SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
...

நல்லகண்ணு: மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி - தவெக விஜய் இரங்கல்

தவெக தலைவர் விஜய் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன். நல்லகண்ணு அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டிருக்கிறார். நல்லகண்ணு : விடைபெற்றார் வாழ்நாள் போராளி!

விகடன் 25 Feb 2026 4:04 pm

நல்லகண்ணு: மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி - தவெக விஜய் இரங்கல்

தவெக தலைவர் விஜய் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன். நல்லகண்ணு அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டிருக்கிறார். நல்லகண்ணு : விடைபெற்றார் வாழ்நாள் போராளி!

விகடன் 25 Feb 2026 4:04 pm

நல்லகண்ணு மறைவு: ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் - சீமான் உருக்கம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமாகி இருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து மறைந்த மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்து பேசியிருக்கிறார். மாபெரும் தலைவரை, மகத்தான மனிதரை இந்த நாடு இழந்திருக்கிறது. இந்த நாடு அடிமைப்பட்டு இருக்கும்போது விடுதலைக்காகப் போராடிய வீர இளைஞர்களில் ஒருவர். நல்லகண்ணு எண்ணற்ற அடக்குமுறை, ஒடுக்குமுறை என எல்லாவற்றையும் கடந்து துளியும் தன்னலம் இல்லாமல் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் அரும்பாடுபட்டவர். எங்களுடைய தலைமுறையினருடனும் போராட்டங்களில் பங்குபெற்ற பெருந்தகை. எவராலும் குறை சொல்ல முடியாத ஒரு புனிதர். நம்மோடு அவர் இல்லை என்று நினைக்கும்போது மிகுந்த மன வலியாக இருக்கிறது. அவருடன் நெருங்கிப் பழகிய பல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன. நூறு ஆண்டுகால வரலாறு. ஒரு தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும். எளிமையாக, நேர்மையாக, தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். அவரை இழந்திருக்கிறோம் என்று நினைக்கும்போதே மனம் வேதனையாக இருக்கிறது. சீமான் அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆறுதல்கள். மகத்தான தலைவருக்கு என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். தோழர் நல்லகண்ணு முதன்முதலில் கலங்கி அழுத கணம்! | Ananda Vikatan | R.Nallakannu | CPIM

விகடன் 25 Feb 2026 3:54 pm

நல்லகண்ணு மறைவு: ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் - சீமான் உருக்கம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமாகி இருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து மறைந்த மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்து பேசியிருக்கிறார். மாபெரும் தலைவரை, மகத்தான மனிதரை இந்த நாடு இழந்திருக்கிறது. இந்த நாடு அடிமைப்பட்டு இருக்கும்போது விடுதலைக்காகப் போராடிய வீர இளைஞர்களில் ஒருவர். நல்லகண்ணு எண்ணற்ற அடக்குமுறை, ஒடுக்குமுறை என எல்லாவற்றையும் கடந்து துளியும் தன்னலம் இல்லாமல் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் அரும்பாடுபட்டவர். எங்களுடைய தலைமுறையினருடனும் போராட்டங்களில் பங்குபெற்ற பெருந்தகை. எவராலும் குறை சொல்ல முடியாத ஒரு புனிதர். நம்மோடு அவர் இல்லை என்று நினைக்கும்போது மிகுந்த மன வலியாக இருக்கிறது. அவருடன் நெருங்கிப் பழகிய பல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன. நூறு ஆண்டுகால வரலாறு. ஒரு தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும். எளிமையாக, நேர்மையாக, தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். அவரை இழந்திருக்கிறோம் என்று நினைக்கும்போதே மனம் வேதனையாக இருக்கிறது. சீமான் அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆறுதல்கள். மகத்தான தலைவருக்கு என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். தோழர் நல்லகண்ணு முதன்முதலில் கலங்கி அழுத கணம்! | Ananda Vikatan | R.Nallakannu | CPIM

விகடன் 25 Feb 2026 3:54 pm

தோழர் நல்லகண்ணு : தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி!

'அதிகாரம் கொடியது!' இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொள்ளா மைல்களை கடப்பார்கள். நிலப்பிரபுக்களாக இருந்த பண்ணையார்களின் அடியாட்கள், எதிர்க்கட்சிகளின் குண்டர்கள், காவல்துறை என யார் கண்ணிலும் சிக்கக் கூடாது. நல்லகண்ணு தற்காப்புக்கு பையில் வெடிகுண்டுகளையும் வைத்திருப்பார்கள். 1949 டிசம்பர் 20, நள்ளிரவில் விழிப்புணர்வு பிரசாரக் கூட்டங்களையெல்லாம் முடித்துவிட்டு கட்சித் தோழர் ஒருவரின் வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் நல்லகண்ணு. காவல்துறைக்கு துப்பு கிடைக்கிறது. நெல்லையின் அந்த புலியூர் குறிச்சி கிராமத்துக்குள் காவலர்கள் சடசடவென இறங்குகிறார்கள். நல்லகண்ணு கைது செய்யப்படுகிறார். சொல்லொனா துயரத்துக்கு ஆளாகிறார். அதிகாரத்தின் பூட்ஸ் கால்கள் நல்லகண்ணுவின் நெஞ்சில் ஏறி மிதித்தன. அதிகாரி ஒருவர் சிகரெட்டை பற்ற வைத்து நல்லகண்ணுவின் மீசையை கருக்கினார். உதட்டின் மேல் பகுதியிலும் சூடு வைத்து உயிர்போகும் வலியை கொடுக்கிறார். நல்லகண்ணு அப்போதும் மனம் தளரவில்லை. தீர்க்கமான நெஞ்சத்தோடு தன்னுடைய தோழர்களை பற்றி எந்தத் தகவலையும் அவர் காவல்துறையிடம் சொல்லவில்லை. விளைவாக, நல்லகண்ணு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் சித்ரவதைகள் தொடர்ந்தது. நல்லகண்ணு 'நெல்லை சதி!' 'நெல்லை சதி' என்ற பெயரில் அதிகாரத்துக்கு எதிராக போராடிய 109 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் 16 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதில், நல்லகண்ணு உட்பட ப.மாணிக்கம், ஐ.மாயாண்டி, பாரதி, பொன்னு ஆர்.கிருஷ்ணன், கே.ப.எஸ்.மணி, அழகுமுத்து, அ.வேலாயுதம், ஆர்.பழனிசாமி என 9 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. நல்லகண்ணு சிறையிலிருந்த நாட்களிலும் நிறைய கொடூரங்கள் நடந்திருந்தது. மில் தொழிலாளர்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் போராடிய உசிலம்பட்டி பாலு, ஒரு காவலர் கொலையுண்ட வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பாலு தூக்குமேடை ஏறிய சமயத்தில், தூக்குத் தண்டனைக்கு எதிராக மதுரை சிறையிலிருந்து கண்டன முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார் நல்லகண்ணு. 'நெஞ்சுரமூட்டிய சிறை!' அதேமாதிரி, நல்லகண்ணுவுடன் ஆயுள்தண்டனை பெற்றிருந்த அ.வேலாயுதமும் தண்டனைக் காலத்திலேயே காச நோயினால் அவதிப்பட்டு உயிரிழந்தார். வேலாயுதம் ஏழ்மை குடிகொண்ட குடும்பத்தவர். நல்லகண்ணுவுடன் வேலாயுதம் சிறையிலிருந்த போதுதான் அவருக்கு மகன் பிறந்திருந்தான். குடும்பச்சூழல், மகனை காண முடியாத துயரம் என வேலாயுதத்தின் மனவேதனைகள் அத்தனையையும் அருகிலிருந்து பார்த்து நொந்துப்போனார் நல்லகண்ணு. சிறை ஒரு மனிதனை உலுக்கிவிடும். மனச்சத்து அத்தனையையும் உருக்குலைத்துவிடும். அதுவும் நல்லகண்ணு சிறையிலிருந்த காலத்தில் அவரின் மன உறுதியை உடைக்கும் வகையில்தான் அத்தனை சம்பவங்களும் நடந்திருந்தது. ஆனாலும் அவர் அசரவில்லை. மக்களுக்கு முன் நிற்கும் போராளி இதையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் இருந்தது. இவ்வளவு நெஞ்சுரத்தை அவர் பெறக் காரணம், அவர் மாணவப் பருவத்திலிருந்தே தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கிவிட்டார். காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு என அப்போது தேசியளவில் முன் நின்ற தலைவர்கள் மீது பெரும் ஈர்ப்பைக் கொண்டிருந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களிலும் மாணவராக பங்கேற்றிருந்தார். தேசியவாத எண்ணம் கொண்ட காங்கிரஸின் மீதான நல்லகண்ணுவின் ஈர்ப்பை அவரின் ஆசிரியர் பலவேசம்தான் மார்க்சிய தத்துவங்களின் மீது திருப்பிவிடுகிறார். 'சக தோழர்களின் வாழ்க்கைப் பாடம்!' ஸ்ரீவைகுண்டத்தில் 'காரநேஷன்' என்கிற பள்ளியில்தான் நல்லகண்ணு பயின்றார். பலவேசம் அந்தப் பள்ளியின் இந்தி ஆசிரியர். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள வாசகசாலை ஒன்றில் பத்திரிகைகளை படிப்பது மாணவராக இருந்த நல்லகண்ணுவின் வழக்கம். அவரின் வாசிப்புப் பழக்கத்தை பார்த்துவிட்டு பலவேசம்தான் 'சோவியத் ருஷ்யா' 'கார்ல்மாக்ஸ் வரலாறு' போன்ற நூல்களை வாசிக்கக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்துதான் கம்யூனிச சித்தாந்தத்தின் மீது நல்லகண்ணுவுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. மாணவ இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் மைக் கட்டுவது, சேர்களை ஒழுங்குப்படுத்துவது போன்ற ஒத்தாசைகளை செய்துகொண்டே அவர்கள் பேசும் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டார். தோழர் பாலனும் தோழர் ஜீவாவும்தான் நல்லகண்ணுவின் ஆஸ்தானங்கள். அவர்களிடமிருந்துதான் எளிமையையும் கொள்கைப்பிடிப்பையும் அவர் கற்றுக்கொண்டார். நல்லகண்ணு இரண்டாம் உலகப்போர் காலத்தில் பஞ்சம் நிலவிய சமயத்தில், நிலப்பிரபுக்கள் நெல்லை பதுக்கி வைக்கத் தொடங்கினர். ஆங்கிலேய அரசும் ஏழை மக்களுக்கு உளுத்துப்போன அரிசியையும் சோளத்தையும் கொடுத்தனர். இதற்கெதிராக ஸ்ரீவைகுண்டத்தில் பாலன் தலைமையில் 'உளுத்த சோள எதிர்ப்புத் தினம்' என பொதுக்கூட்டம் நடத்தினர். அந்தப் பொதுக்கூட்டத்தில் ஓடியாடி அத்தனை வேலைகளையும் நல்லகண்ணுவே செய்திருந்தார். பாலனின் உரைகளை கேட்பது நல்லகண்ணுவுக்கு அவ்வளவு பிடிக்கும். அவரின் உரைகள்தான் நல்லகண்ணுவை செதுக்கின. நெல்லை பதுக்கி வைத்திருந்தவர்களை தேடித் தேடிப் பிடித்து பதுக்கி வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளை வெளியே கொண்டு வந்த பாலனின் தீரம் நல்லகண்ணுவுக்கு நெஞ்சுரத்தை கொடுத்தது. 'வேண்டாம் சென்னை!' தோழர் ஜீவா நல்லகண்ணுவை ஜனசக்தியில் பணியாற்றுமாறு சென்னைக்கு அழைத்துக் கொண்டார். ஆனால், சென்னை பிடிக்காமல் நல்லகண்ணு நெல்லைக்கே திரும்பினார். அங்கு உடனிருந்த தோழர்களுடன் சேர்ந்து விவசாய சங்கங்களை கட்டியெழுப்பினார். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடினார். தோழர் சீனிவாசராவ் போன்றோருடன் ஏற்பட்ட நெருக்கம் நல்லகண்ணுவை இன்னுமே எளிமைப்படுத்தியது. தோழர் நல்லகண்ணு 1960 களின் தொடக்கத்தில் நில உச்சவரம்பு மசோதாவில் திருத்தம் கொண்டுவரக் கோரி இடதுசாரிகள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அந்தப் போராட்டத்திற்காக சீனிவாசராவ் நெல்லை வருகிறார். போராடுகிறவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நிகழ்த்தும் அடக்குமுறைகளைக்கு எதிராகவும் விவசாயிகளுக்கான உரிமைகளைக் கோரியும் உடல் நலிவுற்றிந்த சமயத்திலும் வீரியமாக உரையாற்றுகிறார். அந்த சமயத்தில் அவருக்கு தீவிர ஆஸ்துமா. நெல்லையில் போராட்டத்தை முடித்துவிட்டு அவர் தஞ்சைக்கு செல்ல வேண்டும். சீனிவாசராவை வழியனுப்ப சில தோழர்களுடன் நல்லகண்ணுவும் செல்கிறார். உடல் நலிவுற்றிருப்பதால் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யுமாறு நல்லகண்ணு கூறுகிறார். சீனிவாசராவ் மறுக்கிறார். மீண்டும் அழுத்தி கூறுகிறார். சீனிவாசராவ் ஏற்றுக்கொள்ளவே இல்லை. துண்டை விரித்துக் கொள்கிற இடம் எனக்கு போதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்துகொள்கிறேன் என விடாப்பிடியாக பேசிவிட்டு கிளம்பியிருக்கிறார். கடைசி மூச்சு வரை மக்களுக்காக போராடியே ஓய்ந்தார் சீனிவாசராவ். 'பெண் கொடுத்த தோழர்!' நல்லகண்ணு பிறந்தது வசதியான குடும்பமாக இருக்கலாம். ஆனால், அவர் பார்த்து வளர்ந்து உடன் பயணித்ததெல்லாம் தூக்குமேடை பாலு, அ.வேலாயுதம், பாலன், ஜீவா, சீனிவாசராவ் போன்ற எளிமையும் போராட்டக்குணமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற செங்கொடி ஏந்திய தோழர்களுடன்தான். ஒருவகையில் நல்லகண்ணுவை அரவணைத்துக் கொண்டதுமே இதே மாதிரியான தோழர் ஒருவர்தான். சதி வழக்கில் சிறை சென்று நல்லகண்ணு விடுதலை ஆகி வெளியே வரும்போது அவருக்கு வயது முப்பதை கடந்துவிட்டது. நல்லகண்ணுவுக்கு திருமணம் செய்துகொள்ள பெண் கொடுத்தது ஒரு கம்யூனிஸ்ட் தோழர்தான். நல்லகண்ணு அன்னசாமி என்கிற அவர் சாதி ஒழிப்பு மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் என மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடியவர். அன்னசாமிக்கு மொத்தம் 11 பிள்ளைகள். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த ஆண்டில் அவருக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தது. அந்தப் பெண் பிள்ளைக்கு 'கேரள குமாரி' என பெயரிட்டார். அந்தளவுக்கு கம்யூனிஸ்ட். அவர்தான் தனக்கு இரண்டாவதாக பிறந்த மகள் ரஞ்சிதத்தை நல்லகண்ணுவுக்கு கட்டி வைத்தார். தன்னுடைய தந்தையின் போராட்ட வாழ்வை பார்த்தே வளர்ந்திருந்ததால் ரஞ்சிதம்மாள் நல்லகண்ணுவுக்கும் உற்றத் துணையாக இருந்தார். மாமனார் அன்னசாமியும் நல்லகண்ணுவுக்கு ஒரு முன்னோடி. நிலமீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு இருவரும் ஒரே சிறையில்தான் காலத்தை கழித்திருந்தனர். 'ஆடம்பரம் அநாவசியம்!' எந்தத் துதிபாடல்களையும் புகழுரைகளையும் விரும்பாதவர் நல்லகண்ணு. கம்யூனிஸ்ட்டுகளின் வழக்கம் போல தன்னை தன்னுடைய பெயர் சுருக்கத்தை வைத்து 'ஆர்.என்.கே தோழர்!' என அழைப்பதை மட்டுமே நல்லகண்ணு எப்போதும் விரும்பினார். 1992 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டார். 2005 வரை அவர்தான் மாநிலச் செயலாளர். மாநிலச் செயலாளராக ஆன பிறகு மணப்பாறைக்கு முதல் பொதுக்கூட்டத்தில் பேசச் செல்கிறார். அவர் காரில் வந்து இறங்குவார் என எதிர்பார்க்க எளிமையாக ஆட்டோவில் வந்து இறங்கியிருக்கிறார். நல்லகண்ணு தன்னை வரவேற்க தெருக்களில் கட்டியிருந்த லைட்டுகளையும் தோராணங்களையும் பார்த்துவிட்டு, 'ஊரில் எதுவும் கோவில் திருவிழாவா?' என உள்ளூர் நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார். 'உங்களை வரவேற்கத்தான் எல்லா ஏற்பாடும்...' என நிர்வாகிகள் பதில் நல்லகண்ணுவின் முகம் வாடிவிட்டது. மேடையில் அவருக்கு ஆளுயர மாலை போட திட்டமிட்டிருந்தனர். அதையும் வேண்டாமென கறாராக கூறிவிட்டார். பின்னர் நிர்வாகிகளை அழைத்து, 'நாட்டோட நிலைமையை இந்த மாலையும் லைட்டுமா எடுத்து சொல்லப்போகுது? இந்த செலவையெல்லாம் கட்சிக்கு நிதியா கொடுத்திருந்தா ஒரு கம்யூனிஸ்ட்டு நாடாளுமன்றம் போயி மக்கள் பிரச்னைகளை பேச உதவியா இருந்திருக்குமே..' என அறிவுரையும் கூறியிருக்கிறார். 80-வது பிறந்தநாளில் கட்சி திரட்டிக் கொடுத்த நிதி மொத்தத்தையும் அப்படியே கட்சிக்கே மட்டும் நிதியாக திருப்பிக் கொடுத்தார். அவருக்கு வெகுமதியாக வந்த எல்லாமே கட்சிக்குதான். படோபடம் மட்டுமே ஒரே மொழியாகக் கொண்ட அரசியலில் இவ்வளவு எளிமையாக சிந்தித்ததால்தான் என்னவோ தேர்தல் அரசியலில் ஒரு முறை கூட அவரால் வெல்ல முடியாமல் போனது. தோழர் நல்லகண்ணு 1990 களில் நெல்லையில் கொடூரமான சாதியக் கலவரங்கள் நடந்துகொண்டிருந்தது. இரு வேறு சமூகங்களுக்கிடையே தொடர் மோதல், தொடர் கொலைகள். சாதி ஒழிப்புக்காக தீவிரமாக போராடிய நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமியை வீடு புகுந்து வெட்டினர். அந்த சமயத்தில் நல்லகண்ணு மாநிலச் செயலாளர். அவரால் விஷயத்தை பெரிதுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், தனிமனிதன் ஒருவனின் துயரமும் ஆக்ரோஷமும் சமூகத்தில் பதற்றத்தை உண்டாக்கிவிடக் கூடாது என்பதற்காக நல்லகண்ணு அமைதி காத்தார். ஒவ்வொரு இழப்புமே நல்லகண்ணுவிற்குள் இருக்கும் போராளிக்கு இன்னும் உரத்தையே ஏற்றியது. மாமனார் கொல்லப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே சாதியக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டி கூட்டங்களை நடத்தத் தொடங்கினார். 'என் நாடு, என் மக்கள்..' என்பதுதான் நல்லகண்ணுவின் மார்க்சியம். அந்தக் கருத்திலும் கொள்கைப் பிடிப்பிலும் கடைசி வரைக்குமே சமரசம் செய்துகொள்ளாமல்தான் இருந்தார். 'கட்சிதான் குடும்பம்!' ஒரு பேட்டியில் தோழர் நல்லகண்ணுவின் மனைவி இப்படி கூறியிருப்பார். அதாவது, 'மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து தோழர் விடுபட்டதும் நான் ரொம்பவே மகிழ்ந்தேன். இனி போதுமான அளவுக்கு ஓய்வெடுப்பார் என எண்ணினேன். ஆனால், மீண்டும் முன்பை விட வேகமாக அலைந்துகொண்டுதான் இருக்கிறார். என்ன செய்ய? குடும்பத்தில் வளர்ந்ததை விட அதிகம் கட்சியில்தான் வளர்ந்தார். உறவினர்களோடு இருப்பதை விட கட்சித் தோழர்களோடும் மக்களோடும் இருப்பதைத்தான் விரும்புவார். அதுதான் அவருடைய உடல்நிலைக்கும் ஒத்ததாக இருக்கிறது. அதை நிறுத்தினால் அவருடைய உடம்பு ஒத்துக்கொள்ளாது.' எனக் கூறியிருப்பார். தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு வாழ்வை இதைவிட ஆகச்சிறப்பான வார்த்தைகளில் கோர்க்க முடியாது. நல்லகண்ணு அதிகாரம் கோரமானது. அதிகாரம் எளிய மக்களை தங்களின் இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்கும். தங்களுக்கு எதிராக நிற்பவர்களை கடித்து குதறி விரட்டியடிக்கும். தோழர் நல்லகண்ணுவை அப்படி எத்தனையோ முறை விரட்டியடிக்க முயன்றிருக்கிறது. மீசை மயிரை கருக்கியது தோழரை விரட்டியடிக்க அதிகாரம் கையிலெடுத்த முதல் முயற்சி. அது தோல்வியில் முடிந்தது. அதற்கு பிறகான அத்தனை முயற்சிகளுக்கும் அதே முடிவுதான். ஏனெனில், நல்லகண்ணு எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கமும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களின் பக்கம் மட்டுமே நின்றார். நீதியின் குரல் தோழருக்குள் ஒரு அணையாத செந்தீயை மூட்டியது. தோழர் நல்லகண்ணு 'இருட்டறையில் மெழுகுவத்தியை கொளுத்தி வைக்கிறோம். எரிந்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால், மெழுகுவத்தியும் எரிந்து உருகிவிடுகிறது. ஒளிகொடுத்து தன்னை அழித்துக்கொள்ளும் மெழுகுவத்தியைப் போல ஒரு சில லட்சிய வீரர்களின் வாழ்க்கையும் அமைந்துவிடுகிறது.' சீனிவாசராவுக்கு நல்லகண்ணு எழுதிய இரங்கல் குறிப்பு இது. நல்லகண்ணுவும் இந்த தமிழ்ச் சமூகத்தின் பாட்டாளி வர்க்கத்துக்காக தன்னைக் கரைத்துக் கொண்ட உன்னத ஒளியே! ``கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? - தோழர் நல்லகண்ணு #VikatanVintage

விகடன் 25 Feb 2026 3:51 pm

தோழர் நல்லகண்ணு : தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி!

