SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

31    C
...

E20 : `நீங்களோ நானோ, காரின் மைலேஜை சரியாக கணக்கிட முடியாது!' - அமைச்சர் நிதின் கட்கரி புது விளக்கம்

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு காரின் எரிபொருள் சிக்கனத்தை அதன் உரிமையாளர் தாமாகவே துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் நடத்தும் சோதனைகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஏபிபி நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அரசு கட்டாயமாக்கியுள்ள E20 பெட்ரோலுக்கு மாறிய பிறகு தனது காரின் மைலேஜ் நகர்ப்புறப் பகுதிகளில் லிட்டருக்கு 11 கிலோமீட்டரிலிருந்து 7 கிலோமீட்டராகக் குறைந்துவிட்டதாக ஒரு பத்திரிகையாளர் புகார் தெரிவித்தார். 2023-ல் வாங்கப்பட்ட தனது காரில் இந்தச் சரிவு ஏற்பட்டதாக அவர் கூறியபோது, அந்த மைலேஜை அவர் எவ்வாறு கணக்கிட்டார் என்று அமைச்சர் கட்கரி கேள்வி எழுப்பினார். E20 எத்தனால் அதற்கு அந்தப் பத்திரிகையாளர், வழக்கமாக எல்லோரும் செய்வது போல, எனது காரின் டாஷ்போர்டில் உள்ள மைலேஜ் டிஸ்பிளேவில் சரிபார்த்தேன் என்று பதிலளித்தார். எத்தனால் கலப்புத் திட்டத்தை உறுதியாக ஆதரித்து வரும் கட்கரி, இதற்குப் பதிலளிக்கையில், நீங்களோ நானோ மைலேஜை சரிபார்க்க முடியாது. ஒரு காரின் மைலேஜை, உற்பத்தி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட டீலரின் இயந்திரத்தைப் பயன்படுத்தி மட்டுமே துல்லியமாகச் சரிபார்க்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். E20 பெட்ரோல் சில வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்தை 3 முதல் 5 சதவீதம் வரை குறைக்கக்கூடும் என்று மத்திய அரசே சில நாட்களுக்கு முன்பு ஒப்புக்கொண்ட நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கடந்த வாரம் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட கேள்வி-பதில் ஆவணத்தில், சில வாகனங்களில் 3-5% எரிபொருள் சிக்கனம் குறைவது உண்மைதான். ஆனால் மைலேஜ் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டிய ஒரே காரணி அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், எத்தனால் கலப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் E20 பெட்ரோல் விற்பனையைக் கட்டாயமாக்கியது. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு வாகன ஓட்டிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் தங்கள் வாகனங்களின் மைலேஜ் கணிசமாகக் குறைந்திருப்பதாகப் புகார் தெரிவித்து வருகின்றனர். நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு வாகனத்தின் டாஷ்போர்டு டிஸ்பிளே ஒரு தோராயமான மதிப்பீட்டை வழங்கினாலும், உண்மையான மைலேஜிற்கும் அதற்கும் இடையே 2-5% வேறுபாடு மட்டுமே இருக்கும். ஒருமுறை டேங்கை முழுமையாக நிரப்பி, ட்ரிப் மீட்டரை ரீசெட் செய்து, மீண்டும் பெட்ரோல் நிரப்பும் வரை ஓட்டி, எவ்வளவு தூரம் பயணித்தது என்பதை நிரப்பப்பட்ட பெட்ரோலின் அளவால் வகுக்கும் முழு டேங்க் முறை (Full-tank method) என்பதே நிஜ உலகப் பயன்பாட்டில் மைலேஜை அளவிட மிகவும் நம்பகமான வழியாகக் கருதப்படுகிறது. டீலர்களின் இயந்திரங்கள், மைலேஜை அளவிடுவதை விட, எரிபொருள் சிக்கனத்தைப் பாதிக்கும் சென்சார்கள், இன்ஜெக்டர்கள் மற்றும் இசியு (ECU) ஆகியவற்றில் உள்ள கோளாறுகளைக் கண்டறியவே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, அன்றாடப் பயன்பாட்டில் மைலேஜை அளவிட டீலர்களின் இயந்திரம் மட்டுமே ஒரே வழி என்ற அமைச்சரின் கூற்று முழுமையானதல்ல எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது.

விகடன் 14 Jul 2026 4:57 pm

'அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய்தான் களவாணி!' - எடப்பாடி கடும் தாக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கும் அவர், அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய் திமுக - அதிமுக கூட்டுக்களவாணி என்று விமர்சனம் செய்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய வார்த்தை. முதல்வர் விஜய் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப பேச வேண்டும். முதல்வர் விஜய் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய் தான் களவாணி. முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. வெறும் பஞ்ச் டயலாக் பேசி வருகிறார். 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால். காளி வெங்கட்: 'திரும்ப ஸ்கூலுக்குள்ள போகும்போது வந்த பதற்றம் இருக்கே!' - கழுகுமலை ஸ்கூல் ரீயூனியன் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி கொடுத்து புதுமை படைத்திருக்கிறார். இன்னும் கொஞ்சநாளில் அவரது மேக்கப் மேனுக்கும் அரசு பதவி கொடுத்து விடுவார். எடப்பாடி பழனிசாமி திமுக - அதிமுக கூட்டணி என்பதே கட்டுக்கதை. திமுக தீயசக்தி என்பதே எனது நிலைப்பாடும். தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் உள்ளது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக குரல் கொடுக்கும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 14 Jul 2026 4:28 pm

'அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய்தான் களவாணி!' - எடப்பாடி கடும் தாக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கும் அவர், அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய் திமுக - அதிமுக கூட்டுக்களவாணி என்று விமர்சனம் செய்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய வார்த்தை. முதல்வர் விஜய் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப பேச வேண்டும். முதல்வர் விஜய் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய் தான் களவாணி. முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. வெறும் பஞ்ச் டயலாக் பேசி வருகிறார். 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால். காளி வெங்கட்: 'திரும்ப ஸ்கூலுக்குள்ள போகும்போது வந்த பதற்றம் இருக்கே!' - கழுகுமலை ஸ்கூல் ரீயூனியன் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி கொடுத்து புதுமை படைத்திருக்கிறார். இன்னும் கொஞ்சநாளில் அவரது மேக்கப் மேனுக்கும் அரசு பதவி கொடுத்து விடுவார். எடப்பாடி பழனிசாமி திமுக - அதிமுக கூட்டணி என்பதே கட்டுக்கதை. திமுக தீயசக்தி என்பதே எனது நிலைப்பாடும். தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் உள்ளது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக குரல் கொடுக்கும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 14 Jul 2026 4:28 pm

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் மோதும் அமெரிக்க - ஈரான்! போருக்கு காரணமான அமைதி ஒப்பந்தம்?

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானின் முன்னெடுப்பில் கையெழுத்தான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம், மை காய்வதற்குள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஒப்பந்த விதிகளை மீறிவிட்டதாகப் பரஸ்பரம் அள்ளி வீசும் குற்றச்சாட்டுகளால், வளைகுடாப் பகுதியில் மீண்டும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதல், உலகளாவிய வர்த்தகத்தை முடக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், த்ற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று அறிவித்ததுதான் இந்தப் புதிய நெருக்கடியின் தொடக்கப்புள்ளி. ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி ஈரான் நடக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், ஒருபடி மேலே சென்று, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதன் பாதுகாவலனாகச் செயல்படும் என்று மிரட்டல் விடுத்தார். ட்ரம்ப்பின் இந்த ஆவேசப் பேச்சு, அமைதி முயற்சிகளுக்குச் சாவுமணி அடித்தது போல் ஒலித்தது. ட்ரம்ப் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காதான் ஒப்பந்தத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி திட்டவட்டமாகத் தெரிவித்தார். போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான 25 நாட்களுக்குள், அமெரிக்கா அதன் அத்தனை விதிகளையும் மீறிவிட்டது. ஈரானின் போக்குவரத்து உள்கட்டமைப்பு, மீன்பிடிக் கப்பல்கள், சரக்கு படகுகள் மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இவை போர்க்குற்றங்களுக்கு நிகரான கடுமையான மீறல்கள் என்று ஈரான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஆதிக்கப் போட்டி ஹார்முஸ் ஜலசந்தி இந்த மோதலின் மையப்புள்ளியாக இருப்பது 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' 5-வது பிரிவுதான். இதன்படி, ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்து உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்றும், அடுத்த 60 நாட்களுக்கு ஈரான் எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் இந்த முக்கிய நீர்வழியை ஈரான் முற்றிலுமாக மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தத்தின்படி, கட்டணம் வசூலிக்காமல் கப்பல் போக்குவரத்தை நிர்வகிக்கும் அதிகாரம் தங்களுக்கே உண்டு என்பது ஈரானின் வாதம். ஆனால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் இதை ஏற்கவில்லை. கடல் போக்குவரத்தை முடக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்தாமல், பாதுகாப்பான பயணத்திற்கு ஈரான் உதவ மட்டுமே வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம் என அவை வாதிடுகின்றன. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இந்த இழுபறிக்கு மத்தியில், ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும், ஈரானுடன் அல்லது ஈரான் இல்லாமல். நாங்கள் ஈரானிய முற்றுகையை மீண்டும் நிலைநிறுத்துகிறோம். இந்தப் பதற்றமான பகுதிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகும் செலவீனங்களை ஈடுகட்ட, அவ்வழியே செல்லும் அனைத்து சரக்குக் கப்பல்களிடமிருந்தும் 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரான் அங்கீகரிக்கப்படாத வழிகளில் செல்ல முயன்றதாகக் கூறி சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக அறிவித்துள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்கள்! மீறப்பட்ட வாக்குறுதிகள்... ஹார்முஸ் விவகாரம் ஒருபுறமிருக்க, பொருளாதார ரீதியான வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தின் 10-வது பிரிவின்படி, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி, அதனுடன் தொடர்புடைய வங்கி, காப்பீடு மற்றும் கப்பல் சேவைகளுக்கும் அமெரிக்கா விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது. இது, பல ஆண்டு காலத் தடைகளால் நலிவடைந்திருந்த ஈரான் பொருளாதாரத்திற்கு பெரும் ஆறுதலாகக் கருதப்பட்டது. ஆனால், ஜூலை 7 அன்று, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறி, எண்ணெய் விற்பனைக்கான உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்தது. இது ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என ஈரான் கொந்தளித்துள்ளது. ஈரான் கச்சா எண்ணெய் இதேபோல், ஒப்பந்தத்தின் 11-வது பிரிவின்படி, முடக்கப்பட்ட ஈரானின் நிதிய சொத்துக்களைப் பயன்படுத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டது. கத்தாரில் உள்ள வங்கிக் கணக்குகளில் இருக்கும் சுமார் 6 பில்லியன் டாலர் நிதியும் இதில் அடக்கம். ஆனால், ஜூன் 30 நிலவரப்படி, அந்த நிதி இன்னும் ஈரானுக்கு மாற்றப்படவில்லை என கத்தார் கூறியுள்ளது. இதனிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், விடுவிக்கப்படும் நிதி அமெரிக்கா மற்றும் கத்தாரின் மேற்பார்வையில் இருக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு சோளம், சோயாபீன்ஸ், கோதுமை போன்ற அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்கலாம் என்று கூறியது, ஈரானை மேலும் கோபமூட்டியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உண்டு என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. லெபனான் லெபனான் பதற்றமும் மறைமுகப் போரும் இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் குற்றம்சாட்டுகிறது. மார்ச் 2 அன்று ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது ஈரானின் வாதம். இந்த ஒப்பந்தம் அதன் தெளிவற்ற தன்மையால் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது. இதன் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டுமானால், ஒரு பின்தொடர் ஒப்பந்தம் அவசியம், என்கிறார்கள் சர்வதேச அரசியல் பாரவையாளர்கள். அதிகாரப் போட்டியும், முரட்டுப் பிடிவாதங்களும் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி அமைதிப் பாதை ஆகுமா அல்லது உலகப் பொருளாதாரத்தை மூழ்கடிக்கும் புதைகுழியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.! ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

