SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' - ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா'வாக்குறுதிகள்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திருந்தது. இதில் பேசிய மரிய வில்சன் தொகுதி மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி பேசியிருந்தார். பொதுக்கூட்டம் மரிய வில்சன் பேசியதாவது, ''கடந்த 8 நாட்களாக ஆர்.கே.நகரைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். எல்லா மக்களிடமும் உரையாடியிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரிய துரோகத்தை இரண்டு கட்சிகளுக்கும் இந்த மக்களுக்கு நிகழ்த்தியிருக்கிறது. நான் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு இலவச கல்வியும், முதியோருக்கு வீடு தேடி ரேஷனும் கொடுப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தத் தொகுதியிலிருந்து எக்கச்சக்க கலெக்டர்களும் மருத்துவர்களும் வர வேண்டும். மரிய வில்சன் தொகுதியில் ஓராண்டுக்கு கணவரை இழந்த 25 பெண்களின் குழந்தைகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பேன். ஆண்டுக்கு 25 பேரை ஹஜ் மற்றும் ஜெருசலேம் பயணத்துக்கு அனுப்பி வைப்பேன். இன்னும் இந்தத் தொகுதியில் நிறைய சுற்றி வருவேன். உங்களின் பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பேன். நம்பிக்கையோடு இருங்கள்'' என்றார். மார்ச் 10 ஆம் தேதி தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் இறுதி செய்து அவர்களை நேரில் அழைத்து வாழ்த்தியிருந்தார். அப்போதுதான் மரிய வில்சனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியையும் ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

விகடன் 21 Mar 2026 9:46 pm

திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை - திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். பொதுக்கூட்டம் ஆதவ் பேசியதாவது, ''திமுக கூட்டணியில் மதிமுக சுய கௌரவத்தை இழந்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று வரைக்கு சீட் வாங்க முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறது. ஜவாஹிருல்லாவின் கட்சியை திமுக அழித்துவிட்டது. திமுகவுக்கு தலித்துகளும் சிறுபான்மையினரும் அதிகாரத்துக்கு வருவது பிடிக்காது. இவர்களை நம்பாதீர்கள் எனத் திருமா அண்ணனிடம் எவ்வளவோ சொன்னேன். 'நம்மை வளரவிட மறுக்கிறார்கள். நாம் எந்த விதத்திலும் வலிமை பெறக்கூடாது என நினைக்கிறார்கள்' என மனம் வருந்தி திருமா அண்ணன் பேசியிருக்கிறார். திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. வேங்கைவயல் சம்பவத்தில் திருமா திமுக-வுக்கு எவ்வளவோ துணையாக இருந்தார். ஆனால், இப்போது 5 தொகுதியைக் கொடுத்து, 'இருந்தால் இரு போனால் போ' என்கின்றனர். ஆதவ் திமுகவின் பண்ணையார்த்தனம்தான் இது. விசிகவை அழிக்க திமுக தயாராகிவிட்டது. திருமா அண்ணனின் வலி எங்களின் வலி. திருமாவின் கண்ணீருக்காகவே ஸ்டாலினுக்கு ஒரு முடிவை மக்கள் கொடுப்பார்கள்' என்றார். கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

விகடன் 21 Mar 2026 9:42 pm

கரூரில் 'ஜனநாயகன்'பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா கரூரில் சூட்டிங் நடத்தப்பட்டது என முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கூறி பேசியிருந்தார். பொதுக்கூட்டம் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, ''திமுக மாலை 4-6 மணிக்குத்தான் கள்ள ஓட்டைப் போடுவார்கள். அப்போதுதான் நாம் இன்னமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வட சென்னையை திமுகவும் அதிமுகவும் எப்போதும் ஏழ்மையாகவே வைத்திருக்கிறார்கள். அண்ணா நகருக்கும் ஆர்.கே.நகருக்கும் அத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன. 2014 இல் திமுக 40-40லும் தோல்வியடைந்த சமயத்தில்தான் நான் திமுகவில் வேலை செய்ய ஆரம்பித்தேன். `தவெக விஜய்யுடன் பேசுவோம்!’ - விலக நினைக்கும் ரங்கசாமி; வளைக்கத் துடிக்கும் பாஜக தினமும் முதல்வரைச் சந்தித்து வியூகங்களை வகுத்து கடுமையாக உழைத்தேன். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அத்தனை போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். அப்படிப்பட்டவனுக்கு அங்கே முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு சரியான எதிரியை திமுக பார்க்கவில்லை. அதனால்தான் தலைவர் 6 மாவட்டங்களுக்குச் சென்றவுடனேயே கரூர் சம்பவம் நடந்தது. ஆளும் தரப்பு எடுக்கும் சர்வேக்களே திமுகவை நடுங்க வைத்தது. அதனால்தான் நம்மைப் பிரசாரம் செய்ய விடாமல் முடக்கினார்கள். திருவாரூரில் தலைவருக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்தே திமுக பயந்துவிட்டது. கடந்த 15 நாட்களாக தவெக - பாஜகவுடன் கூட்டணிக்குச் செல்கிறது என்கிற செய்தி பரப்பப்பட்டது. திமுக, அதிமுகவும் சேர்ந்து பரப்பிய செய்தி அது. மிரட்டுபவர்கள்தான் கோழை. அமைதியாக இருப்பவன்தான் வீரன். அதேமாதிரி, காலை - மாலை எனப் பேசிக் கொண்டிருப்பவனே அரசியல் தெரியாதவன். ஆதவ் குஜராத் கலவரத்தை கலைஞர் அந்த மாநிலப் பிரச்னை எனக் குறிப்பிட்டார். மதச்சார்பின்மை பேசும் ஸ்டாலின் அப்போது கலைஞரிடம் கேள்வி கேட்டிருக்கலாமே? பணமும் அதிகாரமும் கிடைத்தால் திமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணிக்குச் சேரும். பாஜகவுடன் கூட்டணி பேசியிருந்தால் ஜனவரி 10 ஆம் தேதியே ஜனநாயகன் ரிலீஸ் ஆகியிருக்கும். பராசக்தி படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகியது. ஜனநாயகன் இன்றைக்கு வரைக்கும் ரிலீஸ் ஆகவில்லை. கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் இதைக் கவனிக்க வேண்டும். மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து வெளியேறியிருந்தால் டெல்லியே தலைவரை முதல்வர் ஆக்கியிருக்கும். ஆனால், தலைவர் கொள்கைப் பிடிப்போடு உறுதியாக நிற்கிறார். உதயநிதி நம்மை பார்த்து கொள்கை என்ன எனக் கேட்கிறார். அவரை நான் நேரடி விவாதத்துக்கு அழைத்தேன் இன்னும் வரவில்லை. கூட்டணிக்கு நாம் செல்லவில்லை என்றவுடன் அதிமுக நம்மை விமர்சிக்கத் தொடங்குகிறது. கரூரில் ஷூட்டிங் நடத்தியதாக பொய் பிரசாரத்தை முன்னெடுக்கிறார்கள். தலைவர் கூப்பிட்டால் எங்கு வேண்டுமானாலும் கூட்டம் கூடும். எதற்காக கரூரில் சூட்டிங் நடத்த வேண்டும்? அது முழுக்க முழுக்க பொய் பிரசாரம். நாம் சமீபத்தில் எடுத்த சர்வேயில் திமுகவை விட 2% வாக்குகள் அதிகமாக எடுக்கிறோம். அதிமுக மூன்றாம் இடத்துக்குச் செல்கிறது. அதனால்தான் நம்மை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள்'' என்றார். 'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்

விகடன் 21 Mar 2026 9:34 pm

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வே லூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான லஞ்சக் குற்றம்’ மற்றும் `பி.என்.எஸ் 132 - அரசு அலுவலர்களை அவர்களின் அலுவல் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல்’ ஆகிய இரு பிரிவுகளின்கீழ் சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். நேற்றைய தினம், TN 23 DK 9579 பதிவெண் கொண்ட மேயரின் டொயோட்டா கிளான்ஸா காரையும் போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். எம்.எல்.ஏ கார்த்திகேயன் - மேயர் சுஜாதா இந்த நிலையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், விளக்கமளிக்கவும் மார்ச் 23-ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகுமாறும் மேயர் சுஜாதாவுக்கு சத்துவாச்சாரி போலீஸார் இன்று சம்மன் அனுப்பியிருக்கின்றனர். அதேபோல, வழக்கில் தொடர்புடைய தி.மு.க கவுன்சிலர் உட்பட மற்ற இருவருக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது. வேலூர் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், தி.மு.க மாநகரச் செயலாளருமான கார்த்திகேயனின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார் மேயர் சுஜாதா. எனவே, `பரிசுப் பொருள் வழங்கியதில் கார்த்திகேயனுக்கும் தொடர்பிருக்கிறதா?’ என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தேர்தல் விதி மீறி பரிசுப் பொருள்; வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் - ஓட்டுநர் மீது வழக்கு பதிவு

விகடன் 21 Mar 2026 7:21 pm

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி முதல்வர் ரங்கசாமிக்குத் தற்போதைய கையிருப்புத் தொகை ரூ.33,339/-. மேலும் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் ரூ.49,632/-, ஹெச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கில் ரூ.98,241/- இருக்கிறது. இவற்றுடன் இரண்டு யமஹா பைக்குகளும், ஹோண்டா சிட்டி, கியா கார்னிவல் என இரண்டு கார்களும் இருக்கின்றன. மேலும் தலா 12 கிராமில் ஒரு செயின், ஒரு மோதிரம் என ரூ.21,25,752/- மதிப்புடையவை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல்வர் ரங்கசாமி அதேபோல தட்டாஞ்சாவடி பகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் 20,000 சதுர அடியில் ஒரு இடமும், ரூ.12 கோடி மதிப்பில் 25,000 மற்றும் 40,000 சதுர அடியில் இரண்டு இடங்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில் 2,400 சதுர அடியில் ரூ.28 லட்சம் மதிப்பில் ஒரு கட்டிடம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.27.78 கோடி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல கோகுலகிருஷ்ணன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட இருவரிடம் ரூ.35 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. என்டிஏ கூட்டணி உறுதி… `லாட்டரி’ சார்லஸ் லஜகவுக்கு இரண்டு சீட்! - பாஜக-வுடன் தொடர்கிறார் ரங்கசாமி

விகடன் 21 Mar 2026 5:45 pm

நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி - கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ். சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசியல் களத்திலும் சரி, மீடியா வட்டாரத்திலும் சரி கடந்த சில மாதங்களாகவே இவர் தான் ஹாட் டாபிக். தமிழ் நாட்டுக்காரரான இவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரது தொகுதிகளின் எஸ்.ஐ.ஆர் கண்காணிப்பு அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்ததிலிருந்தே, 'கெரோ', 'போராட்டம்', 'கோ பேக் கோஷம்' என இவருக்கு எதிராக ரவுண்டு கட்டத் தொடங்கிய‌து திரிணாமுல் காங்கிரஸ். மம்தா பானர்ஜி ஆக்ஸ்போர்டு உரையின்போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூபா மொய்த்ரா 'குயிக் கன் முருகன்' பட போஸ்டரைத் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, 'உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்படும் முருகனைத் தயவு செய்து கட்டுப்படுத்துங்கள்' எனத் தேர்தல் ஆணையத்தை டேக் செய்தார். 'அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்ட அளவுக்கு என்னிடம் துப்பாக்கிகள் இல்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் நாலரை ஆண்டுகள் காவல்துறையில் இருந்தபோது பல ரக துப்பாக்கிகளைக் கையாள பயிற்சி பெற்றிருப்பதுடன், சட்டபூர்வமாகத் திறம்பட அவற்றைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்' என அவருக்குப் பதில் தந்தார் முருகன். பரபரப்பான தேர்தல் பணியிலிருந்தவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''என்னுடைய ஊர் சாத்தூர் பக்கம் கத்தாள‌ம்பட்டி. அப்பா சின்ன கோவிந்தன் தீவிர திமுககாரர். அம்மா அப்பா நான், தங்கைனு அளவான குடும்பம். மகிழ்ச்சியா போயிட்டிருந்த என் பால்யத்தைப் புரட்டிப் போட்டது சாத்தூரில் நிகழ்ந்த ஜாதிக் கலவரம். கலவரத்தில் அப்பா உயிர் போயிடுச்சு. அப்ப 10வது படிச்சிட்டிருந்த நான் குலதெய்வக் கோவிலுக்குப் போயிருந்ததால் அன்னைக்கு நான் தப்பிச்சேன். இல்லாட்டி அன்னைக்கே என்னையும் கொலை செய்திருப்பாங்க. ஏன்னா அப்பெல்லாம் கவுன்ட் காட்ட கொலை பண்ணிட்டிருந்தாங்க. அப்பாவும் முன்னாடி அரிவாள் தூக்கினவர்தான். மம்தா பானர்ஜி இருந்த இடத்தைச் சுத்தி கலவரம், கொலைன்னு பார்த்துப் பார்த்து வளர்ந்ததுல பயம் போயிடுச்சு. ஆனா 'இதுதான் வாழ்க்கையா'ங்கிற கேள்வி எழ, படிச்சு பெரிய பதவிகளுக்குப் போனாதான் குடும்பச் சூழலை மாத்த முடியும்கிற ஒரு வைராக்கியம் மனசுக்குள் வந்தது. போட்டித் தேர்வுகள் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினேன். கல்லூரிப் படிப்பு முடியறதுக்குள்ளாகவே ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியில் புரபஷனரி ஆபீஸர் பணிக்குத் தேர்வானேன். கேரளாவில் முதல் வேலை. வேலையையும் பார்த்துகிட்டே மீதிப் படிப்பையும் முடிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிச்சது. பிறகு தமிழ்நாட்டுக்குப் போகலாம்னு டி.என்.பி.எஸ்.சி எழுதினேன். SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்! குரூப் 1 க்ளியர் ஆகி, காவல்துறைப் பணி கிடைக்க வங்கி வேலையை விட்டுட்டு சென்னை வந்து ஆவடி டி.எஸ்.பி. ஆனேன். அந்தச் சமயத்தில் தவறே செய்யாம உயரதிகாரிகள் ரெண்டு பேர் முன்னாடி குற்றவாளி போல நிக்க வேண்டிய சம்பவம் ஒண்ணு நிகழ்ந்தது. அந்த ரெண்டு அதிகாரிகளும் நேரடி ஐ.பி.எஸ் அதிகாரிகள். அன்னைக்குத்தான் சிவில் சர்வீஸ் எழுதணுங்குற உந்துதல் உண்டாச்சு. சம்பளமில்லா விடுப்பு எடுத்துகிட்டு டெல்லி போய் யு.பி.எஸ்.சி-க்குத் தயார் செய்ததுக்குப் பலன் கிடைச்சது. மேற்கு வங்க கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியா 2007ம் ஆண்டு பணியைத் தொடங்கினேன்'' என்றவரிடம், முருகன் ஐஏஎஸ் முதல்வர் மம்தா பானர்ஜியுடனான மோதல் போக்கு குறித்துக் கேட்டோம். நான் பணியில் சேர்ந்த 4 வது வருஷம் அவங்க முதல்வரானாங்க. தொடர்ந்து மூணு முறை அவங்க ஆட்சிதான். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. ஆனா நேர்மையா சட்டப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகள் என்னை அவருக்கு எதிரியாக்கிடுச்சுனு நினைக்கேன். அதனால எங்காச்சும் என்னைப் பார்த்தால், நான் வணக்கம் வச்சாக் கூட பதிலுக்கு வணக்கம் சொல்ல மாட்டாங்க. நீங்கள் 'இதற்காக' வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை' மம்தா பதில் முக்கியத்துவம் இல்லாத துறைகளையே ஒதுக்குவாங்க. மோதல் போக்கின் உச்சமா ஒரு விஷயம் நடந்தது. என் மகனுக்கு ஆட்டிசம் பிரச்னை ப்ளஸ் பேச்சு சரியா வராம இருந்தது. தாய்மொழி புழங்குகிற இடத்துல இருந்து சிகிச்சை தந்தா சரியாகும்னு அங்க இருக்கிற டாக்டர்கள் பரிந்துரைச்சாங்க. 'தமிழ்நாட்டுக்கு  டெபுடேஷனில் போய் வர்றேன்'னு கேட்டேன். அனுமதி தரலை. ஒரு ஐஏஎஸ் அதிகாரியா இருந்தும் மகனுக்குத் தேவைப்படுகிற ஒரு சிகிச்சையைத் தரமுடியாமப் போச்சேங்கிற அந்தக் குற்ற உணர்ச்சி எனக்கு இப்பவும் இருந்துட்டே இருக்கு'' என்கிறார். மேற்கு வங்கம் 'பாஜக மம்தாவுக்கு எதிராக உங்களைப் பயன்படுத்துவதாகச் சிலர் சொல்கிறார்களே?' எனக் கேட்டதற்கு, தேர்தல் நேரத்துல ஆளுங்கட்சிக்குச் சாதகமா நடக்கிற அதிகாரிகள், நடுநிலையோட செயல்படுகிற அதிகாரிகள்னு பட்டியல் தயார் செய்து அதனடிப்படையில்தான் தேர்தல் கமிஷன் பணி ஒதுக்கும். தேர்தல் கமிஷன் போட்ட உத்தரவை பா.ஜ.க கட்சியோட தொடர்பு படுத்தி நான் பார்க்கலை. நான் சரியா வேலையைச் செய்வேன்னு நம்பி தந்தாகவே நினைக்கிறேன். நாளை பாஜகவே இங்க ஆட்சிக்கு வந்தாலும் அப்ப நான் மாநிலப் பணியில இருந்தா அவங்களுக்கும் ஆகாத ஆளாகவே இருப்பேன்னுதான் நினைக்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் இது சாதாரணம் என்றார். LPG விலை உயர்வு: ``உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது... - மம்தா பானர்ஜி எழுப்பும் கேள்வி!

விகடன் 21 Mar 2026 5:23 pm

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' - மதூர் சத்யா சிக்கியது எப்படி?

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர் சத்யா எப்படி சிக்கினார்? மதூர் சத்யா பெண்களை ஏமாற்றி அவர்களுடன் அந்தரங்க வீடியோக்களை எடுத்து வெளியில் பரப்பியதாக மதூர் சத்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் மீதான புகாரைப் பாதிக்கப்பட்ட பெண்கள் முதலில் சி.பி.ஐ கட்சிக்கே எடுத்து சென்றிருக்கின்றனர். 58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி சி.பி.ஐ யின் முக்கிய நிர்வாகிகள் கூடிப் பேசி புகார் மற்றும் ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன்பிறகே அவரை கட்சியை விட்டு நீக்கியதோடு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் பற்றி அறிய இந்த விவகாரத்தைக் கையாண்ட சி.பி.ஐ-யைச் சேர்ந்த பாரதி மற்றும் ரஞ்சனி கண்ணம்மாவிடம் பேசினோம். அந்த நபர் மீது புகார் வந்தவுடன் எங்களுக்கே முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் தத்துவம். மதூர் சத்யா அதன்படி பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அவர்களின் தனியுரிமையை மதித்து விசாரித்தோம். மார்ச் 13 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், எங்கள் அமைப்பின் தோழர் ஒருவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மனம் நொந்துப் பேசி புகார் கூறியிருக்கிறார். அன்று மாலையே முக்கிய நிர்வாகிகளெல்லாம் ஆன்லைன் வழியாகக் கூடி புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, முகாந்திரம் இருப்பின் மதூர் சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டோம். புகார் கூறிய பெண் பெரும் மன உளைச்சலிலும் பதற்றத்திலும் இருந்தார். அவரைத் தேற்றி தைரியமூட்டி, அவரின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வோம் என உத்தரவாதம் கொடுத்தோம். அதன்பிறகுதான் அந்தப் பெண் கொஞ்சம் நம்பிக்கையாக தன்னிடம் இருந்த வீடியோக்களை எங்களிடம் ஒப்படைத்தார். பாலியல் குற்றச்சாட்டு: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது! வெளியேவே பகிரமுடியாத அந்தரங்க வீடியோக்கள் அவை. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, நட்பாகப் பழகும் பெண்களிடம் நம்பிக்கை கொடுத்து உறவில் இருந்திருக்கிறார். அவர்களுடன் தனிமையில் அந்தரங்கமாக இருக்கும் போது அவற்றை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். எடுத்த வீடியோவை வெளியில் மற்ற பெண்களுக்கும் பகிர்ந்து, வேறு சில பெண்களையும் ஏமாற்ற முயன்றிருக்கிறார். தங்களின் வீடியோ அவரின் மூலம் வெளியில் பரவுவது தெரிந்த பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அழுத்தத்துக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியிருக்கின்றனர். மதூர் சத்யா இது எல்லாமே அமைப்புக்கு வெளியே இருக்கும் பெண்கள். அமைப்புக்குள் இருக்கும் பெண்கள் ஒரு சிலருக்கும் தவறான எண்ணத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்திருக்கிறார். அதன் ஸ்க்ரீன் ஷாட்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது வரைக்கும் 8 பாதிக்கப்பட்ட பெண்கள் கமிட்டியில் புகாரளித்திருக்கின்றனர். 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். மதூர் சத்யா அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதாலும் பிரபலமானவர் என்பதாலும் அவர் மீது புகார் கொடுக்க பெண்கள் தயங்கினர். அவர்களைத் தேற்றி புகாரளிக்க செய்து, அவர்களுக்கான சட்ட உதவிகளையும் பார்த்துக் கொள்ள சி.பி.ஐ தயாராக இருக்கிறது என்றனர். உன் கணவர் இறந்துவிடுவார் - போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்

விகடன் 21 Mar 2026 5:07 pm

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' - மதூர் சத்யா சிக்கியது எப்படி?

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர் சத்யா எப்படி சிக்கினார்? மதூர் சத்யா பெண்களை ஏமாற்றி அவர்களுடன் அந்தரங்க வீடியோக்களை எடுத்து வெளியில் பரப்பியதாக மதூர் சத்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் மீதான புகாரைப் பாதிக்கப்பட்ட பெண்கள் முதலில் சி.பி.ஐ கட்சிக்கே எடுத்து சென்றிருக்கின்றனர். 58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி சி.பி.ஐ யின் முக்கிய நிர்வாகிகள் கூடிப் பேசி புகார் மற்றும் ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன்பிறகே அவரை கட்சியை விட்டு நீக்கியதோடு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் பற்றி அறிய இந்த விவகாரத்தைக் கையாண்ட சி.பி.ஐ-யைச் சேர்ந்த பாரதி மற்றும் ரஞ்சனி கண்ணம்மாவிடம் பேசினோம். அந்த நபர் மீது புகார் வந்தவுடன் எங்களுக்கே முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் தத்துவம். மதூர் சத்யா அதன்படி பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அவர்களின் தனியுரிமையை மதித்து விசாரித்தோம். மார்ச் 13 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், எங்கள் அமைப்பின் தோழர் ஒருவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மனம் நொந்துப் பேசி புகார் கூறியிருக்கிறார். அன்று மாலையே முக்கிய நிர்வாகிகளெல்லாம் ஆன்லைன் வழியாகக் கூடி புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, முகாந்திரம் இருப்பின் மதூர் சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டோம். புகார் கூறிய பெண் பெரும் மன உளைச்சலிலும் பதற்றத்திலும் இருந்தார். அவரைத் தேற்றி தைரியமூட்டி, அவரின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வோம் என உத்தரவாதம் கொடுத்தோம். அதன்பிறகுதான் அந்தப் பெண் கொஞ்சம் நம்பிக்கையாக தன்னிடம் இருந்த வீடியோக்களை எங்களிடம் ஒப்படைத்தார். பாலியல் குற்றச்சாட்டு: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது! வெளியேவே பகிரமுடியாத அந்தரங்க வீடியோக்கள் அவை. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, நட்பாகப் பழகும் பெண்களிடம் நம்பிக்கை கொடுத்து உறவில் இருந்திருக்கிறார். அவர்களுடன் தனிமையில் அந்தரங்கமாக இருக்கும் போது அவற்றை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். எடுத்த வீடியோவை வெளியில் மற்ற பெண்களுக்கும் பகிர்ந்து, வேறு சில பெண்களையும் ஏமாற்ற முயன்றிருக்கிறார். தங்களின் வீடியோ அவரின் மூலம் வெளியில் பரவுவது தெரிந்த பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அழுத்தத்துக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியிருக்கின்றனர். மதூர் சத்யா இது எல்லாமே அமைப்புக்கு வெளியே இருக்கும் பெண்கள். அமைப்புக்குள் இருக்கும் பெண்கள் ஒரு சிலருக்கும் தவறான எண்ணத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்திருக்கிறார். அதன் ஸ்க்ரீன் ஷாட்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது வரைக்கும் 8 பாதிக்கப்பட்ட பெண்கள் கமிட்டியில் புகாரளித்திருக்கின்றனர். 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். மதூர் சத்யா அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதாலும் பிரபலமானவர் என்பதாலும் அவர் மீது புகார் கொடுக்க பெண்கள் தயங்கினர். அவர்களைத் தேற்றி புகாரளிக்க செய்து, அவர்களுக்கான சட்ட உதவிகளையும் பார்த்துக் கொள்ள சி.பி.ஐ தயாராக இருக்கிறது என்றனர். உன் கணவர் இறந்துவிடுவார் - போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்

விகடன் 21 Mar 2026 5:07 pm

கேரளம்: பாஜக - சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு - குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தாமதமாக வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இன்றும், திங்கள் கிழமையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கால அவசாகம் உள்ளது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாக தாமதமாவதற்குக் காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுவதற்காக தலைமையில் சீட் கேட்டதுதான் காரணம் எனச் சொல்லப்பட்டது. பின்னர் அவர்கள் இருவருக்குமே சீட் வழங்கப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் சீட் வழங்காததற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் வி.டி.சதீசன் செய்த சதிதான் காரணம் என்று அக்கட்சிக்குள்ளேயே சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே வி.டி.சதீசன் அளித்த பேட்டியில், கே.சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோரின் பெயர்களை நீக்குவதால் எனக்கு என்ன லாபம். அவர்களின் பெயரை நீக்கும் அளவுக்கு நான் அவ்வளவு பெரிய தலைவரா? எம்.பி-க்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது முழுமையாக ஹைகமாண்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவர்கள் எடுத்த முடிவுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது. கே.சுதாகரன் போன்ற ஒரு தலைவர் காங்கிரஸின் மிகப்பெரிய சொத்து. அவருக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு உண்டு. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், களத்தில் செயல்படுபவர்களையும் தாக்கிப் பேசுவது எதிர்த்தரப்பினரின் வழக்கம்.  சி.பி.எம் - பா.ஜ.க இந்தப் பிரச்னைகளை உருவாக்கியது ஊடகங்கள்தான். கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸுக்கு எதிராகப் பல செய்திகளைப் பரப்பினார்கள். இப்போது எல்லாம் காணாமல் போய்விட்டது. ஊடகங்களின் அஜெண்டாவைக் கூட சி.பி.எம் மாநிலத் தலைமையகமான ஏ.கே.ஜி சென்டர்தான் தீர்மானிக்கிறது. கே.என்.பணிக்கர் மறைவு: கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர் - பினராயி விஜயன் இரங்கல் காங்கிரஸில் கலவரம் நடப்பதாகச் சித்தரித்து, தேர்தலில் பலனடையப் பார்க்கிறார்கள். இந்தியாவில் மிகவும் விலைவாசி அதிகமான மாநிலம் கேரளமாகும். கடந்த பத்து ஆண்டுகளில் கேரள மக்கள் இடதுசாரி ஆட்சியை வெறுத்துவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலிருந்து தப்பிப்பதற்காக இல்லாத கதைகளை உருவாக்குகிறார்கள். காங்கிரஸில் சரியான நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும். வி.டி.சதீசன் பினராயி விஜயன் முதல்வர் ஆவதற்காக வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு சீட் மறுக்கப்பட்ட வரலாறு கேரளாவுக்குத் தெரியும். தொண்டர்கள் கொதித்தெழுந்த பிறகுதானே அவருக்கு சீட் கொடுத்தார்கள். கேரளாவில் ஆட்சிக்கு வருவதுதான் காங்கிரஸின் ஒரே இலக்கு. கேரளாவில் சி.பி.எம் - பா.ஜ.க கட்சிகளிடையே திரைமறைவில் தேர்தல் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது உண்மை என்பதை நிரூபிக்க இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே போதும். சுமார் பத்து இடங்களில் பா.ஜ.க - சி.பி.எம் இடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார். Kerala: 'அவர் 3 முறை MLA; 4-வதாக மனைவிக்கு சீட்டா?' - சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி

விகடன் 21 Mar 2026 4:54 pm

கேரளம்: பாஜக - சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு - குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தாமதமாக வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இன்றும், திங்கள் கிழமையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கால அவசாகம் உள்ளது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாக தாமதமாவதற்குக் காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுவதற்காக தலைமையில் சீட் கேட்டதுதான் காரணம் எனச் சொல்லப்பட்டது. பின்னர் அவர்கள் இருவருக்குமே சீட் வழங்கப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் சீட் வழங்காததற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் வி.டி.சதீசன் செய்த சதிதான் காரணம் என்று அக்கட்சிக்குள்ளேயே சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே வி.டி.சதீசன் அளித்த பேட்டியில், கே.சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோரின் பெயர்களை நீக்குவதால் எனக்கு என்ன லாபம். அவர்களின் பெயரை நீக்கும் அளவுக்கு நான் அவ்வளவு பெரிய தலைவரா? எம்.பி-க்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது முழுமையாக ஹைகமாண்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவர்கள் எடுத்த முடிவுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது. கே.சுதாகரன் போன்ற ஒரு தலைவர் காங்கிரஸின் மிகப்பெரிய சொத்து. அவருக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு உண்டு. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், களத்தில் செயல்படுபவர்களையும் தாக்கிப் பேசுவது எதிர்த்தரப்பினரின் வழக்கம்.  சி.பி.எம் - பா.ஜ.க இந்தப் பிரச்னைகளை உருவாக்கியது ஊடகங்கள்தான். கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸுக்கு எதிராகப் பல செய்திகளைப் பரப்பினார்கள். இப்போது எல்லாம் காணாமல் போய்விட்டது. ஊடகங்களின் அஜெண்டாவைக் கூட சி.பி.எம் மாநிலத் தலைமையகமான ஏ.கே.ஜி சென்டர்தான் தீர்மானிக்கிறது. கே.என்.பணிக்கர் மறைவு: கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர் - பினராயி விஜயன் இரங்கல் காங்கிரஸில் கலவரம் நடப்பதாகச் சித்தரித்து, தேர்தலில் பலனடையப் பார்க்கிறார்கள். இந்தியாவில் மிகவும் விலைவாசி அதிகமான மாநிலம் கேரளமாகும். கடந்த பத்து ஆண்டுகளில் கேரள மக்கள் இடதுசாரி ஆட்சியை வெறுத்துவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலிருந்து தப்பிப்பதற்காக இல்லாத கதைகளை உருவாக்குகிறார்கள். காங்கிரஸில் சரியான நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும். வி.டி.சதீசன் பினராயி விஜயன் முதல்வர் ஆவதற்காக வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு சீட் மறுக்கப்பட்ட வரலாறு கேரளாவுக்குத் தெரியும். தொண்டர்கள் கொதித்தெழுந்த பிறகுதானே அவருக்கு சீட் கொடுத்தார்கள். கேரளாவில் ஆட்சிக்கு வருவதுதான் காங்கிரஸின் ஒரே இலக்கு. கேரளாவில் சி.பி.எம் - பா.ஜ.க கட்சிகளிடையே திரைமறைவில் தேர்தல் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது உண்மை என்பதை நிரூபிக்க இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே போதும். சுமார் பத்து இடங்களில் பா.ஜ.க - சி.பி.எம் இடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார். Kerala: 'அவர் 3 முறை MLA; 4-வதாக மனைவிக்கு சீட்டா?' - சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி

விகடன் 21 Mar 2026 4:54 pm

CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை? - ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது அங்கங்கே பயணம், பிரசாரம் என அரசியல் களப் பரபரப்பிற்குச் சொல்லவே வேண்டாம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்னால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். என்.டி.ஏ கூட்டணியின் அடுத்தடுத்த டெல்லி பயணங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமித்ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் டிடிவி தினகரன். அமித்ஷா தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! அப்போது அவர் பேசியதாவது... நாங்கள் எல்லாம் டெல்லி வந்தாலே முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார். 'தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியைப் பெற்று தரமாட்டார்களா?' என்று எங்களைக் கேட்கிறார். சரியான புரிதல் இல்லாமல் டெல்லியோடு நீங்கள் குழாய் அடி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸிற்குப் பிறகு நாங்கள் எப்படி நிதியைப் பெற்று தரமுடியும்? இது தேர்தல் காலம். அதனால், திமுகவை எப்படி விழ்த்துவது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி... நிதி... என்று கூறுகிறார்கள். ஆனால், கடந்த 12 ஆண்டுகளில், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 12 லட்சம் கோடி வழங்கியிருக்கிறது. 2004-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை, காங்கிரஸ் ஆட்சியில் 3 லட்சம் கோடி தான் நிதி வந்திருக்கிறது. எஸ்.சி, எஸ்.டிக்கான நிதியை ரூ.5,000-க்குச் செலவு செய்துவிட்டார். இது 'கடை தேங்காயை வழி பிள்ளையாருக்கு உடைத்தது போல' இருக்கிறது. தமிழ்நாடு அரசு நிதி ஆளுகையைச் சரியாக செய்யவில்லை. ஸ்டாலின் விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும் - திருமா சி.எஸ்.கேவிற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை? பணியிடை மாற்றம், போஸ்டிங் எனக் கிட்டத்தட்ட ரூ.2,500 ஊழலை அமலாக்கத் துறை கண்டுபிடித்திருக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், சென்னை உயர் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க சொல்லி தமிழ்நாட்டு அரசின் தலையில் குட்டியிருக்கிறது. தவறு செய்தால் டெல்லியைக் கண்டு பயப்பட தான் செய்வார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சி.எஸ்.கே-விற்குத் தலைமை தாங்குவது தோனி. அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்? இதற்கு சென்று முதலமைச்சர் போராடச் சொல்லுங்கள். பஞ்ச பாண்டவ கூட்டணி டெல்லி, தமிழ்நாடு என்று கூறி இனி மக்களை ஏமாற்ற முடியாது. டெல்லியில் இவர்கள் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு எத்தனை கெட்ட பெயர், அவமானம் என்று அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாகத் தோற்கடிக்கும். அதற்கான ஸ்ட்ரேட்டஜியைப் பேசதான் வந்தேன். பீகாரைப் போல எல்லாரும் ஒற்றுமையாக இருந்து, ஒவ்வொரு தொகுதியிலும் பூத் லெவலில் ஒற்றுமையாக உழைப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக என்பதை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் மறுத்துவிட்டார்கள். ராமதாஸ் - சசிகலா அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன் - சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன? ராமதாஸ் - சசிகலா கூட்டணியைச் சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. இப்போது நாங்கள் முழுமையாக உள்ளோம். திமுக என்னும் துரியோதன கூட்டணியை வீழ்த்த எங்களது பஞ்ச பாண்டவ கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். திமுகவிற்கான ஒரே மாற்று அதிமுக தலைமையிலான எங்களது கூட்டணி. தமிழ்நாட்டிற்கான நிதி வரவில்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். மத்திய அரசிடம் இருந்து எளிதாக நிதி பெற்றுத்தரக் கூடியது எங்களது கூட்டணி.

