம். பா.ஜ.க சொந்தமாக மேயர் பதவியை பிடிக்கும் அளவுக்கு இடங்களைப் பெறவில்லை, எனவே அவர்கள் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிலைக்குழுத் தலைவர் பதவி மற்றும் இதர குழுக்களின் தலைவர் பதவிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் வந்த பிறகு அடுத்த வாரம் தான் மேயர் பதவி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 28ம் தேதி மேயர் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் முதல் முறையாக 10 நியமன கவுன்சிலர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். கட்சிகளிடம் இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கைக்கு தக்கபடி நியமன கவுன்சிலர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். பா.ஜ.கவிற்கு 89 கவுன்சிலர்கள் இருப்பதால் அக்கட்சிக்கு அதிகபட்சமாக 4 நியமனக்கவுன்சிலர்கள் கிடைப்பார்கள்

விகடன் 18 Jan 2026 11:29 am

`2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவி வேண்டும்'- ஹோட்டலில் கவுன்சிலர்கள்... பாஜக-விடம் பேரம் பேசும் ஷிண்டே!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 89 வார்டுகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. மேயர் தேர்தலில் வெற்றி பெற 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாகும். ஆனால் அந்த அளவுக்கு பா.ஜ.கவிடம் கவுன்சிலர்கள் இல்லை. இதையடுத்து கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே)வின் ஆதரவை பெற வேண்டிய நிலைக்கு பா.ஜ.க தள்ளப்பட்டுள்ளது. சிவசேனா(ஷிண்டே) மும்பை மாநகராட்சி தேர்தலில் 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு கட்சி கவுன்சிலர்களையும் சேர்த்தால் 118 பேரின் ஆதரவு கிடைக்கிறது. இது தவிர தனித்து போட்டியிட்ட அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பட்னாவிஸ் தற்போது தங்களது துணை இல்லாமல் மேயர் பதவியை பா.ஜ.கவால் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஏக்நாத் ஷிண்டே, தங்களது கட்சிக்கு 2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுவும் முதல் 2.5 ஆண்டுகள் தங்களுக்கு வேண்டும் என்றும், அடுத்த 2.5 ஆண்டுகளை பா.ஜ.க எடுத்துக்கொள்ளட்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது கட்சி கவுன்சிலர்கள் அடியோடு பா.ஜ.கவில் சேர்ந்துவிடக்கூடும் என்று என்ற அச்சத்தில் அனைத்து கவுன்சிலர்களையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏக்நாத் ஷிண்டே தங்க வைத்துள்ளார். அவர்களை ஹோட்டலில் தங்க வைத்த பிறகுதான் ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் பேரம் பேச ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் கட்சி கவுன்சிலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக அவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி கொடுக்கப்படுவதாகவும், அதற்காகத்தான் அவர்கள் ஹோட்டலில் தங்கி இருப்பதாக ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா தெரிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ''சிவசேனா கவுன்சிலர்களை எங்கள் பக்கம் இழுக்கும் பேச்சுக்கே இடமில்லை. நான் எங்களது கட்சியின் புனே கவுன்சிலர்களை சந்தித்து பேசியது போல் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி கவுன்சிலர்களை சந்தித்து பேசி இருக்கலாம். மும்பையில் எங்களது கூட்டணியான மஹாயுதியை சேர்ந்த மேயர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் நான், ஏக்நாத் ஷிண்டே மற்றும் இரு கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு எடுக்கப்படும். இதில் எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை''என்று தெரிவித்தார். இது குறித்து சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''மேயரின் பதவிக் காலத்தை 2.5 வருடங்கள் எங்களுக்கு கேட்கிறோம். இது முதல் 2.5 வருடங்களாக இருக்க வேண்டும். பாஜக இரண்டாவது 2.5 வருடங்களை எடுத்துக் கொள்ளலாம். பா.ஜ.க சொந்தமாக மேயர் பதவியை பிடிக்கும் அளவுக்கு இடங்களைப் பெறவில்லை, எனவே அவர்கள் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிலைக்குழுத் தலைவர் பதவி மற்றும் இதர குழுக்களின் தலைவர் பதவிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் வந்த பிறகு அடுத்த வாரம் தான் மேயர் பதவி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 28ம் தேதி மேயர் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் முதல் முறையாக 10 நியமன கவுன்சிலர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். கட்சிகளிடம் இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கைக்கு தக்கபடி நியமன கவுன்சிலர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். பா.ஜ.கவிற்கு 89 கவுன்சிலர்கள் இருப்பதால் அக்கட்சிக்கு அதிகபட்சமாக 4 நியமனக்கவுன்சிலர்கள் கிடைப்பார்கள்

விகடன் 18 Jan 2026 11:29 am

மகா., உள்ளாட்சி தேர்தல்: சரத் பவாரை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிசெய்த அஜித் பவார்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளது. புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்படி இருந்தும் இரண்டு மாநகராட்சிகளிலும் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று இரண்டு மாநகராட்சிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இரு தேசியாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து இரு கட்சி தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 5ம் தேதி ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சரத் பவாருடன் அஜித் பவார் ஆலோசனை நடத்தி இருக்கிறார். பாராமதியில் உள்ள சரத் பவார் இல்லத்திற்கு அஜித் பவார் இதற்காக சென்றார். அங்கு சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் ரோஹித் பவார் ஆகியோருடன் அஜித் பவார் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து விவாதித்தார். இறுதியில் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இச்சந்திப்பு குறித்து சுப்ரியா சுலேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பூட்டிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையை எப்படி வெளியில் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அஜித் பவார் மற்றும் சரத் பவார் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து பாராமதியில் நடந்த வேளாண் கண்காட்சிக்கு புறப்பட்டு சென்றனர். இது குறித்து அஜித் பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு,'' வேளாண் கண்காட்சிக்கு சரத் பவார் செல்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்து ஒன்றாக வேளாண் கண்காட்சிக்கு சென்றோம்'' என்றார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். சரத் பவார் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில்,''12 ஜில்லா பரிஷத் மற்றும் 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல்களில் கூட்டணி அமைப்பது குறித்து இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஆலோசித்தனர். சில இடங்களில் நட்புரீதியாக ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் நாங்கள் விவாதித்தோம்'' என்றார்.

விகடன் 18 Jan 2026 11:05 am

மகா., உள்ளாட்சி தேர்தல்: சரத் பவாரை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிசெய்த அஜித் பவார்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளது. புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்படி இருந்தும் இரண்டு மாநகராட்சிகளிலும் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று இரண்டு மாநகராட்சிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இரு தேசியாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து இரு கட்சி தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 5ம் தேதி ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சரத் பவாருடன் அஜித் பவார் ஆலோசனை நடத்தி இருக்கிறார். பாராமதியில் உள்ள சரத் பவார் இல்லத்திற்கு அஜித் பவார் இதற்காக சென்றார். அங்கு சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் ரோஹித் பவார் ஆகியோருடன் அஜித் பவார் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து விவாதித்தார். இறுதியில் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இச்சந்திப்பு குறித்து சுப்ரியா சுலேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பூட்டிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையை எப்படி வெளியில் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அஜித் பவார் மற்றும் சரத் பவார் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து பாராமதியில் நடந்த வேளாண் கண்காட்சிக்கு புறப்பட்டு சென்றனர். இது குறித்து அஜித் பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு,'' வேளாண் கண்காட்சிக்கு சரத் பவார் செல்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்து ஒன்றாக வேளாண் கண்காட்சிக்கு சென்றோம்'' என்றார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். சரத் பவார் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில்,''12 ஜில்லா பரிஷத் மற்றும் 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல்களில் கூட்டணி அமைப்பது குறித்து இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஆலோசித்தனர். சில இடங்களில் நட்புரீதியாக ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் நாங்கள் விவாதித்தோம்'' என்றார்.

விகடன் 18 Jan 2026 11:05 am

SIR: இன்றே கடைசி நாள்... வாக்காளர் பெயர் சேர்க்க உடனே விண்ணப்பியுங்க!

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் இறந்​தவர்​கள் 26.94 லட்​சம் பேர், முகவரி​யில்இல்​லாதவர்​கள் 66.44 லட்​சம்பேர், ஒன்​றுக்கு மேற்​பட்ட இடங்​களில் வாக்​குரிமை உள்​ளவர்​கள் 3.98 லட்​சம் பேர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நீக்கப்பட்டவர்களில் இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க அல்லது புதிய பதிவுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் ஆணையம் உயிரிழந்த வாக்காளர்களைத் தவிர்த்துப் பார்த்தால், இன்னும் சுமார் 53.65 லட்சம் பேர் தங்கள் பெயர்களை மீண்டும் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்காவிட்டால், வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜனவரி 18) முடிவடைகிறது. திருத்தப்பணி மேற்கொள்ள வேண்டியவர்கள் இன்று தவறவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால், வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை காப்பாற்றிக் கொள்ள இன்றே தங்களின் வாக்கு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அடுத்த மாதம் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Mumbai-யை கைப்பற்றிய பாஜக - உதவியதா தேர்தல் ஆணையம்? | Imperfect show | Vikatan TV

விகடன் 18 Jan 2026 10:31 am

SIR: இன்றே கடைசி நாள்... வாக்காளர் பெயர் சேர்க்க உடனே விண்ணப்பியுங்க!

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் இறந்​தவர்​கள் 26.94 லட்​சம் பேர், முகவரி​யில்இல்​லாதவர்​கள் 66.44 லட்​சம்பேர், ஒன்​றுக்கு மேற்​பட்ட இடங்​களில் வாக்​குரிமை உள்​ளவர்​கள் 3.98 லட்​சம் பேர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நீக்கப்பட்டவர்களில் இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க அல்லது புதிய பதிவுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் ஆணையம் உயிரிழந்த வாக்காளர்களைத் தவிர்த்துப் பார்த்தால், இன்னும் சுமார் 53.65 லட்சம் பேர் தங்கள் பெயர்களை மீண்டும் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்காவிட்டால், வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜனவரி 18) முடிவடைகிறது. திருத்தப்பணி மேற்கொள்ள வேண்டியவர்கள் இன்று தவறவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால், வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை காப்பாற்றிக் கொள்ள இன்றே தங்களின் வாக்கு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அடுத்த மாதம் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Mumbai-யை கைப்பற்றிய பாஜக - உதவியதா தேர்தல் ஆணையம்? | Imperfect show | Vikatan TV

விகடன் 18 Jan 2026 10:31 am

வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

விகடன் 18 Jan 2026 9:30 am

வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

விகடன் 18 Jan 2026 9:30 am

வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

விகடன் 18 Jan 2026 9:30 am

காங்கிரஸ்: ``கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என தலைமை வேதனையோடு தெரிவித்தது - செல்வப்பெருந்தகை

டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் உள்ளிட்ட 41க்கும் மேற்பட்டோரிடம் கூட்டாகவும் தனித்தனியாகவும் மல்லிகார்ஜுன கார்கேவும் ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தினர். அதில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கூட்டணி, தொகுதி பங்கீடு, உட்கட்சி மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. செல்வப்பெருந்தகை - ஸ்டாலின் இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், ``தேர்தல் உத்தி தொடர்பாக கட்சியின் கொள்கை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில், ``எங்களுடைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எதிர்க் கட்சி தலைவரும் எல்லோரையும் அழைத்து கருத்துக்களை கேட்டிருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், காரிய கமிட்டி உறுப்பினர்கள், மேனாள் மாநில தலைவர்கள், மேனாள் சட்டமன்ற கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை சொல்லியிருக்கிறார்கள். செல்வப்பெருந்தகை - ஸ்டாலின் பொதுவெளியில் கூட்டணியை பற்றி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். ட்வீட் போடுவது, அறிக்கை கொடுப்பது எனக் கூட்டணிக் குறித்து யாரும் பேசக்கூடாது என மிகவும் வேதனையோடு தெரிவித்தார்கள். எனவே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன முடிவெடுக்கிறதோ அந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பின்பற்றும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்தகை திடீர் அறிக்கை

விகடன் 18 Jan 2026 9:11 am

காங்கிரஸ்: ``கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என தலைமை வேதனையோடு தெரிவித்தது - செல்வப்பெருந்தகை

டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் உள்ளிட்ட 41க்கும் மேற்பட்டோரிடம் கூட்டாகவும் தனித்தனியாகவும் மல்லிகார்ஜுன கார்கேவும் ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தினர். அதில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கூட்டணி, தொகுதி பங்கீடு, உட்கட்சி மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. செல்வப்பெருந்தகை - ஸ்டாலின் இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், ``தேர்தல் உத்தி தொடர்பாக கட்சியின் கொள்கை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில், ``எங்களுடைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எதிர்க் கட்சி தலைவரும் எல்லோரையும் அழைத்து கருத்துக்களை கேட்டிருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், காரிய கமிட்டி உறுப்பினர்கள், மேனாள் மாநில தலைவர்கள், மேனாள் சட்டமன்ற கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை சொல்லியிருக்கிறார்கள். செல்வப்பெருந்தகை - ஸ்டாலின் பொதுவெளியில் கூட்டணியை பற்றி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். ட்வீட் போடுவது, அறிக்கை கொடுப்பது எனக் கூட்டணிக் குறித்து யாரும் பேசக்கூடாது என மிகவும் வேதனையோடு தெரிவித்தார்கள். எனவே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன முடிவெடுக்கிறதோ அந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பின்பற்றும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்தகை திடீர் அறிக்கை

விகடன் 18 Jan 2026 9:11 am

உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained

இதுவரை எந்த உலக நாடுகளுமே தொடாத உச்சத்தை சீனா தற்போது தொட்டுள்ளது. ஆம்… வர்த்தகத்தில் 1.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு அபரிமிதத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த நாடுமே இவ்வளவு பெரிய அபரிமிதத்தை எட்டியதில்லை. அபரிமிதம் என்றால் என்ன என்கிற கேள்வி எழுகிறதா? சீனா சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும். சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருக்கும். கடந்த ஆண்டில், சீனா இறக்குமதி செய்ததை விட, ஏற்றுமதியை அதிகம் செய்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி கொஞ்சமா பணம் போடுங்க; ஆனா, கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க! - உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை! இந்த விளக்கத்தை எண்களில் பார்க்கலாம். 2025-ம் ஆண்டு, சீனா 3.77 டிரில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இறக்குமதியை 2.58 டிரில்லியனிற்குத் தான் செய்துள்ளது. இந்த இரண்டு கணக்கையும் கழித்துப் பார்த்தால், நமக்கு வரும் பதில் 1.19 டிரில்லியன் டாலர்கள் . 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட, 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 6.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இவை. நெருக்கடி தந்த ட்ரம்ப் இந்த வர்த்தக அபரிமிதத்தை எளிதாக சீனா தொட்டுவிடவில்லை. 2025-ம் ஆண்டில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சீனாவிற்கு அவர் பல நெருக்கடிகளைத் தந்து வந்தார். எந்த நாட்டிற்கும் இல்லாத அளவிற்கு, சீனா மீது பரஸ்பர வரியைப் போட்டு தாக்கினார் ட்ரம்ப். தான் அதிபராக பொறுப்பேற்றதுமே சீனா அமெரிக்காவிற்கு ஃபென்டனைல் ஏற்றுமதி செய்கிறது என்று கூடுதல் 10 சதவிகித வரியை அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தபோது, சீனாவிற்கு எக்கச்சக்கமாக வரியை விதித்தார். ட்ரம்ப் - பரஸ்பர வரி கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில் பதிலுக்கு, சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரியை அதிகரித்தது. இந்த வர்த்தக போரினால், சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 110 சதவிகிதம் வரை வரி விதித்தது. இந்தப் போர் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் தங்களது வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். அதனால், அமெரிக்கா சீனப் பொருள்களுக்கு 30 சதவிகிதம் என வரியைக் குறைத்தது அமெரிக்கா. பின்னர், அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்களுக்கு விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், ட்ரம்ப் சீனாவிற்கு 130 சதவிகித வரி என அறிவித்தார். இப்படி கடந்த ஆண்டு முழுவதுமே, சீனா மீது அமெரிக்கா வரி விதிப்பதும்… பின்னர் விலக்குவதுமாக இருந்தது. பிற நாடுகளுக்கு வரி அமலாவதற்கு ஓரளவு அவகாசம் கொடுக்கப்பட்டாலும், சீனாவிற்கு மட்டும் இந்த வரிகள் கிட்டத்தட்ட உடனடியாக அமலுக்கு வந்தன. இதை 20 – 30 வரிகளில் படித்துவிடுவது எளிதாக இருக்கலாம். இத்தனை வரிகளை ஒரு நாடு தாங்குவது அவ்வளவு எளிதல்ல. ட்ரம்ப் - ஜி ஜின்பிங் Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க! காரணம், 2025-ம் ஆண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனா அமெரிக்காவிற்கு 2.66 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், அமெரிக்காவின் டாப் சப்ளையர் நாடு சீனா. இப்படியொரு சந்தை உள்ள ஒரு நாட்டில் அதிக வரியை சந்திப்பது எந்த நாட்டிற்கும் நெருக்கடியானது. இவற்றைத் தாண்டி, சீனா வர்த்தக அபரிமிதத்தைத் தொட்டுள்ளது பெரும் ஆச்சரியம் தான். ரூட்டை மாற்றிய சீனா இந்த ஆச்சரியத்தைத் தொட, சீனா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. தனது ரூட்டை மாற்றியது அவ்வளவு தான். ட்ரம்பின் வரிகளால், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்தன. இதை சமன் செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்ப நாடுகள், தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியை முன்பை விட கூடுதலாக்கியது. இந்த மாற்றத்தினால், கடந்த நவம்பர் மாதத்திலேயே 1 டிரில்லியன் டாலர் அபரிமிதத்தை சீனா தாண்டியிருக்கிறது. ஆக, இந்த வளர்ச்சி அமெரிக்காவைத் தாண்டி உள்ளது. இந்த வர்த்தக அபரிமிதத்தைத் தொட 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, வர்த்தக அபரிமிதம் என்றால் அதிக உற்பத்தி இருந்திருக்க வேண்டும்... அப்போது தான் ஏற்றுமதி அதிகம் செய்ய முடியும். அதிக உற்பத்தியை ஒரு ஆண்டில் திடீரென செய்துவிட முடியாது. ஆக, சீனா பல ஆண்டுகளாக கட்டி வந்த… கடைப்பிடித்து வந்த தொழில் கொள்கை தான் இப்போதைய இந்த வளர்ச்சிக்குக் காரணம். சீனா வளர வளர தனது உற்பத்தித் திறனையும் அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி? இரண்டு, 2021-ம் ஆண்டில் சீனா ரியல் எஸ்டேட்டில் பெரும் சறுக்கலைக் கொண்டது. அதுவரை சீனாவின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை பெரும்பங்காற்றியது. ஆம்… சீன மக்கள் வீடுகளை நல்ல முதலீடாக பார்த்து வந்தனர். அதனால், அவர்கள் தங்க ஒரு வீடு, முதலீட்டிற்கு ஒரு அல்லது பல வீடு என்கிற கான்செப்ட்டைப் பின்பற்றி வந்தனர். இதனால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கடன் வாங்கி பல வீடுகளைக் கட்டி குவித்தனர். இதனால், வீடுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. இதனால், மேலும் கடன் வாங்க முடியாமல், டெவலப்பர் நிறுவனங்களால் வீட்டைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஏற்கெனவே வாங்கிய கடனையும் அடைக்க முடியவில்லை. விளைவு, ரியல் எஸ்டேட் துறை சீனாவில் பலத்த சரிவை சந்தித்தது. வீடுகளின் விலையும் சரிந்தன. முதலீடுகளாக வீட்டை வாங்கி போட்டிருந்த சீன மக்களுக்கு இது பெரும் அடி. இதனால், அவர்கள் செலவு செய்வதை பெருமளவு குறைத்தனர். சீனாவின் உள்நாட்டுத் தேவை பலத்த சரிவைக் கண்டது. மக்களின் தேவை குறையும்போது, இறக்குமதி செய்யப்படுவது குறையும். அப்போது, தானாகவே ஏற்றுமதி அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained மூன்றாவது, சீன நாணயமான யுவானின் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கிறது. இது சீனாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய ப்ளஸ். சீனப் பொருள்களை வாங்கும் பிற நாடுகள், குறைந்த மதிப்பைக் கொண்ட யுவானால், குறைவான விலைக்கு வாங்குகிறார்கள். இது பிற நாட்டுப் பொருள்களை வாங்குவதை விட, சீனப் பொருள்களுக்கு மிக குறைந்த விலையே. இதனாலேயே, சீன அரசு மிக கவனமாக யுவானின் விலையை வீழ்ச்சியில் வைத்திருக்கிறது. பிற நாடுகளுக்கு சிக்கல் இதெல்லாம் சரி தான்… சீனாவின் இந்த வர்த்தக அபரிமிதத்தால் பிற நாடுகள் மிகவும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆம்… சீனா இன்னமும் ஏற்றுமதியை அதிகரிக்கும். சீனாவின் பொருள்களின் தரம் பெரும் கேள்விக்குரியது. ஏற்றுமதி அதிகரிப்பதால், உலக மக்களின் கைகளில் கிடைக்கும் பொருள்களின் தரம் கேள்விக்குறி ஆகும். இப்போது உலகமே தொழில்நுட்பத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சீனா பெரும்பாலும் எலெக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சார்ந்த பொருள்களையே ஏற்றுமதி செய்து வருகிறது. தரம் குறையும்போது, விலையும் குறையும். இதனால், பிற நாடுகளில் வேலை இழப்பு, உற்பத்தி குறைவு, பொருளாதாரப் பின்னடைவு ஏற்படலாம். சீனா Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்? பொருளாதார பிரச்னை?! ப்ளூம்பெர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, சீனாவிற்கு வர்த்தகத்தில் அபரிமிதமாக கிடைத்த பணம் சீனாவின் மத்திய வங்கிக்கு போகவில்லையாம். அவை அனைத்தும் சீன முதலீட்டாளர்கள், சீன பணக்காரர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் சும்மா வைத்திருக்கமாட்டார்கள் அல்லவா. அவர்கள் அதை உலக சந்தையில் முதலீடு செய்கிறார்கள். பிற நாடுகளின் பத்திரத்தை வாங்குகிறார்கள். ஒருவேளை, அவர்கள் ஒரேடியாக அந்த முதலீடுகளை விற்றால், உலகப் பொருளாதாரத்தின் நிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு பயங்கரமாக மாறும். உற்பத்தியிலும் சீனாவை நம்பி… பொருளாதாரத்திலும் சீனாவை நம்புவதாக இருந்தால் அது பெரும் பிரச்னை. சீனாவின் வர்த்தக நிலைமையைப் பார்த்தோம். இப்போது இந்தியாவின் வர்த்தக நிலை குறித்து பார்ப்போமா? இந்திய அரசின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு 96.58 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது. 2024-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 88.43 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது. சீன பொருளாதாரத்தையும், இந்திய பொருளாதாரத்தையும் ஒப்பிட முடியாதது தான். ஆனால், இந்திய அரசு இந்த வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை சீக்கிரம் எடுக்க வேண்டும். சீனா ஒவ்வொரு கட்டம் முன்னேறும்போது, இந்தியாவிற்கு ஏதோ ஒரு விதத்தில் சிக்கல். அதை இந்திய அரசு சீக்கிரம் கவனத்தில் கொள்ள வேண்டும். ! வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா' கனவு | Explained

