SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

34    C
...

Spain: ஈரான் போரில் அமெரிக்காவிற்கு 'நோ'சொல்லும் ஒரே ஐரோப்ப நாடு - காரணமோ 'சூப்பர்'

'நாங்கள்... நாங்கள்' என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்ப நாடுகள் ஈரான் போரில் அமெரிக்கா உடன் இணைய ரெடியாக இருக்கின்றன. ஆனால், இதில் ஸ்பெயின் மட்டும் விதிவிலக்காக அமெரிக்காவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. என்ன பிரச்னை? ஆறாவது நாளாக ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் ஸ்பெயினின் ரோட்டா கடற்படைத் தளம் மற்றும் மோரோன் விமானத் தளத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்டது. ஆனால், அதை ஸ்பெயின் அரசு அதிகாரப்பூர்வமாகவே மறுத்துள்ளது. ஸ்பெயினின் இந்தப் பதில் நிச்சயம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பிடிக்காது என்பது நம் அனைவருக்கு தெரிந்தது தான். அதனால் தான், இப்போது ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே விரிசல் உண்டாகி உள்ளது. ட்ரம்ப் IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை' இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா ஏன் ஸ்பெயின் மறுத்தது? ஸ்பெயினின் அடிப்படைக் கொள்கையே போருக்கு 'நோ'. இதை மீறுவதற்கு ஸ்பெயின் தயாராக இல்லை. அதனால், ஸ்பெயின் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. ட்ரம்ப் மிரட்டல் ஸ்பெயின் 'நோ' சொல்லிவிட்டால், ட்ரம்ப் சும்மா இருப்பாரா என்ன... அவர் அவரது வேலையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். ஸ்பெயின் உடன் இருக்கும் அனைத்து வர்த்தகங்களையும் ரத்து செய்யப்படும் என்று மிரட்டியிருக்கிறார் ட்ரம்ப். ஒருவேளை, இதை ட்ரம்ப் செய்தால் ஸ்பெயினுக்குப் பெரிய அடியாக இருக்கும். காரணம், ஸ்பெயினின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவிகிதம் அமெரிக்காவிற்குச் செல்கிறது. ஆக, ஸ்பெயின் ட்ரம்பின் வழிக்கு வருமா... ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதலுக்கு வேறு வழியைப் பார்ப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 'இந்த' முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்

விகடன் 5 Mar 2026 2:13 pm

Spain: ஈரான் போரில் அமெரிக்காவிற்கு 'நோ'சொல்லும் ஒரே ஐரோப்ப நாடு - காரணமோ 'சூப்பர்'

'நாங்கள்... நாங்கள்' என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்ப நாடுகள் ஈரான் போரில் அமெரிக்கா உடன் இணைய ரெடியாக இருக்கின்றன. ஆனால், இதில் ஸ்பெயின் மட்டும் விதிவிலக்காக அமெரிக்காவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. என்ன பிரச்னை? ஆறாவது நாளாக ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் ஸ்பெயினின் ரோட்டா கடற்படைத் தளம் மற்றும் மோரோன் விமானத் தளத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்டது. ஆனால், அதை ஸ்பெயின் அரசு அதிகாரப்பூர்வமாகவே மறுத்துள்ளது. ஸ்பெயினின் இந்தப் பதில் நிச்சயம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பிடிக்காது என்பது நம் அனைவருக்கு தெரிந்தது தான். அதனால் தான், இப்போது ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே விரிசல் உண்டாகி உள்ளது. ட்ரம்ப் IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை' இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா ஏன் ஸ்பெயின் மறுத்தது? ஸ்பெயினின் அடிப்படைக் கொள்கையே போருக்கு 'நோ'. இதை மீறுவதற்கு ஸ்பெயின் தயாராக இல்லை. அதனால், ஸ்பெயின் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. ட்ரம்ப் மிரட்டல் ஸ்பெயின் 'நோ' சொல்லிவிட்டால், ட்ரம்ப் சும்மா இருப்பாரா என்ன... அவர் அவரது வேலையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். ஸ்பெயின் உடன் இருக்கும் அனைத்து வர்த்தகங்களையும் ரத்து செய்யப்படும் என்று மிரட்டியிருக்கிறார் ட்ரம்ப். ஒருவேளை, இதை ட்ரம்ப் செய்தால் ஸ்பெயினுக்குப் பெரிய அடியாக இருக்கும். காரணம், ஸ்பெயினின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவிகிதம் அமெரிக்காவிற்குச் செல்கிறது. ஆக, ஸ்பெயின் ட்ரம்பின் வழிக்கு வருமா... ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதலுக்கு வேறு வழியைப் பார்ப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 'இந்த' முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்

விகடன் 5 Mar 2026 2:13 pm

ஈரான் மீதான தாக்குதல்: இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துகிறதா அமெரிக்கா? - உண்மை என்ன?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு எதிர்த்தாக்குதல்களும் நடந்துவருகின்றன. அதனால் மத்தியக் கிழக்கு நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா தக்குதல் நடத்தியதும் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் முன்னாள் கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் அமெரிக்கா செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``எங்கள் தளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எங்கள் துறைமுக நிறுவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியா: அமெரிக்க வெளியுறவுத்துறை நாங்கள் உண்மையில் இந்தியா மற்றும் இந்திய துறைமுகங்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இது சிறந்த முன்னெடுப்பல்ல எனக் கடற்படை சொல்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். ராணுவ கர்னலின் இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்திருக்கிறது. வெளியுறவு அமைச்சக உண்மை சரிபார்ப்பு பக்கம், ``அமெரிக்க கடற்படையால் இந்திய துறைமுகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சேனலான OAN இல் கூறப்படும் கூற்றுக்கள் போலியானவை, தவறானவை. இது போன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துகளுக்கு எதிராக எச்சரிக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அணு ஆயுதமா... ஆட்சி மாற்றமா... ஈரான் போர்... இந்தியாவுக்கு என்னவாகும்?

விகடன் 5 Mar 2026 1:58 pm

ஈரான் மீதான தாக்குதல்: இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துகிறதா அமெரிக்கா? - உண்மை என்ன?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு எதிர்த்தாக்குதல்களும் நடந்துவருகின்றன. அதனால் மத்தியக் கிழக்கு நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா தக்குதல் நடத்தியதும் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் முன்னாள் கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் அமெரிக்கா செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``எங்கள் தளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எங்கள் துறைமுக நிறுவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியா: அமெரிக்க வெளியுறவுத்துறை நாங்கள் உண்மையில் இந்தியா மற்றும் இந்திய துறைமுகங்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இது சிறந்த முன்னெடுப்பல்ல எனக் கடற்படை சொல்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். ராணுவ கர்னலின் இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்திருக்கிறது. வெளியுறவு அமைச்சக உண்மை சரிபார்ப்பு பக்கம், ``அமெரிக்க கடற்படையால் இந்திய துறைமுகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சேனலான OAN இல் கூறப்படும் கூற்றுக்கள் போலியானவை, தவறானவை. இது போன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துகளுக்கு எதிராக எச்சரிக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அணு ஆயுதமா... ஆட்சி மாற்றமா... ஈரான் போர்... இந்தியாவுக்கு என்னவாகும்?

விகடன் 5 Mar 2026 1:58 pm

ஈரான் vs அமெரிக்கா: ஈரானின் ரஷ்யப் போர் உத்தியால் அமெரிக்காவுக்கு என்ன சிக்கல்? | Analysis

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சனிக்கிழமையன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் துல்லியமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பதிலடியாக ஈரான் ஏவி வரும் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தற்காப்பு அரண்களைப் பலவீனப்படுத்தி வருகின்றன என்ற செய்தியும் வெளியாகி வருகிறது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஈரானின் உத்தி ஈரானின் ‘ஷாஹித்-136’ (Shahed-136) ரக தற்கொலை படை ட்ரோன்கள், சிறிய ரக க்ரூஸ் ஏவுகணைகளுடன் இணைந்து சவூதி அரேபியா முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரையிலான அமெரிக்கத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி வருகின்றன. அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள் இந்த ட்ரோன்களை 90% வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தினாலும், இதில் ஒரு பாரிய பொருளாதாரச் சிக்கல் இருக்கிறது. ஈரான் பயன்படுத்தும் ஷாஹித் ட்ரோன்கள் மிகவும் எளிமையானவை. அவற்றின் ஒரு யூனிட் விலை சுமார் $20,000 (சுமார் ₹17 லட்சம்) மட்டுமே. ஆனால், அமெரிக்கா இதைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தும் பேட்ரியாட் ஏவுகணையின் விலை $4,000,000. ஈரானின் ஒரு மலிவான ட்ரோனை அழிக்க, அமெரிக்கா 200 மடங்கு அதிகப் பணத்தைச் செலவிடுகிறது. இதை 'செலவு-பயன் முரண்பாடு' (Cost-Benefit Asymmetry) என்று ராணுவ ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, எதிராளியை வீழ்த்த நீங்கள் செலவிடும் தொகையை விட, அந்தத் தாக்குதலைத் தடுக்க எதிராளி செலவிடும் தொகை பல மடங்கு அதிகமாக இருக்கும்படி செய்வதுதான் இந்த உத்தி. உழைப்புச் சுரண்டல் இன்னொருபக்கம் இந்த அதிநவீன ஏவுகணைகளைத் தயாரிப்பது மிகவும் கடினம். அமெரிக்காவால் ஒரு ஆண்டில் சில நூறு பேட்ரியாட் ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்க முடியும். ஆனால், ஈரான் அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் மிக எளிமையான பாகங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான ட்ரோன்களைத் தொழிற்சாலைகளில் வேகமாகத் தயாரிக்க முடியும். ஈரான் மீதான தாக்குதல் எனவே, மலிவான ட்ரோன்களை அழிக்க, விலை உயர்ந்த ஏவுகணைகள் தீர்ந்துபோகும். ஒரு கட்டத்தில் அமெரிக்க, இஸ்ரேல் படைகள் ஏவுகணைகளை குறைந்த அளவில் தான் பயன்படுத்த முடியும் என்ற நிலை வரும் போது, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தலாம். அப்போது அதைத் தடுக்க தற்காப்பு ஏவுகணைகள் கையிருப்பு குறைவாக இருக்கலாம். எனவே, புதிய தற்காப்பு ஏவுகணைகளை உருவாக்க நேரமும், உழைப்பும், பொருளாதாரமும் செலவாகும். உக்ரைன் போரில் ரஷ்யா இந்த உத்தியைத்தான் பயன்படுத்தியது. ரஷ்யா நூற்றுக்கணக்கான ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை உக்ரைன் நகரங்கள் மீது ஏவியது. உக்ரைன் தனது விலை உயர்ந்த மேலைநாட்டு ஏவுகணைகளைப் பயன்படுத்தி அவற்றைத் தடுத்தது. ஒரு கட்டத்தில் உக்ரைனிடம் ஏவுகணைகள் தீரத் தொடங்கியதால், ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனின் மின் நிலையங்களை எளிதாகத் தாக்க முடிந்தது. இதையேதான் இப்போது ஈரானும் அமெரிக்காவிற்கு எதிராகச் செய்ய முயல்கிறது. ஆயுத பலத்தில் உக்ரேனையும் அமெரிக்காவையும் ஒரே தட்டில் வைத்து எடைபோட முடியாது தான் என்றாலும், அமெரிக்காவுக்கு இதா மாதிரி தாக்குதல் தொடரும் பட்சத்தில் அது நிச்சயம் பொருளாதாக சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது,. தவிக்கும் அமெரிக்க நட்பு நாடுகள் இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் ஈரானின் இந்தத் தீவிர மோதலால் வளைகுடா நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட உள்நாட்டு ஆய்வின்படி, `கத்தார் நாட்டின் வசம் உள்ள பேட்ரியாட் ஏவுகணைகளின் இருப்பு, தற்போதைய தாக்குதல் வேகத்தில் போனால் இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்' எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கத்தார் சர்வதேச ஊடக தொடர்பு நிறுவனம் இதை மறுத்துள்ளதுடன், தங்கள் வசம் போதுமான ஏவுகணைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதே நேரம் கத்தார் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது. தலைமை இல்லாத ஈரான் ராணுவம் சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது ஈரான் ராணுவத்தின் செயல்பாடுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், ``எங்கள் ராணுவப் பிரிவுகள் இப்போது தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. முன்னரே வழங்கப்பட்ட பொதுவான வழிகாட்டுதல்களின்படி அவர்கள் சுயாதீனமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் எனத் தெரித்திருக்கிறார். இது போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ட்ரம்ப் இஸ்ரேலின் நிலைப்பாடு ஈரானின் தாக்குதல் குறித்து பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையின் அமைச்சர் ஏலி கோஹன், ``இதுவரை ஈரானின் 150 ஏவுகணை ஏவுதளங்களை அழித்துள்ளோம். இனியும் ஈரானின் தாக்குதலை மட்டுப்படுத்த ஏவுகணைகள் வெளியே வரும் சுரங்கப் பாதைகளை மூடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. என்றார். அமெரிக்கத் தரப்பில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் எனக் கணித்திருந்தாலும், `அவ்வளவு காலத்திற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா இன்னும் போர் நடக்கும் பகுதிக்குக் கொண்டு வரவில்லை என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான கேள்விக்கு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், ``ஈரானுடன் நடந்துவரும் போர், இது ஈராக் போர் போன்ற முடிவில்லாத போர் அல்ல என்று கூறியதன் மூலம் போர் விரைவான முடிவைத் தேடுவதைச் சூசகமாக உணர்த்தியுள்ளார். ஈரானைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு மோதலுக்குப் பிறகு அதன் வசம் 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா தினமும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்து வருவதால், ஈரானிடம் ட்ரோன்களின் இருப்பு மிக அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நெதன்யாகு தொழில்நுட்பத் தீர்வும் தற்போதைய நிலையும் விலை உயர்ந்த ஏவுகணைகளைச் சேமிக்க, அமெரிக்கா தனது போர் விமானங்களைக் கொண்டு ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தி வருகிறது. இஸ்ரேலின் லேசர் தற்காப்பு அமைப்பு இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும் எனக் கருதப்பட்டாலும், அது இன்னும் போர்க்களத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஈரானின் நவீன ரஷ்யத் தயாரிப்பு S-300 ஏவுகணைத் தளங்கள் ஏற்கனவே அமெரிக்காவால் அழிக்கப்பட்டுவிட்டதால், ஈரானால் தன் நாட்டை தற்காத்துக்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. தற்போதைய சூழலில், ஈரான் தனது ட்ரோன் தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் காலி செய்ய முயல்கிறது. இந்த தேய்மான உத்தி வெற்றி பெற்றால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்கும் என கருதுகிறார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் இரு தரப்பிலும் ஆயுதங்கள் குறையும் போது போர் ஒரு தேக்க நிலையை அடையக்கூடும் என கார்னகி சர்வதேச அமைதி அறக்கட்டளையின் ஆய்வாளர் அங்கித் பாண்டா தெரிவித்துள்ளார்.! ஈரான் போருக்கு அமெரிக்கா செலவு செய்யும் பெருந்தொகை; சிதையும் ஏழை மக்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்!

விகடன் 5 Mar 2026 1:53 pm

ஈரான் vs அமெரிக்கா: ஈரானின் ரஷ்யப் போர் உத்தியால் அமெரிக்காவுக்கு என்ன சிக்கல்? | Analysis

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சனிக்கிழமையன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் துல்லியமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பதிலடியாக ஈரான் ஏவி வரும் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தற்காப்பு அரண்களைப் பலவீனப்படுத்தி வருகின்றன என்ற செய்தியும் வெளியாகி வருகிறது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஈரானின் உத்தி ஈரானின் ‘ஷாஹித்-136’ (Shahed-136) ரக தற்கொலை படை ட்ரோன்கள், சிறிய ரக க்ரூஸ் ஏவுகணைகளுடன் இணைந்து சவூதி அரேபியா முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரையிலான அமெரிக்கத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி வருகின்றன. அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள் இந்த ட்ரோன்களை 90% வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தினாலும், இதில் ஒரு பாரிய பொருளாதாரச் சிக்கல் இருக்கிறது. ஈரான் பயன்படுத்தும் ஷாஹித் ட்ரோன்கள் மிகவும் எளிமையானவை. அவற்றின் ஒரு யூனிட் விலை சுமார் $20,000 (சுமார் ₹17 லட்சம்) மட்டுமே. ஆனால், அமெரிக்கா இதைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தும் பேட்ரியாட் ஏவுகணையின் விலை $4,000,000. ஈரானின் ஒரு மலிவான ட்ரோனை அழிக்க, அமெரிக்கா 200 மடங்கு அதிகப் பணத்தைச் செலவிடுகிறது. இதை 'செலவு-பயன் முரண்பாடு' (Cost-Benefit Asymmetry) என்று ராணுவ ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, எதிராளியை வீழ்த்த நீங்கள் செலவிடும் தொகையை விட, அந்தத் தாக்குதலைத் தடுக்க எதிராளி செலவிடும் தொகை பல மடங்கு அதிகமாக இருக்கும்படி செய்வதுதான் இந்த உத்தி. உழைப்புச் சுரண்டல் இன்னொருபக்கம் இந்த அதிநவீன ஏவுகணைகளைத் தயாரிப்பது மிகவும் கடினம். அமெரிக்காவால் ஒரு ஆண்டில் சில நூறு பேட்ரியாட் ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்க முடியும். ஆனால், ஈரான் அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் மிக எளிமையான பாகங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான ட்ரோன்களைத் தொழிற்சாலைகளில் வேகமாகத் தயாரிக்க முடியும். ஈரான் மீதான தாக்குதல் எனவே, மலிவான ட்ரோன்களை அழிக்க, விலை உயர்ந்த ஏவுகணைகள் தீர்ந்துபோகும். ஒரு கட்டத்தில் அமெரிக்க, இஸ்ரேல் படைகள் ஏவுகணைகளை குறைந்த அளவில் தான் பயன்படுத்த முடியும் என்ற நிலை வரும் போது, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தலாம். அப்போது அதைத் தடுக்க தற்காப்பு ஏவுகணைகள் கையிருப்பு குறைவாக இருக்கலாம். எனவே, புதிய தற்காப்பு ஏவுகணைகளை உருவாக்க நேரமும், உழைப்பும், பொருளாதாரமும் செலவாகும். உக்ரைன் போரில் ரஷ்யா இந்த உத்தியைத்தான் பயன்படுத்தியது. ரஷ்யா நூற்றுக்கணக்கான ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை உக்ரைன் நகரங்கள் மீது ஏவியது. உக்ரைன் தனது விலை உயர்ந்த மேலைநாட்டு ஏவுகணைகளைப் பயன்படுத்தி அவற்றைத் தடுத்தது. ஒரு கட்டத்தில் உக்ரைனிடம் ஏவுகணைகள் தீரத் தொடங்கியதால், ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனின் மின் நிலையங்களை எளிதாகத் தாக்க முடிந்தது. இதையேதான் இப்போது ஈரானும் அமெரிக்காவிற்கு எதிராகச் செய்ய முயல்கிறது. ஆயுத பலத்தில் உக்ரேனையும் அமெரிக்காவையும் ஒரே தட்டில் வைத்து எடைபோட முடியாது தான் என்றாலும், அமெரிக்காவுக்கு இதா மாதிரி தாக்குதல் தொடரும் பட்சத்தில் அது நிச்சயம் பொருளாதாக சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது,. தவிக்கும் அமெரிக்க நட்பு நாடுகள் இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் ஈரானின் இந்தத் தீவிர மோதலால் வளைகுடா நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட உள்நாட்டு ஆய்வின்படி, `கத்தார் நாட்டின் வசம் உள்ள பேட்ரியாட் ஏவுகணைகளின் இருப்பு, தற்போதைய தாக்குதல் வேகத்தில் போனால் இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்' எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கத்தார் சர்வதேச ஊடக தொடர்பு நிறுவனம் இதை மறுத்துள்ளதுடன், தங்கள் வசம் போதுமான ஏவுகணைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதே நேரம் கத்தார் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது. தலைமை இல்லாத ஈரான் ராணுவம் சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது ஈரான் ராணுவத்தின் செயல்பாடுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், ``எங்கள் ராணுவப் பிரிவுகள் இப்போது தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. முன்னரே வழங்கப்பட்ட பொதுவான வழிகாட்டுதல்களின்படி அவர்கள் சுயாதீனமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் எனத் தெரித்திருக்கிறார். இது போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ட்ரம்ப் இஸ்ரேலின் நிலைப்பாடு ஈரானின் தாக்குதல் குறித்து பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையின் அமைச்சர் ஏலி கோஹன், ``இதுவரை ஈரானின் 150 ஏவுகணை ஏவுதளங்களை அழித்துள்ளோம். இனியும் ஈரானின் தாக்குதலை மட்டுப்படுத்த ஏவுகணைகள் வெளியே வரும் சுரங்கப் பாதைகளை மூடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. என்றார். அமெரிக்கத் தரப்பில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் எனக் கணித்திருந்தாலும், `அவ்வளவு காலத்திற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா இன்னும் போர் நடக்கும் பகுதிக்குக் கொண்டு வரவில்லை என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான கேள்விக்கு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், ``ஈரானுடன் நடந்துவரும் போர், இது ஈராக் போர் போன்ற முடிவில்லாத போர் அல்ல என்று கூறியதன் மூலம் போர் விரைவான முடிவைத் தேடுவதைச் சூசகமாக உணர்த்தியுள்ளார். ஈரானைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு மோதலுக்குப் பிறகு அதன் வசம் 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா தினமும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்து வருவதால், ஈரானிடம் ட்ரோன்களின் இருப்பு மிக அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நெதன்யாகு தொழில்நுட்பத் தீர்வும் தற்போதைய நிலையும் விலை உயர்ந்த ஏவுகணைகளைச் சேமிக்க, அமெரிக்கா தனது போர் விமானங்களைக் கொண்டு ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தி வருகிறது. இஸ்ரேலின் லேசர் தற்காப்பு அமைப்பு இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும் எனக் கருதப்பட்டாலும், அது இன்னும் போர்க்களத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஈரானின் நவீன ரஷ்யத் தயாரிப்பு S-300 ஏவுகணைத் தளங்கள் ஏற்கனவே அமெரிக்காவால் அழிக்கப்பட்டுவிட்டதால், ஈரானால் தன் நாட்டை தற்காத்துக்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. தற்போதைய சூழலில், ஈரான் தனது ட்ரோன் தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் காலி செய்ய முயல்கிறது. இந்த தேய்மான உத்தி வெற்றி பெற்றால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்கும் என கருதுகிறார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் இரு தரப்பிலும் ஆயுதங்கள் குறையும் போது போர் ஒரு தேக்க நிலையை அடையக்கூடும் என கார்னகி சர்வதேச அமைதி அறக்கட்டளையின் ஆய்வாளர் அங்கித் பாண்டா தெரிவித்துள்ளார்.! ஈரான் போருக்கு அமெரிக்கா செலவு செய்யும் பெருந்தொகை; சிதையும் ஏழை மக்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்!

