மிரட்டும் கல்குவாரி MLA-க்கள் - கண்டுகொள்ளாத CM Stalin | BJP EPS ADMK Vijay TVK | IPS Vikatan
மிரட்டும் கல்குவாரி MLA-க்கள் - கண்டுகொள்ளாத CM Stalin | BJP EPS ADMK Vijay TVK | IPS Vikatan
உலகின் அழிவு நெருங்குகிறது - எச்சரிக்கும் Dooms Day Clock | Decode
உலகின் அழிவு நெருங்குகிறது - எச்சரிக்கும் Dooms Day Clock | Decode
புதிய வியூகத்தைக் கையிலெடுக்கும் திமுக - திருப்போரூர் திட்டம் என்ன?
ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற வேகத்தில் அடுத்தடுத்த செயல்பாடுகளில் தீவிரம் காட்டிவருகிறது ஆளும் தரப்பான தி.மு.க. தேர்தலுக்கு முன்பான தேர்தல் பணிகளில் அந்தக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாட்டை நடத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே இளைஞர் அணியின் மண்டல மாநாடு, மண்டல பெண்கள் மாநாடு என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி வரும் தி.மு.க, இப்போது வாக்குச்சாவடி முகவர்களுக்குத் தேர்தல் வியூகங்களைப் பற்றி விளக்கம் அளிக்க அடுத்த மாநாட்டினை நடத்த உள்ளது. அதில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான புதிய யுக்தியையும் தி.மு.க கையில் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்கும் வாக்குமுகவர்களே தேர்தல் களத்தின் அடிப்படை பணியாளர்கள். அவர்களை சரியான விதத்தில் பணியமர்த்தும் கட்சிகளே தேர்தல் நாள் அன்று தங்கள் தரப்பு வாக்குகளை முழுமையாகக் கைப்பற்ற முடியும் என்பதால் அனைத்து கட்சிகளுமே, வாக்குச்சாவடி முகவர்கள் விஷயத்தில் உஷாராக இருப்பது வழக்கம். எனவேதான் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள், பாக முகவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்த உள்ளது. திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் இது குறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, “தேர்தல் வேலைகளை தி.மு.க இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. மாநாடுகள் எல்லாம் ஒருபுறம் என்றாலும், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாக முகவர்களை சரி செய்யும் வேலைகளைத்தான் தற்போது தலைமை மேற்கொண்டுவகிறது. இந்த முறை த.வெ.க வேறு களத்தில் இருப்பதால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகளை குறிவைத்து தி.மு.க வேலை செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நுாறு வாக்குகளுக்கு ஒரு பாக முகவர் என்கிற கணக்கில் ஆட்களை நியமனம் செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து நுாறு வாக்காளர்களை ஒரு பாகவர் முகவர் கண்காணித்து அவர்களை தி.மு.க-வுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வைக்கும் வேலையை இந்த பாக முகவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வாக்காளர்கள் விவரங்களை வைத்து பாக முகவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின் இந்த பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடுதான் திருப்போரூரில் நடக்க உள்ளது. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களை இந்த மாநாட்டிற்கு அழைக்க உள்ளனர். இதன் தொடர்ச்சியாக திருப்பத்துார், மதுரை, கோவை என அடுத்த நான்கு இடங்களுக்கான மாநாடுகள் பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளது, தி.மு.க தலைமை. இந்த மாநாடுகள் நிறைவடைந்த பிறகே திருச்சியில் மாநில மாநாடு மார்ச்-8ம் தேதி அன்று நடக்க உள்ளது என்றனர். தி.மு.க-வின் இந்த வியூகங்கள் குறித்து மண்டல வாரியாக தி.மு.க வில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். திருப்போரூர் மாநாடு முடியும் முன்பே அடுத்த மூன்று மாநாடுகளுக்கான இடங்களையும் தேர்வு செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்கு இடையில் மகளிர் மாநாடு தென் மண்டலத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. அந்த மாநாடு முடிந்த கையோடு பாக முகவர்கள்,வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு, அடுத்து மாநில மாநாடு என வரிசையாக மாநாடுகள் நடக்க இருப்பதால், நிர்வாகிகளுக்குப் பெரும் பணிச்சுமையும் ஏற்படுகிறது என்கிற புலம்பலும் தி.மு.க நிர்வாகிள் மத்தியில் உள்ளது.
புதிய வியூகத்தைக் கையிலெடுக்கும் திமுக - திருப்போரூர் திட்டம் என்ன?
ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற வேகத்தில் அடுத்தடுத்த செயல்பாடுகளில் தீவிரம் காட்டிவருகிறது ஆளும் தரப்பான தி.மு.க. தேர்தலுக்கு முன்பான தேர்தல் பணிகளில் அந்தக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாட்டை நடத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே இளைஞர் அணியின் மண்டல மாநாடு, மண்டல பெண்கள் மாநாடு என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி வரும் தி.மு.க, இப்போது வாக்குச்சாவடி முகவர்களுக்குத் தேர்தல் வியூகங்களைப் பற்றி விளக்கம் அளிக்க அடுத்த மாநாட்டினை நடத்த உள்ளது. அதில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான புதிய யுக்தியையும் தி.மு.க கையில் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்கும் வாக்குமுகவர்களே தேர்தல் களத்தின் அடிப்படை பணியாளர்கள். அவர்களை சரியான விதத்தில் பணியமர்த்தும் கட்சிகளே தேர்தல் நாள் அன்று தங்கள் தரப்பு வாக்குகளை முழுமையாகக் கைப்பற்ற முடியும் என்பதால் அனைத்து கட்சிகளுமே, வாக்குச்சாவடி முகவர்கள் விஷயத்தில் உஷாராக இருப்பது வழக்கம். எனவேதான் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள், பாக முகவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்த உள்ளது. திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் இது குறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, “தேர்தல் வேலைகளை தி.மு.க இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. மாநாடுகள் எல்லாம் ஒருபுறம் என்றாலும், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாக முகவர்களை சரி செய்யும் வேலைகளைத்தான் தற்போது தலைமை மேற்கொண்டுவகிறது. இந்த முறை த.வெ.க வேறு களத்தில் இருப்பதால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகளை குறிவைத்து தி.மு.க வேலை செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நுாறு வாக்குகளுக்கு ஒரு பாக முகவர் என்கிற கணக்கில் ஆட்களை நியமனம் செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து நுாறு வாக்காளர்களை ஒரு பாகவர் முகவர் கண்காணித்து அவர்களை தி.மு.க-வுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வைக்கும் வேலையை இந்த பாக முகவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வாக்காளர்கள் விவரங்களை வைத்து பாக முகவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின் இந்த பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடுதான் திருப்போரூரில் நடக்க உள்ளது. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களை இந்த மாநாட்டிற்கு அழைக்க உள்ளனர். இதன் தொடர்ச்சியாக திருப்பத்துார், மதுரை, கோவை என அடுத்த நான்கு இடங்களுக்கான மாநாடுகள் பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளது, தி.மு.க தலைமை. இந்த மாநாடுகள் நிறைவடைந்த பிறகே திருச்சியில் மாநில மாநாடு மார்ச்-8ம் தேதி அன்று நடக்க உள்ளது என்றனர். தி.மு.க-வின் இந்த வியூகங்கள் குறித்து மண்டல வாரியாக தி.மு.க வில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். திருப்போரூர் மாநாடு முடியும் முன்பே அடுத்த மூன்று மாநாடுகளுக்கான இடங்களையும் தேர்வு செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்கு இடையில் மகளிர் மாநாடு தென் மண்டலத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. அந்த மாநாடு முடிந்த கையோடு பாக முகவர்கள்,வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு, அடுத்து மாநில மாநாடு என வரிசையாக மாநாடுகள் நடக்க இருப்பதால், நிர்வாகிகளுக்குப் பெரும் பணிச்சுமையும் ஏற்படுகிறது என்கிற புலம்பலும் தி.மு.க நிர்வாகிள் மத்தியில் உள்ளது.
`விஜயகாந்தின் கொள்கைப்படி முடிவு இருக்கும் என நம்புகிறேன்..!'- தேமுதிக குறித்து ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்-லே சாட்சி” என்ற தலைப்பில், விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முன்னாள் முதல்வர் எடப்பாடி சந்திக்கச் சென்றாரா என செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும், கரூர் துயர சம்பவத்தையும் சம்பந்தப்படுத்தி பேசுவது நகைப்பிற்குரியதாக உள்ளது. பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது போராட்டத்தில் ஏற்பட்டது. கரூர் சம்பவம் அப்படியல்ல. கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் விஜய்யைப் பார்க்க வந்து உயிரிழந்தவர்கள். தி.மு.க-விற்கும் த.வெ.க-விற்கும் போட்டி என செங்கோட்டையன் கூறுவது, பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டது என நினைப்பதுபோல் உள்ளது. யார் யாருக்குப் போட்டி என்பதும், ஒவ்வொரு கட்சிகளின் வண்டவாளம் தண்டவாளங்களெல்லாம் தேர்தலுக்குப் பின்னர்தான் தெரிய வரும். டி.டி.வி தினகரன், அ.தி.மு.க கூட்டணிக்கு வருகை தந்துள்ளதால் ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.க.வின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அ.தி.மு.க கூட்டணிக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. தி.மு.கவை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்பதுதான் கேப்டன் விஜயகாந்தின் கொள்கையாக இருந்தது. அதை முன் வைத்து தே.மு.தி.க தலைமை முடிவெடுக்கும் என நம்புகிறேன். ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்காக யார் வீட்டு வாசலையும் தட்டப் போவதில்லை. எங்கள் கூட்டணியை மேலும் மேலும் பலப்படுத்தவே கூட்டணிக் கட்சிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதற்காக அ.தி.மு.க-வினர் பலவீனமானவர்கள் அல்ல. யாரிடமும் மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு அ.தி.மு.க பலவீனமாக இல்லை. இதை எங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி, பலவீனமானவர் அல்ல பலம் பொருந்திய தலைவர். தி.மு.க கட்சியை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு கொடுக்காது, அ.தி.மு.கவும் அதேபோல ஆட்சியில் பங்கு கொடுக்காது. சின்ன சின்ன கட்சிகளையெல்லாம் கூட்டு சேர்ப்பதால் தாங்கள் பெரிய பலமான கட்சி என கூட்டணி கட்சிகள் நினைத்துக்கொள்வது தவறான பிற்போக்கு. கூட்டணியில் சேரக்கூடிய கட்சிகள் எல்லாம் ஆட்சியில் பங்கு எனவும், எங்களால்தான் வெற்றி பெற்றார்கள் என சொல்வதெல்லாம் கேலிக்குரியது, விளையாட்டுக்குரியது. பிரேமலதா 2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்குமான தேர்தல்தான். யானை மீது அமர்ந்து செல்வபவர்கள் தாங்கள்தான் ராஜா என சொல்லிக்கொள்வார்கள், அதே யானை தும்பிக்கையால் அடித்து தள்ளினால் செல்லுமிடம் தெரியாமல் சென்று விடுவார்கள்.” என்றார்.
`ஜெயலலிதா விஜய்யைக் கைதுசெய்திருப்பார்; ஸ்டாலின் கரிசனம் காட்டியிருக்கிறார்!' - பி.டி.செல்வகுமார்
தூத்துக்குடியில் த.வெ.க தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.செல்வகுமார் தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகர் விஜய்க்கும், அவர் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை. தந்தை சந்திரசேகர்தான் சினிமாவில் விஜய்யின் வளர்ச்சிக்கு முழுக் காரணம், முக்கியக் காரணம். ஆனால், சந்திரசேகருக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் இல்லை. ஜனநாயகன் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. சென்சார் பிரச்னையைத் தீர்க்க வேண்டியது படக்குழுதான். த.வெ.க விஜய் சென்சார் பிரச்னையில் ஒரே ஒரு உறுப்பினருக்கு மட்டுமே மாறுபட்ட கருத்து இருந்திருக்கிறது. இதனை படக்குழுதான் சரி செய்திருக்க வேண்டும். மாநில அரசுக்கும், சென்சாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தி.மு.க, பா.ஜ.க யாரும் படம் வெளியிடுவதை தடுக்கவில்லை. ஆர்.கே.செல்வமணியின் விஸ்வரூபம் போன்ற பல படங்கள் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்துள்ளது. அதே போன்றுதான் ஜனநாயகன் படமும். இந்த பிரச்னையை தீர்த்த பின்புதான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்க வேண்டும். உங்கள் கடமையிலிருந்து நீங்கள் தவறி விட்டு பிறர் மேல் பழி போடுவது தவறு. ஒரு படம் வெற்றி பெற்றால், புகழ் வந்தால், கைதட்டல் வந்தால், ரசிகர்கள் விசில் அடித்தால் எல்லாப் புகழும் உங்களுக்கு. ஆனால், பிரச்னை என்று வந்தால் மட்டும் நீங்கள் காரணம் இல்லையா? இதுதொடர்பான பிரச்னையை சரி செய்ய வேண்டியது யார்? சென்சார் வரவில்லை என்றவுடன் மத்தியரசுதான் பிரச்னை என்று கூறுகிறீர்கள். முழுக்க, முழுக்க இது விஜய்யின் தவறுதான். கரூரில் மாநாடு போட வேண்டும் என்று கேட்டது யார்? அப்பாவி மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. 41 பேர் இறந்ததற்கு விஜய்தான் பொறுப்பு. ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது விஜய்யை கைது செய்து இருப்பார். விஜய் ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் விஜய் மீது கரிசனம் காட்டி இருக்கிறார். அ.தி.மு.க, பா.ஜ.கவினர் கரூரில் நடந்த சம்பவத்திற்கு அப்போது விஜய்க்கு ஆதரவாகப் பேசினார்கள். தற்போது விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன் எதிராகப் பேசி ஒரு சுயநல அரசியலை செய்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போது அங்கு சென்ற விஜய், ஏன் மதுரை மாநாட்டில் இறந்தவர் வீட்டிற்கு செல்லவில்லை? பப்ளிசிட்டி வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானலும் விஜய் செல்வார். வரும் சட்டமன்றத் தோ்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜய், திரைப்படத்தில் பேசும் பஞ்ச் டயலாக் அரசியலில் எடுபடாது.” என்றார்.
`ஜெயலலிதா விஜய்யைக் கைதுசெய்திருப்பார்; ஸ்டாலின் கரிசனம் காட்டியிருக்கிறார்!' - பி.டி.செல்வகுமார்
தூத்துக்குடியில் த.வெ.க தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.செல்வகுமார் தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகர் விஜய்க்கும், அவர் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை. தந்தை சந்திரசேகர்தான் சினிமாவில் விஜய்யின் வளர்ச்சிக்கு முழுக் காரணம், முக்கியக் காரணம். ஆனால், சந்திரசேகருக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் இல்லை. ஜனநாயகன் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. சென்சார் பிரச்னையைத் தீர்க்க வேண்டியது படக்குழுதான். த.வெ.க விஜய் சென்சார் பிரச்னையில் ஒரே ஒரு உறுப்பினருக்கு மட்டுமே மாறுபட்ட கருத்து இருந்திருக்கிறது. இதனை படக்குழுதான் சரி செய்திருக்க வேண்டும். மாநில அரசுக்கும், சென்சாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தி.மு.க, பா.ஜ.க யாரும் படம் வெளியிடுவதை தடுக்கவில்லை. ஆர்.கே.செல்வமணியின் விஸ்வரூபம் போன்ற பல படங்கள் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்துள்ளது. அதே போன்றுதான் ஜனநாயகன் படமும். இந்த பிரச்னையை தீர்த்த பின்புதான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்க வேண்டும். உங்கள் கடமையிலிருந்து நீங்கள் தவறி விட்டு பிறர் மேல் பழி போடுவது தவறு. ஒரு படம் வெற்றி பெற்றால், புகழ் வந்தால், கைதட்டல் வந்தால், ரசிகர்கள் விசில் அடித்தால் எல்லாப் புகழும் உங்களுக்கு. ஆனால், பிரச்னை என்று வந்தால் மட்டும் நீங்கள் காரணம் இல்லையா? இதுதொடர்பான பிரச்னையை சரி செய்ய வேண்டியது யார்? சென்சார் வரவில்லை என்றவுடன் மத்தியரசுதான் பிரச்னை என்று கூறுகிறீர்கள். முழுக்க, முழுக்க இது விஜய்யின் தவறுதான். கரூரில் மாநாடு போட வேண்டும் என்று கேட்டது யார்? அப்பாவி மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. 41 பேர் இறந்ததற்கு விஜய்தான் பொறுப்பு. ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது விஜய்யை கைது செய்து இருப்பார். விஜய் ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் விஜய் மீது கரிசனம் காட்டி இருக்கிறார். அ.தி.மு.க, பா.ஜ.கவினர் கரூரில் நடந்த சம்பவத்திற்கு அப்போது விஜய்க்கு ஆதரவாகப் பேசினார்கள். தற்போது விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன் எதிராகப் பேசி ஒரு சுயநல அரசியலை செய்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போது அங்கு சென்ற விஜய், ஏன் மதுரை மாநாட்டில் இறந்தவர் வீட்டிற்கு செல்லவில்லை? பப்ளிசிட்டி வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானலும் விஜய் செல்வார். வரும் சட்டமன்றத் தோ்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜய், திரைப்படத்தில் பேசும் பஞ்ச் டயலாக் அரசியலில் எடுபடாது.” என்றார்.
விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?
வே லூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்டமான வெளிப்புற மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் விசாலமான, பாதுகாப்பான இடமாகவும், அவைக் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறையினரின் மேற்பார்வையில் 7 ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மைதானத்தைச் சமன்படுத்தும் பணியில் த.வெ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர். இடம் சீரமைக்கும் பணி இது பற்றி, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் கேட்டபோது, ``த.வெ.க தலைமை அலுவலகத்தில் இருந்து ஓரிரு நாளில், தளபதி வருகைக் குறித்த தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு, காவல்துறையினரிடம் அனுமதி கேட்போம். அதற்கு முன்னதாக, இடத்தை சமன்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் 26 ஏக்கரில் இருந்து 30 ஏக்கர் வரையிலான விசாலமான இடத்தைத் தான் தேர்வு செய்திருக்கிறோம். வாகனங்களை பார்க்கிங் செய்யவும் 50 ஏக்கர் இடத்தை பார்வையிட்டு வருகிறோம்’’ என்றார்.
விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?
வே லூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்டமான வெளிப்புற மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் விசாலமான, பாதுகாப்பான இடமாகவும், அவைக் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறையினரின் மேற்பார்வையில் 7 ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மைதானத்தைச் சமன்படுத்தும் பணியில் த.வெ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர். இடம் சீரமைக்கும் பணி இது பற்றி, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் கேட்டபோது, ``த.வெ.க தலைமை அலுவலகத்தில் இருந்து ஓரிரு நாளில், தளபதி வருகைக் குறித்த தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு, காவல்துறையினரிடம் அனுமதி கேட்போம். அதற்கு முன்னதாக, இடத்தை சமன்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் 26 ஏக்கரில் இருந்து 30 ஏக்கர் வரையிலான விசாலமான இடத்தைத் தான் தேர்வு செய்திருக்கிறோம். வாகனங்களை பார்க்கிங் செய்யவும் 50 ஏக்கர் இடத்தை பார்வையிட்டு வருகிறோம்’’ என்றார்.
'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' - விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் இன்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த சிலரது ஆசைகள், எண்ணங்களை என்னிடம் கேள்வியாக கேட்கிறீர்கள். அவர்களின் ஆசைகளும், எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. 2021 தேர்தலில் எப்படி எங்களை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தார்களோ, அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை தருவதற்கு வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள். நாங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம். ஊடகத்தினர் யாரும் தவெகவிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. செய்தி வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் ஒரு புறம் மட்டுமே கேள்வியை கேட்கிறார்கள். இருபுறமும் கேள்வியை கேட்டீர்கள் என்றால் அந்த கேள்வி நியாயமானதாக இருக்கும். சந்திக்கவே முடியாமல் எல்லைக்கு அப்பாற்பட்டு நாட் ரீச்சபிளில் இருப்பவர்களை பற்றி கேள்வி கேட்டு எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்” என்றார்.
'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' - விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் இன்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த சிலரது ஆசைகள், எண்ணங்களை என்னிடம் கேள்வியாக கேட்கிறீர்கள். அவர்களின் ஆசைகளும், எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. 2021 தேர்தலில் எப்படி எங்களை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தார்களோ, அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை தருவதற்கு வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள். நாங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம். ஊடகத்தினர் யாரும் தவெகவிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. செய்தி வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் ஒரு புறம் மட்டுமே கேள்வியை கேட்கிறார்கள். இருபுறமும் கேள்வியை கேட்டீர்கள் என்றால் அந்த கேள்வி நியாயமானதாக இருக்கும். சந்திக்கவே முடியாமல் எல்லைக்கு அப்பாற்பட்டு நாட் ரீச்சபிளில் இருப்பவர்களை பற்றி கேள்வி கேட்டு எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்” என்றார்.
திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?!
தமிழ் மன்னர்கள் தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியது, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அண்ணாமலை திருமாவளவன் தமிழ் மன்னர்கள் தொடர்பாக என்ன பேசினார்? ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சம்ஸ்கிருத மயமானது, இந்துத்துவமயமானது. ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் காலத்தில்தான். வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ் பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக்கொண்டார்கள். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை என்று விமர்சித்திருந்தார்.
நாஞ்சிக்கோட்டை: பூட்டியே கிடக்கும் பொதுக் கழிவறை; அவதியுறும் மக்கள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் உள்ள கழிவறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் மக்கள், இங்க ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போறாங்க.100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குது. தஞ்சாவூர் டு நாஞ்சக்கோட்டை செல்லும் சாலையில்தான் இந்த முனியாண்டவர் காலனி இருக்குது. முறையான பொதுக் கழிவறை இருந்தும் எந்த ஒரு பயன்பாடும் இன்றி பூட்டியே கெடக்குது. இங்க உழவர் சந்தை, ஸ்கூல், கோயில், நிறைய அங்காடிகள் இருக்கு. இப்படிப்பட்ட முக்கியமான இடத்துல பொதுக் கழிப்பிடம் பூட்டியே இருக்குறது, மிகவும் சிரமத்தை ஏற்படுத்துது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடத்துல தஞ்சை மாநகராட்சி மூலமா அஞ்சு லட்சம் செலவில் பொதுக் கழிவறை கட்டப்பட்டது. இப்போ இந்த பொதுக் கழிவறை எவ்வித பயன்பாடும் இல்லாம ரொம்பா நாளாவே பூட்டியே கெடக்குது. இதனால அந்த வழியாக போகுற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிங்க ஆத்திர அவசரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. நிலைமை இப்படி இருக்குறதால, பெரும்பாலானவங்க சாலையோரங்கள்லையே இயற்கை உபாதைகள கழிக்குறாங்க. அதனால, சுகாதார சீர்கேடு நிலவி, நோய்பரவல் அபாயமும் இருக்குது. கிட்டத்தட்ட ஆறு மாசமா இந்தக் கழிவறையைத் திறக்க வேண்டும்னு கோரிக்கை வெச்சுட்டு இருக்கோம். ஆனா அதிகாரிங்க மக்கள் சுகாதார விஷயத்துல அலட்சியமா இருக்காங்க. எந்தவித நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுத்தப்பாடில்லை என்று மனம் நொந்தனர். இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் கல்பனாவிடம் கேட்டதற்கு, “எங்களுக்கும் இதை திறக்கச் சொல்லி ஏராளமான கோரிக்கை வந்தது. ஆனால் இதில் இன்னும் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும். அதனால்தான் இதனை இன்றளவும் திறக்காமல் வைத்திருக்கிறோம். விரைவில் இக்கழிவறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.
நாஞ்சிக்கோட்டை: பூட்டியே கிடக்கும் பொதுக் கழிவறை; அவதியுறும் மக்கள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் உள்ள கழிவறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் மக்கள், இங்க ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போறாங்க.100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குது. தஞ்சாவூர் டு நாஞ்சக்கோட்டை செல்லும் சாலையில்தான் இந்த முனியாண்டவர் காலனி இருக்குது. முறையான பொதுக் கழிவறை இருந்தும் எந்த ஒரு பயன்பாடும் இன்றி பூட்டியே கெடக்குது. இங்க உழவர் சந்தை, ஸ்கூல், கோயில், நிறைய அங்காடிகள் இருக்கு. இப்படிப்பட்ட முக்கியமான இடத்துல பொதுக் கழிப்பிடம் பூட்டியே இருக்குறது, மிகவும் சிரமத்தை ஏற்படுத்துது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடத்துல தஞ்சை மாநகராட்சி மூலமா அஞ்சு லட்சம் செலவில் பொதுக் கழிவறை கட்டப்பட்டது. இப்போ இந்த பொதுக் கழிவறை எவ்வித பயன்பாடும் இல்லாம ரொம்பா நாளாவே பூட்டியே கெடக்குது. இதனால அந்த வழியாக போகுற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிங்க ஆத்திர அவசரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. நிலைமை இப்படி இருக்குறதால, பெரும்பாலானவங்க சாலையோரங்கள்லையே இயற்கை உபாதைகள கழிக்குறாங்க. அதனால, சுகாதார சீர்கேடு நிலவி, நோய்பரவல் அபாயமும் இருக்குது. கிட்டத்தட்ட ஆறு மாசமா இந்தக் கழிவறையைத் திறக்க வேண்டும்னு கோரிக்கை வெச்சுட்டு இருக்கோம். ஆனா அதிகாரிங்க மக்கள் சுகாதார விஷயத்துல அலட்சியமா இருக்காங்க. எந்தவித நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுத்தப்பாடில்லை என்று மனம் நொந்தனர். இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் கல்பனாவிடம் கேட்டதற்கு, “எங்களுக்கும் இதை திறக்கச் சொல்லி ஏராளமான கோரிக்கை வந்தது. ஆனால் இதில் இன்னும் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும். அதனால்தான் இதனை இன்றளவும் திறக்காமல் வைத்திருக்கிறோம். விரைவில் இக்கழிவறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.
போதை, மோகம், தறிகெட்டு போகும் தமிழகம்! | Ex.ACP Rajaram Interview | Vikatan TV
போதை, மோகம், தறிகெட்டு போகும் தமிழகம்! | Ex.ACP Rajaram Interview | Vikatan TV
திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்து; அனல் தகிக்கும் மதுரை வடக்குத் தொகுதி - என்னதான் நடக்கிறது அங்கே?
திமுக, காங்கிரஸ் இடையேயான உறவில் ஏற்கெனவே புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இருதரப்பினரும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஒரு கூட்டத்தில் எம்.எல்.ஏ கோ.தளபதி காங்கிரஸின் மாணிக்கம் தாகூரையும், ஜோதிமணியையும் கன்னாபின்னாவென பேசியிருந்தார். திமுக எம்எல்ஏ கோ. தளபதி மதுரை வடக்குத் தொகுதியில் யாருக்குத்தான் பலம் அதிகம்? பதிலுக்கு 'காங்கிரஸுக்கும் தன்மானம் இருக்கிறது. மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டுமென கார்கேவிடமே பேசுவேன்' என மாணிக்கம் தாகூர் கொந்தளித்திருக்கிறார். திமுக - காங் மோதலால் மதுரை வடக்கு தொகுதியில் அனல் பறக்கிறது. மதுரை வடக்கில் என்ன நடந்தது? அந்தத் தொகுதியில் யாருக்குத்தான் பலம் அதிகம்? ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாதக் கட்சி காங்கிரஸ் மதுரையில் கடந்த 25 ஆம் தேதி திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்டச் செயலாளரும், வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, காங்கிரஸை விமர்சித்துப் பேசியிருந்தார். அதாவது, “காங்கிரஸைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி எல்லாம் எம்.பி ஆகிவிட்டனர். இனி மற்றவர்கள் எம்.எல்.ஏ ஆனால் என்ன ஆகவில்லை என்றால் என்ன என்று சொல்லி அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என பேசிக்கொண்டிருக்கிறார்கள். திமுக எம்எல்ஏ கோ. தளபதி இதையெல்லாம் தலைமை புரிந்துகொண்டு அடுத்து இவர்களுக்கு எல்லாம் சீட் கொடுக்கவே கூடாது. நாம் இல்லையென்றால் இந்திய கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 2 ஆயிரம் 3 ஆயிரம் ஓட்டுகள் தான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாதக் கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது” என்று விமர்சித்திருந்தார். Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது! இதற்கு பதிலளிக்கும் வகையில் எம்.பி மாணிக்கம் தாக்கூர், “ இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது. Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது என்று பதிவிட்டிருந்தார். காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் திமுக எம்எல்ஏ-வின் கருத்திற்கு காங் எம்.பி. ஜோதிமணி, தமிழக காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போன்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் மதுரை வடக்குச் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் வடக்குத் தொகுதியில் போட்டியிடுவதாகவும் கைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறிக் காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. இப்படி மதுரை வடக்குச் சட்டமன்ற தொகுதியைப் பெறுவதில் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் உண்மையில் மதுரை வடக்குத் தொகுதியின் நிலவரம் என்ன? என்பதைப் பார்ப்போம். மதுரை வடக்குத் தொகுதி 2011 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் உருவானதுதான் இந்த மதுரை வடக்குத் தொகுதி. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, காந்தி மியூசியம், உலகத் தமிழ்ச்சங்கம், அரசு சட்டக்கல்லூரி, மாவட்ட நீதிமன்றம் என மதுரையின் முக்கிய அடையாளங்கள் மதுரையின் வடக்குத் தொகுதியில் தான் அமைந்திருக்கின்றன. 2011, 2016, 2021 என மூன்று முறை இந்தத் தொகுதி சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருக்கிறது. அதிமுக - ஏ.கே போஸ் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே. போஸ் 1,12,691 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ராஜேந்திரனைத் தோற்கடித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.வி. ராஜன் செல்லப்பா 70,460 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி. கார்த்திகேயனைத் தோற்கடித்திருக்கிறார். இரண்டு முறை வென்ற அதிமுக 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கோ. தளபதி 73,010 வாக்குகளைப் பெற்று பாஜக சார்பில் போட்டியிட்ட பி.சரவணனை தோற்கடித்திருக்கிறார். ஆக, மதுரை வடக்குத்தொகுதியைப் பொறுத்தவரை இரண்டு முறை அதிமுகவே இந்தத் தொகுதியில் வெற்றிப்பெற்றிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் காங்கிரஸின் தோல்வி இரண்டு முறை போட்டியிட்டிருக்கும் காங்கிரஸ் தோல்வியையே சந்தித்திருக்கிறது. ஒருமுறை திமுக வென்றிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.ராஜேந்திரன் மாணிக்கம் தாகூரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மாமனாருக்காகத் தான் மதுரை வடக்குத் தொகுதியை முன்வைத்து மாணிக்கம் தாகூர் கலகம் செய்கிறார் என உடன்பிறப்புகள் கொதிக்கின்றனர். தொகுதியைத் தக்கவைப்பதில் உள்ளூர் திமுக தரப்பிலும் மிகவும் உறுதியாகவே இருக்கிறார்கள். ஆனால் மதுரை வடக்கு தொகுதியைப் போலவே தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளில் திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவிக் கொண்டிருப்பது ஊர் அறிந்ததே! எனவே கட்சிகளின் தொகுதி டக் ஆஃப் வாரின் முடிவிலேயே... எந்தெந்த தொகுதிகள் கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு என்பது வெட்டவெளிச்சமாகும்.
திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்து; அனல் தகிக்கும் மதுரை வடக்குத் தொகுதி - என்னதான் நடக்கிறது அங்கே?
திமுக, காங்கிரஸ் இடையேயான உறவில் ஏற்கெனவே புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இருதரப்பினரும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஒரு கூட்டத்தில் எம்.எல்.ஏ கோ.தளபதி காங்கிரஸின் மாணிக்கம் தாகூரையும், ஜோதிமணியையும் கன்னாபின்னாவென பேசியிருந்தார். திமுக எம்எல்ஏ கோ. தளபதி மதுரை வடக்குத் தொகுதியில் யாருக்குத்தான் பலம் அதிகம்? பதிலுக்கு 'காங்கிரஸுக்கும் தன்மானம் இருக்கிறது. மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டுமென கார்கேவிடமே பேசுவேன்' என மாணிக்கம் தாகூர் கொந்தளித்திருக்கிறார். திமுக - காங் மோதலால் மதுரை வடக்கு தொகுதியில் அனல் பறக்கிறது. மதுரை வடக்கில் என்ன நடந்தது? அந்தத் தொகுதியில் யாருக்குத்தான் பலம் அதிகம்? ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாதக் கட்சி காங்கிரஸ் மதுரையில் கடந்த 25 ஆம் தேதி திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்டச் செயலாளரும், வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, காங்கிரஸை விமர்சித்துப் பேசியிருந்தார். அதாவது, “காங்கிரஸைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி எல்லாம் எம்.பி ஆகிவிட்டனர். இனி மற்றவர்கள் எம்.எல்.ஏ ஆனால் என்ன ஆகவில்லை என்றால் என்ன என்று சொல்லி அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என பேசிக்கொண்டிருக்கிறார்கள். திமுக எம்எல்ஏ கோ. தளபதி இதையெல்லாம் தலைமை புரிந்துகொண்டு அடுத்து இவர்களுக்கு எல்லாம் சீட் கொடுக்கவே கூடாது. நாம் இல்லையென்றால் இந்திய கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 2 ஆயிரம் 3 ஆயிரம் ஓட்டுகள் தான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாதக் கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது” என்று விமர்சித்திருந்தார். Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது! இதற்கு பதிலளிக்கும் வகையில் எம்.பி மாணிக்கம் தாக்கூர், “ இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது. Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது என்று பதிவிட்டிருந்தார். காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் திமுக எம்எல்ஏ-வின் கருத்திற்கு காங் எம்.பி. ஜோதிமணி, தமிழக காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போன்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் மதுரை வடக்குச் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் வடக்குத் தொகுதியில் போட்டியிடுவதாகவும் கைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறிக் காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. இப்படி மதுரை வடக்குச் சட்டமன்ற தொகுதியைப் பெறுவதில் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் உண்மையில் மதுரை வடக்குத் தொகுதியின் நிலவரம் என்ன? என்பதைப் பார்ப்போம். மதுரை வடக்குத் தொகுதி 2011 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் உருவானதுதான் இந்த மதுரை வடக்குத் தொகுதி. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, காந்தி மியூசியம், உலகத் தமிழ்ச்சங்கம், அரசு சட்டக்கல்லூரி, மாவட்ட நீதிமன்றம் என மதுரையின் முக்கிய அடையாளங்கள் மதுரையின் வடக்குத் தொகுதியில் தான் அமைந்திருக்கின்றன. 2011, 2016, 2021 என மூன்று முறை இந்தத் தொகுதி சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருக்கிறது. அதிமுக - ஏ.கே போஸ் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே. போஸ் 1,12,691 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ராஜேந்திரனைத் தோற்கடித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.வி. ராஜன் செல்லப்பா 70,460 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி. கார்த்திகேயனைத் தோற்கடித்திருக்கிறார். இரண்டு முறை வென்ற அதிமுக 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கோ. தளபதி 73,010 வாக்குகளைப் பெற்று பாஜக சார்பில் போட்டியிட்ட பி.சரவணனை தோற்கடித்திருக்கிறார். ஆக, மதுரை வடக்குத்தொகுதியைப் பொறுத்தவரை இரண்டு முறை அதிமுகவே இந்தத் தொகுதியில் வெற்றிப்பெற்றிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் காங்கிரஸின் தோல்வி இரண்டு முறை போட்டியிட்டிருக்கும் காங்கிரஸ் தோல்வியையே சந்தித்திருக்கிறது. ஒருமுறை திமுக வென்றிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.ராஜேந்திரன் மாணிக்கம் தாகூரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மாமனாருக்காகத் தான் மதுரை வடக்குத் தொகுதியை முன்வைத்து மாணிக்கம் தாகூர் கலகம் செய்கிறார் என உடன்பிறப்புகள் கொதிக்கின்றனர். தொகுதியைத் தக்கவைப்பதில் உள்ளூர் திமுக தரப்பிலும் மிகவும் உறுதியாகவே இருக்கிறார்கள். ஆனால் மதுரை வடக்கு தொகுதியைப் போலவே தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளில் திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவிக் கொண்டிருப்பது ஊர் அறிந்ததே! எனவே கட்சிகளின் தொகுதி டக் ஆஃப் வாரின் முடிவிலேயே... எந்தெந்த தொகுதிகள் கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு என்பது வெட்டவெளிச்சமாகும்.
