பேராவூரணி தொகுதியை கூட்டணிக்கு தரமாட்டார் எடப்பாடி! - அதிமுக வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பேராவூரணி. கடமைடை பகுதியான இத்தொகுதியில் திமுக-வைச் சேர்ந்த அசோக்குமார் சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை மீண்டும் அசோக்குமார் போட்டியிடுவதற்கு தலைமை ஓகே சொல்லி விட்டதாம். தொகுதிக்குள் பம்பரமாக சுழலும் அசோக்குமார் சுமார் ரூ 500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் செய்திருப்பதாக சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். ஆனாலும், தொகுதியை கைப்பற்ற முத்துமாணிக்கம், அன்பழகன், கார்த்திகேயன், அருள்நம்பி என திமுக-வில் சீட்டுக்கான ரேஸில் இருப்பவர்கள் சுணங்காமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் கோவி.இளங்கோ திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் பேராவூரணியை குறி வைத்து காய் நகர்த்துவதாகவும் நெப்போலியன், செல்வப்பெருந்தகை மூலம் முயற்சிப்பதாகவும் சொல்கிறார்கள். அதிமுக-விற்கு சாதமான தொகுதிகளில் பேராவூரணியும் ஒன்று என்கிறார்கள். இதனால் அதிமுக-வில் வேட்பாளர் ரேஸில் பலர் உள்ளனர். இதில் ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோவிற்கு இபிஎஸ் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதால் இளங்கோ தேர்தல் வேலையை தொடங்கி விட்டதாக கிசு கிசுக்கிறார்கள் ரத்ததின் ரத்தங்கள். இது குறித்து விபரம் அறிந்த புள்ளிகள் தரப்பில் பேசினோம், ``முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராசு மகன் கோவி.இளங்கோ. இவர் 2021 தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார். அப்போது அதிமுகவில் இருந்த வைத்திலிங்கம் சீனியரான முன்னாள் எம்.எல்.ஏ திருஞானசம்பத்தத்தை வேட்பளராக்கினார். சில காரணங்களால் திருஞானசம்பந்தம் 23,000 வாக்கு வித்யாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கோவி.இளங்கோ, திருஞானசம்பந்தம், துரை.மாணிக்கம், பில்லங்குழி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் காய் நகர்த்தி வருகின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்தார் வைத்திலிங்கம். திருஞானசம்பந்தம் அந்த சமயத்தில் வைத்திலிங்கத்தின் கோபத்திற்கு ஆளாவோம் என்பதற்காக அதிமுகவில் இருந்தாலும் பலரும் கட்சி உள்ளிட்ட கூட்டங்களை நடத்துவதில் தயக்கம் காட்டினர். அப்போது, கோவி.இளங்கோ தைரியமாக முன்வந்து கட்சி கூட்டங்களை விமர்சையாக நடத்தினார். உறுப்பினர் சேர்க்கை, மக்கள் பிரச்னையில் உடன் நிற்பதுனு இந்த ஐந்து வருடமும் ஆக்டீவாக இருந்தார். கட்சி வளர்ச்சிக்காக பலமாக வேலை செய்தார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் பேராவூரணி எழுச்சி பயணத்தை ஒருங்கிணைத்தவர் இளங்கோ. இதில் பெரிய அளவில் கூட்டத்தை திரட்டியதால் இபிஎஸ்ஸிடம் கவனம் பெற்றார். அப்போதே தொகுதி உனக்குத்தானு இபிஎஸ் சொன்னாராம். இப்போது இபிஎஸ் சொன்ன வார்த்தை உறுதியாகி விட்டது. இளங்கோ தான் வேட்பாளர் என பரவலாக பேசப்படுகிறது. அவரும் தேர்தல் பணியை தொடங்கி விட்டார். அதே நேரத்தில் சீனியரான திருஞானசம்பந்தம் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். எளிமையானவர் தொகுதி மக்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்க கூடியவர். சர்ச்சைகளுக்கு ஆளாகதவர். அனுபவம் வாய்ந்த இவர் தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு தூது விடுகிறார். கடந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டதால் இந்த முறை இபிஎஸ் என்ன முடிவெடுப்பார்னு தெரியலை. இதே போல் எழுச்சி பயணத்தின் போது சசிகலாவை உள்ளே விடாதீர்கள் என இபிஎஸ் வாகனத்தை நிறுத்தி பூங்கொத்து கொடுத்து உரக்க சொன்னவர் பில்லங்குழி செந்தில்குமார். அடிப்படையில் தொண்டராக கட்சிக்குள் வந்தவர். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக-வில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணியில் மாவட்டத் துணை தலைவராக இருக்கிறார். செந்தில்குமார் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின் போது பெரிய அளவில் அன்னதான நிகழ்ச்சியை நடத்தினார். சசிகலா புதிய கட்சி தொடங்கியதை விமர்சித்து இவர் ஒட்டிய போஸ்டர் கட்சிக்குள் கவனம் பெற்றது. ஆங்கில புத்தாண்டு சமயத்தில் இபிஎஸ்ஸிடம் ஆசி வாங்க சென்ற செந்தில்குமாரிடம், சசிகலாவின் சொந்த மாவட்டத்தில் அவருக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுத்தற்கு தட்டி கொடுத்தாராம். அடிமட்டத்தில் இருப்பவர்களும், உயர்ந்த இடத்திற்கு வருவது அதிமுகவில் மட்டுமே நடக்கும். அந்த வகையில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் செந்தில்குமார் விருப்ப மனு கொடுத்து காத்திருக்கிறார். அதிமுக கூட்டணியில் பா.ஜ.க-வும் தொகுதியை குறி வைத்துள்ளதாம். கருப்பு முருகானந்தம், பண்ணவயல் இளங்கோ ஆகியோரிடையே தொகுதியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. ஆனாலும் ஜெயிக்க கூடிய வாய்ப்புள்ள தொகுதியாக பேராவூரணி இருப்பதாக கட்சி ரகசியமாக எடுத்த கருத்து கணிப்பில் தெரிந்ததால் இபிஎஸ் கூட்டணி கட்சிக்கு தொகுதியை விட்டுத் தரமாட்டார் என்றனர்.
`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்' - அமெரிக்க USCIRF அறிக்கை; காங்கிரஸ் விமர்சனமும் அரசின் பதிலும்!
சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF), ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (R&AW) ஆகியவற்றிற்கு எதிராகத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளே காரணம் என்று அந்த அமெரிக்க அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. USCIRF மேலும், இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் மற்றும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றையும் அந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியாவுடனான ஆயுத விற்பனை மற்றும் வர்த்தக உறவுகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த ஆணையம் கோரியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, அதன் மீது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஓர் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷம் போன்றது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதித்தார். ஆர்.எஸ்.எஸ் தற்போது அமெரிக்க ஆணையமும் இந்த அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ``அமெரிக்க ஆணையத்தின் மதிப்பீடுகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது. தேசிய கீதத்துக்கும் மேலாக வந்தே மாதரம்? ஆர்.எஸ்.எஸ், அமித் ஷா, மோடி அரசின் உள்நோக்கம் என்ன?
ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!
நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகிலுள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி, ஓர் ஆண் குழந்தை உள்ளது. ஆனந்தசேகர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை சரித்திரப் பதிவேடு பட்டியலில் சேர்த்து அவரது நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு, அவர் வசிக்கும் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டி ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்த சேகர் அதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமிகள் அழுது கொண்டே தங்கள் பெற்றோரிடம் கூறியிருக்கின்றனர். இது குறித்து அக்குழந்தைகளின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், ஆனந்தசேகரைக் கைதுசெய்தனர். இந்த வழக்கின் விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுரேஷ்குமார், ’இது சமூகத்தில் நடைபெறும் அரிதினும் அரிதான வழக்கு’ எனச் சுட்டிக்காட்டினார். அவரது தீர்ப்பில், “மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்தசேகருக்கு எந்த விதமான அனுதாபமோ, கருணையோ காட்ட முடியாது. குற்றவாளியின் இந்தச் செயல் உச்சகட்ட கொடூர புத்தியை வெளிக்காட்டுகிறது. குடிபோதையில் செய்த தவறு என்பதை ஏற்க முடியாது. இது போன்ற தவறில் கருணை காட்டுவது போக்சோ சட்டத்தின் நோக்கத்தினை சிதைத்து விடும். நெல்லை நீதிமன்ற வளாகம் அத்துடன், குற்றவியல் நீதி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விடும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்” எனக் குறிப்பிட்டதுடன், தூக்கு தண்டனை விதித்தார். இதில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.56 ஆயிரம் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
`மயிலாடுதுறையில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக மா.செ.க்கள்; தவெக ஆதரவு?'மாவட்டத்தில் முந்துவது யார்?
முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' மாவட்ட கள நிலவரம்! மயிலாடுதுறை மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மயிலாடுதுறை தொகுதியில் வன்னியர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர், செட்டியார், வேளாளர், நாயுடு உள்ளிட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். விவசாயம் தொகுதியில் முக்கிய தொழில். தி.மு.க கூட்டணியில் கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.ராஜ்குமார் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க-வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் அன்பழகன், ஆர்.அருள்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.மருது, ஜெகவீரபாண்டியன், வக்கீல் இராம.சேயோன் என பலர் ரேஸில் உள்ளனர். இந்த முறையும் தொகுதி காங்கிரஸ்க்கு செல்வதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் எஸ்.ராஜ்குமார், மாவட்டத் தலைவர் பானுசேகர் இருவரும் சீட்டுக்கு மல்லு கட்டி வருகின்றனர். தொகுதியை தக்கவைத்துக் கொள்வதற்காக ராஜ்குமார் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார், பானு சேகருக்கு செல்வப்பெருந்தகையின் ஆசி இருப்பதால் தெம்பாக வலம் வருகிறார் என்கிறார்கள். இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியும் மயிலாடுதுறையைக் குறிவைத்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மண்டலச் செயலாளரான நகை கடை அதிபர் ரவிச்சந்திரன் பசைக்கு பஞ்சமில்லாதவர். இவருக்காக கமல்ஹாசன் தொகுதியைக் கேட்கிறாராம். மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், சந்தோஷ்குமார், வி.ஜி.கே.செந்தில்நாதன், நாஞ்சில் கார்த்தி, கோமல் அன்பரசன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பா.ம.க-வுக்குச் சென்றால் மீண்டும் சித்தமல்லி பழனிசாமி (அன்புமணி அணி) போட்டியிடுவார் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட காசிராமன் இந்த முறையும் வேட்பாளர். த.வெ.க-வை பொறுத்தவரை செலவுக்கு கட்சியை எதிர்பார்க்காத நபருக்கே சீட்டாம். பசைக்கு குறையில்லாமல் வலம் வரும் மாவட்ட பொருளாளர் நவீன் மற்றும் நகரச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் ரேஸில் உள்ளனர். தி.மு.க, அதிமுக நேரடியாக மோதினால் போட்டி பலமாக இருக்கும். கூட்டணி வலுவாக இருப்பது திமுக-விற்கு ப்ளஸ். பாஜக எதிர்ப்பு அதிமுக-விற்கு மைனஸ். பா.ம.க-வில் நிலவும் பிளவு, சிறுபான்மையினர் வாக்குகள் போன்றவற்றால் தற்போதைய நிலவரப்படி தொகுதியில் தி.மு.க கூட்டணி முந்துவதற்கான வாய்ப்புள்ளது. நாகர்கோவிலை வட்டமிடும் `பொன்னார்' - குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகள் கள நிலவரம்! முந்துவது யார்? பூம்புகார் சட்டமன்ற தொகுதி பூம்புகார் தொகுதியில் வன்னியர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர், மீனவர்கள் உள்ளிட்ட இதர சமூகத்தினர் வசிக்கின்றனர். விவசாயம், மீன்பிடி போன்றவை முக்கிய தொழில்கள். கட்டடத் கூலி தொழிலாளர்கள் நிறைந்திருக்கின்றனர். திமுக-வைச் சேர்ந்த நிவேதா முருகன் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க-வில் நிவேதா எம்.முருகன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மேலையூர் தேவேந்திரன் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் உள்ளனர். அ.தி.மு.க-வில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ பவுன்ராஜ் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் இளைய நகுலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவெக-வில் ஒன்றிய செயலாளர் வசந்த் போட்டியிடுவதற்கான வாய்ப்பே அதிகமிருப்பதாக சொல்கிறார்கள். ஒருவேளை தவெக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் மாற்றமிருக்கலாம். நிவேதா முருகன்- திமுக 2021 தேர்தலில் 3,200 வாக்கு வித்யாசத்தில் தோல்வியை தழுவிய பவுன்ராஜ் இம்முறை முன்பே திட்டமிட்டு வியூகம் வகுத்து பிரச்சார வேலையை தொடங்கி விட்டார். கட்சி பாகுபாடின்றி வீடு தவறாமல் ஹாட்பாக்ஸ் கொடுத்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். சொந்தக் கட்சியினரை அனுசரிக்கவில்லை என்கிற குறை நிவேதா முருகன் மீது நிலவுகிறது. தனக்கு சீட் பெறுவதே நிவேதா முருகனுக்கு போராட்டமாக இருக்கிறது. பண பலம் படைத்த பவுன்ராஜ், நிவேதா முருகன் இருவரும் மோதினால் போட்டி கடுமையாக இருக்கும். நிவேதா முருகன் மீது சொந்தக் கட்சியினரே அதிருப்தியில் இருப்பதால் தற்போதைய நிலவரப்படி தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி முந்துவதற்கான வாய்ப்புள்ளது. சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதி சீர்காழி தனி தொகுதியில் பட்டியலினத்தவர், வன்னியர், மீனவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர், முக்குலத்தோர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். விவசாயம், மீன்பிடி ஆகியவை முக்கியத் தொழில்கள். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த தொகுதி என்பதால் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ள தொகுதியாகியிருக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த மு.பன்னீர்செல்வம் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க-வை பொறுத்தவரை மு.பன்னீர்செல்வம், பஞ்சு.குமார், மலர்விழி திருமாவளவன், வழக்கறிஞர் சிவதாஸ் ஆகியோர் ரேஸில் உள்ளனர். பவுன்ராஜ்- அதிமுக அதிமுக-வில் முன்னாள் எம்.எல்.ஏ பாரதி, சந்திரமோகன், சக்தி, பாலாஜி ஆகியோர் சீட்டுக்காக கடுமையாக மெனக்கெடுகின்றனர். நாம் தமிழர் கட்சியில் சுபாஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவெக-வில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் குட்டி கோபி போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கூட்டணி பலம், சிறுபான்மையினர் வாக்குகள் சாதகமாக இருப்பதால் தற்போதைய நிலவரப்படி தொகுதியில் தி.மு.க முந்துவதற்கான வாய்ப்புள்ளது . மயிலாடுதுறை மாவட்டம்: மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரையில், மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணி முந்துவதற்கான சூழல் உள்ளது. பூம்புகார் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணி முந்துவதற்கான வாய்ப்பு தற்போது உள்ளது. தனி தொகுதியான சீர்காழி சட்டமன்ற தொகுதியை பொறுத்தமட்டில், கூட்டணி பலத்துடன் சிறுபான்மையினர் வாக்குகளும் சாதகமாக இருப்பதால் திமுக கூட்டணி முந்துவதற்கான வாய்ப்பு உள்ளது. !
தொகுதி மாறி மம்தாவுக்கு `குறி'; எதிர்த்து களமிறங்கும் சுவேந்து அதிகாரி - பரபர மே.வங்க தேர்தல் களம்!
மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த முறை 4 கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில், இப்போது ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கு பா.ஜ.க தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் சேர்ந்த சுவேந்து அதிகாரி முதல்வர் மம்தா பானர்ஜியின் பாபானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இது தவிர நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி பாபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு அதன் சொந்த மண்ணில் சவால் விடும் நோக்கில் அதிகாரியை அங்கு பாஜ.க வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. அதேசமயம் கடந்த முறை நடந்த தேர்தலில் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் சுவேந்து அதிகாரி முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார். இப்போது பாபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இது மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியை கொடுத்து இருக்கிறது. இதனால் இம்முறையும் மம்தா பானர்ஜி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக-வின் 144 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ராஷ்பெஹாரி தொகுதியில் முன்னாள் ராஜ்ய சபா எம்.பி ஸ்வபன் தாஸ்குப்தா போட்டியிடுகிறார். கலிகஞ்சில் இருந்து பாபன் கோஷ், டயமண்ட் ஹார்பரில் இருந்து தீபக் குமார் ஹல்டர், அசன்சோல் தக்ஷினில் இருந்து அக்னிமித்ரா பால், அசன்சோல் உத்தரில் கிருஷ்ணேர்ஜேந்துவும், ஹன்சனில் நிகில் பானர்ஜியும், கூச்பெஹார் உத்தரில் சுகுமார் ராய் மற்றும் சிலிகுரியில் சங்கர் கோஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். முன்னதாக வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பிரதமர் இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா, மேற்கு வங்க கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பிப்லப் தேப் மற்றும் வங்காள பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மாநில பாஜக முன்னாள் தலைவர் சுகந்தா மஜூம்தார் உள்ளிட்ட மாநிலப் பிரிவைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர், பாஜக எம்பி மனோஜ் திக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
`ரீல்ஸ் போடும் முதல்வருக்கு வேடநத்தத்தின் கதறல் கேட்டிருக்க வேண்டாமா?' - குமுறும் கிராமத்தினர்!
கடந்த 10 ஆம் தேதி மாணவி மர்ம முறையில் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருந்து இன்னமும் அந்த விளாத்திகுளத்தின் வேடநத்தம் கிராமம் மீளவில்லை. சம்பவம் நடந்த ஆறாவது நாளில் நாம் அந்த கிராமத்துக்கு நேரில் சென்றிருந்தோம். போராடிய வேடநத்தம் மக்கள் கிராமத்துக்கு உள்ளேயும் வெளியேயும் என 15 இடங்களில் பாய்ன்ட் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். சில இடங்களில் உள்ளூர் இளைஞர்களிடம் விசாரணை நடத்தி அதை நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். உளவுத்துறையினரும் ஊருக்குள் சுற்றித் திரிந்து நிலைமையை அசைபோட்டுக் கொண்டிருந்தனர். முழுக்க முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ஊரே கொஞ்சம் பதைபதைப்பாகத்தான் இருந்தது. 'உள்ளூர் ஆட்கள் யாரையும் தெரியாமல் உள்ளே செல்ல வேண்டாம். மக்கள் கொதிப்போடு இருக்கிறார்கள்' என்கிற செய்தி முன்பே நமக்கு கிடைக்கப் பெற்றதால், உள்ளூர் நபர் ஒருவரை தொடர்புகொண்டு அவரின் வழிகாட்டலின்படிதான் வேடநத்தத்துக்குச் சென்றோம். மாணவியின் உடலை இன்னும் குடும்பத்தினர் வாங்காததால், கிராமம் இயல்புநிலைக்குத் திரும்பாமலேயே இருந்தது. கொல்லப்பட்ட மாணவியின் வீடு ``இந்த கிராமத்துல மொத்தம் 18 சாதிக்காரங்க இருக்கோம். இறந்த பொண்ணோட சாதிக்காரங்க மொத்தமே 4 குடும்பம்தான் இருக்காங்க. இந்த ஊருக்குள்ள இப்போ வரைக்கு சாதி மதத்தால ஒரு சண்டை நடந்தது இல்ல. அதனாலதான் அந்த புள்ளை கொல்லப்பட்ட சம்பவம் கேள்விப்பட்ட உடனே, எந்த வேற்றுமையும் பார்க்காம எல்லாரும் ஒண்ணா கூடிட்டோம். ஒரு நாள் முழுக்க சுட்டெரிக்குற வெயில்ல குறுக்குச்சாலையில உட்காந்து போராடுன பிறகுதான் அமைச்சர் கீதா ஜீவன் எங்களை பார்க்க வந்தாங்க. ரெண்டு நாள் கழிச்சுதான் கனிமொழி வந்தாங்க. நாங்க மட்டும் இறங்கி போராடலன்னா யாரும் கண்டுக்காம போயிருப்பாங்க. அவங்க வீட்டு புள்ளைக்கு நடந்தது. எங்க வீட்டு புள்ளைங்களுக்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம்? என, கொதிக்கின்றனர் கிராமத்தினர். கிராமத்தினர் வழிகாட்டவே ஒரு பெருமாள் கோயிலின் தெப்பக்குளத்திலிருந்து சில மீட்டர்கள் தள்ளியிருந்த பலியான அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்றோம். வீடு முழுக்க வெறுமை சூழ்ந்திருந்தது. மாணவியின் இறப்பை இன்னமும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இறந்து போன மாணவியின் படத்தை வைத்து விளக்குகூட ஏற்றாமல் இருந்தார்கள். 'எலும்பும் தோலுமாதான் இருப்பா, ஆனா எப்பவுமே சிரிச்ச மூஞ்சியா இருப்பா. தெரியாதவங்ககிட்ட அவ்வளவு லேசுல பேசிடமாட்டா, நல்லா படிக்கக் கூடியவ, பத்தாம் க்ளாஸ்ல ஸ்கூல்லயே ரெண்டாவது இடம் பிடிச்சிருந்தா..' பேத்தியின் நினைவை பகிர்ந்து கொண்டார் அவரின் தாத்தா. மாணவியின் தந்தை மாணவியின் தந்தையின் கரத்தைப் பற்றி ஆறுதல் சொன்னோம், 'இப்போ போயி ஊருக்குள்ள இவ்வளவு போலீஸூ போட்ருக்காங்க. நாங்க புகார் கொடுக்க போனப்போவே விசாரிச்சிருந்தா என் புள்ளைய உசுரோடயாச்சு காப்பாத்திருக்கலாமே. புள்ளையை காணோம்னு நைட்டு பதறியடிச்சு போயி குளத்தூர் ஸ்டேஷன்ல நிக்கோம். அங்க பொண்ணுக்கு 17 வயசுதான் ஆகுது. அதனால நீங்க விளாத்திக்குளம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்கணு சொல்லிட்டாங்க. நைட்டு முழுசும் நாங்களே தேடிட்டு காலையில விளாத்திகுளம் ஸ்டேஷனுக்கு போனோம். அங்க 4 மணி நேரம் எங்களை அலையவிட்டு காத்திருக்க வச்சாங்க. கடைசியில, 'பொண்ணு எவனயாச்சு லவ் பண்ணி ஓடியிருக்கும். போயி நீங்களே ஒழுங்கா தேடிப் பாருங்க'னு அவ்வளவு மோசமா லேடி இன்ஸ்பெக்டர் பேசுச்சு. என் பொண்ணை நான் அப்படியா வளர்த்திருக்கேன். ஒரு போன் கூட அனுமதி இல்லாம பேசாது கொள்ளாது. என் புள்ள மேல பழி போட்டு பேசுனாங்க. கடைசியில நாங்கதான் முள்ளு காட்டுக்கு நடுவுல கிடந்து புள்ளையோட உடம்ப கண்டுபிடிச்சோம். கை, கால், முகம்னு எல்லா பக்கமும் ஒரே காயம். இப்படி தூக்கி கொடுக்குறதுக்கா இத்தனை வருசம் வளர்த்து ஆள் ஆக்குனேன்...2 மாசம் முன்னாடி கூட அப்பா நான் கப்பல்ல வேலைக்கு போகணும். உன்னால படிக்க வைக்க முடியுமான்னு அத்தனை அருமையா கேட்டா...மகராசி...இன்னைக்கு அந்த புள்ள எங்க கூட இல்லையே..' என குமுறுகின்றார் மாணவியின் தந்தை. குளத்தூர் காவல் நிலையம் அவருடைய கண்ணீரெல்லாம் வற்றிப்போய் ஒரு மூலையில் சுருண்டிருந்தார். 'புள்ளையே போயிருச்சு. முறையா புகார் கொடுக்குறப்போ போலீஸ் ஒண்ணும் செய்யல. வர வேண்டிய அரசியல்வாதிங்க உடனே வரல. இப்போ அவ்வளவு பணம் கொடுக்கறோம், இவ்வளவு கொடுக்குறோம்னு சமாதானம் பேசுறாங்க. ஒரு புள்ள போயிருச்சு இன்னொரு புள்ள இருக்குல்ல. அதுக்காச்சு உதவும் பணத்தை வாங்கிக்கோங்கனு சொல்றாங்க. அப்படி சொல்றவங்க வீட்டில இப்டி ஒரு புள்ளையை தூக்கி கொடுத்துட்டு பணம் வாங்குவாங்களா? எங்களுக்கு பொண்ணை இப்படி சீரழிச்சது யாருன்னு தெரியனும். சனிக்கிழமை காலையில 10 மணிக்குள்ள குற்றவாளியை பிடிக்கிறோம்னு சொன்னாங்க. இப்போ வரை ஒரு துப்பு கூட கிடைக்கல போலீஸூக்கு. இவ்வளவு அலட்சியமான ஒரு போலீஸை பார்த்ததே இல்லை. Tamilnadu CM MK Stalin மக்கள்தான் எங்க பொண்ணுக்காக குரல் கொடுக்கணும். இன்னைக்கு எங்க வீடு பத்திக்கிட்டு எரியுது. நாளைக்கு இங்க இருந்து ஒரு கொள்ளிய எடுத்து உங்க வீட்டையும் கொளுத்துவாங்க...மக்கள்தான் இதையெல்லாம் தட்டிக் கேட்கணும் என்கின்றனர் துக்கம் விசாரிக்க வந்திருந்த உறவினர்கள். 'முறையா புகார் கொடுத்தப்போ உதாசீனப்படுத்திட்டு, இப்போ எதுவுக்கு இவ்வளவு போலீஸூ?' என்கிற கிராமத்தினரின் குமுறலில் அத்தனை நியாயம் இருக்கிறது. ஓர் அரசு இயந்திரத்தின் அலட்சியமும் மெத்தனப்போக்கும் எத்தகைய இழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு வேடநத்தமே சாட்சி. 'காவல்துறையைக் கையில் வைத்துக் கொண்டு தேர்தலுக்காக ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்த முதல்வர், இந்தக் குடும்பத்தின் குமுறலுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?' சம்பவம் நடந்து ஏழாவது நாள் இன்று. இப்போது வரை காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 பேரின் டிஎன்ஏ சேகரிப்பு- `காவல்துறை மீது நடவடிக்கை..' - நீதிமன்றம்
TVK : 'மாமல்லபுரத்தில் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ளும் விஜய்!' - தவெக அப்டேட்
தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார். Vijay விஜய்யின் தவெகவும் NDA வும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரம் பரபரப்பாகியிருக்கிறது. தவெக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் 'நாங்கள் யாருடனும் கூட்டணி பேசவில்லை' என மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த நிகழ்வை நடத்தவிருக்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை இந்த நிகழ்வுக்காக தவெகவினர் அழைக்கவிருக்கின்றனர். Vijay கடந்த முறை தவெக சார்பில் இஃப்தார் நிகழ்வு இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடத்தப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் பேர் கூடி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த முறை மாமல்லபுரத்தில் இந்நிகழ்வை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இஃப்தார் நிகழ்வில் விஜய் அரசியல் பேசமாட்டார். ஆனால், இஸ்லாமியர்களுடன் எப்போதும் துணையாக நிற்பேன் என ஓரிரு வரிகள் பேசினாலும் அதன் மூலம் நிறைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் எனக் கூறுகின்றனர் தவெகவினர்.