விகடன் 21 Mar 2026 3:27 pm

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், “நான் அண்ணா தி.மு.கவிலிருந்து, அண்ணா தொடங்கிய தி.மு.கவில் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் இவர்கள்தான் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள். எடப்பாடி பழனிசாமியும், நானும் முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள். ஓ.பி.எஸ் வருகை பழனிசாமி ஊர்ந்து சென்று முதல்வரானார். தன்னை முதல்வர் ஆக்கியவர்களுக்கே விசுவாசமாக இல்லாதவர். வாக்களிக்கும் மக்களுக்கு விசுவாசமாக இருப்பாரா? பழனிசாமியைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. உங்களுக்கே தெரியும். அவர் உடன் இருப்பது உதயகுமார். நான் முந்தைய மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டபோது 6 ஒ.பன்னீர்செல்வத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார் உதயகுமார். சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் போன்றோரை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? `பா.ஜ.க-வை டென்சனாக்கிய இருவர் அணி' - கடைசி நேரத்தில் `நோ' சொன்ன விஜய்! தலையைப் பிய்த்துக் கொண்டு பேய் பிடித்தது போல பழனிசாமி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார். கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க 7 இடங்களில் டெபாசிட் காலி ஆனது. 14 இடங்களில் மூன்றாம் இடம் பெற்றது. பழனிசாமியும், உதயகுமாரும் அ.தி.மு.க-வைக் குழி தோண்டி புதைத்து விட்டனர். எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதியை ரத்து செய்து, பொதுச்செயலாளர் ஆகி உள்ளார் பழனிசாமி. கூட்டத்தில் ஓ.பி.எஸ் 10 மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிய வேண்டும் என்றால் பணம் வாங்காமல் இருப்பார்களா? இனி அ.தி.மு.கவில் மிட்டா மிராசுதார்தான் பொதுச் செயலாளராக வர முடியும். சபாநாயகர் கூட சில நேரம் எதிர்க்கட்சி உறுப்பினரைக் கண்டித்தாலும், முதல்வர் பேச விட்டு, பதில் அளிப்பார். தி.மு.க கூட்டணியிலிருந்து ஒரு கட்சிகூட வெளியேறாததற்கு, கூட்டணிக் கட்சிகளை முதல்வர் கண்ணியத்துடன் நடத்துவதே காரணம்” என்றார். 'நான் ஜெயிச்சா மட்டும் போதாது...' - விஜய்-ன் அடுத்தக்கட்ட '50' வேட்பாளர்கள் இவர்கள்தான்?

விகடன் 21 Mar 2026 1:22 pm

அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன் - சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். 'இது சுமூக பேச்சுவார்த்தைக்கான முயற்சியோ' என்று அரசியல் களத்தில் பேச்சு ஒன்று எழுந்தது. இதற்கு வைகோவே பதிலளித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் காம்ரேட் பேபி மாநிலங்களவையில் எனக்கு சக உறுப்பினர் மட்டுமல்ல. என் மீது எல்லையற்ற வாஞ்சையும், அன்பும் கொண்டிருப்பவர். M A பேபி விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும் - திருமா அண்மையில் நான் திருவனந்தபுரம் சென்றிருந்தேன். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நான் ஆற்றிய ஆங்கில உரைகளைத் தொகுத்து அதற்கு அணிந்துரை வழங்க கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தேன். அப்போது விமான நிலையத்திற்கே தொழிற்சங்கத் தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினரையும் அனுப்பி, நானும், என்னோடு வந்தவர்களும் அரசு விடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார் பேபி. ஒற்றுமை எனக்கும், அவருக்கும் ஒரு ஒற்றுமை. பழைய பாடல்களைக் கேட்பது எனக்கும், அவருக்கும் பொழுதுபோக்கு. இப்போது கூட, அவருடன் உணவருந்தும் போது, பாசமலர், திருவிளையாடல், பாவ மன்னிப்பு போன்ற திரைப்படங்களின் பாடல்களைக் கேட்டோம். 'செம்மீன் பாடல்களைக் கேட்போம்' என்று கூறினேன். அதையும் கேட்டோம். எங்கள் இருவருக்கிடையில் அப்படிப்பட்ட நட்பு. அதனால், அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை தொலைகாட்சியில் பார்த்தேன். உடனே புறப்பட்டு வந்தேன். வைகோ அவர்கள் முக்கியமான கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவரைச் சந்திக்க வந்தேன். தேர்தலுக்குப் பிறகு இங்கு வரும்போது, வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்று அழைத்தேன். அதன் பின், அவர் கூட்டத்திற்குச் சென்றுவிட்டார். இதுதான் நடந்தது. இதைத் தவிர, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்திற்குள் எந்த அரசியலையும் பேசமாட்டேன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

விகடன் 21 Mar 2026 1:08 pm

58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அசோக் கராட் என்பவர் தன்னிடம் ஜோதிடம் கேட்க வரும் பெண்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். தன்னை ஓய்வு பெற்ற கப்பல் அதிகாரி என்று கூறிக் கொண்டு, கேப்டன் என்ற அடையாளத்துடன் அப்பகுதியில் செயல்பட்டு வந்தார். ஆன்மீக நடைமுறைகள் என்ற போர்வையில் பெண்களை உணர்ச்சிப்பூர்வமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அசோக் கராட்டை இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அப்பென் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், கராட் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, மயக்க மருந்து கலந்த பானங்களை கொடுத்து 2022 முதல் டிசம்பர் 2025 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று தெரிவித்திருந்தார். அசோக் கராட்டிற்கு அரசியல் தலைவர்கள் மத்தியிலும், முக்கிய பிரமுகர்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் மாநில மகளிர் அணித்தலைவரும், மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் தலைவருமான ரூபாலி சாகங்கருக்கு ஜோதிடருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சிவசேனா(உத்தவ்) குற்றம் சாட்டி இருந்தது. இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்) நிர்வாகி சுஷ்மா அந்தாரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தோம்ப்ரே ஆகியோர் அளித்திருந்த பேட்டியில், சாகங்கர் கைதான ஜோதிடர் கராத்துடன் இணைந்து பில்லி சூனியம் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினர். கராட் தலைமையிலான கோயில் அறக்கட்டளையில் உறுப்பினராக சாகங்கர் இருந்துள்ளார். கராட் கைதை தொடர்ந்து, கராட்டின் கால்களைக் கழுவுவது போன்றும், கராட் சாகங்கருக்கு உணவளிப்பது போன்றும், சூரிய ஒளியில் இருந்து காப்பாற்ற கராடிற்கு குடையைப் பிடித்துக் போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. மேலும் ஒரு காணொளியில் கராடை விட்டல் பகவானுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் போன் இது குறித்து சுஷ்மா அந்தாரே கூறுகையில்,''ஜோதிடரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பல பெண்களை சாகங்கர் மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் என்னிடம் கூறினார். அதோடு புகார் அளிக்க வேண்டாம் என்று கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகச் சிலர் என்னிடம் கூறியுள்ளனர். மற்றவர்களிடம் குற்றத்தைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாக என்னிடம் தெரிவித்தனர். சாகங்கர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கராட் ஆகியோரின் போன் அழைப்பு விபரங்களை காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார். திரவம்? சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா இது குறித்து கூறுகையில்,'' கராடின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை தன்னுடன் ஒரு உள் நபர் பகிர்ந்து கொண்டார். கராட் 'ஓஷ்னோ ஜல்' என்ற திரவத்தை தயாரிப்பதாக அவர் கூறினார். இது வயாக்ராவை போன்றதுஆகும். கராடின் வாடிக்கையாளர்களில் பல மூத்த அரசியல்வாதிகள் மற்றும் ஒரு மத அறக்கட்டளையின் அறங்காவலர் இருக்கிறார். மேலும் அவர்கள் நாசிக்கில் இருந்து 'ஜல்' சேகரிக்க தங்கள் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பினர். அவர்களில் பலர் தங்களது வலிமையை அதிகரிக்க உதவும் 'ஓஷ்னோ ப்ரே' மற்றும் 'சித்தா பிரார்த்தனை' செய்ய கராடின் உதவியை நாடியதாக அவர் கூறினார். இப்புகார்களையடுத்து சாகங்கரை அழைத்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். இதில் உடனே பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டார். உடனே சாகங்கர் துணை முதல்வர் சுனேத்ரா பவாரை சந்தித்து பேசிவிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார். இது குறித்து சாகங்கர் கூறுகையில், `கராட்டை குருவாகத்தான் நினைத்தேன். அவர் மீதான புகார் பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்று தெரிவித்தார்.

விகடன் 21 Mar 2026 12:44 pm

`இனி அமெரிக்கா அதை செய்யாது, இலக்கை நெருங்கி விட்டோம்' - ஈரான் போரிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானில் நடத்தி வரும் போர் மூன்றாவது வாரத்திற்கு வந்திருக்கிறது. இத்தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்கா 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களை கப்பல்களில் அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே வளைகுடாவில் 50 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். புதிதாக வரும் கப்பல் மத்திய கிழக்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இத்தாக்குதலை ஆரம்பத்தில் இருந்தே முன்னெடுத்தது இஸ்ரேல்தான். எனவேதான் இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ஈரான் தங்களது பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதால் அந்த வழியாக வர்த்தக கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நேட்டோ நாடுகளிடம் போர்க்கப்பல்களை அனுப்பும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் எந்த நாடும் போர்க்கப்பலை அனுப்ப மறுத்திவிட்டது. இதனால் நேட்டோ அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே இந்த போர் அமெரிக்காவிற்கு தேவையில்லாதது என்று அமெரிக்க மக்கள் நம்புகின்றனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மற்றொரு புறம் போரை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்காவிற்கு கடுமையான பொருட்செலவாகிறது. இதையடுத்து போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகிறது. இது தொடர்பாக அவர் தற்போது தனது சமூக தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய நெருங்கிவிட்டதாகவும், இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிரான ராணுவ முயற்சிகள் அதன் நோக்கத்தை எட்டிவிட்டன. ஈரானின் ஏவுகணைத் திறன், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில் கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. ஈரானின் கடற்படை மற்றும் வான்படை அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெறாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நட்பு நாடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மறுபுறம் இருப்பவர்களை நாம் முழுமையாக அழித்துக் கொண்டிருக்கும்போது போர்நிறுத்தம் செய்ய முடியாது என்று கூறி, உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த அவர் மறுத்துவிட்டார். ஹார்முஸை கைவிட்ட ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணை தொடர்பான தனது செய்தியில், `அந்தப் பாதையைச் சார்ந்துள்ள நாடுகள் அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் மற்ற நாடுகள், தேவைக்கேற்ப அதன் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா இனி அதைச் செய்யாது. அமெரிக்கா இதற்கு உதவ முடியும் என்றாலும், அது அவசியமற்றது. உதவி கேட்கப்பட்டால், ஹார்முஸ் தொடர்பான முயற்சிகளில் அந்த நாடுகளுக்கு நாங்கள் உதவுவோம். ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகு அது தேவையாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். இந்த பணி எளிதானது என்று விவரித்த ட்ரம்ப், அந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பாதுகாப்பது, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒரு எளிதான ராணுவ நடவடிக்கையாக இருக்கும் என்றும் கூறினார். ட்ரம்பின் இந்த கருத்துகள், மத்திய கிழக்கில் பதற்றங்கள் இன்னும் தணியாத நிலையிலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சூழலிலும், மூன்று வாரங்களாகத் தீவிரமாக நடத்தி வந்த தனது நேரடி ராணுவ தாக்குதலை அமெரிக்கா குறைக்கத் தயாராகி வருவதைக் காட்டுகின்றன. இது அமெரிக்காவின் உத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

விகடன் 21 Mar 2026 10:45 am

'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத'அமெரிக்கா?

ஈரான் போரும் முடிந்தபாடில்லை. ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்க நட்பு நாடுகள் கப்பல்களுக்கு திறப்பதில்லை. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகள் எரிப்பொருள் தட்டுப்பாடால் திணறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா. ஈரான் எண்ணெய்க்கு அனுமதி இது குறித்து அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கருவூலம் அனுமதி அளிக்கிறது. இது குறுகிய கால அனுமதி மட்டுமே. தற்போது, குறைந்த விலைக்கு தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்கி சீனா பதுக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்காட் பெசென்ட் `அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய Air India விமானம்! இப்படி ஏற்கெனவே கப்பலில் இருக்கும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதிப்பதன் மூலம், உலக சந்தைக்குள் கிட்டத்தட்ட 140 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அமெரிக்கா கொண்டு வருகிறது. சப்ளை மீது ஈரான் ஏற்படுத்தியுள்ள தற்காலிக அழுத்தத்தையும் குறைக்கிறது. ஈரான் எண்ணெயை அனுமதித்து உலக அளவில் எண்ணெய் விலையைக் குறைப்பதோடு, போரைத் தொடர்ந்தும் டெஹ்ரானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுப்போம். அமெரிக்காவின் செயல் ஈரான் எண்ணெய்க்கான தற்காலிக அனுமதி ஏற்கெனவே கப்பல்களில் உள்ள ஈரான் எண்ணெய்களுக்கு மட்டுமே... புதிதாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கோ, புதிதாக வாங்கவோ அல்ல. மேலும், ஈரான் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்த முடியாதப்படி, அமெரிக்கா அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும். இதுவரை, உலக சந்தைக்கு ட்ரம்ப் அரசாங்கம் 440 மில்லியன் கூடுதல் பேரல்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில் தடை விதித்திருந்த ரஷ்ய எண்ணெய்களுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா. இப்போது ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது. ஈரான் போரில் உலக அளவிலான எண்ணெய் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குக் கடும் நெருக்கடியாக உள்ளது. 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்

விகடன் 21 Mar 2026 10:31 am

'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத'அமெரிக்கா?

ஈரான் போரும் முடிந்தபாடில்லை. ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்க நட்பு நாடுகள் கப்பல்களுக்கு திறப்பதில்லை. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகள் எரிப்பொருள் தட்டுப்பாடால் திணறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா. ஈரான் எண்ணெய்க்கு அனுமதி இது குறித்து அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கருவூலம் அனுமதி அளிக்கிறது. இது குறுகிய கால அனுமதி மட்டுமே. தற்போது, குறைந்த விலைக்கு தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்கி சீனா பதுக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்காட் பெசென்ட் `அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய Air India விமானம்! இப்படி ஏற்கெனவே கப்பலில் இருக்கும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதிப்பதன் மூலம், உலக சந்தைக்குள் கிட்டத்தட்ட 140 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அமெரிக்கா கொண்டு வருகிறது. சப்ளை மீது ஈரான் ஏற்படுத்தியுள்ள தற்காலிக அழுத்தத்தையும் குறைக்கிறது. ஈரான் எண்ணெயை அனுமதித்து உலக அளவில் எண்ணெய் விலையைக் குறைப்பதோடு, போரைத் தொடர்ந்தும் டெஹ்ரானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுப்போம். அமெரிக்காவின் செயல் ஈரான் எண்ணெய்க்கான தற்காலிக அனுமதி ஏற்கெனவே கப்பல்களில் உள்ள ஈரான் எண்ணெய்களுக்கு மட்டுமே... புதிதாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கோ, புதிதாக வாங்கவோ அல்ல. மேலும், ஈரான் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்த முடியாதப்படி, அமெரிக்கா அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும். இதுவரை, உலக சந்தைக்கு ட்ரம்ப் அரசாங்கம் 440 மில்லியன் கூடுதல் பேரல்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில் தடை விதித்திருந்த ரஷ்ய எண்ணெய்களுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா. இப்போது ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது. ஈரான் போரில் உலக அளவிலான எண்ணெய் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குக் கடும் நெருக்கடியாக உள்ளது. 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்

விகடன் 21 Mar 2026 10:31 am

திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! - காரணம் என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை மார்ச் 23-ம் தேதி திருத்தணியிலிருந்து தொடங்குகிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, மாநாடு, வேட்பாளர் அறிவிப்பு, வாக்குறுதிகள் வெளியீடு என அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. இச்சூழலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் பிரசாரத்தையும் தொடங்குகிறார். நம்மிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்கள் சிலர் பிப்ரவரி 21-ம் தேதி மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்தி அந்த மேடையிலேயே 234 வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டோம். கடந்த ஒருமாதமாக வேட்பாளர்கள் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறார்கள். சீமான் தேர்தல் பிரசாரம் இதற்கிடையில், நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும், வேளாண்மை, ஆடு, மாடு வளர்த்தல் போன்றவை அரசு வேலையாக அறிவிக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை, முழுமையான பூரண மதுவிலக்கு, உழவர்களே உணவு பொருட்களுக்கு விலை தீர்மானிக்கும் உரிமை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறோம். இச்சூழலில்தான் பிரசாரத்துக்கு கிளம்புகிறார் அண்ணன் சீமான் என்றார். நம்மிடம் பேசிய அக்கட்சி நிர்வாகிகள் சிலர், பொதுவாக கன்னியாகுமரியில் திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்திவிட்டு பிரசாரத்தையோ, மாநில சுற்றுப் பயணத்தையோ அண்ணன் சீமான் தொடங்குவார். குமரியில் தொடங்கி சென்னையில் முடிப்பதே வழக்கமான பிரசார ரூட். இம்முறையும் அதற்கான வேலைகள் நடந்தன. ஆனால், 'தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளிலிருந்து பிரசாரத்தை தொடங்கிட வேண்டும்' என்பது அண்ணனின் விருப்பமாக இருந்தது. திருத்தணி முருகன் கோவில் கடந்த மூன்று ஆண்டுகளாக முப்பாட்டன் முருகனின் தீவிர பக்தராகவே மாறிவிட்டார். மேலும் மார்ச் 23-ம் தேதி தேய்பிறை அஷ்டமி என்பதால் அன்று அறுபடை வீடான திருத்தணியில் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என முடிவெடுத்தோம். மார்ச் 23-ம் தேதி காலை திருத்தணி முருகன் கோவில் வழிபாட்டோடு பிரசாரம் தொடங்கும். திருத்தணியில் தொடங்கி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பிரசாரங்களை முதற்கட்டமாக முடிக்கிறோம். ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று இடங்களில் பேசுகிறார். பிறகு மார்ச் 30ம் தேதி அவர் போட்டியிடும் காரைக்குடி தொகுதிக்கு செல்கிறார். வேட்புமனு தாக்கல் பணிகள் நிறைவடைந்த பிறகு இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்குவார். பிரசாரத்தில் எல்.இ.டி திரைமூலம் நாம் தமிழர் அரசு எப்படி இருக்கும் என காணொளி வாயிலாக விளக்க உள்ளார். பிறகு திராவிடக் கட்சிகள் அட்டாக், பாடல்கள் என கலவையாக இருக்கும் என்றனர். திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான்

விகடன் 21 Mar 2026 10:23 am

'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்

ஈரான் போர் தொடங்கி இன்றோடு நான்காவது வாரம் தொடங்குகிறது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் என எந்த நாடும் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இல்லை. போர் நிறுத்தம் வேண்டாம் 'விரைவில் போர் முடிவுக்கு வரும்' என்று நேற்று முன்தினம் (மார்ச் 19), அமெரிக்கா சொன்னதில், உலகம் கொஞ்சம் ஆசுவாசமாகியது. ஈரான் போர் தங்கம் விலை குறையுதுதான்; ஆனால், சரியவில்லை! - இப்போ 'இந்த' தப்பை மட்டும் பண்ணீடாதீங்க | Gold ஆனால், அதற்கும் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். எதிரியை நாம் அடியோடு அழிக்கும் போது, போர் நிறுத்தம் செய்யமாட்டோம் என்று உங்களுக்கு தெரியும் தானே' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கு ஈரான் போரில் உள்ள மிகப்பெரிய பிரச்னையே 'ஹார்முஸ் ஜலசந்தி மூடலே'. இதை சரிசெய்ய தங்களது போர்க்கப்பலை அனுப்ப சொல்லி சீனா, ஜப்பான், நேட்டோ நாடுகளிடம் ட்ரம்ப் கேட்டார். சிலர் மறுத்துவிட்டனர்... சிலர் வாயைக் கூட திறக்கவில்லை. நேட்டோ நாடுகள் - 'கோழைகளே' இதை தற்போது கடுமையாக சாடியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்கா இல்லையென்றால், NATO வெறும் காகிதப் புலிதான். அணு ஆயுதம் கொண்ட ஈரானுடன் சண்டையிட நேட்டோ நாடுகள் வரவில்லை. இந்த நாடுகளுக்குக் குறைந்த ஆபத்தோடு ராணுவ ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஈரான் உடனான போரில் உதவாத அவர்கள், எண்ணெய் விலை உயர்வை பற்றிப் புகார் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவ மறுக்கிறார்கள். கோழைகள்... உங்களை மறக்கமாட்டோம் என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். HDFC தலைவர் ராஜினாமா: சந்தை கடும் சரிவு; வங்கியின் 'இந்த' செயல் காரணமா? முதலீட்டாளர்கள் இனி?

விகடன் 21 Mar 2026 8:24 am

அமெரிக்க எங்களிடம் அனுமதி கோரியது, ஆனால் நாங்கள்.!- அநுர குமார திசாநாயக்க சொல்வது என்ன?

ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி கொண்டே இருக்கிறது. அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் விநியோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​ சில நாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். மார்ச் 4 ஆம் தேதி 8 கப்பல்கள் மற்றும் இரண்டு போர் விமானங்களை இலங்கையில் அனுமதிக்கக்கோரி அமெரிக்கா கேட்டது. ட்ரம்ப் ஆனால் அந்தக் கோரிக்கையை நாங்கள் நிராகரித்துவிட்டோம். எந்த அழுத்தமும் வந்தாலும், நம் நாடு நடுநிலை வகிக்கும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 21 Mar 2026 7:06 am

ராமதாஸ் - சசிகலா `தேர்தல் கூட்டணி' - தைலாபுரத்தில் கையெழுத்தான ஒப்பந்தம்!

வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, இன்று வி.கே.சசிகலா சந்தித்திருந்தார். இந்நிலையில் ராமதாஸ் தலைமையிலான பாமக-வும், சசிகலாவின் அ.பு.த.ம.மு.க-வும் தேர்தல் கூட்டணியை அமைத்திருக்கின்றன. கூட்டணி உடன்பாடு கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், தமிழக மக்களின் நன்மைக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இது. ராமதாஸ் - சசிகலா எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கும் கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்கலாம். நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். சில நேரங்களில் காலதாமதங்கள் ஆவது உண்டு. அந்த வகையில் எங்கள் கூட்டணி தொடர்பான அறிவிப்பில் காலதாமதம் ஆனது என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 20 Mar 2026 8:10 pm

'நான் ஜெயிச்சா மட்டும் போதாது...' - விஜய்-ன் அடுத்தக்கட்ட '50'வேட்பாளர்கள் இவர்கள்தான்?

தவெக சார்பில் இரண்டாம் கட்டமாக '50' வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று உறுதி செய்துள்ளார். ஏற்கனவே முதற்கட்டமாக '60' வேட்பாளர்களை உறுதி செய்திருந்த விஜய், இன்று இரண்டாம் கட்டமாக மேலும் 50 வேட்பாளர்களை பனையூருக்கு அழைத்து வாழ்த்து கூறி அனுப்பியிருக்கிறார். கூடவே, 'நாம் ஓட்டை உடைப்பதற்காக வரவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்காக வந்திருக்கிறோம்' என வேட்பாளர்களிடம் உற்சாகமாகவும் பேசியிருக்கிறார். TVK Vijay | விஜய் தவெக சார்பில் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வாங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஆனந்த், ஜான், ஆதவ் போன்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் தீவிரமாக இறங்கியிருந்தனர். மார்ச் 10 ஆம் தேதி முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 60 வேட்பாளர்களை விஜய் நேரில் அழைத்து சந்தித்து வாழ்த்தி அனுப்பியிருந்தார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். ராஜ்மோகன் கடந்த சில நாட்களாக அடுத்தக்கட்ட வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகள் பனையூரில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இன்றைக்கு இரண்டாம் கட்டமாக 50 தொகுதிகளுக்கான இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை முதலே அலுவலகத்தில் கூடிய வேட்பாளர்களை ஐந்து ஐந்து பேராக விஜய் அழைத்து பேசியிருந்தார். இந்தப் பட்டியலில் முக்கியமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜே.சி.டி பிரபாகர் பெயரும் எழும்பூர் தொகுதிக்கு ராஜ் மோகனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. விஜய்யை சந்தித்துவிட்ட வேட்பாளர்கள் கூறுகையில், ``நாம் ஓட்டை பிரிப்பதற்காகவோ வெறுமென வாக்குசதவீதத்தை வாங்கவோ மட்டும் வரவில்லை. ஆட்சியை பிடிக்க வந்திருக்கிறோம். உங்களில் பலரை நானே நேரடியாக நோட் செய்து வேட்பாளர் ஆக்கியிருக்கிறேன். நான் ஜெயித்தால் மட்டும் போதாது. நீங்கள் எல்லாரும் ஜெயிக்க வேண்டும். கடைசி நேரத்தில் நமக்கு இன்னும் தீவிரமான சிக்கல்கள் வரலாம். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்வோம். Let's Make History! உற்சாகமாக வேலைப் பாருங்கள்! என விஜய் வாழ்த்தி அனுப்பியிருக்கிறார். ஜே.சி.டி.பிரபாகர் விஜய் இறுதி செய்திருக்கும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்: பொன்னேரி தொகுதி - G.அம்பிகா சேந்தமங்கலம் - வெங்கடேஷ் எழும்பூர் - ராஜ்மோகன் முசிறி - கார்த்திக் தென்காசி - ராஜ பிரகாஷ் பாப்பிரெட்டிப்பட்டி - திலகவதி மதுரவாயல் - ரேவந்த் சரண் ஆயிரம் விளக்கு - JCD பிரபாகர் வாணியம்பாடி - சையது மேட்டுப்பாளையம் - சுனில் ஆனந்த் கோவை - கனிமொழி பாலக்கோடு - கோபி பென்னாகரம் - அதியமான் பெருந்துறை - அருணாச்சலம் செங்கல்பட்டு - தியாகு ஜெயங்கொண்டம் - கவிதா ராஜேந்திரன் ஆம்பூர் - இம்தியாஷ் சேலம் வடக்கு - செந்தில்குமார் ஓசூர் - மஞ்சுநாத் விருத்தாச்சலம் - விஜய் ஈரோடு மேற்கு - ஆனந்த் மோகன் நாமக்கல் - திலீப் கிள்ளியூர் - சபின் பத்மநாபபுரம் - கிருஷ்ணகுமார் நெய்வேலி - ஆனந்த் வால்பாறை - ஶ்ரீதரன் வாசுதேவநல்லூர் - மனோகர் துறைமுகம் - அசோக் (முன்னாள் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி) திருவண்ணாமலை - உதயகுமார் பண்ட்ருடி - மணிகண்டன் பல்லடம் - முருகதாஸ்

விகடன் 20 Mar 2026 8:06 pm

NDA: 'அத நீங்க தான் பாத்துக்கணும்' - அமித் ஷா சந்திப்பும் எடப்பாடியின் சந்திராஷ்டம கணக்கும்!

மதுரையிலும் திருச்சியிலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நடத்திய சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத சூழலே நிலவியது. பியூஷ் கோயலுமே, டெல்லியில் பேசிக்கொள்ளுங்கள்... என்று டென்ஷனாகச் சொல்லிவிட்டு பறந்தார். இந்தச்சூழலில், நேற்று டெல்லிக்குச் சென்றிருந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீட் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கலந்தாலோசித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, தே.ஜ கூட்டணியில் சீட் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நடந்த எடப்பாடி - அமித் ஷா சந்திப்பு குறித்து, அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். டெல்லியிலுள்ள அமித் ஷாவின் இல்லத்தில், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்கு நடந்திருக்கிறது அந்தச் சந்திப்பு. பேக்கேஜ் முறையில் பா.ஜ.க எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் சீட் ஒதுக்கீடு செய்ய எடப்பாடிக்கு விருப்பமில்லை. பா.ஜ.க-வுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, அவர்களுடன் அணி சேர்ந்திருக்கும் அ.ம.மு.க-வுக்கு எட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று, ஐ.ஜே.கே கட்சிக்கு இரண்டு, ஏ.சி.சண்முகம், என்.ஆர்.தனபாலன், திருமாறன், ஜான்பாண்டியன் ஆகியோருக்கு தலா ஒன்று ஒதுக்க திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. அதோடு, பா.ம.க-வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கியதுபோக, மீதமிருக்கும் 174 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களைக் களமிறக்கவும் முடிவெடுத்திருக்கிறார். அதில், ஒரு சீட் புரட்சி பாரதம் கட்சிக்கு வழங்கப்படவிருக்கிறது. இதைத்தான் அமித் ஷாவிடம் தெளிவாக விளக்கியிருக்கிறார் எடப்பாடி. 'உங்க கட்சிக்காரங்க அதிக சீட் வாங்கி போட்டியிடணும்னு நினைக்குறாங்க. அவங்க விருப்பத்தை நான் தப்பு சொல்லலை. கடந்த 2021 தேர்தல்ல, 20 தொகுதிகள் ஒதுக்கீடு செஞ்சோம். அதுல, நான்கு தொகுதிகள்ல தான் பா.ஜ.க வெற்றிப்பெற்றது. பா.ஜ.க போட்டியிட்ட தொகுதிகள்ல தி.மு.க நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தி, பத்து தொகுதிகளை கைப்பற்றிவிட்டது. அதுபோன்ற நிலைமை மீண்டும் வரக்கூடாது. நீங்க கூடுதலான தொகுதிகள்ல போட்டியிட்டால், அது தி.மு.க-வுக்கு லாபமாக மாறிவிடும். உங்களோட இலக்கு 2029 நாடாளுமன்றத் தேர்தல்தான். அதுல, பத்து சீட் கூட கேட்டு வாங்கிக்கோங்க' என்று கட் அண்ட் ரைட்டாக அமித் ஷாவிடமே போட்டுடைத்துவிட்டார் எடப்பாடி. அதில், அமித் ஷாவும் கன்வின்ஸ் ஆகிவிட்டார். அமித் ஷா அடுத்ததாக, தேர்தல் செலவுகள் குறித்து பேச்சுவார்த்தை திரும்பியது. இதுவரையில், கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்காக தன்னுடைய பர்ஸை எடப்பாடி பழனிசாமி திறக்கவில்லை. அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும் பெரிதாக உத்தரவாதம் வழங்கவில்லை. அதையெல்லாம் எடுத்துப் பேசியிருக்கும் அமித் ஷா, 'நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர். அதனால், நீங்கள்தான் செலவுக்கான பொறுப்புகளை ஏற்க வேண்டும்' என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார். பா.ஜ.க., தன்னுடைய வேட்பாளர்களின் செலவுகளுக்காக சுமார் 300 ஸ்வீட் பாக்ஸ்களை தமிழகத்தில் இறக்கவிருக்கிறது. கூட்டணியிலிருக்கும் இதர கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் செலவுக்கான பொறுப்பை ஏற்க டெல்லி தயாராக இல்லை. அதைத்தான் எடப்பாடியிடமே பேசி, அவரையே செலவுகளுக்கு பொறுப்பேற்கச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா என்றனர் விரிவாக. டி.டி.வி.தினகரன் எதிர்பார்ப்பு எடப்பாடியின் டெல்லி பயணத்தைத் தொடர்ந்து, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் இன்று டெல்லிக்குச் சென்றிருக்கிறார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்துப் பேசவிருப்பவர், அமித் ஷாவின் அப்பாயின்மென்ட்டையும் கேட்டிருக்கிறார். இரட்டை இலக்கத்தில் சீட் எதிர்பார்க்கும் தினகரனுக்கு, எட்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க பேசப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறது டெல்லி. அப்போது, தினகரனுக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிப்பது குறித்தும் பேசவிருக்கிறார்கள் டெல்லி பா.ஜ.க தலைவர்கள். பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி சந்திராஷ்டம கணக்கு.! நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், நாளை(மார்ச் 21) சென்னை வரவிருக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எந்தெந்த தொகுதிகள் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பேசவிருக்கிறார். நாளையும் நாளை மறுநாளும் எடப்பாடி பழனிசாமிக்கு சந்திராஷ்டமம் என்பதால், மார்ச் 23-ம் தேதி கூட்டணி உடன்படிக்கையைக் கையெழுத்திட்டுக் கொள்ள திட்டமிடுகிறார்கள் அ.தி.மு.க-வினர். ஆனாலும்கூட, டெல்லியில் தன் துறை சார்ந்த பல்வேறு வேலைகள் இருப்பதைக் காரணமாகக் காட்டி, தன்னுடைய சென்னை விசிட்டிலேயே கையெழுத்து சம்பிரதாயங்களை முடித்துவிடப் பார்க்கிறார் கோயல் என்றார். சீட் பங்கீடு, தொகுதி நிர்ணயத்தில் பல்வேறு முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்த தே.ஜ கூட்டணி, எடப்பாடியின் டெல்லி விசிட்டைத் தொடர்ந்து ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. விரைவிலேயே அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். !