விகடன் 14 Jul 2026 4:16 pm

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் மோதும் அமெரிக்க - ஈரான்! போருக்கு காரணமான அமைதி ஒப்பந்தம்?

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானின் முன்னெடுப்பில் கையெழுத்தான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம், மை காய்வதற்குள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஒப்பந்த விதிகளை மீறிவிட்டதாகப் பரஸ்பரம் அள்ளி வீசும் குற்றச்சாட்டுகளால், வளைகுடாப் பகுதியில் மீண்டும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதல், உலகளாவிய வர்த்தகத்தை முடக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், த்ற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று அறிவித்ததுதான் இந்தப் புதிய நெருக்கடியின் தொடக்கப்புள்ளி. ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி ஈரான் நடக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், ஒருபடி மேலே சென்று, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதன் பாதுகாவலனாகச் செயல்படும் என்று மிரட்டல் விடுத்தார். ட்ரம்ப்பின் இந்த ஆவேசப் பேச்சு, அமைதி முயற்சிகளுக்குச் சாவுமணி அடித்தது போல் ஒலித்தது. ட்ரம்ப் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காதான் ஒப்பந்தத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி திட்டவட்டமாகத் தெரிவித்தார். போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான 25 நாட்களுக்குள், அமெரிக்கா அதன் அத்தனை விதிகளையும் மீறிவிட்டது. ஈரானின் போக்குவரத்து உள்கட்டமைப்பு, மீன்பிடிக் கப்பல்கள், சரக்கு படகுகள் மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இவை போர்க்குற்றங்களுக்கு நிகரான கடுமையான மீறல்கள் என்று ஈரான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஆதிக்கப் போட்டி ஹார்முஸ் ஜலசந்தி இந்த மோதலின் மையப்புள்ளியாக இருப்பது 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' 5-வது பிரிவுதான். இதன்படி, ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்து உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்றும், அடுத்த 60 நாட்களுக்கு ஈரான் எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் இந்த முக்கிய நீர்வழியை ஈரான் முற்றிலுமாக மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தத்தின்படி, கட்டணம் வசூலிக்காமல் கப்பல் போக்குவரத்தை நிர்வகிக்கும் அதிகாரம் தங்களுக்கே உண்டு என்பது ஈரானின் வாதம். ஆனால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் இதை ஏற்கவில்லை. கடல் போக்குவரத்தை முடக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்தாமல், பாதுகாப்பான பயணத்திற்கு ஈரான் உதவ மட்டுமே வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம் என அவை வாதிடுகின்றன. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இந்த இழுபறிக்கு மத்தியில், ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும், ஈரானுடன் அல்லது ஈரான் இல்லாமல். நாங்கள் ஈரானிய முற்றுகையை மீண்டும் நிலைநிறுத்துகிறோம். இந்தப் பதற்றமான பகுதிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகும் செலவீனங்களை ஈடுகட்ட, அவ்வழியே செல்லும் அனைத்து சரக்குக் கப்பல்களிடமிருந்தும் 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரான் அங்கீகரிக்கப்படாத வழிகளில் செல்ல முயன்றதாகக் கூறி சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக அறிவித்துள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்கள்! மீறப்பட்ட வாக்குறுதிகள்... ஹார்முஸ் விவகாரம் ஒருபுறமிருக்க, பொருளாதார ரீதியான வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தின் 10-வது பிரிவின்படி, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி, அதனுடன் தொடர்புடைய வங்கி, காப்பீடு மற்றும் கப்பல் சேவைகளுக்கும் அமெரிக்கா விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது. இது, பல ஆண்டு காலத் தடைகளால் நலிவடைந்திருந்த ஈரான் பொருளாதாரத்திற்கு பெரும் ஆறுதலாகக் கருதப்பட்டது. ஆனால், ஜூலை 7 அன்று, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறி, எண்ணெய் விற்பனைக்கான உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்தது. இது ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என ஈரான் கொந்தளித்துள்ளது. ஈரான் கச்சா எண்ணெய் இதேபோல், ஒப்பந்தத்தின் 11-வது பிரிவின்படி, முடக்கப்பட்ட ஈரானின் நிதிய சொத்துக்களைப் பயன்படுத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டது. கத்தாரில் உள்ள வங்கிக் கணக்குகளில் இருக்கும் சுமார் 6 பில்லியன் டாலர் நிதியும் இதில் அடக்கம். ஆனால், ஜூன் 30 நிலவரப்படி, அந்த நிதி இன்னும் ஈரானுக்கு மாற்றப்படவில்லை என கத்தார் கூறியுள்ளது. இதனிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், விடுவிக்கப்படும் நிதி அமெரிக்கா மற்றும் கத்தாரின் மேற்பார்வையில் இருக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு சோளம், சோயாபீன்ஸ், கோதுமை போன்ற அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்கலாம் என்று கூறியது, ஈரானை மேலும் கோபமூட்டியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உண்டு என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. லெபனான் லெபனான் பதற்றமும் மறைமுகப் போரும் இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் குற்றம்சாட்டுகிறது. மார்ச் 2 அன்று ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது ஈரானின் வாதம். இந்த ஒப்பந்தம் அதன் தெளிவற்ற தன்மையால் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது. இதன் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டுமானால், ஒரு பின்தொடர் ஒப்பந்தம் அவசியம், என்கிறார்கள் சர்வதேச அரசியல் பாரவையாளர்கள். அதிகாரப் போட்டியும், முரட்டுப் பிடிவாதங்களும் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி அமைதிப் பாதை ஆகுமா அல்லது உலகப் பொருளாதாரத்தை மூழ்கடிக்கும் புதைகுழியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.! ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

விகடன் 14 Jul 2026 4:16 pm

`440 பேரை ஒரே இரவில் பரிசீலனை செய்தது எப்படி?' - உச்ச நீதிமன்றம் காட்டம்; சிக்கலில் எஸ்.பி.வேலுமணி!

