``DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும் - உதயநிதி விழாவில் கமல்
தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டு தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அந்த ஒப்பந்தத்தின்படி தற்போது மாநிலங்களவையில் எம்.பி-யாக இருக்கிறார் கமல். ஸ்டாலின் - கமல் இவ்வாறிருக்க 10 நாள்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் கமல், ``எதுக்காக நீங்க தி.மு.க-வோடு சேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களேன்னு கேட்டீங்கனா... ஆமா ரிமோட் தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து ரிமோட்ட தூக்கிட்டு போயிட்றான்... அப்படின்னு எடுத்த முடிவு இது. இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க என்று தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து பேசியிருந்தார். அபாய கட்அவுட்கள்; நடைபாதை பேனர்கள்; உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்! - உதயநிதி பர்த்டே காட்சிகள் இந்த நிலையில் சென்னையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க-வுடன் சேர்ந்தது பற்றி கமல் மீண்டும் விளக்கியிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய கமல் , ``இது அரசியல் இக்கட்டுக்காகவோ சூழலுக்காகவோ நான் சேர்ந்த இடமல்ல. நான் சேரவேண்டிய இடம்தான் இது. எங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரேமாதிரியானது. நாங்கள் இதை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்று போர்க்குரல் கொடுப்பது இவர்களோடு அல்ல. இதனை நடத்த வேண்டும் என்று போட்டியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது நாங்கள் சொன்ன ஐடியாவாக இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு செயல்படுத்திக் காட்டியவர்கள் இவர்கள். இவர்களோடு சேர்வதா இல்லை யாரென்றே தெரியாதவர்களுடன் சேர்வதா... உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன் கலைஞருக்கு ஓய்வு கொடுத்தது சரிதான். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அந்த ஓய்வுகூட கொடுக்கலனா 90 வயதுக்கு மேல அவர் வாழ்ந்திருக்க மாட்டார். அந்த ஓய்வுக்கு நன்றி. அதேபோல் அவருடைய பேரனும் நீண்ட நாள் வாழ்ந்து இந்த அமைப்புக்கு நன்மை சேர்க்க வேண்டும். தி.மு.க என்பது ஒரு உணர்வு. என் வயது என்னவோ அதுதான் தி.மு.க-வைப் பற்றிய என் புரிதல். நான் கண்திறந்தபோது பார்த்த சூரியன் இதான். இருட்டு வரும், நாளை சூரியன் வரும். இருட்டைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் விடியும், உதயம் வரும். உதயநிதியும் வருவாரு, முதலமைச்சரும்... இன்னொரு பாராட்டு விழாவுக்கு இந்த அரங்கம் பத்தாது என்று சிரித்தவாறே கூறினார். ‘SIR புயல்!’ - சொதப்பும் தேர்தல் ஆணையம்... யாருக்கு சேதாரம்?
``DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும் - உதயநிதி விழாவில் கமல்
தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டு தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அந்த ஒப்பந்தத்தின்படி தற்போது மாநிலங்களவையில் எம்.பி-யாக இருக்கிறார் கமல். ஸ்டாலின் - கமல் இவ்வாறிருக்க 10 நாள்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் கமல், ``எதுக்காக நீங்க தி.மு.க-வோடு சேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களேன்னு கேட்டீங்கனா... ஆமா ரிமோட் தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து ரிமோட்ட தூக்கிட்டு போயிட்றான்... அப்படின்னு எடுத்த முடிவு இது. இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க என்று தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து பேசியிருந்தார். அபாய கட்அவுட்கள்; நடைபாதை பேனர்கள்; உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்! - உதயநிதி பர்த்டே காட்சிகள் இந்த நிலையில் சென்னையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க-வுடன் சேர்ந்தது பற்றி கமல் மீண்டும் விளக்கியிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய கமல் , ``இது அரசியல் இக்கட்டுக்காகவோ சூழலுக்காகவோ நான் சேர்ந்த இடமல்ல. நான் சேரவேண்டிய இடம்தான் இது. எங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரேமாதிரியானது. நாங்கள் இதை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்று போர்க்குரல் கொடுப்பது இவர்களோடு அல்ல. இதனை நடத்த வேண்டும் என்று போட்டியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது நாங்கள் சொன்ன ஐடியாவாக இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு செயல்படுத்திக் காட்டியவர்கள் இவர்கள். இவர்களோடு சேர்வதா இல்லை யாரென்றே தெரியாதவர்களுடன் சேர்வதா... உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன் கலைஞருக்கு ஓய்வு கொடுத்தது சரிதான். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அந்த ஓய்வுகூட கொடுக்கலனா 90 வயதுக்கு மேல அவர் வாழ்ந்திருக்க மாட்டார். அந்த ஓய்வுக்கு நன்றி. அதேபோல் அவருடைய பேரனும் நீண்ட நாள் வாழ்ந்து இந்த அமைப்புக்கு நன்மை சேர்க்க வேண்டும். தி.மு.க என்பது ஒரு உணர்வு. என் வயது என்னவோ அதுதான் தி.மு.க-வைப் பற்றிய என் புரிதல். நான் கண்திறந்தபோது பார்த்த சூரியன் இதான். இருட்டு வரும், நாளை சூரியன் வரும். இருட்டைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் விடியும், உதயம் வரும். உதயநிதியும் வருவாரு, முதலமைச்சரும்... இன்னொரு பாராட்டு விழாவுக்கு இந்த அரங்கம் பத்தாது என்று சிரித்தவாறே கூறினார். ‘SIR புயல்!’ - சொதப்பும் தேர்தல் ஆணையம்... யாருக்கு சேதாரம்?
'செங்கோட்டையனின் இன்னிங்க்ஸ் II''எடப்பாடிக்கு, Vijay போட்ட ஸ்கெட்ச்! | Elangovan Explains
'செங்கோட்டையனின் இன்னிங்க்ஸ் II''எடப்பாடிக்கு, Vijay போட்ட ஸ்கெட்ச்! | Elangovan Explains
TVK -ல் Sengottaiyan - Vijay Happy - EPS Setback - DMK Reaction| ADMK Ditwah cyclone Imperfect Show
TVK -ல் Sengottaiyan - Vijay Happy - EPS Setback - DMK Reaction| ADMK Ditwah cyclone Imperfect Show
``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக திண்டாடும் மக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியில், திருஞானசம்பந்தம் வள்ளுவர் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட வள்ளுவ சமுதாய குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாமல், வயல்வெளி வழியே எடுத்துச் செல்லும் அவலநிலை நான்கு தலைமுறைகளாக இன்று வரை தொடர்கிறது. மயிலாடுதுறையில் சமீபத்தில் கனமழை பெய்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று வள்ளுவ தெருவைச் சேர்ந்த கனகராஜ் (80) வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார். இவரின் உடலை நல்லடக்கம் செய்ய முழங்கால் அளவு தண்ணீருடன் பல இன்னல்களுக்கு இடையே வயல்வெளி வழியே எடுத்து செல்லும் துயர நிகழ்வானது சமூக வலைதளங்களில் பரவியது. வயல்வெளி வழியே சுடுகாட்டிற்கு செல்லும் மக்கள் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, நாங்க நாலு தலைமுறையாவே ரோடே இல்லாமல், வயல் வழியாதான் சுடுகாட்டுக்கு இறந்தவர்களை அடக்கம் பண்ண தூக்கிக்கொண்டு போகிறோம். நாங்களும் ஜெராக்ஸ் காப்பி வராதத்துக்கு முன்னாடி காலத்திலிருந்தே மனுவாக கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். எங்களுக்கு அப்ப தெரிந்தது எல்லாம் மனு கொடுக்கிறது மட்டும்தான். பாட்டன் பூட்டன் காலம் போய், எங்க காலமே வந்துவிட்டது. ஆனா, இப்ப வரை ரோடு மட்டும் போட்டபாடில்லை. வயல்ல வரப்பு கூட கொஞ்ச தூரம் தான் இருக்கும். மீதி தூரம் நடு வயல்ல தான் இறங்கி போக வேண்டும். சும்மா 250மீ தூரம் வயல்ல நடந்துதான் அந்த சுடுகாட்டுக்கு போக வேண்டும். வெயில் காலத்துல கூட தெரியவில்லை. இப்ப மழைக்காலம் வேற, இப்ப பெய்த மழையில் வயல்ல மூணு அடி ஆழத்துக்கு தண்ணி நிக்குது. இந்த தண்ணீரில் தனி மனிதன் நடந்து போவதே ரொம்ப சிரமம் தான். இதுல செத்து போனவர்களை தூக்கிக்கொண்டு போறது பெரும் பாடுதான். ரொம்ப போராடி மூணு அடி தண்ணீரில் முக்கால் அளவு நனைந்து ரொம்ப பொறுமையா பார்த்து பக்குவமாய் தான் எடுத்துக்கொண்டு போக வேண்டும். போன திங்கட்கிழமை கூட எங்க ஊர்ல கனகராஜ் என்று ஒருத்தர் இறந்துவிட்டார். அவரையும், இந்த வயல் வழியாகத்தான், சுடுகாட்டிற்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும் ஆனால், வயலில் பார்த்தால் ஒரே தண்ணியாவே இருந்துச்சி. வயல்வெளி வழியே சுடுகாட்டிற்கு செல்லும் மக்கள் எப்படி எடுத்து எடுத்துக்கொண்டு போவது என்று தெரியவில்லை. வேற வழியும் இல்லை. பல திண்டாட்டத்திற்கு அப்புறம் அந்த வயலில் உள்ள சேறும் சகதியுமான தண்ணீரிலேயே, நடக்க முடியாமல் நடந்து, முட்டி அளவு தண்ணீரில் முழுகி, அடக்கம் பண்ணிவிட்டு வருவதற்குள் ஒரே அவஸ்தையாக போய்விட்டது. அப்போதுதான் எங்க ஊரில் உள்ள ஒரு பையன் வீடியோ எடுத்து போட்டான். அப்படி இறந்துபோனவர்களின் உடலை காட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்றாலும், அங்கு அந்த உடலை வைத்து கடைசியாக சுத்தி வர கூட முடியாது. அடக்கம் மட்டும் தான் செய்ய முடியும். ஏன்னா? எங்க சுடுகாடு 10க்கு 10 என்று அந்த அளவு ரொம்ப சின்னதாக இருக்கும். இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம்; `சுடுகாட்டுக்கு சாலை' கேட்டு தொடர்ந்து போராடும் கிள்ளியூர் மக்கள் சுடுகாடும் அங்கங்க விரிசல் விட்டு மோசமாகத்தான் இருக்கு. கடந்த ரெண்டு வருசமா நாங்களும் தீவிரமா போராடுறோம். யூனியன் ஆபிஸ்ல நிறைய மனுக் கொடுத்திருக்கோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. எடுப்பதாகவும் தெரியல. வயல்வெளி வழியே சுடுகாட்டிற்கு செல்லும் மக்கள் எங்களுக்கு செத்து போனவங்கள அடக்கம் பண்ண இப்ப இருக்கும் சுடுகாடு இடத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி அடிப்படை வசதியோட புது சுடுகாடும், சுடுகாட்டுக்கு போறதுக்கு தார்சலையும் தரமான முறையில் அமைத்து கொடுத்துட்டாலே போதும், சீக்கிரம் அமைத்து கொடுத்துட்ட நல்லா இருக்கும். மழைக்காலமாக வேற இருக்கு, இவர அடக்கம் பண்ணதே பெரிய போராட்டமாதான் இருந்துச்சி, திரும்பவும் இப்படியென்றால் ரொம்ப கஷ்டமாகிடும் என்று கவலையுடன் கூறினர். இதுகுறித்து கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சன் கூறியதாவது, சுடுகாட்டிற்கு செல்வதற்கான சாலை அமைப்பதற்கான நிலம் தனிநபருக்கு சொந்தமான நிலமாக இருப்பதால், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலமாக சாலை அமைப்பதற்கு தேவையான நிலம் உரிமையாளரிடம் பெறப்பட்டு, நிலம் நகராட்சி ஆணையர் கொள்ளிடம் பெயரில் மாற்றிக்கொடுக்கப்பட்டால் சாலை அமைத்து தரலாம் என்று கூறினார். ``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொளந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம்பட்டு மக்கள்
அபாய கட்அவுட்கள்; நடைபாதை பேனர்கள்; உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்! - உதயநிதி பர்த்டே காட்சிகள்
நவம்பர் 27 ஆம் தேதியான இன்று துணை முதல்வரும் திமுகவின் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அறிவாலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை நகரின் முக்கியமான பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பாதசாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் திமுகவினரால் கட் அவுட்களும் பேனர்களும் வைக்கப்பட்டிருப்பது மக்களும் பெரும் சிரமத்தை கொடுத்திருக்கிறது. உதயநிதி பேனர் உதயநிதி பேனர் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வழக்கமாக அன்பகத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தும் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக அறிவாலயத்தில் வெகு விமர்சையாக தனது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுக தொண்டர்கள் உதயநிதியின் பிறந்தநாள் விழாக்களை நடத்தி வருகின்றனர். உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் திமுகவினர் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் பேனர்களையும் கட் அவுட்களையும் வைத்திருக்கின்றனர். பொது இடங்களில் பாதசாரிகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட், கொடிகள் போன்றவற்றை வைக்கக்கூடாது என நீதிபதிகள் பல்வேறு வழக்குகளில் அறிவுறுத்தியிருக்கின்றனர். அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள் அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள் அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் கடந்த டிசம்பரில்,'இனி கட்சி நிகழ்ச்சிகளுக்காக பொது இடங்களில் பேனர்கள் கட் அவுட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.' என திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உத்தரவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்புகள், சொந்தக் கட்சியின் அறிவுறுத்தல் என எதையும் பொருட்படுத்தாமல் உதயநிதியின் பிறந்த நாளுக்காக திமுகவினர் ஆபத்தான முறையில் வைத்திருக்கும் கட் அவுட்கள் பல இடங்களில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் பார்த்தவரையில் L.B.ரோட்டில் பெட்ரோல் பல்க் அருகே நடைபாதையில் எந்த ஊன்றுதலும் இல்லாமல் கிட்டத்தட்ட 20 அடி உயரத்துக்கு ஒரு பேனரை வைத்திருந்தனர். அடையாறிலிருந்து க்ரீன்வேஸ் சாலைக்குள் நுழைகையில் நான்கு முனையிலும் வாகனங்கள் செல்லக்கூடிய ஜங்ஷனிலும் இப்படியாக எந்த ஊன்றுதலும் இல்லாமல் பேட்ச் வடிவ பதாகையையும் பேனரையும் வைத்திருந்தனர். உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் க்ரீன்வேஸ் சாலை முழுவதும் பேனர்மயமே. அங்கிருந்து வெளியே வந்து ஆர்.ஏ.புரத்துக்குள் நுழைகையிலும் சாலை ஓரத்தில் 30 அடிக்கு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் உதயநிதியின் கட் அவுட் ஒன்றை வைத்திருந்தனர். அதை கடந்து சில மீட்டர் தூரத்திலேயே மீண்டும் நடைபாதையை மறித்து காலண்டர் வடிவில் ஒரு கட் அவுட். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் என எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய பகுதியில் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மக்களுக்கு அத்தனை இடையூறாக இருக்கிறது. 'எந்த ஆடம்பரமும் இல்லாமல் மக்களுக்கு பயனுள்ள வகையில் பிறந்தநாளை கொண்டாடுங்கள்...' என உதயநிதி செய்தி சொல்லியிருக்கிறார். ஆனால், தொண்டர்களின் புரிதல் வேறாக இருக்கிறது.
அபாய கட்அவுட்கள்; நடைபாதை பேனர்கள்; உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்! - உதயநிதி பர்த்டே காட்சிகள்
நவம்பர் 27 ஆம் தேதியான இன்று துணை முதல்வரும் திமுகவின் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அறிவாலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை நகரின் முக்கியமான பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பாதசாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் திமுகவினரால் கட் அவுட்களும் பேனர்களும் வைக்கப்பட்டிருப்பது மக்களும் பெரும் சிரமத்தை கொடுத்திருக்கிறது. உதயநிதி பேனர் உதயநிதி பேனர் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வழக்கமாக அன்பகத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தும் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக அறிவாலயத்தில் வெகு விமர்சையாக தனது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுக தொண்டர்கள் உதயநிதியின் பிறந்தநாள் விழாக்களை நடத்தி வருகின்றனர். உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் திமுகவினர் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் பேனர்களையும் கட் அவுட்களையும் வைத்திருக்கின்றனர். பொது இடங்களில் பாதசாரிகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட், கொடிகள் போன்றவற்றை வைக்கக்கூடாது என நீதிபதிகள் பல்வேறு வழக்குகளில் அறிவுறுத்தியிருக்கின்றனர். அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள் அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள் அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் கடந்த டிசம்பரில்,'இனி கட்சி நிகழ்ச்சிகளுக்காக பொது இடங்களில் பேனர்கள் கட் அவுட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.' என திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உத்தரவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்புகள், சொந்தக் கட்சியின் அறிவுறுத்தல் என எதையும் பொருட்படுத்தாமல் உதயநிதியின் பிறந்த நாளுக்காக திமுகவினர் ஆபத்தான முறையில் வைத்திருக்கும் கட் அவுட்கள் பல இடங்களில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் பார்த்தவரையில் L.B.ரோட்டில் பெட்ரோல் பல்க் அருகே நடைபாதையில் எந்த ஊன்றுதலும் இல்லாமல் கிட்டத்தட்ட 20 அடி உயரத்துக்கு ஒரு பேனரை வைத்திருந்தனர். அடையாறிலிருந்து க்ரீன்வேஸ் சாலைக்குள் நுழைகையில் நான்கு முனையிலும் வாகனங்கள் செல்லக்கூடிய ஜங்ஷனிலும் இப்படியாக எந்த ஊன்றுதலும் இல்லாமல் பேட்ச் வடிவ பதாகையையும் பேனரையும் வைத்திருந்தனர். உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் க்ரீன்வேஸ் சாலை முழுவதும் பேனர்மயமே. அங்கிருந்து வெளியே வந்து ஆர்.ஏ.புரத்துக்குள் நுழைகையிலும் சாலை ஓரத்தில் 30 அடிக்கு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் உதயநிதியின் கட் அவுட் ஒன்றை வைத்திருந்தனர். அதை கடந்து சில மீட்டர் தூரத்திலேயே மீண்டும் நடைபாதையை மறித்து காலண்டர் வடிவில் ஒரு கட் அவுட். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் என எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய பகுதியில் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மக்களுக்கு அத்தனை இடையூறாக இருக்கிறது. 'எந்த ஆடம்பரமும் இல்லாமல் மக்களுக்கு பயனுள்ள வகையில் பிறந்தநாளை கொண்டாடுங்கள்...' என உதயநிதி செய்தி சொல்லியிருக்கிறார். ஆனால், தொண்டர்களின் புரிதல் வேறாக இருக்கிறது.
TVK: தவெக-வில் இணைந்த செங்கோட்டையனுக்கு இரண்டு பொறுப்புகள் - அறிவித்த விஜய்!
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு இரண்டு பதவி பொறுப்புகளை வழங்கி இருக்கிறார் விஜய். கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். முழு விவரங்களைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். pic.twitter.com/SzgCds6sMy — TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025
SIR: ``இது மனித உரிமை மீறல் - RSS அமைப்பின் ஆசிரியர்கள் பிரிவு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!
