SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

`இரட்டை இலை'பானை; நயினார் செயலால் அண்ணாமலை ஷாக் - கோவை பாஜக பொங்கல் விழா ஹைலைட்ஸ்!

பாஜக அகில இந்திய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக நேற்று முன் தினம் கோவை வந்தார். சனிக்கிழமை மாலை தனியார் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி, பாஜக சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம், பாஜக மாநில மையக்குழு கூட்டம் ஆகியவற்றில் நபின் கலந்து கொண்டார். பாஜக பொங்கல் விழா நேற்று வடவள்ளி பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றார். பிறகு மருதமலை, பேரூர் கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார். இவற்றில் பொங்கல் நிகழ்ச்சி தான் செம ஹைலைட். அந்தப் பகுதியில் காளை மாடு, எருமை மாடு சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சாலையின் 2 பக்கமும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்திருந்தனர். மேடையில் 5 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டன.. அந்த பானையில் இரட்டை இலை வரையப்பட்டிருந்தது. தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்ற நிர்வாகிகள் முதலில் வந்து, வள்ளி கும்மி ஆடி பொங்கல் வைத்தனர். தமிழிசை மேடையின் நடுவில் இருந்த பானையில் நபின் அரிசி, வெல்லம் ஆகியவற்றை போட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் வந்த நபின் மிகவும் கஷ்டப்பட்டு “பொங்கலோ பொங்கல்.. பொங்கல் வாழ்த்துகள்” என்று தமிழில் சொன்னார். நபின் பேசிக் கொண்டிருக்கும்போது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்த முயற்சித்தார். “அண்ணே முதலில் தலைவருக்கு போடுங்க” என்று அந்த துண்டை அண்ணாமலை அவரிடமே கொடுத்துவிட்டார். நயினார் நாகேந்திரன் அண்ணாமலை அதன் பிறகு நயினார் நபினுக்கு துண்டு அணிந்து மரியாதை செலுத்தினார். சிறிது நேரத்தில் இன்னொரு துண்டு வந்தவுடன் நயினார், அண்ணாமலை பரஸ்பரம் துண்டு மரியாதை செலுத்தினார். வரவேற்புரையாற்றிய அண்ணாமலை தமிழிசை பெயரை மறந்துவிட்டார். நயினார் அதை நினைவூட்ட அப்போது அண்ணாமலை,”நமக்கு பிடித்தவர்களை அவ்வபோது மறந்துவிடுவோம். அப்படித்தான் தமிழிசை அக்கா” என்று சொல்லி சமாளித்தார். இரட்டை இலை பானை நேற்று காலை கோவையில் மழை பெய்தது. தமிழிசை பேசும்போது, “இங்கு அனைத்து தலைவர்களும் உள்ளனர். பாஜக வந்தவுடன் கோவையில் சூரியன் மறைந்துவிட்டது. மழை கொட்டி நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து தாமரை மலர்ந்தே தீரும்” என்றார். கடைசியாக உறியடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. முதலில் நயினார் நாகேந்திரன் வேட்டியை மடித்துக் கட்டினார். நபினுக்கு நயினார் கண் கட்டிவிட்டார். அண்ணாமலை, “யார் கயிறு பிடித்திருக்கிறீர்கள். நான் எப்போது சொல்கிறேனோ ஏற்றி இறக்க வேண்டும்” என்று கூறினார். 4-5 முயற்சிகளில் நபின் பானையை தொட்டுவிட்டார். உறி அடிக்கும் நிகழ்வு பானை உடையவில்லை. அவரிடம் இருந்து குச்சி வாங்கி நயினார் பானையை உடைத்தார். அவர்கள் அங்கிருந்து செல்லும்போது இரட்டை இலை அடையாளத்துடன் இருந்த பானை கரியாகியிருந்தது.!

விகடன் 12 Jan 2026 2:05 pm

`இரட்டை இலை'பானை; நயினார் செயலால் அண்ணாமலை ஷாக் - கோவை பாஜக பொங்கல் விழா ஹைலைட்ஸ்!

பாஜக அகில இந்திய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக நேற்று முன் தினம் கோவை வந்தார். சனிக்கிழமை மாலை தனியார் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி, பாஜக சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம், பாஜக மாநில மையக்குழு கூட்டம் ஆகியவற்றில் நபின் கலந்து கொண்டார். பாஜக பொங்கல் விழா நேற்று வடவள்ளி பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றார். பிறகு மருதமலை, பேரூர் கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார். இவற்றில் பொங்கல் நிகழ்ச்சி தான் செம ஹைலைட். அந்தப் பகுதியில் காளை மாடு, எருமை மாடு சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சாலையின் 2 பக்கமும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்திருந்தனர். மேடையில் 5 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டன.. அந்த பானையில் இரட்டை இலை வரையப்பட்டிருந்தது. தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்ற நிர்வாகிகள் முதலில் வந்து, வள்ளி கும்மி ஆடி பொங்கல் வைத்தனர். தமிழிசை மேடையின் நடுவில் இருந்த பானையில் நபின் அரிசி, வெல்லம் ஆகியவற்றை போட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் வந்த நபின் மிகவும் கஷ்டப்பட்டு “பொங்கலோ பொங்கல்.. பொங்கல் வாழ்த்துகள்” என்று தமிழில் சொன்னார். நபின் பேசிக் கொண்டிருக்கும்போது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்த முயற்சித்தார். “அண்ணே முதலில் தலைவருக்கு போடுங்க” என்று அந்த துண்டை அண்ணாமலை அவரிடமே கொடுத்துவிட்டார். நயினார் நாகேந்திரன் அண்ணாமலை அதன் பிறகு நயினார் நபினுக்கு துண்டு அணிந்து மரியாதை செலுத்தினார். சிறிது நேரத்தில் இன்னொரு துண்டு வந்தவுடன் நயினார், அண்ணாமலை பரஸ்பரம் துண்டு மரியாதை செலுத்தினார். வரவேற்புரையாற்றிய அண்ணாமலை தமிழிசை பெயரை மறந்துவிட்டார். நயினார் அதை நினைவூட்ட அப்போது அண்ணாமலை,”நமக்கு பிடித்தவர்களை அவ்வபோது மறந்துவிடுவோம். அப்படித்தான் தமிழிசை அக்கா” என்று சொல்லி சமாளித்தார். இரட்டை இலை பானை நேற்று காலை கோவையில் மழை பெய்தது. தமிழிசை பேசும்போது, “இங்கு அனைத்து தலைவர்களும் உள்ளனர். பாஜக வந்தவுடன் கோவையில் சூரியன் மறைந்துவிட்டது. மழை கொட்டி நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து தாமரை மலர்ந்தே தீரும்” என்றார். கடைசியாக உறியடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. முதலில் நயினார் நாகேந்திரன் வேட்டியை மடித்துக் கட்டினார். நபினுக்கு நயினார் கண் கட்டிவிட்டார். அண்ணாமலை, “யார் கயிறு பிடித்திருக்கிறீர்கள். நான் எப்போது சொல்கிறேனோ ஏற்றி இறக்க வேண்டும்” என்று கூறினார். 4-5 முயற்சிகளில் நபின் பானையை தொட்டுவிட்டார். உறி அடிக்கும் நிகழ்வு பானை உடையவில்லை. அவரிடம் இருந்து குச்சி வாங்கி நயினார் பானையை உடைத்தார். அவர்கள் அங்கிருந்து செல்லும்போது இரட்டை இலை அடையாளத்துடன் இருந்த பானை கரியாகியிருந்தது.!

விகடன் 12 Jan 2026 2:05 pm

கூட்டணி ஆட்சி: ஸ்டாலினும், ராகுலும்தான் முடிவெடுக்கணும் - ஐ.பெரியசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில்

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்டோர் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி வருகின்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமி இந்நிலையில் நேற்று (ஜன.11) திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸின் உரிமை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதை எப்போதுமே நாங்கள் ஏற்றுக் கொண்டது இல்லை. திமுகவைப் பொறுத்தவரை எப்போதுமே கூட்டணி ஆட்சி கிடையாது. அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துத் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். எங்கள் கட்சியில் இருப்பவர்கள் அவர்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். செல்வப்பெருந்தகை கருத்துரிமை இருப்பதால் பேசுகிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது தமிழ்நாட்டின் இந்திய கூட்டணியின் தலைவராக இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும்தான் என்று பதிலளித்திருக்கிறார். 'விஜய் கூட்டத்துக்கு உற்சாகமாக வருகிறார்கள்; எதிர்காலத்திற்காக.!' - காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி

விகடன் 12 Jan 2026 1:17 pm

கூட்டணி ஆட்சி: ஸ்டாலினும், ராகுலும்தான் முடிவெடுக்கணும் - ஐ.பெரியசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில்

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்டோர் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி வருகின்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமி இந்நிலையில் நேற்று (ஜன.11) திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸின் உரிமை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதை எப்போதுமே நாங்கள் ஏற்றுக் கொண்டது இல்லை. திமுகவைப் பொறுத்தவரை எப்போதுமே கூட்டணி ஆட்சி கிடையாது. அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துத் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். எங்கள் கட்சியில் இருப்பவர்கள் அவர்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். செல்வப்பெருந்தகை கருத்துரிமை இருப்பதால் பேசுகிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது தமிழ்நாட்டின் இந்திய கூட்டணியின் தலைவராக இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும்தான் என்று பதிலளித்திருக்கிறார். 'விஜய் கூட்டத்துக்கு உற்சாகமாக வருகிறார்கள்; எதிர்காலத்திற்காக.!' - காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி

விகடன் 12 Jan 2026 1:17 pm

மும்பை தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து! - 8 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரிப்பு

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சபாநாயகர் சகோதரனான மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 20 மடங்கு அதிகரித்துள்ளது. மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் தான் மிகவும் பணக்கார வேட்பாளராக கருதப்படுகிறார். தனது சொத்து குறித்து அவர் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிபிட்டுள்ளார். தென்மும்பையில் உள்ள 226வது வார்டில் போட்டியிடும் மகரந்த் நர்வேகர் 2017ம் ஆண்டு தேர்லில் போட்டியிட்டபோது அவரது சொத்து ரூ.6.3 கோடியாக இருந்தது. ஆனால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் கவுன்சிலராக இருந்துள்ள மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 8 ஆண்டில் ரூ.124 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதில் அசையும் சொத்துக்கள் 32.14 கோடியும், அசையா சொத்துக்கள் 92.32 கோடியும் இருக்கிறது. கடந்த 8 ஆண்டில் நிலம், வீடுகள் என அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். ஸ்ரத்தா ஜாதவ் ரூ.16.68 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சாதாரண ஒரு கவுன்சிலரின் சொத்து 8 ஆண்டில் 20 மடங்கு அதிகரித்து இருக்கிறது. கடற்கரை நகரமான அலிபாக்கில் மட்டும் 27 இடங்களில் சொத்து வாங்கி குவித்து இருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் 35 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். நர்வேகரின் மைத்துனி ஹர்சிதா நர்வேகர் 225வது வார்டில் போட்டியிடுகிறார். அவரது சொத்தும் கடந்த 8 ஆண்டில் ரூ.10 கோடியில் இருந்து 63 கோடியாக அதிகரித்துள்ளது. சொத்து மதிப்பு அதிகரித்து இருப்பது குறித்து மகரந்த் நர்வேகர் கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளில் நிலத்தின் மதிப்பு அதிகரித்துவிட்டதால் சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கிறது என்று குறிப்பிட்டார். இத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மேயர் ஸ்ரத்தா ஜாதவ் தனக்கு ரூ.46 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மான்கூர்டு பகுதியில் போட்டியிடும் ஆட்டோ டிரைவர் கந்து நானா கண்டேகர் தனக்கு சொத்து எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 21 வயது முதல் 76 வயது வரை வேட்பாளர்கள் மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களில் 133 பேர் 60 வயதை கடந்தவர்கள் ஆவர். இது தவிர 24 பேர் 70 வயதை கடந்தவர்கள் ஆவர். அவர்களில் கலீனா பகுதியில் போட்டியிடும் கிருஷ்ணாவிற்கு 76 வயதாகிறது. இவர் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ''தேர்தலில் போட்டியிடுவதற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது'' என்று தெரிவித்தார். இதே போன்று போரிவலி பகுதியில் 73 வயது நரேந்திர குமார் என்ற டாக்டர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இதே போன்று வேட்பாளர்களில் சுமித் சாஹில் என்ற 21 வயது இளம் வேட்பாளர் ஜெரிமெரி பகுதியில் போட்டியிடுகிறார். அரசியலில் நுழைவது குறித்து சுமித் சாஹில் (21) கூறுகையில், ``அரசியலில் நுழைவது எனது லட்சியம் அல்ல, விரக்தியால் எடுத்த முடிவு. ஒவ்வொரு நாளும் மக்கள் நீண்ட வரிசையில் தங்கள் பிரச்னைகளை தீர்க்க வருவதை நான் காண்கிறேன். இவை பெரிய பிரச்னைகள் அல்ல. ஒருவரின் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை, யாரோ ஒருவரின் வீட்டிற்கு வெளியே ஒரு அடைப்புள்ள வடிகால் உள்ளது. ஆனால் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உண்மையில் யாருக்கும் ஆர்வம் இல்லை. அதனால்தான் நான் களத்தில் இறங்க முடிவு செய்தேன்'' என்றார். 30 வயதுக்கு உட்பட்ட 189 பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விகடன் 12 Jan 2026 12:15 pm

மும்பை தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து! - 8 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரிப்பு

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சபாநாயகர் சகோதரனான மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 20 மடங்கு அதிகரித்துள்ளது. மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் தான் மிகவும் பணக்கார வேட்பாளராக கருதப்படுகிறார். தனது சொத்து குறித்து அவர் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிபிட்டுள்ளார். தென்மும்பையில் உள்ள 226வது வார்டில் போட்டியிடும் மகரந்த் நர்வேகர் 2017ம் ஆண்டு தேர்லில் போட்டியிட்டபோது அவரது சொத்து ரூ.6.3 கோடியாக இருந்தது. ஆனால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் கவுன்சிலராக இருந்துள்ள மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 8 ஆண்டில் ரூ.124 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதில் அசையும் சொத்துக்கள் 32.14 கோடியும், அசையா சொத்துக்கள் 92.32 கோடியும் இருக்கிறது. கடந்த 8 ஆண்டில் நிலம், வீடுகள் என அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். ஸ்ரத்தா ஜாதவ் ரூ.16.68 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சாதாரண ஒரு கவுன்சிலரின் சொத்து 8 ஆண்டில் 20 மடங்கு அதிகரித்து இருக்கிறது. கடற்கரை நகரமான அலிபாக்கில் மட்டும் 27 இடங்களில் சொத்து வாங்கி குவித்து இருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் 35 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். நர்வேகரின் மைத்துனி ஹர்சிதா நர்வேகர் 225வது வார்டில் போட்டியிடுகிறார். அவரது சொத்தும் கடந்த 8 ஆண்டில் ரூ.10 கோடியில் இருந்து 63 கோடியாக அதிகரித்துள்ளது. சொத்து மதிப்பு அதிகரித்து இருப்பது குறித்து மகரந்த் நர்வேகர் கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளில் நிலத்தின் மதிப்பு அதிகரித்துவிட்டதால் சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கிறது என்று குறிப்பிட்டார். இத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மேயர் ஸ்ரத்தா ஜாதவ் தனக்கு ரூ.46 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மான்கூர்டு பகுதியில் போட்டியிடும் ஆட்டோ டிரைவர் கந்து நானா கண்டேகர் தனக்கு சொத்து எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 21 வயது முதல் 76 வயது வரை வேட்பாளர்கள் மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களில் 133 பேர் 60 வயதை கடந்தவர்கள் ஆவர். இது தவிர 24 பேர் 70 வயதை கடந்தவர்கள் ஆவர். அவர்களில் கலீனா பகுதியில் போட்டியிடும் கிருஷ்ணாவிற்கு 76 வயதாகிறது. இவர் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ''தேர்தலில் போட்டியிடுவதற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது'' என்று தெரிவித்தார். இதே போன்று போரிவலி பகுதியில் 73 வயது நரேந்திர குமார் என்ற டாக்டர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இதே போன்று வேட்பாளர்களில் சுமித் சாஹில் என்ற 21 வயது இளம் வேட்பாளர் ஜெரிமெரி பகுதியில் போட்டியிடுகிறார். அரசியலில் நுழைவது குறித்து சுமித் சாஹில் (21) கூறுகையில், ``அரசியலில் நுழைவது எனது லட்சியம் அல்ல, விரக்தியால் எடுத்த முடிவு. ஒவ்வொரு நாளும் மக்கள் நீண்ட வரிசையில் தங்கள் பிரச்னைகளை தீர்க்க வருவதை நான் காண்கிறேன். இவை பெரிய பிரச்னைகள் அல்ல. ஒருவரின் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை, யாரோ ஒருவரின் வீட்டிற்கு வெளியே ஒரு அடைப்புள்ள வடிகால் உள்ளது. ஆனால் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உண்மையில் யாருக்கும் ஆர்வம் இல்லை. அதனால்தான் நான் களத்தில் இறங்க முடிவு செய்தேன்'' என்றார். 30 வயதுக்கு உட்பட்ட 189 பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விகடன் 12 Jan 2026 12:15 pm

அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01

`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர். கட்டுரையாளர் : பா.முகிலன் `முதல் களம்’ 01 | அறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவுக்கு கிடைத்த மகத்தான வெற்றியிலிருந்துதான் தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கியது என்பது கடந்த கால அரசியல் வரலாற்றை அறிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், திமுகவின் எழுச்சி மற்றும் அண்ணாவின் முதல் தேர்தல் வெற்றியின் பின்னணியில் தமிழக அரசியலின் அதிகம் அறியப்படாத இன்னொரு பக்கமும் உள்ளது - அது, கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி. இரு கட்சிகளும் பொதுவுடமை கருத்துகளையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியபோதிலும், கம்யூனிஸ்ட் கட்சி சறுக்கியது எங்கே, இதில், அண்ணாவின் பங்களிப்பு என்ன? அண்ணாவுக்கு முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்த 1957-ஆம் ஆண்டுத் தேர்தலின் சுவாரஸ்ய பக்கங்கள் இங்கே... அண்ணா அண்ணாவின் முதல் தேர்தல் தோல்வி 1935-ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதன் முதலாக தந்தை பெரியாரைச் சந்தித்தார் அண்ணா. “எம்.ஏ படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறாயா?” எனக்கேட்ட பெரியாரிடம், “இல்லை, பொதுவாழ்வில் ஈடுபட விருப்பம்” என்றார் அண்ணா. பெரியாரும் இது போன்ற கொள்கைகளைக் கொண்ட இளைஞர்களைத்தானே அன்றைய நாட்களில் தேடிக்கொண்டிருந்தார். அப்புறமென்ன, அன்று முதல் பெரியாரின் தளபதியானார் அண்ணா. அண்ணாவின் மேடைப் பேச்சு திறனும், ஆழ்ந்த அரசியல் கருத்துகளைப் பாமரர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலான அவரது அபாரமான எழுத்து நடையும், நீதிக்கட்சி சார்பில், சென்னை மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் பெத்தநாயக்கன்பேட்டையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. மிகவும் எளிமையான உடையணிந்த, குட்டையான உருவம் கொண்ட அண்ணா, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில், பட்டுடை அணிந்து ஆடம்பரமாய் வாழ்ந்த நீதிக்கட்சியினர் சிலருக்கே உடன்பாடு இல்லை. அவர்கள் அண்ணா போட்டியிடுவதை எதிர்த்தனர். ஆனால், செட்டிநாட்டு இளவரசர் எம்.ஏ.முத்தையா செட்டியார், அண்ணாவின் அறிவாற்றல், நேர்மை பற்றி அறிந்தவர் என்பதால், அவர் அண்ணாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தார். “அண்ணாதுரையின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர் தேர்தலில் நிற்பதற்குப் பணம் இல்லாததுதான் தடை என்றால், அந்தப் பணத்தை நான் கொடுத்து, நம்மைப் போல் அவரையும் பணக்காரராக்கி, அந்தத் தடையைத் தகர்க்கத் தயாராக இருக்கிறேன்” என்று முழங்கினார். ராஜாஜி இன்னொரு பக்கம் தமிழ்த் தென்றல் திரு.வி.க., ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றோரெல்லாம் அண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மா.சுப்பிரமணியத்துக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டனர். தேர்தல் முடிவு, அண்ணாவுக்குச் சாதகமாக இல்லை. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தோல்விதான் என்றாலும், அண்ணா அதுகுறித்தெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் போக்கை மாற்றிய திமுக தொடர்ந்து பெரியார் தலைமையிலான திராவிடர் கழகத்தில் தீவிரமாக இயங்கிய அண்ணா, பெரியாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்குப் பின்னர், கருணாநிதி, ஈ.வி.கே. சம்பத் உள்ளிட்ட பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்த 16 பேருடன், 1949 செப்டம்பர் 17-ஆம் தேதி,சென்னை, ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக்கழகத்தைத் தொடங்கினார். அப்போது, இந்த இயக்கம் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டு அரசியலைப் புரட்டிப்போட்டு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்துக்கு வித்திடும் என யாராவது சொல்லி இருந்தால், அது நகைப்புக்குரியதாகவே இருந்திருக்கும். ஆனால், காலம் வேறு ஒரு கணக்கைப் போட்டுக் காத்திருந்தது. அறிஞர் அண்ணா கட்சி உருவானதும் இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள், கட்சியைப் பலப்படுத்துதல் மற்றும் பிரச்சார அரசியலிலேயே பயணித்ததால், ஒரு சில உள்ளாட்சி மற்றும் மாநகராட்சித் தேர்தல்களைத் தவிர்த்து, திமுக முதல் முறையாக போட்டியிட்ட பொதுத்தேர்தல் என்றால், அது 1957-ஆம் ஆண்டில், ஒரே நேரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்தான். இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், 1957-ஆம் ஆண்டு, நாடு தனது இரண்டாவது பொதுத் தேர்தலைச் சந்தித்தது. மொழி அடிப்படையிலான மாநில மறுசீரமைப்பின் காரணமாக தமிழ் பேசும் பகுதிகள் தனித்த மாநிலமாக வடிவம் கொண்டிருந்த அந்தக் காலகட்டம், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றுக்கு ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது. அந்தத் தேர்தலே அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் மேடையேற்றத்தையும், தமிழ்நாட்டின் அரசியல் போக்கை மாற்றத் தொடங்கிய முக்கிய நிகழ்வாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நுழைந்த திமுக 1954-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற காமராஜ், தனது நிர்வாகத் திறன், சாதனைகள் மற்றும் தனிப்பட்ட எளிய வாழ்க்கை மூலம் மக்கள் மத்தியில் அளவிட முடியாத வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், 1957 தேர்தலில் அவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. போட்டியிட்ட 41 நாடாளுமன்ற தொகுதிகளில் 31 இடங்களிலும், சட்டமன்றத் தேர்தலில் 205 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களிலும் காங்கிரஸுக்கு அபார வெற்றிக் கிடைத்தது. அதே சமயம், திமுக 15 சட்டமன்ற இடங்களையும், 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி, தனது முதல் அரசியல் கணக்கை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் தொடங்கியது. ஒரு அங்கீகாரம் கூட இல்லாத கட்சியாகவும், வெறும் போராட்ட மேடையாகவும் கருதப்பட்ட அமைப்பு, சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. காமராஜர் இந்த வெற்றி, திமுகவுக்கு சட்டரீதியான அரசியல் கட்சி அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்தது. காங்கிரஸில் பலரும், திமுக ஒரு 'தேர்தல் வெற்றி காண முடியாத கிளர்ச்சி அமைப்பு' என்ற எண்ணத்திலிருந்த நிலையில், இந்த வெற்றி அவர்களுக்கு ஒரு அதிர்வாக இருந்தது. அண்ணாவின் முதல் தேர்தல் வெற்றி காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணாவுக்கும் அதுதான் முதல் தேர்தல் வெற்றியாக அமைந்தது. அண்ணா ஏன் காஞ்சிபுரத்தைத் தேர்ந்தெடுத்தார்? இது அவரது பிறந்த மண். அண்ணாவின் சொந்த ஊராக இருந்ததால், உள்ளூர் ஆதரவு எளிதாகக் கிடைக்கும் என்று அண்ணா கணித்தார். மேலும், காங்கிரஸ் ஆதிக்கம் உள்ள இடத்தில் போட்டியிடுவது திமுகவுக்கும் தனக்கும் மிகுந்த சவாலாக இருக்கும் என எண்ணியே அவர் அங்கு போட்டியிட்டார். `என் பிறந்த நிலத்தில் விதையை விதைக்கிறேன்’ என்று அவர் கூறியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆனாலும், அண்ணாவுக்கு வெற்றி ஒன்றும் எளிதாக கிடைத்திடவில்லை. அண்ணா காஞ்சிபுரத்தில் அண்ணாவின் முக்கிய எதிராளி இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பி.எஸ். சீனிவாசன். அவர் உள்ளூர் செல்வந்தர், காங்கிரஸ் பிரமுகர். மற்றொரு வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.எஸ். பார்த்தசாரதி. அண்ணாவைத் தோற்கடிக்க, காமராஜர் 'கே. பிளான்' உள்ளிட்ட கடுமையான உத்தியைப் பயன்படுத்தினார் . கே. பிளான் என்றால், மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, களத்திலே வேலை செய்ய வேண்டும் என்பது. இது தவிர, சீனிவாசனுக்கு ஆதரவாக கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்ரமணியம் போன்ற மூத்த தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டனர். இருப்பினும், 11,143 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணா அபார வெற்றி பெற்றார். அண்ணாவுக்கு 31,861 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனுக்கு 20,718 வாக்குகளும் கிடைத்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பார்த்தசாரதி 6,742 வாக்குகள் பெற்றார். அண்ணா எதிர்க்கட்சித் தலைவரானார். அதனால்தான் அவர் அண்ணா! அண்ணாவின் வெற்றிக்கு கருணாநிதி, க.அன்பழகன், என்.வி.நடராஜன், சத்தியவாணி முத்து போன்றோர் சைக்கிள் பிரசாரங்கள் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அண்ணாவின் சகோதரி கண்ணம்மாள் கூட களத்தில் பணியாற்றினார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். நயமிக்க அரசியல் உத்தி, சமூக நீதி, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அண்ணாவின் பேச்சுகள் புதிய தலைமுறையினரை ஈர்த்தன. திமுகவின் தலைவர்கள் பலர் அந்தக் காலத்திய தமிழ் திரைக்கு எழுதிப் படைத்தவர்கள். செய்தியை மக்கள் மனதில் ஊட்டுவதில் அவர்கள் கடைப்பிடித்த உத்தி, தேர்தல் பிரசாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போதாதற்கு காங்கிரஸுக்கு மாற்று தேடத் தொடங்கிய மக்களின் மனநிலையும், குறிப்பாக நகரப்பகுதிகளில், அண்ணாவின் வெற்றிக்கு கூடுதல் வலு சேர்த்தது. அண்ணா, பெரியார் சரிவை நோக்கி பயணித்த கம்யூனிஸ்ட் கட்சி 1957 தேர்தல் வெறும் எண்களின் போட்டி மட்டும் அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் DNA-வையே மாற்றிய தேர்தல் எனலாம். அண்ணா தலைமையிலான திமுகவின் எழுச்சி ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறையத் தொடங்கிய முக்கிய கட்டமாகவும் பதிவாகியது. 1952-ல் தமிழ்நாட்டில் இருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1957 தேர்தலில் வெறும் 2 இடங்களையே பெற்று சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இத்தனைக்கும் இரு கட்சிகளும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் ஒருசேர வலியுறுத்தியபோதிலும், கம்யூனிஸ்ட் கட்சி சறுக்கியதன் பின்னணியிலும் அண்ணாவின் அரசியல் அணுகுமுறையே முக்கிய காரணமாக அமைந்தது. 1950-களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வலுவான அரசியல், தொழிலாளர் இயக்க சக்தியாக திகழ்ந்தது. தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போன்றவற்றின் மூலம் கிராமங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேரூன்றியிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1952 ல் நடைபெற்ற தேர்தலில், 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து, தங்களது செல்வாக்கை நிரூபித்தது. முடிவெடுப்பில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பை உயர்த்துவது, நிலசுவான்தாரர்ககளுக்கு எதிரான போராட்டங்கள், கல்வி-சமூக மறுசீரமைப்பை வலியுறுத்தல் போன்ற கொள்கைகள், அப்போது மாற்றத்தை எதிர்பார்த்த மக்களின் நம்பிக்கையை ஈர்த்தன. காங்கிரஸுக்கு மாற்றாக பல இளம் அறிவுஜீவிகளின் முதல் விருப்பத்துக்கு உரிய இயக்கமாகவும் கம்யூனிஸ்ட் கட்சியே இருந்தது. கம்யூனிஸ்ட் கொடி காரணங்கள் என்ன? அதே சமயம், திமுக சமூக நீதி, மொழி உரிமை, சாதி ஒழிப்பு எனக் கொள்கையாக பேசியபோதும், அதன் அரசியல் மொழி கம்யூனிஸ்டுகளின் கோட்பாட்டைவிட, மக்களுக்கு நெருக்கமாக இருந்தது. கம்யூனிஸ்டுகள் மார்க்சிய கோட்பாட்டை மையமாகக் கொண்டு பேசிய சிக்கலான அரசியல் சொற்பொழிவுகள், மக்களிடம் நெருக்கத்தைத் தவறிய நிலையில், அண்ணாவின் பேச்சு மிக எளிய தமிழில் சமூக அநீதியை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியது. “மக்களின் உள்ளமே மேடை” எனக் கருதிய அண்ணா, மேடை பேச்சை அரசியல் ஆயுதமாக மாற்றினார். திரையுலகக் கதைகள், நாடகங்கள், கவிதைகள் எனப் பல வடிவங்களை ஒன்றிணைத்து, கம்யூனிஸ்டுகள் பேசிய அதே சமத்துவக் கருத்துகளை மக்கள் மனதில் ஆழமாக ஊட்டியதுதான் திமுகவை, கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. அந்த வகையில், 1957 தேர்தல் இதற்கு மிகத் தெளிவான சான்றாக அமைந்தது. சமூக நீதியைப் பேசிய இரு கட்சிகளும் ஒரே வாக்கு தளத்தைப் பகிர்ந்திருந்தபோதும், திமுகவின் எழுச்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு அடிப்படையையே சிதைத்தது. குறிப்பாக நகரத் தொழிலாளர் வர்க்கம் மற்றும் இளம் வாக்காளர்கள் கம்யூனிஸ்டுகளை விட்டு திமுகவை நோக்கி நகரத் தொடங்கினர். காரணம் எளிது... கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடு கரடுமுரடானது; திமுகவின் கருத்து மக்களிடமிருந்து வந்ததுபோல் உணரப்பட்டது. இதில் அண்ணாவின் பங்களிப்பு மிக விரிவானது. சமூக மாற்றத்தைப் பற்றிய அவரது சிந்தனைகள் மார்க்சிய கோட்பாட்டுடன் சில ஒற்றுமைகள் கொண்டிருந்தபோதும், அவர் அதனைத் தமிழரின் அனுபவ மொழியில் பேசினார். திராவிட சிந்தனையை 'அரசியல் பண்பாட்டாக' மாற்றினார்.பொதுமக்கள் பேசும் தமிழையே அரசியல் மொழியாக மாற்றிய முதல் தலைவர் அவர். இதனால் கம்யூனிஸ்டுகள் உருவாக்க முடியாத கலாச்சார அடையாளம் திமுகவின் பக்கம் உருவானது. 'சமத்துவத்தை' போராட்டக் கோஷத்திலிருந்து மக்கள் வாழ்வின் உணர்வாக மாற்றிய அண்ணாவின் அணுகுமுறையே கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பேரறிஞர் அண்ணா அந்த வகையில் 1957-ஆம் ஆண்டு, கம்யூனிஸ்டுகளின் தேர்தல் அரசியலின் வீழ்ச்சியின் தொடக்கமாகவும், திமுகவின் பாய்ச்சலாகவும், அண்ணாவின் தலைமைக்கான அங்கீகாரமாகவும் அமைந்து, தமிழக அரசியலில், திராவிட அரசியலின் அதிகாரபூர்வ பிறப்புக்கு வித்திட்டது எனலாம். இருப்பினும் 1957-ல் காணப்பட்ட அதே வர்க்கபேதமும், சமத்துவமின்மையும், உழைப்புச் சுரண்டலும், மானுட விரோத போக்குகளும் இன்னமும் இந்த மண்ணில் நீடித்துக்கொண்டுதான் உள்ளன என்கிற சூழலில், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் அதன் சித்தாந்தத்துக்கும் ஏது வீழ்ச்சியும் தோல்வியும்? (முதல்... தொடரும்)

விகடன் 12 Jan 2026 10:59 am

நாகர்கோவில்: கறுப்பு-சிவப்புக் கொடி பறக்க ஆரம்பித்த பிறகுதான் மாற்றங்கள் ஏற்பட்டன - திருச்சி சிவா

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. விழாவிற்கு மாவட்டச் செயலாளரும், மேயருமான மகேஷ் தலைமை வகித்த இந்த விழாவில் 1049 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா வழங்கினார். பின்னர் திருச்சி சிவா பேசுகையில், இந்த இயக்கம் வாழ வேண்டும், இது இயங்க வேண்டும், இது வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தமிழன் வாழ முடியும். கறுப்பு சிவப்பு கொடி பறக்க ஆரம்பித்ததற்குப் பின்னால்தான் தமிழ்நாட்டில் இன்றைக்கு நாம் காணுகின்ற மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு காலத்தில் எல்லா வகையிலும் தமிழ்நாடு பின்தங்கி இருந்தது. தொழில் துறையில் 29 வது இடத்தில் இருந்தது. இன்று இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு திராவிட மாடல் ஆட்சிதான் காரணம். 50 ஆண்டுகளுக்கு மேல் உழைப்பின் விளைவாக மு.க.ஸ்டாலின் இன்றைக்கு ஒரு பெரிய கட்சியின் தலைவராக இருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் 3 மாதங்களில் வரவுள்ளது. இந்தத் தேர்தல் மிக மிக முக்கியமானது. இதுவரை நடைபெற்ற தேர்தலில் இருந்து மாறுபட்டது. இதுநாள் வரை யார் ஆட்சிக்கு வரலாம் யார் வரக்கூடாது என்பதாக இருந்தது. இந்த முறை நடைபெறப்போவது ஒரு நாட்டு அரசாங்கத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, இது ஒரு தத்துவப் போர். காங்கிரஸின் அரசியல் ஸ்டன்ட்? - திமுக கூட்டணியின் 'லட்சுமண ரேகை'யும் அதிரும் 2026 தேர்தலும்! நாகர்கோவிலில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசினார் திராவிட இயக்கத்தினால் இந்த மண்ணில் ஏற்பட்ட மாற்றங்கள், உருவான சமத்துவம், சமதர்மம், பொருளாதாரப் பேதம் அகற்றப்பட்டன. இதற்கு மாறான கொள்கை கொண்டவர்கள் ஒரு பக்கத்தில் இருந்து மற்றவர்களின் துணையோடு உள்ளே நுழையத் துடிக்கிறார்கள். திமுக மூத்த நிர்வாகி எல்.கணேசன் மறைவு: ”இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டியவர்” - சோகத்தில் கட்சியினர் இதனைத் தடுக்க வேண்டிய கடமை தி.மு.க-வுக்கு மட்டும் இல்லை. ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. தமிழ் வேண்டாம் சமஸ்கிருதம் வேண்டும் என்று சொல்கிற கூட்டம் உள்ளே வருகிறது. எல்லா இடங்களிலும் இந்திதான் என்றும், அதைப் படிக்கவில்லை என்றால் ஒரு மாநில அரசுக்கு நிதி தர மாட்டோம் என்றும் தங்களுடைய ஆதிக்கத்தைக் காட்டுகிற ஒரு கூட்டம் உள்ளே நுழைகிறது. அதுமட்டுமல்ல மதச்சார்பின்மையை ஒன்றிய அரசு நசுக்கி வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது தமிழகத்தில் நடக்காது. நாகர்கோவிலில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டம் தமிழகத்தில் வாழும் வட மாநிலத்தவர்கள் தி.மு.க ஆட்சியைக் கண்டு பிரமித்து உள்ளனர். தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது எனக் கூறுவதை விட, தி.மு.க-வை எதிர்கொள்ள முடியுமா என்ற நிலைதான் உள்ளது. உலகின் முக்கிய பொறுப்புகளில் தமிழர்கள் பதவி வகித்து வருகின்றனர். நமது விண்வெளித் துறையில் தமிழர்களின் பங்கு பெரும் அளவில் உள்ளது. அவர்கள் அனைவரும் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். தமிழகத்தின் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றார். ஈரோட்டில் திமுக-வின் திராவிடப் பொங்கல் விழா; திறமைகளை வெளிக்காட்டிய பெண்கள்! | Photo Album

விகடன் 12 Jan 2026 10:21 am

நாகர்கோவில்: கறுப்பு-சிவப்புக் கொடி பறக்க ஆரம்பித்த பிறகுதான் மாற்றங்கள் ஏற்பட்டன - திருச்சி சிவா

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. விழாவிற்கு மாவட்டச் செயலாளரும், மேயருமான மகேஷ் தலைமை வகித்த இந்த விழாவில் 1049 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா வழங்கினார். பின்னர் திருச்சி சிவா பேசுகையில், இந்த இயக்கம் வாழ வேண்டும், இது இயங்க வேண்டும், இது வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தமிழன் வாழ முடியும். கறுப்பு சிவப்பு கொடி பறக்க ஆரம்பித்ததற்குப் பின்னால்தான் தமிழ்நாட்டில் இன்றைக்கு நாம் காணுகின்ற மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு காலத்தில் எல்லா வகையிலும் தமிழ்நாடு பின்தங்கி இருந்தது. தொழில் துறையில் 29 வது இடத்தில் இருந்தது. இன்று இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு திராவிட மாடல் ஆட்சிதான் காரணம். 50 ஆண்டுகளுக்கு மேல் உழைப்பின் விளைவாக மு.க.ஸ்டாலின் இன்றைக்கு ஒரு பெரிய கட்சியின் தலைவராக இருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் 3 மாதங்களில் வரவுள்ளது. இந்தத் தேர்தல் மிக மிக முக்கியமானது. இதுவரை நடைபெற்ற தேர்தலில் இருந்து மாறுபட்டது. இதுநாள் வரை யார் ஆட்சிக்கு வரலாம் யார் வரக்கூடாது என்பதாக இருந்தது. இந்த முறை நடைபெறப்போவது ஒரு நாட்டு அரசாங்கத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, இது ஒரு தத்துவப் போர். காங்கிரஸின் அரசியல் ஸ்டன்ட்? - திமுக கூட்டணியின் 'லட்சுமண ரேகை'யும் அதிரும் 2026 தேர்தலும்! நாகர்கோவிலில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசினார் திராவிட இயக்கத்தினால் இந்த மண்ணில் ஏற்பட்ட மாற்றங்கள், உருவான சமத்துவம், சமதர்மம், பொருளாதாரப் பேதம் அகற்றப்பட்டன. இதற்கு மாறான கொள்கை கொண்டவர்கள் ஒரு பக்கத்தில் இருந்து மற்றவர்களின் துணையோடு உள்ளே நுழையத் துடிக்கிறார்கள். திமுக மூத்த நிர்வாகி எல்.கணேசன் மறைவு: ”இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டியவர்” - சோகத்தில் கட்சியினர் இதனைத் தடுக்க வேண்டிய கடமை தி.மு.க-வுக்கு மட்டும் இல்லை. ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. தமிழ் வேண்டாம் சமஸ்கிருதம் வேண்டும் என்று சொல்கிற கூட்டம் உள்ளே வருகிறது. எல்லா இடங்களிலும் இந்திதான் என்றும், அதைப் படிக்கவில்லை என்றால் ஒரு மாநில அரசுக்கு நிதி தர மாட்டோம் என்றும் தங்களுடைய ஆதிக்கத்தைக் காட்டுகிற ஒரு கூட்டம் உள்ளே நுழைகிறது. அதுமட்டுமல்ல மதச்சார்பின்மையை ஒன்றிய அரசு நசுக்கி வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது தமிழகத்தில் நடக்காது. நாகர்கோவிலில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டம் தமிழகத்தில் வாழும் வட மாநிலத்தவர்கள் தி.மு.க ஆட்சியைக் கண்டு பிரமித்து உள்ளனர். தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது எனக் கூறுவதை விட, தி.மு.க-வை எதிர்கொள்ள முடியுமா என்ற நிலைதான் உள்ளது. உலகின் முக்கிய பொறுப்புகளில் தமிழர்கள் பதவி வகித்து வருகின்றனர். நமது விண்வெளித் துறையில் தமிழர்களின் பங்கு பெரும் அளவில் உள்ளது. அவர்கள் அனைவரும் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். தமிழகத்தின் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றார். ஈரோட்டில் திமுக-வின் திராவிடப் பொங்கல் விழா; திறமைகளை வெளிக்காட்டிய பெண்கள்! | Photo Album

விகடன் 12 Jan 2026 10:21 am

சிவசேனா: பால் தாக்கரேவுக்கு இருந்த செல்வாக்கு தாக்கரே சகோதரர்களுக்கு இல்லை - பட்னாவிஸ் தாக்கு

மும்பையில் வரும் 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே), இந்தியக் குடியரசு கட்சி போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கூட்டணி மும்பை மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குறுதியை நேற்று வெளியிட்டது. பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் நடந்த நிகழ்ச்சியில் இதனை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்தியக் குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அதாவலே ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில், மும்பை நகர மேம்பாடு, நவீன கட்டமைப்பு வசதி, நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மும்பை குடிசைவாசிகளுக்குத் தரமான இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும், பெண்களுக்கு மாநகராட்சி பஸ்ஸில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. தண்ணீர் மூலம் நடைபெறும் போக்குவரத்து விரிவுபடுத்தப்படும் என்றும், மாநகராட்சி பஸ்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்கரே சகோதரர்கள் மழை காலத்தில் மும்பையில் வெள்ளம் பாதிக்காமல் இருக்க ஜப்பான் தொழில்நுட்பத்தில் பூமிக்கு அடியில் சுரங்க நீர்நிலைகளை உருவாக்கி மழைநீரை உடனுக்குடன் அங்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''மும்பையில் மராத்தி அல்லாத மொழி பேசுபவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர். சில சக்திகள் விளம்பரத்திற்காகவே பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களைக் குறிவைத்து தாக்குகின்றன. மும்பையில் வசிக்கும் மூன்றாம் தலைமுறை வட இந்தியர்கள் உணவுப் பழக்கவழக்கங்கள், கலாசாரம் மற்றும் பண்டிகைகள் என அனைத்திலும் முழுமையான மும்பைவாசிகளாகவே மாறிவிட்டனர். சில தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன, அவர்கள் வாடகை கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களைத்தான் குறிவைத்துத் தாக்குகின்றனர். அவர்கள் தங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்கிறார்கள். உத்தவ் தாக்கரே மற்றும் அவரது உறவினரான ராஜ் தாக்கரே ஆகியோரால் வழிநடத்தப்படும் கட்சிகள், மும்பை மாநகராட்சித் தேர்தலுக்காகவே ஒன்றிணைந்து, 'மராட்டிய மனிதன்' என்ற பிரச்னையை எழுப்பியுள்ளன. மும்பையை ஒரு துடிப்பான மற்றும் நிலையான நகரமாக மேம்படுத்துவதே எங்களது அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையாகும். மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தல்: MP, MLAக்களின் உறவினர்கள் வென்றால் பதவி கிடைக்காது - பாஜக உறுதி மராத்தி மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக அரசாங்கம் மும்பையில் மறுமேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது. தாராவி மக்களுக்கும் வீடுகளை வழங்கி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் மும்பையில் 437 கிலோமீட்டர் தூர மெட்ரோ ரயில் திட்டப்பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். மெட்ரோ ரயில் போன்று புறநகர் ரயிலிலும் ஏ.சி.ரயில்களை கொண்டுவர இருக்கிறோம். இந்துத்துவத்தையும், மராத்தியையும் பிரிக்க முடியாது'' என்று குறிப்பிட்டார். தாக்கரே சகோதரர்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் தாக்கரே சகோதரர்கள் நினைத்தால் 10 நிமிடத்தில் மும்பையை ஸ்தம்பிக்கச் செய்துவிடுவார்கள் என்று சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவுத் கூறி இருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அது போன்ற வெற்று மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். ஏக்நாத் ஷிண்டேயை மும்பைக்குள் விடமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் ஏக்நாத் ஷிண்டே மும்பைக்கு வந்து ராஜ்பவன் சென்று ஆட்சியமைத்தார். ஷிண்டே-பட்நாவிஸ் மும்பையை மறந்துவிடுங்கள். அவர்களால் பக்கத்து வீட்டைக்கூட அடைக்க முடியாது. பால்தாக்கரே உயிரோடு இருந்தபோது மும்பையை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு சிவசேனாவுக்குச் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போது இருப்பவர்கள் செல்வாக்கு இல்லாதவர்கள்'' என்று குறிப்பிட்டார். தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தாராவியில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் பேசிய பட்னாவிஸ், தாராவி மக்களுக்குத் தரமான வீடுகளைக் கட்டிக்கொடுப்போம் என்றும், தகுதி இல்லாத குடிசைவாசிகளுக்கும் வீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மகாராஷ்டிரா: ஷிண்டே மகனை ஓரங்கட்ட திட்டம்? மும்பையில் காங்கிரஸுடன் பாஜக கூட்டணி வைத்த பின்னணி என்ன?

விகடன் 12 Jan 2026 9:58 am

சிவசேனா: பால் தாக்கரேவுக்கு இருந்த செல்வாக்கு தாக்கரே சகோதரர்களுக்கு இல்லை - பட்னாவிஸ் தாக்கு

மும்பையில் வரும் 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே), இந்தியக் குடியரசு கட்சி போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கூட்டணி மும்பை மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குறுதியை நேற்று வெளியிட்டது. பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் நடந்த நிகழ்ச்சியில் இதனை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்தியக் குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அதாவலே ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில், மும்பை நகர மேம்பாடு, நவீன கட்டமைப்பு வசதி, நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மும்பை குடிசைவாசிகளுக்குத் தரமான இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும், பெண்களுக்கு மாநகராட்சி பஸ்ஸில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. தண்ணீர் மூலம் நடைபெறும் போக்குவரத்து விரிவுபடுத்தப்படும் என்றும், மாநகராட்சி பஸ்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்கரே சகோதரர்கள் மழை காலத்தில் மும்பையில் வெள்ளம் பாதிக்காமல் இருக்க ஜப்பான் தொழில்நுட்பத்தில் பூமிக்கு அடியில் சுரங்க நீர்நிலைகளை உருவாக்கி மழைநீரை உடனுக்குடன் அங்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''மும்பையில் மராத்தி அல்லாத மொழி பேசுபவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர். சில சக்திகள் விளம்பரத்திற்காகவே பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களைக் குறிவைத்து தாக்குகின்றன. மும்பையில் வசிக்கும் மூன்றாம் தலைமுறை வட இந்தியர்கள் உணவுப் பழக்கவழக்கங்கள், கலாசாரம் மற்றும் பண்டிகைகள் என அனைத்திலும் முழுமையான மும்பைவாசிகளாகவே மாறிவிட்டனர். சில தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன, அவர்கள் வாடகை கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களைத்தான் குறிவைத்துத் தாக்குகின்றனர். அவர்கள் தங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்கிறார்கள். உத்தவ் தாக்கரே மற்றும் அவரது உறவினரான ராஜ் தாக்கரே ஆகியோரால் வழிநடத்தப்படும் கட்சிகள், மும்பை மாநகராட்சித் தேர்தலுக்காகவே ஒன்றிணைந்து, 'மராட்டிய மனிதன்' என்ற பிரச்னையை எழுப்பியுள்ளன. மும்பையை ஒரு துடிப்பான மற்றும் நிலையான நகரமாக மேம்படுத்துவதே எங்களது அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையாகும். மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தல்: MP, MLAக்களின் உறவினர்கள் வென்றால் பதவி கிடைக்காது - பாஜக உறுதி மராத்தி மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக அரசாங்கம் மும்பையில் மறுமேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது. தாராவி மக்களுக்கும் வீடுகளை வழங்கி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் மும்பையில் 437 கிலோமீட்டர் தூர மெட்ரோ ரயில் திட்டப்பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். மெட்ரோ ரயில் போன்று புறநகர் ரயிலிலும் ஏ.சி.ரயில்களை கொண்டுவர இருக்கிறோம். இந்துத்துவத்தையும், மராத்தியையும் பிரிக்க முடியாது'' என்று குறிப்பிட்டார். தாக்கரே சகோதரர்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் தாக்கரே சகோதரர்கள் நினைத்தால் 10 நிமிடத்தில் மும்பையை ஸ்தம்பிக்கச் செய்துவிடுவார்கள் என்று சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவுத் கூறி இருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அது போன்ற வெற்று மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். ஏக்நாத் ஷிண்டேயை மும்பைக்குள் விடமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் ஏக்நாத் ஷிண்டே மும்பைக்கு வந்து ராஜ்பவன் சென்று ஆட்சியமைத்தார். ஷிண்டே-பட்நாவிஸ் மும்பையை மறந்துவிடுங்கள். அவர்களால் பக்கத்து வீட்டைக்கூட அடைக்க முடியாது. பால்தாக்கரே உயிரோடு இருந்தபோது மும்பையை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு சிவசேனாவுக்குச் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போது இருப்பவர்கள் செல்வாக்கு இல்லாதவர்கள்'' என்று குறிப்பிட்டார். தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தாராவியில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் பேசிய பட்னாவிஸ், தாராவி மக்களுக்குத் தரமான வீடுகளைக் கட்டிக்கொடுப்போம் என்றும், தகுதி இல்லாத குடிசைவாசிகளுக்கும் வீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மகாராஷ்டிரா: ஷிண்டே மகனை ஓரங்கட்ட திட்டம்? மும்பையில் காங்கிரஸுடன் பாஜக கூட்டணி வைத்த பின்னணி என்ன?

