10ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் - அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த வெறி நாய்!
தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக இன்று காலை பள்ளிக்கு சென்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன்பு பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். இந்நிலையில், பள்ளி அருகே பெரியதெருவில் சாலையில் குரைத்து கொண்டு ஓடிய நாய், நடந்து சென்ற பத்துக்கும் மேற்பட்டோரை கடித்தது. இதையடுத்து சாலையில் ஓடிய வெறி நாய், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. நாய் கடித்ததில் ஏற்பட்ட காயம் அப்போது, படித்து கொண்டிருந்த ஆறு மாணவிகளை கடித்தது. மற்ற மாணவிகள் பயத்தில் அலறி அடித்து வகுப்புக்குள் ஓடினர். கடிப்பட்ட மாணவிகளும் தேர்வு தொடங்க உள்ள நிலையில் நாய் கடித்ததை நினைத்து கலங்கியதுடன் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து, வெறிநாய் கடித்த 6 மாணவிகளும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உடனடியாக மாணவிகளுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவிகளும் தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினர். வெறி நாய் கடிக்கும் தகவல் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொல்லப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பணியாளர்கள் வலை மூலம் வெறி நாயை பிடித்தனர். நாயை பிடித்த பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் வெறி நாய் கடித்து குதறிய 14க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுக முன்னாள் எம்.எல்ஏ. சி.வி.சேகர் உள்ளிட்டோர் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டதுடன், மாணவிகளின் பெற்றோரையும் நேரில் சந்தித்து பேசினார். இதனிடையே தேர்வு எழுதி வரும் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவமனை, டாக்டர்கள் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' - உக்ரைனுக்கு 'நோ'சொன்ன விளைவு இது!
அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய நாடுகள். இந்த விஷயங்களில் ஈரானை ஒப்பிட்டால், அதற்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். ஆனாலும், 12 நாள்களாகப் போர் தொடர்ந்தும், ஈரானை இன்னமும் வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை. இந்தப் போரில் 'டிரோன்கள்' ஈரானுக்கு மிகப்பெரிய பக்க பலமாக இருந்து வருகிறது. போரின் தொடக்கத்தில் டிரோன்களை அமெரிக்கா பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது அது தான் அமெரிக்காவின் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ஈரானிய ஷாகேத் டிரோன் '300 பில்லியன் டாலர்கள்' அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது' ட்ரம்ப் ஹேப்பி விலை... இப்படி அமெரிக்காவிற்குத் தலைவலியாக ஈரான் பயன்படுத்தும் டிரோன் வகையின் பெயர், 'ஈரானிய ஷாகேத் டிரோன்'. ஒவ்வொரு ஷாகேத் டிரோனின் விலையும் 20,000 - 50,000 டாலர்கள். ஆனால், அதை தகர்க்கும் அமெரிக்காவின் இடைமறிப்பான்கள் (Interceptors) விலையோ மில்லியன் கணக்கில். மேலும், டிரோன்களை எளிதாகக் குறுகிய காலத்தில் ஈரான் தயாரித்துவிடலாம். ஆனால், இடைமறிப்பான்களைத் தயாரிக்க பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகும். இதனால், ஷாகேத் டிரோன்களைத் தடுக்க ஒரு சிஸ்டத்தை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கண்டே பிடிக்க முடியவில்லை டிரோன் விஷயத்தில் பணம் ஒரு பிரச்னை என்றால், அதை அமெரிக்கா இடைமறிப்பான்கள் கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது. ஆம்... அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பினால் அனைத்து ஷாகேத் டிரோன்களையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்த டிரோன்கள் மெதுவாகவும், குறைந்த உயரத்திலும் பறக்கக்கூடியது. இதனால், அமெரிக்க ரேடார்களால் இந்த டிரோன்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால், இவை பிற நாடுகளுக்குள் புகுந்து எளிதாகத் தாக்குதல் நடத்துகின்றன. இது குறித்து அந்த நாடுகள் அமெரிக்காவிடம் புகாரளிப்பது அதற்குப் பெரும் பிரச்னையாக இருக்கிறது. ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி 'ஈரான் ஏதாவது செய்தால்.! இது சீனாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் 'கிஃப்ட்'' - மிரட்டும் ட்ரம்ப் அமெரிக்கா செய்த 'தவறு' இந்த டிரோன் பிரச்னைகளை அமெரிக்கா எளிதாக தவிர்த்திருந்திருக்கலாம். ஆனால், அமெரிக்கா செய்த ஒரு 'தவறு' இப்போது பெரும் பிரச்னையாக இருக்கிறது. 2022-ம் ஆண்டில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா பொழிந்து வருவது இந்த வகையான டிரோன் தான். அதனால், அதை தடுக்கத் தேவையான அமைப்பை வைத்திருக்கிறது உக்ரைன். இதை இன்னமும் வலுப்படுத்த அமெரிக்காவிடம் நிதியுதவி கேட்டது உக்ரைன். பதிலுக்கு உக்ரைன் அமெரிக்காவிற்கு அந்த அமைப்பைத் தருவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், அதை அமெரிக்கா மறுத்துவிட்டது. அது தான் இப்போது அமெரிக்காவின் பூதாகரச் சிக்கலாக மாறி நிற்கிறது. ட்ரம்ப்-க்கு பயப்படும் 'அந்த' காரணம்; தெரிந்தால் மோடி ராஜினாமா? - சுப்ரமணியன் சுவாமி
'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?
திமுக கூட்டணியில் இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கும் திமுக தர விரும்பும் இடங்களுக்கும் ஒத்துப்போகாததால் இழுபறி நிலவுகிறது. மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் நிற்குமாறு திமுக வலியுறுத்த, தனிச்சின்னத்தில் நிற்க வேண்டுமென மதிமுக நிர்வாகிகள் விரும்புகிறார்கள். மதிமுக உயர்நிலைக் குழு இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மதிமுகவியின் உயர்நிலை குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்திருந்தது. கூட்டணி குறித்து முக்கிய முடிவை எடுக்க கூடிய இந்த கூட்டத்துக்கு வருகை தந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, 'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்' என கூறிவிட்டு சென்றார். அவர் பேசியதாவது, 'கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் நான் இல்லை. ஆனால், எங்கள் தரப்பினர் மதிமுகவின் விருப்பத்தை திமுகவிடம் தெரியப்படுத்தயிருக்கிறார்கள். திமுக அவர்களின் சூழ்நிலையை எங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். எங்களின் கூட்டணி ஏற்கனவே வலுவாக இருக்கிறது. இப்போது மேலும் சிலர் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். துரை வைகோ மதவாத சக்திகளுக்கு எதிரான பொதுவான கருத்தோடு எல்லாரும் இணைந்திருக்கிறோம். கூட்டணியில் எங்களால் பிரச்னை ஏற்படாது. இயக்கத்தின் நலனை விட தமிழகத்தின் நலனை முக்கியம். சில விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் தாமதமும் இல்லை' என்றார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்தாலும், துரை வைகோ அதனை விரும்பவில்லை என்றும், கட்சிக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் தனிச்சின்னத்தின் தான் நிற்க வேண்டும் எனவும் துரை வைகோ வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், துரை வைகோவின் தற்போதைய கருத்து, மதிமுக, வரும் தேர்தலில் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரி்விப்பதாக உள்ளது.
பாஜக கூட்டணியில் தவெக? EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால் - பியூஸ் கோயலின் பதில் என்ன?
அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா?' என்று கேட்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அதற்குப் பதிலளித்த அவர், இதைப் பற்றி நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க வேண்டும். அவருக்குத்தான் இது குறித்து நன்றாகத் தெரியும். இதுவரைக்கும் எங்கள் கூட்டணியில் எடப்பாடி, நயினார், தினகரன், அன்புமணி, ஜி.கே வாசன் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். `தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில் நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தியிருக்கிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ஒரு வலுவான கூட்டணியாக நாங்கள் தேர்தலைச் சந்திப்போம். பியூஸ் கோயல் திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும் கட்சிகளின் எண்ணிக்கையை விட மக்களிடம் இருக்கும் செல்வாக்கும், வாக்கு வங்கியும்தான் முக்கியம். அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். திருச்சி: இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
பாஜக கூட்டணியில் தவெக? EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால் - பியூஸ் கோயலின் பதில் என்ன?
அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா?' என்று கேட்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அதற்குப் பதிலளித்த அவர், இதைப் பற்றி நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க வேண்டும். அவருக்குத்தான் இது குறித்து நன்றாகத் தெரியும். இதுவரைக்கும் எங்கள் கூட்டணியில் எடப்பாடி, நயினார், தினகரன், அன்புமணி, ஜி.கே வாசன் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். `தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில் நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தியிருக்கிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ஒரு வலுவான கூட்டணியாக நாங்கள் தேர்தலைச் சந்திப்போம். பியூஸ் கோயல் திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும் கட்சிகளின் எண்ணிக்கையை விட மக்களிடம் இருக்கும் செல்வாக்கும், வாக்கு வங்கியும்தான் முக்கியம். அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். திருச்சி: இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
மதுராந்தகம் சிறுமி வன்கொடுமை கொடூரம்: `பொதுநல வழக்கு தாக்கல் செய்தால், விசாரணை.!' - உயர் நீதிமன்றம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தன் தோழிகளான தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, அவரது தோழியான 16 வயது சிறுமி ஆகியோருடன், நேற்று முன்தினம் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில், இரு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊரான மதுராந்தகம் அருகே உள்ள கிராமம் நோக்கிச் சென்றுள்ளார். மதுராந்தகம் அடுத்த தேவத்துார் பகுதியில் இருந்து, மது அருந்தி கொண்டிருந்த மர்ம நபர்கள் இருவர் அந்தச் சிறுவனின் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதை அறிந்த அந்தச் சிறுவன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். காட்டுப் பகுதி அருகே செல்லும்போது, சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. சிறார் வதை அப்போது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவரும் சிறுவன் மற்றும் 16 வயது சிறுமியை துரத்தி விட்டு, 14 வயது சிறுமியை அத்திவாக்கம் ஏரி பகுதிக்கு துாக்கி சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி, சிலரது உதவியால் பவுஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கேட்டறிந்த மருத்துவர்கள், மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தும் போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாகவும், சமீப காலமாக தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் இன்று அவசர முறையிடு செய்தார். இதை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, பொது நல வழக்காக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளது.
விஜய்யை NDA கூட்டணிக்கு அழைக்கும் பவன்? தடுக்கும் ஜான்!? | TN Election Updates 360 | Vikatan
விஜய்யை NDA கூட்டணிக்கு அழைக்கும் பவன்? தடுக்கும் ஜான்!? | TN Election Updates 360 | Vikatan
மதுரையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: 3 நாள்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம்! | கள நிலவரம் என்ன?
தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மதுரையில் உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் கூறியதாவது, “வணிக பயன்பாட்டிற்கான கமர்சியல் சிலிண்டர்கள் போதிய அளவில் விநியோகிக்கப்படாததால் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் டீலர்களுக்கு கமர்சியல் சிலிண்டர் வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், உணவகங்களுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 2,000க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர்கள் தற்போது கள்ளச் சந்தையில் 3,000 வரை விற்கப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தோசை, இட்லி போன்ற அத்தியாவசிய உணவுகளின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகும். இது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும். டெம்பிள் சிட்டி குமார் மதுரையில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல், மதுரையின் அடையாளமாக விளங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்காக மதுரையில் தங்கி இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கும் உணவு, காபி, டீ போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத அவல நிலை உருவாகும். உணவு கடைகள் பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே சில உணவகங்கள் மூடப்படத் தொடங்கியுள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு வணிக சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அதே போல டீ, காபி விலைகளும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இது குறித்து மதுரை காபி, டீ வர்த்த சங்கத்தினர் கூறுகையில், உணவுப் பொருட்களில் அடிப்படையானது டீ காபி தான். ஏனெனில் பொதுமக்கள் காலை எழுந்தவுடன் டீ காபி கடைகள் எல்லாம் தேடுவார்கள். குறிப்பாக மதுரையில் எல்லா தெருக்களிலும் டீ காபி கடைகள் தான் அதிகமாக இருக்கும். அவர்களின் வேலையே டீ காபி கடைகளில் இருந்து தான் துவங்கும். இந்த சூழ்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு டீக்கடை உரிமையாளர்களான எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கோப்பு படம் நேற்று வணிக சிலிண்டர் 1980 ரூபாய்க்கு தருவோம் என இருந்த நிலையில், இன்று சிலிண்டர் 2200 க்கு தான் தருவோம் என தெரிவித்ததாக சொல்கிறார்கள் சிலர். சரி கொடுங்கள் என கேட்டபோதும் கூட சிலிண்டர் கிடைக்கவில்லை. கூடுதல் விலைக்கு கூட சிலிண்டர் கிடைக்காததால் மிகவும் சிரமாக உள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் உடனடியாக சரி செய்து வணிகர்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் இதையினை சரி செய்யவில்லை என்றால் மிகப்பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும். நேரடியாக மறைமுகமாக பலரும் இதனால் பாதிப்படைவார்கள் எனவும் தெரிவித்தனர். வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தேனி மாவட்டத்தில் உள்ள டீ கடைகள், ஓட்டல்கள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளன குறிப்பிடதக்கது.!
எம்ஜிஆர், ஜெயலலிதா சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா? | ‘வாவ்’ வியூகம் 09
எம்ஜிஆர், ஜெ. சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா? ‘வாவ்’ வியூகம் 09 திமுக பெருந்தலைகள் ஆரம்ப காலத்தில் மகளிர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, பின்னர் அதன் வாயிலாகவே மகளிர் வாக்குகளை தக்கவைத்தது போல், அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரும், அதன் பின்னர் வழிநடத்திய ஜெயலலிதாவும் எப்படி தாய்க்குலங்களின் அன்பையும், ஆசியையும் பெற்றார் என்பதையும் இன்றைய பகுதியில் பார்ப்போம். பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா | ‘வாவ்’ வியூகம் 08 எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்னமே திரைப்படங்கள் வாயிலாக மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார். தாய்க்கு தலைவணங்கும் மகனாக, தங்கைக்காக வாழும் தமையனாக, சமுதாயத் தலைவனாக மக்களை சென்றடைந்திருந்தார். அதனால் அவர் அரசியலுக்கு வந்தபோது மக்களுக்கு ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று பாடி வைத்திருந்தது மெய்ப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்தி எதிர்ப்புப் போரட்டம் போன்ற மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலும், திமுகவில் ஏற்கெனவே இருந்தவர் என்பதாலும், திரையின் உச்ச நட்சத்திரம் என்பதாலும் அவர் ஆரம்பித்த அதிமுக, மக்களிடம் அதிகப் போராட்டங்கள் இல்லாமலே சென்றடைந்தது. கருணாநிதி, எம்ஜிஆர் எம்ஜிஆர் மீதான நம்பிக்கை எம்ஜிஆர் ஒரு மகனாக, ஓர் அண்ணணாக, தலைவனாக தங்களைப் பாதுகாப்பார் என்று தாய்க்குலங்கள் நம்பி வாக்களிக்க ஆரம்பித்தனர். மேலும், அந்த காலக்கட்டம் குடும்பத் தலைவர்களும், ஆண்களுமே அந்தக் குடும்பத்தின், வீட்டில் உள்ள பெண்களின் அரசியல் சார்பை தீர்மானிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனாலும் திமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்தபோது அவர் பக்கம் சென்ற கணிசமான தொண்டர்களின் குடும்பப் பெண்களும் எம்ஜிஆர் வாக்கு வங்கியாகினர். எம்ஜிஆர் தனது ஆட்சிக் காலத்தில் ரேஷன் அரிசி விநியோகத்தில் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்தது, அதை சார்ந்திருந்த தாய்மார்கள் மத்தியில் அவருக்கான அபிமானம் குறையாமல் வைத்திருந்தது. அதுதவிர ஏழைக் குடும்பப் பெண்களுக்கு இலவச சேலைகள், திருமாங்கல்யத் திட்டம் ஆகியவையும் மதிய உணவுத் திட்ட விரிவாக்கமும், பெண்களின் அன்றாடச் சுமையைக் குறைத்தன. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், விதவை ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. எம்ஜிஆர் திரையில் இருந்ததைப் போல் நிஜத்திலும் தங்களைக் காப்பதாகவே மக்கள் நம்பினர். 1962 சீனப் போரின்போது நேரு போர் நிதி கோரியவுடன் பெருந்தொகையை அள்ளிக் கொடுத்து மக்கள் அபிமானம் பெற்ற எம்ஜிஆர்தான் பின்னாளில் தான் ஆட்சியில் அமர்ந்தபோது எப்போதெல்லாம் மழை, வெள்ளத்தில் ரிக்ஷாக்காரர்கள் ரிக்ஷாக்களை இழந்தாலும் வாரி வாரி அதை சரிசெய்யவும், புதியவை வாங்கவும் நிதி கொடுத்தார். இப்படியான செயல்கள் தான் அவருக்கான மகளிர் வாக்கை வலுவான வாக்கு வங்கியாக வைத்தது. அதுமட்டுமல்லாம் கட்சியில் அவர் ஜெயலலிதாவுக்கு அளித்த பொறுப்பு மிக முக்கியமான அரசியல் நகர்வு. ஜெயலலிதாவின் திரை பிம்பம், ஆளுமையை சரியாக தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார் எம்ஜிஆர். ஜெயலலிதாவை தனது மதிய உணவுத் திட்டத்தின் தூதராக அறிவித்ததாக இருக்கட்டும், அவரை ராஜ்யசபா எம்.பி.யாக நியமித்ததாக இருக்கட்டும், தமிழக மகளிர் மத்தியில் எம்ஜிஆர் மீதான அபிமானத்துக்கு மேலும் வலுசேர்த்ததோடு, ஜெயலலிதாவின் தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கும் அடித்தளமாகியது. ஜெயலலிதா ‘அம்மா’வின் ஈர்ப்பு 20-06-1982-ல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பிலான மகளிரணி மாநாட்டில் ‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ என்ற தலைப்பில் தனது முதல் அறிமுக அரசியல் உரையாற்றிய ஜெயலலிதா, அதன் பின்னர் விஸ்வரூபம் எடுத்த கதை இன்னொரு தனி அத்தியாயத்துக்கான கன்டென்ட். ஆனால், ஜெயலலிதாவின் இருப்பு, எம்ஜிஆருக்கு பெண்கள் மீதான அபிமானம் இம்மியும் குறையாமல் அவர் காலம் முழுவதும் பார்த்துக் கொண்டது எனலாம். அதனாலேயே எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக பெண்கள் மனங்களில் ஒட்டிக் கொண்டார் ஜெயலலிதா. அதுவும் எம்ஜிஆர் மறைவின்போது வேனில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம், சட்டப்பேரவையில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்கள் யாவும் ஆண்டாண்டு காலமாக தமிழக முதல்வராக ஆண் தானே இருக்கிறார், ஏன் ஒரு பெண் அந்தப் பதவிக்கு வரக்கூடாது என்ற அவருக்கு மகளிர் ஆதரவை அலையென உருவெடுக்க வைத்தது. ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில், திருமண நிதியுதவித் திட்டம் (தாலிக்கு தங்கம்) மூலம் ஏழைப் பெண்களுக்குத் திருமண நிதியுதவியுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. அம்மா இருசக்கர வாகனத் திட்டம் மூலம் உழைக்கும் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 50% மானியம் (அதிகபட்சம் ரூ.25,000) வழங்கப்பட்டது. பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா | ‘வாவ்’ வியூகம் 08 டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுக்காக நிதியுதவியை உயர்த்தி வழங்கினார். தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் பெண் சிசுக் கொலையைத் தடுக்கவும், கைவிடப்படும் குழந்தைகளைப் பாதுகாக்கவும் வழிவகுக்கப்பட்டது. அம்மா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டங்கள் இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்கச் செய்தன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் உதவிகள் வழங்குதல் மற்றும் பெண்களுக்கு 9 மாத மகப்பேறு விடுமுறை அளித்தல் முதலானவையும் பெண்களுக்கு பயன் அளித்து மக்கள் மனதில் அபிமானத்தைக் கூட்டின. இவை தவிர வீர தீரச் செயல்களுக்கு கல்பனா சாவ்லா விருது மற்றும் சமூக சேவை புரிந்த பெண்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டன. நலத் திட்டங்களையும் கடந்து அவர் பெண்களுடன் தனக்கென ஒரு தனி பிணைப்பை உருவாக்கினார். கிராமப்புற பெண்கள் பலரும் அவரை, ‘சிங்கப் பெண்’ணாகவே பார்த்தனர். அதை அப்படியே கேப்பிட்டலைஸ் செய்த ஜெயலலிதா ‘அம்மா ’ என்றொரு கல்ட் உருவாக்கினார். அவரது கட்சியினர் மட்டுமல்ல தமிழக மக்களுமே மெல்ல மெல்ல ஜெயலலிதாவை அம்மாவென்று விளிக்கலாயினர். தமிழக அரசியல் முதல் டெல்லி அரசியல் வரை அம்மா என்ற பெயர் அவருக்கு நிலைத்துப்போகும் அளவுக்கு அவரும் வளர்ந்தார். எடப்பாடி பழனிசாமி ‘அம்மா’வுக்குப் பின்... ‘உங்களால் தான் நான்... உங்களுக்காகவே நான்’ என்று உரக்கச் சொல்லி பெண்கள் அத்தனை பேரின் அன்பையும், பேராதரவையும் தன் பக்கம் குவித்து வைத்திருந்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் நடந்த உட்கட்சிக் குழப்பங்கள் எண்ணிலடங்காதவை. ஜெயலலிதா அதிமுகவுக்கு சேர்த்து வைத்த சொத்து பெண் வாக்காளர்கள். அது எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட நாள் முதல் அவர் அதிமுகவுக்காக தொடர்ச்சியாக சேர்த்து வைத்தது. ஜெயலலிதாவின் மறைவோடு இயல்பாக அந்த பெண் வாக்காளர்களில் ஒரு பகுதி கணிசமாகக் குறைந்தது எனலாம். அவ்வாறாக அவர்கள் அதிமுகவை கைவிடக் காரணம் கட்சியின் உட்பூசல். அதையும் தாண்டி இபிஎஸ் தலைமையை ஏற்று ஒரு பெருமளவிலான பெண்கள் கூட்டம் அதிமுக பக்கம், குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் பக்கம் நிற்கத்தான் செய்தது. ஆனால், கட்சியின் மீதான கட்டுப்பாட்டை யார் தக்கவைத்துக் கொள்வது என்பதில் காட்டிய அக்கறையால் பெண் வாக்கு வங்கியில் ஒரு சிறிய அளவிலான அடி வாங்கினார் இபிஎஸ். அடுத்து வந்த தேர்தலில் உட்கட்சி பூசல், பாஜகவுடன் கூட்டணி, ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடம் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது. இருந்தாலும் கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றது. அந்த இடத்தைத் தந்தது பெண் வாக்காளர்களின் பங்களிப்பு இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. ‘நமக்காக ஒருவன் சிறை செல்கிறான் எனில்.!' - தலைவர்களின் சிறைவாசமும் தாக்கமும்! | ‘வாவ்’ வியூகம் 07 சேலத்திலும், கொங்கு மண்டலத்திலும் இன்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பெண் வாக்காளர்களின் மவுசு இருக்கத்தான் செய்கிறது. காரணம் அவருடைய அத்தனை வாக்குறுத்திகளும் அம்மா, அம்மா என்று ஜெயலலிதாவை மறவாமல் முன்னிறுத்தியே இருக்கிறது. எம்ஜிஆருக்காக ஜெயலலிதாவை ஆதரித்தது போல் ஜெயலலிதாவுக்காக எடப்பாடியை ஆதரிக்கும் போக்கு அதிமுகவில் இன்னும் முடிந்துவிடவில்லை. இந்தத் தேர்தலுக்கான வாக்குறுதிகளாக இதுவரை 3 கட்டங்களாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள வாக்குறுதிள் பெண்களை வெகுவாகக் கவர்வதாகவே உள்ளது. பெண் வாக்காளர்களைப் பொறுத்துவரை திமுக vs அதிமுக தான் இன்னமும் கள நிலவரம். இதில், இந்தத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் நம்பிக்கையை தன் பக்கம் குவிக்க இபிஎஸ் எடுக்கும் முயற்சிகளின் பலனும் தேர்தல் முடிவில்தான் தெரியும். குறிப்பாக மகளிர் பாதுகாப்பை முன்வைத்து இபிஎஸ் செய்யும் பிரச்சாரத்தின் பலனை எந்தளவுக்கு அறுவடை செய்கிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.! (தொடரும் )
கேரளம்: அந்த அழைப்புக்காகத்தான் நான் காத்திருந்தேன் - அமைச்சர் மீது புகார் கூறிய மனைவி சமரசமானார்
கேரள மாநில சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் மீது அவரது மனைவி பிந்து மேனன் நேற்று சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வாலகத்தில் உள்ள குடும்ப வீட்டுக்குக் கடந்த 7-ம் தேதி சென்றபோது அங்கு கே.பி. கணேஷ் குமாரை மற்றொரு பெண்ணுடன் யாரும் பார்க்கக்கூடாத மோசமான நிலையில் பார்த்ததாகவும், அதைத் தனது செல்போனில் போட்டோ எடுத்தபோது அவரது ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தும் விதமாகக் கதவை அடைக்க முயன்றதாகவும், மற்றொருவர் செல்போனைப் பறிக்க முயன்றதாகவும் கூறியிருந்தார். கே.பி. கணேஷ் குமாரின் டிரைவர் அந்தப் பெண்ணை அங்கிருந்து காரில் அழைத்துச் சென்றுவிட்டதாகவும், அங்கிருந்தபடியே உறவினரான முன்னாள் டி.ஜி.பி-யான ஸ்ரீலேகாவை அழைத்து, அவரது ஆலோசனைப்படி காவல்துறையின் 112 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், போலீஸார் அங்கு சென்றபோது கே.பி. கணேஷ் குமாரின் ஊழியர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இது குடும்பப் பிரச்னை என்பதால் அதில் தலையிட முடியாது எனக் கூறி போலீஸார் சென்றுவிட்டதாகவும் பிந்து மேனன் குற்றம் சாட்டியிருந்தார். கேரள மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் இதுபற்றிக் கருத்து தெரிவித்த அமைச்சர் கே.பி. கணேஷ் குமார், எனது அரசியலைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதி மக்களுக்கு என்னவெல்லாம் செய்கிறார், அதனால் கேரளாவுக்கு என்ன நன்மை நடந்தது என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். கணேஷ் குமாருக்கு ஒன்றல்ல ஐந்தாயிரம் காதல் உண்டு. காதல் இல்லாதவன் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன். எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் எனக் கூறியிருந்தார். கேரளம்: மற்றொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் கணவனைப் பார்த்தேன் - அமைச்சர் மீது மனைவி புகார் இதற்கிடையே கணவருடன் சமாதானமாகச் செல்வதாகக் கூறிப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிந்து மேனன். இதுகுறித்து பிந்து மேனன் கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை கணேஷ் குமார் என்னை அழைத்திருந்தார். இது குடும்பப் பிரச்னை என்றும், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். கணேஷ் குமாரைத் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. அவரை மிகவும் நேசிக்கிறேன். கணேஷ் குமார் தனக்கு ஐந்தாயிரம் காதல்கள் இருப்பதாகக் கூறியது மிகவும் வேதனை அளித்தது. அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் மனைவி பிந்து மேனனுடன் கணேஷ் குமார் முதலில் எனது சகோதரிக்கு போன் செய்தார். பின்னர் நேரடியாக என்னிடம் பேசி மன்னிப்புக் கேட்டார். அந்த ஒரு தொலைபேசி அழைப்புக்காகத்தான் நான் காத்திருந்தேன். இதற்கு முன்பு எங்களுக்கு இடையே பிரச்னைகள் இருந்தபோதிலும், நான் ஒருபோதும் ஊடகங்களில் பேசியதில்லை. இப்போது நான் செய்தது தவறு என்று எனது தோழிகள் கூடச் சொன்னார்கள். கணேஷ் குமார் மீது புகார் அளிக்கமாட்டேன். அவரைப் பழிவாங்கும் வகையில் நான் செயல்படமாட்டேன். அவருடன் வாழ வேண்டியவர் நான் என்பதால் கணேஷ் குமார் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவையில்லை. இது குறித்து சமூக ஊடகங்களில் எந்த விவாதமும் நடத்த வேண்டாம் என்றார். கேரளா: ஜி.சுதாகரன் சிபிஎம் கட்சியில் இருந்து விலக முடிவா? சமாதானம் பேசும் தலைவர்கள்; பின்னணி என்ன?
