SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

திமுகவின் பி டீம் அதிமுக; தினகரன் தவெகவில் இணைய விரும்பினார் - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பல முனைகளில் இருந்து தாக்குதல் வந்தால் ஒருவர் மாபெரும் வெற்றியைப் பெறப் போகிறார் என்று அர்த்தம். செங்கோட்டையன் தவெக தங்களின் கூட்டணியில் இணைவார்கள் என்று நினைத்தார்கள். நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், தவெக கொடி பறப்பதை பிள்ளையார் சுழி போட்டாச்சு எனச் சொன்னது எல்லாம் அவர்கள்தான். திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை விமர்சிக்காமல் அதிமுக ஐடி விங் திமுகவிற்கு பி டீமாக இருக்கிறது. புதிதாக உருவான கட்சி மீது குற்றம்சாட்டுவது எதிர்க்கட்சி நடைமுறையில் இல்லாத ஒன்று. எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணம் செய்தவன் நான். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது ஊழல் வழக்கு தொடர்ந்தார்கள். 'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன் டிடிவி தினகரன் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. என் மீது தவறான கருத்துக்கள் சொல்வோர் மீது வழக்கு தொடரப்படும். தவெக கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் விரும்பினார். தினகரன் வரவில்லை என்பது ஏமாற்றம் இல்லை. அவருக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் வாழ்க. தவெகவுடன் டாக்டர் ராமதாஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியில் பார்த்தேன். நல்லது நடக்கட்டும். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அண்ணா அதன் காரணமாகத்தான் நான் வெளியேறி தவெகவில் இணைந்தேன். என் சட்டைப் பையில் இப்போதும் படம் உள்ளது. அவர்கள்தான் ஜெயலலிதா, அண்ணா படங்களைப் போடாமல் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். நாம் யாரால் வளர்க்கப்பட்டோம் என்பதை மறந்து விடக்கூடாது” என்றார். தவெக: “எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்” - செங்கோட்டையன்

விகடன் 27 Jan 2026 3:17 pm

டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!

சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை வளைத்த பா.ஜ.க காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்த்து முப்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமியுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார், கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் போன்ற ஆறு பேர் வெற்றிபெற்றனர். அதேபோல முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பத்து தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆட்சியமைக்க தேவையான 16 இடங்களில் வெற்றி பெற்றதால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி. அதையடுத்து சபாநாயகர், உள்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை ரங்கசாமியிடம் கேட்டுப் பெற்றது பா.ஜ.க. புதுச்சேரி பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அதன்படி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார் போன்றவர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துவிட, கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் வெறும் எம்.எல்.ஏ-க்களாகவே தொடர்ந்தனர். இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொண்டது பா.ஜ.க தரப்பு. அத்துடன் உழவர்கரை சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், ஏனாம் தொகுதியின் எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் மற்றும் திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்களை தங்கள் கட்சி ஆதரவாளர்களாக வளைத்துப் போட்டது. அதன் மூலம் தங்கள் எம்.எல்.ஏ-க்களின் பலத்தை உயர்த்திக் காட்டிய பா.ஜ.க, அவர்களுக்காக வாரியத் தலைவர் பதவிகளைக் கேட்டது. விரக்தியில் விழுந்த அமைச்சர் ஜான்குமார் ஆனால் முதல்வர் ரங்கசாமி அதுகுறித்து வாய் திறக்கவில்லை. இதற்கிடையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்த எம்.எல்.ஏ ஜான்குமார், அது கிடைக்காமல் போனதும் விரக்தியடைந்தார். அதையடுத்து டெல்லி சென்று திரும்பிய அவர், ``சுழற்சி முறையில் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகள் இப்போது இருக்கும் அமைச்சர் தொடர்வார். அதன்பிறகு எனக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறியிருக்கிறார்கள் என்றார். ஆனால் நான்கரை ஆண்டுகள் கடந்தும் அப்படி ஒரு சுழற்சி நடைபெறாததால் மீண்டும் விரக்தியில் விழுந்தார். அதனால் தன்னுடைய லாட்டரி தொழில் குருவான மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரி அரசியலில் களமிறக்கினார் ஜான்குமார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் அமைச்சர் ஜான்குமார் அதன்பிறகு இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்களை இணைத்துக் கொண்டு, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கினார் ஜான்குமார். செல்லுமிடங்களிலெல்லாம் முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். உச்சபட்சமாக முதல்வர் ரங்கசாமியை `கிணற்றுத் தவளை' என்று விமர்சித்தார். அதற்கு என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளிப்படையாக எதிர்ப்புகள் வரவில்லை என்றாலும், `கூட்டணியில் இருந்துகொண்டே யாரோ ஒரு தனி நபருடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நம்மை இப்படி விமர்சிப்பது சரியா?' என்று முதல்வர் ரங்கசாமியிடம் பொருமித் தீர்த்தனர் மூத்த நிர்வாகிகள். இதற்கிடையில் ஜான்குமாரின் `மூவ்'வை பார்த்து `ஜெர்க்'கான பா.ஜ.க தலைமை சாய் சரவணகுமாரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ஜான்குமாரை அமைச்சராக அறிவித்தது. `ஜோஸ் சார்லஸ் மீது எத்தனை ஈ.டி வழக்குகள் இருக்கிறது என்பது தெரியாதா ?’ ஆனால் அவருக்கு இலாகாக்களை ஒதுக்காமல் அரசியல் விளையாட்டை துவக்கினார் முதல்வர் ரங்கசாமி. விளைவு… அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக வலம் வருகிறார் ஜான்குமார். அத்துடன் பா.ஜ.க தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்த்த அவர், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் மட்டும் வலம் வந்தார். இதற்கிடையில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார். அதையடுத்து பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தவிர்த்த என்.ஆர்.காங்கிரஸ், `தேர்தலுக்கு முன்பாகவே மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அமித்ஷா உங்களின் `பி' டீமாக செயல்படும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினையும், அவருடன் இருக்கும் உங்கள் எம்.எல்.ஏ-க்களையும் அடக்கி வையுங்கள். போலி மருந்து விவகாரத்தில் எங்கள் முதல்வர் ரங்கசாமிக்கு கெடு விதிப்பதற்கு இவர் யார் முதலில்? இவருக்கும் புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம் ? இவர் மீது எந்தெந்த மாநிலங்களில் எத்தனை அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதா ?’ என்று கறாராகக் கூறியது. அதன் எதிரொலியாக பா.ஜ.க தலைமையில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். அப்போது, `பா.ஜ.க கூட்டணிக்குள் வந்துவிட வேண்டும். உங்களுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி கொடுக்கப்படும். அதைத் தாண்டி எதுவும் அங்கு நடைபெறக் கூடாது' என்று டோஸ் விட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமிக்கு பூங்கொத்து கொடுத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவரது காலில் விழுந்து ஆசி பெற்று அமைதியானார். திசை தெரியாமல் நிற்கும் எம்.எல்.ஏ-க்கள் அதேபோல பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்த அமைச்சர் ஜான்குமார், எம்.எல்.ஏ-க்கள் ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் கல்யாணசுந்தரம் போன்றவர்கள், பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் துவங்கியிருக்கின்றனர். இந்த அதிரடி மாற்றங்களால், `ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முதல்வரானதும் நாம் அமைச்சராகிவிடலாம்' என்று கணக்குப் போட்டவர்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். குறிப்பாக உழவர்கரை தொகுதியில் 819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், திருபுவனை தொகுதியில் 2,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன், கட்டப்பஞ்சாயத்துக் குற்றச்சாட்டால் கம்யூனிஸ்ட் கட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு சார்லஸ் மார்ட்டினிடம் இணைந்த ஏ.ஐ.டி.யு.சி-யின் மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் போன்றவர்கள் லட்சிய ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டனர். முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி வாங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டால், தங்களின் கதி என்ன என்று இவர்கள் கலங்கி நிற்கிறார்கள். இந்த நிலையில் `அமித் ஷா எச்சரித்ததால் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் `கப்சிப்' ஆனதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து கடந்த ஜனவரி 25-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ``கூட்டணியில் சேருமாறு உள்துறை அமைச்சர் என்னை மிரட்டியதாகக் கூறுவது தவறானது. எங்களை பயமுறுத்தி எதையும் சாதிக்க முடியாது. ஜனநாயக நாட்டில் யாரையும் மிரட்டி பணிய வைக்க முடியாது. புதுச்சேரியில் தனித்து வெற்றிபெற்றால் எதையும் செய்ய முடியாது என்றார். ஜான்குமார் தன்னுடைய காமராஜர் நகர் தொகுதியை ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, முதலியார்பேட்டை தொகுதியில் களமாடி வருகிறார். அதேபோல தன்னுடைய மூத்த மகன் ரிச்சர்டை நெல்லித்தோப்பு தொகுதியிலும், இளைய மகன் ரீகனை பாகூர் தொகுதியிலும் களமிறக்கி விட்டிருக்கிறார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகும் நிலை வந்தால், ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.!

விகடன் 27 Jan 2026 2:54 pm

டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!

சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை வளைத்த பா.ஜ.க காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்த்து முப்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமியுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார், கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் போன்ற ஆறு பேர் வெற்றிபெற்றனர். அதேபோல முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பத்து தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆட்சியமைக்க தேவையான 16 இடங்களில் வெற்றி பெற்றதால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி. அதையடுத்து சபாநாயகர், உள்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை ரங்கசாமியிடம் கேட்டுப் பெற்றது பா.ஜ.க. புதுச்சேரி பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அதன்படி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார் போன்றவர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துவிட, கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் வெறும் எம்.எல்.ஏ-க்களாகவே தொடர்ந்தனர். இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொண்டது பா.ஜ.க தரப்பு. அத்துடன் உழவர்கரை சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், ஏனாம் தொகுதியின் எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் மற்றும் திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்களை தங்கள் கட்சி ஆதரவாளர்களாக வளைத்துப் போட்டது. அதன் மூலம் தங்கள் எம்.எல்.ஏ-க்களின் பலத்தை உயர்த்திக் காட்டிய பா.ஜ.க, அவர்களுக்காக வாரியத் தலைவர் பதவிகளைக் கேட்டது. விரக்தியில் விழுந்த அமைச்சர் ஜான்குமார் ஆனால் முதல்வர் ரங்கசாமி அதுகுறித்து வாய் திறக்கவில்லை. இதற்கிடையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்த எம்.எல்.ஏ ஜான்குமார், அது கிடைக்காமல் போனதும் விரக்தியடைந்தார். அதையடுத்து டெல்லி சென்று திரும்பிய அவர், ``சுழற்சி முறையில் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகள் இப்போது இருக்கும் அமைச்சர் தொடர்வார். அதன்பிறகு எனக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறியிருக்கிறார்கள் என்றார். ஆனால் நான்கரை ஆண்டுகள் கடந்தும் அப்படி ஒரு சுழற்சி நடைபெறாததால் மீண்டும் விரக்தியில் விழுந்தார். அதனால் தன்னுடைய லாட்டரி தொழில் குருவான மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரி அரசியலில் களமிறக்கினார் ஜான்குமார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் அமைச்சர் ஜான்குமார் அதன்பிறகு இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்களை இணைத்துக் கொண்டு, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கினார் ஜான்குமார். செல்லுமிடங்களிலெல்லாம் முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். உச்சபட்சமாக முதல்வர் ரங்கசாமியை `கிணற்றுத் தவளை' என்று விமர்சித்தார். அதற்கு என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளிப்படையாக எதிர்ப்புகள் வரவில்லை என்றாலும், `கூட்டணியில் இருந்துகொண்டே யாரோ ஒரு தனி நபருடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நம்மை இப்படி விமர்சிப்பது சரியா?' என்று முதல்வர் ரங்கசாமியிடம் பொருமித் தீர்த்தனர் மூத்த நிர்வாகிகள். இதற்கிடையில் ஜான்குமாரின் `மூவ்'வை பார்த்து `ஜெர்க்'கான பா.ஜ.க தலைமை சாய் சரவணகுமாரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ஜான்குமாரை அமைச்சராக அறிவித்தது. `ஜோஸ் சார்லஸ் மீது எத்தனை ஈ.டி வழக்குகள் இருக்கிறது என்பது தெரியாதா ?’ ஆனால் அவருக்கு இலாகாக்களை ஒதுக்காமல் அரசியல் விளையாட்டை துவக்கினார் முதல்வர் ரங்கசாமி. விளைவு… அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக வலம் வருகிறார் ஜான்குமார். அத்துடன் பா.ஜ.க தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்த்த அவர், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் மட்டும் வலம் வந்தார். இதற்கிடையில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார். அதையடுத்து பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தவிர்த்த என்.ஆர்.காங்கிரஸ், `தேர்தலுக்கு முன்பாகவே மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அமித்ஷா உங்களின் `பி' டீமாக செயல்படும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினையும், அவருடன் இருக்கும் உங்கள் எம்.எல்.ஏ-க்களையும் அடக்கி வையுங்கள். போலி மருந்து விவகாரத்தில் எங்கள் முதல்வர் ரங்கசாமிக்கு கெடு விதிப்பதற்கு இவர் யார் முதலில்? இவருக்கும் புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம் ? இவர் மீது எந்தெந்த மாநிலங்களில் எத்தனை அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதா ?’ என்று கறாராகக் கூறியது. அதன் எதிரொலியாக பா.ஜ.க தலைமையில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். அப்போது, `பா.ஜ.க கூட்டணிக்குள் வந்துவிட வேண்டும். உங்களுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி கொடுக்கப்படும். அதைத் தாண்டி எதுவும் அங்கு நடைபெறக் கூடாது' என்று டோஸ் விட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமிக்கு பூங்கொத்து கொடுத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவரது காலில் விழுந்து ஆசி பெற்று அமைதியானார். திசை தெரியாமல் நிற்கும் எம்.எல்.ஏ-க்கள் அதேபோல பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்த அமைச்சர் ஜான்குமார், எம்.எல்.ஏ-க்கள் ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் கல்யாணசுந்தரம் போன்றவர்கள், பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் துவங்கியிருக்கின்றனர். இந்த அதிரடி மாற்றங்களால், `ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முதல்வரானதும் நாம் அமைச்சராகிவிடலாம்' என்று கணக்குப் போட்டவர்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். குறிப்பாக உழவர்கரை தொகுதியில் 819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், திருபுவனை தொகுதியில் 2,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன், கட்டப்பஞ்சாயத்துக் குற்றச்சாட்டால் கம்யூனிஸ்ட் கட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு சார்லஸ் மார்ட்டினிடம் இணைந்த ஏ.ஐ.டி.யு.சி-யின் மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் போன்றவர்கள் லட்சிய ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டனர். முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி வாங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டால், தங்களின் கதி என்ன என்று இவர்கள் கலங்கி நிற்கிறார்கள். இந்த நிலையில் `அமித் ஷா எச்சரித்ததால் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் `கப்சிப்' ஆனதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து கடந்த ஜனவரி 25-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ``கூட்டணியில் சேருமாறு உள்துறை அமைச்சர் என்னை மிரட்டியதாகக் கூறுவது தவறானது. எங்களை பயமுறுத்தி எதையும் சாதிக்க முடியாது. ஜனநாயக நாட்டில் யாரையும் மிரட்டி பணிய வைக்க முடியாது. புதுச்சேரியில் தனித்து வெற்றிபெற்றால் எதையும் செய்ய முடியாது என்றார். ஜான்குமார் தன்னுடைய காமராஜர் நகர் தொகுதியை ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, முதலியார்பேட்டை தொகுதியில் களமாடி வருகிறார். அதேபோல தன்னுடைய மூத்த மகன் ரிச்சர்டை நெல்லித்தோப்பு தொகுதியிலும், இளைய மகன் ரீகனை பாகூர் தொகுதியிலும் களமிறக்கி விட்டிருக்கிறார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகும் நிலை வந்தால், ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.!

விகடன் 27 Jan 2026 2:54 pm

'சமூகநீதி டு வாக்கரசியல்' - பாமகவின் தேர்தல் கால ஸ்டண்ட்ஸ்! | கூட்டணி சர்க்கஸ் 03

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சர்க்கஸ் 3 ``தலித் அல்லாத எந்த கட்சியும் தங்களின் கொடியில் நீலத்தை வைத்துக் கொள்ள தயங்கும். ஆனால், பாமகவின் கொடியில் நீலத்தை வைத்தார் ராமதாஸ். வட மாவட்டங்கள் முழுவதும் 100 அம்பேத்கர் சிலைகளை நிறுவினார். இன்றைக்கும் நாம் மாலை போடும் பல சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை. அவர் வீட்டில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலைகளை வைத்திருக்கிறார். திருமாவளவன் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இடது சிந்தனை கொண்டவர்களால் மாற்றாக பார்க்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பதை யாராலும் மறக்க முடியாது. - ராமதாஸைப் பற்றியும் பாமகவைப் பற்றியும் திருமா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியவை இவை.! ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்! ஒரு காலத்தில் பாமக இப்படித்தான் இருந்தது. ஆனால், தேர்தல் அரசியல் பாமகவை தடம் மாற்றியது. வந்த வழியை மறக்க செய்தது. வெறுமென சாதிய வாக்குகளை மட்டுமே நம்பிய சந்தர்ப்பவாத அரசியலை நோக்கி தள்ளியது. தேர்தல் அரசியலுக்காக ராமதாஸ் சுயநலமாக எடுத்த முடிவுகள்தான் இப்போது அவர் வடிக்கும் கண்ணீருக்கும் காரணம். வாக்கு வங்கி தூண்டில், செய்த சத்தியத்தையே மீற வைக்கும், அதன்வழி வளர்த்த கிடாவையே மாரில் பாய வைக்கும், பெரும் கனவோடு தொடங்கப்பட்ட இயக்கத்தில் தன்னுடைய உரிமையையே அது கேள்விக்குள்ளாக்கும் என்றெல்லாம் ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். ராமதாஸ் - பாமக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுக்காக வட மாவட்டங்கள் ஸ்தம்பிக்கும் வகையில் ராமதாஸ் முன்னெடுத்த போராட்டங்கள் ஒரு புதிய அரசியல் சக்திக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தன. 1989 இல் பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது. அது வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியாகத்தான் பாமகவை வடிவமைத்திருந்தார் ராமதாஸ். அதனால்தான் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்கள் ஆக்கிக் கொண்டார். வர்க்க விடுதலைக்காக மார்க்ஸையும் உடன் இணைத்துக் கொண்டார். 'கருணாநிதி ஒரு துரோகி' என..! கட்சியில் பொதுச்செயலாளர் பதவி ஒரு தலித்துக்குதான் வழங்கப்பட வேண்டுமென பைலாவிலேயே இடம்பெறச் செய்தார். அதனால்தான் 90 களின் தொடக்கத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் திராவிட கட்சிகளின் மாற்றென யோசிக்கையில் பாமகவே அவர்களின் புகலிடமாக இருந்தது. ராமதாஸூம் ஆரம்பக்கட்டத்தில் இரண்டு திராவிட கட்சிகளையும் கடுமையாக எதிர்த்தார். போராடிய இட ஒதுக்கீடு கிடைத்திருந்தாலும் 108 சாதிகளோடு பங்கு போட்டுக் கொள்ள சொன்னதில், 'கருணாநிதி ஒரு துரோகி' என கடுமையாக விமர்சித்திருந்தார். சர்ச்சைகள் நிரம்பிய ஜெயலலிதாவின் அந்த 91-96 ஆட்சியிலும் அரசுக்கு எதிராக காத்திரமாக களமாடினார். விடுதலைப் புலிகளுக்காக தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தி கைதாகினார். பாமகவை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஜெயலலிதாவே சட்டமன்றத்தில் பேசினார். ஜெயலலிதா தடாவை திரும்பப் பெறக்கோரி போராடி ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உடல்நலிவுற்றார், அவதிப்பட்டார். 'ஜெயலலிதா நல்லாவே இருக்கமாட்டாங்க' என ராமதாஸின் மனைவி சாபம் விட்டார். ராமதாஸ் துவளவில்லை. சிறையிலிருந்து வந்து மீண்டும் இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் அரசியல் செய்தார். 1996 சட்டமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் காங்கிரஸோடு கூட்டணி அமைத்து மூன்றாவது அணி கட்டி போராடினார். 1991 தான் பாமக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் சேர்த்துக் கொண்டு 194 தொகுதிகளில் பாமகவை போட்டியிட வைத்தார். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாமக வென்றது. பாமக சார்பில் வென்று சட்டமன்றத்துக்கு யானையில் சென்றது பண்ருட்டி ராமச்சந்திரன் எனும் பூர்விக அதிமுக-காரர். பெரிய தோல்வியென்றாலும் பாமகவுக்கு கிடைத்த 5.9% வாக்கு வங்கி ராமதாஸூக்கு நம்பிக்கைக் கொடுத்தது. அந்த நம்பிக்கையோடுதான் 96 தேர்தலிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டார். போட்டியிட்ட 116 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே யானை சின்னம் வெற்றி வாகை சூடியது. அப்போது பாமகவுக்கு யானை சின்னம்தான் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பம் 96 தேர்தலுக்குப் பிறகுதான் ராமதாஸின் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பமானது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நின்றதால் மட்டுமே ராமதாஸ் கொண்டாடப்படவில்லை. ராமதாஸ் ஆர்.எஸ்.எஸூக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். மேடைகளில் ஆர்.எஸ்.எஸூக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். தடா சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஜெயலலிதா அரசு பயன்படுத்துகிறது என்று கூறிதான் போராடி கைதாகினார். ஆனால், 1998 இல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜகவோடு கூட்டணிக்கு சேர்ந்தார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நான்கில் பாமக வென்றது. மத்திய இணை அமைச்சர் பதவி பாமகவை தேடி வருகிறது. அந்த அமைச்சர் பதவியை தலித் ஏழுமலைக்கு கொடுத்தார் ராமதாஸ். பாமக வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை என்பதில் ராமதாஸ் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதற்கு இதெல்லாம் சாட்சி. 'தமிழ்க்குடிதாங்கி' 90 களின் முற்பகுதியில் கும்பகோணம் அருகே குடிதாங்கி கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்லக்கூடாதென வன்னியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். நீண்டகால பிரச்னை இது. விஷயம் ராமதாஸின் காதுக்கு செல்கிறது. குடிதாங்கிக்கு புறப்பட்ட ராமதாஸ், சொந்த சாதியினரின் எதிர்ப்பையும் மீறி அந்த சடலத்தை தோளில் சுமந்து சென்றார். இதற்காக அப்போது திருமாவளவன் ராமதாஸை மதுரையின் மேலூருக்கு அழைத்து பாராட்டு விழா எடுத்து 'தமிழ்க்குடிதாங்கி' என்று பட்டம் கொடுத்தார். 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்புடனேயே பயணித்தனர். அவர்கள் பிளவுபட்ட இடத்தைப் பற்றி பிற்பகுதியில் பார்ப்போம். ராமதாஸ் 1998 இல் ஆட்சியைப் பிடித்த வாஜ்பாயின் அரசு ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் 13 மாதங்களிலேயே கலைந்தது. அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அந்த இடத்துக்கு திமுக வந்து சேர்ந்தது. பாமக அப்படியே தொடர்ந்தது. அந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 5 தொகுதிகளில் பாமக வென்றது. இரண்டே ஆண்டுகளில் ராமதாஸ் ஜம்ப் அடித்தார். 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தார். பாமகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாமகவின் 37 ஆண்டுகால வரலாற்றில் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த தேர்தல் இதுவே. பாமக சார்பில் 20 பேர் கோட்டைக்கு சென்றனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு மீண்டும் ஜம்ப் அடித்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து சேர்ந்தார். ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவம்... அடுத்தடுத்து அணிகள் மாறினாலும் துடிப்பான அரசியல் செயல்பாடுகளால் பாமகவுக்கான வாக்கு வங்கியை பெருக்கிக் கொண்டே இருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும் வென்றது. பாமகவின் வாக்கு வங்கி 6.7% ஆக உயர்ந்தது. அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறென ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவமும் அப்போதுதான் நடந்தது. அன்புமணி மாநிலங்களவைக்கு சென்றார். சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். Anbumani 2006 சட்டமன்றத் தேர்தலுக்கும் இதே கூட்டணியில் தொடர்ந்தார் ராமதாஸ். கருணாநிதி பாமகவுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கினார். 18 தொகுதிகளில் பாமக வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதால் 130 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட்டிருந்தது. 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாமக, காங்கிரஸின் ஆதரவில்தான் கருணாநிதி ஆட்சியமைத்தார். இந்த சமயத்தில்தான் திமுகவுக்கு பெரிய குடைச்சலாக மாறினார் ராமதாஸ். தினசரி எதாவது ஒரு பிரச்னையை கையிலெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். நிழல் பட்ஜெட், அரசுக்கான ரேங்க் கார்ட் என அடித்து ஆடினார். ஆட்சியமைந்த சில மாதங்களிலேயே சென்னையில் புறநகரத்தில் துணை நகரம் என்ற ஒன்றை அமைக்கப்போகிறோம் என திமுக அரசு முடிவெடுத்தது. அதற்காக 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. ராமதாஸ் களத்தில் இறங்கினார். இத்திட்டத்தால் பாதிப்படையும் 132 கிராம மக்களையும் திரட்டி போராடினார். கருணாநிதியின் பிரதிநிதியாக தயாநிதி ராமதாஸை சந்தித்து திட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். ராமதாஸ் மசியவில்லை. மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி போராட்டத்தில் இறங்கினார். ராமதாஸ் கருணாநிதி பின்வாங்கினார். திட்டம் கைவிடப்பட்டது. இப்படியாக அந்த ஆட்சி முழுவதும் யானையின் காதில் புகுந்த எறும்பாக உறுத்தினார் ராமதாஸ். ஆட்சிக்கு '0' மதிப்பெண் கொடுத்து கருணாநிதியையே திணறடித்தார். ஆனால், இந்த காலக்கட்டத்தில்தான் தேர்தல் ரீதியாக ராமதாஸ் எடுத்த முடிவுகள் தவறாகப் போனது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப்போராட்டத்தை காரணம் காட்டி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆனாலும் ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை அப்படியே தொடர்ந்தது. எனினும் பாமக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அப்படியே 2011 தேர்தலையும் அதிமுக கூட்டணியிலேயே எதிர்கொள்வார் என எதிர்பார்க்க, சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் அறிவாலயம் பக்கம் வந்தார். பேரனின் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க கோபாலபுரம் சென்றவர் 2011 தேர்தலுக்கான கூட்டணியையும் பேசி முடித்துவிட்டு வந்தார். அந்தத் தேர்தலில் விசிகவும் திமுக கூட்டணியில்தான் இருந்தது. பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. வென்றதோ 3 தொகுதிகள் மட்டுமே. திமுக கூட்டணிக்கே மிகப்பெரிய தோல்வி. இந்தத் தோல்வி ராமதாஸின் அரசியல் பாதையையே மாற்றியது. அதுவரை பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர், வன்னியர்களுக்கான கட்சி என்கிற தனி வட்டத்துக்குள் பாமகவை அடக்க தொடங்கினார். திருமாவளவன் 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்பு பாராட்டியே வந்தனர். சமூக உரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர் வாழ்வுரிமை மாநாடுகளை ராமதாஸ் நடத்தினார். அதில் திருமா கலந்திருக்கிறார். அதேமாதிரி, திருமா மதுரையிலிருந்து சென்னை வந்து அரசியல் செய்யவும் ஊக்கமாக இருந்தவர்களில் ராமதாஸூம் ஒருவர். ஈழப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் திருமா காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தவர் ராமதாஸ்தான். விசிகவும் பாமகவும் இணைந்து ஈழத்துக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுக்கலாம் என திருமாவே திட்டமிட்டார். 2011 க்குப் பிறகு நடந்த சில சம்பவங்கள் ராமதாஸூக்கும் திருமாவுக்கும் இடையில் இணைய முடியாத விரிசலை ஏற்படுத்தியது. இளவரசன் - திவ்யா காதல் விவகாரம், அதைத் தொடர்ந்து தலித் குடிசைகள் எரிக்கப்பட்ட சம்பவம், மரக்காணம் கலவரம் என சமூகரீதியாகவே பிளவு ஏற்பட்டது. பாமக 'பாமக கொடியில் முதலில் நீலம் கீழ் பகுதியில்தான் இருந்தது. கட்சியின் சில செயற்குழு உறுப்பினர்கள். தலித்துகளின் அடையாளமான நீலத்தை கீழே வைத்திருப்பதா என கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் கேட்பது சரிதானே என்று உடனடியாக நீலத்தை மேல்பகுதிக்கு கொண்டு சென்று கட்சிக் கொடியையே மாற்றினேன்' பாமகவின் நீலம் - மஞ்சள் - சிவப்பு கொடியைப் பற்றி இப்படி கூறிய அதே ராமதாஸ்தான், 2011 க்குப் பிறகு 'கூலிங் க்ளாஸையும் ஜீன்ஸையும் போட்டுட்டு நம்ம வீட்டு புள்ளைங்களை காதலிச்சுட்டு போறானுங்க' என தலித் இளைஞர்கள் மீது வெறுப்பை கக்கினார். தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்ற பெயரில் தலித்துகளற்ற மற்ற கட்சியினரை ஒருங்கிணைத்தார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலையை தைலாபுரத்தில் வைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைக்காக கட்சி தொடங்கிய ராமதாஸை சமூகத்தை பிளக்கும் வெறுப்பரசியலை நோக்கி தள்ளியது வாக்கரசியல். இந்த சமயத்தில்தான் பாஜகவும் பாமகவும் இருக்கும் கூட்டணியில் விசிக எப்போதும் இருக்காது என திருமா அறிவித்தார். திருமாவளவன் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமானது பாமக. அது அதிமுகவின் தேர்தல். மோடியா லேடியா எனக் கேட்டு ஜெ. வாக்குகளை அள்ளினார். பாமக சார்பில் அன்புமணி மட்டும் தர்மபுரி தொகுதியில் வென்றார். கட்சி ஆரம்பித்தபோது தன்னுடைய கொள்கைகள், லட்சியங்கள் என ராமதாஸ் வகுத்து வைத்திருந்த கோட்பாடுகளை ஒவ்வொன்றாக அவரே மீறிய காலக்கட்டம் இது. 'என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். இது சத்தியம். இதிலிருந்து தவறினால் என்னை நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என பழைய ராமதாஸ் கூறியிருந்தார். அன்புமணி வழி அந்த சத்தியத்தை எப்போதோ மீறிவிட்டார். 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 மகனை எம்.பி ஆக்கி அமைச்சர் ஆக்கியவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனியாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். இப்போது விஜய்க்கு 'பலே' வியூகங்களை வகுத்து கொண்டிருக்கிறாரே, அதே ஜான் ஆரோக்கியசாமிதான் அப்போது அன்புமணிக்கும் வியூக வகுப்பாளர். அமெரிக்க தேர்தல் கலாசாரத்தை பின்பற்றி வியூகங்களை வகுத்தார். கொள்கைகளைப் பேசி பல உயிர்களைப் பலிகொடுத்து உருவான கட்சியின் ஒற்றை முகமாக அன்புமணி முன்னிறுத்தப்பட்டார். 'மாற்றம்...முன்னேற்றம்...அன்புமணி' என படோபடமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஒரு பயனும் இல்லை. பாமகவுக்கு எப்போதும் கிடைக்கும் அதே 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி: 'பிக்பாஸில் ஓவியாவுக்கு போட்ட வாக்குகளை எனக்கு போட்டிருந்தால் நான் முதல்வராகியிருப்பேன்' பொதுவெளியில் மேடையிலேயே மனம்விட்டு பேசி விரக்தியடைந்தார் அன்புமணி. அடுத்த 3 ஆண்டுகளில் நடந்ததுதான் அதகளம். அரசியல்வாதிகளின் பேச்சை ஓடும் தண்ணீரில்தான் எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக செயல்பட்டார் அன்புமணி. ஜெ. இறப்புக்குப் பிறகு பதவியேற்ற எடப்பாடி அரசை கன்னாபின்னாவென விமர்சித்தார். அதிமுகவினரை டயர் நக்கிகள் என்று நாகரீகத்தை மீறி வசைபாடினார். ஊழல் அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநரிடம் முறையிட்டார். அதிமுக அரசுக்கு எதிராக புழுதி பறக்க களமாடிவிட்டு 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணியிலேயே தஞ்சமடைந்ததுதான் சோகம். மதுவிலக்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பென ஒப்புக்கு 10 கோரிக்கைகளை அதிமுகவிடம் நீட்டி, அதைச் செயல்படுத்த முயல்வதாக எடப்பாடி உத்தரவாதம் கொடுத்ததால் கூட்டணியில் இணைகிறோம் என தந்தையும் மகனும் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஜல்லியடித்தனர். அதிமுகவை 180 டிகிரியில் வளைபவர்கள் என திட்டி தீர்த்துவிட்டு, 'கூட்டணிக்காக நாணலாக வளைகிறோம்' என்றார் ராமதாஸ். தேர்தல் முடிவுகள் தமிழகம் அறிந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. ஓ.பி.எஸ்ஸின் மகன் மட்டுமே வென்றார். இந்தத் தேர்தலின் பிரசாரத்தின் போதும் ராமதாஸ் திருமா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சிதம்பரத்தில் பிரசாரம் செய்த ராமதாஸ், 'தமிழ் சமூக சீர்திருத்தத்திற்காக அரசியலில் திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான்தான்.. ஆனா அது என் தப்புதான். அவரது கட்சி வன்முறை, கட்ட பஞ்சாயத்து கட்சியாக உள்ளது. என்னை கேட்டால் இப்படி ஒரு கட்சியே எதுக்கு? வேண்டாம் என்றுதான் சொல்வேன்' என்றார். ராமதாஸ் - மோடி 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே பாமக தொடர்ந்தது. பாமகவுக்கு 23 தொகுதிகள். ஐந்தில் மட்டுமே பாமக வென்றது. வாக்கு சதவீதமும் இதுவரை இல்லாத அளவுக்கு 3.8% ஆக கடுமையாக சரிந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவே பாஜகவிடமிருந்து பிரிந்து வந்துவிட்டது. பாமக வரவில்லை. தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று கூட்டணியை உறுதி செய்துவிட்டு வந்தார் அண்ணாமலை. அப்போது திரைமறைவில் நடந்த விவகாரங்களையெல்லாம் இப்போதுதான் போட்டுடைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 அன்புமணி vs ராமதாஸ் அன்புமணியை மகனாக பெற்றதற்கு வெட்கப்படுகிறேன் என கண்ணீர் விடுகிறார் ராமதாஸ். வாரிசை கட்சிக்குள் கொண்டு வரமாட்டேன் என செய்த சத்தியத்தை மீறியதற்காக அவர் வருந்தவில்லை. மகன் சொல்படி கேட்கவில்லை. மகன் தன் சொல்படி கேட்டு வர வேண்டும் அல்லது மகன் இருந்த இடத்தில் மகளையோ பேரனையோ நிறுத்தி அழகு பார்க்க வேண்டும், அவ்வளவுதான். மற்றபடி பெரும் மக்கள் கூட்டத்தின் அடையாளமாக இருந்த கட்சி ஒரு குடும்பத்தின் அடையாளமாக மாறி பங்கு பிரிப்பு சண்டை வீதிக்கு வந்ததைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை. 'திடீர்னு பாரத் மாதா கி ஜேனு ஒரு கூட்டம் உள்ள வந்துருச்சு' என 2024 இல் NDA கூட்டணியில் இணைந்ததைப் பற்றி கூறுகிறார். 2019 இல் நாணலாக வளைந்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். பாமக 2021 இல் மோடியை கட்டித்தழுவி புன்னகைத்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். அப்போதெல்லாம் பாஜக 'பாரத் மாதா கி ஜே' பாடும் என்பது ராமதாஸூக்கு தெரிந்திருக்கவில்லை போலும். 2003 இல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர்ந்தால் சரியாக இருக்கும். பாமகவின் ஏ.கே.மூர்த்தி மத்திய இரயில்வே துறை இணையமைச்சர். ராமதாஸூம் ஏ.கே.மூர்த்தியும் டெல்லியிலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு கூட்டத்துக்காக புறப்ப்படுகிறார்கள். பெங்களூரு வரை விமானம். அங்கிருந்து இரயில் பயணம். ஏ.கே.மூர்த்தி இரயில்வேதுறை இணை அமைச்சர் என்பதால் அவருக்கு இரயிலில் சகல வசதிகளுடன் தனிப்பெட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவர் ராமதாஸ் ராமதாஸ் 2AC இல் டிக்கெட் போட்டிருக்கிறார். என்னுடன் தனிப்பெட்டியில் வாருங்கள் என ராமதாஸை ஏ.கே.மூர்த்தி அழைக்கிறார். அதற்கு ராமதாஸ் 'இரயில்வேதுறை இணையமைச்சர் என்ற முறையில் உனக்கு அந்தப் பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எந்தப் பதவியிலும் இல்லாத நான் அதில் பயணம் செய்வது முறையல்ல. எந்த அதிகாரப் பதவியையும் வகிப்பதில்லை என்பதிலும் அதனால் கிடைக்கும் சௌகரியங்களையும் அனுபவிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றாராம். வன்னியர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சாதியினருக்கும் குறிப்பாக தலித்துகளுக்கும் சேர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கிய கட்சியை பொதுவுடைமையாக பாவித்த அதே தலைவர், அதிகாரத்தால் கிடைக்கும் சௌகரியங்கள் குடும்பத்துக்கே கிடைக்க வேண்டும், வெறுப்பரசியலின் வழி பிளவை ஏற்படுத்தி ஒரு சாராரின் வாக்கை மட்டுமே அறுவடை செய்துவிடலாம் என்றெல்லாம் மாறி நிற்பது வாக்கரசியலின் அலங்கோலம் என்று தானே சொல்ல முடியும்.! அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்! (சர்க்கஸ் தொடரும்..!) தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01