விகடன் 20 Mar 2026 7:04 pm

காந்தியுடன் மோதும் 3 திமுக புள்ளிகள்; எஸ்.எம்.சுகுமார் எஸ்கேப் | ராணிப்பேட்டை மாவட்டம் யாருக்கு?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' ராணிப்பேட்டை மாவட்ட நிலவரம் முந்துவது யார்? ரா ணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. நான்கிலும் தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. அதே சமயம், சீட் எதிர்பார்த்து முட்டிக்கொள்ளும் நிர்வாகிகளால் இரண்டு கூட்டணிகளிலுமே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய களச் சூழலில், நான்கு தொகுதிகளிலும் யார் முந்துகிறார்கள்? வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது? என்பதை பார்ப்போம். அரக்கோணம் (தனி) சட்டமன்றத் தொகுதி அரக்கோணம் தனித் தொகுதியில் 1,99,165 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தத் தொகுதியை அ.தி.மு.க தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி, அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ-வாக மூன்றாவது முறையாகத் தொடர்கிறார். வரும் தேர்தலிலும், அ.தி.மு.க சார்பாக சு.ரவியே மீண்டும் அரக்கோணத்தில் களமிறங்குகிறார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே, வாக்குசேகரிப்பிலும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் சிட்டிங் எம்.எல்.ஏ-வான சு.ரவி. சு.ரவி - பவானி வடிவேலு தி.மு.க சார்பாக நெமிலி ஒன்றியச் சேர்மனும், தி.மு.க ஒன்றியச் செயலாளருமான பெ.வடிவேலுவின் மனைவி பவானிக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அரக்கோணம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க-வைச் சேர்ந்த பவானி வடிவேலு உட்பட 48 பேர் தி.மு.க தலைமையில் விண்ணப்பம் அளித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. அப்போது, `வி.சி.க-வுக்கு அரக்கோணம் தொகுதியைக் கொடுக்கக்கூடாது. கூட்டணிக்கு கொடுப்பதால் அ.தி.மு.க-வுக்கு வெற்றி சாதமாகி விடுகிறது. உதயச்சூரியன் சின்னத்தில் நமது வேட்பாளரைக் களமிறக்கினால் மட்டுமே தொகுதியில் வெற்றிபெற முடியும்’ என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினிடம் 48 பேரும் கூட்டாக தெரிவித்திருக்கின்றனர். முடிவாக, பவானி வடிவேலுவின் பெயருக்கு நேராக `ஓகே’ என `டிக்’ அடித்திருக்கிறாராம் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி `திருக்கடிகை’ எனும் சோளிங்கர் தொகுதியில், மொத்தம் 2,56,118 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.முனிரத்தினம் இருக்கிறார். கடந்த 1989, 1991, 1996 மற்றும் 2021 ஆகிய நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று, சோளிங்கர் தொகுதியில் நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக வலம் வந்துகொண்டிருக்கிறார் முனிரத்தினம். அதேபோல, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு இருமுறை தோல்வியடைந்திருக்கிறார் முனிரத்தினம். இதில் சுவாரஸ்யம் என்னவெனில், 2011 தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்காததால் `காஸ்’ சின்னத்தில் சுயேட்சையாகக் களமிறங்கி தோல்வியடைந்தார். கடந்த 2021 தேர்தலின்போதும், முதலில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால், காங்கிரஸில் இருந்து விலகி தி.மு.க-வில் இணையப் போவதாக பேட்டி கொடுத்து பரபரப்பைக் கூட்டினார். இதையடுத்து, முனிரத்தினத்துக்கே சீட் வழங்கப்பட்டு சமரசம் செய்யப்பட்டது. வரும் தேர்தலிலும், `ஏடாகூடமாக முனிரத்தினம் ஏதாவது செய்துவிடப் போகிறார்’ என்பதை கவனத்தில் கொண்டு, தொகுதி பங்கீட்டு உத்தேச பட்டியலில் சோளிங்கர் தொகுதியை மீண்டும் தி.மு.க தலைமையிடம் கேட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. சோளிங்கர் தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டால் முனிரத்தினமே வேட்பாளராக களமிறக்கப்படுவார். அதே சமயம், சோளிங்கர் தொகுதியிலும் போட்டியிட விரும்பி தி.மு.க நிர்வாகிகள் 34 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர். அமைச்சர் ஆர்.காந்தியின் மகன் வினோத் காந்தி சோளிங்கர் தொகுதியில் விருப்ப மனு கட்டியதாக தகவல் வெளியாகியிருந்த சூழலில், இன்று நடைபெற்ற நேர்காணலில் வினோத் காந்தி கலந்துகொள்ளவில்லை. எனவே, அவர் விருப்ப மனு அளிக்கவில்லை என்பதும் உறுதியாகியிருக்கிறது. ஏ.எம்.முனிரத்தினம் சோளிங்கர் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி வலுவாக இருந்தாலும், கூட்டணிக்குள் அடித்துகொள்ளாத குறையாக சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் கடந்த முறைபோல சோளிங்கரில் பா.ம.க மீண்டும் போட்டியிட விரும்புகிறது. கூட்டணியில் இணைந்திருக்கும் அ.ம.மு.க-விலும் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அ.ம.மு.க மாவட்டச் செயலாளருமான என்.ஜி.பார்த்திபனும் தொகுதியை விட்டுதர மறுக்கிறார். 2024 எம்.பி தேர்தலில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக களமிறங்கி தோல்வியடைந்த ஏ.எல்.விஜயனும் சட்டமன்றத் தேர்தலில் சீட் எதிர்பார்க்கிறார். இதனால், கூட்டணியே சலசலத்து கிடக்கிறது. பா.ம.க இரண்டாக பிரிந்திருப்பதால், அன்புமணி தரப்பு சோளிங்கர் தொகுதியில் வீக்காக இருக்கிறது. காரணம், கடந்த தேர்தலின்போது பா.ம.க சார்பாக களமிறங்கி சுமார் 83,000 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்த அ.ம.கிருஷ்ணன், இப்போது ராமதாஸ் அணியில் பயணிக்கிறார். இந்த முறை ராமதாஸ் தரப்பில் இருந்து அ.ம.கிருஷ்ணன் சுயேட்சையாகவும் களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறார். எனவே, அன்புமணி தரப்பு அ.தி.மு.க கூட்டணியில் வேட்பாளரைக் களமிறக்கினால், பெருவாரியான வன்னியர் வாக்குகளை அ.ம.கிருஷ்ணன் பிளவுப்படுத்தக் கூடும் என்கிறார்கள் பாட்டாளிகள். இதனால், தற்போதைய சூழல்படி அ.தி.மு.க-வில் ஏ.எல்.விஜயன் அல்லது அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ என்.ஜி.பார்த்திபன் ஆகியோரில் ஒருவர் களமிறங்கும் பட்சத்தில், சோளிங்கர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்பதே கள நிலவரமாக இருக்கிறது. ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி `ஸ்டார்’ தொகுதி ராணிப்பேட்டை. இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஆர்.காந்தி. மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் களமிறங்க ஆயத்தமாகிவிட்டார் காந்தி. அதே சமயம், காந்தியை எதிர்த்து தி.மு.க-வில் மேலும் 3 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர். ராணிப்பேட்டை நகரச் செயலாளராக இருந்து காந்தியால் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு ஓரங்கப்பட்ட குட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்த கரிகாலன், விவசாய அணியில் பயணிக்கும் பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேணு ஆகிய 3 பேரும் இன்று நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டனர். இவர்கள் 3 பேரும் காந்தியுடன் மோதல் போக்கில் இருப்பதால், இவர்களுடனான நேர்காணலை சில நிமிடங்களிலேயே முடித்துக்கொண்டாராம் ஸ்டாலின். ஆகவே, காந்திக்கே மறுபடியும் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆர்.காந்தி - எஸ்.எம்.சுகுமார் அதே சமயம், `கடந்த 5 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் காந்தி தூங்கிகொண்டுதான் இருந்தார்’ என பேரவையில் அவர் கண் அசந்து தூங்கிவழியும் போட்டோக்களை பொதுவெளியில் காட்டி கடுமையாக கலாய்த்து வருகிறார்கள் ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க-வினர். இந்த நிலையில், கடந்த முறை காந்தியை எதிர்த்து அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட அக்கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் சத்தமில்லாமல் இந்த முறை பக்கத்திலுள்ள ஆற்காடு தொகுதிக்கு தாவியிருக்கிறார். இதனால், ராணிப்பேட்டை தொகுதியை கூட்டணியிலுள்ள பா.ம.க பக்கம் தள்ளிவிடலாமா அல்லது மறைந்த அ.தி.மு.க மாநிலங்களை முன்னாள் எம்.பி முகமது ஜானின் மகனுக்கு வாய்ப்பு தரலாமா? எனவும் அ.தி.மு.க தலைமையிடம் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறாராம் எஸ்.எம்.சுகுமார். தி.மு.க அமைச்சர் காந்தியுடன் மோத துணிவில்லாமல், அ.தி.மு.க மாவட்டச் செயலாளரே வேறு தொகுதிக்கு ஓட்டம் பிடித்திருப்பதும் களத்தில் எதிரொலிக்கிறது. இதனால், ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க பெரும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புண்டு. இஸ்லாமியர்களின் ஆதரவுடன் தி.மு.க-வே மீண்டும் வெற்றிபெறும் என்பதே ராணிப்பேட்டை தொகுதியின் களநிலவரமாகவும் இருக்கிறது. ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2,45,853 வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்காடு சட்டமன்றத் தொகுதி ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2,43,565 வாக்காளர்கள் இருக்கின்றனர். தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் இருக்கிறார். `2016, 2021 ஆகிய இருமுறையும் தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருந்துவிட்டதால் ஈஸ்வரப்பனுக்கு வரும் தேர்தலில் வாய்ப்பு வழங்கக் கூடாது. அவரின் செயல்பாடுகள் சுமாராக இருக்கிறது’ என்று மாவட்டச் செயலாளரான அமைச்சர் காந்தியே தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறார். தி.மு.க மாவட்ட பொருளாளரும், ஆற்காடு தொழிலதிபருமான ஏ.வி.சாரதியும் சீட் எதிர்பார்க்கிறார். கடந்த எம்.பி தேர்தலில், ஜெகத்ரட்சகன் போட்டியிடாமல் இருந்திருந்தால் ஏ.வி.சாரதிக்குத்தான் எம்.பி சீட் கிடைத்திருக்கும். அந்த அளவுக்கு பொருளாதார செல்வாக்குடன் வலம் வரும் சாரதிக்கும், அமைச்சர் காந்திக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், சாரதியையும் ஓரங்கட்டி வைத்திருக்கிறார் காந்தி. ஏ.வி.சாரதி ஆற்காடு தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஏ.வி.சாரதியும் வன்னியர் என்பதால், அந்தச் சமூக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொருளாதார வலிமையும் இருப்பதால், சாரதிக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில் அ.தி.மு.க-வை எளிதாக வீழ்த்த முடியும். அப்படி நடந்தால், `எதிர்காலத்தில் தனக்கும், தனது மகன் வினோத் காந்திக்கும் சாரதி போட்டியாக அமைந்துவிடுவார்’ என்று டம்மியான நிர்வாகி ஒருவரின் பெயரை பரிந்துரைத்திருக்கிறாராம் காந்தி. அதற்கேற்ப, ஆற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 14 பேர் விண்ணப்பம் அளித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற நேர்காணலிலும் கலந்துகொண்டனர். ஏ.வி.சாரதி மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகிய இருவரும்கூட அந்தக் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்து முதலமைச்சரை சந்தித்துவிட்டு தொகுதி பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அ.தி.மு.க-வில், மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தொகுதி மாறி வந்திருப்பதால், `எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும்’ என அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது, ராணிப்பேட்டை தொகுதியில் வாக்குகளை பெறுவதற்காக காந்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறாரோ, அதை அப்படியே ஆற்காடு தொகுதியிலும் காப்பி - பேஸ்ட் செய்துகொண்டிருக்கிறார் எஸ்.எம்.சுகுமார். தற்போதைய சூழலில், தி.மு.க-வில் நிலவும் உட்கட்சி உறுமலால் அ.தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

விகடன் 20 Mar 2026 6:30 pm

காந்தியுடன் மோதும் 3 திமுக புள்ளிகள்; எஸ்.எம்.சுகுமார் எஸ்கேப் | ராணிப்பேட்டை மாவட்டம் யாருக்கு?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' ராணிப்பேட்டை மாவட்ட நிலவரம் முந்துவது யார்? ரா ணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. நான்கிலும் தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. அதே சமயம், சீட் எதிர்பார்த்து முட்டிக்கொள்ளும் நிர்வாகிகளால் இரண்டு கூட்டணிகளிலுமே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய களச் சூழலில், நான்கு தொகுதிகளிலும் யார் முந்துகிறார்கள்? வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது? என்பதை பார்ப்போம். அரக்கோணம் (தனி) சட்டமன்றத் தொகுதி அரக்கோணம் தனித் தொகுதியில் 1,99,165 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தத் தொகுதியை அ.தி.மு.க தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி, அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ-வாக மூன்றாவது முறையாகத் தொடர்கிறார். வரும் தேர்தலிலும், அ.தி.மு.க சார்பாக சு.ரவியே மீண்டும் அரக்கோணத்தில் களமிறங்குகிறார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே, வாக்குசேகரிப்பிலும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் சிட்டிங் எம்.எல்.ஏ-வான சு.ரவி. சு.ரவி - பவானி வடிவேலு தி.மு.க சார்பாக நெமிலி ஒன்றியச் சேர்மனும், தி.மு.க ஒன்றியச் செயலாளருமான பெ.வடிவேலுவின் மனைவி பவானிக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அரக்கோணம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க-வைச் சேர்ந்த பவானி வடிவேலு உட்பட 48 பேர் தி.மு.க தலைமையில் விண்ணப்பம் அளித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. அப்போது, `வி.சி.க-வுக்கு அரக்கோணம் தொகுதியைக் கொடுக்கக்கூடாது. கூட்டணிக்கு கொடுப்பதால் அ.தி.மு.க-வுக்கு வெற்றி சாதமாகி விடுகிறது. உதயச்சூரியன் சின்னத்தில் நமது வேட்பாளரைக் களமிறக்கினால் மட்டுமே தொகுதியில் வெற்றிபெற முடியும்’ என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினிடம் 48 பேரும் கூட்டாக தெரிவித்திருக்கின்றனர். முடிவாக, பவானி வடிவேலுவின் பெயருக்கு நேராக `ஓகே’ என `டிக்’ அடித்திருக்கிறாராம் ஸ்டாலின் என்கிறார் அறிவாலய வட்டாரத்க்தில். சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி `திருக்கடிகை’ எனும் சோளிங்கர் தொகுதியில், மொத்தம் 2,56,118 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.முனிரத்தினம் இருக்கிறார். கடந்த 1989, 1991, 1996 மற்றும் 2021 ஆகிய நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று, சோளிங்கர் தொகுதியில் நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக வலம் வந்துகொண்டிருக்கிறார் முனிரத்தினம். அதேபோல, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு இருமுறை தோல்வியடைந்திருக்கிறார் முனிரத்தினம். இதில் சுவாரஸ்யம் என்னவெனில், 2011 தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்காததால் `காஸ்’ சின்னத்தில் சுயேட்சையாகக் களமிறங்கி தோல்வியடைந்தார். கடந்த 2021 தேர்தலின்போதும், முதலில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால், காங்கிரஸில் இருந்து விலகி தி.மு.க-வில் இணையப் போவதாக பேட்டி கொடுத்து பரபரப்பைக் கூட்டினார். இதையடுத்து, முனிரத்தினத்துக்கே சீட் வழங்கப்பட்டு சமரசம் செய்யப்பட்டது. வரும் தேர்தலிலும், `ஏடாகூடமாக முனிரத்தினம் ஏதாவது செய்துவிடப் போகிறார்’ என்பதை கவனத்தில் கொண்டு, தொகுதி பங்கீட்டு உத்தேச பட்டியலில் சோளிங்கர் தொகுதியை மீண்டும் தி.மு.க தலைமையிடம் கேட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. சோளிங்கர் தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டால் முனிரத்தினமே வேட்பாளராக களமிறக்கப்படுவார். அதே சமயம், சோளிங்கர் தொகுதியிலும் போட்டியிட விரும்பி தி.மு.க நிர்வாகிகள் 34 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர். அமைச்சர் ஆர்.காந்தியின் மகன் வினோத் காந்தி சோளிங்கர் தொகுதியில் விருப்ப மனு கட்டியதாக தகவல் வெளியாகியிருந்த சூழலில், இன்று நடைபெற்ற நேர்காணலில் வினோத் காந்தி கலந்துகொள்ளவில்லை. எனவே, அவர் விருப்ப மனு அளிக்கவில்லை என்பதும் உறுதியாகியிருக்கிறது. ஏ.எம்.முனிரத்தினம் சோளிங்கர் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி வலுவாக இருந்தாலும், கூட்டணிக்குள் அடித்துகொள்ளாத குறையாக சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் கடந்த முறைபோல சோளிங்கரில் பா.ம.க மீண்டும் போட்டியிட விரும்புகிறது. கூட்டணியில் இணைந்திருக்கும் அ.ம.மு.க-விலும் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அ.ம.மு.க மாவட்டச் செயலாளருமான என்.ஜி.பார்த்திபனும் தொகுதியை விட்டுதர மறுக்கிறார். 2024 எம்.பி தேர்தலில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக களமிறங்கி தோல்வியடைந்த ஏ.எல்.விஜயனும் சட்டமன்றத் தேர்தலில் சீட் எதிர்பார்க்கிறார். இதனால், கூட்டணியே சலசலத்து கிடக்கிறது. பா.ம.க இரண்டாக பிரிந்திருப்பதால், அன்புமணி தரப்பு சோளிங்கர் தொகுதியில் வீக்காக இருக்கிறது. காரணம், கடந்த தேர்தலின்போது பா.ம.க சார்பாக களமிறங்கி சுமார் 83,000 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்த அ.ம.கிருஷ்ணன், இப்போது ராமதாஸ் அணியில் பயணிக்கிறார். இந்த முறை ராமதாஸ் தரப்பில் இருந்து அ.ம.கிருஷ்ணன் சுயேட்சையாகவும் களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறார். எனவே, அன்புமணி தரப்பு அ.தி.மு.க கூட்டணியில் வேட்பாளரைக் களமிறக்கினால், பெருவாரியான வன்னியர் வாக்குகளை அ.ம.கிருஷ்ணன் பிளவுப்படுத்தக் கூடும் என்கிறார்கள் பாட்டாளிகள். இதனால், தற்போதைய சூழல்படி அ.தி.மு.க-வில் ஏ.எல்.விஜயன் அல்லது அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ என்.ஜி.பார்த்திபன் ஆகியோரில் ஒருவர் களமிறங்கும் பட்சத்தில், சோளிங்கர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்பதே கள நிலவரமாக இருக்கிறது. ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி `ஸ்டார்’ தொகுதி ராணிப்பேட்டை. இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஆர்.காந்தி. மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் களமிறங்க ஆயத்தமாகிவிட்டார் காந்தி. அதே சமயம், காந்தியை எதிர்த்து தி.மு.க-வில் மேலும் 3 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர். ராணிப்பேட்டை நகரச் செயலாளராக இருந்து காந்தியால் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு ஓரங்கப்பட்ட குட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்த கரிகாலன், விவசாய அணியில் பயணிக்கும் பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேணு ஆகிய 3 பேரும் இன்று நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டனர். இவர்கள் 3 பேரும் காந்தியுடன் மோதல் போக்கில் இருப்பதால், இவர்களுடனான நேர்காணலை சில நிமிடங்களிலேயே முடித்துக்கொண்டாராம் ஸ்டாலின். ஆகவே, காந்திக்கே மறுபடியும் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆர்.காந்தி - எஸ்.எம்.சுகுமார் அதே சமயம், `கடந்த 5 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் காந்தி தூங்கிகொண்டுதான் இருந்தார்’ என பேரவையில் அவர் கண் அசந்து தூங்கிவழியும் போட்டோக்களை பொதுவெளியில் காட்டி கடுமையாக கலாய்த்து வருகிறார்கள் ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க-வினர். இந்த நிலையில், கடந்த முறை காந்தியை எதிர்த்து அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட அக்கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் சத்தமில்லாமல் இந்த முறை பக்கத்திலுள்ள ஆற்காடு தொகுதிக்கு தாவியிருக்கிறார். இதனால், ராணிப்பேட்டை தொகுதியை கூட்டணியிலுள்ள பா.ம.க பக்கம் தள்ளிவிடலாமா அல்லது மறைந்த அ.தி.மு.க மாநிலங்களை முன்னாள் எம்.பி முகமது ஜானின் மகனுக்கு வாய்ப்பு தரலாமா? எனவும் அ.தி.மு.க தலைமையிடம் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறாராம் எஸ்.எம்.சுகுமார். தி.மு.க அமைச்சர் காந்தியுடன் மோத துணிவில்லாமல், அ.தி.மு.க மாவட்டச் செயலாளரே வேறு தொகுதிக்கு ஓட்டம் பிடித்திருப்பதும் களத்தில் எதிரொலிக்கிறது. இதனால், ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க பெரும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புண்டு. இஸ்லாமியர்களின் ஆதரவுடன் தி.மு.க-வே மீண்டும் வெற்றிபெறும் என்பதே ராணிப்பேட்டை தொகுதியின் களநிலவரமாகவும் இருக்கிறது. ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2,45,853 வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்காடு சட்டமன்றத் தொகுதி ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2,43,565 வாக்காளர்கள் இருக்கின்றனர். தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் இருக்கிறார். `2016, 2021 ஆகிய இருமுறையும் தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருந்துவிட்டதால் ஈஸ்வரப்பனுக்கு வரும் தேர்தலில் வாய்ப்பு வழங்கக் கூடாது. அவரின் செயல்பாடுகள் சுமாராக இருக்கிறது’ என்று மாவட்டச் செயலாளரான அமைச்சர் காந்தியே தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறார். தி.மு.க மாவட்ட பொருளாளரும், ஆற்காடு தொழிலதிபருமான ஏ.வி.சாரதியும் சீட் எதிர்பார்க்கிறார். கடந்த எம்.பி தேர்தலில், ஜெகத்ரட்சகன் போட்டியிடாமல் இருந்திருந்தால் ஏ.வி.சாரதிக்குத்தான் எம்.பி சீட் கிடைத்திருக்கும். அந்த அளவுக்கு பொருளாதார செல்வாக்குடன் வலம் வரும் சாரதிக்கும், அமைச்சர் காந்திக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், சாரதியையும் ஓரங்கட்டி வைத்திருக்கிறார் காந்தி. ஏ.வி.சாரதி ஆற்காடு தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஏ.வி.சாரதியும் வன்னியர் என்பதால், அந்தச் சமூக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொருளாதார வலிமையும் இருப்பதால், சாரதிக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில் அ.தி.மு.க-வை எளிதாக வீழ்த்த முடியும். அப்படி நடந்ததால், `எதிர்காலத்தில் தனக்கும், தனது மகன் வினோத் காந்திக்கும் சாரதி போட்டியாக அமைந்துவிடுவார்’ என்று டம்மியான நிர்வாகி ஒருவரின் பெயரை பரிந்துரைத்திருக்கிறாராம் காந்தி. அதற்கேற்ப, ஆற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 14 பேர் விண்ணப்பம் அளித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற நேர்காணலிலும் கலந்துகொண்டனர். ஏ.வி.சாரதி மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகிய இருவரும்கூட அந்தக் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்து முதலமைச்சரை சந்தித்துவிட்டு தொகுதி பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அ.தி.மு.க-வில், மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தொகுதி மாறி வந்திருப்பதால், `எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும்’ என அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது, ராணிப்பேட்டை தொகுதியில் வாக்குகளை பெறுவதற்காக காந்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறாரோ, அதை அப்படியே ஆற்காடு தொகுதியிலும் காப்பி - பேஸ்ட் செய்துகொண்டிருக்கிறார் எஸ்.எம்.சுகுமார். தற்போதைய சூழலில், தி.மு.க-வில் நிலவும் உட்கட்சி உறுமலால் அ.தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

விகடன் 20 Mar 2026 6:30 pm

கரூர்: `100 இடங்களில் மனிதப்பட்டிகள்; திமுக-வினரை கண்டுகொள்ளாத அதிகாரிகள்' - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

``கரூர் தொகுதியில் வாக்காளர்களை அடைத்து வைத்து இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்கும் நோக்கத்தில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக-வினர் மனிதப்பட்டிகள் அமைத்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டு, 48 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மனிதப்பட்டிகளை புகைப்பட ஆதாரங்களை மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரைச் சந்தித்து, புகார் மனு அளித்தார், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``கரூரில் 100 இடங்களில் திமுக சார்பில் ஆடு, மாடுகளை அடைப்பதுபோல மனிதர்களை அடைப்பதற்கு மனிதப்பட்டிகள் தயார் செய்து வருகின்றனர். 48 இடங்களில் போடப்பட்டுள்ள மனிதப்பட்டிகளின் புகைப்பட ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து உள்ளோம். மொத்தம் 100 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. பொது மக்களிடம் போட்டோ, ஆதார் கார்டு வாங்கி அவர்களை உள்ளே உட்கார வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். மனிதப்பட்டி என்றால், சாதாரண பட்டியல்ல... மிகப்பெரிய பட்டி 6 0X 40, 80x40 என 5,000 முதல் 6,000 சதுர அடியில் மனிதப்பட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் அனுமதி இல்லாமல் கல்யாண மண்டபம்போல் செட் அமைத்துள்ளனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாத வகையில் செட்டைச் சுற்றி 8 அடி முதல் 10 அடி உயரம் அடைத்து விட்டனர். ஒவ்வொரு மனிதப்பட்டியிலும் எல்.இ.டி லைட், ஃபேன் அமைக்கப்பட்டுள்ளது. கரூரில் 50,000 சேர் வாங்கியுள்ளதாக, அவர்களது கட்சிக்காரர்களே கூறுகின்றனர். இந்த மனிதப்பட்டிக்குப் பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 50,000 வாக்காளர்களை சிஃப்ட் முறையில் மூன்று நாட்களுக்கு ஒரு குரூப் என லிஸ்ட் தயார் செய்துள்ளனர். மனிதப்பட்டியில் அடைத்து வைத்து அவர்களுக்கு தினசரி 500 ரூபாய், சாப்பாடு, ஆண்களுக்கு சரக்கு என அனைத்தும் ஏற்பாடு செய்யப்படுவதாக திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தேர்தல் முடியும் வரை 1 லட்சம் வாக்காளர்களை அமரவைத்து அவர்களை பிரைன் வாஷ் செய்து ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளனர். அதிகாரியிடம் புகார் அளித்தால், பட்டா நிலத்தில் போட்டுள்ளனர் எனக் கூறுகிறார். பல இடங்களில் கோயில் இடத்தில் அமைத்துள்ளனர். அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். திமுக-வின் கைக்கூலியாக கரூர் மாவட்ட அதிகாரிகள் உள்ளனர். இவர்களை வைத்து தேர்தல் நடத்தினால் தேர்தல் முறையாக நேர்மையாக நடக்காது. கரூர் மாவட்டத்தில் உள்ள எல்லா அதிகாரிகளும் திமுக-விற்கு எடுபிடி வேலை செய்து வருகின்றனர். தேர்தல் தொடர்பாகப் புகார் அளிக்கும் சி.யூ.ஜி ஆப், பல நேரங்களில் வேலை செய்வது இல்லை. அப்படியே வேலை செய்தாலும்,  புகாருக்கு சரியான பதிலோ, நடவடிக்கையோ இல்லை. அதிமுக-வினர் கொடுக்கும் புகார்களை க்ளோஸ் செய்ய வேண்டும் என்பதே குறியாக உள்ளனர். மனிதப்பட்டியில், தினசரி சாப்பாடு, சரக்கு, பணம் என இந்த மூன்றையும் கொடுத்து, மக்களை அடிமையாக்கி தேர்தலில் ஜெயித்து விடலாம் என திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். அமமுக-வில் இருந்தபோது ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஏமாற்றினர். அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 25,000 பேருக்கு 3 சென்ட் நிலம் மற்றும் கான்கிரீட் வீடு சொந்த செலவில் கட்டித் தருவதாகக் கூறி அதையும் ஏமாற்றினர். கரூர் தொகுதியில் 100 ரூபாய்க்குக்கூட போகாத கல்லு வெள்ளி கொலுசை கொடுத்து மகளிரை கடைசி நேரத்தில் ஏமாற்றினர். தேர்தலில் ஸ்டாலின் ஜெயித்து முதல்வராக 11 மணிக்கு கையெழுத்து போட்டால், 11:05 மணிக்கு நீங்கள் காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுக்கலாம். எந்த அதிகாரி தடுத்தாலும் என்னிடம் கூறுங்கள். அந்த அதிகாரி இல்லாமல் போய்விடுவார் எனக் கூறி, ஓட்டு வாங்கி ஜெயித்தார். கரூரில், கோடிக்கணக்கில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. போலீஸார் செக்போஸ்ட் அமைத்து வண்டிக்கு வண்டி பணம் வசூல் செய்வதில் குறியாக  இருந்து வருகின்றனர். மணல் கொள்ளையைத் தடுக்கவில்லை. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்குத் தங்கம் கொடுக்க இருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஏன் என்றால், மணல் கொள்ளையில் அடித்த பணம் கையில் இருப்பதால் எது வேண்டுமானாலும் கொடுப்பார்கள். மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் சி.எம்., அலுவலகத்தில் இருந்து அவரது பி.ஏ போன் செய்கிறார். அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள். மாவட்ட அதிகாரிகள் திமுக-வினர் செய்யும் சட்ட விரோதத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் தடுமாறுகின்றனர். தேர்தல் உண்மையாக, நேர்மையாக நடக்க விடாமல், இது போன்ற கோல்மால் வேலைகளை செய்து ஜெயித்து விடலாம் என திமுக-வினர் நினைக்கின்றனர். நாங்கள் அதிகாரிகளை நம்புகிறோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கட்சி தலைமையிடம் கூறி தலைமை தேர்தல் ஆணையரிடம்  புகார் அளிக்க முடிவு எடுத்துள்ளோம். கரூரில், இப்போது இருக்கும் அதிகாரிகளை வைத்து தேர்தல் நடத்தினால் தேர்தல் உண்மையாக,  நேர்மையாக நடக்காது. அத்தனை அதிகாரிகளும் திமுக-வின் கைக்கூலியாக இருக்கின்றனர். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளை கூண்டோடு மாற்றிவிட்டு, தேர்தலை நடத்தினால் மட்டும்தான் தேர்தல் நேர்மையாக நடத்த முடியும்... இல்லை என்றால் தேர்தல் நடக்காது என்றார்.

விகடன் 20 Mar 2026 5:58 pm

இதெல்லாம் ஒரு பேச்சா_ எப்போ திருந்துவீங்க_

இதெல்லாம் ஒரு பேச்சா_ எப்போ திருந்துவீங்க_

சமயம் 20 Mar 2026 5:40 pm

சிபிஐ விசாரணையில் இன்று நடந்தது என்ன? Explained | EXCLUSIVE |

சிபிஐ விசாரணையில் இன்று நடந்தது என்ன? Explained | EXCLUSIVE |

சமயம் 20 Mar 2026 5:38 pm

கூடும் நெருக்கடிகள் சசிகலா சமாளிப்பாரா!

கூடும் நெருக்கடிகள் சசிகலா சமாளிப்பாரா!

சமயம் 20 Mar 2026 5:32 pm

எந்த கூட்டணிக்கு செல்வாக்கு அதிகம்? களத்தில் முந்துவது யார்?

எந்த கூட்டணிக்கு செல்வாக்கு அதிகம்? களத்தில் முந்துவது யார்?

சமயம் 20 Mar 2026 5:26 pm

TVK : முதுகுளத்தூரை கேட்கும் இமானுவேல் சேகரன் பேரன்! - முட்டுக்கட்டை போடுவது யார்?

ஊரெங்கும் இப்போது ஒரே பேச்சு... 'சீட்'. திமுக, அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது நூறு சதவிகிதம் முடிவடையவில்லை. 'தளபதியை தலைமை அமைச்சராக ஏற்றுக் கொள்பவர்கள் வரலாம்' எனக் கூப்பிட்டாலும் 'விசில்'காரர்கள் பக்கம் எந்தக் கட்சியும் போகவில்லை. பார்த்தார், 'அப்ளிகேஷன் போட்டவங்கெல்லாம் வாங்கப்பா' என ஒரு அறுபது பேருக்கு இன்டர்வியூ வைத்து அனுப்பி விட்டார் விஜய். இங்கே நாம் பார்க்கப் போவதும் ஒரு 'விசில்' ஏரியா மேட்டர் தான். சென்சிடிவான ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் முதுகுளத்தூர் தொகுதியைக் கேட்டுக் காத்திருக்கிறாராம் சமீபத்தில் தவெகவில் சேர்ந்த இமானுவேல் சேகரனின் பேரன் சக்கரவர்த்தி. தாத்தாவின் அரசியலுடன் தொடர்புடைய அந்த தொகுதியிலிருந்து தன்னுடைய அரசியலையும் தொடங்கலாம் என்பதற்காகவே தொகுதியைக் கேட்கிறாராம் சக்ரவர்த்தி. இமானுவேல் சேகரன் ஆனால் கட்சியின் பொதுச் செயலாளரோ 'பரமக்குடி தனித் தொகுதிங்கிறதால் வெற்றி வாய்ப்பு அதிகம்' எனச் சொல்லி அங்க நிக்கலாமே' என்கிறாராம். `தனித் தொகுதி அடையாளத்துக்குள் திரும்பவும் போகணுமா? நான் பொதுத் தொகுதியில் நின்னே ஜெயிச்சுக் கட்டுறேன். என் உணர்வோட தொடர்பான விஷயமா பார்க்குறேன். தவிர தொகுதியில் இருக்கிற தலித் மக்கள் வாக்குகள் அப்படியே நமக்கு கிடைக்கும். ஆனா முக்குலத்தோர் ஓட்டுகள் திமுக அதிமுகனு பிரியும். அதனால ஈஸியா ஜெயிச்சுடலாம்' எனச் சாதகமான பாயிண்டுகளை எல்லாம் எடுத்துச் சொன்னாராம் சக்ரவர்த்தி. 'பொதுச் செயலாளர் அந்தத் தொகுதியை சக்ரவர்த்திக்குத் தர மறுப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா' என விசாரித்தால், தனித் தொகுதியில் நின்னா வெற்றி பெறலாம்னு சொல்லியிருப்பார். அதைத்தாண்டி வேற காரனாம் தேடினா, சக்ரவர்த்திக்கு கட்சியின் மேல்மட்ட முக்கிய நிர்வாகி ஒருவர் ஆதரவு தர்றாரே, அதுவும் கூட ஒரு காரணமா இருக்கலாம்' என்கிறார்கள், கட்சியின் உள் அரசியலை அறிந்தவர்கள். அதிமுக கூட்டணியில் முதுகுளத்தூரை அமமுக கேட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.!