விகடன் 17 Jan 2026 5:19 pm

உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained

இதுவரை எந்த உலக நாடுகளுமே தொடாத உச்சத்தை சீனா தற்போது தொட்டுள்ளது. ஆம்… வர்த்தகத்தில் 1.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு அபரிமிதத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த நாடுமே இவ்வளவு பெரிய அபரிமிதத்தை எட்டியதில்லை. அபரிமிதம் என்றால் என்ன என்கிற கேள்வி எழுகிறதா? சீனா சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும். சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருக்கும். கடந்த ஆண்டில், சீனா இறக்குமதி செய்ததை விட, ஏற்றுமதியை அதிகம் செய்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி கொஞ்சமா பணம் போடுங்க; ஆனா, கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க! - உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை! இந்த விளக்கத்தை எண்களில் பார்க்கலாம். 2025-ம் ஆண்டு, சீனா 3.77 டிரில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இறக்குமதியை 2.58 டிரில்லியனிற்குத் தான் செய்துள்ளது. இந்த இரண்டு கணக்கையும் கழித்துப் பார்த்தால், நமக்கு வரும் பதில் 1.19 டிரில்லியன் டாலர்கள் . 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட, 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 6.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இவை. நெருக்கடி தந்த ட்ரம்ப் இந்த வர்த்தக அபரிமிதத்தை எளிதாக சீனா தொட்டுவிடவில்லை. 2025-ம் ஆண்டில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சீனாவிற்கு அவர் பல நெருக்கடிகளைத் தந்து வந்தார். எந்த நாட்டிற்கும் இல்லாத அளவிற்கு, சீனா மீது பரஸ்பர வரியைப் போட்டு தாக்கினார் ட்ரம்ப். தான் அதிபராக பொறுப்பேற்றதுமே சீனா அமெரிக்காவிற்கு ஃபென்டனைல் ஏற்றுமதி செய்கிறது என்று கூடுதல் 10 சதவிகித வரியை அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தபோது, சீனாவிற்கு எக்கச்சக்கமாக வரியை விதித்தார். ட்ரம்ப் - பரஸ்பர வரி கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில் பதிலுக்கு, சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரியை அதிகரித்தது. இந்த வர்த்தக போரினால், சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 110 சதவிகிதம் வரை வரி விதித்தது. இந்தப் போர் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் தங்களது வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். அதனால், அமெரிக்கா சீனப் பொருள்களுக்கு 30 சதவிகிதம் என வரியைக் குறைத்தது அமெரிக்கா. பின்னர், அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்களுக்கு விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், ட்ரம்ப் சீனாவிற்கு 130 சதவிகித வரி என அறிவித்தார். இப்படி கடந்த ஆண்டு முழுவதுமே, சீனா மீது அமெரிக்கா வரி விதிப்பதும்… பின்னர் விலக்குவதுமாக இருந்தது. பிற நாடுகளுக்கு வரி அமலாவதற்கு ஓரளவு அவகாசம் கொடுக்கப்பட்டாலும், சீனாவிற்கு மட்டும் இந்த வரிகள் கிட்டத்தட்ட உடனடியாக அமலுக்கு வந்தன. இதை 20 – 30 வரிகளில் படித்துவிடுவது எளிதாக இருக்கலாம். இத்தனை வரிகளை ஒரு நாடு தாங்குவது அவ்வளவு எளிதல்ல. ட்ரம்ப் - ஜி ஜின்பிங் Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க! காரணம், 2025-ம் ஆண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனா அமெரிக்காவிற்கு 2.66 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், அமெரிக்காவின் டாப் சப்ளையர் நாடு சீனா. இப்படியொரு சந்தை உள்ள ஒரு நாட்டில் அதிக வரியை சந்திப்பது எந்த நாட்டிற்கும் நெருக்கடியானது. இவற்றைத் தாண்டி, சீனா வர்த்தக அபரிமிதத்தைத் தொட்டுள்ளது பெரும் ஆச்சரியம் தான். ரூட்டை மாற்றிய சீனா இந்த ஆச்சரியத்தைத் தொட, சீனா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. தனது ரூட்டை மாற்றியது அவ்வளவு தான். ட்ரம்பின் வரிகளால், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்தன. இதை சமன் செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்ப நாடுகள், தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியை முன்பை விட கூடுதலாக்கியது. இந்த மாற்றத்தினால், கடந்த நவம்பர் மாதத்திலேயே 1 டிரில்லியன் டாலர் அபரிமிதத்தை சீனா தாண்டியிருக்கிறது. ஆக, இந்த வளர்ச்சி அமெரிக்காவைத் தாண்டி உள்ளது. இந்த வர்த்தக அபரிமிதத்தைத் தொட 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, வர்த்தக அபரிமிதம் என்றால் அதிக உற்பத்தி இருந்திருக்க வேண்டும்... அப்போது தான் ஏற்றுமதி அதிகம் செய்ய முடியும். அதிக உற்பத்தியை ஒரு ஆண்டில் திடீரென செய்துவிட முடியாது. ஆக, சீனா பல ஆண்டுகளாக கட்டி வந்த… கடைப்பிடித்து வந்த தொழில் கொள்கை தான் இப்போதைய இந்த வளர்ச்சிக்குக் காரணம். சீனா வளர வளர தனது உற்பத்தித் திறனையும் அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி? இரண்டு, 2021-ம் ஆண்டில் சீனா ரியல் எஸ்டேட்டில் பெரும் சறுக்கலைக் கொண்டது. அதுவரை சீனாவின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை பெரும்பங்காற்றியது. ஆம்… சீன மக்கள் வீடுகளை நல்ல முதலீடாக பார்த்து வந்தனர். அதனால், அவர்கள் தங்க ஒரு வீடு, முதலீட்டிற்கு ஒரு அல்லது பல வீடு என்கிற கான்செப்ட்டைப் பின்பற்றி வந்தனர். இதனால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கடன் வாங்கி பல வீடுகளைக் கட்டி குவித்தனர். இதனால், வீடுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. இதனால், மேலும் கடன் வாங்க முடியாமல், டெவலப்பர் நிறுவனங்களால் வீட்டைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஏற்கெனவே வாங்கிய கடனையும் அடைக்க முடியவில்லை. விளைவு, ரியல் எஸ்டேட் துறை சீனாவில் பலத்த சரிவை சந்தித்தது. வீடுகளின் விலையும் சரிந்தன. முதலீடுகளாக வீட்டை வாங்கி போட்டிருந்த சீன மக்களுக்கு இது பெரும் அடி. இதனால், அவர்கள் செலவு செய்வதை பெருமளவு குறைத்தனர். சீனாவின் உள்நாட்டுத் தேவை பலத்த சரிவைக் கண்டது. மக்களின் தேவை குறையும்போது, இறக்குமதி செய்யப்படுவது குறையும். அப்போது, தானாகவே ஏற்றுமதி அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained மூன்றாவது, சீன நாணயமான யுவானின் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கிறது. இது சீனாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய ப்ளஸ். சீனப் பொருள்களை வாங்கும் பிற நாடுகள், குறைந்த மதிப்பைக் கொண்ட யுவானால், குறைவான விலைக்கு வாங்குகிறார்கள். இது பிற நாட்டுப் பொருள்களை வாங்குவதை விட, சீனப் பொருள்களுக்கு மிக குறைந்த விலையே. இதனாலேயே, சீன அரசு மிக கவனமாக யுவானின் விலையை வீழ்ச்சியில் வைத்திருக்கிறது. பிற நாடுகளுக்கு சிக்கல் இதெல்லாம் சரி தான்… சீனாவின் இந்த வர்த்தக அபரிமிதத்தால் பிற நாடுகள் மிகவும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆம்… சீனா இன்னமும் ஏற்றுமதியை அதிகரிக்கும். சீனாவின் பொருள்களின் தரம் பெரும் கேள்விக்குரியது. ஏற்றுமதி அதிகரிப்பதால், உலக மக்களின் கைகளில் கிடைக்கும் பொருள்களின் தரம் கேள்விக்குறி ஆகும். இப்போது உலகமே தொழில்நுட்பத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சீனா பெரும்பாலும் எலெக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சார்ந்த பொருள்களையே ஏற்றுமதி செய்து வருகிறது. தரம் குறையும்போது, விலையும் குறையும். இதனால், பிற நாடுகளில் வேலை இழப்பு, உற்பத்தி குறைவு, பொருளாதாரப் பின்னடைவு ஏற்படலாம். சீனா Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்? பொருளாதார பிரச்னை?! ப்ளூம்பெர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, சீனாவிற்கு வர்த்தகத்தில் அபரிமிதமாக கிடைத்த பணம் சீனாவின் மத்திய வங்கிக்கு போகவில்லையாம். அவை அனைத்தும் சீன முதலீட்டாளர்கள், சீன பணக்காரர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் சும்மா வைத்திருக்கமாட்டார்கள் அல்லவா. அவர்கள் அதை உலக சந்தையில் முதலீடு செய்கிறார்கள். பிற நாடுகளின் பத்திரத்தை வாங்குகிறார்கள். ஒருவேளை, அவர்கள் ஒரேடியாக அந்த முதலீடுகளை விற்றால், உலகப் பொருளாதாரத்தின் நிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு பயங்கரமாக மாறும். உற்பத்தியிலும் சீனாவை நம்பி… பொருளாதாரத்திலும் சீனாவை நம்புவதாக இருந்தால் அது பெரும் பிரச்னை. சீனாவின் வர்த்தக நிலைமையைப் பார்த்தோம். இப்போது இந்தியாவின் வர்த்தக நிலை குறித்து பார்ப்போமா? இந்திய அரசின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு 96.58 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது. 2024-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 88.43 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது. சீன பொருளாதாரத்தையும், இந்திய பொருளாதாரத்தையும் ஒப்பிட முடியாதது தான். ஆனால், இந்திய அரசு இந்த வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை சீக்கிரம் எடுக்க வேண்டும். சீனா ஒவ்வொரு கட்டம் முன்னேறும்போது, இந்தியாவிற்கு ஏதோ ஒரு விதத்தில் சிக்கல். அதை இந்திய அரசு சீக்கிரம் கவனத்தில் கொள்ள வேண்டும். ! வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா' கனவு | Explained

விகடன் 17 Jan 2026 5:19 pm

'டெல்லி சலோ' : திமுக-வா... தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றே மாதங்கள்தான். தி.மு.க-வே கதி எனக் கார்கே, சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஒரு பக்கம் நிற்க... ஏன் த.வெ.க-வுடன் கைகோக்கக் கூடாது? எனக் கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்பு ரூட் மாற்றுகிறது. இந்தக் குழப்பங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட ஐவர் குழு, 70 தொகுதிகள்... ஆட்சியில் பங்கு! என ஸ்டாலினிடம் தூதுவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி கொளுத்திப் போட்ட பிரவீண் சக்கரவர்த்தி! இதனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஓகே என அனைவரும் நினைத்த நேரத்தில், ராகுலுக்கு நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி திடீரென விஜய்யைச் சந்திக்க, கூட்டணிக்குள் நிலநடுக்கமே ஏற்பட்டது. இது தனிப்பட்ட சந்திப்பு எனத் தலைவர்கள் சமாளிப்பதற்குள், தமிழ்நாடுதான் கடனில் முதலிடம் எனக் கனிமொழியின் பேட்டியை வைத்தே ட்விஸ்ட் கொடுத்தார் பிரவீண். விளைவு? தி.மு.க பாசறையில் புகைச்சல் ஆரம்பமானது. கரூர் எம்.பி ஜோதிமணியோ, சிலரின் சுயநலத்தால் காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது எனச் சீற, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.பி. சூர்யபிரகாசமோ, தமிழக காங்கிரஸை தி.மு.க-வின் அடிமைக்கூடாரமாக மாற்றுகிறார் செல்வப்பெருந்தகை என வெடிவைத்துவிட்டு வெளியேறினார். ஜோதிமணி நிலைமை மோசமாவதை உணர்ந்த மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், அவசர அவசரமாகச் சென்னைக்கு ஓடிவந்து, எங்க கூட்டணி தி.மு.க-வோடுதான். த.வெ.க-வுடன் பேசுவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி என்றார். அதற்குள்ளாக அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது... கூட்டணி ஆட்சிக்கு இடமே இல்லை எனத் தெறிக்கவிட, அதை டெல்லி பார்த்துக்கொள்ளும் எனச் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுக்க... பரபரப்பு பற்றிக்கொண்டது! சி.எம் ரொம்ப அப்செட்! இப்படியான சூழலில்தான் சமீபத்தில் கூடலூர் வந்திருந்தார், ராகுல் காந்தி. அதில் பங்கேற்ற நீலகிரி எம்.பி ஆ.ராசா, உங்க ஆட்கள் பேசுவது கூட்டணிக்கு வேட்டு வைக்கிறது. சி.எம் ரொம்ப அப்செட்! எனச் சொல்ல, ராகுலோ கூலாக, நான் பார்த்துக் கொள்கிறேன் என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டதாக தகவல் வெளியாக பரபரப்பை கிளப்பியது. இப்படி நிலைமை திக் திக்... என இருக்கும் சூழலில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை' எனச் சொல்லிப் பரபரப்பை எகிற வைத்தார். இதற்கிடையில்தான் தமிழக காங்கிரஸாருக்கு டெல்லி அவசர அழைப்பு விடுத்திருக்கிறது. ஆ.ராசா இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், தமிழக காங்கிரஸில் தி.மு.க, த.வெ.க என இரண்டு தரப்பு இருக்கிறது. சமீபத்தில் சச்சின் பைலட் அளித்த பேட்டிக்குப் பின்னால் கூடக் கரூர் எம்.பி ஜோதிமனிதான் இருக்கிறார். இதற்கிடையில் தலைவர் ராகுல் தனியாக எடுத்த சர்வேயில், 'தி.மு.க சரியான மரியாதை கொடுப்பதில்லை. எனவே, த.வெ.க-வுடன் செல்லலாம்' எனப் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். விஜய் இதையடுத்துத்தான் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்பதற்கு அகில இந்திய தலைமை முடிவு செய்தது. அதன்படி இன்று மாலை டெல்லி இந்திரா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் தரும் பதிலையடுத்து ராகுல் கூட்டணிகுறித்த இறுதி முடிவை எடுப்பார். இதற்கிடையில் த.வெ.க-வுடன் செல்லும் முடிவை அகில இந்திய தலைமை எடுத்தால் தனது பதவியை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ராஜினாமா செய்யக்கூடும் என்றனர். இப்படியான நிலையில் காங்கிரஸ் கூடாரம், பரபரப்புடனே காணப்படுகிறது.

விகடன் 17 Jan 2026 5:03 pm

'டெல்லி சலோ' : திமுக-வா... தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றே மாதங்கள்தான். தி.மு.க-வே கதி எனக் கார்கே, சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஒரு பக்கம் நிற்க... ஏன் த.வெ.க-வுடன் கைகோக்கக் கூடாது? எனக் கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்பு ரூட் மாற்றுகிறது. இந்தக் குழப்பங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட ஐவர் குழு, 70 தொகுதிகள்... ஆட்சியில் பங்கு! என ஸ்டாலினிடம் தூதுவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி கொளுத்திப் போட்ட பிரவீண் சக்கரவர்த்தி! இதனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஓகே என அனைவரும் நினைத்த நேரத்தில், ராகுலுக்கு நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி திடீரென விஜய்யைச் சந்திக்க, கூட்டணிக்குள் நிலநடுக்கமே ஏற்பட்டது. இது தனிப்பட்ட சந்திப்பு எனத் தலைவர்கள் சமாளிப்பதற்குள், தமிழ்நாடுதான் கடனில் முதலிடம் எனக் கனிமொழியின் பேட்டியை வைத்தே ட்விஸ்ட் கொடுத்தார் பிரவீண். விளைவு? தி.மு.க பாசறையில் புகைச்சல் ஆரம்பமானது. கரூர் எம்.பி ஜோதிமணியோ, சிலரின் சுயநலத்தால் காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது எனச் சீற, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.பி. சூர்யபிரகாசமோ, தமிழக காங்கிரஸை தி.மு.க-வின் அடிமைக்கூடாரமாக மாற்றுகிறார் செல்வப்பெருந்தகை என வெடிவைத்துவிட்டு வெளியேறினார். ஜோதிமணி நிலைமை மோசமாவதை உணர்ந்த மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், அவசர அவசரமாகச் சென்னைக்கு ஓடிவந்து, எங்க கூட்டணி தி.மு.க-வோடுதான். த.வெ.க-வுடன் பேசுவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி என்றார். அதற்குள்ளாக அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது... கூட்டணி ஆட்சிக்கு இடமே இல்லை எனத் தெறிக்கவிட, அதை டெல்லி பார்த்துக்கொள்ளும் எனச் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுக்க... பரபரப்பு பற்றிக்கொண்டது! சி.எம் ரொம்ப அப்செட்! இப்படியான சூழலில்தான் சமீபத்தில் கூடலூர் வந்திருந்தார், ராகுல் காந்தி. அதில் பங்கேற்ற நீலகிரி எம்.பி ஆ.ராசா, உங்க ஆட்கள் பேசுவது கூட்டணிக்கு வேட்டு வைக்கிறது. சி.எம் ரொம்ப அப்செட்! எனச் சொல்ல, ராகுலோ கூலாக, நான் பார்த்துக் கொள்கிறேன் என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டதாக தகவல் வெளியாக பரபரப்பை கிளப்பியது. இப்படி நிலைமை திக் திக்... என இருக்கும் சூழலில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை' எனச் சொல்லிப் பரபரப்பை எகிற வைத்தார். இதற்கிடையில்தான் தமிழக காங்கிரஸாருக்கு டெல்லி அவசர அழைப்பு விடுத்திருக்கிறது. ஆ.ராசா இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், தமிழக காங்கிரஸில் தி.மு.க, த.வெ.க என இரண்டு தரப்பு இருக்கிறது. சமீபத்தில் சச்சின் பைலட் அளித்த பேட்டிக்குப் பின்னால் கூடக் கரூர் எம்.பி ஜோதிமனிதான் இருக்கிறார். இதற்கிடையில் தலைவர் ராகுல் தனியாக எடுத்த சர்வேயில், 'தி.மு.க சரியான மரியாதை கொடுப்பதில்லை. எனவே, த.வெ.க-வுடன் செல்லலாம்' எனப் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். விஜய் இதையடுத்துத்தான் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்பதற்கு அகில இந்திய தலைமை முடிவு செய்தது. அதன்படி இன்று மாலை டெல்லி இந்திரா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் தரும் பதிலையடுத்து ராகுல் கூட்டணிகுறித்த இறுதி முடிவை எடுப்பார். இதற்கிடையில் த.வெ.க-வுடன் செல்லும் முடிவை அகில இந்திய தலைமை எடுத்தால் தனது பதவியை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ராஜினாமா செய்யக்கூடும் என்றனர். இப்படியான நிலையில் காங்கிரஸ் கூடாரம், பரபரப்புடனே காணப்படுகிறது.

விகடன் 17 Jan 2026 5:03 pm

'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02

தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது குறித்து தான் பார்க்க போகிறேம் `Vote Vibes' தொடரில்..! திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை! Vote Vibes 02 இன்றைய தேதிக்கு தேர்தல் அரசியலில் திமுக ஒரு மாபெரும் சக்தி. ஆனால், 1956 இல் அப்படியொரு சம்பவம் மட்டும் நடந்திடாமல் போயிருந்தால் திமுக தேர்தலிலேயே போட்டியிட்டிருக்க மாட்டார்கள். திமுவை தேர்தல் பாதைக்கு அழைத்து வந்த அந்த சம்பவம் என்ன தெரியுமா? அறிஞர் அண்ணா 1949 செப்டம்பர் 17 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் பெரியாரின் பிறந்தநாளில் திமுக என்கிற கட்சியைத் தொடங்கினார் அண்ணா. 1952 இல் சுதந்திரத்துக்கு பிறகு மதராஸ் மாகாணத்துக்கான முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்திருந்தது. திமுக தோற்றத்துக்குப் பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே அந்த கட்சி போட்டியிடவில்லை. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சிக்கும் காமன்வீல் கட்சிக்கும் திமுக தங்களின் ஆதரவை தெரிவித்தது. 1957 இல் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மதராஸ் மாகாணம் தயாராகி வந்தது. அந்தத் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்கிற குழப்பம் திமுகவுக்குள் நிலவியது. திருச்சி மாநாடு 1956 இல் திருச்சியில் திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு நடந்திருந்தது. அந்த மாநாடு மைதானத்தின் நுழைவு வாயிலில் அண்ணா இரண்டு பெட்டிகளை வைத்தார். திமுக தேர்தலில் போட்டியிடலாம் என நினைப்பவர்கள் ஒரு பெட்டியிலும் போட்டியிட வேண்டாம் என்பவர்கள் ஒரு பெட்டியிலும் வாக்களிக்க வேண்டும் என்றார். மாநாட்டு திடலிலேயே வாக்குகள் எண்ணப்பட்டன. திமுக தேர்தலில் போட்டியிட வேண்டுமென பெருவாரியாக தொண்டர்கள் வாக்களித்தனர். மாநாட்டின் மேடையிலேயே திமுக தேர்தலில் போட்டியிடுமென அண்ணா அறிவித்தார். அண்ணா, கருணாநிதி 1957 இல் நடந்த தேர்தலில் 15 தொகுதிகளில் திமுக வென்றது. காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணாவும் குளித்தலையில் இருந்து கருணாநிதியும் வென்று முதல் முறையாக சட்டமன்றத்துக்கு சென்றார்கள். 1962 தேர்தலில் 50 இடங்களை திமுக வென்றது. எதிர்க்கட்சி அந்தஸ்த்திலும் அமர்கிறது. 1967 தேர்தலில் பெரும்பான்மையாக வென்று ஆட்சியையும் பிடிக்கிறது. அண்ணாதுரை மதராஸ் மாகாணத்தின் முதல்வர் ஆனார். மதராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது. அப்போது இருந்து இப்போது வரைக்கும் தமிழக அரசியல் திமுகவை மையப்படுத்தி இருப்பதற்கும் தேர்தல் அரசியலில் திமுக மாபெரும் சக்தியாக இருப்பதற்கும் 1956 இல் நடந்த திருச்சி மாநாடுதான் மிக முக்கிய காரணம்.! Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்

விகடன் 17 Jan 2026 3:06 pm

'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02

தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது குறித்து தான் பார்க்க போகிறேம் `Vote Vibes' தொடரில்..! திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை! Vote Vibes 02 இன்றைய தேதிக்கு தேர்தல் அரசியலில் திமுக ஒரு மாபெரும் சக்தி. ஆனால், 1956 இல் அப்படியொரு சம்பவம் மட்டும் நடந்திடாமல் போயிருந்தால் திமுக தேர்தலிலேயே போட்டியிட்டிருக்க மாட்டார்கள். திமுவை தேர்தல் பாதைக்கு அழைத்து வந்த அந்த சம்பவம் என்ன தெரியுமா? அறிஞர் அண்ணா 1949 செப்டம்பர் 17 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் பெரியாரின் பிறந்தநாளில் திமுக என்கிற கட்சியைத் தொடங்கினார் அண்ணா. 1952 இல் சுதந்திரத்துக்கு பிறகு மதராஸ் மாகாணத்துக்கான முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்திருந்தது. திமுக தோற்றத்துக்குப் பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே அந்த கட்சி போட்டியிடவில்லை. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சிக்கும் காமன்வீல் கட்சிக்கும் திமுக தங்களின் ஆதரவை தெரிவித்தது. 1957 இல் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மதராஸ் மாகாணம் தயாராகி வந்தது. அந்தத் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்கிற குழப்பம் திமுகவுக்குள் நிலவியது. திருச்சி மாநாடு 1956 இல் திருச்சியில் திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு நடந்திருந்தது. அந்த மாநாடு மைதானத்தின் நுழைவு வாயிலில் அண்ணா இரண்டு பெட்டிகளை வைத்தார். திமுக தேர்தலில் போட்டியிடலாம் என நினைப்பவர்கள் ஒரு பெட்டியிலும் போட்டியிட வேண்டாம் என்பவர்கள் ஒரு பெட்டியிலும் வாக்களிக்க வேண்டும் என்றார். மாநாட்டு திடலிலேயே வாக்குகள் எண்ணப்பட்டன. திமுக தேர்தலில் போட்டியிட வேண்டுமென பெருவாரியாக தொண்டர்கள் வாக்களித்தனர். மாநாட்டின் மேடையிலேயே திமுக தேர்தலில் போட்டியிடுமென அண்ணா அறிவித்தார். அண்ணா, கருணாநிதி 1957 இல் நடந்த தேர்தலில் 15 தொகுதிகளில் திமுக வென்றது. காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணாவும் குளித்தலையில் இருந்து கருணாநிதியும் வென்று முதல் முறையாக சட்டமன்றத்துக்கு சென்றார்கள். 1962 தேர்தலில் 50 இடங்களை திமுக வென்றது. எதிர்க்கட்சி அந்தஸ்த்திலும் அமர்கிறது. 1967 தேர்தலில் பெரும்பான்மையாக வென்று ஆட்சியையும் பிடிக்கிறது. அண்ணாதுரை மதராஸ் மாகாணத்தின் முதல்வர் ஆனார். மதராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது. அப்போது இருந்து இப்போது வரைக்கும் தமிழக அரசியல் திமுகவை மையப்படுத்தி இருப்பதற்கும் தேர்தல் அரசியலில் திமுக மாபெரும் சக்தியாக இருப்பதற்கும் 1956 இல் நடந்த திருச்சி மாநாடுதான் மிக முக்கிய காரணம்.! Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்

விகடன் 17 Jan 2026 3:06 pm

நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள் - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்

பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்று அப்போது தெரியும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படமும் இடம்பெற்றுள்ளது. பேனரில் இடம்பெற்ற டிடிவி தினகரன் இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காத டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், தினகரன் தலைமறைவாகிவிட்டார் என்று எனக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தயகத்தினால் வீட்டிலேயே இருக்கிறார். சோர்ந்து போய்விட்டார் என்றும் தகவலைப் பரப்புகிறார்கள். ஆனால் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. மனதில் எந்த கணமும் இல்லை. டிடிவி தினகரன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள். அதன்பிறகு உங்களுக்கு கூட்டணி குறித்து தெரிய வரும். நான் ஒரு கூட்டணியில் சேரும்போது அந்தக் கூட்டணிக்கு தலைமைத் தாங்குபவர்கள் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 17 Jan 2026 2:33 pm

நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள் - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்

பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்று அப்போது தெரியும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படமும் இடம்பெற்றுள்ளது. பேனரில் இடம்பெற்ற டிடிவி தினகரன் இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காத டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், தினகரன் தலைமறைவாகிவிட்டார் என்று எனக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தயகத்தினால் வீட்டிலேயே இருக்கிறார். சோர்ந்து போய்விட்டார் என்றும் தகவலைப் பரப்புகிறார்கள். ஆனால் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. மனதில் எந்த கணமும் இல்லை. டிடிவி தினகரன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள். அதன்பிறகு உங்களுக்கு கூட்டணி குறித்து தெரிய வரும். நான் ஒரு கூட்டணியில் சேரும்போது அந்தக் கூட்டணிக்கு தலைமைத் தாங்குபவர்கள் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 17 Jan 2026 2:33 pm

தமிழே உயிரே! | உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு! | மொழிப்போரின் வீர வரலாறு – 4

