SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

32    C
...

மனிதாபிமான உதவி: இந்தியா வரவிருந்த விமானம் மீது தாக்குதல் - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பலமுனை மோதலாக உருவெடுத்துள்ளது. ஈரானிலிருந்து இந்தியாவிற்கு மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காகப் புறப்படவிருந்த விமானம் ஒன்று அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், 'மஹான் ஏர்' நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. அந்த விமானத்தில் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக டெல்லிக்கு வரவிருந்த இந்த விமானம், தாக்குதலுக்கு உள்ளானதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் தனது சுகாதாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், இந்திய உதவிப் பொருட்கள் ஈரானுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Mahan Air இந்த மோதல்களுக்கு மத்தியிலும், தனக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் தனது நன்றியைத் தெரிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளில், இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் செய்திகள் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியா அனுப்பிய முதற்கட்ட மனிதாபிமான உதவிகளை ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நன்றியறிவிப்பு ஒரு அடையாளச் செயலாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், ``ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாக வணிகத்திற்காகத் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை முற்றிலுமாகத் தகர்ப்போம். மேலும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும். ஈரானின் 47 ஆண்டுகால பயங்கரவாத ஆட்சிக்கு இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த நேரடி மோதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தடைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த மத்தியஸ்த முயற்சிகளை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்து போர் இன்னும் தீவிரமடையும் என்றே அஞ்சப்படுகிறது.

விகடன் 31 Mar 2026 10:23 am

ரூ.8000 வவுச்சர்: சமையலறையில் நுழையாதவர்களுக்கு அந்த வலி புரியாது - கனிமொழி விளக்கம்