Iran - Israel Conflict: Arab நாடுகள் அடுத்து என்ன செய்யும்? - Former BBC Editor மணிவண்ணன் Interview
Iran - Israel Conflict: Arab நாடுகள் அடுத்து என்ன செய்யும்? - Former BBC Editor மணிவண்ணன் Interview
கூட்டணிக்காக Vijay-க்கு நெருக்கடி கொடுக்கிறதா பா.ஜ.க - K.S.Radhakrishnan Interview
LPG Cylinder Shortage | குஷி DMDK விரக்தி VCK CBI TWIST: அடுத்தடுத்து ஆஜராகும் VIJAY, SENTHIL BALAJI
LPG Cylinder Shortage | குஷி DMDK விரக்தி VCK CBI TWIST: அடுத்தடுத்து ஆஜராகும் VIJAY, SENTHIL BALAJI
திருச்சி: இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
திருச்சியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பியூஸ் கோயல், திருச்சியில் நடைபெறவுள்ள ஒரு பெரிய கூட்டத்திற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எனது குடும்ப உறுப்பினர்களான அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைவர்களுடன் இங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திருச்சி இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க அனைவரும் காத்திருக்கிறோம். பிரதமர் மோடி ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் நாட்டின் பெருமைக்காக அயராது உழைத்து வருகிறார். அவர் தமிழக மக்கள், தமிழ் கலாசாரம் மற்றும் தமிழர்களின் பெருமை மீது மிகுந்த அக்கறை கொண்டவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஊழல் நிறைந்த தி.மு.க ஆட்சியை மாற்றப்போகிறோம். தமிழகத்தில் நல்ல சட்டம் ஒழுங்கையும், ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்தது போன்ற நல்லாட்சியையும் மீண்டும் கொண்டு வருவோம். piyus koyal எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து, தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றும். இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை. இது குறித்து, அந்தந்தத் துறையினர் அவ்வப்போது விளக்கமளிப்பார்கள். நிலைமையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எங்களது முழு கவனமும் இப்போது பிரதமரை வரவேற்பதில் தான் உள்ளது. கூட்டணியில் உள்ள அனைவரும் ஒரு குடும்பமாகச் செயல்படுகிறோம். தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் ஒரு அறைக்குள் நடக்கும். இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் முறைப்படி அறிவிப்போம். எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டணியின் தலைவராக இருந்து சரியான நேரத்தில் இது குறித்து முடிவெடுப்பார். தமிழக வெற்றிக் கழகத்தை எங்கள் கூட்டணியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அவர்களிடம்தான் கேட்க வேண்டும். அவருக்குத்தான் இது குறித்து நன்றாகத் தெரியும். தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் என அனைத்து தலைவர்களும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ஒரு வலுவான கூட்டணியாக தேர்தலைச் சந்திப்போம். தி.மு.க கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. ஆனால், கட்சிகளின் எண்ணிக்கையை விட, மக்களிடம் இருக்கும் செல்வாக்கும் வாக்கு வங்கியும்தான் முக்கியம். அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மிகவும் வலுவாக உள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க-வைத் தோற்கடித்து முழு பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுகவிற்குள்ளேயே முதல்வருக்கு நெருக்கடிகள் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் கலாசாரத்திற்கு எதிரானவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியையே தேர்ந்தெடுப்பார்கள் என்றார். ``உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் - கொதிக்கும் பியூஷ் கோயல்
திருச்சி: இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
திருச்சியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பியூஸ் கோயல், திருச்சியில் நடைபெறவுள்ள ஒரு பெரிய கூட்டத்திற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எனது குடும்ப உறுப்பினர்களான அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைவர்களுடன் இங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திருச்சி இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க அனைவரும் காத்திருக்கிறோம். பிரதமர் மோடி ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் நாட்டின் பெருமைக்காக அயராது உழைத்து வருகிறார். அவர் தமிழக மக்கள், தமிழ் கலாசாரம் மற்றும் தமிழர்களின் பெருமை மீது மிகுந்த அக்கறை கொண்டவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஊழல் நிறைந்த தி.மு.க ஆட்சியை மாற்றப்போகிறோம். தமிழகத்தில் நல்ல சட்டம் ஒழுங்கையும், ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்தது போன்ற நல்லாட்சியையும் மீண்டும் கொண்டு வருவோம். piyus koyal எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து, தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றும். இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை. இது குறித்து, அந்தந்தத் துறையினர் அவ்வப்போது விளக்கமளிப்பார்கள். நிலைமையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எங்களது முழு கவனமும் இப்போது பிரதமரை வரவேற்பதில் தான் உள்ளது. கூட்டணியில் உள்ள அனைவரும் ஒரு குடும்பமாகச் செயல்படுகிறோம். தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் ஒரு அறைக்குள் நடக்கும். இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் முறைப்படி அறிவிப்போம். எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டணியின் தலைவராக இருந்து சரியான நேரத்தில் இது குறித்து முடிவெடுப்பார். தமிழக வெற்றிக் கழகத்தை எங்கள் கூட்டணியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அவர்களிடம்தான் கேட்க வேண்டும். அவருக்குத்தான் இது குறித்து நன்றாகத் தெரியும். தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் என அனைத்து தலைவர்களும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ஒரு வலுவான கூட்டணியாக தேர்தலைச் சந்திப்போம். தி.மு.க கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. ஆனால், கட்சிகளின் எண்ணிக்கையை விட, மக்களிடம் இருக்கும் செல்வாக்கும் வாக்கு வங்கியும்தான் முக்கியம். அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மிகவும் வலுவாக உள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க-வைத் தோற்கடித்து முழு பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுகவிற்குள்ளேயே முதல்வருக்கு நெருக்கடிகள் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் கலாசாரத்திற்கு எதிரானவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியையே தேர்ந்தெடுப்பார்கள் என்றார். ``உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் - கொதிக்கும் பியூஷ் கோயல்
ராமதாஸால் வயது மூப்பு காரணமாக முடிவுகளை எடுக்க முடியாது - தன் மனுவில் அன்புமணி சொல்வது என்ன?
ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கோரி டாக்டர் அன்புமணி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்க டாக்டர் ராமதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவர் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கட்சியை நிர்வகிப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சிக்கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்த நிலையில், இதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. `தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' - ராமதாஸ் மனு தள்ளுபடி இதற்கிடையே, 'கட்சிக்கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என்று டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராமதாஸுக்குத் தற்போது 87 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக ரீதியாக அவரால் முடிவுகளை எடுக்க முடியாது, இதைப் பயன்படுத்தி ராமதாஸைச் சிலர் தவறாக வழி நடத்துகின்றனர். சிலரின் தூண்டுதலால் தன்னை தலைவர் எனத் தானே அறிவித்துக் கொண்டது பாமக சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. கட்சி நிறுவனர் என்ற முறையில் கட்சிக்கு ஆலோசனை வழஙகலாம். ஆனால், பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் உள்ளது. அந்த அடிப்படையில்தான் சின்னம் ஒதுக்கீடு சம்பந்தமாக அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. எனவே கட்சிக் கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, வழக்கு தொடர ராமதாஸுக்கு உரிமை இல்லை. அன்புமணியின் பதவி காலம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை உள்ளது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. நீதிமன்ற விசாரணை இதைத்தொடர்ந்து அன்புமணியின் மனுவுக்கு ராமதாஸ் தரப்பில் மார்ச் 11க்குள் (இன்று) பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார் நீதிபதி. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன?- அன்புமணி ராமதாஸ் கேள்வி
ராமதாஸால் வயது மூப்பு காரணமாக முடிவுகளை எடுக்க முடியாது - தன் மனுவில் அன்புமணி சொல்வது என்ன?
ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கோரி டாக்டர் அன்புமணி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்க டாக்டர் ராமதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவர் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கட்சியை நிர்வகிப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சிக்கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்த நிலையில், இதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. `தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' - ராமதாஸ் மனு தள்ளுபடி இதற்கிடையே, 'கட்சிக்கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என்று டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராமதாஸுக்குத் தற்போது 87 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக ரீதியாக அவரால் முடிவுகளை எடுக்க முடியாது, இதைப் பயன்படுத்தி ராமதாஸைச் சிலர் தவறாக வழி நடத்துகின்றனர். சிலரின் தூண்டுதலால் தன்னை தலைவர் எனத் தானே அறிவித்துக் கொண்டது பாமக சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. கட்சி நிறுவனர் என்ற முறையில் கட்சிக்கு ஆலோசனை வழஙகலாம். ஆனால், பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் உள்ளது. அந்த அடிப்படையில்தான் சின்னம் ஒதுக்கீடு சம்பந்தமாக அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. எனவே கட்சிக் கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, வழக்கு தொடர ராமதாஸுக்கு உரிமை இல்லை. அன்புமணியின் பதவி காலம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை உள்ளது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. நீதிமன்ற விசாரணை இதைத்தொடர்ந்து அன்புமணியின் மனுவுக்கு ராமதாஸ் தரப்பில் மார்ச் 11க்குள் (இன்று) பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார் நீதிபதி. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன?- அன்புமணி ராமதாஸ் கேள்வி
'நான் பெரம்பூருக்கு வரலாமாப்பா?' - நிர்வாகிகளிடம் ஜாலியாக தொகுதியை உறுதி செய்த விஜய்!
தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதற்கட்ட வேட்பாளர்களை நேற்று பனையூரில் நேரில் அழைத்து விஜய் பேசியிருந்தார். அப்போது விஜய் தான் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதை நிர்வாகிகள் மத்தியில் உறுதிப்படுத்தி பேசியிருக்கிறார். தவெக நிர்வாகிகள் தவெக சார்பில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் 60 வேட்பாளர்களை விஜய் நேற்று பனையூரில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆலோசனை கூறியிருந்தார். 'உங்களையெல்லாம் எம்.எல்.ஏவாக பார்க்க வேண்டும். மக்களுக்கு பணி செய்ய வேண்டுமென்று வந்துவிட்டோம். நமக்கு எவ்வளவு சிக்கல்கள் எழுந்தாலும் களத்தில் தைரியமாக வேலை பாருங்கள்' என ஊக்கப்படுத்தும் வகையில் வேட்பாளர்களிடம் பேசியிருக்கிறார். விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று பெரம்பூர் தொகுதியின் நிர்வாகிகளும் பனையூருக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். விஜய் அவர்களிடம் தனியாக பேசுகையிலயே தான் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது . விஜய் 'நான் பெரம்பூருக்கு வரலாமாப்பா...' என ஜாலியாக சிரித்தபடியே விஜய் நிர்வாகிகளிடம் கேட்க, 'ஒவ்வொரு குடும்பமும் உங்களை அவங்க வீட்டுப் பிள்ளையா பார்க்குறாங்க. எங்க அண்ணன் எங்க தொகுதிக்கே வந்துருக்காருன்னு திருவிழாவா கொண்டாடி ஜெயிக்க வைப்பாங்க' என நிர்வாகிகள் பதில் கூற விஜய் குஷியாகியிருக்கிறார். 'நீங்கெல்லாம் செய்யுற எல்லா பணியையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன். ரொம்ப நல்லா பண்றீங்க. தொடர்ந்து மக்களை சந்திங்க. நானும் சீக்கிரமே தொகுதிக்கு வரேன்' எனக் கூறி மகிழ்ச்சியாக அந்த நிர்வாகிகளை அனுப்பி வைத்திருக்கிறார். விஜய் விஜய்யே அவர் பெரம்பூரில் நிற்கப்போவதை உறுதி செய்திருப்பதால் 'வட சென்னை' அரசியல் சூடுபிடிக்கத் தொடஙகியிருக்கிறது. ஏற்கனவே பெரம்பூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் த. வெ. க நிர்வாகிகளும் விஜய் பெரம்பூரில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'நான் பெரம்பூருக்கு வரலாமாப்பா?' - நிர்வாகிகளிடம் ஜாலியாக தொகுதியை உறுதி செய்த விஜய்!
தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதற்கட்ட வேட்பாளர்களை நேற்று பனையூரில் நேரில் அழைத்து விஜய் பேசியிருந்தார். அப்போது விஜய் தான் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதை நிர்வாகிகள் மத்தியில் உறுதிப்படுத்தி பேசியிருக்கிறார். தவெக நிர்வாகிகள் தவெக சார்பில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் 60 வேட்பாளர்களை விஜய் நேற்று பனையூரில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆலோசனை கூறியிருந்தார். 'உங்களையெல்லாம் எம்.எல்.ஏவாக பார்க்க வேண்டும். மக்களுக்கு பணி செய்ய வேண்டுமென்று வந்துவிட்டோம். நமக்கு எவ்வளவு சிக்கல்கள் எழுந்தாலும் களத்தில் தைரியமாக வேலை பாருங்கள்' என ஊக்கப்படுத்தும் வகையில் வேட்பாளர்களிடம் பேசியிருக்கிறார். விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று பெரம்பூர் தொகுதியின் நிர்வாகிகளும் பனையூருக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். விஜய் அவர்களிடம் தனியாக பேசுகையிலயே தான் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது . விஜய் 'நான் பெரம்பூருக்கு வரலாமாப்பா...' என ஜாலியாக சிரித்தபடியே விஜய் நிர்வாகிகளிடம் கேட்க, 'ஒவ்வொரு குடும்பமும் உங்களை அவங்க வீட்டுப் பிள்ளையா பார்க்குறாங்க. எங்க அண்ணன் எங்க தொகுதிக்கே வந்துருக்காருன்னு திருவிழாவா கொண்டாடி ஜெயிக்க வைப்பாங்க' என நிர்வாகிகள் பதில் கூற விஜய் குஷியாகியிருக்கிறார். 'நீங்கெல்லாம் செய்யுற எல்லா பணியையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன். ரொம்ப நல்லா பண்றீங்க. தொடர்ந்து மக்களை சந்திங்க. நானும் சீக்கிரமே தொகுதிக்கு வரேன்' எனக் கூறி மகிழ்ச்சியாக அந்த நிர்வாகிகளை அனுப்பி வைத்திருக்கிறார். விஜய் விஜய்யே அவர் பெரம்பூரில் நிற்கப்போவதை உறுதி செய்திருப்பதால் 'வட சென்னை' அரசியல் சூடுபிடிக்கத் தொடஙகியிருக்கிறது. ஏற்கனவே பெரம்பூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் த. வெ. க நிர்வாகிகளும் விஜய் பெரம்பூரில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர் தட்டுப்பாடு: உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமா? நான் தருகிறேன் - நயினார் நாகேந்திரன்
திருச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாளை பிரதமர் தலைமையில் திருச்சி பஞ்சப்பூரில் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், என்.டி.ஏ-வின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.க தலைவர் ஜி.கேவாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நாளை நடைபெறும் விழா தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான விழாவாக இருக்கும். இதில், 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள். பிரதமர் தலைமையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாது. விரைவில் நாங்கள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம். தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க தான் வெல்லும் என முதலமைச்சர் கூறுகிறார். nainar nagenthiran ஆனால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்கப் போவது தமிழக மக்கள்தான். தி.மு.க ஆட்சிக்கு வந்து 28 மாதம் 1000 கொடுக்கவில்லை. பாராளுமன்றத் தேர்தல் வந்ததால் அதைக் கொடுத்தார்கள். இந்தாண்டு தேர்தலால் பொங்கல் பணம் கொடுத்தார்கள். விஜய்யை சி.பி.ஐ விசாரணைக்கு அழைத்துள்ளது. சி.பி.ஐ , அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமான அமைப்பு. எங்கள் கூட்டணியில் புது கட்சிகள் வரலாம். ஆனால், விஜய் வருவது குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய். நான் கேஸ் டீலர் எங்கு உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமோ நான் தருகிறேன். ஹோட்டல்களில் உணவுகளைக் குறைத்ததற்கும் சிலிண்டருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஹோட்டல்களில் உணவு இல்லை என எதிர்க்கட்சிக்காரர்கள் எழுதி போட்டிருப்பார்கள். அ.தி.மு.க தனித்துதான் ஆட்சி அமைக்கும். தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மற்ற கட்சிகள் குறித்து தி.மு.க கவலைப்பட வேண்டியதில்லை. விஜய் தங்களுடைய கட்சியின் கொள்கை என்ன என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு கொள்கை எதிரி பா.ஜ.க எனக் கூறட்டும். வெறும் கொள்கை என்கிற வார்த்தையை மட்டும் கூறுவதால் அதற்கு என்ன அர்த்தம் எனத் தெரியவில்லை. சீனி என எழுதி வைத்தால் மட்டும் இனிக்காது என்றார். தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் கையிருப்பு நிலவரம்! எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?
போர் தொடர்ந்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவு ஏற்படும் - எச்சரிக்கும் சவுதி அராம்கோ CEO
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதல் நீடித்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியத்தில் சுமார் 20% இந்த கடல் வழியாகத்தான் செல்கிறது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்த போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் இந்த இடையூறு தொடர்ந்தால், உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தும். எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், உலக பொருளாதாரத்திலும் கடுமையானத் தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
திமுக-வின் `தொகுதி குறைப்பு நடவடிக்கை' - அப்செட்டில் கூட்டணி கட்சிகள்; புதிய யுக்தியுடன் அறிவாலயம்!