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழே உயிரே! - பகுதி 4 1965-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ‘இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தி இருக்கும்’ என்ற சட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. அது ஒரு குடியரசு தினம். அன்றைய தினத்தில் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆகவே, அண்ணாவின் தலைமையில், தி.மு.க-வினர் அவரவர் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க முடிவுசெய்யப்பட்டது.   கருமருந்து! 1937-ம் ஆண்டு பள்ளிக்கூடங்களில் கட்டாய இந்தியை ராஜாஜி கொண்டுவந்தபோது, மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டத்துக்கு பெரியார் தலைமை ஏற்ற பிறகு, போராட்டம் வீரியம் பெற்றது. 1960-ளிலும், ஆரம்பத்தில் தமிழறிஞர்களால்தான் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வகுப்பறைகளில் மாணவர்களுக்கு தமிழுணர்வை ஊட்டிய காரணத்தால், அது மிகப்பெரிய போராட்டமாக வடிவம் பெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கான கருமருந்தைத் தயாரித்தது தமிழறிஞர்கள் என்றால், அதில் தீவைத்து வெடிக்கச் செய்தவர்கள் மாணவர்கள். 1960-களில் இந்தி எதிர்ப்புக்கான பரப்புரையைத் தொடங்கியவர்களில் முக்கியமானவர் தமிழறிஞர் கி.இலக்குவனார். 1963-ம் ஆண்டு விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அதற்காக சிறை சென்று திரும்பியிருந்தார் அண்ணா. அப்போது, சீன ஆக்கிரமிப்பு விவகாரம் இந்திய மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில், மதுரை தியாகராசர் கல்லூரியில் உரையாற்ற அழைக்கப்பட்டார் அண்ணா. இந்தி என்ற அரக்கி அந்த மேடையில் பேசிய பேராசிரியர் கி.இலக்குவனார், ‘விலைவாசியைக்கூட சமாளித்துவிடலாம். ஆனால், அதைவிட ஒரு கொடுமை நம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது. அதுதான், இந்தி என்ற அரக்கி. அதை எதிர்த்துப் போராட நாம் தயாராக வேண்டும்’ என்றார். அதைக் குறிப்பிட்டுப் பேசிய அண்ணா, ‘பேராசிரியர் சரியான நேரத்தில் நினைவூட்டியிருக்கிறார். ஆனால், எங்கள் கட்சி ஜனநாயகத் தன்மை கொண்டது. எனவே, கட்சிப் பொதுக்குழுவில் இது பற்றி விவாதித்து முடிவெடுப்போம்’ என்றார். அதைத் தொடர்ந்து, சட்ட நகலை எரித்து ஒரு பிரிவினர் போராடுவது, மற்றொரு பிரிவினர் இந்தி எதிர்ப்புக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வது என்று தி.மு.க முடிவெடுத்தது.   அறிஞர் அண்ணா பேராசிரியர் கைது 1965-ம் ஆண்டு, இந்தி வருவதற்கு முன்பே எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள் முடிவுசெய்தனர். மதுரையில் பிப்ரவரி முதல் நாளே மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கி.இலக்குவனார் கைது செய்யப்பட்டார். போராட்டத்தை மீண்டும் தொடங்க முயற்சி செய்வதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், கல்லூரி பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். கல்வித்துறை இயக்குநரிடமிருந்து வந்த கடிதத்தில், கி.இலக்குவனாரின் நடவடிக்கைகள் தவறானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்வர் பக்தவத்சலம்தான் தன்னை பணியிலிருந்து நீக்க வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கி.இலக்குவன் பின்னாளில் தெரிவித்தார். சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் ஐயாயிரம் பேர் கல்லூரியிலிருந்து நகரத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மாணவர் ராஜேந்திரன் உயிரிழந்தார். படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. போராட்டம் தீவிரமடைந்தது. அண்ணாவின் வேண்டுகோள்படி தி.மு.க-வினர் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். அதனால், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டு கோபமடைந்த பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். தேசிய பாதுகாப்புச் சட்டம்! தஞ்சையில் மன்னர் சரபோஜி கல்லூரி, பூண்டி கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கரந்தை தமிழ்க் கல்லூரி, மாயவரம் கல்லூரி என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்காலத்தில் அமைச்சராகவும், சட்டமன்ற சபாநாயகராகவும் இருந்த கா.காளிமுத்துவும், பின்னாளில் திரைப்பட  பாடலாசிரியராக இருந்த நா.காமராசனும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது மாணவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும், ‘இந்தித் திணிப்புக்கு எதிராக நாம் தீக்குளிப்போமா’ என்று தங்களுக்குள் ஆலோசித்தனர். அதை அறிந்த சக மாணவர்கள், அவர்களிடம் பேசி மனதை மாற்றியிருக்கிறார்கள். பின்னர், மதுரையில் கா.காளிமுத்து, நா.காமராசன், பா.செயப்பிரகாசம் உள்ளிட்டோர் கட்டாய இந்திக்கான சட்ட நகலை எரித்ததால் கைது செய்யப்பட்டனர். மதுரை வடக்கு மாசி வீதியில் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றபோது, அவர்கள் மீது காங்கிரஸார் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். போராட்டம் மேலும் தீவிரமடைந்ததால், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது அன்றைய காங்கிரஸ் அரசு. அதற்கு முன்பு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அரசியல்வாதிகள்தான் கைது செய்யப்பட்டனர். ஆனால், மொழிப் போராட்டத்தின்போது, தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற கொடுமையான சட்டத்தின் கீழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ராணுவம் வந்தது! கரூர், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது. பேருந்துகளை தீவைத்துக் கொளுத்துவது, தண்டவாளங்களைப் பெயர்த்தெடுப்பது என்று போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. ஆகவே, ராணுவம் வரவழைக்கப்பட்டது. பொள்ளாச்சியில் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அது தொடர்பாக செய்திகள் காங்கிரஸ் அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. 1966-ம் ஆண்டு மே மாதம், ம.நடராசன் முன்முயற்சியில் தஞ்சாவூரில் அகில இந்திய அளவிலான ஒரு மாணவர் மாநாடு நடைபெற்றது. கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அண்ணா, கி.ஆ.பெ.விசுவநாதம், குன்றக்குடி அடிகளார், ஜி.டி.நாயுடு, காயிதே மில்லத், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற அந்த மாநாட்டில், இந்திக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, போராட்ட மையமாக சென்னை பச்சையப்பன் கல்லூரி விளங்கியது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக, பச்சையப்பன் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து, போலீஸார் தடியடி நடத்தினர். அதனால், தமிழகத்தில் மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. முழு கடையடைப்பு, ரயில் நிலையங்கள் முற்றுகை என்று எரிமலையாக மாறியது தமிழ்நாடு. தென் தமிழகத்தில் மாணவர் போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் முன்னிலை வகித்தவர் எல்.கணேசன். மொழிப்போராட்டத்தில் ஆங்காங்கே தலைமை வகித்த தளபதிகளுக்கு இணைப்புப் பாலமாக இருந்தவர் வை.கோபால்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழே உயிரே : `போருக்குத் தயாராகுங்கள்' | மொழிப்போரின் வீர வரலாறு - 1 உயிர் தமிழுக்கு! ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்ற முழக்கத்தை தமிழர்கள் நடைமுறைப்படுத்தினர். 1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு சிறைசென்ற நடராசன், தாளமுத்து ஆகியோர் உயிர்த் தியாகம் செய்தனர். 1964, 1965 காலக்கட்டத்தில் வேறு வடிவத்தில் உயிர்த்தியாக சம்பவங்கள் நிகழ்ந்தன. 1964-ம் ஆண்டு ஜனவரி மாதம். சென்னை மாகாண முதல்வர் பக்தவத்சலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வருகிறார். அவருடைய காலில் விழுந்த ஓர் இளைஞர், ‘இந்தியை நுழையவிடாதீர்கள். தமிழைக் காப்பாற்றங்கள். நீங்களும் தமிழர்தானே..’ என்று கெஞ்சுகிறார். அப்போது பக்தவத்சலம் தன் பாதுகாவலர்களிடம், ‘இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்’ என்று எரிச்சலுடன் உத்தரவிடுகிறார். அந்த இளைஞரின் பின்னணியை காவல்துறை விசாரித்தது. அந்த இளைஞரின் பெயர் சின்னச்சாமி. அவர், அரியலூர் அருகே கீழப்பளுவூரைச் சேர்ந்தவர். அவருக்கு 27 வயது. விவசாயியான அந்த இளைஞர்களுக்கு திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறார்’ என்பதை காவல்துறை அறிந்துகொள்கிறது. சின்னச்சாமி, ஒரு வாரம் கழித்து திருச்சி ரயில் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியவாறு அவர் தீயில் கருகினார்.  அவர் தன் உயிரை தமிழுக்காக மாய்த்துக்கொண்ட ஜனவரி 25-ம் தேதிதான், ‘மொழிப்போர் தியாகிகள் தினம்’ என்று அனுசரிக்கப்படுகிறது. ‘சின்னச்சாமியைப் போல பத்து தமிழனாவது உயிர்நீத்தால்தான், நம் தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கமும் ஒழியும்’ என்று தன் நண்பர்களிடம் உணர்ச்சிவயப்பட்டு பேசிக்கொண்டிருந்தார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம். இந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுச் சென்ற சிவலிங்கம், தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். கோடம்பாக்கத்தில் சிவலிங்கத்தின் உடலைப் பார்த்து பதறிப்போனார் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அரங்கநாதன். பின்னர், அவரும் தீக்குளித்து உயிரிழந்தார். திருமணமான அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். ‘தமிழுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்’ என்று அண்ணாவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழே உயிரே : `மார்பில் குண்டு பாயட்டும்!' | மொழிப்போரின் வீர வரலாறு - 2 கோவை மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முத்து, பட்டறை ஒன்றில் வேலை பார்த்துவந்தார். அவருக்கு 23 வயது. திடீரென அவர் தீக்குளித்து உயிழந்தார். உடல் தீயில் கருகி, அனத்தியபடி இருந்த அவர் ஒரு வாக்குமூலம் அளித்தார். அதில், ‘தமிழ் மாணவர்கள் தாக்கப்படக்கூடாது. தமிழினம் வாழ வேண்டும்’ என்று குறிப்பிட்டார். புதுக்கோட்டை அருகே கீரனூரைச் சேர்ந்த முத்து, ‘இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்’ என்று முதல்வர் பக்தவத்சலத்துக்கு கடிதம் எழுதிவிட்டு, விஷம் அருந்தி உயிரிழந்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அய்யம்பாளையத்தைச் சேர்ந்த  தலைமை ஆசிரியரான வீரப்பன், தன்னுடைய பள்ளி மாணவர்களை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். ‘தமிழைக் காக்க முயற்சி செய்யுங்கள்’ என்று அண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொண்டார் வீரப்பன். திருச்சியை அடுத்த விராலிமலையைச் சேர்ந்த சண்முகம் மளிகைக்கடையில் வேலை செய்தார். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை நடத்திவந்தார். அவர், அண்ணாவுக்கு ஐந்து கடிதங்கள் எழுதினார். அதில், ‘இந்தப் போராட்டத்துக்காக உயிரைக் கொடுக்கிறோம். தமிழைக் காக்க கடைசிவரை போராடுங்கள்’ என்று எழுதினார். அவர், பூச்சிமருந்தை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்த அவரது உடல், சின்னச்சாமியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. பழைய தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள ஏ.வி.சி கல்லூரி மாணவர் சாரங்கபாணி பி.காம் முதலாமாண்டு படித்துவந்தார். இந்தி எதிர்ப்புப் போரில் தீவிரமாக ஈடுபட்டுவந்த அவர், தீக்குளித்து இறந்தார்.  1942-ல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியைவிட, இந்த பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சி மிகத் தீவிரமாக இருந்தது என்று ஆங்கில ஏடுகள் எழுதின. இந்தி எதிர்ப்புப் போராட்டம் சுமார் 60 நாட்கள் நடைபெற்றன. ‘அதில், அரசின் கணக்குப்படி 65 பேர், பத்திரிகைகளின் கணக்குப்படி 150 பேர் இறந்தனர். ஆனால், எங்கள் கணக்குப்படி 500 பேர் உயிரிழந்தனர்’ என்கிறார் மொழிப்போரில் பங்கெடுத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். தாய்மொழியாம் தமிழுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த அந்த மகத்தான தியாகிகளின் குடும்பங்களைத் தேடிச்சென்று நான் சந்தித்தேன். அவர்களின் பரிதாபகரமான நிலையும், அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளும் என்னை உலுக்கியெடுத்தன. அடுத்த பகுதியில் அவற்றை விரிவாகப் பார்ப்போம்.! - அடுத்த பகுதியுடன் முற்றுப்பெறும்! தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’... இங்கிலீஷ் ‘எவர்’ - தமிழனின் வெற்றி! | மொழிப்போரின் வீர வரலாறு – 3

விகடன் 17 Jan 2026 1:34 pm

ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு; எந்தத் துறையில் பணி?

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை தொடங்கியிருக்கிறது. சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த மாடுபிடி வீரருக்கு கார், போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் தங்கக் காசு பரிசுகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு விழாவை நேரில் சென்று பார்வையிட சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டு ரசித்த மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிச் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்த வழிவகை செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Mandaadi: ஜல்லிக்கட்டு எப்படியோ, அப்படித்தான் பாய்மரப் படகு போட்டியும் - இயக்குநர் வெற்றிமாறன்

விகடன் 17 Jan 2026 1:06 pm

ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு; எந்தத் துறையில் பணி?

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை தொடங்கியிருக்கிறது. சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த மாடுபிடி வீரருக்கு கார், போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் தங்கக் காசு பரிசுகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு விழாவை நேரில் சென்று பார்வையிட சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டு ரசித்த மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிச் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்த வழிவகை செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Mandaadi: ஜல்லிக்கட்டு எப்படியோ, அப்படித்தான் பாய்மரப் படகு போட்டியும் - இயக்குநர் வெற்றிமாறன்

விகடன் 17 Jan 2026 1:06 pm

அதிமுக: 'பெண்களுக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்' - அதிரடி வாக்குறுதிகள்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். EPS அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள், ' குலவிளக்கு திட்டத்தின்படி அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாத மாதம் 2000 ரூபாய் அளிக்கப்படும். *நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம் . *அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் கிராமம் நகர்ப்புறங்களில் குடியிருக்க வீடு இல்லாதவர்கள் அரசே நிலம் வாங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். *ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலினத்தவர்களில் மகன், மகள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கையில் வீடு கட்டி கொடுக்கப்படும். EPS *நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நூற்றைம்பது நாட்களாக விரிவுபடுத்தப்படும். *5 லட்சம் மகளிருக்கு 25000 ரூபாய் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும். எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்தநாளான இன்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

விகடன் 17 Jan 2026 12:26 pm

அதிமுக: 'பெண்களுக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்' - அதிரடி வாக்குறுதிகள்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். EPS அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள், ' குலவிளக்கு திட்டத்தின்படி அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாத மாதம் 2000 ரூபாய் அளிக்கப்படும். *நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம் . *அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் கிராமம் நகர்ப்புறங்களில் குடியிருக்க வீடு இல்லாதவர்கள் அரசே நிலம் வாங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். *ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலினத்தவர்களில் மகன், மகள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கையில் வீடு கட்டி கொடுக்கப்படும். EPS *நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நூற்றைம்பது நாட்களாக விரிவுபடுத்தப்படும். *5 லட்சம் மகளிருக்கு 25000 ரூபாய் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும். எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்தநாளான இன்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

விகடன் 17 Jan 2026 12:26 pm

1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

கட்டுரையாளர்: கப்பிகுளம் ஜெ.பிரபாகர் அரசியல் ஆடுபுலி 1 - 1977 தேர்தல் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்... திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக வாய்ப்புள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை அதிமுகவின் சார்பாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது கட்சியை திமுகவுடன் இணைக்கப் போகிறார். இது போன்ற செய்திகள் அரசியல் பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் நடக்குமா?, இது சாத்தியமா? என்று நாமும் ஆச்சர்யத்தில் மூழ்கி இருப்போம். ஆனால் , அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் எதுவும் சாத்தியம். ஆட்சி அதிகாரம், பதவி கிடைத்திட, கொள்கை கோட்பாடுகள் ஓரங்கட்டி வைக்கப்பட்ட சான்றுகள் கடந்த கால அரசியலில் ஏராளம் கிடைக்கின்றன. அரசியல் ஆடுபுலி காங்கிரஸை எதிர்த்து தொடங்கிய திமுக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆர், திமுக – அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் தேர்தல் அரசியலில் பல திருப்பங்களை உண்டாக்கியுள்ளன.  கூட்டணிக் கணக்குப் போட்டு தேர்தல் கணக்கில் கோட்டை விட்ட தேசியக் கட்சிகள், 1977 தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் தலைதூக்கவே முடியவில்லை. தேசியக் கட்சிகளை ஓடவிட்டு பெரும் திருப்பத்தைத் தந்த தேர்தல் 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல்! தமிழக அரசியலில் முக்கியத் தலைவர்களாக இருந்த, மூதறிஞர் ராஜாஜி 1972-ம் ஆண்டு மறைந்தார். ஈ.வெ.ரா.பெரியார் 1973-ம் ஆண்டு மறைந்தார். பெருந்தலைவர் காமராஜர் 1975-ம் ஆண்டில் மறைந்தார். பேரறிஞர் அண்ணா 1969ஆம் ஆண்டிலேயே மறைந்திருந்தார். பெரும் ஆளுமைகள் இல்லாத அரசியல் வெற்றிடத்தை, கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் நிரப்பியிருந்தனர்.  அப்படியான சூழ்நிலையில்தான், இந்திய அரசியலைப் புரட்டிப் போட்ட நெருக்கடி நிலையைக் கடந்து, 1977இல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. நெருக்கடி நிலை காலத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி 1976-ம் ஆண்டு கலைக்கப்பட்டதால், 1977இல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெற்றது.  அரசியல் ஆடுபுலி இந்திரா காந்தியை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் எதிர்கட்சிகளோடு கூட்டணி சேர்ந்தது. பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சிகள் ஸ்தாபன காங்கிரசோடு இணைந்து ஜனதா கட்சியாக மாறின. ஜனநாயக காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டது. 1977 மார்ச் 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், திமுக, ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் எதிரெதிராகப் போட்டியிட்டார்கள். அதிமுக கூட்டணியில் அதிமுக 18, இந்திரா காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களில் வென்றனர். திமுக கூட்டணியில் திமுக 1, ஜனதா (ஸ்தாபன காங்கிரஸ்) 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. தேர்தல் நேரத்தில் வெளியான சர்காரியா கமிஷனின் இடைக்கால அறிக்கையும், புதிதாக கட்சி தொடங்கிய எம்ஜிஆரின் செல்வாக்கும் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கான காரணங்களாக கூறப்பட்டது. வடமாநிலங்களில் நெருக்கடி நிலைக்கு எதிரான ஜனதா கூட்டணி பெருவெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருந்தது. ஆனாலும், ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். தென் மாநிலங்களில் செல்வாக்கோடு இருப்பதாக காங்கிரஸ் நினைத்துக் கொண்டது. தன்னால்தான் காங்கிரசும் வெற்றி பெற்றது என்று எம்ஜிஆர் எண்ணினார். மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை உண்டாக்கின.  அதனால், 1977 ஜூன் 12 மற்றும் 14 ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் கூட்டணிகள் சிதறிப்போயின. எம்.ஜி.ஆர் - கருணாநிதி திமுக அணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக பக்கம் தாவியது. அதிமுக அணியில் இருந்த இந்திரா காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. திமுக அணியில் இருந்த ஜனதா கட்சியும் தனித்தே களம் கண்டது. மத்தியில், மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்றதால், ஜனதா கூட்டணியை பகைத்துக் கொள்ள வேண்டாமென, காங்கிரஸ் கட்சியை எம்ஜிஆர் கழட்டி விட்டதாக கூறுவார்கள்.  திமுகவுக்கு ஒரு எம்பி மட்டுமே இருந்த நிலையில், ஜனதா கட்சி 3 எம்பிக்களை வென்று இருந்தது, மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்ததாலும் திமுக கூட்டணி வேண்டாமென ஜனதா கட்சி தவிர்த்துவிட்டது. திமுகவோடு இருந்தால் வெற்றி கிடைக்காது என்பதைக் கணித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக பக்கம் ஒதுங்கிய நிலையில், அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்கும், கட்சித் தொடங்கியது முதல் துணையாக இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டுச் சேர்ந்து விட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக, ஜனதா கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி உருவானது. கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக, பாலசுப்பிரமணியம் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பி.கே.மூக்கையாத்தேவர் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, கே.எம்.காதர் முகைதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சி ஒரு கூட்டணியாக இருந்தனர். மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துடன், மணலி கந்தசாமி, ஏ.கே.சுப்பையா ஆகியோர் தலைமையிலான தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கூட்டணியில் இருந்தது. கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் திமுகவை ஆதரித்தது. ஜி.கருப்பையா மூப்பனார் தலைமையிலான இந்திரா காங்கிரஸ், கல்யாணசுந்தரம் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. பழைய காங்கிரஸ் என்றழைக்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் உடன், பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவான கூட்டணியே ஜனதா கட்சி என்பதால், மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சி நம்பிக்கையோடு தமிழகத்தில் தனித்து களம் கண்டது. எம்.ஜி.ஆர் அதிமுகவும், காங்கிரஸும் திமுகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்கு சேகரித்தனர். திமுகவும், ஜனதாவும் காங்கிரசுக்கு எதிராக, நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி பரப்புரை செய்தார்கள். காங்கிரஸ் மீது நெருக்கடி நிலை, மிசா சட்டத்தில் தலைவர்கள் கைது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும்,  திமுக மீது எம்ஜிஆரும், கம்யூனிஸ்டுகளும் எடுத்து வைத்த ஊழல் புகார்களும், கருணாநிதிக்குப் பின்னர் மு.க.முத்து வருகை என்கிற வாரிசு அரசியல் பிரச்னைகளும் 1977 தேர்தலில் பிரதானமாக பேசப்பட்டது. நெருக்கடி நிலையில் கைதான திமுகவினர் மீதான அனுதாபத்தை விட, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் மீதான அனுதாபம் கிராமப்புறங்களில் அதிகளவு எதிரொலித்தது. அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01 மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. தாரமங்கலம் தொகுதியில் 19 வாக்குகள், திருமயம் தொகுதி 57 வாக்குகள், உதகமண்டலம் 129 வாக்குகள், கூடலூர் தொகுதி 129 வாக்குகள், மேலூர் தொகுதி 156 வாக்குகள், நாகர்கோவில் தொகுதி 193 வாக்குகள், நாங்குநேரி தொகுதி 204 வாக்குகள், காரைக்குடி தொகுதி 240 வாக்குகள், சங்கரன்கோவில் தொகுதி 337 வாக்குகள், கோவில்பட்டி தொகுதி 397 வாக்குகள், திருப்பத்தூர் தொகுதி 341 வாக்குகள், ஆத்தூர் தொகுதி 347 வாக்குகள், தாம்பரம் தொகுதி 426 வாக்குகள் என்று 103 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்த வாக்கு வித்தியாசம், வெறும் ஐயாயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே இருந்தன.  காங்கிரஸ் முதன்முதலாக சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்ட எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, 30.37 சதவீத வாக்குகளைப் பெற்று, 130 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆளுங்கட்சியாக இருந்து கலைக்கப்பட்ட கருணாநிதி தலைமையிலான திமுக 24.89 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் 48 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஜனதா கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தன (16.66% வாக்குகள்), தேசியக் கட்சியான காங்கிரஸ் 27 இடங்களை மட்டுமே பிடித்து, 17.51 சதவீத வாக்குகளுடன் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழக அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக இரு கட்சிகளின் கூட்டணியே முதல் இரண்டு இடங்களை வெல்ல முடிகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர், தமிழ்நாட்டு அரசியலில், தேசியக் கட்சியான காங்கிரஸும், திராவிடக் கட்சியான திமுகவும் எதிரும் புதிருமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல். 1952 தேர்தல் முதல் தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தேர்தல் களம் 1977 தேர்தலுக்குப் பின்னர் மாநிலக் கட்சிகளின் வசம் வந்தது.  இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்தோம் என்று பெருமை பாராட்டிய இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்துதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவானது.  (தொடரும்) தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01

விகடன் 17 Jan 2026 12:15 pm

1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

கட்டுரையாளர்: கப்பிகுளம் ஜெ.பிரபாகர் அரசியல் ஆடுபுலி 1 - 1977 தேர்தல் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்... திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக வாய்ப்புள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை அதிமுகவின் சார்பாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது கட்சியை திமுகவுடன் இணைக்கப் போகிறார். இது போன்ற செய்திகள் அரசியல் பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் நடக்குமா?, இது சாத்தியமா? என்று நாமும் ஆச்சர்யத்தில் மூழ்கி இருப்போம். ஆனால் , அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் எதுவும் சாத்தியம். ஆட்சி அதிகாரம், பதவி கிடைத்திட, கொள்கை கோட்பாடுகள் ஓரங்கட்டி வைக்கப்பட்ட சான்றுகள் கடந்த கால அரசியலில் ஏராளம் கிடைக்கின்றன. அரசியல் ஆடுபுலி காங்கிரஸை எதிர்த்து தொடங்கிய திமுக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆர், திமுக – அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் தேர்தல் அரசியலில் பல திருப்பங்களை உண்டாக்கியுள்ளன.  கூட்டணிக் கணக்குப் போட்டு தேர்தல் கணக்கில் கோட்டை விட்ட தேசியக் கட்சிகள், 1977 தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் தலைதூக்கவே முடியவில்லை. தேசியக் கட்சிகளை ஓடவிட்டு பெரும் திருப்பத்தைத் தந்த தேர்தல் 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல்! தமிழக அரசியலில் முக்கியத் தலைவர்களாக இருந்த, மூதறிஞர் ராஜாஜி 1972-ம் ஆண்டு மறைந்தார். ஈ.வெ.ரா.பெரியார் 1973-ம் ஆண்டு மறைந்தார். பெருந்தலைவர் காமராஜர் 1975-ம் ஆண்டில் மறைந்தார். பேரறிஞர் அண்ணா 1969ஆம் ஆண்டிலேயே மறைந்திருந்தார். பெரும் ஆளுமைகள் இல்லாத அரசியல் வெற்றிடத்தை, கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் நிரப்பியிருந்தனர்.  அப்படியான சூழ்நிலையில்தான், இந்திய அரசியலைப் புரட்டிப் போட்ட நெருக்கடி நிலையைக் கடந்து, 1977இல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. நெருக்கடி நிலை காலத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி 1976-ம் ஆண்டு கலைக்கப்பட்டதால், 1977இல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெற்றது.  அரசியல் ஆடுபுலி இந்திரா காந்தியை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் எதிர்கட்சிகளோடு கூட்டணி சேர்ந்தது. பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சிகள் ஸ்தாபன காங்கிரசோடு இணைந்து ஜனதா கட்சியாக மாறின. ஜனநாயக காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டது. 1977 மார்ச் 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், திமுக, ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் எதிரெதிராகப் போட்டியிட்டார்கள். அதிமுக கூட்டணியில் அதிமுக 18, இந்திரா காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களில் வென்றனர். திமுக கூட்டணியில் திமுக 1, ஜனதா (ஸ்தாபன காங்கிரஸ்) 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. தேர்தல் நேரத்தில் வெளியான சர்காரியா கமிஷனின் இடைக்கால அறிக்கையும், புதிதாக கட்சி தொடங்கிய எம்ஜிஆரின் செல்வாக்கும் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கான காரணங்களாக கூறப்பட்டது. வடமாநிலங்களில் நெருக்கடி நிலைக்கு எதிரான ஜனதா கூட்டணி பெருவெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருந்தது. ஆனாலும், ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். தென் மாநிலங்களில் செல்வாக்கோடு இருப்பதாக காங்கிரஸ் நினைத்துக் கொண்டது. தன்னால்தான் காங்கிரசும் வெற்றி பெற்றது என்று எம்ஜிஆர் எண்ணினார். மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை உண்டாக்கின.  அதனால், 1977 ஜூன் 12 மற்றும் 14 ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் கூட்டணிகள் சிதறிப்போயின. எம்.ஜி.ஆர் - கருணாநிதி திமுக அணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக பக்கம் தாவியது. அதிமுக அணியில் இருந்த இந்திரா காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. திமுக அணியில் இருந்த ஜனதா கட்சியும் தனித்தே களம் கண்டது. மத்தியில், மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்றதால், ஜனதா கூட்டணியை பகைத்துக் கொள்ள வேண்டாமென, காங்கிரஸ் கட்சியை எம்ஜிஆர் கழட்டி விட்டதாக கூறுவார்கள்.  திமுகவுக்கு ஒரு எம்பி மட்டுமே இருந்த நிலையில், ஜனதா கட்சி 3 எம்பிக்களை வென்று இருந்தது, மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்ததாலும் திமுக கூட்டணி வேண்டாமென ஜனதா கட்சி தவிர்த்துவிட்டது. திமுகவோடு இருந்தால் வெற்றி கிடைக்காது என்பதைக் கணித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக பக்கம் ஒதுங்கிய நிலையில், அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்கும், கட்சித் தொடங்கியது முதல் துணையாக இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டுச் சேர்ந்து விட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக, ஜனதா கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி உருவானது. கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக, பாலசுப்பிரமணியம் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பி.கே.மூக்கையாத்தேவர் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, கே.எம்.காதர் முகைதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சி ஒரு கூட்டணியாக இருந்தனர். மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துடன், மணலி கந்தசாமி, ஏ.கே.சுப்பையா ஆகியோர் தலைமையிலான தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கூட்டணியில் இருந்தது. கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் திமுகவை ஆதரித்தது. ஜி.கருப்பையா மூப்பனார் தலைமையிலான இந்திரா காங்கிரஸ், கல்யாணசுந்தரம் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. பழைய காங்கிரஸ் என்றழைக்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் உடன், பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவான கூட்டணியே ஜனதா கட்சி என்பதால், மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சி நம்பிக்கையோடு தமிழகத்தில் தனித்து களம் கண்டது. எம்.ஜி.ஆர் அதிமுகவும், காங்கிரஸும் திமுகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்கு சேகரித்தனர். திமுகவும், ஜனதாவும் காங்கிரசுக்கு எதிராக, நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி பரப்புரை செய்தார்கள். காங்கிரஸ் மீது நெருக்கடி நிலை, மிசா சட்டத்தில் தலைவர்கள் கைது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும்,  திமுக மீது எம்ஜிஆரும், கம்யூனிஸ்டுகளும் எடுத்து வைத்த ஊழல் புகார்களும், கருணாநிதிக்குப் பின்னர் மு.க.முத்து வருகை என்கிற வாரிசு அரசியல் பிரச்னைகளும் 1977 தேர்தலில் பிரதானமாக பேசப்பட்டது. நெருக்கடி நிலையில் கைதான திமுகவினர் மீதான அனுதாபத்தை விட, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் மீதான அனுதாபம் கிராமப்புறங்களில் அதிகளவு எதிரொலித்தது. அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01 மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. தாரமங்கலம் தொகுதியில் 19 வாக்குகள், திருமயம் தொகுதி 57 வாக்குகள், உதகமண்டலம் 129 வாக்குகள், கூடலூர் தொகுதி 129 வாக்குகள், மேலூர் தொகுதி 156 வாக்குகள், நாகர்கோவில் தொகுதி 193 வாக்குகள், நாங்குநேரி தொகுதி 204 வாக்குகள், காரைக்குடி தொகுதி 240 வாக்குகள், சங்கரன்கோவில் தொகுதி 337 வாக்குகள், கோவில்பட்டி தொகுதி 397 வாக்குகள், திருப்பத்தூர் தொகுதி 341 வாக்குகள், ஆத்தூர் தொகுதி 347 வாக்குகள், தாம்பரம் தொகுதி 426 வாக்குகள் என்று 103 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்த வாக்கு வித்தியாசம், வெறும் ஐயாயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே இருந்தன.  காங்கிரஸ் முதன்முதலாக சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்ட எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, 30.37 சதவீத வாக்குகளைப் பெற்று, 130 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆளுங்கட்சியாக இருந்து கலைக்கப்பட்ட கருணாநிதி தலைமையிலான திமுக 24.89 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் 48 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஜனதா கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தன (16.66% வாக்குகள்), தேசியக் கட்சியான காங்கிரஸ் 27 இடங்களை மட்டுமே பிடித்து, 17.51 சதவீத வாக்குகளுடன் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழக அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக இரு கட்சிகளின் கூட்டணியே முதல் இரண்டு இடங்களை வெல்ல முடிகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர், தமிழ்நாட்டு அரசியலில், தேசியக் கட்சியான காங்கிரஸும், திராவிடக் கட்சியான திமுகவும் எதிரும் புதிருமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல். 1952 தேர்தல் முதல் தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தேர்தல் களம் 1977 தேர்தலுக்குப் பின்னர் மாநிலக் கட்சிகளின் வசம் வந்தது.  இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்தோம் என்று பெருமை பாராட்டிய இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்துதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவானது.  (தொடரும்) தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01

விகடன் 17 Jan 2026 12:15 pm

மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்!