தி.மு.க தேர்தல் அறிக்கையில் ரூ.8000 கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஏன் என்பதற்கு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ``2021-ல் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காலை உணவு திட்டம், தமிழ்ப் புதல்வன் போன்ற சொல்லப்படாத திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றினார். மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 மத்திய அரசின் ஒத்துழைப்பால்தான் செய்து தரமுடியும் என்ற நிலையில் உள்ளன. மேலும், 64 திட்டங்கள் அப்பகுதியில் உள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியவில்லை. முதல்வர் ஸ்டாலின் இந்த ஆண்டு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டக்கூடிய அளவிற்கான ஒரு தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அறிக்கை குழு பல மாவட்டங்களுக்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய மக்களைச் சந்தித்து பெறப்பட்ட மனு, ஈமெயில், வாட்ஸ் ஆப், குறுஞ்செய்தி எனப் பல்வேறு வழிகளில் கிட்டத்தட்ட 80,000 கருத்துக்களைப் பெற்று இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்? 'ஒவ்வொரு துறையிலும் இருக்கும் அனுபவசாளிகளிடம் ஆலோசனை செய்து, இந்தத் தேர்தல் அறிக்கையில தரக்கூடிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் என்ன? அதையும் ஆராய்ந்து இந்தத் தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படக்கூடிய வாக்குறுதிகளாக இருக்க வேண்டும்' என்று முதலமைச்சர் உறுதியாகப் பணித்திருந்தார். அதன்படி தயாரிக்கப்பட்டிருக்கக்கூடிய தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தல் அறிக்கை. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை படிக்கும் அளவு நேரமில்லை. நடைமுறையில் ஏற்கனவே இருக்கும் திட்டங்களையே அ.தி.மு.க தனது அறிக்கையில் வழங்கியுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று முன்பு கூறியவர்கள், இப்போது அதை 2,000 ரூபாயாக உயர்த்துவோம் என்று கூறுவது நகைப்புக்குரியது. 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன என்பது 80 சதவீதத்திற்கும் மேலானது. இதைச் சரியாகக் கணக்கிடத் தெரிந்தவர்களுக்கு இது புரியும். தி.மு.க-வின் திட்டங்களை 'இலவசங்கள்' என்று அழைப்பது தவறு. இது ஒரு 'பொருளாதார ஊக்கத்தொகை'. மக்கள் கையில் பணம் சேரும்போது அவர்களின் வாங்கும் திறன் அதிகரித்து, அதன் மூலம் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. திமுக தேர்தல் அறிக்கை: 'TV, Fridgeக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன், 10 லட்சம் வீடுகள்'- முழு லிஸ்ட் உதாரணமாக, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணம் என்பது அவர்களுக்கு நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. அந்த நேரத்தில் அவர்கள் மற்றொரு வேலையைச் செய்து பொருளாதார ரீதியாக முன்னேற இது ஒரு சமூக முதலீடாக அமைகிறது. பிங்க் பேருந்து வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு வழங்கப்படவுள்ள வவுச்சர்கள் என்பது ஒரு வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் முதலீடு. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட 'இரண்டு பர்னர் கேஸ் அடுப்பு' என்பது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல. அது பெண்களின் நலன் சார்ந்த ஒரு தொலைநோக்குத் திட்டம். ஒரே ஒரு பர்னர் கொண்ட அடுப்பை வழங்கினால் அரசுக்குச் செலவு குறையும் என்று அதிகாரிகள் ஆலோசனை கூறியபோது, கலைஞர் அதை ஏற்கவில்லை. இரண்டு பர்னர்கள் இருந்தால் பெண்கள் தங்கள் சமையலை விரைவாக முடித்துவிட்டு, சமையலறையிலிருந்து சீக்கிரம் வெளியே வர முடியும் என்றும், அதன் மூலம் தங்களுக்குப் பிடித்தமான மற்ற காரியங்களில் அவர்கள் ஈடுபட முடியும் என்றும் அவர் கருதினார். சுருக்கமாகச் சொன்னால், அது சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளிக்கும் திட்டமாகும். TVK election Manifesto | தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கை | இளைஞர்களுக்கான விஜய் வாக்குறுதிகள் அதே தர்க்கம்தான் தற்போதைய வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்ற சாதனங்களுக்கும் பொருந்தும். ஒரு பெண் துணிகளைக் கையால் துவைக்கச் செலவிடும் நேரத்தை வாஷிங் மெஷின் மிச்சப்படுத்துகிறது. குளிர்சாதனப் பெட்டி இருந்தால், அன்றே சமைத்த உணவை அடுத்த நாள் பயன்படுத்த முடிவதால், தினசரி சமையல் வேலைக்கான நேரம் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு மிச்சமாகும் நேரத்தை பெண்கள் தங்களின் சுய முன்னேற்றத்திற்காகவோ அல்லது வேறொரு வருமானம் தரும் பணிக்காகவோ பயன்படுத்த முடியும். இது வெறும் பொருளாகப் பார்க்கப்படாமல், ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கான முதலீடாகவே கருதப்பட வேண்டும். கலைஞர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ' வவுச்சர்' (Voucher) முறையின் சிறப்பம்சமே அதன் பயன்பாடுதான். ஒரு குறிப்பிட்ட பொருளை அரசே வழங்கும்போது, ஏற்கனவே அந்தப் பொருளை வைத்திருக்கும் வீட்டிற்கு அது தேவையற்ற கூடுதல் சுமையாக மாறுகிறது. ஆனால், வவுச்சராக வழங்கும்போது, அந்தப் பெண்ணிற்குத் தனது வேலைப்பழுவைக் குறைக்க எந்தச் சாதனம் தேவையோ (உதாரணமாக பிரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷின்), அதை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் கிடைக்கிறது. இது அவரது நேரத்தைச் சரியாக முதலீடு செய்ய வழிவகுக்கிறது. மைக்ரோவேவ் ஓவன் (Micro-oven) போன்ற சாதனங்களை ஆடம்பரம் என்று சிலர் விமர்சிக்கலாம். சமையலறைக்குள் நுழையாதவர்களுக்கு அதன் வலி புரியாது. பிரிட்ஜில் இருக்கும் பாத்திரத்தை அப்படியே எடுத்து ஓவனில் வைத்துச் சூடுபடுத்துவது என்பது மிக எளிய காரியம். அதுவே அடுப்பில் சூடுபடுத்த வேண்டும் என்றால், உணவை வேறொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். மீண்டும் அந்தப் பாத்திரத்தைக் கழுவ வேண்டும். இந்தச் சிறு வேலை கூட ஒரு பெண்ணின் நேரத்தையும் உழைப்பையும் கோருகிறது. அந்தப் பெண்களுக்கு மட்டுமே தெரியும், இந்தச் சிறு தொழில்நுட்ப மாற்றங்கள் அவர்களின் தினசரி வாழ்வில் எவ்வளவு பெரிய நிம்மதியைத் தருகின்றன என்று. கனிமொழி கருணாநிதி மத்திய அரசு சரியான நிதிப் பகிர்வை வழங்காத போதிலும், பெட்ரோல் விலையைக் குறைத்தது மற்றும் ஜிடிபி (GDP) வளர்ச்சியை அதிகரித்தது எனத் தமிழக அரசு பல சாதனைகளைப் புரிந்துள்ளது. வரும் காலங்களில் மத்திய அரசின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படாத, மாநில அரசால் சுயமாக நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். என்றார். மிஸ்டர் கழுகு: சீட் கேட்கும் கனிமொழி... பதில் சொல்லாத ஸ்டாலின்!