விகடன் 5 Mar 2026 1:53 pm

IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை'இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் வளைகுடா நாடுகளைத் தாண்டி இலங்கைக்கு அருகே வரை வந்துள்ளது. என்ன நடந்தது? ``நேற்று (மார்ச் 4) இலங்கையின் தெற்குக் கடற்கரை பகுதியில் இருந்துள்ளது ஈரானிய கடற்படை போர்க்கப்பலான IRIS தேனா. இந்தக் கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் தாக்கும் ஏவுகணையான டார்பிடோவை ஏவி மூழ்கடித்துள்ளது. இந்தக் கப்பலில் எத்தனை பேர் இருந்தனர்? IRIS தேனா போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 180 பேர் இருந்துள்ளனர். இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 87 பேரின் உடலை இலங்கைக் கடற்படை மீட்டுள்ளனர். 32 பேர் இலங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். IRIS Dena 'இந்த' முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர் ஈரான் போர்க்கப்பல் இலங்கை கடற்பகுதிக்கு எப்படி வந்தது? ``கடந்த மாதம், இந்தியா விசாகப்பட்டினத்தில், 'MILAN 2026' என்கிற மிகப்பெரிய கப்பற்படைப் பயிற்சி ஒன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பல நாடுகளில் ஈரானும் ஒன்று. ஈரான் சார்பாகக் கலந்துகொண்ட போர்க்கப்பல் தான் IRIS தேனா. இலங்கையில் இந்தத் தாக்குதலா? ``IRIS தேனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது இலங்கை கடற்பகுதிக்கு அருகே தானே தவிர, இலங்கைக் கடற்பகுதியில் இல்லை. அமெரிக்கா இந்தக் கப்பலை இலங்கை அருகே இருக்கும் சர்வதேசக் கடற்பகுதியில் தான் தாக்கியிருக்கிறது. ஆனால், மீட்புப்பணிகளை இலங்கை கடற்படை பார்த்து வருகிறது. இந்தக் கப்பல் தாக்குதல் குறித்த அமெரிக்கா சொல்வதென்ன? அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் தலைமையகம் 'பென்டகன்'. ஈரானின் போர்க்கப்பலை மூழ்கடித்துள்ளதைக் குறித்து பென்டகன் கூறியுள்ளதாவது... 'இரண்டாம் உலகப் போருக்குப் பின், எதிரி மீது இந்த மாதிரியான தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை'. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஈரான் போர்: ட்ரம்ப்பிற்கு எதிராக செனட் சபையில் தீர்மானம்; அமெரிக்க அரசியலமைப்பு சொல்வது என்ன? ஈரானின் பதிலடி என்ன? ``ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் உள்ள கடலில் அமெரிக்கா அட்டூழியத்தைச் செய்துள்ளது. கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஃபிரிகேட் தேனா, சர்வதேச நீரில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது. எனது வார்த்தைகளைக் கவனியுங்கள் - அமெரிக்கா தான் அமைத்த முன்னுதாரணத்திற்காகக் கடுமையாக வருத்தப்பட வேண்டியிருக்கும். ஈரான் போர் நீடித்தால் இந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன?!

விகடன் 5 Mar 2026 12:52 pm

`ஊர் திருச்சி; 4 மாநிலங்களுக்கு பொறுப்பு' - காங்கிரஸ் ராஜ்ய சபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் பின்னணி

தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வரும் மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் தி.மு.க 4 மாநிலங்களவை எம்.பி-க்களையும், அ.தி.மு.க 2 எம்.பிக்களையும் தேர்ந்தெடுக்க முடியும். அந்த வகையில், தி.மு.க-க்கு மொத்தமுள்ள 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களில், தே.மு.தி.க-வுக்கு 1 இடமும், காங்கிரஸூக்கு ஒரு இடமும் வழங்கியுள்ளது. தி.மு.க-வில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தே.மு.தி.க சார்பில் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசர், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், ராஜ்யசபா எம்.பி பதவியைப் பெற முயற்சித்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் அதிக அறிமுகம் இல்லாத கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் கிறிஸ்டோபர் திலக். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவராக உள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மகன். பொறியாளர். வெளிநாடுகளில் ஆடை வடிவமைப்பு நிறுவனங்களின் தலைமை பொறுப்பை உதறிவிட்டு, இளைஞர் காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்தார்.  தற்போது மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக (In-charge Secretary) இருந்து, அங்குள்ள அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறார். இவர், ராகுல் காந்தியின் நேரடி தேர்வு என்று சொல்லப்படுகிறது. இதனால், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவியை பெற கடுமையாக முயற்சித்து வந்த காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் பலரும் அப்செட் ஆகியுள்ளனர். Loading…

விகடன் 5 Mar 2026 12:38 pm

`ஊர் திருச்சி; 4 மாநிலங்களுக்கு பொறுப்பு' - காங்கிரஸ் ராஜ்ய சபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் பின்னணி

தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வரும் மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் தி.மு.க 4 மாநிலங்களவை எம்.பி-க்களையும், அ.தி.மு.க 2 எம்.பிக்களையும் தேர்ந்தெடுக்க முடியும். அந்த வகையில், தி.மு.க-க்கு மொத்தமுள்ள 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களில், தே.மு.தி.க-வுக்கு 1 இடமும், காங்கிரஸூக்கு ஒரு இடமும் வழங்கியுள்ளது. தி.மு.க-வில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தே.மு.தி.க சார்பில் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசர், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், ராஜ்யசபா எம்.பி பதவியைப் பெற முயற்சித்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் அதிக அறிமுகம் இல்லாத கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் கிறிஸ்டோபர் திலக். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவராக உள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மகன். பொறியாளர். வெளிநாடுகளில் ஆடை வடிவமைப்பு நிறுவனங்களின் தலைமை பொறுப்பை உதறிவிட்டு, இளைஞர் காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்தார்.  தற்போது மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக (In-charge Secretary) இருந்து, அங்குள்ள அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறார். இவர், ராகுல் காந்தியின் நேரடி தேர்வு என்று சொல்லப்படுகிறது. இதனால், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவியை பெற கடுமையாக முயற்சித்து வந்த காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் பலரும் அப்செட் ஆகியுள்ளனர். Loading…

விகடன் 5 Mar 2026 12:38 pm

கண்கலங்கிய துர்கா; உற்சாக ஸ்டாலின் - `இன்பன், இனியன் என தொடரும் உறவு' - அன்பில் இல்ல விழா ஹைலைட்ஸ்

தஞ்சாவூர் மஹாராஜா திருமண மஹாலில் அமைச்சர் அன்பில் மகேஸ் சகோதரி மகள் ஓவியா - மனோஜ் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, கிருத்திகா, சபரீசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்காக மண்டபத்தின் உள்பகுதி அரண்மனை போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்டாலின் கலந்து கொண்டதால் போலீஸார் கடும் கெடுபிடி காட்டினர். இதையடுத்து வரவேற்று பேசிய உதயநிதி, `இது மூன்று தலைமுறை நட்பு' என்றார். நன்றி தெரிவித்து பேசிய அன்பில் மகேஸ், `தமிழ்நாட்டின் முதல்வரும், பெரியம்மாவும் தாய், தந்தை ஸ்தானத்தில் இருந்து எங்களை வழி நடத்துகின்றனர்' என்ற போது துர்கா ஸ்டாலின் கண்கள் கலங்கின. அன்பில் மகேஸ் இல்ல விழாவில் ஸ்டாலின் இதைதொடர்ந்து துர்கா, `மாலையை எடுத்து ஸ்டாலின் கையில் கொடுத்து மணமக்களிடம் கொடுக்க சொன்னார். ஸ்டாலின் மணமகனிடம் மாலையை கொடுக்க மணமகள் கழுத்தில் போடுங்கனு துர்கா சொல்ல மணமக்கள் மாலை போட்டுக் கொண்டனர். இதே போல், வணங்கியபடி துர்கா தாலியை எடுத்து ஸ்டாலினிடம் கொடுக்க அவர் மணமகனிடம் கொடுத்தார். மணமகன் தாலி கட்டிய போது மாங்கல்யத்தை துர்கா பிடித்து கொண்டார். ஸ்டாலினும், துர்காவும் உற்சாகமாக திருமணத்தை நடத்தி வைத்தனர். மணமகள் ஓவியா காதில் ஏதோ சொல்லி விட்டு வெடித்து சிரித்தார் துர்கா. பின்னர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அப்போது உதயநிதி கிருத்திகாவை அழைத்து தன் அருகில் நிற்க வைத்து கொண்டார். உதயநிதியும் சபரீசனும் சிரித்தபடி பேசிக்கொண்டே நின்றனர். `இன்பன், இனியன் என வாழையடி வாழையாக.!' இதைதொடர்ந்து பேசிய ஸ்டாலின், ``இந்த மணவிழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்த கூடிய சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. உதயநிதி குறிப்பிட்டதை போல் நமது குடும்பம் என்ற நிலையில் தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அன்பில், தலைவர் கருணாநிதிக்கு எந்த அளவிற்கு துணையாக இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். கட்சி கம்பீரமாக ஓங்கி நிற்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவரான அன்பில், கடைசி வரை தலைவருக்கு பக்கபலமாக இருந்தார். அவரை தொடர்ந்து எனது நண்பன் அன்பில் பொய்யாமொழி எனக்கும், தற்போது அன்பில் மகேஸ் உதயநிதிக்கும் பக்கபலமாக இருக்கிறார். திருமண விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புள்ளி விபரங்களை கையில் வைத்து கொள்ளாமல் கம்ப்யூட்டரை போல் பேசக் கூடிய ஆற்றல் பெற்றவர் அன்பில் மகேஸ். அவரை எல்லோரும் பாராட்டும் போது, நண்பன் அன்பில் பொய்யாமொழி இருந்தால் எந்த அளவிற்கு சந்தோஷபடுவாரோ அதைவிட கூடுதலாக நான் சந்தோஷப்படுகிறேன். இந்த குடும்ப நட்பு, உறவு மகேஸ், உதயநிதியுன் முடியப்போவதில்லை. அவர்களுடைய மகன்கள் இன்பன், இனியன் என வாழையடி வாழையாக தொடர்கிறது. ஆல் பினிஷ் இந்த மணவிழா நிகழ்சிக்கு எந்த சூழ் நிலையில் நான் வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். நேற்று இரவு கூட்டணி கட்சியுடன் பேசி வெற்றிகரமாக ஒப்பந்தம் முடித்து விட்டு, எல்லோரும் பாராட்டும் வகையில் முடித்து விட்டு வந்திருக்கிறேன். கூட்டணி ஒப்பந்தம் ஆனதை ஆக்சனோடு சொன்னேன். இது திட்டமிட்டு செய்யவில்லை. காரில் ஏற வரும் போது பத்திரிக்கை நண்பர்கள் கேட்டதற்கு ஆல் பினிஷ் முடிஞ்சுச்சினு சொன்னேன் அது இன்றைக்கு வைரலாகி விட்டது. அந்த மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின், துர்கா ராஜ்யசபாவிற்கு இரண்டு பேரை அறிவித்திருக்கிறோம். கூட்டணி கட்சிக்கு இரண்டு கொடுத்திருக்கிறோம். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதால் வேகமாக செல்கிறேன். இது காதல் திருமணம், இதற்கு மணமகளின் அம்மா சுகி ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் நாங்கள் சொன்னால் கேட்டுக் கொள்வார். செந்தாமரை எப்படி எனக்கு மகளோ, அது போல் சுகி என்கிற எழிலரசியும் எனக்கு மகள் தான். என் மகள் செந்தாமரையும், சுகியும் நல்ல நட்போடு பார்டனராக இருந்து தொழில்கள் செய்து வருகின்றனர். இந்த திருமணத்தில் நான் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். Loading…

விகடன் 5 Mar 2026 12:16 pm

பீகார்: 'அரசியல் வாழ்க்கையை தொடங்கியதில் இருந்தே ஒரு ஆசை!' - பதவி விலகுவதாக அறிவித்த நிதிஷ் குமார்

'முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என்று நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்று 10-வது முறையாக முதல்வர் பதவியேற்றார். 75 வயதான நிதிஷ் குமார், 10 முறை முதலமைச்சராகப் பதவியேற்று சாதனைப் படைத்திருக்கும் நிலையில்தான், அவர் முதல்வர் பதவியை துறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. மோடி - நிதிஷ் குமார் இந்நிலையில் தான் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீங்கள் தொடர்ந்து என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவும் எனக்குப் பெரிய பலமாக இருந்து வருகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் பீகாருக்கும், அங்கு வாழும் உங்கள் அனைவருக்கும் முழு நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் சேவை செய்து வந்துள்ளோம். உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் தான் இன்று பீகார் வளர்ச்சி அடைவதற்கு காரணமாக இருந்தது. இதற்காக நான் பல முறை உங்களிடம் நன்றியைத் தெரிவித்துள்ளேன். என் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய காலத்திலிருந்தே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற ஒரு விருப்பம் எனக்கு இருந்தது. அதன்படி இந்த முறை நடைபெறும் தேர்தலில் ராஜ்யசபா உறுப்பினராக ஆக விரும்புகிறேன். நிதிஷ் குமார் உங்களுடன் எனக்கு இருக்கும் இந்த உறவு இனி வரும் காலங்களிலும் தொடரும் என்பதை நான் முழு நேர்மையுடன் உறுதி அளிக்கிறேன். மேலும் உங்களுடன் சேர்ந்து ஒரு வளர்ந்த பீகாரை உருவாக்கும் எங்கள் உறுதி மாறாமல் தொடரும். உருவாகும் புதிய அரசாங்கத்துக்கு என் முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 5 Mar 2026 11:35 am

பீகார்: 'அரசியல் வாழ்க்கையை தொடங்கியதில் இருந்தே ஒரு ஆசை!' - பதவி விலகுவதாக அறிவித்த நிதிஷ் குமார்

'முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என்று நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்று 10-வது முறையாக முதல்வர் பதவியேற்றார். 75 வயதான நிதிஷ் குமார், 10 முறை முதலமைச்சராகப் பதவியேற்று சாதனைப் படைத்திருக்கும் நிலையில்தான், அவர் முதல்வர் பதவியை துறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. மோடி - நிதிஷ் குமார் இந்நிலையில் தான் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீங்கள் தொடர்ந்து என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவும் எனக்குப் பெரிய பலமாக இருந்து வருகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் பீகாருக்கும், அங்கு வாழும் உங்கள் அனைவருக்கும் முழு நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் சேவை செய்து வந்துள்ளோம். உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் தான் இன்று பீகார் வளர்ச்சி அடைவதற்கு காரணமாக இருந்தது. இதற்காக நான் பல முறை உங்களிடம் நன்றியைத் தெரிவித்துள்ளேன். என் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய காலத்திலிருந்தே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற ஒரு விருப்பம் எனக்கு இருந்தது. அதன்படி இந்த முறை நடைபெறும் தேர்தலில் ராஜ்யசபா உறுப்பினராக ஆக விரும்புகிறேன். நிதிஷ் குமார் உங்களுடன் எனக்கு இருக்கும் இந்த உறவு இனி வரும் காலங்களிலும் தொடரும் என்பதை நான் முழு நேர்மையுடன் உறுதி அளிக்கிறேன். மேலும் உங்களுடன் சேர்ந்து ஒரு வளர்ந்த பீகாரை உருவாக்கும் எங்கள் உறுதி மாறாமல் தொடரும். உருவாகும் புதிய அரசாங்கத்துக்கு என் முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 5 Mar 2026 11:35 am

`கோயலுடன் முற்றும் மோதல்; தனி ரூட்டில் வானதி டு வாரிசுக்கு மாறும் சொத்துக்கள்?' | கழுகார் அப்டேட்ஸ்!

தனி ரூட்டில் வானதி! கோயலுடன் முற்றும் மோதல்... பிரதமர் மோடி கலந்துகொண்ட மதுரை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், மேடைக்கு அருகே காரில் வர முயன்ற வானதி சீனிவாசனை, 'நாம் ஒன்றும் வி.ஐ.பி கிடையாது' என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலானது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைத்தான் தமிழ்நாடு பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளராக நியமிப்பார்கள் என்று வானதி எதிர்பார்த்தாராம். ஆனால், பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டதில் வானதி கடும் அப்செட்டாம். 'தன்னை மீறி வானதி தனி டிராக்கில் பயணித்துக் கொண்டிருப்பதை பியூஸ் கோயல் விரும்பவில்லை. இருவருக்குமிடையே ஈகோ மோதல் முற்றியிருக்கும் நிலையில், வானதி கேட்கும் கோவை வடக்கு தொகுதிகூட அவருக்குக் கிடைக்காமலிருக்க வேலை பார்க்கிறார் கோயல். ஆனால், வானதி நேரடியாகவே எடப்பாடியிடம் பேசி தனக்கு வேண்டிய தொகுதியைப் பெறுவதற்கான வேலையைத் தொடங்கிவிட்டார்' என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். வெயில் மாவட்ட திகுதிகு பஞ்சாயத்து! வாரிசுக்கு மாறும் சொத்துக்கள்..? வெயில் மாவட்ட மாண்புமிகுவின் தொகுதியில், கூட்டுறவு சங்கத்தின் பல்வேறு இடங்களில் மாண்புமிகுவுக்கு வேண்டியவர்களே பணியில் இருப்பதால், சங்கத்தின் சொத்துக்களை சட்டவிரோதமாக மாண்புமிகுவின் வாரிசுக்கும் அவருக்கு வேண்டிய நபர்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார்களாம். சமீபத்தில்கூட சங்கத்துக்குச் சொந்தமான மனைகளை விற்பனை செய்ய ஏல அறிவிப்பு வெளியானது. உள்ளூர் பத்திரிகையில் விளம்பரம் செய்தால் சிக்கிக்கொள்வோம் என, தலைநகரில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் மட்டும் விளம்பரம் கொடுத்து, உள்ளூரில் யாருக்கும் தெரியாதபடி ஏலத்தை நடத்திட முயற்சி செய்திருக்கிறார்கள். கடைசியில் விஷயம் கசியவே ஏலத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். 'ராகுல் பனையூருக்கு வரணுமா?' - கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக மாற்றப்பட்ட காக்கிகள்! நெருங்கும் தேர்தல்... சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 20 காக்கிகளை மாற்றியிருக்கிறது தமிழக அரசு. 'மீசை' மாண்புமிகுவுக்கு சிக்கல் நெருங்கும் நிலையில், அவர் சம்பந்தப்பட்ட வழக்கைக் கையாள்வதற்காகவே, உயரதிகாரி ஒருவரை சம்பந்தப்பட்ட துறைக்கு மாற்றியிருக்கிறார்களாம். அவர் 'ஆசீர்வாத'மே மாண்புமிகுவைக் காக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த மாறுதல் நடந்துள்ளது. காலியாக இருந்த மலைக்கோட்டை ஏரியாவுக்கு 'சோழ மன்னர்' பெயர்கொண்ட அதிகாரியை பணியமர்த்தியிருக்கின்றனர். இதனால், அந்த ஏரியாவை எதிர்பார்த்திருந்த வெள்ளை மாளிகையின் உளவுப்பிரிவு அதிகாரி டோட்டல் அப்செட்டாம். 'குயின்' மாவட்ட மாண்புமிகுவுடன் முரண்பாட்டிலிருந்த பெண் அதிகாரி, அல்வா மாவட்ட மணியான அதிகாரி எனப் பல காக்கிகளும் தேர்தலைக் காரணம் காட்டி தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், நீண்டகாலம் காத்திருப்பில் இருந்த உயரதிகாரிக்கும் ஒரு பணியிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. 'தேர்தல் தேதி அறிவிப்பு முன்னதாக இன்னொரு லிஸ்ட் வெளியாகும்' என்று தகவல்கள் கூறுவதால், காக்கிகள் மத்தியில் பரபரப்பு அடங்கவில்லை. 'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' - கிரிஷ் சோடங்கர் அதிரடி தட்டிக் கழிக்கும் மாஜி! அந்தக் குடும்பம் வரக்கூடாது... 'கோட்டை' மாவட்டத்தில், சூரியக்கட்சி மாண்புமிகுவை எதிர்த்து யார் வரும் தேர்தலில் போட்டியிடுவது என்ற பஞ்சாயத்து இலைக்கட்சியில் கொழுந்துவிட்டு எரிகிறதாம். அவருடைய தொகுதியில், இலைக்கட்சியின் ஆதிக்கம்தான் கடந்த சில தேர்தல்கள் வரையில் கொடிக்கட்டிப் பறந்தது. தற்போது இலைக்கட்சியில் சீட் எதிர்பார்க்கும் மறைந்த எம்.எல்.ஏ-வின் வாரிசு, 'என் அப்பா காலத்திலிருந்தே எங்கள் குடும்பத்திற்கென தொகுதியில் பலத்த செல்வாக்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே மூன்று முறை தொகுதியில் வென்றிருக்கிறார் என் அப்பா. மாண்புமிகுவை எதிர்த்து என்னை நிறுத்தினால், அவரைத் தோற்கடித்துக் காட்டுவேன்' என்று கட்சித் தலைமையிடம் வாய்ப்புக் கேட்டு காத்திருக்கிறாராம். ஆனால், 'அந்த குடும்பத்தை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டுவந்தால் நமக்குப் போட்டியாக வருவார்கள்...' என்று சொல்லி, வாரிசைத் தட்டிக் கழிப்பதுடன், கட்சி மாறி வந்த தங்கமான ஒருவருக்குத் தொகுதியைப் பெற்றுத்தரும் முயற்சியில் இருக்கிறாராம் கோட்டை மாவட்ட இலைக்கட்சியின் டாக்டர் மாஜி. Kerala: மனைவிக்கு சீட் கொடுக்காதீங்க - பெண் அமைச்சர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கிறாரா கணவர்? சிலை திறப்பில் வெடித்த சர்ச்சை! நிற்கவைக்கப்பட்ட பெண் அதிகாரி... திருத்தணியிலுள்ள அரசு கலைக்கல்லூரியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் சிலை சமீபத்தில் திறக்கப்பட்டது. முதல்வரே காணொலி காட்சி வாயிலாக சிலையைத் திறந்துவைத்தார். அந்த நிகழ்வில், சம்பந்தப்பட்ட கல்லூரியின் பெண் அதிகாரிக்கு இருக்கையே வழங்கப்படவில்லையாம். 'அவர் சார்ந்த சமூகத்தைக் காரணம் காட்டி இருக்கை வழங்கவில்லை' என்ற சர்ச்சை வெடித்துக் கிளம்பியிருக்கிறது. ஆட்சியாளர்களும் அரசு அலுவலர்களும் பங்குபெற்ற அந்த நிகழ்ச்சி முடியும் வரையில் நிற்க வைக்கப்பட்டுள்ளார் அந்தப் பெண் அதிகாரி. விவகாரம் ஆட்சி மேலிடம் வரையில் புகாராக, இப்போது விசாரணை நடத்த உத்தரவு பறந்திருக்கிறதாம். பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா | ‘வாவ்’ வியூகம் 08

விகடன் 5 Mar 2026 11:23 am

``ஃபினிஷ்'அந்த கை சைகையை நான் திட்டமிட்டு செய்யவில்லை.!' - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை நேற்று (மார்ச்.5) முடித்துவிட்டு முதல்வர் கிளம்புகையில் 'ஒரு வழியா முடிஞ்சிருச்சு' என சைகையில் கூறி சிரித்துவிட்டு சென்றார். இது இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் சகோதரி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் அந்த சைகை குறித்து பேசியிருக்கிறார். இந்த மண விழாவுக்கு நான் எந்த சூழலில் நான் வந்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு வரை கூட்டணி கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டு தான், அதுவும் வெற்றிகரமாக முடித்துவிட்டுதான் எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் முடித்துவிட்டு தான் வந்திருக்கிறேன். நீங்கள் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம். ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரிலே ஏறுகிறபோது கையை எடுத்து ஒரு சைகை செய்திருப்பேன். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. ஏதோ காரில் ஏறுகிறபோது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் முடிந்துவிட்டதா? என்று கேட்டார்கள். முடிந்துவிட்டது என்று சொன்னேன் அவ்வளவு தான். அது இன்று வைரலாகி இருக்கிறது. மகிழ்ச்சியோடு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்ய சபாவிற்கு இரண்டு வேட்பாளர்களை அனுப்ப இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதனால் நான் இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு செல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார். Loading…

விகடன் 5 Mar 2026 10:35 am

ஈரான் போர்: ட்ரம்ப்பிற்கு எதிராக செனட் சபையில் தீர்மானம்; அமெரிக்க அரசியலமைப்பு சொல்வது என்ன?

அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தின் படி, அதிபரால் ஒரு போரைத் தொடங்க முடியாது. அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை. ஆனால், ஈரான் போரைத் தொடங்கி வைத்தது என்னவோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். இதற்கு அவர் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸிடம் ஒப்புதல் வாங்கவில்லை. தீர்மானம் இதனால், ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமெரிக்க செனட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டிம் கைன் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்திற்கு 47 பேர் சாதகமாகவும், 53 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத்தான் பெரும்பாலும் வாக்களிக்கப்பட்டுள்ளதால், ட்ரம்ப், ஈரான் போரைத் தொடர்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. அமெரிக்க நாடாளுமன்றம் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold 8 வாரங்களுக்கு... இந்த இடத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத், 'ஈரான் போர் இன்னும் 8 வாரங்கள் வரை தொடரலாம்' என்று கூறியது நினைவுக்கூரத்தக்கது. ட்ரம்பிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த ராண்ட் பால் ஆவார். ஒருவேளை, இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்திருந்தால் ட்ரம்பால் காங்கிரஸின் அனுமதி இல்லாமல் போரைத் தொடர்ந்திருக்க முடியாது. 'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?

விகடன் 5 Mar 2026 9:26 am

Kerala: மனைவிக்கு சீட் கொடுக்காதீங்க - பெண் அமைச்சர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கிறாரா கணவர்?

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். படிக்கும் காலத்தில் சி.பி.எம். மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யுடன் தொடர்பில் இருந்தார். பின்னர் செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஊடகவியலாளரான அவருக்கு 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆரன்முளா சட்டசபை தொகுதியில் போட்டியிட சி.பி.எம் கட்சி திடீரென வாய்ப்பு கொடுத்தது. ஊடகவியலாளருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய நிகழ்வு அப்போது பேசுபொருளானது. 2016 சட்டசபை தேர்தலில் ஆரன்முளா தொகுதியில் வெற்றிபெற்றார். அந்தச் சமயத்தில் வீணா ஜார்ஜின் கணவர் ஜார்ஜ் ஜோசப் ஆர்த்தடாக்ஸ் சபையின் செயலாளராக இருந்தார். சபை வாக்குகள் பெரிய அளவில் கிடைத்ததுதான் வீணா ஜார்ஜின் வெற்றிக்குக் காரணம் எனப் பேசப்பட்டது. எம்.எல்.ஏ-வாக இருக்கும்போதே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் வீணா ஜார்ஜ். ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றதால் 2021 சட்டசபை தேர்தலில் ஆரன்முளா தொகுதியில் மீண்டும் போட்டியிட சி.பி.எம் வாய்ப்பு வழங்கியது.  இரண்டாவது முறையாக வெற்றியைப் பெற்ற வீணா ஜார்ஜ் இரண்டாம் பினராயி சர்க்காரில் சுகாதார அமைச்சராக ஆனார். சிகிச்சைக்குப்பின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் வீணா ஜார்ஜ் கேரளாவில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம். கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.சைலஜா-வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் பதவியில் இருக்கும் வீணா ஜார்ஜ் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வீணா ஜார்ஜிக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்க வேண்டாம் என அவரது கணவர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப் சி.பி.எம் மாநில நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம். முதல்வர் சீட்டுக்கு முஷ்டி முறுக்கும் தலைவர்கள்... கேரளா காங்கிரஸில் களேபரம்! அவரின் கோரிக்கை மாவட்டக் குழுவின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்தனம்திட்டா மாவட்ட குழுக் கூட்டத்தில், ஆரன்முளா தொகுதியில் வீணா ஜார்ஜும், கோன்னியில் ஜனீஷ்குமாரும் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீணா ஜார்ஜ் போட்டியிட விரும்பவில்லை என நேரடியாகத் தெரிவித்தால் மட்டுமே வேறு நபரைப் பரிந்துரைக்கலாம் என மாவட்ட குழு தீர்மானம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வீணா ஜார்ஜுக்கு சீட் வழங்கவேண்டாம் எனக் கோரிக்கை வைத்தீர்களா என்ற கேள்விக்கு ஜார்ஜ் ஜோசப் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அரசியல் பிரவேசத்தால் மனைவியால் குடும்பத்தில் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்பதால் அவரது கணவர் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சில நாட்களுக்கு முன் கண்ணூர் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு போராட்டத்தைத் தொடர்ந்து கழுத்தில் காயமடைந்து ஓய்வில் இருந்தார் வீணா ஜார்ஜ். உடல்நிலை சரியான பின்னர் அவர் கடந்த 3-ம் தேதி பத்தனம்திட்டாவில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூறாமல் சென்றுவிட்டார். அதே சமயம் தேர்தல் பிரசாரத்துக்கு என நியமிக்கப்பட்ட குழுவினர் வீணா ஜார்ஜுடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால் அவர் மீண்டும் போட்டியிடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. கேரளம் ஆனது கேரளா, மேற்கு வங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? காஷ்மீர் சொல்வதென்ன, பின்னணி கதைகள்!

விகடன் 5 Mar 2026 8:42 am

Kerala: மனைவிக்கு சீட் கொடுக்காதீங்க - பெண் அமைச்சர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கிறாரா கணவர்?

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். படிக்கும் காலத்தில் சி.பி.எம். மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யுடன் தொடர்பில் இருந்தார். பின்னர் செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஊடகவியலாளரான அவருக்கு 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆரன்முளா சட்டசபை தொகுதியில் போட்டியிட சி.பி.எம் கட்சி திடீரென வாய்ப்பு கொடுத்தது. ஊடகவியலாளருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய நிகழ்வு அப்போது பேசுபொருளானது. 2016 சட்டசபை தேர்தலில் ஆரன்முளா தொகுதியில் வெற்றிபெற்றார். அந்தச் சமயத்தில் வீணா ஜார்ஜின் கணவர் ஜார்ஜ் ஜோசப் ஆர்த்தடாக்ஸ் சபையின் செயலாளராக இருந்தார். சபை வாக்குகள் பெரிய அளவில் கிடைத்ததுதான் வீணா ஜார்ஜின் வெற்றிக்குக் காரணம் எனப் பேசப்பட்டது. எம்.எல்.ஏ-வாக இருக்கும்போதே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் வீணா ஜார்ஜ். ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றதால் 2021 சட்டசபை தேர்தலில் ஆரன்முளா தொகுதியில் மீண்டும் போட்டியிட சி.பி.எம் வாய்ப்பு வழங்கியது.  இரண்டாவது முறையாக வெற்றியைப் பெற்ற வீணா ஜார்ஜ் இரண்டாம் பினராயி சர்க்காரில் சுகாதார அமைச்சராக ஆனார். சிகிச்சைக்குப்பின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் வீணா ஜார்ஜ் கேரளாவில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம். கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.சைலஜா-வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் பதவியில் இருக்கும் வீணா ஜார்ஜ் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வீணா ஜார்ஜிக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்க வேண்டாம் என அவரது கணவர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப் சி.பி.எம் மாநில நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம். முதல்வர் சீட்டுக்கு முஷ்டி முறுக்கும் தலைவர்கள்... கேரளா காங்கிரஸில் களேபரம்! அவரின் கோரிக்கை மாவட்டக் குழுவின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்தனம்திட்டா மாவட்ட குழுக் கூட்டத்தில், ஆரன்முளா தொகுதியில் வீணா ஜார்ஜும், கோன்னியில் ஜனீஷ்குமாரும் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீணா ஜார்ஜ் போட்டியிட விரும்பவில்லை என நேரடியாகத் தெரிவித்தால் மட்டுமே வேறு நபரைப் பரிந்துரைக்கலாம் என மாவட்ட குழு தீர்மானம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வீணா ஜார்ஜுக்கு சீட் வழங்கவேண்டாம் எனக் கோரிக்கை வைத்தீர்களா என்ற கேள்விக்கு ஜார்ஜ் ஜோசப் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அரசியல் பிரவேசத்தால் மனைவியால் குடும்பத்தில் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்பதால் அவரது கணவர் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சில நாட்களுக்கு முன் கண்ணூர் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு போராட்டத்தைத் தொடர்ந்து கழுத்தில் காயமடைந்து ஓய்வில் இருந்தார் வீணா ஜார்ஜ். உடல்நிலை சரியான பின்னர் அவர் கடந்த 3-ம் தேதி பத்தனம்திட்டாவில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூறாமல் சென்றுவிட்டார். அதே சமயம் தேர்தல் பிரசாரத்துக்கு என நியமிக்கப்பட்ட குழுவினர் வீணா ஜார்ஜுடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால் அவர் மீண்டும் போட்டியிடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. கேரளம் ஆனது கேரளா, மேற்கு வங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? காஷ்மீர் சொல்வதென்ன, பின்னணி கதைகள்!

விகடன் 5 Mar 2026 8:42 am

பிளாஸ்ட்டு.. பிளாஸ்ட்டு..!

கார்ட்டூன்

விகடன் 5 Mar 2026 6:26 am

'இந்தியில் பெயர் பலகை' - திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக-வினர்

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலக நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் இந்தி வார்த்தையை கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVAYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர். protest இந்தி தெரியாத மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ளது மறைமுக இந்தி திணிப்பு என ஒன்றிய அரசையும் ரயில்வே நிர்வாகத்தினரையும் கண்டித்து, முதல்வர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக தி.மு.க-வினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை கறுப்பு மை கொண்டு அழித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 'உடனடியாக அனைவருக்கும் புரியும் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன், திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். protest இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும் தான். துரோகம் இழைப்போர் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள். டெல்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு Out Of Control' என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த சூழலில், இதற்கு எதிர்ப்பு அதிகமாகவும் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட எழுத்துக்களை ரயில்வே நிர்வாகம் நீக்கியிருக்கிறது.

விகடன் 4 Mar 2026 10:55 pm

'இந்தியில் பெயர் பலகை' - திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக-வினர்

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலக நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் இந்தி வார்த்தையை கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVAYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர். protest இந்தி தெரியாத மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ளது மறைமுக இந்தி திணிப்பு என ஒன்றிய அரசையும் ரயில்வே நிர்வாகத்தினரையும் கண்டித்து, முதல்வர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக தி.மு.க-வினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை கறுப்பு மை கொண்டு அழித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 'உடனடியாக அனைவருக்கும் புரியும் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன், திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். protest இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும் தான். துரோகம் இழைப்போர் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள். டெல்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு Out Of Control' என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த சூழலில், இதற்கு எதிர்ப்பு அதிகமாகவும் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட எழுத்துக்களை ரயில்வே நிர்வாகம் நீக்கியிருக்கிறது.

விகடன் 4 Mar 2026 10:55 pm

'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' - கிரிஷ் சோடங்கர் அதிரடி

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சீட்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. Cong இந்நிலையில் அறிவாலயத்திலிருந்து கிளம்பிய பிறகு தனியார் விடுதியில் கூட்டணி குறித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், 'இது வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நாள். இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸூக்கு தொகுதி குறைந்துகொண்டேதான் வந்திருக்கிறது. இப்போதுதான் திமுக கூட்டணியில் எங்களுக்கு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்த முதல்வருக்கு நன்றி. எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். உள்ளாட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறோம். கண்டிப்பாக செய்கிறோம் என திமுக கூறியிருக்கிறது.' என்றார் Chodankar கிரிஷ் சோடங்கர் பேசுகையில், 'நாங்கள் தொண்டர்களின் மனநிலைக்கே முக்கியத்துவம் கொடுத்தோம். எங்களின் தொண்டர்களும் நிர்வாகிகளும் 58 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லை. அவர்களை முன்வைத்தே கூட்டணி பேசினோம். உள்ளாட்சியில் எங்கள் தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதையே பிரதானமாக முன்வைத்தோம். உள்ளாட்சியிலும் கூட்டுறவிலும் எங்களின் தொண்டர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என உறுதியளித்ததால் மட்டுமே கூட்டணிக்கு ஒத்துக்கொண்டோம்' என்றார்.

விகடன் 4 Mar 2026 10:45 pm

'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' - கிரிஷ் சோடங்கர் அதிரடி

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சீட்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. Cong இந்நிலையில் அறிவாலயத்திலிருந்து கிளம்பிய பிறகு தனியார் விடுதியில் கூட்டணி குறித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், 'இது வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நாள். இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸூக்கு தொகுதி குறைந்துகொண்டேதான் வந்திருக்கிறது. இப்போதுதான் திமுக கூட்டணியில் எங்களுக்கு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்த முதல்வருக்கு நன்றி. எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். உள்ளாட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறோம். கண்டிப்பாக செய்கிறோம் என திமுக கூறியிருக்கிறது.' என்றார் Chodankar கிரிஷ் சோடங்கர் பேசுகையில், 'நாங்கள் தொண்டர்களின் மனநிலைக்கே முக்கியத்துவம் கொடுத்தோம். எங்களின் தொண்டர்களும் நிர்வாகிகளும் 58 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லை. அவர்களை முன்வைத்தே கூட்டணி பேசினோம். உள்ளாட்சியில் எங்கள் தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதையே பிரதானமாக முன்வைத்தோம். உள்ளாட்சியிலும் கூட்டுறவிலும் எங்களின் தொண்டர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என உறுதியளித்ததால் மட்டுமே கூட்டணிக்கு ஒத்துக்கொண்டோம்' என்றார்.

விகடன் 4 Mar 2026 10:45 pm

` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்

ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு... இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்... - அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி. அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்பு... மருத்துவம் படிக்கிற நம்ம பிள்ளைகளோட ஆராய்ச்சிக்கு தேவையில பாதிகூட உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு உதவட்டுமே... ரொம்பநாளா நினைக்கிறேன். ஆனா அதுக்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதா இல்லை. இன்னைக்கு நிம்மதியா முடிச்சுட்டேன். அறிவுக்கிட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சான்... 'போடுப்பா கையெழுத்தைன்னு சொல்லிட்டேன். என் உடலைத் தானம் செய்யப்போனா கூடவே அவனும் செஞ்சிட்டான்... சாங்கியம், சடங்குகள் எல்லாம் வழக்கமா நாங்க செய்றது இல்லை. அதனால முழு மனதோட இந்த முடிவை எடுத்தோம்... எனக்கு அவனும் அவனுக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுக்கிட்டோம்... என்கிறார் அற்புதம் அம்மாள். அம்மா தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கூட இருக்கவங்ககிட்டயும் நிறைய பார்க்கிறோம். சமீபத்துல என் நெருக்கமான நண்பர், 'கீற்று' ரமேஷ் மனைவி காலமானபோது அவர் ரொம்ப உறுதியா நின்னு உடல்தானம் செஞ்சார். இத்தனைக்கும் அவங்க இறக்கும்போது 43 வயதுதான். தஞ்சாவூர்ல ஒரு நண்பர் தன் அப்பாவோட உடலை தானம் செஞ்சார். ஒரு தம்பி தன் பிள்ளையோட கண்ணை தானம் செஞ்சார். இது எல்லாத்திலயும் கூட நின்னேன். எனக்கு இதெல்லாம் பெரிய தாக்கத்தை உருவாச்சு. நல்லகண்ணு அய்யாவோட உடலை தானம் செஞ்ச பிறகு அம்மா ரொம்ப உறுதியா நின்னாங்க. கூடவே நானும் பதிவு செஞ்சுக்கிட்டேன்... இது பெரிய விஷயமில்லை. ஆனா, நிறைய பேர் செய்ய முன்வரணும்... என்கிறார் பேரறிவாளன். உடல் தானம் உறுப்பு தானம் பலரின் உயிரை மீட்கும். உடல் தானம், மருத்துவத்துறை மாணவர்கள் கற்றுத்தேர்ந்து மனித குலத்தைக் காக்க உதவும்! தாயும் பிள்ளையும் ஒருசேர உடல் தானத்துக்குப் பதிவு செய்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம்... வாழ்த்துகள்!

விகடன் 4 Mar 2026 8:55 pm

` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்

ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு... இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்... - அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி. அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்பு... மருத்துவம் படிக்கிற நம்ம பிள்ளைகளோட ஆராய்ச்சிக்கு தேவையில பாதிகூட உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு உதவட்டுமே... ரொம்பநாளா நினைக்கிறேன். ஆனா அதுக்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதா இல்லை. இன்னைக்கு நிம்மதியா முடிச்சுட்டேன். அறிவுக்கிட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சான்... 'போடுப்பா கையெழுத்தைன்னு சொல்லிட்டேன். என் உடலைத் தானம் செய்யப்போனா கூடவே அவனும் செஞ்சிட்டான்... சாங்கியம், சடங்குகள் எல்லாம் வழக்கமா நாங்க செய்றது இல்லை. அதனால முழு மனதோட இந்த முடிவை எடுத்தோம்... எனக்கு அவனும் அவனுக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுக்கிட்டோம்... என்கிறார் அற்புதம் அம்மாள். அம்மா தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கூட இருக்கவங்ககிட்டயும் நிறைய பார்க்கிறோம். சமீபத்துல என் நெருக்கமான நண்பர், 'கீற்று' ரமேஷ் மனைவி காலமானபோது அவர் ரொம்ப உறுதியா நின்னு உடல்தானம் செஞ்சார். இத்தனைக்கும் அவங்க இறக்கும்போது 43 வயதுதான். தஞ்சாவூர்ல ஒரு நண்பர் தன் அப்பாவோட உடலை தானம் செஞ்சார். ஒரு தம்பி தன் பிள்ளையோட கண்ணை தானம் செஞ்சார். இது எல்லாத்திலயும் கூட நின்னேன். எனக்கு இதெல்லாம் பெரிய தாக்கத்தை உருவாச்சு. நல்லகண்ணு அய்யாவோட உடலை தானம் செஞ்ச பிறகு அம்மா ரொம்ப உறுதியா நின்னாங்க. கூடவே நானும் பதிவு செஞ்சுக்கிட்டேன்... இது பெரிய விஷயமில்லை. ஆனா, நிறைய பேர் செய்ய முன்வரணும்... என்கிறார் பேரறிவாளன். உடல் தானம் உறுப்பு தானம் பலரின் உயிரை மீட்கும். உடல் தானம், மருத்துவத்துறை மாணவர்கள் கற்றுத்தேர்ந்து மனித குலத்தைக் காக்க உதவும்! தாயும் பிள்ளையும் ஒருசேர உடல் தானத்துக்குப் பதிவு செய்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம்... வாழ்த்துகள்!

விகடன் 4 Mar 2026 8:55 pm

'மனநிறைவோடு 28 சீட்களை வாங்கியிருக்கிறோம்!' - செல்வப்பெருந்தகை ஹேப்பி!

