SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! - பரபர அப்டேஸ்!

இன்று காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த செங்கோட்டையன், சூட்டோடு சூடாக இன்று மாலை தவெக தலைவர் விஜய்யையும் சந்தித்திருக்கிறார். டெல்லியில் எடப்பாடி செய்ததைப் போல கார்களை மாற்றி மாற்றி பயணித்து பத்திரிகையாளர்களையும் குழம்ப வைத்தார். செங்கோட்டையன் நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் தங்கியிருந்தார். காலையில் 8:30 மணிக்கு இனோவா 'TN09 CE 9393' நம்பர் ப்ளேட் கொண்ட காரில் கிளம்பினார். மீடியாக்கள் வட்டமடிப்பதைப் பார்த்து யூடர்ன் போட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டார். 11:30 மணியளவில் மீண்டும் அதே '9393' காரில் கிளம்பி தலைமைச் செயலகம் வந்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அங்கிருந்து புறப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தார். ஊடகங்கள் மொத்தமும் தன்னை பாலோ செய்வதை அறிந்தவர், அங்கிருந்து வேறொரு காரில் புறப்பட்டு சென்றிருக்கிறார். அதே சமயத்தில் விஜய்யும் செங்கோட்டையனை சந்திப்பதற்காக நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். தவெகவில் செங்கோட்டையனின் இணைப்பு சார்ந்து அத்தனை விஷயங்களும் இறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விஜய்யை பெர்சனலாக சந்தித்து பேச திட்டமிட்டார் செங்கோட்டையன். செங்கோட்டையன் இதற்காக ஆதவ்வின் '5050' என்ற பேன்சி நம்பர் கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் செங்கோட்டையனை பிக் அப் செய்ய அனுப்பப்பட்டது. அந்த காரில் தேநீர் அருந்தும் வேளையில் மாலை 4:30 மணிக்கு மேலாக பட்டினம்பாக்கம் வந்து சேர்ந்தார் செங்கோட்டையன். அவர் வருவதற்கு முன்பே ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி, விஜய்யின் நண்பரான விஷ்ணு ரெட்டி ஆகியோரும் பட்டினப்பாக்க வீட்டில் ஆஜராகியிருந்தனர். செங்கோட்டையன் - விஜய் தரப்பு இடையேயான இந்த சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு நீண்டது. விஜய் - செங்கோட்டையன் சந்திப்பு பற்றிய அப்டேட்ஸ் சாட்டிலைட் சேனல்களில் லைவாக ஓட விஜய்யை பார்க்கவும் ஒரு கூட்டம் அங்கே கூடிவிட்டது. பட்டினப்பாக்கத்தில் முக்கியமான ஜங்ஷனில் விஜய்யின் அலுவலக அப்பார்ட்மெண்ட் இருப்பதால் போக்குவரத்து கடும் நெருக்கடிக்குள்ளாகியது. இதனால் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர். கூட்டம் கூடுகிறது சீக்கிரம் சந்திப்பை முடிக்க சொல்லுங்கள் என காவல்துறையினர் விஜய் தரப்புக்கு செக்யூரிட்டிகள் மூலம் மெசேஜ் சொல்லி அனுப்பினர். செங்கோட்டையனின் கார் ஒரு வழியாக மாலை 6:30 மணி வாக்கில் அந்த சந்திப்பு நிறைவடைந்தது. ஆதவ், ஆனந்த், ஜான் என எல்லாரும் தனித்தனி காரில் கிளம்பிச் சென்றனர். அதே '5050' எண் கொண்ட இன்னொரு ரக காரில் செங்கோட்டையனும் கிளம்பி சென்றார். நாளை பனையூர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள் சிலரோடு செங்கோட்டையன் தவெகவில் இணையவிருப்பதாக உறுதியாக கூறுகின்றனர். அதுவரைக்கும் சஸ்பென்ஸை உடைக்காமல் இருக்க நினைக்கிறதாம் விஜய் தரப்பு. அதனால்தான் செங்கோட்டையனும் கார்களை மாற்றி மாற்றி வித்தை காட்டி மௌனமும் காத்திருக்கிறார். நாளை உதயநிதியின் பிறந்தநாள். செங்கோட்டையனின் இணைப்பு விழாவை நாளை நடத்துவதன் மூலம், உடன்பிறப்புகளின் 'சின்னவர்' பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஓவர்டேக் செய்து மாஸ் காட்ட நினைக்கிறார்களாம். ஆனந்த் தட் ’யார் பெருசுன்னு அடிச்சு காட்டுங்க’ மொமென்ட். “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' ; ராஜினாமா, மெளனம், திடீர் குழப்பம் - செங்கோட்டையன் ரவுண்டிங்!

விகடன் 26 Nov 2025 10:27 pm

தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அரசு வேலை!

தென்காசியில் கடந்த 24ம் தேதி இடைகால் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். அன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த எம்.ஆர். கோபாலன் ஆகிய இரண்டு தனியார் பேருந்துகள் இடைகால் அருகிலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் பேருந்திற்குள் இருந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கிருத்திகா மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விபத்து ஏற்படுத்திய பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். பணி ஆணை வழங்கிய ஆட்சியர் உயிரிழந்தவர்களில் பார்வை மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் தாயும் ஒருவர். அந்த பெண்ணிடம் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். சிறுவயதிலேயே தந்தையையும் இழந்த நிலையில், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பெண் கிருத்திகாவுக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையினை அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.

விகடன் 26 Nov 2025 6:18 pm

தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அரசு வேலை!

தென்காசியில் கடந்த 24ம் தேதி இடைகால் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். அன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த எம்.ஆர். கோபாலன் ஆகிய இரண்டு தனியார் பேருந்துகள் இடைகால் அருகிலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் பேருந்திற்குள் இருந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கிருத்திகா மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விபத்து ஏற்படுத்திய பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். பணி ஆணை வழங்கிய ஆட்சியர் உயிரிழந்தவர்களில் பார்வை மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் தாயும் ஒருவர். அந்த பெண்ணிடம் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். சிறுவயதிலேயே தந்தையையும் இழந்த நிலையில், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பெண் கிருத்திகாவுக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையினை அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.

விகடன் 26 Nov 2025 6:18 pm

செங்கோட்டையன் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது - திருமாவளவன்

செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி, செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். செங்கோட்டையன் அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் இன்று (நவ.26) செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன் - விஜய் தற்போது தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் செங்கோட்டையன். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், செங்கோட்டையன் தவெக-வில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தன்னை பாஜக அழைத்து பேசியிருக்கிறது என ஏற்கனேவே செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவிற்கு பின்னடைவாக இருக்கும். அதேபோல நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமாவளவன் தவெகவில் பாஜக மற்றும் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஊடுருவல் நிகழ்ந்தால், அவருடைய அரசியல் கேள்விக்குறியாக மாறும் என்று பேசியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

விகடன் 26 Nov 2025 5:56 pm

செங்கோட்டையன் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது - திருமாவளவன்

செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி, செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். செங்கோட்டையன் அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் இன்று (நவ.26) செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன் - விஜய் தற்போது தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் செங்கோட்டையன். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், செங்கோட்டையன் தவெக-வில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தன்னை பாஜக அழைத்து பேசியிருக்கிறது என ஏற்கனேவே செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவிற்கு பின்னடைவாக இருக்கும். அதேபோல நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமாவளவன் தவெகவில் பாஜக மற்றும் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஊடுருவல் நிகழ்ந்தால், அவருடைய அரசியல் கேள்விக்குறியாக மாறும் என்று பேசியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

விகடன் 26 Nov 2025 5:56 pm

விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு; விவரம் என்ன?

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரை சந்தித்து செங்கோட்டையன் பேசி வருகிறார். செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. செங்கோட்டையனை தவெகவில் இணைக்கும் பணியை ஆதவ் அர்ஜூனா செய்து வருவதாகவும் பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ்,பெங்களூரு புகழேந்தி போன்றோரைச் சந்தித்து பேசியிருந்தார். செங்கோட்டையன் ``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம் காலை 11:30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்ட செங்கோட்டையன் தலைமைச் செயலகத்துக்கு வந்து சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் சேகர் பாபுவும் செங்கோட்டையனிடம் பேசியிருந்தார். இதனால் செங்கோட்டையனை திமுக இழுக்கப் பார்க்கிறது எனும் பேச்சும் அடிபட்டது. இந்நிலையில்தான் பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு பிற்பகல் 1 மணியளவில் விஜய் வந்திருந்தார். எம்.எல்.ஏக்கள் விடுதியிலிருந்த செங்கோட்டையன் பட்டினப்பாக்கம் சென்று இப்போது விஜய்யுடன் ஆலோசித்து வருகிறார். செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

விகடன் 26 Nov 2025 5:18 pm

ஈரோடு: பழனிசாமியின் லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

ஈரோடு மாவட்டம் சோலாரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ.278.62 கோடி மதிப்பில் 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு ஈரோடு வந்தபோது பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் சிலை அறிவித்தேன். இன்று அந்தச் சிலை திறக்கப்பட உள்ளது. தன்னை மேற்கு மண்டலக்காரர் என்று சொல்லிக் கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இதைச் செய்தாரா? சோலார் பஸ் ஸ்டாண்ட் அவர் செய்ததெல்லாம் துரோகம்தான். பச்சை துண்டு போட்டுக்கொண்டு தமிழ்நாட்டுக்குப் பச்சை துரோகம் செய்யும் பழனிசாமி என்று சொன்னவுடன், அவருக்குக் கோபம் வந்தது. நான் ஒரு விவசாயி, இப்போது விவசாயம் செய்கிறேன் என்றார். பழனிசாமி இப்போதும் துரோகம் செய்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் விவசாயி என்று சொல்வது விவசாயிகளை அவமானப்படுத்துவதற்குச் சமம். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள் நெல் கொள்முதலில் தமிழ்நாட்டு கோரிக்கையை பாஜக அரசு நிராகரித்துவிட்டது. பழனிச்சாமி உண்மையான விவசாயியாக இருந்தால், பிரதமரை தமிழ்நாட்டு கோரிக்கையை ஏற்க வேண்டும் எனச் சொல்லியிருக்க வேண்டும். டெல்லியில் பல கார்களில் சென்று, யார் யாரையோ சந்திக்கிறீர்கள். தமிழ்நாடு விவசாயிகளுக்காக பிரதமரைச் சந்திக்க டெல்லி சொல்கிறேன் என்று சொல்லுங்கள். தமிழ்நாட்டு சார்பாக நானே கார் அனுப்புகிறேன். பழனிசாமியின் புதிய லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து உள்ளது. இப்போது சென்செக்ஸ் கணக்கெடுப்பு நடத்தி மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்போது உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டம் முடிவடையும்போது 2035 ஆகி விடும். மக்கள்தொகை குறைவாக உள்ள வட மாநிலங்களுக்கு மெட்ரோ கொடுக்கிறார்கள். பாஜகவிற்கு வாக்களிக்காத தமிழகத்திற்கு எதையும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தால் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படும் என்று பழனிச்சாமி மற்றும் பாஜக கோவை சட்டமன்ற உறுப்பினர் சொல்கிறார். திமுக ஆட்சியில் உள்ளதால்தான் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். ‘மெட்ரோ கிடையாது போங்க...’ - கைவிரித்த பா.ஜ.க... கொந்தளிக்கும் கோவை, மதுரை! இவர்களெல்லாம் தமிழகத்திற்குக் கொடுக்கும் குடைச்சல் போதாமல், நிரந்தரமா கெடுக்க வேண்டும் என ஆளுநர் இருக்கிறார். தமிழகத்திற்குச் சேவை செய்ய வந்ததாக ஆளுநர் சொல்லிவிட்டு, தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்னை இருக்கிறது என்று பேசுகிறார். தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்னை இருக்கிறது. தீவிரவாத போக்கு நிலவக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளதாம், தமிழ் மொழி வளர்ச்சிக்காக எதுவும் நடக்கவில்லை, அனைவரும் ஆங்கிலம் படிக்கிறார்கள் இப்படி எல்லாம் அவர் பேசுவதற்கு உள்ளார் ஆளுநர். தீவிரவாதத்தைத் தடுக்க முடியாத பாஜக ஆட்சியைப் புகழ்ந்து பேசி உள்ள ஆளுநர், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் எனத் திமிரெடுத்து பேசி உள்ளார். அவர் வகிக்கக்கூடிய அரசியல் சாசன பொறுப்பிற்குத் துளியும் தகுதியற்ற தரவு குறைவான பேச்சு இது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எங்கள் மாணவர்கள் உலக வாய்ப்புக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். தமிழ் மொழி பற்றி நீங்கள் வகுப்பு நடத்த வேண்டாம். ஆளுநர் ரவி நீங்கள் தமிழ் வெறுப்பைத் தொடர்ந்து பேச வேண்டும். அப்போதுதான் எங்களது வேலை எளிமையாகும். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டார். இந்த ஆண்டு புதிய வழித்தடத்திற்கான ரயில் சேவைக்கு 31,458 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தெற்கு ரயில்வேவிற்க மத்திய அரசு 1% சதவிதம் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பாஜக செயற்கைப் பேரிடர் செய்கிறது என்று பேசினார். தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