விகடன் 12 Jan 2026 9:58 am

கோவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா; வேட்டி, சட்டையில் வந்த பாஜக தேசிய செயல் தலைவர் | Photo Album

நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா செல்வப்பெருந்தகை Vs திருச்சி வேலுசாமி : ரத்தான ‘ஜனநாயக’ பொங்கல்; சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்!

விகடன் 12 Jan 2026 9:25 am

கரூர் மரணங்கள்: குறுக்குக் கேள்விகள்; 2 நாள் விசாரணை? ஆஜராகும் விஜய்; தவெக-வை நெருக்கும் சிபிஐ?

கரூர் சம்பவத்தில் சிபிஐ தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தவெகவின் முக்கிய நிர்வாகிகளை விசாரித்த சிபிஐ, விஜய்க்கும் சம்மன் அனுப்பியிருந்தது. சிபிஐ முன்பு ஆஜராக டெல்லி புறப்பட்டுவிட்டார் விஜய். இந்நிலையில், விஜய்யைக் குறைந்தபட்சம் இரண்டு நாள்களாவது ஆஜராக வைப்பார்கள் எனக் கிசுகிசுக்கின்றனர் உளவுத்துறை வட்டாரத்தினர். TVK Vijay தவெகவின் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் டிசம்பர் கடைசி வாரத்தில் சிபிஐ முன்பு ஆஜராகியிருந்தனர். அவர்களை மூன்று நாள்களுக்கு சிபிஐ விசாரித்திருந்தது. கரூரில் பாதுகாப்புப் பணியிலிருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சிபிஐ விசாரித்திருந்தது. ஏற்கனவே கரூருக்கு நேரில் வந்து சம்பவ இடத்தையும் தடயங்களையும் பார்வையிட்டு மக்களிடம் விசாரித்த சிபிஐ, சமீபத்தில் விஜய்யின் பிரசார பேருந்தையும் கரூருக்கு ஓட்டிச் சென்றிருந்தது. அங்கே அந்தப் பேருந்தை முழுமையாக ஆய்வு செய்திருந்தனர். 'திமுக, அதிமுக, தவெக' - யாருடன் கூட்டணி? பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய பிரேமலதா! இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சிபிஐ முன்பு ஆஜராகவிருக்கிறார். இதற்காக காலை 7 மணிக்கே தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டிருக்கிறார். காலை 11 மணிக்கு விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவிருக்கிறார். இந்நிலையில், விஜய்யிடம் குறைந்தபட்சம் இரண்டு நாள்களுக்காகவது விசாரணை நடத்தப்படும் எனத் தகவல் சொல்கின்றனர் உளவுத்துறையினர். TVK - Vijay காவல்துறை அதிகாரிகள் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறிய பதில்களை வைத்துக்கொண்டு விஜய்யிடம் குறுக்குக் கேள்விகளும் கேட்கப்படும் என்கின்றனர். கரூர் விவகாரத்தில் பாஜகவினர் விஜய்க்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தபோதும், அவர் பதிலுக்கு எந்தக் க்ரீன் சிக்னலையும் காட்டவில்லை. சிறப்புப் பொதுக்குழு ஒன்றைக் கூட்டி மீண்டும் தானே முதல்வர் வேட்பாளர் எனத் தீர்மானம் போட்டுக்கொண்டார். திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை ஓரணியில் இணைக்க நினைக்கும் பாஜகவின் கனவுக்கு விஜய் தடையாக இருப்பதால் சிபிஐ விசாரணையும் அதன் நடைமுறைகளும் விஜய்க்கு அத்தனை எளிதாக இருக்கப்போவதில்லை என்கின்றனர் அரசியலை உற்றுநோக்குபவர்கள். ``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

விகடன் 12 Jan 2026 8:36 am

கரூர் மரணங்கள்: குறுக்குக் கேள்விகள்; 2 நாள் விசாரணை? ஆஜராகும் விஜய்; தவெக-வை நெருக்கும் சிபிஐ?

கரூர் சம்பவத்தில் சிபிஐ தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தவெகவின் முக்கிய நிர்வாகிகளை விசாரித்த சிபிஐ, விஜய்க்கும் சம்மன் அனுப்பியிருந்தது. சிபிஐ முன்பு ஆஜராக டெல்லி புறப்பட்டுவிட்டார் விஜய். இந்நிலையில், விஜய்யைக் குறைந்தபட்சம் இரண்டு நாள்களாவது ஆஜராக வைப்பார்கள் எனக் கிசுகிசுக்கின்றனர் உளவுத்துறை வட்டாரத்தினர். TVK Vijay தவெகவின் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் டிசம்பர் கடைசி வாரத்தில் சிபிஐ முன்பு ஆஜராகியிருந்தனர். அவர்களை மூன்று நாள்களுக்கு சிபிஐ விசாரித்திருந்தது. கரூரில் பாதுகாப்புப் பணியிலிருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சிபிஐ விசாரித்திருந்தது. ஏற்கனவே கரூருக்கு நேரில் வந்து சம்பவ இடத்தையும் தடயங்களையும் பார்வையிட்டு மக்களிடம் விசாரித்த சிபிஐ, சமீபத்தில் விஜய்யின் பிரசார பேருந்தையும் கரூருக்கு ஓட்டிச் சென்றிருந்தது. அங்கே அந்தப் பேருந்தை முழுமையாக ஆய்வு செய்திருந்தனர். 'திமுக, அதிமுக, தவெக' - யாருடன் கூட்டணி? பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய பிரேமலதா! இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சிபிஐ முன்பு ஆஜராகவிருக்கிறார். இதற்காக காலை 7 மணிக்கே தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டிருக்கிறார். காலை 11 மணிக்கு விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவிருக்கிறார். இந்நிலையில், விஜய்யிடம் குறைந்தபட்சம் இரண்டு நாள்களுக்காகவது விசாரணை நடத்தப்படும் எனத் தகவல் சொல்கின்றனர் உளவுத்துறையினர். TVK - Vijay காவல்துறை அதிகாரிகள் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறிய பதில்களை வைத்துக்கொண்டு விஜய்யிடம் குறுக்குக் கேள்விகளும் கேட்கப்படும் என்கின்றனர். கரூர் விவகாரத்தில் பாஜகவினர் விஜய்க்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தபோதும், அவர் பதிலுக்கு எந்தக் க்ரீன் சிக்னலையும் காட்டவில்லை. சிறப்புப் பொதுக்குழு ஒன்றைக் கூட்டி மீண்டும் தானே முதல்வர் வேட்பாளர் எனத் தீர்மானம் போட்டுக்கொண்டார். திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை ஓரணியில் இணைக்க நினைக்கும் பாஜகவின் கனவுக்கு விஜய் தடையாக இருப்பதால் சிபிஐ விசாரணையும் அதன் நடைமுறைகளும் விஜய்க்கு அத்தனை எளிதாக இருக்கப்போவதில்லை என்கின்றனர் அரசியலை உற்றுநோக்குபவர்கள். ``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

விகடன் 12 Jan 2026 8:36 am

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 31.37 ஏக்கர் நிலம் மீட்பு; முடிவுக்கு வந்த 35 வருட போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். நாடு முழுவதும் அறியப்பட்ட இப்பல்கலைகழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தை ஒட்டியிருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 31.37 ஏக்கர் நிலம் திறந்தவெளி சிறைச்சாலை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது. சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இந்த நிலத்தை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்ததாக புகார் எழுந்தது. பல ஆண்டுகளாக 31.37 ஏக்கர் நிலத்தை தங்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும் என்றும் கூறியிருந்தார். சாஸ்த்ரா-வுக்கு எதிராக சாட்டையை சுழற்றத் தயங்குகிறாரா ஸ்டாலின்? ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் விமர்சனம் எழுந்தது. நிலத்தை மீட்பதற்காகப் போராடி வந்த சமூக ஆர்வலர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் வழக்குகளும் தொடர்ந்திருந்தனர். மேலும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் நிலத்தைக் காலி செய்யும்படி 2022 ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அரசு தரப்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்த 31.37 ஏக்கர் நிலத்தை 4 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் என்றும், உத்தரவை நிறைவேற்றியது குறித்து பிப்ரவரி 18ம் தேதி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று சென்றதுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். `ஆக்கிரமித்துள்ள நிலத்தை ஒப்படையுங்கள்!’ : சாஸ்த்ரா பல்கலைக்கு எதிராக சமூக ஆர்வலர் போர்க்கொடி இதைத்தொடர்ந்து, மீட்கப்பட்ட நிலத்தை சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இது அரசு நிலம் என்பதால், இப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புப் பலகையும் அதிகாரிகள் வைத்தனர். பின்னர், மீட்கப்பட்ட இடத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பது தொடர்பாக சிறைத் துறை அலுவலர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டடத்தில் இருந்த பொருள்களை சாஸ்த்ரா நிர்வாகம் எடுத்து காலி செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அரசு அதிகாரிகள் ஏற்கனவே, இந்த இடத்திற்குப் பதிலாக மாற்று இடம் தருகிறோம் எனவும் சாஸ்த்ரா தரப்பில் சொல்லி வந்ததாகவும் அது எடுபடவில்லை என்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி இருக்கும் என நிலத்தை மீட்பதற்குச் செயல்பட்டு வந்த குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சாஸ்த்ரா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். தஞ்சை, தண்டத்தோட்டம் நடனபுரீஸ்வரர் திருக்கோயில்: திருமண வரம் தரும்; கயிலாய தரிசனப் பலன்!

விகடன் 12 Jan 2026 8:16 am

பணிந்த அரசு; தூய்மைப் பணியாளர்களை சந்திக்கும் அமைச்சர் சேகர் பாபு - வெற்றியை நோக்கி போராட்டம்?

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இன்றோடு நிறைவடையும் நிலையை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு இன்று தூய்மைப் பணியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேசவிருக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் சென்னையில் மாநகராட்சி சார்பில் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை பேணும் பணிகளை தனியாருக்கு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 1900 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். ரிப்பன் பில்டிங் முன்பாக தொடங்கி அவர்களின் போரட்டம் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தது. மெரினா கடல், கலைஞர் சமாதி, உழைப்பாளர் சிலை, ஆட்சியர் அலுவலகம், அண்ணா அறிவாலயம், கூவம் நதி என பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி கைதாகினர். இன்னொரு பக்கம் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை அம்பத்தூரில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தையும் முன்னெடுத்தனர். தொடர்ந்து போராடியும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்களோ அதிகாரிகளோ அழைத்து பேசாமல் இருந்ததால், போராட்டம் தீவிரமடைந்து கொண்டே சென்றது. சேகர் பாபு இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர் பாபு தரப்பினர் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை தொடர்புகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்துதான் இன்று அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 150 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் பலனாக கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் தூய்மைப் பணியாளர்கள் அம்பத்தூரில் கூட தொடங்கியிருக்கின்றனர்.

விகடன் 12 Jan 2026 7:47 am

பணிந்த அரசு; தூய்மைப் பணியாளர்களை சந்திக்கும் அமைச்சர் சேகர் பாபு - வெற்றியை நோக்கி போராட்டம்?

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இன்றோடு நிறைவடையும் நிலையை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு இன்று தூய்மைப் பணியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேசவிருக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் சென்னையில் மாநகராட்சி சார்பில் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை பேணும் பணிகளை தனியாருக்கு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 1900 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். ரிப்பன் பில்டிங் முன்பாக தொடங்கி அவர்களின் போரட்டம் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தது. மெரினா கடல், கலைஞர் சமாதி, உழைப்பாளர் சிலை, ஆட்சியர் அலுவலகம், அண்ணா அறிவாலயம், கூவம் நதி என பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி கைதாகினர். இன்னொரு பக்கம் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை அம்பத்தூரில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தையும் முன்னெடுத்தனர். தொடர்ந்து போராடியும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்களோ அதிகாரிகளோ அழைத்து பேசாமல் இருந்ததால், போராட்டம் தீவிரமடைந்து கொண்டே சென்றது. சேகர் பாபு இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர் பாபு தரப்பினர் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை தொடர்புகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்துதான் இன்று அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 150 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் பலனாக கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் தூய்மைப் பணியாளர்கள் அம்பத்தூரில் கூட தொடங்கியிருக்கின்றனர்.

விகடன் 12 Jan 2026 7:47 am

செல்வப்பெருந்தகை Vs திருச்சி வேலுசாமி : ரத்தான ‘ஜனநாயக’ பொங்கல்; சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஈரோடு கிழக்கில் வென்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்ததையடுத்து, அந்தத் தொகுதி தி.மு.க வசமாகியுள்ளது. இதனால், தற்போது காங்கிரஸிடம் 17 எம்.எல்.ஏ-க்களே உள்ளனர். இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 40 முதல் 70 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும்; ஆட்சியில் அதிகாரப்பூர்வ பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். இதனால் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணிக்குள் நெருக்கடி உருவாகியுள்ளது. செல்வப்பெருந்தகை இந்தப் பின்னணியில்தான், திருச்சி வேலுசாமி, தி.மு.க-வை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அதற்கான வெளிப்பாடாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள காங்கிரஸ் பிரமுகருக்குச் சொந்தமான தனியார் ஓட்டலில் ‘ஜனநாயகன் பொங்கல்’ என்ற நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்திருந்தார். காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள், ஆட்சியில் அதிகாரப் பங்கு வழங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என வேலுசாமி தரப்பு சொல்கிறது. இதையடுத்து, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸார் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஜனநாயகன் பொங்கல் ரகளை ஆனால் அந்த அறிவுறுத்தலை வேலுசாமி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்டபடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் அருள் பெத்தையா, செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருடன் வேலுசாமி ஓட்டலுக்கு வந்தார். பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறையினர் ஓட்டலுக்குள் நுழைந்து, நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர். இதற்கு வேலுசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, 20-க்கும் மேற்பட்டோர் திடீரென ஓட்டலுக்குள் புகுந்தனர். அவர்களுக்கும் வேலுசாமி தரப்புக்கு எதிராக கோஷம் போட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில், ‘ஜனநாயகன் பொங்கல்’ நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ஜனநாயகன் பொங்கல் ரகளை இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மாநில தலைவர் செல்வப்பெருந்தகைதான் அனுப்பியதாக வேலுசாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளதால், காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சி வேலுசாமி, “ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்தத்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். ஆனால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஓட்டலுக்குள் நுழைந்து எங்களை மிரட்டினர். ‘பெரிய குண்டர் படை வந்து உங்களைத் தாக்கப் போகிறது’ என்றும் அவர்கள் சொன்னார்கள். இதுவரை ரவுடிகள் கலாட்டா செய்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என நினைத்தேன். இப்போது, குண்டர் படை வருவதாக பொதுமக்களை மிரட்டுவதற்காகவே போலீஸ் இருக்கிறார்கள் என்பது புரிந்தது” என ஆவேசமாகக் கூறினார். சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அருள் பெத்தையா கூறுகையில், “நிகழ்ச்சி நடத்தக்கூடாது என காவல்துறை எங்களையும், ஓட்டல் நிர்வாகத்தையும் அச்சுறுத்தியது. ரவுடிகள் ஊடுருவியிருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் குறிப்பிட்டது, எங்கள் மாநில தலைவரின் டிரைவர் ஜார்ஸ் என்பவரைத்தான். ஜார்ஸ் 20-க்கும் மேற்பட்டோருடன் வந்திருந்தார். அவர்களது கோஷங்களும் வார்த்தைகளும் மிக மோசமானவை. 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், இப்படி ஒரு சாதிய வன்மத்தை இப்போதுதான் பார்க்கிறேன். காங்கிரஸின் நிலைமை இவ்வளவு தாழ்ந்துவிட்டதா என நினைத்து வெட்கி தலைகுனிகிறேன். காவல்துறையும் முழுமையாக அவர்களுக்கே ஆதரவாக இருந்தது” என வெடித்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடமே விளக்கம் கேட்டோம், “அந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘ஜார்ஸ்’ என்ற பெயரில் என்னிடம் ஓட்டுனரும் இல்லை” என்றார்.

விகடன் 12 Jan 2026 7:00 am

செல்வப்பெருந்தகை Vs திருச்சி வேலுசாமி : ரத்தான ‘ஜனநாயக’ பொங்கல்; சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஈரோடு கிழக்கில் வென்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்ததையடுத்து, அந்தத் தொகுதி தி.மு.க வசமாகியுள்ளது. இதனால், தற்போது காங்கிரஸிடம் 17 எம்.எல்.ஏ-க்களே உள்ளனர். இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 40 முதல் 70 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும்; ஆட்சியில் அதிகாரப்பூர்வ பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். இதனால் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணிக்குள் நெருக்கடி உருவாகியுள்ளது. செல்வப்பெருந்தகை இந்தப் பின்னணியில்தான், திருச்சி வேலுசாமி, தி.மு.க-வை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அதற்கான வெளிப்பாடாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள காங்கிரஸ் பிரமுகருக்குச் சொந்தமான தனியார் ஓட்டலில் ‘ஜனநாயகன் பொங்கல்’ என்ற நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்திருந்தார். காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள், ஆட்சியில் அதிகாரப் பங்கு வழங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என வேலுசாமி தரப்பு சொல்கிறது. இதையடுத்து, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸார் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஜனநாயகன் பொங்கல் ரகளை ஆனால் அந்த அறிவுறுத்தலை வேலுசாமி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்டபடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் அருள் பெத்தையா, செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருடன் வேலுசாமி ஓட்டலுக்கு வந்தார். பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறையினர் ஓட்டலுக்குள் நுழைந்து, நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர். இதற்கு வேலுசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, 20-க்கும் மேற்பட்டோர் திடீரென ஓட்டலுக்குள் புகுந்தனர். அவர்களுக்கும் வேலுசாமி தரப்புக்கு எதிராக கோஷம் போட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில், ‘ஜனநாயகன் பொங்கல்’ நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ஜனநாயகன் பொங்கல் ரகளை இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மாநில தலைவர் செல்வப்பெருந்தகைதான் அனுப்பியதாக வேலுசாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளதால், காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சி வேலுசாமி, “ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்தத்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். ஆனால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஓட்டலுக்குள் நுழைந்து எங்களை மிரட்டினர். ‘பெரிய குண்டர் படை வந்து உங்களைத் தாக்கப் போகிறது’ என்றும் அவர்கள் சொன்னார்கள். இதுவரை ரவுடிகள் கலாட்டா செய்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என நினைத்தேன். இப்போது, குண்டர் படை வருவதாக பொதுமக்களை மிரட்டுவதற்காகவே போலீஸ் இருக்கிறார்கள் என்பது புரிந்தது” என ஆவேசமாகக் கூறினார். சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அருள் பெத்தையா கூறுகையில், “நிகழ்ச்சி நடத்தக்கூடாது என காவல்துறை எங்களையும், ஓட்டல் நிர்வாகத்தையும் அச்சுறுத்தியது. ரவுடிகள் ஊடுருவியிருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் குறிப்பிட்டது, எங்கள் மாநில தலைவரின் டிரைவர் ஜார்ஸ் என்பவரைத்தான். ஜார்ஸ் 20-க்கும் மேற்பட்டோருடன் வந்திருந்தார். அவர்களது கோஷங்களும் வார்த்தைகளும் மிக மோசமானவை. 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், இப்படி ஒரு சாதிய வன்மத்தை இப்போதுதான் பார்க்கிறேன். காங்கிரஸின் நிலைமை இவ்வளவு தாழ்ந்துவிட்டதா என நினைத்து வெட்கி தலைகுனிகிறேன். காவல்துறையும் முழுமையாக அவர்களுக்கே ஆதரவாக இருந்தது” என வெடித்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடமே விளக்கம் கேட்டோம், “அந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘ஜார்ஸ்’ என்ற பெயரில் என்னிடம் ஓட்டுனரும் இல்லை” என்றார்.

விகடன் 12 Jan 2026 7:00 am

அட்டைப்படம்

விகடன் 12 Jan 2026 5:47 am

`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?

மும்பையில் வரும் 15-ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை வந்திருந்தார். அவர் தாராவி மற்றும் மலாடு பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்படி பிரசாரம் செய்தபோது மத்தியில் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அரசும் ஆட்சியில் இருக்கிறது என்றும், எனவே மும்பையில் பா.ஜ.க மேயர் வரவேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ''மும்பை மகாராஷ்டிரா நகரம் கிடையாது. அது ஒரு சர்வதேச நகரம். மும்பை பட்ஜெட் 75 ஆயிரம் கோடியாக இருக்கிறது. சஞ்சய் ராவுத் பெங்களூரு பட்ஜெட் 18 ஆயிரம் கோடியாகவும், சென்னை பட்ஜெட் 8 ஆயிரம் கோடியாகவும் இருக்கிறது. எனவே மும்பை நிர்வாகத்தில் நல்லவர்களை அமர்த்துங்கள்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அண்ணாமலையில் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையை மகாராஷ்டிரா நகரம் கிடையாது என்று எப்படி அண்ணாமலை கூறலாம் என்று சிவசேனா(உத்தவ்) கட்சி எம்.பி.சஞ்சய் ராவுத் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,''அண்ணாமலை மும்பைக்காக போராடி உயிர்தியாகம் செய்த 106 தியாகிகளை அவமதித்துவிட்டார். சூரியன், சந்திரன், நட்சத்திரம் இருக்கும் வரை மும்பை மகாராஷ்டிராவோடுதான் இருக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். ஆனால் பா.ஜ.க நட்சத்திர பேச்சாளர்கள் மும்பை மகாராஷ்டிரா நகரம் கிடையாது என்று சொல்கிறார்கள். இது போன்று கருத்து தெரிவித்த அண்ணாமலை மீது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். அண்ணாமலையில் கருத்து அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. மும்பை மகாராஷ்டிராவிற்கு சொந்தமானது கிடையாது என்றால் வேறு யாருக்கு சொந்தம்'' என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து அதே கட்சியை சேர்ந்த அகில் சித்ரே கூறுகையில், ''மும்பையின் பெயரும் அடையாளமும் மராத்தி மக்களின் போராட்டங்களிலும் தியாகங்களிலும் வேரூன்றியுள்ளன. வேண்டுமென்றே அதை 'பம்பாய்' என்று அழைப்பதும், மகாராஷ்டிராவில் அதன் இடத்தைக் கேள்விக்குள்ளாக்குவதும் அந்த மரபுக்கு நேரடியாக விடுக்கப்படும் சவாலாகும். இது தேர்தல்களின் போது பதட்டங்களைத் தூண்டும்'' என்று அவர் கூறினார்.

விகடன் 11 Jan 2026 10:45 pm

`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?