விகடன் 20 Mar 2026 5:19 pm

என்டிஏ கூட்டணி உறுதி… `லாட்டரி’ சார்லஸ் லஜகவுக்கு இரண்டு சீட்! - பாஜக-வுடன் தொடர்கிறார் ரங்கசாமி

புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்த முதல்வர் ரங்கசாமி, காரைக்கால் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு `என்.டி.ஏ கூட்டணி தொடர்கிறது' என்று தெரிவித்தார். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி அதன்பிறகு என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தது பா.ஜ.க. அதையடுத்து புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சி என்று புதிய கட்சியைத் தொடங்கிய `லாட்டரி' ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை கூட்டணிக்குள் கொண்டு வந்த பா.ஜ.க, அவருக்கு இரண்டு தொகுதிகளை வழங்கவும் முடிவெடுத்தது. ஆனால் என்.டி.ஏ கூட்டணியில் `லாட்டரி' சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க வரக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்தியது என்.ஆர்.காங்கிரஸ். ஆனால் ல.ஜ.க எங்கள் கூட்டணியில்தான் இருக்கும் என்று பிடிவாதமாக நின்றது பா.ஜ.க. அப்படியென்றால் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று கூறிய என்.ஆர்.காங்கிரஸ், த.வெ.க-வுக்கு தூது அனுப்பியது. அத்துடன் பா.ஜ.க அழைத்த கூட்டணி பேச்சுவார்த்தையையும் புறக்கணித்தார் முதல்வர் ரங்கசாமி. அதனால் என்.ஆர்.காங்கிரஸ் வைத்த கோரிக்கைகளை டெல்லி சென்று அமித் ஷாவிடம் தெரிவித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதல்வர் ரங்கசாமியிடம் பேசுவதற்காக நேற்று தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார். ஆனால் அதுகுறித்த தகவல் முதல்வர் ரங்கசாமிக்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், நேற்று மதியம் திருச்செந்தூர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார் ரங்கசாமி. அதனால் அவர் வந்ததும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று, தனியார் நட்சத்திர விடுதியில் இன்றுடன் இரண்டாவது நாளாக காத்திருக்கிறார் மன்சுக் மாண்டவியா. ரங்கசாமி, அமித் ஷா இந்நிலையில் இன்று மதியம் புதுச்சேரி திரும்பிய முதல்வர் ரங்கசாமி, தன்னுடைய கட்சி வேட்பாளர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்கினார். அதையடுத்து அவர் போட்டியிடப் போகும் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களை அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் வைத்து வணங்கினார். அதையடுத்து கோரிமேடு ஆதிதிராவிடர் அலுவலகத்தில் மங்களம் தொகுதிக்கான வேட்பு மனுவையும், சாரம் நில அளவைத் துறை அலுவலகத்தில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். அதன்பிறகு தனியார் நட்சத்திர விடுதியில் காத்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தன் கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்தார். அப்போது அவர்களிடம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் லட்சிய ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை அது உங்களுக்கு உதவியாகத்தான் இருக்கும் என்றும் அமித் ஷா உறுதியளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார் மன்சுக் மாண்டவியா. அதை ஏற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, கூட்டணியை இறுதி செய்திருக்கிறார். அதன்பிறகு பா.ஜ.க நிர்வாகிகளுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, ``எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த தேர்தலிலும் அதே கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறோம். இந்தக் கூட்டணியில் அ.தி.மு.க இருக்கிறது. முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி வாங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அத்துடன் புதிதாக ஒரு கட்சியும் இணைந்திருக்கிறது. அந்தக் கட்சி நம்முடன் இணைந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்றும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் கூறியதன் அடிப்படையில், அந்தக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்” என்றார். அவரையடுத்துப் பேசிய பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மான்சுக் மாண்டவியா, ``என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்களுக்கான 14 இடங்களில் பா.ஜ.க 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க மற்றும் ல.ஜ.க தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிடும்” என்றும் தெரிவித்தார். `கூட்டணி இருக்கா இல்லையா?’ - காத்திருக்கும் பாஜக; கூலாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த ரங்கசாமி

விகடன் 20 Mar 2026 4:42 pm

`கூட்டணி இருக்கா இல்லையா?’ - காத்திருக்கும் பாஜக; கூலாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த ரங்கசாமி

புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்த முதல்வர் ரங்கசாமி, காரைக்கால் வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு `என்.டி.ஏ கூட்டணி தொடர்கிறது' என்று தெரிவித்தார். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி அதன்பிறகு என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தது பா.ஜ.க. அதையடுத்து புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சி என்று புதிய கட்சியைத் தொடங்கிய `லாட்டரி' ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை கூட்டணிக்குள் கொண்டு வந்த பா.ஜ.க, அவருக்கு இரண்டு தொகுதிகளை வழங்கவும் முடிவெடுத்தது. ஆனால் என்.டி.ஏ கூட்டணியில் `லாட்டரி' சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க வரக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்தியது என்.ஆர்.காங்கிரஸ். ஆனால் ல.ஜ.க எங்கள் கூட்டணியில்தான் இருக்கும் என்று பிடிவாதமாக நின்றது பா.ஜ.க. அப்படியென்றால் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று கூறிய என்.ஆர்.காங்கிரஸ், த.வெ.க-வுக்கு தூது அனுப்பியது. அத்துடன் பா.ஜ.க அழைத்த கூட்டணி பேச்சுவார்த்தையையும் புறக்கணித்தார் முதல்வர் ரங்கசாமி. அதனால் என்.ஆர்.காங்கிரஸ் வைத்த கோரிக்கைகளை டெல்லி சென்று அமித் ஷாவிடம் தெரிவித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதல்வர் ரங்கசாமியிடம் பேசுவதற்காக நேற்று தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார். ஆனால் அதுகுறித்த தகவல் முதல்வர் ரங்கசாமிக்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், நேற்று மதியம் திருச்செந்தூர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார் ரங்கசாமி. அதனால் அவர் வந்ததும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று, தனியார் நட்சத்திர விடுதியில் இன்றுடன் இரண்டாவது நாளாக காத்திருக்கிறார் மன்சுக் மாண்டவியா. இந்நிலையில் இன்று மதியம் புதுச்சேரி திரும்பிய முதல்வர் ரங்கசாமி, தன்னுடைய கட்சி வேட்பாளர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்கினார். அதையடுத்து அவர் போட்டியிடப் போகும் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களை அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் வைத்து வணங்கினார். அதையடுத்து கோரிமேடு ஆதிதிராவிடர் அலுவலகத்தில் மங்களம் தொகுதிக்கான வேட்பு மனுவையும், சாரம் நில அளவைத் துறை அலுவலகத்தில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி திருச்செந்தூர் கோயிலிலிருந்து வந்ததும் கூட்டணியை இறுதி செய்து அறிவித்துவிடலாம் என்று காத்திருக்கும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த வேட்புமனு தாக்கல் விவகாரத்தில் நொந்து போயிருக்கிறார். `தவெக விஜய்யுடன் பேசுவோம்!’ - விலக நினைக்கும் ரங்கசாமி; வளைக்கத் துடிக்கும் பாஜக

விகடன் 20 Mar 2026 3:39 pm

‘’அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? - டெல்லி சென்ற எடப்பாடி; கடுமையாக விமர்சித்த கே.என்.நேரு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேற்று (மார்ச். 19) டெல்லிக்குச் சென்றிருந்தார். இதனை தற்போது திமுக அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பதைப் பார்க்கும் போது, ஐயா திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது. அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும் நடிகர் வடிவேலுவை வீட்டில் வைத்து அடித்துத் துவைத்து வெளியே அனுப்பும் போது , ‘’அண்ணே… பிரமாதம். இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்’’ என வடிவேலு பேசும் டயலாக் அப்படியே பழனிசாமிக்கு கச்சிதமாகப் பொருந்தும். இரவு 8.30 மணிக்கே சந்திப்பு நடைபெறும் எனச் சொல்லப்பட்ட நிலையில், 2 மணி நேரமாக அமித்ஷாவின் அழைப்புக்காக காத்திருந்து சந்தித்திருக்கிறார் அடிமை பழனிசாமி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் தலைமை அதிமுக என்று சொன்னால் அந்த அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில்தானே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால், பாஜக தலைவர் அமித்ஷா வீட்டில் அல்லவா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. ராயப்பேட்டை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாதா? கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியின் அலுவலகத்தில் இதுவரை ஒருமுறை கூட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை ‘செவ்வந்தி இல்லத்தில்’ கூட வேண்டாம். எம்ஜிஆர் ஆசை ஆசையாக உருவாக்கிய ராயப்பேட்டை அலுவலகத்திலாவது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாதா? அதற்குக்கூடத் திராணி இல்லாமலா இருக்கிறது அதிமுக? அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தைப் பெரிய திண்டுக்கல் பூட்டைப் போட்டுத் தேர்தல் முடியும் வரை பூட்டி வைத்துவிடுங்கள் பழனிசாமி. அதிமுகவை இப்படிக் கொண்டு வந்து பழனிசாமி நிறுத்திவிட்டாரே என்று அதிமுக தொண்டர்களே ஆதங்கத்தில் இருக்கிறார்கள். அதிமுக தலைமை அலுவலகம் அமித்ஷா வீட்டில் காத்துக் கிடப்பது எல்லாம்.! கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சிதான் பாஜகவுக்கு இத்தனை இடங்கள், பாமகவுக்கு இத்தனை இடங்கள், அமமுகவுக்கு இவ்வளவு இடங்கள் என ஒதுக்கி, ஒப்பந்தம் போட வேண்டும். இப்படிதான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு. ஆனால், கூட்டணியில் அதிமுகவிற்குக் கூடுதல் இடங்களைக் கொடுங்கள் எனக் கேட்டுப் பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி இன்னொரு கட்சியின் தலைவர் அமித்ஷா வீட்டில் காத்துக் கிடப்பது எல்லாம் காலக் கொடுமை. பாஜக - அதிமுக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவிடம் பேசுவதற்காக இதுவரை ஐந்து முறையும் கூட்டணி முடிவான பிறகு 4 முறையும் டெல்லி சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாட்டை அதிக முறை ஆட்சி செய்ததாக மார்தட்டிக் கொள்கிறார்கள். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஒருவர் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு படையெடுப்பது பழனிசாமி காலத்தில் நடந்த வரலாற்று அதிசயம்! அண்ணா அதிமுகவா? இல்லை அமித்ஷா அதிமுகவா? கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 3-ஆவது முறையாக டெல்லிக்கு சென்றிருக்கிறார் பழனிசாமி. ஒவ்வொரு முறையும் அமித்ஷாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் அதிமுக, அண்ணா அதிமுகவா? இல்லை அமித்ஷா அதிமுகவா? பழனிசாமி மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் அன்புமணியும் டிடிவி தினகரனும் அமித்ஷாவை சந்திக்கிறார்கள். பழனிசாமிக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிரூபிக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களைப் பிரித்துக் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய அதிமுக, தனது கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பதைக் கூடத் தீர்மானிக்க முடியாமல் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவின் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிறது. பழனிசாமி அவர்களே… கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 2-ஆவது தீர்மானம் உங்களுக்கு நினைவு இருக்கிறதா? ’சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது! எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா ‘’அப்ப… கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா.? கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அதிமுக பொதுச் செயலாளர், 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது!’ என்ற அந்தத் தீர்மானத்தின் வரிகளை இப்போது படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது. ‘’அப்ப… கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா.? வெளியில இப்படித்தான் சொல்லிக்கிட்டு அலையுறியா.?’’னு அதிமுக தொண்டர்களின் மைண்ட் வாய்ஸ் பழனிசாமிக்கு கேட்கவில்லையா? கூட்டணி முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்ற அந்தப் புரட்சித் தமிழர்தான் (?) டெல்லியில் அதிமுகவின் சீட்டுக்காக மிரட்சியுடன் காத்துக் கிடக்கிறார். ‘கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்குகிறது’ எனப் பொதுக்குழு தீர்மானத்தில் சொன்னீர்கள். அந்தத் தீர்மானம் இயற்றிய ஒரு மாதத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து கூட்டணியில் இணைந்தார் தினகரன். அப்படியென்றால் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அதிமுக என்ன ஆனது? அதற்கு எந்த ரோலும் இல்லையா? ’’இனிமே உன் பேர் தீப்பொறி திருமுகம் இல்லை. ரத்தத் திருமுகம்தான்’’ என்ற வடிவேலுவின் நிஜப் பாத்திரமாகவே மாறிவிட்டார் பழனிசாமி. பரஸ்பர கூட்டணியா? (அ) சம்மன் கூட்டணியா? கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்க பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய் அமித்ஷாவின் காலடியில் சமர்ப்பித்து விட்டு, அவரின் உத்தரவுக்காகக் காத்துக் கிடக்கிறார் பழனிசாமி. விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறையும் சிபிஐயும் சம்மன் அனுப்புவது போல, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியை அழைத்திருக்கிறார். அதிமுகவும் பாஜகவும் பரஸ்பரம் சம்மதித்து உருவான கூட்டணியா? இல்லை சம்மன் கூட்டணியா? வார்த்தைக்கு வார்த்தை அதிமுகதான் தலைமை என்று கூறிவிட்டு, இத்தனை முறை ஏன் டெல்லிக்கு பழனிச்சாமி செல்ல வேண்டும்? கூட்டணிக்கு அதிமுக தலைமை என்றால், அதிமுக விரும்பும் இடத்தில் இதுவரை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை. 2021 தேர்தலில் கூட அமித்ஷா சென்னை வந்து ஹோட்டலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினார். இப்போது டெல்லிக்கு பழனிசாமி ஓடுவதற்குப் பெயர்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போது, அரசின் நடவடிக்கையில் பாஜக தலையிட்டது. இப்போது அதிமுகவின் உள்கட்சி விவகாரத்திலும் தலையிடுகிறது. தொகுதிப் பங்கீட்டைக் கூட அமித்ஷாவிடம் கேட்டுச் செய்வதற்கு பதிலாக ’பாஜகவின் கிளைக் கழகம்தான் அதிமுக’ எனக் கட்சியின் பைலா-வையே (By-laws) திருத்திவிடுங்கள் பழனிசாமி! ஸ்டாலின் தமிழ்நாட்டை மட்டும் விட்டு வைப்பாரா? “டெல்லி அணி - தமிழ்நாடு அணி இடையேதான் போட்டி; இதில் தமிழ்நாடு அணி வெல்லும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சொல்வது ஏன் என்பது இப்போது புரிகிறதா? அதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டைக் கூட டெல்லி முடிவு செய்யும் என்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு என்ன ஆபத்து ஏற்படும் எனத் தெரிகிறதா? கட்சியையே டெல்லியில் அடமானம் வைக்கத் துணிந்த பழனிசாமி, தமிழ்நாட்டை மட்டும் விட்டு வைப்பாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைப்பதும் பாஜகவிற்கு ஆயுள் அடிமையாக இருப்பதும்தான் பாதந்தாங்கி பழனிசாமிக்கு தெரிந்த ஒரே கலை! ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவுக்குக் காவு கொடுத்த பழனிசாமி, இப்போது அதிமுக தொண்டர்களையும் முழுமையாக அடகு வைத்துவிட்டார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என பழனிசாமி போகிற இடமெல்லாம் புலம்பினாலும் அமித்ஷாவும், மோடியும் அதைப் பொருட்படுத்தவே இல்லை. பழனிசாமியை மேடையில் வைத்துக் கொண்டே ’NDA கூட்டணி ஆட்சி அமையும்’ என அவமானப்படுத்துகிறார்கள். மதுராந்தகம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை. இந்த அவமானம் பழனிசாமிக்கு தேவையா? மோடி, அமித்ஷா மட்டுமல்ல அவர்கள் கூட்டணியில் இணைந்திருக்கும் டிடிவி தினகரன் கூட பழனிசாமியை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இந்த லட்சணத்தில்தான் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமையாம்! மானம் என்றால் என்ன விலை? மானம் தமிழரின் உணர்வோடு கலந்தவை. அதனால்தான் மானத்தைப் பற்றி ஒரு முழு அதிகாரத்தையே எழுதியிருக்கிறார் திருவள்ளுவர். மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் என்ற குறளுக்குப் பொருள் தெரியுமா? தன் உடலில் உள்ள மயிர்க்கற்றைகளில் இருந்து ஒரு முடி நீங்கினாலும், அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் உயிர்விடும் இயல்புடையது கவரிமான். தங்களுக்கு ஒரு சிறு அவமானம் அல்லது கௌரவக் குறைச்சல் ஏற்படும் சூழல் வந்தால், அந்த மானத்தைக் காப்பவனே தமிழன். மானம் என்றால் என்ன விலை? எனக் கேட்குமளவிற்கு அடிமைத்தனத்தில் ஊறிப் போயிருக்கும் பழனிசாமியை இந்தத் தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் அரசியலை விட்டே அப்புறப்படுத்தப் போவது உறுதி. திராவிட மாடல் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி 2.0 அதைச் சொல்லும் இந்த அடிமைகளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் எனக் கற்பனைக் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் பித்தலாட்ட நாடகத்தைத் தோலுரித்து காட்டிதான், இந்தத் தேர்தல், தமிழ்நாடு vs என்.டி.ஏ எனச் சூளுரைக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ’’தமிழ்நாடு டெல்லிக்கு out of control’’ என்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ‘’டெல்லிக்கு வா பழனிசாமி’’ என்கிறார் அமித்ஷா. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைத் தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள். அடிமைக் கூட்டணிக்குத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மரண அடி கொடுக்க காத்திருக்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு வெல்லும், திராவிட மாடல் ஆட்சி 2.0 அதைச் சொல்லும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

விகடன் 20 Mar 2026 3:06 pm

`தனித்துப் போட்டியிட்டு திமுகவுக்குப் பாடம் புகட்டுவோம்!'கூட்டணியிலிருந்து வெளியேறும் வேல்முருகன்?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. த.வா.க-வுக்குள் என்ன நடக்கிறதென விசாரித்தோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ஐக்கியமானார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். அப்போதே ஒரு எம்.பி சீட் கேட்ட அவருக்கு 2021-ல் ஒரேயொரு எம்.எல்.ஏ சீட்டைக் கொடுத்து ஆஃப் செய்தது தி.மு.க. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு எம்.பி சீட் கேட்ட அவருக்கு 2026-லும் ஒரேயொரு எம்.எல்.ஏ சீட்டைத் தர முன்வந்திருக்கிறது. இதனால் கடும் கொந்தளிப்பில் காணப்படுகிறது த.வா.க. வேல்முருகன் நம்மிடம் பேசிய அந்தக் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள், “சாதிக் கட்சியாக நாங்கள் செயல்படவில்லை என்றாலும், வடமாவட்டங்களில் வன்னியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் வேல்முருகன். தி.மு.க கூட்டணியில் இணைந்த இந்த 8 ஆண்டுகளில் வடமாவட்டங்களில் பா.ம.க-வுக்கு இணையான கிளைக் கட்டமைப்பை உறுதி செய்திருக்கிறோம். எதற்காக தி.மு.க-வுக்காக நாம் உழைக்க வேண்டும்? ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதிப் பங்கீட்டின்போது எங்களை அவமானப்படுத்துகிறார்கள். மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகள் எனப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், வேல்முருகனைவிட கமல்ஹாசன் என்ன அரசியல் செய்துவிட்டார்... கட்சியே நடத்தாமல் லெட்டர் பேடு மட்டும் வைத்திருக்கும் பலருக்கு ஒரு சீட் தர முன்வந்திருக்கிறது. ஆனால் எங்களுக்கு இரு சீட் தர யோசிக்கிறார்கள்” எனக் குமுறினர். ஸ்டாலின் - திமுக தொட்டர்ந்து பேசியவர்கள், பண்ruட்டி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் எங்கள் தலைவர் வேல்முருகன். இந்தமுறை அவர் போட்டியிட நெய்வேலி தொகுதியையும் கூடுதலாக ஒரு தொகுதியையும் கேட்டோம். ஆனால், மீண்டும் ஒரு தொகுதியை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். அதுவும் அண்ணன் வேல்முருகனை பண்ருட்டியிலேயே நிற்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். கேட்கும் எண்ணிக்கையையும் தர மறுக்கிறார்கள்.. கேட்கும் தொகுதியையும் தர மறுக்கிறார்கள் என்கிறபோது எதற்காக தி.மு.க-வுக்காக நாம் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தலைமை முதல் கீழ்மட்ட பொறுப்பாளர்கள்வரை எழுந்திருக்கிறது. தொகுதி ஒதுக்கீட்டில்தான் பாரபட்சம் காட்டுகிறார்கள், எங்களின் கோரிக்கையையாவது நிறைவேற்றுங்கள் என, சாதிவாரிக் கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மீது நடவடிக்கை, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, சுங்கச்சாவடிகள் அகற்றுதல், தமிழ்நாட்டில் 90 சதவிகிதம் மாநில மக்களுக்கே வேலைவாய்ப்பை உறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். அதைப் பரிசீலிக்கவும் மறுக்கிறார்கள். பிறகு எதற்கு நாங்கள் கூட்டணியில் இருக்கவேண்டும். அதனால்தான் தனித்துப் போட்டி என்கிற முடிவை எடுத்திருக்கிறோம்'' என்கிறார்கள். திருமாவிடம் கேட்டால், சொல்வார்.! நம்மிடம் பேசிய தலைமைக்கு நெருக்கமானவர்கள், எங்களை தி.மு.க மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது. பா.ம.க கூட்டணியில் இல்லாத நிலையில் எங்கள் தலைவரின் பிரசாரம்தான் வன்னியர்களின் வாக்குகளைப் பெற தி.மு.கவுக்கு உதவுகிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற அண்ணன் திருமாவிடம் கேட்டால் அவரே சொல்வார். கடலூர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் எங்களுக்கு வலுவான கட்டமைப்பு இருக்கிறது. நாங்கள் வலுவாக உள்ள மாவட்டங்களில் பத்து முதல் 15 ஆயிரம் வாக்குகளையும் மற்ற இடங்களில் மூன்று முதல் ஐந்து ஆயிரம் வாக்குகளையும் கண்டிப்பாகப் பெறுவோம். நான்குமுனைப் போட்டியில், வெற்றி, தோல்வி ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகளில்தான் தீர்மானிக்கப்படவிருக்கிறது. கண்டிப்பாக தி.மு.கவின் வெற்றியைப் பறிக்கும் வாக்குகளாக எங்கள் வாக்குகள் இருக்கும். அப்போதாவது அவர்களுக்கு எங்களின் வலிமை புரியும்'' என்கிறார்கள். வேல்முருகன் தனித்துப் போட்டி என எப்போது அறிவிப்பீர்கள்? என அவர்களிடமே கேட்டோம், 2 தொகுதிகளையும், நாங்கள் கேட்கும் தொகுதிகளையும் தி.மு.க தர முன்வந்தால் கூட்டணியில் தொடர்வோம். மார்ச் 22-ம் தேதி மாலைவரை தி.மு.க-வுக்கு கெடு, இல்லையென்றால் தனித்துப் போட்டி என தலைமை அறிவிக்கும் என்றனர். ‘புதிய வரவுகளுக்கு வெண்ணெய்... எங்களுக்கு சுண்ணாம்பா?!’ - விரக்தியில் த.வா.க, கொதிப்பில் வி.சி.க!

விகடன் 20 Mar 2026 2:50 pm

குளித்தலை: `எங்க தொகுதியில இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க!' - மக்கள் முன்வைக்கும் `27'கோரிக்கைகள்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது, குளித்தலை சட்டமன்றத் தொகுதி. முன்னாள் முதல்வர் கலைஞர் தனது முதல் தேர்தலைச் சந்தித்து வெற்றிபெற்ற தொகுதி. இந்த தொகுதியில் தற்போது தி.மு.க-வைச் சேர்ந்த மாணிக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் தொகுதி வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி மக்கள் 27 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது குறித்து, அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சுந்தர் பேசுகையில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த கட்சியில் இருந்து குளித்தலையில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் குளித்தலை தொகுதி மக்களின் சார்பாக வாழ்த்துகள். ஆனால், குளித்தலை தொகுதி மக்களின் சார்பாக நிறைவேற்ற வேண்டிய எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று அவர்களிடம் வலியுறுத்துகிறோம். நகராட்சிக்குச் சொந்தமாக புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும். தற்போது, கோயிலுக்கு சொந்தமான வாடகை இடத்தில சிறிய பரப்பளவில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் இல்லாத ஒரே நகராட்சி இதுதான். அதேபோல், விவசாயம் நடக்கும் பகுதி என்பதால் குளித்தலை, மருதூர், முசிறி, உமையாள்புரம் இடையே இருவழிச் சாலையுடன் கூடிய கதவணை அமைக்க வேண்டும். lake தமிழகத்தில் உள்ள ஏரிகளில் மூன்றாவது பெரிய ஏரியான கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூரில் இருந்து காவிரி நீர் கொண்டு செல்லுதல், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குளித்தலை - மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், குளித்தலை பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் சட்டமன்றத் தொகுதியில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இந்த பகுதி மக்கள் பொழுதுபோக்கும் வகையில் குளித்தலை காவிரி கரையில் பூங்கா அமைக்க வேண்டும். அதேபோல், குளித்தலையில் துணை மின் நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். kulithalai மக்களின் நீண்டகால கோரிக்கையான குளித்தலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும், திருச்சி டு கரூர் சாலையை விபத்து இல்லாமல் இருக்க நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை வேண்டும், கடம்பர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கோயில் சார்பாக திருமண மண்டபம் அமைக்க வேண்டும், தோகைமலையில் பத்திரப்பதிவு அலுவலகம், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட குளித்தலை தொகுதியில் நர்சிங் கல்லூரி அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பொறியியல் கல்லூரி இல்லாத தொகுதியாக உள்ள எங்கள் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும். தவிர, இனுங்கூர் வேளாண் விதைப்பண்ணையில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் அமைத்தல், அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற திருக்கோயில் என்பதால், அதை ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கைள், குளித்தலை நகரில் உள்ள கால்நடை மருத்துவ மையத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்துதல், குளித்தலை நகரம் மற்றும் வாலந்தூர் கிராமங்களுக்கு இடையே உள்ள ரயில்வே நிலையம் அருகில் லைனில் சப்வே அமைக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக துவங்கப்பட்ட குளித்தலை நகரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் MRI ஸ்கேன் வசதி உட்பட அனைத்து வசதிகளுடனும் மற்றும் மருத்துவர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புதல், திருச்சி, கரூர் பகுதிகளுக்கு அனுப்பாமல் நம் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தர வேண்டும். bus stand அதேபோல், குளித்தலை அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் ராமேஸ்வரம், மதுரை கன்னியாகுமரி சென்னை உட்பட பகுதிகளுக்கு தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். திருப்பூர், கோவை நகரங்களில் இருந்து திருச்சி நகருக்கு இயக்கப்படும் ஏசி பேருந்துகள் குளித்தலை பயணிகளை ஏற்றி குளித்தலை பேருந்து நிலையத்தில் இறக்கி விட வேண்டும். தவிர, குளித்தலை நகரில் இருந்து லாலாபேட்டை மாயனூர் வழியாக புதிய காவேரி பாலம் காட்டுப்புத்தூர் மோகனூர் வழியாக நகரப் பேருந்துகளும் புறநகர் பேருந்துகளும் மோகனூர் மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அதேமாதிரி, குளித்தலை தொகுதியில் உள்ள வெற்றிலை மற்றும் வாழை கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வாழ்வாதாரங்கள் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் கரூரிலிருந்து இயக்கப்படும் SETC பேருந்துகள் தற்போது சுங்க கேட் வரை வந்து பிறகு முசிறி சென்னை இயக்கப்படுகிறது. பேருந்துகள் குளித்தலை பேருந்து நிலையம் வரை வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பிறகு முசிறி சென்னை வரை இயக்கப்பட வேண்டும். கரூர் திருவள்ளுவர் மைதானம் போன்று குளித்தலை நகர பகுதியில் பொதுமக்களுக்கு நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் குளித்தலை அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுத் திறன் மேம்படுத்திடவும் சிறிய அளவில் மைதானம் ஏற்படுத்தி தர வேண்டுகிறோம். குளித்தலை நகராட்சி எல்லையை அருகில் உள்ள கிராம ஊராட்சிகளின் மக்களின் எண்ணங்களை உணர்ந்து விரிவுபடுத்திட வேண்டும். குளித்தலை நகரப் பகுதியில் உள்ள தென்கரை பாசன வாய்க்கால்களில் நடை பாலங்கள் உள்ளது. railway gate தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப இது பத்தாது. நான்கு சக்கர மற்றும் ஆம்புலன்ஸ்கள் தீயணைப்பு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் குளித்தலையில் சண்முகானந்தா தியேட்டர் அருகில் ஒரு பெரிய பாலமும், மலையப்ப நகர் மற்றும் திருச்சி சாலையை இணைக்கக்கூடிய வகையில் பெரிய பாலமும் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இது, காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதேபோல், தென்கரை பாசன வாய்க்கால்களில் பழுது அடைந்த அனைத்து சிறு பாலங்களை பெரிய வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். குளித்தலை வாரச்சந்தைக்கு நிரந்தரமாக கட்டடம் உள்ள ஓர் இடத்தை தேர்வு செய்து அமைத்துக் கொடுக்க வேண்டும். தினசரி நகராட்சி காய்கறி மார்க்கெட் அமைத்துக் கொடுக்க வேண்டும். கடைசியாக, குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீர் சேகரிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தால், இங்கு செழிப்பாக விவசாயம் நடைபெறும். நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். குளித்தலை சட்டமன்றத் தொகுதி மக்களின் சார்பாக தொகுதி மக்களுக்குத் தேவையான கோரிக்கைகள் இவை. இவற்றை வேட்பாளர்கள் முயற்சிக்க வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வாழ்த்துகள். எங்கள் கோரிக்கைகளை அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

விகடன் 20 Mar 2026 2:04 pm

அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரம் எப்போது வெளியாகும்? - டெல்லியில் இபிஎஸ் பதில்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேற்று (மார்ச். 19) டெல்லி சென்றிருந்தார். அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி இவரைத் தொடர்ந்து இன்று அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் இன்று (மார்ச்.20) அமித்ஷாவைச் சந்திக்க டெல்லி சென்றிருக்கின்றனர். இந்நிலையில் அமித்ஷாவைச் சந்தித்தப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நான்கு நாள்களுக்குள் வெளியிடப்படும். எங்கள் கூட்டணியில் எந்தச் சிக்கலும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி யார், யாருக்கு எந்ததெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? அதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை” என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து சி.வி சண்முகம் நடிகை குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, சி.வி சண்முகம்தான் பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்புக் கேட்டுவிட்டார். இதைப் பற்றி இனி விவாதிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். விடாப்பிடி எடப்பாடி, சீட் பங்கீட்டில் மோதும் BJP | NDA கூட்டணியில் என்ன நடக்கிறது? | off the record

விகடன் 20 Mar 2026 1:20 pm

அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரம் எப்போது வெளியாகும்? - டெல்லியில் இபிஎஸ் பதில்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேற்று (மார்ச். 19) டெல்லி சென்றிருந்தார். அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி இவரைத் தொடர்ந்து இன்று அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் இன்று (மார்ச்.20) அமித்ஷாவைச் சந்திக்க டெல்லி சென்றிருக்கின்றனர். இந்நிலையில் அமித்ஷாவைச் சந்தித்தப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நான்கு நாள்களுக்குள் வெளியிடப்படும். எங்கள் கூட்டணியில் எந்தச் சிக்கலும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி யார், யாருக்கு எந்ததெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? அதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை” என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து சி.வி சண்முகம் நடிகை குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, சி.வி சண்முகம்தான் பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்புக் கேட்டுவிட்டார். இதைப் பற்றி இனி விவாதிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். விடாப்பிடி எடப்பாடி, சீட் பங்கீட்டில் மோதும் BJP | NDA கூட்டணியில் என்ன நடக்கிறது? | off the record

விகடன் 20 Mar 2026 1:20 pm

'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்

தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் திமுகவுக்கு விசுவாசமாக செயல்படுவதாக அருண்ராஜ் காட்டமாக ஒரு பதிவை இட்டுள்ளார். அருண் ராஜ் அருண் ராஜ் வெளியிட்டிருக்கும் பதிவில், 'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள். நேற்றைய தினம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான Raid நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்; அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை; முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை/ரெய்டு நடத்தப்பட வேண்டும். அருண் ராஜ் | Arun Raj - TVK ஆனால் நேற்றைய தினம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. M. வெற்றிவேல் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள். இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. இதேபோல் 16-03-2026 அன்று திருச்செங்கோடு வரகுராம்பட்டியில், பட்டேல் நகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டிற்குள் திரு.பரமராஜ் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி உள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த Rs 23,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். முறையான ஆவணத்துடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டு, 15-03-2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அன்று நடக்கவிருந்த போட்டிகள் நடத்தப்படாமல் பரிசு பொருட்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. மேற்கண்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அருண் ராஜ் குறிப்பிடும் கடிதம் அதேபோல் மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரோடு பள்ளிபாளையத்தில் இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி Dr கண்ணன் அவர்களின் ராதா Ortho மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக் மற்றும் Boost பாட்டில்களை, ஏதோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்டது போல சித்தரித்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 20 Mar 2026 12:54 pm

'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்

தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் திமுகவுக்கு விசுவாசமாக செயல்படுவதாக அருண்ராஜ் காட்டமாக ஒரு பதிவை இட்டுள்ளார். அருண் ராஜ் அருண் ராஜ் வெளியிட்டிருக்கும் பதிவில், 'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள். நேற்றைய தினம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான Raid நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்; அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை; முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை/ரெய்டு நடத்தப்பட வேண்டும். அருண் ராஜ் | Arun Raj - TVK ஆனால் நேற்றைய தினம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. M. வெற்றிவேல் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள். இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. இதேபோல் 16-03-2026 அன்று திருச்செங்கோடு வரகுராம்பட்டியில், பட்டேல் நகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டிற்குள் திரு.பரமராஜ் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி உள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த Rs 23,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். முறையான ஆவணத்துடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டு, 15-03-2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அன்று நடக்கவிருந்த போட்டிகள் நடத்தப்படாமல் பரிசு பொருட்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. மேற்கண்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அருண் ராஜ் குறிப்பிடும் கடிதம் அதேபோல் மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரோடு பள்ளிபாளையத்தில் இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி Dr கண்ணன் அவர்களின் ராதா Ortho மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக் மற்றும் Boost பாட்டில்களை, ஏதோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்டது போல சித்தரித்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 20 Mar 2026 12:54 pm

நினைவுச் சுவடுகள் 10: ஜனநாயக அரசியலின் நினைவுச் சின்னம் - சைக்கிள் பேரணி!

