SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

`இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பாரதா மாதா வாழ்க... என் சகோதர சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர். வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. 2026-ல் எனது முதல் பயணம் இது. NDA கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்களே தமிழக எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம். கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அரசு இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் தெரியும். இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் அற்ற அரசு இது. கலாசாரத்தை வசைப்பாடுகிறது திமுக அரசு. திமுக-வின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம். 11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மும்மடங்கு நிதியை நாங்கள் தந்திருக்கிறோம். காங்கிரஸ் அளித்த நிதியை விட மும்மடங்கு அதிகமாக அளித்திருக்கிறோம். வரலாறு காணாத வளர்ச்சியை பாஜக அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. தமிழ்நாட்டுக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று மக்கள் விரும்புகின்றனர். விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் NDA கூட்டணி ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டு வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கண்முன்னே போதைக்கு சீரழிகிறார்கள் நம் குழந்தைகள். மத்திய அரசுடன் இணைந்த மாநில அரசு வேண்டும். குற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. சிறப்பாக செயல்பட்டார் அவர். தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக தான். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். வாக்கு வங்கி அரசியலை திமுக நடத்துகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை திமுக பிரச்னையாக்கியது திமுக. தமிழகத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்த மாற்றம் தேவை என்று திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 5:31 pm

புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காகத் தயாரான 40,000 பூச்செடிகள் | Photo Album

மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்

விகடன் 23 Jan 2026 4:02 pm

புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காகத் தயாரான 40,000 பூச்செடிகள் | Photo Album

மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்

விகடன் 23 Jan 2026 4:02 pm

தனி தீர்மானம்: `வாழ்வாதாரத்தை வேரறுக்கும் முடிவு; மகாத்மா பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்'ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான மாநில அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ``மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை, மாநிலங்களின் நிதி கட்டமைப்பை, உள்ளாட்சி அமைப்புகளின் சுய சார்புத் தன்மையை, கிராமப்புற மகளிருக்கான வேலைவாய்ப்பைக் குலைக்கும் வண்ணம் ஒன்றிய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள மகாத்மா காந்தி ஊரக உறுதித் திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவந்துள்ள புதிய திட்டம் குறித்து இந்தப் பேரவையில் தங்கள் அனுமதியோடு சில முக்கிய விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித் திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்றுவருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம். 100 நாள் வேலைத்திட்டம் எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-2026 ஆம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்திற்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இன்றுவரை விடுவிக்கப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர்த் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. இப்படி இவர்கள் தாமதிப்பதால் பாதிக்கப்படுவது யார்? தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம். இந்த வஞ்சனையை எல்லாம் விஞ்சக்கூடிய அளவிற்கு, தற்போது ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கக்கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாற்றி, அதற்குப் பதிலாக “வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” என்று தமிழில் பொருள்படும் VB-G RAM G என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஊரகப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை உறுதி செய்தும், சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் VB-G RAM G திட்டத்தை, அறிமுக நிலையிலேயே நமது நடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பியிருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்தத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்தப் புதிய திட்டமானது, மக்களின் தேவையின் அடிப்படையிலே அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நான் ஏற்கெனவே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடந்த 18.12.2025 அன்று கடிதம் எழுதியிருக்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த புதிய வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படவுள்ள உத்தேச ஒதுக்கீட்டின் படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் அனுமதியோடு இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன். அரசினர் தனித் தீர்மானம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் (Demand for Employment) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதியொதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; ‘ஊரக வேலை உறுதித் திட்டம்’ - உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதியொதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும், மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்; இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்; தமிழ்நாடு சட்டமன்றம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் - ஊரகம் (VB-G-RAM-G)' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அவர்கள் இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-இன் விதிமுறைகளின்படியே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் மேற்படி தீர்மானத்தை இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றித் தரவேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் தங்கள் வாயிலாக கேட்டு அமைகிறேன் என்றார்.

விகடன் 23 Jan 2026 3:05 pm

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், 'ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்' என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள். தந்தை - மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்து இரு அணிகளாக தேர்தல் களத்தில் நிற்கிறது. சர்வேக்களின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தும் `அன்புமணி பா.ம.க'-விடம் இருப்பதால் அன்புமணி தரப்பை முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் 'ராமதாஸ் வருவதாக இருந்தாலும் வரட்டும்' என கதவை திறந்தும் வைத்திருக்கிறது அ.தி.மு.க. ராமதாஸ் இதுகுறித்து நம்மிடம் பேசிய ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோப்பதுதான் மருத்துவர் ஐயாவின் விருப்பம். ஆனால் அவரோ டெல்லியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்புமணியை முதலில் சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்குப் போனால் அது தன்மானத்துக்கே இழுக்காகிவிடும். ஆகையால் தி.மு.க கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இது மிக முக்கியமான தேர்தல் என்பதால் வி.சி.க எங்கள் கூட்டணிக்குத் தடையாக இருக்காது என எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க-வை மீட்க கட்சி தொடங்கிவிட்டு அ.தி.மு.க-வுடனேயே கூட்டணி அமைத்திருக்கிறது அ.ம.மு.க. ஆக, ஒவ்வொரு சதவிகித வாக்கும் முக்கியம் என்றனர். ''பா.ம.க-வை, கூட்டணிக்குள் திமுக இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வியை தி.மு.க முக்கியப் புள்ளிகளிடம் கேட்டோம். அவர்களோ, ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், ராமதாஸ் வருவதால் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறார் முதல்வர். இதற்கிடையில், ஜனவரி 22-ம் தேதி ராமதாஸ் விவகாரம் குறித்து வி.சி.க தரப்பில் சில முக்கியமான விஷயங்களை முதல்வருக்குக் கடத்தியிருக்கிறார்கள். திருமாவளவன், ஸ்டாலின் அதன்படி 'ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு வருவதில் எங்கள் தலைவர் திருமாவுக்கு துளியும் விருப்பமில்லை, ராமதாஸிடம் வாக்குவங்கி இல்லாததால்தான் அன்புமணியை முதலில் அழைத்துக் கொண்டது அ.தி.மு.க. அவரை நாம் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால் பா.ம.க எதிர்ப்பில் கூர்மையாக இருக்கும் தலித் வாக்குகள் வெளியே போக வாய்ப்புகள் உண்டு. பா.ம.க, பா.ஜ.க இடம்பெற்றுள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம் என பிரகடனப்படுத்திய எங்களுக்கும் தர்ம சங்கடமான சூழலே ஏற்படும். ஆகையால் நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும்' என வி.சி.க முன்னணி தலைவர்கள் தூதுவிட்டிருக்கிறார்கள் என்றனர். முதல்வர், என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?

விகடன் 23 Jan 2026 2:42 pm

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், 'ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்' என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள். தந்தை - மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்து இரு அணிகளாக தேர்தல் களத்தில் நிற்கிறது. சர்வேக்களின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தும் `அன்புமணி பா.ம.க'-விடம் இருப்பதால் அன்புமணி தரப்பை முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் 'ராமதாஸ் வருவதாக இருந்தாலும் வரட்டும்' என கதவை திறந்தும் வைத்திருக்கிறது அ.தி.மு.க. ராமதாஸ் இதுகுறித்து நம்மிடம் பேசிய ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோப்பதுதான் மருத்துவர் ஐயாவின் விருப்பம். ஆனால் அவரோ டெல்லியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்புமணியை முதலில் சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்குப் போனால் அது தன்மானத்துக்கே இழுக்காகிவிடும். ஆகையால் தி.மு.க கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இது மிக முக்கியமான தேர்தல் என்பதால் வி.சி.க எங்கள் கூட்டணிக்குத் தடையாக இருக்காது என எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க-வை மீட்க கட்சி தொடங்கிவிட்டு அ.தி.மு.க-வுடனேயே கூட்டணி அமைத்திருக்கிறது அ.ம.மு.க. ஆக, ஒவ்வொரு சதவிகித வாக்கும் முக்கியம் என்றனர். ''பா.ம.க-வை, கூட்டணிக்குள் திமுக இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வியை தி.மு.க முக்கியப் புள்ளிகளிடம் கேட்டோம். அவர்களோ, ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், ராமதாஸ் வருவதால் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறார் முதல்வர். இதற்கிடையில், ஜனவரி 22-ம் தேதி ராமதாஸ் விவகாரம் குறித்து வி.சி.க தரப்பில் சில முக்கியமான விஷயங்களை முதல்வருக்குக் கடத்தியிருக்கிறார்கள். திருமாவளவன், ஸ்டாலின் அதன்படி 'ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு வருவதில் எங்கள் தலைவர் திருமாவுக்கு துளியும் விருப்பமில்லை, ராமதாஸிடம் வாக்குவங்கி இல்லாததால்தான் அன்புமணியை முதலில் அழைத்துக் கொண்டது அ.தி.மு.க. அவரை நாம் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால் பா.ம.க எதிர்ப்பில் கூர்மையாக இருக்கும் தலித் வாக்குகள் வெளியே போக வாய்ப்புகள் உண்டு. பா.ம.க, பா.ஜ.க இடம்பெற்றுள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம் என பிரகடனப்படுத்திய எங்களுக்கும் தர்ம சங்கடமான சூழலே ஏற்படும். ஆகையால் நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும்' என வி.சி.க முன்னணி தலைவர்கள் தூதுவிட்டிருக்கிறார்கள் என்றனர். முதல்வர், என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?

விகடன் 23 Jan 2026 2:42 pm

Modi : NDA பொதுக்கூட்டம் - கைலாசா செல்ல வழிகாட்டு நெறிமுறைகள் விநியோகிக்கும் நித்தியானந்தா சீடர்கள் | Live

கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடு NDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர். ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? மோடி - ஸ்டாலின் தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி   தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டம்  தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்வதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விகடன் 23 Jan 2026 12:47 pm

Modi : நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவாங்க?- ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி | Live

நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?- அண்ணாமலை கேள்வி தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் நீட் விலக்கு, கீழடி அறிக்கை , எய்ம்ஸ் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். Tamil Nadu counts the betrayals of NDA. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation -இல் தமிழ்நாட்டின் தொகுதிகள்… https://t.co/tapt7nMS4p — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 23, 2026 அண்ணாமலை அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை? தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்? AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? என்ற கேள்விகளை முன்வைத்திருக்கிறார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களே, Samagra Shiksha திட்டத்தின் ஒரு… https://t.co/siAlRGZ2bX — K.Annamalai (@annamalai_k) January 23, 2026 கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடு NDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர். ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? மோடி - ஸ்டாலின் தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி   தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டம்  தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்வதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விகடன் 23 Jan 2026 12:47 pm

``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டு கோலோச்சியவர்.  ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின்  செயலாளராக நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வில் சீட்டு ஒதுக்கீடு செய்வதற்கான நேர்காணலுக்கு  மாணிக்கராஜா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூன்று பேர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டனர். மாணிக்கராஜா மாணிக்கராஜாவும், ராஜூவும் ஒரே ஊர்க்காரர்கள்தான். ஆனால், நேர்காணலில் சீட் என்னவோ கடம்பூர் ராஜுவுக்குத்தான் கிடைத்தது.  நேர்காணலின்போது முதல்வர் ஜெயலலிதா முன்பு மாணிக்கராஜா, தான் ஒரு ஜமீன்தார்  என்பதை விட்டுக்கொடுக்காமல் உள்ளூரில் அரசியல் செய்யும் தனக்கே உரிய ராஜா தோரணையில் பேசியதும், வைப்பாறு மணல் கொள்ளையில் மறைந்த முன்னாள் தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவனின் தந்தை பெரியசாமியுடன் தொடர்பு இருப்பதாக கிளம்பிய ஆதாரத்துடனான புகாரும்தான் மாணிக்கராஜாவுக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் என்றனர் கட்சியினர். அதன் பிறகு கட்சியில் மாணிக்கராஜாவுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அதிருப்தியிலேயே கட்சியில் தொடர்ந்த மாணிக்கராஜாவுக்கு கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உருவான அ.ம.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்  மாணிக்கராஜா. அ.ம.மு.க-வின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், தென் மண்டல அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. டி.டி.வி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகவே திகழ்ந்தார்.  சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட. மாணிக்கராஜா செய்தியாளர் சந்திப்பு தென் மண்டலத்தில் உள்ள தேனி முதல் குமரி வரையிலான 10 மாவட்டங்களில் இவரது ஆலோசனையும், அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்  தினகரன். மாணிக்கராஜாவுக்கு தினகரன் அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல்  அ.ம.மு.கவில் பயணித்து வந்த தற்போதைய எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட பல தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இருப்பினும், அவர் மீதான மரியாதையையும் அவருக்கான முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்கவில்லை. ”கட்சியை விட்டு யார் போனாலும் பரவாயில்லை. என்னுடைய உண்மையான தென்மண்டலத் தளபதி மாணிக்கராஜா மட்டும்தான்” என,  நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாகவே பேசினார் தினகரன். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக!  தென் மாவட்டங்களில் தினகரன்  வருகை புரிந்தால், காரில் தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வலம் வருவார் தினகரன். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மாணிக்கராஜாவிற்கும், தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்துதான் தி.மு.கவில் இணையும் முடிவிற்கு வந்தாராம் மாணிக்கராஜா. அவர் தி.மு.கவில் இணையப் போகும் தவலறிந்த தினகரன்,  அ.ம.மு.கவின் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவருடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர். தினகரன் - மாணிக்கராஜா தி.மு.கவில் இணைந்ததற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவில் இணைந்துள்ளோம். அ.ம.மு.க எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது கடந்த 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அக்கட்சியை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தினகரன். பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவில் இணைந்துள்ளோம். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்துள்ளனர். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அ.ம.மு.க உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்” என்றார்.   `கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

விகடன் 23 Jan 2026 11:55 am

``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டு கோலோச்சியவர்.  ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின்  செயலாளராக நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வில் சீட்டு ஒதுக்கீடு செய்வதற்கான நேர்காணலுக்கு  மாணிக்கராஜா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூன்று பேர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டனர். மாணிக்கராஜா மாணிக்கராஜாவும், ராஜூவும் ஒரே ஊர்க்காரர்கள்தான். ஆனால், நேர்காணலில் சீட் என்னவோ கடம்பூர் ராஜுவுக்குத்தான் கிடைத்தது.  நேர்காணலின்போது முதல்வர் ஜெயலலிதா முன்பு மாணிக்கராஜா, தான் ஒரு ஜமீன்தார்  என்பதை விட்டுக்கொடுக்காமல் உள்ளூரில் அரசியல் செய்யும் தனக்கே உரிய ராஜா தோரணையில் பேசியதும், வைப்பாறு மணல் கொள்ளையில் மறைந்த முன்னாள் தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவனின் தந்தை பெரியசாமியுடன் தொடர்பு இருப்பதாக கிளம்பிய ஆதாரத்துடனான புகாரும்தான் மாணிக்கராஜாவுக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் என்றனர் கட்சியினர். அதன் பிறகு கட்சியில் மாணிக்கராஜாவுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அதிருப்தியிலேயே கட்சியில் தொடர்ந்த மாணிக்கராஜாவுக்கு கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உருவான அ.ம.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்  மாணிக்கராஜா. அ.ம.மு.க-வின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், தென் மண்டல அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. டி.டி.வி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகவே திகழ்ந்தார்.  சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட. மாணிக்கராஜா செய்தியாளர் சந்திப்பு தென் மண்டலத்தில் உள்ள தேனி முதல் குமரி வரையிலான 10 மாவட்டங்களில் இவரது ஆலோசனையும், அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்  தினகரன். மாணிக்கராஜாவுக்கு தினகரன் அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல்  அ.ம.மு.கவில் பயணித்து வந்த தற்போதைய எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட பல தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இருப்பினும், அவர் மீதான மரியாதையையும் அவருக்கான முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்கவில்லை. ”கட்சியை விட்டு யார் போனாலும் பரவாயில்லை. என்னுடைய உண்மையான தென்மண்டலத் தளபதி மாணிக்கராஜா மட்டும்தான்” என,  நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாகவே பேசினார் தினகரன். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக!  தென் மாவட்டங்களில் தினகரன்  வருகை புரிந்தால், காரில் தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வலம் வருவார் தினகரன். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மாணிக்கராஜாவிற்கும், தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்துதான் தி.மு.கவில் இணையும் முடிவிற்கு வந்தாராம் மாணிக்கராஜா. அவர் தி.மு.கவில் இணையப் போகும் தவலறிந்த தினகரன்,  அ.ம.மு.கவின் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவருடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர். தினகரன் - மாணிக்கராஜா தி.மு.கவில் இணைந்ததற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவில் இணைந்துள்ளோம். அ.ம.மு.க எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது கடந்த 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அக்கட்சியை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தினகரன். பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவில் இணைந்துள்ளோம். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்துள்ளனர். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அ.ம.மு.க உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்” என்றார்.   `கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

விகடன் 23 Jan 2026 11:55 am

`கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன.23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிரதமர் மோடி அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். முன்னதாக மோடி, தமிழகம் வருவது குறித்து திமுக -வை விமர்சித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 23 Jan 2026 11:44 am

`கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன.23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிரதமர் மோடி அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். முன்னதாக மோடி, தமிழகம் வருவது குறித்து திமுக -வை விமர்சித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 23 Jan 2026 11:44 am

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 11:03 am

ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

தமிழக அரசியலில் மறக்க முடியாத தலைவர்களுள் ஒருவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணி என்று அவரது அபிமானிகளால் போற்றப்பட்ட ஜெயலலிதா மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சக அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர். தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மற்ற மாநில அரசியல் தலைவர்களுக்கும் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். சினிமாவிற்கு பிறகு எழுத்து, பத்திரிகை என்று இருந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் தோல்வி அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து ஜெயலலிதா தொடர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது ஜெயலலிதாதான். அதிமுகவின் உச்சமாக பார்க்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வராக இருந்து போட்டியிட்ட போது கூட தோற்றுப் போயிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். தமிழக அரசியல் விசித்திரமானது. இங்கே பெரும் ஜாம்பவான்கள் கூட மக்கள் மன்றத்தில் வீழ்ந்து போயிருக்கின்றனர். ஜெயலலிதாவும் அப்படித்தான் 1996 இல் வீழ்ந்தார். ஜெயலலிதாவை வீழ்த்திய அந்த பர்கூர் மண்ணுக்கு அரசியல் வரலாற்றில் தனி இடம் உண்டு. ஜா அணி - ஜெ அணி 1989-ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜா அணி - ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டிருந்ததால் ஜானகியே முதல்வரானார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தில் கலவரம் வெடித்ததால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. 1989-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஜானகிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. கட்சி பிளவுப்பட்டு இருந்ததால் அந்தத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா இருப்பினும் சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார். ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு ஜானகி விலக அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் கைக்கு வந்துவிட்டது. 1989 மார்ச் 25 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட்டை படித்தபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அந்தக் கலவரத்தில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. தலைவிரி கோலமாக்கப்பட்டு வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத்திற்குள் முதல்வராகத் தான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டார். தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியலை உயிர்த்துடிப்புடன் நடத்தினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை போலவே கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1991-ல் தமிழக சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக- காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். ராஜீவ் காந்தி முதல்வரான ஜெயலலிதா! ராஜீவ் காந்தியின் அனுதாப அலையால் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அதிமுகவே இருக்காது என்று சொல்லப்பட்ட நிலையில் அதிமுகவை தனி ஆளாக நின்று ஆளுங்கட்சியாக மாற்றினார் ஜெயலலிதா. 'காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம்', 'தொட்டில் குழந்தை திட்டம்', '69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பிற்கான சட்ட போராட்டம்', 'மகளிர் காவல் நிலையம்' என பல நல்ல விஷயங்களை ஜெயலலிதா செய்திருந்தாலும் 1991-96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்களும் குற்றச்சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஜெயலலிதா வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அக்கா மகன் தான் சுதாகரன். இவரைத் தான் வளர்ப்பு மகன் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். 1995-ல் சுதாகரனின் திருமணம் நடைபெற்றது. பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பளவில் பந்தல் பணிகளும், 25,000 பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கும் அமைக்கப்பட்டன. இந்தத் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த விருந்தினர்களுக்காகவே பிரபல ஹோட்டல்களில் மொத்தமாக அறைகள் புக் செய்யப்பட்டன. தாம்பூலப்பைகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி, வாண வேடிக்கைகள் என சென்னையே இந்தத் திருமணத்தால் பிரமாண்டமாக ஜொலித்தது. வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்றால் அப்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட இந்த ஒரு திருமணமும் 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு கிடைத்த பலத்த அடியில் முக்கியமான பங்கை வகித்தது. பாலியல் வழக்குகள் 1992 ஆம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என்பவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர் தம் கணவர் நந்தகோபால் முன்னாலேயே காவல்துறையினரால் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். பத்மினியின் கண்முன்னாலேயே நந்த கோபாலை காவல்துறையினர் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் அப்போது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. வாச்சாத்தி வன்கொடுமை வாச்சாத்தி வன்கொடுமை அதுமட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய மற்றொரு சம்பவம் வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை. 1992 ஜூன் 20ஆம் தேதி சந்தன மரங்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அனைவரது வீடுகளிலும் புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஊர் நடுவே அமைந்துள்ள ஆலமரம் அடியில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து கொடூரமாக தாக்கியதாகவும், 18 பெண்களை அருகில் இருந்த வனத்துறையினர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது. கும்பகோண மகாமக விபத்து கும்பகோணத்தில் 1992-ம் ஆண்டு நடந்த மகாமகம் சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது. கும்பகோணத்தில் மகாமகம் நிகழ்ச்சி நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் விழா என்பதால் தமிழ்நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். மகாமக குளத்தில் ஜெயலலிதா 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 ஆனால் இந்த விழாவில் 48 பேர் மகாமகம் குளத்தில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பலியானார்கள். அந்த நாளில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. டான்சி ஊழல் வழக்கு 1991 - 96ம் ஆண்டுக்கால ஆட்சியில், பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு, கொடநாடு எஸ்டேட் என பல புகார்கள் எழுந்தன. அதில் டான்சி ஊழல் முக்கியமானது. தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வாங்கியது `சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம். இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது. Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கையை மக்கள் இழந்திருந்தனர். இவர் ஆட்சியில் இருந்த சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஏன்? ரஜினியே, இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று திமுக - தாமாக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ரஜினி - ஜெயலலிதா இதனைத்தொடர்ந்து தான், 5 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருந்த ஜெயலலிதா 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார். தமிழக அரசின் மோசமான ஆட்சிகளில் ஒன்றை கொடுத்துவிட்டு தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடத்தை கொடுத்தனர். ஜெயலலிதாவே தோற்றுப் போனார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனம் ஜெவை வீழ்த்தி வென்றார். ஜெயலலிதாவின் இந்த பர்கூர் தோல்வி, ஒரு வெறும் தேர்தல் முடிவு மட்டும் அல்ல. மக்கள் நம்பிக்கையின் ஆழத்தையும், அவர்கள் தீர்ப்பின் சக்தியையும் நினைவூட்டிய வரலாற்று தருணம்.! 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

விகடன் 23 Jan 2026 10:58 am

ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

தமிழக அரசியலில் மறக்க முடியாத தலைவர்களுள் ஒருவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணி என்று அவரது அபிமானிகளால் போற்றப்பட்ட ஜெயலலிதா மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சக அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர். தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மற்ற மாநில அரசியல் தலைவர்களுக்கும் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். சினிமாவிற்கு பிறகு எழுத்து, பத்திரிகை என்று இருந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் தோல்வி அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து ஜெயலலிதா தொடர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது ஜெயலலிதாதான். அதிமுகவின் உச்சமாக பார்க்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வராக இருந்து போட்டியிட்ட போது கூட தோற்றுப் போயிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். தமிழக அரசியல் விசித்திரமானது. இங்கே பெரும் ஜாம்பவான்கள் கூட மக்கள் மன்றத்தில் வீழ்ந்து போயிருக்கின்றனர். ஜெயலலிதாவும் அப்படித்தான் 1996 இல் வீழ்ந்தார். ஜெயலலிதாவை வீழ்த்திய அந்த பர்கூர் மண்ணுக்கு அரசியல் வரலாற்றில் தனி இடம் உண்டு. ஜா அணி - ஜெ அணி 1989-ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜா அணி - ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டிருந்ததால் ஜானகியே முதல்வரானார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தில் கலவரம் வெடித்ததால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. 1989-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஜானகிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. கட்சி பிளவுப்பட்டு இருந்ததால் அந்தத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா இருப்பினும் சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார். ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு ஜானகி விலக அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் கைக்கு வந்துவிட்டது. 1989 மார்ச் 25 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட்டை படித்தபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அந்தக் கலவரத்தில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. தலைவிரி கோலமாக்கப்பட்டு வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத்திற்குள் முதல்வராகத் தான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டார். தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியலை உயிர்த்துடிப்புடன் நடத்தினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை போலவே கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1991-ல் தமிழக சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக- காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். ராஜீவ் காந்தி முதல்வரான ஜெயலலிதா! ராஜீவ் காந்தியின் அனுதாப அலையால் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அதிமுகவே இருக்காது என்று சொல்லப்பட்ட நிலையில் அதிமுகவை தனி ஆளாக நின்று ஆளுங்கட்சியாக மாற்றினார் ஜெயலலிதா. 'காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம்', 'தொட்டில் குழந்தை திட்டம்', '69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பிற்கான சட்ட போராட்டம்', 'மகளிர் காவல் நிலையம்' என பல நல்ல விஷயங்களை ஜெயலலிதா செய்திருந்தாலும் 1991-96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்களும் குற்றச்சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஜெயலலிதா வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அக்கா மகன் தான் சுதாகரன். இவரைத் தான் வளர்ப்பு மகன் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். 1995-ல் சுதாகரனின் திருமணம் நடைபெற்றது. பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பளவில் பந்தல் பணிகளும், 25,000 பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கும் அமைக்கப்பட்டன. இந்தத் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த விருந்தினர்களுக்காகவே பிரபல ஹோட்டல்களில் மொத்தமாக அறைகள் புக் செய்யப்பட்டன. தாம்பூலப்பைகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி, வாண வேடிக்கைகள் என சென்னையே இந்தத் திருமணத்தால் பிரமாண்டமாக ஜொலித்தது. வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்றால் அப்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட இந்த ஒரு திருமணமும் 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு கிடைத்த பலத்த அடியில் முக்கியமான பங்கை வகித்தது. பாலியல் வழக்குகள் 1992 ஆம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என்பவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர் தம் கணவர் நந்தகோபால் முன்னாலேயே காவல்துறையினரால் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். பத்மினியின் கண்முன்னாலேயே நந்த கோபாலை காவல்துறையினர் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் அப்போது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. வாச்சாத்தி வன்கொடுமை வாச்சாத்தி வன்கொடுமை அதுமட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய மற்றொரு சம்பவம் வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை. 1992 ஜூன் 20ஆம் தேதி சந்தன மரங்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அனைவரது வீடுகளிலும் புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஊர் நடுவே அமைந்துள்ள ஆலமரம் அடியில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து கொடூரமாக தாக்கியதாகவும், 18 பெண்களை அருகில் இருந்த வனத்துறையினர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது. கும்பகோண மகாமக விபத்து கும்பகோணத்தில் 1992-ம் ஆண்டு நடந்த மகாமகம் சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது. கும்பகோணத்தில் மகாமகம் நிகழ்ச்சி நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் விழா என்பதால் தமிழ்நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். மகாமக குளத்தில் ஜெயலலிதா 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 ஆனால் இந்த விழாவில் 48 பேர் மகாமகம் குளத்தில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பலியானார்கள். அந்த நாளில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. டான்சி ஊழல் வழக்கு 1991 - 96ம் ஆண்டுக்கால ஆட்சியில், பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு, கொடநாடு எஸ்டேட் என பல புகார்கள் எழுந்தன. அதில் டான்சி ஊழல் முக்கியமானது. தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வாங்கியது `சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம். இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது. Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கையை மக்கள் இழந்திருந்தனர். இவர் ஆட்சியில் இருந்த சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஏன்? ரஜினியே, இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று திமுக - தாமாக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ரஜினி - ஜெயலலிதா இதனைத்தொடர்ந்து தான், 5 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருந்த ஜெயலலிதா 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார். தமிழக அரசின் மோசமான ஆட்சிகளில் ஒன்றை கொடுத்துவிட்டு தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடத்தை கொடுத்தனர். ஜெயலலிதாவே தோற்றுப் போனார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனம் ஜெவை வீழ்த்தி வென்றார். ஜெயலலிதாவின் இந்த பர்கூர் தோல்வி, ஒரு வெறும் தேர்தல் முடிவு மட்டும் அல்ல. மக்கள் நம்பிக்கையின் ஆழத்தையும், அவர்கள் தீர்ப்பின் சக்தியையும் நினைவூட்டிய வரலாற்று தருணம்.! 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

விகடன் 23 Jan 2026 10:58 am

ஈரானை நோக்கி கப்பற்படையை அனுப்பியுள்ளேன் - 'மீண்டும்'ஈரான் குறித்து ட்ரம்ப்

பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஈரானில் உள்நாட்டுப் போராட்டம் பெரிதாக வெடித்துள்ளது. இது தொடங்கியதில் இருந்தே போராட்டக்காரர்களுக்கு தன்னுடைய முழு ஆதரவு இருப்பதாக தொடர்ந்து பதிவு செய்து வந்தார் ட்ரம்ப். ஈரான் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு அந்த நாட்டு ஏதாவது செய்தால், ‘இதுவரை இல்லாத தாக்குதல் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார். கடந்த வாரம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது ஈரான் அரசு. இதனால், அந்த ராணுவ மிரட்டலை கைவிட்டார் ட்ரம்ப். இப்போது மீண்டும் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறித்து பேசத் தொடங்கியுள்ளார். ஈரான் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained இது குறித்து அவர் கூறியுள்ளதாவது… “ஈரானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஈரானை நோக்கி அமெரிக்காவின் பெரும் கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக அதை பயன்படுத்துவது போல இருக்காது. ஆனால், தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன” என்று பேசியுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம், ஈரான் – இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருந்த போது, ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தது அமெரிக்கா. இப்போது என்ன நடக்க உள்ளதோ? Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?