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால், அதை இறுதி செய்யும் வேலையை தி.மு.க தலைமை கையில் எடுத்துள்ளது. ஆனால், தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்காமல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என கூட்டணி கட்சியினர் முரண்டு பிடிக்கிறார்கள். இதனால் கணக்கை முடித்து தேர்தல் தேர்தல் வேலையை துவக்குவது எப்போது என ஆலோசிக்கிறது அறிவாலய வட்டாரம். திருச்சியில் நடந்த மாநாடு தி.மு.கவுக்கு திருப்பம் தரும் மாநாடாக இருக்கும் என தி.மு.க தலைமை உற்சாகத்துடன் சொல்லிவருகிறது. ஆனால், “கூட்டணிக் கட்சிகளை உற்சாகப்படுத்தாமல், எப்படி தி.மு.கவுக்கு மட்டும் மாநாடு திருப்பம் தரும்” என கடுப்பில் இருக்கிறார்கள் கூட்டணிக் கட்சியினர். ஸ்டாலின் - திமுக தொகுதி குறைப்பு நடவடிக்கை இன்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொகுதி உடன்படிக்கையை இறுதி செய்ய அறிவாலயத்திற்கு வந்தனர். தி.மு.க தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை செய்தனர். அப்போது, `கடந்த முறை உங்களுக்கு ஆறு இடங்களை ஒதுக்கினோம், இந்த முறை ஒரு இடத்தையாவது குறைத்து கொண்டு ஐந்து இடங்களை வாங்கிக்கொள்ளுங்கள்' என தேர்தல் பேச்சுவார்த்தை குழுவினர் சொல்ல, கடும் டென்சனில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்துள்ளார்கள். “நாங்கள் இந்த முறை கூடுதல் தொகுதியை எதிர்பார்தோம். அதை தர முடியாவிட்டால் கூட பராவாயில்லை. இருக்கிற தொகுதியையும் குறைக்க சொல்வது நியாயமா?”என்று கடுப்பில் கேட்டுள்ளார்கள். மற்றொரு புறம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் நான்கு தொகுதிகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று ஏற்கனவே தி.மு.க தரப்பு சொல்லியுள்ளார்கள். அதற்கு அவர்கள், `ஆறுக்கு குறைவாக ஒரு இடத்தை கூட நாங்கள் வாங்க மாட்டோம்' என்று உறுதியாக சொல்லியுள்ளார்கள். இவர்கள் எல்லாம் ஒருபுறம் என்றால் மறுமலர்ச்சி தி.மு.க கடந்த முறை ஆறு இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை அவர்களை நாலு இடங்களில் மட்டும் போட்டியிட வைக்க தி.மு.க வலியுறுத்தி வருகிறது. மேலும் 2028-ம் ஆண்டு நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்தை மறுமலர்ச்சி தி.மு.க-வுக்கு வழங்குவோம் என தி.மு.க உறுதி கொடுத்துள்ளதாம். ஆனால் இதை ம.தி.மு.க தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. துரை வைகோ தி.மு.கவின் இந்த தொகுதி குறைப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ம.தி.மு.க நாளை உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தை நடத்த உள்ளது . தி.மு.க வின் தொகுதி குறைப்பு நடவடிக்கை குறித்து அதில் ஆலோசிக்க உள்ளார்கள். ஏற்கனவே வி.சி.கவும் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று தி.மு.க தலைமையிடம் அழுத்தம் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து கூட்டணிக்கட்சிகள் அழுத்தம் கொடுப்பதால் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தி.மு.க தலைமை தவித்து வருகிறது. இழுபறி இதுவரை காங்கிரஸ், ஐ.யு.எம்.எல், ம.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணியை இறுதி செய்துள்ளது தி.மு.க. பிற கட்சிகள் கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாமல் சீட் விவகாரம் இழுபறியாக உள்ளது. தி.மு.க நிர்வாகிகள் நம்மிடம், “ தி.மு.க தலைமை தேவையில்லாமல் முதலில் தே.மு.தி.க-வுக்கு எட்டு தொகுதிகள் என்று இறுதி செய்துள்ளனர். அந்த விவரம் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தெரிந்த பிறகு, கடும் கடுப்பில் இருக்கிறார்கள். அதுவும் ராஜ்யசபா சீட் கொடுத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வி.சி.க , கம்யூனிஸ்ட், ம.தி.மு.க என அனைவரும் தங்களுக்கு தே.மு. தி.க எண்ணிக்கையில் சீட் வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் எல்லாக் கட்சியுடனும் கூட்டணியை இறுதி செய்ய தலைமை உத்தரவிட்டுள்ளது. திமுக - அண்ணா அறிவாலயம் புதிய யுக்தி இதனால் புதிய யுக்தியை தி.மு. க கையில் எடுக்க உள்ளது. தே.மு.தி.க-விடம் பேசி எட்டு தொகுதிகளுக்கு பதிலாக ஆறு தொகுதிகளை இறுதி செய்ய உள்ளோம். அதே ஆறு எண்ணிக்கையை கம்யூனிஸ்ட், வி.சி.க , ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு கொடுத்து தொகுதி பேச்சுவார்த்தையை இறுதி செய்ய தி.மு.க தலைமை முடிவெடுத்துள்ளது. கூட்டணி கட்சிகளிடம் தொகுதிகளை குறைக்க சொல்லி வழக்கம் போல பேசுவோம். படியாவிட்டால் மட்டுமே கடைசியாக இந்த கணக்கை செயல்படுத்த உள்ளோம்” என்கிறார்கள்.
'நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் வேல்முருகன்!' - கூடுதல் தொகுதி கிடைக்குமா? த.வா.க ப்ளான் என்ன?
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறத் தொடங்கியிருக்கிறார். த.வா.க-வுக்கு ஒதுக்கும் 1 தொகுதியில் வேல்முருகனே களமிறங்குவார் எனச் சொல்லப்பட்ட சூழலில் 'த.வா.க-வில் விருப்ப மனு விநியோகம் ஏன்?' என விசாரித்தோம். ஸ்டாலின் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ஐக்கியமானது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அப்போதே ஒரு எம்.பி சீட் கேட்ட அவருக்கு 2021-ல் ஒரேயொரு எம்.எல்.ஏ சீட்டைக் கொடுத்து ஆஃப் செய்தது தி.மு.க. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு எம்.பி சீட் கேட்டபோது கிடைக்கவில்லை. இச்சூழலில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு எத்தனை சீட் என்ற எதிர்பார்ப்பு த.வா.க முகாமை ஆட்டிப்படைக்கிறது. நம்மிடம் பேசிய அந்தக் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள், “சாதி கட்சியாக நாங்கள் செயல்படவில்லை என்றாலும், வடமாவட்டங்களில் வன்னியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் வேல்முருகன். பா.ம.க பிளவடைந்திருக்கும் இச்சூழலில் ஏராளமான பா.ம.க-வினர் எங்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள். தி.மு.க கூட்டணியில் இணைந்த இந்த 8 ஆண்டுகளில் வடமாவட்டங்களில் பா.ம.க-வுக்கு இணையான கிளைக் கட்டமைப்பை உறுதி செய்திருக்கிறோம். விருப்ப மனு த.வா.க நிர்வாகிகள் சுப.உதயகுமாரின் பச்சைத் தமிழகம் கட்சியை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைத்திருக்கிறோம். நா.த.க-விலிருந்து வரும் இளைஞர்களுக்கு த.வா.க-தான் அடைக்கலம் கொடுத்துவருகிறது. எத்தகைய உழைப்பை தமிழக அரசியல் களத்தில் செலுத்தினாலும்கூட 1 எம்.எல்.ஏ சீட்டிலேயே நிற்கிறது தி.மு.க என வருந்தினர். இம்முறை எத்தனை சீட் கிடைக்கும் என த.வா.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம் பிப்ரவரி 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 5 முதல் 6 தொகுதிகள் வரையிலான கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் தி.மு.க தரப்பில் ஏற்கனவே உள்ள ஒரு தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள், விருப்ப மனு த.வா.க நிர்வாகிகள் தொகுதி வேண்டுமானாலும் மாற்றித் தருகிறோம் என்றனர். 'மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கு தாராளம் காட்டும் தி.மு.க எங்களுக்கு 2 சீட் தர மறுப்பது ஏன்?' என வடமாவட்ட அமைச்சர்களிடமும் முதல்வர் அலுவலகத்திலும் முறையிட்டார் அண்ணன் வேல்முருகன். ஒரு சீட் உறுதி.. இன்னொரு சீட் குறித்து பரிசீலிக்கிறோம் என தகவல்கள் வரவே நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறத் தொடங்கியிருக்கிறோம். இரண்டாவது சீட் கிடைக்கிறதோ இல்லையோ.. களப்பணிகளை செய்திட எங்கள் கட்சியில் பலநூறு இளைஞர்கள் தன்முனைப்புடன் இருக்கிறார்கள் என்பதை வெளிக்கொணருவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது என்கிறார்கள்.
'உதயசூரிய'னில் நிற்க வற்புறுத்தும் திமுக - உயர்நிலைக் குழுவை அவசரமாக கூட்டிய மதிமுக!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. இருக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா என கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் விவாதத்தைக் கிளப்பி விட்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒருவழியாக தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டன. தேமுதிகவுக்கும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் தொகுதிகளை அறிவிப்பதை பிறகு செய்யலாம் என இரண்டு தரப்பும் நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது. வி.சி.க. கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் ம.தி.மு.க - தி.மு.க இடையே கூட்டணி ஒப்பந்தம் குறித்துதான் கடந்த சில தினங்களாக பரபரப்பான பேச்சுகள் உலா வருகின்றன. வைகோ, ஸ்டாலின் 2021 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் நின்றது அந்தக் கட்சி. அப்போது துரை வைகோ கட்சிக்குள் வந்திருக்கவில்லை. அவர் என்ட்ரி ஆன பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க மறுத்து தனிச் சின்னத்தில் நின்று வென்றார் அவர். இந்த முறையும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க திமுக தலைமை வற்புறுத்துவதாக தகவல்கள் கசிகின்றன. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வைகோவிடமே இது குறித்துப் பேசியதாகவும், ஆனால் வைகோ அந்த இடத்தில் எந்தப் பதிலும் சொல்லவில்லை என்றும் சொல்கிறார்கள். துரை வைகோவோ இந்த முறை நிச்சயம் தனிச் சின்னத்தில்தன் நிற்க வேண்டும், அப்போதுதான் கட்சிக்கு அந்தஸ்தை மீட்க அது உதவும் என நினைக்கிறாராம். durai vaiko ஆனால் தனிச் சின்னம் என்றால் சீட்டுகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்கிறதாம் திமுக தலைமை. இந்தச் சூழலில்தான் கட்சியின் அவசர உயர்நிலைக் குழுக் கூட்டத்தை நாளை கூட்டியிருக்கிறார் வைகோ. திமுக தலைமை தரும் அழுத்தம், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படுமென்கிறார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது- பிரதமர் மோடி
தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது என்று மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பிரதமர் மோடி 2026 தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாக தமிழகம் வர இருக்கிறார். கடந்த ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் முதன்முறையாக ஒன்றாக பங்கேற்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னர் 2-வது முறையாக புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். இதனிடையே மூன்றாவது முறையாக நாளை (மார்ச். 11) மாலை திருச்சியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலம் அடைந்து வருவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும், நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். பிரதமர் மோடி அதனால் தான் தேசிய ஜனநாயக்கூட்டணி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். திருச்சியில் நாளை மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக் கூட்டணி கூட்டத்தில் தமிழக தலைவர்களுடன் நானும் இணைகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் கையிருப்பு நிலவரம்! எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?
அமெரிக்க, இஸ்ரேல் படைகள் ஈரான் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலை ஆரம்பித்து ஒரு வாரம் கடந்து விட்டது. 'அமெரிக்கப் படைகளுக்கு தளம் அமைக்க உதவுகின்றன' எனச் சொல்லி வளைகுடா நாடுகள் சிலவற்றின் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது ஈரான். எண்ணெய் வளம் நிறைந்த நாடுகள் ஈடுபட்டிருக்கும் இந்தப் போரால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் உண்டாகியுள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் ஏகப்பட்ட கப்பல்கள் நடுக்கடலில் நிற்கின்றன. இந்தச் சூழலில் போர் தொடங்கியதுமே இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு வரலாம் என்கிற பேச்சு அடிபட்டது. ஆனால் 'பயப்படத் தேவையில்லை அடுத்த சில தினங்களுக்கான தேவையான கையிருப்பு நம்மிடம் இருக்கிறது' எனக் கூறி வந்தது மத்திய அரசு. ஆனால் நேற்று கர்நாடகாவில் இந்தச் சிக்கல்களுக்கான தொடக்கப் புள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. அங்கு சிலிண்டர் தட்டுப்பாடைக் காரணமாகச் சொல்லி உணவகங்கள் தற்காலிகமாக மூட இருப்பதாக அறிவித்துள்ளனர். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் பிரச்னை பெங்களூருவுக்கு வந்து விட்டால், சென்னைக்கு வர எத்தனை நாள் ஆகப் போகிறது? எனவே ஒருவேளை சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் எழுந்தால் சமாளிப்பது எப்படி என ஆராய தமிழ்நாடு அரசும் அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளது. 'சமையல் சிலிண்டர் விநியோகத்தில் தற்போதைய நிலை என்ன, தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடைத் தடுக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சென்னை பிரிவைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம் இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள். 'பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் அதிக எடையுள்ள சிலிண்டர்களின் சப்ளையில் மட்டுமே கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருக்கோம். கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்த சிலிண்டர் இல்லாட்டி மின்சார அடுப்புகள் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்காது. மத்தபடி சாதாரண ஹோட்டல்களூக்கு, வீடுகளுக்குப் பெரும்பாலானவங்க பயன்படுத்துகிற 14 கிலோ எடையுள்ள சிலிண்டர், மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்ன்படுத்துகிற 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களின் சப்ளையில் இன்றைய தேதிக்கு பிரச்னை இல்லை. அதனால் மக்கள் பீதியடைஞ்சு சிலிண்டர்களை வாங்க அவசரம் காட்டத் தேவையில்லை. இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL) அதேநேரம், நமக்குத் தேவையான எல்.பி.ஜி.க்கு வளைகுடா நாடுகளை பெருமளவு நம்பியிருக்கோம். அங்க இருந்து கப்பல்களில் வரும். மார்ச் 7ம் தேதிக்குப் பிறகு இறக்குமதி நடக்கவில்லை. அதனால போர் தொடர்ந்தா கேஸ் கிடைக்கிறதுல சிக்கல் நீடிக்கதான் செய்யும். தொடர்ந்து சிக்கல் நீடித்ததுன்னா, அந்த சந்தர்ப்பத்தை எப்படி கையாளறதுன்னு அரசு தான் முடிவெடுக்கணும்'' என்கின்றனர்.
ஆளுநர் மாற்றம்... குடியரசுத் தலைவர் அதிருப்தி - மேற்கு வங்கத்தில் சுழன்றடிக்கும் `அரசியல் புயல்!'
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் தேர்தல் சூடு பரவியிருக்கிறது. தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் பதவிக்காலம் மே 7, 2026 அன்று முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. ஆளுநர் மாளிகை மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகம் ஆகிய இரு உயரிய அரசியலமைப்பு பதவிகளும், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜக இடையிலான அரசியல் மோதலுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மம்தா பானர்ஜி - ஆனந்த போஸ் ஆளுநர் மாற்றமும் - மம்தா அச்சமும் கடந்த மார்ச் 5-ம் தேதி, மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் யாரும் எதிர்பாராத விதமாகத் தனது ராஜினாமாவை அறிவித்தார். இது முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அவருக்குப் பதிலாக, தமிழ்நாட்டில் தி.மு.க அரசுடன் தொடர் மோதல்களை உருவாக்கிய ஆளுநரும், முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான ஆர்.என். ரவி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த மாற்றம் நடந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தன் திடீர் ராஜினாமா குறித்து பேசிய ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், ``என் ராஜினாமா தனிப்பட்ட முடிவு. காரணங்கள் ரகசியமானவை. பொருத்தமான நேரத்தில் காரணத்தைக் கூறுவேன் என்றார். ஆளுநர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி, ``தற்போதைய அரசியல் சூழலைப் பார்க்கும்போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, பா.ஜ.க-வின் அரசியல் லாபத்திற்காகச் செயல்படுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். இதில் நான் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். மம்தா பானர்ஜி அதைத் தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆளுநர் ஏன் திடீரென ராஜினாமா செய்ய வேண்டும்? இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். திட்டமிட்டபடி வடக்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க வேண்டிய ஆளுநர், திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்டது ஏன்? தங்களுக்குப் பணிந்து போகும் ஒரு 'சொல்பேச்சுக் கேட்கும்' ஆளுநரை நியமிக்கத்தான் இவரை நீக்கினீர்களா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மம்தா பானர்ஜியின் இந்தக் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மறுத்து, 'ஆளுநர் ஆனந்த போஸ் தனது உடல்நலக் காரணங்களுக்காகவே பதவியை ராஜினாமா செய்தார்' என விளக்கம் அளித்தது. மம்தாவின் விமர்சனமும் குடியரசுத் தலைவரின் குற்றச்சாட்டும் இதற்கிடையில் மார்ச் 7, 2026 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வடக்கு வங்காளத்தின் சிலிகுரி அருகே பிதான்நகர் பகுதியில், 9-வது சர்வதேச சந்தால் (Santhal) பழங்குடியினர் மாநாட்டில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியும் திட்டமிட்டப்படி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மேற்கு வங்க அரசு இறுதி நேரத்தில் இடத்தை மாற்றி, சிறிய இடமான பாக்டோக்ரா பகுதி, கோசைன்பூருக்கு நிகழ்ச்சியைக் கொண்டு சென்றது. இதனால் பழங்குடியின மக்கள் பெருமளவில் வர முடியவில்லை குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கலந்துகொண்டனர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குற்றம்சாட்டினார். ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த நிகழ்ச்சிக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ, அமைச்சர்களோ யாரும் செல்லவில்லை. சிலிகுரி மேயர் கௌதம் தேப் மட்டுமே வரவேற்றார். அதைத் தொடர்ந்து 'வழக்கமான நெறிமுறை (protocol) பின்பற்றப்படவில்லை' என்று குடியரசுத் தலைவர் இரண்டாவது குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய திரௌபதி முர்மு, ``பழங்குடியின மக்களை இந்த நிகழ்ச்சிக்கு வரவிடமல் தடுத்து நிறுத்தியது போல் தெரிகிறது. இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதால் மக்கள் வர முடியவில்லை. மாநில அரசு பழங்குடியினரின் நலனை விரும்பவில்லை போலும். நானும் இந்த வங்கத்தின் மகள் தான். மம்தா பானர்ஜி என் இளைய தங்கை. அவர் என்னுடன் கோபமாக இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் சரி, அவருக்கு நலமே விழைய விரும்புகிறேன்.” என உணர்ச்சிவசப்பட்டு பேசினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் இந்த உரைக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, ``இது தனியார் அமைப்பு (சந்தால் அமைப்பு) நடத்திய நிகழ்ச்சி. மாநில அரசின் நிகழ்ச்சி அல்ல. இதில் எங்கே நெறிமுறை மீறப்பட்டிருக்கிறது?பா.ஜ.க-வின் ஆலோசனையில் அரசியல் செய்ய வேண்டாம் என குடியரசுத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன். SIR மூலம் எத்தனை பழங்குடியினர் பெயர்கள் நீக்கப்பட்டன? அதைப் பற்றி ஏன் பேசவில்லை? தேர்தல் நேரத்தில் குடியரசுத் தலைவரை பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள் என்றார். மம்தா பானர்ஜி இந்த நிகழ்வுக்குப் பிறகு பா.ஜ.க தலைவர்கள், ``குடியரசுத் தலைவரை அவமதித்து, பழங்குடியினர் மரியாதைக்கு உலை வைத்துவிட்டார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தனர். பிரதமர் மோடி, இந்த சம்பவத்தை ``வெட்கக்கேடானது, குடியரசுத் தலைவருக்கு முன்னெப்போதும் இல்லாத அவமதிப்பு” என்று கண்டித்திருக்கிறார். உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு நடுவேதான் மேற்கு வங்கத்தில் சுதந்திரமான தேர்தல் நடத்த 'குடியரசுத் தலைவர் ஆட்சி'யே தீர்வு என பாஜக எம்.பி. ராஜு பிஸ்தா பேசினார். அவரின் இந்த வார்த்தை மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலளித்த திரிணமுல் காங்கிரஸ், முதலில் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை நீக்கப் பார்த்தார்கள், பிறகு ஆளுநரை மாற்றினார்கள்; இப்போது இவை அனைத்தும் தோல்வியடைந்ததால், தேர்தலைத் திருடுவதற்காகக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க துடிக்கிறது எனச் சாடியுள்ளது. வன்முறை - மேற்கு வங்கம் பழங்குடியின வாக்கு வங்கிப் போர் குடியரசுத் தலைவரின் பேச்சுக்குத் திரிணமுல் காங்கிரஸ் இவ்வளவு கடுமையாகப் பதிலளிக்கக் காரணம், வடக்கு வங்காளத்தில் உள்ள பழங்குடியின மக்களின் வாக்குகள் ஆகும். ஏற்கனவே அங்கு பழங்குடியினப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், பழங்குடியின மக்களின் வாக்கு வங்கியை தக்கவைக்க இரு தரப்பும் போராடி வருகிறது. மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் மொத்த மக்கள்தொகையில் சுமார் 5.8% ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த பட்டியலின மக்கள்தொகை: 52,96,963. வடக்கு வங்கம் பகுதிகளில் பட்டியலின மக்கள் 10-25% வரை வாழ்கின்றனர். சில தொகுதிகளில் 20-25% வரை பழங்குடியின வாக்குகள் இருப்பதால், அங்கு அவர்கள் முடிவெடுக்கும் சக்தி கொண்டவர்களாக உள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்ட சந்தால் (Santal) இனம் மட்டும் மாநில ST மக்கள்தொகையில் 51-52% ஆக உள்ளனர். எனவே, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வடக்கு வங்கத்தில் பழங்குடியின வாக்குகள் முக்கியமானவை. அதனால்தான் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க என இரு தரப்பும் அந்த மக்களைக் குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றன. சட்டமன்றத் தேர்தலை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போதைய சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது சாத்தியமில்லை என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகையும், குடியரசுத் தலைவரின் கருத்தும் வங்காளத் தேர்தலை ஒரு தேசிய அளவிலான முக்கியப் பிரச்னையாக மாற்றியுள்ளது. தீதியின் அடுத்தடுத்த சம்பவங்கள் என்ன என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில்
அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய்யைப் பொறுத்தவரை நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கின்றேன். தவெக - விஜய் அதிகாரப்பூர்வமாக இந்த கட்சியினுடைய தலைவர் நயினார் நாகேந்திரன். அவர் இது போன்ற பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றார். என்னைப் பொறுத்தவரை டீயும், காபியும் எப்போதும் ஒன்று சேராது என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன், காரணம் சித்தாந்தங்கள் வேறு. ஆனால் இன்றைக்கு ஊடக நண்பர்கள் உங்களுடைய யூகத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் இன்றைக்கு வலிமையாக இருக்கிறோம். அண்ணாமலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது, தேர்தலைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறோம். பெரும் வெற்றியை நாங்கள் பெறுவோம் என்கின்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.
`என்.டி.ஏ கூட்டணியில் தவெக-வா?' - செய்தியாளர்களின் கேள்விக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதில்!