சைக்கிள் பேரணி நினைவுச் சுவடுகள் 10 தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் என்றால், பெரிய பொதுக்கூட்டங்கள், திரைப்படக் காட்சிகளை நினைவூட்டும் ஊர்வலங்கள், பரபரப்பான மேடைப் பேச்சுகள் என பல அம்சங்கள் நினைவுக்கு வரும். ஆனால் அந்த இரைச்சல் மிக்க வரலாற்றின் ஓரத்தில், அமைதியாகவும் எளிமையாகவும் நடைபெற்ற சைக்கிள் பேரணிகளும் இடம் பெற்றுள்ளன.  சைக்கிள் பேரணி என்பது மக்களுடனான தொடர்பையும் அணுகுமுறையையும் அரசியல் கட்சிகளுக்கு எளிமையாக்கியது. குக்கிராமங்களிலும், கிராமப்புற சாலைகளிலும், குறுகிய தெருக்களிலும் புகுந்த புறப்பட்ட சைக்கிள்கள், தேர்தல் பிரசாரத்தை ஒரு திருவிழா போல மக்களிடம் கொண்டு சென்றன.  சைக்கிள் பிரசாரம் ஏன் ? தமிழகத் தேர்தல் அரசியலில், சைக்கிள் பேரணி என்பது மாநிலத்தின் அரசியல் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றிய ஒன்றாக இருந்தது. 1960–70களில், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் பின்னர் உருவான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள், வழக்கமான மேடைப் பிரசாரம், லவுட்ஸ்பீக்கர்கள் கட்டப்பட்ட வாகனங்களைக் கடந்தும், மக்களை அணுக புதிய வழிகளைத் தேடின. கிராமப்புறத் தெருக்களில் வீடு வீடாக சென்று பேசுவதுதான், தங்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் முக்கியமான வழி என்பதை அந்தக் கட்சிகள் நன்கு உணர்ந்திருந்தன. மோட்டார் வாகன பேரணிகளுக்கு எரிபொருள், வாகனம், ஓட்டுநர் சம்பளம் போன்ற பல செலவுகள் தேவைப்பட்டது. இது பல சமயங்களில், உள்ளூர் கட்சி அமைப்புகளுக்குப் பெரும் பொருளாதார சுமையாக இருந்தது. ஆனால் சைக்கிள், எளிதாகக் கிடைக்கும் மற்றும் குறைந்த செலவு கொண்ட ஒரு வாகனமாக இருந்தது. குறுகிய தெருக்கள், கிராமப் பாதைகள், மண் சாலைகள் என எங்கு வேண்டுமானாலும் சைக்கிள்களால் செல்ல முடிந்தன. தேநீர் கடை, பேருந்து நிறுத்தம் அல்லது ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தி மக்களுடன் பேசுவதற்கும் அது வசதியாக இருந்தது. கட்சித் தொண்டர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும், சைக்கிள் பேரணி என்பது உழைப்பின் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருந்தது. ஒரு தலைவர் மேடையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களிடம் பேச முடிந்தால், சைக்கிளில் சென்ற தொண்டர்கள் அந்தத் தலைவரின் செய்தியை ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கும் கொண்டு சென்று சேர்த்தனர். மக்களின் ஆர்வம் ஒரு சைக்கிள் பேரணி பொதுவாகத் தேர்தலுக்கு பல வாரங்களுக்கு முன்பே தொடங்கும். கட்சி அமைப்பாளர்கள் மாணவர்கள், இளைஞர் அணியினர், உள்ளூர் செயற்பாட்டாளர்கள்... எனத் தொண்டர்களை ஒன்று சேர்ப்பார்கள். அவர்களின் சைக்கிள்களின் முன்புறம் உள்ள கைப்பிடிகளில் கட்சி சின்னம் பொறித்த கொடிகள் பறக்கும். ஒரே மாதிரியான தொப்பி அல்லது துண்டுகளை அணிந்து தொண்டர்கள் சைக்கிள்களில் அணி வகுப்பார்கள்.  பேரணிக்கான பாதைகள் முன்கூட்டியே திட்டமிடப்படும். வார்டு எல்லைகள், கிராமக் குழுக்கள், சந்தைப் பகுதிகள், முக்கியமான பொது இடங்கள் ஆகியவை குறிக்கப்படும். மக்கள் அதிகம் வெளியில் நடமாடும் நேரமான காலை அல்லது மாலை வேளைகளில் பேரணி தொடங்கும். ஒரே சீரான ஓசையில் சைக்கிளை மிதித்துக்கொண்டுச் செல்லும் அந்தப் பிரசாரக் குழுவினர், தொகுதி முழுவதும் சுற்றி வருவார்கள். வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் மெதுவாகச் சென்று, முழக்கங்களை எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை வழங்குவார்கள். சைக்கிளை மிதிக்கும் ஒலி , அதற்கிடையே எழும் முழக்கங்கள் போன்ற அனைத்தும் அந்தப் பிரசாரத்தின் இசையாகவே மாறும். நகரப் பகுதிகளில், குறுகிய சாலைகளில் செல்லும் சைக்கிள் பேரணிகள் சில நேரங்களில் தற்காலிகமாக போக்குவரத்தையே முடக்கிவிடும். இதனால் கடைக்காரர்கள், வழிப்போக்கர்கள் கவனத்தை ஈர்க்கும். முழுமையான ஆதரவு கிடைக்காவிட்டாலும், சம்பந்தப்பட்ட கட்சிகள் மீது குறைந்தபட்சம் ஆர்வத்தையாவது மக்களிடையே உருவாக்கும். மக்களுடன் நேரடித் தொடர்பு தமிழகத்தில் ஏதாவது ஒரு கட்சியில் இருந்த அல்லது தான் சார்ந்த கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட மூத்த தலைமுறையினருக்கு, சைக்கிள் பேரணிகள் என்பது இன்னும் மறக்க முடியாத தேர்தல் நினைவுகளாகவே உள்ளன. இளம் வயதில், அல்லது கல்லூரி மாணவர்களாக இருந்த காலத்தில், வெயிலையும் தூசியையும் பொருட்படுத்தாமல் வயல்வெளிகள், மண் சாலைகள் வழியாக சைக்கிளை மிதித்து பிரசாரம் செய்த நாட்களை பலரும் நினைவு கூறுவார்கள். அவர்களுக்கு அந்தச் சைக்கிள் பேரணிகள், தோழமை உணர்வையும் ஒரு கடமை செய்த திருப்தியையும் தந்த அனுபவமாக இருந்தது. இந்த நினைவுகள், அரசியல் அனுபவம் கொண்ட மூத்தவர்கள், கட்சித் தொண்டர்கள், சாதாரண வாக்காளர்கள் ஆகியோரின் வாய்மொழி கதைகளிலும் பேட்டிகளிலும் இன்றும் இடம் பெறுகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது, ஜீப் போன்ற திறந்த வாகனங்களில் வந்து பிரசாரம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், கிராமங்களில் சைக்கிளில் வந்த இளைஞர்கள்தான் ஒவ்வொரு தெருக்களிலும் வந்து பேசினார்கள். ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டு முன்பாகவும் நின்று பேசுவது அன்றைய பிரசாரத்தின் தனிச்சிறப்பாக இருந்தது. இன்றைய பெரிய வாகன பேரணிகளில் மக்கள் பெரும்பாலும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், பழைய சைக்கிள் பேரணிகள் உரையாடலுக்கான இடத்தை உருவாக்கின. சைக்கிளில் வந்த ஒரு தொண்டர் நின்று பேசலாம், கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம், நேரடித் தொடர்பை உருவாக்கலாம். அந்த மனிதத் தொடர்புதான், பல வாக்காளர்களின் மனதில் ஆழமான நினைவாக பதிந்தது. சைக்கிள் பேரணிகளின் அரசியல் குறியீடுகள் சைக்கிள் பேரணிகள் வெறும் பிரசார ஏற்பாடாக மட்டுமல்லாது அவை ஒரு ஆழமான அரசியல் குறியீட்டையும் சுமந்து சென்றன. எளிமை, சாதாரண மக்களிடம் நெருக்கம், அவர்கள் வாழும் இடத்திற்கே சென்று பேசும் மனப்பான்மை ஆகியவற்றை இந்தப் பேரணிகள் வெளிப்படுத்தின. திரைப்படப் புகழும், மேடைப் பேச்சும் கொண்ட தலைவர்கள் உருவான காலத்திலும், சைக்கிள் பேரணிகள் அரசியலை சாமானிய மக்களுடன் இணைத்தன. சைக்கிளில் மிதித்துச் செல்லும் தொண்டர்கள், நாமெல்லாம் ஒரே மாதிரியான வாழ்வாதாரமும், ஒரே மாதிரியான பிரச்னைகளும், ஒரே எதிர்கால நம்பிக்கையும் கொண்டவர்கள் என்கிற உணர்வை மக்களுக்குக் கடத்தினர். இந்தச் சைக்கிள் பேரணிகள் ஒரு ஒப்பீட்டையும் உருவாக்கின. பெரிய வாகனங்கள், பேனர்கள், ஒலிபெருக்கிகள் இல்லாமலேயே, அடித்தளத்தில் உழைக்கும் தொண்டர்களின் சைக்கிள் பேரணி கூட அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அது வெளிப்படுத்தியது.  இளைஞர்கள் ஆதரவை திரட்டிய நகர்ப்புற பேரணிகள்  சைக்கிள் பேரணிகள் பெரும்பாலும் கிராமப்புற அரசியலுடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் சிறிய நகரங்களிலும் நகர எல்லைப் பகுதிகளிலும் அவை முக்கிய இடம் பெற்றிருந்தன. 1980களிலும் 1990களின் தொடக்க காலத்திலும், முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அணிகள், தேர்தலுக்கு முன்னதாக இரவு நேரங்களில் சைக்கிள் பேரணிகளை நடத்தினர். கல்லூரிகள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக சைக்கிள்களில் சென்று முழக்கங்கள் எழுப்பி, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணிகள், குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்க இருந்த இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை உருவாக்கின. இளைஞர்கள் ஆதரவைத் திரட்டுவதே இந்தப் பேரணிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது. 1990களின் இறுதிப்பகுதியிலும் 2000களின் தொடக்கத்திலும், தமிழ்நாட்டின் தேர்தல் பிரசாரங்கள் தொழில்நுட்ப ரீதியாக மாற்றமடையத் தொடங்கின. கட்சிகளுக்கான பிரத்யேக ஊடகங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது, சைக்கிள் பேரணிகளின் முக்கியத்துவம் மெதுவாகக் குறைந்தது. தொலைக்காட்சி, ஒலிபெருக்கி வாகனங்கள், டிஜிட்டல் பிரசாரம் போன்றவை உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பேரணிகளின் தாக்கத்தைக் குறைத்தன. சைக்கிள்களில் பெரிய ஸ்பீக்கர்களை ஏற்ற முடியாது. சைக்கிள் பேரணிகளின் வேகமும் குறைவு, வீச்சும் குறைவு. அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வளங்கள் கிடைக்கத் தொடங்கியதும், பிரசாரத்தின் போக்கே மாறிவிட்டது. ஆனால், சைக்கிள் பேரணிகள் மறைந்துவிட்டன என்று சொல்ல முடியாது.  மீண்டும் தொடங்கும் சைக்கிள் பேரணிகள்  சமீப ஆண்டுகளாக, சில உள்ளூர் அரசியல் அமைப்புகளும் மாணவர் இயக்கங்களும், சிறிய அளவில் சைக்கிள் பேரணிகளை மீண்டும் நடத்தத் தொடங்கியுள்ளன. இவை முழுமையான பிரசார கருவிகளாக இல்லாமல், ஒரு குறியீட்டு முயற்சியாகவே அதிகம் அமைந்துள்ளன. கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கும் நோக்குடன் நடத்தப்படும் இப்பேரணிகள், ஒருகாலத்தில் ஜனநாயக ஈடுபாடு என்பது மனித உழைப்பும் நேரடி பங்கேற்பும் என்றிருந்த காலத்தை நினைவூட்டுகின்றன. இந்தப் பேரணிகளை அனுபவித்த தலைமுறையைச் சேர்ந்த முதியவர்கள், இன்றும் அவற்றைப் பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள். இந்தியத் தேர்தல்கள் மற்றும் அடிப்படை அரசியல் இயக்கங்களைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தொலைக்காட்சி வருகைக்கு முந்தைய காலகட்டத்தில், குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்ட பிரசார முறைகள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. அவற்றில் சைக்கிள் பேரணிகள் எளிமையான, ஆனால் சமூக ரீதியாக வலுவான அரசியல் பங்கேற்பு வடிவங்களின் ஒரு பகுதியாக இருந்தன என்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் சைக்கிள் பேரணிகள், ஜனநாயக அரசியலின் ஒரு முக்கிய நினைவுச் சின்னமாகவே இருந்து வருகின்றன. (முற்றும்)

விகடன் 20 Mar 2026 12:37 pm

நினைவுச் சுவடுகள் 10: ஜனநாயக அரசியலின் நினைவுச் சின்னம் - சைக்கிள் பேரணி!

சைக்கிள் பேரணி நினைவுச் சுவடுகள் 10 தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் என்றால், பெரிய பொதுக்கூட்டங்கள், திரைப்படக் காட்சிகளை நினைவூட்டும் ஊர்வலங்கள், பரபரப்பான மேடைப் பேச்சுகள் என பல அம்சங்கள் நினைவுக்கு வரும். ஆனால் அந்த இரைச்சல் மிக்க வரலாற்றின் ஓரத்தில், அமைதியாகவும் எளிமையாகவும் நடைபெற்ற சைக்கிள் பேரணிகளும் இடம் பெற்றுள்ளன.  சைக்கிள் பேரணி என்பது மக்களுடனான தொடர்பையும் அணுகுமுறையையும் அரசியல் கட்சிகளுக்கு எளிமையாக்கியது. குக்கிராமங்களிலும், கிராமப்புற சாலைகளிலும், குறுகிய தெருக்களிலும் புகுந்த புறப்பட்ட சைக்கிள்கள், தேர்தல் பிரசாரத்தை ஒரு திருவிழா போல மக்களிடம் கொண்டு சென்றன.  சைக்கிள் பிரசாரம் ஏன் ? தமிழகத் தேர்தல் அரசியலில், சைக்கிள் பேரணி என்பது மாநிலத்தின் அரசியல் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றிய ஒன்றாக இருந்தது. 1960–70களில், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் பின்னர் உருவான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள், வழக்கமான மேடைப் பிரசாரம், லவுட்ஸ்பீக்கர்கள் கட்டப்பட்ட வாகனங்களைக் கடந்தும், மக்களை அணுக புதிய வழிகளைத் தேடின. கிராமப்புறத் தெருக்களில் வீடு வீடாக சென்று பேசுவதுதான், தங்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் முக்கியமான வழி என்பதை அந்தக் கட்சிகள் நன்கு உணர்ந்திருந்தன. மோட்டார் வாகன பேரணிகளுக்கு எரிபொருள், வாகனம், ஓட்டுநர் சம்பளம் போன்ற பல செலவுகள் தேவைப்பட்டது. இது பல சமயங்களில், உள்ளூர் கட்சி அமைப்புகளுக்குப் பெரும் பொருளாதார சுமையாக இருந்தது. ஆனால் சைக்கிள், எளிதாகக் கிடைக்கும் மற்றும் குறைந்த செலவு கொண்ட ஒரு வாகனமாக இருந்தது. குறுகிய தெருக்கள், கிராமப் பாதைகள், மண் சாலைகள் என எங்கு வேண்டுமானாலும் சைக்கிள்களால் செல்ல முடிந்தன. தேநீர் கடை, பேருந்து நிறுத்தம் அல்லது ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தி மக்களுடன் பேசுவதற்கும் அது வசதியாக இருந்தது. கட்சித் தொண்டர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும், சைக்கிள் பேரணி என்பது உழைப்பின் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருந்தது. ஒரு தலைவர் மேடையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களிடம் பேச முடிந்தால், சைக்கிளில் சென்ற தொண்டர்கள் அந்தத் தலைவரின் செய்தியை ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கும் கொண்டு சென்று சேர்த்தனர். மக்களின் ஆர்வம் ஒரு சைக்கிள் பேரணி பொதுவாகத் தேர்தலுக்கு பல வாரங்களுக்கு முன்பே தொடங்கும். கட்சி அமைப்பாளர்கள் மாணவர்கள், இளைஞர் அணியினர், உள்ளூர் செயற்பாட்டாளர்கள்... எனத் தொண்டர்களை ஒன்று சேர்ப்பார்கள். அவர்களின் சைக்கிள்களின் முன்புறம் உள்ள கைப்பிடிகளில் கட்சி சின்னம் பொறித்த கொடிகள் பறக்கும். ஒரே மாதிரியான தொப்பி அல்லது துண்டுகளை அணிந்து தொண்டர்கள் சைக்கிள்களில் அணி வகுப்பார்கள்.  பேரணிக்கான பாதைகள் முன்கூட்டியே திட்டமிடப்படும். வார்டு எல்லைகள், கிராமக் குழுக்கள், சந்தைப் பகுதிகள், முக்கியமான பொது இடங்கள் ஆகியவை குறிக்கப்படும். மக்கள் அதிகம் வெளியில் நடமாடும் நேரமான காலை அல்லது மாலை வேளைகளில் பேரணி தொடங்கும். ஒரே சீரான ஓசையில் சைக்கிளை மிதித்துக்கொண்டுச் செல்லும் அந்தப் பிரசாரக் குழுவினர், தொகுதி முழுவதும் சுற்றி வருவார்கள். வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் மெதுவாகச் சென்று, முழக்கங்களை எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை வழங்குவார்கள். சைக்கிளை மிதிக்கும் ஒலி , அதற்கிடையே எழும் முழக்கங்கள் போன்ற அனைத்தும் அந்தப் பிரசாரத்தின் இசையாகவே மாறும். நகரப் பகுதிகளில், குறுகிய சாலைகளில் செல்லும் சைக்கிள் பேரணிகள் சில நேரங்களில் தற்காலிகமாக போக்குவரத்தையே முடக்கிவிடும். இதனால் கடைக்காரர்கள், வழிப்போக்கர்கள் கவனத்தை ஈர்க்கும். முழுமையான ஆதரவு கிடைக்காவிட்டாலும், சம்பந்தப்பட்ட கட்சிகள் மீது குறைந்தபட்சம் ஆர்வத்தையாவது மக்களிடையே உருவாக்கும். மக்களுடன் நேரடித் தொடர்பு தமிழகத்தில் ஏதாவது ஒரு கட்சியில் இருந்த அல்லது தான் சார்ந்த கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட மூத்த தலைமுறையினருக்கு, சைக்கிள் பேரணிகள் என்பது இன்னும் மறக்க முடியாத தேர்தல் நினைவுகளாகவே உள்ளன. இளம் வயதில், அல்லது கல்லூரி மாணவர்களாக இருந்த காலத்தில், வெயிலையும் தூசியையும் பொருட்படுத்தாமல் வயல்வெளிகள், மண் சாலைகள் வழியாக சைக்கிளை மிதித்து பிரசாரம் செய்த நாட்களை பலரும் நினைவு கூறுவார்கள். அவர்களுக்கு அந்தச் சைக்கிள் பேரணிகள், தோழமை உணர்வையும் ஒரு கடமை செய்த திருப்தியையும் தந்த அனுபவமாக இருந்தது. இந்த நினைவுகள், அரசியல் அனுபவம் கொண்ட மூத்தவர்கள், கட்சித் தொண்டர்கள், சாதாரண வாக்காளர்கள் ஆகியோரின் வாய்மொழி கதைகளிலும் பேட்டிகளிலும் இன்றும் இடம் பெறுகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது, ஜீப் போன்ற திறந்த வாகனங்களில் வந்து பிரசாரம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், கிராமங்களில் சைக்கிளில் வந்த இளைஞர்கள்தான் ஒவ்வொரு தெருக்களிலும் வந்து பேசினார்கள். ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டு முன்பாகவும் நின்று பேசுவது அன்றைய பிரசாரத்தின் தனிச்சிறப்பாக இருந்தது. இன்றைய பெரிய வாகன பேரணிகளில் மக்கள் பெரும்பாலும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், பழைய சைக்கிள் பேரணிகள் உரையாடலுக்கான இடத்தை உருவாக்கின. சைக்கிளில் வந்த ஒரு தொண்டர் நின்று பேசலாம், கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம், நேரடித் தொடர்பை உருவாக்கலாம். அந்த மனிதத் தொடர்புதான், பல வாக்காளர்களின் மனதில் ஆழமான நினைவாக பதிந்தது. சைக்கிள் பேரணிகளின் அரசியல் குறியீடுகள் சைக்கிள் பேரணிகள் வெறும் பிரசார ஏற்பாடாக மட்டுமல்லாது அவை ஒரு ஆழமான அரசியல் குறியீட்டையும் சுமந்து சென்றன. எளிமை, சாதாரண மக்களிடம் நெருக்கம், அவர்கள் வாழும் இடத்திற்கே சென்று பேசும் மனப்பான்மை ஆகியவற்றை இந்தப் பேரணிகள் வெளிப்படுத்தின. திரைப்படப் புகழும், மேடைப் பேச்சும் கொண்ட தலைவர்கள் உருவான காலத்திலும், சைக்கிள் பேரணிகள் அரசியலை சாமானிய மக்களுடன் இணைத்தன. சைக்கிளில் மிதித்துச் செல்லும் தொண்டர்கள், நாமெல்லாம் ஒரே மாதிரியான வாழ்வாதாரமும், ஒரே மாதிரியான பிரச்னைகளும், ஒரே எதிர்கால நம்பிக்கையும் கொண்டவர்கள் என்கிற உணர்வை மக்களுக்குக் கடத்தினர். இந்தச் சைக்கிள் பேரணிகள் ஒரு ஒப்பீட்டையும் உருவாக்கின. பெரிய வாகனங்கள், பேனர்கள், ஒலிபெருக்கிகள் இல்லாமலேயே, அடித்தளத்தில் உழைக்கும் தொண்டர்களின் சைக்கிள் பேரணி கூட அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அது வெளிப்படுத்தியது.  இளைஞர்கள் ஆதரவை திரட்டிய நகர்ப்புற பேரணிகள்  சைக்கிள் பேரணிகள் பெரும்பாலும் கிராமப்புற அரசியலுடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் சிறிய நகரங்களிலும் நகர எல்லைப் பகுதிகளிலும் அவை முக்கிய இடம் பெற்றிருந்தன. 1980களிலும் 1990களின் தொடக்க காலத்திலும், முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அணிகள், தேர்தலுக்கு முன்னதாக இரவு நேரங்களில் சைக்கிள் பேரணிகளை நடத்தினர். கல்லூரிகள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக சைக்கிள்களில் சென்று முழக்கங்கள் எழுப்பி, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணிகள், குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்க இருந்த இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை உருவாக்கின. இளைஞர்கள் ஆதரவைத் திரட்டுவதே இந்தப் பேரணிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது. 1990களின் இறுதிப்பகுதியிலும் 2000களின் தொடக்கத்திலும், தமிழ்நாட்டின் தேர்தல் பிரசாரங்கள் தொழில்நுட்ப ரீதியாக மாற்றமடையத் தொடங்கின. கட்சிகளுக்கான பிரத்யேக ஊடகங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது, சைக்கிள் பேரணிகளின் முக்கியத்துவம் மெதுவாகக் குறைந்தது. தொலைக்காட்சி, ஒலிபெருக்கி வாகனங்கள், டிஜிட்டல் பிரசாரம் போன்றவை உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பேரணிகளின் தாக்கத்தைக் குறைத்தன. சைக்கிள்களில் பெரிய ஸ்பீக்கர்களை ஏற்ற முடியாது. சைக்கிள் பேரணிகளின் வேகமும் குறைவு, வீச்சும் குறைவு. அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வளங்கள் கிடைக்கத் தொடங்கியதும், பிரசாரத்தின் போக்கே மாறிவிட்டது. ஆனால், சைக்கிள் பேரணிகள் மறைந்துவிட்டன என்று சொல்ல முடியாது.  மீண்டும் தொடங்கும் சைக்கிள் பேரணிகள்  சமீப ஆண்டுகளாக, சில உள்ளூர் அரசியல் அமைப்புகளும் மாணவர் இயக்கங்களும், சிறிய அளவில் சைக்கிள் பேரணிகளை மீண்டும் நடத்தத் தொடங்கியுள்ளன. இவை முழுமையான பிரசார கருவிகளாக இல்லாமல், ஒரு குறியீட்டு முயற்சியாகவே அதிகம் அமைந்துள்ளன. கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கும் நோக்குடன் நடத்தப்படும் இப்பேரணிகள், ஒருகாலத்தில் ஜனநாயக ஈடுபாடு என்பது மனித உழைப்பும் நேரடி பங்கேற்பும் என்றிருந்த காலத்தை நினைவூட்டுகின்றன. இந்தப் பேரணிகளை அனுபவித்த தலைமுறையைச் சேர்ந்த முதியவர்கள், இன்றும் அவற்றைப் பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள். இந்தியத் தேர்தல்கள் மற்றும் அடிப்படை அரசியல் இயக்கங்களைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தொலைக்காட்சி வருகைக்கு முந்தைய காலகட்டத்தில், குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்ட பிரசார முறைகள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. அவற்றில் சைக்கிள் பேரணிகள் எளிமையான, ஆனால் சமூக ரீதியாக வலுவான அரசியல் பங்கேற்பு வடிவங்களின் ஒரு பகுதியாக இருந்தன என்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் சைக்கிள் பேரணிகள், ஜனநாயக அரசியலின் ஒரு முக்கிய நினைவுச் சின்னமாகவே இருந்து வருகின்றன. (முற்றும்)

விகடன் 20 Mar 2026 12:37 pm

மகப்பேறு இறப்பு: தமிழ்நாட்டுக்கு தீர்வைத் தேடி வந்த உத்தரப் பிரதேச திட்டக்குழு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாய்மார்களின் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நிலையில், அதைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறிய அந்த மாநிலத்தின் திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் மற்றும் இங்குச் செயல்படுத்தப்படும் தனித்துவமான சுகாதாரத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதே இவர்களின் முதன்மை நோக்கமாகும். இதற்காகத் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர்கள் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டனர். மகப்பேறு இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் 'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்' குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ரூ.18,000 நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் எவ்வாறு தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்பதை அதிகாரிகள் கேட்டறிந்தனர். பிரசவத்திற்கு முன்னும் பின்னும் வழங்கப்படும் இந்த ஆதரவு, இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) என்பது பிரசவத்தின் போதோ அல்லது பிரசவம் முடிந்த 42 நாட்களுக்குள்ளோ உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு 1 லட்சம் பிரசவங்களில் தமிழ்நாட்டில் 35 பேர் மட்டுமே உயிரிழக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 140 ஆக உள்ளது. இந்த மிகப்பெரிய இடைவெளியைக் குறைக்கவும், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைத் தங்கள் மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தவும் உத்தரப்பிரதேச அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாட்டின் இந்தச் சாதனைக்கு இங்குள்ள 24 மணி நேர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அவசர கால மகப்பேறு சிகிச்சை மையங்கள் மற்றும் ரத்த சோகை போன்ற பாதிப்புகள் உள்ள கர்ப்பிணிகளைத் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கும் முறையே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு ஒரு முன்னோடியாகத் திகழ்வதை இந்த ஆய்வுப் பயணம் உறுதிப்படுத்துகிறது. 40 ஆண்டுகளாக நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கும் தமிழ்நாடு அரசு, பின்னணி மற்றும் வழக்கு நிலவரம்!

விகடன் 20 Mar 2026 12:05 pm

நாங்க இருக்கிறோம்! ட்ரம்ப் திட்டியபிறகு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆதரவு

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல் காரணமாக ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு மூடிவிட்டது. இதனால் அந்த நீர்வழித்தடம் வழியாக கச்சா எண்ணெயை கப்பல்கள் எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. எனவே ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அனைத்து நாடுகளும் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் உட்பட எந்த நாடும் அமெரிக்காவிற்கு இவ்விவகாரத்தில் நேரடியாக ஆதரவு கொடுக்க தயக்கம் காட்டி வந்தன. சில நாடுகள் நேரடியாகவே தங்களால் ஆதரவு கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டன. தற்போது ஈரான் கத்தார் போன்ற வளளைகுடா நாடுகளில் எரிவாயு தொழிற்சாலை மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு பிரிட்டன், ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார் எல்பிஜி தொழிற்சாலை ஆனால் ஈரானில் இஸ்ரேல் எரிவாயு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, அதன் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தின. இது தொடர்பாக அந்நாடுகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,''ஈரானின் அச்சுறுத்தல்கள், கண்ணிவெடிகளை வைத்தல், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்தைத் தடுப்பதற்கான பிற முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்ற தலைவர்களின் கூட்டு அறிக்கையை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ``சர்வதேச கப்பல் போக்குவரத்தில் இத்தகைய குறுக்கீடு மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோக சங்கிலிகளின் சீர்குலைவு ஆகியவை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடல் வழி சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஈரானின் நடவடிக்கைகளின் விளைவுகளால் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்''என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் முன்னணி ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் சேர்ந்துசெயல்பட ஒப்புக்கொண்டன. இதற்கிடையே ஈரானிய தாக்குதல் காரணமாக கத்தாரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி திறனில் சுமார் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கத்தார் எரிசக்தி தலைமை நிர்வாக அதிகாரியும், எரிசக்தி விவகாரங்களுக்கான மாநில அமைச்சருமான சாத் அல்-காபி தெரிவித்தார். அதோடு ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பழுதை சரி செய்ய 5 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விகடன் 20 Mar 2026 11:42 am

நாங்க இருக்கிறோம்! ட்ரம்ப் திட்டியபிறகு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆதரவு

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல் காரணமாக ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு மூடிவிட்டது. இதனால் அந்த நீர்வழித்தடம் வழியாக கச்சா எண்ணெயை கப்பல்கள் எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. எனவே ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அனைத்து நாடுகளும் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் உட்பட எந்த நாடும் அமெரிக்காவிற்கு இவ்விவகாரத்தில் நேரடியாக ஆதரவு கொடுக்க தயக்கம் காட்டி வந்தன. சில நாடுகள் நேரடியாகவே தங்களால் ஆதரவு கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டன. தற்போது ஈரான் கத்தார் போன்ற வளளைகுடா நாடுகளில் எரிவாயு தொழிற்சாலை மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு பிரிட்டன், ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார் எல்பிஜி தொழிற்சாலை ஆனால் ஈரானில் இஸ்ரேல் எரிவாயு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, அதன் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தின. இது தொடர்பாக அந்நாடுகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,''ஈரானின் அச்சுறுத்தல்கள், கண்ணிவெடிகளை வைத்தல், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்தைத் தடுப்பதற்கான பிற முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்ற தலைவர்களின் கூட்டு அறிக்கையை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ``சர்வதேச கப்பல் போக்குவரத்தில் இத்தகைய குறுக்கீடு மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோக சங்கிலிகளின் சீர்குலைவு ஆகியவை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடல் வழி சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஈரானின் நடவடிக்கைகளின் விளைவுகளால் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்''என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் முன்னணி ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் சேர்ந்துசெயல்பட ஒப்புக்கொண்டன. இதற்கிடையே ஈரானிய தாக்குதல் காரணமாக கத்தாரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி திறனில் சுமார் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கத்தார் எரிசக்தி தலைமை நிர்வாக அதிகாரியும், எரிசக்தி விவகாரங்களுக்கான மாநில அமைச்சருமான சாத் அல்-காபி தெரிவித்தார். அதோடு ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பழுதை சரி செய்ய 5 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விகடன் 20 Mar 2026 11:42 am

திமுக கொடுத்த முதல் அசைன்மெண்ட்! - செய்து காட்டி இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம்?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த கையோடு தென் மாவட்டங்களில்  சுற்றுப்பயண பிரசாரம் செய்வதற்காக கிளம்பியிருக்கிறார். ’ஓபிஎஸ்ஸின் கூடாரம் காலியாகி விட்டது, அவருடன் யாரும் இல்லை’ என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் திமுகவோ, ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப ஒரு மெகா பிளானை உருவாக்கி அதை சாத்தியப்படுத்த அவரை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள். திமுக கொடுத்திருக்கும் இந்த அசைன்மெண்ட்டை ஓ.பன்னீர்செல்வம் வெற்றிகரமாக செய்தால் மட்டுமே கட்சிக்குள் அவருடைய வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள் திமுகவினர். ஓ. பன்னீர்செல்வம் இது குறித்து நம்மிடையே பேசிய சீனியர் திமுக நிர்வாகிகள், “ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து வெளியே வந்ததும் முக்குலத்தோர் சமூகங்களே அவருக்கு ஆதரவாக நின்றது. இதனாலேயே கடந்த முறை தென் மாவட்டங்களில் அதிகளவு தொகுதிகளில் அதிமுகவால் வெற்றி பெற முடியாமல் போனது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருடைய செயல்பாடுகளினால் அதிருப்தியடைந்த அவருடைய ஆதரவாளர்கள் மாற்று கட்சிகளில் இணைந்து விட்டனர். சொற்ப எண்ணிகையிலான ஆட்களை சேர்த்து கொண்டே திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்! டி.டி.வி.தினகரன், ஒ.பன்னீர்செல்வம், சசிகலா தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுகளை பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் வியூகம் வகுக்க தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், டிடிவி தினகரன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி, பாஜக என எல்லோருமே முக்குலத்தோர் சமூகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சசிகலாவும் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தான் திமுக தலைமையும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என கறாராக கட்சி நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறது. இதற்கு ஓபிஎஸ்ஸின் அரசியல் அனுபவமும், அவர் சார்ந்திருக்கும் சமூக வாக்குகளும் உதவும் என்பதாலேயே கட்சியில் இணைத்து கொண்டு, திமுகவிற்காக பிரச்சாரம் செய்ய அனுப்பியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின் மறுபுறம் ஓபிஎஸ் மீது இருக்கும் அதிருப்தியிலும், ஆதங்கத்திலும் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. திரும்பவும் தன்னுடைய செல்வாக்கை உயர்த்தினால் மட்டுமே நீண்ட காலம் அரசியலில் இருக்க முடியும் என்பதால் இந்த தேர்தல் திமுக - அதிமுக போட்டியை தாண்டி தன்னுடைய செல்வாக்கை மீட்டெடுப்பதற்கான தேர்தலாகவும் இருக்கும் என ஓ.பி.எஸ் நம்புகிறார் இதற்காக, தென் மாவட்டம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.  இந்த பயணத்தின்போது முக்குலத்தோர் சமுதாய தலைவர்களையும் சந்தித்து அவர்களை திமுகவிற்கு வாக்களிக்க வைக்க வேண்டும் என்பது தான் திமுக தலைமை கொடுத்திருக்கும் அசைன்மெண்ட்.  ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வதற்கான  ஏற்பாடுகள் முழுவதையும் அந்ததந்த திமுக நிர்வாகிகள் செய்து தர வேண்டும் என தலைமை  உத்தரவு போட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தற்போது வரை தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். தொடர்ந்து முதுகுளத்தூர், பரமகுடி, திருவாடானை, தேனி ஆகிய பகுதிகளில் நிர்வாகிகளை சந்திக்க இருக்கிறார்” என்றனர் விரிவாக.