விகடன் 23 Jan 2026 10:54 am

ஈரானை நோக்கி கப்பற்படையை அனுப்பியுள்ளேன் - 'மீண்டும்'ஈரான் குறித்து ட்ரம்ப்

பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஈரானில் உள்நாட்டுப் போராட்டம் பெரிதாக வெடித்துள்ளது. இது தொடங்கியதில் இருந்தே போராட்டக்காரர்களுக்கு தன்னுடைய முழு ஆதரவு இருப்பதாக தொடர்ந்து பதிவு செய்து வந்தார் ட்ரம்ப். ஈரான் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு அந்த நாட்டு ஏதாவது செய்தால், ‘இதுவரை இல்லாத தாக்குதல் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார். கடந்த வாரம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது ஈரான் அரசு. இதனால், அந்த ராணுவ மிரட்டலை கைவிட்டார் ட்ரம்ப். இப்போது மீண்டும் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறித்து பேசத் தொடங்கியுள்ளார். ஈரான் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained இது குறித்து அவர் கூறியுள்ளதாவது… “ஈரானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஈரானை நோக்கி அமெரிக்காவின் பெரும் கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக அதை பயன்படுத்துவது போல இருக்காது. ஆனால், தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன” என்று பேசியுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம், ஈரான் – இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருந்த போது, ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தது அமெரிக்கா. இப்போது என்ன நடக்க உள்ளதோ? Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?

விகடன் 23 Jan 2026 10:54 am

நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!'ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார்  பா. முகிலன் , தமிழக தேர்தல்களின்  நினைவுச் சுவடுகள்  தொடர் மூலம்! முதல் அத்தியாயம் : நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்!  அத்தியாயம் 02 நினைவுச் சுவடுகள்: தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதள வீடியோக்கள், வைரலாகும் பிரசார காணொலிகள் எல்லாம் வருவதற்கு முன்பே, தமிழ்நாட்டுத் தேர்தல் தொடர்பான செய்திகளும், தலைவர்களின் பிரசார செய்திகளும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்தின் வழியாக மக்களைச் சென்றடைந்தன. அதுதான் வானொலி.  இந்தியா சுதந்திரம் அடையும் காலத்திற்கும் முன்பே, வானொலி மக்கள் வாழ்வில் ஒரு முக்கிய தகவல் ஊடகமாக மாறியிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வானொலி ஒளிபரப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், முக்கிய செய்திகளை அறிய மக்கள் வானொலியை கவனமாகக் கேட்டு வந்தனர். இரண்டாம் உலகப் போர் செய்திகள், அரசியல் அறிவிப்புகள் போன்றவை வானொலியிலேயே முதலில் கேட்டன. 1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியாவின் சுதந்திர அறிவிப்பும், ஜவஹர்லால் நேருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையும் வானொலியின் மூலமே கோடிக்கணக்கான மக்களிடம் சென்றடைந்தது. சுதந்திரத்திற்குப் பின், அகில இந்திய வானொலியின் ஒலிபரப்புச் சேவை, தமிழ் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் விரிவடைந்தது. இதனால், வானொலியை நம்பி செய்திகள் கேட்கும் பழக்கம் வலுப்பெற்றது. அதுவே, பின்னாளில் தமிழகத் தேர்தல்களில் அரசியல் குரல்கள் வானொலியின் வழியே மக்களிடம் எளிதாகச் சென்றடைய காரணமாக அமைந்தது. வானொலி தேநீர்க் கடையில், கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில், நடுத்தர வகுப்பினரின் வீடுகளின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த வானொலிப் பெட்டியிலிருந்து வரும் கரகரப்பான குரல்தான், தலைவர்களின் உரைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது. பல ஆண்டுகளாக வானொலிதான் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்தது. தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் மக்கள் ஒன்றாக உட்கார்ந்து ரேடியோ கேட்டு, அரசியலை அறிந்துகொண்ட காலம் அது. பார்த்ததைவிட கேட்டதன் மூலமாகவே அரசியலை அறிந்துகொண்ட காலம் அது.  அரசியலின் முதல் ஊடகமாக இருந்த வானொலி சுதந்திரத்துக்குப் பிறகான ஆரம்ப ஆண்டுகளில், அதாவது 1950-கள் தொடங்கி,  ஆல் இந்தியா ரேடியோதான் — மக்களிடையே அதிக நம்பகத்துக்குரிய, பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஊடகமாக இருந்தது. செய்தித்தாள்கள் அடுத்த நாள் காலையில்தான் வந்து சேரும். தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு நேரில் சென்றவர்கள்தான் தலைவர்களின் உரையைக் கேட்க முடியும். ஆனால் வானொலி, தூரங்களைக் கடந்து மக்களிடம் தேர்தல் செய்திகளைக் கொண்டு சேர்த்தது.  தேர்தல் தொடர்பான சிறப்புச் செய்தி ஒலிபரப்புகள் அனைவரது கவனத்தையும் ஒரே நேரத்தில் ஈர்த்தன. செய்தி ஒலிபரப்புக்கு சில நிமிடங்கள் முன்னரே தெருக்கள் அமைதியாகிவிடும். வீடுகளில் கூச்சலிடும் சிறுவர்களை அதட்டல் போட்டு அமைதியாக்குவார்கள் குடும்பத்திலுள்ள பெரியவர்கள். இளைஞர்கள், அரசியல் கட்சித் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், தங்களது அன்றாட வேலைகளை, தேர்தல் செய்திகளைக் கேட்பதற்கு ஏற்ப, தங்களது வேலைகளையும் நிகழ்ச்சி நிரல்களையும் அமைத்துக்கொண்டனர். மீறி ஏதேனும் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், செய்தி ஒலிபரப்பாகும் நேரத்தில் அதனைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு கேட்டனர்.  வானொலி தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. தேர்தல் காலங்களில் ரேடியோவில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியமானதாக உணரப்பட்டது. தலைவர்களின் வானொலி பிரசாரம் 1962 பொதுத் தேர்தலிலிருந்து, அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகப் பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்குப்பதிவுக்கு சில தினங்கள் முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு , ஒவ்வொரு நாளும் 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் என்ற நேரக்கட்டுப்பாட்டுடன் உரையாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உரைகள், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒலிபரப்பப்பட்டன. கட்சிகள் தங்கள் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை வானொலியின் மூலம் மக்களிடம் விளக்க முடிந்தது. கடும் விமர்சனங்களுக்கும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தக் கட்டுப்பாடுகள், தலைவர்களை தெளிவாகவும் நேர்மையாகவும் பேச வலியுறுத்தின. இதன் மூலம், வானொலி தமிழக தேர்தல்களில் ஒரு அதிகாரப்பூர்வமான பிரச்சார மேடையாக உருவெடுத்தது. வானொலியில் நன்றாக அமைந்த ஒரு உரை, மக்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது பொதுக் கூட்டங்களில் மட்டுமல்லாமல், வீடுகள், சமையலறைகள், அலுவலகங்கள் போன்ற தனிப்பட்ட இடங்களுக்குள் நேரடியாக நுழைந்ததாலே அந்தத் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் மக்கள் தினசரி வாழ்வின் ஒரு பகுதியாகவுமே அரசியல் பேச்சுகள் மாறின. வானொலி வானொலி வழியாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், மக்களுடனான அதன் நெருக்கமான தன்மைதான். ஸ்டுடியோக்களில் மைக்கின் முன் நின்று பேசிய தலைவர்களுக்கு முன் ஆரவாரமான கூட்டங்கள் இல்லை. கைத்தட்டல்கள் இல்லை. முகபாவனைகள், காட்சியமைப்புகள், நாடகத்தன்மை போன்ற எதுவும் இல்லை. அங்கு முக்கியமானது குரல் மட்டுமே — அதில் இருக்கும் தெளிவு, மொழி, கருத்தின் நேர்மையின் அடிப்படைகளிலேயே வாக்காளர்கள் தலைவர்களையும், அவர்கள் சார்ந்த கட்சிகளையும்  மக்கள் மதிப்பிட்டனர். கட்சிகளின் நிலைப்பாடுகள், அரசியல் கொள்கை வேறுபாடுகள், வாக்குறுதிகள், எதிர்க்கட்சிகளுக்கான பதிலடிகள் போன்றவற்றை தலைவர்களின் வானொலி உரை மூலம் மக்கள் புரிந்துகொண்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக கிராமப்புற மக்களுக்கு, இந்த வானொலி ஒலிபரப்புகளே மூத்த அரசியல் தலைவர்களின் குரலை நேரடியாகக் கேட்கக் கிடைத்த ஒரே வாய்ப்பாக அமைந்தன.  எதிர்வினைகளும் குழு விவாதங்களும் தேர்தல் காலங்களில் அரசியல் செய்திகளையும் தலைவர்களின் உரைகளையும் வானொலியில் கேட்பது என்பது தனிப்பட்ட செயலாக இல்லை. அது ஒரு கூட்டு அனுபவமாக இருந்தது. கிராமங்களில், ஒரு வானொலிப் பெட்டியைச் சுற்றி பலர் கூடி அமர்ந்து உரைகளையும் செய்திகளையும் கவனமாகக் கேட்டனர். ஒலிபரப்பு முடிவடைந்ததும் உடனடியாக அது குறித்த எதிர்வினைகள், கருத்துகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்படும். நகர்ப்புற வீடுகளில், முக்கிய உரைகள் ஒலிபரப்பாகும் போது அமைதி காக்கப்பட்டது. குழந்தைகள் இடையூறு செய்யக் கூடாது என எச்சரிக்கப்பட்டனர் அல்லது அறிவுறுத்தப்பட்டனர். அந்த அளவுக்கு அந்த நேரத்தில், வானொலி ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருந்தது. வானொலி தமிழக அரசியல் கலாச்சாரத்தில் மொழிக்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அந்த மரபை வானொலி மேலும் வலுப்படுத்தியது. நல்ல பேச்சாற்றல் கொண்ட தலைவர்கள்,வானொலியில் தனிப்பட்ட வகையில் முன்னிலை பெற்றனர். தமிழ்மொழி மீது அவர்களுக்கு இருந்த புலமை, இலக்கியக் குறிப்புகள், எதுகை மோனை வடிவிலான பேச்சு, வாக்கியங்களின் ஓட்டம் போன்ற அனைத்தும், தலைவர்களின் உரைகளை மக்கள் மனதில் நிற்கச் செய்தன. காட்சிகள் இல்லாத நிலையில், அவர்கள் சொல்லும் உவமைகள் மற்றும் சொற்கள் கேட்பவர்களின் மனதில் காட்சிகளாக உருவானது. வானொலியில் கேட்ட ஒரு வலிமையான வாக்கியம், பல நாட்கள் அது குறித்து மக்களிடையே பேசுபொருளானது. பேருந்துகள், பள்ளிகள், சந்தைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் அது குறித்து மீண்டும் மீணடும் சிலாகித்துப் பேசப்பட்டது.   செய்திகளும் தேர்தல் அறிவிப்புகளும் தலைவர்களின் உரைகள் மட்டுமல்ல, தேர்தல் காலங்களில் வானொலி பல முக்கியத் தகவல்களுக்கும் முதன்மை ஊடகமாக இருந்தது. தேர்தல் அறிவிப்புகள், பிரச்சார அட்டவணைகள், வாக்குப்பதிவு நாளுக்கான வழிமுறைகள், வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் ஆகியவை வானொலியின் வழியே மக்களிடம் சென்றடைந்தன. நேரலை தொலைக்காட்சி இல்லாத காலத்தில், நிகழ்நேர தகவல்களை மக்களுக்குக் கொண்டு சென்றது வானொலியே. குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் வானொலி ஒலிபரப்புகள் அதிக பதற்றத்துடன் கேட்கப்பட்டன. ஒவ்வொரு இடைவெளியும், அறிவிப்பாளரின் குரலில் வெளிப்படும் மாற்றமும் கூட, மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.மக்களுக்கு, அவர்களது மனம் கவர்ந்த கட்சி அல்லது தலைவர் அல்லது வேட்பாளரின் வெற்றி தோல்வி குறித்த முதல் தகவலைச் சொன்னது வானொலிதான். ரேடியோ நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் வானொலி இவ்வளவு முக்கியத்துவம் பெற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று — அதன் மீது இருந்த நம்பிக்கையும் நம்பகத்தன்மையும்தான். அகில இந்திய வானொலி, கட்டுப்பாடு கொண்ட, பொறுப்பான, அதிகாரப்பூர்வமான ஊடகமாக மக்கள் பார்வையில் இருந்தது. கட்சிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் குறித்து பத்திரிகைகள் வெவ்வேறு கருத்துகள், விமர்சனங்களை வெளியிட்டபோதும், வானொலிச் செய்திகள் நடுநிலையுடன் வழங்கப்படுவதாக நம்பப்பட்டது. அரசியல் வேறுபாடுகள் தீவிரமாக இருந்த காலங்களிலும், வானொலியில் ஒலித்த உரைகளை, தலைவர்களின் உண்மை கருத்தாகவே மக்கள் அப்படியே ஏற்றுக்கொண்டனர். அந்த நம்பகத்தன்மையே, கட்சிகள் அல்லது தலைவர்கள் மீதான பொதுமக்களின் கருத்துருவாக்கத்தில் வானொலிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியது.  காலத்தின் சாட்சி இத்தகைய சூழ்நிலையில்தான் 1980களின் இறுதி மற்றும் 1990களில், தொலைக்காட்சி தேர்தல் பிரச்சாரத்தின் முதன்மை ஊடகமாக மாறத் தொடங்கியது. காட்சிகள், பேரணிகள், சுருக்கமான காட்சி ஒளிப்பதிவுகள் ஆகியவை முன்னிலை பெற்றன. பின்னர், டிஜிட்டல் தளங்கள் கவனத்தை இன்னும் சிதறடித்தன. இன்றும்  வானொலி மறைந்துவிடவில்லை. ஆனால், அதற்கான முக்கியத்துவம் கணிசமாக குறைந்துபோனது. அந்தக் காலத்தில் அமைதியாக கவனத்துடன் கேட்கும் பழக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. அந்தக் குரல்கள் அனுமதி இல்லாமலே வீடுகளுக்குள் நுழைந்தன. கேள்விகளை எழுப்பின. வாக்குறுதிகளை அளித்தன. மக்களின் கருத்துகளை வடிவமைத்தன. கேட்பதையே ஒரு குடிமகனின் கடமையாக மாற்றின. ஆனால், அந்தப் பொறுமையும் அமைதியும் இன்றைய ஜென் Z தலைமுறையினரிடத்தில் காணாமல் போய்விட்டது. வானொலி பிரசாரம் இன்று கைப்பேசிகளும் திரைகளும் பிரசாரங்களால் நிரம்பியுள்ள சூழலில், வானொலிக் கால தேர்தல்கள் ஒரு மெல்லிய, சிந்தனைமிக்க அரசியல் பண்பாட்டை நினைவூட்டுகின்றன. மூத்த தலைமுறையினருக்கு, தேர்தல் காலங்களில் வானொலியைச் சுற்றி அமர்ந்து கேட்ட நினைவுகள் இன்னும் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளாகவே உள்ளன. அதுவெறும்  பசுமையான நினைவுகள் மட்டுமல்ல — பொறுமையுடன், ஒலியின் வழியே, ஜனநாயகத்தை அனுபவித்த ஒரு காலத்தின் சாட்சி! (தொடரும்)

விகடன் 23 Jan 2026 10:04 am

20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்த பிறகு அந்த நடிகர்கள் பலரின் கவனம் அரசியல் மீதும் பாயும். அப்படி தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நடிகர்கள் பலரும் அரசியலில் பெரும் தாக்கங்களையும் திருப்பங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் நடிகர் கார்த்திக்கின் அரசியல் கதை நம்மை குழப்ப வைக்கும் ஒன்றாக இருக்கும். அரசியல் என்ட்ரியான தேர்தலில் படுதோல்வி - மீண்டும் புதிய கட்சி, மீண்டும் புதிய கட்சி என ஒரே பாதையை சுற்றியது அவருடைய அரசியல் கதை. Actor Karthik - Political Journey சரணாலயம் 90-களில் உச்ச நடிகராக இருந்த நவரச நாயகன் கார்த்திக்கை பல கட்சிகளும் அவர்கள் பக்கம் இழுக்கப் பெரும் முயற்சிகள் எடுத்தன என்கிற பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால், அப்படியான நேரத்தில், 2006-ல் ‘ஆல் இந்தியா ஃபார்வர்டு பிளாக்’ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைவதற்கு முன்பே ‘சரணாலயம்’ என்ற அமைப்பைத் தொடங்கிய கார்த்திக், அவருடைய ரசிகர்கள் பலரை அதில் இணைத்துக் கொண்டார். ஃபார்வர்டு பிளாக் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்த கார்த்திக்கின் ‘சரணாலயம்’ அமைப்பிற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அவருடைய அரசியல் வருகையை அவர் பதிவு செய்வார் என பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருந்தனர். அப்படியான வேளையில்தான், ‘ஆல் இந்தியா ஃபார்வர்டு பிளாக்’ கட்சியில் இணைந்தார். பிறகு, அக்கட்சியின் தமிழகத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். ரசிகர் படையைக் கொண்ட கார்த்திக் கட்சியை முன்னெடுத்துச் செல்வார் என நினைத்திருந்தது தலைமை. ஆனால், கட்சியின் முக்கியக் கூட்டங்களிலேயே அவர் அப்சென்ட் ஆகியிருக்கிறார். இதுமட்டுமல்ல, கார்த்திக்கின் அடுத்தடுத்த செயல்களும் கட்சித் தலைமைக்கு அதிருப்தியாகவே இருந்திருக்கின்றன. பிறகு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். Actor Karthik 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவருடைய புதிய கட்சியான ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யைத் தொடங்குவதாக அறிவித்தார். சொந்தக் கட்சியைத் தொடங்கிய பிறகு ஆதரவாளர்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். பா.ஜ.க-வுடனான கூட்டணியில் இணைந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் கார்த்திக். அவருடைய சமூக மக்களின் ஆதரவு தொடங்கி பல்வேறு திட்டமிடல்களுக்குப் பிறகுதான் விருதுநகரில் அவர் களமிறங்க முடிவு செய்தார். ஆனால், அவருடைய கணிப்புகள் தலைகீழாக மாறி பெரும் தோல்வியையே சந்தித்தார். அந்தத் தேர்தலில் வெறும் 2 சதவீத வாக்குகளை (15,000 வாக்குகள்) மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இதன் பிறகு, 2011 சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய நாடாளும் மக்கள் கட்சியை அதிமுகவுடனான கூட்டணியில் இணைத்துவிட முயற்சி செய்தார் கார்த்திக். ஆனால், ஜெயலலிதாவோ அவர் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கொடுக்க முடியாது என மறுத்திருக்கிறார். இதனால் வருத்தமடைந்த கார்த்திக் அதிமுகவுடனான கூட்டணி திட்டங்களை கைவிட்டார். பிறகு 20-40 தொகுதிகளில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் என அதிரடியாக அறிவித்தார். 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்தான் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், சரியான பரப்புரை திட்டமிடல்கள், வலிமையான வேட்பாளர்கள் இல்லாததால் 2011-லும் இந்தக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. Actor Karthik - Political Journey இதனைத் தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் கார்த்திக் போட்டியிடவில்லை. கார்த்திக் நினைத்த கூட்டணிக் கணக்குகள் சரியாக கைகூடி வராததுதான் அவர் இதற்கிடைப்பட்ட காலத்தில் அரசியலிலிருந்து விலகி சைலன்ட்டாக இருந்ததற்கும் காரணமாகச் சொல்கிறார்கள். இந்த நேரத்தில்தான் அவர் ஓரிரு படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடாளும் மக்கள் கட்சி எந்தவொரு தேர்தல் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. பிறகு, 2018-ம் ஆண்டு அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க முடிவு செய்தார் கார்த்திக். அப்போது, “நாடாளும் மக்கள் கட்சி' புதிய வடிவத்தில் வரவிருக்கிறது. அதனுடைய சில பொறுப்பாளர்கள் மாற்றி அமைக்கப்படுவார்கள்” எனக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, 2019-ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக டிசம்பர் மாதம் ‘மனித உரிமைகள் காக்கும் கட்சி’ என புதியக் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நலன், விவசாயம் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் எனத் தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய மனித உரிமைகள் காக்கும் கட்சி மூலமாக அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகக் கூறியிருந்தார். Actor Karthik - Political Journey பிறகு அதிமுக-வுக்கு பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்து பிரச்சாரமும் செய்தார். அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2018-ல் மனித உரிமைகள் காக்கும் கட்சியைத் தொடங்கிய பிறகு எந்தவொரு தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. அக்கட்சியைத் தொடங்கிய பிறகு அதிமுக-வுக்கு ஆதரவாக மட்டுமே கார்த்திக் பிரச்சாரம் செய்தார். தற்போது உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் அரசியல், சினிமா என அனைத்திலிருந்தும் விலகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.! Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்

விகடன் 23 Jan 2026 9:56 am

20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்த பிறகு அந்த நடிகர்கள் பலரின் கவனம் அரசியல் மீதும் பாயும். அப்படி தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நடிகர்கள் பலரும் அரசியலில் பெரும் தாக்கங்களையும் திருப்பங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் நடிகர் கார்த்திக்கின் அரசியல் கதை நம்மை குழப்ப வைக்கும் ஒன்றாக இருக்கும். அரசியல் என்ட்ரியான தேர்தலில் படுதோல்வி - மீண்டும் புதிய கட்சி, மீண்டும் புதிய கட்சி என ஒரே பாதையை சுற்றியது அவருடைய அரசியல் கதை. Actor Karthik - Political Journey சரணாலயம் 90-களில் உச்ச நடிகராக இருந்த நவரச நாயகன் கார்த்திக்கை பல கட்சிகளும் அவர்கள் பக்கம் இழுக்கப் பெரும் முயற்சிகள் எடுத்தன என்கிற பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால், அப்படியான நேரத்தில், 2006-ல் ‘ஆல் இந்தியா ஃபார்வர்டு பிளாக்’ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைவதற்கு முன்பே ‘சரணாலயம்’ என்ற அமைப்பைத் தொடங்கிய கார்த்திக், அவருடைய ரசிகர்கள் பலரை அதில் இணைத்துக் கொண்டார். ஃபார்வர்டு பிளாக் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்த கார்த்திக்கின் ‘சரணாலயம்’ அமைப்பிற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அவருடைய அரசியல் வருகையை அவர் பதிவு செய்வார் என பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருந்தனர். அப்படியான வேளையில்தான், ‘ஆல் இந்தியா ஃபார்வர்டு பிளாக்’ கட்சியில் இணைந்தார். பிறகு, அக்கட்சியின் தமிழகத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். ரசிகர் படையைக் கொண்ட கார்த்திக் கட்சியை முன்னெடுத்துச் செல்வார் என நினைத்திருந்தது தலைமை. ஆனால், கட்சியின் முக்கியக் கூட்டங்களிலேயே அவர் அப்சென்ட் ஆகியிருக்கிறார். இதுமட்டுமல்ல, கார்த்திக்கின் அடுத்தடுத்த செயல்களும் கட்சித் தலைமைக்கு அதிருப்தியாகவே இருந்திருக்கின்றன. பிறகு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். Actor Karthik 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவருடைய புதிய கட்சியான ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யைத் தொடங்குவதாக அறிவித்தார். சொந்தக் கட்சியைத் தொடங்கிய பிறகு ஆதரவாளர்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். பா.ஜ.க-வுடனான கூட்டணியில் இணைந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் கார்த்திக். அவருடைய சமூக மக்களின் ஆதரவு தொடங்கி பல்வேறு திட்டமிடல்களுக்குப் பிறகுதான் விருதுநகரில் அவர் களமிறங்க முடிவு செய்தார். ஆனால், அவருடைய கணிப்புகள் தலைகீழாக மாறி பெரும் தோல்வியையே சந்தித்தார். அந்தத் தேர்தலில் வெறும் 2 சதவீத வாக்குகளை (15,000 வாக்குகள்) மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இதன் பிறகு, 2011 சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய நாடாளும் மக்கள் கட்சியை அதிமுகவுடனான கூட்டணியில் இணைத்துவிட முயற்சி செய்தார் கார்த்திக். ஆனால், ஜெயலலிதாவோ அவர் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கொடுக்க முடியாது என மறுத்திருக்கிறார். இதனால் வருத்தமடைந்த கார்த்திக் அதிமுகவுடனான கூட்டணி திட்டங்களை கைவிட்டார். பிறகு 20-40 தொகுதிகளில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் என அதிரடியாக அறிவித்தார். 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்தான் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், சரியான பரப்புரை திட்டமிடல்கள், வலிமையான வேட்பாளர்கள் இல்லாததால் 2011-லும் இந்தக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. Actor Karthik - Political Journey இதனைத் தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் கார்த்திக் போட்டியிடவில்லை. கார்த்திக் நினைத்த கூட்டணிக் கணக்குகள் சரியாக கைகூடி வராததுதான் அவர் இதற்கிடைப்பட்ட காலத்தில் அரசியலிலிருந்து விலகி சைலன்ட்டாக இருந்ததற்கும் காரணமாகச் சொல்கிறார்கள். இந்த நேரத்தில்தான் அவர் ஓரிரு படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடாளும் மக்கள் கட்சி எந்தவொரு தேர்தல் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. பிறகு, 2018-ம் ஆண்டு அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க முடிவு செய்தார் கார்த்திக். அப்போது, “நாடாளும் மக்கள் கட்சி' புதிய வடிவத்தில் வரவிருக்கிறது. அதனுடைய சில பொறுப்பாளர்கள் மாற்றி அமைக்கப்படுவார்கள்” எனக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, 2019-ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக டிசம்பர் மாதம் ‘மனித உரிமைகள் காக்கும் கட்சி’ என புதியக் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நலன், விவசாயம் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் எனத் தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய மனித உரிமைகள் காக்கும் கட்சி மூலமாக அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகக் கூறியிருந்தார். Actor Karthik - Political Journey பிறகு அதிமுக-வுக்கு பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்து பிரச்சாரமும் செய்தார். அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2018-ல் மனித உரிமைகள் காக்கும் கட்சியைத் தொடங்கிய பிறகு எந்தவொரு தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. அக்கட்சியைத் தொடங்கிய பிறகு அதிமுக-வுக்கு ஆதரவாக மட்டுமே கார்த்திக் பிரச்சாரம் செய்தார். தற்போது உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் அரசியல், சினிமா என அனைத்திலிருந்தும் விலகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.! Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்

விகடன் 23 Jan 2026 9:56 am

சபரிமலை தங்கம் கொள்ளை: சட்டசபையில் பாட்டுப் பாடி போராடிய எதிர்க்கட்சி; பதிலடி கொடுத்த அமைச்சர்கள்

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு குறித்து கோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது. அதில், உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் கமிஷனர், முன்னாள் தலைவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் அன்றைய தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் எழுந்து, '2024-2025 ஆண்டுகளில் சபரிமலையில் நடந்த மோசடிகளுக்குப் பொறுப்பேற்று தற்போதைய தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும். எஸ்.ஐ.டி மீது முதல்வர் அலுவலகம் கொடுக்கும் அழுத்தத்தை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சபை நடவடிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது'' என்று கூறினார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சபரிமலை தங்கக் கொள்ளைக்கு எதிரான பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர். சபாநாயகரை மறைக்கும் விதமாக பதாகைகளை உயர்த்திப் பிடித்து போராட்டம் நடத்தினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள். அதுமட்டும் அல்லாது, அவையின் நடுவே இறங்கி 'ஸ்வர்ணம் கட்டவர் (திருடியவர்) யாரப்பா... சகாக்களாணே ஐய்யப்பா' எனக் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாட்டுப் பாடி போராட்டம் நடத்தினர். சபரிமலை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளும் சி.பி.எம் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக களத்தில் இறங்கினர். இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சி.பி.எம் அமைச்சர் எம்.பி.ராஜேஷ், ஸ்வர்ணம் கட்டவர் யாரப்பா எனக் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் கன்வீனர் அடூர் பிரகாஷிடம் கேளுங்கள். பதில் திருப்தி இல்லாமல் இருந்தால் டெல்லி சென்று சோனியா காந்தியின் வீட்டில் போய் கேளுங்கள். சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு உதவினேனா? - CPM முன்னாள் அமைச்சர் விளக்கம் தங்கம் கொள்ளையடித்தவரும், அதை வாங்கியவரும் சோனியா காந்தியுடன் நிற்கும் போட்டோ உள்ளது. காங்கிரீட் கொடிமரத்தை கரையான் அரித்ததாக பொய்க்கதை கூறியவர்கள் நீங்கள். உண்மையான குற்றவாளிகள் சிறைக்குச் செல்லும்போது பாடுவதற்கு ஒரு பாடல் வைத்துள்ளோம் என்று காங்கிரஸ் எம்.எல்.எ-க்களைப் பார்த்து கூறினார். கேரள அமைச்சர் சிவன்குட்டி இதற்கிடையே அமைச்சர் சிவன்குட்டி, ஸ்வர்ணம் கட்டவர் யாரப்பா... காங்கிரஸாணே ஐயப்பா எனக் கோஷம் எழுப்பினார். மேலும், சோனியா காந்தியைக் கைது செய்ய வேண்டும் எனவும், அவரது வீட்டில் தங்கம் உள்ளதாகவும் அமைச்சர் சிவன்குட்டி கூறினார். அவரை சபாநாயகர் கட்டுப்படுத்தினார். மேலும், ''சபையில் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார்தான். நோட்டீஸ் வழங்காமல் சபையை அலங்கோலப்படுத்தக்கூடாது. இது முன்னுதாரணமான செயல் அல்ல'' எனவும் சபாநாயகர் தெரிவித்தார். மேலும், சோனியா காந்தி குறித்து சட்டசபையில் பேசியது குறித்து அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் சபாநாயகருக்குக் கடிதம் அளித்துள்ளார். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன?