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்தை தொடங்கி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என, தீயாக இருக்கிறது தேர்தல் களம். அதன் ஒரு பகுதியாக இன்று தவெக தலைவர் விஜய், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த நிர்வாகிகளை நேரில் அழைத்து நேர்காணல் நடத்தினார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், ``தலைவர் விஜய் விருப்ப மனு கொடுத்த முக்கிய நிர்வாகிகள சந்தித்து முதற்கட்ட நேர்காணல் நடத்தி முடித்திருக்கிறார். தொடர்ந்து நேர்காணல் நடைபெறும். நாங்கள் பா.ஜ.க கூட்டணியில் இணையப் போவதாக யூகங்கள் கிளம்புகிறது. யூகங்களின் அடிப்படையில் எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை. சிடிஆர் நிர்மல் குமார் ஏதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்தால், அது கட்சித் தலைமையால் முறைப்படி அறிவிக்கப்படும். யூகங்களுக்குக் கருத்துச் சொல்லி நேரத்தை வீணடிக்க நாங்கள் தயாராக இல்லை. ஏற்கெனவே இரண்டு முறை டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகி அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டுவிட்டன. தற்போது தலைவருக்குப் பல பணிகள் இருப்பதால், விசாரணையைச் சென்னைக்கு மாற்றவோ அல்லது வேறு தேதி வழங்கவோ கோரியிருந்தோம். அதனடிப்படையில், வரும் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு புதிய சம்மன் கிடைத்துள்ளது. இது குறித்து ஆலோசித்துவிட்டு, முடிவெடுக்கப்படும். கரூர் சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த வாரமே இது தொடர்பான செய்திகள் வெளியாகின. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, பல்வேறு விவகாரங்களில் விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜிதான். சிபிஐ விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. vijay தேர்தலுக்கான விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 150-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாகப் பல ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தனித்தனியாக அழைத்து தலைவர் நேர்காணல் நடத்தி வருகிறார். அனைத்துத் தொகுதிகளுக்கான நேர்காணல்களும் முடிந்த பிறகு, தகுதியான வேட்பாளர்கள் அடங்கிய முழுமையான பட்டியலைத் தலைமை முறைப்படி வெளியிடும். என்றார். ஆதவ் அர்ஜுனா: நான் DMKவில் இருந்து வெளியேறியது ஏன்?- Aadhav Arjuna Answer| Vikatan Medai | Vijay #2
பிரதமரின் தமிழ்நாடு வருகை; ரூ.5,650 மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் மோடி!
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை (மார்ச் 11, 2026) தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது, இரு மாநிலங்களிலும் மொத்தம் ரூ.16,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலில், ``நாளை மதியம் 1:30 மணியளவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெறும் விழாவில் ரூ.10,800 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி கொச்சி பிபிசிஎல் (BPCL) சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5,500 கோடி மதிப்பிலான 'பாலிப்ரோப்பிலீன்' (Polypropylene) உற்பத்தி பிரிவிற்கு அடிக்கல். ரூ.2,650 கோடி மதிப்பிலான என்.ஹெச்-66 சாலைத் திட்டம் மற்றும் கோழிக்கோடு புறவழிச்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மேலும், ஷோரனூர் - நிலம்பூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையையும் தொடங்கி வைத்து, பாலக்காடு - பொள்ளாச்சி இடையே புதிய ரயில் சேவையைக் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார். கேரளப் பயணத்தை முடித்துக்கொண்டு மாலை 5:45 மணியளவில் திருச்சி வரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் விழாவில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடி முதலீட்டில் 'சிட்டி கேஸ்' (City Gas) விநியோகக் கட்டமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் சுமார் 8.8 லட்சம் வீடுகளுக்குக் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை மணலியில் ரூ.1,490 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (IOCL) லூப் கலவை ஆலையை (Lube Blending Plant) அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மோடி தமிழகத்திலிருந்து தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கு இந்தியாவுக்குச் செல்லும் வகையில் 2 அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 3 புதிய ரயில் சேவைகளைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் (PMGSY) தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை அவர் திறந்து வைக்கிறார். மேலும், கங்கை கொண்ட சோழபுரம் அருகே அமையும் புதிய புறவழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ட்ரம்ப்-க்கு பயப்படும் 'அந்த' காரணம்; தெரிந்தால் மோடி ராஜினாமா? - சுப்ரமணியன் சுவாமி
கலைஞர் கனவு இல்லம்: ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழை மக்களுக்காக 4,29,394 வீடுகள்!
தென்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமா பார்க்கும் கல்லா ஒருவருக்கும் உண்பது நாழி உடுப்பது இரண்டே பிறவும் எல்லாம் ஓரோக் கும்மே! -என்று புறநானூறு 189 ஆம் பாடல் சொல்கிறது. அதாவது அரசன் ஆயினும், ஆண்டி ஆயினும் அனைவரும் உண்பது ஒரு நாழி அளவுள்ள உணவே. அவர்களுக்கு இடுப்பில் உடுக்கும் துணியும், உடம்பின் மேல் அணியும் துணியும் என இரண்டு துணிகள்தான் தேவை; இதுபோல் பிற அனைத்தும் எல்லோர்க்கும் ஒரே அளவில்தான் தேவைப்படும் என்கிறது இந்த புறநானூற்றுப் பாடல் இவற்றுடன் எல்லோரும் மழை, வெயில் காலங்களிலும் புயல் வெள்ளக் காலங்களிலும் பாதுகாப்பாகத் தங்கி வாழ ஒரு வீடு என்பது மிகவும் முக்கியம் ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்பதனை, ‘எலிவளை ஆயினும் தனிவளை தேவை’ என நம் நாட்டுப் பழமொழி கூறும். இவற்றின் அடிப்படையில்தான் நம் திராவிட மாடல் அரசு அனைவருக்கும் தேவைப்படும் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. எல்லார்க்கும் எல்லாம் என்னும் திராவிட மாடல் அரசின் தத்துவத்தைத் தான் இந்தப் புறநானூற்றுப் பாடல் முழங்குகிறது. கலைஞர் கனவு இல்லம் கலைஞர் கனவு இல்லம் எல்லோர்க்கும் உணவு தேவை. உணவுப் பொருள்களை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்குகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் நேரடி வருவாய் இல்லாத மகளிருக்கு நேரடியாகவே மாதம் ரூ.1000 தருகிறது. இந்த 1000 ரூபாயைக் கொண்டு தேவையானவைகளை வாங்கிக் கொள் என வழிகாட்டுகிறது திராவிட மாடல் அரசு! அடுத்து, எல்லோர்க்கும் வீடு வேண்டும் அல்லவா?அதற்காகத்தான் கலைஞர் கனவு இல்லம் திட்டம்! தமிழ்நாட்டில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எல்லோர்க்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது திராவிட மாடல் அரசின் இலக்கு. இதற்காக 2030 ஆம் ஆண்டிற்குள் 8 இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் வீதம் 2 இலட்சம் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டத்தை அனுமதித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் இரண்டே ஆண்டுகளில் 2 இலட்சம் வீடுகளில் 1,79,850 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டில் மேலும் 1 இலட்சம் வீடுகள் ரூ. 3500 கோடியில் கட்டப்படும் என அறிவித்துள்ளது திராவிட மாடல் அரசு இதில் ஒரு ஒப்பீடு 2016-2021 ஐந்து ஆண்டுகளில் முந்தைய ஆட்சியில் 1 இலட்சம் வீடுகள் தான் கட்டப்பட்டன. ஆனால் 2024-2026 இரண்டே ஆண்டுகளில் 1,79,850 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேலும் 1 இலட்சத்து 20 ஆயிரத்து 150 வீடுகள் கட்டப்படுகின்றன. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மட்டும் அல்ல! இலங்கை தமிழர்களுக்கு ரூ.589 கோடி ஒதுக்கீட்டில் 10,045 நிரந்தர வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 7,469 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து 1 இலட்சத்து 79 ஆயிரத்து 850 வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.3,058 கோடியில் 2.63 இலட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின்கீழ் ரூ.8,384 கோடியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு; மேலும் 53,467 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்தில் ஒரு ஒப்பீடு கலைஞர் கனவு இல்லம் 2016-2021 முந்தைய ஆட்சியில் 27,688 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்திய அயோத்திதாச பண்டிதர் குறியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.482 கோடி மதிப்பீட்டில் 5281 உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 23.56 இலட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியினர் நலம் நாடும் தொல்குடி திட்டத்தில் ரூ. 221 கோடி மதிப்பீட்டில் 7,674 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒற்றைச் சாளர முறை திட்டத்தின்கீழ் 24,446 மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கும், 2002 கட்டட அனுமதி விண்ணப்பங்களுக்கு திராவிட மாடல் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆகமொத்தம், திராவிட மாடல் அரசு 2021 முதல் ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகளைக் கட்டியுள்ளது. ரூ.482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 23.56 இலட்சம் ஏழைகளின் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி எல்லாருக்கும் எல்லாம் என்னும் தத்துவத்தின்படி திராவிட மாடல் அரசு ஏழை எளிய நலிந்த சமுதாய மக்களின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி தமிழ்நாட்டிற்குப் பெருமைகளைச் சேர்க்கிறது!
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன?- அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிலிண்டர் இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது. தேநீர்கடைகள், சிற்றுண்டிகள், உணவகங்கள் போன்றவை தனித்த வணிகங்கள் அல்ல. உணவகங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் கொள்முதல், உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட பிறகு அவற்றை பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்தல் என மிகப்பெரிய கொள்முதல் மற்றும் வினியோகச் சங்கிலியை உணவகங்கள் கொண்டுள்ளன. அவை மூடப்பட்டால் மூலப்பொருள்கள் கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மட்டுமின்றி, உணவகப் பணியாளர்கள், உணவகங்களை சார்ந்துள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும். அதுமட்டுமின்றி பணி நிமித்தமாக வீடுகளை விட்டு வெளியில் செல்லும் அடித்தட்டு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு கிடைக்காத நிலை உருவாகும். ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அம்மா உணவகங்களைக் கூட மூட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் மிக மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படக்கூடும். அதைத் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி, வினியோகம் ஆகியவை மத்தியப் பட்டியலில் 53-ஆம் இடத்தில் இருப்பதால், அதில் மாநில அரசு அதன் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஆனால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு தான் உள்ளது. அந்த வகையில் நிலைமையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது. இதற்காக திமுக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் வணிக சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் நாம் நினைத்துப் பார்ப்பதை விட மிக மோசமாக இருக்கும். எனவே, நாடகங்களை நடத்துவது, விளம்பரப் படங்களில் நடிப்பது போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, தில்லி சென்று மத்திய அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தி தமிழ்நாட்டுக்கு வணிக எரிவாயு உருளைகளை பெறுவது, தனியார் நிறுவனங்கள் மூலம் எரிவாயு உருளைகளை பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இன்னொருபுறம் திமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்த திமுக, ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு தமிழக அரசு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
LPG சிலிண்டர் தட்டுப்பாடு: `பொறுப்புள்ள அரசாக இதைச் செய்ய வேண்டும்!'- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் சிலிண்டரை பதுக்குவதை தடுக்க வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியான எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ஹோட்டல் துறை கடுமையாக பாதித்து இருக்கிறது. இதுபோன்ற நிலை தமிழ்நாட்டின் சிலப் பகுதிகளில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். முதல்வர் ஸ்டாலின் அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். நாடு முழுவதும் வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு; ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்!
பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு- பா.ரஞ்சித் காட்டம்
மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இந்தச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற இளைஞர் காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும் காவல்துறையும். ஆகாஷ் 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லையென்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காவல்துறையினர் உரிய நடவடிக்கையோ பாதுகாப்போ அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை பட்டியல் சமூக மக்கள் இழந்துவருகிறார்கள். சமூக இயக்கங்களும் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் நீதிமன்றங்களும் தொடந்து இதனை கவனப்படுத்தி வருகிறபோதிலும் திமுக அரசு இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்பும் இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக - அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படை உரிமைக்காகவே வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கரசியலுக்காக கூட பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு. எல்லா அதிகார மட்டத்திலும் கைவிடப்பட்டவர்களாகவே பட்டியல் சமூக மக்களின் நிலை இருக்கிறது. “அரசியலில் நாம் ‘ஒரு மனிதன் – ஒரு ஓட்டு – ஒரு மதிப்பு’ என்ற சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சமூகமும் பொருளாதாரமும் சமத்துவமற்றதாகவே இருந்தால், இந்த ஜனநாயகம் நீண்ட காலம் நிலைக்காது” என வலியுறுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர். பா. ரஞ்சித் இன்று பட்டியல் சமூக மக்களின் உயிர் பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், இந்த எச்சரிக்கை இன்னும் தீவிரமான அரசியல் கேள்வியாக மாறியுள்ளது. ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களின் பிரச்சினைகளை பேச பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களோ அந்தப் பிரச்சினையை பேசாத பட்டியல் சமூகப் பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பட்டியல் சமூக மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க முன்னெப்போதையும் விட அணியமாக வேண்டிய தேவையும் இருக்கிறது, அதுவே இந்நிலையை மாற்றும் என்று தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரி: `ஹோட்டல்னு நினைச்சி தூங்கிட்டோம்'- ஆளுநரை அலற வைத்த போதை இளைஞர்; பதறிய போலீஸ்!
புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனால், கடற்கரை சாலையில் கலாசார மையத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தை தற்காலிக ஆளுநர் மாளிகையாக மாற்றி, அங்கு குடும்பத்துடன் குடியேறினார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, 24 மணி நேரக் கண்காணிப்பு என அந்த இடமே ஒரு கோட்டை போலக் காட்சியளிக்கும். புதுச்சேரி ஆளுநர் மாளிகை நேற்று நள்ளிரவு மது போதையில் கடற்கரை சாலையில் நடந்து வந்த இரண்டு இளைஞர்கள், ஆளுநர் மாளிகையின் அழகைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். அத்துடன் நிற்காமல் அதன் சுவரில் ஏறிக் குதித்து ஆளுநர் மாளிகைக்குள் சென்று, அங்கிருந்த அறைகளை திறந்து திறந்து பார்த்திருக்கிறார்கள். அனைத்திலும் உயர்தர படுக்கைகளுடன் ஐந்து நட்சத்திர விடுதி அறைகளைப் போல இருந்ததால், உற்சாகமான அவர்கள் ஆடைகளை கலைந்துவிட்டு அந்த படுக்கையில் அயர்ந்து தூங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மீண்டும் ஆளுநர் மாளிகையின் சுவர் ஏறிக் குதித்து வெளியில் சென்றிருக்கிறார். இவர்கள் தூங்கிய அறைக்குப் பக்கத்து அறையில் ஆளுநர் மகன் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பக்கத்து அறையில் கேட்ட பேச்சு சத்தத்தில் எழுந்த அவர், அந்த அறைக் கதவை திறந்து பார்த்திருக்கிறார். அங்கு போதையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை அழைத்து அவர் யார் என்று கேட்டிருக்கிறார். அதிர்ந்து போன போலீஸார், அந்த நபரை எழுப்பி விசாரித்திருக்கிறார்கள். ஆனால் மது போதையில் இருந்த அவரால் சரியாக பேச முடியவில்லை. இந்த கலகலப்பில் ஆளுநர் கைலாஷ்நாதனும் அங்கு வந்துவிட்டிருக்கிறார். புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் அதனால் அவரை அலேக்காக தூக்கிய போலீஸார், முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போதையை `தெளிய’ வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு விரைந்து சென்ற காவல்துறை உயரதிகாரிகள், அந்த நபரிடம் விசாரணை செய்திருக்கின்றனர். அப்போது, `நானும் என் ஃபிரண்டும்தான் நைட் அந்த இடத்தைப் பார்த்தோம். ஹோட்டல் மாதிரி இருந்ததால் உள்ளே போய் படுத்து தூங்கிட்டோம். என்னுடன் வந்த என் ஃபிரண்ட் மறுபடியும் சுவர் ஏறி குதித்து வெளியில் போயிட்டான். உண்மையாவே நாங்க தூங்கத்தான் போனோம்’ என்று கூலாக கூறியிருக்கிறார் அந்த போதை நபர். ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி
Iran: `போர் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்' - அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது அமெரிக்காவிலும் எதிரொலித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்றும், போர் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அவர் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''ஈரானுக்கு எதிரான போர் குறுகிய காலமாக இருக்கலாம். ஆனால் இஸ்லாமிய குடியரசு ஒரு புதிய கடுமையான உச்ச தலைவரைத் தேர்ந்தெடுத்ததால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தடைபட்டால் சண்டை அதிகரிக்கும் சாத்தியம் இருக்கிறது. குறுகிய கால சுற்றுலா சில தீமைகளிலிருந்து விடுபட மத்திய கிழக்குக்கு ஒரு சிறிய சுற்றுலா சென்றோம். இது ஒரு குறுகிய கால சுற்றுலாவாக இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஈரானில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, ஈரான் பதிலளித்துள்ளது. ``அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் எப்போது நிறுத்தப்படும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது. நாங்கள் தான் முடிவு செய்வோம் இது குறித்து இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இப்பிராந்தியத்தின் எதிர்காலம் இப்போது எங்கள் கைகளில் உள்ளன. போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம். போரை அமெரிக்க படைகள் முடிவுக்கு கொண்டு வராது என்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. அடுத்த சில மணி நேரத்தில் அமெரிக்கத் தளபதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்திக்குள் எண்ணெய் ஓட்டத்தை தடுக்கும் வகையில் ஈரான் ஏதாவது செய்தால், அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதை விட இருபது மடங்கு அதிகமாக அமெரிக்காவால் தாக்கப்படுவர். கூடுதலாக, எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை நாங்கள் தாக்குவோம். இதனால் ஈரான் ஒரு தேசமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவது சாத்தியமற்றதாகிவிடும். மரணம், நெருப்பு மற்றும் சீற்றம் அவர்கள் மீது ஆட்சி செய்யும். ஆனால் அது நடக்கக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக பிரார்த்திக்கிறோம். இது சீனாவிற்கும், ஹார்முஸ் ஜலசந்தியை அதிகமாகப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவிலிருந்து ஒரு பரிசு என்று அவர் அதில் கூறியுள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது போரை முடிவுக்கு கொண்டு வர புடின் சில ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அதேசமயம் போர் தொடருமானால் வளைகுடா பிராந்தியத்தில் இருந்து ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் ஹார்மோஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கான உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக ஏற்கெனவே அப்பகுதியில் ஆயிரக்கணக்கான வணிகக் கப்பல் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. அதிகமான கப்பல்கள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு; ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் சிலிண்டரை பதுக்குவதை தடுக்க வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது புதிய சிலிண்டர் முன்பதிவுக்கு 21 நாள்கள் இடைவெளி இருக்கவேண்டும். இந்த இடைவெளியை மத்திய அரசு 25 நாள்களாக அதிகரித்து இருக்கிறது. இதில் அதிக அளவில் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியான எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ஹோட்டல் துறை கடுமையாக பாதித்து இருக்கிறது. சிலிண்டர் சப்ளை சீராகவில்லை என்றால் அடுத்த சில நாள்களில் உணவகங்கள் மூடப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கங்கள் எச்சரித்துள்ளன. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மும்பையில் உள்ள சுமார் 20% உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. பெங்களூருவில் உள்ள ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. பெங்களூருவின் புகழ்பெற்ற வித்யார்த்தி பவன் போன்ற பிரபல உணவகங்கள் தங்கள் செயல்பாடுகளைக் குறைத்துள்ளன. இது குறித்து அகில இந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவக சங்கத்தின் தலைவர் விஜய் ஷெட்டி கூறுகையில், ''பற்றாக்குறை வேகமாக பரவி வருகிறது. விரைவில் ஹோட்டல் துறை முடக்கப்படக்கூடும். இந்த பற்றாக்குறை தொடர்ந்தால் மும்பையில் உள்ள அனைத்து உணவகங்களும் அடுத்த இரண்டு நாட்களில் மூடப்படும் என்று தெரிவித்தார். மேலும், இந்த சங்கம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மகாராஷ்டிரா சிவில் சப்ளை துறை அமைச்சர் சகன் புஜ்பாலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஷெட்டி கூறினார். இன்றைய நிலவரப்படி, எங்கள் உறுப்பினர்களில் 10–20 சதவிகிதம் பேர் சிலிண்டர் பற்றாக்குறை பிரச்னையை எதிர்கொள்கின்றனர். நாளைக்குள் இது 60 சதவீதமாக இருக்கும். நாளை மறுநாள், உணவகங்களில் இது 100 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் அவை மூடப்படும் என்று அவர் கூறினார். வணிக சிலிண்டர் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை முதல் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வீட்டு சிலிண்டர்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு முதல் எட்டு நாள்கள் கழித்து டெலிவரி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து மும்பையில் ஹோட்டல் நடத்தி வரும் அன்னு ஷெட்டி கூறுகையில்,''வணிக எல்பிஜி சிலிண்டர்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. சில இடங்களில் அது கிடைக்கிறது, ஆனால் ரூ.1,750 விலையில் உள்ள சிலிண்டர் ரூ.1,950க்கு விற்கப்படுகிறது” என்று அவர் கூறினார். சில ஹோட்டல்கள் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றன. பெங்களூருவிலும் இதே நிலைதான் இருக்கிறது. இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், ''எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதால், நாளை முதல் ஹோட்டல்கள் மூடப்படும். சிலிண்டர் பற்றாக்குறை சாதாரண மக்கள், மாணவர்கள் மற்றும் தினசரி உணவுக்காக ஹோட்டல்களை நம்பியிருக்கும் மருத்துவ நிபுணர்களை பாதிக்கும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சந்த சங்கத்தின் தலைவர் பி.சி.ராவ் கூறுகையில்,''பற்றாக்குறை தொடர்ந்தால் ஹோட்டல் உரிமையாளர்கள் ஹோட்டல்களை மூடுவதை தவிர வேறு வழியில்லை. எரிவாயு இல்லாமல், நாளை முதல் ஹோட்டல்களில் உணவு மற்றும் சிற்றுண்டி கிடைக்காது. ஹோட்டல்கள் திறக்கப்படாது. நாங்கள் மத்திய அமைச்சர்களிடமும், பெங்களூருவைச் சேர்ந்த எம்.பி.க்களிடமும் பேசி தகவல் அனுப்பியுள்ளோம். எரிவாயு இல்லாமல், உணவு தயாரிக்க முடியாது, எனவே அரசாங்கம் உடனடியாக இதில் தலையிடவேண்டும்.” என்று கூறினார். இதே போன்று சென்னை, டெல்லி போன்ற நகரங்களிலும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், இந்தியா தனது எல்பிஜி இறக்குமதிக்கு 85% நம்பியிருக்கும் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு வரவேண்டிய எரிவாயு வரவில்லை.
'உதயசூரியன் சின்னம்' - மதிமுகவை நிர்பந்திக்கும் திமுக; டென்ஷனில் துரை வைகோ?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ம.தி.மு.க - தி.மு.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது ம.தி.மு.க. உதயசூரியன் சின்னத்திலேயே ம.தி.மு.க வேட்பாளர்கள் களமிறங்கி 4 இடங்களில் வெற்றிபெற்றனர். அதையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தில் திருச்சியில் போட்டியிட்டபோதும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்தித்தது தி.மு.க. அதற்கு 'உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்' ஆவேசம் காட்டினார் துரை வைகோ. ஒருவழியாக திமுகவும் சம்மதித்தது. ஆனால் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொல்லி நிர்பந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க சீனியர்கள் நிர்வாகிகள் 2026 சட்டமன்றத் தேர்தலில் 12 இடங்களில் போட்டியிட்டு குறைந்தது 7 இடங்களில் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. ஆனால் தற்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டு 6 தொகுதிகளை ஒதுக்குங்கள், தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என கேட்டிருந்தோம். ஆனால் 4-5 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என கறார் காட்டுகிறது அறிவாலயம். துரை வைகோ அதிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் நீங்கள் நிற்க வேண்டும் என தலைவரிடம் முதலமைச்சரே நேரடியாக கோரியிருக்கிறார். முதல்வரே நேரடியாக பேசுவதால் பொதுச்செயலாளர் வைகோ ஒப்புக்கொள்ளலாமா என்ற சிந்தனையில் இருக்கிறார். ஆனால், இதில் துரை வைகோவுக்கு துளியும் விருப்பமில்லை. 'நாடாளுமன்றத் தேர்தலில் போராடி தனிச் சின்னத்தில் நிற்கும் வாய்ப்பை பெற்றோம். இப்போது மீண்டும் தனிச்சின்னத்தில் நிற்க சொல்வது ஏற்கவே முடியாது. தி.மு.க-வின் இந்த கோரிக்கையை நாம் ஏற்க கூடாது' எனக் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார் என்றனர்.