மும்பையில் வரும் 15-ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை வந்திருந்தார். அவர் தாராவி மற்றும் மலாடு பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்படி பிரசாரம் செய்தபோது மத்தியில் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அரசும் ஆட்சியில் இருக்கிறது என்றும், எனவே மும்பையில் பா.ஜ.க மேயர் வரவேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ''மும்பை மகாராஷ்டிரா நகரம் கிடையாது. அது ஒரு சர்வதேச நகரம். மும்பை பட்ஜெட் 75 ஆயிரம் கோடியாக இருக்கிறது. சஞ்சய் ராவுத் பெங்களூரு பட்ஜெட் 18 ஆயிரம் கோடியாகவும், சென்னை பட்ஜெட் 8 ஆயிரம் கோடியாகவும் இருக்கிறது. எனவே மும்பை நிர்வாகத்தில் நல்லவர்களை அமர்த்துங்கள்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அண்ணாமலையில் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையை மகாராஷ்டிரா நகரம் கிடையாது என்று எப்படி அண்ணாமலை கூறலாம் என்று சிவசேனா(உத்தவ்) கட்சி எம்.பி.சஞ்சய் ராவுத் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,''அண்ணாமலை மும்பைக்காக போராடி உயிர்தியாகம் செய்த 106 தியாகிகளை அவமதித்துவிட்டார். சூரியன், சந்திரன், நட்சத்திரம் இருக்கும் வரை மும்பை மகாராஷ்டிராவோடுதான் இருக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். ஆனால் பா.ஜ.க நட்சத்திர பேச்சாளர்கள் மும்பை மகாராஷ்டிரா நகரம் கிடையாது என்று சொல்கிறார்கள். இது போன்று கருத்து தெரிவித்த அண்ணாமலை மீது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். அண்ணாமலையில் கருத்து அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. மும்பை மகாராஷ்டிராவிற்கு சொந்தமானது கிடையாது என்றால் வேறு யாருக்கு சொந்தம்'' என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து அதே கட்சியை சேர்ந்த அகில் சித்ரே கூறுகையில், ''மும்பையின் பெயரும் அடையாளமும் மராத்தி மக்களின் போராட்டங்களிலும் தியாகங்களிலும் வேரூன்றியுள்ளன. வேண்டுமென்றே அதை 'பம்பாய்' என்று அழைப்பதும், மகாராஷ்டிராவில் அதன் இடத்தைக் கேள்விக்குள்ளாக்குவதும் அந்த மரபுக்கு நேரடியாக விடுக்கப்படும் சவாலாகும். இது தேர்தல்களின் போது பதட்டங்களைத் தூண்டும்'' என்று அவர் கூறினார்.

விகடன் 11 Jan 2026 10:45 pm

அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள் - கடற்கரை பொங்கல் விழாவில் நெகிழ்ந்த நடிகை தேவயானி!

கன்னியாகுமரி ரஸ்த்தாகாடு கடற்கரையில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 12-வது சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. இதில் 3006 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டனர். சினிமா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நாகர்கோவில் மேயர் மகேஷ், சபாநாயகர் அப்பாவு, எம்.பி விஜய்வசந்த், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை தேவயானி, கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள்கூடி ஒற்றுமையாக பொங்கலிடும் இந்த காட்சி மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற காட்சியை நான் இதற்கு முன் கண்டதில்லை. அதற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி. கடவுளின் அருள் இருந்தால்தான் இதுபோன்று நடக்கும். பொங்கல் என்பது தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் ஒரு அருமையான விழா. பொங்கலன்று சூரியனை வணங்குகிறோம். இயற்கைக்கு நன்றி சொல்கிறோம். கூட இருக்கும் பிராணிகளுக்கு நன்றிசொல்லி வணங்குகிறோம். அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள். நான்கு நாட்கள் விடுமுறையில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருங்கள் என்றார். மேலும், ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 'மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு...' என்ற பாடலையும் தேவயானி மேடையில் பாடினார். பொங்கல் விழாவில் நடிகை தேவயானி இதில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழர்களுடைய பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர், சாமானிய மக்களும் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக ரொக்கப் பணமாக 3000 ரூபாய் கொடுத்துள்ளார். சாமானிய வீட்டு ஏழை பெண்கள் இலவச மகளிர் பேருந்து எப்போது வரும் என்று கேட்கிறார்கள். நாள் ஒன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என்று உத்தரவு பிறப்பித்து  ஆண்டுக்கு 3760 கோடி ரூபாயை முதலமைச்சர் அள்ளிக் கொடுத்துள்ளார். ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றார். கடற்கரையில் நடைபெற்ற பொங்கல் விழா பட்டப்படிப்பு படிக்க மாதம் 1000 ரூபாய் கொடுக்கின்ற நம்முடைய முதல்வர் சாமானிய ஏழை மக்களை பற்றி சிந்தித்து செயல்பட்டதனுடைய விளைவு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் 60  சதவிகிதம் பேர் பட்டம் படித்திருக்கின்றார்கள். திராவிட சமத்துவ மாடல் தான் இவ்வளவு பெரிய வெற்றியை நமக்கு தந்திருக்கின்றது. நம் முதல்வர் சாமானிய மக்களை பற்றி சிந்திக்கின்றார். ஏழைகளைப் பற்றி சிந்திக்கின்றார். ஒரே கையெழுத்தில் 6800 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் முதல்வர். ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகள்தான். விவசாயி சேற்றில் காலை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்றார்.

விகடன் 11 Jan 2026 9:46 pm

அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள் - கடற்கரை பொங்கல் விழாவில் நெகிழ்ந்த நடிகை தேவயானி!

கன்னியாகுமரி ரஸ்த்தாகாடு கடற்கரையில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 12-வது சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. இதில் 3006 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டனர். சினிமா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நாகர்கோவில் மேயர் மகேஷ், சபாநாயகர் அப்பாவு, எம்.பி விஜய்வசந்த், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை தேவயானி, கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள்கூடி ஒற்றுமையாக பொங்கலிடும் இந்த காட்சி மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற காட்சியை நான் இதற்கு முன் கண்டதில்லை. அதற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி. கடவுளின் அருள் இருந்தால்தான் இதுபோன்று நடக்கும். பொங்கல் என்பது தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் ஒரு அருமையான விழா. பொங்கலன்று சூரியனை வணங்குகிறோம். இயற்கைக்கு நன்றி சொல்கிறோம். கூட இருக்கும் பிராணிகளுக்கு நன்றிசொல்லி வணங்குகிறோம். அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள். நான்கு நாட்கள் விடுமுறையில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருங்கள் என்றார். மேலும், ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 'மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு...' என்ற பாடலையும் தேவயானி மேடையில் பாடினார். பொங்கல் விழாவில் நடிகை தேவயானி இதில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழர்களுடைய பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர், சாமானிய மக்களும் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக ரொக்கப் பணமாக 3000 ரூபாய் கொடுத்துள்ளார். சாமானிய வீட்டு ஏழை பெண்கள் இலவச மகளிர் பேருந்து எப்போது வரும் என்று கேட்கிறார்கள். நாள் ஒன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என்று உத்தரவு பிறப்பித்து  ஆண்டுக்கு 3760 கோடி ரூபாயை முதலமைச்சர் அள்ளிக் கொடுத்துள்ளார். ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றார். கடற்கரையில் நடைபெற்ற பொங்கல் விழா பட்டப்படிப்பு படிக்க மாதம் 1000 ரூபாய் கொடுக்கின்ற நம்முடைய முதல்வர் சாமானிய ஏழை மக்களை பற்றி சிந்தித்து செயல்பட்டதனுடைய விளைவு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் 60  சதவிகிதம் பேர் பட்டம் படித்திருக்கின்றார்கள். திராவிட சமத்துவ மாடல் தான் இவ்வளவு பெரிய வெற்றியை நமக்கு தந்திருக்கின்றது. நம் முதல்வர் சாமானிய மக்களை பற்றி சிந்திக்கின்றார். ஏழைகளைப் பற்றி சிந்திக்கின்றார். ஒரே கையெழுத்தில் 6800 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் முதல்வர். ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகள்தான். விவசாயி சேற்றில் காலை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்றார்.

விகடன் 11 Jan 2026 9:46 pm

காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்! - திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி 'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகதான் எதிர்த்ததாம் எனக் கூறியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தியில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் எனவும், அப்போது இந்தி ஆட்சி மொழியாக வராமல் இருந்ததற்குக் காரணம் சஞ்சீவி ரெட்டிதான் எனவும் செய்தியாளர்களிடையே அவர் பேசியிருக்கிறார். பராசக்தி திருச்சி வேலுசாமி பேசுகையில், “இன்று ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அப்படத்தைத் தயாரித்தது தமிழகத்தின் ஆளுங்கட்சி. அதில் வசனங்கள் பற்றி என்னிடம் சொன்னார்கள். காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம். அதைத் திமுகதான் எதிர்த்ததாம். எனக்கு இந்தி தெரியாது. இங்கிருக்கும் பலருக்கும் இந்தி தெரிய வாய்ப்பில்லை. அக்குடும்பத்தைச் சேர்ந்த, பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கக்கூடியவர் இந்தியிலேயே படித்து, பட்டம் பெற்றிருக்கிறாரா, இல்லையா? அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது, அப்போது எப்படி இவர் இந்த இளம் வயதிலேயே மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார் என அப்போதைய முதல்வரிடம் கேட்டபோது 'அவனுக்கு ஆங்கிலத்தைவிட இந்தி நன்றாகத் தெரியும். அதனால் அவனுக்கு அங்கு மரியாதை இருக்கிறது' எனச் சொன்னாரா இல்லையா? இந்தி இங்கு ஆட்சிமொழியாக வராமல் தடுத்ததற்கு ஒரே காரணம் சஞ்சீவி ரெட்டிதான். திருச்சி வேலுசாமி அப்போது ஆட்சிமொழி எதுவாக இருக்க வேண்டும் என வாக்கெடுப்பு நடக்கும்போது, இந்திக்குத்தான் சமமான வாக்குகள் வருகின்றன. அப்போது சஞ்சீவி ரெட்டி இந்தி மொழிக்கு எதிராக வாக்குப் போட்டதால்தான் அப்போது அது தடுக்கப்பட்டது. 1967 வரை தமிழகப் பள்ளிகளில் தமிழ்தான் பாடமொழியாக இருந்தது. அதற்குப் பின் வந்த ஆங்கிலத்திற்கு காங்கிரஸ் காரணமா அல்லது திராவிட இயக்கம் காரணமா? அப்போது தமிழ் மொழிக்காகப் பல சாதனைகளைச் செய்வதற்கு காமராஜர் காரணமாக இருந்தார். 1972-ல் காமராஜர் திருச்சிக்கு வந்தார். அப்போது அவர் அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும். அப்போது அவர் இடையிடையே நிறுத்திச் சிறுநீர் கழிக்க வேண்டும். அதைத் தடுத்த வக்கிரப் புத்தியை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் அதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.” எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 8:12 pm

காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்! - திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி 'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகதான் எதிர்த்ததாம் எனக் கூறியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தியில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் எனவும், அப்போது இந்தி ஆட்சி மொழியாக வராமல் இருந்ததற்குக் காரணம் சஞ்சீவி ரெட்டிதான் எனவும் செய்தியாளர்களிடையே அவர் பேசியிருக்கிறார். பராசக்தி திருச்சி வேலுசாமி பேசுகையில், “இன்று ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அப்படத்தைத் தயாரித்தது தமிழகத்தின் ஆளுங்கட்சி. அதில் வசனங்கள் பற்றி என்னிடம் சொன்னார்கள். காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம். அதைத் திமுகதான் எதிர்த்ததாம். எனக்கு இந்தி தெரியாது. இங்கிருக்கும் பலருக்கும் இந்தி தெரிய வாய்ப்பில்லை. அக்குடும்பத்தைச் சேர்ந்த, பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கக்கூடியவர் இந்தியிலேயே படித்து, பட்டம் பெற்றிருக்கிறாரா, இல்லையா? அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது, அப்போது எப்படி இவர் இந்த இளம் வயதிலேயே மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார் என அப்போதைய முதல்வரிடம் கேட்டபோது 'அவனுக்கு ஆங்கிலத்தைவிட இந்தி நன்றாகத் தெரியும். அதனால் அவனுக்கு அங்கு மரியாதை இருக்கிறது' எனச் சொன்னாரா இல்லையா? இந்தி இங்கு ஆட்சிமொழியாக வராமல் தடுத்ததற்கு ஒரே காரணம் சஞ்சீவி ரெட்டிதான். திருச்சி வேலுசாமி அப்போது ஆட்சிமொழி எதுவாக இருக்க வேண்டும் என வாக்கெடுப்பு நடக்கும்போது, இந்திக்குத்தான் சமமான வாக்குகள் வருகின்றன. அப்போது சஞ்சீவி ரெட்டி இந்தி மொழிக்கு எதிராக வாக்குப் போட்டதால்தான் அப்போது அது தடுக்கப்பட்டது. 1967 வரை தமிழகப் பள்ளிகளில் தமிழ்தான் பாடமொழியாக இருந்தது. அதற்குப் பின் வந்த ஆங்கிலத்திற்கு காங்கிரஸ் காரணமா அல்லது திராவிட இயக்கம் காரணமா? அப்போது தமிழ் மொழிக்காகப் பல சாதனைகளைச் செய்வதற்கு காமராஜர் காரணமாக இருந்தார். 1972-ல் காமராஜர் திருச்சிக்கு வந்தார். அப்போது அவர் அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும். அப்போது அவர் இடையிடையே நிறுத்திச் சிறுநீர் கழிக்க வேண்டும். அதைத் தடுத்த வக்கிரப் புத்தியை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் அதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.” எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 8:12 pm

''இதுவொரு முக்கியமான மைல்கல் - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம். போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. போரூர் - வடபழனி வழித்தடத்தில் சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று காலை சோதனை ஓட்டத்தை நடத்தியது. சென்னை மெட்ரோ டவுன் லைனில் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தியவர்கள் கூடிய விரைவில் இதேபோல அப் லைனிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அந்த வழித்தடம் திறக்கப்படும் தேதி குறித்து சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர், இன்று சோதனை ஓட்டம் நடத்தினோம். அது வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இதுவொரு முக்கியமான மைல்கல். கடந்த ஜூன் மாதத்தில் பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை சோதனை ஓட்டம் நடத்தினோம். அதன் வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை மெட்ரோ இருந்தால்தான் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வடபழனி மெட்ரோவிலிருந்து போரூர் செல்லும் வழித்தடத்திற்கு லிங்க் பிரிட்ஜ் அமைத்திருக்கிறோம். மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் கடந்த நான்கு மாதங்களாக போரூர் - வடபழனி வழித்தடத்தின் மின்சாரம், டிராக் ஆகியவற்றுக்காக எங்களின் சி.எம்.ஆர்.எல் ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த மாத முடிவிற்குள் முழுமையான வேகத்தில் சோதனை நடத்தவிருக்கிறோம். வேகத்திற்கான சான்றிதழ், வழித்தடத்தின் ஆய்வு கூடிய விரைவில் நடைபெறும். பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே சேவை தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான பாதையின் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும். எனக் கூறினார்.

விகடன் 11 Jan 2026 5:56 pm

''இதுவொரு முக்கியமான மைல்கல் - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம். போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. போரூர் - வடபழனி வழித்தடத்தில் சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று காலை சோதனை ஓட்டத்தை நடத்தியது. சென்னை மெட்ரோ டவுன் லைனில் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தியவர்கள் கூடிய விரைவில் இதேபோல அப் லைனிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அந்த வழித்தடம் திறக்கப்படும் தேதி குறித்து சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர், இன்று சோதனை ஓட்டம் நடத்தினோம். அது வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இதுவொரு முக்கியமான மைல்கல். கடந்த ஜூன் மாதத்தில் பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை சோதனை ஓட்டம் நடத்தினோம். அதன் வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை மெட்ரோ இருந்தால்தான் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வடபழனி மெட்ரோவிலிருந்து போரூர் செல்லும் வழித்தடத்திற்கு லிங்க் பிரிட்ஜ் அமைத்திருக்கிறோம். மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் கடந்த நான்கு மாதங்களாக போரூர் - வடபழனி வழித்தடத்தின் மின்சாரம், டிராக் ஆகியவற்றுக்காக எங்களின் சி.எம்.ஆர்.எல் ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த மாத முடிவிற்குள் முழுமையான வேகத்தில் சோதனை நடத்தவிருக்கிறோம். வேகத்திற்கான சான்றிதழ், வழித்தடத்தின் ஆய்வு கூடிய விரைவில் நடைபெறும். பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே சேவை தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான பாதையின் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும். எனக் கூறினார்.

விகடன் 11 Jan 2026 5:56 pm

Grok AI சர்ச்சை: 'இந்திய சட்டத்தின் படி நடப்போம்' - தவறை ஒப்புக்கொண்ட எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம், தனது Grok AI மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டு 600 கணக்குளை ஒப்புக்கொண்டிருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எக்ஸ் தளத்தின் Grok AI மூலம் ஆபாச உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருந்தது. Grok AI இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளை ஒப்புக்கொண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்போம் என்றும் உறுதி அளித்துள்ளது. தவிர ஆபாசமான ப்ராம்ப்ட்களை (Prompts) பயன்படுத்தித் தவறான உள்ளடக்கங்களை உருவாக்கிய சுமார் 600-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக நீக்கி இருக்கிறது. விதிகளை மீறி உருவாக்கப்பட்ட 3,500-க்கும் அதிகமான ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை எக்ஸ் தளத்திலிருந்து அகற்றியிருக்கிறது. எலான் மஸ்க் இனி வரும் காலங்களில் Grok AI மூலம் ஆபாசமான அல்லது பாலியல் ரீதியான படங்களை உருவாக்க முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறது.

விகடன் 11 Jan 2026 3:40 pm

`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர் இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை, திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது, இதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமி தைத்திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளார். மேலும் முதலமைச்சர் சொல்வது உண்மைதான் சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்றார்.

விகடன் 11 Jan 2026 2:35 pm

`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர் இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை, திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது, இதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமி தைத்திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளார். மேலும் முதலமைச்சர் சொல்வது உண்மைதான் சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்றார்.

விகடன் 11 Jan 2026 2:35 pm

AjithKumar: அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்- ரசிகர்கள் குறித்து அஜித்குமார்

நடிகர் அஜித்குமார், ‘குட்​பேட் அக்​லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இதனிடையே கார் பந்​த​யத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறார் அஜித்குமார். துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், மலேசியா நாடுகளைத் தொடர்ந்து தற்போது 24 ஹெச் சீரிஸ்- மத்​திய கிழக்கு டிராபி பந்​த​யத்​தில் கலந்​து​கொண்​டிருக்​கிறார். Ajithkumar இந்த கார் பந்​த​யத்​துக்கு நடுவே அஜித்​கு​மார் பேசி​யிருக்​கும் வீடியோ ஒன்று இணை​யத்​தில் வைரலாகி இருக்கிறது. அதில், “ 2025 ஒரு நல்ல வருடமாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அற்புதமான மனிதர்களைச் சந்தித்தேன். நான் வாழ்க்​கை​யில் சிறப்​பாக இருக்க வேண்​டும் என்று எப்​படி ரசிகர்கள் விரும்​பு​கிறார்களோ, அதேபோல அவர்​களும் தங்​கள்​ வாழ்க்​கை​யில்​ முன்னேற வேண்​டும்​ என்​று தான்​ விரும்​பு​கிறேன். AjithKumar அனை​வருக்​கும்​ சிறந்​த மற்​றும்​ அழகான வாழ்க்​கை அமைய ​வாழ்​த்​துகிறேன்​” என்​று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 1:12 pm

`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரணத்துக்கு பாமக கட்சித் தலைவர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் உயர்சிகிச்சை அளிப்பதற்கான உதவி செய்யாததுதான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குருவுக்கு கனல் அரசு என்ற மகனும், விருதாம்பிகை என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், குருவின் மகள் விருதாம்பிகை ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். சேலம் மாவட்டம், ஓமலூரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை விருதாம்பிகை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னியர் சமூக மக்களின் ஒற்றுமைக்காகவும், அனைத்து சமுதாய மக்களின் நலன் கருதி ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை என்பது வன்னியர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதுதான். வன்னியர் சங்கமும் இதற்காகத்தான் தொடங்கப்பட்டது. புதிய கட்சி மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய மகனுக்காக சங்கம் மற்றும் பாமக கொள்கையில் இருந்து பின்வாங்கினார். ஆனால், என் தந்தை தனது உயிர்மூச்சு இருக்கும் வரை வன்னியர் சமுதாயத்துக்காகப் போராடினார். எந்த மகனுக்காக, அவரை நம்பியிருந்த வன்னியர் சமுதாயத்தை ராமதாஸ் புறந்தள்ளினாரோ, இன்று பதவிக்காக அன்புமணி ராமதாஸை இழிவுபடுத்தி பேசி வருகிறார். ராமதாஸ் மீது எனக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், வயதான காலத்தில் அவரை அன்புமணி இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாமக பிரிந்து கிடப்பதக்கு காசு தான் காரணம். 10.5 சதவீதம் தருகிறேன் என்று வன்னியரை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, அன்புமணி அதிமுக-வுடன் கூட்டணி வைக்கிறார். வன்னியரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து நிற்கிறார் அன்புமணி. ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளார் அன்புமணி. அரசியல் லாபத்துக்காகவும், காசுக்காகவும் அன்புமணி செயல்படுகிறார். அப்பா, மகனின் துரோகத்தை வன்னியர் மக்கள் மெல்ல மெல்ல புரிந்துகொண்டு வருகிறார்கள். அதை மக்களிடம் கொண்டு செல்லவே கட்சி தொடங்கியுள்ளேன் என்றார்.

விகடன் 11 Jan 2026 12:45 pm

`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரணத்துக்கு பாமக கட்சித் தலைவர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் உயர்சிகிச்சை அளிப்பதற்கான உதவி செய்யாததுதான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குருவுக்கு கனல் அரசு என்ற மகனும், விருதாம்பிகை என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், குருவின் மகள் விருதாம்பிகை ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். சேலம் மாவட்டம், ஓமலூரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை விருதாம்பிகை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னியர் சமூக மக்களின் ஒற்றுமைக்காகவும், அனைத்து சமுதாய மக்களின் நலன் கருதி ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை என்பது வன்னியர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதுதான். வன்னியர் சங்கமும் இதற்காகத்தான் தொடங்கப்பட்டது. புதிய கட்சி மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய மகனுக்காக சங்கம் மற்றும் பாமக கொள்கையில் இருந்து பின்வாங்கினார். ஆனால், என் தந்தை தனது உயிர்மூச்சு இருக்கும் வரை வன்னியர் சமுதாயத்துக்காகப் போராடினார். எந்த மகனுக்காக, அவரை நம்பியிருந்த வன்னியர் சமுதாயத்தை ராமதாஸ் புறந்தள்ளினாரோ, இன்று பதவிக்காக அன்புமணி ராமதாஸை இழிவுபடுத்தி பேசி வருகிறார். ராமதாஸ் மீது எனக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், வயதான காலத்தில் அவரை அன்புமணி இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாமக பிரிந்து கிடப்பதக்கு காசு தான் காரணம். 10.5 சதவீதம் தருகிறேன் என்று வன்னியரை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, அன்புமணி அதிமுக-வுடன் கூட்டணி வைக்கிறார். வன்னியரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து நிற்கிறார் அன்புமணி. ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளார் அன்புமணி. அரசியல் லாபத்துக்காகவும், காசுக்காகவும் அன்புமணி செயல்படுகிறார். அப்பா, மகனின் துரோகத்தை வன்னியர் மக்கள் மெல்ல மெல்ல புரிந்துகொண்டு வருகிறார்கள். அதை மக்களிடம் கொண்டு செல்லவே கட்சி தொடங்கியுள்ளேன் என்றார்.

விகடன் 11 Jan 2026 12:45 pm

அயோத்தி ராமர் கோயிலில் நமாஸ் செய்ய முயற்சி: காஷ்மீர் நபரின் செயலால் அதிர்ச்சி!

அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில்தான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அக்கோயிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு நேற்று ஒருவர் காஷ்மீர் பிரஜை போன்று உடையணிந்து வந்தார். அவர் கோயில் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் கோயிலின் தென்பகுதியில் உள்ள சீதா கோயில் அருகில் அமர்ந்து திடீரென நமாஸ் செய்ய ஆரம்பித்தார். இதைபார்த்த பாதுகாப்பு படையினர் அவரை நமாஸ் செய்ய விடாமல் தடுத்தனர். உடனே அவர் உருது மொழியில் ஏதோ மந்திரங்களை சொன்னார். இதனால் அவரை போலீஸார் பிடித்துச்சென்றனர். அவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் அகமத் ஷேக் என்றும், அவரது சொந்த ஊர் காஷ்மீரின் சோபியன் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமோ அல்லது கோயில் நிர்வாகமோ எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் ஒருவர் கோயில் வளாகத்தில் நுழைந்து நமாஸ் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் வளாகத்தை சுற்றிலும் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அசைவ உணவுகளை சாப்பிட தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு கோயிலில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் ஹோட்டல்களிலும் அசைவ உணவு மற்றும் மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட உதவி உணவு கமிஷனர் மணிக் சந்திர சிங் கூறுகையில், `` ராமர் கோவில் பகுதியைச் சுற்றி அசைவ உணவு விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் வந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ராமன் கோயில் பகுதியிலும் அருகிலுள்ள இடங்களிலும் அசைவ உணவை ஆன்லைனில் விநியோகம் செய்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது இந்த உத்தரவை மீறினால், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்''என்று கூறினார்.

விகடன் 11 Jan 2026 10:00 am

அயோத்தி ராமர் கோயிலில் நமாஸ் செய்ய முயற்சி: காஷ்மீர் நபரின் செயலால் அதிர்ச்சி!

அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில்தான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அக்கோயிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு நேற்று ஒருவர் காஷ்மீர் பிரஜை போன்று உடையணிந்து வந்தார். அவர் கோயில் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் கோயிலின் தென்பகுதியில் உள்ள சீதா கோயில் அருகில் அமர்ந்து திடீரென நமாஸ் செய்ய ஆரம்பித்தார். இதைபார்த்த பாதுகாப்பு படையினர் அவரை நமாஸ் செய்ய விடாமல் தடுத்தனர். உடனே அவர் உருது மொழியில் ஏதோ மந்திரங்களை சொன்னார். இதனால் அவரை போலீஸார் பிடித்துச்சென்றனர். அவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் அகமத் ஷேக் என்றும், அவரது சொந்த ஊர் காஷ்மீரின் சோபியன் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமோ அல்லது கோயில் நிர்வாகமோ எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் ஒருவர் கோயில் வளாகத்தில் நுழைந்து நமாஸ் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் வளாகத்தை சுற்றிலும் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அசைவ உணவுகளை சாப்பிட தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு கோயிலில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் ஹோட்டல்களிலும் அசைவ உணவு மற்றும் மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட உதவி உணவு கமிஷனர் மணிக் சந்திர சிங் கூறுகையில், `` ராமர் கோவில் பகுதியைச் சுற்றி அசைவ உணவு விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் வந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ராமன் கோயில் பகுதியிலும் அருகிலுள்ள இடங்களிலும் அசைவ உணவை ஆன்லைனில் விநியோகம் செய்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது இந்த உத்தரவை மீறினால், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்''என்று கூறினார்.

விகடன் 11 Jan 2026 10:00 am

அடம் பிடிக்கும் ட்ரம்ப்; நோபல் பரிசை பகிர நினைத்த மச்சாடோ - எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி!

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறார். அடம் பிடிக்கும் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு கூட வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தினேன். என்னை விட அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்குத் தகுதியானவர் இங்கு யாருமில்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எதுவும் செய்ததில்லை. அவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று பேசியிருந்தார். ட்ரம்ப் நோபல் பரிசை பகிர நினைக்கும் மச்சாடோ இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். மச்சாடோவின் பதிவு இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், எனக்குக் கிடைத்த இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜனவரி 3-ம் தேதி (மதுரோ பிடிபட்ட நாள்) வரலாற்றில் நீதிக்காகக் கொடுங்கோன்மை வீழ்ந்த நாளாகக் குறிக்கப்படும். இது வெனிசுலா மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மதுரோ சிறைபிடிக்கப்பட்டபோது, சுதந்திரத்தின் மணி ஒலித்துவிட்டது என்று பதிவிட்டிருந்தார். மரியா கொரினா மச்சாடோ எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி இந்நிலையில் தனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறிய மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது, “ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை என்று மச்சாடோவின் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நோபல் கமிட்டி.

விகடன் 11 Jan 2026 9:48 am

அடம் பிடிக்கும் ட்ரம்ப்; நோபல் பரிசை பகிர நினைத்த மச்சாடோ - எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி!

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறார். அடம் பிடிக்கும் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு கூட வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தினேன். என்னை விட அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்குத் தகுதியானவர் இங்கு யாருமில்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எதுவும் செய்ததில்லை. அவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று பேசியிருந்தார். ட்ரம்ப் நோபல் பரிசை பகிர நினைக்கும் மச்சாடோ இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். மச்சாடோவின் பதிவு இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், எனக்குக் கிடைத்த இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜனவரி 3-ம் தேதி (மதுரோ பிடிபட்ட நாள்) வரலாற்றில் நீதிக்காகக் கொடுங்கோன்மை வீழ்ந்த நாளாகக் குறிக்கப்படும். இது வெனிசுலா மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மதுரோ சிறைபிடிக்கப்பட்டபோது, சுதந்திரத்தின் மணி ஒலித்துவிட்டது என்று பதிவிட்டிருந்தார். மரியா கொரினா மச்சாடோ எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி இந்நிலையில் தனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறிய மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது, “ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை என்று மச்சாடோவின் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நோபல் கமிட்டி.

விகடன் 11 Jan 2026 9:48 am

`மகாராஷ்டிராவை வலுப்படுத்த டிரம்ப் போன்ற ஒருவருக்குகூட ஆதரவளிக்க தயங்க மாட்டேன்'- ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே தேர்தல் கூட்டணியில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரது கட்சியும் மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேர்தல் தோல்வி பயத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. இத்தேர்தல் கூட்டணி குறித்து ராஜ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில்,''மராத்தி மக்களின் நலன், மராத்தி மொழியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, மற்றும் ஒரு வலிமையான மகாராஷ்டிரா ஆகியவையே எனக்கு மிகவும் முக்கியம். அரசியலில் வலைந்து கொடுக்கிறோம் என்பதற்காக கொள்கையில் சமரசம் செய்து கொண்டதாக அர்த்தமாகாது. மகாராஷ்டிரா வலுவாக இருக்கவேண்டும் என்பதற்காக டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஒருவருக்கு கூட ஆதரவு கொடுக்க தயங்க மாட்டேன். ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய, நோக்கம் 'தெளிவாகவும் தூய்மையாகவும்' இருக்கும் வரை, அதற்காக எந்த முறையையும் பயன்படுத்தலாம்''என்றார். மராத்தி மொழியைச் செம்மொழியாக அறிவித்ததன் பின்னணியில் உள்ள மத்திய அரசின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய ராஜ் தாக்கரே, அந்த மொழிக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். செம்மொழியாக அறிவித்துவிட்டு அதன் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. சமஸ்கிருதத்திற்காக கணிசமான நிதி செலவிடப்படுகிறது. தொடர்ச்சியான நிதி ஆதரவு இல்லாமல் ஒரு மொழி உயிர்வாழவோ அல்லது வளரவோ முடியாது என்று கூறினார். உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி அமைத்தது குறித்து கூறுகையில், _` இந்த கூட்டணி மராத்தியர்களை மட்டுமே மையமாகக் கொண்டது. அதற்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. இது மாநில அல்லது மத்திய அளவில் ஒரு கூட்டணியாக மாறும் என்று கருதுவது தவறானது. ஏனெனில் தேர்தல் கூட்டணிகள் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயம். மகாராஷ்டிராவை வலுப்படுத்த உதவும் என்றால், டிரம்ப் போன்ற ஒருவருக்கு ஆதரவளிக்கக்கூட எனக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. அரசியல் அடையாளங்களை விட மாநிலத்தின் நலன்களே எனக்கு முக்கியம். தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தாலும், மராத்தி அடையாளம் குறித்த எனது கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்வேன். நான் முழுமையான மராட்டியன். இந்த விஷயத்தில் நான் பின்வாங்கமாட்டேன்''என்று தெரிவித்தார்.

விகடன் 11 Jan 2026 9:06 am

கோவை: `திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'- பாஜக செயல் தலைவர் நிதின் நபின் சபதம்

பாஜக அகில இந்திய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக கோவை வந்துள்ளார். நேற்று மாலை பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில பாஜகவின் மூத்த நிர்வாகிகள், கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய நிதின் நபின், நிதின் நபின் “இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் முன்னேறிய நகரமாக கோவை உள்ளது.  கோவைக்கு வந்தே பாரத் ரயிலை மோடி வழங்கியுள்ளார். ஜவுளித்துறை, சிறு குறு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் முன்னேற்றம், உள்நாட்டு கட்டமைப்பு போன்றவற்றில் அதிக முதலீடு செய்துள்ளோம். கொங்கு மண்டலம் முன்னேற்றத்திற்கான பகுதி.  கோவை தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் நலனுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கி வருகிறார், ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அப்படி இல்லை. ஊழல், லஞ்சம் என்றால் அது திமுக ஆட்சி தான். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கல்லூரி மாணவிகள் மீது பாலியல் வன்முறை நடைபெறுகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு சில அமைச்சர்கள் கொச்சையாக பேசி வருகிறார்கள். பாஜக சபதம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத்தை ஏற்ற விடாமல் மாநில அரசு செயல்பட்டுள்ளது. திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை கொண்ட அரசாங்கம் வர வேண்டும்” என்றார். பிறகு பாஜகவின் வெற்றிக்காக சபதம் எடுத்தனர்.

விகடன் 11 Jan 2026 8:51 am

கோவை: `திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'- பாஜக செயல் தலைவர் நிதின் நபின் சபதம்

பாஜக அகில இந்திய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக கோவை வந்துள்ளார். நேற்று மாலை பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில பாஜகவின் மூத்த நிர்வாகிகள், கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய நிதின் நபின், நிதின் நபின் “இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் முன்னேறிய நகரமாக கோவை உள்ளது.  கோவைக்கு வந்தே பாரத் ரயிலை மோடி வழங்கியுள்ளார். ஜவுளித்துறை, சிறு குறு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் முன்னேற்றம், உள்நாட்டு கட்டமைப்பு போன்றவற்றில் அதிக முதலீடு செய்துள்ளோம். கொங்கு மண்டலம் முன்னேற்றத்திற்கான பகுதி.  கோவை தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் நலனுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கி வருகிறார், ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அப்படி இல்லை. ஊழல், லஞ்சம் என்றால் அது திமுக ஆட்சி தான். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கல்லூரி மாணவிகள் மீது பாலியல் வன்முறை நடைபெறுகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு சில அமைச்சர்கள் கொச்சையாக பேசி வருகிறார்கள். பாஜக சபதம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத்தை ஏற்ற விடாமல் மாநில அரசு செயல்பட்டுள்ளது. திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை கொண்ட அரசாங்கம் வர வேண்டும்” என்றார். பிறகு பாஜகவின் வெற்றிக்காக சபதம் எடுத்தனர்.

விகடன் 11 Jan 2026 8:51 am

வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா'கனவு | Explained

2026-ம் ஆண்டு பிறந்த மூன்று நாள்களில் (ஜனவரி 3), வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கடத்தியது அமெரிக்கப் படை. அதுவும் வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் இருக்கும் பலத்த ராணுவ பாதுகாப்பு கொண்ட டியுனா கோட்டையிலிருந்து. இதைக் கூறி கொலம்பியாவைப் பயமுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அடுத்ததாக, உடனடி டார்கெட்டாக கிரீன்லேண்டை செட் செய்திருக்கிறார் போலும். இது அவரது பேச்சுகளின் மூலம் வெளிப்படுகிறது. ட்ரம்பின் அத்தனை நடவடிக்கைகள், பேச்சுகளில் இருந்து 'அகண்ட அமெரிக்கா' என்கிற அவருடைய கனவு வெளி வருகிறது. ஆர்.கண்ணன் Venezuela: ஒத்திகை முதல் Spy வரை; அதிபர் மதுரோவைச் சிறைப்பிடிக்க அமெரிக்கா எப்படித் திட்டமிட்டது? 'அகண்ட அமெரிக்கா' குறித்து விளக்குகிறார் ஐ.நா-வின் முன்னாள் அதிகாரியும், எழுத்தாளருமான ஆர்.கண்ணன். வெனிசுலா அதிபர் மதுரோவின் சிறைபிடிப்பிற்கு 'போதைப்பொருள் கடத்தல்' காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதற்குப் பின்னணியில் முக்கியமாக இருப்பதென்னவோ, 'வெனிசுலாவில் இருக்கும் எண்ணெய் வளம்' தான். இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே இதுவரை பலமுறை கூறிவிட்டார். மதுரோ சிறைப்பிடிப்பிற்குப் பின், வெனிசுலா நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ். இவர் ட்ரம்பிற்கு எதிராக ஆரம்பத்தில் நிறைய பேசிக்கொண்டிருந்தார். இது தொடர்ந்தால், மதுரோவை விட கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த பின், டெல்சி அப்படியே அமைதியாகி விட்டார். தற்போது 3 - 5 கோடி பில்லியன் பேரல்கள் எண்ணெய்களை டெல்சி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். இந்த எண்ணெயின் மொத்த மதிப்பு 3 பில்லியன் டாலர்கள். ட்ரம்ப் பேசும்போது, மதுரோவின் சிறைபிடிப்பிற்கு முன்னும், பின்னும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பேசியதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். ஆக, மதுரோ சிறைபிடிப்பு சம்பவம் முழுக்க முழுக்க 'வணிக நோக்கத்திற்காக' செய்யப்பட்டது ஆகும். மேலும், இது அவரது ஆதிக்கத்தைக் காட்டவும் செய்யப்பட்டது ஆகும். நிக்கோலஸ் மதுரோ Marinera: ரஷ்ய கொடி பறந்த கப்பல்; பின்தொடர்ந்து கைபற்றிய அமெரிக்கா - முற்றும் வெனிசுலா விவகாரம்! ரிஸ்க் எடுக்கும் ட்ரம்ப் வெனிசுலாவில் மின்சாரம் தொடங்கி ரயில்வே வரை பல உள்கட்டமைப்புப் பணிகளை செய்துள்ளது சீனா. சீனாவும், வெனிசுலாவும் எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து வருகிறது. ஆனால், வெனிசுலாவில் சீனாவின் முதலீட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் தான் ட்ரம்ப் காய் நகர்த்துவார். இந்த இடத்தில் 'டோன்ரோ கோட்பாடு' குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். டோன்ரோ கோட்பாடு என்றால் அமெரிக்கக் கண்டத்திற்குள் பிற கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் உள்வரக்கூடாது. வெனிசுலா இடதுசாரி கொள்கையை தழுவிய பின், ரஷ்யா, சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டத் தொடங்கியது. இது முன்னர் அமெரிக்க அதிபர்களாக இருந்த எவருக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால், ட்ரம்ப் அளவிற்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. அதனால், வெனிசுலாவைக் கைப்பற்றுவதை ட்ரம்ப் செய்து காட்டியிருக்கிறார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை அவரது 'அகண்ட அமெரிக்கா' கனவைக் காட்டுகிறது. கிரீன்லேண்ட் விவகாரம் 80 ஆண்டுகளுக்கு முன், ட்ரூமன் கிரீன்லேண்டை 100 பில்லியன் டாலர் தங்கத்திற்கு விலைக்கு வாங்குவதாக இருந்தார். ஆனால், அது அப்போது நடக்கவில்லை. இப்போது ட்ரம்ப் அதுகுறித்து பேசுகிறார். அடுத்ததாக, கனடாவை 51-வது மாகாணம் என்று கூறுகிறார். பனாமா கால்வாய் நாங்கள் கட்டியது என்று கூறுகிறார் ட்ரம்ப். கிரீன்லேண்டைக் கைப்பற்றுவது குறித்து ட்ரம்ப் பேசும்போது, டென்மார்க்கைத் தவிர, வேறு எந்த நாடும் பெரிதாகப் பேசவில்லை. வெனிசுலா சம்பவத்திற்கு பிறகு, கொலம்பியாவிற்கும் எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப். ஆரம்பத்தில் எதிர்ப்பு காட்டினார். பின்னர், ட்ரம்பிற்கு, அந்த நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின், 'பெட்ரோ உடன் பேசியது மிகப்பெரிய பெருமை' என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப். இதிலிருந்தே மதுரோவிற்கு நடந்தது பெட்ரோவிற்கு நடக்காது என்று தெரிய வருகிறது. கியூபா 'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்? கியூபாவைக் கண்டுகொள்ளாத ட்ரம்ப் ஆனால், கியூபா பக்கம் இன்னும் ட்ரம்ப் செல்லவில்லை. அந்த நாடே தானாக விழுந்துவிடும் என்று ட்ரம்ப் கூறுகிறார். உண்மையில், அந்த அளவுக்கு தான் கியூபாவின் பொருளாதார நிலைமை உள்ளது. மற்ற அமெரிக்க அதிபர்கள் அமெரிக்க கண்டத்தைத் தாண்டி நாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், ட்ரம்ப் தங்களது கொல்லைப்புறமான தென் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பார்க்கிறார். இதற்கு போதைப்பொருள் போன்றவைகளைக் காரணமாகக் கூறுகிறார். அதுவும் உண்மை தான். ஆனால், அவைகளைக் கட்டுப்படுத்துவதில் சர்வதேச விதிகள் எதையும் இவர் பின்பற்றுவதில்லை என்பது தான் ஒரே பிரச்னை. என்கிறார். டார்கெட் Greenland: நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.! - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

விகடன் 11 Jan 2026 8:00 am

வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா'கனவு | Explained

2026-ம் ஆண்டு பிறந்த மூன்று நாள்களில் (ஜனவரி 3), வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கடத்தியது அமெரிக்கப் படை. அதுவும் வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் இருக்கும் பலத்த ராணுவ பாதுகாப்பு கொண்ட டியுனா கோட்டையிலிருந்து. இதைக் கூறி கொலம்பியாவைப் பயமுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அடுத்ததாக, உடனடி டார்கெட்டாக கிரீன்லேண்டை செட் செய்திருக்கிறார் போலும். இது அவரது பேச்சுகளின் மூலம் வெளிப்படுகிறது. ட்ரம்பின் அத்தனை நடவடிக்கைகள், பேச்சுகளில் இருந்து 'அகண்ட அமெரிக்கா' என்கிற அவருடைய கனவு வெளி வருகிறது. ஆர்.கண்ணன் Venezuela: ஒத்திகை முதல் Spy வரை; அதிபர் மதுரோவைச் சிறைப்பிடிக்க அமெரிக்கா எப்படித் திட்டமிட்டது? 'அகண்ட அமெரிக்கா' குறித்து விளக்குகிறார் ஐ.நா-வின் முன்னாள் அதிகாரியும், எழுத்தாளருமான ஆர்.கண்ணன். வெனிசுலா அதிபர் மதுரோவின் சிறைபிடிப்பிற்கு 'போதைப்பொருள் கடத்தல்' காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதற்குப் பின்னணியில் முக்கியமாக இருப்பதென்னவோ, 'வெனிசுலாவில் இருக்கும் எண்ணெய் வளம்' தான். இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே இதுவரை பலமுறை கூறிவிட்டார். மதுரோ சிறைப்பிடிப்பிற்குப் பின், வெனிசுலா நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ். இவர் ட்ரம்பிற்கு எதிராக ஆரம்பத்தில் நிறைய பேசிக்கொண்டிருந்தார். இது தொடர்ந்தால், மதுரோவை விட கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த பின், டெல்சி அப்படியே அமைதியாகி விட்டார். தற்போது 3 - 5 கோடி பில்லியன் பேரல்கள் எண்ணெய்களை டெல்சி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். இந்த எண்ணெயின் மொத்த மதிப்பு 3 பில்லியன் டாலர்கள். ட்ரம்ப் பேசும்போது, மதுரோவின் சிறைபிடிப்பிற்கு முன்னும், பின்னும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பேசியதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். ஆக, மதுரோ சிறைபிடிப்பு சம்பவம் முழுக்க முழுக்க 'வணிக நோக்கத்திற்காக' செய்யப்பட்டது ஆகும். மேலும், இது அவரது ஆதிக்கத்தைக் காட்டவும் செய்யப்பட்டது ஆகும். நிக்கோலஸ் மதுரோ Marinera: ரஷ்ய கொடி பறந்த கப்பல்; பின்தொடர்ந்து கைபற்றிய அமெரிக்கா - முற்றும் வெனிசுலா விவகாரம்! ரிஸ்க் எடுக்கும் ட்ரம்ப் வெனிசுலாவில் மின்சாரம் தொடங்கி ரயில்வே வரை பல உள்கட்டமைப்புப் பணிகளை செய்துள்ளது சீனா. சீனாவும், வெனிசுலாவும் எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து வருகிறது. ஆனால், வெனிசுலாவில் சீனாவின் முதலீட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் தான் ட்ரம்ப் காய் நகர்த்துவார். இந்த இடத்தில் 'டோன்ரோ கோட்பாடு' குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். டோன்ரோ கோட்பாடு என்றால் அமெரிக்கக் கண்டத்திற்குள் பிற கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் உள்வரக்கூடாது. வெனிசுலா இடதுசாரி கொள்கையை தழுவிய பின், ரஷ்யா, சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டத் தொடங்கியது. இது முன்னர் அமெரிக்க அதிபர்களாக இருந்த எவருக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால், ட்ரம்ப் அளவிற்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. அதனால், வெனிசுலாவைக் கைப்பற்றுவதை ட்ரம்ப் செய்து காட்டியிருக்கிறார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை அவரது 'அகண்ட அமெரிக்கா' கனவைக் காட்டுகிறது. கிரீன்லேண்ட் விவகாரம் 80 ஆண்டுகளுக்கு முன், ட்ரூமன் கிரீன்லேண்டை 100 பில்லியன் டாலர் தங்கத்திற்கு விலைக்கு வாங்குவதாக இருந்தார். ஆனால், அது அப்போது நடக்கவில்லை. இப்போது ட்ரம்ப் அதுகுறித்து பேசுகிறார். அடுத்ததாக, கனடாவை 51-வது மாகாணம் என்று கூறுகிறார். பனாமா கால்வாய் நாங்கள் கட்டியது என்று கூறுகிறார் ட்ரம்ப். கிரீன்லேண்டைக் கைப்பற்றுவது குறித்து ட்ரம்ப் பேசும்போது, டென்மார்க்கைத் தவிர, வேறு எந்த நாடும் பெரிதாகப் பேசவில்லை. வெனிசுலா சம்பவத்திற்கு பிறகு, கொலம்பியாவிற்கும் எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப். ஆரம்பத்தில் எதிர்ப்பு காட்டினார். பின்னர், ட்ரம்பிற்கு, அந்த நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின், 'பெட்ரோ உடன் பேசியது மிகப்பெரிய பெருமை' என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப். இதிலிருந்தே மதுரோவிற்கு நடந்தது பெட்ரோவிற்கு நடக்காது என்று தெரிய வருகிறது. கியூபா 'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்? கியூபாவைக் கண்டுகொள்ளாத ட்ரம்ப் ஆனால், கியூபா பக்கம் இன்னும் ட்ரம்ப் செல்லவில்லை. அந்த நாடே தானாக விழுந்துவிடும் என்று ட்ரம்ப் கூறுகிறார். உண்மையில், அந்த அளவுக்கு தான் கியூபாவின் பொருளாதார நிலைமை உள்ளது. மற்ற அமெரிக்க அதிபர்கள் அமெரிக்க கண்டத்தைத் தாண்டி நாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், ட்ரம்ப் தங்களது கொல்லைப்புறமான தென் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பார்க்கிறார். இதற்கு போதைப்பொருள் போன்றவைகளைக் காரணமாகக் கூறுகிறார். அதுவும் உண்மை தான். ஆனால், அவைகளைக் கட்டுப்படுத்துவதில் சர்வதேச விதிகள் எதையும் இவர் பின்பற்றுவதில்லை என்பது தான் ஒரே பிரச்னை. என்கிறார். டார்கெட் Greenland: நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.! - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