விகடன் 20 Mar 2026 10:56 am

எ.வ.வேலு ஸ்கெட்ச் ; வளைத்து இழுக்கும் அறிவாலயம் - நழுவும் செம்மலை!

தி.மு.க-வுக்கு வரும் அ.தி.மு.க-வினர்: ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் முக்கிய தலைவர்கள், அதிருப்தியில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவது, சேர்வது வழக்கமான ஒன்று. ஆனால், யாரும் யோசித்துக் கூட பார்த்திடாத வகையில் இந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது. உதாரணமாக அரைநூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் தொடர்ச்சியாக திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்த ஓபிஎஸ் எல்லாவற்றுக்கும் உச்சமாக, மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். சமீபத்தில் கூட, நூற்றுக்கணக்கான அதிமுக வழக்கறிஞர்கள் திமுகவில் இணைந்தார்கள். தொடர்ச்சியாகப் பலரும் திமுகவில் இணைந்துவரும் நிலையில் இப்போது அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செம்மலை திமுகவில் இணைய இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. செம்மலையை இழுக்கும் வேலு: இந்த விவகாரம் குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். கடந்த தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒரு தொகுதியை மட்டுமே திமுக கைப்பற்றியது. இந்த முறை சேலத்திலிருந்து கூடுதல் இடங்களைப் பெறவேண்டும் என திமுக தலைமை உறுதியாக இருக்கிறது. அதற்காகச் சேலம் மண்டல பொறுப்பாளராக மூத்த அமைச்சர் எ.வ. வேலுவை களமிறங்கியது திமுக தலைமை. கடந்த சில மாதங்களாகச் சேலத்துக்குச் சிறப்புக் கவனம் செலுத்திவரும் வேலு, கட்சி கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வேலைகளையும் செய்துவந்தார். இருந்தபோதிலும், சேலத்தில் திமுகவின் கை சற்று தொங்கிய இருந்தது. கண்டிப்பாக அடித்துக் காட்டுவேன் என்று தலைமையிடம் வேலு உறுதியளித்திருந்த நிலையில், வெற்றிக்கான சில வேலைகளையும் பார்க்கத் தொடங்கினர். அமைச்சர் எ.வ.வேலு கடந்த சில மாதங்களாக அதிமுகவினர் தொடர்ச்சியாக திமுகவில் இணைந்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும், சேலம் பகுதியைச் சேர்ந்தவருமான முன்னாள் அமைச்சர் செம்மலையை திமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் இறங்கியிருந்தார் வேலு. காரணம் சேலம் பகுதியில் செம்மலை சார்ந்த வன்னியர் பகுதியில் அவருக்கென்ற தனியொரு செல்வாக்கு படைத்தவர் செம்மலை. அவரை மேட்டூர் தொகுதியில் களமிறக்கினால் மேட்டூர் மட்டுமன்றி இன்னும் மூன்று தொகுதிகளில் கூடுதல் வாக்குகள் வரக்கூடும். இதனால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று எண்ணி முயற்சியில் இறங்கினார். ஓ.பி.எஸ் தொடங்கி பலரும் முயற்சி செய்திருந்த நிலையில் அவர் திமுகவுக்கு இசைவு கொடுக்கவில்லை என்றார்கள் விரிவாக. `பா.ஜ.க-வை டென்சனாக்கிய இருவர் அணி' - கடைசி நேரத்தில் `நோ' சொன்ன விஜய்! செம்மலை பின்னணி : செம்மலை குறித்து அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளிலிருந்தவர் செம்மலை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில், அனைத்து எம்.எல்.ஏ-களிடமும் எடப்பாடியை முதலமைச்சராக்கக் கையெழுத்துப் போடச்சொல்லப்பட்டது. அனைவரும் சரி என்று சொன்ன நிலையில் முதல் ஒரு ஆளாக `என்னால் முடியாது' என்று கிளம்பிய நபர் செம்மலை. அந்த ஒரு காரணத்தினாலேயே கடந்த சட்டமன்ற தேர்தலில் செம்மலைக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் செய்திகள் பரபரத்தன. செம்மலை எப்படியும் இந்த தேர்தலிலும் நமக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார் அல்லது நாம் கேட்கும் தொகுதியை வழங்கமாட்டார் என்று செம்மலை உணர்ந்த காரணத்தினாலேயே இம்முறை அவர் விருப்ப மனு கூட வழங்கவில்லை. திமுக முகாமுக்கு அவரை இழுக்கப் பலரும் பலகட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியிருந்தார்கள். அதிமுக தலைமை மீது அதிருப்தி இருந்தாலும், அவருக்கு அந்த கட்சியிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை. திமுகவுக்குச் செல்கிறார், இணைகிறார் என்று செய்திகள் பெருமளவில் பேசுபொருளாலான நிலையில் தான் அவரே, ``நான் திமுகவுக்கு போகவில்லை என்று விளக்கமும் கொடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்றார்கள்.

விகடன் 20 Mar 2026 10:50 am

`தவெக விஜய்யுடன் பேசுவோம்!’ - விலக நினைக்கும் ரங்கசாமி; வளைக்கத் துடிக்கும் பாஜக

`என்.ஆர்.காங்கிரஸ் முக்கியம்தான்… ஆனால்.!’ புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்தார் ரங்கசாமி. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த அவர், `தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும்' என்று கூறிவிட்டுச் சென்றார். அதையடுத்து புதுச்சேரியில் நடைபெற்ற  என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ்தான். `த.வெ.க தலைவர் விஜய்யிடம் பேசுங்கள்…’ அதேசமயம் லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. அதற்கு முதல்வர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் கடந்த 16-ம் தேதி இரவு அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார் முதல்வர் ரங்கசாமி. நடிகர் விஜய்யுடன் முதல்வர் ரங்கசாமி அப்போது, `ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதை நாம் எதிர்க்கவில்லை என்று அவர்களாகவே கூறுகிறார்கள். அடுத்த தேர்தலே வந்துவிட்டது. ஆனால் நாம் வைத்த மாநில அந்தஸ்து கோரிக்கை அப்படியே நிற்கிறது. அவர்களுக்கு `லாட்டரி' மார்ட்டின் குரூப் முக்கியம் என்றால் நாம் தனித்துப் போட்டியிடுவோம். இல்லையென்றால் த.வெ.க தலைவர் விஜய்யிடம் பேசுங்கள்' என்று முகம் சிவந்திருக்கிறார். `ல.ஜ.க எங்களுடன்தான் இருக்கும், நீங்கள் வெளியேறுங்கள்...’ அதையடுத்து தனியார் விடுதியில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் காத்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை இரவோடு இரவாக சந்தித்தனர் என்.ஆர்.காங்கிரஸ் குழுவினர். அப்போது, `முதல்வர் ரங்கசாமி வரவில்லையா?’ கேட்டிருக்கிறார் மன்சுக் மாண்டவியா. அதற்கு, `அவர் வரவில்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததும் சந்திப்பார்’ என்று அவர்கள் சொன்னதும், அவரின் முகம் சட்டென சுருங்கிப் போயிருக்கிறது. அதையடுத்து அவர்களிடம் முதல்வரின் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள். முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி வாங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அதற்கு, `ல.ஜ.க எங்களுடன்தான் இருக்கும். வேண்டுமானால் நீங்கள் வெளியேறலாம்’ என்று பா.ஜ.க தரப்பில் ஆவேசமாகக் கூறியிருக்கிறார். அதில் உஷ்ணமான என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் குழுவினர், `என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இல்லை என்று நீங்களே அறிவித்துவிடுங்கள்’ என்று கூறிவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். தோல்வியில் முடிந்த இந்த பேச்சுவார்த்தையால், உள்ளூர் தலைவர்கள்தான் துவண்டு போயிருக்கிறார்கள். மத்திய அமைச்சருக்கு தண்ணீர் காட்டிய ரங்கசாமி! குறிப்பாக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.ஜ.கவைச் சேர்ந்த இரண்டு பேர், `என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால், நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை’ என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து, `த.வெ.க-வுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என்ற கேள்வியுடன் என்.ஆர்.காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபாலிடம் நாம் பேசியபோது, `ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. பா.ஜ.க அதை ஏற்கவில்லை என்றால் நாங்கள் வேறு முடிவை எடுப்போம். அதேபோல த.வெ.க-வுடனான கூட்டணிக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன' என்று முடித்துக் கொண்டார். பிரதமர் மோடியுடன் முதல்வர் ரங்கசாமி இதற்கிடையில் என்.ஆர்.காங்கிரஸின் கோரிக்கையை டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கூறிய மன்சுக் மாண்டவியா, 19-ம் தேதி மதியம் 1 மணிக்கு முதல்வர் ரங்கசாமியை சந்திப்பதாக திட்டமிடப்பட்டது. அந்த தகவல் முன்கூட்டியே முதல்வர் ரங்கசாமிக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் 12.30 மணிக்கு திருச்செந்தூர் கோயிலுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார் முதல்வர் ரங்கசாமி. அவரின் இந்த தொடர் புறக்கணிப்பால் துவண்டு நிற்கிறது பா.ஜ.க இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ``சுயேச்சை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களை வளைத்து வைத்திருக்கும் லாட்டரி சார்லஸ் மார்ட்டின், இந்த தேர்தல் அவர்களை களமிறக்கி வெற்றிபெற வைக்க நினைக்கிறார். அவர்கள் மூலம் தேர்தலுக்குப் பிறகு ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, புதுச்சேரியை கேசினோ பூமியாக்குவதுதான் அவர்கள் திட்டம். தவிர, பா.ஜ.க சார்லஸ் டீமை ஏ.டி.எம் இயந்திரமாக பார்க்கிறது. அதனால்தான் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள்” என்றார். இதுகுறித்து பா.ஜ.க தரப்பில் பேசியபோது, ``என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணியே தொடரும். என்.டி.ஏ கூட்டணியில் ல.ஜ.க இருக்காது. இன்று முடிவு அறிவிக்கப்பட்டுவிடும்” என்றனர்.

விகடன் 20 Mar 2026 10:42 am

ஈரான் - இஸ்ரேல்: அமெரிக்காவை நாங்கள் போருக்குள் இழுக்கவில்லை - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுப் படை போர் தொடங்கி 20 நாள்கள் நெருங்கிவிட்டது. இன்றளவும் இருநாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அது வதந்தி என இஸ்ரேல் மறுத்தது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று ஊடகங்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது, ``ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் அணுசக்தித் திறன் பெரியளவில் சிதைத்திருக்கிறோம். ஈரானால் இனி யுரேனியத்தைச் செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ முடியாது. ஈரான் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. நெதன்யாகு - ட்ரம்ப் போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைக் கிடங்குகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படும். அமெரிக்காவை இந்தப் போருக்குள் இஸ்ரேல் கட்டாயப்படுத்தி இழுத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிபர் ட்ரம்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லிக் கொடுக்க முடியுமா? அவர் எப்போதும் அமெரிக்காவின் நலனுக்காகவே முடிவெடுப்பார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறை மற்றும் ராணுவங்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை எட்டி வருகின்றன. முழு மத்திய கிழக்கையும், ஏன் உலகத்தையே நாங்கள் பாதுகாத்து வருவதில் பெருமிதம் கொள்கிறோம். ஈரானின் முக்கிய எரிசக்தி வளமான South Pars எரிவாயு வயல் மீதான தாக்குதலில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்பட்டது. அதிபர் ட்ரம்பின் வேண்டுகோளை ஏற்று, அந்த எரிவாயு வயல்கள் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். ஈரான் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தில் இருக்கிறது. இதுவரை வான்வழித் தாக்குதலாக மட்டுமே நடந்து வரும் இந்தப் போர், அடுத்தகட்டமாகத் தரைவழித் தாக்குதலாக மாறக்கூடும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஈரானின் தற்போதைய தலைமைக்குள் கடும் குழப்பமும் பதற்றமும் நிலவுகிறது. இப்போது ஈரானை யார் வழிநடத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை. ஈரானிய மக்கள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி தங்கள் நாட்டின் எழுச்சிக்கு வழிவகுக்க வேண்டும். அந்த நாட்டின் எதிர்காலம் மக்கள் கையிலேயே இருக்கிறது என்றார். திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?

விகடன் 20 Mar 2026 10:27 am

தேர்தல் விதி மீறி பரிசுப் பொருள்; வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் - ஓட்டுநர் மீது வழக்கு பதிவு

வே லூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோயில் பின்புறமாக இருக்கும், மாநகராட்சி வணிக வளாகத்துக்குள் நேற்று இளைஞர்களை அழைத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி தி.மு.க-வைச் சேர்ந்த வேலூர் மேயர் சுஜாதா, மறைமுகமாக விளையாட்டு உபகரணங்களை வழங்க சென்றிருக்கிறார். இந்தத் தகவல் வெளியில் கசிந்தவுடன் பதற்றமான மேயர் சுஜாதா அவசர அவசரமாக `TN 23 DK 9579’ என்ற பதிவெண் கொண்ட தனது டொயோட்டா கிளான்ஸா காரில் ஏறி அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த காட்சியினை அங்குவந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்தக் காட்சியில், காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மேயர் சுஜாதா தனது முகத்தை மறைத்துக்கொண்டு செல்கிறார். பறிமுதல் செய்யப்பட்ட மேயர் சுஜாதா சென்ற கார் வணிக வளாகத்தில் இருந்து வெளியே வந்த மேயரின் காரை அங்கு பணியில் இருந்த தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, கார் கண்ணாடியை இறக்கி `நான் மாநகராட்சி மேயர்’ என்று சுஜாதா அறிமுகப்படுத்தியதும், `உங்கள்மேல் புகார் வந்திருக்கிறது. காரை சோதனையிட்டு விசாரிக்க வேண்டும்’ என்று தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் கூறினராம். ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மேயர் சுஜாதாவின் ஓட்டுநர் காரை வேகமாக இயக்கிச் சென்றிருக்கிறார். இதுபற்றி, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்புலெட்சுமியிடம் அ.தி.மு.க வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புகாராக பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து, தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த வேளாண் கண்காணிப்பாளர் சதீஷ்வேலன் என்பவர் சத்துவாச்சாரி காவல் நிலையம் சென்று புகாரளித்தார். அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புகாரில், ``எங்கள் குழுவினருடன் ஆஞ்சநேயர் கோயில் அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் வந்து எங்களிடம் `தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப் பொருள்கள் தருகிறார்கள்’ என்று தகவல் கொடுத்தார். இதையடுத்து, அந்த வழியாக வந்த `TN 23 DK 9579’ பதிவெண் காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றோம். காரில் முன்பக்கம் அமர்ந்திருந்தவர் `நான் மேயர்’ என்று கூறினார். சோதனைக்கு ஒத்துழைக்கச் சொன்னபோது, அவரின் ஓட்டுநர் காரை ஓட்டிச் சென்றுவிட்டார். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. புகாரின் அடிப்படையில், `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான லஞ்சக் குற்றம்’ மற்றும் `பி.என்.எஸ் 132 - அரசு அலுவலர்களை அவர்களின் அலுவல் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல்’ ஆகிய இருப்பிரிவுகளின்கீழ் மேயரின் ஓட்டுநர் மீது போலீஸார் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ``பரிசுப் பொருள் வழங்கிய மேயர் சுஜாதா மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அவரின் ஓட்டுநர் மீது சப்பைக் கட்டுக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். தேர்தல் விதிகளை மீறியது தி.மு.க மேயர் என்பதால், அதிகாரிகளும் காவல்துறையினரும் ஒருதலைபட்சமாக ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். எனவே, மேயர் சுஜாதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு காட்டமாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, இன்று அதிகாலை நேரத்தில் மேயர் சுஜாதாவின் காரை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அடுத்தகட்டமாக, மேயர் சுஜாதாவின் பெயரையும் வழக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருக்கின்றனராம்.

விகடன் 20 Mar 2026 10:26 am

மத்திய கிழக்கு போர் எதிரொலி: எரிசக்தித் தட்டுப்பாடைச் சமாளிக்க இந்தியாவின் திட்டம் என்ன?

அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹார்மூஸ் ஜலசந்தியும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், எரிசக்தித் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எரிசக்தி தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்துவந்த இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். ரந்தீர் ஜெய்ஸ்வால் அப்போது, ``இந்திய மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவிடமிருந்தும் எல்.பி.ஜி (LPG) வாங்க அரசு தயாராக இருக்கிறது. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், எரிசக்தி விநியோகத்திற்கான ஆதாரங்களை ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், பரவலான இடங்களிலிருந்து இறக்குமதி செய்ய விரும்புகிறோம். எங்கள் மக்களின் எரிபொருள் தேவையை உறுதி செய்வதுதான் எங்களின் முதன்மையான நோக்கம். எனவே, ரஷ்யாவிடம் எரிவாயு கிடைத்தால், அங்கிருந்தும் வாங்குவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுக்கு மத்தியில், அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிடமிருந்தும் எரிசக்தி உதவி கோரி கோரிக்கைகள் வந்திருக்கின்றன. 2007-ம் ஆண்டு முதல் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் வங்கதேசத்திற்கு இந்தியா டீசல் விநியோகம் செய்து வருகிறது. தற்போதைய நெருக்கடியிலும் அண்டை நாடுகளுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும். இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் மற்றும் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த உதவிகள் மேற்கொள்ளப்படும். அமெரிக்கா- ஈரான் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் சமையல் எரிவாயுவை (LPG) மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை மாற்றுச் சமையல் முறைகளை ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். எரிவாயுத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மாநில அரசுகள் அதிரடி சோதனைகளைத் தொடங்கியுள்ளன. அதேசமயம், எல்.பி.ஜி மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக உணவகங்கள் மற்றும் விடுதிகளில் நிலக்கரி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் தட்டுப்பாட்டை ஓரளவுக்குச் சமாளிக்க முடியும் என நம்புகிறோம் என்றார். காலியான காஸ் சிலிண்டர்... கோட்டைவிட்ட மத்திய அரசு... மாற்று வழிதான் என்ன?

விகடன் 20 Mar 2026 7:21 am

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: வன்மையான கண்டனம் - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்

அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பைக் கொண்ட ஈரானின் South Pars வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக கத்தாரின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான Ras Laffan மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதனால், அதன் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரான் தாக்குதல் இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்கவும், மோதல்களைத் தவிர்க்கவும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்களை இலக்கு வைப்பதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ``மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் தொடர்பாக பிரதமர் மோடி ஓமன் சுல்தான், பிரான்ஸ் அதிபர், மலேசியப் பிரதமர் மற்றும் பின்லாந்து அதிபர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாகப் பேசி ஆலோசித்து வருகிறார். அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்ட், பாகிஸ்தானை அணுசக்தி அச்சுறுத்தல் மிகுந்த நாடாக அறிவித்திருக்கிறார். ரந்தீர் ஜெய்ஸ்வால் பாகிஸ்தானுக்கு ரகசியமான முறையில் அணுசக்தி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நீண்ட கால வரலாறு உண்டு. இத்தகைய அறிக்கைகள் அவர்களின் நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குலுக்கு இந்தியா வன்மையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறது என்றார். அணு ஆயுதமா... ஆட்சி மாற்றமா... ஈரான் போர்... இந்தியாவுக்கு என்னவாகும்?

விகடன் 20 Mar 2026 7:06 am

'சட்டமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன செய்வேன் தெரியுமா?'- சுரேஷ் கோபி சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளில் வேட்பாளர் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. எம்.பி-க்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவருமான கே.சுதாகரன் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து அதில் உறுதியாக உள்ளார். இதனால் காங்கிரஸில் இறுதிகட்ட வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் சுரேஷ்கோபி தனது  திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சூர் நாடாளுமன்ற எல்லைக்குட்பட்ட 7 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். இந்த தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெறும்போது எனக்கு அது பக்கபலமாக மாறும். மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி எம்.பி-க்கள் ராஜிநாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் நிற்பது அந்தந்த கட்சிகளின் முடிவைப் பொறுத்த விஷயம். அது அவர்களின் அதிகார ஆசை என்றோ, ஆசை இல்லாத நிலையா என்பதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. நான் என்.டி.ஏ கூட்டணியின் முன்னேற்றம் என நினைத்துக்கொண்டு அதுபோன்று குதிக்க தயாராக இல்லை. ஒருவேளை என்னிடம் எங்கள் தலைவர்கள் அதுபோன்று கூறினால் நான் அனைத்தையும் விட்டுவிட்டு சென்றுவிடுவேன். நான் பலமானவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். தெய்வம் ஆதரிக்கும் வரை நான் அந்த சீட்டில் இருப்பேன். தேர்தல் பிரசாரத்தில் சுரேஷ்கோபி இது நான் மற்றவர்களுக்கு கூறும் உபதேசம் அல்ல. காங்கிரஸில் சீட் கேட்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுதாகரனைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. 2029 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் மக்களின் முழு மதிப்பெண் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் எனக்கு ஒற்றைக்கொம்பன் சினிமாவில் கிடைக்கும் சம்பளம் என்னவென்று விசாரித்துப்பாருங்கள். அந்த சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு சினிமாவை கவனித்துக்கொண்டும், என் பிள்ளைகளை கவனித்துக்கொண்டும் இருந்தால் போதுமே. மக்கள் பணி செய்வதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.

விகடன் 19 Mar 2026 9:36 pm

கத்தார் எரிவாயு முனையம் மீது தாக்குதல்: உலகளவில் எகிறும் எரிசக்தி விலை - இந்தியாவிற்கு நெருக்கடி!

அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக கத்தாரின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான 'ராஸ் லாஃபான்' (Ras Laffan) மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி உற்பத்தி தளமான இங்கு தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக, அதன் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரான் தாக்குதல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவிற்கு இணையாக உலகின் முன்னணி எல்.என்.ஜி உற்பத்தியாளராக கத்தார் திகழ்கிறது. மார்ச் முதல் வாரத்தில் கத்தாரின் எரிவாயு வயல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான QatarEnergy தனது உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தது. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பைக் கொண்ட ஈரானின் 'தெற்கு பார்ஸ்' (South Pars) வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே, ஈரான் இந்தத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி தற்போது போர்க்களமாக மாறியுள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் உளவுத்துறைத் தலைவர் இஸ்மாயில் காதிப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைக் கொன்றுள்ளன. இதற்குப் பதிலடியாக ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கி வருகிறது. தற்போது மூன்றாவது வாரமாக நீடிக்கும் இந்தப் போரினால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முடியாமல் சுமார் 700-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் மதிய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான பகுதிகளில் முடங்கிக் கிடக்கின்றன. இது எரிசக்தி விலையை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளது. மோடி - நெதன்யாகு இந்தச் சூழல் இந்தியாவிற்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 50 சதவீதத்தை சர்வதேசச் சந்தையிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவின் மொத்த எல்.என்.ஜி இறக்குமதியில் 40 சதவீதம் கத்தாரிலிருந்து மட்டுமே வருகிறது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இயற்கை எரிவாயு தேவையில் 20 சதவீதம் கத்தாரைச் சார்ந்து உள்ளது. கத்தாரில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியா தனது எரிவாயு நுகர்வைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து எரிசக்தி பொருளாதார நிபுணர் கிரீத் பாரிக் கூறுகையில், ``இந்தியா தனது எரிவாயு பயன்பாட்டை, குறிப்பாகத் தொழில் துறை மற்றும் மின்சாரத் துறையில் பெருமளவு குறைக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய தினசரி இயற்கை எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (MMSCMD) ஆகும். இதில் 97.5 MMSCMD மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வாரம் நிலவிய அசாதாரணமான போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவின் இறக்குமதியில் 47.4 MMSCMD விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க, பொதுத்துறை எரிவாயு நிறுவனங்கள் மாற்று நாடுகளிலிருந்து எல்.என்.ஜி-யைப் பெற அவசர ஆர்டர்களை வழங்கியுள்ளன. ஈரான் vs அமெரிக்கா: ஈரானின் ரஷ்யப் போர் உத்தியால் அமெரிக்காவுக்கு என்ன சிக்கல்? | Analysis

விகடன் 19 Mar 2026 8:14 pm

சீனா நோக்கிச் சென்ற 7 ரஷ்ய கப்பல்கள்; திடீரென இந்தியாவுக்கு வருவது ஏன்?!

சீனாவுக்குச் செல்லவிருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள், திடீரென திசைமாற்றப்பட்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் விநியோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​ இந்திய நோக்கி வரும் கப்பல்கள் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்​கும் வகை​யில் ரஷ்​யா​விடம் இருந்து முன்னெப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​தியா அதி​கள​வில் கச்சா எண்ணெய்யை கொள்​முதல் செய்​யத் தொடங்​கி​ இருக்கிறது. சமீபத்தில் மட்டும் நம் நாடு, 3 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் சீனாவுக்கு செல்ல இருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள் திடீரென திசைமாற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தை தேவைக்கு ஏற்ப அவை நம் நாட்டு துறைமுகங்களை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன. இந்திய நோக்கி வரும் கப்பல்கள் சமீபத்தில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் அனுமதியை தொடர்ந்து, மீண்டும் ரஷ்ய எண்ணெயை அதிகமாக கொள்முதல் செய்யத் தொடங்கி இருக்கிறது. இந்தியா தவிர ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை அதிகமாக வாங்கத் தொடங்கியிருப்பதால் அதன் விலை விரைவில் உயரக் கூடும் எனும் கூறப்படுகிறது.

விகடன் 19 Mar 2026 6:56 pm

தேமுதிக-வுக்கு எவ்வளவு ஓட்டு? விஜய்யின் தாக்கம் என்ன? - நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி!

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார். இந்நிலையில், கொங்கு மண்டலத்துக்கு நடந்த இன்றைய நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் தேமுதிக மற்றும் மநீமவின் செல்வாக்கு குறித்து கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். வேட்பாளர் நேர்காணல் அறிவாலயத்தில் நேற்றிலிருந்து தமிழக தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. இன்று கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களுக்கான வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்திருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கரூருக்கான நேர்காணலில் கலந்துகொண்டார். கறார் காட்டிய முதல்வர் கடந்த முறை கொங்கு மண்டலத்தில் திமுக பலத்த அடி வாங்கியிருந்தது. அதனால் நேர்காணலில், இந்த முறை உள்ளடி வேலைகள் எதுவுமின்றி நிர்வாகிகள் ஒன்றிணைந்து யாரை வேட்பாளராக அறிவிக்கிறோமோ அவருக்காக வேலை செய்ய வேண்டுமென முதல்வர் கறாராக கூறியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கென உள்ளே வரும் விண்ணப்பத்தாரர்களிடம் தொகுதி நிலவரம் குறித்தும் முதல்வர் கேட்டு தெரிந்துகொள்கிறார். வேட்பாளர் நேர்காணல் அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் தொகுதிகளுக்காக நேர்காணலுக்கு சென்றவர்களிடம், 'தொகுதியில் தேமுதிக, மநீமவுக்கு எவ்வளவு வாக்குகள் இருக்கும்?' என குறிப்பாக கேட்டிருக்கிறார். இரண்டு கட்சிக்கும் தலா 2000-3000 வாக்குகள் வரை இருக்குமென உடன்பிறப்புகள் தெரியப்படுத்தியிருக்கின்றன. அதேமாதிரி, கொங்கு மண்டலத்தில் விஜய்யின் தவெக கொஞ்சம் வலுவாக இருப்பதாகவும், விஜய் பிரிக்கப் போகும் வாக்குகளும் நமக்கு சாதகமாகவே அமையும் என்றும் சில நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். அதையும் முதல்வர் உன்னிப்பாக கேட்டிருக்கிறார். அதேமாதிரி, கொங்கு மண்டலத்தில் கடந்த முறை கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை சேர்ந்தவர்களிடம், 'இந்த முறையும் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கலாமா உங்க கருத்து என்ன?' என முதல்வர் கேட்டிருக்கிறார். உடன்பிறப்புகள் அத்தனை பேரும் ஒருமித்த குரலில் 'வேண்டவே...வேண்டாம்' எனக் கூறியிருக்கின்றனர். 'கூட்டணி கட்சிகளிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். பேசிவிட்டு சொல்கிறோம்!' என முதல்வர் கூறியிருக்கிறார். எல்.கே.சுதீஷ், பிரேமலதா, ஸ்டாலின் காலை 9:30 - 10:00 மணிக்குள் அறிவாலயத்தின் கலைஞர் அரங்கம் வந்து சேரும் முதல்வர் 2:15 வரைக்கும் நேர்காணல் நடத்துகிறார். அதன்பிறகு சித்தரஞ்சன் சாலை வீட்டிற்கு சென்று மதிய உணவை முடித்துவிட்டு சிறிய ஓய்வோடு மீண்டும் 4:30 மணிக்கு அறிவாலயம் வந்து 7 மணி வரைக்கும் மீண்டும் நேர்காணல் நடத்துகிறார்.

விகடன் 19 Mar 2026 4:52 pm

`வெய்ட்டா கவனிக்கணும்' - அள்ளி இறைக்கத் திட்டமிடும் அதிமுக? - அதிரும் ஆற்காடு தொகுதி!

ரா ணிப்பேட்டை மாவட்டத்தில், மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க மாவட்டச் செயலாளரும், கைத்தறித்துறை அமைச்சருமான ஆர்.காந்தி இருக்கிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, காந்தியை எதிர்த்து அ.தி.மு.க சார்பாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் கணிசமாக வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகள் போதுமான அளவு அ.தி.மு.க-வுக்குக் கைகொடுக்காததால், காந்தியிடம் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் எஸ்.எம்.சுகுமார். எஸ்.எம்.சுகுமார் இந்த நிலையில், வரும் தேர்தலிலும் போட்டியிடத் தயாரான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சுகுமாருக்கு ராணிப்பேட்டையை விட பக்கத்திலுள்ள ஆற்காடு தொகுதி மீதே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால், ஆற்காடு தொகுதிக்கும் சேர்த்தே அ.தி.மு.க தலைமையில் விருப்ப மனு கட்டி வந்திருக்கிறார் சுகுமார். இதனிடையே, கடந்த முறைபோல அ.தி.மு.க கூட்டணியில் இணைந்திருக்கும் பா.ம.க-வும், மீண்டும் ஆற்காடு தொகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பாட்டாளிகளின் எதிர்பார்ப்பை தகர்த்தெறியும் வகையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆற்காடு தொகுதியில் பெரிய பட்ஜெட்டுடன் களமிறங்கி தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டாராம். பாட்டாளிகளின் குமுறல் சத்தத்தை காதில் வாங்கிக்கொள்ளாத எஸ்.எம்.சுகுமார் தரப்பினர் ஆற்காடு தொகுதி முழுவதும் வீடு, வீடாகச் சென்று ரேஷன் கார்டுக்கு வேட்டி, சட்டை, புடவை, ஜாக்கெட் துணி ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்களாம். தேர்தல் அதுமட்டுமல்லாமல், தொகுதியைச் சார்ந்த அ.தி.மு.க-வின் கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர் போன்ற நிர்வாகிகளுக்கும் தலா ஒரு சிப்பம் அரிசி மூட்டையை கொடுத்துள்ளார்களாம். எல்லாவற்றையும்விட முக்கியமானதாக, தொகுதியிலுள்ள 318 பூத்களிலும் தலா 3 பூத்களுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து, வாக்காளர்களைக் கவனிக்கவும் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுவிட்டதாம். ஆற்காடு தொகுதியில் மொத்தமாக 2,43,565 வாக்காளர்கள் இருக்கின்றனர். அதைக் கணக்கிட்டு, வாக்காளர்களை `வெய்ட்டாக' கவனிக்க அ.தி.மு.க தரப்பு திட்டமிட்டிருக்கிறதாம்.

விகடன் 19 Mar 2026 4:37 pm

`பா.ஜ.க-வை டென்சனாக்கிய இருவர் அணி' - கடைசி நேரத்தில் `நோ'சொன்ன விஜய்!

