'எங்களது தலைவரின் ரத்தத்திற்கு பழி வாங்காமல் விடமாட்டோம்' - ஈரான் கூறும் 'அமெரிக்கா'வின் பிளான்?
ஈரானின் உச்ச தலைவர் இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. இன்னமும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் இன்னும் நீளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சிக்னல் தந்து வருகிறார். இந்த நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள் தளபதி லாரிஜானி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... நாங்கள் எங்களுடைய தலைவர் மற்றும் மக்களின் ரத்தத்திற்கு பழி வாங்குவோம். இதற்கான விளைவை ட்ரம்ப் சந்திக்க வேண்டும்... சந்திப்பார். லாரிஜானி இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! பின், ஈரான் தேசிய தொலைகாட்சி பேட்டியில் லாரிஜானி, ட்ரம்பை விடமாட்டோம். அவரது செயலுக்கான விளைவை அவர் சந்தித்தே ஆக வேண்டும். அவர் நமது தலைவர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது மக்களைக் கொன்றுள்ளார். இது சாதாரண விஷயம் அல்ல. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை உடைக்க பார்க்கிறது. வெனிசுலாவில் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்துள்ளது போல ஈரானிலும் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது என்று பேசியுள்ளார். லாரிஜானியைப் பற்றி ட்ரம்பிடம் கேட்ட போது, அப்படி ஒருவரை தெரியாது. அவர் சொல்வதைக் கண்டுகொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளார். நீங்கள் 'இதற்காக' வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை' மம்தா பதில்
கடுமையாகும் ஈரான் போர்: முன்பை விட வேகமாக வலுவாகும் அமெரிக்க டாலர்! - இது 'எப்படி'சாத்தியம்?
ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சொல்லப் போனால், இந்தப் போருக்குப் பின் தான், அமெரிக்க டாலரின் மதிப்பு பெரியளவில் வலுவடைந்து வருகிறது. இதற்கான '4' காரணங்கள் என்ன? > போர் பதற்றத்தில் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்கிறார்கள். அப்படியான பாதுகாப்பு முதலீடுகளில் 'அமெரிக்க கருவூலப் பத்திரமும்' ஒன்று. ஆக, முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் கருவூலப் பத்திரம் உள்ளிட்ட அமெரிக்க சார்ந்த முதலீடுகளுக்கு செல்லும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாகிறது. us dollar - usd - அமெரிக்க டாலர் > இந்தியாவைப் போன்று எரிசக்திக்கு இன்னொரு நாட்டை சார்ந்திருக்கும் நாடல்ல அமெரிக்கா. அமெரிக்காவே எரிசக்தியின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர். அதனால், கச்சா எண்ணெய் மீதான அழுத்தம் அமெரிக்க டாலரை எட்டவில்லை. > எரிசக்தியின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது. இதனால், இப்போதைக்கு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்காது. இந்த எதிர்பார்ப்பும் டாலரின் மதிப்பை வலுவாக்கி உள்ளது. > இப்போது நிலவும் நிலையற்ற தன்மையால், உலக நாடுகளுக்கு அமெரிக்க டாலர் தேவை. காரணம், அது தான் உலகளாவிய நாணயம். இதனாலும், நாடுகள் அமெரிக்க டாலர் பக்கம் திரும்பியுள்ளன. இதுவும் அதன் மதிப்பை உயர்த்துகிறது.
கடுமையாகும் ஈரான் போர்: முன்பை விட வேகமாக வலுவாகும் அமெரிக்க டாலர்! - இது 'எப்படி'சாத்தியம்?
ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சொல்லப் போனால், இந்தப் போருக்குப் பின் தான், அமெரிக்க டாலரின் மதிப்பு பெரியளவில் வலுவடைந்து வருகிறது. இதற்கான '4' காரணங்கள் என்ன? > போர் பதற்றத்தில் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்கிறார்கள். அப்படியான பாதுகாப்பு முதலீடுகளில் 'அமெரிக்க கருவூலப் பத்திரமும்' ஒன்று. ஆக, முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் கருவூலப் பத்திரம் உள்ளிட்ட அமெரிக்க சார்ந்த முதலீடுகளுக்கு செல்லும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாகிறது. us dollar - usd - அமெரிக்க டாலர் > இந்தியாவைப் போன்று எரிசக்திக்கு இன்னொரு நாட்டை சார்ந்திருக்கும் நாடல்ல அமெரிக்கா. அமெரிக்காவே எரிசக்தியின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர். அதனால், கச்சா எண்ணெய் மீதான அழுத்தம் அமெரிக்க டாலரை எட்டவில்லை. > எரிசக்தியின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது. இதனால், இப்போதைக்கு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்காது. இந்த எதிர்பார்ப்பும் டாலரின் மதிப்பை வலுவாக்கி உள்ளது. > இப்போது நிலவும் நிலையற்ற தன்மையால், உலக நாடுகளுக்கு அமெரிக்க டாலர் தேவை. காரணம், அது தான் உலகளாவிய நாணயம். இதனாலும், நாடுகள் அமெரிக்க டாலர் பக்கம் திரும்பியுள்ளன. இதுவும் அதன் மதிப்பை உயர்த்துகிறது.
நீங்கள் 'இதற்காக'வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை'மம்தா பதில்
நேற்றும், இன்றும் மேற்கு வங்கத்தில் 9-வது சர்வதேச சந்தாலி மாநாடு நடக்கிறது. இந்தியாவின் ஜார்காண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் சந்தால் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது கலாச்சாரம், மொழி மற்றும் உரிமையை பாதுகாக்கும், கொண்டாடும் நோக்கமே இந்தச் சர்வதேச மாநாடு. இந்த மாநாட்டில் நேற்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! முதலில் இந்த நிகழ்வு மேற்கு வங்கத்தில் உள்ள பன்சிதேவாவின் பிதான்நகரில் நடக்க இருந்தது. இந்த இடத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் கூடலாம். ஆனால், கடைசி நேரத்தில், மேற்கு வங்க அரசு இந்த நிகழ்வை கோஷய்பூருக்கு மாற்றியிருக்கிறது. அது மிகவும் குறுகலான பகுதி. அங்கே அதிக மக்களும் கூட முடியாது. கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டதால் மாநாட்டில் அதிக மக்கள் கலந்துகொள்ளவில்லை. மேலும் திரௌபதி முர்முவை வரவேற்க அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதனால், தனது அதிருப்தியை பொதுவெளியிலேயே தெரிவித்திருந்தார் முர்மு... மம்தா பானர்ஜி எனது தங்கையைப் போன்றவர். நானும் மேற்கு வங்கத்தின் மகள் தான். ஆனால், என்னை ஏன் இங்கு வர அனுமதிக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. அவர் அதிருப்தியாக இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அதனால் தான், இடம் மாற்றப்பட்டதா? பொதுவாக, ஜனாதிபதியை வரவேற்க முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் வர வேண்டும். ஆனால், அவர்கள் வரவில்லை. சமீபத்தில் தான் இங்கே ஆளுநர் மாற்றப்பட்டிருக்கிறார். அதனால் அவரால் வரமுடியவில்லை என்பது புரிகிறது என்று பேசியிருந்தார். மம்தா பானர்ஜி ஈரான் போர்: கச்சா எண்ணெய் அழுத்தத்தை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்? - ட்ரம்ப் பதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்தச் செயலை பாஜக, 'அரசியலமைப்பு ஒழுக்கத்தின் முழுமையான சரிவு' என்று விமர்சித்துள்ளது. பிரதமர் மோடியும், 'இந்தச் செயல் அவமானகரமானது' என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விமர்சனங்களுக்கு தற்போது பதிலளித்துள்ளார் மம்தா பானர்ஜி. அவர் கூறியுள்ளதாவது... ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயரை பயன்படுத்தி பாஜக மாநிலத்தின் மீது அவதூறு பரப்புகிறது என்றும், முர்முவிற்கு பதிலளிக்கும் விதமாக, நீங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வந்தால் நான் உங்களை வரவேற்பேன். ஆனால், தேர்தல் சமயத்தில் வந்தால், உங்களது நிகழ்வுகளில் என்னால் கலந்துகொள்ள முடியாது. ஏனெனில், நான் மக்கள் உரிமையில் பிஸியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
`தாய்க்கழகம் திரும்பும் விழா' - மேடையில் ஸ்டாலினுடன் கைக்கோத்த ஓபிஎஸ்! - Album
தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும்
`தாய்க்கழகம் திரும்பும் விழா' - மேடையில் ஸ்டாலினுடன் கைக்கோத்த ஓபிஎஸ்! - Album
தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும்
வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு 'மன்னிப்பு' - ஈரான் அதிபர்; ஆனால், இன்னமும் தாக்குதலை தொடர்கிறது- ஏன்?
ஈரான் போர் தொடங்கி ஒரு வாரம் தாண்டிவிட்டது. ஆனால், இன்னமும் வளைகுடா நாடுகளில் வெடிகுண்டு சத்தங்களும், ஏவுகணை பாய்ச்சல்களும் குறைந்ததாக இல்லை. நேற்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு மன்னிப்பு கேட்டார்... இனி அந்த நாடுகள் எங்களை தாக்கினாலே தவிர, நாங்களாக அவர்களைத் தாக்கமாட்டோம் என்றும் உறுதியளித்தார். இருந்தும், இப்போது வரை வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி கொண்டே தான் இருக்கிறது. அதிபர் பெஷேஷ்கியன் | Masoud Pezeshkian இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! காரணம் என்ன? ஈரானைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவது மட்டுமே ஈரானின் அதிபர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பணி. மற்றப்படி, அனைத்து அதிகாரங்களும் ஈரானின் உச்ச தலைவர் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடமே (IRGC) இருக்கும். இப்போது தங்கள் தேசத்தின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் கட்டுப்பாடு ஈரான் அதிபர் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சி தலைவருக்குமே இல்லை. வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதலை நிறுத்துவது முழுக்க முழுக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையின் முடிவு. அந்தத் தலைமை நினைத்தால் தான் இந்தத் தாக்குதல் நிற்கும். ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர்: கச்சா எண்ணெய் அழுத்தத்தை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்? - ட்ரம்ப் பதில்
ஈரானில் போர் நடப்பதும், அந்த நாடு ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியதும் உலக அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் கடுமையாக பாதித்துள்ளது... அதன் விலையும் தாறுமாறாக ஏறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 6), இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதிக்கிறோம் என்று 'பெர்மிஷன்' கொடுத்திருந்தது அமெரிக்கா. இந்தியாவிற்கு கொடுத்துள்ள அனுமதி குறித்தும், கச்சா எண்ணெய் அழுத்தத்தைக் குறைக்க வேறு ஏதேனும் அமெரிக்க அரசு செய்யுமா என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நேற்று கேள்வி கேட்கப்பட்டது. கச்சா எண்ணெய் அதற்கு அவரது பதில்... கச்சா எண்ணெயின் தேவை அழுத்தம் அதிகரித்தால், தேவைப்பட்டால் அமெரிக்காவின் மூலோபாய பெட்ரோலிய இருப்பில் (SPR) இருந்து எண்ணெய் விநியோகிப்பேன். ஆனால், நம்மிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. நம் நாட்டிடம் அதிகளவிலான எண்ணெய் இருக்கிறது. அதனால், இந்தப் பிரச்னை விரைவில் சரியாகும் என்று தெரிவித்துள்ளார்.
'கார்ப்பரேட் பார்ட்டி ஆஃப் இந்தியா'- கேரள கம்யூனிஸ்ட் அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி!
கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் 'புதுயுக யாத்திரை' என்ற பெயரில் கேரள மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். புதுயுக யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியாக திருவனந்தபுரம் புத்தரிகண்டம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், சி.பி.எம் - பி.ஜே.பி கூட்டணி காரணமாகத்தான் அமலாக்கத்துறையும் சி.பி.ஐ-யும் பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தவில்லை. கேரளாவில் சி.பி.எம் மற்றும் பி.ஜே.பி இணைந்து சி.ஜே.பி தான் உள்ளது. சி.பி.எம்-மும் பி.ஜே.பி-யும் இணைந்து காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கைகோர்க்கிறார்கள். எனக்கு எதிராக அமலாக்கத்துறை 36 வழக்குகள் பதிவு செய்துள்ளது. என்னிடம் 55 மணி நேரம் விசாரணை செய்தது. ஆனால் பினராயி விஜயனுக்கு எதிராக அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரள அரசுக்கு கம்யூனிஸ்ட் பண்பு இல்லை. விவசாயிகள், தொழிலாளர்களின் நலனை இந்த அரசு பாதுகாக்கவில்லை. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற பெயரை மாற்றி 'கார்ப்பரேட் பார்ட்டி ஆஃப் இந்தியா' என்று ஆக்க வேண்டும். சபரிமலை தங்கக் கொள்ளையில் பல சி.பி.எம் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வலுவான நடவடிக்கை எடுக்கப்படும். திருவனந்தபுரத்தில் ராகுல் காந்தி உலகளாவிய ஆபத்தான சூழ்நிலை இருந்தும் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமெரிக்காவுடன் உடன் ஒப்பந்தம் செய்து நாட்டை வஞ்சித்துள்ளார். அமெரிக்கா சொல்பவர்களிடமிருந்து மட்டுமே கச்சா எண்ணெய் வாங்குவதாக ட்ரம்பிற்கு வாக்கு கொடுத்துள்ளார் மோடி. மோடி சமரசமாக செல்வதற்கு 'எப்ஸ்டீன் ஃபைல்கள்'தான் காரணம். காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். தனி நபராக நடனம் ஆடுவதைவிட, குழு நடனம் தான் நன்றாக இருக்கும். இது மக்களின் அறிவுரையாகும். என் வாழ்வின் நெருக்கடியான கட்டத்தில் ஆதரவாக நின்றவர்கள் கேரள மக்கள். நான் கேரளாவிற்கு கடமைப்பட்டுள்ளேன். திருவனந்தபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் இலவசப் பயணத்திட்டமும், கல்லூரி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். முதியோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் 3,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். உம்மன் சாண்டி பெயரில் 25 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இளம் தொழில்முனைவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லாக் கடன் வழங்கப்படும். மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக தனித் துறை ஏற்படுத்தப்படும். இந்த ஐந்து திட்டங்களும் இந்திரா கேரண்டி ஆகும் இவ்வாறு அவர் பேசினார்.
ஆளுநர் R N ரவி மாற்றம், ஸ்கெட்ச் West Bengal-க்கா, தமிழ்நாட்டுக்கா? | Political Pulse | Vikatan
'விசுவாசத்திற்கு ஓ.பன்னீர்செல்வம்; துரோகத்திற்கு பழனிசாமி'– முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்
மதுரையில் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் இணைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மேடை வித்தியாசமான மேடை. இதில் ஓபிஎஸ் இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு நானும் ரசிகன். கழகம் அவரை வளர்த்தது அவரும் கழகத்தை வளர்த்தார். அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்ய போனதால் உரிமை குரல் எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம் தாய் கழகம் திரும்பியிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் 2008ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதை குறிப்பிட்டு அடுத்த நாள் அவரை 'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம்' என்று செய்தி வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி. தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது . ஓபிஎஸ் ஸ்பெஷலிட்டியே அவருடைய சிரித்த முகம்தான் ஆனால் அந்த சிரிப்பே அவருக்கு பிரச்சனையாகி விட்டது. என்னை பார்த்து ஒரு முறை சிரித்து விட்டார். அதை ஒரு போர் போல சித்தரித்து பேச தொடங்கி விட்டார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நாம் எந்த அரசியல் கட்சியல் இருந்தாலும், வெளியில் பார்க்கும் போது நலம் விசாரிப்பது தான் அரசியல் பண்பு. அமைதியின் புன்னகை மட்டுமல்ல ஓபிஎஸ், விசுவாசம் என்றாலும் ஓபிஎஸ் பெயர்தான் தான் நியாபகம் வருகிறது. ஜெயலலிதா தான் அமர்ந்திருந்த இருக்கையில் இரண்டு முறை ஓபிஎஸ்ஸை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைத்த ஆட்சியை எந்த துரோகமும் இல்லாமல் திருப்பி கொடுத்தவர் ஓபிஎஸ். விசுசாசத்திற்கு ஓபிஎஸ் என்றால் துரோகத்திற்கு எடப்பாடி பழனிசாமி. முதல்வர் மு.க.ஸ்டாலின் கூவத்தூரில் தவழ்ந்து பதவியை பிடிததவர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு பதவியை கொடுத்தவர்களிடமே 'நீ எனக்கு பதவியை கொடுத்தாயா' என கேட்டவர். தன்னை காப்பாற்றி கொள்ள எது வேண்டுமானலும் செய்வார். தற்போது தன்னை காப்பாற்ற அதிமுகவையே அடமானம் வைத்திருக்கிறார். பாஜக நல்லது செய்யும் என நினைக்கிறார், அவர்கள் நல்லது நினைக்க மாட்டார்கள். பாஜக அதிமுகவின் ரத்ததை உரிஞ்சி விடும். 10 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷையே பாஜக பந்தாடியது. எனக்கு கிடைத்த தகவல் படி நிதிஷ்குமாருக்கு பதிலாக பாஜக சார்பில் வேறு ஒருவரை நியமிக்க இருக்கிறார்கள். அதே போல தான் பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை பொதுச் செயலாளராக மாற்ற போகிறார்கள், இந்த தேர்தல் முடிந்ததும் மாற்றி விடுவார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மோடி அதிமுக பெயரை சொல்ல மாட்டார். இரண்டு விரல் காட்டிய படத்தையே மாற்றி விடுவார்கள். திமுக வெற்றிபெறும் என பா.ஜ.க., நினைத்ததால் தான் நமது பிரச்சார பீரங்கியை ஆளுநர் ஆர்.என் ரவியை மாற்றியுள்ளனர். என்னை மீண்டும் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டுமெனவே அவர் கிளம்பி சென்று விட்டார். அவரை தேர்தல் முடியும் வரை தமிழ்நாடு ஆளுநராக தொடர வைக்க வேண்டும் என மத்திய அரசிடம் எவ்வளவோ கோரிக்கை வைத்தேன் அதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை என்றார்.
நான் இருந்த இயக்கத்தில் தனி அணி உருவாக்கியதில்லை; நேர்மையுடன் பணியாற்றினேன்– ஓ.பி.எஸ்.
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த காலத்தில் நான் ஒருபோதும் தனி அணியை உருவாக்கவில்லை, கட்சிக்கு நேர்மை மற்றும் உண்மையுடன் பணியாற்றினேன். 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணத்தில் நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கட்சியின் கொள்கைக்கு நேர்மையாகவும், வழங்கப்பட்ட பொறுப்புகளை மனசாட்சியுடன் நிறைவேற்றியுள்ளேன். நான் இருந்த இயக்கத்தில் தனி அணி அமைக்கவில்லை, அத்தகைய எண்ணமே எனக்கு இருந்ததில்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியல் பணியை செய்தேன். எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதனுடைய நோக்கததில் இருந்து விலகி, தொண்டர்களின் உரிமைகள் பறித்து விட்டது. எம்ஜிஆரின் அதிமுக அபகரிப்பு அதிமுகவாக மாறியிருக்கிறது. குறுக்கு வழியால் வந்தவர்களால் நான் எப்படி பாதிக்கப்பட்டேன் என எல்லோருக்கும் தெரியும். ஓ.பன்னீர்செல்வம் சட்டத்தை வளைத்து திட்டம் போடலாம், சட்ட விதிகளை வளைக்கலாம், ஆனாலும் தோல்வி அவர்களுக்கு தான். 8 தோல்வி 10 தோல்வி மட்டும் இல்லை இனி தொடர்ந்து தோல்வி தான் பெறுவார்கள். திராவிட சிந்தாந்த கொள்கைகளை கடைபிடிக்கும் தாய்கழகத்தில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். இதனால், திராவிட சித்தாந்தம் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்று, அந்தக் கட்சியில் ஒரு தொண்டனாக இணைந்துள்ளேன். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்து, தன்னையும் தன்னுடன் பயணித்தவர்களையும் அன்புடன் அரவணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. ஓ.பன்னீர்செல்வம் தந்தை பெரியாரின் சுயமரியாதை, பேரறிஞர் அண்ணாவின் அறிவு, முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் தமிழ்ப்பற்று மற்றும் அரசியல் ஞானம், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் விவேகம் ஆகிய பண்புகளை ஒருங்கே பெற்ற தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். திமுகவுடன் நான் இணைந்தது சிலருக்கு வெறுப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இது எதிரணியின் வெற்றி வாய்ப்பை முற்றிலும் தடுத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தேசியம் என்ற பெயரில் மதவாத அரசியல் தமிழ்நாட்டில் வெறும் பேச்சாகவே உள்ளது , இங்கு எப்போதும் திராவிடமே நம் உயிர் மூச்சு. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக முதலமைச்சருக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Womens Day TVK VIjay full speech | '6 சிலிண்டர்கள் இலவசம், அண்ணன் சீர்; பெண்களுக்கு மாதம் ரூ.2500'
தேனி டு மதுரை: OPS ஆதரவாளர்கள் DMK இணைப்பு விழா அதிர்ச்சி | Trump கட்டுப்பாட்டில் MODI? | TVK VIJAY
Iran War: ஈரான் போடும் பலே திட்டம் - Gulfக்கு Relief கிடைக்குமா? | Decode
ஏன் தமிழ்நாட்டில் 234 தொகுதிகள்? | 234 Seats? | Vikatan Election Express | IPS Road Show #1
மீண்டும் கதவை திறந்த எடப்பாடி ? மாறும் கூட்டணி கணக்கு?