இழுபறியில் நீடித்துக் கொண்டிருந்த திமுக - காங் கூட்டணி இறுதியாகியிருக்கிறது. காங்கிரஸூக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. Cong முதல்வரை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செல்வப்பெருந்தகை பேசுகையில், '28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.' என்றார். கிரிஷ் சோடங்கர் பேசுகையில், 'தமிழகம் முடிந்த பிறகுதான் புதுச்சேரி குறித்து பேச முடியும். அதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளும் தொடங்கியிருக்கிறது.' என்றார். பவர் ஷேரிங் பற்றி பேசினீர்களா என நிருபர்கள் சோடங்கரிடம் கேட்க, 'அப்புறம் பேசுறோம் அதெல்லாம்...' என பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து சோடங்கரை காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார் செல்வப்பெருந்தகை. Cong திமுகவில் மாநிலங்களவைக்கு கான்ஸ்டண்டைன் ரவீந்தரனும் திருச்சி சிவாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிவாலயத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

விகடன் 4 Mar 2026 8:33 pm

'ராகுல் பனையூருக்கு வரணுமா?' - கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என நாம் கொளுத்திப் போட்ட வெடிகுண்டு எல்லா கூட்டணியிலும் வெடித்துக் கொண்டிருக்கிறது' என விஜய் பெருமிதம் பேசியிருந்தார். TVK Vijay - தவெக விஜய் ஆனால், 'குண்டு வெடித்ததில் நமக்கு என்ன பிரயோஜனம்? யாரும் நம்மை நோக்கி வரவில்லையே...' என தலையில் துண்டோடு சோகத்தோடு நிற்கின்றனர் தவெகவினர். காங்கிரஸ் வலிந்து கூட்டணிக்கு முயன்றும் விஜய் கூட்டணிக்காக எந்த முயற்சியும் எடுக்காததுதான் காங்கிரஸ் 'கை' நழுவிப் போனதற்கு காரணம் என்கின்றனர் கதர் சட்டையினர். 'காங்கிரஸ் நிர்வாகிகளில் எந்தளவுக்கு திமுக மீது ஆர்வம் இருக்கிறதோ, அதே அளவுக்கு தவெகவின் மீதும் ஆர்வம் இருந்தது. இதை ராகுல் காந்தி உணர்ந்ததால்தான் 2004 லிலிருந்து தொடர்ந்து வரும் திமுக கூட்டணியை முறிக்கும் ரிஸ்க்கை கூட எடுக்க தயாராக இருந்தார். ராகுல் காந்தி ஆனால், ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை எழுமா? இருதரப்பிலும் கூட்டணிக்கான முயற்சியை எடுத்திருக்க வேண்டாமா? ஜனநாயகன் விவகாரத்தில் திமுகவினர் கண்டும் காணாமலும் இருந்த போதும் ராகுல் காந்தி தொடங்கி காங்கிரஸின் கடைமட்ட தொண்டன் வரை விஜய்க்கு ஆதரவளித்திருந்தார்கள். அதற்காக காங்கிரஸூக்கு ஒரு நன்றியோ அறிக்கையோ கூட விஜய் வெளியிடவில்லையே. கூட்டணி பேச்சுகளின் போது இந்த சின்னச்சின்ன விவகாரங்கள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதை கூட புரிந்துகொள்ளாத தலைவராகத்தான் விஜய் இருந்தார். திமுகவுடன் கிட்டத்தட்ட கூட்டணி முறியப்போகிறது எனும் நிலையில் கூட, ஆதவ் தரப்புதான் லைனுக்கு வருகிறது. அவரை எப்படி எங்களின் தலைமை நம்பும்? அவர் திமுகவுக்கும் சபரீசனுக்கும் நெருக்கமாக இருந்தவர். அப்படிப்பட்டவர் வழியாக திமுக கூட்டணியை முறிப்பதை பற்றி நாங்கள் பேச வேண்டுமென நினைக்கிறாரா விஜய்? வேறெந்த நம்பகத்தன்மையான ஆளுமே அவரிடம் இல்லையா அல்லது எங்களின் ராகுல் காந்தி பனையூருக்கு வந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென விஜய் நினைக்கிறாரா? அடிப்படை அரசியல் சூழல் புரிந்த எந்த தலைவரும் இப்படியெல்லாம் யோசிக்கமாட்டார்கள். Vijay தவெகவும் காங்கிரஸூம் கை கோர்க்காமல் போனதற்கு விஜய்யின் மெத்தனமும் ஒரு முக்கிய காரணமே...' என கொந்தளிக்கின்றனர் கதர் சட்டையினர். காங்கிரஸ் தவெக பக்கம் வர தயாராக இருந்தும் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடிக்காமல் விட்டதில் கொஞ்சம் வருத்தம்தான் என்கின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். மூன்று மாதங்களுக்கு முன்பு செயற்குழுவில் கூட்டணி பேச ஒரு குழுவும் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழுவும் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டது. கூட்டணி பேச குழு எங்கே அமைக்கப்பட்டது? தீர்மானம் நிறைவேற்றினோமே குழுவை காணவில்லையே என தலைவரும் கேட்கவில்லை. பெயரளவுக்கு கூட ஒரு குழுவை அமைக்க ஆனந்த் முன்வரவில்லை. குழு அமைத்து அதன் மூலம் கூட்டணி அமைந்து அந்தக் குழுவின் தலைவர் பெயரை வாங்கி சென்றுவிடுவாரோ என்கிற பயம் அவருக்கு. கூட்டணி பேசுவதற்கென ஒரு குழு இருந்திருந்தால் வெளிப்படையாக காங்கிரஸின் குழுவோடு பேச ஒரு முயற்சியை எடுத்திருக்கலாம். அது அமையாததால் தலைவரை சுற்றியிருக்கும் முக்கியஸ்தர்கள் மூவரும் ஆளுக்கு ஒரு லைனில் பேசிக் கொண்டிருந்தார்கள். John Arockiyasamy ஒருவருக்கு காங்கிரஸ் கூட்டணி வேண்டும், ஒருவருக்கு கூட்டணி வேண்டும் ஆனால் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம், இன்னொருவருக்கு கூட்டணியே வேண்டாம். இப்படி ஆளுக்கொரு அம்பலம் செய்வதிலேயே நேரத்தை ஓட்டினால் காங்கிரஸூடன் எப்படி பேச முடியும்? கட்சி ஆரம்பித்த சில நாட்களுக்கு தலைவர் வியூக வகுப்பாளர்களை நம்புவார். உடனிருப்பவர்களின் பேச்சை அப்படியே கேட்பார். அதன்பிறகு சொந்தமாக முடிவுகளை எடுப்பார் என நினைத்தோம். இப்போது வரைக்கும் அப்படி எதுவும் நடக்கவில்லை. 10 ஆண்டுகளாக ஸ்டாலின் தக்கவைத்திருந்த ஒரு கூட்டணியை உடைத்து சுக்கு நூறாக்கும் வாய்ப்பு தலைவரின் கையில் வந்து விழுந்தது. அதை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் கோட்டை விட்டு விட்டார்' என விரக்தி முகத்தோடு கூறுகின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். ஆட்சி அதிகாரத்தில் பங்கு!' என்பது ஒரு அரசியல் அணுகுண்டு என விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் கூறியிருந்தார். அந்த அணுகுண்டு விசிகவையும் காங்கிரஸையும் தவெக பக்கம் கொண்டு வந்துவிடுமென வியூக வகுப்பாளர்களால் விஜய் நம்ப வைக்கப்பட்டார். நடந்திருப்பதோ தலைகீழ். விஜய்யை காட்டி காங்கிரஸூம் விசிகவும் டிமாண்ட் ஏற்றி தங்களின் எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டுள்ளன. 'அவங்க வராங்க...இவங்க வராங்க...' எனக் கூறி விஜய்யையும் இலவுகாத்த கிளியாக்கி 'மக்களுடன் தான் கூட்டணி' என பழைய பன்ச்சை பேசும் நிலைக்கு தள்ளியிருக்கின்றனர் சுற்றியிருக்கும் அந்த 'மூவர்' குழு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆதவ் அர்ஜூனா சினிமாவை போல வீடு தேடி வந்து கதை சொல்லி அட்வான்ஸ் கொடுத்து கமிட் செய்துவிட்டு செல்லும் தயாரிப்பாளர்கள் மாதிரி பிற அரசியல் கட்சியினரும் இருப்பார்கள் என நினைக்கும் விஜய்யின் அரசியல் புரிதல் இனியாவது மாறுமா என்பதே பெருவாரியானோரின் கேள்வி.

விகடன் 4 Mar 2026 8:26 pm

'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. Congress திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவை நோக்கி சென்ற நிலையில், டெல்லியின் உத்தரவின் பேரில் ப.சிதம்பரம் கடைசி நிமிடத்தில் முதல்வருடன் பேசி கூட்டணியை இறுதி செய்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக - காங் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வர கோவாவிலிருந்து விமான டிக்கெட்டும் புக் செய்திருந்தார். கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல். இந்த இழுபறி சில மணி நேரங்களுக்கு நீடித்து பரபரப்பை கூட்டியது. Cong நீண்ட காத்திருப்புக்கு பிறகு காங்கிரஸ் குழு அறிவாலயம் நோக்கி புறப்பட, இரவு 7:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு போன்றோர் அறிவாலயம் வந்தனர். கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை போன்றோரும் வர முதல்வர் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. Updates shortly

விகடன் 4 Mar 2026 8:02 pm

'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. Congress திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவை நோக்கி சென்ற நிலையில், டெல்லியின் உத்தரவின் பேரில் ப.சிதம்பரம் கடைசி நிமிடத்தில் முதல்வருடன் பேசி கூட்டணியை இறுதி செய்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக - காங் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வர கோவாவிலிருந்து விமான டிக்கெட்டும் புக் செய்திருந்தார். கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல். இந்த இழுபறி சில மணி நேரங்களுக்கு நீடித்து பரபரப்பை கூட்டியது. Cong நீண்ட காத்திருப்புக்கு பிறகு காங்கிரஸ் குழு அறிவாலயம் நோக்கி புறப்பட, இரவு 7:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு போன்றோர் அறிவாலயம் வந்தனர். கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை போன்றோரும் வர முதல்வர் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. செல்வப்பெருந்தகை பேசுகையில், '28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.' என்றார்.

விகடன் 4 Mar 2026 8:02 pm

தம்பி நல்லா பேசுனாரு; கேள்விகள் நியாயமா கேட்டாரு.! - விஜய் பேச்சு குறித்து தமிழிசை

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (மார்ச். 4) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் இன்று விஜய் தஞ்சாவூர் கூட்டத்தில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவேன் என்று கூறுவதை விட தம்பி விஜய் முதலில் தனக்கு வரும் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், நமக்கு பின்னால் வரும் தொண்டர்களை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து. தவெக விஜய் இன்றைய கூட்டத்தில் எலெக்ஷன், எமோஷன் என்றெல்லாம் பேசியிருந்தார். ஆனால் தமிழ்நாடு புரொமோஷன் அடைய வேண்டும் என்றால் அதற்கு என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். தம்பி விஜய் இன்றைக்கு பேசியதை பார்த்தேன். நன்றாகத் தான் பேசியிருந்தார். சில கேள்விகள் நியாயமாகக் கேட்டார். மாநில அரசால் முடியாது என்று தெரிந்தும் நீட் விலக்கு என்று ஏன் சொன்னீர்கள்? என்பது உள்ளிட்ட நியாயமான கேள்விகளை கேட்டிருந்தார். அதனால் அவர் கேட்ட நியாயமான கேள்விகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம். தமிழ்நாடு அணி, டெல்லி அணி என்று அவர் விளையாட்டாக பேசியதை எல்லாம் தவிர்த்து விடுங்கள். அதுதான் என்னுடைய கருத்து என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 4 Mar 2026 7:23 pm

'டெல்லி தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!' - பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. திமுக - காங்கிரஸ் இந்நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று மேற்கொள்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அண்ணா அறிவாலயத்திற்கு செல்லவில்லை. பேச்சுவார்த்தை தாமதமாகிக் கொண்டிருக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க தான் செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேச்சுவார்த்தை தாமதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். டெல்லி தலைமை அறிக்கை தந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று ஒப்பந்தத்தை இறுதிசெய்வோம். செல்வப்பெருந்தகை திமுக - காங்கிரஸ் கூட்டணி சுமூகமாகத் தான் இருக்கிறது. பிரச்னை எதுவும் இல்லை என்றிருக்கிறார். தொடர்ந்து ராஜ்ய சபா சீட் குறித்த கேள்விக்கு, இன்னும் நிறைய டைம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். Loading…

விகடன் 4 Mar 2026 6:55 pm

'டெல்லி தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!' - பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. திமுக - காங்கிரஸ் இந்நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று மேற்கொள்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அண்ணா அறிவாலயத்திற்கு செல்லவில்லை. பேச்சுவார்த்தை தாமதமாகிக் கொண்டிருக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க தான் செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேச்சுவார்த்தை தாமதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். டெல்லி தலைமை அறிக்கை தந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று ஒப்பந்தத்தை இறுதிசெய்வோம். செல்வப்பெருந்தகை திமுக - காங்கிரஸ் கூட்டணி சுமூகமாகத் தான் இருக்கிறது. பிரச்னை எதுவும் இல்லை என்றிருக்கிறார். தொடர்ந்து ராஜ்ய சபா சீட் குறித்த கேள்விக்கு, இன்னும் நிறைய டைம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். Loading…

விகடன் 4 Mar 2026 6:55 pm

ஈரான் - அமெரிக்கா: இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் தாக்குதல் - பரவும் போர் பதற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து வரும் போரில், ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்களையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கி வருகிறது. அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் சென்றபோது ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது கப்பல் தாக்குதலுக்கு உள்ளான போர்க் கப்பலிலில் இருந்து வந்த அவசர அழைப்பை அடுத்து, இலங்கை கடற்படையினர் உதவி செய்தனர். 180 கடற்படை வீரர்களுடன் சென்ற போர் கப்பலில் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் போர்க் கப்பல் கடலில் மூழ்கி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் கூடுதல் தகவல்களை வழங்கவில்லை. ஆனால், இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்திருக்கிறார். மத்தியக் கிழக்கு நாடுகளில் தொடங்கிய இந்தப் பதற்றம் தற்போது இந்தியப் பெருங்கடல் வரை நீண்டிருப்பது உலக நாடுகள் மத்தியில் கூடுதல் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அணு ஆயுதமா... ஆட்சி மாற்றமா... ஈரான் போர்... இந்தியாவுக்கு என்னவாகும்?

விகடன் 4 Mar 2026 6:19 pm

பீகார்: முதல்வர் பதவியை துறக்கிறாரா நிதிஷ் குமார்? - துணை முதல்வராகும் வாரிசு? - என்ன நடக்கிறது?

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி போட்டியிட்டது. அரசியல் நிபுணர்களால் 'நிதிஷ் குமார் இந்த தேர்தலில் தோல்வியடைவார்' எனக் கூறப்பட்ட நிலையில், பீகார் பெண்களின் வாக்குகளால் அமோக வெற்றியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து 10-வது முறையாக முதல்வர் பதவியேற்றார். ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் காரணமாகவும், பீகாரில் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தவுமே அவரின் எம்.பி விருப்பம் தள்ளிப்போடப்பட்டதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமார், நிஷாந்த் குமார் 75 வயதான நிதிஷ் குமார், 10 முறை முதலமைச்சராகப் பதவியேற்று சாதனைப் படைத்திருக்கும் நிலையில்தான், அவர் முதல்வர் பதவியை துறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், பீகாரின் அடுத்த முதல்வராக பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்படலாம் என்றும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் மாநில துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் பதவியேற்பு

விகடன் 4 Mar 2026 6:09 pm

திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து வெளியான தகவல்

திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து வெளியான தகவல்

சமயம் 4 Mar 2026 5:51 pm

இன்னும் முடிவாகாத சீட்; வேலைகளை ஜரூராகத் தொடங்கி விட்ட மநீம பிரபலங்கள்! - இவர்கள்தான் வேட்பாளர்களா?

திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது. அக்கட்சி சார்பில் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உட்பட சில நிர்வாகிகள் வந்து திமுக-வின் குழுவோடு பேசினார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது, ''பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது. 'திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும்' என்கிற விபரங்களை தரவுகளோடு ஒப்படைத்திருக்கிறோம். எந்தெந்த தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது என்கிற விபரங்களையுமே ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறோம். இது முதல் கட்டப் பேச்சு வார்த்தைதான். எந்தெந்த தொகுதிகள் கேட்டோம் என்பதை இங்கு பகிர முடியாது. கோழி அடைகாப்பது போல் காத்து வருகிறோம். குஞ்சு பொரிக்கும் போது உங்களுக்குத் தெரியத்தான் போகிறது' என ஜாலி மூடில் பேசிவிட்டுச் சென்றார். இதற்கு முந்தைய, அதாவது மநீம தனது சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்ட போது, அதன் தேர்தல் அறிக்கையே அவ்வளவு சூடாக இருந்தது. ஸ்டாலின், கமல்ஹாசன் ''அதிமுக, திமுக கட்சிகளின் மோசமான ஆட்சியாலும், தவறான நிதி நிர்வாகத்தாலும் தமிழகத்தின் கடன் சுமை 1 லட்ச‌ம் கோடியிலிருந்து, 5.75 லட்சம் கோடியாய் பெருகியது. இந்த இரு கட்சிகளும் வரி வருமானத்தை ம‌ட்டுமே நம்பி, மாநில நிர்வாகத்தை நடத்துவதற்கு கடன் வாங்கித்தான் நடத்த முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள் என்ப‌து வெளிப்படையாகத் தெரிகிறது. இக்கட்சிகளின் தலைவர்களால் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்ல முடியாது'' என ஆவேசமாக அறிக்கை தயாரித்திருந்தார் கமல். ஐந்தாண்டு கால திமுக ஆட்சி முடிந்த இன்றைய தேதியில், தமிழக அரசின் கடன் அப்படியே இரட்டிப்பாகியிருக்கிறது. இந்தப் பக்கம் கமலுமே அப்படியே தலைகீழாக மாறி இன்று திமுக கூட்டணியில் ஒரு கட்சியாகி விட்டார். snehan, kamal சரி எல்லோருக்கும் தெரிந்த இந்தக் கதை இப்போது எதற்கு? 'குஞ்சு பொரிக்கும் போது தெரியவரும்' என்கிறார்களே, அந்த மேட்டருக்குச் செல்லலாம். 'எத்தனை தொகுதிகள் மநீமவுக்குக் கிடைக்கலாம்' என்ற கேள்வியை கட்சியின் உயர்மட்டத்துடன் நெருக்கமான வட்டாரங்களில் காதை தீட்டினோம். 'ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மௌரியா, கவிஞர் சிநேகன் ரெண்டு பேரு பெயர்களும் பலமா அடிபடுது. இரண்டு தொகுதிகள் கிடைக்கும்னா இவங்களுக்கு முன்னுரிமை கிடைக்கலாம்னு சொல்றாங்க‌. இவர்களில் மௌரியாவுக்குக் கிடைத்தால் தலைநகரையொட்டிய ஏதாவது ஒரு தொகுதி இருக்குமாம். சிநேகன் சொந்த ஊர்ப் பக்கம் நிற்பாராம். சின்னம் உதயசூரியன் தான். ரெண்டு பேருமே தேர்தல் வேலைகளை நம்பிக்கையோட தொடங்கிட்டாங்க' என்கின்றனர் அவர்கள். Loading…

விகடன் 4 Mar 2026 5:48 pm

இன்னும் முடிவாகாத சீட்; வேலைகளை ஜரூராகத் தொடங்கி விட்ட மநீம பிரபலங்கள்! - இவர்கள்தான் வேட்பாளர்களா?

திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது. அக்கட்சி சார்பில் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உட்பட சில நிர்வாகிகள் வந்து திமுக-வின் குழுவோடு பேசினார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது, ''பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது. 'திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும்' என்கிற விபரங்களை தரவுகளோடு ஒப்படைத்திருக்கிறோம். எந்தெந்த தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது என்கிற விபரங்களையுமே ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறோம். இது முதல் கட்டப் பேச்சு வார்த்தைதான். எந்தெந்த தொகுதிகள் கேட்டோம் என்பதை இங்கு பகிர முடியாது. கோழி அடைகாப்பது போல் காத்து வருகிறோம். குஞ்சு பொரிக்கும் போது உங்களுக்குத் தெரியத்தான் போகிறது' என ஜாலி மூடில் பேசிவிட்டுச் சென்றார். இதற்கு முந்தைய, அதாவது மநீம தனது சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்ட போது, அதன் தேர்தல் அறிக்கையே அவ்வளவு சூடாக இருந்தது. ஸ்டாலின், கமல்ஹாசன் ''அதிமுக, திமுக கட்சிகளின் மோசமான ஆட்சியாலும், தவறான நிதி நிர்வாகத்தாலும் தமிழகத்தின் கடன் சுமை 1 லட்ச‌ம் கோடியிலிருந்து, 5.75 லட்சம் கோடியாய் பெருகியது. இந்த இரு கட்சிகளும் வரி வருமானத்தை ம‌ட்டுமே நம்பி, மாநில நிர்வாகத்தை நடத்துவதற்கு கடன் வாங்கித்தான் நடத்த முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள் என்ப‌து வெளிப்படையாகத் தெரிகிறது. இக்கட்சிகளின் தலைவர்களால் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்ல முடியாது'' என ஆவேசமாக அறிக்கை தயாரித்திருந்தார் கமல். ஐந்தாண்டு கால திமுக ஆட்சி முடிந்த இன்றைய தேதியில், தமிழக அரசின் கடன் அப்படியே இரட்டிப்பாகியிருக்கிறது. இந்தப் பக்கம் கமலுமே அப்படியே தலைகீழாக மாறி இன்று திமுக கூட்டணியில் ஒரு கட்சியாகி விட்டார். snehan, kamal சரி எல்லோருக்கும் தெரிந்த இந்தக் கதை இப்போது எதற்கு? 'குஞ்சு பொரிக்கும் போது தெரியவரும்' என்கிறார்களே, அந்த மேட்டருக்குச் செல்லலாம். 'எத்தனை தொகுதிகள் மநீமவுக்குக் கிடைக்கலாம்' என்ற கேள்வியை கட்சியின் உயர்மட்டத்துடன் நெருக்கமான வட்டாரங்களில் காதை தீட்டினோம். 'ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மௌரியா, கவிஞர் சிநேகன் ரெண்டு பேரு பெயர்களும் பலமா அடிபடுது. இரண்டு தொகுதிகள் கிடைக்கும்னா இவங்களுக்கு முன்னுரிமை கிடைக்கலாம்னு சொல்றாங்க‌. இவர்களில் மௌரியாவுக்குக் கிடைத்தால் தலைநகரையொட்டிய ஏதாவது ஒரு தொகுதி இருக்குமாம். சிநேகன் சொந்த ஊர்ப் பக்கம் நிற்பாராம். சின்னம் உதயசூரியன் தான். ரெண்டு பேருமே தேர்தல் வேலைகளை நம்பிக்கையோட தொடங்கிட்டாங்க' என்கின்றனர் அவர்கள். Loading…

விகடன் 4 Mar 2026 5:48 pm

காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன_

காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன_

சமயம் 4 Mar 2026 5:43 pm

2026 தேர்தலில் மிகவும் கவனிக்கப்படும் தொகுதி – கொளத்தூர்

2026 தேர்தலில் மிகவும் கவனிக்கப்படும் தொகுதி – கொளத்தூர்

சமயம் 4 Mar 2026 5:37 pm

இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது போடாதீர்கள், அது உங்கள் அரசின்.!- தமிழிசைக்கு சு.வெ பதில்

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என மத்திய அரசு பெயர் சூட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ' இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எங்களது தமிழ் மொழியின் முறையான மொழிபெயர்ப்பை எழுத அறிவுறுத்துங்கள். அதிகாரிகளின் தவறால் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்திருந்தார். தமிழிசை சௌந்தரராஜன் தமிழிசை சௌந்தரராஜனின் கோரிக்கைக்கு எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள். இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது. வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சிஎன்று பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டிருக்கிறார். Loading…

விகடன் 4 Mar 2026 5:08 pm

திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப்பாடி பழனிசாமி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக  நுழைவு வளைவு கட்டப்பட்டது. அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளனர். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்தியில் பெயர் அமைத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து திருச்சியில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். திருச்சி ஜங்சன் இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்க் குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது. எடப்பாடி பழனிசாமி இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா?

விகடன் 4 Mar 2026 5:02 pm

திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப்பாடி பழனிசாமி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக  நுழைவு வளைவு கட்டப்பட்டது. அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளனர். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்தியில் பெயர் அமைத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து திருச்சியில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். திருச்சி ஜங்சன் இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்க் குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது. எடப்பாடி பழனிசாமி இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா?

விகடன் 4 Mar 2026 5:02 pm

முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன? Explained

முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன? Explained

சமயம் 4 Mar 2026 4:53 pm

'புளித்துப் போன காமெடி பண்ணாதீங்க.!'- ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்தற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.! முதல்வர் ஸ்டாலின் இழிவான செயலில் ஒன்றிய பாஜக அரசு! 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர். குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர். சரியான பாடம் புகட்ட வேண்டும்! ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள். கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்! தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். அண்ணாமலை புளித்துப் போன காமெடி ஸ்டாலினின் இந்தப் பதிவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா? இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்? என்று சாடியிருக்கிறார்.