விகடன் 23 Jan 2026 7:28 am

சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அந்த ஜனநாயகத்தின் உயிர் நாடி வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையிடையே ஆழமாக விதைக்கும் நோக்கில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி (Government College of Engineering, Salem) மாணவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். கல்லூரியில் செயல்பட்டு வரும் ART OF SPHERE குழுவின் மையக்கருத்து VIBGIOR 26 மாணவர் அணியின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு இந்த மாபெரும் முயற்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் மையமாக, 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், 5 லட்சத்துக்கும் அதிகமான விரல் ரேகைகளை பயன்படுத்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிரமாண்ட கிராண்ட் போர்ட்ரேட்டை உருவாக்கினர். இந்த முயற்சி ஒரு கலை நிகழ்வாக மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடான “மக்களே அதிகாரம்” என்ற கருத்தை உயிர்ப்பிக்கும் சமூக விழிப்புணர்வு இயக்கமாக அமைந்தது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர்ந்து, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. இந்த மாபெரும் போர்ட்ரேட்(portrait )உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் நீல நிற உடை அணிந்து கலந்து கொண்டனர். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சிந்தனையின் அடையாளமாக விளங்கும் டாக்டர் அம்பேத்கரின் நீல நிற அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த உடைத் தேர்வு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே சிந்தனையுடன், ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயல்பட்டதே இந்த முயற்சியின் மிகப் பெரிய பலமாக அமைந்தது. இந்த உலக சாதனை முயற்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா முழுமையான ஆதரவு, ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார். கல்வி வளாகத்தில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு வழங்கப்பட்டதால், இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புப் பொறுப்பை ரமணன் மற்றும் சங்கீதா ஆகிய செயலாளர்கள் ஏற்றுக் கொண்டு, 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்ட முறையில் செயல்படுத்தி, 5 மணி நேரத்துக்கும் மேலான கடின உழைப்பின் மூலம் இந்த மாபெரும் போர்ட்ரேட்டை நிறைவு செய்தனர். ஒற்றுமை, கலை, அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த உலக சாதனை முயற்சி, இளம் தலைமுறையின் ஜனநாயக நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக அமைந்துள்ளது. வாக்குரிமையின் அவசியத்தை கலை வடிவில் மக்களிடம் கொண்டு சென்ற இந்த முயற்சி, கல்வி வளாகத்தைத் தாண்டி பொதுமக்களிடையிலும் பெரும் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

விகடன் 22 Jan 2026 9:48 pm

சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அந்த ஜனநாயகத்தின் உயிர் நாடி வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையிடையே ஆழமாக விதைக்கும் நோக்கில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி (Government College of Engineering, Salem) மாணவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். கல்லூரியில் செயல்பட்டு வரும் ART OF SPHERE குழுவின் மையக்கருத்து VIBGIOR 26 மாணவர் அணியின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு இந்த மாபெரும் முயற்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் மையமாக, 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், 5 லட்சத்துக்கும் அதிகமான விரல் ரேகைகளை பயன்படுத்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிரமாண்ட கிராண்ட் போர்ட்ரேட்டை உருவாக்கினர். இந்த முயற்சி ஒரு கலை நிகழ்வாக மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடான “மக்களே அதிகாரம்” என்ற கருத்தை உயிர்ப்பிக்கும் சமூக விழிப்புணர்வு இயக்கமாக அமைந்தது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர்ந்து, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. இந்த மாபெரும் போர்ட்ரேட்(portrait )உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் நீல நிற உடை அணிந்து கலந்து கொண்டனர். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சிந்தனையின் அடையாளமாக விளங்கும் டாக்டர் அம்பேத்கரின் நீல நிற அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த உடைத் தேர்வு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே சிந்தனையுடன், ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயல்பட்டதே இந்த முயற்சியின் மிகப் பெரிய பலமாக அமைந்தது. இந்த உலக சாதனை முயற்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா முழுமையான ஆதரவு, ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார். கல்வி வளாகத்தில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு வழங்கப்பட்டதால், இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புப் பொறுப்பை ரமணன் மற்றும் சங்கீதா ஆகிய செயலாளர்கள் ஏற்றுக் கொண்டு, 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்ட முறையில் செயல்படுத்தி, 5 மணி நேரத்துக்கும் மேலான கடின உழைப்பின் மூலம் இந்த மாபெரும் போர்ட்ரேட்டை நிறைவு செய்தனர். ஒற்றுமை, கலை, அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த உலக சாதனை முயற்சி, இளம் தலைமுறையின் ஜனநாயக நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக அமைந்துள்ளது. வாக்குரிமையின் அவசியத்தை கலை வடிவில் மக்களிடம் கொண்டு சென்ற இந்த முயற்சி, கல்வி வளாகத்தைத் தாண்டி பொதுமக்களிடையிலும் பெரும் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

விகடன் 22 Jan 2026 9:48 pm

தவெக: “எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்” - செங்கோட்டையன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. தவெக தலைவர் விஜய் தேர்தல் ஆணையம் தவெகவிற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், எல்லோரும் இன்று தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். ஒருபுறம் 10 கட்சி கூட்டணி. மற்றொரு புறம் 8 கட்சி கூட்டணி. ஆனால் யாரை எல்லோரும் தேடித்தேடி வருகிறார்கள் என்று சொன்னால் தவெக விஜய்யைத் தான். எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு தானாகவே கூட்டணி அமையும். அப்படி கூட்டணி அமைந்தால் 234 தொகுதிகளிலும் தவெகதான் வெல்லும். செங்கோட்டையன் விஜய் யாரை நிற்க வைக்கிறாரோ அவர்கள் தான் வெல்வார்கள். தவெகவை தவிர யாராலும் தமிழகத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற வரலாற்றைப் படைப்போம். அந்தக் காலத்திற்காகத் தான் எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 8:10 pm

TVK Vijay : முதல் வெற்றி அத்தியாயம் தொடக்கம் - விசில் சின்னம் ஒதுக்கியது குறித்து தவெக விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் தவெக-விற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். விசில் தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. தவெக தலைவர் விஜய் நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம் என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 8:07 pm

TVK Vijay : முதல் வெற்றி அத்தியாயம் தொடக்கம் - விசில் சின்னம் ஒதுக்கியது குறித்து தவெக விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் தவெக-விற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். விசில் தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. தவெக தலைவர் விஜய் நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம் என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 8:07 pm

ஓ.பன்னீர் செல்வம் தவறவிட்ட வாய்ப்புகள்! – இனி எங்கே செல்லும் இந்த பாதை?

2001-ம் ஆண்டு மத்தியில்... சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியிலிருக்கும் அந்த சலூனுக்கு ஆட்டோவில் வந்திறங்கினார், அந்த அரசியல்வாதி. சில நிமிடங்களில் முகச்சவரம் முடித்துவிட்டு கிளம்பத் தயாரான போதுதான், அவரைக் கவனிக்கிறார் சலூன்காரர். ஜெயலலிதாவின் சாய்ஸ்! அப்படியே கடையில் கிடக்கும் செய்தித்தாளையும் பார்க்கிறார். 'தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்கிறார்' என்றச் செய்தியையும் பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தையும் பார்த்த சலூன்காரருக்கு, கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை. ஆம், கடைக்கு ஆட்டோவில் வந்திருந்தது ஓ.பன்னீர் செல்வமேதான். முதன்முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக சலூன் வந்திருந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது, ஜானகி அணிக்குச் சென்றவர் என்றாலும், தான் பதவி விலக வேண்டி வந்த போதெல்லாம்... ஒரே சாய்ஸாக ஜெயலலிதா கை காட்டியது இவரைத்தான். எங்கேயோ பெரியகுளத்தில் உள்ளாட்சி மன்றப் பதவியில் இருந்தபடி அரசியல் வெளிச்சம் படாமல் இருந்தவரை, ஜெயலலிதா முன்பாக போய் நிறுத்தியது சசிகலா என்றார்கள். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்திருக்கிறார். நிதி அமைச்சராக தமிழக அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் இன்று?! ஓ.பன்னீர் செல்வம் தன்னந்தனியாக நான் நிற்கும் வேளை! திக்குத் தெரியாத ஒரு பாதையில் நின்று கொண்டிருக்கிறார். அடையாளம் தந்த அதிமுக-வில் இன்றைய தேதிக்கு இவர் உறுப்பினர்கூட இல்லை. அதிமுக-வை மீட்கப் போகிறேன் என சிலரைச் சேர்த்துக் கொண்டு கடந்த சில வருடங்களாக அறிக்கை விட்டபடி இருந்தார். உடன் இருந்த அந்தச் சிலரில், 'மத்த நேரம் சரி, தேர்தல் நேரத்துல ஏதாவதொரு முடிவெடுத்து யார் கூடவாச்சும் போய் பதவி கிதவி கிடைச்சாதானே அரசியல் செய்ய முடியும், இப்படியே இருந்தா எப்படி?' என நினைத்தவர்கள் கிளம்பி விட்டனர். எம்.எல்.ஏ-வாக இவருடன் இருந்த மூன்று பேரில் மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் திமுக-வுக்குப் போய் விட்டார்கள். உசிலம்பட்டி ஐயப்பனும், இவரால் ராஜ்ய சபா எம்.பி ஆகும் வாய்ப்பு கிடைத்த முதுகுளத்தூர் தர்மரும் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர் தவெக பக்கம் சென்று விட்டார். ஏன் இந்த நிலை?! ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவராலும் மிகவும் நம்பிக்கையான‌ மனிதராகப் பார்க்கப் பட்ட ஓ.பி.எஸ் இன்று ஏன் இந்த நிலைக்கு ஆளானார்? அதிமுக சீனியர் ஒருவரிட‌ம் பேசினோம். ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி? ஜெயலலிதா சறுக்களில் தொடங்கிய யுத்தம்! ''அவர் கட்சிக்கு விசுவாசமானவரா நடித்திருக்கிறாரோ என எண்ண தோன்றுகிறது. ஜெயலலிதா ஆட்சியில இல்லாத போது அவருடைய நாற்காலியைப் பயன்படுத்த மாட்டேன்னு சொன்னதெல்லாம் நடந்துச்சு தான். அவருடைய உண்மையான கட்சிப் பாசம், சுயரூபம், போலி விசுவாசம் எல்லாமே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அம்மா உடல்நிலை சரியில்லாத போது முதல்வரானார், சரி. அவங்க மறைஞ்சதும் அந்த சூழலைப் பயன்படுத்தி டெல்லி கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்குச்சு. தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதான்னு அவங்க பார்த்தாங்க.. அந்தச் சூழல்ல இவர் என்ன செய்தார்? கட்சியின் நலன் முக்கியம்னு நின்றிருக்க வேண்டாமா? 'என்னை ராஜினாமா செய்யச் சொல்றாங்க'ன்னு பொதுவெளியில சசிகலா பத்திப் பேசினாரே, இவருக்கு அடையாளம் தந்ததே இதே சசிகலாதானே? அவர் நினைக்கலையே, அந்த இடத்துல இவரது விசுவசம் கேள்விக்குள்ளாச்சி . அன்னைக்கு கட்சிக்குச் சம்பந்தமில்லாத சிலர் பேச்சையல்லவா கேட்டுட்டு 'தர்ம யுத்தம்' அது இதுன்னு போய் உட்கார்ந்தார். ஒருவேளை சசிகலா ராஜினாமா செய்யச் சொன்னதும் ஜெ.,-வுக்காக ராஜினாமா செய்தது போலவே பதவியை விட்டு விலகியிருந்தா, ஜெயிலுக்குப் போகும் முன் சசிகலா இவரையே முதல்வராக்கி விட்டுப் போயிருந்திருக்கலாம்... எடப்பாடி பழனிசாமியின் என்ட்ரியே நிகழாமல் போயிருந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கு. ஒருவேளை, கட்சி முழுக்க அவர் கட்டுப்பாட்டுல போயிருந்தா வடக்கிலிருந்து என்ன செய்யச் சொல்றாங்களோ அதையெல்லாம் செய்து கட்சியை ஒரு வழி பண்ணியிருப்பார். சசிகலா அரசியலுக்கு செட் ஆகாத பணிவே துணை! ஏன்னா, எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற துணிச்சல், கட்சி மீதான பற்று எல்லாம் இவர்கிட்ட கொஞ்சமும் இல்லை. 'எங்க உட்கட்சி விவகாரங்களில் தலையிடாதீங்க' என அமித் ஷாவிடம் சொல்கிற துணிச்சல் எல்லாம் ஓ.பி.எஸ் க்கு கிடையாது. ஒராண்டுக்கு முன் கூட்டணி அறிவிக்க வந்த அமித் ஷா, 'அதிமுக-வின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்' எனச் சொன்னதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல போகிற போக்கில் ஜெயலலிதாவையே விமர்சித்த அண்ணாமலை இருந்தால் கூட்டணி செட் ஆகாது என மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியிலிருக்கும் போதுதான் சொல்லி கூட்டணியை முறித்தார் எடப்பாடி. இந்த இடத்தில் பன்னீர் செல்வம் இருந்திருந்தால் பேசியிருப்பாரா? 2016 முதல் 21 வரையிலான ஆட்சியில் ஜெயலலிதா இல்லாத மிச்சக் காலத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடித்ததும், கட்சியை இப்போது வரை கட்டுக் கோப்பாக கொண்டு போவதும் எடப்பாடிதான். ஒரு பக்கம் ஆளும் திமுக, இன்னொருபுறம் இவங்க வழியா சவாரி செய்யலாமா எனத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சி. 'திமுக-வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி' எனப் புதுசா கிளம்பியிருக்கிற ஒருத்தர் என எல்லாரையும் சமாளிச்சபடியே கட்சியை 2026 தேர்தலுக்குத் தயார்படுத்திட்டு வர்றார் பழனிசாமி. . துணிவே துணை என எந்த முடிவையும் எடுக்கிறார் பழனிசாமி. இவர் பணிவே துணைன்னு இருந்தா அரசியலுக்கு அது செட் ஆகாதே. இதை ஏத்துக்கிட்டுப் போயிருந்தா இவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்கிறார் அவர். OPS: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன் - ஓபிஎஸ் விளக்கம் ஓ.பன்னீர் செல்வம் தவற விட்ட அன்பழகன் இடம்! மூத்தப் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசியபோது, ''எளிமையான மனிதர்தான். ஆனா சமயத்துல என்ன பண்றோம்னு தெரியாமச் செய்கிறாரா அல்லது தெரிஞ்சே செய்கிறாரா தெரியல. அவருடைய சில செயல்பாடுகள் கட்சியின் உண்மையான தொண்டர்கள்கிட்ட இருந்து அவரை அந்நியப்படுத்திடுது. 'இந்த தேர்தல்ல திமுக ஜெயிக்க வாய்ப்பிருக்கு'னு சொல்றது, அதிமுக வேட்பாளரை எதிர்த்து தேர்தல்ல நின்னது போன்ற செயல்களை உதாரணமாகச் சொல்லலாம். கட்சியின் கள நிலவரத்தைக் கொஞ்சம் புரிஞ்சு நடந்திருந்தா திமுக-வில் அன்பழகன் இருந்த மாதிரி, நம்பர் 2 என்ற இடத்தில் இவர் அதிமுக-வில் இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டார் என்றார். எடப்பாடி பழனிசாமி எங்கே செல்லும் இந்தப் பாதை? எது என்னவோ இன்று திக்குத் தெரியாத காட்டில் நிற்கிறார் பன்னீர் செல்வம். இயக்குநர் பாலா இவரின் உறவினர் என்கிறார்கள். அவரது 'சேது' படத்தில் வரும் 'எங்கே செல்லும் இந்தப் பாதை' பாடல்தான் நினைவுக்கு வருகிறது, பன்னீர் செல்வத்தின் நாளைய அரசியலை நினைத்துப் பார்க்கும் போது. 'நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை' எனச் சொன்ன பிறகும் பழனிசாமி இவரைச் சேர்க்க மறுக்கிறார் என்றால், உள்ளே வந்த பிறகு எப்படியும் மாறலாம் என்று நினைக்கிறார்போல. டி.டி.வி.தினகரன் போல தனியாக ஓரிரு இடங்களை வாங்கிக் கொண்டு தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வருவாரா என்றால், டெல்லியே இவரை விரும்பி அழைக்குமா என்பதும் தெரியவில்லை. டெல்லியைப் பொறுத்தவரை யார் மூலமாவது ஆதாயம் இருந்தால் மட்டுமே அவர்கள் பக்கம் போவார்கள். மொத்தத்தில் பழைய பன்னீர் செல்வமாக அரசியலில் இனி ஒ.பி.எஸ்.ஸைப் பார்க்க முடியுமா என நோக்கினால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெளிச்சம் இல்லை. காலத்திடம்தான் விடை இருக்கிறது.!

விகடன் 22 Jan 2026 7:25 pm

ஓ.பன்னீர் செல்வம் தவறவிட்ட வாய்ப்புகள்! – இனி எங்கே செல்லும் இந்த பாதை?

2001-ம் ஆண்டு மத்தியில்... சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியிலிருக்கும் அந்த சலூனுக்கு ஆட்டோவில் வந்திறங்கினார், அந்த அரசியல்வாதி. சில நிமிடங்களில் முகச்சவரம் முடித்துவிட்டு கிளம்பத் தயாரான போதுதான், அவரைக் கவனிக்கிறார் சலூன்காரர். ஜெயலலிதாவின் சாய்ஸ்! அப்படியே கடையில் கிடக்கும் செய்தித்தாளையும் பார்க்கிறார். 'தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்கிறார்' என்றச் செய்தியையும் பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தையும் பார்த்த சலூன்காரருக்கு, கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை. ஆம், கடைக்கு ஆட்டோவில் வந்திருந்தது ஓ.பன்னீர் செல்வமேதான். முதன்முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக சலூன் வந்திருந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது, ஜானகி அணிக்குச் சென்றவர் என்றாலும், தான் பதவி விலக வேண்டி வந்த போதெல்லாம்... ஒரே சாய்ஸாக ஜெயலலிதா கை காட்டியது இவரைத்தான். எங்கேயோ பெரியகுளத்தில் உள்ளாட்சி மன்றப் பதவியில் இருந்தபடி அரசியல் வெளிச்சம் படாமல் இருந்தவரை, ஜெயலலிதா முன்பாக போய் நிறுத்தியது சசிகலா என்றார்கள். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்திருக்கிறார். நிதி அமைச்சராக தமிழக அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் இன்று?! ஓ.பன்னீர் செல்வம் தன்னந்தனியாக நான் நிற்கும் வேளை! திக்குத் தெரியாத ஒரு பாதையில் நின்று கொண்டிருக்கிறார். அடையாளம் தந்த அதிமுக-வில் இன்றைய தேதிக்கு இவர் உறுப்பினர்கூட இல்லை. அதிமுக-வை மீட்கப் போகிறேன் என சிலரைச் சேர்த்துக் கொண்டு கடந்த சில வருடங்களாக அறிக்கை விட்டபடி இருந்தார். உடன் இருந்த அந்தச் சிலரில், 'மத்த நேரம் சரி, தேர்தல் நேரத்துல ஏதாவதொரு முடிவெடுத்து யார் கூடவாச்சும் போய் பதவி கிதவி கிடைச்சாதானே அரசியல் செய்ய முடியும், இப்படியே இருந்தா எப்படி?' என நினைத்தவர்கள் கிளம்பி விட்டனர். எம்.எல்.ஏ-வாக இவருடன் இருந்த மூன்று பேரில் மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் திமுக-வுக்குப் போய் விட்டார்கள். உசிலம்பட்டி ஐயப்பனும், இவரால் ராஜ்ய சபா எம்.பி ஆகும் வாய்ப்பு கிடைத்த முதுகுளத்தூர் தர்மரும் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர் தவெக பக்கம் சென்று விட்டார். ஏன் இந்த நிலை?! ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவராலும் மிகவும் நம்பிக்கையான‌ மனிதராகப் பார்க்கப் பட்ட ஓ.பி.எஸ் இன்று ஏன் இந்த நிலைக்கு ஆளானார்? அதிமுக சீனியர் ஒருவரிட‌ம் பேசினோம். ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி? ஜெயலலிதா சறுக்களில் தொடங்கிய யுத்தம்! ''அவர் கட்சிக்கு விசுவாசமானவரா நடித்திருக்கிறாரோ என எண்ண தோன்றுகிறது. ஜெயலலிதா ஆட்சியில இல்லாத போது அவருடைய நாற்காலியைப் பயன்படுத்த மாட்டேன்னு சொன்னதெல்லாம் நடந்துச்சு தான். அவருடைய உண்மையான கட்சிப் பாசம், சுயரூபம், போலி விசுவாசம் எல்லாமே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அம்மா உடல்நிலை சரியில்லாத போது முதல்வரானார், சரி. அவங்க மறைஞ்சதும் அந்த சூழலைப் பயன்படுத்தி டெல்லி கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்குச்சு. தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதான்னு அவங்க பார்த்தாங்க.. அந்தச் சூழல்ல இவர் என்ன செய்தார்? கட்சியின் நலன் முக்கியம்னு நின்றிருக்க வேண்டாமா? 'என்னை ராஜினாமா செய்யச் சொல்றாங்க'ன்னு பொதுவெளியில சசிகலா பத்திப் பேசினாரே, இவருக்கு அடையாளம் தந்ததே இதே சசிகலாதானே? அவர் நினைக்கலையே, அந்த இடத்துல இவரது விசுவசம் கேள்விக்குள்ளாச்சி . அன்னைக்கு கட்சிக்குச் சம்பந்தமில்லாத சிலர் பேச்சையல்லவா கேட்டுட்டு 'தர்ம யுத்தம்' அது இதுன்னு போய் உட்கார்ந்தார். ஒருவேளை சசிகலா ராஜினாமா செய்யச் சொன்னதும் ஜெ.,-வுக்காக ராஜினாமா செய்தது போலவே பதவியை விட்டு விலகியிருந்தா, ஜெயிலுக்குப் போகும் முன் சசிகலா இவரையே முதல்வராக்கி விட்டுப் போயிருந்திருக்கலாம்... எடப்பாடி பழனிசாமியின் என்ட்ரியே நிகழாமல் போயிருந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கு. ஒருவேளை, கட்சி முழுக்க அவர் கட்டுப்பாட்டுல போயிருந்தா வடக்கிலிருந்து என்ன செய்யச் சொல்றாங்களோ அதையெல்லாம் செய்து கட்சியை ஒரு வழி பண்ணியிருப்பார். சசிகலா அரசியலுக்கு செட் ஆகாத பணிவே துணை! ஏன்னா, எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற துணிச்சல், கட்சி மீதான பற்று எல்லாம் இவர்கிட்ட கொஞ்சமும் இல்லை. 'எங்க உட்கட்சி விவகாரங்களில் தலையிடாதீங்க' என அமித் ஷாவிடம் சொல்கிற துணிச்சல் எல்லாம் ஓ.பி.எஸ் க்கு கிடையாது. ஒராண்டுக்கு முன் கூட்டணி அறிவிக்க வந்த அமித் ஷா, 'அதிமுக-வின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்' எனச் சொன்னதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல போகிற போக்கில் ஜெயலலிதாவையே விமர்சித்த அண்ணாமலை இருந்தால் கூட்டணி செட் ஆகாது என மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியிலிருக்கும் போதுதான் சொல்லி கூட்டணியை முறித்தார் எடப்பாடி. இந்த இடத்தில் பன்னீர் செல்வம் இருந்திருந்தால் பேசியிருப்பாரா? 2016 முதல் 21 வரையிலான ஆட்சியில் ஜெயலலிதா இல்லாத மிச்சக் காலத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடித்ததும், கட்சியை இப்போது வரை கட்டுக் கோப்பாக கொண்டு போவதும் எடப்பாடிதான். ஒரு பக்கம் ஆளும் திமுக, இன்னொருபுறம் இவங்க வழியா சவாரி செய்யலாமா எனத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சி. 'திமுக-வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி' எனப் புதுசா கிளம்பியிருக்கிற ஒருத்தர் என எல்லாரையும் சமாளிச்சபடியே கட்சியை 2026 தேர்தலுக்குத் தயார்படுத்திட்டு வர்றார் பழனிசாமி. . துணிவே துணை என எந்த முடிவையும் எடுக்கிறார் பழனிசாமி. இவர் பணிவே துணைன்னு இருந்தா அரசியலுக்கு அது செட் ஆகாதே. இதை ஏத்துக்கிட்டுப் போயிருந்தா இவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்கிறார் அவர். OPS: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன் - ஓபிஎஸ் விளக்கம் ஓ.பன்னீர் செல்வம் தவற விட்ட அன்பழகன் இடம்! மூத்தப் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசியபோது, ''எளிமையான மனிதர்தான். ஆனா சமயத்துல என்ன பண்றோம்னு தெரியாமச் செய்கிறாரா அல்லது தெரிஞ்சே செய்கிறாரா தெரியல. அவருடைய சில செயல்பாடுகள் கட்சியின் உண்மையான தொண்டர்கள்கிட்ட இருந்து அவரை அந்நியப்படுத்திடுது. 'இந்த தேர்தல்ல திமுக ஜெயிக்க வாய்ப்பிருக்கு'னு சொல்றது, அதிமுக வேட்பாளரை எதிர்த்து தேர்தல்ல நின்னது போன்ற செயல்களை உதாரணமாகச் சொல்லலாம். கட்சியின் கள நிலவரத்தைக் கொஞ்சம் புரிஞ்சு நடந்திருந்தா திமுக-வில் அன்பழகன் இருந்த மாதிரி, நம்பர் 2 என்ற இடத்தில் இவர் அதிமுக-வில் இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டார் என்றார். எடப்பாடி பழனிசாமி எங்கே செல்லும் இந்தப் பாதை? எது என்னவோ இன்று திக்குத் தெரியாத காட்டில் நிற்கிறார் பன்னீர் செல்வம். இயக்குநர் பாலா இவரின் உறவினர் என்கிறார்கள். அவரது 'சேது' படத்தில் வரும் 'எங்கே செல்லும் இந்தப் பாதை' பாடல்தான் நினைவுக்கு வருகிறது, பன்னீர் செல்வத்தின் நாளைய அரசியலை நினைத்துப் பார்க்கும் போது. 'நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை' எனச் சொன்ன பிறகும் பழனிசாமி இவரைச் சேர்க்க மறுக்கிறார் என்றால், உள்ளே வந்த பிறகு எப்படியும் மாறலாம் என்று நினைக்கிறார்போல. டி.டி.வி.தினகரன் போல தனியாக ஓரிரு இடங்களை வாங்கிக் கொண்டு தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வருவாரா என்றால், டெல்லியே இவரை விரும்பி அழைக்குமா என்பதும் தெரியவில்லை. டெல்லியைப் பொறுத்தவரை யார் மூலமாவது ஆதாயம் இருந்தால் மட்டுமே அவர்கள் பக்கம் போவார்கள். மொத்தத்தில் பழைய பன்னீர் செல்வமாக அரசியலில் இனி ஒ.பி.எஸ்.ஸைப் பார்க்க முடியுமா என நோக்கினால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெளிச்சம் இல்லை. காலத்திடம்தான் விடை இருக்கிறது.!

விகடன் 22 Jan 2026 7:25 pm

TVK : பலிக்காத கூட்டணிக் கனவு; கோட்டைவிட்ட விஜய்; தனித்து விடப்பட்ட தவெக?