Kanchipuram கள நிலவரம் என்ன? | Influencers Meet | IPS Show On Road | #8 | Ground Report
ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?
ஏற்கெனவே சில மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வந்தது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்த நிலையில், ஈரான் போர் தொடங்கியதும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.92-ஐ கடந்தது. அது விரைவில் ரூ.93-ஐ தொட்டுவிடுமோ என்கிற அச்சம் கூட நிலவி வருகிறது. ஈரானிலிருந்து கிட்டத்தட்ட 2,800 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது இந்தியா. ஆனால், அங்கே நடக்கும் போரின் தாக்கம்தான் இந்திய ரூபாய் மதிப்பைத் தற்போது வீழ்ச்சியில் தள்ளி உள்ளது. பொதுவாகப் பார்த்தால், இந்திய ரூபாய் வீழ்ச்சிக்குக் காரணங்கள்... ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு? > ஈரான் போர் தொடங்கியதும், எரிசக்திகளின் விலை கூடி வருகிறது... இன்னும் இதன் விலை கூடுமோ என்கிற அச்சம் வேறு இருந்து வருகிறது. உலக வர்த்தகத்திற்குத் தேவை அமெரிக்க டாலர்கள். அதனால், உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் எரிசக்திகளை வாங்கவும், பாதுகாப்பான முதலீடாகவும் அமெரிக்க டாலர்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன. இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. இதற்கு இந்திய ரூபாயின் மதிப்பைக் கூட்டுவதுபோல எந்த விஷயமும் இப்போது நடக்கவில்லை என்பதும் ஒரு காரணம். > எரிசக்திகளைப் பெருமளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது என்பது உலகம் அறிந்த சேதி. எரிசக்திகளுக்கு இந்தியா பிற நாடுகளைச் சார்ந்து இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம் சந்தை மீதோ, நம் நாணயத்தின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இதனால், இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அவர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகிறார்கள். இப்போது சொல்லப்போகும் காரணம் மிக முக்கியமானது... கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில் மேலே சொன்னதுதான் - இந்தியா எரிசக்தி இறக்குமதிகளுக்குப் பிற நாடுகளைத்தான் சார்ந்துள்ளது. இப்போது கச்சா எண்ணெய், எல்.பி.ஜி உள்ளிட்ட எரிசக்தி விலை சர்வதேச சந்தையில் விலையேறி போய் கிடக்கிறது. அவற்றை வாங்க இந்தியாவிற்கு அமெரிக்க டாலர்கள் வேண்டும். அமெரிக்க டாலர்கள் வலுவாக உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம். அது அப்படி வலுவாகி உள்ளதால், அதிக இந்திய ரூபாய்களைக் கொடுத்துதான் அமெரிக்க டாலர்களை வாங்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி அதிக இந்திய ரூபாயைக் கொடுக்கும் போதே, அங்கே இந்திய ரூபாயின் மதிப்பு அடிபடுகிறது அல்லவா... இதனால்தான், தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு இறங்குமுகம் பக்கமாக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு நிலையாக, ஈரான் போர் முடிய வேண்டும். அது எப்போது முடியும் என்பது அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் கையில் உள்ளது. ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்
Trump: ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும் - ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்
அமெரிக்கா - ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், ஈரானால் முடங்கியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க சீனா உதவ வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் கடந்த இரண்டு வாரங்களில் உலக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், பெட்ரோல் விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் அமெரிக்கப் போர் கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்று கூறிய ட்ரம்ப், தற்போது சுமார் ஏழு நாடுகளிடம் ராணுவ உதவி கோரியுள்ளார். ட்ரம்ப் ஒருபுறம் ட்ரம்ப் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கும் நிலையில், மறுபுறம் பாரிஸ் நகரில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹி லிஃபெங் ஆகியோர் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரம்ப்பின் சீனப் பயணத்திற்கு முன்கூட்டியே ஒரு சுமூகமான சூழலை உருவாக்கவே இந்தப் பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'பைனான்சியல் டைம்ஸ்' இதழுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்திருந்த பேட்டியில், ``மத்திய கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெய்யைச் சீனா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை உறுதி செய்ய நாங்கள் உருவாக்கும் புதிய கூட்டணியில் சீனா இணைய வேண்டும். எனது சீனப் பயணத்திற்கு முன்பாகவே அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய விரும்புகிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துழைக்காவிட்டால், எனது பயணம் தள்ளிவைக்கப்படலாம். அமெரிக்கா Vs சீனா ட்ரம்ப்பின் இந்தக் கோரிக்கை குறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ``ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமானது. இப்பகுதியை அமைதியாக வைத்திருப்பது சர்வதேச சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. அமைதியை நிலைநாட்ட தொடர்புடைய நாடுகளுடன் சீனா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் எனப் பொதுவாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே வர்த்தகப் போரினால் அமெரிக்கா - சீனா இடையே சுங்க வரி மோதல் நிலவி வருகிறது. 2026-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி இலக்கைச் சீனா 4.5% - 5% ஆகக் குறைத்துள்ள நிலையில், எண்ணெய் விநியோகத் தடை நீடித்தால் அது சீனாவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் மௌனம் ஏன்? பெய்ஜிங்கில் இயங்கும் அந்த ரகசிய வங்கி! அமெரிக்கா - ஈரான் போரில் ஒரு ட்விஸ்ட்!
தேனி மாவட்டத்தில் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ள வாக்குச்சாவடி! - காரணம் என்ன?
தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலையில், 5 வாக்காளர்களுக்காக மட்டுமே வாக்குசாவடி அமைக்கபோவதாக அறிவித்திருப்பது வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள வருசாநாடு பகுதியில் உள்ளது வெள்ளிமலை எஸ்டேட். வெள்ளிமலை பகுதி அடர்ந்த வனம் என்பதால் சென்று வருவதற்கு போதுமான சாலை வசதி கிடையாது. இங்கு சென்று வர மூன்று மணி நேரமாகும். இதனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவானது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்த இறுதி வாக்காளர் பட்டியலில் வெள்ளிமலை பகுதியில் செந்தில், ஜெயராணி, பவுல், சுதா, ரோகித். ஆகிய ஐந்து வாக்களர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர் ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம், ஒரு ஓட்டு கூட வீணாக கூடாது என்ற எண்ணத்தில் வெள்ளிமலையில் உள்ள 5 வாக்காளர்களுக்காக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் ஒரு வாக்குச்சாவடி அமைக்கபடவுள்ளது. இந்த வாக்கு சாவடியானது அங்குள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப்பள்ளி கட்டிடடத்தில் அமையவுள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பேசும் போது, 'தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதி, வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயக திருவிழாவின் ஒரு மகுடம்” என தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்களிடம் TVK ஆனந்த் பேசியது ஏன்_
மாவட்ட செயலாளர்களிடம் TVK ஆனந்த் பேசியது ஏன்_
_ திமுகவால் விசிக பெயர் கெட்டுப்போச்சு_- sangatamizhan vck
_ திமுகவால் விசிக பெயர் கெட்டுப்போச்சு_- sangatamizhan vck
விஜயை CORNER செய்றாங்களா _இது என்ன அரசியல்_
விஜயை CORNER செய்றாங்களா _இது என்ன அரசியல்_
விளம்பரம் செய்ய தடை!அமலுக்கு வந்த விதி!தேர்தல் நடத்தை விதிமுறைகள் Explained
விளம்பரம் செய்ய தடை!அமலுக்கு வந்த விதி!தேர்தல் நடத்தை விதிமுறைகள் Explained
சிலுவம்பாளையம் டு சி.எம். நாற்காலி - எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! | முதல் களம் 10
எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! முதல் களம் 10 1989-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது, சேலம் மாவட்டத்தின் ஒரு சிறிய ஊரிலிருந்து ஒருவர் தேர்தல் களத்தில் குதித்தார். அவர் பெயர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பெரும்பாலானோருக்கு அவர் பெயர் கூடத் தெரியாது. ஆனால் அந்தத் தேர்தலில், எடப்பாடி தொகுதியில் அவருக்கு கிடைத்த வெற்றி, திராவிட அரசியல் வரலாற்றில் மிகவும் எதிர்பாராத ஒரு அத்தியாயத்துக்கான தொடக்கமாக அமைந்து, முதலமைச்சர் பதவியிலும் அவரை அமர வைத்தது. தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் மக்களை ஈர்க்கும் கவர்ச்சியும், உரத்த பேச்சும், ஆளுமையும்தான் பெரும்பாலும் ஒருவரை தலைவராக உயர்த்தும். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த உயர்வு, ஒரு வித்தியாசமான எளிமையால் தனித்து நிற்கிறது. இன்று அதிமுக பொதுச் செயலாளராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கைக்கான தொடக்க புள்ளி, அவரது முதல் தேர்தல் வெற்றியிலிருந்துதான் துவங்கியது. எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் தொடங்கிய அரசியல் வாழ்க்கை 1954-ல் சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகேயுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த பழனிசாமி, சாதாரண வெல்லமண்டி வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கினார். எடப்பாடி பழனிசாமி அதிமுக-வில் அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்து சிலுவம்பாளையம் அதிமுக கிளைச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர், எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக உடைந்தபோது, ஜெயலலிதா அணியில் செங்கோட்டையனுடன் இருந்தார். ஒரு வகையில் சொல்லப்போனால், செங்கோட்டையன்தான் பழனிசாமியின் அரசியல் தொடக்கத்தை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். எடப்பாடி முதல் சேலம் மாவட்டம் வரையிலான அமைப்பு பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார் செங்கோட்டையன். அந்தப் பணிகளை எல்லாம் அமைதியாகவும், துல்லியமாகவும், முழுமையாகவும் செய்து முடிக்கும் திறன்தான், பின்னாளில் அவரது அடையாளச் சின்னமாக மாறியது. கோட்டையாக மாறிய எடப்பாடி தொகுதி 1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஜெயலலிதா ஆதரவு அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமே, பழனிசாமியைத் தேர்தல் அரசியலுக்குள் இழுத்தது. கட்சி பிளவுபட்டபோது அவர் ஜெயலலிதா பக்கமே நின்றார். அந்த விசுவாசத்துக்கு பலனாக, 1989 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதிக்கான அதிமுக சீட் அவருக்கே கிடைத்தது. அதிமுகவில் அடிமட்டத் தொண்டராக, கிளைக்கழகச் செயலாளராக பல ஆண்டுகள் உழைத்த எடப்பாடிக்கு, அந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றி, சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில்தான் கிடைத்தது. வெறும் 1,299 வாக்குகள் வித்தியாசத்திலேயே, அவர் திமுக வேட்பாளர் கே.ஆர். நடராஜனை வீழ்த்தினார். இருப்பினும், முதல் முறை போட்டியிட்டு, பெரிதாக அறியப்படாத பின்னணியிலிருந்து வந்த ஒருவருக்கு, அது சாதாரண வெற்றி அல்ல. அதைவிட முக்கியம், எடப்பாடி தொகுதி அன்று முதல், பழனிசாமியின் கோட்டையாக மாறியது. முதல் வெற்றிக்குப் பிறகு அவர் திரும்பவும் 1991-ல் அதே எடப்பாடி தொகுதியில் வென்றார்.1996 தேர்தலின்போது காணப்பட்ட்ட மாநிலம் தழுவிய அதிமுக எதிர்ப்பு அலையில் தோற்றாலும், 2011-ல் மிகப் பெரிய வித்தியாசத்துடனும், 2016-ல் இன்னும் பெரிய வெற்றியுடனும் திரும்பி வந்தார். அதற்கு அவர் பயன்படுத்தியது உரத்த பிரசாரங்களோ திரைப்பட நட்சத்திரக் கவர்ச்சியோ அல்ல. தொகுதிக்குள்ளேயே தங்கி, மக்களோடு மக்களாக நடத்திய அமைதியான அரசியல்தான். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் பிரம்மாண்டமில்லாமல் வாக்குகளைத் திரட்டும் அவரது திறமை, ஜெயலலிதாவின் கண்களில் படத் தொடங்கியது. 2000-களின் தொடக்கத்திலேயே மேற்கு மாவட்டங்களின் கட்சி அமைப்பின் ஒருங்கிணைப்புக்கு அவர் நம்பிக்கைக்குரியவராக உருவெடுத்தார். கட்சிக்குள் சத்தமில்லாமல் வேலையை முடிக்கும் திறன் அவருக்கு அமைச்சரவையிலும் இடத்தைப் பெற்றுத் தந்தது. 2001-ல் பொதுப்பணித் துறை அமைச்சரானார். அந்தப் பொறுப்பையும் சர்ச்சையோ சத்தமோ இல்லாமல் நிர்வகித்தார். அந்த அமைதியான நம்பகத்தன்மைதான் அவரை ஜெயலலிதாவுக்கு அருகில் நெருக்கமாக்கியது. கட்சி விவகாரங்களைக் கவனிக்கும் ஐவர் குழுவில் ஒருவராகவும் அவர் இடம்பிடித்தார். காமராஜர் : அடித்தளமிட்ட சாத்தூர்; `முதல்’ தேர்தலிலேயே அன்னபோஸ்ட்டாக வென்றது எப்படி? | முதல் களம் 06 அமைச்சரவையில் அசைக்க முடியாத இடம் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணத்தில் அடுத்த பெரிய பாய்ச்சல் 2011-ல் வந்தது. அதிமுக மாபெரும் வெற்றியுடன் ஆட்சிக்கு வந்தபோது, ஜெயலலிதா அவரை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக நியமித்தார். அந்தப் பொறுப்பு அவரது அரசியல் பிம்பத்தின் மையமாக மாறியது. எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து பெற்ற வெற்றிகளும், அவரை ஜெயலலிதாவின் மிகவும் நம்பகமான அமைச்சர்களில் ஒருவராக்கின. மாவட்ட அளவிலான உத்தி, தேர்தல் திட்டமிடல் போன்றவற்றில் அவர் கையாளும் பொறுப்புகள் படிப்படியாக அதிகரித்தன. 2016-ல் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்த பின்னர், பொதுப்பணித் துறை உட்பட முக்கிய இலாகாக்களுக்கான அமைச்சராக பொறுப்புகளை ஏற்றபோது, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நான்காவது இடம் அவருடையதாக மாறியது. மேலும் மேலிடத்துக்கான 'ஸ்வீட் பாக்ஸ்' சப்ளையில், ஒழுங்கான கணக்கு வழக்குகளுடன் மிக நேர்மையாக(?) நடந்துகொண்டார் எனவும், இதில் பிற அமைச்சர்களைக் காட்டிலும் எடப்பாடிக்கு மிக நல்ல பெயர் என்கிற பேச்சும் அப்போது கட்சி மட்டத்தில் நிலவியது. இதுவே அவரை ஜெயலலிதாவின் உள் வட்டத்திற்குள் நிரந்தரமாக இழுத்துச் சென்றது. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் மறைவும் முதலமைச்சர் வாய்ப்பும் 2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா மறைந்தபோது, அதிமுக முழுக்க குழப்பமும் பிளவும் சூழ்ந்தன. கட்சியின் கட்டுப்பாட்டை ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஏற்ற நிலையில், சில மாதங்களிலேயே முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலா குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, கூவத்தூரில் நடைபெற்ற பரபரப்பான அத்தியாயத்துக்குப் பின்னர்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பினால் சசிகலா சிறைக்கு செல்லும் சூழல் உருவான நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் பேசி புதிய அதிமுக சட்டசபைத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தார் சசிகலா. சொல்லப்போனால், முதலில் இந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டவர் செங்கோட்டையன்தான். ஆனால், பின்னர் நடந்த பல அரசியல் ஆட்டங்களை தொடர்ந்து அந்த வாய்ப்பு எடப்பாடிக்குப் போனது. அந்தத் தேர்வு அதிமுக வட்டாரத்திலேயே ஏராளமானோருக்கு ஆச்சரியத்தை அளித்தது. 2017 பிப்ரவரி 14 அன்று அவர் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். பிப்ரவரி 18 அன்று, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் வென்றார். ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி... தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம் 08 அதன்பின்னர், ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் சமாதானப்படுத்தி, எஞ்சிய நான்கு ஆண்டுக்கால ஆட்சியையும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு இடையேதான் கொண்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி. இன்னொருபுறம் அதுவரை அதிமுக கட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் மறைமுக அதிகார மையமாக கோலோச்சிய சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களை முற்றிலும் ஓரங்கட்டினார். அடுத்ததாக 2021 தேர்தலுக்குப் பின்னர், தனக்கு அச்சுறுத்தலாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தையும் கட்சியிலிருந்து சாமர்த்தியமாக வெளியேற்றி, அதிமுகவை முற்றிலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். இன்றுவரை இந்த இருதரப்பும், மீண்டும் அதிமுகவுக்குள் நுழைய டெல்லி பாஜக மூலம் எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும், அசைந்து கொடுக்காமல், கட்சியின் தலைமை பீடத்தில் வலுவுடன் அமர்ந்திருக்கிறார் எடப்பாடி. அந்த வகையில், 1989-தேர்தலில், வெறும் 1,299 வாக்குகள் வித்தியாசத்தில் தொடங்கிய ஒரு சிறிய வெற்றிதான் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற உறுப்பினராக்கியது மட்டுமல்ல, முதலமைச்சராகவும், அதிமுகவின் ஒரே ஆளுமையாகவும் உயர்த்தியது. சிலுவம்பாளையத்து அடிமட்ட அதிமுக தொண்டனுக்கு அன்று திறந்த கதவு இன்று வரை மூடப்படவே இல்லை! (தொடரும்) தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09
தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
திருப்பத்தூரில் நேற்று (மார்ச்.15) திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் பாஜகவையும், எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். பாஜக தமிழ்நாட்டில் நேர்வழியில் உள்ளே நுழைய முடியாது என்பதால் பல குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து வருகிறது. ஆனால் அது பலிக்காது. பாஜக சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் இதையெல்லாம் வைத்து மிரட்டி அதிமுக கூட்டணியை உருவாகி இருக்கிறது. மோடி, எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் திருச்சி வந்திருந்தார். 10 நாட்களுக்கு முன்பு மதுரை வந்திருந்தார். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வருவார். ஆனால் எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு வழங்கமாட்டார். பீகாரில் நிதீஷ்குமார் 10 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்தான் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இன்று அவரை ஓரம் கட்டிவிட்டு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 10 முறை முதலமைச்சராக இருந்த பீகார் முதல்வருக்கு இந்த நிலைமை என்றால் காலில் ஊர்ந்து சென்று போய் பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நிலைமை என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஒரு முதுகெலும்புள்ள முதல்வர் இருக்க வேண்டும். அது எடப்பாடியால் நிச்சயமாக முடியாது. எடப்பாடி பழனிசாமி - பிரதமர் மோடி பாஜகவை எதிர்க்க கூடிய சக்தி நமது தலைவருக்கு மட்டும்தான் உள்ளது. மக்களும் அதை உணர்ந்துள்ளனர். ஒரு பழமொழி உள்ளது ஜாடிக்கேத்த மூடி என்று. இப்போது மோடிக்கு ஏற்ற ஒரு அடிமையாக எடப்பாடி இருந்து வருகிறார். நிச்சயம் இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்று பேசியிருக்கிறார்.