மும்பை மாநகராட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகள் கழித்து ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணியால் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியை தாக்கரே சகோதரர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. சிவசேனா(உத்தவ்) 65 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த தேர்தலில் 84 இடங்களில் வெற்றி பெற்றது. ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மான் சேனாவும் எதிர்பார்த்த அளவு தேர்தலில் வெற்றி பெறவில்லை. இத்தேர்தலில் மராத்தியர்களை குறிவைத்து தாக்கரே சகோதரர்கள் தேர்தலை சந்தித்தனர். தாக்கரே சகோதரர்கள் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும் இடங்களில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. ஆனால் இத்தேர்தல் முடிவுகளில் மராத்தியர்கள் தாக்கரே சகோதரர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். தாக்கரே சகோதரர்களால் மும்பையை தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் மராத்தியர்களை தக்கவைத்துக்கொண்டனர். மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் தாதர், மாகிம், ஒர்லி, தீந்தோஷி, பாண்டூப், விக்ரோலி, பாந்த்ரா கிழக்கு போன்ற பகுதியில் தாக்கரே சகோதரர்களின் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் மேற்கு மும்பையில் உள்ள மராத்தியர்கள் தாக்கரே சகோதரர்களை கைவிட்டுள்ளனர். மாநகராட்சி தேர்தல் வாழ்வா சாவா போராட்டம் என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டு இருந்தார். சிவசேனா(உத்தவ்) மும்பையில் 163 இடங்களிலும், நவநிர்மான் சேனா 53 இடங்களிலும் போட்டியிட்டன. இத்தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் இரண்டு பேர் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து வெற்றி பெற்று இருக்கின்றனர். மும்பையில் சிவசேனாவின் செல்வாக்கு என்ன என்பதை மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஏற்கனவே வெளிப்படுத்தின. ஆனால், மாநகராட்சி தேர்தல் மிகவும் கடுமையாக இருந்தது. உண்மையான சேனா எது என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்திருந்தது. தாக்கரேக்கள் இந்த முறை இணைந்து போட்டியிட்டார்கள். எனவே, தாக்கரே முத்திரைக்கு இது ஒரு உண்மையான சோதனையாக அமைந்தது. இச்சோதனையில் தாக்கரே சகோதரர்களால் மராத்தியர்களை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. தோல்வியை தழுவிய வாரிசுகள் சிவசேனா(ஷிண்டே) 90 இடங்களிலேயே போட்டியிட்டது. ஷிண்டேவின் சேனா தலைவர்களின் வாரிசுகளுக்கு அதிக அளவில் சீட் கொடுத்து இருந்தது. தற்போது மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் / எம்பிக்கள் குடும்ப உறுப்பினர்கள் 8 பேருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு இருந்தது. முன்னாள் எம்பி ராகுல் ஷெவாலேவின் மைத்துனி வைஷாலி நயன் ஷேவாலே வார்டு 183வது வார்டிலும், முன்னாள் எம்எல்ஏ சதா சர்வான்கரின் மகன் சமாதான் மற்றும் மகள் பிரியா முறையே 194 மற்றும் 191 (ஒர்லி, மாகிம்)வது வார்டிலும், குர்லா எம்எல்ஏ மங்கேஷ் குடால்கரின் மகன் ஜெய் குடால்கர் (கே) 169வது வார்டிலும் போட்டியிட்டனர். சேனா எம்.பி ரவீந்திர வாய்கரின் மகள் தீப்தி வாய்கர்-போட்னிஸ் வார்டு 73ல் (ஜோகேஸ்வரி) போட்டியிட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் தோற்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் ரவீந்திர வாய்கரின் மனைவி போட்டியிட்டார். அவரும் தோல்வியை தழுவினார். இதேபோல், பாண்டூப் எம்எல்ஏ அசோக் பாட்டீலின் மகன் ரூபேஷ் பாட்டீல் 113வது வார்டில் போட்டியிட்டார். முன்னாள் கவுன்சிலர் தீபக் ஹண்டேவின் மனைவி அஷ்வினி ஹண்டேவுக்கு 128 (காட்கோபர்)வது வார்டில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் தோல்வி அடைந்தனர். உத்தவ் தாக்கரேயிடமிருந்து பிரிந்து சென்ற முன்னாள் கவுன்சிலர்கள் பலரும் தோல்வியை தழுவினர். மும்பையில் முஸ்லிம் வேட்பாளர்கள் 31 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகமானோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோவண்டி பகுதியில் சமாஜ்வாடி கட்சியிடம் இருந்த அனைத்து வார்டுகளையும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பிடித்துள்ளது.

விகடன் 17 Jan 2026 12:08 pm

`பந்தக்கால் ஊன்றிய அதிமுக; பொருமலில் பாஜக முதல் சிக்கலில் கதர் கட்சி தலைமை வரை' | கழுகார் அப்டேட்ஸ்

உறுமும் சிறுத்தைக் கட்சியினர்! தட்டிக்கொடுக்கும் மாண்புமிகுக்கள்... வரும் தேர்தலில் யாருக்கு சீட் அளிப்பது என்ற முடிவுக்கு, சிறுத்தைக் கட்சியின் தலைமை இதுவரையில் வரவில்லை. ஆனால், அந்த கட்சியின் எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொள்ளும் சூரியக்கட்சி மாண்புமிகுக்கள் சிலர், 'இந்த முறையும் உங்களுக்கே சீட்... நீங்க தேர்தல் வேலையைப் பாருங்க...' என்று தட்டிக் கொடுக்கிறார்களாம். இந்த தகவலறிந்த சிறுத்தைக் கட்சியின் சீனியர் உறுப்பினர்கள் சிலர், தங்கள் பகுதிகளில் செல்வாக்காக உள்ள மாண்புமிகுக்களை தொடர்புகொண்டு, சீட் பெற ஆதரவு கேட்கிறார்களாம். அண்ணா அறிவாலயம் இதனால், சீட் எதிர்பார்ப்பில் இருக்கும் இதர நிர்வாகிகள் மத்தியில் கடும் கொதிப்பு உருவாகியிருக்கிறது. ''எங்கள் கட்சியில் யாருக்கு சீட் என்பதை, எங்கள் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். அறிவாலய அமைச்சர்கள் எப்படி முடிவு செய்யலாம்... இதை ஆரம்பத்திலேயே தலைவர் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், 'மாண்புமிகுக்கள் பார்த்து ஓகே சொல்லும் நபருக்குத்தான் தலைவர் சீட் கொடுக்கிறார்' என்ற பெயர் உருவாகிவிடும்...'' என்று உறுமுகிறார்கள். சிக்கலில் கதர் கட்சி தலைமை! புகாரளித்த 20 மாவட்டத் தலைவர்கள்... ஏற்கெனவே, கதர்க் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மீது, 'ஆளும் கட்சிக்கு அதிகமாக ஜால்ரா போடுகிறார்; கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்...' என்று தொடங்கி, பி.எஸ்.பி கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் வரை, ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்குத் பறந்துகொண்டே தான் இருந்தன. இந்தச் சூழலில், புது புகாரும் புகையைக் கிளப்புகிறதாம். சமீபத்தில் 'திருச்சிக்காரர்' தரப்பு தலைநகரில் நடத்திய பொங்கல் விழாவில், தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் ஆதரவாளர்கள் செய்த அடாவடியை யாரும் ரசிக்கவில்லையாம். தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளரானவர் வழியாக டெல்லிக்கு, சில வீடியோ ஆதாரங்களைத் தட்டிவிட்டிருக்கிறார்கள். 'இதேநிலை தொடர்ந்தால் கட்சி கரைசேராது...' என்று சுமார் 20 மாவட்டத் தலைவர்கள் கோரஸ் பாடியிருக்கிறார்கள். இவ்விவகாரம் சீரியஸாகியுள்ள நிலையில், 'கதர் கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை' என்கின்றன பவன் வட்டாரங்கள். நெருப்புத்துறையில் வசூல் வேட்டை! லட்டுகளை உருட்டும் 'பெருமாள்' அதிகாரி... நெருப்புத் துறையின் உச்ச அதிகாரியாக இருப்பவர், தனக்குக் கீழ் பணிபுரியும் 'பெருமாள்' பெயர் கொண்ட அதிகாரியைக் கண்மூடித்தனமாக நம்புகிறாராம். அதை லாகவமாகப் பயன்படுத்திக்கொண்டு, உச்ச அதிகாரியின் பெயரைச் சொல்லி, லைசென்ஸ் வழங்கும் விவகாரத்தில் பல 'லட்டுகளை' வாங்கிக் குவிக்கிறாராம் 'பெருமாள்' அதிகாரி. அவருடைய வசூல் வேட்டை தெரியாமல், நீட்டிய இடத்திலெல்லாம் உச்ச அதிகாரி கையெழுத்துப் போடுவதால், 'ரிட்டயர்டு ஆகப்போகும் கடைசி நேரத்தில் ஏதாவது சிக்கலில் சிக்கிக் கொள்ளப் போகிறார்...' என்று 'உச்' கொட்டுகிறார்கள் நெருப்பு துறையில் பணிபுரிபவர்கள். பொருமலில் பாஜக! பந்தக்கால் ஊன்றிய அதிமுக வரும் ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, பிரமாண்ட மாநாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகளும் தொடங்கியிருக்கின்றன. பந்தக்கால் நடும் நிகழ்வுக்கு, பா.ஜ.க-வினரை அழைக்காமல் அ.தி.மு.க-வினரே தன்னிச்சையாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருப்பதுதான் கூட்டணிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. ' மோடி, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில், கூட்டணிக்குத் தலைமை அ.தி.மு.க-தான் என்றாலும், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்காமல் எப்படி பந்தக்கால் ஊன்றலாம்... டெல்லியில், பிரதமருடன் பொங்கல் விழாவில் நயினார் நாகேந்திரன் இருக்கும் நேரமாகப் பார்த்து, கமுக்கமாக பந்தக்காலை ஊன்றிவிட்டார்கள் அ.தி.மு.க-வினர்' என்று பொருமுகிறது கமலாலய வட்டாரம். நயினாரை வைத்து மீண்டும் ஒரு பந்தக்கால் ஊன்றுவதற்கு திட்டமிடப்பட்டதாம். தேவையற்ற சர்ச்சைகள் எழும் என்பதால், அந்தத் திட்டத்திற்கு தடைபோட்டுவிட்டதாம் டெல்லி. கழுகார் பதில்கள்! முட்டிமோதும் மத்தியசென்னை புள்ளி! உதவிக்கு சம்மதித்த மடம்... சமீபத்தில், கடவுள் தேசத்தைச் சேர்ந்த ஆன்மிக மடத்தின் நிர்வாகிகளை, மலர்க்கட்சி பிரமுகர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள். தேர்தலையொட்டி பெரும் 'உதவிகள்' பேசப்பட, 'ஆட்சி மாறினால் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் கட்டுவதற்கு இலவசமாக நிலம் ஒதுக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன் உதவிக்கு சம்மதித்திருக்கிறதாம் அந்த மடம். இதில் பஞ்சாயத்தே, மடத்தின் உதவிகளைக் யார் கையாள்வது என்பதில்தான் வெடித்திருக்கிறது. மத்திய சென்னையிலுள்ள மலர்க்கட்சியின் முக்கியப் புள்ளி, 'நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்று கையைத் தூக்குகிறாராம். அவர் முன்னாள் ஆளுநரின் ஆள் என்பதால், பொறுப்பை ஒப்படைக்கத் தயங்குகிறாராம் மலர்க்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். 'இந்த உதவிகளை கையாண்டாலே போதும், பெரியளவில் பலனடைந்துவிடலாம்' என்று கணக்குப் போட்டு, டெல்லி மக்கள் பிரதிநிதி மற்றும் முன்னாள் 'பெல்' மாஜியின் ரூட்டில் சிபாரிசுக்காக முட்டிமோதுகிறாராம் அந்த முக்கியப் புள்ளி. மோடி வருகை... “யார் யார் மேடையில்..?” - டிக் டிக் டிக் தே.ஜ கூட்டணி!

விகடன் 17 Jan 2026 10:41 am

`பந்தக்கால் ஊன்றிய அதிமுக; பொருமலில் பாஜக முதல் சிக்கலில் கதர் கட்சி தலைமை வரை' | கழுகார் அப்டேட்ஸ்

உறுமும் சிறுத்தைக் கட்சியினர்! தட்டிக்கொடுக்கும் மாண்புமிகுக்கள்... வரும் தேர்தலில் யாருக்கு சீட் அளிப்பது என்ற முடிவுக்கு, சிறுத்தைக் கட்சியின் தலைமை இதுவரையில் வரவில்லை. ஆனால், அந்த கட்சியின் எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொள்ளும் சூரியக்கட்சி மாண்புமிகுக்கள் சிலர், 'இந்த முறையும் உங்களுக்கே சீட்... நீங்க தேர்தல் வேலையைப் பாருங்க...' என்று தட்டிக் கொடுக்கிறார்களாம். இந்த தகவலறிந்த சிறுத்தைக் கட்சியின் சீனியர் உறுப்பினர்கள் சிலர், தங்கள் பகுதிகளில் செல்வாக்காக உள்ள மாண்புமிகுக்களை தொடர்புகொண்டு, சீட் பெற ஆதரவு கேட்கிறார்களாம். அண்ணா அறிவாலயம் இதனால், சீட் எதிர்பார்ப்பில் இருக்கும் இதர நிர்வாகிகள் மத்தியில் கடும் கொதிப்பு உருவாகியிருக்கிறது. ''எங்கள் கட்சியில் யாருக்கு சீட் என்பதை, எங்கள் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். அறிவாலய அமைச்சர்கள் எப்படி முடிவு செய்யலாம்... இதை ஆரம்பத்திலேயே தலைவர் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், 'மாண்புமிகுக்கள் பார்த்து ஓகே சொல்லும் நபருக்குத்தான் தலைவர் சீட் கொடுக்கிறார்' என்ற பெயர் உருவாகிவிடும்...'' என்று உறுமுகிறார்கள். சிக்கலில் கதர் கட்சி தலைமை! புகாரளித்த 20 மாவட்டத் தலைவர்கள்... ஏற்கெனவே, கதர்க் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மீது, 'ஆளும் கட்சிக்கு அதிகமாக ஜால்ரா போடுகிறார்; கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்...' என்று தொடங்கி, பி.எஸ்.பி கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் வரை, ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்குத் பறந்துகொண்டே தான் இருந்தன. இந்தச் சூழலில், புது புகாரும் புகையைக் கிளப்புகிறதாம். சமீபத்தில் 'திருச்சிக்காரர்' தரப்பு தலைநகரில் நடத்திய பொங்கல் விழாவில், தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் ஆதரவாளர்கள் செய்த அடாவடியை யாரும் ரசிக்கவில்லையாம். தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளரானவர் வழியாக டெல்லிக்கு, சில வீடியோ ஆதாரங்களைத் தட்டிவிட்டிருக்கிறார்கள். 'இதேநிலை தொடர்ந்தால் கட்சி கரைசேராது...' என்று சுமார் 20 மாவட்டத் தலைவர்கள் கோரஸ் பாடியிருக்கிறார்கள். இவ்விவகாரம் சீரியஸாகியுள்ள நிலையில், 'கதர் கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை' என்கின்றன பவன் வட்டாரங்கள். நெருப்புத்துறையில் வசூல் வேட்டை! லட்டுகளை உருட்டும் 'பெருமாள்' அதிகாரி... நெருப்புத் துறையின் உச்ச அதிகாரியாக இருப்பவர், தனக்குக் கீழ் பணிபுரியும் 'பெருமாள்' பெயர் கொண்ட அதிகாரியைக் கண்மூடித்தனமாக நம்புகிறாராம். அதை லாகவமாகப் பயன்படுத்திக்கொண்டு, உச்ச அதிகாரியின் பெயரைச் சொல்லி, லைசென்ஸ் வழங்கும் விவகாரத்தில் பல 'லட்டுகளை' வாங்கிக் குவிக்கிறாராம் 'பெருமாள்' அதிகாரி. அவருடைய வசூல் வேட்டை தெரியாமல், நீட்டிய இடத்திலெல்லாம் உச்ச அதிகாரி கையெழுத்துப் போடுவதால், 'ரிட்டயர்டு ஆகப்போகும் கடைசி நேரத்தில் ஏதாவது சிக்கலில் சிக்கிக் கொள்ளப் போகிறார்...' என்று 'உச்' கொட்டுகிறார்கள் நெருப்பு துறையில் பணிபுரிபவர்கள். பொருமலில் பாஜக! பந்தக்கால் ஊன்றிய அதிமுக வரும் ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, பிரமாண்ட மாநாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகளும் தொடங்கியிருக்கின்றன. பந்தக்கால் நடும் நிகழ்வுக்கு, பா.ஜ.க-வினரை அழைக்காமல் அ.தி.மு.க-வினரே தன்னிச்சையாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருப்பதுதான் கூட்டணிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. ' மோடி, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில், கூட்டணிக்குத் தலைமை அ.தி.மு.க-தான் என்றாலும், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்காமல் எப்படி பந்தக்கால் ஊன்றலாம்... டெல்லியில், பிரதமருடன் பொங்கல் விழாவில் நயினார் நாகேந்திரன் இருக்கும் நேரமாகப் பார்த்து, கமுக்கமாக பந்தக்காலை ஊன்றிவிட்டார்கள் அ.தி.மு.க-வினர்' என்று பொருமுகிறது கமலாலய வட்டாரம். நயினாரை வைத்து மீண்டும் ஒரு பந்தக்கால் ஊன்றுவதற்கு திட்டமிடப்பட்டதாம். தேவையற்ற சர்ச்சைகள் எழும் என்பதால், அந்தத் திட்டத்திற்கு தடைபோட்டுவிட்டதாம் டெல்லி. கழுகார் பதில்கள்! முட்டிமோதும் மத்தியசென்னை புள்ளி! உதவிக்கு சம்மதித்த மடம்... சமீபத்தில், கடவுள் தேசத்தைச் சேர்ந்த ஆன்மிக மடத்தின் நிர்வாகிகளை, மலர்க்கட்சி பிரமுகர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள். தேர்தலையொட்டி பெரும் 'உதவிகள்' பேசப்பட, 'ஆட்சி மாறினால் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் கட்டுவதற்கு இலவசமாக நிலம் ஒதுக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன் உதவிக்கு சம்மதித்திருக்கிறதாம் அந்த மடம். இதில் பஞ்சாயத்தே, மடத்தின் உதவிகளைக் யார் கையாள்வது என்பதில்தான் வெடித்திருக்கிறது. மத்திய சென்னையிலுள்ள மலர்க்கட்சியின் முக்கியப் புள்ளி, 'நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்று கையைத் தூக்குகிறாராம். அவர் முன்னாள் ஆளுநரின் ஆள் என்பதால், பொறுப்பை ஒப்படைக்கத் தயங்குகிறாராம் மலர்க்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். 'இந்த உதவிகளை கையாண்டாலே போதும், பெரியளவில் பலனடைந்துவிடலாம்' என்று கணக்குப் போட்டு, டெல்லி மக்கள் பிரதிநிதி மற்றும் முன்னாள் 'பெல்' மாஜியின் ரூட்டில் சிபாரிசுக்காக முட்டிமோதுகிறாராம் அந்த முக்கியப் புள்ளி. மோடி வருகை... “யார் யார் மேடையில்..?” - டிக் டிக் டிக் தே.ஜ கூட்டணி!

விகடன் 17 Jan 2026 10:41 am

10 ஆண்டுகால ஸ்கெட்ச்: ஷிண்டே உதவியோடு ஒரே கல்லில் தாக்கரே, பவார் பிராண்டை காலி செய்த பா.ஜ.க!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நேற்று முன்தினம் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி பிடித்துள்ளது. மும்பையை எப்படியும் தனித்து பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 227 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் 89 வார்டில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இத்தேர்தலில் மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் இருந்த 8 மாநகராட்சிகளில் 6 மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது. மும்பையை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால் அவர்களது முயற்சி பலனலிக்கவில்லை. சரத்பவார் மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சியை பா.ஜ.கவும், அதன் கூட்டணி கட்சியும் சேர்ந்து பிடித்துள்ளன. 50 ஆண்டு பிராண்ட உடைத்த பா.ஜ.க மகாராஷ்டிரா அரசியலில் தாக்கரே மற்றும் பவார் பிராண்ட் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால் அந்த இரு சக்திகளை அழிக்க பா.ஜ.க முதல் கட்டமாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உதவியோடு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்தது. இதற்காக பா.ஜ.க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உழைத்தது. அதோடு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னம் மற்றும் பெயர்களை வைத்திருந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரை பா.ஜ.க தங்களது கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. இது தாக்கரே மற்றும் பவார் பிராண்டை அடியோடு ஒழிக்க பா.ஜ.கவிற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. இப்போது இத்தேர்தலில் பா.ஜ.க எதிர்பார்த்தது போன்று மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதுமே பவார் பிராண்ட் தோல்வியை சந்தித்துள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதிலும் அஜித் பவார் கட்சி தனித்து போட்டியிட்டது. இதே போன்று சரத் பவார் கட்சியும் தனித்து போட்டியிட்டது. இரண்டு பேருமே படுதோல்வியை சந்தித்துள்ளனர். இதே போன்று ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு சொர்ப்ப இடங்களை கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் பா.ஜ.க போட்டியிட்டது. அதுவும் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிடும் இடங்களில் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு இடங்களை பா.ஜ.க ஒதுக்கியது. இதனால் சிவசேனா அனுதாபிகள் எது உண்மையான சிவசேனா என்ற குழப்பத்திற்கு வந்தனர். கடந்த 50 ஆண்டுகளாக தாக்கரே பிராண்ட் மராத்தியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தது. இதே போன்று சரத் பவார் மாநிலம் முழுவதும் குறிப்பாக மேற்கு மகாராஷ்டிராவில் சிறந்து விளங்கும் கூட்டுறவு துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அஜித்பவார்-சரத்பவார் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் பிளவுபடுவதற்கு முன்பே, மேற்கு மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக விளங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், வங்கிகள் மற்றும் பால் சங்கங்களில் பா.ஜ.க ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. பவாரின் பல விசுவாசிகளும், கூட்டுறவுத் துறையின் மீது ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் தலைவர்களும் கூட பா.ஜ.க.வுக்கு மாறினர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. இப்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு ஒன்றாக சேர வேண்டிய நிலைக்கு தள்ளி இருக்கிறது. அஜித் பவாரும், சரத் பவாரும் புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. பா.ஜ.க நினைத்தால் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும் என்பதை அஜித் பவார் புரிந்து கொள்ள தொடங்கி இருப்பதாகவும், எனவேதான் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது கட்சியோடு இணைக்க அஜித்பவார் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அஜித் பவாரால் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியை பிடித்துள்ளது.