விகடன் 4 Mar 2026 3:48 pm

'புளித்துப் போன காமெடி பண்ணாதீங்க.!'- ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்தற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.! முதல்வர் ஸ்டாலின் இழிவான செயலில் ஒன்றிய பாஜக அரசு! 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர். குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர். சரியான பாடம் புகட்ட வேண்டும்! ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள். கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்! தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். அண்ணாமலை புளித்துப் போன காமெடி ஸ்டாலினின் இந்தப் பதிவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா? இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்? என்று சாடியிருக்கிறார்.

விகடன் 4 Mar 2026 3:48 pm

சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ளது. இந்திய விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலையை தூக்கிட்ட இடமாக பெரும்பாலும் அறியப்படும் சங்ககிரி கோட்டை பற்றிய தகவல் சேகரிக்க அங்கு நேரில் சென்றோம். பழைமையின் புதிர்கள்... சுமார் 1200 ஆண்டுக்கால வரலாறும் சுமார் 1200 அடி உயரத்தின் மேலும் அமைக்கப்பட்டுள்ள கோட்டை இதுவாகும். சங்ககிரி மலையை குடைந்து அங்கிருந்து எடுக்கப்பட்ட பெரிய கற்களைக் கொண்டே அந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது விஜயநகர பேரரசு காலத்தில் கட்டபட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழும் இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னர்களும் முக்கிய இடமாக இதை பயன்படுத்தியுள்ளனர். விஜயநகர- பேரரசு வர்த்தக பாதையாகவும், திப்பு சுல்தான் -படைத்தளமாகவும், ராணுவ துருப்பு பகுதியாகவும் இறுதியில் ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கொங்கு நாட்டின்‌ வரிவசூல் கிடங்காகவும் பயன்படுத்தியுள்ளனர். தண்டனைகளின் கோட்டை பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தக் கோட்டையானது, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான தண்டனை நிறைவேற்றும் பகுதியாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர். உருட்டிவிட்டான் பாறை, தோலுச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை மற்றும் ஆள் இறங்கு குழி என கொடுமையான தண்டனைகள் நிறைந்த கோட்டையாக இருந்துள்ளது. உருட்டிவிட்டான் பாறை:- இந்த தண்டனையில் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயரமான பாறை மீதிருந்து கீழே உருட்டிவிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும். தோலுச்சான் மேடு என்பது கைகள், கால்கள் கட்டப்பட்டு சாட்டையால் முதுகு மற்றும் உடலின் பகுதிகளில் தோல் உரியும் அளவுக்கு சாட்டையடிகள் குற்றத்திற்கு ஏற்ப அளிக்கப்படும். அப்படி என்னதான் உள்ளது... சுமார் 8-க்கும் மேற்பட்ட வாயில்களுடன் கோட்டை அமைப்புகளுடனான நீண்ட தூரம் மலை நடைப்பயணம் இந்த கோட்டையின் சிறப்பாகும். கற்களினால் செதுக்கப்பட்ட படிக்கட்டுகளுடன் செங்குத்தான பல வழிகளை கடந்த பிறகே கோட்டையின் உச்சியை அடைய முடியும். ஆங்காங்கே வாயில்களில் ஓய்வெடுக்க அமருமிடங்கள் மற்றும் சில இடங்களில் மண்டபங்களுடன் இணைந்த வாயில்கள் மேலும் தெப்பக்குளம் மற்றும் சிவன், பெருமாள், அனுமன் கோவில்கள் உள்ளடங்கிய கோட்டையாகும். சாதாரண நபர்கள் சராசரியாக மலையேற 2 மணி நேரமாகும். வயதானவர்கள் இந்த பயணம் தவிர்ப்பது நல்லது. மலையேற்றத்தின் பல பகுதிகளில் புகைப்படத்திற்கான இடங்களும் காணப்படுகிறது. மேலும், சங்ககிரி நகரத்தினையும் காண முடியும். வழியில் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கு நாம் பார்க்க முடியும். மேலும், கற்துண்களில் சிற்ப வேலைப்பாடுகளையும் நம்மால் காணமுடியும். 0காலை 6:00 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை இந்த சங்ககிரி மலைக்கோட்டை மக்கள் பார்வைக்கு இலவசமாக திறக்கப்படுகிறது. நீண்ட தூரம் காடு, மேடு என கடந்த பிறகே உச்சியை அடைய முடியும்.மேலும், இது ஒரு சவாலான நடைப்பயணமாக புதிய நபர்களுக்கு அமையும். அண்மையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க தலைமை செயலகத்தில் முதலைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்த கோட்டைக்கு, பார்வையாளர்களாக வந்த நபர்களிடம் பேசியபோது, ``பிழைமையான அமைப்புகள் அப்படியே நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால்,சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இது அனைவரும் பார்வையிடும் வகையில் மேம்படுத்த வேண்டும். வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டார்கள். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கருணாகரனிடம் பேசியபோது, ``இன்றைய தலைமுறை வரலாற்று பக்கங்களைப் புரட்ட தயங்குகின்றனர். இந்திய விடுதலை போரில் மிக முக்கிய பங்கு வகித்த, நம்முடைய வரலாற்று சின்னங்கள் மற்றும் அதன் வரலாறுகளை இன்றைய தலைமுறைகள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். வரலாறு தெரியாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்பதற்கு இணங்க வரலாற்று சின்னங்கள் மற்றும் அதனை பாதுகாக்க அரசுடன் பொதுமக்கள் கைக்கோக்க வேண்டும். அரசு இந்த வரலாற்று சின்னங்களை மக்கள் பார்வைக்கு எளிதாக்கி மற்றும் பழைமை மாறாமல் பராமரிப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு இந்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார். இந்த சங்ககிரி கோட்டையை அனைத்து மக்களுடம் பார்வையிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையான நவீன ரோப் கார் அமைத்து இந்த வரலாற்று சின்னத்தை மக்கள் பார்வைக்கு அரசு கொண்டு வருமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

விகடன் 4 Mar 2026 3:40 pm

சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ளது. இந்திய விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலையை தூக்கிட்ட இடமாக பெரும்பாலும் அறியப்படும் சங்ககிரி கோட்டை பற்றிய தகவல் சேகரிக்க அங்கு நேரில் சென்றோம். பழைமையின் புதிர்கள்... சுமார் 1200 ஆண்டுக்கால வரலாறும் சுமார் 1200 அடி உயரத்தின் மேலும் அமைக்கப்பட்டுள்ள கோட்டை இதுவாகும். சங்ககிரி மலையை குடைந்து அங்கிருந்து எடுக்கப்பட்ட பெரிய கற்களைக் கொண்டே அந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது விஜயநகர பேரரசு காலத்தில் கட்டபட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழும் இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னர்களும் முக்கிய இடமாக இதை பயன்படுத்தியுள்ளனர். விஜயநகர- பேரரசு வர்த்தக பாதையாகவும், திப்பு சுல்தான் -படைத்தளமாகவும், ராணுவ துருப்பு பகுதியாகவும் இறுதியில் ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கொங்கு நாட்டின்‌ வரிவசூல் கிடங்காகவும் பயன்படுத்தியுள்ளனர். தண்டனைகளின் கோட்டை பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தக் கோட்டையானது, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான தண்டனை நிறைவேற்றும் பகுதியாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர். உருட்டிவிட்டான் பாறை, தோலுச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை மற்றும் ஆள் இறங்கு குழி என கொடுமையான தண்டனைகள் நிறைந்த கோட்டையாக இருந்துள்ளது. உருட்டிவிட்டான் பாறை:- இந்த தண்டனையில் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயரமான பாறை மீதிருந்து கீழே உருட்டிவிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும். தோலுச்சான் மேடு என்பது கைகள், கால்கள் கட்டப்பட்டு சாட்டையால் முதுகு மற்றும் உடலின் பகுதிகளில் தோல் உரியும் அளவுக்கு சாட்டையடிகள் குற்றத்திற்கு ஏற்ப அளிக்கப்படும். அப்படி என்னதான் உள்ளது... சுமார் 8-க்கும் மேற்பட்ட வாயில்களுடன் கோட்டை அமைப்புகளுடனான நீண்ட தூரம் மலை நடைப்பயணம் இந்த கோட்டையின் சிறப்பாகும். கற்களினால் செதுக்கப்பட்ட படிக்கட்டுகளுடன் செங்குத்தான பல வழிகளை கடந்த பிறகே கோட்டையின் உச்சியை அடைய முடியும். ஆங்காங்கே வாயில்களில் ஓய்வெடுக்க அமருமிடங்கள் மற்றும் சில இடங்களில் மண்டபங்களுடன் இணைந்த வாயில்கள் மேலும் தெப்பக்குளம் மற்றும் சிவன், பெருமாள், அனுமன் கோவில்கள் உள்ளடங்கிய கோட்டையாகும். சாதாரண நபர்கள் சராசரியாக மலையேற 2 மணி நேரமாகும். வயதானவர்கள் இந்த பயணம் தவிர்ப்பது நல்லது. மலையேற்றத்தின் பல பகுதிகளில் புகைப்படத்திற்கான இடங்களும் காணப்படுகிறது. மேலும், சங்ககிரி நகரத்தினையும் காண முடியும். வழியில் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கு நாம் பார்க்க முடியும். மேலும், கற்துண்களில் சிற்ப வேலைப்பாடுகளையும் நம்மால் காணமுடியும். 0காலை 6:00 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை இந்த சங்ககிரி மலைக்கோட்டை மக்கள் பார்வைக்கு இலவசமாக திறக்கப்படுகிறது. நீண்ட தூரம் காடு, மேடு என கடந்த பிறகே உச்சியை அடைய முடியும்.மேலும், இது ஒரு சவாலான நடைப்பயணமாக புதிய நபர்களுக்கு அமையும். அண்மையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க தலைமை செயலகத்தில் முதலைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்த கோட்டைக்கு, பார்வையாளர்களாக வந்த நபர்களிடம் பேசியபோது, ``பிழைமையான அமைப்புகள் அப்படியே நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால்,சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இது அனைவரும் பார்வையிடும் வகையில் மேம்படுத்த வேண்டும். வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டார்கள். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கருணாகரனிடம் பேசியபோது, ``இன்றைய தலைமுறை வரலாற்று பக்கங்களைப் புரட்ட தயங்குகின்றனர். இந்திய விடுதலை போரில் மிக முக்கிய பங்கு வகித்த, நம்முடைய வரலாற்று சின்னங்கள் மற்றும் அதன் வரலாறுகளை இன்றைய தலைமுறைகள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். வரலாறு தெரியாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்பதற்கு இணங்க வரலாற்று சின்னங்கள் மற்றும் அதனை பாதுகாக்க அரசுடன் பொதுமக்கள் கைக்கோக்க வேண்டும். அரசு இந்த வரலாற்று சின்னங்களை மக்கள் பார்வைக்கு எளிதாக்கி மற்றும் பழைமை மாறாமல் பராமரிப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு இந்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார். இந்த சங்ககிரி கோட்டையை அனைத்து மக்களுடம் பார்வையிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையான நவீன ரோப் கார் அமைத்து இந்த வரலாற்று சின்னத்தை மக்கள் பார்வைக்கு அரசு கொண்டு வருமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

விகடன் 4 Mar 2026 3:40 pm

``காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்! - விஜயதரணி பேட்டி

தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி 2024-ம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனிலிருந்து கமலாலயத்திற்கு தாவினார். ஆனால் அப்போது முதல் இப்போது வரை அந்தக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?, பாரதிய ஜனதாவில் சேர்ந்த முடிவு தவறென நினைக்கிறீர்களா? என்பன போன்ற சில கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம். சத்திய மூர்த்தி பவன் ``'கட்சி கொறடா, மூன்று முறை எம்.எல்.ஏ என காங்கிரஸில் பிசியாக இருந்தீங்க. வரும் தேர்தலில் மீண்டும் விளவங்கோடு மக்கள்கிட்ட ஓட்டு கேட்டு போக வாய்ப்பு உள்ளதா? ``கட்சிதான் அதுகுறித்து முடிவெடுக்கும். தொடர்ந்து மக்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே காங்கிரஸ் கட்சியில இருந்து வெளியேறினேன். பா.ஜ.க தலைமைக்கும் இது தெரியும். அதனால தலைவர்கள் முடிவெடுப்பாங்க. அதுக்கு இன்னும் அவகாசம் இருக்கு. கமலாலயம் ``ஆனாலும் பெரிய பொறுப்புகள் எதுவும் பி.ஜே.பி.யில் தரப்பட்டதாகத் தெரியவில்லையே? ``மாநில அளவில் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். இதுவே முக்கியமான பொறுப்புதான். மாவட்டத்தில் நடக்கிற கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கிறாங்க. தவிர எந்தவொரு முக்கிய முடிவுன்னாலும் கருத்து கேக்கறாங்க. இதுக்கு மேல என்ன செய்யணும்? 23 வருஷம், அதாவது என் இளமைப் பருவத்தையெல்லால் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவு செய்தேன். அதுக்குப் பிறகுதன் அங்கீகாரம் தந்தாங்க. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்யணும்னு நான் நினைச்சப்ப இடையூறு தந்தாங்க. அதனாலேயே ஒருகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன். ஆனா அப்படி வெளியேறிய பிறகும் எம்.பி. தேர்தல் சீட்டுக்கு ஆசைப்பட்டுதான் கட்சி மாறினதா வதந்தி பரப்பினாங்க. அது உண்மையில்லை. இங்க வந்து 23 மாதங்கள்தானே ஆகுது. ஆதனால பா.ஜ.க. வில் அங்கீகாரம் கிடைக்கலைங்கிறது நிஜமில்லை. NDA கூட்டணி மாநாடு ``தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கா? ``களம் எங்களுக்குச் சாதகமாகவே இருக்கு. எதிர்க்கட்சி கூட்டணி ஓவர் லோடுல போயிட்டிருக்கு. போற வர்றவங்களையெல்லாம் கூட்டணிக்கு இழுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வாக்கு சதவிகிதமே இல்லைனு நிரூபணமான கட்சிகளைக் கூட கணக்குக்காக சேர்த்திருக்காங்க. காரணம் தோல்வி பயம். எங்க கூட்டணியில எந்தச் சிக்கலும் இல்லை.. வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு. tvk ``காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நீடிக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா? அந்தக் கட்சியில் பல வருடம் இருந்த உங்க அனுபவத்தில் சொல்லுங்களேன். ``காங்கிரஸ் கட்சியில் இன்னைக்கு தேதிக்கு 99 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வேண்டாம்னு சொல்றதா தெரிய வருது. இவங்க சூடு சொரணை உள்ளவர்கள். 1 சதவிகிதம் பேருக்கு அது கிடையாது. அவங்க திமுக அரசுகிட்ட இருந்து சில பல சலுகைகளை அனுபவிச்சுகிட்டு அங்கதான் இருக்கணும்னு சொல்லிட்டு வர்றாங்க. யார் பேச்சை கேக்கணும்கிறதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் தீர்மாணிக்கணும். என்றார். முழுமையான பேட்டியை காண...

விகடன் 4 Mar 2026 2:51 pm

'இந்த'முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்

ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கான பதிலைப் பல செய்தி அறிக்கைகள் தருகின்றன. அதன் தொகுப்பு இதோ... Financial Times - பல ஆண்டுகளாகவே, ஈரான் முக்கிய தலைவர்களைக் கண்காணிக்கத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிசிடிவி டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அந்த கேமராக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. ஈரான் போர் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold British Daily - அப்படி ஹேக் செய்யப்பட்ட கேமராக்களில் ஒன்று - டெஹ்ரானின் முக்கிய வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கிறது. அந்த டிராபிக் கேமரா வழியாக தான், காமேனி சம்பவம் நடந்த அன்று 'எங்கே இருந்தார்?' என்பதை இஸ்ரேலும், மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA) சரியாக கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. Reuters அறிக்கை படி, இஸ்ரேலின் உளவுத் துறை, சனிக்கிழமை காலை, டெஹ்ரானில் முக்கிய வளாகத்தில் மீட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு தான், அங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, சி.ஐ.ஏ காமேனி அந்தச் சந்திப்பில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது என்று சொல்கிறார்கள். ஆக, சிசிடிவி கேமரா தான் காமேனியின் கொலையில் முக்கிய உளவாளியாக இருந்துள்ளது. 'ஹீரோ' Crude Oil: 'காலத்தே பயிர் செய்' - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே!

விகடன் 4 Mar 2026 2:44 pm

'இந்த'முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்

ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கான பதிலைப் பல செய்தி அறிக்கைகள் தருகின்றன. அதன் தொகுப்பு இதோ... Financial Times - பல ஆண்டுகளாகவே, ஈரான் முக்கிய தலைவர்களைக் கண்காணிக்கத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிசிடிவி டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அந்த கேமராக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. ஈரான் போர் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold British Daily - அப்படி ஹேக் செய்யப்பட்ட கேமராக்களில் ஒன்று - டெஹ்ரானின் முக்கிய வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கிறது. அந்த டிராபிக் கேமரா வழியாக தான், காமேனி சம்பவம் நடந்த அன்று 'எங்கே இருந்தார்?' என்பதை இஸ்ரேலும், மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA) சரியாக கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. Reuters அறிக்கை படி, இஸ்ரேலின் உளவுத் துறை, சனிக்கிழமை காலை, டெஹ்ரானில் முக்கிய வளாகத்தில் மீட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு தான், அங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, சி.ஐ.ஏ காமேனி அந்தச் சந்திப்பில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது என்று சொல்கிறார்கள். ஆக, சிசிடிவி கேமரா தான் காமேனியின் கொலையில் முக்கிய உளவாளியாக இருந்துள்ளது. 'ஹீரோ' Crude Oil: 'காலத்தே பயிர் செய்' - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே!

விகடன் 4 Mar 2026 2:44 pm

அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்' - நிகிதா பேட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அஜித்குமார் கொலை வழக்கு இந்த நிலையில் மதுரை மாவட்ட  நீதிமன்றத்தில்  அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று  சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜரானார். நிகிதா இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அசன் முகம்மது நிகிதாவிடம், நகை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க ஆட்சேபனை இருக்கிறதா?' என்றார். அதற்கு நிகிதா, `ஆட்சேபனை ஏதும் இல்லை' என வாய்மொழியாக கூறிய நிலையில்   9ஆம் தேதிக்கு ஆஜராகி எழுத்து மூலமாக அதை கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா பேசும் போது, “ நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது, தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் ஊடகத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள். மதுரை மாவட்ட நீதிமன்றம் நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.  நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. அஜித்குமார் மரண வழக்கு மறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு. அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார்” என தெரிவித்துள்ளார். `நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' - மடப்புரம் அஜித்குமாரின் தாயார்

விகடன் 4 Mar 2026 2:35 pm

அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்' - நிகிதா பேட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அஜித்குமார் கொலை வழக்கு இந்த நிலையில் மதுரை மாவட்ட  நீதிமன்றத்தில்  அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று  சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜரானார். நிகிதா இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அசன் முகம்மது நிகிதாவிடம், நகை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க ஆட்சேபனை இருக்கிறதா?' என்றார். அதற்கு நிகிதா, `ஆட்சேபனை ஏதும் இல்லை' என வாய்மொழியாக கூறிய நிலையில்   9ஆம் தேதிக்கு ஆஜராகி எழுத்து மூலமாக அதை கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா பேசும் போது, “ நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது, தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் ஊடகத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள். மதுரை மாவட்ட நீதிமன்றம் நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.  நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. அஜித்குமார் மரண வழக்கு மறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு. அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார்” என தெரிவித்துள்ளார். `நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' - மடப்புரம் அஜித்குமாரின் தாயார்

விகடன் 4 Mar 2026 2:35 pm

'இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு...' - தேர்தல் சர்ச்சைக்கு தவெக ஆதரவு முஸ்தபா விளக்கம்

தவெகவின் 'ஒரே' கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் கட்சி வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என ஒரு செய்தியை அக்கட்சியின் தலைவர் முஸ்தபாவின் விளக்கத்தோடு வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியானவுடன் அவர் மேலும் அதுசார்ந்து விளக்கம் அளிக்க விரும்புவதாக நம்மை தொடர்புகொண்டார். முஸ்தபா முஸ்தபா கூறியதாவது, 'அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம். ஆவடி நாசர், ஆளுர் ஷாநவாஸ் என இஸ்லாமியர்களுக்கு எதிராகவே எங்கள் கட்சி ஆட்களை நிறுத்தி, ஒரு இஸ்லாமியரும் இன்னொரு இஸ்லாமியரும் மோதிக்கொள்ளும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. இஸ்லாமியர்களுக்குள் சகோதர யுத்தம் வேண்டாம் என நினைக்கிறோம். எந்த இஸ்லாமிய அமைப்பிலிருந்தும் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் சென்றால் எங்களுக்கு மகிழ்ச்சியே. இஸ்லாமியர்கள் கணிசமாக இருந்தும் முறையான பிரதிநிதித்துவம் கிடைக்காத கடையநல்லூர், பாபநாசம் போன்ற தொகுதிகளில் எங்களுக்கு வாய்ப்பு கேட்கிறோம். இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை. அதை முதலில் கட்சிக்குள் இருந்து அமல்படுத்துங்கள் என தவெகவிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். முஸ்தபா 23 எம்.எல்.ஏக்கள் இடங்களை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க சொல்கிறோம். இதுதான் எங்களின் கொள்கை. இதன்படியே நாங்கள் செயல்பட விரும்புகிறோம். தவெக கூட்டணி பேச குழு அமைக்கும் போது இதையெல்லாம் பேசி முடிவெடுப்போம்' என்றார்.

விகடன் 4 Mar 2026 2:22 pm

`நிச்சயதார்த்தத்திலும் நீண்ட ஆலோசனை; கார்கே மனதை கரைத்த சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் `டீல்'பின்னணி

“நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் - தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதிக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்கிறார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர்.  காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது. நேற்று இரவு செல்வபெருந்தகை  மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாக தொடர்பு  கொண்டு முதலில் பேசியிருக்கிறார் சிதம்பரம். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இந்த முறை உள்ளாட்சியில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ம் ஆண்டு மேலும் ஒரு ராஜ்ய சபாவை பெற்றுக்கொள்ளலாம் என்று கார்கேவின் மனதை கரைத்துள்ளார் சிதம்பரம். இறுதியாக கனிமொழியும் சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, “அண்ணன் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம்.  ராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் தரப்புக்கு தகவலை சொல்லியுள்ளார் கனிமொழி. இன்று அதிகாலை சிதம்பரம் தி.மு.க தரப்பை தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு ராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை ஓ.கே சொல்லிவிட்ட தகவலை சொல்லியுள்ளார். ராகுல், ஸ்டாலின், விஜய், அமித் ஷா அதன்பிறகே இன்றுமாலை அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் வருத்ததில் இருந்த கிரஷ் சோடாங்கரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.  தி.மு.க தர உள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த தமிழரான இந்த பெண், மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம்வரும் இவரை ராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை  ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள்.  தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த ரேஸில் குதித்துள்ளார்கள். குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்த ரேஸில் உள்ளார்கள். முடிவு விரைவில் தெரியும்.!