விகடன் 27 Jan 2026 2:42 pm

'சமூகநீதி டு வாக்கரசியல்' - பாமகவின் தேர்தல் கால ஸ்டண்ட்ஸ்! | கூட்டணி சர்க்கஸ் 03

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சர்க்கஸ் 3 ``தலித் அல்லாத எந்த கட்சியும் தங்களின் கொடியில் நீலத்தை வைத்துக் கொள்ள தயங்கும். ஆனால், பாமகவின் கொடியில் நீலத்தை வைத்தார் ராமதாஸ். வட மாவட்டங்கள் முழுவதும் 100 அம்பேத்கர் சிலைகளை நிறுவினார். இன்றைக்கும் நாம் மாலை போடும் பல சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை. அவர் வீட்டில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலைகளை வைத்திருக்கிறார். திருமாவளவன் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இடது சிந்தனை கொண்டவர்களால் மாற்றாக பார்க்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பதை யாராலும் மறக்க முடியாது. - ராமதாஸைப் பற்றியும் பாமகவைப் பற்றியும் திருமா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியவை இவை.! ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்! ஒரு காலத்தில் பாமக இப்படித்தான் இருந்தது. ஆனால், தேர்தல் அரசியல் பாமகவை தடம் மாற்றியது. வந்த வழியை மறக்க செய்தது. வெறுமென சாதிய வாக்குகளை மட்டுமே நம்பிய சந்தர்ப்பவாத அரசியலை நோக்கி தள்ளியது. தேர்தல் அரசியலுக்காக ராமதாஸ் சுயநலமாக எடுத்த முடிவுகள்தான் இப்போது அவர் வடிக்கும் கண்ணீருக்கும் காரணம். வாக்கு வங்கி தூண்டில், செய்த சத்தியத்தையே மீற வைக்கும், அதன்வழி வளர்த்த கிடாவையே மாரில் பாய வைக்கும், பெரும் கனவோடு தொடங்கப்பட்ட இயக்கத்தில் தன்னுடைய உரிமையையே அது கேள்விக்குள்ளாக்கும் என்றெல்லாம் ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். ராமதாஸ் - பாமக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுக்காக வட மாவட்டங்கள் ஸ்தம்பிக்கும் வகையில் ராமதாஸ் முன்னெடுத்த போராட்டங்கள் ஒரு புதிய அரசியல் சக்திக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தன. 1989 இல் பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது. அது வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியாகத்தான் பாமகவை வடிவமைத்திருந்தார் ராமதாஸ். அதனால்தான் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்கள் ஆக்கிக் கொண்டார். வர்க்க விடுதலைக்காக மார்க்ஸையும் உடன் இணைத்துக் கொண்டார். 'கருணாநிதி ஒரு துரோகி' என..! கட்சியில் பொதுச்செயலாளர் பதவி ஒரு தலித்துக்குதான் வழங்கப்பட வேண்டுமென பைலாவிலேயே இடம்பெறச் செய்தார். அதனால்தான் 90 களின் தொடக்கத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் திராவிட கட்சிகளின் மாற்றென யோசிக்கையில் பாமகவே அவர்களின் புகலிடமாக இருந்தது. ராமதாஸூம் ஆரம்பக்கட்டத்தில் இரண்டு திராவிட கட்சிகளையும் கடுமையாக எதிர்த்தார். போராடிய இட ஒதுக்கீடு கிடைத்திருந்தாலும் 108 சாதிகளோடு பங்கு போட்டுக் கொள்ள சொன்னதில், 'கருணாநிதி ஒரு துரோகி' என கடுமையாக விமர்சித்திருந்தார். சர்ச்சைகள் நிரம்பிய ஜெயலலிதாவின் அந்த 91-96 ஆட்சியிலும் அரசுக்கு எதிராக காத்திரமாக களமாடினார். விடுதலைப் புலிகளுக்காக தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தி கைதாகினார். பாமகவை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஜெயலலிதாவே சட்டமன்றத்தில் பேசினார். ஜெயலலிதா தடாவை திரும்பப் பெறக்கோரி போராடி ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உடல்நலிவுற்றார், அவதிப்பட்டார். 'ஜெயலலிதா நல்லாவே இருக்கமாட்டாங்க' என ராமதாஸின் மனைவி சாபம் விட்டார். ராமதாஸ் துவளவில்லை. சிறையிலிருந்து வந்து மீண்டும் இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் அரசியல் செய்தார். 1996 சட்டமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் காங்கிரஸோடு கூட்டணி அமைத்து மூன்றாவது அணி கட்டி போராடினார். 1991 தான் பாமக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் சேர்த்துக் கொண்டு 194 தொகுதிகளில் பாமகவை போட்டியிட வைத்தார். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாமக வென்றது. பாமக சார்பில் வென்று சட்டமன்றத்துக்கு யானையில் சென்றது பண்ருட்டி ராமச்சந்திரன் எனும் பூர்விக அதிமுக-காரர். பெரிய தோல்வியென்றாலும் பாமகவுக்கு கிடைத்த 5.9% வாக்கு வங்கி ராமதாஸூக்கு நம்பிக்கைக் கொடுத்தது. அந்த நம்பிக்கையோடுதான் 96 தேர்தலிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டார். போட்டியிட்ட 116 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே யானை சின்னம் வெற்றி வாகை சூடியது. அப்போது பாமகவுக்கு யானை சின்னம்தான் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பம் 96 தேர்தலுக்குப் பிறகுதான் ராமதாஸின் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பமானது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நின்றதால் மட்டுமே ராமதாஸ் கொண்டாடப்படவில்லை. ராமதாஸ் ஆர்.எஸ்.எஸூக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். மேடைகளில் ஆர்.எஸ்.எஸூக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். தடா சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஜெயலலிதா அரசு பயன்படுத்துகிறது என்று கூறிதான் போராடி கைதாகினார். ஆனால், 1998 இல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜகவோடு கூட்டணிக்கு சேர்ந்தார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நான்கில் பாமக வென்றது. மத்திய இணை அமைச்சர் பதவி பாமகவை தேடி வருகிறது. அந்த அமைச்சர் பதவியை தலித் ஏழுமலைக்கு கொடுத்தார் ராமதாஸ். பாமக வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை என்பதில் ராமதாஸ் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதற்கு இதெல்லாம் சாட்சி. 'தமிழ்க்குடிதாங்கி' 90 களின் முற்பகுதியில் கும்பகோணம் அருகே குடிதாங்கி கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்லக்கூடாதென வன்னியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். நீண்டகால பிரச்னை இது. விஷயம் ராமதாஸின் காதுக்கு செல்கிறது. குடிதாங்கிக்கு புறப்பட்ட ராமதாஸ், சொந்த சாதியினரின் எதிர்ப்பையும் மீறி அந்த சடலத்தை தோளில் சுமந்து சென்றார். இதற்காக அப்போது திருமாவளவன் ராமதாஸை மதுரையின் மேலூருக்கு அழைத்து பாராட்டு விழா எடுத்து 'தமிழ்க்குடிதாங்கி' என்று பட்டம் கொடுத்தார். 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்புடனேயே பயணித்தனர். அவர்கள் பிளவுபட்ட இடத்தைப் பற்றி பிற்பகுதியில் பார்ப்போம். ராமதாஸ் 1998 இல் ஆட்சியைப் பிடித்த வாஜ்பாயின் அரசு ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் 13 மாதங்களிலேயே கலைந்தது. அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அந்த இடத்துக்கு திமுக வந்து சேர்ந்தது. பாமக அப்படியே தொடர்ந்தது. அந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 5 தொகுதிகளில் பாமக வென்றது. இரண்டே ஆண்டுகளில் ராமதாஸ் ஜம்ப் அடித்தார். 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தார். பாமகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாமகவின் 37 ஆண்டுகால வரலாற்றில் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த தேர்தல் இதுவே. பாமக சார்பில் 20 பேர் கோட்டைக்கு சென்றனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு மீண்டும் ஜம்ப் அடித்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து சேர்ந்தார். ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவம்... அடுத்தடுத்து அணிகள் மாறினாலும் துடிப்பான அரசியல் செயல்பாடுகளால் பாமகவுக்கான வாக்கு வங்கியை பெருக்கிக் கொண்டே இருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும் வென்றது. பாமகவின் வாக்கு வங்கி 6.7% ஆக உயர்ந்தது. அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறென ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவமும் அப்போதுதான் நடந்தது. அன்புமணி மாநிலங்களவைக்கு சென்றார். சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். Anbumani 2006 சட்டமன்றத் தேர்தலுக்கும் இதே கூட்டணியில் தொடர்ந்தார் ராமதாஸ். கருணாநிதி பாமகவுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கினார். 18 தொகுதிகளில் பாமக வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதால் 130 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட்டிருந்தது. 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாமக, காங்கிரஸின் ஆதரவில்தான் கருணாநிதி ஆட்சியமைத்தார். இந்த சமயத்தில்தான் திமுகவுக்கு பெரிய குடைச்சலாக மாறினார் ராமதாஸ். தினசரி எதாவது ஒரு பிரச்னையை கையிலெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். நிழல் பட்ஜெட், அரசுக்கான ரேங்க் கார்ட் என அடித்து ஆடினார். ஆட்சியமைந்த சில மாதங்களிலேயே சென்னையில் புறநகரத்தில் துணை நகரம் என்ற ஒன்றை அமைக்கப்போகிறோம் என திமுக அரசு முடிவெடுத்தது. அதற்காக 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. ராமதாஸ் களத்தில் இறங்கினார். இத்திட்டத்தால் பாதிப்படையும் 132 கிராம மக்களையும் திரட்டி போராடினார். கருணாநிதியின் பிரதிநிதியாக தயாநிதி ராமதாஸை சந்தித்து திட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். ராமதாஸ் மசியவில்லை. மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி போராட்டத்தில் இறங்கினார். ராமதாஸ் கருணாநிதி பின்வாங்கினார். திட்டம் கைவிடப்பட்டது. இப்படியாக அந்த ஆட்சி முழுவதும் யானையின் காதில் புகுந்த எறும்பாக உறுத்தினார் ராமதாஸ். ஆட்சிக்கு '0' மதிப்பெண் கொடுத்து கருணாநிதியையே திணறடித்தார். ஆனால், இந்த காலக்கட்டத்தில்தான் தேர்தல் ரீதியாக ராமதாஸ் எடுத்த முடிவுகள் தவறாகப் போனது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப்போராட்டத்தை காரணம் காட்டி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆனாலும் ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை அப்படியே தொடர்ந்தது. எனினும் பாமக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அப்படியே 2011 தேர்தலையும் அதிமுக கூட்டணியிலேயே எதிர்கொள்வார் என எதிர்பார்க்க, சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் அறிவாலயம் பக்கம் வந்தார். பேரனின் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க கோபாலபுரம் சென்றவர் 2011 தேர்தலுக்கான கூட்டணியையும் பேசி முடித்துவிட்டு வந்தார். அந்தத் தேர்தலில் விசிகவும் திமுக கூட்டணியில்தான் இருந்தது. பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. வென்றதோ 3 தொகுதிகள் மட்டுமே. திமுக கூட்டணிக்கே மிகப்பெரிய தோல்வி. இந்தத் தோல்வி ராமதாஸின் அரசியல் பாதையையே மாற்றியது. அதுவரை பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர், வன்னியர்களுக்கான கட்சி என்கிற தனி வட்டத்துக்குள் பாமகவை அடக்க தொடங்கினார். திருமாவளவன் 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்பு பாராட்டியே வந்தனர். சமூக உரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர் வாழ்வுரிமை மாநாடுகளை ராமதாஸ் நடத்தினார். அதில் திருமா கலந்திருக்கிறார். அதேமாதிரி, திருமா மதுரையிலிருந்து சென்னை வந்து அரசியல் செய்யவும் ஊக்கமாக இருந்தவர்களில் ராமதாஸூம் ஒருவர். ஈழப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் திருமா காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தவர் ராமதாஸ்தான். விசிகவும் பாமகவும் இணைந்து ஈழத்துக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுக்கலாம் என திருமாவே திட்டமிட்டார். 2011 க்குப் பிறகு நடந்த சில சம்பவங்கள் ராமதாஸூக்கும் திருமாவுக்கும் இடையில் இணைய முடியாத விரிசலை ஏற்படுத்தியது. இளவரசன் - திவ்யா காதல் விவகாரம், அதைத் தொடர்ந்து தலித் குடிசைகள் எரிக்கப்பட்ட சம்பவம், மரக்காணம் கலவரம் என சமூகரீதியாகவே பிளவு ஏற்பட்டது. பாமக 'பாமக கொடியில் முதலில் நீலம் கீழ் பகுதியில்தான் இருந்தது. கட்சியின் சில செயற்குழு உறுப்பினர்கள். தலித்துகளின் அடையாளமான நீலத்தை கீழே வைத்திருப்பதா என கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் கேட்பது சரிதானே என்று உடனடியாக நீலத்தை மேல்பகுதிக்கு கொண்டு சென்று கட்சிக் கொடியையே மாற்றினேன்' பாமகவின் நீலம் - மஞ்சள் - சிவப்பு கொடியைப் பற்றி இப்படி கூறிய அதே ராமதாஸ்தான், 2011 க்குப் பிறகு 'கூலிங் க்ளாஸையும் ஜீன்ஸையும் போட்டுட்டு நம்ம வீட்டு புள்ளைங்களை காதலிச்சுட்டு போறானுங்க' என தலித் இளைஞர்கள் மீது வெறுப்பை கக்கினார். தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்ற பெயரில் தலித்துகளற்ற மற்ற கட்சியினரை ஒருங்கிணைத்தார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலையை தைலாபுரத்தில் வைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைக்காக கட்சி தொடங்கிய ராமதாஸை சமூகத்தை பிளக்கும் வெறுப்பரசியலை நோக்கி தள்ளியது வாக்கரசியல். இந்த சமயத்தில்தான் பாஜகவும் பாமகவும் இருக்கும் கூட்டணியில் விசிக எப்போதும் இருக்காது என திருமா அறிவித்தார். திருமாவளவன் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமானது பாமக. அது அதிமுகவின் தேர்தல். மோடியா லேடியா எனக் கேட்டு ஜெ. வாக்குகளை அள்ளினார். பாமக சார்பில் அன்புமணி மட்டும் தர்மபுரி தொகுதியில் வென்றார். கட்சி ஆரம்பித்தபோது தன்னுடைய கொள்கைகள், லட்சியங்கள் என ராமதாஸ் வகுத்து வைத்திருந்த கோட்பாடுகளை ஒவ்வொன்றாக அவரே மீறிய காலக்கட்டம் இது. 'என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். இது சத்தியம். இதிலிருந்து தவறினால் என்னை நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என பழைய ராமதாஸ் கூறியிருந்தார். அன்புமணி வழி அந்த சத்தியத்தை எப்போதோ மீறிவிட்டார். 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 மகனை எம்.பி ஆக்கி அமைச்சர் ஆக்கியவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனியாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். இப்போது விஜய்க்கு 'பலே' வியூகங்களை வகுத்து கொண்டிருக்கிறாரே, அதே ஜான் ஆரோக்கியசாமிதான் அப்போது அன்புமணிக்கும் வியூக வகுப்பாளர். அமெரிக்க தேர்தல் கலாசாரத்தை பின்பற்றி வியூகங்களை வகுத்தார். கொள்கைகளைப் பேசி பல உயிர்களைப் பலிகொடுத்து உருவான கட்சியின் ஒற்றை முகமாக அன்புமணி முன்னிறுத்தப்பட்டார். 'மாற்றம்...முன்னேற்றம்...அன்புமணி' என படோபடமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஒரு பயனும் இல்லை. பாமகவுக்கு எப்போதும் கிடைக்கும் அதே 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி: 'பிக்பாஸில் ஓவியாவுக்கு போட்ட வாக்குகளை எனக்கு போட்டிருந்தால் நான் முதல்வராகியிருப்பேன்' பொதுவெளியில் மேடையிலேயே மனம்விட்டு பேசி விரக்தியடைந்தார் அன்புமணி. அடுத்த 3 ஆண்டுகளில் நடந்ததுதான் அதகளம். அரசியல்வாதிகளின் பேச்சை ஓடும் தண்ணீரில்தான் எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக செயல்பட்டார் அன்புமணி. ஜெ. இறப்புக்குப் பிறகு பதவியேற்ற எடப்பாடி அரசை கன்னாபின்னாவென விமர்சித்தார். அதிமுகவினரை டயர் நக்கிகள் என்று நாகரீகத்தை மீறி வசைபாடினார். ஊழல் அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநரிடம் முறையிட்டார். அதிமுக அரசுக்கு எதிராக புழுதி பறக்க களமாடிவிட்டு 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணியிலேயே தஞ்சமடைந்ததுதான் சோகம். மதுவிலக்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பென ஒப்புக்கு 10 கோரிக்கைகளை அதிமுகவிடம் நீட்டி, அதைச் செயல்படுத்த முயல்வதாக எடப்பாடி உத்தரவாதம் கொடுத்ததால் கூட்டணியில் இணைகிறோம் என தந்தையும் மகனும் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஜல்லியடித்தனர். அதிமுகவை 180 டிகிரியில் வளைபவர்கள் என திட்டி தீர்த்துவிட்டு, 'கூட்டணிக்காக நாணலாக வளைகிறோம்' என்றார் ராமதாஸ். தேர்தல் முடிவுகள் தமிழகம் அறிந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. ஓ.பி.எஸ்ஸின் மகன் மட்டுமே வென்றார். இந்தத் தேர்தலின் பிரசாரத்தின் போதும் ராமதாஸ் திருமா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சிதம்பரத்தில் பிரசாரம் செய்த ராமதாஸ், 'தமிழ் சமூக சீர்திருத்தத்திற்காக அரசியலில் திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான்தான்.. ஆனா அது என் தப்புதான். அவரது கட்சி வன்முறை, கட்ட பஞ்சாயத்து கட்சியாக உள்ளது. என்னை கேட்டால் இப்படி ஒரு கட்சியே எதுக்கு? வேண்டாம் என்றுதான் சொல்வேன்' என்றார். ராமதாஸ் - மோடி 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே பாமக தொடர்ந்தது. பாமகவுக்கு 23 தொகுதிகள். ஐந்தில் மட்டுமே பாமக வென்றது. வாக்கு சதவீதமும் இதுவரை இல்லாத அளவுக்கு 3.8% ஆக கடுமையாக சரிந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவே பாஜகவிடமிருந்து பிரிந்து வந்துவிட்டது. பாமக வரவில்லை. தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று கூட்டணியை உறுதி செய்துவிட்டு வந்தார் அண்ணாமலை. அப்போது திரைமறைவில் நடந்த விவகாரங்களையெல்லாம் இப்போதுதான் போட்டுடைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 அன்புமணி vs ராமதாஸ் அன்புமணியை மகனாக பெற்றதற்கு வெட்கப்படுகிறேன் என கண்ணீர் விடுகிறார் ராமதாஸ். வாரிசை கட்சிக்குள் கொண்டு வரமாட்டேன் என செய்த சத்தியத்தை மீறியதற்காக அவர் வருந்தவில்லை. மகன் சொல்படி கேட்கவில்லை. மகன் தன் சொல்படி கேட்டு வர வேண்டும் அல்லது மகன் இருந்த இடத்தில் மகளையோ பேரனையோ நிறுத்தி அழகு பார்க்க வேண்டும், அவ்வளவுதான். மற்றபடி பெரும் மக்கள் கூட்டத்தின் அடையாளமாக இருந்த கட்சி ஒரு குடும்பத்தின் அடையாளமாக மாறி பங்கு பிரிப்பு சண்டை வீதிக்கு வந்ததைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை. 'திடீர்னு பாரத் மாதா கி ஜேனு ஒரு கூட்டம் உள்ள வந்துருச்சு' என 2024 இல் NDA கூட்டணியில் இணைந்ததைப் பற்றி கூறுகிறார். 2019 இல் நாணலாக வளைந்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். பாமக 2021 இல் மோடியை கட்டித்தழுவி புன்னகைத்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். அப்போதெல்லாம் பாஜக 'பாரத் மாதா கி ஜே' பாடும் என்பது ராமதாஸூக்கு தெரிந்திருக்கவில்லை போலும். 2003 இல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர்ந்தால் சரியாக இருக்கும். பாமகவின் ஏ.கே.மூர்த்தி மத்திய இரயில்வே துறை இணையமைச்சர். ராமதாஸூம் ஏ.கே.மூர்த்தியும் டெல்லியிலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு கூட்டத்துக்காக புறப்ப்படுகிறார்கள். பெங்களூரு வரை விமானம். அங்கிருந்து இரயில் பயணம். ஏ.கே.மூர்த்தி இரயில்வேதுறை இணை அமைச்சர் என்பதால் அவருக்கு இரயிலில் சகல வசதிகளுடன் தனிப்பெட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவர் ராமதாஸ் ராமதாஸ் 2AC இல் டிக்கெட் போட்டிருக்கிறார். என்னுடன் தனிப்பெட்டியில் வாருங்கள் என ராமதாஸை ஏ.கே.மூர்த்தி அழைக்கிறார். அதற்கு ராமதாஸ் 'இரயில்வேதுறை இணையமைச்சர் என்ற முறையில் உனக்கு அந்தப் பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எந்தப் பதவியிலும் இல்லாத நான் அதில் பயணம் செய்வது முறையல்ல. எந்த அதிகாரப் பதவியையும் வகிப்பதில்லை என்பதிலும் அதனால் கிடைக்கும் சௌகரியங்களையும் அனுபவிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றாராம். வன்னியர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சாதியினருக்கும் குறிப்பாக தலித்துகளுக்கும் சேர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கிய கட்சியை பொதுவுடைமையாக பாவித்த அதே தலைவர், அதிகாரத்தால் கிடைக்கும் சௌகரியங்கள் குடும்பத்துக்கே கிடைக்க வேண்டும், வெறுப்பரசியலின் வழி பிளவை ஏற்படுத்தி ஒரு சாராரின் வாக்கை மட்டுமே அறுவடை செய்துவிடலாம் என்றெல்லாம் மாறி நிற்பது வாக்கரசியலின் அலங்கோலம் என்று தானே சொல்ல முடியும்.! அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்! (சர்க்கஸ் தொடரும்..!) தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01