திமுக கூட்டணி: `அரசியல்ல சங்கடங்கள் சாதாரணம்'பாஸ்! - வடிவேலு முதல் கமல், ஓ.பி.எஸ் வரை!
'மேனேஜர் கூட செட் ஆகலைனு கம்பெனி மாறினா, கடைசியில் நாம சேர்ந்த புது கம்பெனிக்கே அந்த மேனேஜரும் வந்துட்டாரு' - ஸ்டான்ட் அப் காமெடி ஏரியா ஒன்றில் தென்பட்ட ஒரு கமென்ட் இது. இன்றைய அரசியல் சூழலுக்கு ரொம்பவே பொருந்திப் போகிறது. 'நீ முன்னால போனா நான் பின்னால வருவேன்' என்கிற ரீதியில் கம்பெனி செட் ஆகாமல் சென்றவர்களும் அவர்களுக்குப் பின்னாடியே அவர்கள் சென்ற இடத்துக்கே சென்ற மேனேஜர்களும் யார் யார் பார்க்கலாமா? கமல் கமல்ஹாசனும் களை எடுக்க வேண்டிய முதல் நபரும்! 'கலைஞரின் மகனாகச் சொல்கிறேன்' என ஸ்டாலின் டிவியில் பேச... கையிலிருந்த டார்ச் லைட்கைக் கொண்டு டிவியை உடைத்தபடி நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியைத் துவக்கிய போது, அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இணைந்து செயல்பட்டவர் கோவையைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன். ம.நீ.ம சார்ப்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தேர்தலில் கமல் கோவை தெற்கில் போட்டியிட, இவர் சிங்காநல்லூரில் நின்றார். இந்த தேர்தலில் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத சூழலில், தேர்தலுக்குப் பிறகு 'கட்சியில் ஜனநாயகம் இல்லை' எனக் கூறி வெளியேறினார். பதிலுக்கு கமலுமே 'களத்தில் எதிரிகளுடன் துரோகிகளூம் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டேன். களையெடுக்கப் பட வேண்டிய பட்டியலில் முதல் ஆளாக இருந்ததே துரோகியான அவர்தான். ஒரு களையே தன்னை களை என புரிந்து விலகி விட்டது' என கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார். ம.நீ.ம வில் இருந்து வெளியேறிய மகேந்திரன் நேராகச் சென்றது திமுகவுக்குதான். அவர் மட்டும் செல்லாமல் 11,000 உறுப்பினர்களுடன் சென்று சேர்ந்தார். திமுக-வுமே கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு மாநில அளவில் கட்சியில் தகவல் தொழில் நுட்ப அணியில் இணைச் செயலாளர் பதவி தந்தது. மூன்றே வருடங்கள்தான். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. 'தமிழ்நாட்டு நலனுக்காக எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்குகிறோம்' என திமுகவுடன் கூட்டு சேர்ந்தார். அந்த தேர்தலில் ம.நீ.ம.. போட்டியிடாது, பதிலுக்கு அடுத்தாண்டு நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட் வழங்கப்படுமென ஒப்பந்தம் போடப் பட்டது. அடுத்த வருடம் ராஜ்ய சபா தேர்தலும் வந்து கமலும் ராஜ்யசபாவுக்குச் சென்று விட்டார். இதோ அடுத்த சட்டசபைத் தேர்தலும் வந்து விட்டது. திமுக - மநீம கூட்டணி முன்பை விட வலுவாகி விட்டது. இந்த முறை கோவையில் ஏதாவதொரு தொகுதியில் மகேந்திரன் திமுக சார்பில் நிற்பார் என்கிறார்கள். 'களை' மகேந்திரனுக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்வாரா... காலம் தான் பதில் சொல்லும். நீங்க இக்னோர் பண்ணலாம், நாங்க...? மறுமலர்ச்சி திமுகவில் வைகோவின் மகன் துரையுடன் செட் ஆகாமல் வெளியேறி 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற தனிக்கட்சியை துவக்கியிருப்பவர் மல்லை சத்யா. வெளியேறிய புதிதில் சத்யா தரப்பும் வைகோ தரப்பும் பாடிக் கொண்ட வசைகள் ஏராளம். ஆனால் வரும் சட்டசபைத் தேர்தலில் மதிமுக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளது திவெக. தொகுதிப் பங்கீடு குறித்த திமுகவுடன் பேசிவிட்டு வெளியில் வந்த வைகோவிடம் 'திவெக வும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதே' எனச் செய்தியாளர்கள் கேட்டதுதான் தாமதம், 'ஐ இக்னோர் ஹிம்' அன ஆவேசமாகப் பதிலளித்து விட்டு நடையைக் கட்டினார் வைகோ. அருகிலிருந்த திமுகவினரின் மைன்ட் வாய்ஸ் எப்படி இருந்திருக்கும், நீங்களே கெஸ் பண்ணிக்கோங்க. உள்ளூர் அரசியல்! மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்ற போது அவருக்குப் பதிலாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் ஒ.பன்னீர் செல்வம். பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி வ்ந்த ஜெயலலிதா போட்டியிட வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்து தொகுதியைத் தந்தவர் தங்க தமிழ்ச் செல்வன். தேனிக்காரர்களான இவர்கள் இருவருமே ஒரே கட்சியில் இருந்த போதே உள்ளூர் அரசியலால் ஒருவருக்கொருவர் செட் ஆகாது. தலைமைக்கு யார் அதிக நெருக்கம் என்கிற போட்டியா தெரியாது. ஜெ.மறைவுக்குப் பிறகு பன்னீருடன் இருக்க பிடிக்காமல் டிடிவி பக்கம் போனவர் அங்கிருந்து திமுகவுக்குத் தாவினார். திமுகவும் இவரை தேனியில் பன்னீருக்கு எதிரானவராகவே களமிறக்கியது. Thanga Tamilselvan இந்தச் சூழலில் தற்போது பன்னீரும் திமுகவுக்கு வந்து விட்டார். திமுகவில் சேர்ந்த பின் செய்தியாளர்களை பன்னீர் சந்தித்த போது அவர் பக்கத்தில் பளீச் பற்களுடன் போஸ் கொடுக்கவும் மறக்கவில்லை தங்க தமிழ்ச் செல்வன். 'தேர்தலில் எப்படியும் திமுக பன்னீருக்கு சீட் கொடுக்கும். தேர்தலில் அவர் ஜெயிச்சா பிறகு ஏதாவது முக்கியமான பதவி தரலாம், இதை அண்ணன் எப்படி எடுத்துக்கப் போறார், தேனி மாவட்ட அளவுல இனி அண்ணன் எப்படி பாலிடிஸ் பண்ணப் போறார்னு தெரியலை' என இப்போதே உச் கொட்ட ஆரம்பித்து விட்டனர், தங்கத்தின் தம்பிகள். சுதீஷும் ரவீந்திரனும் கை குலுக்குவாங்களா? தற்போது நாடாளூமன்ற மாநிலங்களவைக்குத் தேர்வாகியிருக்கும் இருவரும் இந்த 'கம்பெனி - மேனேஜர்' பட்டியலில் வருகிறார்கள். இருவரும் ஒரே கூட்டணி சார்பாகத் தேர்வாகியிருக்கிறார்கள் திமுக தனது நான்கு சீட்டுகளில் ஒன்றை காங்கிரஸுக்கும் ஒன்றை தேமுதிகவுக்கும் கொடுத்திருப்பது தெரியும். தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளார் சுதிஷ் தேர்வாகியிருக்கிறார். மீதி இரண்டை கட்சிக்காரர்களான திருச்சி சிவாவுக்கும் கான்ஸ்டைன்டன் ரவீந்திரனுக்கும் தந்துள்ளது. சுதீஷ் ரவீந்திரன், விஜயகாந்த் தேமுதிகவை உருவாக்கிய போது உடன் இருந்தவர். தேமுதிக சார்பில் மத்திய சென்னை தொகுதி வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்.. அந்த தேர்தலில் இவர் பெற்ற வாக்குகளே திமுகவின் முக்கியப் புள்ளியான கலைஞரின் பேரனான தயாநிதியின் தோல்விக்கே காரணமானது. அந்த தேர்தல் முடிந்த அடுத்த சில மாதங்களில் தேமுதிகவில் இருந்து வெளியேறி திமுகவுக்குப் போய் விட்டார். இந்தச் சூழலில்தான் தற்போது கட்சி அவருக்கு மாநிலங்களவை சீட் தர, இந்த நேரம் பார்த்த தேமுதிகவும் திமுக அணிக்கு வந்திருக்கிறது. மாநிலங்களவையில் பதவி ஏற்கும் நாளில் ரவீந்திரனும் சுதீஷும் கை குலுக்கிக் கொள்வார்களா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கவுண்டமணி அரசியல்ல இதுவும்..! 'இவங்க ஒருவருக்கொருவர் சந்திக்க நேரிட்டால் தர்மசங்கடமா இருக்குமே' என்கிறீர்களா, நீங்க மட்டுமே அப்படி நினைச்சிட்டிருக்கலாம். வடிவேலு என்ன நினைப்பார் என தேமுதிகவைத் சேர்த்த போதோ, வைகோ என்ன நினைப்பார் என சத்யாவின் ஆதரவைப் பெற்ற போதோ, தங்கம் என்ன நினைக்குமோ என பன்னீரை வரவேற்ற போதோ, பிரேமலதா என்ன நினைப்பாங்க என ரவீந்திரனுக்கு சீட் கொடுத்த போதோ முதல்வர் ஸ்டாலின் நினைச்சிட்டா இருக்க முடியும்? வாய்ப்பே இல்லை. இருக்கவே இருக்கு கவுண்டமணியின் 'அரசியல்ல இதெல்லாம்..' டயலாக். நாம வேணும்னா கொஞ்சம் மாத்தி இப்படிச் சொல்லலாம், 'அரசியல்ல சங்கடங்கள் சாதாரணம்'!
LPG: `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்' - சிலிண்டர் தட்டுப்பாடா? - மத்திய அரசின் திட்டம் என்ன?
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் பரவியது. அதனால், உலக நாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற எண்ணெய், எரிபொருள் விற்பனை சிக்கலை சந்தித்தது. அதன் காரணமாக இந்தியா முழுவதும், இயற்கை எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக, 1955-ம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்பது பொதுமக்களுக்கு அவசியமானதாகக் கருதப்படும் குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்த இயற்றப்பட்ட ஒரு மையச் சட்டமாகும். இது நியாயமான விலையில் சமமான விநியோகத்தை உறுதி செய்யும் அதே வேளையில், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்கவும் வழிவகுக்கும். பிரதமர் மோடி இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் நிலையான கிடைப்பை உறுதி செய்யவும், செயற்கையான பற்றாக்குறையைத் தடுக்கவும், இந்தப் பொருட்கள் வாங்கப்படும் அல்லது விற்கப்படும் விலைகளை ஒழுங்குபடுத்தவும் இந்த சட்டம் செயல்படுத்தப்படும். இந்த அத்தியாவசியப் பொருள் என்ற வரையறைக்குள் சட்டத்தின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் குறிக்கிறது. மேலும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, மத்திய அரசு அட்டவணையில் இருந்து பொருட்களைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யலாம். மேலும், எந்தவொரு நபரோ அல்லது வர்த்தகரோ ஒரு பொருளின் இருப்பை வைத்திருக்கக்கூடிய அளவை அரசே நிர்ணயிக்க முடியும். இந்தச் சட்டம், குறிப்பாக உணவு தானியங்கள், சமையல் எண்ணெய்கள் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களுக்கு விலைகளை நிர்ணயம் செய்ய அனுமதிக்கிறது. இதன் அடிப்படையில்தான் எல்.பி.ஜி எரிவாயுவுக்கு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. டேங்கர் லாரி எனவே, அரசின் இந்த உத்தரவை மீறினால் பிரிவு 3 இன் கீழ் உத்தரவுகளை மீறினால் மூன்று மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படலாம். மேலும், பதட்டத்தை மீறினால், பொருட்களையும், அவற்றின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுபவற்றை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. உக்ரைன் போருக்குப் பிந்தைய காலத்தில் எண்ணெய் துறையில் அரசாங்கம் ESMA விதிகளைப் பயன்படுத்தியது, அதிக லாபம் காரணமாக லாபகரமானதாக மாறிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. ஈரான் போர் எதிரொலி: சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்? எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு புது உத்தரவு
'25 நாள்கள் முன்பு சிலிண்டர் புக் செய்தவர்களுக்கே முன்னுரிமை!'நெருக்குகிறதா தட்டுப்பாடு?
ஈரான் போரினால் உலகம் முழுவதும் எரிசக்திகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், எரிசக்திகளை இறக்குமதி செய்யும் இந்தியாவின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம். இனி வரும் சூழலைச் சமாளிக்க மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி, நேற்று மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது... தற்போது உலக அளவில் உள்ள பாதிப்புகள் காரணமாக எரிபொருள் சப்ளை மற்றும் எல்.பி.ஜி விநியோகத்திற்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் ஈரான் போர் எதிரொலி: சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்? எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு புது உத்தரவு அதனால், மத்திய அமைச்சகம் எண்ணெய் நிறுவனங்களை எல்.பி.ஜி உற்பத்தியை அதிகரிக்கவும், அதை வீட்டு உபயோகச் சிலிண்டர்களுக்குப் பயன்படுத்துமாறும் ஆணையிட்டுள்ளது. பிளாக் மார்க்கெட் மற்றும் பதுக்கி வைப்பதைத் தவிர்க்க, 25 நாள்களுக்கு முன் புக் செய்த வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அமைச்சகம் முன்னுரிமை கொடுக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட எல்.பி.ஜி சிலிண்டர்களை வீட்டு உபயோகம் அல்லாத பயன்பாடுகளில் மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கிறது. ட்ரம்ப்-க்கு பயப்படும் 'அந்த' காரணம்; தெரிந்தால் மோடி ராஜினாமா? - சுப்ரமணியன் சுவாமி
பேரறிஞர் அண்ணாவின் வீடு - தமிழக அரசியல் வரலாறு | Home tour | IPS Show On Road | #5
திமுக திருச்சி மாநாடு: பாஜக-வால் ஒருபோதும் தமிழ்நாட்டில் காவி அடிக்க முடியாது - ஸ்டாலின் ஆவேசம்
திருச்சியில் உள்ள சிறுகனூரில் தி.மு.க சார்பில், 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க மாநில மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. 700 ஏக்கரில், 200 ஏக்கர் மாநாட்டு திடலும், 240 அடி நீளத்தில் மேடை, 3.60 லட்சம் நாற்காலிகள், 4 லட்சம் பேர்களுக்கு உணவு, மாநாட்டு வருகை தந்த தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில் அடங்கிய பை என்று தடபுடல் ஏற்பாட்டை செய்திருந்தனர். dmk maanadu 48 நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதோடு, 168 இடங்களில் எல்.இ.டி திரைகள், 1000 அடி நீளத்துக்குப் பிரமாண்டமான கோட்டை வடிவ மாநாட்டு முகப்பு அமைக்கப்பட்டு, அதில் பெரியார், அண்ணாதுரை, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது படங்கள் வைக்கப்பட்டன. மாநாட்டு மேடைக்குப் பின்புறம் தி.மு.க ஐ.டி டீம் பரபரப்பாகச் செயல்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க ஐடி விங் நிர்வாகிகள் லேப்டாப் சகிதம் வந்தனர். நொடிக்கொரு அப்டேட் என்ற வகையில் மாநாட்டு செய்திகளை உடனுக்குடன் ஹேஷ் டேக் செய்தனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 1,500 முகநூல் கணக்குகள் மூலம் இந்த மாநாட்டை நேரலை செய்து, 3 கோடி சமூக வலைத்தள அக்கவுண்ட்களை ரீச் செய்ய போவதாகத் தெரிவித்தார். திமுக திருச்சி மாநாடு கண்கலங்கிய துர்கா; உற்சாக ஸ்டாலின் - `இன்பன், இனியன் என தொடரும் உறவு' - அன்பில் இல்ல விழா ஹைலைட்ஸ் காலை 11 மணியில் இருந்தே தொண்டர்கள் பசியாற வசதியாக நான்கு இடங்களில் சிக்கன் பிரியாணியும், சிக்கன் கிரேவியும் சுடச்சுட தயார் செய்து வழங்கப்பட்டது. அதோடு, மாநாட்டில் ஒவ்வொரு தொண்டருக்கும் 4 லிட்டர் தண்ணீர் வீதம் பத்து லட்சம் தொண்டர்களுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நூறு மீட்டர் இடைவெளியில் ஒரு குடிநீர் தொட்டி, மோர், மூலிகை குடிநீர், தர்பூசணி என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் சிறுகனூர் பகுதிக்கு வந்தவர், மாநாட்டு முகப்பில் அமைக்கப்பட்ட 110 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க கொடியை ஏற்றிவிட்டு, அங்கிருந்து 600 அடி நீள ரேம்பில் நடந்து, குழுமியிருந்த கூட்டத்தினரைப் பார்த்தபடி மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். திமுக திருச்சி மாநாடு த.வெ.க தலைவர் விஜய் நிகழ்ச்சிகளில் நடப்பது போல் அவர் வாகனத்தில் வந்தபோதும், ரேம்ப் வாக் நடந்தபோதும் தொண்டர்கள் அவர்மீது தி.மு.க வண்ணம் கொண்ட துண்டுகளை எறிந்தனர். மேடையில் நின்ற சில தி.மு.க புள்ளிகளும் தங்களது கைகளில் இருந்த துண்டுகளை தலைக்கு மேலே சுழற்றினர். வரவேற்புரை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு, டெல்டாவே உங்களுக்குச் சொந்தம். ஆணையயிடுங்கள். வென்று காட்டுகிறோம் என்று பேசினார். 6.50 மணிக்கு மைக்கைப் பிடித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். mk stalin ``ஃபினிஷ்' அந்த கை சைகையை நான் திட்டமிட்டு செய்யவில்லை.!' - முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அதன்பிறகு, தி.மு.க இதுவரை 12 மாநில மாநாடுகளை நடத்தியுள்ளது. இதில் 1956, 1990, 1996, 2006, 2014, 2021, 2026 என 7 மாநாடுகள் திருச்சியில்தான் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டு அணிக்கும், அ.தி.மு.க அணிக்கும் இடையில் தான் ஸாரி, அ.தி.முக அணி என்று அழைத்தால் மோடியும், அமித்ஷாவும் கோபித்துக்கொள்வார்கள். தி.மு.க-வுக்கும், என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி. அதுவும், தமிழ்நாட்டு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையில்தான் போட்டி. பா.ஜ.க எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் காவி அடிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் பாட்ஷா பலிக்காது. தமிழ்நாடு உங்களுக்கு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். மீண்டும் வெல்வோம். மீண்டும் மீண்டும் வெல்வோம். கனிமொழி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகள் தயாராகி வருகின்றன. விரைவில் வெளியிடப்படும் என்றார். அதேபோல், த.வெ.க பற்றியோ, விஜய்யைப் பற்றியோ எதுவும் விமர்சித்து பேசவில்லை. மாறாக, பா.ஜ.க-வைத்தான் தனது அரைமணிநேர பேச்சில் அதிகம் 'அட்டாக்' செய்தார். தி.மு.க திருச்சி மாநாடு அதேபோல், அண்ணாதுரை, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு என்னைத்தான் நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தீர்கள். மறுபடியும் என்னைத்தான் ஜெயிக்க வைப்பீர்கள் என்று எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாகப் போட்டுத் தாக்கினார். தொடர்ந்து பேசிய அவர், நம் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைப்பது போல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் உழையுங்கள். தேர்தலுக்கான கூட்டணி இல்லை. கொள்கைக்கான கூட்டணி. பீகாரில் நிதிஷ் குமார் முகத்தைக் காட்டி ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது அவரை அகற்றி விட்டு முதலமைச்சர் பதவியைப் பிடிக்க உள்ளது பா.ஜ.க. இதே போல எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க முடியாது. தி.மு.க இருக்கும் வரை அது நடக்காது. 'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம், எம்ஜிஆர் வளர்த்த கழகம், அதிமுகவின் அடிமைச் சேவகம்' - ஸ்டாலின் பேச்சு திமுக திருச்சி மாநாடு தி.மு.க அரசின் திட்டப் பயனாளிகள் வாக்களித்தாலே போதும், நமக்கு முழு வெற்றி கிடைக்கும்; அதை உறுதி செய்வதுதான் உங்கள் பணி. சமீப காலமாக தவணை முறையில் சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன. அதுவும் திராவிட மாடல் அரசின் திட்டத்தை டாப்-அப் செய்து அறிவிக்கின்றனர். ஏனென்றால், அந்தத் திட்டங்களில் எல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ யோசிக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை நாம் கொண்டு வந்துருக்கிறோம். திமுக திருச்சி மாநாடு தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க உள்ளது என்பதை அறிந்தும், அதற்காகக் கூட பட்ஜெட்டில் மாநிலத்திற்கு எந்தத் திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இந்த அளவுக்குத் திட்டமிட்டு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் NDA கூட்டணிக்கு எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார். ``ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜனநாயகம் - குறைக்கப்பட வேண்டிய சுமை அல்ல - முதல்வர் ஸ்டாலின்
விஜய்: ஸ்வீட் பாக்ஸூடன் வந்த 50+ நிர்வாகிகள்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயார்? - பனையூர் அப்டேட்
சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜய் தேர்வு செய்திருக்கும் முக்கியமான 50 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பனையூருக்கு வருகை தர ஆரம்பித்திருக்கின்றனர். தவெகவிடம் NDA தரப்பிலிருந்து கூட்டணிக்காக பேசி வருவதாக தகவல் வெளியாகிய நிலையில், விஜய் இன்று தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 50 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை இன்று அறிவிக்கவிருப்பதாக பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். பிப்ரவரி 20 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலையை தவெக தலைமை செய்து வந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை பரிசீலனை பட்டியலில் வைத்து அதிலிருந்து ஒரு வேட்பாளரை விஜய் டிக் அடித்திருக்கிறார். அந்த வகையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் - தி.நகர், அருண்ராஜ் - திருச்செங்கோடு, ராஜ்மோகன் - எழும்பூர், மரிய வில்சன் - திருவொற்றியூர் - தொகுதிகளுக்காக நேர்காணலில் கலந்துகொள்கின்றனர். இவர்கள் போக தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் சரவணன், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.பிரபு, ராணிப்பேட்டை காந்திராஜ், புதுக்கோட்டை பர்வேஸ், சேலம் பார்த்திபன், விருகம்பாக்கம் சபரிநாதன், ஆர்.கே.நகர் சுறா வேலு, திருக்கோவிலூர் பரணி பாலாஜி, ஆலங்குளம் விபின், செஞ்சி குணா, காரைக்குடி பிரபு போன்றோர் நேர்காணலுக்காக வந்திருக்கின்றனர். இவர்கள் இறுதிசெய்யப்பட்ட வேட்பாளர்கள் என்பதால் தலைமையிடமிருந்து அழைப்பு வந்தவுடன் பொக்கே மற்றும் ஸ்வீட் பாக்ஸூடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர். விஜய் இவர்களை சந்தித்து வாழ்த்து கூறி, தொகுதியில் வேலையை தொடங்குமாறு கூறவிருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நேர்காணல் முடிந்தவுடன் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது. Loading…
'ஈரான் ஏதாவது செய்தால்.! இது சீனாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் 'கிஃப்ட்'' - மிரட்டும் ட்ரம்ப்
ஹார்மோஸ் ஜலசந்தி - இதன் வழியாகத் தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வணிகத்திற்குச் செல்கின்றன... உலகத் தேவையில் 20 சதவிகித எல்.என்.ஜி (LNG) செல்கின்றன. ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போரினால் ஈரான் அந்த ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதனால் எண்ணெய் போக்குவரத்து பாதித்து, அந்த வர்த்தகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்... ஹார்முஸ் ஜலசந்தி ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய்களை நிறுத்த ஈரான் ஏதாவது செய்தால், இது வரை தாக்கியதை விட, 20 மடங்கு அதிகமாக ஈரானை அமெரிக்கா தாக்கும். கூடவே, ஈரான் ஒரு தேசமாக மீண்டும் கட்டி எழுப்ப முடியாத அளவுக்கு அதன் இலக்குகளை அமெரிக்கா அழிக்கும். இறப்புகள், தீ, கோபம் மீண்டும் அவர்கள் மீது பொழியும். ஆனால், அது மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்... நடக்கக்கூடாது என்று வேண்டுகிறேன். ஹார்மோஸ் ஜலசந்தியை அதிகம் பயன்படுத்தும் சீனா மற்றும் பிற நாடுகளுக்கு, இது அமெரிக்காவின் பரிசு என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'ஈரான் ஏதாவது செய்தால்.! இது சீனாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் 'கிஃப்ட்'' - மிரட்டும் ட்ரம்ப்
ஹார்மோஸ் ஜலசந்தி - இதன் வழியாகத் தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வணிகத்திற்குச் செல்கின்றன... உலகத் தேவையில் 20 சதவிகித எல்.என்.ஜி (LNG) செல்கின்றன. ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போரினால் ஈரான் அந்த ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதனால் எண்ணெய் போக்குவரத்து பாதித்து, அந்த வர்த்தகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்... ஹார்முஸ் ஜலசந்தி ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய்களை நிறுத்த ஈரான் ஏதாவது செய்தால், இது வரை தாக்கியதை விட, 20 மடங்கு அதிகமாக ஈரானை அமெரிக்கா தாக்கும். கூடவே, ஈரான் ஒரு தேசமாக மீண்டும் கட்டி எழுப்ப முடியாத அளவுக்கு அதன் இலக்குகளை அமெரிக்கா அழிக்கும். இறப்புகள், தீ, கோபம் மீண்டும் அவர்கள் மீது பொழியும். ஆனால், அது மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்... நடக்கக்கூடாது என்று வேண்டுகிறேன். ஹார்மோஸ் ஜலசந்தியை அதிகம் பயன்படுத்தும் சீனா மற்றும் பிற நாடுகளுக்கு, இது அமெரிக்காவின் பரிசு என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கரூர் சம்பவம்: `CBI சம்மனுக்கு நான் நேரில் ஆஜராக போகிறேன்' - செந்தில் பாலாஜி
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கான விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது சி.பி.ஐ. இந்த விசாரணையையொட்டி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது சி.பி.ஐ இந்தச் சம்மன் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் செந்தில் பாலாஜி பதிவிட்டிருப்பதாவது... கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்குப் பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் சம்பவம் ஈரான் போர் எதிரொலி: சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்? எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு புது உத்தரவு வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கு விஜய் கடந்த ஜனவரி மாதம் இரண்டு முறை நேரில் ஆஜராகி இருந்தார். இன்று அவரை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய… — V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@V_Senthilbalaji) March 10, 2026
கரூர் சம்பவம்: `CBI சம்மனுக்கு நான் நேரில் ஆஜராக போகிறேன்' - செந்தில் பாலாஜி
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கான விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது சி.பி.ஐ. இந்த விசாரணையையொட்டி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது சி.பி.ஐ இந்தச் சம்மன் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் செந்தில் பாலாஜி பதிவிட்டிருப்பதாவது... கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்குப் பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் சம்பவம் ஈரான் போர் எதிரொலி: சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்? எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு புது உத்தரவு வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கு விஜய் கடந்த ஜனவரி மாதம் இரண்டு முறை நேரில் ஆஜராகி இருந்தார். இன்று அவரை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய… — V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@V_Senthilbalaji) March 10, 2026
ஈரான் போர் எதிரொலி: சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்? எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு புது உத்தரவு
11-வது நாளாக ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால், இந்தியா மாதிரியான பெரியளவில் எரிசக்தி இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு. இன்னும் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும், மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான், கடந்த 7-ம் தேதியிலிருந்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் இந்தியா முழுவதும் ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. கமர்ஷியல் சிலிண்டர்களின் விலை ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஈரான் போர்: ட்ரம்ப் சொன்ன 'அந்த' ஒரு வார்த்தை; கச்சா எண்ணெயின் திடீர் சரிவிற்குக் காரணம் என்ன? இந்த நிலையில் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு அரசு அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களிடம் தமிழ்நாடு அரசு, 'தமிழ்நாட்டிற்குப் போதிய அளவு கேஸ் சிலிண்டர்கள் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளது. இரண்டாவது, கையிருப்பிலுள்ள சிலிண்டர்கள் விவரம் குறித்த தரவுகளை இன்று மதியத்திற்குள் தமிழ்நாடு அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. தங்கத்தை விற்க திண்டாடும் 'துபாய்': தள்ளுபடியில் விற்கிறோம் 'வாங்க' என்று அழைக்கும் வணிகர்கள்!