விகடன் 11 Jan 2026 8:00 am

`நீட்'எழுதி தேர்வான 50 மாணவர்கள்; கல்லூரிக்கு திடீர் அனுமதி ரத்து - கொண்டாடிய இந்துத்துவ அமைப்பினர்

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி (SMVDIME) செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 50 இடங்களுடன் எம்பிபிஎஸ் வகுப்பை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்புக்குத் தேர்வான 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 42 பேர் இஸ்லாமிய மாணவர்கள், ஒரு சீக்கி மாணவர், மீதமிருக்கும் 7 மாணவர்கள் இந்து மாணவர்கள். ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி இந்த நிலையில், `இந்தக் கல்லூரியை வைஷ்ணவ தேவி ஆலய வாரியம் நடத்துகிறது. எனவே, இந்து பக்தர்களின் காணிக்கைகளால் நிதியளிக்கப்படும் இந்தக் கல்லூரியில், இந்துக்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்க வேண்டும். முஸ்லிம் மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். அது முடியாதென்றால், மருத்துவக் கல்லூரியை மூட வேண்டும்' என வெவ்வேறு பெயர்களில் இருக்கும் 60 குழுக்கள் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி (SMVDSS) என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுத்தன. அதைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் நிபுணர் குழு ஒன்று ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ``கல்லூரியில் பேராசிரியர்கள் எண்ணிக்கையில் 39 சதவீதமும், மூத்த மருத்துவர்கள் மற்றும் பயிற்றுநர்கள் எண்ணிக்கையில் 65 சதவீதமும் பற்றாக்குறை இருக்கிறது. மேலும், நோயாளிகளின் வருகை (OPD) 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதோடு, மருத்துவமனை படுக்கைகளில் 45 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகங்களில் 50 சதவீதம் மட்டுமே இருந்தன. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி15 மருத்துவ இதழ்களுக்குப் பதிலாக இரண்டு இதழ்கள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தன. ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளும் தேசியத் தரத்திற்கு இணையாக இல்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் (MBBS) படிப்புக்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. மாணவர்களின் கல்வி நிலை: இந்த அங்கீகார ரத்து நடவடிக்கையால், 2025-26 கல்வியாண்டில் ஏற்கனவே கல்லூரியில் சேர்ந்த 50 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் அனைவரையும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்கள் மூலம் மாற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கல்லூரியில் எம்.பி.பி.எஸ் அனுமதி ரத்து கொண்டாட்டம். 'ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி' என்ற அமைப்பு மூலம் போராட்டங்களை முன்னெடுத்த ஓய்வுபெற்ற கர்னல் சுக்வீர் மன்கோட்டியா, ``ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவு பெற்ற 60 அமைப்புகளின் கூட்டமைப்பான ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி மூலமாகதான் இது சாத்தியமானது. இந்து யாத்ரீகர்கள் அளிக்கும் காணிக்கைப் பணத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தில் காஷ்மீர் முஸ்லிம் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. ஆரம்பத்திலிருந்தே அம்மாணவர்களை மற்ற கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரி வந்தோம் எனத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து கல்லூரியில் எம்.பி.பி.எஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதை மேளதாளத்துடன் இனிப்பு வழங்கியும், மாலை அணிவித்தும் கொண்டாடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்புக் கல்லூரி, `` எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. குளிர்கால விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் பலர் விடுப்பில் இருந்தபோது, முன்னறிவிப்பின்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக் குழு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புதான் எங்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள். அதற்குள் விடுப்பில் இருந்தவர்களை அழைக்க நேரமில்லை. தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை நிர்வாகக் குறைபாடுகளுக்கானதல்ல... அரசியல் அழுத்தத்துக்கானது. எனத் தெரிவித்திருக்கிறது. நீட் தேர்வில் மோசடி: '6 மாநிலங்கள்; ரூ.100 கோடி' - ஆள்மாறாட்டம் செய்த பொறியாளர் சிக்கியது எப்படி?

விகடன் 10 Jan 2026 5:40 pm

`நீட்'எழுதி தேர்வான 50 மாணவர்கள்; கல்லூரிக்கு திடீர் அனுமதி ரத்து - கொண்டாடிய இந்துத்துவ அமைப்பினர்

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி (SMVDIME) செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 50 இடங்களுடன் எம்பிபிஎஸ் வகுப்பை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்புக்குத் தேர்வான 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 42 பேர் இஸ்லாமிய மாணவர்கள், ஒரு சீக்கி மாணவர், மீதமிருக்கும் 7 மாணவர்கள் இந்து மாணவர்கள். ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி இந்த நிலையில், `இந்தக் கல்லூரியை வைஷ்ணவ தேவி ஆலய வாரியம் நடத்துகிறது. எனவே, இந்து பக்தர்களின் காணிக்கைகளால் நிதியளிக்கப்படும் இந்தக் கல்லூரியில், இந்துக்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்க வேண்டும். முஸ்லிம் மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். அது முடியாதென்றால், மருத்துவக் கல்லூரியை மூட வேண்டும்' என வெவ்வேறு பெயர்களில் இருக்கும் 60 குழுக்கள் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி (SMVDSS) என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுத்தன. அதைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் நிபுணர் குழு ஒன்று ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ``கல்லூரியில் பேராசிரியர்கள் எண்ணிக்கையில் 39 சதவீதமும், மூத்த மருத்துவர்கள் மற்றும் பயிற்றுநர்கள் எண்ணிக்கையில் 65 சதவீதமும் பற்றாக்குறை இருக்கிறது. மேலும், நோயாளிகளின் வருகை (OPD) 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதோடு, மருத்துவமனை படுக்கைகளில் 45 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகங்களில் 50 சதவீதம் மட்டுமே இருந்தன. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி15 மருத்துவ இதழ்களுக்குப் பதிலாக இரண்டு இதழ்கள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தன. ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளும் தேசியத் தரத்திற்கு இணையாக இல்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் (MBBS) படிப்புக்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. மாணவர்களின் கல்வி நிலை: இந்த அங்கீகார ரத்து நடவடிக்கையால், 2025-26 கல்வியாண்டில் ஏற்கனவே கல்லூரியில் சேர்ந்த 50 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் அனைவரையும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்கள் மூலம் மாற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கல்லூரியில் எம்.பி.பி.எஸ் அனுமதி ரத்து கொண்டாட்டம். 'ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி' என்ற அமைப்பு மூலம் போராட்டங்களை முன்னெடுத்த ஓய்வுபெற்ற கர்னல் சுக்வீர் மன்கோட்டியா, ``ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவு பெற்ற 60 அமைப்புகளின் கூட்டமைப்பான ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி மூலமாகதான் இது சாத்தியமானது. இந்து யாத்ரீகர்கள் அளிக்கும் காணிக்கைப் பணத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தில் காஷ்மீர் முஸ்லிம் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. ஆரம்பத்திலிருந்தே அம்மாணவர்களை மற்ற கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரி வந்தோம் எனத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து கல்லூரியில் எம்.பி.பி.எஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதை மேளதாளத்துடன் இனிப்பு வழங்கியும், மாலை அணிவித்தும் கொண்டாடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்புக் கல்லூரி, `` எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. குளிர்கால விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் பலர் விடுப்பில் இருந்தபோது, முன்னறிவிப்பின்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக் குழு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புதான் எங்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள். அதற்குள் விடுப்பில் இருந்தவர்களை அழைக்க நேரமில்லை. தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை நிர்வாகக் குறைபாடுகளுக்கானதல்ல... அரசியல் அழுத்தத்துக்கானது. எனத் தெரிவித்திருக்கிறது. நீட் தேர்வில் மோசடி: '6 மாநிலங்கள்; ரூ.100 கோடி' - ஆள்மாறாட்டம் செய்த பொறியாளர் சிக்கியது எப்படி?

விகடன் 10 Jan 2026 5:40 pm

மதுரோ–சதாம் ஹுசைன் சிறைபிடிப்பு: இரண்டுமே அமெரிக்கா செய்தது தான்; ஆனால், வித்தியாசம் உண்டு - எப்படி?

கடந்த ஜனவரி 3-ம் தேதி வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவிற்கு சிறைபிடித்து வரப்பட்டார். இதற்கு முன்பு, 2003-ம் ஆண்டு, ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படையினரால் ஈராக்கில் சிறைபிடிக்கப்பட்டார். இந்த இரண்டு சிறைபிடிப்புகளும் அமெரிக்கப் படையினரால் தான் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்று கூறுகிறார் ஐ.நா-வின் முன்னாள் அதிகாரியும், எழுத்தாளருமான ஆர்.கண்ணன். சதாம் ஹூசைன் சிறைபிடிப்பை எடுத்துக்கொண்டால், அவரை அமெரிக்க ராணுவம் சிறைபிடிக்கும்போது, அவர் மறைந்து வாழ்ந்து வந்தார். ஆர்.கண்ணன் Venezuela: ஒத்திகை முதல் Spy வரை; அதிபர் மதுரோவைச் சிறைப்பிடிக்க அமெரிக்கா எப்படித் திட்டமிட்டது? அடுத்ததாக, ஈராக்கில் இருந்து சதாம் ஹுசைன் அமெரிக்காவிற்கு கொண்டுவரப்படவில்லை. சிறைபிடிப்பு முதல் வழக்கு வரை அனைத்துமே அவர் ஈராக்கில் இருந்தப்போது தான் நடந்தது. அவருக்கு கிடைத்த தூக்கு தண்டனை ஈராக் சட்டத்தாலும்... ஈராக் நீதிமன்றத்தாலும் தரப்பட்டது ஆகும். ஆனால், மதுரோவின் சிறைபிடிப்பு முற்றிலும் வேறு. மதுரோ வெனிசுலாவில் இருந்து வெளியே அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நீதிமன்றத்தில் தான் அவர் அவருக்கு எதிரான வழக்கை சந்தித்து வருகிறார். என்கிறார். Marinera: ரஷ்ய கொடி பறந்த கப்பல்; பின்தொடர்ந்து கைபற்றிய அமெரிக்கா - முற்றும் வெனிசுலா விவகாரம்!

விகடன் 10 Jan 2026 5:26 pm

தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’... இங்கிலீஷ் ‘எவர்’ - தமிழனின் வெற்றி! | மொழிப்போரின் வீர வரலாறு – 3

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழே உயிரே! - பகுதி 3   ‘குண்டுக்கஞ்சோம் வடவர்கள் கூட்டுக்கஞ்சோம் பலபல குண்டர்க்காம் செய்தித்தாள் கூற்றுக்கஞ்சோம் அண்டிற்றா இந்நாட்டில் அயலானின் இந்திமொழி? அண்டைப்புழு மாந்திடுமென்று அதிராயோ முரசே!’ – என்று அஞ்சாமை முழங்குகிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இது நியாயமில்லை! நாட்டின் சுதந்திரத்துக்கு முன்பு, 1937-ம்ஆண்டு கட்டாய இந்திக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு, 1950-ல் மீண்டும் ஓர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. காரணம், சென்னை மாகாண கல்வியமைச்சராக இருந்த மாதவ மேனன், உயர்நிலைப் பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் ஆணை ஒன்றை 1950-ம் ஆண்டு மே 2-ம் தேதி பிறப்பித்தார். அதற்கு, தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. கட்டாய இந்தியை எதிர்த்து தி.மு.க போராட்டத்தைத் தொடங்கியது. தி.மு.க-வினர் பலர் கைது செய்யப்பட்டார்கள். கட்டாய இந்தியை எதிர்த்து பேரணி நடத்த அண்ணா முற்பட்டார். எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், இந்தி கட்டாயப் பாடம் என்ற ஆணையை ஜூன் 18-ம் தேதி அரசு வாபஸ் பெற்றது. பின்னர், கல்வியமைச்சர் மாதவ மேனன், மொழிக்கல்வியில் ‘சீர்திருத்தம்’, ‘மாறுதல்’ போன்றவை இனிமேல் இருக்காது என்ற அளவுக்கு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார். ‘திருத்தியமைக்கப்பட்ட’ அந்தத் திட்டம் வரவேற்புக்குரியதாக இருந்தது. அதன்படி, மாநில மொழியை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை வருகிறது. அதாவது, தமிழ்நாட்டில் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்… ஆந்திராவில் தெலுங்கு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதாக அது இருந்தது. ஆங்கிலத்துக்கும் அந்த முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தி கட்டாயம் என்று அல்லாமல், விருப்பம் இருப்பவர்கள் இந்தியைப் படிக்கலாம், அல்லது கைத்தொழில் பழகலாம் என்று அந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அந்தளவில் அமைச்சர் மாதவ மேனன் கொண்டுவந்த திட்டம் வரவேற்பைப் பெற்றது. அதே நேரம், அதில் ஒரு சிக்கலும் இருந்தது. வடமொழிக்காரர்களைத் திருப்திபடுத்துவதற்காக சிக்கலான அந்த அம்சத்தை அமைச்சர் மாதவ மேனன் சேர்த்துவிட்டாரோ என்ற கேள்வியும் எழுந்தது. அதாவது, வட்டார மொழியைப் பொதுப்படிப்பு, சிறப்புப்படிப்பு என்று பிரித்திருந்தனர். அதில், பொதுப்படிப்பை அனைவருக்கும் கட்டாயம் என்றும், சிறப்புப் படிப்பை விருப்பப்பாடம் என்று கொண்டுவந்தது ஒரு பிரச்னையாக எழுந்தது. இதுவரை, வட்டார மொழி என்ற பாடத்தில் கற்றுத்தரப்பட்ட அளவு பாடங்களையே முதற்பாகம், இரண்டாம் பாகம் என்று பங்கு போடுகிறார்கள். முதற்பாகம் சாதாரண மொழிப் பயிற்சி மட்டுமே பெற உதவும். இரண்டாம் பாகம்தான் இலக்கியப் பயிற்சிக்கு இடமளிக்கிறது. முதற்பாகம்தான் இப்போது கட்டாயப்பாடம். அதாவது, சாதாரண மொழியறிவுதான் கட்டாயம். இலக்கண, இலக்கியப் பயிற்சி விருப்பமிருந்தால் கற்றுக்கொள்ளலாம். அவ்வளவுதான். இந்த நிலை விருப்பத்தக்கது அல்ல என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்தி திணிப்பு ஆங்கில மொழியைப் பொருத்தளவில், இதுவரை இருந்துவந்த பாடத்திட்டத்தில், நேரத்தில் மாறுதல் ஏதும் இல்லை. ஆனால், வட்டார மொழிக்கு இதுவரை கிடைத்துவந்த பாடத்திட்டத்திலும், நேரத்திலும் பங்கு போட்டு, வடமொழிக்கு வழங்கியிருக்கிறார்கள். இதுவரை இருந்துவந்த வட்டார மொழிப் (தமிழ்) பாடத்திட்டமே போதுமான அளவில் இல்லை. இன்னும் ஆக்கம் பெற வேண்டும். அப்படியிருக்கும்போது, பாடத்திட்டத்தில் வடமொழிக்கு ஆக்கம் அளிப்பதற்காக வட்டார மொழியின் பங்கை இழக்கச் செய்திருப்பது சிறிதும் நியாயமில்லை என்று தமிழறிஞர்களிடமிருந்தும், தமிழ் அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தி மீது தார்! 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவில் நான்கு இயல்கள் அமைந்திருக்கின்றன. முதலாவது இயலில் உள்ள 343-வது விதி, தேவநாகரி வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்தி மொழியை மைய அரசின் ஆட்சி மொழி என்றும், 1965 வரை ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்றும் இருந்தது. 344-வது விதியில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி மொழியின் வளர்ச்சியைக் கண்டறிய ஆட்சி மொழி ஆணையம் ஒன்றை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது. இப்படியாக, இந்தியை  வளர்க்கவும், பரவலாக்கவும், ஆட்சி மொழியாக நிலைபெறச் செய்யவும் விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதை எதிர்த்து, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழறிஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். புகைவண்டி நிலையங்களிலும், அஞ்சல் நிலையங்களிலும் பெயர்ப்பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை தார்பூசி அவர்கள் அழித்தார்கள். ஈரோடு புகைவண்டி நிலையத்தில் அண்ணாவும், திருச்சி புகைவண்டி நிலையத்தில் பெரியாரும் இந்தி எழுத்துக்களை அழித்தனர். திருச்சி தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகத்தில் கருணாநிதி, நாகூர் அனிபா, எசு.மணி உள்ளிட்டோர் இந்தி பெயர்ப்பலகையை தார்பூசி அழித்தனர். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமான நடைபெற்றன. திருச்சி அருகே கல்லக்குடியின் பெயரை ‘டால்மியாபுரம்’ என்ற மாற்றியதைக் கண்டித்து 1953-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் கருணாநிதி. சங்கரலிங்கனாரின் உயிர்மூச்சு! 1956-ம் ஆண்டு. ‘சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றுங்கள்… தமிழ்நாடு என்று பெயர் சூட்டுங்கள்’ என்று உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதம் இருந்தார் தியாகி சங்கரலிங்கனார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும், பொது வாழ்விலும் ஆட்சியதிகாரத்திலும் பரிசுத்தம் நிலவ வேண்டும் என்பன உட்பட 12 கோரிக்கைகளை சங்கரலிங்கனார் வலியுறுத்தினார். முதல்வர் காமராஜர், தி.மு.க தலைவர் சி.என்.அண்ணாதுரை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம், கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் உட்பட பல தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் உண்ணாவிரதத்தைக் கைவிட சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார். சங்கரலிங்கனார் அந்த தேசபக்தரின் சொந்த ஊரான அதே விருதுநகரைச் சேர்ந்த காமராஜர்தான் அன்றைக்கு சென்னை மாகாண முதல்வராக இருந்தார். தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட முடியாது என்று காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு மறுத்துவிட்டது. 1956-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி தொடங்கிய சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதப் போராட்டம், அக்டோபர் 13-ம் தேதி முடிவுற்றது. காரணம், அன்றைய தினம் அவரது மூச்சு நின்றுவிட்டது. மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையில் சங்கரலிங்கனாரின் உயிர் பிரிந்த செய்தி வெளியே பரவியது. மருத்துவமனை முன்பு மதுரை மக்கள் திரண்டனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஓடோடிவந்து அந்த தேசபக்தருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். சாவதற்கு முன்பு மூன்று கடிதங்களை அவர் எழுதியிருந்தார். ஒரு கடிதத்தில், ‘பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாக, தவறான வழியில்  கண்மூடித்தனமாகப் போய்க்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத்திறன் இருந்தால் அது திருத்திக்கொள்ளட்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இன்னொரு கடிதத்தில், ‘நான் மரணமுற்ற பிறகு என் சடலத்தை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படையுங்கள்’ என்று சங்கரலிங்கனார் தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். மதுரை தத்தனேரி சுடுகாட்டில் சங்கரலிங்கனாரின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அதை, கம்யூனிஸ்ட் தலைவர்களான கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே.தங்கமணி உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். சங்கரலிங்கனார் மரணமடைந்தார். ஆனால், அவரது உயிர்மூச்சான ‘தமிழ்நாடு என்று பெயர்சூட்டுங்கள்’ என்ற கோரிக்கை உயிரோடு இருந்தது. தமிழனின் வெற்றி! 1952 முதல் 1962 வரை, ராஜாஜியின் சீடரான சி.சுப்பிரமணியம் தமிழ்நாட்டின் கல்வியமைச்சராக இருந்தார். அவர், 1956-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, தமிழ் ஆட்சி மொழி மசோதாவை சட்டமன்றத்தில் முன்வைத்தார். சென்னை மாகாணம் மொழிவழி மாநிலங்களாகப் பிரிந்த பிறகு, தமிழ் பேசும் பகுதிகளை மட்டுமே கொண்ட சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் இந்த மசோதா முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத்தில் அந்த மசோதா மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ப.ஜீவானந்தம் பங்கெடுத்தார். அப்போது, ‘அடுத்து புதிதாக வரப்போகும் சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நம் மாநிலத்துக்கு நிச்சயம் சூட்டப்படும். அந்த ஆட்சியின் காலவரையறை தீருவதற்கு முன்பு, ஐந்தாண்டுகளுக்குள் கல்லூரிகளில் தமிழ் ஆனந்தத் தாண்டவமாடும் என்பதில் சந்தேகம் கிடையாது. தமிழ் ஆட்சிமொழி என்பது மந்திரி அவர்களின் வெற்றி கிடையாது. இது தமிழனின் ஜனநாயக வெற்றி’ என்றார். பிறகு, தமிழ் ஆட்சி மொழி மசோதா சட்டமன்றத்தில் ஏகமனதுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், ஆட்சி மொழி ஆணையத்தின் அறிக்கை 1957 ஆகஸ்ட் 12-ம் தேதி நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அதை ஆராய்ந்து கருத்து தெரிவிக்க 30 பேர் கொண்ட குழு உள்துறை அமைச்சர் வல்லப பந்த் தலைமையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் மீது நாடாளுமன்றத்தில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, ‘எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்க வேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் அதில் முடிவெடுக்க வேண்டும்’ என்று பிரதமர் நேரு உறுதியளித்தார். இந்தித் திணிப்புக்கு எதிரான கடும் போராட்டத்துக்குப் பிறகு, இந்தி ‘நெவர்’… இங்கிலீஷ் ’எவர்’ என்ற கொள்கையை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டாலும், அதில் அவர்கள் உறுதியாக இல்லை என்பதுதான் பிந்தைய வரலாறாக அமைந்தது. ஆட்சியாளர்கள் வார்த்தை தவறியதால், ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று அடுத்த சில ஆண்டுகளில் வீருகொண்டு போராட்டம் எழுந்தது. - தொடரும்

விகடன் 10 Jan 2026 5:14 pm

தூய்மைப் பணியாளர்கள் போராடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் - போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னைக்குள் தொடர் போராட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று முதல் (10.01.26) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் தூய்மைப் பணியாளர்கள் அனுமதி கேட்டிருந்தனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஆனால், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது. சென்னையின் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை பேணும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. இதை எதிர்த்து அந்த மண்டலங்களில் பணி செய்து வந்த 1900க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு ரிப்பன் பில்டிங்கின் வெளியே போராட்டத்தைத் தொடங்கியவர்கள், 150 நாட்களைக் கடந்து சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். துறை சார்ந்த அமைச்சர் நேரு மற்றும் அதிகாரிகள் என யாருமே தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னை: மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி; மெல்லிய மழைக்கே உயிர்கள் பலி - தமிழிசை கண்டனம் இதனால்தான் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று முதல் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர். தூய்மைப் பணியாளர்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல இணை ஆணையாளர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் பொது அமைதிக்குப் பாதிப்பும் ஏற்படும் எனக்கூறி போராட்டத்துக்கான அனுமதியை மறுத்திருக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 13 நாளா அந்த ரிப்பன் பில்டிங் முன்னாடி உட்காந்திருந்தோம். எந்த மக்களுக்காவது நாங்க தொந்தரவு கொடுத்தோமா? இப்போ நாங்க போராட அனுமதி கேட்ட எதோ சமூக விரோதிங்க மாதிரி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்னு சொல்றாங்க. இதெல்லாம் நியாயமா? எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். `இத்தனை நடந்தும் கண்டுகொள்ளாத அமைச்சர்' காணவில்லை: கே.என் நேரு; தேடுவோர்: தூய்மைப் பணியாளர்கள்!

விகடன் 10 Jan 2026 4:14 pm

தூய்மைப் பணியாளர்கள் போராடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் - போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னைக்குள் தொடர் போராட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று முதல் (10.01.26) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் தூய்மைப் பணியாளர்கள் அனுமதி கேட்டிருந்தனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஆனால், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது. சென்னையின் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை பேணும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. இதை எதிர்த்து அந்த மண்டலங்களில் பணி செய்து வந்த 1900க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு ரிப்பன் பில்டிங்கின் வெளியே போராட்டத்தைத் தொடங்கியவர்கள், 150 நாட்களைக் கடந்து சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். துறை சார்ந்த அமைச்சர் நேரு மற்றும் அதிகாரிகள் என யாருமே தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னை: மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி; மெல்லிய மழைக்கே உயிர்கள் பலி - தமிழிசை கண்டனம் இதனால்தான் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று முதல் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர். தூய்மைப் பணியாளர்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல இணை ஆணையாளர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் பொது அமைதிக்குப் பாதிப்பும் ஏற்படும் எனக்கூறி போராட்டத்துக்கான அனுமதியை மறுத்திருக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 13 நாளா அந்த ரிப்பன் பில்டிங் முன்னாடி உட்காந்திருந்தோம். எந்த மக்களுக்காவது நாங்க தொந்தரவு கொடுத்தோமா? இப்போ நாங்க போராட அனுமதி கேட்ட எதோ சமூக விரோதிங்க மாதிரி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்னு சொல்றாங்க. இதெல்லாம் நியாயமா? எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். `இத்தனை நடந்தும் கண்டுகொள்ளாத அமைச்சர்' காணவில்லை: கே.என் நேரு; தேடுவோர்: தூய்மைப் பணியாளர்கள்!

