`அன்று கருணாநிதி ஒழிக; இன்று ஸ்டாலின் வாழ்க’ - கட்சித் தாவிய அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர்
இ ருக்கிற இடம் தெரியாதபடி ஒரு குழந்தை இருந்தால், `சமத்து’ என்பார்கள். அதுபோல, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் `இப்படியொரு மந்திரி இருந்தாரா?’ என்பதே தமிழகத்தில் பலருக்குத் தெரியாது. அப்படியிருந்தும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ஐந்து வருடங்களை அசால்ட்டாகக் கடந்தவர்தான் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்த நிலோஃபர். பக்கத்து தொகுதியான ஜோலார்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணியுடன் நீடித்த மோதல் காரணமாகவே, 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் சீட் எதிர்பார்த்த நிலோஃபருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபத்தில், ``தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் கே.சி.வீரமணி `மாமா... மச்சான்’ உறவில் பழகுகிறார்’’ என்று பொதுவெளியில் பேட்டி கொடுத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பினார் நிலோஃபர். இதையடுத்து, 2021 மே 21-ம் தேதி அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிலோஃபரை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. நிலோஃபர் இதைத்தொடர்ந்து, லைம்லைட்டில் இல்லாமலிருந்துவந்த நிலோஃபர் 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்தான் தலைகாட்டினார். அப்போது, தி.மு.க சார்பாக மீண்டும் களமிறங்கிய கதிர் ஆனந்துக்காக வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குள் வேலை செய்யவும் ஆர்வம் காட்டினார் நிலோஃபர். ஆனால், வாணியம்பாடி தி.மு.க நகரச் செயலாளர் வி.எஸ்.சாரதிகுமாருடன் ஏற்கெனவே நிலோஃபருக்கு இருந்த முட்டல், மோதலாலும்... பொதுவெளியில் துரைமுருகனை விமர்சித்திருந்ததாலும் நிலோஃபரைத் தி.மு.க-வுக்குள் சேர்த்துக்கொள்ள தி.மு.க-வில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால், அ.தி.மு.க-வின் அனுதாபியாக வலம் வரத் தொடங்கினார் நிலோஃபர். ஆனாலும், அ.தி.மு.க நிகழ்ச்சிகளில் அவரை அனுமதிக்கவில்லை கே.சி.வீரமணி. ரீ-என்ட்ரி கொடுத்த நிலோஃபர்... வீராப்பு காட்டிய வீரமணி - அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கைகோத்த பின்னணி இந்த நிலையில்தான் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கிய சூழலில் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் நிலோஃபர். முதுமை காரணமாக, தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனால் முன்புபோல ஆக்டிவ்வாகச் செயல்பட முடியவில்லை. இதனால், நிலோஃபரைச் சேர்த்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற முடிவு தி.மு.க வடக்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலுவிடம் கொடுக்கப்பட்டது. அவர் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட துரைமுருகன் தரப்பு ஆதரவாளர்களை அழைத்து சமாதானம் செய்த பிறகே நேற்று ஜோலார்பேட்டை மண்டலவாடியில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் நிலோஃபர். நிலோஃபர் இந்த நிலையில், தி.மு.க-வில் இணைந்த நிலோஃபர் மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள் அ.தி.மு.க-வினர். அதேபோல, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போனபோது நிலோஃபர் வாணியம்பாடி வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி, பழக்கடைகளைச் சூறையாடுவதுபோல ஒரு வீடியோ வைரல் ஆனது. அதைப் பகிர்ந்து, ``அன்று `கருணாநிதி ஒழிக..’ என்று முழக்கமிடும் நிலோஃபர், இன்று `ஸ்டாலின் வாழ்க..’ என்று முழங்குகிறார். அ.தி.மு.க-வில், வாணியம்பாடி நகர்மன்றத் தலைவராக பத்து ஆண்டுகள், அதைத்தொடர்ந்து அமைச்சராக ஐந்து ஆண்டுகள் என அதிகாரமிக்க பதவிகளை அனுபவித்துவிட்டு, இன்று தி.மு.க-வுக்குச் சென்றிருக்கும் நிலோஃபர் ஒரு ஊர்க்குருவி. உயரப் பறந்தாலும், அவர் பருந்தாக முடியாது’’ எனவும் காட்டமாக விமர்சிக்கிறார்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வினர். ‘‘துக்கடா பசங்க போட்ட சாலை இப்படித்தான் இருக்கும்!’’ - ஒப்பந்ததாரரைப் பிடிபிடித்த நிலோஃபர் கபில்
திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை - பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன?
தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கூட்டணி குறித்து பரபரப்பான கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாதது எனவும் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூட்டணி தொடர்பாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகவும் பேசியிருந்தார். திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, இனி யாரும் கூட்டணி ஆட்சி குறித்து பேசமாட்டார்கள். உரிமைத் தொகை ரூ.5000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியும். அதனால், இனி யாரும் அது பற்றி பேசமாட்டார்கள். எங்களுடைய தலைவர் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். காங்கிரஸில் இருந்து ராகுல் காந்தி, கார்கே, செல்வப் பெருந்தகை கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம் எனப் பேட்டியளித்திருந்தார். மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது ஆனால், அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி… https://t.co/Ag5F49gE4z pic.twitter.com/e8wYKzEoDL — Praveen Chakravarty (@pravchak) February 15, 2026 இந்தப் பேட்டியை ரீட்வீட் செய்து காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் பிரவீன் சக்ரவர்த்தி, மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூட நம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வியடைந்தன எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருகிறார். தொகுதி பங்கீடு: மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் - கொதிக்கும் மாணிக்கம் தாகூர்
திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை - பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன?
தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கூட்டணி குறித்து பரபரப்பான கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாதது எனவும் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூட்டணி தொடர்பாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகவும் பேசியிருந்தார். திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, இனி யாரும் கூட்டணி ஆட்சி குறித்து பேசமாட்டார்கள். உரிமைத் தொகை ரூ.5000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியும். அதனால், இனி யாரும் அது பற்றி பேசமாட்டார்கள். எங்களுடைய தலைவர் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். காங்கிரஸில் இருந்து ராகுல் காந்தி, கார்கே, செல்வப் பெருந்தகை கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம் எனப் பேட்டியளித்திருந்தார். மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது ஆனால், அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி… https://t.co/Ag5F49gE4z pic.twitter.com/e8wYKzEoDL — Praveen Chakravarty (@pravchak) February 15, 2026 இந்தப் பேட்டியை ரீட்வீட் செய்து காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் பிரவீன் சக்ரவர்த்தி, மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூட நம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வியடைந்தன எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருகிறார். தொகுதி பங்கீடு: மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் - கொதிக்கும் மாணிக்கம் தாகூர்
தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு விவகாரம்: இப்ப என்ன அவசரம்? - மூத்த தலைவர் புஜ்பால் கேள்வி
மகாராஷ்டிராவில் சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சி 2023 ஆம் ஆண்டு இரண்டாக உடைந்தது. சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களுடன் சென்று ஒட்டுமொத்த கட்சியையும் தன்வசப்படுத்திக் கொண்டார். ஆனால் தற்போது அஜித்பவார் விமான விபத்தில் காலமாகிவிட்டார். அவர் உயிரோடு இருந்தபோது மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேசியவாத காங்கிரஸின் இரண்டு பிரிவுகளும் புனே மாவட்டத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதோடு தேர்தலுக்குப் பிறகு இரண்டு அணிகளை இணைக்க அஜித்பவார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அஜித்பவார் பிப்ரவரி 12ம் தேதி இரு அணிகளையும் இணைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது அஜித்பவார் இல்லாத காரணத்தால் அந்த இணைப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை. அதோடு அஜித்பவார் மரணத்திற்குப் பிறகு அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார். சுனேத்ரா பவார் இப்போது இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அஜித்பவார் கட்சியில் சில மூத்த தலைவர்கள் இரு அணிகளின் இணைப்புக்குச் சாதகமாக இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் அஜித்பவார் மனைவியை கட்சியின் தேசியத் தலைவராக மாற்ற அவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பால் அளித்த பேட்டியில், ''இப்போது சுனேத்ரா பவாரை கட்சியின் தேசியத் தலைவராக்குவதுதான் கட்சியின் முக்கிய திட்டம். சுனேத்ரா துணை முதல்வராகப் பதவியேற்கும்போதே கேள்வி எழுப்பினார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைவதில் என்ன அவசரம்? அது இன்றோ நாளையோ அல்லது மூன்று மாதம் கழித்தோ நடக்கலாம். எதற்காக அதற்கு நிர்ப்பந்தம் கொடுக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை இப்போது இரு அணிகளும் இணைவது தொடர்பான திட்டம் இல்லை. இப்போதுதான் சுனேத்ரா பவார் துணை முதல்வராகி இருக்கிறார். அவர் விரைவில் கட்சித் தலைவராக மாறுவார். இது 100 சதவீதம் நடக்கும்'' என்று தெரிவித்தார். சுனேத்ரா பவாருக்கு அரசியலில் அனுபவம் இல்லாத காரணத்தால் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் உட்பட சிலர் கட்சியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அஜித்பவார் இருந்தபோது இரு அணிகளும் இணைய அஜித்பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக சரத்பவாரும் குறிப்பிட்டு இருந்தார். மகாராஷ்டிரா: அஜித் பவார் மரணம், தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பைத் தடுக்க பாஜக தூதர் ஆனாரா அதானி?!
”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி.செழியன், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு உதயநிதியை வரவேற்கும் விதமாக சாலையின் ஒரு பகுதியை இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாழை மரங்கள் மற்றும் கரும்பால் அலங்காரம் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தும் முடியாமலும் வாழைத்தார் மற்றும் கரும்பை பலர் எடுத்துச் சென்றனர். இதில் உதயநிதி பேசியதாவது, ''பட்டுக்கோட்டை மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட ஊர். மிக வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாகத் திகழ்கிறது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவில் உதயநிதி ஆனால், இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் ஒரு பேருந்து நிலையம் இல்லை. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இந்நகரின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம்தான் இந்தப் பேருந்து நிலையம். இந்நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி, இந்தப் பேருந்து நிலையம் தாராளமான இட வசதியோடு, அதிநவீனமான கட்டமைப்பு வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வரைப் பொறுத்தவரைக்கும், எல்லா ஊருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் அனைத்து ஊர்களிலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000 தஞ்சாவூர் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக 30 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். 60 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது. 32,000 மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். 35,000 கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்லாத் திட்டங்களையும் விட முக்கியமான ஒரு திட்டம் உள்ளது, அதுதான் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் இன்றைக்கு இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப் பலர் திட்டமிட்டனர், இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் முதல்வர் தகர்த்தெறிந்து, இன்றைக்கு ரூ.5,000 மகளிருக்குக் கொடுத்துள்ளார். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் ரூ.2,000 மாதந்தோறும் வழங்கப்படும் என முதல் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் அறிவித்துள்ளார். இப்படி மக்கள் நலத் திட்டங்களாக இருந்தாலும் சரி, பேருந்து நிலையம் போன்ற உட்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும் சரி, தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. Budget 2025-26: மகளிர் உரிமைத் தொகை டு பெண்கள் விடுதி வரை! - மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்? இந்த மாதிரியான வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும், தமிழ்நாடு மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர வேண்டும்'' என்றார். முன்னதாக திமுக பிரமுகர் பழஞ்சூர் செல்வம் இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியது, ''தமிழ்நாடு இந்தியாவிலேயே 11.19% வளர்ச்சியோடு இன்றைக்கு முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அரசு எவ்வளவோ சதித் திட்டங்களைத் தீட்டுகிறது. நிதி உரிமையைப் பறிக்கின்றார்கள். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம்கூட கிடையாது. ஆனால் இந்தப் பட்ஜெட்டை அதிமுகவினர் வரவேற்கின்றனர். உதயநிதி எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு இந்தியாவிலேயே பாஜகவுடைய 'முரட்டு அடிமை'. ஜாடிக்கு ஏத்த மூடின்னு சொல்லுவாங்க, இன்றைக்கு மோடிக்கு ஏத்த மூடியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். இனிமேல் 10 தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் என்னதான் பாடுபட்டாலும் தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நம்பிக்கையைப் பெற முடியாது. எனவே, மீண்டும் அமையப் போறது திமுக அரசுதான்'' என்றார். மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000: ஆன்லைன் மோசடி; போனில் விவரங்களைப் பகிர வேண்டாம்! பெண்களே உஷார்..!
”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி.செழியன், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு உதயநிதியை வரவேற்கும் விதமாக சாலையின் ஒரு பகுதியை இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாழை மரங்கள் மற்றும் கரும்பால் அலங்காரம் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தும் முடியாமலும் வாழைத்தார் மற்றும் கரும்பை பலர் எடுத்துச் சென்றனர். இதில் உதயநிதி பேசியதாவது, ''பட்டுக்கோட்டை மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட ஊர். மிக வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாகத் திகழ்கிறது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவில் உதயநிதி ஆனால், இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் ஒரு பேருந்து நிலையம் இல்லை. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இந்நகரின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம்தான் இந்தப் பேருந்து நிலையம். இந்நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி, இந்தப் பேருந்து நிலையம் தாராளமான இட வசதியோடு, அதிநவீனமான கட்டமைப்பு வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வரைப் பொறுத்தவரைக்கும், எல்லா ஊருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் அனைத்து ஊர்களிலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000 தஞ்சாவூர் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக 30 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். 60 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது. 32,000 மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். 35,000 கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்லாத் திட்டங்களையும் விட முக்கியமான ஒரு திட்டம் உள்ளது, அதுதான் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் இன்றைக்கு இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப் பலர் திட்டமிட்டனர், இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் முதல்வர் தகர்த்தெறிந்து, இன்றைக்கு ரூ.5,000 மகளிருக்குக் கொடுத்துள்ளார். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் ரூ.2,000 மாதந்தோறும் வழங்கப்படும் என முதல் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் அறிவித்துள்ளார். இப்படி மக்கள் நலத் திட்டங்களாக இருந்தாலும் சரி, பேருந்து நிலையம் போன்ற உட்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும் சரி, தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. Budget 2025-26: மகளிர் உரிமைத் தொகை டு பெண்கள் விடுதி வரை! - மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்? இந்த மாதிரியான வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும், தமிழ்நாடு மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர வேண்டும்'' என்றார். முன்னதாக திமுக பிரமுகர் பழஞ்சூர் செல்வம் இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியது, ''தமிழ்நாடு இந்தியாவிலேயே 11.19% வளர்ச்சியோடு இன்றைக்கு முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அரசு எவ்வளவோ சதித் திட்டங்களைத் தீட்டுகிறது. நிதி உரிமையைப் பறிக்கின்றார்கள். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம்கூட கிடையாது. ஆனால் இந்தப் பட்ஜெட்டை அதிமுகவினர் வரவேற்கின்றனர். உதயநிதி எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு இந்தியாவிலேயே பாஜகவுடைய 'முரட்டு அடிமை'. ஜாடிக்கு ஏத்த மூடின்னு சொல்லுவாங்க, இன்றைக்கு மோடிக்கு ஏத்த மூடியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். இனிமேல் 10 தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் என்னதான் பாடுபட்டாலும் தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நம்பிக்கையைப் பெற முடியாது. எனவே, மீண்டும் அமையப் போறது திமுக அரசுதான்'' என்றார். மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000: ஆன்லைன் மோசடி; போனில் விவரங்களைப் பகிர வேண்டாம்! பெண்களே உஷார்..!