திமுக தனது கூட்டணியை இந்த நொடி வரை வலுவாக வைத்திருக்கிறது. காங்கிரஸ் மட்டுமே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் என்.டி.ஏவும் தங்களுடைய கூட்டணியை இறுதிப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. தேமுதி-கவும் ராமதாஸூம் மட்டுமே கொஞ்சம் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களும் எதோ ஒரு பக்கம் தஞ்சம் அடைந்துவிடுவார்கள். இந்த இடத்தில்தான் விஜய் தனித்து விடப்படுகிறாரா எனும் கேள்வி எழுகிறது. TVK VIJAY 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு!' என அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதை அப்படியே பிடித்துக் கொண்டு தங்கள் பக்கமாக பல கட்சியினரும் வந்து சேருவார்கள் என விஜய் தரப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால், விஜய்யை திமுக, அதிமுக-விடம் டிமாண்ட் ஏற்ற மட்டுமே ஏனைய கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. இது சம்பந்தமாக தமிழக அரசியலை உற்றுநோக்குபவர்கள் சிலரிடம் பேசினோம். ``புதிதாக கட்சி தொடங்கும் நடிகர்கள் தாங்கள் சந்திக்கும் முதல் தேர்தலில் பெரிய கட்சிகள் எதனோடும் கூட்டணி வைக்காமல் தங்களின் பலத்தை தெரிந்துகொள்ள தனித்தே போட்டியிடுவார்கள். விஜயகாந்த் அப்படித்தான் போட்டியிட்டார். கமல்ஹாசனும் பெரிதாக எந்த கட்சிக்கும் வலைவீசவில்லை. தன்னை தேடி வந்த மார்க்கெட் இல்லாத கட்சிகளை மட்டுமே சேர்த்துக் கொண்டுதான் தேர்தலை சந்தித்தார். கடைசி வரை பூச்சாண்டி மட்டுமே காட்டிய ரஜினிகாந்துமே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்றே அறிவித்தார். TVK Vijay கிட்டத்தட்ட தோல்வி உறுதி என்பதை அறிந்து எடுக்கும் ரிஸ்க் இது. 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்ற விஜயகாந்த், தன்னுடைய வாக்குவங்கியை நிரூபித்து அடுத்த தேர்தலிலேயே கூட்டணிக்கு போனார். ஆனால், விஜய் தரப்பு இந்த விவகாரத்தில் கொஞ்சம் வித்தியாசமான போக்கையே கொண்டிருந்தது. சந்திக்கப்போகும் முதல் தேர்தலையே கூட்டணியோடுதான் சந்திக்க வேண்டுமென விஜய் தரப்பு நினைத்தது. அதனால்தான் விக்கிரவாண்டி மாநாட்டிலேயே 'நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்' என விஜய் பேசினார். அப்போது விஜய்யின் மனதில் இருந்தது திருமா. அவரும் அந்த சமயத்தில்தான் ஆட்சியில் பங்கு வேண்டும் எனப் பேசியிருந்தார். கூடவே விஜய்யின் முதல் மாநாட்டுக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார். TVK Vijay விஜய்யும் திருமாவும் கூட்டணிக்காக நெருங்குவார்கள் என ஹேஸ்யங்கள் பறந்து கொண்டிருந்த சமயத்திலேயே திருமா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். 'விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்துகொள்வதை திருமா தவிர்த்தார். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது திரைமறைவில் பேச வேண்டிய விஷயம்' என விஜய்க்கு கண்டனம் தெரிவித்தார். திமுகவை விமர்சித்த ஆதவ் அர்ஜூனாவை இடைக்காலமாக கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். அந்த சமயத்திலும் விஜய் விடவில்லை. 'புத்தக வெளியீட்டுக்கு திருமா வரவில்லையெனினும் அவர் மனம் முழுவதும் இங்கேதான் இருக்கும்' என தொடர்ந்து தூண்டில் போட்டுக் கொண்டே இருந்தார். விக்கிரவாண்டி மாநாடு முடிந்த 2 மாதங்களுக்கு மட்டுமே தவெக - விசிக கூட்டணி என்பது பேசுபொருளாக இருந்தது. அதன்பிறகு, தவெகவின் பார்வை அப்படியே காங்கிரஸ் பக்கமாக திரும்ப ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ்காரர்களும் விஜய்க்கு அவ்வப்போது ஆதரவு தெரிவித்து நட்பு சக்தியாகவே காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸூம் அமைச்சரவையில் பங்கு என்கிற கோஷத்தை முன்வைத்தது. அதன்பிறகுதான் திமுக கூட்டணியில் விரிசல், காங்கிரஸ் தவெக பக்கமாக செல்கிறது போன்ற பேச்சுகள் எழ ஆரம்பித்தன. ராகுல் காந்தி 'ஜனநாயகன்' விவகாரத்தில் முதல்வரின் ஒரே ட்வீட்டோடு திமுக கூடாரம் கப்சிப் ஆகிவிட்டது. ஆனால், காங்கிரஸ் விஜய்க்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு கொடுத்தது. ராகுல் காந்தியே விஜய்க்காக ட்வீட் செய்தார். ஆனால், காங்கிரஸூம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டென எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் முட்டல் மோதல் ஏற்பட்டால் மட்டுமே விஜய்யை நோக்கி நகர்வார்கள் எனும் நிலையே இப்போது. ஆக, அவர்களுக்கும் விஜய் முதல் ஆப்சன் கிடையாது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 'சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் டிடிவி விஜய்க்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார். விஜய்க்கு நெருக்கமான நிர்வாகி ஒருவருடன் டிடிவி தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தது. அதை வேகப்படுத்தி டிடிவியை உள்ளே இழுக்கவும் தவறிவிட்டனர். ஓ.பி.எஸ் சீட்டெழுதி வாங்கிய வாக்கெடுப்பிலும் விஜய்யுடன் செல்ல வேண்டும் என்றே அதிகம் பேர் கூறியிருக்கின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு ஆர்ப்பாட்டத்துக்காக அன்புமணியின் பாமக தரப்பில் பாலு தவெகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். டிடிவி தினகரன் வந்த வாய்ப்புகள் அத்தனையையும் தவற விட்டு விட்டு இப்போது இலவு காத்த கிளியாக காத்திருக்கின்றனர்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர். பிரேமலதா விஜயகாந்தும் ராமதாஸூம் மட்டுமே மிச்சம் இருக்கிறார்கள். 'தேமுதிக தகுதிக்கு மீறி சீட் எதிர்பார்க்கிறது' என்பதுதான் திமுக அதிமுக-வினரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. திமுக - அதிமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிகவினரும் உறுதி செய்கின்றனர். ஒருவேளை தேமுதிக தவெக பக்கமாக வந்தாலும் அது பெரிய பலனை கொடுக்குமா என்பதும் சந்தேகமே. ராமதாஸ் தரப்பையும் தவெக தொடர்புகொண்டிருப்பதாக பனையூர் வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். ஆனால், ராமதாஸ் பழுத்த அனுபவமிக்கவர். அவர் அவ்வளவு எளிதில் ஒரு புதிய கட்சியை நம்பி வருவாரா என்பதும் சந்தேகமே என்கின்றனர் முக்கியப் புள்ளிகள் சிலர். ராமதாஸ் இன்னொரு பக்கம் 'திமுகவை பொது எதிரியாக முன்நிறுத்தி விஜய் எங்களின் பக்கம் வருவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இன்னமும் இருக்கிறது. அதனால்தான் எந்த கட்சிக்கும் இன்னமும் சீட் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருக்கிறோம். விஜய் வந்தால் எல்லாமே மாறும்' என கிசுகிசுக்கின்றனர் கமலாலய வட்டாரத்தினர். TVK Vijay அதேநேரத்தில் விஜய்யின் இந்த இரண்டாண்டு நடவடிக்கைகளை வைத்து பார்க்கையில், 'வெற்றிக் கூட்டணியை அமைக்கப் போகிறேன் என 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்கிற ஆயுதத்தோடு வந்த விஜய் இப்போது வேறு வழியே இல்லாமல் தனித்து நிற்க வேண்டிய நிலையை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறார்' என அரசியலை உற்றுநோக்குபவர்கள் கூறுகின்றனர்.

விகடன் 22 Jan 2026 7:19 pm

TVK : பலிக்காத கூட்டணிக் கனவு; கோட்டைவிட்ட விஜய்; தனித்து விடப்பட்ட தவெக?

திமுக தனது கூட்டணியை இந்த நொடி வரை வலுவாக வைத்திருக்கிறது. காங்கிரஸ் மட்டுமே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் என்.டி.ஏவும் தங்களுடைய கூட்டணியை இறுதிப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. தேமுதி-கவும் ராமதாஸூம் மட்டுமே கொஞ்சம் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களும் எதோ ஒரு பக்கம் தஞ்சம் அடைந்துவிடுவார்கள். இந்த இடத்தில்தான் விஜய் தனித்து விடப்படுகிறாரா எனும் கேள்வி எழுகிறது. TVK VIJAY 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு!' என அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதை அப்படியே பிடித்துக் கொண்டு தங்கள் பக்கமாக பல கட்சியினரும் வந்து சேருவார்கள் என விஜய் தரப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால், விஜய்யை திமுக, அதிமுக-விடம் டிமாண்ட் ஏற்ற மட்டுமே ஏனைய கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. இது சம்பந்தமாக தமிழக அரசியலை உற்றுநோக்குபவர்கள் சிலரிடம் பேசினோம். ``புதிதாக கட்சி தொடங்கும் நடிகர்கள் தாங்கள் சந்திக்கும் முதல் தேர்தலில் பெரிய கட்சிகள் எதனோடும் கூட்டணி வைக்காமல் தங்களின் பலத்தை தெரிந்துகொள்ள தனித்தே போட்டியிடுவார்கள். விஜயகாந்த் அப்படித்தான் போட்டியிட்டார். கமல்ஹாசனும் பெரிதாக எந்த கட்சிக்கும் வலைவீசவில்லை. தன்னை தேடி வந்த மார்க்கெட் இல்லாத கட்சிகளை மட்டுமே சேர்த்துக் கொண்டுதான் தேர்தலை சந்தித்தார். கடைசி வரை பூச்சாண்டி மட்டுமே காட்டிய ரஜினிகாந்துமே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்றே அறிவித்தார். TVK Vijay கிட்டத்தட்ட தோல்வி உறுதி என்பதை அறிந்து எடுக்கும் ரிஸ்க் இது. 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்ற விஜயகாந்த், தன்னுடைய வாக்குவங்கியை நிரூபித்து அடுத்த தேர்தலிலேயே கூட்டணிக்கு போனார். ஆனால், விஜய் தரப்பு இந்த விவகாரத்தில் கொஞ்சம் வித்தியாசமான போக்கையே கொண்டிருந்தது. சந்திக்கப்போகும் முதல் தேர்தலையே கூட்டணியோடுதான் சந்திக்க வேண்டுமென விஜய் தரப்பு நினைத்தது. அதனால்தான் விக்கிரவாண்டி மாநாட்டிலேயே 'நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்' என விஜய் பேசினார். அப்போது விஜய்யின் மனதில் இருந்தது திருமா. அவரும் அந்த சமயத்தில்தான் ஆட்சியில் பங்கு வேண்டும் எனப் பேசியிருந்தார். கூடவே விஜய்யின் முதல் மாநாட்டுக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார். TVK Vijay விஜய்யும் திருமாவும் கூட்டணிக்காக நெருங்குவார்கள் என ஹேஸ்யங்கள் பறந்து கொண்டிருந்த சமயத்திலேயே திருமா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். 'விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்துகொள்வதை திருமா தவிர்த்தார். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது திரைமறைவில் பேச வேண்டிய விஷயம்' என விஜய்க்கு கண்டனம் தெரிவித்தார். திமுகவை விமர்சித்த ஆதவ் அர்ஜூனாவை இடைக்காலமாக கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். அந்த சமயத்திலும் விஜய் விடவில்லை. 'புத்தக வெளியீட்டுக்கு திருமா வரவில்லையெனினும் அவர் மனம் முழுவதும் இங்கேதான் இருக்கும்' என தொடர்ந்து தூண்டில் போட்டுக் கொண்டே இருந்தார். விக்கிரவாண்டி மாநாடு முடிந்த 2 மாதங்களுக்கு மட்டுமே தவெக - விசிக கூட்டணி என்பது பேசுபொருளாக இருந்தது. அதன்பிறகு, தவெகவின் பார்வை அப்படியே காங்கிரஸ் பக்கமாக திரும்ப ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ்காரர்களும் விஜய்க்கு அவ்வப்போது ஆதரவு தெரிவித்து நட்பு சக்தியாகவே காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸூம் அமைச்சரவையில் பங்கு என்கிற கோஷத்தை முன்வைத்தது. அதன்பிறகுதான் திமுக கூட்டணியில் விரிசல், காங்கிரஸ் தவெக பக்கமாக செல்கிறது போன்ற பேச்சுகள் எழ ஆரம்பித்தன. ராகுல் காந்தி 'ஜனநாயகன்' விவகாரத்தில் முதல்வரின் ஒரே ட்வீட்டோடு திமுக கூடாரம் கப்சிப் ஆகிவிட்டது. ஆனால், காங்கிரஸ் விஜய்க்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு கொடுத்தது. ராகுல் காந்தியே விஜய்க்காக ட்வீட் செய்தார். ஆனால், காங்கிரஸூம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டென எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் முட்டல் மோதல் ஏற்பட்டால் மட்டுமே விஜய்யை நோக்கி நகர்வார்கள் எனும் நிலையே இப்போது. ஆக, அவர்களுக்கும் விஜய் முதல் ஆப்சன் கிடையாது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 'சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் டிடிவி விஜய்க்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார். விஜய்க்கு நெருக்கமான நிர்வாகி ஒருவருடன் டிடிவி தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தது. அதை வேகப்படுத்தி டிடிவியை உள்ளே இழுக்கவும் தவறிவிட்டனர். ஓ.பி.எஸ் சீட்டெழுதி வாங்கிய வாக்கெடுப்பிலும் விஜய்யுடன் செல்ல வேண்டும் என்றே அதிகம் பேர் கூறியிருக்கின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு ஆர்ப்பாட்டத்துக்காக அன்புமணியின் பாமக தரப்பில் பாலு தவெகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். டிடிவி தினகரன் வந்த வாய்ப்புகள் அத்தனையையும் தவற விட்டு விட்டு இப்போது இலவு காத்த கிளியாக காத்திருக்கின்றனர்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர். பிரேமலதா விஜயகாந்தும் ராமதாஸூம் மட்டுமே மிச்சம் இருக்கிறார்கள். 'தேமுதிக தகுதிக்கு மீறி சீட் எதிர்பார்க்கிறது' என்பதுதான் திமுக அதிமுக-வினரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. திமுக - அதிமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிகவினரும் உறுதி செய்கின்றனர். ஒருவேளை தேமுதிக தவெக பக்கமாக வந்தாலும் அது பெரிய பலனை கொடுக்குமா என்பதும் சந்தேகமே. ராமதாஸ் தரப்பையும் தவெக தொடர்புகொண்டிருப்பதாக பனையூர் வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். ஆனால், ராமதாஸ் பழுத்த அனுபவமிக்கவர். அவர் அவ்வளவு எளிதில் ஒரு புதிய கட்சியை நம்பி வருவாரா என்பதும் சந்தேகமே என்கின்றனர் முக்கியப் புள்ளிகள் சிலர். ராமதாஸ் இன்னொரு பக்கம் 'திமுகவை பொது எதிரியாக முன்நிறுத்தி விஜய் எங்களின் பக்கம் வருவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இன்னமும் இருக்கிறது. அதனால்தான் எந்த கட்சிக்கும் இன்னமும் சீட் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருக்கிறோம். விஜய் வந்தால் எல்லாமே மாறும்' என கிசுகிசுக்கின்றனர் கமலாலய வட்டாரத்தினர். TVK Vijay அதேநேரத்தில் விஜய்யின் இந்த இரண்டாண்டு நடவடிக்கைகளை வைத்து பார்க்கையில், 'வெற்றிக் கூட்டணியை அமைக்கப் போகிறேன் என 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்கிற ஆயுதத்தோடு வந்த விஜய் இப்போது வேறு வழியே இல்லாமல் தனித்து நிற்க வேண்டிய நிலையை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறார்' என அரசியலை உற்றுநோக்குபவர்கள் கூறுகின்றனர்.

விகடன் 22 Jan 2026 7:19 pm

'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா'பிரேமலதா; திக்...திக் தேமுதிக!

பேரம் பேசுவதில் என்ன தப்பு? விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, அ.தி.மு.க கொடுத்த ராஜ்ய சபா சீட் `அல்வா' என அடுத்தடுத்த சறுக்கல்களால் சோர்ந்து போயிருந்தார், பிரேமலதா. ஜனவரியில் கடலூர் மாநாட்டில் அதிரடி முடிவு வரும் என அவர் கொடுத்த பில்டப், லட்சக்கணக்கான தொண்டர்களைக் கடலூரில் திரட்டியது. கூட்டத்தில் மைக் பிடித்த சுதீஷ், ஆமாம்... நாங்க பேரம் பேசுறோம். 10 லட்சம் தொண்டர்கள் இருக்கும்போது சீட்டுக்காகப் பேரம் பேசுவதில் என்ன தப்பு? தே.மு.தி.க யாருடன் இருக்கிறதோ அவங்கதான் ஆட்சி அமைப்பாங்க. அப்போது பொதுச்செயலாளர் துணை முதல்வராக வருவார் என எகிற, தொண்டர்கள் உற்சாகமானார்கள். எடப்பாடி பழனிசாமி ஆனால், கிளைமாக்ஸில் பேசிய பிரேமலதாவோ, மத்திய, மாநில ஆளும் கட்சிகளே இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காதபோது நாம் ஏன் அவசரப்பட வேண்டும்? எனச் சொல்லி ஒட்டுமொத்த எதிர்பார்ப்பிலும் மண்ணைப் போட்டார். குடும்பத்துக்குள் குஸ்தி? இதற்கு, கடந்த முறை ராஜ்ய சபா சீட் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய அ.தி.மு.க-வை நம்ப வேண்டாம். தி.மு.க பக்கம் போனால் நிச்சயம் சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என்பது மாவட்டச் செயலாளர்களின் ஒட்டுமொத்த கருத்து. ஆனால் விருதுநகர் தோல்வியை இன்னும் மறக்காத விஜயபிரபாகரன், தி.மு.க கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்றிருக்கிறார். இதற்கிடையில் வெற்றி வாய்ப்பு தி.மு.க பக்கமே இருப்பதால், அங்கு செல்வதே புத்திசாலித்தனம் என சுதீஷ் நினைத்திருக்கிறார். இதனால்தான் பிரேமலதாவால் அப்போது முடிவு எடுக்க முடியவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். விஜயபிரபாகரன் இதற்கிடையில்தான், தே.ஜ கூட்டணியைப் பலப்படுத்தும் வேலைகளைத் தீவிரமாகக் கையில் எடுத்தது பா.ஜ.க தலைமை. இதையடுத்துதான் முரண்டு பிடித்த அன்புமணி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டனர். பியூஸ் கோயல் தரப்பு பிரேமலதாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பிரேமலதா கலந்துகொள்வார் என்று ஒரு தரப்பு சொன்னாலும், ரகசியமாக 'அறிவாலய' டீலிங் முடிந்துவிட்டதாகத் தகவல்களும் கசிகின்றன. இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? இது குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், எ.வ.வேலு நடத்திய பேச்சுவார்த்தையில், '12 சீட், ஒரு ராஜ்ய சபா' எனப் பேரம் பேசியது தே.மு.தி.க. ஆனால் அறிவாலயம் 6-க்கு மேல் தர முடியாது எனக் கையை விரித்துவிட்டது. அ.தி.மு.க-விடமும் 18 சீட் கேட்டு 'நோ' சொல்லப்பட்டது. விஜய்யின் த.வெ.க-வில் சீட் கிடைக்குமே தவிர, 'தேர்தல் செலவு'க்கு வழி இருக்காது என்பதால், அந்த ஆப்ஷனையும் பிரேமலதா தள்ளி வைத்துவிட்டார். இந்த நிலையில்தான் தி.மு.க தரப்பிலிருந்து 'பாசிட்டிவ்' சிக்னல் கிடைத்திருக்கிறது. அண்ணா அறிவாலயம் இதையடுத்து, `அ.தி.மு.க பக்கம் போனால் வெற்றி சந்தேகம். தி.மு.க பக்கம் போனால் நிச்சயம் எம்.எல்.ஏ-க்கள் ஆகலாம்' எனக் கணக்கு போட்டிருக்கிறார், அண்ணி. இருந்தாலும், கடைசி நிமிடம்வரை பேரம் பேசி அதிகப்படியான பலனைப் பெற வேண்டும் என்பதே தே.மு.தி.க-வின் தந்திரம். எனவே, நாளை மோடி மேடைக்குப் பிரேமலதா செல்வாரா அல்லது அறிவாலயம் நோக்கி வண்டியைத் திருப்புவாரா? என 'கேப்டன்' கட்சித் தொண்டர்கள் திக்திக் நிமிடங்களில் காத்திருக்கிறார்கள்! என்றனர். 'டெல்லி சலோ' : திமுக-வா... தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!

விகடன் 22 Jan 2026 6:27 pm

'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா'பிரேமலதா; திக்...திக் தேமுதிக!

பேரம் பேசுவதில் என்ன தப்பு? விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, அ.தி.மு.க கொடுத்த ராஜ்ய சபா சீட் `அல்வா' என அடுத்தடுத்த சறுக்கல்களால் சோர்ந்து போயிருந்தார், பிரேமலதா. ஜனவரியில் கடலூர் மாநாட்டில் அதிரடி முடிவு வரும் என அவர் கொடுத்த பில்டப், லட்சக்கணக்கான தொண்டர்களைக் கடலூரில் திரட்டியது. கூட்டத்தில் மைக் பிடித்த சுதீஷ், ஆமாம்... நாங்க பேரம் பேசுறோம். 10 லட்சம் தொண்டர்கள் இருக்கும்போது சீட்டுக்காகப் பேரம் பேசுவதில் என்ன தப்பு? தே.மு.தி.க யாருடன் இருக்கிறதோ அவங்கதான் ஆட்சி அமைப்பாங்க. அப்போது பொதுச்செயலாளர் துணை முதல்வராக வருவார் என எகிற, தொண்டர்கள் உற்சாகமானார்கள். எடப்பாடி பழனிசாமி ஆனால், கிளைமாக்ஸில் பேசிய பிரேமலதாவோ, மத்திய, மாநில ஆளும் கட்சிகளே இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காதபோது நாம் ஏன் அவசரப்பட வேண்டும்? எனச் சொல்லி ஒட்டுமொத்த எதிர்பார்ப்பிலும் மண்ணைப் போட்டார். குடும்பத்துக்குள் குஸ்தி? இதற்கு, கடந்த முறை ராஜ்ய சபா சீட் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய அ.தி.மு.க-வை நம்ப வேண்டாம். தி.மு.க பக்கம் போனால் நிச்சயம் சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என்பது மாவட்டச் செயலாளர்களின் ஒட்டுமொத்த கருத்து. ஆனால் விருதுநகர் தோல்வியை இன்னும் மறக்காத விஜயபிரபாகரன், தி.மு.க கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்றிருக்கிறார். இதற்கிடையில் வெற்றி வாய்ப்பு தி.மு.க பக்கமே இருப்பதால், அங்கு செல்வதே புத்திசாலித்தனம் என சுதீஷ் நினைத்திருக்கிறார். இதனால்தான் பிரேமலதாவால் அப்போது முடிவு எடுக்க முடியவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். விஜயபிரபாகரன் இதற்கிடையில்தான், தே.ஜ கூட்டணியைப் பலப்படுத்தும் வேலைகளைத் தீவிரமாகக் கையில் எடுத்தது பா.ஜ.க தலைமை. இதையடுத்துதான் முரண்டு பிடித்த அன்புமணி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டனர். பியூஸ் கோயல் தரப்பு பிரேமலதாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பிரேமலதா கலந்துகொள்வார் என்று ஒரு தரப்பு சொன்னாலும், ரகசியமாக 'அறிவாலய' டீலிங் முடிந்துவிட்டதாகத் தகவல்களும் கசிகின்றன. இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? இது குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், எ.வ.வேலு நடத்திய பேச்சுவார்த்தையில், '12 சீட், ஒரு ராஜ்ய சபா' எனப் பேரம் பேசியது தே.மு.தி.க. ஆனால் அறிவாலயம் 6-க்கு மேல் தர முடியாது எனக் கையை விரித்துவிட்டது. அ.தி.மு.க-விடமும் 18 சீட் கேட்டு 'நோ' சொல்லப்பட்டது. விஜய்யின் த.வெ.க-வில் சீட் கிடைக்குமே தவிர, 'தேர்தல் செலவு'க்கு வழி இருக்காது என்பதால், அந்த ஆப்ஷனையும் பிரேமலதா தள்ளி வைத்துவிட்டார். இந்த நிலையில்தான் தி.மு.க தரப்பிலிருந்து 'பாசிட்டிவ்' சிக்னல் கிடைத்திருக்கிறது. அண்ணா அறிவாலயம் இதையடுத்து, `அ.தி.மு.க பக்கம் போனால் வெற்றி சந்தேகம். தி.மு.க பக்கம் போனால் நிச்சயம் எம்.எல்.ஏ-க்கள் ஆகலாம்' எனக் கணக்கு போட்டிருக்கிறார், அண்ணி. இருந்தாலும், கடைசி நிமிடம்வரை பேரம் பேசி அதிகப்படியான பலனைப் பெற வேண்டும் என்பதே தே.மு.தி.க-வின் தந்திரம். எனவே, நாளை மோடி மேடைக்குப் பிரேமலதா செல்வாரா அல்லது அறிவாலயம் நோக்கி வண்டியைத் திருப்புவாரா? என 'கேப்டன்' கட்சித் தொண்டர்கள் திக்திக் நிமிடங்களில் காத்திருக்கிறார்கள்! என்றனர். 'டெல்லி சலோ' : திமுக-வா... தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!

விகடன் 22 Jan 2026 6:27 pm

``தப்பான கணக்கும் அல்ல; அச்சுப் பிழையும் அல்ல - தங்கமணிக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!

சட்டமன்றக் கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று (ஜன.22) கூடியது. இந்தக் கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் தொடர்பாக தங்கமணி பேசியதற்கு, “தப்பான கணக்கும் அல்ல, அச்சுப் பிழையும் அல்ல,1,831 கோடி ரூபாய் என்பது சரியான கணக்கே” என்று பதிலுரை அளித்திருக்கிறார். புதுமைப் பெண் திட்டம் அதாவது, மாண்புமிகு உறுப்பினர் திரு.தங்கமணி அவர்கள் பேசும்போது, ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்ட, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் பயனாளிகள் பற்றிய விவரம் தவறாக தெரிவதாகவும், 12 இலட்சம் பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தலா ஆண்டுக்கு 12 ஆயிரம் செலவழித்தால், 720 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்றும், ஆளுநர் உரையில் அது 1,831 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சரியா என்றும் ஒரு கேள்வியை எழுப்பினார். இதுகுறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மாதந்தோறும், அவர்கள் படிக்கும் கல்லூரிக் காலம் முழுவதற்கும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகின்றது. அதாவது, ஒருவர் கல்லூரியில் சேரும்போது அளிக்கப்படும் இந்தத் தொகை மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை மாதந்தோறும் அளிக்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 இலட்சம் பயனாளிகள் என்பது, இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை. இந்தத் திட்டங்களின் முதல் மாதத்திலிருந்து இப்பயனாளிகள், தாங்கள் கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று முதல் ஐந்து ஆண்டுக் காலத்திற்கு, மாதந்தோறும் இந்தத் தொகையைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள். எனவே, 12 இலட்சம் பயனாளிகளுக்கு தலா ஓராண்டு என்ற அடிப்படையில் கணக்கிட்டு, 720 கோடி ரூபாய் என்று மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அவர்கள் இங்கு தெரிவித்த கணக்கீடு சரியானதல்ல. 2022-2023 ஆம் ஆண்டு புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அதன்கீழ் பயனடைந்த 6.95 இலட்சம் பயனாளி மாணவிகளும், 2024-2025 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ள 5.4 இலட்சம் மாணவர்களும், மேற்கூறியவாறு தாங்கள் படிக்கக்கூடிய கல்லூரிப் பருவம் முழுமைக்கும் மாதந்தோறும் இதுவரை பெற்றுள்ள தொகை 1,831 கோடி ரூபாய் என்பது சரியான கணக்கே ஆகும். மேலும், சொல்ல வேண்டுமென்றால், இந்தத் திட்டத்தின் செலவினங்கள் அனைத்தும், மத்திய கணக்காய்வுத் துறையால் ஆய்வு செய்யப்பட்டு, அந்தந்த நிதியாண்டிற்கான ஆய்வறிக்கைகள் இப்பேரவையில் வைக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு சந்தேகமிருந்தால், இந்த அறிக்கைகளில் கணக்கு விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிலுரை ஆற்றி இருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 6:10 pm

ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி?

