மதுரை: `தலைவர்கள் வரும்போது கட்சித் துண்டுகளை சுழற்ற வேண்டும்!'- அதிமுக கண்டிஷன்; தவெகவின் தாக்கமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாட்டில் ரேம்ப் வாக்கில் நடந்து செல்லும்போது, அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சித் துண்டுகளை அவருக்குக் கொடுத்து அதை அணிந்து கொண்டு நடந்த நிகழ்வு டிரெண்டிங் ஆனது. அதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று மதுரையில் நடந்த தி.மு.க-வின் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பொதுக்கூட்ட அரங்கிற்குள் ஸ்டாலின் வந்தபோது நிர்வாகிகளுடன் சேர்ந்து அமைச்சர்களும் கட்சித் துண்டுகளைச் சுழற்றியும், ஸ்டாலினை நோக்கி வீசியும் அவரை வரவேற்றனர். அதுவும் டிரெண்ட் ஆனது. அந்த வரிசையில் தற்போது அ.தி.மு.க-வினரும் இந்த டிரெண்டிற்குள் இணைய இருக்கின்றனர். விஜய் மதுரையில் மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த பொதுக்கூட்டம் குறித்து, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட அ.தி.மு.க சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை எல்லீஸ் நகர்ப் பகுதியில் நடைபெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை புறநகர் அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் ஏற்பாடு செய்தனர். மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசுகையில், ``வருகின்ற 2026 தேர்தலுக்காக மதுரை மண்ணில் பரப்புரை ஆற்ற பிரதமர் மோடியும் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வருகை தரவுள்ளனர். இந்த மதுரை பொதுக்கூட்டம் வெற்றி விழா கூட்டமாக மாற்றவேண்டும். இதில் இரு பெரும் தலைவர்கள் ( மோடி - இபிஎஸ்) பேசக்கூடியவை ஆளுங்கட்சியைக் கலங்கடிக்கச் செய்யும். எனவே தொண்டர்களை கடைசி வரை கூட்டத்தில் அமர வைக்க வேண்டும். அனைவரும் அ.தி.மு.க கட்சித் துண்டை அணிந்து வரவேண்டும். நமது கூட்டணிக் கட்சியினர் வருவார்கள். அவர்கள், அவர்களது கட்சித் துண்டை அணிந்துவருவார்கள். அதேபோல் நாமும் நமது அ.தி.மு.க துண்டை அணிந்துவர வேண்டும். கே.பி.,முனுசாமி அதேபோல் தலைவர்கள் வரும்போது தலைக்கு மேல் துண்டைச் சுழற்றிக் காட்ட வேண்டும். மதுரையில் நடைபெறும் கூட்டம் வெற்றிக் கூட்டமாக நடைபெற வேண்டும்” என்றார்.
தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் - சிரமத்தில் வியாபாரிகள்!
தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் மூன்று கழிவறைகள் கட்டப்பட்டிருந்தும் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை என அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, அங்கு சென்று அப்பகுதி மக்களிடம் இது குறித்து கேட்டறிந்தோம். நம்மிடம் பேசியவர்கள், தஞ்சாவூர்ல மிக பழைமையான மார்கெட் என்றால் அது காமராசர் மார்கெட்தான். இது சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ₹20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் நவீனமயமாக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு புதிய பொலிவுடன் கட்டப்பட்டது. ஆனால், இங்கு ஒன்றுக்கு மூன்று கழிவறைகள் இருந்தும், ஒன்றுகூட இப்போது பயன்பாட்டில் இல்லை. இங்கு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து போகிறார்கள். இங்கு 500-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. காய்கறி, பழக்கடை, பல்பொருள் அங்காடி என அனைத்து கடைகளும் இங்கு இருக்கிறது. இந்த முக்கியமான இடத்தில் பொதுக் கழிவறை இருந்தும் பயன்பாடின்றி இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் மைதானத்தில்தான் இயற்கை உபாதைகளை கழிக்கிறோம். ஆண்கள்கூட எப்படியாவது சமாளித்துக் கொள்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்கள்தான் ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியே கழிவறை இருந்தும், பயன்பாடு இன்றி பூட்டியே இருக்கிறது. புது கழிவறை கட்டி மூன்று ஆண்டுகளாகிறது. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. இப்போது புது கழிவறை முன்புறம் பார்க்கிங் இடமா போச்சு. ஏற்கெனவே இருந்த கழிவறையும் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. நாங்களும் அதிகாரிகளிடம் கழிவறைகளை திறக்கக் கோரிக்கை விடுத்தோம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகள் இவ்வளவு பேர் இங்கு இருக்கிறோம்... அவசரத்துக்கு என்ன செய்வோம்? எங்களோட சிரமம் அதிகாரிகளுக்கு புரியவில்லை. இங்கிருக்கிற கழிவறைகளை உடனடியாக சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் - சிரமத்தில் வியாபாரிகள்!
தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் மூன்று கழிவறைகள் கட்டப்பட்டிருந்தும் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை என அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, அங்கு சென்று அப்பகுதி மக்களிடம் இது குறித்து கேட்டறிந்தோம். நம்மிடம் பேசியவர்கள், தஞ்சாவூர்ல மிக பழைமையான மார்கெட் என்றால் அது காமராசர் மார்கெட்தான். இது சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ₹20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் நவீனமயமாக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு புதிய பொலிவுடன் கட்டப்பட்டது. ஆனால், இங்கு ஒன்றுக்கு மூன்று கழிவறைகள் இருந்தும், ஒன்றுகூட இப்போது பயன்பாட்டில் இல்லை. இங்கு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து போகிறார்கள். இங்கு 500-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. காய்கறி, பழக்கடை, பல்பொருள் அங்காடி என அனைத்து கடைகளும் இங்கு இருக்கிறது. இந்த முக்கியமான இடத்தில் பொதுக் கழிவறை இருந்தும் பயன்பாடின்றி இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் மைதானத்தில்தான் இயற்கை உபாதைகளை கழிக்கிறோம். ஆண்கள்கூட எப்படியாவது சமாளித்துக் கொள்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்கள்தான் ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியே கழிவறை இருந்தும், பயன்பாடு இன்றி பூட்டியே இருக்கிறது. புது கழிவறை கட்டி மூன்று ஆண்டுகளாகிறது. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. இப்போது புது கழிவறை முன்புறம் பார்க்கிங் இடமா போச்சு. ஏற்கெனவே இருந்த கழிவறையும் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. நாங்களும் அதிகாரிகளிடம் கழிவறைகளை திறக்கக் கோரிக்கை விடுத்தோம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகள் இவ்வளவு பேர் இங்கு இருக்கிறோம்... அவசரத்துக்கு என்ன செய்வோம்? எங்களோட சிரமம் அதிகாரிகளுக்கு புரியவில்லை. இங்கிருக்கிற கழிவறைகளை உடனடியாக சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
PEN ரிபோர்ட்; உதயநிதியின் கிரீன் சிக்னல்; உற்சாகத்தில் உடுமலை இளைஞரணி - திடீர் விசிட் பின்னணி!
திருப்பூர் மாவட்டத்தில் விஐபி தொகுதியாக கருதப்படும் உடுமலைப்பேட்டைதான் இப்போது, மாவட்ட திமுக-வுக்குள் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. 1996-க்குப் பிறகான 25 ஆண்டுகளில், இந்த தொகுதியில் நடைபெற்ற 5 தேர்தல்களிலும் திமுக ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. இதனால், வரும் 2026 தேர்தலில் எப்படியாவது உடுமலைப்பேட்டை தொகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்பது கட்சித் தலைமையின் உத்தரவு. குறிப்பாக உடுமலைப்பேட்டை தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனை வீழ்த்த வேண்டுமென்றால் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என திமுக தலைமை நினைக்கிறது. உதயநிதி இதற்காக வேட்பாளர் தேர்விலும் கட்சித் தலைமை கறார் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே, உடுமலைப்பேட்டைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம், இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் திறப்பு மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கியது, உயிரிழந்த நிர்வாகிகளின் உருவப் படம் திறப்பு என ஒரு நாள் முழுவதும் உடுமலைப்பேட்டையில் முகாமிட்டிருந்தார். உதயநிதி உடுமலைப்பேட்டை திடீர் விசிட் பின்னணியில் என்ன நடந்துள்ளது என திமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. காங்கேயம், தாராபுரம் மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகள்தான் திமுக-விடம் உள்ளது. இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தது 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதிலும், திமுக-வின் பொருளாளராக இருந்த சாதிக் பாட்ஷாவின் சொந்த ஊரான உடுமலைப்பேட்டை தொகுதியில் 25 ஆண்டுகளாக வெற்றிபெற முடியாததை கெளரவம் சம்பந்தப்பட்ட விசயமாக கட்சித் தலைமை பார்க்கிறது. இதனால், வரும் தேர்தலில் மற்ற தொகுதிகளைவிட உடுமலைப்பேட்டை தொகுதியை மிக மிக கவனமாக கையாள முடிவு செய்துள்ளது. உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம் இதற்காக கடந்த மாதம் உடுமலைப்பேட்டை தொகுதியில் முகாமிட்ட பென் டீம் உட்கட்சி பிரச்னை, யாரை வேட்பாளராக நிறுத்தலாம், வேட்பாளராக நிறுத்துவோர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா? தொகுதிக்குள் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு? போன்றவை குறித்து அலசி ஆராய்ந்து தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. மேலும், உளவுத்துறை தனியாகவும் கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அதில், உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் சுந்தர், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது. உடுமலைப்பேட்டையில் உட்கட்சி பிரச்னை தலைவிரித்து ஆடுவதால், அதிமுக-வை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமென்றால் பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்பதுதான் பென் டீம் மற்றும் உளவுத்துறை ரிப்போட்டாக உள்ளது. அதன்படி பார்த்தால், கட்சிக்காரர்கள் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லாதவரும், உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான வட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமாரைத்தான் தலைமை டிக் அடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. உதயநிதி ஏனென்றால், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் தேர்தலில் ஜெயக்குமாரைத்தான் உதயநிதி அறிவித்தார். ஆனால், சில உட்கட்சிப் பிரச்னையால், ஜெயக்குமார் தோற்கடிக்கப்பட்டார். தனது அணியில் இருக்கும் ஜெயக்குமாருக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென உதயநிதி விரும்புகிறார். அதன் பின்னணியில்தான் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான ஈஸ்வரசாமி அழைப்பை ஏற்று உடுமலைப்பேட்டைக்கு வந்த உதயநிதி, தனது ஆதரவாளர் என்பதைக் காட்டுவதற்காகவும், ஜெயக்குமாரை முன்னிலைப்படுத்துவதற்காகவும் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார். அத்துடன் வரும் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, கணியூரில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில், இதை உறுதிப்படுத்தும் வகையில் இளைஞரணிக்கு வரும் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என சூசகமாக உதயநிதி பேசினார். எதுவாக இருந்தாலும் நாமும் முயற்சித்து பார்ப்போம் என மறுபுறம் உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுசாமி ஆ.ராசா, எ.வ.வேலு மூலமும், ஷியாம் பிரசாத் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதன் மூலமும், அடிவள்ளி முரளி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை மூலமும் சீட் பெற தீவிரமாக முயன்று வருகின்றனர் என்கின்றர் விரிவாக.! Loading…
PEN ரிபோர்ட்; உதயநிதியின் கிரீன் சிக்னல்; உற்சாகத்தில் உடுமலை இளைஞரணி - திடீர் விசிட் பின்னணி!
திருப்பூர் மாவட்டத்தில் விஐபி தொகுதியாக கருதப்படும் உடுமலைப்பேட்டைதான் இப்போது, மாவட்ட திமுக-வுக்குள் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. 1996-க்குப் பிறகான 25 ஆண்டுகளில், இந்த தொகுதியில் நடைபெற்ற 5 தேர்தல்களிலும் திமுக ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. இதனால், வரும் 2026 தேர்தலில் எப்படியாவது உடுமலைப்பேட்டை தொகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்பது கட்சித் தலைமையின் உத்தரவு. குறிப்பாக உடுமலைப்பேட்டை தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனை வீழ்த்த வேண்டுமென்றால் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என திமுக தலைமை நினைக்கிறது. உதயநிதி இதற்காக வேட்பாளர் தேர்விலும் கட்சித் தலைமை கறார் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே, உடுமலைப்பேட்டைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம், இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் திறப்பு மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கியது, உயிரிழந்த நிர்வாகிகளின் உருவப் படம் திறப்பு என ஒரு நாள் முழுவதும் உடுமலைப்பேட்டையில் முகாமிட்டிருந்தார். உதயநிதி உடுமலைப்பேட்டை திடீர் விசிட் பின்னணியில் என்ன நடந்துள்ளது என திமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. காங்கேயம், தாராபுரம் மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகள்தான் திமுக-விடம் உள்ளது. இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தது 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதிலும், திமுக-வின் பொருளாளராக இருந்த சாதிக் பாட்ஷாவின் சொந்த ஊரான உடுமலைப்பேட்டை தொகுதியில் 25 ஆண்டுகளாக வெற்றிபெற முடியாததை கெளரவம் சம்பந்தப்பட்ட விசயமாக கட்சித் தலைமை பார்க்கிறது. இதனால், வரும் தேர்தலில் மற்ற தொகுதிகளைவிட உடுமலைப்பேட்டை தொகுதியை மிக மிக கவனமாக கையாள முடிவு செய்துள்ளது. உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம் இதற்காக கடந்த மாதம் உடுமலைப்பேட்டை தொகுதியில் முகாமிட்ட பென் டீம் உட்கட்சி பிரச்னை, யாரை வேட்பாளராக நிறுத்தலாம், வேட்பாளராக நிறுத்துவோர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா? தொகுதிக்குள் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு? போன்றவை குறித்து அலசி ஆராய்ந்து தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. மேலும், உளவுத்துறை தனியாகவும் கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அதில், உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் சுந்தர், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது. உடுமலைப்பேட்டையில் உட்கட்சி பிரச்னை தலைவிரித்து ஆடுவதால், அதிமுக-வை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமென்றால் பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்பதுதான் பென் டீம் மற்றும் உளவுத்துறை ரிப்போட்டாக உள்ளது. அதன்படி பார்த்தால், கட்சிக்காரர்கள் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லாதவரும், உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான வட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமாரைத்தான் தலைமை டிக் அடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. உதயநிதி ஏனென்றால், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் தேர்தலில் ஜெயக்குமாரைத்தான் உதயநிதி அறிவித்தார். ஆனால், சில உட்கட்சிப் பிரச்னையால், ஜெயக்குமார் தோற்கடிக்கப்பட்டார். தனது அணியில் இருக்கும் ஜெயக்குமாருக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென உதயநிதி விரும்புகிறார். அதன் பின்னணியில்தான் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான ஈஸ்வரசாமி அழைப்பை ஏற்று உடுமலைப்பேட்டைக்கு வந்த உதயநிதி, தனது ஆதரவாளர் என்பதைக் காட்டுவதற்காகவும், ஜெயக்குமாரை முன்னிலைப்படுத்துவதற்காகவும் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார். அத்துடன் வரும் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, கணியூரில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில், இதை உறுதிப்படுத்தும் வகையில் இளைஞரணிக்கு வரும் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என சூசகமாக உதயநிதி பேசினார். எதுவாக இருந்தாலும் நாமும் முயற்சித்து பார்ப்போம் என மறுபுறம் உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுசாமி ஆ.ராசா, எ.வ.வேலு மூலமும், ஷியாம் பிரசாத் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதன் மூலமும், அடிவள்ளி முரளி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை மூலமும் சீட் பெற தீவிரமாக முயன்று வருகின்றனர் என்கின்றர் விரிவாக.! Loading…
விஜய்க்காக அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்; தவெக தொண்டர் கைது; இன்ஸ்பெக்டரைக் கண்டித்த டிஐஜி
வே லூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் வந்த விஜய்க்கு வழிநெடுக த.வெ.க தொண்டர்களும், ரசிகர்களும் வரவேற்பு கொடுத்தனர். வெட்டுவாணம் சந்திப்புப் பகுதியில் த.வெ.க-வினர் திரண்டிருந்தபோது, விஜய்யின் அதிதீவிர தொண்டரான ஏழுமலை என்பவர் முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கி சாகசம் செய்தபடி விஜய்க்கு மாலை அணிவிப்பதற்காக வந்திருந்தார். இதற்கு காவல்துறை தரப்பில் இருந்து ஏழுமலை எந்தவித அனுமதியும் பெறவில்லை. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம் இதையடுத்து, த.வெ.க தொண்டர் ஏழுமலை மற்றும் கிரேன் உரிமையாளர் முனிரத்தினம் ஆகிய இருவர் மீதும் பள்ளிகொண்டா போலீஸார் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ததோடு கிரேனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த நிகழ்வின்போது, அங்கு பணியில் இருந்த பாகாயம் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி அவரை `காத்திருப்போர் பட்டியலில்’ வைக்க வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜன் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, டி.ஐ.ஜி முன்பு இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார். பிறகு பணியில் கவனமாக இருக்க அறிவுறுத்தி கண்டித்த டி.ஐ.ஜி தனது நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டாராம். `விதிமுறைகளை மீறிய தவெக-வினர்; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!’ - வேலூர் மாவட்டக் காவல்துறை
`எந்த பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல்... எங்கள் இலக்கு.!' - தேர்தலில் போட்டியிடாதது குறித்து தினகரன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% ஓர் அணியில் திரண்டு உள்ளோம். தீய சக்தி திமுக மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு உள்ளார்கள். யாரோ ஒரு சில பேர் ஒதுங்கி இருப்பவர்கள் விலகி இருப்பவர்கள் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைவார்கள். டி.டி.வி.தினகரன் எங்கள் கூட்டணியில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்... பேசினார்கள். அமமுக மற்றும் அதிமுகவின் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய அளவில் பாஜகவின் தலைமையும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் இணைந்திருக்கிறோம். டி.டி.வி.தினகரன் திமுகவிடம் 35 லிருந்து 40 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்பதோடு. கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள் என்பது எனக்கு வந்த தகவல், அது உண்மை. காங்கிரஸ், திமுக கூட்டணியில் தொடருமா என்பது தெரியவில்லை. தேசிய முஸ்லிம் லீக் காதர் மைதீன் ஏற்கனவே மூன்று தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். தற்போது இரண்டு தொகுதி தருவேன் என்று திமுக சொல்கிறார்கள். இதுபோன்ற நிலைமை எங்கள் கூட்டணியில் இல்லை. அமமுக , அதிமுக கட்சியில் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் கருத்து வேறுபாடுகளை கடந்து ஓர் அணியில் சேர்ந்துள்ளோம். டி.டி.வி.தினகரன் எங்கள் கட்சிக்கான தொகுதி பங்கீடு உடன்பாட்டை பாஜக மற்றும் அதிமுகவோடு பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. காரணம் எந்த ஒரு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. எந்த ஒரு சின்ன மன வருத்தமும் யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு. தொகுதி பங்கீடு சுமூகமாக முடிய வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக கட்சிக்கு தகுதியான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக மூலம் பெறுவோம் டி.டி.வி.தினகரன் பாஜக வலியுறுத்தல் படி அமமுக செயல்பட்டு, அதிமுக கூட்டணியில் நாங்கள் இடங்களை பெற்று வெற்றிகரமாக அமமுக வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள். ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைய வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு என்றார். Loading…
ஜெயலலிதா பிறந்தநாள்: பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவினர்!
தேர்தல் களத்தில் சின்னங்கள் மாற்றம் அடைந்த வரலாறு! | TN Election 360 updates | Vikatan
பீகார்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை; பாஜக கூட்டணி அரசு சொல்லும் காரணம் என்ன?
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி, அம்மாநிலத்தில் சில பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு அம்மாநில அரசு அதிரடித் தடைவிதித்துள்ளது. விஜய் குமார் சின்கா இதுகுறித்து பீகார் மாநில பா.ஜ.க தலைவரும், துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, ``குழந்தைகளிடையே வன்முறைப் போக்குகள் உருவாவதைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இறைச்சி விற்பனையை முறைப்படுத்துவதற்கான அரசின் முயற்சியின் ஒரு பகுதியே இது. யாருடைய உணவுப் பழக்க வழக்கங்களுக்கும் அரசு எதிராக இல்லை. ஆனால், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவோ அல்லது மக்களின் புனிதமான உணர்வுகளைப் புண்படுத்தவோ கூடாது. மக்கள் எவ்விதத் தளர்வும் இன்றி இந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை நடத்திய கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் புதிய முயற்சி பீகாரின் மாறிவரும் தன்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. எனவே, பீகார் நகராட்சி சட்டம் 2007-ன் படி, இறைச்சிக் கடை நடத்துவதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகும். புதிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் வியாபாரப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படும் எனக் காட்டமாகத் தெரிவித்தார். விஜய் குமார் சின்கா இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ``திறந்தவெளியில் இறைச்சி வெட்டுவதும் விற்பனை செய்வதும் மாசுபாட்டை உருவாக்குவதோடு தூய்மை விதிகளுக்கு எதிரானது என இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? ஏனெனில், ஆட்சி செய்வது என்பது தற்போது வெறும் நிர்வாகமாக மட்டும் இல்லாமல், மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எப்படி வாழ வேண்டும் மற்றும் யாருடைய கலாசாரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதைத் தீர்மானிக்கும் கட்டுப்பாடாக மாறி வருகிறது. Mandi IIT: `இறைச்சி சாப்பிடுவதால்தான் நிலச்சரிவு ஏற்படுகிறது!’ - ஐஐடி இயக்குநரின் சர்ச்சைப் பேச்சு பீகாரில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சமூக நல்லிணக்கத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால் நேர்மையாக ஒரு கேள்வியைக் கேட்போம். யாருடைய உணவுப் பழக்கவழக்கங்கள் இங்கே குறிவைக்கப்படுகின்றன? இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் என ஒவ்வொருவருக்கும் வரலாறு, புவியியல் மற்றும் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த தனித்துவமான உணவு மரபுகள் உள்ளன. இந்த உணவு முறைகளை அரசு மறைமுகமாக இழிவுபடுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முற்படும்போது, அது சுகாதாரத்தைப் பற்றியதாக இருப்பதில்லை. மாறாக அது கலாசாரக் கட்டுப்பாடாகவே மாறுகிறது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மொழி, நம்பிக்கை, உடை மற்றும் உணவில் நிலவும் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் வலிமை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனிமனிதத் தேர்விற்கான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. நிர்வாகம் என்பது பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, ஒற்றைத்தன்மையைத் திணிக்கக் கூடாது. பிரித்தாளும் அரசியலைத் தோற்கடிப்பது என்பது பாரதத்தின் ஆன்மாவைப் பாதுகாப்பதாகும். அங்கே ஒரு குடிமகன் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மற்றொருவர் தீர்மானிக்க முடியாது எனக் குறிப்பிட்டிருக்கிறார். இறைச்சி சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் -மராத்தியர் vs குஜராத்தியர் ஆக மாறிய தகராறு; பின்னணி என்ன?
பீகார்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை; பாஜக கூட்டணி அரசு சொல்லும் காரணம் என்ன?
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி, அம்மாநிலத்தில் சில பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு அம்மாநில அரசு அதிரடித் தடைவிதித்துள்ளது. விஜய் குமார் சின்கா இதுகுறித்து பீகார் மாநில பா.ஜ.க தலைவரும், துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, ``குழந்தைகளிடையே வன்முறைப் போக்குகள் உருவாவதைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இறைச்சி விற்பனையை முறைப்படுத்துவதற்கான அரசின் முயற்சியின் ஒரு பகுதியே இது. யாருடைய உணவுப் பழக்க வழக்கங்களுக்கும் அரசு எதிராக இல்லை. ஆனால், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவோ அல்லது மக்களின் புனிதமான உணர்வுகளைப் புண்படுத்தவோ கூடாது. மக்கள் எவ்விதத் தளர்வும் இன்றி இந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை நடத்திய கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் புதிய முயற்சி பீகாரின் மாறிவரும் தன்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. எனவே, பீகார் நகராட்சி சட்டம் 2007-ன் படி, இறைச்சிக் கடை நடத்துவதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகும். புதிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் வியாபாரப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படும் எனக் காட்டமாகத் தெரிவித்தார். விஜய் குமார் சின்கா இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ``திறந்தவெளியில் இறைச்சி வெட்டுவதும் விற்பனை செய்வதும் மாசுபாட்டை உருவாக்குவதோடு தூய்மை விதிகளுக்கு எதிரானது என இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? ஏனெனில், ஆட்சி செய்வது என்பது தற்போது வெறும் நிர்வாகமாக மட்டும் இல்லாமல், மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எப்படி வாழ வேண்டும் மற்றும் யாருடைய கலாசாரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதைத் தீர்மானிக்கும் கட்டுப்பாடாக மாறி வருகிறது. Mandi IIT: `இறைச்சி சாப்பிடுவதால்தான் நிலச்சரிவு ஏற்படுகிறது!’ - ஐஐடி இயக்குநரின் சர்ச்சைப் பேச்சு பீகாரில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சமூக நல்லிணக்கத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால் நேர்மையாக ஒரு கேள்வியைக் கேட்போம். யாருடைய உணவுப் பழக்கவழக்கங்கள் இங்கே குறிவைக்கப்படுகின்றன? இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் என ஒவ்வொருவருக்கும் வரலாறு, புவியியல் மற்றும் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த தனித்துவமான உணவு மரபுகள் உள்ளன. இந்த உணவு முறைகளை அரசு மறைமுகமாக இழிவுபடுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முற்படும்போது, அது சுகாதாரத்தைப் பற்றியதாக இருப்பதில்லை. மாறாக அது கலாசாரக் கட்டுப்பாடாகவே மாறுகிறது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மொழி, நம்பிக்கை, உடை மற்றும் உணவில் நிலவும் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் வலிமை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனிமனிதத் தேர்விற்கான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. நிர்வாகம் என்பது பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, ஒற்றைத்தன்மையைத் திணிக்கக் கூடாது. பிரித்தாளும் அரசியலைத் தோற்கடிப்பது என்பது பாரதத்தின் ஆன்மாவைப் பாதுகாப்பதாகும். அங்கே ஒரு குடிமகன் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மற்றொருவர் தீர்மானிக்க முடியாது எனக் குறிப்பிட்டிருக்கிறார். இறைச்சி சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் -மராத்தியர் vs குஜராத்தியர் ஆக மாறிய தகராறு; பின்னணி என்ன?