விகடன் 17 Jan 2026 10:16 am

10 ஆண்டுகால ஸ்கெட்ச்: ஷிண்டே உதவியோடு ஒரே கல்லில் தாக்கரே, பவார் பிராண்டை காலி செய்த பா.ஜ.க!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நேற்று முன்தினம் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி பிடித்துள்ளது. மும்பையை எப்படியும் தனித்து பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 227 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் 89 வார்டில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இத்தேர்தலில் மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் இருந்த 8 மாநகராட்சிகளில் 6 மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது. மும்பையை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால் அவர்களது முயற்சி பலனலிக்கவில்லை. சரத்பவார் மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சியை பா.ஜ.கவும், அதன் கூட்டணி கட்சியும் சேர்ந்து பிடித்துள்ளன. 50 ஆண்டு பிராண்ட உடைத்த பா.ஜ.க மகாராஷ்டிரா அரசியலில் தாக்கரே மற்றும் பவார் பிராண்ட் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால் அந்த இரு சக்திகளை அழிக்க பா.ஜ.க முதல் கட்டமாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உதவியோடு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்தது. இதற்காக பா.ஜ.க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உழைத்தது. அதோடு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னம் மற்றும் பெயர்களை வைத்திருந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரை பா.ஜ.க தங்களது கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. இது தாக்கரே மற்றும் பவார் பிராண்டை அடியோடு ஒழிக்க பா.ஜ.கவிற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. இப்போது இத்தேர்தலில் பா.ஜ.க எதிர்பார்த்தது போன்று மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதுமே பவார் பிராண்ட் தோல்வியை சந்தித்துள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதிலும் அஜித் பவார் கட்சி தனித்து போட்டியிட்டது. இதே போன்று சரத் பவார் கட்சியும் தனித்து போட்டியிட்டது. இரண்டு பேருமே படுதோல்வியை சந்தித்துள்ளனர். இதே போன்று ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு சொர்ப்ப இடங்களை கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் பா.ஜ.க போட்டியிட்டது. அதுவும் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிடும் இடங்களில் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு இடங்களை பா.ஜ.க ஒதுக்கியது. இதனால் சிவசேனா அனுதாபிகள் எது உண்மையான சிவசேனா என்ற குழப்பத்திற்கு வந்தனர். கடந்த 50 ஆண்டுகளாக தாக்கரே பிராண்ட் மராத்தியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தது. இதே போன்று சரத் பவார் மாநிலம் முழுவதும் குறிப்பாக மேற்கு மகாராஷ்டிராவில் சிறந்து விளங்கும் கூட்டுறவு துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அஜித்பவார்-சரத்பவார் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் பிளவுபடுவதற்கு முன்பே, மேற்கு மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக விளங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், வங்கிகள் மற்றும் பால் சங்கங்களில் பா.ஜ.க ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. பவாரின் பல விசுவாசிகளும், கூட்டுறவுத் துறையின் மீது ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் தலைவர்களும் கூட பா.ஜ.க.வுக்கு மாறினர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. இப்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு ஒன்றாக சேர வேண்டிய நிலைக்கு தள்ளி இருக்கிறது. அஜித் பவாரும், சரத் பவாரும் புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. பா.ஜ.க நினைத்தால் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும் என்பதை அஜித் பவார் புரிந்து கொள்ள தொடங்கி இருப்பதாகவும், எனவேதான் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது கட்சியோடு இணைக்க அஜித்பவார் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அஜித் பவாரால் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியை பிடித்துள்ளது.

விகடன் 17 Jan 2026 10:16 am

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். அதோடு கடந்த முறை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் ரவி ராஜா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். ரவி ராஜா தாராவியை சேர்ந்தவர் கிடையாது. அவர் தாராவிக்கு அருகில் உள்ள சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர். இதற்கு முன்பு சயான் கோலிவாடாவில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் தாராவியில் ஒருபோதும் போட்டியிட்டது கிடையாது. இம்முறை தொகுதி ஒதுக்கீட்டில் சயான் கோலிவாடாவில் உள்ள வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ரவி ராஜா போட்டியிட சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருக்கு பா.ஜ.க தலைமை தாராவியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் தாராவியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் என்பவர் தன்னை தயார்படுத்தி வந்தார். ரமேஷுக்கு சீட் கொடுக்காமல் ரவி ராஜாவிற்கு சீட் கொடுத்ததால் தாராவி பா.ஜ.கவினர் ரவி ராஜாவிற்கு சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தாராவி பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிப்பார்த்தபோது அவர்களிடம் தாராவியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்காத அதிருப்தி இருந்ததை காண முடிந்தது. தேர்தலில் ரவி ராஜா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இது தவிர தமிழகத்தில் இருந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் வந்து பிரசாரம் செய்தார். மாரியம்மாள் ஆனாலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டதில் ரவி ராஜா சிவசேனா(உத்தவ்) வேட்பாளர் ஜெகதீஷ் என்பவரிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுகளில் ரவி ராஜா தரப்பில் சந்தேகம் எழுப்பட்டதால் சிறிது நேரம் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்தோல்வி ரவி ராஜாவிற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஜெகதீஷ் மலையாளியாவார். இதே போன்று தாராவியில் மற்றொரு வார்டான 188வது வார்டில் மாரியம்மாள் முத்துராமலிங்கம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனா(ஷிண்டே) சார்பாக பாஸ்கர் ஷெட்டி என்பவர் போட்டியிட்டார். மாரியம்மாள் இதற்கு முன்பு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் கவுன்சிலராக இருந்தார். இம்முறை அவருக்கு அக்கட்சியில் சீட் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சிக்கு வந்து போட்டியிட்டார். இதேவார்டில் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காமல் சாலமோன் ராஜா என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அண்ணாமலை அதோடு ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் நிர்வாகி மாறன் நாயகம் மகன் ராபின்சன் சுயேச்சையாக போட்டியிட்டார். தமிழர்களின் வாக்குகளை இரண்டு பேர் சுயேச்சையாக நின்று பிரித்தனர். இதனால் மாரியம்மாள் முத்துராமலிங்கம் பாஸ்கர் ஷெட்டியிடம் தோல்வியை தழுவினார். தாராவி என்றாலே தமிழர்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் தாராவியில் போட்டியிட்ட தமிழர்கள் யாரும் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதே போன்று 162வது வார்டில் சிவசேனா(உத்தவ்) சார்பாக அண்ணாமலை என்பவர் போட்டியிட்டார். அவரும் இத்தேர்தலில் தோல்வியையே தழுவினார். தமிழர்கள் சொற்ப எண்ணிக்கையில் போட்டியிட்டனர். ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தாராவியில் இரு தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடையவதற்கு கட்சி நிர்வாகிகளும், அதிருப்தி வேட்பாளர்களும் காரணம் என்று கூறப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று இருப்பதால் மராத்தி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மேயராக நியமிக்கப்படுவார் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.

விகடன் 16 Jan 2026 5:42 pm

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். அதோடு கடந்த முறை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் ரவி ராஜா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். ரவி ராஜா தாராவியை சேர்ந்தவர் கிடையாது. அவர் தாராவிக்கு அருகில் உள்ள சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர். இதற்கு முன்பு சயான் கோலிவாடாவில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் தாராவியில் ஒருபோதும் போட்டியிட்டது கிடையாது. இம்முறை தொகுதி ஒதுக்கீட்டில் சயான் கோலிவாடாவில் உள்ள வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ரவி ராஜா போட்டியிட சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருக்கு பா.ஜ.க தலைமை தாராவியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் தாராவியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் என்பவர் தன்னை தயார்படுத்தி வந்தார். ரமேஷுக்கு சீட் கொடுக்காமல் ரவி ராஜாவிற்கு சீட் கொடுத்ததால் தாராவி பா.ஜ.கவினர் ரவி ராஜாவிற்கு சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தாராவி பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிப்பார்த்தபோது அவர்களிடம் தாராவியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்காத அதிருப்தி இருந்ததை காண முடிந்தது. தேர்தலில் ரவி ராஜா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இது தவிர தமிழகத்தில் இருந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் வந்து பிரசாரம் செய்தார். மாரியம்மாள் ஆனாலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டதில் ரவி ராஜா சிவசேனா(உத்தவ்) வேட்பாளர் ஜெகதீஷ் என்பவரிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுகளில் ரவி ராஜா தரப்பில் சந்தேகம் எழுப்பட்டதால் சிறிது நேரம் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்தோல்வி ரவி ராஜாவிற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஜெகதீஷ் மலையாளியாவார். இதே போன்று தாராவியில் மற்றொரு வார்டான 188வது வார்டில் மாரியம்மாள் முத்துராமலிங்கம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனா(ஷிண்டே) சார்பாக பாஸ்கர் ஷெட்டி என்பவர் போட்டியிட்டார். மாரியம்மாள் இதற்கு முன்பு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் கவுன்சிலராக இருந்தார். இம்முறை அவருக்கு அக்கட்சியில் சீட் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சிக்கு வந்து போட்டியிட்டார். இதேவார்டில் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காமல் சாலமோன் ராஜா என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அண்ணாமலை அதோடு ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் நிர்வாகி மாறன் நாயகம் மகன் ராபின்சன் சுயேச்சையாக போட்டியிட்டார். தமிழர்களின் வாக்குகளை இரண்டு பேர் சுயேச்சையாக நின்று பிரித்தனர். இதனால் மாரியம்மாள் முத்துராமலிங்கம் பாஸ்கர் ஷெட்டியிடம் தோல்வியை தழுவினார். தாராவி என்றாலே தமிழர்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் தாராவியில் போட்டியிட்ட தமிழர்கள் யாரும் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதே போன்று 162வது வார்டில் சிவசேனா(உத்தவ்) சார்பாக அண்ணாமலை என்பவர் போட்டியிட்டார். அவரும் இத்தேர்தலில் தோல்வியையே தழுவினார். தமிழர்கள் சொற்ப எண்ணிக்கையில் போட்டியிட்டனர். ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தாராவியில் இரு தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடையவதற்கு கட்சி நிர்வாகிகளும், அதிருப்தி வேட்பாளர்களும் காரணம் என்று கூறப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று இருப்பதால் மராத்தி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மேயராக நியமிக்கப்படுவார் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.

விகடன் 16 Jan 2026 5:42 pm

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டும் மன்னராட்சி முறையை மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவியின் கடைசி மகளும், ரெசா பஹ்லவியின் இளைய தங்கையுமான லெய்லா பஹ்லவியின் சோகக் கதையைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர். அந்தக் கதையைப் பார்ப்போமா... Reza Pahlavi 1979-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி உச்சத்தில் இருந்தபோது, 'ஷாவுக்கு மரணம்' என்ற கோஷத்துடன் மக்கள் கூட்டம் அரச அரண்மனைகளை சுற்றி வளைத்தது. இதனால், ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவி மற்றும் அவரது மனைவி எம்பிரஸ் பரா பஹ்லவியின் குடும்பம் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தக் குடும்பத்தின் இளைய மகள் இளவரசி லெய்லா பஹ்லவி 1970-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி தெஹ்ரானில் பிறந்தவர். ஈரானை விட்டு வெளியேறும்போது லெய்லாவுக்கு வயது 9. புரட்சியால் குடும்பத்தின் உரிமைகள், குடியுரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட பிறகு, பஹ்லவி குடும்பம் எகிப்து, மொராக்கோ, பஹாமாஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா, பனாமா உள்ளிட்ட பல நாடுகளில் தங்கினர். கொலை முயற்சி அச்சுறுத்தல்கள் காரணமாக எந்த நாடும் நீண்டகாலம் தஞ்சம் அளிக்க மறுத்தது. 1980-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, முகமது ரிசா பஹ்லவி மேம்பட்ட லிம்போமா நோயால் எகிப்தின் கெய்ரோவில் உயிரிழந்தார். இது லெய்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. Leila Pahlavi பிறகு, இவர்களின் குடும்பம் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள கிரீன்விச்சில் குடியேறியது. லெய்லா நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பள்ளியில் பயின்றார். 1988-ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை சரளமாகப் பேசவும் அவர் கற்றுக் கொண்டார். ஆனால், நாடு கடத்தப்பட்ட விஷயம், தந்தையின் இழப்பு அவரிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. அது அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. இதனால் அவர் சோர்வு நோய் (chronic fatigue syndrome), மனச்சோர்வு, அனோரெக்ஸியா உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இதனால் தூக்க மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகளுக்கும் அவர் அடிமையானார். இப்படியான மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால், 2001-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி லண்டனின் லியோனார்ட் ஹோட்டலில் அவரது அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். Leila Pahlavi Cementery அப்போது அவருக்கு வயது 31. பிரேதப் பரிசோதனையில், தூக்க மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டதும், கொக்கைன் போதைப்பொருள் எடுத்துக் கொண்டதும் கண்டறியப்பட்டது. அவர் தனது மருத்துவரின் மேசையிலிருந்து மருந்துகளைத் திருடியதாகவும் தெரியவந்தது. இளவரசி லெய்லாவின் உடல் பாரிஸில் உள்ள பாஸி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. குழந்தைப் பருவத்திலேயே தாயக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, அந்நிய நாட்டில் அடையாள நெருக்கடி உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டார். லெய்லா எப்போதும் பொது வாழ்க்கையைத் தவிர்த்து, தனியாக வாழ விரும்பினார். ஈரானில் தற்போது மீண்டும் மன்னராட்சி திரும்ப வேண்டும் என மக்கள் குரலெழுப்பும் நிலையில், இளவரசி லெய்லாவின் இந்த சோகக் கதை மீண்டும் நினைவுகூரப்படுகிறது.

விகடன் 16 Jan 2026 5:26 pm

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டிட்டன. ஆரம்பத்தில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட திட்டமிட்டது. அதன் பிறகு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டன. இந்த இரண்டு மாநகராட்சிகளும் 2017ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் வசம் இருந்தது. எனவே அஜித்பவார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காமல் தனது பெரியப்பா சரத்ப வார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் இத்தேர்தலில் பா.ஜ.க யாருமே எதிர்பாராத விதமாக இரண்டு மாநகராட்சிகளையும் கைப்பற்றி இருக்கிறது. புனே மாநகராட்சியில் பா.ஜ.க 80 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சிக்கு பிறகு மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியை கடந்த 2017ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் தன் வசம் வைத்திருந்தது. ஆனால் இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக பிரிந்து அக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இங்கேயும் பா.ஜ.க 77 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 10 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இத்தேர்தல் மூலம் பவார் குடும்பம் முதல் முறையாக புனேயை இழந்துள்ளது. புனேயில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட முன்னாள் மேயர் பிரசாந்த் ஜக்தாப் 18வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பிரசாந்த் தாயார் ரத்னபிரபா இத்தேர்தலில் தோல்வியை தழுவினார். மும்பையில் முதல் முறையாக ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 4 வார்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறது. தாதா மகள்கள் தோல்வி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கும் மும்பை தாதா அருண் காவ்லியின் மகள் யோகிதா காவ்லி இத்தேர்தலில் மும்பையில் தோல்வியை தழுவினார். அருண் காவ்லியின் மற்றொரு மகளான கீதா காவ்லி 212வது வார்டில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். அருண் காவ்லி மகள்கள் இரண்டு பேரும் அருண் காவ்லி தொடங்கிய அகில பாரதீய சேனா என்ற கட்சி சார்பாக போட்டியிட்டனர். இதே போன்று சிவசேனா(ஷிண்டே) எம்.பி. ரவீந்திர வாய்க்கர் மகள் தீப்தி வாய்கர் மும்பை 73வது வார்டில் தோல்வியை தழுவினார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் ஷெவாலேயின் மைத்துணி வைசாலி சாவ்லே தாராவி 183வது வார்டில் போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தலில் வைசாலியை காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா தீபக் காலி என்பவர் 1450 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மும்பையில் 1.03 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். 75 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் 1,700 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 16 Jan 2026 4:46 pm

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டிட்டன. ஆரம்பத்தில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட திட்டமிட்டது. அதன் பிறகு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டன. இந்த இரண்டு மாநகராட்சிகளும் 2017ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் வசம் இருந்தது. எனவே அஜித்பவார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காமல் தனது பெரியப்பா சரத்ப வார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் இத்தேர்தலில் பா.ஜ.க யாருமே எதிர்பாராத விதமாக இரண்டு மாநகராட்சிகளையும் கைப்பற்றி இருக்கிறது. புனே மாநகராட்சியில் பா.ஜ.க 80 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சிக்கு பிறகு மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியை கடந்த 2017ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் தன் வசம் வைத்திருந்தது. ஆனால் இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக பிரிந்து அக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இங்கேயும் பா.ஜ.க 77 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 10 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இத்தேர்தல் மூலம் பவார் குடும்பம் முதல் முறையாக புனேயை இழந்துள்ளது. புனேயில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட முன்னாள் மேயர் பிரசாந்த் ஜக்தாப் 18வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பிரசாந்த் தாயார் ரத்னபிரபா இத்தேர்தலில் தோல்வியை தழுவினார். மும்பையில் முதல் முறையாக ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 4 வார்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறது. தாதா மகள்கள் தோல்வி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கும் மும்பை தாதா அருண் காவ்லியின் மகள் யோகிதா காவ்லி இத்தேர்தலில் மும்பையில் தோல்வியை தழுவினார். அருண் காவ்லியின் மற்றொரு மகளான கீதா காவ்லி 212வது வார்டில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். அருண் காவ்லி மகள்கள் இரண்டு பேரும் அருண் காவ்லி தொடங்கிய அகில பாரதீய சேனா என்ற கட்சி சார்பாக போட்டியிட்டனர். இதே போன்று சிவசேனா(ஷிண்டே) எம்.பி. ரவீந்திர வாய்க்கர் மகள் தீப்தி வாய்கர் மும்பை 73வது வார்டில் தோல்வியை தழுவினார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் ஷெவாலேயின் மைத்துணி வைசாலி சாவ்லே தாராவி 183வது வார்டில் போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தலில் வைசாலியை காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா தீபக் காலி என்பவர் 1450 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மும்பையில் 1.03 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். 75 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் 1,700 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 16 Jan 2026 4:46 pm

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளிலும் பெரும்பாலானவற்றை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை மாநகராட்சியில் பா.ஜ.க 69 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று மும்பை அருகில் உள்ள தானே மாநகராட்சியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 24 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. உத்தவ்- ராஜ் தாக்கரே இங்கு பா.ஜ.க வெறும் 5 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. மற்றொரு முக்கிய மாநகராட்சியான நாசிக்கில் பா.ஜ.க மொத்தமுள்ள 119 இடங்களில் 57 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. சிவசேனா(ஷிண்டே) 40 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 12 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மற்றொரு மாநகராட்சியான பன்வெல் மாநகராட்சியில் பா.ஜ.க மொத்தமுள்ள 78 வார்டுகளில் 22 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. மற்ற கட்சிகள் சொற்ப இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. மற்றொரு மாநகராட்சியான வசாய்-விரார் மாநகராட்சியில் பகுஜன் விகாஷ் அகாடி கட்சி மொத்தமுள்ள 115 வார்டுகளில் 65 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க இங்கு 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. மும்பை அருகில் உள்ள மற்றொரு முக்கிய நகரமான கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியில் பா.ஜ.க 22 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே) 15 வார்டுகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மீரா பயந்தர் மாநகராட்சியில் பா.ஜ.க 32 இடங்களில் முன்னிலை பெற்று அங்கு முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் 8 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. உல்லாஸ் நகர் மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) 17 வார்டுகளிலும், பா.ஜ.க 6 வார்டுகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. பீவாண்டி மாநகராட்சியிலும் பா.ஜ.க கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது. சாம்பாஜி நகர் மாநகராட்சியில் பா.ஜ.க 24 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே)18 வார்டுகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 15 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இங்கு காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. நாக்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 151 வார்டுகளில் 101 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இது தவிர கோலாப்பூர் மாநகராட்சியை பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் சேர்ந்து கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. சோலாப்பூர், அகோலா, நாண்டெட், சாங்கிலி, ஜல்காவ், அகில்யா நகர், துலே, ஜல்னா, இசல்கரஞ்சி போன்ற மாநகராட்சிகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. அமராவதி மற்றும் லாத்தூர் ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. மாலேகாவ் மற்றும் தானே மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) முன்னிலையில் இருக்கிறது. இதற்கு முன்பு ஒன்று பட்டு இருந்த சிவசேனா அதிக மாநகராட்சிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இப்போது அந்த மாநகராட்சிகளை இரண்டு சிவசேனாக்களும் சேர்ந்து பா.ஜ.கவிடம் இழந்துள்ளன. இத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. மொத்தமுள்ள 2869 வார்டுகளில் 1081 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 293 இடங்களிலும், காங்கிரஸ் 191 இடங்களிலும், சிவசேனா(உத்தவ்) 137 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 119 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

விகடன் 16 Jan 2026 2:52 pm

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளிலும் பெரும்பாலானவற்றை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை மாநகராட்சியில் பா.ஜ.க 69 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று மும்பை அருகில் உள்ள தானே மாநகராட்சியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 24 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. உத்தவ்- ராஜ் தாக்கரே இங்கு பா.ஜ.க வெறும் 5 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. மற்றொரு முக்கிய மாநகராட்சியான நாசிக்கில் பா.ஜ.க மொத்தமுள்ள 119 இடங்களில் 57 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. சிவசேனா(ஷிண்டே) 40 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 12 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மற்றொரு மாநகராட்சியான பன்வெல் மாநகராட்சியில் பா.ஜ.க மொத்தமுள்ள 78 வார்டுகளில் 22 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. மற்ற கட்சிகள் சொற்ப இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. மற்றொரு மாநகராட்சியான வசாய்-விரார் மாநகராட்சியில் பகுஜன் விகாஷ் அகாடி கட்சி மொத்தமுள்ள 115 வார்டுகளில் 65 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க இங்கு 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. மும்பை அருகில் உள்ள மற்றொரு முக்கிய நகரமான கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியில் பா.ஜ.க 22 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே) 15 வார்டுகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மீரா பயந்தர் மாநகராட்சியில் பா.ஜ.க 32 இடங்களில் முன்னிலை பெற்று அங்கு முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் 8 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. உல்லாஸ் நகர் மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) 17 வார்டுகளிலும், பா.ஜ.க 6 வார்டுகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. பீவாண்டி மாநகராட்சியிலும் பா.ஜ.க கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது. சாம்பாஜி நகர் மாநகராட்சியில் பா.ஜ.க 24 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே)18 வார்டுகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 15 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இங்கு காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. நாக்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 151 வார்டுகளில் 101 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இது தவிர கோலாப்பூர் மாநகராட்சியை பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் சேர்ந்து கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. சோலாப்பூர், அகோலா, நாண்டெட், சாங்கிலி, ஜல்காவ், அகில்யா நகர், துலே, ஜல்னா, இசல்கரஞ்சி போன்ற மாநகராட்சிகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. அமராவதி மற்றும் லாத்தூர் ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. மாலேகாவ் மற்றும் தானே மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) முன்னிலையில் இருக்கிறது. இதற்கு முன்பு ஒன்று பட்டு இருந்த சிவசேனா அதிக மாநகராட்சிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இப்போது அந்த மாநகராட்சிகளை இரண்டு சிவசேனாக்களும் சேர்ந்து பா.ஜ.கவிடம் இழந்துள்ளன. இத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. மொத்தமுள்ள 2869 வார்டுகளில் 1081 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 293 இடங்களிலும், காங்கிரஸ் 191 இடங்களிலும், சிவசேனா(உத்தவ்) 137 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 119 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

விகடன் 16 Jan 2026 2:52 pm

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. டெல்லி காற்று மாசு | Delhi Air pollution இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லி அரசு புள்ளிவிவரங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், 2024-ஆம் ஆண்டுக்கான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகளின் படி, கடந்த ஆண்டில் மட்டும் சுவாசம் தொடர்பான நோய்களால் 9,211 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023-ம் ஆண்டின் எண்ணிக்கையான 8,801-ஐ விட சுமார் 4.6 சதவீதம் அதிகமாகும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் காசநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, டெல்லியின் நச்சுக்காற்று மற்றும் குளிர்காலங்களில் நிலவும் கடுமையான பனி போன்றவை முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நுரையீரலைப் கடுமையாகப் பாதிப்பதே இந்த உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணம். கடந்த ஆண்டில் டெல்லியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.39 லட்சமாக உள்ளது. டெல்லி காற்று மாசு | Delhi Air pollution இதில் இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளால் 21,262 பேரும், தொற்று நோய்களால் 16,060 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்களின் எண்ணிக்கை (85,391) பெண்களை விட அதிகமாக உள்ளது. மேலும், பிறப்பு விகிதத்தின் அடிப்படையிலான பாலின விகிதம் 922-ல் இருந்து 920-ஆகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

விகடன் 16 Jan 2026 2:45 pm

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. டெல்லி காற்று மாசு | Delhi Air pollution இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லி அரசு புள்ளிவிவரங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், 2024-ஆம் ஆண்டுக்கான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகளின் படி, கடந்த ஆண்டில் மட்டும் சுவாசம் தொடர்பான நோய்களால் 9,211 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023-ம் ஆண்டின் எண்ணிக்கையான 8,801-ஐ விட சுமார் 4.6 சதவீதம் அதிகமாகும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் காசநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, டெல்லியின் நச்சுக்காற்று மற்றும் குளிர்காலங்களில் நிலவும் கடுமையான பனி போன்றவை முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நுரையீரலைப் கடுமையாகப் பாதிப்பதே இந்த உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணம். கடந்த ஆண்டில் டெல்லியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.39 லட்சமாக உள்ளது. டெல்லி காற்று மாசு | Delhi Air pollution இதில் இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளால் 21,262 பேரும், தொற்று நோய்களால் 16,060 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்களின் எண்ணிக்கை (85,391) பெண்களை விட அதிகமாக உள்ளது. மேலும், பிறப்பு விகிதத்தின் அடிப்படையிலான பாலின விகிதம் 922-ல் இருந்து 920-ஆகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

விகடன் 16 Jan 2026 2:45 pm

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இது தவிர பா.ஜ.கவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்திருந்தன. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மும்பையில் தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நேற்றைய தேர்தலில் வாக்காளர்களுக்கு கையில் மை வைக்க மார்கர் பேனா பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த பேனா மையை அழித்துவிட்டு திரும்ப திரும்ப கள்ள ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படியே தேர்தல் முடிவுகள் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.கவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் முன்னிலையில் இருந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் கடுமையான போட்டியை கொடுத்தது. பா.ஜ.கவுக்கு நிகரான இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. ஆனால் இறுதியில் பா.ஜ.க 87 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 73 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. ஏக்நாத் தலைமையிலான சிவசேனா 29 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இதன் மூலம் பா.ஜ.கவும், சிவசேனாவும்(ஷிண்டே) சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றி இருக்கிறது. மும்பை மாநகராட்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனாவின் கையை விட்டு சென்று இருக்கிறது. அதேசமயம் மும்பை மாநகராட்சியை பிடிக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் கனவும் நிறைவேறி இருக்கிறது. அதற்கு ஏக்நாத் ஷிண்டே சகுனியாக இருந்து பா.ஜ.கவிற்கு உதவி செய்துள்ளார். இத்தேர்தலில் நவநிர்மாண் சேனா எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெறவில்லை. 53 இடங்களில் போட்டியிட்ட நவநிர்மாண் சேனா வெறும் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று இருந்தது. எப்படியும் மும்பையை தக்கவைத்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் 20 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ் தாக்கரேயுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்தார். ஆனால் அந்த கூட்டணி எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இதே போன்று காங்கிரஸ் கட்சியும் வெறும் 7 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருந்தது. இறுதியில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க 87 இடங்களிலும், சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களிலும் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 73 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் சதா சர்வான்கர் மகன் சமாதான் சர்வான்கர் இத்தேர்தலில் தோல்வி அடைந்தார். மராத்தியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் உத்தவ் தாக்கரே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார். உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி அமைத்தபோதிலும் ராஜ்தாக்கரேயிக்கு அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதே போன்று பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 90 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 29 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் உத்தவ் தாக்கரேயிடம் ஏக்நாத் ஷிண்டே தோல்வி அடைந்தார். ஆனால் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊரான தானேயில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்கவைத்துள்ளார். ராஜ் தாக்கரே எப்படியாவது இந்த தேர்தலில் செல்வாக்கை நிரூபித்துக்காட்ட முயன்றார். அதுவும் முடியாமல் போய்விட்டது.