'அதிகாரம் கொடியது!' இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொள்ளா மைல்களை கடப்பார்கள். நிலப்பிரபுக்களாக இருந்த பண்ணையார்களின் அடியாட்கள், எதிர்க்கட்சிகளின் குண்டர்கள், காவல்துறை என யார் கண்ணிலும் சிக்கக் கூடாது. நல்லகண்ணு தற்காப்புக்கு பையில் வெடிகுண்டுகளையும் வைத்திருப்பார்கள். 1949 டிசம்பர் 20, நள்ளிரவில் விழிப்புணர்வு பிரசாரக் கூட்டங்களையெல்லாம் முடித்துவிட்டு கட்சித் தோழர் ஒருவரின் வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் நல்லகண்ணு. காவல்துறைக்கு துப்பு கிடைக்கிறது. நெல்லையின் அந்த புலியூர் குறிச்சி கிராமத்துக்குள் காவலர்கள் சடசடவென இறங்குகிறார்கள். நல்லகண்ணு கைது செய்யப்படுகிறார். சொல்லொனா துயரத்துக்கு ஆளாகிறார். அதிகாரத்தின் பூட்ஸ் கால்கள் நல்லகண்ணுவின் நெஞ்சில் ஏறி மிதித்தன. அதிகாரி ஒருவர் சிகரெட்டை பற்ற வைத்து நல்லகண்ணுவின் மீசையை கருக்கினார். உதட்டின் மேல் பகுதியிலும் சூடு வைத்து உயிர்போகும் வலியை கொடுக்கிறார். நல்லகண்ணு அப்போதும் மனம் தளரவில்லை. தீர்க்கமான நெஞ்சத்தோடு தன்னுடைய தோழர்களை பற்றி எந்தத் தகவலையும் அவர் காவல்துறையிடம் சொல்லவில்லை. விளைவாக, நல்லகண்ணு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் சித்ரவதைகள் தொடர்ந்தது. நல்லகண்ணு 'நெல்லை சதி!' 'நெல்லை சதி' என்ற பெயரில் அதிகாரத்துக்கு எதிராக போராடிய 109 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் 16 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதில், நல்லகண்ணு உட்பட ப.மாணிக்கம், ஐ.மாயாண்டி, பாரதி, பொன்னு ஆர்.கிருஷ்ணன், கே.ப.எஸ்.மணி, அழகுமுத்து, அ.வேலாயுதம், ஆர்.பழனிசாமி என 9 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. நல்லகண்ணு சிறையிலிருந்த நாட்களிலும் நிறைய கொடூரங்கள் நடந்திருந்தது. மில் தொழிலாளர்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் போராடிய உசிலம்பட்டி பாலு, ஒரு காவலர் கொலையுண்ட வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பாலு தூக்குமேடை ஏறிய சமயத்தில், தூக்குத் தண்டனைக்கு எதிராக மதுரை சிறையிலிருந்து கண்டன முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார் நல்லகண்ணு. 'நெஞ்சுரமூட்டிய சிறை!' அதேமாதிரி, நல்லகண்ணுவுடன் ஆயுள்தண்டனை பெற்றிருந்த அ.வேலாயுதமும் தண்டனைக் காலத்திலேயே காச நோயினால் அவதிப்பட்டு உயிரிழந்தார். வேலாயுதம் ஏழ்மை குடிகொண்ட குடும்பத்தவர். நல்லகண்ணுவுடன் வேலாயுதம் சிறையிலிருந்த போதுதான் அவருக்கு மகன் பிறந்திருந்தான். குடும்பச்சூழல், மகனை காண முடியாத துயரம் என வேலாயுதத்தின் மனவேதனைகள் அத்தனையையும் அருகிலிருந்து பார்த்து நொந்துப்போனார் நல்லகண்ணு. சிறை ஒரு மனிதனை உலுக்கிவிடும். மனச்சத்து அத்தனையையும் உருக்குலைத்துவிடும். அதுவும் நல்லகண்ணு சிறையிலிருந்த காலத்தில் அவரின் மன உறுதியை உடைக்கும் வகையில்தான் அத்தனை சம்பவங்களும் நடந்திருந்தது. ஆனாலும் அவர் அசரவில்லை. மக்களுக்கு முன் நிற்கும் போராளி இதையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் இருந்தது. இவ்வளவு நெஞ்சுரத்தை அவர் பெறக் காரணம், அவர் மாணவப் பருவத்திலிருந்தே தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கிவிட்டார். காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு என அப்போது தேசியளவில் முன் நின்ற தலைவர்கள் மீது பெரும் ஈர்ப்பைக் கொண்டிருந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களிலும் மாணவராக பங்கேற்றிருந்தார். தேசியவாத எண்ணம் கொண்ட காங்கிரஸின் மீதான நல்லகண்ணுவின் ஈர்ப்பை அவரின் ஆசிரியர் பலவேசம்தான் மார்க்சிய தத்துவங்களின் மீது திருப்பிவிடுகிறார். 'சக தோழர்களின் வாழ்க்கைப் பாடம்!' ஸ்ரீவைகுண்டத்தில் 'காரநேஷன்' என்கிற பள்ளியில்தான் நல்லகண்ணு பயின்றார். பலவேசம் அந்தப் பள்ளியின் இந்தி ஆசிரியர். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள வாசகசாலை ஒன்றில் பத்திரிகைகளை படிப்பது மாணவராக இருந்த நல்லகண்ணுவின் வழக்கம். அவரின் வாசிப்புப் பழக்கத்தை பார்த்துவிட்டு பலவேசம்தான் 'சோவியத் ருஷ்யா' 'கார்ல்மாக்ஸ் வரலாறு' போன்ற நூல்களை வாசிக்கக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்துதான் கம்யூனிச சித்தாந்தத்தின் மீது நல்லகண்ணுவுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. மாணவ இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் மைக் கட்டுவது, சேர்களை ஒழுங்குப்படுத்துவது போன்ற ஒத்தாசைகளை செய்துகொண்டே அவர்கள் பேசும் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டார். தோழர் பாலனும் தோழர் ஜீவாவும்தான் நல்லகண்ணுவின் ஆஸ்தானங்கள். அவர்களிடமிருந்துதான் எளிமையையும் கொள்கைப்பிடிப்பையும் அவர் கற்றுக்கொண்டார். நல்லகண்ணு இரண்டாம் உலகப்போர் காலத்தில் பஞ்சம் நிலவிய சமயத்தில், நிலப்பிரபுக்கள் நெல்லை பதுக்கி வைக்கத் தொடங்கினர். ஆங்கிலேய அரசும் ஏழை மக்களுக்கு உளுத்துப்போன அரிசியையும் சோளத்தையும் கொடுத்தனர். இதற்கெதிராக ஸ்ரீவைகுண்டத்தில் பாலன் தலைமையில் 'உளுத்த சோள எதிர்ப்புத் தினம்' என பொதுக்கூட்டம் நடத்தினர். அந்தப் பொதுக்கூட்டத்தில் ஓடியாடி அத்தனை வேலைகளையும் நல்லகண்ணுவே செய்திருந்தார். பாலனின் உரைகளை கேட்பது நல்லகண்ணுவுக்கு அவ்வளவு பிடிக்கும். அவரின் உரைகள்தான் நல்லகண்ணுவை செதுக்கின. நெல்லை பதுக்கி வைத்திருந்தவர்களை தேடித் தேடிப் பிடித்து பதுக்கி வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளை வெளியே கொண்டு வந்த பாலனின் தீரம் நல்லகண்ணுவுக்கு நெஞ்சுரத்தை கொடுத்தது. 'வேண்டாம் சென்னை!' தோழர் ஜீவா நல்லகண்ணுவை ஜனசக்தியில் பணியாற்றுமாறு சென்னைக்கு அழைத்துக் கொண்டார். ஆனால், சென்னை பிடிக்காமல் நல்லகண்ணு நெல்லைக்கே திரும்பினார். அங்கு உடனிருந்த தோழர்களுடன் சேர்ந்து விவசாய சங்கங்களை கட்டியெழுப்பினார். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடினார். தோழர் சீனிவாசராவ் போன்றோருடன் ஏற்பட்ட நெருக்கம் நல்லகண்ணுவை இன்னுமே எளிமைப்படுத்தியது. தோழர் நல்லகண்ணு 1960 களின் தொடக்கத்தில் நில உச்சவரம்பு மசோதாவில் திருத்தம் கொண்டுவரக் கோரி இடதுசாரிகள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அந்தப் போராட்டத்திற்காக சீனிவாசராவ் நெல்லை வருகிறார். போராடுகிறவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நிகழ்த்தும் அடக்குமுறைகளைக்கு எதிராகவும் விவசாயிகளுக்கான உரிமைகளைக் கோரியும் உடல் நலிவுற்றிந்த சமயத்திலும் வீரியமாக உரையாற்றுகிறார். அந்த சமயத்தில் அவருக்கு தீவிர ஆஸ்துமா. நெல்லையில் போராட்டத்தை முடித்துவிட்டு அவர் தஞ்சைக்கு செல்ல வேண்டும். சீனிவாசராவை வழியனுப்ப சில தோழர்களுடன் நல்லகண்ணுவும் செல்கிறார். உடல் நலிவுற்றிருப்பதால் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யுமாறு நல்லகண்ணு கூறுகிறார். சீனிவாசராவ் மறுக்கிறார். மீண்டும் அழுத்தி கூறுகிறார். சீனிவாசராவ் ஏற்றுக்கொள்ளவே இல்லை. துண்டை விரித்துக் கொள்கிற இடம் எனக்கு போதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்துகொள்கிறேன் என விடாப்பிடியாக பேசிவிட்டு கிளம்பியிருக்கிறார். கடைசி மூச்சு வரை மக்களுக்காக போராடியே ஓய்ந்தார் சீனிவாசராவ். 'பெண் கொடுத்த தோழர்!' நல்லகண்ணு பிறந்தது வசதியான குடும்பமாக இருக்கலாம். ஆனால், அவர் பார்த்து வளர்ந்து உடன் பயணித்ததெல்லாம் தூக்குமேடை பாலு, அ.வேலாயுதம், பாலன், ஜீவா, சீனிவாசராவ் போன்ற எளிமையும் போராட்டக்குணமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற செங்கொடி ஏந்திய தோழர்களுடன்தான். ஒருவகையில் நல்லகண்ணுவை அரவணைத்துக் கொண்டதுமே இதே மாதிரியான தோழர் ஒருவர்தான். சதி வழக்கில் சிறை சென்று நல்லகண்ணு விடுதலை ஆகி வெளியே வரும்போது அவருக்கு வயது முப்பதை கடந்துவிட்டது. நல்லகண்ணுவுக்கு திருமணம் செய்துகொள்ள பெண் கொடுத்தது ஒரு கம்யூனிஸ்ட் தோழர்தான். நல்லகண்ணு அன்னசாமி என்கிற அவர் சாதி ஒழிப்பு மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் என மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடியவர். அன்னசாமிக்கு மொத்தம் 11 பிள்ளைகள். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த ஆண்டில் அவருக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தது. அந்தப் பெண் பிள்ளைக்கு 'கேரள குமாரி' என பெயரிட்டார். அந்தளவுக்கு கம்யூனிஸ்ட். அவர்தான் தனக்கு இரண்டாவதாக பிறந்த மகள் ரஞ்சிதத்தை நல்லகண்ணுவுக்கு கட்டி வைத்தார். தன்னுடைய தந்தையின் போராட்ட வாழ்வை பார்த்தே வளர்ந்திருந்ததால் ரஞ்சிதம்மாள் நல்லகண்ணுவுக்கும் உற்றத் துணையாக இருந்தார். மாமனார் அன்னசாமியும் நல்லகண்ணுவுக்கு ஒரு முன்னோடி. நிலமீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு இருவரும் ஒரே சிறையில்தான் காலத்தை கழித்திருந்தனர். 'ஆடம்பரம் அநாவசியம்!' எந்தத் துதிபாடல்களையும் புகழுரைகளையும் விரும்பாதவர் நல்லகண்ணு. கம்யூனிஸ்ட்டுகளின் வழக்கம் போல தன்னை தன்னுடைய பெயர் சுருக்கத்தை வைத்து 'ஆர்.என்.கே தோழர்!' என அழைப்பதை மட்டுமே நல்லகண்ணு எப்போதும் விரும்பினார். 1992 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டார். 2005 வரை அவர்தான் மாநிலச் செயலாளர். மாநிலச் செயலாளராக ஆன பிறகு மணப்பாறைக்கு முதல் பொதுக்கூட்டத்தில் பேசச் செல்கிறார். அவர் காரில் வந்து இறங்குவார் என எதிர்பார்க்க எளிமையாக ஆட்டோவில் வந்து இறங்கியிருக்கிறார். நல்லகண்ணு தன்னை வரவேற்க தெருக்களில் கட்டியிருந்த லைட்டுகளையும் தோராணங்களையும் பார்த்துவிட்டு, 'ஊரில் எதுவும் கோவில் திருவிழாவா?' என உள்ளூர் நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார். 'உங்களை வரவேற்கத்தான் எல்லா ஏற்பாடும்...' என நிர்வாகிகள் பதில் நல்லகண்ணுவின் முகம் வாடிவிட்டது. மேடையில் அவருக்கு ஆளுயர மாலை போட திட்டமிட்டிருந்தனர். அதையும் வேண்டாமென கறாராக கூறிவிட்டார். பின்னர் நிர்வாகிகளை அழைத்து, 'நாட்டோட நிலைமையை இந்த மாலையும் லைட்டுமா எடுத்து சொல்லப்போகுது? இந்த செலவையெல்லாம் கட்சிக்கு நிதியா கொடுத்திருந்தா ஒரு கம்யூனிஸ்ட்டு நாடாளுமன்றம் போயி மக்கள் பிரச்னைகளை பேச உதவியா இருந்திருக்குமே..' என அறிவுரையும் கூறியிருக்கிறார். 80-வது பிறந்தநாளில் கட்சி திரட்டிக் கொடுத்த நிதி மொத்தத்தையும் அப்படியே கட்சிக்கே மட்டும் நிதியாக திருப்பிக் கொடுத்தார். அவருக்கு வெகுமதியாக வந்த எல்லாமே கட்சிக்குதான். படோபடம் மட்டுமே ஒரே மொழியாகக் கொண்ட அரசியலில் இவ்வளவு எளிமையாக சிந்தித்ததால்தான் என்னவோ தேர்தல் அரசியலில் ஒரு முறை கூட அவரால் வெல்ல முடியாமல் போனது. தோழர் நல்லகண்ணு 1990 களில் நெல்லையில் கொடூரமான சாதியக் கலவரங்கள் நடந்துகொண்டிருந்தது. இரு வேறு சமூகங்களுக்கிடையே தொடர் மோதல், தொடர் கொலைகள். சாதி ஒழிப்புக்காக தீவிரமாக போராடிய நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமியை வீடு புகுந்து வெட்டினர். அந்த சமயத்தில் நல்லகண்ணு மாநிலச் செயலாளர். அவரால் விஷயத்தை பெரிதுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், தனிமனிதன் ஒருவனின் துயரமும் ஆக்ரோஷமும் சமூகத்தில் பதற்றத்தை உண்டாக்கிவிடக் கூடாது என்பதற்காக நல்லகண்ணு அமைதி காத்தார். ஒவ்வொரு இழப்புமே நல்லகண்ணுவிற்குள் இருக்கும் போராளிக்கு இன்னும் உரத்தையே ஏற்றியது. மாமனார் கொல்லப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே சாதியக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டி கூட்டங்களை நடத்தத் தொடங்கினார். 'என் நாடு, என் மக்கள்..' என்பதுதான் நல்லகண்ணுவின் மார்க்சியம். அந்தக் கருத்திலும் கொள்கைப் பிடிப்பிலும் கடைசி வரைக்குமே சமரசம் செய்துகொள்ளாமல்தான் இருந்தார். 'கட்சிதான் குடும்பம்!' ஒரு பேட்டியில் தோழர் நல்லகண்ணுவின் மனைவி இப்படி கூறியிருப்பார். அதாவது, 'மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து தோழர் விடுபட்டதும் நான் ரொம்பவே மகிழ்ந்தேன். இனி போதுமான அளவுக்கு ஓய்வெடுப்பார் என எண்ணினேன். ஆனால், மீண்டும் முன்பை விட வேகமாக அலைந்துகொண்டுதான் இருக்கிறார். என்ன செய்ய? குடும்பத்தில் வளர்ந்ததை விட அதிகம் கட்சியில்தான் வளர்ந்தார். உறவினர்களோடு இருப்பதை விட கட்சித் தோழர்களோடும் மக்களோடும் இருப்பதைத்தான் விரும்புவார். அதுதான் அவருடைய உடல்நிலைக்கும் ஒத்ததாக இருக்கிறது. அதை நிறுத்தினால் அவருடைய உடம்பு ஒத்துக்கொள்ளாது.' எனக் கூறியிருப்பார். தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு வாழ்வை இதைவிட ஆகச்சிறப்பான வார்த்தைகளில் கோர்க்க முடியாது. நல்லகண்ணு அதிகாரம் கோரமானது. அதிகாரம் எளிய மக்களை தங்களின் இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்கும். தங்களுக்கு எதிராக நிற்பவர்களை கடித்து குதறி விரட்டியடிக்கும். தோழர் நல்லகண்ணுவை அப்படி எத்தனையோ முறை விரட்டியடிக்க முயன்றிருக்கிறது. மீசை மயிரை கருக்கியது தோழரை விரட்டியடிக்க அதிகாரம் கையிலெடுத்த முதல் முயற்சி. அது தோல்வியில் முடிந்தது. அதற்கு பிறகான அத்தனை முயற்சிகளுக்கும் அதே முடிவுதான். ஏனெனில், நல்லகண்ணு எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கமும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களின் பக்கம் மட்டுமே நின்றார். நீதியின் குரல் தோழருக்குள் ஒரு அணையாத செந்தீயை மூட்டியது. தோழர் நல்லகண்ணு 'இருட்டறையில் மெழுகுவத்தியை கொளுத்தி வைக்கிறோம். எரிந்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால், மெழுகுவத்தியும் எரிந்து உருகிவிடுகிறது. ஒளிகொடுத்து தன்னை அழித்துக்கொள்ளும் மெழுகுவத்தியைப் போல ஒரு சில லட்சிய வீரர்களின் வாழ்க்கையும் அமைந்துவிடுகிறது.' சீனிவாசராவுக்கு நல்லகண்ணு எழுதிய இரங்கல் குறிப்பு இது. நல்லகண்ணுவும் இந்த தமிழ்ச் சமூகத்தின் பாட்டாளி வர்க்கத்துக்காக தன்னைக் கரைத்துக் கொண்ட உன்னத ஒளியே! ``கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? - தோழர் நல்லகண்ணு #VikatanVintage

விகடன் 25 Feb 2026 3:51 pm

`அதிமுக-வில் பழனிசாமி நீடித்தால் அதிமுக 1 சதவிகிதத்துக்கு வந்துவிடும்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு கூட்டுறவு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அதையடுத்து இன்று இந்தக் கல்லுரியின் வகுப்புகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “குடும்பங்களுக்கு 10,000 உரிமைத்தொகை வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அள்ளி விடுகிறார். எடப்பாடி பழனிசாமி பொருளாதார நிபுணர் கிடையாது. ஏதோ காரணத்தினால் முதலமைச்சராக வந்தவர். அடிப்படையில் பெரிய அரசியல் தலைவரும் கிடையாது, அவரிடம் நிர்வாகத் திறனும் இல்லை. இதனால் 10,000 என்பது அள்ளி விடுவது போல்தான் உள்ளது. சொல்வதை அவர் செய்யப் போவதில்லை. அடுத்து அவர் ஆட்சிக்கு வர மாட்டார் என்பதால், என்ன வேண்டுமானாலும் கூறலாம். மக்களின் ஆதரவை அதிமுக இழந்துவிட்டது. அதிமுக சுக்குநூறாக போய்விட்டது. பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு சேர்ந்த பின் தற்போது அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. பாஜக-வுக்கு அடிமையாகத்தான் அதிமுக இருந்து வருகின்றது. பாஜக தான் அதிமுக-வை வழிநடத்தி வருகிறது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி எடப்பாடி பழனிசாமி சுயமாக எதுவும் கூறுவதில்லை. பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் அதிமுக முழுவதுமாக பலவீனம் ஆகிவிட்டது. தேர்தலில் நிற்கக்கூட ஆட்கள் வர மாட்டார்கள். மதுரையிலும் பலவீனம் ஆகிவிட்டது. திண்டுக்கல்லில் ஒன்றும் இல்லை. பெரியசாமி தென் மாவட்டத்திலுள்ள 58 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வர வாய்ப்புள்ளது. ஐந்தாண்டு காலத்தில் அடிப்படை வசதிகள் அனைத்து கிராமங்களிலும் செய்து கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நீடித்தார் என்றால், அதிமுக ஒரு சதவிகிதத்துக்கு வந்துவிடும் என்றார்.