`அதிமுக வேட்பாளர்களின் ப்ளஸ் மைனஸ் ஃபைல்; விஜய்யுடன் கூட்டணி பேச்சு' - சசிகலாவின் கணக்கு பலிக்குமா?
சசிகலா புதிய கட்சிக்கான கொடியை அறிவித்த பிறகு மாவட்டம் வாரியாக தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதில் மும்முரமாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் தனது இல்லத்தில் ஆதரவாளர்களை சந்தித்தார். இதில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொருவரிடமும் தனி தனியாகவும் கருத்துக்களை கேட்டிருக்கிறார் சசிகலா. அப்போது, `என்னால் பலனடைந்த யாரும் இன்று என்னுடன் நிற்கவில்லை, தொண்டர்களாகிய நீங்கள் எனக்கு பக்க பலமாக நிற்பது எனக்கான பலம். எதை பற்றியும் யோசிக்காமல் உண்மையாக உழையுங்கள் நிச்சயம் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும். தஞ்சாவூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் சசிகலா துரோகத்தை வீழ்த்தி, நாம் யார்னு நிரூபிக்கணும். இது தான் நமது குறிக்கோள். ஒரு வாரத்திற்குள் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பேன். இங்கே இருப்பவர்கள் தான் வேட்பாளர், நான் சொல்வதை களத்தில் செயல்படுத்துங்கள், அது போதும். நல்லது நடக்கும்'னு சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார். சசிகலாவுக்கு முன்பிருந்த ஆதரவு இப்போது இல்லை, அவர் பின்னால் பெரிய அளவில் ஆதரவாளர்களும் இல்லை என்கிற விமர்சனம் பரவலாக முன் வைக்கப்படும் சூழலில் சசிகலாவின் கணக்கு வேறு மாதிரியாக இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர். இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்த சசிகலா, ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். 2026 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நல்லது நடக்கும், அதிமுக-வில் திரும்பவும் அதிகார மையமாக வலம் வரலாம் என நினைத்திருந்தார் சசிகலா. ஆனால் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோருக்கு கட்சியில் இடம் இல்லைனு திட்டவட்டமாக பேசி வந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜக மேலிடமும் டி.டி.வி.தினகரனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தனக்கு அளிக்கவில்லை என்கிற ஆதங்கம் ஏற்பட்டது. ஆதரவாளர்களுடன் சசிகலா கட்சி பிளவுபடக் கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக நடந்த அனைத்தையும் கவனித்து கொண்டு பொறுமையாக இருந்தார். ஜெயலலிதாவுடன் இருந்து திரைமறைவில் அரசியல் மூவையும் செய்தவர் சசிகலா என்பது இன்று அதிமுகவின் அதிகாரமையாக இருக்கும் அனைவருக்கும் தெரியும். ஆனால் நம்மை ஒரு கிள்ளு கீரையாக நினைக்கிறார்கள். நமக்கான அங்கீகாரத்தை தர மறுக்கிறார்கள் என்பதால் இனியும் பொறுமையாக இருக்க முடியாது, நாம் யார்னு காட்ட வேண்டும் என்கிற கட்டாயத்தில் புதுகட்சி பிளானுடன் களமிறங்கி இருக்கிறார். ஆலோசனை கூட்டத்தில் ஆதரவாளர்கள், துரோகத்தை வீழ்த்துவேன் என கூறி வந்த தினகரன், அதிமுக கூட்டணியில் இருக்கிறார் என்றதுமே, அவரை பற்றி பேசாதீர்கள், நாம் எப்படி முன்னே போவது என்பதை மட்டும் சொல்லுங்கள் என்றாராம். அதிமுக, அமமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார். தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பில்லை. தேர்தல் நெருங்கி விட்டதால் அதற்கான அவகாசமும் இல்லை என்பதால் தனது தம்பியால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிடர் கழகத்தை தூசு தட்டி அதன் மூலம் தேர்தலை சந்திப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது. கூட்டத்தில் கூட்டணி குறித்து பேச்சுக்கள் எழ ஆதரவாளர்கள் பலரும் பாஜக கூட்டணிக்குள் சென்று விடக்கூடாது என்கிற கருத்தை முன் வைக்க, `நீங்கள் விரும்புகிற கூட்டணி அமையும்' என்றாராம். தவெக தலைவர் விஜய் தரப்புடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக தெரிகிறது. இது அமைந்தால் 20 தொகுதிகளில் போட்டியிடுவார்கள், ஒரு வேளை அமையவில்லை என்றாலும் தனித்து நிற்கவும் தயாராகத்தான் இருக்கிறார். தேர்தல் செலவுக்கான பசையும் தடையின்றி கைக்கு வந்து சேரும்னு ஆதரவாளர்களிடத்தில் சொல்லியிருக்கிறார். சசிகலா அதிமுக-வில் வேட்பாளராக களம் இறங்க இருப்பவர்களின் ப்ளஸ் மைனஸ் குறித்த விபரங்களை திரட்டி ஃபைல் ஒன்றை கையில் வைத்திருக்கிறாராம். அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்துவது தான் திட்டம். ஒண்ணா இருக்கணும்னு நினைக்காமல், தன்னோட தியாகத்தை மதிக்காமல் ஆணவத்தோடு இருப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டணும் என்கிற குறிக்கோளுடன் தங்களுக்கு சாதகமாக இருக்கும் தொகுதிகள் குறித்தும் கணக்கெடுத்துள்ளார். 2 சதவீத வாக்குகளை குறி வைத்து களத்தில் இறங்கியிருக்கிறார். இந்த 2 சதவீத வாக்குகள் நம்மை யார்னு உணர்த்தும், தேர்தல் முடிவுக்கு பின்னர் நிச்சயம் வருத்தப்படுவார்கள் என்கிற சசிகலாவின் கணக்கு பலிக்குமா என்பது வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தெரிய வரும் என்றனர். Loading…
ட்ரம்ப்-க்கு பயப்படும் 'அந்த'காரணம்; தெரிந்தால் மோடி ராஜினாமா? - சுப்ரமணியன் சுவாமி
இதுவரை எதிர்க்கட்சிகள் தான், `அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்ன சொல்கிறாரோ, அதைத் தான் இந்திய பிரதமர் மோடி செய்து வருகிறார்' என்று குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், இப்போது உள்கட்சியில் இருந்தே இந்தக் குரல் வந்துள்ளது. அதுவும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் குரல். பாஜகவிற்குள் இருந்துகொண்டே அந்தக் கட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பது சுப்ரமணியன் சுவாமிக்குப் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மோடி - ட்ரம்ப் அப்படி ட்ரம்பை வைத்து மோடி குறித்து சுப்ரமணியன் சுவாமி என்ன கூறியுள்ளார்? இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஏன் இப்படிப் பயப்படுகிறார்? மோடி எதனால், யாரால் இப்படி இருக்கிறார் என்பதை என்னிடம் எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள் கூறினார்கள். ஆனால், அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அது வெளியே தெரிந்தால் மோடி தனது பிரதமர் பதவியைக் கூட ராஜினாமா செய்ய நேரிடலாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுப்ரமணியன் சுவாமி. Why is India’s third term PM, Modi, so scared of US President, Donald Trump ? Americans, whom I know, say that Modi is compromised-by what and whom I cannot yet reveal, which would lead to Modi’s resignation as PM. — Subramanian Swamy (@Swamy39) March 10, 2026
ஈரான் போர்: ட்ரம்ப் சொன்ன 'அந்த'ஒரு வார்த்தை; கச்சா எண்ணெயின் திடீர் சரிவிற்குக் காரணம் என்ன?
நேற்று இந்நேரம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி கிட்டத்தட்ட 114 டாலர்கள் அளவில் வர்த்தகமாகி வந்தது. ஆனால், இன்று சரிந்து ஒரு பேரலுக்குச் சுமார் 85 டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இது கிட்டத்தட்ட 25 சதவிகித வித்தியாசம் ஆகும். இந்தத் திடீர் சரிவிற்குக் காரணம் என்ன? > நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'விரைவில் ஈரான் போர் முடிவுக்கு வரும்' என்று தெரிவித்தார். > நேற்று கச்சா எண்ணெய் விலை ஏற்கெனவே ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி விட்டது. அடுத்து அது 150 டாலர்களைத் தொடுவதை விரும்பவில்லை ஜி7 நாடுகள். அதனால், அந்த நாடுகள் தங்களிடம் இருக்கும் மூலோபாயப் பெட்ரோலிய இருப்புக்களை சந்தைக்குள் எடுத்துவர தயாராக இருக்கிறது. கச்சா எண்ணெய் கடுமையாகும் ஈரான் போர்: முன்பை விட வேகமாக வலுவாகும் அமெரிக்க டாலர்! - இது 'எப்படி' சாத்தியம்? > நேற்று ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அது குறித்து அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட், 'ரஷ்யாவின் மில்லியன் கணக்கான எண்ணெய் பேரல்கள் மீது இருக்கும் வரிகளை நீக்க அமெரிக்கா யோசனையில் உள்ளது' என்று தெரிவித்தார். > நேற்று ட்ரம்ப் விரைவில் ஈரான் போர் முடியும் என்று சொன்னதும், பயத்தில் கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், அந்த முதலீடுகளை 'சட்டென' விற்றனர். இந்த 4 காரணங்களிலும் மிக முக்கியமானது - ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்கிற ட்ரம்பின் அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியானதுமே சரிவில் சென்று கொண்டிருந்த அமெரிக்க சந்தை கொஞ்சம் மீண்டது. அடுத்ததாக, இதுவே தற்போது ஆசியச் சந்தைகளிலும் பிரதிபலித்துள்ளது. நேற்று 'சிவப்பு'களில் தத்தளித்த சந்தைகள், இப்போது பாசிட்டிவாக மாறியுள்ளன. தங்கத்தை விற்க திண்டாடும் 'துபாய்': தள்ளுபடியில் விற்கிறோம் 'வாங்க' என்று அழைக்கும் வணிகர்கள்!
கே.என்.பணிக்கர் மறைவு: கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர் - பினராயி விஜயன் இரங்கல்
நவீன இந்தியாவின் முன்னணி வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரும் காலடி ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கே.என்.பணிக்கர் (90) நேற்று காலமானார். ஸ்ட்ரோக் காரணமாக நேற்று மதியம் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர் மரணமடைந்தார். இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் கவடியாரில் உள்ள அவரது வீட்டில் பொது அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு தைக்காடு சாந்தி மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. கே.என்.பணிக்கரின் மனைவி உஷா ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இவர்களுக்கு ராகிணி, சாலினி என 2 மகள்கள் உள்ளனர். இந்திய மதச்சார்பின்மையின் பாதுகாவலராக அறியப்படும் கே.என். பணிக்கரின் 90-வது பிறந்தநாள் விழாவை கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் கொண்டாட முடிவுசெய்திருந்த நிலையில் அவரது மறைவு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இடதுசாரி ஆய்வாளர் கே.என்.பணிக்கர் மரணம் முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; டாக்டர் கே.என். பணிக்கர் ஒரு கலாசார நாயகர். இந்தியாவின் பன்மைத்துவம் வரலாற்றின் போக்கின் மூலம் உருவானது என்றும், அதன் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எழுத்து, பேச்சு மற்றும் கற்பித்தல் மூலம் மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டினார். வகுப்புவாதத்தின் கருமேகங்கள் மூடிய நேரங்களில் எல்லாம் இந்திய மதச்சார்பின்மையை சமூகத்தின் மனதில் பரப்பும் ஒளியாக கே.என்.பணிக்கரின் கருத்துகள் மாறின. இந்தியா என்றால் என்ன என்பதை ஆய்வு செய்து புதிய தலைமுறைக்கு வழங்கினார். வரலாறு மற்றும் கலாசார ஆய்வுகள் மூலம் இந்தியாவை வகுப்புவாதமாக்கும் முயற்சிகளை அவர் நேரடியாக எதிர்த்து போராடினார். எனவேதான் அவரையும், அவரது வரலாற்று ஆய்வுத் திட்டங்களையும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் போன்ற வரலாற்று ஆய்வு நிறுவனங்களிலிருந்து விலக்கி வைக்கிறார்கள். மறைந்த கே.என்.பணிக்கர் சர்வதேச அரங்கில் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களில் இவரும் ஒருவர். பாடத்திட்டங்களில் வகுப்புவாதத்தைப் புகுத்துவதற்கு எதிராகப் போராடுவதிலும், கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்ப்பதிலும் இவரது பங்கு மிக முக்கியமானதாகும். காலடி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போன்ற உயர் பதவிகளை அலங்கரித்தார். இடதுசாரி அரசியலுக்கு எப்போதும் துணை நின்றவர். அவரது மறைவு இந்திய மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவுக்கு வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கேரளா: ஜி.சுதாகரன் சிபிஎம் கட்சியில் இருந்து விலக முடிவா? சமாதானம் பேசும் தலைவர்கள்; பின்னணி என்ன?
ஆதவ் அர்ஜுனா: நான் DMKவில் இருந்து வெளியேறியது ஏன்?- Aadhav Arjuna Answer| Vikatan Medai | Vijay #2
போர்களில் கொல்லப்படும் குழந்தைகள்... உறங்குகிறதா உலகின் மனசாட்சி?
உலகில் நடக்கும் ஒவ்வொரு போரும் குழந்தைகளுக்கு எதிரான போர்தான். தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தும் போரால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள குழந்தைகளின் உயிர்கள், அதிகாரப் பசி ஏந்தி வரும் ஏவுகணைகளாலும் குண்டுகளாலும் குடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரத்தம் தோய்ந்த அக்குழந்தைகளின் புத்தகப்பைகள், காலணிகளின் புகைப்படங்கள் அதற்கு சாட்சியாகி, உலகின் மனசாட்சியை உலுக்கி வருகின்றன. `ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த உடன்படவில்லை’ எனக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள போர் இது. ஈரானின் உச்சத் தலைவர் கமேனி உட்பட, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 165 அப்பாவி சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் குறைந்தபட்சம் 10 லட்சம் குழந்தைகள் வரை போரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஐந்து வாரங்களுக்குப் போரை நீட்டிக்கப் போவதாக, ட்ரம்ப் கொக்கரித்துள்ளார். அமெரிக்க - ஈரான் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல் உலகப் பொருளாதாரமே ஆட்டம் காண்பது வரை இதன் விளைவுகளை அரசாங்கங்கள் முதல் பல நாடுகளின் குடிமக்கள் வரை எதிர்கொள்ள இருக்கிறோம். ஆனால், போரில் தாக்குதலுக்கு ஆளாகும் தங்கள் நாட்டின் தெருக்கள், வீடுகள், பூங்காக்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் ரத்தக்களரியில் விழுந்து மடியும் குழந்தைகள்தான், போரினால் பாதிக்கப்படும் மற்ற அனைவரையும்விடவும் பரிதாபமானவர்கள். தொண்டையில் உள்ள மிட்டாயை விழுங்குவதற்குள், வீட்டுப்பாடத்தின் அடுத்த எழுத்தை எழுதுவதற்குள், விளையாட்டின் களைப்பில் தண்ணீர் பருக வருவதற்குள், அடுத்த நொடி அவர்களை இல்லாமல் செய்து சடலமாக்கி வருகிறது போர். 2026-ம் ஆண்டு நிலவரப்படி, உலகம் முழுக்க 47.3 கோடி குழந்தைகள் போர்ச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். காஸா, சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, சிரியா, நைஜீரியா என உலகளவில் ஆறு குழந்தைகளில் ஒருவர் போர்ச் சூழலில் வசிக்கின்றனர். உயிரிழப்பு, படுகாயம், குடும்பத்தை இழப்பது, உறவுகள் யாருமற்ற அநாதரவு நிலைக்கு ஆளாவது, ஆயுதக் குழுக்களில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்படுவது, அகதிகளாவது, கல்வி தடைப்படுவது, பாலியல் கொடுமைகள், சுகாதாரமின்மை, நோய்கள், பட்டினி எனப் போர், குழந்தைகளை மிகக் கொடூரமாக பாதிக்கிறது. அவர்களது குழந்தைமையைச் சிதைக்கிறது. அந்த மன உளைச்சல், பிழைத்திருந்தாலுமே ஆயுள் வரை அவர்களைத் துரத்துகிறது. வியட்நாமில் அமெரிக்க குண்டுவீச்சில் உடலெங்கும் தீக்காயம்பட்டு அழுதபடி ஓடிவந்த சிறுமியின் கண்ணீரை உலகம் மறக்காது. நேஷனல் ஜியாகிரஃபிக் இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்ற, சோவியத் - ஆஃப்கன் போரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் கண்களை, 41 வருடங்களாகியும் நம்மால் மறக்க முடியவில்லை அல்லவா? அதுபோல பல கோடி கண்கள், போர்க்களங்களில் தங்களைக் காப்பாற்ற நீளும் கரங்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன. அக்கண்களின் அச்சம் துடைக்கப்பட வேண்டும்; போர்கள் நிறுத்தப்பட வேண்டும்! உரிமையுடன், ஸ்ரீ ஆசிரியர்
Iran war: புதிய Supreme Leader - யார் இந்த Mojtaba Khamenei? | Decode | Middle East | Vikatan
NDA கூட்டணி: Pawan Kalyan Advise; நெறுக்கும் BJP; குழப்பத்தில் ADMK - விழிபிதுங்கும் VIJAY DMK IPS
“டெல்லிக்கு அழைத்த சி.பி.ஐ... பனையூரில் முகாமிடும் விஜய்” - பின்னணி என்ன?
தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க-வை இணைக்க கடுமையான முயற்சிகள் நடப்பதாக ஒருபுறம் செய்திகள் வருகின்றன. மறுபுறம் டெல்லியில் சி.பி.ஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகுமாறு சம்மன் வந்துள்ளது. டெல்லி செல்ல வேண்டிய விஜய் எதற்காக பனையூரில் கூட்டம் போடுகிறார்? என்ன திட்டத்தில் த.வெ.க இருக்கிறது என விசாரித்தோம்... தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க-வை கொண்டுவர வேண்டும் என பா.ஜ.க தரப்பு, கடுமையான முயற்சிகளை எடுத்துவருகிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணிக்கு சென்றபிறகு, த.வெ.க-வை பா.ஜ.க பக்கம் கொண்டுவரும் வேலையில் டெல்லி தலைமை இறங்கியுள்ளது. இதற்காக, தனி டீம் ஒன்றும் களத்தில் இறங்கியுள்ளது. இதுவரை த.வெ.க நிர்வாகிகள் மட்டுமே, கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசிவந்த நிலையில், இந்த முறை விஜய்க்கு நெருக்கமான நபர்களை வைத்து கூட்டணி காய்நகர்த்தலை பா.ஜ.க மேற்கொள்கிறதாம். தவெக விஜய் இதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை கையாண்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக கரூர் விவகாரத்தில் ஏற்கெனவே, சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகியிருந்தார் விஜய். அப்போதே அடுத்தகட்ட விசாரணைக்கு அழைப்பதாகச் சொல்லியிருந்தனர். கூட்டணி விவகாரம் ஒருபுறம் சூடுபிடித்து வரும் நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய் தரப்புக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10-ம் தேதி டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்தது. ஆனால் அன்று கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதால், தன்னால் ஆஜராக முடியாது என விஜய் தரப்பில் பதில் மனு அளித்துள்ளார்கள். வேறு ஒரு தேதியில் விசாரணையை வைத்துக்கொள்ள விஜய் தரப்பு கோரிக்கைவைத்துள்ளது. அப்படியன்றி சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக வாய்ப்புள்ளதா? என்று கேட்டிருக்கிறார்கள். வழக்கு டெல்லி சி.பி.ஐ யில் நடப்பதால், டெல்லியில் மட்டுமே ஆஜாராக முடியும் என சி.பி.ஐ. தரப்பில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். டெல்லி சி.பி.ஐ-யிடம் செல்ல வேண்டுமா என்றும்... விசாரணை என்ற பெயரில் அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்படுத்துவார்களோ என்றும் விஜய் தரப்பு யோசிக்கிறதாம். இதனால் டெல்லிக்கு அழைத்த மார்ச் 10-ம் தேதி பனையூரில் நிர்வாகிகள் கூட்டத்தை த.வெ.க நடத்துகிறது. இதில் மாநில நிர்வாகிகள் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும் என தலைமையிலிருந்து உத்தரவு வந்துள்ளது. மற்றொருபுறம் அதே 10-ம் தேி அன்று இருபத்தி ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேர்காணலையும் நடத்த இருக்கிறார் விஜய். ஒவ்வொரு தொகுதிக்கு இரண்டு முதல் மூன்று நபர்களை தேர்வு செய்துள்ளது, புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் தலைமையிலான குழு. அவர்களை பனையூரில் வைத்து நேர்காணல் செய்யும் விஜய் அது குறித்த வீடியோவையும் வெளியிட உள்ளார். சிபிஐ இந்த நேர்காணல் முடிந்த பிறகு விஜய்க்கு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை வரிசையாக நடத்தி, அவரை பிஸியாக காட்ட நினைக்கிறது த.வெ.க தலைமை. அதை வைத்து டெல்லி சி.பி.ஐ-யிடம் ஆஜராகும் நாள்களை தள்ளிப்போடலாம் என த.வெ.க தரப்பு திட்டமிடுகிறது. கூட்டணிக் குறித்து முழுமையாக ஒரு முடிவு எடுக்காமல் டெல்லிக்குச் செல்ல வேண்டாம் என விஜய்யிடம் அறிவுறுத்தியுள்ளார்கள். தவெக தலைவர் விஜய் மற்றொருபுறம் கூட்டணி இருக்கோ, இல்லையோ, நமக்கான வேட்பாளர்களை 234 தொகுதிகளுக்கும் இறுதி செய்யுங்கள் என்று விஜய் தனது நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளார். அந்த அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. “முதற்கட்டடமாக ஐம்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து விஜய்யிடம் ஒப்புதல் வாங்க உள்ளார்கள். அந்த வேட்பாளர்கள் பட்டியலை வைத்து முதற்கட்ட பட்டியலை வரும் மார்ச் 16 தேதி வெளியிட உள்ளது, கட்சி. அதனை தொடர்ந்து விஜய் பிரசாரத்திற்கான சுற்றுப்பயணமும் துவங்க உள்ளது என்கிறார்கள் த.வெ.க வின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள். கரூர் சம்பவம்: `நாளையே நேரில் ஆஜராக' சிபிஐ சம்மன் - கால அவகாசம் கேட்ட விஜய்?
“டெல்லிக்கு அழைத்த சி.பி.ஐ... பனையூரில் முகாமிடும் விஜய்” - பின்னணி என்ன?
தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க-வை இணைக்க கடுமையான முயற்சிகள் நடப்பதாக ஒருபுறம் செய்திகள் வருகின்றன. மறுபுறம் டெல்லியில் சி.பி.ஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகுமாறு சம்மன் வந்துள்ளது. டெல்லி செல்ல வேண்டிய விஜய் எதற்காக பனையூரில் கூட்டம் போடுகிறார்? என்ன திட்டத்தில் த.வெ.க இருக்கிறது என விசாரித்தோம்... தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க-வை கொண்டுவர வேண்டும் என பா.ஜ.க தரப்பு, கடுமையான முயற்சிகளை எடுத்துவருகிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணிக்கு சென்றபிறகு, த.வெ.க-வை பா.ஜ.க பக்கம் கொண்டுவரும் வேலையில் டெல்லி தலைமை இறங்கியுள்ளது. இதற்காக, தனி டீம் ஒன்றும் களத்தில் இறங்கியுள்ளது. இதுவரை த.வெ.க நிர்வாகிகள் மட்டுமே, கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசிவந்த நிலையில், இந்த முறை விஜய்க்கு நெருக்கமான நபர்களை வைத்து கூட்டணி காய்நகர்த்தலை பா.ஜ.க மேற்கொள்கிறதாம். தவெக விஜய் இதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை கையாண்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக கரூர் விவகாரத்தில் ஏற்கெனவே, சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகியிருந்தார் விஜய். அப்போதே அடுத்தகட்ட விசாரணைக்கு அழைப்பதாகச் சொல்லியிருந்தனர். கூட்டணி விவகாரம் ஒருபுறம் சூடுபிடித்து வரும் நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய் தரப்புக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10-ம் தேதி டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்தது. ஆனால் அன்று கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதால், தன்னால் ஆஜராக முடியாது என விஜய் தரப்பில் பதில் மனு அளித்துள்ளார்கள். வேறு ஒரு தேதியில் விசாரணையை வைத்துக்கொள்ள விஜய் தரப்பு கோரிக்கைவைத்துள்ளது. அப்படியன்றி சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக வாய்ப்புள்ளதா? என்று கேட்டிருக்கிறார்கள். வழக்கு டெல்லி சி.பி.ஐ யில் நடப்பதால், டெல்லியில் மட்டுமே ஆஜாராக முடியும் என சி.பி.ஐ. தரப்பில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். டெல்லி சி.பி.ஐ-யிடம் செல்ல வேண்டுமா என்றும்... விசாரணை என்ற பெயரில் அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்படுத்துவார்களோ என்றும் விஜய் தரப்பு யோசிக்கிறதாம். இதனால் டெல்லிக்கு அழைத்த மார்ச் 10-ம் தேதி பனையூரில் நிர்வாகிகள் கூட்டத்தை த.வெ.க நடத்துகிறது. இதில் மாநில நிர்வாகிகள் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும் என தலைமையிலிருந்து உத்தரவு வந்துள்ளது. மற்றொருபுறம் அதே 10-ம் தேி அன்று இருபத்தி ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேர்காணலையும் நடத்த இருக்கிறார் விஜய். ஒவ்வொரு தொகுதிக்கு இரண்டு முதல் மூன்று நபர்களை தேர்வு செய்துள்ளது, புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் தலைமையிலான குழு. அவர்களை பனையூரில் வைத்து நேர்காணல் செய்யும் விஜய் அது குறித்த வீடியோவையும் வெளியிட உள்ளார். சிபிஐ இந்த நேர்காணல் முடிந்த பிறகு விஜய்க்கு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை வரிசையாக நடத்தி, அவரை பிஸியாக காட்ட நினைக்கிறது த.வெ.க தலைமை. அதை வைத்து டெல்லி சி.பி.ஐ-யிடம் ஆஜராகும் நாள்களை தள்ளிப்போடலாம் என த.வெ.க தரப்பு திட்டமிடுகிறது. கூட்டணிக் குறித்து முழுமையாக ஒரு முடிவு எடுக்காமல் டெல்லிக்குச் செல்ல வேண்டாம் என விஜய்யிடம் அறிவுறுத்தியுள்ளார்கள். தவெக தலைவர் விஜய் மற்றொருபுறம் கூட்டணி இருக்கோ, இல்லையோ, நமக்கான வேட்பாளர்களை 234 தொகுதிகளுக்கும் இறுதி செய்யுங்கள் என்று விஜய் தனது நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளார். அந்த அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. “முதற்கட்டடமாக ஐம்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து விஜய்யிடம் ஒப்புதல் வாங்க உள்ளார்கள். அந்த வேட்பாளர்கள் பட்டியலை வைத்து முதற்கட்ட பட்டியலை வரும் மார்ச் 16 தேதி வெளியிட உள்ளது, கட்சி. அதனை தொடர்ந்து விஜய் பிரசாரத்திற்கான சுற்றுப்பயணமும் துவங்க உள்ளது என்கிறார்கள் த.வெ.க வின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள். கரூர் சம்பவம்: `நாளையே நேரில் ஆஜராக' சிபிஐ சம்மன் - கால அவகாசம் கேட்ட விஜய்?
கோவை: ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் - விசாரணைக்கு உத்தரவு!
கோவை வடவள்ளி 36-வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனை திமுக கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் ஆக்கிரமித்து வீடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. திமுக நிர்வாகி இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்தப் புகார் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த கட்டடம் கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பகுதியின் ஆரம்ப சுகாதார நிலையமாக பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டாலும் அங்கு போதிய இடவசதி இல்லை. கோவை திமுக நிர்வாகி இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இந்த கட்டடம் துணை சுகாதார நிலையமாகவே செயல்படுகிறது. அதில் ஒரு பகுதியை மட்டும் செவிலியர்களுக்கான குடியிருப்பாக பயன்படுத்திக் கொண்டு, 2 அறைகளை துணை சுகாதார நிலையமாகவும், 2 அறைகளை கிளினிக்காகவும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 3 அறைகளை குடியிருப்புக்காகவும், ஒரு அறையை கிளினிக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். வீடு இது தொடர்பாக செவிலியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
கோவை: ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் - விசாரணைக்கு உத்தரவு!
கோவை வடவள்ளி 36-வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனை திமுக கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் ஆக்கிரமித்து வீடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. திமுக நிர்வாகி இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்தப் புகார் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த கட்டடம் கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பகுதியின் ஆரம்ப சுகாதார நிலையமாக பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டாலும் அங்கு போதிய இடவசதி இல்லை. கோவை திமுக நிர்வாகி இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இந்த கட்டடம் துணை சுகாதார நிலையமாகவே செயல்படுகிறது. அதில் ஒரு பகுதியை மட்டும் செவிலியர்களுக்கான குடியிருப்பாக பயன்படுத்திக் கொண்டு, 2 அறைகளை துணை சுகாதார நிலையமாகவும், 2 அறைகளை கிளினிக்காகவும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 3 அறைகளை குடியிருப்புக்காகவும், ஒரு அறையை கிளினிக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். வீடு இது தொடர்பாக செவிலியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
`கிரிக்கெட்டின் லாஸ்ட் ஓவரில் சிக்ஸர் போல இந்த மாநாடுகள்' - திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை
சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து மாநாடு, நிர்வாகிகள் சந்திப்பு என தமிழ்நாட்டை வலம்வரத் தொடங்கிவிட்டனர். அதன் அடிப்படையில், தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு திருச்சி மாவட்டம், சிறுகனூரில் இன்று கலாசார நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ``ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெற்றி பெறட்டும்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார். துணை முதல்வரும் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார். ஸ்டாலின் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலு, மூத்த தலைவர் கே.என்.நேரு உள்ளிட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கின்றனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து மாநாடுகள் நடத்திவருகின்றனர். 10 லட்சம் பேர் கலந்து கொண்டிருக்கும் இந்த மாநாட்டில் என் வயது குறைந்திருப்பதாக உணர்கிறேன். உங்களால்தான் வளர்ந்து, உயர்ந்தேன். உங்களுக்காகத்தான் வாழ்கிறேன். கலைஞர் முதல் நான் வரை இந்தப் பாச உணர்வைப் பார்க்கிறேன். கிரிக்கெட்டில் ஆரம்பத்திலிருந்து ரன் எடுப்பது சரிதான். ஆனால், மேட்ச்சின் இறுதியில சிக்ஸ் அடுத்து கிராண்ட் வெற்றியாக மாற்றுவதுதான் இந்த மாநாடுகளின் நோக்கம். என்றார். Speech Updates are on the way...
அமெரிக்கா - ஈரான் போர் விவகாரம்: ``இதுதான் இந்தியாவின் நிலைபாடு - அமைச்சர் ஜெய்சங்கர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்பந்தத்தில் தொடங்கி, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா கூறியது வரை அரசியலில் பேசுபொருளானது. இதற்கிடையில், அமெரிக்கா, ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``எங்கள் அரசாங்கம் பிப்ரவரி 20-ம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டு, அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியது. பதட்டங்களைத் தணிக்க உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தொடரப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் தொடர்ந்து சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்தச் சூழலில் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மார்ச் 1-ம் தேதி பிரதமர் தலைமையில் அமைச்சரவை பாதுகாப்புக் குழு (CCS) கூடியது. ஈரானில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து பல வளைகுடா நாடுகளில் நடந்த தாக்குதல்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்திய சமூகத்தின் பாதுகாப்பு குறித்து CCS கவலை கொண்டுள்ளது. நடந்து கொண்டிருக்கும் மோதல் குறிப்பாக இந்தியாவிற்கு கவலை அளிக்கிறது. வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வேலை செய்யும் ஒரு கோடி இந்தியர்கள் உள்ளனர். ஈரானிலும், படிப்பு, வேலைவாய்ப்புக்காக சில ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இந்தப் பகுதி நமது எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கியமானது மற்றும் எண்ணெய், எரிவாயுவின் பல முக்கிய சப்ளையர்களை உள்ளடக்கியது. அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையான விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள், இப்போது நிலவும் உறுதியற்ற தன்மை கொண்ட சூழல் ஆகியவை இப்போதைய பிரச்னைகள். மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெளிப்படையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள பல இந்திய மாணவர்களை வெளி இடங்களுக்கு மாற்றுவதற்கு இந்திய தூதரகம் வசதி செய்துள்ளது. வணிக நிமித்தமாக ஈரானில் உள்ள இந்தியர்கள் ஆர்மீனியாவுக்குச் சென்று இந்தியா திரும்ப வசதி செய்யப்பட்டது. தெஹ்ரானில் உள்ள தூதரகம் முழுமையாக செயல்பட்டு வருகிறது மற்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. இந்த நேரத்தில் இந்தியர்களுக்கு ஆதரவாக இருக்க உறுதியாக இருக்கிறோம். ஈரானிய போர்க்கப்பலான லாவனை கொச்சி துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்த இந்தியாவிற்கு, ஈரான் நன்றியைத் தெரிவித்திருக்கிறது. என்றார். `அரசியல்' செய்வோருக்கு அகாதமியில் என்ன வேலை - படைப்பாளியின் பேனாவைப் பறிப்பது நியாயம்தானா?
பொன்னேரி தொகுதி கள நிலவரம் என்ன?| Ground Report | IPS Show On Road | #4
திருச்சி திமுக மாநாடு: சுட சுட பிரியாணி பார்சல்கள்; பரபரக்கும் பணிகள் - கிட்சன் கிளிக்ஸ்!
``ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜனநாயகம் - குறைக்கப்பட வேண்டிய சுமை அல்ல - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றில், `ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து எழுதியிருக்கிறார். அதன் உள்ளடக்கம்... ``2019-ம் ஆண்டு இந்தோனேசியா ஒரே நாளில் அதிபர், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை நடத்தியது. செலவைக் குறைக்கவும் நிர்வாகத்தை எளிதாக்கவும் எடுக்கப்பட்ட இந்த முயற்சி பெரும் துயரத்தில் முடிந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்ட சுமார் 900 பேர் உயிரிழந்தனர்; 5,000-க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். 2024-லும் இதே போன்ற பாதிப்புகள் தொடர்ந்தன. இதன் விளைவாக, 2025-இல் அந்நாட்டு நீதிமன்றம், தேர்தல் அதிகாரிகளின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, 2029 முதல் தேசிய மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களைத் தனித்தனியாக (2 முதல் 2.5 ஆண்டுகள் இடைவெளியில்) நடத்த உத்தரவிட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை ஆதரிப்பவர்கள், இது செலவைக் குறைக்கும் என்றும், அடிக்கடி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதைத் தவிர்க்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், இந்தோனேசியாவின் அனுபவம் நமக்கு ஒரு எச்சரிக்கையாக உள்ளது. கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தேர்தல்கள் தனித்தனியாகவே நடக்கின்றன. ஜெர்மனியிலும்கூட மாநிலத் தேர்தல்கள் வெவ்வேறு நேரங்களிலேயே நடத்தப்படுகின்றன. அமெரிக்க அதிபர் முறை வேறு, இந்தியாவின் நாடாளுமன்ற முறை வேறு. எனவே அங்குள்ள முறையை இங்கு ஒப்பிட முடியாது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் '129-வது அரசியலமைப்பு திருத்த மசோதா - 2024' உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் கவலைக்குரியவை: ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் ஐந்தாண்டு பதவிக்காலத்தை முன்கூட்டியே முடிக்க இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. ஒரு மாநில அரசு இடையில் கலைக்கப்பட்டால், அங்கு நடத்தப்படும் புதிய தேர்தல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இருக்காது. அந்தச் சுழற்சியின் மீதமுள்ள காலத்திற்கு (உதாரணமாக 1 அல்லது 2 ஆண்டுகள்) மட்டுமே அந்த அரசு பதவியில் இருக்கும். இது மக்களின் வாக்குரிமையைக் கொச்சைப்படுத்துவதாகும். மோடி, அமித் ஷா ஒருவேளை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாவிட்டால், மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்க பரிந்துரைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படுகிறது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூறியது போல, இந்திய ஜனநாயகம் 'நிலைத்தன்மையை' (Stability) விட 'பொறுப்புக்கூறலுக்கே' (Responsibility) முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு அரசு சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும்போது கலைக்கப்படுவது ஒரு ஜனநாயகப் பாதுகாப்பு அரண். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையானது ஆட்சிக் கலைப்பை ஒரு நிர்வாகச் சிக்கலாகப் பார்த்து, நாடாளுமன்ற முறையை மெதுவாக அதிபர் ஆட்சி முறைக்கு மாற்ற முயல்கிறது. உச்ச நீதிமன்றம் 'எஸ்.ஆர்.பொம்மை' வழக்கில் கூறியது போல, கூட்டாட்சி என்பது அரசியலமைப்பின் அடிப்படைத் தூண். மாநிலங்கள் வெறும் நிர்வாக அமைப்புகள் அல்ல. அவற்றுக்கென்று தனித்துவமான அடையாளம் உண்டு. அடிக்கடி நடக்கும் தேர்தல்கள், மக்கள் தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரிவிக்கும் ஒரு பின்னூட்ட அமைப்பாகச் செயல்படுகின்றன. மத்திய அளவில் ஒரு தற்காலிக அரசு தேர்தலுக்காகக் காத்திருக்க நேரிட்டால், அது பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இது நாட்டின் நிதி நிர்வாகத்தைப் பாதிக்கும். மேலும், மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாக நீட்டிக்கவும் இது வழிவகுக்கும். Election Commission - SIR தேர்தல் செலவு என்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 0.03% முதல் 0.05% வரை மட்டுமே. இந்த மிகச்சிறிய தொகையைச் சேமிக்க வேண்டும் என்பதற்காக, அரசியலமைப்பின் அடிப்படைத் தன்மையையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பலவீனப்படுத்துவது புத்திசாலித்தனம் அல்ல. ஜனநாயகம் என்பது குறைக்கப்பட வேண்டிய சுமை அல்ல. அது நாம் செலுத்த வேண்டிய விலை. தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட 'நீதிபதி குரியன் ஜோசப் குழு', இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதனைத் தமிழ்நாடு அரசும் வழிமொழிகிறது. ஒரே நாடு - ஒரே தேர்தல் முறையினால் வரும் நன்மைகளை விட பாதிப்புகள் மிக அதிகம். இந்தோனேசியா செய்த தவற்றை இந்தியா செய்யக் கூடாது. நினைவுச் சுவடுகள் 03: `திமுக வசனங்கள் டு காப்பி எடுத்த அதிமுக' - மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்!
புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு; எதிர்க்கும் ட்ரம்ப்... தீவிரமடையும் போர்!