மீண்டும் கதவை திறந்த எடப்பாடி ? மாறும் கூட்டணி கணக்கு?
காரசார விவாதம்! சிக்கலில் அட்மட்;அடித்து ஆடும் bjp
காரசார விவாதம்! சிக்கலில் அட்மட்;அடித்து ஆடும் bjp
கேப்டன் செய்யாததை செய்து காட்டிய பிரேமலதா ... உற்சாகத்தில் தேமுதிகவினர்!
கேப்டன் செய்யாததை செய்து காட்டிய பிரேமலதா ... உற்சாகத்தில் தேமுதிகவினர்!
அரசியலுக்கு வந்தாலே இது தான் கதியா? விஜய்க்கு எதிராக சதியா?
அரசியலுக்கு வந்தாலே இது தான் கதியா? விஜய்க்கு எதிராக சதியா?
“OPS DMK-க்கு போனதால் Usilampatti அரசியல் மாறுமா_ யார் strong_” (1)
“OPS DMK-க்கு போனதால் Usilampatti அரசியல் மாறுமா_ யார் strong_” (1)
விஜய் வெளியிடும் அறிவிப்பு... தவெகவை மீட்குமா?
விஜய் வெளியிடும் அறிவிப்பு... தவெகவை மீட்குமா?
'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம், எம்ஜிஆர் வளர்த்த கழகம், அதிமுகவின் அடிமைச் சேவகம்' - ஸ்டாலின் பேச்சு
கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவருடைய மகன் ஓ.பி. ரவீந்திரநாத்துடன் அவர் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், இன்று மதுரையில், அதிமுக, அமமுக கட்சிகளிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதனை தாய்க்கழகம் திரும்பும் விழா என்கிற பெயரில் ஓ.பி.எஸ் நடத்தி வருகிறார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். முதல்வரை சந்தித்த பன்னீர் செல்வம் அவர் பேசுகையில், சில காலத்திற்கு முன்பு வரை சகோதரர் ஓ.பி.எஸ் இந்த மேடையில் இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்த தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் திரும்பியிருக்கிறார். அவரையும், அவருடைய இயக்கத்திற்குத் திரும்பியிருக்கும் உடன்பிறப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக வரவேற்கிறேன். கழகம் எம்.ஜி.ஆரை வளர்த்தது. அவரும் கழகத்தை வளர்த்தார். முத்தமிழறிஞரை தலைவராக அவர் ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட தாயின் மடிக்கு நீங்கள் திரும்பியிருக்கிறீர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக, யாருக்கோ அடிமைச் சேவகம் செய்யப் போனதனால், உரிமைக்குரல் எழுப்பி தாய்க்கழகத்திற்குத் திரும்பியிருக்கிறீர்கள். பேரறிஞர் அண்ணாவின் பெயரைத் தாங்கியுள்ள இயக்கம், அவரையும் அவருடைய கொள்கைகளையும் மறந்து துரோகத்தின் முழு உருவமானதனால், பேரறிஞர் அண்ணா தொடங்கிய கழகத்திற்கு வந்திருக்கிறீர்கள். சுயமரியாதைக் கோட்டையான அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். ஓ.பி.எஸை இங்கு பார்க்கும்போது, ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. மு.க. ஸ்டாலின் 2008-ல் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ஓ.பி.எஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தார். அப்போது, நவம்பர் 11-ம் தேதி, இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பன்னீர்செல்வம் பேசினார். அடுத்த நாள் காலை வெளிவந்த முரசொலியில், பச்சைத்தமிழன் பன்னீர்செல்வம் குறித்த செய்தியை வெளியிட்டார்கள். ஓ.பி.எஸும் முரசொலி செய்தியைக் குறிப்பிட்டு அவையில் பேசினார். உடனடியாக கலைஞரும் 'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் அதற்காகக் கவலைப்படக்கூடாது. பச்சைத் தமிழர் எனப் பெரியார், காமராஜருக்கு பட்டமே கொடுத்திருக்கிறார். அதைத்தான் முரசொலியும் கொடுத்திருக்கிறது. அதுவும் முரசு அடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது' எனத் தலைவர் கலைஞர் சொன்னார். என்றார். ஓபிஎஸ்: `ஆதரவாளர்கள் கொடுத்த ட்விஸ்ட்!' - தேனியை விட்டுவிட்டு மதுரையில் இணைப்பு விழா! பின்னணி என்ன?
TVK: வருத்தப்படாதீங்க; அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்ல! - சமீப பிரச்னைகள் பற்றி விஜய்
மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பெண்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, சமீபத்திய சர்ச்சைகள் குறித்தும் பேசியிருக்கிறார். Vijay பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், குடும்பத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், மாணவர்களின் தாய்க்கு 15,000 ரூ உதவித்தொகை எனப் பல முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட்டிருந்தார். விஜய் தனது உரையை முடிக்கையில், சமீபமாக நிறைய பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் வருந்துவதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் எல்லாரும் சேர்ந்து மக்கள் பிரச்னைகளைப் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள். அது வொர்த் இல்லை என்றார். Vijay தவெகவின் இந்த நிகழ்வில் துறைவாரியாக சாதித்த பல பெண்களையும் நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி விஜய் கௌரவித்திருந்தார். தவெக சார்பில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட மகளிரணி நிர்வாகிகளுக்கும் இந்த நிகழ்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. TVK: '6 சிலிண்டர்கள் இலவசம், அண்ணன் சீர்; பெண்களுக்கு மாதம் ரூ.2500' - விஜய்யின் தேர்தல் அறிக்கை!
வாயைத் திறக்காத தலைமை; காத்திருப்பில் உடன்பிறப்புக்கள்; திமுக விருப்ப மனு அப்டேட்!
முடிந்த விருப்ப மனு விநியோகம்! கடந்த பிப்ரவரி 20-ம் தேதி திமுகவில் தொடங்கிய விருப்ப மனு விநியோகம் மார்ச் 2-ம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிப்பு வெளியானது. கூடுதலான விருப்ப மனு வந்த காரணத்தினால் கடைசித் தேதி மார்ச் 6-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 15 தினங்கள் மொத்தம் 15,372 திமுக உறுப்பினர்கள் அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். இதில் தங்களுக்கான விருப்ப மனுக்களைத் தாண்டி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி 1,473 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். திமுக - விருப்ப மனு முதல்வரைப் போலவே, துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். அடுத்தபடியாக கனிமொழிக்கும் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் பலநூறு பேர் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். முக்கிய தலைவர்களைத் தாண்டி, அந்தந்தப் பகுதி மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதில், வட்ட, பகுதி செயலாளர்கள் மட்டுமே 500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் சொல்கின்றன. “செஞ்சுட்டேன்...” - ராகுலை வீழ்த்திய ஸ்டாலின்! ஆசையில் உடன்பிறப்புகள்! விருப்ப மனு கொடுத்து முடித்திருக்கும் நிலையில், யாருக்கு சீட் என்பது குறித்து தி.மு.க தலைமை கனத்த மௌனமாக இருப்பதாகச் சொல்கிறது திமுக வட்டாரம். இந்த விவகாரம் குறித்து அறிவாலய வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஒவ்வொரு தொகுதிகளிலும் சிலர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி பணம் காட்டுவார்கள். இன்னும் சிலர் கட்சித் தலைவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக்காக பணம் காட்டுவார்கள். அப்படி இந்த முறை மற்றவர்களுக்காகத் தாண்டி தனித்தனியாக மட்டுமே 12,000-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள். திமுக - விருப்ப மனு ஒவ்வொரு முறையில் விருப்ப மனு கொடுத்து முடிந்ததுமே அந்தந்தத் தொகுதிக்குள் விருப்ப மனு கொடுத்த தரப்புக்கும், இப்போது இருக்கும் ஒரு தரப்புக்கும் இடையே பல்வேறு குழப்பங்களும் வந்து சேர்வது இயல்பான ஒன்றுதான். எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் தேர்தல் தேதிக்கு முன்பாக தலைமையே குறிப்பிட்ட ஒருசிலருக்கு சீட் கன்பார்ம் செய்து வேலையை ஆரம்பிக்கச் சொல்வது வழக்கம். ஆனால், இம்முறை தேர்தலே நெருங்கிவிட்டது. இப்போதுவரை அப்படி யாருக்குமே சீட் உறுதி செய்தது குறித்து தலைமை இப்போதுவரை வாயைத் திறக்கவில்லை. 'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின் உறுதி ஆகாத சீட்! இத்தனைக்கும் தலைவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர்கள் சீட் குறித்து ஏதாவது பேசினாலும் 'சீட் பத்தி யாரும் பேசாதீங்க' என்று முகத்தில் அடித்ததுபோல பேசிவிடுகிறார். இதனால், வரும் தேர்தலில் புது முகங்கள் மட்டுமல்ல யாருக்கு சீட் கிடைக்கும் என்று தெரியாமல் கட்சியினர் பலரும் கிலியில் இருக்கிறார்கள். இதில் சீட் உறுதி என்ற நம்பிக்கையில் கடந்த சில மாதங்களாக தொகுதியில் முகாமிட்டு செலவு செய்தவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. திமுக - விருப்ப மனு உண்மையில் கூட்டணி குழப்பமே இப்போதுவரை தீராமல் இருக்க, கட்சி சீட் பஞ்சாயத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார் தலைவர். திருச்சி மாநாடு முடிந்ததுமே, நேர்காணல் நடத்தும் திட்டத்தில் இருக்கிறது தலைமை. நேர்காணல் நடந்து முடிந்தாலும், உடனடியாக வேட்பாளர் பட்டியல் வெளியாகப்போவதில்லை. கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்னரே திமுகவில் பட்டியல் வெளிவரக்கூடும். தொகுதி கிடைக்கும் என்ற ஆசையில் இருப்பவர்கள் முகத்தில் இருள் விலகப் போவதில்லை. அதுவரை தங்கள் சக்திக்கு ஏற்றார் போலப் பலரும் திமுக தலைமை மட்டத்தில் இருப்பவர் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்றார்கள் விளக்கமாக. கண்கலங்கிய துர்கா; உற்சாக ஸ்டாலின் - `இன்பன், இனியன் என தொடரும் உறவு' - அன்பில் இல்ல விழா ஹைலைட்ஸ்
TVK: 'பெண்களுக்கு மாதம் ரூ.2500 மதிப்புமிகு மகளிர் திட்டம்' - விஜய்யின் தேர்தல் அறிக்கை!
தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் விஜய் உரை ஆற்றினார். விஜய் விஜய் பேசியதாவது, நெஞ்சில் குடியிருக்கும் சிங்கப்பெண்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். ஒரு ஊரில் ஒரு பெரிய கோயில் யானை இருந்தது. அது உஷாரான யானை. யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால், ஒரு ஜகஜால கில்லாடி அந்த யானையை ஏமாற்றிவிட்டார். எப்படி என்றால் தேங்காய் முடிக்குள் சுண்ணாம்பை வைத்துக் கொடுத்திருக்கிறார். அந்த யானையும் சாப்பிட்டுவிட்டது. 'ஏமாத்துறதெல்லாம் தொழில் ரகசியம்' என அந்த ஆள் தன் நண்பனிடம் பெருமை பேசியிருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அந்த நண்பர்கள் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள். 'ஒரு வேளை அந்த யானை முதல் தடவை என்பதால் தெரியாமல் ஏமாந்திருக்கும்' என்று நண்பன் சொல்ல, 'நான் மீண்டும் ஏமாற்றி காட்டுகிறேன்' என அந்த ஜகஜால கில்லாடி சொல்கிறான். வாழைப் பழத்தை வாங்கி அதில் பஞ்சைத் திணித்து யானைக்கு மீண்டும் கொடுக்கிறான். இப்போது யானை தும்பிக்கையைச் சுழற்றி அவனை வீசி எறிகிறது. அந்த யானைதான் நாம். பெண்களுக்காக தவெகவின் சில முக்கிய அறிவிப்புகள்: பெண்கள், குழந்தைகள், முதியோருக்கான தனி இலாகா அமைக்கப்படும். அது என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். மதிப்புமிகு மகளிர் திட்டம் - மகளிர் உரிமைத் தொகை வெறும் 1000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. நம்முடைய அரசில் 60 வயது வரையுள்ள மகளிருக்கு மாதாமாதம் 2500 ரூபாய் வழங்கப்படும். மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு விதி விலக்கு.
மாவட்டம் Vs வாரிசு; அண்ணா நகருக்குக் குறிவைக்கும் இருவர்! யாரை டிக் அடிக்கப் போகிறார் மாப்பிள்ளை?
உடன்பிறப்புகளிடம் விருப்ப மனுக்களை வாங்கி முடித்திருக்கிறது அறிவாலயம். கருணாநிதி போட்டியிட்ட சென்னையின் 'அண்ணா நகர்' தொகுதியைப் பிடிக்க சபரீசனின் ஒப்புதலுடன் மாவட்டச் செயலாளர் சிற்றரசுவும் சிட்டிங் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கும் முட்டி மோதுவதால் போட்டி சுவாரஸ்யமடைந்திருப்பதாக அறிவாலய வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். கார்த்திக் அண்ணா நகர் தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ எம்.கே.மோகன். 2016 இல் அதிமுகவின் கோகுல இந்திராவை 1687 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். 2021லும் கோகுல இந்திராவை 27445 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். கண்கலங்கிய துர்கா; உற்சாக ஸ்டாலின் - `இன்பன், இனியன் என தொடரும் உறவு' - அன்பில் இல்ல விழா ஹைலைட்ஸ் 2026 தேர்தலிலும் 'அண்ணா நகர்' தொகுதியைக் குறிவைத்தே கோகுல இந்திரா வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திமுக முகாமில் அண்ணா நகர் தொகுதிக்கு வேட்பாளர் மாற்றம் இருக்கப்போகிறது என்கின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ மோகன் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு போட்டியிட விருப்ப மனுவே தாக்கல் செய்யவில்லை என்கின்றனர். தனக்கு பதில் தன்னுடைய மகன் 'அண்ணா நகர்' கார்த்திக் தொகுதியில் போட்டியிட வேண்டுமென மோகன் விரும்புகிறார். ஐ.டி.விங்கின் மாநில துணைச் செயலாளராக இருக்கும் கார்த்திக் முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். சபரீசனுடன் கார்த்திக் குறிப்பாக, 'மாப்பிள்ளை' சபரீசனின் உற்றத் தோழன். தந்தையின் விருப்பப்படி களத்தில் இறங்கினால் சீட் உறுதி என்கிற எண்ணத்தில் கார்த்திக்கும் தொகுதியில் வேலையைத் தொடங்கிவிட்டார். தொகுதியில் 'பட்டா' இல்லாத இடங்களுக்கு பட்டா வாங்கிக் கொடுப்பது, பள்ளிகளைப் புனரமைப்பது, கோவில் திருப்பணிகள் எனத் தொகுதிக்குள் சுற்றி சுழன்று வேலை பார்க்கிறார். சமீபத்தில் பொங்கல் பரிசாக தொகுதியின் திமுக நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் பைக், செல்போன், எர் கூலர், மிக்ஸி, கிரைண்டர், பாத்திர செட் என யாரையும் தவறவிடாமல் கொடுத்திருக்கிறார். தொகுதியை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கொடுப்பேன் என்றும் கார்த்திக் பல இடங்களில் பேசி வருகிறார் கார்த்திக். 'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின் குடியிருப்பு குடியிருப்பாக சென்று வாக்கும் சேகரித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு அறிவாலயத்தில் விருப்ப மனுவையும் தாக்கல் செய்திருந்தார். வலுவாகப் போட்டியளிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், விருப்ப மனு விநியோகம் முடிகிற கடைசி நாளில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் கவுன்சிலருமான சிற்றரசு அண்ணா நகருக்கு விருப்ப மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் என மூன்று தொகுதிகள் சிற்றரசுவின் கட்டுப்பாட்டில் வருகிறது. சிற்றரசு சேப்பாக்கம் உதயநிதியுடைய தொகுதி, ஆயிரம் விளக்கு மருத்துவர் எழிலனின் தொகுதி மீதம் இருப்பது அண்ணா நகர் மட்டுமே. போட்டியிட விரும்பிய சிற்றரசு தயாநிதி மாறனின் ஆதரவோடு உதயநிதியின் ஒப்புதலோடு அண்ணா நகர் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்துவிட்டார். சிற்றரசுவின் விருப்ப மனுவுக்கு சபரீசனும் க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கிசுகிசுக்கின்றனர். சென்னையின் மத்தியில் முக்கிய தொகுதியாக திகழும் அண்ணா நகருக்கு முட்டிக் கொள்ளும் இருவருக்கும் மாப்பிள்ளையின் ஆதரவு இருப்பதால், அவர் யாரை டிக் அடித்து டிக்கெட் கொடுக்கப் போகிறார் என்பதை அறிய உடன்பிறப்புகள் பலரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். “செஞ்சுட்டேன்...” - ராகுலை வீழ்த்திய ஸ்டாலின்!
மாவட்டம் Vs வாரிசு; அண்ணா நகருக்குக் குறிவைக்கும் இருவர்! யாரை டிக் அடிக்கப் போகிறார் மாப்பிள்ளை?
உடன்பிறப்புகளிடம் விருப்ப மனுக்களை வாங்கி முடித்திருக்கிறது அறிவாலயம். கருணாநிதி போட்டியிட்ட சென்னையின் 'அண்ணா நகர்' தொகுதியைப் பிடிக்க சபரீசனின் ஒப்புதலுடன் மாவட்டச் செயலாளர் சிற்றரசுவும் சிட்டிங் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கும் முட்டி மோதுவதால் போட்டி சுவாரஸ்யமடைந்திருப்பதாக அறிவாலய வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். கார்த்திக் அண்ணா நகர் தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ எம்.கே.மோகன். 2016 இல் அதிமுகவின் கோகுல இந்திராவை 1687 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். 2021லும் கோகுல இந்திராவை 27445 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். கண்கலங்கிய துர்கா; உற்சாக ஸ்டாலின் - `இன்பன், இனியன் என தொடரும் உறவு' - அன்பில் இல்ல விழா ஹைலைட்ஸ் 2026 தேர்தலிலும் 'அண்ணா நகர்' தொகுதியைக் குறிவைத்தே கோகுல இந்திரா வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திமுக முகாமில் அண்ணா நகர் தொகுதிக்கு வேட்பாளர் மாற்றம் இருக்கப்போகிறது என்கின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ மோகன் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு போட்டியிட விருப்ப மனுவே தாக்கல் செய்யவில்லை என்கின்றனர். தனக்கு பதில் தன்னுடைய மகன் 'அண்ணா நகர்' கார்த்திக் தொகுதியில் போட்டியிட வேண்டுமென மோகன் விரும்புகிறார். ஐ.டி.விங்கின் மாநில துணைச் செயலாளராக இருக்கும் கார்த்திக் முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். சபரீசனுடன் கார்த்திக் குறிப்பாக, 'மாப்பிள்ளை' சபரீசனின் உற்றத் தோழன். தந்தையின் விருப்பப்படி களத்தில் இறங்கினால் சீட் உறுதி என்கிற எண்ணத்தில் கார்த்திக்கும் தொகுதியில் வேலையைத் தொடங்கிவிட்டார். தொகுதியில் 'பட்டா' இல்லாத இடங்களுக்கு பட்டா வாங்கிக் கொடுப்பது, பள்ளிகளைப் புனரமைப்பது, கோவில் திருப்பணிகள் எனத் தொகுதிக்குள் சுற்றி சுழன்று வேலை பார்க்கிறார். சமீபத்தில் பொங்கல் பரிசாக தொகுதியின் திமுக நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் பைக், செல்போன், எர் கூலர், மிக்ஸி, கிரைண்டர், பாத்திர செட் என யாரையும் தவறவிடாமல் கொடுத்திருக்கிறார். தொகுதியை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கொடுப்பேன் என்றும் கார்த்திக் பல இடங்களில் பேசி வருகிறார் கார்த்திக். 'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின் குடியிருப்பு குடியிருப்பாக சென்று வாக்கும் சேகரித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு அறிவாலயத்தில் விருப்ப மனுவையும் தாக்கல் செய்திருந்தார். வலுவாகப் போட்டியளிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், விருப்ப மனு விநியோகம் முடிகிற கடைசி நாளில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் கவுன்சிலருமான சிற்றரசு அண்ணா நகருக்கு விருப்ப மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் என மூன்று தொகுதிகள் சிற்றரசுவின் கட்டுப்பாட்டில் வருகிறது. சிற்றரசு சேப்பாக்கம் உதயநிதியுடைய தொகுதி, ஆயிரம் விளக்கு மருத்துவர் எழிலனின் தொகுதி மீதம் இருப்பது அண்ணா நகர் மட்டுமே. போட்டியிட விரும்பிய சிற்றரசு தயாநிதி மாறனின் ஆதரவோடு உதயநிதியின் ஒப்புதலோடு அண்ணா நகர் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்துவிட்டார். சிற்றரசுவின் விருப்ப மனுவுக்கு சபரீசனும் க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கிசுகிசுக்கின்றனர். சென்னையின் மத்தியில் முக்கிய தொகுதியாக திகழும் அண்ணா நகருக்கு முட்டிக் கொள்ளும் இருவருக்கும் மாப்பிள்ளையின் ஆதரவு இருப்பதால், அவர் யாரை டிக் அடித்து டிக்கெட் கொடுக்கப் போகிறார் என்பதை அறிய உடன்பிறப்புகள் பலரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். “செஞ்சுட்டேன்...” - ராகுலை வீழ்த்திய ஸ்டாலின்!
கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் 20 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் 2-ம் தேதி கோவை விமான நிலைத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் இரவு 11 மணியளவில் இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கோவை மாணவி வழக்கு அப்போது அங்கு திடீரென வந்த 3 பேர் கொண்ட கும்பல், கார் கண்ணாடியை உடைத்து வினீத்தை கத்தியால் சரமாரியாக குத்தி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தவசி ஆகிய 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 4 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. கருப்பசாமி காளீஸ்வரன் அரசுத் தரப்பில் 72 சாட்சிகளாக விசாரித்தனர். சாட்சி விசாரணை மற்றும் அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. இதுதொடர்பாக 270 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்துள்ளார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜிஷா செய்தியாளர்களிடம், “பாதிக்கப்பட்ட மாணவியும், ஆண் நண்பரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கோவை மாணவி பாலியல் வழக்கு ஜிஷா அன்றைய தினம் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோதுதான் அவர்கள் 2 பேரையும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம், அவரின் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். சம்பவம் நடைபெற்ற 126 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா அறிவாலயத்தில் கவனம்பெற்ற `தளபதி அறிவாலயம்’ - வாணியம்பாடியைக் கைப்பற்றுமா திமுக?
தி ருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட விரும்பும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளரான வி.எஸ்.ஞானவேலன் சீட்டுக்கான ரேஸிலும் முந்துகிறார். இந்த நிலையில், அண்ணா அறிவாலயம் போன்றே ஆலங்காயம் மதனாஞ்சேரியில் தனது சொந்த செலவில் `தளபதி அறிவாலயம்’ கட்டி, கட்சிக்காக ஞானவேலன் அர்ப்பணித்த தகவலும், முதல்வர் ஸ்டாலினிடம் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த 2016 ஜனவரி 26-ம் தேதி தளபதி அறிவாலயத்தை கட்டி முடித்து, அப்போதைய பொதுச்செயலாளரான பேராசிரியர் க.அன்பழகனையும் நேரில் அழைத்து திறக்கச் செய்திருக்கிறார் ஞானவேலன். அப்போது, அன்பழகன் பிரியப்பட்டு `ஆனியன் ஊத்தாப்பம்’ கேட்டு, அதை வாங்கிக்கொடுத்ததையும் மலரும் நினைவுகளாகப் பகிர்கிறார் ஞானவேலன். தளபதி அறிவாலயம் இந்த நிலையில்தான் `உடன்பிறப்பே வா..’ நிகழ்ச்சி மூலம் ஸ்டாலினுடன் ஒன் டூ ஒன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, தளபதி அறிவாலயத்தின் புகைப்படத்தைக் காட்டி பத்து ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிக்காக செய்துவரும் பல்வேறு நலத்திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் ஞானவேலன். தற்போது, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய இருத் தொகுதிகளுக்குமே விருப்ப மனு வழங்கிவிட்டு, தலைமையின் முடிவுக்காக காத்திருக்கிறார். ஞானவேலனுக்காக அவரின் மனைவியும், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவருமான பிரியதர்ஷினி ஞானவேலனும் அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் விண்ணப்பம் வழங்கியிருக்கிறார். வாணியம்பாடி தொகுதி தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க வசம் இருக்கிறது. `கூட்டணிக்குத் தாரைவார்ப்பதால் தி.மு.க தொடர் தோல்வியைச் சந்திக்கிறது. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் நேரடியாகப் போட்டியிட்டு தொகுதியைக் கைப்பற்ற வேண்டும்’ எனக் குமுறுகிறார்கள் உடன்பிறப்புகள்.
Christopher Tilak: உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன் - கிறிஸ்டோபர் திலக்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி விமான நிலையம் வருகை தந்த அவருக்கு, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது சொந்த ஊர் திருச்சி. cristober thilak இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டோபர் திலக், எனது அரசியல் பயணம் குறித்து கட்சியின் தலைமைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, அடிமட்டத் தொண்டனாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய எனக்கு, இவ்வளவு பெரிய பொறுப்பை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது. இது, எனக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல, என்னைப்போல உழைக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரச்னைகளையும், குறிப்பாக திருச்சி மாவட்டத்தின் தேவைகளையும் உரத்த குரலில் ஒலிப்பேன் என உறுதி அளிக்கிறேன். திருச்சியை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படப் போகிறேன். விரைவில் பொது மக்களையும், கட்சித் தொண்டர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் திட்டங்களை வகுக்க இருக்கிறேன் என்றார். `ஊர் திருச்சி; 4 மாநிலங்களுக்கு பொறுப்பு' - காங்கிரஸ் ராஜ்ய சபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் பின்னணி
`முதலமைச்சரே இடைத்தேர்தலில் போட்டியிட்டால்..!' - இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள்! | அரசியல் ஆடுபுலி 8
`எம்.எல்.ஏ. ஆகாமல் முதலமைச்சர்' அரசியல் ஆடுபுலி 8 தமிழ்நாட்டு அரசியலில், எம்.எல்.ஏ. ஆகாதவர்கள், முதலமைச்சர் ஆன ஆடுபுலி ஆட்டங்கள் அவ்வப்போது நடந்துள்ளன. ராஜாஜி, காமராஜர், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் எம்.எல்.ஏ. ஆகாமலேயே முதலமைச்சர் ஆன அரசியல் வரலாறு இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று, வெற்றி பெற்றால்தான் முதலமைச்சராகப் பதவி ஏற்க வேண்டும் என்பதில்லை. முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும், முதன் முதலாக முதலமைச்சராகப் பதவியேற்ற ராஜாஜி அப்போது தேர்தலில் போட்டியிடவே இல்லை. அரசியலே வேண்டாமென்று ஒதுங்கி இருந்தார். பிரதமர் நேரு, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான காமராஜர் உள்ளிட்டோரின் வற்புறுத்தலால் ராஜாஜி முதலமைச்சராக பதவியேற்க ஒப்புக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குழு ராஜாஜியை தங்கள் தலைவராகத் தேர்வு செய்தது. முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு அப்போதிருந்த சட்டமன்ற மேலவைக்கு ராஜாஜி தேர்வு செய்யப்பட்டார். ராஜாஜி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. அப்படியொரு ஆதரவு கிடைத்து விட்டால், வாக்குரிமை உள்ள குடிமக்கள் யாராக இருந்தாலும் முதலமைச்சராக பதவி ஏற்க முடியும். அப்படித்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா மரணமடைந்த பின்பு அதிமுக உறுப்பினர்களால் மூன்று சட்டமன்றத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் எம்.எல்.ஏ. இல்லாத வி.கே.சசிகலாவும் ஒருவர். 2016 டிசம்பர் 5 அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு தாண்டி 1 மணிக்கு மேல், அப்போதைய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் இரண்டு மாத காலம் மட்டும் ஆட்சி நடத்திய ஓ.பன்னீர்செல்வம், தனது முதலமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டார். சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் தர்ம யுத்தம் நடத்தினார். இதற்கிடையே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தங்களின் சட்டமன்றக் குழுத் தலைவராக, ஜெயலலிதாவின் தோழி, அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தேர்வு செய்தனர். அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென, 130 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்த போதும், சசிகலாவை முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையில், ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததால் சசிகலா பெங்களூர் சிறைக்குச் சென்றார். சசிகலா சிறை செல்லும் முன்பு, கூவத்தூர் விடுதியில் நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வி.கே.சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். எடப்பாடி கே பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சசிகலா இங்கு, எம்.எல்.ஏ.வாக இல்லாத வி.கே.சசிகலா முதலமைச்சராக தகுதிபெற்றும், பதவியேற்க முடியவில்லை. அதாவது 118 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் முதலமைச்சர் ஆகலாம். ஆனால், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்க வேண்டும். இல்லையென்றால் முதலமைச்சராகத் தொடர முடியாது. முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த போது, 1988ஆம் ஆண்டு, அவரது மனைவி வி.என்.ஜானகி முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆறு மாத காலத்திற்குள் அவர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும். ஆனால், ஜானகி ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் அவர் 24 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார். எம்.எல்.ஏ. ஆக வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை. 1952 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. இல்லாத ராஜாஜி முதலமைச்சராக பதவியேற்ற பின்பு, அப்போதிருந்த சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது போல, 1967ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுக வெற்றிபெற்று பெரும்பான்மை இடங்களைப் பிடித்தது. எம்.எல்.ஏ. இல்லாத திமுக தலைவர் அண்ணாதுரை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அண்ணா அப்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தென் சென்னை எம்பியாக இருந்தார். முதலமைச்சராக பதவியேற்க எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்படாமல், முதலமைச்சராக பதவியேற்றவர்கள் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் போது, அரசியல் ஆடுபுலி ஆட்டங்களுக்கு அளவே இருக்காது. இடைத்தேர்தல் என்றாலே தேர்தல் திருவிழா களைகட்டும், அதுவும் முதலமைச்சரே தேர்தலில் போட்டியிட்டால் எப்படி இருக்கும். காமராஜர் அப்படித்தான், 1954ஆம் ஆண்டு ராஜாஜி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின்பு காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு காமராஜருக்கு இருந்தது, ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். அதனால் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரையாவது ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, பின்னர் அத்தொகுதியில் போட்டியிடலாம் அல்லது சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறினர். ஆனால், அந்த நேரத்தில் காலியாக இருந்த குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் காமராஜர். காமராஜரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.கோதண்டராமன் களமிறங்கினார். காமராஜர் ஆட்சிக்கு வந்து நான்கு மாதத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல். ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வி திட்டத்தை காமராஜர் ரத்து செய்துவிட்டார். அதனால், ஈ.வே.ரா. பெரியார் பச்சைத் தமிழர் காமராஜர் வெற்றிபெற வேண்டுமென பரப்புரை செய்தார். காங்கிரசை எதிர்த்து கட்சி தொடங்கிய திமுக தலைவர் அண்ணா குலக் கொழுந்தே குணாளா என்று காமராஜரை ஆதரித்தார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிராக, பொது வேட்பாளராக காமராஜர் பார்க்கப்பட்டார். குடியாத்தம் இடைத்தேர்தலில் 38,212 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் காமராஜர். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை இருந்தது. வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தார். ஒரு நபர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது. ஆனால் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை செய்தார். அத்தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைத்தது. அதிமுக 132, தமிழ் மாநிலக் காங்கிரஸ் 22, பாட்டாளி மக்கள் கட்சி 20, காங்கிரஸ் 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6, இந்தியக் கம்யூனிஸ்ட் 5 என்று அதிமுக கூட்டணி 197 இடங்களில் வென்றது. தேர்தலில் போட்டியிடாத, எம்.எல்.ஏ. ஆகாத, ஜெயலலிதாவை சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுக உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியிடம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடித்தத்தைக் கொடுத்து, பதவியேற்க அழைப்பு விடுக்க கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. எம்.எல்.ஏ. இல்லாத ஜெயலலிதா 2001 மே 4 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், ஜெயலலிதா மீதான வழக்குகள் காரணமாக, நீதிமன்ற உத்தரவின்படி சில நாட்களில் பதவியில் இருந்து விலகினார். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். தினமும் போயஸ் கார்டன் இல்லம் சென்றுவிட்டு, பின்னர் தலைமைச் செயலகமான கோட்டைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 2001 டிசம்பர் 4 அன்று ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தனி நீதிமன்றம் டான்சி வழக்கில் கொடுத்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, முகமது ஆசிப், டி.ஆர்.சீனிவாசன், நாகராஜன், கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை ரத்தானதால் தேர்தலில் போட்டியிடவும், முதலமைச்சராக பதவி ஏற்கவும் தகுதி பெற்றார் ஜெயலலிதா. அப்போது ஆண்டிபட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் (தற்போதைய தேனி தொகுதி திமுக எம்பி) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ஜெயலலிதா ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில், அப்பகுதியைச் சேர்ந்த, நடிகர் வாகை சந்திரசேகர் களத்தில் குதித்தார். அதிமுகவில் டிடிவி தினகரன், திமுகவில் அழகிரி ஆண்டிபட்டி தொகுதியில் முகாமிட்டனர். மதிமுக சார்பில் ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆகியோரும் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். 2002 பெப்ரவரி 21 அன்று நடைபெற்ற ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் 78,437 வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றார் ஜெயலலிதா. திமுக வேட்பாளர் வாகை சந்திரசேகர் 37,236 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாமிடம் பிடித்தார். ஆண்டிபட்டி தொகுதியில் வென்ற ஜெயலலிதா அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். 2002 மார்ச் 2 அன்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட, ஜெயலலிதா அமைச்சரவையில் 26 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். முன்னாள் முதலமைச்சராக மாறிய பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இரண்டாமிடம் பிடித்தார். பொதுத்தேர்தல் இல்லாமலேயே புதிய அமைச்சரவை பதவி ஏற்றது.! (தொடரும்)
Vijay: `வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுப்பு?' - நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரும் சங்கீதா
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்றும் மனுவில் கூறியுள்ளார். 'கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்தேன். அந்த உறவை விட்டுவிடுவதாக விஜய் உறுதி கொடுத்தார். நடிகர் விஜய் ஆனால், மீண்டும் அதே உறவில் நீடித்தார். விஜய்யும் அந்த நடிகையும் வெளிநாடுகளுக்கு பல முறை ஒன்றாக பயணம் செய்தனர். அந்தப் புகைப்படங்களை நடிகை தனது சோசியல் மீடியாவில் பல முறை பதிவிட்டார்.' உள்ளிட்டப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நடிகர் விஜய் பிரபல நடிகையுடன் திருமண விழாவில் பங்கேற்றது பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில், ``எங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். பரஸ்பர சம்மதத்துடன் பிரிய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன். பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட எனக்கு இந்தியாவில் வேறு இருப்பிடம் இல்லை என்பதால், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யுடன் வசித்து வந்த நீலாங்கரையில் உள்ள அவர் இல்லத்திலேயே தொடர்ந்து வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும். எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். விஜய் - சங்கீதா முதற்கட்டமாக நீலாங்கரை இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டபோது விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுக்கப்பட்டு, மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே சங்கீதா நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தெரிகிறது. அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `நோட்டா' எல்லாம் ஒரு போட்டி வேட்பாளரா? `கட்டாய வாக்கு' கொண்டுவருவது சரியா? - ஒரு நீதிமன்ற விவாதம்!
Vijay: `வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுப்பு?' - நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரும் சங்கீதா
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்றும் மனுவில் கூறியுள்ளார். 'கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்தேன். அந்த உறவை விட்டுவிடுவதாக விஜய் உறுதி கொடுத்தார். நடிகர் விஜய் ஆனால், மீண்டும் அதே உறவில் நீடித்தார். விஜய்யும் அந்த நடிகையும் வெளிநாடுகளுக்கு பல முறை ஒன்றாக பயணம் செய்தனர். அந்தப் புகைப்படங்களை நடிகை தனது சோசியல் மீடியாவில் பல முறை பதிவிட்டார்.' உள்ளிட்டப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நடிகர் விஜய் பிரபல நடிகையுடன் திருமண விழாவில் பங்கேற்றது பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில், ``எங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். பரஸ்பர சம்மதத்துடன் பிரிய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன். பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட எனக்கு இந்தியாவில் வேறு இருப்பிடம் இல்லை என்பதால், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யுடன் வசித்து வந்த நீலாங்கரையில் உள்ள அவர் இல்லத்திலேயே தொடர்ந்து வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும். எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். விஜய் - சங்கீதா முதற்கட்டமாக நீலாங்கரை இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டபோது விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுக்கப்பட்டு, மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே சங்கீதா நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தெரிகிறது. அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `நோட்டா' எல்லாம் ஒரு போட்டி வேட்பாளரா? `கட்டாய வாக்கு' கொண்டுவருவது சரியா? - ஒரு நீதிமன்ற விவாதம்!
'வீட்டில் சிலுவை இருக்கிறது என்பதற்காக கிறிஸ்தவராகிவிட்டார் என அர்த்தமாகாது'- மும்பை உயர் நீதிமன்றம்
மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவை சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் தனக்கு பட்டியலின சாதிச்சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மாணவரின் முன்னோர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதால், அவருக்கு பட்டியலின சான்றிதழ் பெறத் தகுதியில்லை என்று அகோலா சாதி சரிபார்ப்புக் குழு முடிவு செய்திருந்தது. விண்ணப்பத்தாரரின் வீட்டில் சிலுவை மற்றும் கிறிஸ்து படங்கள் இருப்பு மற்றும் 1962-ஆம் ஆண்டு பள்ளிப் பதிவேட்டில் அவரது குடும்பம் கிறிஸ்துவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை ஆதாரமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மனுதாரர் தனது மனுவில், ''தனது குடும்பம் முறையாக ஒருபோதும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சாதிப் பாகுபாட்டைத் தவிர்ப்பதற்காகவே தனது தாத்தா பள்ளிப் பதிவேடுகளில் கிறிஸ்துவர் என்று குறிப்பிட்டுக்கொண்டார் என்றும், உண்மையில் மதமாற்றம் ஏதும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தனது வாதத்திற்கு ஆதாரமாக பள்ளி மற்றும் அரசு ஆவணங்களையும், தனது உறவினர் ஒருவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சாதி உறுதிச் சான்றிதழையும் அவர் சமர்ப்பித்தார். இம்மனு நீதிபதிகள் முகுலிகா ஜவால்கர் மற்றும் நந்தேஷ் தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஆதாரங்களை ஆய்வு செய்த உயர் நீதிமன்றம், மாவட்ட அதிகாரிகளின் முடிவு சரியானது அல்ல என்று கண்டறிந்தது. மேலும் அகோலா சாதி சரிபார்ப்புக் குழுவின் முடிவை தவறானது மற்றும் பிழையானது என்று தெரிவித்த நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், மனுதாரருக்கு பட்டியலின சான்றிதழை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஒருவரது வீட்டில் இருக்கும் மத அடையாளங்களை வைத்து மட்டுமே மதமாற்றத்தை உறுதி செய்ய முடியாது என்றும், மதமாற்றத்திற்கு உறுதியான ஆவண ஆதாரங்கள் அவசியம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்,மதமாற்றம் குறித்த எந்தவொரு குற்றச்சாட்டும் ஞானஸ்நான சடங்குகள் (baptism rituals) அல்லது ஞானஸ்நானச் சான்றிதழ் போன்ற ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், என்று தெரிவித்தனர். முறையான மதமாற்றச் சடங்குகள் நடந்ததா என்பதையும் சரிபார்ப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.!
IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர் கப்பலை அமெரிக்கா நீர் மூழ்கி ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது. இந்தப் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் கடற்படையினருக்கு இந்தியா மற்றும் இலங்கை மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் அளித்துள்ளன. ஈரானின் 'ஐரிஸ் டெனா' கப்பல் அமெரிக்காவால் தாக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான 'ஐரிஸ் லவன்', தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகக் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புக அனுமதி கேட்டிருந்தது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்று, மார்ச் 1 அன்று இந்தியா அனுமதி வழங்கியது. மார்ச் 4 அன்று கொச்சி வந்தடைந்த இந்தக் கப்பலில் இருந்த 183 மாலுமிகளும் தற்போது கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படை முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே ஈரானியக் கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்ட நிலையில், காயமடைந்த 32 மாலுமிகளை இலங்கை மீட்டது. மேலும், 'ஐரிஸ் புஷெர்' (IRIS Bushehr) என்ற மற்றொரு ஈரானியக் கப்பலும் எஞ்சின் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி கேட்டது. இலங்கை அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்த 219 மாலுமிகள் கொழும்பு அருகே உள்ள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்துப் பேசிய இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க, ``ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. நடுநிலை வகிக்கும் அதே வேளையில், உயிர்களைக் காப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறோம், என்று தெரிவித்துள்ளார். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சி, இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ``எங்கள் மாலுமிகளை மீட்ட இலங்கை அரசுக்கு நன்றி. எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி, 2000 மைல்களுக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் இருந்த ஒரு கப்பலை அமெரிக்கா தாக்கியிருப்பது ஒரு குற்றம். இது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் எதிர்கொள்ளப்படும். எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அணு ஆயுதமா... ஆட்சி மாற்றமா... ஈரான் போர்... இந்தியாவுக்கு என்னவாகும்?