தொகுதி பங்கீடு: மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் - கொதிக்கும் மாணிக்கம் தாகூர்
மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணியில் கூடுதல் தொகுதி ஒதுக்கீடு, கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மாணிக்கம் தாகூர் மேலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்தும் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கின்றன. மோடி அரசு ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். பாராளுமன்றத்தில் யார் பலமாகச் சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிக்கொண்டுப் போய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்குக் கிடையவே கிடையாது. மாணிக்கம் தாகூர் காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம். காங்கிரஸைச் சாதாரணமாக நினைத்துப் பேசுகின்றனர். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம். எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனக் கூறியிருக்கிறார். நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
உக்ரைன் - ரஷ்யா: 20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் வரும் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. Munich Security Conference 2026 இந்த நிலையில், ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference 2026) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``உக்ரைனின் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டப்பூர்வமாக வலுவான ஒப்பந்தங்கள் அவசியம். அமெரிக்கா தற்போது 15 ஆண்டுகாலப் பாதுகாப்பு ஏற்பாட்டை முன்மொழிந்துள்ள நிலையில், அதனை 20 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும். 2027-ம் ஆண்டிற்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உறுதியான தேதியை ஐரோப்பிய நாடுகள் அறிவிக்க வேண்டும். எங்கள் மக்கள் அங்கே வாழ்கிறார்கள். அதேநேரம், அமைதிக்காக டான்பாஸ் (Donbas) பிராந்தியத்திலிருந்து உக்ரைன் பின்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்க முடியாது. அமைதிக்கான சமரசங்கள் பெரும்பாலும் உக்ரைன் தரப்பிலிருந்தே எதிர்பார்க்கப்படுவது அதிருப்தியளிக்கிறது. ஜெலன்ஸ்கி மேலும், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களும் கவலையளிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த அழுத்தம் கொடுத்து வருகிறார். எப்போது போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே உக்ரைன் தேர்தல்களை நடத்த முடியும். எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார். ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம்
கோவையில் செந்தில் பாலாஜியை முந்திய வேலுமணி; ஹாட் பாக்ஸுடன் இறங்கிய அதிமுக; வீடு தேடி வரும் பரிசுகள்
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிடினும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகதான் வென்றது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் களப்பணியும் அவர்களுக்குப் பெரியளவுக்கு கைக்கொடுத்தது. செந்தில் பாலாஜி, வேலுமணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்ற வேலுமணி பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளார். மறுபக்கம் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளனர். 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை ஹாட்பாக்ஸ், கொலுசு ஆகியவற்றைக் கொடுத்து கோவை மாவட்டம் முழுவதையும் திமுக வசமாக்கினார் செந்தில் பாலாஜி. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் கோவையில் பணத்திற்கும், பரிசுப் பொருள்களுக்கும் பஞ்சமிருக்காது. வேலுமணி திமுக மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கினால், மறுபக்கம் கோவையில் செந்தில் பாலாஜியை ஓவர்டேக் செய்து வேலுமணி ஸ்கோர் செய்துள்ளார். அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள். ஆட்சி மாறியதால் கடந்த 4 ஆண்டுகளாக அது வழங்கப்படவில்லை. வருகிற பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இது தேர்தல் ஆண்டு என்பதால் அதிமுக சார்பில் 10 தொகுதிகளுக்கும் பரிசு வழங்க வேலுமணி முடிவு செய்தார். அதிமுக பரிசுப் பொருள்கள் கடந்த சில மாதங்களாகவே இதற்காக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் நிறைவடைந்து தற்போது பரிசுப் பொருள்கள் விநியோகம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஹாட்பாக்ஸ், பெரிய தட்டு, வேட்டி சட்டை மற்றும் சேலை கொடுக்கப்பட்டு வருகின்றன. வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் சற்று ஸ்பெஷல். அங்கு மேற்சொன்ன பரிசுப் பொருள்களுடன் ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் குடை வழங்கி வருகின்றனர். பரிசுப் பொருள் விநியோகம் அதிமுக தெருமுனைக் கூட்டங்களில் முதற்கட்டமாக பரிசுகளை வழங்கினார்கள். மேலும் பரிசுப் பொருள்களை வீடு வீடாகக் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்பு டீம்களையும் அமைத்துள்ளனர். ஒரு சில நாள்களில் இந்தப் பணிகளை முடிக்க வேலுமணி உத்தரவிட்டுள்ளார். ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000
கோவையில் செந்தில் பாலாஜியை முந்திய வேலுமணி; ஹாட் பாக்ஸுடன் இறங்கிய அதிமுக; வீடு தேடி வரும் பரிசுகள்
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிடினும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகதான் வென்றது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் களப்பணியும் அவர்களுக்குப் பெரியளவுக்கு கைக்கொடுத்தது. செந்தில் பாலாஜி, வேலுமணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்ற வேலுமணி பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளார். மறுபக்கம் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளனர். 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை ஹாட்பாக்ஸ், கொலுசு ஆகியவற்றைக் கொடுத்து கோவை மாவட்டம் முழுவதையும் திமுக வசமாக்கினார் செந்தில் பாலாஜி. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் கோவையில் பணத்திற்கும், பரிசுப் பொருள்களுக்கும் பஞ்சமிருக்காது. வேலுமணி திமுக மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கினால், மறுபக்கம் கோவையில் செந்தில் பாலாஜியை ஓவர்டேக் செய்து வேலுமணி ஸ்கோர் செய்துள்ளார். அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள். ஆட்சி மாறியதால் கடந்த 4 ஆண்டுகளாக அது வழங்கப்படவில்லை. வருகிற பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இது தேர்தல் ஆண்டு என்பதால் அதிமுக சார்பில் 10 தொகுதிகளுக்கும் பரிசு வழங்க வேலுமணி முடிவு செய்தார். அதிமுக பரிசுப் பொருள்கள் கடந்த சில மாதங்களாகவே இதற்காக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் நிறைவடைந்து தற்போது பரிசுப் பொருள்கள் விநியோகம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஹாட்பாக்ஸ், பெரிய தட்டு, வேட்டி சட்டை மற்றும் சேலை கொடுக்கப்பட்டு வருகின்றன. வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் சற்று ஸ்பெஷல். அங்கு மேற்சொன்ன பரிசுப் பொருள்களுடன் ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் குடை வழங்கி வருகின்றனர். பரிசுப் பொருள் விநியோகம் அதிமுக தெருமுனைக் கூட்டங்களில் முதற்கட்டமாக பரிசுகளை வழங்கினார்கள். மேலும் பரிசுப் பொருள்களை வீடு வீடாகக் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்பு டீம்களையும் அமைத்துள்ளனர். ஒரு சில நாள்களில் இந்தப் பணிகளை முடிக்க வேலுமணி உத்தரவிட்டுள்ளார். ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000
Vijay: அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுகவை ஆரம்பித்தார் - விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில்
கடந்த வாரம் விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதை நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், மகளிர் உதவித்தொகை கொடுக்கவே முடியாது எனச் சொன்னார்கள். அதையும் கொடுத்திருக்கிறோம். தற்போது மகளிர் உதவித் தொகையுடன் சிறப்பு தொகுப்பாக ரூ. 5000 கொடுத்திருப்பது பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது'' என்றார். சேலத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, யார் கூட்டத்தை நடத்தினார்களோ அவர்கள்தாம் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தாம் பதில் சொல்ல வேண்டும்'' என்றார். விஜய், உதயநிதி தன்னுடைய அரசியலின் தாக்கத்தால்தான் உரிமைத் தொகையை அரசு தருவதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுக கட்சியை ஆரம்பித்தார் தெரியுமா? எனத் துணை முதலமைச்சர் உதயநிதி கிண்டலாகப் பேசினார். நாகப்பட்டினம்: `ஸ்டாலின் பாராட்டிய ஒருவர் vs உதயநிதி பாராட்டிய ஒருவர்' - திமுகவில் சீட் யாருக்கு?
பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதே RSS, BJP-இன் சித்தாந்தம் - நயினார் மீது ஜோதிமணி காட்டம்
பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், பொதுவாழ்வில் ஒரு கட்சித் தலைவர் மீது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்தால் கருத்து ரீதியாக அவரை எதிர்கொள்ளுங்கள். விமர்சனம் செய்யுங்கள். அதைச் செய்ய முடியாமல் ஒரு பெண்ணை ஆபாசமாகப் பொதுவெளியில் பேசுவது பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், பார்க்கலாம், விமர்சிக்கலாம் என்கிற ஆபத்தான, அருவருக்கத்தக்க மனநிலையின் உச்சம். கடுமையான கண்டனத்துக்குரியது. கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 'நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்
இலவச சட்ட சேவை பெறும் உரிமை எல்லோருக்கும் உண்டு; ஆனால் எப்படி? | How To?
'நீதிமன்றம்' என்பது பொதுவானதுதான் என்றாலும், அதன் வாசல் ஏறி நீதி கோருவதற்கு இங்கு பொருளாதாரமும், அறியாமையும் பெரிய தடையாய் இருக்கின்றன. அதன் காரணமாகவே, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கான நம்பிக்கையாய் சட்டப்பணிகள் ஆணையக்குழு உருவானது. மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படைச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நம் எல்லோருக்குமே இலவச சட்ட சேவை பெறும் உரிமை உண்டு. அதை எப்படி பெறுவது ? என்பது பற்றி தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவினரிடம் கேட்டோம். அனைவருக்கும் நீதி: ``இந்திய அரசியலமைப்பின் 39A பிரிவு, பொருளாதார அல்லது பிற குறைபாடுகளின் காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதி பெறுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பொருத்தமான சட்டம் அல்லது திட்டங்கள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ இலவச சட்ட உதவியை வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது. இதன் அடிப்படையில் சட்ட சேவைகள் ஆணையச் சட்டம்,1987 (Legal Services Authorities Act, 1987) இயற்றப்பட்டு அது 09.11.1995 அன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தை நிறைவேற்ற தேசிய அளவில் – புதுதில்லியில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மற்றும் தாலுக்காக்களில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு என்று நீதியை சமூகத்தின் பலவீனப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு முழு அமைப்பு உருவானது. சட்ட உதவி பெற தகுதிகள் அதன் விளைவாக இன்று பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள், மலைவாழ் மக்கள், பெண்கள், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், சிறைவாசிகள், காவலில் உள்ளவர்கள், மனிதக் கடத்தல், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- வரம்புக்குள் உள்ளவர்கள், மூத்த குடிமகன்கள், முன்னாள் படைவீரர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் HIV/AIDS நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முற்றிலும் இலவசமாக சட்டம் சார்ந்த அனைத்து தேவைகளையும் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் நிறைவேற்றி தருகிறது. மேலும் சமூகத்தின் கடைநிலை நபருக்கும் அவருடைய இருப்பிடத்திற்கே சட்ட உதவி சென்று சேரும் வகையில் மிக சிறப்பாக மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, புதுப்புது திட்டங்கள் வகுத்து மாநில, மாவட்ட, வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் “அனைவருக்கும் நீதி” என்ற அரசியலமைப்பு இலக்கை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. சட்ட விழிப்புணர்வு முகாம்கள் பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், சிறைவாசிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமகன்கள் ஆகியோருக்கு தங்களது உரிமைகள் மற்றும் கடமைகள், அரசின் நல திட்டங்கள் மற்றும் மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நல திட்டங்கள், மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை சட்டங்கள் குறித்து தெளிவுபடுத்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், விபத்து நஷ்டஈடு, தொழிலாளர் உரிமைகள், மூத்த குடிமக்கள் உரிமைகள் மற்றும் அனைத்து அடிப்படை சட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. சட்ட ஆலோசனை மையங்கள் சட்ட உதவி தேவைப்படுவோர் நேரடியாக அணுகும் வகையில் அவரவர் பகுதிகளிலேயே “சட்ட உதவி மையங்கள்” நடந்துவருகிறது. இதனால் ஒரு சட்ட ஆலோசனை/சட்ட உதவி பெற நீதிமன்றம் வரை வர வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள சட்ட உதவி மையங்கள் வாயிலாகவே சட்ட உதவியை பெற முடியும். சேலத்தில் சிறைகள், தாலுகா அலுவகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 25 சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. 24×7 சட்ட உதவி மையங்கள் மாண்புமிகு நீதியரசர் M. சுந்தர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முன்னாள் செயல்தலைவர் அவர்களின் முன்னெடுப்பில் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு (NALSA)- வின் பல்வேறு திட்டங்களின் கீழ் 24x7 மணி நேரமும் செயல்படும் சட்ட சேவை மையத்தை (Legal Services Clinics) சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவர் மாண்புமிகு நீதியரசர் சூர்யகாந்த் அவர்கள் கடந்த 23 ஆகஸ்ட் 2025 அன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். சட்ட தன்னார்வ தொண்டர்கள் சட்ட உதவி சேவைகள் கிராம மக்களுக்கும் எளிய முறையில் சென்றடைய சட்ட தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers) நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கு சட்ட தகவல்களை வழங்கி, தேவையுள்ளவர்களை சட்டப் பணிகள் ஆணைக்குழுவுடன் இணைக்கும் முக்கிய பாலமாக செயல்படுகின்றனர். சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு Legal Aid Defense Counsel System (LADCS) சிறைகளில் உள்ள கைதிகளுக்கும் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. வழக்கு நிலை, ஜாமீன், மேல் முறையீடு, தண்டனை குறைப்பு போன்ற விவகாரங்களில் இலவச சட்ட ஆலோசனை வழங்கப்பட்டு, கைதிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் குற்றம் சாட்டப்பட்ட சமூகத்தின் பலவீனப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு தரமான இலவச சட்ட உதவி வழங்கும் புதிய முறையை மாண்புமிகு தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு “Legal Aid Defense Counsel System - சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு” அதை தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் சோதனை முயற்சியாக இரண்டு வருடங்கள் செயல்படுத்தி பார்த்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் Legal Aid Defense Counsel System (LADCS)/சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழக்கறிஞர்களை 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கி வருகிறது. இது மிகச்சீரான, முழுநேர பாதுகாப்பு சேவை அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் முதல் நீதிமன்றத்தின் இறுதி நிலை வரை முழுமையான சட்ட உதவி வழங்குவதே இதன் நோக்கம். ஜாமீன், மேல்முறையீடு, விசாரணை, ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய அனைத்திற்கும் ஒரே குழு பொறுப்பேற்கும். இது வழக்குகளில் தகுதியான மற்றும் தரமான சட்ட உதவியை வழங்கி, நீதி, சமத்துவம் நிலைநிறுத்த உதவுகிறது. நீதியின் கதவைத் திறக்க ஒரே ஒரு உதவி எண் - 15100 உங்களுக்கோ, உங்கள் அருகிலுள்ளவர்களுக்கோ சட்ட உதவி தேவைப்பட்டால்,தயங்காமல் அருகிலுள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழுவையோ அல்லது அருகிலுள்ள சட்ட உதவி மையத்தையோ அணுகுங்கள். நீதியின் கதவைத் திறக்க ஒரே ஒரு உதவி எண்ணை அழைத்தாலே போதும். அது தான் NALSA-வின் 15100 - இந்தியாவில் எங்கிருந்தாலும், எந்த நேரத்திலும், யாரும் இந்த 15100 எண்ணுக்கு தொடர்பு கொண்டு இலவச சட்ட உதவி பெறலாம். உங்களுக்கோ, உங்கள் அருகிலுள்ளவர்களுக்கோ சட்ட உதவி தேவைப்பட்டால், தயங்காமல் அருகிலுள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழுவையோ அல்லது அருகிலுள்ள சட்ட உதவி மையத்தையோ அணுகுங்கள். என்றனர் விரிவாக.