விகடன் 4 Mar 2026 1:47 pm

`நிச்சயதார்த்தத்திலும் நீண்ட ஆலோசனை; கார்கே மனதை கரைத்த சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் `டீல்'பின்னணி

“நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் - தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதிக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்கிறார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர்.  காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது. நேற்று இரவு செல்வபெருந்தகை  மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாக தொடர்பு  கொண்டு முதலில் பேசியிருக்கிறார் சிதம்பரம். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இந்த முறை உள்ளாட்சியில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ம் ஆண்டு மேலும் ஒரு ராஜ்ய சபாவை பெற்றுக்கொள்ளலாம் என்று கார்கேவின் மனதை கரைத்துள்ளார் சிதம்பரம். இறுதியாக கனிமொழியும் சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, “அண்ணன் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம்.  ராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் தரப்புக்கு தகவலை சொல்லியுள்ளார் கனிமொழி. இன்று அதிகாலை சிதம்பரம் தி.மு.க தரப்பை தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு ராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை ஓ.கே சொல்லிவிட்ட தகவலை சொல்லியுள்ளார். ராகுல், ஸ்டாலின், விஜய், அமித் ஷா அதன்பிறகே இன்றுமாலை அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் வருத்ததில் இருந்த கிரஷ் சோடாங்கரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.  தி.மு.க தர உள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த தமிழரான இந்த பெண், மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம்வரும் இவரை ராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை  ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள்.  தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த ரேஸில் குதித்துள்ளார்கள். குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்த ரேஸில் உள்ளார்கள். முடிவு விரைவில் தெரியும்.!

விகடன் 4 Mar 2026 1:47 pm

ஈரான் போர் நீடித்தால் இந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன?!

ஐந்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் மேலும் நீடித்தால் இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்று Quick Points ஆக பார்ப்போம்... வாங்க... > சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 75 டாலர் அளவிற்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இப்போதைக்கு இந்தியாவிடம் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. இந்தப் போர் நீடித்து இந்தியாவில் கச்சா எண்ணெய் குறைபாட்டை எட்டினால், இங்கே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கலாம். ஏற்றுமதி-இறக்குமதி 'ஹீரோ' Crude Oil: 'காலத்தே பயிர் செய்' - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே! > எண்ணெயைத் தவிர்த்து, பிற ஏற்றுமதி, இறக்குமதிகளை இந்தியா ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகத் தான் செய்து வருகிறது. இப்போது அது மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் வணிகம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது நீடித்தால், வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படலாம். > ஈரானில் தான் போர் என்றாலும், வளைகுடா நாடுகளிலும் தாக்குதல் மற்றும் பதற்றம் பரவியுள்ளது. ஆகையால், அங்கே முழுவதுமாகவும், பாதியாகவும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இது இந்திய விமான போக்குவரத்தை பாதித்து வருகிறது. > எண்ணெய் விலை உயர்வு, வணிக பாதிப்பு போன்றவை இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இது சாமானியர்களையும் பாதிக்கும். > இந்தப் பதற்றத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், ஏற்கெனவே இந்திய முதலீட்டுகளை விற்றுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மேலும் தங்களது முதலீடுகளை விற்கலாம். > முக்கியமாக, இந்திய பங்குச்சந்தை பெருமளவு வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி இந்தப் போரை சுற்றி இருப்பதால், இந்த வீழ்ச்சி தொடரலாம். சாபஹார் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold > இந்தியாவின் நிதியுதவி உடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள துறைமுகம் 'சாபஹார் துறைமுகம்'. இந்தத் துறைமுகம் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியைத் தவிர்த்து பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யலாம் என்பது தான் இந்தியாவின் பிளான். ஈரானில் நடந்து வரும் இந்தத் தாக்குதலில் இந்தத் துறைமுகம் பாதிக்கப்பட்டால், நிச்சயம் அது இந்தியாவிற்கு இன்னொரு பெரிய அடியாக இருக்கும். > வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். போர் தொடர்ந்தால் இவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். > மேலும், இவர்களிடம் இருந்து இந்தியாவிற்கு வரும் பணத்திலும் சிக்கல் ஏற்படலாம். 'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?

விகடன் 4 Mar 2026 1:23 pm

'குஞ்சு பொரித்தவுடன் எத்தனை சீட் என சொல்வோம்!' - அறிவாலயத்தில் கமல் பாணியில் ம.நீ.ம பேச்சுவார்த்தை

திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது. அருணாச்சலம் அக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட நிர்வாகிகள் திமுகவின் குழுவோடு பேசியிருந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் பேசியதாவது, ``திமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும் என தரவுகளோடு ஒப்படைத்தோம். எந்தெந்த தொகுதிகளில் ம.நீ.ம பெர்பார்ம் செய்திருக்கிறது என தொகுதி வாரியாக தரவுகளை கொடுத்தோம். அந்த தரவுகளை திமுகவின் குழு ஆய்வு செய்தது. இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான். நாங்கள் என்ன கேட்டோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. கோழி அடைகாப்பத்தை போல அடைகாத்து வருகிறோம். குஞ்சு பொriக்கும் போது உங்களுக்கே தெரியும்' என்றார். கமல் - Kamal Haasan மக்கள் நீதி மய்யத்தை உதய சூரியன் சின்னத்த்தில் நிற்க திமுக வலியுறுத்துவதாக தெரிகிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்கின்றனர். Loading…

விகடன் 4 Mar 2026 1:11 pm

'குஞ்சு பொரித்தவுடன் எத்தனை சீட் என சொல்வோம்!' - அறிவாலயத்தில் கமல் பாணியில் ம.நீ.ம பேச்சுவார்த்தை

திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது. அருணாச்சலம் அக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட நிர்வாகிகள் திமுகவின் குழுவோடு பேசியிருந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் பேசியதாவது, ``திமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும் என தரவுகளோடு ஒப்படைத்தோம். எந்தெந்த தொகுதிகளில் ம.நீ.ம பெர்பார்ம் செய்திருக்கிறது என தொகுதி வாரியாக தரவுகளை கொடுத்தோம். அந்த தரவுகளை திமுகவின் குழு ஆய்வு செய்தது. இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான். நாங்கள் என்ன கேட்டோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. கோழி அடைகாப்பத்தை போல அடைகாத்து வருகிறோம். குஞ்சு பொriக்கும் போது உங்களுக்கே தெரியும்' என்றார். கமல் - Kamal Haasan மக்கள் நீதி மய்யத்தை உதய சூரியன் சின்னத்த்தில் நிற்க திமுக வலியுறுத்துவதாக தெரிகிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்கின்றனர். Loading…

விகடன் 4 Mar 2026 1:11 pm

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!- மாணிக்கம் தாகூர் சூசகம்

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்படி திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. ராகுல் காந்தி, ஸ்டாலின் கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களை விட கட்சி பெரியது. மாணிக்கம் தாகூர் தலைமை முடிவு செய்யும் போது அதனை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி என்று பதிவிட்டிருக்கிறார். இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை தான் சூசகமாக பதிவிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது. Loading…

விகடன் 4 Mar 2026 1:03 pm

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!- மாணிக்கம் தாகூர் சூசகம்

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்படி திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. ராகுல் காந்தி, ஸ்டாலின் கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களை விட கட்சி பெரியது. மாணிக்கம் தாகூர் தலைமை முடிவு செய்யும் போது அதனை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி என்று பதிவிட்டிருக்கிறார். இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை தான் சூசகமாக பதிவிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது. Loading…

விகடன் 4 Mar 2026 1:03 pm

`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்' - தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!

ராஜ்ய சபையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் 4 உறுப்பினர்களை பா.ஜ.க தேர்வு செய்ய இருக்கிறது. இது தவிர சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சிகள் தலா ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சிகளால் ஒரு உறுப்பினரை மட்டும் தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சி கூட்டணியில் அந்த ஒரு இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஒரு இடம் தங்களது கட்சிக்கு வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அந்த இடம் தங்களுக்கு வேண்டும் என்று கூறி வந்தது. இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்)வும், காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. மற்றொரு புறம் சரத்பவாருக்கு அப்பதவியை கொடுக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கோரிக்கை விடுத்துள்ளது. சரத்பவார் இது தொடர்பாக சரத் பவார் மகள் சுப்ரியா சுலே உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் இவ்விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாளை வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். இதையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேரடியாக உத்தவ் தாக்கரேயிடம் பேசி இருக்கிறார். தற்போது ராஜ்ய சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் ராஜ்ய சபையில் மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10 சதவீத உறுப்பினர்களை காங்கிரஸ் பெற்று இருக்கவேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்குமா? ராஜ்ய சபையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் காங்கிரஸ் மூத்த எம்.பி.க்களான அபிஷேக் மனு சிங்வி, ரஜ்னி பாட்டீல், பூலோதேவி நேதம், கே.டி.எஸ்.துளசி ஆகியோர் ஓய்வு பெறுவதால், மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் 10 சதவீதத்துக்கும் கீழே போகலாம். ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமானால் காங்கிரஸ் கட்சிக்கு 25 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். உத்தவிடம் உதவ கோரும் காங்கிரஸ் எனவே மகாராஷ்டிராவில் இருந்து தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கவில்லையெனில் ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடும் என்று உத்தவ் தாக்கரேயிடம் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். தேசிய நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்படி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு அடுத்த மாதம் உத்தவ் தாக்கரேயின் சட்டமேலவை உறுப்பினர் பதவி காலியாகிறது. இதில் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க தாங்கள் ஆதரவு கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. காங்கிரஸும் சிவசேனாவும் (உத்தவ்) ஒரு ராஜ்ய சபை இடம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும், உத்தவ் தாக்கரே கட்சி எம்பி சஞ்சய் ராவுத், சரத் பவாரை ஆதரித்துள்ளார். அவர் அளித்த பேட்டிகளில், ``ராஜ்ய சபை தேர்தலில் சரத்பவார் போட்டியிடுவார் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். சரத்பவார் இதில் போட்டியிடுவார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் ராவத் தெரிவித்துள்ளார். அதேசமயம் சிவசேனா(உத்தவ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜ்ய சபைக்கான ஒரு இடத்தை பற்றி கவலை கொண்டு இருப்பதை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராவத், காங்கிரஸ் ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பற்றி கவலைப்படுகிறது. சிவசேனா (உத்தவ்) ராஜ்யசபாவில் அதன் இரண்டு இடங்களைப் பற்றி கவலைப்படுகிறது என்று கூறினார். ஒரு இடத்தை இரண்டு கட்சிகளும் கேட்பதால் உத்தவ் தாக்கரே பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். வரும் 16ம் தேதி இத்தேர்தல் நடைபெறுகிறது.! Loading…

விகடன் 4 Mar 2026 12:50 pm

`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்' - தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!

ராஜ்ய சபையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் 4 உறுப்பினர்களை பா.ஜ.க தேர்வு செய்ய இருக்கிறது. இது தவிர சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சிகள் தலா ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சிகளால் ஒரு உறுப்பினரை மட்டும் தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சி கூட்டணியில் அந்த ஒரு இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஒரு இடம் தங்களது கட்சிக்கு வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அந்த இடம் தங்களுக்கு வேண்டும் என்று கூறி வந்தது. இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்)வும், காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. மற்றொரு புறம் சரத்பவாருக்கு அப்பதவியை கொடுக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கோரிக்கை விடுத்துள்ளது. சரத்பவார் இது தொடர்பாக சரத் பவார் மகள் சுப்ரியா சுலே உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் இவ்விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாளை வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். இதையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேரடியாக உத்தவ் தாக்கரேயிடம் பேசி இருக்கிறார். தற்போது ராஜ்ய சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் ராஜ்ய சபையில் மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10 சதவீத உறுப்பினர்களை காங்கிரஸ் பெற்று இருக்கவேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்குமா? ராஜ்ய சபையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் காங்கிரஸ் மூத்த எம்.பி.க்களான அபிஷேக் மனு சிங்வி, ரஜ்னி பாட்டீல், பூலோதேவி நேதம், கே.டி.எஸ்.துளசி ஆகியோர் ஓய்வு பெறுவதால், மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் 10 சதவீதத்துக்கும் கீழே போகலாம். ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமானால் காங்கிரஸ் கட்சிக்கு 25 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். உத்தவிடம் உதவ கோரும் காங்கிரஸ் எனவே மகாராஷ்டிராவில் இருந்து தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கவில்லையெனில் ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடும் என்று உத்தவ் தாக்கரேயிடம் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். தேசிய நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்படி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு அடுத்த மாதம் உத்தவ் தாக்கரேயின் சட்டமேலவை உறுப்பினர் பதவி காலியாகிறது. இதில் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க தாங்கள் ஆதரவு கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. காங்கிரஸும் சிவசேனாவும் (உத்தவ்) ஒரு ராஜ்ய சபை இடம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும், உத்தவ் தாக்கரே கட்சி எம்பி சஞ்சய் ராவுத், சரத் பவாரை ஆதரித்துள்ளார். அவர் அளித்த பேட்டிகளில், ``ராஜ்ய சபை தேர்தலில் சரத்பவார் போட்டியிடுவார் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். சரத்பவார் இதில் போட்டியிடுவார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் ராவத் தெரிவித்துள்ளார். அதேசமயம் சிவசேனா(உத்தவ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜ்ய சபைக்கான ஒரு இடத்தை பற்றி கவலை கொண்டு இருப்பதை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராவத், காங்கிரஸ் ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பற்றி கவலைப்படுகிறது. சிவசேனா (உத்தவ்) ராஜ்யசபாவில் அதன் இரண்டு இடங்களைப் பற்றி கவலைப்படுகிறது என்று கூறினார். ஒரு இடத்தை இரண்டு கட்சிகளும் கேட்பதால் உத்தவ் தாக்கரே பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். வரும் 16ம் தேதி இத்தேர்தல் நடைபெறுகிறது.! Loading…

விகடன் 4 Mar 2026 12:50 pm

பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா | ‘வாவ்’ வியூகம் 08

பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா ‘வாவ்’ வியூகம் 08 தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் 12.22 லட்சம் பேர் அதிகம் உள்ளனர். முந்தைய காலங்களிலும்கூட பெரும்பாலும் இவ்வாறாக பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்டதாகவே வாக்காளர் பட்டியல் இருந்திருக்கிறது. இந்தியா முழுவதுமே பரவலாக இதே போக்குதான், விதிவிலக்காக வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமிருப்பதைக் காணலாம். இந்த புள்ளிவிவரமே சொல்லும் தேசிய, மாநிலக் கட்சிகள், வளரும், அரும்பும் அரசியல் கட்சிகள் என எல்லாவற்றுக்கும் பெண் வாக்காளர்களை ஈர்ப்பது எவ்வளவு முக்கியமென்பது. பெண்களின் வாக்குகளை வசப்படுத்துவது என்பது அத்தனை எளிதல்ல. அதை அரசியல் களத்தில் லாவகமாக செயல்படுத்தி அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் சாதித்ததையும், தேர்தல் களம் காணாமலேயே கணிசமான அளவில் பெண்கள் அபிமானத்தை சம்பாதித்து வைத்திருக்கும் விஜய் அரசியல் பற்றியும் இனி அலசுவோம். பெண் வாக்காளர்கள் ‘முன்னோடி’ அண்ணா தேர்தல் அரசியலில் பெண் வாக்காளர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களை தக்கவைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அண்ணாவில் இருந்து ஆரம்பிப்பது தமிழக அரசியல் வரலாற்றைப் பொருத்தவரை ஆகப் பொருத்தமானது. அண்ணா முதல்வராவதற்கு முன்னர் தேர்ந்த வாசிப்பாளராக, சிந்தை தெளிவுடன் மேடைகளில் பேசக் கூடியவராக, மொழி ஆளுமை மிக்கவராக இவற்றைக் கொண்டு சமூக நீதி அரசியலை முன்னெடுப்பவராக இருந்தார். அவருடைய எழுத்துகள் அன்றைய காலக்கட்டத்தில் நிலவிய பல்வேறு சமூகப் பிரச்சினைகளை பேசியதோடு அவற்றுக்கான தீர்வை முன்னிறுத்துவதாகவே அமைந்தன. அப்படித்தான் அண்ணாவின் எழுத்துகளில் பெண்களின் முன்னேற்றம் வியாபித்துக் கிடந்தது. பாரதி கண்ட புதுமைப் பெண் போல் அண்ணாவும் தன் வழியில் பெண்கள் புரட்சிக்கு மிகப்பெரிய அடித்தளமிட்டிருக்கிறார். சமூக கட்டுப்பாடுகளை பெண்கள் உடைத்தெறிவது பற்றி அவர் தனது பல கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறார். குடும்பத்தில் மனைவியின் கடமைகள் அவளுக்கு சுமையாவது, மிகுந்த வயது வித்தியாசம் கொண்ட ஆணுக்கு பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பது, கைம்பெண்ணின் பாலியல் உணர்வும் சமூகம் அப்பெண்ணின் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அண்ணா தனது கட்டுரைகளில் ஆழமாகப் பேசியிருக்கிறார். அறிஞர் அண்ணா அரசியல் தளத்தில் பெண்ணுரிமை பற்றிய விவாதங்களும், பெண்கள் முன்னேற்றம் சார்ந்த பார்வைகளும் விரியும் முன்னரே அண்ணா மறைந்துவிட்டார் என்றாலும் கூட, அந்தக் குறுகிய காலத்தில் அவர் , “பெண்களையும் உள்ளடக்கியது தான் திராவிட இயக்கத்தின் சமூக முன்னேற்றப் பார்வை” என்பதை வகுத்துக் கொடுத்துவிட்டுத்தான் மறைந்தார் எனலாம். திமுகவில் அன்னை சத்தியவாணி முத்துவைக் கொள்கை பரப்புச் செயலாளராக்கி அந்தக் காலத்திலேயே கட்சி அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்மாதிரியை ஏற்படுத்தியவர் தான் அண்ணா. 1967 முதல் 1969 வரை தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சியின்போது ஹரிஜன நலன் மற்றும் தகவல் துறை அமைச்சராகப் சத்தியவாணி முத்து பணியாற்றினார். அண்ணாவின் ஆட்சியில் தான் சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பெண்களின் உரிமைகளை அச்சட்டம் பெற்று தந்ததோடு அவர்களின் சுயமரியாதையையும் காப்பாற்றியது. விதவை மணம் புரிந்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அவர் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன. சத்தியவாணி முத்து திமுக ஆட்சியைப் பிடித்தபோது அதன் பின்னணியில் அது முன்னெடுத்த சமூக, மொழிப் போராட்டங்கள்தான் முக்கியமானவையாக இருந்தன. இருந்தாலும், ஆட்சிக்கு வந்தபின்னர் கட்சியோடு, பெண்களின் முன்னேற்றமும் சேர்த்தே வளர்த்தெடுக்கப்பட்டது. அந்தப் பார்வைதான் இன்றுவரை திமுகவில் மகளிர் நலத் திட்டங்கள் வடிவில் வாவ் வியூகங்களாக சுழன்று கொண்டிருக்கிறது. கருணாநிதியின் முன்னெடுப்புகள் பெரியார், அண்ணா வழியில் வந்த கருணாநிதி, முன்னவர்கள் மேடையில் பெண்கள் நலன் சார்ந்து பேசியதையும், அவற்றையும் தாண்டி பெண்களின் வளர்ச்சிக்கு பல திட்டங்களையும் திராவிட இயக்கத்தின் சார்பில் கொண்டுவந்திருக்கிறார். பெண்களின் வாழ்வை மாற்றியமைத்த திட்டங்களில் சில வரலாற்றில் முத்திரை பதித்தவையாகும். பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகேப்பேறு உதவி திட்டம் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். மகளிர் காவல் நிலையங்களை உருவாக்க 1973-ம் ஆண்டு விதை போட்டவர் கருணாநிதி. அடுத்த ஆண்டு, பெண்கள் காவல் துறையில் இணைந்து பயிற்சி பெற்றனர். அவர்களின் முதல் அணிவகுப்பு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் 1992-ல் முதல் மகளிர் காவல் நிலையம் ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைக்கப்பட்டது. 1929 ஆண்டு செங்கல்பட்டில், தந்தை பெரியார் தலைமையில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘நமக்காக ஒருவன் சிறை செல்கிறான் எனில்.!' - தலைவர்களின் சிறைவாசமும் தாக்கமும்! | ‘வாவ்’ வியூகம் 07 பெரியாரின் கனவை 1989-ம் ஆண்டு நிறைவேற்றிக் காட்டினார் கருணாநிதி. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டம் அந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேறியது. அப்போது பேசிய கருணாநிதி “எந்த ஒரு சமூக மறுமலர்ச்சியும், பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் ஏற்படாது” என்று கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது. 1989-ம் ஆண்டு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களையும் சேர்ந்த பெண்களுக்கு ஆரம்பப் பள்ளி முதல் , பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கும் ஈ.வே.ரா. நாகம்மையார் கல்வித்திட்டத்தை கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு என்பதாகும். ஏராளமான பெண்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பணிகளில் சேர்ந்தனர். 1996-ம் ஆண்டு தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்தார் கருணாநிதி. கருணாநிதி இந்தப் பட்டியலை கருணாநிதி ஆட்சிக் காலத்தின் கடைசி காலம் வரை நீட்டித்துக் கொண்டே செல்லலாம். மக்கள் இல்லங்களில் ‘கலைஞர்’ சமூகத்தில் பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம்தான் திமுகவின் ஆரம்ப காலம் தொட்டு மகளிர் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள பெரும் பலமாக இருந்துள்ளது. 2006-ல் திமுக வெளியிட்ட சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் இலவச கேஸ் அடுப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதே தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இன்னொரு முக்கிய அறிவிப்பு இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம். கேஸ் அடுப்பு, இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டங்கள் தமிழகத்தில் பெண்களை வெகுவாகக் கவர்ந்தது. விறகுப் புகையில், மண்ணெண்ணெய் நெடியில் இருந்து பெண்கள் விடுபட்டனர். டிவி பார்க்க அதை வைத்தவர் வீட்டை நம்பியிருக்க வேண்டிய சூழலில் எல்லோர் வீட்டிலும் கலைஞர் வண்ணத் தொலைக்காட்சி ஓட ஆரம்பித்தது. பெண்கள் உரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்களின் தேவை என்றே திமுக தனது தேர்தல் வியூகங்களை வகுத்து வந்திருக்கிறது. திமுக பெருந்தலைகள் ஆரம்ப காலத்தில் மகளிர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, பின்னர் அதன் வாயிலாகவே மகளிர் வாக்குகளை தக்கவைத்தனர். அண்ணாவும் கருணாநிதியும் பெண்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டு, அவர்களின் வாக்குகளையும் வசப்படுத்தி, தேர்தல் களம் என்னும் கிரிக்கெட்டில் ‘க்ளாஸ்’ ஓபனிங் பேட்டிங் செய்ய, அத்தகைய வியூகங்களின் அடுத்தகட்ட பாய்ச்சலைக் காட்டி 2021 களத்தில் வின்னிங் ஷாட் விளாசியது சமீபத்திய வரலாறு. இந்த விஷயத்தில் திமுகவுக்கு சற்றும் சளைத்தது அல்ல அதிமுக. அதற்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவுமே சான்று. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.! (தொடரும்) Loading…