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் 10வது நாளை எட்டி இருக்கிறது. இத்தாக்குதல்களால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விநியோகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் புதிய தலைவரை தனது ஒப்புதல் இல்லாமல் நியமிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். அதோடு 48 மணி நேரத்தில் தான் புதிய தலைவரை அறிவிக்கப்போவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதற்குள் ஈரான் தங்களது புதிய சுப்ரீம் தலைவரை அறிவித்து இருக்கிறது. போர் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராக (Supreme Leader) போரில் கொலை செய்யப்பட்ட உயர்மட்டத் தலைவர் காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானின் 88 மதகுருமார்களைக் கொண்ட 'நிபுணர்கள் சபை' மொஜ்தபா கமேனியை ஈரானின் மூன்றாவது உயர்மட்டத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. டொனால்டு ட்ரம்ப் இந்த நியமனத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் அவர் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேலும் புதிய தலைவரைக் குறிவைப்பதாக எச்சரித்துள்ளது. ஈரானின் பதில் தாக்குதலில் இதுவரை 7 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதே சமயம், அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் 1,332 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு கூறுகிறது. அமெரிக்கா நிபந்தனையற்ற சரணடைதலை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், போர்நிறுத்தத்தை நாடவில்லை என்றும், ஆக்கிரமிப்பாளர்களைத் தண்டிப்போம் என்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் தெரிவித்துள்ளார். அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதலின் 9-வது நாள் தாக்குதலில் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் தெஹ்ரான் நகரின் வான்பரப்பு அடர்ந்த கரும்புகையால் சூழ்ந்துள்ளது. எரிபொருள் கிடங்குகளைத் தாக்குவது போர்க்குற்றம் என்றும், இதன் மூலம் நச்சுப் பொருள்கள் காற்றில் பரவி வருவதாகவும் ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் குற்றம்சாட்டியுள்ளார். இது மோதலின் ஆபத்தான புதிய கட்டம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால் இந்த எரிபொருள் கிடங்குகள் ஈரானின் ஏவுகணை தயாரிப்பு மற்றும் போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், அவை சட்டபூர்வமான ராணுவ இலக்குகளே என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய ஆட்சியாளர்களை இரக்கமின்றி தாக்குவோம் என்றும், ஈரானிய ஆட்சியை நிலைகுலைக்க எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்தப் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையில், அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் செவ்வாயன்று இஸ்ரேல் செல்லவுள்ளனர். இந்தப் போரினால் உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன, வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும் விமானப் போக்குவரத்து பெரும் இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய திரவங்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. இது உலகளாவிய நுகர்வில் சுமார் 20% மற்றும் உலகின் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் கால் பங்கு ஆகும். ஹார்முஸ் வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் பெரும்பாலானவை ஆசியாவிற்குச் செல்கின்றன. சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை சேர்ந்து ஜலசந்தி வழியாகச் செல்லும் கச்சா எண்ணெயில் பாதிக்கும் மேல் எடுத்துக் கொள்கின்றன. இதனால் இதில் ஆசியா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: 'குலுக்கல் முறையில் தங்கக் காசு' - கூட்டம் சேர்க்க புது ஐடியா; பேசுபொருளாகும் இபிஎஸ் பிரசாரம்
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் வாகன பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், பவானி தொகுதியில் நேற்றிரவு உரை நிகழ்த்தியிருக்கிறார். தங்க காசு டோக்கன் இந்த நிகழ்ச்சிக்கு அதிக எண்ணிக்கையில் மக்களைத் திரட்டும் முயற்சியாக கூட்டத்தில் பங்கேற்கும் நபர்களுக்குக் குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவித்ததுடன் அதற்கான டோக்கனையும் கூட்டம் தொடங்கும் முன்னரே விநியோகம் செய்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் உரை நிறைவடைந்ததும் குலுக்கல் நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், கூட்டம் நிறைவடைந்ததும் தங்க நாணயத்திற்கான குலுக்கல் நடைபெறும் என மக்கள் இரவு நீண்ட நேரமாக கையில் டோக்கனுடன் காத்திருந்துள்ளனர். கூட்டம் முடிந்ததும் குலுக்கல் முறையில் 10 நபர்களைத் தேர்வு செய்து அரை கிராம் தங்க நாணயத்தைப் பெற அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட டோக்கன்களை வென்ற 10 நபர்களும் கூட்டம் முடியும் முன்னரே பாதியில் வெளியேறியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. தங்க காசு டோக்கன் சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்து தங்க காசுகள் வழங்கப்படும் என அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என டோக்கன் விநியோகம் செய்த நிகழ்வு அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. மிரட்டும் பா.ஜ.க, முரண்டு பிடிக்கும் எடப்பாடி - தொகுதிப் பங்கீட்டில் யார் கை ஓங்குகிறது?
பழவேற்காடு ஏரி ஆபத்தில்? | Adani துறைமுகமும், Tamil Nadu அரசின் அலட்சியமும்! | IPS Show On Road |#3
கரூர் சம்பவம்: `நாளையே நேரில் ஆஜராக'சிபிஐ சம்மன் - கால அவகாசம் கேட்ட விஜய்?
செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் டெல்லி சென்று சிபிஐ முன் ஆஜராகி இருந்தார். அப்போது சிபிஐ-யின் விசாரணை குழு விஜய்யிடம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், 'கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் தனது கட்சியோ அல்லது அதன் நிர்வாகிகளோ பொறுப்பல்ல. தவெக தலைவர் விஜய் மேலும், நான் அங்கேயே இருந்தால் மேலும் குழப்பம் ஏற்படும் என உணர்ந்து நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்' என விஜய் கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது. தேவைப்பட்டால் மீண்டும் இந்த வழக்கில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நாளை (மார்ச்.10) விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால் பல்வேறு திட்டமிட்ட நிகழ்வுகள் இருப்பதால் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க விஜய் தரப்பில் இருந்து கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்: '$200 தொடுமா கச்சா எண்ணெய்?' - இஸ்ரேல் மீது அமெரிக்கா கோபம்
கடந்த 28-ம் தேதியில் இருந்து ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், அந்த கூட்டணியில் தற்போது விரிசல் எழுந்துள்ளது. என்ன காரணம்? கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), ஈரானின் 30 எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் குறித்து முன்னரே இஸ்ரேல் அமெரிக்காவிற்குத் தெரிவித்திருந்ததுதான். ஆனால், இஸ்ரேல் சொன்ன அளவைத் தாண்டி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது. கச்சா எண்ணெய் 100 டாலர்களைத் தாண்டிய கச்சா எண்ணெய்; தங்கத்தை விட்டுட்டு 'இந்த' பக்கம் வாங்க முதலீட்டாளர்களே! ஈரானின் ராணுவத் தளவாடங்களுடன் இந்த எண்ணெய் கிடங்குகளுக்கு லிங்க் இருந்ததால், தாங்கள் அதன் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், அமெரிக்காவோ ஈரான் குடிமக்களையும் உலக அளவிலான எண்ணெய் விலையையும் பாதிக்கும் இந்தத் தாக்குதலைக் கொஞ்சமும் விரும்பவில்லை. மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பொறுத்தவரை, அவருக்கு எண்ணெய் கட்டமைப்புகள் மீது எந்தத் தாக்குதலும் நடக்கக்கூடாது. ஈரான் பதில் இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கதம் அல்-அன்பியா கூறியுள்ளதாவது... ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் தொடர்ந்தால், தங்களது பிராந்தியத்தில் இருக்கும் பிற நாடுகளின் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம். ஈரான் இன்னும் பிற நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறி வைக்கவில்லை. இனி ஈரான் கட்டமைப்புகள் மேல் தாக்குதல் நடந்தால், உடனே நாங்களும் தாக்குதல் நடத்துவோம். இது எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 டாலர்கள் வரை உயர்த்தலாம். தங்கத்தை விற்க திண்டாடும் 'துபாய்': தள்ளுபடியில் விற்கிறோம் 'வாங்க' என்று அழைக்கும் வணிகர்கள்!
வயநாடு: `மக்கள் தவறாக நினைப்பார்கள்; தள்ளி நில்லுங்கள்' - மம்மூட்டி, CPM மா.செ இடையே நடந்தது என்ன?
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. முண்டக்கை, சூரல்மல நிலச்சரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிகொடுக்கும் மாடல் டவுண்ஷிப் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 64 ஹெக்டேர் நிலத்தில் ஒரு குடும்பத்துக்கு 7 செண்ட் நிலத்தில் ஆயிரம் சதுர அடி அளவுள்ள வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின்படி மூன்று கட்டங்களாக 402 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கல்பெட்டா-வில் உள்ள எல்ஸ்டன் எஸ்டேட்டில் நடைபெறும் டவுண்ஷிப் பணிகளை கடந்த 7-ம் தேதி திடீரென பார்வையிடச் சென்றார் நடிகர் மம்மூட்டி. ஒரு படபிடிப்புக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் டவுண்ஷிப்புக்குச் சென்ற அவருடன் சினிமா தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் சென்றிருந்தார். டவுண்ஷிப்பை சுமார் 15 நிமிடங்கள் சுற்றிபார்த்தவரிடம் தலைமை இயக்க அதிகாரி ஜோ.அருன், சமூக நலக்கூடம் அமைக்கும் இடம், மக்களுக்கு செய்யப்படும் வசதிகள் போன்றவற்றை விளக்கிக் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மம்மூட்டி பேசியதுடன், கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டார். நடிகர் மம்மூட்டியுடன் வயநாடு சி.பி.எம் மாவட்டச்செயலாளர் கே.ரஃபீக் டவுண்ஷிப்பை பார்வையிட்டுவிட்டு திரும்பும்போது நடிகர் மம்மூட்டி கூறுகையில், இதுபோன்ற திட்டங்கள் அரிதாகவே நடக்கும். துயரத்தில் உள்ள, ஆபத்தில் சிக்கிய மக்களுக்கு ஒரு நாட்டின் மக்கள் ஒன்றிணைந்து நன்கொடையாக அளித்ததுதான் இந்த டவுண்ஷிப். கேரள மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை அரசு வழங்குகிறது. மக்களின் மனங்களை இதன் மூலம் பார்க்கிறேன். சமூகத்தின் மூலதனமாகத்தான் இதை பார்க்கிறேன். மற்றவர்கள் மீதான இரக்கமும், அனுதாபமும் கேரளாவில் மிக அதிகமாக உள்ளது. அதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம் என்றார். வயநாட்டில் புதிய டவுண்ஷிப்பை பார்வையிட்ட நடிகர் மம்மூட்டி இதற்கிடையே மம்மூட்டி டவுண்ஷிப்பை பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது சி.பி.எம் வயநாடு மாவட்டச் செயலாளர் கே.ரஃபீக் அவருடன் சென்றுகொண்டே மீடியாவுக்கு போஸ்கொடுத்துக் கொண்டிருந்தார். தேர்தல் சமயத்தில் இது அரசியல் நிகழ்வாக திசைதிரும்பிவிடக்கூடாது என நினைத்த மம்மூட்டி, நீங்கள் எப்போதும் என்னுடன் வந்துகொண்டிருந்தால், நான் உங்களுக்காக இங்கு வந்ததாக மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளமாட்டார்களா. எனவே தள்ளி நில்லுங்கள் எனக்கூறினார். அந்த உரையால் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. சி.பி.எம் நிர்வாகிகள் மம்மூட்டிக்கு பொது இடத்தில் எப்படி செயல்பட வேண்டும் என தெரியவில்லை என்பதுபோன்ற எதிரான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் அரசியல் சார்பற்ற நடிகர் மம்மூட்டி அவ்வாறு கூறியதில் தவறு இல்லை என மற்தொரு சாராரும் கூறிவருகின்றனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மம்மூட்டியை ஆதரித்து பதிவிடுவதால் இது அரசியல் விவாதமாக மாறி உள்ளது. இதற்கிடையே இது தனிப்பட்ட உரையாடல். அதை சில வலதுசாரி ஊடகங்கள் தவறாக சித்திரித்துவிட்டன என கே.ரஃபிக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09
திருமாவளவனின் முதல் தேர்தல் வெற்றி! முதல் களம் 09 தமிழக அரசியலில் கட்சித் தலைவர்களின் செல்வாக்கு, கூட்டணி பலம் மற்றும் சமூகம் ஆகியவைதான் எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஆனால், இந்த நிலையான சூத்திரங்களுக்கு அப்பாற்பட்டு, வேறொரு வழியில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். கிராமப்புறம் ஒன்றில், பட்டியலின குடும்பத்தில் பிறந்து, சட்டக்கல்வியைப் பயின்று, சமூக உணர்வு கொண்ட இளைஞனாக உருவான அவர், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான அடிமட்டப் போராட்டங்களிலிருந்தே தன் பயணத்தைத் தொடங்கியவர். 2001 தேர்தலில் அவருக்கு கிடைத்த முதல் சட்டமன்ற தேர்தல் வெற்றிதான் அவரது கட்சி, தமிழகத்தில் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாவதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 1990-களில் தலித் சிறுத்தைகள் இயக்கத்துக்கு தலைமையேற்று, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்ட அவர், தேர்தல் அரசியலுக்கு அடியெடுத்து வைப்பதை விரும்பாதவராக இருந்தவர். அப்படியான ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கியது எப்படி, தேர்தல் அரசியலுக்குள் அவரை இழுத்து வந்தவர் யார், தமிழகத்தின் பிற பட்டியலின அமைப்புத் தலைவர்களிடமிருந்து வேறுபட்டு, பொது சமூகத்துக்கான தலைவராக உயர்ந்தது எப்படி? 1980-களிலிருந்து பயணிக்கலாம்... திருமாவளவன் போராட்டங்களிலிருந்து தொடங்கிய பொது வாழ்க்கை திருமாவளவனின் பொது வாழ்க்கை அலுவலக அறைகளிலோ, கட்சித் தலைமைகளின் மேசைகளிலோ தொடங்கவில்லை; மாறாக, கிராமங்களின் தெரு முனைகளிலும், சாலையோரப் போராட்டங்களிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரும் கோபமும் கலந்த இடங்களிலும்தான் தொடங்கியது. இளம் வயதிலேயே இந்திய தலித் சிறுத்தைகள் இயக்கத்தில் (Dalit Panthers of India - DPM) இணைந்தார். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தலித் உரிமைகளுக்காகவும் தீவிரமாகப் போராடிய இந்த இயக்கத்தின் தமிழக அமைப்பாளராக இருந்த அ.மலைச்சாமி 1989-ல் மரணமடையவே, அந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமாவளவன். அவரது தலைமையில் தமிழ்நாடு முழுவதும் தலித் சிறுத்தைகள் ஒரு பரவலான சக்தியாக உருவெடுத்தது. கிராமம் கிராமமாகச் சென்று தலித் இளைஞர்களை ஒன்று திரட்டினார். சமத்துவத்துக்கான உரத்த குரலாக ஒலித்தார். நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த சாதி அநீதிகளுக்கு எதிராக முழங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களிடையே சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்ப்பையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்திய அவர், போராட்டங்கள், கருத்தாழமிக்க உரைகள், விழிப்புணர்வு பயணங்கள் வழியாக தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுக்கத் தொடங்கினார். கட்சி... கொடி... கூட்டணி! EP06 `நட்சத்திரம் நகர்ந்து வந்த பாதை!' | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அரசியலை நோக்கி... தலித் சிறுத்தைகள் இயக்கத்தில் தீவிரமாக இயங்கியபோது, தேர்தல் அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் இருந்தார் திருமாவளவன். ஆனால், சமூக நீதி நிலைத்து நிற்க வேண்டுமானால், போராட்டத்தோடு அரசியல் அதிகாரமும் தேவை. மேடைகளில் எழுப்பும் உரிமைக்குரலை சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் எழுப்புங்கள்; அதிகார அரசியல் மூலம்தான் குறைந்தபட்ச உரிமைகளையாவது வென்றெடுக்க முடியும் என அவர் மீது அக்கறை கொண்டவர்கள் வலியுறுத்திய நிலையில், அதிலுள்ள நியாயத்தை அவர் புரிந்துகொண்டார். அதனாலேயே தலித் சிறுத்தைகள் இயக்கம், படிப்படியாக ஒரு முழு அரசியல் கட்சியாக உருவாகத் தொடங்கியது அந்த வகையில், 1990-களின் பிற்பகுதியில், போராட்ட மேடைகளிலிருந்து தேர்தல் அரங்குக்கு ஒரு துணிச்சலான பாய்ச்சலை நிகழ்த்தினார் திருமாவளவன். தலித் சிறுத்தைகள் இயக்கத்தின் சமூகநீதி உணர்வையும் போராட்ட அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, 1999-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) உருவானது. இது வெறும் பெயர் மாற்றமாக அல்லாமல் ஒரு தத்துவத்தை நோக்கிய மாற்றமாக அமைந்தது. “தெருவில் மட்டும் குரல் கொடுத்தால் போதாது, சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும்” என்கிற உறுதிபாட்டுடன், தலித் உரிமைகள், சாதி ஒழிப்பு, பரந்துபட்ட சமூக நீதி ஆகியவற்றை ஜனநாயகத்தின் உள்ளே கொண்டு சென்று நிறுவுவதையே விசிகவின் இலக்காக அமைத்துக்கொண்டார் திருமாவளவன். கட்சி... கொடி... கூட்டணி | தொல். திருமாவளவன் திருப்புமுனையாக அமைந்த முதல் தேர்தல் வெற்றி 1999 நாடாளுமன்றத் தேர்தல்தான் விசிக சந்தித்த முதல் தேர்தல். சிதம்பரம் (தனி) தொகுதியில் தமிழ் மாநிலக் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் திருமாவளவன். புதிய கட்சி, புதிய முகம், புதிய சிந்தனை என்றாலும் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அந்தத் தோல்வி அவருக்கு ஒரு பாடமாக அமைந்தது. அடுத்த இரண்டே ஆண்டுகளில், 2001 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தனித் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டார் திருமாவளவன். திமுக சின்னத்திலேயே போட்டியிட்ட திருமாவளவன் 64,627 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்த தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) வேட்பாளர் சு.புரட்சிமணியை 1,855 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். வெற்றி வித்தியாசம் வெறும் 1.37% மட்டும்தான். ஆனால்,புதிதாக உருவான தலித் மக்களை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சி, தனித் தொகுதி, கூட்டணி அரசியல் என்கிற சூழலில் இந்த சிறிய வித்தியாசமே பெரிதாக பார்க்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, போராட்ட இயக்கத்திலிருந்து தேர்தல் களத்துக்கு மாறியதை மக்கள் ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாகவே அது அமைந்தது. கூடவே போராட்டக்காரருக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரபூர்வ அங்கீகாரம். அவரது குரல் பொது மேடைகளைத் தாண்டி, சட்டமன்றத்திலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்த ஒரு வெற்றிதான், பின்னர் வந்த அவரது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிகளுக்கும் விதை போட்டது. 2009-ல் சிதம்பரம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2014-ல் ஒரு தோல்வி வந்தாலும், 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் மீண்டும் அதே தொகுதியில் அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி அந்த முதல் சிறிய வெற்றியிலிருந்து இன்று விசிக ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில், தலித் சமூகத்தை அரசியல் கட்சிகள் எப்போதும் “இலக்காக” வைத்தே வந்திருக்கின்றன. திமுகவும் இடதுசாரிக் கட்சிகளும் கூட பல காலமாக தலித் மக்களை மையப்படுத்தி பேசி வந்துள்ளபோதிலும், தலித் சமூகம் ஒரு ஒற்றைப் பெரும் அரசியல் சக்தியாக உருவாகாமலேயே இருந்துவந்தது. அந்த நிலையை ஓரளவு மாற்றி உள்ளார் திருமாவளவன். 2024 தேர்தலில் இரண்டு நாடாளுமன்ற இடங்களை தனது ‘பானை’ சின்னத்தில் வென்ற பிறகு, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது விசிக. அதே சமயம், தலித் அரசியலோடு நின்றுவிடாமல், சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை, தமிழ் உணர்வு, இலங்கைத் தமிழர் பிரச்னை என பல்வேறு தளங்களில் திருமாவளவன் குரல் ஒலிக்கிறது. “சமூகத்தை ஒன்றுபடுத்துவது சாதியால் அல்ல, கொள்கையால்தான் முடியும். சாதி அடிப்படையில் ஒருபோதும் நாங்கள் முயல மாட்டோம். எங்கள் அரசியல் பேச்சை ஏற்றுக்கொள்பவர்கள் எங்களோடு இருப்பார்கள். தோற்றாலும் சரி, இதைத்தான் நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம்” என்கிறார் திருமாவளவன். அவரது இந்த நிலைப்பாடு காரணமாகவே, தமிழ்நாட்டின் கூட்டணி அரசியலில் இன்று அவரது கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில், ஒடுக்கப்பட்டோரின் குரலாக மட்டுமல்லாது, சமத்துவத்தையும் நீதியையும் வலியுறுத்தும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் முகமாகவும் அவர் உயர்ந்திருக்கிறார். தொல்.திருமாவளவன் திமுகவுக்கு பக்கபலம் இந்த நிலையில், தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை, திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தேவையையும் மதிப்பையும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அதிமுக தொடர்ந்து பிளவுண்டு கிடக்கிறது. பாஜகவுக்கு கூட்டணி இல்லாமல், தமிழ்நாட்டில் காலூன்றுவதே சிரமமாக உள்ளது. இந்தச் சூழலில் வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட விசிக, திமுக கூட்டணிக்கான சித்தாந்த வலிமையையும் சமூகப் பன்முகத்தன்மையையும் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், திமுக ஆட்சியைப் பிடித்ததற்கும், 2024 நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றிக்கும் விசிக-வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்ததாக அரசியல் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 78 சட்டமன்ற தொகுதிகள் ஆட்சியைத் தீர்மானிப்பவையாக உள்ளன. 2021-லும் இதே பகுதிதான் திமுகவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது. இந்தத் தேர்தலில், திமுக கூட்டணி 64 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அதிமுக-பாஜக கூட்டணிக்கு 14 இடங்கள் மட்டுமே கிடைத்தது.இந்த நிலையில், 2026 தேர்தலிலும் இந்தப் பகுதியே வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஆட்சியில் பங்கு என்கிற முழக்கத்தை, கடந்த ஆண்டு திருமாவளவன் எழுப்பியபோது தமிழக அரசியல் வட்டாரம் அதிர்ந்துதான் போனது. திமுகவுக்கும் அதிர்ச்சிதான் என்றாலும், தொடர்ந்து அவர் அந்த கோரிக்கையை வலியுறுத்தவில்லை. மேலும், 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே விசிக நீடிக்கும் என்றும் திருமாவளவன் அறிவித்துவிட்டார். தலித் 'முத்திரை'யை உடைத்த தலைமைத்துவம் திருமாவளவன் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், அதை ஒருநாளும் அவர் அரசியல் பொது மேடைகளில் குறிப்பிட்டுப் பேசியதில்லை. ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக, அவர் மீது ‘தலித் தலைவர்’ என்கிற முத்திரை குத்தப்படுவதாகக் கூறும் அரசியல் திறனாய்வாளர்கள், தமிழகத்தில் இன்றைய தேதிக்கு, திருமாவளவன் அளவுக்கு அரசியல் வாசிப்புத் திறன், சமூக நீதி குறித்த நுண்ணுணர்வு, உறுதியான மொழி ஆளுமை, மக்களுடன் நெருக்கமாக இணையும் பணிவு, சிக்கலான கருத்துகளையும் எளிய சொற்களில் விளக்கும் அறிவாற்றல், போராட்ட நிலைகளில் பின்னடைவு இல்லாமல் நிற்கும் மனத்துணிச்சல், தொடர்ந்து படிக்கும் பழக்கத்தால் உருவான ஆழமான அறிவு போன்ற பண்புகளை ஒருங்கே கொண்டவராக வேறு எந்த ஒரு கட்சித் தலைவரும் இல்லை என்கின்றனர். தொல்.திருமாவளவன் திருமாவளவன் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது பதிவு ஒன்றில், ஒரு தலைவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என நான் நினைப்பவை தமிழகமெங்கும் கிராமம் கிராமமாக பல ஆண்டுகள் அலைந்து உண்மையான வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருத்தல், பலதரப்பட்டவர்களை இணைத்துக்கொண்டு ஓர் அமைப்பை கட்டியெழுப்பும் இயல்பு கொண்டிருத்தல், அடிப்படையான வாசிப்பும் அதிலிருந்து வரும் அறிவுத்தகுதியும், அதன் விளைவான தொலைநோக்கும் கொண்டவராக இருத்தல் ஆகியவைதான்.திருமாவளவன், அவருடைய சாதியின் தலைவராக தொடங்கியவர். தமிழகத்தைத் தலைமைதாங்கும் தகுதிகொண்டவராக வளர்ந்தவர். இன்று, தமிழகத்தின் முதன்மையான அரசியல் தலைவர் அவரே எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில்,தெருவில் தொடங்கிய திருமாவளவனின் போராட்டக் குரல், 2001 சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த முதல் தேர்தல் வெற்றி மூலம் சட்டமன்றத்திலும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் ஒலிப்பதோடு, இன்று தமிழகத்தின் முதன்மையான அரசியல் தலைவராகவும் அவரை உயர்த்தி உள்ளது. (தொடரும்.!)
திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் | DMK, ADMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு? |TN Elections 360 updates
ஈரோட்டில் 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்'பயணம்; இபிஎஸ் ஆவேசப் பேச்சு | Photo Album
அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மிரட்டும் பா.ஜ.க, முரண்டு பிடிக்கும் எடப்பாடி - தொகுதிப் பங்கீட்டில் யார் கை ஓங்குகிறது?

32 C