`நீங்கள் வரத்தான் போகிறீர்கள்' - ப.சிதம்பரத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்!
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்திருந்தார். நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாகரிகம் ஓங்கியிருந்ததற்கு தடயங்கள் கிடைத்த மண், கீழடி. கழனிவாசலில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைக்க உள்ளேன். மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் நான் காரைக்குடியில் ரூ.100.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரியை திறந்து வைத்துள்ளேன். சிதம்பரம் பேசும்போது அடுத்தும் வருவேன் என்றார்... நீங்கள் வரத்தான் போகிறீர்கள் அதில் என்ன சந்தேகம். தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்வதல்ல... மத்திய அரசினுடைய புள்ளி விவரங்கள்தான் சொல்கிறது. புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி என தமிழ்நாட்டை மத்திய அரசு பாராட்டுகிறது. இதையெல்லாம் ஆளுநரும், பிரதமரும் படிக்க வேண்டும், படிக்காமல் போய் விடாதீர்கள். சிவகங்கை கிராமங்கள் நிறைந்த மாநிலம். கிராமத்தின் முதுகெலும்பாக இருந்த மகாத்மா காந்தி நூறு நாள் திட்டத்தை காலி செய்து விட்டு வேறு பெயரில் வேறு வடிவில் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைமுறையிலிருக்கிற 100 நாள் திட்டத்தையே 50 நாள்கள்கூட கொடுப்பதில்லை, மாநிலங்களுக்கான நிதியை விடுவிப்பதில்லை. இதில் தற்போது 125 நாள்கள் வேலை கொடுப்போம் என்கிறார்கள். அதற்காக தற்போதுள்ளதை விட இரண்டரை மடங்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், மத்திய அரசு அதற்கு தயாராக இருக்கிறதா? இவர்கள் சொல்வதெல்லாம் மாயைதான். சொல்வது தான் சொல்கிறீர்கள் 325 நாள்கள் என்று சொல்லுங்கள். மாகத்மா காந்தி நூறு நாள் திட்டத்தினால் தமிழ்நாட்டில் கடந்தாண்டு 65 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள், 15 ஆயிரம் கோடி வரை ஊதியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தில் பாதி பேருக்கு வேலை கொடுப்பதே சிரமம்தான். மாநில அரசு வேலை நாள்களையும் முடிவு செய்ய முடியாது, மத்திய அரசு தான் முடிவு செய்வார்கள். போதாக்குறைக்கு மாநிலங்கள் 40 சதவிகிதம் நிதியைக் கொடுக்க வேண்டும் என்கிற பெரிய தாக்குதலை நம்மீது தொடுக்கிறார்கள். மத்திய அரசு தன் கடமையிலிருந்து ஓடுகிறது, கிராமங்களை கைகழுவி விடுகிறது. இதை எதிர்த்து நாம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். இந்த திட்டத்தை அவர்கள் திரும்பப் பெற வேண்டும். மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் துணையோடு வாபஸ் பெற வைப்போம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு குரல் கொடுக்க முடியாத பழனிசாமி நம்முடைய திட்டங்களை காப்பி அடித்து அவர் புதிய வாக்குறுதிகள் எனச் சொல்லி வருகிறார். ஏற்கெனவே அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன எதையும் அவர்கள் செய்யவில்லை. 2011 தேர்தல் அறிக்கையில் சென்னை முதல் குமரி வரை கனரக சாலை திட்டம், தென் தமிழகத்தில் ஏரோ பார்க், 58 வயது மேற்பட்டவர்களுக்கு பஸ் பாஸ் எனச் சொன்னார்கள்... அவற்றையெல்லாம் செய்யவில்லை. 2016 தேர்தல் வாக்குறுதியில் இலவச வைபை, ரேசன் கார்டுகளுக்கு இலவச போன், அம்மா பழுது பார்க்கும் மையம் என சொன்னார்கள் அதை அவர்களே மறந்து விட்டார்கள். நாங்கள் சொன்னவற்றை எல்லாம் செய்திருக்கிறோம்” என்றார்.
`நீங்கள் வரத்தான் போகிறீர்கள்' - ப.சிதம்பரத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்!
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்திருந்தார். நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாகரிகம் ஓங்கியிருந்ததற்கு தடயங்கள் கிடைத்த மண், கீழடி. கழனிவாசலில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைக்க உள்ளேன். மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் நான் காரைக்குடியில் ரூ.100.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரியை திறந்து வைத்துள்ளேன். சிதம்பரம் பேசும்போது அடுத்தும் வருவேன் என்றார்... நீங்கள் வரத்தான் போகிறீர்கள் அதில் என்ன சந்தேகம். தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்வதல்ல... மத்திய அரசினுடைய புள்ளி விவரங்கள்தான் சொல்கிறது. புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி என தமிழ்நாட்டை மத்திய அரசு பாராட்டுகிறது. இதையெல்லாம் ஆளுநரும், பிரதமரும் படிக்க வேண்டும், படிக்காமல் போய் விடாதீர்கள். சிவகங்கை கிராமங்கள் நிறைந்த மாநிலம். கிராமத்தின் முதுகெலும்பாக இருந்த மகாத்மா காந்தி நூறு நாள் திட்டத்தை காலி செய்து விட்டு வேறு பெயரில் வேறு வடிவில் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைமுறையிலிருக்கிற 100 நாள் திட்டத்தையே 50 நாள்கள்கூட கொடுப்பதில்லை, மாநிலங்களுக்கான நிதியை விடுவிப்பதில்லை. இதில் தற்போது 125 நாள்கள் வேலை கொடுப்போம் என்கிறார்கள். அதற்காக தற்போதுள்ளதை விட இரண்டரை மடங்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், மத்திய அரசு அதற்கு தயாராக இருக்கிறதா? இவர்கள் சொல்வதெல்லாம் மாயைதான். சொல்வது தான் சொல்கிறீர்கள் 325 நாள்கள் என்று சொல்லுங்கள். மாகத்மா காந்தி நூறு நாள் திட்டத்தினால் தமிழ்நாட்டில் கடந்தாண்டு 65 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள், 15 ஆயிரம் கோடி வரை ஊதியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தில் பாதி பேருக்கு வேலை கொடுப்பதே சிரமம்தான். மாநில அரசு வேலை நாள்களையும் முடிவு செய்ய முடியாது, மத்திய அரசு தான் முடிவு செய்வார்கள். போதாக்குறைக்கு மாநிலங்கள் 40 சதவிகிதம் நிதியைக் கொடுக்க வேண்டும் என்கிற பெரிய தாக்குதலை நம்மீது தொடுக்கிறார்கள். மத்திய அரசு தன் கடமையிலிருந்து ஓடுகிறது, கிராமங்களை கைகழுவி விடுகிறது. இதை எதிர்த்து நாம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். இந்த திட்டத்தை அவர்கள் திரும்பப் பெற வேண்டும். மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் துணையோடு வாபஸ் பெற வைப்போம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு குரல் கொடுக்க முடியாத பழனிசாமி நம்முடைய திட்டங்களை காப்பி அடித்து அவர் புதிய வாக்குறுதிகள் எனச் சொல்லி வருகிறார். ஏற்கெனவே அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன எதையும் அவர்கள் செய்யவில்லை. 2011 தேர்தல் அறிக்கையில் சென்னை முதல் குமரி வரை கனரக சாலை திட்டம், தென் தமிழகத்தில் ஏரோ பார்க், 58 வயது மேற்பட்டவர்களுக்கு பஸ் பாஸ் எனச் சொன்னார்கள்... அவற்றையெல்லாம் செய்யவில்லை. 2016 தேர்தல் வாக்குறுதியில் இலவச வைபை, ரேசன் கார்டுகளுக்கு இலவச போன், அம்மா பழுது பார்க்கும் மையம் என சொன்னார்கள் அதை அவர்களே மறந்து விட்டார்கள். நாங்கள் சொன்னவற்றை எல்லாம் செய்திருக்கிறோம்” என்றார்.
`ரூ.6 லட்சம் கோடி ஊழல்; விசாரணைக்கு உத்தரவிட தயாரா?' - திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!
``திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட தயாரா? எனக் கேள்வியெழுப்பி, திமுக அரசைச் சாடியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையானவை என்றும், அவற்றை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுகவின் ஊழல்களுக்கான ஆதாரங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டு அவற்றின் மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவரது அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கற்பனை என்று கூறுவது நகைமுரணின் உச்சம் ஆகும். என்.டி.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் சென்னையில் நேற்று நடத்திய தமிழ்நாடு உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும் போதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். அகராதியில் ஊழல் என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமான இன்னொரு சொல்லை சேர்க்க வேண்டும் என்றால் அது திமுக என்பதாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு ஊழலுக்கும், திமுகவுக்கும் பிரிக்க முடியாத பந்தம். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழல்கள் அம்பலமாகி வருகின்றன. ஸ்டாலின் திமுக ஆட்சியின் மீது பாட்டாளி மக்கள் கட்சி கீழ்க்கண்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது; இவற்றின் மூலம் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கக்கூடும் என்றும் கூறி இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1. ரூ.888 கோடி பணி நியமன ஊழல் 2. ரூ. 4730 கோடி மணல் கொள்ளை. கடந்த நான்கரை ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையின் மொத்த மதிப்பு ரூ.1.80 கட்சம் கோடி 3. ரூ.1020 கோடி ஒப்பந்த ஊழல் 4. ரூ.366 கோடி பணியிட மாற்ற ஊழல் 5. ரூ.1240 கோடி நெல் கொள்முதல் ஊழல் 6. ரூ. 165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல் 7. பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி ஊழல் 8. மது வரி ஏய்ப்பு & ரூ.1.82 லட்சம் கோடி ஊழல் 9. ஆண்டுக்கு ரூ.5400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல் 10. ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல் மேற்கண்ட 10 ஊழல்களுக்குமான ஆதாரங்கள் பொதுவெளியிலேயே உள்ளன. இவற்றில் முதல் நான்கு ஊழல்களுக்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை வினா எழுப்பியது. ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், நேரடியாக வழக்குப் பதிவு செய்வதற்கு பதிலாக, தொடக்கக்கட்ட விசாரணை 180 நாள்களுக்கு நடத்தப்படும் என்றும், அதன் பிறகு தான் வழக்குப் பதிவு செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் கூறி வழக்குப் பதிவு செய்யாமல் திமுக அரசு தாமதித்து வருகிறது. இப்படியாக ஊழலை போற்றிப் பாதுகாக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என்று கூறி தப்பிக்கப் பார்க்கிறார். அன்புமணி ராமதாஸ் ரூ. 1.82 லட்சம் கோடி மது வரி ஏய்ப்பு ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் எதுவும் எழுப்பவில்லை. மாறாக திமுக ஆட்சியில் முதலில் நிதியமைச்சராக பணியாற்றிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தான் 15.03.2022ஆம் நாள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கலால் வரி ஏய்ப்பு குறித்து குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் குற்றஞ்சாட்டி நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை கலால் வரி ஏய்ப்பைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வில்லை. அப்படிப்பட்டவர் ஊழலுக்கும், தமக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறுவது வினோதமாக உள்ளது. ஊழல் செய்வதில் மட்டுமின்றி, ஊழல் செய்தவர்களை சட்டவிரோதமாக காப்பாற்றுவதிலும் திமுக அரசு தான் முன்னணியில் உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்தூர் இராமச்சந்திரன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் சட்டவிரோதமாக விசாரணை நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து தீர்ப்பளித்தது. திமுகவினர் ஊழல் செய்வதிலும், அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்புவதிலும் வல்லவர்கள் என்பதற்கு இதுவே சான்று. திமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்களை மட்டுமின்றி, பிற கட்சிகளில் ஊழல் செய்தவர்களையும் சலவை செய்து காப்பாற்றுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்பதற்கு அந்தக் கட்சியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜிக்கும், வைத்திலிங்கத்திற்கும் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரம் தான் சான்று ஆகும். ED இன்றளவும் விஞ்ஞான ஊழலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கும் திமுக, தங்களுக்கும் ஊழலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவது அவல நகைச்சுவையாகும். திமுக ஊழலே செய்யவில்லை என்றால், அதன் மீதான ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அதன் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். இதைச் செய்ய திமுக அரசு தயாரா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். `ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற நாடகங்கள்; திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?'- அன்புமணி
Dindigul மாவட்ட தொகுதிகள்: பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டையில் யார் யார் போட்டி? | TN Elections 2026
Dindigul மாவட்ட தொகுதிகள்: பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டையில் யார் யார் போட்டி? | TN Elections 2026
`கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?' - திருமாவளவன் பேச்சுக்கு நயினார், டிடிவி கண்டனம்!
விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் நாடு குட்டிச்சுவர் ஆனது. சம்ஸ்கிருத மயமானது. கோயிலின் கருவறைக்குள் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டது. தொல். திருமாவளவன் ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை என்று விமர்சித்துப் பேசியிருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. மிகுந்த கண்டனத்திற்குரியது!- நயினார் நாகேந்திரன் தொல்.திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். தமிழ் அழிவதற்கும் தமிழ்க் கலாச்சாரம் அழிவதற்கும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் காரணமானவர்கள் என விசிக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், அவர்கள் கொச்சையாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. கடல் கடந்து சென்று ஸ்ரீவிஜயத்தையும் கங்கையையும் தமிழரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து தமிழ்க் கலாச்சாரத்தை நிலைநாட்டிய தமிழ் மன்னர்களைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் போல சித்தரிப்பதை என்றும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. நயினார் நாகேந்திரன் யார் தமிழின விரோதிகள் என்று தெரியவில்லையா ? ஒருபுறம் சோழப் பேரரசர் இராஜராஜனுக்கும், மாமன்னர் இராஜேந்திரனுக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிலையெழுப்பி, அவர்களது புகழை மேன்மேலும் பரவச் செய்கிறது. மறுபுறம் இண்டி கூட்டணியினரோ அம்மாமன்னர்களைத் தமிழின எதிரிகளைப் போல சித்தரிக்கின்றனர். இதிலிருந்தே தெரியவில்லையா, யார் தமிழின விரோதிகள் என்று? தேர்தல் சீட்டு கணக்குகளுக்காகச் சேரக்கூடாத இடம் சென்று சேர்ந்து, தான் கெடுவதோடு நில்லாமல், பழம்பெருமைமிக்க மன்னர்களின் புகழையும் கெடுத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் கொடிய முயற்சியை சகோதரர் திரு. திருமாவளவன் அவர்கள் இத்தோடு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? இந்நிலையில் தற்போது அமமுக தலைவர் டிடிவி தினகரனும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிற்கும் பதிவில், தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா? ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது. எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
`கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?' - திருமாவளவன் பேச்சுக்கு நயினார், டிடிவி கண்டனம்!
விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் நாடு குட்டிச்சுவர் ஆனது. சம்ஸ்கிருத மயமானது. கோயிலின் கருவறைக்குள் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டது. தொல். திருமாவளவன் ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை என்று விமர்சித்துப் பேசியிருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. மிகுந்த கண்டனத்திற்குரியது!- நயினார் நாகேந்திரன் தொல்.திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். தமிழ் அழிவதற்கும் தமிழ்க் கலாச்சாரம் அழிவதற்கும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் காரணமானவர்கள் என விசிக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், அவர்கள் கொச்சையாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. கடல் கடந்து சென்று ஸ்ரீவிஜயத்தையும் கங்கையையும் தமிழரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து தமிழ்க் கலாச்சாரத்தை நிலைநாட்டிய தமிழ் மன்னர்களைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் போல சித்தரிப்பதை என்றும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. நயினார் நாகேந்திரன் யார் தமிழின விரோதிகள் என்று தெரியவில்லையா ? ஒருபுறம் சோழப் பேரரசர் இராஜராஜனுக்கும், மாமன்னர் இராஜேந்திரனுக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிலையெழுப்பி, அவர்களது புகழை மேன்மேலும் பரவச் செய்கிறது. மறுபுறம் இண்டி கூட்டணியினரோ அம்மாமன்னர்களைத் தமிழின எதிரிகளைப் போல சித்தரிக்கின்றனர். இதிலிருந்தே தெரியவில்லையா, யார் தமிழின விரோதிகள் என்று? தேர்தல் சீட்டு கணக்குகளுக்காகச் சேரக்கூடாத இடம் சென்று சேர்ந்து, தான் கெடுவதோடு நில்லாமல், பழம்பெருமைமிக்க மன்னர்களின் புகழையும் கெடுத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் கொடிய முயற்சியை சகோதரர் திரு. திருமாவளவன் அவர்கள் இத்தோடு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? இந்நிலையில் தற்போது அமமுக தலைவர் டிடிவி தினகரனும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிற்கும் பதிவில், தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா? ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது. எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு! 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட்டாக இது உள்ளது.. இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில், நாளை (பிப்.1) 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாளை 'மத்திய பட்ஜெட் 2026' நாளை (பிப்ரவரி 1, 2026) மத்திய பட்ஜெட் தினம். மத்திய பட்ஜெட்டை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாகத் தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதனால், இந்த ஆண்டின் பட்ஜெட் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய பட்ஜெட் அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரி... தற்போது கையெழுத்தாகி உள்ள இந்தியா - ஐரோப்ப ஒன்றிய ஒப்பந்தம்... உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை போன்றவை நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இதை சமாளிக்கும் வகையிலும்... இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. விவசாயம், ஏ.ஐ, மூத்த குடிமக்களின் நலன், வருமான வரி போன்றவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பட்ஜெட் தாக்கல் சுமார் 11 மணி அளவில் தொடங்கும்.!
27 ஆண்டுகளுக்குப் பிறகு! 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட்டாக இது உள்ளது.. இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில், நாளை (பிப்.1) 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாளை 'மத்திய பட்ஜெட் 2026' நாளை (பிப்ரவரி 1, 2026) மத்திய பட்ஜெட் தினம். மத்திய பட்ஜெட்டை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாகத் தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதனால், இந்த ஆண்டின் பட்ஜெட் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய பட்ஜெட் அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரி... தற்போது கையெழுத்தாகி உள்ள இந்தியா - ஐரோப்ப ஒன்றிய ஒப்பந்தம்... உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை போன்றவை நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இதை சமாளிக்கும் வகையிலும்... இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. விவசாயம், ஏ.ஐ, மூத்த குடிமக்களின் நலன், வருமான வரி போன்றவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பட்ஜெட் தாக்கல் சுமார் 11 மணி அளவில் தொடங்கும்.!
`விசுவாசத்தின் விலை துரோகமா?' - ஜி ஜின்பிங்கின் 'நிழல்'ஜாங் யூக்ஸியா வீழ்ந்தது எப்படி?
வரலாற்றின் பக்கங்கள் எப்போதுமே அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களை போலவே, அந்த உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டவர்களை பற்றியும் அதிகம் பேசுகின்றன. எந்த ஒரு பேரரசின் வீழ்ச்சியும் அதன் அடித்தளத்திலிருந்தே தொடங்குகிறது. நம்பிக்கை 'போர் வீரனாக'... 1950-ல் ஒரு செல்வாக்கு மிக்க ராணுவக் குடும்பத்தில் பிறந்த ஜாங்கிற்கு, அதிகாரம் என்பது பிறப்பிலேயே கொடுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இவரது தந்தை ஜாங் ஜாங்ஸுன், மாவோவின் நம்பிக்கைக்குரிய தளபதி. அதே காலகட்டத்தில், தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங்கின் தந்தையும் அதே ராணுவப் பிரிவில் பணியாற்றியவர். ஒரு சாதாரண வீரராக ராணுவத்தில் சேர்ந்த ஜாங், வெறும் வாரிசுப் பெருமையால் மட்டும் உயரவில்லை; 1979-ல் வியட்நாம் போர்க்களத்தில் அவர் சிந்திய ரத்தமும், காட்டிய வீரமுமே அவரை ஒரு நிஜமான 'போர் வீரனாக' ராணுவத்தின் முன்னணியில் நிறுத்தியது. ராணுவ பதவி - விசுவாசத்தின் அடையாளம் 2012-ஆம் ஆண்டு சீன அரசியலில் ஒரு திருப்புமுனை. ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராகப் பொறுப்பேற்றபோது, ராணுவத்தைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடித்தார். அதற்கு அவருக்கு ஒரு நம்பிக்கையான போர் வீரன் தேவைப்பட்டான். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தவர் ஜாங் யூக்ஸியா. ஜாங்கின் மீது ஜி ஜின்பிங் கொண்ட அபார நம்பிக்கையினால், அவர் மத்திய ராணுவ ஆணையத்தின் (CMC) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இது ராணுவத்தில் அதிபருக்கு அடுத்தபடியாக ஒருவருக்குக் கிடைக்கும் மிக உயரிய பதவி. சீனாவின் அணு ஆயுதப் பிரிவை (Rocket Force) நவீனப்படுத்துவது முதல், அதிநவீன ஏவுகணைகளை வாங்குவது வரை அனைத்து ரகசியப் பொறுப்புகளும் ஜாங்கிடமே ஒப்படைக்கப்பட்டன. ராணுவ விதிகளின்படி 72 வயதில் ஓய்வு பெற வேண்டிய ஜாங்கிற்கு, ஜி ஜின்பிங் விதியைத் தளர்த்தி 75 வயது வரை பதவி நீட்டிப்பு வழங்கினார். அந்த அளவிற்கு அவர் விசுவாசத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டார். அணு ஆயுத தகவல் கசிவு ஆனால், 2026-ன் தொடக்கத்தில் சீனாவின் மிக ரகசியமான அணு ஆயுத ஏவுகணைகள் மற்றும் அவை நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின. அமெரிக்க உளவு அமைப்பான CIA-விற்கு இந்தத் தகவல்கள் பரிமாறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தத் தகவல்கள் ஜாங் யூக்ஸியாவின் நேரடி மேற்பார்வையில் இருந்த 'ஆயுத மேம்பாட்டுத் துறையிலிருந்து' கசிந்தவை என்பது உறுதி செய்யப்பட்டபோது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட தரவுகளின்படி, பல ஆண்டுகளாக ராணுவ ரகசியங்கள் கைமாறியதன் பின்னணியில் ஒரு பெரும் சதி வலை இருப்பது தெரியவந்தது. ஊழல், தேசத்துரோகம், அதிகார துஷ்பிரயோகம் படிப்படியாக உயர்ந்த ஜாங்கின் அதிகாரம், ஒரே ஒரு வாரத்தில் சரிந்து விழுந்தது. ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் நிகழ்ந்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார்கள் ஒருபுறமிருக்க, ராணுவத்திற்குள் ஜி ஜின்பிங்கின் அதிகாரத்திற்குச் சவால் விடும் வகையில் ஜாங் ஒரு தனி அரசியல் குழுவை உருவாக்கியது விசாரணையில் அம்பலமானது. ஊழல், தேசத்துரோகம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய மும்முனைத் தாக்குதலுக்கு ஜாங் உள்ளானார். நேற்றுவரை அதிபருடன் ஒரே மேடையில் அமர்ந்து ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டவர், இன்று கைதியாக விசாரணை அறையில் அமர வைக்கப்பட்டார். இது ஒரு தனிமனிதனின் வீழ்ச்சி என்பதைத் தாண்டி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசனனையாக ஆனது. ஜாங்கின் இந்த வீழ்ச்சி, ஜி ஜின்பிங்கின் அதிகாரப் பிடியை இன்னும் பலப்படுத்தியுள்ளதோடு, ராணுவத்தில் இருக்கும் மற்ற அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்துள்ளது. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் நம்பிக்கையாகத் தொடங்கி, இன்று ஒரு வரலாற்றுச் சுவடாக மறைந்துபோன ஜாங் யூக்ஸியாவின் கதை, அதிகாரத்தின் இருண்ட பக்கத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.!
நெல்லை: `எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்'- அரசின் காலை உணவை குப்பையில் கொட்டிய தூய்மைப் பணியாளர்கள்!
தமிழகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கவதற்கு சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 750 தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை நேரத்தில் உப்புமா, இட்லி, பொங்கல் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கிய சில நாள்கள் மட்டும் உணவு தரம் நன்றாக இருந்தாதகவும், அதன் பிறகு வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். காலை உணவாக வழங்கப்பட்ட பொங்கல் இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறி, அதனை பணியாளர்கள் சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் வீசினார்கள். இதே போல் சில நாள்களாகச் சாப்பிட முடியாமல் உணவை குப்பைத் தொட்டியில் போடுவதாகக் கூறினார்கள். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், இந்தக் காலை உணவு திட்டம் தொடங்கிய 10 நாள்கள் மட்டுமே உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்தது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல தரம் இல்லை. இட்லி கல் போலவும், சாம்பார் தண்ணீர் போலவும் இருக்கிறது, உப்புமா மற்றும் பொங்கலில் தண்ணீர் அதிகமாக உள்ளது. உப்புமாவா பொங்கலா எனத் தெரியவில்லை. இதைச் சாப்பிட்டு எங்களில் பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. எங்களை கொல்லப் பார்க்கிறார்கள். இதுகுறித்து மாநகராட்சியில் புகார் செய்தால், `உணவு தருவது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் அதைச் சாப்ப்பிடுவதும் வீணடிப்பதும் உங்களது விருப்பம்' என அலட்சியமாகப் பேசுகிறார்கள் அதிகாரிகள். சம்பளம் கூடுதலாகக் கேட்டு போராட்டம் நடத்தியதற்கு காலை உணவு தருகிறோம் என்கிறது அரசு. ஒரு நாளுக்கு வழங்கப்படும் ரூ.540 ஊதியத்தை ரூ.800 வரை உயர்த்தி வழங்க வேண்டும். காலை உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை சம்பளத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும் என்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம், “தூய்மைப் பணியாளர்கள் கூறும் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
நெல்லை: `எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்'- அரசின் காலை உணவை குப்பையில் கொட்டிய தூய்மைப் பணியாளர்கள்!
தமிழகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கவதற்கு சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 750 தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை நேரத்தில் உப்புமா, இட்லி, பொங்கல் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கிய சில நாள்கள் மட்டும் உணவு தரம் நன்றாக இருந்தாதகவும், அதன் பிறகு வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். காலை உணவாக வழங்கப்பட்ட பொங்கல் இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறி, அதனை பணியாளர்கள் சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் வீசினார்கள். இதே போல் சில நாள்களாகச் சாப்பிட முடியாமல் உணவை குப்பைத் தொட்டியில் போடுவதாகக் கூறினார்கள். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், இந்தக் காலை உணவு திட்டம் தொடங்கிய 10 நாள்கள் மட்டுமே உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்தது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல தரம் இல்லை. இட்லி கல் போலவும், சாம்பார் தண்ணீர் போலவும் இருக்கிறது, உப்புமா மற்றும் பொங்கலில் தண்ணீர் அதிகமாக உள்ளது. உப்புமாவா பொங்கலா எனத் தெரியவில்லை. இதைச் சாப்பிட்டு எங்களில் பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. எங்களை கொல்லப் பார்க்கிறார்கள். இதுகுறித்து மாநகராட்சியில் புகார் செய்தால், `உணவு தருவது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் அதைச் சாப்ப்பிடுவதும் வீணடிப்பதும் உங்களது விருப்பம்' என அலட்சியமாகப் பேசுகிறார்கள் அதிகாரிகள். சம்பளம் கூடுதலாகக் கேட்டு போராட்டம் நடத்தியதற்கு காலை உணவு தருகிறோம் என்கிறது அரசு. ஒரு நாளுக்கு வழங்கப்படும் ரூ.540 ஊதியத்தை ரூ.800 வரை உயர்த்தி வழங்க வேண்டும். காலை உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை சம்பளத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும் என்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம், “தூய்மைப் பணியாளர்கள் கூறும் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
`ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற நாடகங்கள்; திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?'- அன்புமணி
`ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்ற 5,000 அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?' என திமுக அரசை நோக்கி கேள்விகளை அடுக்கியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்திருந்த நிலையில், ஜனவரி மாதத்துடன் ஓய்வு பெற்ற சுமார் 5000 அரசு ஊழியர்களில், புதிய திட்டத்தின்படி ஒய்வூதியம் பெறத் தகுதியானவர்களுக்கு அதற்கான ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வந்தக் குற்றச்சாட்டை இது உறுதி செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 26 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்தாண்டுகளாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர். அப்போராட்டத்தைத் தடுக்கும் வகையில், கடந்த 3-ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. திமுக அரசால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடியானத் திட்டம்; அதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்று அப்போதே குற்றஞ்சாட்டிய நான், இந்த மோசடித் திட்டமும் கூட திமுக ஆட்சிக்காலத்திற்குள் நடைமுறைக்கு வராது என எச்சரித்திருந்தேன். ஆனால், கடந்த 10-ஆம் தேதி தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்ட திமுக அரசு, 01.01.2026 முதல் ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது. திமுக அரசு வெளியிட்ட அரசாணையில், விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு தான் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை திமுக அரசு திட்டமிட்டு மறைத்து அரசு ஊழியர்களை ஏமாற்றியது. அந்த மோசடி இப்போது அம்பலமாகிவிட்டது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி வேலைநாளான நேற்று 5000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். அவர்களின் கணிசமானவர்கள் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதிடம் பெற தகுதியானவர்கள் ஆவர். திமுக அரசு கூறியிருந்தவாறு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், நேற்றுடன் ஓய்வு பெற்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி பயனடைவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அத்தகைய ஆணைகள் எதுவும் நேற்று ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒருவருக்கும் பயனளிக்காத தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 3-ஆம் தேதி அறிவித்த போதே, தங்களுக்கு ஆதரவான அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து, அவர்களை இனிப்பு ஊட்டச் செய்து ஏராளமான நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றியது. ஒருவேளை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், அதற்காக மக்களின் வரிப்பணத்தில் ஒரு விழாவையே திமுக அரசு நடத்தியிருக்கும். ஆனால், எதையும் செய்யாமல் அடக்கி வாசிப்பதில் இருந்தே தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகிறது. அன்புமணி ராமதாஸ் ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பது அத்தகையது அல்ல. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து அந்தத் தொகையைக் கொண்டு தான் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாகக் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு ஆகும். ஆனால், இந்தத் திட்டத்தைக்கூட செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதிலிருந்தே அதன் மோசடித்தனத்தை அளவிட முடியும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள் வகுக்கப்பட்டால் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விடும். ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகளை வகுப்பது மிகவும் எளிது. ஆனால், ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் சார்பில் ரூ.13,000 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். எனினும், அதற்கான நிதி திமுக அரசிடம் இல்லை என்பதால் அந்த நிதியை ஒதுக்கவும் முடியாது; ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தவும் முடியாது. ஆனாலும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நாடகங்களை திமுக அரசு நடத்துகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். அ.தி.மு.க-வுடன் அன்புமணி டீல்... அறிவாலயத்தை நெருங்கும் ராமதாஸ்!
`ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற நாடகங்கள்; திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?'- அன்புமணி
`ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்ற 5,000 அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?' என திமுக அரசை நோக்கி கேள்விகளை அடுக்கியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்திருந்த நிலையில், ஜனவரி மாதத்துடன் ஓய்வு பெற்ற சுமார் 5000 அரசு ஊழியர்களில், புதிய திட்டத்தின்படி ஒய்வூதியம் பெறத் தகுதியானவர்களுக்கு அதற்கான ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வந்தக் குற்றச்சாட்டை இது உறுதி செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 26 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்தாண்டுகளாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர். அப்போராட்டத்தைத் தடுக்கும் வகையில், கடந்த 3-ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. திமுக அரசால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடியானத் திட்டம்; அதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்று அப்போதே குற்றஞ்சாட்டிய நான், இந்த மோசடித் திட்டமும் கூட திமுக ஆட்சிக்காலத்திற்குள் நடைமுறைக்கு வராது என எச்சரித்திருந்தேன். ஆனால், கடந்த 10-ஆம் தேதி தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்ட திமுக அரசு, 01.01.2026 முதல் ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது. திமுக அரசு வெளியிட்ட அரசாணையில், விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு தான் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை திமுக அரசு திட்டமிட்டு மறைத்து அரசு ஊழியர்களை ஏமாற்றியது. அந்த மோசடி இப்போது அம்பலமாகிவிட்டது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி வேலைநாளான நேற்று 5000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். அவர்களின் கணிசமானவர்கள் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதிடம் பெற தகுதியானவர்கள் ஆவர். திமுக அரசு கூறியிருந்தவாறு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், நேற்றுடன் ஓய்வு பெற்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி பயனடைவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அத்தகைய ஆணைகள் எதுவும் நேற்று ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒருவருக்கும் பயனளிக்காத தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 3-ஆம் தேதி அறிவித்த போதே, தங்களுக்கு ஆதரவான அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து, அவர்களை இனிப்பு ஊட்டச் செய்து ஏராளமான நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றியது. ஒருவேளை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், அதற்காக மக்களின் வரிப்பணத்தில் ஒரு விழாவையே திமுக அரசு நடத்தியிருக்கும். ஆனால், எதையும் செய்யாமல் அடக்கி வாசிப்பதில் இருந்தே தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகிறது. அன்புமணி ராமதாஸ் ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பது அத்தகையது அல்ல. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து அந்தத் தொகையைக் கொண்டு தான் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாகக் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு ஆகும். ஆனால், இந்தத் திட்டத்தைக்கூட செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதிலிருந்தே அதன் மோசடித்தனத்தை அளவிட முடியும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள் வகுக்கப்பட்டால் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விடும். ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகளை வகுப்பது மிகவும் எளிது. ஆனால், ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் சார்பில் ரூ.13,000 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். எனினும், அதற்கான நிதி திமுக அரசிடம் இல்லை என்பதால் அந்த நிதியை ஒதுக்கவும் முடியாது; ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தவும் முடியாது. ஆனாலும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நாடகங்களை திமுக அரசு நடத்துகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். அ.தி.மு.க-வுடன் அன்புமணி டீல்... அறிவாலயத்தை நெருங்கும் ராமதாஸ்!