விகடன் 25 Feb 2026 3:49 pm

45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்கவிட்டுள்ளது தெற்கு இரயில்வே - சு.வெங்கடேசன் கண்டனம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். எம்.பி சு.வெங்கடேசன் பதிவு எம்.பி சு.வெங்கடேசனும் இதுதொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில், ரூ.2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால் புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ரூ 734 கோடியில் புணரமைக்கபடும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு இரயில்வே. ரயில் சேவை பாதிப்பு சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்க செய்திருக்கும் இந்த நிர்வாக கோழைத்தனத்திற்கு இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை குறைப்பால் பயணிகள் அவதி தெற்கு ரயில்வேயின் நிர்வாக அட்சியமே காரணம். கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடியான இரயில் சேவைக் குறைப்பு மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தினசரி இயக்கப்பட்டு வந்த 204 புறநகர் இரயில் சேவைகள் 115 ஆக, அதாவது 436 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.. தெற்கு இரயில்வே தரப்பில் நிர்வாகக் காரணங்களுக்காக மற்றும் எழும்பூர் நிலைய மறுசீரமைப்புப் பணிகளுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் திட்டமிடலில் இருந்த நிர்வாக குறைபாடுகளே முக்கியக் காரனமாக இருக்கிறது. மோசமான சேவை தெற்கு இரயில்வேயின் சென்னைக் கோட்டம், எழும்பூர் இரயில் நிலையத்தை மறுசீரமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5, 2026 வரை 45 நாட்களுக்கு ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளைத் திட்டமிட்டுள்ளது. தொடக்கத்தில் 20% ரயில்கள் மட்டுமே ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சமிக்ஞை மாற்றங்கள் காரணமாக இவ்வெண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 43% இரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது இரயில்களின் நேர இடைவெளியை கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கு முன்பு 8 நிமிடங்களுக்கு ஒரு இரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த இடைவெளி 15 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது. இது நிலையங்களில் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் போகக் காரணமாகியுள்ளது. சென்னை இரயில்வே வரலாற்றில் இத்தகைய மோசமான நீண்டகால சேவைக்குறைப்பு மற்றும் பயணிகள் பாதிப்பு இதற்கு முன்பு நடந்ததே இல்லை. ரயில் சேவை பாதிப்பு மெகா பிளாக் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள புறநகர் இரயில் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, சென்னை எழும்பூர் பணிகளில் திட்டமிடல் இடைவெளி தெளிவாகத் தெரிகிறது. மும்பை சி.எஸ்.எம்.டி (CSMT) மறுசீரமைப்பு - 2026 சென்னை எழும்பூரைப் போலவே மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திலும் (CSMT) 2,450 கோடி ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்புப் பணிகள் பிப்ரவரி 2026-ல் தொடங்கப்பட்டன. இதற்காக 85 நாட்கள் மெகா பிளாக் (Mega Block) அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், மும்பை இரயில்வே நிர்வாகம் ஒரு முக்கியமான உத்தியைக் கையாண்டது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் 16 மற்றும் 17-வது நடைமேடைகள் புறநகர் இரயில் பாதைகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இதனால், மும்பையின் புறநகர் இரயில் சேவைகள் (Local Trains) எந்தவிதப் பெரிய பாதிப்புமின்றி வழக்கம்போல இயக்கப்பட்டன. எக்ஸ்பிரஸ் இரயில்கள் மட்டுமே சில நிலையங்களுக்கு முன்பாகவே (Dadar, Thane) நிறுத்தப்பட்டன. 20 ஆண்டுகளாக இழுபறி கொல்கத்தா சீல்டா (Sealdah) விரிவாக்கப் பணிகள் - 2024 கொல்கத்தாவில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீல்டா இரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை அனுமதிப்பதற்காக நடைமேடை நீட்டிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சுமார் 80 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 147 ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. ஆனால், இப்பணிகள் ஒரு வார இறுதியில் (சனி மற்றும் ஞாயிறு) மட்டுமே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சென்னை எழும்பூரைப் போல 45 நாட்களுக்குத் தொடர்ச்சியாக சேவைகளைக் குறைக்கும் முறை அங்கு இல்லை. இந்நெருக்கடியை திட்டமிடப்பட்ட நிர்வாக நடைமுறையின் மூலம் தவிர்த்திருக்க முடியும். எம்.ஆர்.டி.எஸ் (MRTS) இணைப்புப் பணியில் ஏற்பட்ட காலதாமதம் சென்னையின் புறநகர் இரயில் சேவையில் நிலவும் நெருக்கடிக்கு மிக முக்கியக் காரணியாக வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுண்ட் (St. Thomas Mount) இடையிலான எம்.ஆர்.டி.எஸ் விரிவாக்கப் பணித் தாமதம் பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள இந்த 5 கி.மீ தூர இணைப்புப் பணி முடிவடைந்திருந்தால், பயணிகள் கடற்கரை மற்றும் கோட்டை நிலையங்களை அடைய எழும்பூர் வழியாக வரும் தேவையிருக்காது. ரயில் சேவை பாதிப்பு வேளச்சேரி வழியாக நேரடியாக மவுண்ட் நிலையத்திலிருந்து கடற்கரைக்குச் செல்ல முடியும். நிர்வாகம் எழும்பூர் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, இந்த எம்.ஆர்.டி.எஸ் இணைப்பை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். பிப்ரவரி 2026-ல் எழும்பூர் பணிகள் உச்சத்தில் இருக்கும்போது, எம்.ஆர்.டி.எஸ் இணைப்பு மார்ச் மாதம்தான் முடியும் என்று இரயில்வே தரப்பு ஒப்புக்கொள்வது, பணிகளை ஒருங்கிணைப்பதில் உள்ள பெரிய தோல்வியைக் காட்டுகிறது. நடைமேடை மேலாண்மை மற்றும் வேகக் கட்டுப்பாடு எழும்பூர் இரயில் நிலையத்தில் புறநகர் இரயில்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட நடைமேடைகள் 10 மற்றும் 11 ஆகும். இவை 55 கி.மீ வேகத்தில் இரயில்களை இயக்கவும், ஒரே நேரத்தில் இரயில்களை அனுப்பவும் பெறவும் கூடிய வசதி கொண்டவை. தற்போது இந்நடைமேடைகள் மூடப்பட்டு, புறநகர் இரயில்கள் எக்ஸ்பிரஸ் இரயில் நடைமேடைகளான 5 மற்றும் 6-க்கு மாற்றப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் நடைமேடைகளின் சமிக்ஞை மற்றும் வழித்தட அமைப்புகள் (Crossings) புறநகர் இரயில்களுக்குப் பொருத்தமானதாக இல்லை. இதனால் இரயில்கள் நிலையத்திற்குள் நுழையும்போது அதன் வேகம் 15 கி.மீ ஆகக் குறைக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு இயக்கப்பட வேண்டிய இரயில்களின் எண்ணிக்கையை இவ்வேகக் குறைப்பு நேரடியாகப் பாதிக்கிறது. இப்பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து, கூடுதல் சமிக்ஞை வசதிகளைச் செய்யத் தவறியது நிர்வாகத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. பொருளாதாரப் பின்னடைவு ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை இல்லாமை ஒரு மிகப்பெரிய இரயில் சேவைக் குறைப்பு அறிவிக்கப்படும்போது, அது சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) மற்றும் மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) ஆகியவற்றுடன் முறையாகக் கலந்தாலோசிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பு மாநில போக்குவரத்து முகமைகளைத் தயார் நிலையில் இல்லாமல் செய்ததாகத் தெரிகிறது. இரயில்வே விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகுதான் மாநகரப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன, ஆனால், அது இரயில் பயணிகளின் எண்ணிக்கையை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை. தற்காலிக சிரமம், நிரந்தர வசதி என்று பிரச்சாரம் செய்தாலும், 45 நாட்கள் என்பது ஒரு சாமானியனின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிதியியல் சுமை புறநகர் இரயில்களில் பயணிக்க 10 ரூபாய் செலவாகும் நிலையில், இரயில்கள் இல்லாததால் ஆட்டோ அல்லது தனியார் டாக்ஸிகளில் பயணிக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் அல்லது செங்கல்பட்டிலிருந்து அலுவலகம் செல்ல ஒரு நாளைக்கு 300 முதல் 400 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. தினசரி கூலி வேலை செய்பவர்களுக்கு இது பெரும் பொருளாதாரப் பின்னடைவாகும். ரயில் சேவை பாதிப்பு நிர்வாக அலட்சியம் மாணவர்களின் கல்விப் பாதிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். குறிப்பாக, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் நேரத்தில் இரயில் சேவைக் குறைப்பு செய்யப்பட்டிருப்பது மாணவர்களின் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இரயில்களின் இடைவெளி அதிகரிப்பு மற்றும் நிலையற்ற நேரங்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வதில் சிக்கல்களை உருவாக்கியுள்ளன. மாற்று வழித்தடங்களின் நிலை புறநகர் இரயில்கள் குறைந்ததால் மெட்ரோ இரயில்களில் (CMRL) பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20,000 அதிகரித்துள்ளது. இதனால் மெட்ரோ இரயில் நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுகிறது. அதேபோல ஜி.எஸ்.டி சாலையில் பேருந்துப் போக்குவரத்து அதிகரித்திருப்பதால், அங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சிக்கல்கள் அனைத்துக்கும் தெற்கு இரயில்வேயின் திட்டமிடப்படாத நிர்வாக அலட்சியமே முக்கிய காரணம். தனிமைப்படுத்தப்பட்ட நடைமேடை எம்.ஆர்.டி.எஸ் இணைப்பை முடிக்காமல் எழும்பூர் பணிகளைத் தொடங்கியது. 204 இரயில்களில் இருந்து 115 ஆகக் குறைக்கப்பட்டதை முன்கூட்டியே முறையாக அறிவிக்காதது. மாற்றுப் பேருந்து வசதிகள் மற்றும் மெட்ரோ சேவைகளை மாநில அரசுடன் இணைந்து முன்கூட்டியே திட்டமிடத் தவறியது.மும்பை போன்ற நகரங்களில் புறநகர் சேவைகளைப் பாதுகாக்கப் பின்பற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமேடை உத்தியை எழும்பூரில் செயல்படுத்தாதது. எக்ஸ்பிரஸ் நடைமேடைகளிலும் புறநகர் இரயில்களை 40-50 கி.மீ வேகத்தில் இயக்கக்கூடிய வகையில் சமிக்ஞை அமைப்புகளை (Yard Modernization) முன்கூட்டியே மேம்படுத்தாது. ரயில் சேவை பாதிப்பு பயணிகள் தவிப்பு மக்களின் நலனை கருத்தில் கொள்ளாத மமதை ஏறிய நிர்வாக அலட்சியத்தால் சென்னை மக்கள் இந்த பெரும் இன்னலை இன்று சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ரூ. 2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால் புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ரூ 734 கோடியில் புனரமைக்கப்படும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்கவிட்டுள்ளது தெற்கு இரயில்வே. சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்கச் செய்திருக்கும் இந்நிர்வாகக் கோழைத்தனத்திற்கு ஒன்றிய இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 25 Feb 2026 3:35 pm

45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்கவிட்டுள்ளது தெற்கு இரயில்வே - சு.வெங்கடேசன் கண்டனம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். எம்.பி சு.வெங்கடேசன் பதிவு எம்.பி சு.வெங்கடேசனும் இதுதொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில், ரூ.2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால் புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ரூ 734 கோடியில் புணரமைக்கபடும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு இரயில்வே. ரயில் சேவை பாதிப்பு சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்க செய்திருக்கும் இந்த நிர்வாக கோழைத்தனத்திற்கு இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை குறைப்பால் பயணிகள் அவதி தெற்கு ரயில்வேயின் நிர்வாக அட்சியமே காரணம். கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடியான இரயில் சேவைக் குறைப்பு மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தினசரி இயக்கப்பட்டு வந்த 204 புறநகர் இரயில் சேவைகள் 115 ஆக, அதாவது 436 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.. தெற்கு இரயில்வே தரப்பில் நிர்வாகக் காரணங்களுக்காக மற்றும் எழும்பூர் நிலைய மறுசீரமைப்புப் பணிகளுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் திட்டமிடலில் இருந்த நிர்வாக குறைபாடுகளே முக்கியக் காரனமாக இருக்கிறது. மோசமான சேவை தெற்கு இரயில்வேயின் சென்னைக் கோட்டம், எழும்பூர் இரயில் நிலையத்தை மறுசீரமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5, 2026 வரை 45 நாட்களுக்கு ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளைத் திட்டமிட்டுள்ளது. தொடக்கத்தில் 20% ரயில்கள் மட்டுமே ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சமிக்ஞை மாற்றங்கள் காரணமாக இவ்வெண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 43% இரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது இரயில்களின் நேர இடைவெளியை கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கு முன்பு 8 நிமிடங்களுக்கு ஒரு இரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த இடைவெளி 15 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது. இது நிலையங்களில் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் போகக் காரணமாகியுள்ளது. சென்னை இரயில்வே வரலாற்றில் இத்தகைய மோசமான நீண்டகால சேவைக்குறைப்பு மற்றும் பயணிகள் பாதிப்பு இதற்கு முன்பு நடந்ததே இல்லை. ரயில் சேவை பாதிப்பு மெகா பிளாக் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள புறநகர் இரயில் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, சென்னை எழும்பூர் பணிகளில் திட்டமிடல் இடைவெளி தெளிவாகத் தெரிகிறது. மும்பை சி.எஸ்.எம்.டி (CSMT) மறுசீரமைப்பு - 2026 சென்னை எழும்பூரைப் போலவே மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திலும் (CSMT) 2,450 கோடி ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்புப் பணிகள் பிப்ரவரி 2026-ல் தொடங்கப்பட்டன. இதற்காக 85 நாட்கள் மெகா பிளாக் (Mega Block) அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், மும்பை இரயில்வே நிர்வாகம் ஒரு முக்கியமான உத்தியைக் கையாண்டது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் 16 மற்றும் 17-வது நடைமேடைகள் புறநகர் இரயில் பாதைகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இதனால், மும்பையின் புறநகர் இரயில் சேவைகள் (Local Trains) எந்தவிதப் பெரிய பாதிப்புமின்றி வழக்கம்போல இயக்கப்பட்டன. எக்ஸ்பிரஸ் இரயில்கள் மட்டுமே சில நிலையங்களுக்கு முன்பாகவே (Dadar, Thane) நிறுத்தப்பட்டன. 20 ஆண்டுகளாக இழுபறி கொல்கத்தா சீல்டா (Sealdah) விரிவாக்கப் பணிகள் - 2024 கொல்கத்தாவில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீல்டா இரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை அனுமதிப்பதற்காக நடைமேடை நீட்டிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சுமார் 80 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 147 ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. ஆனால், இப்பணிகள் ஒரு வார இறுதியில் (சனி மற்றும் ஞாயிறு) மட்டுமே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சென்னை எழும்பூரைப் போல 45 நாட்களுக்குத் தொடர்ச்சியாக சேவைகளைக் குறைக்கும் முறை அங்கு இல்லை. இந்நெருக்கடியை திட்டமிடப்பட்ட நிர்வாக நடைமுறையின் மூலம் தவிர்த்திருக்க முடியும். எம்.ஆர்.டி.எஸ் (MRTS) இணைப்புப் பணியில் ஏற்பட்ட காலதாமதம் சென்னையின் புறநகர் இரயில் சேவையில் நிலவும் நெருக்கடிக்கு மிக முக்கியக் காரணியாக வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுண்ட் (St. Thomas Mount) இடையிலான எம்.ஆர்.டி.எஸ் விரிவாக்கப் பணித் தாமதம் பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள இந்த 5 கி.மீ தூர இணைப்புப் பணி முடிவடைந்திருந்தால், பயணிகள் கடற்கரை மற்றும் கோட்டை நிலையங்களை அடைய எழும்பூர் வழியாக வரும் தேவையிருக்காது. ரயில் சேவை பாதிப்பு வேளச்சேரி வழியாக நேரடியாக மவுண்ட் நிலையத்திலிருந்து கடற்கரைக்குச் செல்ல முடியும். நிர்வாகம் எழும்பூர் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, இந்த எம்.ஆர்.டி.எஸ் இணைப்பை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். பிப்ரவரி 2026-ல் எழும்பூர் பணிகள் உச்சத்தில் இருக்கும்போது, எம்.ஆர்.டி.எஸ் இணைப்பு மார்ச் மாதம்தான் முடியும் என்று இரயில்வே தரப்பு ஒப்புக்கொள்வது, பணிகளை ஒருங்கிணைப்பதில் உள்ள பெரிய தோல்வியைக் காட்டுகிறது. நடைமேடை மேலாண்மை மற்றும் வேகக் கட்டுப்பாடு எழும்பூர் இரயில் நிலையத்தில் புறநகர் இரயில்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட நடைமேடைகள் 10 மற்றும் 11 ஆகும். இவை 55 கி.மீ வேகத்தில் இரயில்களை இயக்கவும், ஒரே நேரத்தில் இரயில்களை அனுப்பவும் பெறவும் கூடிய வசதி கொண்டவை. தற்போது இந்நடைமேடைகள் மூடப்பட்டு, புறநகர் இரயில்கள் எக்ஸ்பிரஸ் இரயில் நடைமேடைகளான 5 மற்றும் 6-க்கு மாற்றப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் நடைமேடைகளின் சமிக்ஞை மற்றும் வழித்தட அமைப்புகள் (Crossings) புறநகர் இரயில்களுக்குப் பொருத்தமானதாக இல்லை. இதனால் இரயில்கள் நிலையத்திற்குள் நுழையும்போது அதன் வேகம் 15 கி.மீ ஆகக் குறைக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு இயக்கப்பட வேண்டிய இரயில்களின் எண்ணிக்கையை இவ்வேகக் குறைப்பு நேரடியாகப் பாதிக்கிறது. இப்பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து, கூடுதல் சமிக்ஞை வசதிகளைச் செய்யத் தவறியது நிர்வாகத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. பொருளாதாரப் பின்னடைவு ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை இல்லாமை ஒரு மிகப்பெரிய இரயில் சேவைக் குறைப்பு அறிவிக்கப்படும்போது, அது சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) மற்றும் மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) ஆகியவற்றுடன் முறையாகக் கலந்தாலோசிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பு மாநில போக்குவரத்து முகமைகளைத் தயார் நிலையில் இல்லாமல் செய்ததாகத் தெரிகிறது. இரயில்வே விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகுதான் மாநகரப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன, ஆனால், அது இரயில் பயணிகளின் எண்ணிக்கையை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை. தற்காலிக சிரமம், நிரந்தர வசதி என்று பிரச்சாரம் செய்தாலும், 45 நாட்கள் என்பது ஒரு சாமானியனின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிதியியல் சுமை புறநகர் இரயில்களில் பயணிக்க 10 ரூபாய் செலவாகும் நிலையில், இரயில்கள் இல்லாததால் ஆட்டோ அல்லது தனியார் டாக்ஸிகளில் பயணிக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் அல்லது செங்கல்பட்டிலிருந்து அலுவலகம் செல்ல ஒரு நாளைக்கு 300 முதல் 400 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. தினசரி கூலி வேலை செய்பவர்களுக்கு இது பெரும் பொருளாதாரப் பின்னடைவாகும். ரயில் சேவை பாதிப்பு நிர்வாக அலட்சியம் மாணவர்களின் கல்விப் பாதிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். குறிப்பாக, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் நேரத்தில் இரயில் சேவைக் குறைப்பு செய்யப்பட்டிருப்பது மாணவர்களின் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இரயில்களின் இடைவெளி அதிகரிப்பு மற்றும் நிலையற்ற நேரங்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வதில் சிக்கல்களை உருவாக்கியுள்ளன. மாற்று வழித்தடங்களின் நிலை புறநகர் இரயில்கள் குறைந்ததால் மெட்ரோ இரயில்களில் (CMRL) பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20,000 அதிகரித்துள்ளது. இதனால் மெட்ரோ இரயில் நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுகிறது. அதேபோல ஜி.எஸ்.டி சாலையில் பேருந்துப் போக்குவரத்து அதிகரித்திருப்பதால், அங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சிக்கல்கள் அனைத்துக்கும் தெற்கு இரயில்வேயின் திட்டமிடப்படாத நிர்வாக அலட்சியமே முக்கிய காரணம். தனிமைப்படுத்தப்பட்ட நடைமேடை எம்.ஆர்.டி.எஸ் இணைப்பை முடிக்காமல் எழும்பூர் பணிகளைத் தொடங்கியது. 204 இரயில்களில் இருந்து 115 ஆகக் குறைக்கப்பட்டதை முன்கூட்டியே முறையாக அறிவிக்காதது. மாற்றுப் பேருந்து வசதிகள் மற்றும் மெட்ரோ சேவைகளை மாநில அரசுடன் இணைந்து முன்கூட்டியே திட்டமிடத் தவறியது.மும்பை போன்ற நகரங்களில் புறநகர் சேவைகளைப் பாதுகாக்கப் பின்பற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமேடை உத்தியை எழும்பூரில் செயல்படுத்தாதது. எக்ஸ்பிரஸ் நடைமேடைகளிலும் புறநகர் இரயில்களை 40-50 கி.மீ வேகத்தில் இயக்கக்கூடிய வகையில் சமிக்ஞை அமைப்புகளை (Yard Modernization) முன்கூட்டியே மேம்படுத்தாது. ரயில் சேவை பாதிப்பு பயணிகள் தவிப்பு மக்களின் நலனை கருத்தில் கொள்ளாத மமதை ஏறிய நிர்வாக அலட்சியத்தால் சென்னை மக்கள் இந்த பெரும் இன்னலை இன்று சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ரூ. 2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால் புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ரூ 734 கோடியில் புனரமைக்கப்படும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்கவிட்டுள்ளது தெற்கு இரயில்வே. சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்கச் செய்திருக்கும் இந்நிர்வாகக் கோழைத்தனத்திற்கு ஒன்றிய இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 25 Feb 2026 3:35 pm

தோழர் நல்லகண்ணு : ``அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்புவோம் - முதல்வர் ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு சிகிச்சை பலனின்றி இன்று (25.02.2026) மதியம் 1.55 மணியளவில் காலமானார். தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தோழர் நல்லகண்ணு மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், `` `எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு' என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் - தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. மு.க.ஸ்டாலின், தோழர் நல்லகண்ணு நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் - “சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத் தூக்கினில் ஏற்றினாலும் விட்டுப்பிரியாது – செங்கொடி வீரம் குறையாது” என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு. கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர்! முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், தலைவர் கலைஞருடன் தோளோடு தோள் நின்று களமாடியவர். பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருதை வழங்கிச் சிறப்பித்தார். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தோழர் அவர்களுக்குத் தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது எனது பெரும் பேறு! முதல்வர் ஸ்டாலின் எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்! “தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்” என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது. தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்! மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். சிறைவாசம் முதல் செங்கொடி வரை: காலமானார் தோழர் நல்லகண்ணு