கடந்த 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்பொழுது உறுதி செய்துள்ளது. பணி இழந்தவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரே இரவில் 440 பேரை எப்படிப் பரிசீலனை செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பி, மனுக்களை அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் விரிவான பின்னணியைக் காணலாம்.  எஸ்.பி.வேலுமணி கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதில் 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, இறுதியில் 54 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நியமனங்கள் முறையான விளம்பரம் இன்றி, விதிமுறைகளை மீறி புறவாசல் வழியாக நடத்தப்பட்டவை என்று கூறி ஈஸ்வரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 2021 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு, டிஎன்பிஎஸ்சி அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட தேர்வு அமைப்புகள் மூலம் இந்த நியமனங்கள் நடத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. இந்த 54 நியமனங்களும் சட்டவிரோதமானவை என்று கூறி கடந்த ஜூன் 18-ம் தேதி அவற்றை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டது. உச்ச நீதிமன்றம் இதனால் வேலையை இழந்த நிவேதா, சக்தி கவிதா, வினோத் குமார் உள்ளிட்டோர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பாலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பைக் கடுமையாகச் சாடிய நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்:  இளநிலை உதவியாளர்கள் பணிக்கு வந்த 654 விண்ணப்பங்களில் 440 விண்ணப்பங்களை ஒரே நாளில் இறுதி செய்து நியமன ஆணை வழங்கியது எப்படி? நீதிபதிகளாகிய எங்களுக்கே தினசரி பட்டியலிடப்படும் 65 வழக்குகளை முழுமையாகப் படிக்கப் போதிய நேரம் கிடைக்காத போது, 440 விண்ணப்பங்களை உங்களால் ஒரே இரவில் எப்படிப் பரிசீலனை செய்ய முடிந்தது? என்று கேள்வி எழுப்பினர். விஜய் - வேலுமணி விண்ணப்பங்கள் கோருவதற்குப் பொது நாளிதழ்களில் விளம்பரம் தராமல், ஈ-பேப்பரில்  மட்டும் விளம்பரம் வெளியிட்டது ஏன்? எந்தத் தகுதியின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்? இவர்களது மதிப்பெண் பட்டியல் எங்கே? என்று நீதிபதிகள் சாடினர்.  இந்த நியமனங்களில் அப்பட்டமான சட்டவிரோதமும், விதிமுறை மீறல்களும் இருப்பது தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிப்பு: மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.வி.கிரி, தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். எனவே, மீண்டும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது இவர்களுக்குக் கருணை அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்கத் திட்டவட்டமாக மறுத்த நீதிபதிகள், முறைகேடாகப் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக உறுதி செய்தனர். இந்த விவகாரம் அரசியல் ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது.  காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ள எஸ்.பி வேலுமணி தமிழக வெற்றிக் கழகத்துடன் நெருங்குவதற்கான தருணத்தை பார்த்து வருகின்றார் என்கிற தகவல் வெளியாகி வருகிறது.  எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் வரிசையில் எஸ்.பி வேலுமணியையும் தங்கள் பக்கம் கொண்டு வருவதில் முதல்வர் விஜய்க்கும் விருப்பம் இருக்கத்தான் செய்கின்றது.  இந்த சூழலில் தான் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இவர்களது இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக வந்துள்ளது.  முந்தைய திமுக அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு முறைகேடு வழக்குகளை தூசி தட்டி லஞ்ச ஒழிப்பு துறையின் மூலமாக விசாரணைக்கு உத்தரவிட்டு வரும் முதல்வர் விஜய், அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளையும் ஊழல் வழக்குகளையும் கவனிப்பாரா என்ற கேள்வி  தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் எஸ்.பி வேலுமணி தொடர்பான விவகாரத்தில் கடுமையான முறைகேடுகள் நடந்திருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. முதல்வர் விஜய் தொடர்ந்து மௌனம் சாதித்தாலோ,  அல்லது இவ்வளவு நடந்ததற்கு பிறகும் எஸ்.பி வேலுமணியை  தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டாலோ  எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குதிரை பேர  விமர்சனங்களுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்து விடும்.  முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறாரோ?

விகடன் 14 Jul 2026 3:53 pm

தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்; விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு

தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிவிரைவு சாலைகள் (Expressways) அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் தனி செயல் திட்டத்தை உருவாக்கவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்வர் விஜய் சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் இன்னும் அதிவிரைவு சாலைகள் போதுமான அளவில் உருவாக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள் மற்றும் நகரமயமாதலை கருத்தில் கொண்டு, அதிவிரைவு சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்டத்தை விரைந்து தயாரிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நடைபெற்று வருவதால், அவற்றை கணிசமாகக் குறைக்கும் நோக்கில் தனி செயல்திட்டம் ஒன்றை உருவாக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை அடையாளம் காணுதல், சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சாலை அதேபோல், நகர்புற வளர்ச்சி மற்றும் எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 10 ஆண்டுகால தொலைநோக்கு செயல்திட்டத்தையும் தயாரிக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய குடியிருப்பு மற்றும் தொழில் மையங்களின் உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாலை வசதிகளை திட்டமிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலைகள், நகர்ப்புற இணைப்புச் சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலை திட்டங்கள் மூலம் மாநிலத்தின் போக்குவரத்து திறனை மேம்படுத்தி, பயண நேரத்தைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் ஊக்கத்தை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விகடன் 14 Jul 2026 3:45 pm

தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்; விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு

தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிவிரைவு சாலைகள் (Expressways) அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் தனி செயல் திட்டத்தை உருவாக்கவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்வர் விஜய் சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் இன்னும் அதிவிரைவு சாலைகள் போதுமான அளவில் உருவாக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள் மற்றும் நகரமயமாதலை கருத்தில் கொண்டு, அதிவிரைவு சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்டத்தை விரைந்து தயாரிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நடைபெற்று வருவதால், அவற்றை கணிசமாகக் குறைக்கும் நோக்கில் தனி செயல்திட்டம் ஒன்றை உருவாக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை அடையாளம் காணுதல், சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சாலை அதேபோல், நகர்புற வளர்ச்சி மற்றும் எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 10 ஆண்டுகால தொலைநோக்கு செயல்திட்டத்தையும் தயாரிக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய குடியிருப்பு மற்றும் தொழில் மையங்களின் உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாலை வசதிகளை திட்டமிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலைகள், நகர்ப்புற இணைப்புச் சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலை திட்டங்கள் மூலம் மாநிலத்தின் போக்குவரத்து திறனை மேம்படுத்தி, பயண நேரத்தைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் ஊக்கத்தை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விகடன் 14 Jul 2026 3:45 pm