இந்தியாவில் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) நடைபெறும் மாநிலங்களில் இந்த விவகாரம்தான் பேசுபொருளாக இருக்கிறது. குறிப்பாக SIR பணியில் ஈடுபடும் BLO-க்களின் வேலைப் பளூ, அதிகாரிகளின் மிரட்டல் எனப் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அது தொடர்பாக நம் விகடனில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி விரிவான செய்தியாக பதிவு செய்திருந்தோம். தற்போது அதே பிரச்னையை சுட்டிக்காட்டி அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்ஷிக் மகாசங்கம் (ABRSM) தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது. SIR கல்வித் துறையில் RSS-ன் செல்வாக்கை விரிவுபடுத்தும் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்ஷிக் மகாசங்கம் (ABRSM) 1988ல் நிறுவப்பட்டது. பள்ளி முதல் பல்கலைக்கழக நிலை வரையிலான ஆசிரியர்களை ஒருங்கிணைப்பது இந்த அமைப்பின் முக்கியப் பணியாகும். மாநில அளவிலான அமைப்புகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக அளவிலான அமைப்புகள் என 24 மாநிலங்களில் இந்த அமைப்பு பரவியுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கீதா பட் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், SIR செயல்முறை நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் ஒரு முக்கியமான பயிற்சி. வாக்காளர் பட்டியல்களின் துல்லியம் நியாயமான தேர்தல்களுக்கு அடிப்படை என்பதால், ஆசிரியர் சமூகம் எப்போதும் இந்த தேசியப் பொறுப்பை உண்மையாக நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், BLOக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த செயல்முறை அதிகப்படியான பணிச்சுமை, 16-18 மணிநேர தினசரி களப்பணி, போர்டல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை ஆகியவற்றை எதிர்கொள்ளும் BLOக்களிடையே மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் அதிகரித்திருக்கிறது. SIR அதிகாரிகளின் தவறான நடத்தை பல மாநிலங்களில் BLO ஆசிரியர்களிடையே கடுமையான மன அழுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சில இடங்களில் துயரமான தற்கொலைகளுக்கு கூட வழிவகுத்துள்ளது. இது ஆசிரியச் சமூகத்தை தொந்தரவு செய்வது மட்டுமல்லாமல், மனித உரிமை மீறலையும் குறிக்கிறது. இந்த நிர்வாக நடைமுறையை ஜனநாயக நிறுவனங்களின் நெறிமுறை தரநிலைகளுக்கு ஏற்றதாக கருத முடியாது. இரண்டாவதாக, BLO செயலி மற்றும் போர்ட்டலின் அடிக்கடி செயலிழப்பு, நெட்வொர்க் இணைப்பு இல்லாமை, OTP தோல்விகள், தரவு பதிவேற்ற தோல்விகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி இல்லாமை போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் BLOக்கள் பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட வளங்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. மூன்றாவதாக குறுகிய காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சம்பளத்தை நிறுத்தி வைப்பது, அதிகாரத் தொனியில் கேட்கப்படும் மரியாதையற்ற கேள்விகள், குற்றப்பத்திரிகைகள், இடைநீக்கங்கள், FIR அச்சுறுத்தல்கள், துஷ்பிரயோக நடத்தை ஆகியவற்றையும் BLOக்கள் எதிர்கொள்கின்றனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பணியின் போது உருவாக்கப்படும் இந்த அச்சுறுத்தும் சூழல், தேர்தல்களின் கண்ணியத்திற்கும் ஆசிரியர் சமூகத்தின் மரியாதைக்கும் முரணானது. நான்காவதாக, BLOக்கள் பெரும்பாலும் பொதுமக்களின் கோபத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெரும்பாலான மக்களிடம் அவர்களின் 20 ஆண்டு பழமையான ஆவணங்கள் இல்லை. அதனால் அவர்கள் BLOக்களுக்கு ஒத்துழைப்பதில்லை. சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். இந்த SIR குறித்து தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு போதுமான அளவு கற்பிக்கவுமில்லை. சில இடங்களில் மக்கள் இது தேவையற்றது என்றும் நினைக்கிறார்கள். எனவே, மன அழுத்தமில்லாத, துல்லியமான மற்றும் தரமான பணியை உறுதி செய்ய வேண்டும் என ABRSM விரும்புகிறது. அதற்காக SIR காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். SIRன் அழுத்தம் காரணமாக மரணமடைந்த அல்லது தற்கொலை செய்து கொண்ட BLOக்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும். இதுபோன்ற அனைத்து புகார்களையும் உயர் மட்டத்தில் விசாரிக்க வேண்டும். குற்றமிழைத்த அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும். ABRSM அமைப்பின் பொதுச் செயலாளர் கீதா பட் தொழில்நுட்ப உதவியாளர்கள், கணினி ஆபரேட்டர்கள், டேப்லெட்டுகள்/மடிக்கணினிகள், பயணக் கொடுப்பனவுகள் போன்றவற்றை BLOக்களுக்கு வழங்க வேண்டும். எந்தவிதமான அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல், துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். BLOக்களுக்கு பணிச்சுமை, அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ப மரியாதைக்குரிய கூடுதல் கௌரவ ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா?
TVK : 'விசுவாசம், தவிப்பு, சங்கடம்.!' - பனையூரில் தயங்கி நின்ற செங்கோட்டையன்!
இரண்டு நாட்களாக சென்னையை ரவுண்ட் அடித்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த செங்கோட்டையன், இன்று பனையூருக்கு வண்டியை திருப்பிவிட்டார். விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதில் எவ்வளவு மனவேதனையில் இருந்தேன் என்பது உங்களுக்கு தெரியும் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டுதான் கோவையிலிருந்து சென்னைக்கு விமானமே ஏறினார். செங்கோட்டையன் ஆனால், இன்று தவெகவில் இணைந்த பிறகும் செங்கோட்டையன் முழுமையாக ஆசுவாசமாக உணர்ந்ததைப் போல தெரியவில்லை. பனையூரில் செங்கோட்டையன் வெளிக்காட்டிய உடல் மொழியிலும் செயல்பாட்டிலும் சின்ன சின்ன தயக்கங்களும் சங்கடமும் இருந்ததை உணர முடிந்தது. செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி. அதிமுகவின் சூப்பர் சீனியர். '1975 இல் கோவையில் பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தியதற்காக எம்.ஜி.ஆர் என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார்.' என செங்கோட்டையன் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூட பேசியிருந்தார். அத்தனை மூத்த அரசியல்வாதி 50 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கட்சியில் விசுவாசமாக பயணித்துவிட்டு, இன்னமும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத கட்சியில் இணைவது அத்தனை எளிதான விஷயமல்ல. செங்கோட்டையன் செங்கோட்டையனிடம் வெளிப்பட்ட தயக்கமும் இதை அப்பட்டமாக உணர்த்தியது. தவெகவில் இணைவதற்காக காலை 9:50 மணியளவில் ஒரு BMW காரில் வந்திறங்கினார் செங்கோட்டையன். நேற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகும் காரில் அதிமுக கொடியை கழட்டாமல் இருந்தவர், இன்றைக்கு சட்டைப்பையில் ஜெயலலிதாவின் படத்துடன்தான் விஜய்யை சந்திக்கவே வந்தார். செய்தியாளர் சந்திப்பில் இதை ஒரு கேள்வியாகவும் அவரிடம் கேட்டனர். 'இந்த படத்தை எடுத்துட்டா ஒரே நாள்ல எப்படி மாறிட்டான் பாருங்கன்னு நீங்களே பேசுவீங்களே...' என கொஞ்சம் நகைச்சுவையாக தனக்கிருக்கும் நெருடலையும் சங்கடத்தையும் வெளிக்காட்டியிருந்தார். அதேமாதிரி, 'அதிமுக கரை வேட்டியை கட்டக்கூடாது என்றுதான் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். படம் வைக்கக்கூடாது என அவர்களால் சொல்ல முடியாது. தவெகவும் ஒரு ஜனநாயக இயக்கம். அதில் யாருடைய படத்தை வேண்டுமானாலும் வைக்கலாம்.' என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சென்டிமென்டையும் விடாமல் பேசினார். செங்கோட்டையன் அதேமாதிரி, பத்திரிகையாளர் சந்திப்பின் தொடக்கத்தில் ஆதவ் தவெக துண்டை செங்கோட்டையனின் தோளில் போட்டுவிடுவார். அப்போதும் அதை மறுத்து எடுத்துவிடுவார். இத்தனைக்கும் செங்கோட்டையன் பின்னால் நின்று கொண்டிருந்த அவரின் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் தோளில் தவெக துண்டுடனேயே நின்று கொண்டிருந்தனர். துண்டை மறுத்துவிட்டு, 'வேணாம்ப்பா... கிண்டலடிப்பாங்க.. ' என்றும் ஆதவ்விடம் கூறியிருப்பார். அரைநூற்றாண்டாக அதிமுக கரை வேட்டி கட்டியவர், திடீரென தவெக துண்டை தோளில் போட்டுக் கொண்டால் அதிமுக அபிமானிகளால் தான் எப்படி பார்க்கப்படுவோம் என்கிற தவிப்பு செங்கோட்டையனிடம் இருந்ததையும் அறிய முடிந்தது. காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! - பரபர அப்டேஸ்! அதேமாதிரி, பத்திரிகையாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கிட்டத்தட்ட 18 நிமிடங்களுக்கு பேசியிருந்தார். அதில் ஒரு இடத்தில் மட்டுமே விஜய்யை தலைவர் எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார். பெரும்பாலும் அன்பு இளவல் என்றே விஜய்யை அடையாளப்படுத்தவும் செய்தார். 'தளபதின்னு எங்கயும் சொல்லல பாருங்க. ஒரே நாள்ல எப்படி மாற முடியும்...கஷ்டம்தான்...' என சில தவெக நிர்வாகிகளும் செங்கோட்டையனின் தயக்கத்தை புரிந்துகொண்டு முணுமுணுத்தனர். விஜய் - செங்கோட்டையன் விஜய் செங்கோட்டையனை அண்ணன் என்கிறார். ஆனால், செங்கோட்டையனால் விஜய்யை தம்பி, தலைவர், தளபதி என தயக்கமின்றி கூற முடியவில்லை. ஆதவ் - செங்கோட்டையன் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஜரூராக இருந்தனர். விஜய் போட்டு விட்ட துண்டை கடைசி வரை கழட்டாமல் அப்படியே போட்டிருந்தனர். மேடைக்கு முன்பாக முதல் வரிசையில் இடம் பிடிக்கவும், பத்திரிகையாளர் சந்திப்பில் கேமரா ப்ரேமுக்குள் நிற்கவும் அவ்வளவு போட்டி போட்டனர். அதே உற்சாகத்தை செங்கோட்டையனின் முகத்தில் பார்க்க முடியவில்லை. அதிமுகவின் பெருந்தலைவர்களுக்கு இன்னமும் விசுவாசமாக இருக்கிறேன் என்பதையும் செங்கோட்டையன் பனையூரில் காட்டிவிட்டார் என்று தான் தோன்றியது. அதேநேரத்தில், தவெகவை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் அவருக்கு இருக்கும் சங்கடத்தையும் தவிப்பையும் கூட அப்பட்டமாக காட்டிவிட்டது எனலாம். நேரத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு வேடத்தை மாற்றி மாற்றி கட்டிக்கொள்வதுதான் அரசியலின் அடிப்படை தகுதி. இது செங்கோட்டையனுக்கு தெரியாத விஷயம் ஒன்றில்லை. இது ஒரு Starting Trouble என்று கூட புரிந்துகொள்ளலாம்.! TVK: பனையூரில் செங்கோட்டையன் & கோ - த.வெ.க வில் இணைபவர்கள் யார் யார்?
TVK : 'விசுவாசம், தவிப்பு, சங்கடம்.!' - பனையூரில் தயங்கி நின்ற செங்கோட்டையன்!
இரண்டு நாட்களாக சென்னையை ரவுண்ட் அடித்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த செங்கோட்டையன், இன்று பனையூருக்கு வண்டியை திருப்பிவிட்டார். விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதில் எவ்வளவு மனவேதனையில் இருந்தேன் என்பது உங்களுக்கு தெரியும் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டுதான் கோவையிலிருந்து சென்னைக்கு விமானமே ஏறினார். செங்கோட்டையன் ஆனால், இன்று தவெகவில் இணைந்த பிறகும் செங்கோட்டையன் முழுமையாக ஆசுவாசமாக உணர்ந்ததைப் போல தெரியவில்லை. பனையூரில் செங்கோட்டையன் வெளிக்காட்டிய உடல் மொழியிலும் செயல்பாட்டிலும் சின்ன சின்ன தயக்கங்களும் சங்கடமும் இருந்ததை உணர முடிந்தது. செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி. அதிமுகவின் சூப்பர் சீனியர். '1975 இல் கோவையில் பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தியதற்காக எம்.ஜி.ஆர் என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார்.' என செங்கோட்டையன் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூட பேசியிருந்தார். அத்தனை மூத்த அரசியல்வாதி 50 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கட்சியில் விசுவாசமாக பயணித்துவிட்டு, இன்னமும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத கட்சியில் இணைவது அத்தனை எளிதான விஷயமல்ல. செங்கோட்டையன் செங்கோட்டையனிடம் வெளிப்பட்ட தயக்கமும் இதை அப்பட்டமாக உணர்த்தியது. தவெகவில் இணைவதற்காக காலை 9:50 மணியளவில் ஒரு BMW காரில் வந்திறங்கினார் செங்கோட்டையன். நேற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகும் காரில் அதிமுக கொடியை கழட்டாமல் இருந்தவர், இன்றைக்கு சட்டைப்பையில் ஜெயலலிதாவின் படத்துடன்தான் விஜய்யை சந்திக்கவே வந்தார். செய்தியாளர் சந்திப்பில் இதை ஒரு கேள்வியாகவும் அவரிடம் கேட்டனர். 'இந்த படத்தை எடுத்துட்டா ஒரே நாள்ல எப்படி மாறிட்டான் பாருங்கன்னு நீங்களே பேசுவீங்களே...' என கொஞ்சம் நகைச்சுவையாக தனக்கிருக்கும் நெருடலையும் சங்கடத்தையும் வெளிக்காட்டியிருந்தார். அதேமாதிரி, 'அதிமுக கரை வேட்டியை கட்டக்கூடாது என்றுதான் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். படம் வைக்கக்கூடாது என அவர்களால் சொல்ல முடியாது. தவெகவும் ஒரு ஜனநாயக இயக்கம். அதில் யாருடைய படத்தை வேண்டுமானாலும் வைக்கலாம்.' என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சென்டிமென்டையும் விடாமல் பேசினார். செங்கோட்டையன் அதேமாதிரி, பத்திரிகையாளர் சந்திப்பின் தொடக்கத்தில் ஆதவ் தவெக துண்டை செங்கோட்டையனின் தோளில் போட்டுவிடுவார். அப்போதும் அதை மறுத்து எடுத்துவிடுவார். இத்தனைக்கும் செங்கோட்டையன் பின்னால் நின்று கொண்டிருந்த அவரின் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் தோளில் தவெக துண்டுடனேயே நின்று கொண்டிருந்தனர். துண்டை மறுத்துவிட்டு, 'வேணாம்ப்பா... கிண்டலடிப்பாங்க.. ' என்றும் ஆதவ்விடம் கூறியிருப்பார். அரைநூற்றாண்டாக அதிமுக கரை வேட்டி கட்டியவர், திடீரென தவெக துண்டை தோளில் போட்டுக் கொண்டால் அதிமுக அபிமானிகளால் தான் எப்படி பார்க்கப்படுவோம் என்கிற தவிப்பு செங்கோட்டையனிடம் இருந்ததையும் அறிய முடிந்தது. காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! - பரபர அப்டேஸ்! அதேமாதிரி, பத்திரிகையாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கிட்டத்தட்ட 18 நிமிடங்களுக்கு பேசியிருந்தார். அதில் ஒரு இடத்தில் மட்டுமே விஜய்யை தலைவர் எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார். பெரும்பாலும் அன்பு இளவல் என்றே விஜய்யை அடையாளப்படுத்தவும் செய்தார். 'தளபதின்னு எங்கயும் சொல்லல பாருங்க. ஒரே நாள்ல எப்படி மாற முடியும்...கஷ்டம்தான்...' என சில தவெக நிர்வாகிகளும் செங்கோட்டையனின் தயக்கத்தை புரிந்துகொண்டு முணுமுணுத்தனர். விஜய் - செங்கோட்டையன் விஜய் செங்கோட்டையனை அண்ணன் என்கிறார். ஆனால், செங்கோட்டையனால் விஜய்யை தம்பி, தலைவர், தளபதி என தயக்கமின்றி கூற முடியவில்லை. ஆதவ் - செங்கோட்டையன் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஜரூராக இருந்தனர். விஜய் போட்டு விட்ட துண்டை கடைசி வரை கழட்டாமல் அப்படியே போட்டிருந்தனர். மேடைக்கு முன்பாக முதல் வரிசையில் இடம் பிடிக்கவும், பத்திரிகையாளர் சந்திப்பில் கேமரா ப்ரேமுக்குள் நிற்கவும் அவ்வளவு போட்டி போட்டனர். அதே உற்சாகத்தை செங்கோட்டையனின் முகத்தில் பார்க்க முடியவில்லை. அதிமுகவின் பெருந்தலைவர்களுக்கு இன்னமும் விசுவாசமாக இருக்கிறேன் என்பதையும் செங்கோட்டையன் பனையூரில் காட்டிவிட்டார் என்று தான் தோன்றியது. அதேநேரத்தில், தவெகவை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் அவருக்கு இருக்கும் சங்கடத்தையும் தவிப்பையும் கூட அப்பட்டமாக காட்டிவிட்டது எனலாம். நேரத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு வேடத்தை மாற்றி மாற்றி கட்டிக்கொள்வதுதான் அரசியலின் அடிப்படை தகுதி. இது செங்கோட்டையனுக்கு தெரியாத விஷயம் ஒன்றில்லை. இது ஒரு Starting Trouble என்று கூட புரிந்துகொள்ளலாம்.! TVK: பனையூரில் செங்கோட்டையன் & கோ - த.வெ.க வில் இணைபவர்கள் யார் யார்?
புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக; எதிர்ப்புகளை மீறி நண்பருக்கு கைகொடுப்பாரா ரங்கசாமி?
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். அதனடிப்படையில் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாகச் சென்று மக்களைச் சந்திக்க இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல்வர் ரங்கசாமி அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கு மனு ஒன்றை அளித்திருக்கிறது. அந்த மனுவில், `புதுச்சேரியில் நடிகர் விஜய்யின் ரோடு ஷோ நடத்துவதற்கு த.வெ.க-வினர் அனுமதி கேட்டிருக்கின்றனர். கரூரில் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் உயிரிழந்தனர். அதைக் கவனத்தில் கொண்டு புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதையும் மீறி அனுமதி கொடுத்தால் போராட்டம் நடத்துவோம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ``அண்ணன் செங்கோட்டையன் அரசியல் அனுபவமும், களப்பணியும் தவெக-வுக்கு உறுதுணையாக இருக்கும்'' - விஜய் அதேபோல சமூக ஆர்வலர் அசோக்ராஜா என்பவர் டி.ஜி.பி அலுவலகத்தில் கொடுத்திருந்த மனுவில், `பொது இடங்களில் குறிப்பாக பிரதான சாலைகளில் அதிகளவு கூட்டத்தைக் கூட்டும் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகள், எவ்வளவு ஆபத்தானது என்று கரூர் அசம்பாவிதம் நமக்கு தெளிவாகக் காட்டியிருக்கிறது. புதுச்சேரியில் இருக்கும் பிரதான சாலைகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவியும் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கினால், சிறிய ஊரான புதுச்சேரியில் அதிகளவு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, மாணவர்களின் படிப்பு போன்றவற்றுடன், முதியவர்கள் மற்றும் நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள். டி.ஜி.பி-யிடம் மனு கொடுத்த சமூக ஆர்வலர் அசோக் ராஜா மக்களின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் முன்னுரிமை கொடுத்து நடிகர் விஜய்யின் ரோடு ஷோவுக்காக த.வெ.க-வினர் கேட்கும் அனுமதியைத் தரக்கூடாது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மைதானம் அல்லது, மூடப்பட்ட இடத்தில் அவர்களின் கூட்டங்களுக்கு அனுமதி தரலாம். பொது இடங்களில் ரோடு ஷோ நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில் காவல்துறை டி.ஜி.பி-யிடம் மனு அளித்த த.வெ.க-வினர், என். ஆனந்தின் உத்தரவுப்படி அப்படியே சட்டப்பேரவைக்குச் சென்று முதல்வர் ரங்கசாமியிடமும் அனுமதி கேட்டு மனு அளித்தனர். அதை வாங்கிக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, `பார்க்கிறேன்’ என்ற ஒற்றை வார்த்தையுடன் தன்னுடைய வழக்கமான ஆசியையும் கொடுத்து அனுப்பினார். முதல்வர் ரங்கசாமிக்கு என். ஆனந்தும், நடிகர் விஜய்யும் நண்பர்கள். அதனால் முதல்வர் ரங்கசாமி தங்களுக்குக் கண்டிப்பாக கை கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் த.வெ.க-வினர். புதுச்சேரி: 8 மணி நேரம் `ரோடு ஷோ’... தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன?