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆதரவு அதிமுக நிர்வாகிகளை த.வெ.க-வுக்கு கூட்டிச் செல்ல பெங்களூரு புகழேந்தி தயாராகி வருவதாகத் தகவல்கள் பரபரக்கின்றன. திமுகவில் வைத்திலிங்கம் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் சமீபத்தில் தவெக-வில் இணைந்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை தந்தது. எடப்பாடி பழனிசாமியின் தலைமை, பிடிக்காமல் முன்னாள் எம்.பி மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவைத் தொடர்ந்து பல அதிமுக நிர்வாகிகள் திமுக-வில் இணைந்தனர். அதிமுக-வில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கதிரவன் உள்ளிட்டோரும் சமீபத்தில் திமுக-வில் இணைந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கமும் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் ஐக்கியமானார். செங்கோட்டையன் இந்த நிலையில் 'எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் இருக்கும் வரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய மாட்டேன்' என்று தொடர்ந்து பேசி வந்த டி.டி.வி.தினகரன், நேற்று பாஜக தலைவர்கள் முன்னிலையில் கூட்டணியில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எந்தவொரு அரசியல் நிலைப்பாடும் எடுக்க முடியாமலும் ஓ.பி.எஸ்-ஸும், சசிகலாவும் தனித்து நிற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோரின் நடவடிக்கையால் ஒதுஙகி நிற்கும் அதிமுக நிர்வாகிகளை தவெக-வுக்கு அழைத்துச் செல்ல பெங்களூர் புகழேந்தி ஏற்பாடு செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது. டிடிவி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் கர்நாடக மாநில அதிமுகச் செயலாளராகவும் பெங்களூரில் நடந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை கவனித்தும் வந்த வழக்கறிஞர் புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஆதரவாளராகி பின்பு தினகரனுடன் பயணித்து, கருத்து வேறுபாட்டால் பின்பு எடப்பாடி பழனிசாமி அதரவாளராகி, அங்கிருந்து விலகி ஓ.பி.எஸ் அணியில் பயணித்து வந்த நிலையில்தான், தற்போது தவெக-வில் சேர முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஓசூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்ததை கடுமையாக விமர்சித்து பேசிய புகழேந்தி, தான் தவெக-வுக்கு செல்ல உள்ள தகவலை சூசகமாகத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக-வுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி, அதிமுக இல்லவே இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள். அவர் சோர்வடைந்துவிட்டார், பாஜக-வை விட்டு ஓபிஎஸ் வெளியே வர மாட்டார், எம்.ஜி.ஆர் ஆரம்பித்து ஜெயலலிதா தலைமை தாங்கிய கட்சி பாஜக-தான் என்பதுபோல் அவர் இருக்கிறார். ஓ.பி.எஸ் ஆகட்டும், கட்சியை அடமானம் வைத்த இ.பி.எஸ் ஆகட்டும், இதோ திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறேன் என்று வந்த இன்னொரு அம்மாவாகட்டும், பெங்களூரு சிறை, திகார் சிறை வரைக்கும் கூடவே பயணித்து என்னால் இன்று அரசியல் வானில் பறந்துகொண்டிருக்கும் ஒருவர்(தினகரன்) இன்று எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டார். சசிகலா சிறைக்கு சென்றபோது ஒப்படைத்துவிட்டு சென்ற ஆட்சி ஆதிகாரம், கட்சி அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பிடுங்கிக் கொண்டபோது அதை காப்பாற்றிக் கொள்ள திறமை இல்லாதவர், இப்போது அவருடனே இணைந்துவிட்டார். புகழேந்தி இந்த நான்கு பேருமே பாஜக-வின் அடிமைகள், பாஜக-வும் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இவர்கள் பணத்தை காப்பாற்றிக் கொள்ள பாஜக காலில் விழுந்துவிட்டார்கள். இதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றவர், இன்னும் 10 நாள்களில் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நான் கொண்டாடுவேன் என்று சூசகமாகத் தெரிவித்தார். அவர் மட்டுமன்றி, அதிமுக-வில் அதிருப்தியில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து தவெக-வுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

விகடன் 22 Jan 2026 5:37 pm

ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி?

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆதரவு அதிமுக நிர்வாகிகளை த.வெ.க-வுக்கு கூட்டிச் செல்ல பெங்களூரு புகழேந்தி தயாராகி வருவதாகத் தகவல்கள் பரபரக்கின்றன. திமுகவில் வைத்திலிங்கம் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் சமீபத்தில் தவெக-வில் இணைந்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை தந்தது. எடப்பாடி பழனிசாமியின் தலைமை, பிடிக்காமல் முன்னாள் எம்.பி மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவைத் தொடர்ந்து பல அதிமுக நிர்வாகிகள் திமுக-வில் இணைந்தனர். அதிமுக-வில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கதிரவன் உள்ளிட்டோரும் சமீபத்தில் திமுக-வில் இணைந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கமும் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் ஐக்கியமானார். செங்கோட்டையன் இந்த நிலையில் 'எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் இருக்கும் வரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய மாட்டேன்' என்று தொடர்ந்து பேசி வந்த டி.டி.வி.தினகரன், நேற்று பாஜக தலைவர்கள் முன்னிலையில் கூட்டணியில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எந்தவொரு அரசியல் நிலைப்பாடும் எடுக்க முடியாமலும் ஓ.பி.எஸ்-ஸும், சசிகலாவும் தனித்து நிற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோரின் நடவடிக்கையால் ஒதுஙகி நிற்கும் அதிமுக நிர்வாகிகளை தவெக-வுக்கு அழைத்துச் செல்ல பெங்களூர் புகழேந்தி ஏற்பாடு செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது. டிடிவி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் கர்நாடக மாநில அதிமுகச் செயலாளராகவும் பெங்களூரில் நடந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை கவனித்தும் வந்த வழக்கறிஞர் புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஆதரவாளராகி பின்பு தினகரனுடன் பயணித்து, கருத்து வேறுபாட்டால் பின்பு எடப்பாடி பழனிசாமி அதரவாளராகி, அங்கிருந்து விலகி ஓ.பி.எஸ் அணியில் பயணித்து வந்த நிலையில்தான், தற்போது தவெக-வில் சேர முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஓசூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்ததை கடுமையாக விமர்சித்து பேசிய புகழேந்தி, தான் தவெக-வுக்கு செல்ல உள்ள தகவலை சூசகமாகத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக-வுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி, அதிமுக இல்லவே இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள். அவர் சோர்வடைந்துவிட்டார், பாஜக-வை விட்டு ஓபிஎஸ் வெளியே வர மாட்டார், எம்.ஜி.ஆர் ஆரம்பித்து ஜெயலலிதா தலைமை தாங்கிய கட்சி பாஜக-தான் என்பதுபோல் அவர் இருக்கிறார். ஓ.பி.எஸ் ஆகட்டும், கட்சியை அடமானம் வைத்த இ.பி.எஸ் ஆகட்டும், இதோ திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறேன் என்று வந்த இன்னொரு அம்மாவாகட்டும், பெங்களூரு சிறை, திகார் சிறை வரைக்கும் கூடவே பயணித்து என்னால் இன்று அரசியல் வானில் பறந்துகொண்டிருக்கும் ஒருவர்(தினகரன்) இன்று எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டார். சசிகலா சிறைக்கு சென்றபோது ஒப்படைத்துவிட்டு சென்ற ஆட்சி ஆதிகாரம், கட்சி அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பிடுங்கிக் கொண்டபோது அதை காப்பாற்றிக் கொள்ள திறமை இல்லாதவர், இப்போது அவருடனே இணைந்துவிட்டார். புகழேந்தி இந்த நான்கு பேருமே பாஜக-வின் அடிமைகள், பாஜக-வும் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இவர்கள் பணத்தை காப்பாற்றிக் கொள்ள பாஜக காலில் விழுந்துவிட்டார்கள். இதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றவர், இன்னும் 10 நாள்களில் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நான் கொண்டாடுவேன் என்று சூசகமாகத் தெரிவித்தார். அவர் மட்டுமன்றி, அதிமுக-வில் அதிருப்தியில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து தவெக-வுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

விகடன் 22 Jan 2026 5:37 pm

தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது!- காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் தவெகவிற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் தவெகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விசில் சின்னம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது! அனைத்து கட்சிகளும் இப்போது Ready… Set… Go! என்று பதிவிட்டிருக்கிறார். தவெக விஜய் தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானப்போதும், தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 22 Jan 2026 4:28 pm

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. செந்தில் பாலாஜி, வேலுமணி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக களமிறங்கியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்று தங்களின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி புள்ளிகள் கரைவேட்டி மாற்றுவது சஜகமானது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது, அதிமுக கோவை முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தது போன்றவற்றால் அதிமுகவில் களேபரம் ஏற்பட்டது. கோவை அடுத்தடுத்து சீனியர் நிர்வாகிகள் திமுக, தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாற்றுக் கட்சிக்கு சென்றவர்கள் மற்றும் ஏற்கனவே அந்தக் கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்கும் அஸைன்மென்டுடன் வேலுமணி களமிறங்கியுள்ளார். கோவை திமுக ஆனைமலை மேற்கு ஒன்றியத்தின் அவைத் தலைவராக இருந்தவர் ஈஸ்வரமூர்த்தி. அவர் அதிருப்தியில் இருந்த நிலையில் தன் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் பகுதி செயலாளராக இருந்த பார்த்திபன், கடந்த மாதம் தவெகவில் இணைந்தார். ஈஸ்வரமூர்த்தி பேரூராட்சி தலைவர் சசிக்குமார் தற்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அதிமுகவில் இணைத்துள்ளனர். மேலும் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர் சசிக்குமார், 8 கவுன்சிலர்களுடன் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மேலும் பல நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க வேலுமணி திட்டமிட்டுள்ளார். அதிமுவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேலுமணி கோவையை தனி அசைன்மென்ட்டாக கையில் எடுத்துள்ளாராம். இதனால் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது என்கிறார்கள். பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

விகடன் 22 Jan 2026 3:09 pm

அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்ன என்பது நன்றாகவே தெரியும். அவருக்குக் கோபம் இருந்தாலும்கூட, மோடியை விட்டுப் போகக்கூடிய மனிதர் அவர் அல்ல. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கசப்பான விஷயங்களை மறந்து.! 2024-ல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்முடன் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) இணைந்த அவர், எப்படி 2026-ல் நம்மை விட்டுச் செல்வார்? சில மனக்கசப்பு காரணமாக தற்காலிகமாக அவர் கூட்டணியில் இருந்து விலகி இருந்திருக்கலாம். அவர் நம்முடன்தான் மீண்டும் இணைவார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்பதற்காக சில கசப்பான விஷயங்களை எல்லாம் மறந்து தினகரன் அண்ணன் கூட்டணிக்கு வந்திருக்கிறார். மிகப்பெரிய விஷயம்... இது அவருக்குக் கடினமான முடிவாகத்தான் இருந்திருக்கும். அவர் எடுத்த முடிவு மிகப்பெரிய விஷயம். இப்படி இருக்கையில் டி.டி.வி.தினகரன் குறித்து எதுவும் தெரியாமல் செல்வப்பெருந்தகை பேச வேண்டாம். மூழ்கிக்கொண்டிருக்கும் அவர்களது கூட்டணியையும், ஆட்சியையும் காப்பாற்றுவது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து பேச அவர் யார்.... ஏன் அவர் பேச வேண்டும்? என்றிருக்கிறார். ஓபிஎஸ் சத்திய சோதனை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவர்.! தொடர்ந்து ஓ.பி.எஸ்., குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஓ.பி.எஸ் அண்ணனைப் பொறுத்தவரை அவர் ஒரு பெரிய தலைவர். நல்ல மனிதர். சத்தியச் சோதனை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவர். தமிழ்நாட்டில் மிக முக்கியமான தலைவர். அரசியலில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். கனிமொழி அக்காவிற்கு என்ன பிரச்னை? தொடர்ந்து சர்ச்சையான ரஹ்மான் கருத்து குறித்த கேள்விக்கு, ரஹ்மான் ஓர் இசை மேதை. தமிழ்நாட்டின் அடையாளம் அவர். எங்கு சென்றாலும் மேடைகளில் தமிழ்தான் பேசுவார். அவர் அளித்த பேட்டியில் சில விஷயங்களை எடுத்து திரித்து அங்கும் இங்கும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. 'ராமாயணா' படத்திற்கு அவர்தான் இசையமைக்கிறார். எல்லாவிதமான படங்களுக்கும் அவர் இசையமைக்கிறார். AR ரஹ்மான் சினிமாத் துறையில் பவர் ஷிஃப்ட் எப்படி மாறி இருக்கிறது என்றுதான் அவர் கூறியிருந்தார். அது அவருடைய கருத்து. பாஜக பின்னணியில் இருக்கிறது என்று அவர் சொல்லவில்லை. அவருடைய ரசிகன் நான். அவர் கருத்து சர்ச்சையான நிலையில் விளக்கம் கொடுத்துவிட்டார். இதில் கனிமொழி அக்காவிற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை என்று பேசியிருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 3:06 pm

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ரமேஷைச் சந்தித்து, உரையாடத் தொடங்கினோம். எனக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். தினந்தோறும் சமூகத்தில் நடப்பதைப் பார்க்கும்போது, எனக்குள் ஆத்திரம்தான் எழுந்தது. பக்தியைக் காட்டிலும் அறிவியல்தான் அவசியம் என்பதை உணர்ந்ததால், நடைமுறை வாழ்வில் காந்திய வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பொதுமக்களிடையே பட்டா, உதவித் தொகை, அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டிய அவசியம் குறித்தும், அரசின் சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு நேர்மையான முறையில் பெற வேண்டும் என்பது பற்றியும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அஹிம்சா வழியைத் தேர்ந்தெடுக்கக் காரணம்? காந்தியத்தை இந்திய நாட்டிற்குப் பிரதிபலிக்க வேண்டும், இளைஞர்களிடம் அஹிம்சை உணர்வைப் பரப்ப வேண்டும் என்பதற்காக உடை மாற்றத்திலிருந்து, காந்திய வழியைப் பின்பற்றி வருகிறேன். 2019 வரை சாதாரண கதர் உடையை அணிந்து வந்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் காந்தியைப் போன்று உடை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்தேன். தொடக்கத்தில் எனது குடும்பமும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் இது எத்தனை நாள்களுக்கு என்று கேட்டார்கள்? ஆனால் எனது வைராக்கியம், இன்றுவரை நான் இந்த உடையிலேயே எனது பாதையில் பயணித்து வருகிறேன். 2016 ஆம் ஆண்டு `அஹிம்சா சோஷியலிஸ்ட்' கட்சியைத் தொடங்கினேன். மற்ற கட்சிகள் பெயரளவிற்கு மட்டுமே அஹிம்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அஹிம்சை என்ற இலக்கை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அரசியல் 'சேவை என்பதைத் தாண்டி, வியாபாரமாக' மாறிவிட்டது. எளிய பின்னணியில் இருந்து சமூகத்திற்காக தன்னலமற்று உழைக்கக்கூடிய நபர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும். தேர்தல் நேரத்தில் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி தேர்தலில் ஒரு தத்துவத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாகக் கட்டி இருக்கிறேன். இதுவரையில் எந்த தேர்தலிலும் நான் செலுத்திய வைப்புத் தொகை திரும்பக் கிடைத்ததில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படுவதும் கிடையாது. பல கோடிகள் புழங்கும் இந்த அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் இந்த சமூகத்தில் பிறந்து விட்டோம், இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். எனது இந்தப் பயணத்தில் மக்களிடையே சற்று விழிப்புணர்வு வந்துள்ளது. அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுப்பதும் அவர்கள் லஞ்சம் கேட்டால் எதிர்க்கும் நிலையும் பாமர மக்களிடையே வந்து இருக்கிறது. தேர்தல் பரப்புரையில், `நீங்க என்ன ஜெயிச்சிடுவிங்களா?' என்று மக்களே கேட்பார்கள். `நீங்கள் தனியாக ஓட்டு கேட்கிறீர்கள்? இந்தக் காலத்தில் காந்திய கொள்கைகள் எல்லாம் எடுபடுமா?' எனப் பல கேள்விகளை மக்கள் கேட்பார்கள். தேர்தல் பரப்புரைக்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. வசதியானவர்களும், பணம் கொடுப்பவர்களும், கும்பலாக வருபவர்களும் ஒருபோதும் உங்களுக்காக உழைக்க மாட்டார்கள் என்பதை, தொடர்ந்து மக்களிடம் சொல்லி வருகிறோம். இப்போதிருக்கும் எந்த மக்கள் பிரதிநிதியாவது அதிகாரிகளை நோக்கி லஞ்சம் வாங்கக் கூடாது எனப் பேச தைரியம் இருக்கிறதா? நான் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது. மதிப்புறு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறது. இந்திய யோகா கூட்டமைப்பு சார்பில் எனக்கு கர்மயோகி விருது வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்தான வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டரை லட்சம் கடன் சுமை உள்ளதாகக் குறிப்பிட்டார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எனது குடும்பத்தின் சார்பில் 2 லட்சம் அடங்கிய காசோலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றேன். ஆனால் அதனை வாங்க மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டார். கிராமப்புறங்களில் அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை திறம்பட எடுத்துச் செல்லவும் அரசு அலுவலகங்களில் ஊழல் லஞ்சத்தை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறேன். ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தினத்தின்போது இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் கிராமங்களுக்குச் சென்று கொடியேற்ற வேண்டும். அந்த வகையில் எங்கள் கிராமத்திற்கும் வந்து கொடியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் வாயிலாக மனு ஒன்றை அனுப்பி இருக்கிறேன். தற்கால மாணவர்களிடையே காந்தியும் சென்று சேரவில்லை... அது நிச்சயமாக சென்று சேர வேண்டும். அதனால்தான் இன்று வன்முறை போராட்டங்கள், மதுபோதையில் ஒரு தலைமுறையே சீரழிந்து கொண்டிருக்கிறது. இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டம் இருக்கிறதாமே! ஆம். இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டத்தில்தான் இருக்கிறேன். இந்த சமூக சீரழிவுக்கு ஒரு விதத்தில் சினிமா இயக்குநர்களும் காரணமாக இருக்கிறார்கள். படத்தில் வன்முறைக் காட்சிகளும் ஆபாச சொல்லாடல்களும், போதை காட்சிகளும் சமூகத்தில் நஞ்சைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு பதிலாக நல்ல கருத்துக்களையும் நல்ல அரசியலையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்தச் சமூகத்தை சீர்திருத்தும் வலிமை திரைத்துறைக்கு உண்டு. ஆனால் அதை தவறுதலாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். மனிதனை மனிதன் முதலில் மதிக்க வேண்டும். மதங்கள் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றவர்கள் மீது வெறுப்பைக் கக்குவதற்கு அல்ல. நாட்டில் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்து விட்டால் நாடு நிச்சயம் வல்லரசாக மாறும்... நாட்டில் பசி, வறுமை, பாதி சமூக தீமைகள் ஒழிந்து விடும். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நாமே நினைப்போம்! அதை நோக்கியது தான் எனது இந்தப் பயணம் என்கிறார், காந்தியவாதி ரமேஷ்.

விகடன் 22 Jan 2026 3:00 pm

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். பின்னர், `அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதாகவும்' கூறினார். இதையடுத்து தஞ்சாவூரில் இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் தஞ்சாவூர், செங்கிப்பட்டி பகுதியில் வரும் 26ம் தேதி திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இதன் ஒரு பகுதியில் மேடை அமைத்து தன் ஆதராவளர்கள் சுமார் ஆயிரம் பேரை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கிறார் வைத்திலிங்கம். இதற்காக ஆதரவாளர்களிடம் வைத்திலிங்கம், மகன்கள் பிரபு, சண்முகபிரபு, அவரது சம்பந்தி தவமணி ஆகியோர் அழைப்பு கொடுத்து வருகின்ரனர். வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் அவர் திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதை விமர்சனம் செய்தும் வருகின்றனர். வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் நேற்று இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்வதாக கூறியிருந்தார். ஆனால் இன்று குடும்பத்தினர் கூறியதாலும், உடல் நிலையை கவனத்தில் கொண்டும் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆர்.டி.ராமச்சந்திரனின் இந்த முடிவை வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அதிமுகவில் இணைய இருக்கும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரத்தில் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக வலம் வந்த முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகபிரபு, மேலவீதி சாமிநாதன், செல்லத்துரை, பில்லுக்காரத்தெரு ராஜா உள்ளிட்ட 30 பேர் வைத்தி திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதையடுத்து மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைத்து கொள்கின்றனர். இதற்காக இன்று காலையிலேயே சென்னை கிளம்பி விட்டனர். ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம் இதையறிந்த வைத்திலிங்கம் தரப்பு அப்செட் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து சாமிநாதனிடம் பேசினோம், ``எங்களை பொறுத்தவரை மறைந்த ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம். அவருடைய வாழ்நாள் எதிரி திமுக. ஜெயலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கும் காரணம் திமுக தான். அப்படிப்பட்ட திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தது எங்களுக்கு உடன்பாடில்லை. அதிகாரம் வரும் போகும். தன் சுய நலத்திற்காக, தன்னை காப்பாற்றி கொள்ள இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் வைத்திலிங்கம். முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன் என்னை போன்றவர்களிடம் இணைப்பு விழாவில் திமுகவில் இணைவதற்காக அழைத்தார் நாங்கள் மறுத்து விட்டோம். ஒருங்கிணைப்பில் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் அவருடன் இருந்தோம். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. எனவே தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் எடப்பாடி முன்னிலையில் இன்று மாலை 6 மணியளவில் அதிமுகவில் இணைகிறோம் என்றார். `மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

விகடன் 22 Jan 2026 2:54 pm

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். பின்னர், `அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதாகவும்' கூறினார். இதையடுத்து தஞ்சாவூரில் இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் தஞ்சாவூர், செங்கிப்பட்டி பகுதியில் வரும் 26ம் தேதி திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இதன் ஒரு பகுதியில் மேடை அமைத்து தன் ஆதராவளர்கள் சுமார் ஆயிரம் பேரை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கிறார் வைத்திலிங்கம். இதற்காக ஆதரவாளர்களிடம் வைத்திலிங்கம், மகன்கள் பிரபு, சண்முகபிரபு, அவரது சம்பந்தி தவமணி ஆகியோர் அழைப்பு கொடுத்து வருகின்ரனர். வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் அவர் திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதை விமர்சனம் செய்தும் வருகின்றனர். வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் நேற்று இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்வதாக கூறியிருந்தார். ஆனால் இன்று குடும்பத்தினர் கூறியதாலும், உடல் நிலையை கவனத்தில் கொண்டும் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆர்.டி.ராமச்சந்திரனின் இந்த முடிவை வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அதிமுகவில் இணைய இருக்கும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரத்தில் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக வலம் வந்த முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகபிரபு, மேலவீதி சாமிநாதன், செல்லத்துரை, பில்லுக்காரத்தெரு ராஜா உள்ளிட்ட 30 பேர் வைத்தி திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதையடுத்து மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைத்து கொள்கின்றனர். இதற்காக இன்று காலையிலேயே சென்னை கிளம்பி விட்டனர். ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம் இதையறிந்த வைத்திலிங்கம் தரப்பு அப்செட் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து சாமிநாதனிடம் பேசினோம், ``எங்களை பொறுத்தவரை மறைந்த ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம். அவருடைய வாழ்நாள் எதிரி திமுக. ஜெயலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கும் காரணம் திமுக தான். அப்படிப்பட்ட திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தது எங்களுக்கு உடன்பாடில்லை. அதிகாரம் வரும் போகும். தன் சுய நலத்திற்காக, தன்னை காப்பாற்றி கொள்ள இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் வைத்திலிங்கம். முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன் என்னை போன்றவர்களிடம் இணைப்பு விழாவில் திமுகவில் இணைவதற்காக அழைத்தார் நாங்கள் மறுத்து விட்டோம். ஒருங்கிணைப்பில் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் அவருடன் இருந்தோம். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. எனவே தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் எடப்பாடி முன்னிலையில் இன்று மாலை 6 மணியளவில் அதிமுகவில் இணைகிறோம் என்றார். `மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

விகடன் 22 Jan 2026 2:54 pm

ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால் - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்திரன். இந்நிலையில், நேற்று மாலை, தனது அரசியல் ஆசான் வைத்திலிங்கம் தி.மு.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து வருகின்ற 26-ம் தேதி தானும் திமுகவில் இணையப் போவதாக, செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், குடும்ப உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவும், எனது உடல்நிலை குறித்த மருத்துவரின் ஆலோசனையின் காரணமாகவும் நான் இன்று மாற்று முடிவை எடுத்திருக்கிறேன். பொது வாழ்க்கையில் இருந்து நான் விலகிக் கொள்ளப் போவதாக முடிவெடுத்திருக்கிறேன். rt ramachandran நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தவறான விஷயம் என்றபோதிலும், என் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பச் சூழ்நிலை, குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தலின் பேரில் என் நிம்மதிக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். நான் இனி எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை. தயவுகூர்ந்து அண்ணன் வைத்திலிங்கம் அவர்களும், என்னோடு இதுவரை பயணித்த தொண்டர்களும் என்னை மன்னித்து, என்னோடு இதுவரை உறுதுணையாக இருந்த கழகத் தொண்டர்கள் அவரவர் விரும்பும் கழகத்தில் இணைந்து பணியாற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இரண்டு விஷயங்கள் என் மனதை மாற்றியன. என்னைப் பெற்றெடுத்த தாய், 'உன் வளர்ப்புத் தாயான ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றுவாயா?' என்று கேட்டார். 'எனக்கு அசிங்கமாக இருக்கு. இதெல்லாம் வேலையா?' என்று என் பெண் கேட்டதும், வேதனை அடைந்தேன். இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. காலையில் வீட்டாரிடம் சொல்லிவிட்டு, இந்த முடிவை அறிவிக்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை

விகடன் 22 Jan 2026 2:51 pm

ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால் - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்திரன். இந்நிலையில், நேற்று மாலை, தனது அரசியல் ஆசான் வைத்திலிங்கம் தி.மு.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து வருகின்ற 26-ம் தேதி தானும் திமுகவில் இணையப் போவதாக, செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், குடும்ப உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவும், எனது உடல்நிலை குறித்த மருத்துவரின் ஆலோசனையின் காரணமாகவும் நான் இன்று மாற்று முடிவை எடுத்திருக்கிறேன். பொது வாழ்க்கையில் இருந்து நான் விலகிக் கொள்ளப் போவதாக முடிவெடுத்திருக்கிறேன். rt ramachandran நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தவறான விஷயம் என்றபோதிலும், என் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பச் சூழ்நிலை, குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தலின் பேரில் என் நிம்மதிக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். நான் இனி எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை. தயவுகூர்ந்து அண்ணன் வைத்திலிங்கம் அவர்களும், என்னோடு இதுவரை பயணித்த தொண்டர்களும் என்னை மன்னித்து, என்னோடு இதுவரை உறுதுணையாக இருந்த கழகத் தொண்டர்கள் அவரவர் விரும்பும் கழகத்தில் இணைந்து பணியாற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இரண்டு விஷயங்கள் என் மனதை மாற்றியன. என்னைப் பெற்றெடுத்த தாய், 'உன் வளர்ப்புத் தாயான ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றுவாயா?' என்று கேட்டார். 'எனக்கு அசிங்கமாக இருக்கு. இதெல்லாம் வேலையா?' என்று என் பெண் கேட்டதும், வேதனை அடைந்தேன். இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. காலையில் வீட்டாரிடம் சொல்லிவிட்டு, இந்த முடிவை அறிவிக்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை

விகடன் 22 Jan 2026 2:51 pm

நாயுடன் நடைபயிற்சி; விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய ஐ.ஏ.எஸ், டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமனம்!

டெல்லி மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இதற்கு முன்பு டெல்லியில் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளராக இருந்தபோது, நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார். 2022-ம் ஆண்டு தினமும் மாலையில் அங்குள்ள தியாகராஜ் மைதானத்தில் தனது நாயுடன் சஞ்சீவ் கிர்வார் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். சஞ்சீவ் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு இருந்த தடகள வீரர்கள் அனைவரையும் மாலை 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேறும் படி கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தடகள வீரர்கள் வழக்கமாக இரவு 8.30 மணி வரை விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக மாலை 7 மணிக்கே எங்களை மைதானத்தை விட்டு வெளியேறும்படி கூறினர் என்று பயிற்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டினார். ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்த சஞ்சீவ், சில நேரம் நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தடகள வீரர்களுக்கு எந்த வித இடையூறும் செய்தது கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு வீரர்களுக்காக இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்தார். இந்த நாய் சர்ச்சையை தொடர்ந்து சஞ்சீவ் கிர்வாரை மத்திய உள்துறை அமைச்சகம் லடாக்கிற்கு இடமாற்றம் செய்தது. தற்போது டெல்லியில் பா.ஜ.க அரசு பதவியேற்றுள்ள நிலையில் சஞ்சீவ் கிர்வார் டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது டெல்லி மாநகராட்சி கமிஷனராக இருக்கும் அஸ்வனிகுமார் ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விகடன் 22 Jan 2026 2:42 pm

நாயுடன் நடைபயிற்சி; விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய ஐ.ஏ.எஸ், டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமனம்!