MSME: US வரியால் பெரும் பாதிப்பு; வேறு சந்தைகளை தேட 'இந்த'அறிவிப்புகள் வேண்டும்|மத்திய பட்ஜெட் 2026
இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று - சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை. இந்தத் துறைக்கான அறிவிப்பு எதிர்பார்ப்புகள் என்ன என்பதை விளக்குகிறார் See Change நிறுவனத்தின் தலைவர் மற்றும் MSME நிபுணர் ஆனந்த். இந்தியாவின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை உற்பத்தியில் கிட்டத்தட்ட 36 சதவிகிதமும், ஏற்றுமதியில் 45 சதவிகிதமும் பங்களிக்கிறது. முக்கியமாக, 11 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அமெரிக்காவின் வரிக் கொள்கை மாற்றங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU), நியூசிலாந்து உடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு (FTA) மத்தியில், இந்த பட்ஜெட் வெறும் கடனுதவி சார்ந்ததாக இல்லாமல், உலகளாவிய வர்த்தகத் திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். See Change நிறுவனத்தின் தலைவர் மற்றும் MSME நிபுணர் ஆனந்த் 2024–25 மற்றும் 2025–26 பட்ஜெட்டுகளில் இந்தத் தொழில்துறையின் வகைப்பாட்டைச் சீரமைத்தல், கடன் கிடைப்பதற்கான சலுகைகளை விரிவாக்குதல், சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கான கிரெடிட் கார்டுகள் மற்றும் BharatTradeNet போன்ற ஏற்றுமதி ஊக்குவிப்பு கட்டமைப்புகளில் கவனம் செலுத்தப்பட்டன. இதனால், பணப்புழக்கம் மேம்பட்டாலும், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு சரியாக பேமென்ட் கிடைக்காதது போன்ற வர்த்தக அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் முழுமையடையவில்லை. இப்போதுள்ள சவால் இப்போது அமெரிக்கா உயர்த்தியுள்ள வரியினால் (சில துறைகளில் 25%- 50% வரை) ஜவுளி, தோல் மற்றும் ரத்தினக் கற்கள் சார்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறைகள் பாதித்துள்ளன. இதனால், இந்தத் துறையினர் வேறு சந்தைகளைத் தேடி வருகின்றனர். அப்படி ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஓசியானியா சந்தைகளை நோக்கி நகரும்போது, லாப வரம்பு அழுத்தம் மற்றும் இணக்கச் செலவுகள் (Compliance Costs) பெரும் சவாலாக உள்ளன. ட்ரம்ப் - பரஸ்பர வரி இன்றைய உலகச் சந்தைகள் ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை) தரநிலைகள் மற்றும் டிஜிட்டல் வர்த்தக வசதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால், இந்திய நிறுவனங்களுக்குச் சர்வதேசச் சான்றிதழ்கள் பெறுவதிலும், ஏற்றுமதி காப்பீட்டிலும் முறையான கட்டமைப்பு ஆதரவு இன்னும் தேவைப்படுகிறது. இதை மத்திய அரசு எளிதாக்க வேண்டும். எதிர்பார்ப்புகள்... 1. சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை வர்த்தக மீளுருவாக்க நிதி (Trade Resilience Fund) - உலகளாவிய சந்தை மாற்றங்களை எதிர்கொள்ளப் பிரத்யேக நிதி ஒதுக்கீடு. 2. FTA மூலம் பலனடைய சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்ய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி செய்வதற்கான திட்டம். 3. புதிய நாடுகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்ல கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் மானியங்கள். பட்ஜெட் 4. BharatTradeNet போன்ற டிஜிட்டல் வர்த்தகச் செயல்பாடுகளை எளிமையாக்குதல். 5. Industry 4.0 & ESG திறன் மேம்பாடு - நவீனத் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் தரநிலைகளுக்கான பயிற்சி அளித்தல். 2026–27 பட்ஜெட் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறைகளை வெறும் பிழைப்பு மட்டத்திலிருந்து (Survival) உலகளாவிய போட்டித்தன்மைக்கு (Global Competitiveness) உயர்த்த வேண்டும். வர்த்தகத் திறன், உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமே இது சாத்தியமாகும்.
MSME: US வரியால் பெரும் பாதிப்பு; வேறு சந்தைகளை தேட 'இந்த'அறிவிப்புகள் வேண்டும்|மத்திய பட்ஜெட் 2026
இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று - சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை. இந்தத் துறைக்கான அறிவிப்பு எதிர்பார்ப்புகள் என்ன என்பதை விளக்குகிறார் See Change நிறுவனத்தின் தலைவர் மற்றும் MSME நிபுணர் ஆனந்த். இந்தியாவின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை உற்பத்தியில் கிட்டத்தட்ட 36 சதவிகிதமும், ஏற்றுமதியில் 45 சதவிகிதமும் பங்களிக்கிறது. முக்கியமாக, 11 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அமெரிக்காவின் வரிக் கொள்கை மாற்றங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU), நியூசிலாந்து உடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு (FTA) மத்தியில், இந்த பட்ஜெட் வெறும் கடனுதவி சார்ந்ததாக இல்லாமல், உலகளாவிய வர்த்தகத் திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். See Change நிறுவனத்தின் தலைவர் மற்றும் MSME நிபுணர் ஆனந்த் 2024–25 மற்றும் 2025–26 பட்ஜெட்டுகளில் இந்தத் தொழில்துறையின் வகைப்பாட்டைச் சீரமைத்தல், கடன் கிடைப்பதற்கான சலுகைகளை விரிவாக்குதல், சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கான கிரெடிட் கார்டுகள் மற்றும் BharatTradeNet போன்ற ஏற்றுமதி ஊக்குவிப்பு கட்டமைப்புகளில் கவனம் செலுத்தப்பட்டன. இதனால், பணப்புழக்கம் மேம்பட்டாலும், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு சரியாக பேமென்ட் கிடைக்காதது போன்ற வர்த்தக அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் முழுமையடையவில்லை. இப்போதுள்ள சவால் இப்போது அமெரிக்கா உயர்த்தியுள்ள வரியினால் (சில துறைகளில் 25%- 50% வரை) ஜவுளி, தோல் மற்றும் ரத்தினக் கற்கள் சார்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறைகள் பாதித்துள்ளன. இதனால், இந்தத் துறையினர் வேறு சந்தைகளைத் தேடி வருகின்றனர். அப்படி ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஓசியானியா சந்தைகளை நோக்கி நகரும்போது, லாப வரம்பு அழுத்தம் மற்றும் இணக்கச் செலவுகள் (Compliance Costs) பெரும் சவாலாக உள்ளன. ட்ரம்ப் - பரஸ்பர வரி இன்றைய உலகச் சந்தைகள் ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை) தரநிலைகள் மற்றும் டிஜிட்டல் வர்த்தக வசதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால், இந்திய நிறுவனங்களுக்குச் சர்வதேசச் சான்றிதழ்கள் பெறுவதிலும், ஏற்றுமதி காப்பீட்டிலும் முறையான கட்டமைப்பு ஆதரவு இன்னும் தேவைப்படுகிறது. இதை மத்திய அரசு எளிதாக்க வேண்டும். எதிர்பார்ப்புகள்... 1. சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை வர்த்தக மீளுருவாக்க நிதி (Trade Resilience Fund) - உலகளாவிய சந்தை மாற்றங்களை எதிர்கொள்ளப் பிரத்யேக நிதி ஒதுக்கீடு. 2. FTA மூலம் பலனடைய சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்ய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி செய்வதற்கான திட்டம். 3. புதிய நாடுகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்ல கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் மானியங்கள். பட்ஜெட் 4. BharatTradeNet போன்ற டிஜிட்டல் வர்த்தகச் செயல்பாடுகளை எளிமையாக்குதல். 5. Industry 4.0 & ESG திறன் மேம்பாடு - நவீனத் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் தரநிலைகளுக்கான பயிற்சி அளித்தல். 2026–27 பட்ஜெட் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறைகளை வெறும் பிழைப்பு மட்டத்திலிருந்து (Survival) உலகளாவிய போட்டித்தன்மைக்கு (Global Competitiveness) உயர்த்த வேண்டும். வர்த்தகத் திறன், உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமே இது சாத்தியமாகும்.
மொழி டாக்ஸிக் ஆக மாறக்கூடாது; எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்.!- கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் NDTV நடத்திய தமிழ்நாடு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் நேற்று (ஜன.30) கலந்துகொண்டிருக்கிறார். இந்த கருத்தரங்கில் மொழி குறித்து பேசிய அவர், அன்பு ஒரு போதும் விஷமாக மாறக்கூடாது. மொழியும் அப்படிதான் அது டாக்ஸிக் ஆக மாறக்கூடாது. என்னிடம் யாரும் மொழியும் திணிக்க முடியாது. நான் 27 வயது வரை இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவே இல்லை. கமல்ஹாசன் ஒரு வார்த்தைக்கூட எனக்கு தெரியாது. பிறகு பேசும் அளவிற்கு இந்திக் கற்றுக்கொண்டேன். ஆனாலும் இந்தி எழுதத் தெரியாது. நான் மூன்று மொழிகளில் நன்கு பரிட்சயம் பெற்றவன். ஒன்று தமிழ், இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது சினிமா. சினிமாமாவால் எல்லா மொழியும் பேச முடியும். மொழி என் பண்பாட்டுப் பெருமை. என் மொழியை நேசிக்க, நான் பிற மொழியை வெறுக்க வேண்டியதில்லை. எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள். கமல்ஹாசன் அந்த முடிவை மக்களிடமே விட்டுவிடுங்கள். வாழ்க்கைக்கு தேவை என்றால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
மொழி டாக்ஸிக் ஆக மாறக்கூடாது; எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்.!- கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் NDTV நடத்திய தமிழ்நாடு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் நேற்று (ஜன.30) கலந்துகொண்டிருக்கிறார். இந்த கருத்தரங்கில் மொழி குறித்து பேசிய அவர், அன்பு ஒரு போதும் விஷமாக மாறக்கூடாது. மொழியும் அப்படிதான் அது டாக்ஸிக் ஆக மாறக்கூடாது. என்னிடம் யாரும் மொழியும் திணிக்க முடியாது. நான் 27 வயது வரை இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவே இல்லை. கமல்ஹாசன் ஒரு வார்த்தைக்கூட எனக்கு தெரியாது. பிறகு பேசும் அளவிற்கு இந்திக் கற்றுக்கொண்டேன். ஆனாலும் இந்தி எழுதத் தெரியாது. நான் மூன்று மொழிகளில் நன்கு பரிட்சயம் பெற்றவன். ஒன்று தமிழ், இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது சினிமா. சினிமாமாவால் எல்லா மொழியும் பேச முடியும். மொழி என் பண்பாட்டுப் பெருமை. என் மொழியை நேசிக்க, நான் பிற மொழியை வெறுக்க வேண்டியதில்லை. எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள். கமல்ஹாசன் அந்த முடிவை மக்களிடமே விட்டுவிடுங்கள். வாழ்க்கைக்கு தேவை என்றால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
`அவர்களுக்கு உரிமை இருக்கிறது; சுனேத்ரா துணை முதல்வராவது பற்றி எனக்கு தெரியாது'- சரத் பவார்
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது சொந்த ஊரான பாராமதியில் நடந்த விமான விபத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் தலைமை வகித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு அஜித் பவாரின் துணை முதல்வர் பதவி குறித்தும் கேள்வி எழுந்தது. ஆனால் இப்போது அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வர் பதவியேற்க இருக்கிறார். கணவர் இறந்த மூன்றாவது நாளில் இதற்காக சுனேத்ரா பவார் தன்னுடைய மகனோடு மும்பைக்குக் கிளம்பி போய் இருக்கிறார். மும்பையில் இன்று நடக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் சுனேத்ரா பவார் கட்சியின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதனைத் தொடர்ந்து இன்றே துணை முதல்வராகவும் பதவியேற்க இருக்கிறார். சுனேத்ரா பவார் அதேசமயம் இது குறித்து கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவாரிடம் சுனேத்ரா பவார் எதுவும் கலந்து ஆலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சரத் பவார் அதிருப்தியடைந்துள்ளார். சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்க இருப்பது குறித்து இன்று சரத் பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''அஜித் பவாரின் மனைவி துணை முதல்வராகப் பதவியேற்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. பத்திரிகை செய்திகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். அவர் இது குறித்து எங்களிடமோ அல்லது குடும்பத்திலோ கலந்து ஆலோசிக்கவில்லை. அவர்களது கட்சியில் மூத்த தலைவர்கள் பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே போன்றோர் இருக்கின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் ஒன்றாக இணையவேண்டும் என்பது அஜித் பவாரின் விருப்பமாக இருந்தது. அவருடைய அந்த விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். அஜித் பவார் மற்றும் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கடந்த நான்கு மாதங்களாக இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர். அந்தப் பேச்சுவார்த்தைகள் சாதகமான ஒன்றாக இருந்தது. பிப்ரவரி 12-ம் தேதி இந்த இணைப்பு குறித்து அறிவிக்க அஜித் பவார் விரும்பினார். இது அவருடைய விருப்பமாக இருந்தது என்று கூறினார். அஜித் பவாருக்கு மிகவும் நெருக்கமான சில கட்சித் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவேதான் பா.ஜ.க-விடம் பேசி அவசர அவசரமாக சுனேத்ரா பவாரை துணை முதல்வராக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவில் சரத் பவார் அல்லது அவர் மகள் சுப்ரியா சுலே பங்கேற்பார்களா என்றும் தெரியவில்லை.
2001: தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர்; `கிங் மேக்கர்' TTV; OPS எனும் நான்.! | அரசியல் ஆடுபுலி 03
2001 அரசியல் ஆடுபுலி 03 விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசும்போது, ``நான்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவார் என்றார். அதெப்படி நான்கு தொகுதிகளில் போட்டியிட முடியுமென்று பலருக்கும் கேள்வி எழுந்தது. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி தொடுத்த, 2011 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான வழக்கில், திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பில்லை என்று சிலர் ஆரூடம் சொல்கிறார்கள். ஒருவேளை அப்படியொரு நிகழ்வு நடந்தால், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் திமுக தேர்தலை சந்திக்கவும் வாய்ப்புண்டு. தமிழ்நாட்டு அரசியலில் இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பு செய்யாமல் தேர்தலை சந்தித்தாலும், கட்சித் தலைமை, கூட்டணித் தலைமை யார் என்பதை வைத்து மக்களே தீர்மானித்து விடுவார்கள். அதுவும் காங்கிரஸ் காலத்திற்குப் பின்னர், திமுக, அதிமுக தலைவர்களே முதலமைச்சர் போட்டியில் இருக்கிறார்கள். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆனால், 2001ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பல்வேறு அரசியல் ஆடுபுலி ஆட்டங்களை சந்தித்தது. ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சர் ஆனார். ஜெயலலிதா கைது, கருணாநிதி கைது என்று தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கும் பின்புமாக அன்றைய அரசியல் களம் பரபரப்பாகவே இருந்தது. 1996ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கப் போகிறேன் என்றார். அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்தனர். அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த இரா.நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம், எஸ்.கண்ணப்பன் (ராஜகண்ணப்பன்), டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். துறைச் செயலாளர்களாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சிறைக்குச் சென்றார்கள். 1996 ஜூன் 20ஆம் நாள் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா அந்நிய செலவாணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா கைது ஊராட்சி மன்றங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி வாங்கியது, டான்சி நிலபேரம், கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் அனுமதி, தெற்காசிய விளையாட்டுப் போட்டி விளம்பரம், நிலக்கரி இறக்குமதி, அந்நிய செலவாணி சட்டத்தை மீறி மூன்று லட்சம் அமெரிக்க டாலர் பெற்றது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு ஆகிய ஏழு வழக்குகள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டது. ஏழு வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக் கோரி, தனித்தனியாக முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. ஆனால், செசன்ஸ் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ஆனது. 1996 டிசம்பர் 6 அன்று ஏழு வழக்கிலும் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட உடனே, மறுநாள் டிசம்பர் 7 அன்று காலை சுமார் 9.50 மணிக்கு ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா ஊராட்சி மன்றங்களுக்கு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியதில் ரூ 8.53 கோடி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான ஜெயலலிதாவிற்கு சிறையில் 2529 என்ற எண் வழங்கப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா கைதாகும் போது தமிழ்நாடு முழுக்க அதிமுக தொண்டர்கள் கொந்தளித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதானார்கள். 28 நாட்கள் சிறையில் இருந்தார் ஜெயலலிதா. தான் கைது செய்யப்படும்போது, போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கிளம்பிய ஜெயலலிதா, கூடியிருந்த செய்தியாளர்களிடம் “நாளை நமதே” என்றார். சிறை சென்று திரும்பியதும் அடுத்து வந்த தேர்தலில் அதனை சாதித்தும் காட்டினார். ஜெயலலிதா, சசிகலா மற்றும் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்தது. அடுத்தடுத்த வழக்குகள் 1991 இல் அதிமுக ஆட்சியில் இருந்த போது, சென்னை கிண்டியில் உள்ள அரசு நிறுவனமான டான்சி நிலத்தை ஜெயா பப்ளிகேசன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் வாங்கியுள்ளன. ஜெயலலிதா, சசிகலாவை பங்குதாரர்களாகக் கொண்ட, இந்நிறுவனங்கள் ரூ.4.16 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டார்கள் என்ற வழக்கும் அந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ஜெயலலிதா மீதான வழக்கில், 2000ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் அனுமதி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா இருவரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி ஐந்தாண்டுகள் முழுமையாக முதலமைச்சர் பதவியை நிறைவு செய்தார் திமுக தலைவர் கருணாநிதி. ஜெயலலிதா 2001 மே 10 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு, தேர்தல் பரப்புரைகள் தொடங்கின. 2001 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிபட்டி ஆகிய 4 தொகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 - பிரிவு 33(7) ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கிறது. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை. அதனை மீறித்தான் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்புமனு அளித்திருந்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 2827 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனையில் ஜெயலலிதாவின் நான்கு மனுக்கள் உள்பட 758 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கருணாநிதி செய்த சூழ்ச்சியால் தனது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார் ஜெயலலிதா. யார் முதல்வர்? அதிமுக வெற்றி பெற்றால் யார் முதலமைச்சராக முடியும்? உங்களால் சொல்ல முடியுமா? என்று தேர்தல் பரப்புரையில் அதிமுக அணியை நோக்கி கருணாநிதி கேள்வி எழுப்பினார். கூட்டணி கணக்குகள் அதிமுகவிற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் முடிவுகளில், அதிமுக அணி 196 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் வேட்புமனு தள்ளுபடியான, கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோவிந்தராசு 21,773 வாக்குகள் வித்தியாசத்திலும், ஆண்டிபட்டி தொகுதியில் தங்கத்தமிழ்செல்வன் 25,009 வாக்குகள் வித்தியாசத்திலும், புதுக்கோட்டை தொகுதியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் 28,183 வாக்குகள் வித்தியாசத்திலும், புவனகிரி தொகுதியில் அதிமுக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் பி.எஸ்.அருள் வாழைப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 3,764 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். தேர்தலில் போட்டியிடாத, சட்டமன்ற உறுப்பினர் இல்லாத, செல்வி ஜெ.ஜெயலலிதா அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா ஆளுநர் பாத்திமா பீவியைச் சந்தித்து, தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. மத்தியில் திமுக கூட்டணியோடு பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சட்டவல்லுநர்கள் ஜெயலலிதா பதவியேற்க முடியுமா என்று விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதே, அதிமுக அமைச்சரவை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 2001 மே 14 அன்று மாலை செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பொன்னையன், தம்பிதுரை, டி.ஜெயக்குமார், அய்யாறு வாண்டையார், ஆர்.சரோஜா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஓரிரு நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி முதலமைச்சராக பதவியேற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்தது. ஆனால், 2001 மே 14 முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, ஜூன் 31 நள்ளிரவில் சென்னை மேம்பால கட்டுமான ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியை கைது செய்தார். மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்டனர். கருணாநிதி கைது இந்த அரசியல் பரபரப்பு அடங்கும் முன்பாக, ஜெயலலிதா மீதான பதவியேற்பு வழக்கில் 2001 செப்டம்பர் 21 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி பரூச்சா தலைமையில், நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், ரூமாபால், ஜி.பி.பட்நாயக், பிரிஜேஷ் குமார் ஆகிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. அடுத்த முதலமைச்சர் யார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. பொன்னையன், காளிமுத்து, தம்பிதுரை, ஜெயக்குமார், தனபால், சரோஜா உட்பட பலரது பெயர்களையும் பத்திரிகையாளர்கள் அசைபோட்டார்கள். நாவலர் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி, சசிகலா அண்ணன் ஜெயராமன் மனைவி இளவரசி ஆகியோரையும் முதலமைச்சர் போட்டியில் கொண்டு வந்தனர். இரவு 7 மணிக்கு அதிமுக தலைமைக் கழகம் வந்தார் ஜெயலலிதா. முறைப்படி அறிவிப்பு செய்தார். அதிமுகவில் சேடப்பட்டி முத்தையா சீடராக வளர்ந்து, பெரியகுளம் சேர்மனாக பதவி வகித்து, கம்பம் செல்வேந்திரன், பெரியவீரன் துணையோடு, டிடிவி தினகரன் ஆதரவாளராகத் தொடர்ந்து, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2001 செப்டம்பர் 21 இரவு சுமார் 8.20 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் எனும் நான்… ஆளுநர் மாளிகையில் முறைப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அங்கு கிங் மேக்கர் ஆனார் டிடிவி தினகரன்.! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்)
2001: தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர்; `கிங் மேக்கர்' TTV; OPS எனும் நான்.! | அரசியல் ஆடுபுலி 03
2001 அரசியல் ஆடுபுலி 03 விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசும்போது, ``நான்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவார் என்றார். அதெப்படி நான்கு தொகுதிகளில் போட்டியிட முடியுமென்று பலருக்கும் கேள்வி எழுந்தது. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி தொடுத்த, 2011 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான வழக்கில், திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பில்லை என்று சிலர் ஆரூடம் சொல்கிறார்கள். ஒருவேளை அப்படியொரு நிகழ்வு நடந்தால், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் திமுக தேர்தலை சந்திக்கவும் வாய்ப்புண்டு. தமிழ்நாட்டு அரசியலில் இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பு செய்யாமல் தேர்தலை சந்தித்தாலும், கட்சித் தலைமை, கூட்டணித் தலைமை யார் என்பதை வைத்து மக்களே தீர்மானித்து விடுவார்கள். அதுவும் காங்கிரஸ் காலத்திற்குப் பின்னர், திமுக, அதிமுக தலைவர்களே முதலமைச்சர் போட்டியில் இருக்கிறார்கள். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆனால், 2001ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பல்வேறு அரசியல் ஆடுபுலி ஆட்டங்களை சந்தித்தது. ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சர் ஆனார். ஜெயலலிதா கைது, கருணாநிதி கைது என்று தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கும் பின்புமாக அன்றைய அரசியல் களம் பரபரப்பாகவே இருந்தது. 1996ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கப் போகிறேன் என்றார். அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்தனர். அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த இரா.நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம், எஸ்.கண்ணப்பன் (ராஜகண்ணப்பன்), டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். துறைச் செயலாளர்களாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சிறைக்குச் சென்றார்கள். 1996 ஜூன் 20ஆம் நாள் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா அந்நிய செலவாணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா கைது ஊராட்சி மன்றங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி வாங்கியது, டான்சி நிலபேரம், கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் அனுமதி, தெற்காசிய விளையாட்டுப் போட்டி விளம்பரம், நிலக்கரி இறக்குமதி, அந்நிய செலவாணி சட்டத்தை மீறி மூன்று லட்சம் அமெரிக்க டாலர் பெற்றது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு ஆகிய ஏழு வழக்குகள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டது. ஏழு வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக் கோரி, தனித்தனியாக முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. ஆனால், செசன்ஸ் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ஆனது. 1996 டிசம்பர் 6 அன்று ஏழு வழக்கிலும் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட உடனே, மறுநாள் டிசம்பர் 7 அன்று காலை சுமார் 9.50 மணிக்கு ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா ஊராட்சி மன்றங்களுக்கு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியதில் ரூ 8.53 கோடி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான ஜெயலலிதாவிற்கு சிறையில் 2529 என்ற எண் வழங்கப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா கைதாகும் போது தமிழ்நாடு முழுக்க அதிமுக தொண்டர்கள் கொந்தளித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதானார்கள். 28 நாட்கள் சிறையில் இருந்தார் ஜெயலலிதா. தான் கைது செய்யப்படும்போது, போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கிளம்பிய ஜெயலலிதா, கூடியிருந்த செய்தியாளர்களிடம் “நாளை நமதே” என்றார். சிறை சென்று திரும்பியதும் அடுத்து வந்த தேர்தலில் அதனை சாதித்தும் காட்டினார். ஜெயலலிதா, சசிகலா மற்றும் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்தது. அடுத்தடுத்த வழக்குகள் 1991 இல் அதிமுக ஆட்சியில் இருந்த போது, சென்னை கிண்டியில் உள்ள அரசு நிறுவனமான டான்சி நிலத்தை ஜெயா பப்ளிகேசன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் வாங்கியுள்ளன. ஜெயலலிதா, சசிகலாவை பங்குதாரர்களாகக் கொண்ட, இந்நிறுவனங்கள் ரூ.4.16 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டார்கள் என்ற வழக்கும் அந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ஜெயலலிதா மீதான வழக்கில், 2000ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் அனுமதி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா இருவரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி ஐந்தாண்டுகள் முழுமையாக முதலமைச்சர் பதவியை நிறைவு செய்தார் திமுக தலைவர் கருணாநிதி. ஜெயலலிதா 2001 மே 10 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு, தேர்தல் பரப்புரைகள் தொடங்கின. 2001 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிபட்டி ஆகிய 4 தொகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 - பிரிவு 33(7) ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கிறது. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை. அதனை மீறித்தான் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்புமனு அளித்திருந்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 2827 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனையில் ஜெயலலிதாவின் நான்கு மனுக்கள் உள்பட 758 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கருணாநிதி செய்த சூழ்ச்சியால் தனது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார் ஜெயலலிதா. யார் முதல்வர்? அதிமுக வெற்றி பெற்றால் யார் முதலமைச்சராக முடியும்? உங்களால் சொல்ல முடியுமா? என்று தேர்தல் பரப்புரையில் அதிமுக அணியை நோக்கி கருணாநிதி கேள்வி எழுப்பினார். கூட்டணி கணக்குகள் அதிமுகவிற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் முடிவுகளில், அதிமுக அணி 196 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் வேட்புமனு தள்ளுபடியான, கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோவிந்தராசு 21,773 வாக்குகள் வித்தியாசத்திலும், ஆண்டிபட்டி தொகுதியில் தங்கத்தமிழ்செல்வன் 25,009 வாக்குகள் வித்தியாசத்திலும், புதுக்கோட்டை தொகுதியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் 28,183 வாக்குகள் வித்தியாசத்திலும், புவனகிரி தொகுதியில் அதிமுக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் பி.எஸ்.அருள் வாழைப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 3,764 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். தேர்தலில் போட்டியிடாத, சட்டமன்ற உறுப்பினர் இல்லாத, செல்வி ஜெ.ஜெயலலிதா அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா ஆளுநர் பாத்திமா பீவியைச் சந்தித்து, தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. மத்தியில் திமுக கூட்டணியோடு பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சட்டவல்லுநர்கள் ஜெயலலிதா பதவியேற்க முடியுமா என்று விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதே, அதிமுக அமைச்சரவை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 2001 மே 14 அன்று மாலை செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பொன்னையன், தம்பிதுரை, டி.ஜெயக்குமார், அய்யாறு வாண்டையார், ஆர்.சரோஜா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஓரிரு நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி முதலமைச்சராக பதவியேற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்தது. ஆனால், 2001 மே 14 முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, ஜூன் 31 நள்ளிரவில் சென்னை மேம்பால கட்டுமான ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியை கைது செய்தார். மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்டனர். கருணாநிதி கைது இந்த அரசியல் பரபரப்பு அடங்கும் முன்பாக, ஜெயலலிதா மீதான பதவியேற்பு வழக்கில் 2001 செப்டம்பர் 21 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி பரூச்சா தலைமையில், நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், ரூமாபால், ஜி.பி.பட்நாயக், பிரிஜேஷ் குமார் ஆகிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. அடுத்த முதலமைச்சர் யார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. பொன்னையன், காளிமுத்து, தம்பிதுரை, ஜெயக்குமார், தனபால், சரோஜா உட்பட பலரது பெயர்களையும் பத்திரிகையாளர்கள் அசைபோட்டார்கள். நாவலர் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி, சசிகலா அண்ணன் ஜெயராமன் மனைவி இளவரசி ஆகியோரையும் முதலமைச்சர் போட்டியில் கொண்டு வந்தனர். இரவு 7 மணிக்கு அதிமுக தலைமைக் கழகம் வந்தார் ஜெயலலிதா. முறைப்படி அறிவிப்பு செய்தார். அதிமுகவில் சேடப்பட்டி முத்தையா சீடராக வளர்ந்து, பெரியகுளம் சேர்மனாக பதவி வகித்து, கம்பம் செல்வேந்திரன், பெரியவீரன் துணையோடு, டிடிவி தினகரன் ஆதரவாளராகத் தொடர்ந்து, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2001 செப்டம்பர் 21 இரவு சுமார் 8.20 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் எனும் நான்… ஆளுநர் மாளிகையில் முறைப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அங்கு கிங் மேக்கர் ஆனார் டிடிவி தினகரன்.! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்)
தேசியவாத காங்கிரஸ் இணைப்பு பற்றி விவாதிக்க சரத் பவார் கூட்டிய கூட்டம் - புறக்கணித்த சுனேத்ரா பவார்!
மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்தது. மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. சமீபத்தில் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பே தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டையும் ஒன்றாக இணைப்பது குறித்து சரத் பவாரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். ஆனால் அவர் அதற்குள் அகால மரணமடைந்துவிட்டார். இதையடுத்து அஜித் பவாரின் அஸ்தி கரைக்கப்பட்ட பிறகு சரத் பவாரின் இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்து பேச சரத் பவார் ஏற்பாடு செய்து இருந்தார். இந்த கூட்டத்தில் இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டத்திற்கு சுனேத்ரா பவாரோ அல்லது அஜித் பவார் குடும்பத்தினரோ வரவில்லை. சுனேத்ரா பவார் தனது ஒரு மகனை அழைத்துக்கொண்டு மும்பை சென்றுவிட்டதாக சுனேத்ரா பவாருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். சரத்பவார் அதுவும் சரத் பவாரிடம் துணை முதல்வராக பதவியேற்பது குறித்து கலந்து ஆலோசிக்காமல், அவரிடம் சொல்லாமல் அவசர அவசரமாக சுனேத்ரா பவார் புறப்பட்டு சென்று விட்டார். இது சரத் பவாருக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருக்கிறது. துணை முதல்வர் பதவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது. எனவே, அஜித் பவார் மறைந்த நான்காவது நாளில் பதவியேற்பு விழாவை அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே அஜித் பவாரின் மறைவுக்கு 12 அல்லது 13 ம் நாள் துக்கம் அனுசரித்த பிறகு இது போன்ற நிகழ்வுகளை வைத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இது குறித்து அஜித் பவாருக்கு மிகவும் நெருக்கமான மாநில அமைச்சர் நர்ஹரி ஜரிவால் கூறுகையில்,' அண்ணி அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கவேண்டும். சரத் பவார் கட்சிக்கு பாதுகாவலராக இருந்து இரு அணிகளும் இணைய முக்கிய பங்காற்ற வேண்டும். இரண்டு அணிகளும் ஏறக்குறைய மீண்டும் ஒன்றிணைந்துவிட்டன. அவை உள்ளாட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன. இரு அணிகளின் இணைப்பு என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. அது நடக்க வேண்டும் என்று அஜித் தாதா விரும்பினார். ஆனால் இப்போது பவார் சாஹேப் தலைமை ஏற்று அஜித் பவாரின் முடிக்கப்படாத கனவை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ்(பவார்) மாநில தலைவர் சசிகாந்த் ஷிண்டே கூறுகையில், ''இரு அணிகளும் மீண்டும் இணைவது குறித்து பவார் குடும்பத்தினர் முடிவு எடுக்க வேண்டும். சோகம் நடந்தபோது விவாதங்கள் இறுதிக் கட்டத்தில் இருந்தன. இப்போது, பவார் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இணைப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர்களின் முடிவை நாங்கள் மதிப்போம். சுனேத்ரா பவார் இந்த இணைப்பு இரு பிரிவினருக்கும் பயனளிக்கும். நாங்கள் முன்பு அஜித் பவாரை சந்தித்தபோது, இரு கட்சிகளும் ஒன்றாக வர வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அவர் அதைப் பற்றி பலமுறை பேசியிருந்தார். அஜித் பவாருடன் இரு அணிகளின் இணைப்பு குறித்துபல முறை பேசியிருக்கிறேன். ஜில்லா பரிஷத் தேர்தல்களுக்கு பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் அவர் கூறி இருந்தார்''என்றார். ஆனால் இந்த இணைப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சுனேத்ரா பவாருக்கு அவசரமாக துணை முதல்வர் பதவியை பா.ஜ.க கொடுக்க முன்வந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். `சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க' - அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு
தேசியவாத காங்கிரஸ் இணைப்பு பற்றி விவாதிக்க சரத் பவார் கூட்டிய கூட்டம் - புறக்கணித்த சுனேத்ரா பவார்!
மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்தது. மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. சமீபத்தில் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பே தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டையும் ஒன்றாக இணைப்பது குறித்து சரத் பவாரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். ஆனால் அவர் அதற்குள் அகால மரணமடைந்துவிட்டார். இதையடுத்து அஜித் பவாரின் அஸ்தி கரைக்கப்பட்ட பிறகு சரத் பவாரின் இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்து பேச சரத் பவார் ஏற்பாடு செய்து இருந்தார். இந்த கூட்டத்தில் இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டத்திற்கு சுனேத்ரா பவாரோ அல்லது அஜித் பவார் குடும்பத்தினரோ வரவில்லை. சுனேத்ரா பவார் தனது ஒரு மகனை அழைத்துக்கொண்டு மும்பை சென்றுவிட்டதாக சுனேத்ரா பவாருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். சரத்பவார் அதுவும் சரத் பவாரிடம் துணை முதல்வராக பதவியேற்பது குறித்து கலந்து ஆலோசிக்காமல், அவரிடம் சொல்லாமல் அவசர அவசரமாக சுனேத்ரா பவார் புறப்பட்டு சென்று விட்டார். இது சரத் பவாருக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருக்கிறது. துணை முதல்வர் பதவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது. எனவே, அஜித் பவார் மறைந்த நான்காவது நாளில் பதவியேற்பு விழாவை அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே அஜித் பவாரின் மறைவுக்கு 12 அல்லது 13 ம் நாள் துக்கம் அனுசரித்த பிறகு இது போன்ற நிகழ்வுகளை வைத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இது குறித்து அஜித் பவாருக்கு மிகவும் நெருக்கமான மாநில அமைச்சர் நர்ஹரி ஜரிவால் கூறுகையில்,' அண்ணி அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கவேண்டும். சரத் பவார் கட்சிக்கு பாதுகாவலராக இருந்து இரு அணிகளும் இணைய முக்கிய பங்காற்ற வேண்டும். இரண்டு அணிகளும் ஏறக்குறைய மீண்டும் ஒன்றிணைந்துவிட்டன. அவை உள்ளாட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன. இரு அணிகளின் இணைப்பு என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. அது நடக்க வேண்டும் என்று அஜித் தாதா விரும்பினார். ஆனால் இப்போது பவார் சாஹேப் தலைமை ஏற்று அஜித் பவாரின் முடிக்கப்படாத கனவை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ்(பவார்) மாநில தலைவர் சசிகாந்த் ஷிண்டே கூறுகையில், ''இரு அணிகளும் மீண்டும் இணைவது குறித்து பவார் குடும்பத்தினர் முடிவு எடுக்க வேண்டும். சோகம் நடந்தபோது விவாதங்கள் இறுதிக் கட்டத்தில் இருந்தன. இப்போது, பவார் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இணைப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர்களின் முடிவை நாங்கள் மதிப்போம். சுனேத்ரா பவார் இந்த இணைப்பு இரு பிரிவினருக்கும் பயனளிக்கும். நாங்கள் முன்பு அஜித் பவாரை சந்தித்தபோது, இரு கட்சிகளும் ஒன்றாக வர வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அவர் அதைப் பற்றி பலமுறை பேசியிருந்தார். அஜித் பவாருடன் இரு அணிகளின் இணைப்பு குறித்துபல முறை பேசியிருக்கிறேன். ஜில்லா பரிஷத் தேர்தல்களுக்கு பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் அவர் கூறி இருந்தார்''என்றார். ஆனால் இந்த இணைப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சுனேத்ரா பவாருக்கு அவசரமாக துணை முதல்வர் பதவியை பா.ஜ.க கொடுக்க முன்வந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். `சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க' - அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு
`சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க' - அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு
மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவர் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி தலைவர்கள் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரிடம் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முறைப்படி சுனேத்ரா பவார் கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இது குறித்து மாநில தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் சகன் புஜ்பால் கூறுகையில்,''சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்பார். இது ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூடி சுனேத்ரா பவாரை முறைப்படி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்ய இருக்கின்றனர்''என்றார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசி வந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இம்முடிவுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனே ஒப்புதல் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கும் என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க அஜித் பவார் இறந்த சில நாட்களில் அவசர அவசரமாக அவரது மனைவிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் பவார் இருந்த போது சரத் பவார் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு இரு கட்சிகளையும் இணைக்க அஜித் பவார் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது திடீரென அஜித் பவார் இறந்துவிட்டதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரத் பவார் ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார் என்ற அபாயம் இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கருதினர். மீண்டும் சரத் பவாரின் கட்டுப்பாட்டில் செல்வதை கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தலைமையில் செல்வதை பா.ஜ.கவும் விரும்பவில்லை. சரத்பவார் சரத்பவார் கட்சியில் ஆதிக்கம் செலுத்தினால் எதிர்காலத்தில் பா.ஜ.க கூட்டணியை அவர் விரும்ப மாட்டார் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. எனவேதான் சுனேத்ரா பவாரை துணை முதல்வராக்குவதில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளையும் பிப்ரவரி மத்தியில் ஒன்றாக இணைக்க திட்டமிட்டு இருந்தனர். சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றால் மகாராஷ்டிராவில் முதல் பெண் முதல்வர் என்ற பெயரை பெறுவார். சுனேத்ரா பவார் ஏற்கனவே மும்பைக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. துணை முதல்வராக பதவியேற்ற பிறகு பாராமதி இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்படுவார். தற்போது சுனேத்ரா பவார் ராஜ்ய சபை உறுப்பினராக இருக்கிறார். துணை முதல்வரான பிறகு அப்பதவியை கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் அல்லது தனது மகன்களில் ஒருவருக்கு கொடுப்பார் என்று தெரிகிறது. 'அமைச்சரவை மாற்றம்; இடைத்தேர்தலில் ஜெய் பவார்' - அஜித் பவார் மனைவி துணை முதல்வர்? அடுத்து என்ன?
`சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க' - அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு
மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவர் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி தலைவர்கள் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரிடம் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முறைப்படி சுனேத்ரா பவார் கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இது குறித்து மாநில தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் சகன் புஜ்பால் கூறுகையில்,''சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்பார். இது ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூடி சுனேத்ரா பவாரை முறைப்படி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்ய இருக்கின்றனர்''என்றார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசி வந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இம்முடிவுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனே ஒப்புதல் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கும் என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க அஜித் பவார் இறந்த சில நாட்களில் அவசர அவசரமாக அவரது மனைவிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் பவார் இருந்த போது சரத் பவார் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு இரு கட்சிகளையும் இணைக்க அஜித் பவார் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது திடீரென அஜித் பவார் இறந்துவிட்டதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரத் பவார் ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார் என்ற அபாயம் இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கருதினர். மீண்டும் சரத் பவாரின் கட்டுப்பாட்டில் செல்வதை கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தலைமையில் செல்வதை பா.ஜ.கவும் விரும்பவில்லை. சரத்பவார் சரத்பவார் கட்சியில் ஆதிக்கம் செலுத்தினால் எதிர்காலத்தில் பா.ஜ.க கூட்டணியை அவர் விரும்ப மாட்டார் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. எனவேதான் சுனேத்ரா பவாரை துணை முதல்வராக்குவதில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளையும் பிப்ரவரி மத்தியில் ஒன்றாக இணைக்க திட்டமிட்டு இருந்தனர். சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றால் மகாராஷ்டிராவில் முதல் பெண் முதல்வர் என்ற பெயரை பெறுவார். சுனேத்ரா பவார் ஏற்கனவே மும்பைக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. துணை முதல்வராக பதவியேற்ற பிறகு பாராமதி இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்படுவார். தற்போது சுனேத்ரா பவார் ராஜ்ய சபை உறுப்பினராக இருக்கிறார். துணை முதல்வரான பிறகு அப்பதவியை கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் அல்லது தனது மகன்களில் ஒருவருக்கு கொடுப்பார் என்று தெரிகிறது. 'அமைச்சரவை மாற்றம்; இடைத்தேர்தலில் ஜெய் பவார்' - அஜித் பவார் மனைவி துணை முதல்வர்? அடுத்து என்ன?
`சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க' - அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு
மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவர் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி தலைவர்கள் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரிடம் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முறைப்படி சுனேத்ரா பவார் கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இது குறித்து மாநில தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் சகன் புஜ்பால் கூறுகையில்,''சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்பார். இது ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூடி சுனேத்ரா பவாரை முறைப்படி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்ய இருக்கின்றனர்''என்றார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசி வந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இம்முடிவுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனே ஒப்புதல் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கும் என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க அஜித் பவார் இறந்த சில நாட்களில் அவசர அவசரமாக அவரது மனைவிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் பவார் இருந்த போது சரத் பவார் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு இரு கட்சிகளையும் இணைக்க அஜித் பவார் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது திடீரென அஜித் பவார் இறந்துவிட்டதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரத் பவார் ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார் என்ற அபாயம் இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கருதினர். மீண்டும் சரத் பவாரின் கட்டுப்பாட்டில் செல்வதை கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தலைமையில் செல்வதை பா.ஜ.கவும் விரும்பவில்லை. சரத்பவார் சரத்பவார் கட்சியில் ஆதிக்கம் செலுத்தினால் எதிர்காலத்தில் பா.ஜ.க கூட்டணியை அவர் விரும்ப மாட்டார் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. எனவேதான் சுனேத்ரா பவாரை துணை முதல்வராக்குவதில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளையும் பிப்ரவரி மத்தியில் ஒன்றாக இணைக்க திட்டமிட்டு இருந்தனர். சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றால் மகாராஷ்டிராவில் முதல் பெண் முதல்வர் என்ற பெயரை பெறுவார். சுனேத்ரா பவார் ஏற்கனவே மும்பைக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. துணை முதல்வராக பதவியேற்ற பிறகு பாராமதி இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்படுவார். தற்போது சுனேத்ரா பவார் ராஜ்ய சபை உறுப்பினராக இருக்கிறார். துணை முதல்வரான பிறகு அப்பதவியை கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் அல்லது தனது மகன்களில் ஒருவருக்கு கொடுப்பார் என்று தெரிகிறது. 'அமைச்சரவை மாற்றம்; இடைத்தேர்தலில் ஜெய் பவார்' - அஜித் பவார் மனைவி துணை முதல்வர்? அடுத்து என்ன?
Truth Social பதிவில் Trump கடும் எச்சரிக்கை
வியாழக்கிழமை (29) Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், Trump கனடாவைச் சேர்ந்த The post Truth Social பதிவில் Trump கடும் எச்சரிக்கை appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .
'தூத்துக்குடி போகாத எடப்பாடி பழனிசாமி விஜய்யை பற்றி பேசலாமா' - செங்கோட்டையன் பதிலடி!
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சினிமாவில் இருந்து எம்ஜிஆர் 3 முறை முதலமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். செங்கோட்டையன் திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்கிற வரலாற்றை இந்தியாவிற்கே எம்ஜிஆர், என்டிஆர் உருவாக்கியுள்ளனர் . இப்போதுள்ள நிலையில் தவெக, திமுக இடையேதான் போட்டி. எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்ற நிலை இல்லை. பிரதமரின் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி இவர் கட்சி நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி முகத்திற்காகவா மக்கள் ஓட்டு போடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. விஜய் அதையே அவர் இன்னும் உணராமல் இருக்கிறார். அதிமுக, திமுக நிர்வாகிகள் வீட்டிற்கு சென்றாலும், அவர்களின் குடும்பத்தினரின் வாக்கு தவெகவுக்கு செல்லும் நிலை உள்ளது. எங்களது சர்வே முடிவில் தவெகவுக்கு 40% வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தூத்துகுடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவிகளை சுடுவது போன்று சுட்டு கொன்றார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி எட்டி பார்த்தாரா. ஜெயலலிதா தங்கி இருக்கும் கோடநாடு எஸ்டேட்டில் 2 கொலைகள் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவம் காலையில்தான் எனக்கு தெரியும் என்று சொன்னவர் தான் எடப்பாடி. அவர் எப்படி முதலமைச்சரானார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதையும் நாடே அறியும். அவருக்கு விஜய்யை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை” என்றார்.
'தூத்துக்குடி போகாத எடப்பாடி பழனிசாமி விஜய்யை பற்றி பேசலாமா' - செங்கோட்டையன் பதிலடி!
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சினிமாவில் இருந்து எம்ஜிஆர் 3 முறை முதலமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். செங்கோட்டையன் திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்கிற வரலாற்றை இந்தியாவிற்கே எம்ஜிஆர், என்டிஆர் உருவாக்கியுள்ளனர் . இப்போதுள்ள நிலையில் தவெக, திமுக இடையேதான் போட்டி. எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்ற நிலை இல்லை. பிரதமரின் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி இவர் கட்சி நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி முகத்திற்காகவா மக்கள் ஓட்டு போடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. விஜய் அதையே அவர் இன்னும் உணராமல் இருக்கிறார். அதிமுக, திமுக நிர்வாகிகள் வீட்டிற்கு சென்றாலும், அவர்களின் குடும்பத்தினரின் வாக்கு தவெகவுக்கு செல்லும் நிலை உள்ளது. எங்களது சர்வே முடிவில் தவெகவுக்கு 40% வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தூத்துகுடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவிகளை சுடுவது போன்று சுட்டு கொன்றார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி எட்டி பார்த்தாரா. ஜெயலலிதா தங்கி இருக்கும் கோடநாடு எஸ்டேட்டில் 2 கொலைகள் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவம் காலையில்தான் எனக்கு தெரியும் என்று சொன்னவர் தான் எடப்பாடி. அவர் எப்படி முதலமைச்சரானார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதையும் நாடே அறியும். அவருக்கு விஜய்யை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை” என்றார்.
விவசாயம், விவசாயிகள் எதிர்பார்க்கும் '10'அறிவிப்புகள்!|மத்திய பட்ஜெட் 2026
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு 'விவசாயம்'. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயத்திற்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். இந்தப் பட்ஜெட்டிலும் அது இடம்பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் எதிர்பார்ப்பைக் கூறுகிறார் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன். இளங்கீரன் பட்ஜெட்டுக்கு பின் Share Market-க்கு பூஸ்ட் கிடைக்குமா? முதலீட்டாளர்கள் கவனிக்க!|மத்திய பட்ஜெட் 2026 > C+2 என்கிற குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயம் வேண்டும். 'லாபம் இல்லை' என்று தான் விவசாயிகள் விவசாயத்தில் இருந்து வெளியேறுகின்றனர். இதைத் தடுக்க, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது மிக மிக முக்கியம். மேலும், விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டால், விவசாயம் லாபகரமானதாக மாறும். > விவசாயத்திற்கு தண்ணீர் மிக மிக முக்கியம். 2014-ம் ஆண்டு 'நதிகள் இணைக்கப்படும்' என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. இப்போது மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும், இன்னும் அவர்கள் இதற்கான முயற்சியை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் முக்கிய நதிகளையாவது இணைக்க வேண்டும். அப்போது இங்கே மழை பெய்யும்போது, மழை இல்லாத மாநிலத்திற்கு, இங்கிருக்கும் உபரி நீரை திருப்பிவிட்டு, இங்குள்ள பயிர்களைப் பாதுகாக்கலாம். > உதய் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 'இலவச மின்சாரத்தை'த் தடுக்க பார்க்கிறது மத்திய அரசு. மின்சாரம் என்பது இப்போது விவசாயிகளுக்கு ஜீவநாடியாக இருந்து வருகிறது. அதில் கைவைப்பது அவர்களை இன்னும் சிக்கலில் தள்ளும். அதனால், இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும். > ரசாயன உரங்களின் விலை மிக அதிகமாக ஏறியிருக்கிறது. ரூ.600-க்கு விற்றுக்கொண்டிருந்த DAP-ன் தற்போதைய விலை ரூ.1,300. இது கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும். இதைக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். உரம் Gold: பட்ஜெட் அறிவிப்புகள் தங்கத்தின் விலையைக் குறைக்குமா? Wait பண்ணலாமா?|மத்திய பட்ஜெட் 2026 > ரசாயன உரங்களில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டம் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும். > டிராக்டர் உள்ளிட்ட விவசாய இயந்திரங்களுக்கு 0 சதவிகித வட்டி மாதிரியான சலுகைகளை வழங்க வேண்டும். > ஒரு பிர்காவே (மூன்று கிராமங்கள்) பாதிக்கப்பட்டால் தான் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இதை மாற்றி ஒரு பகுதியில்... ஒரு விவசாயி பாதிக்கப்பட்டாலே, அவர்களுக்கான தகுந்த காப்பீடு வழங்கப்பட வேண்டும். > காப்பீடு இப்போது மாநில அரசின் பட்டியலுக்கு மாறிவிட்டது. ஆனால், மாநில அரசு இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், முன்பு போல, காப்பீட்டிற்கு மத்திய அரசு 90 சதவிகிதமும், விவசாயிகள் 10 சதவிகிதமும் பங்களிக்கும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். insurance - காப்பீடு - இன்ஷூரன்ஸ் 'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026 > 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். > விவசாயப் பொருளை விவசாயிகளே மதிப்புக் கூட்டி, விற்பனை செய்யும் அளவிற்கு மாவட்ட அளவில் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும். இந்த '5' அறிவிப்புகள் வந்தால், அது தான் எலெக்ட்ரிக் வாகனங்களின் 'Game Changer' | மத்திய பட்ஜெட் 2026
விவசாயம், விவசாயிகள் எதிர்பார்க்கும் '10'அறிவிப்புகள்!|மத்திய பட்ஜெட் 2026
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு 'விவசாயம்'. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயத்திற்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். இந்தப் பட்ஜெட்டிலும் அது இடம்பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் எதிர்பார்ப்பைக் கூறுகிறார் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன். இளங்கீரன் பட்ஜெட்டுக்கு பின் Share Market-க்கு பூஸ்ட் கிடைக்குமா? முதலீட்டாளர்கள் கவனிக்க!|மத்திய பட்ஜெட் 2026 > C+2 என்கிற குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயம் வேண்டும். 'லாபம் இல்லை' என்று தான் விவசாயிகள் விவசாயத்தில் இருந்து வெளியேறுகின்றனர். இதைத் தடுக்க, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது மிக மிக முக்கியம். மேலும், விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டால், விவசாயம் லாபகரமானதாக மாறும். > விவசாயத்திற்கு தண்ணீர் மிக மிக முக்கியம். 2014-ம் ஆண்டு 'நதிகள் இணைக்கப்படும்' என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. இப்போது மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும், இன்னும் அவர்கள் இதற்கான முயற்சியை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் முக்கிய நதிகளையாவது இணைக்க வேண்டும். அப்போது இங்கே மழை பெய்யும்போது, மழை இல்லாத மாநிலத்திற்கு, இங்கிருக்கும் உபரி நீரை திருப்பிவிட்டு, இங்குள்ள பயிர்களைப் பாதுகாக்கலாம். > உதய் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 'இலவச மின்சாரத்தை'த் தடுக்க பார்க்கிறது மத்திய அரசு. மின்சாரம் என்பது இப்போது விவசாயிகளுக்கு ஜீவநாடியாக இருந்து வருகிறது. அதில் கைவைப்பது அவர்களை இன்னும் சிக்கலில் தள்ளும். அதனால், இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும். > ரசாயன உரங்களின் விலை மிக அதிகமாக ஏறியிருக்கிறது. ரூ.600-க்கு விற்றுக்கொண்டிருந்த DAP-ன் தற்போதைய விலை ரூ.1,300. இது கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும். இதைக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். உரம் Gold: பட்ஜெட் அறிவிப்புகள் தங்கத்தின் விலையைக் குறைக்குமா? Wait பண்ணலாமா?|மத்திய பட்ஜெட் 2026 > ரசாயன உரங்களில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டம் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும். > டிராக்டர் உள்ளிட்ட விவசாய இயந்திரங்களுக்கு 0 சதவிகித வட்டி மாதிரியான சலுகைகளை வழங்க வேண்டும். > ஒரு பிர்காவே (மூன்று கிராமங்கள்) பாதிக்கப்பட்டால் தான் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இதை மாற்றி ஒரு பகுதியில்... ஒரு விவசாயி பாதிக்கப்பட்டாலே, அவர்களுக்கான தகுந்த காப்பீடு வழங்கப்பட வேண்டும். > காப்பீடு இப்போது மாநில அரசின் பட்டியலுக்கு மாறிவிட்டது. ஆனால், மாநில அரசு இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், முன்பு போல, காப்பீட்டிற்கு மத்திய அரசு 90 சதவிகிதமும், விவசாயிகள் 10 சதவிகிதமும் பங்களிக்கும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். insurance - காப்பீடு - இன்ஷூரன்ஸ் 'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026 > 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். > விவசாயப் பொருளை விவசாயிகளே மதிப்புக் கூட்டி, விற்பனை செய்யும் அளவிற்கு மாவட்ட அளவில் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும். இந்த '5' அறிவிப்புகள் வந்தால், அது தான் எலெக்ட்ரிக் வாகனங்களின் 'Game Changer' | மத்திய பட்ஜெட் 2026
மலையாள பாஷ மசோதா: எதிர்க்கும் சித்தாராமையாவுக்கு பதில் அனுப்பிய பினராயி விஜயன்!
கேரள சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி 'மலையாள பாஷ பில்' தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. கேரளா பள்ளிகளிலும், அரசுத்துறைகளிலும் மலையாள மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் காசர்கோடு உள்ளிட்ட கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள கன்னட மொழிபேசும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கர்நாடக முதல்வர் சித்தாராமையா அச்சம் தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என கர்நாடக எல்லை மேம்பாட்டு ஆணையம் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை கடந்த ஜனவரி 7-ம் தேதி சந்தித்து மனு அளித்துள்ளது. இதுகுறித்து கர்நாடகா முதல்வர் சித்தாராமையா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், கேரளாவில் கன்னடம் மற்றும் தமிழ் வழி பள்ளிகளில் தொடக்கநிலை முதல் மலையாளத்தை கட்டாயமாக்கும் மசோதாவை கர்நாடகா எதிர்க்கிறது. காசர்கோடு மாவட்டத்தில் சந்திரகிரி புழாவின் வடக்கே உள்ள காசர்கோடு மற்றும் மஞ்சேஸ்வரம் தாலுகாக்களில் கன்னடம் மற்றும் துளு மொழிகளில் மக்கள் பேசிவருகின்றனர். கேரள சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதா காசர்கோட்டில் உள்ள மொழி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பிற்கு விரோதமானதாகும் என சித்தாராமையா தெரிவித்திருந்தார். சித்தாராமையா இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாஷ பில் சம்பந்தமாக ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: கன்னட வழிப் பள்ளிகளில் மலையாளம் திணிக்கப்படுவதாக கூறப்படும் புகார் அடிப்படையற்றது. பள்ளிகளில் மலையாளத்தை கட்டாய முதல் மொழியாக்கும் முடிவு குறித்து கர்நாடக அரசு தெரிவித்துள்ள கவலைகள் அடிப்படையற்றவை. மொழி சிறுபான்மையினரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் எந்த விதியும் அந்தச் சட்டத்தில் இல்லை. மலையாளம் முதல் மொழியாக மாற்றப்படும் என்று சட்டம் கூறுவது உண்மைதான். இருப்பினும், மலையாளத்தைத் தாய்மொழி அல்லாத குழந்தைகள் அந்த மொழியுடன் மலையாளத்தையும் கற்க வாய்ப்பு வழங்கப்படும். பினராயி விஜயன் தேசிய பாடத்திட்டத்தின்படி, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்யலாம். பிற மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, 10-ம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மலையாளத் தேர்வு கட்டாயம் இல்லை. மொழி சிறுபான்மையினர் அரசு அலுவலகங்களுடன் மனு உள்ளிட்ட கடிதங்களை தமிழ் மற்றும் கன்னட மொழியில் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதங்களுக்கு அந்தந்த மொழிகளில் பதிலளிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. தாய்மொழி மீதான அன்பு மற்ற மொழிகளை ஊக்குவிப்பதற்கு ஒரு தடையல்ல. கேரளா மற்றும் கர்நாடகா இடையேயான கலாச்சார உறவுகள் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமன்றக் கடமையை கேரள அரசு நிறைவேற்றி வருகிறது. என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மலையாள பாஷ மசோதா: எதிர்க்கும் சித்தாராமையாவுக்கு பதில் அனுப்பிய பினராயி விஜயன்!
கேரள சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி 'மலையாள பாஷ பில்' தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. கேரளா பள்ளிகளிலும், அரசுத்துறைகளிலும் மலையாள மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் காசர்கோடு உள்ளிட்ட கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள கன்னட மொழிபேசும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கர்நாடக முதல்வர் சித்தாராமையா அச்சம் தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என கர்நாடக எல்லை மேம்பாட்டு ஆணையம் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை கடந்த ஜனவரி 7-ம் தேதி சந்தித்து மனு அளித்துள்ளது. இதுகுறித்து கர்நாடகா முதல்வர் சித்தாராமையா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், கேரளாவில் கன்னடம் மற்றும் தமிழ் வழி பள்ளிகளில் தொடக்கநிலை முதல் மலையாளத்தை கட்டாயமாக்கும் மசோதாவை கர்நாடகா எதிர்க்கிறது. காசர்கோடு மாவட்டத்தில் சந்திரகிரி புழாவின் வடக்கே உள்ள காசர்கோடு மற்றும் மஞ்சேஸ்வரம் தாலுகாக்களில் கன்னடம் மற்றும் துளு மொழிகளில் மக்கள் பேசிவருகின்றனர். கேரள சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதா காசர்கோட்டில் உள்ள மொழி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பிற்கு விரோதமானதாகும் என சித்தாராமையா தெரிவித்திருந்தார். சித்தாராமையா இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாஷ பில் சம்பந்தமாக ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: கன்னட வழிப் பள்ளிகளில் மலையாளம் திணிக்கப்படுவதாக கூறப்படும் புகார் அடிப்படையற்றது. பள்ளிகளில் மலையாளத்தை கட்டாய முதல் மொழியாக்கும் முடிவு குறித்து கர்நாடக அரசு தெரிவித்துள்ள கவலைகள் அடிப்படையற்றவை. மொழி சிறுபான்மையினரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் எந்த விதியும் அந்தச் சட்டத்தில் இல்லை. மலையாளம் முதல் மொழியாக மாற்றப்படும் என்று சட்டம் கூறுவது உண்மைதான். இருப்பினும், மலையாளத்தைத் தாய்மொழி அல்லாத குழந்தைகள் அந்த மொழியுடன் மலையாளத்தையும் கற்க வாய்ப்பு வழங்கப்படும். பினராயி விஜயன் தேசிய பாடத்திட்டத்தின்படி, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்யலாம். பிற மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, 10-ம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மலையாளத் தேர்வு கட்டாயம் இல்லை. மொழி சிறுபான்மையினர் அரசு அலுவலகங்களுடன் மனு உள்ளிட்ட கடிதங்களை தமிழ் மற்றும் கன்னட மொழியில் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதங்களுக்கு அந்தந்த மொழிகளில் பதிலளிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. தாய்மொழி மீதான அன்பு மற்ற மொழிகளை ஊக்குவிப்பதற்கு ஒரு தடையல்ல. கேரளா மற்றும் கர்நாடகா இடையேயான கலாச்சார உறவுகள் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமன்றக் கடமையை கேரள அரசு நிறைவேற்றி வருகிறது. என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Vijay -ஐ சமாளிக்க Udhayanidhi Plan? | 6 தொகுதிகளுக்கு Annamalai பொறுப்பு - NDA வியூகம் பலிக்குமா?
நிலைகுலைந்து விழுந்த ஹெச்.ராஜா; ICU வில் அனுமதி! - என்ன நடந்தது?
சென்னையில் தனியார் செய்தி சேனல் ஒன்றின் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தலைவர் ஹெச்.ராஜா திடீரென நிலைகுலைந்து மயங்கியதால் பரபரப்பு ஹெச்.ராஜா தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வட இந்தியாவை சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்று இன்றும் நாளையும் சென்னையில் ஒரு உரையாடல் நிகழ்வை நடத்துகிறது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போன்றோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஒரு அமர்வில் கலந்துகொள்ள வந்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா திடீரென நிலைகுலைந்து மயங்கமடைந்திருக்கிறார். முதலுதவிகளுக்குப் பிறகும் அவர் இயல்பாகாததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை மருத்துவமனையில் சந்தித்திருக்கிறார்.
நிலைகுலைந்து விழுந்த ஹெச்.ராஜா; ICU வில் அனுமதி! - என்ன நடந்தது?
சென்னையில் தனியார் செய்தி சேனல் ஒன்றின் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தலைவர் ஹெச்.ராஜா திடீரென நிலைகுலைந்து மயங்கியதால் பரபரப்பு ஹெச்.ராஜா தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வட இந்தியாவை சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்று இன்றும் நாளையும் சென்னையில் ஒரு உரையாடல் நிகழ்வை நடத்துகிறது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போன்றோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஒரு அமர்வில் கலந்துகொள்ள வந்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா திடீரென நிலைகுலைந்து மயங்கமடைந்திருக்கிறார். முதலுதவிகளுக்குப் பிறகும் அவர் இயல்பாகாததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை மருத்துவமனையில் சந்தித்திருக்கிறார்.
? NEW SEED BILL 2025 என்ன பிரச்சனை? | Seriously! | EP - 10 | Vikatan Tv60-updates
? NEW SEED BILL 2025 என்ன பிரச்சனை? | Seriously! | EP - 10 | Vikatan Tv60-updates
வேளச்சேரியில் போட்டியிடும் விஜய்? | MGR to TR தொகுதி டிக் அடித்த வரலாறு! | Election 360 updates
வேளச்சேரியில் போட்டியிடும் விஜய்? | MGR to TR தொகுதி டிக் அடித்த வரலாறு! | Election 360 updates
`வேளச்சேரியில் போட்டியிடுகிறாரா விஜய்?'எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை தொகுதி தேர்வு செய்த வரலாறு!
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல்,விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் தவெக போட்டியிடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில்தான் முதல்முறையாக களத்தில் இறங்குகிறது தவெக. அந்தக் கட்சிக்கு சமீபத்தில்தான் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் கட்சியில் மிகத் தீவிரமாக நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வேளச்சேரி... தர்மபுரி... மதுரை வடக்கு! வரும் தேர்தலில் அக்கட்சி சார்பில், கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக சேவகர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சென்னை வேளச்சேரியில் போட்டியிட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கு முன்பும் இதேபோல பல தொகுதிகளின் பெயர்கள் அடிபட்டன. முதன்முதலில் மதுரை வடக்கு தொகுதியில் விஜய் போட்டியிடப்போவதாக போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பினர் தவெகவினர். தொடர்ந்து, த.வெ.கவின் முதல் மாநாட்டுக்கு மக்களை அழைக்கும் விதமாக, ’2026-ன் மதுரை வடக்குத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் தலைவர் விஜய் அழைக்கிறார்’ என போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பினர். அதேபோல, தர்மபுரியில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டமொன்றில், தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா ''2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சியின் தலைவர் விஜய் தர்மபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாகத் தெரிவிக்கிறேன். மதுரை விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள் இந்த மண் அதியமான் பிறந்த மண். அவ்வையார் வாழ்ந்த மண். எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று சி.எம் ஆக வேண்டும் என கோரிக்கை வைத்தோம். தர்மபுரியில் தான் போட்டியிடுவேன் என்று விஜய் சொல்லி 10 நாள் ஆகிறது. ஆனால் இன்று தான் அதை வெளியிடுகிறேன்'' என பரபரப்பைக் கிளப்பினார். அதோடு, தூத்துக்குடி, நாகப்பட்டனம், இராமநாதபுரம் என கடல் பகுதியை ஒட்டிய இந்த மூன்றில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது எனவும் தகவல் வெளியானது. கோவை? திருச்சி கிழக்கா? அதுமட்டுமில்லாமல், ஜோதிடரின் அறிவுரைப்படி வி சென்டிமென்டில் விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருத்தாசலம், வில்லிவாக்கம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் களம் காணலாம் என்கிற தகவல்கள் கூட வெளியாகின. அவ்வளவு ஏன் சமீபத்தில், கோவையில் விஜய்க்கு எழுந்த வரவேற்பைப் பார்த்து, கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட விஜய் முடிவே செய்துவிட்டார் என்கிற தகவல்கள்கூட வெளியாகின. கடந்தாண்டு மே மாதத்தில், மதுரை மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து, விஜய்யை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றிகள் என்று தவெகவினர் ஒட்டிய போஸ்டர் அரசியல் களத்தில் பேசுபொருளானது. தொடர்ந்து, திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடப் போகிறார். அதனால்தான் அங்கே பிரசாரத்தைத் தொடங்கினார் எனச் சொல்லப்பட்டது. இந்தவரிசையில் தற்போது வேளச்சேரி வந்து சேர்ந்திருக்கிறது. அதற்குப் பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. விஜய் முதலில் ஜோதிடர் அறிவுரைப்படி, வி சென்டிமென்டில் வேளச்சேரி வந்திருக்கிறது. அடுத்ததாக, முதல் தலைமுறை வாக்காளர்கள், சென்னையிலேயே செட்டிலாகிவிட்ட ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள், பெண்களின் வாக்குகள். கணிசமான சிறுபான்மையினர் வாக்குகள், அடுத்ததாக, எப்போதும் மாற்றத்தை வரவேற்கும் மக்களாக வேளச்சேரி மக்கள் இருப்பது (மக்கள் நீதி மய்யம் 23000 வாக்குகள், நாம் தமிழர் 14000 மக்கள்), 2011 முதல் உருவாக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால் எந்த ஒரு தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையில் பெரியளவில் செல்வாக்கு இல்லாமல் இருப்பது, தொடர்ச்சியாக மழை, வெள்ள பாதிப்புகளால் ஆளும் தரப்பின் மீதான அதிருப்தி என பல காரணங்களைச் சொல்லி வேளச்சேரியில் போட்டியிடலாம் என விஜயிடம் அறிவுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன்! இதுஒருபுறமிருக்க, திரைத்துறையில் இருந்து வந்து அரசியல் கட்சி தொடங்கி, விஜய்க்கு முன்னோடியாக விளங்கும் எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன் தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலில் தொகுதியை எவ்வாறு தேர்வு செய்தனர் என்று பார்ப்போம். எம்.ஜி.ஆர் - அருப்புக்கோட்டை எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருக்கும்போது 1967,71 என இரண்டு தேர்தலிலும் சென்னையில் உள்ள பரங்கிமலை தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், அவர் அதிமுகவைத் தொடங்கியபிறகு, 1977 தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆருக்கு 1950-ல் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது மதுரையில்தான். எம்.ஜி.ஆர் 1972-ல் தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டதும் அதனைக் கண்டித்து மதுரையில் மிகப்பெரிய கூட்டம் நடத்திய மதுரை ரசிகர்கள், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கும் காரணமாக இருந்தார்கள். முதல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திண்டுக்கல்லும் அப்போது மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதனால்தான் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் அதை மதுரையைச் சுற்றியே எடுத்தார் எம்.ஜி.ஆர். அதிக கிராமங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்ததால் அருப்புக்கோட்டைய டிக் அடித்து, 29,378 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியையும் பெற்றார் எம்.ஜி.ஆர் சிவாஜி - திருவையாறு திமுக, காங்கிரஸில் பயணித்த சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை 1989-ல் தொடங்கினார். முதல் தேர்தலில், திருவையாறு தொகுதியில், எம்.ஜி.ஆரின் மனைவி ஜா அணியில் நின்று தேர்தலைச் சந்தித்தார். நாகர்கோவில், இராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் பரிசீலனையில் இருந்தபோதும், திருவையாறு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சிவாஜி, விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அவரின் பூர்விகம் தஞ்சை மாவட்டம்தான். சிவாஜி அவருக்கு அங்கு அதிகமான ரசிகர்களும் இருந்தார்கள். அவர் சார்ந்த சமூக மக்களும் அதிகமாக இருக்கும் தொகுதி என திருவையாறில் போட்டியிட்டு, 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அப்போது இளைஞராக சிவாஜியைத் தோற்கடித்த துரை.சந்திரசேகரன் தான் தற்போதும் திருவையாறு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். விஜயகாந்த் - விருத்தாச்சலம் அடுத்ததாக, 2005-ல் மதுரையில் கட்சி தொடங்கிய விஜயகாந்த், 2006 -ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் களமிறங்கினார். கட்சி தொடங்கிய அதே மதுரையில்தான் விஜயகாந்த் போட்டியிடப் போகிறார் என்கிற தகவல்கள் முதலில் வெளியாகின. ஆனால், கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் தொகுதியைத் தேர்வு செய்தார் விஜயகாந்த்.., விஜயகாந்த் திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்த நிலையில், அந்தக் கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவரான கோவிந்தசாமியை எதிர்த்துக் களமிறங்கினார் விஜயகாந்த்..,விஜயகாந்த்துக்கு கடலூர் மாவட்டத்தில் ரசிகர்கள் அதிகம். அதனால்தான், இந்தாண்டு தேர்தலுக்கான மாநாட்டைக்கூட கடலூரில் நடத்தினார் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா. அதேவேளை, விஜயகாந்த் படம் வெளியாகும்போது தமிழ்நாட்டிலேயே அதிக கலெக்ஷன் விருத்தாச்சலத்தில்தான் ஆகியிருக்கிறது. அதனடிப்படையில் அந்தத் தொகுதி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியையும் பதிவு செய்தார். கமல்ஹாசன் - கோவை தெற்கு அதேபோல, 2018-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி களமிறங்கினாலும் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. அவர், 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கினார். அதற்கு, கட்சி தொடங்கப்பட்ட நாள்முதலாகவே நல்ல வரவேற்பு, களத்தில் இறங்கி வேலை செய்ய முன்னணித் தளபதிகள் இருந்ததோடு நாடாளுமன்றத் தேர்தலில் சென்னைக்குப் பிறகு நல்ல வாக்குகளையும் பெற்றுக்கொடுத்த தொகுதியாகவும் கோவை விளங்கியதால், கோவையில் ஒரு தொகுதி என்பது முதலில் முடிவானது.. கமல் ஆனால், நகர்ப்பகுதியில் இருப்பதோடு, குறைந்த பரப்பளவையும் கொண்ட தொகுதியாக இருந்ததால், கோவை தெற்கு தேர்வு செய்யப்பட்டது. காரணம், தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் பரப்புரை செய்யவேண்டியிருந்தது . அதுமட்டுமல்ல, கமல் முதலில் சென்னையில் உள்ள வேளச்சேரி அல்லது ஆலந்தூரில் போட்டியிடப்போகிறார் என்கிற தகவல்கள்தான் வெளியாகின ஆனால் போட்டியிடவில்லை. அதேவேளை, வேளச்சேரியில் மற்றொரு நடிகரான வாகை சந்திரசேகர் 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2026 தேர்தலில் விஜய் அங்கு போட்டியிடுவாரா, போட்டியிட்டால் வெற்றி வாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.! 'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்
`வேளச்சேரியில் போட்டியிடுகிறாரா விஜய்?'எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை தொகுதி தேர்வு செய்த வரலாறு!