விகடன் 27 Jan 2026 2:42 pm

அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது! - கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி மதுரையில் இன்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். செங்கோட்டையன் குறித்து பேசிய அவர், நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார். செங்கோட்டையனும் பலமுறை டெல்லி சென்றார். டெல்லியில் இருந்தவர்கள் அவருடனும் பேசினார்கள். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செங்கோட்டையன் - டிடிவி தினகரன் நான் டெல்லி சென்றபோது கூட 'செங்கோட்டையன் ஏன் தவெகவிற்கு சென்றார். நம்முடன் வந்து இணைந்துகொள்ள சொல்லுங்கள்' என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் சொன்னார்கள். நான் இதை செங்கோட்டையனிடம் சொன்னேன். ஆனால் அவர் 'நான் ஏற்கனவே தவெகவில் இணைந்து விட்டேன். என்னால் மீண்டும் அங்கு வரமுடியாது' என்று சொன்னார்' மூத்த அரசியல்வாதியான அவரை வற்புறுத்துவதெல்லாம் சரியான விஷயம் கிடையாது என்றிருக்கிறார். ஓபிஎஸ் திமுகவில் இணைகிறாரா? தொடர்ந்து ஓபிஎஸ் திமுகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் எப்படி திமுகவிற்கு போவார். ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால் அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணி ஆட்சி தவிர கூட்டணி ஆட்சி குறித்து பேசிய டிடிவி தினகரன் , தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இருப்பதாகத் தான் அரசியல்வாதிகளும், மூத்த பத்திரிகையாளர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை மட்டுமே. நிபந்தனை எதுவும் நான் விதிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது என்று பேசியிருக்கிறார்.

விகடன் 27 Jan 2026 1:00 pm

ஜனநாயகன்: `ராணுவ சின்னங்கள், மத நல்லிணக்கத்துக்கு ஊறு..!' - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்!

விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றம் இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது. தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியத்தின் வாதங்களை கேட்ட நீதிமன்றம் திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் வெளியீட்டு தேதியை எப்படி அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பியது. மேலும், ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.27) தீர்ப்பு வழங்கியது. ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்கும்படி, சென்சார் போர்டுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் ராணுவ சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அன்னிய சக்திகள் நாட்டில் கலவரம் ஏற்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரமான புகார் வந்துள்ளதால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தீவிரமான புகார் கூறப்பட்டுள்ள நிலையில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டனர். மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கில் கோரிக்கையை திருத்தம் செய்து பட நிறுவனம் மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுவுக்கு சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விகடன் 27 Jan 2026 12:45 pm

”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட்டணி” - ஸ்டாலின்

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு' நடைபெற்றது. இதற்காக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் மகளிர் அழைத்து வரப்பட்டனர். இதற்காக அந்தச் சாலையின் போக்குவரத்து மாற்றப்பட்டது. மாநாடு நடைபெற்ற இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு வரை போக்குவரத்து நெரிசலால் பேருந்துகள் அணி வகுத்து நின்றன. திமுக மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் மாநாட்டுத் திடலில் போடப்பட்ட நாற்காலிகளில் இரண்டு பைகள் வைத்திருந்தனர். ஒரு பையில் ஸ்நாக்ஸ் உள்ளிட்டவையும், மற்றொரு பையில் ஹாட்பாக்ஸ் அதில் சிக்கன் பிரியாணியும் இருந்தது. முன்கூட்டியே வந்த பெண்கள் பக்கத்து இருக்கையில் இருந்த ஹாட்பாக்ஸையும் சேர்த்து எடுத்துக் கொண்டனர். இதனால் பின்னால் வந்த பெண்களுக்கு ஹாட்பாக்ஸ் கிடைக்கவில்லை. பின்பகுதியில் தனியாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. அதை வாங்குவதற்கு பெண்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பல பெண்கள் பிரியாணி கிடைக்காமல் திரும்பினர். மாநாட்டுத் திடலுக்குள் பிரசார வேனில் நின்று கையசைத்தபடி என்ட்ரி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். மேடையேறிய ஸ்டாலினுக்கு அமைச்சர் நேரு உள்ளிட்டவர்கள் வீரவாள் பரிசாகக் கொடுத்தனர். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் பேசிய பிறகு ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ''ராணுவப் படை போல மிடுக்காக திரண்டு இருக்கும் என் அன்பு சகோதரிகளுக்கு என்னுடைய வணக்கம். வீட்டை மட்டுமல்ல கழகத்தை நாங்கள் காப்போம் என்கிற உணர்வோடு கருப்பு சிவப்பு கடல் போல திரண்டு வந்துள்ளீர்கள். நம் தமிழ்நாட்டையும் ஏன் இந்திய நாட்டையும் காக்கவும் நாங்கள் தயார். யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்கிற துணிச்சலோடு திரண்டுள்ளீர்கள். தஞ்சை மண் கம்பீரமான மண், மன்னர்களுக்கெல்லாம் மன்னரான ராஜராஜ சோழன் ஆட்சி செய்த சோழமண். இந்த மண் கம்பீரமாக நிற்கக்கூடிய பெரியகோயிலும், காலங்கள் கடந்தும் உறுதியாக இருக்கக்கூடிய கல்லணையும் நிலைத்திருக்கக்கூடிய மண். கனிமொழியிடம் பொறுப்பு ஒப்படைத்தால் அதை அமைதியாகவும் சிறப்பாகவும் செய்து காட்டுவார் என்பதற்கு இந்த மாநாடு ஒரு எடுத்துக்காட்டு. கழகப் பணியில்தான் இந்த அமைதி. உரிமைக் குரல் எழுப்ப வேண்டிய நேரத்தில் கர்ஜனை மொழியாக மாறிப் போராடுவார். அதுதான் கனிமொழி. திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன? பெண் விடுதலை. சாதிய ஏற்றத்தாழ்வு இல்லை என்பதையும், ஆண் உயர்ந்தவர் பெண் தாழ்ந்தவர் என்று நடத்துவது தவறானது என்பதை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் நம்முடைய திராவிட இயக்கம். சூத்திரர்களைப் போல பெண்களும் இழிவானவர்கள் என ஒடுக்கப்பட்ட காலத்தில் இந்த இருவருடைய விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் உழைத்தார் பெரியார். திராவிட இயக்கத்துடைய தாய் அமைப்பான நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார். பெண்களுக்குச் சமபங்கு உண்டு என அறிவித்தார் கலைஞர். மகளிர் மாநாடு: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன- உதயநிதி இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடுதான். இதை அடித்துச் சொல்கிறேன். இங்குதான் அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அண்மையில், இந்தியாவிலேயே பெண்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி, முதலான சமூகக் காரணிகளில் சிறந்து விளங்குகிற நகரங்களைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளனர். 125 நகரங்கள் கொண்ட அந்தப் பட்டியலில் முதல் 25 நகரங்களில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு என ஏழு நகரங்கள் இருந்தன பிரதமருக்குத் தெரியுமா? ஸ்டாலின் பிரதமர் அவர்களே மணிப்பூரை மறந்து விட்டீர்களா? 2023ம் ஆண்டு மே மாதம் எரியத் தொடங்கிய மணிப்பூரில் இதுவரை அரசுக் கணக்குப்படி பார்த்தால் 260 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கு அதிகமாக இருக்கும் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். ஒரு லட்சம் பேருக்கும் மேல் மாநிலத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டார்கள். மூன்று ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஒன்றியத்தை ஆள்வது, மணிப்பூரை ஆண்டது பாஜகதான். ஆனால் உங்கள் டபுள் இன்ஜின் ஏன் மணிப்பூர் மக்களைக் காப்பாற்றவில்லை? மணிப்பூர் முதலமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏக்கள் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியிருக்கிறார்கள். மணிப்பூரை ஆண்ட பா.ஜ.க-வால் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை? இதுதான் பாஜகவின் லட்சணமா? மாண்புமிகு பிரதமரே, மணிப்பூரையும் உத்தரப்பிரதேசத்தையும் பாருங்கள், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக ஆளுகிற 2 மாநிலங்கள் மூலமாகத்தான் போதைப்பொருள் பரவுகிறது என்று ஆதாரங்களுடன் செய்தி வருகிறதே பத்திரிகையை நீங்கள் படிக்கவில்லையா? இதை அனைத்தையும் மறைத்துவிட்டு அமைதியான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பாதீர்கள். ஏதோ புதிதாக கூட்டணியை உருவாக்கியது போல அவரும் தோள் உயர்த்தி இருக்கிறார். தோற்ற கூட்டணியைப் புதுப்பித்து பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கூட்டணியில் இருக்கிற அனைவரும் ஈடி, ஐடி, சிபிஐ என ஏதோ ஒரு வகையில் பாஜகவிடம் சிக்கி, அந்த வாஷிங் மெஷின் தங்களை வெளுக்காதா என்கிற நப்பாசையில் கைகட்டி உட்கார்ந்து இருக்கிறார்கள். மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல் ஏற்கனவே இதே பாஜக - அதிமுக கூட்டணி, 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் ஒன்றாக நின்று தோற்றுப் போனார்கள். 2024 தேர்தலில் அதிமுக, பாஜக என்கிற வேஸ்ட் லக்கேஜைக் கழற்றிவிட்டு, 'அப்புறமா சேர்த்துக்கலாம்' என்று மறைமுகக் கூட்டணியா வந்தார்கள். ஆனால் எந்தக் கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு கெட் அவுட்தான் என்று தமிழக மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிட்டாங்க. இப்போ திரும்பவும் பழையபடியே உடைந்து போனதை எல்லாம் ஒட்டி எடுத்துக்கொண்டு, புதுசா என்டிஏ கூட்டணி என்று வந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும் பாஜக, அதிமுக கூட்டணி கட்டாயத்தால் உருவாகி இருக்கிற கூட்டணி என்று. மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. உண்மையான அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. முழுக்க முழுக்க தனது சுயலாபத்திற்காக வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள பழனிசாமி உருவாக்கிய சுயநல கூட்டணி. டெல்லிக்கு ரகசியமாக பல கார்களில் மாறி மாறி சென்று, அங்கே வழக்குகளைக் காட்டி மிரட்டியதும், ஏசி காரில் இருந்தும் ஒருவருக்கு முகம் எல்லாம் வியர்த்து விறுவிறுக்க, எப்படி கர்சிஃப் வைத்து துடைத்துக்கொண்டு வந்தார் என்பதை நாடே பார்த்தது. தஞ்சாவூர் மகளிர் அணி மாநாட்டில் பேசும் ஸ்டாலின் பாஜக என்ன நினைக்கிறது, திரும்பவும் தனது கண்ணசைவில் தலையாட்டுகிற எடுபிடிகளை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆளலாம் என நினைக்கிறது. உங்களுக்குத் தக்க பதிலடியை தமிழ்நாடு தரும். இப்போது வெளிப்படையாக பாஜக அரசு என்றே சொல்லிக் கொண்டு வந்தால் உங்களை எங்களுடைய எல்லைக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம். நடக்க இருக்கும் தேர்தலில் என்டிஏ வெர்சஸ் மதச்சார்பற்ற கூட்டணி கிடையாது. என்டிஏ வெர்சஸ் தமிழ்நாடு என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாடு மக்களுக்காக உண்மையாக உழைக்கின்ற, நாடே திரும்பிப் பார்க்கக் கூடிய செயல் திட்டங்களைச் செயல்படுத்துகிற, தலை நிமிர்ந்து, தன்மானத்தோடு போராடுவது திமுகதான். எனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியை வழங்க மக்கள் தயாராகி விட்டார்கள். நான் என்னை விட அதிகமாக நம்புவது தமிழ்நாடு மக்களைத்தான். எனவே என் மீது நம்பிக்கை வைத்திருக்கிற மக்களை, நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். என்றைக்கும் எப்போதும் மக்களுடனேயே இருக்க வேண்டும். இதுதான் உங்களுடைய சகோதரராக இருக்கக்கூடிய என்னுடைய வேண்டுகோள். எனவே அதற்கான பரப்புரையில் ஈடுபட வெல்லும் தமிழ்ப் பெண்களே புறப்படுங்கள். மீண்டும் இந்த ஸ்டாலின் ஆட்சி, கழக ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி அமைய ஓய்வை மறந்து உழையுங்கள் உழையுங்கள் என்றார். பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!– முதல்வர் ஸ்டாலின் விளாசல்

விகடன் 27 Jan 2026 12:17 pm

மீண்டும் மொழியைக் கையிலெடுக்கும் திமுக - தேர்தலில் கைகொடுக்குமா?

தியாகிகள் தினம்! தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுகூரும் விதமாக ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று முந்தினம் சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகளுக்காக நடந்த வீரவணக்க நாள் பேரணியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர், அமைச்சர்கள், திமுக மாணவரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். அங்கே அமைத்திருக்கும் தாளமுத்து - நடராசன் நினைவிடத்திலும், சமூகப் போராளி டாக்டர்.எஸ்.தருமாம்பாள் அம்மையார் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையைச் செலுத்தினர். அதன் பின் தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் சிலைகளைத் திறந்துவைத்திருந்தார். வீரவணக்க நாள் பேரணி முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள். அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை. மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று பதிவு செய்திருந்தார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பதா? காலையில் பேரணியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி சார்பில் 74 இடங்களில் மொழிப் போர் வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! எங்கள் மொழி, எங்கள் அடையாளம். கீழடி தமிழர் தாய்மடி. தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாட்டைத் தலை குனிய விட மாட்டேன். தமிழ் வாழ்க என்ற முழக்கங்களைப் பிரதான கருத்தாக வைத்து கூட்டங்கள் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின், திருவெற்றியூரில் துணை முதல்வர் உதயநிதி, சைதாப்பேட்டையில் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், தாம்பரத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, புதுக்கோட்டையில் கனிமொழி கருணாநிதி என 74 இடங்களிலும் மூத்த நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், தலைமை கழக மற்றும் இளம் பேச்சாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் சிலை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரு வரலாற்றுப்போராட்டம். தமிழ் மண்ணுக்கும், தமிழுக்கும் ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழகம் கிளர்ந்தெழுந்துள்ளது. காஞ்சிபுரம் அதிகமாகவே போராட்டங்களைக் கண்டுள்ளது. அதனால் மொழிப்போர் தியாகிகளுக்கு அண்ணா பிறந்த மண்ணில் வீரவணக்கம் செலுத்த வந்துள்ளேன். மத்தியில் ஆளும் பாஜக அரசு, பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. புதிய கல்விக் கொள்கை தொடங்கி, நிர்வாக ரீதியிலான அறிவிப்புகள் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்கிறது. இந்தியா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட ஒரு ஒன்றியம். இங்கே ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடித்து, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பது ஜனநாயகப் படுகொலை. சில நாட்களுக்கு முன்னர், சென்னை வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நமக்கு மொழிப்பாடம் எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பது போன்று இருக்கிறது. எதிரிகளை வீழ்த்தவேண்டிய நேரம்! 3 ஆயிரம், 5 ஆயிரம், ஏன் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும், மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சொன்னவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து செல்ல, நாம் என்ன அடிமைகளா? பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இதுவரை 10 முறை தோல்வியைக் கண்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இவர்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து திமுகவை வீழ்த்தப்போவதாகக் கூறுகின்றனர். திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. இந்தக் கூட்டணியை வீழ்த்த முடியாது. பொதுமக்கள், தமிழ் இனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டிய நேரம் இது. தியாகிகளின் தியாகம் வீண் போகாத வகையில், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பேசியிருந்தார். முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான திட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இந்தி திணிப்பை எந்த வகையிலும் திமுக ஏற்றுக்கொள்ளாது. தொடர்ச்சியாக ஒன்றிய பாஜக அரசு தமிழ் மொழியையும், தமிழர்களையும் புறக்கணித்து வருகிறது. எப்படியாவது ஏதோ ஒருவகையில் இந்தி திணிப்பைத் தமிழகத்தில் நடத்திவிடத் துடிக்கிறது பாஜக அரசு. அதற்காக நமக்கு வழங்கவேண்டிய கல்வி நிதியைக் கூட நிறுத்தினார்கள். இருந்தபோதிலும் திமுக அரசு கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை. இந்த இடத்தில் திமுகவைத் தாண்டி வேறெந்த கட்சி இருந்தாலும் பாஜக அடிபணிய வைத்திருக்கும். இதனைத் தமிழ்நாடு மக்களுக்கும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இப்படி தமிழ்மொழியைக் காக்கவேண்டிய தேவை குறித்து திமுக தொடர்ந்து பேசும். தமிழுக்காக திமுக செய்தது குறித்து நடந்து முடிந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்களில் எங்கள் கழக உறுப்பினர்கள் எடுத்துரைத்தார்கள். அதேபோல், வரும் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்றார்கள்.

விகடன் 27 Jan 2026 12:05 pm

மீண்டும் மொழியைக் கையிலெடுக்கும் திமுக - தேர்தலில் கைகொடுக்குமா?

தியாகிகள் தினம்! தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுகூரும் விதமாக ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று முந்தினம் சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகளுக்காக நடந்த வீரவணக்க நாள் பேரணியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர், அமைச்சர்கள், திமுக மாணவரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். அங்கே அமைத்திருக்கும் தாளமுத்து - நடராசன் நினைவிடத்திலும், சமூகப் போராளி டாக்டர்.எஸ்.தருமாம்பாள் அம்மையார் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையைச் செலுத்தினர். அதன் பின் தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் சிலைகளைத் திறந்துவைத்திருந்தார். வீரவணக்க நாள் பேரணி முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள். அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை. மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று பதிவு செய்திருந்தார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பதா? காலையில் பேரணியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி சார்பில் 74 இடங்களில் மொழிப் போர் வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! எங்கள் மொழி, எங்கள் அடையாளம். கீழடி தமிழர் தாய்மடி. தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாட்டைத் தலை குனிய விட மாட்டேன். தமிழ் வாழ்க என்ற முழக்கங்களைப் பிரதான கருத்தாக வைத்து கூட்டங்கள் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின், திருவெற்றியூரில் துணை முதல்வர் உதயநிதி, சைதாப்பேட்டையில் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், தாம்பரத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, புதுக்கோட்டையில் கனிமொழி கருணாநிதி என 74 இடங்களிலும் மூத்த நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், தலைமை கழக மற்றும் இளம் பேச்சாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் சிலை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரு வரலாற்றுப்போராட்டம். தமிழ் மண்ணுக்கும், தமிழுக்கும் ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழகம் கிளர்ந்தெழுந்துள்ளது. காஞ்சிபுரம் அதிகமாகவே போராட்டங்களைக் கண்டுள்ளது. அதனால் மொழிப்போர் தியாகிகளுக்கு அண்ணா பிறந்த மண்ணில் வீரவணக்கம் செலுத்த வந்துள்ளேன். மத்தியில் ஆளும் பாஜக அரசு, பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. புதிய கல்விக் கொள்கை தொடங்கி, நிர்வாக ரீதியிலான அறிவிப்புகள் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்கிறது. இந்தியா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட ஒரு ஒன்றியம். இங்கே ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடித்து, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பது ஜனநாயகப் படுகொலை. சில நாட்களுக்கு முன்னர், சென்னை வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நமக்கு மொழிப்பாடம் எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பது போன்று இருக்கிறது. எதிரிகளை வீழ்த்தவேண்டிய நேரம்! 3 ஆயிரம், 5 ஆயிரம், ஏன் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும், மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சொன்னவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து செல்ல, நாம் என்ன அடிமைகளா? பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இதுவரை 10 முறை தோல்வியைக் கண்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இவர்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து திமுகவை வீழ்த்தப்போவதாகக் கூறுகின்றனர். திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. இந்தக் கூட்டணியை வீழ்த்த முடியாது. பொதுமக்கள், தமிழ் இனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டிய நேரம் இது. தியாகிகளின் தியாகம் வீண் போகாத வகையில், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பேசியிருந்தார். முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான திட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இந்தி திணிப்பை எந்த வகையிலும் திமுக ஏற்றுக்கொள்ளாது. தொடர்ச்சியாக ஒன்றிய பாஜக அரசு தமிழ் மொழியையும், தமிழர்களையும் புறக்கணித்து வருகிறது. எப்படியாவது ஏதோ ஒருவகையில் இந்தி திணிப்பைத் தமிழகத்தில் நடத்திவிடத் துடிக்கிறது பாஜக அரசு. அதற்காக நமக்கு வழங்கவேண்டிய கல்வி நிதியைக் கூட நிறுத்தினார்கள். இருந்தபோதிலும் திமுக அரசு கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை. இந்த இடத்தில் திமுகவைத் தாண்டி வேறெந்த கட்சி இருந்தாலும் பாஜக அடிபணிய வைத்திருக்கும். இதனைத் தமிழ்நாடு மக்களுக்கும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இப்படி தமிழ்மொழியைக் காக்கவேண்டிய தேவை குறித்து திமுக தொடர்ந்து பேசும். தமிழுக்காக திமுக செய்தது குறித்து நடந்து முடிந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்களில் எங்கள் கழக உறுப்பினர்கள் எடுத்துரைத்தார்கள். அதேபோல், வரும் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்றார்கள்.

விகடன் 27 Jan 2026 12:05 pm

மகளிர் மாநாடு: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன- உதயநிதி

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் உதயநிதி பேசியதாவது, ''மற்ற இயக்கங்கள், வருடத்திற்கு ஒரு முறை, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாநாடு நடத்துவார்கள், ஆனால் திமுக மட்டும்தான் மாதத்திற்கு ஒரு மாநாடு நடத்துகிறது. இதன் மூலம் இயக்கத்தின் கொள்கைகள், அரசின் சாதனைகள், தலைவர் சாதனைகள் தொடர்ந்து பேசப்படுகின்றன. மகளிர் அணி மாநாட்டில் உதயநிதி இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பித்தவர் கலைஞர். அவர் வழியில், பெண்களுக்குப் பார்த்துப் பார்த்து நமது தலைவர் ஆட்சி செய்கிறார். விடியல் பயணத்திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எனப் பல திட்டங்களைச் சொல்லலாம். மகளிர் முன்னேற்றத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக வழிகாட்டியாக முதல்வர் ஆட்சி செய்கிறார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தவர், திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனப் பேசியுள்ளார். பிரதமர், மைக் என நினைத்து கண்ணாடியைப் பார்த்துப் பேசியிருக்கிறார். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை நாடே பார்த்தது. ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். ஆட்சி சரியில்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என மணிப்பூரில் ஆட்சி கலைக்கப்பட்டது. ஓராண்டாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல் திமுக மகளிர் அணி மாநாடு 2002 ஆம் ஆண்டு இதே பிரதமர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கலவரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது பெண்கள். ஐந்து மாத கர்ப்பிணி பாலியல் கொடுமை செய்யப்பட்டார். குடும்பமே கொலை செய்யப்பட்ட கொடூரமான வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பாஜக அரசு. குற்றவாளிகளுக்கு ஆதரவு கரம் கொடுத்த கட்சிதான் பாஜக. இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குப் போகும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம். இந்த மாநிலங்களை ஆட்சி செய்து கொண்டிருப்பது பாஜக. பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகளைச் செய்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பெண்களிடம் ஓட்டு கேட்பதற்கு வெட்கம் இல்லையா மோடி என்று மக்கள் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட பாசிஸ்டுகள் தமிழ்நாட்டிற்குள் வந்தால் மகளிருக்கும் பாதுகாப்பு கிடையாது நம்முடைய மாநிலத்திற்கும் பாதுகாப்பு இருக்காது. டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு பெண்களுக்குத் துணையாக இருக்கக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்பை எப்படியாவது முடக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு முயல்கிறது. இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்தார்கள். இன்று அந்த நிதிச் சுமையை மாநில அரசின் மீது திணிக்க முயற்சி செய்கிறார்கள். இதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுத்தவர் நமது முதல்வர். நம்பர் ஒன் அடிமையான எடப்பாடி பழனிசாமி இதற்கும் முட்டுக்கொடுத்து வருகிறார். முரட்டு பக்தர் கேள்விப்பட்டிருப்போம், முரட்டுத் தொண்டர் பார்த்திருப்போம். ஆனால் அடிமையாக நமது கண் முன் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது நுழைந்து விடலாம் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். பழைய அடிமைகள் மட்டுமின்றி புதுப்புது அடிமைகளுடன் நுழைகின்றனர். எத்தனை பேர் வேண்டுமானாலும் கிளம்பி வரட்டும் ஆனால் திமுகவை, நம்முடைய தமிழ்நாட்டை அவர்களால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அதற்கு இங்கு இருக்கக்கூடிய நமது மகளிர் படை நிச்சயம் காவல் அரணாக இருப்பார்கள். நமது அரசு அமைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் மகளிர்தான். அரசைக் கொண்டாடுவதும் இங்கு வந்துள்ள மகளிர்தான். அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் சேர்க்க வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஏழாவது முறை ஆட்சி அமைக்கவும், தலைவர் இரண்டாவது முறை மீண்டும் முதலமைச்சராக அமரவும் இங்கு வந்திருக்கும் மகளிர் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்'' என்றார். திமுக மகளிர் அணி மாநாடு: `ஹாட்பாக்ஸில் பிரியாணி முதல் கூல்ட்ரிங்ஸ் வரை' - பையில் இருந்தது என்ன?