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 - 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது. இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி * பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்படும். * 12 ஆம் வகுப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். * மக்களின் சுமையைக் குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 தரப்படும். * நகரப்பகுதியில் நடைபாதை சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி * மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.8000 இருந்து 12,000 மாக உயர்த்தி வழங்கப்படும். * விசைத்தறி நெசவாளர்களுக்கு 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். Loading…
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 - 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது. இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி * பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்படும். * 12 ஆம் வகுப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். * மக்களின் சுமையைக் குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 தரப்படும். * நகரப்பகுதியில் நடைபாதை சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி * மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.8000 இருந்து 12,000 மாக உயர்த்தி வழங்கப்படும். * விசைத்தறி நெசவாளர்களுக்கு 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். Loading…
நெல்லை: “திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” - நயினார் நாகேந்திரன்
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாத சூழல் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட முருக பக்தர்கள் மத்தியில் ஒரு மன வருத்தம் நீடிக்கிறது. எனவே, அந்த மனக்குறையைப் போக்கிடவும் இறைவனை வேண்டிக்கொள்ளவும் விளக்கேற்றும் நிகழ்வினை ஒருங்கிணைத்துள்ளோம். தமிழகமெங்கும் வாழும் முருக பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் குத்துவிளக்கேற்றி ’கந்த சஷ்டி கவசம்’ படிக்க வேண்டுமென்று முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளோம். நயினார் நாகேந்திரன் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடுகள் மின்னல் வேகமா? முயல் வேகமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள்தான் இருக்கிறார்கள். புதிதாக யாரும் சேரவில்லை. தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துக்கள் மறைக்கப்படுகின்றன. அமைச்சர் நேரு உள்ளிட்ட பல அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவின் வழக்குகள் உள்ளன. நீதிமன்றமே சில அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூறியுள்ளது. நயினார் நாகேந்திரன் ஆனால், இந்த அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. பிரதமருக்கு எதிராக தென்காசியில் பேசிய முக்கியத் தலைவரை இதுவரை இந்த அரசு கைது செய்யவில்லை. ஆனால், பா.ஜ.கவினரைச் சிறிய காரணங்களுக்காகக் கூட கைது செய்கிறார்கள். விரைவில் எங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்போம். டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் எங்களுடன் இணைந்தே உள்ளனர். வரும் தேர்தலில் ஒரு பலமான மாற்றத்தை மக்கள் பார்ப்பார்கள்” என்றார். நடிகை குறித்த பேச்சு: `அன்றைக்கு தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது'- நயினார் நாகேந்திரன் வருத்தம்!
`விதிமுறைகளை மீறிய தவெக-வினர்; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!’ - வேலூர் மாவட்டக் காவல்துறை
வே லூர் அகரம்சேரியில், த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்று முப்பத்தைந்து நிமிடங்கள் பேசினார். அதற்கு முன்னதாக, காவல்துறையினர் அனுமதி கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்தியதாக த.வெ.க பொறுப்பாளர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது குற்றம்சாட்டியிருந்தனர். இந்த நிலையில், த.வெ.க-வினர் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் விதமாக வேலூர் மாவட்டக் காவல்துறை பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. விஜய் அதில், ``த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக மனு அளித்தபோதிலும், பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22-2-2026-ம் தேதி காவல்துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல், மனு அளிக்கப்பட்ட நான்கு நாள்களிலேயே உரிய அனுமதியும் வழங்கப்பட்டது. த.வெ.க கட்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, `காவல்துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதமாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது’ எனக் கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மேலும், த.வெ.க கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4,900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டக் காவல்துறை ஆனால், குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இச்செயலானது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறியதாகும். எனினும், காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
`மேடை ஏறலாம், வசனம் பேசலாம்... ஆனால்.!' - விஜய்க்கு வானதி சீனிவாசன் சவால்
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசு அதை நிறைவேற்றாமல் இருக்கிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவினர் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர். வானதி சீனிவாசன் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று பொய்யான காரணங்களை கூறுகிறார்கள். தமிழர்களின் அடையாளங்களை அழிக்கிற விதமாக திராவிட மாடல் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக-வினரின் நோக்கமே இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும், இந்து கோயில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக் கூடாது என்பது தான். அது அவர்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது. ஆன்மிக நம்பிக்கையை எந்த அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முதல்வர் ஸ்டாலின் ஊழல்வாதிகளை மிரட்டி தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். இவ்வளவு பேசும் முதலமைச்சர் அவரது அமைச்சரவையில் உள்ள கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது ஊழலாக தெரியவில்லையா. முதலமைச்சர் தன் அருகில் இருப்பவர்களை பார்த்துவிட்டு பேசினால் நியாயமாக இருக்கும். ஊழல் வழக்கிற்காக பதவியில் இருந்த அமைச்சரை வீட்டிற்கு அனுப்பிய பெருமைக்குரியவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவருக்கு எங்களை பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. விஜய் விஜய் என்னதான் புது புது வார்த்தைகளால் பேசினாலும், அல்டிமேட்டாக திமுகவை வீழ்த்தப் போவது தேஜகூ தான். மேடை ஏறலாம், வசனம் பேசலாம், கூட்டத்தையும் காட்டலாம். ஆனால் திமுகவை வீழ்த்தும் சக்தி எங்களுக்கு தான் இருக்கிறது” என்றார். Loading…
TN SIR Final Electoral Roll: உங்கள் பெயரைத் தேடுவது எப்படி? | Decode | Vikatan
TN SIR Final Electoral Roll: உங்கள் பெயரைத் தேடுவது எப்படி? | Decode | Vikatan
Karaikudi : நான்குமுனைப் போட்டியில் சீமான்? - வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 360 updates
Karaikudi : நான்குமுனைப் போட்டியில் சீமான்? - வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 360 updates
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடக்கத்தில் இந்தத் தடத்தில் நாளொன்றுக்கு 204 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் பணிகளுக்காக இது முதற்கட்டமாக 164 ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பராமரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், ரயில் சேவைகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, தற்போது வெறும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, வழக்கமான சேவையில் பாதியளவு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. Chennai Rail இந்த மாற்றங்கள் எழும்பூர் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்டவை எனத் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மெட்ரோ ரயில், பேருந்து போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு ஏப்ரல் 5 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காகச் சில முக்கிய நிலையங்களுக்கு இடையே 'கட் சர்வீஸ்' ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூர் - பரங்கிமலை, எழும்பூர் - கூடுவாஞ்சேரி, எழும்பூர் - செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறைவான ரயில்களால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து வரும் பயணிகளுக்கு, இந்தச் சேவைக் குறைப்பு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் முடியும் வரை இந்த மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு; `QR code' டிக்கெட் சேவை பாதிப்பு; CMRL அறிவுரை
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடக்கத்தில் இந்தத் தடத்தில் நாளொன்றுக்கு 204 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் பணிகளுக்காக இது முதற்கட்டமாக 164 ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பராமரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், ரயில் சேவைகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, தற்போது வெறும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, வழக்கமான சேவையில் பாதியளவு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. Chennai Rail இந்த மாற்றங்கள் எழும்பூர் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்டவை எனத் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மெட்ரோ ரயில், பேருந்து போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு ஏப்ரல் 5 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காகச் சில முக்கிய நிலையங்களுக்கு இடையே 'கட் சர்வீஸ்' ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூர் - பரங்கிமலை, எழும்பூர் - கூடுவாஞ்சேரி, எழும்பூர் - செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறைவான ரயில்களால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து வரும் பயணிகளுக்கு, இந்தச் சேவைக் குறைப்பு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் முடியும் வரை இந்த மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு; `QR code' டிக்கெட் சேவை பாதிப்பு; CMRL அறிவுரை
DMK கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்? | TVK உடன் இணையும் Ramadoss? | SIR | STALIN VIJAY ADMK BJP | IPS
என் பொண்ணு கன்னத்துல Director பாரதிராஜா பளார்னு அடிச்சிட்டார் - நடிகை பிரதியுக்ஷா Mother பகீர்
`சட்டசபைத் தேர்தலில் கட்டம் யாருக்குச் சாதகம்?' - பாஜக-வுக்கு ஜோதிடம் சொன்ன திமுக!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. இடைக்கால பட்ஜெட்டுடன் நிறைவடைந்த இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரஸ்யங்களும் அரங்கேறி உள்ளது. அப்படி சட்டபேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பா.ஜ.க-வினருக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே நடந்த விவாதம் இப்போது வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது. உடனே தி.மு.க வின் அமைச்சர் சேகர்பாபு எழுந்து, “இதையேத்தான் 2021 ஆம் ஆண்டு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். அந்தக் கட்டத்தை எல்லாம் உடைத்தெறிந்து வியூக வலையை அறுத்தெறிந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அன்றைக்கு கட்டத்திற்கே கட்டத்தைப் போட்டவர். இன்றைக்கு கிரகப் பலன்கள் அனைத்தும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு இருக்கின்றது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், தமிழ்க் கடவுள் முருகன் எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களோடு கைகோத்துக் கொண்டிருக்கின்றார். கிரகங்கள் எதுவும் எங்களைச் செய்யாது. சேகர் பாபு மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு 2026 ஆம் ஆண்டு முதல்வர் நாற்காலியிலே எங்கள் முதல்வர்தான் மீண்டும் அமர்வார். நம்முடைய நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சட்டமன்றத்திற்கு வருவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன” என்று பதிலடி கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரன் தொடர்ந்து தங்கம் தென்னரசு பேசும்போது, “அடிப்படையிலே எனக்கு கிரக நிலையிலேயே நம்பிக்கை இல்லை. இருந்தாலும்கூட மாண்புமிகு உறுப்பினர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு அதிலே நிறைந்த நம்பிக்கை இருக்கக்கூடிய காரணத்தினால் அவருடைய பாணியிலே அதற்கு பதில் சொல்லவேண்டுமென்றால், கிரக நிலையைப் பொறுத்தமட்டிலே உங்களுக்கு அஷ்டமத்திலே சனி இருக்கிறது, எங்களுக்கு ஒன்பதிலே குரு இருக்கிறது” என்று ஜோதிடர் பாணியில் பதில் சொல்ல, உடனே எழுந்த பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “நிதி அமைச்சர் அவர்கள் ஒன்றை ஒத்துக்கொண்டுவிட்டார். நம்பிக்கை இல்லை என்று சொல்லி தினசரி அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அஷ்டமத்தில் சனி என்று சரி-ஆகச் சொல்கிறார். அதாவது அஷ்டமத்தில் சனி இருந்தாலும், எனக்கு குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதை நிதி அமைச்சர் அவர்கள் மறந்துவிட்டார்.” என்று இவரும் பதில் அளிக்க சபையில் சிரிப்பலை எழுந்தது. இதற்கு தங்கம் தென்னரசு, “நான் அவருக்கு அஷ்டமத்தில் சனி இருக்கிறது என்று சொன்னால், நான் அவருக்கு என்று தனிப்பட்ட வகையிலே சொல்லவில்லை, நான் அரசியல்ரீதியாகவே சொன்னேன். தங்கம் தென்னரசு அதை அவரே ஏற்றுக்கொண்டு இங்கே அதற்கு ஒப்புதல் தருகிறார்.” என்று கூற... மறுபுறம் நயினார் நாகேந்திரன் எழுந்து, “தப்பித்தோம், பிழைத்தோம் என்று அல்ல! நிச்சயமாக இறைவனுடைய பிராப்தம் இருந்தால் நாம் எல்லோரும் இங்கு எதிர்க்கட்சிகளாக அல்லது ஆளுங்கட்சிகளாக சந்திக்கின்ற வாய்ப்பு இருந்தால் இன்னும் சொல்லப்போனால் அதையும்தாண்டி பல்வேறு மனக்கருத்துகள், மன மாட்சிமைகள் இருந்தால்கூட தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்” என்று சொல்லி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜோதிடத்தை நம்பாத பகுத்தறிவு பேசும் தி.மு.க-வும் , ஆன்மிகத்தை தங்கள் அரசியலின் பங்காக கடைபிடித்துவரும் பா.ஜ.க-வும் ஒரே நேரத்தில் இறுதி சட்டசபை கூட்டத்தில் கலகலப்பாகப் பேசியது வரவேற்கக்கூடிய செய்தியாக இப்போது மாறியுள்ளது.
`சட்டசபைத் தேர்தலில் கட்டம் யாருக்குச் சாதகம்?' - பாஜக-வுக்கு ஜோதிடம் சொன்ன திமுக!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. இடைக்கால பட்ஜெட்டுடன் நிறைவடைந்த இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரஸ்யங்களும் அரங்கேறி உள்ளது. அப்படி சட்டபேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பா.ஜ.க-வினருக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே நடந்த விவாதம் இப்போது வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது. சட்டமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசும்போது, ``இந்த ஆட்சியினுடைய இறுதி கட்டம் என்று பேசியிருக்கிறார். இதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்கும்போது, “இது ஆட்சியினுடைய இறுதி அல்ல, எதிர்காலத்தின் உறுதி” என்று சொன்னார். இந்த விவாதத்தில் பங்கேற்ற பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “என்னைப் பொறுத்தமட்டிலும் காலங்கள் செய்யாததை கிரகங்கள் செய்யும். அந்தக் கிரகங்கள் இப்போது யார் பக்கத்தில் இருக்கிறது என்று தெரியாது. நேற்று அங்கு இருந்தவர்கள் இன்று இங்கு இருக்கிறார்கள். இன்று இங்கு இருப்பவர்கள் நாளைக்கு அங்கு வரலாம். எல்லாம் இறைவனுடைய தீர்ப்பு, மக்களுடைய தீர்ப்பு” என்று பதில் அளித்தார். உடனே தி.மு.க வின் அமைச்சர் சேகர்பாபு எழுந்து, “இதையேத்தான் 2021 ஆம் ஆண்டு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். அந்தக் கட்டத்தை எல்லாம் உடைத்தெறிந்து வியூக வலையை அறுத்தெறிந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அன்றைக்கு கட்டத்திற்கே கட்டத்தைப் போட்டவர். இன்றைக்கு கிரகப் பலன்கள் அனைத்தும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு இருக்கின்றது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், தமிழ்க் கடவுள் முருகன் எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களோடு கைகோத்துக் கொண்டிருக்கின்றார். கிரகங்கள் எதுவும் எங்களைச் செய்யாது. சேகர் பாபு மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு 2026 ஆம் ஆண்டு முதல்வர் நாற்காலியிலே எங்கள் முதல்வர்தான் மீண்டும் அமர்வார். நம்முடைய நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சட்டமன்றத்திற்கு வருவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன” என்று பதிலடி கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரன் தொடர்ந்து தங்கம் தென்னரசு பேசும்போது, “அடிப்படையிலே எனக்கு கிரக நிலையிலேயே நம்பிக்கை இல்லை. இருந்தாலும்கூட மாண்புமிகு உறுப்பினர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு அதிலே நிறைந்த நம்பிக்கை இருக்கக்கூடிய காரணத்தினால் அவருடைய பாணியிலே அதற்கு பதில் சொல்லவேண்டுமென்றால், கிரக நிலையைப் பொறுத்தமட்டிலே உங்களுக்கு அஷ்டமத்திலே சனி இருக்கிறது, எங்களுக்கு ஒன்பதிலே குரு இருக்கிறது” என்று ஜோதிடர் பாணியில் பதில் சொல்ல, உடனே எழுந்த பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “நிதி அமைச்சர் அவர்கள் ஒன்றை ஒத்துக்கொண்டுவிட்டார். நம்பிக்கை இல்லை என்று சொல்லி தினசரி அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அஷ்டமத்தில் சனி என்று சரி-ஆகச் சொல்கிறார். அதாவது அஷ்டமத்தில் சனி இருந்தாலும், எனக்கு குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதை நிதி அமைச்சர் அவர்கள் மறந்துவிட்டார்.” என்று இவரும் பதில் அளிக்க சபையில் சிரிப்பலை எழுந்தது. இதற்கு தங்கம் தென்னரசு, “நான் அவருக்கு அஷ்டமத்தில் சனி இருக்கிறது என்று சொன்னால், நான் அவருக்கு என்று தனிப்பட்ட வகையிலே சொல்லவில்லை, நான் அரசியல்ரீதியாகவே சொன்னேன். தங்கம் தென்னரசு அதை அவரே ஏற்றுக்கொண்டு இங்கே அதற்கு ஒப்புதல் தருகிறார்.” என்று கூற... மறுபுறம் நயினார் நாகேந்திரன் எழுந்து, “தப்பித்தோம், பிழைத்தோம் என்று அல்ல! நிச்சயமாக இறைவனுடைய பிராப்தம் இருந்தால் நாம் எல்லோரும் இங்கு எதிர்க்கட்சிகளாக அல்லது ஆளுங்கட்சிகளாக சந்திக்கின்ற வாய்ப்பு இருந்தால் இன்னும் சொல்லப்போனால் அதையும்தாண்டி பல்வேறு மனக்கருத்துகள், மன மாட்சிமைகள் இருந்தால்கூட தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்” என்று சொல்லி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜோதிடத்தை நம்பாத பகுத்தறிவு பேசும் தி.மு.க-வும் , ஆன்மிகத்தை தங்கள் அரசியலின் பங்காக கடைபிடித்துவரும் பா.ஜ.க-வும் ஒரே நேரத்தில் இறுதி சட்டசபை கூட்டத்தில் கலகலப்பாகப் பேசியது வரவேற்கக்கூடிய செய்தியாக இப்போது மாறியுள்ளது.
Vijay-யை காட்டி எல்லோரும் பலனடைகிறார்கள் | பழ.கருப்பையா Interview | Vikatan
கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !
தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள்
கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !
தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள்
``திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்! - அறநிலையத்துறை
திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் பொறுப்பேற்றது முதல் 22.02.2026 வரை, 20 முதல் 400 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4,332 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. திருப்பணி 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 29,479 திருப்பணிகளுள் ரூ.4,346 கோடி மதிப்பீட்டிலான 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் நன்கொடையாளர் நிதி மூலம் ரூ.2,000.87 கோடி மதிப்பீட்டில் 12,220 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு அகற்றுதல் / நிலங்கள் அளவீடு திராவிட நாயகர் ஆட்சியில், 1,055 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ .8,436.31 கோடி மதிப்பிலான 8,107.03 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நவீன ரோவர் கருவிகள் (DGPS) மூலம் 2,38,060.24 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1,50,221 எல்லைக் கற்கள் நடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் திருக்கோயில்களில் திருப்பணி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணி கிராமப்புறத் திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் திருப்பணி ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் திட்டத்தில், அரசு நிதி ரூ.425 கோடி, திருக்கோயில் நிதி, நன்கொடையாளர் நிதி, பொதுநலநிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 88 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன. பெருந்திட்ட வரைவுப் பணி (Master Plan) திருச்செந்தூர், சமயபுரம், இராமேஸ்வரம், பழநி, அழகர்கோவில், மருதமலை, திருவேற்காடு, பெரியபாளையம், சிறுவாபுரி உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் பெருந்திட்ட வரைவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கம்பிவட ஊர்திகள் மற்றும் மின்தூக்கிகள் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயிலில் ரூ.20.30 கோடி செலவிலும், கரூர் மாவட்டம், அய்யர்மலை, அருள்மிகு இரத்தனகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.9.10 கோடி செலவிலும், கம்பிவட ஊர்திகளும், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.5.20 கோடி செலவில் மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளன. பழனி மலை மற்றும் இடும்பன் மலை இடையே ரூ.90 கோடி மதிப்பீட்டிலும், அனுவாவியில் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், திருநீர்மலையில் ரூ.19.60 கோடி மதிப்பீட்டிலும், திருக்கழுக்குன்றத்தில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டிலும், திருப்பரங்குன்றம் அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.32.18 கோடி மதிப்பீட்டிலும் கம்பி வட ஊர்திகளும், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் : 2 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 12 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 14 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ.120 கோடி செலவிடப்படுவதோடு, சுமார் 3.65 கோடி பக்தர்கள் பயன்பெறுகின்றனர். தங்க முதலீட்டுத் திட்டம் இருக்கன்குடி, பெரியபாளையம், சமயபுரம், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 21 திருக்கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு 1,074 கிலோ 123 கிராம் தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டு வட்டியாக 17 கோடியே 81 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் திருக்கோயில்களுக்கு வருமானம் கிடைக்கிறது. ஆன்மிகப் பயணம் 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9.94 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.40,000-லிருந்து ரூ.1 இலட்சமாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.10,000-லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்குச் 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை மற்றும் பட்டு வேட்டி உட்பட ரூ.70,000/- மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருக்கோயில்களின் சார்பாக 2,800 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ .335 கோடியில் ஒருகால பூசை திட்டம் ஒருகால பூசை கூடச் செய்திட முடியாத, நிதிவசதி இல்லாத 12,959 திருக்கோயில்களுக்கான வைப்பு நிதி தலாரூ.1 இலட்சத்திலிருந்து, ரூ. 2 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், 5,041 திருக்கோயில்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டன. தற்போது ஒருகால பூஜைத் திட்டத்திலுள்ள 19,000 திருக்கோயில்களுக்கும் வைப்பு நிதி ரூ.2.50 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்திற்காக மட்டும் இதுவரை ரூ. 335 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஒருகால பூசை திட்டத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஊக்கத் தொகை ரூ.1,500/–ஆக உயர்த்தப்பட்டு 19,000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 1,500 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 19,000 ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூசை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடுதல் திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணம், கட்டடக்கலை, கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டு; மேலும் 300 நூல்கள் மறுபதிப்பு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி மற்றும் பெண் ஓதுவார்கள் நியமனம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உன்னத திட்டமாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்படி, 29 பேர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி நியமனம் செய்யப்பட்ட 46 ஓதுவார்களில் 12 ஓதுவார்கள் பெண்கள் ஆகும். நாள் முழுவதும் பிரசாதம் இவ்வரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 30 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2024 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. யுனெஸ்கோ விருது தஞ்சை மாவட்டம், கும்பகோணம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டடக் கலையினைப் பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் திருக்கோயிலைப் புனரமைத்தற்காக கலாச்சாரப் பாரம்பரிய யுனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்கு கற்கோயில் அய்யன் திருவள்ளுவரைப் போற்றும் வகையில் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணி ரூ.19.17 கோடியில் கற்கோயிலாகக் கட்டப்பட்டு வருகிறது. தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் நாகை மாவட்டம். வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அருள்மிகு ஒளவையார் திருக்கோயிலில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு இவ்வரசு பொறுப்பேற்ற பின் திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்கள் உள்பட 294 திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 விழுக்காடு பங்குத் தொகையாக வழங்கப்படுகிறது. 14 போற்றி நூல்களை பதிப்பிக்கச் செய்து மேலும் வலு சேர்த்துள்ளது. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலைகளை நிறுவுதல் கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ. 110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம், அடிப்படை வசதிகளுடன் அருங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதியதாக 184 அடி உயர முருகன் சிலையும், ஈரோடு மாவட்டம், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக 180 அடி உயர முருகன் சிலையும், இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், குமரகிரி, திமிரி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் புதியதாக 114 அடி உயர முருகன் சிலையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுக்கும் பணி திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடற்கரை பரப்பினை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் பொருட்டும், புனித நீராடும் பக்தர்களின் நலன் கருதியும், நீர்வளத்துறையின் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு மூலம், ரூ.15 கோடி அரசு நிதி மற்றும் ரூ.15 கோடி திருக்கோயில் நிதி ஆக மொத்தம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பணியாளர் நியமனங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி ஆணையர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 பேர் உட்பட, 944 பேருக்கும், நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் 946 அலுவலர்களுக்கும், கருணை அடிப்படையில் 34 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,351 பணியாளர்கள் பணிவரன்முறைப்படுத்தப்பட்டுள்ளனர். திருக்கோயில் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அர்ச்சர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடைகள் மற்றும் சீருடைகள், ரூ.221 கோடி மதிப்பீட்டில் 616 குடியிருப்புகள், திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 ஆகவும் உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை, குடும்ப நலநிதி ரூ.4 இலட்சமாக உயர்வு, ஆண்டிற்கு ஒருமுறை முழு உடற் பரிசோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வள்ளலார் முப்பெரும் விழா & அனைத்துலக வள்ளலார் மாநாடு ரூ. 3.25 கோடி அரசு நிதியில் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு, ஓராண்டு காலம் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், வடலூரில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் வகையில் 15.02.2026 அன்று சென்னை, கீழ்ப்பாக்கத்தில், அனைத்துலக வள்ளலார் மாநாடு வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை திட்டங்களுக்கு அரசு நிதி : மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதியாக ரூ.1,187.83 கோடி வழங்கப்பட்டுள்ளது.
SIR: வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி?!
கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் அந்த வகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது. இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925 பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617 SIRக்கு பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம். https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலத்தை பதிவு செய்து தேடலாம். அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து பெயர் இருப்பதை அறியலாம். வாக்காளர் பட்டியல் திருத்தம் மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம். பெயர் இருந்தால் ‘View Details’ பகுதியில் முழு விவரங்களை காண முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
SIR: வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி?!
கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் அந்த வகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது. இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925 பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617 SIRக்கு பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம். https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலத்தை பதிவு செய்து தேடலாம். அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து பெயர் இருப்பதை அறியலாம். வாக்காளர் பட்டியல் திருத்தம் மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம். பெயர் இருந்தால் ‘View Details’ பகுதியில் முழு விவரங்களை காண முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உதயநிதி கலந்துகொண்ட மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் - Photo Album
மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம்
உதயநிதி கலந்துகொண்ட மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் - Photo Album
மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம்
SIR : தமிழ்நாட்டில் அதிக, குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதிகள்... இறுதி வாக்காளர் பட்டியல்!
தமிழக அளவில் வாக்காளர் தீவிர திருத்தத்தப் பணிகள் முடிந்த பிறகான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அர்ச்சனா பட்நாயக் அதன்படி, 'தமிழகத்தில் SIR க்கு முன்பாக 6,41,14, 587 வாக்காளர்கள் இருந்தனர். SIR கணக்கெடுப்பு முடிந்து டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5,43,76,756 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 97,37,831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் இருப்பை நிரூபித்து விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்து பெயரை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மேலும் 27.53 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு 4.23 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படிருந்தது. இறுதியாக இப்போது வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதில் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர் ஆண்கள், 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேர் பெண்கள். 7617 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இறுதியாக இப்போது 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா பட்நாயக் தமிழகத்திலேயே அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5,36,991 வாக்காளர்களும், தமிழகத்திலேயே மிகக்குறைவாக துறைமுகம் தொகுதியில் 1,16,986 வாக்காளர்களும் இருக்கின்றனர். வெளியான பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621 ; பெண்கள் 2,74,254 ; மூன்றாம் பாலினத்தவர் 116). இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662 ; பெண்கள் 2,19,035; மூன்றாம் பாலினத்தவர் 75). தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,16,896 ஆவர். (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; மூன்றாம் பாலினத்தவர் 55). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட எழும்பூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879 ஆவர் (ஆண்கள் 65,677 ; பெண்கள் 69,149 ; மூன்றாம் பாலினத்தவர் 53).