விகடன் 25 Feb 2026 3:20 pm

நல்லகண்ணு: நேர்மையும் தியாகமும் சுமந்த அவரது வாழ்க்கையை ஆவணமாக்க விரும்பினேன்— உருகும் வ.கௌதமன்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், எழுத்தாளர், ஒடுக்குமுறைகள், அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்தவர் தோழர் ஆர்.நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளர். எதிர்க்கட்சிக்காரர்களும் கண்ணியத்தோடு அணுகும், மதிக்கும் ஆளுமையானவர். அவரது 101-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த டிசம்பரில் சென்னையில் நடந்தது. அதில் திரைப்பட இயக்குநரும், தமிழ் உணர்வாளருமான வ.கௌதமன் ஆக்கத்தில் 'தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு வாழ்த்துப்பாடல்' ஒன்றை வெளியிட்டிருந்தார். நல்லகண்ணுவின் ஆவணப்படத்தை இயக்க விரும்பிய வ.கௌதமன், அதன்பிறகு அவரை பற்றிய வாழ்த்துப் பாடலை இயக்கியிருந்தார். இப்பொது வாட்ஸ்அப்பில் வைரலாகி வரும் அந்த பாடல் குறித்தும், தோழரிடம் பேசி பழகிய இனிமையான தருணங்கள் குறித்தும் இங்கே மனம் திறக்கிறார் வ.கௌதமன். நல்லகண்ணுவுடன்.. `என்னை விட தியாக செய்தவங்க பலர் இருக்காங்க' ``என்னோட உயிர் நண்பரும், நான் இயக்கிய 'மகிழ்ச்சி' படத்தின் தயாரிப்பாளருமான த.மணிவண்ணன் 13 ஆண்டுகளுக்கு முன்னாடி அமெரிக்காவுக்கு சென்று திரும்பினார். அப்போது அங்கே பல லட்சம் மதிப்புள்ள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யக்கூடிய கேமரா ஒன்றை வாங்கி வந்திருந்தார். 'தமிழ் ஆளுமைகள் இரா.நல்லகண்ணு ஐயா, பழ.நெடுமாறன் ஐயா, வே ஆனைமுத்து ஐயா ஆகியோர்களை பற்றிய ஆவணப்படங்களை அதில் படமாக்குவோம். அதன் பிறகு நாம பயோபிக் படமாக கொண்டு வரலாம்' என்றார். அதனால நல்லகண்ணு ஐயாவின் வீட்டிற்கு சென்று ஆவணப்படம் எடுக்க விரும்பியது குறித்து பேசினோம். அடுத்த தலைமுறைக்கு உங்களைப் போன்ற நேர்மையாக தியாகம் சுமந்தவர்கள் இங்கே இருந்திருக்கார். வாழ்ந்திருக்கார்னு சொன்னா நம்பமாட்டாங்க.. அதனால அவங்களுக்கு காண்பிக்கணும் என்றதும் அவர் சிரித்துவிட்டார். 'என்னை ஆவணப்படம் எடுத்து என்னவாகப்போகிறது? என்னை விட தியாக செய்தவங்க பலர் இருக்காங்க' என தன்னடக்கமாக சொன்னார். அதன்பிறகு நான் அவரிடம் எவ்வளவு பேசியும் அவர் மசிந்து கொடுக்கவே இல்லை. ரயில் பயணம்.. அவரிடம் நான், 'ஐயா நீங்க சுதந்திரப் போராட்ட காலகட்டத்துலேயே போராடியவர். ஆயுதம் ஏந்தத் தயாரானவர். அதன்பிறகு நீங்க கம்யூனிசத்துக்கு வந்தீங்க. கம்யூனிசத்திலும் உங்களுக்கு தலைமறைவு வாழ்க்கை தான். இப்படி உங்களோட வாழ்க்கை முழுவதுவம் போராட்டம்தான். ஊருக்கு எங்காவது நீங்க சென்றால் கூட சாதாரண பேருந்தில் தான் பயணம் செய்வீங்க. ரொம்பவே எளிமையாக வாழ்ந்திருக்கீங்க..' என்றெல்லாம் சொன்னேன். போராட்ட களத்தில் நல்லகண்ணு ஐயாவோடு சேர்ந்து பல போராட்டங்களில் நானும் ஈடுபட்டிருக்கேன். கரூரில் மணல் திருட்டுக்கு எதிராக நின்ற போராட்டம். கடும் போராட்டம். அவருடன் மூன்று போராட்டங்கள்ல இருந்திருக்கேன். நானும் கைதாகியிருக்கேன். நீங்க எண்ணற்ற போராட்டங்கள்ல கலந்துக்கிட்டிருக்கீங்க.. இது எல்லாத்தையுமே படைப்பு ஆக்கணும்னு சொல்லியும் அவர் 'முடியவே முடியாது'னு மறுத்துட்டார். ஒருகட்டத்துல நான் அவர் மேல கோபமாகிட்டேன். `ஐயா நீங்க இப்படி பண்றதே வன்முறை ஐயா' என்றேன். இந்த தலைமுறையில் நாங்களும் கத்திப்பாரா, அவனியாபுரம், நீட் தேர்வை எதிர்த்து, ஜல்லிக்கட்டுக்காக என பல போராட்டங்கள் செய்துட்டு இருக்கோம். ஆனாலும் உங்களோட ஒப்பிடுகையில் ஒரு துளியளவு கூட இல்லை. உங்களுக்கு கொடுத்த பணத்தைக்கூட மேடையிலேயே கொடுத்துட்டு வந்துட்டீங்க.. உங்களுக்கு கொடுத்த வீட்டையும் பறிச்சிட்டு வேறொரு இடத்துல உங்களை கொண்டு போனப்ப கூட நீங்க எதுவுமே சொல்லலை. இந்த மண்ணுக்காக உங்களை போல வாழணும்னு ஒருத்தன் சொல்லணும்னா.. உங்களை பத்தி யாராவது ஒருத்தர் சொன்னால் தானய்யா முடியும் என்றேன். கடைசி வரைக்கும் அவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். என்னைப் பத்தி தெரிய வேணாம்னு சொல்லிட்டார். விழாவில்.. அவர் இப்படி உறுதியாக நின்றதுக்கான காரணமாக ஒரு படையாளியாக நான் நினைக்கற விஷயம் இதுவாகத்தானிருக்க முடியும். ஏன்னா, அவருக்கு.. 'என்னை மாதிரி ஒருத்தன் இனி வருவானா' என்ற சந்தேகம் இருந்திருக்கலாம். அல்லது என்னை மாதிரி ஒருத்தன் வந்தாலும் கூட பின்னாளில் ஆயிரம், 500களுக்கு சோரம் போகக்கூடிய இந்த கூட்டத்தை ஒருகாலும் இனி திருத்த முடியாதுனு நினைச்சிருக்கலாம். ஒரு நேர்மையோடு நிற்க நம்மள தேர்தல் களத்தில் படுதோல்வி அடைய செய்த கூட்டம் இனிமே எந்தக்காலத்தில் திருந்தி வாழப்போகுதுனு கூட நினைச்சிருக்கலாம். இப்படியெல்லாம் இருக்கலாம்னு நான் ஒப்பிட்டு பார்க்கறேன். ஆனாலும் அவர் மீதான அன்பு, பாசமும் அவர் என்மீது வைத்திருக்கும் பேரன்பும், பெரும் பாசமும் எப்போதும் அப்படியேதான் இருந்திருக்கு. அவரோட 99வது வயதுல எனக்கு ஒரு புத்தகம் பரிசளிசார். 'என் அன்பு நண்பர் கௌதமனுக்கு'னு கையொழுத்து போட்டு கொடுத்த புத்தகத்தை பொக்கிஷமாக வச்சிருக்கேன். புத்தககம்... சரி பாடல் குறித்த விஷயத்துக்கு வர்றேன். அவருக்கு விருப்பம் இல்லாததால அவரை ஆவணப் படம் எடுக்க முடியலையே தவிர அவரது புகைப்படங்களை சேகரித்து ஒரு பாடல் பதிவு செய்திடணும்னு விரும்பினேன். அவரது நூற்றாண்டு விழாவுக்கு தொடக்கப் பாடலாக ஒரு பாடலை கொண்டு வர விரும்பினேன். அந்த விழாவுக்கு முதல்வர் உள்பட தோழரோடு பழகிய ஆளுமைகள் கலந்துக்கிட்டாங்க. நண்பர் த.மணிவண்ணன் தயாரிப்பில், இளையகம்பன் வரிகளில், சைந்தவி குரலில் உருவான பாடலுக்கு மரியா மனோகர் இசையமைத்திருந்தார். நான் உருவாக்கிய ஈழத் தமிழர்கள் குறித்த பாடல்களுக்கு இசையமைத்தவர் அவர். நூற்றாண்டு விழாவில் அந்த பாடலை கேட்ட தமிழக முதல்வர் உள்பட அத்தனை பேரும் கண்கலங்கினார்கள். குடும்பத்தினருடன்.. இதில் கடினமான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டுதான் ஆகணும். அவரது புகைப்படங்களை கேட்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். எத்தனையோ முறை தொடர்பு கொண்டும் ஒரே ஒரு புகைப்படத்தை கூட அவங்களிடமிருந்து வாங்க முடியலை. அப்படி சொல்றதை விட அவங்ககிட்ட ஒரு புகைப்படம் கூட இல்லை என்பதே உண்மை. அதாவது நூற்றாண்டு கண்ட கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நூற்றாண்டு கண்ட நல்லகண்ணு ஐயாவின் ஒரு புகைப்படம் கூட இல்லை. அதன்பின் ஜனசக்தியிடம் கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை. அதன்பிறகு தீக்கதிரில் உள்ள நண்பர் ஒருவர், ஐயாவின் உறவினர்கள் என பலரிடம் கிடைத்த புகைப்படங்களை வைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளேன்.. அதாவது நம்பிக்கையோடு இயங்கினால் அந்த விதை எங்காவது ஓரிடத்தில் கிடைக்கும் என்பது நல்லகண்ணு மட்டுமல்ல. அவரது புகைப்படமும் எனக்கு உணர்த்தி பாடம். அவரது புகைப்படங்கள் அவரது பாடலுக்கு உயிரோட்டமாக அமைஞ்சிருக்குது.''என்ற வ.கௌதமன் அந்த பாடலை நமக்கு காண்பித்தார். நல்லகண்ணுவின் சிரிப்புக்கிடையே சைந்தவி பாடல் ஒலிக்கிறது.. நல்லகண்ணு 'முத்து விளையும் அந்த தூத்துக்குடி நம்ம முன்னவரப் பெற்றெடுத்த மூத்தக்குடி சிங்கநிகர் வீரம் எழும் தமிழர்க்குடி அந்த திருவைகுண்டம் மண்ணைத்தொட்டு வணங்குங்கடி ராமசாமி கருப்பாயி பெத்த சிங்கம் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்த கருப்புத்தங்கம்...' அறம்... நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்' நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்

விகடன் 25 Feb 2026 2:50 pm

நல்லகண்ணு: நேர்மையும் தியாகமும் சுமந்த அவரது வாழ்க்கையை ஆவணமாக்க விரும்பினேன்— உருகும் வ.கௌதமன்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், எழுத்தாளர், ஒடுக்குமுறைகள், அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்தவர் தோழர் ஆர்.நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளர். எதிர்க்கட்சிக்காரர்களும் கண்ணியத்தோடு அணுகும், மதிக்கும் ஆளுமையானவர். அவரது 101-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த டிசம்பரில் சென்னையில் நடந்தது. அதில் திரைப்பட இயக்குநரும், தமிழ் உணர்வாளருமான வ.கௌதமன் ஆக்கத்தில் 'தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு வாழ்த்துப்பாடல்' ஒன்றை வெளியிட்டிருந்தார். நல்லகண்ணுவின் ஆவணப்படத்தை இயக்க விரும்பிய வ.கௌதமன், அதன்பிறகு அவரை பற்றிய வாழ்த்துப் பாடலை இயக்கியிருந்தார். இப்பொது வாட்ஸ்அப்பில் வைரலாகி வரும் அந்த பாடல் குறித்தும், தோழரிடம் பேசி பழகிய இனிமையான தருணங்கள் குறித்தும் இங்கே மனம் திறக்கிறார் வ.கௌதமன். நல்லகண்ணுவுடன்.. `என்னை விட தியாக செய்தவங்க பலர் இருக்காங்க' ``என்னோட உயிர் நண்பரும், நான் இயக்கிய 'மகிழ்ச்சி' படத்தின் தயாரிப்பாளருமான த.மணிவண்ணன் 13 ஆண்டுகளுக்கு முன்னாடி அமெரிக்காவுக்கு சென்று திரும்பினார். அப்போது அங்கே பல லட்சம் மதிப்புள்ள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யக்கூடிய கேமரா ஒன்றை வாங்கி வந்திருந்தார். 'தமிழ் ஆளுமைகள் இரா.நல்லகண்ணு ஐயா, பழ.நெடுமாறன் ஐயா, வே ஆனைமுத்து ஐயா ஆகியோர்களை பற்றிய ஆவணப்படங்களை அதில் படமாக்குவோம். அதன் பிறகு நாம பயோபிக் படமாக கொண்டு வரலாம்' என்றார். அதனால நல்லகண்ணு ஐயாவின் வீட்டிற்கு சென்று ஆவணப்படம் எடுக்க விரும்பியது குறித்து பேசினோம். அடுத்த தலைமுறைக்கு உங்களைப் போன்ற நேர்மையாக தியாகம் சுமந்தவர்கள் இங்கே இருந்திருக்கார். வாழ்ந்திருக்கார்னு சொன்னா நம்பமாட்டாங்க.. அதனால அவங்களுக்கு காண்பிக்கணும் என்றதும் அவர் சிரித்துவிட்டார். 'என்னை ஆவணப்படம் எடுத்து என்னவாகப்போகிறது? என்னை விட தியாக செய்தவங்க பலர் இருக்காங்க' என தன்னடக்கமாக சொன்னார். அதன்பிறகு நான் அவரிடம் எவ்வளவு பேசியும் அவர் மசிந்து கொடுக்கவே இல்லை. ரயில் பயணம்.. அவரிடம் நான், 'ஐயா நீங்க சுதந்திரப் போராட்ட காலகட்டத்துலேயே போராடியவர். ஆயுதம் ஏந்தத் தயாரானவர். அதன்பிறகு நீங்க கம்யூனிசத்துக்கு வந்தீங்க. கம்யூனிசத்திலும் உங்களுக்கு தலைமறைவு வாழ்க்கை தான். இப்படி உங்களோட வாழ்க்கை முழுவதுவம் போராட்டம்தான். ஊருக்கு எங்காவது நீங்க சென்றால் கூட சாதாரண பேருந்தில் தான் பயணம் செய்வீங்க. ரொம்பவே எளிமையாக வாழ்ந்திருக்கீங்க..' என்றெல்லாம் சொன்னேன். போராட்ட களத்தில் நல்லகண்ணு ஐயாவோடு சேர்ந்து பல போராட்டங்களில் நானும் ஈடுபட்டிருக்கேன். கரூரில் மணல் திருட்டுக்கு எதிராக நின்ற போராட்டம். கடும் போராட்டம். அவருடன் மூன்று போராட்டங்கள்ல இருந்திருக்கேன். நானும் கைதாகியிருக்கேன். நீங்க எண்ணற்ற போராட்டங்கள்ல கலந்துக்கிட்டிருக்கீங்க.. இது எல்லாத்தையுமே படைப்பு ஆக்கணும்னு சொல்லியும் அவர் 'முடியவே முடியாது'னு மறுத்துட்டார். ஒருகட்டத்துல நான் அவர் மேல கோபமாகிட்டேன். `ஐயா நீங்க இப்படி பண்றதே வன்முறை ஐயா' என்றேன். இந்த தலைமுறையில் நாங்களும் கத்திப்பாரா, அவனியாபுரம், நீட் தேர்வை எதிர்த்து, ஜல்லிக்கட்டுக்காக என பல போராட்டங்கள் செய்துட்டு இருக்கோம். ஆனாலும் உங்களோட ஒப்பிடுகையில் ஒரு துளியளவு கூட இல்லை. உங்களுக்கு கொடுத்த பணத்தைக்கூட மேடையிலேயே கொடுத்துட்டு வந்துட்டீங்க.. உங்களுக்கு கொடுத்த வீட்டையும் பறிச்சிட்டு வேறொரு இடத்துல உங்களை கொண்டு போனப்ப கூட நீங்க எதுவுமே சொல்லலை. இந்த மண்ணுக்காக உங்களை போல வாழணும்னு ஒருத்தன் சொல்லணும்னா.. உங்களை பத்தி யாராவது ஒருத்தர் சொன்னால் தானய்யா முடியும் என்றேன். கடைசி வரைக்கும் அவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். என்னைப் பத்தி தெரிய வேணாம்னு சொல்லிட்டார். விழாவில்.. அவர் இப்படி உறுதியாக நின்றதுக்கான காரணமாக ஒரு படையாளியாக நான் நினைக்கற விஷயம் இதுவாகத்தானிருக்க முடியும். ஏன்னா, அவருக்கு.. 'என்னை மாதிரி ஒருத்தன் இனி வருவானா' என்ற சந்தேகம் இருந்திருக்கலாம். அல்லது என்னை மாதிரி ஒருத்தன் வந்தாலும் கூட பின்னாளில் ஆயிரம், 500களுக்கு சோரம் போகக்கூடிய இந்த கூட்டத்தை ஒருகாலும் இனி திருத்த முடியாதுனு நினைச்சிருக்கலாம். ஒரு நேர்மையோடு நிற்க நம்மள தேர்தல் களத்தில் படுதோல்வி அடைய செய்த கூட்டம் இனிமே எந்தக்காலத்தில் திருந்தி வாழப்போகுதுனு கூட நினைச்சிருக்கலாம். இப்படியெல்லாம் இருக்கலாம்னு நான் ஒப்பிட்டு பார்க்கறேன். ஆனாலும் அவர் மீதான அன்பு, பாசமும் அவர் என்மீது வைத்திருக்கும் பேரன்பும், பெரும் பாசமும் எப்போதும் அப்படியேதான் இருந்திருக்கு. அவரோட 99வது வயதுல எனக்கு ஒரு புத்தகம் பரிசளிசார். 'என் அன்பு நண்பர் கௌதமனுக்கு'னு கையொழுத்து போட்டு கொடுத்த புத்தகத்தை பொக்கிஷமாக வச்சிருக்கேன். புத்தககம்... சரி பாடல் குறித்த விஷயத்துக்கு வர்றேன். அவருக்கு விருப்பம் இல்லாததால அவரை ஆவணப் படம் எடுக்க முடியலையே தவிர அவரது புகைப்படங்களை சேகரித்து ஒரு பாடல் பதிவு செய்திடணும்னு விரும்பினேன். அவரது நூற்றாண்டு விழாவுக்கு தொடக்கப் பாடலாக ஒரு பாடலை கொண்டு வர விரும்பினேன். அந்த விழாவுக்கு முதல்வர் உள்பட தோழரோடு பழகிய ஆளுமைகள் கலந்துக்கிட்டாங்க. நண்பர் த.மணிவண்ணன் தயாரிப்பில், இளையகம்பன் வரிகளில், சைந்தவி குரலில் உருவான பாடலுக்கு மரியா மனோகர் இசையமைத்திருந்தார். நான் உருவாக்கிய ஈழத் தமிழர்கள் குறித்த பாடல்களுக்கு இசையமைத்தவர் அவர். நூற்றாண்டு விழாவில் அந்த பாடலை கேட்ட தமிழக முதல்வர் உள்பட அத்தனை பேரும் கண்கலங்கினார்கள். குடும்பத்தினருடன்.. இதில் கடினமான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டுதான் ஆகணும். அவரது புகைப்படங்களை கேட்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். எத்தனையோ முறை தொடர்பு கொண்டும் ஒரே ஒரு புகைப்படத்தை கூட அவங்களிடமிருந்து வாங்க முடியலை. அப்படி சொல்றதை விட அவங்ககிட்ட ஒரு புகைப்படம் கூட இல்லை என்பதே உண்மை. அதாவது நூற்றாண்டு கண்ட கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நூற்றாண்டு கண்ட நல்லகண்ணு ஐயாவின் ஒரு புகைப்படம் கூட இல்லை. அதன்பின் ஜனசக்தியிடம் கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை. அதன்பிறகு தீக்கதிரில் உள்ள நண்பர் ஒருவர், ஐயாவின் உறவினர்கள் என பலரிடம் கிடைத்த புகைப்படங்களை வைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளேன்.. அதாவது நம்பிக்கையோடு இயங்கினால் அந்த விதை எங்காவது ஓரிடத்தில் கிடைக்கும் என்பது நல்லகண்ணு மட்டுமல்ல. அவரது புகைப்படமும் எனக்கு உணர்த்தி பாடம். அவரது புகைப்படங்கள் அவரது பாடலுக்கு உயிரோட்டமாக அமைஞ்சிருக்குது.''என்ற வ.கௌதமன் அந்த பாடலை நமக்கு காண்பித்தார். நல்லகண்ணுவின் சிரிப்புக்கிடையே சைந்தவி பாடல் ஒலிக்கிறது.. நல்லகண்ணு 'முத்து விளையும் அந்த தூத்துக்குடி நம்ம முன்னவரப் பெற்றெடுத்த மூத்தக்குடி சிங்கநிகர் வீரம் எழும் தமிழர்க்குடி அந்த திருவைகுண்டம் மண்ணைத்தொட்டு வணங்குங்கடி ராமசாமி கருப்பாயி பெத்த சிங்கம் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்த கருப்புத்தங்கம்...' அறம்... நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்' நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்

விகடன் 25 Feb 2026 2:50 pm

அறம்... நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்'நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்

1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி... நூற்று ஒரு ஆண்டுகளுக்கு முன் வடக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய அதே நாளில், தென்கோடியில் உதித்தது இரா.நல்லகண்ணு என்ற ஒளி நட்சத்திரம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் மகத்தான தலைவராக உருவெடுத்த நல்லகண்ணுவுக்கும் இப்போது நூற்று ஒரு வயது. ஸ்ரீ வைகுண்டத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே, வீறு கொண்டு எழுந்த நாட்டின் விடுதலைப் போராட்டம் நல்லகண்ணுவின் மனதிலும் கனலாய் எரிந்தது. அங்கே நடந்த எல்லாப் போராட்டங்களிலும் தேசிய உணர்வோடு களத்தில் நின்றார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். அப்பொழுதே தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் நல்லகண்ணுவின் குரல் மேலோங்கியது. ஸ்ரீவைகுண்டத்தில் பிரிட்டிஷ் அரசு அமைத்த உணவு கமிட்டியில் குடும்பன் என்ற பட்டியலின மாணவருக்கு அவமதிப்பு நிகழ்ந்தபோது கொதித்தெழுந்து அவரை அழைத்து வந்து சரிக்குச்சமமாக அமர வைத்தார் நல்லகண்ணு. நல்லகண்ணு மகாத்மா, நேருவின் மீது பற்றுக்கொண்டிருந்த நல்லகண்ணுவுக்கு பொது உடைமை நூல்களை அறிமுகம் செய்து வைத்தார் ஆசிரியர் பலவேசம். அதன் விளைவாக காந்தியவாதியாக இருந்த நல்லகண்ணு இன்று நாம் காணும் பொதுவுடைமைவாதியாக உருவெடுத்தார். 1943-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் நல்லகண்ணு. போராட்டங்களில் அதிதீவிரம் காட்டியதால் பாதியில் படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்க சமயம். உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய காலம். ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் இருக்கிற பத்தினிக்கோட்டையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக நல்லகண்ணுவிற்கு தகவல் கிடைக்க, யாரும் சுலபமாக செல்ல முடியாத அந்த மறைவிடம் பற்றி அரசு அதிகாரிகளிடம் தைரியமாக புகார் அளித்தார். அதிகாரிகள் அதிரடியாக கோட்டைக்குள் புகுந்து நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தார்கள். இந்த நடவடிக்கையால் நல்லகண்ணுவின் பெயர் மேலும் பிரபலமானது. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களை முன் நின்று நடத்தினார் நல்லகண்ணு. அதற்காக காவல்துறையின் அச்சுறுத்தல்கள், மிராசுகளின் மிரட்டல்கள் என்பதெல்லாம் அவர் வாழ்க்கையின் இயல்பானது. ஆதினங்களின் நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்து கிடந்தன. அங்கு நிலமற்ற தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட, கொதித்தெழுந்தார் நல்லகண்ணு. அவர் நடத்திய வீரியமிக்கப் போராட்டங்கள் தொழிலாளர்களின் குடியுரிமையை மீட்டுத் தர. நெல்லை சீமையெங்கும் தோழரின் புகழ் பரவியது. 1948-ல் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை முன்னெடுத்தற்காக, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட தலைமறைவானார் நல்லகண்ணு. ஆனால் அவரது போராட்டம் ஓயவில்லை. குறிவைத்துத் தேடிய தேடிய காவல்துறை, நல்லகண்ணு பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தது. பிற தோழர்களை அடையாளம் காட்டச் சொல்லி இரு கைகளையும் பின்புறமாக சேர்த்து கட்டி, தெருவில் இழுத்துச் சென்று கடுமையாக தாக்கியது காவல்துறை. தலை முடியை பிய்த்து பூட்ஸ் காலால் மிதித்து சித்திரவதை செய்தும் நல்லகண்ணுவிடமிருந்து எந்த ஒரு தகவலையும் பெற முடியவில்லை. பொறுமை இழந்த போலீஸ் அதிகாரி, சிகரெட் நெருப்பால் நல்லகண்ணுவின் மீசையை பொசுக்கிய கொடுமைகூட நடந்தது. அப்படியும் மௌனம் கலைக்கவில்லை, நம் தோழர். நல்லகண்ணு எந்த தகவலையும் பெற முடியாமல் நாங்குநேரி சிறைக்குள் மட்டுமே அவரை அடைக்க முடிந்தது காவல்துறையால். அவர்மீதும் குற்றம் சாட்டி நெல்லை சதி வழக்கு தொடரப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை கவிழ்க்க வேலை நிறுத்தங்களை தூண்டினார், ஆயுதப் புரட்சி நடத்தினார், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தார், வெடிகுண்டுகள் தயாரித்தார் என பல குற்றச்சாட்டுகள் புனைந்து நல்லகண்ணு மீது சுமத்தப்பட்டது. ஆனால் சிறைக்குள்ளே நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக சீற்றத்தோடு வெகுண்டெழுந்தார் இந்த சிவப்புப் போராளி. அதுவரை கிடைக்காத பல உரிமைகள் சிறைவாசிகளுக்குக் கிடைத்தன. அவர்களுக்கு கல்வி கற்கும் உரிமையையும் வாங்கி கொடுத்தார். ஏழாண்டு சிறைவாசத்திற்கு பிறகு, சதி வழக்கில் இருந்து மீண்டுவந்தார் நல்லகண்ணு. ரஞ்சிதம் அம்மாள் மனதோடு இணைந்த வாழ்க்கைத் துணைவியானார். திருமணத்துக்குப் பிறகும் அவரின் போராட்ட வாழ்க்கை தொடர்ந்தது. எளிமையும் தூய்மையுமே தன் அடையாளமாகக் கொண்ட இந்த அரிய அரசியல்வாதி 1992 முதல் 2005 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மண்ணின் மீதும் மனிதர்கள் மீதும் பெருநேசம் கொண்ட இந்த மாமனிதர், கடனாநதியில் அணை கட்டுவதற்காக தன் உயிரை முன்வைத்து நடத்திய போராட்டம் பல்லாயிரம் விவசாயிகளின் வாழ்க்கையைப் பசுமையாக்கியது. தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக அவரே ஆஜராகி வைத்த வாதங்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தன. நியாயம் உணர்ந்து உடனே மணல் அள்ள தடை விதித்தது நீதிமன்றம். அதிகார வேட்கையோ, பணத் தேவையோ, புகழ் போதையோ இல்லாத இந்த மகத்தான மனிதருக்காக ஒரு கோடி ரூபாயை அன்போடு அளித்தார்கள் தோழர்கள். அடுத்த நொடியே கட்சிக்காக அதை திருப்பியளித்து திகைப்பூட்டிய பண்பாளர். அம்பேத்கர் விருதுக்காக தமிழக அரசு தந்த லட்ச ரூபாயையும் பாதியை கட்சிக்கும் மீதியை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் பகிர்ந்தளித்தார். நல்லகண்ணு தகைசால் தமிழர் விருதோடு தந்த பத்து லட்சத்தோடு, தன் பையிலிருந்த ஐயாயிரத்தையும் சேர்த்து முதல்வர் நிவாரண நிதிக்தே திருப்பி அளித்தார். இத்தனையாண்டு அரசியல் வாழ்க்கையில் சொந்த வீடு கூட இல்லாத நேர்மையாளர். அரசியலை வெறுப்புடன் அணுகும் இன்றைய தலைமுறைக்கான நம்பிக்கைச்சுடர். கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மக்களாலும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படுகிற மாபெரும் தலைவர். சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி-துண்டு, ரப்பர் செருப்பு, வியர்த்துக் களைத்த உருவம் தான் பெருந்தமிழரின் வெளி அடையாளம். ஆனால் இவரின் வாழ்க்கையோ நம் எல்லோருக்குமான நம்பிக்கை வெளிச்சம். கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் ஓய்வறியாத மக்கள் தொண்டாலும் தமிழ் மக்களின் மதிப்பையும் மரியாதையையும் சொத்தாகச் சேர்த்திருக்கும் இந்தத் தோழர், நமக்கான பெருமிதத் தமிழர். தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி! - தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