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல்,விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் தவெக போட்டியிடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில்தான் முதல்முறையாக களத்தில் இறங்குகிறது தவெக. அந்தக் கட்சிக்கு சமீபத்தில்தான் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் கட்சியில் மிகத் தீவிரமாக நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வேளச்சேரி... தர்மபுரி... மதுரை வடக்கு! வரும் தேர்தலில் அக்கட்சி சார்பில், கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக சேவகர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சென்னை வேளச்சேரியில் போட்டியிட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கு முன்பும் இதேபோல பல தொகுதிகளின் பெயர்கள் அடிபட்டன. முதன்முதலில் மதுரை வடக்கு தொகுதியில் விஜய் போட்டியிடப்போவதாக போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பினர் தவெகவினர். தொடர்ந்து, த.வெ.கவின் முதல் மாநாட்டுக்கு மக்களை அழைக்கும் விதமாக, ’2026-ன் மதுரை வடக்குத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் தலைவர் விஜய் அழைக்கிறார்’ என போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பினர். அதேபோல, தர்மபுரியில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டமொன்றில், தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா ''2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சியின் தலைவர் விஜய் தர்மபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாகத் தெரிவிக்கிறேன். மதுரை விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள் இந்த மண் அதியமான் பிறந்த மண். அவ்வையார் வாழ்ந்த மண். எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று சி.எம் ஆக வேண்டும் என கோரிக்கை வைத்தோம். தர்மபுரியில் தான் போட்டியிடுவேன் என்று விஜய் சொல்லி 10 நாள் ஆகிறது. ஆனால் இன்று தான் அதை வெளியிடுகிறேன்'' என பரபரப்பைக் கிளப்பினார். அதோடு, தூத்துக்குடி, நாகப்பட்டனம், இராமநாதபுரம் என கடல் பகுதியை ஒட்டிய இந்த மூன்றில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது எனவும் தகவல் வெளியானது. கோவை? திருச்சி கிழக்கா? அதுமட்டுமில்லாமல், ஜோதிடரின் அறிவுரைப்படி வி சென்டிமென்டில் விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருத்தாசலம், வில்லிவாக்கம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் களம் காணலாம் என்கிற தகவல்கள் கூட வெளியாகின. அவ்வளவு ஏன் சமீபத்தில், கோவையில் விஜய்க்கு எழுந்த வரவேற்பைப் பார்த்து, கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட விஜய் முடிவே செய்துவிட்டார் என்கிற தகவல்கள்கூட வெளியாகின. கடந்தாண்டு மே மாதத்தில், மதுரை மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து, விஜய்யை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றிகள் என்று தவெகவினர் ஒட்டிய போஸ்டர் அரசியல் களத்தில் பேசுபொருளானது. தொடர்ந்து, திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடப் போகிறார். அதனால்தான் அங்கே பிரசாரத்தைத் தொடங்கினார் எனச் சொல்லப்பட்டது. இந்தவரிசையில் தற்போது வேளச்சேரி வந்து சேர்ந்திருக்கிறது. அதற்குப் பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. விஜய் முதலில் ஜோதிடர் அறிவுரைப்படி, வி சென்டிமென்டில் வேளச்சேரி வந்திருக்கிறது. அடுத்ததாக, முதல் தலைமுறை வாக்காளர்கள், சென்னையிலேயே செட்டிலாகிவிட்ட ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள், பெண்களின் வாக்குகள். கணிசமான சிறுபான்மையினர் வாக்குகள், அடுத்ததாக, எப்போதும் மாற்றத்தை வரவேற்கும் மக்களாக வேளச்சேரி மக்கள் இருப்பது (மக்கள் நீதி மய்யம் 23000 வாக்குகள், நாம் தமிழர் 14000 மக்கள்), 2011 முதல் உருவாக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால் எந்த ஒரு தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையில் பெரியளவில் செல்வாக்கு இல்லாமல் இருப்பது, தொடர்ச்சியாக மழை, வெள்ள பாதிப்புகளால் ஆளும் தரப்பின் மீதான அதிருப்தி என பல காரணங்களைச் சொல்லி வேளச்சேரியில் போட்டியிடலாம் என விஜயிடம் அறிவுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன்! இதுஒருபுறமிருக்க, திரைத்துறையில் இருந்து வந்து அரசியல் கட்சி தொடங்கி, விஜய்க்கு முன்னோடியாக விளங்கும் எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன் தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலில் தொகுதியை எவ்வாறு தேர்வு செய்தனர் என்று பார்ப்போம். எம்.ஜி.ஆர் - அருப்புக்கோட்டை எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருக்கும்போது 1967,71 என இரண்டு தேர்தலிலும் சென்னையில் உள்ள பரங்கிமலை தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், அவர் அதிமுகவைத் தொடங்கியபிறகு, 1977 தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆருக்கு 1950-ல் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது மதுரையில்தான். எம்.ஜி.ஆர் 1972-ல் தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டதும் அதனைக் கண்டித்து மதுரையில் மிகப்பெரிய கூட்டம் நடத்திய மதுரை ரசிகர்கள், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கும் காரணமாக இருந்தார்கள். முதல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திண்டுக்கல்லும் அப்போது மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதனால்தான் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் அதை மதுரையைச் சுற்றியே எடுத்தார் எம்.ஜி.ஆர். அதிக கிராமங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்ததால் அருப்புக்கோட்டைய டிக் அடித்து, 29,378 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியையும் பெற்றார் எம்.ஜி.ஆர் சிவாஜி - திருவையாறு திமுக, காங்கிரஸில் பயணித்த சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை 1989-ல் தொடங்கினார். முதல் தேர்தலில், திருவையாறு தொகுதியில், எம்.ஜி.ஆரின் மனைவி ஜா அணியில் நின்று தேர்தலைச் சந்தித்தார். நாகர்கோவில், இராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் பரிசீலனையில் இருந்தபோதும், திருவையாறு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சிவாஜி, விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அவரின் பூர்விகம் தஞ்சை மாவட்டம்தான். சிவாஜி அவருக்கு அங்கு அதிகமான ரசிகர்களும் இருந்தார்கள். அவர் சார்ந்த சமூக மக்களும் அதிகமாக இருக்கும் தொகுதி என திருவையாறில் போட்டியிட்டு, 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அப்போது இளைஞராக சிவாஜியைத் தோற்கடித்த துரை.சந்திரசேகரன் தான் தற்போதும் திருவையாறு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். விஜயகாந்த் - விருத்தாச்சலம் அடுத்ததாக, 2005-ல் மதுரையில் கட்சி தொடங்கிய விஜயகாந்த், 2006 -ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் களமிறங்கினார். கட்சி தொடங்கிய அதே மதுரையில்தான் விஜயகாந்த் போட்டியிடப் போகிறார் என்கிற தகவல்கள் முதலில் வெளியாகின. ஆனால், கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் தொகுதியைத் தேர்வு செய்தார் விஜயகாந்த்.., விஜயகாந்த் திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்த நிலையில், அந்தக் கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவரான கோவிந்தசாமியை எதிர்த்துக் களமிறங்கினார் விஜயகாந்த்..,விஜயகாந்த்துக்கு கடலூர் மாவட்டத்தில் ரசிகர்கள் அதிகம். அதனால்தான், இந்தாண்டு தேர்தலுக்கான மாநாட்டைக்கூட கடலூரில் நடத்தினார் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா. அதேவேளை, விஜயகாந்த் படம் வெளியாகும்போது தமிழ்நாட்டிலேயே அதிக கலெக்ஷன் விருத்தாச்சலத்தில்தான் ஆகியிருக்கிறது. அதனடிப்படையில் அந்தத் தொகுதி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியையும் பதிவு செய்தார். கமல்ஹாசன் - கோவை தெற்கு அதேபோல, 2018-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி களமிறங்கினாலும் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. அவர், 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கினார். அதற்கு, கட்சி தொடங்கப்பட்ட நாள்முதலாகவே நல்ல வரவேற்பு, களத்தில் இறங்கி வேலை செய்ய முன்னணித் தளபதிகள் இருந்ததோடு நாடாளுமன்றத் தேர்தலில் சென்னைக்குப் பிறகு நல்ல வாக்குகளையும் பெற்றுக்கொடுத்த தொகுதியாகவும் கோவை விளங்கியதால், கோவையில் ஒரு தொகுதி என்பது முதலில் முடிவானது.. கமல் ஆனால், நகர்ப்பகுதியில் இருப்பதோடு, குறைந்த பரப்பளவையும் கொண்ட தொகுதியாக இருந்ததால், கோவை தெற்கு தேர்வு செய்யப்பட்டது. காரணம், தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் பரப்புரை செய்யவேண்டியிருந்தது . அதுமட்டுமல்ல, கமல் முதலில் சென்னையில் உள்ள வேளச்சேரி அல்லது ஆலந்தூரில் போட்டியிடப்போகிறார் என்கிற தகவல்கள்தான் வெளியாகின ஆனால் போட்டியிடவில்லை. அதேவேளை, வேளச்சேரியில் மற்றொரு நடிகரான வாகை சந்திரசேகர் 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2026 தேர்தலில் விஜய் அங்கு போட்டியிடுவாரா, போட்டியிட்டால் வெற்றி வாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.! 'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்
Exclusive: `பன்னீர்செல்வத்தின் அரசியல் நாடகம்; விஜய்க்கு பதிலடி ஏன்?' - செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி
தமிழக அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. வலுவாக இருந்த திமுக கூட்டணியில் காங்கிரஸ் போக்கு காட்டிக்கொண்டிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்திருப்பது அந்த கூட்டணிக்கு வலிமை சேர்த்திருக்கிறது. இத்தனை நாட்கள் கூட்டணி கணக்குடன், ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் அமைதிகாத்து வந்த அதிமுகவும் தவெகவும் வார்த்தைப் போரில் இறங்கியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், அதிமுகவைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்... ``தேர்தல் பணிகள் எப்படி செல்கிறது, கள நிலவரம் எப்படி உள்ளது?'' ``தேர்தல் பணிகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியைத்தான் விரும்புகிறார்கள் என்பது களத்தில் தெரிகிறது. sellur raju ``ஆரம்பத்தில் விஜய்யை ஆதரித்துப் பேசிய நீங்கள் இப்போது தவெக-வை கடுமையாக விமர்சித்து வருகிறீர்களே?'' ``புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கிறார் என்ற அடிப்படையில், வரவேற்றோம். ஆளுங்கட்சியும், அரசும் அவரை எதிர்க்கும்போது, புதியவர்களும் வர வேண்டும் என்கிற அடிப்படையில் அவர்களுக்கு சப்போர்ட்டாக பேசியவர் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார். நாங்கள் வரவேற்றோம் என்பதற்காக, அவர்கள் பேசுவது அனைத்தையும் அதிமுக தாங்கிக்கொண்டிருக்குமா? அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் விமர்சிக்கிறோம். ``தவெக உங்கள் கூட்டணிக்கு வரும் என்று இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு, அதற்கு வாய்ப்பில்லை என்றதும் விமர்சிக்கிறீர்கள் என்று சொல்லப்படுகிறதே? ``இல்லை. அப்போது கூட்டணி என்ற எதிர்பார்ப்பே எங்களிடம் இல்லை. கூட்டணி என்பதெல்லாம் தேர்தல் நேரத்திற்கான ஏற்பாடுதான். எங்கள் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும்போது ஆளும் கட்சியாக இருந்த கலைஞர் பல நெருக்கடிகளைக் கொடுத்தார். அதையெல்லாம் சமாளித்துதான் கட்சியை வளர்த்தெடுத்தார் எம்.ஜி.ஆர். அதேபோல விஜய்க்கும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறதே என்ற அடிப்படையில்தான் ஆதரவாக பேசினோமே தவிர, கூட்டணிக்காக அப்படி பேசவில்லை ``எதிர்க்கட்சியான அதிமுக, ஆளுங்கட்சியான திமுகவைத்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர புதிய கட்சியான தவெகவை விமர்சிப்பது சரியான போக்கு இல்லை என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே?'' ``செங்கோட்டையன் பற்றி நான் பேச விரும்பவில்லை. அதிமுகவால் அடையாளம் பெற்று, பலமுறை அமைச்சராக இருந்தவர் இப்போது கட்சியைப் பற்றி விமர்சிப்பது முறையல்ல. அவர் ஒரு பச்சோந்தி. அதிமுகவில் இருக்கும் வரைதான் அவருக்கு மதிப்பு; கட்சியை விட்டுப் போனவர்கள் எங்களுக்குக் கால் தூசிக்குச் சமம். ``ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தற்போதைய நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' ``அவரின் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? உண்மையிலேயே அவர் கட்சியில் இணைய விரும்பினால் நேரடியாகச் சேலத்திற்கோ அல்லது சென்னைக்கோ எடப்பாடியாரைப் பார்த்திருக்கலாம். அதைவிடுத்து, ஊடகங்களில் பேசுவதன் நோக்கம் மக்கள் மத்தியில் இரக்கத்தைப் பெறுவதற்காகத்தான். அது அரசியல் நாடகம். ``ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கை இந்த தேர்தலில் அதிகம் எதிரொலிக்கிறது. அதுகுறித்த உங்களின் பார்வை? ``தமிழ்நாட்டு மக்கள் ஒரு கட்சி ஆட்சியைத்தான் விரும்புவார்களே தவிர, கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள்! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் விரிவான பேட்டியைப் பார்க்க கீழே உள்ள லிங்க்- ஐ கிளிக் செய்யவும்.
சென்னை: 'திமுகவை புகழ்ந்து தள்ளிய பாஜக கவுன்சிலர்!' - ஜாலியாக கலாய்த்த உடன்பிறப்புகள்!
மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சிக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. எப்போதும் எதிர்க்கருத்துகளை முன்வைத்து அமளி செய்யும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், இன்று திடீரென திமுகவை ஏகத்துக்கும் புகழ்ந்ததால் திமுக உறுப்பினர்கள் உற்சாகமாகிவிட்டனர். திமுகவை புகழ்ந்த உமா ஆனந்தை ஜாலியாக கிண்டலடிக்கவும் செய்தனர். சென்னை மாநகராட்சிக் கூட்டம் 134 வது வார்டு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் எப்போதுமே தன்னுடைய வார்டு குறித்த கோரிக்கைகளை முன்வைத்து அமளி செய்வார். ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை பேசுவார். கடந்த மாதம்கூட மாமன்றம் தொடங்குவதற்கு முன்பாகவே வெளிநடப்பு செய்திருந்தார். இந்நிலையில், இன்று நேரமில்லா நேரத்தில் பேச எழுந்த உமா ஆனந்தன் ஆரம்பத்திலேயே திமுக-வை ஏகத்துக்கும் புகழ்ந்தார். 'மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று நான்காண்டுகளில் நான் முன்வைத்த 80% கோரிக்கைகளை மேயரும் துணை மேயரும் நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். பாஜக உறுப்பினர் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது என்றில்லாமல் நல்ல எண்ணத்தோடு பணிகளை முடித்துக் கொடுத்த திமுக அரசுக்கு நன்றி. இந்த மாமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் 100% கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்' என்றார். உமா ஆனந்தன் பாஜக உறுப்பினரே திமுக-வை புகழ்ந்ததால் அவையில் பெருவாரியாக இருக்கும் திமுக உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பினர். 'இதுதான் திராவிட மாடல் அரசு' என துணை மேயர் மகேஷ் குமார் பெருமிதம் பேசினார். பின்னர் சிறிது நேரம் கழித்து பேசிய 99 வார்டு திமுக கவுன்சிலர் பரிதி இளம் சுருதி, 'உமா ஆனந்தன் அவர்கள் நம்மைப் பாராட்டி பேசினார். சில நிமிடங்களுக்கு முன் ஒரு கேமராமேனை அழைத்து அவர் மைக்கில் பேசுவது போல போஸ் கொடுத்து ஒரு போட்டோ எடுத்ததைப் பார்த்தேன். அதுதான் பாஜக. பாஜக செய்வதெல்லாம் ரீல். திராவிட மாடல் தான் ரியல். நீங்கள் டூப். நாங்கள்தான் டாப். உமா ஆனந்தன் எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நல்லது செய்வோம் என தலைவர் சொன்னார். அதை செய்தும் காட்டியிருக்கிறார்' என உமா ஆனந்தை கலாய்த்தார். உடனே துணை மேயர் மகேஷ் குமார், 'ஏம்ப்பா...அவங்கதான் நம்மை பாராட்டுறாங்களே, அப்பவும் விடமாட்டீங்களா?' என கமெண்ட் அடித்தார். வழக்கத்துக்கு மாறாக உமா ஆனந்த் ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியதை பார்த்த திமுகக்காரர்களே, 'எலெக்சன் நேரமாக இருப்பதால் கட்சி தாவ நினைக்கிறாரோ..' என கிசுகிசுத்துக் கொண்டனர்.
சென்னை: 'திமுகவை புகழ்ந்து தள்ளிய பாஜக கவுன்சிலர்!' - ஜாலியாக கலாய்த்த உடன்பிறப்புகள்!
மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சிக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. எப்போதும் எதிர்க்கருத்துகளை முன்வைத்து அமளி செய்யும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், இன்று திடீரென திமுகவை ஏகத்துக்கும் புகழ்ந்ததால் திமுக உறுப்பினர்கள் உற்சாகமாகிவிட்டனர். திமுகவை புகழ்ந்த உமா ஆனந்தை ஜாலியாக கிண்டலடிக்கவும் செய்தனர். சென்னை மாநகராட்சிக் கூட்டம் 134 வது வார்டு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் எப்போதுமே தன்னுடைய வார்டு குறித்த கோரிக்கைகளை முன்வைத்து அமளி செய்வார். ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை பேசுவார். கடந்த மாதம்கூட மாமன்றம் தொடங்குவதற்கு முன்பாகவே வெளிநடப்பு செய்திருந்தார். இந்நிலையில், இன்று நேரமில்லா நேரத்தில் பேச எழுந்த உமா ஆனந்தன் ஆரம்பத்திலேயே திமுக-வை ஏகத்துக்கும் புகழ்ந்தார். 'மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று நான்காண்டுகளில் நான் முன்வைத்த 80% கோரிக்கைகளை மேயரும் துணை மேயரும் நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். பாஜக உறுப்பினர் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது என்றில்லாமல் நல்ல எண்ணத்தோடு பணிகளை முடித்துக் கொடுத்த திமுக அரசுக்கு நன்றி. இந்த மாமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் 100% கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்' என்றார். உமா ஆனந்தன் பாஜக உறுப்பினரே திமுக-வை புகழ்ந்ததால் அவையில் பெருவாரியாக இருக்கும் திமுக உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பினர். 'இதுதான் திராவிட மாடல் அரசு' என துணை மேயர் மகேஷ் குமார் பெருமிதம் பேசினார். பின்னர் சிறிது நேரம் கழித்து பேசிய 99 வார்டு திமுக கவுன்சிலர் பரிதி இளம் சுருதி, 'உமா ஆனந்தன் அவர்கள் நம்மைப் பாராட்டி பேசினார். சில நிமிடங்களுக்கு முன் ஒரு கேமராமேனை அழைத்து அவர் மைக்கில் பேசுவது போல போஸ் கொடுத்து ஒரு போட்டோ எடுத்ததைப் பார்த்தேன். அதுதான் பாஜக. பாஜக செய்வதெல்லாம் ரீல். திராவிட மாடல் தான் ரியல். நீங்கள் டூப். நாங்கள்தான் டாப். உமா ஆனந்தன் எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நல்லது செய்வோம் என தலைவர் சொன்னார். அதை செய்தும் காட்டியிருக்கிறார்' என உமா ஆனந்தை கலாய்த்தார். உடனே துணை மேயர் மகேஷ் குமார், 'ஏம்ப்பா...அவங்கதான் நம்மை பாராட்டுறாங்களே, அப்பவும் விடமாட்டீங்களா?' என கமெண்ட் அடித்தார். வழக்கத்துக்கு மாறாக உமா ஆனந்த் ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியதை பார்த்த திமுகக்காரர்களே, 'எலெக்சன் நேரமாக இருப்பதால் கட்சி தாவ நினைக்கிறாரோ..' என கிசுகிசுத்துக் கொண்டனர்.
DMK vs Congress: டெல்லி டு சென்னை... கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | பரபரக்கும் பவன்
தமிழக காங்கிரஸில் இப்போது இரண்டு கோஷ்டிகள் மல்லுக்கட்டுகின்றன. கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்போ, 40 முதல் 70 தொகுதிகள்வரை வேண்டும்; இல்லையெனில் அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும். எதுவும் கிடைக்காவிட்டால் விஜய்யின் த.வெ.க பக்கம் ஒதுங்குவதிலும் தவறில்லை என அதிரடி காட்டுகின்றனர். ஆனால், ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை தரப்போ, வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு... தி.மு.க-வே பாதுகாப்பானது எனப் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இதனால் இரண்டு கட்சிகளின் தலைமையும் கூட்டணிகுறித்து பொதுவெளியில் பேச வேண்டாமெனத் தெரிவித்திருக்கிறது. மாணிக்கம் தாகூர் மதுரையில் மூண்ட தீ! இப்படியான சூழலில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ கோ. தளபதி பேசிய பேச்சுதான் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது. காங்கிரஸில் இருக்கும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் எம்.பி-க்களாகிவிட்டார்கள். அதனால் அடுத்தவன் எம்.எல்.ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். அதிகாரத்தில் பங்கு கேட்டு நிபந்தனை விதிக்கும் இவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது என அவர் ஆவேசப்பட, காங்கிரஸ் தரப்பில் அனல் பறந்தது. இதற்குப் பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர், மதுரை வடக்கு தொகுதியை இந்த முறை காங்கிரஸே கேட்கும். அதிகார திமிருடன் செயல்படுபவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது எனச் சீறினார். ஜோதிமணியோ, கூட்டணி தர்மத்திற்காக இதுவரை பொறுத்திருந்தோம், இனியும் பொறுக்க மாட்டோம் என 'வார்னிங்' கொடுத்திருந்தார். இப்படியாக இருதரப்பிலும் நிலவும் பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்கச் சென்றார் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த அந்தச் சந்திப்பு நடைபெற்றது. திமுக எம்எல்ஏ கோ. தளபதி ராகுல் - கனிமொழி: 40 நிமிட மீட்டிங்! அப்போது பேசிய கனிமொழி, தமிழக காங்கிரஸில் நடக்கும் குழப்பங்களுக்குக் கிரிஷ் சோடங்கரும், மாணிக்கம் தாகூரும்தான் முக்கியக் காரணம். வரப்போகும் தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. காங்கிரஸுடன் கைகோத்தே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் அண்ணனின் (மு.க.ஸ்டாலின்) விருப்பம் எனக் கனிமொழி விவரித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு ராகுல், கடந்தமுறை 40 தொகுதிகள் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால் நீங்கள் (தி.மு.க) அம்மாவிடம் (சோனியா காந்தி) பேசினீர்கள். எனவேதான் குறைந்த இடங்களுக்குச் சம்மதித்தேன். ஆனால், இந்த முறையும் அதைத் தொடர முடியாது. கூட்டணிக்குள் காங்கிரஸுக்கு உரிய மரியாதையும் அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்குப் பதிலளித்த கனிமொழி, நாங்கள் மாதந்தோறும் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த ரிப்போர்ட்படி, காங்கிரஸின் 12 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் தோல்வி நிச்சயம் எனத் தெரிகிறது. அப்படியிருக்கையில் கூடுதல் இடங்களை எப்படிக் கொடுக்க முடியும்? கடந்த முறை வெற்றி வாய்ப்புள்ள இடங்களையே உங்களுக்காகத் தியாகம் செய்தோம். அதேபோல் இந்த முறை நீங்களும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் எனச் சொல்லிவிட்டு வந்ததாகத் தகவல். கனிமொழி - ராகுல் காந்தி இந்தச் சூழலில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தி.மு.க - காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. கூட்டணிகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைத் தி.மு.க தலைவர் விரைவில் வெளியிடுவார் எனத் தெரிவித்தார். இதற்கிடையில், 'காங்கிரஸை விமர்சித்துப் பேசிய எம்.எல்.ஏ கோ. தளபதிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்தார். இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் மீண்டும் சலசப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலில்தான், நாளை மறுநாள் கே.சி. வேணுகோபால் தமிழகம் வருகிறார். இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர் கூறுகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் நாளை மறுநாள் மதியம் 12.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னை புறப்படுகிறார். பிற்பகல் 3.30 மணிக்குச் சென்னை வரும் அவர், பல்லாவரத்தில் நடைபெறும் காங்கிரஸ் நடைப்பயணத்தில் பங்கேற்கிறார். அதன்பின் புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் அவர், தனியார் ஹோட்டலில் தங்குவார். அண்ணா அறிவாலயம் அப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாகத் தி.மு.க மேலிடத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அந்தச் சந்திப்பில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பார். அதன் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணிகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றனர். கூட்டணியைக் காப்பாற்ற வேணுகோபால் 'தூது' போகிறாரா அல்லது 'துண்டிப்பு'க்கு அச்சாரம் போடுகிறாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்! மேடைக்குப் பின்னால் நடந்த மேஜிக்... கைகோத்துக் கனிந்த எடப்பாடி - டி.டி.வி...
DMK vs Congress: டெல்லி டு சென்னை... கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | பரபரக்கும் பவன்
தமிழக காங்கிரஸில் இப்போது இரண்டு கோஷ்டிகள் மல்லுக்கட்டுகின்றன. கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்போ, 40 முதல் 70 தொகுதிகள்வரை வேண்டும்; இல்லையெனில் அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும். எதுவும் கிடைக்காவிட்டால் விஜய்யின் த.வெ.க பக்கம் ஒதுங்குவதிலும் தவறில்லை என அதிரடி காட்டுகின்றனர். ஆனால், ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை தரப்போ, வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு... தி.மு.க-வே பாதுகாப்பானது எனப் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இதனால் இரண்டு கட்சிகளின் தலைமையும் கூட்டணிகுறித்து பொதுவெளியில் பேச வேண்டாமெனத் தெரிவித்திருக்கிறது. மாணிக்கம் தாகூர் மதுரையில் மூண்ட தீ! இப்படியான சூழலில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ கோ. தளபதி பேசிய பேச்சுதான் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது. காங்கிரஸில் இருக்கும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் எம்.பி-க்களாகிவிட்டார்கள். அதனால் அடுத்தவன் எம்.எல்.ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். அதிகாரத்தில் பங்கு கேட்டு நிபந்தனை விதிக்கும் இவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது என அவர் ஆவேசப்பட, காங்கிரஸ் தரப்பில் அனல் பறந்தது. இதற்குப் பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர், மதுரை வடக்கு தொகுதியை இந்த முறை காங்கிரஸே கேட்கும். அதிகார திமிருடன் செயல்படுபவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது எனச் சீறினார். ஜோதிமணியோ, கூட்டணி தர்மத்திற்காக இதுவரை பொறுத்திருந்தோம், இனியும் பொறுக்க மாட்டோம் என 'வார்னிங்' கொடுத்திருந்தார். இப்படியாக இருதரப்பிலும் நிலவும் பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்கச் சென்றார் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த அந்தச் சந்திப்பு நடைபெற்றது. திமுக எம்எல்ஏ கோ. தளபதி ராகுல் - கனிமொழி: 40 நிமிட மீட்டிங்! அப்போது பேசிய கனிமொழி, தமிழக காங்கிரஸில் நடக்கும் குழப்பங்களுக்குக் கிரிஷ் சோடங்கரும், மாணிக்கம் தாகூரும்தான் முக்கியக் காரணம். வரப்போகும் தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. காங்கிரஸுடன் கைகோத்தே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் அண்ணனின் (மு.க.ஸ்டாலின்) விருப்பம் எனக் கனிமொழி விவரித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு ராகுல், கடந்தமுறை 40 தொகுதிகள் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால் நீங்கள் (தி.மு.க) அம்மாவிடம் (சோனியா காந்தி) பேசினீர்கள். எனவேதான் குறைந்த இடங்களுக்குச் சம்மதித்தேன். ஆனால், இந்த முறையும் அதைத் தொடர முடியாது. கூட்டணிக்குள் காங்கிரஸுக்கு உரிய மரியாதையும் அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்குப் பதிலளித்த கனிமொழி, நாங்கள் மாதந்தோறும் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த ரிப்போர்ட்படி, காங்கிரஸின் 12 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் தோல்வி நிச்சயம் எனத் தெரிகிறது. அப்படியிருக்கையில் கூடுதல் இடங்களை எப்படிக் கொடுக்க முடியும்? கடந்த முறை வெற்றி வாய்ப்புள்ள இடங்களையே உங்களுக்காகத் தியாகம் செய்தோம். அதேபோல் இந்த முறை நீங்களும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் எனச் சொல்லிவிட்டு வந்ததாகத் தகவல். கனிமொழி - ராகுல் காந்தி இந்தச் சூழலில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தி.மு.க - காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. கூட்டணிகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைத் தி.மு.க தலைவர் விரைவில் வெளியிடுவார் எனத் தெரிவித்தார். இதற்கிடையில், 'காங்கிரஸை விமர்சித்துப் பேசிய எம்.எல்.ஏ கோ. தளபதிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்தார். இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் மீண்டும் சலசப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலில்தான், நாளை மறுநாள் கே.சி. வேணுகோபால் தமிழகம் வருகிறார். இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர் கூறுகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் நாளை மறுநாள் மதியம் 12.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னை புறப்படுகிறார். பிற்பகல் 3.30 மணிக்குச் சென்னை வரும் அவர், பல்லாவரத்தில் நடைபெறும் காங்கிரஸ் நடைப்பயணத்தில் பங்கேற்கிறார். அதன்பின் புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் அவர், தனியார் ஹோட்டலில் தங்குவார். அண்ணா அறிவாலயம் அப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாகத் தி.மு.க மேலிடத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அந்தச் சந்திப்பில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பார். அதன் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணிகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றனர். கூட்டணியைக் காப்பாற்ற வேணுகோபால் 'தூது' போகிறாரா அல்லது 'துண்டிப்பு'க்கு அச்சாரம் போடுகிறாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்! மேடைக்குப் பின்னால் நடந்த மேஜிக்... கைகோத்துக் கனிந்த எடப்பாடி - டி.டி.வி...
`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்சி கூட்டத்தில் கலகல!