Iran - America: `நியூயார்க் மேயரையே நியமிக்க முடியாதவர் ட்ரம்ப்'– டெல்லியில் ஈரான் அமைச்சர் காட்டம்
டெல்லியில் நடைபெற்று வரும் 'ரைசினா டயலாக்' சர்வதேச மாநாட்டில் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜாதே கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் உரையாற்றிய காதிப் ஜாதே, ``அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கோருகிறார். ஆனால் அவரால் நியூயார்க் நகர மேயரைக் கூட நியமிக்க முடியவில்லை. இது ஒரு காலனித்துவ மனப்போக்கு. ஈரானில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரைக் கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது. பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் வாழ்வா-சாவா போராட்டம். ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜா ஈரானால் எந்தத் தூண்டுதலும் இல்லாத நிலையில், இஸ்ரேல் எனும் மாயையாலும், அதிகார அரசியலாலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும், ஒரு நாட்டின் தலைவரைக் குறிவைத்துத் தாக்குவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. இந்தியாவின் 'மிலன்' கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ஈரானின் 'ஐரிஸ் டெனா' கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. ஆயுதங்கள் ஏதுமற்ற நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த ஒரு விருந்தினரை அமெரிக்கா தாக்கியது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலாகும். ஈரான் ஒரு பொறுப்புள்ள தேசம். ஹார்முஸ் ஜலசந்தியின் நிலைத்தன்மைக்கு நாங்களே அச்சாணி. நாங்கள் அதை மூடவில்லை. அவ்வாறு மூடுவதாக இருந்தால் முறைப்படி அறிவிப்போம் என்று என்றார். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல்: பகை தோன்றிய வரலாறு - சர்வதேச சட்டங்களை மீறிய ட்ரம்ப் மீது அதிருப்தி!
நேபாளத் தேர்தல் 2026: ராப் பாடகர் டு பிரதமர்; 'ஜென் Z'ஆதரவுடன் முன்னிலையில் பலேன் ஷா!
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 'ஜென் ஸீ' (Gen Z) இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், ராப் கலைஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பலேன் ஷாவின் (Balen Shah) 'ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி' (RSP) மிகப்பெரிய வெற்றிபெறும் எனக் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 165 தொகுதிகளில், 144 தொகுதிகளுக்கான தரவுகளின்படி, RSP கட்சி 3 இடங்களை வென்றுள்ளதுடன், 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பலேன் ஷா நேபாளி காங்கிரஸ் 2 இடங்களை வென்று 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிபிஎன்-யுஎம்எல் (CPN-UML) 10 தொகுதிகளிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காத்மாண்டுவின் 10 தொகுதிகளிலும் RSP கட்சியே முன்னிலை வகிக்கிறது. காத்மாண்டுவின் மேயராக இருந்த 35 வயது பொறியாளர் பலேந்திர ஷா (பலேன்), ஜாபா-5 தொகுதியில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விடப் பன்மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது இடைக்கால அரசை வழிநடத்தப் பலேனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு முழு பதவி காலத்திற்குப் பிரதமராக விரும்புவதாகக் கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் ஜனவரி மாதம் ரவி லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியில் இணைந்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த 18 ஆண்டுகளில் 14 அரசாங்கங்களைக் கண்ட நேபாளத்தில், இந்தத் தேர்தல் ஒரு நிலையான ஆட்சியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், நேபாளத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கிறது. புதிய அரசுடன் இணைந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு முடிவு கட்டுதல், நல்லாட்சி, வாரிசு அரசியலை ஒழித்தல் மற்றும் அரசியலில் தலைமுறை மாற்றம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 'ஜென் ஸீ' இளைஞர்கள் நடத்திய போராட்டமே இந்தத் தேர்தலுக்கு அடிப்படையாக அமைந்தது. தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடதக்கது. ஊழல் வழக்குகளை உடைத்த ஜெயலலிதா… கண்ணகிக்காகப் போராடிய கருணாநிதி! - வாக்காளப் பெருங்குடி மக்களே! - 34
``எப்ஸ்டீன் அழைத்துச் சென்றார்; ட்ரம்ப் என்னை அடித்து.. - பகீர் பாலியல் குற்றச்சாட்டை வைக்கும் பெண்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவரின் வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நீதித்துறை, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கூடுதல் கோப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஒரு மைனர் பெண் கூறிய உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் இடம்பெற்று இருக்கிறது. டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண்ணிடம் எஃப்.பி.ஐ நடத்திய விசாரணையின் மூன்று பகுதிகளைக் கொண்ட கோப்புகள் வெளியாகி இருக்கிறது. முந்தைய கோப்புகளை வெளியிடும்போது மறைந்த பாலியல் குற்றவாளி தொடர்பான ஆவணங்களின் சில பகுதிகளை நகல் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டதால், அவை அப்போது வெளியிடப்படவில்லை என்று நீதித்துறை தெரிவித்துள்ளது. எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நிர்வாகம் எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து ஜனநாயக கட்சியினர் விசாரணை வேண்டும் என்கிறார்கள். இக்கோப்பில் எஃப்.பி.ஐ டொனால்டு ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் இடம்பெற்று இருக்கிறது. அதில் அப்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''டொனால்டு ட்ரம்பிடம் என்னை எப்ஸ்டீன் தான் அறிமுகம் செய்தார். என்னை எப்ஸ்டீன் நியூயார்க் அல்லது நியூஜெர்சிக்கு அழைத்துச் சென்றார். அதிக அறைகள் உள்ள பெரிய கட்டடத்திற்கு என்னை அழைத்துச் சென்று, ட்ரம்பிடம் அறிமுகம் செய்து வைத்தார். உடனே ட்ரம்ப் அங்கிருந்த அனைவரையும் வெளியில் போகும்படி கேட்டுக்கொண்டார். என்னை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் வாய்வழியாக உறவை ஏற்படுத்திக்கொண்டபோது அவரது அந்தரங்க உறுப்பை கடித்துவிட்டேன். உடனே அவர் என்னை அடித்தார். இதனால் ஏற்பட்ட சத்தத்தில் மற்றவர்கள் மீண்டும் அறைக்குள் வந்தனர். ட்ரம்பும், எப்ஸ்டீனும் பேசிக்கொண்டதை நான் கேட்டேன். இதில் எப்ஸ்டீன் மற்றவர்களை மிரட்டுவது குறித்து பேசினார். ட்ரம்ப் பணத்தை சூதாட்டத்தில் செலவிடுவது குறித்து பேசினார். பாலியல் உறவின்போது எப்ஸ்டீன் என்னை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை காட்டி எனது தாயாரை மிரட்டினார். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டபோது அவர் அடிக்கடி மது, கஞ்சா மற்றும் கோகோயின் போன்ற போதைபொருளை எனக்கு கொடுத்தார். கடந்த பல ஆண்டுகளில் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று எனக்கும், என்னோடு தொடர்புடையவர்களுக்கும் பல முறை மிரட்டல் அழைப்புகள் வந்தது''என்றும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இச்சம்பவம் நடக்கும்போது 13 முதல் 15 வயது இருக்கும். அப்பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரிகள் சரிபார்க்கவில்லை என்று எப்.பி.ஐ தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்டு ட்ரம்ப் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,'' இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், நம்பகமான ஆதாரங்கள் இல்லாதவை. குற்ற பின்னணி கொண்ட பெண்ணிடமிருந்து இது போன்ற குற்றச்சாட்டு வந்திருக்கிறது''என்று குறிப்பிட்டுள்ளார். ஏராளமான மைனர் சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டது மற்றும் அச்சிறுமிகளை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கியதாக எப்ஸ்டீன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது 2019ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் தொடர்பான கோப்புகள் வெளியாகி அமெரிக்க பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேலின் ‘ப்ளூ ஸ்பாரோ’ ஏவுகணை! - முழு விவரம்!
ஈரானின் உச்ச தலைவராக கடந்த 37 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு ‘ப்ளூ ஸ்பாரோ’ (Blue Sparrow) எனப்படும் நவீன ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலை ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) என்று அழைக்கிறது. அதே சமயம், அமெரிக்க பென்டகன் இதனை ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) எனக் குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 28 அதிகாலை ஈரானின் தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் உள்ள காமேனியின் குடியிருப்பு வளாகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ப்ளூ ஸ்பாரோ மார்ச் 1 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ‘ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ்’ (Rafael Advanced Defense Systems) தயாரிப்பான ப்ளூ ஸ்பாரோ, மற்ற ஏவுகணைகளை விட மிகவும் ஆபத்தானது. 6.51 மீட்டர் நீளமும், 1,900 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை, வான்வெளியில் இருந்து ஏவப்படக்கூடிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இந்த ஏவுகணையின் தனிச்சிறப்பு அதன் செங்குத்தான பயணப்பாதைதான். பொதுவாக வான் பாதுகாப்பு அமைப்புகள் அடிவானத்தில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையே கண்காணிக்கும். ஆனால், ப்ளூ ஸ்பாரோ விண்வெளியின் விளிம்பு வரை சென்று, அங்கிருந்து கிட்டத்தட்ட நேர் செங்குத்தாக இலக்கை நோக்கி விழும். ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் வானிலிருந்து கீழே பாயும் இந்த ஏவுகணையை ரேடார்களால் கண்டறிவதற்குள், அது இலக்கைத் தாக்கி அழித்திருக்கும். அயதுல்லா அலி கமேனி தொடக்கத்தில், இஸ்ரேலின் ‘ஆரோ’ வான் பாதுகாப்பு அமைப்பைச் சோதிப்பதற்காக ஒரு ‘டம்மி’ ஏவுகணையாகவே ப்ளூ ஸ்பாரோ உருவாக்கப்பட்டது. ஈரான் போன்ற நாடுகளின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்த பயிற்சி பெறவே இது பயன்பட்டது. ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தையே அடிப்படையாகக் கொண்டு ‘ராக்ஸ்’ என்ற அதிநவீன போர் ஏவுகணையை இஸ்ரேல் உருவாக்கியது. இந்த ஏவுகணை ஜிபிஎஸ் (GPS) சிக்னல்கள் முடக்கப்பட்ட சூழலிலும், ‘இனர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம்’ (INS) மூலம் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. 500 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் இது, தரைக்கு அடியில் உள்ள இலக்குகளையும் ஊடுருவி அழிக்கக்கூடியது. 1989-ம் ஆண்டு முதல் ஈரானின் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருந்த காமேனியின் மறைவு, அந்த நாட்டின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் முழுமையாக ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்
ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேலின் ‘ப்ளூ ஸ்பாரோ’ ஏவுகணை! - முழு விவரம்!
ஈரானின் உச்ச தலைவராக கடந்த 37 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு ‘ப்ளூ ஸ்பாரோ’ (Blue Sparrow) எனப்படும் நவீன ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலை ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) என்று அழைக்கிறது. அதே சமயம், அமெரிக்க பென்டகன் இதனை ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) எனக் குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 28 அதிகாலை ஈரானின் தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் உள்ள காமேனியின் குடியிருப்பு வளாகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ப்ளூ ஸ்பாரோ மார்ச் 1 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ‘ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ்’ (Rafael Advanced Defense Systems) தயாரிப்பான ப்ளூ ஸ்பாரோ, மற்ற ஏவுகணைகளை விட மிகவும் ஆபத்தானது. 6.51 மீட்டர் நீளமும், 1,900 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை, வான்வெளியில் இருந்து ஏவப்படக்கூடிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இந்த ஏவுகணையின் தனிச்சிறப்பு அதன் செங்குத்தான பயணப்பாதைதான். பொதுவாக வான் பாதுகாப்பு அமைப்புகள் அடிவானத்தில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையே கண்காணிக்கும். ஆனால், ப்ளூ ஸ்பாரோ விண்வெளியின் விளிம்பு வரை சென்று, அங்கிருந்து கிட்டத்தட்ட நேர் செங்குத்தாக இலக்கை நோக்கி விழும். ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் வானிலிருந்து கீழே பாயும் இந்த ஏவுகணையை ரேடார்களால் கண்டறிவதற்குள், அது இலக்கைத் தாக்கி அழித்திருக்கும். அயதுல்லா அலி கமேனி தொடக்கத்தில், இஸ்ரேலின் ‘ஆரோ’ வான் பாதுகாப்பு அமைப்பைச் சோதிப்பதற்காக ஒரு ‘டம்மி’ ஏவுகணையாகவே ப்ளூ ஸ்பாரோ உருவாக்கப்பட்டது. ஈரான் போன்ற நாடுகளின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்த பயிற்சி பெறவே இது பயன்பட்டது. ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தையே அடிப்படையாகக் கொண்டு ‘ராக்ஸ்’ என்ற அதிநவீன போர் ஏவுகணையை இஸ்ரேல் உருவாக்கியது. இந்த ஏவுகணை ஜிபிஎஸ் (GPS) சிக்னல்கள் முடக்கப்பட்ட சூழலிலும், ‘இனர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம்’ (INS) மூலம் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. 500 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் இது, தரைக்கு அடியில் உள்ள இலக்குகளையும் ஊடுருவி அழிக்கக்கூடியது. 1989-ம் ஆண்டு முதல் ஈரானின் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருந்த காமேனியின் மறைவு, அந்த நாட்டின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் முழுமையாக ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்
தடைபோடும் அதிமுக; தாண்டிச் செல்லும் பாமக - அதகளப்படும் ஆற்காடு தொகுதி
ரா ணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியில், கடந்த முறைபோல அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிட விரும்புகிறது. இந்தத் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, பா.ம.க வேட்பாளராகக் களமிறங்கியவர் பா.ம.க மாவட்டச் செயலாளரான ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ கே.எல்.இளவழகன். அப்போது, அ.தி.மு.க-வினரின் முழு ஒத்துழைப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. உள்ளடி வேலைப் பார்த்து பா.ம.க-வை வீழ்த்த காரணமாக இருந்ததுமே அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள்தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது . இணைந்து செயல்பட்டால் மட்டுமே இலை விரிந்து மாம்பழம் பழுக்கும் என்கிற சூழலே நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் வரும் தேர்தலிலும், `தன்னுடைய தீவிர ஆதரவாளர் இளவழகனுக்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ம.க தலைவர் அன்புமணி ஆற்காடு தொகுதியை நிச்சயம் கேட்டுப் பெறுவார்’ என்று நம்புகிறார்கள் பாட்டாளிகள். இளவழகனும் தேர்தலில் போட்டியிடத் தயாராகி, ஆற்காடு தொகுதிக்குஉட்பட்ட கிராமந்தோறும் சென்று வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ கே.எல்.இளவழகன் கடந்த 1991 சட்டமன்றத் தேர்தலின்போது, ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற வேணுகோபால் மரணமடைந்ததால், தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 1993-ல் ராணிப்பேட்டை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது பா.ம.க தனித்து களமிறங்கியது. அப்போது, பா.ம.க வேட்பாளராக யானை சின்னத்தில் முதல்முறையாகக் களம் கண்டார் இளவழகன். 1996 தேர்தலிலும், யானை சின்னத்திலேயே பா.ம.க சார்பாக மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் இளவழகன். இரு முறையும் பின்னடவைச் சந்தித்தபோதும், 2006 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்ததால், மனம் தளராமல் ஆற்காடு தொகுதியில் களமிறங்கி வெற்றிபெற்றார் இளவழகன். தொடர்ந்து, 2011 தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் மீண்டும் ஆற்காடு தொகுதியில் போட்டியிட்ட இளவழகன் பின்னடைவைச் சந்தித்தார். 2016 தேர்தலின்போது, `மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற பிரசார முழக்கத்தை முன்னெடுத்த சமயத்தில், ஆற்காடு தொகுதியில் இருந்து அணைக்கட்டு தொகுதிக்கு மாறிய இளவழகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, கடந்த 2021 தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்த பிறகு மீண்டும் ஆற்காடு தொகுதிக்குத் திரும்பினார் இளவழகன். தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ஜெ.எல்.ஈஸ்வரப்பனிடம் சுமார் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் இளவழகன். ஒரு இடைத்தேர்தல், ஐந்து பொதுத்தேர்தல்கள் என ஆறு முறை சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டு, ஏழாவது முறையாகவும் போட்டியிட ஆயத்தமான இளவழகனின் முயற்சிக்கு அ.தி.மு.க தடைபோடுவது பாட்டாளிகளைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. எஸ்.எம்.சுகுமார் அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் கடந்த முறை ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க-வின் சிட்டிங் அமைச்சர் ஆர்.காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறையும் ராணிப்பேட்டை தொகுதியில் காந்தி களமிறங்கத் தயாராகிவிட்டதாலும், அங்கு வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் இஸ்லாமியர்களிடம் போதிய ஆதரவு கிடைக்கப் பெறாததாலும் எஸ்.எம்.சுகுமார் ராணிப்பேட்டையில் மீண்டும் களமிறங்கத் தயக்கம் காட்டுகிறார். அவரின் மாவட்டச் செயலாளர் பொறுப்பின்கீழ் ராணிப்பேட்டை தொகுதியும், ஆற்காடு தொகுதியும் இடம் பெறுகிறது. அந்த உரிமையிலும், தற்போது ஆற்காடு தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வலுபெற்றுள்ளதாலும் தொகுதி மாறத் திட்டமிடுகிறார் எஸ்.எம்.சுகுமார். அண்மைக் காலமாக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து சந்தித்து ஆற்காடு தொகுதியைக் கேட்டும் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார் எஸ்.எம்.சுகுமார். அதே சமயம், பா.ம.க-வும் விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை. அ.தி.மு.க-வின் தடைகளை பா.ம.க தாண்டிச் செல்வதால் ஆற்காடு தொகுதிக்குள் அந்த கூட்டணி அதகளப்பட்டிருக்கிறது.
Vijay ஏன் வெளியே வரல? - இதுதான் காரணம் - Aadhav Arjuna | Vikatan Medai | ஆதவ் அர்ஜுனா தவெக
Iran war: Russia China ரகசிய உதவியா? வீணாகும் US Israel Plan | Decode | Vikatan
Election-க்கு முன் Governor RN RAVI மாற்றம் -பகீர் பின்னணி DMK - 26 கட்சிகள்; யாருக்கு எத்தனை சீட்?
போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, எல்பிஜி (LPG) உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் எல்பிஜி உற்பத்திக்குத் தேவையான புரொப்பைன், பியூட்டேன் வாயுக்களை பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு கொடுக்கவும் தடை விதித்திருக்கிறது. சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், எரிவாயுவை அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவையில், சுமார் 90% மத்திய கிழக்கு நாடுகளே பூர்த்தி செய்துவந்த நிலையில், அது தற்போது தடைபட்டுள்ளதால் மத்திய அரசு அவசரக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அம்மா பிறந்தநாள் ; மூன்றாம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்ட eps
அம்மா பிறந்தநாள் ; மூன்றாம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்ட eps
செங்கோட்டையன் குடுத்த idea ! குஷியில் tvk தொண்டர்கள்
செங்கோட்டையன் குடுத்த idea ! குஷியில் tvk தொண்டர்கள்
இணையத்தில் குறிவைக்கப்படு நடிகைகள் என்ன காரணம்_
இணையத்தில் குறிவைக்கப்படு நடிகைகள் என்ன காரணம்_
ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்
ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வணிகப் போக்குவரத்துப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துதான் வர்த்தகம் ஆகி வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர்களைக்கூட எட்டலாம் என்கிற அச்சம்கூட இருந்து வருகிறது. இந்த நிலையில், கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி கச்சா எண்ணெய் விலை குறித்துப் பேசியுள்ளார். கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! அவர் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்... அவர் சொல்வது ஏன் முக்கியம் என்று தெரிந்துகொள்ளலாம். உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் டாப் 15 நாடுகளில் கத்தாரும் ஒன்று. உலக அளவில் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் டாப் மூன்றாவது நாடு கத்தார். இந்த இடத்தில் இருக்கும் கத்தார், கத்தாரின் அமைச்சர் சொல்வது கச்சா எண்ணெய் வணிகத்தில் மிக முக்கியமானது. அப்படி கத்தார் எரிசக்தி அமைச்சர் என்ன கூறியிருக்கிறார்? இப்போது ஈரானில் நடந்து வரும் போர் தொடர்ந்தால், வளைகுடா நாடுகள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் எரிசக்திகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். இது உலகின் எரிசக்திச் சந்தையைப் பெரிதும் பாதிக்கலாம். உலகப் பொருளாதாரங்களைக் கீழே தள்ளலாம். ஒருவேளை இந்தப் போர் இப்போதே நிறுத்தப்பட்டாலும், வழக்கம் போல, கத்தார் தங்களது டெலிவரிகளை ஆரம்பிக்க வாரங்கள் அல்லது மாதங்கள் கணக்கில் ஆகும். மேலும், இந்தப் போர் ஒரு பேரல் எண்ணெயின் விலை 150 டாலருக்குக்கூட தள்ளலாம் என்று ஃபைனான்சியல் டைம்ஸிற்குத் தந்த பேட்டியில் கூறியுள்ளார். ஈரான்: `இந்திய விருந்தாளி மீது தாக்குதல்; இருந்தும் மோடி மௌனம்' - கார்கேயின் `3' கேள்விகள்!
ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்
ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வணிகப் போக்குவரத்துப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துதான் வர்த்தகம் ஆகி வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர்களைக்கூட எட்டலாம் என்கிற அச்சம்கூட இருந்து வருகிறது. இந்த நிலையில், கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி கச்சா எண்ணெய் விலை குறித்துப் பேசியுள்ளார். கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! அவர் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்... அவர் சொல்வது ஏன் முக்கியம் என்று தெரிந்துகொள்ளலாம். உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் டாப் 15 நாடுகளில் கத்தாரும் ஒன்று. உலக அளவில் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் டாப் மூன்றாவது நாடு கத்தார். இந்த இடத்தில் இருக்கும் கத்தார், கத்தாரின் அமைச்சர் சொல்வது கச்சா எண்ணெய் வணிகத்தில் மிக முக்கியமானது. அப்படி கத்தார் எரிசக்தி அமைச்சர் என்ன கூறியிருக்கிறார்? இப்போது ஈரானில் நடந்து வரும் போர் தொடர்ந்தால், வளைகுடா நாடுகள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் எரிசக்திகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். இது உலகின் எரிசக்திச் சந்தையைப் பெரிதும் பாதிக்கலாம். உலகப் பொருளாதாரங்களைக் கீழே தள்ளலாம். ஒருவேளை இந்தப் போர் இப்போதே நிறுத்தப்பட்டாலும், வழக்கம் போல, கத்தார் தங்களது டெலிவரிகளை ஆரம்பிக்க வாரங்கள் அல்லது மாதங்கள் கணக்கில் ஆகும். மேலும், இந்தப் போர் ஒரு பேரல் எண்ணெயின் விலை 150 டாலருக்குக்கூட தள்ளலாம் என்று ஃபைனான்சியல் டைம்ஸிற்குத் தந்த பேட்டியில் கூறியுள்ளார். ஈரான்: `இந்திய விருந்தாளி மீது தாக்குதல்; இருந்தும் மோடி மௌனம்' - கார்கேயின் `3' கேள்விகள்!
பராசக்தியை வைத்து வாக்கு திரட்ட திமுக திட்டம்- ஆதவ் அர்ஜுனா
பராசக்தியை வைத்து வாக்கு திரட்ட திமுக திட்டம்- ஆதவ் அர்ஜுனா
அடுத்தடுத்து அதிரடி காட்டும் திமுக...சாதகம் ஆகிறதா களம்?
அடுத்தடுத்து அதிரடி காட்டும் திமுக...சாதகம் ஆகிறதா களம்?
இந்தியா எங்களது சந்தையை 'இப்படி'பிடிக்க முடியாது; சீனாவிடம் செய்த தவறு இனி இல்லை - அமெரிக்கா
இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ். அவர் டெல்லியில் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பேசியுள்ளதாவது... 20 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் சீனாவிடம் செய்த அதே தவறை இந்தியாவிடம் செய்யமாட்டோம். அதாவது எங்களது சந்தையில் எளிதாக உள்நுழைந்து, வலுவான போட்டியாளராக மாற விடமாட்டோம். நாங்கள் எது செய்தாலும் அது எங்கள் மக்களுக்கு நியாயமானதாக இருப்பதாக பார்க்க்கப் போகிறோம். இந்தியா இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! காரணம், இந்தியா எப்படி இந்திய மக்களுக்குப் பொறுப்பாக இருக்கிறதோ, அதே மாதிரி, நாங்களும் எங்களது சொந்த மக்களுக்குப் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்றால் அது அமெரிக்கா மட்டுமல்ல. இதை அடையப் பிற நாடுகளுடனும் அமெரிக்காவும் ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்படி அமெரிக்காவை மீண்டும் சிறந்தது ஆக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ... அதே மாதிரிதான் இந்திய பிரதமர் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும், அவர்களது நாட்டைச் சிறந்தது ஆக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்தியா இந்த நூற்றாண்டில் நல்ல வளர்ச்சியை அடையும் என்பது மறுக்க முடியாத ஒரு விஷயம். 'ஒன்றாக இணைந்து' பணிபுரிவது என்பது எங்களது விருப்பமாக உள்ளது. இதை இந்தியாவும் விரும்பும் என்று நினைக்கிறோம். இந்தியாவிடம் அனைத்துச் சக்திகளும் உள்ளது. இப்போது இந்தியா தான் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இந்தியா ஈரான்: `இந்திய விருந்தாளி மீது தாக்குதல்; இருந்தும் மோடி மௌனம்' - கார்கேயின் `3' கேள்விகள்! இங்கே பொருளாதாரம், மனிதவளம் உள்ளிட்ட பல வளங்கள் இருக்கின்றன. இந்த நூற்றாண்டில் இந்தியா மிக முக்கியமான நாடு. அத்துடன் நாங்கள் வலுவான உறவை உருவாக்க விரும்புகிறோம். இந்த உறவு சமூகப் பணியோ, தொண்டோ அல்ல. எங்களது நாட்டின் நலனுக்காகத் தான் நான் இங்கே இருக்கிறேன். இந்தியா உடன் இணக்கமாக இருப்பது எங்களது நாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சிங்கம் கூட சாதுதான்; 'இந்த 4' விலங்குகள் கிட்ட மனிதர்கள் மாட்டுனா அவ்வளவுதான்!
விஜய் குடும்பத்திலேயே வாக்கு இல்லை! எப்படி நம்புவாங்க!
விஜய் குடும்பத்திலேயே வாக்கு இல்லை! எப்படி நம்புவாங்க!
`4,000 ஓட்டுக்காக கம்யூனிஸ்ட்டுக்கு தொகுதியை கொடுப்பதா?' - அறிவாலயத்தில் குமுறும் உடன்பிறப்புகள்
இன்றோடு விருப்ப மனுக்களை வாங்கி முடிக்கிறது அறிவாலயம். சீட்டுக்காக உடன்பிறப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், 'ஐயா நீங்க சீட்டை கட்சிக்காரன் யாருக்கு வேணா கொடுங்க, ஆனா தொகுதியை மட்டும் கம்யூனிஸ்ட்டுக்கு தூக்கி கொடுத்துடாதீங்க!' என குமுறுகின்றனர் பவானிசாகர் (தனி) தொகுதி உடன்பிறப்புகள். சுந்தரம் பவானிசாகர் தொகுதிக்காக விருப்பமனுவை தாக்கல் செய்துவிட்டு அறிவாலயத்தை சுற்றிக் கொண்டிருந்த சில உடன்பிறப்புகளிடம் பேச்சுக் கொடுத்தோம். '2006 இல் கடைசியாக பவானிசாகர் தொகுதியில் திமுக வென்றது. அதன்பிறகு தொகுதி எங்கள் கைக்கு வரவே இல்லை. 2011 இல் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இருந்தது. கம்யூக்களுக்கு பவானிசாகர் தொகுதி ஒதுக்கப்பட்டது. பி.எல்.சுந்தரம் என்பவர் போட்டியிட்டு வென்றார். 2016 இல் கம்யூக்கள் மக்கள் நலக் கூட்டணிக்கு தாவி விட்டார்கள். அப்போதும் பி.எல்.சுந்தரம்தான் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளர் ஈஸ்வரன் 83,000 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சத்யா தோற்றார். பி.எல்.சுந்தரம் மட்டும் 27,000 வாக்குகளை பிரித்து திமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்தார். 2021 இல் கம்யூக்கள் திமுக கூட்டணிக்கு வந்துவிட்டனர். அப்போதும் தொகுதி கம்யூக்களுக்கே சென்றது. கடந்த தேர்தல்களில் திமுகவை தோற்கடித்த திமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்த பி.எல்.சுந்தரம்தான் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பண்ணாரி என்பவர்தான் போட்டியிட்டார். அந்த கட்சிக்குள்ளேயே பலருக்கும் அவரை யாரென்று தெரியாது. அப்படிப்பட்ட வேட்பாளரிடம் பி.எல்.சுந்தரம் தோற்றுப்போனார். ஸ்டாலின் தொகுதியில் அருந்ததியர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள். அப்படியிருக்க தேவேந்திர குல வேளாளரான சுந்தரத்துக்கு எப்படி மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்? கடந்த காலங்களில் திமுகவினருக்கு எதிராகவே வேலை பார்த்ததால் எங்கள் கட்சிக்குள்ளும் அவருக்கு ஒத்துழைக்க யாரும் தயாராக இல்லை. தொகுதியில் கம்யூக்களுக்கு செல்வாக்கே இல்லை. 2016 இல் மக்கள் நலக்கூட்டணியில் அவர்கள் பெற்ற வாக்குகளில் 20-23 ஆயிரம் வாக்குகள் விஜயகாந்துக்காக விழுந்தது. கம்யூக்களுக்கென 4000-5000 வாக்குகள் மட்டுமே இருக்கும். கம்யூக்களுக்கு தொகுதியை வழங்கி பி.எல்.சுந்தரமே மீண்டும் போட்டியிட்டால், இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அதிமுகவுடன் மறைமுக கூட்டணி அமைத்து நமக்கு தோல்வியை உறுதி செய்துகொடுப்பார். ரங்கசாமி, கணேசன், சிற்றரசு, குணசேகரன், கவின் என கட்சிக்காக வேலை பார்த்த பலரும் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். உதயசூரிய ந் நின்றால் மட்டுமே பவானிசாகர் தொகுதியை 20 ஆண்டுகள் கழித்து நம்முடையதாக்க முடியும்.' என்றனர். பவானிசாகரில் கட்சியினர் விருப்பப்படி சூரியன் உதிக்குமா? கட்சி முடிவுக்காக காத்திருக்கும் உடன்பிறப்புகள்.
`4,000 ஓட்டுக்காக கம்யூனிஸ்ட்டுக்கு தொகுதியை கொடுப்பதா?' - அறிவாலயத்தில் குமுறும் உடன்பிறப்புகள்
இன்றோடு விருப்ப மனுக்களை வாங்கி முடிக்கிறது அறிவாலயம். சீட்டுக்காக உடன்பிறப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், 'ஐயா நீங்க சீட்டை கட்சிக்காரன் யாருக்கு வேணா கொடுங்க, ஆனா தொகுதியை மட்டும் கம்யூனிஸ்ட்டுக்கு தூக்கி கொடுத்துடாதீங்க!' என குமுறுகின்றனர் பவானிசாகர் (தனி) தொகுதி உடன்பிறப்புகள். சுந்தரம் பவானிசாகர் தொகுதிக்காக விருப்பமனுவை தாக்கல் செய்துவிட்டு அறிவாலயத்தை சுற்றிக் கொண்டிருந்த சில உடன்பிறப்புகளிடம் பேச்சுக் கொடுத்தோம். '2006 இல் கடைசியாக பவானிசாகர் தொகுதியில் திமுக வென்றது. அதன்பிறகு தொகுதி எங்கள் கைக்கு வரவே இல்லை. 2011 இல் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இருந்தது. கம்யூக்களுக்கு பவானிசாகர் தொகுதி ஒதுக்கப்பட்டது. பி.எல்.சுந்தரம் என்பவர் போட்டியிட்டு வென்றார். 2016 இல் கம்யூக்கள் மக்கள் நலக் கூட்டணிக்கு தாவி விட்டார்கள். அப்போதும் பி.எல்.சுந்தரம்தான் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளர் ஈஸ்வரன் 83,000 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சத்யா தோற்றார். பி.எல்.சுந்தரம் மட்டும் 27,000 வாக்குகளை பிரித்து திமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்தார். 2021 இல் கம்யூக்கள் திமுக கூட்டணிக்கு வந்துவிட்டனர். அப்போதும் தொகுதி கம்யூக்களுக்கே சென்றது. கடந்த தேர்தல்களில் திமுகவை தோற்கடித்த திமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்த பி.எல்.சுந்தரம்தான் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பண்ணாரி என்பவர்தான் போட்டியிட்டார். அந்த கட்சிக்குள்ளேயே பலருக்கும் அவரை யாரென்று தெரியாது. அப்படிப்பட்ட வேட்பாளரிடம் பி.எல்.சுந்தரம் தோற்றுப்போனார். ஸ்டாலின் தொகுதியில் அருந்ததியர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள். அப்படியிருக்க தேவேந்திர குல வேளாளரான சுந்தரத்துக்கு எப்படி மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்? கடந்த காலங்களில் திமுகவினருக்கு எதிராகவே வேலை பார்த்ததால் எங்கள் கட்சிக்குள்ளும் அவருக்கு ஒத்துழைக்க யாரும் தயாராக இல்லை. தொகுதியில் கம்யூக்களுக்கு செல்வாக்கே இல்லை. 2016 இல் மக்கள் நலக்கூட்டணியில் அவர்கள் பெற்ற வாக்குகளில் 20-23 ஆயிரம் வாக்குகள் விஜயகாந்துக்காக விழுந்தது. கம்யூக்களுக்கென 4000-5000 வாக்குகள் மட்டுமே இருக்கும். கம்யூக்களுக்கு தொகுதியை வழங்கி பி.எல்.சுந்தரமே மீண்டும் போட்டியிட்டால், இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அதிமுகவுடன் மறைமுக கூட்டணி அமைத்து நமக்கு தோல்வியை உறுதி செய்துகொடுப்பார். ரங்கசாமி, கணேசன், சிற்றரசு, குணசேகரன், கவின் என கட்சிக்காக வேலை பார்த்த பலரும் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். உதயசூரிய ந் நின்றால் மட்டுமே பவானிசாகர் தொகுதியை 20 ஆண்டுகள் கழித்து நம்முடையதாக்க முடியும்.' என்றனர். பவானிசாகரில் கட்சியினர் விருப்பப்படி சூரியன் உதிக்குமா? கட்சி முடிவுக்காக காத்திருக்கும் உடன்பிறப்புகள்.
கெடு விதித்த திமுக! ராகுல் மனதில் இருப்பது என்ன Explained
கெடு விதித்த திமுக! ராகுல் மனதில் இருப்பது என்ன Explained
ஆட்சியில் பங்கு கேட்கவில்லையா விசிக? உடைத்து பேசிய S.S பாலாஜி MLA
ஆட்சியில் பங்கு கேட்கவில்லையா விசிக? உடைத்து பேசிய S.S பாலாஜி MLA
நவம்பர் 9ஆம் தேதி ஒரே மேடையில் ராகுல் - ஸ்டாலின்!
நவம்பர் 9ஆம் தேதி ஒரே மேடையில் ராகுல் - ஸ்டாலின்!
விவசாய கடன் தள்ளுபடி; இரு விமான நிலையங்களிடையே ரூ22000 கோடியில் மெட்ரோ ரயில்- மகா., பட்ஜெட் ஹைலைட்ஸ்
மகாராஷ்டிரா பட்ஜெட்டை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தாக்கல் செய்தார். அதில் மும்பையில் வடாலாவில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை ரு.23,487 கோடியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், இது தாராவி மற்றும் பாந்த்ரா டெர்மிஸ் வரை நீட்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் விமான நிலையத்தில் இருந்து நவிமும்பையில் உள்ள விமான நிலையத்திற்கு ரூ.22,862 கோடியில் புதிய மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ரு.1,500 வழங்கும் திட்டம் தொடரும். அதோடு நவிமும்பையில் புதிய கல்வி நகரம் உருவாக்கப்படும். விவசாயிகளின் 2 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். 2025ம் ஆண்டு செப்டம்பருக்கு முந்தைய கடன்கள் இத்திட்டத்தில் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பாந்த்ரா-வர்சோவா இடையிலான கடற்சாலை திட்டம் 2028ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். இச்சாலை பின்னர் பயந்தர் வரை நீட்டிக்கப்படும். 1000 மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராம சாலைகளும் கான்கிரீட் மயமாக்கப்படும். மும்பை வடாலாவில் 130 ஏக்கர் பரப்பில் ஸ்டார்ட்அப் வளாகம் உருவாக்கப்படும். மும்பை மற்றும் புனேயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்க சாலைகள் ஏற்படுத்தப்படும். பட்ஜெட்டில் திட்டச்செலவு ஒதுக்கீடு ரூ.7,69,467 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.40,552 கோடியாக இருக்கும். மொத்த பட்ஜெட்டில் 1,50,491 கோடி அளவுக்கு பற்றாக்குறை இருக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஹெக்டேரில் இயற்கை விவசாய திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 295 அனிமேஷன் ஸ்டூடியோ உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாய கடன் தள்ளுபடி; இரு விமான நிலையங்களிடையே ரூ22000 கோடியில் மெட்ரோ ரயில்- மகா., பட்ஜெட் ஹைலைட்ஸ்
மகாராஷ்டிரா பட்ஜெட்டை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தாக்கல் செய்தார். அதில் மும்பையில் வடாலாவில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை ரு.23,487 கோடியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், இது தாராவி மற்றும் பாந்த்ரா டெர்மிஸ் வரை நீட்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் விமான நிலையத்தில் இருந்து நவிமும்பையில் உள்ள விமான நிலையத்திற்கு ரூ.22,862 கோடியில் புதிய மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ரு.1,500 வழங்கும் திட்டம் தொடரும். அதோடு நவிமும்பையில் புதிய கல்வி நகரம் உருவாக்கப்படும். விவசாயிகளின் 2 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். 2025ம் ஆண்டு செப்டம்பருக்கு முந்தைய கடன்கள் இத்திட்டத்தில் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பாந்த்ரா-வர்சோவா இடையிலான கடற்சாலை திட்டம் 2028ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். இச்சாலை பின்னர் பயந்தர் வரை நீட்டிக்கப்படும். 1000 மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராம சாலைகளும் கான்கிரீட் மயமாக்கப்படும். மும்பை வடாலாவில் 130 ஏக்கர் பரப்பில் ஸ்டார்ட்அப் வளாகம் உருவாக்கப்படும். மும்பை மற்றும் புனேயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்க சாலைகள் ஏற்படுத்தப்படும். பட்ஜெட்டில் திட்டச்செலவு ஒதுக்கீடு ரூ.7,69,467 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.40,552 கோடியாக இருக்கும். மொத்த பட்ஜெட்டில் 1,50,491 கோடி அளவுக்கு பற்றாக்குறை இருக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஹெக்டேரில் இயற்கை விவசாய திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 295 அனிமேஷன் ஸ்டூடியோ உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த தொகுதிகளை ஜெயித்தால் தான் தமிழ்நாடு ஆட்சி!”
“இந்த தொகுதிகளை ஜெயித்தால் தான் தமிழ்நாடு ஆட்சி!”
3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் - பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘IPS VIKATAN ELECTION EXPRESS 2026’ வாகனத்தை, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா. சீனிவாசன் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். VIKATAN ELECTION EXPRESS அடுத்த சில வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் இந்த வாகனம் வலம் வரவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் மனநிலை, தொகுதி வாரியான பிரச்னைகள் மற்றும் அரசியல் மாற்றங்களை சுவாரசியமாகவும் நேர்த்தியாகவும் வீடியோக்களாக இக்குழுவினர் வழங்க உள்ளனர். தேர்தலை ஒரு புதிய கோணத்தில் அணுகும் இந்த பயணம், வாசகர்களுக்கு ஒரு முழுமையான கள அனுபவத்தைத் தரும்!
3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் - பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘IPS VIKATAN ELECTION EXPRESS 2026’ வாகனத்தை, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா. சீனிவாசன் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். VIKATAN ELECTION EXPRESS அடுத்த சில வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் இந்த வாகனம் வலம் வரவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் மனநிலை, தொகுதி வாரியான பிரச்னைகள் மற்றும் அரசியல் மாற்றங்களை சுவாரசியமாகவும் நேர்த்தியாகவும் வீடியோக்களாக இக்குழுவினர் வழங்க உள்ளனர். தேர்தலை ஒரு புதிய கோணத்தில் அணுகும் இந்த பயணம், வாசகர்களுக்கு ஒரு முழுமையான கள அனுபவத்தைத் தரும்!