விகடன் 26 Nov 2025 3:46 pm

ஈரோடு: பழனிசாமியின் லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

ஈரோடு மாவட்டம் சோலாரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ.278.62 கோடி மதிப்பில் 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு ஈரோடு வந்தபோது பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் சிலை அறிவித்தேன். இன்று அந்தச் சிலை திறக்கப்பட உள்ளது. தன்னை மேற்கு மண்டலக்காரர் என்று சொல்லிக் கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இதைச் செய்தாரா? சோலார் பஸ் ஸ்டாண்ட் அவர் செய்ததெல்லாம் துரோகம்தான். பச்சை துண்டு போட்டுக்கொண்டு தமிழ்நாட்டுக்குப் பச்சை துரோகம் செய்யும் பழனிசாமி என்று சொன்னவுடன், அவருக்குக் கோபம் வந்தது. நான் ஒரு விவசாயி, இப்போது விவசாயம் செய்கிறேன் என்றார். பழனிசாமி இப்போதும் துரோகம் செய்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் விவசாயி என்று சொல்வது விவசாயிகளை அவமானப்படுத்துவதற்குச் சமம். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள் நெல் கொள்முதலில் தமிழ்நாட்டு கோரிக்கையை பாஜக அரசு நிராகரித்துவிட்டது. பழனிச்சாமி உண்மையான விவசாயியாக இருந்தால், பிரதமரை தமிழ்நாட்டு கோரிக்கையை ஏற்க வேண்டும் எனச் சொல்லியிருக்க வேண்டும். டெல்லியில் பல கார்களில் சென்று, யார் யாரையோ சந்திக்கிறீர்கள். தமிழ்நாடு விவசாயிகளுக்காக பிரதமரைச் சந்திக்க டெல்லி சொல்கிறேன் என்று சொல்லுங்கள். தமிழ்நாட்டு சார்பாக நானே கார் அனுப்புகிறேன். பழனிசாமியின் புதிய லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து உள்ளது. இப்போது சென்செக்ஸ் கணக்கெடுப்பு நடத்தி மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்போது உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டம் முடிவடையும்போது 2035 ஆகி விடும். மக்கள்தொகை குறைவாக உள்ள வட மாநிலங்களுக்கு மெட்ரோ கொடுக்கிறார்கள். பாஜகவிற்கு வாக்களிக்காத தமிழகத்திற்கு எதையும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தால் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படும் என்று பழனிச்சாமி மற்றும் பாஜக கோவை சட்டமன்ற உறுப்பினர் சொல்கிறார். திமுக ஆட்சியில் உள்ளதால்தான் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். ‘மெட்ரோ கிடையாது போங்க...’ - கைவிரித்த பா.ஜ.க... கொந்தளிக்கும் கோவை, மதுரை! இவர்களெல்லாம் தமிழகத்திற்குக் கொடுக்கும் குடைச்சல் போதாமல், நிரந்தரமா கெடுக்க வேண்டும் என ஆளுநர் இருக்கிறார். தமிழகத்திற்குச் சேவை செய்ய வந்ததாக ஆளுநர் சொல்லிவிட்டு, தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்னை இருக்கிறது என்று பேசுகிறார். தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்னை இருக்கிறது. தீவிரவாத போக்கு நிலவக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளதாம், தமிழ் மொழி வளர்ச்சிக்காக எதுவும் நடக்கவில்லை, அனைவரும் ஆங்கிலம் படிக்கிறார்கள் இப்படி எல்லாம் அவர் பேசுவதற்கு உள்ளார் ஆளுநர். தீவிரவாதத்தைத் தடுக்க முடியாத பாஜக ஆட்சியைப் புகழ்ந்து பேசி உள்ள ஆளுநர், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் எனத் திமிரெடுத்து பேசி உள்ளார். அவர் வகிக்கக்கூடிய அரசியல் சாசன பொறுப்பிற்குத் துளியும் தகுதியற்ற தரவு குறைவான பேச்சு இது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எங்கள் மாணவர்கள் உலக வாய்ப்புக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். தமிழ் மொழி பற்றி நீங்கள் வகுப்பு நடத்த வேண்டாம். ஆளுநர் ரவி நீங்கள் தமிழ் வெறுப்பைத் தொடர்ந்து பேச வேண்டும். அப்போதுதான் எங்களது வேலை எளிமையாகும். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டார். இந்த ஆண்டு புதிய வழித்தடத்திற்கான ரயில் சேவைக்கு 31,458 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தெற்கு ரயில்வேவிற்க மத்திய அரசு 1% சதவிதம் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பாஜக செயற்கைப் பேரிடர் செய்கிறது என்று பேசினார். தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

விகடன் 26 Nov 2025 3:46 pm

தூய்மைப் பணியாளர் பிர்ச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும் - ஆதவ் அர்ஜுனா

பணி நிரந்தரம் வேண்டியும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் மாளிக்கைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் தொடர் போராட்டம் நடத்தி கைதாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்போது அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.  தூய்மைப் பணியாளர்கள் இன்று விஜய்யின் தவெக கட்சியின் தரப்பில் இருந்து ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் ஆகியோர் அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இதுதான் பண்ணையார்த்தனம் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் ஆதவ் அர்ஜுனா, தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு உணவு வழங்குகிறோம் என்கிறார்கள். இதுதான் பண்ணையார்த்தனம். அவர்களின் பிரச்னையை சரிசெய்யாமல், உணவு வழங்குகிறோம் என பிச்சை போடுவதுபோல பண்ணையார்தனம் செய்கிறார்கள். எங்கள் உணவை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம், எங்கள் வீடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், எங்கள் குழந்தைகளை நாங்கள் படிக்க வைத்துக் கொள்கிறோம். அரசு எங்களுக்கான உரிமையை, கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்கிறார்கள். உண்ணாநிலை போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் 'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' - கு.பாரதி குற்றச்சாட்டு! இதுதான் சமூக நீதியா? மேலும், எங்களை பணியில் இருந்து தூக்கிவிட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல முதல்வர், அமைச்சர்கள், மாநகராட்சி ஆணையரை சந்திக்க வேண்டுகோள் வைக்கிறோம். ஆனால், எங்களை தனியார் நிறுவனத்திடம் போய் பேசச் சொல்லி அரசே சொல்லுகிறது என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். 16 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யாமல், இன்று அவர்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது அரசு. ஒட்டுமொத்த ஆதி திராவிடர் மக்களுக்கு அநீதி செய்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் சமூக நீதியா? இதுதான் அவர்களின் சமத்துவ அரசியலா? விஜய் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். போராட்டம் வெடிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதியைக் கேட்டவுடனே எங்கள் தவெக தலைவர் விஜய் கடந்த 4, 5 நாள்களாக மிகவும் வருத்தத்தில் இருந்தார். உடனே அவர்களை நேரில் சென்று பார்க்க எங்களுக்கு ஆணையிட்டார். தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 100 நாள்களுக்கு மேல் போராடி வருகிறார்கள். அவர்களை பலமுறை கைது செய்து போராட்டத்தை அடக்கி ஒடுக்க நினைத்தது திமுக அரசு. அவர்கள் இன்னும் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் இருக்கின்றனர். இப்போது நான்கு பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் 'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தூய்மைப் பணியாளர்களுக்காக களத்தில் இறங்கி துணை நிற்க வேண்டும். சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கும் மாநகராட்சியில் இந்த பிரச்னைகள் இருக்கின்றன. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தவெக சார்பில் தலைவர் விஜய்யிடம் கலந்தாலோசித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும், போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருக்கிறார் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா.

விகடன் 26 Nov 2025 3:12 pm

தூய்மைப் பணியாளர் பிரச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும் - ஆதவ் அர்ஜுனா

பணி நிரந்தரம் வேண்டியும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் மாளிக்கைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் தொடர் போராட்டம் நடத்தி கைதாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்போது அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.  தூய்மைப் பணியாளர்கள் இன்று விஜய்யின் தவெக கட்சியின் தரப்பில் இருந்து ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் ஆகியோர் அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இதுதான் பண்ணையார்த்தனம் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் ஆதவ் அர்ஜுனா, தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு உணவு வழங்குகிறோம் என்கிறார்கள். இதுதான் பண்ணையார்த்தனம். அவர்களின் பிரச்னையை சரிசெய்யாமல், உணவு வழங்குகிறோம் என பிச்சை போடுவதுபோல பண்ணையார்தனம் செய்கிறார்கள். எங்கள் உணவை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம், எங்கள் வீடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், எங்கள் குழந்தைகளை நாங்கள் படிக்க வைத்துக் கொள்கிறோம். அரசு எங்களுக்கான உரிமையை, கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்கிறார்கள். உண்ணாநிலை போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் 'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' - கு.பாரதி குற்றச்சாட்டு! இதுதான் சமூக நீதியா? மேலும், எங்களை பணியில் இருந்து தூக்கிவிட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல முதல்வர், அமைச்சர்கள், மாநகராட்சி ஆணையரை சந்திக்க வேண்டுகோள் வைக்கிறோம். ஆனால், எங்களை தனியார் நிறுவனத்திடம் போய் பேசச் சொல்லி அரசே சொல்லுகிறது என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். 16 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யாமல், இன்று அவர்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது அரசு. ஒட்டுமொத்த ஆதி திராவிடர் மக்களுக்கு அநீதி செய்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் சமூக நீதியா? இதுதான் அவர்களின் சமத்துவ அரசியலா? விஜய் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். போராட்டம் வெடிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதியைக் கேட்டவுடனே எங்கள் தவெக தலைவர் விஜய் கடந்த 4, 5 நாள்களாக மிகவும் வருத்தத்தில் இருந்தார். உடனே அவர்களை நேரில் சென்று பார்க்க எங்களுக்கு ஆணையிட்டார். தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 100 நாள்களுக்கு மேல் போராடி வருகிறார்கள். அவர்களை பலமுறை கைது செய்து போராட்டத்தை அடக்கி ஒடுக்க நினைத்தது திமுக அரசு. அவர்கள் இன்னும் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் இருக்கின்றனர். இப்போது நான்கு பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் 'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தூய்மைப் பணியாளர்களுக்காக களத்தில் இறங்கி துணை நிற்க வேண்டும். சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கும் மாநகராட்சியில் இந்த பிரச்னைகள் இருக்கின்றன. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தவெக சார்பில் தலைவர் விஜய்யிடம் கலந்தாலோசித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும், போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருக்கிறார் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா.

விகடன் 26 Nov 2025 3:12 pm

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' ; ராஜினாமா, மெளனம், திடீர் குழப்பம் - செங்கோட்டையன் ரவுண்டிங்!

அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை ஆதவ் தரப்பு சந்தித்து பேசி தவெகவில் இணையும் சூழலை ஏற்படுத்தியதாக பனையூர் வட்டாரத்தினர் தகவல் சொல்கின்றனர். 'தவெகவில் இணைகிறீர்களா?' இந்நிலையில், நேற்று இரவு கோவையிலிருந்து சென்னை கிளம்பிய போதும் சென்னையில் வந்திறங்கிய போதும் விமான நிலையத்தில், 'தவெகவில் இணைகிறீர்களா?' எனும் கேள்விக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மௌனமாக கடந்து சென்றார். ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு வந்து சேர்ந்த செங்கோட்டையன் இன்று காலை 8:30 மணியளவில் இனோவா காரில் வெளியே புறப்பட்டார். மீடியாக்கள் சூழ்ந்திருப்பதை அறிந்த செங்கோட்டையன் அப்படியே யூடர்ன் அடித்து வீட்டுக்கு திரும்பிவிட்டார். செங்கோட்டையன் அடுத்த ஒரு மணி நேரத்தில் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனின் வீட்டுக்கு வந்து சந்தித்தார். வெளியே வந்தவர் செங்கோட்டையன் தவெகவுக்கு செல்லும் மனநிலையில் இருப்பதை உறுதி செய்தார். அடுத்ததாக பெங்களூரு புகழேந்தி வந்தார். செங்கோட்டையனை சந்தித்து சில நிமிடங்கள் பேசியவர், 'அவர் எதுவாக இருந்தாலும் உங்களிடம் கூறிவிட்டுதான் செல்வார்.' என பொதுவாக கூறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே செங்கோட்டையனின் இனோவா கார் தலைமைச் செயலகத்தை நோக்கி செல்ல தயாரானது. செய்தியாளர்கள் சூழ காரில் ஏறிய போதும், 'ராஜினாமா செய்யப்போகிறேன் என்றோ...தவெகவில் இணையப்போகிறேன் என்றோ...' எதையும் கமிட் செய்யவில்லை. கையெடுத்து கும்பிட்டபடி மௌனமாக சென்றுவிட்டார். 'ஒரு நாள் பொறுங்களேன்...சொல்றேன்...' செங்கோட்டையனின் அந்த '9393' பேன்சி நம்பர் காரை ஊடகத்தினரின் வண்டிகள் பாலோ செய்தது. பீச் ரோட்டில் செங்கோட்டையனின் வண்டி ஏற, அவர் ஜெ.சமாதிக்கு செல்கிறாரோ எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஜெ.சமாதியையும் தாண்டி சென்ற செங்கோட்டையனின் கார் தலைமைச் செயலகத்தில் சபாநாயகரின் அறை அருகே இருக்கும் கேட்டில் நுழைந்தது. சபாநாயகர் அறைக்குள் நுழையும் போதும் மைக்குகள் செங்கோட்டையனை துரத்தின. அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, 'ஒரு நாள் பொறுங்களேன்...சொல்றேன்...' என சைகையில் ஊடகத்தினரை நோக்கி மெசேஜ் கொடுத்தார். செங்கோட்டையன் அப்பாவு - செங்கோட்டையன் மீட்டிங் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு நீண்டது. இடையில் அமைச்சர் சேகர் பாபுவும் அப்பாவு அறைக்கு வந்து செங்கோட்டையனிடம் சில நிமிடங்கள் பேசிச் சென்றார். 45 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த செங்கோட்டையன், அப்போதும் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. செய்தியாளர்கள் கூட்டதை பிளந்து கொண்டு காரில் ஏறியவரிடம், 'அதிமுக கொடியை இன்னும் கழட்டவில்லையா...' என கேட்டதற்கும் எந்த ரியாக்சனும் இல்லாமல் சென்றார். தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட செங்கோட்டையன் எம்.எல்.ஏக்கள் விடுதியில் சில மணி நேரமாக இருக்கிறார். செங்கோட்டையன் நாளை விஜய்யை சந்தித்து தவெகவில் இணைவதுதான் திட்டம் என்கின்றனர் ஒரு தரப்பில். இடையில், அதிமுக அதிருப்தியாளர்களை திமுகவில் இணைக்கும் அசைன்மென்டை கையிலெடுத்திருக்கும் சேகர் பாபு உட்பட சிலரும் செங்கோட்டையனை சந்தித்து முக்கியமான சில விஷயங்களை பேசுவதால், செங்கோட்டையன் கடைசி நிமிட குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் சொல்கின்றனர். செங்கோட்டையன் எப்போது மௌனம் கலைப்பார்? அப்போது தான் அனைத்து வெட்ட வெளிச்சமாகும்.

விகடன் 26 Nov 2025 2:00 pm

மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?

வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் அதிகம் குடியேறுவதை தடுப்பதும், அமெரிக்கர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஃபுல் ஃபோக்கஸ். அவர் முன்னெடுத்த தேர்தல் பிராசாரமும் இது தான். அதற்கேற்ற மாதிரி அதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றினார். அடுத்ததாக விசா நடைமுறைகளை கெடுபிடிகளை அதிகரித்து வருகிறார். அதில் ஒன்று தான் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு. இது இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. காரணம், இந்த விசா வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. ஹெச்-1பி விசா H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு? 'பிராஜெக்ட் ஃபயர்வால்' திட்டம் இந்த சூழலில் தான், ஹெச்-1பி விசாவிற்கு மேலும் கெடுபிடியை கூட்டுவதை போல, 'பிராஜெக்ட் ஃபயர்வால் (Project Firewall)' என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது ட்ரம்பின் அரசாங்கம். இந்தக் குழு ஹெச்-1பி விசா விண்ணப்பத்தை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துகிறதா என்பதை கண்காணிக்கும். இந்தக் குழுவின் முக்கிய வேலை, வரும் விண்ணப்பங்களை, 'குறிப்பிட்ட வேலையை அமெரிக்கர்கள் செய்ய முடியுமா?' என்பதை ஆராய்வது தான். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம்... சம்பளத்தை உயர்த்தலாம் என்பதை ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டம் ஆகும். H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்

விகடன் 26 Nov 2025 1:40 pm

மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?

வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் அதிகம் குடியேறுவதை தடுப்பதும், அமெரிக்கர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஃபுல் ஃபோக்கஸ். அவர் முன்னெடுத்த தேர்தல் பிராசாரமும் இது தான். அதற்கேற்ற மாதிரி அதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றினார். அடுத்ததாக விசா நடைமுறைகளை கெடுபிடிகளை அதிகரித்து வருகிறார். அதில் ஒன்று தான் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு. இது இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. காரணம், இந்த விசா வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. ஹெச்-1பி விசா H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு? 'பிராஜெக்ட் ஃபயர்வால்' திட்டம் இந்த சூழலில் தான், ஹெச்-1பி விசாவிற்கு மேலும் கெடுபிடியை கூட்டுவதை போல, 'பிராஜெக்ட் ஃபயர்வால் (Project Firewall)' என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது ட்ரம்பின் அரசாங்கம். இந்தக் குழு ஹெச்-1பி விசா விண்ணப்பத்தை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துகிறதா என்பதை கண்காணிக்கும். இந்தக் குழுவின் முக்கிய வேலை, வரும் விண்ணப்பங்களை, 'குறிப்பிட்ட வேலையை அமெரிக்கர்கள் செய்ய முடியுமா?' என்பதை ஆராய்வது தான். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம்... சம்பளத்தை உயர்த்தலாம் என்பதை ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டம் ஆகும். H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்

விகடன் 26 Nov 2025 1:40 pm

விருதுநகர்: `கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி சரியாக நடைபெறவில்லை' - எழுந்த குற்றச்சாட்டு

விருதுநகர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு: கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர் ராஜ்குமார் தனது வார்டில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனை தீர்க்கப்படவில்லை. எனவே, அதை சரிசெய்ய வேண்டுமென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார். நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தோண்டி போடப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமென உறுப்பினர் வெங்கேடஷ் தெரிவித்தார். மேலும் அருப்புக்கோட்டை சாலையின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தில் சீரமைப்பதாகத் தெரிவித்தும், ஏன்? சரி செய்யவில்லையென உறுப்பினர்கள் ஜெயக்குமார், மிக்கேல்ராஜ் ஆகியோர் கேள்வி எழுப்பினர். சீரமைக்கும் பணி தொடங்கிய போது மழை வந்துவிட்டதால் தாமதமாகிவிட்டது. நாளை முதல் பணிகள் நடைபெறும் என தலைவர் பதிலளித்தார். அதேபோல் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கவில்லையென உறுப்பினர்கள் கலையரசன், சரவணன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். ஏற்கெனவே, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் அனுப்பியுள்ளோம் எனத் தலைவர் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு உள்ளதாக உள் தெருவில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் வந்துள்ளது. வழக்கு இல்லையென ஆதாரத்துடன் உறுப்பினர் உமாராணி கூறினார். நேரடியாக வந்து விளக்கம் தந்தால் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதில் கூறினார். விருதுநகர் நகர்மன்றக் கூட்டம் கணக்கீட்டுப் படிவங்கள் பற்றி பொது மக்களுக்குச் சரிவர தெரிவிக்கவில்லை. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பொது மக்களுக்கு படிவத்தை நிரப்பிட உதவ வேண்டும் என உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார். தனது வார்டு பகுதி மிகப்பெரியது. நகர்மன்ற கூட்டம் ஆனால், சரிவர படிவங்கள் வழங்கவில்லை. நிரப்பியும் வாங்கவில்லையென உறுப்பினர் முத்துராமன் புகார் தெரிவித்தார். குறைவான கால அவகாசம் உள்ள நிலையில் டிசம்பர் 4க்குள் படிவங்களை எப்படி பதிவேற்றம் செய்ய முடியும். எனவே, படிவங்களை வாக்காளர்களிடம் பெற்று பதிவேற்றம் செய்ய காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என உறுப்பினர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார். 60 ஆயிரம் வாக்காளர்களில் சுமார் 25 ஆயிரம் கணக்கீட்டுப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் குறைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட மேற்பார்வை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என ஆணையாளர் பதில் கூறினார்.

விகடன் 26 Nov 2025 12:38 pm

விருதுநகர்: `கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி சரியாக நடைபெறவில்லை' - எழுந்த குற்றச்சாட்டு

விருதுநகர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு: கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர் ராஜ்குமார் தனது வார்டில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனை தீர்க்கப்படவில்லை. எனவே, அதை சரிசெய்ய வேண்டுமென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார். நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தோண்டி போடப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமென உறுப்பினர் வெங்கேடஷ் தெரிவித்தார். மேலும் அருப்புக்கோட்டை சாலையின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தில் சீரமைப்பதாகத் தெரிவித்தும், ஏன்? சரி செய்யவில்லையென உறுப்பினர்கள் ஜெயக்குமார், மிக்கேல்ராஜ் ஆகியோர் கேள்வி எழுப்பினர். சீரமைக்கும் பணி தொடங்கிய போது மழை வந்துவிட்டதால் தாமதமாகிவிட்டது. நாளை முதல் பணிகள் நடைபெறும் என தலைவர் பதிலளித்தார். அதேபோல் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கவில்லையென உறுப்பினர்கள் கலையரசன், சரவணன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். ஏற்கெனவே, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் அனுப்பியுள்ளோம் எனத் தலைவர் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு உள்ளதாக உள் தெருவில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் வந்துள்ளது. வழக்கு இல்லையென ஆதாரத்துடன் உறுப்பினர் உமாராணி கூறினார். நேரடியாக வந்து விளக்கம் தந்தால் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதில் கூறினார். விருதுநகர் நகர்மன்றக் கூட்டம் கணக்கீட்டுப் படிவங்கள் பற்றி பொது மக்களுக்குச் சரிவர தெரிவிக்கவில்லை. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பொது மக்களுக்கு படிவத்தை நிரப்பிட உதவ வேண்டும் என உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார். தனது வார்டு பகுதி மிகப்பெரியது. நகர்மன்ற கூட்டம் ஆனால், சரிவர படிவங்கள் வழங்கவில்லை. நிரப்பியும் வாங்கவில்லையென உறுப்பினர் முத்துராமன் புகார் தெரிவித்தார். குறைவான கால அவகாசம் உள்ள நிலையில் டிசம்பர் 4க்குள் படிவங்களை எப்படி பதிவேற்றம் செய்ய முடியும். எனவே, படிவங்களை வாக்காளர்களிடம் பெற்று பதிவேற்றம் செய்ய காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என உறுப்பினர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார். 60 ஆயிரம் வாக்காளர்களில் சுமார் 25 ஆயிரம் கணக்கீட்டுப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் குறைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட மேற்பார்வை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என ஆணையாளர் பதில் கூறினார்.

விகடன் 26 Nov 2025 12:38 pm

தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

செங்கோட்டையனுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். செங்கோட்டையன் ராஜினாமா இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுகவில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். முன்னதாக துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனை சந்தித்து பேசினார். பின்னர் துக்ளக் ரமேஷ், ``செங்கோட்டையன் தவெக வில் இணைந்த பிறந்த அவருக்கு அளிக்கும் பொறுப்பை பார்த்து... அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சிலர் செங்கோட்டையனின் வழியை பின் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்றிருக்கிறார்.

விகடன் 26 Nov 2025 11:51 am

தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

செங்கோட்டையனுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். செங்கோட்டையன் ராஜினாமா இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுகவில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். முன்னதாக துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனை சந்தித்து பேசினார். பின்னர் துக்ளக் ரமேஷ், ``செங்கோட்டையன் தவெக வில் இணைந்த பிறந்த அவருக்கு அளிக்கும் பொறுப்பை பார்த்து... அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சிலர் செங்கோட்டையனின் வழியை பின் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்றிருக்கிறார்.

விகடன் 26 Nov 2025 11:51 am

புதுச்சேரி: 8 மணி நேரம் `ரோடு ஷோ’... தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன?

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். கரூரில் அவர் நடத்திய ரோடு ஷோவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்காக த.வெ.க தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று குற்றம் சுமத்தி, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்திருந்தார். புதுச்சேரி இந்த நிலையில்தான் த.வெ.க தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்காக அந்தக் கட்சியினர் அனுமதி கேட்டு புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாக சென்று மக்களை சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன?

விகடன் 26 Nov 2025 11:42 am

திருச்சி: ``இருட்டில் சந்தை, திருட்டு ஆடுகளை விற்க ஏற்பாடு?'' - போராட்டத்தில் குதித்த விசிக-வினர்

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை காலம் காலமாக நடைபெறுவது வழக்கம். அதிகாலை 3 மணிக்கு துவங்கும் ஆட்டுச் சந்தை மதியம் 2 மணி  வரை நடைபெறும். இங்கு, திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், முசிறி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆடுகளை வளர்ப்பவர்களும், ஆடு வியாபாரிகளும் வந்து விற்பனை செய்வது வழக்கம். சமயபுரம் ஆட்டுச் சந்தை இந்நிலையில், தற்போது வார சந்தையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பலரும் குற்றச்சாட்டுகள் தெரிவித்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணி தொடங்கி ஆட்டுச் சந்தை அதிகாலை 2 மணிக்கு ஆடு விற்பனை இருட்டில் முடிந்து விடுவதாகவும், இதனால் திருட்டு ஆடுகள் விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இதுபற்றி பேசிய ஆடு வளர்ப்பவர்கள் சிலர், சீட்டு வசூல் என்ற பெயரில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடமும் ஆட்டிற்கு ரூ. 80 என  வசூல் செய்யப்படுகிறது. அதே ஆட்டை வியாபாரிகள் வாங்கிகொண்டு வெளியே செல்பவர்களிடம் ரூ. 80 -ம் வசூல் செய்யப்படுகிறது. மேலும், சந்தைக்கு ஆடுகளை ஏற்றி வரும் வாகனத்திற்கு 150 முதல் 200 ரூபாய் வரை வசூல் செய்வதோடு, இதற்கு முறையான ரசீதும் வழங்கப்படுவதும் இல்லை. ஆனால், இப்படி முறைகேடாக பணம் வசூல் செய்தாலும் அங்கு போதிய எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. முக்கியமாக, கழிப்பறை, மின் விளக்குகள், சாலை வசதி குடிநீர் வசதியும் இல்லை. protest வழக்கமான நடைமுறையை மாற்றி முதல்நாள் இரவில் ஆடுகளை விற்பனை செய்ய காரணமே, திருட்டு ஆடுகளை கொண்டு வருபவர்கள் ஈஸியாக ஆடுகளை விற்க வேண்டும் என்று என்பதற்காகத்தான். அதற்காக, திருட்டு ஆடுகளை விற்பவர்கள் அவர்களை கவனிப்பதாக சொல்கிறார்கள். வழக்கம்போல் சனிக்கிழமை காலையில் இருந்து ஆட்டுச் சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். இந்நிலையில், ஆட்டுச் சந்தையில் நிலவும் அவலநிலை மற்றும் முறைகேடுகளை கண்டித்து சமயபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சந்தையின் நுழைவாயிலில் வாகனங்களை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முறையான தீர்வு எட்டப்படவில்லை என்றால் போராட்டம் வலுப்பெறும் என தெரிவித்துள்ளனர். விசிக-வினர் போராட்டம் இது குறித்து சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோர் செய்தியாளர்களிடம், காலம் காலமாக சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்து மதியம் மூன்று மணி வரை நடைபெறும். ஆனால், தற்பொழுது ஏலம் எடுத்தவர்கள் நாங்களும் பல ஆலோசனைகளை வழங்கியும் இவ்வாறு செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர். protest விசிக-வினர் போராட்டம் ஏலம் எடுத்தவர்களின் முறைகேடுகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் துணை போகிறார்களா என சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம்; `சுடுகாட்டுக்கு சாலை' கேட்டு தொடர்ந்து போராடும் கிள்ளியூர் மக்கள்

விகடன் 26 Nov 2025 10:20 am

சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்

சீனாவின் நடவடிக்கை நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறினார்கள். இதற்கு காரணமாக, அவர்கள் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் பிராந்தியம் என்று கூறுகிறார்கள் - இது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கின் சமீபத்திய பதிவு. ஷாங்காய் விமான நிலையம் Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? இந்தப் பதிவு இந்தியா - சீனா உறவில் சிக்கலை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் மாநிலமாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை, 2006-ம் ஆண்டு முதல் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை இந்தியா சற்றும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் பதில் 'பிரேமா வாங்ஜோம் தோங்டாக் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்' - இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும் காரணம் இது. இந்தியாவின் பதிலடி பிரேமா தடுக்கப்பட்டதற்கும், சீனாவின் பதிலுக்கும் கடுமையான பதிலடியை தந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். அவர், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி ஆகும். இது வெளிப்படையான உண்மை. இதை சீனா எவ்வளவு மறுத்தாலும், அது மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றாது. ரந்தீர் ஜெய்ஸ்வால் அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது? இந்தத் தடுப்பு விவகாரத்தை பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான பயண மரபுகளை மீறும் இந்த செயலுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. சீனாவின் இந்த செயல், அனைத்து தேசத்தினரும் அவர்களது நாட்டில் 24 மணி நேரம் எந்த விசாவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்கிற அவர்களது சொந்த விதிமுறையை மீறியது ஆகும் என்று பதிவிட்டுள்ளார். Our response to media queries on statements made by the Chinese Foreign Ministry⬇️ https://t.co/3JUnXjIBLc pic.twitter.com/DjEdy7TmTK — Randhir Jaiswal (@MEAIndia) November 25, 2025 `இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