விகடன் 31 Mar 2026 10:15 am

மோடியின் வாயைப் பூட்டி, சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது - பிருந்தா காரத் காட்டம்

கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் முதல் ரவுண்ட் பிரசாரம் மேற்கொண்டனர். இரண்டாம் கட்டமாக அடுத்தும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின்போது பா.ஜ.க 'ஏ' டீம் எனக்கூறி சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளை அட்டாக் செய்தார். ராகுல் காந்தி பிரசாரத்தின்போது சபரிமலை தங்கம் கொள்ளை பற்றி பிரதமர் மோடி மறந்துவிட்டார் எனவும், கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர வேண்டும் என மோடி விரும்புவதாகவும் கூறியிருந்தார். மேலும், ரப்பருக்கு அடிப்படை ஆதாரவிலையை 250 ரூபாயாக நிர்ணயிப்பதாக 2016-ல் வாக்குறுதி அளித்த சி.பி.எம் அதை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதானி, அம்பானி மற்றும் அமெரிக்காவும்தான் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஏ' டீம். டொனால்ட் டிரம்ப் ஈரானை முதலில் தாக்கியபோதும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தைத் தாக்கியபோதும் மௌனம் காத்தவர் மோடி. மோடியின் வாயைப் பூட்டி அதன் சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது. பிருந்தா காரத் கேரளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் பா.ஜ.க மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுப்பவர்கள் சி.பி.எம் கட்சியினர். இதனை மறைத்து 'டீல்' என்று கூறி பா.ஜ.க-வும் காங்கிரஸும் பொய்ப் பிரசாரம் செய்கின்றன. பல விஷயங்களில் பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போன்று செயல்படுகின்றனர். கேரள மக்களுக்குச் சேர வேண்டிய நிதியை ஏன் மறுக்கிறீர்கள் என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும். ​ தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம் சில மதப் பிரிவினரை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டது. பிருந்தா காரத் கர்நாடகாவும் தெலங்கானாவும் காங்கிரஸின் ஏ.டி.எம்-களாக மாறிவிட்டன. அங்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸால் நிறைவேற்ற முடியவில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பிறகுதான் ராகுல் காந்தி கேரளாவில் வந்து வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் வயநாடு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடு அமைத்து கொடுக்க எல்.டி.எஃப் அரசு டவுன்ஷிப் அமைத்து வருகிறது. இந்த நேரத்தில் வீடு கட்டித் தருவதாகச் சொல்லி வருபவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) மக்களிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலித்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?

விகடன் 31 Mar 2026 9:10 am

வேலூர் தவெக வேட்பாளர் பின்னணி: மினி டிரக்; 7 கார்கள்; கைகொடுத்த பிசினஸ் - வெளியான சொத்து மதிப்பு