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: திமுக தொண்டர்களின் கொண்டாட்ட புகைப்படங்கள் | Photo Album
TVK: `அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு.! - மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
தவெக வந்தவுடன் அண்ணன் செங்கோட்டையன் சொன்ன தேர்தல் வியூகம் இதுதான் - ஆதவ் அர்ஜுனா
இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார். கடந்த சில தினங்களாக செங்கோட்டையன் விஜய்யுடன் இணையப்போவதாக பரபரப்பான விவாதங்கள் நடந்தன. இதையடுத்து நேற்று எம்.எல்.ஏ பதவி ராஜினாமா, உடனே விஜய் சந்திப்பு, இன்றைக்கு தவெகவில் இணைந்தது என படபடவென காய்களை நகர்த்தியிருக்கிறார் செங்கோட்டையன். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார். விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன் ``விஜய்யின் தவெக கட்சியில் நான் இணைந்தது ஏன்?'' - செங்கோட்டையன் விளக்கம் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் சரியில்லை, அதிமுகவை ஒன்றிணைக்க முடியவில்லை, திமுக - அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்று கூறி தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வரவேண்டுமென தவெகவில் இணைந்திருப்பதாக செங்கோட்டையன் கூறியிருக்கிறார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது குறித்துப் பேசியிருக்கும் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, 1977ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருடன் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று ஒரு பெரும் வரலாறு ஆரம்பித்ததில் பங்காற்றியவர். அதன்பிறகு ஜெயலலிதா அவர்கள் வரலாறு தொடங்கியபோது உறுதுணையாக இருந்தார். இப்போது மூன்றாவது முறையாக ஒரு புதிய வரலாற்றை உருவாக்க தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிக்குப் பெரும் உறுதுணையாக இருக்கப்போகிறார் அண்ணன் செங்கோட்டையன். அன்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதல்வராக உறுதுணையாக இருந்தவர், இப்போது விஜய் அவர்களை தமிழகத்தின் முதல்வராக்க, புதிய வரலாற்றை உருவாக்க முடிவெடுத்திருக்கிறார் அண்ணன் செங்கோட்டையன். ஆதவ் அர்ஜுனா ``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய் தேசிய கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிகள் வரை அவரை அழைந்தன. ஆனால், அவரது முடிவு தவெகவில் இணைவதாக இருந்திருக்கிறது. 'தவெக வாக்கு வங்கி 28 சதவிகிதம் என கணிக்கப்படுகிறது. இன்னும் ஒரு 10 சதவிகிதத்தை நோக்கி உழைத்தால் மாபெரும் வெற்றி நிச்சயம். 18 வயதிலிருந்து 40 வயது வரை இருப்பவர்கள் ஆதரவு இருக்கிறது. அதை இன்னும் விரிவுபடுத்தி 90 வயதுவரை இருப்பவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்' என்று தேர்தல் வியூக அறிவுரைகளை கட்சியில் இணைந்தவுடன் சொல்லியிருக்கிறார் அண்ணன் செங்கோட்டையன். 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்குவோம் என்று பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
தவெக வந்தவுடன் அண்ணன் செங்கோட்டையன் சொன்ன தேர்தல் வியூகம் இதுதான் - ஆதவ் அர்ஜுனா
இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார். கடந்த சில தினங்களாக செங்கோட்டையன் விஜய்யுடன் இணையப்போவதாக பரபரப்பான விவாதங்கள் நடந்தன. இதையடுத்து நேற்று எம்.எல்.ஏ பதவி ராஜினாமா, உடனே விஜய் சந்திப்பு, இன்றைக்கு தவெகவில் இணைந்தது என படபடவென காய்களை நகர்த்தியிருக்கிறார் செங்கோட்டையன். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார். விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன் ``விஜய்யின் தவெக கட்சியில் நான் இணைந்தது ஏன்?'' - செங்கோட்டையன் விளக்கம் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் சரியில்லை, அதிமுகவை ஒன்றிணைக்க முடியவில்லை, திமுக - அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்று கூறி தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வரவேண்டுமென தவெகவில் இணைந்திருப்பதாக செங்கோட்டையன் கூறியிருக்கிறார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது குறித்துப் பேசியிருக்கும் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, 1977ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருடன் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று ஒரு பெரும் வரலாறு ஆரம்பித்ததில் பங்காற்றியவர். அதன்பிறகு ஜெயலலிதா அவர்கள் வரலாறு தொடங்கியபோது உறுதுணையாக இருந்தார். இப்போது மூன்றாவது முறையாக ஒரு புதிய வரலாற்றை உருவாக்க தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிக்குப் பெரும் உறுதுணையாக இருக்கப்போகிறார் அண்ணன் செங்கோட்டையன். அன்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதல்வராக உறுதுணையாக இருந்தவர், இப்போது விஜய் அவர்களை தமிழகத்தின் முதல்வராக்க, புதிய வரலாற்றை உருவாக்க முடிவெடுத்திருக்கிறார் அண்ணன் செங்கோட்டையன். ஆதவ் அர்ஜுனா ``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய் தேசிய கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிகள் வரை அவரை அழைந்தன. ஆனால், அவரது முடிவு தவெகவில் இணைவதாக இருந்திருக்கிறது. 'தவெக வாக்கு வங்கி 28 சதவிகிதம் என கணிக்கப்படுகிறது. இன்னும் ஒரு 10 சதவிகிதத்தை நோக்கி உழைத்தால் மாபெரும் வெற்றி நிச்சயம். 18 வயதிலிருந்து 40 வயது வரை இருப்பவர்கள் ஆதரவு இருக்கிறது. அதை இன்னும் விரிவுபடுத்தி 90 வயதுவரை இருப்பவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்' என்று தேர்தல் வியூக அறிவுரைகளை கட்சியில் இணைந்தவுடன் சொல்லியிருக்கிறார் அண்ணன் செங்கோட்டையன். 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்குவோம் என்று பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
`புதுச்சேரி பாஜக-வில் நீண்டகால தலைவர்’ - தவெகவில் தஞ்சமடைய என்ன காரணம்? யார் இந்த சாமிநாதன்?
யார் இந்த சாமிநாதன் ? த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அவரின் பனையூர் அலுவலகத்தில், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அக்கட்சியில் இணைந்தார். அதேபோல அந்த விழாவில் புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதியின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அசனா இருவரும், விஜய் முன்பு அக்கட்சியில் இணைந்தனர். புதுச்சேரி லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன், கடந்த 2015 முதல் 2023 வரை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்தவர். புதுச்சேரி பா.ஜ.க-வில் நீண்டகாலம் தலைவராக நீடித்தவர். 2017-ல் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் கடுமையான அதிகார மோதல் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம் அது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொள்ளலாம் என்பது விதி. மாநில அரசுதான் அதை எப்போதும் நியமித்துக் கொள்ளும். அதன்படி அப்போது அதற்கான முயற்சியை மேற்கொண்டார் முதல்வர் நாராயணசாமி. பனையூரில் சாமிநாதன், அசனா ஆனால் எந்தவித முன்னறிவிப்புமின்றி இரவோடு இரவாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேருக்கு ரகசியமாக நியமன எம்.எல்.ஏ-வாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் கிரண்பேடி. அதில் ஒருவர்தான் இந்த சாமிநாதன். தற்போது ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும் செல்வகணபதி, மறைந்த அக்கட்சியின் முன்னாள் பொருளாளர் சங்கர் போன்றவர்களும் அந்த ரகசிய பதவிப் பிராணத்தின் மூலம் எம்.எல்.ஏ ஆனவர்கள். அதுவரை எந்த சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெறாத மூவரும், புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் எம்.எல்.ஏ-க்களாக அமர்ந்தனர். அதன்பிறகு 2021-ல் ராஜ்யசபா எம்.பி-யாக நியமிக்கப்பட்ட செல்வகணபதியை, 2023-ல் புதுச்சேரி மாநிலத் தலைவராக அறிவித்தது பா.ஜ.க தலைமை. பாஜக-வில் ஓரம் கட்டப்பட்ட சாமிநாதன் அவர் தலைவர் பதவிக்கு வந்ததும் முதலில் செய்தது முன்னாள் தலைவர் சாமிநாதனை டம்மியாக்கியதுதான். எட்டு ஆண்டுகள் சாமிநாதனால் பொறுப்புகள் பெறப்பட்டவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பதவிகளைப் பறித்து ஓரம் கட்டினார் செல்வகணபதி. அதேபோல கட்சி தொடர்பான எந்தக் கூட்டங்களுக்கும் சாமிநாதனுக்கு தகவலாகக் கூட சொல்லாமல், அவரை புறக்கணித்தார் செல்வகணபதி. கட்சியைப் பொறுத்தவரை `ஆக்டிவ்’ தலைவராக வலம் வந்த சாமிநாதன், தலைவர் பதவி பறிக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டதால் வெறுத்துப் போனார். அதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சன அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அதனால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்ததால், சாமிநாதனை அமைதியாக இருக்கும்படி கட்டளையிட்டது பா.ஜ.க தலைமை. தமிழக வெற்றிக் கழகம் விஜய் அதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ என்ற பெயரில், அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து கட்சியில் இணைந்தார் சாமிநாதன். ஆனால் அது தொடர்பான புகைப்படங்களோ, அதிகாரப்பூர்வ அறிக்கையோ த.வெ.க-வில் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் இன்று பனையூரில் நடைபெற்ற விழாவில் விஜய் முன்பு கட்சியில் இணைந்திருக்கிறார். அவருடன் சென்ற மற்றொருவர் காரைக்கால் தெற்கு தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ அசனா. கடந்த 2021 தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்திற்காக, புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது அ.தி.மு.க. இனிமேலும் அந்தக் கட்சியில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த அசனா, த.வெ.க வண்டியில் ஏறிவிட்டார்.! புதுச்சேரி: ``அரசு உயரதிகாரிகள் சொத்துக் கணக்குகளை விசாரணை செய்ய வேண்டும்! - பாஜக தலைவர் சாமிநாதன்
`புதுச்சேரி பாஜக-வில் நீண்டகால தலைவர்’ - தவெகவில் தஞ்சமடைய என்ன காரணம்? யார் இந்த சாமிநாதன்?
யார் இந்த சாமிநாதன் ? த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அவரின் பனையூர் அலுவலகத்தில், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அக்கட்சியில் இணைந்தார். அதேபோல அந்த விழாவில் புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதியின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அசனா இருவரும், விஜய் முன்பு அக்கட்சியில் இணைந்தனர். புதுச்சேரி லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன், கடந்த 2015 முதல் 2023 வரை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்தவர். புதுச்சேரி பா.ஜ.க-வில் நீண்டகாலம் தலைவராக நீடித்தவர். 2017-ல் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் கடுமையான அதிகார மோதல் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம் அது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொள்ளலாம் என்பது விதி. மாநில அரசுதான் அதை எப்போதும் நியமித்துக் கொள்ளும். அதன்படி அப்போது அதற்கான முயற்சியை மேற்கொண்டார் முதல்வர் நாராயணசாமி. பனையூரில் சாமிநாதன், அசனா ஆனால் எந்தவித முன்னறிவிப்புமின்றி இரவோடு இரவாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேருக்கு ரகசியமாக நியமன எம்.எல்.ஏ-வாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் கிரண்பேடி. அதில் ஒருவர்தான் இந்த சாமிநாதன். தற்போது ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும் செல்வகணபதி, மறைந்த அக்கட்சியின் முன்னாள் பொருளாளர் சங்கர் போன்றவர்களும் அந்த ரகசிய பதவிப் பிராணத்தின் மூலம் எம்.எல்.ஏ ஆனவர்கள். அதுவரை எந்த சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெறாத மூவரும், புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் எம்.எல்.ஏ-க்களாக அமர்ந்தனர். அதன்பிறகு 2021-ல் ராஜ்யசபா எம்.பி-யாக நியமிக்கப்பட்ட செல்வகணபதியை, 2023-ல் புதுச்சேரி மாநிலத் தலைவராக அறிவித்தது பா.ஜ.க தலைமை. பாஜக-வில் ஓரம் கட்டப்பட்ட சாமிநாதன் அவர் தலைவர் பதவிக்கு வந்ததும் முதலில் செய்தது முன்னாள் தலைவர் சாமிநாதனை டம்மியாக்கியதுதான். எட்டு ஆண்டுகள் சாமிநாதனால் பொறுப்புகள் பெறப்பட்டவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பதவிகளைப் பறித்து ஓரம் கட்டினார் செல்வகணபதி. அதேபோல கட்சி தொடர்பான எந்தக் கூட்டங்களுக்கும் சாமிநாதனுக்கு தகவலாகக் கூட சொல்லாமல், அவரை புறக்கணித்தார் செல்வகணபதி. கட்சியைப் பொறுத்தவரை `ஆக்டிவ்’ தலைவராக வலம் வந்த சாமிநாதன், தலைவர் பதவி பறிக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டதால் வெறுத்துப் போனார். அதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சன அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அதனால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்ததால், சாமிநாதனை அமைதியாக இருக்கும்படி கட்டளையிட்டது பா.ஜ.க தலைமை. தமிழக வெற்றிக் கழகம் விஜய் அதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ என்ற பெயரில், அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து கட்சியில் இணைந்தார் சாமிநாதன். ஆனால் அது தொடர்பான புகைப்படங்களோ, அதிகாரப்பூர்வ அறிக்கையோ த.வெ.க-வில் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் இன்று பனையூரில் நடைபெற்ற விழாவில் விஜய் முன்பு கட்சியில் இணைந்திருக்கிறார். அவருடன் சென்ற மற்றொருவர் காரைக்கால் தெற்கு தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ அசனா. கடந்த 2021 தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்திற்காக, புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது அ.தி.மு.க. இனிமேலும் அந்தக் கட்சியில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த அசனா, த.வெ.க வண்டியில் ஏறிவிட்டார்.! புதுச்சேரி: ``அரசு உயரதிகாரிகள் சொத்துக் கணக்குகளை விசாரணை செய்ய வேண்டும்! - பாஜக தலைவர் சாமிநாதன்
ஆசிரியை வெட்டிக் கொலை: ``முதல்வர் ஸ்டாலின் மாய உலகில் இருக்கிறார் - சாடும் அன்புமணி
தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை காவியா சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பா.ம.க.தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியை காவியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சாவூர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் காவியாவை காதலித்து வந்ததாகவும், ஆனால், காவியாவுக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த அஜித்குமார் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது ஆசிரியை காவியா படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் உறுதியாகியிருக்கிறது. இதே தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி என்ற ஆசிரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி மதன் என்பவரால் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் வீராவேசம் காட்டினார்கள். அன்புமணி ஆனால், சரியாக ஓராண்டு கழித்து தஞ்சாவூரில் இன்னொரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க தி.மு.க அரசால் முடியவில்லை. தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மட்டும் 7 ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பதைத் தேடினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. ஆனால், இது குறித்த கவலைகள் எதுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தம்மைச் சுற்றிலும் உண்மைத் தடுப்பு வேலியை அமைத்துக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உன்னத ஆட்சி நடைபெறுவதாக வீண்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின், அன்பில் மகேஷ் அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தினமும் அனுபவிக்கும் கொடுமைகளை பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கப் போகும் இன்னும் சில நாள்களுக்காவது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். கோவில்பட்டி: குடும்பத் தகராறு; டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்!
ஆசிரியை வெட்டிக் கொலை: ``முதல்வர் ஸ்டாலின் மாய உலகில் இருக்கிறார் - சாடும் அன்புமணி
தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை காவியா சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பா.ம.க.தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியை காவியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சாவூர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் காவியாவை காதலித்து வந்ததாகவும், ஆனால், காவியாவுக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த அஜித்குமார் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது ஆசிரியை காவியா படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் உறுதியாகியிருக்கிறது. இதே தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி என்ற ஆசிரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி மதன் என்பவரால் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் வீராவேசம் காட்டினார்கள். அன்புமணி ஆனால், சரியாக ஓராண்டு கழித்து தஞ்சாவூரில் இன்னொரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க தி.மு.க அரசால் முடியவில்லை. தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மட்டும் 7 ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பதைத் தேடினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. ஆனால், இது குறித்த கவலைகள் எதுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தம்மைச் சுற்றிலும் உண்மைத் தடுப்பு வேலியை அமைத்துக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உன்னத ஆட்சி நடைபெறுவதாக வீண்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின், அன்பில் மகேஷ் அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தினமும் அனுபவிக்கும் கொடுமைகளை பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கப் போகும் இன்னும் சில நாள்களுக்காவது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். கோவில்பட்டி: குடும்பத் தகராறு; டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்!
தவெக-வில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் ஏன்? - செங்கோட்டையன் சொன்ன கலகல பதில்
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அதிமுக-வில் இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், இன்று (நவ 27) தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார். இதுகுறித்து செங்கோட்டையன், அதிமுக மூன்றாக உடைந்துவிட்டது. அதை ஒன்றிணைக்க பாடுபட்டேன். தேவர் ஜெயந்தியின்போது பிரிந்தவர்களைச் சேர்க்கத்தான் சந்தித்துப் பேசினேன். ஆனால், அதற்காக என்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்துகூட நீக்கிவிட்டார்கள். இத்தணை ஆண்டுகாலம் கட்சியில் உழைத்த எனக்குக் கிடைத்தப் பரிசு இதுதான். விஜய், செங்கோட்டையன் இன்று திமுக - அதிமுக இரண்டும் வேறல்ல என்றாகிவிட்டது. இரண்டும் ஒன்றாக பயணித்து நாட்டில் நாடகம் நடத்தி வருகிறார்கள். 'தூய்மையான அரசியல், நல்ல மாற்றம் வேண்டும்' என தவெக கட்சியில் இணைந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். செங்கோட்டையனுக்கு தவெகவில் வழங்கவிருக்கும் பொறுப்புகள் குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தவெகவில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் வைத்திருப்பது ஏன்? இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில், தவெகவில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் வைத்திருப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், நான் 50 ஆண்டுகளுக்கு மேல் அதிமுகவில் இருந்திருக்கிறேன். கட்சிக்காக உண்மையாக உழைத்து அம்மா ஜெயலலிதாவால் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன். பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கத்தான் நினைத்தேன். ஆனால் என்னை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டார்கள். இப்போது தமிழ்நாட்டில் புதிய மாற்றம், தூய்மையான அரசியல் வேண்டும் என தவெகவில் இணைந்திருக்கிறேன். விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன் அதிமுக கலர் கொண்ட உடையைக்கூட அணியக் கூடாது என்று என்மேல் வழக்குப் போட்டுவிட்டார்கள். இல்லையென்றால் அதையும் அணிந்து வந்திருப்பேன் என்னுடைய சட்டைப் பையில் நான் மதிக்கும் ஜெயலலிதா புகைப்படத்தை வைப்பது என்பது என்னுடைய உரிமை. நான் மாற்றியிருந்தால் 'இவனெல்லாம் என்ன தியாகி, கட்சிக்காக உழைத்தவனா, கொள்கைப் பிடிப்பு இல்லாதவன், கட்சித் தாவிவிட்டான், சட்டைப் பையில் இருந்த அம்மா படத்தையும் மாற்றிவிட்டான்' என்று விமர்சிப்பார்கள். அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்கள் விஜய்யின் வாகனத்தில் அலங்கரித்து வருகிறது. என்னுடைய வாகனத்திலும், சட்டைப் பையிலும் அம்மா ஜெயலலிதா படம் வைத்திருப்பேன். அது என்னுடைய உரிமை. அதை தவெகவினரும் ஏற்றுக் கொண்டார்கள் என்று பதிலளித்திருக்கிறார் செங்கோட்டையன்.