“நாங்கள் எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று இஃப்தார் நிகழ்ச்சியில் பேசி பா.ஜ.க -வுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் த.வெ.க தலைவர் விஜய்.  கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பா.ஜ.கவுடன் த.வெ.க கூட்டணி அமைக்க போகிறது என்கிற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க கூட்டணி வைக்கப்போகிறது என்று செய்திகள் வெளியான நிலையில், தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதி செய்தது காங்கிரஸ். இதனைத் தொடர்ந்து பா.ஜ.கவுடன் கூட்டணி என்கிற செய்திகள் கிளம்பியது, தமிழக அரசியல் களம் மும்முனை போட்டியை நோக்கி செல்வதாகவே தோன்றியது.  தவெக தலைவர் விஜய் அதற்கு தோதாக த.வெ.க வின் பொதுச்செயலாளர் ஆனந்த், அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் பல்வேறு நிர்வாகிகள், கூட்டணி அமைத்தால் மட்டுமே, நமது வெற்றியை உறுதி செய்ய முடியும் என்கிற கருத்தை முன்வைத்துள்ளனர். இந்த விவரங்கள் வெளியான பிறகு, கூட்டணி குறித்த பேச்சுக்கும் மதிப்பு கூடியது. அதே நேரம் த.வெ.க தலைமைக்கு நெருக்கமானவர்கள், “கூட்டணி அமைப்பது ஓ.கே. தான். ஆனால் யாருடன் கூட்டணி என்பதில் நாம் நிதானித்து செயல்பட வேண்டும் . நம் கட்சியின் வாக்கு வங்கியில் பிரதானமாக இருப்பது, தலித் மற்றும் சிறுபான்மை வாக்குகளே. பா.ஜ.க உள்ள அணியில் நாம் இணைந்தால் அந்த வாக்குகள் நமக்கு கிடைக்காமல் போகும்” என விஜய்யிடம் ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.  மற்றொருபுறம் ஆந்திராவை சேர்ந்த ஒரு டீம் சென்னையில் முகாமிட்டு விஜய்க்கு நெருக்கமானவர்களை சந்தித்து தே.ஜ.கூட்டணியில் இணைய அழுத்தம் கொடுத்து வந்தார்கள். த.வெ.க-வில் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் கூட்டணிக்கு சென்றால், குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெறலாம். ஆட்சியிலும் பங்கேற்று கட்சியை வலுப்படுத்தலாம் என்று விஜய்க்கு ஐடியா கொடுத்தனர். ஆனால், ஆதவ் அர்ஜூனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகிய இருவர் பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பது நம் கொள்கைக்கு நாமே வேட்டுவைப்பது போல் ஆகிவிடும் என்று கூட்டணிக்கு கட்டை போட்டனர்.  கடந்த வாரம் விஜய் அலுவலகத்தில் வைத்து கூட்டணி குறித்து காரசார விவாதம் நடந்துள்ளது. விஜய், “நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று மூத்த நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டார். உடனே ஆதவ் அர்ஜூனா, “பா.ஜ.க கூட்டணிக்கு செல்வதென்றால் 90 தொகுதியை நாம் கேட்போம். நாம் சரிபாதி அமைச்சர்களையும் கேட்போம்” என சொல்ல, அது எப்படி கொடுப்பார்கள் என்று மற்றொரு நிர்வாகி சொல்லியுள்ளார். ஆதவ் அர்ஜுனா  “அதற்கு நாம் தனியாகவே நிற்கலாம். நம்மை நம்பியுள்ள சிறுபான்மையினர் வாக்குகளை நாம் இழக்க முடியாது. இந்த தேர்தலுக்காக நம் கொள்கையை விட்டுக்கொடுத்தால், எதிர்காலத்தில் நம்மால் அரசியல் செய்ய முடியாது” என்று பேசியிருக்கிறார். மற்றொருபுறம் ஜான் ஆரோக்கியசாமி, “நமது சர்வேபடி நாம் இப்போது இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறோம். நமக்கு வலுவான வாக்குகள் உள்ள இடங்களை குறிவைத்து வேலை செய்தாலே, ஐம்பது தொகுதிகளில் வெற்றியை கூட பெறலாம். நம்மை தவிர்த்து ஆட்சியை யாரும் பிடிக்க முடியாது. எதற்காக துணை முதல்வர் பதவிக்காக நம் கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டும். ஒரு போதும் பா.ஜ.க அணி வேண்டாம்” என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.  ”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” - நயினார் நாகேந்திரன் இதன்பிறகே தனித்து போட்டியிடலாம் என்று விஜய் முடிவெடுத்தார். இந்த முடிவை தெரிந்த அன்று இரவே கொளத்துாரில் நடந்த கூட்டத்தில், “எங்களிடம் பா.ஜ.க பேரம் பேசியது. நாங்கள் மதவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம்” என்று போட்டுடைத்தார் ஆதவ்.  மற்றொரு தள்ளிப்போய் கொண்டே இருந்த த.வெ.க-வின் இஃப்தார் நிகழ்ச்சியை உடனடியாக நடத்த முடிவெடுத்தனர். அந்த கூட்டத்தில் வைத்து தங்கள் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த த.வெ.க முடிவெடுத்தது. ஜான் மற்றும் ஆதவ் தரப்பு கச்சதமாக காய்நகர்த்தி விஜய் பேச்சை வடிவமைத்தனர். இவர்கள் கருத்தை விஜய் உள்வாங்கிய பிறகே, தே.ஜ.கூட்டணிக்கு நோ சொன்னார் விஜய்.   ஜான் ஆரோக்கியசாமி அவர்களின் மூவ் படியே, “நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்து சில வதந்திகள் சொல்லப்படுகிறது. அந்த டீம், இந்த டீம் என சொன்னார்கள், ஆனால் மக்களின் டீம் என எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அந்த செய்தியையெல்லாம் கேட்டு நீங்கள் குழப்பம் அடைந்திருப்பீர்கள். நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். நான், நாங்கள் எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். நமது முதல் மாநாட்டில் யாருக்காகவும் எதற்காகவும் எந்தவிதமான சமரசமும் வைத்துக்கொள்ள போவதில்லை என சொல்லியிருந்தேன். அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். எனவே யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவனில் அருளால் நாம் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும்” என்று பேசி கூட்டணி கணக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.  இந்த கடுப்பில் தான் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “நாங்கள் த.வெ.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. ஆதவ் அர்ஜூனா யார் என்றே எனக்கு தெரியாது” என்றெல்லாம் கடுப்பான கருத்தையும் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கைகூடாவிட்டாலும் பரவாயில்லை, பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என த.வெ.க வில் இருவர் கூட்டணியாக செயல்பட்ட ஆதவ்- ஜான் அணி அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். இதனால், பா.ஜ.க தரப்பு இந்த இருவர் மீது கடும் டென்சனில் இருக்கிறதாம்.! `90 சீட்டுகள், 50-50 என டீல் பேசினார்கள்; 'என்ன அர்ஜூன் இங்கயே ஆரம்பிச்சுரலாமா?' கேட்ட விஜய்' - ஆதவ்

விகடன் 19 Mar 2026 4:26 pm

'ரூ1.25 லட்சத்துக்கு குடும்பத்துக்கே விருப்ப மனு வாங்குனேன்!' - அறிவாலயத்தை வியக்க வைத்த உடன்பிறப்பு

அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணலை பரபரப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இன்று நடந்த நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினை பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விருப்ப மனு கொடுத்து வந்திருந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்திருந்தது. மோகனசுந்தரம் குடும்பம் கடந்த மார்ச் 17 ஆம் தேதி முதல் திமுக சார்பில் வேட்பாளர் நேர்காணல் முதல்வர் தலைமையில் நடந்து வருகிறது. அந்தவகையில் இன்று கரூர், நாமக்கல், ஈரோடு மாவட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்திருந்தது. மொடக்குறிச்சி தொகுதிக்காக நடந்த நேர்காணலில் 31 பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் மோகனசுந்தரம் என்பவர் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரோடும் பங்கேற்றிருந்தார். நேர்காணலை முடித்துவிட்டு வந்த மோகனசுந்தரத்திடம் பேசினோம். 'எங்க அப்பா கலைஞர் காலத்துல இருந்து 45 வருசமா திமுகவுல இருக்காரு. எந்த பொறுப்புலயும் பதவியிலயும் இருந்தது இல்ல. ஒரு அடிப்படை உறுப்பினரா களத்துல உழைச்சுக்கிட்டு இருக்காரு. நான் பிறந்தப்போ கூட என்னை பார்க்க வராம கழகம் நடத்துன ஒரு போராட்டத்துக்கு போயிட்டாரு. முடி வெட்டுற வேலைதான் பார்க்குறாரு. மோகனசுந்தரம் குடும்பம் ஆனா, ஸ்டாலின் ஐயா கொரோனா அப்ப எல்லாருக்கும் சாப்பாடு கொடுக்க சொன்னதால இப்ப வரைக்கும் தினசரி 30 பேருக்கு சாப்பாடு கொடுத்திட்டு இருக்காரு. தலைவர் ஸ்டாலினை 10 வருசத்துக்கு முன்னாடி நேர்ல சந்திச்சு போட்டோலாம் எடுத்திருக்கோம். ஆனா, இப்போ தலைவர் பெரிய பொறுப்புக்கு போயிட்டாரு. அவரை பார்க்குறதே சிரமமா இருக்கு. அதனாலதான் குடும்பத்தோட விருப்ப மனு போட்டோம். 5 பேருக்கு 1.25 லட்ச ரூபாய் ஆச்சு. எங்க அப்பா 1500 பேருக்கு முடி வெட்டி ஷேவ் பண்ணாதான் இந்த பணத்தை சம்பாதிக்க முடியும். இன்னைக்கு அவரால நேர்ல வர முடியல. ஆனாலும் எங்களை தவறாம போயி தலைவரை சந்திச்சுட்டு வர சொன்னாங்க. மொடக்குறிச்சு தொகுதிக்காக உள்ள போனப்போ தலைவரை பார்த்துட்டோம். பேச முடியல, போட்டோ எடுக்க முடியல. ஆனாலும் தலைவரை பார்த்துட்டோம். அந்த சந்தோஷமே போதும்' என்றார் நெகிழ்ச்சியாக. இப்படியான உடன்பிறப்புகளால்தான் கழகம் 75 ஆண்டுகளை கடந்து நூற்றாண்டை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக புல்லரித்துப் போயினர் சக உடன்பிறப்புகள்!

விகடன் 19 Mar 2026 4:07 pm

தூத்துக்குடி சிறுமி பாலியல் வழக்கு; 'ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?'- அண்ணாமலை

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. குற்றவாளியைக் கைதுசெய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். தர்ம முனீஸ்வரன் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது. பாலியல் கொடுமை - கொலை தற்போது இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தர்ம முனீஸ்வரன் ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே. பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு. ஸ்டாலின் இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். தூத்துக்குடி: சதைத் துணுக்கு, டி.என்.ஏ ரிப்போர்ட்- மாணவி கொலை வழக்கில் சி.சி.டி.வி-யால் சிக்கிய நபர்

விகடன் 19 Mar 2026 3:48 pm

திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக + அமமுக; தவெக தருமா ட்விஸ்ட்! - புதுக்கோட்டை சமஸ்தானம் யாருக்கு?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம்...! தமிழக சட்டமன்றத் தேர்தல் ஜூரம் இப்போதே தொற்றிக்கொள்ள, புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசியல் களம் 'தகி தகி' எனத் தகித்துக் கொண்டிருக்கிறது. விவசாயமும், அந்நியச் செலாவணியும் அச்சாணியாக இருக்கும் இந்த மண்ணில், புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை(தனி) விராலிமலை, திருமயம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிள் வேட்பாளர் ரேஸில் யார் முந்துகிறார்கள் என்பது பற்றிய அலசல் ரிப்போர்ட்! சமஸ்தானம் யார் கையில்..? 1. புதுக்கோட்டை தொகுதி தற்போதைய திமுக எம்.எல்.ஏ டாக்டர் வை.முத்துராஜா. மீண்டும் களத்தில் இறங்க சீட் வாங்குவதில் படுதீவிரமாக இருக்கிறார். மக்களிடம் அவர் காட்டிய எளிமையான அணுகுமுறை, தொகுதி முழுவதுமுள்ள அறிமுகம், மேலிடத்தில் உள்ள நல்ல தொடர்பு ஆகியவவை இந்த முறையும் சீட்டைப் பெற்றுத் தரும் என நம்புகிறார். இதற்காக கடந்த முறை சீட் பெற முயற்சித்த அதே ரூட்டிலேயே இப்போதும் ஸ்கெட்ச் போடுகிறார். இவருக்கு கடும் போட்டியாளராக திமுகவின் விருப்ப மனு செய்வதற்கான கடைசி நாளில் மனு செய்து சீட்டை பெரிதும் எதிர் நோக்கி இருப்பவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.எம்.எம்.அப்துல்லா. ஹைடெக் அரசியல்வாதி என பெயரெடுத்துள்ள இவர் தனது எம்.பி.பதவியால் பல திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தவர். தனக்குரிய கட்சியின் மேலிடச் செல்வாக்கால் கட்டாயம் தொகுதியில் களம் இறங்குவது உறுதி என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். டாக்டர் முத்துராஜா அதேபோல் அதிமுகவில் எம்எல்ஏ-வாவாக இருந்து சமீபத்தில் திமுகவில் ஐக்கியமான மன்னர் வம்சத்தின் கார்த்திக் தொண்டைமானும் சீட் கிடைக்கும் எனக் காத்திருக்கிறார். புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் எப்படியும் இந்த முறை தேர்தலில் குதிக்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு சீட் வாங்கும் முயற்சியில் இருக்கிறார். அதேபோல் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் பாரம்பரிய திமுக குடும்பத்து உறுப்பினருமான டாக்டர் மு.க.முத்துக்கருப்பனும் முன்னணி ரேஸில் இருக்கிறார். முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான பெரியண்ணன் அரசும், அவருடைய மூத்த மகள் மருத்துவர் அபிநயா அரசும் விருப்ப மனு தாக்கல் செய்து தொகுதிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளனர். புதுக்கோட்டை பெரியண்ணன் குடும்பம் என்ற முத்திரை மேலிடத்திடமிருந்து சீட்டைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இப்படி விருப்ப மனுக் களத்தில் முக்கியமானவர்களில் அறிவாலாயம் யாரை டிக் அடிக்கப் போகிறது என்பதுதான் தெரியவில்லை. இவர்கள் தவிர, மாநகராட்சித் தலைவியான மேயர் திலகவதி செந்திலும், அவருடைய மகனும் அமைச்சர் கே.என்.நேருவின் ஆசீர்வாதத்தோடு ரேஸில் குதித்துள்ளனர். அதிமுகவில், எம்.பி. தேர்தலில் தோற்றாலும் சோர்ந்து போகாமல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவோடு ப.கருப்பையா சீட்டுக்கு மல்லுக்கட்டுகிறார். இவர்களுடன் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத எம்.ஜி.ஆர்.மன்ற வடக்கு மாவட்டச் செயலாளர் தொழிலதிபர் பழனிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன் ஆகியோருடன் இன்னும் சில இஸ்லாமியப் பிரமுகர்களும் 'இரட்டை இலை'க்காக தவம் கிடக்கிறார்கள் இறுதிப்பட்டியலில் யார் இடம் பெறப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும். ஒருவேளை கூட்டணியில் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் அக்கட்சியின் மேற்கு மாவட்டத்தலைவர் என்.ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சரின் ஆசியுடன் எளிதில் கைப்பற்ற ஆயத்த நிலையில் இருந்து வருகிறார். த.வெ.க மாவட்டச் செயலாளர் பர்வேஸ், எனக்கு சீட் கன்பார்ம் என விசில் அடித்து வேலையைத் தொடங்கிவிட, நாம் தமிழர் கட்சியோ அதிரடியாகப் பொறியாளர் எழிலரசியை வேட்பாளராகவே அறிவித்து 'ஆல் தி பெஸ்ட்' சொல்லிவிட்டது. புதுக்கோட்டை தொகுதியில் தவெக பர்வேஸ் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளைப் பிரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. புதுக்கோட்டையைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ முத்துராஜா மீது பெரிய அதிருப்தி இல்லை என்பது தி.மு.க-வுக்குப் பெரிய நிம்மதி. ஆனால், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும், ஆளுங்கட்சிக்கு எதிரான பொதுவான அதிருப்தியும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. தற்போதைய நிலவரப்படி கூட்டணி பலம், மகளிர் உரிமைத் தொகை, சிட்டிங் எம்எல்ஏவின் திருப்தியான செயல்பாடுகள் தி.மு.க-வை முன்னிலையில் வைத்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வின் வைட்டமின் பலம் மற்றும் த.வெ.க, நா.த.க. பிரிக்கும் இளசுகளின் ஓட்டுகள் கடைசி நேரத்தில் 'ட்விஸ்ட்' வைக்கலாம். 'சமஸ்தானம்' யார் கையில்? பொறுத்திருந்து பார்ப்போம்..! வெற்றிமாலை யாருக்கு? 2. விராலிமலை தொகுதி தமிழகமே எதிர்நோக்கும் ஸ்டார் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று விராலிமலை. காரணம் இத்தொகுதியின் கதாநாயகன் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர். 2011, 2016, 2021 என மூன்று முறை ஹாட்ரிக் வெற்றி கண்டவர். திமுக தரப்பில் 2011 இல் தற்போதைய இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இதே தொகுதியில் போட்டியிட்டு விஜயபாஸ்கரிடம் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். அடுத்து 2016 மற்றும் 2021 ஆகிய இரு தேர்தல்களிலும் தன்னை எதிர்த்து நின்ற திமுகவின் தென்னலூர் மா.பழனியப்பனை வெற்றி கண்டவர். டாக்டர் விஜயபாஸ்கரின் அணுகுமுறை, தொகுதிக்குள் இடைவிடாத பயணம், தொகுதி மக்களின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்பது, வீட்டுக்கு வீடு அன்பளிப்புச் சீர்களை அள்ளிக் கொடுப்பது, ஏராளமான அரசுத் திட்டங்களை புதுக்கோட்டைக்கும், விராலிமலைக்கும் கொண்டு வந்து சேர்த்தது இப்படி செய்த சாதனைகள் அனைத்தும் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு விராலிமலையை விசுவாச மலையாக மாற்றியிருக்கிறது. விஜயபாஸ்கர் செல்வாக்கு பெற்ற வேட்பாளர் என அறியப்படும் முன்னாள் அமைச்சரை எதிர்த்துக் களம் காண இந்த முறை வெயிட்டான ஆளை இறக்க திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. டாக்டருக்கு டஃப் பைட் கொடுக்க திமுகவின் வடக்கு மாவட்டம் செல்லப்பாண்டியனோ அல்லது கார்த்திக் தொண்டைமானோ இங்கு இறக்குமதி செய்யப்படலாம் எனத் தெரிகிறது. மீண்டும் தென்னலூர் பழனியப்பனும் களமிறங்கத் திட்டமிட்டுள்ளார். மற்றும் சில திமுக புள்ளிகளும் சீட்டுக்காக அறிவாலயப் படையெடுப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். எப்படியும் டாக்டர் விஜயபாஸ்கரின் வெற்றிவாய்ப்பை இந்த முறை தடுத்து நிறுத்த பல வழிகளிலும் பிரசாரத் திட்டம் வகுத்து வருகிறதாம் திமுக தலைமை. தவெகவும், நாதகவும் ஓரளவு வாக்குகள் பெறும் நிலையில் உள்ளன. எப்படி இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி வெற்றிக் காற்று அதிமுகவின் பக்கமே வீசுகிறது.! கோட்டை மீண்டும் திமுக வசமாகுமா? 3. திருமயம் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தின் இன்னொரு நட்சத்திரத் தொகுதி திருமயம். பழமையான குடவரைக்கோவிலைக் கொண்ட, தீரர் சத்தியமூர்த்தியை தந்த இத்தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர், தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர், கோனார், உடையார், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பல சமூக மக்களும் வசித்து வருகின்றனர். திமுகவில் சீட் கேட்டு முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இளைஞரணியைச் சேர்ந்த விராச்சிலை வக்கீல் கைலாசம், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் அடைக்கலம் மணி ஆகியோர் முட்டிமோதினாலும் மீண்டும் அமைச்சர் ரகுபதிதான் இங்கு வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. இதனால் தனது மகன் டாக்டர் அண்ணாமலையை அழைத்துக் கொண்டு தனது பரிவாரங்களுடன் ஒவ்வொரு ஊராக களமிறங்கி நலத்திட்டப்பணிகளையும் அன்பளிப்புகளையும் அள்ளி வழங்கி வருகிறார். அமைச்சர் ரகுபதி கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் பெற்ற கே.கே.செல்வக்குமாரின் தமிழர் தேசம் கட்சி தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக தரப்பில் கடந்த 2 தேர்தல்களிலும் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் (2016- 766, 2021 -1382) தோல்வியை தழுவிய வைரமுத்து இந்த முறை வெற்றிக்கனியைப் பறிக்காமல் விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் களமாடி வருகிறார். கடந்த முறை அமமுக தனியாகப் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றது. அவ்வாறு பெற்ற வாக்குகள் இந்தமுறை கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு கிடைப்பது ஒரு பலம். இரண்டுமுறை தோல்வியைத் தழுவியவர் என்ற அனுதாபமும் தொகுதி மக்களிடையே நிறையவே உள்ளது. ஆனால் தொகுதியைக் கைப்பற்றுவதற்குள் கட்சியிலிருந்து சீட்டைக் கைப்பற்றவே படாதபாடு படவேண்டியிருக்கிறது. அரிமளம் ஒன்றியச் செயலாளர் கடையக்குடி திலகர் பெரும்பான்மையாக உள்ள தனது முத்தரையர் சமூகத்தை முன்னிலைப்படுத்தி எப்படியும் அதிமுகவில் சீட்டைக் கைப்பற்றும் பணியில் தீவிரமாக இருக்கிறார். தவெக சார்பில் சிந்து ராமசாமிதான் வேட்பாளராக இருப்பார் என்பதால் அவரும் சமூக ஊடகங்களில் சளைக்காமல் பதிவுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். நாதகவும் லட்சுமி சீனிவாசனை வேட்பாளராக களத்தில் இறக்கிவிட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் திருமயத்தில் மீண்டும் கடுமையான போட்டியைச் சந்திப்பார்கள் என்பது சந்தேகமில்லை. அதேபோல் முத்தரையர் சமூகத்தின் முக்கியப்புள்ளிகள் சிலர் சுயேட்சையாக களம் இறங்கவும் திட்டம் உள்ளது. தவெகவும், நாதகவும் குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெறும் என்பதாலும், இரு முக்கிய கட்சிகளின் இரு தரப்பிலும் கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகளும் தூக்கலாக இருக்கும் என்பதால் திருமயம் தொகுதி யாருக்குச் சாதகம் என்பதை அவ்வளவு எளிதில் சொல்ல முடியாத நிலையில்தான் தற்போதுவரை கடும் போட்டி நிலவும் தொகுதியாகவே உள்ளது. வெற்றிக் கடல் யார் பக்கம்? 4. அறந்தாங்கி தொகுதி புதுக்கோட்டையின் கடற்கரையோர தொகுதி. முக்குலத்தோர் , முத்தரையர், பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், உடையார், கோனார், நாடார் உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் 'விஐபி' தொகுதிகளில் ஒன்றான அறந்தாங்கி, எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத களம். ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்து, பின் அதிமுகவின் பிடிக்குள் வந்து, இப்போது 'மிக்ஸட்' மோடில் இருக்கிறது. தற்போது காங்கிரஸ் (திமுக கூட்டணி) வசம் தொகுதி இருந்தாலும், கள நிலவரம் என்னவோ கூட்டணி ஒதுக்கீட்டில் தொகுதி திமுகவுக்கா? காங்கிரஸூக்கா? என்பதில்தான் பெரும் அனல் பறக்கிறது. தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், ஒரு காலத்தில் தொகுதியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த எஸ்.திருநாவுக்கரசரின் வாரிசு என்ற கூடுதல் அறிமுகமும், அமைதியாவனர் என்ற பெயரும் இருந்தாலும் தொகுதியில் பெரிய அளவிலான உட்கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வரவில்லை என்கிற ஆதங்கம் ஒரு தரப்பு மக்களிடம் இருக்கிறது. இதனை காரணம் காட்டி தொகுதியை காங்கிரஸிடமிருந்து மீட்க தொகுதியின் திமுக உடன்பிறப்புகள் கடும் போட்டி கொடுத்து வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.உதயம் சண்முகம், அதிமுகவிலிருந்து திமுகவில் ஐக்கியமான மணமேல்குடி பரணி கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளர் சக்தி ராமசாமி ஆகியோர் சீட்டுக்கான தீவிர முயற்சியில் இருந்து வருகின்றனர். தொகுதி பங்கீட்டில் மீண்டும் தன் மகனுக்கே தக்க வைப்பதில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் மற்றும் திமுக மேலிடத்துக்கான வலுவான கோரிக்கைகளுடன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுக இங்கே தீவிரமாக வேலை செய்கிறது. அதிமுகவில் சீட்டை கைப்பற்றுவதில் எக்ஸ் எம்எல்ஏ ராஜநாயகம், ஒன்றியச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் கடும் போட்டி போடுகின்றனர். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் அக்கட்சியின் மாநில மகளிரணித் தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் சீட்டைக் கைப்பற்றுவதில் குறியாக உள்ளார். நாதக முத்துலெட்சுமி தவெக தரப்பில் பிரபு, ஆண்ட்ரூஸ் பாண்டியன் ஆகியோர் சீட்டுக்காக பனையூரை முகாமிட்டுள்ளனர். நாதக தரப்பில் முத்துலெட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தமுறை அதிமுக கூட்டணியில் அமமுக இடம் பெற்றுள்ளதும், திமுக கூட்டணியில் தமிழர் தேசம் பங்கு பெற்றுள்ளதும் ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியமாகி இருப்பதும் இளைஞர்களின் வாக்குகளை தவெகவும், நாம் தமிழர் கட்சியும் அறுவடை செய்ய இருப்பதும் தேர்தலில் பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தலாம். அறந்தாங்கியைப் பொறுத்தவரை வேட்பாளர் தேர்வுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்! மீண்டும் பறக்குமா செங்கொடி? 5. கந்தர்வகோட்டை தொகுதி புதுக்கோட்டையின் 'தனி'த் தொகுதியான கந்தர்வகோட்டை, எப்போதும் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சிகளின் பலப்பரீட்சை களமாகவே இருந்து வருகிறது. இந்த முறை வழக்கமான கூட்டணிக் கணக்குகளையும் தாண்டி, புதுப்புது முகங்களின் வருகை களத்தை 'திக் திக்' ரகமாக மாற்ற இருக்கிறது. தற்போது சிபிஎம் வசம் இருக்கும் இந்தத் தொகுதியில், மீண்டும் மா. சின்னத்துரை களம் இறங்கத் தயாராகி வருகிறார். மக்களோடு மக்களாக நிற்பவர் என்ற பெயர் அவருக்கு பிளஸ். ஆனால், இந்த முறை திமுக நேரடியாக இங்கே கைவைக்க நினைக்கிறது. திமுக ரேஸில் இலக்கிய அணியின் ராசு கவிதைப்பித்தன், கட்சிப் பணிகளில் வேகம் காட்டும் கீரை தமிழ் ராஜா ஆகியோர் முட்டி மோதுகின்றனர். கூட்டணிக்கு ஒதுக்கியது போதும், இந்த முறை உதயசூரியன் சின்னம் வேண்டும் என்பதே உள்ளூர் உடன்பிறப்புகளின் கோஷமாக இருக்கிறது. ஆனாலும் செங்கொடி தோழர்கள் கூட்டணியில் கந்தர்வகோட்டையை அத்தனை எளிதில் இழந்துவிடமாட்டார்கள் . மறுபக்கம், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. தொகுதியின் பழைய முகமாக இருந்தாலும், தொகுதிக்குள் மீண்டும் தன் செல்வாக்கை தக்கவைக்கப் பார்க்கிறார் நார்த்தாமலை ஆறுமுகம்.  கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெயபாரதி, புதுமுகம் புவனா பாண்டியன் ஆகிய இரு பெண் வேட்பாளர்களின் பெயர்களும் பலமாக அடிபடுகின்றன. பெண் வாக்காளர்களைக் கவர இவர்களில் ஒருவருக்கு 'சீட்' கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகப் பேச்சு அடிபடுகிறது. ராஜ்மோகன் விஜய் கட்சியின் என்ட்ரி இங்கே இளைஞர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்மோகன், இந்திரகுமார், சரத்குமார் ஆகிய மூவரும் தளபதியின் ஆசிக்குக் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, புது முகங்கள் என்பதால் வாக்காளர்களிடம் ஒரு 'கியூரியாசிட்டி' இருக்கிறது. கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்ற நாதக, நதியாவை களத்தில் இறக்கி இருக்கிறது. தேசியக் கட்சியான பாஜகவின் பலத்தைக் காட்ட புரட்சிக் கவிதாசன், உதயகுமார், சாந்தார் என ஒரு பட்டாளமே சீட்டுக்காக முட்டி மோதுகிறது. கந்தர்வகோட்டையைப் பொறுத்தவரை பெரும்பான்மையாக உள்ள ஆத்திராவிடர், முக்குலத்தோர், உடையார், கோனார் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் தான் வெற்றியைத் தீர்மானிக்கும் 'மாஸ்டர் கீ'. கூட்டணிக் குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், 'புது ரத்தம்' பாய்ச்சும் தவெக மற்றும் நாதக வேட்பாளர்கள் இந்த முறை பெரிய கட்சிகளின் கணக்குகளைத் தலைகீழாக மாற்றினாலும் ஆச்சரியமில்லை! அனல் பறக்கும் 'ஆடுபுலி' ஆட்டம்! 6. ஆலங்குடி தொகுதி ஆலங்குடி என்றாலே அது 'அரசியல் மல்லுக்கட்டு'க்குப் பெயர் போன ஊர். முத்தரையர் சமூக வாக்குகள் மெஜாரிட்டியாக இருக்கும் இந்த மண்ணில், இந்த முறை களம் வழக்கமான நேர்கோட்டில் இல்லை. ஜிக்-ஜாக் பாதையில் பயணிக்கிறது. அமைச்சர் மெய்யநாதன் தொகுதியில் பம்பரமாகச் சுழல்கிறார். தொகுதி மக்களின் அனைத்து இல்ல நிகழ்வுகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுவார் என்கிற முத்திரை அவருக்குப் பெரிய பலம். 2016-ல் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவர், 2021-ல் அந்த இடைவெளியை 25 ஆயிரமாக உயர்த்தினார். இந்த முறை 'ஹாட்ரிக்' அடித்துத் தன் பலத்தை நிரூபிக்க நினைக்கிறார். கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை அமைச்சர் இன்னும் நிறைவேற்றவில்லையே என்ற முணுமுணுப்பை அவர் சரிகட்டியாக வேண்டும். மெய்யநாதன் அதிமுகவின் தர்ம தங்கவேல், கடந்த முறை தோல்வியடைந்தாலும் துவண்டுவிடாமல் இந்த முறையும் மீண்டும் களம் இறங்க காத்திருக்கிறார். நாதகவின் வேட்பாளர் பொறியாளர் ராஜாராம் கிராமம் கிராமமாகத் திண்ணைப் பிரசாரம் செய்கிறார். மாற்று அரசியலை எதிர்பார்க்கும் ஒரு கணிசமான வாக்கு வங்கி நாதகவுக்கு இங்கே உண்டு. இது எந்தக் கட்சியின் வாக்கு வங்கியை பதம் பார்க்கும் என்பது தெரியவில்லை. தவெக வில் சிவநேசன், ஆதி அரங்குளவன், சூர்யா ஆகியோர் சீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆர்வம் தெரிகிறது. இவர்கள் பிரிக்கும் வாக்குகள், வெற்றியாளரின் மார்ஜினைத் தீர்மானிக்கும் 'டிசைடிங் ஃபேக்டர்'. தொகுதியில் திமுகவுக்குச் சாதகமான காற்று வீசினாலும், அது சூறாவளியாக மாறாமல் தடுப்பது தவெக-வின் என்ட்ரிதான். அதிமுகவின் கோட்டைக்குள் தவெகவும் நாதகவும் புகுந்து வாக்குகளைக் குடைந்தால், அது மறைமுகமாக மெய்யநாதனுக்கு 'லக்' ஆக மாற வாய்ப்புண்டு. ஆகையால் தற்போதைய நிலையில் திமுகவின் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகிக்கிறார். புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசியல் ஆட்டம் இப்போது 'ஆடுபுலி' ஆட்டமாக மாறியிருக்கிறது! விராலிமலையில் அதிமுகவும், ஆலங்குடியில் திமுகவும் 'தனிநபர் செல்வாக்கு' கோட்டை கட்டினாலும், புதுக்கோட்டையிலும் திருமயத்திலும் திமுகவின் 'அதிகார பலம்' அணை கட்டுகிறது. ஆனால், அறந்தாங்கியிலும் கந்தர்வக்கோட்டையிலும் கூட்டணிக்குள் நடக்கும் உள்நாட்டுப் போர்தான் சமஸ்தானத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது. திமுகவின் ஆட்சித் திறன் ஒருபுறம், அதிமுகவின் மீட்டெடுப்பு வேகம் மறுபுறம் இருந்தாலும், தவெக - நாதக எனும் இளம் சிங்கங்களின் பாய்ச்சலில் யாருடைய கோட்டை சரியப்போகிறது என்பதுதான் நிஜமான ட்விஸ்ட். சுருக்கமாகச் சொன்னால், பெரிய தலைகள் முட்டி மோதிக்கொள்ள, புது ரத்தம் பாய்ச்சும் இளைய சமுதாயத்தின் வாக்குகள் யாருக்குச் சாதகமோ.... அவர்களுக்கே புதுக்கோட்டை சிம்மாசனமிடும்..!