மேயர் பிரியா தலைமையிலான மாநகராட்சிக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.யூ.எம்.எல் கட்சியின் 61 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா முஷாபர், `மேயருக்கு எம்.எல்.ஏவாக ப்ரமோஷன் கிடைக்கப் போகிறது' என ஐஸ் வைக்க, மேயர் பிரியா உள்ளர்த்தத்தோடு வெட்கப்பட்டு குலுங்கி சிரித்த சம்பவம், கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது. பாத்திமா சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தில் மன்றத்தின் உறுப்பினர்கள் பேசி முடித்திருந்தனர். அந்த சமயத்தில் IUML கட்சியைச் சேர்ந்த 61 வது வார்டு உறுப்பினர் பாத்திமா எழுந்து பேசுவதற்கு நேரம் கேட்கவே மேயர் பிரியாவும் அவரை பேச அனுமதித்தார். IUML கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பாத்திமா தொடர்ந்து, 'இன்னும் இரண்டு மாதத்தில் இந்த அவையில் இருக்கும் பலரும் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது. அந்தளவுக்கு திறன் படைத்த பலரும் இங்கே இருக்கிறார்கள். என்னால் அவர்களின் பெயர்களை கூட சொல்ல முடியும்' என்றார். உடனே துணை மேயர் மகேஷ் குமார் இடைமறித்து, 'மேயர் பிரியா சிரிக்கிறார் பாருங்கள்' என்றார். உடனே அரங்கமே கலகலப்பானது. 'மேயர் பிரியா என் மகளைப் போன்றவர். சிங்கப்பெண்ணாக அவரை மாநகராட்சியின் மேயர் ஆக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கும் ப்ரமோஷன் கிடைக்கும்' எனக் கூறவே அரங்கத்தில் சிரிப்பலை. மேயர் பிரியா தொடர்ந்து பேசியவர் தன்னுடைய வார்டின் கோரிக்கைகளை வரிசையாக அடுக்கினார். மீண்டும் இடைமறித்த துணை மேயர் மகேஷ் குமார், 'நல்லா பக்குவமா பேசுறீங்கம்மா...மகள் மாதிரி சிங்க்பெண் மாதிரினுலாம் சொல்லிட்டு நைசா உங்க கோரிக்கையையெல்லாம் அடுக்குறீங்களே..' என்றார். உடனே பாத்திமா, 'அவர் பிரமோஷன் ஆகிப் போவதற்குள் இதையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பார் என நம்புகிறேன்' என்றார் சிரித்துக்கொண்டே. உடனே கூட்டத்திலிருந்த இன்னொரு உறுப்பினர், 'துணை மேயர் அண்ணனும் ப்ரமோஷனுக்குத்தான் ட்ரை பண்றாரு' என கமென்ட் அடிக்க, அரங்கம் மொத்தமும் வெடித்துச் சிரித்தது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மேயர் பிரியா சீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் பல மாதங்களாகவே அறிவாலய வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்சி கூட்டத்தில் கலகல!
மேயர் பிரியா தலைமையிலான மாநகராட்சிக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.யூ.எம்.எல் கட்சியின் 61 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா முஷாபர், `மேயருக்கு எம்.எல்.ஏவாக ப்ரமோஷன் கிடைக்கப் போகிறது' என ஐஸ் வைக்க, மேயர் பிரியா உள்ளர்த்தத்தோடு வெட்கப்பட்டு குலுங்கி சிரித்த சம்பவம், கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது. பாத்திமா சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தில் மன்றத்தின் உறுப்பினர்கள் பேசி முடித்திருந்தனர். அந்த சமயத்தில் IUML கட்சியைச் சேர்ந்த 61 வது வார்டு உறுப்பினர் பாத்திமா எழுந்து பேசுவதற்கு நேரம் கேட்கவே மேயர் பிரியாவும் அவரை பேச அனுமதித்தார். IUML கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பாத்திமா தொடர்ந்து, 'இன்னும் இரண்டு மாதத்தில் இந்த அவையில் இருக்கும் பலரும் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது. அந்தளவுக்கு திறன் படைத்த பலரும் இங்கே இருக்கிறார்கள். என்னால் அவர்களின் பெயர்களை கூட சொல்ல முடியும்' என்றார். உடனே துணை மேயர் மகேஷ் குமார் இடைமறித்து, 'மேயர் பிரியா சிரிக்கிறார் பாருங்கள்' என்றார். உடனே அரங்கமே கலகலப்பானது. 'மேயர் பிரியா என் மகளைப் போன்றவர். சிங்கப்பெண்ணாக அவரை மாநகராட்சியின் மேயர் ஆக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கும் ப்ரமோஷன் கிடைக்கும்' எனக் கூறவே அரங்கத்தில் சிரிப்பலை. மேயர் பிரியா தொடர்ந்து பேசியவர் தன்னுடைய வார்டின் கோரிக்கைகளை வரிசையாக அடுக்கினார். மீண்டும் இடைமறித்த துணை மேயர் மகேஷ் குமார், 'நல்லா பக்குவமா பேசுறீங்கம்மா...மகள் மாதிரி சிங்க்பெண் மாதிரினுலாம் சொல்லிட்டு நைசா உங்க கோரிக்கையையெல்லாம் அடுக்குறீங்களே..' என்றார். உடனே பாத்திமா, 'அவர் பிரமோஷன் ஆகிப் போவதற்குள் இதையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பார் என நம்புகிறேன்' என்றார் சிரித்துக்கொண்டே. உடனே கூட்டத்திலிருந்த இன்னொரு உறுப்பினர், 'துணை மேயர் அண்ணனும் ப்ரமோஷனுக்குத்தான் ட்ரை பண்றாரு' என கமென்ட் அடிக்க, அரங்கம் மொத்தமும் வெடித்துச் சிரித்தது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மேயர் பிரியா சீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் பல மாதங்களாகவே அறிவாலய வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
`விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?' - செல்லூர் ராஜூ கேள்வி
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் 63 வது வார்டு ஈபி காலனியில் புதிய நியாய விலைக் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, ``திமுக போல் தோல்வி கண்ட கட்சி கிடையாது. தொண்டர்களுக்கு கடிதம் எழுதி கட்சியை வளர்த்தவர் கலைஞர் கருணாநிதி. ஆனாலும் கூட்டணி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது. விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?. கரூர் துயர சம்பவத்தில் பிறகு மக்கள் அதிகமாக கூடுவார்கள் காரணத்தை கூறி பொதுவெளிக்கு வராமல் இருப்பது தவறு. காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், மத்திய போலீஸ் வாங்கி பரப்புரைக்கு செல்லலாமே. கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காமல் அவர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தது கொடுமையானது. பொது வாழ்க்கையில் இப்படியெல்லாம் ஒரு நடைமுறையை பார்த்ததே இல்லை. செல்லூர் ராஜூ கருணாநிதி ஜெயிக்க காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். நடிகர் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். சகோதரர் விஜயை நாங்களாக திட்டவில்லை. எங்களை திட்டினார் நாங்கள் திட்டினோம். தற்போது தவெக வினர் பேசியதை வாபஸ் பெற்றுள்ளனர். அதேபோன்று நாங்களும் அவர்களை பற்றி பேச மாட்டோம். அறைக்குள் அரசியல் செய்தால் எப்படி. ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதை கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. ஊடகம் வழியாக தான் கேட்க வேண்டுமா? அவர் நடத்தும் நாடகத்தை எல்லாம் மக்கள் பார்த்து சலித்து விட்டார்கள். இந்த நாடகமெல்லாம் வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
சீமான் போட்டியிடும் தொகுதிக்கு பாஜக பொறுப்பாளராகும் அண்ணாமலை - அதிர்ச்சியில் நாதக முகாம்!
சீமான் போட்டியிடுவதாக கூறப்படும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு பா.ஜ.க-வின் தேர்தல் சுற்றுபயண பொறுப்பாளராக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பது, நாம் தமிழர் கட்சி முகாமில் பேசுபொருளாகியிருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தல் முதல் களம்காணுகிறது நாம் தமிழர் கட்சி. இதுவரைக்கும் எந்தவொரு வெற்றியையும் அவர்கள் பதிவு செய்யவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலாவது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எப்படியாவது எம்.எல்.ஏ-வாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுகிறார்கள், அக்கட்சி நிர்வாகிகள். இந்நிலையில் அ.தி.மு.க, தி.மு.க களமிறங்காத காரைக்குடி சட்டமன்றத் தொகுதிதான் நா.த.க-வின் முதல் தேர்வாக இருக்கிறது, அதனை வரும் பிப்ரவரி 21-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். அண்ணாமலை, மோடி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இச்சூழலில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்திருக்கிறது, பா.ஜ.க-வின் டெல்லி தலைமை. அதன்படி சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பா.ஜ.க சுற்றுப்பயண பொறுப்பாளராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர்கள், நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, வெற்றிக்கான வியூகங்களை வகுப்பார்கள். அதிலும் பா.ஜ.க போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள். அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் காரைக்குடியில் உறுதியாக பா.ஜ.க களமிறங்குவதால் அவர் அங்கே கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. சோஷியல் இன்ஜினீயரிங் வியூகங்களை மேற்கொள்ளவும் ஆயத்தமாகிறது பா.ஜ.க. காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாலும் காங்கிரஸும் வலுவாக இருப்பதால், வாக்குகள் தாறுமாறாகப் பிரியும். அதை பயன்படுத்தி வெற்றிபெறுவதற்கு பா.ஜ.க இலக்கு நிர்ணயித்துள்ளது என்றனர். சீமான் அரசியல் பார்வையாளர்கள் சிலரோ, ``நா.த.க-வையும் சீமானையும் பொதுவெளியில் அண்ணாமலை பாராட்டினாலும், இளைஞர்கள் சீமான் பின்னால் திரள்வதை பா.ஜ.க விரும்பவில்லை. எனவே சீமான் வென்றுவிடக் கூடாது என்பதில் உறுதிகாட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே நா.த.க முகாமில் அதிர்ச்சி பற்றிக் கொண்டிருக்கிறது என்றனர். விரக்தியில் தம்பிகள்... சுதாரிக்காத சீமான்... என்னவாகும் நாம் தமிழர் கட்சி?
சீமான் போட்டியிடும் தொகுதிக்கு பாஜக பொறுப்பாளராகும் அண்ணாமலை - அதிர்ச்சியில் நாதக முகாம்!
சீமான் போட்டியிடுவதாக கூறப்படும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு பா.ஜ.க-வின் தேர்தல் சுற்றுபயண பொறுப்பாளராக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பது, நாம் தமிழர் கட்சி முகாமில் பேசுபொருளாகியிருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தல் முதல் களம்காணுகிறது நாம் தமிழர் கட்சி. இதுவரைக்கும் எந்தவொரு வெற்றியையும் அவர்கள் பதிவு செய்யவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலாவது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எப்படியாவது எம்.எல்.ஏ-வாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுகிறார்கள், அக்கட்சி நிர்வாகிகள். இந்நிலையில் அ.தி.மு.க, தி.மு.க களமிறங்காத காரைக்குடி சட்டமன்றத் தொகுதிதான் நா.த.க-வின் முதல் தேர்வாக இருக்கிறது, அதனை வரும் பிப்ரவரி 21-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். அண்ணாமலை, மோடி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இச்சூழலில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்திருக்கிறது, பா.ஜ.க-வின் டெல்லி தலைமை. அதன்படி சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பா.ஜ.க சுற்றுப்பயண பொறுப்பாளராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர்கள், நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, வெற்றிக்கான வியூகங்களை வகுப்பார்கள். அதிலும் பா.ஜ.க போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள். அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் காரைக்குடியில் உறுதியாக பா.ஜ.க களமிறங்குவதால் அவர் அங்கே கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. சோஷியல் இன்ஜினீயரிங் வியூகங்களை மேற்கொள்ளவும் ஆயத்தமாகிறது பா.ஜ.க. காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாலும் காங்கிரஸும் வலுவாக இருப்பதால், வாக்குகள் தாறுமாறாகப் பிரியும். அதை பயன்படுத்தி வெற்றிபெறுவதற்கு பா.ஜ.க இலக்கு நிர்ணயித்துள்ளது என்றனர். சீமான் அரசியல் பார்வையாளர்கள் சிலரோ, ``நா.த.க-வையும் சீமானையும் பொதுவெளியில் அண்ணாமலை பாராட்டினாலும், இளைஞர்கள் சீமான் பின்னால் திரள்வதை பா.ஜ.க விரும்பவில்லை. எனவே சீமான் வென்றுவிடக் கூடாது என்பதில் உறுதிகாட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே நா.த.க முகாமில் அதிர்ச்சி பற்றிக் கொண்டிருக்கிறது என்றனர். விரக்தியில் தம்பிகள்... சுதாரிக்காத சீமான்... என்னவாகும் நாம் தமிழர் கட்சி?
மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்! - தளபதியை சீண்டும் மாணிக்கம் தாகூர்
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவினருக்குமிடையே கூட்டணி சண்டை சூடுபிடித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மொழிப்போர் தியாகிகள் நிகழ்வு ஒன்றில் பேசிய மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் மாவட்ட செயலாளருமான கோ.தளபதி, ``காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருவரும் எம்.பி ஆகிவிட்டனர். இதனால் மற்றவர்கள் எம்.எல்.ஏ ஆகவில்லையென்றாலும் பரவாயில்லை என அதில் பங்கு கொடு இதில் பங்கு கொடு என கேட்கிறார்கள். இதையெல்லாம் நம்முடைய தலைமை புரிந்து கொண்டு இவர்களுக்கு சீட்டே கொடுக்க கூடாது. நாம் கொடுக்க விட கூடாது. காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டுகள் தான் இருக்கிறது. பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு அதிக அளவு பங்கு கொடுக்க கூடாது என பேசியது சர்ச்சையை கிளப்பியது. கோ.தளபதி இதயடுத்து எம்.பி மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புத் தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மதுரை வடக்கு தொகுதியில் `காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது மேலும் சலசலப்பை உருவாக்கியது. தொடர்ந்து இன்று திருப்பரங்குன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, எங்களை பற்றி அவதூறாக பேசிய திமுக மாவட்ட செயலாளர் மீது மூன்று நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு சீட் கிடைக்கிறது, ஜோதிமணிக்கு சீட் கிடைக்கிறது என்பதெல்லாம் பிரச்னை இல்லை ஆனால் அதை தாண்டி பூத் கமிட்டிக்கு ஆள் இல்லை, வாக்குகள் இல்லை என பேசுவதெல்லாம் வன்மம் மிகுந்தது. இதை கடுமையாக எதிர்ப்போம். அதிகார மமதையில் பேசுகிறார் திமுக மாவட்ட செயலாளர். மாணிக்கம் தாகூர் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள் நான் அவர்களோடு இருப்பேன். வந்தே மாதரம் என்று சொல்லி கொண்டு செல்ல மாட்டோம். காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும். மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள் இந்த தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெறுவோம். மதுரை வடக்கு மதுரை வடக்கு தொகுதியில் 13 ஆம் தேதிக்கு பிறகு பூத் கமிட்டி கூட்டம் போட்டு எங்களுடைய பலத்தை காட்ட இருக்கிறோம் என்றார்.
மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்! - தளபதியை சீண்டும் மாணிக்கம் தாகூர்
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவினருக்குமிடையே கூட்டணி சண்டை சூடுபிடித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மொழிப்போர் தியாகிகள் நிகழ்வு ஒன்றில் பேசிய மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் மாவட்ட செயலாளருமான கோ.தளபதி, ``காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருவரும் எம்.பி ஆகிவிட்டனர். இதனால் மற்றவர்கள் எம்.எல்.ஏ ஆகவில்லையென்றாலும் பரவாயில்லை என அதில் பங்கு கொடு இதில் பங்கு கொடு என கேட்கிறார்கள். இதையெல்லாம் நம்முடைய தலைமை புரிந்து கொண்டு இவர்களுக்கு சீட்டே கொடுக்க கூடாது. நாம் கொடுக்க விட கூடாது. காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டுகள் தான் இருக்கிறது. பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு அதிக அளவு பங்கு கொடுக்க கூடாது என பேசியது சர்ச்சையை கிளப்பியது. கோ.தளபதி இதயடுத்து எம்.பி மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புத் தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மதுரை வடக்கு தொகுதியில் `காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது மேலும் சலசலப்பை உருவாக்கியது. தொடர்ந்து இன்று திருப்பரங்குன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, எங்களை பற்றி அவதூறாக பேசிய திமுக மாவட்ட செயலாளர் மீது மூன்று நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு சீட் கிடைக்கிறது, ஜோதிமணிக்கு சீட் கிடைக்கிறது என்பதெல்லாம் பிரச்னை இல்லை ஆனால் அதை தாண்டி பூத் கமிட்டிக்கு ஆள் இல்லை, வாக்குகள் இல்லை என பேசுவதெல்லாம் வன்மம் மிகுந்தது. இதை கடுமையாக எதிர்ப்போம். அதிகார மமதையில் பேசுகிறார் திமுக மாவட்ட செயலாளர். மாணிக்கம் தாகூர் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள் நான் அவர்களோடு இருப்பேன். வந்தே மாதரம் என்று சொல்லி கொண்டு செல்ல மாட்டோம். காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும். மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள் இந்த தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெறுவோம். மதுரை வடக்கு மதுரை வடக்கு தொகுதியில் 13 ஆம் தேதிக்கு பிறகு பூத் கமிட்டி கூட்டம் போட்டு எங்களுடைய பலத்தை காட்ட இருக்கிறோம் என்றார்.
UGC:`கல்விக்கூடங்களில் கண்ணுக்குத் தெரியாத சாதி'ரோஹித் வெமுலா முதல் UGC 2026 வரை| விரிவான அலசல்
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி படித்து வந்த ரோஹித் வெமுலா, அம்பேத்கர் மாணவர் சங்கத்திலும் (ASA) உறுப்பினராக இருந்தார். ஆகஸ்ட் 2015-ல், அம்பேத்கர் மாணவர் சங்கத்துக்கும் - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற இந்துத்துவ மாணவர் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் தாக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் ரோஹித் வெமுலா மீது தவறு இல்லை எனக் கூறிய பல்கலைக்கழக விசாரணைக்குழு, சில முக்கியப் புள்ளிகளின் தலையீட்டால் ரோஹித் வெமுலா உட்பட 5 பட்டியலின மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, விடுதியிலிருந்து வெளியேற்றியது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1.75 லட்சம் கல்வி உதவித்தொகையும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கல்லூரியில் நடந்த பல அவமானங்களால் ஜனவரி 17, 2016 அன்று எனது பிறப்பு ஒரு விபத்து (My birth is a fatal accident) என எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் ரோஹித் வெமுலா. ரோஹித் வெமுலா இதேப் போன்ற சாதியக் கொடுமையால், மகாராஷ்டிராவின் தட்வி பில் (Tadvi Bhil) என்ற பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த பயல் தட்வி என்ற மருத்துவ கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவியும், மே 22, 2019 அன்று இந்த உலகைவிட்டு விடைப்பெற்றுக்கொண்டார். இந்த இரண்டு வழக்குகளும் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கல்லூரிகளில் சாதிக்கொடுமை! இதற்கிடையில், 2023-ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்,`` 2018 - 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றிலிருந்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த 19,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். எனக் குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு தொடர்பான புகார்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 118.4 சதவீதம் அதிகரித்துள்ளன. 2019-20-ல் 173 புகார்களே பதிவு செய்யப்பட்ட நிலையில், 2023-24-ல் இந்த எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில், 704 பல்கலைக்கழகங்கள் மற்றும் 1,553 கல்லூரிகளில் இருந்து மொத்தம் 1,160 புகார்கள் பெறப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளி விவரங்கள், இந்தியாவில் கண்ணுக்குத் தெரியாத சாதியும், அதனால் அரங்கேற்றப்பட்ட கொடுமைகளும் எவ்வளவு அருவறுப்பானது என்பதை உலகுக்கு எடுத்துக்காண்பித்தன. ஆனால், இந்தத் தற்கொலைகளும், கல்வி இடை நிறுத்தல்களும் நடப்பதற்கு முன்பே, 2012-ம் ஆண்டு கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சட்டங்களை வகுத்திருந்தது. சாதிப்பாகுபாடு UGC 2012 சட்டம்! அந்த சட்டத்தில்... ஒரு மாணவர் சாதி ரீதியிலான பாகுபாட்டிற்கு உள்ளானார் என்றால் அதில் விசாரணைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் சாதி பாகுபாட்டை களைய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பார். சாதிப் பாகுபாடு உள்ளிட்ட புகார்களை அளிக்க அதற்கான மையம் இருக்க வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படை யில் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான பாதுகாப்பை முக்கியமாக கருதப்பட்டது. ஒரு புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது 60 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த அமைப்பிடம் நிறுவன ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெரிய அளவில் இல்லை. எனவே, சட்டம் இருந்தும் பெரிதாக எந்தச் செயல்பாடும், மாற்றமும் இல்லை. இதைக் கருத்தில்கொண்டு, ரோஹித் வெமுலாவின் அம்மா ராதிகா வெமுலா, பயல் தட்வின் அம்மா அபேதா தட்வி ஆகியோர், ``கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர சரியான வழிகாட்டுதலுடன் கூடிய வலுவான கட்டமைப்பு தேவை. 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யுஜிசி சட்டம் முறையாக அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். யுஜிசி நீதிமன்றத் தலையீடு... இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு மற்றும் யுஜிசி-யும் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியது. நீதிமன்றம் இந்த வழக்கை வெறும் தற்கொலை வழக்காகப் பார்க்காமல், அமைப்பு ரீதியான தோல்வி (Institutional Failure) எனக் கருதியது. 2023-ம் ஆண்டு நடந்த விசாரணையின் போது, பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன் பிறகு தொடர்ந்து நீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில், யுஜிசி பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. அதன் இறுதி வடிவமாகவே இந்த மாத தொடக்கத்தில் நீதிமன்ற ஆலோசனையின் பேரில் யுஜிசி 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026' என்ற விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்தது. என்ன சொல்கிறது? 2026 புதிய விதி ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் Equal Opportunity Centre அமைக்க வேண்டும். ஒரு மூத்த பேராசிரியர் அல்லது தகுதியான ஆசிரியர் இந்த சம வாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். சம வாய்ப்பு மையத்தின் செயல்பாட்டை நிர்வகிக்கவும் பாகுபாடு தொடர்பான புகார்களை விசாரிக்கவும், கல்வி நிறுவனத் தலைவரால் Equity Committee அமைக்கப்படும். இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் இடம்பெறுவர். இக்குழுவில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்குக் கட்டாயம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட தங்களுக்கு சாதிய பாகுபாடு காட்டப்பட்டால் புகார் அளிக்கலாம். உச்ச நீதிமன்றம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் உதவி எண் இருக்க வேண்டும். புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குழு கூடி விவாதிக்க வேண்டும். 15 வேலை நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு 7 நாட்களுக்குள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேர்க்கையின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தாங்கள் எந்தவிதப் பாகுபாட்டிலும் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும். குழுவின் முடிவில் அதிருப்தி இருந்தால், 30 நாட்களுக்குள் குறைதீர்ப்பாளர் முன்னிலையில் மேல்முறையீடு செய்யலாம். குறைதீர்ப்பாளர் 30 நாட்களுக்குள் அதைத் தீர்க்க முயற்சி செய்வார். கல்வி நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை) அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதில், மாணவர் சேர்க்கை விவரம் மற்றும் இடைநிற்றல் விகிதங்கள் இடம்பெற வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை யுஜிசி தேசிய அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைத்து இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும். இந்த விதிகளுக்குக் கீழ்ப்படியாத கல்வி நிறுவனங்களின் நிதி முடக்கப்படலாம் அல்லது அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம். EWS - பத்து சதவிகித இட ஒதுக்கீடு இந்தப் புதிய யுஜிசி சட்ட விதிகள், 2012-ம் ஆண்டின் பழைய முறையைப் போல வெறும் ஆலோசனை அமைப்பாக இல்லாமல், அதிக அதிகாரம் கொண்ட சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், புதிய விதிமுறைகளின்படி, 'சாதி அடிப்படையிலான பாகுபாடு' என்பது பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை மட்டுமே குறிக்கிறது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS), 'சாதி' என்ற வரையறைக்குள் வராவிட்டாலும், அவர்கள் மீதான பாகுபாடும் தண்டனைக்குரியது தான், ஆனால் அது 'சாதி பாகுபாடு' என்ற வரையறைக்கு கீழ் வராமல் 'பொதுவான பாகுபாடு' என்ற பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. யுஜிசி-யின் இந்தப் புதிய சட்டத்துக்கு நாடாளாவிய அளவில் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றத் தலைவர்களும் வரவேற்றிருக்கின்றன. எதிர்க்கும் வலதுசாரி அமைப்புகள் அதே நேரம், யுஜிசி-யின் இந்தப் விதிகள் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகக் குறிப்பிட்டு, 'இந்த விதிகளை வாபஸ் பெற வேண்டும்' என்பதை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தையும் நடத்தினர். உத்தரப் பிரதேசத்தில் மாக் மேளாவில் கூடிய சாமியார்களும் புதிய யுஜிசி சட்டம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அகில இந்தியத் தண்டி சன்யாசி பரிஷத்தின் தேசியத் தலைவரான பிதாதிஷ்வர் சுவாமி பிரம்மாஷ்ரம் போன்ற சாமியார்களும், வலதுசாரி அமைப்புகளும் இந்த சட்டத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து, போராட்டங்களை முன்னெடுத்தன. சில அரசு அதிகாரிகளும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். உச்ச நீதிமன்றம் இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றம், ``புதிய விதிமுறைகளின் மொழி மிகவும் தெளிவற்றதாக உள்ளது. இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால், அது சமூகத்தில் ஒரு ஆபத்தான மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, புதிய யு.ஜி.சி விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. எனத் தடை விதித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச, திராவிடர் மாணவர் கூட்டமைப்பு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இளையபெருமாளை தொடர்புகொண்டோம். நம்மிடம் விரிவாகவும், விளக்கமாகவும் பேசத் தொடங்கிய அவர், ``கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அதனால்தான், ரோஹித் வெமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் நடக்கும் அமைப்பு ரீதியான கொலைகளை (Institutional Murders) தடுக்க 'ரோஹித் சட்டம்' வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் அழுத்தத்தால் தான் இந்த புதிய விதிகள் வந்துள்ளன. இளையபெருமாள் புதிய விதியில் சாதகம் என்ன? UGC 2026 2012 விதிகள் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இது குறிப்பாக எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கானது மட்டுமே. இதில் ஓ.பி.சி சேர்க்கப்படவில்லை. இப்போது கொண்டுவந்த புதிய விதியில் ஓ.பி.சி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS), பெண்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இந்த விதியில் முக்கியமான அம்சம், ஒரு புகார் அளிக்கப்பட்டால் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. 2012 விதிகளில் இந்தத் தெளிவான கால வரையறை இல்லை. மேலும், விசாரணை கமிட்டியில் ஒரு மாணவரையும் உறுப்பினராகச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஏன் முக்கியம்? ஏற்கனவே நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும்போது, யுஜிசி மூலம் தனியாக ஒரு விதிமுறை வருவது அந்தச் சட்டத்தை பலவீனப்படுத்திவிடுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பு. பல்கலைக்கழகங்கள் ஒரு 'பாதுகாக்கப்பட்ட இடமாகப்' பார்க்கப்படுகின்றன. ஒரு மாணவரைப் பல்கலைக்கழகத்திற்குள் வந்து காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றால் கூட, அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளர் அனுமதி அளிக்க வேண்டும். இந்தத் தன்னாட்சி அதிகாரம் சில நேரங்களில் குற்றவாளிகளைக் காப்பாற்றவோ அல்லது நீதியைத் தாமதப்படுத்தவோ வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு FIR பதிவு செய்வது சாதாரண விஷயமல்ல. கடும் போராட்டங்களுக்குப் பிறகே அது சாத்தியமாகிறது. சாதிய வன்மம் அதேநேரம், வெளியில் நடக்கும் வன்கொடுமைகளை விட, கல்வி நிறுவனங்களுக்குள் நடக்கும் பாகுபாடுகள் மறைமுகமானவை. ஒரு எஸ்சி - எஸ்டி மாணவர் பிஎச்.டி சேர்ந்தும் அவருக்கு வழிகாட்டும் பேராசிரியர் ஒதுக்காமல் இழுத்தடிப்பது, மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பை நிறுத்தி வைப்பது அல்லது தாமதப்படுத்துவது, மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் விதமான நிர்வாகச் சிக்கல்களை உருவாக்குவது, இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் மீது உனக்குத் தகுதி இல்லை என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஐ.ஐ.டி மும்பையில் நடந்த தர்ஷன் சோலங்கி போன்ற மாணவர்களின் மரணங்கள் இதற்குச் சான்று. கல்லூரி விடுதிகளில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதும், அப்படியே இருந்தாலும் அவை ஒரு திரைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்படுவதும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கலாச்சாரம் மற்றவர்கள் மீது திணிக்கப்படுவதும், மாணவர்களுக்கு வளாகத்துக்குள்ளேயே சுதந்திரமின்மை போன்ற சூழலை உருவாக்குகிறது. இது போன்ற நுணுக்கமான வன்கொடுமைகளை வெளியில் இருக்கும் பொதுவான வன்கொடுமை தடுப்புச் சட்டம் நேரடியாகக் கையாள முடியாது. அதனால்தான் பல்கலைக்கழகங்களுக்கெனத் தனித்துவமான விதிகள் தேவைப்படுகின்றன. எதிர்ப்புப் போராட்டம் ஏன்? யுஜிசி கொடுத்த இந்த விதிகளில் அனைத்துப் பிரிவினரையும் உள்ச்சேர்த்து பொதுப்பிரிவினரை மட்டுமே குற்றவாளிகளாகச் சித்தரிப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் அதிகார மையங்களில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிராகப் புகார்கள் வரும்போது அதைத் தடுக்க முற்படுகின்றனர். ஏற்கெனவே, வழங்கப்பட்ட புகார்களை இந்த புதிய விதிகள் மீண்டும் கிளரும். அப்படி நடந்தால் அடுத்தடுத்த நடவடிக்கைகளை குற்றமிழைத்தவர்கள் எதிர்க்கொள்ள நேரிடும். அதற்காகவே இந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது எனக் கருதுகிறேன். யுஜிசி-க்கு எதிரான போராட்டம் நீதிமன்றத்தின் இரட்டை நிலைப்பாடு விவசாயச் சட்டங்கள் அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் வரும்போது தடுத்து நிறுத்தாத நீதிமன்றம், ஆதிக்கத் தரப்பினர் போராடும்போது மட்டும் உடனடியாக கமிட்டி அமைத்து விதிகளை மறுபரிசீலனை செய்ய முன்வருவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புதிய சட்டத்தின் பாதகம் UGC 2026 இந்தப் புதிய சட்டத்தில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களை (EWS) இணைத்தது வன்மையான கண்டனத்துக்குறியது. இந்தியாவில் பாகுபாடு என்பது பொருளாதார நிலையில் இல்லை, சாதி அடிப்படையில்தான் இருக்கிறது. அதேப்போல உயர்கல்வி நிறுவனங்களில் ஜாட் போன்ற பல ஓபிசி சமூகங்கள் இன்றும் பேராசிரியர்களாகவோ, உயர் பதவிகளிலோ இல்லை. அட்மிஷன் மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி-க்கான உரிமைகள் முழுமையாகச் சென்றடையாத நிலையில், அவர்களைப் பொதுவான ஒரு பிரிவுக்குள் கொண்டு வருவது சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யும். மேலும், பல்கலைக்கழகங்களில் இன்றும் ஆதிக்கச் சாதியினரே உயர் பதவிகளில் உள்ளனர். EWS போன்ற பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் இந்தச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. சாதி சமூகம் ஏற்கனவே சமமாக இல்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி, அந்த இடைவெளியை நிரப்புவதன் மூலமே (Equity) அனைவரையும் சமநிலைக்கு கொண்டு வர முடியும். பல்கலைக்கழகங்கள் இந்த மாற்றத்தை முன்னெடுக்கும் இடங்களாக இருக்க வேண்டும். படிக்காதவர்கள் இருக்கும் கிராமங்களில் ஜாதி இருப்பதை விட, படித்து அறிவு பெற்றவர்கள் இருக்கும் பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாடு பார்ப்பது அதிக ஆபத்தானது. கல்வி நிறுவனங்களில் சாதி மற்றும் பாகுபாட்டை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அது சமுதாயத்திலிருந்தே ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. என்றார் உறுதியான குரலில். UGC : `இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால்.. புதிய UGC சட்டத்துக்கு இடைக்காலத் தடை!' - உச்ச நீதிமன்றம்
UGC:`கல்விக்கூடங்களில் கண்ணுக்குத் தெரியாத சாதி'ரோஹித் வெமுலா முதல் UGC 2026 வரை| விரிவான அலசல்