விகடன் 25 Feb 2026 2:33 pm

அறம்... நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்'நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்

1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி... நூற்று ஒரு ஆண்டுகளுக்கு முன் வடக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய அதே நாளில், தென்கோடியில் உதித்தது இரா.நல்லகண்ணு என்ற ஒளி நட்சத்திரம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் மகத்தான தலைவராக உருவெடுத்த நல்லகண்ணுவுக்கும் இப்போது நூற்று ஒரு வயது. ஸ்ரீ வைகுண்டத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே, வீறு கொண்டு எழுந்த நாட்டின் விடுதலைப் போராட்டம் நல்லகண்ணுவின் மனதிலும் கனலாய் எரிந்தது. அங்கே நடந்த எல்லாப் போராட்டங்களிலும் தேசிய உணர்வோடு களத்தில் நின்றார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். அப்பொழுதே தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் நல்லகண்ணுவின் குரல் மேலோங்கியது. ஸ்ரீவைகுண்டத்தில் பிரிட்டிஷ் அரசு அமைத்த உணவு கமிட்டியில் குடும்பன் என்ற பட்டியலின மாணவருக்கு அவமதிப்பு நிகழ்ந்தபோது கொதித்தெழுந்து அவரை அழைத்து வந்து சரிக்குச்சமமாக அமர வைத்தார் நல்லகண்ணு. நல்லகண்ணு மகாத்மா, நேருவின் மீது பற்றுக்கொண்டிருந்த நல்லகண்ணுவுக்கு பொது உடைமை நூல்களை அறிமுகம் செய்து வைத்தார் ஆசிரியர் பலவேசம். அதன் விளைவாக காந்தியவாதியாக இருந்த நல்லகண்ணு இன்று நாம் காணும் பொதுவுடைமைவாதியாக உருவெடுத்தார். 1943-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் நல்லகண்ணு. போராட்டங்களில் அதிதீவிரம் காட்டியதால் பாதியில் படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்க சமயம். உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய காலம். ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் இருக்கிற பத்தினிக்கோட்டையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக நல்லகண்ணுவிற்கு தகவல் கிடைக்க, யாரும் சுலபமாக செல்ல முடியாத அந்த மறைவிடம் பற்றி அரசு அதிகாரிகளிடம் தைரியமாக புகார் அளித்தார். அதிகாரிகள் அதிரடியாக கோட்டைக்குள் புகுந்து நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தார்கள். இந்த நடவடிக்கையால் நல்லகண்ணுவின் பெயர் மேலும் பிரபலமானது. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களை முன் நின்று நடத்தினார் நல்லகண்ணு. அதற்காக காவல்துறையின் அச்சுறுத்தல்கள், மிராசுகளின் மிரட்டல்கள் என்பதெல்லாம் அவர் வாழ்க்கையின் இயல்பானது. ஆதினங்களின் நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்து கிடந்தன. அங்கு நிலமற்ற தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட, கொதித்தெழுந்தார் நல்லகண்ணு. அவர் நடத்திய வீரியமிக்கப் போராட்டங்கள் தொழிலாளர்களின் குடியுரிமையை மீட்டுத் தர. நெல்லை சீமையெங்கும் தோழரின் புகழ் பரவியது. 1948-ல் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை முன்னெடுத்தற்காக, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட தலைமறைவானார் நல்லகண்ணு. ஆனால் அவரது போராட்டம் ஓயவில்லை. குறிவைத்துத் தேடிய தேடிய காவல்துறை, நல்லகண்ணு பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தது. பிற தோழர்களை அடையாளம் காட்டச் சொல்லி இரு கைகளையும் பின்புறமாக சேர்த்து கட்டி, தெருவில் இழுத்துச் சென்று கடுமையாக தாக்கியது காவல்துறை. தலை முடியை பிய்த்து பூட்ஸ் காலால் மிதித்து சித்திரவதை செய்தும் நல்லகண்ணுவிடமிருந்து எந்த ஒரு தகவலையும் பெற முடியவில்லை. பொறுமை இழந்த போலீஸ் அதிகாரி, சிகரெட் நெருப்பால் நல்லகண்ணுவின் மீசையை பொசுக்கிய கொடுமைகூட நடந்தது. அப்படியும் மௌனம் கலைக்கவில்லை, நம் தோழர். நல்லகண்ணு எந்த தகவலையும் பெற முடியாமல் நாங்குநேரி சிறைக்குள் மட்டுமே அவரை அடைக்க முடிந்தது காவல்துறையால். அவர்மீதும் குற்றம் சாட்டி நெல்லை சதி வழக்கு தொடரப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை கவிழ்க்க வேலை நிறுத்தங்களை தூண்டினார், ஆயுதப் புரட்சி நடத்தினார், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தார், வெடிகுண்டுகள் தயாரித்தார் என பல குற்றச்சாட்டுகள் புனைந்து நல்லகண்ணு மீது சுமத்தப்பட்டது. ஆனால் சிறைக்குள்ளே நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக சீற்றத்தோடு வெகுண்டெழுந்தார் இந்த சிவப்புப் போராளி. அதுவரை கிடைக்காத பல உரிமைகள் சிறைவாசிகளுக்குக் கிடைத்தன. அவர்களுக்கு கல்வி கற்கும் உரிமையையும் வாங்கி கொடுத்தார். ஏழாண்டு சிறைவாசத்திற்கு பிறகு, சதி வழக்கில் இருந்து மீண்டுவந்தார் நல்லகண்ணு. ரஞ்சிதம் அம்மாள் மனதோடு இணைந்த வாழ்க்கைத் துணைவியானார். திருமணத்துக்குப் பிறகும் அவரின் போராட்ட வாழ்க்கை தொடர்ந்தது. எளிமையும் தூய்மையுமே தன் அடையாளமாகக் கொண்ட இந்த அரிய அரசியல்வாதி 1992 முதல் 2005 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மண்ணின் மீதும் மனிதர்கள் மீதும் பெருநேசம் கொண்ட இந்த மாமனிதர், கடனாநதியில் அணை கட்டுவதற்காக தன் உயிரை முன்வைத்து நடத்திய போராட்டம் பல்லாயிரம் விவசாயிகளின் வாழ்க்கையைப் பசுமையாக்கியது. தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக அவரே ஆஜராகி வைத்த வாதங்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தன. நியாயம் உணர்ந்து உடனே மணல் அள்ள தடை விதித்தது நீதிமன்றம். அதிகார வேட்கையோ, பணத் தேவையோ, புகழ் போதையோ இல்லாத இந்த மகத்தான மனிதருக்காக ஒரு கோடி ரூபாயை அன்போடு அளித்தார்கள் தோழர்கள். அடுத்த நொடியே கட்சிக்காக அதை திருப்பியளித்து திகைப்பூட்டிய பண்பாளர். அம்பேத்கர் விருதுக்காக தமிழக அரசு தந்த லட்ச ரூபாயையும் பாதியை கட்சிக்கும் மீதியை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் பகிர்ந்தளித்தார். நல்லகண்ணு தகைசால் தமிழர் விருதோடு தந்த பத்து லட்சத்தோடு, தன் பையிலிருந்த ஐயாயிரத்தையும் சேர்த்து முதல்வர் நிவாரண நிதிக்தே திருப்பி அளித்தார். இத்தனையாண்டு அரசியல் வாழ்க்கையில் சொந்த வீடு கூட இல்லாத நேர்மையாளர். அரசியலை வெறுப்புடன் அணுகும் இன்றைய தலைமுறைக்கான நம்பிக்கைச்சுடர். கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மக்களாலும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படுகிற மாபெரும் தலைவர். சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி-துண்டு, ரப்பர் செருப்பு, வியர்த்துக் களைத்த உருவம் தான் பெருந்தமிழரின் வெளி அடையாளம். ஆனால் இவரின் வாழ்க்கையோ நம் எல்லோருக்குமான நம்பிக்கை வெளிச்சம். கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் ஓய்வறியாத மக்கள் தொண்டாலும் தமிழ் மக்களின் மதிப்பையும் மரியாதையையும் சொத்தாகச் சேர்த்திருக்கும் இந்தத் தோழர், நமக்கான பெருமிதத் தமிழர். தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி! - தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

விகடன் 25 Feb 2026 2:33 pm

சிறைவாசம் முதல் செங்கொடி வரை: காலமானார் தோழர் நல்லகண்ணு

தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டத்தைச் சேர்ந்தவர் இரா.நல்லகண்ணு. ராம பக்தரான தந்தைக்கு மகனாகப் பிறந்தாலும், இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சிப் பணிகளுக்காகத் தனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது போராட்டக் களத்தில் நின்று எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். தோழர் நல்லக்கண்ணு குடும்பம் மற்றும் கொள்கை: சிறையிலிருந்து திரும்பிய பின், தந்தையின் கறாரான நிபந்தனைக்கிணங்க 1958-ல் ரஞ்சிதம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ரஞ்சிதம் ஆசிரியையாகப் பணிபுரிந்து நல்லகண்ணுவின் பொதுவாழ்க்கைக்குப் பெரும் துணையாகத் திகழ்ந்தார். இந்தத் தம்பதியினருக்கு காசிபாரதி, ஆண்டாள் என இரு மகள்கள் உள்ளனர். விவசாய இயக்கப் பணிகள், கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகள் எனப் பதினெட்டு வயதில் தொடங்கிய பணிகளை சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தார். தமிழ்நாடு முழுக்க இவரது கால் படாத குக்கிராமங்களே இருக்காது எனச் சொல்லலாம். கட்சிப் பணிகளுக்காக வீட்டிலிருந்து கிளம்பிப் போனால் வீடு திரும்ப குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகுமென நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பார். போராட்டக்களமே வீடு: தோழர் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் சுமார் 12-13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். கட்சியின் விதியின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என இருந்தபோதிலும், அவரது அர்ப்பணிப்பு காரணமாக அனைத்திந்திய தலைமை விதியைத் திருத்தி நான்கு முறை பதவி வகிக்க அனுமதித்தது. சாதி, மத, வர்க்க பேதங்களுக்கு எதிராகப் போராடும் இவரிடம் தன்னலம் என்பது துளியும் இல்லை என அவருடன் பயணித்த பலரும் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இதற்குச் சான்றாக, கட்சி தனது பிறந்தநாளில் வழங்கிய ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை மீண்டும் கட்சிக்கே வழங்கினார். அதேபோல் தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் விவசாயச் சங்கத்திற்கும் கட்சிக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். தோழர் நல்லக்கண்ணு முதுமையும் - உடல்நலமும் 2016-ல் தன் மனைவி ரஞ்சிதத்தை இழந்த நல்லக்கண்ணு வயது முதிர்வு காரணமாக இல்லத்தில் ஓய்வில் இருந்தார். ஆனாலும் அவ்வப்போது பொது மேடைகளில் அவரைக் காணமுடிந்தது. இந்த நிலையில், 22.08.2025 அன்று நல்லகண்ணு வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 24.08.2025 அன்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் நல்லகண்ணு உடல் நலம் தேறி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். ஆனால், கடந்த சில மாதங்களாக அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுவதும், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பவுவதுமாக இருந்தார். தோழர் நல்லகண்ணு இந்த நிலையில், நேற்று மீண்டும் உடல்நலமில்லாமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தோழர் நல்லக்கண்ணுவுக்கு செயற்கைச் சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து சிகிச்சை குறித்தும், உடல் நலன் குறித்தும் விசாரித்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தோழர் நல்லக்கண்ணு இன்று (25.02.2026) மதியம் 1.15 மணியளவில் காலமானார். தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ''மக்கள் விழிப்போடு இருக்கணும்!'': நல்லக்கண்ணு

விகடன் 25 Feb 2026 2:23 pm

நல்லகண்ணு : விடைபெற்றார் வாழ்நாள் போராளி!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார். கடந்த ஒன்றாம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோழர் நல்லகண்ணுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை குறைந்து, அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.55 மணியளவில் நல்லகண்ணு உயிர் பிரிந்ததாக, மருத்துவமனை தரப்பு விவரிக்கிறது.

விகடன் 25 Feb 2026 2:17 pm

இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.. - உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலையளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற்றும் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் கடந்த பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் நீதிபதி உஜ்ஜால் புயான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``பொது ஒழுக்கம் அல்லது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை விட, அரசியலமைப்பு ஒழுக்கமே ஒரு நீதிபதிக்கு மிக முக்கியமானது. சமூகத்தில் இன்றும் நிலவும் பாகுபாடுகளை விளக்க உங்களுடன் இரண்டு செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறேன். உச்ச நீதிமன்றம் என் மகளின் தோழி ஒருவர். முனைவர் பட்டம் பயிலும் அந்த மாணவி தெற்கு டெல்லியில் தங்குமிடம் தேடிச் சென்றபோது, அவரது குடும்பப் பெயரைக் கேட்ட விடுதி உரிமையாளர், அவர் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்ததும் இடம் தர மறுத்துவிட்டார். இதேபோல் ஒடிசாவில் தலித் பெண் சமைத்த மதிய உணவை, சாதி பாகுபாடு காரணமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் மறைந்து கிடக்கும் பெரிய அவலங்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே. 2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய 'நாஸ் அறக்கட்டளை' (Naz Foundation) வழக்கை கவனித்தால், தன்பாலின ஈர்ப்பு குற்றமாக்கும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்த அந்தத் தீர்ப்பு, பெரும்பான்மை மக்கள் எதை ஒழுக்கம் என்று கருதுகிறார்களோ அதை விட, அரசியலமைப்புச் சட்டம் எதைச் சரி என்று சொல்கிறதோ அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது. ஒரு செயலைப் பொதுமக்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்காக, சட்டப்பிரிவு 21-ன் கீழ் ஒரு குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அரசு பறிக்க முடியாது. Justice Ujjal Bhuyan அரசியலமைப்பு ஒழுக்கம் என்பது ஜனநாயக நிறுவனங்கள் தங்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதையும், அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்கிறது. நிர்வாக அதிகாரம் மற்றும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு தனிநபர்களின் உரிமைகளை நசுக்கக் கூடாது என்பதில் நீதிமன்றங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதிகார பலத்தை விட சட்டத்தின் மாண்பே ஒரு தேசத்தை வழிநடத்த வேண்டும். முன்னாள் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி 'துர்குட்' மார்ஷலின் பொன்மொழி ஒன்று உண்டு `ஒரு நீதிபதியின் உண்மையான அதிகார ஆதாரம் என்பது பதவியோ அல்லது சட்ட அதிகாரமோ அல்ல. அரசியலமைப்பின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பகத்தன்மையும், அதன் மூலம் அவர் ஈட்டும் மக்களின் மரியாதையும் மட்டுமே' எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார். `இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது' - தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

விகடன் 25 Feb 2026 1:12 pm

இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.. - உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலையளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற்றும் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் கடந்த பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் நீதிபதி உஜ்ஜால் புயான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``பொது ஒழுக்கம் அல்லது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை விட, அரசியலமைப்பு ஒழுக்கமே ஒரு நீதிபதிக்கு மிக முக்கியமானது. சமூகத்தில் இன்றும் நிலவும் பாகுபாடுகளை விளக்க உங்களுடன் இரண்டு செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறேன். உச்ச நீதிமன்றம் என் மகளின் தோழி ஒருவர். முனைவர் பட்டம் பயிலும் அந்த மாணவி தெற்கு டெல்லியில் தங்குமிடம் தேடிச் சென்றபோது, அவரது குடும்பப் பெயரைக் கேட்ட விடுதி உரிமையாளர், அவர் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்ததும் இடம் தர மறுத்துவிட்டார். இதேபோல் ஒடிசாவில் தலித் பெண் சமைத்த மதிய உணவை, சாதி பாகுபாடு காரணமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் மறைந்து கிடக்கும் பெரிய அவலங்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே. 2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய 'நாஸ் அறக்கட்டளை' (Naz Foundation) வழக்கை கவனித்தால், தன்பாலின ஈர்ப்பு குற்றமாக்கும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்த அந்தத் தீர்ப்பு, பெரும்பான்மை மக்கள் எதை ஒழுக்கம் என்று கருதுகிறார்களோ அதை விட, அரசியலமைப்புச் சட்டம் எதைச் சரி என்று சொல்கிறதோ அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது. ஒரு செயலைப் பொதுமக்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்காக, சட்டப்பிரிவு 21-ன் கீழ் ஒரு குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அரசு பறிக்க முடியாது. Justice Ujjal Bhuyan அரசியலமைப்பு ஒழுக்கம் என்பது ஜனநாயக நிறுவனங்கள் தங்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதையும், அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்கிறது. நிர்வாக அதிகாரம் மற்றும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு தனிநபர்களின் உரிமைகளை நசுக்கக் கூடாது என்பதில் நீதிமன்றங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதிகார பலத்தை விட சட்டத்தின் மாண்பே ஒரு தேசத்தை வழிநடத்த வேண்டும். முன்னாள் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி 'துர்குட்' மார்ஷலின் பொன்மொழி ஒன்று உண்டு `ஒரு நீதிபதியின் உண்மையான அதிகார ஆதாரம் என்பது பதவியோ அல்லது சட்ட அதிகாரமோ அல்ல. அரசியலமைப்பின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பகத்தன்மையும், அதன் மூலம் அவர் ஈட்டும் மக்களின் மரியாதையும் மட்டுமே' எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார். `இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது' - தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

விகடன் 25 Feb 2026 1:12 pm

``குஜராத்தில் இருந்து வந்தாலும் பருப்பு வேகாது; முதல் அடி நம்முடையது.! - கோவையில் செந்தில் பாலாஜி

சட்டமன்ற தேர்தலுக்காக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “தேர்தலுக்கு இன்னும் 50 நாள்கள் தான் இருக்கின்றன. திமுக அலுவலகம் ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் கடினமாக உழைக்க வேண்டும். நமது திட்டங்களையும், சாதனைகளையும் வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் புள்ளி விபரங்களை ஆய்வு செய்யுங்கள். கோவை அதிமுக - பாஜக கூட்டணியாக பெற்ற வாக்குகள், தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குகளை தெரிந்து கொண்டு பணியாற்றுங்கள். அப்போதுதான் நமக்கு எவ்வளவு வாக்குகள் தேவைப்படும் என அறிந்து செயல்பட உதவியாக இருக்கும். நம்முடைய வியூகம் என்ன என்று எதிரிகளுக்கு தெரியாத வகையில் பணியாற்ற வேண்டும். டெல்லியில் இருந்து வந்தாலும், குஜராத்தில் இருந்து வந்தாலும், சேலத்தில் இருந்து வந்தாலும், ஏன் எங்கிருந்து வந்தாலும் பருப்பு வேகாது. திமுக தேர்தலில் முதல் அடி நம்முடையதாக இருக்க வேண்டும். திமுகவினர் தடுப்பு ஆட்டம் ஆடாமல் அடித்து ஆட வேண்டும். நாம தான் ஜெயிக்கிறோம். 50 நாள்களுக்கு பிறகும் நாம் தான் ஆட்சியில் இருப்போம்” என்றார். Loading…

விகடன் 25 Feb 2026 12:57 pm

`'நான் மட்டும் தலையிடவில்லை என்றால் பாக். பிரதமர் இறந்திருப்பார்'என்றனர்' - மீண்டும் ட்ரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரைத் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரம்ப், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை நாங்கள் பெருமையுடன் மீட்டெடுத்து வருகிறோம். இந்திய பிரதமர் - பாகிஸ்தான் பிரதமர் எனது முதல் 10 மாத பதவிக்காலத்தில் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் என்னுடைய தலையீடு இல்லாமலிருந்திருந்தால் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என்று 35 மில்லியன் மக்கள் என்னிடம் சொன்னார்கள். இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும். அதை நான் தடுத்து நிறுத்தினேன். ஒன்பதாவது போரை முடிவுக்குக் கொண்டுவர எனது நிர்வாகம் மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. ரஷியா - உக்ரைன் இடையிலான படுகொலை, நான் அதிபராக இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது என்று கூறியிருக்கிறார். மோடி - ட்ரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இருநாடுகளிடையேயான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. Loading…

விகடன் 25 Feb 2026 12:50 pm

`'நான் மட்டும் தலையிடவில்லை என்றால் பாக். பிரதமர் இறந்திருப்பார்'என்றனர்' - மீண்டும் ட்ரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரைத் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரம்ப், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை நாங்கள் பெருமையுடன் மீட்டெடுத்து வருகிறோம். இந்திய பிரதமர் - பாகிஸ்தான் பிரதமர் எனது முதல் 10 மாத பதவிக்காலத்தில் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் என்னுடைய தலையீடு இல்லாமலிருந்திருந்தால் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என்று 35 மில்லியன் மக்கள் என்னிடம் சொன்னார்கள். இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும். அதை நான் தடுத்து நிறுத்தினேன். ஒன்பதாவது போரை முடிவுக்குக் கொண்டுவர எனது நிர்வாகம் மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. ரஷியா - உக்ரைன் இடையிலான படுகொலை, நான் அதிபராக இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது என்று கூறியிருக்கிறார். மோடி - ட்ரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இருநாடுகளிடையேயான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. Loading…

விகடன் 25 Feb 2026 12:50 pm

El Mencho: பகலில் காக்கி... இரவில் கிரிமினல் - மெக்சிகோவை நடுங்க வைத்த ‘எல் மென்சோ’வின் கதை!