'அவர்'மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ
ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின் ஒரு பேரறிஞர். இயக்குநர் ராம் கூறியதைப்போல, நாங்கள் எல்லோரும் அவருடைய மாணவர்கள். மாணவர்கள் என்றால் பின்தொடர்பவர்கள் அல்ல; விவாதிப்பவர்கள், உரையாடுபவர்கள், முட்டி மோதுபவர்கள். சு.வெங்கடேசன் `பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான் அவருடைய 'அந்நியமாதல்' புத்தகம் 20 வருடங்களாக எங்களைச் சுற்றிவருகிறது. அவர்மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா... ஒரு பேரறிஞருக்கு மகிழ்ச்சி என்பது விருது அல்ல; அவர் இயங்கிக்கொண்டிருப்பதுதான் மகிழ்ச்சி. இன்றைக்கு வரை இயங்கிக்கொண்டிருக்கிற ஒரு பேரறிஞர் எஸ்.வி.ஆர். மேலும், தமிழ் அறிவுச் சூழலில் ஒரு தசாப்தத்தின் வரலாற்றைத் தன் எழுத்துகளால் செதுக்கியவர். அதிகாரத்துக்கு எதிராகத் தொடர்ந்து ஒலிக்கும் அவரது குரல், இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி என்றார். `எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' - திருமாவளவன்
``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு
தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், ``இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டுடைய நிரந்தர டிரெண்ட் கருப்பு - சிவப்பு தான். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான். ஏழாவது முறையும் தி.மு.க ஆட்சிதான். திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை; ரொம்ப அடக்கத்தோடு, மிகுந்த பணிவோடு நம் அரசு செய்திருக்கின்ற சாதனைகள்மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையில் சொல்கிறேன். எல்லாவற்றுக்கும்மேலாக உடன் பிறப்புகளாகிய உங்கள் மீதான நம்பிக்கையிலும் சொல்கிறேன். வெற்றியைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிக்கத் தேவையில்லை. உங்களை வழிநடத்தி உங்களுக்கான டாஸ்க்கை ஒப்படைத்தாலே போதும். மீண்டும் உதயச்சூரியன் ஆட்சி உறுதி. இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தொகுதியும் தி.மு.க கோட்டை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும். 2026-ல் தி.மு.க-வின் வெற்றி என்பது, இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி உறுப்பினர்களை நாம் நியமித்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் பூத்கள் இருக்கிறது. இப்படி, ஒவ்வொரு பூத்திலும் நாம் செட் செய்திருக்கக்கூடிய மினிமம் டார்கெட் 350 வாக்குகள். இந்த டார்கெட்டை நாம் அச்சிவ் செய்தாலே 2.60 கோடி வாக்குகளுக்குமேல் நாம் வாங்கிவிடுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தலில், 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் நாம் வாங்கியே ஆக வேண்டும். இதை நடத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு. உங்களுக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் செய்துகொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. 2 கோடியே 50 லட்சமா? என்று யாரும் மலைக்க வேண்டாம்; யோசிக்கவும் வேண்டாம். இங்கு வந்திருக்கின்ற ஒவ்வொருத்தவரும் தலா 40 அல்லது 50 வாக்குகள் பொறுப்பேற்றுக்கொண்டால் அவ்வளவுதான். சிம்பிள். ஒவ்வொருத்தவரும் அவர்களுக்கு அசைன் செய்திருக்கின்ற 50 வாக்குகளைப் பெற்று தந்தாலே போதும். 200 தொகுதிகள் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கிறது தான் நம்முடைய லட்சியம். அதற்காக, 2 மாதங்கள் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்குள் நீங்கள் ஒவ்வொருத்தரும் 100 வாக்காளர்களை குறைந்தது 5 முறையாவது சந்திக்க வேண்டும். என்னதான் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று புதுபுது ஊடகங்கள் வந்தாலும், மக்களை நேரில் சந்தித்து பணிவாக வாக்கு கேட்கின்ற பிரசாரத்துக்கு ஈடாகாது. அதனால்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். பரம்பரைப் பரம்பரையாக தி.மு.க-வுக்கு வாக்களிக்கின்ற குடும்பங்களாக இருந்தாலும் சரி. இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பங்களாக இருந்தாலும் சரி. பிரசாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்க வேண்டும். இதை நீங்கள் ரிப்பீட்மோடில் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ரிப்பீட் ஆகும். 2021-ல் இருந்ததைவிட நமக்கான வரவேற்பும், ஆதரவும் இப்போது கூடியிருக்கிறது. 2021 தேர்தலின்போது, இதையெல்லாம் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம். இப்போது, சொன்னதையும் தாண்டி செய்துகொண்டிருக்கிறோம். அதனால், கெத்தாக மக்கள் முன்னாடி வந்து நிற்கிறோம். எனவே, மெத்தனமாக இருக்காமல், களத்தில் தொடர்ந்து உழைத்தால் சென்ற முறையைவிட பெரிய வெற்றி 100 சதவிகிதம் சாத்தியம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாம் வாங்கிய வாக்குகளைச் சட்டமன்றத் தொகுதி வாரியாக பார்த்தாலே, மிகத்தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 200 தொகுதிகளுக்குமேல் நாம்தான் வெல்லப் போகிறோம். நேற்று காலை விடிந்ததும், 1.31 கோடி பெண்கள் முகத்திலும் புன்னகையைக் கொண்டுவந்திருக்கிறோம். அவர்கள் காலையில் கேட்ட முதல் ரிங்டோன், `5 ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அக்கௌண்ட்டில் வந்திருக்கிறதா?’ என்கிற மெசேஜ் டோன் தான். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, `தேர்தல் நெருக்கத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும்’ என்று திட்டம் போட்டார்கள். ஒன்றிய பா.ஜ.க-வைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள். நல்லது செய்பவர்களையும் செய்யவிடமாட்டார்கள். தமிழ்நாட்டு மகளிருக்காக நான் கொடுத்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. அதற்கு தடைப்போட நான் விட்டு விடுவேனா? அதனால்தான் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல். மாநாடு ஓரவஞ்சனைக்கும், வஞ்சகத்துக்கும் உருவகம் இருந்தால், அதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு. இதுவரை தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டம் ஏதாவது அறிவித்திருக்கிறார்களா? நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். முறையாக பதில் சொல்ல, இதுவரையில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வரவில்லை. அதற்குப் பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை. பா.ஜ.க-வின் தலைமையில் இருந்தும் பதில் வரவில்லை. பா.ஜ.க-வின் கிளைச் செயலாளராக இருக்கிற பழனிசாமியிடம் இருந்தும் பதில் வரவில்லை. ஆமாம், பா.ஜ.க-வின் கிளைக் கழகமாக மாறிவிட்டது அ.தி.மு.க. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் பேசுவதற்குத் துணிவில்லாமல், முதுகெலும்பு இல்லாமல், கொத்தடிமை சேவகம் செய்துகொண்டிருக்கிற பழனிசாமி எனக்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார். இன்றைக்கும் ஒரு அரசியல்வாதி எப்படி எல்லாம் இருக்கக்கூடாது? என்பதற்கு அடையாளமாக சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. மாண்புமிகு பழனிசாமி அவர்களே, தவழ்ந்து தவழ்ந்து ஊழல் குற்றவாளியான அம்மையார் சசிகலா காலில் விழுந்து பதவியைப் பெற்றுவிட்டு, காலை வாரிவிட்டுவிட்டு, `நீ எனக்குப் பதவி கொடுத்தியா?’ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்டீர்களே, மறுக்க முடியுமா? சட்டம் - ஒழுங்குப் பிரச்னைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்குத் தார்மீக உரிமையாவது இருக்கிறதா? உங்கள் கட்சியின் உண்மையான பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள்... இதையெல்லாம் மறக்கடித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? பொல்லாத ஆட்சி பழனிசாமியின் ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளே சாட்சியாக, ஆறாத வடுவாக இருக்கிறதே. ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அமைதியாக ஊர்வலம் சென்ற அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லிவிட்டு, `டி.வி-யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று நாடகம்போட்டது மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவும், மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்டபோது, `அவர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்ததாக’ கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் சொன்னீர்களே, உங்களின் கல் மனதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்தீர்களா? பா.ஜ.க-வின் டப்பா என்ஜின் முன்னாடி நம்முடைய திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது. அண்மையில், ஒன்றிய அரசின் பட்ஜெட் வெளியிட்டார்களே. அதில் தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் அறிவித்தார்களா? இதை தட்டிக்கேட்கிற துணிச்சலோ, தைரியமோ பழனிசாமிக்கு இருக்கிறதா? அவரைப் பொறுத்தவரைக்கும் `தோப்புக்கரணம் போடு’ என்று சொன்னால், `ஸ்டாப்’ சொல்கிற வரைக்கும் `நான் ஸ்டாப்’பாக பல்டி அடிப்பார். எல்லா துரோகத்தையும் செய்துவிட்டு, `கூட்டணி தர்மத்துக்காகத்தான் தமிழ்நாடு உரிமைகளை அடகு வைத்தேன்’ என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்வார். இதையெல்லாம் நன்றாக உணர்ந்துதான் அவரின் தலைமையை, அவரின் கூட்டணியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லோரும் ஒரிஜினல் ஓனரான பா.ஜ.க-விடம் நேரடியாக சரண்டராகிறார்கள். தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்று துடிக்கிறவர்கள், தமிழ்நாட்டுக்குள் வந்தால் அவர்களின் சதி திட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று மக்களிடம் நீங்கள் புரிய வைக்க வேண்டும்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் நாங்கள் அதைத் தடுத்தோமா. வானதி சீனிவாசன் திமுகவினர் மக்களின் காதில் பூ சுற்ற முயற்சி செய்கிறார்கள். முதலமைச்சர் மகளிரின் பாதுகாவலர் போன்று ஒரு டிராமா செய்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக கோடை காலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கூட தராதவர்கள், தற்போது கோடைகால சிறப்பு நிதியாக ரூ. 2,000 கொடுக்கிறார்கள். பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் உரிமைத் தொகை வெளியில் சென்ற பெண்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று குடும்ப உறவுகள் பதற்றமாக இருக்கிறார்கள். ரூ.5,000 கொடுத்தால் அனைத்தையும் மறப்பார்கள் என்று நினைக்கிறார்கள். மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். நயினார் நாகேந்திரன் பொதுவாக மிகவும் அமைதியானர். பண்பாக பேசக்கூடியவர். சட்டசபையில் கூட மிகவும் நாகரிகமாக பேசுவார். எதற்காக த்ரிஷா பற்றி அப்படி பேசினார் என தெரியவில்லை. அவர் பேசியது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னுடைய கருத்தை அவரிடம் கூறுவேன். நயினார் நாகேந்திரன் அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு, இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள்” என்றார்.
'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் நாங்கள் அதைத் தடுத்தோமா. வானதி சீனிவாசன் திமுகவினர் மக்களின் காதில் பூ சுற்ற முயற்சி செய்கிறார்கள். முதலமைச்சர் மகளிரின் பாதுகாவலர் போன்று ஒரு டிராமா செய்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக கோடை காலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கூட தராதவர்கள், தற்போது கோடைகால சிறப்பு நிதியாக ரூ. 2,000 கொடுக்கிறார்கள். பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் உரிமைத் தொகை வெளியில் சென்ற பெண்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று குடும்ப உறவுகள் பதற்றமாக இருக்கிறார்கள். ரூ.5,000 கொடுத்தால் அனைத்தையும் மறப்பார்கள் என்று நினைக்கிறார்கள். மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். நயினார் நாகேந்திரன் பொதுவாக மிகவும் அமைதியானர். பண்பாக பேசக்கூடியவர். சட்டசபையில் கூட மிகவும் நாகரிகமாக பேசுவார். எதற்காக த்ரிஷா பற்றி அப்படி பேசினார் என தெரியவில்லை. அவர் பேசியது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னுடைய கருத்தை அவரிடம் கூறுவேன். நயினார் நாகேந்திரன் அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு, இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள்” என்றார்.
'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!'– காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா
``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...” புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் தொன்மையான மற்றும் இனிமையான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை என்பதற்காக முதலில் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இப்போது நான் புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, புதுச்சேரியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் எப்படியான வளர்ச்சித் திட்டங்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்பதைக் கூற வந்திருக்கிறேன். மற்றொன்று, புதுச்சேரியை ஏற்கெனவே ஆட்சி செய்தவர்களின் முகத்திரையைக் கிழித்திட வந்திருக்கிறேன். காரைக்கால் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கும் ஆளுநர் கைலாஷ்நாதன் மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாள்தோறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் அந்த அன்றாடத் தாக்குதல் குறித்து அப்போதைய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ வாய் திறக்க மாட்டார்கள். கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தார்கள். நாட்டுக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அதேசமயம் அந்தத் தாக்குதலுக்காக எதிரிகளின் இடத்திற்கே சென்று வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தோம். இரண்டாவதாக, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினோம். ``புதுச்சேரியில் 60% வாக்குகள்... 24 தொகுதிகள்...” இறுதியாக ஆபரேஷன் சிந்தூர் போன்ற துல்லியமான தாக்குதலால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நம் நாட்டுக்குப் பெருமையை மட்டும் தேடித் தரவில்லை, பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறார். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கைச் சரிசெய்து வளர்ச்சிப் பணியைத் தொடங்கியிருக்கிறோம். நம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடந்த 2021 தேர்தலில் 44% வாக்குகளைப் புதுச்சேரி மக்கள் வழங்கினார்கள். அந்த வகையில் வருகின்ற 2026 தேர்தலில் 60% வாக்குகளைப் பெற்று 24 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். பா.ஜ.க பொதுக்கூட்டம் புதுச்சேரியை இதற்கு முன்பு ஆட்சி செய்த நாராயணசாமி மிக மோசமாக ஆட்சியை நடத்தினார். அந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலால் ஒட்டுமொத்த புதுச்சேரிக்கும் சீர்குலைவு ஏற்பட்டது. புதுச்சேரியைக் காந்தி குடும்பத்துக்கான ஏ.டி.எம். இயந்திரமாக மாற்றி வைத்திருந்தார் நாராயணசாமி. கல்வி நிலையங்களை விற்ற அவர், எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைக் கூட ஏலம் விட்டுவிட்டார். அவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. போக்குவரத்து மாஃபியாக்களுக்குப் புதுச்சேரியை முழுமையாகத் திறந்துவிட்டவர் நாராயணசாமி. ``ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி...” வளர்ச்சித் திட்டங்களுக்காகப் புதுச்சேரிக்குக் கொடுக்கப்பட்ட நிதியில், சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு அவர் ஊழல் செய்திருப்பது சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. ரூ.15,000 கோடி என்பது புதுச்சேரி மாநிலத்தின் மூன்று ஆண்டுகளுக்கான பட்ஜெட் தொகை. அவரது ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் புதிதாக ஒரு தொழிற்சாலைகூடத் தொடங்கப்படவில்லை. நம்முடைய ஐந்து ஆண்டுகால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதுடன், சுயமாகச் செயல்படும் ஓர் அரசை உருவாக்கியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முக்கியத் துறைகளில் நாம் கவனம் செலுத்த இருக்கிறோம். நாராயணசாமி ஒன்று, புதுச்சேரி மீனவர்களின் பொருட்கள் உலக சந்தைகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது. இரண்டாவது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான இடமாகப் புதுச்சேரி மாநிலத்தை மாற்றுவது. அதன்மூலம் புதுச்சேரி இளைஞர்கள் அதிக அளவு வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதுச்சேரியில் ஏற்கெனவே ஜோஹோ அமைப்பு தங்களுடைய சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. அதேபோல் எஸ்.ஆர். நிறுவனம் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் லேப்டாப்கள் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருக்கிறது என்றார். புதுச்சேரி: ``பள்ளி மாணவர்கள் லேப்டாப் கொள்முதலில் ரூ.90 கோடி ஊழல்” – `பகீர்’ கிளப்பும் நாராயணசாமி
'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!'– காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா
``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...” புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் தொன்மையான மற்றும் இனிமையான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை என்பதற்காக முதலில் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இப்போது நான் புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, புதுச்சேரியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் எப்படியான வளர்ச்சித் திட்டங்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்பதைக் கூற வந்திருக்கிறேன். மற்றொன்று, புதுச்சேரியை ஏற்கெனவே ஆட்சி செய்தவர்களின் முகத்திரையைக் கிழித்திட வந்திருக்கிறேன். காரைக்கால் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கும் ஆளுநர் கைலாஷ்நாதன் மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாள்தோறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் அந்த அன்றாடத் தாக்குதல் குறித்து அப்போதைய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ வாய் திறக்க மாட்டார்கள். கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தார்கள். நாட்டுக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அதேசமயம் அந்தத் தாக்குதலுக்காக எதிரிகளின் இடத்திற்கே சென்று வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தோம். இரண்டாவதாக, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினோம். ``புதுச்சேரியில் 60% வாக்குகள்... 24 தொகுதிகள்...” இறுதியாக ஆபரேஷன் சிந்தூர் போன்ற துல்லியமான தாக்குதலால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நம் நாட்டுக்குப் பெருமையை மட்டும் தேடித் தரவில்லை, பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறார். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கைச் சரிசெய்து வளர்ச்சிப் பணியைத் தொடங்கியிருக்கிறோம். நம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடந்த 2021 தேர்தலில் 44% வாக்குகளைப் புதுச்சேரி மக்கள் வழங்கினார்கள். அந்த வகையில் வருகின்ற 2026 தேர்தலில் 60% வாக்குகளைப் பெற்று 24 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். பா.ஜ.க பொதுக்கூட்டம் புதுச்சேரியை இதற்கு முன்பு ஆட்சி செய்த நாராயணசாமி மிக மோசமாக ஆட்சியை நடத்தினார். அந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலால் ஒட்டுமொத்த புதுச்சேரிக்கும் சீர்குலைவு ஏற்பட்டது. புதுச்சேரியைக் காந்தி குடும்பத்துக்கான ஏ.டி.எம். இயந்திரமாக மாற்றி வைத்திருந்தார் நாராயணசாமி. கல்வி நிலையங்களை விற்ற அவர், எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைக் கூட ஏலம் விட்டுவிட்டார். அவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. போக்குவரத்து மாஃபியாக்களுக்குப் புதுச்சேரியை முழுமையாகத் திறந்துவிட்டவர் நாராயணசாமி. ``ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி...” வளர்ச்சித் திட்டங்களுக்காகப் புதுச்சேரிக்குக் கொடுக்கப்பட்ட நிதியில், சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு அவர் ஊழல் செய்திருப்பது சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. ரூ.15,000 கோடி என்பது புதுச்சேரி மாநிலத்தின் மூன்று ஆண்டுகளுக்கான பட்ஜெட் தொகை. அவரது ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் புதிதாக ஒரு தொழிற்சாலைகூடத் தொடங்கப்படவில்லை. நம்முடைய ஐந்து ஆண்டுகால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதுடன், சுயமாகச் செயல்படும் ஓர் அரசை உருவாக்கியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முக்கியத் துறைகளில் நாம் கவனம் செலுத்த இருக்கிறோம். நாராயணசாமி ஒன்று, புதுச்சேரி மீனவர்களின் பொருட்கள் உலக சந்தைகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது. இரண்டாவது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான இடமாகப் புதுச்சேரி மாநிலத்தை மாற்றுவது. அதன்மூலம் புதுச்சேரி இளைஞர்கள் அதிக அளவு வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதுச்சேரியில் ஏற்கெனவே ஜோஹோ அமைப்பு தங்களுடைய சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. அதேபோல் எஸ்.ஆர். நிறுவனம் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் லேப்டாப்கள் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருக்கிறது என்றார். புதுச்சேரி: ``பள்ளி மாணவர்கள் லேப்டாப் கொள்முதலில் ரூ.90 கோடி ஊழல்” – `பகீர்’ கிளப்பும் நாராயணசாமி
'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!'– காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா
``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...” புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் தொன்மையான மற்றும் இனிமையான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை என்பதற்காக முதலில் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இப்போது நான் புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, புதுச்சேரியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் எப்படியான வளர்ச்சித் திட்டங்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்பதைக் கூற வந்திருக்கிறேன். மற்றொன்று, புதுச்சேரியை ஏற்கெனவே ஆட்சி செய்தவர்களின் முகத்திரையைக் கிழித்திட வந்திருக்கிறேன். காரைக்கால் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கும் ஆளுநர் கைலாஷ்நாதன் மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாள்தோறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் அந்த அன்றாடத் தாக்குதல் குறித்து அப்போதைய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ வாய் திறக்க மாட்டார்கள். கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தார்கள். நாட்டுக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அதேசமயம் அந்தத் தாக்குதலுக்காக எதிரிகளின் இடத்திற்கே சென்று வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தோம். இரண்டாவதாக, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினோம். ``புதுச்சேரியில் 60% வாக்குகள்... 24 தொகுதிகள்...” இறுதியாக ஆபரேஷன் சிந்தூர் போன்ற துல்லியமான தாக்குதலால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நம் நாட்டுக்குப் பெருமையை மட்டும் தேடித் தரவில்லை, பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறார். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கைச் சரிசெய்து வளர்ச்சிப் பணியைத் தொடங்கியிருக்கிறோம். நம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடந்த 2021 தேர்தலில் 44% வாக்குகளைப் புதுச்சேரி மக்கள் வழங்கினார்கள். அந்த வகையில் வருகின்ற 2026 தேர்தலில் 60% வாக்குகளைப் பெற்று 24 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். பா.ஜ.க பொதுக்கூட்டம் புதுச்சேரியை இதற்கு முன்பு ஆட்சி செய்த நாராயணசாமி மிக மோசமாக ஆட்சியை நடத்தினார். அந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலால் ஒட்டுமொத்த புதுச்சேரிக்கும் சீர்குலைவு ஏற்பட்டது. புதுச்சேரியைக் காந்தி குடும்பத்துக்கான ஏ.டி.எம். இயந்திரமாக மாற்றி வைத்திருந்தார் நாராயணசாமி. கல்வி நிலையங்களை விற்ற அவர், எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைக் கூட ஏலம் விட்டுவிட்டார். அவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. போக்குவரத்து மாஃபியாக்களுக்குப் புதுச்சேரியை முழுமையாகத் திறந்துவிட்டவர் நாராயணசாமி. ``ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி...” வளர்ச்சித் திட்டங்களுக்காகப் புதுச்சேரிக்குக் கொடுக்கப்பட்ட நிதியில், சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு அவர் ஊழல் செய்திருப்பது சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. ரூ.15,000 கோடி என்பது புதுச்சேரி மாநிலத்தின் மூன்று ஆண்டுகளுக்கான பட்ஜெட் தொகை. அவரது ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் புதிதாக ஒரு தொழிற்சாலைகூடத் தொடங்கப்படவில்லை. நம்முடைய ஐந்து ஆண்டுகால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதுடன், சுயமாகச் செயல்படும் ஓர் அரசை உருவாக்கியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முக்கியத் துறைகளில் நாம் கவனம் செலுத்த இருக்கிறோம். நாராயணசாமி ஒன்று, புதுச்சேரி மீனவர்களின் பொருட்கள் உலக சந்தைகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது. இரண்டாவது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான இடமாகப் புதுச்சேரி மாநிலத்தை மாற்றுவது. அதன்மூலம் புதுச்சேரி இளைஞர்கள் அதிக அளவு வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதுச்சேரியில் ஏற்கெனவே ஜோஹோ அமைப்பு தங்களுடைய சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. அதேபோல் எஸ்.ஆர். நிறுவனம் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் லேப்டாப்கள் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருக்கிறது என்றார். புதுச்சேரி: ``பள்ளி மாணவர்கள் லேப்டாப் கொள்முதலில் ரூ.90 கோடி ஊழல்” – `பகீர்’ கிளப்பும் நாராயணசாமி
`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்
திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடிப்பார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம். இதனால், NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் சூழ்ச்சி செய்ய பார்க்கிறார்கள். அதையும் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சொல்லக்கூடிய அளவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரவேண்டிய மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால், அதையும் சேர்த்து யாரிடம் சொல்லாமல் உடனடியாக 5,000 ரூபாயை அறிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தர வேண்டும் என முதலமைச்சரும், துணை முதல்வரும் சொல்லியுள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வந்து சென்றதால் தான் நாங்கள் 40 இடங்களை தக்க வைத்தோம். அதேபோல், அவர்கள் அடிக்கடி வந்தால் கடந்த தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 இடங்களை கடந்து வெற்றி பெறுவோம். தி.மு.க-வுக்கு எதிராக என்.டி.ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களின் தேர்தல் ஸ்டன்ட்டைக் காட்டுகிறது என்றார்.