விகடன் 19 Mar 2026 3:22 pm

தேனி: திமுக-வில் பன்னீர்; களத்தில் டிடிவி மனைவி? இழந்த செல்வாக்கை மீட்குமா அதிமுக? | முந்துவது யார்?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' தேனி மாவட்டம் முந்துவது யார்? 1. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு, தமிழக வரலாற்றில் தனித்த இடம் உண்டு. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா ஆகிய மூவரும் களம் கண்ட தொகுதி. தற்போது திமுகவை சேர்ந்த மகராஜன் எம்.எல்.ஏவாக இருக்கிறார். தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டு தொகுதியை கைப்பற்ற வேண்டுமென அதிமுகவும் கடுமையாக வேலை செய்து வருகிறது. தொகுதியில், முக்குலத்தோரும், பட்டியல் சமூகத்தினரும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாயக்கர், கவுண்டர், செட்டியார் சமூகத்தினர் தொகுதியில் பரவலாக இருக்கின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மகராஜனும், அதிமுகவில் அவருடைய தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர். மகராஜன் கட்சிகளை பின்னுக்கு தள்ளி அண்ணன், தம்பி போட்டியாக இது பார்க்கபட்டது. இந்த முறை அதிமுகவில் வேறு வேட்பாளரை நிறுத்து வேண்டுமென கட்சியினர் போர்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால் லோகிராஜன் திரும்பவும் சீட் கேட்பதோடு தொகுதி முழுவதும் கட்சி பணிகளை செய்து  வருகிறார். கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார். அமமுகவிற்கு தொகுதி ஒதுக்கபட்டால் டிடிவி தினகரகன் மனைவி அனுராதா நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. லோகிராஜன் திமுக தரப்பில், சிட்டிங் எம்எல்ஏ மகராஜன் சீட் கேட்கிறார். புதிதாக கட்சியில் சேர்ந்திருக்கும் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்தர்நாத், தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் ஆகியோரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி என்பவர் வேட்பாளராக களம் இறங்குகிறார். தவெக-வை பொறுத்தவரையில் வேட்பாளர் தேர்வுக்கு பின் தான் வாக்குகள் குறித்து தெரியும் என்ற அளவில் தான் உள்ளது. ஆண்டிபட்டியில் தேமுதிகவிற்கும் கணிசமான வாக்குகள் உள்ளது. இது திமுகவிற்கு கூடுதல் பலனளிக்கும் என்பதால் தற்போதைய நிலையில் மீண்டும் உதயசூரியனே உதிக்க வாய்ப்புள்ளது.! 2. பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி பெரியகுளம் தொகுதி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது என்பதால் அதிகளவில் விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக சுமார் 300 ஏக்கரில் மாம்பழ விவசாயம் நடைபெறுகிறது. வடுகபட்டியில் பூண்டு மார்க்கெட்டும், லெட்சுமிபுரத்தில் கரும்பு வெல்ல மார்க்கெட்டும் இருக்கின்றன. பெரியகுளம் (தனி) தொகுதியில் அதிக அளவில் பட்டியலினத்தவர்கள் வசிக்கின்றனர். அதற்கடுத்து முக்குலத்தோர், நாயுடு, இஸ்லாமியர்கள், நாடார், செட்டியார் சமூகத்தினர் கணிசமான அளவில் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ சரவணகுமார் தி.மு.க-வில் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார் சிட்டிங் எம்.எல்.ஏ சரவணகுமார். ஆனால் தொகுதியில் அவர் மீது அதிருப்தி நிலவிவுதால் அவருக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்கிறார்கள் அவருடைய கட்சியினர். அவருக்கு அடுத்தபடியாக வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா, திமுக வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்  பாண்டியராஜனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தி.மு.க கூட்டணிக் கட்சியான சி.பி.எம்-க்கு தொகுதி ஒதுக்கப்பட்டால், அந்தக் கட்சியைச் சேர்ந்த லாசர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அ.தி.மு.க-வில் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தவமணி, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் ஜெயராமன், நகர மாவட்ட பிரதிநிதி எம் சுரேஷ், தென்கரை பேரூர் கழகச் செயலாளர் ஆண்டவர் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். அமமுகவில் கதிர்காமு சீட் கேட்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் விமலா என்பவர் வேட்பாளாராக களமிறங்குகிறார். தவெக சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் பாலமுருகன் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி ஆகியோர் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார்கள். அதிமுக, திமுக இரண்டு தரப்பிலும் வேட்பாளர்களுக்கான தேர்வில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தொகுதியிலும் இரு திராவிட கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்ற நிலையே தற்போது உள்ளது. தவெக பிரிக்கும் வாக்குகளும் இங்கு வெற்றி தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையே உள்ளது. கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்? 3. கம்பம் சட்டமன்ற தொகுதி நெல், திராட்சை, வாழை விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதானமாக அமைந்திருக்கும் தொகுதி, தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சட்டமன்றத் தொகுதி. கேரள எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்குக் கூலி வேலைக்காகவும் தொகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.  தொகுதியில், ஒக்கலிகக் கவுண்டர், முக்குலத்தோர் சமூகத்தினரே வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்களாகவும் அதற்கடுத்து இஸ்லாமியர்கள், நாயுடு, பட்டியல் சமூகத்தினர் தொகுதி முழுக்கப் பரவலாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் தி.மு.க-வில், சிட்டிங் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் மீண்டும் சீட் கேட்கிறார். அவருக்கு வயதை காரணம் காட்டி தவிர்ப்பதற்கும் வாய்ப்புள்ளதாகவும் பேச்சு உள்ளது. முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார். தி.மு.க கூட்டணியிலுள்ள சி.பி.எம் கட்சியினரும் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில், முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் சீட் கேட்கிறார். ஜக்கையன் பா.ஜ.கவும் தொகுதியை கேட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் அன்பு செல்வி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தற்போதைய சூழலில், தி.மு.க வே இங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது. மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்? 4. போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி போடிநாயக்கனூர் தொகுதி மலைப்பகுதிகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இங்குள்ள மலைக் கிராமங்களில் காபி, ஏலக்காய், மிளகு பயிரிடப்படுகின்றன. மலையடிவாரப் பகுதியில் இலவம் பஞ்சு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெத்தை, தலையணை களுக்குத் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு. தொகுதியில், முக்குலத்தோர் மற்றும் பட்டியல் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அடுத்தபடியாக, செட்டியார், ஒக்கலிக கவுடர், பிள்ளைமார் சமூகத்தினர் பரவலாக இருக்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தி.மு.க-வில் ஐக்கியமானார். அவரும் சீட்டு கேட்டு வருகிறார். அதேசமயம், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், போடி தி.மு.க நகரச் செயலாளர் புருஷோத்தமன், நகர துணைச் செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் சீட் பெற முயன்றுவருகிறார்கள். தேனி அ.தி.மு.க-வில், தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.டி.நாராயணசாமி, வாசு, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள். அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், பி.சி.பாண்டியன் அல்லது தண்டபாணிக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர். சீ.கலைஅரசு என்பவர் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார். தவெக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் சீட் பெற முயற்சித்து வருகிறார்.   தற்போதைய சூழலில், திமுகவே இங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது.!

விகடன் 19 Mar 2026 2:26 pm

'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' - ஜோ கென்ட் 'பரபர'தகவல்கள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது... மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது... - என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜோ கென்ட். தனது ராஜினாமா குறித்து நேற்று பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் ஜோ கென்ட். அதில் அவர் பேசியிருப்பதாவது... கமேனி ஈரான் 'இதை' செய்யவில்லை என்றால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது! - ட்ரம்ப் ஈரான் திரும்ப தாக்குதல் நடத்தும் என்று தெரிந்து தான் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. தங்களால் போரை தொடங்க முடியும் என்றும், அதற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றினால் மட்டும் போதும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசுக்கு நன்கு தெரியும். இப்போதும் சரி... கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய போதும் சரி... ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை. கமேனிக்கு இறப்பிற்குப் பயப்படவில்லை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றது அமெரிக்காவிற்கு சாதகமாக அமையவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய ஆதரவாளர்கள் தான் இன்னும் வலுவானார்கள். அயோதுல்லா இறப்பது குறித்து அவர்கள் பயப்படவில்லை. இது அவர் பைத்தியக்காரர் என்பதால் அல்ல. தான் கொல்லப்பட்டாலும், ஈரானில் நடக்கும் ஆட்சி தொடரும் என்று அவருக்கு தெரிந்ததால், அவர் பயப்படவில்லை என்று கூறியுள்ளார். 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail

விகடன் 19 Mar 2026 12:57 pm

'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' - ஜோ கென்ட் 'பரபர'தகவல்கள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது... மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது... - என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜோ கென்ட். தனது ராஜினாமா குறித்து நேற்று பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் ஜோ கென்ட். அதில் அவர் பேசியிருப்பதாவது... கமேனி ஈரான் 'இதை' செய்யவில்லை என்றால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது! - ட்ரம்ப் ஈரான் திரும்ப தாக்குதல் நடத்தும் என்று தெரிந்து தான் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. தங்களால் போரை தொடங்க முடியும் என்றும், அதற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றினால் மட்டும் போதும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசுக்கு நன்கு தெரியும். இப்போதும் சரி... கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய போதும் சரி... ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை. கமேனிக்கு இறப்பிற்குப் பயப்படவில்லை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றது அமெரிக்காவிற்கு சாதகமாக அமையவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய ஆதரவாளர்கள் தான் இன்னும் வலுவானார்கள். அயோதுல்லா இறப்பது குறித்து அவர்கள் பயப்படவில்லை. இது அவர் பைத்தியக்காரர் என்பதால் அல்ல. தான் கொல்லப்பட்டாலும், ஈரானில் நடக்கும் ஆட்சி தொடரும் என்று அவருக்கு தெரிந்ததால், அவர் பயப்படவில்லை என்று கூறியுள்ளார். 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail

விகடன் 19 Mar 2026 12:57 pm

”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” - நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுகள் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ளன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். மாநிலத் தலைவர் என்ற முறையிலும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் என்ற முறையிலும் நான் இதுவரை நடிகர் விஜய்யிடமோ அல்லது அவரது தரப்பினரிடமோ எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நயினார் நாகேந்திரன் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. அப்படியிருக்கையில் இத்தகைய செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு தவறான தகவல்.  அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை சுதந்திரமான அமைப்புகள். தவறு செய்தவர்கள் மீது மட்டுமே அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கும் பா.ஜ.கவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பல அமைச்சர்கள் மீது 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பே வழக்குகள் உள்ளன. எனவே இதனைத் தேர்தல் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க எந்த ஒரு சாதியையோ அல்லது மதத்தையோ சார்ந்த கட்சி கிடையாது. நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாகவே நடத்துகிறோம். இஸ்லாமியர்களின் நோன்புத் திறப்பு நிகழ்வுகளில்கூட நான் கலந்துகொள்கிறேன். நயினார் நாகேந்திரன் உண்மையில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகப் பேசுவது தி.மு.க.,தான். இந்து மதப் பண்டிகைகளுக்கு அவர்கள் வாழ்த்துச் சொல்வதில்லை, ஆனால், மற்ற பண்டிகைகளுக்குச் சொல்கிறார்கள். தேர்தல் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.  

விகடன் 19 Mar 2026 12:24 pm

கைகூடாத கூட்டணி கணக்கு! - தடுமாறும் தைலாபுரம்… தனித்துவிடப்பட்ட `ராமதாஸ்'பாமக!

``தனித்துப் போட்டியிடலாம்” `அன்புமணி அணி' `ராமதாஸ் அணி' என இரண்டாக பிரிந்து கிடக்கிறது பா.ம.க. அதேசமயம் கட்சியின் சின்னமும், பெயரும் அன்புமணியிடம் இருப்பதால், பெரும்பாலான நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர் அணியில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அதில் அப்செட்டான மருத்துவர் ராமதாஸ், தி.மு.க பக்கம் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், `பா.ம.க இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் வி.சி.க இருக்காது' என்று திருமாவளவன் திடமாக நின்றதால், அந்தக் கதவும் அடைக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில்` `பா.ம.க-வின் பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்துவதற்கும், பா.ம.க தலைவர் என அவரைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கும் தடை விதிக்க வேண்டும்' என்றும் மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில்தான் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துக் கொண்ட அன்புமணி, ராமதாஸ் | கோப்புப் படம் காலை 10 மணிக்கு தொடங்கிய அந்தக் கூட்டத்தில் `ராமதாஸ் பா.ம.க அணி'யின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, சேலம் மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ அருள், பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையது மன்சூர் உசேன், ராமதாசின் பேரன் முகுந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, `தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்குச் செல்வதற்கான சூழல் இல்லாததால், நாம் தனித்துப் போட்டியிடலாம். அதன்மூலம் தங்களது வாக்கு வங்கியை நிரூபித்து சின்னவருக்கு பாடம் கற்பிக்கலாம்' என்று சிலர் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். ஆனால், `அப்படி செய்தால் நாம் மேலும் பலவீனமாக வாய்ப்பிருக்கிறது' என்று அதை நிராகரித்திருக்கிறார் ராமதாஸ். அதையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அல்லது சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. ``ஓரிரு நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்” ஆனால், `அவர்களுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தேர்தலையே நாம் புறக்கணித்துவிடலாம்' என்று ஒரு தரப்பினர் கூறியிருக்கிறார்கள். கூட்டம் முடிவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ அருள், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ``ஏப்ரல் 6-ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. அதனால் கூட்டணி குறித்து அய்யா அறிவிப்பார். சொந்த வேலை காரணமாக அய்யாவிடம் சொல்லிவிட்டுத்தான் செல்கிறேன். வலிமையான கூட்டணி அமைக்கும் வாய்ப்பு பா.ம.க-விடம் இருக்கிறது. எங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், எங்களில் பலரை எம்.எல்.ஏ-வாக தமிழக சட்டப்பேரவைக்குள் அனுப்பி வைப்பார். சேலம் மேற்கு தொகுதியில் உறுதியாக போட்டியிட்டு வெற்றிபெறுவேன். அது மாம்பழம் சின்னத்திலா அல்லது வேறு சின்னத்திலா என்பதை காலம் முடிவு செய்யும். தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியதைப் போல நீதிமன்றத்தையும் ஏமாற்ற நினைக்கிறார் அன்புமணி. சசிகலா தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும் என்றார். கூட்டம் முடிந்த பிறகு மாலை 7 மணிக்கு வந்த ஜி.கே.மணி, ``கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார் அய்யா. யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிப்போம். அந்த வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யாருடன் கூட்டணி என்று இப்போது சொல்ல முடியாது. அதேபோல எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை என்றும் சொல்லிவிட முடியாது என்றவரிடம், `தேர்தல் அரசியலில் ராமதாஸ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறாரா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``மருத்துவர் அய்யாவின் சக்தி என்ன என்பது மக்களுக்குத் தெரியும். கட்சியின் நிலை தற்போது சரியாக இல்லாததால் நெருக்கடியாக இருக்கிறது. இல்லையென்றால் முன்பே கூட்டணியை அறிவித்திருப்போம் என்றார். `எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' - அன்புமணி ராமதாஸ்

விகடன் 19 Mar 2026 12:15 pm

'உதய சூரியனில் நிற்க முடியாது; டார்ச் லைட்தான் வேண்டும்!' - அறிவாலயத்தில் அடம் பிடித்த கமலின் மநீம!

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாகவே சென்று கொண்டிருக்கிறது. விசிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கனவே முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றன. அருணாச்சலம் - மநீம பொதுச்செயலாளர் இப்போது அந்தப் பட்டியலில் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. 'போட்டியிட்டால் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்' என அறிவாலயத்திலேயே கறாராக பேசியிருக்கிறார் மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம். திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை மநீம இன்று நடத்தியிருந்தது. சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் தாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடவே விரும்புவதாக மநீம கூறியிருக்கிறது. மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் பேசுகையில், 'தொகுதி எண்ணிக்கையில் பிரச்னை இல்லை. அது சம்பந்தமான பேச்சுவார்த்தை சுமுகமாகவே சென்றது. ஆனால், திமுக எங்களை உதய சூரியன் சின்னத்தில் நிற்க கோரிக்கை வைக்கிறது. ஸ்டாலின் - கமல் கடந்த தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு சராசரியாக 4% வாக்குகளை வாங்கியிருக்கிறோம். தொண்டர்கள் மற்றும் மக்களிடன் சென்று சேர்ந்த சின்னம் டார்ச் லைட் சின்னம். அதில் போட்டியிட வேண்டும் என்றே உறுதியாக இருக்கிறோம். சின்னம் குறித்துதான் இருதரப்புக்கும் மாற்று கருத்துகள் இருக்கிறது. தலைவரிடம் விஷயத்தை கூறுவோம். செயற்குழு கூடி முடிவெடுப்போம். இன்னும் ஓரிரு நாளில் மீண்டும் சந்திக்கிறோம்' என்றார். திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படவிருப்பதாக தகவல் சொல்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

விகடன் 19 Mar 2026 12:10 pm

`தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை !' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி வருகிறார். அதின் முக்கிய வாக்குறுதிகள் தொகுப்பு... * நாதக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு தனித்தொகுதி * தமிழக தேசிய மரமாக பனைமரம் அறிவிக்கப்படும் * தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள் அறிவிக்கப்படும் சீமான் * அனைவருக்கும் அரசு வேலை * பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை * தலைமை செயலகம், சட்டமன்றம் உள்ளிட்டவை திருச்சியில் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்படும் * அரசு பள்ளிகள், கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை * நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை கடைப்பிடிக்கப்படும். * சமூக நீதி, வாழ்வியல், தொன்மம், ஒழுக்கம் முதலியவை தொடக்கப்பள்ளி முதலே கற்றுத்தரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

விகடன் 19 Mar 2026 11:53 am

ஈரான் 'இதை'செய்யவில்லை என்றால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது! - ட்ரம்ப்

இஸ்ரேல் ஈரானின் தலைவர்கள் மற்றும் எரிசக்தி ஆலைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி ஆலைகளைத் தாக்கி வருகிறது. அப்படித் தான் நேற்று கத்தாரில் உள்ள எரிவாயு ஆலையை தாக்கியிருக்கிறது ஈரான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... ஈரான் போர் 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail வளைகுடா நாடுகளில் நடத்தப்படும் தாக்குதல் மீதான கோபத்தில் இஸ்ரேல், ஈரானில் உள்ள மிகப்பெரிய எரிசக்தி வசதியான தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அந்தத் தாக்குதல் எரிவாயு வாயலின் மிகச் சிறிய பகுதியையே பாதித்தது. அமெரிக்காவிற்கு இந்தத் தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது. கத்தாருக்கும் இந்தத் தாக்குதல் நடக்கும் என்று தெரியாது... அது இந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை. ஈரானுக்கும் இது குறித்து தெரியவில்லை. அதனால், அது கத்தாரின் எல்.என்.ஜி எரிவாயு வசதியை தவறாக தாக்கியுள்ளது. இஸ்ரேல் தாக்காது கத்தார் மீதான தாக்குதல் போல, ஈரான் அறிவீனமான எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்றால், இஸ்ரேல் எரிசக்திகள் மீது தாக்குதல் நடத்தாது. ஒருவேளை, கத்தார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஈரான் இதுவரை பார்த்திராத போல, மிகப்பெரிய தாக்குதலில் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை முழுவதுமாக அழிக்கும் அமெரிக்கா. இந்தத் தாக்குதல் நீண்ட காலத்திற்கு ஈரானை பாதிக்கும் என்பதால், அந்த மாதிரியான வன்முறை மற்றும் அழிவிற்கு நான் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், கத்தார் எல்.என்.ஜி மீது மீண்டும் தாக்குதல் நடந்தால், நான் தயங்கமாட்டேன். தங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா?

விகடன் 19 Mar 2026 11:40 am

பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி ஆகும் துரைமுருகன் முதல் அப்செட்டில் மணியான மாஜி வரை! | கழுகார்

மீண்டும் களமிறங்கும் துரைமுருகன்! பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி... தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் வயது மூப்பு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி, காட்பாடியில் அவருக்குப் பதிலாக அவரது மருமகள் சங்கீதாவுக்குத்தான் சீட் எனத் தகவல் பரவின. இந்தச் சூழலில், துரைமுருகன் மீண்டும் போட்டியிடும் முடிவுக்கு வந்திருப்பதோடு, காட்பாடியில் தனது மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் மூலமாகக் களப் பணிகளையும் வேகப்படுத்தியிருக்கிறாராம். துரைமுருகன் களச் சூழலும் தனக்குச் சாதகமாக இருப்பதாகக் கருதும் துரைமுருகன், `இம்முறை எப்படி பிரசாரம் செய்யலாம்... மக்களை எப்படியெல்லாம் குளிர்விக்கலாம்?’ என்ற ஆலோசனையில் இருக்கியிருக்கிறாராம். பல்வேறு பலே திட்டங்களுடன், அரசியலில் ரீ-என்ட்ரி கொடுக்க தன்னுடைய உடம்பை திடப்படுத்திக் கொண்டிருக்கிறாராம் துரைமுருகன். இழுபறியில் இணைப்பு! மாம்பழம் டு சூரியன் ஆடுதுறை பேரூராட்சி சேர்மனாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தீவிர ஆதரவாளரும் அவர் அணியைச் சேர்ந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். தொடர்ச்சியாக ஆளும் கட்சிக்கு எதிராகக் கடுமையாகப் பேசி பேசிவந்த அவர், சமீப காலமாக அடக்கி வாசிப்பதால், 'ம.க.ஸ்டாலின் தி.மு.க-வில் இணையப் போகிறார்' என்று பேசப்பட்டது. இந்நிலையில், ஆடுதுறையில் கட்டப்பட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணியின் நினைவு மண்டபத்தை அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் திறந்து வைத்தார். அதற்கான முன்னெடுப்பைச் செய்த ம.க.ஸ்டாலின், நேருவின் காலில் விழுந்து ஆசி வாங்கியதைப் பார்த்து உடன்பிறப்புகளே வாயடைத்துப் போனார்களாம். 'பா.ம.க-வில் பிளவு நிலவுவதால் தி.மு.க-வில் இணைய முட்டி மோதுகிறார் ம.க.ஸ்டாலின். அதற்கு லோக்கல் உடன்பிறப்புக்கள் முட்டுக்கட்டை போடுவதால், இணைப்பு இழுத்துக்கொண்டு போகிறது' என்கிறார்கள் டெல்டா தி.மு.க-வினர். அப்செட்டில் மணியான மாஜி! அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு... அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை பஞ்சாயத்து வெடிக்கும்வரை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், கே.பி.முனுசாமி என எட்டு பேர் ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். 2022-ல் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு, மற்ற ஆறு பேரும் குழுவின் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர். தற்போது, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், இன்பதுரை ஆகிய மூவரையும் ஆட்சிமன்றக் குழுவில் புதிதாக இணைத்திருக்கிறார் எடப்பாடி. எடப்பாடி பழனிசாமி இதன்மூலமாக, குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருக்கிறது. விஷயம் அதுவல்ல... அந்த அறிவிப்பு இரட்டை 'மணி'களில் மற்றொரு மணியான முன்னாள் அமைச்சருக்கு கடுமையான வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறதாம். ஏற்கெனவே தலைமைக் கழகப் பொறுப்பிலும் இல்லை, தற்போது ஆட்சிமன்றக் குழுவிலும் பெயர் சேர்க்கப்படாததால் கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். '2017 தொடங்கி தற்போது வரை டெல்லி தொடர்பான பல்வேறு விஷயங்களில் கூடவே இருந்தவன் நான். என்னைத் தொடர்ந்து புறக்கணிப்பது சரியல்ல' என தன் ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். மாற்றப்பட்ட காக்கிகள்! ஆளுங்கட்சிக்கு நெருக்கம்? தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட நான்கு எஸ்.பி-க்களில் மூன்று பேரின் குடும்பத்தினர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாம். இன்னொருவர் மாவட்ட அமைச்சருக்குத் தீவிர விசுவாசியாக இருந்து வந்தாராம். அதுதொடர்பான ரிப்போர்ட் அடிப்படையில்தான் நான்கு எஸ்.பி-க்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியிருக்கிறது. இவர்கள் அனைவரும் டி.ஜி.பி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடமாறுதலைத் தொடர்ந்து ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றத் திட்டமிட்டுள்ளதாம். காத்திருப்போர் பட்டியலுக்குச் செல்லும் நிலை இருப்பதால், ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக ஐ.ஜி அந்தஸ்தில் இருந்தபடி தகவல்களைப் பார்த்துச் சொன்ன அதிகாரி ஒருவர் மெடிக்கல் லீவ் லெட்டரை இப்போதே தயாராக வைத்திருக்கிறாராம். மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி! - ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்... கிளப்பிவிட்ட தி.மு.க! பேசி முடித்த வேலுமணி! தே.ஜ கூட்டணியில் புதிய தமிழகம்... புதிய தமிழகம் கட்சியை தே.ஜ கூட்டணிக்கு இழுத்து வரும் இறுதிக்கட்ட பணியில் மும்முரமாகியிருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அதுதொடர்பாக, டாக்டர்.கிருஷ்ணசாமியுடன் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளை வேலுமணி நடத்தி முடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 'ஐந்து சீட் என்பதில் உறுதியாக இருந்த கிருஷ்ணசாமியின் மனதை மாற்றி, இரண்டு சீட்டுகளை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டார் வேலுமணி. விரைவிலேயே கூட்டணி உடன்படிக்கைக் கையெழுத்தாகிவிடும்' என்கின்றன எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள். அதேசமயம், புதிய தமிழகத்துக்குத் தேவையான 'உதவிகள்' அனைத்தையும் செய்வதற்கு, பா.ஜ.க-வின் முன்னணி தலைவர் ஒருவர் மனம் திறந்திருப்பதால், வரும் வாரத்திலேயே எடப்பாடியுடன் கிருஷ்ணசாமி கைக்குலுக்க வாய்ப்புகள் இருக்கின்றன. முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!

விகடன் 19 Mar 2026 11:10 am

`இந்த ஒரு விஷயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது' - திமுக கூட்டணி இழுபறிக்கு தேமுதிக காரணமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொடர்ந்து மறுத்து வருவதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க முடியாமல் தவிக்கிறது திராவிட முன்னேற்ற கழகம். தி.மு.க தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறிக்கான காரணங்களை அலசினோம். முதல்வரை சந்தித்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் தி.மு.க கூட்டணியின் பிரதான கட்சிகளான காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ம.தி.மு.க-வுக்கு 4, சி.பி.ஐ-க்கு 5 என கூட்டணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. ஆனால், வி.சி.க-வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகவில்லை என்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய அறிவாலயப் புள்ளிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகளில் தொடங்கி கடந்தமுறை அவர்கள் பெற்ற 6 தொகுதிகள்வரை தருவதாக சொல்லிவிட்டோம். ஆனால் 6 தொகுதிகளுக்கு கூடுதலாக தொகுதிகள் தருவதாக இருந்தால்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் சொல்லியிருக்கிறார்கள். மேலும் வி.சி.க-வுக்கு 7 தொகுதிகள் தர இசைவு தெரிவித்த நிலையில், அவர்கள் தமிழ்நாட்டில் 8 தொகுதிகளும் புதுச்சேரி மாநிலத்தில் 2 தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், சி.பி.எம்-க்கு 6, வி.சி.க 7 தொகுதிகள் என்பதுதான் எங்கள் கணக்கு என்றனர் பெ. சண்முகம் நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், தி.மு.க கூட்டணியில் நிகழும் நெருக்கடிகள் அனைத்துக்கும் தே.மு.தி.க-வின் வருகையே காரணம். தி.மு.க-வுடனான மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், 'புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினால் நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு தொகுதிகள் தருவது கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள், ஆனால் இதே சிரமத்திற்கு மத்தியில் தே.மு.தி.க-வுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்படும் என்று ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது' என தங்கள் குமுறல்களை பதிவுசெய்தார் சண்முகம், இன்னும் பொதுவெளியில் பேசவில்லை என்றாலும் வி.சி.க-வும் இதே நினைப்பில்தான் இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்டு 2,00,157 லட்சம் வாக்குகளைப் பெற்றது தே.மு.தி.க. வாக்கு வங்கியாகப் பார்த்தால் 0.4%-தான் வரும். எந்த ஒரு களச் செயல்பாடும் கொண்டிராத அந்தக் கட்சிக்கு 9 முதல் 10 தொகுதிகள் தர தயாராகியிருக்கும் தி.மு.க, வி.சி.க-வுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் தருவதில் என்ன சிக்கல்.. என்ற ஒற்றைக் கேள்விதான் தி.மு.க கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு காரணம் என்றனர். திருமாவளவன் - பெ.சண்முகம் நம்மிடம் பேசிய வி.சி.க முன்னணி நிர்வாகிகள், தே.மு.தி.க-வுக்கு அதிகமாகக் கொடுத்து, வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகளுக்கு தொகுதிகளை குறைத்துக் கொடுக்க முன்வந்தால் கூட்டணிக்குள் வருத்தம் உண்டாவதைத் தவிர்க்க முடியாது. அண்மையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அவர்களும், `திமுக எங்களிடம் தொகுதிகளை குறைக்க சொல்ல கேட்கவில்லை' என்று பேசினார். எண்ணிக்கைக்காக எங்கள் கூட்டணி உடையாது என்றாலும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் எக்கச்சக்க பிரச்னைகள் வரும். அதிலும் தே.மு.தி.க கூட்டணியை உறுதி செய்தவற்கு முன்பு எங்களிடம் கையெழுத்து வாங்குவதில் தி.மு.க குறியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஆகையால் முதலில் தே.மு.தி.க கையெழுத்துப் போடட்டும் என எங்களை தலைமையிடம் சொல்லியிருக்கிறோம் என்றனர்.

விகடன் 19 Mar 2026 10:14 am

'இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! 'இப்படி'போராடுவோம்' - சிவா திலீபனுக்கு ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மே 17 இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். கடந்த 12-ம் தேதி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் போராட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட சிவா திலீபன் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில், அங்கே வந்த ரயில் ஒன்றின் மீது, 'தமிழ் வாழ்க' என்று முழங்கிப் பாய்ந்திருக்கிறார். இதில் காயமடைந்த அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல், அவர் இறந்துவிட்டார். மே 17 இயக்கத்தினர் போராட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! இவருக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்! இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன். தங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா? இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக்… — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 18, 2026

விகடன் 19 Mar 2026 10:00 am

மனோ தங்கராஜுக்கு எதிராக புகார்; ஸ்டாலின் முன்னிலையில் கொந்தளிப்பு; நேர்காணலில் நடந்தது என்ன?

சட்டசபை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணலில் அமைச்சர் மனோதங்கராஜிக்கு சீட் கொடுக்கக் கூடாது என தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக நேர்காணல் முடிந்து வெளியே வந்த திருவட்டாறு ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் கலை வெளிப்படையாகவே மீடியாக்களிடம் பேசினார். நேர்காணலில் நடந்தது குறித்து அதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில், பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட சுமார் 38 பேர் விருப்பமனு வழங்கியிருந்த நிலையில் நேர்காணலில் சிட்டிங் எம்.எல்.ஏ மனோதங்கராஜ், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், திருவட்டாறு வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்பிரைட், திருவட்டாறு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன் உள்ப்பட 28 பேர் கலந்துகொண்டனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தியபோது டி.ஆர்.பாலு, துரைமுருகன், நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நேர்காணலில், 'வந்த அனைவருக்கும் சீட் கொடுக்க வாய்ப்பு இல்லை. உங்களில் ஒருவருக்கு சீட் கொடுத்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு கட்சிப் பணி செய்து, உழைத்து வெற்றிபெற வைப்பீர்களா?' என முதல்வர் ஸ்டாலின் கேட்டார். அனைவரும் சரி எனச் சொன்னார்கள். உங்களுக்கு எதாவது ஆட்சேபனை இருந்தால் கூறுங்கள் என ஸ்டாலின் கேட்டார். முதலில் பேசிய ஜான்பிரைட், 'மனோதங்கராஜுக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அவர் அமைச்சரும் ஆகிவிட்டார். அவரை யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலைதான் இருந்தது. கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் அவரால் பயன் இல்லை. அவர் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெறும்' எனச் சொன்னார். உடனே அங்கிருந்த நிர்வாகிகள் கைத்தட்டினர். அடுத்து பேசிய ஜான்சன், 'அமைச்சர் மனோதங்கராஜுக்கு சீட் கொடுக்க வேண்டும்' என்றார். பின்னர் பேசிய ஸ்டாலின், 'தொகுதியில் வளர்ச்சிப் பற்றி பேசலாம். யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதுபற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்றார். ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல் கிள்ளியூர் தொகுதிக்கான நேர்காணலின்போது, அந்தத் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கவேண்டும் என நிர்வாகிகள் கேட்டனர். கொல்லங்கோடு நகராட்சி மற்றும் 18 பஞ்சாயத்துக்களில் 13-ல் தி.மு.க வென்றுள்ளது எனக் கூறியுள்ளனர். அப்போது பேசிய முதல்வர், 'கிள்ளியூர் கூட்டணியான காங்கிரஸ் வசம் உள்ளது. அரசிடம் அதிக நிதிபெற்றவர் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார். அவர்தாம் நம்மை அதிகமாக விமர்சித்தும் பேசினார். ஆனாலும், கூட்டணி தர்மம் என்று ஒன்று இருக்கிறது. பார்க்கலாம்' என ஸ்டாலின் பேசினார். அப்போது பாலூரைச் சேர்ந்த நிர்வாகி தேவா என்பவர், 'எப்படியும் காங்கிரசுக்குத்தான் கிள்ளியூரைக் கொடுக்கப் போகிறீர்கள்' எனக் கூறியுள்ளார். அவர் அப்படி பேசியதும்  முதல்வர் முன்னிலையிலே பிற நிர்வாகிகள் அவரை அடிக்கப் பாய்ந்துள்ளனர். பின்னர், வெளியே வந்த அவரைச் சில நிர்வாகிகள் தாக்க முற்பட்டனர். மனோ தங்கராஜ் நாகர்கோவில் தொகுதிக்கான நேர்காணலின்போது முதலில் மாவட்டச் செயலாளரான மேயர் மகேஷ் பேச எழுந்திருக்கிறார். அப்போது, மாவட்டச் செயலாளர் பேசவேண்டாம் எனக்கூறி உட்கார வைத்தார் முதல்வர்.  முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியபோது இடைமறித்த ஸ்டாலின், 'கடந்த தேர்தலில் பா.ஜ.க-விடம் தோற்றுப்போகக் காரணம் என்ன?' எனக் கேட்டார். 'அவர்கள் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள்' எனச் சுரேஷ்ராஜன் பதில் சொன்னார். குளச்சல் தொகுதி நேர்காணலின்போது அந்தத் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர் என்றனர்.

விகடன் 19 Mar 2026 8:53 am

திருப்பரங்குன்ற வழக்கை விசாரிக்கத் தடை இருந்தால் அதை நான் மதிப்பேன் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்குப் போதிய ஏற்பாடுகள் அதிகாரிகள் தரப்பில் செய்து தரப்படவில்லை என ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''தீபம் ஏற்ற இருக்கும் தூணிற்கு மனுதாரர்கள் உட்பட  5 பேர் பூஜை செய்ய அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து கொள்ளலாம்’' எனத் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டி மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. மதுரை உயர் நீதிமன்றம்! இந்த அவமதிப்பு வழக்கு மீண்டும் நீதிபதி சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் தரப்பில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தனிநீதிபதியே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். அந்த உத்தரவும், நேற்றைய இடைக்காலத் தடை உத்தரவும் முரணாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே அதனடிப்படையில் திருப்பரங்குன்றம் வழக்கை விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளது. வழக்கை விசாரிக்கத் தடை இருந்தால் அதை நான் மதிப்பேன், உங்களைப் போல அல்ல. தீபத்தூண் அமைந்துள்ள மலை உச்சியில் நீதிமன்றம் நியமிக்கும் 5 நபர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தூண் இதில் உரிய முடிவெடுத்து தெரிவிக்காத பட்சத்தில் காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். ஏன் இருவரும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு எதிராக வாரன்ட் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என நீதிபதி எச்சரித்தார். அவர்கள் ஆஜராக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. பிறகு, ''ஒட்டுமொத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும், இரு நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை. அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9க்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என்றார். திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை! - விவரம் என்ன?

விகடன் 19 Mar 2026 7:39 am

கார்ட்டூன்..!

கார்ட்டூன்

விகடன் 19 Mar 2026 5:14 am