விகடன் 4 Mar 2026 12:25 pm

பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா | ‘வாவ்’ வியூகம் 08

பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா ‘வாவ்’ வியூகம் 08 தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் 12.22 லட்சம் பேர் அதிகம் உள்ளனர். முந்தைய காலங்களிலும்கூட பெரும்பாலும் இவ்வாறாக பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்டதாகவே வாக்காளர் பட்டியல் இருந்திருக்கிறது. இந்தியா முழுவதுமே பரவலாக இதே போக்குதான், விதிவிலக்காக வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமிருப்பதைக் காணலாம். இந்த புள்ளிவிவரமே சொல்லும் தேசிய, மாநிலக் கட்சிகள், வளரும், அரும்பும் அரசியல் கட்சிகள் என எல்லாவற்றுக்கும் பெண் வாக்காளர்களை ஈர்ப்பது எவ்வளவு முக்கியமென்பது. பெண்களின் வாக்குகளை வசப்படுத்துவது என்பது அத்தனை எளிதல்ல. அதை அரசியல் களத்தில் லாவகமாக செயல்படுத்தி அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் சாதித்ததையும், தேர்தல் களம் காணாமலேயே கணிசமான அளவில் பெண்கள் அபிமானத்தை சம்பாதித்து வைத்திருக்கும் விஜய் அரசியல் பற்றியும் இனி அலசுவோம். பெண் வாக்காளர்கள் ‘முன்னோடி’ அண்ணா தேர்தல் அரசியலில் பெண் வாக்காளர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களை தக்கவைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அண்ணாவில் இருந்து ஆரம்பிப்பது தமிழக அரசியல் வரலாற்றைப் பொருத்தவரை ஆகப் பொருத்தமானது. அண்ணா முதல்வராவதற்கு முன்னர் தேர்ந்த வாசிப்பாளராக, சிந்தை தெளிவுடன் மேடைகளில் பேசக் கூடியவராக, மொழி ஆளுமை மிக்கவராக இவற்றைக் கொண்டு சமூக நீதி அரசியலை முன்னெடுப்பவராக இருந்தார். அவருடைய எழுத்துகள் அன்றைய காலக்கட்டத்தில் நிலவிய பல்வேறு சமூகப் பிரச்சினைகளை பேசியதோடு அவற்றுக்கான தீர்வை முன்னிறுத்துவதாகவே அமைந்தன. அப்படித்தான் அண்ணாவின் எழுத்துகளில் பெண்களின் முன்னேற்றம் வியாபித்துக் கிடந்தது. பாரதி கண்ட புதுமைப் பெண் போல் அண்ணாவும் தன் வழியில் பெண்கள் புரட்சிக்கு மிகப்பெரிய அடித்தளமிட்டிருக்கிறார். சமூக கட்டுப்பாடுகளை பெண்கள் உடைத்தெறிவது பற்றி அவர் தனது பல கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறார். குடும்பத்தில் மனைவியின் கடமைகள் அவளுக்கு சுமையாவது, மிகுந்த வயது வித்தியாசம் கொண்ட ஆணுக்கு பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பது, கைம்பெண்ணின் பாலியல் உணர்வும் சமூகம் அப்பெண்ணின் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அண்ணா தனது கட்டுரைகளில் ஆழமாகப் பேசியிருக்கிறார். அறிஞர் அண்ணா அரசியல் தளத்தில் பெண்ணுரிமை பற்றிய விவாதங்களும், பெண்கள் முன்னேற்றம் சார்ந்த பார்வைகளும் விரியும் முன்னரே அண்ணா மறைந்துவிட்டார் என்றாலும் கூட, அந்தக் குறுகிய காலத்தில் அவர் , “பெண்களையும் உள்ளடக்கியது தான் திராவிட இயக்கத்தின் சமூக முன்னேற்றப் பார்வை” என்பதை வகுத்துக் கொடுத்துவிட்டுத்தான் மறைந்தார் எனலாம். திமுகவில் அன்னை சத்தியவாணி முத்துவைக் கொள்கை பரப்புச் செயலாளராக்கி அந்தக் காலத்திலேயே கட்சி அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்மாதிரியை ஏற்படுத்தியவர் தான் அண்ணா. 1967 முதல் 1969 வரை தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சியின்போது ஹரிஜன நலன் மற்றும் தகவல் துறை அமைச்சராகப் சத்தியவாணி முத்து பணியாற்றினார். அண்ணாவின் ஆட்சியில் தான் சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பெண்களின் உரிமைகளை அச்சட்டம் பெற்று தந்ததோடு அவர்களின் சுயமரியாதையையும் காப்பாற்றியது. விதவை மணம் புரிந்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அவர் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன. சத்தியவாணி முத்து திமுக ஆட்சியைப் பிடித்தபோது அதன் பின்னணியில் அது முன்னெடுத்த சமூக, மொழிப் போராட்டங்கள்தான் முக்கியமானவையாக இருந்தன. இருந்தாலும், ஆட்சிக்கு வந்தபின்னர் கட்சியோடு, பெண்களின் முன்னேற்றமும் சேர்த்தே வளர்த்தெடுக்கப்பட்டது. அந்தப் பார்வைதான் இன்றுவரை திமுகவில் மகளிர் நலத் திட்டங்கள் வடிவில் வாவ் வியூகங்களாக சுழன்று கொண்டிருக்கிறது. கருணாநிதியின் முன்னெடுப்புகள் பெரியார், அண்ணா வழியில் வந்த கருணாநிதி, முன்னவர்கள் மேடையில் பெண்கள் நலன் சார்ந்து பேசியதையும், அவற்றையும் தாண்டி பெண்களின் வளர்ச்சிக்கு பல திட்டங்களையும் திராவிட இயக்கத்தின் சார்பில் கொண்டுவந்திருக்கிறார். பெண்களின் வாழ்வை மாற்றியமைத்த திட்டங்களில் சில வரலாற்றில் முத்திரை பதித்தவையாகும். பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகேப்பேறு உதவி திட்டம் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். மகளிர் காவல் நிலையங்களை உருவாக்க 1973-ம் ஆண்டு விதை போட்டவர் கருணாநிதி. அடுத்த ஆண்டு, பெண்கள் காவல் துறையில் இணைந்து பயிற்சி பெற்றனர். அவர்களின் முதல் அணிவகுப்பு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் 1992-ல் முதல் மகளிர் காவல் நிலையம் ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைக்கப்பட்டது. 1929 ஆண்டு செங்கல்பட்டில், தந்தை பெரியார் தலைமையில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘நமக்காக ஒருவன் சிறை செல்கிறான் எனில்.!' - தலைவர்களின் சிறைவாசமும் தாக்கமும்! | ‘வாவ்’ வியூகம் 07 பெரியாரின் கனவை 1989-ம் ஆண்டு நிறைவேற்றிக் காட்டினார் கருணாநிதி. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டம் அந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேறியது. அப்போது பேசிய கருணாநிதி “எந்த ஒரு சமூக மறுமலர்ச்சியும், பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் ஏற்படாது” என்று கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது. 1989-ம் ஆண்டு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களையும் சேர்ந்த பெண்களுக்கு ஆரம்பப் பள்ளி முதல் , பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கும் ஈ.வே.ரா. நாகம்மையார் கல்வித்திட்டத்தை கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு என்பதாகும். ஏராளமான பெண்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பணிகளில் சேர்ந்தனர். 1996-ம் ஆண்டு தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்தார் கருணாநிதி. கருணாநிதி இந்தப் பட்டியலை கருணாநிதி ஆட்சிக் காலத்தின் கடைசி காலம் வரை நீட்டித்துக் கொண்டே செல்லலாம். மக்கள் இல்லங்களில் ‘கலைஞர்’ சமூகத்தில் பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம்தான் திமுகவின் ஆரம்ப காலம் தொட்டு மகளிர் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள பெரும் பலமாக இருந்துள்ளது. 2006-ல் திமுக வெளியிட்ட சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் இலவச கேஸ் அடுப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதே தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இன்னொரு முக்கிய அறிவிப்பு இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம். கேஸ் அடுப்பு, இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டங்கள் தமிழகத்தில் பெண்களை வெகுவாகக் கவர்ந்தது. விறகுப் புகையில், மண்ணெண்ணெய் நெடியில் இருந்து பெண்கள் விடுபட்டனர். டிவி பார்க்க அதை வைத்தவர் வீட்டை நம்பியிருக்க வேண்டிய சூழலில் எல்லோர் வீட்டிலும் கலைஞர் வண்ணத் தொலைக்காட்சி ஓட ஆரம்பித்தது. பெண்கள் உரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்களின் தேவை என்றே திமுக தனது தேர்தல் வியூகங்களை வகுத்து வந்திருக்கிறது. திமுக பெருந்தலைகள் ஆரம்ப காலத்தில் மகளிர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, பின்னர் அதன் வாயிலாகவே மகளிர் வாக்குகளை தக்கவைத்தனர். அண்ணாவும் கருணாநிதியும் பெண்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டு, அவர்களின் வாக்குகளையும் வசப்படுத்தி, தேர்தல் களம் என்னும் கிரிக்கெட்டில் ‘க்ளாஸ்’ ஓபனிங் பேட்டிங் செய்ய, அத்தகைய வியூகங்களின் அடுத்தகட்ட பாய்ச்சலைக் காட்டி 2021 களத்தில் வின்னிங் ஷாட் விளாசியது சமீபத்திய வரலாறு. இந்த விஷயத்தில் திமுகவுக்கு சற்றும் சளைத்தது அல்ல அதிமுக. அதற்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவுமே சான்று. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.! (தொடரும்) Loading…

விகடன் 4 Mar 2026 12:25 pm

`உலக மகாமேதைகளே... நானும் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறேன்..!' - தவெக தலைவர் விஜய் காட்டம்

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று (புதன்கிழமை - மாா்ச் 4) நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து காரில் செங்கிப்பட்டி வந்தார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. விஜய் vs ஸ்டாலின் சார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், ``வேலூர் நிர்வாகிகள் சந்திப்பில் நான் தான் தமிழ்நாடு என்றுக் கூறியிருந்தேன், தமிழ்நாட்டு மக்களின் ஒரே உண்மையான பிரதிநிதியாக நாம்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே. தமிழ்நாடு vs ஸ்டாலின் சார்... அதாவது விஜய் vs ஸ்டாலின். தவெக தலைவர் விஜய் இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்.. இதில் எப்படி பா.ஜ.க வந்தது எனக் கேள்வி கேட்டிருந்தேன். அதையும், விஜய் பாஜகவுக்காகப் பேசுகிறார் எனத் திரித்துப் பேசினார்கள். நம் சிறுபான்மைச் சகோதரர்களை ஏமாற்றும் வேலை இனி செய்ய முடியாது என்பதைத் தெரிந்து திரித்துப் பேசும் வேலையைச் செய்கிறார்கள். சென்னையில் டெல்லி டெல்லி எனப் பேசுவதும், அடித்தக் கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் அதே டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பதும் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டைக் காப்பது, பிழைக்க வைப்பது திமுக ஸ்டாலின்தான் எனப் பேசுவது வேலைக்கு ஆகாது. இப்போது சிறுவர்கள் கூட ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். TVK:``பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான் - மீண்டும் அதிமுக-வை சீண்டிய தவெக! தமிழ்நாட்டு அணி டெல்லி அணி எனப் பேசுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணி தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசிலை போடுவது சிஎஸ்கே - வரக்கூடிய தேர்தலிலும் விசிலை போடப்போவது டிவிகே. டெல்லி அணி மட்டுமல்லா எல்லா அணியையும் தவெக அடித்து நொறுக்கும். எனக்கும் என் மக்களுக்கும் நடுவில் யாராலும் உள்நுழைய முடியாது. இது ஒரு அம்மா - பையன். அப்பா - மகன், அண்ணன் - தம்பி, அக்கா - தம்பி உறவு. இது மற்றவர்களுக்கு தான் எலக்சன் என்னையும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் எமோஷன். ஊழலற்ற, உண்மையான, சமூக நீதியை நிலை நாட்ட, நம் ஆட்சியை அமைப்பீர்கள் என்ற உறுதி மொழியை நீங்கள் எனக்கு நீங்கள் தர வேண்டும். இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே... உண்மையிலேயே கொடுப்பீர்கள் தானே... இந்த விஜய்யை நம்புகிறீர்கள் தானே... தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டம் நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் பொழுது, நமக்கே அறியாமல் விவசாயிகளுக்கு நன்றி சொல்வோம். எனக்கு அடுத்த ஜென்மத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அப்படி அடுத்த ஜென்மம் இருந்தால் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு விவசாயத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். மற்றவர்களைப் போல நானும் டெல்டாகாரன் தான் என உங்கள் காதுகளில் டால்டா ஊத்துவதற்கு வரவில்லை. விவசாயிகளைப் பற்றித்தான் எனக்கு தெரியாது. அவர்கள் படும் கஷ்டங்கள் எனக்கு நன்றாக தெரியும். என்றார். தொடர்ந்து, ``ஐநா சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நிலத்தடி நீர் திவாலாகப் போகிறது என்ற தகவலை வெளியிட்டிருந்தது. மண்ணையும், மணலையும், மலைகளையும், கனிம வளங்களையும் கொள்ளையடித்தால் என்ன ஆகும்? 'மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் சொன்னதே... 'கனிமவளக் கொள்ளைகளுக்கெல்லாம் மணல் மாஃபியாதான் காரணம்' என மதுரை உயர் நீதிமன்றம் சொன்னதே.. இதையெல்லாம் மறந்துட்டீங்களா? தவெக விஜய் மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவளிப்பதே உங்கள் திமுக அரசு தானே, இதை இல்லை என்று சொல்ல முடியுமா? தண்ணீர், கனிம வளம் மட்டுமல்ல உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாகப் போகிறது. கடன் வாங்கி உங்கள் அரசு கவிழ்ந்து விட்டது. விவசாயிகள் விளைவித்த நெல் மழையில் நனைந்து வீணாகிப்போனதே அதை கவனித்தீர்களா? விவசாயிகள் போராட்டத்தில் உடன் நின்றீர்களா? ஆனால் அவர்கள் போராடினால், குண்டாசில் மட்டும் கைது செய்வீர்கள். இதுதானே உங்கள் சாதனை. பரந்தூர் பிரச்சனையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டின் அனைத்து நதிகளையும் இணைப்போம் என்ற சொன்னவர்கள், அதைச் செய்தார்களா? இவர்கள் எப்பொழுதும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற திட்டங்களை அறிவித்துவிட்டு, தேர்தலில் தோற்றுவிடுவார்கள். அதற்கு பின்பு எங்களுடைய ஆட்சி முடிந்து விட்டதே... என சாக்கு சொல்வார்கள். நம்முடைய ஆட்சி அமைந்ததும் இது போன்ற பெரிய திட்டங்களை உடனே தொடங்கி, அதை ஆட்சி முடிவதற்குள் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வோம். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் உன் கருத்து என்ன என கேட்பார்கள் உலக மகாமேதைகளே ஆர்.ஓ.வி மூலம் தண்ணிக்குள்ளே சென்று அணைகளின் உறுதி தன்மையை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு நானும் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறேன். என்றார். (More Details will Updated here) Loading…

விகடன் 4 Mar 2026 11:46 am

'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?

வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே - ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில் பரவியுள்ள பதற்றத்தால் கச்சா எண்ணெய் மேலும் மேலும் எகிறும் என்கிற அச்சம். இந்த இரண்டினால் பயப்படும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வேகமாக விற்று வருகின்றனர். இதனால், பங்குச்சந்தையும் சரி... இந்திய ரூபாயின் மதிப்பும் சரி... வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இன்னொரு பக்கம், அமெரிக்காவின் டாலர் வலுவடைந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவில் இருந்து மாற்றி வருகின்றனர். ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold ஏன் கச்சா எண்ணெய் விலை இந்தியாவிற்கு மைனஸ்? உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம். இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வது நிச்சயம் இந்தியாவை சற்று அசைத்துப் பார்க்கும் தான். ஹார்மோஸ் ஜலசந்தி தற்போது மூடப்பட்டிருப்பதால், இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளை கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேட வேண்டும். ஆனால், இந்தியாவிடம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, ஒரு மாதத்தைத் தாண்டியும் போர் நீடித்தால், இந்தியாவிற்கு இது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்தச் சூழல் பாதிக்கும் முக்கிய விஷயங்களில் இந்திய ரூபாய் மதிப்பும் ஒன்று. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் என்ன ஆகும்? இங்கே பணவீக்கம் அதிகரிக்கும். அடுத்ததாக, வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும். இது இரண்டும் நடந்தால் சாமானிய மக்களின் வாழ்க்கைக் கூட பாதிக்கும். அடுத்ததாக, அமெரிக்க டாலர்களில் கடன் வாங்கி இருக்கும் இந்திய நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஏற்கெனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இந்திய முதலீடுகளை விற்றுகொண்டு வருகின்றனர். இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தால், அவர்கள் மேலும் தங்களது முதலீடுகளை வெளியேற்றுவார்கள். இதில் இருக்கும் பாசிட்டிவான விஷயம் என்னவென்றால், ஐ.டி, ஜவுளி போன்ற துறைகள் ஏற்றுமதியில் பலனடையும். இந்திய ரூபாயின் மதிப்பு எப்போது சரியாகலாம்? இந்தப் போர் முடிந்து, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வருவதில் பிரச்னை இல்லை என்கிற சூழல் உருவாகும் போதும்... இந்தியாவில் பணவீக்கம் இல்லை என்கிற நிலை உருவாகும் போதும். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் வீழ்ச்சியை சரிசெய்ய தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துருக்கிறது. ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?

விகடன் 4 Mar 2026 11:24 am

'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?

வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே - ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில் பரவியுள்ள பதற்றத்தால் கச்சா எண்ணெய் மேலும் மேலும் எகிறும் என்கிற அச்சம். இந்த இரண்டினால் பயப்படும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வேகமாக விற்று வருகின்றனர். இதனால், பங்குச்சந்தையும் சரி... இந்திய ரூபாயின் மதிப்பும் சரி... வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இன்னொரு பக்கம், அமெரிக்காவின் டாலர் வலுவடைந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவில் இருந்து மாற்றி வருகின்றனர். ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold ஏன் கச்சா எண்ணெய் விலை இந்தியாவிற்கு மைனஸ்? உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம். இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வது நிச்சயம் இந்தியாவை சற்று அசைத்துப் பார்க்கும் தான். ஹார்மோஸ் ஜலசந்தி தற்போது மூடப்பட்டிருப்பதால், இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளை கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேட வேண்டும். ஆனால், இந்தியாவிடம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, ஒரு மாதத்தைத் தாண்டியும் போர் நீடித்தால், இந்தியாவிற்கு இது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்தச் சூழல் பாதிக்கும் முக்கிய விஷயங்களில் இந்திய ரூபாய் மதிப்பும் ஒன்று. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் என்ன ஆகும்? இங்கே பணவீக்கம் அதிகரிக்கும். அடுத்ததாக, வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும். இது இரண்டும் நடந்தால் சாமானிய மக்களின் வாழ்க்கைக் கூட பாதிக்கும். அடுத்ததாக, அமெரிக்க டாலர்களில் கடன் வாங்கி இருக்கும் இந்திய நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஏற்கெனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இந்திய முதலீடுகளை விற்றுகொண்டு வருகின்றனர். இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தால், அவர்கள் மேலும் தங்களது முதலீடுகளை வெளியேற்றுவார்கள். இதில் இருக்கும் பாசிட்டிவான விஷயம் என்னவென்றால், ஐ.டி, ஜவுளி போன்ற துறைகள் ஏற்றுமதியில் பலனடையும். இந்திய ரூபாயின் மதிப்பு எப்போது சரியாகலாம்? இந்தப் போர் முடிந்து, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வருவதில் பிரச்னை இல்லை என்கிற சூழல் உருவாகும் போதும்... இந்தியாவில் பணவீக்கம் இல்லை என்கிற நிலை உருவாகும் போதும். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் வீழ்ச்சியை சரிசெய்ய தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துருக்கிறது. ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?

விகடன் 4 Mar 2026 11:24 am

மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! - மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி?

ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி அவரது பதவியை ஏற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை மொஜ்தபாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.1969-இல் ஈரானின் மஷாத் நகரில் பிறந்த முஜ்தபா, தனது ஆரம்ப காலத்தை ஈரானின் கடைசி ஷாவான முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராக போராடி வந்த தனது தந்தையின் எழுச்சிக்கு மத்தியில் கழித்தார். 1979-ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியின் மூலம் நாட்டின் தலையெழுத்து மாறியதுடன் புதிய ஆட்சி அதிகாரத்தில் காமேனி குடும்பம் முக்கிய அங்கம் வகித்தது. மொஜ்தபா பின்னர் ஈரானின் மிக முக்கியமான ஷியா ஆன்மீக மையமான கோம் நகரில் உள்ள மதப் பள்ளிகளில் தனது ஆன்மீகப் படிப்பைத் தொடர்ந்தார். இறுதியில் அவர் ஹோஜத்துல் இஸ்லாம் என்ற மதகுரு பதவியை அடைந்தார். அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள 'அயதுல்லா'க்களில் ஒருவராகக் கருதப்படாவிட்டாலும், ஈரானில் தனது தந்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரின் அலுவலகத்தில் படிப்படியாக தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார். தனது இளமைக் காலத்தில், மொஜ்தபா ஈரான் மற்றும் ஈராக் இடையே நடந்த போரில் முக்கிய பங்காற்றினார். இந்த அனுபவம், ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாப்பு படையான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப்படையில் அவருக்கு மிகுந்த தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. மொஜ்தபா நீண்டகாலமாக பழமைவாத பிரிவுகளுடனும், இஸ்லாமியக் குடியரசின் அரசியல் பாதுகாப்புப் படையுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு போரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இருந்த ராணுவத் தொடர்புகளே அவர் ஈரானின் புதிய உயர்ந்த பட்ச தலைவராக வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிலர். பொது மேடைகளில் பேசுவதையோ அல்லது அதிகாரப்பூர்வ பதவிகள் வகிப்பதையோ அவர் தவிர்த்து வந்தாலும், அரசியல் நியமனங்கள், வியூகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அவர் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஈரானின் அரசியலமைப்பின்படி மதகுருமார்கள் அடங்கிய அமைப்பே உயர்ந்த பட்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, இந்த அமைப்பு உடனடியாகக் கூடி மொஜ்தபாவை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரது இந்த நியமனம் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மன்னராட்சிக்கு எதிரான அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு குடியரசு நாட்டில், முன்னாள் உயர்ந்த பட்ச தலைவரின் மகனுக்கே மீண்டும் அந்தப் பதவியை வழங்குவது ஒரு வாரிசு அரசியலாக அமைந்துள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆயதுல்லா அலி காமேனி Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! | In-depth அதேபோல், ஈரானின் மிக உயர்ந்த மத அதிகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான பாரம்பரிய தகுதிகள் மற்றும் மத அறிஞருக்கான அந்தஸ்து அவரிடம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையில், மொஜ்தபா ஒரு முன்னணி பழமைவாத அரசியல்வாதியின் மகளான சஹ்ரா ஹத்தாத் என்பவரை  திருமணம் செய்துள்ளார். இது ஈரானின் உயர்மட்ட அதிகார வர்க்கத்தினருடன் அவருக்குள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையிலிருந்து விலக்கியே வைத்துள்ளனர். மொஜ்தபா உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது துல்லியமான சொத்து மதிப்பு குறித்து தெரியவில்லை. அவர் உலகளாவிய ரீதியில் ஒரு சொத்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளதாகவும், பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான நிதியை மேலைநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

விகடன் 4 Mar 2026 11:13 am

மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! - மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி?

ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி அவரது பதவியை ஏற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை மொஜ்தபாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.1969-இல் ஈரானின் மஷாத் நகரில் பிறந்த முஜ்தபா, தனது ஆரம்ப காலத்தை ஈரானின் கடைசி ஷாவான முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராக போராடி வந்த தனது தந்தையின் எழுச்சிக்கு மத்தியில் கழித்தார். 1979-ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியின் மூலம் நாட்டின் தலையெழுத்து மாறியதுடன் புதிய ஆட்சி அதிகாரத்தில் காமேனி குடும்பம் முக்கிய அங்கம் வகித்தது. மொஜ்தபா பின்னர் ஈரானின் மிக முக்கியமான ஷியா ஆன்மீக மையமான கோம் நகரில் உள்ள மதப் பள்ளிகளில் தனது ஆன்மீகப் படிப்பைத் தொடர்ந்தார். இறுதியில் அவர் ஹோஜத்துல் இஸ்லாம் என்ற மதகுரு பதவியை அடைந்தார். அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள 'அயதுல்லா'க்களில் ஒருவராகக் கருதப்படாவிட்டாலும், ஈரானில் தனது தந்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரின் அலுவலகத்தில் படிப்படியாக தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார். தனது இளமைக் காலத்தில், மொஜ்தபா ஈரான் மற்றும் ஈராக் இடையே நடந்த போரில் முக்கிய பங்காற்றினார். இந்த அனுபவம், ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாப்பு படையான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப்படையில் அவருக்கு மிகுந்த தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. மொஜ்தபா நீண்டகாலமாக பழமைவாத பிரிவுகளுடனும், இஸ்லாமியக் குடியரசின் அரசியல் பாதுகாப்புப் படையுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு போரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இருந்த ராணுவத் தொடர்புகளே அவர் ஈரானின் புதிய உயர்ந்த பட்ச தலைவராக வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிலர். பொது மேடைகளில் பேசுவதையோ அல்லது அதிகாரப்பூர்வ பதவிகள் வகிப்பதையோ அவர் தவிர்த்து வந்தாலும், அரசியல் நியமனங்கள், வியூகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அவர் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஈரானின் அரசியலமைப்பின்படி மதகுருமார்கள் அடங்கிய அமைப்பே உயர்ந்த பட்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, இந்த அமைப்பு உடனடியாகக் கூடி மொஜ்தபாவை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரது இந்த நியமனம் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மன்னராட்சிக்கு எதிரான அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு குடியரசு நாட்டில், முன்னாள் உயர்ந்த பட்ச தலைவரின் மகனுக்கே மீண்டும் அந்தப் பதவியை வழங்குவது ஒரு வாரிசு அரசியலாக அமைந்துள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆயதுல்லா அலி காமேனி Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! | In-depth அதேபோல், ஈரானின் மிக உயர்ந்த மத அதிகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான பாரம்பரிய தகுதிகள் மற்றும் மத அறிஞருக்கான அந்தஸ்து அவரிடம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையில், மொஜ்தபா ஒரு முன்னணி பழமைவாத அரசியல்வாதியின் மகளான சஹ்ரா ஹத்தாத் என்பவரை  திருமணம் செய்துள்ளார். இது ஈரானின் உயர்மட்ட அதிகார வர்க்கத்தினருடன் அவருக்குள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையிலிருந்து விலக்கியே வைத்துள்ளனர். மொஜ்தபா உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது துல்லியமான சொத்து மதிப்பு குறித்து தெரியவில்லை. அவர் உலகளாவிய ரீதியில் ஒரு சொத்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளதாகவும், பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான நிதியை மேலைநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

விகடன் 4 Mar 2026 11:13 am

தொடரும் போர் பதற்றம்: ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு?

ஈரான் மீதான போர் உச்சகட்டத்தில் நீடிக்கும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் - அமெரிக்கா ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 36 ஆண்டுகள் நாட்டை ஆண்ட அயதுல்லா கமேனியுடன் அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்தியும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். அயதுல்லா அலி கமேனியின் உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும், அடக்கம் செய்வதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகான நியமிக்கப்பட்ட வாரிசு இல்லை என்பதால், அயதுல்லா அலிரேசா அராஃபி, ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன், தலைமை நீதிபதி கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் ஆகியோர் அடங்கிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஈரானின் இடைக்கால தலைமைத்துவக் குழு, அடுத்த உச்சத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டது. மொஜ்தபா ஹொசைனி கமேனி இஸ்ரேல் - அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் பல துபாய், அபுதாபி, கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளைத் தாக்கின. ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அயதுல்ல அலி கமேனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்க அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் நிபுணர்கள் சபையால் அவர் கமேனியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி?

விகடன் 4 Mar 2026 10:52 am

தருமபுரி: விவாத நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட திமுக - அதிமுக நிர்வாகிகள்! - முகம் சுழித்த பொதுமக்கள்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தருமபுரியில் விவாத நிகழ்ச்சியை கடந்த 2 ஆம் தேதி இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. கலவரமான நிகழ்ச்சி இதில் தருமபுரி திமுக எம்.பி ஆ.மணி, முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன், நாதக மாநில ஒருஙகிணைப்பாளர் சந்தோஷ்குமார் உள்ளிடடோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் வந்திருந்தனர். தருமபுரி மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிரபார்க்கும் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள், பழைய பேருந்து நிலையம் மாற்றப்பட்ட விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எம்.பி மணி, அன்பழகன் எம்.எல்.ஏ பதில் அளித்தனர். கே.பி.அன்பழகன் அதுமட்டுமின்றி தங்கள் கட்சி ஆட்சி காலத்தை புகழ்ந்து பேசியதோடு மாறி மாறி விமர்சனத்தையும் வைத்து பேசியதால் வந்திருந்த இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் சத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தனர். 'மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது காவிரி உபரி நீர்த் திட்டம் கொண்டுவரப்படும்' என்று அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் பேசும்போது, திமுக எம்.பி மணி குறுக்கிட்டுப்பேச, அதற்கு அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டபடி பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீச ஆரம்பித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த தருமபுரி எஸ்.பி தொடர்ந்து திமுகவினரும் சத்தம் எழுப்பி சேர்களை தூக்கி வீச அந்த இடமே கூச்சல், குழப்பத்துடன் போர்க்களம் போலானது. இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டாலும், இரண்டு தரப்பையும் போலீசாரால் அமைதிபடுத்த முடியவில்லை. தகவல் தெரிந்து தருமபுரி எஸ்.பி மகேஸ்வரன் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியவர், இரண்டு கட்சியினரிடமும் கலைந்து செல்ல உத்தரவிட்டார். ஆனால் யாரும் செல்லாமல் அங்கேயே நின்றவர்கள், ஒருவழியாக 9 மணிக்கு மேல்தான் கலந்து சென்றனர். தருமபுரி எம்.பி ஆ.மணி விவாத நிகழ்ச்சியில் ஆக்கப்பூர்வமாக பேசாமல் பொறுமை இல்லாமல் இரண்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Loading…

விகடன் 4 Mar 2026 10:26 am

'தேர்தல்ல போட்டி போட விருப்பமில்லங்க!' - ட்விஸ்ட் கொடுக்கும் தவெகவின் 'ஒரே'கூட்டணி கட்சி?

விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா என்கிற வாதம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தவெகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. முஸ்தபா தேர்தலில் போட்டியிடாமல் இருக்க அந்த கட்சித் தலைவர் முஸ்தபா சொல்லும் காரணம்தான் தவெகவினருக்கு 'ஷாக்' கொடுத்திருக்கிறது. தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடந்த பிப்ரவரியில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தது. ஆனந்தையும் ஆதவ்வையும் சந்தித்து தங்களின் ஆதரவை முஸ்தபா தெரிவித்திருந்தார். தவெகவும் முஸ்தபாவை அரவணைத்துக் கொண்டது. எல்லா மேடையிலும் முஸ்தபாவுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. தங்களை நம்பி வந்த ஒரே கட்சி என்பதால் தவெகவின் தலைமையும் முஸ்தபாவை முக்கிய இடத்தில் வைத்திருந்தது. விஜய் தவெகவுக்காக பல டிவி விவாதங்களிலும் வரிந்து கட்டிக் கொண்டு பேசும் வாய்ப்பையும் தலைமை அவருக்கு கொடுத்தது. பெரிய கட்சிகளிடம் கூட்டணி கட்சிகள் அதிக சீட்களை கேட்டு அரசியல் களத்தை தகிக்க விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், முஸ்தபாவும் தவெக தலைமையிடம் அதிக சீட்டுகளை கேட்டு நெருக்கிக் கொண்டிருப்பார் என நினைத்தோம். கூட்டணியில் ஒரே ஒரு கட்சிதான் இருக்கிறது என்பதால் முஸ்தபா கேட்கும் இடத்தை தவெக கொடுக்கும் என்றும் தோன்றியது. இதே எண்ணத்தோடு பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம். 'அவரு உஷாரான ஆளுங்க. அவருக்கு எலெக்சன்ல போட்டி போடுற எண்ணமே இல்ல...' என அதிர்ச்சி கொடுக்கின்றனர் தவெகவினர். `என்னணே சொல்றீங்க' என மேற்படி விசாரிக்கையில், 'முஸ்தபா மிக தெளிவாக இருக்கிறார். இந்தத் தேர்தலில் தவெகவால் என்ன செய்ய முடியும்? ஆட்சியைப் பிடித்து விடமுடியுமா என்கிறார். அதிகபட்சம் 10-15% வாக்குகளை வாங்குவீர்கள். இதற்காக கூட்டணி சீட்டுகளை வாங்கிக் கொண்டு போய் நான் செலவு செய்து தோற்பேன் என்று தெரிந்தே தோற்பதா? அது முட்டாள்த்தனமாக இருக்கும். அதனால் என் கட்சி போட்டியிடவில்லை. யாருக்காவது சீட் வேண்டுமான்றால் சொல்லுங்கள் தலைமையிடம் பேசி நல்லபடியாக முடித்து தருகிறேன் என இளநீர் வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அவர் பேசுவதைப் பார்த்தால் பாசிட்டிவாக இருக்கும் எங்களுக்கு கூட கிலியாக இருக்கிறது' என வருந்துகின்றனர் பனையூரின் முக்கிய நிர்வாகிகள். முஸ்தபா உடனடியாக முஸ்தபாவை தொடர்புகொண்டு விஷயத்தை கேட்டோம் நான்கைந்து விநாடிகள் யோசித்துவிட்டு, 'தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைத்தவுடன் பேசுவோம்' என்றார். 'அலர்ட்' ஆறுமுகமாக இருக்கிறாரே! Loading…

விகடன் 4 Mar 2026 10:12 am

'தேர்தல்ல போட்டி போட விருப்பமில்லங்க!' - ட்விஸ்ட் கொடுக்கும் தவெகவின் 'ஒரே'கூட்டணி கட்சி?

விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா என்கிற வாதம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தவெகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. முஸ்தபா தேர்தலில் போட்டியிடாமல் இருக்க அந்த கட்சித் தலைவர் முஸ்தபா சொல்லும் காரணம்தான் தவெகவினருக்கு 'ஷாக்' கொடுத்திருக்கிறது. தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடந்த பிப்ரவரியில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தது. ஆனந்தையும் ஆதவ்வையும் சந்தித்து தங்களின் ஆதரவை முஸ்தபா தெரிவித்திருந்தார். தவெகவும் முஸ்தபாவை அரவணைத்துக் கொண்டது. எல்லா மேடையிலும் முஸ்தபாவுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. தங்களை நம்பி வந்த ஒரே கட்சி என்பதால் தவெகவின் தலைமையும் முஸ்தபாவை முக்கிய இடத்தில் வைத்திருந்தது. விஜய் தவெகவுக்காக பல டிவி விவாதங்களிலும் வரிந்து கட்டிக் கொண்டு பேசும் வாய்ப்பையும் தலைமை அவருக்கு கொடுத்தது. பெரிய கட்சிகளிடம் கூட்டணி கட்சிகள் அதிக சீட்களை கேட்டு அரசியல் களத்தை தகிக்க விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், முஸ்தபாவும் தவெக தலைமையிடம் அதிக சீட்டுகளை கேட்டு நெருக்கிக் கொண்டிருப்பார் என நினைத்தோம். கூட்டணியில் ஒரே ஒரு கட்சிதான் இருக்கிறது என்பதால் முஸ்தபா கேட்கும் இடத்தை தவெக கொடுக்கும் என்றும் தோன்றியது. இதே எண்ணத்தோடு பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம். 'அவரு உஷாரான ஆளுங்க. அவருக்கு எலெக்சன்ல போட்டி போடுற எண்ணமே இல்ல...' என அதிர்ச்சி கொடுக்கின்றனர் தவெகவினர். `என்னணே சொல்றீங்க' என மேற்படி விசாரிக்கையில், 'முஸ்தபா மிக தெளிவாக இருக்கிறார். இந்தத் தேர்தலில் தவெகவால் என்ன செய்ய முடியும்? ஆட்சியைப் பிடித்து விடமுடியுமா என்கிறார். அதிகபட்சம் 10-15% வாக்குகளை வாங்குவீர்கள். இதற்காக கூட்டணி சீட்டுகளை வாங்கிக் கொண்டு போய் நான் செலவு செய்து தோற்பேன் என்று தெரிந்தே தோற்பதா? அது முட்டாள்த்தனமாக இருக்கும். அதனால் என் கட்சி போட்டியிடவில்லை. யாருக்காவது சீட் வேண்டுமான்றால் சொல்லுங்கள் தலைமையிடம் பேசி நல்லபடியாக முடித்து தருகிறேன் என இளநீர் வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அவர் பேசுவதைப் பார்த்தால் பாசிட்டிவாக இருக்கும் எங்களுக்கு கூட கிலியாக இருக்கிறது' என வருந்துகின்றனர் பனையூரின் முக்கிய நிர்வாகிகள். முஸ்தபா உடனடியாக முஸ்தபாவை தொடர்புகொண்டு விஷயத்தை கேட்டோம் நான்கைந்து விநாடிகள் யோசித்துவிட்டு, 'தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைத்தவுடன் பேசுவோம்' என்றார். 'அலர்ட்' ஆறுமுகமாக இருக்கிறாரே! Loading…

விகடன் 4 Mar 2026 10:12 am

'அண்ணியார் ஆப்சென்ட்; சுதீஷுடன் ராஜ்ய சபா சீட் மட்டும் ஒப்பந்தம்!' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

திமுகவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்த தேமுதிக, இன்று இரவு 8:30 மணியளவில் திமுகவுடன் ராஜ்ய சபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. சுதீஷ் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் கிடைக்காததால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. NDA, திமுக என இரண்டு பக்கமும் பேசி வந்த தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. திமுகவிடம் 4 ராஜ்ய சபா சீட்கள் இருக்கிறது. ராஜ்ய சபா சீட்டுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5 ஆம் தேதியே கடைசி நாள். அதனால் தேமுதிகவுக்கு உத்தரவாதம் அளித்தபடியே இன்று இரவு 8:30 மணியளவில் முதலமைச்சர் முன்னிலையில் தேமுதிகவின் சுதீஷ் ராஜ்ய சபாவுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டார். செல்வப்பெருந்தகை மகளின் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு அங்கிருந்தபடியே அறிவாலயத்துக்கு நேரில் வந்து ஒப்பந்தத்தை முடித்திருக்கின்றனர். ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகியிருப்பது ராஜ்ய சபா ஒப்பந்தம் மட்டுமே. சட்டமன்ற தேர்தலுக்கான இடங்கள் பற்றிய ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியூரில் இருப்பதால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அவர் வந்தவுடன் அடுத்த சில நாட்களில் தேமுதிகவுடன் சட்டமன்றத்துக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்கின்றனர்.

விகடன் 3 Mar 2026 9:21 pm

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும். இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது. எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களுக்குக் கையிருப்பு தற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத 'அபராத' வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும். Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?

விகடன் 3 Mar 2026 7:33 pm

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும். இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது. எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களுக்குக் கையிருப்பு தற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத 'அபராத' வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும். Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?

விகடன் 3 Mar 2026 7:33 pm

Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?

ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து பதிவில் இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளதாவது... ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் படி, டெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைமை வளாகத்திற்குள் (பிரதமர் அலுவலகம் இருக்கும் வளாகம்) இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தி உள்ளோம். கமேனி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! அதில் அதிபர் அலுவலகம் மற்றும் உச்சத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டடத்தின் மீது ஏராளமான வெடிமருந்துகள் வீசப்பட்டன என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்ததால்தான், தற்போது ஈரான் மிகப்பெரிய அளவில் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் தலைமையின் மீது குறிவைப்பது இந்தப் போரை மீண்டும் அதிக பதற்றமாக்கலாம் என்று கூறப்படுகிறது. חיל-האוויר בהכוונה מדויקת של אמ״ן, תקף במהלך הלילה מבני שלטון ביטחוניים בתוך מתחם ההנהגה של משטר הטרור האיראני בלב טהרן. בתקיפת המתחם, הוטלו חימושים רבים על לשכת הנשיאות ומבנה המועצה העליונה לביטחון לאומי. בנוסף, הותקף מתחם ההתכנסות של הפורום הבכיר ביותר של המשטר, האחראי על… pic.twitter.com/8Ffur9wvd8 — Israeli Air Force (@IAFsite) March 3, 2026

விகடன் 3 Mar 2026 7:11 pm

Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?

ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து பதிவில் இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளதாவது... ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் படி, டெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைமை வளாகத்திற்குள் (பிரதமர் அலுவலகம் இருக்கும் வளாகம்) இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தி உள்ளோம். கமேனி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! அதில் அதிபர் அலுவலகம் மற்றும் உச்சத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டடத்தின் மீது ஏராளமான வெடிமருந்துகள் வீசப்பட்டன என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்ததால்தான், தற்போது ஈரான் மிகப்பெரிய அளவில் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் தலைமையின் மீது குறிவைப்பது இந்தப் போரை மீண்டும் அதிக பதற்றமாக்கலாம் என்று கூறப்படுகிறது. חיל-האוויר בהכוונה מדויקת של אמ״ן, תקף במהלך הלילה מבני שלטון ביטחוניים בתוך מתחם ההנהגה של משטר הטרור האיראני בלב טהרן. בתקיפת המתחם, הוטלו חימושים רבים על לשכת הנשיאות ומבנה המועצה העליונה לביטחון לאומי. בנוסף, הותקף מתחם ההתכנסות של הפורום הבכיר ביותר של המשטר, האחראי על… pic.twitter.com/8Ffur9wvd8 — Israeli Air Force (@IAFsite) March 3, 2026

விகடன் 3 Mar 2026 7:11 pm

விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை

திமுக - காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். பதைபதைத்துப் போய் ப.சிதம்பரம், சித்தரஞ்சன் சாலையைச் சுற்றிவர சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மகிழ்வைக் கொடுத்த ஒரு அறிவிப்புதான் காரணமென்பதே இந்த அரசியலாட்டத்தின் பெரும் சுவாரஸ்யம். சித்தரஞ்சன் சாலையில் ப.சிதம்பரம் திமுக - காங்கிரஸ் இடையேயான பஞ்சாயத்து கடந்த அக்டோபர் - நவம்பரிலேயே புகைய ஆரம்பித்துவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி மேல் பேட்டியாகக் கொடுத்து கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மாணிக்கம் தாகூரும் கோதாவில் இறங்கத் தயாராகியிருந்தார். காங்கிரஸ், விஜய்யுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் தீயாகப் பரவி வந்தது. அந்தச் சமயத்தில்தான் நவம்பர் 22 ஆம் தேதி ஒரு சனிக்கிழமையில் காலை 7:43 க்கு ப.சி ஒரு ட்வீட்டைப் பதிவிட்டிருந்தார். 'தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் 'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்' என்பதுதான் அந்த ட்வீட். சிதம்பரம் ட்வீட் அடுத்த சில மணி நேரங்களில் டெல்லியிலிருந்து அறிவிப்பு வந்தது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அறிவிக்கப்பட்டது. எந்தப் புகைச்சல் முடிவுக்கு வரும் எனப் ப.சி மனப்பூர்வமாக நம்பினாரோ அந்தப் புகைச்சலை மேலும் கொளுந்து விட்டு எரிய வைத்தார் கிரிஷ் சோடங்கர். அமைச்சரவையில் பங்கு, அதிக சீட்டுகள் என மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் பேசியதற்குத் துணையாக நின்றார் சோடங்கர். அறிவாலயத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு டெல்லி போய் 'திமுக கொடுக்கும் 25 சீட்டுகளுக்கெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது' என்றார். ஸ்டாலின், சோடங்கர் என்கிற பெயரைக் கேட்டாலே எரிச்சலடையும் நிலையை ஏற்படுத்தினார். திமுக - காங். இடையிலான விரிசலை இன்னும் அதிகப்படுத்தினார். அரசல் புரசல் வதந்திக்கெல்லாம் முடிவுகட்டி கூட்டணியைச் சுமுகமாகக் கொண்டு செல்ல உதவுமெனப் ப.சி நினைத்த அதே குழுதான், இன்றைக்கு அவரை சித்தரஞ்சன் சாலையை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓட வைத்திருக்கிறது. அரசியல் கற்பனைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை ப.சி இன்னொரு முறை உணர்ந்திருப்பார். CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?

விகடன் 3 Mar 2026 6:51 pm