பி ரசாரம், பேரணி, வாக்குசேகரிப்பு எனத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. களத்தில் நேருக்குநேர் மோதும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதன்படி, வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஆகிய இருவரும் நேற்றைய தினம் தங்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். உறுதிமொழி பத்திரத்துடன் அவர்கள் கணக்கு காட்டியுள்ள சொத்து மதிப்பும், தற்போது வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன் தேர்தல் களத்துக்கு முதல்முறையாக வந்திருக்கிறார். தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.1,49,29,432 மதிப்பில் இருப்பதாகவும், தனது மனைவி எழிலரசி பெயரில் 54,94,436 ரூபாய் மதிப்பிலும், மகள் ஸ்ரீவித்யா பெயரில் 7,00,400 ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். வேலூர் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் கையில் ரொக்கமாக தன்னிடம் 1,25,550 ரூபாயும், தன் மனைவியிடம் 10,000 ரூபாய் இருப்பதாகவும், தனது பெயரில் ஒரு மினி டிரக் மற்றும் 7 கார்கள் இருக்கின்றன எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இவை அனைத்தும், அசையும் சொத்துகள் பட்டியலில் அடக்கமாகிறது. அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் ரூ.62,68,000 மதிப்பிலும், தனது மனைவி மற்றும் தனது மகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக 2,73,92,268 ரூபாய்க்கு இருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். கொளத்தூர்: அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை அதேபோல, தனது பெயரிலும் தன் மனைவி பெயரிலும் சேர்த்து தொழில் ரீதியாக 1,12,03,537 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். இதில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், வினோத் கண்ணனின் பின்னணி க்ளியராக இருக்கிறது. எந்தவொரு வழக்கு விவகாரங்களிலும் அவரின் பெயர் இதுநாள் வரை பதிவாகவில்லை. `அலமா அபாகஸ்’ கல்வி பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் வினோத் கண்ணன். அவரின் மனைவி எழிலரசி `ஶ்ரீ மெமென்டோஸ்’ விற்பனையகம் நடத்துகிறார். பூர்வீக சொத்து இல்லாமல், படிப்படியாக பிசினஸ் கைகொடுத்ததால் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, வேலூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தையும் தொடங்கி, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் வினோத் கண்ணன். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா வேலூர் தொகுதியில் களமிறங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஓர் இல்லத்தரசி. அவரின் கணவர் விஜய் வாகன ஓட்டுநராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு மனைவியை உயர்க்கல்வி படிக்கவைக்க விருப்பப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பி.ஏ தமிழ் பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார். வரும் 2026-2027 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டு செல்லவிருக்கிறார் சோனியா. இந்த நிலையில், அசையும் சொத்து தனது பெயரில் 8,57,000 ரூபாய் மதிப்பிலும், தன் கணவர் பெயரில் ரூ.20,30,000 மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அசையா சொத்துகள் எதுவுமே இல்லை எனவும், தனது வங்கிக் கணக்கில் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே வைப்புத் தொகையாக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார் சோனியா. Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்

விகடன் 31 Mar 2026 9:08 am

வேலூர் தவெக வேட்பாளர் பின்னணி: மினி டிரக்; 7 கார்கள்; கைகொடுத்த பிசினஸ் - வெளியான சொத்து மதிப்பு

பி ரசாரம், பேரணி, வாக்குசேகரிப்பு எனத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. களத்தில் நேருக்குநேர் மோதும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதன்படி, வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஆகிய இருவரும் நேற்றைய தினம் தங்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். உறுதிமொழி பத்திரத்துடன் அவர்கள் கணக்கு காட்டியுள்ள சொத்து மதிப்பும், தற்போது வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன் தேர்தல் களத்துக்கு முதல்முறையாக வந்திருக்கிறார். தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.1,49,29,432 மதிப்பில் இருப்பதாகவும், தனது மனைவி எழிலரசி பெயரில் 54,94,436 ரூபாய் மதிப்பிலும், மகள் ஸ்ரீவித்யா பெயரில் 7,00,400 ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். வேலூர் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் கையில் ரொக்கமாக தன்னிடம் 1,25,550 ரூபாயும், தன் மனைவியிடம் 10,000 ரூபாய் இருப்பதாகவும், தனது பெயரில் ஒரு மினி டிரக் மற்றும் 7 கார்கள் இருக்கின்றன எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இவை அனைத்தும், அசையும் சொத்துகள் பட்டியலில் அடக்கமாகிறது. அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் ரூ.62,68,000 மதிப்பிலும், தனது மனைவி மற்றும் தனது மகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக 2,73,92,268 ரூபாய்க்கு இருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். கொளத்தூர்: அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை அதேபோல, தனது பெயரிலும் தன் மனைவி பெயரிலும் சேர்த்து தொழில் ரீதியாக 1,12,03,537 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். இதில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், வினோத் கண்ணனின் பின்னணி க்ளியராக இருக்கிறது. எந்தவொரு வழக்கு விவகாரங்களிலும் அவரின் பெயர் இதுநாள் வரை பதிவாகவில்லை. `அலமா அபாகஸ்’ கல்வி பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் வினோத் கண்ணன். அவரின் மனைவி எழிலரசி `ஶ்ரீ மெமென்டோஸ்’ விற்பனையகம் நடத்துகிறார். பூர்வீக சொத்து இல்லாமல், படிப்படியாக பிசினஸ் கைகொடுத்ததால் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, வேலூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தையும் தொடங்கி, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் வினோத் கண்ணன். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா வேலூர் தொகுதியில் களமிறங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஓர் இல்லத்தரசி. அவரின் கணவர் விஜய் வாகன ஓட்டுநராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு மனைவியை உயர்க்கல்வி படிக்கவைக்க விருப்பப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பி.ஏ தமிழ் பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார். வரும் 2026-2027 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டு செல்லவிருக்கிறார் சோனியா. இந்த நிலையில், அசையும் சொத்து தனது பெயரில் 8,57,000 ரூபாய் மதிப்பிலும், தன் கணவர் பெயரில் ரூ.20,30,000 மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அசையா சொத்துகள் எதுவுமே இல்லை எனவும், தனது வங்கிக் கணக்கில் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே வைப்புத் தொகையாக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார் சோனியா. Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்