விகடன் 10 Jan 2026 4:14 pm

கடலூர்: தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0; குவிந்த தொண்டர்கள் | Photo Album

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி

விகடன் 10 Jan 2026 3:37 pm

கடலூர்: தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0; குவிந்த தொண்டர்கள் | Photo Album

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி

விகடன் 10 Jan 2026 3:37 pm

RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், கடந்த ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க கருவூல பத்திரம் இருப்பை அதிகமாகக் குறைத்துள்ளது. இதை அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகள் உறுதி செய்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி தரவுகள் என்ன சொல்கின்றன? அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகளின் படி, இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரையிலான நிலவரப்படி, 241.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க கருவூல பத்திரத்தை வைத்திருந்திருக்கிறது. கடந்த ஆண்டு (2025) அதே தேதியின் நிலவரத்தை எடுத்து பார்த்தால், இந்திய ரிசர்வ் வங்கியிடம் 190.7 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க கருவூல பத்திரம் மட்டுமே இருக்கிறது. ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மிக குறைந்த அளவிலான அமெரிக்க கருவூல பத்திரம் வைத்திருப்பது இதுவே முதல் முறை. காரணம் என்ன? 'அமெரிக்க கருவூலப் பத்திரம் இந்த நேரத்தில் நல்ல வருமானத்தைத் தரவில்லையா?' என்று பார்த்தால், அப்படியெல்லாம் இல்லை. 10 ஆண்டுகளுக்கான அமெரிக்க கருவூலப் பத்திரம் 4 - 4.8 சதவிகித வருமானத்தைத் தந்துள்ளது. இந்த நேரத்தில் தான், இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க கருவூலப் பத்திரத்தின் இருப்பைக் குறைத்துள்ளது. அமெரிக்க கருவூலப் பத்திரத்திற்கு பதிலாக, தங்கத்தின் பக்கம் தங்களது முதலீட்டைத் திருப்பியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. கடந்த செப்டம்பர் மாதம், மொத்த அந்நிய செலாவணியின் இருப்பில் 13.9 சதவிகிதம் தங்கத்தை வைத்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதக் காலக்கட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை 9 சதவிகிதம் தான் வைத்திருந்தது. இந்தியா- சீனா இந்தியா மட்டுமல்ல... சீனா கூட அமெரிக்க கருவூலப் பத்திர இருப்பைக் குறைத்துள்ளது. இதற்கு உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மையே காரணம். இதனால், உலக வங்கிகள் தங்கத்தின் மீது அதிக நம்பிக்கையை வைக்கிறன. மேலும், ஒரே இடத்தில் அதிக முதலீடுகளைச் செய்து, ரிஸ்க்குகளைச் சந்திப்பதை மாற்றி, பல முதலீடுகளில் கவனம் செலுத்தலாம் என்று உலக வங்கிகள் நினைக்கின்றன.

விகடன் 10 Jan 2026 2:20 pm

RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், கடந்த ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க கருவூல பத்திரம் இருப்பை அதிகமாகக் குறைத்துள்ளது. இதை அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகள் உறுதி செய்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி தரவுகள் என்ன சொல்கின்றன? அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகளின் படி, இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரையிலான நிலவரப்படி, 241.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க கருவூல பத்திரத்தை வைத்திருந்திருக்கிறது. கடந்த ஆண்டு (2025) அதே தேதியின் நிலவரத்தை எடுத்து பார்த்தால், இந்திய ரிசர்வ் வங்கியிடம் 190.7 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க கருவூல பத்திரம் மட்டுமே இருக்கிறது. ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மிக குறைந்த அளவிலான அமெரிக்க கருவூல பத்திரம் வைத்திருப்பது இதுவே முதல் முறை. காரணம் என்ன? 'அமெரிக்க கருவூலப் பத்திரம் இந்த நேரத்தில் நல்ல வருமானத்தைத் தரவில்லையா?' என்று பார்த்தால், அப்படியெல்லாம் இல்லை. 10 ஆண்டுகளுக்கான அமெரிக்க கருவூலப் பத்திரம் 4 - 4.8 சதவிகித வருமானத்தைத் தந்துள்ளது. இந்த நேரத்தில் தான், இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க கருவூலப் பத்திரத்தின் இருப்பைக் குறைத்துள்ளது. அமெரிக்க கருவூலப் பத்திரத்திற்கு பதிலாக, தங்கத்தின் பக்கம் தங்களது முதலீட்டைத் திருப்பியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. கடந்த செப்டம்பர் மாதம், மொத்த அந்நிய செலாவணியின் இருப்பில் 13.9 சதவிகிதம் தங்கத்தை வைத்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதக் காலக்கட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை 9 சதவிகிதம் தான் வைத்திருந்தது. இந்தியா- சீனா இந்தியா மட்டுமல்ல... சீனா கூட அமெரிக்க கருவூலப் பத்திர இருப்பைக் குறைத்துள்ளது. இதற்கு உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மையே காரணம். இதனால், உலக வங்கிகள் தங்கத்தின் மீது அதிக நம்பிக்கையை வைக்கிறன. மேலும், ஒரே இடத்தில் அதிக முதலீடுகளைச் செய்து, ரிஸ்க்குகளைச் சந்திப்பதை மாற்றி, பல முதலீடுகளில் கவனம் செலுத்தலாம் என்று உலக வங்கிகள் நினைக்கின்றன.

விகடன் 10 Jan 2026 2:20 pm

USA: ``நான் சீன, ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால்.! - அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேட்டி

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில், சுயாட்சி செய்துவரும் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என வல்லரசுகள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. கிரீன்லாந்தில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட தாது பொருள்களும், பணி உருகுவதால் ஏற்படும் கடல் வழித்தடமும் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லாந்தை சொந்தமாக்கிவிட வேண்டும் எனப் பலத் திட்டங்களை செயல்படுத்த முயன்றுவருகிறார். கிரீன்லாந்து குறிப்பாக, கிரீன்லாந்தின் பொருளாதாரச் சூழலை சாதமாக்கி கிரீன்லாந்து குடிமக்களுக்கு பணம் கொடுப்பது, அல்லது டென்மார்க் மீது அரசியல் அழுத்தம் ஏற்படுத்தியோ, இராணுவம் மூலமோ அந்தப் பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தீவிரமாக செயல்படுகிறார் ட்ரம்ப். அதற்கு டென்மார்க், கிரீன்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஐ.நா-வும், ஐ.நா-வின் கொள்கைக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் செயல்படுகிறார் எனக் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், ``ரஷ்யாவும் சீனாவும் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க, அமெரிக்கா அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் உரிமையைப் பாதுகாக்க அந்த நாட்டின் மீது உரிமை இருக்க வேண்டும். இப்போது நாம் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. எனவே, அதற்காக கிரீன்லாந்தை எளிதான வழியிலோ, அல்லது கடினமாக வழியிலோ அடைவோம். ட்ரம்ப் அமெரிக்கா ஏற்கனவே கிரீன்லாந்தில் ராணுவ தளம் வைத்துள்ளது, ஆனாலும் முழு உரிமையும் வேண்டும். நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை வாங்குவது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதது. கிரீன்லாந்தின் எல்லா இடங்களிலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களால் நிரம்பியுள்ளது. நான் சீன மக்களையும், ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால் கிரீன்லாந்தில் அவர்கள் எனக்கு அண்டை நாடாக இருப்பதை நான் விரும்பவில்லை, அது நடக்காது. எனவே, நேட்டோ இதை புரிந்துகொள்ள வேண்டும். என்றார். ட்ரம்ப் ஸ்கெட்ச்... வெனிசுலாவுக்குள் புகுந்த அமெரிக்கா... பின்னணியில் எண்ணெய் வளம்?

விகடன் 10 Jan 2026 12:19 pm

உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது அரசு. ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நியூயார்க் மேயரான ஜோஹ்ரான் மம்தானி கடந்த மாதம் அமெரிக்காவில் உமர் காலித்தின் பெற்றோரைச் சந்தித்தார். அப்போது, உமர் காலித்துக்கு கையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை அவர்களிடம் வழங்கினார். ரந்தீர் ஜெய்ஸ்வால் அந்தக் கடிதத்தை உமர் காலித்தின் இணையர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், அன்புள்ள உமர், கசப்புணர்வு ஒரு மனிதனை அழித்துவிடாமல் தடுப்பது முக்கியம் என்று நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன். உங்களுடைய பெற்றோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஜோஹ்ரான் மம்தானி உமர் காலித்துக்கு எழுதிய கடிதம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறது. நேற்று வாராந்திர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், ``மற்ற ஜனநாயக நாடுகளில் நீதித்துறையின் சுதந்திரத்தை மக்கள் பிரதிநிதிகள் மதிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவது பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. இதுபோன்ற கருத்துக்களுக்குப் பதிலாக, அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது. எனக் குறிப்பிட்டார். நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி

விகடன் 10 Jan 2026 11:31 am

உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது அரசு. ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நியூயார்க் மேயரான ஜோஹ்ரான் மம்தானி கடந்த மாதம் அமெரிக்காவில் உமர் காலித்தின் பெற்றோரைச் சந்தித்தார். அப்போது, உமர் காலித்துக்கு கையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை அவர்களிடம் வழங்கினார். ரந்தீர் ஜெய்ஸ்வால் அந்தக் கடிதத்தை உமர் காலித்தின் இணையர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், அன்புள்ள உமர், கசப்புணர்வு ஒரு மனிதனை அழித்துவிடாமல் தடுப்பது முக்கியம் என்று நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன். உங்களுடைய பெற்றோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஜோஹ்ரான் மம்தானி உமர் காலித்துக்கு எழுதிய கடிதம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறது. நேற்று வாராந்திர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், ``மற்ற ஜனநாயக நாடுகளில் நீதித்துறையின் சுதந்திரத்தை மக்கள் பிரதிநிதிகள் மதிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவது பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. இதுபோன்ற கருத்துக்களுக்குப் பதிலாக, அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது. எனக் குறிப்பிட்டார். நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி

விகடன் 10 Jan 2026 11:31 am

உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது அரசு. ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நியூயார்க் மேயரான ஜோஹ்ரான் மம்தானி கடந்த மாதம் அமெரிக்காவில் உமர் காலித்தின் பெற்றோரைச் சந்தித்தார். அப்போது, உமர் காலித்துக்கு கையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை அவர்களிடம் வழங்கினார். ரந்தீர் ஜெய்ஸ்வால் அந்தக் கடிதத்தை உமர் காலித்தின் இணையர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், அன்புள்ள உமர், கசப்புணர்வு ஒரு மனிதனை அழித்துவிடாமல் தடுப்பது முக்கியம் என்று நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன். உங்களுடைய பெற்றோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஜோஹ்ரான் மம்தானி உமர் காலித்துக்கு எழுதிய கடிதம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறது. நேற்று வாராந்திர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், ``மற்ற ஜனநாயக நாடுகளில் நீதித்துறையின் சுதந்திரத்தை மக்கள் பிரதிநிதிகள் மதிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவது பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. இதுபோன்ற கருத்துக்களுக்குப் பதிலாக, அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது. எனக் குறிப்பிட்டார். நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி

விகடன் 10 Jan 2026 11:31 am

டார்கெட் Greenland: நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.! - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

வெனிசுலாவைக் கைப்பற்றியதை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லேண்டிற்கு தற்போது குறி வைத்திருக்கிறார். இது புதிய குறி அல்ல... அவர் முதல்முறை அமெரிக்க அதிபராக பதவியேற்ற போதே வைத்த குறி தான். கடந்த ஆண்டும், அவர் இந்த விஷயத்தை அவ்வப்போது கூறி வந்தார். ஆனால், வெனிசுலாவைக் கைப்பற்றிய ஜோரில் இப்போது கிரீன்லேண்டைக் கைப்பற்றுவது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். கிரீன்லேண்ட் |Greenland Greenland: 'கிரீன் லேண்ட் வேணும்' அடம்பிடிக்கும் ட்ரம்ப்... அமெரிக்காவால் வாங்க முடியுமா?! ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்? நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு, 'ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்?' என்பதை ஓபனாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப். அவர் கூறியுள்ளதாவது... அவர்களுக்கு பிடிக்கிறதோ... இல்லையோ, கிரீன்லேண்ட் விஷயத்தில் நாம் ஒன்றை செய்ய உள்ளோம். நாம் அதை செய்யவில்லை என்றால், ரஷ்யா அல்லது சீனா கிரீன்லேண்டைக் கைப்பற்றும். நமக்கு ரஷ்யாவோ, சீனாவோ பக்கத்து நாடாக மாறப் போவதில்லை. இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained 1951-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி, கிரீன்லேண்டில் அமெரிக்க ராணுவம் இருக்கிறது தான். ஆனாலும், அமெரிக்கா கிரீன்லேண்டை கைப்பற்றலாம். காரணம், இந்த மாதிரியான ஒப்பந்தம் மட்டும், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு போதாது என்று பேசியுள்ளார். இந்தப் பேச்சில் இருந்தே, ட்ரம்ப் அடுத்ததாக கிரீன்லேண்டை தான் குறி வைத்திருக்கிறார் என்பது அப்பட்டமந்த் தெரிகிறது. '2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

விகடன் 10 Jan 2026 11:23 am

'கோட்டையில் ஓட்டை போட திமுக சம்மட்டியுடன் தயாராக உள்ளது!' - அதிமுகவினருக்கு எஸ்.பி. வேலுமணி வார்னிங்

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் அனல் பறக்க தொடங்கிவிட்டன. கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக உள்ளனர். செந்தில் பாலாஜி திமுக வெற்றிக்காக செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அண்மையில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்றது. விரைவில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு அரசு திட்டங்களை நிறைவேற்ற திமுக திட்டமிட்டுள்ளது. பல முக்கிய அறிவுப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்து கொங்கு மண்டலத்தில் தங்கள் செல்வாக்கை தக்கவைப்பதற்கு அதிமுக திட்டமிட்டுள்ளது.  கோவை பவர் சென்டர் கொங்கு மண்டல அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முக்கிய பவர் சென்டர். கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய காரணமாக உள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “அதிமுக கூட்டணியில் இனி ஒவ்வொரு கட்சியாக வருவார்கள். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். ஒரு தோல்வியை சந்தித்தால் அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். எஸ்.பி வேலுமணி ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலில் திமுக தோற்று விடும். இது வரலாறு. அதேநேரத்தில் நாம் திமுகவை குறைத்து மதிப்பிட கூடாது. கோட்டையில் ஓட்டை போட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் சம்மட்டியுடன் தயாராக இருக்கிறார்கள். மாயை கொலுசு மற்றும் ரூ.1,000 பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள். பூத்திற்கு சராசரியாக 50 ஓட்டுகள் மாற்றினால்  தொகுதிக்கு 35,000 ஓட்டுகள் வரும். தற்போது புதிது புதிதாக ஏதேதோ கட்சிகள் வந்துவிட்டன. இளைஞர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் மாயை. தவெக தலைவர் விஜய் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பூத் வாரியாக கோயில், ஜமாத் கமிட்டி, குடியிருப்போர் சங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, இறங்கி வேலை பார்க்க வேண்டும். திமுக வேலை செய்யாதது போல இருக்கும். ஆனால் இறங்கி வேலை பார்ப்பார்கள். பெண்கள் மற்றும் இளைஞர்கள் துண்டு பிரசுரங்களுடன் வீடு வீடாக பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 70 தெருமுனை கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிரியை எந்த காலத்திலும் முந்த விடக்கூடாது. கோவைக்கு அத்தனை திட்டங்களையும் அதிமுக தான் நிறைவேற்றியுள்ளோம். வேலுமணி திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று எடப்பாடியை முதல்வராக அமர வைக்க வேண்டும். அதுதான் நம் லட்சியம்” என்றார்.

விகடன் 10 Jan 2026 10:49 am

'கோட்டையில் ஓட்டை போட திமுக சம்மட்டியுடன் தயாராக உள்ளது!' - அதிமுகவினருக்கு எஸ்.பி. வேலுமணி வார்னிங்

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் அனல் பறக்க தொடங்கிவிட்டன. கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக உள்ளனர். செந்தில் பாலாஜி திமுக வெற்றிக்காக செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அண்மையில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்றது. விரைவில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு அரசு திட்டங்களை நிறைவேற்ற திமுக திட்டமிட்டுள்ளது. பல முக்கிய அறிவுப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்து கொங்கு மண்டலத்தில் தங்கள் செல்வாக்கை தக்கவைப்பதற்கு அதிமுக திட்டமிட்டுள்ளது.  கோவை பவர் சென்டர் கொங்கு மண்டல அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முக்கிய பவர் சென்டர். கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய காரணமாக உள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “அதிமுக கூட்டணியில் இனி ஒவ்வொரு கட்சியாக வருவார்கள். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். ஒரு தோல்வியை சந்தித்தால் அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். எஸ்.பி வேலுமணி ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலில் திமுக தோற்று விடும். இது வரலாறு. அதேநேரத்தில் நாம் திமுகவை குறைத்து மதிப்பிட கூடாது. கோட்டையில் ஓட்டை போட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் சம்மட்டியுடன் தயாராக இருக்கிறார்கள். மாயை கொலுசு மற்றும் ரூ.1,000 பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள். பூத்திற்கு சராசரியாக 50 ஓட்டுகள் மாற்றினால்  தொகுதிக்கு 35,000 ஓட்டுகள் வரும். தற்போது புதிது புதிதாக ஏதேதோ கட்சிகள் வந்துவிட்டன. இளைஞர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் மாயை. தவெக தலைவர் விஜய் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பூத் வாரியாக கோயில், ஜமாத் கமிட்டி, குடியிருப்போர் சங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, இறங்கி வேலை பார்க்க வேண்டும். திமுக வேலை செய்யாதது போல இருக்கும். ஆனால் இறங்கி வேலை பார்ப்பார்கள். பெண்கள் மற்றும் இளைஞர்கள் துண்டு பிரசுரங்களுடன் வீடு வீடாக பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 70 தெருமுனை கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிரியை எந்த காலத்திலும் முந்த விடக்கூடாது. கோவைக்கு அத்தனை திட்டங்களையும் அதிமுக தான் நிறைவேற்றியுள்ளோம். வேலுமணி திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று எடப்பாடியை முதல்வராக அமர வைக்க வேண்டும். அதுதான் நம் லட்சியம்” என்றார்.

விகடன் 10 Jan 2026 10:49 am

``உங்கள் கனவை சொல்லுங்கள்'என்கிறார் ஸ்டாலின்; திமுக ஆட்சியை அகற்றுவதே மக்களின் கனவு' - அண்ணாமலை

திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் திருப்பூர், உலக அரங்கில், இந்தியாவுக்கே ஒரு அடையாளமாக உள்ளது. அத்தகைய நகரை, குப்பை நகராக மாற்றியதே தி.மு.க. அரசின் சாதனை. இந்தி மொழி வேண்டாம் என்கின்றனர். ஆனால், திருப்பூரிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், இந்தியில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சிறந்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்கா, ரஷ்யா என, எந்த நாட்டுக்கு சென்றாலும், மோடியிடம் உலக தலைவர்கள் நட்பு பாராட்டுகின்றனர். அந்தளவு நேர்மையும், தைரியமும் மிக்க மாபெரும் தலைவர் மோடி. அவருக்கு இங்கு கருப்புக் கொடி காட்டுகின்றனர். பொங்கல் பரிசாக முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் மூவாயிரம் ரூபாய் முழுமையாக, டாஸ்மாக் கடைகளுக்கே செல்லகிறது. தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், 17 பேர் மீது ஊழல் புகார் இருக்கிறது. ஊழல் இல்லாத அரசு, டாஸ்மாக் இல்லாத, நல்லாட்சி தமிழகம் அமைய வேண்டும் என்கிற மக்களின் விருப்பம் விரைவில் நிறைவேறப்போகிறது என்றார். அண்ணாமலை இதைத் தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில், பின்னலாடை வர்த்தகம் வாயிலாக, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், திருப்பூர் அதிக வருவாய் ஈட்டித்தருகிறது. இத்தகைய நகரை, தி.மு.க அரசு, குப்பை நகராக மாற்றிவிட்டது. திருப்பூரிலுள்ள ஒரே ஒரு தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணாவில் ஈடுபட்டார். குப்பை அகற்றப்படாததால், மேயருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவது தி.மு.க., கம்யூ., கட்சியினருக்கு கைவந்த கலை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதுாறு ஷா என்கின்றனர் திமுகவினர். உங்களைப்போலவே எங்களுக்கும் பதிலடி கொடுக்க தெரியும். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அ.தி.மு.க., ஆட்சியை நிறைவு செய்த 2021ம் ஆண்டு வரை, தமிழகத்தின் மொத்த கடன், 4.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; ஆனால், தி.மு.க., அரசு, நான்கே ஆண்டுகளில், கூடுதலாக, 5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர் மீதும், இரண்டரை லட்சம் ரூபாய் கடன் விழுந்துள்ளது. அப்படியிருக்க, தமிழகத்தை கடனில் தள்ளியதாக, அ.தி.மு.க., மீது வீண் பழி போடுகின்றனர். உங்கள் கனவை சொல்லுங்கள் என்கிற புதிய திட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி போக வேண்டும்: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து, நல்லாட்சி மலரவேண்டும் என்பதுதான், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் கனவு என்றார்.

விகடன் 10 Jan 2026 10:44 am

``உங்கள் கனவை சொல்லுங்கள்'என்கிறார் ஸ்டாலின்; திமுக ஆட்சியை அகற்றுவதே மக்களின் கனவு' - அண்ணாமலை

திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் திருப்பூர், உலக அரங்கில், இந்தியாவுக்கே ஒரு அடையாளமாக உள்ளது. அத்தகைய நகரை, குப்பை நகராக மாற்றியதே தி.மு.க. அரசின் சாதனை. இந்தி மொழி வேண்டாம் என்கின்றனர். ஆனால், திருப்பூரிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், இந்தியில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சிறந்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்கா, ரஷ்யா என, எந்த நாட்டுக்கு சென்றாலும், மோடியிடம் உலக தலைவர்கள் நட்பு பாராட்டுகின்றனர். அந்தளவு நேர்மையும், தைரியமும் மிக்க மாபெரும் தலைவர் மோடி. அவருக்கு இங்கு கருப்புக் கொடி காட்டுகின்றனர். பொங்கல் பரிசாக முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் மூவாயிரம் ரூபாய் முழுமையாக, டாஸ்மாக் கடைகளுக்கே செல்லகிறது. தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், 17 பேர் மீது ஊழல் புகார் இருக்கிறது. ஊழல் இல்லாத அரசு, டாஸ்மாக் இல்லாத, நல்லாட்சி தமிழகம் அமைய வேண்டும் என்கிற மக்களின் விருப்பம் விரைவில் நிறைவேறப்போகிறது என்றார். அண்ணாமலை இதைத் தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில், பின்னலாடை வர்த்தகம் வாயிலாக, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், திருப்பூர் அதிக வருவாய் ஈட்டித்தருகிறது. இத்தகைய நகரை, தி.மு.க அரசு, குப்பை நகராக மாற்றிவிட்டது. திருப்பூரிலுள்ள ஒரே ஒரு தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணாவில் ஈடுபட்டார். குப்பை அகற்றப்படாததால், மேயருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவது தி.மு.க., கம்யூ., கட்சியினருக்கு கைவந்த கலை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதுாறு ஷா என்கின்றனர் திமுகவினர். உங்களைப்போலவே எங்களுக்கும் பதிலடி கொடுக்க தெரியும். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அ.தி.மு.க., ஆட்சியை நிறைவு செய்த 2021ம் ஆண்டு வரை, தமிழகத்தின் மொத்த கடன், 4.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; ஆனால், தி.மு.க., அரசு, நான்கே ஆண்டுகளில், கூடுதலாக, 5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர் மீதும், இரண்டரை லட்சம் ரூபாய் கடன் விழுந்துள்ளது. அப்படியிருக்க, தமிழகத்தை கடனில் தள்ளியதாக, அ.தி.மு.க., மீது வீண் பழி போடுகின்றனர். உங்கள் கனவை சொல்லுங்கள் என்கிற புதிய திட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி போக வேண்டும்: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து, நல்லாட்சி மலரவேண்டும் என்பதுதான், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் கனவு என்றார்.