விகடன் Imperfect Show On Road | Election Express | 4000 கிமீ பயணம் தொடங்கியது | Vikatan Tv
விகடன் Imperfect Show On Road | Election Express | 4000 கிமீ பயணம் தொடங்கியது | Vikatan Tv
அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார், ராமதாஸ் சிக்னல் என்ன_ கூட்டணி யாருடன்_
அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார், ராமதாஸ் சிக்னல் என்ன_ கூட்டணி யாருடன்_
28 + 1 எனும் மேஜிக் எண் வேலை செய்யுமா?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் 28 + 1 இதுதான் இன்றைய ஹாட் டாபிக். இந்த மேஜிக் நம்பரை பிடிக்க எத்தனை எத்தனை பேட்டிகள். X தள பதிவுகள். இன்னும் நிறைய...நிறைய... 2011 ல் மேலே ரெய்ட் கீழே கூட்டணி பேச்சுவார்த்தை என்ற பழைய பரபரப்பை மிஞ்சியது தற்போதைய திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை, மற்றும் ஒப்பந்தம். ஐபிஎல் ஏலம் போல எகிறிக் கொண்டே போனது காங்கிரஸ் கட்சி. தவெக ஏலம் எடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி சொல்லியே திமுகவை பயமுறுத்திக் கொண்டு இருந்தது. ஒரு வழியாக 28 + 1 என்று A S K (ARIVALAYAM SUPER KINGS) அணிக்கு ஏலம் எடுத்துவிட்டார்கள். ராகுல் காந்தி - ப்ரியங்கா காந்தி எந்த அடிப்படையில் எடுத்தார்கள் என்ற கேள்வி வருகிறது. சிறந்த பவுலிங்... சிறந்த பேட்டிங்...சிறந்த ஃபீல்டிங்... பதில் எதுவுமில்லை. அந்த கட்சியில் சிறந்த பேச்சாளர்கள் இருக்கிறார்களா....? இல்லை... ஃபீல்டிங் என்று சொல்லப்படும் களத்தில் இறங்கி வேலை செய்ய போதுமான தொண்டர்கள் இருக்கிறார்களா... இல்லை...தொகுதிக்கு நன்கு அறிமுகமான, மக்களோடு மக்களாக கலந்து பழகக்கூடிய வேட்பாளர்கள் இருக்கிறார்களா...இல்லை. இல்லை என்பதே காங்கிரஸ் கட்சியின் பிரதானம். அதில் 80 சதவீதம் வெற்றி பெற்றுவிட்டார்கள். அதெல்லாம் சரி, அறிவாலயத்துக்கு என்ன ஆச்சு....? முக்கிய காரணம் விசில். 70 களில் ''விசிலடிச்சான் ரசிகர்கள்'' என்று எம்.ஜி.ஆர். ரசிகர்களை மிக மோசமாக கிண்டல் செய்து அதன் பலனை நீண்ட நாட்கள் அனுபவித்தார்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகே 1989 ஆம் ஆண்டில் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள். அதுவும் இரண்டு ஆண்டுகள் தான். 1991 ல் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியை பிடித்தார். பிறகு மாறி மாறி திமுகவும் அதிமுகவும் ஆட்சிக்கு வந்தன. 2011 ல் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அவர்கள் 2016 ல் தொடர்ந்தார். 10 ஆண்டுகள் திமுக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஜெயலலிதா வாக்குறுதிகளை வாரி இறைத்து ஏகப்பட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தும் திமுக தனது பழைய பாணியை கைவிடவில்லை. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள், ஊழல் புகார்கள், சட்டம் ஒழுங்கு சீர் குலைவுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லி சொல்லி வெறுப்பேத்தினார்கள். வெறுப்பு அரசியல் மட்டுமே நடத்தினார்கள். நிதி இல்லை என்று சொல்லி பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக 'நீட் ஒழிப்பு' . அந்த ரகசியம் என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. திமுகவின் பலவீனத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொண்டது. தவெக வை காட்டி காட்டி...பூதம் வருது...பூதம் வருது ன்னு குழந்தைகளை பயமுறுத்தும் பழைய டெக்னிக்கை பயன்படுத்தி காங்கிரஸ் வென்றுவிட்டது. . 28 + 1 வந்தது. இந்திரா காந்தி, கருணாநிதி ஒரு சிறிய பிளாஸ்பேக்...1980 ல் இதே காங்கிரஸ் திமுக கூட்டணி அமைந்தது. அப்போது இந்திரா காந்தி அவர்களும் கருணாநிதி அவர்களும் இருந்தார்கள். சரிபாதி தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வாங்கியது. அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கருணாநிதி அவர்களும் வாரி வழங்கினார். 1980 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை வென்ற அதிமுக சட்டமன்ற தேர்தலில் அருதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. ஆறே மாதத்தில் வாக்களிக்கும் முறையில் வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் வாக்குகள் அதிமுகவிற்கே சென்று விட்டது. தற்போது அதே போல ஒரு சூழ்நிலை உருவாகுமா...? மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் இன்று இல்லை...என்றாவது ஒருநாள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். தீர்ப்பு வரும்போது தெரியும்...எது எது மாறிப் போனது என்று. சுருக்கமாக சொன்னால் 28 +1 அசாதாரணமான நம்பர். அதற்குள் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது.
விஜய் தான் Boss, அவருக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை! Mathivanan interview
விஜய் தான் Boss, அவருக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை! Mathivanan interview
விஜய்-திரிஷா செய்த செயல்!இணையத்தில் Viral
விஜய்-திரிஷா செய்த செயல்!இணையத்தில் Viral
``16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை - கர்நாடக முதல்வர் சித்தராமையா!
கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று வெள்ளிக்கிழமை 2026–27-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அவர் உரையாற்றினார். அப்போது, ``அரசியலமைப்பில் வகுத்துள்ள கூட்டாட்சி முறையைப் பின்பற்றாமல் மத்திய அரசு மாநிலத்திற்கு அநீதி இழைக்கிறது. உள்கட்டமைப்பு மற்றும் நீண்டகால பொருளாதார மாற்றத்தில், முதலீடுகளுடன் நலத்திட்டங்களை சமநிலைப்படுத்தும் ஒரு வளர்ச்சி உத்தியை மாநில அரசு பின்பற்றி வருகிறது. நாட்டின் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் கர்நாடக மாநிலம் முன்னணியில் உள்ளது. அதிக வரி வருவாயை வழங்கும் முக்கிய மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும். சித்தராமையா 2026–27-ம் ஆண்டிற்கான மொத்த செலவு ரூ.4,48,004 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் கர்நாடகா தொடர்ந்து தனித்துவமான பங்கை வகித்து வருகிறது. அதிகரித்து வரும் மொபைல் பயன்பாட்டின் பாதகமான விளைவுகளைத் தடுக்க 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும். அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தைத் தடுப்பதே இந்தத் தடையின் நோக்கமாகும். ஐ.ஐ.எஸ்.சி.யின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப பூங்கா, இஸ்ரோ மற்றும் கியோனிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பெங்களூரு ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு மண்டலம் என்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளாகம் அமைக்கப்படும். கடந்த 2025–26 நிதியாண்டின் தொடக்கத்தில், கர்நாடகாவின் ஜிஎஸ்டி வருவாய் ஒவ்வொரு மாதமும் சுமார் 10% என்ற ஆரோக்கியமான வேகத்தில் வளர்ந்து வந்தது. ஆனால், ஜிஎஸ்டி வரி விகிதங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு (Restructuring) பிறகு, இந்த வளர்ச்சி வேகம் 4% ஆகக் கடுமையாகக் குறைந்துவிட்டது. சிறுவர்கள் மொபைல் வரி விகித மாற்றங்களால் கர்நாடக அரசுக்கு வர வேண்டிய வருவாயில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) சுமார் ரூ. 10,000 கோடி வருவாய் குறையும். அடுத்த நிதியாண்டில் (2026-27) சுமார் ரூ. 15,000 கோடி வருவாய் குறையும். மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் மட்டும் கர்நாடக அரசுக்கு சுமார் ரூ.25,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அல்லது ஜிஎஸ்டி கவுன்சில் சில பொருட்களுக்கான வரி விகிதங்களைக் குறைத்திருக்கலாம் அல்லது மாற்றியிருக்கலாம். கர்நாடகா ஒரு பெரிய நுகர்வு மாநிலமாக இருப்பதால், இந்த வரி மாற்றங்கள் நேரடியாக மாநில அரசுக்கு வரும் பணத்தைக் குறைத்துவிட்டன. வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த 6% சரிவு மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். எனக் குறிப்பிட்டார். AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!
அரக்கோணம்: அதிமுக ஹாட்ரிக் வெற்றி; மீண்டும் களமிறங்கும் சு.ரவி - என்ன செய்யப் போகிறது திமுக?
ரா ணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் தனித்தொகுதியை அ.தி.மு.க தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக மூன்றாவது முறையாக நீடிக்கும் அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி, வரும் தேர்தலிலும் களமிறங்குகிறார். அரக்கோணம் நகர்ப்பகுதி வாக்குகள் தி.மு.க-வுக்குக் கைகொடுத்தாலும், தொகுதியைக் கூட்டணிக்குத் தாரை வார்ப்பதால் அ.தி.மு.க-வுக்கே சாதகமான சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் இந்த முறை `தி.மு.க நேரடியாகப் போட்டியிட வேண்டும்’ என உடன்பிறப்புகள் போர்க்கொடித் தூக்கியிருக்கின்றனர். நெமிலி ஒன்றியச் சேர்மனும், தி.மு.க ஒன்றியச் செயலாளருமான பெ.வடிவேலு தனது மனைவி பவானிக்காக சீட் கேட்கிறார். மாவட்ட அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகனின் ஆதரவும் பவானிக்கு இருக்கிறது. சீட்டுக்கான ரேஸிலும் பவானியே முந்துகிறார். சேர்மன் வடிவேலு - மனைவி பவானி சேர்மன் வடிவேலு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மனைவி பவானி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் பவானி, தி.மு.க-விலும் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளராக ஆக்டிவ்வாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். `பவானிக்கு சீட் கிடைக்குமேயானால், வன்னியர்களின் ஆதரவும் தி.மு.க-வுக்குக் கிடைக்கும். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் தேர்தல் முடிவு அ.தி.மு.க-வுக்கே மீண்டும் சாதகமாகக்கூடும்’ எனக் கணக்குப்போடுகிறார்கள் உடன்பிறப்புகள். அரக்கோணம் தொகுதியைப் பொறுத்தவரை பட்டியலினத்தவரும், வன்னியர்களுமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். விஜய் களத்துக்கு வந்திருப்பதால், மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, பட்டியல் சமூக வாக்குகள் மூன்றாகப் பிளவுப்படும். அன்புமணி தலைமையிலான பா.ம.க கைகொடுப்பது, இந்த முறையும் அ.தி.மு.க-வுக்குப் பிளஸ். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும், பா.ம.க மூலமாகத்தான் வன்னியர் வாக்குகளை அறுவடை செய்தார் சு.ரவி. அப்போது, தி.மு.க கூட்டணியில் களமிறங்கிய வி.சி.க வேட்பாளர் கௌதமசன்னா சுமார் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் சு.ரவியிடம் தோல்வியடைந்தார். இப்போதும் அதே திட்டத்துடன்தான் காய் நகர்த்துகிறார் சு.ரவி என்கின்றனர். அமைச்சர் காந்தி - எம்.பி ஜெகத்ரட்சகன் இந்த நிலையில்தான், `கடந்த முறைப்போல வி.சி.க அல்லது காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதியைத் தாரை வார்த்தால் தி.மு.க கூட்டணிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்படும்’ என தி.மு.க மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.காந்தியும் கணக்குப் போடுகிறார். எம்.பி ஜெகத்ரட்சகனும் தொடர் தோல்வியை விரும்பவில்லை. ஜெகத்ரட்சகனும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைப் பிரசாரக் களத்தில் இறக்கி அந்தச் சமூக வாக்குகளை அறுவடை செய்யலாம் என்கின்றனர் உடன்பிறப்புகள். `ஒருவேளை மறுபடியும் கூட்டணிக்கு தொகுதியைக் கொடுத்துவிட்டால், ஜெகத்ரட்சகன் பிரசாரம் செய்ய வரமாட்டார். சேர்மன் வடிவேலு தனது தீவிர ஆதரவாளர் என்பதால், அவரின் மனைவிக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில் ஜெகத்ரட்சகன் வியூகம் அமைத்து பிரசாரக் களத்துக்கு வருவார். எனவே, காந்தியின் கணக்கும், ஜெகத்ரட்சகனின் வியூகமும் தி.மு.க-வின் வெற்றிக்கு கைகொடுக்கும்’ என்கிறார்கள் அரக்கோணம் தொகுதி உடன்பிறப்புகள். Loading…
23 கூட்டணி கட்சிகள்... திமுக போடும் மெகா பிளான்!
23 கூட்டணி கட்சிகள்... திமுக போடும் மெகா பிளான்!
வெளிப்படையாக பேசப்போகும் விஜய்_ தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு_
வெளிப்படையாக பேசப்போகும் விஜய்_ தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு_
Social media politics உண்மையிலேயே election result-ஐ பாதிக்குமா_ voters-ஐ influence பண்ணுகிறதா_
Social media politics உண்மையிலேயே election result-ஐ பாதிக்குமா_ voters-ஐ influence பண்ணுகிறதா_
பெட்ரோல் விலை உயர்வைப் பற்றிக் கவலையில்லை; ஈரானை வீழ்த்துவதே இலக்கு! - அதிபர் ட்ரம்ப் உறுதி
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் (AAA) தரவுகளின்படி, அமெரிக்காவில் பெட்ரோலின் சராசரி விலை கடந்த வாரத்தில் 27 காசுகள் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கேலன் பெட்ரோல் சுமார் $3.25 (சுமார் ரூ.270) ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 காசுகள் அதிகமாகும். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``பெட்ரோல் நிலையங்களில் விலை உயர்வது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. போர் முடிந்ததும் விலைகள் தானாகவே மிக விரைவாகக் குறைந்துவிடும். பெட்ரோல் விலைகள் ஒன்றும் அந்த அளவிற்கு அதிகமாக உயரவில்லை. ட்ரம்ப் மேலும், பெட்ரோல் விலை சிறிது உயருவதை விட, இந்த ராணுவ மோதலில் நாம் எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானது. விலை உயர்வைக் குறைக்க அமெரிக்கா வசம் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பான மூலோபாய பெட்ரோலிய ரிசர்வ்லிருந்து (Strategic Petroleum Reserve) எண்ணெயை வழங்கும் திட்டம் எதுவுமில்லை. ஈரான் முற்றுகையையும் மீறி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்துத் தொடரும் என்றார். எண்ணெய் விலை உயர்வு குறித்து அதிபர் ட்ரம்ப் கவலைப்படவில்லை என்று கூறினாலும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், தலைமை அதிகாரி சூசி வைல்ஸ், எரிசக்திச் செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் பெரிய எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விலை உயர்வு கட்டுக்கடங்காமல் போனால், அரசு தலையிட்டு விலையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஈரான் போர்; வெள்ளை மாளிகையில் சிறப்பு பிரார்த்தனை செய்த அதிபர் ட்ரம்ப் - புகைப்படங்கள் வைரல்!
இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி!
'உலகச் சந்தைகளில் எண்ணெய் இருப்பு தொடர்ந்து இருக்க வேண்டும்' என்பதற்காக இந்திய ரீஃபைனர்கள் தற்காலிகமாக 30 நாள்களுக்கு ரஷ்யா எண்ணெயை வாங்க அமெரிக்க கருவூலத் துறை அனுமதிக்கிறது'. இது அமெரிக்கக் கருவூல செயலர் ஸ்காட் பெசன்டின் பதிவு. இந்தப் பதிவில், 'அனுமதி' என்கிற ஒற்றைச் சொல்லைக் கடந்து செல்ல முடியவில்லை... அப்படி சென்றுவிடவும் கூடாது. அமெரிக்கா இந்தியாவிற்கு யார்? நல்ல நண்பன்... வர்த்தகக் கூட்டாளி... அவ்வளவு தான். ஸ்காட் பெசன்ட் பதிவு ஆனால், ஸ்காட் பெசன்ட்டின் பதிவு என்னவோ, அமெரிக்காவின் காலனித்துவத்தின் கீழ் இந்தியா இருப்பதுபோல, அதிகாரத் தோரணையுடன் இருக்கிறது. இந்தப் பதிவு வெளியாகி கிட்டத்தட்ட 8 மணிநேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இந்தியாவின் ரியக்ஷனோ வழக்கம்போல, 'மௌனம்' தான். இனியும் இந்தியா வாயைத் திறக்கும் என்கிற நம்பிக்கை இல்லை. இங்கே 'வழக்கம் போல' என்கிற வார்த்தையை உற்றுக் கவனிக்க வேண்டும். காரணம், இந்தியாவின் மௌனம் இது முதன்முறை அல்ல. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல முறை இந்தியாவின் பதில் மௌனமாக மட்டுமே இருந்திருக்கிறது. ட்ரம்ப் பதவியேற்றதும் கொண்டு வந்த அதிரடிகளில் முதன்மையானது, 'அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவது' ஆகும். ட்ரம்பின் செயல் தவறானது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர் அதை எப்படிச் செய்தார் என்பது தான் தவறானது. சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கைவிலங்கிட்டும்... கால் விலங்கிட்டும்... ராணுவ விமானத்தில் அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பினர். ராணுவ விமானம் என்பது போர்க் கைதிகளுக்கு பயன்படுத்தும் ஒன்றாகும். பிழைப்புத் தேடி, பஞ்சம் பிழைக்கச் சென்ற மக்கள் சட்டத்தை ஏமாற்றி... சட்டத்திற்கு புறம்பாக குடியேறியது தவறு தான். ஆனால், அவர்களை போர் கைதிகளுக்கு இணையாக 'அடிப்படை' கண்ணியம் கூட இல்லாமல் வெளியேற்றியது அமெரிக்கா. இந்தக் கண்ணியக் குறைப்பாட்டிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன மெக்சிகோ, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகள். டொனால்டு ட்ரம்ப் கொலம்பியா, வெனிசுலா, மெக்சிகோ... கொலம்பியா மற்றும் வெனிசுலா தங்களது நாட்டிற்குள் அமெரிக்காவின் ராணுவ விமானம் தரையிறங்கவே அனுமதிக்கவில்லை. அவர்கள் தங்களது விமானத்தை அனுப்பி அவரவர் நாட்டு மக்களைக் கண்ணியமாக அழைத்து வந்தனர். மெக்சிகோ அமெரிக்க ராணுவ விமானத்தை நாட்டிற்குள் அனுமதிக்காமல், அமெரிக்காவின் வணிக விமானங்களில் மக்களை அழைத்து வந்த போது ஒத்துக்கொண்டது. இந்த நாடுகள் அவர்களது மக்களையும், அவர்களது மரியாதையையும் எப்படி பாதுகாத்திருக்கின்றனர்? ஆனால், இந்தியா செய்தது என்ன? விளக்கமளித்த இந்தியா 2025-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி ராஜ்ய சபாவில் அமெரிக்காவின் செயலுக்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். என்ன அது? 'ஒரு நாட்டில் சட்டத்திற்குப் புறம்பாக நம் மக்கள் குடியேறியிருக்கிறார்கள் என்று தெரிந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வது நம்முடைய கடமை. அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறையின் கொள்கைப் படி, தங்களது நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய மக்களை அப்படித் தான் வெளியேற்றுவார்கள்' என்று எங்கோ இருக்கும் அமெரிக்காவிற்கு சாதகமாக விளக்கமளித்தார் ஜெய்சங்கர். இந்த விளக்கமும் 'டக்'கென வந்துவிடவில்லை. 'மத்திய அரசு அமெரிக்காவின் செயலுக்கு வாயை திறக்கவில்லை' என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும், கண்டனங்களும் எழுந்த பின் தான், இந்தப் பதில் வந்தது. வெளியேற்றம் அமெரிக்கா குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை கொள்கை என்றாலும், அதற்கு கொலம்பியா, மெக்சிகோ, வெனிசுலா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்... அவர்களது எதிர்ப்பை கேட்டு அமெரிக்கா அடிப்பணிந்தது எப்படி? இதை ஏன் இந்தியா செய்யவில்லை? தொடர்ந்து பல ஆண்டுகளாக, சட்டத்திற்குப் புறம்பாக வெளியேறிய இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்றி கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அது எதுவும் சத்தமில்லாமல், கண்ணியமான முறையில் நடந்தது. ஆனால், திடீரென்று ட்ரம்ப் தனது வெளிச்சத்திற்காக செய்த ஒன்றை கண்டும் காணாமல் இந்தியா கடந்தது. அடுத்தது, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம். 2025-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி இந்தியா பாகிஸ்தானில் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியது. அதன் பிறகு, அது விஸ்வரூபம் எடுத்து... பின் சமாதானம் என மே 10-ம் தேதியே அதற்கொரு என்ட் கார்டு வந்துவிட்டது. 'இந்தச் சமாதானம் பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுகொண்டதால்' என்று இந்தியா கூறியது... இன்று வரை கூறுகிறது. ஆனால், ட்ரம்போ, 'நான் வரியைக் காட்டி பயமுறுத்தினேன்... ஒப்பந்தத்தைக் காட்டி பயமுறுத்தினேன்' என்று இந்த நொடி வரை திரும்பத் திரும்ப கூறி வருகிறார். அதற்கு தான் இந்திய பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்து விட்டாரே என்பது உங்களது மைன்ட் வாய்ஸா? இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் முடிந்த அன்றே, இந்தியா தெரிவிக்கும் முன்பே, 'நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்று பறைசாற்றி விட்டார். Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர் ஆனால், இதை இந்தியாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மூன்று நாள்கள் கழித்து மே 13-ம் தேதி மறுத்தார். இதன் பின், கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, ஜூன் 17-ம் தேதி, ட்ரம்ப் உடனான போன்காலில் மோடி இந்த விஷயத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று, 'இறையாண்மை'. அதற்கே ஒரு பாதிப்பு வரும் போது, இந்தியா உடனே எதிர்வினையாற்றாமல் மூன்று நாள்கள் கழித்து காலம்... நேரம் பார்த்து மறுப்பு தெரிவித்தது! இந்தியாவிற்கு அமெரிக்கா எப்படி நண்பரோ, வர்த்தகக் கூட்டாளியோ... அப்படித்தான் ரஷ்யாவும். சொல்லப்போனால், இந்தியா - அமெரிக்காவின் நட்பு வயதை விட, இந்தியா - ரஷ்யாவின் நட்பிற்கு வயது அதிகம். அப்படியான நண்பரிடம் தான் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கூறியது. இந்தியா உடன் வர்த்தகம் செய்யும் பணத்தை ரஷ்யா உக்ரைன் போருக்குப் பயன்படுத்துகிறது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால், இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா கட்டளையிடுவதெல்லாம் 'டூ...டூ...டூ... மச்'. ஆனால், அதையும் இந்தியா கேட்டது என்பதுதான் ஹைலைட். கடந்த மாதம் இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்காக டிசம்பர் மாதத்தில் இருந்தே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைப் படிப்படியாகக் குறைத்தது இந்தியா. மோடி - புதின் 'வர்த்தக ஒப்பந்தம்' என்பது இரு நாடுகளுக்கு இடையிலானது. ஆனால், இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து 'இதோ பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது... அதோ பேச்சுவார்த்தை முடியப்போகிறது' என ட்ரம்ப் அவ்வப்போது கமென்ட்ரி கொடுத்து வந்தார். இது அடிப்படையில் தவறு. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றாகத்தான் தெரிவிக்க வேண்டும். ஒருவர் மட்டும் முந்திக்கொண்டு சொல்வது முற்றிலும் தவறு. இந்த அடிப்படை நாகரிகமற்ற செயலுக்குக்கூட இந்தியா எதும் சொல்லவில்லை. போனது போகட்டும்... இப்போது இந்த மாதத்திற்கு வருவோம். ஈரான் போர் - உலக நாடுகளை ஏதோ ஒருவிதத்தில் பாதித்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொலை செய்யப்பட்டார். அவரது இறப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது கூட பரவாயில்லை. ஆனால், அவரது இறப்பிற்கு ஐந்து நாள்களுக்குப் பிறகு இந்தியா இரங்கல் தெரிவித்திருக்கிறது. மேலும், கடந்த மாதம் இந்தியா விசாகப்பட்டினத்தில் நடந்த கடற்பயிற்சிக்கு வந்த ஈரானின் போர்க்கப்பல் IRIS தேனா மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலைக் மீட்க இந்தியா உதவியதாக இப்போது இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. என்ன நடக்கும்... ஏது நடக்கும் என்று யோசித்து தான் அறிக்கை வெளியிடுகிறது. அதுவும் மூன்று நாள்கள் கழித்து. IRIS Dena உலக அளவில் இந்தியா வளரும் நாடாக நிலைநிறுத்தி உள்ளது. இந்த நேரத்தில் இத்தனை மௌனங்கள் இந்தியாவை பலவீனமாகக் காட்டாதா... இந்திய பிரதமர் மோடி எங்கே... வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எங்கே... அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இதே நிலை தொடருமா? அமெரிக்காவின் கைப்பாவையாக இந்தியா மாறுகிறதா? இந்தியாவை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டார் மோடி போன்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்தான் என்ன?