`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்
திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடிப்பார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம். இதனால், NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் சூழ்ச்சி செய்ய பார்க்கிறார்கள். அதையும் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சொல்லக்கூடிய அளவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரவேண்டிய மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால், அதையும் சேர்த்து யாரிடம் சொல்லாமல் உடனடியாக 5,000 ரூபாயை அறிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தர வேண்டும் என முதலமைச்சரும், துணை முதல்வரும் சொல்லியுள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வந்து சென்றதால் தான் நாங்கள் 40 இடங்களை தக்க வைத்தோம். அதேபோல், அவர்கள் அடிக்கடி வந்தால் கடந்த தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 இடங்களை கடந்து வெற்றி பெறுவோம். தி.மு.க-வுக்கு எதிராக என்.டி.ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களின் தேர்தல் ஸ்டன்ட்டைக் காட்டுகிறது என்றார்.
அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி
`ஆட்சியில் பங்கு' அரசியல் ஆடுபுலி 05 ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்கியுள்ளனர். கைகூடாத கனவு இதே போன்று 1952, 1980, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டன, ஆனால், கைகூடவில்லை. தமிழ்நாட்டு அரசியலில் இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த முதல் பொதுத்தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைந்திடும் வாய்ப்பு உருவானது. 1952 இல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு மூன்று மாத காலம் ஆட்சி அமைக்காமல் காத்திருந்தார்கள். ஒருவழியாக அரசியலே வேண்டாமென்று ஒதுங்கி இருந்த ராஜாஜி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 62 சட்டமன்ற உறுப்பினர்களோடு, உருவாக்கிய கூட்டணி அமைச்சரவைக் கனவு கைகூடவில்லை. தனிப்பெரும்பான்மை இல்லாமல், பிற கட்சிகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. 152 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது 200 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. அப்போது, ராஜாஜி அமைத்ததும் கூட்டணி அமைச்சரவை போன்றுதான். காமன்வீல் கட்சியைக் கலைத்துவிட்டு எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர் நிலவருவாய் துறையின் அமைச்சரானார். அக்கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களாக மாறினர். சிறிதுகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் 19 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியாக மாறினார்கள், அக்கட்சித் தலைவர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி உள்ளாட்சித் துறை அமைச்சரானார். ராஜாஜி ராஜாஜி அமைச்சரவையிலும், காமராஜர் அமைச்சரவையிலும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக மாறிய பின்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1980 தேர்தல் 1980 சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆடுபுலி ஆட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது. எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவோடு, இந்திய கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், மக்கள் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி, கவாய் குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ருசித்த திமுக – காங்கிரஸ் கூட்டணி அப்படியே தொடர்ந்தது. முஸ்லீம் லீக் கட்சி, தேசிய பார்வர்ட் பிளாக், பசும்பொன் தேவர் கட்சி, உழைப்பாளர் கட்சி, சக்திதாசன் இந்தியக் குடியரசுக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக் முன்னணியின் மற்றொரு பிரிவு உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியை ஆதரித்தனர். திமுக 109 தொகுதிகளிலும், காங்கிரஸ் 109 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஜனதா கட்சி 95 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. சமபலத்தோடு போட்டியிட்ட திமுக கூட்டணியில் யார் முதலமைச்சர் என்று பேச்சு எழுந்தது. திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எம்.பி.சுப்பிரமணியம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். திமுக, காங்கிரஸ் எந்தக் கட்சி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்களோ, அந்தக் கட்சிக்கு முதல்வர் பதவி என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்கினர். `கருணாநிதி தான் முதலமைச்சர்' - அறிவித்த இந்திரா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளர்களான ஆர்.வெங்கட்ராமன், ராம் கோபால் ரெட்டி போன்றவர்களும், ”தேர்தலுக்குப் பின்னர் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்” என்றார்கள். இதற்கிடையே, திமுகவின் வேண்டுகோளை ஏற்ற இந்திரா காந்தி, தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் கருணாநிதி தான் முதலமைச்சர் என்று அறிவித்தார். ஆனால், அமைச்சரவையில் காங்கிரஸ் பங்களிப்பது பற்றி, வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. 1980 மே 28 முதல் மே 31 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 1 அன்று அதிமுகவுக்கு சாதகமான முடிவுகளைத் தந்தது. ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் வென்று, மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். 128 இடங்களில் வென்ற அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. திமுக 38, காங்கிரஸ் 30 இடங்களில் மட்டுமே வென்றனர். தமிழக அரசியலில் இந்த முறையும் கூட்டணி ஆட்சி அமைத்திடும் கனவு கைவிட்டுப் போனது. கருணாநிதி - அண்ணா மைனாரிட்டி திமுக ஆட்சி 2006 ஆம் ஆண்டில், திமுக ஆட்சி அமைத்தாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுகவின் 96 உறுப்பினர்களோடு, காங்கிரஸ், பாமக ஆதரவு கிடைத்ததால் ஐந்தாண்டு காலம் திமுகவால் ஆட்சியை நடத்த முடிந்தது. இந்த காலகட்டத்தில்தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா விமர்சனம் செய்து வந்தார். 2006 – 2011 ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் போது, அவ்வப்போது அமைச்சரவையில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர். 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது, ஆட்சியில் பங்கு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில், “காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் ஆட்சியில் பங்கு பெறுவோம், முதன்மையான இடத்தில் இருப்போம்” என்று வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மத்திய அரசின் அமைச்சரவையில் திமுக எம்பிக்கள் அமைச்சர்களாக இருந்தனர். அதனால், திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில்தான் இருந்தது. திமுகவோடு கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியில், மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், கே.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. திமுகவின் சார்பாக, அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோரைக் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. அதிக தொகுதிகள் கேட்க வேண்டும், ஆட்சியில் பங்குபெற வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, 2011 பிப்ரவரி 20 ஞாயிறு அன்று மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் ஆட்சியில் பங்கு என்பதை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. `கூடுதல் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தையைத் தொடரலாம்' என்றனர். தொகுதிப் பங்கீட்டு குழுவினர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை முடிவுகளை விளக்கிச் சொன்னார்கள். காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு திமுக ஆட்சியில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புவதாகச் சொன்னார். கே.வி.தங்கபாலு காங்கிரஸின் ஆடுபுலி ஆட்டம்! திமுகவோ கடந்த 2006 தேர்தலில் 132 இடங்களில் போட்டியிட்டு, 96 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதனால் பெரும்பான்மை இடங்களான 117 கூட கிடைக்கவில்லை. அப்படியொரு சூழ்நிலை வந்துவிடக் கூடாது. அதனால், 2011 தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிடவேண்டுமென்று விரும்பினார்கள். திமுக கூட்டணியில் முதல் ஆளாக இணைந்திருந்த பாமக 31 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் போட்டிருந்தது. மீதமுள்ள 203 தொகுதிகளில் பிற கட்சிகளுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும். கூட்டணிப் பேச்சுவார்த்தை டெல்லியிலும் மறைமுகமாகத் தொடர்ந்தது, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, டெல்லியில் 2011 மார்ச் 8 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, ஆட்சியில் பங்கு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரவை தொடர்பாக தமிழகத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திமுகவோடு முடிவெடுப்போம் என்றும் கூறினார். சிபிஐ ஆனால், 2011 மார்ச் 11 அன்று திடீர் திருப்பமாக தமிழக அரசியலில் தேசியக் கட்சியான காங்கிரஸ் ஓர் ஆடுபுலி ஆட்டத்தை அரங்கேற்றியது. பிப்ரவரி 18 அன்று கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிப்ரவரி 20 அன்று திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதே போல மார்ச் 11 அன்று திமுக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, சிபிஐ விசாரணை அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நான்காவது நாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளோடு கருணாநிதி நேர்காணல் செய்து கொண்டிருந்தார். 2001: தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர்; `கிங் மேக்கர்' TTV; OPS எனும் நான்.! | அரசியல் ஆடுபுலி 03 மற்றொரு பகுதியில் திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அதே, அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கும் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து கலைஞர் டிவி இயக்குநர்களான அமிர்தம், தயாளு அம்மாள் ஆகியோரும் வந்தடைந்தனர். சிறிது நேரத்தில் 10.45 மணிக்கு டி.எஸ்.பி. , பெண் அதிகாரிகள் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் குழு அண்ணா அறிவாலயம் வந்தனர். மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்தின் பேராசிரியர் ஆய்வு நூலகத்தில் வைத்து தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தினர். திமுக - காங்கிரஸ் தொலைக்காட்சி அலுவலகத்தில் கனிமொழியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மூன்று மணி நேரமாக இந்த விசாரணை தொடர்ந்தது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் ஒரு பகுதியில் வேட்பாளர் நேர்காணல், இன்னொரு பகுதியில் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, மற்றொரு பகுதியில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணை என்று அறிவாலயமே தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் பிரதிநிதியாக ப.சிதம்பரம் இருந்தார். உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் தலைமையின் கீழ் செயல்படும் சிபிஐ அதிகாரிகள் இன்னொரு அறையில் திமுக தலைவரின் மனைவி மற்றும் மகளிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். விசாரணை முடிந்து சிபிஐ அதிகாரிகள் வெளியேறிய பின்னர் அறிவாயலம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவித்தனர். 60 முதல் 80 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் கிடைத்தது என்றனர். ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி அதன்பிறகு பேசவில்லை. சர்க்காரியா போய் ரே வந்தது; அதிமுக காங்கிரஸ் சேர்ந்தது! - திருப்பம் தந்த திருப்பத்தூர் | ஆடுபுலி 04 எடுபடாத வாதம் - ஆட்சியில் பங்கு! ஆனால், 2011 ஏப்ரல் 1 அன்று சேலத்தில் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசும்போது, ``திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஆவதுதான் எங்களது இலக்கு, ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து, தேர்தல் முடிந்தவுடன் பேசுவோம்” என்று கூறினார். ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அதிமுக அணியில் அதிக இடங்களைப் பிடித்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆட்சியில் பங்குபெறும் எண்ணம் இல்லையென்று அறிவித்தார். அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்கட்சியாகவும் செயல்பட்டனர். இந்த முறையும் தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி அமைச்சரவைக் கனவு கைகூடவில்லை.! இம்முறை கைகூடுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்)
`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?
மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை புகுவிழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசுபவர் கிடையாது. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். திமுக ஐம்பதாயிரம் ரூபாய் அறிவித்தாலும் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்து விடும். விவசாயிகள் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் போராடி கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. தமிழ்நாட்டில் கூலிப்படைகள் உருவாகிற அளவிற்கு போதைப்பொருள்கள் பள்ளிக்கூடங்களின் அருகிலேயே கிடைக்கிறது. அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு விட்டதால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மடை மாற்றி பெண்களின் உரிமை தொகையாக கொடுத்திருக்கிறார்கள். இது தேர்தல் பயத்தையும், தோல்வி பயத்தையும் காட்டுகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாய கூட்டணிக்கு வருவது குறித்து ஓபிஎஸ்-தான் முடிவெடுக்க வேண்டும். அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும் எனச் சொன்னவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்துவிடும். அது யாராக இருந்தாலும் சரி. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் யாரெல்லாம் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்களோ அவர்கள் தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிரிந்து சென்ற அம்மாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இன்னும் ஒரு சிலர் வெளியில் இருக்கிறார்கள். அவர்களும் வர வேண்டும் என்றார்.
`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?
மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை புகுவிழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசுபவர் கிடையாது. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். திமுக ஐம்பதாயிரம் ரூபாய் அறிவித்தாலும் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்து விடும். விவசாயிகள் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் போராடி கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. தமிழ்நாட்டில் கூலிப்படைகள் உருவாகிற அளவிற்கு போதைப்பொருள்கள் பள்ளிக்கூடங்களின் அருகிலேயே கிடைக்கிறது. அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு விட்டதால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மடை மாற்றி பெண்களின் உரிமை தொகையாக கொடுத்திருக்கிறார்கள். இது தேர்தல் பயத்தையும், தோல்வி பயத்தையும் காட்டுகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாய கூட்டணிக்கு வருவது குறித்து ஓபிஎஸ்-தான் முடிவெடுக்க வேண்டும். அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும் எனச் சொன்னவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்துவிடும். அது யாராக இருந்தாலும் சரி. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் யாரெல்லாம் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்களோ அவர்கள் தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிரிந்து சென்ற அம்மாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இன்னும் ஒரு சிலர் வெளியில் இருக்கிறார்கள். அவர்களும் வர வேண்டும் என்றார்.