SIR : தமிழ்நாட்டில் அதிக, குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதிகள்... இறுதி வாக்காளர் பட்டியல்!
தமிழக அளவில் வாக்காளர் தீவிர திருத்தத்தப் பணிகள் முடிந்த பிறகான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அர்ச்சனா பட்நாயக் அதன்படி, 'தமிழகத்தில் SIR க்கு முன்பாக 6,41,14, 587 வாக்காளர்கள் இருந்தனர். SIR கணக்கெடுப்பு முடிந்து டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5,43,76,756 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 97,37,831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் இருப்பை நிரூபித்து விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்து பெயரை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மேலும் 27.53 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு 4.23 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படிருந்தது. இறுதியாக இப்போது வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதில் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர் ஆண்கள், 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேர் பெண்கள். 7617 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இறுதியாக இப்போது 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா பட்நாயக் தமிழகத்திலேயே அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5,36,991 வாக்காளர்களும், தமிழகத்திலேயே மிகக்குறைவாக துறைமுகம் தொகுதியில் 1,16,986 வாக்காளர்களும் இருக்கின்றனர். வெளியான பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621 ; பெண்கள் 2,74,254 ; மூன்றாம் பாலினத்தவர் 116). இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662 ; பெண்கள் 2,19,035; மூன்றாம் பாலினத்தவர் 75). தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,16,896 ஆவர். (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; மூன்றாம் பாலினத்தவர் 55). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட எழும்பூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879 ஆவர் (ஆண்கள் 65,677 ; பெண்கள் 69,149 ; மூன்றாம் பாலினத்தவர் 53).
மொத்தம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்!
கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது. இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925 பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617 SIR-ன் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியான, பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ரீதியாக வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் கீழே மாவட்டரீதியாக இறுதி வாக்காளர் பட்டியல்
மொத்தம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்!
கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது. இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925 பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617 SIR-ன் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியான, பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ரீதியாக வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் கீழே மாவட்டரீதியாக இறுதி வாக்காளர் பட்டியல்
முழு வரி ரத்திற்கு 'சான்ஸே இல்லை': அடுத்த வரி வழிகளை தேடும் ட்ரம்ப் அரசு; இருக்கும் ஆப்ஷன்கள் என்ன?
என்னதான் 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று விதிக்கப்பட்ட வரியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தாலும், வரி போடுவதை கைவிடுவதாக இல்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த எண்ணத்தின் ஒரு பகுதிதான் தீர்ப்பு வந்த அன்றே (பிப்ரவரி 20) ட்ரம்ப் அறிவித்த 10 சதவிகித வரி. இந்த வரியை அவர் வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122-ன் படி விதித்திருந்தார். அடுத்த நாளே, இந்த 10 சதவிகித வரியை உலகளவில் 15 சதவிகிதமாக உயர்த்தினார். இந்தக் குறிப்பிட்ட சட்டத்தை ட்ரம்ப் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அது அதிபருக்கு அளிக்கும் அதிகாரம் தான். அமெரிக்க உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்ற உத்தரவு: இதுவரை வசூலித்த 133 பில்லியன் டாலர் வரி... ரீஃபண்ட் செய்யுமா அமெரிக்கா? வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122-ன் படி, அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து அதிக தொகைக்கு வாங்கி... ஆனால், அது ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கான தொகை முன்பு சொன்னதை விட குறைவாக இருந்தால் (Balance of Payment Deficit) அமெரிக்க அதிபர் 15 சதவிகிதம் வரை உலக நாடுகள் மீது வரி விதிக்கலாம். ஆனால், அது 150 நாள்களுக்கு மட்டுமே செல்லும். இந்த வரி விதிப்பு நாளை (பிப்ரவரி 24) முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த 150-வது நாள் ஜூலை 24, 2026. அதனால், அதற்குள் ட்ரம்ப் நிச்சயம் இன்னொரு வரிச் சட்டத்தைப் பிடித்துவிடுவார். ஆனால், அது எந்த நீதிமன்றத்தாலும் தலையிட முடியாத படி, வலுவான சட்டங்களாக இருக்கும். அவர் ஏற்கெனவே இன்னும் சில மாதங்களில் ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்ப வரி அறிவிக்கப்படும் என்று வேறு தெரிவித்திருக்கிறார். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் வரி விதிப்பை மட்டும் விட்டுவிட மாட்டார் ட்ரம்ப். அப்படி சட்டத்திற்கு உட்பட்டு ட்ரம்பிற்கு இருக்கும் வலுவான ஆப்ஷன்களைக் காண்போம்... ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? 1. வர்த்தக விரிவாக்கச் சட்டம், 1962 - பிரிவு 232 இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் தேசிய பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், அதிபரால் வரி விதிக்க முடியும். இதற்கு எந்தக் கால வரம்பும் கிடையாது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் இந்தப் பொருள்களால், உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆபத்து என்று ட்ரம்ப் இந்தச் சட்டத்தின் கீழ் வரிகளைக் கொண்டு வரலாம். 2. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 301 நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என்கிற அடிப்படையில் இந்தச் சட்டத்தின் மூலம் அமெரிக்க அதிபர் உலக நாடுகளின் மீது வரி விதிக்கலாம். இதில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் நியாயமற்றதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது என்று கூட வரி விதிக்கலாம். இதில் அறிவுசார் திருட்டுகள் கூட அடங்கும். ஏற்றுமதி - இறக்குமதி 'நோட் பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold 3. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 201 அமெரிக்காவிற்குள் இறக்குமதிகள் அதிகமாகி, அது உள்நாட்டு உற்பத்திகளைப் பாதித்தால், அதிபர் தாராளமாக வரி விதிக்கலாம். 4. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 701, 731 - Anti-dumping and Countervailing Duties நியாயமான விலைக்குக் கீழே விற்கப்படும்... வெளிநாட்டு அரசுகளால் மானியம் வழங்கப்படும் பொருள்களுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் வரி விதிக்கலாம். இதற்கு அதிபரின் உத்தரவு எல்லாம் தேவை இல்லை. இது குறித்து அமெரிக்க வர்த்தகத் துறையே முடிவெடுக்கலாம். 5. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 338 அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் போது, அதிபர் இந்த பழிவாங்கும் வரிச் சட்டத்தைக் கையிலெடுத்து அதிக வரிகளை விதிக்கலாம். இப்படி அடுத்து 'சட்ட ரீதியாக' எப்படி உலக நாடுகளின் மீது வரி விதிக்கலாம் என்று ட்ரம்ப் அரசு நிர்வாகத்தினர், இப்போது தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!
எஸ்.டி.எஸ், பாக்யராஜ் முதல் பண்ருட்டியார் வரை; அடேங்கப்பா! அதிமுக-விலிருந்து எத்தனை எத்தனை கட்சிகள்?
ஓபிஎஸ் அணியிலிருந்த மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன், 'எம்.ஜி.ஆர் அண்ணா திமுக' என்ற கட்சியை சமீபத்தில் தொடங்கியுள்ளது, பேசு பொருளாகியுள்ளது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் இது ஒன்றும் புதிதல்ல, திமுக-விலிருந்து பிரிந்து சென்றுதான் அதிமுக-வை எம்.ஜி.ஆர் தொடங்கினார். என்றாலும், அந்த அதிமுக-வில் பயணித்தவர்கள்தான் வெளியேறி அதிகமான அளவில் புதுக்கட்சி தொடங்கியுள்ளார்கள் என்பதுதான், தமிழக அரசியலில் சுவாரஸ்யமான வரலாறு. எம்.ஜி.ஆர் இருக்கும்போதே 'நமது கழகம்' என்ற கட்சியை அவர் அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அது கட்சியினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது வேறு விஷயம். பின்னாளில் அவர் ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றதுதான் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர் - பாக்யராஜ் அதுபோல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை இணைத்துக்கொண்டு அவ்வப்போது கட்சிகளை தொடங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அப்படி தனிக்கட்சி தொடங்கியவர்களில் திருநாவுக்கரசரைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் பேசப்படவில்லை. பலர் ஆரம்பித்த கட்சிகளையும் காணோம், அவர்களையும் காணோம். திருநாவுக்கரசர் அப்படி தொடங்கப்பட்ட சில கட்சிகளைப் பற்றி பார்ப்போம் 1989 : 'எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை கே.பாக்கியராஜ் தொடங்கினார், ஆனால் நடத்த முடியவில்லை. 1990 : 'எம்.ஜி.ஆர் அதிமுக' என்ற கட்சியைத் திருநாவுக்கரசர் தொடங்கினார். அக்கட்சி மூலம் சில தேர்தல்களில் வெற்றி பெற்றவர், பா.ஜ.க-வில் இணையும் வரை கட்சியை நடத்தினார். ஆர்.எம்.வீரப்பன் 1995 : 'எம்.ஜி.ஆர் கழகம்' என்ற கட்சியைத் ஆர்.எம். வீரப்பன் தொடங்கினார். தொடர்ந்து திமுக-வுக்கு ஆதரவு அளித்து வந்தார். 2001 : அதிமுக முன்னாள் எம்.பி ஏ.சி.சண்முகம் சாதி அமைப்பை முதலில் தொடங்கி, பின்பு புதிய நீதிக் கட்சியைத் தொடங்கினார். 2010 : ஜெயலலிதா இருக்கும்போதே 'ஜனநாயக அதிமுக' என்ற கட்சியை நெல்லையைச் சேர்ந்த செல்வம் என்பவர் தொடங்கி, அதிமுக-வினரின் கவனிப்பால் பின்பு அமைதியானார். 2017 : ஜெயலலிதா மறைவுக்குப் பின் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை ஜெயலாலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். தீபா, மாதவன் 2017 : தீபாவின் பரபரப்பு அடங்குவதற்கள் `எம்.ஜி.ஆர் - ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை தீபாவின் கணவர் மாதவன் தொடங்கி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். 2018 : 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை டிடிவி தினகரன் மேலூரில் தொடங்கி, இன்றுவரை நடத்தி வருகிறார். டி.டி.வி. தினகரன் 2018 : 'அண்ணா எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை டிடிவி பாஸ்கரன் தொடங்கினார், அதன் பின்பு சத்தத்தையே காணோம். 2018 : 'அண்ணா திராவிடர் கழகம்' என்ற கட்சியை சசிகலா சகோதரர் திவாகரன் தொடங்கினார், அதன் பின்பு என்ன ஆனது என்று தெரியவில்லை. திவாகரன் 2019 : 'அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை அதிமுக நிர்வாகியான மதுரை வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தொடங்கி நடத்தி திமுக-வுக்கு ஆதரவு அளித்து வருகிறார். 2020 : 'அகில இந்திய புரட்சித் தலைவர் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை மதுரையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தொடங்கி நடத்தி வருகிறார். அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் 2025 : 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்' என்ற அமைப்பை ஓ.பி.எஸ் தொடங்கினார். உரிமை மீட்புக் குழுவை கழகமாக மாற்றி கூட்டங்களை நடத்தி வந்தாலும், அரசியல் கட்சியாக பதிவு செய்யவில்லை. இதில் இன்னொரு வேடிக்கையாக 2022-ல் 'புரட்சித்தாய் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை சசிகலாவை மனதில் வைத்து பெரம்பலூரைச் சேர்ந்த சேரசோழ பாண்டியன் என்பவர் தொடங்கிய சம்பவமும் நடந்தது. இடைப்பட்ட காலத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரில் புதிதாக கட்சி ஏதும் தொடங்கப்பட்டதா என்ற தகவல் இல்லை, இந்நிலையில்தான் அண்ணா காலத்து அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன், தன் தள்ளாத வயதில் தற்போது `எம்.ஜி.ஆர் அண்ணா திமுக' என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். 1971-ல் கருணாநிதி ஆட்சியிலும், அதன் பின்பு எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தது மட்டுமன்றி எம்.ஜி.ஆருக்கு ஆலோசகர் போலவும் செயல்பட்டார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்து, பின்பு அவரிடம் முரண்பட்டு நெடுஞ்செழியனுடன் சேர்ந்து நால்வர் அணியாக செயல்பட்டு பின்பு பா.ம.க-வில் இணைந்து அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையை பெற்றவர். பண்ருட்டி ராமச்சந்திரன் அதன் பின்பும் தனிக்கட்சி ஒன்றைத் தொடங்கி, அது வேலைக்கு ஆகாமல் போகவே, தேமுதிக-வில் பயணித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து, அங்கிருந்து முரண்பட்டு மீண்டும் அதிமுக-வுக்கு வந்தவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார். பின்பு 2022-ல் ஓ.பி.எஸ் அணியில் திடீரென தோன்றினாலும் அதன் பின்பும் அமைதியாக இருந்தவர், தற்போது 'எம்.ஜி.ஆர் அண்ணா திமுக' என்ற கட்சியைத் தொடங்கி கவனிக்க வைத்துள்ளார். அடுத்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா தொடங்கும் புதுக்கட்சியை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
`திமுக கூட்டணி குறித்த கேள்விகள்; செலவுக்கு.?' - தே.மு.தி.க நேர்காணலில் பிரேமலதா கேட்ட கேள்விகள்!
வரும் சட்டமன்ற தேர்தலில் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப்பிறகு தி.மு.கவுடன் கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. அதையொட்டி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தே.மு.தி.க நிர்வாகிகளிடம் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நேர்காணல் நடந்தது. பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த நேர்காணலில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம், கூட்டணி குறித்து முதலில் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒட்டு மொத்த மாவட்டச் செயலாளர்கள், தி.மு.கவுடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்திருப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதன்பிறகு மாவட்டம் வாரியாக நேர்காணல் நடந்திருக்கிறது. தே.மு.தி.க நேர்காணல் 20-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. 21-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியாலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றுக்கு நடத்தப்பட்டது. 22-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நடந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர். அவர்களிடம் நேர்காணல் நடத்திய பிரேமலதா, `தொகுதியில் உங்களின் செல்வாக்கு என்ன?, கட்சியின் செல்வாக்கு, எவ்வளவு செலவழிக்க முடியும்?' என பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு நேர்காணலில் பங்கேற்றவர்கள் பதிலளித்ததும், `தி.மு.க கூட்டணியில் நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்' என்று பிரேமலதா பேசியிருக்கிறார். தே.மு.தி.க நேர்காணல் நேர்காணலில் பங்கேற்ற தே.மு.தி.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம் ``தி.மு.க கூட்டணியில் ஒற்றை இலக்கத்தில்தான் தே.மு.தி.கவுக்கு சீட் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பொதுச் செயலாளர் பிரேமலதா, விருத்தாசலத்திலும் விஜய பிரபாகரன், விருதுநகரிலும் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது எங்கிறார்கள். இதுதவிர சென்னையில் விருகம்பாக்கம், தர்மபுரி, டெல்டா மாவட்டத்தில் ஒரு தொகுதி, தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி உள்ளிட்ட தொகுதிகள் தே.மு.தி.கவுக்கு கிடைக்கும் என நம்புகிறோம். தென்காசி மாவட்டத்தில் தி.மு.க கூட்டணியிலிருக்கும் ம.தி.மு.க போட்டியிட்டு வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியை தே.மு.தி.கவுக்கு ஒதுக்கினால் தென்மாவட்டத்தில் கட்சி வளர வாய்ப்பாக அமையும். இந்தத் தொகுதியில் போட்டியிட தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் நெடுவயல் எம்.குமார் நேர்காணலின்போது, `வாசுதேவநல்லூரில் போட்டியிட்டால் நிச்சயம், தே.மு.தி.க வெற்றி பெறும். ஏனெனில் இந்தத் தொகுதியில் 30 சதவிகிதம் ஆதிதிராவிட சமுகத்தினர் இருந்தாலும் தெலுங்கு பேசுபவர்கள் தொகுதியில் பரவலாக இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டுக்கள் தே.மு.தி.கவுக்கு கிடைத்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்' என பேசியிருக்கிறார். பிரேமலதா அடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகிகள், பாளையங்கோட்டை தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கூறியிருக்கிறார்கள். தென் மாவட்ட நிர்வாகி ஒருவர், கோடியில் செலவழிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். நேர்காணலில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் லட்சத்தில் மட்டுமே செலவு செய்ய முடியும் எனக் கூறியிருக்கிறார்கள். கோடி, லட்சங்களில் செலவு செய்பவர்களிடம் எவ்வளவு நாள்களுக்குள் உங்களால் ஏற்பாடு செய்ய முடியும் எனவும் கேட்கப்பட்டுள்ளதாம். பின்னர், கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கட்டும், அதன் பின்னர் பார்க்கலாம் என நேர்காணல் முடிக்கப்பட்டதாம். தொடர்ந்து அ.தி.மு.க வஞ்சகம் செய்தது குறித்து சில மாவட்டச் செயலாளர்கள் நேர்காணலில் ஆவேசமாக பேசினார்கள். அதையெல்லாம் பிரேமலதா பொறுமையாக கேட்டார், பின்னர் தி.மு.க கூட்டணியில் நமக்கு 11 தொகுதிகள் கிடைக்கும் என கூறிய பிரேமலதா, சற்று யோசித்த அவர், 12, 13 தொகுதிகள் வரைகூட கிடைக்கும் என தெரிவித்தார் என்றனர்.
`திமுக கூட்டணி குறித்த கேள்விகள்; செலவுக்கு.?' - தே.மு.தி.க நேர்காணலில் பிரேமலதா கேட்ட கேள்விகள்!
வரும் சட்டமன்ற தேர்தலில் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப்பிறகு தி.மு.கவுடன் கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. அதையொட்டி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தே.மு.தி.க நிர்வாகிகளிடம் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நேர்காணல் நடந்தது. பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த நேர்காணலில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம், கூட்டணி குறித்து முதலில் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒட்டு மொத்த மாவட்டச் செயலாளர்கள், தி.மு.கவுடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்திருப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதன்பிறகு மாவட்டம் வாரியாக நேர்காணல் நடந்திருக்கிறது. தே.மு.தி.க நேர்காணல் 20-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. 21-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியாலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றுக்கு நடத்தப்பட்டது. 22-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நடந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர். அவர்களிடம் நேர்காணல் நடத்திய பிரேமலதா, `தொகுதியில் உங்களின் செல்வாக்கு என்ன?, கட்சியின் செல்வாக்கு, எவ்வளவு செலவழிக்க முடியும்?' என பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு நேர்காணலில் பங்கேற்றவர்கள் பதிலளித்ததும், `தி.மு.க கூட்டணியில் நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்' என்று பிரேமலதா பேசியிருக்கிறார். தே.மு.தி.க நேர்காணல் நேர்காணலில் பங்கேற்ற தே.மு.தி.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம் ``தி.மு.க கூட்டணியில் ஒற்றை இலக்கத்தில்தான் தே.மு.தி.கவுக்கு சீட் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பொதுச் செயலாளர் பிரேமலதா, விருத்தாசலத்திலும் விஜய பிரபாகரன், விருதுநகரிலும் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது எங்கிறார்கள். இதுதவிர சென்னையில் விருகம்பாக்கம், தர்மபுரி, டெல்டா மாவட்டத்தில் ஒரு தொகுதி, தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி உள்ளிட்ட தொகுதிகள் தே.மு.தி.கவுக்கு கிடைக்கும் என நம்புகிறோம். தென்காசி மாவட்டத்தில் தி.மு.க கூட்டணியிலிருக்கும் ம.தி.மு.க போட்டியிட்டு வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியை தே.மு.தி.கவுக்கு ஒதுக்கினால் தென்மாவட்டத்தில் கட்சி வளர வாய்ப்பாக அமையும். இந்தத் தொகுதியில் போட்டியிட தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் நெடுவயல் எம்.குமார் நேர்காணலின்போது, `வாசுதேவநல்லூரில் போட்டியிட்டால் நிச்சயம், தே.மு.தி.க வெற்றி பெறும். ஏனெனில் இந்தத் தொகுதியில் 30 சதவிகிதம் ஆதிதிராவிட சமுகத்தினர் இருந்தாலும் தெலுங்கு பேசுபவர்கள் தொகுதியில் பரவலாக இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டுக்கள் தே.மு.தி.கவுக்கு கிடைத்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்' என பேசியிருக்கிறார். பிரேமலதா அடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகிகள், பாளையங்கோட்டை தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கூறியிருக்கிறார்கள். தென் மாவட்ட நிர்வாகி ஒருவர், கோடியில் செலவழிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். நேர்காணலில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் லட்சத்தில் மட்டுமே செலவு செய்ய முடியும் எனக் கூறியிருக்கிறார்கள். கோடி, லட்சங்களில் செலவு செய்பவர்களிடம் எவ்வளவு நாள்களுக்குள் உங்களால் ஏற்பாடு செய்ய முடியும் எனவும் கேட்கப்பட்டுள்ளதாம். பின்னர், கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கட்டும், அதன் பின்னர் பார்க்கலாம் என நேர்காணல் முடிக்கப்பட்டதாம். தொடர்ந்து அ.தி.மு.க வஞ்சகம் செய்தது குறித்து சில மாவட்டச் செயலாளர்கள் நேர்காணலில் ஆவேசமாக பேசினார்கள். அதையெல்லாம் பிரேமலதா பொறுமையாக கேட்டார், பின்னர் தி.மு.க கூட்டணியில் நமக்கு 11 தொகுதிகள் கிடைக்கும் என கூறிய பிரேமலதா, சற்று யோசித்த அவர், 12, 13 தொகுதிகள் வரைகூட கிடைக்கும் என தெரிவித்தார் என்றனர்.
கேரளா: பாஜக மாநிலத் தலைவரை எதிர்த்து களமிறங்கும் சசிதரூர்; விஐபி தொகுதியாகும் நேமம்; பின்னணி என்ன?
கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் போட்டியிட சி.பி.எம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் முண்டியடிக்கும் நிலை உள்ளது. கேரளாவில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் சி.பி.எம் அந்தத் தகுதியை நிலைநிறுத்தும் வகையில், 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கடும் முயற்சியில் உள்ளது. பா.ஜ.க இம்முறை கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களத்தில் உள்ளது. பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத் தேர்தலின்போது திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வென்றார். வரும் சட்டமன்றத் தேர்தலும் சசிதரூருக்கும், ராஜீவ் சந்திரசேகருக்கும் நேரடியாக மோதல் ஏற்படும் நிலை உள்ளது. திருவனந்தபுரம், கோவளம், காட்டாக்கடை தொகுதிகளை மூன்று பக்க எல்லையாகவும், ஒருபுறம் கடலை எல்லையாகவும் கொண்டது நேமம் தொகுதி. இங்கு சி.பி.எம், சி.பி.ஐ, காங்கிரஸ் கட்சிகள் வென்றுள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஓ.ராஜகோபால் வென்று கேரளாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப் பெற்றார். நேமம் தொகுதியில் தாமரை படம் வரைந்த ராஜீவ் சந்திரசேகர் 2016 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம் வேட்பாளர் வி.சிவன்குட்டி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். 2021 தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த வி.சிவன்குட்டி நேமம் தொகுதி எம்.எல்.ஏ-வாக வென்று தற்போது கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளார். கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்! கடந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸின் கே.முரளிதரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மீண்டும் நேமம் தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். நேற்று நேமம் தொகுதியில் சுவர் எழுதும் பணியைத் தொடங்கிவைத்து பிரசாரத்தைத் தொடங்கினார் ராஜீவ் சந்திரசேகர். பின்னர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், திருவனந்தபுரத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அதற்காக நேமம் தொகுதியில் போட்டியிடத் தயாராக உள்ளேன். இது பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பே தேசியத் தலைமைக்குத் தெரிவித்துள்ளேன். தேசியத் தலைமை இறுதி முடிவை எடுத்து, விரைவில் அறிவிக்கும் என நம்புகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் மக்கள் எனக்கு அளித்த ஆதரவையும், அன்பையும் மறக்க முடியாது என்றார். ராஜீவ் சந்திரசேகர், சசிதரூர் முன்னாள் மத்திய அமைச்சரான பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக வலுவான வேட்பாளரைக் களமிறக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி-யுமான சசிதரூரை நேமம் தொகுதியில் களமிறக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 3 பேர் ஏற்கனவே வென்றுள்ளனர். அதிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.கருணாகரன் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ. ஆகி கேரள மாநில முதல்வராக இருந்த வரலாறு உள்ளது. எனவே, முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சசிதரூரும் இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். சி.பி.எம் சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான அமைச்சர் சிவன்குட்டி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே நேமம் தொகுதி வி.ஐ.பி தொகுதியாக மாறும் நிலை உள்ளது. கேரளா: பொன்னு மோளே நீ சாக மாட்டாய் - 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு
கேரளா: பாஜக மாநிலத் தலைவரை எதிர்த்து களமிறங்கும் சசிதரூர்; விஐபி தொகுதியாகும் நேமம்; பின்னணி என்ன?
கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் போட்டியிட சி.பி.எம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் முண்டியடிக்கும் நிலை உள்ளது. கேரளாவில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் சி.பி.எம் அந்தத் தகுதியை நிலைநிறுத்தும் வகையில், 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கடும் முயற்சியில் உள்ளது. பா.ஜ.க இம்முறை கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களத்தில் உள்ளது. பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத் தேர்தலின்போது திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வென்றார். வரும் சட்டமன்றத் தேர்தலும் சசிதரூருக்கும், ராஜீவ் சந்திரசேகருக்கும் நேரடியாக மோதல் ஏற்படும் நிலை உள்ளது. திருவனந்தபுரம், கோவளம், காட்டாக்கடை தொகுதிகளை மூன்று பக்க எல்லையாகவும், ஒருபுறம் கடலை எல்லையாகவும் கொண்டது நேமம் தொகுதி. இங்கு சி.பி.எம், சி.பி.ஐ, காங்கிரஸ் கட்சிகள் வென்றுள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஓ.ராஜகோபால் வென்று கேரளாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப் பெற்றார். நேமம் தொகுதியில் தாமரை படம் வரைந்த ராஜீவ் சந்திரசேகர் 2016 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம் வேட்பாளர் வி.சிவன்குட்டி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். 2021 தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த வி.சிவன்குட்டி நேமம் தொகுதி எம்.எல்.ஏ-வாக வென்று தற்போது கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளார். கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்! கடந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸின் கே.முரளிதரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மீண்டும் நேமம் தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். நேற்று நேமம் தொகுதியில் சுவர் எழுதும் பணியைத் தொடங்கிவைத்து பிரசாரத்தைத் தொடங்கினார் ராஜீவ் சந்திரசேகர். பின்னர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், திருவனந்தபுரத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அதற்காக நேமம் தொகுதியில் போட்டியிடத் தயாராக உள்ளேன். இது பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பே தேசியத் தலைமைக்குத் தெரிவித்துள்ளேன். தேசியத் தலைமை இறுதி முடிவை எடுத்து, விரைவில் அறிவிக்கும் என நம்புகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் மக்கள் எனக்கு அளித்த ஆதரவையும், அன்பையும் மறக்க முடியாது என்றார். ராஜீவ் சந்திரசேகர், சசிதரூர் முன்னாள் மத்திய அமைச்சரான பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக வலுவான வேட்பாளரைக் களமிறக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி-யுமான சசிதரூரை நேமம் தொகுதியில் களமிறக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 3 பேர் ஏற்கனவே வென்றுள்ளனர். அதிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.கருணாகரன் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ. ஆகி கேரள மாநில முதல்வராக இருந்த வரலாறு உள்ளது. எனவே, முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சசிதரூரும் இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். சி.பி.எம் சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான அமைச்சர் சிவன்குட்டி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே நேமம் தொகுதி வி.ஐ.பி தொகுதியாக மாறும் நிலை உள்ளது. கேரளா: பொன்னு மோளே நீ சாக மாட்டாய் - 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு
Vellore TVK Vijay full speech today: Stalin ஆட்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை - தவெக விஜய்
20 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி; உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடக்கம்!