விஜய் வீட்டில் NECKLACE-ஆள் வந்த பிரச்னை!;5 நாட்களில் வரப்போகும் UPDATE
விஜய் வீட்டில் NECKLACE-ஆள் வந்த பிரச்னை!;5 நாட்களில் வரப்போகும் UPDATE
ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை விடவில்லை ஈரான். அதன் வழியாக தான் இந்தியா, சீனா என பல நாடுகளுக்கு எரிசக்தி கொண்டு செல்லப்படுகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பலை விடவில்லை என்றால் தொடர் தாக்குதல் என்று ட்ரம்ப் எவ்வளவு சொல்லியும், ஈரான் கேட்பதாக இல்லை. ஹார்முஸ் ஜலசந்தி ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில் ட்ரம்ப் பதிவு இந்த நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளை அழைத்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது... ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் அமெரிக்கா உடன் சேர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தும், பாதுகாப்பாகவும் வைக்கவும் போர் கப்பலை அனுப்பும். ஏற்கெனவே அமெரிக்கா ஈரானின் 100 சதவிகித ராணுவ சக்தியை அழித்துள்ளது. இருந்தும் ஈரான் டிரோன்களை அனுப்பியோ, ஏவுகணைகளை ஏவியும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதனால், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியைக் காக்க கப்பல்களை அனுப்பும். அப்போது தான் ஈரான் அச்சுறுத்தலாக இருக்காது. அதே சமயத்தில், ஹார்முஸ் ஜலசந்தி பாதை பாதுகாப்பாக மீண்டும் மாறும் வரை, அமெரிக்கா ஈரான் கடற்கரை ஓரத்திலும், ஈரான் கப்பல்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும். ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு எந்த நாடும் இன்னும் பதிலளிக்கவில்லை. ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில்
ஈரான் போரின் மையமாக 'ஹார்முஸ் ஜலசந்தி'யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் அனுமதிப்பதில்லை ஈரான். போரினால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறினாலும், இந்த ஒரு விஷயமும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி வருகிறது. இந்தச் சூழலில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்துள்ளது ஈரான். ஹார்முஸ் ஜலசந்தி ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான் ஜெய்சங்கர் பேச்சு இது குறித்து 'ஃபைனான்சியல் டைம்ஸ்'-க்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது... ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். என்னுடைய பேச்சுவார்த்தைக்கு சில நல்ல முடிவுகளும் கிடைத்துள்ளன. இன்னமும் பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கின்றன. அந்தப் பேச்சுவார்த்தை நல்ல முடிவை எட்டினால், அது தொடரும். ஈரான் இந்திய கப்பல்களை அனுமதித்ததற்கு எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. இன்னும் நிறைய இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் இருக்கிறது. அதனால், பேச்சுவார்த்தை இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. இந்தியா எல்.பி.ஜி சிக்கலால் கடுமையாக திண்டாடி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்களில் சில இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எல்.பி.ஜியைக் கொண்டு வருகிறது. ஆக, இந்தக் கப்பல்கள் இந்தியா வர அனுமதிக்கப்பட்டால், இந்தத் தட்டுப்பாடுகளை ஓரளவு நிச்சயம் குறைக்க முடியும். Oscar: Michael B.Jordan, Jessie Buckley: 98-வது ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் யார் யார்? முழு விவரம்
கூட்டணிக்கு தனி ரூட் பிடித்த ஆனந்த்; கடுப்பான விஜய்! தவெக - NDA கூட்டணி(?) நிலவரம் என்ன?
தவெக - NDA இடையே தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தவெக - NDA வுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என அடித்து கூறுகின்றனர் அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகள். நிலவரம் என்னவென இறங்கி விசாரித்தோம். TVK Vijay - தவெக விஜய் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் கட்சியின் மா.செக்களுடன் வீடியோ வழி ஒரு அவசர கூட்டத்தை நடத்தியிருந்தார். அதில்தான், 'நாம் கூட்டணிக்கு செல்லலாமா வேண்டாமா?, கூட்டணிக்கு சென்றால் உங்களில் பல பேருக்கு சீட் கிடைக்காதே?' போன்ற கேள்விகளை ஆனந்த் கேட்டிருந்தார். மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானோர் கூட்டணிக்கு செல்ல வேண்டுமென்றே விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்தத் தகவல் வெளியான பிறகுதான் தவெக - NDA கூட்டணி என்கிற செய்தி தீயாக பரவத் தொடங்கியது. அரசியல் வட்டாரமே பரபரப்பானது. இப்போது தவெக - NDA கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை எனக் கூறும் சீனியர்கள் சிலரிடம் ஆனந்த் நடத்திய மா.செக்கள் கூட்டத்தைப் பற்றி கேட்டோம். 'ஆனந்த் அந்த கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு நேராக சென்று தலைவரைத்தான் சந்தித்தார். அவர் அலுவலகத்துக்கு வரும் முன்பே தவெக - NDA கூட்டணி என்கிற செய்தி எல்லா பக்கமும் பரவி விட்டது. அதை கண்டு தலைவரே டென்ஷனாகிவிட்டார். Bussy Anand 'ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க. அவங்கதான் நம்ம கூட கூட்டணிக்கு விரும்புறாங்க. நாம ஒண்ணும் கூட்டணிக்கு விருப்பப்படல. கூட்டத்துல பேசுற விஷயங்கள் அப்படியே நியூஸ் ஆகுற அளவுக்குதான் ஒரு கூட்டத்தை நடத்துவீங்களா? இனிமே நீங்களா எதுவும் செய்ய வேணாம்...' என ஆனந்திடம் தலைவர் உஷ்ணமாகிவிட்டார். அதனால்தான் மறுநாளே தி.நகரில் 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்!' என்பதை பிரதானப்படுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை நடத்தினார். அதில் மைக் பிடித்து தலைவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றும் பேசினார்.' என்கின்றனர் அந்த சீனியர்கள். ஆனந்த் ஆட்டத்தின் பின்னணி ஆனந்த் கூட்டணிக்கு தனி ரூட் பிடிக்க காரணம் என்னவென்பதை அறிய கட்சியின் உள் விவகாரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம். 'கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் இதற்கு முக்கிய காரணம். ஜான், ஆதவ் போன்றோருக்கு NDA வுடன் கூட்டணி செல்ல விரும்பவில்லை. ஆனால், ஆனந்துக்கு அந்த தேவை இருக்கிறது. கட்சிக்குள் ஆதவ்வுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அவருக்கு உறுத்தலாக இருக்கிறது. ஆதவ் தனி ஆவர்த்தனம் செய்வதாக ஆனந்த் தரப்பு நினைக்கிறது. போதாக்குறைக்கு விஜய் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியின் முழு பொறுப்பையும் ஆதவ் ஏற்றுக்கொண்டு விட்டார். அத்தோடு சேர்த்து பெரம்பூருக்கு அருகேயே இருக்கும் வில்லிவாக்கம் தொகுதியையும் கேட்டு வாங்கிவிட்டார். Aadhav Arjuna தலைவர் பெரம்பூரில் உண்டாக்கும் தாக்கத்திலேயே வில்லிவாக்கத்தில் தன்னால் வென்றுவிட முடியுமென ஆதவ் கணக்கு போடுகிறார். ஆதவ் வென்று நாம் தோற்றால் அது கௌரவக் குறைச்சல் என ஆனந்த் நினைக்கிறார். அதனால்தான் தி.நகர் தொகுதியில் எப்படியாவது வெல்ல வேண்டுமென எல்லா வழிகளிலும் முயல்கிறார். தி.நகரில் பாஜகவுக்கான வாக்குவங்கி கணிசமாக இருக்கிறது. பாஜக நிர்வாகிகளின் உதவியை நாடினால் தன்னால் வெல்ல முடியுமென ஆனந்த் நினைக்கிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழியே அதற்கான முயற்சியிலும் இறங்கினார். முதல்வர் ரங்கசாமி, விஜய் | கோப்புப் படம் அந்த லைனில்தான் தவெக - NDA கூட்டணியையும் முன்னெடுக்க முயன்றிருக்கிறார் ஆனந்த். ஆனால், தலைவர் ஆனந்தையெல்லாம் தாண்டி அவருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு சிலருடன்தான் கூட்டணி பற்றி பேசி காய்களை நகர்த்தி வருகிறார். அது புரியாமல் ஈகோ மோதலில் ஆனந்த் அவசரகதியில் நடத்திய மா.செக்கள் கூட்டம்தான் அத்தனை சர்ச்சைக்கும் காரணம்' என்கின்றனர். தலைவருக்கே விருப்பமில்லை 'இப்படியொரு கூட்டணிக்கு செல்ல தலைவருக்கே விருப்பமில்லை. குறுகிய காலத்தில் அந்த கூட்டணி நல்ல பலனை கொடுப்பதாக இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் தன்னுடைய அரசியலுக்கே அது பிரச்னையாக அமையும் என தலைவர் நினைக்கிறார்' எனக் கூறும் விஜய்க்கு நெருக்கமான நிர்வாகிகள், 'சூழலை உணர்ந்து நெளிவு சுழிவு அறிந்தே காய்களை நகர்த்த வேண்டும் என்பதால்தான் NDA வுக்கு நேரடியாக 'நோ' சொல்லவில்லை. மாறாக, 90 சீட்டுகள் முதல்வர் பதவி என்றுதான் எங்களின் டிமாண்டையே முன்வைத்தோம். அதனால்தான் டெல்லி எங்களை கூட்டணிக்குள் இழுக்க முயன்றும் எடப்பாடி அதற்கான முன்னெடுப்புகள் எதையும் செய்யாமல் இருக்கிறார். 90 சீட்டுகள் + முதல்வர் பதவி என்பதே சுருக்கமாக 'நோ' தான் எடப்பாடி உணர்ந்திருக்கிறார்' என்கின்றனர் அந்த நிர்வாகிகள். TVK Vijay | விஜய் எப்படியும் கூட்டணிக்கு செல்லப்போவதில்லை என்பதை தன்னுடைய தொண்டர்களுக்கு கடத்தும் விதமாகத்தான் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறும்போதே கார் மேல் ஏறி கையசைத்து வெற்றி முத்திரையை விஜய் காட்டி சென்றதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். விஜய் தலையை சுற்றி மூக்கை தொட்டு 'நோ' சொன்னாலும் டெல்லி மேலிடம் இன்னும் இந்த கூட்டணியை சாத்தியப்படுத்தி விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது. 'மார்ச் 30' தான் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது. அதுவரை விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க நேரமிருப்பதாக நினைக்கிறது பாஜக! `முதலமைச்சராவதற்கு தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்!- கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் Loading…
ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்
ஈரான் போர் 17-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என எந்தப் பிரிவினரும் இந்தப் போரை முடிவை நோக்கி நகர்த்தவில்லை. ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் போரும், தாக்குதலும் தொடர கச்சா எண்ணெய் விலை கூடிக்கொண்டே வருகிறது. இன்னொரு பக்கம் எல்.பி.ஜி உள்ளிட்ட பல எரிசக்தி பிரச்னைகளை உலகம் சந்தித்து வருகிறது. நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் இந்த நிலையில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசியுள்ளனர். அவர்கள், ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டால், வரும் வாரங்களில் உலக எரிசக்தி சந்தைகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளனர். அப்பாஸ் அரக்சி கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான் தயாராக இல்லாத ஈரான் தற்போதைய சூழலில், ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறார். ஆனால், ஈரான் அதற்கு தயாராக இல்லை. பேச்சுவார்த்தை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காரணம் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்திய போது, நாங்கள் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு தான் இருந்தோம் என்று தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி
விஜய்யை NDA கூட்டணியில் இணைய சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினேனா?- பவன் கல்யாண் விளக்கம்
2026 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என்ற நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி போன்ற கட்சிகள் இணைந்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் இப்படியான நிலையில் திமுக கூட்டணியில் 19 கட்சிகள் இணைந்திருக்கிறது. இதனால் திமுகவை வீழ்த்த விஜய்யின் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக டெல்லி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே தவெக தலைவர் விஜய்யுடன் திரைத்துறையில் அவரது நண்பரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நீங்கள் விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? என்று பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “அப்படியெல்லாம் இல்லை. நான் விஜய்யிடம் பேசவில்லை. நானும் அந்த செய்தியை கேள்விப்பட்டேன். எதற்கு இப்படி பரப்பினார்கள் என்பது தெரியவில்லை. நான் விஜயை சந்தித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. சமீபத்தில் நான் விஜயிடம் பேச வில்லை. எங்களுக்குள் எந்தவித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார். பவன் கல்யாண் தொடர்ந்து, தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தான் விஜய்க்கு சரியான இடமா? என்ற கேள்விக்கு, “எனக்கு தெரியவில்லை. கூட்டணி என்பது கட்சி தலைவர்களை மட்டும் கொண்டது கிடையாது. அது அவர்களின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவால் அமைவது. அது தனிப்பட்ட விஷயம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.
விஜய்யை NDA கூட்டணியில் இணைய சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினேனா?- பவன் கல்யாண் விளக்கம்
2026 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என்ற நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி போன்ற கட்சிகள் இணைந்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் இப்படியான நிலையில் திமுக கூட்டணியில் 19 கட்சிகள் இணைந்திருக்கிறது. இதனால் திமுகவை வீழ்த்த விஜய்யின் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக டெல்லி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே தவெக தலைவர் விஜய்யுடன் திரைத்துறையில் அவரது நண்பரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நீங்கள் விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? என்று பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “அப்படியெல்லாம் இல்லை. நான் விஜய்யிடம் பேசவில்லை. நானும் அந்த செய்தியை கேள்விப்பட்டேன். எதற்கு இப்படி பரப்பினார்கள் என்பது தெரியவில்லை. நான் விஜயை சந்தித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. சமீபத்தில் நான் விஜயிடம் பேச வில்லை. எங்களுக்குள் எந்தவித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார். பவன் கல்யாண் தொடர்ந்து, தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தான் விஜய்க்கு சரியான இடமா? என்ற கேள்விக்கு, “எனக்கு தெரியவில்லை. கூட்டணி என்பது கட்சி தலைவர்களை மட்டும் கொண்டது கிடையாது. அது அவர்களின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவால் அமைவது. அது தனிப்பட்ட விஷயம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.
கோவில்பட்டி: `யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி, திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி!' - வைகோ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் த.வெ.க இணைந்தால் தி.மு.கவுக்கு பாதிப்பா என்று கேட்கிறீர்கள். அத்தைக்கு மீசை முளைத்த பிறகுதான் சித்தப்பா என்று சொல்ல முடியும். யூகங்கள், விருப்பங்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது? புதிதாக உருவாக்கப்பட்ட த.வெ.க., பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு செல்லுமா என்று தெரியாது. பிரதமர் நரேந்திர மோடி ஆனால், ஒரு வாரத்திற்குள் நிலைமை தெரியும். யார் யாரோடு கூட்டணி வைக்கிறார் என்று. யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி, என்ன முயற்சி செய்தாலும் சரி, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. நான் வழக்கம் போல பிரசாரத்தில் ஈடுபடுவேன். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் நாற்காலியில் மோடி உட்கார வாய்ப்பே கிடையாது. கோவில்பட்டி சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடப் போவதாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு சதவீதம்கூடக் கிடையாது. நடிகர் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல ஒரு பண்பாளர். யாரையும் எப்போதும் புண்படுத்திப் பேச மாட்டார். ரொம்ப யோசனை செய்து அரசியல் நமக்கு சரிபட்டு வராது என்று முடிவெடுத்து விட்டார். வைகோ கற்பனையாக புதுக்கட்சிக்காரர்கள் ஏதாவது சொல்ல வேண்டுமென அவரைப்பற்றி பேசுகின்றனர். தனியாக கேட்டால் புதிய கட்சி தொடங்கியவரைப் பற்றிச் சொல்வார். தலைமைத் தேர்தல் அதிகாரியை நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானம் சரியான நடவடிக்கை. அது நடந்தால் மகிழ்ச்சி” என்றார். Loading…
கோவில்பட்டி: `யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி, திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி!' - வைகோ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் த.வெ.க இணைந்தால் தி.மு.கவுக்கு பாதிப்பா என்று கேட்கிறீர்கள். அத்தைக்கு மீசை முளைத்த பிறகுதான் சித்தப்பா என்று சொல்ல முடியும். யூகங்கள், விருப்பங்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது? புதிதாக உருவாக்கப்பட்ட த.வெ.க., பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு செல்லுமா என்று தெரியாது. பிரதமர் நரேந்திர மோடி ஆனால், ஒரு வாரத்திற்குள் நிலைமை தெரியும். யார் யாரோடு கூட்டணி வைக்கிறார் என்று. யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி, என்ன முயற்சி செய்தாலும் சரி, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. நான் வழக்கம் போல பிரசாரத்தில் ஈடுபடுவேன். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் நாற்காலியில் மோடி உட்கார வாய்ப்பே கிடையாது. கோவில்பட்டி சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடப் போவதாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு சதவீதம்கூடக் கிடையாது. நடிகர் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல ஒரு பண்பாளர். யாரையும் எப்போதும் புண்படுத்திப் பேச மாட்டார். ரொம்ப யோசனை செய்து அரசியல் நமக்கு சரிபட்டு வராது என்று முடிவெடுத்து விட்டார். வைகோ கற்பனையாக புதுக்கட்சிக்காரர்கள் ஏதாவது சொல்ல வேண்டுமென அவரைப்பற்றி பேசுகின்றனர். தனியாக கேட்டால் புதிய கட்சி தொடங்கியவரைப் பற்றிச் சொல்வார். தலைமைத் தேர்தல் அதிகாரியை நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானம் சரியான நடவடிக்கை. அது நடந்தால் மகிழ்ச்சி” என்றார். Loading…
Sivagangai மாவட்ட தொகுதிகள் | DMK, ADMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு? | TN Elections 360 updates
Sivagangai மாவட்ட தொகுதிகள் | DMK, ADMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு? | TN Elections 360 updates
`முதலமைச்சராவதற்கு தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்!- கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன்
தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “டெல்லி சிபிஐ விசாரணை தொடர்பாக தவெக தலைவர் விஜய் அவரது பாணியில் நேற்று உரிய பதிலை கொடுத்துவிட்டார். செங்கோட்டையன் விஜய் செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வரவேற்கிறார்கள். தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் பயத்துடன் வாழும் சூழ்நிலை நிலவுகிறது. அதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்கிற மன நிலையில் மக்கள் உள்ளனர். சட்டம் ஒழுங்கு பாதிப்பு அந்த மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் தவெகவில் உள்ளனர். தவெக - தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து தற்போதுவரை எந்த கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை. விஜய் முதலமைச்சராக வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். துணை முதலமைச்சர் பதவியை எல்லாம் ஏற்பதற்கான வாய்ப்பே இல்லை. விஜய் எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்பவர்களுடன் கூட்டணி என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் அதிகளவு ஆர்ப்பரிக்கிறார்கள். இப்படிப்பட்ட எழுச்சியை நான் பார்த்ததில்லை” என்றார்.
`முதலமைச்சராவதற்கு தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்!- கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன்
தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “டெல்லி சிபிஐ விசாரணை தொடர்பாக தவெக தலைவர் விஜய் அவரது பாணியில் நேற்று உரிய பதிலை கொடுத்துவிட்டார். செங்கோட்டையன் விஜய் செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வரவேற்கிறார்கள். தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் பயத்துடன் வாழும் சூழ்நிலை நிலவுகிறது. அதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்கிற மன நிலையில் மக்கள் உள்ளனர். சட்டம் ஒழுங்கு பாதிப்பு அந்த மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் தவெகவில் உள்ளனர். தவெக - தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து தற்போதுவரை எந்த கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை. விஜய் முதலமைச்சராக வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். துணை முதலமைச்சர் பதவியை எல்லாம் ஏற்பதற்கான வாய்ப்பே இல்லை. விஜய் எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்பவர்களுடன் கூட்டணி என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் அதிகளவு ஆர்ப்பரிக்கிறார்கள். இப்படிப்பட்ட எழுச்சியை நான் பார்த்ததில்லை” என்றார்.
EVM எப்படி செயல்படுகிறது? | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் | Live Demonstration | IPS Show #7
EVM எப்படி செயல்படுகிறது? | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் | Live Demonstration | IPS Show #7
கேரள சிபிஎம் வேட்பாளர்கள்: முதல்வர் தர்மடத்தில் போட்டி; நடிகர் முகேஷுக்கு சீட் மறுக்க காரணம் என்ன?
கேரளம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. நேற்று தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாநிலத் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி செண்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சி.பி.எம் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். கட்சிச் சின்னத்தில் போட்டியிடும் 75 தொகுதிகள் மற்றும் அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் 6 தொகுதிகள் என 81 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். கேரளம் மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 86 தொகுதிகளில் சி.பி.எம் போட்டியிடுகிறது. மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் முதல்வர் பினராயி விஜயன் சிட்டிங் தொகுதியான தர்மடத்தில் போட்டியிடுகிறார். சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் போட்டியிடவில்லை. ஆனால், அவரது மனைவி பி.கே.சியாமளா தளிப்பறம்பு தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளம்: சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்.பி-க்களுக்கு சீட் இல்லை கறார் காட்டிய ராகுல் காந்தி! கொல்லத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான நடிகர் முகேசுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. சினிமா படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்தாகப் புகார் எழுந்ததால் சீட் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஜெயமோகன் என்பவர் போட்டியிடுகிறார். நடிகர் முகேஷ், கே.கே.ஷைலஜா இரண்டு முறை தலசேரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஏ.எம்.சம்சீருக்கு இந்த முறை சீட் வழங்கவில்லை. முன்னாள் அமைச்சர் கே.கே.சைலஜா மட்டனூர் தொகுதியில் இப்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார். அவரை அந்தத் தொகுதியில் இருந்து மாற்றி காங்கிரஸ் கைவசம் உள்ள பேராவூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதுபோன்று சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளா: ஜி.சுதாகரன் சிபிஎம் கட்சியில் இருந்து விலக முடிவா? சமாதானம் பேசும் தலைவர்கள்; பின்னணி என்ன?
கேரள சிபிஎம் வேட்பாளர்கள்: முதல்வர் தர்மடத்தில் போட்டி; நடிகர் முகேஷுக்கு சீட் மறுக்க காரணம் என்ன?
கேரளம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. நேற்று தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாநிலத் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி செண்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சி.பி.எம் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். கட்சிச் சின்னத்தில் போட்டியிடும் 75 தொகுதிகள் மற்றும் அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் 6 தொகுதிகள் என 81 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். கேரளம் மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 86 தொகுதிகளில் சி.பி.எம் போட்டியிடுகிறது. மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் முதல்வர் பினராயி விஜயன் சிட்டிங் தொகுதியான தர்மடத்தில் போட்டியிடுகிறார். சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் போட்டியிடவில்லை. ஆனால், அவரது மனைவி பி.கே.சியாமளா தளிப்பறம்பு தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளம்: சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்.பி-க்களுக்கு சீட் இல்லை கறார் காட்டிய ராகுல் காந்தி! கொல்லத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான நடிகர் முகேசுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. சினிமா படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்தாகப் புகார் எழுந்ததால் சீட் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஜெயமோகன் என்பவர் போட்டியிடுகிறார். நடிகர் முகேஷ், கே.கே.ஷைலஜா இரண்டு முறை தலசேரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஏ.எம்.சம்சீருக்கு இந்த முறை சீட் வழங்கவில்லை. முன்னாள் அமைச்சர் கே.கே.சைலஜா மட்டனூர் தொகுதியில் இப்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார். அவரை அந்தத் தொகுதியில் இருந்து மாற்றி காங்கிரஸ் கைவசம் உள்ள பேராவூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதுபோன்று சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளா: ஜி.சுதாகரன் சிபிஎம் கட்சியில் இருந்து விலக முடிவா? சமாதானம் பேசும் தலைவர்கள்; பின்னணி என்ன?