விகடன் 27 Jan 2026 10:49 am

அமெரிக்கா செய்துவிட்டது; ஆனால், தென் கொரியா செய்யவில்லை - ட்ரம்ப் வரியை உயர்த்த காரணம் என்ன?

தென் கொரியாவிற்கு வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஏன் இந்த உயர்வு? இதற்கான பதிலை தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் கூறியுள்ளதாவது... நமக்கு நம்முடைய வர்த்தக ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் என்ன முடிவாகி உள்ளதோ, அதைப் பொறுத்து அந்தந்த நாடுகளுக்கு உடனடியாக வரிகளைக் குறைத்து வருகிறோம். இதை நமது வர்த்தகக் கூட்டாளிகளும் நமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தென் கொரியா அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை. 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி, நானும், அதிபர் லீயும் இரு நாடுகளுக்கும் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டோம். வரி பங்குச்சந்தை சரிவு: இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத 6 தவறுகள்! 2025-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி, நான் கொரியா சென்றிருந்தபோதும், ஒப்பந்தத்தை மறுபடியும் உறுதிப்படுத்தினேன். பின், ஏன் இன்னும் கொரிய சட்டமன்றம் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை? இதனால், தென் கொரியாவில் இருந்து வரும் ஆட்டோமொபைல்கள், மருத்துவம் சார்ந்த பொருள்கள், மரக்கட்டைகள், பரஸ்பர வரிகளை 15 சதவிகித வரியில் இருந்து 25 சதவிகித வரியாக உயர்த்துகிறேன் என்று கூறியுள்ளார். இனி சொத்தை பத்திரப் பதிவு செய்ய 'இந்த' ஆவணங்கள் மிக முக்கியம்! - தமிழக மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்

விகடன் 27 Jan 2026 10:09 am

அமெரிக்கா செய்துவிட்டது; ஆனால், தென் கொரியா செய்யவில்லை - ட்ரம்ப் வரியை உயர்த்த காரணம் என்ன?

தென் கொரியாவிற்கு வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஏன் இந்த உயர்வு? இதற்கான பதிலை தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் கூறியுள்ளதாவது... நமக்கு நம்முடைய வர்த்தக ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் என்ன முடிவாகி உள்ளதோ, அதைப் பொறுத்து அந்தந்த நாடுகளுக்கு உடனடியாக வரிகளைக் குறைத்து வருகிறோம். இதை நமது வர்த்தகக் கூட்டாளிகளும் நமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தென் கொரியா அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை. 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி, நானும், அதிபர் லீயும் இரு நாடுகளுக்கும் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டோம். வரி பங்குச்சந்தை சரிவு: இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத 6 தவறுகள்! 2025-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி, நான் கொரியா சென்றிருந்தபோதும், ஒப்பந்தத்தை மறுபடியும் உறுதிப்படுத்தினேன். பின், ஏன் இன்னும் கொரிய சட்டமன்றம் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை? இதனால், தென் கொரியாவில் இருந்து வரும் ஆட்டோமொபைல்கள், மருத்துவம் சார்ந்த பொருள்கள், மரக்கட்டைகள், பரஸ்பர வரிகளை 15 சதவிகித வரியில் இருந்து 25 சதவிகித வரியாக உயர்த்துகிறேன் என்று கூறியுள்ளார். இனி சொத்தை பத்திரப் பதிவு செய்ய 'இந்த' ஆவணங்கள் மிக முக்கியம்! - தமிழக மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்

விகடன் 27 Jan 2026 10:09 am

மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல்

தஞ்சாவூரில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் மாநாட்டில் கனிமொழி எம்.பி., பேசியதாவது, ''அனைவருக்கும் அன்பு வணக்கம். கலைமகளின் கரம் தந்து, கல்வியிலே தரம் தந்து, நல்லாட்சிக்கான வரம் தந்த நம் முதல்வரை வணங்குகிறேன். உள்ளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நடுமலரே, ஒளி உமிழ் புதுநிலவே, அன்பே, அறிவே, அழகே, உயிரே, இன்பே, இனிய தென்றலே, பனியே, கனியே, மரகத அணியே, மாணிக்கச் சுடரே, மன்மத விளக்கே என்றெல்லாம் தமிழைப் போற்றினாலும், தமிழை தமிழே என்று கூறுவதுதான் பெருமை, அழகு என்பார் முதல்வர். திமுக மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி ஓடு வளர் காடு தணி ஓடி விளையாடுகின்ற பீடு மிகு மாநிலமும், பாடு திசை ஜோடி குயில் தாலமொடு பாவம் மிகு கானமயில் புள்ளினமும், மட்டுப்படிகற்ற கொடைச் சிற்றடர் வெற்றிச் சீர் பெற்றிடவும் உல, மானம் காக்கப் புறப்படுக மறவர் சேனை! மானம் காக்கப் புறப்படுக மறவர் சேனை! இன்புற்றான் என் தமிழன். இங்கு வந்த இந்தினை எதிர்ப்பதற்கு இவையின்றி செங்குத்துத் தூணைப் போல் இருக்கின்றானா அல்லது அங்கத்தில் துடிப்பின்றி கிடக்கின்றானா? ஐயோ பாவம், அவனுக்கு சங்கத்தில் பாட்டெழுதி அரங்கேற்றுங்கள் என்று இந்தியை எதிர்த்து தமிழ் மொழியை அரியணை ஏற்றியது நம் திராவிட மாடல் ஆட்சி தானே! தடியூன்றி நடக்கின்ற பெரியாரும் இல்லை, தமிழூன்றி நடக்கின்ற கலைஞரும் இல்லை, கொடியேற்றுகின்ற கழகத்தைத் தொடங்கி வைத்த பேரறிஞர் அண்ணாவும் இல்லை. இப்படி இந்தப் படிக்கட்டுகளை அமைத்திட்ட எந்தத் தலைவர்களும் பக்கத்தில் இல்லை என்றாலும், இந்த மூன்று வெடிமருந்தையும் தன் மூளைக்குள் தாங்கிக்கொண்டு தமிழகத்தை வென்றெடுத்தார் நம் முதல்வர். அதுமட்டுமல்லாமல், அன்பு உடன்பிறப்புகளே என்ற ஒற்றைக் காவியத்தை வைத்தார் கலைஞர் என்றால், அப்பா என்ற ஒற்றை வார்த்தையிலே வரலாற்றைப் படைத்தவர் நம் முதல்வர். திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உமிழ்நீரைக் கூட விழுங்குவதற்கு நேரமின்றி ஊரெல்லாம் உரையாடி உழைப்பவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கூற்றிற்கு இணங்க, பசித்த ஒரு குழந்தையின் முகத்தைக் கண்ட அடுத்த கணமே அவர் கொண்டு வந்தாரோ ஒரு சட்டம், அதுவே காலை உணவுத் திட்டம். கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டைய உரிக்கும் சுடுகாட்டில் அவன் பட்டை வேகம் என்ற வரிகளுக்கு இணங்க, நம் முதல்வர் செயல்படுத்திய நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக, ஏரோட்டுபவரின் மகன் ஏரோப்ளேன் ஓட்டுகின்றான், களை பறிப்பவரின் மகன் கலெக்டர் ஆகின்றான். Chennai Book Fair: 100 நூல்கள்;16,000 பக்கங்கள்; 100 ஆண்டுகால திராவிட வரலாறு-அசத்தும் ஆழி பதிப்பகம்! பெண்கள் விண்வெளிக்கே போனாலும், அவர்கள் போக முடியாத ஒரே இடம் கோவிலின் கருவறை. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தால் இனி கரு சுமக்கும் பெண் கூட கோவிலின் கருவறைக்குள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற வாதத்தை மாற்றி, பெண்களுக்கு சொத்துரிமை தந்து, வாழ்வுரிமை தந்து, கல்வியைத் தந்து, கல்விக்குத் தொகையும் தந்து, இடஒதுக்கீடு தந்து, சம உரிமையைப் படைத்து, பெண்களின் தடைகளை உடைத்து, பெண்களின் வழித்தடத்தை வாழ்க்கைத் தடமாக மாற்றி வரும் ஒரு சகாப்த நாயகர் நம் தமிழ்நாட்டின் முதல்வர். திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா என்ற பாரதியாரின் வரிகளுக்கேற்ப, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற மாபெரும் மாநாட்டை நடத்தி பெண்மையைப் போற்றுவதுதான் நம் திராவிட மாடல் அரசியலுடைய புரட்சி. அதுமட்டுமல்லாமல் நான் இன்னொன்னு கருத்தைச் சொல்கிறேன். ​விதவைக்கு கைம்பெண், ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை, என்று பெயரிட்ட தாயுமானவர் கலைஞரின் வழியில், பெண்களுக்கு இலவசப் பேருந்து என்று இல்லாமல் கட்டணமில்லாப் பயணம், பெண்களுக்கு உதவித்தொகை என்று இல்லாமல் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என்று திட்டங்களின் பெயர்களில் கூட பெண்களுக்கு சுயமரியாதையைத் தருவது நம் திராவிட மாடல் ஆட்சி தானே! பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!– முதல்வர் ஸ்டாலின் விளாசல் ஒரு பெண் இன்னும் இந்தத் தமிழ் மண்ணில் வெற்றிப் புன்னகையோடும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடனும் வாழ்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் முதல்வர் இந்த நாட்டை ஆள்கிறார் என்பது மட்டுமல்ல, நம் அப்பா இந்தப் பெண் சமூகத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறார் என்பதே எங்கள் நம்பிக்கை. விளையாட்டுத் துறையில் முக்கியமாகப் பெண்கள் - கபடியில் கண்ணகி, நாகரத்தினம், கார்த்திகா; கிரிக்கெட்டில் ஜெமிமா என முன்வருவதற்கு காரணமே நம்முடைய திராவிட மாடல் அரசு தானே! திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை வேண்டுமானால் உருவாக்கலாம், ஒருபொழுதும் நல்ல தலைவர்களை உருவாக்க முடியாது. திராவிடத்திற்கு என்றும் இல்லை வறட்சி, என்றும் இருப்பது வளர்ச்சி, எழுச்சி! அதற்குச் சாட்சி நம் முதல்வருடைய ஆட்சி. நாடு போற்றும் அந்த ஐந்தாண்டு, தொடரட்டும் பல்லாண்டு! மீண்டும் நீங்களே முதல்வர், மீண்டும் மீண்டும் நீங்களே முதல்வர்'' என்றார். நான் தினம் தினம் சென்னையைப் பார்த்து வியக்கிறேன்! - பெண்ணின் பிரமிப்பு| #Chennaidays

விகடன் 27 Jan 2026 10:01 am

மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல்

தஞ்சாவூரில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் மாநாட்டில் கனிமொழி எம்.பி., பேசியதாவது, ''அனைவருக்கும் அன்பு வணக்கம். கலைமகளின் கரம் தந்து, கல்வியிலே தரம் தந்து, நல்லாட்சிக்கான வரம் தந்த நம் முதல்வரை வணங்குகிறேன். உள்ளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நடுமலரே, ஒளி உமிழ் புதுநிலவே, அன்பே, அறிவே, அழகே, உயிரே, இன்பே, இனிய தென்றலே, பனியே, கனியே, மரகத அணியே, மாணிக்கச் சுடரே, மன்மத விளக்கே என்றெல்லாம் தமிழைப் போற்றினாலும், தமிழை தமிழே என்று கூறுவதுதான் பெருமை, அழகு என்பார் முதல்வர். திமுக மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி ஓடு வளர் காடு தணி ஓடி விளையாடுகின்ற பீடு மிகு மாநிலமும், பாடு திசை ஜோடி குயில் தாலமொடு பாவம் மிகு கானமயில் புள்ளினமும், மட்டுப்படிகற்ற கொடைச் சிற்றடர் வெற்றிச் சீர் பெற்றிடவும் உல, மானம் காக்கப் புறப்படுக மறவர் சேனை! மானம் காக்கப் புறப்படுக மறவர் சேனை! இன்புற்றான் என் தமிழன். இங்கு வந்த இந்தினை எதிர்ப்பதற்கு இவையின்றி செங்குத்துத் தூணைப் போல் இருக்கின்றானா அல்லது அங்கத்தில் துடிப்பின்றி கிடக்கின்றானா? ஐயோ பாவம், அவனுக்கு சங்கத்தில் பாட்டெழுதி அரங்கேற்றுங்கள் என்று இந்தியை எதிர்த்து தமிழ் மொழியை அரியணை ஏற்றியது நம் திராவிட மாடல் ஆட்சி தானே! தடியூன்றி நடக்கின்ற பெரியாரும் இல்லை, தமிழூன்றி நடக்கின்ற கலைஞரும் இல்லை, கொடியேற்றுகின்ற கழகத்தைத் தொடங்கி வைத்த பேரறிஞர் அண்ணாவும் இல்லை. இப்படி இந்தப் படிக்கட்டுகளை அமைத்திட்ட எந்தத் தலைவர்களும் பக்கத்தில் இல்லை என்றாலும், இந்த மூன்று வெடிமருந்தையும் தன் மூளைக்குள் தாங்கிக்கொண்டு தமிழகத்தை வென்றெடுத்தார் நம் முதல்வர். அதுமட்டுமல்லாமல், அன்பு உடன்பிறப்புகளே என்ற ஒற்றைக் காவியத்தை வைத்தார் கலைஞர் என்றால், அப்பா என்ற ஒற்றை வார்த்தையிலே வரலாற்றைப் படைத்தவர் நம் முதல்வர். திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உமிழ்நீரைக் கூட விழுங்குவதற்கு நேரமின்றி ஊரெல்லாம் உரையாடி உழைப்பவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கூற்றிற்கு இணங்க, பசித்த ஒரு குழந்தையின் முகத்தைக் கண்ட அடுத்த கணமே அவர் கொண்டு வந்தாரோ ஒரு சட்டம், அதுவே காலை உணவுத் திட்டம். கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டைய உரிக்கும் சுடுகாட்டில் அவன் பட்டை வேகம் என்ற வரிகளுக்கு இணங்க, நம் முதல்வர் செயல்படுத்திய நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக, ஏரோட்டுபவரின் மகன் ஏரோப்ளேன் ஓட்டுகின்றான், களை பறிப்பவரின் மகன் கலெக்டர் ஆகின்றான். Chennai Book Fair: 100 நூல்கள்;16,000 பக்கங்கள்; 100 ஆண்டுகால திராவிட வரலாறு-அசத்தும் ஆழி பதிப்பகம்! பெண்கள் விண்வெளிக்கே போனாலும், அவர்கள் போக முடியாத ஒரே இடம் கோவிலின் கருவறை. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தால் இனி கரு சுமக்கும் பெண் கூட கோவிலின் கருவறைக்குள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற வாதத்தை மாற்றி, பெண்களுக்கு சொத்துரிமை தந்து, வாழ்வுரிமை தந்து, கல்வியைத் தந்து, கல்விக்குத் தொகையும் தந்து, இடஒதுக்கீடு தந்து, சம உரிமையைப் படைத்து, பெண்களின் தடைகளை உடைத்து, பெண்களின் வழித்தடத்தை வாழ்க்கைத் தடமாக மாற்றி வரும் ஒரு சகாப்த நாயகர் நம் தமிழ்நாட்டின் முதல்வர். திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா என்ற பாரதியாரின் வரிகளுக்கேற்ப, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற மாபெரும் மாநாட்டை நடத்தி பெண்மையைப் போற்றுவதுதான் நம் திராவிட மாடல் அரசியலுடைய புரட்சி. அதுமட்டுமல்லாமல் நான் இன்னொன்னு கருத்தைச் சொல்கிறேன். ​விதவைக்கு கைம்பெண், ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை, என்று பெயரிட்ட தாயுமானவர் கலைஞரின் வழியில், பெண்களுக்கு இலவசப் பேருந்து என்று இல்லாமல் கட்டணமில்லாப் பயணம், பெண்களுக்கு உதவித்தொகை என்று இல்லாமல் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என்று திட்டங்களின் பெயர்களில் கூட பெண்களுக்கு சுயமரியாதையைத் தருவது நம் திராவிட மாடல் ஆட்சி தானே! பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!– முதல்வர் ஸ்டாலின் விளாசல் ஒரு பெண் இன்னும் இந்தத் தமிழ் மண்ணில் வெற்றிப் புன்னகையோடும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடனும் வாழ்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் முதல்வர் இந்த நாட்டை ஆள்கிறார் என்பது மட்டுமல்ல, நம் அப்பா இந்தப் பெண் சமூகத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறார் என்பதே எங்கள் நம்பிக்கை. விளையாட்டுத் துறையில் முக்கியமாகப் பெண்கள் - கபடியில் கண்ணகி, நாகரத்தினம், கார்த்திகா; கிரிக்கெட்டில் ஜெமிமா என முன்வருவதற்கு காரணமே நம்முடைய திராவிட மாடல் அரசு தானே! திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை வேண்டுமானால் உருவாக்கலாம், ஒருபொழுதும் நல்ல தலைவர்களை உருவாக்க முடியாது. திராவிடத்திற்கு என்றும் இல்லை வறட்சி, என்றும் இருப்பது வளர்ச்சி, எழுச்சி! அதற்குச் சாட்சி நம் முதல்வருடைய ஆட்சி. நாடு போற்றும் அந்த ஐந்தாண்டு, தொடரட்டும் பல்லாண்டு! மீண்டும் நீங்களே முதல்வர், மீண்டும் மீண்டும் நீங்களே முதல்வர்'' என்றார். நான் தினம் தினம் சென்னையைப் பார்த்து வியக்கிறேன்! - பெண்ணின் பிரமிப்பு| #Chennaidays

விகடன் 27 Jan 2026 10:01 am

தமிழக அரசு ரூ. 3000 கொடுத்துவிட்டு ரூ. 850 கோடியை TASMAC மூலம் பெற்றுக்கொண்டது - சௌமியா அன்புமணி

மகளிர் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, ''தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாடுகள் உண்டு, ஆனால், பெண்களுக்கு இங்கு மரியாதை இல்லை, தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மூவாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு 850 கோடி ரூபாயை டாஸ்மாக் மூலம் பெற்றுக்கொண்டது. சௌமியா அன்புமணி டாஸ்மாக் காலி மது பாட்டில்களைச் சேமித்து வைக்க குடோன் இருக்கும்போது விவசாயிகளின் மலர்களைச் சேமித்து வைக்க குடோன் இல்லை. மலர் விவசாயம் மட்டுமல்ல, தென்னை விவசாயம், மா விவசாயம் என எந்தவொரு விவசாய வளர்ச்சிக்கான கட்டமைப்பும் இந்த ஆட்சியில் செய்யப்படவில்லை. ``மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500: ஆம்னிப் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை - அன்புமணி காட்டம்! மாவுக்கு மதிப்புக்கூட்ட இப்பகுதியில் தொழிற்சாலை இல்லை, ஆனால், இப்பகுதி இளைஞர்களுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். மா விவசாயமும் பெருமளவு குறைந்துவிட்டது. மாவிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியைத் தரம் உயர்த்தியதால்தான் நாம் அதைப் பயன்படுத்தி வருகிறோம். இல்லையென்றால் பெங்களூருக்குத்தான் செல்ல வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் இன்றும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். சௌமியா அன்புமணி மூன்று போகம் விளைச்சல் தரும் விளைநிலத்தைப் பறித்து தொழிற்சாலை அமைப்பது நல்லதல்ல. ஒகேனக்கல் குடிநீர் திட்டம், மாவட்டத்தில் பல பகுதிகளுக்குப் போய்ச்சேரவில்லை. அதேபோல் கிராமங்களுக்குச் சரியான பேருந்து வசதிகள் இல்லை, இந்தப் பகுதியில் கல்லூரிகள் கிடையாது. கிரானைட் குவாரிகளில் வெடி வைப்பதால் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இக்குவாரிகளுக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் கோடி சம்பாதிக்கும் கிரானைட் நிறுவனங்களுக்கு அபராதத்தைக் கட்ட இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் வாங்கும் கடனுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுப்பது இல்லை. மதுவால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பவர் அன்புமணி ராமதாஸ். நாம் நன்றாக இருக்க வேண்டும், நம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும், அதை உணர்ந்து வாக்களியுங்கள். மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு புதிய மதுக்கடைகளைத் திறப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கக் கூடாது என்று பேசினார். அ.தி.மு.க-வுடன் அன்புமணி டீல்... அறிவாலயத்தை நெருங்கும் ராமதாஸ்!

விகடன் 27 Jan 2026 8:49 am

தமிழக அரசு ரூ. 3000 கொடுத்துவிட்டு ரூ. 850 கோடியை TASMAC மூலம் பெற்றுக்கொண்டது - சௌமியா அன்புமணி

மகளிர் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, ''தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாடுகள் உண்டு, ஆனால், பெண்களுக்கு இங்கு மரியாதை இல்லை, தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மூவாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு 850 கோடி ரூபாயை டாஸ்மாக் மூலம் பெற்றுக்கொண்டது. சௌமியா அன்புமணி டாஸ்மாக் காலி மது பாட்டில்களைச் சேமித்து வைக்க குடோன் இருக்கும்போது விவசாயிகளின் மலர்களைச் சேமித்து வைக்க குடோன் இல்லை. மலர் விவசாயம் மட்டுமல்ல, தென்னை விவசாயம், மா விவசாயம் என எந்தவொரு விவசாய வளர்ச்சிக்கான கட்டமைப்பும் இந்த ஆட்சியில் செய்யப்படவில்லை. ``மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500: ஆம்னிப் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை - அன்புமணி காட்டம்! மாவுக்கு மதிப்புக்கூட்ட இப்பகுதியில் தொழிற்சாலை இல்லை, ஆனால், இப்பகுதி இளைஞர்களுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். மா விவசாயமும் பெருமளவு குறைந்துவிட்டது. மாவிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியைத் தரம் உயர்த்தியதால்தான் நாம் அதைப் பயன்படுத்தி வருகிறோம். இல்லையென்றால் பெங்களூருக்குத்தான் செல்ல வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் இன்றும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். சௌமியா அன்புமணி மூன்று போகம் விளைச்சல் தரும் விளைநிலத்தைப் பறித்து தொழிற்சாலை அமைப்பது நல்லதல்ல. ஒகேனக்கல் குடிநீர் திட்டம், மாவட்டத்தில் பல பகுதிகளுக்குப் போய்ச்சேரவில்லை. அதேபோல் கிராமங்களுக்குச் சரியான பேருந்து வசதிகள் இல்லை, இந்தப் பகுதியில் கல்லூரிகள் கிடையாது. கிரானைட் குவாரிகளில் வெடி வைப்பதால் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இக்குவாரிகளுக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் கோடி சம்பாதிக்கும் கிரானைட் நிறுவனங்களுக்கு அபராதத்தைக் கட்ட இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் வாங்கும் கடனுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுப்பது இல்லை. மதுவால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பவர் அன்புமணி ராமதாஸ். நாம் நன்றாக இருக்க வேண்டும், நம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும், அதை உணர்ந்து வாக்களியுங்கள். மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு புதிய மதுக்கடைகளைத் திறப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கக் கூடாது என்று பேசினார். அ.தி.மு.க-வுடன் அன்புமணி டீல்... அறிவாலயத்தை நெருங்கும் ராமதாஸ்!

விகடன் 27 Jan 2026 8:49 am

எங்களைப் பற்றி விஜய் எது வேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால் - டிடிவி தினகரன் காட்டம்

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”ஊழல் ஆட்சியிலிருந்து மீட்டெடுத்து தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் எனப் பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். கங்காரு குட்டி போல சுற்றிக்கொண்டு உள்ள ஒருவரை முதலமைச்சர் பட்டம் சூட்ட காத்திருக்கிறது திமுக. பங்காளி சண்டை இல்லாத குடும்பங்கள் இல்லை. எங்கள் வீட்டு குடும்ப விஷயங்களை நான் மனம்விட்டு பேசினேன். தற்போது அம்மாவின் ஆட்சி அமைய ஒன்றிணைந்துள்ளோம். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் பிரிந்து நின்று தேர்தலைச் சந்தித்ததால் திமுக வெற்றிபெற்றது நாங்கள் ஒன்றாகப் போட்டியிட்டு இருந்தால் மேலும் 20- 25 தொகுதியில் வெற்றிபெற்று இருப்போம். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றுதான் கூறினேன், தவிர ஒரே கட்சியில் இணைய வேண்டும் எனக் கூறவில்லை. ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி.தினகரன் கூட்டணியில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் நல்ல ஒரு முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியிலிருந்து நான் அழைப்பு விடுக்கிறேன். அவரது வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உள்ளது. அவர் சென்ற உயரங்களுக்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன். எனது கோரிக்கை ஏற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஒ.பன்னீர்செல்வம். யார் பேச்சையோ கேட்டு தர்ம யுத்தம் நடத்தினர். அப்போது மட்டும் அவர் தர்ம யுத்தம் நடத்தாமல் இருந்து இருந்திருந்தால் மீண்டும் முதலமைச்சராக இருந்து இருப்பார். டிடிவி தினகரன் 'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன் அம்மாவின் இடத்தில் எங்களுக்கு மோடிதான் இருக்கிறார். தமிழ்நாட்டை மோடி அவர்கள் தத்தெடுத்து இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற நாங்கள் துணை நிற்போம். நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது உடனிருப்பவர்களை வாய்ப்யிருந்தால் அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எங்கள் தலைவர் எம்ஜிஆர் படத்தை வைத்து விட்டு எங்களை ஊழல் கட்சி என்கிறார் விஜய். சினிமா வசனம் பேசுகிறார். உங்கள் திரைப்படத்தில் கள்ள டிக்கெட் விற்பனையில் நடக்கும் ஊழல்களைத் தடுத்து நிறுத்துங்கள், முதலில் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். நாங்கள் அமைதியாக இருந்தால் நீங்கள் எது வேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால் என்ன ஆவது? டிடிவி தினகரன் - தவெக விஜய் விஜயகாந்த் போல் விஜயும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றுதான் கூறினேன், எம்.ஜி.ஆர் போன்று வருவார் என்று நான் எங்கும் சொல்லவில்லை” எனத் தெரிவித்தார் இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன்

விகடன் 27 Jan 2026 8:23 am

பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு - திமுக MLA பேச்சும் ஜோதிமணியின் பதிலும்

திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது, காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருவரும் எம்பி ஆகிவிட்டனர். இதனால் மற்றவர்கள் எம்எல்ஏ ஆகவில்லையென்றாலும் பரவாயில்லை என அதில் பங்கு கொடு, இதில் பங்கு கொடு எனக் கேட்கிறார்கள். இதையெல்லாம் நம்முடைய தலைமை புரிந்துகொண்டு இவர்களுக்கு சீட்டே கொடுக்கக் கூடாது. நாமும் கொடுக்க விடக் கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால் நாம் இல்லை என்றால் இந்தியா கூட்டணியே கிடையாது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோரால்தான் இந்தியா கூட்டணியே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டுகள்தான் இருக்கிறது. முதலமைச்ச மு.க.ஸ்டாலினுடன் எம்எல்எ கோ.தளபதி பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு அதிக அளவு பங்கு கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்தார். இவருடைய பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?  ஜோதிமணி காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும்தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம்.  கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக்கூட பேசவேண்டிய இடத்தில்தான் பேசியிருக்கிறேன்.  ஜோதிமணி வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைப்பிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராகப் பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது எனப் பதிவிட்டுள்ளார். ”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

விகடன் 27 Jan 2026 7:59 am

பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு - திமுக MLA பேச்சும் ஜோதிமணியின் பதிலும்

திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது, காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருவரும் எம்பி ஆகிவிட்டனர். இதனால் மற்றவர்கள் எம்எல்ஏ ஆகவில்லையென்றாலும் பரவாயில்லை என அதில் பங்கு கொடு, இதில் பங்கு கொடு எனக் கேட்கிறார்கள். இதையெல்லாம் நம்முடைய தலைமை புரிந்துகொண்டு இவர்களுக்கு சீட்டே கொடுக்கக் கூடாது. நாமும் கொடுக்க விடக் கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால் நாம் இல்லை என்றால் இந்தியா கூட்டணியே கிடையாது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோரால்தான் இந்தியா கூட்டணியே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டுகள்தான் இருக்கிறது. முதலமைச்ச மு.க.ஸ்டாலினுடன் எம்எல்எ கோ.தளபதி பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு அதிக அளவு பங்கு கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்தார். இவருடைய பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?  ஜோதிமணி காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும்தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம்.  கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக்கூட பேசவேண்டிய இடத்தில்தான் பேசியிருக்கிறேன்.  ஜோதிமணி வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைப்பிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராகப் பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது எனப் பதிவிட்டுள்ளார். ”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

விகடன் 27 Jan 2026 7:59 am

திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!

திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!

விகடன் 26 Jan 2026 10:22 pm

பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!– முதல்வர் ஸ்டாலின் விளாசல்

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றது. கனிமொழி தலைமை தாங்கிய இந்த மாநாட்டில், 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின் அவர் உரையில், ``வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பாஜக கூட்டணிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான போர். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி, இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அபாண்டமான பொய்யைக் கூறிச் சென்றுள்ளார். மணிப்பூரில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஊரை விட்டு வெளியேறியபோது டபுள் இன்ஜின் பா.ஜ.க அரசு வேடிக்கை பார்த்தது. ஆனால், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான முதல் 25 நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை உட்பட தமிழகத்தின் 7 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என அடித்துச் சொல்கிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. தேர்தல் நேரத்தில் மட்டும் இந்தியாவுக்கு வரும் பிரதமர், தமிழக மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் பழைய கண்டென்ட்டையே பேசிச் சென்றுள்ளார். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லா பயணத்தை உறுதி செய்தது. 1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 5 லட்சம் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தால் பயனடைகிறார்கள். இந்த மகிழ்ச்சி பெண்களின் முகத்தில் தெரிவதே எங்கள் ஆட்சியின் வெற்றி. திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், பதவி சுகத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு சுயநலக் கூட்டணி. டெல்லிக்கு ரகசியமாகச் சென்று மிரட்டல்களுக்குப் பணிந்து உருவான இந்த 'பிளாக்மெயில்' கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். பா.ஜ.க-வின் எடுபடிகளாக இருந்து தமிழகத்தை ஆள நினைப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மறைத்துவிட்டு, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்ப பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை. எனக் குறிப்பிட்டார். `சுய மரியாதை முக்கியம்; லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் வைத்திலிங்கம்' - ஸ்டாலின்

விகடன் 26 Jan 2026 8:23 pm

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் காலமானார்: பா.சிதம்பரம் இரங்கல்

காரைக்குடி தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சுந்தரம் (1996-2001, 2006-2011) கடந்த சில மாதங்களாகவே உடல்நலமில்லாமல் இருந்தார். இந்த நிலையில், சுந்தரம் தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில், காரில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவரின் எக்ஸ் பதிவில், ``மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு N சுந்தரம் அவர்கள் சற்று நேரத்திற்கு முன் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். ப. சிதம்பரம் நான் கடந்த இரண்டு நாட்களாகத் தொகுதியில் இருந்தேன். இன்று காலை புறப்பட்டு பகல் 2 மணிக்கு டில்லி வந்தேன். இந்த துயரச் செய்தி 3 மணிக்குக் கிடைத்தது. நம்முடைய கட்சித் தோழர்களை உடனடியாகச் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் சொல்ல வேண்டியுள்ளேன். திரு சுந்தரம் என்னுடைய 35 ஆண்டு காலத் தோழர். காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். உடல் நலம் குன்றியதன் காரணமாகச் சில காலமாக ஓய்வில் இருந்தார். உடல் நலம் சீரடைந்து கட்சிப் பணிக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன். அவர் மறைவு அவருடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை? - கேள்வி எழுப்பும் தமிழிசை

விகடன் 26 Jan 2026 6:17 pm

``இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் - ஐரோப்பிய ஆணையத் தலைவர் நெகிழ்ச்சி

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்றனர். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உர்சுலா வான் டெர் லேயன், குடியரசு நிகழ்வின் அரச விருந்தினராக கலந்துகொண்டார். உர்சுலா வான் டெர் லேயன் - மோடி மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் உர்சுலா வான் டெர் லேயன், ``குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்பது எங்கள் வாழ்நாள் பெருமை. வெற்றிகரமான இந்தியா உலகை மேலும் நிலையானதாகவும், செழிப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. இதனால் நாம் அனைவரும் பயனடைகிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்னதாக டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ``வெற்றியடையும் இந்தியா மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும். உலக உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் கால் பங்கைக் கொண்ட, 200 கோடி மக்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட சந்தையை இந்த வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் என்று தெரிவித்திருந்தார். ₹1 கோடி + மாதம் தொடர் வருமானம்: 35–50 வயசுக்காரங்க கலந்துக்க வேண்டிய கட்டணமில்லா SIP–SWP வகுப்பு!

விகடன் 26 Jan 2026 4:57 pm

``இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் - ஐரோப்பிய ஆணையத் தலைவர் நெகிழ்ச்சி

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்றனர். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உர்சுலா வான் டெர் லேயன், குடியரசு நிகழ்வின் அரச விருந்தினராக கலந்துகொண்டார். உர்சுலா வான் டெர் லேயன் - மோடி மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் உர்சுலா வான் டெர் லேயன், ``குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்பது எங்கள் வாழ்நாள் பெருமை. வெற்றிகரமான இந்தியா உலகை மேலும் நிலையானதாகவும், செழிப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. இதனால் நாம் அனைவரும் பயனடைகிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்னதாக டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ``வெற்றியடையும் இந்தியா மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும். உலக உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் கால் பங்கைக் கொண்ட, 200 கோடி மக்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட சந்தையை இந்த வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் என்று தெரிவித்திருந்தார். ₹1 கோடி + மாதம் தொடர் வருமானம்: 35–50 வயசுக்காரங்க கலந்துக்க வேண்டிய கட்டணமில்லா SIP–SWP வகுப்பு!

விகடன் 26 Jan 2026 4:57 pm

திமுக மகளிர் அணி மாநாடு: `ஹாட்பாக்ஸில் பிரியாணி முதல் கூல்ட்ரிங்ஸ் வரை' - பையில் இருந்தது என்ன?

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றுவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு திடலில் போடப்பட்டிருக்கும் நாற்காளிகளில் பை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பையில் சிக்கன் பிரியாணி வைக்கப்பட்ட ஹாட் பாக்ஸ், மேரி கோல்டு, குட் டே பிஸ்கட், பாதுஷா, மிக்சர் காரம், தண்ணீர், மாசா கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. பிரபலங்கள் திரண்ட மகளிர் மாநாடு... உரசல்களை ஒட்டவைத்த தி.மு.க!

விகடன் 26 Jan 2026 4:04 pm

`சுய மரியாதை முக்கியம்; லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் வைத்திலிங்கம்' - ஸ்டாலின்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது அரசியல் மட்டத்தில் பேசு பொருளானது. இந்நிலையில் இணைப்பு விழாவிற்கான ஏற்பாட்டை வைத்திலிங்கம் செய்தார். தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் இன்று மாலை வெல்லும் தமிழ்ப் பெண்கள் தி.மு.க. டெல்டா மகளிர் மாநாடு நடைபெறுகிறது. அதே பகுதியில் தனியாக பந்தல் அமைத்து இணைப்பு விழாவிற்கான ஏற்பாட்டை செய்தார் வைத்திலிங்கம். சுமார் 12 மணியளவில் மேடையேறினார் முதல்வர் ஸ்டாலின். வைத்திலிங்கம் தலைமையில், ஸ்டாலின் முன்னிலையில் 10,000 மாற்றுக்கட்சியினர் தி.மு.க -வில் இணைந்தனர். இதில் கனிமொழி, நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய வைத்திலிங்கம், ``நமது முதலமைச்சர்  இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற அளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் இன்றைக்கு முதல்வரை மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம், இப்படிப் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இன்றைக்கு இந்த திராவிடத்தைக் கண்டாலே சிலருக்கு மனவேதனை. யாரும் இந்த திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்பதற்கு, இன்றைக்கு நமது முதல்வர் எதற்கும் துணிந்து, 'என்னுடைய உயிர் திராவிடம்தான்' என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எப்போதும் நாம் அவருக்குத் துணையாக இந்த திராவிடத்தைக் காக்கப் பாடுபட வேண்டும். சிபி சக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல் இன்றைக்கு அவர் மடியில் நான் விழுந்திருக்கின்றேன் என்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேச ஆரம்பித்தார். அப்போது எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரனிடம் கனிமொழி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, கனிமொழி அருகில் அமர்ந்திருத்த கே.என்.நேரு, சைகை மூலம், கனிமொழியிடம் முதல்வர் அமர்ந்திருந்த நாற்காலியை காட்டி அதில் அமரச் சொன்னார். மறுத்த கனிமொழியிடம் மீண்டும் சொல்ல முதல்வரை காட்டி அந்த நாற்காலியில் அமர்வதை மறுத்து விட்டார். ஸ்டாலின் பேசியதாவது, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரால் இணைக்கப்பட்ட அனைவரையும் மனதார வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வரும் வழியில் நான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த இணைப்பு விழாவில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்த போது பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது. அதனால் அனுமதி வாங்கி பேசுகிறேன். இது இணைப்பு விழாவா அல்லது மாநாடா என்று நினைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிரிந்தது. சட்டமன்றத்தில் கூட வைத்திலிங்கம் கவலையுடன் தான் இருந்தார். இதனை நான் அப்போதே பார்த்தேன். சுய மரியாதை முக்கியம் என உணர்ந்து தற்போது வைத்திலிங்கம் தி.மு.க.வில் லேட்டாக இணைந்துள்ளார். லேட்டாக இணைந்தாலும் லேட்டஸ்டாக இணைந்து விட்டார். தேர்தல் நெருங்கி விட்டது. நாம் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். மக்களின் பேராதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான். நமது ஆட்சியில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்து விட்டோம். இனி அந்த சாதனையை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை படைக்க போகிறோம். தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

விகடன் 26 Jan 2026 2:13 pm

``விஜய் ஜீரோ மாதிரி... எப்படி அந்த கார்-னு ஒரு கேள்வி இருக்கு - தமிழிசை சௌந்தராஜன்

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பா.ஜ.க மாநில துணை தலைவர்கள் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய கொடி ஏற்றிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ``தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு கொண்டிருப்பதை போல மாய தோற்றத்தை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு எனது வன்மையான கண்டனம். தமிழர்களுக்கு நல்லது நடக்கும்போது முதல்வர் வாழ்த்துவதுகூட கிடையாது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவரானபோதும், தமிழ்நாட்டின் 10 மாவட்ட பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டபோதும் முதல்வராக வாழ்த்தவில்லை. அதனால் அவரது சுயநல நோக்கத்தை, அவரின் ஈகோ அரசியலையும் தமிழகம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தம்பி விஜய்க்கு அனுபவம் இன்னும் போதாது என நினைக்கிறேன். அவர் தனித்து விடப்பட்டதால் அப்படி பேசுகிறாரா என்று எனக்கு தெரியவில்லை. உச்சத்தில் இருந்து வந்திருக்கிறார் என்று சொல்கிறார். 30 வருடம் நடித்து, பெயர், புகழ், பணம் எல்லாம் சேர்த்துவிட்டுதானே வந்திருக்கிறார். ஏதோ தியாகம் செய்வதாகப் பேசிக்கொண்டிருக்கிறார். எனவே, இந்த தேர்தலில் உண்மையிலேயே போட்டி, திமுக கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான். தனி சக்தியாக வருவோம் என்கிறார். அவருடன் வருவதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரு ரூபாய் கூட ஊழல் கரைபடியாதவர் என்கிறார். ஆனால், படத்தின் மூலம் ரூ்.15 கோடி மறைத்த விவகாரம், யார் அந்த சார் என்பது போல எப்படி அந்த கார்? போன்ற கேள்விகள் இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் நான் அப்படி செய்துவிடுவேன் இப்படி செய்துவிடுவேன் எனப் பேசுவதுபோலதான் அவரின் பேச்சைப் பார்க்கிறேன். தவெக விஜய் விஜய் ஒரு ஜீரோ மாதிரி, தனியாக இருந்தால் மதிப்பு கிடையாது. அதே ஜீரோ இன்னொன்றுடன் சேர்ந்தால் மதிப்பு அதிகம். திமுக கூட்டணிலேயே சிக்கல் இருக்கிறது. முதல்வரின் பேச்சில் பதற்றம் இருக்கிறது. என்.டி.ஏ கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். திரைப்படத்திலிருந்து வந்து முதலமைச்சராக வருவது மிக மிக சிரமமான காரியம். அதனால், விஜய் தொண்டர்களின் உழைப்பையும், ரசிகர்களின் உழைப்பையும், அவர்களின் நம்பிக்கையும் வீணாக்கிவிடக்கூடாது. எந்த கூட்டணி வெற்றி பெறுகிறதோ அந்த கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை? - கேள்வி எழுப்பும் தமிழிசை

விகடன் 26 Jan 2026 1:58 pm

``விஜய் ஜீரோ மாதிரி... எப்படி அந்த கார்-னு ஒரு கேள்வி இருக்கு - தமிழிசை சௌந்தராஜன்

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பா.ஜ.க மாநில துணை தலைவர்கள் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய கொடி ஏற்றிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ``தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு கொண்டிருப்பதை போல மாய தோற்றத்தை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு எனது வன்மையான கண்டனம். தமிழர்களுக்கு நல்லது நடக்கும்போது முதல்வர் வாழ்த்துவதுகூட கிடையாது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவரானபோதும், தமிழ்நாட்டின் 10 மாவட்ட பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டபோதும் முதல்வராக வாழ்த்தவில்லை. அதனால் அவரது சுயநல நோக்கத்தை, அவரின் ஈகோ அரசியலையும் தமிழகம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தம்பி விஜய்க்கு அனுபவம் இன்னும் போதாது என நினைக்கிறேன். அவர் தனித்து விடப்பட்டதால் அப்படி பேசுகிறாரா என்று எனக்கு தெரியவில்லை. உச்சத்தில் இருந்து வந்திருக்கிறார் என்று சொல்கிறார். 30 வருடம் நடித்து, பெயர், புகழ், பணம் எல்லாம் சேர்த்துவிட்டுதானே வந்திருக்கிறார். ஏதோ தியாகம் செய்வதாகப் பேசிக்கொண்டிருக்கிறார். எனவே, இந்த தேர்தலில் உண்மையிலேயே போட்டி, திமுக கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான். தனி சக்தியாக வருவோம் என்கிறார். அவருடன் வருவதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரு ரூபாய் கூட ஊழல் கரைபடியாதவர் என்கிறார். ஆனால், படத்தின் மூலம் ரூ்.15 கோடி மறைத்த விவகாரம், யார் அந்த சார் என்பது போல எப்படி அந்த கார்? போன்ற கேள்விகள் இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் நான் அப்படி செய்துவிடுவேன் இப்படி செய்துவிடுவேன் எனப் பேசுவதுபோலதான் அவரின் பேச்சைப் பார்க்கிறேன். தவெக விஜய் விஜய் ஒரு ஜீரோ மாதிரி, தனியாக இருந்தால் மதிப்பு கிடையாது. அதே ஜீரோ இன்னொன்றுடன் சேர்ந்தால் மதிப்பு அதிகம். திமுக கூட்டணிலேயே சிக்கல் இருக்கிறது. முதல்வரின் பேச்சில் பதற்றம் இருக்கிறது. என்.டி.ஏ கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். திரைப்படத்திலிருந்து வந்து முதலமைச்சராக வருவது மிக மிக சிரமமான காரியம். அதனால், விஜய் தொண்டர்களின் உழைப்பையும், ரசிகர்களின் உழைப்பையும், அவர்களின் நம்பிக்கையும் வீணாக்கிவிடக்கூடாது. எந்த கூட்டணி வெற்றி பெறுகிறதோ அந்த கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை? - கேள்வி எழுப்பும் தமிழிசை

விகடன் 26 Jan 2026 1:58 pm

”காளை மாடுகூட கன்று போடலாம்; ஆனால், பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது” - கருணாஸ் காட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் ஒரு நடிகர் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும், கூட்டங்களில் திரைப்பட வசனத்தை மேற்கோள்காட்டி பேசி, கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் முதலமைச்சராகதான் வருவேன் என அவர் பேசுவது அவரது பேராசையை காட்டுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவராக ஏன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஏற்றுக் கொள்ளவில்லை? கருணாஸ் அவரை சாதியை வட்டத்துக்குள் சுருக்கிப் பார்க்கிறார்கள். ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய், தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டவில்லை. அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. அதையெல்லாம் அவர் நினைவில் வைத்துப் பேசினால் நன்றாக இருக்கும். விசிலை வாயில் வைத்து ஊதத்தான் முடியும். ஆனால், ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு வீரர் ஒருவர் வேண்டும். ஓடி வெற்றி பெற வேண்டும், அரசியல் அது தேர்தல் களத்தில்தான் தெரியும். பா.ஜ.கவின் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வலையில் விழுந்ததன் விளைவாக ஓ.பி.எஸ் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பா.ஜ.கட்சியை நம்பி தர்ம யுத்தத்தை நடத்தியவர் ஒ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி எப்படி சசிகலாவிற்கு துரோகம் செய்தாரோ , அதேபோல் ஓ.பி.எஸ்-யிடம் இருந்த பலரும் இ.பி.எஸிடம் சென்று விட்டார்கள். முழுக்க முழுக்க பாஜக ஓ.பி.எஸ்-ஐ நம்ப வைத்து கழுத்தை அறுத்திருக்கிறது. கருணாஸ் ஒ.பி.எஸின் நிலைமை இன்றைக்கு மிகவும் கவலைக் குறியதாகவும், வருத்தம் அடையக் கூடியதாகவும் இருக்கிறது. முக்குலத்தோர் சமுதாயத்தை பா.ஜ.க பிளவுபடுத்தி, டி.டி.வி தினகரனை சிறையிலடைத்து, கூட்டணியில் இருந்து  வெளிநடப்பு செய்த அவரை இன்று மீண்டும் கூட்டணில் சேர்க்கப்படுகிறது என்றால், முழுக்க முழுக்க பா.ஜ.கவின் மோசடி வேலை என உலகமே உற்று நோக்குகிறது. 10 நாட்களுக்கு முன் இ.பி.எஸ் பற்றியும், பா.ஜ.கவை பற்றியும் தினகரன் என்னவெல்லாம்  விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் உடனடியாக மறக்க மாட்டார்கள். இ.பி.எஸ் மீது எவ்வளவோ குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வர விட மாட்டேன். எனக் கூறி வந்த  டி.டி.வி தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லை என்று சந்தர்ப்பத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும், சூழ்நிலை கைதியாக பங்காளி சண்டை என கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. கருணாஸ் டி.டி.வி தினகரன் அன்று ஒன்று பேசுகிறார், இன்று ஒன்று பேசுகிறார், நாளை ஒன்று பேசுவார். பா.ஜ.கவின் அரசியல் தீர்மானமே அண்டைய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி  துண்டாக்குவதுதான். அதே முயற்சியைத்தான்  தமிழகத்திலும் எடுக்கிறார்கள். படர்தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பா.ஜ.கவின் தாமரை நாட்டுக்கு நாசம். வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது.” என்றார்.  

விகடன் 26 Jan 2026 12:58 pm

”காளை மாடுகூட கன்று போடலாம்; ஆனால், பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது” - கருணாஸ் காட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் ஒரு நடிகர் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும், கூட்டங்களில் திரைப்பட வசனத்தை மேற்கோள்காட்டி பேசி, கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் முதலமைச்சராகதான் வருவேன் என அவர் பேசுவது அவரது பேராசையை காட்டுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவராக ஏன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஏற்றுக் கொள்ளவில்லை? கருணாஸ் அவரை சாதியை வட்டத்துக்குள் சுருக்கிப் பார்க்கிறார்கள். ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய், தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டவில்லை. அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. அதையெல்லாம் அவர் நினைவில் வைத்துப் பேசினால் நன்றாக இருக்கும். விசிலை வாயில் வைத்து ஊதத்தான் முடியும். ஆனால், ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு வீரர் ஒருவர் வேண்டும். ஓடி வெற்றி பெற வேண்டும், அரசியல் அது தேர்தல் களத்தில்தான் தெரியும். பா.ஜ.கவின் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வலையில் விழுந்ததன் விளைவாக ஓ.பி.எஸ் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பா.ஜ.கட்சியை நம்பி தர்ம யுத்தத்தை நடத்தியவர் ஒ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி எப்படி சசிகலாவிற்கு துரோகம் செய்தாரோ , அதேபோல் ஓ.பி.எஸ்-யிடம் இருந்த பலரும் இ.பி.எஸிடம் சென்று விட்டார்கள். முழுக்க முழுக்க பாஜக ஓ.பி.எஸ்-ஐ நம்ப வைத்து கழுத்தை அறுத்திருக்கிறது. கருணாஸ் ஒ.பி.எஸின் நிலைமை இன்றைக்கு மிகவும் கவலைக் குறியதாகவும், வருத்தம் அடையக் கூடியதாகவும் இருக்கிறது. முக்குலத்தோர் சமுதாயத்தை பா.ஜ.க பிளவுபடுத்தி, டி.டி.வி தினகரனை சிறையிலடைத்து, கூட்டணியில் இருந்து  வெளிநடப்பு செய்த அவரை இன்று மீண்டும் கூட்டணில் சேர்க்கப்படுகிறது என்றால், முழுக்க முழுக்க பா.ஜ.கவின் மோசடி வேலை என உலகமே உற்று நோக்குகிறது. 10 நாட்களுக்கு முன் இ.பி.எஸ் பற்றியும், பா.ஜ.கவை பற்றியும் தினகரன் என்னவெல்லாம்  விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் உடனடியாக மறக்க மாட்டார்கள். இ.பி.எஸ் மீது எவ்வளவோ குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வர விட மாட்டேன். எனக் கூறி வந்த  டி.டி.வி தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லை என்று சந்தர்ப்பத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும், சூழ்நிலை கைதியாக பங்காளி சண்டை என கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. கருணாஸ் டி.டி.வி தினகரன் அன்று ஒன்று பேசுகிறார், இன்று ஒன்று பேசுகிறார், நாளை ஒன்று பேசுவார். பா.ஜ.கவின் அரசியல் தீர்மானமே அண்டைய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி  துண்டாக்குவதுதான். அதே முயற்சியைத்தான்  தமிழகத்திலும் எடுக்கிறார்கள். படர்தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பா.ஜ.கவின் தாமரை நாட்டுக்கு நாசம். வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது.” என்றார்.  

விகடன் 26 Jan 2026 12:58 pm

பத்ம விருதுகள்: ``மம்மூட்டி, மாதவன், ரோஹித் சர்மா - இந்திய அளவில் கவனம் பெற்ற நட்சத்திரங்கள்!

மத்திய அரசு நேற்று 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளில் 131 விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐந்து பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொது வாழ்க்கை, கலை, சினிமா, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களூக்கு இந்த விருது வழங்கப்படும். அதன் அடிப்படையில், நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், மறைந்த மூத்த நடிகர் தர்மேந்திர சிங் தியோல், மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன், கர்நாடக இசை வயலின் கலைஞர் என். ராஜம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ், பிரபல எழுத்தாளர் பி. நாராயணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். பத்ம பூஷண் பட்டியலில் பாடகி அல்கா யாக்னிக், நடிகர் மம்மூட்டி, தொழிலதிபர் உதய் கோடக், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷ்யாரி, மறைந்த விளம்பரத் துறை நிபுணர் பியூஷ் பாண்டே, சமூகத் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். பத்மஸ்ரீ பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர்களான ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா ஆகியோர் விளையாட்டுத் துறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். கலைத் துறைப் பட்டியலில் நடிகர்கள் மாதவன், பிரோசென்ஜித் சாட்டர்ஜி, கர்நாடக இசைப் பாடகி திரிப்தி முகர்ஜி, நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைஞர்களான தருண் பட்டாச்சார்யா, போக்கிலா லெக்தேபி போன்றோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த ஆண்டு விருது பட்டியலில் 19 பெண்கள், 6 வெளிநாட்டினர், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், மறைந்தவர்கள் 16 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பத்ம விருதுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகின்றன. மம்முட்டி நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்முக்கா அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம். நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து. எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தியாவின் உயரிய விருது: தமிழ்நாட்டுக்கு 5 'பத்ம' விருதுகள்; யார் யாருக்கு விருது?

விகடன் 26 Jan 2026 12:49 pm

பத்ம விருதுகள்: ``மம்மூட்டி, மாதவன், ரோஹித் சர்மா - இந்திய அளவில் கவனம் பெற்ற நட்சத்திரங்கள்!

மத்திய அரசு நேற்று 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளில் 131 விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐந்து பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொது வாழ்க்கை, கலை, சினிமா, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களூக்கு இந்த விருது வழங்கப்படும். அதன் அடிப்படையில், நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், மறைந்த மூத்த நடிகர் தர்மேந்திர சிங் தியோல், மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன், கர்நாடக இசை வயலின் கலைஞர் என். ராஜம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ், பிரபல எழுத்தாளர் பி. நாராயணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். பத்ம பூஷண் பட்டியலில் பாடகி அல்கா யாக்னிக், நடிகர் மம்மூட்டி, தொழிலதிபர் உதய் கோடக், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷ்யாரி, மறைந்த விளம்பரத் துறை நிபுணர் பியூஷ் பாண்டே, சமூகத் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். பத்மஸ்ரீ பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர்களான ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா ஆகியோர் விளையாட்டுத் துறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். கலைத் துறைப் பட்டியலில் நடிகர்கள் மாதவன், பிரோசென்ஜித் சாட்டர்ஜி, கர்நாடக இசைப் பாடகி திரிப்தி முகர்ஜி, நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைஞர்களான தருண் பட்டாச்சார்யா, போக்கிலா லெக்தேபி போன்றோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த ஆண்டு விருது பட்டியலில் 19 பெண்கள், 6 வெளிநாட்டினர், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், மறைந்தவர்கள் 16 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பத்ம விருதுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகின்றன. மம்முட்டி நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்முக்கா அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம். நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து. எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தியாவின் உயரிய விருது: தமிழ்நாட்டுக்கு 5 'பத்ம' விருதுகள்; யார் யாருக்கு விருது?

விகடன் 26 Jan 2026 12:49 pm

சீனாவுடன் 'இந்த'ஒப்பந்தம் இல்லை - கார்னி விளக்கம்; ட்ரம்பிற்கு அஞ்சுகிறதா கனடா?

சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி. இந்தச் சந்திப்பிற்கு பிறகு, கனடா மற்றும் சீனா - இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக தடை, வரிப் பிரச்னை ஆகியவைகளைக் குறைக்கும் 'மைல்கல்' வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்நிலையை அடைந்துள்ளோம் என்று கூறினார் கார்னி. 'ஒப்பந்தம்' என்று கார்னி குறிப்பிட்டது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்று பொருள் கொள்ளப்பட்டது. இது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மார்க் கார்னி - ஜி ஜின்பிங் Gold: 2026-ம் ஆண்டின் முதல் மாதத்திலேயே 'இவ்வளவு' ஏற்றம்; சாதாரண மக்கள் ஆகிய 'நான்' என்ன செய்வது? ட்ரம்ப் எச்சரிக்கை இதனால், சீனா உடன் கனடா ஒப்பந்தம் போட்டால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருள்களுக்கும் உடனடியாக 100 சதவிகித வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார் ட்ரம்ப். கார்னி விளக்கம் உடனே, ட்ரம்ப்பின் கூற்றிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார் கார்னி... சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அதிக வரி, வர்த்தக தடைகள் குறித்து தான் பேசியிருக்கிறோம். இது கிட்டத்தட்ட 'பேக்' அடித்தல் என்றே எடுத்துக்கொள்ளலாம். Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன? ஏன்? அமெரிக்க வலைதளத்தின் படி, 2024-ம் ஆண்டு, கனடா தனது தயாரிப்புகளில் நான்கில் மூன்று பங்கு பொருள்களை அமெரிக்காவிற்குத் தான் ஏற்றுமதி செய்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு சந்தையை நிச்சயம் கனடா இழக்க விரும்பாது என்பது தான் இந்தப் 'பேக்'கிற்கான காரணம். வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

விகடன் 26 Jan 2026 12:43 pm

”ஒரு கைக்கு 5 விரல்களே போதும்; விஜய்யின் த.வெ.க ஆறாவது விரல்.!”– ராஜேந்திர பாலாஜி கிண்டல்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இதுவரை நடந்து முடிந்த அரசியலில் பார்த்தால் ஒவ்வொரு நேரமும் தி.மு.கவும் படுதோல்வி அடைந்திருக்கிறது, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்தது.  டெபாசிட் இழந்த தி.மு.கவே ஆட்சிக்கு வருகிறபோது, 32 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைத்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார். எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் சொல்லி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அவரது தொண்டர்களால்தான் கொண்டு வர முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமியால்  மட்டுமே தர முடியும். ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க கூட்டணிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் வருவார்கள்.  தனித்து நின்றே வெற்றி பெறுவோம் என த.வெ.க தலைவர் விஜய் கூறுகிறார்.  உழைக்கும்  மனிதனுக்கு 5 விரல்கள்தான் தேவை, 6வது விரல் தேவையில்லை, தமிழகத்திற்கு விஜயின் த.வெ.க 6வது விரலாக உள்ளது.  தேர்தல் களத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளும், தி.மு.கவும் திமுக கூட்டணி கட்சிகளும் மட்டுமே நிற்கும். தேர்தல் அறிவித்தவுடன் மற்ற கட்சிகள் எல்லாம் கரைந்து காணாமல் போய்விடும்” என்றார்.

விகடன் 26 Jan 2026 11:10 am

'விவசாயி வீரமணி, ஓட்டுநர் சங்கர், டாப் காவல் நிலையம்.!' - குடியரசு தினத்தில் வழங்கப்பட்ட விருதுகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முன், கொடியேற்றினார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். கொடியேற்ற நிகழ்விற்குப் பின், முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய விருதுகளின் பட்டியல்... வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் > நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுநர் சங்கர் > தீயணைப்புத் துறையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஷ் > கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சன் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள் Gold: 2026-ம் ஆண்டின் முதல் மாதத்திலேயே 'இவ்வளவு' ஏற்றம்; சாதாரண மக்கள் ஆகிய 'நான்' என்ன செய்வது? கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது > திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலிமுல்லா சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது > தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணி சிறந்த காவல் நிலையத்திற்கான விருது > முதல் பரிசு மதுரை மாநகரம் > இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம் > மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம் காந்தியடிகள் காவலர் பதக்கம் > விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன் > விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன் > கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் > கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன் > சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன் Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க!

விகடன் 26 Jan 2026 11:05 am

எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! | முதல் களம் - 03

`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர். கட்டுரையாளர் : பா.முகிலன் `முதல்’ 03 | எம்.ஜி.ஆர் (எ) மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் சில தருணங்கள், வழக்கமான தேர்தல் வெற்றிகளைக் கடந்து, ஒரு தலைமுறையின் பயணத்தை முற்றாக மாற்றிவிடும். மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் — எம்.ஜி.ஆர் அந்த வகையில் ஒற்றை நபராக மட்டுமல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கப்புள்ளியாகவும் மாறினார் எம்.ஜி.ஆர். அவரின் முதல் சட்டமன்றத் தேர்தல் வெற்றி, அவருக்கான வெற்றியாக மட்டுமல்லாது, இருபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியைத் தகர்த்தெறிந்து, திராவிட அரசியலின் உச்சத்தை உருவாக்கிய திமுகவின் மகத்தான வெற்றிக்குத் துணை புரிந்ததாகவும் அமைந்தது. ஆம், 1967-ல் நடைபெற்ற அந்தத் தேர்தலில்தான் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியைப் பிடித்து, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது.  எம்.ஜி.ஆர், கலைஞர் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அண்ணாவை சென்று சந்தித்த இளம் திமுக தலைவர்கள் சிலர், அவருக்கு மாலை அணிவிக்க முயன்றபோது, “இந்தத் தேர்தல் வெற்றிக்காக யாருக்காவது மாலை அணிவிக்க வேண்டுமென்றால், அது எம்.ஜி.ஆருக்குதான்  அணிவிக்கப்பட வேண்டும் என அண்ணா கூறியதாக அப்போது ஒரு பேச்சு உண்டு. அண்ணா அப்படிச் சொன்னது உண்மையோ இல்லையோ, திமுகவின் வரலாற்று வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர், அந்நாளைய தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவரும், பின்னாளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்தவருமான எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட எம்.ஜி. ராமச்சந்திரன் என்பதை திமுகவினரும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள். தமிழ்நாட்டின் அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த 1967 தேர்தலின்போது என்ன நடந்தது, எம்.ஜி.ஆர் திமுகவுக்கு வந்தது எப்படி,  முதன்முதலாக அவர் போட்டியிட்ட தொகுதி எது, அந்தத் தேர்தலில், எம்.ஜி.ஆரால் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்ல முடியாமல் போனது ஏன், பிரசாரத்துக்குச் செல்லாமலேயே அவர் வெற்றி பெற்றது எப்படி, திமுக பெற்ற மாபெரும் வெற்றிக்காக எம்.ஜி.ஆரை அண்ணா சிலாகித்துப் பேசியது ஏன்...? விடைகளைத் தெரிந்துகொள்ள, 1960-களின் ஃப்ளாஷ்பேக்குகளுக்குள் செல்லலாம்.  எம்.ஜி.ஆர் திமுகவின் எழுச்சியும் எம்.ஜி.ஆரின் வருகையும் 1950-களின் இறுதி மற்றும் 1960-களின் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அரசியல் களம், ஓர் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்தது. விலைவாசி உயர்வு, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கான பஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் பண்ணையார்தனமான அரசியல் அணுகுமுறை போன்றவை  காங்கிரஸ் ஆட்சி மீது, மக்களிடையே சோர்வையும் சலிப்பையும் ஏற்படுத்தி இருந்தன. இன்னொருபுறம் இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டுசென்ற திமுகவின் எழுச்சி, உச்சத்தில் இருந்தது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், காங்கிரஸின் அகம்பாவம், சமூக நீதி, தமிழ்மொழி அடையாளம், சாதி–மத பாகுபாடுகளுக்கு எதிரான தத்துவங்கள், மாநில உரிமைகள் சார்ந்த முழக்கங்கள் போன்றவை, மக்களை திமுகவை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்தன. அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், நாவலர் போன்ற சக்திவாய்ந்த பேச்சாளர்களும்  தலைவர்களும், திமுகவுக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார்கள்.  ஆனால், திமுகவுக்கு ஒன்றே ஒன்று மட்டும் இன்னும் ஒரு குறையாகவே இருந்தது. அது - பொதுமக்களின் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடிக்கும் அளவுக்கான பிரபல முகம். அதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நுட்பமாக கண்டு உணர்ந்த கருணாநிதிதான், எம்.ஜி.ஆரை திமுகவுக்கு அழைத்து வந்தார். மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால கறுப்பு வெள்ளை படங்களின் வெற்றிக்கு, கருணாநிதி தீட்டிய திரைக்கதை வசனங்கள் பெரும் பங்களிப்பை அளித்தன. அதன் அடிப்படையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஆழமான நட்பும், தொடர்ச்சியாக இடம் பெற்ற கலந்துரையாடல்களும்தான் எம்.ஜி.ஆரை அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொண்டு, திமுக பக்கம் இழுத்து வந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் அண்ணாவை அசரவைத்த எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கு அந்த வகையில்,எம்.ஜி.ஆர், 1953-லிருந்தே திமுகவின் பிரசாரக் கருவூலமாக வலம் வரத் தொடங்கினார். ஏழைகளின் காப்பாளன், அநீதிக்கு எதிரான போராளி போன்ற அவர் மீதான திரைப்பட பிம்பம் திமுகவின் கொள்கைகளுடன் ஒத்துப்போனது. அவரது பல்வேறு படங்கள் திமுக பிரசாரத்திற்கு உதவின. திமுகவுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டியதில், எம்.ஜி.ஆரின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை அண்ணாவே நேரடியாக கண்டு உணரும் சில சந்தர்ப்பங்களும் அவருக்கு வாய்த்தன.  1964-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு சம்பவம் இது. அண்ணா, தனது கட்சி செயல்வீரர்கள் இருவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்றபோது, காரில் பறக்கும் திமுகவின் கொடியைக் கண்ட சில உள்ளூர்வாசிகள், அந்த வாகனத்தை நிறுத்தினர். காரின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த அவர்கள், வெள்ளைச் சட்டையில் வீற்றிருந்த அண்ணாவைப் பார்த்து, அவர் யார் என்பதை அறியாமலேயே,   “ஐயா… நீங்க எம்.ஜி.ஆர் கட்சியா? எனக் கேட்டுள்ளனர். அண்ணா – எம்ஜிஆரின் அரசியல் ஆசான். அந்த கேள்வி அவரைப் புன்முறுவல் பூக்க வைத்தது. உடன் வந்த செயல்வீரர்களை நோக்கி சிரித்தபடி, “பாருங்க… இதுதான் எம்.ஜி.ஆரின் மக்கள் ஈர்ப்பு சக்தி என அண்ணா பெருமையுடன் கூறியதாக திமுக-வின் வரலாற்று பக்கம் ஒன்று சொல்கிறது.   அடுத்ததாக 1966-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. சென்னை, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் திமுக மாநாட்டு மேடையில் இருந்த எம்ஜிஆர், கட்சிக்காக 3 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். அந்த ஆண்டுகளில் ரூ.3 லட்சம் என்பது “அதிர்ச்சி” அளிக்கும் அளவுக்குப் பெரிய தொகை. ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பின் உரையாற்ற மைக்கைப் பிடித்த அண்ணா, கூட்டம் முழுவதும் கவனமாகக் கேட்டு கொண்டிருக்கும் நிலையில், “எம்ஜிஆர் இந்த மூன்று லட்சத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்ளலாம். எங்களுக்கு அதைவிட முக்கியமானது — இவரால் நமக்கு கிடைக்கப் போகும் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாக்குகள்.” - இந்த இரண்டு நிகழ்வுகளையும், தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆர் உருவாக்கிய பேரலைக்கும், அண்ணா அதனை உணர்ந்து கொண்டிருந்த தொலைநோக்குத் திறனுக்குமான வரலாற்றுப் பதிவுகளாக பார்க்கலாம். எம்.ஜி.ஆர் சுடப்பட்ட எம்.ஜி.ஆர் இத்தகைய சூழலில்தான், 1967-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியாகி, தமிழக அரசியல் களம் பரபரப்பாகியது. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் எம்.ஜி.ஆரும் இடம்பெற்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி சென்னை பரங்கிமலை தொகுதி. பிரசாரம் அனல் பறந்துகொண்டிருந்த நிலையில், தேர்தலுக்கு  ஒரு மாதம் முன்பு, அதாவது ஜனவரி 12 அன்று, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் சென்னை ராமாபுரம்  வீட்டுக்கு, நடிகர் எம்.ஆர். ராதா மற்றும் தயாரிப்பாளர் கே.கே. வாசு வந்தனர். 'பெற்றால்தான் பிள்ளையா' என்கிற திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது தகராறு ஏற்பட்டது. திடீரென எம்.ஆர்.ராதா துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரின் இடது காதருகே இரு முறை சுட்டார். ஒரு குண்டு கழுத்தில் பாய்ந்தது. ராதா தானும் சுட்டுக்கொண்டார். இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எம்.ஜி.ஆரின் குரல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.  செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு முன்பாக திரண்டனர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக்கொள்ள, திரையுலக வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளானது. இன்னொருபுறம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தெருவில் அழுது திரண்டனர். ஊரெங்கும் பதற்றம். கடைகள் மூடப்பட்டன. எம்.ஆர்.ராதாவின் வீடு தாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நலம்பெற வேண்டி அவரது ரசிகர்கள் கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த அன்று மாலையே அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்களும், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு விரைந்தனர். அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தனர். ஆபத்து கட்டத்தை எம்.ஜி.ஆர் தாண்டிவிட்டதாக மருத்துவர் கூறியதைக் கேட்ட பின்னர்தான் அண்ணாவும் அவருடன் வந்திருந்த திமுக இளம் தலைவர்களும் நிம்மதி அடைந்தனர். ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.  எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் வெற்றிக்கு உதவிய எம்.ஜி.ஆரின் மருத்துவமனை புகைப்படம் எம்.ஜி.ஆரால், அவர் போட்டியிடும் பரங்கிமலை தொகுதிக்குக் கூட பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. துப்பாக்கிச் சூடு நிகழ்வு, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே மாபெரும் அனுதாப அலையை உருவாக்கியது. திமுக தலைமையும் இதை திறம்பட பயன்படுத்திக் கொண்டது. கழுத்தில் பேண்டேஜ் கட்டுடன், கைகளைக் கூப்பி வணங்கும் எம்.ஜி.ஆரின் மருத்துவமனை படுக்கை புகைப்படம், தமிழகம் முழுவதும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது. இது எம்.ஜி.ஆர் மீது மட்டுமல்லாது, திமுகவுக்கும் மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி, திமுகவின் தேர்தல் வெற்றிக்கு கூடுதல் பங்களிப்பை அளித்தது. மருத்துவமனையில் படுத்துக்கொண்டே பரங்கிமலை தொகுதியில் 54,106 வாக்குகள் பெற்று, எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் டி.எல். ரகுபதி 26,432 வாக்குகளுடனும், ஜனசங்க வேட்பாளர் கே. காசிநாதன் 613 வாக்குகளுடனும் தோற்றனர். வெற்றி எம்.ஜி.ஆருக்கு மட்டுமா? அண்ணா தலைமையிலான திமுக கூட்டணி, 234 இடங்களில் 179 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் வெறும் 51 இடங்களுடன் தோற்றது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்... இந்தியாவில் முதல்முறையாக ஒரு பிராந்தியக் கட்சி, தேசியக் கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது. காமராஜர், பக்தவத்சலம் போன்ற ஜாம்பவான்கள் தோல்வியைத் தழுவினர்.  `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 சட்டமன்ற உறுப்பினரான எம்.ஜி.ஆர் , பின்னர் அதிமுகவைத் தொடங்கி மூன்று முறை முதலமைச்சரானார். இன்றும் எம்.ஜி.ஆரின் அந்த மருத்துவமனை புகைப்படம்,  1967 தேர்தலின் அரசியல் அடையாளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது! (தொடரும்.!)

விகடன் 26 Jan 2026 10:59 am

எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! | முதல் களம் - 03

`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர். கட்டுரையாளர் : பா.முகிலன் `முதல்’ 03 | எம்.ஜி.ஆர் (எ) மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் சில தருணங்கள், வழக்கமான தேர்தல் வெற்றிகளைக் கடந்து, ஒரு தலைமுறையின் பயணத்தை முற்றாக மாற்றிவிடும். மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் — எம்.ஜி.ஆர் அந்த வகையில் ஒற்றை நபராக மட்டுமல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கப்புள்ளியாகவும் மாறினார் எம்.ஜி.ஆர். அவரின் முதல் சட்டமன்றத் தேர்தல் வெற்றி, அவருக்கான வெற்றியாக மட்டுமல்லாது, இருபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியைத் தகர்த்தெறிந்து, திராவிட அரசியலின் உச்சத்தை உருவாக்கிய திமுகவின் மகத்தான வெற்றிக்குத் துணை புரிந்ததாகவும் அமைந்தது. ஆம், 1967-ல் நடைபெற்ற அந்தத் தேர்தலில்தான் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியைப் பிடித்து, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது.  எம்.ஜி.ஆர், கலைஞர் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அண்ணாவை சென்று சந்தித்த இளம் திமுக தலைவர்கள் சிலர், அவருக்கு மாலை அணிவிக்க முயன்றபோது, “இந்தத் தேர்தல் வெற்றிக்காக யாருக்காவது மாலை அணிவிக்க வேண்டுமென்றால், அது எம்.ஜி.ஆருக்குதான்  அணிவிக்கப்பட வேண்டும் என அண்ணா கூறியதாக அப்போது ஒரு பேச்சு உண்டு. அண்ணா அப்படிச் சொன்னது உண்மையோ இல்லையோ, திமுகவின் வரலாற்று வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர், அந்நாளைய தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவரும், பின்னாளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்தவருமான எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட எம்.ஜி. ராமச்சந்திரன் என்பதை திமுகவினரும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள். தமிழ்நாட்டின் அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த 1967 தேர்தலின்போது என்ன நடந்தது, எம்.ஜி.ஆர் திமுகவுக்கு வந்தது எப்படி,  முதன்முதலாக அவர் போட்டியிட்ட தொகுதி எது, அந்தத் தேர்தலில், எம்.ஜி.ஆரால் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்ல முடியாமல் போனது ஏன், பிரசாரத்துக்குச் செல்லாமலேயே அவர் வெற்றி பெற்றது எப்படி, திமுக பெற்ற மாபெரும் வெற்றிக்காக எம்.ஜி.ஆரை அண்ணா சிலாகித்துப் பேசியது ஏன்...? விடைகளைத் தெரிந்துகொள்ள, 1960-களின் ஃப்ளாஷ்பேக்குகளுக்குள் செல்லலாம்.  எம்.ஜி.ஆர் திமுகவின் எழுச்சியும் எம்.ஜி.ஆரின் வருகையும் 1950-களின் இறுதி மற்றும் 1960-களின் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அரசியல் களம், ஓர் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்தது. விலைவாசி உயர்வு, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கான பஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் பண்ணையார்தனமான அரசியல் அணுகுமுறை போன்றவை  காங்கிரஸ் ஆட்சி மீது, மக்களிடையே சோர்வையும் சலிப்பையும் ஏற்படுத்தி இருந்தன. இன்னொருபுறம் இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டுசென்ற திமுகவின் எழுச்சி, உச்சத்தில் இருந்தது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், காங்கிரஸின் அகம்பாவம், சமூக நீதி, தமிழ்மொழி அடையாளம், சாதி–மத பாகுபாடுகளுக்கு எதிரான தத்துவங்கள், மாநில உரிமைகள் சார்ந்த முழக்கங்கள் போன்றவை, மக்களை திமுகவை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்தன. அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், நாவலர் போன்ற சக்திவாய்ந்த பேச்சாளர்களும்  தலைவர்களும், திமுகவுக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார்கள்.  ஆனால், திமுகவுக்கு ஒன்றே ஒன்று மட்டும் இன்னும் ஒரு குறையாகவே இருந்தது. அது - பொதுமக்களின் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடிக்கும் அளவுக்கான பிரபல முகம். அதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நுட்பமாக கண்டு உணர்ந்த கருணாநிதிதான், எம்.ஜி.ஆரை திமுகவுக்கு அழைத்து வந்தார். மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால கறுப்பு வெள்ளை படங்களின் வெற்றிக்கு, கருணாநிதி தீட்டிய திரைக்கதை வசனங்கள் பெரும் பங்களிப்பை அளித்தன. அதன் அடிப்படையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஆழமான நட்பும், தொடர்ச்சியாக இடம் பெற்ற கலந்துரையாடல்களும்தான் எம்.ஜி.ஆரை அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொண்டு, திமுக பக்கம் இழுத்து வந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் அண்ணாவை அசரவைத்த எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கு அந்த வகையில்,எம்.ஜி.ஆர், 1953-லிருந்தே திமுகவின் பிரசாரக் கருவூலமாக வலம் வரத் தொடங்கினார். ஏழைகளின் காப்பாளன், அநீதிக்கு எதிரான போராளி போன்ற அவர் மீதான திரைப்பட பிம்பம் திமுகவின் கொள்கைகளுடன் ஒத்துப்போனது. அவரது பல்வேறு படங்கள் திமுக பிரசாரத்திற்கு உதவின. திமுகவுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டியதில், எம்.ஜி.ஆரின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை அண்ணாவே நேரடியாக கண்டு உணரும் சில சந்தர்ப்பங்களும் அவருக்கு வாய்த்தன.  1964-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு சம்பவம் இது. அண்ணா, தனது கட்சி செயல்வீரர்கள் இருவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்றபோது, காரில் பறக்கும் திமுகவின் கொடியைக் கண்ட சில உள்ளூர்வாசிகள், அந்த வாகனத்தை நிறுத்தினர். காரின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த அவர்கள், வெள்ளைச் சட்டையில் வீற்றிருந்த அண்ணாவைப் பார்த்து, அவர் யார் என்பதை அறியாமலேயே,   “ஐயா… நீங்க எம்.ஜி.ஆர் கட்சியா? எனக் கேட்டுள்ளனர். அண்ணா – எம்ஜிஆரின் அரசியல் ஆசான். அந்த கேள்வி அவரைப் புன்முறுவல் பூக்க வைத்தது. உடன் வந்த செயல்வீரர்களை நோக்கி சிரித்தபடி, “பாருங்க… இதுதான் எம்.ஜி.ஆரின் மக்கள் ஈர்ப்பு சக்தி என அண்ணா பெருமையுடன் கூறியதாக திமுக-வின் வரலாற்று பக்கம் ஒன்று சொல்கிறது.   அடுத்ததாக 1966-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. சென்னை, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் திமுக மாநாட்டு மேடையில் இருந்த எம்ஜிஆர், கட்சிக்காக 3 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். அந்த ஆண்டுகளில் ரூ.3 லட்சம் என்பது “அதிர்ச்சி” அளிக்கும் அளவுக்குப் பெரிய தொகை. ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பின் உரையாற்ற மைக்கைப் பிடித்த அண்ணா, கூட்டம் முழுவதும் கவனமாகக் கேட்டு கொண்டிருக்கும் நிலையில், “எம்ஜிஆர் இந்த மூன்று லட்சத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்ளலாம். எங்களுக்கு அதைவிட முக்கியமானது — இவரால் நமக்கு கிடைக்கப் போகும் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாக்குகள்.” - இந்த இரண்டு நிகழ்வுகளையும், தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆர் உருவாக்கிய பேரலைக்கும், அண்ணா அதனை உணர்ந்து கொண்டிருந்த தொலைநோக்குத் திறனுக்குமான வரலாற்றுப் பதிவுகளாக பார்க்கலாம். எம்.ஜி.ஆர் சுடப்பட்ட எம்.ஜி.ஆர் இத்தகைய சூழலில்தான், 1967-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியாகி, தமிழக அரசியல் களம் பரபரப்பாகியது. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் எம்.ஜி.ஆரும் இடம்பெற்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி சென்னை பரங்கிமலை தொகுதி. பிரசாரம் அனல் பறந்துகொண்டிருந்த நிலையில், தேர்தலுக்கு  ஒரு மாதம் முன்பு, அதாவது ஜனவரி 12 அன்று, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் சென்னை ராமாபுரம்  வீட்டுக்கு, நடிகர் எம்.ஆர். ராதா மற்றும் தயாரிப்பாளர் கே.கே. வாசு வந்தனர். 'பெற்றால்தான் பிள்ளையா' என்கிற திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது தகராறு ஏற்பட்டது. திடீரென எம்.ஆர்.ராதா துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரின் இடது காதருகே இரு முறை சுட்டார். ஒரு குண்டு கழுத்தில் பாய்ந்தது. ராதா தானும் சுட்டுக்கொண்டார். இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எம்.ஜி.ஆரின் குரல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.  செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு முன்பாக திரண்டனர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக்கொள்ள, திரையுலக வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளானது. இன்னொருபுறம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தெருவில் அழுது திரண்டனர். ஊரெங்கும் பதற்றம். கடைகள் மூடப்பட்டன. எம்.ஆர்.ராதாவின் வீடு தாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நலம்பெற வேண்டி அவரது ரசிகர்கள் கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த அன்று மாலையே அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்களும், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு விரைந்தனர். அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தனர். ஆபத்து கட்டத்தை எம்.ஜி.ஆர் தாண்டிவிட்டதாக மருத்துவர் கூறியதைக் கேட்ட பின்னர்தான் அண்ணாவும் அவருடன் வந்திருந்த திமுக இளம் தலைவர்களும் நிம்மதி அடைந்தனர். ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.  எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் வெற்றிக்கு உதவிய எம்.ஜி.ஆரின் மருத்துவமனை புகைப்படம் எம்.ஜி.ஆரால், அவர் போட்டியிடும் பரங்கிமலை தொகுதிக்குக் கூட பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. துப்பாக்கிச் சூடு நிகழ்வு, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே மாபெரும் அனுதாப அலையை உருவாக்கியது. திமுக தலைமையும் இதை திறம்பட பயன்படுத்திக் கொண்டது. கழுத்தில் பேண்டேஜ் கட்டுடன், கைகளைக் கூப்பி வணங்கும் எம்.ஜி.ஆரின் மருத்துவமனை படுக்கை புகைப்படம், தமிழகம் முழுவதும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது. இது எம்.ஜி.ஆர் மீது மட்டுமல்லாது, திமுகவுக்கும் மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி, திமுகவின் தேர்தல் வெற்றிக்கு கூடுதல் பங்களிப்பை அளித்தது. மருத்துவமனையில் படுத்துக்கொண்டே பரங்கிமலை தொகுதியில் 54,106 வாக்குகள் பெற்று, எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் டி.எல். ரகுபதி 26,432 வாக்குகளுடனும், ஜனசங்க வேட்பாளர் கே. காசிநாதன் 613 வாக்குகளுடனும் தோற்றனர். வெற்றி எம்.ஜி.ஆருக்கு மட்டுமா? அண்ணா தலைமையிலான திமுக கூட்டணி, 234 இடங்களில் 179 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் வெறும் 51 இடங்களுடன் தோற்றது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்... இந்தியாவில் முதல்முறையாக ஒரு பிராந்தியக் கட்சி, தேசியக் கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது. காமராஜர், பக்தவத்சலம் போன்ற ஜாம்பவான்கள் தோல்வியைத் தழுவினர்.  `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 சட்டமன்ற உறுப்பினரான எம்.ஜி.ஆர் , பின்னர் அதிமுகவைத் தொடங்கி மூன்று முறை முதலமைச்சரானார். இன்றும் எம்.ஜி.ஆரின் அந்த மருத்துவமனை புகைப்படம்,  1967 தேர்தலின் அரசியல் அடையாளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது! (தொடரும்.!)