விகடன் 26 Nov 2025 8:47 am

சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்

சீனாவின் நடவடிக்கை நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறினார்கள். இதற்கு காரணமாக, அவர்கள் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் பிராந்தியம் என்று கூறுகிறார்கள் - இது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கின் சமீபத்திய பதிவு. ஷாங்காய் விமான நிலையம் Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? இந்தப் பதிவு இந்தியா - சீனா உறவில் சிக்கலை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் மாநிலமாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை, 2006-ம் ஆண்டு முதல் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை இந்தியா சற்றும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் பதில் 'பிரேமா வாங்ஜோம் தோங்டாக் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்' - இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும் காரணம் இது. இந்தியாவின் பதிலடி பிரேமா தடுக்கப்பட்டதற்கும், சீனாவின் பதிலுக்கும் கடுமையான பதிலடியை தந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். அவர், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி ஆகும். இது வெளிப்படையான உண்மை. இதை சீனா எவ்வளவு மறுத்தாலும், அது மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றாது. ரந்தீர் ஜெய்ஸ்வால் அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது? இந்தத் தடுப்பு விவகாரத்தை பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான பயண மரபுகளை மீறும் இந்த செயலுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. சீனாவின் இந்த செயல், அனைத்து தேசத்தினரும் அவர்களது நாட்டில் 24 மணி நேரம் எந்த விசாவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்கிற அவர்களது சொந்த விதிமுறையை மீறியது ஆகும் என்று பதிவிட்டுள்ளார். Our response to media queries on statements made by the Chinese Foreign Ministry⬇️ https://t.co/3JUnXjIBLc pic.twitter.com/DjEdy7TmTK — Randhir Jaiswal (@MEAIndia) November 25, 2025 `இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

விகடன் 26 Nov 2025 8:47 am

தஞ்சாவூர்: `குப்பை கிடங்கில் முறைகேடு வழக்கு' - முன்னாள் ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம் இருந்து மீட்டார். துணிச்சலான இவரது செயல் அப்போது பலராலும் பாராட்டை பெற்றது. மேலும் அவரது பணி காலத்தில் பல விமர்சனங்களும் எழுந்தன. மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரித்தலில் சரவணக்குமார் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. தஞ்சாவூர் மாநகராட்சி மேலும், மாநகராட்சி கடைகள் ஏலம் விட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டு மகேஸ்வரி என்பவர் ஆணையராக பொறுப்பேற்றார். மாநகராட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் போர்வாள் கோவிந்தராஜ் என்பவர் குப்பை தரம் பிரிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்த வழக்கு நடந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், முன்னாள் ஆணையர் சரவணக்குமார் உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிலரிடம் பேசினோம், தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளன. இங்கு சேரும் குப்பைகளை தரம் பிரிக்க, கடந்த 2018ம் ஆண்டு பயோமைனிங் முறையில் 2.30 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் வழங்கபட்டது. ஆணையர் சரவணகுமார் இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது. அதன் பின், சரவணக்குமார் பொறுப்பேற்ற பிறகு புதிய நிறுவனத்துக்கு 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், புதிதாக ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும் 5,000 கனமீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, ரூ.10.60 கோடி பில் தொகை பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கு, 8,328 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளனர். இதை வைத்து இதில் முறைகேடு நடந்திருப்பதாக பேசப்பட்டது. இதனைதொடர்ந்து, இது தொடர்பாக போர்வாள் கோவிந்தராஜ், வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக்தில் குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்ட பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து ஆணவங்களை எடுத்து சென்றனர். ஆணையர் சரவணக்குமார் இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்ததாரர் மணிசேகர் ஆகிய நான்கு பேர் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் `திடீர்' பணியிட மாற்றம்; அரசியல் அழுத்தம் காரணமா?!

விகடன் 26 Nov 2025 7:02 am

தஞ்சாவூர்: `குப்பை கிடங்கில் முறைகேடு வழக்கு' - முன்னாள் ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம் இருந்து மீட்டார். துணிச்சலான இவரது செயல் அப்போது பலராலும் பாராட்டை பெற்றது. மேலும் அவரது பணி காலத்தில் பல விமர்சனங்களும் எழுந்தன. மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரித்தலில் சரவணக்குமார் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. தஞ்சாவூர் மாநகராட்சி மேலும், மாநகராட்சி கடைகள் ஏலம் விட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டு மகேஸ்வரி என்பவர் ஆணையராக பொறுப்பேற்றார். மாநகராட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் போர்வாள் கோவிந்தராஜ் என்பவர் குப்பை தரம் பிரிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்த வழக்கு நடந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், முன்னாள் ஆணையர் சரவணக்குமார் உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிலரிடம் பேசினோம், தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளன. இங்கு சேரும் குப்பைகளை தரம் பிரிக்க, கடந்த 2018ம் ஆண்டு பயோமைனிங் முறையில் 2.30 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் வழங்கபட்டது. ஆணையர் சரவணகுமார் இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது. அதன் பின், சரவணக்குமார் பொறுப்பேற்ற பிறகு புதிய நிறுவனத்துக்கு 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், புதிதாக ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும் 5,000 கனமீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, ரூ.10.60 கோடி பில் தொகை பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கு, 8,328 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளனர். இதை வைத்து இதில் முறைகேடு நடந்திருப்பதாக பேசப்பட்டது. இதனைதொடர்ந்து, இது தொடர்பாக போர்வாள் கோவிந்தராஜ், வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக்தில் குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்ட பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து ஆணவங்களை எடுத்து சென்றனர். ஆணையர் சரவணக்குமார் இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்ததாரர் மணிசேகர் ஆகிய நான்கு பேர் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் `திடீர்' பணியிட மாற்றம்; அரசியல் அழுத்தம் காரணமா?!

விகடன் 26 Nov 2025 7:02 am

'தவெக-வில் இணைகிறீர்களா?' - மனம் திறந்த செங்கோட்டையன்

அதிமுக-வில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவராக வலம் வந்தவர் செங்கோட்டையன். அதிமுக வரலாற்றில் அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சுற்றுப்பயணம் வகுத்து கொடுத்தவர், அமைச்சர் என்று பல முக்கிய பொறுப்புகளை கொண்டிருந்தார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ஆனால் இது எல்லாம் கடந்த காலம். அண்மை காலமாக செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளருக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இதில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறி வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். செங்கோட்டையன் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் அதிரடி முடிவு எடுப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் செங்கோட்டையன் நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் தவெக வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்பு செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளேன். அப்படி இயக்கத்திற்காக உழைத்த என்னை உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என்று நீக்கியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். செங்கோட்டையன் இந்த மன வேதனை உங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரியும். அதை மீறி வேறு எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை.” என்று கூறி சென்றார்.

விகடன் 25 Nov 2025 9:24 pm

காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவல் நமக்கு வந்தது. நேரில் சென்று விசாரித்தோம்! அப்படி என்றால் அங்கு படிக்கும் குழந்தைகள் இப்போது எங்கு படிக்கின்றனர் என்று கேட்க தோன்றும். ஆம்! அங்கு படிக்கும் குழந்தைகள் சுமார் 2 ஆண்டுகளாக அருகில் அட்டை போட்ட சிறு வீட்டில் கழிவறை வசதியின்றி, அவசர தேவைக்கு அருகிலுள்ள வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி வரும் நிலை நீடித்துவருகிறது. சுமார் 25 குழந்தைகள் பயின்று‌ வரும் இந்த அங்கன்வாடி பள்ளி பற்றி அங்குள்ள நபர்களிடம் கேட்ட போது, ``பல கிராம சபை கூட்டங்களில் பல மனுக்கள் அளித்தும் இதுவரை புதிய கட்டடம் கட்டித்தர அரசு முன்வரவில்லை. கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் டெண்டருக்கு பிறகு கட்டடம் கட்டப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்‌ கூறியிருக்கிறார். அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றனர். குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, ``சுமார் 2 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றனர். இது குறித்து காமலாபுரம் ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, ``புதிய கட்டடத்திற்கான முன்மொழிவு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பபட்டுள்ளது. அவர் ஒப்புதல் தந்ததும் கட்டடம் கட்டப்படும் என்றார். சுமார் 2 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அரசு விரைந்து இனியும் காலம் தாழ்த்தாமல் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது!

விகடன் 25 Nov 2025 9:11 pm

காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவல் நமக்கு வந்தது. நேரில் சென்று விசாரித்தோம்! அப்படி என்றால் அங்கு படிக்கும் குழந்தைகள் இப்போது எங்கு படிக்கின்றனர் என்று கேட்க தோன்றும். ஆம்! அங்கு படிக்கும் குழந்தைகள் சுமார் 2 ஆண்டுகளாக அருகில் அட்டை போட்ட சிறு வீட்டில் கழிவறை வசதியின்றி, அவசர தேவைக்கு அருகிலுள்ள வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி வரும் நிலை நீடித்துவருகிறது. சுமார் 25 குழந்தைகள் பயின்று‌ வரும் இந்த அங்கன்வாடி பள்ளி பற்றி அங்குள்ள நபர்களிடம் கேட்ட போது, ``பல கிராம சபை கூட்டங்களில் பல மனுக்கள் அளித்தும் இதுவரை புதிய கட்டடம் கட்டித்தர அரசு முன்வரவில்லை. கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் டெண்டருக்கு பிறகு கட்டடம் கட்டப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்‌ கூறியிருக்கிறார். அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றனர். குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, ``சுமார் 2 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றனர். இது குறித்து காமலாபுரம் ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, ``புதிய கட்டடத்திற்கான முன்மொழிவு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பபட்டுள்ளது. அவர் ஒப்புதல் தந்ததும் கட்டடம் கட்டப்படும் என்றார். சுமார் 2 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அரசு விரைந்து இனியும் காலம் தாழ்த்தாமல் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது!

விகடன் 25 Nov 2025 9:11 pm

`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album

செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு

விகடன் 25 Nov 2025 8:59 pm

`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album

செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு

விகடன் 25 Nov 2025 8:59 pm

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! - என்ன ஸ்பெஷல்?

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள்

விகடன் 25 Nov 2025 8:58 pm

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! - என்ன ஸ்பெஷல்?

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள்

விகடன் 25 Nov 2025 8:58 pm

`விஜய்யின் தவெக-வில் இணையப் போகிறீர்களா?' - செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய நிருபர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக-வில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிசாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுக-வை துண்டு துண்டாக்கியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் ``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம் இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுக-வினர் ஒன்று சேரவில்லை என்றால், புதிய கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், 50 ஆண்டுக்காலம் அதிமுக-விற்காக உழைத்திருக்கிறேன். பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறேன். கட்சிக்காக என்னை அர்பணித்திருக்கிறேன். இன்று அதற்குப் பரிசாக அதிமுக-வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறேன். அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராகக்கூட இன்று நான் இல்லை. மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் என்றார். ஓ.பன்னீர்செல்வம் ``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை 'விஜய்யின் தவெக கட்சியில் இணையப் போகிறீர்களா?' என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், மெளனமாகச் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். 'இந்த மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாமா?' என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். திடீரென செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைவதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. இதை அறிந்த செங்கோட்டையன் மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன.

விகடன் 25 Nov 2025 7:56 pm

தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை என்றும் திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் திமுக அமைச்சர் ரகுபதி, திராவிடம் என்பது கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம்பெற்றிருக்கிறது என்பது ஆளுநர் ரவிக்கு தெரியாதா? ஒடிசாவில் தேர்தல் வந்தபோது, ’ஒடிசாவை ஒரு தமிழன் ஆள வேண்டுமா? ஒடிசாவின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது’ என தமிழர்களை திருடர்கள் என்பது போல் குற்றச்சாட்டை முன்வைத்து அமித் ஷாவும், மோடியும் பிரசாரம் செய்தனர். அதேபோல், பீகார் தேர்தல் பிரசாரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர். திமுக அமைச்சர் ரகுபதி தமிழகத்திலும் 'வாக்குத் திருட்டு' நடக்கிறது - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன? தமிழ்நாட்டில் பிறமொழி பேசும் பிற மாநிலத்தவர்கள், பீகார் மக்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை. ஆளுநர்தான் தொடர்ந்து அவதூறு பேசிவருகிறார். ஆளுநரும், ஒன்றிய பாஜக-வும், எங்குச் சென்றாலும், தமிழருக்கு எதிராக பேசுவதை கொள்கையாக கொண்டுள்ளனர். மீனவர்களுக்காக நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என ஆளுநர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் போது, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, ஆளுநரோ ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பார்களா? தமிழ்நாடு தனித்து நிற்கிறது என ஆளுநர் சொல்லியுள்ளார். தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர் ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை என தவறான தகவலை பரப்பி வருகிறார். தனித்தமிழ்நாடு கோரிக்கையை அண்ணா முன்வைத்தார். ஆனால், இந்தியாவுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அது கைவிடப்பட்டு, 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவுடன் சேர்ந்து ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியிருக்கிறது தமிழ்நாடு. நாங்கள் இந்தியாவுடன் தான் இருக்கிறோம்  திமுக அமைச்சர் ரகுபதி TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி ஆர்.என்.ரவி பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வேலைக்காக சேர்ந்திருக்க வேண்டியவர். ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநராக வந்திருக்கிறார். இங்கிருந்து கொண்டு தொடர்ந்து அவதூறுகளையும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும் பேசி வருகிறார். இனி ஆளுநர் மசோதாக்களை கால தாமதப்படுத்தினால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று பேசியிருக்கிறார் ரகுபதி.

விகடன் 25 Nov 2025 6:27 pm

`அதிமுக - தேமுதிக; வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணியா?' - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார். தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி `` 'நேத்து முளைச்ச காளான்' என விஜய்யை சொல்லவில்லை - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்! இந்நிலையில் இன்று நீலகிரி சென்று படுகர் இன மக்களோடு அவர்கள் கலாசாரம் உடை அணிந்து நடனமாடி மகிழ்ந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூட்டணி குறித்து, அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்தோம். வெறும் ராஜ்ய சபா சீட்டுக்கு ஆசைப்பட்டு கூட்டணி வைக்க மாட்டோம். தேமுதிக தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்று பேட்டியளித்திருக்கிறார்.

விகடன் 25 Nov 2025 6:13 pm

`அதிமுக - தேமுதிக; வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணியா?' - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார். தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி `` 'நேத்து முளைச்ச காளான்' என விஜய்யை சொல்லவில்லை - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்! இந்நிலையில் இன்று நீலகிரி சென்று படுகர் இன மக்களோடு அவர்கள் கலாசாரம் உடை அணிந்து நடனமாடி மகிழ்ந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூட்டணி குறித்து, அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்தோம். வெறும் ராஜ்ய சபா சீட்டுக்கு ஆசைப்பட்டு கூட்டணி வைக்க மாட்டோம். தேமுதிக தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்று பேட்டியளித்திருக்கிறார்.