Iran War: அம்பலமான Trump பொய்கள் | Kharg Island | Hormuz Strait | Decode
Iran War: அம்பலமான Trump பொய்கள் | Kharg Island | Hormuz Strait | Decode
கோவை: பள்ளி மாணவர்களுக்காகத் தயாராகும் வண்ணமயமான சாலைகள்! | Photo Album
வண்ணமயமான கோவை சாலை வண்ணமயமான கோவை சாலை வண்ணமயமான கோவை சாலை வண்ணமயமான கோவை சாலை வண்ணமயமான கோவை சாலை வண்ணமயமான கோவை சாலை வண்ணமயமான கோவை சாலை வண்ணமயமான கோவை சாலை வண்ணமயமான கோவை சாலை வண்ணமயமான கோவை சாலை கோவை தெற்கு தொகுதியைக் கைகழுவும் பா.ஜ.க... கொந்தளிக்கும் இந்து இயக்கங்கள்!
தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை... எதற்காக இந்த நீண்ட இடைவெளி?
தேர்தல் அறிவிப்பு : தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி, ஒரே கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதிக்கும், அசாமில் ஏப்ரல் 9-ம் தேதியிலும், கேரளாவிலும் ஏப்ரல் 9-ம் தேதியிலும், புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதியிலும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நான்கு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் முடிவுகளை மே நான்காம் தேதி அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தேர்தல் தேதி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேட்புமனு தாக்கல் 30.03.2026 தொடங்கி 06.04.2026 தேதி வரை நடைபெறுகிறது. அடுத்ததாக வேட்புமனு பரிசீலனை 07.04.2026 தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திருப்பப் பெறுவதற்கான கடைசி நாள் 09.04.2026. இதனைத் தொடர்ந்து 23.04.2026 தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து மே 04-ம் தேதி நடைபெறவுள்ளது. மூன்று இடங்களுக்கு வெகு சீக்கிரம் தேர்தலை நடத்திவிட்டு, தமிழ்நாடு, மேற்கு வங்கத்துக்கு மிகவும் தாமதமாகத் தேர்தலை நடத்துவதிலும், ஐந்து நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையை நடத்துவதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. முன்-பின்னாக தேர்தல் தேதி: இரண்டு மாநிலம் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு ஒரு தேதியிலும் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மற்ற இரண்டு மாநில தேர்தலையும் நடத்துவது தொடர்பாகவும். வாக்கு எண்ணிக்கையை ஐந்து நாள்களுக்குப் பிறகு நடத்துவது தொடர்பாகவும் விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். வழக்கமாகப் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களுக்கு ஒரே நாளில் தான் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அசாம், கேரளா, புதுச்சேரிக்கு ஒன்பதாம் தேதியே தேர்தலை வைத்துவிட்டு, பின்னர் நீண்ட இடைவெளி விட்டு 23-ம் தேதி தமிழ்நாட்டுக்கும் நடைபெறுகிறது. வாக்காளர்கள் இந்த விவகாரத்தில் அலசி ஆராய்வதற்கு முன்பாகவே தேதியே பார்த்தாலே பற்பல சந்தேகங்களை எழுப்புகிறது. அசாம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இப்போதுவரை உட்கட்சி பூசல் தொடங்கி காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தலுக்கு முழுவதுமாக தயாராகவில்லை. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் பாஜகவுடன் இப்போதுவரை விஜய் கூட்டணிக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடந்து வருகிறது. இங்கு அவர்களுக்கு நாட்கள் தேவைப்படுவதால் பின்னரும், மற்ற இடங்களில் முன்னதாகவும் தேர்தல் தேதியை அறிவித்திருப்பதாகவே கருத முடிகிறது என்றார்கள் விளக்கமாக. ஐந்து நாள் இடைவெளி: தேர்தல் நடைபெறுவது ஒருபுறமிருக்க, தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கும் ஐந்து நாள்கள் இடைவெளி இருப்பது தொடர்பாகத் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் விசாரித்தோம். வாக்கு எண்ணிக்கைக்குச் சிறிய இடைவெளி இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 06-ம் தேதியே தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதியே வெளியானது. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் கடந்த முறை எட்டு சுற்றுகளாக நடைபெற்ற தேர்தல் இம்முறை இரண்டே இரண்டு சுற்றுகளாக மட்டுமே நடைபெறுகிறது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்துக்கும், 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டுக்கும் மற்ற மூன்று இடங்களில் தேர்தல் நடத்துவதைப் போல நடத்திவிட முடியாது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடம் தொகுதிகள் அதிகமிருக்கும் மாநிலங்களுக்குக் கூடுதல் அவகாசம் என்பது கட்சிகளுக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் அவசியம். அதே நேரத்தில் முக்கியமாக இம்முறை மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடத்தும்போது ஒரு சில இடங்களில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அங்கே மறு வாக்குப் பதிவு நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கான நேரமாகவே இந்த ஐந்து நாள்களைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், மற்ற மூன்று இடங்களில் ஏப்ரல் தொடக்கத்திலேயே தேர்தல் முடிவடைந்துவிடுகிறது. 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவையும், 126 தொகுதிகளைக் கொண்ட அசாமையும், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியையும், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்கிறார்கள்.
S P Velumani Vs Senthil Balaji: உச்சத்தில் அதிகாரப் போட்டி, Coimbatore-ல் கொட்டும் பரிசு மழை!
நெல்லை: மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள்! உடனடியாக அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்!
நெல்லை: மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள்! உடனடி அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்!
50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது! - அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை பதவிக்காலம் வருகிற மே, ஜூன் மாதங்களில் முடிவுக்கு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். மேற்கு வங்கத்தில் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். எனத் தெரிவித்திருக்கிறார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன் முதல் கட்டமாக தலைமை செயலகத்திலுள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் விதிமுறைகள் என்னென்ன? அரசு செலவில் அரசியல் விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்-க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும். விமர்சனங்கள் கொள்கைகள், செயல்திறன் மற்றும் திட்டங்களை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்; தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தக்கூடாது. ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு சார்பாக பக்கபலமாகப் பயன்படுத்தப்படக்கூடாது. லஞ்சம், மிரட்டல், போலி வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பிரச்சாரம் செய்வது போன்ற சட்டவிரோத செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் படங்கள் அகற்றம் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். ஒலிபெருக்கி அல்லது கூட்டங்களுக்கான அனுமதி பெற வேண்டும். அமைதியைப் பேணுவதற்கும் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கும் காவல்துறை அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். வாக்காளர்களை செல்வாக்கு செலுத்தக்கூடிய நிதி உதவிகள், புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு உறுதிமொழிகள் அல்லது தற்காலிக நியமனங்கள் போன்ற அறிவிப்புகள் வெளியிடக்கூடாது. அரசு வாகனங்கள், விடுதிகள், டாக் பங்களாக்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட அரசு வசதிகள் அனைத்து கட்சிகளுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.
50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது! - அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை பதவிக்காலம் வருகிற மே, ஜூன் மாதங்களில் முடிவுக்கு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். மேற்கு வங்கத்தில் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். எனத் தெரிவித்திருக்கிறார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன் முதல் கட்டமாக தலைமை செயலகத்திலுள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் விதிமுறைகள் என்னென்ன? அரசு செலவில் அரசியல் விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்-க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும். விமர்சனங்கள் கொள்கைகள், செயல்திறன் மற்றும் திட்டங்களை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்; தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தக்கூடாது. ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு சார்பாக பக்கபலமாகப் பயன்படுத்தப்படக்கூடாது. லஞ்சம், மிரட்டல், போலி வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பிரச்சாரம் செய்வது போன்ற சட்டவிரோத செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் படங்கள் அகற்றம் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். ஒலிபெருக்கி அல்லது கூட்டங்களுக்கான அனுமதி பெற வேண்டும். அமைதியைப் பேணுவதற்கும் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கும் காவல்துறை அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். வாக்காளர்களை செல்வாக்கு செலுத்தக்கூடிய நிதி உதவிகள், புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு உறுதிமொழிகள் அல்லது தற்காலிக நியமனங்கள் போன்ற அறிவிப்புகள் வெளியிடக்கூடாது. அரசு வாகனங்கள், விடுதிகள், டாக் பங்களாக்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட அரசு வசதிகள் அனைத்து கட்சிகளுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.
Assembly Elections: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!- முழு விவரம்
தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா என நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் தேதியை இன்று அறிவிப்பதாக தகவல் வந்திருந்தது. Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர் இந்த 5 மாநிலங்களின் ஆட்சிகாலம் வருகிற மே மற்றும் ஜூன் மாதங்களில் தேதிகளில் முடிவடைகிறது. தேர்தல் சட்டங்களின்படி, ஆணையம் அந்தத் தேதிகளுக்கு முன்பாகவே தேர்தல்களை நடத்தவிருக்கிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதி தொடர்பாக, மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள். நீங்கள் வாழ்வில் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றை ஏற்கத் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் வாக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் எதிர்காலம். லட்சக்கணக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுடன் இணைந்து, சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, அனைவருக்கும் அணுகக்கூடிய மற்றும் அமைதியான தேர்தல்கள் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் உறுதி செய்திருக்கிறது. Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், தெளிவான சின்னங்கள்,தன்னார்வலர்களின் உதவி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்களிக்கும் அறைக்குள் போதுமான வெளிச்சமும், போதிய நிழலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நமது மதிப்பிற்குரிய மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவனிப்பும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய ஏற்பாடுகள் மூலம் அனைத்து வாக்காளர்களும் எளிதாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்ய ஆணையம் முழு அக்கறை செலுத்தி வருகிறது. ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்று யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும்.மேற்கு வங்கத்தில் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். எனக் கூறியிருக்கிறார். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 6-ம் தேதி என அறிவித்திருக்கிறார்கள். அந்த வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவித்திருக்கிறார்.
'பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்?' - திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது விஜிலென்ஸ் FIR
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணி பேரூராட்சி திமுக சேர்மன் சாந்தி. இவரது கணவர் சேகர், திமுக நகர செயலாளர். சேகரின் தந்தையும், சாந்தியின் மாமனாருமான செல்வராஜ் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக-வின் முன்னாள் மாவட்ட துணை செயலாளர். கட்சியில் சீனியரான செல்வராஜ், பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகப் புகார் எழுந்தது. சேர்மன், தன் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கு பேரூராட்சியில் நடைபெறும் ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கக் கூடாது என்பதை மீறி கணவர் சேகருக்கும், செல்வராஜிக்கும் பல்வேறு ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கியதாகச் சொல்லப்படுகிறது. குடும்பமாகச் சேர்ந்து பல்வேறு ஊழல்களைச் செய்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரான ஒப்பந்ததாரர் செந்தில்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆறு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க, பேரூராட்சி இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் பேரூராட்சியில் ஆய்வுகள் செய்தனர். இதையடுத்து பேரூராட்சி இயக்குநரக உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது என்கிறார்கள். பின்னர், செயல் அலுவலர் பழனிவேலுக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவரை டிரான்ஸ்பர் செய்தனர். இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரூராட்சியில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் பேரூராட்சியில் நடைபெற்ற ஊழல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நீலகண்டன் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் மனு அளித்தார். மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஆறு வார காலத்திற்குள் விசாரணை நடத்தி ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நீலகண்டனிடம் நடத்திய விசாரணையில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களைக் கொடுத்தாகச் சொல்லப்படுகிறது. மேலும் பேரூராட்சியில் விசாரணை நடத்தி முறைகேடு நடந்திருப்பதை விஜிலென்ஸ் உறுதி செய்ததாகச் சொல்கிறார்கள். பேராவூரணி பேரூராட்சி தலைவரின் மாமனார் செல்வராஜ் ஆனாலும் ஆளும் கட்சியினர் முறைகேடு புகாரில் சிக்கியிருப்பதால் மேல் மட்டத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். இதைதொடர்ந்து மீண்டும் நீலகண்டன், லஞ்ச ஒழிப்பு துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் தவறு செய்திருக்கும் பட்சத்தில் நான்கு வாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து மீண்டும் விசாரணையில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார், திமுக சேர்மன் சாந்தி, அவரது கணவர் சேகர், மாமனார் செல்வராஜ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து கடந்த 11ம் தேதி செயல் அலுவலர் பழனிவேல், சேர்மன் சாந்தி, சேகர், செல்வராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர்: மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி; உதவி பொறியாளர் மீது வழக்கு சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் திமுக சேர்மன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் வட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதை வைத்து பிரசாரத்தை முன்னெடுப்பார்கள் என்பதால் பேராவூரணி திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர். இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். ''சாலை, பாலம், ப்ளீச்சிங் பவுடர், மண் அடித்தல் உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. சாந்தி, சேகர், செல்வராஜ் ஆகியோர் சேர்ந்து அதிகாரத்தின் மூலம் அழுத்தம் கொடுத்து ஊழல் செய்திருப்பதாகப் புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சேர்மன் சாந்தி, இவரது கணவர் சேகர், மாமனார் செல்வராஜ், செயல் அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செயல் அலுவலர் பழனிவேல் முதல் குற்றவாளியாக வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றனர். திமுக சேர்மன் சாந்தி சேகர் இது குறித்து செல்வராஜிடம் விளக்கம் கேட்டோம். ''லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எதிர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் முறைகேடு நடந்திருப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சேர்மன் கூட்டுச் சதி செய்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. எங்கள் மீது போடப்பட்ட எப்ஐஆர் தவறு என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. முழுக்க இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடக்கும் சதி. நாங்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை, பேரூராட்சியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைச் சட்டப்படி நிரூபிப்போம்'' என்றார். திருச்சி: திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்! - பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்
உயிருடன் இருந்தால் விடமாட்டோம் - நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!
கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் 14 மாதப் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர். 'இந்தக் கொடூரக் கொலைக்கு பழிவாங்குவோம்' எனக் குறிப்பிட்ட ஈரான், தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருக்கும் பகுதிகள் குறிவைத்து தாக்கப்பட்டது. இதற்கிடையில், 'ஈரான் தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டார்' என ஈரான் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. 6 விரலுடன் நெதன்யாகு இந்தக் கூற்றை முழுமையாக மறுத்த இஸ்ரேல், நெதன்யாகு உரையாற்றுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஈரான், ``இந்த வீடியோவில் நெதன்யாகுவுக்கு 6 விரல் இருப்பது போல காட்சிகள் வருகின்றன. இது ஏஐ வீடியோ எனக் குறிப்பிட்டது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ``பிரதமர் நெதன்யாகு நலமாக இருக்கிறார். இவை அனைத்தும் முற்றிலும் வதந்திகள் என விளக்கம் அளித்துள்ளது. இதற்கு பதிலளித்திருக்கும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை' (IRGC) ``நெதன்யாகு குழந்தைகளைக் கொல்லும் குற்றவாளி... எங்கள் தலைவரின் குடும்பத்தைச் சிதைத்த அவரை வேட்டையாடாமல் விடமாட்டோம். ஒருவேளை அவர் கொல்லப்படவில்லை என்றால். அவரை தேடி வேட்டையாடுவோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஈரானின் இந்த நேரடி கொலை மிரட்டல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் மேகங்களாகச் சூழ்ந்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ? - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?
''காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதை தோழமைக்கட்சிகள் விவாதமாக்காதீர்கள்- செல்வப்பெருந்தகை
இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆனால் இன்னும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் முடிவுக்கு வந்தபாடில்லை. குறிப்பாக திமுக கூட்டணியின் முக்கிய கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு இழுபறியாகவே இருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார். ஸ்டாலின், செல்வப்பெருந்தகை இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளார்களைச் சந்தித்த அவர், ``தமிழக மக்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், எங்களுக்குக் கூடுதலாக மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தொகுதிகளை நாங்கள் முழு மனநிறைவோடு ஏற்றுக்கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை மற்ற கட்சிகள் விவாதப் பொருளாக்குவது முறையல்ல. திருச்சி: திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்! - பி.ஆர்.பாண்டியன் ஆவேசம் தி.மு.க கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் போன்ற தோழமைக் கட்சிகள் தங்களுக்குக் கூடுதல் இடங்கள் வேண்டும் எனக் கேட்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் காங்கிரஸ் கட்சியை மையப்படுத்தி கேள்வி எழுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தோழமைக் கட்சிகள் தாராளமாகத் தங்கள் உரிமையைக் கேட்கலாம். மாண்புமிகு முதலமைச்சருக்குப் பெரிய மனமிருக்கிறது, வாய்ப்பிருந்தால் நிச்சயம் வழங்குவார். விசிக தலைவர் திருமாவளவன் அதே சமயம், காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இத்தனை இடங்கள் வழங்கப்பட்டன என்பதைத் தோழமைக் கட்சிகள் எங்களின் கடந்த காலத் தியாகங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் 110 தொகுதிகளில் போட்டியிட்ட நாங்கள், பிறகு 63, 41, தற்போது 25 எனத் தொடர்ந்து எங்களின் எண்ணிக்கையை விட்டுக் கொடுத்து வந்துள்ளோம். எங்களின் இந்த வேதனையை மற்றவர்கள் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'நமக்காக பேச யாருமில்லை' - விரக்தியடைந்த விசிக நிர்வாகிகள்; இழுபறியில் பேச்சுவார்த்தை?
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல்: தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும் - தேர்தல் ஆணையம்
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. இது தொடர்பாக டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 4:00 மணியளவில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் முழுமையான கால அட்டவணையை வெளியிடுவார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களிலும் 'தேர்தல் நடத்தை விதிகள்' (Model Code of Conduct) அமலுக்கு வரும். Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர் இதன் மூலம் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ, அரசாணைகளை வெளியிடவோ முடியாது. அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வரும். தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, பதற்றமான தொகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினரை நிறுத்துவது குறித்தும் இன்று அறிவிப்பு வெளியாகலாம். மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகளை அரசியல் கட்சிகள் இப்போதே இறுதி செய்யத் தொடங்கியுள்ளன. மாலை 4 மணிக்குப் பிறகு அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களம்: `விஜயகாந்த் டு விஜய்' தமிழ்நாட்டில் 'மூன்றாம் அணி' வெற்றி சாத்தியமா? - ஓர் அலசல்!
நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ? - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?
இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாக்குதலில் ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதும் தொடர்ந்து ஈரான் தாக்கி வருகிறது. இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள தீவிரவாத அமைப்புகளும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவர் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவர் வெளியில் வரவே இல்லை. நேற்று நெதன்யாகு அளித்திருந்த பேட்டி ஒன்றின் காணொலி வெளியாகி இருந்தது. அந்தக் காணொலியில் நெதன்யாகுவிற்கு கையில் 6 விரல் இருப்பது போன்று இருந்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு இதனால் அந்த வீடியோ ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், நெதன்யாகு போரில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பான செய்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. துருக்கியைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொலியின் பின்னணியில் உள்ள திரைச்சீலைகளின் நகர்வு உட்பட, இரண்டு இஸ்ரேலிய கொடிகள் பெரும்பாலும் அசையாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி அந்தக் காணொலி செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சமூக வலைத்தளப் பயனர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இச்செய்தியை இஸ்ரேல் வன்மையாக மறுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ''பிரதமர் நெதன்யாகு இறந்துவிட்டதாக வரும் செய்திகள் போலியானவை. அதில் உண்மையில்லை. பிரதமர் நலமோடு இருக்கிறார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காணொலியில் 6 விரல்கள் இருப்பது குறித்து விசாரித்தபோது, அந்தக் காணொலியில் தெரிந்த கூடுதல் விரல் என்பது கேமரா கோணம் மற்றும் ஒளியின் நிழலால் ஏற்பட்ட ஒரு மாயை ஆகும். அது AI வீடியோ அல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக பெரிய அளவில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் புகார்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. `ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel
Trump: பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம் - ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான். கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலியாகினர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரம்ப் இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``ஈரானின் கர்க் தீவில் (Kharg Island) உள்ள பெரும்பாலான ராணுவ இலக்குகள் ஏற்கனவே அமெரிக்கத் தாக்குதலில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. தேவைப்பட்டால் பொழுதுபோக்கிற்காக இன்னும் சில முறை அங்கு தாக்குதல் நடத்துவோம் ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை. ஈரானுடனான இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய சீனா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அந்தப் பகுதியின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும் எனக் குறிப்பிட்டார். ஈரான் போர் இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ஈரான், ``அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை. துபாய், அபுதாபி மற்றும் புஜைரா (Fujairah) போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய துறைமுகப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், ஈரானிலிருந்து அமீரகத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அங்குள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரான் யுத்தம்... அத்துமீறலுக்கு இன்னொரு பெயர் அமெரிக்கா!