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடந்த 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தினால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2012-ல் உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ளும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து இரு அலகுகளைக் கொண்ட 800 மெகாவாட் தமிழ்நாடு மின் தொடர் கழகம், கடந்த 27.03.2012-ல் ஒப்புதல் அளித்தது. நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல் ஆனால், 01.02.2023-ம் தேதி 800 மெகாவாட்டிற்குப் பதிலாக 680 மெகாவாட் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து அனல் நிலையம் அமைக்கும் பணி, கடற்கரையொட்டி நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. அனல் மின் நிலைய வளாகத்தில் கட்டடங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் இரவு பகலாக நடந்து வந்த நிலையில், அதுவும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த சில மாதங்களாக அனல் மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புகை வெளியேற்றும் குழாயிலிருந்து புகை வெளியேறி வருகிறது. தற்போது முழுமையாக பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக புகை வெளியேறும் இடத்தில் அதிக அளவு புகை வெளியேறி வருகிறது. அது மட்டுமல்லாமல், இந்த உடன்குடி அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி இறக்குமதி பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த உடன்குடி அனல் மேல் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக இந்தோனேஷியா நாட்டிலிருந்து சரக்கு கப்பல் மூலம் 20 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல் அங்கிருந்து கடல் வழியாக உடன்குடி அனல்மின் நிலையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி இறக்குதளத்திற்கு சரக்கு கப்பல் வருகை தந்துள்ளது. இந்த சரக்கு கப்பலில் இருந்து நிலக்கரிகள் இறங்குதளத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
`கேட்ட மூன்றில் இரண்டு அவுட்; அந்த ஒன்று?' - ஶ்ரீதர் வாண்டையார் போடும் கணக்கு திமுக-விடம் பலிக்குமா?
திமுக கூட்டணியில் சமீபத்தில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக அமைந்தது. கூட்டணி கட்சிகளிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை வேகமாக நடத்தி வருகிறது திமுக தலைமை. மூவேந்தர் முன்னேற்ற கழகம் திமுக கூட்டணியில் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு தொகுதியில் ஶ்ரீதர் வாண்டையார் போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஶ்ரீதர் வாண்டையார் இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், `மூவேந்தர் முன்னேற்ற கழகம் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் சுமார் 75,000 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனிடம் தோல்வியை தழுவினார். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள, நாங்கள் கேட்ட தொகுதியை அதிமுக எங்களுக்கு ஒதுக்கவில்லை. நாங்கள் விரும்பிய தொகுதியை கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்னு அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினரால் பேசப்பட்டது. கடந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியை தான் அதிமுக-விடம் ஶ்ரீதர் வாண்டையார் தரப்பில் கேட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் கும்பகோணம் ஒதுக்கினர். இதையடுத்து அதிமுகவுடன் மனகசப்பு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து விலகினர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தனர். தற்போது அந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில், `ஶ்ரீதர் வாண்டையார் நம் குடும்பத்தில் ஒருத்தர் என தாத்தாவும், அப்பாவும் சொல்வார்கள். அவர் குடும்பத்தில் மட்டுமல்ல கூட்டணியிலும் ஒருவர். எங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்' என ஶ்ரீதர் வாண்டையார் குறித்து துணை முதல்வர் உதயநிதி பேசினார். சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் குறித்து கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது திமுக. இதில் மயிலாடுதுறையில் கலந்து கொண்ட ஶ்ரீதர் வாண்டையார், `ஒன்றிய அரசு பல நெருக்கடிகள் கொடுத்தும் நல்லாட்சி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக அவர் இரவு பகல் பாராமல் உழைக்கிறார். தமிழகத்தில் அவர் கால் படாத இடங்களே இல்லை'னு ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். ஶ்ரீதர் வாண்டையார் இப்படியாக ஒத்த எண்ணத்தில் இந்த கூட்டணி தொடரும் நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாண்டையார் மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு அதில் ஒரு தொகுதியை கொடுங்கள்னு கேட்டதாக சொல்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு ஆகிய மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு கேட்டுள்ளார். இதில் முக்குலத்தோர் வாக்குகள் நிறைந்த தொகுதி என்பதால் ஶ்ரீதர் வாண்டையாரின் முதல் சாய்ஸாக ஒரத்தநாடு இருந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு தொகுதிக்குள் சில நிகழ்ச்சிகளையும் நடத்தினார். வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ் இப்படியான சூழலில் வைத்திலிங்கம் திமுக-வுக்குள் என்ட்ரி கொடுத்ததால் ஒரத்தநாடு அவருக்கு என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில் ஶ்ரீதர் வாண்டையார் தஞ்சாவூர், திருவையாறு என இரு தொகுதிகளில் ஒன்றை கேட்பதாகவும், குறிப்பாக தஞ்சாவூர் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என பேசியதாக சொல்கிறார்கள். திருவையாறு மத்திய மாவட்ட செயலாளரான, சிட்டிங் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் போட்டியிடுவது உறுதி என்பதால் அதை கொடுப்பதற்கு வாய்ப்பில்லாத சூழல். அவர்கள் விரும்பியதில் மிச்சமிருப்பது தஞ்சாவூர் தொகுதி. தஞ்சாவூரில் ஶ்ரீதர் வாண்டையாரின் சொந்தங்கள் நிறைந்திருக்கின்றனர். தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும் நினைப்பதால் தஞ்சாவூர் தொகுதியில் தான் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கருதுகிறார். தஞ்சாவூர் 2026ல் ஶ்ரீதர் வாண்டையாரை சட்டமன்றத்திற்குள் அனுப்ப வேண்டும் என அக்கட்சியினர் நினைக்கிறார்கள். அதற்கான வேலையை இப்போதே தொடங்கி விட்டனர். திமுக தலைமை அவருக்கு தஞ்சாவூர் தொகுதியை ஒதுக்குகிறதா அல்லது வேறு தொகுதி தருகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாம் வலிமையாக இருக்கிறோம் இந்த முறை நாம் வெற்றி பெறுவது உறுதினு நம்பிக்கையுடன் பேசி வருகிறார் ஶ்ரீதர் வாண்டையார்,. தஞ்சாவூர் தொகுதியியை மனதில் வைத்து அவரது மூவ் இருப்பதாக தெரிகிறது என்றனர். Loading…
`கேட்ட மூன்றில் இரண்டு அவுட்; அந்த ஒன்று?' - ஶ்ரீதர் வாண்டையார் போடும் கணக்கு திமுக-விடம் பலிக்குமா?
திமுக கூட்டணியில் சமீபத்தில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக அமைந்தது. கூட்டணி கட்சிகளிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை வேகமாக நடத்தி வருகிறது திமுக தலைமை. மூவேந்தர் முன்னேற்ற கழகம் திமுக கூட்டணியில் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு தொகுதியில் ஶ்ரீதர் வாண்டையார் போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஶ்ரீதர் வாண்டையார் இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், `மூவேந்தர் முன்னேற்ற கழகம் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் சுமார் 75,000 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனிடம் தோல்வியை தழுவினார். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள, நாங்கள் கேட்ட தொகுதியை அதிமுக எங்களுக்கு ஒதுக்கவில்லை. நாங்கள் விரும்பிய தொகுதியை கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்னு அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினரால் பேசப்பட்டது. கடந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியை தான் அதிமுக-விடம் ஶ்ரீதர் வாண்டையார் தரப்பில் கேட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் கும்பகோணம் ஒதுக்கினர். இதையடுத்து அதிமுகவுடன் மனகசப்பு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து விலகினர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தனர். தற்போது அந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில், `ஶ்ரீதர் வாண்டையார் நம் குடும்பத்தில் ஒருத்தர் என தாத்தாவும், அப்பாவும் சொல்வார்கள். அவர் குடும்பத்தில் மட்டுமல்ல கூட்டணியிலும் ஒருவர். எங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்' என ஶ்ரீதர் வாண்டையார் குறித்து துணை முதல்வர் உதயநிதி பேசினார். சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் குறித்து கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது திமுக. இதில் மயிலாடுதுறையில் கலந்து கொண்ட ஶ்ரீதர் வாண்டையார், `ஒன்றிய அரசு பல நெருக்கடிகள் கொடுத்தும் நல்லாட்சி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக அவர் இரவு பகல் பாராமல் உழைக்கிறார். தமிழகத்தில் அவர் கால் படாத இடங்களே இல்லை'னு ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். ஶ்ரீதர் வாண்டையார் இப்படியாக ஒத்த எண்ணத்தில் இந்த கூட்டணி தொடரும் நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாண்டையார் மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு அதில் ஒரு தொகுதியை கொடுங்கள்னு கேட்டதாக சொல்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு ஆகிய மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு கேட்டுள்ளார். இதில் முக்குலத்தோர் வாக்குகள் நிறைந்த தொகுதி என்பதால் ஶ்ரீதர் வாண்டையாரின் முதல் சாய்ஸாக ஒரத்தநாடு இருந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு தொகுதிக்குள் சில நிகழ்ச்சிகளையும் நடத்தினார். வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ் இப்படியான சூழலில் வைத்திலிங்கம் திமுக-வுக்குள் என்ட்ரி கொடுத்ததால் ஒரத்தநாடு அவருக்கு என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில் ஶ்ரீதர் வாண்டையார் தஞ்சாவூர், திருவையாறு என இரு தொகுதிகளில் ஒன்றை கேட்பதாகவும், குறிப்பாக தஞ்சாவூர் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என பேசியதாக சொல்கிறார்கள். திருவையாறு மத்திய மாவட்ட செயலாளரான, சிட்டிங் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் போட்டியிடுவது உறுதி என்பதால் அதை கொடுப்பதற்கு வாய்ப்பில்லாத சூழல். அவர்கள் விரும்பியதில் மிச்சமிருப்பது தஞ்சாவூர் தொகுதி. தஞ்சாவூரில் ஶ்ரீதர் வாண்டையாரின் சொந்தங்கள் நிறைந்திருக்கின்றனர். தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும் நினைப்பதால் தஞ்சாவூர் தொகுதியில் தான் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கருதுகிறார். தஞ்சாவூர் 2026ல் ஶ்ரீதர் வாண்டையாரை சட்டமன்றத்திற்குள் அனுப்ப வேண்டும் என அக்கட்சியினர் நினைக்கிறார்கள். அதற்கான வேலையை இப்போதே தொடங்கி விட்டனர். திமுக தலைமை அவருக்கு தஞ்சாவூர் தொகுதியை ஒதுக்குகிறதா அல்லது வேறு தொகுதி தருகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாம் வலிமையாக இருக்கிறோம் இந்த முறை நாம் வெற்றி பெறுவது உறுதினு நம்பிக்கையுடன் பேசி வருகிறார் ஶ்ரீதர் வாண்டையார்,. தஞ்சாவூர் தொகுதியியை மனதில் வைத்து அவரது மூவ் இருப்பதாக தெரிகிறது என்றனர். Loading…
விழுப்புரம் கோட்டையில் சரிந்த செல்வாக்கு! - மகனுக்காக பாசப்போராட்டம் நடத்தும் பொன்முடி
காய் நகர்த்திய பொன்முடி... கைவிரித்த அறிவாலயம்! விழுப்புரம் மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராகவும், தி.மு.க ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் பொன்முடி. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் சி.வி.சண்முகத்தால் சொந்தத் தொகுதியான விழுப்புரத்தில் வீழ்த்தப்பட்ட பிறகு, திருக்கோவிலூர் தொகுதிக்கு ஒதுங்கிக் கொண்டார். தற்போது தி.மு.க வலுவாக இருக்கும் இந்த சூழலில், தன்னுடைய மகன் கௌதம் சிகாமணியை அரியணையில் அமர வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன்படி விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியை தன்னுடைய மகனுக்காக கேட்டு கேட்டு காய் நகர்த்தினார் பொன்முடி. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டதாம் அறிவாலயம். கௌதம சிகாமணி, பொன்முடி அதையடுத்து, `எனக்கு கூட சீட் வேண்டாம். எனக்கு பதில் என் மகன் திருக்கோவிலூர் தொகுதியிலேயே போட்டியிடட்டும். ஆனால் என் மகனுக்கு விழுப்புரத்தை கொடுங்கள்' என்று தன்னுடைய இறுதி அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கிறார் பொன்முடி. அதுகுறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியைத்தான் மகனுக்காக பொன்முடி முதலில் கேட்டார். ஆனால் அந்த இரண்டு தொகுதிகளிலும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை மாற்றினால் நமக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று பென் டீம் எச்சரித்ததால் அதற்கு `நோ' சொல்லிவிட்டார் தளபதி. அதனால் மகனுக்காக தேர்தல் அரசியலில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறார் பொன்முடி. கூப்பிட்டாலும் வராத உடன்பிறப்புகள்... கண்டுகொள்ளாத ஆட்சியர் அலுவலகம்! விழுப்புரத்தில் அறிவாலயம் தொடங்கி, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்தயும் கொண்டு வந்தவர் பொன்முடிதான். அதிலும் அறிவாலயத்தில் இருக்கும் மாவட்டச் செயலாளர் அறை, சென்னை அறிவாலயத்தைவிட அதிகமாக இழைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த அறிவாலயத்தில் இன்று மூன்றாவது மனிதரைப் போல வந்து செல்லும் நிலையில் இருக்கிறார். ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கூட அவரின் பேச்சைக் கேட்பதில்லை. சமயத்தில், `விசாரித்து சொல்கிறோம்…' என்று வரும் பதில்களால் நொந்து போயிருக்கிறார்கள் தந்தையும், தனயனும். அதேபோல முன்பு அவரோ அல்லது அவர் மகன் கௌதம சிகாமணியோ வந்தால், பின்னால் பத்து கார்களில் 50 பேர் வருவார்கள். பொன்முடி வீட்டு வாசலில் அவர்களை பார்ப்பதற்கு தினசரி நூறுபேராவது வருவார்கள். ஆனால் இப்போது போன் செய்து நிர்வாகிகளை கூப்பிடும் நிலைமையாக மாறியிருக்கிறது. அப்படியே கூப்பிட்டாலும் ஒருசிலரைத் தவிர யாரும் வருவதில்லை. அதில் துவண்டு போனதால்தான், விழுப்புரம் தன் கையில் இருக்க வேண்டும் என்றும் மாவட்டத்தின் தலைநகர் கையில் இருந்தால்தான் மரியாதை என்றும் நினைக்கிறார் பொன்முடி. `எனக்கு சீட் வேண்டாம்...’ அதன்படி விழுப்புரம், விக்கிரவாண்டி அல்லது விழுப்புரம், திருக்கோவிலூர் தொகுதிகளின் மாவட்டச் செயலாளராக தன் மகனை அறிவிக்க வேண்டும் என்று துரைமுருகன் மூலமாக தலைமையிடம் தூது விட்டு வருகிறார் பொன்முடி. அதற்காகத்தான் தனக்கு சீட் வேண்டாம் என்று தலைமையிடம் கூறியிருக்கிறார். என்றனர் விரிவாக. ஸ்டாலின் தற்போது செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டச் செயலாளராக கே.எஸ்.மஸ்தானும், விழுப்புரம், வானூர் தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மாவட்டச் செயலாளராக டாக்டர் இரா.லட்சுமணனும், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மாவட்டச் செயலாளராக டாக்டர் கௌதம சிகாமணியும் இருக்கின்றனர். அறிவாலயத்தின் அதிகார மையமாக இருந்தப் பொன்முடி, இப்போது மாவட்டச் செயலாளர் பதவிக்காக தூதுவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான் விழுப்புரம் அரசியலின் உச்சகட்ட டிவிஸ்ட். Loading… உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்
விழுப்புரம் கோட்டையில் சரிந்த செல்வாக்கு! - மகனுக்காக பாசப்போராட்டம் நடத்தும் பொன்முடி
காய் நகர்த்திய பொன்முடி... கைவிரித்த அறிவாலயம்! விழுப்புரம் மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராகவும், தி.மு.க ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் பொன்முடி. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் சி.வி.சண்முகத்தால் சொந்தத் தொகுதியான விழுப்புரத்தில் வீழ்த்தப்பட்ட பிறகு, திருக்கோவிலூர் தொகுதிக்கு ஒதுங்கிக் கொண்டார். தற்போது தி.மு.க வலுவாக இருக்கும் இந்த சூழலில், தன்னுடைய மகன் கௌதம் சிகாமணியை அரியணையில் அமர வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன்படி விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியை தன்னுடைய மகனுக்காக கேட்டு கேட்டு காய் நகர்த்தினார் பொன்முடி. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டதாம் அறிவாலயம். கௌதம சிகாமணி, பொன்முடி அதையடுத்து, `எனக்கு கூட சீட் வேண்டாம். எனக்கு பதில் என் மகன் திருக்கோவிலூர் தொகுதியிலேயே போட்டியிடட்டும். ஆனால் என் மகனுக்கு விழுப்புரத்தை கொடுங்கள்' என்று தன்னுடைய இறுதி அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கிறார் பொன்முடி. அதுகுறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியைத்தான் மகனுக்காக பொன்முடி முதலில் கேட்டார். ஆனால் அந்த இரண்டு தொகுதிகளிலும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை மாற்றினால் நமக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று பென் டீம் எச்சரித்ததால் அதற்கு `நோ' சொல்லிவிட்டார் தளபதி. அதனால் மகனுக்காக தேர்தல் அரசியலில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறார் பொன்முடி. கூப்பிட்டாலும் வராத உடன்பிறப்புகள்... கண்டுகொள்ளாத ஆட்சியர் அலுவலகம்! விழுப்புரத்தில் அறிவாலயம் தொடங்கி, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்தயும் கொண்டு வந்தவர் பொன்முடிதான். அதிலும் அறிவாலயத்தில் இருக்கும் மாவட்டச் செயலாளர் அறை, சென்னை அறிவாலயத்தைவிட அதிகமாக இழைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த அறிவாலயத்தில் இன்று மூன்றாவது மனிதரைப் போல வந்து செல்லும் நிலையில் இருக்கிறார். ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கூட அவரின் பேச்சைக் கேட்பதில்லை. சமயத்தில், `விசாரித்து சொல்கிறோம்…' என்று வரும் பதில்களால் நொந்து போயிருக்கிறார்கள் தந்தையும், தனயனும். அதேபோல முன்பு அவரோ அல்லது அவர் மகன் கௌதம சிகாமணியோ வந்தால், பின்னால் பத்து கார்களில் 50 பேர் வருவார்கள். பொன்முடி வீட்டு வாசலில் அவர்களை பார்ப்பதற்கு தினசரி நூறுபேராவது வருவார்கள். ஆனால் இப்போது போன் செய்து நிர்வாகிகளை கூப்பிடும் நிலைமையாக மாறியிருக்கிறது. அப்படியே கூப்பிட்டாலும் ஒருசிலரைத் தவிர யாரும் வருவதில்லை. அதில் துவண்டு போனதால்தான், விழுப்புரம் தன் கையில் இருக்க வேண்டும் என்றும் மாவட்டத்தின் தலைநகர் கையில் இருந்தால்தான் மரியாதை என்றும் நினைக்கிறார் பொன்முடி. `எனக்கு சீட் வேண்டாம்...’ அதன்படி விழுப்புரம், விக்கிரவாண்டி அல்லது விழுப்புரம், திருக்கோவிலூர் தொகுதிகளின் மாவட்டச் செயலாளராக தன் மகனை அறிவிக்க வேண்டும் என்று துரைமுருகன் மூலமாக தலைமையிடம் தூது விட்டு வருகிறார் பொன்முடி. அதற்காகத்தான் தனக்கு சீட் வேண்டாம் என்று தலைமையிடம் கூறியிருக்கிறார். என்றனர் விரிவாக. ஸ்டாலின் தற்போது செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டச் செயலாளராக கே.எஸ்.மஸ்தானும், விழுப்புரம், வானூர் தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மாவட்டச் செயலாளராக டாக்டர் இரா.லட்சுமணனும், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மாவட்டச் செயலாளராக டாக்டர் கௌதம சிகாமணியும் இருக்கின்றனர். அறிவாலயத்தின் அதிகார மையமாக இருந்தப் பொன்முடி, இப்போது மாவட்டச் செயலாளர் பதவிக்காக தூதுவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான் விழுப்புரம் அரசியலின் உச்சகட்ட டிவிஸ்ட். Loading… உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்
TVK Vijay: ஜல்லிக்கட்டு காளை குட்டிகதை முதல் கரூர் சம்பவம் வரை! - வேலூரில் விஜய் பேசியது என்ன?
வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், எங்க ஓட்டு எங்க உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான். யாரையும் நம்பி ஓட்டு போட மாட்டோம் என்று நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார். குட்டிகதை தொடர்ந்து குட்டிகதையோடு பேசித்தொடங்கிய விஜய் , ஒரு பெரிய ஊரில் நான்கு சாலைகள் சந்தித்துக் கொள்ளும் ஜங்ஷன். அங்கே ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை சீறிக்கொண்டு நிற்கிறது. அந்த காளையை அப்புறப்படுத்தினால்தாம் அந்த இடம் அமைதியாகும். அந்த காளையை அடக்கி பழக்கப்பட்டவர்கள் அங்கே இல்லை. ஒரு சிலர் நாங்க பார்க்காத காளையா என இறங்குகிறார்கள். தவெக - விஜய் காளை அவர்கள் தூக்கி வீசி எறிகிறது. இப்போது ஒரு சின்னப்பையன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு காளையை அடக்க வருகிறான். 'எங்களாலயே முடியல உன்னால எப்படி'னு மத்தவங்க குறைச்சு மதிப்பிடுறாங்க. ஆனா அந்த பையன் கெத்தா ஸ்டைலா உள்ள போறான். காளை சீறுது. பையன் பார்க்குறான். டக்குனு பாக்கெட்ல இருந்த புல்ல எடுத்து மாட்டுக்கு கொடுக்குறான். மாடு ரொம்ப அமைதியா புல்ல சாப்பிட்டுக்கிட்டே பையங்கிட்ட வந்திடுது. அந்த காளைதான் தமிழ்நாட்டு அரசியல்! ஒரு வயசானவர் எப்படிப்பா காளையை அடக்குனேன்னு கேட்டாரு. 'ஐயா எனக்கு அந்த காளை கோபமா இருந்தா மாதிரி தெரியல. பசியா இருந்துதுன்னு உணர்ந்தேன். அதனால புல்ல கொடுத்த உடனே அமைதியா வந்துடுச்சு'னு சொன்னான். அவ்வளவுதாங்க. வயசு, அனுபவம் எதுவும் பெருசு இல்ல. பிரச்னையை எப்படி அணுகுறோங்றதுதான் முக்கியம். அந்த காளைதான் தமிழ்நாட்டு அரசியல். அந்த பெரியவர்தான் தமிழக மக்கள். அந்த பையன் தான் நீங்க நான் எல்லாம்.. உங்க எல்லாரையும் உங்க ஊர்ல நேர்ல வந்து சந்திக்கணுங்றதுதான் என்னோட ஆசை. ஆனா, நமக்கு அழுத்தம் கொடுக்கப்படுது. இப்போ நான் ஒரு உறுதி கொடுக்குறேன். நம்ம ஆட்சி அமைந்த உடனே ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேர்ல வரேன். தவெக தலைவர் விஜய் நீங்க என்ன பிரதமரா ஆகப்போறீங்களா சார்? கொஞ்ச நாளைக்கு முன்னாடி முதல்வர் ஸ்டாலின் ஒரு உருட்டு உருட்டுனாரு.இது டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தலாம். நீங்க என்ன பிரதமரா ஆகப்போறீங்களா சார்? இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் எதிரான போர். இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒழுங்கா நிர்வாகம் பண்ணாத ஸ்டாலினுக்கும் நடக்குற போர். இன்னும் சொல்லப்போனா ஸ்டாலின் சாருக்கும் விஜய்க்கும் நடக்கும் போர் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாம். ஆம், தமிழ்நாடு காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் காலத்தில் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது. இப்போது ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனின் மாநிலமாக இருக்கிறது. மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? இல்ல... இது சாதாரண தேர்தல் இல்ல. 50 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலா பாருங்க. இது ஒரு அதிசய தேர்தல். எல்லாரும் சேர்ந்து ஒரே ஒருத்தனை எதிர்த்தாலும் போட்டி இங்க திமுகவுக்கும் தவெகவுக்கும்தான். என் மீது அவதூறு பரப்புவது மக்கள் மீது அவதூறு பரப்புவது போன்றது. எனக்கு அரசியல் தெரியாது என கூறுவது மக்களுக்கு அரசியல் தெரியாது என கூறுவது போன்றது. நானும் மக்களும் வேறில்லை. மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? தவெக தலைவர் விஜய் உங்களின் சொத்து மதிப்பு என்ன? சில பேர் தாமாகவே வந்து வண்டியில் ஏறிக்கொள்கிறார்கள். சீரியஸா ஒரு போட்டி நடக்கும் போது இங்கே காமெடிக்கெல்லாம் இடம் இல்லை. அரசியல்வாதிகளிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் உங்களின் சொத்து மதிப்பு என்ன? இப்போது உங்களின் சொத்து மதிப்பு என்ன? ஓப்பனாக அறிவிக்க முடியுமா? கரூர் விஷயத்தில் எதற்காக என் மேல் பழியை தூக்கி போட்டீர்கள் முதல்வரே? நான் ஒரு கூட்டம் நடத்த ஏன் இடம் கொடுப்பதில்லை? சொன்னீங்களே செஞ்சிங்களா? ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களுக்கான உரிமை சார்ந்தது மட்டும் அல்ல, சிறுபான்மை மக்களுக்கான உரிமையும் சார்ந்தது. இது அண்ணா சொன்னது. அதுதான் நம்முடைய கொள்கையும். இங்கே அரசியல்வாதிகள் ஒரு சிலர் அமைதியாக இருந்தாலே போதும். மாத மாதம் மின் கட்டணம் கட்டும்படி கொண்டு வருவோம் என்றீர்களே சொன்னீங்களே செஞ்சிங்களா? தவெக தலைவர் விஜய் வாக்குறுதிகள் நிறைய மலைகிராமங்களில் பஸ் வசதியும் மருத்துவமனை வசதியும் இல்லை. தமிழ்நாட்டுல பெண்கள் பாதுகாப்பு கொட்டி கிடக்குதாம். கேட்குறவன்லாம் என்ன கேசரி சாப்பிட்டுட்டு இருக்கானா? பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு முதன்மையாக இருக்கும். பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு முதன்மையாக இருக்கும். சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக பின்பற்றப்படும். அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் முதல்தரமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு ஏற்றப்படி பாடத்திட்டங்கள் மாற்றப்படும். இந்திய முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் கல்லூரிகளில் சேர்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட கலெக்டர், எஸ்.பிக்களில் பாதிக்கு பாதி பெண்களாக இருப்பார்கள். ஆட்டோ, டாக்சி, லாரி டிரைவர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். அறிவாலயம் பக்கமாக நிழலுக்கு ஒதுங்கினால் கூட ஸ்டாலின் கூட்டணி சேர்த்துக் கொள்கிறார். கொள்ளையடித்த பணத்தில் பங்கு கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் அந்த கூட்டணி ஒரு கல்லாப்பெட்டி கூட்டணி. இது ஒரு விசில் புரட்சி எலெக்சன் என்றார். Loading…
உச்ச நீதிமன்ற உத்தரவு: இதுவரை வசூலித்த 133 பில்லியன் டாலர் வரி... ரீஃபண்ட் செய்யுமா அமெரிக்கா?
சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த 'வரி சட்டத்திற்கு புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால், இன்றிலிருந்து இந்தச் சட்டத்திற்குக் கீழ், வரி வசூலிக்கப்படாது என்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 'இப்போ வரி வசூலிப்பதை நிறுத்துவது எல்லாம் சரி தான்... இதுவரை வாங்கிய வரிகள் என்ன ஆகும்?' என்கிற கேள்வி எழுவது நியாயம் தான். IEEPA சட்டத்தின் படி, இதுவரை அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட 133 பில்லியன் டாலர்கள் வரி வசூலித்துள்ளது. ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? அந்த மொத்த தொகையும் ரீஃபண்ட் செய்யப்பட உள்ளது. 'ரீஃபண்ட் செய்ய தயார்' என்று ஓபனாகவே அமெரிக்க அரசு அறிவித்துவிட்டது. ஆனால், அது எப்படி, எப்போது ரீஃபண்ட் செய்யப்படும்... அதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி அமெரிக்க உச்ச நீதிமன்றமோ, அமெரிக்க அரசாங்கமோ வாயைத் திறக்கவில்லை. அதனால், இதற்கான வழிமுறைகளை அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்கள், அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், அமெரிக்க சுங்கத் துறை ஆகியவை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. யாருக்கு கிடைக்கும்? ரீஃபண்ட் குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியிருப்பதாவது... ரீஃபண்ட் தொகை கட்டாயம் செல்லும். அவை நிறுவனங்களுக்கு செல்லுமே தவிர, அமெரிக்க மக்களுக்கு செல்லாது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். பிற நாட்டு பொருள்களின் வரி ஏறும்போது, அமெரிக்க கடைகளில் அந்தப் பொருள்களுக்கான விலையும் ஏறியது. அதனால், அதிக தொகை கொடுத்து தான், அமெரிக்க மக்கள் பொருள்களை வாங்கி வந்தனர். அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்! ஸ்காட் பெசென்ட் பேச்சை வைத்து பார்க்கும்போது, அதிக தொகை செலுத்தி பொருள்களை வாங்கிய அமெரிக்க மக்களுக்கு எந்த ரீஃபண்டும் கிடைக்காது என்று தெரிய வருகிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. ரீஃபண்ட் என்றால் அது எளிதாக கிடைத்துவிடாது. அதில் ஏகப்பட்ட வழிமுறைகளும், நடைமுறைகளும் இருக்கும். இவை அனைத்தையும் ஃபாலோ செய்து ரீஃபண்ட் பெறுவது பெரிய நிறுவனங்களுக்கு சற்று எளிதாக இருக்கும். ஆனால், சிறிய நிறுவனங்களுக்கு அது மிகக் கடினம். அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றுவது அவர்களுக்கு சிரமத்தில் சென்று முடியும். எப்போது கிடைக்கும்? அடுத்ததாக, இந்த ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என்பதற்கான தெளிவான விளக்கமும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால், இந்த நடைமுறை முடிய மாதக்கணக்கிலோ, ஆண்டுக்கணக்கிலோ ஆகும் என்று ட்ரம்ப் முதல் ஸ்காட் பெசென்ட் வரை தெரிவித்திருக்கிறார்கள். 'நோட் பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold
உச்ச நீதிமன்ற உத்தரவு: இதுவரை வசூலித்த 133 பில்லியன் டாலர் வரி... ரீஃபண்ட் செய்யுமா அமெரிக்கா?
சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த 'வரி சட்டத்திற்கு புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால், இன்றிலிருந்து இந்தச் சட்டத்திற்குக் கீழ், வரி வசூலிக்கப்படாது என்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 'இப்போ வரி வசூலிப்பதை நிறுத்துவது எல்லாம் சரி தான்... இதுவரை வாங்கிய வரிகள் என்ன ஆகும்?' என்கிற கேள்வி எழுவது நியாயம் தான். IEEPA சட்டத்தின் படி, இதுவரை அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட 133 பில்லியன் டாலர்கள் வரி வசூலித்துள்ளது. ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? அந்த மொத்த தொகையும் ரீஃபண்ட் செய்யப்பட உள்ளது. 'ரீஃபண்ட் செய்ய தயார்' என்று ஓபனாகவே அமெரிக்க அரசு அறிவித்துவிட்டது. ஆனால், அது எப்படி, எப்போது ரீஃபண்ட் செய்யப்படும்... அதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி அமெரிக்க உச்ச நீதிமன்றமோ, அமெரிக்க அரசாங்கமோ வாயைத் திறக்கவில்லை. அதனால், இதற்கான வழிமுறைகளை அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்கள், அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், அமெரிக்க சுங்கத் துறை ஆகியவை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. யாருக்கு கிடைக்கும்? ரீஃபண்ட் குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியிருப்பதாவது... ரீஃபண்ட் தொகை கட்டாயம் செல்லும். அவை நிறுவனங்களுக்கு செல்லுமே தவிர, அமெரிக்க மக்களுக்கு செல்லாது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். பிற நாட்டு பொருள்களின் வரி ஏறும்போது, அமெரிக்க கடைகளில் அந்தப் பொருள்களுக்கான விலையும் ஏறியது. அதனால், அதிக தொகை கொடுத்து தான், அமெரிக்க மக்கள் பொருள்களை வாங்கி வந்தனர். அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்! ஸ்காட் பெசென்ட் பேச்சை வைத்து பார்க்கும்போது, அதிக தொகை செலுத்தி பொருள்களை வாங்கிய அமெரிக்க மக்களுக்கு எந்த ரீஃபண்டும் கிடைக்காது என்று தெரிய வருகிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. ரீஃபண்ட் என்றால் அது எளிதாக கிடைத்துவிடாது. அதில் ஏகப்பட்ட வழிமுறைகளும், நடைமுறைகளும் இருக்கும். இவை அனைத்தையும் ஃபாலோ செய்து ரீஃபண்ட் பெறுவது பெரிய நிறுவனங்களுக்கு சற்று எளிதாக இருக்கும். ஆனால், சிறிய நிறுவனங்களுக்கு அது மிகக் கடினம். அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றுவது அவர்களுக்கு சிரமத்தில் சென்று முடியும். எப்போது கிடைக்கும்? அடுத்ததாக, இந்த ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என்பதற்கான தெளிவான விளக்கமும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால், இந்த நடைமுறை முடிய மாதக்கணக்கிலோ, ஆண்டுக்கணக்கிலோ ஆகும் என்று ட்ரம்ப் முதல் ஸ்காட் பெசென்ட் வரை தெரிவித்திருக்கிறார்கள். 'நோட் பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் - வான்வழித் தாக்குதலால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாவட்டமான பன்னுவில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்னதாக பஜூர் மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளே காரணம் எனப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிரடி வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில், குறைந்தது ஆப்கானிஸ்தானின் 70 போராளிகள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான்ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் இந்த தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் துணை உள்துறை அமைச்சர் தலால் சவுத்ரி மற்றும் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ``ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் உள்ள பாகிஸ்தான் தாலிபான் (TTP) மற்றும் அதன் துணை அமைப்புகளின் 7 முகாம்கள் மீது உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 70 முதல் 80 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள தலைவர்களின் உத்தரவின் பேரில் நடப்பதாகப் பாகிஸ்தானிடம் உறுதியான ஆதாரங்கள் உள்ளன. என்றனர். பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை மறுத்த தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், ``பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்கள் மதரஸாக்கள் மற்றும் குடியிருப்புகள் போன்ற பொதுமக்கள் வாழும் பகுதிகளிலேயே நடத்தப்பட்டன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் வான்வெளி வரம்பையும், இறையாண்மையையும் மீறியுள்ளது. இதற்குப் பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும். 70 போராளிகள் கொல்லப்பட்டனர் என்ற பாகிஸ்தானின் தகவல் முற்றிலும் பொய்யானது எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து, தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. தங்கள் நாட்டைப் பாதுகாப்பது தங்களின் சட்டக் கடமை என்றும் ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான்ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் தாக்குதல் நடந்த பகுதிகளில் கிராம மக்கள் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். தாக்குதல் நடந்தப் பகுதியில் வசிக்கும் உள்ளூர் பழங்குடியினத் தலைவர் ஹபீபுல்லா, `` உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. கொல்லப்பட்டவர்கள் தாலிபான்களோ அல்லது ராணுவ வீரர்களோ அல்ல, அவர்கள் ஏழை கிராமவாசிகள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தானின், பாதுகாப்பு ஆய்வாளர் அப்துல்லா கான், ``பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தீர்க்க கத்தார், துருக்கி மற்றும் சவுதி தலைமையிலான மத்தியஸ்தங்கள் கூடத் தவறிவிட்டன என்பதை பாகிஸ்தான் தாக்குதல்கள் காட்டுகின்றன. இந்தத் தாக்குதல்கள் சூழலை மேலும் மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது, என்று அவர் கூறினார். இந்தச் சம்பவம் ஏற்கனவே இருநாடுகளுக்கும் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் மேலும் போர்ப் பதற்றம் உருவாகியிருக்கிறது. தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கியதா பாகிஸ்தான்? மறுக்கும் ஆப்கானிஸ்தான்! - தாக்குதல் பின்னணி?
மதிமுக: தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்...” - திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி எனக் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் தொடங்கி இருக்கிறது. ஸ்டாலின் இன்று (பிப்.23) தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழு மதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திமுக குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை அறிவிப்போம். சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். அது முடிவில்லாதது. அதனால் இந்தக் கூட்டணி தொடரும். மதிமுக அர்ஜுனராஜ் ராஜ்ய சபை சீட் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம். மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறது என்று தெரிவித்திருக்கிறார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 'இல்லாத ஊருக்கு போகாத வழி' - காங்கிரஸ் கோரிக்கை குறித்து வைகோ விமர்சனம்!
மதிமுக: தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்...” - திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி எனக் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் தொடங்கி இருக்கிறது. ஸ்டாலின் இன்று (பிப்.23) தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழு மதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திமுக குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை அறிவிப்போம். சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். அது முடிவில்லாதது. அதனால் இந்தக் கூட்டணி தொடரும். மதிமுக அர்ஜுனராஜ் ராஜ்ய சபை சீட் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம். மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறது என்று தெரிவித்திருக்கிறார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 'இல்லாத ஊருக்கு போகாத வழி' - காங்கிரஸ் கோரிக்கை குறித்து வைகோ விமர்சனம்!
CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?
நேற்றிரவு சித்தரஞ்சன் சாலையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் - கே.சி.வேணுகோபால் சந்திப்பைப் பற்றி இரண்டு கட்சிகளின் முகாம்களிலும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். வெறிச்சோடி காணப்பட்ட அறிவாலயம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் நிலவி வரும் நிலையில், நேற்று மதியம் ஊடகங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, டெல்லியிலிருந்து அவசரமாக சென்னை வரும் கே.சி.வேணுகோபால் முதல்வரை இரவு 8 மணியளவில் சந்திக்கவிருக்கிறார் என்பதே செய்தி. சந்திப்பு உண்மையிலேயே நடக்கிறதா? அப்படி நடந்தால் எங்கே வைத்து சந்திப்பு என எதையும் திமுக - காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தாமலேயே இருந்தன. கூட்டணி குறித்த சந்திப்பாக இருப்பின் அறிவாலயத்தில் வைத்தே நடைபெறும் என அனுமானித்து மாலை 6:30 மணியிலிருந்தே ஊடகத்தினர் அறிவாலயத்தில் மைக் போட்டு காத்திருந்தனர். ஆனால், அப்படியொரு சந்திப்பு நடக்கப்போவதாக அறிவாலய வட்டாரத்தினர் கடைசி நிமிடம் வரை உறுதிப்படுத்தவில்லை. 7:45 மணியாகியும் அறிவாலயத்தில் சி.எம் வருவதற்கான எந்த பரபரப்பும் இல்லை. காவலர்களுக்கும் சி.எம் கான்வாய்க்கான அலர்ட் கொடுக்கப்படவில்லை. அப்போதுதான் சுதாரித்துக் கொண்ட செய்தியாளர்கள் கேமராவோடு சித்தரஞ்சன் சாலையை நோக்கி ஓடினர். சித்தரஞ்சன் சாலையில் கூடியிருந்த ஊடகத்தினர் சாலைக்கு வெளியே முதல்வரின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் காவலர்களுக்கும் இப்படியொரு சந்திப்பு நடக்கப் போவதாக எந்த அலர்ட்டும் கொடுக்கப்படவில்லை. ஐ.டி.சியில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் இப்போதுதான் வீடு திரும்பியிருப்பதாகவும் கனிமொழியும் கே.என்.நேருவும் மட்டுமே உடன் இருப்பத்தாகவும் காங்கிரஸ்க்காரர்கள் யாரும் செக் போஸ்ட்டை தாண்டவில்லை என போலீஸ் தரப்பு தகவல் சொன்னது. 8:15 மணிக்கு மேல்தான் காவல்துறையினரும் உஷாராகினர். சித்தரஞ்சன் சாலையில் நுழைவில் கேமராக்கள் வளைத்து நிற்பதை காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியப்படுத்திய உளவுத்துறை, கே.சி.வேணுகோபாலின் காரை டி.டி.கே சாலை வழியாக வர வைத்தது. ஒரு சில ஊடகத்தினர் மட்டுமே இந்த நுழைவில் நின்றதால் மைக்குகளிடம் இருந்து தப்பித்து கே.சி.வேணுகோபால் சி.எம் வீட்டுக்குள் சென்று சேர்ந்தார். வேணுகோபால் வந்த டிபண்டர் காரில் அவருடன் சத்தீஸ்கரின் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ மட்டுமே இருந்தார். கே.சி.வேணுகோபாலின் கார் 8:35 மணிக்கு கே.சி.வேணுகோபாலின் கார் சி.எம் இன் வீட்டை அடைந்தது. சிம்பிளான டின்னருக்கு பிறகு தொடங்கிய பேச்சுவார்த்தை 9:25 வரைக்கும் நீண்டது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகும் ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்த வேணுகோபால், ஊடகங்கள் யாரும் இல்லாத இன்னொரு ரூட் வழியாக காரை திருப்பி விர்ரென கிளம்பினார். முதல்வருடன் கே.சி.வேணுகோபாலின் சீக்ரெட் சந்திப்பு குறித்து விசாரிக்கையில், 'கிரிஷ் சோடங்கர் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைப்பது பற்றி டெல்லி ஊடகங்கள் வரைக்கும் கன்னாபின்னாவென பேட்டி கொடுத்ததில் முதல்வர் தரப்பு கடும் அப்செட். அதேமாதிரி, தமிழ்நாட்டிற்குள் மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் தொடர்ந்து சீண்டும் வகையில் பேசியதையும் திமுக ரசிக்கவில்லை. இந்நிலையில்தான், பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று அறிவித்தது. உடனே, `திமுக காங்கிரஸை முதலில் அழைத்து பேசாது. ஸ்டாலின் காங்கிரஸை திமுக காக்க வைத்து அவமதிக்கும்' போன்ற பேச்சுகள் எழுந்தது. இதை தவிர்க்க முதல்வர் தரப்பு எண்ணியது. அதேமாதிரி, டெல்லி காங்கிரஸாரும் கூட்டணியை உடைத்து திமுக அதிர்ச்சி கொடுத்துவிடும் என்கிற கிலியில் இருக்கின்றனர். இதனால் காங்கிரஸ் மேலிடமும் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்திக்க திட்டமிட்டிருக்கிறது. இருதரப்பினுடைய பரஸ்பர விருப்பத்தின் பேரில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. செல்வப்பெருந்தகையை அழைத்து வந்தால் கிரிஷ் சோடங்கர் ஏன் வரவில்லை என்கிற கேள்வி எழும். அதனால்தான் யாரையும் அழைக்காமல் சிங் தியோவை மட்டும் கூட்டிக் கொண்டு முதல்வரை சந்தித்தார் கே.சி.வேணுகோபால்' என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 'கூட்டணி குறித்து ராகுல் சொல்லியனுப்பிய முக்கிய மெசேஜ்களை கே.சி.வேணுகோபால் முதல்வரிடம் கூறியிருக்கிறார்' என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தினர். 'அமைச்சரவையில் பங்கு கேட்டோம். அதை கொடுக்க முடியாதென முதல்வரே அறிவித்துவிட்டார். இதற்கு மேல் தேர்தலுக்கு முன்பாக அமைச்சரைவையில் பங்கு கேட்பதில் பிரயோஜனமில்லை. எனில், கடந்த முறையை விட அதிக தொகுதிகளையும் ராஜ்யசபா சீட்டையும் எதிர்பார்க்கிறோம். ஆனால், திமுக 2028 இல் தான் எங்களுக்கு ராஜ்ய சபாவை கொடுப்போம் என்கின்றனர். மேலும், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் திமுக தலைமை எதிர்பார்க்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் ஒத்துக்கொண்டால் கட்சி ரொம்பவே பலவீனமாக தெரியும். கே.சி.வேணுகோபால் மாணிக்கம் தாகூர், பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் இனி கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பேசமாட்டார்கள் என்று உறுதியளித்திருக்கிறோம். அதேமாதிரி அடுத்த மாதமே எங்களுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்குங்கள் என கேட்கிறோம். மேலும், 30 தொகுதிகள் வரைக்குமாவது பரீசிலியுங்கள் என்றும் கூறியிருக்கிறோம். இவை சம்பந்தமாக ராகுல் சொல்லியனுப்பிய மெசேஜ்களையும் முதல்வரின் காதில் போட்டிருக்கிறார் கே.சி.வேணுகோபால். இதெல்லாம் ஒரு இறுதிக்கட்ட இழுபறிதான். சீக்கிரமே சுமுகமாக பேசி முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடுவோம்' என்கின்றனர் கதர் சட்டையினர். காங்கிரஸின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் எந்த முடிவையும் சொல்லாததால்தான் ஊடகத்திடனரிடமும் எதையும் கமிட் செய்யாமல் வேறு ரூட்டை பிடித்து கிளம்பியிருக்கிறார் கே.சி.வேணுகோபால் என்கின்றனர் உள்விவரம் அறிந்த சிலர்.
CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?
நேற்றிரவு சித்தரஞ்சன் சாலையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் - கே.சி.வேணுகோபால் சந்திப்பைப் பற்றி இரண்டு கட்சிகளின் முகாம்களிலும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். வெறிச்சோடி காணப்பட்ட அறிவாலயம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் நிலவி வரும் நிலையில், நேற்று மதியம் ஊடகங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, டெல்லியிலிருந்து அவசரமாக சென்னை வரும் கே.சி.வேணுகோபால் முதல்வரை இரவு 8 மணியளவில் சந்திக்கவிருக்கிறார் என்பதே செய்தி. சந்திப்பு உண்மையிலேயே நடக்கிறதா? அப்படி நடந்தால் எங்கே வைத்து சந்திப்பு என எதையும் திமுக - காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தாமலேயே இருந்தன. கூட்டணி குறித்த சந்திப்பாக இருப்பின் அறிவாலயத்தில் வைத்தே நடைபெறும் என அனுமானித்து மாலை 6:30 மணியிலிருந்தே ஊடகத்தினர் அறிவாலயத்தில் மைக் போட்டு காத்திருந்தனர். ஆனால், அப்படியொரு சந்திப்பு நடக்கப்போவதாக அறிவாலய வட்டாரத்தினர் கடைசி நிமிடம் வரை உறுதிப்படுத்தவில்லை. 7:45 மணியாகியும் அறிவாலயத்தில் சி.எம் வருவதற்கான எந்த பரபரப்பும் இல்லை. காவலர்களுக்கும் சி.எம் கான்வாய்க்கான அலர்ட் கொடுக்கப்படவில்லை. அப்போதுதான் சுதாரித்துக் கொண்ட செய்தியாளர்கள் கேமராவோடு சித்தரஞ்சன் சாலையை நோக்கி ஓடினர். சித்தரஞ்சன் சாலையில் கூடியிருந்த ஊடகத்தினர் சாலைக்கு வெளியே முதல்வரின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் காவலர்களுக்கும் இப்படியொரு சந்திப்பு நடக்கப் போவதாக எந்த அலர்ட்டும் கொடுக்கப்படவில்லை. ஐ.டி.சியில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் இப்போதுதான் வீடு திரும்பியிருப்பதாகவும் கனிமொழியும் கே.என்.நேருவும் மட்டுமே உடன் இருப்பத்தாகவும் காங்கிரஸ்க்காரர்கள் யாரும் செக் போஸ்ட்டை தாண்டவில்லை என போலீஸ் தரப்பு தகவல் சொன்னது. 8:15 மணிக்கு மேல்தான் காவல்துறையினரும் உஷாராகினர். சித்தரஞ்சன் சாலையில் நுழைவில் கேமராக்கள் வளைத்து நிற்பதை காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியப்படுத்திய உளவுத்துறை, கே.சி.வேணுகோபாலின் காரை டி.டி.கே சாலை வழியாக வர வைத்தது. ஒரு சில ஊடகத்தினர் மட்டுமே இந்த நுழைவில் நின்றதால் மைக்குகளிடம் இருந்து தப்பித்து கே.சி.வேணுகோபால் சி.எம் வீட்டுக்குள் சென்று சேர்ந்தார். வேணுகோபால் வந்த டிபண்டர் காரில் அவருடன் சத்தீஸ்கரின் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ மட்டுமே இருந்தார். கே.சி.வேணுகோபாலின் கார் 8:35 மணிக்கு கே.சி.வேணுகோபாலின் கார் சி.எம் இன் வீட்டை அடைந்தது. சிம்பிளான டின்னருக்கு பிறகு தொடங்கிய பேச்சுவார்த்தை 9:25 வரைக்கும் நீண்டது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகும் ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்த வேணுகோபால், ஊடகங்கள் யாரும் இல்லாத இன்னொரு ரூட் வழியாக காரை திருப்பி விர்ரென கிளம்பினார். முதல்வருடன் கே.சி.வேணுகோபாலின் சீக்ரெட் சந்திப்பு குறித்து விசாரிக்கையில், 'கிரிஷ் சோடங்கர் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைப்பது பற்றி டெல்லி ஊடகங்கள் வரைக்கும் கன்னாபின்னாவென பேட்டி கொடுத்ததில் முதல்வர் தரப்பு கடும் அப்செட். அதேமாதிரி, தமிழ்நாட்டிற்குள் மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் தொடர்ந்து சீண்டும் வகையில் பேசியதையும் திமுக ரசிக்கவில்லை. இந்நிலையில்தான், பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று அறிவித்தது. உடனே, `திமுக காங்கிரஸை முதலில் அழைத்து பேசாது. ஸ்டாலின் காங்கிரஸை திமுக காக்க வைத்து அவமதிக்கும்' போன்ற பேச்சுகள் எழுந்தது. இதை தவிர்க்க முதல்வர் தரப்பு எண்ணியது. அதேமாதிரி, டெல்லி காங்கிரஸாரும் கூட்டணியை உடைத்து திமுக அதிர்ச்சி கொடுத்துவிடும் என்கிற கிலியில் இருக்கின்றனர். இதனால் காங்கிரஸ் மேலிடமும் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்திக்க திட்டமிட்டிருக்கிறது. இருதரப்பினுடைய பரஸ்பர விருப்பத்தின் பேரில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. செல்வப்பெருந்தகையை அழைத்து வந்தால் கிரிஷ் சோடங்கர் ஏன் வரவில்லை என்கிற கேள்வி எழும். அதனால்தான் யாரையும் அழைக்காமல் சிங் தியோவை மட்டும் கூட்டிக் கொண்டு முதல்வரை சந்தித்தார் கே.சி.வேணுகோபால்' என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 'கூட்டணி குறித்து ராகுல் சொல்லியனுப்பிய முக்கிய மெசேஜ்களை கே.சி.வேணுகோபால் முதல்வரிடம் கூறியிருக்கிறார்' என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தினர். 'அமைச்சரவையில் பங்கு கேட்டோம். அதை கொடுக்க முடியாதென முதல்வரே அறிவித்துவிட்டார். இதற்கு மேல் தேர்தலுக்கு முன்பாக அமைச்சரைவையில் பங்கு கேட்பதில் பிரயோஜனமில்லை. எனில், கடந்த முறையை விட அதிக தொகுதிகளையும் ராஜ்யசபா சீட்டையும் எதிர்பார்க்கிறோம். ஆனால், திமுக 2028 இல் தான் எங்களுக்கு ராஜ்ய சபாவை கொடுப்போம் என்கின்றனர். மேலும், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் திமுக தலைமை எதிர்பார்க்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் ஒத்துக்கொண்டால் கட்சி ரொம்பவே பலவீனமாக தெரியும். கே.சி.வேணுகோபால் மாணிக்கம் தாகூர், பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் இனி கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பேசமாட்டார்கள் என்று உறுதியளித்திருக்கிறோம். அதேமாதிரி அடுத்த மாதமே எங்களுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்குங்கள் என கேட்கிறோம். மேலும், 30 தொகுதிகள் வரைக்குமாவது பரீசிலியுங்கள் என்றும் கூறியிருக்கிறோம். இவை சம்பந்தமாக ராகுல் சொல்லியனுப்பிய மெசேஜ்களையும் முதல்வரின் காதில் போட்டிருக்கிறார் கே.சி.வேணுகோபால். இதெல்லாம் ஒரு இறுதிக்கட்ட இழுபறிதான். சீக்கிரமே சுமுகமாக பேசி முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடுவோம்' என்கின்றனர் கதர் சட்டையினர். காங்கிரஸின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் எந்த முடிவையும் சொல்லாததால்தான் ஊடகத்திடனரிடமும் எதையும் கமிட் செய்யாமல் வேறு ரூட்டை பிடித்து கிளம்பியிருக்கிறார் கே.சி.வேணுகோபால் என்கின்றனர் உள்விவரம் அறிந்த சிலர்.
உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்
திமுக மண்டல வாரியாக இளைஞரணி கூட்டத்தை நடத்த முடிவு செய்தபோது, முதலில் கோவையில் மேற்கு மண்டல கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் வடக்கு, தெற்கு, டெல்டா பகுதிகளில் இளைஞரணி கூட்டங்களை முடித்துவிட்டு இறுதியாக நேற்று தான் திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் கருமத்தம்பட்டி பகுதி அருகே கூட்டம் நடைபெற்றது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களின் 39 தொகுதிகளைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக போடப்பட்டிருந்த மேடை, நுழைவு பந்தல் உள்ளிட்டவற்றில் கருணாநிதியின் படத்தை பூதக்கண்ணாடி மூலம் தேடி வேண்டியதாக இருந்தது. பெரியார், அண்ணா ஆகியோருடன் கருணாநிதியின் படத்தையும் ஏதோ நினைவு சின்னம் போல மிகவும் சிறிதாக வைத்திருந்தனர். திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் பெயர் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டமாக இருந்தாலும், நிர்வாகிகள் என்னவோ குறைந்தளவுக்குத்தான் இருந்தார்கள். கோவை, கரூர் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை வைட்டமின்களுடன் `சிறப்பாக' கவனித்து அழைத்து வரப்பட்டனர். இதிலும் வட இந்திய தொழிலாளர்களை அதிகம் காண முடிந்தது. எல்லோருக்குமே உதயநிதி புகைப்படத்துடன் கூடிய டி-ஷர்ட் கொடுக்கப்பட்டதால் வித்தியாசம் தெரியவில்லை. கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் செந்தில் பாலாஜி சிக்கன் பிரியாணி + முட்டை இரவு உணவு ஏற்பாடு செய்தார். அரசுப் பேருந்துகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேருந்துகளில் தான் அழைத்து வந்தனர். அதில் பெரும்பாலனோர் மது அருந்தியிருந்தனர். திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் சிலர் ஸ்பீக்கருக்காக போடப்பட்டிருந்த கம்பியின் மீது ஏறி அட்ராசிட்டி செய்தனர். உதயநிதி மாலை 5 மணியளவில் தான் மேடையேறினார். மதியம் 2 மணியளவில் இருந்தே அழைத்து வரப்பட்ட இளைஞர்கள் அமர வைக்கப்பட்டனர். வெயில் வாட்டி வதைத்ததால் மிகவும் சிரமப்பட்டனர். கூட்டத்தில் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சையளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் வரவில்லை என்றும், வருகிற 27-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. எல்இடி திரை பழுது மோப்ப நாயுடன் சோதனை மேடையில் இருந்த எல்இடி திரை அவ்வபோது பழுதானது. உதயநிதி ஸ்டாலின் நுழைவு வாயிலில் இருந்தே, ரேம்ப் மூலம் மேடை வர திட்டமிட்டனர். ரேம்பின் 2 பக்கமும் காவல்துறையினரை நிறுத்தி, மோப்ப நாய் மூலம் சோதனை செய்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். ஆனால் உதயநிதி வந்த பிறகு காவல்துறை மற்றும் நிர்வாகிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பலரும் ரேம்பில் ஏறி அவரை பார்த்து ஆரவாரம் செய்தனர். சிலர் உதயநிதி கையைப்பிடித்து இழுத்து காயப்படுத்தினர். இதில் உதயநிதி ஒரு நொடி அதிர்ச்சியாகி தன் கையை பார்த்தபடி சென்றார். உதயநிதி உதயநிதி காவல்துறையினர் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். மேடை ஏறியதும் உதயநிதி தன் கைகளை சானிடைஸர் கொண்டு கழுவினார். உதயநிதி பேசி முடித்த பிறகும் நிர்வாகிகள் மொத்தமாக ரேம்பில் ஏறி முண்டியத்தனர். காவல்துறையினர் அவர்களை அதிரடியாக விரட்டி உதயநிதியை அனுப்பி வைத்தனர். உதயநிதிக்கு ஒரு பக்கம் பில்டப் என்றால், ஈரோடு எம்பியும் திமுக இளைஞரணி மாநில துணை செயலாளருமான பிரகாசும் பயங்கர பில்டப்புடன் வலம் வந்தார். உதயநிதி வருவதற்கு முன்பு ரேம்பில் அங்கேயும், இங்கேயும் சுற்றினார். முண்டியத்த கூட்டம் உதயநிதி உதயநிதி புறப்பட்டுவிடுவார் என்பதற்காக அவர் பேசுவதற்கு முன்பாகவே பிரகாஷ் நன்றியுரை வாசித்தார். ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள எண்டு கார்டா என்பது போலத்தான் மொத்த கூட்டமும் இருந்தது.! Loading…
உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்
திமுக மண்டல வாரியாக இளைஞரணி கூட்டத்தை நடத்த முடிவு செய்தபோது, முதலில் கோவையில் மேற்கு மண்டல கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் வடக்கு, தெற்கு, டெல்டா பகுதிகளில் இளைஞரணி கூட்டங்களை முடித்துவிட்டு இறுதியாக நேற்று தான் திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் கருமத்தம்பட்டி பகுதி அருகே கூட்டம் நடைபெற்றது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களின் 39 தொகுதிகளைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக போடப்பட்டிருந்த மேடை, நுழைவு பந்தல் உள்ளிட்டவற்றில் கருணாநிதியின் படத்தை பூதக்கண்ணாடி மூலம் தேடி வேண்டியதாக இருந்தது. பெரியார், அண்ணா ஆகியோருடன் கருணாநிதியின் படத்தையும் ஏதோ நினைவு சின்னம் போல மிகவும் சிறிதாக வைத்திருந்தனர். திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் பெயர் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டமாக இருந்தாலும், நிர்வாகிகள் என்னவோ குறைந்தளவுக்குத்தான் இருந்தார்கள். கோவை, கரூர் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை வைட்டமின்களுடன் `சிறப்பாக' கவனித்து அழைத்து வரப்பட்டனர். இதிலும் வட இந்திய தொழிலாளர்களை அதிகம் காண முடிந்தது. எல்லோருக்குமே உதயநிதி புகைப்படத்துடன் கூடிய டி-ஷர்ட் கொடுக்கப்பட்டதால் வித்தியாசம் தெரியவில்லை. கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் செந்தில் பாலாஜி சிக்கன் பிரியாணி + முட்டை இரவு உணவு ஏற்பாடு செய்தார். அரசுப் பேருந்துகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேருந்துகளில் தான் அழைத்து வந்தனர். அதில் பெரும்பாலனோர் மது அருந்தியிருந்தனர். திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் சிலர் ஸ்பீக்கருக்காக போடப்பட்டிருந்த கம்பியின் மீது ஏறி அட்ராசிட்டி செய்தனர். உதயநிதி மாலை 5 மணியளவில் தான் மேடையேறினார். மதியம் 2 மணியளவில் இருந்தே அழைத்து வரப்பட்ட இளைஞர்கள் அமர வைக்கப்பட்டனர். வெயில் வாட்டி வதைத்ததால் மிகவும் சிரமப்பட்டனர். கூட்டத்தில் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சையளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் வரவில்லை என்றும், வருகிற 27-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. எல்இடி திரை பழுது மோப்ப நாயுடன் சோதனை மேடையில் இருந்த எல்இடி திரை அவ்வபோது பழுதானது. உதயநிதி ஸ்டாலின் நுழைவு வாயிலில் இருந்தே, ரேம்ப் மூலம் மேடை வர திட்டமிட்டனர். ரேம்பின் 2 பக்கமும் காவல்துறையினரை நிறுத்தி, மோப்ப நாய் மூலம் சோதனை செய்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். ஆனால் உதயநிதி வந்த பிறகு காவல்துறை மற்றும் நிர்வாகிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பலரும் ரேம்பில் ஏறி அவரை பார்த்து ஆரவாரம் செய்தனர். சிலர் உதயநிதி கையைப்பிடித்து இழுத்து காயப்படுத்தினர். இதில் உதயநிதி ஒரு நொடி அதிர்ச்சியாகி தன் கையை பார்த்தபடி சென்றார். உதயநிதி உதயநிதி காவல்துறையினர் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். மேடை ஏறியதும் உதயநிதி தன் கைகளை சானிடைஸர் கொண்டு கழுவினார். உதயநிதி பேசி முடித்த பிறகும் நிர்வாகிகள் மொத்தமாக ரேம்பில் ஏறி முண்டியத்தனர். காவல்துறையினர் அவர்களை அதிரடியாக விரட்டி உதயநிதியை அனுப்பி வைத்தனர். உதயநிதிக்கு ஒரு பக்கம் பில்டப் என்றால், ஈரோடு எம்பியும் திமுக இளைஞரணி மாநில துணை செயலாளருமான பிரகாசும் பயங்கர பில்டப்புடன் வலம் வந்தார். உதயநிதி வருவதற்கு முன்பு ரேம்பில் அங்கேயும், இங்கேயும் சுற்றினார். முண்டியத்த கூட்டம் உதயநிதி உதயநிதி புறப்பட்டுவிடுவார் என்பதற்காக அவர் பேசுவதற்கு முன்பாகவே பிரகாஷ் நன்றியுரை வாசித்தார். ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள எண்டு கார்டா என்பது போலத்தான் மொத்த கூட்டமும் இருந்தது.! Loading…
Vote Vibes : ரஜினி `கொடுத்தும்'எடுபடாத தேர்தலை பற்றி தெரியுமா?
தமிழக அரசியலில் ரஜினி வாய்ஸ் எடுபட்ட காலம் ஒன்று உண்டு. அதை மனதில் வைத்துதான் 1996 இல் நான் நினைத்திருந்தால் முதலமைச்சரே ஆகியிருப்பேன் என ரஜினியே பேசியிருந்தார். ஆனால், தமிழக அரசியலில் ரஜினியின் வாய்ஸ் எடுபடாத சம்பவங்களும் இருக்கவே செய்கிறது. ரஜினிகாந்த் 1991-96 ஜெயலலிதா ஆட்சி நிறைய விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்ட ஆட்சி. அந்த சமயத்தில் ரஜினிக்கும் ஜெ-க்குமே முட்டல் மோதலாகவே இருந்தது. நிறைய மேடைகளில் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் ரஜினி பேசினார். போயஸ்கார்டனுக்குள் ரஜினியின் காரை நுழையவிடாமல் ஜெவின் பாதுகாவலர்கள் தடுக்க ரஜினி காரிலிருந்து இறங்கி தெருவில் நடந்து பரபரப்பை கிளப்பியதாகவும் கதைகள் உண்டு. பாட்ஷா பட மேடையில் 'தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துவிட்டது' எனப் பேசி அதிமுக ஆட்சியை டோட்டலாக டேமேஜ் செய்திருந்தார். இதைத் தொடர்ந்துதான் 1996 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவும் தமாகாவும் அமைத்த கூட்டணிக்கு ரஜினி வாய்ஸ் கொடுத்தார். 'ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானால் ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது' என்றார். தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்தது. கருணாநிதி முதல்வரானார். மூப்பனாரின் தமாகாவுக்கு பெரு வெற்றி. அதிமுக வெறும் நான்கே இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இதிலிருந்துதான் ரஜினி வாய்ஸூக்கு தமிழக அரசியலில் பெரும் தாக்கம் இருக்கும் என்கிற பேச்சு எழுந்தது. Actor Rajinikanth ஆனால், 1998 நாடாளுமன்ற தேர்தலுக்கும் ரஜினி திமுக - தமாகா கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 30 இடங்களிலும் திமுக தமாகா கூட்டணி 9 இடங்களிலும் மட்டுமே வென்றது. ரஜினி வாய்ஸ் இங்கே எடுபடவில்லை. அதேமாதிரி, பாபா பட விவகாரத்தால் ரஜினிக்கும் பாமகவுக்கும் முட்டிக் கொண்டது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அக்கட்சிக்கு எதிராக செயல்படுமாறு ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தினார். ஆனால், அந்தத் தேர்தலில் பாமக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வென்றிருந்தது. ஆக, ரஜினி வாய்ஸ் எடுபடாமல் போன சம்பவங்களும் இங்கே இருக்கிறது. மேடையில் சிலர் அந்த சம்பவங்களை வசதியாக மறந்துவிடுவர். (தொடரும்)
Vote Vibes : ரஜினி `கொடுத்தும்'எடுபடாத தேர்தலை பற்றி தெரியுமா?
தமிழக அரசியலில் ரஜினி வாய்ஸ் எடுபட்ட காலம் ஒன்று உண்டு. அதை மனதில் வைத்துதான் 1996 இல் நான் நினைத்திருந்தால் முதலமைச்சரே ஆகியிருப்பேன் என ரஜினியே பேசியிருந்தார். ஆனால், தமிழக அரசியலில் ரஜினியின் வாய்ஸ் எடுபடாத சம்பவங்களும் இருக்கவே செய்கிறது. ரஜினிகாந்த் 1991-96 ஜெயலலிதா ஆட்சி நிறைய விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்ட ஆட்சி. அந்த சமயத்தில் ரஜினிக்கும் ஜெ-க்குமே முட்டல் மோதலாகவே இருந்தது. நிறைய மேடைகளில் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் ரஜினி பேசினார். போயஸ்கார்டனுக்குள் ரஜினியின் காரை நுழையவிடாமல் ஜெவின் பாதுகாவலர்கள் தடுக்க ரஜினி காரிலிருந்து இறங்கி தெருவில் நடந்து பரபரப்பை கிளப்பியதாகவும் கதைகள் உண்டு. பாட்ஷா பட மேடையில் 'தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துவிட்டது' எனப் பேசி அதிமுக ஆட்சியை டோட்டலாக டேமேஜ் செய்திருந்தார். இதைத் தொடர்ந்துதான் 1996 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவும் தமாகாவும் அமைத்த கூட்டணிக்கு ரஜினி வாய்ஸ் கொடுத்தார். 'ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானால் ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது' என்றார். தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்தது. கருணாநிதி முதல்வரானார். மூப்பனாரின் தமாகாவுக்கு பெரு வெற்றி. அதிமுக வெறும் நான்கே இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இதிலிருந்துதான் ரஜினி வாய்ஸூக்கு தமிழக அரசியலில் பெரும் தாக்கம் இருக்கும் என்கிற பேச்சு எழுந்தது. Actor Rajinikanth ஆனால், 1998 நாடாளுமன்ற தேர்தலுக்கும் ரஜினி திமுக - தமாகா கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 30 இடங்களிலும் திமுக தமாகா கூட்டணி 9 இடங்களிலும் மட்டுமே வென்றது. ரஜினி வாய்ஸ் இங்கே எடுபடவில்லை. அதேமாதிரி, பாபா பட விவகாரத்தால் ரஜினிக்கும் பாமகவுக்கும் முட்டிக் கொண்டது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அக்கட்சிக்கு எதிராக செயல்படுமாறு ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தினார். ஆனால், அந்தத் தேர்தலில் பாமக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வென்றிருந்தது. ஆக, ரஜினி வாய்ஸ் எடுபடாமல் போன சம்பவங்களும் இங்கே இருக்கிறது. மேடையில் சிலர் அந்த சம்பவங்களை வசதியாக மறந்துவிடுவர். (தொடரும்)
பக்தவத்சலம்: முதல் தேர்தல் வெற்றியிலேயே ஒரு தலைமுறையின் வரலாற்றைத் தீர்மானித்தவர்! | முதல் களம் 07
(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர்.) முதல் தேர்தல் வெற்றியிலேயே ஒரு தலைமுறையின் வரலாற்றைத் தீர்மானித்தவர்! முதல் 07 : பக்தவத்சலம் அது 1922-ஆம் ஆண்டு. மதராஸ் காங்கிரஸ் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு பகல் பொழுது. 24 வயதுடைய இளைஞன் ஒருவன் உள்ளே அடியெடுத்து வைத்தான். அப்போது அந்த இளைஞனுக்குத் தெரியாது, ஒரு நாள் நாம் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக ஆவோம் என. அந்த இளைஞர் வேறு யாருமல்ல முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் தான். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி, காங்கிரஸில் இணைந்து, தமிழ்நாட்டு அரசியலில் அழியா முத்திரை பதித்த பக்தவத்சலத்தின் நாற்பது ஆண்டுக்கால பொது வாழ்க்கை பயணத்துக்கான தொடக்கப் புள்ளிக்கு வித்திட்ட நிகழ்வு என்ன? காங்கிரஸ் இயக்கத்தில் அவர் அடைந்த கிடுகிடு வளர்ச்சிக்கான காரணம், மூத்த தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்றது எப்படி, போட்டியிட்ட முதல் தேர்தல் தொடங்கி முதலமைச்சர் பதவியை எட்டியது வரையிலான பக்தவத்சலத்தின் அரசியல் பயணத்தின் ஃப்ளாஷ்பேக் இங்கே... அரசியலில் அடியெடுத்து வைத்த தருணமும்! ஆரம்பகால வாழ்க்கையும் 1897 அக்டோபர் 9 அன்று மயிலாப்பூரில் பிறந்த பக்தவத்சலம், பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கிராமத்துச் சூழலில் வளர்ந்தார். இந்திய விடுதலைப் போராட்டம் இளைஞர்களின் மனதில் புரட்சித்தீயைப் பற்ற வைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் அவரது பள்ளிப்பருவம் அமைந்தது. தொடக்க கல்வியை கோவையிலும், பட்டப்படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியிலும் பயின்ற அவர், பின்னர் சட்டம் பயின்று 1923-ஆம் ஆண்டில், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். கல்லூரி காலத்தில் இராஜாஜி, எஸ். சத்தியமூர்த்தி, அன்னி பெசன்ட் போன்ற தலைவர்கள் பேசிய பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அனுபவமும், அவர்கள் ஆற்றிய உரையும், அவர்களுடனான சந்திப்பும் காங்கிரஸ் இயக்கத்தின்பால் அவரை ஈர்த்தன. உயர் நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சி மேற்கொண்டபோது சந்தித்த தேசபக்த சட்ட நிபுணர்கள் உடனான உரையாடல்கள், அவரது சிந்தனையைத் தேசியவாதத்தை நோக்கி அழைத்துச் சென்றன. 1920-களின் தொடக்ககால மதராசில் சத்தியாகிரகப் பேரணிகள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை தினசரி நிகழ்வாக இருந்தன. இந்த நேரத்தில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இளைஞரான பக்தவத்சலம், காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரக போராட்டங்கள், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானார். பல ஆண்டுக் காலம் சிறையிலும் அடைக்கப்பட்டார். `போடிநாயக்கனூர் ஏன்?’ - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5 காங்கிரஸில் கிடுகிடு வளர்ச்சி 1920-களின் தொடக்கத்திலேயே மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் கமிட்டியில் இடம்பெற்ற அவர், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற காங்கிரஸ் தொண்டர்களின் வழக்குகளை ஏற்று நடத்தி, அவர்களது விடுதலைக்கு உதவி செய்தார். இதன் காரணமாக, கட்சியின் நகராட்சி அமைப்புகளிலும் உள்ளூர் அமைப்புகளிலும் பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. சட்டப் பயிற்சி, பொதுத் தொடர்பு, அடிமட்ட அமைப்புப் பணி என பல்வேறு தளங்களிலும் அவர் சுற்றிச் சுழன்றார். இவை அவரை இராஜாஜி, சரோஜினி நாயுடு, எஸ். சத்தியமூர்த்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக்கியது. பக்தவத்சலத்தின் முதல் தேர்தல் வெற்றியும் பின்னணியும் 1935 -ல் அப்போதைய ஆங்கிலேயர் அரசு, மாகாண சுயாட்சிக்கான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பெரும் மாகாணத் தேர்தல்கள் 1937 -ஆம் ஆண்டு, பிப்ரவரியில் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் பக்தவத்சலத்தை நிறுத்த காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். அங்கிருந்த சமூக சமநிலை, கல்வியறிவு பெற்ற நடுத்தர வர்க்க வாக்காளர்கள், மேலும் தேசிய இயக்கத்துக்கான அதிகமான ஒத்துழைப்பு போன்ற அனைத்தும் காங்கிரஸின் வலிமையை உறுதிப்படுத்தும் வகையில் இருந்ததால், திருவள்ளூர் தொகுதியை, காங்கிரஸ் தலைவர்கள் மிக முக்கியமானதாக கருதினர். பக்தவத்சலத்தின் உறுதியான பேச்சாற்றல், அமைப்புத் திறன் மற்றும் அவரது தொடர்ச்சியான தன்னார்வச் செயல்பாடுகளால், ஏற்கனவே மக்களிடம் பரிச்சயமான முகமாக இருந்த பக்தவத்சலத்தை அந்தத் தொகுதியில் நிறுத்த தீர்மானித்தனர். தேர்தல் பிரசாரம் பெரும்பாலும் நேரடி மக்கள் சந்திப்பாகவே இருந்தது. கிராமங்களுக்கு நேரில் சென்று, உப்பு சட்டம் முதல் கல்வி சீர்திருத்தம்வரை காங்கிரஸ் வாக்குறுதிகளை எளிய மொழியில் விவரித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் பக்தவத்சலம். இராஜாஜி மற்றும் சத்தியமூர்த்தி போன்ற தலைவர்களும் அவருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டனர். இவையெல்லாம் சேர்ந்து, திருவள்ளூர் வாக்காளர்களிடையே அவருக்கென்று ஒரு தனிச் செல்வாக்கை உருவாக்கி, தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்தது. முதலமைச்சராக உயர வழிவகுத்த 1937 தேர்தல் வெற்றி பக்தவத்சலத்தின் இந்த முதல் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, இராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கான நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், 1937 தேர்தல் வெற்றி அவருக்கு மூன்று முக்கிய வாய்ப்புகளைத் திறந்தது. அதில் முதலாவது, சட்டமன்றத்தில் நிர்வாக அனுபவம். அதாவது வாய்ப்புகள் கிடைக்கும் முன்பே நிர்வாகத்துக்கு ஏற்புடையவர் என்கிற மதிப்பு அவருக்கு கிடைத்தது. அடுத்ததாக உயர்மட்ட தலைவர்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை. அதுதான், பின்னாளில் இராஜாஜி அவரை முக்கிய அமைச்சகப் பொறுப்புகளுக்குப் பரிந்துரைக்கவும், முதலமைச்சராகவும் காரணமாக அமைந்தது. மூன்றாவதாக, காங்கிரஸ் அமைப்பை நிர்வகிக்கும் வாய்ப்பு. 1940–50-களில் காங்கிரஸின் மாநில அமைப்பு முழுவதும் அவரின் செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டே இயங்கியது. அந்த வகையில், 1937 தேர்தலில் பக்தவத்சலத்துக்கு கிடைத்த வெற்றி, வெறும் தொகுதி அடிப்படையிலான வெற்றியாக மட்டும் அல்லாமல், புதிய தலைமுறை காங்கிரஸ் தலைவர்கள் உருவாவதற்கான தருணத்தையும் உருவாக்கியது. தேர்தல் வெற்றியின் மூலம் அவரது அரசியல் பிணைப்புகள் விரிவாகின. சட்டமன்ற உறுப்பினராகவும், இளநிலை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்ததால், மூத்த காங்கிரஸ் தலைவர்கள், உயரதிகாரிகள், செல்வாக்கு மிக்க பிரபலங்களுடனான தொடர்புகள் அதிகரித்தன. இந்தத் தொடர்புகள் அவர் மீது நம்பிக்கையையும் பரஸ்பர கடமையையும் சேர்ந்தே உருவாக்கின. கட்சியின் உயர் பதவிகளுக்கு நம்பிக்கைக்குரியவர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பும் அவருக்கு அமைந்தது. சட்டமன்றப் பணி, பொதுமேடை பேச்சுகள், நகராட்சி-கிராமப்புறங்களில் அவர் மேற்கொண்ட பணிகள் போன்றவை கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் வாக்காளர்கள் மத்தியிலும் அவரது செல்வாக்கை உயர்த்தின. சுருக்கமாக சொல்வதென்றால், திருவள்ளூர் தொகுதி தேர்தல் வெற்றி, அவரை மாநில அளவிலான நம்பிக்கைக்குரிய அரசியல்வாதியாகவும் தலைவராகவும் உயர்த்தியது. நிர்வாகத் திறனைக் கொடுத்த சட்டமன்ற பணி பின்னர் தொடர்ச்சியாக மாகாண அமைச்சரவைகளில் பொதுப்பணித் துறை, தகவல், உள்ளாட்சித் துறை போன்ற இலாகாக்களில் அமைச்சராகவும் பணியாற்றியதுடன், அவருக்கு நிர்வாகத் திறன்மிக்கவர் என்கிற பெயரையும் பெற்றுக்கொடுத்தது. உள்கட்டமைப்புத் திட்டங்கள், நகராட்சி சீர்திருத்தங்கள் போன்றவற்றில் அவர் மேற்கொண்ட பணிகள், அவரது திறமைக்கான ஆதாரமாக அமைந்தன. சுதந்திர இயக்கப் பின்னணி மற்றும் நிர்வாகத் திறன் ஆகிய இரண்டையும் காங்கிரஸ் மதித்த காலம் அது என்பதால், பக்தவத்சலம் உயர்ப் பொறுப்புகளுக்கான நம்பிக்கைக்குரிய தலைவராக உயர்ந்தார். அந்த வகையில், அவரது முதல் தேர்தல் வெற்றி, அவரைத் தேர்தல் அரசியலில் நிலைத்திருக்க உதவியது. சுதந்திரத்திற்குப் பிறகு அரசியல் நிர்ணய சபை உள்ளிட்ட தேசிய அமைப்புகளில் பங்கேற்றார். 1950-களிலும் 1960-களின் தொடக்கத்திலும் பக்தவத்சலம் மெட்ராஸ் (பின்னர் தமிழ்நாடு) காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். காமராஜர், 1963 அக்டோபர் மாதம், தான் வகித்த முதலமைச்சர் பதவியைத் துறந்து தேசிய அளவில், அமைப்புப் பணிக்குச் செல்ல (கே பிளான்) முடிவு செய்தபோது, காமராஜரின் பரிந்துரையின்பேரில் பக்தவத்சலமே மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, 1963-ஆம் ஆண்டு, அக்டோபர் 2-ஆம் தேதி, தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அந்தவகையில், தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு இளைஞரின் முதல் தேர்தல் வெற்றியே ஒருதலைமுறையின் வரலாற்றைத் தீர்மானிக்க முடியும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் பக்தவத்சலம்! (தொடரும்) Loading…
`20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்களிடையே 2 மாதத்தில் பிணக்கு?'கவுன்சிலர் தேர்வில் மோதல்
மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரம் யுத்தம் காரணமாக அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கட்சியில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் அரசியல் ரீதியாக எந்த கூட்டணியும் வைத்துக்கொண்டது கிடையாது. முதல் முறையாக மும்பை மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இத்தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சி வெறும் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மும்பை மாநகராட்சியில் ஆட்சியை இழந்ததோடு 65 இடங்களில் வெற்றி பெற்றது. மும்பை மாநகராட்சியில் அரசியல் கட்சிகள் 10 நியமன கவுன்சிலர்களை நியமிக்க முடியும். அந்த வகையில் உத்தவ் தாக்கரே கட்சியால் அக்கட்சிக்கு இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 3 பேரை நியமன கவுன்சிலர்களாக நியமிக்க முடியும். இது தவிர பா.ஜ.க தரப்பில் 4 பேரையும், காங்கிரஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் சார்பாக தலா ஒருவரையும் நியமிக்க முடியும். இதில் உத்தவ் தாக்கரே கட்சிக்கு கிடைத்துள்ள 3 பேரில் ஒரு கவுன்சிலர் பதவியை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அக்கோரிக்கையை உத்தவ் தாக்கரே நிராகரித்துவிட்டார். இதனால் தாக்கரே சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. அதோடு உத்தவ் தாக்கரேயின் பரம அரசியல் எதிரியாக கருதப்படும் ஏக்நாத் ஷிண்டேயை ராஜ் தாக்கரே சமீபத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு உத்தவ் தாக்கரேயிக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ் தாக்கரே கட்சியினர் உத்தவ் தாக்கரேயை மறைமுகமாக சாடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர்கள், இதயம் அதில் இல்லாதபோது ஏன் அன்பைப் பற்றி கவலைப்பட வேண்டும்? என்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களால் மற்றவர்களை அரவணைக்க முடியாது போன்ற பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து ராஜ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் அவினாஷ் அபயான்கர் அளித்த பேட்டியில், ''ராஜ்தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கட்சிகளிடையே கூட்டணி இருக்கிறது. இதில் உத்தவ் தாக்கரே கட்சிக்கு கிடைக்கும் நியமன உறுப்பினர்களில் ஒன்றை கேட்பது குறித்து ராஜ் தாக்கரேதான் முடிவு செய்வார். இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை''என்றார். தாக்கரே சகோதரர்கள் இது குறித்து உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் துபே கூறுகையில், ''உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இருவரும் புத்திசாலித்தனமான மற்றும் முற்போக்கான தலைவர்கள். அவர்கள் இருவரும் மிகச் சிறிய விஷயங்களுக்காகச் சண்டையிட்டுக் கொள்பவர்கள் அல்ல. மராத்திய பெருமையை நிலைநாட்டுவதில் இருவரும் உறுதியாக இருப்பார்கள். சில இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்துக்களோ அல்லது சமூக ஊடகப் பதிவுகளோ இந்தக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தாது. இந்தக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டார். தாக்கரே சகோதரர்கள் மும்பை மாநகராட்சி தேர்தலில் ஒன்றிணைந்தாலும் மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை. அதோடு ஒரு சில மாநகராட்சிகளில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், இரு தலைவர்களும் சேர்ந்து பிரசாரம் செய்யவில்லை. இதனால் உத்தவ் தாக்கரே கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
`20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்களிடையே 2 மாதத்தில் பிணக்கு?'கவுன்சிலர் தேர்வில் மோதல்
மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரம் யுத்தம் காரணமாக அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கட்சியில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் அரசியல் ரீதியாக எந்த கூட்டணியும் வைத்துக்கொண்டது கிடையாது. முதல் முறையாக மும்பை மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இத்தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சி வெறும் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மும்பை மாநகராட்சியில் ஆட்சியை இழந்ததோடு 65 இடங்களில் வெற்றி பெற்றது. மும்பை மாநகராட்சியில் அரசியல் கட்சிகள் 10 நியமன கவுன்சிலர்களை நியமிக்க முடியும். அந்த வகையில் உத்தவ் தாக்கரே கட்சியால் அக்கட்சிக்கு இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 3 பேரை நியமன கவுன்சிலர்களாக நியமிக்க முடியும். இது தவிர பா.ஜ.க தரப்பில் 4 பேரையும், காங்கிரஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் சார்பாக தலா ஒருவரையும் நியமிக்க முடியும். இதில் உத்தவ் தாக்கரே கட்சிக்கு கிடைத்துள்ள 3 பேரில் ஒரு கவுன்சிலர் பதவியை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அக்கோரிக்கையை உத்தவ் தாக்கரே நிராகரித்துவிட்டார். இதனால் தாக்கரே சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. அதோடு உத்தவ் தாக்கரேயின் பரம அரசியல் எதிரியாக கருதப்படும் ஏக்நாத் ஷிண்டேயை ராஜ் தாக்கரே சமீபத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு உத்தவ் தாக்கரேயிக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ் தாக்கரே கட்சியினர் உத்தவ் தாக்கரேயை மறைமுகமாக சாடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர்கள், இதயம் அதில் இல்லாதபோது ஏன் அன்பைப் பற்றி கவலைப்பட வேண்டும்? என்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களால் மற்றவர்களை அரவணைக்க முடியாது போன்ற பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து ராஜ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் அவினாஷ் அபயான்கர் அளித்த பேட்டியில், ''ராஜ்தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கட்சிகளிடையே கூட்டணி இருக்கிறது. இதில் உத்தவ் தாக்கரே கட்சிக்கு கிடைக்கும் நியமன உறுப்பினர்களில் ஒன்றை கேட்பது குறித்து ராஜ் தாக்கரேதான் முடிவு செய்வார். இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை''என்றார். தாக்கரே சகோதரர்கள் இது குறித்து உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் துபே கூறுகையில், ''உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இருவரும் புத்திசாலித்தனமான மற்றும் முற்போக்கான தலைவர்கள். அவர்கள் இருவரும் மிகச் சிறிய விஷயங்களுக்காகச் சண்டையிட்டுக் கொள்பவர்கள் அல்ல. மராத்திய பெருமையை நிலைநாட்டுவதில் இருவரும் உறுதியாக இருப்பார்கள். சில இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்துக்களோ அல்லது சமூக ஊடகப் பதிவுகளோ இந்தக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தாது. இந்தக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டார். தாக்கரே சகோதரர்கள் மும்பை மாநகராட்சி தேர்தலில் ஒன்றிணைந்தாலும் மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை. அதோடு ஒரு சில மாநகராட்சிகளில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், இரு தலைவர்களும் சேர்ந்து பிரசாரம் செய்யவில்லை. இதனால் உத்தவ் தாக்கரே கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
DMK : உதயநிதி to சிட்டிங் MLAக்கள், சீட்டுக்கு மோதும் 5 தரப்பு! | TN Election 360 updates | Vikatan
பெங்களூரூ: டெண்டர் ஒதுக்க 12 % கமிஷன்; கையும் களவுமாக பாஜக எம்எல்ஏ பிடிபட்டது எப்படி?