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது 18 பெண்கள் இறப்பு - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மே மாதம் முதல் பிரசவத்திற்குப் பிறகு 18 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ள இத்தொடர் தாய்மார்களின் இறப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் கடந்த 5ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பில்வாரா மற்றும் பன்ஸ்வாரா ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது ஒன்பது பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மகப்பேறு மருத்துவமனையில், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஐந்து பெண்கள் ஆறு நாள்களுக்குள் உயிரிழந்தனர். கஜேந்திர சிங் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த ஐந்து பெண்களுக்கும் உடல்நலச் சிக்கல் ஏற்பட்டதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மே மாதத்தில் ஐந்து பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளனர். இது தவிர கடந்த மாதத்தில் பிகானேரில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆறு பெண்களுக்குச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பெண்கள் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளனர். இந்த மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,இவ்வளவு குறுகிய காலத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்வது எங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதற்கான காரணத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் வெப்பத்தின் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக நாங்கள் கருதினோம், ஆனால் இப்போது வெப்பம் தணிந்துவிட்டது. கோட்டா, ஜோத்பூர் மற்றும் பிகானர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், மருத்துவமனைத் தலைவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஆலோசனைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ரத்தப் பரிசோதனை முடிவுகள் தெளிவாக உள்ளன. மற்ற அனைத்தும் சரியாகவே தெரிகின்றன. இருப்பினும், இச்சம்பவங்களுக்கான அடிப்படை அல்லது உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டியுள்ளது. அலட்சியம், கவனக்குறைவு அல்லது குறிப்பிட்ட மருத்துவத் தவறு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மருத்துவர்கள் அல்லது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்'' என்றும் தெரிவித்தார்.

விகடன் 14 Jul 2026 3:35 pm

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது 18 பெண்கள் இறப்பு - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மே மாதம் முதல் பிரசவத்திற்குப் பிறகு 18 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ள இத்தொடர் தாய்மார்களின் இறப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் கடந்த 5ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பில்வாரா மற்றும் பன்ஸ்வாரா ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது ஒன்பது பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மகப்பேறு மருத்துவமனையில், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஐந்து பெண்கள் ஆறு நாள்களுக்குள் உயிரிழந்தனர். கஜேந்திர சிங் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த ஐந்து பெண்களுக்கும் உடல்நலச் சிக்கல் ஏற்பட்டதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மே மாதத்தில் ஐந்து பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளனர். இது தவிர கடந்த மாதத்தில் பிகானேரில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆறு பெண்களுக்குச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பெண்கள் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளனர். இந்த மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,இவ்வளவு குறுகிய காலத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்வது எங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதற்கான காரணத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் வெப்பத்தின் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக நாங்கள் கருதினோம், ஆனால் இப்போது வெப்பம் தணிந்துவிட்டது. கோட்டா, ஜோத்பூர் மற்றும் பிகானர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், மருத்துவமனைத் தலைவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஆலோசனைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ரத்தப் பரிசோதனை முடிவுகள் தெளிவாக உள்ளன. மற்ற அனைத்தும் சரியாகவே தெரிகின்றன. இருப்பினும், இச்சம்பவங்களுக்கான அடிப்படை அல்லது உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டியுள்ளது. அலட்சியம், கவனக்குறைவு அல்லது குறிப்பிட்ட மருத்துவத் தவறு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மருத்துவர்கள் அல்லது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்'' என்றும் தெரிவித்தார்.

விகடன் 14 Jul 2026 3:35 pm

விஜய் அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் - ஒப்புதல் அளிக்க கூடுகிறது தமிழக அமைச்சரவை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு (பட்ஜெட்) அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாநிலத்தின் நிதிநிலை, வருவாய் ஆதாரங்கள், புதிய நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள், கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சரவையில் விரிவான ஆலோசனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. தலைமைச் செயலகம் மேலும், வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற உள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும் அமைச்சர்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். அதன் பின்னர் இறுதி செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதித்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகத் தயாரித்து வருகின்றனர். பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஜூலை மாத இறுதி வாரத்திலேயே சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய் புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே, ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அரசின் முதல் பட்ஜெட்டின் திசையை நிர்ணயிக்கும் முக்கிய ஆலோசனையாகப் பார்க்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

விகடன் 13 Jul 2026 6:26 pm

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் அமல்ராஜை நியமனம் செய்து உத்தரவிட்டிருந்தது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரிகளுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அருண் ஐபிஎஸ்., தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநராக நியமிக்கப்பட்டார். அருண் ஐ.பி.எஸ் அந்தப் பொறுப்பை ஏற்று 45 நாள்களே ஆகியிருக்கும் நிலையில், அருண் அப்பதவியிலிருந்து திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யான மகேஸ்வரி, கூடுதல் பொறுப்பாக அந்தத் துறையின் இயக்குநர் பதவியை கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அருண் ஐ.பி.எஸ்-ஸை, தமிழ்நாடு காவல் பயிற்சிப் பள்ளியின் கூடுதல் இயக்குநராக நியமித்திருக்கிறது. இந்த திடீர் நிர்வாக மாற்றம் காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கான பின்னணி குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