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவோம் - மதுரை ரஜினி காந்த் ரசிகர்கள் ஆவேசம்
சென்னையில் கடந்த வாரம் தவெக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர நினைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். சிஸ்டம் சரியில்லை, அனைத்தையும் மாற்ற வேண்டும் என அவர் அரசியலுக்கு வர நினைத்தபோது, திமுக குடும்பம் அவரை மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தனர்” எனப் பேசியிருந்தார். அவருடைய இந்தப் பேச்சு சர்ச்சையானது. ’காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச் சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் தலைவா.. வேதனை! வெட்கம்! அவமானம்! காலம் பேசாது.. நிச்சயம் பதில் சொல்லும்; களத்தில் சந்திப்போம்.. கதம்! கதம்!' என்ற வாசகங்களோடு ரஜினிகாந்தை அவதூறாகப் பேசிய ஆதவ் அர்ஜுனாவைக் கண்டித்து மதுரையில் மதுரை மாநகர் மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நேற்று கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தொடர்ந்து ரஜினி காந்த்தின் நண்பர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி குமரவேல் தலைமையில் நடிகர் ரஜினி காந்த் ரசிகர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “1996 ஆம் ஆண்டு ஏழு நிமிட பேட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி 40 சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்ற செய்தது ரஜினி வாய்ஸ். அப்போதைய ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருந்தவரும் ரஜினி. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் புகழின் உச்சத்தைப் பார்த்தவருக்கு அச்சம் கிடையாது. அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் ரஜினியைச் சீண்டி பார்க்க வேண்டாம். ``கூட்டம் சேர்ப்பவரெல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது!’’ - ஆதவ் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி ரஜினிக்கு யாரையும் பார்த்தும் பயம் கிடையாது. கொரானா காலத்தில் யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என அரசியலுக்கு வரவில்லை. உங்கள் பேட்டி உங்களுக்கு எதிராக ஆகிவிடும். நடிகை பிரச்னையை மறைக்கவே ரஜினி பற்றி பேசி மடைமாற்றம் செய்ய ஆதவ் முயற்சி செய்கிறார். ரஜினி தமிழகத்தில் கம்பி இல்லாத மின்சாரம். மதுரை மாநகர ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆதவ் சர்வ கட்சிக்குப் போகிறவர். விஜய் அவரைக் கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் ஆதவ் நிற்கும் தொகுதியில் ரஜினி அனுமதியுடன் சாதாரண தொண்டனை நிறுத்தி தோற்கடிப்போம். ஆதவ் மீது விஜய் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக கட்சி துவக்கியவர்கள் எந்த உயிரிழப்பு இல்லாமல் கூட்டத்தை நடத்த கற்று கொள்ளுங்கள் என்றனர். ஆதவ் டேபிள் ஃபேன்; ஆனந்த் எலெக்ட்ரிக் குக்கர்! - போட்டி போட்டு பரிசுப் பொருட்களை இறக்கும் தவெக-வினர்
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவோம் - மதுரை ரஜினி காந்த் ரசிகர்கள் ஆவேசம்
சென்னையில் கடந்த வாரம் தவெக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர நினைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். சிஸ்டம் சரியில்லை, அனைத்தையும் மாற்ற வேண்டும் என அவர் அரசியலுக்கு வர நினைத்தபோது, திமுக குடும்பம் அவரை மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தனர்” எனப் பேசியிருந்தார். அவருடைய இந்தப் பேச்சு சர்ச்சையானது. ’காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச் சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் தலைவா.. வேதனை! வெட்கம்! அவமானம்! காலம் பேசாது.. நிச்சயம் பதில் சொல்லும்; களத்தில் சந்திப்போம்.. கதம்! கதம்!' என்ற வாசகங்களோடு ரஜினிகாந்தை அவதூறாகப் பேசிய ஆதவ் அர்ஜுனாவைக் கண்டித்து மதுரையில் மதுரை மாநகர் மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நேற்று கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தொடர்ந்து ரஜினி காந்த்தின் நண்பர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி குமரவேல் தலைமையில் நடிகர் ரஜினி காந்த் ரசிகர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “1996 ஆம் ஆண்டு ஏழு நிமிட பேட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி 40 சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்ற செய்தது ரஜினி வாய்ஸ். அப்போதைய ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருந்தவரும் ரஜினி. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் புகழின் உச்சத்தைப் பார்த்தவருக்கு அச்சம் கிடையாது. அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் ரஜினியைச் சீண்டி பார்க்க வேண்டாம். ``கூட்டம் சேர்ப்பவரெல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது!’’ - ஆதவ் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி ரஜினிக்கு யாரையும் பார்த்தும் பயம் கிடையாது. கொரானா காலத்தில் யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என அரசியலுக்கு வரவில்லை. உங்கள் பேட்டி உங்களுக்கு எதிராக ஆகிவிடும். நடிகை பிரச்னையை மறைக்கவே ரஜினி பற்றி பேசி மடைமாற்றம் செய்ய ஆதவ் முயற்சி செய்கிறார். ரஜினி தமிழகத்தில் கம்பி இல்லாத மின்சாரம். மதுரை மாநகர ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆதவ் சர்வ கட்சிக்குப் போகிறவர். விஜய் அவரைக் கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் ஆதவ் நிற்கும் தொகுதியில் ரஜினி அனுமதியுடன் சாதாரண தொண்டனை நிறுத்தி தோற்கடிப்போம். ஆதவ் மீது விஜய் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக கட்சி துவக்கியவர்கள் எந்த உயிரிழப்பு இல்லாமல் கூட்டத்தை நடத்த கற்று கொள்ளுங்கள் என்றனர். ஆதவ் டேபிள் ஃபேன்; ஆனந்த் எலெக்ட்ரிக் குக்கர்! - போட்டி போட்டு பரிசுப் பொருட்களை இறக்கும் தவெக-வினர்
`அதிமுக உறுப்பினர் கார்டை கிழிச்சு போடக்கூட மனசு வரலை!'- சசிகலா கட்சியின் நிறுவன தலைவர் சக்கரவர்த்தி
தனது ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்னும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா. சக்கரவர்த்தி என்னும் அந்தத் தொண்டர் 90 களிலிருந்து எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்தவராம். மதுரையைச் சேர்ந்தவர். கட்சியின் பெயர் அறிவிக்கும் விழாவை முடித்து விட்டு மதுரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவரை நிறுத்திப் பேசினோம். ஒ பன்னீர் செல்வம் ‘’இன்னைக்கு பன்னீர்செல்வம்.. சுற்றுப் பயணம் போறாராம். ஐம்பது வருஷமா சோறு போட்ட இரட்டை இலைக்கு ஓட்டுப் போடாதீங்கனு கேக்கப் போறாராம். காலையில் செய்தி பார்த்தேன். வயிறெல்லாம் எரிஞ்சது. திங்கற சோறு அவருக்கெல்லாம் எப்படிச் செறிக்குது தெரியலை. பேசாம அரசியல்ல இருந்து ஒதுங்கிடலாமே. என்னை எடுத்துக்கோங்க. 40 வருஷத்துக்கு மேல கட்சியில இருந்தேன். ஒரு கிளைச் செயலாளர் பதவி கூட கிடைக்கலை. மதுரையில் இருக்கிற செல்லூர் ராஜ் எதுவும் எனக்கு கிடைக்காதபடி பார்த்துகிட்டார். அம்மா இருக்கிற வரை அவரைச் சந்திக்க கூட முடியாதபடி செஞ்சார். அவங்க மறைஞ்ச பின்னாடி திமுகவுக்குப் போகலாம்னா போயிருக்கலாமே. அப்படி போய் சோறு சாப்பிடணுமானு லெட்டர் பேடு கட்சியாகன்னாலும் இருந்துட்டுப் போகட்டும்னு தனியா ஒரு கட்சியை ஆரம்பிச்சு எம்..ஜி.ஆர் புகழ்பாடிட்டு இருந்தேனே, அப்படி இருந்துட்டுப் போக வேண்டிதானே. அதை விட்டுட்டு எதிரிகள் முகாம்ல போய் தஞ்சமடைஞ்சிருக்காரே’’ - எடுத்த எடுப்பிலேயே ஒ.பி,எஸ் மீது பாய்ந்தவரை கூல் செய்து, ‘அதான் தனிக்கட்சி தொடங்கிட்டீங்கல்ல இனி இரட்டை இலை பத்தி எதுக்கு யோசிக்கணும்’ என்றோம். சக்கரவர்த்தி ‘’அதுவும் சரிதான்’ என ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.. ‘’எம்.ஜி.ஆர் ரசிகனா இருந்தேன். ஆள் பார்க்க கொஞ்சம் அவர் சாயல்ல இருக்கிறதால் மதுரை எம்.ஜி.ஆர்.ன்னே கூப்பிடுவாங்க. அதிமுகவுல உறுப்பினர் கார்டு வச்சிருந்தேன். இப்பக் கூட அந்தக் கார்டு இருக்கு. கிழிச்சுப்போடக் கூட மனசு வரலை. அம்மா மறைவுக்குப் பிறகு ஒருத்தர் தலைமையில வந்து கட்சி திரும்பவும் ஆட்சியைப் பிடிக்கும்னு லட்சோப லட்சம் தொண்டர்களைப் போலவே நானும் நம்பினேன். ஆனா இங்க ஆளாளுக்கு நாட்டாமை பண்ணி ஒரு வழி ஆக்கிட்டாங்க. பழனிசாமியும் சுயநலத்தோட தான் செயல்படறார். அதனால சிவனேன்னு புரட்சித் தலைவர் பெயர் சொல்ல ஒரு கட்சியை நடத்துவோம்னு அம்மா மறைஞ்சதுமே பதிவு பண்ணிட்டேன். எப்படியும் இவங்க யாரும் சேரப்போறதில்லைனு இப்பதான் ரெண்டு மாசமா அலைஞ்சு சின்னமும் வாங்கி வச்சிருந்தேன். எடப்பாடி பழனிசாமி சின்னம்மாவை பசும்பொன் வந்தப்ப ரெண்டு தடவை ஏற்கனவே பாத்துப் பேசியிருக்கேன், அம்மாவுக்குப் பிறகு திமுகவை எதிர்க்க அவங்கதான் சரியான ஆள்னு எனக்குத் தோணுச்சு. பன்னீர், பழனிசாமி ரெண்டு பேருமே முதலமைச்சராக காரணம் அவங்கதானே/ இவங்க ரெண்டு பேர் மட்டுமில்ல அதிமுகவுல முக்கால்வாசி பேர் வெள்ளையும் சொள்ளையுமா திரியறதுக்கு காரணமே அவங்கதான். அவங்க வந்து புதுக்கட்சி தொடர்பா பேசினாங்க. மறுப்பு எதுவும் சொல்ல முடியலை. அதனால சம்மதிச்சிட்டேன். வர்ற தேர்தல்ல கட்சி போட்டியிடும். கூட்டணி தொடர்பான மத்த விஷயங்களை அவங்க பார்த்துப்பாங்க. இறுதியானதும் அவங்களே சொல்வாங்க’’ என்றவரிடம். கட்சியில் உங்களுக்கு என்ன பொறுப்பு என்றோம். ``நிறுவன தலைவர் நானே தான். அவங்க செயலாளரா இருந்து கட்சியை நடத்துவாங்க’’ என்கிறார்.
தேர்தலில் போட்டியிடும்படி மோடியின் பிரதிநிதி என்னை சந்தித்தார் - எம்.பி ஆக ஆசைப்படும் ஐ.எம்.விஜயன்
கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து ஜாம்பவானும், நடிகரும், போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஐ.எம்.விஜயன் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவின. இதையடுத்து ஐ.எம்.விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில் அவர் கூறுகையில், கேரளாவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் என் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஐ.எம்.விஜயன் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பில் எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை எனக்கு முதன்முதலில் 1986-87 காலக்கட்டத்தில் கே.கருணாகரன் (காங்கிரஸ்) முதல்வராக இருந்தபோதுதான் போலீஸில் வேலை கிடைத்தது. அதன்பிறகு கேரளா போலீஸ் அணிக்காக விளையாடினேன். பின்னர் 1991-ல் மோகன் பகான் அணிக்குச் சென்றேன். 1993-ல் சந்தோஷ் டிராபி வென்றபோது எனக்கு டபிள் பிரமோஷன் கிடைத்தது. அப்போதும் கருணாகரன் சார்தான் முதலமைச்சராக இருந்தார். நான் கொல்கத்தா அணியில் இருந்ததால் பதவி உயர்வை ஏற்கவில்லை. 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் கேரளா போலீஸில் இணைய வந்தேன். அப்போது ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவராக ரசா இருந்தார். என்னிடம் 'ஏன் மீண்டும் போலீஸில் சேர வேண்டும்?' என்று கேட்டார்கள். நான் 'சேர வேண்டும்' என்று சொன்னேன். இரண்டு ஆண்டுகள் செவன்ஸ் கால்பந்து விளையாடிவிட்டு பிறகு போலீஸில் சேர முடிவு செய்தேன். அப்போது கொடியேரி பாலகிருஷ்ணன் (சி.பி.எம்) உள்துறை அமைச்சராக இருந்தார். அவரிடம் மனு எழுதி கொடுத்தபோது, 'என்ன, போலீஸைப் பார்த்து பயந்து ஓடிவிட்டாயா?' என்று கிண்டலாகக் கேட்டார். நான் 'இல்லை சார், அப்போது எனக்கு வீடு இல்லை, அதற்காகத்தான் போனேன்' என்று சொன்னேன். ஐ.எம்.விஜயன் 2011-ல் நான் எஸ்.ஐ ஆக போலீஸில் சேர்ந்தேன். பின்னர் மரடோனா கேரளா வந்தபோது அன்றைய முதல்வராக இருந்த உம்மன் சாண்டி எனக்கு இரட்டைப் பதவி உயர்வு அளித்தார். அதன் பிறகு கோவிட் காலத்தில், நான் முதல்வர் பினராயி விஜயனிடம் சென்று எனக்கு ஏ.சி (உதவி கமிஷனர்) ஆக பதவி உயர்வு கிடைத்தால் உதவியாக இருக்கும்' என்று கேட்டேன். அவர் 'பார்க்கலாம்' என்று சொன்னார். அவர் சொன்னது எனக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. பின்னர் எனக்கு ஏ.சி பதவி உயர்வு கிடைத்தது. எனக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது பா.ஜ.க ஆட்சியில். என்னைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ், சி.பி.எம், பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளும் என்னுடன் உண்டு. ஒரு குறிப்பிட்ட கட்சி என்று சொல்லி என்னால் நிற்க முடியாது. கொல்கத்தாவில் இருக்கும்போது சிலர் என்னை தேர்தலில் போட்டியிட வைக்க முயன்றனர். இப்போது மூன்று வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அனுப்பிய ஒருவர் டெல்லியில் இருந்து வந்திருந்தார். நானே நேரில் சென்று அவரை சந்தித்து, சேர்ந்து காலை உணவு சாப்பிட்டோம். அவர் என்னிடம் 'தேர்தலில் நிற்கிறீர்களா?' என்று கேட்டார். 'இல்லை சார், நான் தேர்தலில் நிற்கவில்லை' என்று சொன்னேன். அதுபோன்று மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி என்னை அழைத்து, 'நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும்' என்று சொன்னார். எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை எனக்கூறினேன். பத்மஸ்ரீ விருதுபெற்ற ஐ.எம்.விஜயன் எனக்கு மக்களின் இந்த அன்பு போதும். எனக்கு எந்தக் கட்சியுடனும் தனிப்பட்ட பிணைப்பு கிடையாது. எனக்கு எல்லாரும் வேண்டும். ஏனென்றால் நான் ஒரு தேசிய முகம். கேரளாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கால்பந்து ரசிகர்கள் என்னை நேசிக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும். எல்லாரும் போன் செய்து கேட்டுக்கொண்டே இருப்பதால், இதை அனைவருக்கும் சொல்லவே உங்களை அழைத்தேன். நான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் நான் சுரேஷ் கோபியிடமும் சொன்னேன், எல்லாரிடமும் சொல்கிறேன், 'நீங்கள் எனக்கு ஒரு மேல்சபை எம்.பி பதவி கொடுத்தால், விளையாட்டை மேம்படுத்த அந்தப் பதவியைப் பயன்படுத்திக் கொள்வேன். அப்படி இல்லாமல் ஒரு கட்சியில் சேர்ந்து நிற்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு எல்லாரும் வேண்டும் என்றார்.
இறுதியான என்.ஆர் - பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! - புதுவையில் விசிலடிப்பாரா விஜய்?
புதுச்சேரி, தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்றே கூட வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு போன்றவற்றில் முனைப்பு காட்டி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ் கைகோர்த்திருப்பதன் மூலம், புதுச்சேரியிலும் அந்தக் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. அதேபோல பா.ஜ.க.வுடனான கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் இருந்த முதல்வர் ரங்கசாமி, கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு கூட்டணி தொடர்வதாக பேட்டி கொடுத்தார். ரங்கசாமி ஆனால் அதன்பிறகு தொகுதி உடன்பாடு குறித்து உள்ளூர் பா.ஜ.க-வினருடன் அவர் பேசாமல் இருந்தார். அதனால், `ல.ஜ.க தலைவரும், `லாட்டரி’ தொழிலதிபருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூட்டணிக்குள் வருவதை ரங்கசாமி விரும்பவில்லை. அதனால் சார்லஸ் மார்ட்டினை வெளியேற்றுமாறு பா.ஜ.க-வுக்கு ரங்கசாமி அழுத்தம் கொடுக்கிறார்’ என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்த நிலையில்தான் கடந்த 12.03.2026 அன்று, காமராஜர் சாலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தன்னுடைய கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்தார் முதல்வர் ரங்கசாமி. நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த முதலமைச்சர் ரங்கசாமி, `என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, `என்.ஆர்.காங்கிரஸ் கட்சி த.வெ.க-வுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறதா..?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, `நாங்கள் எங்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆலோசனை செய்தோம்’ என்று பதிலளித்ததுடன், த.வெ.க குறித்து எழுப்பிய கேள்வியை கவனமாக தவிர்த்தார். தொடர்ந்து, `மாநில அந்தஸ்து குறித்து உங்கள் கோரிக்கைக்கு மத்திய பா.ஜ.க பதிலளிக்கவில்லை. அதை வலியுறுத்தி என்.ஆர்.காங்கிரஸ் தேர்தலை புறக்கணிக்குமா…’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ரங்கசாமி, அமித் ஷா அதற்கு, ``எங்களைப் பொறுத்தவரை மாநில அரசின் மிக முக்கியமான கோரிக்கை. அதை வலியுறுத்துவோம்” என்று மட்டும் கூறினார். அதையடுத்து நேற்று 13.03.2026 அன்று புதுச்சேரிக்கு வந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுவில் மாண்டவியா, பா.ஜ.க அமைச்சர்கள், எம்.ல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நட்சத்திர விடுதியில் ஆலோசனை செய்தார். அதன்பிறகு நேற்று மாலை தனியார் நட்சத்திர விடுதியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டவியா, பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, ``கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் என்.ஆர்.காங்கிரஸும், பா.ஜ.க-வும் இணைந்து தேர்தலை சந்திக்கும். கூட்டணிக்குள் வரும் புதிய கட்சிகள் குறித்தும் அவர்களுக்கான தொகுதிகள் குறித்தும் பிறகு அறிவிப்போம்” என்றார். அதற்கு, `எங்கள் முதல்வரையும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்த `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும்போது, பா.ஜ.க-வை கொள்கை எதிரி என்று சொன்ன விஜய் எங்கள் கூட்டணிக்குள்ளும் வரலாம்’ என்று பின்னணி பாடுகின்றனர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள். அதையடுத்துப் பேசிய பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாலர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி அது தவிர பிற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அந்த வகையில் ல.ஜ.க எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. முதல்வர் ரங்கசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேபோல த.வெ.க-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நாங்கள் நடத்தவில்லை. மேலும் எங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ம.க கடந்த தேர்தலில் சீட் கேட்கவில்லை. இந்த தேர்தலிலும் இதுவரை கேட்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும். கடந்த முறை அ.தி.மு.க-வுக்கு நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருந்ததால் 5 தொகுதிகள் ஒதுக்கினோம். இந்த தேர்தலில் அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பதையும், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்தும் விரைவில் பேசி முடிவு செய்வோம்” என்றார். `புதுச்சேரி பாஜக-வில் நீண்டகால தலைவர்’ - தவெகவில் தஞ்சமடைய என்ன காரணம்? யார் இந்த சாமிநாதன்?
இறுதியான என்.ஆர் - பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! - புதுவையில் விசிலடிப்பாரா விஜய்?
புதுச்சேரி, தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்றே கூட வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு போன்றவற்றில் முனைப்பு காட்டி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ் கைகோர்த்திருப்பதன் மூலம், புதுச்சேரியிலும் அந்தக் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. அதேபோல பா.ஜ.க.வுடனான கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் இருந்த முதல்வர் ரங்கசாமி, கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு கூட்டணி தொடர்வதாக பேட்டி கொடுத்தார். ரங்கசாமி ஆனால் அதன்பிறகு தொகுதி உடன்பாடு குறித்து உள்ளூர் பா.ஜ.க-வினருடன் அவர் பேசாமல் இருந்தார். அதனால், `ல.ஜ.க தலைவரும், `லாட்டரி’ தொழிலதிபருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூட்டணிக்குள் வருவதை ரங்கசாமி விரும்பவில்லை. அதனால் சார்லஸ் மார்ட்டினை வெளியேற்றுமாறு பா.ஜ.க-வுக்கு ரங்கசாமி அழுத்தம் கொடுக்கிறார்’ என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்த நிலையில்தான் கடந்த 12.03.2026 அன்று, காமராஜர் சாலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தன்னுடைய கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்தார் முதல்வர் ரங்கசாமி. நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த முதலமைச்சர் ரங்கசாமி, `என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, `என்.ஆர்.காங்கிரஸ் கட்சி த.வெ.க-வுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறதா..?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, `நாங்கள் எங்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆலோசனை செய்தோம்’ என்று பதிலளித்ததுடன், த.வெ.க குறித்து எழுப்பிய கேள்வியை கவனமாக தவிர்த்தார். தொடர்ந்து, `மாநில அந்தஸ்து குறித்து உங்கள் கோரிக்கைக்கு மத்திய பா.ஜ.க பதிலளிக்கவில்லை. அதை வலியுறுத்தி என்.ஆர்.காங்கிரஸ் தேர்தலை புறக்கணிக்குமா…’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ரங்கசாமி, அமித் ஷா அதற்கு, ``எங்களைப் பொறுத்தவரை மாநில அரசின் மிக முக்கியமான கோரிக்கை. அதை வலியுறுத்துவோம்” என்று மட்டும் கூறினார். அதையடுத்து நேற்று 13.03.2026 அன்று புதுச்சேரிக்கு வந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுவில் மாண்டவியா, பா.ஜ.க அமைச்சர்கள், எம்.ல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நட்சத்திர விடுதியில் ஆலோசனை செய்தார். அதன்பிறகு நேற்று மாலை தனியார் நட்சத்திர விடுதியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டவியா, பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, ``கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் என்.ஆர்.காங்கிரஸும், பா.ஜ.க-வும் இணைந்து தேர்தலை சந்திக்கும். கூட்டணிக்குள் வரும் புதிய கட்சிகள் குறித்தும் அவர்களுக்கான தொகுதிகள் குறித்தும் பிறகு அறிவிப்போம்” என்றார். அதற்கு, `எங்கள் முதல்வரையும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்த `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும்போது, பா.ஜ.க-வை கொள்கை எதிரி என்று சொன்ன விஜய் எங்கள் கூட்டணிக்குள்ளும் வரலாம்’ என்று பின்னணி பாடுகின்றனர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள். அதையடுத்துப் பேசிய பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாலர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி அது தவிர பிற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அந்த வகையில் ல.ஜ.க எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. முதல்வர் ரங்கசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேபோல த.வெ.க-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நாங்கள் நடத்தவில்லை. மேலும் எங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ம.க கடந்த தேர்தலில் சீட் கேட்கவில்லை. இந்த தேர்தலிலும் இதுவரை கேட்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும். கடந்த முறை அ.தி.மு.க-வுக்கு நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருந்ததால் 5 தொகுதிகள் ஒதுக்கினோம். இந்த தேர்தலில் அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பதையும், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்தும் விரைவில் பேசி முடிவு செய்வோம்” என்றார். `புதுச்சேரி பாஜக-வில் நீண்டகால தலைவர்’ - தவெகவில் தஞ்சமடைய என்ன காரணம்? யார் இந்த சாமிநாதன்?
``கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை - அண்ணாமலை அதிரடி
கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமிக்கு நடத்த கொடூரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் அளித்தபோது நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதம் தடுக்கபட்டிருக்கலாம். அண்ணாமலை இது காவல்துறை மற்றும் முதல்வரின் தோல்வி. பெட்ரோல், கேஸ் விவகாரத்தில் இங்குள்ள அரசியல்வாதிகள் பீதியை கிளப்புவதால் பொது மக்கள் கேன்களுடன் சென்று பெட்ரோல் வாங்கும் நிலை இருக்கிறது. திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியினர் தான் பீதியை கிளப்புகின்றனர். விளாத்திகுளத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்ல வேண்டும். உள்துறை செயலாளர் கொடுக்கும் தகவல்கள் பொய்யாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். தவெக விஜய் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. யாரையும் எதிர்பார்த்து இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக சிபிஐ விசாரணை கேட்டது. அதற்கு நாங்களும் குரல் கொடுத்தோம். ஜனநாயகன் படம் பற்றி விஜய்யே பேசவில்லை, முதலில் அவர் பேசட்டும். பிறகு நான் பேசுகிறேன். கரூர் தவெக கூட்டத்தில் விஜய், ‘பத்து ரூபாய் பாலாஜி’ என்று சொன்ன போதுதான் செருப்பு வந்து விழுந்தது. மருத்துவமனைக்கு முதல் ஆளாக சென்றவர் செந்தில் பாலாஜி. அவரை விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. அவர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு எப்போதும் டிவிஸ்ட் இருக்கும். செந்தில் பாலாஜி இந்த முறை என்ன டிவிஸ்ட் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை, பாஜக விமர்சித்தது உண்மை. எடப்பாடி பழனிசாமியும் என் மீது விமர்சனம் வைத்தார். அரசியலில் பின்னாடி திரும்பி பார்த்தால் அரசியல் செய்ய முடியாது” என்றார்.