விகடன் 31 Mar 2026 9:08 am

வந்தவாசி: பத்து தோல்வி பழனிசாமியை, மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ - உதயநிதி

தி ருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தனித் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது உதயநிதி பேசுகையில், ``இந்தியாவில் வளர்ந்து வருகிற மாநிலங்களில் 11.19 சதவிகித வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு நமக்குத் துணை நிற்கிறதா? நிதி உரிமை, கல்வி உரிமை என மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு, புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்தார்கள். அதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால், தமிழ்நாடு மட்டும் ஏற்கவில்லை. ஏன்? புதிய கல்விக் கொள்கையை அனுமதித்தால் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க முயற்சிப்பார்கள். வந்தவாசி தனித் தொகுதி நமக்கு வரவேண்டிய 2,500 கோடி ரூபாய் கல்வி நிதி, இப்போதுவரை வரவில்லை. `புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி கொடுப்போம்’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சொல்கிறார். `2500 கோடி ரூபாய் அல்ல; பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்கள்மீது திணிக்க மாட்டேன்’ என்று நம்முடைய முதலமைச்சர் சொல்கிறார். இப்படி, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒவ்வொரு விஷயத்திலும் துரோகம் செய்துகொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக, எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக்கொண்டு இன்றைக்கு மக்களைச் சந்திக்க வருகிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் சாதிப்பாரா உதயநிதி? `ஜாடிக்கேற்ற மூடி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல, மோடிக்கேற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார். அரசியலில் முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவே எடப்பாடி பழனிசாமியின் ரூபத்தில் ஒரு முரட்டு அடிமையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இவர்களுக்குச் சரியான பாடத்தைச் சொல்லித் தர வேண்டும். பொதுவாக, ஒரு ப்ராடக்ட் பெரிய ஹிட்டானால், அதே மாதிரி போலி ப்ராடக்டை லான்ச் செய்வார்கள். `சைனீஸ் மேக் டூப்ளிகேட்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதுமாதிரிதான் இன்றைக்கு டெல்லியில் அ.தி.மு.க கூட்டணி அரேஞ்ச் செய்யப்பட்டிருக்கிறது. கீழ்பென்னாத்தூர் தொகுதி சைனா மேக் மாதிரி டெல்லி மேக்காக அ.தி.மு.க உங்களிடம் வருகிறது. நிச்சயமாக, அந்தக் கூட்டணிக்கு கேரன்டியும் கிடையாது; வாரன்டியும் கிடையாது. தேர்தல் முடிந்தவுடன் அதனுடைய பியூஸைப் பிடுங்கிவிடுவார்கள். அ.தி.மு.க கட்சியைப் போன தேர்தலின்போது பா.ஜ.க-விடம் வாடகைக்கு விட்டிருந்தார். இன்றைக்கு மொத்தமாக பா.ஜ.க-விடம் விற்றுவிட்டார். இந்தத் தேர்தல், மோடியா? நம்முடைய தலைவரா? என்று கேட்கக்கூடிய தேர்தல். இன்றைக்கு பா.ஜ.க ஒரு டீமாக வந்திருக்கிறது. பா.ஜ.க-வின் ஏ டீம், பி டீம், சி டீம் என்று களத்துக்குப் பலபேர் வந்திருக்கிறார்கள். எத்தனை டீம் வந்தாலும், நம்முடைய தலைவர்தான் சாம்பியன்’’ என்றார். அதைத்தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கு.பிச்சாண்டியை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அங்கு பேசுகையில், ``இன்றைக்கு `மக்களைக் காப்போம்; தமிழ்நாட்டை மீட்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் இருந்து மீட்க வேண்டும். பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ என்றார். ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