``விஜய்யின் தவெக கட்சியில் நான் ஏன் இணைந்தேன்?'' - செங்கோட்டையன் விளக்கம்
நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார். எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார். செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக நின்றவர். இப்போது சட்டப்பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டபடி விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன். விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தத செங்கோட்டையன் அன்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நல்ல தலைமை; ஆனால் இப்போது அதிமுகவின் நிலை எல்லாம் மாறிவிட்டது. செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் செங்கோட்டையன், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அடையாளம் காணப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். 1972-ல் இந்த அதிமுக தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆர் பின்னால் அணி வகுத்து நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன். 1975-ல் கோவையில் அதிமுக பொதுக்குழுவின் முழுப்பொறுப்பையும் ஏற்று நடத்தியதை கண்டு சத்யா ஸ்டியோவில் என்னைக் கட்டித் தழுவிப் பாராட்டினார் எம்.ஜி.ஆர் அவர்கள். அன்று இருந்த எதிர்க்கட்சிகள் அதிமுகவைப் பார்த்து 'இந்தக் கட்சி ஒரு சினிமா படம் போல, 100 நாள்கூட தாண்டாது' என்று விமர்சித்தார்கள். ஆனால், அன்றே அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் இருந்துகொண்டே வெற்றி பெற்று அன்று தமிழ்நாட்டிற்குத் திரும்பும்போது முதல்வராக காலடி எடுத்து வைத்தவர் எம்.ஜி.ஆர். அவருடன் உண்மையாக உடன் நின்றவன் நான். அதன்பிற்கு புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா தலைமையில் கட்சியில் உண்மையாக உழைத்து பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன். அவரது மறைவிற்குப் பிறகும் கட்சியைக் காப்பாற்ற உறுதுணையாக இருந்தேன். ஆனால் இப்போது அதிமுகவின் நிலை எல்லாம் மாறிவிட்டது. 'நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று பார்த்துக் கொள்வான்' இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். இதை நான் இப்போது சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன் அதிமுக மூன்றாக உடைந்துவிட்டது. அதை ஒன்றிணைக்க பாடுபட்டேன். அதை செயல்படுத்த முடியவில்லை. எல்லோரையும் ஒன்றிணைக்கலாம் என்றுதான் தேவர் ஜெயந்தியின்போது பிரிந்தவர்களைச் சந்தித்துப் பேசினேன். ஆனால், அதற்காக என்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்துகூட நீக்கிவிட்டார்கள். இத்தனை ஆண்டுகாலம் கட்சியில் உழைத்த எனக்குக் கிடைத்தப் பரிசு இதுதான். செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு அதன்பிறகு இன்றைக்கு தெளிவான முடிவை மேற்கொண்டுதான் நேற்று (நவ.26) சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறேன். ஏன் இங்கு இணைந்தேன் என்று கேள்வி எழும். இன்று திமுக - அதிமுக இரண்டும் வேறல்ல என்றாகிவிட்டது. இரண்டும் ஒன்றாக பயணித்து நாட்டில் நாடகம் நடத்தி வருகிறார்கள். தவெக விஜய் அவர்கள் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறார். 'ஒரு புதிய மாற்றம் வேண்டும். இரு கட்சிகள் மட்டும்தான் ஆளவேண்டுமா?' என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக வந்துவிட்டது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், தூய்மையான அரசியல் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அடிப்படையில் தவெக கட்சியை மக்கள் வரவேற்கிறார்கள். தூய்மையான அரசியல், நல்ல மாற்றம் வேண்டும் என தவெக கட்சியில் இணைந்திருக்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைப்பார் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன் என்று பேசியிருக்கிறார். ``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய்
``விஜய்யின் தவெக கட்சியில் நான் ஏன் இணைந்தேன்?'' - செங்கோட்டையன் விளக்கம்
நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார். எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார். செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக நின்றவர். இப்போது சட்டப்பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டபடி விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன். விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தத செங்கோட்டையன் அன்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நல்ல தலைமை; ஆனால் இப்போது அதிமுகவின் நிலை எல்லாம் மாறிவிட்டது. செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் செங்கோட்டையன், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அடையாளம் காணப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். 1972-ல் இந்த அதிமுக தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆர் பின்னால் அணி வகுத்து நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன். 1975-ல் கோவையில் அதிமுக பொதுக்குழுவின் முழுப்பொறுப்பையும் ஏற்று நடத்தியதை கண்டு சத்யா ஸ்டியோவில் என்னைக் கட்டித் தழுவிப் பாராட்டினார் எம்.ஜி.ஆர் அவர்கள். அன்று இருந்த எதிர்க்கட்சிகள் அதிமுகவைப் பார்த்து 'இந்தக் கட்சி ஒரு சினிமா படம் போல, 100 நாள்கூட தாண்டாது' என்று விமர்சித்தார்கள். ஆனால், அன்றே அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் இருந்துகொண்டே வெற்றி பெற்று அன்று தமிழ்நாட்டிற்குத் திரும்பும்போது முதல்வராக காலடி எடுத்து வைத்தவர் எம்.ஜி.ஆர். அவருடன் உண்மையாக உடன் நின்றவன் நான். அதன்பிற்கு புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா தலைமையில் கட்சியில் உண்மையாக உழைத்து பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன். அவரது மறைவிற்குப் பிறகும் கட்சியைக் காப்பாற்ற உறுதுணையாக இருந்தேன். ஆனால் இப்போது அதிமுகவின் நிலை எல்லாம் மாறிவிட்டது. 'நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று பார்த்துக் கொள்வான்' இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். இதை நான் இப்போது சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன் அதிமுக மூன்றாக உடைந்துவிட்டது. அதை ஒன்றிணைக்க பாடுபட்டேன். அதை செயல்படுத்த முடியவில்லை. எல்லோரையும் ஒன்றிணைக்கலாம் என்றுதான் தேவர் ஜெயந்தியின்போது பிரிந்தவர்களைச் சந்தித்துப் பேசினேன். ஆனால், அதற்காக என்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்துகூட நீக்கிவிட்டார்கள். இத்தனை ஆண்டுகாலம் கட்சியில் உழைத்த எனக்குக் கிடைத்தப் பரிசு இதுதான். செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு அதன்பிறகு இன்றைக்கு தெளிவான முடிவை மேற்கொண்டுதான் நேற்று (நவ.26) சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறேன். ஏன் இங்கு இணைந்தேன் என்று கேள்வி எழும். இன்று திமுக - அதிமுக இரண்டும் வேறல்ல என்றாகிவிட்டது. இரண்டும் ஒன்றாக பயணித்து நாட்டில் நாடகம் நடத்தி வருகிறார்கள். தவெக விஜய் அவர்கள் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறார். 'ஒரு புதிய மாற்றம் வேண்டும். இரு கட்சிகள் மட்டும்தான் ஆளவேண்டுமா?' என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக வந்துவிட்டது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், தூய்மையான அரசியல் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அடிப்படையில் தவெக கட்சியை மக்கள் வரவேற்கிறார்கள். தூய்மையான அரசியல், நல்ல மாற்றம் வேண்டும் என தவெக கட்சியில் இணைந்திருக்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைப்பார் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன் என்று பேசியிருக்கிறார். ``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய்
`தவெகவில் இணைந்த செங்கோட்டையன்'எடப்பாடி பழனிசாமி, நயினார் ரியாக்ஷன் என்ன?
செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார். செங்கோட்டையன் அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் நேற்று (நவ.26) செங்கோட்டையன் தலைமைச் செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன் - விஜய் அதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் செங்கோட்டையன். இந்நிலையில் இன்று (நவ. 27) தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்துள்ளார் செங்கோட்டையன். தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து இன்று (நவ.27) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அதேபோல செங்கோட்டையன் குறித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், செங்கோட்டையன் பின்னால் பாஜக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியிருந்தால் அவர் ஏன் தவெகவிற்கு செல்ல வேண்டும். எங்களுடனே இருந்திருக்கலாம் அல்லவா?... செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பாஜக- அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்திருக்கிறார்.
`தவெகவில் இணைந்த செங்கோட்டையன்'எடப்பாடி பழனிசாமி, நயினார் ரியாக்ஷன் என்ன?
செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார். செங்கோட்டையன் அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் நேற்று (நவ.26) செங்கோட்டையன் தலைமைச் செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன் - விஜய் அதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் செங்கோட்டையன். இந்நிலையில் இன்று (நவ. 27) தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்துள்ளார் செங்கோட்டையன். தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து இன்று (நவ.27) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அதேபோல செங்கோட்டையன் குறித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், செங்கோட்டையன் பின்னால் பாஜக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியிருந்தால் அவர் ஏன் தவெகவிற்கு செல்ல வேண்டும். எங்களுடனே இருந்திருக்கலாம் அல்லவா?... செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பாஜக- அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்திருக்கிறார்.
`நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க..!’ டு டென்ஷனான கனிமொழி! - கழுகார் அப்டேட்ஸ்
டென்ஷனான கனிமொழி! மிஸ்ஸான எம்.எல்.ஏ... தென்மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மாவட்டமும் பாதிப்படைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழி பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, திருவைகுண்டம் தொகுதிக்குள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அந்தத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் மட்டும் மிஸ்ஸாகிவிட்டாராம். இது குறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் கனிமொழி விசாரித்தபோது, 'அவர் ஊரிலேயே பாதி நேரம் இருக்கமாட்டார். மழை பாதிப்பு ஏற்பட்ட இந்தச் சூழலில்கூட களத்துக்கு வராம இருக்கார்...' என்று தூபம் போட்டிருக்கிறார்கள். கனிமொழி எம்.பி இதனால், டென்ஷனான கனிமொழி, 'தென்மண்டலப் பொறுப்பாளர் என்ற முறையில், நான்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நான்தான் பொறுப்பு. ஒரு தொகுதி தோற்றாலும் எனக்குத்தான் அவமானம். இனி எம்.எல்.ஏ-வை நம்பிட்டு இருக்காம, நீங்க களத்தில இறங்கி வேலையைப் பாருங்க. இந்தத் தொகுதியில, நாமளே நிற்கும்படி தலைமையிடம் நான் பேசுறேன்...' என்றியிருக்கிறாராம். கனிமொழியிடமிருந்தே இப்படி உத்தரவாதம் கிடைத்திருப்பதால், குஷியாகியிருக்கிறார்கள் திருவைகுண்டம் தொகுதி தி.மு.க-வினர்! தி.மு.க மா.செ-வை நச்சரிக்கும் நிர்வாகிகள்! ‘வாங்கிய ஸ்வீட் பாக்ஸ் எங்கே..?’ அல்வா மாவட்டத்தில், ஒன்றிய அளவில் போஸ்டிங் போடுவதற்கு, ஏகப்பட்ட ஆட்களிடம் ஸ்விட் பாக்ஸ்களை வசூலித்திருக்கிறாராம் மாவட்டச் செயலாளரான முன்னாள் சட்டசபைப் புள்ளி. ஆனால், அவரின் போதாத காலம், அவர் கைவசமிருந்த இரண்டு தொகுதிகள் பிரிக்கப்பட்டு, வேறு ஒருவருக்குப் போய்விட்டது. இதனால், ஸ்விட் பாக்ஸ்களைக் கொடுத்தவர்களுக்கு போஸ்டிங் போட முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. தற்போது, கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்களைத் திருப்பிக் கேட்டிருக்கிறார்கள் நிர்வாகிகள். ஆனால், அதை வைத்துதான் தனது ஊரில் பிரமாண்ட மாளிகை ஒன்றைக் கட்டிவருகிறாராம் அந்த மா.செ. அத்துடன் தனது பதவியைக் காப்பாற்ற, சீனியர் அமைச்சர் ஒருவருக்கும் படியளந்திருக்கிறாராம். இதனால், வாங்கிய ஸ்விட் பாக்ஸுகளைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம் அந்த மா.செ. இதில் டென்ஷனாகும் நிர்வாகிகள், 'கொடுக்குறீங்களா... இல்ல தலைமையிடம் புகார் கொடுக்கவா..?' என்று மா.செ-வை நச்சரித்து வருகிறார்களாம்! கடுப்பாகும் அ.தி.மு.க மா.செ! நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க... முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தன்னை மா.செ-வாக சுதந்திரமாகச் செயல்படவே விடுவதில்லை எனக் கடுப்பாகிறாராம் செல்வராஜ். இது குறித்து தனது நெருக்கமானவர்களிடம், “மா.செ பொறுப்பு கொடுக்கும்போது, நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க... ஆனா, ஒரு கிளைச்செயலாளர் போஸ்டிங்கூட என்னால போட முடியல. எல்லாமே தலைமையின் உறவினர்கள் கன்ட்ரோலில்தான் இருக்குது... ரொம்ப வெறுப்பா இருக்கு... என்னிடம் சொல்லாமலேயே என் மாவட்டத்துல கூட்டம் நடத்த பிளான் போடுறாங்க... இது குறித்தெல்லாம் சீக்கிரமே தலைமையிடம் பேசணும்...' என்றிருக்கிறார். இந்த விவகாரம் எடப்பாடியின் உறவினர்கள் காதுகளுக்குச் செல்லவே, 'அவ்வளவு பெரிய பொறுப்பில் அவரை ஏன் நியமிச்சோம்ன்னு, இன்னும் அவருக்கே தெரியல பாருங்களேன்...' எனச் சிரித்திருக்கிறார்கள்! மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வில் புது பவர் சென்டர்... பிடியிழந்த வேலுமணி! கொந்தளித்த சீமான்! கூட்டத்துக்கு வர மாட்டீங்களா? சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் பொதுக்கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம், எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் என, சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட எந்தக் கூட்டத்துக்கும் 500 பேர்கூட கூடவில்லையாம். நா.த.க-வில் மாநிலப் பொறுப்பாளர்கள் தொடங்கி பூத் கமிட்டி நிர்வாகிகள் வரை, எல்லா மட்டத்திலும் நியமனங்கள் முடிந்தவிட்டன. சீமான் ஆனாலும், ‘நிர்வாகிகள்கூட வராத காரணத்தால்தான் கூட்டமில்லாமல் நிகழ்ச்சிகள் காத்து வாங்குகின்றன...’ என்ற தகவல் காதுகளுக்கு எட்டவே, டென்ஷாகிவிட்டாராம் சீமான். 'ஏன் நிர்வாகிகள்கூட கூட்டத்துக்கு வருவதில்லை. வராதவங்களுக்கு எதுக்கு பொறுப்பு... ட்வீட் மட்டும் போட்டு ஏமாத்துறாங்களா... உங்களையெல்லாம் நம்பி பிப்ரவரி 7-ம் தேதி திருச்சி மாநாடு வேற அறிவிச்சிருக்கேன்... என்ன செய்ய காத்திருக்கீங்களோ தெரியல...' என்று சீனியர் நிர்வாகிகளிடம் கொத்தளித்திருக்கிறார் சீமான்! சஸ்பென்ஸ் வைக்கும் திருமா! கணக்குப் போடும் சீனியர்கள் தி.மு.க கூட்டணியில் கைவசமுள்ள தொகுதிகளில், நெகட்டிவ் தொகுதிகளைக் கொடுத்துவிட்டு, பாசிட்டிவாக இருக்கும் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது குறித்து தனிக் கணக்கு போட்டுவருகிறார்கள் வி.சி.க சீனியர்கள். அதன்படி, காட்டுமன்னார் கோவில், செய்யூர், நாகை ஆகிய தொகுதிகளைத் தக்கவைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். அதேநேரத்தில் திருப்போரூர் தொகுதி தனக்கு நெகட்டிவாக இருப்பதால், மயிலம் தொகுதியைக் குறிவைக்கிறார் எஸ்.எஸ் பாலாஜி. 'கடந்த முறை தோல்வியைத் தழுவிய வானூர், அரக்கோணம் தொகுதிக்குப் பதிலாக, திண்டிவனம் அல்லது மதுராந்தகம் தொகுதியைக் கேட்கவும், கூடுதலாக சீட் கிடைத்தால் கள்ளக்குறிச்சி, அரூரை கேட்க வேண்டும்' எனவும் ஏகப்பட்ட கணக்குகளைப் போடுகின்றனர் சீனியர்கள். ஆனால், 'எவ்வளவு சீட் வாங்க வேண்டும்... எந்தெந்த தொகுதிகளை வாங்க வேண்டும்... யார் யாரெல்லாம் வேட்பாளர்கள்...' என்ற டாப்பிக்கை ஓப்பனே செய்யாமல் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் திருமா. இது சீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் பலரின் வயிற்றிலும் புளியைக் கரைத்திருக்கிறது...' என்கிறார்கள் அம்பேத்கர் திடல் வாசிகள்! வெள்ளித்திரையின் `மேஜிக்' ரஜினிகாந்த்! - நீண்ட திரைப்பயணத்தில் நீங்கள் கொண்டாடிய தருணங்கள்!