ஏழைகளின் இறைச்சி முதல் தீபாவளி பருப்பு வரை! - புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் டாப் 6 பருப்புகள்
உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள், மசாலாக்கள் போன்றவற்றிற்குப் பொதுவாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த புவிசார் குறியீடு இருந்தால் போலியான பொருள்கள் புழகத்திற்கு வர முடியாது. அதேசமயம் உண்மையான மற்றும் தரமான பொருள்கள் பாதுகாக்கப்படும். அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மதிப்பு கிடைப்பதுடன், உற்பத்தியில் லாபமும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அந்த ஊருக்குப் பெயர் கிடைக்கும். இந்த வகையில் இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற டாப் 6 பயறுவகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். புவிசார் குறியீடு நவாப்பூர் தூர் பருப்பு மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள நவாப்பூர் தாலுகாதான் நவாப்பூர் தூர் பருப்புக்குப் பிறப்பிடமாகும். சிறிய வெள்ளை விதைகள் கொண்ட இந்த தூர் பருப்பு, அதிக புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது. தீபாவளி காலத்தில் சந்தைக்கு வருவதால், மக்கள் இதை திவால் தூர் என்று அன்புடன் அழைக்கின்றனர். இது 2016 மார்ச் மாதம் புவிசார் குறியீடு பெற்றது. குல்பர்கா தூர் பருப்பு கர்நாடகாவின் கலபுரகி (குல்பர்கா) மாவட்டத்தின் மண் வளமே இந்த குல்பர்கா தூர் பருப்பு சுவைக்குக் காரணம். மிருதுவான மற்றும் இனிப்பு சுவை கொண்ட இந்த தூர் பருப்பு, 'பட்கா தால்' என்றும் அழைக்கப்படுகிறது. கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், தினசரி உணவுக்கு ஏற்றது. இது 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு பஹாரி தூர் பருப்பு மிருதுவான சுவை மற்றும் நீண்ட காலம் கெட்டுப்போகாத தன்மை உடைய பஹாரி தூர் பருப்பு, உத்தராகாண்ட் மலைப்பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்பு ஆகியவை அதிகம் உள்ளதால், இது ஆரோக்கிய உணவாகப் போற்றப்படுகிறது. பஹாரி மக்கள் இதை 'சௌன்சா' போன்ற பாரம்பரிய முறைகளில் சமைத்து வருகின்றனர். இது 2023 நவம்பரில் புவிசார் குறியீடு பெற்றது. அட்டப்பாடி துவாரா கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பழங்குடி மக்களின் பாரம்பர்ய பயறுதான் அட்டப்பாடி துவரை. பெரிய வெள்ளை விதைகள் மற்றும் கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் நிறைந்த இந்த பயறு, ஊட்டச்சத்து குறைபாடுகளைச் சரிசெய்யும் உணவாகப் பார்க்கப்படுகிறது. இது 2022 ஜூலையில் புவிசார் குறியீடு பெற்றது. கஹத் பருப்பு உத்தராகண்ட் ஹிமாலயப் பகுதியின் இயற்கை மருத்துவ உணவாகக் கருதப்படுவது கஹத் பருப்பு. இதில் இரும்பு மற்றும் புரதம் அதிகம் உள்ளதால், இது ஏழைகளின் இறைச்சி என்று அழைக்கப்படுகிறது. குமாவோனி மக்களின் சமையலில் கஹத் தால், பராத்தா, சூப் போன்ற பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது 2023ஆம் ஆண்டுபுவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் | கோப்புப் படம் தண்டூர் சிவப்புப் பயறு தெலங்கானாவின் தண்டூர் பகுதியில் விளைவிக்கப்படும் இந்த தண்டூர் சிவப்புப் பயறு 22–24% வரை புரதம் கொண்டது. இது மற்ற பயறு வகைகளைவிட மூன்று மடங்கு அதிக மகசூல் தருவதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் விளங்குகிறது. இது 2022ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு: கடலூர் கோட்டிமுளை கத்திரி உள்ளிட்ட 15 பொருள்களுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
ஏழைகளின் இறைச்சி முதல் தீபாவளி பருப்பு வரை! - புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் டாப் 6 பருப்புகள்
உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள், மசாலாக்கள் போன்றவற்றிற்குப் பொதுவாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த புவிசார் குறியீடு இருந்தால் போலியான பொருள்கள் புழகத்திற்கு வர முடியாது. அதேசமயம் உண்மையான மற்றும் தரமான பொருள்கள் பாதுகாக்கப்படும். அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மதிப்பு கிடைப்பதுடன், உற்பத்தியில் லாபமும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அந்த ஊருக்குப் பெயர் கிடைக்கும். இந்த வகையில் இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற டாப் 6 பயறுவகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். புவிசார் குறியீடு நவாப்பூர் தூர் பருப்பு மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள நவாப்பூர் தாலுகாதான் நவாப்பூர் தூர் பருப்புக்குப் பிறப்பிடமாகும். சிறிய வெள்ளை விதைகள் கொண்ட இந்த தூர் பருப்பு, அதிக புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது. தீபாவளி காலத்தில் சந்தைக்கு வருவதால், மக்கள் இதை திவால் தூர் என்று அன்புடன் அழைக்கின்றனர். இது 2016 மார்ச் மாதம் புவிசார் குறியீடு பெற்றது. குல்பர்கா தூர் பருப்பு கர்நாடகாவின் கலபுரகி (குல்பர்கா) மாவட்டத்தின் மண் வளமே இந்த குல்பர்கா தூர் பருப்பு சுவைக்குக் காரணம். மிருதுவான மற்றும் இனிப்பு சுவை கொண்ட இந்த தூர் பருப்பு, 'பட்கா தால்' என்றும் அழைக்கப்படுகிறது. கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், தினசரி உணவுக்கு ஏற்றது. இது 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு பஹாரி தூர் பருப்பு மிருதுவான சுவை மற்றும் நீண்ட காலம் கெட்டுப்போகாத தன்மை உடைய பஹாரி தூர் பருப்பு, உத்தராகாண்ட் மலைப்பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்பு ஆகியவை அதிகம் உள்ளதால், இது ஆரோக்கிய உணவாகப் போற்றப்படுகிறது. பஹாரி மக்கள் இதை 'சௌன்சா' போன்ற பாரம்பரிய முறைகளில் சமைத்து வருகின்றனர். இது 2023 நவம்பரில் புவிசார் குறியீடு பெற்றது. அட்டப்பாடி துவாரா கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பழங்குடி மக்களின் பாரம்பர்ய பயறுதான் அட்டப்பாடி துவரை. பெரிய வெள்ளை விதைகள் மற்றும் கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் நிறைந்த இந்த பயறு, ஊட்டச்சத்து குறைபாடுகளைச் சரிசெய்யும் உணவாகப் பார்க்கப்படுகிறது. இது 2022 ஜூலையில் புவிசார் குறியீடு பெற்றது. கஹத் பருப்பு உத்தராகண்ட் ஹிமாலயப் பகுதியின் இயற்கை மருத்துவ உணவாகக் கருதப்படுவது கஹத் பருப்பு. இதில் இரும்பு மற்றும் புரதம் அதிகம் உள்ளதால், இது ஏழைகளின் இறைச்சி என்று அழைக்கப்படுகிறது. குமாவோனி மக்களின் சமையலில் கஹத் தால், பராத்தா, சூப் போன்ற பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது 2023ஆம் ஆண்டுபுவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் | கோப்புப் படம் தண்டூர் சிவப்புப் பயறு தெலங்கானாவின் தண்டூர் பகுதியில் விளைவிக்கப்படும் இந்த தண்டூர் சிவப்புப் பயறு 22–24% வரை புரதம் கொண்டது. இது மற்ற பயறு வகைகளைவிட மூன்று மடங்கு அதிக மகசூல் தருவதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் விளங்குகிறது. இது 2022ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு: கடலூர் கோட்டிமுளை கத்திரி உள்ளிட்ட 15 பொருள்களுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
`தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான்'திமுக மாவட்ட செயலாளரின் வாக்குறுதி; குழப்பத்தில் நிர்வாகிகள்!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி, எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற பல முன்னெடுப்புகளை செய்கிறார்கள். வெற்றியை குறி வைத்து வியூகங்கள் வகுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் எட்டு தொகுதிகளையும் கைபற்ற திமுக தலைமை முனைப்பு காட்டி வருகிறது. மேயர் சண்.இராமநாதன் வீட்டின் சுவற்றில் ஸ்டாலின், உதயநிதி சிற்பம் திமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சீட் கேட்டு காய் நகர்த்துகின்றனர். திமுக தலைமை யாருக்கு சீட் என்பதை இறுதி செய்யும் போது மாவட்ட செயலாளரின் பரிந்துரையும் முக்கியம் என்பதால் எம்.எல்.ஏ-வும், மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரனை வேட்பாளர் ரேஸில் இருப்பவர்கள் மொய்க்கின்றனர். அவரும் உனக்கு தான் சீட்னு ஒவ்வொருவரிடத்திலும் சொல்லி குஷி படுத்தி வருகிறாராம். இதனால் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது தெரியாமல் சஸ்பென்ஸ் நீடிப்பதால் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், `தஞ்சாவூர் தொகுதியில் திமுக-வில் போட்டியிடுவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் பலரும் முட்டி மோதி வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிட்ட டி.கே.ஜி. நீலமேகம் கிட்டதட்ட 45,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை வீழ்த்தினார். இந்த முறை அதிமுக-வில் என்.எஸ்.சரவணன் தான் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டது என்கிறார்கள். சரவணனும் தொகுதிக்குள் வலம் வருவதுடன் சத்தமில்லாமல் பிரச்சாரமும் செய்து வருகிறார். தஞ்சாவூர், திமுக-விற்கு சாதகமான தொகுதி என பேசப்படுவதால் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை செய்தால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர் கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று தொகுதிக்குள் பம்பரமாக சுழல்கிறார். நடிகர் துரை.சுதாகர் தஞ்சாவூர் தொகுதியை திமுக-வின் கோட்டை என்கிறார்கள், அந்த கோட்டையில் 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதையே தனக்கான பாசிட்டிவ் பாயிண்டாக எடுத்து கொண்டு களம் காண காத்திருக்கிறார் அதிமுக சரவணன். திமுக-வை பொறுத்தவரை மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பெரிய பட்டாளமே ரேஸில் உள்ளது. தொடக்கத்தில் இருந்தே மேயர் சண்.இராமநாதன் பெயர் பலமாக அடிப்பட்டது. தன்னுடைய வீட்டின் மாடியில் கட்சிக்கான அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார். அந்த அறையின் சுவற்றில் கருங்கல்லால் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உருவத்தை செதுக்கி பொருத்தியுள்ளார். இதை பாத்து வியந்த பலரும் அவரை பாராட்ட, தலைமுறைகளை கடந்தும் என் வீட்டில் இந்த சுவர் சிற்பம் இருக்கும், ராஜாஸ்தானில் இருந்து ஒரே கருங்கல்லை வாங்கி வந்து சிரத்தை எடுத்து இதை செய்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரும் என் தலைமுறைகளை கடந்தும் எங்களுக்கு தலைவர்கள் என்றாராம். தான் கட்சிக்கான விசுவாசி என்பதை உணர்த்துவதற்காக இராமாநாதன் இதை செய்துள்ளார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி நடிகர் துரை.சுதாகர் பண பலம் படைத்தவர் செலவுக்கு தயங்காதவர். நன்கொடைனு யார் கேட்டாலும் முகழ் சுழிக்காமல் செய்யக்கூடியவர். தனக்கு ஒரு பெயர், கூட்டத்துடன் வலம் வரக்கூடியவர். சினிமா தொடர்பு அதிகம். நடிகர், தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் தொகுதிக்குள் வலம் வரும் தனக்கு நெருக்கமான மேலிட வட்டம் மூலம் சீட்டுக்கு காய் நகர்த்துகிறார். சுதாகருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பேசுகின்றனர். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தஞ்சையில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் கவனம் பெற்றுள்ளார். இம்முறை தன்னை தலைவர் ஸ்டாலின் கைவிட மாட்டார் என்பது மட்டுமே அவரது நம்பிக்கை. பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்! செந்தமிழ்செல்வன் தஞ்சாவூரில் அடையாளமான குடும்பத்தை சேர்ந்தவர். துரை.சந்திரசேகரினின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். துரை.சந்திரசேகரன் பரிந்துரை இவருக்கு இருக்கும் என்கிறார்கள். இப்படியாக பலரும் சீட்டை முன் வைத்தே ஒவ்வொரு வைத்து முன்னெடுப்பை செய்கின்றனர். இதில் சண்.இராமநாதன், துரை.சுதாகர், செந்தமிழ்செல்வன் ஆகியோர் தனி தனியாக சந்திரசேகரனுடன் காரில் அவ்வப்போது ஒன்றாக செல்லும் போது உனக்கு தான் சீட் என்கிறாராம். இப்படி ஒவ்வொருவரிடத்திலும் சொல்ல அவர்கள் தனக்கு தான் சீட் என்கிற நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள். ஆதரவாளர்களுடன் தனியாக இருக்கும் போது ஒவ்வொருவரிடத்திலும் இதை சொல்ல அந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்து விட்டது. இப்பவும் யாருக்கு சீட் கிடைக்கும் என்கிற சஸ்பென்ஸ் நீள்கிறது. இதனால் கட்சியினரும் குழப்பத்தில் உள்ளதாக' தெரிவித்தனர். வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்
`தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான்'திமுக மாவட்ட செயலாளரின் வாக்குறுதி; குழப்பத்தில் நிர்வாகிகள்!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி, எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற பல முன்னெடுப்புகளை செய்கிறார்கள். வெற்றியை குறி வைத்து வியூகங்கள் வகுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் எட்டு தொகுதிகளையும் கைபற்ற திமுக தலைமை முனைப்பு காட்டி வருகிறது. மேயர் சண்.இராமநாதன் வீட்டின் சுவற்றில் ஸ்டாலின், உதயநிதி சிற்பம் திமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சீட் கேட்டு காய் நகர்த்துகின்றனர். திமுக தலைமை யாருக்கு சீட் என்பதை இறுதி செய்யும் போது மாவட்ட செயலாளரின் பரிந்துரையும் முக்கியம் என்பதால் எம்.எல்.ஏ-வும், மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரனை வேட்பாளர் ரேஸில் இருப்பவர்கள் மொய்க்கின்றனர். அவரும் உனக்கு தான் சீட்னு ஒவ்வொருவரிடத்திலும் சொல்லி குஷி படுத்தி வருகிறாராம். இதனால் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது தெரியாமல் சஸ்பென்ஸ் நீடிப்பதால் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், `தஞ்சாவூர் தொகுதியில் திமுக-வில் போட்டியிடுவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் பலரும் முட்டி மோதி வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிட்ட டி.கே.ஜி. நீலமேகம் கிட்டதட்ட 45,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை வீழ்த்தினார். இந்த முறை அதிமுக-வில் என்.எஸ்.சரவணன் தான் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டது என்கிறார்கள். சரவணனும் தொகுதிக்குள் வலம் வருவதுடன் சத்தமில்லாமல் பிரச்சாரமும் செய்து வருகிறார். தஞ்சாவூர், திமுக-விற்கு சாதகமான தொகுதி என பேசப்படுவதால் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை செய்தால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர் கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று தொகுதிக்குள் பம்பரமாக சுழல்கிறார். நடிகர் துரை.சுதாகர் தஞ்சாவூர் தொகுதியை திமுக-வின் கோட்டை என்கிறார்கள், அந்த கோட்டையில் 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதையே தனக்கான பாசிட்டிவ் பாயிண்டாக எடுத்து கொண்டு களம் காண காத்திருக்கிறார் அதிமுக சரவணன். திமுக-வை பொறுத்தவரை மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பெரிய பட்டாளமே ரேஸில் உள்ளது. தொடக்கத்தில் இருந்தே மேயர் சண்.இராமநாதன் பெயர் பலமாக அடிப்பட்டது. தன்னுடைய வீட்டின் மாடியில் கட்சிக்கான அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார். அந்த அறையின் சுவற்றில் கருங்கல்லால் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உருவத்தை செதுக்கி பொருத்தியுள்ளார். இதை பாத்து வியந்த பலரும் அவரை பாராட்ட, தலைமுறைகளை கடந்தும் என் வீட்டில் இந்த சுவர் சிற்பம் இருக்கும், ராஜாஸ்தானில் இருந்து ஒரே கருங்கல்லை வாங்கி வந்து சிரத்தை எடுத்து இதை செய்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரும் என் தலைமுறைகளை கடந்தும் எங்களுக்கு தலைவர்கள் என்றாராம். தான் கட்சிக்கான விசுவாசி என்பதை உணர்த்துவதற்காக இராமாநாதன் இதை செய்துள்ளார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி நடிகர் துரை.சுதாகர் பண பலம் படைத்தவர் செலவுக்கு தயங்காதவர். நன்கொடைனு யார் கேட்டாலும் முகழ் சுழிக்காமல் செய்யக்கூடியவர். தனக்கு ஒரு பெயர், கூட்டத்துடன் வலம் வரக்கூடியவர். சினிமா தொடர்பு அதிகம். நடிகர், தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் தொகுதிக்குள் வலம் வரும் தனக்கு நெருக்கமான மேலிட வட்டம் மூலம் சீட்டுக்கு காய் நகர்த்துகிறார். சுதாகருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பேசுகின்றனர். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தஞ்சையில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் கவனம் பெற்றுள்ளார். இம்முறை தன்னை தலைவர் ஸ்டாலின் கைவிட மாட்டார் என்பது மட்டுமே அவரது நம்பிக்கை. பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்! செந்தமிழ்செல்வன் தஞ்சாவூரில் அடையாளமான குடும்பத்தை சேர்ந்தவர். துரை.சந்திரசேகரினின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். துரை.சந்திரசேகரன் பரிந்துரை இவருக்கு இருக்கும் என்கிறார்கள். இப்படியாக பலரும் சீட்டை முன் வைத்தே ஒவ்வொரு வைத்து முன்னெடுப்பை செய்கின்றனர். இதில் சண்.இராமநாதன், துரை.சுதாகர், செந்தமிழ்செல்வன் ஆகியோர் தனி தனியாக சந்திரசேகரனுடன் காரில் அவ்வப்போது ஒன்றாக செல்லும் போது உனக்கு தான் சீட் என்கிறாராம். இப்படி ஒவ்வொருவரிடத்திலும் சொல்ல அவர்கள் தனக்கு தான் சீட் என்கிற நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள். ஆதரவாளர்களுடன் தனியாக இருக்கும் போது ஒவ்வொருவரிடத்திலும் இதை சொல்ல அந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்து விட்டது. இப்பவும் யாருக்கு சீட் கிடைக்கும் என்கிற சஸ்பென்ஸ் நீள்கிறது. இதனால் கட்சியினரும் குழப்பத்தில் உள்ளதாக' தெரிவித்தனர். வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்
நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே மதுரையில் நேற்று (பிப்.13) திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆட்சியில் பங்கு கிடையாது என காங்கிரஸுக்கு மீண்டும் தெரிவித்திருந்தார். ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நாங்கள் காங்கிரஸிடம் நிலைமையை சொல்கிறோம். நாம் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தான் நல்லது என்று சொல்கிறோம். அவ்வளவு தான் சொல்கிறோமே தவிர கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. ஆட்சியில் பங்கு கிடையாது என்று முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார். 93 இடம் தான் கலைஞர் வைத்திருந்தார், ஆனால் அப்போது ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி இப்போது கொடுக்க முடியும். 150-ல் இருந்து 160 தொகுதியில் உதயசூரியன் ஜெயிக்கும். நீங்கள் பாருங்கள். 170 தொகுதியில் நிப்போம், 150 தொகுதியில் இருந்து 160 தொகுதி வரை ஜெயிப்போம். உதயசூரியன் ஜெயிக்கும்” என்று பேசியிருந்தார். மாணிக்கம் தாகூர் இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 2021-ல் 173 -ல் போட்டியிட்டு 133 வெற்றி.. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில் 40 இடங்களை கேட்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
Vijay : தவெக vs சேகர் பாபு vs தவெக; துறைமுகம் தொகுதியின் முக்கோண மோதல்!