விகடன் 16 Jan 2026 2:27 pm

காங்கிரஸ்: கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனை; டெல்லிக்குச் செல்லும் செல்வப்பெருந்தகை!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைக் கட்சிகள் தொடங்கிவிட்டன. தவெக தலைவர் விஜய் இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார். அதேபோல காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்று உறுதியளித்து வருகிறார். இந்நிலையில் தான் செல்வப்பெருந்தகை நாளை(ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்டாலின், செல்வப்பெருந்தகை கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோருடன் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

விகடன் 16 Jan 2026 12:04 pm

காங்கிரஸ்: கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனை; டெல்லிக்குச் செல்லும் செல்வப்பெருந்தகை!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைக் கட்சிகள் தொடங்கிவிட்டன. தவெக தலைவர் விஜய் இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார். அதேபோல காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்று உறுதியளித்து வருகிறார். இந்நிலையில் தான் செல்வப்பெருந்தகை நாளை(ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்டாலின், செல்வப்பெருந்தகை கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோருடன் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

விகடன் 16 Jan 2026 12:04 pm

`8'-இல் `2'தொகுதிகள்; உதயநிதியின் டார்கெட் - களமிறக்கப்படும் இளைஞரணி?பரபரக்கும் திருப்பூர் திமுக!

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் அவிநாசி மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். மீதமுள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கேயம், பல்லடம், உடுமலைப்பேட்டை,மடத்துக்குளம் ஆகிய 6 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக உள்ளன. இந்த 8 தொகுதிகளில் திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் மட்டும் திமுக வசம் உள்ளன. பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர் வடக்கு, அவிநாசி ஆகிய 5 தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. 2026 தேர்தலில் கைவிட்ட 5 தொகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரத்தில், உடுமலைப்பேட்டை, திருப்பூர் வடக்கு அல்லது தெற்கு தொகுதிகள் இளைஞரணிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது, திருப்பூர் தி.மு.க வட்டாரத்தை பரபரப்பாக்கி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு முக்கியத்துவம் இது தொடர்பாக கட்சியின் சீனியர்கள் சிலர் பேசுகையில், கடந்த மக்களவைத் தேர்தலின்போது இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென உதயநிதி தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், அந்த தேர்தலில் உதயநிதி எதிர்பார்த்ததுபோல் இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. உதயநிதியை சமாதானப்படுத்தும் விதமாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞரணி துணைச் செயலாளரான பிரகாஷுக்கு மட்டும் ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில், உதயநிதி பேசும்போது, `2026 தேர்தலில் இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்று மாநாட்டில் வெளிப்படையாகவே பேசினார். வருவாய் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என குறைந்தது 40 தொகுதிகளையாவது இளைஞரணிக்கு பெற்றுவிட வேண்டுமென உதயநிதி திட்டமிட்டு வருகிறார். மேலும், தவெக-வுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகமாக செல்வதையும் உதயநிதி உன்னிப்பாக கவனித்து வருகிறார். குறிப்பாக மேற்கு மண்டலத்தில் ஏற்கெனவே திமுக வீக்காக உள்ளதால், இந்த முறை அதை சரிகட்ட இளைஞரணியை களமிறக்க திட்டமிட்டுள்ளார் உதயநிதி. அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் திமுக-வில் எந்தக் காலத்திலும் இல்லாத நடைமுறையாக பொங்கல் பண்டிகையையொட்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை அண்மையில் சென்னைக்கு அழைத்த உதயநிதி அவர்களிடம் இளைஞரணி நிர்வாகிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றுங்கள் என்று கூறி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெரும் தொகையை வழங்கி உள்ளார். குறிப்பாக மேற்கு மண்டல நிர்வாகிகளிடம் தொகுதிப் பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார் என்றனர் விரிவாக... உதயநிதி உடுமலையை குறிவைக்கும் உதயநிதி தொடந்து பேசிய அவர்கள், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலைப்பேட்டை தொகுதி முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சா காலத்தில் திமுக-வின் கோட்டையாக இருந்தாலும், சரியான வேட்பாளர்கள் இல்லாதது மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது, உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தராதது போன்ற காரணங்களால், கடந்த 2001 தேர்தலில் இருந்து 2021 தேர்தல் வரை 5 தேர்தல்களில் திமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த முறை எப்படியாவது உடுமலைப்பேட்டையை கைப்பற்றிவிட வேண்டுமென திமுக தலைமை எண்ணுகிறது. உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுசாமி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி, செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத், முன்னாள் மாணவரணி நிர்வாகி சுரேஷ் ஆகியோர் பெயர் வேட்பாளர் லிஸ்டில் பலமாக அடிபட்டாலும், உடுமலைப்பேட்டை தொகுதியை இளைஞரணிக்கு ஒதுக்க வேண்டுமென உதயநிதி தலைமையிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் உடுமலைப்பேட்டை தொகுதியில் வலுவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணனை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் திமுக-வுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமைச்சர் பதவி வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் விடாப்பிடியாக இருந்ததால் அதை திமுக தலைமை ஏற்கவில்லை. இதனால், ராதாகிருஷ்ணனை வீழ்த்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு திமுக தலைமை சென்றுள்ளது. அதற்கு, புதுமுகம் மட்டுமின்றி ஒரு இளைஞரை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. தற்போது திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி 70 வயதைக் கடந்துள்ளதுடன், உட்கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது. அடிவள்ளி முரளி மீது அதிமுக-வில் இருந்து வந்தவர் என்ற பிம்பம் உள்ளது. ஷியாம் பிரசாத்,சுரேஷ் ஆகியோருக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் பெரிய அறிமுகம் இல்லை. இறுதியாக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்தான் உதயநிதியின் சாய்ஸாகவும், தலைமையின் சாய்ஸாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. உதயநிதி ஸ்டாலின் கடந்த உள்ளாட்சித் தேர்தலில், உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் வேட்பாளராக ஜெயக்குமாரை உதயநிதி நிறுத்தினார். ஆனால், உள்ளூர் அரசியல் காரணமாக ஜெயக்குமார் தேற்கடிக்கப்பட்டு, அப்போதைய திமுக நகரச் செயலாளரான மத்தின் நகராட்சித் தலைவரானார். இதனால், மத்தின் நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கெனவே, அரசுக் கல்லூரி பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். நகராட்சித் தேர்தலில் தன்னால் நிறுத்தப்பட்டு உள்கட்சி அரசியலால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சாஃப்ட் கார்னர் ஜெயக்குமார் மீது உதயநிதிக்கு உள்ளதால், உடுமலை தொகுதி அவருக்குத்தான் ஒதுக்க வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. உதயநிதியின் கேன்டிடேட் என்பதால், தெற்கு மாவட்டச் செயலாளரான எம்.பி.ஈஸ்வரசாமி ஏற்றுக் கொள்வார். ஆனால், களத்தில் அதிமுக-வைவிட திமுக-வின் உள்கட்சி அரசியலை ஜெயக்குமார் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இதை சரிகட்டுவது கட்சித் தலைமை மற்றும் உதயநிதியின் கையில்தான் உள்ளது என்றனர். மாவட்டச் செயலாளர்களின் மோதல் இது குறித்து திருப்பூர் மாநகர திமுக-வினர் சிலர் பேசுகையில், திருப்பூர் மாநகரத்தைப் பொறுத்தவரை மத்திய மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான செல்வராஜுக்கும், மேயரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான தினேஷ்குமாருக்கும் இடையே குப்பை மேலாண்மை பிரச்னை தொடங்கி அனைத்திலும் எலியும், பூனையுமாக உள்ளனர். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஈகோ மோதல் திருப்பூர் வடக்கு,தெற்கு, பல்லடம் மற்றும் அவிநாசி தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால், இவர்கள் இருவரும் இல்லாத ஒருவரை முன்னிருத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டுமென திமுக தலைமை யோசித்து வருகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், திமுக தலைமை மற்றும் உதயநிதியின் தீவிர ஆதரவாளரான திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளரான தங்கராஜ் சாய்ஸாக இருக்க வாய்ப்புள்ளது. திருப்பூர் ஏற்கெனவே, நீண்டகாலம் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்த தங்கராஜுக்கு அண்மையில்தான் மாநகரச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இளைஞரணியில் பணியாற்றியபோது, கட்சி அளவிலும், பொதுமக்கள் அளவிலும் தங்கராஜுக்கு நல்ல அறிமுகம் இருப்பது பிளஸாக உள்ளது. திமுக வலுவாக உள்ள திருப்பூர் தெற்குத் தொகுதி அல்லது தங்கராஜின் சொந்த தொகுதியான திருப்பூர் வடக்கு ஆகிய இரண்டில் ஒன்று தங்கராஜுக்கு ஒதுக்க வேண்டுமென உதயநிதி திட்டமிட்டுள்ளார். கூடுதலாக மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனின் ஆதரவு தங்கராஜுக்கு இருப்பதால் வரும் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. ஆனால், ஒருபுறம் வடக்கு மாவட்டச் செயலாளரான மேயர் தினேஷ்குமாரின் அரசியல், மறுபுறம் சீனியரும் எம்எல்ஏ-வும், மத்திய மாவட்டச் செயலாளரான செல்வராஜ் ஆகிய இருவரின் உள்கட்சி அரசியலை எதிர்த்து தங்கராஜ் களத்தில் நிற்பது மிகவும் சவாலானதாக இருக்கும் என்றனர்.

விகடன் 16 Jan 2026 11:42 am

`8'-இல் `2'தொகுதிகள்; உதயநிதியின் டார்கெட் - களமிறக்கப்படும் இளைஞரணி?பரபரக்கும் திருப்பூர் திமுக!

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் அவிநாசி மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். மீதமுள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கேயம், பல்லடம், உடுமலைப்பேட்டை,மடத்துக்குளம் ஆகிய 6 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக உள்ளன. இந்த 8 தொகுதிகளில் திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் மட்டும் திமுக வசம் உள்ளன. பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர் வடக்கு, அவிநாசி ஆகிய 5 தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. 2026 தேர்தலில் கைவிட்ட 5 தொகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரத்தில், உடுமலைப்பேட்டை, திருப்பூர் வடக்கு அல்லது தெற்கு தொகுதிகள் இளைஞரணிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது, திருப்பூர் தி.மு.க வட்டாரத்தை பரபரப்பாக்கி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு முக்கியத்துவம் இது தொடர்பாக கட்சியின் சீனியர்கள் சிலர் பேசுகையில், கடந்த மக்களவைத் தேர்தலின்போது இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென உதயநிதி தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், அந்த தேர்தலில் உதயநிதி எதிர்பார்த்ததுபோல் இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. உதயநிதியை சமாதானப்படுத்தும் விதமாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞரணி துணைச் செயலாளரான பிரகாஷுக்கு மட்டும் ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில், உதயநிதி பேசும்போது, `2026 தேர்தலில் இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்று மாநாட்டில் வெளிப்படையாகவே பேசினார். வருவாய் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என குறைந்தது 40 தொகுதிகளையாவது இளைஞரணிக்கு பெற்றுவிட வேண்டுமென உதயநிதி திட்டமிட்டு வருகிறார். மேலும், தவெக-வுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகமாக செல்வதையும் உதயநிதி உன்னிப்பாக கவனித்து வருகிறார். குறிப்பாக மேற்கு மண்டலத்தில் ஏற்கெனவே திமுக வீக்காக உள்ளதால், இந்த முறை அதை சரிகட்ட இளைஞரணியை களமிறக்க திட்டமிட்டுள்ளார் உதயநிதி. அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் திமுக-வில் எந்தக் காலத்திலும் இல்லாத நடைமுறையாக பொங்கல் பண்டிகையையொட்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை அண்மையில் சென்னைக்கு அழைத்த உதயநிதி அவர்களிடம் இளைஞரணி நிர்வாகிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றுங்கள் என்று கூறி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெரும் தொகையை வழங்கி உள்ளார். குறிப்பாக மேற்கு மண்டல நிர்வாகிகளிடம் தொகுதிப் பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார் என்றனர் விரிவாக... உதயநிதி உடுமலையை குறிவைக்கும் உதயநிதி தொடந்து பேசிய அவர்கள், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலைப்பேட்டை தொகுதி முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சா காலத்தில் திமுக-வின் கோட்டையாக இருந்தாலும், சரியான வேட்பாளர்கள் இல்லாதது மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது, உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தராதது போன்ற காரணங்களால், கடந்த 2001 தேர்தலில் இருந்து 2021 தேர்தல் வரை 5 தேர்தல்களில் திமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த முறை எப்படியாவது உடுமலைப்பேட்டையை கைப்பற்றிவிட வேண்டுமென திமுக தலைமை எண்ணுகிறது. உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுசாமி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி, செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத், முன்னாள் மாணவரணி நிர்வாகி சுரேஷ் ஆகியோர் பெயர் வேட்பாளர் லிஸ்டில் பலமாக அடிபட்டாலும், உடுமலைப்பேட்டை தொகுதியை இளைஞரணிக்கு ஒதுக்க வேண்டுமென உதயநிதி தலைமையிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் உடுமலைப்பேட்டை தொகுதியில் வலுவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணனை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் திமுக-வுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமைச்சர் பதவி வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் விடாப்பிடியாக இருந்ததால் அதை திமுக தலைமை ஏற்கவில்லை. இதனால், ராதாகிருஷ்ணனை வீழ்த்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு திமுக தலைமை சென்றுள்ளது. அதற்கு, புதுமுகம் மட்டுமின்றி ஒரு இளைஞரை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. தற்போது திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி 70 வயதைக் கடந்துள்ளதுடன், உட்கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது. அடிவள்ளி முரளி மீது அதிமுக-வில் இருந்து வந்தவர் என்ற பிம்பம் உள்ளது. ஷியாம் பிரசாத்,சுரேஷ் ஆகியோருக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் பெரிய அறிமுகம் இல்லை. இறுதியாக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்தான் உதயநிதியின் சாய்ஸாகவும், தலைமையின் சாய்ஸாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. உதயநிதி ஸ்டாலின் கடந்த உள்ளாட்சித் தேர்தலில், உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் வேட்பாளராக ஜெயக்குமாரை உதயநிதி நிறுத்தினார். ஆனால், உள்ளூர் அரசியல் காரணமாக ஜெயக்குமார் தேற்கடிக்கப்பட்டு, அப்போதைய திமுக நகரச் செயலாளரான மத்தின் நகராட்சித் தலைவரானார். இதனால், மத்தின் நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கெனவே, அரசுக் கல்லூரி பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். நகராட்சித் தேர்தலில் தன்னால் நிறுத்தப்பட்டு உள்கட்சி அரசியலால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சாஃப்ட் கார்னர் ஜெயக்குமார் மீது உதயநிதிக்கு உள்ளதால், உடுமலை தொகுதி அவருக்குத்தான் ஒதுக்க வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. உதயநிதியின் கேன்டிடேட் என்பதால், தெற்கு மாவட்டச் செயலாளரான எம்.பி.ஈஸ்வரசாமி ஏற்றுக் கொள்வார். ஆனால், களத்தில் அதிமுக-வைவிட திமுக-வின் உள்கட்சி அரசியலை ஜெயக்குமார் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இதை சரிகட்டுவது கட்சித் தலைமை மற்றும் உதயநிதியின் கையில்தான் உள்ளது என்றனர். மாவட்டச் செயலாளர்களின் மோதல் இது குறித்து திருப்பூர் மாநகர திமுக-வினர் சிலர் பேசுகையில், திருப்பூர் மாநகரத்தைப் பொறுத்தவரை மத்திய மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான செல்வராஜுக்கும், மேயரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான தினேஷ்குமாருக்கும் இடையே குப்பை மேலாண்மை பிரச்னை தொடங்கி அனைத்திலும் எலியும், பூனையுமாக உள்ளனர். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஈகோ மோதல் திருப்பூர் வடக்கு,தெற்கு, பல்லடம் மற்றும் அவிநாசி தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால், இவர்கள் இருவரும் இல்லாத ஒருவரை முன்னிருத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டுமென திமுக தலைமை யோசித்து வருகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், திமுக தலைமை மற்றும் உதயநிதியின் தீவிர ஆதரவாளரான திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளரான தங்கராஜ் சாய்ஸாக இருக்க வாய்ப்புள்ளது. திருப்பூர் ஏற்கெனவே, நீண்டகாலம் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்த தங்கராஜுக்கு அண்மையில்தான் மாநகரச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இளைஞரணியில் பணியாற்றியபோது, கட்சி அளவிலும், பொதுமக்கள் அளவிலும் தங்கராஜுக்கு நல்ல அறிமுகம் இருப்பது பிளஸாக உள்ளது. திமுக வலுவாக உள்ள திருப்பூர் தெற்குத் தொகுதி அல்லது தங்கராஜின் சொந்த தொகுதியான திருப்பூர் வடக்கு ஆகிய இரண்டில் ஒன்று தங்கராஜுக்கு ஒதுக்க வேண்டுமென உதயநிதி திட்டமிட்டுள்ளார். கூடுதலாக மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனின் ஆதரவு தங்கராஜுக்கு இருப்பதால் வரும் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. ஆனால், ஒருபுறம் வடக்கு மாவட்டச் செயலாளரான மேயர் தினேஷ்குமாரின் அரசியல், மறுபுறம் சீனியரும் எம்எல்ஏ-வும், மத்திய மாவட்டச் செயலாளரான செல்வராஜ் ஆகிய இருவரின் உள்கட்சி அரசியலை எதிர்த்து தங்கராஜ் களத்தில் நிற்பது மிகவும் சவாலானதாக இருக்கும் என்றனர்.

விகடன் 16 Jan 2026 11:42 am

நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்! | பகுதி 01

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன் , தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்! அத்தியாயம் 01 நினைவுச் சுவடுகள் தமிழகத் தேர்தல் வரலாறு வெறும் ஆவணங்கள், வாக்கு எண்ணிக்கை, அரசு அறிவிக்கைகள் போன்றவற்றில் மட்டுமே பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கிகளின் கிரீச் சத்தத்தில், தூசி நிறைந்த திறந்த மைதானங்களில், தூக்கமின்றிக் காத்திருந்த கூட்டங்களின் இரவுகளில், தலைவர்களுக்கும் அவர்களைக் காண காத்திருந்த மக்களுக்கும் இடையே நிலவிய உணர்ச்சிகரமான பிணைப்புகளின் நினைவுகளாலும் நிரம்பியவை. தரவு பகுப்பாய்வு, லைவ் ஸ்ட்ரீம், தேர்ந்தெடுக்கப்பட்ட சவுண்ட் பைட்ஸ், ஹேஷ்டேக், எல்இடி திரைகள் இவையெல்லாம் வருவதற்கு முன்பு, தமிழகத் தேர்தல்களும் அதன் பிரசாரங்களும் எப்படி இருந்தன..? அந்த கருப்பு வெள்ளை காலத்திய தேர்தல் திருவிழா காட்சிகள் தெரியுமா...  கூம்பு வடிவ ஒலி பெருக்கி பொது சதுக்கங்களாக மாறிய மைதானங்கள்! தமிழக தேர்தல் களத்தில் மைக்குகளும் ஒலிபெருக்கிகளும்  வெறும் கருவிகளாக மட்டும் இருந்ததில்லை, அவை அரசியல் கட்சிகளின் ஆயுதங்களாகவும், மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையேயான பாலங்களாகவும் திகழ்ந்தன. பிரசார மைதானங்கள் வெறும் அரசியல் மேடைகளாக மட்டுமல்லாது, கலாச்சாரக் கூடல்களாகவும் திகழ்ந்தன. தலைவர்கள் வருவதற்கு முன்னர், கட்சிப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. தொண்டர்கள், கட்சியின் கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் அச்சுப் பிரதிகளை விநியோகித்தனர். இன்னொருபுறம் மைதானங்களில் திடீரென முளைத்த கடைகளில் வியாபாரிகள் தின்பண்டங்களை விற்றனர். பலூன் விற்பவர்கள் கூட்டத்துக்குள் நடமாடினர். குழந்தைகள் இந்தக் கூட்டங்களைப் பண்டிகை போல கொண்டாடினர். இத்தகைய மைதானங்கள் தற்காலிக பொது சதுக்கங்களாக மாறின. அங்கு அரசியல் அன்றாட வாழ்க்கையோடு கலந்து, சமூக எல்லைகள் மங்கி, அனைவருக்கும் அரசியல் அணுகக்கூடியதாக உணரப்பட்டது. அரசியல் தலைவர்கள், தங்களது கருத்துகளை எப்படிச் சொல்கிறார்கள், எந்த பாணியில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே அவர்கள் மதிப்பிடப்பட்டனர். 1950-களிலிருந்து 90-கள் வரை, தேர்தல் பிரசாரங்கள் என்பது மைதானங்கள், பள்ளி மைதானங்கள், பரந்துவிரிந்த வீதிகள், வெறிச்சோடிய நிலங்கள் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பொது கூட்டங்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. மூங்கில் கம்பங்களில் கட்டப்பட்ட லவுட் ஸ்பீக்கர்கள்  அடிக்கடி கிரீச் சத்தம் எழுப்பி, பின்னர் தாளம் பிடித்தன. தலைவர் பேசத் தொடங்கிவிட்டால், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோரும் அப்படியே அமைதியாகி விடுவார்கள்.  காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் மைக் அரசியலைத் திறம்படக் கையாண்டனர். அவர்களின் குரல்கள் மேடையைத் தாண்டி வீடுகள், தேநீர்க் கடைகள், பேருந்து நிலையங்கள் வரை பரவி, இன்றும் நினைவலைகளில் நீந்திக்கொண்டிருக்கின்றன.  மக்களை மயக்கிய மேடை பேச்சுகள்  தமிழகத் தேர்தல் வரலாற்றில் மிகவும் துடிப்பான அத்தியாயங்கள் என்றால், அது மேடைக்கு முன்னர் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்த நிகழ்வுகள்தான். தலைவர் வருவதற்கு பல மணி நேரம் முன்னரே மைதானத்தில் வந்து மக்கள் குவிந்திருந்தனர். பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆண்கள், தங்களது குழந்தைகளை, தங்களது தோள்களில் அமரவைத்துத் தூக்கிக்கொண்டு வந்ததெல்லாம் உண்டு. இன்று 70 அல்லது 80 வயதில் இருக்கும் ஆண்களிடம் கேட்டால், அவர்களிடம் அது குறித்து சொல்வதற்கு ஏராளமான கதைகள் உண்டு. தலைவர்கள் வரத்தாமதமானால், தரையில் துண்டை விரித்துப் படுத்துவிடுவார்கள். அந்தக் காத்திருப்பு வெறும் பொறுமை மட்டுமல்ல – அது தேர்தலின் உண்மையான உயிர்நாடியாக இருந்தது. அறிவிக்கப்பட்ட சரியான நேரத்துக்கு தலைவர்கள் வருவது என்பது அரிதாகவே இருக்கும். ஆனாலும், மக்கள் யாரும் கலைந்து போனதில்லை. ஏனெனில் ஒரு பிரசாரக் கூட்டம் வெறும் அரசியல் சார்ந்த நிகழ்வாக மட்டுமல்லாது, பொழுதுபோக்கு, கல்வி, விடுதலை உணர்ச்சி என எல்லாம் ஒன்றுசேர்ந்த ஒரு நிகழ்வாக இருந்தது. பல கிராமங்களைப் பொறுத்தவரை, தேர்தல் கூட்டங்கள்தான், தங்களது மனம் கவர்ந்த தேசிய அல்லது மாநிலத் தலைவர்களை நேரில் காணும் ஒரே வாய்ப்பு. அந்த எதிர்பார்ப்புதான் தூசி நிறைந்த மைதானங்களை நம்பிக்கை நிறைந்த இடங்களாக மாற்றியது. தமிழக அரசியலில், தேர்தல் மேடை பேச்சுகளின் பொற்காலம் என்றால், அது 1949 செப்டம்பர் 17-ஆம் நாள்,  சென்னை ராபின்சன் பூங்காவில் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கியதற்குப் பிந்தைய ஆண்டுகள்தான். 1967 முதல்  தேர்தல்களில், தலைவர்களின் பேச்சைக் கேட்க மக்கள் வண்டி கட்டி, குடும்பத்தோடு கிளம்பி வந்த காட்சி வழக்கமாக இருந்தது. பிரசாரத்துக்கு நேரம் தடையாக இருந்ததில்லை. பகலும் இரவும் பாராமல் தலைவர்கள் சுற்றி வந்தனர். அவர்களின் வருகையை எதிர்பார்த்து, மாடி வீட்டில் வசிப்பவர்கள் கூட சாலையோரம் படுத்து உறங்கினர். கிட்டத்தட்ட 1990-களின் இறுதிவரை அது நீடித்தது. ஆர்ப்பாட்டமில்லாத காமராஜர் பேச்சுகள்   காமராஜர், அவரது காலத்திய அரசியல்வாதிகளைப் போல் வளவளவென்று பேசுவது கிடையாது. நீண்ட வாக்கியங்களாகவும் பேசுவது இல்லை. எளிய தமிழில், குறைவான வார்த்தைகளில் பேசினார். ஆனால், அவை அளவிட முடியாத நம்பகத்தன்மையைக் கொண்டிருந்தன. அவரது கூட்டங்களில் மக்கள் நாடகத்தை எதிர்பார்க்கவில்லை. நேர்மையை எதிர்பார்த்தனர். காமராஜர் அது அரசியல் பொதுக்கூட்ட மேடையோ, அடிக்கல் நாட்டு விழாவோ...  தொழிற்சாலை திறப்பு விழாவோ... எதுவாக இருந்தாலும் சரி, நீண்ட சொற்பொழிவுகள் ஆற்றி அவர் நேரத்தை வீணாக்கியதில்லை. தேவையான அளவுக்கு பேசி , சொல்ல வேண்டிய கருத்துகளை மக்கள் மனதில் தைக்கும் அளவுக்கு உணர்த்தி விட்டுச் சென்றுவிடுவார். காமராஜின் பலம் மக்கள் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையில் இருந்தது. பள்ளிகள், உணவு, வளர்ச்சி பற்றி அவர் பேசியபோது கேட்பவர்கள் அதனை நம்பினர். ஏனெனில், அவர்கள் ஏற்கனவே அதன் பலன்களைப் பார்த்திருந்தனர்.வலிமையான பேச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், காமராஜ் அமைதியான பேச்சுக்கும் மக்களிடையே இடம் உண்டு  என்பதை நிரூபித்தார். அரசியலைப் பயிற்றுவித்த அண்ணா அண்ணாவின் தேர்தல் கூட்டங்கள் வெறும் இரைச்சலுக்காகவோ ஆரவாரத்துக்காகவோ நினைவுகூரப்படவில்லை. மக்களை, குறிப்பாக இளைஞர்களை அரசியல்மயப்படுத்திய, அவர்களுக்கு அரசியலைப் பயிற்றுவித்த சிந்தனைக்காகவே நினைவுகூரப்படுகின்றன. தர்க்கம், நகைச்சுவை, இலக்கியக் குறிப்புகள் கலந்தவையாக இருந்தன அண்ணாவின் பேச்சுகள். மெதுவான குரலில், வார்த்தைகளுக்கு இடையே திட்டமிட்ட இடைவெளி விட்டு, தாம் பேசிய கருத்துகள் கூட்டத்தில் ஆழமாக ஊடுருவ அனுமதித்தார். அதனை மக்கள் மிக கவனமாக கேட்டனர். அந்தப் பேச்சுகளுக்கு தலையசைத்தனர். தாமதமாக வந்தவர்களுக்கு மற்றவர்கள் மெல்ல விளக்கினர். அண்ணாதுரை மைக்கில் பேசிய அண்ணாவின்  குரல் இரைச்சலாக இல்லாமல், மக்களின் மனதை வெல்வதாக இருந்தது. பல ஊர்களில் அவரது பேச்சுகள் அடுத்த நாள் காலை தேநீர்க் கடைகளில், பத்திரிகைகளில் இடம்பெற்ற கட்டுரைகள் போல விவாதிக்கப்பட்டன. “நேத்து அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?” என்கிற கேள்வி சகஜமாக ஒலிக்கும். அவரது காலத்தில் அரசியல் அறிவுசார் உணர்வு கொண்டதாகத் தோன்றியது. தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு அண்ணா வருவது தாமதமாகிவிட்டது. இரவு 10 மணியைத்தாண்டியும், மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், ஒரு வழியாக வந்து சேர்ந்தார் அண்ணா. மைக்கைப் பிடித்த அவர், மாதமோ சித்திரை ... நேரமோ பத்தரை ... உங்கள் கண்களிலோ நித்திரை... உதயசூரியன் சின்னத்தில் குத்துங்கள் முத்திரை என எதுகை மோனையுடன் பேச, கூட்டம் மொத்தமும் ஆர்ப்பரித்தது. அந்த அளவுக்கு அண்ணாவின் மேடைப்பேச்சு அப்போது மக்களைக் கட்டிப்போட்டிருந்தது.  கருணாநிதி நிகழ்த்திய இலக்கிய கச்சேரி அதேபோன்றுதான் கருணாநிதி. ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என கரகரத்த குரலில் கருணாநிதி தனது பேசத்தொடங்கியதுமே, திமுக தொண்டர்களின் கைத்தட்டலும் விசில் சத்தமும் விண்ணைப் பிளக்கும்.  கருணாநிதி மைக்கைப் பிடித்ததும் மைதானம் நாடக அரங்காக மாறிவிடும். அவரது பேச்சுகள் திரைக்கதை போல அமைந்திருக்கும் . தமிழ் இலக்கியம், வரலாறு, சமகால வாழ்க்கை ஆகியவற்றிலிருந்து தனது பேச்சுகளை எடுத்தாண்டார். அரசியல் ரீதியாக அவருடன் கருத்துமாறுபட்டவர்கள்கூட அவரது பேச்சைக் கேட்கக் காத்திருந்தனர். அவ்வளவு ஏன்... எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களே, கருணாநிதி பேசும் மேடை அருகே காரில் மறைவாக காத்திருந்து, அவரது பேச்சை ரசித்துச் செல்வார்களாம்.  அந்த அளவுக்கு அவர் பேசும் வார்த்தைகளில் தாளமும் ஆழமும் இருந்தன. கலைஞர் கருணாநிதி பேச்சின் ஊடே அவர் உதிர்க்கும் தனித்துவமான வாக்கியங்களும், அழகான உவமைகளும் மக்களின் கைத்தட்டலை அள்ளித்தரும். கருணாநிதியின் தேர்தல் கூட்டங்கள் பெரும்பாலும் நள்ளிரவு வரை நீண்டுகொண்டே போகும். ஆயினும் மக்கள் கலைந்து போனதில்லை. அந்த அளவுக்கு அவரது பேச்சில் மக்கள் மயங்கினர். அதே சமயம், அவரது பேச்சுகள் அறிவுரீதியான தர்க்கத்தைக் கிளப்பவும் தவறியதில்லை. மக்களுக்கும் கட்சித் தொண்டர்களைப் பொறுத்தவரை கருணாநிதியின் பேச்சைக் கேட்பது என்பது ஒரு இலக்கியக் கச்சேரியைப் போலத்தான் இருந்தது. எம்.ஜி.ஆர் - முகம் ஒன்றே போதும் எம்.ஜி.ஆருக்கும் அதேதான். கருணாநிதி தனது பேச்சுகளை கவிதையாக்கினாரென்றால், எம்.ஜி. ராமச்சந்திரன் கூட்டங்களை உணர்ச்சிப் பெருக்கான காட்சியாக மாற்றினார். எம்.ஜி.ஆரின் குரல் இலேசாக மென்மையாக இருந்தாலும், ‘என் ரத்தத்தின் ரத்தங்களே' என்று மைக்கைப் பிடித்து உரத்துச் சொன்னதும், கரகோஷம் காதை கிழிக்கும். அவரிடமிருந்து வரும் அந்த ஒற்றை வார்த்தைக்காகவும், அவரது முகத்தை தரிசப்பதற்காகவும் மக்கள் கூட்டம் விடிய விடிய காத்திருக்கும். எம்.ஜி.ஆர் திறந்த ஜீப்பிலிருந்து அவர் தோன்றிய தருணமே மைதானம் ஆர்ப்பரிக்கும். வாழ்த்து முழக்கங்கள் ஒலி பெருக்கியின் குரலையே அமுக்கிவிடும். கைத்தட்டல்கள் காதைக் கிழிக்கும். கைகளை ஆட்டியும் நீட்டியும் ஒரு மீட்பரை வரவேற்பது போல எம்.ஜி.ஆரை வரவேற்றார்கள் மக்கள். அவரை நெருங்க முண்டியடிக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் ரொம்பவே திணறிப்போய்விடுவார்கள்.எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை அவருக்கு நீண்ட பேச்சுகள் தேவையில்லை. அவரது  முகம் ஒன்றே போதுமானது.அவரது ரசிகர்களும் கட்சியினரும் மக்களும் மதிமயங்கிப் போய்விடுவர்.  ஜெயலலிதா- 'மக்களுக்காகவே நான்'... ஜெயலலிதாவின்  ‘அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்கிற அவரது குரல், இப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் அதிமுகவினரால் பகிரப்படுகின்றன. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் தமிழகம் வரும்போது, அவர்களின் பேச்சு முழுமையாகப் புரியாவிட்டாலும், அவர்களின் உருவத்தையும் நிறத்தையும் காண மக்கள் கூட்டம் அலைமோதும்.  ஜெயலலிதா தேர்தலை திருவிழாவாக்கிய திரை நட்சத்திரங்கள்  தலைவர்கள் ஒருபுறம் தேர்தல் மேடைகளைத் தங்களது அனல் பறக்கும் பேச்சுகளால் தெறிக்கவிட்டார்களென்றால், இன்னொருபுறம், திரை நட்சத்திரங்களும் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு, தேர்தலை திருவிழாவாக மாற்றினர். சினிமா நட்சத்திரங்கள் மேடையில் தோன்றியதும், இளைஞர்களின் மனதில் உலகத்தையே வென்ற மகிழ்ச்சி பொங்கியது. அவர்களைப் பொறுத்தவரை அவர்களைப் பார்த்ததே போதுமானது. அண்ணா திமுகவைத் தொடங்கிய பிறகு, அக்கட்சிக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் போன்ற திரை நட்சத்திரங்கள் மேற்கொண்ட பிரசாரம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிவாஜி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், 1980-களில் அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா மேற்கொண்ட பிரசாரம், அந்த சினிமா கவர்ச்சியை எதிர்கொள்ள திமுக தரப்பில் டி.ராஜேந்தர் களமிறங்கிய நிலையில், அவருக்குப் போட்டியாக அதிமுகவை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட கே.பாக்யராஜ், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நடிகர்கள் ராதாரவி, எஸ்.எஸ். சந்திரன், பின்னர் அவர்களே அதிமுகவுக்குத் தாவிய நிலையில், அவர்களுடன் கைகோத்த ராமராஜன் போன்ற திரை நட்சத்திரங்களால் தேர்தல் களம் வண்ணமயமாக காட்சி அளித்தது.  இன்று தொழில்நுட்பம் அரசியலின்  வீச்சை விரிவாக்கியுள்ளது; ஆனால், அந்தப் பழைய மைதானங்களில் அமைக்கப்பட்ட உணர்ச்சிகரமான மேடைகளும் நடத்தப்பட்ட கூட்டங்களும் தமிழக அரசியலின் மறக்க முடியாத அடையாளங்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றன.! (தொடரும்.!)