விகடன் 25 Nov 2025 6:13 pm

`தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம்

தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் பாஜக அரசு இரயில்வே துறையில் வஞ்சகம் செய்வதாக சு.வெங்கடேஷன் எம்.பி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் இதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. இரயில்வே துறை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. ஆனால் தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கும் சில கோரிக்கைளை முன் வைத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 2020ல் நிறுத்தப்பட்ட இந்த சலுகையினால் மூத்தோர் மருத்துவம் மற்றும் திருத்தலப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக்கட்டண சலுகைகளும், அபராத ரத்து செய்யும் முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன. பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் கிடைக்கவில்லை. இரயில்வே துறை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடைபெறுகிறது. பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டாலும், தெற்கு ரயில்வேக்கு அதில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இரண்டாவது முனையம் அமைப்பது அவசியம். கோயம்புத்தூர் ப்ளாட்ஃபாரங்கள் மிகுந்த நெரிசலுடன் செயல்பட்டு வருவதால் போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும். அதேபோன்று மதுரை கூடல் நகரிலும் இரண்டாவது ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும். ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய இன்டர்லாக் செய்யாத கேட்டுகளை உடனடியாக இன்டர்லாக் கேட்களாக மாற்றுவதற்கு போதிய நிதி வழங்க வேண்டும். செம்மங்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு விபத்து போன்றவை இன்டர்லாக் கேட் இல்லாததாலேயே நடக்கின்றன. அஷ்வினி வைஷ்ணவ் - மத்திய இரயில்வே அமைச்சர் கொல்லம்–நாகூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். இறுதியாக மதுரையிலிருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

விகடன் 25 Nov 2025 5:54 pm

`தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம்

தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் பாஜக அரசு இரயில்வே துறையில் வஞ்சகம் செய்வதாக சு.வெங்கடேஷன் எம்.பி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் இதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. இரயில்வே துறை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. ஆனால் தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கும் சில கோரிக்கைளை முன் வைத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 2020ல் நிறுத்தப்பட்ட இந்த சலுகையினால் மூத்தோர் மருத்துவம் மற்றும் திருத்தலப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக்கட்டண சலுகைகளும், அபராத ரத்து செய்யும் முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன. பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் கிடைக்கவில்லை. இரயில்வே துறை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடைபெறுகிறது. பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டாலும், தெற்கு ரயில்வேக்கு அதில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இரண்டாவது முனையம் அமைப்பது அவசியம். கோயம்புத்தூர் ப்ளாட்ஃபாரங்கள் மிகுந்த நெரிசலுடன் செயல்பட்டு வருவதால் போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும். அதேபோன்று மதுரை கூடல் நகரிலும் இரண்டாவது ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும். ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய இன்டர்லாக் செய்யாத கேட்டுகளை உடனடியாக இன்டர்லாக் கேட்களாக மாற்றுவதற்கு போதிய நிதி வழங்க வேண்டும். செம்மங்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு விபத்து போன்றவை இன்டர்லாக் கேட் இல்லாததாலேயே நடக்கின்றன. அஷ்வினி வைஷ்ணவ் - மத்திய இரயில்வே அமைச்சர் கொல்லம்–நாகூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். இறுதியாக மதுரையிலிருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

விகடன் 25 Nov 2025 5:54 pm

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.208 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு அதில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் அருகே நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், கோவை செம்மொழிப் பூங்கா கோவை செம்மொழிப் பூங்கா பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம்,ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன. அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். பூங்கா வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செம்மொழிப் பூங்கா மாற்றுத்திறனாளிகளும் பயனளிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கோவையில் செம்மொழிப் பூங்கா திறந்து என் தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

விகடன் 25 Nov 2025 4:30 pm

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.208 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு அதில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் அருகே நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், கோவை செம்மொழிப் பூங்கா கோவை செம்மொழிப் பூங்கா பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம்,ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன. அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். பூங்கா வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செம்மொழிப் பூங்கா மாற்றுத்திறனாளிகளும் பயனளிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கோவையில் செம்மொழிப் பூங்கா திறந்து என் தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

விகடன் 25 Nov 2025 4:30 pm

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.208 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு அதில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் அருகே நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், கோவை செம்மொழிப் பூங்கா கோவை செம்மொழிப் பூங்கா பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம்,ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன. அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். பூங்கா வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செம்மொழிப் பூங்கா மாற்றுத்திறனாளிகளும் பயனளிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கோவையில் செம்மொழிப் பூங்கா திறந்து என் தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

விகடன் 25 Nov 2025 4:30 pm

``234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரேமலதா விஜயகாந்த் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ள அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். குன்னூர் அருகில் உள்ள கோடமலை படுகர் சமுதாய மக்களின் கிராமத்திற்கு சென்ற அவர் அவர்களுடன் சேர்ந்து படுகர் நடமாடி மகிழ்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் ஜனவரி 9 - ம் தேதி கடலூரில் தே.மு.தி.க - வின் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O என்ற பெயரில் நடத்தப்படும் அந்த மாநாட்டில் எங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்படும்.‌ பிரேமலதா விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது. 2026 தேர்தல் மட்டுமின்றி அதற்கு அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும். வெறுமனே ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் இந்த இயக்கம் கிடையாது. தொண்டர்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணியை வலுவாக அமைப்போம் என்றார்.

விகடன் 25 Nov 2025 3:12 pm

``234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரேமலதா விஜயகாந்த் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ள அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். குன்னூர் அருகில் உள்ள கோடமலை படுகர் சமுதாய மக்களின் கிராமத்திற்கு சென்ற அவர் அவர்களுடன் சேர்ந்து படுகர் நடமாடி மகிழ்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் ஜனவரி 9 - ம் தேதி கடலூரில் தே.மு.தி.க - வின் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O என்ற பெயரில் நடத்தப்படும் அந்த மாநாட்டில் எங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்படும்.‌ பிரேமலதா விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது. 2026 தேர்தல் மட்டுமின்றி அதற்கு அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும். வெறுமனே ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் இந்த இயக்கம் கிடையாது. தொண்டர்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணியை வலுவாக அமைப்போம் என்றார்.

விகடன் 25 Nov 2025 3:12 pm

TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா? - பரபர பின்னணி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தினர் சிலரிடம் பேசினோம். விஜய் விஜய்யின் அரசியலை கரூர் சம்பவத்துக்கு முன் பின் என இரண்டாக பிரிக்கலாம். கரூர் சம்பவத்துக்கு முன் தவெகவில் இணைய தயாராக இருந்த சில முக்கியப் புள்ளிகளை கூட காத்திருக்க வைத்து கடுப்பேற்றி அனுப்பியிருந்தார்கள். ஆனால், கரூர் சம்பவத்துக்கு பிறகு சில யதார்த்தங்கள் பனையூரின் முக்கிய நிர்வாகிகளுக்கு புரிந்திருக்கிறது. அனுபவம் இல்லாத நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வைத்துக் கொண்டு திமுகவை எதிர்த்து நிற்பது இமாலயச் சவால் என்பதை உணர்ந்தனர். இதன்பிறகுதான் மாற்றுக்கட்சியினரை உள்ளே இழுப்பதன் முக்கியத்துவத்தை விஜய்க்கும் தெரியப்படுத்தி, அதற்கான வலையை விரிப்பதிலும் இறங்கியிருக்கிறது இரண்டு - மூன்று தரப்புகள். செங்கோட்டையன் இந்த சமயத்தில்தான் செங்கோட்டையனும் ஓ.பி.எஸ், டிடிவியுடன் கரம் கோர்த்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 'டெல்லிதான் அதிமுகவின் அணிகளை இணைக்கும் அசைன்மெண்டை எனக்குக் கொடுத்தது.' என ஓப்பனாக போட்டு உடைத்துப் பேசிய பிறகும் பாஜக தரப்பிலிருந்து செங்கோட்டையனுக்கு எந்தத் தரப்பும் வெளிப்படையாக ஆதரவு கொடுக்கவில்லை. அதிமுக தொடங்கியதிலிருந்தே கட்சியில் இருப்பவர், எம்.ஜி.ஆரால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவர், கட்சியின் சூப்பர் சீனியர் அத்தனை பகுமானங்கள் இருந்தும் எம்.ஜி.ஆர் மாளிகைக்குள் இருந்து செங்கோட்டையனின் நீக்கத்துக்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்பவில்லை. எந்தப் பக்கம் நிற்கப் போகிறோம் என செங்கோட்டையன் தரப்பு குழப்பத்தில் இருந்த சமயத்தில்தான் அவரை ஆதவ் தரப்பு தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. 'உங்களைப் போன்ற சீனியர்கள் கட்சிக்குள் இருந்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உரிய மரியாதையும் கட்சிக்குள் கிடைக்கும்..' எனப் பேசி செங்கோட்டையனின் மனதை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆதவும் செங்கோட்டையனுடன் நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார். செங்கோட்டையனுடனான மீட்டிங்கின் அப்டேட்களும் விஜய்க்கு அடுத்தடுத்து கொடுக்கப்பட்டது என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். ஆதவ் அர்ஜூனா இந்தப் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்த சமயத்தில்தான் தவெகவின் S.I.R கண்டன கூட்டத்தில் சம்பந்தமே இல்லாமல், 'எம்.ஜி.ஆர் கிட்டயும் கட்டமைப்பு இல்லன்னு சொன்னாங்க. அவர்க்கிட்டயும் இளைஞர்கள்தான் இருந்தாங்க. செங்கோட்டையன் எம்.எல்.ஏ ஆன அப்போ அவருக்கு வயசு 26 தான்!' என அவரை புகழ்ந்து பொடி வைத்துப் பேசினார் ஆதவ். TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவிலிருந்து விட்டு, ஒரு புதிய கட்சியை நோக்கி பார்வையை திருப்புவதில் செங்கோட்டையனுக்கும் பெரிய மனத்தடை இருந்ததாகவும் சொல்கின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். ஆனால், ஓ.பி.எஸ் யை போலவோ டிடிவியை போலவோ தனி அணியோ கட்சியோ கட்டும் சூழல் செங்கோட்டையனுக்கு இல்லை என்பதை அவர் உணர்ந்திருப்பதாக கூறுகின்றனர். செங்கோட்டையன் ஓ.பி.எஸ்க்கும் டிடிவிக்கு அவர்கள் சார்ந்த சமூகம் புறக்கணிக்கப்படுகிறது என்கிற எமோஷன் அவர்களுக்கு கைக்கொடுக்கிறது. ஆனால், செங்கோட்டையனால் அப்படி சமூக அரசியலை கையிலெடுத்தும் பரிதாபத்தை சம்பாதிக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலையும் செங்கோட்டையன் தரப்பு உணர்ந்திருக்கிறது என்கின்றனர், இணைப்பு பேச்சுவார்த்தையை பற்றி பேசும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர். 'மாற்றுக் கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்களிடம் பேசுவது வழக்கமான விஷயம்தானே. அதேமாதிரிதான் செங்கோட்டையன் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். இந்த வார இறுதிக்குள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகள். விஜய் செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதியை பனையூர் பக்கமாக திருப்பி, விஜய்யிடம் இன்னும் நெருக்கமாக நினைக்கிறதாம் ஆதவ் தரப்பு. கட்சிக்குள் ஆதவ் வந்த போதும் பதவியோடுதான் வந்தார். அருண் ராஜ் வந்தபோதும் பதவியோடுதான் வந்தார். செங்கோட்டையன் க்ரீன் சிக்னல் காட்டும்பட்சத்தில், கொங்கு மண்டலத்துக்கென ஒரு பவர்புல் பதவி உருவாக்கி அவருக்கு கொடுக்கவும் தயாராக இருக்கிறது விஜய் தரப்பு என்ற தகவலும் கட்சிக்குள் ஓடுகிறது. முடிவு செங்கோட்டையனின் கையில்! TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்!