டெல்லி மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இதற்கு முன்பு டெல்லியில் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளராக இருந்தபோது, நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார். 2022-ம் ஆண்டு தினமும் மாலையில் அங்குள்ள தியாகராஜ் மைதானத்தில் தனது நாயுடன் சஞ்சீவ் கிர்வார் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். சஞ்சீவ் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு இருந்த தடகள வீரர்கள் அனைவரையும் மாலை 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேறும் படி கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தடகள வீரர்கள் வழக்கமாக இரவு 8.30 மணி வரை விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக மாலை 7 மணிக்கே எங்களை மைதானத்தை விட்டு வெளியேறும்படி கூறினர் என்று பயிற்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டினார். ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்த சஞ்சீவ், சில நேரம் நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தடகள வீரர்களுக்கு எந்த வித இடையூறும் செய்தது கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு வீரர்களுக்காக இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்தார். இந்த நாய் சர்ச்சையை தொடர்ந்து சஞ்சீவ் கிர்வாரை மத்திய உள்துறை அமைச்சகம் லடாக்கிற்கு இடமாற்றம் செய்தது. தற்போது டெல்லியில் பா.ஜ.க அரசு பதவியேற்றுள்ள நிலையில் சஞ்சீவ் கிர்வார் டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது டெல்லி மாநகராட்சி கமிஷனராக இருக்கும் அஸ்வனிகுமார் ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விகடன் 22 Jan 2026 2:42 pm

TVK : விஜய்யின் தவெக-வுக்கு விசில் சின்னம்; அதிகாரப்பூர்வமாக அறிவித்த தேர்தல் ஆணையம்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. TVK Vijay கடந்த 2024 பிப்ரவரி 2 ஆம் தேதியில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து விக்கிரவாண்டி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மாநாடை நடத்திய விஜய் 2026 தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அங்கீகாரம் பெறாத கட்சிகள் தங்கள் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பச் சின்னங்களாக சில சின்னங்களையும் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும். கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தனி விதிமுறைகள் உள்ளது. TVK VIJAY அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். தவெக தரப்பில் ஆட்டோ, கால்பந்து, கிரிக்கெட் பேட், விசில் போன்ற சின்னங்களை விருப்பச் சின்னங்களாக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்திருந்தனர். அதிலிருந்து இப்போது விசில் சின்னத்தை தவெகவுக்கென தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.

விகடன் 22 Jan 2026 2:35 pm

TVK : விஜய்யின் தவெக-வுக்கு விசில் சின்னம்; அதிகாரப்பூர்வமாக அறிவித்த தேர்தல் ஆணையம்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. TVK Vijay கடந்த 2024 பிப்ரவரி 2 ஆம் தேதியில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து விக்கிரவாண்டி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மாநாடை நடத்திய விஜய் 2026 தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அங்கீகாரம் பெறாத கட்சிகள் தங்கள் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பச் சின்னங்களாக சில சின்னங்களையும் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும். கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தனி விதிமுறைகள் உள்ளது. TVK VIJAY அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். தவெக தரப்பில் ஆட்டோ, கால்பந்து, கிரிக்கெட் பேட், விசில் போன்ற சின்னங்களை விருப்பச் சின்னங்களாக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்திருந்தனர். அதிலிருந்து இப்போது விசில் சின்னத்தை தவெகவுக்கென தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.

விகடன் 22 Jan 2026 2:35 pm

ஈரோடு: வனத்துக்குள் வழிதவறிய சிறுவர்கள்; களமிறங்கிய வனத்துறை; 5 மணி நேரத்தில் மீட்கப்பட்டது எப்படி?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொங்காடை மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்ஷன் (6), ராசாத்தி (11) கலைவாணி (12), சிவா (11), சூர்யா (11), தமிழ்ச்செல்வன் (11) மற்றும் மணிகண்டன் (11). இந்த 7 பேரும் அந்தியூர் அருகே கிணத்தடி சோளகா பழங்குடியினர் கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் தங்கிப் படித்து வருகின்றனர். 7 பேரும் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் கடந்த திங்கள்கிழமை பள்ளிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், 6 வயது சிறுவன் தர்ஷன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என அழுததால், மற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் 6 பேரும் சிறுவன் தர்ஷனை அழைத்துக் கொண்டு புதன்கிழமை காலை 6 மணியளவில் பள்ளியில் பாதுகாப்புக்காக இருந்த சமையலரிடம் தெரிவிக்காமல் வனப் பகுதி வழியாக தங்களது சொந்த ஊரான கொங்காடை மலைக் கிராமத்திற்குச் செல்லத் திட்டமிட்டு வனப் பகுதிக்குள் சென்றுள்ளனர். காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் 7 மாணவர்களும் பள்ளியில் இல்லாததை அடுத்து பேருந்து மூலம் ஊருக்குச் சென்று விட்டார்கள் என நினைத்து கொங்காடை மலை கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை இந்நிலையில் வனப்பகுதிக்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுவன் தர்ஷனால் நடக்க முடியாததால், இரண்டு சிறுமிகள் தர்ஷனோடு வனத்துக்குள் இருந்துள்ளனர். மற்ற நான்கு சிறுவர்களும் அருகில் உள்ள காக்கையனூர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் வனப்பகுதிக்குள்ளேயே இருந்துள்ளனர். தொடர்ந்து வெளியே வந்த சிறுவர்கள், வனப்பகுதிக்குள் மூவரும் இருப்பது குறித்து அங்குள்ள கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; புதிய மைல்கல் - வனத்துறை நம்பிக்கை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வெள்ளி திருப்பூர் காவல் நிலையம் போலீஸார் மற்றும் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனப் பகுதிக்குள் போலீஸார் மற்றும் வனத்துறையினர் 5 குழுக்களாகச் சென்று தேடினர். மேலும் ட்ரோன் கேமராக்கள், தெர்மல் ட்ரோன் கேமரா மூலமும் தேடப்பட்டது. சுமார் 5 மணி நேர தேடலுக்குப் பிறகு இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் தர்ஷன் ஆகிய மூன்று பேரும் கோட்டமலை அடிவாரப் பகுதியில் இருந்ததைப் பார்த்த வேட்டைத் தடுப்பு காவலர்கள், மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். வனம் தொடர்ந்து தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்சில் இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, சிறுமிகள் மற்றும் சிறுவனை மீட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மகேஷ், நாகராஜ் மற்றும் ராஜா ஆகிய மூவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். சிறுத்தை, புலி, யானை உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை சுமார் ஐந்து மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மூவரும் பத்திரமாக மீட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? - வனத்துறை விளக்கம்!

விகடன் 22 Jan 2026 12:58 pm

ஈரோடு: வனத்துக்குள் வழிதவறிய சிறுவர்கள்; களமிறங்கிய வனத்துறை; 5 மணி நேரத்தில் மீட்கப்பட்டது எப்படி?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொங்காடை மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்ஷன் (6), ராசாத்தி (11) கலைவாணி (12), சிவா (11), சூர்யா (11), தமிழ்ச்செல்வன் (11) மற்றும் மணிகண்டன் (11). இந்த 7 பேரும் அந்தியூர் அருகே கிணத்தடி சோளகா பழங்குடியினர் கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் தங்கிப் படித்து வருகின்றனர். 7 பேரும் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் கடந்த திங்கள்கிழமை பள்ளிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், 6 வயது சிறுவன் தர்ஷன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என அழுததால், மற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் 6 பேரும் சிறுவன் தர்ஷனை அழைத்துக் கொண்டு புதன்கிழமை காலை 6 மணியளவில் பள்ளியில் பாதுகாப்புக்காக இருந்த சமையலரிடம் தெரிவிக்காமல் வனப் பகுதி வழியாக தங்களது சொந்த ஊரான கொங்காடை மலைக் கிராமத்திற்குச் செல்லத் திட்டமிட்டு வனப் பகுதிக்குள் சென்றுள்ளனர். காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் 7 மாணவர்களும் பள்ளியில் இல்லாததை அடுத்து பேருந்து மூலம் ஊருக்குச் சென்று விட்டார்கள் என நினைத்து கொங்காடை மலை கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை இந்நிலையில் வனப்பகுதிக்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுவன் தர்ஷனால் நடக்க முடியாததால், இரண்டு சிறுமிகள் தர்ஷனோடு வனத்துக்குள் இருந்துள்ளனர். மற்ற நான்கு சிறுவர்களும் அருகில் உள்ள காக்கையனூர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் வனப்பகுதிக்குள்ளேயே இருந்துள்ளனர். தொடர்ந்து வெளியே வந்த சிறுவர்கள், வனப்பகுதிக்குள் மூவரும் இருப்பது குறித்து அங்குள்ள கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; புதிய மைல்கல் - வனத்துறை நம்பிக்கை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வெள்ளி திருப்பூர் காவல் நிலையம் போலீஸார் மற்றும் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனப் பகுதிக்குள் போலீஸார் மற்றும் வனத்துறையினர் 5 குழுக்களாகச் சென்று தேடினர். மேலும் ட்ரோன் கேமராக்கள், தெர்மல் ட்ரோன் கேமரா மூலமும் தேடப்பட்டது. சுமார் 5 மணி நேர தேடலுக்குப் பிறகு இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் தர்ஷன் ஆகிய மூன்று பேரும் கோட்டமலை அடிவாரப் பகுதியில் இருந்ததைப் பார்த்த வேட்டைத் தடுப்பு காவலர்கள், மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். வனம் தொடர்ந்து தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்சில் இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, சிறுமிகள் மற்றும் சிறுவனை மீட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மகேஷ், நாகராஜ் மற்றும் ராஜா ஆகிய மூவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். சிறுத்தை, புலி, யானை உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை சுமார் ஐந்து மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மூவரும் பத்திரமாக மீட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? - வனத்துறை விளக்கம்!

விகடன் 22 Jan 2026 12:58 pm

மேயர் பதவி: ராஜ்தாக்கரே, சரத் பவாருடன் ஷிண்டே கூட்டணி - மகாராஷ்டிராவில் மாறும் கூட்டணி எல்லைகள்!

மகாராஷ்டிராவில் நடந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கு பிறகு நகராட்சி துணைத்தலைவர், மேயர் பதவியை பிடிக்க பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் மற்ற கட்சிகளின் கவுன்சிலர்களின் ஆதரவை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது. துணை தலைவர் பதவியை பிடிக்க ஆரம்பத்தில் காங்கிரஸ் மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க பெற்றது. அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் திடீரென சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்தனர். காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பா.ஜ.கவில் சேர்ந்தனர். இப்போது இப்பிரச்னை மும்பை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்நிலையில் மும்பை அருகில் உள்ள கல்யான் டோம்பிவலி மாநகராட்சியிலும் மேயர் பதவியை பிடிக்க பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தமுள்ள 122 வார்டுகளில் பா.ஜ.க 50 இடங்களிலும், சிவசேனா 54 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதிலும் மேயர் பதவியை பிடிப்பதில் இரு கட்சிகளிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. சரத்பவார் சிவசேனாவுக்கு 5 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஆதரவு கொடுத்து இருக்கிறது. இங்கு ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இப்போது திடீரென மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்து இருப்பது உத்தவ் தாக்கரேயிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜ் தாக்கரேயின் அனுமதியை பெற்றுத்தான் சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்து இருக்கிறோம் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா முன்னாள் எம்.எல்.ஏ.ராஜு பாட்டீல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சிவசேனா(ஷிண்டே)வுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து கல்யான் சிவசேனா(உத்தவ்) தலைவர் சரத்பாட்டீல் அளித்த பேட்டியில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்தார். உத்தவ் தாக்கரேயின் சிவசேனா இங்கு 11 இடங்களில் வெற்றி பெற்றது. அவர்களில் 4 பேர் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு ஆதரவு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் நான்கு பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உத்தவ் தாக்கரே கட்சி அறிவித்துள்ளது. இது தவிர சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இங்கு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அந்த ஒரு உறுப்பினரும் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே இதனால் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு மேயர் பதவியை பிடிக்கும் அளவுக்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து இருக்கிறது. ஆனால் மேயர் பதவி இம்மாத இறுதியில்தான் நடக்கும். அதுவரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. இதே போன்று மும்பை அருகில் உள்ள மற்றொரு மாநகராட்சியான உல்லாஸ் நகரிலும் மேயர் பதவியை பிடிப்பதற்கான 40 கவுன்சிலர்களின் ஆதரவை ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா பெற்று இருக்கிறது. இங்கு சிவசேனா 36 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கல்யான் டோம்பிவலி மற்றும் உல்லாஸ் நகர் மேயர் பதவி குறித்து முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ் மும்பை திரும்பியதும் முடிவு செய்யப்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் ரவீந்திர சவான் தெரிவித்துள்ளார். மும்பையில் மேயர் பதவியை பிடிக்க துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். ஒரே சின்னத்தில் அஜித்பவார், சரத்பவார் கட்சிகள் போட்டி மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலில் சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடிகாரம் சின்னத்தில் போட்டியிடுவது என்று இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. !

விகடன் 22 Jan 2026 12:25 pm

``உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் - கொதிக்கும் பியூஷ் கோயல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று காலை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்றார். அங்கு பா.ஜ.க தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார். அதைத் தொடர்ந்து பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமி இல்லத்திலிருந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் அப்போது, ``தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியின் தலைவர எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அவருடன் காலை உணவு உண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையிலும், தமிழ்நாட்டில் பழனிசாமியின் வழிகாட்டுதலிலும், என்.டி.ஏ கூட்டணி இந்தத் தி.மு.க அரசை முற்றிலுமாகத் தூக்கியெறியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஊழல் நிறைந்த, திறமையற்ற, சமரசம் செய்து கொண்டு, வளர்ச்சிக்கு எதிரான இந்தத் தி.மு.க அரசு, வரவிருக்கும் தேர்தலில் நிச்சயமாகத் தோல்வியடைய போகிறது. எனது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் அனைவரும் வாரிசு அரசியல், ஊழலைத் தவிர, தமிழ்நாட்டின் நலனுக்காகவோ அல்லது முன்னேற்றத்திற்காகவோ திமுக அரசு எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்திருக்கிறார்கள். உள் கட்டமைப்புகள் சிதைந்து வருகின்றன. முறையற்ற நிர்வாகம், ஊழல் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான செயல்பாடுகளே தி.மு.க-வின் அடையாளமாக மாறியுள்ளன. எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோத கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உதயநிதி ஸ்டாலினின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக உயர் நீதிமன்றமும் நேற்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. வெறுப்புப் பேச்சைத் தூண்டியதற்காகவும், மக்களிடையே பிரிவினையை உண்டாக்க முயன்றதற்காகவும் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவிருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இதற்காக ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. `நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு பிரதமரையும், எடப்பாடி பழனிசாமியையும் அ.தி.மு.க தலைமையிலான வலுவான கூட்டணியின் பிற தலைவர்களையும் சந்திக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். வருகிற ஏப்ரல் மாதம் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வரும். அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும். வளர்ச்சியைத் தரும். உள்கட்டமைப்பை மேம்படுத்தும். நல்லாட்சியை வழங்கும். எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டின் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் பணியாற்றுவோம். இதன் மூலம் தமிழ்நாடு மீண்டும் நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு உன்னதமான மாநிலமாக மாறும். தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பெருமையையும் நாங்கள் மீட்டெடுப்போம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் எனத் தெரிவித்திருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

விகடன் 22 Jan 2026 11:52 am

``உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் - கொதிக்கும் பியூஷ் கோயல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று காலை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்றார். அங்கு பா.ஜ.க தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார். அதைத் தொடர்ந்து பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமி இல்லத்திலிருந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் அப்போது, ``தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியின் தலைவர எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அவருடன் காலை உணவு உண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையிலும், தமிழ்நாட்டில் பழனிசாமியின் வழிகாட்டுதலிலும், என்.டி.ஏ கூட்டணி இந்தத் தி.மு.க அரசை முற்றிலுமாகத் தூக்கியெறியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஊழல் நிறைந்த, திறமையற்ற, சமரசம் செய்து கொண்டு, வளர்ச்சிக்கு எதிரான இந்தத் தி.மு.க அரசு, வரவிருக்கும் தேர்தலில் நிச்சயமாகத் தோல்வியடைய போகிறது. எனது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் அனைவரும் வாரிசு அரசியல், ஊழலைத் தவிர, தமிழ்நாட்டின் நலனுக்காகவோ அல்லது முன்னேற்றத்திற்காகவோ திமுக அரசு எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்திருக்கிறார்கள். உள் கட்டமைப்புகள் சிதைந்து வருகின்றன. முறையற்ற நிர்வாகம், ஊழல் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான செயல்பாடுகளே தி.மு.க-வின் அடையாளமாக மாறியுள்ளன. எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோத கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உதயநிதி ஸ்டாலினின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக உயர் நீதிமன்றமும் நேற்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. வெறுப்புப் பேச்சைத் தூண்டியதற்காகவும், மக்களிடையே பிரிவினையை உண்டாக்க முயன்றதற்காகவும் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவிருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இதற்காக ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. `நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு பிரதமரையும், எடப்பாடி பழனிசாமியையும் அ.தி.மு.க தலைமையிலான வலுவான கூட்டணியின் பிற தலைவர்களையும் சந்திக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். வருகிற ஏப்ரல் மாதம் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வரும். அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும். வளர்ச்சியைத் தரும். உள்கட்டமைப்பை மேம்படுத்தும். நல்லாட்சியை வழங்கும். எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டின் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் பணியாற்றுவோம். இதன் மூலம் தமிழ்நாடு மீண்டும் நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு உன்னதமான மாநிலமாக மாறும். தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பெருமையையும் நாங்கள் மீட்டெடுப்போம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் எனத் தெரிவித்திருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

விகடன் 22 Jan 2026 11:52 am

`திமுக-வினரை சந்திக்கக் கூடாது’ காங்கிரஸ் தடை டு `சீட்டே வேண்டாம்' - `பூ’ நடிகை டென்சன் | கழுகார்

- காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்குத் தடை! ``தி.மு.க-வினர் யாரையும் சந்திக்கக் கூடாது!’’ அண்மையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களில், ஏற்கெனவே மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்களில் மூன்று பேருக்கு மட்டுமே மீண்டும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களெல்லாம் புதியவர்கள். சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் மேலிடக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலும், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரின் பரிந்துரையிலும் இந்த மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறதாம். காங்கிரஸ் கடந்த ஜன. 20-ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழுவுக்கு முன்பாக, அனைத்து மாவட்டத் தலைவர்களுக்கும் மெசேஜ் அனுப்பிய ஜோடங்கர், 'காங்கிரஸ் தலைவர்களைத் தவிர, வேறு எந்தக் கட்சிப் பிரமுகரையும் சென்று சந்திக்கக் கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். உள்ளடி வேலைகளில் ஈடுபட்டால், கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என்று எச்சரித்தாராம். செயற்குழுவிலும் அதையே சொல்லியிருக்கிறார். ''மாவட்டத் தலைவர் பதவி கிடைத்தவுடன், லோக்கலில் இருக்கும் அமைச்சர்களைச் சந்தித்து வாழ்த்து பெற சிலர் முடிவெடுத்திருந்தனர். அதைத் தெரிந்துகொண்டுதான் யாரையுமே சந்திக்கக் கூடாது என்று தடைபோட்டுவிட்டார் ஜோடங்கர்'' என்கிறார்கள் கதர்கள். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் நீடிக்கும் நிலையில், ஜோடங்கரின் தடை உத்தரவு கதர்களிடம் பேசுபொருளாகியிருக்கிறது. 'டோஸ்'விட்ட டி.ஜி.பி அலுவலகம்! களத்துக்குச் செல்லாத எஸ்.பி... தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தின் 'விவேகமான' எஸ்.பி., தன் மாவட்டத்துக்குள் பெரிய அளவில் குற்றங்கள் நிகழ்ந்தாலும்கூட, சம்பவ இடத்துக்குச் செல்வது கிடையாதாம். கடந்த பொங்கல் தினத்தன்று அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியாவில் கஞ்சா போதையில் இரட்டைக்கொலைச் சம்பவம் நடந்தது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகப் பொங்கிக்கொண்டிருந்த நிலையிலும், விசாரணை செய்யக்கூட, சம்பவ இடத்துக்குச் செல்லவில்லையாம் அந்த அதிகாரி. தகவலறிந்து, டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து எஸ்.பி-க்குக் கடும் டோஸ் விழுந்திருக்கிறது. டி.ஜி.பி. அலுவலகம் அந்தக் கோபத்தில், 'ஒழுங்கா வேலை பாரு... இல்லைன்னா சஸ்பெண்ட் ஆர்டர் வரும்' என்று தனக்குக்கீழ் பணிபுரிபவர்களை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்துவிட்டாராம் 'விவேகமான' அதிகாரி. 'அவரு வேலை பார்க்காததுக்கு எங்களைத் திட்டுறது எந்த வகையில நியாயம்..?' என்று புலம்பித் தீர்க்கிறார்கள் மாவட்ட காக்கிகள். 'விவேகமான' அதிகாரிமீது 'கறார்' வடமண்டல உச்ச அதிகாரியும் மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதால், விரைவில் ஆக்‌ஷன் பாயலாம்’ என்கிறார்கள். கடுகடுப்பில் அமலாக்கத்துறை! சுற்றலில்விட்ட வேலூர் காக்கிகள்... சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரளாவைச் சேர்ந்த சி.எம்.சி மருத்துவமனை மருத்துவர் பிளிங்கின் என்பவரின் அறையைச் சோதனை செய்தனர். சோதனையில், அவருடைய அறையிலிருந்து 33 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்திருக்கிறார்கள். அதை எடுத்துக்கொண்டு, வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குப் புகாரளிக்க அமலாக்கத்துறை டீம் சென்றபோது, போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவில் புகாரளிக்கச் சொல்லி அனுப்பிவிட்டார்களாம் காவல் நிலையத்தில் இருந்தவர்கள். அமலாக்கத்துறை போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவினரோ, '``மூன்று கிலோவுக்கு மேல் கஞ்சா இருந்தால்தான் நாங்கள் வழக்கை எடுத்துக்கொள்வோம். நீங்கள் வடக்கு காவல் நிலையத்துக்கே சென்று புகார் சொல்லுங்கள்...’’ என்று வந்த இடத்துக்கே திருப்பி அனுப்பி, சுற்றலில் விட்டிருக்கிறார்கள்ள். மீண்டும் வடக்கு காவல் நிலையத்துக்கு வந்த அமலாக்கத்துறை டீம், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவுசெய்ய வைத்திருக்கிறது. அங்கும் இங்குமாகத் தங்களை அலையவிட்ட வேலூர் காக்கிகள்மீது, பயங்கர கடுப்பில் இருக்கிறதாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பு. மிஸ்டர் கழுகு: தினகரனுக்கு உள்ளடி வேலை... ஒதுக்கப்பட்ட அண்ணாமலை! - டென்ஷனான `பூ’ நடிகை ``எனக்கு சீட்டே வேண்டாம்...’’ வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணிகளைச் சத்தமில்லாமல் செய்ய ஆரம்பித்திருக்கிறதாம் மலர்க் கட்சி. தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் தொகுதிக்கு `பாடி பில்டிங்’ நடிகர், சாத்தூரில் மாநிலத் தலைவர், செங்கல்பட்டில் `பாகவதர்’ என்று இப்போதே பட்டியல் தயாராகிவருகிறதாம். அந்த வரிசையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை `பூ’ நடிகைக்குக் கொடுத்துவிட கட்சிக்குள் சிலர் பேசியிருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் டென்ஷனான `பூ’ நடிகை, '``சின்னவர்கூட மோதவிட்டு என்னைய காலி செய்யலாம்னு பிளான் பண்றாங்க. ஜெயிக்கிற தொகுதியா குடுத்தா போட்டியிடுறேன். இல்லைன்னா, எனக்கு சீட்டே வேண்டாம்...’’ என்று டெல்லியிலுள்ள சீனியர்கள் சிலரிடம் கொதித்துவிட்டாராம். `இன்னும் லிஸ்ட் முடிவாகவில்லை. அதற்குள்ளாக ஏன் அவசரப்படுகிறீர்கள்?’ என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள் அந்த சீனியர்கள். மலர்க் கட்சிக்குள் வந்ததிலிருந்து பெரிதாக அங்கீகாரம் ஏதுமில்லாத வருத்தத்தில் இருக்கும் `பூ’ நடிகைக்கு, இந்த சேப்பாக்கம் தொகுதி விவகாரம் மேலும் அதிருப்தியைக் கூட்டியிருக்கிறதாம். அதிரடிக்கும் சர்வேக்கள்... பரிதவிக்கும் கழகங்கள்… 2026 தேர்தல் யாருக்கு சாதகம்? `டோஸ்’ விட்ட சூரியக் கட்சித் தலைமை! ``இதைச் சொல்றதுக்கு வெட்கமா இல்லையா..?’’ கோட்டை மாவட்டத்தின் சூரியக் கட்சி மாவட்டச் செயலாளர், தன் எல்லைக்கு உட்பட்ட `மலை’ தொகுதியில் போட்டியிடத் தயாராகிக்கொண்டிருந்தார். அதற்காக சர்வேக்களையும் எடுத்திருந்தார். அதில், தொகுதியிலுள்ள இலைக் கட்சியின் `குட்கா மாஜி’க்கு செல்வாக்கு மலைபோல இருப்பதாகவும், `உங்களுக்கு வெற்றி வாய்ப்பு ரொம்பவே குறைவு’ என்றும் ரிசல்ட் வந்ததாம். அரண்டுபோன மாவட்டச் செயலாளர், `மலை’ தொகுதியை விட்டுவிட்டு `கோட்டை’ தொகுதிக்கு அடிபோட்டிருக்கிறார். தன் விருப்பத்தைத் தலைமையிடம் தெரிவிக்கவும், `மாவட்டச் செயலாளராக இருக்குற உங்களாலயே அந்தத் தொகுதியில ஜெயிக்க முடியாதுன்னு சொல்றதுக்கு வெட்கமா இல்லையா... அந்த அளவுக்குத்தான் கட்சியை வளர்த்து வெச்சிருக்கீங்களா..?' என்று கடுகடுத்துவிட்டதாம் தலைமை. அதை எதிர்பார்க்காத மாவட்டச் செயலாளர், `குட்கா மாஜியை எதிர்த்தே களமாடலாமா... இல்லை வேறு ஏதாவது ரூட்டைப் பிடித்து `கோட்டை தொகுதிக்கு முயற்சி செய்யலாமா?' என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறாராம். மிஸ்டர் கழுகு: தினகரனுக்கு உள்ளடி வேலை... ஒதுக்கப்பட்ட அண்ணாமலை!