மெக்சிகோவின் மலைச்சரிவுகளில் அவகேடோ பழங்களைப் பறித்துக்கொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுவன், பின்னாளில் ஒரு நாட்டின் ராணுவத்தையே நடுங்க வைப்பான் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்க அவன் கையில் எடுத்த ஆயுதம், இன்று உலகையே அச்சுறுத்தும் ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. அவன்தான் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ், உலகம் இவனை 'எல் மென்சோ' என்று நடுக்கத்துடன் அழைக்கிறது. மெக்சிகோவின் மைக்கோகன் மாகாணத்தில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெமேசியோவிற்கு, பசி மட்டுமே அன்றாடத் துணையாக இருந்தது. அமெரிக்காவில் சிறை வறுமையின் காரணமாக ஐந்தாம் வகுப்போடு கல்வியைத் துறந்தவன், தனது 14 வயதில் கஞ்சாத் தோட்டங்களைக் காவல் காக்கும் பணியில் சேர்ந்தபோதுதான், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தான். அங்கே போதைப்பொருள் விற்ற குற்றத்திற்காக சான் பிரான்சிஸ்கோ போலீஸாரிடம் சிக்கி சிறைத் தண்டனை பெற்றதே அவனது வாழ்க்கையின் முதல் கறுப்புப் பக்கம். சிறையிலிருந்து விடுதலையாகி மெக்சிகோ திரும்பியவன் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவன் ஜாலிஸ்கோ மாநில காவல்துறையில் ஒரு காவலராகப் பணியில் அமர்ந்து, அதிகாரத்தின் சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டான். பகலில் சீருடை அணிந்து சட்டத்தைப் பாதுகாப்பது போல நடித்தாலும், இரவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குக் காவல்துறையின் நகர்வுகளை ரகசியமாக விற்று வந்தான். இந்த இரட்டை வாழ்க்கை அவனுக்குப் பெரும் லாபத்தையும், நிழல் உலகத் தொடர்புகளையும் அள்ளிக் கொடுத்தது. ஒருகட்டத்தில் ஒரு பெரிய கடத்தல் கும்பல் தலைவனின் மகளையே திருமணம் செய்துகொண்டு அந்த சாம்ராஜ்யத்தின் முக்கிய வாரிசாக உருவெடுத்தான். 2010-ல் தனது சொந்த அமைப்பான 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) தொடங்கியபோது, அவன் ஒரு சாதாரண ரவுடியாக இருக்க விரும்பவில்லை. ஒரு ராணுவத் தளபதியைப் போலத் தனது ஆட்களுக்குப் பயிற்சி அளித்து, நவீன ரகத் துப்பாக்கிகள் மற்றும் கவச வாகனங்கள் என ஒரு சிறு நாட்டை எதிர்க்கும் அளவுக்குத் தனது படையைப் பலப்படுத்தினான். 2015-ல் தன்னைத் துரத்தி வந்த ராணுவ ஹெலிகாப்டரையே ராக்கெட் லாஞ்சர் மூலம் சுட்டு வீழ்த்தியபோது, ஒட்டுமொத்த அரசாங்கமும் அதிர்ச்சியில் உறைந்தது. இதன் மூலம் மெக்சிகோவின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சில ஆண்டுகளிலேயே தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்தான். நெமேசியோவின் மூளை ஒரு கார்ப்பரேட் சி.இ.ஓ-வைப் போலச் செயல்பட்டது. 'ஃபெண்டானில்' எனும் உயிருக்கு ஆபத்தான போதைப்பொருளை அமெரிக்காவிற்குள் கடத்துவதில் அவன் ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நடத்தினான். எல் மென்ச்சோ இதன் மூலம் சுமார் 20 பில்லியன் டாலர் (₹1.6 லட்சம் கோடி) சொத்துக்களைக் குவித்து, உலகப் பணக்காரக் குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பிடித்தான். இவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு அமெரிக்கா 125 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தும், அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருந்து பல ஆண்டுகள் அரசாங்கத்தைச் சவாலுக்கு இழுத்தது இவனது தந்திரம். எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருந்தாலும், காலம் அவனுக்குச் சிறுநீரகக் கோளாறு என்ற வடிவில் ஒரு பின்னடைவைத் தந்தது. உடல்நலக் குறைவால் நடமாட்டத்தை குறைந்த அவன், காடுகளுக்குள் ரகசிய மருத்துவமனை அமைத்துத் தலைமறைவாக இருந்தான். இறுதியாக, பிப்ரவரி 2026-ல் ஒரு ரகசிய உளவாளி, மற்றும் காதலி கொடுத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் அவனது மறைவிடத்தைச் சூழ்ந்தது. தப்பிக்கும் வழியின்றி நடந்த அந்தப் பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்தான். அவனை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லும் வழியிலேயே அவனது மூச்சு நின்றது. ஒரு ஏழை விவசாயியாகத் தொடங்கி, உலகையே அச்சுறுத்திய ஒரு கொடூர சகாப்தம் அத்தோடு முடிவுக்கு வந்தது.!

விகடன் 25 Feb 2026 12:44 pm

El Mencho: பகலில் காக்கி... இரவில் கிரிமினல் - மெக்சிகோவை நடுங்க வைத்த ‘எல் மென்சோ’வின் கதை!

மெக்சிகோவின் மலைச்சரிவுகளில் அவகேடோ பழங்களைப் பறித்துக்கொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுவன், பின்னாளில் ஒரு நாட்டின் ராணுவத்தையே நடுங்க வைப்பான் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்க அவன் கையில் எடுத்த ஆயுதம், இன்று உலகையே அச்சுறுத்தும் ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. அவன்தான் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ், உலகம் இவனை 'எல் மென்சோ' என்று நடுக்கத்துடன் அழைக்கிறது. மெக்சிகோவின் மைக்கோகன் மாகாணத்தில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெமேசியோவிற்கு, பசி மட்டுமே அன்றாடத் துணையாக இருந்தது. அமெரிக்காவில் சிறை வறுமையின் காரணமாக ஐந்தாம் வகுப்போடு கல்வியைத் துறந்தவன், தனது 14 வயதில் கஞ்சாத் தோட்டங்களைக் காவல் காக்கும் பணியில் சேர்ந்தபோதுதான், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தான். அங்கே போதைப்பொருள் விற்ற குற்றத்திற்காக சான் பிரான்சிஸ்கோ போலீஸாரிடம் சிக்கி சிறைத் தண்டனை பெற்றதே அவனது வாழ்க்கையின் முதல் கறுப்புப் பக்கம். சிறையிலிருந்து விடுதலையாகி மெக்சிகோ திரும்பியவன் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவன் ஜாலிஸ்கோ மாநில காவல்துறையில் ஒரு காவலராகப் பணியில் அமர்ந்து, அதிகாரத்தின் சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டான். பகலில் சீருடை அணிந்து சட்டத்தைப் பாதுகாப்பது போல நடித்தாலும், இரவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குக் காவல்துறையின் நகர்வுகளை ரகசியமாக விற்று வந்தான். இந்த இரட்டை வாழ்க்கை அவனுக்குப் பெரும் லாபத்தையும், நிழல் உலகத் தொடர்புகளையும் அள்ளிக் கொடுத்தது. ஒருகட்டத்தில் ஒரு பெரிய கடத்தல் கும்பல் தலைவனின் மகளையே திருமணம் செய்துகொண்டு அந்த சாம்ராஜ்யத்தின் முக்கிய வாரிசாக உருவெடுத்தான். 2010-ல் தனது சொந்த அமைப்பான 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) தொடங்கியபோது, அவன் ஒரு சாதாரண ரவுடியாக இருக்க விரும்பவில்லை. ஒரு ராணுவத் தளபதியைப் போலத் தனது ஆட்களுக்குப் பயிற்சி அளித்து, நவீன ரகத் துப்பாக்கிகள் மற்றும் கவச வாகனங்கள் என ஒரு சிறு நாட்டை எதிர்க்கும் அளவுக்குத் தனது படையைப் பலப்படுத்தினான். 2015-ல் தன்னைத் துரத்தி வந்த ராணுவ ஹெலிகாப்டரையே ராக்கெட் லாஞ்சர் மூலம் சுட்டு வீழ்த்தியபோது, ஒட்டுமொத்த அரசாங்கமும் அதிர்ச்சியில் உறைந்தது. இதன் மூலம் மெக்சிகோவின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சில ஆண்டுகளிலேயே தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்தான். நெமேசியோவின் மூளை ஒரு கார்ப்பரேட் சி.இ.ஓ-வைப் போலச் செயல்பட்டது. 'ஃபெண்டானில்' எனும் உயிருக்கு ஆபத்தான போதைப்பொருளை அமெரிக்காவிற்குள் கடத்துவதில் அவன் ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நடத்தினான். எல் மென்ச்சோ இதன் மூலம் சுமார் 20 பில்லியன் டாலர் (₹1.6 லட்சம் கோடி) சொத்துக்களைக் குவித்து, உலகப் பணக்காரக் குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பிடித்தான். இவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு அமெரிக்கா 125 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தும், அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருந்து பல ஆண்டுகள் அரசாங்கத்தைச் சவாலுக்கு இழுத்தது இவனது தந்திரம். எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருந்தாலும், காலம் அவனுக்குச் சிறுநீரகக் கோளாறு என்ற வடிவில் ஒரு பின்னடைவைத் தந்தது. உடல்நலக் குறைவால் நடமாட்டத்தை குறைந்த அவன், காடுகளுக்குள் ரகசிய மருத்துவமனை அமைத்துத் தலைமறைவாக இருந்தான். இறுதியாக, பிப்ரவரி 2026-ல் ஒரு ரகசிய உளவாளி, மற்றும் காதலி கொடுத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் அவனது மறைவிடத்தைச் சூழ்ந்தது. தப்பிக்கும் வழியின்றி நடந்த அந்தப் பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்தான். அவனை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லும் வழியிலேயே அவனது மூச்சு நின்றது. ஒரு ஏழை விவசாயியாகத் தொடங்கி, உலகையே அச்சுறுத்திய ஒரு கொடூர சகாப்தம் அத்தோடு முடிவுக்கு வந்தது.!

விகடன் 25 Feb 2026 12:44 pm

நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர்! - முதல்வர் ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. அதில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்திய துணைக்கண்டத்தின் தொடக்கமான வள்ளுவமுனை அமைந்துள்ள குமரி முனைக்கு வந்துள்ளேன். உணவு, வட்டார வழக்கு, கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு நிறைந்திருக்கும் மாவட்டம். எல்லை போராட்ட வீரர் மார்ஷல் நேசமணி, என்.எஸ்.கிருஷ்ணன், தோழர் ஜீவா, தேசிய விநாயகம் பிள்ளை என பல பேருவமைகளை கொண்டுள்ள தலைவர்களை தந்த மாவட்டத்திற்கு வந்துள்ளேன். குமரிக்கு இதெல்லாம் செய்துள்ளோம்! இஸ்ரோவுக்கு எத்தனையோ தலைவர்களை கொடுத்த மாவட்டம். இங்கு மிகசிறப்பாக விழாவை ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். பால்வளத்துறையை சிறப்பாக கவனித்துவரும் வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரர் அவர். 3,12,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த கலெக்டருக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக செயல்படும் ஆட்சியர்களில் குறிப்பிட்டு சொல்லும்படியாக அவரது செயல்பாடு அமைந்துள்ளது. அவருக்கு துணையாக நிற்கும் அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். நேற்று இலங்கை தமிழர்கள் குடியிருப்பு, திருவள்ளுவர் வெள்ளிவிழா வளைவு, தியாகி பொன்னப்பநாடார் சிலை ஆகியவற்றை திறந்துவத்தேன். எல்லைப்போராட்ட வீரர் மார்ஷல் நேசமணியின் போர்ப்படை தளபதியாக இருந்தவர் பொன்னப்பநாடார். எளிமையாக இருந்து ஏழைகளுக்காக செயல்பட்டவர். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 50 லட்சம் ரூபாய் செலவில் அவரது வெண்கலச்சிலை திறந்துவைத்ததில் பெருமைப்படுகிறேன். கலைஞரின் சிலை, எனது பெயரில் படைப்பகம் ஆகியவற்றை நாகர்கோவில் முதல் மேயர் மகேசின் சிறப்பான ஏற்பாட்டில் திறந்துவைத்தேன். 2025 புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு நான் குமரி மாவட்டம் வந்தேன். பேரறிவுச்சிலை வெள்ளிவிழாவை கொண்டாடினோம். கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தேன். 2026-ல் திராவிடமாடல் 2.0 அமைவதற்கு முன் நான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் 2004-ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிலம் கையகப்படுத்தி வீடு கட்டிக்கொடுத்தாலும் அரசு நிலம் என இருந்தது. அவர்களுக்கு இன்று பட்டா வழங்கப்படுகிறது. 40,086 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். தூண்டில் வளைவுகள், மீன் இறங்குத்தளங்கள், வலைபின்னும் கூடங்கள், மீன் ஏலக்கூடங்களை குமரி மீனவர்களுக்கு செய்து கொடுத்துள்ளோம். இதன்மூலம் 1,47,360 மீனவர்கள் பலனடைந்துள்ளனர். குளச்சல் மீன்பிடித்துறைமுக விரிவாக்கம், வாணியக்குடியில் புதிய மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாயில் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளோம். குளச்சலுக்கும் வாணியக்குடிக்கும் 3 கி.மீ தொலைவுதான் இடைவெளி. மீனவ பெருங்குடி மக்கள் கேட்டதால் துறைமுகத்தை செய்துகொடுத்துள்ளோம். மீனவர்கள் மீன்பிடி தடைக்கால நிவாரணாம் 5000 ரூபாயில் இருந்து 8000  ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கோட்டாறு சவேரியார் ஆலயத்தை சீரமைக்க 2.29 கோடி, நாகர்கோவில் மாநகராட்சியில் குடிரநீர் இணைப்பு. சுசீந்திரம், தேரூர் குளங்கள் ராம்சார் குறியீடு, இலங்கை தமிழர்களுக்கு 762 வீடுகள், தோவாளை மலர் சந்தையில் உயர்மட்ட கூடம், அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 9 புதிய கட்டடங்கள் மற்றும் ஸ்கேன் மிஷின். பத்மநாபபுரம் மருத்துவமனையில் மத்திய ஆய்வகம்,  சுற்றுலாத்துறைக்காக சிற்றார் 2 அணை, திற்பரப்பு அருவி மற்றும் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ச்சிப்பணிகள், வடசேரியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்காக அடிக்கல், நியூ டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குமரியின் எல்லா பகுதிகளுக்கும் வளர்ச்சிப்பணிகளை கொண்டுவந்துள்ளோம். புது அறிவிப்புகளை வெளியிடாமல் போனால் நன்றாக இருக்காது. அதிலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை சும்மா இருக்கமாட்டார்கள். கேள்விகளால் துளைத்தெடுத்து விடுவார்கள். உரிமையோடுதான் அவர்கள் கேட்பார்கள். எனவே குமரிக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளேன். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கன்னியாகுமரியில் பழையாற்றில் இருந்து கூடுதல் குடிநீர் வழங்க 28 கோடியில் புதிய திட்டம். அங்கு 25 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் சுத்தீகரிப்பு நிலையம். குளச்சல் நகராட்சி மண்டைக்காடு பேரூராட்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 1.20 கோடி மதிப்பில் ஏ.வி.எம் கால்வாய் புனரமைக்கப்படும். கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளில் 9 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கம் செய்யப்படும். முளகுமூடு மரியன்னை பசிலிக்கா 2 கோடியில் புனரமைக்கப்படும். தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் கல்வி, திருமண நிதி உதவிகள் அதிகரித்து வழங்கப்படும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது காணாமல்போகும் மீனவர்கள் இறந்தால் காப்பீடு கிடைக்கும் வரை தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் மாதம் 2000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். இதுதான் திராவிடமாடல் ஆட்சி. தமிழ்நாடு மக்களுக்கு வேண்டிய கல்வி, தனித்திறன் பயிற்சிகள், உட்கட்டமைப்பு வசதிகள், சாலை, தொழில் நிறுவனங்கள், தொழில் தொடங்க மானியம், கட்டணம் இல்லா பேருந்து, மகளிர் உதவித்தொகை ஆகியவைகள்தான் திராவிடமாடல் ஆட்சி. ஒவ்வொரு நாளும் நான் ஏதாவது ஒரு திட்டத்தை நான் தொடங்கிவைத்துக்கொண்டே இருக்கிறேன். தமிழ்நாடு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள் நாங்கள்தான் என்பதை எங்கள் திட்டங்கள் மூலம் நிரூபித்து வருகிறோம். கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் 14 வயதில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். 50 ஆண்டு தொடர் உழைப்பால் முதல்வராக உயர்ந்திருக்கிறேன். எம்.எல்.ஏ-வாக, மேயராக, அமைச்சராக, துணை முதல் அமைச்சராக, எதிர்கட்சி தலைவராக தற்போது முதல் அமைச்சராக உள்ளேன். நான் செல்லாத ஊரே இல்லை. மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என அறிந்து புரிந்து செய்கிறேன். நீங்கள் தமிழ்நாட்டை நம்பி என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். என் சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன். வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்ல வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து உழைத்து வருகிறேன். சிலர் தேர்தல் சமயத்தில் மட்டும் உங்களை வடமடிப்பார்கள். தேடி வருவார்கள். தேர்தல் என்பதால் பிரதமர் மோடியும் தமிழ்நாடுக்கு வருவார். ஏற்கனவே வந்துகொண்டிருக்கிறார். அவர் வருவதை நினைத்து அவரது கூட்டணியினர் கலக்கமடைந்துள்ளனர். அவர் வருவதற்கு ஏற்ப அதிக வாக்குவித்தியாசத்தில் என்.டி.ஏ கூட்டணி தோல்வியடையும். இந்த தேர்தலில் தமிழ்நாடு-க்கும் என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. தமிழ்நாடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படும். டெல்லியில் இருந்து ஆளும் நிலை வரக்கூடாது. பாஜக வந்தால் வளர்ச்சி இருக்காது. குமரி மாவட்டத்தில் அனைத்து மத மக்களும் நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள். முஸ்லிம்ககுக்கு இட ஒதுக்கீடு ரத்துச் செய்யப்பட்டது. மணிப்பூர் இன்னும் பற்றி எரிகிறது. பீகார் துணைமுதல்வர் பள்ளிக்கூடங்கள் அருகில் இறைச்சிக்கடைகள் இருந்தால் அகற்றப்படும் என கூறுகிறார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என முடிவு செய்வதற்கு அவர்கள் யார்?  திராவிட மாடல் அரசில் அனைவரும் சமமாக உள்ளனர். வக்பு சட்டதிருத்தத்துக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராகவும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். 4000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். இந்த பகுதியைச் சேர்ந்த பாலபிரஜாதிபதி அடிகளார், 'நம் முதல்வருக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை, மொழி உணர்வு இருக்கிறது என பேசி உள்ளார். அது போன்று வள்ளலார் அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டி உள்ளனர். ஆன்மீக பெரியோர்கள் இந்த ஆட்சியை பாராட்டி உள்ளனர். திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் நான் வெளிப்படையாக பாஜக-வினரைப்பார்த்து கேட்கிறேன்... எப்போது வன்முறையையும் வெறுப்பையும் விட்டுவிட்டு வளர்ச்சியைப்பற்றி பேசுவீர்கள். நீங்கள் ஆளக்கூடிய எந்த மாநிலம் தமிழ்நாட்டைவிட சிறப்பாக ஆளுகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்குவது எப்போது நிற்கும். இதைச் சொல்லிதான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். அவர்களுக்கு கிடைத்த சரியான நபர்தான் எடப்படி பழனிச்சாமி. நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வடைச்சுட்டது பா.ஜ.க. அதுபோன்று விதவிதமாக வடைசுடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த வடைகளை எல்லாம் தமிழக மக்கள் நம்பும் நிலையில் இல்லை. தேர்தலை முன்னிட்டு மகளிர் உதவித்தொகையை நிறுத்திவிடலாம். அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்திவிடலாம் என நினைத்தார். அதை நான் முன்கூட்டியே தெரிந்து 3 மாதங்கள் மகளிர் உரிமைத் தொகையும் சேர்த்து 5000 ரூபாயாக மகளிருக்கு வழங்கிவிட்டோம். நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ரைக்கால் மக்கள் ஹேப்பி, எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர். முதலில் இதை கொச்சைப்படுத்தி பேசினார்கள். பா.ஜ.க டப்பா எஞ்சினை நம்பி, அ.தி.மு.க. இருக்கிறது. அ.தி.மு.க. என்ற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க. வருகிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான். ராஜ்ஜியம் கிடைக்காது. நம்ம திராவிட மாடல்  சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின். 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியுடன் யாரும் எட்டி பிடிக்க முடியாத அளவுக்கு அதிவேகமாக முன்னாடி போயிட்டு இருக்கு. திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் மீண்டும் அமையும். இப்போது நாங்கள் செய்திருக்கும் சாதனைகளை எங்களோட செக்கண்ட் இன்னிங்ஸில் நாங்களே மிஞ்சுவோம். தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம். நாட்டுக்கே வழிகாட்டும் நமது மக்கள்நலத் திட்டங்கள் தொடர தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வெல்வோம் ஒன்றாக. தமிழ்நாடு வெல்லட்டும் என்றார். Loading…

விகடன் 25 Feb 2026 12:17 pm

கேரளா பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்; அதிருப்தியில் மம்தா பானர்ஜி - முழு விவரம்!