விகடன் 13 Jul 2026 6:14 pm

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்புதான் மக்கள் அமோக ஆதரவுடன் தேர்ந்தெடுத்த மேயர் பாலன் ஷா தலைமையிலான அரசுக்கு எதிராக, இன்று இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து கணக்குக் கேட்கத் தொடங்கியுள்ளனர். ஒரு தனிநபரின் மரணம், ஓர் அரசின் நிர்வாகக் குறைபாடுகளையும், அதன் இரக்கமற்ற அணுகுமுறையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை, கணேஷ் நேபாளி என்ற 25 வயது இளைஞர், தனது பைக்-டாக்சி சேவைக்காக வாடிக்கையாளருக்காக காத்மாண்டு வீதியில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மாநகராட்சி காவல்துறையினர், எந்த முன்னறிவிப்புமின்றி அவரது பைக்கின் சக்கரத்தைப் பூட்டினர். வாழ்வாதாரமே பறிபோன விரக்தியின் உச்சத்தில், அந்த இளைஞர் தன் மீதே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இந்த நெஞ்சை உலுக்கும் காட்சியை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், வெள்ளிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம், அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எதிராக நீண்ட காலமாக இருந்துவந்த அதிருப்தியை ஒரு கொந்தளிப்பாக மாற்றியுள்ளது. நேபால் பிரதமர் பாலன் ஷா ஞாயிற்றுக்கிழமை, தலைநகரில் உள்ள சிங்துர்பார் செயலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களின் கைகளில், 'ஏழைகளுக்கு எதிரான அட்டூழியத்தை நிறுத்து', 'மனித உரிமைகளை மதியுங்கள்' போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகள் இருந்தன. சட்டவிரோதக் கைதுகளை நிறுத்த வேண்டும் என்றும், பாலன் ஷா அரசால் இடம்பெயரச் செய்யப்பட்ட சாலையோர மக்களுக்கு தங்குமிடம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பினர். பாலன் ஷாவின் நிர்வாகம்! நேபாள ஊடக அறிக்கைகளின்படி, 2022-ல் பாலன் ஷா மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து காத்மாண்டு மாநகராட்சியின் அணுகுமுறையில் ஒருவித ஆக்ரோஷம் அதிகரித்துள்ளது. நடைபாதைகள் மற்றும் முறைசாரா சாலையோரச் சந்தைகளை அகற்றுவது, ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற நகர மேலாண்மைப் பணிகளில் ஷா கடுமையான போக்கைக் கடைப்பிடித்தார். பல சமயங்களில், இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் வன்முறை மோதல்களில் முடிந்தன. இது, நகரின் ஏழை மக்கள் மீதான இரக்கமற்ற தன்மையைக் கண்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன? அப்படியானால், ஒரு மாநகராட்சியின் காவல்துறைக்கு இவ்வளவு அதிகாரம் எங்கிருந்து வந்தது? சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி, மாநகராட்சி நிர்வாகம் தனது அரசியலமைப்புச் சட்ட வரம்புகளைத் தொடர்ந்து மீறி வருகிறது. ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பாக இருக்க வேண்டிய மாநகராட்சி காவல்துறை, மத்திய காவல் படையான நேபாள காவல்துறையின் தந்திரங்களைப் பின்பற்றும் ஒரு ஆக்கிரமிப்புப் படையாக மாறியுள்ளது. மூத்த வழக்கறிஞர் ராஜு சாபகெய்ன் இதுபற்றிக் கூறும்போது, மாநகராட்சி காவல்துறைக்கு உடல்ரீதியான பலத்தைப் பயன்படுத்தவோ, கலவரத்தைக் கட்டுப்படுத்தும் தந்திரங்களைக் கையாளவோ சட்டத்தில் எந்த இடமும் இல்லை. அவர்களின் முக்கியப் பணி, பேச்சுகள் மற்றும் சமூக ஈடுபாடு மூலம் நிர்வாகப் பணிகளுக்கு உதவுவது மட்டுமே, என்கிறார். போக்குவரத்து அல்லது தெருத் தடைகள் தொடர்பான பிரச்சினைகள் எழும்போது, அது போக்குவரத்து காவல்துறையிடம் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால், மாநகராட்சி அதிகாரிகளே வியாபாரிகளைத் துரத்துவதையும், தனிப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வதையும், குடிமக்களைத் தாக்குவதையும் நாம் காண்கிறோம். இது முற்றிலும் சட்டவிரோதமானது, என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். சட்டம் சொல்வது வேறு! இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால், ஷாவின் பதவிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 'காத்மாண்டு மாநகராட்சி காவல்துறை சட்டம் 2023', மாநகராட்சி காவல்துறைக்கு தடியடி நடத்தவோ அல்லது குடிமக்களைக் கைது செய்யவோ அதிகாரம் அளிக்கவில்லை. அந்தச் சட்டத்தின்படி, நகராட்சி சொத்துக்களைப் பாதுகாப்பது, பொதுப் பூங்காக்களைப் பாதுகாப்பது, துப்புரவு இணக்கத்தைக் கண்காணிப்பது, உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் கலாச்சார ஊர்வலங்களுக்கு உதவுவது மட்டுமே அவர்களின் முதன்மைப் பொறுப்புகள். ஓய்வுபெற்ற நேபாள காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பூர்ண சந்திர ஜோஷி, அவர்கள் முற்றிலும் ஒரு நிர்வாக வசதி அமைப்பு மட்டுமே. ஒரு நிலைமை பொது அமைதிக்குக் குந்தகமாக மாறினாலோ அல்லது உடல்ரீதியான தலையீடு தேவைப்பட்டாலோ, மாநகராட்சி அதிகாரிகள் நேபாள காவல்துறையைத்தான் அழைக்க வேண்டும். அவர்களாகத் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது, என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். இந்த சட்ட வரம்புகள் இருந்தபோதிலும், ஷாவின் நிர்வாகத்தின் கீழ் மாநகராட்சி காவல்துறை தினக்கூலி வியாபாரிகளுக்கு எதிராக அடிக்கடி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பான பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்த ஆக்கிரமிப்புமிக்க நகர்ப்புற நிர்வாக மாதிரி நாடு முழுவதும் உள்ள மற்ற நகராட்சிகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. ஒ ஒரு நகரத்தை அழகுபடுத்துவது என்பது அதன் ஏழை மக்களை வாழ்வாதாரத்தை விட்டு விரட்டியடிப்பதுதானா என்ற கேள்வி இன்று காத்மாண்டு வீதிகளில் எதிரொலிக்கிறது.