விகடன் 10 Jan 2026 10:44 am

'ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றது மறந்துவிட்டதா?' - விஜய்யை சாடிய சரத்குமார்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், “சென்சார் போர்டு ‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் நிறுத்தவில்லை. இதற்கு முன்பும் பல்வேறு படங்களை நிறுத்தியுள்ளார்கள். அண்மையில் ‘தக்லைப்’ படத்திற்கு நடந்தது அனைவருக்கும் தெரியும். சரத்குமார் விஜய் படத்திற்கு ஏற்கனவே இப்படி நடந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இப்படி நடந்து, விஜய் கைகட்டி ரோட்டில் நின்றார் தானே. இதில் அரசியல் இல்லை. அனைத்தும் அரசியல் ரீதியாக நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.  எனக்கும் ஆசை உள்ளது  சென்சார் போர்டு அந்த படம் சரியாக இல்லை என்று நினைக்கிறது. அரசியல்வாதிகள் யாரும் சென்சார் போர்டில் இடம்பெறவில்லை. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. அதேபோல எனக்கும் ஆசை உள்ளது. படம் எடுப்பது மிகவும் கடினம். ஜனநாயகன் | விஜய் ஆனால் அது சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. எதை அரசியலாக வேண்டும், எதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதறியாமல் இருக்கிறார்கள். எது மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று நினைக்கிறார்களோ, அதை சென்சார் போர்டு கூர்ந்து கவனிக்கிறது. நான் நடித்த ‘அடங்காதே’ படமும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை. அடங்காதே திரைப்படத்திற்கு அனைத்து நடிகர்களையும் குரல் கொடுக்க கூறுங்களேன் பராசக்தி திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்று தான் வந்தது. பராசக்தி வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை. பாஜக வெற்றி பெறுவதற்காக உழைப்பேன். என்னுடன் பயணித்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து, அவர்கள் அமைச்சரானால் மகிழ்ச்சியடைவேன்” என்றார்.

விகடன் 10 Jan 2026 9:31 am

'ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றது மறந்துவிட்டதா?' - விஜய்யை சாடிய சரத்குமார்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், “சென்சார் போர்டு ‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் நிறுத்தவில்லை. இதற்கு முன்பும் பல்வேறு படங்களை நிறுத்தியுள்ளார்கள். அண்மையில் ‘தக்லைப்’ படத்திற்கு நடந்தது அனைவருக்கும் தெரியும். சரத்குமார் விஜய் படத்திற்கு ஏற்கனவே இப்படி நடந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இப்படி நடந்து, விஜய் கைகட்டி ரோட்டில் நின்றார் தானே. இதில் அரசியல் இல்லை. அனைத்தும் அரசியல் ரீதியாக நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.  எனக்கும் ஆசை உள்ளது  சென்சார் போர்டு அந்த படம் சரியாக இல்லை என்று நினைக்கிறது. அரசியல்வாதிகள் யாரும் சென்சார் போர்டில் இடம்பெறவில்லை. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. அதேபோல எனக்கும் ஆசை உள்ளது. படம் எடுப்பது மிகவும் கடினம். ஜனநாயகன் | விஜய் ஆனால் அது சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. எதை அரசியலாக வேண்டும், எதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதறியாமல் இருக்கிறார்கள். எது மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று நினைக்கிறார்களோ, அதை சென்சார் போர்டு கூர்ந்து கவனிக்கிறது. நான் நடித்த ‘அடங்காதே’ படமும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை. அடங்காதே திரைப்படத்திற்கு அனைத்து நடிகர்களையும் குரல் கொடுக்க கூறுங்களேன் பராசக்தி திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்று தான் வந்தது. பராசக்தி வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை. பாஜக வெற்றி பெறுவதற்காக உழைப்பேன். என்னுடன் பயணித்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து, அவர்கள் அமைச்சரானால் மகிழ்ச்சியடைவேன்” என்றார்.

விகடன் 10 Jan 2026 9:31 am

`தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளும் ஒன்று சேர்கிறதா?' - இணைப்புக்கு அஜித் பவார் ஆர்வம்!

மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் இரண்டாக உடைந்தது. இதனால் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் துணை முதல்வர் அஜித் பவார் பக்கம் சென்றனர். எனவே கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவார் அணிக்கு சென்றுவிட்டது. இப்போது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வேறு சின்னத்துடன் தேர்தலில் போட்டியிடுகிறது. கட்சியில் ஏற்பட்ட பிளவு பவார் குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அஜித் பவார் மற்றும் சரத் பவார் குடும்பமும் பேசாமல் போனது. தற்போது மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சி தேர்தல் நடந்து வருகிறது. புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி எப்போதும் தேசியவாத காங்கிரஸ் கோட்டையாக இருந்துள்ளது. எனவே அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இங்கு தனித்து போட்டியிடுகிறது. இங்கு முதல் முறையாக சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. ஆரம்பத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தில் சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்று அஜித் பவார் நிர்ப்பந்தம் செய்தார். ஆனால் சரத் பவார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து இரு அணிகளும் அவரவர் சின்னத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் முதல் முறையாக இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக அஜித்பவார் தெரிவித்துள்ளார். அஜித்பவார் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். இப்போது இரு அணிகளும் ஒன்றாக இருக்கிறது. பவார் குடும்ப பதட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. தொண்டர்களும் அதையே விரும்புகின்றனர்''என்று தெரிவித்தார். அதோடு புனே மாநகராட்சி தேர்தலுக்கு பொது செயல்திட்டத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் முதல் முறையாக அஜித் பவாரும், சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். இரு அணிகளும் இணைவது குறித்து சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கூறுகையில், ''கட்சி உடைந்த பிறகு முதல் முறையாக இரு அணிகளும் தேர்தல் கூட்டணியில் ஒன்று சேர்ந்திருக்கிறது. இது புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு மட்டும்தான். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பிறகு பார்க்கலாம்''என்று தெரிவித்தார். அஜித் பவார் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்கு இருந்த பேனரில் அஜித் பவார் மற்றும் சரத் பவார் ஆகியோரின் புகைப்படம் இருந்தது. அதனை சுட்டிக்காட்டிய நிருபர்கள் இது நிரந்தரமாக இருக்குமா என்று கேட்டனர். ``அதற்கு உங்களது வார்த்தை உண்மையாகலாம் என்று சரத்பவார் தெரிவித்தார். அஜித்பவார் கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே அளித்த பேட்டியில், ``இரு அணிகளும் இணைவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எந்த முடிவாக இருந்தாலும் இரு கட்சிகளும் இணைந்து எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். கடந்த மாதம் அதானி நிறுவனத்தின் தலைவர் கெளதம் அதானி பாராமதிக்கு வந்திருந்தார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல் முறையாக சரத்பவாரும், அஜித்பவாரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அதோடு இதில் சரத் பவார் தனது வீட்டில் வைத்த விருந்தில் அதானியும், அஜித் பவாரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த விருந்துக்கு பிறகுதான் புனேயில் சரத் பவார் கட்சியுடன் கூட்டணி வைக்க அஜித் பவார் சம்மதம் தெரிவித்தார். இத்தேர்தலை தொடர்ந்து எதிர்காலத்தில் இரு கட்சிகளும் ஒன்று சேரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இவ்விவகாரத்தில் சுப்ரியாவும், அஜித்பவாரும் முடிவு எடுப்பார்கள் என்று சரத்பவார் கூறிவிட்டார். ஆனாலும் கட்சியை அஜித் பவார் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.!

விகடன் 10 Jan 2026 9:27 am

கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி

கடலூர் மாவட்டம், வேப்பூரில் தே.மு.தி.க-வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்குவது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ``தலைவருக்கான இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் நம் தலைவர் விஜயகாந்த். வெறும் ரசிகர் மன்றமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு, இன்று தே.மு.தி.க என்ற மாபெரும் இயக்கமாக வளர்ந்து நிற்கிறது. கேப்டன் இல்லாமல் நாம் இல்லை. அனைத்தும் கேப்டன்தான். கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கின்றார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இங்கு வந்திருக்கும் உங்களில் கேப்டனைப் பார்க்கிறேன். தே.மு.தி.க-வுக்கு இணை வேறு கட்சியே இல்லை. நூறு ரூபாய் பணம், பீர், சோறு வழங்கினால்தான் மற்ற கட்சிகளின் தொண்டர்கள் அந்தக் கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வார்கள். ஆனால் தே.மு.தி.க அப்படி இல்லை. சொந்தப் பணத்தைப் போட்டு, அவர்களாகவே சாப்பாடு செய்து, நம் குடும்ப விழாவுக்கு வந்திருக்கிறார்கள். விஜயகாந்த் என்ற பெயருக்காகக் கூடிய கூட்டம் இது. நம் கேப்டனை எம்.எல்.ஏ-வாக்கியது இந்தக் கடலூர் மண். தமிழகம் முழுக்க நாம் பல மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். ஆனால் நம் கேப்டனை எம்.எல்.ஏ-வாக்கிய கடலூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை? தே.மு.தி.க-வைத் தரக்குறைவாகப் பேசுவதற்கு எந்தக் கொம்பனுக்கும் தகுதி கிடையாது. அவர்களுக்கு எங்கள் தொண்டர்கள் பதிலளிப்பார்கள். 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் துவங்கிய நாள் இன்று. அந்த நாளில் நாம் உரிமை மீட்பு மாநாட்டை நடத்துகிறோம். இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற மாநாடுகளில் இணையில்லா மாநாடு இந்த மாநாடு. தேர்தலில் யாருடன் கூட்டணி என்று தே.மு.தி.க தொண்டர்கள்தான் முடிவெடுப்பார்கள். அதன்படி நீங்கள் யாருடன் கூட்டணி என்று சொல்கிறீர்களோ அவர்களுடன்தான் கூட்டணி. கேப்டன் தொண்டர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் கூட்டணி பேசமாட்டேன். தே.மு.தி.க இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நாம் கூட்டணி அமைக்கும் கட்சிதான் வெற்றி பெறும். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஏனென்றால் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட கட்சிதான் தே.மு.தி.க. விஜயகாந்தின் குருபூஜை குறித்து விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது. குருபூஜை இல்லை, எந்தப் பூஜையை வேண்டுமென்றாலும் நாங்கள் நடத்துவோம். அதுகுறித்துக் கேட்க யாருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது. ஏனென்றால் தலைவர் என்பவர் அடுத்த தேர்தலைப் பார்ப்பவர் இல்லை. அடுத்த தலைமுறையைப் பார்ப்பவர். தேர்தல் வந்துவிட்டால் பேரம் பேசுகிறோம் என்று சொல்கிறீர்களே… நான் பேசுவேன். என்ன கொள்கை… என்ன கொள்கை… எனக் கேட்கிறார்கள். இனி அவர்களிடம் சொல்லுங்கள் வெற்றி ஒன்றுதான் இனி தே.மு.தி.க-வின் கொள்கை. அதன்படி இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று தே.மு.தி.க-தான் முடிவு செய்யும். தே.மு.தி.க-வை நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்கள். ஜெயித்துக்கொள்வீர்கள். ஏற்கனேவே சொல்லிவிட்டேனே... அவங்களுக்கு இடமில்லை!- அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி திட்டவட்டம் ஆனால் தே.மு.தி.க-வுக்கு மட்டும் நீங்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டீர்கள். இது என்ன நியாயம்? தேர்தல் களத்தில் தே.மு.தி.க-வினரைத் தவிர, உங்கள் கட்சியைச் சேர்ந்த யாரேனும் உழைக்கிறார்களா? கேப்டன் வலியுறுத்திய கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் எதையும் எதிர்பார்க்காமல், எந்தவித ஆசாபாசங்களுக்கும் அடிபணியாமல், நேர்மையுடன் உழைக்கும் கள வீரர்கள் தே.மு.தி.க தொண்டர்கள் மட்டும்தான். அதை யாராவது மறுக்க முடியுமா? பணம் கொடுத்தால்தான் உங்கள் கட்சிக்காரர்கள் களத்திற்கு வருவார்கள். ஆனால் தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை கேப்டனும், அண்ணியாரும் ஒரு முடிவெடுத்து அறிவித்தால் போதும். எங்கள் தொண்டர்கள் வெற்றி வீரர்களாக களத்தில் நிற்பார்கள். இது எங்களுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்ற கட்சிகளுக்குத் தெரியும். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா எங்கள் மாவட்டச் செயலாளர்களுடன், நிர்வாகிகளுடன், தொண்டர்களுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். இன்று உங்கள் அண்ணியாக, அம்மாவாகச் சொல்கிறேன். உங்கள் ஒப்புதல் இல்லாமல் கூட்டணி குறித்துப் பேச மாட்டேன். மாவட்டச் செயலாளர்களுடன் கருத்து பெற்று கூட்டணி முடிவு செய்துள்ளேன். யாருடன் கூட்டணி என முடிவெடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அதனை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அறிவிக்காத நிலையில், நாமும் யோசித்து பொறுமையாகத் தெரிவிப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும். சத்ரியனாக வாழ்ந்துவிட்டோம். இனி சாணக்கியனாக வாழ்வோம். மற்ற கட்சிகள் அறிவிக்காத போது நாம் ஏன் முந்திரிக்கொட்டை போன்று அவசரப்பட வேண்டும்? என்றார். `கேப்டனுக்காக ஜெயலலிதாவை வாக்குக் கேட்கச் சொன்னவர் அமைச்சர் சி.வி.சண்முகம்!' - பிரேமலதா விஜயகாந்த்

விகடன் 10 Jan 2026 7:10 am

கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி

கடலூர் மாவட்டம், வேப்பூரில் தே.மு.தி.க-வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்குவது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ``தலைவருக்கான இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் நம் தலைவர் விஜயகாந்த். வெறும் ரசிகர் மன்றமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு, இன்று தே.மு.தி.க என்ற மாபெரும் இயக்கமாக வளர்ந்து நிற்கிறது. கேப்டன் இல்லாமல் நாம் இல்லை. அனைத்தும் கேப்டன்தான். கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கின்றார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இங்கு வந்திருக்கும் உங்களில் கேப்டனைப் பார்க்கிறேன். தே.மு.தி.க-வுக்கு இணை வேறு கட்சியே இல்லை. நூறு ரூபாய் பணம், பீர், சோறு வழங்கினால்தான் மற்ற கட்சிகளின் தொண்டர்கள் அந்தக் கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வார்கள். ஆனால் தே.மு.தி.க அப்படி இல்லை. சொந்தப் பணத்தைப் போட்டு, அவர்களாகவே சாப்பாடு செய்து, நம் குடும்ப விழாவுக்கு வந்திருக்கிறார்கள். விஜயகாந்த் என்ற பெயருக்காகக் கூடிய கூட்டம் இது. நம் கேப்டனை எம்.எல்.ஏ-வாக்கியது இந்தக் கடலூர் மண். தமிழகம் முழுக்க நாம் பல மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். ஆனால் நம் கேப்டனை எம்.எல்.ஏ-வாக்கிய கடலூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை? தே.மு.தி.க-வைத் தரக்குறைவாகப் பேசுவதற்கு எந்தக் கொம்பனுக்கும் தகுதி கிடையாது. அவர்களுக்கு எங்கள் தொண்டர்கள் பதிலளிப்பார்கள். 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் துவங்கிய நாள் இன்று. அந்த நாளில் நாம் உரிமை மீட்பு மாநாட்டை நடத்துகிறோம். இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற மாநாடுகளில் இணையில்லா மாநாடு இந்த மாநாடு. தேர்தலில் யாருடன் கூட்டணி என்று தே.மு.தி.க தொண்டர்கள்தான் முடிவெடுப்பார்கள். அதன்படி நீங்கள் யாருடன் கூட்டணி என்று சொல்கிறீர்களோ அவர்களுடன்தான் கூட்டணி. கேப்டன் தொண்டர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் கூட்டணி பேசமாட்டேன். தே.மு.தி.க இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நாம் கூட்டணி அமைக்கும் கட்சிதான் வெற்றி பெறும். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஏனென்றால் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட கட்சிதான் தே.மு.தி.க. விஜயகாந்தின் குருபூஜை குறித்து விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது. குருபூஜை இல்லை, எந்தப் பூஜையை வேண்டுமென்றாலும் நாங்கள் நடத்துவோம். அதுகுறித்துக் கேட்க யாருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது. ஏனென்றால் தலைவர் என்பவர் அடுத்த தேர்தலைப் பார்ப்பவர் இல்லை. அடுத்த தலைமுறையைப் பார்ப்பவர். தேர்தல் வந்துவிட்டால் பேரம் பேசுகிறோம் என்று சொல்கிறீர்களே… நான் பேசுவேன். என்ன கொள்கை… என்ன கொள்கை… எனக் கேட்கிறார்கள். இனி அவர்களிடம் சொல்லுங்கள் வெற்றி ஒன்றுதான் இனி தே.மு.தி.க-வின் கொள்கை. அதன்படி இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று தே.மு.தி.க-தான் முடிவு செய்யும். தே.மு.தி.க-வை நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்கள். ஜெயித்துக்கொள்வீர்கள். ஏற்கனேவே சொல்லிவிட்டேனே... அவங்களுக்கு இடமில்லை!- அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி திட்டவட்டம் ஆனால் தே.மு.தி.க-வுக்கு மட்டும் நீங்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டீர்கள். இது என்ன நியாயம்? தேர்தல் களத்தில் தே.மு.தி.க-வினரைத் தவிர, உங்கள் கட்சியைச் சேர்ந்த யாரேனும் உழைக்கிறார்களா? கேப்டன் வலியுறுத்திய கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் எதையும் எதிர்பார்க்காமல், எந்தவித ஆசாபாசங்களுக்கும் அடிபணியாமல், நேர்மையுடன் உழைக்கும் கள வீரர்கள் தே.மு.தி.க தொண்டர்கள் மட்டும்தான். அதை யாராவது மறுக்க முடியுமா? பணம் கொடுத்தால்தான் உங்கள் கட்சிக்காரர்கள் களத்திற்கு வருவார்கள். ஆனால் தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை கேப்டனும், அண்ணியாரும் ஒரு முடிவெடுத்து அறிவித்தால் போதும். எங்கள் தொண்டர்கள் வெற்றி வீரர்களாக களத்தில் நிற்பார்கள். இது எங்களுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்ற கட்சிகளுக்குத் தெரியும். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா எங்கள் மாவட்டச் செயலாளர்களுடன், நிர்வாகிகளுடன், தொண்டர்களுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். இன்று உங்கள் அண்ணியாக, அம்மாவாகச் சொல்கிறேன். உங்கள் ஒப்புதல் இல்லாமல் கூட்டணி குறித்துப் பேச மாட்டேன். மாவட்டச் செயலாளர்களுடன் கருத்து பெற்று கூட்டணி முடிவு செய்துள்ளேன். யாருடன் கூட்டணி என முடிவெடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அதனை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அறிவிக்காத நிலையில், நாமும் யோசித்து பொறுமையாகத் தெரிவிப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும். சத்ரியனாக வாழ்ந்துவிட்டோம். இனி சாணக்கியனாக வாழ்வோம். மற்ற கட்சிகள் அறிவிக்காத போது நாம் ஏன் முந்திரிக்கொட்டை போன்று அவசரப்பட வேண்டும்? என்றார். `கேப்டனுக்காக ஜெயலலிதாவை வாக்குக் கேட்கச் சொன்னவர் அமைச்சர் சி.வி.சண்முகம்!' - பிரேமலதா விஜயகாந்த்

விகடன் 10 Jan 2026 7:10 am

சூடுபிடிக்கும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை; டிடிவி, ஓபிஎஸ்ஸை அரவணைக்கும் அமித்ஷா; எதிர்க்கும் EPS?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நயினார் நாகேந்திரன் எடப்பாடி- நயினார் சந்திப்பு இந்தச் சூழலில்தான் இன்று (ஜன.9) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பது குறித்தும், அவருக்கான இடங்களையும் ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பாஜக கேட்கும் சீட்களை அதிமுக தருமா, கூட்டணியில் டிடிவி தினகரனை இணைப்பாரா எடப்பாடி பழனிசாமி போன்ற கேள்விகளுடன் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் தொடர்புகொண்டு பேசினோம். கூட்டணியில் டிடிவி தினகரனை இணைப்பாரா எடப்பாடி பழனிசாமி? எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரைக்கும் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள விருப்பம் இல்லை. இணைத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அமித் ஷா போடும் கணக்கு ஆனால் அமித் ஷாவின் நோக்கம் என்னவென்றால் திமுகவிற்கு எதிரான கட்சிகள் எல்லாவற்றையும் நம்முடைய அணிக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதனால் அதிமுகவில் டிடிவியையும், ஓபிஎஸ்ஸையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர்களைச் சேர்த்துக்கொள்ள முயல்கிறார். Vijay: ஜன நாயகன் படத்திற்கு அமித் ஷா நெருக்கடி கொடுக்கிறாரா? - செல்லூர் ராஜூ விளக்கம் ஏன் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்? 56 தொகுதிகளை பாஜக கேட்டு, அதில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்க்கு சீட்களைக் கொடுக்கப் பார்க்கிறார். எடப்பாடிக்கு இது ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. நாளைக்கு இவர்கள் வெற்றி பெற்றால் தனக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். பாஜகவிற்குத்தான் இருவரும் ஆதரவாக இருப்பார்கள். அதனால் நாம் ஏன் நம் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி அரவணைக்க நினைக்கும் அமித்ஷா பாஜக அவர்களுக்கு மட்டும் 30 இடங்களைக் கேட்டால் அதனை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார் எடப்பாடி. ஆனால் மற்றவர்களுக்காக பாஜக கேட்கும் இடங்களைக் கொடுத்துவிட்டால் நாம்தான் பலவீனமாக இருப்போம் என்று நினைக்கிறார். எடப்பாடிக்கு அதிகாரம் வேண்டும். டிடிவியை கூட்டணிக்குள் இணைப்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். டிடிவியையும், ஓபிஎஸ்ஸையும் இணைத்தால்தான் தென்மாவட்ட ஓட்டுகள் கிடைக்கும். அதனால்தான் அமித்ஷா அரவணைக்க நினைக்கிறார்” என்று கேள்விகளுக்கு விடை அளித்தார். எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

விகடன் 10 Jan 2026 6:50 am

SIR மதுரை: ஒரே பாகத்தில் இறந்தவர்கள் உட்பட முறைகேடாக 42 பெயர்கள் சேர்ப்பு - சரவணன் புகார்

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98 இல் இறந்தவர்கள் உட்பட 42 பெயர்கள் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று முன்னாள் எம்.எல்.ஏ-வும் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளருமான டாக்டர் சரவணன் புகார் எழுப்பியுள்ளார். தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்த டாகடர் சரவணன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின்படி மதுரை மாவட்டத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து நாங்கள் ஆய்வு செய்தபோது மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98 இல் 844 பேர் வரைவு பட்டியலில் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் ஆளுங்கட்சியின் தூண்டுதலால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் திட்டமிட்டு மரணமடைந்த 29 பேரின் பெயர்களும், நிரந்தரமாக இடம் பெயர்ந்த 12 பேரின் பெயர்களும், ஒரு இரட்டைப் பதிவு என 42 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. டாக்டர் சரவணன் இந்தப் பதிவுகளை நீக்கவும், தவறு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிய ஆவணங்களுடன் வடக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளேன். எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்ப்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி இது போன்ற மோசடிகளைச் செய்து, தேர்தலில் வெற்றி பெற திமுக அரசு முயற்சித்து வருகிறது. திமுக அரசின் மோசமான நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மகளிர், மாணவர் எனப் பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த முறை திமுகவுக்குப் பாடம் புகட்டுவது உறுதி என்றார். SIR: உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டதா? புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க எளிய வழி!

விகடன் 10 Jan 2026 6:25 am