விகடன் 26 Jan 2026 10:59 am

'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!'விசிகவினருக்கு ஆதவ் விளக்கம்

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விடுதலைச் சிறுத்தை கட்சிகள் குறித்து பேசியிருந்தது, விசிகவினர் இடையே அதிருப்தியைக் கிளப்பியிருந்தது. தவெக செயல்வீரர்கள் கூட்டம் OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன? அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள பதிவு... எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு... இன்று நடந்த த.வெ.க செயல்வீரர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்தத்தை என்னிடம் பதிவுசெய்துவருகிறார்கள். அவர்களுடைய வருத்தத்தை மதிப்பதோடு, உரிய விளக்கத்தையும் கொடுப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இன்றைய கூட்டத்தில், நான் சொல்ல வந்த கருத்தை சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாமல் போனதாலேயே இந்தக் குழப்பம். எனவே, இந்தப் பதிவின் வாயிலாக நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறேன். 'அண்ணன்' திருமாவளவன் ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு...’ என்கிற முழக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் அவர்களின் கரங்களில் கிடைக்கும் வரை என் குரல்வளையிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த முழக்கத்தையும் என் குரலையும், ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது’ என நினைக்கும் தி.மு.க தலைமை கடுமையாக ஒடுக்கப் பார்க்கிறது. அவ்வகையிலேயே என் பேச்சும் இன்று அவர்களால் திரித்துவிடப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் நன்கு அறிவார். எனது கல்லூரிக் காலம் முதலே பெருமதிப்பும் மரியாதையும் கொண்டு நான் நேசிக்கும் தலைவர் அவர். ஆதவ் அர்ஜூனா ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி அந்த 20 பேர்... அதை உணர்ந்தவராகவே எப்போதும் நீங்கா அன்புடனும் என்னுடன் உரையாடுகிற உறவாடுகிற தலைவராக அண்ணன் திருமாவளவன் அவர்கள் இருந்துவருகிறார்கள். ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்’ என அண்ணன் திருமாவளவன் அவர்கள் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிவருகிறார். ஆனால் அந்தக் கட்சியிலுள்ள 20 நபர்கள், தி.மு.க-வின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் தி.மு.க-வினராகவே மாறிச் செயல்பட்டுவருகிறார்கள். அப்படி ‘முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்’ என்கிற பொருளில் நான் சொல்ல வந்த கருத்து, ‘வி.சி.க-வில் இருபது நபர்கள் மட்டுமே இருப்பதாக’ நான் பேசிவிட்டதாகப் பொருள் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எனது பேச்சில் சொல்ல வந்த கருத்து முழுமைபெறாமல் போனதால், அது முற்றிலும் தவறான விதத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மிகத் தவறான விதத்தில் எனது பேச்சும் கருத்தும் தி.மு.க சக்திகளால் திரித்துப் பரப்பப்பட்டு வருகிறது. வேங்கைவயல் Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன? வேங்கைவயல் விவகாரத்தை மறக்கமாட்டார்கள் தி.மு.க-வின் இந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, அடிமட்ட வி.சி.க தொண்டர்கள் நன்கு அறிவார்கள். வி.சி.க-வின் கொடிக்கம்பங்களைக்கூட சுதந்திரமான முறையில் நட முடியாத அளவிற்கு, ஆளும் அதிகார மையம் செய்யும் அடக்குமுறையை ஒடுக்குமுறையை அனைவருமே அறிவார்கள். அப்படி தம் உரிமைகளுக்காக நின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி அநியாய வழக்குகளை இந்த அரசு பதிவுசெய்ததை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட; ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே வழக்குப்பதிவு செய்த வஞ்சகத்தை, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள். தம்மைத் தேர்ந்தெடுத்த எளிய மக்களுக்கு இன்றைய அதிகார ஆளும் வர்க்கம் கொடுத்த ‘ஒடுக்குமுறை’ பரிசை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். வாக்கு அரசியலை மட்டுமே மனதில் கொண்டு, இந்த எளிய மக்களை ஆளும் தி.மு.க அதிகார வர்க்கம் சுரண்டுகிறது. தனது வாக்குத் தேவைக்காக மட்டும் வி.சி.க-வின் தோழர்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சி அரசியலையே எப்போதும் தி.மு.க செய்துவந்திருக்கிறது; வருகிறது. அதை மிக அருகிலிருந்து பார்த்து நன்கு அறிந்தவன் நான். அதனாலேயே, வி.சி.க-வுக்குள், தி.மு.க-வின் குரலாகவே ஒலித்துவரும் 20 நபர்கள் குறித்து நான் குறிப்பிட்டுப் பேசினேன். அறிந்த உண்மையைப் பேசினேன். அந்த 20 நபர்கள் கொடுக்கிற தவறான தகவல்களை வைத்தே எங்கள் கட்சி மீதான விமர்சனங்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியோ, நாங்களோ எவ்வித அதிகாரத்திலும் இதுவரை இருந்தது இல்லை. திருமாவளவன் எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்! - அமைச்சர் ரகுபதி விளக்கம் அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்... அந்த மாற்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரமும் நிலைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, இந்த அரசியல் பயணத்தில் களமாடி வருகிறோம். அந்த உண்மை ஒருநாள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குத் தெரியவரும். வி.சி.க இயக்கத்தில் தி.மு.க-வின் குரலாகச் செயல்பட்டு வரும் அந்த 20 நபர்கள் குறித்த உண்மை முகமும் ஒருநாள் உலகிற்குத் தெரியவரும். ஏன்? இப்போது அண்ணனுடன் பயணிக்கும் பலருக்கும் அந்த நபர்களைக் குறித்த உண்மைகள் தெரியுமே! நான் எனது அரசியல் பயணத்தை எந்தக் களத்திலிருந்து எந்த நோக்கத்திற்காகத் துவங்கினேனோ, அந்த நோக்கத்திலிருந்து இதுவரை நான் தடம் மாறவில்லை. ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம்’ என்கிற எனது குரல், அவர்கள் அதிகாரத்தை அடையும் வரை என்னிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நான் எப்போதும் அன்பும், நேசமும் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கு மிக அன்போடு தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். எனது கருத்து, தவறான வகையில் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க செய்து வருகிற அந்தத் திரிப்பு அரசியலுக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த விளக்கப் பதிவு. ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு’ என்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், எப்போதும் எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு... இன்று நடந்த த.வெ.க செயல்வீர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்ததை என்னிடம்… — Aadhav Arjuna (@AadhavArjuna) January 25, 2026

விகடன் 26 Jan 2026 8:18 am

'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!'விசிகவினருக்கு ஆதவ் விளக்கம்

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விடுதலைச் சிறுத்தை கட்சிகள் குறித்து பேசியிருந்தது, விசிகவினர் இடையே அதிருப்தியைக் கிளப்பியிருந்தது. தவெக செயல்வீரர்கள் கூட்டம் OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன? அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள பதிவு... எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு... இன்று நடந்த த.வெ.க செயல்வீரர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்தத்தை என்னிடம் பதிவுசெய்துவருகிறார்கள். அவர்களுடைய வருத்தத்தை மதிப்பதோடு, உரிய விளக்கத்தையும் கொடுப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இன்றைய கூட்டத்தில், நான் சொல்ல வந்த கருத்தை சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாமல் போனதாலேயே இந்தக் குழப்பம். எனவே, இந்தப் பதிவின் வாயிலாக நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறேன். 'அண்ணன்' திருமாவளவன் ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு...’ என்கிற முழக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் அவர்களின் கரங்களில் கிடைக்கும் வரை என் குரல்வளையிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த முழக்கத்தையும் என் குரலையும், ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது’ என நினைக்கும் தி.மு.க தலைமை கடுமையாக ஒடுக்கப் பார்க்கிறது. அவ்வகையிலேயே என் பேச்சும் இன்று அவர்களால் திரித்துவிடப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் நன்கு அறிவார். எனது கல்லூரிக் காலம் முதலே பெருமதிப்பும் மரியாதையும் கொண்டு நான் நேசிக்கும் தலைவர் அவர். ஆதவ் அர்ஜூனா ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி அந்த 20 பேர்... அதை உணர்ந்தவராகவே எப்போதும் நீங்கா அன்புடனும் என்னுடன் உரையாடுகிற உறவாடுகிற தலைவராக அண்ணன் திருமாவளவன் அவர்கள் இருந்துவருகிறார்கள். ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்’ என அண்ணன் திருமாவளவன் அவர்கள் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிவருகிறார். ஆனால் அந்தக் கட்சியிலுள்ள 20 நபர்கள், தி.மு.க-வின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் தி.மு.க-வினராகவே மாறிச் செயல்பட்டுவருகிறார்கள். அப்படி ‘முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்’ என்கிற பொருளில் நான் சொல்ல வந்த கருத்து, ‘வி.சி.க-வில் இருபது நபர்கள் மட்டுமே இருப்பதாக’ நான் பேசிவிட்டதாகப் பொருள் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எனது பேச்சில் சொல்ல வந்த கருத்து முழுமைபெறாமல் போனதால், அது முற்றிலும் தவறான விதத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மிகத் தவறான விதத்தில் எனது பேச்சும் கருத்தும் தி.மு.க சக்திகளால் திரித்துப் பரப்பப்பட்டு வருகிறது. வேங்கைவயல் Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன? வேங்கைவயல் விவகாரத்தை மறக்கமாட்டார்கள் தி.மு.க-வின் இந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, அடிமட்ட வி.சி.க தொண்டர்கள் நன்கு அறிவார்கள். வி.சி.க-வின் கொடிக்கம்பங்களைக்கூட சுதந்திரமான முறையில் நட முடியாத அளவிற்கு, ஆளும் அதிகார மையம் செய்யும் அடக்குமுறையை ஒடுக்குமுறையை அனைவருமே அறிவார்கள். அப்படி தம் உரிமைகளுக்காக நின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி அநியாய வழக்குகளை இந்த அரசு பதிவுசெய்ததை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட; ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே வழக்குப்பதிவு செய்த வஞ்சகத்தை, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள். தம்மைத் தேர்ந்தெடுத்த எளிய மக்களுக்கு இன்றைய அதிகார ஆளும் வர்க்கம் கொடுத்த ‘ஒடுக்குமுறை’ பரிசை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். வாக்கு அரசியலை மட்டுமே மனதில் கொண்டு, இந்த எளிய மக்களை ஆளும் தி.மு.க அதிகார வர்க்கம் சுரண்டுகிறது. தனது வாக்குத் தேவைக்காக மட்டும் வி.சி.க-வின் தோழர்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சி அரசியலையே எப்போதும் தி.மு.க செய்துவந்திருக்கிறது; வருகிறது. அதை மிக அருகிலிருந்து பார்த்து நன்கு அறிந்தவன் நான். அதனாலேயே, வி.சி.க-வுக்குள், தி.மு.க-வின் குரலாகவே ஒலித்துவரும் 20 நபர்கள் குறித்து நான் குறிப்பிட்டுப் பேசினேன். அறிந்த உண்மையைப் பேசினேன். அந்த 20 நபர்கள் கொடுக்கிற தவறான தகவல்களை வைத்தே எங்கள் கட்சி மீதான விமர்சனங்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியோ, நாங்களோ எவ்வித அதிகாரத்திலும் இதுவரை இருந்தது இல்லை. திருமாவளவன் எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்! - அமைச்சர் ரகுபதி விளக்கம் அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்... அந்த மாற்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரமும் நிலைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, இந்த அரசியல் பயணத்தில் களமாடி வருகிறோம். அந்த உண்மை ஒருநாள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குத் தெரியவரும். வி.சி.க இயக்கத்தில் தி.மு.க-வின் குரலாகச் செயல்பட்டு வரும் அந்த 20 நபர்கள் குறித்த உண்மை முகமும் ஒருநாள் உலகிற்குத் தெரியவரும். ஏன்? இப்போது அண்ணனுடன் பயணிக்கும் பலருக்கும் அந்த நபர்களைக் குறித்த உண்மைகள் தெரியுமே! நான் எனது அரசியல் பயணத்தை எந்தக் களத்திலிருந்து எந்த நோக்கத்திற்காகத் துவங்கினேனோ, அந்த நோக்கத்திலிருந்து இதுவரை நான் தடம் மாறவில்லை. ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம்’ என்கிற எனது குரல், அவர்கள் அதிகாரத்தை அடையும் வரை என்னிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நான் எப்போதும் அன்பும், நேசமும் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கு மிக அன்போடு தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். எனது கருத்து, தவறான வகையில் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க செய்து வருகிற அந்தத் திரிப்பு அரசியலுக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த விளக்கப் பதிவு. ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு’ என்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், எப்போதும் எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு... இன்று நடந்த த.வெ.க செயல்வீர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்ததை என்னிடம்… — Aadhav Arjuna (@AadhavArjuna) January 25, 2026

விகடன் 26 Jan 2026 8:18 am

திடீரென வந்த கும்பல்: முதல் மாடியிலிருந்து குதித்து தப்பிய ஜோடி! - உ.பி-யில் தொடரும் அவலம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் இரண்டு மாடி பீசா உணவகம் அமைந்திருக்கிறது. இந்த உணவகத்துக்கு ஒரு தம்பதியினர் வந்துள்ளனர். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த ஒரு வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர், அந்தத் தம்பதியினரைச் சூழ்ந்து கொண்டு அவர்கள் யார், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தம்பதியினரின் அனுமதியின்றி அவர்களைத் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளனர். In UP's Shahjahanpur, a couple jumped from the first floor of an eatery after men from right wing group stormed the premises and began recording video and misbehaving with the couple. The woman sustained grevious injuries due to the fall. pic.twitter.com/Ryrimhyguy — Piyush Rai (@Benarasiyaa) January 25, 2026 இதனால் பதற்றமடைந்த அந்த இருவரும், அந்தச் சூழலை தவிர்க்கவும், அவர்களிடமிருந்து விடுபடவும் முயன்றனர். ஆனால், அதற்கான சூழல் அங்கே இல்லை என்பதால், அச்சம் மிகுதியில், அந்த உணவகத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் கீழே விழுந்த பெண்ணுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வருகிறது. மேலும், குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப் பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில், கடந்த ஜனவரி 13-ம் தேதி இரு மதத்தைச் சேர்ந்த தம்பதியின், சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. In UP's Shahjahanpur, a wedding reception of an interfaith couple was cancelled after right-wing group held protest demanding the cancellation of the event. Family claimed the police requested them to not go ahead with the function. pic.twitter.com/NaEzpXoZtA — Piyush Rai (@Benarasiyaa) January 15, 2026 அப்போதும் இதுபோன்ற சில வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஒரு கும்பல் மண்டபத்திற்குள் புகுந்தது. அவர்கள் இந்தத் திருமணத்தை 'லவ் ஜிகாத்' என்று குற்றம் சாட்டி கோஷமிட்டனர். திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களிடம் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த குண்டர்களின் அத்துமீறிய, அநாகரீக செயலால் அந்த வரவேற்பு நிகழ்ச்சி இடைநிறுத்தம் செய்யப்பட்டது. கடந்த மாத இறுதியில் ஹோட்டலில் நர்சிங் மாணவியின் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் கலந்துகொண்டனர். அப்போது ``லவ் ஜிகாத்’’ நடப்பதாக கூறி ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்த `பஜ்ரங் தள்’ அமைப்பினர், இஸ்லாமிய இளைஞர்களைத் தாக்கினர். இந்த விவகாரமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து பேசிய அந்த மாணவி, ``பிறந்தநாளையே சிதைத்துவிட்டார்கள். என் நண்பர்கள் அனைவரையும் அழைத்தேன். அதில் ஏராளமானோர் இந்துக்கள்; இருவர் மட்டுமே இஸ்லாமியர்கள். லவ் ஜிகாத் இல்லை. வலதுசாரி அமைப்பினர் என் வீடியோக்களை வெட்டி, ஒட்டி பரப்புகின்றனர் எனக்கூறி வேதனை தெரிவித்திருந்தார். புல்டோசர், கன்வர் யாத்திரை, அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றி அசைவ தடை... உ.பி-யில் வளரும் மத அரசியல்!

விகடன் 26 Jan 2026 7:13 am

அட்டைப்படம்...

அட்டைப்படம்

விகடன் 26 Jan 2026 5:18 am

அட்டைப்படம்...

அட்டைப்படம்

விகடன் 26 Jan 2026 5:18 am

இந்தியாவின் உயரிய விருது: தமிழ்நாட்டுக்கு 5 'பத்ம'விருதுகள்; யார் யாருக்கு விருது?

குடியரசு தினம் நாளைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இன்று, 2026-ம் ஆண்டிற்கான உயரிய விருதான பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சமூக சேவை, கலை, கலாச்சாரம், கல்வி, பொது விவகாரங்கள் மற்றும் பிற துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மொத்தம் 45 சாதனையாளர்கள் இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நேரில் கௌரவிக்கப்படுவார்கள். புண்ணியமூர்த்தி நடேசன் - ஓதுவார் சுவாமிநாதன் - ஆர். கிருஷ்ணன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் உலகிலேயே மிகப்பெரிய இலவச நூலகத்தை நிறுவிய முன்னாள் பேருந்து நடத்துநர், ஆசியாவின் முதல் தாய்ப்பால் வங்கியைத் தொடங்கிய குழந்தை நல மருத்துவர், அரிய பாரம்பரிய இசைக்கருவியைப் பாதுகாத்து வரும் 90 வயது பழங்குடியின இசைக்கலைஞர் என 45 பேர் இந்த ஆண்டு 'அறியப்படாத நாயகர்கள்' பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம் இசைத்துறையில், குறிப்பாக மிருதங்கக் கலையில் ஆற்றிய சாதனைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இசை மற்றும் பக்திப் பாடல்களைத் தொடர்ந்து வளர்த்து வரும் திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு ஆன்மீகம் மற்றும் கலைத்துறையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர் - பக்தவச்சலம் சிற்பக் கலையில், குறிப்பாக வெண்கலச் சிற்பங்களை வடித்தெடுத்தலில் சேலம் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டரின் பங்களிப்புக்காகவும், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக் கலையைத் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வரும் நீலகிரி ஆர். கிருஷ்ணனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இது தவிர 20 மொழிகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் அரிய கையெழுத்துப் பிரதிகளுடன் மிகப்பெரும் தனியார் 'புஸ்தக மானே' எனும் நூலகத்தை உருவாக்கிய கர்நாடக மாநில அங்கே கவுடாவுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாய்ப்பால் வங்கித் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்திய மும்பை குழந்தை நல மருத்துவர் அர்மிடா பெர்னாண்டஸ் உள்ளிட்ட 45 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலதாமதக் கலைமாமணி விருது! - ஸ்பான்சர்டு பை அமலாக்கத்துறை

விகடன் 25 Jan 2026 7:13 pm

தஞ்சை: ஒன்றரை லட்சம் மகளிர்... நேரு தலைமையில் பரபரக்கும் மாநாடு ஏற்பாடுகள்!

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொள்ள இருப்பதாக சொல்கிறார்கள். டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மகளிர் மாநாடு ஏற்பாட்டில் மகளிர் அணி நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். ஒரு வாக்கு சாவடிக்கு 10 முதல் 15 பெண்கள் வரை அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான வாகன வசதி கட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தலா ஒரு கருப்பு சிவப்பு சேலை, ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ.200 கொடுத்ததாக சொல்கிறார்கள். மாநாட்டு திடலில் அமர்ந்ததும் பெண்களுக்கு பை ஒன்று தருகிறார்கள். இதில் ஹாட்பாக்ஸ், ஸ்வீட், காரம் ஸ்நாக்ஸ் , தண்ணீர் பாட்டில் போன்றவை இருக்கும் என்கிறார்கள். குடியரசு தின விழாவை முடித்து விட்டு சென்னையில் இருந்து தஞ்சாவூர் வருகிறார் முதல்வர் ஸ்டாலின் சுமார் 4 மணியளவில் மேடையேறுவார் என்கிறார்கள். டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு ஸ்டாலின் வரும் போது 50 பெண்கள் தாங்களே புல்லட், 200 பெண்கள் ஸ்கூட்டி ஓட்டியபடி அணிவகுத்து முதல்வர் ஸ்டாலினை அழைத்து வருகின்றனர். ஸ்டாலின் மேடை ஏறும் போது பெண்கள் கோலாட்டம் அடித்து ஆடியபடி வரவேற்பு கொடுக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் ஒன்றரை லட்சம் பெண்கள் மற்றும் குடும்பத்தினரை வாக்குகளாக மாற்ற வேண்டும் என திமுக தலைமை திடமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் சொல்கிறார்கள். இதற்காக பல்லடத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டை விட வெற்றிகரமாக அமையும் வகையில் கூடுதல் சிரத்தை எடுத்து அனைத்து நிர்வாகிகளும் வேலை செய்கின்றனர்.

விகடன் 25 Jan 2026 4:47 pm

தஞ்சை: ஒன்றரை லட்சம் மகளிர்... நேரு தலைமையில் பரபரக்கும் மாநாடு ஏற்பாடுகள்!

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொள்ள இருப்பதாக சொல்கிறார்கள். டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மகளிர் மாநாடு ஏற்பாட்டில் மகளிர் அணி நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். ஒரு வாக்கு சாவடிக்கு 10 முதல் 15 பெண்கள் வரை அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான வாகன வசதி கட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தலா ஒரு கருப்பு சிவப்பு சேலை, ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ.200 கொடுத்ததாக சொல்கிறார்கள். மாநாட்டு திடலில் அமர்ந்ததும் பெண்களுக்கு பை ஒன்று தருகிறார்கள். இதில் ஹாட்பாக்ஸ், ஸ்வீட், காரம் ஸ்நாக்ஸ் , தண்ணீர் பாட்டில் போன்றவை இருக்கும் என்கிறார்கள். குடியரசு தின விழாவை முடித்து விட்டு சென்னையில் இருந்து தஞ்சாவூர் வருகிறார் முதல்வர் ஸ்டாலின் சுமார் 4 மணியளவில் மேடையேறுவார் என்கிறார்கள். டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு ஸ்டாலின் வரும் போது 50 பெண்கள் தாங்களே புல்லட், 200 பெண்கள் ஸ்கூட்டி ஓட்டியபடி அணிவகுத்து முதல்வர் ஸ்டாலினை அழைத்து வருகின்றனர். ஸ்டாலின் மேடை ஏறும் போது பெண்கள் கோலாட்டம் அடித்து ஆடியபடி வரவேற்பு கொடுக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் ஒன்றரை லட்சம் பெண்கள் மற்றும் குடும்பத்தினரை வாக்குகளாக மாற்ற வேண்டும் என திமுக தலைமை திடமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் சொல்கிறார்கள். இதற்காக பல்லடத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டை விட வெற்றிகரமாக அமையும் வகையில் கூடுதல் சிரத்தை எடுத்து அனைத்து நிர்வாகிகளும் வேலை செய்கின்றனர்.

விகடன் 25 Jan 2026 4:47 pm

மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை? - கேள்வி எழுப்பும் தமிழிசை

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து - நடராசன் நினைவிடத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு நிற உடையில் வருகை தந்தார். அங்கு தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 'மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்' என முழக்கமிட்டார். முதல்வர் ஸ்டாலின்: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், ``வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்! 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன். எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன். மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் நீங்கள் அவர்களை சுட்டுக்கொன்ற காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு இந்த வணக்கத்தை செலுத்தினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் ஆன்மாக்கள் தான் ஏற்றுக் கொள்ளுமா? தமிழிசை சௌந்தரராஜன் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை கூப்பிடுவீர்களே இந்த நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களை கூப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளிலேயே ஹிந்தி கற்பிக்கப்படுகிறதே அவை எல்லாம் தமிழ்நாட்டில் இல்லையா? இத்தனை முரண்பாடுகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளுமா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே? இனியும் மொழியை வைத்து நீங்கள் போடும் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்? - எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Jan 2026 3:37 pm

கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026

கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026 – பெருந்திரளான பங்கேற்புடன் சிறப்பாக The post கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026 appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 25 Jan 2026 2:42 pm

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நாளை தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடக்கிறது. இதில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைகின்றனர். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. தன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் திமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவினர் வைத்திலிங்கம் மூவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தஞ்சாவூரில் நாளை டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. குடியரசு தினவிழாவை முடித்த பின்னர் தஞ்சாவூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து கிளம்பியதும் நேராக மேடைக்கு வருகிறார் ஸ்டாலின். முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாம். இணைப்பு விழா நடைபெறும் இடம் தனக்கான தனித்துவத்தை காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்தார். தன் விருப்பத்தை செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே ஓகே வாங்கி கொடுத்தாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பத்தாயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கிறார்கள். ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விகடன் 25 Jan 2026 2:31 pm

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நாளை தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடக்கிறது. இதில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைகின்றனர். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. தன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் திமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவினர் வைத்திலிங்கம் மூவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தஞ்சாவூரில் நாளை டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. குடியரசு தினவிழாவை முடித்த பின்னர் தஞ்சாவூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து கிளம்பியதும் நேராக மேடைக்கு வருகிறார் ஸ்டாலின். முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாம். இணைப்பு விழா நடைபெறும் இடம் தனக்கான தனித்துவத்தை காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்தார். தன் விருப்பத்தை செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே ஓகே வாங்கி கொடுத்தாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பத்தாயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கிறார்கள். ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விகடன் 25 Jan 2026 2:31 pm

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நாளை தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடக்கிறது. இதில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைகின்றனர். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. தன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் திமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவினர் வைத்திலிங்கம் மூவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தஞ்சாவூரில் நாளை டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. குடியரசு தினவிழாவை முடித்த பின்னர் தஞ்சாவூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து கிளம்பியதும் நேராக மேடைக்கு வருகிறார் ஸ்டாலின். முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாம். இணைப்பு விழா நடைபெறும் இடம் தனக்கான தனித்துவத்தை காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்தார். தன் விருப்பத்தை செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே ஓகே வாங்கி கொடுத்தாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பத்தாயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கிறார்கள். ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விகடன் 25 Jan 2026 2:31 pm

சுயசார்பு கனடாவை உருவாக்குவோம் - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதமர்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகள் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. ட்ரம்ப் அந்தவகையில் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் வேளாண் பொருட்கள், மின்சார வாகனங்கள் தொடர்பாக சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்நிலையில், சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா அமல்படுத்தினால் கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு பிறகு கனடா பிரதமர் மார்க் கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மார்க் கார்னி அதில் பேசியிருக்கும் அவர், வெளிநாட்டு அச்சுறுத்தலைச் சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம். கனடாவைக் கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுபடுத்த முடியாது. எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். சுயசார்பு கனடாவை உருவாக்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 2:05 pm

'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!

தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை. விஜய் அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்தின் மிக முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன். எதாவது அழுத்தம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? அழுத்தத்துக்கெல்லாம் அடங்கி போற ஆளா நாம? அழுத்தம் மக்கள் மீதுதான் இருக்கிறது. தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் பாஜகவிடம் நேரடியாக சரண்டர் ஆகிவிட்டார்கள். திமுக மறைமுகமாக சரண்டர் ஆகியிருக்கிறது. அவர்களின் வேடம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக கலர் கலர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார் என்கிற அழுத்தத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்கள் நம் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். விஜய் கூட்டணியைப் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யை நம்பி யார் வருவார் என நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஆனால், மக்கள் நம்மை நம்புகிறார்கள். அதனால்தான் கரியரின் உச்சம் என்கிற இடத்தில் என்னை தூக்கி வைத்திருக்கிறார்கள். என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களாக உழைக்க வேண்டும். ஏற்கனவே ஆண்டவர்களை போலவும் ஆள்பவர்களை போலவும் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். தீய சக்தியும் வேண்டாம். ஊழல் சக்தியும் வேண்டாம். இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் சக்தியும் நமக்குதான் இருக்கிறது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அண்டி பிழைக்கவோ அடிமையாகவோ மாறும் எண்ணமே இங்கில்லை. Vijay யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்யக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள். அண்ணா ஆரம்பித்த கட்சியும் அண்ணா பெயர் கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அந்த இரண்டு கட்சிக்கும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம். நாம் அதை அனுமதிக்கக் கூடாது. நடக்கப்போறது ஜனநாயகப் போர். அதை லீட் செய்யப்போகும் தளபதிகள் நீங்கள்தான். உங்களுக்கு விஜய் பிடிக்கும்னா அதை உங்க உழைப்புல காட்டுங்க. நாம அறிவிக்கப்போற வேட்பாளர்களுக்கு உங்களோட முழு ஆதரவையும் கொடுங்க. நட்பு சக்தி இருந்தாலும் இல்லைன்னாலும் நம்மால ஜெயிக்க முடியும்.' என்றார்.