விகடன் 13 Jul 2026 4:39 pm

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். நம் அனைவரின் மூதாதையர்களும் ஒன்றே என்று அவர் கூறிய கருத்து, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யோகா முகாம்கள் மற்றும் ஆயுர்வேதப் பொருள்கள் மூலம் பெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பாபா ராம்தேவ், தனது சமீபத்திய பேச்சில், ஹரித்வாருக்கு அருகில் தியோபந்த் உள்ளது. 2009-ல் அங்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நான் அவர்களிடம், 'நம் மதங்கள் வேறுபடலாம், ஆனால் நம் மூதாதையர்கள் ஒன்றே. இந்து ராஷ்டிரா என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. நம் அனைவரின் மூதாதையர்களும் சனாதன இந்து ஆரிய-வேத மரபைச் சேர்ந்தவர்கள்' என்று கூறினேன் என உத்தரப் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனத்திற்குச் சென்றதை நினைவு கூர்ந்தார். Baba Ramdev - பாபா ராம்தேவ் மேலும் சிறுபான்மை சமூகத்தினருக்கு அறிவுரை வழங்கும் விதமாக, இந்து ராஷ்டிரா அமைந்தால் முஸ்லிம்கள் எங்கே போவார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். உங்கள் மூதாதையர்களின் பாரம்பர்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தாடி வைத்துக் கொள்ளலாம் அல்லது மழித்துக் கொள்ளலாம்; விருப்பமான ஆடையை அணியலாம், ஆனால் உங்கள் மூதாதையர்களின் குணத்தைப் பின்பற்றுங்கள். இந்துஸ்தானில் முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். ராம்தேவின் இந்தக் கருத்துகளுக்கு உடனடியாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், அனைவரும் சனாதனிகள் என்றால், ஏன் இத்தனை பிரிவினைகளை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன? இந்து ராஷ்டிரா பற்றிப் பேசுபவர்களிடம் கேளுங்கள். பாபா ராம்தேவிடம் கேளுங்கள். அவர் என்ன நோக்கத்தில் இதைக் கூறுகிறார் என்று எனக்கு எப்படித் தெரியும்? அனைவரும் சனாதனிகள் என்றால் பிரிவினைகளை உருவாக்கும் முயற்சிகள் ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அசாதுதீன் ஓவைசி (AIMIM) கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான், இந்த நாடு அரசியலமைப்புச் சட்டத்தின்படியே இயங்குகிறது; அது அப்படித்தான் தொடரும். இது இந்து ராஷ்டிராவாகிவிட்டது என்று உங்களிடம் யார் சொன்னது? நமது நாடு இந்து தேசமாக அறிவிக்கப்பட்டுவிட்டதா என பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன். ஒரு முஸ்லிம் யாருக்கும் அஞ்சமாட்டான். நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறோம். அரசியலமைப்பை மதியுங்கள். இதுபோல வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள் என்று கடுமையாகச் சாடினார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஃபக்ருல் ஹசன் சாந்த், நாட்டின் முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் தந்திரத்தின் ஒரு பகுதியே ராம்தேவின் பேச்சு. பாஜக இது போன்ற விவாதங்களை வேண்டுமென்றே ஊக்குவித்து, தங்களின் பொறுப்புகளிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது என்று குற்றம் சாட்டினார். அசாதுதீன் ஒவைசி சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நசீம் சித்திக், இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியா ஓர் இந்து தேசம் அல்ல; அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு மதச்சார்பற்ற நாடு. இத்தகைய பேச்சுகள் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார். மே வங்கம்: `திரிணாமுல் தலைவர்கள்மீது முட்டை வீச வேண்டுமென்பது அரசு உத்தரவு'- பாஜக கவுன்சிலர் சர்ச்சை

விகடன் 13 Jul 2026 4:26 pm