திருச்சி: திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்! - பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி விவசாயிகளுக்கு எதிராகவேதான் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளது. தி.மு.க, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. வருகிற தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களிப்பதை விரும்பவில்லை. தி.மு.க-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம். 38 கோரிக்கைகள் எந்த அரசியல் கட்சி ஏற்றுக் கொள்கிறதோ, அது குறித்து அலசி ஆராய்ந்த பின்பு முடிவெடுக்கப்படும். வரும் மார்ச் 31- ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துவது என முடிவெடுத்துள்ளோம். pr pandiyan அந்த மாநாட்டில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தி.மு.க மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். விவசாயிகளுக்கு தி.மு.க அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. தி.மு.க அரசு விவசாய விரோத சட்டம் கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு உள்ளது. எனவே, வரும் சட்ட மன்ற தேர்தலில் விவசாயிகள் தி.மு.க-விற்கு வாக்களிக்க மாட்டோம். தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். எந்த கட்சி விவசாயிகளுக்கு நம்பிக்கையாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அந்த கட்சிக்கு ஆதரவு தர தயங்க மாட்டோம் என்றார்.
'ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?'- அன்புமணி கேள்வி
'படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க' எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் சிறுவர்கள் தேவா, ஜீவாவை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் இதனை பாமக தலைவர் அன்புமணி விமர்சித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வெளியிட்டிருக்கிறார். சிறுவர்களை பாராட்டிய ஸ்டாலின் முதலமைச்சர் எத்தனை விளம்பரப் படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளட்டும்... அதற்காக மக்களின் வரிப்பணத்தைக் கூட வீணடித்துக் கொள்ளட்டும்... அதையும் கூட பொறுத்துக் கொள்வோம். ஆனால், முதலமைச்சரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்பது தான் நமது வினா. கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவா, ஜீவா என்ற சிறுவர்கள் அருகில் உள்ள நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையே 5 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் அளவுக்கு புகழ்பெற்றிருக்கும் அவர்கள் ‘படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க...’ என்று வலியுறுத்தி வெளியிட்ட ரீல்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசி வீடியோ வெளியிட்டதுடன், கலெக்டராகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரும் அளவுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லை. முதலமைச்சரின் ஷூட்டிங் பாணியில் பேசுவதாக இருந்தால், அடுத்த ஷாட்டுக்கு கடலூர் மாவட்டம் நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்வோம்.... அந்த பள்ளியில் தான் ரீல்ஸ் புகழ் மாணவர்கள் தேவாவும், ஜீவாவும் படிக்கிறார்கள். நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மொத்தம் 5 வகுப்புகள் உள்ளன. 30 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். சிறுவர்களை பாராட்டிய ஸ்டாலின் இரு ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்? எப்படி தரமான கல்வி வழங்க முடியும்? தேவாவும், ஜீவாவும் எப்படி கலெக்டராகவும், காவல் அதிகாரியாகவும் ஆவதற்கு ஏற்ற அடிப்படைக் கல்வியை பெற முடியும்? சொல்லுங்க முதல்வரே. தேவா, ஜீவா பயிலும் பள்ளியின் நிலைமை மட்டும் இவ்வளவு மோசமாக இல்லை. தொடக்கக் கல்வித்துறை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு வெறும் 2 ஆசிரியர்கள் மட்டும் தான். மேலும் 3800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே ஆசிரியர் தான். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 29,418 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும் முதலமைச்சர் அவர்களே? மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை; சிறுவர்களை பாராட்டிய ஸ்டாலின் விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் மாநிலம் முழுவதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்புவதற்காகத் தான் இந்த விளம்பரப்படத்தை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தகைய விளம்பரப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. இன்னும் சில வாரங்களில் நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களால் மறக்க முடியாத தீர்ப்பை அளிப்பார்கள். அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து தான் நீங்கள் பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கும் என்று அன்புமணி விமர்சித்திருக்கிறார்.
சுயேட்சையிடம் டெபாசிட் இழந்த திமுக; நோட்டாவுக்கு பின்னால் பாஜக; அதிமுக அவுட்! | RK நகர் ஆடுபுலி 09
அரசியல் ஆடுபுலி 09 மறைந்த முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்த வி.கே.சசிகலா 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகம், சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் தொடங்கிய அண்ணா எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் தீவிர தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் சசிகலாவின் புதிய கட்சி 2026 தேர்தலில் கவனம் பெற்றுள்ளது. சசிகலா தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் உதயமாவது இயல்பானதே, ஆனால், ஒரு இடைத்தேர்தலில் பல கட்சிகள் தோன்றியது என்று சொன்னால், அது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தான். பல அரசியல் ஆடுபுலி ஆட்டங்களைக் கண்ட ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றியால், சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கண்டார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, தேர்தலில் போட்டியிட்ட இயக்குநர் கங்கைஅமரன், வேட்புமனு தாக்கல் செய்த விஷால் என்று ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஒரு சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் ஆளுங்கட்சியான அதிமுகவை வீழ்த்தினார். திமுகவின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் தேர்தலிலேயே திமுக டெபாசிட் இழந்தது. தேசியக் கட்சியான பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் நோட்டாவை விட குறைவான வாக்குகளே பெற்றது. ஒவ்வொரு நாளும் ஆடுபுலி ஆட்டங்களைக் கண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பல அரசியல் திருப்பங்களை உண்டாக்கியது. ஆர்.கே.நகர் எனும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தல்களில் ஒருமுறை ஜெயலலிதாவும், மற்றொரு முறை டிடிவி தினகரனும் வெற்றி பெற்றனர். ஆர்.கே. நகர் 2014 செப்டம்பர் 27 அன்று சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்தார். அந்த வழக்கின் மேல்முறையீட்டில் 2015 மே 11 அன்று உயர் நீதிமன்றத்தால் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். மீண்டும் 2015 மே 23 முதலமைச்சரான ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் போட்டியிட வசதியாக ஆர்.கே.நகர் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் 2015 மே 17 அன்றே ராஜினாமா செய்திருந்தார். ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்களுக்கும் வார்டு வாரியாக வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு, தேர்தல் களம் கண்டனர். ஜூன் 27 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. மீண்டும் வந்த சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் ஆர்.கே.நகர் தொகுதியிலேயே போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார் ஜெயலலிதா. 2016 டிசம்பர் 5 அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்தார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு 17 மாதங்கள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்தார் ஜெயலலிதா. இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி இருவருக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ஆனார். அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டனர். அச்சூழ்நிலையில்தான், காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 2017 ஏப்ரல் 12 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரு அணியாக அதிமுக இருந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறங்கினார். முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி நேரடியாக களத்திற்குச் சென்று, தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரனை ஆதரித்துப் பரப்புரை செய்தார். அதிமுக இரண்டாகப் பிளவுபட்டிருந்த நேரம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இரட்டை மின் கம்பம் சின்னத்தில் போட்டியிட்ட மதுசூதனன் வெற்றி பெற வேண்டுமென தீவிர பரப்புரை செய்தனர். அதிமுக யாருக்கு என்பதை நிரூப்பிக்கும் தேர்தலாக பார்க்கப்பட்டதால் இரு அணியினரும் முழுவீச்சில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். `அதிமுக அம்மா அணி' என்பது துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலும் இயங்கியது. `அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி' என்பது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டது. வி.கே.சசிகலா சிறையில் இருந்தார். ஆனாலும், சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்றே இரு அணிகளுக்கும் பெயர் வைத்தனர். ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, பாஜக வேட்பாளராக இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோரும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டனர். இரட்டை இலை முடக்கப்பட்டதால், அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் வழங்கப்பட்டிருந்தது. அதிமுக அம்மா அணி வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.4000 வழங்குவதாக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி குற்றம் சாட்டியது. ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டினர். எதிர்கட்சித் தலைவரா இருந்த மு.க.ஸ்டாலின் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் தெரிவித்தார். தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்பாக திடீரென இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே இரவு 11 மணிக்கு பிரேக்கிங் நியூஸ் வெளியாவது வாடிக்கையாக இருந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பும் டிசம்பர் 10, இரவு பத்து மணிக்கு மேல்தான் வெளியானது. இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக 29 பக்க அறிக்கையை வெளியிட்டது தேர்தல் ஆணையம். ”ஆர்.கே. நகர் தொகுதியில் 61 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநில காவல் துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பணியில் இருந்தனர். 256 வாக்குச்சாவடிகளுக்கும் 256 மத்திய அரசு ஊழியர்கள் நுண்பார்வையாளர்களாக இருந்தனர். 12க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள், 2 ஐஏஎஸ், 2 ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்தனர். ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம், செல்போன் ரீசார்ஜ், பால், செய்தித்தாள் சந்தா ஆகியவற்றுக்கான கூப்பன்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. ரூ.18,80,700 பறிமுதல் செய்யப்பட்டது. விளக்கு, டி-சர்ட், எவர்சில்வர் தட்டு, காமாட்சி விளக்கு, செல்போன், சேலை உட்பட பரிசுப் பொருட்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டன. அதிமுக (அம்மா) அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்காக, ஒரே நிறுவனத்தில் 10 ஆயிரம் தொப்பிகள் தினமும் வாங்கப்பட்டன. அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி வேட்பாளர் மதுசூதனனுக்காக சின்னம் பொறிக்கப்பட்ட டிசர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டன. வரி ஏய்ப்பு, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகாரில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உட்பட 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரின் கணக்காளரிடம் இருந்து ரூ.89 கோடி பணப்பட்டுவாடா ஆவணங்கள் எம்.எல்.ஏ.விடுதியில் கைப்பற்றப்பட்டன. தேர்தல் ஆணையத்திற்கு சவால் விடும் இந்தப் போக்கினால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது போல, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.” என்று அறிக்கை அளித்தது தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தான சில நாட்களில் ஏப்ரல் 18 அன்று டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில், இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மே 1 அன்று டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு, 15 நாள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, எடப்பாடி கே பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆகஸ்ட் 21 அன்று இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அதிமுக கட்சி அலுவலகத்தில் ஒன்றாக கைகோர்த்தனர். அன்றே, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவர் நியமித்த நிர்வாகிகள் நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒன்று சேர்ந்ததால், அதிமுகவிற்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் வழங்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். அ.தி.மு.க -பன்னீர் - எடப்பாடி மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஓபிஎஸ் அணியில் போட்டியிட்ட மதுசூதனன் அதிமுக வேட்பாளர் ஆனார். சசிகலா அணியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் சுயேட்சையாகப் போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் கங்கை அமரன் மாற்றப்பட்டு கரு. நாகராஜன் வேட்பாளர் ஆனார். சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு போட்டியாக கே.தினகரன், எம்.தினகரன், ஜி.தினகரன் ஆகிய சுயேட்சை வேட்பாளர்களும், அதிமுக வேட்பாளர் இ. மதுசூனனுக்கு எதிராக எஸ்.மதுசூதனன், ஆர்.மதுசூதனன் ஆகிய சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். முதல் தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராகப் போட்டியிட்ட இ.மதுசூதனன், இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்தில் களமிறங்கினார். அடுத்த இடைத்தேர்தலில் மதுசூதனன் இரட்டை இலை சின்னம் பெற்றிருந்தார். ஆனால், சுயேட்சை வேட்பாளர் எஸ்.மதுசூதனன் இரட்டை மின் கம்பம் சின்னத்தில் போட்டியிட்டார். முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ஆர் கே நகர் தொகுதியில் முகாமிட்டனர். சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அதிமுகவில் இருந்து விலகிய அல்லது நீக்கப்பட்ட மற்றொரு தரப்பினர் தீவிரப் பரப்புரை செய்தனர். 2014 நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2015 சட்டமன்ற இடைத்தேர்தல், 2016 சட்டமன்ற பொதுத்தேர்தல், 2017 ஏப்ரலில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து, 2017 டிசம்பரில் சட்டமன்ற இடைத்தேர்தல் என்று அடுத்தடுத்து அரசியல் கட்சிகளின் வருகையால் ஆர்.கே.நகர் மக்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். பணப்பட்டுவாடா புகாரால் ரத்தான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2017 டிசம்பர் 21 அன்று நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியான போது, டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். தினகரனின் வெற்றிக் கணக்கு அவருக்கு அதிமுகவில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராகவும் முன்னிறுத்தப்பட்டது. 2015 இடைத்தேர்தலில் ஜெயலலிதா 1,60,432 வாக்குகள் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் 9,710 வாக்குகள் மட்டுமே பெற்றார். வாக்கு வித்தியாசம் 1,50,722. அடுத்து வந்த 2016 பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 57,673 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 39,545. 2017 இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் இ. மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 40,707. ஆளுங்கட்சியான அதிமுக தோல்வி கண்டது. பிரதான எதிர்கட்சியான திமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் மட்டுமே பெற்றார். நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகளும், பாஜக கரு. நாகராஜன் 1,368 வாக்குகளும் பெற்றனர். ஆனால் நோட்டாவிற்கு பாஜகவைவிட அதிகமாக 2,348 வாக்குகள் கிடைத்திருந்தது. ஒரு இடைத்தேர்தல் பல அரசியல் கணக்குகளை எடுத்துக் காட்டியது என்றால் அது ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தான். (ஆடுபுலி ஆட்டம் தொடரும்)
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை
இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, டீக்கடைகள், உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மெல்ல மெல்ல மாறி உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கேஸ் சிலிண்டர் பிரச்னையை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 நாள்களுக்கு தமிழ்நாட்டில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. விறகு அடுப்பு மேலும், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளதாவது , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை வழங்கப்பட உள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நீங்கும் வரை மின்சார பயன்பாட்டிற்கான இந்தச் சலுகை தொடரும். டீக்கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும் இது பொருந்தும். இந்தச் சூழலில் விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.
விஜய்யை கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயற்சியா? - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெகவை இணைக்க பாஜக முயல்வதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். தவெக - விஜய் அப்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா? பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், இது பற்றி உங்களுக்கு தெரிந்த அளவுக்குக் கூட எனக்கு தெரியாது. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காகவே விஜய் டெல்லி செல்கிறார். விஜய் டெல்லி செல்வதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிபிஐ மூலம் மிரட்டி விஜய்யை கூட்டணிக்கு வர வைப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பேசுகின்றன. அவ்வளவு பேரும் பொய் தான் சொல்கிறார்கள். தமிழகத்தில் தினமும் கொலைகள் நடக்கிறது. நாங்குநேரி, சிவகங்கையில் கஞ்சா போதையில் வருவோர் போவோரை எல்லாம் வெட்டுகிறார்கள். நயினார் நாகேந்திரன் இதை ஆளும்கட்சிதான் செய்கிறது. அதற்கு காரணம் கஞ்சாதானே. நான் நாட்டு மக்களுக்கு என்னென்ன நடக்கிறது என்று சொல்கிறேன். உங்களுக்கு ஒரே கவலை கூட்டணி இருக்கிறதா, இல்லையா? என்பதுதான். விஜய் கூட்டணிக்குள் வருகிறாரா? என்பது பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது! - அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அரசின் குளறுபடிகளால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டினை உடனடியாக நீக்கக் கோரியும், தமிழகத்திற்கு போதிய திட்டங்களை வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க (NDA) அரசைக் கண்டித்தும், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணி அளவில் பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகம் அருகே நடைபெறும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, meeting கடந்த நான்கு, ஐந்து தேர்தல்களாக தி.மு.க தலைமையில் உருவான கூட்டணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூட்டணியில் உள்ள அனைவரின் மனமும் புண்படாத வகையில், அனைவரையும் அரவணைத்து இந்த வெற்றிகரமான கூட்டணியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார். கேஸ் விலை உயர்வு போன்ற விவகாரங்களில் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, எந்த அதிகார வரம்பில் யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. ஒன்றிய அரசு செய்ய வேண்டியதை, முதல்வர் உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். தேர்தல் நேரம் என்பதால் நம்மை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவர் பேசி வருகிறார். இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான தேர்தல். தமிழ்நாட்டில் பாஜகவை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது என்பதில் தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளது. இது, தமிழ்நாடு-டெல்லிக்குமான தேர்தல் என்பதை முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இடையில் சிலர் புதிதாகக் கட்சி ஆரம்பித்துச் சில விஷயங்களைக் கூறினாலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தி.மு.க தலைமையிலான கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். வரவிருக்கும் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்வோம் என்றார்.
`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' - ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது?
ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. போர் தொடங்கியவுடன் ஈரானின் தலைவர் அல் கமெனி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்ததால் அடுத்த சில நாட்களில் போரை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று அமெரிக்கா தப்புக்கணக்கு போட்டது. ஆனால் அமெரிக்கா நினைத்தது போன்று அவ்வளவு எளிதில் போர் முடியவில்லை. ஈரான் உச்ச தலைவர் அல் கமெனி இப்போரில் கொலை செய்யப்பட்ட பிறகு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்கா ஆதரவு நாடுகளான துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளில் ஈரான் ஏவுகனைகளை கொண்டும் ட்ரோன்களை கொண்டும் கடுமையாக தாக்கியது. அதோடு இஸ்ரேல் மீதும் மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு ஈரான் இத்தாக்குதல் நடத்தியது. இரண்டு வார போரில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் அடைந்துள்ளது. மொஜ்தபா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், ஆயில் நிலைகள் சேதம் அடைந்தாலும், அமெரிக்கா நினைத்த எதுவும் நடக்கவில்லை என்பது மட்டும் உண்மை. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்த அமெரிக்காவின் எண்ணம் ஈடேரவில்லை. `20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' இனியும் அது நடக்குமா என்பது சந்தேகம்தான் என்று அமெரிக்காவே தெரிவித்துவிட்டது. அதோடு ஈரான் சிறிதும் சளைக்காமல் உடனடியாக தங்களது உச்ச தலைவரையும் அறிவித்துவிட்டு எந்த வித தொய்வும் இல்லாமல் தொடர்ந்து போர் செய்து கொண்டிருக்கிறது. இப்போர் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி, ''கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் சந்தித்த தோல்விகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எனவே அதற்கு தக்கபடி ஈரானின் சிறிய ராணுவப் பிரிவுகள் தனித்து நின்று போரிடும் வகையில் எங்களது தற்காப்பு முறையை மாற்றியமைத்துள்ளோம். எனவே, எப்போது, எப்படி இந்தப் போர் முடிய வேண்டும் என்பதை நாங்களே தீர்மானிப்போம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து ஈரான் போரிட்டு வருவது குறித்து சர்வதேச நெருக்கடி குழுமத்தின் ஈரான் திட்ட இயக்குனர் அலி வேஸ் கூறுகையில், ''உயர் தலைமையை இழக்க நேரிட்டாலும், அதனால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பரவலாக்கப்பட்ட இராணுவக் கட்டளை அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். எனவேதான் சில மூத்த தலைவர்களை இழந்த போதிலும், ஆட்சி அப்படியே உள்ளது. 2005ம் ஆண்டு ஆப்கான் மற்றும் ஈராக்கில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இது போன்ற புதிய ராணுவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஈரான் இப்போது 3 குறிக்கோள்களை மையமாக வைத்து இப்போரில் ஈடுபட்டுள்ளது. முதலாவதாக, எதிரியின் ஆரம்பக்கட்டத் தாக்குதல்களில் இருந்து நாட்டின் தலைமை மற்றும் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, தங்களது இருப்பு அழியாமல் இருப்பதை உறுதி செய்வவது ஆகும். இரண்டாவதாக, போரில் தொடர்ந்து நீடிப்பதற்கும் எதிரிக்குத் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் தேவையான ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதத் திறனைத் தக்கவைத்துக் கொள்வது ஆகும். மூன்றாவதாக, போரை நீண்ட காலத்திற்கு இழுத்தடிப்பது. இதன் மூலம் எதிரி நாடு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சோர்வடையும் போது, ஈரானுக்குச் சாதகமான நிபந்தனைகளுடன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகும். அமெரிக்கா போன்ற ஒரு பெரிய வல்லரசுடன் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என்பதால், போரைத் தற்காப்பு ரீதியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் கொண்டு செல்வதே ஈரானின் திட்டம்''என்று தெரிவித்தார். இப்போரால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு உள்நாட்டிலும், நட்பு நாடுகளிடமிருந்தும் கடும் நெருக்கடி வந்து கொண்டிருக்கிறது. ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் மலிவான ட்ரோன் (Drone) படைகளைக் கொண்டு, துபாயில் உள்ள ஒரு சொகுசு படகுத் துறைமுகம் (Marina) மற்றும் கடலில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம், இந்தப் போரை வளைகுடா நாடுகள், துருக்கி, சைப்ரஸ் மற்றும் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் ஈரான் விரிவுபடுத்தியுள்ளது. அதே சமயம், லெபனானில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஈரானியப் படைகள் ஹார்முஸ் நீரிணையை கிட்டத்தட்ட மூடிவிட்டன. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய வழித்தடம் முடங்கியுள்ளதால் உலக அளவில் பெரும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த போர் வியூகம் குறித்து உலக அளவில் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இந்தப் போரின் உண்மையான நோக்கம் என்ன என்பதில் அமெரிக்க அரசு தெளிவான பதில்களைத் தவிர்க்கிறது. இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தைச் சேர்ந்த டேனி சிட்ரினோவிச் இது குறித்து கூறுகையில், ஈரானின் நீண்ட காலத் திட்டங்கள் மற்றும் அதன் உறுதித்தன்மை குறித்த புரிதல் எங்களிடம் இல்லை என்று அவர் எச்சரிக்கிறார். இந்தப் போரிலிருந்து சுலபமாக வெளியேற வழி இல்லாததால், அதிபர் ட்ரம்ப் தனது வெற்றி குறித்த இலக்கை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வு பேராசிரியர் ஜொனாதன் பாக்குயின் தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் கூறுகையில், ஈரான் சரணடைய வேண்டும் அல்லது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிட்டு, ஈரானிய மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் அரசை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறி அவர் விலகிக்கொள்ளப் பார்க்கலாம்''என்று தெரிவித்தார்.