``அண்ணன் செங்கோட்டையன் அரசியல் அனுபவமும், களப்பணியும் தவெக-வுக்கு உறுதுணையாக இருக்கும்'' - விஜய்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் எழுந்த மோதல் போக்கைத் தொடர்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பேசிவந்த செங்கோட்டையன் தற்போது புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், நவம்பர் 26-ஆம் தேதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யைச் சந்தித்தார். K A Sengottaiyan இன்று (நவ 27) தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்துள்ளார் செங்கோட்டையன். இதன்மூலம் தவெக 2026 தேர்தலில் உறுதியான மூன்றாவது அணியாக களமிறங்கும், என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். செங்கோட்டையனை வரவேற்று வீடியோ வெளியிட்டுள்ள விஜய் அதில், 20 வயசு இளைஞராக இருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அவங்களுடைய மன்றத்தில் சேர்ந்தவர். சின்ன வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன்பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். pic.twitter.com/NwUN91AxkW — TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025 இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவங்களுடைய அரசியல் அனுபவமும், களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், இன்று அவங்களையும் அவங்களோடு இணைந்து பணியாற்ற நம்மளோடு கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். எனப் பேசியுள்ளார். தவெக: அறிவுத் திருவிழா அவதூறு திருவிழாவானது - திமுகவைத் தாக்கிய விஜய்
``அண்ணன் செங்கோட்டையன் அரசியல் அனுபவமும், களப்பணியும் தவெக-வுக்கு உறுதுணையாக இருக்கும்'' - விஜய்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் எழுந்த மோதல் போக்கைத் தொடர்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பேசிவந்த செங்கோட்டையன் தற்போது புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், நவம்பர் 26-ஆம் தேதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யைச் சந்தித்தார். K A Sengottaiyan இன்று (நவ 27) தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்துள்ளார் செங்கோட்டையன். இதன்மூலம் தவெக 2026 தேர்தலில் உறுதியான மூன்றாவது அணியாக களமிறங்கும், என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். செங்கோட்டையனை வரவேற்று வீடியோ வெளியிட்டுள்ள விஜய் அதில், 20 வயசு இளைஞராக இருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அவங்களுடைய மன்றத்தில் சேர்ந்தவர். சின்ன வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன்பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். pic.twitter.com/NwUN91AxkW — TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025 இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவங்களுடைய அரசியல் அனுபவமும், களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், இன்று அவங்களையும் அவங்களோடு இணைந்து பணியாற்ற நம்மளோடு கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். எனப் பேசியுள்ளார். தவெக: அறிவுத் திருவிழா அவதூறு திருவிழாவானது - திமுகவைத் தாக்கிய விஜய்
``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய்
நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார். எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்தார். செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக நின்றவர். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் TVK: காத்திருந்த விஜய்; ஆதவ்வோடு வந்த செங்கோட்டையன்; மேற்கு மண்டல பொறுப்பு - பனையூர் பரபர மூத்த அரசியல் தலைவரும், அதிமுக தொண்டர்களின் மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவரான செங்கோட்டையன் இப்போது தவெகவில் இணைந்திருப்பது அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்திருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர், இப்போது விஜய்யை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். விஜய்யின் தவெக அரசியல் பயணத்தில் மிகப்பெரிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், 20 வயதில் இளைஞராக இருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அதிமுகவில் சேர்ந்தவர். அந்த சின்ன வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். pic.twitter.com/NwUN91AxkW — TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025 அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், அவருடைய அரசியல் அனுபவம், களப்பணிகளின் அனுபவங்கள் எல்லாம் பெரும் உறுதுணையாக இருக்கும். அவருடன் இணைந்து கைகோர்த்திருக்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று காணொலி மூலம் பேசியிருக்கிறார். TVK: பனையூரில் செங்கோட்டையன்; திடீர் தள்ளுமுள்ளு; மன்னிப்பு கேட்ட ஆதவ், சி.டி.ஆர் - நடந்தது என்ன?
``புதிய கூட்டணி அமைய வாய்ப்பு, 4 முனைப் போட்டி; பொறுத்திருங்கள்'' - டி.டி.வி தினகரன்
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், ஒட்டன்சத்திரம் அமமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் டி.டி.வி தினகரன் அதில், “அதிமுகவில் எத்தனை உயர்வு தாழ்வுகள் வந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயக்கத்திற்கு வந்தபோதெல்லாம் எல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் ஆதரவாக இருந்தார். அனைவரும் விஜய் உடனான சந்திப்பை அரசியலாக பார்க்கிறீர்கள். நான் அவரைப்பற்றி கவனமாக பேச வேண்டும் என நினைக்கிறேன். செங்கோட்டையன் 1989 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதே செங்கோட்டையன் பம்பரமாக செயல்பட்டார் அவர் ஒரு நல்ல நிர்வாகி. நான் பள்ளி செல்லும் போதே அரசியலுக்கு வந்தவர். 1999-ல் என்னை கோபி செட்டிபாளையத்தில் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஜெயலலிதாவிடம் சொன்னவர் செங்கோட்டையன். செங்கோட்டையன் தற்போதும் துரோகத்தை நீக்குவதற்காக எங்களோடு பயணித்து கொண்டிருப்பவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட என்னோடு பேசினார். விஜயுடன் சேர்வது குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. கட்சியில் நீக்கப்பட்டதிலிருந்து மனவருத்தத்தில் இருந்தார். அவர் என்ன பேசுகிறார் என்பதை பொறுத்து தான் அவரை பற்றி பேசுவது சரியாக இருக்கும். நாங்கள் கூட்டணி சேர்வது குறித்து முடிவு செய்யவில்லை, ஆனால் கூட்டணி குறித்து மற்ற கட்சிகள் எங்களோடு பேசி வருவது உண்மை. தமிழ்நாட்டு அரசாங்கம் மற்றும் ஆட்சியாளர்களை பிடிக்கிறதோ இல்லையோ மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைகளை தாய் உள்ளத்துடன் மத்திய அரசு அணுகி அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். டி.டி.வி.தினகரன் தற்போது நெல் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டுமென்பது விவசாயிகளின் கோரிக்கை. அதை தமிழக அரசிடம் சொல்கிறார்கள், அவர்கள் அதை மத்திய அரசிடம் கேட்கிறார்கள். இதில் அரசியல் பார்க்க கூடாது. மத்திய அரசு தமிழ்நாடு கேட்பதை கொடுப்பதுதான் சரியாக இருக்கும். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கேள்விக்கு, ”தமிழ்நாட்டில் கிராமங்களில் இருந்து பல்வேறு மக்கள் நகரங்களுக்கு குடியேறி வருகின்றனர். இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு ஒரு கார் விற்பனையாகிறது என்றால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் தொலைநோக்கு பார்வையுடன் மெட்ரோ ரயில் திட்டம். கொண்டு வருவது மக்களின் நலன் கருதியே. வருங்காலத்தில், பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு மெட்ரோ ரயில் முக்கிய நகரங்களில் வருவது நல்ல திட்டம். இதற்கு மத்திய அரசு கண்டிப்பாக நிதி ஒதுக்க வேண்டும். டி.டி.டி.தினகரன் தற்போது 4 முனைப் போட்டி உள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்பட்டு புதிதாக கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அது குறித்து சில நகர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதனால் அனைவரும் பொறுத்திருங்கள் என்றார் `விஜய் என்ன சிறு பிள்ளையா?; பழனிசாமி துரோகம் பற்றி தெரியாதா?’ - டி.டி.வி.தினகரன் ஓப்பன் டாக்
``புதிய கூட்டணி அமைய வாய்ப்பு, 4 முனைப் போட்டி; பொறுத்திருங்கள்'' - டி.டி.வி தினகரன்
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், ஒட்டன்சத்திரம் அமமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் டி.டி.வி தினகரன் அதில், “அதிமுகவில் எத்தனை உயர்வு தாழ்வுகள் வந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயக்கத்திற்கு வந்தபோதெல்லாம் எல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் ஆதரவாக இருந்தார். அனைவரும் விஜய் உடனான சந்திப்பை அரசியலாக பார்க்கிறீர்கள். நான் அவரைப்பற்றி கவனமாக பேச வேண்டும் என நினைக்கிறேன். செங்கோட்டையன் 1989 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதே செங்கோட்டையன் பம்பரமாக செயல்பட்டார் அவர் ஒரு நல்ல நிர்வாகி. நான் பள்ளி செல்லும் போதே அரசியலுக்கு வந்தவர். 1999-ல் என்னை கோபி செட்டிபாளையத்தில் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஜெயலலிதாவிடம் சொன்னவர் செங்கோட்டையன். செங்கோட்டையன் தற்போதும் துரோகத்தை நீக்குவதற்காக எங்களோடு பயணித்து கொண்டிருப்பவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட என்னோடு பேசினார். விஜயுடன் சேர்வது குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. கட்சியில் நீக்கப்பட்டதிலிருந்து மனவருத்தத்தில் இருந்தார். அவர் என்ன பேசுகிறார் என்பதை பொறுத்து தான் அவரை பற்றி பேசுவது சரியாக இருக்கும். நாங்கள் கூட்டணி சேர்வது குறித்து முடிவு செய்யவில்லை, ஆனால் கூட்டணி குறித்து மற்ற கட்சிகள் எங்களோடு பேசி வருவது உண்மை. தமிழ்நாட்டு அரசாங்கம் மற்றும் ஆட்சியாளர்களை பிடிக்கிறதோ இல்லையோ மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைகளை தாய் உள்ளத்துடன் மத்திய அரசு அணுகி அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். டி.டி.வி.தினகரன் தற்போது நெல் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டுமென்பது விவசாயிகளின் கோரிக்கை. அதை தமிழக அரசிடம் சொல்கிறார்கள், அவர்கள் அதை மத்திய அரசிடம் கேட்கிறார்கள். இதில் அரசியல் பார்க்க கூடாது. மத்திய அரசு தமிழ்நாடு கேட்பதை கொடுப்பதுதான் சரியாக இருக்கும். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கேள்விக்கு, ”தமிழ்நாட்டில் கிராமங்களில் இருந்து பல்வேறு மக்கள் நகரங்களுக்கு குடியேறி வருகின்றனர். இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு ஒரு கார் விற்பனையாகிறது என்றால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் தொலைநோக்கு பார்வையுடன் மெட்ரோ ரயில் திட்டம். கொண்டு வருவது மக்களின் நலன் கருதியே. வருங்காலத்தில், பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு மெட்ரோ ரயில் முக்கிய நகரங்களில் வருவது நல்ல திட்டம். இதற்கு மத்திய அரசு கண்டிப்பாக நிதி ஒதுக்க வேண்டும். டி.டி.டி.தினகரன் தற்போது 4 முனைப் போட்டி உள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்பட்டு புதிதாக கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அது குறித்து சில நகர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதனால் அனைவரும் பொறுத்திருங்கள் என்றார் `விஜய் என்ன சிறு பிள்ளையா?; பழனிசாமி துரோகம் பற்றி தெரியாதா?’ - டி.டி.வி.தினகரன் ஓப்பன் டாக்
TVK: காத்திருந்த விஜய்; ஆதவ்வோடு வந்த செங்கோட்டையன்; மேற்கு மண்டல பொறுப்பு - பனையூர் பரபர
நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார். இன்று (நவ 27) செங்கோட்டையன், அவர்களது ஆதரவாளர்கள் சிலருடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவதாகத் தகவல்கள் கசிந்தன. எதிர்பார்த்தப்படியே இன்று காலையே விஜய்யின் தவெக பனையூர் அலுவலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பத்துவிட்டன. 9.10 மணியளவில் விஜய் தனது காரில் பனையூர் வந்துவிட்டார். விஜய் வருகை TVK: பனையூரில் செங்கோட்டையன்; திடீர் தள்ளுமுள்ளு; மன்னிப்பு கேட்ட ஆதவ், சி.டி.ஆர் - நடந்தது என்ன? புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனா, முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்டோர் பனையூரில் காலையிலேயே ஆஜராகவிட்டிருந்தனர். செங்கோட்டையனை ஆதவ் வரவேற்று அலுவலகத்துக்குள் கூட்டி வந்தார். வழக்கமாக, நிர்வாகிகள் கூட்டத்துக்கும் இணைப்பு விழாக்களுக்கும் அனைவரும் வந்த பிறகு கடைசியாகத்தான் விஜய் அலுவலகத்துக்கு வருவார். ஆனால், செங்கோட்டையன் சூப்பர் சீனியர் என்பதால் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக விஜய் செங்கோட்டையனுக்கு முன்பாகவே அலுவலகத்துக்கு வந்துவிட்டார். காலை 9:15 மணிக்கு வந்த விஜய் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் அலுவலகத்திலுள்ள அவரது அறையில் காத்திருந்தார். விஜய்யின் பனையூர் அலுவலகத்துக்கு சற்று அருகே இருக்கும் ஆதவ்வுக்கு சொந்தமான இல்லத்தில்தான் செங்கோட்டையன் தங்கியிருந்தார். ஆதவ் தரப்புதான் செங்கோட்டையனை தவெகவுக்குள் இணைக்கும் அசைமென்ட்டை கையிலெடுத்து முடித்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் தவெக இணைந்த செங்கோட்டையன் ``செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா?'' - டிடிவி தினகரன் சொன்ன பதில் ஆதவ் கார் முன்பக்கம் வர பின்னால் வந்த காரில் செங்கோட்டையன் வந்தார். ஆதவ் செங்கோட்டையனை வரவேற்று அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்லவே, உள்ளே விஜய்யை சந்தித்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார். செங்கோட்டையனுக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல பொறுப்பைக் கொடுத்திருப்பதாகவும் தகவல்.
TVK: காத்திருந்த விஜய்; ஆதவ்வோடு வந்த செங்கோட்டையன்; மேற்கு மண்டல பொறுப்பு - பனையூர் பரபர
நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார். இன்று (நவ 27) செங்கோட்டையன், அவர்களது ஆதரவாளர்கள் சிலருடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவதாகத் தகவல்கள் கசிந்தன. எதிர்பார்த்தப்படியே இன்று காலையே விஜய்யின் தவெக பனையூர் அலுவலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பத்துவிட்டன. 9.10 மணியளவில் விஜய் தனது காரில் பனையூர் வந்துவிட்டார். விஜய் வருகை TVK: பனையூரில் செங்கோட்டையன்; திடீர் தள்ளுமுள்ளு; மன்னிப்பு கேட்ட ஆதவ், சி.டி.ஆர் - நடந்தது என்ன? புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனா, முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்டோர் பனையூரில் காலையிலேயே ஆஜராகவிட்டிருந்தனர். செங்கோட்டையனை ஆதவ் வரவேற்று அலுவலகத்துக்குள் கூட்டி வந்தார். வழக்கமாக, நிர்வாகிகள் கூட்டத்துக்கும் இணைப்பு விழாக்களுக்கும் அனைவரும் வந்த பிறகு கடைசியாகத்தான் விஜய் அலுவலகத்துக்கு வருவார். ஆனால், செங்கோட்டையன் சூப்பர் சீனியர் என்பதால் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக விஜய் செங்கோட்டையனுக்கு முன்பாகவே அலுவலகத்துக்கு வந்துவிட்டார். காலை 9:15 மணிக்கு வந்த விஜய் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் அலுவலகத்திலுள்ள அவரது அறையில் காத்திருந்தார். விஜய்யின் பனையூர் அலுவலகத்துக்கு சற்று அருகே இருக்கும் ஆதவ்வுக்கு சொந்தமான இல்லத்தில்தான் செங்கோட்டையன் தங்கியிருந்தார். ஆதவ் தரப்புதான் செங்கோட்டையனை தவெகவுக்குள் இணைக்கும் அசைமென்ட்டை கையிலெடுத்து முடித்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் தவெக இணைந்த செங்கோட்டையன் ``செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா?'' - டிடிவி தினகரன் சொன்ன பதில் ஆதவ் கார் முன்பக்கம் வர பின்னால் வந்த காரில் செங்கோட்டையன் வந்தார். ஆதவ் செங்கோட்டையனை வரவேற்று அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்லவே, உள்ளே விஜய்யை சந்தித்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார். செங்கோட்டையனுக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல பொறுப்பைக் கொடுத்திருப்பதாகவும் தகவல்.
TVK: பனையூரில் செங்கோட்டையன்; திடீர் தள்ளுமுள்ளு; மன்னிப்பு கேட்ட ஆதவ், சி.டி.ஆர் - நடந்தது என்ன?
செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று முன்தினம்(நவ.25) கோவையிலிருந்து சென்னை வந்தார். செங்கோட்டையனை துக்ளக் ரமேஷ், பெங்களூரு புகழேந்தி போன்றோர் சந்தித்துப் பேசியிருந்தனர். நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார் செங்கோட்டையன். இதையடுத்து மாலை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்து செங்கோட்டையன் பேசினார். `விஜய்யின் தவெக-வில் இணையப் போகிறீர்களா?' - செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய நிருபர்கள்! இதைத்தொடர்ந்து இன்று (நவ 27) செங்கோட்டையன், தனது ஆதரவாளர் சிலருடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவதாக தகவல் வெளியானது. எதிர்பார்த்தப்படியே இன்று காலையே விஜய்யின் தவெக பனையூர் அலுவலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பத்துவிட்டன. 9.10 மணியளவில் விஜய் தனது காரில் பனையூர் வந்துவிட்டார். காலை 9.30 மணியளவில் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனா, முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்டோர் பனையூரில் ஆஜராகவிட்டனர். செங்கோட்டையனை ஆதவ் வரவேற்று அலுவலகத்துக்குள் கூட்டி வந்தார். முன்னதாக நேற்று விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு ஆதவ் காரில்தான் வந்திருந்தார் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று செங்கோட்டையன் பனையூர் அலுவலகம் வரும்போது அங்கு, சிறு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதமாகவும் தள்ளுமுள்ளுவாகவும் மாறியது. செய்தியாளர்களிடம் அநாகரிகமாக பேசி தாக்க முற்பட்ட பாதுகாவலரை மன்னிப்பு கேட்க சொல்லி செய்தியாளர்கள் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தி அனுப்பினர்.
TVK: பனையூரில் செங்கோட்டையன் &கோ - த.வெ.க வில் இணைபவர்கள் யார் யார்?
தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று (26-11-2025) ராஜினாமா செய்த செங்கோட்டையன், பனையூர் அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவிலிருந்து பிரிந்திருப்பவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் எனப் பேசி எடப்பாடியுடன் முரண் ஏற்பட்டு செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கும் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்யப் போகிறார் எனும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. செங்கோட்டையன் இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக செங்கோட்டையன் தவெகவில் இணையப் போகிறார் எனும் தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் நேற்று சபாநாயகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியையும் செங்கோட்டையன் ராஜினாமா செய்திருந்தார். பின்னர் நேற்று மாலையே பட்டினப்பாக்க வீட்டில் விஜய்யை சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசியிருந்தார். இந்நிலையில், இன்று காலை 9 மணி முதல் முன்னாள் எம்.பி சத்தியபாமா உட்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தவெக அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். முன்னாள் எம்.பி. சத்தியபாமா மற்றும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் செங்கைட்டையனுடன் தவெக-வில் இணைகின்றனர். மேலும் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதனும் தவெக வில் இணைகிறார். அவருடன் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் பாஜக-வில் இணைகிறார். விஜய்யும் 9.15 மணிக்கு பனையூர் அலுவலகம் வந்து சேர, இப்போது அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன். இன்னும் சில நிமிடங்களில் அவர் பத்திரிகையாளர்களையும் சந்திக்கவிருக்கிறார். காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! - பரபர அப்டேஸ்!
TVK: பனையூரில் செங்கோட்டையன் &கோ - த.வெ.க வில் இணைபவர்கள் யார் யார்?
தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று (26-11-2025) ராஜினாமா செய்த செங்கோட்டையன், பனையூர் அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவிலிருந்து பிரிந்திருப்பவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் எனப் பேசி எடப்பாடியுடன் முரண் ஏற்பட்டு செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கும் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்யப் போகிறார் எனும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. செங்கோட்டையன் இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக செங்கோட்டையன் தவெகவில் இணையப் போகிறார் எனும் தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் நேற்று சபாநாயகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியையும் செங்கோட்டையன் ராஜினாமா செய்திருந்தார். பின்னர் நேற்று மாலையே பட்டினப்பாக்க வீட்டில் விஜய்யை சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசியிருந்தார். இந்நிலையில், இன்று காலை 9 மணி முதல் முன்னாள் எம்.பி சத்தியபாமா உட்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தவெக அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். முன்னாள் எம்.பி. சத்தியபாமா மற்றும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் செங்கைட்டையனுடன் தவெக-வில் இணைகின்றனர். மேலும் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதனும் தவெக வில் இணைகிறார். அவருடன் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் பாஜக-வில் இணைகிறார். விஜய்யும் 9.15 மணிக்கு பனையூர் அலுவலகம் வந்து சேர, இப்போது அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன். இன்னும் சில நிமிடங்களில் அவர் பத்திரிகையாளர்களையும் சந்திக்கவிருக்கிறார். காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! - பரபர அப்டேஸ்!
``செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும்'' - அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 'மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி!’ என்ற இலக்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சொந்த முன்னெடுப்பில் நடத்தி வரும் மூன்று நாள் இலவச மகளிர் தொழிற்பயிற்சி முகாமில் 15 வயது முதல் 70 வயது வரையுள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். இதில் சிறு தொழில், உணவுப் பொருள் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு, அழகுக் கலை உள்ளிட்ட பல்வேறு திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. `மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி' பயிற்சி முகாமில் இந்நிலையில் இன்று மகளிர் சுயத்தொழில் முகாமை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர், செயற்கை நுண்ணறிவு மூலம் தனது கனவிற்கு உயிர் கொடுத்த பெண்ணை பாராட்டினார். நேற்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு பயிற்சி வகுப்பில் கே.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி பங்கேற்றார். இவர் சிறு வயது முதலே காவல்துறை அதிகாரியாக ஆகவேண்டும் என்ற இலக்குடன் முயற்சி செய்து வந்துள்ளார். இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்- தங்கம் தென்னரசு ஆனால் உயரக் குறைபாடு காரணமாக காவல்துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணியில் சேர முடியவில்லை. மேலும் வறுமையால் படிப்பும் தடைபட்ட நிலையில், தற்போது TNPSC குரூப்-4 தேர்வு எழுதி அரசு பணி பெற முயற்சித்து வருகிறார். தனது பழைய கனவை நினைவுகூர்ந்த முத்துலட்சுமி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தானே காவல்துறை சீருடையில் இருப்பது போலவும், “என் பெயர் முத்துலட்சுமி, நான் காவல்துறை அதிகாரி” என்று பேசுவது போல ஒரு சிறிய வீடியோவை உருவாக்கினார். இந்த வீடியோவைப் பார்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு மிகுந்த மகிழ்ச்சியுடன் கைதட்டி உற்சாகப்படுத்தினார். உடனடியாக முத்துலட்சுமியை மேடைக்கு அழைத்து பாராட்டிய அமைச்சர், கண்ணீருடன் வந்த முத்துலட்சுமியை பாராட்டி, விரைவில் அரசு பணியை பெறுங்கள் என்று சல்யூட் அடித்து வாழ்த்து தெரிவித்தார். `மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி' பயிற்சி முகாமில் அதன் பின் பேசிய தங்கம் தென்னரசு, “நகரங்களில் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கும் வரவேண்டும். தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மகளிர் தங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும். நமக்கான வேலை முன்னேற்றம் நமக்கான தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது ஆரம்பகால பயிற்சி அடுத்தகட்ட பயிற்சிகள் விரைவில் தொடங்கும். இப்பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் மகளிர் பொருளாதாரத்தில் உயரமுடியும் எனத் தெரிவித்தார். ``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு
கார்ட்டூன்: பாவம், அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு..!
கார்ட்டூன்: பாவம், அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு..!
``செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா?'' - டிடிவி தினகரன் சொன்ன பதில்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேராக பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 'செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார்' என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து நடந்திருக்கும் இந்தச் சந்திப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு; விவரம் என்ன? இதுகுறித்து பேசியிருக்கும் அமுமுக டிடிவி தினகரன், நாங்கள் எல்லாம் பள்ளி சென்றுகொண்டிருந்தபோது அரசியலில் இருந்தவர் அண்ணன் செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆர் உடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவிற்குப் பக்கபலமாக நின்றவர். இன்றைக்கு அவர் அரசியலில் எடுத்திருப்பது அவருடைய சொந்த முடிவு. அரசியலில் அதிக அனுபவம் பெற்ற அண்ணன் செங்கோட்டையன் எந்தவொரு முடிவையும் சரியாக யோசித்துதான் எடுப்பார். கடந்த இரண்டு நாள்களாக அவரிடம் பேசவில்லை. அவர் நிச்சயம் என்னிடம் பேசுவார். அப்படி பேசினால் இதுகுறித்து அவரிடம் நிச்சயம் பேசுவேன். நாங்கள் மதிக்கும் மூத்த தலைவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார், ஏன் எடுத்தார் என்பதை அவரே நிச்சயம் செய்தியாளர் சந்திப்பில் விரைவில் விளக்கிப் பேசுவார். டிடிவி தினகரன் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் விரைவில் எங்களின் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் எங்களின் அமுமுக கட்சி உடன் கூட்டணி வைக்க நிறையபேர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அது யார் யார் என்று இப்போதைக்கு எங்களால் சொல்ல முடியாது. விரைவில் எங்களின் கூட்டணி யாருடன் என்று முடிவெடுப்போம் என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.
``செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா?'' - டிடிவி தினகரன் சொன்ன பதில்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேராக பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 'செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார்' என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து நடந்திருக்கும் இந்தச் சந்திப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு; விவரம் என்ன? இதுகுறித்து பேசியிருக்கும் அமுமுக டிடிவி தினகரன், நாங்கள் எல்லாம் பள்ளி சென்றுகொண்டிருந்தபோது அரசியலில் இருந்தவர் அண்ணன் செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆர் உடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவிற்குப் பக்கபலமாக நின்றவர். இன்றைக்கு அவர் அரசியலில் எடுத்திருப்பது அவருடைய சொந்த முடிவு. அரசியலில் அதிக அனுபவம் பெற்ற அண்ணன் செங்கோட்டையன் எந்தவொரு முடிவையும் சரியாக யோசித்துதான் எடுப்பார். கடந்த இரண்டு நாள்களாக அவரிடம் பேசவில்லை. அவர் நிச்சயம் என்னிடம் பேசுவார். அப்படி பேசினால் இதுகுறித்து அவரிடம் நிச்சயம் பேசுவேன். நாங்கள் மதிக்கும் மூத்த தலைவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார், ஏன் எடுத்தார் என்பதை அவரே நிச்சயம் செய்தியாளர் சந்திப்பில் விரைவில் விளக்கிப் பேசுவார். டிடிவி தினகரன் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் விரைவில் எங்களின் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் எங்களின் அமுமுக கட்சி உடன் கூட்டணி வைக்க நிறையபேர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அது யார் யார் என்று இப்போதைக்கு எங்களால் சொல்ல முடியாது. விரைவில் எங்களின் கூட்டணி யாருடன் என்று முடிவெடுப்போம் என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.
'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' - பரபர இந்திரா பவன்! | Karnataka Congress
2.5 ஆண்டுகள் சுழற்சி ஒப்பந்தம்? கர்நாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்வர் பதவியைப் பிடிக்கச் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரிடமும் தலைமை பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அப்போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராகவும் பதவியைப் பகிர்ந்து கொள்ள 'ஒரு ரகசிய ஒப்பந்தம்' போடப்பட்டதாகச் செய்திகள் பரவின. ஆனால், காங்கிரஸ் மேலிடம் இதை வெளிப்படையாக ஒருபோதும் அறிவிக்கவில்லை. இந்தசூழலில் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுக் காலம் நவம்பரில் முடிவடைகிறது. கர்நாடக சட்டப்பேரவை இதையடுத்து, 'ரகசிய ஒப்பந்தத்தை மதித்து, டி.கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும்' என அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களில் தினேஷ் கூலிகவுடா, ரவி கனிஹா, குப்பி வாசு உள்ளிட்ட சில எம்.எல்.ஏ-க்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்ததாக வெளியான தகவல்கள் கர்நாடக காங்கிரஸில் பெரும் பரபரப்பை கிளப்பியது. அப்போது அவர்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததற்குக் கடுமையாக உழைத்த டி.கே. சிவக்குமாருக்கு, ரகசிய ஒப்பந்தத்தின்படி முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். தற்போதைய முதல்வர் பதவிக் குழப்பத்துக்குக் கட்சித் தலைமை விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. '200% டி.கே. சிவக்குமார்தான் முதல்வர்!' இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்நகராவின் எம்.எல்.ஏ-வும், டி.கே. சிவக்குமாரின் தீவிர ஆதரவாளருமான இக்பால் ஹுசைன், நான் எப்போதும் அந்த அறிக்கைக்கு 200% உறுதியாக இருக்கிறேன். விரைவில் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராவார். எல்லோரும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவோம். ஆனால், சிவக்குமார் முதலமைச்சராக வருவது நிச்சயம். அவர் கட்சிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். 2028-ல் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த, சிவக்குமார் தலைமைக்கு வர வேண்டும். எனப் பேட்டி கொடுத்துச் சித்தராமையா தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ், நான் அவர்களை (ஆதரவு எம்.எல்.ஏக்களை) டெல்லிக்கு அழைக்கவும் இல்லை, பேசவும் இல்லை. அவர்கள் ஏன் சென்றார்கள் என்று நான் கேட்கப் போவதில்லை. அமைச்சரவை மாற்றத்தில் அவர்களுக்கு அமைச்சர் பதவி தேவைப்பட்டிருக்கலாம், என்று கூறி, தனது ஆதரவாளர்களின் வெளிப்படையான முயற்சிக்கும் தனக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று அவர் காட்டிக் கொண்டார். தொடர்ந்து பேசியவர், எனக்கு முதல்வர் பதவி தொடர்பாகப் பதவியின் முதல் நாட்களிலேயே ஒரு உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் நான் மற்றும் சித்தராமையாவுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல. ஐந்து முதல் ஆறு கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையே ஆன ஒரு ரகசிய ஒப்பந்தம் அது, 'பொதுவெளியில் பேச விரும்பவில்லை…' அந்த ஒப்பந்தம்பற்றிப் பொதுவெளியில் பேச நான் விரும்பவில்லை. அது மிகவும் ரகசியமானது. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவும், இந்த அரசு ஸ்திரமாக இருக்கவும், எனக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று நான் துணை முதல்வராகப் பதவியேற்றேன். இப்போதுகூட, இந்த விவகாரம் குறித்துப் பொதுவெளியில் பேசி நான் மேலும் சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை. என்னிடமும் சித்தராமையாவிடமும் தலைமை பேசியுள்ளது. கட்சித் தலைமை எடுத்த முடிவுகுறித்து எனக்குத் தெரியும். ராகுல் காந்தி அவர்களுக்கு அனைத்தும் தெரியும். இப்போது அந்த முடிவை அவர்கள் தான் செயல்படுத்த வேண்டும். நாங்கள் அனைவரும் கட்சியின் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள். டெல்லி தலைமை என்ன முடிவெடுத்தாலும், அதற்கு நான் கட்டுப்படுவேன். பொறுத்திருந்து பாருங்கள். டெல்லி தலைமையின் முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்வோம். காத்திருங்கள், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள் எனத் தெரிவித்து ரகசிய ஒப்பந்தம்குறித்து வெளிப்படையாகப் போட்டுடைத்தார். 'டி.கே.எஸ் சொல்வது எனக்குப் புரியவில்லை' - சித்தராமையா! இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, முதல்வர் பதவிக் காலம்குறித்து எந்த ரகசிய ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. நான் ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதலமைச்சராக இருப்பேன். அதிலென்ன சந்தேகம்? எங்கள் ஆட்சி எந்தப் பதவிக் காலப் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் செயல்படவில்லை. கட்சித் தலைமை எடுத்த முடிவின்படி நான் முதல்வராக இருக்கிறேன். டி.கே. சிவக்குமார் கூறும் ரகசிய ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரியாது. அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இருப்பதை நான் அறியேன், என்றார். இதனால் டி.கே.எஸ் ஆதரவாளர்கள் கொதி நிலையின் உச்சத்துக்கு சென்றனர். இதையடுத்து டெல்லிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். சோனியா காந்தி பிறகு பேசிய சித்தராமையா, முதல்வர் பதவிக் குழப்பத்துக்குக் காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க சித்தராமையா முயற்சித்து வருகிறார். அதாவது தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அமைச்சர்களாக நியமித்து, தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்தவும், கட்சிக்குள் தனது நிலையை உறுதிப்படுத்தவும் முயல்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். புதிதாக அமைச்சர்கள் பதவியேற்றால், உடனடியாக முதல்வரை மாற்றுவது கட்சி மேலிடத்திற்குச் சிரமமாக இருக்கும் என்று அவர் நம்புவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 'காமராஜ் திட்டம்' என்ற பெயரில் சில மூத்த அமைச்சர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குக் கட்சிப் பணிகளை ஒதுக்கவும், அதற்குப் பதிலாக 10 முதல் 12 புதிய முகங்களை அமைச்சரவையில் சேர்க்கவும் சித்தராமையா திட்டமிட்டிருகிறார். அமைச்சரவை மாற்றம்; தயாராகும் சித்தராமையா! இதற்கு டெல்லி தலைமையிடம், 'சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதிலிருந்து, பல எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இடம் பிடிக்கத் தீவிரமாக லாபி செய்து வருகின்றனர். இந்த மாற்றம்மூலம் நீண்டகாலமாக அமைச்சரவை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கோரிக்கையைச் சமாதானப்படுத்த முடியும். சில அமைச்சர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுவதால், அரசின் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், 2028 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டும் திறமையற்றவர்களை நீக்கிவிட்டுப் புதியவர்களை நியமிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்' எனச் சித்தராமையா காரணம் சொல்வதாகக் கூறப்படுகிறது. சித்தராமையாவின் கணக்கு டெல்லிக்கு தெரியும் என்பதால் அவர்கள் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவில் தற்போது நிலவும் அதிகாரப் போராட்டம் குறித்துப் பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரம் குறித்துச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கூற விரும்பினாலும், அவர்கள் அதைக் கட்சித் தலைமையிடம் தான் தெரிவிக்க வேண்டும். இறுதியில், இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கட்சி மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் இந்தச் சிக்கலைத் தீர்ப்போம். நானும், சோனியா காந்தி மற்றும் ராகுலும் காந்தி இணைந்து இதைச் சரிசெய்வோம் எனத் தெரிவித்திருக்கிறார். கார்கே.. சோனியா.. ராகுல்.. பரபர இந்திரா பவன்! இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய மிக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், டிசம்பர் 1-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்குள் இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் கார்கே-ராகுல் காந்தி சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதன் பிறகு சித்தராமையாவும், டி.கே.எஸ்ஸும் டெல்லிக்கு வரவழைக்கப்படுவார்கள். தற்போதைய நிலவரப்படி டி.கே. சிவக்குமாரை சமாதானப்படுத்தவே டெல்லி தலைமை முயற்சி செய்கிறது. காங்கிரஸ் (Congress) ஏனெனில் சித்தராமையவிடமிருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டால் அவர் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு எடுக்கக்கூடும் எனத் தலைமை அஞ்சுகிறது. இவர்கள் இருவரும் சமாதானம் அடையவில்லை என்றால் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவை முதல்வராக்கலாமெனச் சில தலைவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அவரும் தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். இதை, நான் எப்போதும் முதல்வர் பதவிக்கான போட்டியில் தான் இருக்கிறேன். இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. நான் ஒருபோதும் போட்டியிலிருந்து விலகியதில்லை. எனக்கூறி பரமேஸ்வரா உறுதிப்படுத்திருக்கிறார். ஆனால் இதை டெல்லி தலைமை விரும்பவில்லை. எனவே என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பாப்போம் என்றனர் விரிவாக. `திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!
'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' - பரபர இந்திரா பவன்! | Karnataka Congress
2.5 ஆண்டுகள் சுழற்சி ஒப்பந்தம்? கர்நாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்வர் பதவியைப் பிடிக்கச் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரிடமும் தலைமை பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அப்போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராகவும் பதவியைப் பகிர்ந்து கொள்ள 'ஒரு ரகசிய ஒப்பந்தம்' போடப்பட்டதாகச் செய்திகள் பரவின. ஆனால், காங்கிரஸ் மேலிடம் இதை வெளிப்படையாக ஒருபோதும் அறிவிக்கவில்லை. இந்தசூழலில் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுக் காலம் நவம்பரில் முடிவடைகிறது. கர்நாடக சட்டப்பேரவை இதையடுத்து, 'ரகசிய ஒப்பந்தத்தை மதித்து, டி.கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும்' என அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களில் தினேஷ் கூலிகவுடா, ரவி கனிஹா, குப்பி வாசு உள்ளிட்ட சில எம்.எல்.ஏ-க்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்ததாக வெளியான தகவல்கள் கர்நாடக காங்கிரஸில் பெரும் பரபரப்பை கிளப்பியது. அப்போது அவர்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததற்குக் கடுமையாக உழைத்த டி.கே. சிவக்குமாருக்கு, ரகசிய ஒப்பந்தத்தின்படி முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். தற்போதைய முதல்வர் பதவிக் குழப்பத்துக்குக் கட்சித் தலைமை விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. '200% டி.கே. சிவக்குமார்தான் முதல்வர்!' இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்நகராவின் எம்.எல்.ஏ-வும், டி.கே. சிவக்குமாரின் தீவிர ஆதரவாளருமான இக்பால் ஹுசைன், நான் எப்போதும் அந்த அறிக்கைக்கு 200% உறுதியாக இருக்கிறேன். விரைவில் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராவார். எல்லோரும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவோம். ஆனால், சிவக்குமார் முதலமைச்சராக வருவது நிச்சயம். அவர் கட்சிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். 2028-ல் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த, சிவக்குமார் தலைமைக்கு வர வேண்டும். எனப் பேட்டி கொடுத்துச் சித்தராமையா தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ், நான் அவர்களை (ஆதரவு எம்.எல்.ஏக்களை) டெல்லிக்கு அழைக்கவும் இல்லை, பேசவும் இல்லை. அவர்கள் ஏன் சென்றார்கள் என்று நான் கேட்கப் போவதில்லை. அமைச்சரவை மாற்றத்தில் அவர்களுக்கு அமைச்சர் பதவி தேவைப்பட்டிருக்கலாம், என்று கூறி, தனது ஆதரவாளர்களின் வெளிப்படையான முயற்சிக்கும் தனக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று அவர் காட்டிக் கொண்டார். தொடர்ந்து பேசியவர், எனக்கு முதல்வர் பதவி தொடர்பாகப் பதவியின் முதல் நாட்களிலேயே ஒரு உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் நான் மற்றும் சித்தராமையாவுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல. ஐந்து முதல் ஆறு கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையே ஆன ஒரு ரகசிய ஒப்பந்தம் அது, 'பொதுவெளியில் பேச விரும்பவில்லை…' அந்த ஒப்பந்தம்பற்றிப் பொதுவெளியில் பேச நான் விரும்பவில்லை. அது மிகவும் ரகசியமானது. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவும், இந்த அரசு ஸ்திரமாக இருக்கவும், எனக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று நான் துணை முதல்வராகப் பதவியேற்றேன். இப்போதுகூட, இந்த விவகாரம் குறித்துப் பொதுவெளியில் பேசி நான் மேலும் சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை. என்னிடமும் சித்தராமையாவிடமும் தலைமை பேசியுள்ளது. கட்சித் தலைமை எடுத்த முடிவுகுறித்து எனக்குத் தெரியும். ராகுல் காந்தி அவர்களுக்கு அனைத்தும் தெரியும். இப்போது அந்த முடிவை அவர்கள் தான் செயல்படுத்த வேண்டும். நாங்கள் அனைவரும் கட்சியின் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள். டெல்லி தலைமை என்ன முடிவெடுத்தாலும், அதற்கு நான் கட்டுப்படுவேன். பொறுத்திருந்து பாருங்கள். டெல்லி தலைமையின் முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்வோம். காத்திருங்கள், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள் எனத் தெரிவித்து ரகசிய ஒப்பந்தம்குறித்து வெளிப்படையாகப் போட்டுடைத்தார். 'டி.கே.எஸ் சொல்வது எனக்குப் புரியவில்லை' - சித்தராமையா! இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, முதல்வர் பதவிக் காலம்குறித்து எந்த ரகசிய ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. நான் ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதலமைச்சராக இருப்பேன். அதிலென்ன சந்தேகம்? எங்கள் ஆட்சி எந்தப் பதவிக் காலப் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் செயல்படவில்லை. கட்சித் தலைமை எடுத்த முடிவின்படி நான் முதல்வராக இருக்கிறேன். டி.கே. சிவக்குமார் கூறும் ரகசிய ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரியாது. அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இருப்பதை நான் அறியேன், என்றார். இதனால் டி.கே.எஸ் ஆதரவாளர்கள் கொதி நிலையின் உச்சத்துக்கு சென்றனர். இதையடுத்து டெல்லிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். சோனியா காந்தி பிறகு பேசிய சித்தராமையா, முதல்வர் பதவிக் குழப்பத்துக்குக் காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க சித்தராமையா முயற்சித்து வருகிறார். அதாவது தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அமைச்சர்களாக நியமித்து, தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்தவும், கட்சிக்குள் தனது நிலையை உறுதிப்படுத்தவும் முயல்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். புதிதாக அமைச்சர்கள் பதவியேற்றால், உடனடியாக முதல்வரை மாற்றுவது கட்சி மேலிடத்திற்குச் சிரமமாக இருக்கும் என்று அவர் நம்புவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 'காமராஜ் திட்டம்' என்ற பெயரில் சில மூத்த அமைச்சர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குக் கட்சிப் பணிகளை ஒதுக்கவும், அதற்குப் பதிலாக 10 முதல் 12 புதிய முகங்களை அமைச்சரவையில் சேர்க்கவும் சித்தராமையா திட்டமிட்டிருகிறார். அமைச்சரவை மாற்றம்; தயாராகும் சித்தராமையா! இதற்கு டெல்லி தலைமையிடம், 'சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதிலிருந்து, பல எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இடம் பிடிக்கத் தீவிரமாக லாபி செய்து வருகின்றனர். இந்த மாற்றம்மூலம் நீண்டகாலமாக அமைச்சரவை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கோரிக்கையைச் சமாதானப்படுத்த முடியும். சில அமைச்சர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுவதால், அரசின் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், 2028 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டும் திறமையற்றவர்களை நீக்கிவிட்டுப் புதியவர்களை நியமிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்' எனச் சித்தராமையா காரணம் சொல்வதாகக் கூறப்படுகிறது. சித்தராமையாவின் கணக்கு டெல்லிக்கு தெரியும் என்பதால் அவர்கள் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவில் தற்போது நிலவும் அதிகாரப் போராட்டம் குறித்துப் பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரம் குறித்துச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கூற விரும்பினாலும், அவர்கள் அதைக் கட்சித் தலைமையிடம் தான் தெரிவிக்க வேண்டும். இறுதியில், இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கட்சி மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் இந்தச் சிக்கலைத் தீர்ப்போம். நானும், சோனியா காந்தி மற்றும் ராகுலும் காந்தி இணைந்து இதைச் சரிசெய்வோம் எனத் தெரிவித்திருக்கிறார். கார்கே.. சோனியா.. ராகுல்.. பரபர இந்திரா பவன்! இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய மிக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், டிசம்பர் 1-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்குள் இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் கார்கே-ராகுல் காந்தி சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதன் பிறகு சித்தராமையாவும், டி.கே.எஸ்ஸும் டெல்லிக்கு வரவழைக்கப்படுவார்கள். தற்போதைய நிலவரப்படி டி.கே. சிவக்குமாரை சமாதானப்படுத்தவே டெல்லி தலைமை முயற்சி செய்கிறது. காங்கிரஸ் (Congress) ஏனெனில் சித்தராமையவிடமிருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டால் அவர் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு எடுக்கக்கூடும் எனத் தலைமை அஞ்சுகிறது. இவர்கள் இருவரும் சமாதானம் அடையவில்லை என்றால் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவை முதல்வராக்கலாமெனச் சில தலைவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அவரும் தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். இதை, நான் எப்போதும் முதல்வர் பதவிக்கான போட்டியில் தான் இருக்கிறேன். இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. நான் ஒருபோதும் போட்டியிலிருந்து விலகியதில்லை. எனக்கூறி பரமேஸ்வரா உறுதிப்படுத்திருக்கிறார். ஆனால் இதை டெல்லி தலைமை விரும்பவில்லை. எனவே என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பாப்போம் என்றனர் விரிவாக. `திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!
காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! - பரபர அப்டேஸ்!
இன்று காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த செங்கோட்டையன், சூட்டோடு சூடாக இன்று மாலை தவெக தலைவர் விஜய்யையும் சந்தித்திருக்கிறார். டெல்லியில் எடப்பாடி செய்ததைப் போல கார்களை மாற்றி மாற்றி பயணித்து பத்திரிகையாளர்களையும் குழம்ப வைத்தார். செங்கோட்டையன் நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் தங்கியிருந்தார். காலையில் 8:30 மணிக்கு இனோவா 'TN09 CE 9393' நம்பர் ப்ளேட் கொண்ட காரில் கிளம்பினார். மீடியாக்கள் வட்டமடிப்பதைப் பார்த்து யூடர்ன் போட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டார். 11:30 மணியளவில் மீண்டும் அதே '9393' காரில் கிளம்பி தலைமைச் செயலகம் வந்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அங்கிருந்து புறப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தார். ஊடகங்கள் மொத்தமும் தன்னை பாலோ செய்வதை அறிந்தவர், அங்கிருந்து வேறொரு காரில் புறப்பட்டு சென்றிருக்கிறார். அதே சமயத்தில் விஜய்யும் செங்கோட்டையனை சந்திப்பதற்காக நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். தவெகவில் செங்கோட்டையனின் இணைப்பு சார்ந்து அத்தனை விஷயங்களும் இறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விஜய்யை பெர்சனலாக சந்தித்து பேச திட்டமிட்டார் செங்கோட்டையன். செங்கோட்டையன் இதற்காக ஆதவ்வின் '5050' என்ற பேன்சி நம்பர் கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் செங்கோட்டையனை பிக் அப் செய்ய அனுப்பப்பட்டது. அந்த காரில் தேநீர் அருந்தும் வேளையில் மாலை 4:30 மணிக்கு மேலாக பட்டினம்பாக்கம் வந்து சேர்ந்தார் செங்கோட்டையன். அவர் வருவதற்கு முன்பே ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி, விஜய்யின் நண்பரான விஷ்ணு ரெட்டி ஆகியோரும் பட்டினப்பாக்க வீட்டில் ஆஜராகியிருந்தனர். செங்கோட்டையன் - விஜய் தரப்பு இடையேயான இந்த சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு நீண்டது. விஜய் - செங்கோட்டையன் சந்திப்பு பற்றிய அப்டேட்ஸ் சாட்டிலைட் சேனல்களில் லைவாக ஓட விஜய்யை பார்க்கவும் ஒரு கூட்டம் அங்கே கூடிவிட்டது. பட்டினப்பாக்கத்தில் முக்கியமான ஜங்ஷனில் விஜய்யின் அலுவலக அப்பார்ட்மெண்ட் இருப்பதால் போக்குவரத்து கடும் நெருக்கடிக்குள்ளாகியது. இதனால் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர். கூட்டம் கூடுகிறது சீக்கிரம் சந்திப்பை முடிக்க சொல்லுங்கள் என காவல்துறையினர் விஜய் தரப்புக்கு செக்யூரிட்டிகள் மூலம் மெசேஜ் சொல்லி அனுப்பினர். செங்கோட்டையனின் கார் ஒரு வழியாக மாலை 6:30 மணி வாக்கில் அந்த சந்திப்பு நிறைவடைந்தது. ஆதவ், ஆனந்த், ஜான் என எல்லாரும் தனித்தனி காரில் கிளம்பிச் சென்றனர். அதே '5050' எண் கொண்ட இன்னொரு ரக காரில் செங்கோட்டையனும் கிளம்பி சென்றார். நாளை பனையூர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள் சிலரோடு செங்கோட்டையன் தவெகவில் இணையவிருப்பதாக உறுதியாக கூறுகின்றனர். அதுவரைக்கும் சஸ்பென்ஸை உடைக்காமல் இருக்க நினைக்கிறதாம் விஜய் தரப்பு. அதனால்தான் செங்கோட்டையனும் கார்களை மாற்றி மாற்றி வித்தை காட்டி மௌனமும் காத்திருக்கிறார். நாளை உதயநிதியின் பிறந்தநாள். செங்கோட்டையனின் இணைப்பு விழாவை நாளை நடத்துவதன் மூலம், உடன்பிறப்புகளின் 'சின்னவர்' பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஓவர்டேக் செய்து மாஸ் காட்ட நினைக்கிறார்களாம். ஆனந்த் தட் ’யார் பெருசுன்னு அடிச்சு காட்டுங்க’ மொமென்ட். “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' ; ராஜினாமா, மெளனம், திடீர் குழப்பம் - செங்கோட்டையன் ரவுண்டிங்!
Vijay டீமில் Sengottaiyan, டீல், டிமாண்ட் இதுதான், EPS ஷாக்! | Elangovan Explains
Vijay உடன் இணைந்த Sengottaiyan | EWS இட ஒதுக்கீடு: PG NEET சர்ச்சை| TVK EPS ADMK
தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அரசு வேலை!
தென்காசியில் கடந்த 24ம் தேதி இடைகால் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். அன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த எம்.ஆர். கோபாலன் ஆகிய இரண்டு தனியார் பேருந்துகள் இடைகால் அருகிலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் பேருந்திற்குள் இருந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கிருத்திகா மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விபத்து ஏற்படுத்திய பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். பணி ஆணை வழங்கிய ஆட்சியர் உயிரிழந்தவர்களில் பார்வை மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் தாயும் ஒருவர். அந்த பெண்ணிடம் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். சிறுவயதிலேயே தந்தையையும் இழந்த நிலையில், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பெண் கிருத்திகாவுக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையினை அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.
தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அரசு வேலை!
தென்காசியில் கடந்த 24ம் தேதி இடைகால் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். அன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த எம்.ஆர். கோபாலன் ஆகிய இரண்டு தனியார் பேருந்துகள் இடைகால் அருகிலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் பேருந்திற்குள் இருந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கிருத்திகா மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விபத்து ஏற்படுத்திய பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். பணி ஆணை வழங்கிய ஆட்சியர் உயிரிழந்தவர்களில் பார்வை மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் தாயும் ஒருவர். அந்த பெண்ணிடம் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். சிறுவயதிலேயே தந்தையையும் இழந்த நிலையில், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பெண் கிருத்திகாவுக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையினை அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.
MLA Sudharsanam Case: Bawaria கொள்ளையர்களைப் பிடிச்சது எப்படி? | Jangid Interview
MLA Sudharsanam Case: Bawaria கொள்ளையர்களைப் பிடிச்சது எப்படி? | Jangid Interview
செங்கோட்டையன் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது - திருமாவளவன்
செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி, செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். செங்கோட்டையன் அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் இன்று (நவ.26) செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன் - விஜய் தற்போது தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் செங்கோட்டையன். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், செங்கோட்டையன் தவெக-வில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தன்னை பாஜக அழைத்து பேசியிருக்கிறது என ஏற்கனேவே செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவிற்கு பின்னடைவாக இருக்கும். அதேபோல நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமாவளவன் தவெகவில் பாஜக மற்றும் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஊடுருவல் நிகழ்ந்தால், அவருடைய அரசியல் கேள்விக்குறியாக மாறும் என்று பேசியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!
செங்கோட்டையன் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது - திருமாவளவன்
செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி, செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். செங்கோட்டையன் அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் இன்று (நவ.26) செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன் - விஜய் தற்போது தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் செங்கோட்டையன். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், செங்கோட்டையன் தவெக-வில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தன்னை பாஜக அழைத்து பேசியிருக்கிறது என ஏற்கனேவே செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவிற்கு பின்னடைவாக இருக்கும். அதேபோல நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமாவளவன் தவெகவில் பாஜக மற்றும் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஊடுருவல் நிகழ்ந்தால், அவருடைய அரசியல் கேள்விக்குறியாக மாறும் என்று பேசியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!
விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு; விவரம் என்ன?
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரை சந்தித்து செங்கோட்டையன் பேசி வருகிறார். செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. செங்கோட்டையனை தவெகவில் இணைக்கும் பணியை ஆதவ் அர்ஜூனா செய்து வருவதாகவும் பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ்,பெங்களூரு புகழேந்தி போன்றோரைச் சந்தித்து பேசியிருந்தார். செங்கோட்டையன் ``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம் காலை 11:30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்ட செங்கோட்டையன் தலைமைச் செயலகத்துக்கு வந்து சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் சேகர் பாபுவும் செங்கோட்டையனிடம் பேசியிருந்தார். இதனால் செங்கோட்டையனை திமுக இழுக்கப் பார்க்கிறது எனும் பேச்சும் அடிபட்டது. இந்நிலையில்தான் பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு பிற்பகல் 1 மணியளவில் விஜய் வந்திருந்தார். எம்.எல்.ஏக்கள் விடுதியிலிருந்த செங்கோட்டையன் பட்டினப்பாக்கம் சென்று இப்போது விஜய்யுடன் ஆலோசித்து வருகிறார். செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ஈரோடு: பழனிசாமியின் லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
ஈரோடு மாவட்டம் சோலாரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ.278.62 கோடி மதிப்பில் 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு ஈரோடு வந்தபோது பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் சிலை அறிவித்தேன். இன்று அந்தச் சிலை திறக்கப்பட உள்ளது. தன்னை மேற்கு மண்டலக்காரர் என்று சொல்லிக் கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இதைச் செய்தாரா? சோலார் பஸ் ஸ்டாண்ட் அவர் செய்ததெல்லாம் துரோகம்தான். பச்சை துண்டு போட்டுக்கொண்டு தமிழ்நாட்டுக்குப் பச்சை துரோகம் செய்யும் பழனிசாமி என்று சொன்னவுடன், அவருக்குக் கோபம் வந்தது. நான் ஒரு விவசாயி, இப்போது விவசாயம் செய்கிறேன் என்றார். பழனிசாமி இப்போதும் துரோகம் செய்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் விவசாயி என்று சொல்வது விவசாயிகளை அவமானப்படுத்துவதற்குச் சமம். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள் நெல் கொள்முதலில் தமிழ்நாட்டு கோரிக்கையை பாஜக அரசு நிராகரித்துவிட்டது. பழனிச்சாமி உண்மையான விவசாயியாக இருந்தால், பிரதமரை தமிழ்நாட்டு கோரிக்கையை ஏற்க வேண்டும் எனச் சொல்லியிருக்க வேண்டும். டெல்லியில் பல கார்களில் சென்று, யார் யாரையோ சந்திக்கிறீர்கள். தமிழ்நாடு விவசாயிகளுக்காக பிரதமரைச் சந்திக்க டெல்லி சொல்கிறேன் என்று சொல்லுங்கள். தமிழ்நாட்டு சார்பாக நானே கார் அனுப்புகிறேன். பழனிசாமியின் புதிய லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து உள்ளது. இப்போது சென்செக்ஸ் கணக்கெடுப்பு நடத்தி மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்போது உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டம் முடிவடையும்போது 2035 ஆகி விடும். மக்கள்தொகை குறைவாக உள்ள வட மாநிலங்களுக்கு மெட்ரோ கொடுக்கிறார்கள். பாஜகவிற்கு வாக்களிக்காத தமிழகத்திற்கு எதையும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தால் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படும் என்று பழனிச்சாமி மற்றும் பாஜக கோவை சட்டமன்ற உறுப்பினர் சொல்கிறார். திமுக ஆட்சியில் உள்ளதால்தான் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். ‘மெட்ரோ கிடையாது போங்க...’ - கைவிரித்த பா.ஜ.க... கொந்தளிக்கும் கோவை, மதுரை! இவர்களெல்லாம் தமிழகத்திற்குக் கொடுக்கும் குடைச்சல் போதாமல், நிரந்தரமா கெடுக்க வேண்டும் என ஆளுநர் இருக்கிறார். தமிழகத்திற்குச் சேவை செய்ய வந்ததாக ஆளுநர் சொல்லிவிட்டு, தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்னை இருக்கிறது என்று பேசுகிறார். தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்னை இருக்கிறது. தீவிரவாத போக்கு நிலவக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளதாம், தமிழ் மொழி வளர்ச்சிக்காக எதுவும் நடக்கவில்லை, அனைவரும் ஆங்கிலம் படிக்கிறார்கள் இப்படி எல்லாம் அவர் பேசுவதற்கு உள்ளார் ஆளுநர். தீவிரவாதத்தைத் தடுக்க முடியாத பாஜக ஆட்சியைப் புகழ்ந்து பேசி உள்ள ஆளுநர், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் எனத் திமிரெடுத்து பேசி உள்ளார். அவர் வகிக்கக்கூடிய அரசியல் சாசன பொறுப்பிற்குத் துளியும் தகுதியற்ற தரவு குறைவான பேச்சு இது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எங்கள் மாணவர்கள் உலக வாய்ப்புக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். தமிழ் மொழி பற்றி நீங்கள் வகுப்பு நடத்த வேண்டாம். ஆளுநர் ரவி நீங்கள் தமிழ் வெறுப்பைத் தொடர்ந்து பேச வேண்டும். அப்போதுதான் எங்களது வேலை எளிமையாகும். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டார். இந்த ஆண்டு புதிய வழித்தடத்திற்கான ரயில் சேவைக்கு 31,458 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தெற்கு ரயில்வேவிற்க மத்திய அரசு 1% சதவிதம் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பாஜக செயற்கைப் பேரிடர் செய்கிறது என்று பேசினார். தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!
தூய்மைப் பணியாளர் பிர்ச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும் - ஆதவ் அர்ஜுனா
பணி நிரந்தரம் வேண்டியும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் மாளிக்கைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் தொடர் போராட்டம் நடத்தி கைதாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்போது அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் இன்று விஜய்யின் தவெக கட்சியின் தரப்பில் இருந்து ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் ஆகியோர் அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இதுதான் பண்ணையார்த்தனம் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் ஆதவ் அர்ஜுனா, தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு உணவு வழங்குகிறோம் என்கிறார்கள். இதுதான் பண்ணையார்த்தனம். அவர்களின் பிரச்னையை சரிசெய்யாமல், உணவு வழங்குகிறோம் என பிச்சை போடுவதுபோல பண்ணையார்தனம் செய்கிறார்கள். எங்கள் உணவை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம், எங்கள் வீடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், எங்கள் குழந்தைகளை நாங்கள் படிக்க வைத்துக் கொள்கிறோம். அரசு எங்களுக்கான உரிமையை, கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்கிறார்கள். உண்ணாநிலை போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் 'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' - கு.பாரதி குற்றச்சாட்டு! இதுதான் சமூக நீதியா? மேலும், எங்களை பணியில் இருந்து தூக்கிவிட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல முதல்வர், அமைச்சர்கள், மாநகராட்சி ஆணையரை சந்திக்க வேண்டுகோள் வைக்கிறோம். ஆனால், எங்களை தனியார் நிறுவனத்திடம் போய் பேசச் சொல்லி அரசே சொல்லுகிறது என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். 16 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யாமல், இன்று அவர்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது அரசு. ஒட்டுமொத்த ஆதி திராவிடர் மக்களுக்கு அநீதி செய்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் சமூக நீதியா? இதுதான் அவர்களின் சமத்துவ அரசியலா? விஜய் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். போராட்டம் வெடிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதியைக் கேட்டவுடனே எங்கள் தவெக தலைவர் விஜய் கடந்த 4, 5 நாள்களாக மிகவும் வருத்தத்தில் இருந்தார். உடனே அவர்களை நேரில் சென்று பார்க்க எங்களுக்கு ஆணையிட்டார். தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 100 நாள்களுக்கு மேல் போராடி வருகிறார்கள். அவர்களை பலமுறை கைது செய்து போராட்டத்தை அடக்கி ஒடுக்க நினைத்தது திமுக அரசு. அவர்கள் இன்னும் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் இருக்கின்றனர். இப்போது நான்கு பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் 'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தூய்மைப் பணியாளர்களுக்காக களத்தில் இறங்கி துணை நிற்க வேண்டும். சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கும் மாநகராட்சியில் இந்த பிரச்னைகள் இருக்கின்றன. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தவெக சார்பில் தலைவர் விஜய்யிடம் கலந்தாலோசித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும், போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருக்கிறார் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா.