விகடன் 25 Jan 2026 1:52 pm

'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!

தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை. விஜய் அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்தின் மிக முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன். எதாவது அழுத்தம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? அழுத்தத்துக்கெல்லாம் அடங்கி போற ஆளா நாம? அழுத்தம் மக்கள் மீதுதான் இருக்கிறது. தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் பாஜகவிடம் நேரடியாக சரண்டர் ஆகிவிட்டார்கள். திமுக மறைமுகமாக சரண்டர் ஆகியிருக்கிறது. அவர்களின் வேடம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக கலர் கலர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார் என்கிற அழுத்தத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்கள் நம் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். விஜய் கூட்டணியைப் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யை நம்பி யார் வருவார் என நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஆனால், மக்கள் நம்மை நம்புகிறார்கள். அதனால்தான் கரியரின் உச்சம் என்கிற இடத்தில் என்னை தூக்கி வைத்திருக்கிறார்கள். என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களாக உழைக்க வேண்டும். ஏற்கனவே ஆண்டவர்களை போலவும் ஆள்பவர்களை போலவும் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். தீய சக்தியும் வேண்டாம். ஊழல் சக்தியும் வேண்டாம். இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் சக்தியும் நமக்குதான் இருக்கிறது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அண்டி பிழைக்கவோ அடிமையாகவோ மாறும் எண்ணமே இங்கில்லை. Vijay யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்யக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள். அண்ணா ஆரம்பித்த கட்சியும் அண்ணா பெயர் கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அந்த இரண்டு கட்சிக்கும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம். நாம் அதை அனுமதிக்கக் கூடாது. நடக்கப்போறது ஜனநாயகப் போர். அதை லீட் செய்யப்போகும் தளபதிகள் நீங்கள்தான். உங்களுக்கு விஜய் பிடிக்கும்னா அதை உங்க உழைப்புல காட்டுங்க. நாம அறிவிக்கப்போற வேட்பாளர்களுக்கு உங்களோட முழு ஆதரவையும் கொடுங்க. நட்பு சக்தி இருந்தாலும் இல்லைன்னாலும் நம்மால ஜெயிக்க முடியும்.' என்றார்.

விகடன் 25 Jan 2026 1:52 pm

பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா? - திருமாவளவன் சொன்ன பதில் என்ன?

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் அணியை கூட்டணியில் கொண்டு வர திமுக முயற்சியில் இறங்கி இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் ராமதாஸ் அணி திமுக கூட்டணிக்குள் வந்தால், அதனை விசிக ஏற்குமா? என்ற கேள்வி எழுந்தது. ராமதாஸ் - ஸ்டாலின் ஏற்கெனவே `மதவாதக் கட்சியான பா.ஜ.க-வோடும், சாதியவாதக் கட்சியான பா.ம.க-வுடனும் எந்தவித ஒட்டும் இல்லை உறவும் இல்லை, அவர்களுடன் கூட்டணியும் இல்லை' என்று டிக்ளேர் செய்திருந்தார் திருமாவளவன். இந்நிலையில் இன்று( ஜன.25) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் இருக்கும் அணியில் இடம்பெறப் போவதில்லை என்பதை முடிவு செய்துவிட்டோம். அந்த இரு கட்சிகளும் சாதி மற்றும் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள். பாமகவின் ஓர் அணி மோடி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. திருமாவளவன் ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணிக்குள் இணைப்பது குறித்து திமுக தலைமை முடிவு செய்யும். பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் இன்றும் உறுதியாக இருக்கிறோம் என்று திருமாவளவன் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 1:21 pm

TVK : 'விசில் சின்னத்தை கொடுத்த அதிகாரியே விஜய் ரசிகர்தான்!' - 'அடேங்கப்பா'ஆதவ்!

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. அந்த நிகழ்வில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியவை. விஜய் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'நம்மை வெறும் ரசிகர் மன்றம் சார்ந்தவர்கள் என பொய்பிரசாரம் செய்வார்கள். நம்மிடம் ஒரு கட்டமைப்பு இருக்கிறது. 2300 ஒன்றிய செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கே கட்சியின் கட்டமைப்பு மீது சந்தேகம் இருந்தது. கடந்த நான்கு மாதங்களாக கடினமாக உழைத்து கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். டெல்லிக்கு சிபிஐ விசாரணைக்கு செல்கையில், அண்ணனோடு காரில் சென்றேன். அப்போது வண்டி சிக்னலில் நின்ற போது அங்கிருந்த பெண்கள் ஓடி வந்து அண்ணனை கண்டுகொண்டார்கள். திமுக வீட்டில் நம்முடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். எடப்பாடியின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டிலும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவுடன் ஒரு 20 பேர் மட்டும்தான் இங்கே இருக்கிறார்கள். விசிக மொத்தமும் தவெகவில்தான் இருக்கிறது. ஆதவ் திமுக என்பது திருட்டு திமுக. அவர்கள் நம்மைப் பார்த்து கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். நாங்கள் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராக வைத்திருக்கிறோம். அறிவாலயத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை எங்கே? திருமா அதை கேட்பாரா? உங்களையெல்லாம் அடியாட்களைப் போல திமுக பயன்படுத்துகிறது. மகனை துணை முதல்வர் ஆக்கியதுதான் முதல்வரின் சாதனை. எங்கே பாஜகவை எதிர்க்க வேண்டுமோ நாங்கள் எதிர்ப்போம். 2026 தேர்தல் திமுக வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல். செந்தில் பாலாஜியை 2 நிமிடம் பெரியாரை பற்றி பேசச் சொல்லுங்கள். இங்கேயே தூக்கு மாட்டிக் கொள்கிறேன். நம்மைப் பார்த்து மிரட்டப்படுகிறோம் என்கிறார்கள். மிரட்டுகிறவர்கள்தான் பயந்தவர்கள் என்று அர்த்தம். அமைதியாக இருப்பவர்கள்தான் தைரியமானவர்கள். எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கிய போது கூட்டணியை நம்பி உருவாக்கவில்லை. தாய்க்குலத்தை நம்பி உருவாக்கினார். அப்படித்தான் தலைவரும் கட்சி தொடங்கியிருக்கிறார். ஆதவ் டெல்லி சிபிஐ அலுவலகத்துக்குள் தலைவர் நுழைந்தவுடனேயே 10 பேர் செல்பி எடுக்க ஓடி வந்தார்கள். எல்லா இடத்திலும் அவரின் ஆட்கள் இருக்கிறார்கள். தலைவரை பிடித்த எதோ ஒரு அதிகாரி என்ன பிரச்னை ஆகினாலும் பரவாயில்லை என கையெழுத்து போட்டதால்தான் விசில் சின்னம் கிடைத்திருக்கிறது' என்றார்.

விகடன் 25 Jan 2026 1:18 pm

தமிழே உயிரே! |அரியணை ஏறியதா தமிழ்?|மொழிப்போரின் வீர வரலாறு – 5

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழே உயிரே! - பகுதி 5 தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவ தில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ? என்று பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது உணர்ச்சிமிகு வார்த்தைகளை நாமும் வழிமொழிகிறோம்.  தமிழுக்காக உயிரை நீத்தவர்களுக்கு என்றுமே மரணமில்லை. தமிழாகவே  அவர்கள் வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம் ஆட்சியையே மாற்றியது! தமிழகத்தில் நடைபெற்ற ‘மொழிப்போர்’, ஆட்சியையே புரட்டிப்போட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி என்ற அடையாளத்துடன் இந்தியா முழுவதும் வியாபித்திருந்த காங்கிரஸ் கட்சி மமதையோடு இருந்தது. அதனால்தான், இங்கு வந்து இந்தியைத் திணித்தது. இந்திக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போரை தமிழர்கள் நடத்தினார்கள். அந்தச் சூழலில்தான், தமிழகம் 1967-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் என்ற ஆலமத்தைச் சாய்ப்பதற்கு, மொழிப்போரில் ஈடுபட்ட வீரர்படை களமிறங்கியது. காமராஜர் மிகப்பெரிய தலைவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவான அவர், ‘நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்’ என்று கூறினார். ஆனால், என்ன நடந்தது? மொழிப்போரை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவரான மாணவர் பெ.சீனிவாசனிடம் விருதுநகரில் தோற்றுப்போனார் காமராஜர். காமாஜரே தோற்றுவிட்டார் என்றால், மற்ற காங்கிரஸாரின் கதி? ஸ்ரீபெரும்புதூரில் முதல்வர் பக்தவத்சலம் தோற்றார். மேலூரில் எளிமையின் சிகரமாக விளங்கிய அமைச்சர் கக்கன் தோல்வியடைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான கிருஷ்ணசாமி தோற்றுப்போனார். சி.சுப்பிரமணியம் தோற்றார். ஆர்.வெங்கட்ராமன் தோற்றார். விருத்தாசலத்தில் போட்டியிட்ட பூவராகவனைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் தோற்றுப்போனார்கள். கருணாநிதி - அண்ணா பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெற்றது. அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது என்றால், அதற்கு இந்தித் திணிப்பு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அண்ணா, தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு, இன்றுவரை காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த நிலைக்கு காரணமாக இருந்தவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த தியாகிகள். தங்களின் உயிருக்கு இணையாக நேசித்த தாய்மொழிக்காக உயிரையே தியாகம் செய்த அந்த தியாகிகளின் குடும்பங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக நேரில் சென்றேன். அப்போது நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகிய 12 தியாகிகளின் குடும்பங்களைப் பற்றிய நிலையை அறிந்துகொள்ளும்  வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.   தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த இரா.சண்முகத்தின் ஊரான விராலிமலைக்குச் சென்றேன். சண்முகத்தின் அண்ணன் இரா.மாணிக்கத்தைச் சந்தித்தேன். மொழிப்போரில் உயிரிந்தோரின் குடும்பங்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்கி, அதை நடத்திவருகிறார் இரா.மாணிக்கம். எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் மன்றத்தினர்! தன்னுடைய தம்பியைப் பற்றியும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது பற்றியும் விரிவாக என்னிடம் இரா.மாணிக்கம் பேசினார். ‘நாங்கள் மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். என் தம்பி சண்முகம் 11.08.1943-ல் பிறந்தார். 5-ம் வகுப்புவரை படித்தார். குடும்பச் சூழல் காரணமாக, நானும் தம்பியும் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தோம். திராவிட நாடு, குடியரசு, விடுதலை ஆகிய பத்திரிகைகள் இங்கு வரும். அவற்றை நாங்கள் தொடர்ந்து வாசிப்போம். நானும், தம்பியும் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தைத் தொடங்கி, அதை நடத்திவந்தோம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதிலிருந்து நானும் தம்பியும் அதில் கலந்துகொள்வோம். தம்பி சண்முகம் தலையை மொட்டையடித்து, இந்திக்கு கொள்ளி வைக்கும் போராட்டத்தை நடத்தினார். அதுவரை இந்திக்கு எதிராக ஐந்து பேர் தீக்குளித்து உயிர் துறந்திருந்தனர். எங்கள் ஊரில் கடையடைப்பு நடத்த என் தம்பி முடிவுசெய்தார். ஆனால், கடையடைப்பு நடத்த வியாபாரிகள் மறுத்துவிட்டனர். அந்த நேரத்தில், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், போராட்டத்தைக் கைவிடுமாறு அண்ணா கேட்டுக்கொண்டார். அதனால், என் தம்பிக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எனக்கு ஒரு கடிதம், அண்ணாவுக்கு ஒரு கடிதம், ஆசிரியர் மூர்த்திக்கு ஒரு கடிதம் என மூன்று கடிதங்களை எழுதிவைத்து, அவற்றை ஆசிரியர் மூர்த்தியிடம் கொடுத்திருக்கிறார். ஆசிரியர் மூர்த்தி தன் வீட்டில் போய் தனக்கான கடிதத்தைப் பிரித்து வாசித்திருக்கிறார். உடனே, பதறியடித்துக்கொண்டு போய் பார்த்தபோது, என் தம்பி விஷம் அருந்தி ஒரு மரத்தடியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை ஆசிரியர் மூர்த்தி மருத்துவமனையில் சேர்த்தார். அந்த நிலையில், ‘தமிழுக்காக மீண்டும் ஒருவன் உயிர் துறந்தான் என்று தெரிந்தால், தமிழகம் மீண்டும் போராடத் தொடங்கும்’ என்று தம்பி சண்முகம் கூறினார். அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தமிழுக்காக என் தம்பி உயிரையே கொடுத்தார்” என்று வேதனையுடன் சொல்லி முடித்தார் இரா.மாணிக்கம். மொழிப்போர் தியாகிகள் அமைப்பின் தலைவராக இரா.மாணிக்கம் இருப்பதால், மற்ற தியாகிகளின் உறவினர்களை விராலிமலைக்கு வரவழைத்திருந்தார். அவர்களுடனும் பேசினேன். அவர்களின் குடும்ப நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது. திருச்சியில் அடக்கம் செய்யப்பட்ட கீழப்பழுவூர் சின்னச்சாமியின் நினைவிடத்துக்குச் சென்றேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இரண்டாம்தர குடிமக்களா? சென்னை விருகம்பாக்கத்தில் தியாகி அரங்கநாதன் வீட்டுக்குச் சென்று, அவருடைய மகன் அமுதவாணனைச் சந்தித்தேன். தன் தந்தை எப்படி மொழிக்காக உயிரைத் தியாகம் செய்தார் என்பதை விரிவாக என்னிடம் கூறினார். இந்தித் திணிப்பை எரித்துப்பொசுக்கிய விருகம்பாக்கம் அரங்கநாதன்! “என்னுடைய அப்பா, அண்ணாவின் சொற்பொழிவுகள் எங்கு நடந்தாலும், அங்கு சென்றுவிடுவார். கட்டாய இந்தி காரணமாக தமிழக மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படுகிறார்கள் என்று அவர் மிகவும் ஆதங்கப்பட்டார். இது குறித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, 1965-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி, தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். அப்போது எனக்கு ஏழு வயது. என்னுடைய தம்பி ஆறு மாத கைக்குழந்தை. ’குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்று என் தாயிடம் சொல்லிவிட்டு உறங்கச் சென்ற தந்தை, அதிகாலையில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அப்போது, ‘இந்தி ஒழிக… தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டிருக்கிறார். என் தந்தை தீக்குளித்ததால் அதிர்ச்சியடைந்த என் தாயாருக்கு மனநலம் பாதித்துவிட்டது” என்றார். அந்தக் குடும்பத்தின் சூழலைப் பார்த்தபோது மிகுந்த வேதனையாக இருந்தது. எந்த பலனும் இல்லை! மொழிக்காக உயிரையே தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் பெரிய உதவிகள் எதுவுமில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. விராலிமலை சண்முகத்தின் அண்ணன் மாணிக்கம் நம்மிடம் வேதனையுடன் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். தமிழ்நாடு அரசு |TNPSC வேலைவாய்ப்பு “மொழிப்போர் தியாகிகளுக்கு மாதம் நூறு ரூபாய் உதவித்தொகை அளிப்பதாக 1987-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், அது எங்களுக்கு கிடைக்கவில்லை. மொழிப்போரில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்தவர்களுக்கு மட்டும்தான் உதவித்தொகையைத் தருவோம் என்று அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவிப்பு வந்ததைக் கேள்விப்பட்டு, அதிகாரிகளிடம் போய்க் கேட்டோம். அதற்கு, மொழிக்காக உயிர்த்தியாம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சொல்லிவிட்டார்கள். என்ன கொடுமை என்றால், மொழிக்காக உயிர்நீத்த 12 பேரில், மூன்று பேர் மட்டுமே திருமணம் ஆனவர்கள். அந்த மூன்று பேரின் வாரிசுகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னுரிமை. மற்ற ஒன்பது பேர் திருமணம் ஆகாதவர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடையாதாம். எனவே, இவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம்’ என்று சொன்னார். மொழியுணர்வைப் புரிந்துகொள்ளாத காங்கிரஸ் கட்சி, தன் ஆட்சியையே விலையாகக் கொடுத்தது. தன் தவறான செயலுக்கான தண்டனையை இன்றுவரை காங்கிரஸ் அனுபவித்துவிருகிறது.  மொழி உணர்வையும், இன உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் ஒருபோதும் அடக்கிவைக்க முடியாது. அப்படி அடக்கினால், அது பெருநெருப்பாக வெடித்துக்கிளம்பும் என்பதற்கு முத்துக்குமார், செங்கொடி உயிரிழப்புகள் சமீபத்திய சான்று. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரியணை ஏறியதா தமிழ்? ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாடு. அதை அடக்க முயன்றபோது,  மெரினா கடற்கரையில் தொடங்கி தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக வெடித்த போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே மாற்றியெழுத வைத்தது. இதை ஆட்சியாளர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. மொழிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் பெயர்களை அரசுக் கட்டடத்துக்கும், பாலத்துக்கும் பெயர் சூட்டி தமிழக அரசு கவுரவித்திருக்கிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த தியாகிகளின் குடும்பங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆட்சியாளர்கள் அக்கறையோடு பார்க்க வேண்டும். நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் குடும்பம் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறது? இதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மூலக்கொத்தளத்தில் நடராசன், தாளமுத்து நினைவிடங்களை ரூ.34 லட்சம் செலவில் புதுப்பித்திருக்கிறது. அதை முதல்வர் ஸ்டாலின் சென்று திறந்துவைத்து தியாகிகளுக்கு மரியாதை செய்திருக்கிறார். வரவேற்கத்தக்க நடவடிக்கை. அதைப்போல, அந்த தியாகிகளின் குடும்பங்களின் நிலையையும் அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்பதே தமிழ்ச்சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழ்நாடு மேலும், தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர், திராவிடம் பேசுபவர்களை அரியணையில் ஏற்றியது. ஆனால், உரிய முறையில் ஆட்சி மொழியாக அரியணையில் தமிழ் ஏறியிருக்கிறதா? என்து மிகப்பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக, தமிழுக்காகப் போராடியவர்களின் நெஞ்சில் நீங்காத கேள்வியாக இன்னமும் இது இருக்கிறது. (நிறைவுற்றது) ஜனவரி 25- இன்று மொழிப்பேர் தியாகிகள் தினம்

விகடன் 25 Jan 2026 12:27 pm

'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கடைசி டிசம்பர் விழாவில் பேசிய விஜய். அதன்பிறகு கிட்டத்தட்ட 38 நாட்களுக்கு விஜய் மௌனமாக இருந்தார். விஜய் இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கியமான கட்டத்தில் நடக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் NDA கூட்டணியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் பேசியதாவது, 'இங்கே எல்லார் கையிலும் விசில் வைத்திருக்கிறீர்கள். நாளை காவலர்கள், நடத்துனர்கள் கூட விசில் வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள். இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு கூட்டம். தலைக்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டி வந்திருந்தார்கள். அவர்கள் திமுகவை வீழ்த்துவோம் என்றார்கள். ஒருவரும் கைத்தட்டவில்லை. திமுகவை வீழ்த்தும் சக்தி நம் தலைவருக்குதான் உண்டு. 10 கட்சி கூட்டணி 15 கூட்டணியையெல்லாம் முறியடிக்கும் சக்தி தலைவருக்குதான் உண்டு. செங்கோட்டையன் இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத புகழ் நம் தலைவருக்கு இருக்கிறது. 1000 கோடி வருவாயை வேண்டாமென்று கூறிவிட்டு அவர் மக்களுக்காக வந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஓட்டு இருக்கிறது. திமுகக்காரர்களின் வீட்டு ஓட்டு கூட நமக்குதான் இருக்கிறது.அந்த இரு கட்சிகளிலும் இருப்பவர்கள் தலைவர்களே அல்ல. நம்முடைய தலைவரை முதல்வராக்க வேண்டுமென மக்கள் சூளுரைத்திருக்கின்றனர். எந்த சக்தியாலும் நம்மை இனி தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய சின்னம் விசில் சின்னம். தூங்குகிறவர்களின் காதுகளில் விசில் அடித்து விடாதீர்கள். முதியவர்களின் முன்னால் விசில் அடித்துவிடாதீர்கள். வாக்கு கிடைக்காமல் போய்விடும்' என்றார்.

விகடன் 25 Jan 2026 11:51 am

'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கடைசி டிசம்பர் விழாவில் பேசிய விஜய். அதன்பிறகு கிட்டத்தட்ட 38 நாட்களுக்கு விஜய் மௌனமாக இருந்தார். விஜய் இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கியமான கட்டத்தில் நடக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் NDA கூட்டணியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் பேசியதாவது, 'இங்கே எல்லார் கையிலும் விசில் வைத்திருக்கிறீர்கள். நாளை காவலர்கள், நடத்துனர்கள் கூட விசில் வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள். இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு கூட்டம். தலைக்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டி வந்திருந்தார்கள். அவர்கள் திமுகவை வீழ்த்துவோம் என்றார்கள். ஒருவரும் கைத்தட்டவில்லை. திமுகவை வீழ்த்தும் சக்தி நம் தலைவருக்குதான் உண்டு. 10 கட்சி கூட்டணி 15 கூட்டணியையெல்லாம் முறியடிக்கும் சக்தி தலைவருக்குதான் உண்டு. செங்கோட்டையன் இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத புகழ் நம் தலைவருக்கு இருக்கிறது. 1000 கோடி வருவாயை வேண்டாமென்று கூறிவிட்டு அவர் மக்களுக்காக வந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஓட்டு இருக்கிறது. திமுகக்காரர்களின் வீட்டு ஓட்டு கூட நமக்குதான் இருக்கிறது.அந்த இரு கட்சிகளிலும் இருப்பவர்கள் தலைவர்களே அல்ல. நம்முடைய தலைவரை முதல்வராக்க வேண்டுமென மக்கள் சூளுரைத்திருக்கின்றனர். எந்த சக்தியாலும் நம்மை இனி தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய சின்னம் விசில் சின்னம். தூங்குகிறவர்களின் காதுகளில் விசில் அடித்து விடாதீர்கள். முதியவர்களின் முன்னால் விசில் அடித்துவிடாதீர்கள். வாக்கு கிடைக்காமல் போய்விடும்' என்றார்.

விகடன் 25 Jan 2026 11:51 am

காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்? - எடப்பாடி பழனிசாமி

மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி வெள்ளைக்காளி என்பவரை நேற்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சென்னைக்கு புழல் சிறையில் அவரை அடைப்பதற்காக வாகனத்தில் போலீஸார் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, இரண்டு கார்களில் வந்த மர்மம் கும்பல், போலீஸாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, கைதி வெள்ளகாளியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது. அதைத் தடுக்க முயன்ற போலீஸ் வாகன ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வெள்ளகாளி கொலை முயற்சி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தின் மீது ஒரு மர்மக் கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இவ்வளவுக் கொடிய தாக்குதலை நடத்தும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை விசாரணைக்காக அழைத்து செல்லும் போது அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் வந்து தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அதைத் தடுக்க முடியாத அளவுக்கு உளவுத்துறையும், நெடுஞ்சாலை சுற்றுக்காவலும் செயலிழந்து விட்டனவா? திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே கொலை, கொள்ளை, குண்டுவீச்சு, காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்து விட்டன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாத அளவுக்கு திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது. நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை. செயல்படாத திமுக அரசு இனியும் நீடிக்கக் கூடாது. அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள். எனப் பதிவிட்டிருக்கிறார். தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், ``காவலர்கள் பாதுகாப்பையும் களவாடிய திமுக அரசு! பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே பிரபல ரவுடியை அழைத்து வந்த காவலர்கள் இருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி! துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது சீருடை அணிந்த காவலர்கள் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தைப் பேரழிவில் நிறுத்தியுள்ள கேடுகெட்ட ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே? சமூக வலைதளத்தில் மட்டும் களமாடி, மக்கள் பாதுகாப்பைக் களவாடும் ஆட்சியை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை வன்முறைக் களமாகவும் ரவுடிகளின் கூடாரமாகவும் மாற்றிய அறிவாலய ஆட்சி தமிழக மக்களால் அழித்தொழிக்கப்படும் நாள் தொலைவில் இல்லை! எனக் குறிப்பிட்டிருக்கிரார். எடப்பாடி - டிடிவி - அண்ணாமலை; மனக்கசப்புகள் மறந்து மேடையேறி கரம்கோர்த்த NDA தலைவர்கள்! - Photo Album

விகடன் 25 Jan 2026 10:29 am

எங்களுக்கு விசில் தேவையில்லை; குக்கர் விசில் இருக்கிறது- தமிழிசை சௌந்தரராஜன்

“எங்களுக்கு விசில் தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பல கட்சிகள் இணைய உள்ளன’’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் நேற்று ( ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம், தவெக என்டிஏ கூட்டணிக்கு வருமா? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதா? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் அதற்கு பதிலளித்த அவர், சி.பி.ஐ விஜய்யை டெல்லிக்கு வரவைத்தது விசாரணைக்காகத் தான். அவரை என்டிஏ கூட்டணிக்கு வர வைப்பதற்காக இல்லை. தேர்தலைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக எப்போது வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம். இப்போது எங்கள் கூட்டணிக்கு விசில் (தவெக) தேவையில்லை . எங்கள் கூட்டணியில் ஏற்கனவே விசில் (அமமுகவின் குக்கர் சின்னம்) இருக்கிறது. எங்கள் கூட்டணியில் அமமுக உள்ளது. அவர்களின் குக்கர் சின்னத்திலும் விசில் இருக்கிறது. விசில் சின்னம் அதுவே எங்கள் கூட்டணிக்கு போதும். அதனால், எங்களுக்கு விசில் சின்னம் தேவையில்லை. இனி மேலும் எங்கள் கூட்டணிக்கு பலக் கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் கூட்டணி உறுதியானக் கூட்டணியாகத் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 9:32 am

T 20 World Cup: வங்கதேச அணியைத் தொடர்ந்து பாகிஸ்தானும் விலகுகிறதா?- PCB தலைவர் அளித்த பதில் என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. இப்போட்டிகளுக்கான அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேச அணி விலகியது. வங்கதேச அணி அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் அணி தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியது. அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக்கு குழு இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐசிசி இந்நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, வங்கதேசத்திற்கு ஐசிசி அநியாயம் செய்துள்ளது. ஐசிசி கூட்டத்திலும் நான் இதையேதான் சொன்னேன். ஒரு அணி எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள். ஆனால் மற்றொரு அணி அதைசெய்தால் அதற்கு அனுமதி கிடையாது. அதனால்தான் நாங்கள் வங்கதேச அணியின் பக்கம் நிற்கிறோம், அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் ஒரு முக்கியமான அணி, அவர்களுக்கு இப்படியான ஒரு அநீதியைச் செய்யக்கூடாது. வங்கதேசத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகுமா? என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 8:59 am

T 20 World Cup: வங்கதேச அணியைத் தொடர்ந்து பாகிஸ்தானும் விலகுகிறதா?- PCB தலைவர் அளித்த பதில் என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. இப்போட்டிகளுக்கான அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேச அணி விலகியது. வங்கதேச அணி அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் அணி தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியது. அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக்கு குழு இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐசிசி இந்நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, வங்கதேசத்திற்கு ஐசிசி அநியாயம் செய்துள்ளது. ஐசிசி கூட்டத்திலும் நான் இதையேதான் சொன்னேன். ஒரு அணி எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள். ஆனால் மற்றொரு அணி அதைசெய்தால் அதற்கு அனுமதி கிடையாது. அதனால்தான் நாங்கள் வங்கதேச அணியின் பக்கம் நிற்கிறோம், அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் ஒரு முக்கியமான அணி, அவர்களுக்கு இப்படியான ஒரு அநீதியைச் செய்யக்கூடாது. வங்கதேசத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகுமா? என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 8:59 am