காங்கிரஸ்,தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுக்க முடியும்னா, எங்களுக்கு மட்டும் ஏன்.! - பெ.சண்முகம்
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுடன் திமுக-வுக்கு சிறு சிறு அதிருப்திகள் வர தொடங்கி இருக்கிறது. திமுகவுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு உடன்பாடு ஏற்படாத சூழலில் இன்று (மார்ச்.14) மூன்றாம் கட்டமாக அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தனர். திமுக குழு ஆனால் திமுக சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இன்றைய தினம் பேச்சுவார்த்தை என்றுதான் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளைய தினம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான தயாரிப்பில் திமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் என எல்லோரும் அந்தப் பணிகளை மேற்கொள்ள இருப்பதனால் இன்றைக்கு நடைபெறும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பம். அந்த விருப்பத்தைத் தான் திமுகவிடம் சொல்லியிருக்கிறோம். புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினால் நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு தொகுதிகள் தருவது கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதே சிரமத்திற்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சியினருக்கு கூடுதல் தொகுதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்படும் என்று ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. பெ. சண்முகம் ஆகவே அவர்களுக்கெல்லாம் கூடுதல் தொகுதி ஒதுக்கப்படுகின்றபோது இடதுசாரி கட்சிகளுக்கு தரமுடியாது என்று சொல்வதற்கான எந்தவித நியாயமும் இல்லை. கடந்தத் தேர்தலைவிட அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய முடிவு. இதை பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம். அவர்கள் தங்களது தலைவரிடம் கலந்து பேசி தெரிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ்,தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுக்க முடியும்னா, எங்களுக்கு மட்டும் ஏன்.! - பெ.சண்முகம்
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுடன் திமுக-வுக்கு சிறு சிறு அதிருப்திகள் வர தொடங்கி இருக்கிறது. திமுகவுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு உடன்பாடு ஏற்படாத சூழலில் இன்று (மார்ச்.14) மூன்றாம் கட்டமாக அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தனர். திமுக குழு ஆனால் திமுக சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இன்றைய தினம் பேச்சுவார்த்தை என்றுதான் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளைய தினம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான தயாரிப்பில் திமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் என எல்லோரும் அந்தப் பணிகளை மேற்கொள்ள இருப்பதனால் இன்றைக்கு நடைபெறும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பம். அந்த விருப்பத்தைத் தான் திமுகவிடம் சொல்லியிருக்கிறோம். புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினால் நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு தொகுதிகள் தருவது கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதே சிரமத்திற்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சியினருக்கு கூடுதல் தொகுதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்படும் என்று ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. பெ. சண்முகம் ஆகவே அவர்களுக்கெல்லாம் கூடுதல் தொகுதி ஒதுக்கப்படுகின்றபோது இடதுசாரி கட்சிகளுக்கு தரமுடியாது என்று சொல்வதற்கான எந்தவித நியாயமும் இல்லை. கடந்தத் தேர்தலைவிட அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய முடிவு. இதை பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம். அவர்கள் தங்களது தலைவரிடம் கலந்து பேசி தெரிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
திருமணம், ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிரா அரசு புதிய சட்டம்
பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. இத்தடையை எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறைஈடு செய்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா அரசும் மதமாற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மத சுதந்திர மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்களை விட மிகவும் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. 7 ஆண்டு சிறை இதன் ட்ி திருமணத்தின் பெயரில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதோடு கூட்டாக மதமாற்றம் செய்வோருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதே தவறை தொடர்ந்து செய்தால் 10 ஆண்டு சிறையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மதமாற்றம் செய்யப்பட்டவரின் பெற்றோர், உடன்பிறந்தோர் அல்லது உறவினர்கள் யார் புகார் அளித்தாலும், காவல்துறை அதை கட்டாயம் வழக்காக பதிவு செய்யவேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்துக் குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும். 60 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் சட்டவிரோத மதமாற்றத்தின் மூலம் நடைபெறும் திருமணங்கள் அல்லது திருமணம் போன்ற உறவுகள் (live-in relationships) மூலம் பிறக்கும் குழந்தைகள், அந்தத் திருமணத்திற்கு முன்பு அவர்களின் தாய் எந்த மதத்தை சார்ந்திருந்தாரோ அந்த மதத்தை சேர்ந்தவராகவே கருதப்படுவார். மதம் மாற விரும்புபவர்கள் மற்றும் அந்தச் சடங்கை நடத்துபவர்கள், குறிப்பிட்ட அதிகாரியிடம் 60 நாட்களுக்கு முன்பே அறிவிக்கவேண்டும். மதம் மாறிய நபர் மற்றும் அந்த மதமாற்றச் சடங்கை நடத்திய நபர் அல்லது நிறுவனம் (பூசாரி, மௌலவி அல்லது அமைப்பு), மதம் மாற்றம் நடந்த 21 நாட்களுக்குள் குறிப்பிட்ட அரசு அதிகாரியிடம் அது குறித்த பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பரிசு பொருட்கள் கொடுப்பது குற்றம் மதமாற்றத்திற்காக பரிசு பொருட்கள் வழங்குவது அல்லது வாக்குறுதி அளிப்பது குற்றமாகக் கருதப்படும். பரிசுகள், வேலைவாய்ப்பு அல்லது இலவசக் கல்வி வழங்குவதாக கூறுவது சிறந்த வாழ்க்கை முறை தருவதாகக் கூறுவது, தெய்வீகக் சக்தி மூலம் நோயை குணப்படுத்துவோம் என்று கூறுவது போன்றவை குற்றமாகும். சாதாரணக் குற்றவியல் சட்டங்களில் ஒருவரை குற்றவாளி என நிரூபிக்கும் பொறுப்பு புகாரளிப்பவர் அல்லது காவல்துறையிடம் இருக்கும். ஆனால், இந்த மசோதாவின்படி யார் அந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்தினாரோ அல்லது அதற்கு உதவியாக இருந்தாரோ அவர்களே அந்த மதமாற்றம் சட்டத்திற்கு உட்பட்டு நடந்தது என்பதையும், எந்த விதிகளையும் மீறவில்லை என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இம்மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திர உரிமை (பிரிவு 25), பொது அமைதி, பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு உட்பட்டது. மத சுதந்திரம் என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும், அது மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதை மசோதாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதத்தைப் பரப்புவதற்கான உரிமை என்பது, மற்றொரு நபரை வற்புறுத்தியோ அல்லது ஆசை காட்டியோ மதம் மாற்றுவதற்கான உரிமையை உள்ளடக்கியது கிடையாது என்றும் மசோதா கூறுகிறது. மதச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். மேலும், மிரட்டல், மோசடி, ஆசை வார்த்தைகள் அல்லது திருமணம் ஆகியவற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மத மாற்றங்களைத் தடை செய்வதையும் இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்று சட்டமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய உள்துறை இணையமைச்சர் பங்கஜ் போயர் தெரிவித்தார். இந்த மசோதா பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. சிட்டிசன்ஸ் பார் ஜஸ்டீஸ் அண்ட் பீஸ் உட்பட 35 சிவில் சமூக அமைப்புகள் இந்த மசோதாவை எதிர்த்துள்ளன. இது தனிமனித சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த மசோதா அடுத்த வாரம் சட்டப்பேரவையில் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
திருமணம், ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிரா அரசு புதிய சட்டம்
பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. இத்தடையை எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறைஈடு செய்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா அரசும் மதமாற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மத சுதந்திர மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்களை விட மிகவும் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. 7 ஆண்டு சிறை இதன் ட்ி திருமணத்தின் பெயரில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதோடு கூட்டாக மதமாற்றம் செய்வோருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதே தவறை தொடர்ந்து செய்தால் 10 ஆண்டு சிறையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மதமாற்றம் செய்யப்பட்டவரின் பெற்றோர், உடன்பிறந்தோர் அல்லது உறவினர்கள் யார் புகார் அளித்தாலும், காவல்துறை அதை கட்டாயம் வழக்காக பதிவு செய்யவேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்துக் குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும். 60 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் சட்டவிரோத மதமாற்றத்தின் மூலம் நடைபெறும் திருமணங்கள் அல்லது திருமணம் போன்ற உறவுகள் (live-in relationships) மூலம் பிறக்கும் குழந்தைகள், அந்தத் திருமணத்திற்கு முன்பு அவர்களின் தாய் எந்த மதத்தை சார்ந்திருந்தாரோ அந்த மதத்தை சேர்ந்தவராகவே கருதப்படுவார். மதம் மாற விரும்புபவர்கள் மற்றும் அந்தச் சடங்கை நடத்துபவர்கள், குறிப்பிட்ட அதிகாரியிடம் 60 நாட்களுக்கு முன்பே அறிவிக்கவேண்டும். மதம் மாறிய நபர் மற்றும் அந்த மதமாற்றச் சடங்கை நடத்திய நபர் அல்லது நிறுவனம் (பூசாரி, மௌலவி அல்லது அமைப்பு), மதம் மாற்றம் நடந்த 21 நாட்களுக்குள் குறிப்பிட்ட அரசு அதிகாரியிடம் அது குறித்த பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பரிசு பொருட்கள் கொடுப்பது குற்றம் மதமாற்றத்திற்காக பரிசு பொருட்கள் வழங்குவது அல்லது வாக்குறுதி அளிப்பது குற்றமாகக் கருதப்படும். பரிசுகள், வேலைவாய்ப்பு அல்லது இலவசக் கல்வி வழங்குவதாக கூறுவது சிறந்த வாழ்க்கை முறை தருவதாகக் கூறுவது, தெய்வீகக் சக்தி மூலம் நோயை குணப்படுத்துவோம் என்று கூறுவது போன்றவை குற்றமாகும். சாதாரணக் குற்றவியல் சட்டங்களில் ஒருவரை குற்றவாளி என நிரூபிக்கும் பொறுப்பு புகாரளிப்பவர் அல்லது காவல்துறையிடம் இருக்கும். ஆனால், இந்த மசோதாவின்படி யார் அந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்தினாரோ அல்லது அதற்கு உதவியாக இருந்தாரோ அவர்களே அந்த மதமாற்றம் சட்டத்திற்கு உட்பட்டு நடந்தது என்பதையும், எந்த விதிகளையும் மீறவில்லை என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இம்மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திர உரிமை (பிரிவு 25), பொது அமைதி, பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு உட்பட்டது. மத சுதந்திரம் என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும், அது மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதை மசோதாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதத்தைப் பரப்புவதற்கான உரிமை என்பது, மற்றொரு நபரை வற்புறுத்தியோ அல்லது ஆசை காட்டியோ மதம் மாற்றுவதற்கான உரிமையை உள்ளடக்கியது கிடையாது என்றும் மசோதா கூறுகிறது. மதச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். மேலும், மிரட்டல், மோசடி, ஆசை வார்த்தைகள் அல்லது திருமணம் ஆகியவற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மத மாற்றங்களைத் தடை செய்வதையும் இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்று சட்டமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய உள்துறை இணையமைச்சர் பங்கஜ் போயர் தெரிவித்தார். இந்த மசோதா பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. சிட்டிசன்ஸ் பார் ஜஸ்டீஸ் அண்ட் பீஸ் உட்பட 35 சிவில் சமூக அமைப்புகள் இந்த மசோதாவை எதிர்த்துள்ளன. இது தனிமனித சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த மசோதா அடுத்த வாரம் சட்டப்பேரவையில் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
திருமணம், ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிரா அரசு புதிய சட்டம்
பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. இத்தடையை எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறைஈடு செய்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா அரசும் மதமாற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மத சுதந்திர மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்களை விட மிகவும் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. 7 ஆண்டு சிறை இதன் ட்ி திருமணத்தின் பெயரில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதோடு கூட்டாக மதமாற்றம் செய்வோருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதே தவறை தொடர்ந்து செய்தால் 10 ஆண்டு சிறையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மதமாற்றம் செய்யப்பட்டவரின் பெற்றோர், உடன்பிறந்தோர் அல்லது உறவினர்கள் யார் புகார் அளித்தாலும், காவல்துறை அதை கட்டாயம் வழக்காக பதிவு செய்யவேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்துக் குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும். 60 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் சட்டவிரோத மதமாற்றத்தின் மூலம் நடைபெறும் திருமணங்கள் அல்லது திருமணம் போன்ற உறவுகள் (live-in relationships) மூலம் பிறக்கும் குழந்தைகள், அந்தத் திருமணத்திற்கு முன்பு அவர்களின் தாய் எந்த மதத்தை சார்ந்திருந்தாரோ அந்த மதத்தை சேர்ந்தவராகவே கருதப்படுவார். மதம் மாற விரும்புபவர்கள் மற்றும் அந்தச் சடங்கை நடத்துபவர்கள், குறிப்பிட்ட அதிகாரியிடம் 60 நாட்களுக்கு முன்பே அறிவிக்கவேண்டும். மதம் மாறிய நபர் மற்றும் அந்த மதமாற்றச் சடங்கை நடத்திய நபர் அல்லது நிறுவனம் (பூசாரி, மௌலவி அல்லது அமைப்பு), மதம் மாற்றம் நடந்த 21 நாட்களுக்குள் குறிப்பிட்ட அரசு அதிகாரியிடம் அது குறித்த பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பரிசு பொருட்கள் கொடுப்பது குற்றம் மதமாற்றத்திற்காக பரிசு பொருட்கள் வழங்குவது அல்லது வாக்குறுதி அளிப்பது குற்றமாகக் கருதப்படும். பரிசுகள், வேலைவாய்ப்பு அல்லது இலவசக் கல்வி வழங்குவதாக கூறுவது சிறந்த வாழ்க்கை முறை தருவதாகக் கூறுவது, தெய்வீகக் சக்தி மூலம் நோயை குணப்படுத்துவோம் என்று கூறுவது போன்றவை குற்றமாகும். சாதாரணக் குற்றவியல் சட்டங்களில் ஒருவரை குற்றவாளி என நிரூபிக்கும் பொறுப்பு புகாரளிப்பவர் அல்லது காவல்துறையிடம் இருக்கும். ஆனால், இந்த மசோதாவின்படி யார் அந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்தினாரோ அல்லது அதற்கு உதவியாக இருந்தாரோ அவர்களே அந்த மதமாற்றம் சட்டத்திற்கு உட்பட்டு நடந்தது என்பதையும், எந்த விதிகளையும் மீறவில்லை என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இம்மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திர உரிமை (பிரிவு 25), பொது அமைதி, பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு உட்பட்டது. மத சுதந்திரம் என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும், அது மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதை மசோதாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதத்தைப் பரப்புவதற்கான உரிமை என்பது, மற்றொரு நபரை வற்புறுத்தியோ அல்லது ஆசை காட்டியோ மதம் மாற்றுவதற்கான உரிமையை உள்ளடக்கியது கிடையாது என்றும் மசோதா கூறுகிறது. மதச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். மேலும், மிரட்டல், மோசடி, ஆசை வார்த்தைகள் அல்லது திருமணம் ஆகியவற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மத மாற்றங்களைத் தடை செய்வதையும் இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்று சட்டமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய உள்துறை இணையமைச்சர் பங்கஜ் போயர் தெரிவித்தார். இந்த மசோதா பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. சிட்டிசன்ஸ் பார் ஜஸ்டீஸ் அண்ட் பீஸ் உட்பட 35 சிவில் சமூக அமைப்புகள் இந்த மசோதாவை எதிர்த்துள்ளன. இது தனிமனித சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த மசோதா அடுத்த வாரம் சட்டப்பேரவையில் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்'பலமான பதிலடி கொடுக்கும் ஈரான்
ஈரான் எண்ணெய் ஏற்றுமதியின் முக்கியமான தளம், 'கார்க் தீவு'. இந்தத் தீவை குறி வைத்து தாக்கியுள்ளது அமெரிக்கா. ட்ரம்ப் என்ன சொல்கிறார்? இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், எனது வழிகாட்டுதலில் கார்க் தீவில் உள்ள ராணுவ தளவாடங்கள் தாக்கப்பட்டுள்ளன. எண்ணெய் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. ட்ரம்ப் ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கோ, பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் வந்தால், எதுவும் யோசிக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அந்தப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் எரிசக்தி தளவாடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியிருந்தது ஈரான். இப்போது அமெரிக்கா கார்க் தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை என்றாலும், கார்க் தீவு மீதான தாக்குதலை ஈரான் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. ஈரான் பதிலடி இன்று காலை (இந்திய நேரப்படி) ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இனி ஏதேனும் ஈரான் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளில் அமெரிக்காவிற்கு சொந்தமாக இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கிய 5 அமெரிக்க விமானங்களை ஈரான் தாக்கியுள்ளது என்று 'The Wall Street' பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதல், மிரட்டல் அனைத்துமே கார்க் தீவிற்காக அமெரிக்காவைப் பழி வாங்கும் நடவடிக்கையே. முதலில் தந்தை; இப்போது மகன்: மொஜ்தபா காமேனிக்கும் குறி வைக்கும் அமெரிக்கா - என்ன சொல்கிறது?
கனிமொழி கையிலெடுத்த `விவகாரம்'சக்சஸ்: `இனிமேல் எல்லாம் அக்கா தான்' - உற்சாக கனி டீம்! பின்னணி என்ன?
திமுக-வில் நடந்த மாற்றம்! சமீபத்தில் திமுக மாணவரணிச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்திக்கு பதிலாக, திமுக மாணவர் அணி துணைச் செயலாளராக இருந்துவரும் ஜெ. வீரமணி என்ற பெண்மணியை மாணவரணிச் செயலாளராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது திமுக தலைமை. மேலும், ஒரு அணியின் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தியை கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமித்திருக்கிறார்கள். இதனை அவருக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். கனிமொழியுடன் வீரமணி தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவின் முக்கியமான அணியின் செயலாளர், அதுவும் உதயநிதி, அன்பில் மகேஸ் உள்ளிட்ட மேல்மட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் கருதப்படும் ராஜீவ் காந்தி மாற்றப்பட்டிருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. கூடவே இந்த மாற்றத்தின் பின்னணியில் துணை பொதுச் செயலாளரும், முதல்வரின் சகோதரியுமான கனிமொழி கருணாநிதியின் கை ஓங்கியிருப்பதாகச் சொல்கிறது அறிவாலய வட்டாரம். முதல்வரிடம் பேசிய கனிமொழி! ராஜீவ் மாற்றத்துக்குப் பின்னணியில் கனிமொழி இருப்பதாகச் சொல்லப்படுவது குறித்து விவரமறிந்த வட்டாரத்தில் பேசினோம். திருச்சி மாநாட்டுக்கு முன்பாகவே இந்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. கனிமொழியைச் சந்தித்த மாணவரணி நிர்வாகிகள் சிலர் ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகள் குறித்து கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்கள். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கனிமொழி இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். கூடவே திருச்சி மாநாடு முடிந்ததும் இந்த விவகாரம் குறித்து மீண்டும் முதல்வரிடம் பேசியிருக்கிறார். கனிமொழி கருணாநிதி - ஸ்டாலின் கனிமொழியின் தொடர்ச்சியான கோரிக்கையினால் செயலாளர் நடவடிக்கை குறித்து உளவுத்துறையிடம் விரிவான அறிக்கையைக் கேட்டிருக்கிறார் முதல்வர். அந்த அறிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதல்வர் விவகாரத்தை உதயநிதியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அறிக்கையைப் பார்த்து உதயநிதிக்கும் படு ஷாக் தான். எல்லாம் ஒன்று சேர்ந்த நிலையில் செயலாளரை மாற்றுவது தவிர வேறெந்த வழியிலும் இல்லை என்ற நிலையில் ராஜீவை மாற்றி, இந்த புகார்களைக் கனிமொழியின் கவனத்துக்குக் கொண்டு சென்ற வீரமணியைச் செயலாளராக அறிவித்திருக்கிறது தலைமை என்றார்கள். ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! - `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை...' - வெடித்துக் கிளம்பிய விவகாரம்! சந்தோஷத்தில் கனி, வருத்தத்தில் ஆ.ராசா! இந்த அறிவிப்பு குறித்து அறிவாலய வட்டாரத்தில் கேட்டபோது, மாணவரணியின் பொறுப்பாளரான துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா ஏற்கனவே ராஜீவ் காந்தி செயல்பாடுகள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார். கூடவே அணிக்கு புதிய செயலாளர் நியமனத்துக்கு அவர் வேறொரு நபரைப் பரிந்துரை செய்திருந்தார். இந்த சூழலில் ஆள் மாறியிருப்பதில் ராசா தரப்பு வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில், கனிமொழி மண்டல பொறுப்பாளராக இருக்கும் தொகுதிகளில் வேட்பாளர் தேர்வினை அவரே முடிவுசெய்யட்டும் என்று முதல்வர் சொல்லியிருந்தார். கனிமொழி கருணாநிதி ஏற்கனவே கனிமொழி பரிந்துரையில் சிலருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது தொடங்கி இப்போது அவர் சொன்ன நபரை முக்கிய அணியின் செயலாளராக நியமித்தது வரை கனிமொழியின் கோரிக்கைகளைத் தொடர்ச்சியாகத் தட்டாமல் செய்து கொடுக்கிறார் தலைவர். இதனால், கட்சியின் கனி அக்காவின் கை ஓங்கியிருப்பதாக 'இனி நாங்க தான்' என்று சொல்லி ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறது கனிமொழி தரப்பு. அதே நேரத்தில் மாநில அரசியலில் அவர் அதீத ஆர்வம் காட்டுவதாக அவர் தரப்பு செய்திகளைக் கிளப்பிவிட்ட நிலையில் அவரை சரிக்கட்டப் பார்க்கிறதா தலைமை என்ற விவாதமும் இருக்கத்தான் செய்கிறது என்றார்கள் விளக்கமாக. Loading…
கனிமொழி கையிலெடுத்த `விவகாரம்'சக்சஸ்: `இனிமேல் எல்லாம் அக்கா தான்' - உற்சாக கனி டீம்! பின்னணி என்ன?