விகடன் 22 Jan 2026 11:20 am

`திமுக-வினரை சந்திக்கக் கூடாது’ காங்கிரஸ் தடை டு `சீட்டே வேண்டாம்' - `பூ’ நடிகை டென்சன் | கழுகார்

- காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்குத் தடை! ``தி.மு.க-வினர் யாரையும் சந்திக்கக் கூடாது!’’ அண்மையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களில், ஏற்கெனவே மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்களில் மூன்று பேருக்கு மட்டுமே மீண்டும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களெல்லாம் புதியவர்கள். சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் மேலிடக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலும், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரின் பரிந்துரையிலும் இந்த மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறதாம். காங்கிரஸ் கடந்த ஜன. 20-ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழுவுக்கு முன்பாக, அனைத்து மாவட்டத் தலைவர்களுக்கும் மெசேஜ் அனுப்பிய ஜோடங்கர், 'காங்கிரஸ் தலைவர்களைத் தவிர, வேறு எந்தக் கட்சிப் பிரமுகரையும் சென்று சந்திக்கக் கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். உள்ளடி வேலைகளில் ஈடுபட்டால், கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என்று எச்சரித்தாராம். செயற்குழுவிலும் அதையே சொல்லியிருக்கிறார். ''மாவட்டத் தலைவர் பதவி கிடைத்தவுடன், லோக்கலில் இருக்கும் அமைச்சர்களைச் சந்தித்து வாழ்த்து பெற சிலர் முடிவெடுத்திருந்தனர். அதைத் தெரிந்துகொண்டுதான் யாரையுமே சந்திக்கக் கூடாது என்று தடைபோட்டுவிட்டார் ஜோடங்கர்'' என்கிறார்கள் கதர்கள். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் நீடிக்கும் நிலையில், ஜோடங்கரின் தடை உத்தரவு கதர்களிடம் பேசுபொருளாகியிருக்கிறது. 'டோஸ்'விட்ட டி.ஜி.பி அலுவலகம்! களத்துக்குச் செல்லாத எஸ்.பி... தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தின் 'விவேகமான' எஸ்.பி., தன் மாவட்டத்துக்குள் பெரிய அளவில் குற்றங்கள் நிகழ்ந்தாலும்கூட, சம்பவ இடத்துக்குச் செல்வது கிடையாதாம். கடந்த பொங்கல் தினத்தன்று அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியாவில் கஞ்சா போதையில் இரட்டைக்கொலைச் சம்பவம் நடந்தது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகப் பொங்கிக்கொண்டிருந்த நிலையிலும், விசாரணை செய்யக்கூட, சம்பவ இடத்துக்குச் செல்லவில்லையாம் அந்த அதிகாரி. தகவலறிந்து, டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து எஸ்.பி-க்குக் கடும் டோஸ் விழுந்திருக்கிறது. டி.ஜி.பி. அலுவலகம் அந்தக் கோபத்தில், 'ஒழுங்கா வேலை பாரு... இல்லைன்னா சஸ்பெண்ட் ஆர்டர் வரும்' என்று தனக்குக்கீழ் பணிபுரிபவர்களை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்துவிட்டாராம் 'விவேகமான' அதிகாரி. 'அவரு வேலை பார்க்காததுக்கு எங்களைத் திட்டுறது எந்த வகையில நியாயம்..?' என்று புலம்பித் தீர்க்கிறார்கள் மாவட்ட காக்கிகள். 'விவேகமான' அதிகாரிமீது 'கறார்' வடமண்டல உச்ச அதிகாரியும் மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதால், விரைவில் ஆக்‌ஷன் பாயலாம்’ என்கிறார்கள். கடுகடுப்பில் அமலாக்கத்துறை! சுற்றலில்விட்ட வேலூர் காக்கிகள்... சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரளாவைச் சேர்ந்த சி.எம்.சி மருத்துவமனை மருத்துவர் பிளிங்கின் என்பவரின் அறையைச் சோதனை செய்தனர். சோதனையில், அவருடைய அறையிலிருந்து 33 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்திருக்கிறார்கள். அதை எடுத்துக்கொண்டு, வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குப் புகாரளிக்க அமலாக்கத்துறை டீம் சென்றபோது, போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவில் புகாரளிக்கச் சொல்லி அனுப்பிவிட்டார்களாம் காவல் நிலையத்தில் இருந்தவர்கள். அமலாக்கத்துறை போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவினரோ, '``மூன்று கிலோவுக்கு மேல் கஞ்சா இருந்தால்தான் நாங்கள் வழக்கை எடுத்துக்கொள்வோம். நீங்கள் வடக்கு காவல் நிலையத்துக்கே சென்று புகார் சொல்லுங்கள்...’’ என்று வந்த இடத்துக்கே திருப்பி அனுப்பி, சுற்றலில் விட்டிருக்கிறார்கள்ள். மீண்டும் வடக்கு காவல் நிலையத்துக்கு வந்த அமலாக்கத்துறை டீம், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவுசெய்ய வைத்திருக்கிறது. அங்கும் இங்குமாகத் தங்களை அலையவிட்ட வேலூர் காக்கிகள்மீது, பயங்கர கடுப்பில் இருக்கிறதாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பு. மிஸ்டர் கழுகு: தினகரனுக்கு உள்ளடி வேலை... ஒதுக்கப்பட்ட அண்ணாமலை! - டென்ஷனான `பூ’ நடிகை ``எனக்கு சீட்டே வேண்டாம்...’’ வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணிகளைச் சத்தமில்லாமல் செய்ய ஆரம்பித்திருக்கிறதாம் மலர்க் கட்சி. தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் தொகுதிக்கு `பாடி பில்டிங்’ நடிகர், சாத்தூரில் மாநிலத் தலைவர், செங்கல்பட்டில் `பாகவதர்’ என்று இப்போதே பட்டியல் தயாராகிவருகிறதாம். அந்த வரிசையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை `பூ’ நடிகைக்குக் கொடுத்துவிட கட்சிக்குள் சிலர் பேசியிருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் டென்ஷனான `பூ’ நடிகை, '``சின்னவர்கூட மோதவிட்டு என்னைய காலி செய்யலாம்னு பிளான் பண்றாங்க. ஜெயிக்கிற தொகுதியா குடுத்தா போட்டியிடுறேன். இல்லைன்னா, எனக்கு சீட்டே வேண்டாம்...’’ என்று டெல்லியிலுள்ள சீனியர்கள் சிலரிடம் கொதித்துவிட்டாராம். `இன்னும் லிஸ்ட் முடிவாகவில்லை. அதற்குள்ளாக ஏன் அவசரப்படுகிறீர்கள்?’ என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள் அந்த சீனியர்கள். மலர்க் கட்சிக்குள் வந்ததிலிருந்து பெரிதாக அங்கீகாரம் ஏதுமில்லாத வருத்தத்தில் இருக்கும் `பூ’ நடிகைக்கு, இந்த சேப்பாக்கம் தொகுதி விவகாரம் மேலும் அதிருப்தியைக் கூட்டியிருக்கிறதாம். அதிரடிக்கும் சர்வேக்கள்... பரிதவிக்கும் கழகங்கள்… 2026 தேர்தல் யாருக்கு சாதகம்? `டோஸ்’ விட்ட சூரியக் கட்சித் தலைமை! ``இதைச் சொல்றதுக்கு வெட்கமா இல்லையா..?’’ கோட்டை மாவட்டத்தின் சூரியக் கட்சி மாவட்டச் செயலாளர், தன் எல்லைக்கு உட்பட்ட `மலை’ தொகுதியில் போட்டியிடத் தயாராகிக்கொண்டிருந்தார். அதற்காக சர்வேக்களையும் எடுத்திருந்தார். அதில், தொகுதியிலுள்ள இலைக் கட்சியின் `குட்கா மாஜி’க்கு செல்வாக்கு மலைபோல இருப்பதாகவும், `உங்களுக்கு வெற்றி வாய்ப்பு ரொம்பவே குறைவு’ என்றும் ரிசல்ட் வந்ததாம். அரண்டுபோன மாவட்டச் செயலாளர், `மலை’ தொகுதியை விட்டுவிட்டு `கோட்டை’ தொகுதிக்கு அடிபோட்டிருக்கிறார். தன் விருப்பத்தைத் தலைமையிடம் தெரிவிக்கவும், `மாவட்டச் செயலாளராக இருக்குற உங்களாலயே அந்தத் தொகுதியில ஜெயிக்க முடியாதுன்னு சொல்றதுக்கு வெட்கமா இல்லையா... அந்த அளவுக்குத்தான் கட்சியை வளர்த்து வெச்சிருக்கீங்களா..?' என்று கடுகடுத்துவிட்டதாம் தலைமை. அதை எதிர்பார்க்காத மாவட்டச் செயலாளர், `குட்கா மாஜியை எதிர்த்தே களமாடலாமா... இல்லை வேறு ஏதாவது ரூட்டைப் பிடித்து `கோட்டை தொகுதிக்கு முயற்சி செய்யலாமா?' என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறாராம். மிஸ்டர் கழுகு: தினகரனுக்கு உள்ளடி வேலை... ஒதுக்கப்பட்ட அண்ணாமலை!

விகடன் 22 Jan 2026 11:20 am

``இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள் - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக செல்வப்பெருந்தகை!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்தச் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``யாரையும் புண்படுத்தும் எண்ணம் என்னுடைய நோக்கமில்லை. இந்தியனாக இருப்பதை ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம் எனத் தெரிவித்திருந்தார். ஆனாலும், பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் எம்.பி கனிமொழி, ஜோதிமணி, மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா போன்ற பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகையும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், `` இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்திற்கு கண்டனம். உலகளவில் இந்திய இசைக்கு பெருமை சேர்த்தவர், ஆஸ்கர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர், இசை அமைப்பாளர் திரு.ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள். அவருக்கு எதிராக சமீப காலமாக முன்வைக்கப்படும் தேவையற்ற, அடிப்படை அற்ற விமர்சனங்கள் மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கின்றது. பல தசாப்தங்களாக இசையின் மூலம் மனிதநேயம், அமைதி, ஒற்றுமை ஆகிய மதிப்புகளை உலகம் முழுவதும் பரப்பி வரும் திரு.ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. கலைஞர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்;. மேலும், அவர் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று அவர் பதிலளித்துள்ளார். செல்வப் பெருந்தகை இந்நிலையில் அவர் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்துத் தாக்குதல் நடத்துவதும், அவமதிக்கும் வகையிலும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும் ஜனநாயகத்திற்கும், கலாச்சார மரபுகளுக்கும் முற்றிலும் முரணானவை. கலைஞர்களை அவர்களின் படைப்புகளின் அடிப்படையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் அவர்களின் சாதனைகளையும், சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகளையும் புறக்கணித்து, இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை. எனவே, இசை மேதை திரு.ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் இத்தகைய கடுமையான விமர்சனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். கலை, கலாச்சாரம், மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் அனைவரும் இத்தகைய செயல்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பதும் கவலையளிக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு

விகடன் 22 Jan 2026 10:14 am

கேரளா: பினராயி விஜயனை பாஜக கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர்; CPM-ன் பதில் என்ன தெரியுமா?

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சராக ராம்தாஸ் அத்வாலே உள்ளார். இவர் தலைவராக உள்ள ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது. ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று கேரள மாநிலம் கண்ணூருக்குச் சென்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், கேரளாவில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைய வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் சேர்ந்து நின்றால் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். கேரளாவின் வளர்ச்சிக்காகத் தாராளமாக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறலாம். விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் பெரிய பாய்ச்சலை கேரளா அடைய முடியும். பினராயி விஜயன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதால் நீங்கள் பா.ஜ.க-வாக ஆகிவிடமாட்டீர்கள். பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க-வை எதிர்க்கலாம், ஆனால் வளர்ச்சியை எதிர்க்கக் கூடாது. கொள்கை ரீதியாக பா.ஜ.க-வுக்கும், சி.பி.எம் கட்சிக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக கருத்து இருந்தாலும், வளர்ச்சி என்ற முறையில் இந்தப் பாகுபாடு தேவை இல்லை. என்.டி.ஏ-வின் கூட்டணிக் கட்சியாக இடதுசாரிகளை வரவேற்கிறோம். பினராயி விஜயனை கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம் நாட்டில் மட்டும் அல்ல, உலக நாடுகளில் 70 சதவிகிதம் மக்கள் ஆதரவைப் பெற்றவர் பிரதமர் மோடி. குறைந்தபட்ச திட்டத்தின் ஒருபகுதியாக நாட்டின் வளர்ச்சிக்காக சி.பி.எம் தலைமையிலான கேரளத்தின் எல்.டி.எஃப் கூட்டணி என்.டி.ஏ கூட்டணியில் அங்கமாக வேண்டும் என்றார். மத்திய அமைச்சரின் கூட்டணி அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன், கேரள அரசியலைப் பற்றி மத்திய அமைச்சருக்குப் போதுமான புரிதல் இல்லை. கேரள இடதுசாரி இயக்கம் ஒவ்வொரு கட்டத்திலும் போராடித்தான் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக முன்னேறி உள்ளது என்றார். கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது

விகடன் 22 Jan 2026 9:18 am

கேரளா: பினராயி விஜயனை பாஜக கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர்; CPM-ன் பதில் என்ன தெரியுமா?

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சராக ராம்தாஸ் அத்வாலே உள்ளார். இவர் தலைவராக உள்ள ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது. ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று கேரள மாநிலம் கண்ணூருக்குச் சென்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், கேரளாவில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைய வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் சேர்ந்து நின்றால் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். கேரளாவின் வளர்ச்சிக்காகத் தாராளமாக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறலாம். விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் பெரிய பாய்ச்சலை கேரளா அடைய முடியும். பினராயி விஜயன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதால் நீங்கள் பா.ஜ.க-வாக ஆகிவிடமாட்டீர்கள். பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க-வை எதிர்க்கலாம், ஆனால் வளர்ச்சியை எதிர்க்கக் கூடாது. கொள்கை ரீதியாக பா.ஜ.க-வுக்கும், சி.பி.எம் கட்சிக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக கருத்து இருந்தாலும், வளர்ச்சி என்ற முறையில் இந்தப் பாகுபாடு தேவை இல்லை. என்.டி.ஏ-வின் கூட்டணிக் கட்சியாக இடதுசாரிகளை வரவேற்கிறோம். பினராயி விஜயனை கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம் நாட்டில் மட்டும் அல்ல, உலக நாடுகளில் 70 சதவிகிதம் மக்கள் ஆதரவைப் பெற்றவர் பிரதமர் மோடி. குறைந்தபட்ச திட்டத்தின் ஒருபகுதியாக நாட்டின் வளர்ச்சிக்காக சி.பி.எம் தலைமையிலான கேரளத்தின் எல்.டி.எஃப் கூட்டணி என்.டி.ஏ கூட்டணியில் அங்கமாக வேண்டும் என்றார். மத்திய அமைச்சரின் கூட்டணி அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன், கேரள அரசியலைப் பற்றி மத்திய அமைச்சருக்குப் போதுமான புரிதல் இல்லை. கேரள இடதுசாரி இயக்கம் ஒவ்வொரு கட்டத்திலும் போராடித்தான் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக முன்னேறி உள்ளது என்றார். கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது

விகடன் 22 Jan 2026 9:18 am

கோவை: ரூ. 300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பிரமாண்டமான பெரியார் அறிவுலகம் | Photo Album

பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பெரியார் காலாவதியானவரா, காலம் கடந்தவரா? பிறந்ததினப் பகிர்வு

விகடன் 22 Jan 2026 8:35 am

கோவை: ரூ. 300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பிரமாண்டமான பெரியார் அறிவுலகம் | Photo Album

பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பெரியார் காலாவதியானவரா, காலம் கடந்தவரா? பிறந்ததினப் பகிர்வு

விகடன் 22 Jan 2026 8:35 am

OPS: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன் - ஓபிஎஸ் விளக்கம்

தேனி செல்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவரை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வரவேற்றார். தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். ஓபிஎஸ் வைத்தியலிங்கம் தி.மு.க-வில் இணைந்தது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தமிழ்நாடு வரும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை. தி.மு.க-வில் இணைவீர்களா என்று கேட்கிறீர்கள். அதுபற்றி உங்களை அழைத்து கூறுவேன். பொறுமையாக இருங்கள். தொடர்ந்து என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன் என்றார். பின்னர், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து வெல்லமண்டி நடராஜனும் காரில் ஏறி புறப்பட்டார். OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?

விகடன் 22 Jan 2026 7:27 am

கை உயருமா..? - கார்ட்டூன்

கை உயருமா..? - கார்ட்டூன்

விகடன் 22 Jan 2026 5:39 am

``இதற்குப் பிறகும் துணை முதல்வர் பதவியில் இருப்பதா? - உதயநிதி ஸ்டாலினை சாடும் பாஜக

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டு சனாதான ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், `சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. டெங்கு, மலேரியாவைப் போல் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் தமிழ்நாட்டின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் படங்களை பதிவிட்டு, சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். அது தொடர்பாக திருச்சியில் அமித் மால்வியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமித் மாள்வியா மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமித் மால்வியா மீதான வழக்கை நேற்று ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலின் இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``உயர் நீதிமன்றம் அமித் மால்வியாவுக்கு எதிரான தி.மு.க-வின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது மட்டுமல்லாமல், இந்தக் கருத்து தி.மு.க-வின் இந்துக்களுக்கு எதிரான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மரபணுவின் பின்னணியில் இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளது. உயர் நீதிமன்றக் கண்டனத்திற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவரை உடனடியாக துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் இந்த நாட்டின் 80 சதவீத மக்கள்தொகைக்கு எதிராக, அதாவது இந்து சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உதயநிதியின் கருத்து இனப்படுகொலைக்கான அழைப்பு. எனக் குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ்: கண்ணாம்மூச்சி ஆடும் டெல்லி; தமிழ்நாட்டில் பிளான் B - ஸ்கெட்ச் யாருக்கு?!

விகடன் 21 Jan 2026 6:38 pm

``இதற்குப் பிறகும் துணை முதல்வர் பதவியில் இருப்பதா? - உதயநிதி ஸ்டாலினை சாடும் பாஜக

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டு சனாதான ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், `சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. டெங்கு, மலேரியாவைப் போல் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் தமிழ்நாட்டின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் படங்களை பதிவிட்டு, சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். அது தொடர்பாக திருச்சியில் அமித் மால்வியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமித் மாள்வியா மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமித் மால்வியா மீதான வழக்கை நேற்று ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலின் இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``உயர் நீதிமன்றம் அமித் மால்வியாவுக்கு எதிரான தி.மு.க-வின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது மட்டுமல்லாமல், இந்தக் கருத்து தி.மு.க-வின் இந்துக்களுக்கு எதிரான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மரபணுவின் பின்னணியில் இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளது. உயர் நீதிமன்றக் கண்டனத்திற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவரை உடனடியாக துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் இந்த நாட்டின் 80 சதவீத மக்கள்தொகைக்கு எதிராக, அதாவது இந்து சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உதயநிதியின் கருத்து இனப்படுகொலைக்கான அழைப்பு. எனக் குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ்: கண்ணாம்மூச்சி ஆடும் டெல்லி; தமிழ்நாட்டில் பிளான் B - ஸ்கெட்ச் யாருக்கு?!

விகடன் 21 Jan 2026 6:38 pm

'தமிழ்நாட்டில் 7, பாஜக ரூட்டில் ஒரு ராஜ்ய சபா சீட்' - விட்டுக்கொடுத்த தினகரனுக்கு டெல்லி `பரிசு'?

'விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' எனச் சொல்லி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான கோபங்களை விட்டுக் கொடுத்து என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வை இணைத்திருக்கிறார் டிடிவி தினகரன். டெல்லியின் பேச்சுக்கு மரியாதைக்கு கொடுத்து கூட்டணிக்கு வந்ததால் அ.ம.மு.க-வுக்கு 'ராஜ்ய சபா சீட்' பரிசாக கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். டிடிவி தினகரன் நம்மிடம் பேசிய அவர்கள், 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினார் டிடிவி தினகரன். '18 சீட் கொடுத்தால் கூட்டணிக்கு வருகிறேன்' என பா.ஜ.க தலைமைக்கு தூதுவிட்டார். பா.ஜ.க முயற்சித்தும்கூட சசிகலா, தினகரன் என யாரும் கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதிக்காட்டியது எடப்பாடி - பன்னீர் தரப்பு. இதனால் அப்செட்டான டிடிவி தினகரன் தே.மு.தி.க உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அவரை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளாததன் விளைவாக அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரிந்து 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவியதோடு ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் இழக்கும் நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு 2026-ல் தி.மு.க-வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்தார் என்றனர். எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரங்கள் குறித்து அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தோம். அதன்பிறகு 2025 ஏப்ரல் மாதம் அ.தி.மு.க என்.டி.ஏ-வுக்குள் வந்தவுடன் 'அ.ம.மு.க கூட்டணியில் இருக்கக்கூடாது' என கருதியது அ.தி.மு.க. எங்களுக்கான முக்கியத்துவம் குறையத்தொடங்கியதும் என்.டி.ஏ-வைவிட்டு விலகினோம். ஆனால் கடந்த மூன்றுமாதமாக எங்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியது டெல்லி. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தினகரன். 'அ.ம.மு.க வேண்டாம்' என முன்பு முரண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக சொன்னார்கள். டெல்லியும் கூட்டணிக்கு வரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து நாங்களும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம். ஆரம்பத்தில் 18 சீட் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. மோடி - அமித் ஷா 10 சீட்டுக்கு மேல் வாய்ப்பில்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியுடன் கலந்தாலோசித்து 7 எம்.எல்.ஏ தொகுதிகளாக ஒப்பந்தமாகியிருக்கிறது. அதோடு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருந்து ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்றனர். கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கினாலும்கூட தனது சொந்த கணக்கிலிருந்து எம்.பி சீட் கொடுத்து அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் இழுத்திருக்கிறது பாஜக என்கிற தகவல் தான் தற்போது அரசியல் மட்டத்தில் ஹாட் டாப்பிக்.!

விகடன் 21 Jan 2026 6:32 pm

'தமிழ்நாட்டில் 7, பாஜக ரூட்டில் ஒரு ராஜ்ய சபா சீட்' - விட்டுக்கொடுத்த தினகரனுக்கு டெல்லி `பரிசு'?

'விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' எனச் சொல்லி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான கோபங்களை விட்டுக் கொடுத்து என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வை இணைத்திருக்கிறார் டிடிவி தினகரன். டெல்லியின் பேச்சுக்கு மரியாதைக்கு கொடுத்து கூட்டணிக்கு வந்ததால் அ.ம.மு.க-வுக்கு 'ராஜ்ய சபா சீட்' பரிசாக கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். டிடிவி தினகரன் நம்மிடம் பேசிய அவர்கள், 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினார் டிடிவி தினகரன். '18 சீட் கொடுத்தால் கூட்டணிக்கு வருகிறேன்' என பா.ஜ.க தலைமைக்கு தூதுவிட்டார். பா.ஜ.க முயற்சித்தும்கூட சசிகலா, தினகரன் என யாரும் கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதிக்காட்டியது எடப்பாடி - பன்னீர் தரப்பு. இதனால் அப்செட்டான டிடிவி தினகரன் தே.மு.தி.க உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அவரை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளாததன் விளைவாக அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரிந்து 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவியதோடு ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் இழக்கும் நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு 2026-ல் தி.மு.க-வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்தார் என்றனர். எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரங்கள் குறித்து அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தோம். அதன்பிறகு 2025 ஏப்ரல் மாதம் அ.தி.மு.க என்.டி.ஏ-வுக்குள் வந்தவுடன் 'அ.ம.மு.க கூட்டணியில் இருக்கக்கூடாது' என கருதியது அ.தி.மு.க. எங்களுக்கான முக்கியத்துவம் குறையத்தொடங்கியதும் என்.டி.ஏ-வைவிட்டு விலகினோம். ஆனால் கடந்த மூன்றுமாதமாக எங்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியது டெல்லி. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தினகரன். 'அ.ம.மு.க வேண்டாம்' என முன்பு முரண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக சொன்னார்கள். டெல்லியும் கூட்டணிக்கு வரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து நாங்களும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம். ஆரம்பத்தில் 18 சீட் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. மோடி - அமித் ஷா 10 சீட்டுக்கு மேல் வாய்ப்பில்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியுடன் கலந்தாலோசித்து 7 எம்.எல்.ஏ தொகுதிகளாக ஒப்பந்தமாகியிருக்கிறது. அதோடு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருந்து ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்றனர். கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கினாலும்கூட தனது சொந்த கணக்கிலிருந்து எம்.பி சீட் கொடுத்து அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் இழுத்திருக்கிறது பாஜக என்கிற தகவல் தான் தற்போது அரசியல் மட்டத்தில் ஹாட் டாப்பிக்.!

விகடன் 21 Jan 2026 6:32 pm

`வைத்திலிங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்!' - திமுக தட்டி தூக்கிய பின்னணி

திமுகவில் வைத்தி! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வர, இன்னும் ஒருசில வாரங்களே இருக்கின்றன. இந்த நிலையில், ஒவ்வொரு முன்னணி கட்சிகளும் தேர்தல் நேரத்தில் வலுசேர்க்க முக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சியில் இணைக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக இருக்கிறது. அதிலும் ஆளும் திமுக தரப்பு தொடர்ச்சியாக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து பெரிய தலைகள் தூக்கிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் அக்கட்சியில் சேர்ந்திருந்த நிலையில், அடுத்ததாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றவர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த சூழலில் அதே ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான வைத்திலிங்கம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அன்பில் மகேஸ், வைத்திலிங்கம் இந்த இணைப்பு பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து வைத்தியலிங்கத்துக்கு நெருங்கிய வட்டாரத்திலும் அறிவாலய வட்டாரத்திலும் விசாரித்தோம். தவெக-வுக்கு இசைவு காட்டவே இல்லை! ஓ.பி.எஸ அணியிலிருந்து இனி எந்த பயனும் இல்லை. 'தேர்தல் நெருங்கும் நேரத்தில், இப்படி எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது எனக்கு மட்டுமல்ல என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லதல்ல' என்று வைத்திலிங்கம் சொல்லிக்கொண்டே இருந்தார். அதிமுகவில் சேர்வதுவே அவரது பிரதான ஆசையாக இருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற நிலையில் வேறு முடிவு எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. த.வெ.க-விலிருந்து தொடர்ச்சியான அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. அண்ணனின் ஆதரவாளர்களும் த.வெ.க-வில் இணைய வலியுறுத்தினார்கள். ஆனால், அதற்கு என்னவோ அவர் இசைவு காட்டவே இல்லை. `மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி? திமுகவின் அசைன்மெண்ட்! இந்த சூழலில் தான் வைத்திலிங்கத்தின் நெருங்கிய உறவினரான திமுக அமைச்சர் அன்பில் மகேஸ் வைத்தலிங்கத்தைத் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். கூடவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் வைத்திலிங்கத்திடம் பேசினார். `திமுக தரப்பில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நாங்கள் செய்துகொடுக்கிறோம். எங்களுடன் வந்துவிடுங்கள்' என்று சொல்லி இருக்கிறார்கள். பதிலுக்கு வைத்தி, `எனக்கு மட்டுமல்ல என்னைச் சேர்ந்தவர்களுக்கும் சீட், கட்சி பதவி எல்லாம் வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். எல்லா கோரிக்கைகளும் சுமுகமாக முடிய, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்திருக்கிறார். கட்சியில் சேர்ந்திருக்கும் அவருக்கு திமுக தரப்பிலிருந்து புதிய அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள். டெல்டாவை பொறுத்தவரை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே சமபலத்தில் இருக்கின்றன. கடந்த தேர்தலைப் பொறுத்தவரை டி.டி.வி தனித்து போட்டியிட்டதால் அதிமுக வாக்குகள் பிரிந்து அது திமுகவுக்குப் பலமாக அமைந்தது. இப்போது, டி.டி.வி என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். அது அதிமுகவுக்குக் கூடுதல் பலம். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் டெல்டாவை பொறுத்தவரை எந்த கட்சியிலிருந்தாலும் வைத்திலிங்கத்துக்கு என்று ஒரு தனி செல்வாக்கு இருக்கிறது. கூடவே ஆளும் கட்சியின் அதிகாரமும் சேர்ந்துகொள்ள டெல்டாவில் அதிமுக தோல்வியைச் சந்திக்கத் தேவையான அனைத்து வேலைகளையும் இப்போதிலிருந்தே தீவிரமாகப் பார்க்கச் சொல்லியிருக்கிறது திமுக தலைமை. வைத்திலிங்கத்தைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் திமுகவில் இணையவுள்ளனர். கூடவே வரும் 26-ம் தேதி தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெறும் திமுக மகளிரணி டெல்டா மண்டல மாநாடு சமயத்தில் தனது ஆதரவாளர்கள் பலரையும் திமுகவில் இணையவைக்க ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார். திமுக தலைமை ஒரு கணக்குப் போட்டு இவருக்கு வேலைகளைக் கொடுத்ததுபோலவே, கூடுதல் தொகுதிகளில் வேலைபார்த்து திமுகவை வெற்றிபெறவைத்தால் வெயிட்டான அமைச்சர் பதவியை வாங்கிவிடலாம் என்று இப்போதிலிருந்தே அதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக இருக்கிறார் என்றார்கள் விளக்கமாக. `மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

விகடன் 21 Jan 2026 5:18 pm

ம.பி: `பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கக் காரணம்..' - MLA பேச்சால் சர்ச்சை; திக்விஜய் சிங் சொன்ன பதில்

மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்படவர் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை ததியாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பாலியல் வன்கொடுமை பட்டியலினப் பெண்களுக்குதான் அதிகம் நடக்கிறது. அதற்கு காரணம், குறிப்பிட்ட சமூக பெண்களை வல்லுறவு செய்வதால், புனித யாத்திரை சென்றதற்கு சமமான புண்ணியம் கிடைப்பதாக மத நூல் ஒன்று கூறுகிறது. யாத்திரை செல்ல முடியாத பட்சத்தில், புண்ணியத்தை சம்பாதிக்க குறிப்பிட்ட சில ஆண்கள் வல்லுறவு கொள்கிறார்கள். இதுபோன்ற மத நம்பிக்கைகள் வல்லுறவு கொள்ள தூண்டுகின்றன என்றார். இந்த விவகாரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா மேலும், எம்.எல்.ஏ பூல் சிங் பரையா மீது ராகுல் காந்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், ``பூல் சிங் பரையா பேசியது தவறாக சித்தரிக்கப்படுகிறது. பூல் சிங் பரையா கூறியது பட்னா பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் முன்னாள் தலைவரும், பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஹரி மோகன் ஜா எழுதிய ஒரு புத்தகத்திலிருந்துதான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இந்தக் கருத்து நடவடிக்கை எடுக்கத் தகுந்த கருத்து என்றால், அதை எழுதியவர் மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றார். அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! - ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!

விகடன் 21 Jan 2026 4:53 pm

ம.பி: `பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கக் காரணம்..' - MLA பேச்சால் சர்ச்சை; திக்விஜய் சிங் சொன்ன பதில்

மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்படவர் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை ததியாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பாலியல் வன்கொடுமை பட்டியலினப் பெண்களுக்குதான் அதிகம் நடக்கிறது. அதற்கு காரணம், குறிப்பிட்ட சமூக பெண்களை வல்லுறவு செய்வதால், புனித யாத்திரை சென்றதற்கு சமமான புண்ணியம் கிடைப்பதாக மத நூல் ஒன்று கூறுகிறது. யாத்திரை செல்ல முடியாத பட்சத்தில், புண்ணியத்தை சம்பாதிக்க குறிப்பிட்ட சில ஆண்கள் வல்லுறவு கொள்கிறார்கள். இதுபோன்ற மத நம்பிக்கைகள் வல்லுறவு கொள்ள தூண்டுகின்றன என்றார். இந்த விவகாரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா மேலும், எம்.எல்.ஏ பூல் சிங் பரையா மீது ராகுல் காந்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், ``பூல் சிங் பரையா பேசியது தவறாக சித்தரிக்கப்படுகிறது. பூல் சிங் பரையா கூறியது பட்னா பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் முன்னாள் தலைவரும், பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஹரி மோகன் ஜா எழுதிய ஒரு புத்தகத்திலிருந்துதான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இந்தக் கருத்து நடவடிக்கை எடுக்கத் தகுந்த கருத்து என்றால், அதை எழுதியவர் மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றார். அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! - ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!