அரசு ஒப்பந்ததாரரிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்ற பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது கர்நாடக மாநிலம் ஷிரஹட்டி தொகுதி எம்எல்ஏ-வான பாஜக-வைச் சேர்ந்த சந்துரு லமானி, அரசின் சிறுபாசனத்துறை மூலம் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சாலை தடுப்புச் சுவர் கட்டும் ஒப்பந்தத்தை பெற்றுத் தர ஒப்பந்ததாரரான விஜய் பூஜார் என்பவரிடம் கட்டாயப்படுத்தி 12 சதவிகிதம் கமிஷன் கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து லட்சுமேஸ்வரில் உள்ள தனக்குச் சொந்தமான மருத்துவமனைக்கு லஞ்சப் பணத்தைக் கொண்டு வர எம்எல்ஏ சொன்னதால் அங்கு வைத்து ரூ. 5 லட்சத்தை ஒப்பந்ததாரர் கொடுக்க, அதை சந்துரு லமானியும் அவரது உதவியாளர்களும் சேர்ந்து வாங்கும்போது மறைந்திருந்த லோக் ஆயுக்தா காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த நடவடிக்கையின்போது எம்எல்ஏ-வின் உதவியாளர்களில் ஒருவர், லஞ்சப் பணத்தில் ஐம்பதாயிரத்தை பக்கத்திலிருந்த வளாகத்திற்குள் தூக்கி எறிந்துவிட்டு தப்பிக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கர்நாடக மாநில பாஜக தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், கைதைக் கண்டித்து எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். லஞ்சம் அதைத் தொடர்ந்து லட்சுமேஸ்வரில் உள்ள தனக்குச் சொந்தமான மருத்துவமனைக்கு லஞ்ச பணத்தைக் கொண்டு வர எம்எல்ஏ சொன்னதால் அங்கு வைத்து ரூ. 5 லட்சத்தை ஒப்பந்ததாரர் கொடுக்க, அதை சந்துரு லமானியும் அவரது உதவியாளர்களும் சேர்ந்து வாங்கும்போது மறைந்திருந்த லோக் ஆயுக்தா காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த நடவடிக்கையின்போது எம்எல்ஏ-வின் உதவியாளர்களில் ஒருவர், லஞ்சப் பணத்தில் ஐம்பதாயிரத்தை பக்கத்திலிருந்த வளாகத்திற்குள் தூக்கி எறிந்துவிட்டு தப்பிக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கர்நாடக மாநில பாஜக தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், கைதைக் கண்டித்து எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?
பெங்களூரூ: டெண்டர் ஒதுக்க 12 % கமிஷன்; கையும் களவுமாக பாஜக எம்எல்ஏ பிடிபட்டது எப்படி?
அரசு ஒப்பந்ததாரரிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்ற பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது கர்நாடக மாநிலம் ஷிரஹட்டி தொகுதி எம்எல்ஏ-வான பாஜக-வைச் சேர்ந்த சந்துரு லமானி, அரசின் சிறுபாசனத்துறை மூலம் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சாலை தடுப்புச் சுவர் கட்டும் ஒப்பந்தத்தை பெற்றுத் தர ஒப்பந்ததாரரான விஜய் பூஜார் என்பவரிடம் கட்டாயப்படுத்தி 12 சதவிகிதம் கமிஷன் கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து லட்சுமேஸ்வரில் உள்ள தனக்குச் சொந்தமான மருத்துவமனைக்கு லஞ்சப் பணத்தைக் கொண்டு வர எம்எல்ஏ சொன்னதால் அங்கு வைத்து ரூ. 5 லட்சத்தை ஒப்பந்ததாரர் கொடுக்க, அதை சந்துரு லமானியும் அவரது உதவியாளர்களும் சேர்ந்து வாங்கும்போது மறைந்திருந்த லோக் ஆயுக்தா காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த நடவடிக்கையின்போது எம்எல்ஏ-வின் உதவியாளர்களில் ஒருவர், லஞ்சப் பணத்தில் ஐம்பதாயிரத்தை பக்கத்திலிருந்த வளாகத்திற்குள் தூக்கி எறிந்துவிட்டு தப்பிக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கர்நாடக மாநில பாஜக தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், கைதைக் கண்டித்து எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். லஞ்சம் அதைத் தொடர்ந்து லட்சுமேஸ்வரில் உள்ள தனக்குச் சொந்தமான மருத்துவமனைக்கு லஞ்ச பணத்தைக் கொண்டு வர எம்எல்ஏ சொன்னதால் அங்கு வைத்து ரூ. 5 லட்சத்தை ஒப்பந்ததாரர் கொடுக்க, அதை சந்துரு லமானியும் அவரது உதவியாளர்களும் சேர்ந்து வாங்கும்போது மறைந்திருந்த லோக் ஆயுக்தா காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த நடவடிக்கையின்போது எம்எல்ஏ-வின் உதவியாளர்களில் ஒருவர், லஞ்சப் பணத்தில் ஐம்பதாயிரத்தை பக்கத்திலிருந்த வளாகத்திற்குள் தூக்கி எறிந்துவிட்டு தப்பிக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கர்நாடக மாநில பாஜக தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், கைதைக் கண்டித்து எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?
தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி டெபாசிட் இழக்கும் - அன்புமணி உறுதி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெண்களால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் தன்னுடைய எம்.பி நிதியின் மூலம் கட்டப்பட்ட திருமண மண்டத்தைத் திறந்து வைக்க வந்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆட்சி முடிய உள்ள நிலையிலும் 12 நாட்களில் ரூ. 4,355 கோடி மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் திமுக ஆட்சியில் மட்டும் ரூ. 4 லட்சத்து 96 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அன்புமணி ராமதாஸ் தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு இதுவரை 3 முறை ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடத்தியுள்ளனர். ஆனால், ஒரு தொழிற்சாலை கூட இதுவரை தொடங்கப்படவில்லை. தருமபுரி மாவட்டத்தை திமுக அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. திமுக கூட்டணி குழப்பத்தில் இருக்கிறது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெண்களால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றார். மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா?- திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்
தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி டெபாசிட் இழக்கும் - அன்புமணி உறுதி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெண்களால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் தன்னுடைய எம்.பி நிதியின் மூலம் கட்டப்பட்ட திருமண மண்டத்தைத் திறந்து வைக்க வந்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆட்சி முடிய உள்ள நிலையிலும் 12 நாட்களில் ரூ. 4,355 கோடி மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் திமுக ஆட்சியில் மட்டும் ரூ. 4 லட்சத்து 96 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அன்புமணி ராமதாஸ் தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு இதுவரை 3 முறை ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடத்தியுள்ளனர். ஆனால், ஒரு தொழிற்சாலை கூட இதுவரை தொடங்கப்படவில்லை. தருமபுரி மாவட்டத்தை திமுக அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. திமுக கூட்டணி குழப்பத்தில் இருக்கிறது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெண்களால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றார். மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா?- திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்
பெரம்பூரில் TVK Vijay போட்டியா? முறைகேட்டில் IAS IPS அதிகாரிகள் - லீக்கான ED ஆவணம் | IPS Vikatan
NTK வேட்பாளர் லிஸ்ட் : நாகையில் பிரபலங்கள், தேனியில் பெண்கள் - சீமான் வைத்த செக் TN Election updates
திருச்சி மாநாடு Seeman Full Speech: “எவரோடும் சமரசம் செய்யாமல் தனித்துப் போராடுகிறோம்” | Vikatan
Bose Venkat Interview : சித்தாந்தம் தெரியாமல் வெறும் கையை வீசும் Vijay - பிரசார பீரங்கி
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க மறுத்ததால் பழிவாங்கினர்- தந்திரி வெளிப்படுத்திய தகவலால் விவாதம்!
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரக பலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முன்னாள் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைதுசெய்யப்பட்டிருந்தார். சுமார் 41 நாள்கள் சிறைவாசத்திற்குப் பின் அவருக்கு கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவால் வலுவான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. கூட்டுச்சதியில் அவர் ஈடுபட்டதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோயில் பூஜைகள் உள்ளிட்ட தாந்திரீக விஷயங்களுக்கு மட்டுமே தந்திரி பொறுப்பானவர் ஆவார் எனவும் கோர்ட் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தடையாக இருந்ததால் பழிவாங்கும் விதமாக அரசு இந்த வழக்கில் கைதுசெய்துள்ளதாக தந்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட்டில் தந்திரி கண்டரரு ராஜீவரரு சமர்ப்பித்த ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் தந்திரி கூறியுள்ளதாவது: ``சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பதை தடுத்ததைத் தொடர்ந்து பழிவாங்கும் விதமாக தங்கம் கொள்ளை வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்கவைத்துள்ளனர். சபரிமலை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை திருப்திபடுத்தும் விதமாக சில போலீஸ் அதிகாரிகள் இளம்பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க முயன்றனர். அதற்கான முயற்சிகள் நடந்தபோது பூஜைகளை நிறுத்தி வைப்பேன் என்றும், கோயிலை விட்டு வெளியேறிவிடுவேன் எனவும் நான் தெரிவித்தேன். கோயிலுக்குள் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டேன் என தீர்க்கமான முடிவை எடுத்தேன். சபரிமலை கோயிலை தினமும் திறக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டியதையும் எதிர்த்ததாலும், அரசுக்கு என்மீது கோபம் இருந்தது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றியை நான் சபரிமலைக்கு அழைத்துவந்தது போன்று சித்திரிக்கும் விதமாக சில விஷயங்களை விசாரணைக்குழு மறைத்துவைத்தது. சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே சமர்பித்த இரண்டு அறிக்கைகளிலும் எனது பெயர் இல்லை. திடீரென எனது பெயரை சேர்த்துள்ளனர். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு சபரிமலை கோயில் ஆசாரங்கள், அனுஷ்டானங்கள், பூஜைகள் ஆகியவை மட்டுமே எனக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ, சொத்துக்களை பராமரிப்பதிலோ தந்திரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. தேவசம்போர்டு வழிகாட்டு நெறிமுறைகள்படி கோயிலில் விலைமதிப்புமிக்க பொருள்கள் மற்றும் திருவாபரணங்களை கணக்கெடுப்பது, பாதுகாப்பது போன்றவை தேவசம்போர்டுக்கு மட்டுமே உள்ள பொறுப்பு ஆகும். நிர்வாகத்தின் முறைகேடுகளை தடுக்க எனக்கு சட்டப்பூர்வமான பொறுப்பு இல்லை. அதனால், இதுபோன்ற விஷயங்களில் நான் பதில் கூறாமல் இருப்பதை குற்றத்துக்கு கூட்டாக நின்று சதிசெய்ததாக கருதமுடியாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவை ஆளும் சி.பி.எம் அரசு சபரிமலை விவகாரத்தில் தந்திரியை பழிவாங்கிவிட்டதாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க மறுத்ததால் பழிவாங்கினர்- தந்திரி வெளிப்படுத்திய தகவலால் விவாதம்!
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரக பலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முன்னாள் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைதுசெய்யப்பட்டிருந்தார். சுமார் 41 நாள்கள் சிறைவாசத்திற்குப் பின் அவருக்கு கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவால் வலுவான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. கூட்டுச்சதியில் அவர் ஈடுபட்டதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோயில் பூஜைகள் உள்ளிட்ட தாந்திரீக விஷயங்களுக்கு மட்டுமே தந்திரி பொறுப்பானவர் ஆவார் எனவும் கோர்ட் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தடையாக இருந்ததால் பழிவாங்கும் விதமாக அரசு இந்த வழக்கில் கைதுசெய்துள்ளதாக தந்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட்டில் தந்திரி கண்டரரு ராஜீவரரு சமர்ப்பித்த ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் தந்திரி கூறியுள்ளதாவது: ``சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பதை தடுத்ததைத் தொடர்ந்து பழிவாங்கும் விதமாக தங்கம் கொள்ளை வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்கவைத்துள்ளனர். சபரிமலை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை திருப்திபடுத்தும் விதமாக சில போலீஸ் அதிகாரிகள் இளம்பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க முயன்றனர். அதற்கான முயற்சிகள் நடந்தபோது பூஜைகளை நிறுத்தி வைப்பேன் என்றும், கோயிலை விட்டு வெளியேறிவிடுவேன் எனவும் நான் தெரிவித்தேன். கோயிலுக்குள் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டேன் என தீர்க்கமான முடிவை எடுத்தேன். சபரிமலை கோயிலை தினமும் திறக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டியதையும் எதிர்த்ததாலும், அரசுக்கு என்மீது கோபம் இருந்தது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றியை நான் சபரிமலைக்கு அழைத்துவந்தது போன்று சித்திரிக்கும் விதமாக சில விஷயங்களை விசாரணைக்குழு மறைத்துவைத்தது. சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே சமர்பித்த இரண்டு அறிக்கைகளிலும் எனது பெயர் இல்லை. திடீரென எனது பெயரை சேர்த்துள்ளனர். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு சபரிமலை கோயில் ஆசாரங்கள், அனுஷ்டானங்கள், பூஜைகள் ஆகியவை மட்டுமே எனக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ, சொத்துக்களை பராமரிப்பதிலோ தந்திரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. தேவசம்போர்டு வழிகாட்டு நெறிமுறைகள்படி கோயிலில் விலைமதிப்புமிக்க பொருள்கள் மற்றும் திருவாபரணங்களை கணக்கெடுப்பது, பாதுகாப்பது போன்றவை தேவசம்போர்டுக்கு மட்டுமே உள்ள பொறுப்பு ஆகும். நிர்வாகத்தின் முறைகேடுகளை தடுக்க எனக்கு சட்டப்பூர்வமான பொறுப்பு இல்லை. அதனால், இதுபோன்ற விஷயங்களில் நான் பதில் கூறாமல் இருப்பதை குற்றத்துக்கு கூட்டாக நின்று சதிசெய்ததாக கருதமுடியாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவை ஆளும் சி.பி.எம் அரசு சபரிமலை விவகாரத்தில் தந்திரியை பழிவாங்கிவிட்டதாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டாலின் பேச்சு
fமதுரை உத்தங்குடியில் தென் மண்டல வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”வீரம் என்றால் மதுரை. பாசம் என்றால் மதுரை. கோவில் என்றால் மதுரை. சாப்பாடு என்றாலும் மதுரை. இங்கு எல்லாமே ஃபேமஸ் தான். இப்படிப்பட்ட மண்ணில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி மாநாடு நடைபெறுவது பெருமை. அமைச்சர் மூர்த்திக்கு ஒரு பழக்கம் உண்டு எதையும் சிறிதாகச் செய்ய தெரியாது எல்லாமே பிரமாண்டம்தான். நாமதான் ஜெயிக்கிறோம் எப்பவுமே நாமதான் ஜெயிக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலின் போது BLA-2 உறுப்பினர்களுக்கான பயிற்சியை மண்டல வாரியாக நானே சென்று நடத்தினேன். அதனால்தான் 40க்கு 40 என்ற வெற்றியைப் பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முறையில் ஆப் மூலமாக 1 கோடியே 10 லட்சம் குடும்பங்களை இணைத்தோம். எஸ்ஐஆர் வாக்காளார் சிறப்பு சீர்திருத்தின் போது பலரிடm வாக்குகளும் நீக்கப்பட வாய்ப்பு இருந்த நிலையில் அதை பாதுகாத்தது நமது இயக்கம் தான். மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் BLC 75,032 பேர், BDAவில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் என மொத்தம் சுமார் ஏழு லட்சம் பேர். வருகிற தேர்தலில் நமது வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த ஏழு லட்சம் பேர்தான். 2019 முதல் எல்லா தேர்தல்களிலும் வெற்றிமேல் வெற்றி தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை மக்கள் தந்தார்கள். இப்போது அதைவிட அதிக திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் 350 வாக்குகள் இலக்கு. அதை செய்தால் 2 கோடி 50 லட்சம் வாக்குகளை பெற முடியும். இந்த தேர்தலில் 2.5 கோடிக்கு குறையாத வாக்குகளை பெற வேண்டும். அதை வாங்கிக் கொடுப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு தேவையானதை செய்து தருவது என் பொறுப்பு. மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த இரண்டு மாதம் நமக்கு நோ ரெஸ்ட். ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது ஐந்து முறை நேரில் சந்திக்க வேண்டும். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் எல்லாம் இருக்கட்டும். ஆனால் வீட்டு வாசலில் சென்று கையெடுத்து கும்பிட்டு வாக்கு கேட்பதற்குச் சமம் எதுவும் இல்லை. வாக்குப்பதிவு முடிந்து சீல் வைத்து எடுத்துச் செல்லும் வரை கவனம். கடைசி வாக்கு எண்ணப்படும் வரை கவனம். தேர்தல் தேதி எப்போது வந்தாலும் பரப்புரை நம்மால் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை முடக்க முயன்றதை முறியடித்து முன்கூட்டியே வழங்கினோம். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதை 2000 ஆக கொடுப்போம். மக்களுக்காக கொடுத்தால் அது தமிழக அரசு. மக்களிடமிருந்து எடுத்தால் அது ஒன்றிய அரசு. எந்த தொகுதியில் யார் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்து கொள்கிறேன். கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன. மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகிறார். அவரிடம் மதுரை மெட்ரோ எங்கே?, கோவை மெட்ரோ எங்கே?, தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் எங்கே?, கீழடி அறிக்கை ஏன் வெளியிடவில்லை?, நீட் விலக்கு ஏன் தரவில்லை? என மக்கள் நீங்கள் கேட்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனுக்காக கேட்க வேண்டியதை எடப்பாடி கே. பழனிசாமி கேட்கவில்லை. அந்த பயந்தகோலி பழனிசாமி போல இருக்க மாட்டோம், நாங்கள் பயப்பட மாட்டோம். இந்தியாவிலேயே அதிக வழக்குகளை சந்தித்து வரும் கட்சி திமுக. மிசா, தடா, எமர்ஜென்சி பார்த்த இயக்கம் திமுக. சிபிஐ, இ.டி, ஐ.டி எதற்கும் அஞ்ச மாட்டோம். மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மாதங்களில் ஏழு மாநாடுகள். ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் பேரை சந்தித்துள்ளேன். இப்போது காட்டுவது ட்ரைலர் தான். திருச்சியில் மார்ச் 9ஆம் தேதி பத்து லட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடு பார்க்கப் போகிறது. மெயின் பிக்சர் திருச்சியில் உள்ளது. மக்களிடம் கேளுங்கள் தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இந்தப் போரில் தமிழ்நாடு வெல்லும். ஒன்றாக இந்தி திணிப்பை எதிர்த்து வெல்வோம். ஒன்றாக மாநில சுயாட்சியை மீட்க வெல்வோம். உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக இருக்க வேண்டும் இது என் வாக்குறுதி” என்றார்.
மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டாலின் பேச்சு
fமதுரை உத்தங்குடியில் தென் மண்டல வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”வீரம் என்றால் மதுரை. பாசம் என்றால் மதுரை. கோவில் என்றால் மதுரை. சாப்பாடு என்றாலும் மதுரை. இங்கு எல்லாமே ஃபேமஸ் தான். இப்படிப்பட்ட மண்ணில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி மாநாடு நடைபெறுவது பெருமை. அமைச்சர் மூர்த்திக்கு ஒரு பழக்கம் உண்டு எதையும் சிறிதாகச் செய்ய தெரியாது எல்லாமே பிரமாண்டம்தான். நாமதான் ஜெயிக்கிறோம் எப்பவுமே நாமதான் ஜெயிக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலின் போது BLA-2 உறுப்பினர்களுக்கான பயிற்சியை மண்டல வாரியாக நானே சென்று நடத்தினேன். அதனால்தான் 40க்கு 40 என்ற வெற்றியைப் பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முறையில் ஆப் மூலமாக 1 கோடியே 10 லட்சம் குடும்பங்களை இணைத்தோம். எஸ்ஐஆர் வாக்காளார் சிறப்பு சீர்திருத்தின் போது பலரிடm வாக்குகளும் நீக்கப்பட வாய்ப்பு இருந்த நிலையில் அதை பாதுகாத்தது நமது இயக்கம் தான். மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் BLC 75,032 பேர், BDAவில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் என மொத்தம் சுமார் ஏழு லட்சம் பேர். வருகிற தேர்தலில் நமது வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த ஏழு லட்சம் பேர்தான். 2019 முதல் எல்லா தேர்தல்களிலும் வெற்றிமேல் வெற்றி தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை மக்கள் தந்தார்கள். இப்போது அதைவிட அதிக திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் 350 வாக்குகள் இலக்கு. அதை செய்தால் 2 கோடி 50 லட்சம் வாக்குகளை பெற முடியும். இந்த தேர்தலில் 2.5 கோடிக்கு குறையாத வாக்குகளை பெற வேண்டும். அதை வாங்கிக் கொடுப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு தேவையானதை செய்து தருவது என் பொறுப்பு. மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த இரண்டு மாதம் நமக்கு நோ ரெஸ்ட். ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது ஐந்து முறை நேரில் சந்திக்க வேண்டும். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் எல்லாம் இருக்கட்டும். ஆனால் வீட்டு வாசலில் சென்று கையெடுத்து கும்பிட்டு வாக்கு கேட்பதற்குச் சமம் எதுவும் இல்லை. வாக்குப்பதிவு முடிந்து சீல் வைத்து எடுத்துச் செல்லும் வரை கவனம். கடைசி வாக்கு எண்ணப்படும் வரை கவனம். தேர்தல் தேதி எப்போது வந்தாலும் பரப்புரை நம்மால் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை முடக்க முயன்றதை முறியடித்து முன்கூட்டியே வழங்கினோம். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதை 2000 ஆக கொடுப்போம். மக்களுக்காக கொடுத்தால் அது தமிழக அரசு. மக்களிடமிருந்து எடுத்தால் அது ஒன்றிய அரசு. எந்த தொகுதியில் யார் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்து கொள்கிறேன். கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன. மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகிறார். அவரிடம் மதுரை மெட்ரோ எங்கே?, கோவை மெட்ரோ எங்கே?, தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் எங்கே?, கீழடி அறிக்கை ஏன் வெளியிடவில்லை?, நீட் விலக்கு ஏன் தரவில்லை? என மக்கள் நீங்கள் கேட்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனுக்காக கேட்க வேண்டியதை எடப்பாடி கே. பழனிசாமி கேட்கவில்லை. அந்த பயந்தகோலி பழனிசாமி போல இருக்க மாட்டோம், நாங்கள் பயப்பட மாட்டோம். இந்தியாவிலேயே அதிக வழக்குகளை சந்தித்து வரும் கட்சி திமுக. மிசா, தடா, எமர்ஜென்சி பார்த்த இயக்கம் திமுக. சிபிஐ, இ.டி, ஐ.டி எதற்கும் அஞ்ச மாட்டோம். மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மாதங்களில் ஏழு மாநாடுகள். ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் பேரை சந்தித்துள்ளேன். இப்போது காட்டுவது ட்ரைலர் தான். திருச்சியில் மார்ச் 9ஆம் தேதி பத்து லட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடு பார்க்கப் போகிறது. மெயின் பிக்சர் திருச்சியில் உள்ளது. மக்களிடம் கேளுங்கள் தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இந்தப் போரில் தமிழ்நாடு வெல்லும். ஒன்றாக இந்தி திணிப்பை எதிர்த்து வெல்வோம். ஒன்றாக மாநில சுயாட்சியை மீட்க வெல்வோம். உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக இருக்க வேண்டும் இது என் வாக்குறுதி” என்றார்.
பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!
'அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்போ, தீர்ப்பில்லையோ... வரி ரத்தோ, வரி ரத்து இல்லையோ... நான் வரி போட்டே தீருவேன்' என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்கிறார் போலும். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20), 'அதிபர் அதிகாரத்தை மீறி சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், உலக நாடுகளின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது' என்று ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதம், IEEPA-ன் கீழ், உலக நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவித்த வரிகள் ரத்து செய்யப்படுகின்றன. ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? ஆனால், எப்படியாவது வரி போட்டே ஆக வேண்டும் என்று ட்ரம்ப் உறுதியாகி இருக்கிறார். இதற்காக, தற்போது புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க சாசனத்தின் படி, வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122 தான் அது. வர்த்தக பற்றாக்குறை எழும்போது, இந்தச் சட்டத்தின் கீழ், 15 சதவிகிதம் வரை வரி விதிக்க முடியும். தீர்ப்பு வந்த அன்று, வெள்ளிக்கிழமை இந்தச் சட்டத்தின் கீழ், உலக நாடுகளின் மீது 10 சதவிகித வரியை விதித்திருந்தார் ட்ரம்ப். நேற்று, அதை 15 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார். இந்த வரி விதிப்பு வரும் 24-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலே சொன்ன சட்டத்தின் கீழ், 150 நாள்கள் மட்டுமே வரி விதிக்க முடியும். அதற்குள் ட்ரம்ப் அரசாங்கம் வலுவாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் வரி விதிப்பைக் கொண்டு வரும். அது எப்படி இருக்கப் போகிறதோ? சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின் பிளான்
பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!
'அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்போ, தீர்ப்பில்லையோ... வரி ரத்தோ, வரி ரத்து இல்லையோ... நான் வரி போட்டே தீருவேன்' என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்கிறார் போலும். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20), 'அதிபர் அதிகாரத்தை மீறி சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், உலக நாடுகளின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது' என்று ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதம், IEEPA-ன் கீழ், உலக நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவித்த வரிகள் ரத்து செய்யப்படுகின்றன. ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? ஆனால், எப்படியாவது வரி போட்டே ஆக வேண்டும் என்று ட்ரம்ப் உறுதியாகி இருக்கிறார். இதற்காக, தற்போது புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க சாசனத்தின் படி, வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122 தான் அது. வர்த்தக பற்றாக்குறை எழும்போது, இந்தச் சட்டத்தின் கீழ், 15 சதவிகிதம் வரை வரி விதிக்க முடியும். தீர்ப்பு வந்த அன்று, வெள்ளிக்கிழமை இந்தச் சட்டத்தின் கீழ், உலக நாடுகளின் மீது 10 சதவிகித வரியை விதித்திருந்தார் ட்ரம்ப். நேற்று, அதை 15 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார். இந்த வரி விதிப்பு வரும் 24-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலே சொன்ன சட்டத்தின் கீழ், 150 நாள்கள் மட்டுமே வரி விதிக்க முடியும். அதற்குள் ட்ரம்ப் அரசாங்கம் வலுவாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் வரி விதிப்பைக் கொண்டு வரும். அது எப்படி இருக்கப் போகிறதோ? சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின் பிளான்
வேலூர்: விஜய்க்காகத் தயாரான பிரமாண்ட பந்தல்; 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி - பரபரக்கும் ஏற்பாடுகள்!
வே லூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அடுத்துள்ள அகரம்சேரியில் நாளை நடைபெறும் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக 4,900 பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை `மக்கள் சந்திப்புக் கூட்டம்’ என்ற பெயரில் நடைபெற்றுவந்த விஜய் நிகழ்ச்சிகளில் கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், முன்னேற்பாடு இல்லாததாலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வந்தன. இதனை தவிர்க்கும் பொருட்டு, ``மக்கள் சந்திப்பு என்ற பெயரை மாற்றி `நிர்வாகிகள் சந்திப்பு’ என்கிற பெயரில் கூட்டம் நடத்தினால் மட்டுமே நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்கப்படும்’’ என்று வேலூர் மாவட்டக் காவல்துறை அறிவுறுத்தியது. அதனை ஏற்று நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி என்கிற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது வேலூர் மாவட்ட த.வெ.க தலைமை. பிரமாண்ட பந்தல் அதன்படி, நாளை காலையில் சாலை மார்க்கமாக வேலூருக்கு வரவுள்ளார் விஜய். கூட்ட அரங்கிற்குள் விஜய்யின் கார் நுழைவதற்காக தனி வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக உள்ளே நுழையும் விஜய், பந்தல் முகப்புப் பகுதிக்குச் சென்றடைந்து, அங்குத் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரசார வாகனத்தில் ஏறி நின்று பேச உள்ளார். முன்னதாக, 4,900 பேருக்கு க்யூ.ஆர் கோடுடன்கூடிய அனுமதி பாஸ் வழங்கப்பட்டு, அதை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த வகையிலும் அனுமதி கிடையாது என்பதால், அவர்கள் விஜய்யை சந்திக்க வர வேண்டாம். குறிப்பாக, பெண்கள், குழந்தைகளுடன் அவரவர் வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்கள் மூலமாக விஜய் பேசுவதை கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் த.வெ.க-வினர் அறிவுறுத்தியிருக்கின்றனர். விஜய் அனுமதி பாஸ் இல்லாதவர்கள் நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைவதையும், அரங்கு வெளியே ரசிகர்கள் கூடுவதையும் தடுக்க 35 அடி தொலைவுக்கு முன்னதாகவே இரண்டு இடங்களில் 10 அடி உயரத்தில் தடுப்புகள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பந்தலுக்குள் விஜய்க்கும், நிர்வாகிகள் அமரும் இடத்துக்கும் இடையிலும் சுமார் 60 அடிக்கு இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் மிகக் கவனமாக கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர் த.வெ.க நிர்வாகிகள்.
வேலூர்: விஜய்க்காகத் தயாரான பிரமாண்ட பந்தல்; 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி - பரபரக்கும் ஏற்பாடுகள்!
வே லூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அடுத்துள்ள அகரம்சேரியில் நாளை நடைபெறும் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக 4,900 பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை `மக்கள் சந்திப்புக் கூட்டம்’ என்ற பெயரில் நடைபெற்றுவந்த விஜய் நிகழ்ச்சிகளில் கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், முன்னேற்பாடு இல்லாததாலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வந்தன. இதனை தவிர்க்கும் பொருட்டு, ``மக்கள் சந்திப்பு என்ற பெயரை மாற்றி `நிர்வாகிகள் சந்திப்பு’ என்கிற பெயரில் கூட்டம் நடத்தினால் மட்டுமே நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்கப்படும்’’ என்று வேலூர் மாவட்டக் காவல்துறை அறிவுறுத்தியது. அதனை ஏற்று நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி என்கிற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது வேலூர் மாவட்ட த.வெ.க தலைமை. பிரமாண்ட பந்தல் அதன்படி, நாளை காலையில் சாலை மார்க்கமாக வேலூருக்கு வரவுள்ளார் விஜய். கூட்ட அரங்கிற்குள் விஜய்யின் கார் நுழைவதற்காக தனி வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக உள்ளே நுழையும் விஜய், பந்தல் முகப்புப் பகுதிக்குச் சென்றடைந்து, அங்குத் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரசார வாகனத்தில் ஏறி நின்று பேச உள்ளார். முன்னதாக, 4,900 பேருக்கு க்யூ.ஆர் கோடுடன்கூடிய அனுமதி பாஸ் வழங்கப்பட்டு, அதை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த வகையிலும் அனுமதி கிடையாது என்பதால், அவர்கள் விஜய்யை சந்திக்க வர வேண்டாம். குறிப்பாக, பெண்கள், குழந்தைகளுடன் அவரவர் வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்கள் மூலமாக விஜய் பேசுவதை கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் த.வெ.க-வினர் அறிவுறுத்தியிருக்கின்றனர். விஜய் அனுமதி பாஸ் இல்லாதவர்கள் நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைவதையும், அரங்கு வெளியே ரசிகர்கள் கூடுவதையும் தடுக்க 35 அடி தொலைவுக்கு முன்னதாகவே இரண்டு இடங்களில் 10 அடி உயரத்தில் தடுப்புகள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பந்தலுக்குள் விஜய்க்கும், நிர்வாகிகள் அமரும் இடத்துக்கும் இடையிலும் சுமார் 60 அடிக்கு இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் மிகக் கவனமாக கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர் த.வெ.க நிர்வாகிகள்.
குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் - சுரேஷ் கோபி
கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், குருவாயூர் தேவசம் போர்டின் தலைவராகி குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. அதைத்தாண்டி நான் வேறு எதுவும் விரும்பவில்லை. இப்போது நான் இருக்கும் நிலை எனது ஆசை அல்ல. இதைச்சொல்வதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன். இல்லையென்றால், வட இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் 'சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குருவாயூர் தேவசம் போர்டு தலைவராகப் போய்விட்டார்' என்று கிளப்பிவிட்டுவிடுவார்கள். ஒருவிதத்திலும் வாழமுடியாத நிலை ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய பல பெண்கள் இருக்கிறார்கள். அது என் பாட்டியிடம் இருந்து தொடங்குகிறது. என் பாட்டி சுவையான மற்றும் சத்தான உணவை சமைத்துக் கொடுத்தார். பின்னர் அதை என் அம்மா ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு என் சக்தியாக மனைவி ராதிகா உள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி பிள்ளைகளை வளர்ப்பதில் என் மனைவி ராதிகா முக்கிய பங்குவகித்தார். அதை எல்லாம் நான் முக்கிய விஷயமாக பார்க்கிறேன். என் வருமான கணக்குகளை பார்த்தால் என் மனைவிக்கு நான் அளிக்கும் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியவரும். எனக்கு ஒரு பிளாட் இருக்கிறது என்றால், அதில் ஒரு தளம் என் பெயரிலும், அடுத்த தளம் என் மனைவி பெயரிலும் இருக்கும். எனது சொத்துக்களில் பாதி என் மனைவி பெயரில் இருக்கும். என் பெயரில் ஒரு சொத்து இருந்தால், என் மனைவி ராதிகா பெயரில் இரண்டு சொத்துக்கள் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். சுரேஷ்கோபி மத்திய அமைச்சர் பதவியைத் தவிர, மற்ற எல்லா ஆவணங்களிலும் என் மனைவிக்கு சமமான பங்கு அளிக்கும் வகையில் நான் ஒரு தெளிவான கோட்டை ஏற்படுத்தி உள்ளேன். அந்தக் கோடு என் இதயத்திலும் உள்ளது. அரசியல் ஆர்வலராக மாறுவதற்கான தகுதி நேர்மையாகும். இந்தத் தகுதி நமக்கு இருந்தால், நம் எதிரிகள் நம்மைப் பார்த்து பயப்படுவார்கள் என்றார்.
குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் - சுரேஷ் கோபி
கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், குருவாயூர் தேவசம் போர்டின் தலைவராகி குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. அதைத்தாண்டி நான் வேறு எதுவும் விரும்பவில்லை. இப்போது நான் இருக்கும் நிலை எனது ஆசை அல்ல. இதைச்சொல்வதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன். இல்லையென்றால், வட இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் 'சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குருவாயூர் தேவசம் போர்டு தலைவராகப் போய்விட்டார்' என்று கிளப்பிவிட்டுவிடுவார்கள். ஒருவிதத்திலும் வாழமுடியாத நிலை ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய பல பெண்கள் இருக்கிறார்கள். அது என் பாட்டியிடம் இருந்து தொடங்குகிறது. என் பாட்டி சுவையான மற்றும் சத்தான உணவை சமைத்துக் கொடுத்தார். பின்னர் அதை என் அம்மா ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு என் சக்தியாக மனைவி ராதிகா உள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி பிள்ளைகளை வளர்ப்பதில் என் மனைவி ராதிகா முக்கிய பங்குவகித்தார். அதை எல்லாம் நான் முக்கிய விஷயமாக பார்க்கிறேன். என் வருமான கணக்குகளை பார்த்தால் என் மனைவிக்கு நான் அளிக்கும் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியவரும். எனக்கு ஒரு பிளாட் இருக்கிறது என்றால், அதில் ஒரு தளம் என் பெயரிலும், அடுத்த தளம் என் மனைவி பெயரிலும் இருக்கும். எனது சொத்துக்களில் பாதி என் மனைவி பெயரில் இருக்கும். என் பெயரில் ஒரு சொத்து இருந்தால், என் மனைவி ராதிகா பெயரில் இரண்டு சொத்துக்கள் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். சுரேஷ்கோபி மத்திய அமைச்சர் பதவியைத் தவிர, மற்ற எல்லா ஆவணங்களிலும் என் மனைவிக்கு சமமான பங்கு அளிக்கும் வகையில் நான் ஒரு தெளிவான கோட்டை ஏற்படுத்தி உள்ளேன். அந்தக் கோடு என் இதயத்திலும் உள்ளது. அரசியல் ஆர்வலராக மாறுவதற்கான தகுதி நேர்மையாகும். இந்தத் தகுதி நமக்கு இருந்தால், நம் எதிரிகள் நம்மைப் பார்த்து பயப்படுவார்கள் என்றார்.
நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேறுசில கட்சிகளை இணைக்க திட்டம் இருக்கிறது என்றும் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவால் தொகுதிகளை தியாகம் செய்ய வேண்டும் என்றும் திமுக கூறியது. ஸ்டாலின்- காதர் மொகிதீன் 5 தொகுதிகளை தராவிட்டால் 4 தொகுதிகளையாவது தர வேண்டுமென்று கேட்டுள்ளோம். கடந்த முறை 3 தொகுதிகளை தந்த திமுக இம்முறை 2 தொகுதிகளை அளிக்க முன்வந்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் அழைப்பு வரும். போட்டியிட சின்னம் சார்ந்து எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு ஏணி சின்னம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை சின்னம் பிரச்னை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேறுசில கட்சிகளை இணைக்க திட்டம் இருக்கிறது என்றும் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவால் தொகுதிகளை தியாகம் செய்ய வேண்டும் என்றும் திமுக கூறியது. ஸ்டாலின்- காதர் மொகிதீன் 5 தொகுதிகளை தராவிட்டால் 4 தொகுதிகளையாவது தர வேண்டுமென்று கேட்டுள்ளோம். கடந்த முறை 3 தொகுதிகளை தந்த திமுக இம்முறை 2 தொகுதிகளை அளிக்க முன்வந்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் அழைப்பு வரும். போட்டியிட சின்னம் சார்ந்து எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு ஏணி சின்னம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை சின்னம் பிரச்னை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தள்ளிப்போகும் பேச்சுவார்த்தை; இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில் சுணக்கம்?
கடந்த 2-ம் தேதி, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிப்பை வெளியிட்டார்கள் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டு, வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது. தற்போது இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, அது 18 சதவிகிதம் ஆக குறையும். ஆக, இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மிகப் பெரிய ஹேப்பி நியூஸாக இருந்தது. ட்ரம்ப் Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? ஆனால், இந்த ஹேப்பி நியூஸ் தற்போது சுணங்கி உள்ளது. ஆம்... ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்த இந்திய அதிகாரிகள் நாளை அமெரிக்கா செல்ல இருந்தனர். இந்தச் சந்திப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்... ஒன்று, 'அதிகாரத்தை மீறி ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வரி விதித்துள்ளார்' என்று வரிகளை ரத்து செய்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். இன்னொன்று, ட்ரம்ப் வருகிற 24-ம் தேதி முதல், உலக நாடுகளின் மீது 15 சதவிகிதம் வரி விதித்துள்ளார். அடுத்த சில மாதங்களில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப சட்டத்திற்கு உட்பட்டு வரி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனால், இனி அனைத்து நாடுகளின் வரியின் அளவுகள் மாற உள்ளது. அதைப் பொறுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை எடுத்துச் செல்லலாம் என்று நாளைய சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளின் மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட' ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன?
TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர். செயல்வீரர்கள் கூட்டம் ஆதவ் அர்ஜூன் பேசுகையில், 'பிகில் படத்தில் 'நம்ம ஆளுங்களை எல்லாம் அடிச்சிட்டாங்க' என ட்ரைவர் சொல்ல 'உடனே அந்த இடத்துக்கு வண்டியை விடு'னு தலைவர் சொல்வார். 'தொக்கா மாட்னானுக' என தலைவர் வசனம் பேசிவிட்டு கார் கதவை திறக்கையிலேயே 5 பேர் பறப்பார்கள். துறைமுகம் தொகுதியில் அமைதியாக பிரசாரம் செய்த எங்கள் நிர்வாகிகள் மீது கை வைத்ததால்தான் தலைவர் முதலில் வட சென்னையில் களமிறங்குகிறார். சென்னை எங்களின் கோட்டை என்கிறார்களே அதனால்தான் முதலில் சென்னைக்குள் இறங்குகிறோம். இனி சென்னைன்னா தவெகதான். வடசென்னையில் சேகர் பாபு என்றால் இங்கே அவரின் காட்பாதர் வி.எஸ்.பாபு இருக்கிறார். செயல்வீரர்கள் கூட்டம் வடசென்னை மக்கள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தை திமுக உருவாக்கிவிட்டது. இங்கே இருக்கும் அத்தனை மக்களும் உழைப்பாளிகள். இங்கே எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை. திமுகவுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்யவே வேண்டாம். திமுக பற்றி வைகோ பேசியவற்றை எடுத்து போட்டாலே போதும். தீயசக்தி திமுகவை வீழ்த்த கேப்டன் உருவாக்கிய கட்சி தேமுதிக. தண்ணி போட்றவன் எல்லாம் கேப்டன் இல்லனு திமுக பேசுனாங்க. ஸ்டாலின் அதை கேட்டு சிரிச்சிட்டு இருந்தாரு. கேப்டனின் ஆன்மா ஒரு போதும் இவர்களை மதிக்காது. எந்த இடத்துல அதிக வறுமை இருக்கிறதோ எந்த இடத்தில் மக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் போட்டியிட வேண்டுமென தலைவர் சொல்வார். தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பமாக இருக்கும்' என்றார். செயல் வீரர்கள் கூட்டம் ஆனந்த் பேசுகையில், 'ஆதவ் முன்வைத்த தீர்மானத்தை நாங்கள் எல்லாரும் மனதார ஏற்றுக்கொள்கிறோம். உங்களுடைய விருப்பத்தை தளபதியிடம் சொல்வோம்.' என்றார். -
TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர். செயல்வீரர்கள் கூட்டம் ஆதவ் அர்ஜூன் பேசுகையில், 'பிகில் படத்தில் 'நம்ம ஆளுங்களை எல்லாம் அடிச்சிட்டாங்க' என ட்ரைவர் சொல்ல 'உடனே அந்த இடத்துக்கு வண்டியை விடு'னு தலைவர் சொல்வார். 'தொக்கா மாட்னானுக' என தலைவர் வசனம் பேசிவிட்டு கார் கதவை திறக்கையிலேயே 5 பேர் பறப்பார்கள். துறைமுகம் தொகுதியில் அமைதியாக பிரசாரம் செய்த எங்கள் நிர்வாகிகள் மீது கை வைத்ததால்தான் தலைவர் முதலில் வட சென்னையில் களமிறங்குகிறார். சென்னை எங்களின் கோட்டை என்கிறார்களே அதனால்தான் முதலில் சென்னைக்குள் இறங்குகிறோம். இனி சென்னைன்னா தவெகதான். வடசென்னையில் சேகர் பாபு என்றால் இங்கே அவரின் காட்பாதர் வி.எஸ்.பாபு இருக்கிறார். செயல்வீரர்கள் கூட்டம் வடசென்னை மக்கள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தை திமுக உருவாக்கிவிட்டது. இங்கே இருக்கும் அத்தனை மக்களும் உழைப்பாளிகள். இங்கே எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை. திமுகவுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்யவே வேண்டாம். திமுக பற்றி வைகோ பேசியவற்றை எடுத்து போட்டாலே போதும். தீயசக்தி திமுகவை வீழ்த்த கேப்டன் உருவாக்கிய கட்சி தேமுதிக. தண்ணி போட்றவன் எல்லாம் கேப்டன் இல்லனு திமுக பேசுனாங்க. ஸ்டாலின் அதை கேட்டு சிரிச்சிட்டு இருந்தாரு. கேப்டனின் ஆன்மா ஒரு போதும் இவர்களை மதிக்காது. எந்த இடத்துல அதிக வறுமை இருக்கிறதோ எந்த இடத்தில் மக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் போட்டியிட வேண்டுமென தலைவர் சொல்வார். தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பமாக இருக்கும்' என்றார். செயல் வீரர்கள் கூட்டம் ஆனந்த் பேசுகையில், 'ஆதவ் முன்வைத்த தீர்மானத்தை நாங்கள் எல்லாரும் மனதார ஏற்றுக்கொள்கிறோம். உங்களுடைய விருப்பத்தை தளபதியிடம் சொல்வோம்.' என்றார். -
TVK : பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்!' - செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி செய்த நிர்வாகிகள்?
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர். செயல் வீரர்கள் கூட்டம் பெரம்பூர் தொகுதியின் மாவட்டச் செயலாளரான சிவா பேசுகையில், 'தலைவருக்கு மிகவும் பிடித்த தொகுதியாக பெரம்பூர் தொகுதியை மாற்றிவிட்டேன். ஓராண்டில் 44000 பேரை தொகுதிக்குள் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறேன். இன்னும் 35 நாட்கள்தான் இருக்கிறது. ஒரு நாளும் தூங்காமல் உழைத்து தளபதியை வெல்ல வைத்து முதல்வராக்க வேண்டும்' என்றார். சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் மா.செ வி.எஸ் பாபு பேசுகையில், 'முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான். இந்தத் தொகுதியிலிருந்துதான் முதல்வர் வரப்போகிறார். திமுக, அதிமுகவில் வட்டச் செயலாளர் பதவி வாங்கவே 25 வருடம் குடும்பத்தை விட்டு விட்டு சாக வேண்டும். ஆனால், தவெகவில்தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளர் ஆக முடியும். செயல் வீரர்கள் கூட்டம் திமுக, அதிமுகவினர் என்ன செய்வார்கள் என எனக்கு தெரியும். பொதுச்செயலாளர் மட்டும் உத்தரவிட்டால் நான் அத்தனை பேரையும் ஓட விட்டு விடுவேன். திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதியெல்லாம் தவெகவுக்குதான். தலைவரை மட்டும் ஒரு நான்கைந்து முறை தொகுதிக்கு பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள்' என்றார். செயல் வீரர்கள் கூட்டம் 'பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் அத்தனை பேரும் டெபாசிட் இழப்பார்கள்' என்றார் செங்கோட்டையன்

31 C