விகடன் 31 Mar 2026 8:36 am

வந்தவாசி: பத்து தோல்வி பழனிசாமியை, மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ - உதயநிதி

தி ருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தனித் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது உதயநிதி பேசுகையில், ``இந்தியாவில் வளர்ந்து வருகிற மாநிலங்களில் 11.19 சதவிகித வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு நமக்குத் துணை நிற்கிறதா? நிதி உரிமை, கல்வி உரிமை என மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு, புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்தார்கள். அதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால், தமிழ்நாடு மட்டும் ஏற்கவில்லை. ஏன்? புதிய கல்விக் கொள்கையை அனுமதித்தால் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க முயற்சிப்பார்கள். வந்தவாசி தனித் தொகுதி நமக்கு வரவேண்டிய 2,500 கோடி ரூபாய் கல்வி நிதி, இப்போதுவரை வரவில்லை. `புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி கொடுப்போம்’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சொல்கிறார். `2500 கோடி ரூபாய் அல்ல; பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்கள்மீது திணிக்க மாட்டேன்’ என்று நம்முடைய முதலமைச்சர் சொல்கிறார். இப்படி, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒவ்வொரு விஷயத்திலும் துரோகம் செய்துகொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக, எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக்கொண்டு இன்றைக்கு மக்களைச் சந்திக்க வருகிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் சாதிப்பாரா உதயநிதி? `ஜாடிக்கேற்ற மூடி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல, மோடிக்கேற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார். அரசியலில் முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவே எடப்பாடி பழனிசாமியின் ரூபத்தில் ஒரு முரட்டு அடிமையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இவர்களுக்குச் சரியான பாடத்தைச் சொல்லித் தர வேண்டும். பொதுவாக, ஒரு ப்ராடக்ட் பெரிய ஹிட்டானால், அதே மாதிரி போலி ப்ராடக்டை லான்ச் செய்வார்கள். `சைனீஸ் மேக் டூப்ளிகேட்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதுமாதிரிதான் இன்றைக்கு டெல்லியில் அ.தி.மு.க கூட்டணி அரேஞ்ச் செய்யப்பட்டிருக்கிறது. கீழ்பென்னாத்தூர் தொகுதி சைனா மேக் மாதிரி டெல்லி மேக்காக அ.தி.மு.க உங்களிடம் வருகிறது. நிச்சயமாக, அந்தக் கூட்டணிக்கு கேரன்டியும் கிடையாது; வாரன்டியும் கிடையாது. தேர்தல் முடிந்தவுடன் அதனுடைய பியூஸைப் பிடுங்கிவிடுவார்கள். அ.தி.மு.க கட்சியைப் போன தேர்தலின்போது பா.ஜ.க-விடம் வாடகைக்கு விட்டிருந்தார். இன்றைக்கு மொத்தமாக பா.ஜ.க-விடம் விற்றுவிட்டார். இந்தத் தேர்தல், மோடியா? நம்முடைய தலைவரா? என்று கேட்கக்கூடிய தேர்தல். இன்றைக்கு பா.ஜ.க ஒரு டீமாக வந்திருக்கிறது. பா.ஜ.க-வின் ஏ டீம், பி டீம், சி டீம் என்று களத்துக்குப் பலபேர் வந்திருக்கிறார்கள். எத்தனை டீம் வந்தாலும், நம்முடைய தலைவர்தான் சாம்பியன்’’ என்றார். அதைத்தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கு.பிச்சாண்டியை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அங்கு பேசுகையில், ``இன்றைக்கு `மக்களைக் காப்போம்; தமிழ்நாட்டை மீட்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் இருந்து மீட்க வேண்டும். பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ என்றார். ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

விகடன் 31 Mar 2026 8:36 am