ADMK: கட்சிக்கு ரூட் க்ளியர்.. ஆட்சிக்கு? எடப்பாடி பழனிசாமி முன் நிற்கும் சவால் தான் என்ன?
அ.இ.அ.தி.மு.க-வை தொடங்கிய எம்.ஜி.ஆர் மற்றும் தொடர்ந்து வழி நடத்திய ஜெயலலிதா ஆகிய இருவருக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பதவியில் கொஞ்சம் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி. ஜெயலலிதா மறைந்த போது முதலமைச்சர் நாற்காலியிலிருந்த ஒ.பன்னீர்செல்வம், திமுக உறுப்பினராகி விட்டார். ஜெ.க்குப் பிறகு கட்சியைக் கைப்பற்றி விடுவாரோ என பலரும் நினைத்த வி.கே. சசிகலா தனிக்கட்சி தொடங்கி விட்டார். டி.டி.வி தினகரனை பன்னீர்செல்வம், சசிகலா போல் போட்டியாகக் கருதவில்லை பழனிசாமி. இருந்தாலும் அவருமே பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டு விட்டார். பிறகென்ன, கட்சித் தலைமைப் பொறுப்புக்கு ரூட் க்ளியர் ஆகி விட்டது. ஆனால் ஆட்சிக்கு? ஜெ.மறைந்த போது கட்சி ஆட்சி பீடத்தில் இருந்தது. 2016 தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே அவர் இறந்து விட, அடுத்த ஐந்தாண்டுகள் பழனிசாமி முதல்வராக இருந்தார். ஐந்தாண்டுகள் முடிய 2021 தேர்தலில் 60க்கும் அதிகமான இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் சென்றது கட்சி. ஒ பன்னீர் செல்வம் பன்னீர் அண்ட் கோ இந்த இடத்தில் 'ஜெ இல்லாத போதே இவ்வளவு எம்.எல்.ஏ.க்கள் என்றால், ஜெ இருந்திருந்தால் நிச்சயம் மூன்றாவது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருப்பார்' என்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனாலும் பழனிசாமி தன்னை முதல்வராக முன் நிறுத்திய முதல் தேர்தலில் தோல்விதான் கிடைத்தது. இந்த தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பு சசிகலா வெளியேற்றப் பட்டது, தினகரன் எம்.எல்.ஏக்களை இழுத்தது என அதிமுகவில் அரங்கேறிய பல சம்பவங்களுக்கு இந்த தோல்வியில் பங்குண்டு என்கிறார்கள் இ.பி.எஸ்.சின் ஆதரவாளர்கள். பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சி அமைய, 'அவ்வளவுதான், இனி அதிமுக சிதறி விடுமென எதிர்க்கட்சிகளும் அதிமுகவில் பழனிசாமி தலைமைக்குச் சிக்கல் வருமென உள்கட்சியில் சிலரும் உள்ளூர மகிழ்ந்தனர். ஆனால் 'கூடவே இருக்கும் பன்னீர்செல்வம் பின்னால் இருக்கும் மூன்று பேரைத் தவிர வேறு எவரும் எந்தக் கட்சிக்கும் செல்ல மாட்டார்கள்' என மிகச் சரியாக கணித்தார் பழனிசாமி. அவர் நினைத்தது போலவே நடந்து பன்னீருடன் அவர் அணியிலிருந்த ஐயப்பன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூன்று பேர் திமுக பக்கம் போயிருக்கின்றனர். சீனியரான செங்கோட்டையன் கணக்கு தனி. ஏனெனில் அவரையுமே தன் பதவிக்குப் போட்டியாக கருதவில்லை பழனிசாமி. சரி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நாட்களும் முடிந்து 2026 தேர்தலும் வந்து விட்டது. செங்கோட்டையன் இந்த ஐந்தாண்டுமே பன்னீர், சசி, டிடிவி ஆட்களால் வழக்கு, வாய்தா என ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை சந்தித்து வந்த நிலையில் இப்போது எல்லாவற்றுக்கும் ஒரு எண்டு கார்டு வந்திருக்கிறது ஆனால் 'இனிமேல்தான் பழனிசாமிக்கு நிஜமான போராட்டம் இருக்கிறது' என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 'இவ்வளவு நாளும் அவர் உட்கட்சியினருடன் மோதிக் கொண்டிருந்தார். இனிமேல் களத்தில் எதிர்த்து நிற்கும் கட்சிகளுடன் மோத வேண்டும். திமுக 2011 முதல் 2021 வரை பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லை. இந்தக் காலக்கட்டத்தில் நடந்த இடைத் தேர்தலில் கூட அந்தக் கட்சி ஜெயிக்கவில்லை. பழனிசாமி 2021 ல் ஆட்சியை இழந்தார். இப்பொது ஐந்தாண்டு கழித்து தேர்தலைச் சந்திக்கிறார். ஆனால் திமுக ஐ.டி. விங் 'பத்து தோல்வி பழனிசாமி' என கிடைக்கிற கேப்பில் எல்லாம் அவரது இமேஜை டேமேஜ் செய்கிறது. இந்த மாதிரியான பிரசாரங்களூக்கு அவர் தரப்பிலிருந்து ஏனோ சரியான அல்லது தரமான பதிலடி வந்ததாய் தெரியவில்லை. இந்த வேகத்திலிருந்தால் சிரமம்தான்'' என்கிற இவர்கள். பழனிசாமி முன் தற்போது நிற்கும் சவால்களாக சில விஷயங்களைப் பட்டியலிடுகின்றனர். அவை என்னென்ன பார்க்கலாமா? திமுக - காங்கிரஸ் கூட்டணி மிரட்டும் திமுக கூட்டணி! சசிகலா, பன்னீர் இருவரும் விலகி விட்டதால் கட்சியின் உரிமை குறித்த சட்டச் சிக்கல்கள் நீங்கியிருக்கலாம். ஆனால் பொதுச் செயலாளராக கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிற சூழலில் வரும் தேர்தலில் வெற்றி பழனிசாமி முன் நிற்கும் மிகப் பெரிய சவால். தவெக தலைவர் விஜய் இரண்டாவது இடத்துக்கும் போட்டி ! புதிதாக வந்திருக்கும் தவெக ஆரம்பம் முதலே அதிமுகவை பலவீனமான ஒன்றாகவே கருதுகிறது. போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும்தான் என மேடைக்கு மேடை பேசுகிறார் விஜய். அவருடன் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு போகவில்லை என்றாலும் புதிய ஓட்டுகள் அந்தப் பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக பரவலான கருத்து உள்ளது. ஒருவேளை தேர்தல் முடிவு அதிமுகவுக்குச் சாதகமாக இல்லையென்றாலும் 2021 தேர்தல் போல வலுவான எதிர்க்கட்சியாகவாவது இருந்தால் தான் தப்பிக்க முடியும். அந்த இடத்துக்கு தவெக வந்து விட்டால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி விடும். இந்தச் சூழலை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதும் அவர் கையில்தான் இருக்கிறது. மோடி - அமித்ஷா காத்திருக்கும் பாஜக! ஏற்கனவே பாஜக எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பதாக ஒரு கருத்து உலா வருகிறது. அதிமுக ஒன்றுபட இவர்தான் தடையாக இருந்தார் என நினைக்கிறது பாஜக தலைமை. எனவே தேர்தல் ரிசல்ட் சாதகமாக வராவிட்டால் மத்தியில் அதிகாரத்திலிருக்கும அவர்கள் பழனிசாமியை அகற்றி விட்டு வேறொருவரை அந்த இடத்தில் அமர வைக்கும் முயற்சியை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது. சோர்வடையும் தொண்டர்கள்! எல்லாவற்றுக்கும் மேலாக இரட்டை இலை மீண்டும் துளிர்க்காதா எனக் காத்திருக்கும் தொண்டர்கள். ஐந்தாண்டுகள் கட்சி ஆட்சியில் இல்லாத நிலையில் மீண்டும் ஆட்சி அமையாவிட்டால் கட்சியின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்குமே அது பெரிய மனச் சோர்வை உண்டாக்கும். ஏனெனில் கடந்த 35 ஆண்டுகளில் தொடர்ந்து பத்தாண்டுகள் அதிகாரத்தில் இல்லாத ஒரு சூழலை அவர்கள் சந்தித்திராத நிலையில், அப்படியொ சந்தர்ப்பம் உருவானால் அது தலைமையைக் கேள்விக்குள்ளாக்கி கட்சியையும் கலகலத்துப் போகச் செய்து விடலாம். இரட்டை இலை ஆக மொத்தத்தில் பழனிசாமியின் நிலை, ‘போக்கிரி’ படத்தில் பிரகாஷ்ராஜ் பேசுவாரே ஒரு வசனம், அதே மாதிரி் தான் பழனிசாமிக்கும். 2026 தேர்தலில் மூன்று விஷயம் தான் வாய்ப்பு... ஒன்று ஜெயிக்க வேண்டும். ரெண்டு ஜெயிக்க வேண்டும். ஜெயிக்க வேண்டும், அது ஒன்று மட்டும்தான் அவர் முன்னால் நிற்கும் ஒரே சவால்.! முடிவு, மே மாதம் தெரிய வரும்.!
திமுக-வுக்கு நாகூர் ஹனீபா; எம்.ஜி.ஆருக்கு? - அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்! | சுவடுகள் 8
அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்! நினைவுச் சுவடுகள் 08 தேர்தல்கள் என்றாலே சத்தமும் இரைச்சலும்தான். தேர்தலை ஒரு திருவிழாவாக பார்க்கும் தமிழ்நாட்டில், தேர்தல் என்பது ஆட்டமும் பாட்டமும் நிறைந்ததாகத்தான் இருக்கும். இன்றைக்குத்தான் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் எனப் பிரசாரங்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டன. ஆனால், இவையெல்லாம் வருவதற்கு முன்பு, கட்சிப் பாடல்கள்தான் பிரசாரத்துக்கு வெகுவாக கைகொடுத்தன. தெருக்கள், தேநீர்க் கடைகள், பிரசார வாகனங்கள் மற்றும் மின்கம்பங்களில் கட்டப்பட்ட லவுட் ஸ்பீக்கர்கள் வழியாக அரசியல் பாடல்கள் ஒலித்தன. நினைவுச் சுவடுகள் கட்சியின் கொள்கைகளை விளக்கியோ அல்லது தலைவர்களைப் புகழ்ந்தோ பாடப்பட்ட இந்தப் பாடல்கள், அரசியல் கருத்துகளை எளிமையாக மக்களிடம் கொண்டு சென்று உணர்ச்சிகளைத் தூண்டியவை. ஒரு கட்சியின் அடையாளத்தையும், ஒரு தலைவரின் முகத்தையும் பொதுமக்களிடம் பதித்ததில் இந்தப் பாடல்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பல தசாப்தங்களாக, இந்த அரசியல் பாடல்கள் வாக்காளர்கள் அரசியலை எப்படி புரிந்துகொண்டார்கள் என்பதை தீர்மானித்தன. கடினமான அரசியல் கருத்துகளை எளிமையாக்கின. யார் ஹீரோ, யார் எதிரி என்பதையும் தெளிவாக காட்டின. ஜனநாயகம் என்பது வெறும் பேச்சோடு மட்டுமல்லாது பாடல்களாகவும் வெளிப்பட்டன. அரசியலுடன் கைகோத்த பிரசாரப் பாடல்கள் 1940–50களில் திராவிட இயக்கம் பரவலாக வேரூன்றத் தொடங்கிய காலகட்டத்தில் அரசியலுடன் இயல், இசை, நாடகங்களும் கைகோக்கத் தொடங்கிவிட்டன. கல்வியறிவு சம அளவில் இல்லாத சமுதாயத்தில், கலைகள், குறிப்பாக பாடல்கள் ஒரு முக்கிய தகவல் ஊடகமாக மாறின. நாடகக் குழுக்கள், தெருக்கூத்து, வீதி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பாடல்கள் மூலம் சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற கருத்துகள் பரப்பப்பட்டன. அந்தப் பாடல்கள் எளிமையான சொற்களுடன், நேரடியாக மனதைத் தொடும் வகையில் இருந்தன.இதனால், சாதாரண மக்களிடையே அந்தக் கருத்துகள் வலுவாகப் பதிந்தன. அரசியல் கூட்டங்கள் கலாச்சார நிகழ்ச்சிகளாக மாறின. தலைவர்களின் உரைகள் தொடங்குவதற்கு முன், மக்களை உணர்வுப்பூர்வமாகத் தயார்படுத்தும் பாடல்கள் இல்லாமல் எந்த அரசியல் கூட்டமும் நடைபெறாது. நினைவுச் சுவடுகள் 08 தேர்தல் பிரசாரமும் ஒலிபெருக்கி கலாச்சாரமும் 1960–70களில், தேர்தல் பிரசாரங்களில் அரசியல் பாடல்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறின. ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட திறந்த ஜீப்புகள், அதிகாலை முதல் இரவு வரை தெருத்தெருவாகச் சுற்றி, கட்சிப் பாடல்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்தன. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வருவதற்கும் முன்பே, இந்தப் பாடல்களே தேர்தல் வந்துவிட்டது என்பதை மக்களுக்கு உணர்த்தின. ஒவ்வொரு முக்கிய அரசியல் கட்சிக்கும் தனித்தனி இசை அடையாளம் உருவானது. பாடல்களின் தாளம், வரிகள், குரல்கள் போன்றவை அந்தந்தக் கட்சியின் அரசியல் முகத்தைப் பிரதிபலித்தன. சில பாடல்கள் உற்சாகமாக இருந்தன; சில உணர்ச்சியைத் தூண்டும் வகையில் இருந்தன; சில மாற்றத்தை வலியுறுத்தின. பல நேரங்களில், தேர்தல் அறிக்கைகளை விட, தெருவில் ஒலித்த பாடல்களாலேயே மக்கள், கட்சிகளை அடையாளம் கண்டனர். குழந்தைகள் கூட, அது என்ன வகையான பாடல் என்பதைத் தெரியாமலேயே அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டு திரிந்தனர். பெரியவர்கள், தங்களது வேலைகளுக்கு இடையே அதனை மெதுவாக முணுமுணுத்துக்கொண்டு இருந்தனர். அரசியல் எல்லைகளைத் தாண்டி, இத்தகைய பாடல்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறின. கருத்துகளைச் சுமந்து வந்த வரிகள் தமிழ்நாட்டின் அரசியல் பாடல்கள் பெரும்பாலும் கற்பனையான வார்த்தைகளாக இருக்கவில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பேசின. வறுமை, சாதி ஒடுக்குமுறை, விலை உயர்வு, மரியாதை, அதிகாரம் போன்ற விஷயங்கள் அந்தப் பாடல்களில் வெளிப்பட்டன. இவ்வாறான பாடல்களின் வரிகளை எழுதியவர்கள், அரசியல் இயக்கங்களோடு நேரடியாகத் தொடர்புடைய கவிஞர்களாகவும், சில நேரங்களில் அரசியல் தலைவர்களாகவும் இருந்தனர். திராவிட இயக்கத்துடன் தொடர்புடைய பாடல்கள், இலக்கிய நயம் கொண்டவையாக இருந்தாலும், பொதுமக்களுக்கு எளிதாகப் புரியும்படி எழுதப்பட்டன. அவை உணர்ச்சியுடனும், அதே நேரத்தில் அர்த்தம் நிறைந்ததாகவும் இருந்தன. அப்பாடல்கள் அரசியல் கருத்துகளைச் சொன்னாலும், அவை மக்களுக்கு நெருக்கமாகவே இருந்தன. கூடவே, இந்தப் பாடல்கள் வாக்காளர்களுக்கு விழிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்தின, பிரச்னைகளைச் சுட்டிக்காட்டின, கருத்துகளை உருவாக்கின, நாம் அனைவரும் சமமானவர்கள்; நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்ற உணர்வையும் ஏற்படுத்தின. நாகூர் ஹனீபா திராவிட இயக்கப் பாடல்களுக்கு உயிர் கொடுத்த நாகூர் ஹனீபா திராவிட இயக்கத்தின் அரசியல் பாடல்களுக்கு தனித்த அடையாளம் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசை முரசு என அழைக்கப்பட்ட நாகூர் ஹனீபா. இறைவனிடம் கையேந்துங்கள்... என்பது போன்ற இஸ்லாமிய பக்திப் பாடல்களால் பிரபலமான இவர், திராவிட இயக்கக் கொள்கை மீது தீவிரப் பற்றுக்கொண்டவராக திகழ்ந்தார். திராவிட இயக்கத்தின் கருத்துகளைப் பாடல்களாக மக்களிடம் கொண்டு சென்றார். குறிப்பாக, பாரதிதாசனின் 'சங்கே முழங்கு’ பாடலை, போராட்ட மேடைகளில் பாடுவார். நாகூர் ஹனீபாவின் பாடல்களுக்கு தந்தை பெரியார் தீவிர ரசிகர். அவரது பாடலைக் கேட்டுப் பிடித்துபோன, பெரியார், ஹனிபாவுக்கு ஒலிபெருக்கியே தேவை இல்லை’’ என்று ரொக்கப் பரிசெல்லாம் கொடுத்துப் பாராட்டி உள்ளார். பேரறிவாளர் அவர் பெரியார் என்னும் ஈ.வெ.ரா. தூங்கிக்கிடந்த உன்னைத் தூக்கித் துடைத்தணைத்து தாங்கித் தரைமேல் இட்டார். தமிழர் தாத்தாவாம் ஈ.வெ.ரா-வே! என்று நாகூர் ஹனிபா பாடிய பாடல்தான் பெரியார் பற்றி முதன்முதலில் இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்ட பாடல். அதுபோல அண்ணாவின் புகழைப் பட்டிதொட்டியெங்கும் பாடல் வழியாக ஒலிக்கச் செய்தவரும் நாகூர் ஹனிபாதான். நினைவுச் சுவடுகள் 08 திமுகவினரின் உணர்வுகளைத் தட்டியெழுப்பிய பாடல்கள் இப்படி சுயமரியாதை இயக்கக் கொள்கைகளால் வார்க்கப்பட்ட ஹனிபா, திமுக தொடங்கப்பட்டபோது, அக்கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டார். 1955-ஆம் ஆண்டு, 'நம் நாடு' இதழில் அழைக்கின்றார் அண்ணா... என்கிற பாடல் பிரசுரமாகியிருந்தது. அந்தப் பாடலுக்கு நாகூர் ஹனிபா இசையமைத்துப் பாடினார். அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் தீயாய்ப் பரவியது. அந்த ஆண்டில் அதிகம் விற்பனையான இசைத்தட்டு என்ற பெருமையையும் பெற்றது. திமுகவின் முதல் மாநில மாநாடு தொடங்கி, பல மாவட்ட மாநாடுகள், மாநில மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் நாகூர் ஹனீபாவின் இன்னிசை நிகழ்ச்சி கட்டாயம் இடம் பெறும். அவருடைய இன்னிசைக்காகவே தனிக்கூட்டம் வரும் அளவுக்கு முத்திரை பதித்தார். அப்படி, தனது இசையால் தமிழர்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி ஈர்த்த ஹனீபாவுக்கு, 1957-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாகை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் அண்ணா. அப்போது நாகூர் ஹனீபா பாடிய பாடல்தான் ஓடி வருகிறான், உதயசூரியன் பாடல். திமுக தொண்டனின் உணர்வுகளைத் தட்டியெழுப்ப, இன்றுவரை அந்த ஒற்றைப் பாடல்தான் அக்கட்சி மேடைகளில் திமுக-வின் இதயகீதமாக ஒலிக்கிறது. 1961-ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி, தமிழ் தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தார். கண்ணதாசனும் திமுகவில் இருந்து விலகினார். இருவரையும் விமர்சிக்கும் வகையில், நாகை சலீம் என்கிற திமுக கவிஞர் எழுதி, நாகூர் ஹனீபா பாடிய வளர்த்த கடா, மார்பில் பாய்ந்ததடா என்ற அந்தப் பாடல், திமுகவுக்கு எக்காலமும் பொருந்தும் பாடலானது. 70, 90 களில் திமுக-வில் பிளவுகள் ஏற்பட்டபோது (எம்.ஜி.