விகடன் 25 Nov 2025 2:43 pm

TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா? - பரபர பின்னணி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தினர் சிலரிடம் பேசினோம். விஜய் விஜய்யின் அரசியலை கரூர் சம்பவத்துக்கு முன் பின் என இரண்டாக பிரிக்கலாம். கரூர் சம்பவத்துக்கு முன் தவெகவில் இணைய தயாராக இருந்த சில முக்கியப் புள்ளிகளை கூட காத்திருக்க வைத்து கடுப்பேற்றி அனுப்பியிருந்தார்கள். ஆனால், கரூர் சம்பவத்துக்கு பிறகு சில யதார்த்தங்கள் பனையூரின் முக்கிய நிர்வாகிகளுக்கு புரிந்திருக்கிறது. அனுபவம் இல்லாத நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வைத்துக் கொண்டு திமுகவை எதிர்த்து நிற்பது இமாலயச் சவால் என்பதை உணர்ந்தனர். இதன்பிறகுதான் மாற்றுக்கட்சியினரை உள்ளே இழுப்பதன் முக்கியத்துவத்தை விஜய்க்கும் தெரியப்படுத்தி, அதற்கான வலையை விரிப்பதிலும் இறங்கியிருக்கிறது இரண்டு - மூன்று தரப்புகள். செங்கோட்டையன் இந்த சமயத்தில்தான் செங்கோட்டையனும் ஓ.பி.எஸ், டிடிவியுடன் கரம் கோர்த்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 'டெல்லிதான் அதிமுகவின் அணிகளை இணைக்கும் அசைன்மெண்டை எனக்குக் கொடுத்தது.' என ஓப்பனாக போட்டு உடைத்துப் பேசிய பிறகும் பாஜக தரப்பிலிருந்து செங்கோட்டையனுக்கு எந்தத் தரப்பும் வெளிப்படையாக ஆதரவு கொடுக்கவில்லை. அதிமுக தொடங்கியதிலிருந்தே கட்சியில் இருப்பவர், எம்.ஜி.ஆரால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவர், கட்சியின் சூப்பர் சீனியர் அத்தனை பகுமானங்கள் இருந்தும் எம்.ஜி.ஆர் மாளிகைக்குள் இருந்து செங்கோட்டையனின் நீக்கத்துக்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்பவில்லை. எந்தப் பக்கம் நிற்கப் போகிறோம் என செங்கோட்டையன் தரப்பு குழப்பத்தில் இருந்த சமயத்தில்தான் அவரை ஆதவ் தரப்பு தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. 'உங்களைப் போன்ற சீனியர்கள் கட்சிக்குள் இருந்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உரிய மரியாதையும் கட்சிக்குள் கிடைக்கும்..' எனப் பேசி செங்கோட்டையனின் மனதை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆதவும் செங்கோட்டையனுடன் நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார். செங்கோட்டையனுடனான மீட்டிங்கின் அப்டேட்களும் விஜய்க்கு அடுத்தடுத்து கொடுக்கப்பட்டது என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். ஆதவ் அர்ஜூனா இந்தப் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்த சமயத்தில்தான் தவெகவின் S.I.R கண்டன கூட்டத்தில் சம்பந்தமே இல்லாமல், 'எம்.ஜி.ஆர் கிட்டயும் கட்டமைப்பு இல்லன்னு சொன்னாங்க. அவர்க்கிட்டயும் இளைஞர்கள்தான் இருந்தாங்க. செங்கோட்டையன் எம்.எல்.ஏ ஆன அப்போ அவருக்கு வயசு 26 தான்!' என அவரை புகழ்ந்து பொடி வைத்துப் பேசினார் ஆதவ். TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவிலிருந்து விட்டு, ஒரு புதிய கட்சியை நோக்கி பார்வையை திருப்புவதில் செங்கோட்டையனுக்கும் பெரிய மனத்தடை இருந்ததாகவும் சொல்கின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். ஆனால், ஓ.பி.எஸ் யை போலவோ டிடிவியை போலவோ தனி அணியோ கட்சியோ கட்டும் சூழல் செங்கோட்டையனுக்கு இல்லை என்பதை அவர் உணர்ந்திருப்பதாக கூறுகின்றனர். செங்கோட்டையன் ஓ.பி.எஸ்க்கும் டிடிவிக்கு அவர்கள் சார்ந்த சமூகம் புறக்கணிக்கப்படுகிறது என்கிற எமோஷன் அவர்களுக்கு கைக்கொடுக்கிறது. ஆனால், செங்கோட்டையனால் அப்படி சமூக அரசியலை கையிலெடுத்தும் பரிதாபத்தை சம்பாதிக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலையும் செங்கோட்டையன் தரப்பு உணர்ந்திருக்கிறது என்கின்றனர், இணைப்பு பேச்சுவார்த்தையை பற்றி பேசும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர். 'மாற்றுக் கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்களிடம் பேசுவது வழக்கமான விஷயம்தானே. அதேமாதிரிதான் செங்கோட்டையன் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். இந்த வார இறுதிக்குள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகள். விஜய் செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதியை பனையூர் பக்கமாக திருப்பி, விஜய்யிடம் இன்னும் நெருக்கமாக நினைக்கிறதாம் ஆதவ் தரப்பு. கட்சிக்குள் ஆதவ் வந்த போதும் பதவியோடுதான் வந்தார். அருண் ராஜ் வந்தபோதும் பதவியோடுதான் வந்தார். செங்கோட்டையன் க்ரீன் சிக்னல் காட்டும்பட்சத்தில், கொங்கு மண்டலத்துக்கென ஒரு பவர்புல் பதவி உருவாக்கி அவருக்கு கொடுக்கவும் தயாராக இருக்கிறது விஜய் தரப்பு என்ற தகவலும் கட்சிக்குள் ஓடுகிறது. முடிவு செங்கோட்டையனின் கையில்! TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்!

விகடன் 25 Nov 2025 2:43 pm

`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்

கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகர்கோவிலில் அமைந்துள்ள கலெக்டர் அலுவகத்தில் ஆட்சியர் அலுவலக அறை முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கலெக்டர் அழகு மீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி கிராம நிர்வாக அலுவலருமான நாகேஸ்வரகாந்த் என்பவரை மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஒருமையில் பேசியதுடன், அவரது  செல்போனை வீசி எறிந்தும் அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து புத்தேரி கிராம நிர்வாக அலுவலரும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான நாகேஸ்வரகாந்த்திடம் பேசினோம், எஸ்.ஐ.ஆர் பணிக்காக சுமார் நான்கு வாரங்களாக சனி, ஞாயிறு கிழமைகள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பத்து பி.எல்.ஓ-க்களுக்கு ஒரு வி.ஏ.ஓ சூப்பர்வைசராக உள்ளார். மேலும் அதிகாரிகள் சொல்லும் வழிமுறையை பின்பற்றி படிவங்கள் பூர்த்தி செய்து பெற்றுவருகிறோம். நாகேஸ்வரகாந்த் பி.எல்.ஓ-க்களாக நியமிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் திணறினாலும் நாங்கள் எங்கள் மொபைல் போனில் 2002-ம் ஆண்டுக்கான பூத் எண் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து அந்த பணிகளை செய்து படிவங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆய்வு கூட்டத்திற்காக எங்களை கலெக்டர் வர சொன்னார்கள். எஸ்.ஐ.ஆர் சம்பந்தப்பட்ட முகாமில் பணிகளை செய்ததால் மொபைலில் சார்ஜ் இறங்கி விட்டது என்பதால் ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு பட்டன் போனை எடுத்துக்கொண்டு கலெக்டர் மீட்டிங்கு சென்றிருந்தேன். கலெக்டர் அந்த மீட்டிங்கில் என்ன எழுப்பி விட்டு, கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பி.எல்.ஓ-வுக்கு போன் செய்யும்படி என்னிடம் கலெக்டர் தெரிவித்தார். நான் என்னுடைய பட்டன் போனில் இருந்து சம்பந்தப்பட்ட பி.எல்.ஏ-வுக்கு போன் செய்தேன். அப்போது ஆர்.டி.ஓ மேடம் எனது மொபைலை வாங்கி அந்த பி.எல்.ஓ-விடம்  பேசினார்கள். அப்போது கலெக்டர் மேடம் அந்த போனை வாங்கி, இது யாருடையது எனக்கேட்டார்கள். கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அது என்னுடைய போன் என தெரிவித்தேன். 'இந்த போனை வைத்துத்தான் வேலை செய்கிறீர்களா?' எனக்கேட்டு செல்போனை மேசையில் தூக்கி எறிந்துவிட்டு, என்னை 'வெளியே போ' எனக்கூறிவிட்டார். நேற்று காலையில்தான் கூகுள் மீட்டிங்கில் ஸ்மார்ட் போன் மூலம் இணைந்தேன். அதுவும் கலெக்டருக்கு தெரியும். சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் கூகுள் மீட்டில் இருக்க வேண்டும். அதன் பிறகு படிவங்கள் பெற வேண்டும். இப்படி மிகவும் நெருக்கடியான வேலைக்கு மத்தியில் கலெக்டரும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். சாதாரண ஆட்களாக இருந்தால் நேற்று நடந்த சம்பவத்திற்கு அவர் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்று இருப்பார். இதுபோன்று வேறொரு எஸ்.ஐ.ஆர் முகாமில் சென்று ஒரு வி.ஏ.ஓ-வை 'பிச்சைக்கார நாயே' என கலெக்டர் திட்டியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு மீட்டிங்கில் பெண் வில்லேஜ் ஆபீசர் ஒருவரை பார்த்து, 'உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீ வேலைபார்க்கமாட்டாய்' என உருவக்கேலி செய்து பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ-க்களுக்கே இந்த நிலைமை என்றால், அதற்கு கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். கலெக்டரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.ஏ.ஓ-க்கள் அது மட்டுமல்லாது தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதால் அதை வைத்து மிரட்டுகிறார். கடைநிலை ஊழியராக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தானே. வெள்ளைக்காரர்கள் நடத்தியது போன்று எங்களைஅடிமை என நினைத்து நடத்துகிறார்கள் கலெக்டர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாகத்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் கலெக்டர் அவரது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனகேட்டு இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றார். இறுதியாக கலெக்டர் சென்று வி.ஏ.ஓ-க்களிடம் கூலாக பேச்சுவார்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

விகடன் 25 Nov 2025 2:32 pm

`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்

கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகர்கோவிலில் அமைந்துள்ள கலெக்டர் அலுவகத்தில் ஆட்சியர் அலுவலக அறை முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கலெக்டர் அழகு மீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி கிராம நிர்வாக அலுவலருமான நாகேஸ்வரகாந்த் என்பவரை மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஒருமையில் பேசியதுடன், அவரது  செல்போனை வீசி எறிந்தும் அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து புத்தேரி கிராம நிர்வாக அலுவலரும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான நாகேஸ்வரகாந்த்திடம் பேசினோம், எஸ்.ஐ.ஆர் பணிக்காக சுமார் நான்கு வாரங்களாக சனி, ஞாயிறு கிழமைகள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பத்து பி.எல்.ஓ-க்களுக்கு ஒரு வி.ஏ.ஓ சூப்பர்வைசராக உள்ளார். மேலும் அதிகாரிகள் சொல்லும் வழிமுறையை பின்பற்றி படிவங்கள் பூர்த்தி செய்து பெற்றுவருகிறோம். நாகேஸ்வரகாந்த் பி.எல்.ஓ-க்களாக நியமிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் திணறினாலும் நாங்கள் எங்கள் மொபைல் போனில் 2002-ம் ஆண்டுக்கான பூத் எண் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து அந்த பணிகளை செய்து படிவங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆய்வு கூட்டத்திற்காக எங்களை கலெக்டர் வர சொன்னார்கள். எஸ்.ஐ.ஆர் சம்பந்தப்பட்ட முகாமில் பணிகளை செய்ததால் மொபைலில் சார்ஜ் இறங்கி விட்டது என்பதால் ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு பட்டன் போனை எடுத்துக்கொண்டு கலெக்டர் மீட்டிங்கு சென்றிருந்தேன். கலெக்டர் அந்த மீட்டிங்கில் என்ன எழுப்பி விட்டு, கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பி.எல்.ஓ-வுக்கு போன் செய்யும்படி என்னிடம் கலெக்டர் தெரிவித்தார். நான் என்னுடைய பட்டன் போனில் இருந்து சம்பந்தப்பட்ட பி.எல்.ஏ-வுக்கு போன் செய்தேன். அப்போது ஆர்.டி.ஓ மேடம் எனது மொபைலை வாங்கி அந்த பி.எல்.ஓ-விடம்  பேசினார்கள். அப்போது கலெக்டர் மேடம் அந்த போனை வாங்கி, இது யாருடையது எனக்கேட்டார்கள். கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அது என்னுடைய போன் என தெரிவித்தேன். 'இந்த போனை வைத்துத்தான் வேலை செய்கிறீர்களா?' எனக்கேட்டு செல்போனை மேசையில் தூக்கி எறிந்துவிட்டு, என்னை 'வெளியே போ' எனக்கூறிவிட்டார். நேற்று காலையில்தான் கூகுள் மீட்டிங்கில் ஸ்மார்ட் போன் மூலம் இணைந்தேன். அதுவும் கலெக்டருக்கு தெரியும். சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் கூகுள் மீட்டில் இருக்க வேண்டும். அதன் பிறகு படிவங்கள் பெற வேண்டும். இப்படி மிகவும் நெருக்கடியான வேலைக்கு மத்தியில் கலெக்டரும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். சாதாரண ஆட்களாக இருந்தால் நேற்று நடந்த சம்பவத்திற்கு அவர் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்று இருப்பார். இதுபோன்று வேறொரு எஸ்.ஐ.ஆர் முகாமில் சென்று ஒரு வி.ஏ.ஓ-வை 'பிச்சைக்கார நாயே' என கலெக்டர் திட்டியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு மீட்டிங்கில் பெண் வில்லேஜ் ஆபீசர் ஒருவரை பார்த்து, 'உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீ வேலைபார்க்கமாட்டாய்' என உருவக்கேலி செய்து பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ-க்களுக்கே இந்த நிலைமை என்றால், அதற்கு கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். கலெக்டரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.ஏ.ஓ-க்கள் அது மட்டுமல்லாது தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதால் அதை வைத்து மிரட்டுகிறார். கடைநிலை ஊழியராக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தானே. வெள்ளைக்காரர்கள் நடத்தியது போன்று எங்களைஅடிமை என நினைத்து நடத்துகிறார்கள் கலெக்டர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாகத்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் கலெக்டர் அவரது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனகேட்டு இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றார். இறுதியாக கலெக்டர் சென்று வி.ஏ.ஓ-க்களிடம் கூலாக பேச்சுவார்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

விகடன் 25 Nov 2025 2:32 pm

`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்

கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகர்கோவிலில் அமைந்துள்ள கலெக்டர் அலுவகத்தில் ஆட்சியர் அலுவலக அறை முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கலெக்டர் அழகு மீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி கிராம நிர்வாக அலுவலருமான நாகேஸ்வரகாந்த் என்பவரை மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஒருமையில் பேசியதுடன், அவரது  செல்போனை வீசி எறிந்தும் அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து புத்தேரி கிராம நிர்வாக அலுவலரும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான நாகேஸ்வரகாந்த்திடம் பேசினோம், எஸ்.ஐ.ஆர் பணிக்காக சுமார் நான்கு வாரங்களாக சனி, ஞாயிறு கிழமைகள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பத்து பி.எல்.ஓ-க்களுக்கு ஒரு வி.ஏ.ஓ சூப்பர்வைசராக உள்ளார். மேலும் அதிகாரிகள் சொல்லும் வழிமுறையை பின்பற்றி படிவங்கள் பூர்த்தி செய்து பெற்றுவருகிறோம். நாகேஸ்வரகாந்த் பி.எல்.ஓ-க்களாக நியமிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் திணறினாலும் நாங்கள் எங்கள் மொபைல் போனில் 2002-ம் ஆண்டுக்கான பூத் எண் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து அந்த பணிகளை செய்து படிவங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆய்வு கூட்டத்திற்காக எங்களை கலெக்டர் வர சொன்னார்கள். எஸ்.ஐ.ஆர் சம்பந்தப்பட்ட முகாமில் பணிகளை செய்ததால் மொபைலில் சார்ஜ் இறங்கி விட்டது என்பதால் ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு பட்டன் போனை எடுத்துக்கொண்டு கலெக்டர் மீட்டிங்கு சென்றிருந்தேன். கலெக்டர் அந்த மீட்டிங்கில் என்ன எழுப்பி விட்டு, கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பி.எல்.ஓ-வுக்கு போன் செய்யும்படி என்னிடம் கலெக்டர் தெரிவித்தார். நான் என்னுடைய பட்டன் போனில் இருந்து சம்பந்தப்பட்ட பி.எல்.ஏ-வுக்கு போன் செய்தேன். அப்போது ஆர்.டி.ஓ மேடம் எனது மொபைலை வாங்கி அந்த பி.எல்.ஓ-விடம்  பேசினார்கள். அப்போது கலெக்டர் மேடம் அந்த போனை வாங்கி, இது யாருடையது எனக்கேட்டார்கள். கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அது என்னுடைய போன் என தெரிவித்தேன். 'இந்த போனை வைத்துத்தான் வேலை செய்கிறீர்களா?' எனக்கேட்டு செல்போனை மேசையில் தூக்கி எறிந்துவிட்டு, என்னை 'வெளியே போ' எனக்கூறிவிட்டார். நேற்று காலையில்தான் கூகுள் மீட்டிங்கில் ஸ்மார்ட் போன் மூலம் இணைந்தேன். அதுவும் கலெக்டருக்கு தெரியும். சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் கூகுள் மீட்டில் இருக்க வேண்டும். அதன் பிறகு படிவங்கள் பெற வேண்டும். இப்படி மிகவும் நெருக்கடியான வேலைக்கு மத்தியில் கலெக்டரும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். சாதாரண ஆட்களாக இருந்தால் நேற்று நடந்த சம்பவத்திற்கு அவர் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்று இருப்பார். இதுபோன்று வேறொரு எஸ்.ஐ.ஆர் முகாமில் சென்று ஒரு வி.ஏ.ஓ-வை 'பிச்சைக்கார நாயே' என கலெக்டர் திட்டியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு மீட்டிங்கில் பெண் வில்லேஜ் ஆபீசர் ஒருவரை பார்த்து, 'உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீ வேலைபார்க்கமாட்டாய்' என உருவக்கேலி செய்து பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ-க்களுக்கே இந்த நிலைமை என்றால், அதற்கு கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். கலெக்டரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.ஏ.ஓ-க்கள் அது மட்டுமல்லாது தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதால் அதை வைத்து மிரட்டுகிறார். கடைநிலை ஊழியராக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தானே. வெள்ளைக்காரர்கள் நடத்தியது போன்று எங்களைஅடிமை என நினைத்து நடத்துகிறார்கள் கலெக்டர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாகத்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் கலெக்டர் அவரது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனகேட்டு இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றார். இறுதியாக கலெக்டர் சென்று வி.ஏ.ஓ-க்களிடம் கூலாக பேச்சுவார்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

விகடன் 25 Nov 2025 2:32 pm

Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது'ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?