கடந்த வாரத்தில் துறைமுகம் தொகுதியில் திமுகவினருக்கும் தவெகவினற்கும் இடையே நடந்த மோதலின் சூடு இன்னமும் அந்தப் பகுதியில் தணியவில்லை. களமிறங்கி விசாரித்ததில் நமக்கும் தொகுதிக்குள் நிலவும் முக்கோண மோதல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது. தாக்குதல் நடந்த அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள் பிப்ரவரி 10 ஆம் தேதி தவெகவை சார்ந்த சிலர் துறைமுகம் தொகுதியின் 60 வது வார்டில் உள்ள அங்கப்பன் நாயக்கர் தெருவில் 2026 தேர்தல் சார்ந்த கருத்துக்கணிப்புகளை எடுக்க சென்றிருக்கின்றனர். அந்த சமயத்தில் அங்கே திமுக மற்றும் தவெகவினரிடையே மோதல் ஏற்படவே காவல்துறையினர் விரைந்து வந்து இருதரப்பையும் சமாதானம் செய்திருக்கின்றனர். இதில் திமுகவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி தவெகவை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உட்பட 6 ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை பார்க்க வந்த தவெகவின் முக்கிய நிர்வாகிகளான சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா போன்றோர் 'துறைமுகம் அமைச்சர் சேகர்பாபுவின் தொகுதி என்பதால் அவர்தான் ரவுடிகளை ஏவிவிட்டு தவெகவினரை தாக்கியிருக்கிறார்' எனக் குற்றஞ்சாட்டினர். 'இது ஒரு அராஜகத் தாக்குதல். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது' என தவெக தலைவர் விஜய்யும் ட்வீட் செய்திருந்தார். அமைச்சர் சேகர் பாபு திமுகவின் 60 வார்டு வட்டச் செயலாளர் கவியரசு மீதுதான் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவரை தொடர்புகொண்டு பேசினோம். 'தவெகவினர்தான் லோக்கல் காவல்துறையினுடைய அனுமதி கூட வாங்காமல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் எங்கள் பகுதி மக்களை மிரட்டியிருக்கின்றனர். கருத்துக்கணிப்பு எடுப்பவர்கள் எதற்கு கட்சித்துண்டை போட்டுக் கொண்டு வர வேண்டும்? தவெகவுக்கு ஓட்டு போடுவீர்களா மாட்டீர்களா என அதட்டும் தொனியில் எங்கள் பகுதி மக்களிடம் கேட்டிருக்கின்றனர். நிலைமை தீவிரமடைகையில்தான் பகுதி மக்கள் எனக்கு போன் செய்தனர். நானும் அமைச்சர் சேகர் பாபுவும் ஸ்பாட்டிலேயே இல்லை. ஒரு முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தோம். அங்கிருந்து முதலில் காவல்துறைக்குதான் தொடர்புகொண்டோம். அதற்குள் தவெகவினர் வெளியிலிருந்து ஆட்களை திரட்டி வன்முறையில் இறங்கிவிட்டனர். இதில் பாதிக்கப்பட்டது எங்கள் பகுதி மக்கள்தான். சேகர் பாபு அண்ணன் சொல்லி நாங்கள் தவெகவினரை தாக்கினோம் என்பதில் துளி கூட உண்மையில்லை. அவர்கள் தாக்கியதில்தான் எங்கள் பகுதி மக்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்' என்றார். சென்னை - சேகர் பாபு திமுகவினர் எங்களை தாக்கியது உண்மைதான். ஆனால், இந்த விவகாரத்தை திமுக Vs தவெக என்று மட்டும் பார்க்க முடியாது. இதற்கு கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலும் ஒரு முக்கிய காரணம்' என வேறொரு கோணத்தில் இந்தப் பிரச்னையைப் பற்றி விளக்கினர் லோக்கல் தவெகவினர். 'தொகுதிக்குள் சேகர்பாபுவின் ஆட்களால் எங்களுக்கு பிரச்னை இருப்பது உண்மைதான். தொகுதியில் உள்ள 6 வார்டுகளில் 19 கொடிக்கம்பங்களை நட்டிருந்தோம். அந்த கொடிக்கம்பம் நட இடம் கொடுத்தவர்களையெல்லாம் மிரட்டி திமுகவில் இணைய சொல்கிறார்கள். ஒரு தெருமுனை கூட்டத்தை கூட முறையாக நடத்த முடியவில்லை. காவல்துறையினர் எக்கச்சக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ஆனால், இந்த மோதல் கொஞ்சம் வித்தியாசமானது. கட்சிக்குள் இப்போது வரை 132 மா.செக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், முக்கியமான துறைமுகம் தொகுதிக்கு இன்னமும் மா.செ நியமிக்கப்படவே இல்லை. மூன்று கோஷ்டியினர் மா.செ பதவிக்காக அடித்துக் கொண்டிருக்கிறது. T. ராஜேஷ் மக்கள் இயக்கத்திலிருந்து நீண்ட காலமாக தளபதியோடு பயணிப்பவர். அவரும் மா.செ பதவி வேண்டும் என்கிறார். இன்னொரு ராஜேஷ் இருக்கிறார். அவரும் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். மூன்றாவதாக அட்வகேட் விஜயகுமார். இவர்தான் கடைசியாக தொகுதிக்குள் வந்தார். இவர் மா.செ + எம்.எல்.ஏ டிக்கெட் என இரண்டையும் எதிர்பார்க்கிறார். T. ராஜேஷ் இவர் வெளியாள் என்பதால் தொகுதிக்குள் பெரியளவில் ஆதரவு இல்லை. தனக்கு ஆதரவு இருப்பதைப் போல காட்டிக் கொள்ள ஒரு சிலரை சேர்த்துக் கொண்டு சர்வே என்ற பெயரில் வீடியோ போட்டு தன்னை பிரபலப்படுத்திக் கொள்கிறார். தொகுதிக்குள் பல வருடமாக வேலை பார்த்து வைத்திருக்கும் நிர்வாகிகள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தாமாக இப்படியான சுய விளம்பர வேலைகளில் இறங்கியதுதான் பிரச்னையே. இதற்கு முன்னரும் அவர் பல தடவை சர்வே எடுக்கிறேன் என போய் பிரச்னை ஆகியிருக்கிறது. இந்த முறைதான் வெளியில் தெரிகிறது. எங்களுக்கு அவர் மேல் உடன்பாடு இல்லையென்றாலும் தவெக பெயரை சொல்லி சென்றவருக்கு அடி விழுந்ததால் நாங்களும் மருத்துவமனைக்கு சென்று அவர்களுடன் நின்றோம். தலைமை திமுகவினரின் தாக்குதலுக்கு உடனடியாக ரியாக்ட் செய்ததிலும் மகிழ்ச்சிதான். ஆனால், தொகுதிக்குள் உண்மையான பிரச்னை என்னவென்பதை தலைமை உணர வேண்டும். தேர்தல் அறிவிப்பு 2-3 வாரங்கள்தான் இருக்கிறது. இன்னமும் தொகுதிக்கு மா.செவை நியமிக்கவில்லை. சேகர் பாபு தொகுதியில் கட்சி கட்டமைப்பே இல்லாமல் எப்படி வேலை செய்ய முடியும்? இப்போதே ஒவ்வொரு கோஷ்டியும் ஒவ்வொரு பக்கம் வேலை செய்து நெகட்டிவாகிறது. M.Rajesh தேர்தலின் போதும் இப்படி கோஷ்டியாகவே பிரிந்து நின்றால் எப்படி வேலை செய்ய முடியும்? பிரச்னை வீதிக்கு வந்த பிறகும் தலைமை நிர்வாகிகளை நியமிக்காமல் தாமதப்படுத்துவதில் வருத்தமே' என்கின்றனர் துறைமுக தவெக தொண்டர்கள் சிலர். சர்வே எடுக்க ஆட்களை கூட்டி சென்ற தவெக நிர்வாகி அட்வகேட் விஜயகுமாரிடம் பேசினேன். '20 நாட்களாக சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறேன். தொகுதிக்குள் தவெகவுக்கு இருக்கு பெரும் செல்வாக்கை திமுகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திட்டமிட்டு 100 ரவுடிகளை இறக்கி எங்களை தாக்கினார்கள். கட்சி விவகாரத்தைப் பொறுத்தவரை தலைமை சொல்லாமல் நான் எப்படி தேர்தல் வேலைகளை செய்ய முடியும்? தலைமைதான் மா.செ பதவியும் தொகுதியும் எனக்குதான் என்பதை உறுதியளித்து வேலை பார்க்க சொல்லியிருக்கிறது. அட்வகேட் விஜயகுமார் நீங்கள் சொல்லும் அந்த இரண்டு ராஜேஷ் மீதும் நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது. கட்சிக்குள் கமிட்டி அமைத்து விசாரிக்கப்பட்டு அந்த கமிட்டியே அவர்களை எனக்கு ஒத்துழைப்பு வழங்க சொல்லியிருக்கிறது' என்கிறார். 'திமுகவினர் தவெகவினரை தாக்கியதுதான் இங்கே பிரச்னை. ரவுடிகளை இறக்கி கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மற்றபடி எல்லா கட்சியிலும் இருக்கும் சின்னச்சின்ன மனமாச்சரியங்கள் இங்கேயும் இருக்கலாம். அதெல்லாம் சரியாகிவிடும்' என்கிறார் தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். திமுகவினருக்கும் தவெகவினருக்கும் சண்டை என நினைத்து துறைமுகம் தொகுதிக்குள் காதை கொடுத்தால், 'தவெக vs தவெக' என புதிய கதை ஓப்பன் ஆகிறது. 'கோஷ்டி பூசலுக்கு முடிவு கட்டவில்லையெனில் துறைமுகம் தொகுதியை மறந்துவிட வேண்டியதுதான்' என்கிற லோக்கல் தவெகவினரின் குரல் தலைமைக்கு கேட்குமா?.
ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் - வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்
இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம். காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் நான்கு போட்டோக்களைப் பகிர்ந்து 'உங்களுக்காக' என்று பதிவிட்டுள்ளது. இங்கு 'உங்களுக்காக' என்று தெரிவித்திருப்பது ட்ரம்பை தான். வெள்ளை மாளிகை 'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained முதல் போட்டோவில், வெனிசுலா அதிபர் மதுரோ கைதுப் போட்டோவைப் பகிர்ந்து, 'நீங்கள் எனது இதயத்தைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்' என்றும்... இரண்டாவது போட்டோவில், ட்ரம்ப் கையெழுத்திட்ட 4547-வது நிர்வாக ஆணையைப் பகிர்ந்து, 'நீங்கள் என் காதலர்' என்றும்... மூன்றாவது போட்டோவில், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய வெளிநாட்டினரை ட்ரம்ப் வெளியேற்றியது குறித்து, 'ஜனநாயக கட்சியினருக்கு சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் மீது எத்தனை காதலோ, உங்கள் மீது அத்தனை காதல்' என்றும்... நான்காவது போட்டோவில், கிரீன்லேண்டை இதய வடிவில் உருவகப்படுத்தியும்... - பதிவிட்டிருக்கிறது. இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained 4547-வது நிர்வாக ஆணை என்பது 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்கு 1,000 டாலர்கள் வழங்கப்படுகிறது. PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to Made just for you pic.twitter.com/DhSgnGK1M6 — The White House (@WhiteHouse) February 14, 2026
ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் - வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்
இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம். காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் நான்கு போட்டோக்களைப் பகிர்ந்து 'உங்களுக்காக' என்று பதிவிட்டுள்ளது. இங்கு 'உங்களுக்காக' என்று தெரிவித்திருப்பது ட்ரம்பை தான். வெள்ளை மாளிகை 'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained முதல் போட்டோவில், வெனிசுலா அதிபர் மதுரோ கைதுப் போட்டோவைப் பகிர்ந்து, 'நீங்கள் எனது இதயத்தைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்' என்றும்... இரண்டாவது போட்டோவில், ட்ரம்ப் கையெழுத்திட்ட 4547-வது நிர்வாக ஆணையைப் பகிர்ந்து, 'நீங்கள் என் காதலர்' என்றும்... மூன்றாவது போட்டோவில், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய வெளிநாட்டினரை ட்ரம்ப் வெளியேற்றியது குறித்து, 'ஜனநாயக கட்சியினருக்கு சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் மீது எத்தனை காதலோ, உங்கள் மீது அத்தனை காதல்' என்றும்... நான்காவது போட்டோவில், கிரீன்லேண்டை இதய வடிவில் உருவகப்படுத்தியும்... - பதிவிட்டிருக்கிறது. இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained 4547-வது நிர்வாக ஆணை என்பது 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்கு 1,000 டாலர்கள் வழங்கப்படுகிறது. PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to Made just for you pic.twitter.com/DhSgnGK1M6 — The White House (@WhiteHouse) February 14, 2026
புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா! - கூட்டணிக்கு இழுத்தடிக்கும் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதனடிப்படையில் நேற்று திருச்சிக்கு வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று காரைக்காலுக்கு வருகிறார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்கும் அமித் ஷா, அங்கிருந்து கார் மூலம் நகராட்சி திடலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முதல்வர் ரங்கசாமி அதன்பிறகு திருநள்ளாறு சாலையிலுள்ள தனியார் விடுதியில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை சந்தித்துவிட்டு முதல்வர் ரங்கசாமியை சந்திக்கிறார். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டணியை இறுதி செய்யாமல் இழுத்தடித்து வரும் ரங்கசாமியிடம், அவரது கோரிக்கைகளையும், கருத்துகளையும் கேட்கிறார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அமித் ஷா வருகையையொட்டி ஏழு பட்டாலியன் துணை ராணுவப் படையினருடன், சுமார் 700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!
புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா! - கூட்டணிக்கு இழுத்தடிக்கும் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதனடிப்படையில் நேற்று திருச்சிக்கு வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று காரைக்காலுக்கு வருகிறார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்கும் அமித் ஷா, அங்கிருந்து கார் மூலம் நகராட்சி திடலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முதல்வர் ரங்கசாமி அதன்பிறகு திருநள்ளாறு சாலையிலுள்ள தனியார் விடுதியில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை சந்தித்துவிட்டு முதல்வர் ரங்கசாமியை சந்திக்கிறார். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டணியை இறுதி செய்யாமல் இழுத்தடித்து வரும் ரங்கசாமியிடம், அவரது கோரிக்கைகளையும், கருத்துகளையும் கேட்கிறார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அமித் ஷா வருகையையொட்டி ஏழு பட்டாலியன் துணை ராணுவப் படையினருடன், சுமார் 700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!
July Charter 2025: இனி பிரதமருக்கு அனைத்திற்கும் 'செக்' - புதிதாக உருமாறும் வங்கதேசம்!
நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) வங்கதேசம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வங்கதேசத்தில் மொத்தம் 300 தொகுதிகள் உள்ளன. ஆனால், 12-ம் தேதி 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 210 தொகுதிகளை வென்றுள்ளது வங்கதேச தேசிய கட்சியின் கீழ் அமைந்த கூட்டணி. ஆக, வங்கதேசத்தின் அடுத்த பிரதமர் வங்கதேச தேசிய கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கதேசத்தில் பிரதமராக பதவியேற்கும் முதல் ஆண் பிரதமர் இவர். தாரிக் ரஹ்மான் இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained வங்கதேசத்தில் கடந்த 12-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மட்டும் நடைபெறவில்லை... ' ஜூலை தேசிய சாசனம் 2025 (July National Charter, 2025) '-க்கான தேசிய வாக்கெடுப்பும் நடந்தது. இந்தத் தேசிய வாக்கெடுப்பிற்கு 60.26 சதவிகித மக்கள் சாதகமாக வாக்களித்துள்ளனர். அது என்ன 'ஜூலை தேசிய சாசனம் 2025'? இது வங்கதேசத்தின் ஆட்சி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றுவதற்கான புதிய சாசனம் ஆகும். இந்த சாசனத்தில் தேசிய கட்டமைப்பை மாற்றுவதற்கான 84 புள்ளிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சாசனத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் இதோ... > நீண்ட காலமாக ஒரே பிரதமர் நாட்டை ஆள்வதற்கு செக் வைக்கும் விதமாக, இனி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பிரதமர் ஆகலாம். > புதிதாக 100 மேல் சபை சீட்டுகள் உருவாக்கப்படும். இந்தச் சீட்டுகள் தேசிய வாக்குகளின் பங்கைப் பொறுத்து பிரித்துக்கொடுக்கப்படும். > பிரதமரிடம் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிவதைத் தடுக்க, ஜனாதிபதியின் அதிகாரம் வலுப்படுத்தப்பட உள்ளது. > நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு சார்ந்த அமைப்புகளில் அரசியல் செல்வாக்கு குறைக்கப்பட உள்ளது. > எதிர்க்கட்சிகளுக்கு உரிய அதிகாரம் கொடுத்தல் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு துணை சபா நாயகர் பதவி வழங்கப்படும். > நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட உள்ளது. PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to
July Charter 2025: இனி பிரதமருக்கு அனைத்திற்கும் 'செக்' - புதிதாக உருமாறும் வங்கதேசம்!
நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) வங்கதேசம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வங்கதேசத்தில் மொத்தம் 300 தொகுதிகள் உள்ளன. ஆனால், 12-ம் தேதி 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 210 தொகுதிகளை வென்றுள்ளது வங்கதேச தேசிய கட்சியின் கீழ் அமைந்த கூட்டணி. ஆக, வங்கதேசத்தின் அடுத்த பிரதமர் வங்கதேச தேசிய கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கதேசத்தில் பிரதமராக பதவியேற்கும் முதல் ஆண் பிரதமர் இவர். தாரிக் ரஹ்மான் இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained வங்கதேசத்தில் கடந்த 12-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மட்டும் நடைபெறவில்லை... ' ஜூலை தேசிய சாசனம் 2025 (July National Charter, 2025) '-க்கான தேசிய வாக்கெடுப்பும் நடந்தது. இந்தத் தேசிய வாக்கெடுப்பிற்கு 60.26 சதவிகித மக்கள் சாதகமாக வாக்களித்துள்ளனர். அது என்ன 'ஜூலை தேசிய சாசனம் 2025'? இது வங்கதேசத்தின் ஆட்சி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றுவதற்கான புதிய சாசனம் ஆகும். இந்த சாசனத்தில் தேசிய கட்டமைப்பை மாற்றுவதற்கான 84 புள்ளிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சாசனத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் இதோ... > நீண்ட காலமாக ஒரே பிரதமர் நாட்டை ஆள்வதற்கு செக் வைக்கும் விதமாக, இனி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பிரதமர் ஆகலாம். > புதிதாக 100 மேல் சபை சீட்டுகள் உருவாக்கப்படும். இந்தச் சீட்டுகள் தேசிய வாக்குகளின் பங்கைப் பொறுத்து பிரித்துக்கொடுக்கப்படும். > பிரதமரிடம் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிவதைத் தடுக்க, ஜனாதிபதியின் அதிகாரம் வலுப்படுத்தப்பட உள்ளது. > நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு சார்ந்த அமைப்புகளில் அரசியல் செல்வாக்கு குறைக்கப்பட உள்ளது. > எதிர்க்கட்சிகளுக்கு உரிய அதிகாரம் கொடுத்தல் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு துணை சபா நாயகர் பதவி வழங்கப்படும். > நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட உள்ளது. PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to
விஜய்யை விமர்சிக்க நடிகையின் பெயர்: `அவதூறு பேசுவது அழகல்ல'- நயினாரை கண்டித்த தமிழச்சி தங்கபாண்டியன்
சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய தவெக தலைவர் விஜய், ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை. கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். தவெக விஜய் இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரனிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், பாவம்..விஜய் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டை விட்டு அவர் வெளியில் வர வேண்டும். (ஒரு பெயரை சொல்லி)நடிகையிடம் இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும். நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கங்கள் பற்றி நல்லதாக அவர் பேச வேண்டும் என்று நடிகையின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். நயினாரின் இந்த விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. நயினார் நாகேந்திரன் அந்தவகையில் எம்.பி தமிழச்சி தங்கப் பாண்டியன் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்கிறது. ஆனால், அந்த அஸ்திரத்தை லாகவமாக எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய காங்கிரஸோ, கூட்டணியை சிதைக்கும் வேலைகளை கச்சிதமாக செய்துவருவதாக கொதிக்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்! பிரதமர் மோடி “2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கணிசமான வாக்கு சதவிகிதத்தை பா.ஜ.க பெற்றிருந்தாலும் அதனால் எந்தவித பயனும் இல்லை எனக் கருதியது டெல்லி பா.ஜ.க. அதனாலேயே 2026 ஏப்ரலில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, 2025 ஏப்ரல் 9-ம் தேதியே அ.தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதிசெய்தார் அமித் ஷா. மத்தியிலும் 16 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும்கூட அ.தி.மு.க கூட்டணியை வலுப்படுத்த கூட்டணி பேச்சுவார்த்தை, ராஜ்ய சபா ஆஃபர், கணிசமான ஸ்வீட் பாக்ஸ் என்று வாடிவாசலில் நின்று ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களைப் போல் சாதுர்யமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ சாணக்கியத்தனமாக இல்லாமல் ஆளும் கூட்டணி தலைமையான தி.மு.க-வை சீண்டிப் பார்க்கிறது” என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 10 எம்.பி-க்களையும், 17 எம்.எல்.ஏ-க்களையும் பெற்றிருக்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் வலிமைக்கும் கள செயல்பாடுகளுக்கும் இந்த எண்ணிக்கை சற்று அதிகம் என்பதே சக கூட்டணிக் கட்சியினரின் கருத்து. கட்சியை வலுப்படுத்தும் வேலையை செய்யாமல் கூடுதல் சீட், அதிகாரப் பகிர்வு என்று கம்பு சுற்றும் சில காங்கிரஸ் புள்ளிகள், தி.மு.க கூட்டணியை முறித்துக் கொண்டு த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்துவிட தீயாய் வேலை செய்துவருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சொல்லப்போனால், இந்தியாவிலேயே சமரசங்களின்றி பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் மாநிலக் கட்சிகளில் தி.மு.க முதன்மையானது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க சக இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் தயங்கின. ஆனால் முதல் ஆளாக ஏற்றுக்கொண்டது தி.மு.க-தான். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்’ என பா.ஜ.க ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையிலும் தங்கள் கூட்டணியில் காங்கிரஸை வைத்திருக்கிறது தி.மு.க. ஆனாலும், நேற்றைக்கு வந்த த.வெ.க-வுடன் கூட்டணிக்குப் போக வேண்டும் என ஆலோசனை நடத்திவருகிறார்கள். அது சாத்தியப்படுமானால், அதனால் பயனடையப் போவது என்.டி.ஏ கூட்டணிதான்” என பகீர் கிளப்பினர். த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா? கூட்டணி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸின் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இல்லாமல் பா.ஜ.க-வுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை நேரடியாகப் பார்த்தும் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி குறித்து ஆலோசிக்கிறது காங்கிரஸ் தலைமை. அதிலும் கட்சி ஆரம்பித்ததிலிருந்து பா.ஜ.க-வை கண்டித்து தெருமுனைக் கூட்டம்கூட நடத்தாத விஜய்யை நம்பி கூட்டணிக்குப் போக முடியுமா? மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைவித்த திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய்திறந்தாரா? மத்தியிலும் மாநிலத்திலும் பட்டியலின தலைவர்களை கொண்டிருக்கும் காங்கிரஸ், ஆணவக் கொலை விவகாரத்தில் நழுவிய த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா? விஜய் டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்? அவ்வளவு ஏன்... கரூர் விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு மாறியபோது ‘நீதி வென்றது’ என்றார் விஜய். `ஜனநாயகன்’ படத்தை பா.ஜ.க முடக்கி வைத்திருக்கும் சூழலில் பா.ஜ.க-வை கண்டிக்காமல், அதற்கு ராகுல் காந்தி குரல் கொடுத்தபோதும் நன்றிகூட சொல்ல பயந்த விஜய்யுடன் கைகோத்து பாசிசத்தை காங்கிரஸ் வீழ்த்தப் போகிறதா.. மறுபக்கம், ‘த.வெ.க-வுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது’ என்ற சர்வேக்களை நம்பி தி.மு.க கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியே போனால் தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த இஸ்லாமிய, பட்டியலின வாக்குகள் காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணிக்கு கணிசமாகப் பிரியும். அப்படிப் பிரிந்தால் என்.டி.ஏ கூட்டணிக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். அதை டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்.. ஆக, ‘நாமளும் தோற்கணும்.. தி.மு.க-வும் தோற்கணும்’ என்ற காங்கிரஸின் விநோத கணக்கு புரியாத புதிராகவே இருக்கிறது” என்றனர். ராகுல் காந்தியும்தான் பொறுப்பு! நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “பா.ஜ.க-வை வீழ்த்துவது தி.மு.க-வின் வேலை என்ற மனநிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. தி.மு.க கூட்டணியில் நிலவும் பிரச்னைக்கு ராகுல் காந்தியும்தான் பொறுப்பு. தி.மு.க உதவி இல்லாமல் ராகுல் காந்தி கூட்டத்துக்கு காங்கிரஸால் ஆள் திரட்ட முடியாத நிலைதான் அக்கட்சி உள்ளது” என்றார். கோபண்ணா இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்! காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். “பாசிச பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற புள்ளியில் ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினும் மிகத் தெளிவாக இருப்பதால்தான் நீண்டகாலமாக தி.மு.க-வும் காங்கிரஸும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதை புரிந்துகொள்ளாத ஒருசிலர் கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிவருகிறார்கள். அவர்கள் பேச்சுகள் இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்” என்றார். “ராகுல் காந்திக்கு ஆதரவாக, ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறாரா விஜய்?” - கேட்கிறார் ஆளூர் ஷாநவாஸ்!
பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்கிறது. ஆனால், அந்த அஸ்திரத்தை லாகவமாக எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய காங்கிரஸோ, கூட்டணியை சிதைக்கும் வேலைகளை கச்சிதமாக செய்துவருவதாக கொதிக்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்! பிரதமர் மோடி “2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கணிசமான வாக்கு சதவிகிதத்தை பா.ஜ.க பெற்றிருந்தாலும் அதனால் எந்தவித பயனும் இல்லை எனக் கருதியது டெல்லி பா.ஜ.க. அதனாலேயே 2026 ஏப்ரலில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, 2025 ஏப்ரல் 9-ம் தேதியே அ.தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதிசெய்தார் அமித் ஷா. மத்தியிலும் 16 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும்கூட அ.தி.மு.க கூட்டணியை வலுப்படுத்த கூட்டணி பேச்சுவார்த்தை, ராஜ்ய சபா ஆஃபர், கணிசமான ஸ்வீட் பாக்ஸ் என்று வாடிவாசலில் நின்று ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களைப் போல் சாதுர்யமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ சாணக்கியத்தனமாக இல்லாமல் ஆளும் கூட்டணி தலைமையான தி.மு.க-வை சீண்டிப் பார்க்கிறது” என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 10 எம்.பி-க்களையும், 17 எம்.எல்.ஏ-க்களையும் பெற்றிருக்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் வலிமைக்கும் கள செயல்பாடுகளுக்கும் இந்த எண்ணிக்கை சற்று அதிகம் என்பதே சக கூட்டணிக் கட்சியினரின் கருத்து. கட்சியை வலுப்படுத்தும் வேலையை செய்யாமல் கூடுதல் சீட், அதிகாரப் பகிர்வு என்று கம்பு சுற்றும் சில காங்கிரஸ் புள்ளிகள், தி.மு.க கூட்டணியை முறித்துக் கொண்டு த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்துவிட தீயாய் வேலை செய்துவருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சொல்லப்போனால், இந்தியாவிலேயே சமரசங்களின்றி பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் மாநிலக் கட்சிகளில் தி.மு.க முதன்மையானது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க சக இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் தயங்கின. ஆனால் முதல் ஆளாக ஏற்றுக்கொண்டது தி.மு.க-தான். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்’ என பா.ஜ.க ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையிலும் தங்கள் கூட்டணியில் காங்கிரஸை வைத்திருக்கிறது தி.மு.க. ஆனாலும், நேற்றைக்கு வந்த த.வெ.க-வுடன் கூட்டணிக்குப் போக வேண்டும் என ஆலோசனை நடத்திவருகிறார்கள். அது சாத்தியப்படுமானால், அதனால் பயனடையப் போவது என்.டி.ஏ கூட்டணிதான்” என பகீர் கிளப்பினர். த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா? கூட்டணி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸின் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இல்லாமல் பா.ஜ.க-வுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை நேரடியாகப் பார்த்தும் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி குறித்து ஆலோசிக்கிறது காங்கிரஸ் தலைமை. அதிலும் கட்சி ஆரம்பித்ததிலிருந்து பா.ஜ.க-வை கண்டித்து தெருமுனைக் கூட்டம்கூட நடத்தாத விஜய்யை நம்பி கூட்டணிக்குப் போக முடியுமா? மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைவித்த திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய்திறந்தாரா? மத்தியிலும் மாநிலத்திலும் பட்டியலின தலைவர்களை கொண்டிருக்கும் காங்கிரஸ், ஆணவக் கொலை விவகாரத்தில் நழுவிய த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா? விஜய் டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்? அவ்வளவு ஏன்... கரூர் விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு மாறியபோது ‘நீதி வென்றது’ என்றார் விஜய். `ஜனநாயகன்’ படத்தை பா.ஜ.க முடக்கி வைத்திருக்கும் சூழலில் பா.ஜ.க-வை கண்டிக்காமல், அதற்கு ராகுல் காந்தி குரல் கொடுத்தபோதும் நன்றிகூட சொல்ல பயந்த விஜய்யுடன் கைகோத்து பாசிசத்தை காங்கிரஸ் வீழ்த்தப் போகிறதா.. மறுபக்கம், ‘த.வெ.க-வுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது’ என்ற சர்வேக்களை நம்பி தி.மு.க கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியே போனால் தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த இஸ்லாமிய, பட்டியலின வாக்குகள் காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணிக்கு கணிசமாகப் பிரியும். அப்படிப் பிரிந்தால் என்.டி.ஏ கூட்டணிக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். அதை டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்.. ஆக, ‘நாமளும் தோற்கணும்.. தி.மு.க-வும் தோற்கணும்’ என்ற காங்கிரஸின் விநோத கணக்கு புரியாத புதிராகவே இருக்கிறது” என்றனர். ராகுல் காந்தியும்தான் பொறுப்பு! நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “பா.ஜ.க-வை வீழ்த்துவது தி.மு.க-வின் வேலை என்ற மனநிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. தி.மு.க கூட்டணியில் நிலவும் பிரச்னைக்கு ராகுல் காந்தியும்தான் பொறுப்பு. தி.மு.க உதவி இல்லாமல் ராகுல் காந்தி கூட்டத்துக்கு காங்கிரஸால் ஆள் திரட்ட முடியாத நிலைதான் அக்கட்சி உள்ளது” என்றார். கோபண்ணா இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்! காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். “பாசிச பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற புள்ளியில் ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினும் மிகத் தெளிவாக இருப்பதால்தான் நீண்டகாலமாக தி.மு.க-வும் காங்கிரஸும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதை புரிந்துகொள்ளாத ஒருசிலர் கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிவருகிறார்கள். அவர்கள் பேச்சுகள் இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்” என்றார். “ராகுல் காந்திக்கு ஆதரவாக, ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறாரா விஜய்?” - கேட்கிறார் ஆளூர் ஷாநவாஸ்!
சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ம.நீ.ம ஆகிய கட்சிகள்! 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்ப்பை காத்திருக்கும் சூழலில் தி.மு.க கூட்டணியில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிவருகிறது காங்கிரஸ் கட்சி. தி.மு.க - காங்கிரஸ் பஞ்சாயத்து ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, தங்களுக்கு தேவையான தொகுதி பட்டியலை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க-வின் இதர கூட்டணிக் கட்சிகள். அதன்படி வேளச்சேரி, மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்டாலின், கமல்ஹாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 33 ஆயிரம் வாக்குகளையும் வேளச்சேரி தொகுதியில் கிட்டதட்ட 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது. ம.நீ.ம-வுக்கு கிடைவுள்ள 2 - 3 தொகுதிகளில் இந்த இரண்டில் ஒரு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதிகாட்டுகிறது. அதேசமயம் மதுரவாயல் தொகுதியை பெற தி.மு.க-வுள்ளேயே இருவர் முட்டி மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி மீண்டும் களமிறங்க விரும்பும் நிலையில், தி.மு.க-வின் ஐடி விங் மாநில நிர்வாகி பத்மபிரியாவும் சீட் எதிர்பார்க்கிறார். மக்கள் நீதி மய்யம் தொகுதியை பெற தீவிரம் காட்டினாலும் தி.மு.க புள்ளிகளுக்குதான் சீட் என்பதே தற்போதைய நிலவரம். திமுக பத்மபிரியா அதேபோல், வேளச்சேரி தொகுதிக்கும் தி.மு.க கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. வி.சி.க வசமுள்ள திருப்போரூர் தொகுதியை தி.மு.க திரும்பப் பெற்றுக் கொண்டால் வேளச்சேரியை கேட்கலாம். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் ஒருவர் சென்னையில் களமிறங்க கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வில் துணை மேயர் மகேஷ் குமார், ராஜ்ய சபா எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் மல்லுக்கட்டி வருகிறார்கள். வேளச்சேரி சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கல்தா என்பதில் மட்டும் சந்தேகமில்லை என்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சென்னையில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. அவர்களது விருப்ப பட்டியலில் மதுரவாயல், பெரம்பூர் தொகுதிகள் இருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். வேளச்சேரி வி.சி.க-வுக்கு கிடைக்கவில்லை என்றால் ஆர்.கே நகர் தொகுதியை கேட்கும் மனநிலையிலும் இருக்கிறார்கள் சிறுத்தைகள். விசிக ஆளூர் ஷாநவாஸ் பொதுவாகவே சென்னை சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க கூட்டணிக் கட்சிகளை விட்டுதருவதில்லை. அதிலும் விஜய்யின் த.வெ.க நகர்பகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தும் என சர்வே முடிவுகள் சொல்வதால் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க-வே களமிறங்கவே வாய்ப்பு. மேலும் தலைநகர் வேட்பாளர்கள் பட்டியலில் கணிசமாக ஜூனியர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் ஆலோசனையில் இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். கூட்டணிக் கட்சிகளை தி.மு.க எப்படி சமாளிக்கப்போகிறதோ? பார்ப்போம்! “கூட்டணி நிச்சயம்... கூடுதல் சீட் லட்சியம்...” வி.சி.க டிமாண்ட்! - ஏற்குமா தி.மு.க?
சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ம.நீ.ம ஆகிய கட்சிகள்! 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்ப்பை காத்திருக்கும் சூழலில் தி.மு.க கூட்டணியில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிவருகிறது காங்கிரஸ் கட்சி. தி.மு.க - காங்கிரஸ் பஞ்சாயத்து ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, தங்களுக்கு தேவையான தொகுதி பட்டியலை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க-வின் இதர கூட்டணிக் கட்சிகள். அதன்படி வேளச்சேரி, மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்டாலின், கமல்ஹாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 33 ஆயிரம் வாக்குகளையும் வேளச்சேரி தொகுதியில் கிட்டதட்ட 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது. ம.நீ.ம-வுக்கு கிடைவுள்ள 2 - 3 தொகுதிகளில் இந்த இரண்டில் ஒரு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதிகாட்டுகிறது. அதேசமயம் மதுரவாயல் தொகுதியை பெற தி.மு.க-வுள்ளேயே இருவர் முட்டி மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி மீண்டும் களமிறங்க விரும்பும் நிலையில், தி.மு.க-வின் ஐடி விங் மாநில நிர்வாகி பத்மபிரியாவும் சீட் எதிர்பார்க்கிறார். மக்கள் நீதி மய்யம் தொகுதியை பெற தீவிரம் காட்டினாலும் தி.மு.க புள்ளிகளுக்குதான் சீட் என்பதே தற்போதைய நிலவரம். திமுக பத்மபிரியா அதேபோல், வேளச்சேரி தொகுதிக்கும் தி.மு.க கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. வி.சி.க வசமுள்ள திருப்போரூர் தொகுதியை தி.மு.க திரும்பப் பெற்றுக் கொண்டால் வேளச்சேரியை கேட்கலாம். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் ஒருவர் சென்னையில் களமிறங்க கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வில் துணை மேயர் மகேஷ் குமார், ராஜ்ய சபா எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் மல்லுக்கட்டி வருகிறார்கள். வேளச்சேரி சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கல்தா என்பதில் மட்டும் சந்தேகமில்லை என்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சென்னையில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. அவர்களது விருப்ப பட்டியலில் மதுரவாயல், பெரம்பூர் தொகுதிகள் இருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். வேளச்சேரி வி.சி.க-வுக்கு கிடைக்கவில்லை என்றால் ஆர்.கே நகர் தொகுதியை கேட்கும் மனநிலையிலும் இருக்கிறார்கள் சிறுத்தைகள். விசிக ஆளூர் ஷாநவாஸ் பொதுவாகவே சென்னை சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க கூட்டணிக் கட்சிகளை விட்டுதருவதில்லை. அதிலும் விஜய்யின் த.வெ.க நகர்பகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தும் என சர்வே முடிவுகள் சொல்வதால் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க-வே களமிறங்கவே வாய்ப்பு. மேலும் தலைநகர் வேட்பாளர்கள் பட்டியலில் கணிசமாக ஜூனியர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் ஆலோசனையில் இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். கூட்டணிக் கட்சிகளை தி.மு.க எப்படி சமாளிக்கப்போகிறதோ? பார்ப்போம்! “கூட்டணி நிச்சயம்... கூடுதல் சீட் லட்சியம்...” வி.சி.க டிமாண்ட்! - ஏற்குமா தி.மு.க?
PM RAHAT: 'இதற்கு'ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to
நேற்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட நான்கு கையெழுத்துகளில் ஒன்று - PM RAHAT (Road Accident Victims Hospitalisation and Assured Treatment) திட்டம். PM RAHAT எதற்கு? இந்த மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கீழ் வரும் திட்டம் ஆகும். விபத்து இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained யாருக்கு? இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அனைவருமே பயன்பெறலாம். பாதிக்கப்பட்டவருக்கு நிதிப் பின்னணி என்னவாக இருந்தாலும், அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவது எப்படி? > விபத்து நடந்த 24 மணிநேரத்திற்குள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY நெட்வொர்க்கின் கீழ் இருக்கும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். > எந்த மருத்துவமனை இந்த நெட்வொர்க்கின் கீழ் வரும் என்பதை தெரிந்துகொள்ள 112 என்கிற தொலைபேசி எண்ணுக்குப் போன்கால் செய்யலாம். > விபத்து குறித்து முதல் 24 மணிநேரத்தில் போலீஸாரிடம் புகாரளித்திருக்க வேண்டும். > பெரும்பாலும், அனுமதிக்கப்படும் மருத்துவமனையே போலீஸாரிடம் இந்த மாதிரியான விபத்துகளைத் தெரிவித்துவிடும். > மருத்துவமனை நிர்வாகமே குறிப்பிட்ட விபத்தை மத்திய போக்குவரத்துத் துறையில் e-DAR ( Electronic Detailed Accident Report)-ல் பதிவு செய்துவிடும். மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை பெற பாதிக்கப்பட்டவர் என்ன ஆவணங்கள் தர வேண்டும்? > அடையாள அட்டை > எஃப்.ஐ.ஆர் > காயம் சம்பந்தமான ஆவணங்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!
PM RAHAT: 'இதற்கு'ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to
நேற்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட நான்கு கையெழுத்துகளில் ஒன்று - PM RAHAT (Road Accident Victims Hospitalisation and Assured Treatment) திட்டம். PM RAHAT எதற்கு? இந்த மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கீழ் வரும் திட்டம் ஆகும். விபத்து இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained யாருக்கு? இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அனைவருமே பயன்பெறலாம். பாதிக்கப்பட்டவருக்கு நிதிப் பின்னணி என்னவாக இருந்தாலும், அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவது எப்படி? > விபத்து நடந்த 24 மணிநேரத்திற்குள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY நெட்வொர்க்கின் கீழ் இருக்கும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். > எந்த மருத்துவமனை இந்த நெட்வொர்க்கின் கீழ் வரும் என்பதை தெரிந்துகொள்ள 112 என்கிற தொலைபேசி எண்ணுக்குப் போன்கால் செய்யலாம். > விபத்து குறித்து முதல் 24 மணிநேரத்தில் போலீஸாரிடம் புகாரளித்திருக்க வேண்டும். > பெரும்பாலும், அனுமதிக்கப்படும் மருத்துவமனையே போலீஸாரிடம் இந்த மாதிரியான விபத்துகளைத் தெரிவித்துவிடும். > மருத்துவமனை நிர்வாகமே குறிப்பிட்ட விபத்தை மத்திய போக்குவரத்துத் துறையில் e-DAR ( Electronic Detailed Accident Report)-ல் பதிவு செய்துவிடும். மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை பெற பாதிக்கப்பட்டவர் என்ன ஆவணங்கள் தர வேண்டும்? > அடையாள அட்டை > எஃப்.ஐ.ஆர் > காயம் சம்பந்தமான ஆவணங்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!
அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?- விஜய்க்கு அதிமுக பதிலடி
சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை. கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். தவெக விஜய் இந்நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் அங்கிள்? அப்பா மூலமா சினிமா உள்ள வந்தீங்க... வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார், புரட்சிக் கலைஞர், ஆகியோரைப் பார்த்து காப்பி பேஸ்ட்.... அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் மரபைத் திருடி, காப்பி பேஸ்ட்... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? எடப்பாடி பழனிசாமி இந்த முதல் காட்சி டிக்கெட்டெல்லாம் ரூ.2000-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 ஆண்டு கொள்ளை அனுபவம் இருக்கு தானே? என்று விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?- விஜய்க்கு அதிமுக பதிலடி
சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை. கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். தவெக விஜய் இந்நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் அங்கிள்? அப்பா மூலமா சினிமா உள்ள வந்தீங்க... வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார், புரட்சிக் கலைஞர், ஆகியோரைப் பார்த்து காப்பி பேஸ்ட்.... அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் மரபைத் திருடி, காப்பி பேஸ்ட்... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? எடப்பாடி பழனிசாமி இந்த முதல் காட்சி டிக்கெட்டெல்லாம் ரூ.2000-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 ஆண்டு கொள்ளை அனுபவம் இருக்கு தானே? என்று விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
? யார் இந்த Jaggi Vasudev? | Seriously! | EP - 12 | Vikatan TV
ஈரோடு மாவட்ட தொகுதிகள் part 2 | ADMK, DMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு?| TN Elections 306 updates
ஈரோடு மாவட்ட தொகுதிகள் part 2 | ADMK, DMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு?| TN Elections 306 updates
இந்தியா மீது திடீர் 'ஐஸ்'மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained
இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி... ஆசிய நாடுகளிலேயே யார் டாப் இடத்தைப் பிடிப்பது என்கிற போட்டி பல தசாப்தங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறன. இதன் விளைவு தான் அடிக்கடி இந்தியா, சீனா இடையே நடக்கும் 'பங்காளி சண்டைகள்'. 2020-ம் ஆண்டு எல்லைப் பிரச்னைக்கு பிறகு இந்தியா, சீனா உறவில் பெரும் விரிசல் உண்டாகியது. இரு நாடுகளும் நேரடி விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு அந்த விரிசல் இருந்தது. பிரிக்ஸ் 'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained பிரிக்ஸ் ஆனால், கடந்த சில மாதங்களாக, இந்த விரிசலின் அளவு குறைந்து, உறவு கூட ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆரம்பம் 'பிரிக்ஸ்' அமைப்பிற்குப் பிரச்னை வந்தப் போது தொடங்கியது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய உலகில் உள்ள தென்னாடுகளின் கூட்டமைப்பு 'பிரிக்ஸ்'. அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் டார்கெட் செய்தவற்றில் 'பிரிக்ஸ்' முக்கியமான ஒன்று. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாணயத்தை உருவாக்க உள்ளது என்று குற்றம் சாட்டினார் ட்ரம்ப். இதனால், பிரிக்ஸ் நாடுகளின் மீது வரி விதிக்க உள்ளதாகவும் அச்சுறுத்தினார். இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகள் தங்களது ஒற்றுமையைக் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதையடுத்து, 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா சென்றார் இந்திய பிரதமர் மோடி. அதன் பிறகு, இரு நாடுகளின் உறவும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்கியதில் இருந்து மெல்ல மெல்ல சுமுக நிலைக்குத் திரும்பி வருகின்றன. ஆனால், திடீரென்று இப்போது இந்தியாவிற்கு ஆதரவாக பேசித் தள்ளுகிறது சீனா. > சீனாவின் நிர்வாக துணை வெளியுறவு அமைச்சர் மா சாவோக்சு. இவர் சமீபத்தில், 'இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்... பகையாளிகள் அல்ல' என்று கருத்து தெரிவித்துள்ளார். > ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இன்னும் உறுப்பு நாடல்ல. ஆனால், சீனா நிரந்தர உறுப்பினர் கடந்த 10-ம் தேதி, 'இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர சீட் பெற நினைப்பதை சீனா மதிக்கிறது... புரிந்துகொள்கிறது' என்று கருத்து தெரிவித்துள்ளது சீனா. மா சாவோக்சு - விக்ரம் மிஸ்ரி சந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் - என்ன காரணம்? இது தொடருமா? > இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குவதை முழுமையாக ஆதரித்துள்ளது சீனா. இவை எல்லாமே 'அட' ரகம் தான். 'இதெல்லாம் பெரிய விஷயமா?' என்று தோன்றலாம். ஆனால், போட்டி நாடான இந்தியாவிற்கு சீனா இதுபோல ஆதரவாகப் பேசுவது பெரிய விஷயமல்ல... மிகப்பெரிய விஷயம். ஆனால், இவற்றால் இந்தியா உடனே குளிர்ந்து போய்விடக் கூடாது. பின்னணி என்ன? 'இதன் பின்னணி என்ன?' என்பதை நிச்சயம் யோசிக்க வேண்டும். ட்ரம்ப்பின் வரியால் ஏற்கெனவே உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு சீனா விதிவிலக்கு அல்ல. இன்னொரு பக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தில் சில சீனப் பொருள்களுக்கு அதிக வரி. இது சீனாவிற்கு சற்று சிரமம் தான். அதனால், இந்தியா போன்ற பெரிய சந்தையைப் பிடிக்க நினைக்கிறது சீனா. ஏற்கெனவே இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருந்தது சீனா. ஆனால், 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, இந்தச் சப்ளை செயின் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதி-இறக்குமதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்! இந்தக் காலகட்டம் இந்தியாவிற்கும் மூலப்பொருள்கள் கொள்முதலை சிரமமாக்கியது. அதனால், மீண்டும் இந்திய சந்தையைத் தேடுகிறது சீனா. இந்தியா, அமெரிக்கா இடையே தற்போது ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது. இது இரு நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தலாம். சீனாவின் போட்டி நாடுகளில் முக்கியமான ஒன்று அமெரிக்கா. இந்தியா - அமெரிக்கா ஒற்றுமை சீனாவிற்கு ஆபத்து தான். ஆக, இந்த ஒற்றுமையைச் சற்று தணிக்கவே சீனாவின் இந்தப் பாசம் என்று எடுத்துக்கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைக்கு முழு ஆதரவை சீனா தெரிவித்திருக்கிறது என்று முன்பு பார்த்தோம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி கொடுக்கத் தொடங்கப்பட்டதே பிரிக்ஸ் அமைப்பு. மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிக்கு இணையாக அல்லது வளர்ச்சியைத் தாண்டி வளர வேண்டும் என்பது தான் இந்தியா, சீனாவின் கொள்கை. இதனால், பிரிக்ஸின் வலிமை தொடர வேண்டும் என்பதும் இந்தியாவிற்கு சீனா கொடுக்கும் ஆதரவிற்கு ஒரு காரணம். ஆக, சீனாவின் ஒவ்வொரு அசைவுகளுக்குப் பின் இருக்கும் காரணத்தையும் நிச்சயம் மறுக்க முடியாது... தவிர்க்க முடியாது. இதனால், சீனாவின் ஆதரவை இரு கரங்கள் விரித்து இந்தியா ஏற்றுக்கொண்டாலும், அதில் நிச்சயம் மிக மிக கவனம் தேவை! Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4 கையெழுத்துகள்
கூட்டணி ஆட்சி: Amit Shah -வை வழிக்கு கொண்டு வந்த EPS? | Puducherry -யிலும் கூட்டணி குஸ்தி | DMK TVK
விஜய் என் நண்பர்தான்.. ஆனால்.. - எஸ்.பி. வேலுமணி கடும் விமர்சனம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. திமுக Vs அதிமுக என்றிருந்த தமிழக அரசியல் களம், இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது. விஜய் திமுக அதிமுக இரண்டு கட்சிகள் மீதும் தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் வைக்கிறார். பதிலுக்கு விஜய் மீது அதிமுகவினரும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, “புதிதாக சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம். வேலுமணி விஜய்யை பார்ப்பதற்காக அவரின் கட்சியினர் ஏராளமானோர் கரூர் வந்தனர். விஜய் கண் முன்னரே 41 மக்கள் கொத்து கொத்தாக விழுந்து இறந்தனர். விஜய் எதுவும் செய்யாமல் சென்னை ஓடினார். இப்போது வரை கரூர் செல்லவில்லை. அதிமுகவில் சாதாரண ஒரு தொண்டருக்கு அடிபட்டால் கூட உடனடியாக சென்று பார்க்கிறோம். கரூரில் இருந்து சென்னை ஓடிய விஜய் ஒரு மாதம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அவரை ஆதரிக்கலாமா. விஜய் எனக்கு நண்பர்தான். ஆனால் இது சினிமா இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சினிமாவில் கேமரா முன்பு நடித்து செல்வது போல, விஜய் கரூர் சம்பவத்தையும் அணுகியுள்ளார் அவருக்கு வாக்களித்து திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்து விட வேண்டாம்” என்றார்.
விஜய் என் நண்பர்தான்.. ஆனால்.. - எஸ்.பி. வேலுமணி கடும் விமர்சனம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. திமுக Vs அதிமுக என்றிருந்த தமிழக அரசியல் களம், இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது. விஜய் திமுக அதிமுக இரண்டு கட்சிகள் மீதும் தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் வைக்கிறார். பதிலுக்கு விஜய் மீது அதிமுகவினரும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, “புதிதாக சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம். வேலுமணி விஜய்யை பார்ப்பதற்காக அவரின் கட்சியினர் ஏராளமானோர் கரூர் வந்தனர். விஜய் கண் முன்னரே 41 மக்கள் கொத்து கொத்தாக விழுந்து இறந்தனர். விஜய் எதுவும் செய்யாமல் சென்னை ஓடினார். இப்போது வரை கரூர் செல்லவில்லை. அதிமுகவில் சாதாரண ஒரு தொண்டருக்கு அடிபட்டால் கூட உடனடியாக சென்று பார்க்கிறோம். கரூரில் இருந்து சென்னை ஓடிய விஜய் ஒரு மாதம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அவரை ஆதரிக்கலாமா. விஜய் எனக்கு நண்பர்தான். ஆனால் இது சினிமா இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சினிமாவில் கேமரா முன்பு நடித்து செல்வது போல, விஜய் கரூர் சம்பவத்தையும் அணுகியுள்ளார் அவருக்கு வாக்களித்து திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்து விட வேண்டாம்” என்றார்.
கோடை சிறப்புத் தொகை : Bihar மாடலா திராவிட மாடலா? | RAHUL BJP DMK | TVK VIJAY | IPS Vikatan

25 C