விகடன் 21 Jan 2026 4:53 pm

Sasikala: ``திமுகவை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன் - சசிகலா

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை பரபரப்பாக தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க சார்பில் என்.டி.ஏ கூட்டணிக்கான பொறுப்பாளராக தமிழ்நாடு வந்திருக்கும் பியூஸ் கோயல் முன்னிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தார். அவரை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்று வாழ்த்தினார். அதேப் போல ஓ.பி.எஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ-வுமான வைத்திலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுக-வில் இணைந்துகொண்டார். இந்த நிலையில், சசிகலா தன் எக்ஸ் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். வைத்திலிங்கம் - துரதிருஷ்டவசமானது! அவர், ``கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். வைத்திலிங்கம்- சசிகலா- திவாகரன் இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை.  அதிமுக என்ற பேரியக்கம் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். ஜெயலலிதா “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்தார்கள். மன்னிக்க முடியாத செயல் ஆனால், இன்றைக்கு தங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக்கொண்டவர்கள் இயக்கத்தை காப்பாற்ற முடியாமல் தோல்வியடைந்து இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான்  நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஸ்டாலின் இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும். அம்மா அவர்களது ஆட்சி காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் தான் நம்மை தேடி வந்து இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் பயணித்து வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நடப்பது ஏன் என்று அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். நம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு செல்கின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது ஜெயலலிதா காலங்களில் திமுகவினரின் சித்து விளையாட்டுகள், முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து இந்த கட்சி அழிந்துவிடாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடி காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கின்றவைகளை பார்க்கும்பொழுது நம் இருபெரும் தலைவர்கள் இந்த கட்சிக்காக பட்ட துன்பங்கள் தான் நினைவிற்கு வருகிறது. இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது. சசிகலா இந்த மக்கள் விரோத மன்னர் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவது தவிர வேறொன்றுமில்லை. எனது வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்துவிடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் அவர்கள் `திமுக ஒரு தீயசக்தி' என்பதை மக்களிடத்தில் தோலுரித்து காட்டிய அதே கொள்கைப்பிடிப்பினையும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சுயமரியாதையினையும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன். புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள்,  ஒன்றிணைந்து களம் காண்போம், வென்று காட்டுவோம், எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

விகடன் 21 Jan 2026 4:49 pm

`ராகுல் காந்தி இல்லையென்றால் இந்தியாவை விற்றுவிடுவார்கள்!'– பாஜகவை சீண்டிய காங்கிரஸ் எம்.பி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், ``புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு கடந்த ஐந்து மாதங்களாக இலவச அரிசியை வழங்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்திற்கான கூலி 350 ரூபாய். ஆனால் இங்கு பயனாளிகளுக்கு 320 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது. தற்போது நடைபெறும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அகற்றப்பட வேண்டும். புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி வந்ததில் இருந்து ஆண்டுக்கு 2,000 பேர் என மொத்தமாக 10,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கின்றனர். ஆனால் வெறும் 2,400 பேருக்குத்தான் இவர்கள் வேலை கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாகத்தான் 12 நாட்கள் பாதயாத்திரை நடத்த இருக்கிறோம். முதல் கட்டமாக 21.01.2026 அன்று தொடங்கும் இந்தப் பாத யாத்திரையை 23 தொகுதிகளில் நடத்த இருக்கிறோம். பிரதமர் மோடியை எதிர்க்கும் துணிச்சல் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே இருக்கிறது. அவர் மட்டும் இல்லையென்றால் அவர்கள் இந்தியாவையே விற்றுவிடுவார்கள் என்றார். புதுச்சேரி: ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி... - ரங்கசாமி மீது காங்கிரஸ் எம்.பி., தாக்கு

விகடன் 21 Jan 2026 2:29 pm

NDA கூட்டணி: நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம் - வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு டிடிவி தினகரன் நன்றி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமமுக தலைவர் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாகப் போராடியது. ஒருகட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அமமுக-வைப் போட்டியிட வைக்கத் தீர்மானித்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். என்.டி.ஏ கூட்டணி அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமமுக: அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை- TTV தினகரன் சொல்வது என்ன? மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தி.மு.க குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனப் பதிவிட்டிருக்கிறார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

விகடன் 21 Jan 2026 2:26 pm

`மாப்பிள்ளை'அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

வைத்திலிங்கம் திமுக-வில் இணையப்போவதாக பேசப்பட்டதை, அவரே உண்மையாக்கியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் வைத்திலிங்கம் கார் அறிவாலயம் நோக்கி சென்றது. ``அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை, அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார். அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இனைந்திருக்கிறேன். தேர்தல் வருவதால் சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ்ஸை விட்டு விலகி வந்துள்ளேன். எனக்கு தனிப்பட்ட முறையில் அதிமுக-வில் இருந்து அழைப்பு வந்தது. அதை நான் நிராகரித்து விட்டேன். தஞ்சாவூரில் இணைப்பு விழா நடக்க உள்ளது என முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு தெரிவித்துள்ளார் வைத்திலிங்கம். அன்பில் மகேஸ், வைத்திலிங்கம் வைத்திலிங்கம் சேர்வது முடிவான பின்னரும், அது அரசியல் களத்தில் பேசு பொருளாக ஆக வேண்டும் என்பதற்காக வைத்திலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்களும் திமுக-வில் இணைவதை தாமதப்படுத்தி வந்தனர். இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியை இறுதி செய்ய பாஜகவின் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்திருக்கும் இந்த நாளில், இணைப்பை செய்திருக்கிறார்கள். அன்பில் போட்ட ஸ்கெட்ச் ; செந்தில் பாலாஜி அழுத்தம்! அன்பில் போட்ட ஸ்கெட்ச்சுக்கு, செந்தில் பாலாஜி அழுத்தம் கொடுக்க டெல்டாவின் முகமாக அறியப்பட்ட வைத்திலிஙம் விக்கெட் தற்போது திமுகவிற்குள் விழுந்திருக்கிறது. என்ன நடந்தது, ஏன் வைத்திலிங்கம் தி.மு.க-விற்கு சென்றார் என டெல்டா அரசியலில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து டெல்டா மாவட்டங்களில் அரசியல் தெரிந்த சிலரிடம் பேசினோம், ``வைத்திலிங்கம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வருவதற்கு பேசப்பட்டது. தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் நின்று வந்த வைத்திலிங்கம் கூட்டணியில் சீட் பெற்றும் மாற்று சின்னத்தில் நிற்பதை விரும்பவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. சில காரணங்களால் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், வைத்திலிஙத்திற்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு நீடித்தது. ஒ பன்னீர் செல்வம் அதிருப்தியில் இருக்கும் வைத்திலிங்கத்தை தவெக-வுக்கு இழுப்பதற்கு செங்கோட்டையன் முயன்றார். உங்கள் கண்ட்ரோலில் சில மாவட்டங்களை தருகிறோம் என்றெல்லாம் பேசப்பட்டது. கிட்டதட்ட செங்கோட்டையன் அழைப்பை ஏற்கும் மனநிலையில் வைத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஜனநாயகன் படப்பிரச்னை, சிபிஐ விசாரணை போன்றவற்றால் விஜயிடமிருந்து சிக்னல் வருவதற்கு தாமதமானது. மறுபக்கம், வைத்திலிங்கமும் அமைச்சர் அன்பில் மகேஸ் மனைவியும் நெருங்கிய உறவினர்கள். நிகழ்ச்சிகளில் வைத்திலிங்கம், அன்பில் மகேஸை பார்த்தால் மாப்பிள்ளை என்று தான் அன்பிலை அழைப்பாராம். தீவிர அதிமுக விசுவாசி டு திமுக இந்த உறவை பாலமாக்கி வைத்தியை திமுக-வுக்கு இழுப்பதற்கான முயற்சியை அன்பில் மகேஸ் மேற்கொண்டார். அதற்கான தேவையும் இருந்ததாக சொல்கிறார்கள். தஞ்சாவூரில் குறிப்பாக ஒரத்தநாட்டில் ஆளுமை மிக்க நிர்வாகிகள் திமுகவில் இல்லை என தலைமை கருதியது. வைத்திலிங்கம் மூலம் இதை சரி செய்வதற்கே அவருக்கு வலை விரிக்கப்பட்டதாம். தஞ்சாவூரில் விவசாயிகளை திரட்டி விழா எடுத்த வைத்திலிங்கம், `பொன்னியின் செல்வி' என்ற பட்டத்தை ஜெயலலிதாவிற்கு வழங்கினார். அந்த அளவிற்கு ஜெயலலிதா விசுவாசியாக இருந்தார். ஒரு முறை சட்டமன்ற விவாதத்தில் ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்தார். அந்த சமயத்தில் பேராவூரணியில் நடந்த கூட்டம் ஒன்றில், வைத்திலிங்கத்திற்கு சவால் விட்டார் ஸ்டாலின். தீவிர அதிமுக விசுவாசியாக இருந்தவர் வைத்தி. வைத்திலிங்கம் இவை திமுக-வுக்கு சென்றால் தனக்கு சங்கடத்தை உருவாக்கும் என கருதியவர் மனக்குழப்பத்தில் இருந்தார். அப்போது, செந்தில் பாலாஜி, `ஒரு வேளை நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்று தேர்தலில் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ-வாகத்தான் இருப்பீர்கள், எங்க பக்கம் வாங்க அமைச்சர் தருகிறோம். முதல்வரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்' என அவர் மனதை கரைத்துள்ளார். அதன் பிறகு வைத்திலிங்கத்தை சந்தித்த அன்பில் மகேஸ், போன் மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் வைத்தியை பேச வைத்து தயக்கத்தை போக்கியுள்ளார். அப்போது, ``அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வளவு மரியாதை தருகிறோம் என்பது தங்களுக்கு தெரியும், நீங்கள் தைரியமாக வாருங்கள், உங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றாராம். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்! அதன் பிறகே திமுகவில் இணையும் முடிவை தீர்க்கமாக எடுத்தாராம். கடந்த பத்து நாட்களாக திரைமறைவில் நடந்தவை இன்று பொதுவெளியில் அரங்கேறியுள்ளது. தன் மகன் பிரபு உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவி, ஒரத்தநாடு தொகுதியில் சீட், ஆட்சி அமைத்தால் அமைச்சர் என பல்வேறு டிமாண்ட் வைத்தி தரப்பில் வைக்கப்பட்டதாம். இதற்கு திமுக தலைமை ஓகே சொன்னதாம். ஆனாலும் வைத்தி இணைவது முதல்கட்ட நிர்வாகிகள் பலருக்கே தெரியாமல் ரகசியமாக வைத்திருந்துள்ளனர் திமுக தலைமை. நேற்று இரவு தான் முக்கிய நிர்வாகிகளுக்கு சொல்லியுள்ளனர். நல்ல நேரத்திற்குள் இணைய வேண்டும் என விரும்பியதால் காலை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அறிவாலயம் வந்து விட்டார்களாம். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆனால் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் அறிவாலயம் செல்வதற்கு தாமதமாகி விட்டதாம். ஸ்டாலின் காத்திருக்கிறார் என அவருக்கு தகவல் சொல்லப்பட்டதும் அரக்க பரக்க ஓடியவர் ட்ராபிக்கில் சிக்கி கொண்டேன் என தாமதத்திற்கு காரணம் சொன்னாராம் சந்திரசேகரன். இணைப்பு வைபவம் முடிந்ததும் தன் ஆதரவாளர்களை தஞ்சாவூரில் நடைபெறும் இணைப்பு விழாவில் சேர்ப்பதற்கான பணிகளில் மூழ்கி விட்டார் வைத்தி என்கிறார்கள். 'எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... அறிவாலயம் போகும் வைத்திலிங்கம்?' - உச்சக்கட்ட பரபரப்பில் டெல்டா! ``வைத்தி எடுத்திருக்கும் முடிவால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சொல்லப்போனால் எங்களுக்கு ரூட் கிளியர் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்கள் அதிமுகவினர். வைத்திலிங்கம் திமுக-விற்கு சென்றதை விரும்பாத ஆதரவாளர்களை மீண்டும் அதிமுகவில் இழுப்பதற்கான பணிகள் நடக்கிறது. தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடப்பதற்கு முன் அவரது ஆதரவாளர்கள் பலரை அதிமுகவில் இணைத்து வைத்திக்கு அதிர்ச்சி தரக்குடிய நிகழ்வை நிகழ்த்துவதற்காக எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார் என்கிறார்கள்.!

விகடன் 21 Jan 2026 2:19 pm

அதை செந்தில் பாலாஜி நிரூபித்தால், அரசியலை விட்டு விலகி விடுகிறேன் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழகச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி, தி.மு.க அரசுதான் கதவணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததாகப் பேசி வருகிறார். அ.தி.மு.க அரசு திட்டத்தை அறிவித்தவுடன் ரூ. 420 நிதியை ஒதுக்கீடு செய்தது. தி.மு.க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது என்று செந்தில் பாலாஜி நிரூபித்தால், தமிழக அரசியலை விட்டு நான் விலகி விடுகிறேன். தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேசுவதெல்லாம் பொய்யாக உள்ளது. அதனை மக்கள் நம்ப மாட்டார்கள் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராகி விட்டார்கள் என்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும், யார் யாருடன் போட்டி என தெரியும் - விஜய்க்கு செந்தில் பாலாஜி பதில்

விகடன் 21 Jan 2026 1:29 pm

``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இரண்டு முக்கியக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் தீவிரமாக களமாடி வருகின்றனர். அதிமுக எடப்பாடி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என மூன்றாக உடைந்ததிலிருந்து, துரோகி எனக் மூன்று தரப்பும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். என்.டி.ஏ கூட்டணி எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இணையமாட்டேன் எனப் பேட்டியளித்திருந்தார் டிடிவி தினகரன். துரோகிகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டோம் என டிடிவி, ஓ.பி.எஸ் குறித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டிடிவி-யை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாக போராடியது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் வென்ற நிலையில், மற்றொரு திட்டத்தோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நெருங்கியது தேசிய பா.ஜ.க தலைமை. அதன்படி, எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் அமுமுக-வை போட்டியிட வைத்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டு, சம்மதிக்க வைத்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ``தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனப் பதிவிட்டிருக்கிறார். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!

விகடன் 21 Jan 2026 12:58 pm

``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இரண்டு முக்கியக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் தீவிரமாக களமாடி வருகின்றனர். அதிமுக எடப்பாடி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என மூன்றாக உடைந்ததிலிருந்து, துரோகி எனக் மூன்று தரப்பும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். என்.டி.ஏ கூட்டணி எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இணையமாட்டேன் எனப் பேட்டியளித்திருந்தார் டிடிவி தினகரன். துரோகிகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டோம் என டிடிவி, ஓ.பி.எஸ் குறித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டிடிவி-யை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாக போராடியது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் வென்ற நிலையில், மற்றொரு திட்டத்தோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நெருங்கியது தேசிய பா.ஜ.க தலைமை. அதன்படி, எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் அமுமுக-வை போட்டியிட வைத்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டு, சம்மதிக்க வைத்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ``தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனப் பதிவிட்டிருக்கிறார். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!

விகடன் 21 Jan 2026 12:58 pm

'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்

என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். டிடிவி பியூஸ் கோயல் பேசியதாவது, ``தனிப்பட்ட முறையில் தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஊழல் நிறைந்த நிர்வாக திறனற்ற திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக ஒரு குடும்பமாக செயல்படுவோம். ஆன்டி இந்தியா கூட்டணியை தோற்கடிப்போம் ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்' என்றார். NDA டிடிவி தினகரன் பேசுகையில், 'மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை' என்றார்.

விகடன் 21 Jan 2026 12:50 pm

'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்

என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். டிடிவி பியூஸ் கோயல் பேசியதாவது, ``தனிப்பட்ட முறையில் தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஊழல் நிறைந்த நிர்வாக திறனற்ற திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக ஒரு குடும்பமாக செயல்படுவோம். ஆன்டி இந்தியா கூட்டணியை தோற்கடிப்போம் ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்' என்றார். NDA டிடிவி தினகரன் பேசுகையில், 'மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை' என்றார்.

விகடன் 21 Jan 2026 12:50 pm

Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?

முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... ட்ரம்ப் 'அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்' என கடுமையாக அடம்பிடிக்கிறார். அமெரிக்காவின் 'பாதுகாப்பு' மட்டும் ட்ரம்பின் இந்த அடத்திற்கு காரணம் அல்ல. ட்ரம்பிற்கு ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்? கிரீன்லேண்டின் இருப்பிடமும்... கிரீன்லேண்டில் இருக்கும் இருப்பும் இதற்கு முக்கிய காரணம். புரியவில்லையா...? அதாவது கிரீன்லேண்ட் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு நடுவில் உள்ளது. கிரீன்லேண்ட் ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! அதனால், கிரீன்லேண்டைப் பிடித்தால், அமெரிக்காவில் இருந்து வெளியே செல்லும் வர்த்தக பொருள்கள், அமெரிக்காவிற்குள் வரும் வர்த்தக பொருள்கள் என அனைத்திற்கும் அந்த நாடு ஈசியான பாதையாக இருக்கும். இதன் மூலம் கால நேரத்தையும், செலவுகளையும் அதிகம் குறைக்கலாம். இன்னொன்று, அங்கு லித்தியம், நியோடைமியம் போன்ற கனிம பொருள்கள் கொட்டி கிடக்கின்றன. இவை ஸ்மார்ட் போன், எலெக்ட்ரிக் வாகனங்கள்... போன்ற இன்றைய அப்-டு-டேட் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்கா கைப்பற்றுவதால் உற்பத்தி மற்றும் வணிகத்தில் லாபம் பெறலாம். அடுத்தது, கிரீன்லேண்டில் எண்ணெய் வளம் உள்ளது. ஏற்கெனவே, வெனிசுலாவை ட்ரம்ப் எண்ணெய் வளத்திற்காக தான் பிடித்துள்ளார் என்பது உலகம் அறிந்த ரகசியம். அப்போது, அவர் கிரீன்லேண்டை விட்டு வைக்க வாய்ப்பே இல்லை. கடைசியாக... ஆனால், முக்கியமாக... ட்ரம்ப் அரசியல்வாதி என்பதை தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு பிசினஸ்மேன். கிரீன்லேண்டை அவர் ஒரு 'பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக' பார்க்கிறார். கிரீன்லேண்டை அடைவது மூலம் அமெரிக்காவை இன்னும் பெரிதாக்கலாம். அங்கேயும் முதலீடுகளைக் குவிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். இத்தனை ப்ளஸ்கள் கொட்டி உள்ள கிரீன்லேண்டை ட்ரம்ப் 'மிஸ்' செய்வாரா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. NATO ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth கிரீன்லேண்டை விட்டுத்தராத நாடுகள்..! தற்போது டென்மார்க்கிற்கு கீழ் உள்ளது கிரீன்லேண்ட். டென்மார்க் கிரீன்லேண்டை விட்டுத் தருவதாக இல்லை. கிரீன்லேண்ட் தாங்கள் தனி நாடாக இயங்கவே விரும்புகிறது. அதனால், நேட்டோ நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ட்ரம்பின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றனர். இவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் 1-ம் தேதியில் இருந்து, நேட்டோ நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளின் மீது 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார். வரும் ஜூனுக்கு பின்னும், இவர்கள் இழுத்தடித்து கொண்டிருந்தால், இந்த வரி 25 சதவிகிதமாக உயரும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால், இந்த நாடுகளும் விட்டுத் தருவதாக இல்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று, இந்த விஷயத்தைக் கையாள்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், நேட்டோ மற்றும் ஐரோப்ப நாடுகள் இணைந்து அமெரிக்காவின் மீது வரி விதிக்கவும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ட்ரம்ப் கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன? ட்ரம்ப் பகிர்ந்த புகைப்படம் இந்த நிலையில் தான், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், கிரீன்லேண்டில் ட்ரம்ப் அமெரிக்க கொடியை நடுவது போலவும். கிரீன்லேண்ட் - அமெரிக்காவின் பிராந்தியம், 2026 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில், ட்ரம்புடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க் ரூபியோவும் இருக்கிறார்கள். Davos அஜென்டா தற்போது டாவோஸில் உலக பொருளாதார மன்றம் நடைபெற்று வருகிறது. இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ட்ரம்பும் கலந்துகொள்ள இன்று சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை தாண்டி, அங்கு வந்துள்ள உலகத் தலைவர்களிடம் கிரீன்லேண்ட் குறித்து பேச வேண்டும் என்பது ட்ரம்பின் முக்கிய அஜென்டா என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். 'இது எதுவரை போகும்?' என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.! வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

விகடன் 21 Jan 2026 12:40 pm

Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?

முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... ட்ரம்ப் 'அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்' என கடுமையாக அடம்பிடிக்கிறார். அமெரிக்காவின் 'பாதுகாப்பு' மட்டும் ட்ரம்பின் இந்த அடத்திற்கு காரணம் அல்ல. ட்ரம்பிற்கு ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்? கிரீன்லேண்டின் இருப்பிடமும்... கிரீன்லேண்டில் இருக்கும் இருப்பும் இதற்கு முக்கிய காரணம். புரியவில்லையா...? அதாவது கிரீன்லேண்ட் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு நடுவில் உள்ளது. கிரீன்லேண்ட் ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! அதனால், கிரீன்லேண்டைப் பிடித்தால், அமெரிக்காவில் இருந்து வெளியே செல்லும் வர்த்தக பொருள்கள், அமெரிக்காவிற்குள் வரும் வர்த்தக பொருள்கள் என அனைத்திற்கும் அந்த நாடு ஈசியான பாதையாக இருக்கும். இதன் மூலம் கால நேரத்தையும், செலவுகளையும் அதிகம் குறைக்கலாம். இன்னொன்று, அங்கு லித்தியம், நியோடைமியம் போன்ற கனிம பொருள்கள் கொட்டி கிடக்கின்றன. இவை ஸ்மார்ட் போன், எலெக்ட்ரிக் வாகனங்கள்... போன்ற இன்றைய அப்-டு-டேட் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்கா கைப்பற்றுவதால் உற்பத்தி மற்றும் வணிகத்தில் லாபம் பெறலாம். அடுத்தது, கிரீன்லேண்டில் எண்ணெய் வளம் உள்ளது. ஏற்கெனவே, வெனிசுலாவை ட்ரம்ப் எண்ணெய் வளத்திற்காக தான் பிடித்துள்ளார் என்பது உலகம் அறிந்த ரகசியம். அப்போது, அவர் கிரீன்லேண்டை விட்டு வைக்க வாய்ப்பே இல்லை. கடைசியாக... ஆனால், முக்கியமாக... ட்ரம்ப் அரசியல்வாதி என்பதை தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு பிசினஸ்மேன். கிரீன்லேண்டை அவர் ஒரு 'பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக' பார்க்கிறார். கிரீன்லேண்டை அடைவது மூலம் அமெரிக்காவை இன்னும் பெரிதாக்கலாம். அங்கேயும் முதலீடுகளைக் குவிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். இத்தனை ப்ளஸ்கள் கொட்டி உள்ள கிரீன்லேண்டை ட்ரம்ப் 'மிஸ்' செய்வாரா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. NATO ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth கிரீன்லேண்டை விட்டுத்தராத நாடுகள்..! தற்போது டென்மார்க்கிற்கு கீழ் உள்ளது கிரீன்லேண்ட். டென்மார்க் கிரீன்லேண்டை விட்டுத் தருவதாக இல்லை. கிரீன்லேண்ட் தாங்கள் தனி நாடாக இயங்கவே விரும்புகிறது. அதனால், நேட்டோ நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ட்ரம்பின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றனர். இவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் 1-ம் தேதியில் இருந்து, நேட்டோ நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளின் மீது 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார். வரும் ஜூனுக்கு பின்னும், இவர்கள் இழுத்தடித்து கொண்டிருந்தால், இந்த வரி 25 சதவிகிதமாக உயரும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால், இந்த நாடுகளும் விட்டுத் தருவதாக இல்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று, இந்த விஷயத்தைக் கையாள்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், நேட்டோ மற்றும் ஐரோப்ப நாடுகள் இணைந்து அமெரிக்காவின் மீது வரி விதிக்கவும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ட்ரம்ப் கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன? ட்ரம்ப் பகிர்ந்த புகைப்படம் இந்த நிலையில் தான், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், கிரீன்லேண்டில் ட்ரம்ப் அமெரிக்க கொடியை நடுவது போலவும். கிரீன்லேண்ட் - அமெரிக்காவின் பிராந்தியம், 2026 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில், ட்ரம்புடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க் ரூபியோவும் இருக்கிறார்கள். Davos அஜென்டா தற்போது டாவோஸில் உலக பொருளாதார மன்றம் நடைபெற்று வருகிறது. இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ட்ரம்பும் கலந்துகொள்ள இன்று சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை தாண்டி, அங்கு வந்துள்ள உலகத் தலைவர்களிடம் கிரீன்லேண்ட் குறித்து பேச வேண்டும் என்பது ட்ரம்பின் முக்கிய அஜென்டா என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். 'இது எதுவரை போகும்?' என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.! வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

விகடன் 21 Jan 2026 12:40 pm

`லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணை, மனைவியாக அங்கீகரிக்க உரிமை' - மதுரை ஐகோர்ட் உத்தரவு சொல்வதென்ன?

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.  இருவருடைய காதலையும் பெற்றோர்கள் ஏற்று கொள்ளவில்லை. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இதையடுத்து பெண் மாயமானதாக பெண்ணின் தந்தை புகாரளித்ததால் பெண்ணை அவரின் வீட்டில் ஒப்படைத்தார் பிரபாகரன். கலப்புத் திருமணம் செய்துகொண்டால், இருவரையும் கொன்றுவிடுவோம் என பிரபாகரனின் உறவினர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பிரபாகரன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் உறவு வைத்து விட்டு ஏமாற்றியதாக பிரபாகரன் மீது அந்த பெண் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி கூறியதாவது, “மனுதாரர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் ஏமாற்றியுள்ளார். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறார். லிவ் இன் ரிலேஷன்ஷிப் தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென்று பெண்களின் குணநலன்களைக் குற்றம்சாட்டி வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.  இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீர்வாக அமையாத போது, ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது. பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவு கொண்டதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறி மறுத்து விட்டார். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்னையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. நீதிமன்றம் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனைவியாக அங்கீகரிக்கப்பட உரிமை உண்டு. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதற்காக அவர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிய வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.

விகடன் 21 Jan 2026 12:05 pm

OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது. அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கம். அதிமுகவின் சீனியர், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என அதிமுகவின் மிக முக்கியமானவராக இருந்தவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா Vs ஓ.பன்னீர்செல்வம் என்கிற நிலை வந்தபோது, இவர் ஓ.பி.எஸ்ஸை டிக் செய்தார். வைத்திலிங்கம் ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி பின்னர் ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்தபோதும், ஓ.பி.எஸ்ஸிற்குத் தூணாகவே நின்றார். இ.பி.எஸ், ஓ.பி.எஸிக்குத் தலைமைச் சண்டை வந்து இருவரும் பிரிய, அப்போது ஓ.பி.எஸ்ஸுடனேயே தொடர்ந்தார். ஆனால், இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார் வைத்திலிங்கம். இன்று காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் இவர். அடுத்தது, அறிவாலயம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்துள்ளார். அதன் பின், அவர் பேசியதாவது... அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவது சிறப்பானதாக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செய்து வருகிறார் முதலமைச்சர். அதிமுகவில் இருந்து விலகினாலும், அண்ணா தோற்றுவித்த தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன். தேர்தல் விரைவில் வருகிறது. முடிவுகளைச் சீக்கிரம் எடுக்க வேண்டும். ஆனால், அது கால தாமதமானது. அதனால், ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE அதிமுக சுதந்திரமாகச் செயல்படவில்லை. சர்வாதிகரமாகச் செயல்படுகிறது. ஓ.பி.எஸ் திமுகவில் இணைவாரா என்பது குறித்து அவரைத்தான் கேட்க வேண்டும். என்னைத் தனிப்பட்ட முறையில், அதிமுகவில் இணைய அழைத்தார்கள். ஆனால், அதிமுக ஒட்டுமொத்தமாக ஒன்றாக இணைந்தால்தான், அதிமுகவில் சேருவேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு இப்போது தேவை திமுக என்று பேசியுள்ளார். மருது அழகுராஜ், அன்வார் ராஜா, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் வரிசையில் தற்போது வைத்திலிங்கம். அடுத்து யாரோ?

விகடன் 21 Jan 2026 11:29 am