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி படித்து வந்த ரோஹித் வெமுலா, அம்பேத்கர் மாணவர் சங்கத்திலும் (ASA) உறுப்பினராக இருந்தார். ஆகஸ்ட் 2015-ல், அம்பேத்கர் மாணவர் சங்கத்துக்கும் - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற இந்துத்துவ மாணவர் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் தாக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் ரோஹித் வெமுலா மீது தவறு இல்லை எனக் கூறிய பல்கலைக்கழக விசாரணைக்குழு, சில முக்கியப் புள்ளிகளின் தலையீட்டால் ரோஹித் வெமுலா உட்பட 5 பட்டியலின மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, விடுதியிலிருந்து வெளியேற்றியது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1.75 லட்சம் கல்வி உதவித்தொகையும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கல்லூரியில் நடந்த பல அவமானங்களால் ஜனவரி 17, 2016 அன்று எனது பிறப்பு ஒரு விபத்து (My birth is a fatal accident) என எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் ரோஹித் வெமுலா. ரோஹித் வெமுலா இதேப் போன்ற சாதியக் கொடுமையால், மகாராஷ்டிராவின் தட்வி பில் (Tadvi Bhil) என்ற பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த பயல் தட்வி என்ற மருத்துவ கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவியும், மே 22, 2019 அன்று இந்த உலகைவிட்டு விடைப்பெற்றுக்கொண்டார். இந்த இரண்டு வழக்குகளும் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கல்லூரிகளில் சாதிக்கொடுமை! இதற்கிடையில், 2023-ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்,`` 2018 - 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றிலிருந்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த 19,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். எனக் குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு தொடர்பான புகார்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 118.4 சதவீதம் அதிகரித்துள்ளன. 2019-20-ல் 173 புகார்களே பதிவு செய்யப்பட்ட நிலையில், 2023-24-ல் இந்த எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில், 704 பல்கலைக்கழகங்கள் மற்றும் 1,553 கல்லூரிகளில் இருந்து மொத்தம் 1,160 புகார்கள் பெறப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளி விவரங்கள், இந்தியாவில் கண்ணுக்குத் தெரியாத சாதியும், அதனால் அரங்கேற்றப்பட்ட கொடுமைகளும் எவ்வளவு அருவறுப்பானது என்பதை உலகுக்கு எடுத்துக்காண்பித்தன. ஆனால், இந்தத் தற்கொலைகளும், கல்வி இடை நிறுத்தல்களும் நடப்பதற்கு முன்பே, 2012-ம் ஆண்டு கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சட்டங்களை வகுத்திருந்தது. சாதிப்பாகுபாடு UGC 2012 சட்டம்! அந்த சட்டத்தில்... ஒரு மாணவர் சாதி ரீதியிலான பாகுபாட்டிற்கு உள்ளானார் என்றால் அதில் விசாரணைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் சாதி பாகுபாட்டை களைய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பார். சாதிப் பாகுபாடு உள்ளிட்ட புகார்களை அளிக்க அதற்கான மையம் இருக்க வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படை யில் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான பாதுகாப்பை முக்கியமாக கருதப்பட்டது. ஒரு புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது 60 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த அமைப்பிடம் நிறுவன ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெரிய அளவில் இல்லை. எனவே, சட்டம் இருந்தும் பெரிதாக எந்தச் செயல்பாடும், மாற்றமும் இல்லை. இதைக் கருத்தில்கொண்டு, ரோஹித் வெமுலாவின் அம்மா ராதிகா வெமுலா, பயல் தட்வின் அம்மா அபேதா தட்வி ஆகியோர், ``கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர சரியான வழிகாட்டுதலுடன் கூடிய வலுவான கட்டமைப்பு தேவை. 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யுஜிசி சட்டம் முறையாக அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். யுஜிசி நீதிமன்றத் தலையீடு... இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு மற்றும் யுஜிசி-யும் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியது. நீதிமன்றம் இந்த வழக்கை வெறும் தற்கொலை வழக்காகப் பார்க்காமல், அமைப்பு ரீதியான தோல்வி (Institutional Failure) எனக் கருதியது. 2023-ம் ஆண்டு நடந்த விசாரணையின் போது, பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன் பிறகு தொடர்ந்து நீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில், யுஜிசி பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. அதன் இறுதி வடிவமாகவே இந்த மாத தொடக்கத்தில் நீதிமன்ற ஆலோசனையின் பேரில் யுஜிசி 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026' என்ற விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்தது. என்ன சொல்கிறது? 2026 புதிய விதி ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் Equal Opportunity Centre அமைக்க வேண்டும். ஒரு மூத்த பேராசிரியர் அல்லது தகுதியான ஆசிரியர் இந்த சம வாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். சம வாய்ப்பு மையத்தின் செயல்பாட்டை நிர்வகிக்கவும் பாகுபாடு தொடர்பான புகார்களை விசாரிக்கவும், கல்வி நிறுவனத் தலைவரால் Equity Committee அமைக்கப்படும். இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் இடம்பெறுவர். இக்குழுவில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்குக் கட்டாயம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட தங்களுக்கு சாதிய பாகுபாடு காட்டப்பட்டால் புகார் அளிக்கலாம். உச்ச நீதிமன்றம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் உதவி எண் இருக்க வேண்டும். புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குழு கூடி விவாதிக்க வேண்டும். 15 வேலை நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு 7 நாட்களுக்குள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேர்க்கையின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தாங்கள் எந்தவிதப் பாகுபாட்டிலும் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும். குழுவின் முடிவில் அதிருப்தி இருந்தால், 30 நாட்களுக்குள் குறைதீர்ப்பாளர் முன்னிலையில் மேல்முறையீடு செய்யலாம். குறைதீர்ப்பாளர் 30 நாட்களுக்குள் அதைத் தீர்க்க முயற்சி செய்வார். கல்வி நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை) அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதில், மாணவர் சேர்க்கை விவரம் மற்றும் இடைநிற்றல் விகிதங்கள் இடம்பெற வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை யுஜிசி தேசிய அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைத்து இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும். இந்த விதிகளுக்குக் கீழ்ப்படியாத கல்வி நிறுவனங்களின் நிதி முடக்கப்படலாம் அல்லது அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம். EWS - பத்து சதவிகித இட ஒதுக்கீடு இந்தப் புதிய யுஜிசி சட்ட விதிகள், 2012-ம் ஆண்டின் பழைய முறையைப் போல வெறும் ஆலோசனை அமைப்பாக இல்லாமல், அதிக அதிகாரம் கொண்ட சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், புதிய விதிமுறைகளின்படி, 'சாதி அடிப்படையிலான பாகுபாடு' என்பது பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை மட்டுமே குறிக்கிறது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS), 'சாதி' என்ற வரையறைக்குள் வராவிட்டாலும், அவர்கள் மீதான பாகுபாடும் தண்டனைக்குரியது தான், ஆனால் அது 'சாதி பாகுபாடு' என்ற வரையறைக்கு கீழ் வராமல் 'பொதுவான பாகுபாடு' என்ற பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. யுஜிசி-யின் இந்தப் புதிய சட்டத்துக்கு நாடாளாவிய அளவில் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றத் தலைவர்களும் வரவேற்றிருக்கின்றன. எதிர்க்கும் வலதுசாரி அமைப்புகள் அதே நேரம், யுஜிசி-யின் இந்தப் விதிகள் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகக் குறிப்பிட்டு, 'இந்த விதிகளை வாபஸ் பெற வேண்டும்' என்பதை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தையும் நடத்தினர். உத்தரப் பிரதேசத்தில் மாக் மேளாவில் கூடிய சாமியார்களும் புதிய யுஜிசி சட்டம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அகில இந்தியத் தண்டி சன்யாசி பரிஷத்தின் தேசியத் தலைவரான பிதாதிஷ்வர் சுவாமி பிரம்மாஷ்ரம் போன்ற சாமியார்களும், வலதுசாரி அமைப்புகளும் இந்த சட்டத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து, போராட்டங்களை முன்னெடுத்தன. சில அரசு அதிகாரிகளும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். உச்ச நீதிமன்றம் இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றம், ``புதிய விதிமுறைகளின் மொழி மிகவும் தெளிவற்றதாக உள்ளது. இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால், அது சமூகத்தில் ஒரு ஆபத்தான மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, புதிய யு.ஜி.சி விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. எனத் தடை விதித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச, திராவிடர் மாணவர் கூட்டமைப்பு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இளையபெருமாளை தொடர்புகொண்டோம். நம்மிடம் விரிவாகவும், விளக்கமாகவும் பேசத் தொடங்கிய அவர், ``கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அதனால்தான், ரோஹித் வெமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் நடக்கும் அமைப்பு ரீதியான கொலைகளை (Institutional Murders) தடுக்க 'ரோஹித் சட்டம்' வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் அழுத்தத்தால் தான் இந்த புதிய விதிகள் வந்துள்ளன. இளையபெருமாள் புதிய விதியில் சாதகம் என்ன? UGC 2026 2012 விதிகள் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இது குறிப்பாக எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கானது மட்டுமே. இதில் ஓ.பி.சி சேர்க்கப்படவில்லை. இப்போது கொண்டுவந்த புதிய விதியில் ஓ.பி.சி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS), பெண்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இந்த விதியில் முக்கியமான அம்சம், ஒரு புகார் அளிக்கப்பட்டால் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. 2012 விதிகளில் இந்தத் தெளிவான கால வரையறை இல்லை. மேலும், விசாரணை கமிட்டியில் ஒரு மாணவரையும் உறுப்பினராகச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஏன் முக்கியம்? ஏற்கனவே நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும்போது, யுஜிசி மூலம் தனியாக ஒரு விதிமுறை வருவது அந்தச் சட்டத்தை பலவீனப்படுத்திவிடுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பு. பல்கலைக்கழகங்கள் ஒரு 'பாதுகாக்கப்பட்ட இடமாகப்' பார்க்கப்படுகின்றன. ஒரு மாணவரைப் பல்கலைக்கழகத்திற்குள் வந்து காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றால் கூட, அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளர் அனுமதி அளிக்க வேண்டும். இந்தத் தன்னாட்சி அதிகாரம் சில நேரங்களில் குற்றவாளிகளைக் காப்பாற்றவோ அல்லது நீதியைத் தாமதப்படுத்தவோ வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு FIR பதிவு செய்வது சாதாரண விஷயமல்ல. கடும் போராட்டங்களுக்குப் பிறகே அது சாத்தியமாகிறது. சாதிய வன்மம் அதேநேரம், வெளியில் நடக்கும் வன்கொடுமைகளை விட, கல்வி நிறுவனங்களுக்குள் நடக்கும் பாகுபாடுகள் மறைமுகமானவை. ஒரு எஸ்சி - எஸ்டி மாணவர் பிஎச்.டி சேர்ந்தும் அவருக்கு வழிகாட்டும் பேராசிரியர் ஒதுக்காமல் இழுத்தடிப்பது, மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பை நிறுத்தி வைப்பது அல்லது தாமதப்படுத்துவது, மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் விதமான நிர்வாகச் சிக்கல்களை உருவாக்குவது, இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் மீது உனக்குத் தகுதி இல்லை என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஐ.ஐ.டி மும்பையில் நடந்த தர்ஷன் சோலங்கி போன்ற மாணவர்களின் மரணங்கள் இதற்குச் சான்று. கல்லூரி விடுதிகளில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதும், அப்படியே இருந்தாலும் அவை ஒரு திரைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்படுவதும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கலாச்சாரம் மற்றவர்கள் மீது திணிக்கப்படுவதும், மாணவர்களுக்கு வளாகத்துக்குள்ளேயே சுதந்திரமின்மை போன்ற சூழலை உருவாக்குகிறது. இது போன்ற நுணுக்கமான வன்கொடுமைகளை வெளியில் இருக்கும் பொதுவான வன்கொடுமை தடுப்புச் சட்டம் நேரடியாகக் கையாள முடியாது. அதனால்தான் பல்கலைக்கழகங்களுக்கெனத் தனித்துவமான விதிகள் தேவைப்படுகின்றன. எதிர்ப்புப் போராட்டம் ஏன்? யுஜிசி கொடுத்த இந்த விதிகளில் அனைத்துப் பிரிவினரையும் உள்ச்சேர்த்து பொதுப்பிரிவினரை மட்டுமே குற்றவாளிகளாகச் சித்தரிப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் அதிகார மையங்களில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிராகப் புகார்கள் வரும்போது அதைத் தடுக்க முற்படுகின்றனர். ஏற்கெனவே, வழங்கப்பட்ட புகார்களை இந்த புதிய விதிகள் மீண்டும் கிளரும். அப்படி நடந்தால் அடுத்தடுத்த நடவடிக்கைகளை குற்றமிழைத்தவர்கள் எதிர்க்கொள்ள நேரிடும். அதற்காகவே இந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது எனக் கருதுகிறேன். யுஜிசி-க்கு எதிரான போராட்டம் நீதிமன்றத்தின் இரட்டை நிலைப்பாடு விவசாயச் சட்டங்கள் அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் வரும்போது தடுத்து நிறுத்தாத நீதிமன்றம், ஆதிக்கத் தரப்பினர் போராடும்போது மட்டும் உடனடியாக கமிட்டி அமைத்து விதிகளை மறுபரிசீலனை செய்ய முன்வருவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புதிய சட்டத்தின் பாதகம் UGC 2026 இந்தப் புதிய சட்டத்தில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களை (EWS) இணைத்தது வன்மையான கண்டனத்துக்குறியது. இந்தியாவில் பாகுபாடு என்பது பொருளாதார நிலையில் இல்லை, சாதி அடிப்படையில்தான் இருக்கிறது. அதேப்போல உயர்கல்வி நிறுவனங்களில் ஜாட் போன்ற பல ஓபிசி சமூகங்கள் இன்றும் பேராசிரியர்களாகவோ, உயர் பதவிகளிலோ இல்லை. அட்மிஷன் மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி-க்கான உரிமைகள் முழுமையாகச் சென்றடையாத நிலையில், அவர்களைப் பொதுவான ஒரு பிரிவுக்குள் கொண்டு வருவது சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யும். மேலும், பல்கலைக்கழகங்களில் இன்றும் ஆதிக்கச் சாதியினரே உயர் பதவிகளில் உள்ளனர். EWS போன்ற பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் இந்தச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. சாதி சமூகம் ஏற்கனவே சமமாக இல்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி, அந்த இடைவெளியை நிரப்புவதன் மூலமே (Equity) அனைவரையும் சமநிலைக்கு கொண்டு வர முடியும். பல்கலைக்கழகங்கள் இந்த மாற்றத்தை முன்னெடுக்கும் இடங்களாக இருக்க வேண்டும். படிக்காதவர்கள் இருக்கும் கிராமங்களில் ஜாதி இருப்பதை விட, படித்து அறிவு பெற்றவர்கள் இருக்கும் பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாடு பார்ப்பது அதிக ஆபத்தானது. கல்வி நிறுவனங்களில் சாதி மற்றும் பாகுபாட்டை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அது சமுதாயத்திலிருந்தே ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. என்றார் உறுதியான குரலில். UGC : `இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால்.. புதிய UGC சட்டத்துக்கு இடைக்காலத் தடை!' - உச்ச நீதிமன்றம்
`தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்க மாட்டார்கள்!' | Sellur Raju Interview
`தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்க மாட்டார்கள்!' | Sellur Raju Interview
துரைமுருகன்: எம்.ஜி.ஆரின் 'செல்லப்பிள்ளை'கலைஞரை 'தலைவராக'ஏற்றுக்கொண்டது ஏன்? | Vote Vibes 06
தமிழ்நாட்டின் தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர், திமுகவின் பொதுச் செயலாளர், காட்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ, சீனியர் அரசியல்வாதி - இது 'துரைமுருகனின்' தற்போதைய பக்கங்கள். இவரது அரசியல் வரலாற்றை புரட்டி பார்த்தால், அது 1954-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. இந்த ஆண்டும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆரம்ப காலமும் கிட்டத்தட்ட ஒன்று. தமிழ்நாட்டில் திமுக வளர வளர, இவரது அரசியல் பயணமும் தொடர்ந்து வளர்ந்தது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவர் திமுகவின் மிக முக்கியமான முகம். இது இப்போது இல்லை... அப்போதிலிருந்தே. துரைமுருகன் இருக்கும் வரையில் கட்சியின் முக்கிய முகமாகவே இருப்பார் என்றும் கூறலாம். துரைமுருகன் 'தள்ளிப்போகும் தேதிகள்' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி என்ன? 1971-ம் ஆண்டு தொடங்கி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரை, இவர் மொத்தம் 12 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். அதில் 1984, 1991 ஆண்டுகளில் நடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களைத் தவிர, மற்ற தேர்தல்களில் எல்லாம் இவருக்கு வெற்றி தான். தொடர்ந்து திமுகவின் முகமாக அறியப்படும் துரைமுருகன், எம்.ஜி.ஆரின் 'செல்லப்பிள்ளை' என்பது பெரும்பாலான 2கே கிட்ஸிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்... இவர் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை தான். ஆனால், எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டுமே, அதிமுக பக்கம் செல்லாமல் இப்போது வரை திமுகவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார் துரைமுருகன். எம்.ஜி.ஆர் - துரைமுருகன் உறவு குறித்து துரைமுருகனே ஒரு பிராசார மேடையில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பகிர்வு இதோ... எம்.ஜி.ஆர் எனக்கு மிகவும் வேண்டியவர். என்னை ஏழு ஆண்டுகள் படிக்க வைத்தவர். பாம்பேவில் ஃபிளைட்டைத் தவறவிட்டதால், சார்ட்டர்ட் ஃபிளைட் பிடித்து என் திருமணத்திற்கு வந்தார். என் திருமணப் பரிசாக 25 பவுன் நகை கொடுத்தார். இப்படி எனக்கு எல்லாம் செய்தவர் தான் எம்.ஜி.ஆர். ஆனால், 'இடி, மின்னல், மழை' என்கிற பிராசார பயணத்தில், அவரை கடுமையாக சாடி பேசினேன். சபையில் அவரை எதிர்த்து பேசும்போது, அவர் கையைக் காட்டுவார். ஆனால், நான் முகத்தை திருப்பி கொள்வேன். எம்.ஜி.ஆர் H-1B Visa திட்டத்தை நிறுத்த வேண்டுமா? இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யும் எலான் மஸ்க் ஒருநாள், எம்.ஜி.ஆரிடம் சபாநாயகர் அறையில் மாட்டிக்கொண்டேன். எம்.ஜி.ஆர் பண்ருட்டி ராமசந்திரனுடன் சபாநாயகரின் அறைக்கு வந்தார். அங்கே குறுக்கே நானும், ரகுமான் கானும் போய்க்கொண்டிருந்தோம். என் சட்டையைப் பிடித்து, 'உங்கிட்ட சில விஷயங்களைப் பேசணும்' என்று கூறினார். உடனே, நானும் 'பேசலாம்ண்ணே' என்றேன். அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். ஒருவரிடம் பேச வேண்டும் என்றால் முதலில் நெஞ்சை தடவுவது மாதிரி பேசத் தொடங்குவார். இது தான் எம்.ஜி.ஆரின் டேக்டிக்ஸ். 'ஏன் துரைமுருகன், அப்பா இறந்துட்டாராமே. அதைக்கூட எனக்கு சொல்லல. ராமசந்திரன் அவ்வளவு கெட்டவனா போய்ட்டானா?' என்றார். என் அப்பாவை எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரியும். என் அப்பாவிடம் எம்.ஜி.ஆர், 'இனி அவன் உங்க மகன் இல்ல... என் மகன்' என்று கூறியிருக்கிறார். என்னுடைய காலேஜ் புரோகிரெஸ் கார்டில் எம்.ஜி.ஆர் தான் கையெழுத்து போடுவார். அந்தளவு பழக்கம். எம்.ஜி.ஆரின் கேள்விக்கு, தேர்தலுக்கு 13 நாள்களுக்கு முன்ன தான் எங்க அப்பா இறந்தாரு. தேர்தல் அன்னைக்கு தான் காரியம் வெச்சுருந்தோம். ஆனால், இடையில நீங்க ரெண்டு தடவை என் தொகுதிக்கு வந்து எனக்கு ஓட்டு போட வேண்டாம்னு சொன்னீங்களே... அதுகப்புறம் நான் எப்படி உங்ககிட்ட பேசறது என்று பதிலளித்தேன். எம்.ஜி.ஆர் - கருணாநிதி 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க! அடுத்ததா, 'நான் என்ன சொன்னாலும் கேட்பீயா?'னு கேட்டார். 'கேட்பேனே' என்று சொன்னேன். 'தவறமாட்டியா?' என்கிற கேள்விக்கு, 'தவறமாட்டேன்' என்று சொன்னேன். 'இந்த ஜன்னல் வழியா ஏறி கீழே குதி பாக்கலாம்' என்று கூறினார். உடனே, ஜன்னல் பக்கம் போனதும், செக்யூரிட்டியைக் கூப்பிட்டு, 'குதிச்சாலும் குதிச்சுடுவான்' என்று தடுத்தார். பின், 'இன்னொன்னு சொல்றேன் கேட்கிறீயா? அது குதிப்பது அல்ல... உக்கறாது. நான் உக்காந்திருக்கேன்ல. அதுக்கு பக்கத்துல இருக்க சீட்ல போய் உக்காரு. நான் சபைக்கு வந்து உனக்கு என்ன மந்திரி பதவிங்கறதை அறிவிக்கிறேன்' என்றார். அதற்கு நான், 'என் உயிரையே வேணும்னாலும் கொடுப்பேனே தவிர, கட்சி மாறமாட்டேன்' என்று மறுத்துவிட்டேன். 'என்ன சொல்ற? நான் இருக்கற இடத்துல தான நீ இருக்கணும்' என்ற கேள்விக்கு, நீங்க கத்தி சண்டை போடறது பாத்து 'ஆஹா'னு கட்சிக்கு வந்துருந்தா, நான் உங்கக்கூட வந்துருப்பேன். ஆனா, நான் அப்படி வரல. கருணாநிதி - எம்.ஜி.ஆர் WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி திராவிட நாடு கிடைக்கும்னு... அண்ணாவை நம்பி பெரிய இயக்கத்துக்கு போறோம்னு வந்தவன் துரைமுருகன். அதனால, என் கட்சி திமுக. என் தலைவர் கலைஞர் என்பது என் பதில். கோபத்தின் உச்சத்தில், 'அப்போ நான்?' என்று கேட்டார். எல்லா உதவியும் செஞ்சு படிக்க வெச்சவரு நீங்க. என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க. கலைஞர் என் தலைவர் என்றேன். அதன் பின், என்னை அணைத்து, நீ இவ்ளோ உறுதியா இருப்பேனு நான் நினைக்கலடா என்று பாராட்டி அனுப்பி வைத்தார். அந்தளவு எனக்கு கட்சியும், கொள்கையும் முக்கியம். என்றார். துரைமுருகன் தான் சொன்னதுபோலவே கொள்கைப்பிடிப்புடன் திமுக-வில் பயணித்து வருகிறார். தமிழ்நாடு அரசியலில் சீனியராக இருக்கும் துரைமுருகன், கருணாநிதி, ஸ்டாலின், தற்போது உதயநிதி ஸ்டாலின் என தலைமுறைகளைக் கண்டிருக்கும் திமுக-வின் வரலாற்றில் முக்கிய அங்கமாக இருக்கிறார்.
'லட்சக்கணக்கில் முறைகேடு அம்பலம்? கிராமசபை கூட்டத்தில் கேள்விகளால் துளைத்த மக்கள்!' - நடந்தது என்ன?
திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சியில் 77 -ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26 - ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் மணிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மருதூர் ஊராட்சியில் கடந்த 2022-23 ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 39.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணி நடைபெற்றதாக பெயர் பலகை வைத்ததால் கிராம சபை கூட்டத்தில் சரமாரியாக கேள்விகளை கிராம மக்கள் எழுப்பினர். இதில், மருதூர், மேல தெரு கிராமத்திற்கு சொந்தமான குளத்தை தூர்வாரி சுற்றுசுவர் அமைத்த பணிக்கு ரூ.11,49,000 செலவு செய்ததாக ஊராட்சிமன்ற அலுவலகத்தின் வெளியே திட்டப்பணி போர்டு வைக்கப்பட்டதால் மேலத்தெரு கிராம மக்கள், குளத்தில் எந்த பணியும் செய்யாமல் போர்டில் எழுதப்பட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் வரை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி செயலாளர் மணிராஜ் தெரிவித்தார். pechuvarthai பின்னர், ஊராட்சி மேற்பார்வையாளர் சைமன்ராஜ் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு, மருதூர் கிராம மக்கள், 'எங்களுக்கு முடிவு தெரியாமல் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம்' என தெரிவித்து காத்திருந்தனர். பின்னர், லால்குடி பி.டி.ஒ-விடம் தொலைபேசியில் மேற்பார்வையாளர் சைமன் தகவல் தெரிவித்து பின்னர் கிராம சபை கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவரிடம் பி.டி.ஓ பேசினார். நான் உடல் நல குறைவால் மெடிக்கல் விடுப்பு எடுத்துள்ளேன். நான் வந்ததற்கு பிறகு அலுவலகத்திற்கு வாருங்கள். எந்தப் பணி திட்டமாக இருந்தாலும் நான் அதற்கு ஆதாரம் காட்டுகிறேன் என பி.டி.ஓ செல்போனிலேயே உரையாடினார். அதற்கு கொஞ்சமும் அசராத கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து வெளியே செல்லாமல் இருந்தனர். இதனால், சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்று சமயபுரம் காவல் நிலைய போலீஸார் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தந்தனர். போலீஸார், கிராம மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, ஊராட்சி மேற்பார்வையாளர் பி.டி.ஓ-யிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் மறுநாள் காலை 11 மணியளவில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா நேரில் வந்து விளக்கம் மற்றும் ஆவணங்கள் காண்பிப்பதாக தெரிவித்த பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக கடந்த 27 - ம் தேதி மருதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், லால்குடி வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் ராஜா, வட்டார ஊராட்சி அலுவலர் பாபு அண்ணாதுரை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் மற்றும் முன்னாள் ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தை இதனை தொடர்ந்து, மருதூர் மேல தெரு மக்களுக்கு சொந்தமான குளத்தில் சுற்று சுவர் படித்துறை கட்டாமல் கட்டியதாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டில் ரூ 11,49,000 செய்யப்பட்டதாக தகவல் இடம்பெற்றுள்ளது. இதில், 2 - ம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளிடம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அங்கு இருந்த ஊராட்சி செயலாளர் மகாலிங்கத்திடம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அந்த ஆவணத்தை பீரோவில் இருந்து எடுக்கச் சொன்னார். ஆனால், முன்னாள் ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் நீண்ட நேரமாக தேடியும் மருதூர் மேலத்தெரு குளம் சுற்று சுவர் அமைக்கப்பட்டிருந்ததற்கான ஆவணங்கள் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அதன் பிறகு, அந்த குளத்திற்கு சுற்று சுவர் அமைக்கும் திட்ட பணிக்காக வந்த தொகை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடமே அனுப்பி வைக்கப்பட்டதாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்து அதற்குப் பதிலாக இரண்டு தார் சாலை அமைத்ததாக தெரிவித்தனர். அப்போதும் விடாத மக்கள், அந்த தார் சாலை எங்கே இருக்கிறது என வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டனர். அப்போது மருதூர் நேரு நகர் பகுதியில் 3 சாலை அமைக்கப்பட்டதாக தெரிவித்தனர். அதற்கு கிராம மக்கள், 'அந்த சாலையை எங்களிடம் காட்டுங்கள்' என கேட்டதற்கு, 'பிறகு வட்டார வளர்ச்சி அதிகாரி, ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் என எல்லோரும் சென்று நேரு நகரில் உள்ள சாலையை பார்வையிட்டனர். அப்போது, ஏற்கனவே 14 -வது மத்திய நிதி குழு மானிய நிதிகள் அமைக்கப்பட்ட இரண்டு காங்கிரீட் சாலை ரூ. 3,67,000 மதிப்பீட்டில் போடப்பட்டது. ஆனால், சாலையை தமிழக அரசு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டதாக கணக்கு காண்பித்திருக்கிறார்கள். ரூ. 5,30,000 செலவில் காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டதாக நிதியை கையாடல் செய்திருக்கிறார்கள் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதனை தொடர்ந்து, மருதூர் மேலத்தெரு பகுதியில் உள்ள குளத்தை வட்டார வழங்கல் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், 'எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலம் மற்றும் சாக்கடை கால்வாயில் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் வருவதாக வட்டார வளங்கள் அதிகாரி முன்னாள் கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம், குளத்தில் சுற்று சுவர் அமைப்பதற்கு ஒதுக்கிய நிதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் உண்மை நிலை குறித்து கடிதம் ஆக எழுதி கொடுக்க சொன்னதின் பேரில் வந்திருந்த வட்டார வளங்கள் அதிகாரிகள் 10 நாட்களுக்குள் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி ஆவணங்களை அறிக்கையாக தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும். மேலும், இதில் முறைகேடு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளங்கள் அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். pechuvarthai அதனைத்தொடர்ந்து, நடந்தவை குறித்து பேசிய மருதூர் கிராம மக்கள் சிலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மருதூர் ஊராட்சி மேலத் தெருவில் செய்யப்படாத குளத்தை ஆழப்படுத்தி படித்துறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு அதற்கு அதிகாரிகள் அந்த நிதியாண்டில் குளத்தில் தண்ணீர் இருந்ததாகவும் அதனால் மாற்றுப் பணி செய்யப்பட்டதாகவும் விளக்கினர். ஆனால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் இயக்குனர் வழிகாட்டுதலின்படி ஒரு பணியை நிறுத்த வேண்டும் என்று சொன்னால் பிளாக் கமிட்டி மற்றும் கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும் மற்றும் மாற்றுப் பணி செய்வதற்கும் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை அதிகாரிகள் மீறி செயல்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் அப்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட கிராம சபை புத்தகத்தை எங்களுக்கு எடுத்து காமியுங்கள் என்று சொன்னால் ஊராட்சி செயலாளர் அந்த புத்தகத்தை தேடிக்கொண்டே இருக்கிறார். அதிகாரிகளும் தேடிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆக எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றாமல் கிராம சபையில் ஒப்புதல் பெறாமல் ஒரு பணியை நிறுத்தி மாற்றுப் பணியை செய்வதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இல்லாமல் மோசடியாக இந்த வேலைகளை செய்துள்ளனர். மேலும், மாற்றுப் பணி செய்ததாக நேரு நகரில் ரூ.5,30,000 மதிப்பீட்டுக்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதாக சொன்னதின் பேரில் அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்ததின் பேரில் நேரு நகரில் ஏற்கனவே இரண்டு சாலைகள் மத்திய நிதி குழு மானிய நிதியில் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு சாலை 3,66,174 ரூபாய்க்கு போடப்பட்ட சாலையையே மீண்டும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5,30,000 ரூபாய்க்கு போடப்பட்டதாக பொய்யாக கணக்கு எழுதி முறைகேடு செய்திருப்பது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மீதி பணத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியதாக அதிகாரிகள் சொன்னதின் பேரில். பொதுமக்கள் அப்படி எந்த ரூபாயும் அனுப்புவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை. மாற்றுப் பணி செய்வதற்கு நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வேறு பணிகளை செய்யலாம் என்று அதுதானே வழிகாட்டு நெறிமுறைகள் என்று சொன்னதற்கு அதிகாரிகள் மழுப்பி பேசினார்கள் என்றார்கள்.
'லட்சக்கணக்கில் முறைகேடு அம்பலம்? கிராமசபை கூட்டத்தில் கேள்விகளால் துளைத்த மக்கள்!' - நடந்தது என்ன?
திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சியில் 77 -ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26 - ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் மணிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மருதூர் ஊராட்சியில் கடந்த 2022-23 ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 39.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணி நடைபெற்றதாக பெயர் பலகை வைத்ததால் கிராம சபை கூட்டத்தில் சரமாரியாக கேள்விகளை கிராம மக்கள் எழுப்பினர். இதில், மருதூர், மேல தெரு கிராமத்திற்கு சொந்தமான குளத்தை தூர்வாரி சுற்றுசுவர் அமைத்த பணிக்கு ரூ.11,49,000 செலவு செய்ததாக ஊராட்சிமன்ற அலுவலகத்தின் வெளியே திட்டப்பணி போர்டு வைக்கப்பட்டதால் மேலத்தெரு கிராம மக்கள், குளத்தில் எந்த பணியும் செய்யாமல் போர்டில் எழுதப்பட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் வரை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி செயலாளர் மணிராஜ் தெரிவித்தார். pechuvarthai பின்னர், ஊராட்சி மேற்பார்வையாளர் சைமன்ராஜ் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு, மருதூர் கிராம மக்கள், 'எங்களுக்கு முடிவு தெரியாமல் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம்' என தெரிவித்து காத்திருந்தனர். பின்னர், லால்குடி பி.டி.ஒ-விடம் தொலைபேசியில் மேற்பார்வையாளர் சைமன் தகவல் தெரிவித்து பின்னர் கிராம சபை கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவரிடம் பி.டி.ஓ பேசினார். நான் உடல் நல குறைவால் மெடிக்கல் விடுப்பு எடுத்துள்ளேன். நான் வந்ததற்கு பிறகு அலுவலகத்திற்கு வாருங்கள். எந்தப் பணி திட்டமாக இருந்தாலும் நான் அதற்கு ஆதாரம் காட்டுகிறேன் என பி.டி.ஓ செல்போனிலேயே உரையாடினார். அதற்கு கொஞ்சமும் அசராத கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து வெளியே செல்லாமல் இருந்தனர். இதனால், சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்று சமயபுரம் காவல் நிலைய போலீஸார் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தந்தனர். போலீஸார், கிராம மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, ஊராட்சி மேற்பார்வையாளர் பி.டி.ஓ-யிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் மறுநாள் காலை 11 மணியளவில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா நேரில் வந்து விளக்கம் மற்றும் ஆவணங்கள் காண்பிப்பதாக தெரிவித்த பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக கடந்த 27 - ம் தேதி மருதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், லால்குடி வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் ராஜா, வட்டார ஊராட்சி அலுவலர் பாபு அண்ணாதுரை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் மற்றும் முன்னாள் ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தை இதனை தொடர்ந்து, மருதூர் மேல தெரு மக்களுக்கு சொந்தமான குளத்தில் சுற்று சுவர் படித்துறை கட்டாமல் கட்டியதாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டில் ரூ 11,49,000 செய்யப்பட்டதாக தகவல் இடம்பெற்றுள்ளது. இதில், 2 - ம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளிடம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அங்கு இருந்த ஊராட்சி செயலாளர் மகாலிங்கத்திடம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அந்த ஆவணத்தை பீரோவில் இருந்து எடுக்கச் சொன்னார். ஆனால், முன்னாள் ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் நீண்ட நேரமாக தேடியும் மருதூர் மேலத்தெரு குளம் சுற்று சுவர் அமைக்கப்பட்டிருந்ததற்கான ஆவணங்கள் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அதன் பிறகு, அந்த குளத்திற்கு சுற்று சுவர் அமைக்கும் திட்ட பணிக்காக வந்த தொகை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடமே அனுப்பி வைக்கப்பட்டதாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்து அதற்குப் பதிலாக இரண்டு தார் சாலை அமைத்ததாக தெரிவித்தனர். அப்போதும் விடாத மக்கள், அந்த தார் சாலை எங்கே இருக்கிறது என வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டனர். அப்போது மருதூர் நேரு நகர் பகுதியில் 3 சாலை அமைக்கப்பட்டதாக தெரிவித்தனர். அதற்கு கிராம மக்கள், 'அந்த சாலையை எங்களிடம் காட்டுங்கள்' என கேட்டதற்கு, 'பிறகு வட்டார வளர்ச்சி அதிகாரி, ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் என எல்லோரும் சென்று நேரு நகரில் உள்ள சாலையை பார்வையிட்டனர். அப்போது, ஏற்கனவே 14 -வது மத்திய நிதி குழு மானிய நிதிகள் அமைக்கப்பட்ட இரண்டு காங்கிரீட் சாலை ரூ. 3,67,000 மதிப்பீட்டில் போடப்பட்டது. ஆனால், சாலையை தமிழக அரசு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டதாக கணக்கு காண்பித்திருக்கிறார்கள். ரூ. 5,30,000 செலவில் காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டதாக நிதியை கையாடல் செய்திருக்கிறார்கள் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதனை தொடர்ந்து, மருதூர் மேலத்தெரு பகுதியில் உள்ள குளத்தை வட்டார வழங்கல் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், 'எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலம் மற்றும் சாக்கடை கால்வாயில் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் வருவதாக வட்டார வளங்கள் அதிகாரி முன்னாள் கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம், குளத்தில் சுற்று சுவர் அமைப்பதற்கு ஒதுக்கிய நிதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் உண்மை நிலை குறித்து கடிதம் ஆக எழுதி கொடுக்க சொன்னதின் பேரில் வந்திருந்த வட்டார வளங்கள் அதிகாரிகள் 10 நாட்களுக்குள் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி ஆவணங்களை அறிக்கையாக தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும். மேலும், இதில் முறைகேடு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளங்கள் அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். pechuvarthai அதனைத்தொடர்ந்து, நடந்தவை குறித்து பேசிய மருதூர் கிராம மக்கள் சிலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மருதூர் ஊராட்சி மேலத் தெருவில் செய்யப்படாத குளத்தை ஆழப்படுத்தி படித்துறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு அதற்கு அதிகாரிகள் அந்த நிதியாண்டில் குளத்தில் தண்ணீர் இருந்ததாகவும் அதனால் மாற்றுப் பணி செய்யப்பட்டதாகவும் விளக்கினர். ஆனால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் இயக்குனர் வழிகாட்டுதலின்படி ஒரு பணியை நிறுத்த வேண்டும் என்று சொன்னால் பிளாக் கமிட்டி மற்றும் கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும் மற்றும் மாற்றுப் பணி செய்வதற்கும் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை அதிகாரிகள் மீறி செயல்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் அப்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட கிராம சபை புத்தகத்தை எங்களுக்கு எடுத்து காமியுங்கள் என்று சொன்னால் ஊராட்சி செயலாளர் அந்த புத்தகத்தை தேடிக்கொண்டே இருக்கிறார். அதிகாரிகளும் தேடிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆக எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றாமல் கிராம சபையில் ஒப்புதல் பெறாமல் ஒரு பணியை நிறுத்தி மாற்றுப் பணியை செய்வதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இல்லாமல் மோசடியாக இந்த வேலைகளை செய்துள்ளனர். மேலும், மாற்றுப் பணி செய்ததாக நேரு நகரில் ரூ.5,30,000 மதிப்பீட்டுக்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதாக சொன்னதின் பேரில் அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்ததின் பேரில் நேரு நகரில் ஏற்கனவே இரண்டு சாலைகள் மத்திய நிதி குழு மானிய நிதியில் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு சாலை 3,66,174 ரூபாய்க்கு போடப்பட்ட சாலையையே மீண்டும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5,30,000 ரூபாய்க்கு போடப்பட்டதாக பொய்யாக கணக்கு எழுதி முறைகேடு செய்திருப்பது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மீதி பணத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியதாக அதிகாரிகள் சொன்னதின் பேரில். பொதுமக்கள் அப்படி எந்த ரூபாயும் அனுப்புவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை. மாற்றுப் பணி செய்வதற்கு நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வேறு பணிகளை செய்யலாம் என்று அதுதானே வழிகாட்டு நெறிமுறைகள் என்று சொன்னதற்கு அதிகாரிகள் மழுப்பி பேசினார்கள் என்றார்கள்.