கேரளா என்ற மாநிலப் பெயரை `கேரளம்' என மாற்ற வேண்டும் என்பது கேரள மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று. 2023 மற்றும் 2024 ஆகிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒருமனதாக கேரளா என்ற மாநிலப் பெயரை கேரளம் என மாற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இன்னும் சில மாதங்களில் கேரள மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மத்திய அரசு கேரள அரசின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பினராயி விஜயன் - மோடி இனி என்ன நடக்கும்? இந்திய அரசியலமைப்பின் பிரிவு 3 படி, ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான செயல்முறை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. கேரளாவை கேரளம் என மாற்றுவதற்கான மசோதாவை மத்திய அரசு குறிப்பாக உள்துறை அமைச்சகம் தயார் செய்து, குடியரசுத் தலைவரிடம் அனுப்பும். குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை கேரள சட்டமன்றத்திற்கு அனுப்புவார். இது அரசியலமைப்பின் பிரிவு 3-ன் proviso-ன் கீழ் கட்டாயமானது. சட்டமன்றம் தனது கருத்துக்களை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தெரிவிக்கும். அதன் பிறகு, மத்திய அரசு குடியரசுத் தலைவரின் பரிந்துரையைப் பெற்று, அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும். நாடாளுமன்றம் அதை நிறைவேற்றினால், முதல் அட்டவணையில் கேரளம் என்றப் பெயர் மாற்றம் பதிவாகும். ஏன் இந்தப் பெயர் மாற்றம்? ஆகஸ்ட் 2023-ல், கேரளா பெயர் மாற்றம் குறித்து சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய பினராயி விஜயன், ``மலையாளத்தில் நமது மாநிலத்தின் பெயர் கேரளம். நவம்பர் 1, 1956 அன்று மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன... மலையாளத்தை தாய்மொழியாகப் பேசும் மக்களுக்கு ஒருங்கிணைந்த கேரளம் என்ற கோரிக்கை சுதந்திரப் போராட்ட நாட்களிலிருந்தே வலுவாக இருந்து வருகிறது. இருப்பினும், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை கேரளா என்று குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ், அதை கேரளம் என்று திருத்த அவசர நடவடிக்கைகள் தேவை என்றார். கேரளா கேரளம் என்ற பெயர் காலனித்துவ ஆட்சிக்கு முந்தையது. இந்தப் பெயருக்கான குறிப்புகள் கிமு 3-ம் நூற்றாண்டில் அசோகன் ஆணைகளில் கேரளபுத்திரர் என்றும், பண்டைய தமிழ் இலக்கியங்களில் அகநாநுரு என்றும் காணப்படுகின்றன. சொற்பிறப்பியல் ரீதியாக, அறிஞர்கள் இதை சேர் மற்றும் ஆலம் (பகுதி) உடன் இணைக்கின்றனர், அதாவது கடலால் சேர்க்கப்பட்ட நிலம் எனப் பெயர் காரணத்தைக் குறிப்பிடுகின்றனர். சில வரலாற்றாசிரியர்கள் மாநிலத்தின் முக்கிய விவசாய விளைபொருளான கேரம் (தேங்காய்) இருப்பதால் அதை வைத்து காரணப் பெயராக உருவானது எனக் கருதுகின்றனர். ஆகமொத்தத்தில் அது கேரளா அல்ல கேரளம் என்பதுதான் சரியானது என வாதிடுகின்றனர். அதிருப்தியில் மம்தா: கேரளம் போலவே, மேற்கு வங்கமும் தன் மாநிலப் பெயரை பங்களா எனப் மாற்ற வேண்டும் என 2016 முதல் பல சட்டமன்றக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பியிருக்கிறது. ஆனால் அதற்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை இது தொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம்,``கேரளாவின் பெயர் மாற்றத்திற்கு வாழ்த்துகள். எத்தனை முறை முயன்றும் எங்கள் மாநிலத்தின் பெயர் மாற்ற மத்திய அரசு அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போதெல்லாம் இந்த பிரச்சினையை எழுப்பியிருக்கிறேன். மம்தா பானர்ஜி ஆனால் எதுவும் நடக்கவில்லை. மேற்கு வங்காள எதிர்ப்பு காரணமாக அதை அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறேன். வங்காளத்தின் சின்னங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களை அவர்கள் அவமதிக்கிறார்கள். தேர்தல்களின் போது தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே அவர்கள் 'பங்களா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் அவர்கள் மாநிலத்தின் பெயரை மாற்ற ஒப்புதல் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் சீட்டுக்கு முஷ்டி முறுக்கும் தலைவர்கள்... கேரளா காங்கிரஸில் களேபரம்! மேற்கு வங்கம் - பங்களா முன்னாள் முதல்வர் ஜோதி பாசு தலைமையிலான மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம், 1999-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை பஷ்சிம் பங்களா அல்லது பங்களா என்று மாற்றுவதற்கு முதலில் முன்மொழிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2011-ல் மம்தா பானர்ஜி முதல்வரான பிறகு, மாநிலத்தின் மாற்றுவதற்கு மாநில அரசு முன்மொழிந்தது. அதையும் மத்திய அரசு நிராகரித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2019-ல், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மீண்டும் ஒரு பெயர் மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. ஆங்கிலத்தில் வங்காளம், வங்காளத்தில் பங்களா மற்றும் இந்தியில் பங்களம் என்று பரிந்துரைத்தது. இதுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜியின் அதிருப்தி வந்திருக்கிறது.

விகடன் 25 Feb 2026 12:05 pm

கேரளா பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்; அதிருப்தியில் மம்தா பானர்ஜி - முழு விவரம்!

கேரளா என்ற மாநிலப் பெயரை `கேரளம்' என மாற்ற வேண்டும் என்பது கேரள மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று. 2023 மற்றும் 2024 ஆகிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒருமனதாக கேரளா என்ற மாநிலப் பெயரை கேரளம் என மாற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இன்னும் சில மாதங்களில் கேரள மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மத்திய அரசு கேரள அரசின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பினராயி விஜயன் - மோடி இனி என்ன நடக்கும்? இந்திய அரசியலமைப்பின் பிரிவு 3 படி, ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான செயல்முறை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. கேரளாவை கேரளம் என மாற்றுவதற்கான மசோதாவை மத்திய அரசு குறிப்பாக உள்துறை அமைச்சகம் தயார் செய்து, குடியரசுத் தலைவரிடம் அனுப்பும். குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை கேரள சட்டமன்றத்திற்கு அனுப்புவார். இது அரசியலமைப்பின் பிரிவு 3-ன் proviso-ன் கீழ் கட்டாயமானது. சட்டமன்றம் தனது கருத்துக்களை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தெரிவிக்கும். அதன் பிறகு, மத்திய அரசு குடியரசுத் தலைவரின் பரிந்துரையைப் பெற்று, அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும். நாடாளுமன்றம் அதை நிறைவேற்றினால், முதல் அட்டவணையில் கேரளம் என்றப் பெயர் மாற்றம் பதிவாகும். ஏன் இந்தப் பெயர் மாற்றம்? ஆகஸ்ட் 2023-ல், கேரளா பெயர் மாற்றம் குறித்து சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய பினராயி விஜயன், ``மலையாளத்தில் நமது மாநிலத்தின் பெயர் கேரளம். நவம்பர் 1, 1956 அன்று மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன... மலையாளத்தை தாய்மொழியாகப் பேசும் மக்களுக்கு ஒருங்கிணைந்த கேரளம் என்ற கோரிக்கை சுதந்திரப் போராட்ட நாட்களிலிருந்தே வலுவாக இருந்து வருகிறது. இருப்பினும், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை கேரளா என்று குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ், அதை கேரளம் என்று திருத்த அவசர நடவடிக்கைகள் தேவை என்றார். கேரளா கேரளம் என்ற பெயர் காலனித்துவ ஆட்சிக்கு முந்தையது. இந்தப் பெயருக்கான குறிப்புகள் கிமு 3-ம் நூற்றாண்டில் அசோகன் ஆணைகளில் கேரளபுத்திரர் என்றும், பண்டைய தமிழ் இலக்கியங்களில் அகநாநுரு என்றும் காணப்படுகின்றன. சொற்பிறப்பியல் ரீதியாக, அறிஞர்கள் இதை சேர் மற்றும் ஆலம் (பகுதி) உடன் இணைக்கின்றனர், அதாவது கடலால் சேர்க்கப்பட்ட நிலம் எனப் பெயர் காரணத்தைக் குறிப்பிடுகின்றனர். சில வரலாற்றாசிரியர்கள் மாநிலத்தின் முக்கிய விவசாய விளைபொருளான கேரம் (தேங்காய்) இருப்பதால் அதை வைத்து காரணப் பெயராக உருவானது எனக் கருதுகின்றனர். ஆகமொத்தத்தில் அது கேரளா அல்ல கேரளம் என்பதுதான் சரியானது என வாதிடுகின்றனர். அதிருப்தியில் மம்தா: கேரளம் போலவே, மேற்கு வங்கமும் தன் மாநிலப் பெயரை பங்களா எனப் மாற்ற வேண்டும் என 2016 முதல் பல சட்டமன்றக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பியிருக்கிறது. ஆனால் அதற்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை இது தொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம்,``கேரளாவின் பெயர் மாற்றத்திற்கு வாழ்த்துகள். எத்தனை முறை முயன்றும் எங்கள் மாநிலத்தின் பெயர் மாற்ற மத்திய அரசு அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போதெல்லாம் இந்த பிரச்சினையை எழுப்பியிருக்கிறேன். மம்தா பானர்ஜி ஆனால் எதுவும் நடக்கவில்லை. மேற்கு வங்காள எதிர்ப்பு காரணமாக அதை அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறேன். வங்காளத்தின் சின்னங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களை அவர்கள் அவமதிக்கிறார்கள். தேர்தல்களின் போது தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே அவர்கள் 'பங்களா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் அவர்கள் மாநிலத்தின் பெயரை மாற்ற ஒப்புதல் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் சீட்டுக்கு முஷ்டி முறுக்கும் தலைவர்கள்... கேரளா காங்கிரஸில் களேபரம்! மேற்கு வங்கம் - பங்களா முன்னாள் முதல்வர் ஜோதி பாசு தலைமையிலான மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம், 1999-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை பஷ்சிம் பங்களா அல்லது பங்களா என்று மாற்றுவதற்கு முதலில் முன்மொழிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2011-ல் மம்தா பானர்ஜி முதல்வரான பிறகு, மாநிலத்தின் மாற்றுவதற்கு மாநில அரசு முன்மொழிந்தது. அதையும் மத்திய அரசு நிராகரித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2019-ல், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மீண்டும் ஒரு பெயர் மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. ஆங்கிலத்தில் வங்காளம், வங்காளத்தில் பங்களா மற்றும் இந்தியில் பங்களம் என்று பரிந்துரைத்தது. இதுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜியின் அதிருப்தி வந்திருக்கிறது.

விகடன் 25 Feb 2026 12:05 pm

ம.நடராஜனின் சகோதரர் மரணம் - கட்சியின் பெயரை வி.கே.சசிகலா அறிவிக்காததற்கு காரணம் இதுவா?

வி.கே. சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜனின் மூத்த  சகோதரர் ம. சாமிநாதன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராமநாதரபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்று புதிய கட்சி தொடங்கும் முடிவை அறிவித்தார் வி.கே சசிகலா. இந்த நிகழ்வுக்குக் கிளம்பும் முன்னரே, அதாவது நேற்று காலையிலேயே சாமிநாதனின் காலமாகிவிட்டார். இருந்தும் கடைசி நேரம் என்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்தால் சரியாக இருக்காது என சசிகலா பசும்பொன் வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இது தொடர்பாக விசாரித்தோம். ம.சாமிநாதன் ‘’தஞ்சாவூர் மாவட்டம் விளார் தான் சசிகலா கணவர் நடராஜனின் சொந்த ஊர். அவருடைய அப்பா மருதப்ப பண்ணையாருக்கு ஊரில் நல்ல செல்வாக்கு. நடராஜன் கூடப் பிறந்தவர்களில் மூத்தவர் சாமிநாதன். வயோதிகம் சார்ந்து எல்லோருக்கும் வர்ற சில பிரச்னைகளால் கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்தவர் நேற்று காலை காலமாகிட்டார். உடல் அடக்கம் இன்னைக்கு மதியம் விளாரில் நடக்குது. சசிகலாவின் கட்சி அறிவிப்பு கூட்டம் ஏற்கனவே திட்டமிட்டதுங்கிறதால அதை ரத்து செய்ய வேண்டாமென சசிகலா சொல்லிட்டதாச் சொல்றாங்க. ம.நடராஜன் தென்மாவட்டங்களில் இருந்து பரவலா அவரது ஆதரவாளர்களும் வந்து கலந்து கிட்டதால கட்சியின் கொடியை மட்டுமாவது அறிமுகம் செய்யலாம்னு  அதைச் செய்திருக்காங்க’’ என்ற அவர்கள், `கட்சியின் பெயரைப் பொறுத்தவரை ஏற்கனவே திவாகரன் பதிவு செய்து வைத்திருக்கும் கட்சி அல்லது ’அண்ணா எம்.ஜி.ஆர் திமுக’ மற்றும் மேலும் சில பெயர்களை செலக்ட் செய்து வைத்திருப்பதாகவும், கணவர் வீட்டில் இப்படியொரு சம்பவம் நிகழாமல் இருந்தால் நேற்றே அதையும் அறிவித்திருப்பார் என்கிறார்கள். Loading…

விகடன் 25 Feb 2026 11:51 am

ஈரான் - இஸ்ரேல் போர்ப் பதற்றம்: இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி; காரணம் என்ன?

இந்தியப் பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (புதன்கிழமை) இஸ்ரேல் செல்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராயும் வகையிலும் இந்தப் பயணம் அமையும் என்று இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு வலிமையான ஜனநாயக நாடுகளுக்கு இடையே ஒரு வலுவான கூட்டணியை அடைவதற்கான முயற்சிகளை இந்தப் பயணம் மறுசீரமைப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றடையும் பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அவருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய நாடாளுமன்றமான 'நெசெட்' (Knesset) இல் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மாலையில் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியைப் பார்வையிடும் அவர், பின்னர் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு அளிக்கும் தனிப்பட்ட இரவு விருந்தில் கலந்துகொள்கிறார். வியாழக்கிழமை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. இந்தப் பயணத்தின் மிக முக்கிய முடிவுகளில் ஒன்றாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட இலக்கு வைத்துள்ளன. இந்தியா-இஸ்ரேல் இடையிலான அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், உலக ஹோலோகாஸ்ட் நினைவு மையமான 'யாத் வாஷேமைப்' பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார். நெதன்யாகு இஸ்ரேல்-அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல் பதட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் நடைபெறுவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார், ``உலகம் வேகமாக மாறிவரும் சூழலில், அச்சுறுத்தல்களும் பெருகி வருகின்றன. அவற்றைச் சந்திக்க பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதன் மூலம் இரு நாட்டு பாதுகாப்பு உறவை ஆழப்படுத்த ஆலோசிக்கப்படும். பொருளாதார ரீதியாக இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள நிலையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிய நகர்வு பொருளாதாரக் கூட்டாண்மைக்கு பெரும் வேகத்தைக் கொடுக்கும் என்றார். மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

விகடன் 25 Feb 2026 8:53 am

ஈரான் - இஸ்ரேல் போர்ப் பதற்றம்: இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி; காரணம் என்ன?

இந்தியப் பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (புதன்கிழமை) இஸ்ரேல் செல்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராயும் வகையிலும் இந்தப் பயணம் அமையும் என்று இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு வலிமையான ஜனநாயக நாடுகளுக்கு இடையே ஒரு வலுவான கூட்டணியை அடைவதற்கான முயற்சிகளை இந்தப் பயணம் மறுசீரமைப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றடையும் பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அவருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய நாடாளுமன்றமான 'நெசெட்' (Knesset) இல் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மாலையில் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியைப் பார்வையிடும் அவர், பின்னர் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு அளிக்கும் தனிப்பட்ட இரவு விருந்தில் கலந்துகொள்கிறார். வியாழக்கிழமை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. இந்தப் பயணத்தின் மிக முக்கிய முடிவுகளில் ஒன்றாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட இலக்கு வைத்துள்ளன. இந்தியா-இஸ்ரேல் இடையிலான அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், உலக ஹோலோகாஸ்ட் நினைவு மையமான 'யாத் வாஷேமைப்' பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார். நெதன்யாகு இஸ்ரேல்-அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல் பதட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் நடைபெறுவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார், ``உலகம் வேகமாக மாறிவரும் சூழலில், அச்சுறுத்தல்களும் பெருகி வருகின்றன. அவற்றைச் சந்திக்க பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதன் மூலம் இரு நாட்டு பாதுகாப்பு உறவை ஆழப்படுத்த ஆலோசிக்கப்படும். பொருளாதார ரீதியாக இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள நிலையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிய நகர்வு பொருளாதாரக் கூட்டாண்மைக்கு பெரும் வேகத்தைக் கொடுக்கும் என்றார். மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

விகடன் 25 Feb 2026 8:53 am

முதல்வர் ஸ்டாலின் பத்திரிகை வாசிக்க, ஆமோதித்த அழகிரி; கலைஞர் குடும்பத்தில் களைகட்டிய விசேஷம்!

பிப்ரவரி 22 சென்னையில் நடந்த முதல்வர் வீட்டு விசேஷத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரர் மு.க. அழகிரியும் அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்ததில், கோபாலபுரம் உறவுகள் அனைவருடைய கண்கள் பனித்து இதயங்கள் இனித்த சம்பவம் அரங்கேறியதாகச் சொல்கிறார்கள். முதல்வரின் அத்தை மகன் அமிர்தத்தின் மகள் கலைச்செல்வியின் மகளான இலக்கியாவுக்கு கிரிதரா என்பவருடன் பிப்ரவரி 22ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ’தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் சேர்க்கிறார்கள்’ என வீடியோ போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமாரை நினைவிருக்கிறதா, அவருடைய மகள்தான் இலக்கியா. அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கே கூட அனுமதி இல்லை எனச் சொல்லிவிட்டார்களாம். முழுக்க கோபாலபுர குடும்பத்தினரின் நிகழ்ச்சியாக இருக்கட்டுமென நினைத்தார்களாம். அழகிரியுடம் மன்னன் முதல்வர் மனைவியுடன் சரியான நேரத்துக்கு வர, அவருக்கு முன்பே அண்ணன் அழகிரியும் மனைவியுடன் வந்து காத்திருந்தார். சில தினங்களுக்கு முன் மறைந்த மு.க.முத்துவின் மகன் அறிவுநிதியின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டபோது அண்ணன், தம்பி இருவரும் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை என ஒரு சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். மதுரையில் அழகிரியின் முன்னாள் ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் சேர்ந்த விஷயத்தில், அண்ணன் மீது வருத்தத்தில் இருக்கிறார் முதல்வர் எனப் பேச்சுகளும் கிளம்பிய பின்னணியில் நடந்தது இந்த நிகழ்ச்சி. தம்பி வந்ததும் முகம் மலர வரவேற்ற அழகிரி அருகே இருந்த சேரைக் காட்ட, அங்கேயே அமர்ந்து விட்டார் முதல்வர். கருணாநிதியின் மருமகன் அமிரதம், முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரும் அருகருகே உட்கார்ந்து நீண்ட நேரம் சிரித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் கோபாலபுரத்து உறவுகள். மாறன் சகோதரர்களில் தயாநிதி மனைவியுடன் வந்திருந்தார். கலாநிதி சார்பில் காவேரி மட்டும் கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து நிச்சயதார்த்த உறுதிமொழிப் பத்திரத்தை முதல்வரே வாசிக்க, அருகே அதை ஆமோதித்தபடி அமர்ந்திருந்தாராம் அழகிரி. வரும் ஆகஸ்டில் திருமணம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். “கழகத் தளபதி ஏற்றுக்கொண்டாலும் மதுரைத் தளபதிகள் தடுக்கிறார்கள்!” - புலம்பும் அழகிரி ஆதரவாளர்கள்

விகடன் 25 Feb 2026 7:32 am

முதல்வர் ஸ்டாலின் பத்திரிகை வாசிக்க, ஆமோதித்த அழகிரி; கலைஞர் குடும்பத்தில் களைகட்டிய விசேஷம்!

பிப்ரவரி 22 சென்னையில் நடந்த முதல்வர் வீட்டு விசேஷத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரர் மு.க. அழகிரியும் அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்ததில், கோபாலபுரம் உறவுகள் அனைவருடைய கண்கள் பனித்து இதயங்கள் இனித்த சம்பவம் அரங்கேறியதாகச் சொல்கிறார்கள். முதல்வரின் அத்தை மகன் அமிர்தத்தின் மகள் கலைச்செல்வியின் மகளான இலக்கியாவுக்கு கிரிதரா என்பவருடன் பிப்ரவரி 22ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ’தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் சேர்க்கிறார்கள்’ என வீடியோ போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமாரை நினைவிருக்கிறதா, அவருடைய மகள்தான் இலக்கியா. அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கே கூட அனுமதி இல்லை எனச் சொல்லிவிட்டார்களாம். முழுக்க கோபாலபுர குடும்பத்தினரின் நிகழ்ச்சியாக இருக்கட்டுமென நினைத்தார்களாம். அழகிரியுடம் மன்னன் முதல்வர் மனைவியுடன் சரியான நேரத்துக்கு வர, அவருக்கு முன்பே அண்ணன் அழகிரியும் மனைவியுடன் வந்து காத்திருந்தார். சில தினங்களுக்கு முன் மறைந்த மு.க.முத்துவின் மகன் அறிவுநிதியின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டபோது அண்ணன், தம்பி இருவரும் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை என ஒரு சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். மதுரையில் அழகிரியின் முன்னாள் ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் சேர்ந்த விஷயத்தில், அண்ணன் மீது வருத்தத்தில் இருக்கிறார் முதல்வர் எனப் பேச்சுகளும் கிளம்பிய பின்னணியில் நடந்தது இந்த நிகழ்ச்சி. தம்பி வந்ததும் முகம் மலர வரவேற்ற அழகிரி அருகே இருந்த சேரைக் காட்ட, அங்கேயே அமர்ந்து விட்டார் முதல்வர். கருணாநிதியின் மருமகன் அமிரதம், முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரும் அருகருகே உட்கார்ந்து நீண்ட நேரம் சிரித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் கோபாலபுரத்து உறவுகள். மாறன் சகோதரர்களில் தயாநிதி மனைவியுடன் வந்திருந்தார். கலாநிதி சார்பில் காவேரி மட்டும் கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து நிச்சயதார்த்த உறுதிமொழிப் பத்திரத்தை முதல்வரே வாசிக்க, அருகே அதை ஆமோதித்தபடி அமர்ந்திருந்தாராம் அழகிரி. வரும் ஆகஸ்டில் திருமணம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். “கழகத் தளபதி ஏற்றுக்கொண்டாலும் மதுரைத் தளபதிகள் தடுக்கிறார்கள்!” - புலம்பும் அழகிரி ஆதரவாளர்கள்

விகடன் 25 Feb 2026 7:32 am

முதல்வர் ஸ்டாலின் பத்திரிகை வாசிக்க, ஆமோதித்த அழகிரி; கலைஞர் குடும்பத்தில் களைகட்டிய விசேஷம்!