சில நேரங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது, வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத டென்சன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், 'KYV (Know Your Vehicle)' அப்டேட் செய்யாமல் இருப்பதே ஆகும். இந்தப் பிரச்னையை சந்தித்தவர்கள், சந்திக்காதவர்கள் என ஃபாஸ்ட் டேக் வைத்திருக்கும் அனைவருமே KYV-ஐ அப்டேட் செய்வது மிக அவசியமாகும். Fastag/ஃபாஸ்ட் டேக் KYV முடிக்காமல், Fastag பயன்படுத்துவதில் சிக்கலா? இனி கவலை வேண்டாம்; NHAI-ன் புதிய மாற்றங்கள் இதோ! KYV என்றால் என்ன? Know Your Vehicle என்பதன் சுருக்கமே KYV. அதாவது உங்களுடைய ஃபாஸ்ட் டேக் குறிப்பிட்ட வாகனத்துடன் தான் இணைந்திருக்கிறது என்பதன் ஆதாரம் தான் இது. KYV செய்யும்போது, உங்கள் ஃபாஸ்ட் டேக்கை வேறு யாரும் பயன்படுத்தாமல் தடுக்க முடியும். மேலும், உங்கள் வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் அரசாங்கத்திற்கும் பக்காவாக சென்றுவிடும். KYV அப்டேட் செய்வது எப்படி? https://fastag.ihmcl.com என்கிற இணையதளத்திற்குள் செல்லவும். உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் 'Log in' செய்யவும். அடுத்ததாக, உங்களது வாகனத்தின் முன்பக்க புகைப்படத்தை ஃபாஸ்ட் டேக் தெரிவதுபோல அப்லோடு செய்துகொள்ளவும். பின், உங்களுடைய ஆர்.சி தகவல்கள் தானாகவே பதிவாகும். அப்படியாகவில்லை எனில் நீங்களே பதிவு செய்யுங்கள். Fastag/ஃபாஸ்ட் டேக் இதை முடித்து 'Confirm' கொடுத்து சப்மிட் செய்தால் போதும். உங்களுடைய KYV அப்டேட் ஆகிவிடும். இதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் 1033 என்கிற எண்ணுக்கு போன் செய்யலாம் அல்லது ஃபாஸ்ட் டேக் வழங்கிய வங்கியின் உதவியை நாடலாம். உங்கள் ஃபாஸ்ட் டேக் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், எப்போதும் ஆக்டிவாக இருக்கவும் கட்டாயம் KYV செஞ்சுடுங்க மக்களே. FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass

விகடன் 25 Nov 2025 1:57 pm

துப்பாக்கிச்சூடு : `அதிகாரிக்கு பதவி உயர்வா? திமுகவின் இரட்டை வேடம்’ - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

``தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கொடுமை நடைபெற்றதில்லை. குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருந்ததை ரத்து செய்து விட்டு தூத்துக்குடி செல்கிறேன்.” - கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டவுடன் இப்போதைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் கொந்தளித்து பேசிய வார்த்தைகள் தான் இவை. கொந்தளித்ததுடன் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து உடனே விளக்கமெல்லாம் கேட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த சம்பவத்துக்கு காரணமான ஒரு அதிகாரியை விடமாட்டோம் எனச் சூளுரைக்கவும் செய்தார். நிற்க. ஒரு வருடத்துக்கு முந்தைய ஒரு செய்திக்கு வருவோம். துப்பாக்கிச்சூடு நடந்த போது ஐ.ஜி யாக இருந்த சைலேஷ் குமார் யாதவுக்கு 2023 இறுதியில் டி.ஜி.பி யாக பதவி உயர்வு அளித்தது தமிழக அரசு. திமுக கூட்டணியிலிருக்கும் கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் கண்டனமெல்லாம் கூட தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இப்போது கடந்த வார மேட்டருக்கு வருவோம். அந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனான அருணா ஜெகதீசன் கமிஷன் சம்பவத்தில் குற்றம் நிகழ்த்தியதாகச் சுட்டிக் காட்டிய  காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான ரென்னிஸுக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ரென்னிஸ் இன்ஸ்பெக்டர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காந்திமதி நாதனிடம் இது தொடர்பாகப் பேசினோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் இவரும் ஒருவர்.  ‘’திமுக ரெட்டை வேடம் போடுற கட்சின்னு ஒரு கருத்து பொதுவான மக்கள் மத்தியில் இருக்கில்லையா. அதுக்கு நல்ல உதாரணம் இது. ஆட்சியில இருந்தா ஒரு மாதிரியும் இல்லாட்டி வேற மாதிரியும் பேசறது அவங்களுக்கு இயல்பாகவே வரும். ஸ்டெர்லைட்டுக்கு எதிரா போராடின மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளிலெல்லாம் அந்தந்த தனி நபர்களே வாதாடி வழக்குல இருந்து வெளியில வந்தாங்க. காந்திமதிநாதன் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரங்கள் மீது நடவடிக்கை எடுக்காட்டிக் கூட என்னன்னும் போறாங்கனு அதைச் சகிச்சுப் போயிடலாம். ஆனா அவங்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கறது மோசமான முன்னுதாரணம். நாளைககு இன்னொரு போராட்டம் நடந்தா இந்த அதிகாரிகள் எந்த எல்லைக்கும் துணிய மாட்டாங்களா? இதை மக்கள் நலனில் அக்கறை உடைய அரசு செய்யலாமா? ஸ்டெர்லைட் துப்பாக்குச் சூடு சம்பவம்தான் இந்த தொகுதியில் கனிமொழி ஜெயிக்கவும் முக்கிய காரணமா இருந்தது. எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி இப்படி புரமோஷன் தர்றாங்கனு தெரியலை. இதுல இன்னொரு ஹைலைட் என்னன்னா, இப்ப இன்ஸ்பெக்டரா ஆகியிருக்கிற ரென்னஸ் சபாநாயகர் அப்பாவுவின் சகோதரர் மகன். அரசியல் செல்வாக்குல வாங்கினாரா தெரியலை, ஆனா இவருக்கு தரப்பட்டிருக்கும் புரமோஷன் தப்பானதுங்க” என்கிறார் இவர். சபாநாயகர் அப்பாவு அரசு ஊழியர் பென்ஷன் விவகாரத்திலும் எதிர்க்கட்சியாக இருந்த போது ஒன்றையும் சமீபத்தில் நீதிம்னறத்தில் அதற்கு நேரெதிராகவும் பேசியிருக்கிறார்கள் இப்போதைய ஆட்சியாளர்கள். தேர்தல் நெருக்கத்தில் இப்போது இந்த பதவி உயர்வு விவகாரமும் நடந்திருக்கிறது. சமூக ஊடகங்களில் இதை கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கியிருக்கின்றனர்.

விகடன் 25 Nov 2025 1:47 pm

துப்பாக்கிச்சூடு : `அதிகாரிக்கு பதவி உயர்வா? திமுகவின் இரட்டை வேடம்’ - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

``தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கொடுமை நடைபெற்றதில்லை. குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருந்ததை ரத்து செய்து விட்டு தூத்துக்குடி செல்கிறேன்.” - கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டவுடன் இப்போதைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் கொந்தளித்து பேசிய வார்த்தைகள் தான் இவை. கொந்தளித்ததுடன் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து உடனே விளக்கமெல்லாம் கேட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த சம்பவத்துக்கு காரணமான ஒரு அதிகாரியை விடமாட்டோம் எனச் சூளுரைக்கவும் செய்தார். நிற்க. ஒரு வருடத்துக்கு முந்தைய ஒரு செய்திக்கு வருவோம். துப்பாக்கிச்சூடு நடந்த போது ஐ.ஜி யாக இருந்த சைலேஷ் குமார் யாதவுக்கு 2023 இறுதியில் டி.ஜி.பி யாக பதவி உயர்வு அளித்தது தமிழக அரசு. திமுக கூட்டணியிலிருக்கும் கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் கண்டனமெல்லாம் கூட தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இப்போது கடந்த வார மேட்டருக்கு வருவோம். அந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனான அருணா ஜெகதீசன் கமிஷன் சம்பவத்தில் குற்றம் நிகழ்த்தியதாகச் சுட்டிக் காட்டிய  காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான ரென்னிஸுக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ரென்னிஸ் இன்ஸ்பெக்டர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காந்திமதி நாதனிடம் இது தொடர்பாகப் பேசினோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் இவரும் ஒருவர்.  ‘’திமுக ரெட்டை வேடம் போடுற கட்சின்னு ஒரு கருத்து பொதுவான மக்கள் மத்தியில் இருக்கில்லையா. அதுக்கு நல்ல உதாரணம் இது. ஆட்சியில இருந்தா ஒரு மாதிரியும் இல்லாட்டி வேற மாதிரியும் பேசறது அவங்களுக்கு இயல்பாகவே வரும். ஸ்டெர்லைட்டுக்கு எதிரா போராடின மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளிலெல்லாம் அந்தந்த தனி நபர்களே வாதாடி வழக்குல இருந்து வெளியில வந்தாங்க. காந்திமதிநாதன் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரங்கள் மீது நடவடிக்கை எடுக்காட்டிக் கூட என்னன்னும் போறாங்கனு அதைச் சகிச்சுப் போயிடலாம். ஆனா அவங்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கறது மோசமான முன்னுதாரணம். நாளைககு இன்னொரு போராட்டம் நடந்தா இந்த அதிகாரிகள் எந்த எல்லைக்கும் துணிய மாட்டாங்களா? இதை மக்கள் நலனில் அக்கறை உடைய அரசு செய்யலாமா? ஸ்டெர்லைட் துப்பாக்குச் சூடு சம்பவம்தான் இந்த தொகுதியில் கனிமொழி ஜெயிக்கவும் முக்கிய காரணமா இருந்தது. எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி இப்படி புரமோஷன் தர்றாங்கனு தெரியலை. இதுல இன்னொரு ஹைலைட் என்னன்னா, இப்ப இன்ஸ்பெக்டரா ஆகியிருக்கிற ரென்னஸ் சபாநாயகர் அப்பாவுவின் சகோதரர் மகன். அரசியல் செல்வாக்குல வாங்கினாரா தெரியலை, ஆனா இவருக்கு தரப்பட்டிருக்கும் புரமோஷன் தப்பானதுங்க” என்கிறார் இவர். சபாநாயகர் அப்பாவு அரசு ஊழியர் பென்ஷன் விவகாரத்திலும் எதிர்க்கட்சியாக இருந்த போது ஒன்றையும் சமீபத்தில் நீதிம்னறத்தில் அதற்கு நேரெதிராகவும் பேசியிருக்கிறார்கள் இப்போதைய ஆட்சியாளர்கள். தேர்தல் நெருக்கத்தில் இப்போது இந்த பதவி உயர்வு விவகாரமும் நடந்திருக்கிறது. சமூக ஊடகங்களில் இதை கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கியிருக்கின்றனர்.

விகடன் 25 Nov 2025 1:47 pm

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிரச்னை என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்பு ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகரின் விரைவான வளர்ச்சியால் பாறைக்குழியைச் சுற்றியுள்ள பகுதிகள் வீடுகளாக மாறிவிட்டன. இதனால் அங்கு குப்பை கொட்டுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். முதலியபாளையம் அருகே உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் உயர்நீதிமன்றம் அங்கு குப்பை கொட்ட தடை விதித்தது. இதற்கான மாற்று தீர்வாக, இடுவாய் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் குப்பையை கொட்டத் திட்டமிடப்பட்டது. திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள் ஆனால், அதற்கும் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகளை அகற்ற முடியாமல் நிர்வாகம் சிக்கலில் உள்ளது. இதனிடையே, ராயபுரம் ரோட்டரி பள்ளி அருகே நொய்யல் ஆற்றின் இருபுறங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும், திருப்பூர் ரயில் நிலையம் பின்புறமாக மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்திலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியது: “இந்த வழியேதான் நாங்கள் மெயின் ரோட்டுக்கு செல்வோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இதை கடந்து செல்கிறார்கள். இங்கிருந்து அதிக துர்நாற்றம் வீசுவதால் நடந்து செல்லவே முடியவில்லை. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி உடனடியாக இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள் இது குறித்து 36-ஆம் வார்டு கவுன்சிலரும் அந்தப் பகுதியின் மண்டல தலைவருமான திவாகரன் அவர்களிடம் கேட்டபோது, “குப்பை பிரச்சினைக்கு மாநகராட்சி விரைவில் நிரந்தர தீர்வு எடுக்கத் திட்டமிட்டு வருகிறது. மக்கள் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

விகடன் 25 Nov 2025 1:21 pm

அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது?