`தீயில் எரிந்தது விவசாயி மட்டுமல்ல; தமிழக சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பும்தான்' - எடப்பாடி பழனிசாமி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி. எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். “இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. `திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?' - ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை; வலுக்கும் கண்டனங்கள் தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான். இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்
`தீயில் எரிந்தது விவசாயி மட்டுமல்ல; தமிழக சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பும்தான்' - எடப்பாடி பழனிசாமி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி. எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். “இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. `திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?' - ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை; வலுக்கும் கண்டனங்கள் தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான். இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்
நினைவுச் சுவடுகள் 03: `திமுக வசனங்கள் டு காப்பி எடுத்த அதிமுக' - மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்!
இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன் , தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்! மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்! நினைவுச் சுவடுகள் 03 ஒரு மாநிலத்தின் அரசியல் பயணம், தேர்தல் முடிவுகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. மக்களின் கோபம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகியவை எப்படி அரசியல் பிரசாரங்களில் வெளிப்பட்டன என்பதில்தான் அதன் உண்மை வரலாறு பதிந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் நடைபெற்ற சில தேர்தல் பிரசாரங்கள், காலத்தைப் பேசும் அரசியல் தருணங்களாக மாறி, இன்று வரை நினைவில் நிலைத்திருக்கின்றன சுதந்திரத்துக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளிலிருந்து, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பிரசாரங்கள் வந்த தற்போதைய காலம் வரை, சில தேர்தல் பிரசாரங்கள் மறக்க முடியாதவையாக இருந்து வருகின்றன. அந்தக் காலகட்டங்களில் நடந்த சமூக மாற்றங்கள், தலைமை மாற்றங்கள், வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அந்தப் பிரசாரங்கள் நேரடியாக வெளிப்படுத்தின. இந்தத் தேர்தல் பிரசாரங்கள் மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாகத் தொடர்ந்ததால், அவர்களின் நினைவில் ஆழமாகப் பதிந்தவையாகவும் அமைந்தன. முதல் ஜனநாயகத் தேர்தல் பிரசாரம் 1952 1952 ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடைபெற்ற மெட்ராஸ் மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலுக்கான அடித்தளத்தை அமைத்தது. அந்த காலத்தில் பிரசாரம் என்பது பொதுக்கூட்டங்கள், பிரசுரங்கள், செய்தித்தாள்கள் மற்றும் வானொலி அறிவிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. அரசியல் தலைவர்கள் சாலை மற்றும் ரயில் வழியாகப் பயணம் மேற்கொண்டு, நகரங்களிலும் கிராமங்களிலும் மக்களிடம் உரையாற்றினர். இந்தத் தேர்தலின் முக்கியத்துவம், சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக பெருமளவிலான அரசியல் இயக்கத்தை அறிமுகப்படுத்தியதில்தான் இருந்தது. மக்களுக்கு வாக்குப்பதிவு முறைகள் பரிச்சயமாக இல்லை. அதனால், வாக்குரிமை, தேர்தல் சின்னங்கள், ஜனநாயகப் பொறுப்பு போன்ற விஷயங்களை விளக்குவதிலேயே பிரசாரத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அந்த காலப் பிரசாரங்களின் மொழி அமைதியானதாகவும், விளக்கமானதாகவும், சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. அதிகார மாற்றத்தை உருவாக்கிய தேர்தல் பிரசாரம் 1967 1967 பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக இன்று வரை நினைவுகூரப்படுகிறது. இந்தத் தேர்தல், மாநிலத்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி, திராவிட அரசியல் அதிகாரத்திற்கு வர வழிவகுத்தது. அதாவது அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வர வழிவகுத்தது. இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் மிகத் தீவிரமாகவும், கருத்தியல் அடிப்படையுடனும் அமைந்திருந்தது. பொதுக்கூட்டங்களில் பெருமளவு மக்கள் திரண்டனர். மொழி உரிமை, மாநில சுயாட்சி, விலைவாசி உயர்வு, சமூக நீதி என பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்த திமுக தலைவர்களின் உரைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டன. பொருளாதார சுமைகள் மற்றும் மத்திய அரசின் ஆதிக்கம் குறித்து மக்களிடையே உருவான அதிருப்தி, இந்தப் பிரசாரங்களில் தெளிவாக வெளிப்பட்டது. மேலும், மக்களைக் கவரக்கூடிய வகையிலான எளிமையான கருத்துகள், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முழக்கங்கள், திமுகவின் அடித்தள அமைப்புகள் ஆகியவற்றை திறம்படப் பயன்படுத்திய தேர்தலாகவும் இது அமைந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டு அரசியலின் போக்கையே நிரந்தரமாக மாற்றி, பிராந்திய அடையாளத்தை மையமாகக் கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்கின. அறிஞர் அண்ணா இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1967 வரை தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியில் அரிசி கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடும், அது தொடர்பான பஞ்சமும் மக்களை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் திருப்பின. கூடவே மொழிப் பிரச்னையைச் சரியாகக் கையாளத் தவறியது அப்போதைய பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம், அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைகள் போன்றவை மக்களை காங்கிரஸ் அரசின் இதர நல்ல அம்சங்களை மறக்கடிக்கச் செய்தன. அன்றைய தமிழக அரசியலில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிப் பிடித்துக்கொண்டிருந்த அண்ணா தலைமையிலான திமுக, 1967-ல் சட்டமன்றத் தேர்தலில், இந்த இரண்டு பிரச்னைகளையும் தங்களுடைய தேர்தல் ஆயுதங்களாக எடுத்துக்கொண்டு, மக்களிடம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. அதிலும் குறிப்பாக, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்று தேர்தல் முழக்கத்தை வெளியிட்டவுடன், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, அப்படியே திமுக பக்கம் சென்றது. கூடவே, விலைவாசி உயர்வையொட்டி திமுக வைத்த முழக்கங்கள் மக்களிடையே இன்னும் வேகமாகச் சென்றடைந்தன. 'கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா’, 'பக்தவத்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி’, 'காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சி?’, 'கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான்’ போன்ற முழக்கங்களெல்லாம் அன்றைய தேர்தலில் உச்சம் தொட்ட தேர்தல் கோஷங்கள். அவசரநிலைக்குப் பிந்தைய தேர்தல் பிரசாரம் 1977 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக்கு எதிரான முழக்கம்தான் , 1977 மே–ஜூன் மாதங்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தது.1976 ஜனவரி 31-ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பின் 356-வது பிரிவை பயன்படுத்தி கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைத்திருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் மாநில உரிமைகள் மற்றும் மத்திய அரசின் ஆதிக்கம் பெரும் விவாதப் பொருளானது. அவசரநிலை நீக்கப்பட்டிருந்தாலும், அதன் தாக்கங்கள் மக்களின் நினைவில் நீங்காமலேயே இருந்தன. பத்திரிகை தணிக்கை, மிசா சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கைது நடவடிக்கைகள், பறிக்கப்பட்ட குடிமக்கள் உரிமைகள் போன்றவை தேர்தல் உரைகளில் வெளிப்படையாகப் பேசப்பட்டன. எம்.ஜி.ஆர் - கருணாநிதி இந்தச் சூழலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம், 1967-ல் போலக் கோஷங்களால் நிரம்பியதாக இல்லாமல், ‘ஜனநாயக பாதுகாப்பு’, ‘அரசியல் நிலைத்தன்மை’, ‘மக்களின் அமைதி’ போன்ற கருத்துகளை மையமாகக் கொண்டு அமைந்தது. இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் அப்போது திமுகவிலிருந்து வெளியேறி தொடங்கிய அதிமுக, தங்களை காங்கிரசுக்கும் திமுகவுக்கும் அப்பாற்பட்ட மாற்றாக முன்வைத்து, ஏழை மக்களுக்கான நலன், அரசியல் குழப்பத்துக்கு முடிவு என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்றது. இந்த அணுகுமுறை, அவசரநிலைக்குப் பிறகான அரசியலால் சலிப்படைந்திருந்த மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கூடவே, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே காணப்பட்ட திரைக்கவர்ச்சியும் அதிமுகவுக்கு பெரும்பான்மை வெற்றியை வழங்கி, தமிழ்நாட்டு அரசியலில் இன்னொரு முக்கிய திருப்பத்தை உருவாக்கின. கருத்தியலுக்குத் திரும்பிய தமிழக அரசியல் 1989 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், 1980-களின் அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, தமிழக அரசியலை மீண்டும் கருத்தியல் மையத்திற்குக் கொண்டு வந்த தேர்தலாக அமைந்தது. 1987, டிசம்பர் 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி உடைந்தது. 1988-ஆம் ஆண்டில் ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அணி என அதிமுக இரண்டாகப் பிரிந்த அந்த அரசியல் குழப்பம், சட்டசபையில் நடைபெற்ற அடிதடி, 1988 ஜனவரியில் அதிமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கும், அதன் பின்னர் ஆளுநர் ஆட்சிக்கும் வழிவகுத்தது. அதிமுகவில் ஏற்பட்ட இந்தப் பிளவினால் ஏற்பட்ட களேபரங்கள், நிலையான ஆட்சி இல்லாத சூழல், மத்திய அரசின் தலையீடுகள் ஆகியவை மக்களிடையே அரசியல் அதிருப்தியை அதிகரித்திருந்தன. இந்தச் சூழலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மங்கிப்போயிருந்த கருத்தியல் அடிப்படையிலான விவாதங்களை மீண்டும் எழுப்பியது. 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாதபோதிலும், திமுகவை உயிர்ப்புடன் வைத்திருந்த கருணாநிதிதான் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போகிறார் என்பது தேர்தலுக்கு முன்னரே ஊடகங்களால் யூகிக்க முடிந்தது. மக்களிடையேயும் அத்தகைய ஆதரவு போக்கே காணப்பட்ட நிலையில், மாநில உரிமைகள், சமூக நீதி, சட்டமன்ற மரியாதை, ஜனநாயக நடைமுறைகள் போன்ற கருத்தியல்களை முன்னிறுத்தி, திமுக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. கருணாநிதி அன்றைய தேர்தல் பிரசாரங்களில், “நிலையான ஆட்சி”, “மத்திய அரசின் தலையீட்டுக்கு எதிர்ப்பு”, “தமிழகத்தின் சுயமரியாதை” போன்ற முழக்கங்கள் முக்கிய இடம் பெற்றன. பொதுக்கூட்டங்களில், அவசரநிலை அனுபவங்கள், 1980-களில் ஏற்பட்ட அரசியல் நிலைகுலைவு, ஆட்சி மாற்றங்களால் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடு ஆகியவை பேசப்பட்டன. இதன் மூலம், மக்கள் மத்தியில் ‘தமிழக அரசியல் மீண்டும் நிலையான மற்றும் ஜனநாயகப் பாதைக்கு வர வேண்டும்’ என்கிற எண்ணம் வலுப்பெற்றது. அந்த வகையில், 1989 தேர்தல், உணர்ச்சி அரசியலைவிட கருத்தியல் அரசியலுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்த தேர்தலாகப் பார்க்கப்பட்டது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அரசியல் உரைகள் நீளமாக இருந்தாலும், மக்கள் கவனத்துடன் கேட்டனர். தேர்தல் முடிவு, திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்ததோடு, தமிழக அரசியலில் அரசியல் நிலைத்தன்மை, கருத்தியல் தெளிவு ஆகியவை மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தியது. உச்சத்தை எட்டிய ஆட்சி எதிர்ப்பு பிரசாரம் 1996 1996 ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், அதிமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் வெளிப்படையாக வெடித்த தேர்தலாக அமைந்தது. 1991 தேர்தலில், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு, விலைவாசி உயர்வு, நிர்வாகக் குளறுபடி, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக விரைவிலேயே மக்களின் ஆதரவை இழந்தது. குறிப்பாக, 1995 செப்டம்பரில் நடந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர திருமணம், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் குறித்து எழுந்த விமர்சனங்கள், அரசு நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற கேள்விகளை எழுப்பியது. இவையெல்லாம்,1996 தேர்தல் பிரசாரத்தில் எதிரொலித்தது. இந்தச் சூழலில், நடிகர் ரஜினிகாந்த், “இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், அந்த ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது எனத் தனது கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்தது பெரும் பேசுபொருளானது. ஜெயலலிதா இன்னொருபுறம் டெல்லி காங்கிரஸ் மேலிடம், தமிழக காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து, ஜி.கே. மூப்பனார் தலைமையில் உருவான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்ததும் தேர்தல் பிரசாரத்தை மேலும் பரபரப்பாக்கிய நிகழ்வுகளாக அமைந்தன. இத்தகைய பின்னணியில், திமுக தலைமையிலான கூட்டணி, ஆட்சி எதிர்ப்பு மனநிலையை (anti incumbency)ஒருங்கிணைத்து, 1996 தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில், கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியமைத்தது. போட்டிப்போட்டு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் 2011 2011 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரசாரம், நலத்திட்டங்களை மையமாகக் கொண்டதாக அமைந்தது. தேர்தல் அறிக்கைகளிலும், பொதுக்கூட்ட உரைகளிலும், மானியங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற வாக்குறுதிகள் முக்கியமாக இடம் பெற்றன. கட்சிகளின் தேர்தல் பிரசாரம், பாரம்பரிய பொதுக்கூட்டங்களோடு சேர்ந்து, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களையும் விரிவாகப் பயன்படுத்தும் வகையில் இருந்தது. இது, பழைய பிரசார முறைகளுக்கும் புதிய ஊடக சூழலுக்கும் இடையிலான மாற்றத்தைப் பிரதிபலித்தது. வாக்காளர்கள், கருத்தியல் அரசியலை விட, நேரடியாக பயன் தரக்கூடிய வாக்குறுதிகளின் அடிப்படையில் கட்சிகளை மதிப்பிட்டனர். இந்தத் தேர்தலில், அதிமுகவுக்கு முன்னதாகவே திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், இலவச மிக்ஸி, ஃபேன் , திருமண உதவித் திட்டத்துக்கான நிதி உயர்வு, முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 1,500 ஆக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. கருணாநிதி - ஜெயலலிதா திமுக தேர்தல் அறிக்கை வெளியானதும், அதிமுக அதை அப்படியே காப்பி அடித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் இலவசமாக மிக்ஸி, மின் விசிறி வழங்குவோம் என்று அறிவிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், அதிமுகவோ ஒருபடி மேலே போய் மிக்ஸி, மின் விசிறியோடு, கிரைண்டர் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப் என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இதனால், 2011 தேர்தல் பிரசாரமும் அது தொடர்பான விவாதமும் இலவச திட்டங்களை முன்னிறுத்தியே அமைந்தன. இந்த மறக்க முடியாத தேர்தல் பிரசாரங்கள், தமிழகத்தின் ஜனநாயகப் பயணத்தில் முக்கிய கட்டங்களாக விளங்குகின்றன. தேர்தல் என்பது அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டி மட்டும் அல்ல; அதன் நோக்கத்தை மக்களிடம் விளக்கவும், நம்பிக்கையை உருவாக்கவும், எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கப்போகிறோம் என்பதற்கான ஒரு முக்கிய அரசியல் செயல்முறை என்பதைக் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன! (தொடரும்)
நினைவுச் சுவடுகள் 03: `திமுக வசனங்கள் டு காப்பி எடுத்த அதிமுக' - மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்!
இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன் , தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்! மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்! நினைவுச் சுவடுகள் 03 ஒரு மாநிலத்தின் அரசியல் பயணம், தேர்தல் முடிவுகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. மக்களின் கோபம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகியவை எப்படி அரசியல் பிரசாரங்களில் வெளிப்பட்டன என்பதில்தான் அதன் உண்மை வரலாறு பதிந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் நடைபெற்ற சில தேர்தல் பிரசாரங்கள், காலத்தைப் பேசும் அரசியல் தருணங்களாக மாறி, இன்று வரை நினைவில் நிலைத்திருக்கின்றன சுதந்திரத்துக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளிலிருந்து, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பிரசாரங்கள் வந்த தற்போதைய காலம் வரை, சில தேர்தல் பிரசாரங்கள் மறக்க முடியாதவையாக இருந்து வருகின்றன. அந்தக் காலகட்டங்களில் நடந்த சமூக மாற்றங்கள், தலைமை மாற்றங்கள், வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அந்தப் பிரசாரங்கள் நேரடியாக வெளிப்படுத்தின. இந்தத் தேர்தல் பிரசாரங்கள் மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாகத் தொடர்ந்ததால், அவர்களின் நினைவில் ஆழமாகப் பதிந்தவையாகவும் அமைந்தன. முதல் ஜனநாயகத் தேர்தல் பிரசாரம் 1952 1952 ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடைபெற்ற மெட்ராஸ் மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலுக்கான அடித்தளத்தை அமைத்தது. அந்த காலத்தில் பிரசாரம் என்பது பொதுக்கூட்டங்கள், பிரசுரங்கள், செய்தித்தாள்கள் மற்றும் வானொலி அறிவிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. அரசியல் தலைவர்கள் சாலை மற்றும் ரயில் வழியாகப் பயணம் மேற்கொண்டு, நகரங்களிலும் கிராமங்களிலும் மக்களிடம் உரையாற்றினர். இந்தத் தேர்தலின் முக்கியத்துவம், சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக பெருமளவிலான அரசியல் இயக்கத்தை அறிமுகப்படுத்தியதில்தான் இருந்தது. மக்களுக்கு வாக்குப்பதிவு முறைகள் பரிச்சயமாக இல்லை. அதனால், வாக்குரிமை, தேர்தல் சின்னங்கள், ஜனநாயகப் பொறுப்பு போன்ற விஷயங்களை விளக்குவதிலேயே பிரசாரத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அந்த காலப் பிரசாரங்களின் மொழி அமைதியானதாகவும், விளக்கமானதாகவும், சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. அதிகார மாற்றத்தை உருவாக்கிய தேர்தல் பிரசாரம் 1967 1967 பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக இன்று வரை நினைவுகூரப்படுகிறது. இந்தத் தேர்தல், மாநிலத்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி, திராவிட அரசியல் அதிகாரத்திற்கு வர வழிவகுத்தது. அதாவது அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வர வழிவகுத்தது. இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் மிகத் தீவிரமாகவும், கருத்தியல் அடிப்படையுடனும் அமைந்திருந்தது. பொதுக்கூட்டங்களில் பெருமளவு மக்கள் திரண்டனர். மொழி உரிமை, மாநில சுயாட்சி, விலைவாசி உயர்வு, சமூக நீதி என பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்த திமுக தலைவர்களின் உரைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டன. பொருளாதார சுமைகள் மற்றும் மத்திய அரசின் ஆதிக்கம் குறித்து மக்களிடையே உருவான அதிருப்தி, இந்தப் பிரசாரங்களில் தெளிவாக வெளிப்பட்டது. மேலும், மக்களைக் கவரக்கூடிய வகையிலான எளிமையான கருத்துகள், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முழக்கங்கள், திமுகவின் அடித்தள அமைப்புகள் ஆகியவற்றை திறம்படப் பயன்படுத்திய தேர்தலாகவும் இது அமைந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டு அரசியலின் போக்கையே நிரந்தரமாக மாற்றி, பிராந்திய அடையாளத்தை மையமாகக் கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்கின. அறிஞர் அண்ணா இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1967 வரை தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியில் அரிசி கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடும், அது தொடர்பான பஞ்சமும் மக்களை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் திருப்பின. கூடவே மொழிப் பிரச்னையைச் சரியாகக் கையாளத் தவறியது அப்போதைய பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம், அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைகள் போன்றவை மக்களை காங்கிரஸ் அரசின் இதர நல்ல அம்சங்களை மறக்கடிக்கச் செய்தன. அன்றைய தமிழக அரசியலில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிப் பிடித்துக்கொண்டிருந்த அண்ணா தலைமையிலான திமுக, 1967-ல் சட்டமன்றத் தேர்தலில், இந்த இரண்டு பிரச்னைகளையும் தங்களுடைய தேர்தல் ஆயுதங்களாக எடுத்துக்கொண்டு, மக்களிடம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. அதிலும் குறிப்பாக, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்று தேர்தல் முழக்கத்தை வெளியிட்டவுடன், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, அப்படியே திமுக பக்கம் சென்றது. கூடவே, விலைவாசி உயர்வையொட்டி திமுக வைத்த முழக்கங்கள் மக்களிடையே இன்னும் வேகமாகச் சென்றடைந்தன. 'கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா’, 'பக்தவத்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி’, 'காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சி?’, 'கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான்’ போன்ற முழக்கங்களெல்லாம் அன்றைய தேர்தலில் உச்சம் தொட்ட தேர்தல் கோஷங்கள். அவசரநிலைக்குப் பிந்தைய தேர்தல் பிரசாரம் 1977 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக்கு எதிரான முழக்கம்தான் , 1977 மே–ஜூன் மாதங்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தது.1976 ஜனவரி 31-ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பின் 356-வது பிரிவை பயன்படுத்தி கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைத்திருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் மாநில உரிமைகள் மற்றும் மத்திய அரசின் ஆதிக்கம் பெரும் விவாதப் பொருளானது. அவசரநிலை நீக்கப்பட்டிருந்தாலும், அதன் தாக்கங்கள் மக்களின் நினைவில் நீங்காமலேயே இருந்தன. பத்திரிகை தணிக்கை, மிசா சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கைது நடவடிக்கைகள், பறிக்கப்பட்ட குடிமக்கள் உரிமைகள் போன்றவை தேர்தல் உரைகளில் வெளிப்படையாகப் பேசப்பட்டன. எம்.ஜி.ஆர் - கருணாநிதி இந்தச் சூழலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம், 1967-ல் போலக் கோஷங்களால் நிரம்பியதாக இல்லாமல், ‘ஜனநாயக பாதுகாப்பு’, ‘அரசியல் நிலைத்தன்மை’, ‘மக்களின் அமைதி’ போன்ற கருத்துகளை மையமாகக் கொண்டு அமைந்தது. இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் அப்போது திமுகவிலிருந்து வெளியேறி தொடங்கிய அதிமுக, தங்களை காங்கிரசுக்கும் திமுகவுக்கும் அப்பாற்பட்ட மாற்றாக முன்வைத்து, ஏழை மக்களுக்கான நலன், அரசியல் குழப்பத்துக்கு முடிவு என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்றது. இந்த அணுகுமுறை, அவசரநிலைக்குப் பிறகான அரசியலால் சலிப்படைந்திருந்த மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கூடவே, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே காணப்பட்ட திரைக்கவர்ச்சியும் அதிமுகவுக்கு பெரும்பான்மை வெற்றியை வழங்கி, தமிழ்நாட்டு அரசியலில் இன்னொரு முக்கிய திருப்பத்தை உருவாக்கின. கருத்தியலுக்குத் திரும்பிய தமிழக அரசியல் 1989 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், 1980-களின் அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, தமிழக அரசியலை மீண்டும் கருத்தியல் மையத்திற்குக் கொண்டு வந்த தேர்தலாக அமைந்தது. 1987, டிசம்பர் 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி உடைந்தது. 1988-ஆம் ஆண்டில் ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அணி என அதிமுக இரண்டாகப் பிரிந்த அந்த அரசியல் குழப்பம், சட்டசபையில் நடைபெற்ற அடிதடி, 1988 ஜனவரியில் அதிமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கும், அதன் பின்னர் ஆளுநர் ஆட்சிக்கும் வழிவகுத்தது. அதிமுகவில் ஏற்பட்ட இந்தப் பிளவினால் ஏற்பட்ட களேபரங்கள், நிலையான ஆட்சி இல்லாத சூழல், மத்திய அரசின் தலையீடுகள் ஆகியவை மக்களிடையே அரசியல் அதிருப்தியை அதிகரித்திருந்தன. இந்தச் சூழலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மங்கிப்போயிருந்த கருத்தியல் அடிப்படையிலான விவாதங்களை மீண்டும் எழுப்பியது. 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாதபோதிலும், திமுகவை உயிர்ப்புடன் வைத்திருந்த கருணாநிதிதான் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போகிறார் என்பது தேர்தலுக்கு முன்னரே ஊடகங்களால் யூகிக்க முடிந்தது. மக்களிடையேயும் அத்தகைய ஆதரவு போக்கே காணப்பட்ட நிலையில், மாநில உரிமைகள், சமூக நீதி, சட்டமன்ற மரியாதை, ஜனநாயக நடைமுறைகள் போன்ற கருத்தியல்களை முன்னிறுத்தி, திமுக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. கருணாநிதி அன்றைய தேர்தல் பிரசாரங்களில், “நிலையான ஆட்சி”, “மத்திய அரசின் தலையீட்டுக்கு எதிர்ப்பு”, “தமிழகத்தின் சுயமரியாதை” போன்ற முழக்கங்கள் முக்கிய இடம் பெற்றன. பொதுக்கூட்டங்களில், அவசரநிலை அனுபவங்கள், 1980-களில் ஏற்பட்ட அரசியல் நிலைகுலைவு, ஆட்சி மாற்றங்களால் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடு ஆகியவை பேசப்பட்டன. இதன் மூலம், மக்கள் மத்தியில் ‘தமிழக அரசியல் மீண்டும் நிலையான மற்றும் ஜனநாயகப் பாதைக்கு வர வேண்டும்’ என்கிற எண்ணம் வலுப்பெற்றது. அந்த வகையில், 1989 தேர்தல், உணர்ச்சி அரசியலைவிட கருத்தியல் அரசியலுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்த தேர்தலாகப் பார்க்கப்பட்டது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அரசியல் உரைகள் நீளமாக இருந்தாலும், மக்கள் கவனத்துடன் கேட்டனர். தேர்தல் முடிவு, திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்ததோடு, தமிழக அரசியலில் அரசியல் நிலைத்தன்மை, கருத்தியல் தெளிவு ஆகியவை மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தியது. உச்சத்தை எட்டிய ஆட்சி எதிர்ப்பு பிரசாரம் 1996 1996 ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், அதிமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் வெளிப்படையாக வெடித்த தேர்தலாக அமைந்தது. 1991 தேர்தலில், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு, விலைவாசி உயர்வு, நிர்வாகக் குளறுபடி, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக விரைவிலேயே மக்களின் ஆதரவை இழந்தது. குறிப்பாக, 1995 செப்டம்பரில் நடந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர திருமணம், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் குறித்து எழுந்த விமர்சனங்கள், அரசு நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற கேள்விகளை எழுப்பியது. இவையெல்லாம்,1996 தேர்தல் பிரசாரத்தில் எதிரொலித்தது. இந்தச் சூழலில், நடிகர் ரஜினிகாந்த், “இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், அந்த ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது எனத் தனது கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்தது பெரும் பேசுபொருளானது. ஜெயலலிதா இன்னொருபுறம் டெல்லி காங்கிரஸ் மேலிடம், தமிழக காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து, ஜி.கே. மூப்பனார் தலைமையில் உருவான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்ததும் தேர்தல் பிரசாரத்தை மேலும் பரபரப்பாக்கிய நிகழ்வுகளாக அமைந்தன. இத்தகைய பின்னணியில், திமுக தலைமையிலான கூட்டணி, ஆட்சி எதிர்ப்பு மனநிலையை (anti incumbency)ஒருங்கிணைத்து, 1996 தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில், கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியமைத்தது. போட்டிப்போட்டு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் 2011 2011 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரசாரம், நலத்திட்டங்களை மையமாகக் கொண்டதாக அமைந்தது. தேர்தல் அறிக்கைகளிலும், பொதுக்கூட்ட உரைகளிலும், மானியங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற வாக்குறுதிகள் முக்கியமாக இடம் பெற்றன. கட்சிகளின் தேர்தல் பிரசாரம், பாரம்பரிய பொதுக்கூட்டங்களோடு சேர்ந்து, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களையும் விரிவாகப் பயன்படுத்தும் வகையில் இருந்தது. இது, பழைய பிரசார முறைகளுக்கும் புதிய ஊடக சூழலுக்கும் இடையிலான மாற்றத்தைப் பிரதிபலித்தது. வாக்காளர்கள், கருத்தியல் அரசியலை விட, நேரடியாக பயன் தரக்கூடிய வாக்குறுதிகளின் அடிப்படையில் கட்சிகளை மதிப்பிட்டனர். இந்தத் தேர்தலில், அதிமுகவுக்கு முன்னதாகவே திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், இலவச மிக்ஸி, ஃபேன் , திருமண உதவித் திட்டத்துக்கான நிதி உயர்வு, முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 1,500 ஆக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. கருணாநிதி - ஜெயலலிதா திமுக தேர்தல் அறிக்கை வெளியானதும், அதிமுக அதை அப்படியே காப்பி அடித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் இலவசமாக மிக்ஸி, மின் விசிறி வழங்குவோம் என்று அறிவிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், அதிமுகவோ ஒருபடி மேலே போய் மிக்ஸி, மின் விசிறியோடு, கிரைண்டர் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப் என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இதனால், 2011 தேர்தல் பிரசாரமும் அது தொடர்பான விவாதமும் இலவச திட்டங்களை முன்னிறுத்தியே அமைந்தன. இந்த மறக்க முடியாத தேர்தல் பிரசாரங்கள், தமிழகத்தின் ஜனநாயகப் பயணத்தில் முக்கிய கட்டங்களாக விளங்குகின்றன. தேர்தல் என்பது அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டி மட்டும் அல்ல; அதன் நோக்கத்தை மக்களிடம் விளக்கவும், நம்பிக்கையை உருவாக்கவும், எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கப்போகிறோம் என்பதற்கான ஒரு முக்கிய அரசியல் செயல்முறை என்பதைக் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன! (தொடரும்)
Ajit Pawar Flight crash எப்படி நடந்தது? வெளியான அதிர்ச்சி தகவல் | Decode
Ajit Pawar Flight crash எப்படி நடந்தது? வெளியான அதிர்ச்சி தகவல் | Decode
Dindigul மாவட்ட தொகுதிகள் | திண்டுக்கல் சீனிவாசனுக்குப் போட்டியாக IP செந்தில் குமார்? | Vikatan
Dindigul மாவட்ட தொகுதிகள் | திண்டுக்கல் சீனிவாசனுக்குப் போட்டியாக IP செந்தில் குமார்? | Vikatan
அமெரிக்கா மட்டுமே சந்தையில்லை, இந்திய - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் பொருளாதாரத்துக்குப் புதிய வாசல்!
வர்த்தகப் போர்கள், வரிப் போர்கள் என உலக நாடுகளுக்கிடையே நடக்கும் அரசியல் சண்டைகளால், ஒட்டுமொத்த உலக வர்த்தகமுமே கேள்விக்குறியாகி வருகிறது. இச்சூழலில், இந்திய - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் நமக்குப் புதிய நம்பிக்கை தந்திருக்கிறது. இந்தியா மீது அமெரிக்க அதிபர் தொடுத்து வரும் வரிப் போர்களால் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. நம் 18% ஏற்றுமதி அமெரிக்காவை நம்பி இருப்பதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். இந்தப் பின்னணியில்தான், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல் சந்தை வாய்ப்புகளை விரிவுசெய்ய வேண்டிய காலச்சூழலில், இந்திய அரசு பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது பாராட்டத்தக்க விஷயம். ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய இங்கிலாந்துடன் ஏற்கெனவே இந்தியா வெற்றிகரமாக வர்த்தக ஒப்பந்தம் போட்டிருக்கிறது. தற்போது, ஐரோப்பிய யூனியனுடன் பல ஆண்டுகளாக நடந்துவந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது. இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக மதிப்பு, சுமார் 136 பில்லியன் டாலர். இதில் இந்தியாவின் ஏற்றுமதி 75.8 பில்லியன் டாலர்; இறக்குமதி 60.7 பில்லியன் டாலர். ஒப்பீட்டளவில், அதிகமான ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டுவருகிறது. எனவே, இந்தியாவுக்கான பலன் கூடுதலாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஒப்பந்தத்தால், சுமார் 99% இந்தியப் பொருள்களுக்கு ஐரோப்பிய சந்தையில் முன்னுரிமை கிடைக்கும். இந்திய ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளிலும் தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். மேலும், சுமார் 90% இந்தியப் பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியனில் 0% வரியே விதிக்கப்படும். மற்ற பொருள்களுக்கும் படிப்படியாக வரி குறைக்கப்படும். இதன்மூலம் ஜவுளி, காலணிகள் மற்றும் தோல்பொருள்கள், நகைகள் மற்றும் ரத்தினங்கள், கடல் உணவுப் பொருள்கள், கெமிக்கல்ஸ், கன்ஸ்யூமர் கூட்ஸ் உள்ளிட்ட துறைகள் பலனடையும். ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலையுயர்ந்த கார்கள், மருந்துகள், விமான பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், ஸ்டீல் போன்றவற்றின் விலையும் குறையும். இது இந்தியர்கள் உயர்தரமான பொருள்களை குறைந்த விலையில் பெறுவதற்கு வழிவகுக்கும். வளர்ச்சிக்கும், வர்த்தகத்துக்கும் சில நாடுகளையே நம்பியிருக்கும் நிலையை மாற்ற, பல்வேறு நாடுகளுடனான வர்த்தக உறவைப் பேணுவது மிகவும் அவசியம். ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தம், அதற்கான தொடக்கமாக இருக்கட்டும். இந்தியப் பொருளாதாரத்தின் வாசல்கள் இன்னும் விசாலமாகட்டும்! - ஆசிரியர்

24 C