திமுக-வில் நடந்த மாற்றம்! சமீபத்தில் திமுக மாணவரணிச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்திக்கு பதிலாக, திமுக மாணவர் அணி துணைச் செயலாளராக இருந்துவரும் ஜெ. வீரமணி என்ற பெண்மணியை மாணவரணிச் செயலாளராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது திமுக தலைமை. மேலும், ஒரு அணியின் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தியை கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமித்திருக்கிறார்கள். இதனை அவருக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். கனிமொழியுடன் வீரமணி தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவின் முக்கியமான அணியின் செயலாளர், அதுவும் உதயநிதி, அன்பில் மகேஸ் உள்ளிட்ட மேல்மட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் கருதப்படும் ராஜீவ் காந்தி மாற்றப்பட்டிருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. கூடவே இந்த மாற்றத்தின் பின்னணியில் துணை பொதுச் செயலாளரும், முதல்வரின் சகோதரியுமான கனிமொழி கருணாநிதியின் கை ஓங்கியிருப்பதாகச் சொல்கிறது அறிவாலய வட்டாரம். முதல்வரிடம் பேசிய கனிமொழி! ராஜீவ் மாற்றத்துக்குப் பின்னணியில் கனிமொழி இருப்பதாகச் சொல்லப்படுவது குறித்து விவரமறிந்த வட்டாரத்தில் பேசினோம். திருச்சி மாநாட்டுக்கு முன்பாகவே இந்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. கனிமொழியைச் சந்தித்த மாணவரணி நிர்வாகிகள் சிலர் ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகள் குறித்து கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்கள். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கனிமொழி இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். கூடவே திருச்சி மாநாடு முடிந்ததும் இந்த விவகாரம் குறித்து மீண்டும் முதல்வரிடம் பேசியிருக்கிறார். கனிமொழி கருணாநிதி - ஸ்டாலின் கனிமொழியின் தொடர்ச்சியான கோரிக்கையினால் செயலாளர் நடவடிக்கை குறித்து உளவுத்துறையிடம் விரிவான அறிக்கையைக் கேட்டிருக்கிறார் முதல்வர். அந்த அறிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதல்வர் விவகாரத்தை உதயநிதியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அறிக்கையைப் பார்த்து உதயநிதிக்கும் படு ஷாக் தான். எல்லாம் ஒன்று சேர்ந்த நிலையில் செயலாளரை மாற்றுவது தவிர வேறெந்த வழியிலும் இல்லை என்ற நிலையில் ராஜீவை மாற்றி, இந்த புகார்களைக் கனிமொழியின் கவனத்துக்குக் கொண்டு சென்ற வீரமணியைச் செயலாளராக அறிவித்திருக்கிறது தலைமை என்றார்கள். ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! - `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை...' - வெடித்துக் கிளம்பிய விவகாரம்! சந்தோஷத்தில் கனி, வருத்தத்தில் ஆ.ராசா! இந்த அறிவிப்பு குறித்து அறிவாலய வட்டாரத்தில் கேட்டபோது, மாணவரணியின் பொறுப்பாளரான துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா ஏற்கனவே ராஜீவ் காந்தி செயல்பாடுகள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார். கூடவே அணிக்கு புதிய செயலாளர் நியமனத்துக்கு அவர் வேறொரு நபரைப் பரிந்துரை செய்திருந்தார். இந்த சூழலில் ஆள் மாறியிருப்பதில் ராசா தரப்பு வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில், கனிமொழி மண்டல பொறுப்பாளராக இருக்கும் தொகுதிகளில் வேட்பாளர் தேர்வினை அவரே முடிவுசெய்யட்டும் என்று முதல்வர் சொல்லியிருந்தார். கனிமொழி கருணாநிதி ஏற்கனவே கனிமொழி பரிந்துரையில் சிலருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது தொடங்கி இப்போது அவர் சொன்ன நபரை முக்கிய அணியின் செயலாளராக நியமித்தது வரை கனிமொழியின் கோரிக்கைகளைத் தொடர்ச்சியாகத் தட்டாமல் செய்து கொடுக்கிறார் தலைவர். இதனால், கட்சியின் கனி அக்காவின் கை ஓங்கியிருப்பதாக 'இனி நாங்க தான்' என்று சொல்லி ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறது கனிமொழி தரப்பு. அதே நேரத்தில் மாநில அரசியலில் அவர் அதீத ஆர்வம் காட்டுவதாக அவர் தரப்பு செய்திகளைக் கிளப்பிவிட்ட நிலையில் அவரை சரிக்கட்டப் பார்க்கிறதா தலைமை என்ற விவாதமும் இருக்கத்தான் செய்கிறது என்றார்கள் விளக்கமாக. Loading…
அதிமுக to தவெக.., மாநிலக் கட்சிகளை விழுங்குகிறதா பாஜக? | TN Election Updates 360 | Vikatan
அதிமுக to தவெக.., மாநிலக் கட்சிகளை விழுங்குகிறதா பாஜக? | TN Election Updates 360 | Vikatan
Iran war: முதல் பேச்சிலேயே மிரட்டிய Supreme Leader Mojtaba khamenei | USA | Israel | Decode Vikatan
Iran war: முதல் பேச்சிலேயே மிரட்டிய Supreme Leader Mojtaba khamenei | USA | Israel | Decode Vikatan
திருவள்ளூர் தொகுதி: தி.மு.க-வில் `சீட்'க்கு கடும் போட்டி! - குஷியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்
திருவள்ளூர் தொகுதியில் ஏழு தடவை தி.மு.கவும், 5 தடவை அ.தி.மு.கவும், இரண்டு தடவை காங்கிரஸும், ஒரு தடவை தமிழ் மாநில காங்கிரஸ், விவசாயிகள் மஸ்தூர் மக்கள் கட்சி ஆகியவை வெற்றி பெற்றியிருக்கின்றன. கடந்த 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த வி.ஜி.ராஜேந்திரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க திருவள்ளூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா வெற்றி வாய்ப்பை இழந்தார். சென்னையில் குடியிருப்பதால் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் தொகுதியை சரிவர கண்டுக்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதைப் போல கட்சி கூட்டங்களுக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கும் சரியான நேரத்தில் அவர் வருவதில்லை. ராஜேந்திரன் குறிப்பாக திருவள்ளூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விழாவுக்கு வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ காலதாமதமாக வந்ததால் தூய்மை பணியாளர் ஒருவர் மயக்கமடைந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் வி.ஜி.ராஜேந்திரனின் பி.ஏ-வாக இருந்த தி.மு.க பிரமுகர் நேதாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அறிவாலயத்துக்குச் சென்றதால் அவரை கட்சியிலிருந்து தலைமை நீக்கியது. நேதாஜி விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒன் டு ஒன் நட்பிலிருந்த வி.ஜி. ராஜேந்திரன் மீதே வருத்தத்தை கட்சித் தலைமைக்கு ஏற்பட்டது. அதோடு சிட்டிங் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் டீமுக்கும் திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகளுக்கும் இடையே முட்டல் மோதல் இருந்து வருகிறது. அதனால் திருவள்ளூர் தொகுதியில் கடும் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட தி.மு.கவினர், ``திருவள்ளூர், திருத்தணி தொகுதிகளின் மாவட்ட செயலாளராக இருப்பவர் சந்திரன். ஆனால், ஆக்டிங் மாவட்டச் செயலாளர் போல சிட்டிங் எம்.எல்ஏ ராஜேந்திரன் செயல்பட்டு வருகிறார். அவரை விட அவரின் பி.ஏ-வாக இருந்த நேதாஜி ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதுதவிர மாவட்ட துணை செயலாளராக இருக்கும் வி.சி.ஆர் குமரனுக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ-வி.ஜி.ராஜேந்திரனுக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே ஒத்துப் போகவில்லை. இந்தத் தேர்தலில் வி.ஜி.ராஜேந்திரனுக்கு சீட் கிடைக்க கூடாது என்று குமரன் டீம் தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. அதே நேரத்தில் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என தன்னுடைய அறிவாலய செல்வாக்கை பயன்படுத்தி வருகிறார் குமரன். மேலும் தொகுதியில் தனக்கென்று தனி டீமை ஏற்படுத்தியிருக்கும் குமரன், தொகுதியில் நலத்திட்ட உதவி என்ற பெயரில் கெத்து காட்டி வருகிறார். ஆனால் அவர் மீது மோசடி குற்றச்சாட்டுக்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தின் படியேறினாலும் அதையும் சமாளித்து வருகிறார். திருவள்ளூர் குமரனுக்கு உள்ளடி வேலைகளை சிட்டிங் எம்.எல்.ஏ-வான ராஜேந்திரனின் டீமும் செய்து வருகிறது. அதன்பின்னணியில் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டாலும் நேதாஜி அன்கோ, திரைமறைவில் இருந்து வருகிறது. நேதாஜி அன்கோவை எம்.எல்.ஏ கண்டிக்கவில்லை என்றால் அவருக்கு கெட்ட பெயர் ஏற்படும். குறிப்பாக மண் பிசினஸில் இந்த டீம் கொடி கட்டி பறக்கிறது. சட்டவிரோதமாக இந்த டீம் அள்ளியிருக்கும் மண் விவகாரம் எப்போது பூதாகரமாக வெடிக்கும் என தெரியவில்லை. அதைத் தொடர்ந்து நகரச் செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரனுக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரனுக்கும் முட்டல் மோதல் இருந்து வருகிறது. நகர செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ சுப்பிரமணியனின் மகன். அதனால் அவரும் இந்தத் தடவை சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார். அதோடு மாவட்ட அமைச்சர் நாசருக்கு விசுவாசமாக இருப்பதால் சீட் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் இருந்து வருகிறார். நகர செயலாளர் ரவிச்சந்திரனுக்கு வி.ஜி.ராஜேந்திரன் டீம், நகராட்சி நிர்வாகத்திலிருப்பவர்கள் மூலம் குடைச்சலை கொடுத்து வருகிறது என்றனர். தி.மு.க-வில் யாருக்கு சீட் திருவள்ளூர் தொகுதியில் இந்தத் தடவை சீட் கேட்டு சிட்டிங் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் குமரன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புவனேஷ்குமார் உள்பட 13 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதில் புவனேஷ்குமார், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலும் சீட் கேட்டார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் வி.ஜி.ராஜேந்திரனின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இளைஞரணியில் ஆக்டிவ்வாக இருப்பதால் துணை முதல்வர் உதயநிதியின் குட்புக்கில் புவனேஷ்குமார் இருந்து வருகிறார். தொகுதியில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்க புவனேஷ்குமாருக்கு சீட் கொடுக்கலாமா என்ற யோசனையிலும் தலைமை இருந்து வருகிறது. அதனால் புவனேஷ்குமார் குறித்த முழுவிவரங்களை உளவுத்துறை, பென் டீமை சேகரித்து அனுப்ப கட்சித் தலைமை தெரிவித்ததும் அந்த ரிப்போர்ட்டும் அறிவாலயத்துக்குச் சென்றிருக்கிறது. இதுகுறித்து அறிவாலய சீனியர்களிடம் கேட்டதற்கு, ``தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் சீட் கேட்பதில் நிர்வாகிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும். தகுதியானவர் யார் என்பது கட்சித் தலைமைக்குத் தெரியும். நிர்வாகிகளுக்கிடையே நடக்கும் போட்டியை கோஷ்டி பூசல் என கூறுவது தவறு. தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா எம்.பி , அனைத்து தரப்பு நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார் என்றனர். முன்னாள் அமைச்சர் ரமணா குஷியில் முன்னாள் அமைச்சர் இந்த தொகுதியில் இந்தத் தடவை சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பி.வி.ரமணா. இவரைத் தவிர இன்னும் சிலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும் மாவட்டச் செயலாளராக பி.வி.ரமணா இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் குட்கா வழக்கு பி.வி ரமணாவுக்கு ஒரு தடையாக இருக்கிறது. இருந்தபோதிலும் தொகுதியில் பி.வி.ரமணாவுக்கு கடந்த தேர்தல்களில் கடும் போட்டியாக இருந்தவர் அதிமு.க தலைமையுடன் அதிருப்தியிலிருப்பதால் தனக்கு தான் சீட் என முன்னாள் அமைச்சர் தரப்பு குஷியிலிருந்து வருகிறது. !
திருவள்ளூர் தொகுதி: தி.மு.க-வில் `சீட்'க்கு கடும் போட்டி! - குஷியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்
திருவள்ளூர் தொகுதியில் ஏழு தடவை தி.மு.கவும், 5 தடவை அ.தி.மு.கவும், இரண்டு தடவை காங்கிரஸும், ஒரு தடவை தமிழ் மாநில காங்கிரஸ், விவசாயிகள் மஸ்தூர் மக்கள் கட்சி ஆகியவை வெற்றி பெற்றியிருக்கின்றன. கடந்த 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த வி.ஜி.ராஜேந்திரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க திருவள்ளூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா வெற்றி வாய்ப்பை இழந்தார். சென்னையில் குடியிருப்பதால் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் தொகுதியை சரிவர கண்டுக்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதைப் போல கட்சி கூட்டங்களுக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கும் சரியான நேரத்தில் அவர் வருவதில்லை. ராஜேந்திரன் குறிப்பாக திருவள்ளூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விழாவுக்கு வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ காலதாமதமாக வந்ததால் தூய்மை பணியாளர் ஒருவர் மயக்கமடைந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் வி.ஜி.ராஜேந்திரனின் பி.ஏ-வாக இருந்த தி.மு.க பிரமுகர் நேதாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அறிவாலயத்துக்குச் சென்றதால் அவரை கட்சியிலிருந்து தலைமை நீக்கியது. நேதாஜி விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒன் டு ஒன் நட்பிலிருந்த வி.ஜி. ராஜேந்திரன் மீதே வருத்தத்தை கட்சித் தலைமைக்கு ஏற்பட்டது. அதோடு சிட்டிங் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் டீமுக்கும் திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகளுக்கும் இடையே முட்டல் மோதல் இருந்து வருகிறது. அதனால் திருவள்ளூர் தொகுதியில் கடும் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட தி.மு.கவினர், ``திருவள்ளூர், திருத்தணி தொகுதிகளின் மாவட்ட செயலாளராக இருப்பவர் சந்திரன். ஆனால், ஆக்டிங் மாவட்டச் செயலாளர் போல சிட்டிங் எம்.எல்ஏ ராஜேந்திரன் செயல்பட்டு வருகிறார். அவரை விட அவரின் பி.ஏ-வாக இருந்த நேதாஜி ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதுதவிர மாவட்ட துணை செயலாளராக இருக்கும் வி.சி.ஆர் குமரனுக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ-வி.ஜி.ராஜேந்திரனுக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே ஒத்துப் போகவில்லை. இந்தத் தேர்தலில் வி.ஜி.ராஜேந்திரனுக்கு சீட் கிடைக்க கூடாது என்று குமரன் டீம் தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. அதே நேரத்தில் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என தன்னுடைய அறிவாலய செல்வாக்கை பயன்படுத்தி வருகிறார் குமரன். மேலும் தொகுதியில் தனக்கென்று தனி டீமை ஏற்படுத்தியிருக்கும் குமரன், தொகுதியில் நலத்திட்ட உதவி என்ற பெயரில் கெத்து காட்டி வருகிறார். ஆனால் அவர் மீது மோசடி குற்றச்சாட்டுக்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தின் படியேறினாலும் அதையும் சமாளித்து வருகிறார். திருவள்ளூர் குமரனுக்கு உள்ளடி வேலைகளை சிட்டிங் எம்.எல்.ஏ-வான ராஜேந்திரனின் டீமும் செய்து வருகிறது. அதன்பின்னணியில் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டாலும் நேதாஜி அன்கோ, திரைமறைவில் இருந்து வருகிறது. நேதாஜி அன்கோவை எம்.எல்.ஏ கண்டிக்கவில்லை என்றால் அவருக்கு கெட்ட பெயர் ஏற்படும். குறிப்பாக மண் பிசினஸில் இந்த டீம் கொடி கட்டி பறக்கிறது. சட்டவிரோதமாக இந்த டீம் அள்ளியிருக்கும் மண் விவகாரம் எப்போது பூதாகரமாக வெடிக்கும் என தெரியவில்லை. அதைத் தொடர்ந்து நகரச் செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரனுக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரனுக்கும் முட்டல் மோதல் இருந்து வருகிறது. நகர செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ சுப்பிரமணியனின் மகன். அதனால் அவரும் இந்தத் தடவை சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார். அதோடு மாவட்ட அமைச்சர் நாசருக்கு விசுவாசமாக இருப்பதால் சீட் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் இருந்து வருகிறார். நகர செயலாளர் ரவிச்சந்திரனுக்கு வி.ஜி.ராஜேந்திரன் டீம், நகராட்சி நிர்வாகத்திலிருப்பவர்கள் மூலம் குடைச்சலை கொடுத்து வருகிறது என்றனர். தி.மு.க-வில் யாருக்கு சீட் திருவள்ளூர் தொகுதியில் இந்தத் தடவை சீட் கேட்டு சிட்டிங் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் குமரன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புவனேஷ்குமார் உள்பட 13 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதில் புவனேஷ்குமார், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலும் சீட் கேட்டார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் வி.ஜி.ராஜேந்திரனின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இளைஞரணியில் ஆக்டிவ்வாக இருப்பதால் துணை முதல்வர் உதயநிதியின் குட்புக்கில் புவனேஷ்குமார் இருந்து வருகிறார். தொகுதியில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்க புவனேஷ்குமாருக்கு சீட் கொடுக்கலாமா என்ற யோசனையிலும் தலைமை இருந்து வருகிறது. அதனால் புவனேஷ்குமார் குறித்த முழுவிவரங்களை உளவுத்துறை, பென் டீமை சேகரித்து அனுப்ப கட்சித் தலைமை தெரிவித்ததும் அந்த ரிப்போர்ட்டும் அறிவாலயத்துக்குச் சென்றிருக்கிறது. இதுகுறித்து அறிவாலய சீனியர்களிடம் கேட்டதற்கு, ``தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் சீட் கேட்பதில் நிர்வாகிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும். தகுதியானவர் யார் என்பது கட்சித் தலைமைக்குத் தெரியும். நிர்வாகிகளுக்கிடையே நடக்கும் போட்டியை கோஷ்டி பூசல் என கூறுவது தவறு. தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா எம்.பி , அனைத்து தரப்பு நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார் என்றனர். முன்னாள் அமைச்சர் ரமணா குஷியில் முன்னாள் அமைச்சர் இந்த தொகுதியில் இந்தத் தடவை சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பி.வி.ரமணா. இவரைத் தவிர இன்னும் சிலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும் மாவட்டச் செயலாளராக பி.வி.ரமணா இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் குட்கா வழக்கு பி.வி ரமணாவுக்கு ஒரு தடையாக இருக்கிறது. இருந்தபோதிலும் தொகுதியில் பி.வி.ரமணாவுக்கு கடந்த தேர்தல்களில் கடும் போட்டியாக இருந்தவர் அதிமு.க தலைமையுடன் அதிருப்தியிலிருப்பதால் தனக்கு தான் சீட் என முன்னாள் அமைச்சர் தரப்பு குஷியிலிருந்து வருகிறது. !
Sasikala Ramadoss-ன் பலே திட்டம்?| NDA: காய் நகர்த்தும் BJP - முரண்டுபிடுக்கும் EPS -பணிவாரா Vijay?
முதலில் தந்தை; இப்போது மகன்: மொஜ்தபா காமேனிக்கும் குறி வைக்கும் அமெரிக்கா - என்ன சொல்கிறது?
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீதான போரை தொடங்கியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். அந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் காமேனியை குறி வைத்தது இரு நாடுகளும். அவரும் அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார். அவருக்குப் பின்னான உச்ச தலைவரை சமீபத்தில் தான் ஈரான் அறிவித்தது. அவர் காமேனியின் இளைய மகனான மொஜ்தபா காமேனி. தற்போது இவருக்குக் குறி வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் சன்மானம் Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப் அமெரிக்காவின் சன்மானம் அதாவது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) சேர்ந்த முக்கிய தலைவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்க அரசு. இவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர்களை வரை சன்மானம் என்று அறிவித்துள்ளது. 10 மில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 92.47 கோடி. அமெரிக்கா வெளியிட்டுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் மொஜ்தபா காமேனியின் படம் தான் முதலில் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கெனவே ஈரானில் நடந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனிக்கு காயமடைந்திருந்தார். அவர் இறந்துவிட்டார் என்கிற செய்திகள் கூட பரவின. இப்போது அவர் குறித்த தகவல்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!
மதிமுக Vaiko - வின் அரசியல் வளர்ச்சிக்கு செக் வைத்த 3 நடிகர்கள்! | TN Election 360 updates| Vikatan
Iran war: ஈரானின் உக்கிரத் தாக்குதலில் நொறுங்கிய US Air Defence System – Prof Bernard D‘ Samy
Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை'மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப்
ஈரானுக்கு மிக மிக முக்கியமானது, 'கார்க் தீவு'. இந்தத் தீவில் இருந்து தான் ஈரான் தன்னுடைய 90 சதவிகித எண்ணெய் ஏற்றுமதிகளைச் செய்கிறது. 90 சதவிகிதம் என்றால் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 950 மில்லியன் பேரல்கள். இந்தத் தீவை அமெரிக்கா தொட்டால் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றும் என்று இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்து வந்தனர். தற்போது அந்தத் தீவை தான் குறி வைத்து தாக்கியிருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதிசெய்துள்ளார். ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... என்னுடைய வழிகாட்டுதலின் படி, ஈரானின் மகுடக் கல்லான 'கார்க் தீவில்' உள்ள அனைத்து ராணுவ தளவாடங்களும் தகர்க்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ஆகும். நாகரிகம் காரணமாக, அந்தத் தீவில் இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகளை நாங்கள் தாக்கவில்லை. ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் எனது முடிவை மாற்ற வேண்டியதாக இருக்கும். இதற்கு ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ? https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328
எல்.பி.ஜி கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர்கள்! - திருச்சி நிலவரம்
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹர்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால், உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. auto இந்த நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பரவிய வதந்தியின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் பங்குகளில் அதிக அளவு மக்கள் தங்களுக்கு தேவையான அளவைவிட அதிக அளவில் பெட்ரோல், டீசலை வாங்கி சென்று வருகின்றனர். இதனிடையே, திருச்சி மாவட்டத்தில் ஆட்டோக்களுக்கு lpg எரிவாயு நிரப்பும் சுமார் 12 எல்.பி.ஜி பங்குகள் உள்ளது. அதில், எல்.பி.ஜி கேஸ் இல்லாமல் பெரும்பாலான பங்குகள் மூடப்பட்டுள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பங்க் மற்றும் கேஸ் நிரப்பும் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதனால், எல்.பி.ஜி நிரப்புவதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கு சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான எல்.பி.ஜி எரிவாயுகளை நிரப்பி செல்கின்றனர். drivers காலதாமதம் ஆவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எங்களுடைய ஒரு நாள் வருமானமே போய்விட்டது. இதே நிலை நீடித்தால் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே, அரசு இதில் உரிய கவனம் எடுத்து இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோனலிசா போஸ்லேவுக்கு 18 வயது பூர்த்தி ஆகும் முன்பே திருமணம் நடந்ததா? விவாதத்துக்கு காரணம் என்ன?
பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் ருத்ராட்சம் மற்றும் மாலைகள் விற்பனை செய்துகொண்டிருந்த மோனலிசா போஸ்லே புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து புகழ்பெற்றார். பின்னர் சினிமா வாய்ப்புகளும் வந்தன. மலையாள சினிமா உள்ளிட்ட பலமொழி சினிமாக்களில் நடித்தும் வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த முஹம்மது ஃபர்மானும் காதலித்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இஸ்லாமியரான முஹம்மது ஃபர்மானை திருமணம் செய்துகொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்கள் குல வழக்கப்படி வேறு கிராமத்தில் பெண்ணை திருமணம் செய்துகொடுப்பதில்லை என அவரது தந்தை தெரிவித்திருந்தார். தம்பானூர் காவல் நிலையத்தில் மோனலிசாவும் முஹம்மது ஃபர்மானும் தஞ்சம் அடைந்து புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிப்பட்டது. மோனலிசா போஸ்லே - முஹம்மது ஃபர்மான் திருமணத்தில் கேரள அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சி.பி.எம் நிர்வாகிகள் இவர்களது திருமணத்தில் சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கேரள அமைச்சர் சிவன்குட்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதற்கிடையே மோனலிசா போஸ்லேவுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை, அதையும் மீறி திருமணம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. பிரயாக்ராஜில் அவர் அளித்த பேட்டி உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி இந்த விவாரத்தை எழுப்பினர். சிலர் 'திருமணம் செய்து வைக்க இடதுசாரியினரை அணுகவும்' என்ற ரீதியிலும் கருத்துகளை பகிர்ந்தனர். மோனலிசா போஸ்லே- முகம்மது ஃபர்மான் ஆனால், மோனலிசா போஸ்லே 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்ததாக தெரியவந்துள்ளது. எனவே அவருக்கு 18 வயதும் 2 மாதங்களும் ஆகிவிட்டதாக தெரியவந்துள்ளது. அவர்களது திருமணம் கேரளா திருமணச்சட்டத்தின்படி கே ஸ்மார்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் சான்றிதழை சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

28 C