வரி... பிரச்னை... சமாதானம்... ரிப்பீட்டு - இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா - சீனா உறவு இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது... அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின... இரு நாடுகளும் அதை தான் சொன்னது. ட்ரம்ப் 'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது? அடுத்த பிரச்னை அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார். அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது. தொலைபேசி அழைப்பு இந்த நிலையில்தான், நேற்று ட்ரம்ப் - ஜின்பிங் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், நானும் ஜியும் உக்ரைன் விஷயம், ஃபென்டனைல், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். சீனா உடனான நம்முடைய உறவு மிகவும் வலுவாக உள்ளது. என்னை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஜிங்கிற்கு அதிபர் ஜி அழைத்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவரும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வருவதாக ஒப்புக்கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் - ஜி ஜின்பிங் 'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது? இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து வெளியுறவுத் துறையின் சீன செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜி ஜின்பிங் தைவானை சீனா உடன் இணைப்பது குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவு அப்படியே தொடருமா... அல்லது அடுத்து எதாவது பிரச்னை ஏற்பட்டு விரிசல் உண்டாகுமா... காலம் தான் பதிலளிக்கும். President Xi Jinping spoke with U.S. President Donald J. Trump on the phone. President Xi noted that since the Busan meeting, the China-U.S. relationship has generally maintained a steady and positive trajectory, and this is welcomed by the two countries and the broader… pic.twitter.com/OChLjr7PpL — Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) November 24, 2025

விகடன் 25 Nov 2025 1:03 pm

அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது?

வரி... பிரச்னை... சமாதானம்... ரிப்பீட்டு - இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா - சீனா உறவு இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது... அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின... இரு நாடுகளும் அதை தான் சொன்னது. ட்ரம்ப் 'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது? அடுத்த பிரச்னை அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார். அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது. தொலைபேசி அழைப்பு இந்த நிலையில்தான், நேற்று ட்ரம்ப் - ஜின்பிங் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், நானும் ஜியும் உக்ரைன் விஷயம், ஃபென்டனைல், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். சீனா உடனான நம்முடைய உறவு மிகவும் வலுவாக உள்ளது. என்னை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஜிங்கிற்கு அதிபர் ஜி அழைத்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவரும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வருவதாக ஒப்புக்கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் - ஜி ஜின்பிங் 'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது? இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து வெளியுறவுத் துறையின் சீன செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜி ஜின்பிங் தைவானை சீனா உடன் இணைப்பது குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவு அப்படியே தொடருமா... அல்லது அடுத்து எதாவது பிரச்னை ஏற்பட்டு விரிசல் உண்டாகுமா... காலம் தான் பதிலளிக்கும். President Xi Jinping spoke with U.S. President Donald J. Trump on the phone. President Xi noted that since the Busan meeting, the China-U.S. relationship has generally maintained a steady and positive trajectory, and this is welcomed by the two countries and the broader… pic.twitter.com/OChLjr7PpL — Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) November 24, 2025

விகடன் 25 Nov 2025 1:03 pm

`பிரதமர் மோடியை அன்று கடுமையாக எதிர்த்தவர், இன்று ஆதரிப்பது ஏன்?’ - பி.ஆர் பாண்டியன் எக்ஸ்க்ளூஸிவ்

`பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் இருப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் விரும்பவில்லை. கோவை இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலினை அழைக்க முயற்சி செய்த போதும், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என அனைத்து விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ளார். அவருடன் விகடன் சார்பில் பிரத்தியேக நேர்காணல் செய்யப்பட்டது. இனி கேள்விகளும் அவரின் பதில்களும்...! ``கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடி உங்களை புகழ்ந்து பாராட்டினார். அவர் உங்களிடம் என்ன கூறினார்?” ``பிரதமருடைய தமிழக வருகை விவசாயிகள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு இயற்கை விவசாயம் குறித்த திட்டங்களை பிரதமரிடம் நாங்கள் எடுத்துரைத்தோம். அரசியல் ரீதியிலாக கொள்கை ரீதியிலாக பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட, அவரை நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் அவரை அழைத்து பேசுவதற்கும், எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைப்பதற்கும் அந்த மேடையை நாங்கள் பயன்படுத்தினோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரை அழைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த விவசாயிகளுக்கு முழு உரிமை இருக்கிறது. பிரதமரும் அந்த மேடையை அரசியல் மேடையாக பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மேடையாகவே பயன்படுத்தினார். அது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. பிரதமருடைய இந்த பேச்சு ஒட்டுமொத்தமாக விவசாயத்தை இயற்கை விவசாயமாக மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் ஆவது இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். மேடை அலங்காரத்திற்காக எதையும் அவர் பேசாமல் எது வாய்ப்பு இருக்கிறதோ அதை அவர் பேசியுள்ளார்.” ``பிரதமர் பேசியதற்கு பிறகு உடனடியான மாற்றங்கள் எதுவும் தென்பட்டிருக்கிறதா?” ``இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சௌஹான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மலையடிவார கிராமங்களில் வசிக்கக்கூடிய நபர்கள் வனவிலங்குகளால் தாக்கப்பட்டாலோ கொல்லப்பட்டாலோ அதற்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதை உறுதி செய்து இருக்கிறார். மேலும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அரசாணையும் வெளியிட்டு இருக்கிறார். மாநாடு முடிந்த உடனேயே எங்களது கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் எங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.” ``பிரதமரின் இந்த வருகை அரசியல் சார்புடையது அல்ல என நீங்கள் சொன்னாலும், பிரதமரின் வருகையை ஒட்டி தமிழ்நாட்டில் ஏராளமான அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது பிரதமரின் இந்த வருகை அரசியல் ரீதியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்?” ``சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் நாங்கள் இந்த மாநாட்டை நடத்தவில்லை. நாங்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருக்கிறோம். ஆகஸ்ட் மாதமே இதை நடத்துவதாக இருந்தோம். ஆனால் கால சூழல் சேராததால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது. எனவே நாங்கள் இதை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. பிரதமர் கலந்து கொள்ள இருந்து அரங்கில் 3000 விவசாயிகளை அமர வைக்க திட்டமிட்டு இருந்தோம். அத்தனை பேர் வருவார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. ஆனால் 5000 விவசாயிகள் வந்திருந்தார்கள். நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் இதற்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்தமாக அரசியல் கலப்பில்லாமல் இதை செய்தோம் . உலகளாவிய அளவில் வலிமையான தலைவர் பிரதமர் என்பதால் அவரை வைத்து இப்படி ஒரு மாநாட்டை நடத்தினால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதை அணுகுகிறார்கள். காரணம் பிரதமருடைய வருகை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” ``நெல்லுக்கான ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அரசு சமீபத்தில் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி கோவை மாநாட்டிற்கு வந்திருக்கிறார். எனவே பிரதமர் மோடியின் வருகை வாக்கு வங்கியை குறிவைத்து தானே தவிர விவசாயிகளின் நலன் சார்ந்தது அல்ல என்ற விமர்சனங்கள் திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிறது இதை எப்படி பார்க்கிறீர்கள்?” ``குருவை நெல் கொள்முதல் என்பது செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி அம்மாத இறுதியில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. அக்டோபர் 15ஆம் தேதி வரை பருவமழை தொடங்கவில்லை. நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதுவரையிலும் கூட நெல் கொள்முதலை அரசு முறையாக செய்யவில்லை. அதனால் தான் மழையில் நெல் மூட்டைகள் நனைந்தன. ஆனால் ஆரம்பத்தில் இவர்கள் `நெல் மூட்டைகள் நனையவில்லை’ என சொன்னார்கள் அதை எதிர்த்து நாங்கள் செய்த போராட்டங்களை கொச்சைப்படுத்தினார்கள். ஆனால் நெல் நனையவில்லை என சொன்ன இவர்கள் தற்பொழுது ஈரப்பதத்தை அதிகரித்து மத்திய அரசு வழங்கவில்லை என சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசு ஏன் மறுத்தது என்பதை அரசு இன்னும் தெளிவாக சொல்லவில்லை. அதை முதல்வர் மு.க ஸ்டாலின் தெரியப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.” ``விவசாயிகள் பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் இடையே தொடர்ந்து சச்சரவு நீடிக்கும் நிலையில், கோவையில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினையும் ஒரே மேடையில் கொண்டு வந்திருந்தால் பிரச்சனைகள் ஓரளவுக்கு சுமுகமாக முடிந்திருக்குமே. அதற்கான முயற்சிகள் எதையும் எடுத்தீர்களா?” ``இந்த மாநாடு தென்னிந்திய அளவில் நடைபெற்ற மாநாடு. ஒரு மாநில முதல்வரை அழைத்து இன்னொரு மாநில முதல்வரை அழைக்கவில்லை என்றால் அது நன்றாக இருந்திருக்காது. இருந்தாலும் கூட தமிழ்நாடு முதல்வரிடம் இதற்கான அனுமதி என்பது கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சகம் இது தொடர்பாக எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.” ஸ்டாலின் ``விவசாயிகள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி என்பதால் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மறுப்பு தெரிவித்தாரா அல்லது பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் மறுப்பு தெரிவித்தாரா?” ``நாங்கள் கடந்த ஜனவரியில் இருந்து இதற்கான தயாரிப்பு பணிகளில் இருந்தோம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எங்களுடன் இதில் சுமூகமாக நடந்து கொள்ளவில்லை. அதை நாங்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக உணர்ந்து கொண்டோம். பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் தான் கலந்து கொள்ள முதல்வருக்கு மனம் இல்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் இயற்கை விவசாயம் சார்ந்த விவகாரங்களில் கொள்கை முடிவை பிரதமர் தான் எடுக்க முடியும் என்பதால், அவரது தலைமையில் மாநாட்டை நடத்தினோம். ஆனால் இதில் எந்த அரசியலும் கிடையாது. திமுக பார்வையில் இது அரசியலாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. இதை அரசியல் ஆக்க முயற்சிப்பது தவறு.” ``பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தவிர்ப்பதாக தொடர் விமர்சனங்கள் வருகிறது அதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?” ``பிரதமர் என்பவரோ முதல்வர் என்பவரோ அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவியில் இருப்பவர்கள். நாடு தழுவிய அளவில் கொள்கை முடிவுகளை எடுப்பவர் பிரதமர். மாநில அளவில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் மாநில முதல்வர்கள். எனவே இவர்கள் இணக்கமாக செயல்பட்டு, பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரும் பொழுது அந்த மாநில முதல்வர் அவரை சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் சமீப காலமாக அந்த கலாச்சாரம் பின்பற்றப்படாமல் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை இருக்கிறது. கொள்கைய அளவில் எதிர்ப்பது என்பது முக்கியம்தான். ஆனால் நிர்வாக ரீதியில் அந்த எதிர்ப்பை காட்டக்கூடாது. ஒருவேளை பிரதமரை தமிழ்நாடு முதல்வர் சந்திக்க முயற்சித்து அதற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி தரவில்லையா என்பதை தமிழ்நாடு முதல்வர் தான் விளக்க வேண்டும்.” ``மூன்று வேளாண் சட்டம் தொடங்கி பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்தவர் பி.ஆர் பாண்டியன். ஆனால் தற்பொழுது பிரதமரை ஆதரிப்பதன் பின்னணி என்ன? இதில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றதே?” ``தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் பேரழிவு திட்டத்தை 2011ல் கொண்டு வந்தது திமுக தலைமையிலான அரசு. பின்னர் அதன் பாதிப்புகளை தெரியாமல் நாங்கள் அனுமதி கொடுத்து விட்டோம் என விவசாய சங்கங்களான எங்களுடன் சேர்ந்து அதை எதிர்த்ததும் திமுக தான். எங்களுடைய போராட்டங்களில் அப்போதைய முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டார். இன்னும் சொல்லப்போனால் மூன்று வேளாண் சட்டங்கள் என்பது தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நடந்த முரசொலி மாறன் நினைவு நிகழ்ச்சியில் கூட தோகா மாநாட்டின் முடிவுகள் சிறப்பு வாய்ந்தது என முதல்வர் மு.க ஸ்டாலினே குறிப்பிட்டு இருக்கிறார். 50 ஆண்டுகால காவேரி பிரச்னை இன்னமும் கூட முடியவில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்ததற்கு பிறகும் கூட திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுகள் அதை அரசுதலில் வெளியிடாமல் இருந்தார்கள். பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் உச்ச நீதிமன்றத்தை நாடி அதை பெற்றுக் கொடுத்தார். இப்படி திமுகவின் செயல்பாடுகளையும் நிறைய சொல்ல முடியும். எனவே அதுபோல தான் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கிறது என தெரிந்து நாங்கள் பிரதமரை எதிர்த்தோம். ஆனால் பிரதமரை அழைத்து மாநாட்டை நடத்தினோம் என்பதற்காகவே வேண்டும் என்று வேண்டுமென்றே என் மீது அவதூறுகள் பரப்பப்படுகிறது. நான் மேடையிலேயே கூட சில விஷயங்களை போராடி தான் அரசுகளிடம் இருந்து பெற வேண்டி இருக்கிறது என பேசினேன் பிரதமர் இருக்கக்கூடிய ஒரு மேடையில் இதுவரை யாரும் இவ்வளவு வெளிப்படையாக பேசியதே கிடையாது. ஆனால் அதையும் கூட நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று தான் பிரதமர் பேசினார்.” ``இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. பாரத ரத்னா விருதை அரசியல் கருவியாக பாஜக பயன்படுத்துகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக முன் வைக்கும் நிலையில் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?” ``கொரோனா காலத்தில் எனது உயிரைக் காப்பாற்றியது இயற்கை விவசாய உணவுகள் தான் என பிரிட்டன் பிரதமரை ஒருமுறை தெரிவித்து இருக்கிறார். அவர் இந்திய விவசாயிகளுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் நஞ்சில்லா உணவு மண் மலட்டுத்தன்மை அடையாமல் இருப்பதை தடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் பெரும் புரட்சி செய்தவர் நம்மாழ்வார். எனவே அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் எனக் கேட்பது எங்களது உரிமை. அவருக்கு அப்படி ஒரு விருது வழங்கும் பட்சத்தில் இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்ல முடியும். angaadi உத்திரபிரதேசத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கும், பீகாரில் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூருக்கும் , தமிழ்நாட்டில் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட்டதில் அரசியல் இருக்கிறது என முன்வைக்கப்படும் விமர்சனங்களை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் எங்களுடைய பார்வையில் நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அந்த கோரிக்கையை பிரதமரிடம் நேரடியாக முன் வைத்துள்ளோம்.”

விகடன் 25 Nov 2025 11:52 am