தூய்மைப் பணியாளர் பிரச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும் - ஆதவ் அர்ஜுனா
பணி நிரந்தரம் வேண்டியும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் மாளிக்கைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் தொடர் போராட்டம் நடத்தி கைதாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்போது அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் இன்று விஜய்யின் தவெக கட்சியின் தரப்பில் இருந்து ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் ஆகியோர் அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இதுதான் பண்ணையார்த்தனம் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் ஆதவ் அர்ஜுனா, தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு உணவு வழங்குகிறோம் என்கிறார்கள். இதுதான் பண்ணையார்த்தனம். அவர்களின் பிரச்னையை சரிசெய்யாமல், உணவு வழங்குகிறோம் என பிச்சை போடுவதுபோல பண்ணையார்தனம் செய்கிறார்கள். எங்கள் உணவை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம், எங்கள் வீடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், எங்கள் குழந்தைகளை நாங்கள் படிக்க வைத்துக் கொள்கிறோம். அரசு எங்களுக்கான உரிமையை, கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்கிறார்கள். உண்ணாநிலை போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் 'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' - கு.பாரதி குற்றச்சாட்டு! இதுதான் சமூக நீதியா? மேலும், எங்களை பணியில் இருந்து தூக்கிவிட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல முதல்வர், அமைச்சர்கள், மாநகராட்சி ஆணையரை சந்திக்க வேண்டுகோள் வைக்கிறோம். ஆனால், எங்களை தனியார் நிறுவனத்திடம் போய் பேசச் சொல்லி அரசே சொல்லுகிறது என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். 16 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யாமல், இன்று அவர்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது அரசு. ஒட்டுமொத்த ஆதி திராவிடர் மக்களுக்கு அநீதி செய்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் சமூக நீதியா? இதுதான் அவர்களின் சமத்துவ அரசியலா? விஜய் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். போராட்டம் வெடிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதியைக் கேட்டவுடனே எங்கள் தவெக தலைவர் விஜய் கடந்த 4, 5 நாள்களாக மிகவும் வருத்தத்தில் இருந்தார். உடனே அவர்களை நேரில் சென்று பார்க்க எங்களுக்கு ஆணையிட்டார். தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 100 நாள்களுக்கு மேல் போராடி வருகிறார்கள். அவர்களை பலமுறை கைது செய்து போராட்டத்தை அடக்கி ஒடுக்க நினைத்தது திமுக அரசு. அவர்கள் இன்னும் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் இருக்கின்றனர். இப்போது நான்கு பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் 'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தூய்மைப் பணியாளர்களுக்காக களத்தில் இறங்கி துணை நிற்க வேண்டும். சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கும் மாநகராட்சியில் இந்த பிரச்னைகள் இருக்கின்றன. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தவெக சார்பில் தலைவர் விஜய்யிடம் கலந்தாலோசித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும், போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருக்கிறார் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' ; ராஜினாமா, மெளனம், திடீர் குழப்பம் - செங்கோட்டையன் ரவுண்டிங்!
அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை ஆதவ் தரப்பு சந்தித்து பேசி தவெகவில் இணையும் சூழலை ஏற்படுத்தியதாக பனையூர் வட்டாரத்தினர் தகவல் சொல்கின்றனர். 'தவெகவில் இணைகிறீர்களா?' இந்நிலையில், நேற்று இரவு கோவையிலிருந்து சென்னை கிளம்பிய போதும் சென்னையில் வந்திறங்கிய போதும் விமான நிலையத்தில், 'தவெகவில் இணைகிறீர்களா?' எனும் கேள்விக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மௌனமாக கடந்து சென்றார். ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு வந்து சேர்ந்த செங்கோட்டையன் இன்று காலை 8:30 மணியளவில் இனோவா காரில் வெளியே புறப்பட்டார். மீடியாக்கள் சூழ்ந்திருப்பதை அறிந்த செங்கோட்டையன் அப்படியே யூடர்ன் அடித்து வீட்டுக்கு திரும்பிவிட்டார். செங்கோட்டையன் அடுத்த ஒரு மணி நேரத்தில் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனின் வீட்டுக்கு வந்து சந்தித்தார். வெளியே வந்தவர் செங்கோட்டையன் தவெகவுக்கு செல்லும் மனநிலையில் இருப்பதை உறுதி செய்தார். அடுத்ததாக பெங்களூரு புகழேந்தி வந்தார். செங்கோட்டையனை சந்தித்து சில நிமிடங்கள் பேசியவர், 'அவர் எதுவாக இருந்தாலும் உங்களிடம் கூறிவிட்டுதான் செல்வார்.' என பொதுவாக கூறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே செங்கோட்டையனின் இனோவா கார் தலைமைச் செயலகத்தை நோக்கி செல்ல தயாரானது. செய்தியாளர்கள் சூழ காரில் ஏறிய போதும், 'ராஜினாமா செய்யப்போகிறேன் என்றோ...தவெகவில் இணையப்போகிறேன் என்றோ...' எதையும் கமிட் செய்யவில்லை. கையெடுத்து கும்பிட்டபடி மௌனமாக சென்றுவிட்டார். 'ஒரு நாள் பொறுங்களேன்...சொல்றேன்...' செங்கோட்டையனின் அந்த '9393' பேன்சி நம்பர் காரை ஊடகத்தினரின் வண்டிகள் பாலோ செய்தது. பீச் ரோட்டில் செங்கோட்டையனின் வண்டி ஏற, அவர் ஜெ.சமாதிக்கு செல்கிறாரோ எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஜெ.சமாதியையும் தாண்டி சென்ற செங்கோட்டையனின் கார் தலைமைச் செயலகத்தில் சபாநாயகரின் அறை அருகே இருக்கும் கேட்டில் நுழைந்தது. சபாநாயகர் அறைக்குள் நுழையும் போதும் மைக்குகள் செங்கோட்டையனை துரத்தின. அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, 'ஒரு நாள் பொறுங்களேன்...சொல்றேன்...' என சைகையில் ஊடகத்தினரை நோக்கி மெசேஜ் கொடுத்தார். செங்கோட்டையன் அப்பாவு - செங்கோட்டையன் மீட்டிங் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு நீண்டது. இடையில் அமைச்சர் சேகர் பாபுவும் அப்பாவு அறைக்கு வந்து செங்கோட்டையனிடம் சில நிமிடங்கள் பேசிச் சென்றார். 45 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த செங்கோட்டையன், அப்போதும் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. செய்தியாளர்கள் கூட்டதை பிளந்து கொண்டு காரில் ஏறியவரிடம், 'அதிமுக கொடியை இன்னும் கழட்டவில்லையா...' என கேட்டதற்கும் எந்த ரியாக்சனும் இல்லாமல் சென்றார். தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட செங்கோட்டையன் எம்.எல்.ஏக்கள் விடுதியில் சில மணி நேரமாக இருக்கிறார். செங்கோட்டையன் நாளை விஜய்யை சந்தித்து தவெகவில் இணைவதுதான் திட்டம் என்கின்றனர் ஒரு தரப்பில். இடையில், அதிமுக அதிருப்தியாளர்களை திமுகவில் இணைக்கும் அசைன்மென்டை கையிலெடுத்திருக்கும் சேகர் பாபு உட்பட சிலரும் செங்கோட்டையனை சந்தித்து முக்கியமான சில விஷயங்களை பேசுவதால், செங்கோட்டையன் கடைசி நிமிட குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் சொல்கின்றனர். செங்கோட்டையன் எப்போது மௌனம் கலைப்பார்? அப்போது தான் அனைத்து வெட்ட வெளிச்சமாகும்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' ; ராஜினாமா, மெளனம், திடீர் குழப்பம் - செங்கோட்டையன் ரவுண்டிங்!
அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை ஆதவ் தரப்பு சந்தித்து பேசி தவெகவில் இணையும் சூழலை ஏற்படுத்தியதாக பனையூர் வட்டாரத்தினர் தகவல் சொல்கின்றனர். 'தவெகவில் இணைகிறீர்களா?' இந்நிலையில், நேற்று இரவு கோவையிலிருந்து சென்னை கிளம்பிய போதும் சென்னையில் வந்திறங்கிய போதும் விமான நிலையத்தில், 'தவெகவில் இணைகிறீர்களா?' எனும் கேள்விக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மௌனமாக கடந்து சென்றார். ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு வந்து சேர்ந்த செங்கோட்டையன் இன்று காலை 8:30 மணியளவில் இனோவா காரில் வெளியே புறப்பட்டார். மீடியாக்கள் சூழ்ந்திருப்பதை அறிந்த செங்கோட்டையன் அப்படியே யூடர்ன் அடித்து வீட்டுக்கு திரும்பிவிட்டார். செங்கோட்டையன் அடுத்த ஒரு மணி நேரத்தில் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனின் வீட்டுக்கு வந்து சந்தித்தார். வெளியே வந்தவர் செங்கோட்டையன் தவெகவுக்கு செல்லும் மனநிலையில் இருப்பதை உறுதி செய்தார். அடுத்ததாக பெங்களூரு புகழேந்தி வந்தார். செங்கோட்டையனை சந்தித்து சில நிமிடங்கள் பேசியவர், 'அவர் எதுவாக இருந்தாலும் உங்களிடம் கூறிவிட்டுதான் செல்வார்.' என பொதுவாக கூறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே செங்கோட்டையனின் இனோவா கார் தலைமைச் செயலகத்தை நோக்கி செல்ல தயாரானது. செய்தியாளர்கள் சூழ காரில் ஏறிய போதும், 'ராஜினாமா செய்யப்போகிறேன் என்றோ...தவெகவில் இணையப்போகிறேன் என்றோ...' எதையும் கமிட் செய்யவில்லை. கையெடுத்து கும்பிட்டபடி மௌனமாக சென்றுவிட்டார். 'ஒரு நாள் பொறுங்களேன்...சொல்றேன்...' செங்கோட்டையனின் அந்த '9393' பேன்சி நம்பர் காரை ஊடகத்தினரின் வண்டிகள் பாலோ செய்தது. பீச் ரோட்டில் செங்கோட்டையனின் வண்டி ஏற, அவர் ஜெ.சமாதிக்கு செல்கிறாரோ எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஜெ.சமாதியையும் தாண்டி சென்ற செங்கோட்டையனின் கார் தலைமைச் செயலகத்தில் சபாநாயகரின் அறை அருகே இருக்கும் கேட்டில் நுழைந்தது. சபாநாயகர் அறைக்குள் நுழையும் போதும் மைக்குகள் செங்கோட்டையனை துரத்தின. அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, 'ஒரு நாள் பொறுங்களேன்...சொல்றேன்...' என சைகையில் ஊடகத்தினரை நோக்கி மெசேஜ் கொடுத்தார். செங்கோட்டையன் அப்பாவு - செங்கோட்டையன் மீட்டிங் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு நீண்டது. இடையில் அமைச்சர் சேகர் பாபுவும் அப்பாவு அறைக்கு வந்து செங்கோட்டையனிடம் சில நிமிடங்கள் பேசிச் சென்றார். 45 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த செங்கோட்டையன், அப்போதும் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. செய்தியாளர்கள் கூட்டதை பிளந்து கொண்டு காரில் ஏறியவரிடம், 'அதிமுக கொடியை இன்னும் கழட்டவில்லையா...' என கேட்டதற்கும் எந்த ரியாக்சனும் இல்லாமல் சென்றார். தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட செங்கோட்டையன் எம்.எல்.ஏக்கள் விடுதியில் சில மணி நேரமாக இருக்கிறார். செங்கோட்டையன் நாளை விஜய்யை சந்தித்து தவெகவில் இணைவதுதான் திட்டம் என்கின்றனர் ஒரு தரப்பில். இடையில், அதிமுக அதிருப்தியாளர்களை திமுகவில் இணைக்கும் அசைன்மென்டை கையிலெடுத்திருக்கும் சேகர் பாபு உட்பட சிலரும் செங்கோட்டையனை சந்தித்து முக்கியமான சில விஷயங்களை பேசுவதால், செங்கோட்டையன் கடைசி நிமிட குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் சொல்கின்றனர். செங்கோட்டையன் எப்போது மௌனம் கலைப்பார்? அப்போது தான் அனைத்து வெட்ட வெளிச்சமாகும்.
மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?
வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் அதிகம் குடியேறுவதை தடுப்பதும், அமெரிக்கர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஃபுல் ஃபோக்கஸ். அவர் முன்னெடுத்த தேர்தல் பிராசாரமும் இது தான். அதற்கேற்ற மாதிரி அதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றினார். அடுத்ததாக விசா நடைமுறைகளை கெடுபிடிகளை அதிகரித்து வருகிறார். அதில் ஒன்று தான் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு. இது இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. காரணம், இந்த விசா வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. ஹெச்-1பி விசா H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு? 'பிராஜெக்ட் ஃபயர்வால்' திட்டம் இந்த சூழலில் தான், ஹெச்-1பி விசாவிற்கு மேலும் கெடுபிடியை கூட்டுவதை போல, 'பிராஜெக்ட் ஃபயர்வால் (Project Firewall)' என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது ட்ரம்பின் அரசாங்கம். இந்தக் குழு ஹெச்-1பி விசா விண்ணப்பத்தை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துகிறதா என்பதை கண்காணிக்கும். இந்தக் குழுவின் முக்கிய வேலை, வரும் விண்ணப்பங்களை, 'குறிப்பிட்ட வேலையை அமெரிக்கர்கள் செய்ய முடியுமா?' என்பதை ஆராய்வது தான். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம்... சம்பளத்தை உயர்த்தலாம் என்பதை ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டம் ஆகும். H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்
மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?
வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் அதிகம் குடியேறுவதை தடுப்பதும், அமெரிக்கர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஃபுல் ஃபோக்கஸ். அவர் முன்னெடுத்த தேர்தல் பிராசாரமும் இது தான். அதற்கேற்ற மாதிரி அதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றினார். அடுத்ததாக விசா நடைமுறைகளை கெடுபிடிகளை அதிகரித்து வருகிறார். அதில் ஒன்று தான் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு. இது இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. காரணம், இந்த விசா வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. ஹெச்-1பி விசா H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு? 'பிராஜெக்ட் ஃபயர்வால்' திட்டம் இந்த சூழலில் தான், ஹெச்-1பி விசாவிற்கு மேலும் கெடுபிடியை கூட்டுவதை போல, 'பிராஜெக்ட் ஃபயர்வால் (Project Firewall)' என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது ட்ரம்பின் அரசாங்கம். இந்தக் குழு ஹெச்-1பி விசா விண்ணப்பத்தை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துகிறதா என்பதை கண்காணிக்கும். இந்தக் குழுவின் முக்கிய வேலை, வரும் விண்ணப்பங்களை, 'குறிப்பிட்ட வேலையை அமெரிக்கர்கள் செய்ய முடியுமா?' என்பதை ஆராய்வது தான். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம்... சம்பளத்தை உயர்த்தலாம் என்பதை ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டம் ஆகும். H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்
விருதுநகர்: `கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி சரியாக நடைபெறவில்லை' - எழுந்த குற்றச்சாட்டு
விருதுநகர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு: கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர் ராஜ்குமார் தனது வார்டில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனை தீர்க்கப்படவில்லை. எனவே, அதை சரிசெய்ய வேண்டுமென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார். நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தோண்டி போடப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமென உறுப்பினர் வெங்கேடஷ் தெரிவித்தார். மேலும் அருப்புக்கோட்டை சாலையின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தில் சீரமைப்பதாகத் தெரிவித்தும், ஏன்? சரி செய்யவில்லையென உறுப்பினர்கள் ஜெயக்குமார், மிக்கேல்ராஜ் ஆகியோர் கேள்வி எழுப்பினர். சீரமைக்கும் பணி தொடங்கிய போது மழை வந்துவிட்டதால் தாமதமாகிவிட்டது. நாளை முதல் பணிகள் நடைபெறும் என தலைவர் பதிலளித்தார். அதேபோல் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கவில்லையென உறுப்பினர்கள் கலையரசன், சரவணன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். ஏற்கெனவே, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் அனுப்பியுள்ளோம் எனத் தலைவர் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு உள்ளதாக உள் தெருவில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் வந்துள்ளது. வழக்கு இல்லையென ஆதாரத்துடன் உறுப்பினர் உமாராணி கூறினார். நேரடியாக வந்து விளக்கம் தந்தால் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதில் கூறினார். விருதுநகர் நகர்மன்றக் கூட்டம் கணக்கீட்டுப் படிவங்கள் பற்றி பொது மக்களுக்குச் சரிவர தெரிவிக்கவில்லை. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பொது மக்களுக்கு படிவத்தை நிரப்பிட உதவ வேண்டும் என உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார். தனது வார்டு பகுதி மிகப்பெரியது. நகர்மன்ற கூட்டம் ஆனால், சரிவர படிவங்கள் வழங்கவில்லை. நிரப்பியும் வாங்கவில்லையென உறுப்பினர் முத்துராமன் புகார் தெரிவித்தார். குறைவான கால அவகாசம் உள்ள நிலையில் டிசம்பர் 4க்குள் படிவங்களை எப்படி பதிவேற்றம் செய்ய முடியும். எனவே, படிவங்களை வாக்காளர்களிடம் பெற்று பதிவேற்றம் செய்ய காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என உறுப்பினர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார். 60 ஆயிரம் வாக்காளர்களில் சுமார் 25 ஆயிரம் கணக்கீட்டுப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் குறைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட மேற்பார்வை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என ஆணையாளர் பதில் கூறினார்.
தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!
செங்கோட்டையனுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். செங்கோட்டையன் ராஜினாமா இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுகவில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். முன்னதாக துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனை சந்தித்து பேசினார். பின்னர் துக்ளக் ரமேஷ், ``செங்கோட்டையன் தவெக வில் இணைந்த பிறந்த அவருக்கு அளிக்கும் பொறுப்பை பார்த்து... அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சிலர் செங்கோட்டையனின் வழியை பின் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்றிருக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!
செங்கோட்டையனுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். செங்கோட்டையன் ராஜினாமா இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுகவில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். முன்னதாக துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனை சந்தித்து பேசினார். பின்னர் துக்ளக் ரமேஷ், ``செங்கோட்டையன் தவெக வில் இணைந்த பிறந்த அவருக்கு அளிக்கும் பொறுப்பை பார்த்து... அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சிலர் செங்கோட்டையனின் வழியை பின் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்றிருக்கிறார்.
புதுச்சேரி: 8 மணி நேரம் `ரோடு ஷோ’... தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன?
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். கரூரில் அவர் நடத்திய ரோடு ஷோவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்காக த.வெ.க தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று குற்றம் சுமத்தி, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்திருந்தார். புதுச்சேரி இந்த நிலையில்தான் த.வெ.க தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்காக அந்தக் கட்சியினர் அனுமதி கேட்டு புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாக சென்று மக்களை சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன?
புதுச்சேரி: 8 மணி நேரம் `ரோடு ஷோ’... தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன?
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். கரூரில் அவர் நடத்திய ரோடு ஷோவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்காக த.வெ.க தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று குற்றம் சுமத்தி, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்திருந்தார். புதுச்சேரி இந்த நிலையில்தான் த.வெ.க தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்காக அந்தக் கட்சியினர் அனுமதி கேட்டு புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாக சென்று மக்களை சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன?

26 C