விகடன் 16 Jan 2026 11:00 am

நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்! | பகுதி 01

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன் , தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்! அத்தியாயம் 01 நினைவுச் சுவடுகள் தமிழகத் தேர்தல் வரலாறு வெறும் ஆவணங்கள், வாக்கு எண்ணிக்கை, அரசு அறிவிக்கைகள் போன்றவற்றில் மட்டுமே பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கிகளின் கிரீச் சத்தத்தில், தூசி நிறைந்த திறந்த மைதானங்களில், தூக்கமின்றிக் காத்திருந்த கூட்டங்களின் இரவுகளில், தலைவர்களுக்கும் அவர்களைக் காண காத்திருந்த மக்களுக்கும் இடையே நிலவிய உணர்ச்சிகரமான பிணைப்புகளின் நினைவுகளாலும் நிரம்பியவை. தரவு பகுப்பாய்வு, லைவ் ஸ்ட்ரீம், தேர்ந்தெடுக்கப்பட்ட சவுண்ட் பைட்ஸ், ஹேஷ்டேக், எல்இடி திரைகள் இவையெல்லாம் வருவதற்கு முன்பு, தமிழகத் தேர்தல்களும் அதன் பிரசாரங்களும் எப்படி இருந்தன..? அந்த கருப்பு வெள்ளை காலத்திய தேர்தல் திருவிழா காட்சிகள் தெரியுமா...  கூம்பு வடிவ ஒலி பெருக்கி பொது சதுக்கங்களாக மாறிய மைதானங்கள்! தமிழக தேர்தல் களத்தில் மைக்குகளும் ஒலிபெருக்கிகளும்  வெறும் கருவிகளாக மட்டும் இருந்ததில்லை, அவை அரசியல் கட்சிகளின் ஆயுதங்களாகவும், மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையேயான பாலங்களாகவும் திகழ்ந்தன. பிரசார மைதானங்கள் வெறும் அரசியல் மேடைகளாக மட்டுமல்லாது, கலாச்சாரக் கூடல்களாகவும் திகழ்ந்தன. தலைவர்கள் வருவதற்கு முன்னர், கட்சிப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. தொண்டர்கள், கட்சியின் கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் அச்சுப் பிரதிகளை விநியோகித்தனர். இன்னொருபுறம் மைதானங்களில் திடீரென முளைத்த கடைகளில் வியாபாரிகள் தின்பண்டங்களை விற்றனர். பலூன் விற்பவர்கள் கூட்டத்துக்குள் நடமாடினர். குழந்தைகள் இந்தக் கூட்டங்களைப் பண்டிகை போல கொண்டாடினர். இத்தகைய மைதானங்கள் தற்காலிக பொது சதுக்கங்களாக மாறின. அங்கு அரசியல் அன்றாட வாழ்க்கையோடு கலந்து, சமூக எல்லைகள் மங்கி, அனைவருக்கும் அரசியல் அணுகக்கூடியதாக உணரப்பட்டது. அரசியல் தலைவர்கள், தங்களது கருத்துகளை எப்படிச் சொல்கிறார்கள், எந்த பாணியில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே அவர்கள் மதிப்பிடப்பட்டனர். 1950-களிலிருந்து 90-கள் வரை, தேர்தல் பிரசாரங்கள் என்பது மைதானங்கள், பள்ளி மைதானங்கள், பரந்துவிரிந்த வீதிகள், வெறிச்சோடிய நிலங்கள் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பொது கூட்டங்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. மூங்கில் கம்பங்களில் கட்டப்பட்ட லவுட் ஸ்பீக்கர்கள்  அடிக்கடி கிரீச் சத்தம் எழுப்பி, பின்னர் தாளம் பிடித்தன. தலைவர் பேசத் தொடங்கிவிட்டால், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோரும் அப்படியே அமைதியாகி விடுவார்கள்.  காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் மைக் அரசியலைத் திறம்படக் கையாண்டனர். அவர்களின் குரல்கள் மேடையைத் தாண்டி வீடுகள், தேநீர்க் கடைகள், பேருந்து நிலையங்கள் வரை பரவி, இன்றும் நினைவலைகளில் நீந்திக்கொண்டிருக்கின்றன.  மக்களை மயக்கிய மேடை பேச்சுகள்  தமிழகத் தேர்தல் வரலாற்றில் மிகவும் துடிப்பான அத்தியாயங்கள் என்றால், அது மேடைக்கு முன்னர் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்த நிகழ்வுகள்தான். தலைவர் வருவதற்கு பல மணி நேரம் முன்னரே மைதானத்தில் வந்து மக்கள் குவிந்திருந்தனர். பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆண்கள், தங்களது குழந்தைகளை, தங்களது தோள்களில் அமரவைத்துத் தூக்கிக்கொண்டு வந்ததெல்லாம் உண்டு. இன்று 70 அல்லது 80 வயதில் இருக்கும் ஆண்களிடம் கேட்டால், அவர்களிடம் அது குறித்து சொல்வதற்கு ஏராளமான கதைகள் உண்டு. தலைவர்கள் வரத்தாமதமானால், தரையில் துண்டை விரித்துப் படுத்துவிடுவார்கள். அந்தக் காத்திருப்பு வெறும் பொறுமை மட்டுமல்ல – அது தேர்தலின் உண்மையான உயிர்நாடியாக இருந்தது. அறிவிக்கப்பட்ட சரியான நேரத்துக்கு தலைவர்கள் வருவது என்பது அரிதாகவே இருக்கும். ஆனாலும், மக்கள் யாரும் கலைந்து போனதில்லை. ஏனெனில் ஒரு பிரசாரக் கூட்டம் வெறும் அரசியல் சார்ந்த நிகழ்வாக மட்டுமல்லாது, பொழுதுபோக்கு, கல்வி, விடுதலை உணர்ச்சி என எல்லாம் ஒன்றுசேர்ந்த ஒரு நிகழ்வாக இருந்தது. பல கிராமங்களைப் பொறுத்தவரை, தேர்தல் கூட்டங்கள்தான், தங்களது மனம் கவர்ந்த தேசிய அல்லது மாநிலத் தலைவர்களை நேரில் காணும் ஒரே வாய்ப்பு. அந்த எதிர்பார்ப்புதான் தூசி நிறைந்த மைதானங்களை நம்பிக்கை நிறைந்த இடங்களாக மாற்றியது. தமிழக அரசியலில், தேர்தல் மேடை பேச்சுகளின் பொற்காலம் என்றால், அது 1949 செப்டம்பர் 17-ஆம் நாள்,  சென்னை ராபின்சன் பூங்காவில் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கியதற்குப் பிந்தைய ஆண்டுகள்தான். 1967 முதல்  தேர்தல்களில், தலைவர்களின் பேச்சைக் கேட்க மக்கள் வண்டி கட்டி, குடும்பத்தோடு கிளம்பி வந்த காட்சி வழக்கமாக இருந்தது. பிரசாரத்துக்கு நேரம் தடையாக இருந்ததில்லை. பகலும் இரவும் பாராமல் தலைவர்கள் சுற்றி வந்தனர். அவர்களின் வருகையை எதிர்பார்த்து, மாடி வீட்டில் வசிப்பவர்கள் கூட சாலையோரம் படுத்து உறங்கினர். கிட்டத்தட்ட 1990-களின் இறுதிவரை அது நீடித்தது. ஆர்ப்பாட்டமில்லாத காமராஜர் பேச்சுகள்   காமராஜர், அவரது காலத்திய அரசியல்வாதிகளைப் போல் வளவளவென்று பேசுவது கிடையாது. நீண்ட வாக்கியங்களாகவும் பேசுவது இல்லை. எளிய தமிழில், குறைவான வார்த்தைகளில் பேசினார். ஆனால், அவை அளவிட முடியாத நம்பகத்தன்மையைக் கொண்டிருந்தன. அவரது கூட்டங்களில் மக்கள் நாடகத்தை எதிர்பார்க்கவில்லை. நேர்மையை எதிர்பார்த்தனர். காமராஜர் அது அரசியல் பொதுக்கூட்ட மேடையோ, அடிக்கல் நாட்டு விழாவோ...  தொழிற்சாலை திறப்பு விழாவோ... எதுவாக இருந்தாலும் சரி, நீண்ட சொற்பொழிவுகள் ஆற்றி அவர் நேரத்தை வீணாக்கியதில்லை. தேவையான அளவுக்கு பேசி , சொல்ல வேண்டிய கருத்துகளை மக்கள் மனதில் தைக்கும் அளவுக்கு உணர்த்தி விட்டுச் சென்றுவிடுவார். காமராஜின் பலம் மக்கள் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையில் இருந்தது. பள்ளிகள், உணவு, வளர்ச்சி பற்றி அவர் பேசியபோது கேட்பவர்கள் அதனை நம்பினர். ஏனெனில், அவர்கள் ஏற்கனவே அதன் பலன்களைப் பார்த்திருந்தனர்.வலிமையான பேச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், காமராஜ் அமைதியான பேச்சுக்கும் மக்களிடையே இடம் உண்டு  என்பதை நிரூபித்தார். அரசியலைப் பயிற்றுவித்த அண்ணா அண்ணாவின் தேர்தல் கூட்டங்கள் வெறும் இரைச்சலுக்காகவோ ஆரவாரத்துக்காகவோ நினைவுகூரப்படவில்லை. மக்களை, குறிப்பாக இளைஞர்களை அரசியல்மயப்படுத்திய, அவர்களுக்கு அரசியலைப் பயிற்றுவித்த சிந்தனைக்காகவே நினைவுகூரப்படுகின்றன. தர்க்கம், நகைச்சுவை, இலக்கியக் குறிப்புகள் கலந்தவையாக இருந்தன அண்ணாவின் பேச்சுகள். மெதுவான குரலில், வார்த்தைகளுக்கு இடையே திட்டமிட்ட இடைவெளி விட்டு, தாம் பேசிய கருத்துகள் கூட்டத்தில் ஆழமாக ஊடுருவ அனுமதித்தார். அதனை மக்கள் மிக கவனமாக கேட்டனர். அந்தப் பேச்சுகளுக்கு தலையசைத்தனர். தாமதமாக வந்தவர்களுக்கு மற்றவர்கள் மெல்ல விளக்கினர். அண்ணாதுரை மைக்கில் பேசிய அண்ணாவின்  குரல் இரைச்சலாக இல்லாமல், மக்களின் மனதை வெல்வதாக இருந்தது. பல ஊர்களில் அவரது பேச்சுகள் அடுத்த நாள் காலை தேநீர்க் கடைகளில், பத்திரிகைகளில் இடம்பெற்ற கட்டுரைகள் போல விவாதிக்கப்பட்டன. “நேத்து அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?” என்கிற கேள்வி சகஜமாக ஒலிக்கும். அவரது காலத்தில் அரசியல் அறிவுசார் உணர்வு கொண்டதாகத் தோன்றியது. தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு அண்ணா வருவது தாமதமாகிவிட்டது. இரவு 10 மணியைத்தாண்டியும், மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், ஒரு வழியாக வந்து சேர்ந்தார் அண்ணா. மைக்கைப் பிடித்த அவர், மாதமோ சித்திரை ... நேரமோ பத்தரை ... உங்கள் கண்களிலோ நித்திரை... உதயசூரியன் சின்னத்தில் குத்துங்கள் முத்திரை என எதுகை மோனையுடன் பேச, கூட்டம் மொத்தமும் ஆர்ப்பரித்தது. அந்த அளவுக்கு அண்ணாவின் மேடைப்பேச்சு அப்போது மக்களைக் கட்டிப்போட்டிருந்தது.  கருணாநிதி நிகழ்த்திய இலக்கிய கச்சேரி அதேபோன்றுதான் கருணாநிதி. ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என கரகரத்த குரலில் கருணாநிதி தனது பேசத்தொடங்கியதுமே, திமுக தொண்டர்களின் கைத்தட்டலும் விசில் சத்தமும் விண்ணைப் பிளக்கும்.  கருணாநிதி மைக்கைப் பிடித்ததும் மைதானம் நாடக அரங்காக மாறிவிடும். அவரது பேச்சுகள் திரைக்கதை போல அமைந்திருக்கும் . தமிழ் இலக்கியம், வரலாறு, சமகால வாழ்க்கை ஆகியவற்றிலிருந்து தனது பேச்சுகளை எடுத்தாண்டார். அரசியல் ரீதியாக அவருடன் கருத்துமாறுபட்டவர்கள்கூட அவரது பேச்சைக் கேட்கக் காத்திருந்தனர். அவ்வளவு ஏன்... எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களே, கருணாநிதி பேசும் மேடை அருகே காரில் மறைவாக காத்திருந்து, அவரது பேச்சை ரசித்துச் செல்வார்களாம்.  அந்த அளவுக்கு அவர் பேசும் வார்த்தைகளில் தாளமும் ஆழமும் இருந்தன. கலைஞர் கருணாநிதி பேச்சின் ஊடே அவர் உதிர்க்கும் தனித்துவமான வாக்கியங்களும், அழகான உவமைகளும் மக்களின் கைத்தட்டலை அள்ளித்தரும். கருணாநிதியின் தேர்தல் கூட்டங்கள் பெரும்பாலும் நள்ளிரவு வரை நீண்டுகொண்டே போகும். ஆயினும் மக்கள் கலைந்து போனதில்லை. அந்த அளவுக்கு அவரது பேச்சில் மக்கள் மயங்கினர். அதே சமயம், அவரது பேச்சுகள் அறிவுரீதியான தர்க்கத்தைக் கிளப்பவும் தவறியதில்லை. மக்களுக்கும் கட்சித் தொண்டர்களைப் பொறுத்தவரை கருணாநிதியின் பேச்சைக் கேட்பது என்பது ஒரு இலக்கியக் கச்சேரியைப் போலத்தான் இருந்தது. எம்.ஜி.ஆர் - முகம் ஒன்றே போதும் எம்.ஜி.ஆருக்கும் அதேதான். கருணாநிதி தனது பேச்சுகளை கவிதையாக்கினாரென்றால், எம்.ஜி. ராமச்சந்திரன் கூட்டங்களை உணர்ச்சிப் பெருக்கான காட்சியாக மாற்றினார். எம்.ஜி.ஆரின் குரல் இலேசாக மென்மையாக இருந்தாலும், ‘என் ரத்தத்தின் ரத்தங்களே' என்று மைக்கைப் பிடித்து உரத்துச் சொன்னதும், கரகோஷம் காதை கிழிக்கும். அவரிடமிருந்து வரும் அந்த ஒற்றை வார்த்தைக்காகவும், அவரது முகத்தை தரிசப்பதற்காகவும் மக்கள் கூட்டம் விடிய விடிய காத்திருக்கும். எம்.ஜி.ஆர் திறந்த ஜீப்பிலிருந்து அவர் தோன்றிய தருணமே மைதானம் ஆர்ப்பரிக்கும். வாழ்த்து முழக்கங்கள் ஒலி பெருக்கியின் குரலையே அமுக்கிவிடும். கைத்தட்டல்கள் காதைக் கிழிக்கும். கைகளை ஆட்டியும் நீட்டியும் ஒரு மீட்பரை வரவேற்பது போல எம்.ஜி.ஆரை வரவேற்றார்கள் மக்கள். அவரை நெருங்க முண்டியடிக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் ரொம்பவே திணறிப்போய்விடுவார்கள்.எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை அவருக்கு நீண்ட பேச்சுகள் தேவையில்லை. அவரது  முகம் ஒன்றே போதுமானது.அவரது ரசிகர்களும் கட்சியினரும் மக்களும் மதிமயங்கிப் போய்விடுவர்.  ஜெயலலிதா- 'மக்களுக்காகவே நான்'... ஜெயலலிதாவின்  ‘அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்கிற அவரது குரல், இப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் அதிமுகவினரால் பகிரப்படுகின்றன. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் தமிழகம் வரும்போது, அவர்களின் பேச்சு முழுமையாகப் புரியாவிட்டாலும், அவர்களின் உருவத்தையும் நிறத்தையும் காண மக்கள் கூட்டம் அலைமோதும்.  ஜெயலலிதா தேர்தலை திருவிழாவாக்கிய திரை நட்சத்திரங்கள்  தலைவர்கள் ஒருபுறம் தேர்தல் மேடைகளைத் தங்களது அனல் பறக்கும் பேச்சுகளால் தெறிக்கவிட்டார்களென்றால், இன்னொருபுறம், திரை நட்சத்திரங்களும் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு, தேர்தலை திருவிழாவாக மாற்றினர். சினிமா நட்சத்திரங்கள் மேடையில் தோன்றியதும், இளைஞர்களின் மனதில் உலகத்தையே வென்ற மகிழ்ச்சி பொங்கியது. அவர்களைப் பொறுத்தவரை அவர்களைப் பார்த்ததே போதுமானது. அண்ணா திமுகவைத் தொடங்கிய பிறகு, அக்கட்சிக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் போன்ற திரை நட்சத்திரங்கள் மேற்கொண்ட பிரசாரம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிவாஜி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், 1980-களில் அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா மேற்கொண்ட பிரசாரம், அந்த சினிமா கவர்ச்சியை எதிர்கொள்ள திமுக தரப்பில் டி.ராஜேந்தர் களமிறங்கிய நிலையில், அவருக்குப் போட்டியாக அதிமுகவை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட கே.பாக்யராஜ், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நடிகர்கள் ராதாரவி, எஸ்.எஸ். சந்திரன், பின்னர் அவர்களே அதிமுகவுக்குத் தாவிய நிலையில், அவர்களுடன் கைகோத்த ராமராஜன் போன்ற திரை நட்சத்திரங்களால் தேர்தல் களம் வண்ணமயமாக காட்சி அளித்தது.  இன்று தொழில்நுட்பம் அரசியலின்  வீச்சை விரிவாக்கியுள்ளது; ஆனால், அந்தப் பழைய மைதானங்களில் அமைக்கப்பட்ட உணர்ச்சிகரமான மேடைகளும் நடத்தப்பட்ட கூட்டங்களும் தமிழக அரசியலின் மறக்க முடியாத அடையாளங்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றன.! (தொடரும்.!)