ஆர் மற்றும் வைகோ), திமுக தொண்டர்களுக்கான ஆயுதமாக இந்தப் பாடல்கள்தான் ஒலித்தன. திமுகவின் பிரசார பாடல்களில் நாகூர் ஹனீபாவின் பங்கு, பெரும்பாலும் கருணாநிதி காலத்தில்தான் அதிகமாக வெளிப்பட்டது. கருணாநிதி அரசியலில் முழுமையாக முன்னணிக்கு வந்த பிறகு, திமுகவின் கருத்துகளும் போராட்ட மொழியும் பாடல்களில் மேலும் வீரியம் பெற்றது. அந்தப் பாடல்களுக்கு நாகூர் ஹனீபாவின் குரல் உயிர் கொடுத்தது. நினைவுச் சுவடுகள் 08 அரசியல் போராட்டங்களுக்காக கருணாநிதி சிறையில் அடைக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பாடும் “பாளையங்கோட்டை சிறையினிலே... பாம்புகள் பல்லிகள் மத்தியிலே” என்ற பாடலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கல்லக்குடியில் கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து நடத்திய போராட்டத்தைக் குறிப்பிடும், கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே... போன்ற பாடல்கள், திமுக அரசியலின் உணர்ச்சி மொழியாக மக்களிடையே பரவின. இவை வெறும் தேர்தல் பிரசார பாடல்களாக அல்லாமல், போராட்டம், சிறை, ஒடுக்குமுறை, எதிர்ப்பு ஆகிய அனுபவங்களைப் பேசுபவையாக இருந்ததால், நாகூர் ஹனீபாவின் குரல், திமுகவுக்கான குறிப்பிட்ட ஒரு அரசியல் காலகட்டத்தை நினைவூட்டும் ஒலியாக இன்று வரை நினைவில் நிற்கிறது. அதிமுகவுக்கு கைகொடுத்த எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடல்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நாகூர் ஹனீபாவின் குரல் அரசியல் அடையாளமாக இருந்ததுபோல், அதிமுகவுக்கு எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களின் பாடல்களே அரசியல் பிரசார ஆயுதங்களாக மாறின. திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே, எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் இடம்பெற்ற கதாநாயகன் புகழ் பாடல்கள் எல்லாமே, அவருக்கென்றே கச்சிதமாக பொருந்திப்போகும் அளவுக்கு அமைந்திருந்தன. உதாரணமாக, 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்..., 'இதயக்கனி' படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற, 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இடம்பெற்ற அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும் பாடலில் வரும் கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை போன்ற வரிகளெல்லாம் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்டதுபோல் அமைந்து, அவர் அதிமுகவைத் தொடங்கிய பின்னர் அக்கட்சி மேடைகளிலெல்லாம் இதுபோன்ற பாடல்கள்தான் ஒலித்தன. அதிலும் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்ற நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்... பாடல், ஒவ்வொரு அதிமுக பொதுக்கூட்ட மேடைகளிலும், மாநாட்டுக் கூட்டங்களிலும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக கட்டாயம் ஒலிக்கும். சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் மயிர்க்கால்கள் சிலிர்த்துக்கொள்ளும், நாடி நரம்புகள் புடைக்கும். அந்த அளவுக்கு உணர்ச்சிகரமான பாடல் இது. நினைவுச் சுவடுகள் 08 தேர்தல் காலங்களில், அதிமுக பிரசார வாகனங்களில் புதிய அரசியல் பாடல்களைவிட, இத்தகைய திரைப்படப் பாடல்களே அதிகம் ஒலித்தன. மக்கள் ஏற்கனவே அறிந்த குரல், தெரிந்த வரிகள் என்பதால், அந்தப் பாடல்களுக்கு தனி அரசியல் விளக்கம் தருவதற்கான அவசியம் இல்லாமல் போனது. எம்.ஜி.ஆர் குறித்து திரையில் உருவான ‘மக்கள் நாயகன்’ பிம்பத்தை அப்படியே இந்தப் பாடல்கள் அதிமுகவினரிடமும் பொதுமக்களிடமும் கடத்தியதால், அவை அதிமுகவுக்கு ஓட்டுகளைப் பெற்றுத்தந்தன. இதன் மூலம், அதிமுகவுக்காக எழுதப்பட்ட பாடல்களைவிட, எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்களின் உணர்ச்சியே அதன் பிரசார மொழியாகவும், ஒரு அரசியல் இயக்கத்தின் அடையாள ஒலியாகவும் மாறின. எம்.ஜி.ஆருக்குப் பின்னர், ஜெயலலிதா தலைமை தொடங்கி, இன்றைய எடப்பாடி பழனிசாமி தலைமை வரை, அதிமுகவுக்கான கொள்கை பிரசார பாடல்களாக அதே பழைய எம்.ஜி.ஆர் படப்பாடல்களே இன்றைய அதிமுக மேடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இடதுசாரிகளின் நாட்டுப்புறப் பாடல்கள் அரசியல் பாடல்கள் திமுக மற்றும் அதிமுக ஆகிய பெரிய திராவிடக் கட்சிகளுக்குள் மட்டும் சுருங்கிவிடவில்லை. இடதுசாரிக் கட்சிகள், தலித் இயக்கங்கள், பிராந்திய அரசியல் குழுக்கள் ஆகியவையும் நாட்டுப்புற இசை வடிவங்களை தங்களின் அரசியல் மொழியாகப் பயன்படுத்தின. தெருப்பாடல்கள், பறை இசை, கிராமிய மேடை நிகழ்ச்சிகள் வழியாக அரசியல் செய்திகள் நேரடியாக கிராமங்களுக்குள் சென்றன. இந்தப் பாடல்கள் பெரும்பாலும் உள்ளூர் பிரச்னைகளைப் பேசின. நில உரிமை, தொழிலாளர் சுரண்டல், சாதி அடக்குமுறை போன்ற விஷயங்கள் நேரடியாகவும் உருக்கமாகவும் சொல்லப்பட்டன. பெரிய ஊடகங்களில் இடம் கிடைக்காவிட்டாலும், அடித்தள மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதில் இந்தப் பாடல்கள் முக்கியப் பங்கு வகித்தன. தனித்துவ கட்சிப் பாடல்கள் இல்லாத காங்கிரஸ் காங்கிரஸ் கட்சிக்கும் அரசியல் பாடல்கள் இருந்தன என்றாலும், திராவிடக் கட்சிகளைப் போல தனித்துவமான “கட்சிப் பாடல் கலாச்சாரம்” அதற்கு உருவாகவில்லை. சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதன் பின்னரும், காங்கிரஸ் இயக்கத்தில் தேசிய உணர்வு கொண்ட பாடல்கள் முக்கிய பங்காற்றின. “வந்தே மாதரம்”, “ஜன கண மன”, “தேச பக்தி கீதங்கள்” போன்ற பாடல்கள், கூட்டங்களிலும் பேரணிகளிலும் பாடப்பட்டன. தமிழ்ச் சூழலில், தேசம், சுதந்திரம், ஒற்றுமை, காந்தி, நேரு ஆகியோரின் பெயர்களை மையமாகக் கொண்ட பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால்,இவை திரைப்படப் பாடல்களாகவோ,தினசரி தேர்தல் பிரசாரத்தில் ஒலிக்கும் கட்சிப் பாடல்களாகவோ மாறவில்லை. அதனால்தான், தமிழகத்தில் அரசியல் பாடல் என்ற அடையாளம் காங்கிரசைவிட, திராவிட இயக்கங்களுடனே அதிகமாக ஒட்டிக்கொண்டது. தேர்தல் வரலாற்றை நினைவூட்டும் பாடல்கள் இன்றும் கூட, அரசியல் நினைவுக்குறிப்புகள், பேட்டிகள், தேர்தல் பின்னோட்டங்களில் அரசியல் பாடல்கள் குறித்த குறிப்புகள் இடம் பெறுகின்றன. ஒரு பாடல் வரி அல்லது ஒரு இசை ஒலி கேட்டாலே, குறிப்பிட்ட ஒரு தேர்தல், ஒரு தலைவர், அல்லது வாழ்க்கையின் ஒரு காலகட்டம் நினைவுக்கு வந்து நிற்கும். இந்தப் பாடல்கள் வெறும் பிரசார கருவிகளாக மட்டுமல்லாது, ஒவ்வொரு அரசியல் காலகட்டத்தையும் உணர்ச்சியுடன் பதிவு செய்த நினைவுக் குறியீடுகளாக, தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. (தொடரும்)
எடப்பாடியில் கெத்து காட்டும் EPS.., மேட்டுரில் வீரப்பன் மகள்! | TN Elections 360 Updates | Vikatan
கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' - காங்கிரஸ் கேள்வி
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்கா நிர்பந்தித்ததின் அடிப்படையில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்தது. இந்த நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கியப் போர் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானின் தாக்குதலால் சவுதி அரம்கோவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையமும், ஈராக்கின் ருமைலா எண்ணெய் வயல்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போரின் எதிர்வினையாக வர்த்தகத்தின் முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியிருக்கிறது. மோடி - புதின் அதனால் அங்கு கச்சா எண்ணெய் கொண்டுவரும் இந்தியக் கப்பல்கள் சிக்கியிருக்கின்றன. எனவே, இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய எரிசக்தி சந்தைக்கு நிம்மதியளிக்கும் வகையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC), மார்ச் 5, 2026 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா வாங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 3, 2026 வரை இந்தச் சலுகை நடைமுறையில் இருக்கும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மோடி - ட்ரம்ப் இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் விவாதமாகியிருக்கிருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ட்ரம்பின் புதிய விளையாட்டு இது... தன் டெல்லி நண்பரிடம் புதினிடமிருந்து எண்ணெய் பெறலாம் என அனுமதி அளித்திருக்கிறார். இந்த அமெரிக்க மிரட்டல் இன்னும் எவ்வளவு காலம் தொடரும்? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் மத்திய அரசும் விவசாயம், இந்தியர்களின் தரவுகள், ஜவுளித் துறை என அமெரிக்க ஒப்பந்தம் என இந்தியாவை விற்றுவிட்டீர்கள் எனக் குறிபிட்டிருந்தார். மதுரை எம்.பி.சு வெகங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு. நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது. தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு. என விமர்சித்திருக்கிறார். Tax War: ரஷ்யாவின் 'வீட்டோ' முதல் ட்ரம்ப்பின் 'சந்தை' வரை... விடையின்றி நிற்கும் கேள்விகள்?!
ஓபிஎஸ்: `ஆதரவாளர்கள் கொடுத்த ட்விஸ்ட்!' - தேனியை விட்டுவிட்டு மதுரையில் இணைப்பு விழா! பின்னணி என்ன?
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதிமுகவின் விசுவாசி, ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவர், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் நேர் எதிரியான திமுகவில் ஐக்கியமானது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக மதுரையில் உள்ள திருமங்கலத்தில் வரும் 7-ஆம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன் ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் விழாவையும் நடத்த உள்ளார். இந்நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவருடைய ஆதரவாளர்கள் பலரும் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கடமலை தெற்கு ஒன்றியத்தில் உள்ள மண்ணூத்து, சென்றாயபுரம், தேவேந்திரபுரம், கோம்பைத்தொழு, முத்துலாபுரம், வலம்புரி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த ஓ,பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். மதுரையில் இணைப்பு விழா நடைபெறும் நிலையில் ஆதரவாளர்கள் கூட்டாக அதிமுகவில் சேரத் தொடங்கியுள்ளது ஓ.பி.எஸ் தரப்பில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ இணைப்பு விழாவிற்கான வேலைகளில் மும்மரம் காட்டி வருகிறார். காரணம் தான் திமுகவில் இணைந்துள்ளது குறித்து தன்னுடைய ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய சொந்த மாவட்டத்தில் இணைப்பு விழாவை நடத்தாமல் மதுரையில் நடத்துவதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து நம்மிடயே பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் சிலர், “திரும்பவும் அதிமுகவுடன் இணையும் வாய்ப்பு அமையும் என்று தான் காத்திருந்தோம். ஆனால் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கவில்லை. கட்சியில் சேர்ந்ததோடு ஒவ்வொரு அமைச்சரையும் இவரே நேரில் சென்று சந்திக்கிறார். அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரை அவர்கள் தானே வந்து சந்திக்க வேண்டும். இது அவரோடு சேர்ந்து எங்களையும் மரியாதை குறைவாக நடத்துவது போல உள்ளது, மரியாதை இல்லாமல் இருக்க முடியாது என அதிமுகவில் சேர்ந்து விட்டோம். மதுரையில் நடைபெறும் இணைப்பு விழா பூமி பூஜை நாங்கள் அதிமுகவில் சேர்வதை முன் கூட்டியே தெரிந்து கொண்டே மதுரையில் கூட்டத்தை நடத்துகிறார். ஏனெனில் தற்போது அவருடைய ஆதரவாளர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். இதனால் தன்னுடைய சொந்த மாவட்டமான தேனியில் இணைப்பு விழா நடத்தினால் கூட்டத்தை கூட்ட முடியாது என மதுரைக்கு மாற்றியிருக்கிறார். அங்கு இணைப்பு விழாவை நடத்தினால் அமைச்சர்கள் மூர்த்தி, பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன், மற்றும் கோ.தளபதி ஆகியோரே கூட்டத்தை கூட்டி விடுவார்கள் இதனால் தனக்கு பிரச்சனை வராது என நினைத்தே மதுரையில் இணைப்பு விழாவை நடத்துகிறார்” என்றனர். Loading…
`அடுத்து கியூபாதான்' - ஈரான் போரை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என கூறும் டொனால்டு ட்ரம்ப்
ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் 5 வாரங்கள் வரை போர் தொடரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்காவிடம் இருக்கும் ஆயுதங்களின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது. போர் எப்போது முடியும் என்பது குறித்து டொனால்டு ட்ரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. ஈரானை முடிக்க வேண்டும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. இது தவிர ஈரானை வழிநடத்துவதற்கு பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறினார். தாக்குதலுக்குள்ளான அமெரிக்க ரேடார் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவது குறித்தும் அமெரிக்கா பயப்படுகிறதா என நிருபர்கள் கேட்டதற்கு, அவர்கள் எப்போதும் அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எப்போதும் அதைப் பற்றி சிந்திக்கிறோம். நாங்கள் அதற்காகத் திட்டமிடுகிறோம். ஆனால் நாங்கள் சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். நான் சொன்னது போல், சிலர் இறந்துவிடுவார்கள். போருக்குச் செல்லும்போது, சிலர் இறக்கத்தான் செய்வார்கள். தாக்குதல்களுக்கு மத்தியில் டெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து அமெரிக்காவை அணுகுகிறது. ஆனால் அவர்கள் கோரிக்கை தாமதமாக வந்தது. அமெரிக்கா இப்போது அவர்கள் செய்வதை விட அதிகமாக போராட விரும்புகிறது. அமெரிக்க ராணுவம், இஸ்ரேல் படையுடன் இணைந்து ஈரானின் ஏவுகனை மற்றும் ட்ரோன்களை அழிக்க எந்நேரமும் பணியாற்றி வருகிறது. முதலில் ஈரானை முடிக்க விரும்புகிறோம். அதனை முடித்துவிட்டு கியூபா மீது கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்தார். கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை காரணமாக அந்நாட்டிற்குள் எரிபொருள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மேற்கு ஆசியாவில், குறிப்பாக ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அமெரிக்கா வழங்கிய ஏவுகணை பாதுகாப்பு நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட ரேடார் அமைப்புகள், ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ரேடார்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இது பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக-விலிருந்து மேலும் ஒரு புது கட்சி! - பெங்களூரு புகழேந்தியின் புரட்சி அதிமுகவின் நோக்கம் என்ன?
பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலாவைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து மேலும் ஒரு புதிய கட்சியை தொடங்கியுள்ளார் வழக்கறிஞர் வா.புகழேந்தி. புரட்சி அதிமுக திமுக-விலிருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவைத் தொடங்கி ஆட்சியை பிடித்தது வரலாறு. அதன்பின் அக்கட்சி நிர்வாகிகள் கருத்து வேறுபாட்டால் அவ்வப்போது புதிய கட்சிகளை தொடஙகுவது வழக்கமானதாக இருந்தாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் டிடிவி தினகரன், திவாகரன், பாஸ்கரன், ஜெ.தீபா என ஒவ்வொருவரும் புதிய கட்சியினைத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலாவும் புதிய கட்சிகளை தொடங்கிய நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துவிட, அவர் உருவாக்கிய அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழுவில் சில காலம் பயணித்து, அதிமுகவின் கர்நாடக மாநிலச் செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்த வழக்கறிஞர் வா.புகழேந்தி 'புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். புகழேந்தி கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கவனித்து வந்த புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா அணியில் இருந்தார். பின்பு தினகரனின் அமமுகவில் பயணித்தார். அங்கிருந்து முரண்பட்டு எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றார். அதன் பின்பு ஓபிஎஸ் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழுவை தொடங்கியபோது அதில் பயணித்தவர், அதிமுக கட்சிக்கொடி, இரட்டை இலைச்சின்னத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் புதுக்கட்சியை தொடஙகியுள்ளார். சமீபத்தில் மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பெரியார் படம் அகற்றப்பட்டதை கடுமையாக விமர்சித்த புகழேந்தி, ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததையும் விமர்சித்தார். அதனால், தற்போது கட்சி தொடங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக கூட்டணியை எதிர்த்து தவெக-வுக்கு ஆதரவளிப்பார் என்ற சொல்லப்படுகிறது.
யார் இந்த Christopher Tilak? - காங்கிரஸ் ராஜ்ய சபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் பின்னணி
Iran War: US Israel-ஐ கண்டிக்க மறுக்கும் Modi - Indiaவை நெருங்கியதா போர்? IRIS Dena Warship
அதிமுக - பாஜக சீட்டு இழுபறி.. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நடப்பது என்ன? | Vikatan

32 C