விகடன் 16 Jan 2026 11:00 am

Vibe With MKS: எனக்கு பிடித்த கார்.!- நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் கலந்துரையாடும் ' Vibe With MKS' என்ற நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கார் தொடர்பாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமீபத்தில் மு.க.ஸ்டாலின் வின்டேஜ் காரில் உலா வந்த வீடியோ வைரலானதைச் சுட்டிக்காட்டி மதன் கார்க்கி கேள்வி எழுப்பி இருந்தார்.  அப்போது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் ஒருமுறை சினிமாவுக்கு பாடல்கள் எழுதுவதற்காக பெங்களூருக்கு சென்றார். அவருடன் நானும் சென்றிருந்தேன். வுட்லேண்ட்ஸ் ஹோட்டலுக்கு சென்றிருந்தோம். Vibe With MKS அப்போது கலைஞர் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது டிரைவர் என்னை அழைத்துப் போய் எதிரே இருக்கும் கப்பன் பார்க்கில் 'ஃபியட் செலக்ட்' காரில் எனக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தார். நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன். தொல்காப்பிய பூங்காவுக்கு தினமும் நடைபயிற்சிக்குப் போவேன். அப்படி நடைபயிற்சி போகும்போது வண்டியை (கார்) எடுத்து வந்தார்கள். வண்டி நல்லா இருந்தது. சரி ஓட்டிப் பார்க்கலாம் என்று வீடு வரை ஓட்டிக்கொண்டு போனேன். பழைய கார் மேல் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு. கோயம்புத்தூரில் பழைய கார்களை நன்றாக பராமரித்துக்கொண்டிருப்பார்கள். கோயம்புத்தூர் போய் கார் வாக்கிகொண்டு இங்கே வந்து ஒரு ஆறு மாதம், 7 மாதம் ஓட்டுவேன். அதற்கு பிறகு விற்றுவிட்டு, மறுபடியும் பழைய கார் வாங்கப் போவேன். இளைஞரணியில் நான் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் ஐந்து, ஆறு பேர் குழுவுடன் சுற்றுப் பயணம் போனேன். அப்படி போகும்போது டிரைவரை அடுத்த வண்டியில் வரசொல்லிவிட்டு, நான்தான் வண்டி ஓட்டிக்கொண்டு போவேன். மு.க ஸ்டாலின் அதிலும் இரவில் வண்டி ஓட்டுவதில் எனக்கு ரொம்ப பிரியம், என்னை நம்பி எல்லாரும் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். டிரைவரை கார் எடுத்து திருப்பிவிடுவது, துடைத்து வைப்பது இதற்குதான் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். ஒரு நாள் டிரைவர் வேடிக்கையாக சொன்னார், சார் நான் கார் ஓட்டுவதையே மறந்துவிட்டேன், அதனால் நான் எங்காவது வேலைக்கு போகிறேன் என்று சொன்னார். அந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கிறது” என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

விகடன் 16 Jan 2026 10:01 am

Vibe With MKS: எனக்கு பிடித்த கார்.!- நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் கலந்துரையாடும் ' Vibe With MKS' என்ற நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கார் தொடர்பாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமீபத்தில் மு.க.ஸ்டாலின் வின்டேஜ் காரில் உலா வந்த வீடியோ வைரலானதைச் சுட்டிக்காட்டி மதன் கார்க்கி கேள்வி எழுப்பி இருந்தார்.  அப்போது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் ஒருமுறை சினிமாவுக்கு பாடல்கள் எழுதுவதற்காக பெங்களூருக்கு சென்றார். அவருடன் நானும் சென்றிருந்தேன். வுட்லேண்ட்ஸ் ஹோட்டலுக்கு சென்றிருந்தோம். Vibe With MKS அப்போது கலைஞர் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது டிரைவர் என்னை அழைத்துப் போய் எதிரே இருக்கும் கப்பன் பார்க்கில் 'ஃபியட் செலக்ட்' காரில் எனக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தார். நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன். தொல்காப்பிய பூங்காவுக்கு தினமும் நடைபயிற்சிக்குப் போவேன். அப்படி நடைபயிற்சி போகும்போது வண்டியை (கார்) எடுத்து வந்தார்கள். வண்டி நல்லா இருந்தது. சரி ஓட்டிப் பார்க்கலாம் என்று வீடு வரை ஓட்டிக்கொண்டு போனேன். பழைய கார் மேல் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு. கோயம்புத்தூரில் பழைய கார்களை நன்றாக பராமரித்துக்கொண்டிருப்பார்கள். கோயம்புத்தூர் போய் கார் வாக்கிகொண்டு இங்கே வந்து ஒரு ஆறு மாதம், 7 மாதம் ஓட்டுவேன். அதற்கு பிறகு விற்றுவிட்டு, மறுபடியும் பழைய கார் வாங்கப் போவேன். இளைஞரணியில் நான் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் ஐந்து, ஆறு பேர் குழுவுடன் சுற்றுப் பயணம் போனேன். அப்படி போகும்போது டிரைவரை அடுத்த வண்டியில் வரசொல்லிவிட்டு, நான்தான் வண்டி ஓட்டிக்கொண்டு போவேன். மு.க ஸ்டாலின் அதிலும் இரவில் வண்டி ஓட்டுவதில் எனக்கு ரொம்ப பிரியம், என்னை நம்பி எல்லாரும் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். டிரைவரை கார் எடுத்து திருப்பிவிடுவது, துடைத்து வைப்பது இதற்குதான் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். ஒரு நாள் டிரைவர் வேடிக்கையாக சொன்னார், சார் நான் கார் ஓட்டுவதையே மறந்துவிட்டேன், அதனால் நான் எங்காவது வேலைக்கு போகிறேன் என்று சொன்னார். அந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கிறது” என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

விகடன் 16 Jan 2026 10:01 am

Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது வரும் ஜனவரி 21-ம் தேதி முதல், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. டிரம்ப் அதாவது ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அல்ஜீரியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆர்மீனியா, பஹாமாஸ், வங்கதேசம், பார்படாஸ், பெலாரூஸ், பெலிஸ், பூட்டான், போஸ்னியா, பிரேசில், மியான்மர், கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, கொலம்பியா, கோட் டி'ஐவரி, கியூபா, காங்கோ ஜனநாயக குடியரசு, டொமினிகா, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, ஃபிஜி, காம்பியா, ஜார்ஜியா, கானா, கிரெனடா, குவாத்தமாலா, கினி, ஹைதி, ஈரான், ஈராக், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லைபீரியா, லிபியா, மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, மான்டனீக்ரோ, மொராக்கோ, நேபாளம், நிகரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ரஷ்யா, ருவாண்டா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், சியரா லியோன், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, உஸ்பெகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் இந்த தடையிலிருந்து, சுற்றுலா விசா, வணிக விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் பெறக்கூடிய குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளில் இருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன. அமெரிக்க மக்களின் செல்வத்தை இவர்கள் சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த தடை என்பது தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் சூழலிலும் பாகிஸ்தானையும் இந்த பட்டியலில் சேர்த்து இருப்பது தற்போது விவாதத்தை எழுப்பி இருக்கிறது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை தந்திருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 16 Jan 2026 8:17 am

Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது வரும் ஜனவரி 21-ம் தேதி முதல், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. டிரம்ப் அதாவது ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அல்ஜீரியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆர்மீனியா, பஹாமாஸ், வங்கதேசம், பார்படாஸ், பெலாரூஸ், பெலிஸ், பூட்டான், போஸ்னியா, பிரேசில், மியான்மர், கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, கொலம்பியா, கோட் டி'ஐவரி, கியூபா, காங்கோ ஜனநாயக குடியரசு, டொமினிகா, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, ஃபிஜி, காம்பியா, ஜார்ஜியா, கானா, கிரெனடா, குவாத்தமாலா, கினி, ஹைதி, ஈரான், ஈராக், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லைபீரியா, லிபியா, மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, மான்டனீக்ரோ, மொராக்கோ, நேபாளம், நிகரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ரஷ்யா, ருவாண்டா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், சியரா லியோன், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, உஸ்பெகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் இந்த தடையிலிருந்து, சுற்றுலா விசா, வணிக விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் பெறக்கூடிய குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளில் இருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன. அமெரிக்க மக்களின் செல்வத்தை இவர்கள் சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த தடை என்பது தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் சூழலிலும் பாகிஸ்தானையும் இந்த பட்டியலில் சேர்த்து இருப்பது தற்போது விவாதத்தை எழுப்பி இருக்கிறது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை தந்திருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 16 Jan 2026 8:17 am

திருடும் சம்பவங்கள் -Residential Break and Enters

Durham பிராந்தியத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகளில் உள்ளே நுழைந்து திருடும் சம்பவங்கள் (Residential The post திருடும் சம்பவங்கள் -Residential Break and Enters appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 16 Jan 2026 7:01 am

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இதற்கிடையே கடந்த  2019-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவார பாலகர்கள் சிலையில் உள்ள செம்புத் தகடுகள் மீது தங்கம் பதிக்கும் திருப்பணிக்கு உபயம் வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. மேலும், அந்தக் கவசங்களை பராமரிப்புப் பணி செய்து தருவதாகக்கூறி தேவசம்போர்டு அதிகாரிகள் முன்னிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி சென்னைக்கு கொண்டுசென்றார் உன்னிகிருஷ்ணன் போற்றி. ஹைகோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் விதிகளை மீறி தங்க கவசங்கள் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த கவசங்கள் சபரிமலை சன்னிதானத்துக்கு திரும்ப கொண்டுவரப்பட்டன. அப்போது அந்த தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விஜய் மல்லையா 1999-ம் ஆண்டு  ஏற்கனவே தங்கம் வழங்கிய நிலையில், மீண்டும் தங்கம் பதிக்க வேண்டிய அவசியம் என்ன? பழைய தங்கம் ஆவியாகிவிட்டதா என ஹைகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) அமைத்தது ஹைகோர்ட். கருவறையின் முன்பகுதியில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளின் செம்பு கவசங்கள் மீது பொதியப்பட்ட தங்கம் மற்றும் கருவறை திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டதாக சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்து தனித்தனியாக 2 வழக்குகள் பதிந்தது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய புள்ளிகள் குறித்து தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து தங்கம் சரியாக பராமரிக்காதது, அலுவலக புத்தகத்தை சரியாக பராமரிக்காதது உள்ளிட்ட தவறுகளை செய்ததாக சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர் முராரி பாபு அக்டோபர் 24-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். முன்னாள் எக்ஸிகியூட்டி ஆப்பீசர் சி.சுதீஷ்குமார் கடந்த நவம்பர் 1-ம் தேதியும்,  முன்னாள் திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ நவம்பர் 6-ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் தேவசம்போர்டு கமிஷனர் என்.வாசு நவம்பர் 11-ம் தேதி கைதானார். தொடர்ந்து முன்னாள் தேவசம்போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் நவம்பர் 20-ம் தேதி கைதானார். முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர் எஸ்.ஸ்ரீகுமார் டிசம்பர் மாதம் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். செம்புகவசத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த தங்கத்தகட்டை தனியாக பிரித்தெடுக்க உதவிய சென்னை ஸ்மார்ட் கிரியேசன் நிறுவன உரிமையாளர் பங்கஜ் பண்டாரி கடந்த டிசம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். சபரிமலையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை வாங்கிய கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தனும் அதே டிசம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது நகைக்கடையில் இருந்து சுமார்  நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் டிசம்பர் 29-ம் தேதி கைது செய்யப்பட்டார். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு ஜனவரி 9-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடைசியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் கே.பி.சங்கரதாஸ் நேற்று முன்தினம் (ஜனவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார். சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த கே.பி.சங்கரதாஸ் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சென்று கைது செய்துள்ளது சிறப்பு விசாரணைக்குழு. 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி நடைபெற்ற திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூட்டத்தில் தங்கம் பூசிய தகடு என குறிப்பிடப்பட்டதை பச்சை இங்க் பேனாவால் வெட்டி செம்புத்தகடு என திருத்தி உள்ளார் அன்றைய தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார். அதில் தேவசம்போர்டு உறுப்பினர்கள் விஜயகுமார் மற்றும் கே.பி.சங்கரதாஸ் ஆகியோர் கையெழுத்து போட்டுள்ளனர். உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் தங்க கவசங்களை கொடுத்து அனுப்புவதற்காக இந்த தீர்மானம் போடப்பட்டதாக சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்ததைத் தொடர்ந்தே, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பத்மகுமார், உறுப்பினர்களாக இருந்த விஜயகுமார், கே.பி.சங்கரதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019 காலக்கட்டத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், உறுப்பினர்கள் என ஒட்டுமொத்த குழுவும் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏ.பத்மகுமார் ஆளும் சி.பி.எம் கட்சியில் நேரடியாக பதவியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டார். விஜயகுமாரும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர். கே.பி.சங்கரதாஸ் சி.பி.ஐ கட்சியை சேர்ந்தவராவார். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைதான கே.பி.சங்கரதாஸ் இந்த வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், துவார பாலகர்களின் தங்க கவசங்களை சென்னைக்கு எடுத்துச் செல்வதத்கு அனுமதி அளிக்கும் ஃபைலில் தந்திரி கண்டரரு ராஜீவரரும் கையெழுத்து போட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தந்திரியை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த (ஜன.16) கோர்ட்டில் மனு அளிக்கப்பட உள்ளது. கைது செய்யப்பட்டாலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் தொடருகிறார் கே.பி.சங்கரதாஸ். நீதிபதிகள் மருத்துவமனைக்குச் சென்று கே.பி.சங்கரதாஸை ரிமாண்ட் செய்துள்ளனர். அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை மருத்துவர்கள் கே.பி.சங்கரதாஸை பரிசோதித்த பின்னர், அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கொள்ளை நடைபெற்ற காலகட்டத்தில் தேவசம்போர்டு அமைச்சராக இருந்த கடகம்பள்ளி சுரேந்திரனிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கும் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

விகடன் 16 Jan 2026 6:18 am

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இதற்கிடையே கடந்த  2019-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவார பாலகர்கள் சிலையில் உள்ள செம்புத் தகடுகள் மீது தங்கம் பதிக்கும் திருப்பணிக்கு உபயம் வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. மேலும், அந்தக் கவசங்களை பராமரிப்புப் பணி செய்து தருவதாகக்கூறி தேவசம்போர்டு அதிகாரிகள் முன்னிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி சென்னைக்கு கொண்டுசென்றார் உன்னிகிருஷ்ணன் போற்றி. ஹைகோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் விதிகளை மீறி தங்க கவசங்கள் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த கவசங்கள் சபரிமலை சன்னிதானத்துக்கு திரும்ப கொண்டுவரப்பட்டன. அப்போது அந்த தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விஜய் மல்லையா 1999-ம் ஆண்டு  ஏற்கனவே தங்கம் வழங்கிய நிலையில், மீண்டும் தங்கம் பதிக்க வேண்டிய அவசியம் என்ன? பழைய தங்கம் ஆவியாகிவிட்டதா என ஹைகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) அமைத்தது ஹைகோர்ட். கருவறையின் முன்பகுதியில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளின் செம்பு கவசங்கள் மீது பொதியப்பட்ட தங்கம் மற்றும் கருவறை திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டதாக சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்து தனித்தனியாக 2 வழக்குகள் பதிந்தது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய புள்ளிகள் குறித்து தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து தங்கம் சரியாக பராமரிக்காதது, அலுவலக புத்தகத்தை சரியாக பராமரிக்காதது உள்ளிட்ட தவறுகளை செய்ததாக சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர் முராரி பாபு அக்டோபர் 24-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். முன்னாள் எக்ஸிகியூட்டி ஆப்பீசர் சி.சுதீஷ்குமார் கடந்த நவம்பர் 1-ம் தேதியும்,  முன்னாள் திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ நவம்பர் 6-ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் தேவசம்போர்டு கமிஷனர் என்.வாசு நவம்பர் 11-ம் தேதி கைதானார். தொடர்ந்து முன்னாள் தேவசம்போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் நவம்பர் 20-ம் தேதி கைதானார். முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர் எஸ்.ஸ்ரீகுமார் டிசம்பர் மாதம் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். செம்புகவசத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த தங்கத்தகட்டை தனியாக பிரித்தெடுக்க உதவிய சென்னை ஸ்மார்ட் கிரியேசன் நிறுவன உரிமையாளர் பங்கஜ் பண்டாரி கடந்த டிசம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். சபரிமலையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை வாங்கிய கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தனும் அதே டிசம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது நகைக்கடையில் இருந்து சுமார்  நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் டிசம்பர் 29-ம் தேதி கைது செய்யப்பட்டார். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு ஜனவரி 9-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடைசியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் கே.பி.சங்கரதாஸ் நேற்று முன்தினம் (ஜனவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார். சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த கே.பி.சங்கரதாஸ் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சென்று கைது செய்துள்ளது சிறப்பு விசாரணைக்குழு. 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி நடைபெற்ற திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூட்டத்தில் தங்கம் பூசிய தகடு என குறிப்பிடப்பட்டதை பச்சை இங்க் பேனாவால் வெட்டி செம்புத்தகடு என திருத்தி உள்ளார் அன்றைய தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார். அதில் தேவசம்போர்டு உறுப்பினர்கள் விஜயகுமார் மற்றும் கே.பி.சங்கரதாஸ் ஆகியோர் கையெழுத்து போட்டுள்ளனர். உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் தங்க கவசங்களை கொடுத்து அனுப்புவதற்காக இந்த தீர்மானம் போடப்பட்டதாக சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்ததைத் தொடர்ந்தே, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பத்மகுமார், உறுப்பினர்களாக இருந்த விஜயகுமார், கே.பி.சங்கரதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019 காலக்கட்டத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், உறுப்பினர்கள் என ஒட்டுமொத்த குழுவும் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏ.பத்மகுமார் ஆளும் சி.பி.எம் கட்சியில் நேரடியாக பதவியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டார். விஜயகுமாரும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர். கே.பி.சங்கரதாஸ் சி.பி.ஐ கட்சியை சேர்ந்தவராவார். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைதான கே.பி.சங்கரதாஸ் இந்த வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், துவார பாலகர்களின் தங்க கவசங்களை சென்னைக்கு எடுத்துச் செல்வதத்கு அனுமதி அளிக்கும் ஃபைலில் தந்திரி கண்டரரு ராஜீவரரும் கையெழுத்து போட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தந்திரியை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த (ஜன.16) கோர்ட்டில் மனு அளிக்கப்பட உள்ளது. கைது செய்யப்பட்டாலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் தொடருகிறார் கே.பி.சங்கரதாஸ். நீதிபதிகள் மருத்துவமனைக்குச் சென்று கே.பி.சங்கரதாஸை ரிமாண்ட் செய்துள்ளனர். அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை மருத்துவர்கள் கே.பி.சங்கரதாஸை பரிசோதித்த பின்னர், அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கொள்ளை நடைபெற்ற காலகட்டத்தில் தேவசம்போர்டு அமைச்சராக இருந்த கடகம்பள்ளி சுரேந்திரனிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கும் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

விகடன் 16 Jan 2026 6:18 am

இந்திய பொருளாதாரத்துக்குக் காத்திருக்கும் சவால்கள்... முதலீட்டாளர்களே, நிதி முடிவுகளில் தேவை கவனம்!

இந்தியப் பொருளாதாரம் மீதும், இந்திய முதலீட்டுச் சந்தையின் மீதும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறினாலும், தொடர்ந்து அதிகரித்துவரும் உள்நாட்டு முதலீடுகளே அதற்குச் சான்று. காரணம், இந்தியப் பொருளாதாரம் சார்ந்து சொல்லப்படும் தகவல்கள் நம்பிக்கையூட்டும் வகையில் இருப்பதே. உச்சத்தில் உள்ள பங்குச் சந்தை, சிகரத்தைத் தொடும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, வலுவாக உள்ள நுகர்வு வளர்ச்சி, குறைவான வட்டி விகிதம், அதிகரிக்கும் கார் விற்பனை, வணிக வளாகங்களில் நிரம்பும் மக்கள் கூட்டம்... இவையெல்லாம் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக நம்மை உற்சாகப்படுத்தி வருகின்றன. ஆனால், இந்த உற்சாகத்துக்குப் பின்னால் சில கட்டமைப்பு ஆபத்துகள் மறைந்திருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நமக்குச் சொல்லப்படுவதற்கும், நடைமுறை யதார்த்தத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்துக்கு இருக்கும் சில அபாயகரமான சவால்களை, முதலீட்டாளர்கள் அறிய வேண்டியது அவசியமாகிறது. முதலாவது, அரசுக் கடன். ஐ.எம்.எஃப் கணக்குப்படி, இந்தியாவின் கடன் ஒட்டுமொத்த ஜிடிபியில் 80%-ஐ தாண்டியுள்ளது. மேலும், கடனுக்கான வட்டி, மானியங்கள், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் ஆகியவை அரசு வருவாயின் 83%-ஐ எடுத்துக்கொள்கின்றன. வருவாய் ஆதாரங்களும் குறையத் தொடங்கியிருக்கின்றன. டிசம்பரில் நிகர ஜி.எஸ்.டி வசூல் வெறும் 2.2% வளர்ச்சியே கண்டிருக்கிறது. பல மாநிலங்களில் வருவாய்த் தேக்கம் தென்படுகிறது. இப்படியாக கடன் அதிகரிப்பு, வருவாய் வளர்ச்சி குறைவு போன்றவை தொடர்ந்தால், அரசு மூலதனச் செலவினங்களைக் (Capex) குறைக்கும். சமீப ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்ததும், காப்பாற்றியதும் அரசு செலவினங்கள்தான். அது குறைக்கப்பட்டால், நாட்டின் ஜிடிபி வளர்ச்சியே பாதிக்கப்படும். இந்நிலையில், மத்திய - மாநில அரசுகளின் தேர்தல் அறிவிப்புகள் பலவும் செலவுகளையும், கடன்களையும் மேலும் உயர்த்தும் அபாயமும் உள்ளது. இரண்டாவது நெருக்கடி, குடும்பச் சேமிப்புகளின் வீழ்ச்சி. இந்தியாவின் பலமே குடும்பச் சேமிப்புகள்தான். ஆனால், அது ஜிடிபியில் 10%-லிருந்து 7%-ஆகக் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பும், ஊதியங்களும் தேங்கியிருப்பதே இதற்குக் காரணம். மூன்றாவது, சர்வதேச அரசியல் சூழல்களால் ஏற்படும் அபாயங்கள். குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி நடவடிக்கைகளால், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தின் வளர்ச்சியே கேள்விக்குறி ஆகியிருக்கிறது. இப்படியாக, நாட்டின் பொருளாதாரத்திலும், முதலீட்டுச் சந்தையிலும் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்த பல காரணிகள் தயாராக இருக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, நாட்டின் வளர்ச்சி குறித்த கருத்துகள், தங்கம், வெள்ளி பற்றிய தகவல்களை அப்படியே நம்பக்கூடாது. ‘அஸெட் அலொகேஷன்’ உத்தி மூலம், நீண்டகால இலக்குடன் திட்டமிடுவதே, நம் பணத்துக்குப் பாதுகாப்பு. முதலீட்டு முடிவுகளை... ஆராய்ந்து எடுப்போம்! - ஆசிரியர்

விகடன் 16 Jan 2026 5:58 am

இந்திய பொருளாதாரத்துக்குக் காத்திருக்கும் சவால்கள்... முதலீட்டாளர்களே, நிதி முடிவுகளில் தேவை கவனம்!

இந்தியப் பொருளாதாரம் மீதும், இந்திய முதலீட்டுச் சந்தையின் மீதும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறினாலும், தொடர்ந்து அதிகரித்துவரும் உள்நாட்டு முதலீடுகளே அதற்குச் சான்று. காரணம், இந்தியப் பொருளாதாரம் சார்ந்து சொல்லப்படும் தகவல்கள் நம்பிக்கையூட்டும் வகையில் இருப்பதே. உச்சத்தில் உள்ள பங்குச் சந்தை, சிகரத்தைத் தொடும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, வலுவாக உள்ள நுகர்வு வளர்ச்சி, குறைவான வட்டி விகிதம், அதிகரிக்கும் கார் விற்பனை, வணிக வளாகங்களில் நிரம்பும் மக்கள் கூட்டம்... இவையெல்லாம் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக நம்மை உற்சாகப்படுத்தி வருகின்றன. ஆனால், இந்த உற்சாகத்துக்குப் பின்னால் சில கட்டமைப்பு ஆபத்துகள் மறைந்திருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நமக்குச் சொல்லப்படுவதற்கும், நடைமுறை யதார்த்தத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்துக்கு இருக்கும் சில அபாயகரமான சவால்களை, முதலீட்டாளர்கள் அறிய வேண்டியது அவசியமாகிறது. முதலாவது, அரசுக் கடன். ஐ.எம்.எஃப் கணக்குப்படி, இந்தியாவின் கடன் ஒட்டுமொத்த ஜிடிபியில் 80%-ஐ தாண்டியுள்ளது. மேலும், கடனுக்கான வட்டி, மானியங்கள், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் ஆகியவை அரசு வருவாயின் 83%-ஐ எடுத்துக்கொள்கின்றன. வருவாய் ஆதாரங்களும் குறையத் தொடங்கியிருக்கின்றன. டிசம்பரில் நிகர ஜி.எஸ்.டி வசூல் வெறும் 2.2% வளர்ச்சியே கண்டிருக்கிறது. பல மாநிலங்களில் வருவாய்த் தேக்கம் தென்படுகிறது. இப்படியாக கடன் அதிகரிப்பு, வருவாய் வளர்ச்சி குறைவு போன்றவை தொடர்ந்தால், அரசு மூலதனச் செலவினங்களைக் (Capex) குறைக்கும். சமீப ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்ததும், காப்பாற்றியதும் அரசு செலவினங்கள்தான். அது குறைக்கப்பட்டால், நாட்டின் ஜிடிபி வளர்ச்சியே பாதிக்கப்படும். இந்நிலையில், மத்திய - மாநில அரசுகளின் தேர்தல் அறிவிப்புகள் பலவும் செலவுகளையும், கடன்களையும் மேலும் உயர்த்தும் அபாயமும் உள்ளது. இரண்டாவது நெருக்கடி, குடும்பச் சேமிப்புகளின் வீழ்ச்சி. இந்தியாவின் பலமே குடும்பச் சேமிப்புகள்தான். ஆனால், அது ஜிடிபியில் 10%-லிருந்து 7%-ஆகக் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பும், ஊதியங்களும் தேங்கியிருப்பதே இதற்குக் காரணம். மூன்றாவது, சர்வதேச அரசியல் சூழல்களால் ஏற்படும் அபாயங்கள். குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி நடவடிக்கைகளால், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தின் வளர்ச்சியே கேள்விக்குறி ஆகியிருக்கிறது. இப்படியாக, நாட்டின் பொருளாதாரத்திலும், முதலீட்டுச் சந்தையிலும் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்த பல காரணிகள் தயாராக இருக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, நாட்டின் வளர்ச்சி குறித்த கருத்துகள், தங்கம், வெள்ளி பற்றிய தகவல்களை அப்படியே நம்பக்கூடாது. ‘அஸெட் அலொகேஷன்’ உத்தி மூலம், நீண்டகால இலக்குடன் திட்டமிடுவதே, நம் பணத்துக்குப் பாதுகாப்பு. முதலீட்டு முடிவுகளை... ஆராய்ந்து எடுப்போம்! - ஆசிரியர்

விகடன் 16 Jan 2026 5:58 am