பிப்ரவரி 22 சென்னையில் நடந்த முதல்வர் வீட்டு விசேஷத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரர் மு.க. அழகிரியும் அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்ததில், கோபாலபுரம் உறவுகள் அனைவருடைய கண்கள் பனித்து இதயங்கள் இனித்த சம்பவம் அரங்கேறியதாகச் சொல்கிறார்கள். முதல்வரின் அத்தை மகன் அமிர்தத்தின் மகள் கலைச்செல்வியின் மகளான இலக்கியாவுக்கு கிரிதரா என்பவருடன் பிப்ரவரி 22ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ’தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் சேர்க்கிறார்கள்’ என வீடியோ போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமாரை நினைவிருக்கிறதா, அவருடைய மகள்தான் இலக்கியா. அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கே கூட அனுமதி இல்லை எனச் சொல்லிவிட்டார்களாம். முழுக்க கோபாலபுர குடும்பத்தினரின் நிகழ்ச்சியாக இருக்கட்டுமென நினைத்தார்களாம். அழகிரியுடம் மன்னன் முதல்வர் மனைவியுடன் சரியான நேரத்துக்கு வர, அவருக்கு முன்பே அண்ணன் அழகிரியும் மனைவியுடன் வந்து காத்திருந்தார். சில தினங்களுக்கு முன் மறைந்த மு.க.முத்துவின் மகன் அறிவுநிதியின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டபோது அண்ணன், தம்பி இருவரும் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை என ஒரு சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். மதுரையில் அழகிரியின் முன்னாள் ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் சேர்ந்த விஷயத்தில், அண்ணன் மீது வருத்தத்தில் இருக்கிறார் முதல்வர் எனப் பேச்சுகளும் கிளம்பிய பின்னணியில் நடந்தது இந்த நிகழ்ச்சி. தம்பி வந்ததும் முகம் மலர வரவேற்ற அழகிரி அருகே இருந்த சேரைக் காட்ட, அங்கேயே அமர்ந்து விட்டார் முதல்வர். கருணாநிதியின் மருமகன் அமிரதம், முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரும் அருகருகே உட்கார்ந்து நீண்ட நேரம் சிரித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் கோபாலபுரத்து உறவுகள். மாறன் சகோதரர்களில் தயாநிதி மனைவியுடன் வந்திருந்தார். கலாநிதி சார்பில் காவேரி மட்டும் கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து நிச்சயதார்த்த உறுதிமொழிப் பத்திரத்தை முதல்வரே வாசிக்க, அருகே அதை ஆமோதித்தபடி அமர்ந்திருந்தாராம் அழகிரி. வரும் ஆகஸ்டில் திருமணம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். “கழகத் தளபதி ஏற்றுக்கொண்டாலும் மதுரைத் தளபதிகள் தடுக்கிறார்கள்!” - புலம்பும் அழகிரி ஆதரவாளர்கள்

விகடன் 25 Feb 2026 7:32 am

ஓபிஎஸ் குற்றமற்றவர்; சுற்றியிருந்தவர்கள்தான்... - பசும்பொன்னில் சசிகலா சர்டிபிகேட்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்துள்ள நிலையில் அந்தக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரைச் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வருகிறார். இந்நிலையில் பசும்பொன்னில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக சசிகலா கூறியிருந்தார். சசிகலா கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கமுதி பசும்பொன் அருகில் உள்ள கோட்டைமேட்டில் சசிகலா ஆதரவாளர்கள் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய சசிகலா, ''புரட்சித் தலைவி அக்கா மறைந்தபோது இப்போது இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னை முதல்வர் பதவி ஏற்கச் சொன்னார்கள். ஆனால் அக்காவுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டியிருப்பதால் ஓ.பன்னீர்செல்வமே முதல்வர் பதவியில் தொடரட்டும் எனக் கூறிவிட்டேன். அப்போது பதவியில் இருந்த அமைச்சர்களையும் பதவியில் தொடரச் சொன்னேன். திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம் ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தைச் சுற்றியிருந்தவர்கள் அவரது போக்கு சரியில்லை எனப் புகார் சொன்னார்கள். காலை, மாலை, இரவு எனத் திரும்பத் திரும்ப என்னிடம் வந்து ஓ.பி.எஸ் குறித்து புகார் சொன்னார்கள். இதனால் நான் முதல்வராகச் சம்மதித்தேன். ஆனால் அவர் நல்லவர். ஓ.பன்னீர்செல்வத்தைச் சுற்றியிருந்தவர்கள்தான் அவரைத் தவறாக வழி நடத்தினர். இதனால் அவர் திடீரென்று அம்மா சமாதியில் போய் உட்கார்ந்து விட்டார். அதுவே இப்ப அவருக்குச் சிக்கலா போய்விட்டது. புது கட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற சசிகலா ஆதரவாளர்கள் எனக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சூழலில் அம்மா அமைத்த அரசு கலைக்கப்பட்டுவிடக் கூடாது எனக் கருதி அவரை (எடப்பாடி பழனிசாமி) முதல்வராக்க அனைவரது சம்மதத்தையும் வாங்கினேன். அவரைப் பற்றி அப்போது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. நான் சிறையில் இருந்தபோது அவர் எனக்குப் பல இடையூறுகளைச் செய்தார். என் கணவர் இறந்தபோது கூட அவருக்கான காரியங்களைச் செய்யக்கூட இடையூறு செய்தார். 9 ஆண்டுக் காலமாக இந்த உண்மைகளை எல்லாம் மனதில் போட்டு மறைத்து வைத்திருந்தேன். ஆனால் கட்சியும், கட்சித் தொண்டர்களின் நிலையும் சரிந்து கீழே போய் கொண்டிருக்கும் நிலையில், உண்மைகளை எவ்வளவு காலம் மறைக்க முடியும். `39 வருட அனுபவம் இருக்கு; அம்மா ஆட்சியைக் கொண்டு வர என்ன வேண்டுமானாலும் செய்வேன்' - சசிகலா அவருக்குப் பின்னால வந்த எதிர்க்கட்சி அரசும் நல்ல ஆட்சியைக் கொடுக்கல. இந்தச் சூழலில்தான் சட்டமோ அரசோ கொடுக்குற தீர்ப்பை விட மக்கள் கொடுக்கும் தீர்ப்பே முக்கியமானது எனக் கருதி புதிய களம் காண போகிறேன். அதற்காக புதிய கட்சியை ஆரம்பிக்கிறேன். ஏழை, எளிய சாமானியர்களின் கட்சியாகவும் திராவிடக் கட்சியாகவும் இது இருக்கும். அதன் கொடியை இங்கு அறிமுகம் செய்கிறேன். புது கட்சி கொடி பதாகையுடன் சசிகலா கட்சியின் பெயரினை விரைவில் அறிவிக்கிறேன்'' எனக் கூறி அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய புதிய கொடியை அறிமுகம் செய்தார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் தலைமை கொறடா நரசிம்மன், முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை மற்றும் பசும்பொன் ஊராட்சி முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 - 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி

விகடன் 25 Feb 2026 7:16 am

இணைய வழியில் இனிய-தமிழ்இணையவழி உரையாடல்

தலைப்பு:இணைய வழியில் இனிய தமிழ் இணையவழி உரையாடல் எண் : 198 The post இணைய வழியில் இனிய-தமிழ்இணையவழி உரையாடல் appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 25 Feb 2026 4:03 am

சசிகலா: ''இனி பொறுமையாக இருக்க முடியாது! - புதிய கட்சி தொடங்கிய சசிகலா!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால், அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் பட்டியல், வாக்குறுதிகள், கூட்டணி நிலைப்பாடு என பரபரப்பான தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டனர். சமீப நாட்களாக, சசிகலா புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவிருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. இன்றுகூட 'புதிய கட்சியைத் தொடங்குகிறீர்களா?' எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'இன்று நல்ல செய்தி வரும்' எனப் பதிலளித்திருந்தார். சசிகலா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ராமநாதபுரத்திலுள்ள கமுதியில் சசிகலா தலைமையில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அவர் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த மாநாட்டில், சசிகலா அவருடைய புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் கொடியில் இடம்பெற்றிருக்கின்றன. சசிகலா புதிய கட்சி தொடங்குவது பற்றி இந்த மாநாட்டில் சசிகலா, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியைத் தொடங்குகிறேன். 9 ஆண்டுகள் பொறுமையாக இருந்ததுபோல், இனி என்னால் இருக்க முடியாது. நான் பார்த்து பதவியில் உட்கார வைத்தவர்கள், அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஈட்டியால் முதுகில் குத்தினார்கள். என் கணவரை பார்க்க பரோல் கேட்ட போது, தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை. 5 நாளுக்கு மேல் எனக்கு பரோல் தரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சொன்னார். கட்சி என்னவானாலும் பரவாயில்லை என தன்னை பற்றி மட்டுமே நினைத்தார் எடப்பாடி பழனிசாமி எனக் கூறியிருக்கிறார். கட்சியின் பெயரை கூடிய விரைவில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 24 Feb 2026 8:21 pm

`சேகர்பாபு பேசினது சங்கடமா போச்சு; உடனே துணை முதல்வர்..'- தவெக மேடையில் பாடியது குறித்து வேல்முருகன்

சமீபத்தில் தவெக-வின் மூன்றாமாண்டு தொடக்க விழா மேடையில் பாடகர் வேல்முருகன் விஜய்யைப் புகழ்ந்து பாடியது நினைவிருக்கலாம். அவர் பாடிய பாடல் வரிகளில் திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் 'கொள்ளையடித்தக் கூட்டம்' என்றெல்லாம் வார்த்தைகள் இருந்தன. இது தொடர்பாக நாம் வேல்முருகனிடம் அப்போதே கேட்டதற்கு, ``நான் எல்லோருக்கும் பொதுவான ஆளுங்க. பிரதமர் மோடி ஒரு மேடையில் என்னைக் கட்டிப் பிடித்தார். உதயநிதிக்கு கூட‌ 'வேணாம் மச்சான்' பாட்டு பாடியிருக்கேன். மூணாவது வருஷ தொடக்க விழான்னு கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க. என்னை நம்பி என்கூட இருக்கிறவங்களுக்கு பாட ஒரு மேடையும் நாலு காசும் கிடைக்கும்கிறதால போய் பாடினேன். வந்திருந்தவங்க நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க. இதைத் தாண்டி வேற எதையும் நான் காதுல ஏத்திக்கப் போறதில்லை எனச் சொல்லியிருந்தார். இந்த நிலையில் சில தினங்களூக்கு முன் தமிழ்நாடு அரசின் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பாடகர் வேல்முருகனுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. விருதை வழங்கியது துணை முதல்வர் உதயநிதி. பாடகர் வேல்முருகன் விழாவில் வேல்முருகனின் பெயர் வாசிக்கப்பட்டு, அவர் மேடையருகே சென்றதும், அவரைப் பார்த்த அமைச்சர் சேகர் பாபு, 'பாடகரே சமீபத்திய உங்க ஆடலும் பாடலும் பார்த்தோம். நல்லா இருந்தது. இருந்தாலும் எங்களுக்கு உங்க மேல வருத்தம்' என்றாராம். இது குறித்து வேல்முருகனையே தொடர்பு கொண்டு கேட்டோம். ''தேர்தல் நேரம் வந்திடுச்சுன்னாலே எங்களைப் போன்ற பாடகர்களுக்கு இது ஒரு பெரிய சங்கடம். எல்லாக் கட்சியும் கச்சேரிகளுக்குக் கூப்பிடுவாங்க. கலைஞர்களா யார்கிட்டயும் மறுப்புச் சொல்ல முடியாது. போய் பாடுகிற இடங்கள்ல சமயங்கள்ல ஏதாவது கூட்டிக் குறைச்சுப் பாட வேண்டி வந்திடுது. அது நாங்க விருப்பப் பட்டு பண்றதில்லை. உடனே 'காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் பாடுவீங்களா'னு கேப்பீங்க. கோயில் கொடைக்குப் போறோம். திருவிழா முடிஞ்ச கடைசி நாள் ரெண்டு சினிமா பாட்டு பாடுங்கனு சொன்னா பாடுவாங்க இல்லையா, அது போலத்தான் எங்களை விரும்பி அழைக்கிறவங்க வேண்டுகோள் வைக்கிறப்ப கொஞ்சம் முன்னப் பின்ன நடந்துக்க வேண்டியிருக்கு. udhayanithi stalin அதனால ஒரு மேடையில பாடறதை வச்சு எங்களை முத்திரை குத்த வேண்டாம்னு கேட்டுக்க விரும்பறேன். தவெக மேடையில நான் பாடிய அடுத்த நாளே அது தொடர்பான என்னுடைய விளக்கத்தையும் தந்துட்டேன், அந்தப் பிரச்னை அன்னைக்கே முடிஞ்சது. சமூக ஊடகங்களில்தான் சிலர் எப்பவும் ஏதாவது சர்ச்சை கிடைக்காதானு தேடிட்டிருக்காங்க. அவங்கதான் சின்ன பிரச்னையா இருந்தாலும் பெரிசு படுத்திடுறாங்க. சினிமா விழாவுல விருது வாங்கறதுக்கு முன்னாடி அமைச்சர் எங்கிட்ட அப்படிச் சொன்னது நிஜம்தான். அவர் அப்படிப் பேசினதும் எனக்கே கொஞ்சம் சங்கடமாத்தான் போச்சு. என்ன சொல்றதுனு யோசிட்டிருந்தப்பவே துணை முதல்வர் அவர் பங்குக்கு 'எங்க வருமானம் வருதோ அங்க போக வேண்டிதானே'னு சொல்லிட்டார். ஒரு மாதிரி ஆகிடுச்சு. உடனே துணை முதல்வர் சிரிச்சுகிட்டே, 'நீங்க எல்லாருக்கும் பொதுவானவர்னு எனக்குத் தெரியும்' எனச் சொல்லி, அந்தச் சூழலை எளிதாக்கினார். அவர்கிட்ட ஏற்கெனவே அறிமுகமானவங்கிற முறையில அவர் அதை சீரியஸா எடுத்துக்கிடலைன்னுதான் தெரிஞ்சது. இருந்தாலும் அந்த நேரத்துல அது கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது என்கிறார்.

விகடன் 24 Feb 2026 7:06 pm

`சேகர்பாபு பேசினது சங்கடமா போச்சு; உடனே துணை முதல்வர்..'- தவெக மேடையில் பாடியது குறித்து வேல்முருகன்

சமீபத்தில் தவெக-வின் மூன்றாமாண்டு தொடக்க விழா மேடையில் பாடகர் வேல்முருகன் விஜய்யைப் புகழ்ந்து பாடியது நினைவிருக்கலாம். அவர் பாடிய பாடல் வரிகளில் திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் 'கொள்ளையடித்தக் கூட்டம்' என்றெல்லாம் வார்த்தைகள் இருந்தன. இது தொடர்பாக நாம் வேல்முருகனிடம் அப்போதே கேட்டதற்கு, ``நான் எல்லோருக்கும் பொதுவான ஆளுங்க. பிரதமர் மோடி ஒரு மேடையில் என்னைக் கட்டிப் பிடித்தார். உதயநிதிக்கு கூட‌ 'வேணாம் மச்சான்' பாட்டு பாடியிருக்கேன். மூணாவது வருஷ தொடக்க விழான்னு கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க. என்னை நம்பி என்கூட இருக்கிறவங்களுக்கு பாட ஒரு மேடையும் நாலு காசும் கிடைக்கும்கிறதால போய் பாடினேன். வந்திருந்தவங்க நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க. இதைத் தாண்டி வேற எதையும் நான் காதுல ஏத்திக்கப் போறதில்லை எனச் சொல்லியிருந்தார். இந்த நிலையில் சில தினங்களூக்கு முன் தமிழ்நாடு அரசின் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பாடகர் வேல்முருகனுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. விருதை வழங்கியது துணை முதல்வர் உதயநிதி. பாடகர் வேல்முருகன் விழாவில் வேல்முருகனின் பெயர் வாசிக்கப்பட்டு, அவர் மேடையருகே சென்றதும், அவரைப் பார்த்த அமைச்சர் சேகர் பாபு, 'பாடகரே சமீபத்திய உங்க ஆடலும் பாடலும் பார்த்தோம். நல்லா இருந்தது. இருந்தாலும் எங்களுக்கு உங்க மேல வருத்தம்' என்றாராம். இது குறித்து வேல்முருகனையே தொடர்பு கொண்டு கேட்டோம். ''தேர்தல் நேரம் வந்திடுச்சுன்னாலே எங்களைப் போன்ற பாடகர்களுக்கு இது ஒரு பெரிய சங்கடம். எல்லாக் கட்சியும் கச்சேரிகளுக்குக் கூப்பிடுவாங்க. கலைஞர்களா யார்கிட்டயும் மறுப்புச் சொல்ல முடியாது. போய் பாடுகிற இடங்கள்ல சமயங்கள்ல ஏதாவது கூட்டிக் குறைச்சுப் பாட வேண்டி வந்திடுது. அது நாங்க விருப்பப் பட்டு பண்றதில்லை. உடனே 'காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் பாடுவீங்களா'னு கேப்பீங்க. கோயில் கொடைக்குப் போறோம். திருவிழா முடிஞ்ச கடைசி நாள் ரெண்டு சினிமா பாட்டு பாடுங்கனு சொன்னா பாடுவாங்க இல்லையா, அது போலத்தான் எங்களை விரும்பி அழைக்கிறவங்க வேண்டுகோள் வைக்கிறப்ப கொஞ்சம் முன்னப் பின்ன நடந்துக்க வேண்டியிருக்கு. udhayanithi stalin அதனால ஒரு மேடையில பாடறதை வச்சு எங்களை முத்திரை குத்த வேண்டாம்னு கேட்டுக்க விரும்பறேன். தவெக மேடையில நான் பாடிய அடுத்த நாளே அது தொடர்பான என்னுடைய விளக்கத்தையும் தந்துட்டேன், அந்தப் பிரச்னை அன்னைக்கே முடிஞ்சது. சமூக ஊடகங்களில்தான் சிலர் எப்பவும் ஏதாவது சர்ச்சை கிடைக்காதானு தேடிட்டிருக்காங்க. அவங்கதான் சின்ன பிரச்னையா இருந்தாலும் பெரிசு படுத்திடுறாங்க. சினிமா விழாவுல விருது வாங்கறதுக்கு முன்னாடி அமைச்சர் எங்கிட்ட அப்படிச் சொன்னது நிஜம்தான். அவர் அப்படிப் பேசினதும் எனக்கே கொஞ்சம் சங்கடமாத்தான் போச்சு. என்ன சொல்றதுனு யோசிட்டிருந்தப்பவே துணை முதல்வர் அவர் பங்குக்கு 'எங்க வருமானம் வருதோ அங்க போக வேண்டிதானே'னு சொல்லிட்டார். ஒரு மாதிரி ஆகிடுச்சு. உடனே துணை முதல்வர் சிரிச்சுகிட்டே, 'நீங்க எல்லாருக்கும் பொதுவானவர்னு எனக்குத் தெரியும்' எனச் சொல்லி, அந்தச் சூழலை எளிதாக்கினார். அவர்கிட்ட ஏற்கெனவே அறிமுகமானவங்கிற முறையில அவர் அதை சீரியஸா எடுத்துக்கிடலைன்னுதான் தெரிஞ்சது. இருந்தாலும் அந்த நேரத்துல அது கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது என்கிறார்.

விகடன் 24 Feb 2026 7:06 pm

ஆண்தாய் ஆனந்த் `டு'பிஸி ஆனந்த் - தவெக செயல் வீரர்கள் கூட்டத்தின் கலகல மொமென்ட்ஸ்! | TVK

தவெக-வின் செயல்வீரர்கள் கூட்டம் வில்லிவாக்கத்தில் நடந்திருந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், சில ஜாலியான ரகளையான மொமென்ட்களும் நடந்திருந்தது. குறிப்பாக, ஒரே கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்துக்கு '6' செல்லப்பெயர்கள் வழங்கப்பட்டதால், அவரே திக்குமுக்காடிப் போனார். புஸ்ஸி ஆனந்த் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் தவெக-வில் இணைந்த ஜெகதீச பாண்டியன் மைக் பிடிக்கையில், ``கழகத்துக்காகச் சுற்றிச் சுழன்று உழைத்துக் கொண்டிருக்கும் 'ஆண் தாய்' பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எனப் புகழ்ந்தார். ஆனந்தை இப்படி அழைப்பதை ஜெகதீச பாண்டியன் பழக்கமாக மாற்றி வருகிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு பெரம்பூரில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்திலும் அப்படித்தான் அழைத்திருந்தார். கன்னங்கள் சிவக்க புஸ்ஸி ஆனந்தும் அந்தப் பட்டத்தை ஆமோதித்துக் கொள்கிறார். 'ஆண்தாய்ங்றதுனாலதான் போஸ்டர்ல எப்பவும் என் படத்துக்கு கீழ உங்க படத்தைப் போடுறோம். அம்மா படத்துக்கு கீழ உங்க படத்தை போடுறதுதான வழக்கம்...புரிஞ்சுக்கோங்க செங்க்ஸ் ப்ரோ..' என செங்கோட்டையனிடம் அந்த சிரிப்பின் வழியே ஒரு மெசேஜையும் நைசாக கடத்திவிடுகிறார். ஜெகதீச பாண்டியன் செங்கோட்டையனுக்கும் எதார்த்தம் புரிந்திருக்கிறது. அதனால் அவரும் இப்போதெல்லாம் ஆனந்துக்கு ஐஸ் வைக்க தவறுவதில்லை. ``அவர் புஸ்ஸி ஆனந்தா இல்லை...'பிஸி' ஆனந்தா என்றே தெரியவில்லை என மீண்டும் ஆனந்தின் கன்னங்களை சிவக்க வைத்தார். அடுத்ததாக, 'நான் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியிருக்கிறேன். அம்மாவுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், இவர் எங்கிருந்து பணியாற்றுகிறார் என்றே தெரியாத அளவுக்கு பணியாற்றுகிறார்..' என்றார். கன்னங்கள் சிவந்திருந்த ஆனந்த் 'இப்போ பாராட்டுறீங்களா...திட்டுறீங்களா...' என்பதுபோல திடீர் குழப்பமடைந்தார். எதுகை மோனையில் உறைய வைக்கும் ராஜ்மோகன் மைக்கைப் பிடித்தார். 'எங்களை ஆளாக்கி அழகு பார்க்கும் ஆண் தாயே..' என்றவுடன் ஆனந்த் கொஞ்சம் நிமிர்ந்து உட்காந்து புகழுரைகளை கேட்ச் பிடிக்க தயாரானார். ஆனால், ட்விஸ்ட் கொடுத்த ராஜ்மோகன் 'மிஸ்டர் ஆதவ் அர்ஜூனா யார் இந்த மனிதர்?' என ஒரு பாட்டே பாட ஆரம்பித்தார். ராஜ் மோகன் மிஸ்டர் ஆதவ் அர்ஜூனா யார் இந்த மனிதன்? தவழும் வயதில் தாயை இழந்த மகன் வளரும் வயதில் தந்தையை இழந்த கொடுமை வாலிப வயதில் வசந்தங்களை இழந்த மாணவன் இழக்கக் கூடாத வயதில் அத்தனையும் இழந்தார். ஆனால், தன்னம்பிக்கையை மட்டும் இழக்காத சிங்கம். தவறான பாதைக்குச் செல்லாமல் பகுத்தறிவு பாதைக்குச் சென்று, மார்க்சிய விழுமியங்களை கற்றறிந்து விளையாட்டு மைதானங்களுக்குள் நுழைந்து மாவட்ட... மாநிலம்... தேசமென வென்று, தேசிய கீதம் பாடுகையில் இந்தியாவுக்காக நின்ற விளையாட்டு வீரரை கொண்டிருக்கும் கட்சி தவெக. நான் சாப்பிடும் போது எல்லாவற்றையும் சாப்பிடுவேன். ஆனால், அவர் வெறும் முள்ளங்கி சாம்பாரை சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார். ஏன் என்று கேட்பேன். 'பிரதர் நீங்கள் வயதிலிருந்து எல்லாவற்றையும் கடித்து சுவைத்து சாப்பிட்டிருப்பீர்கள். நான் சத்துணவு சாப்பிட்டு இந்த இடத்துக்கு வந்தவன்' என்றார். விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சொல்லும் ஆதவ் எங்கே? விவசாய பட்ஜெட் வாசிக்கும் போது கொட்டாவி விட்டு தூங்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் எங்கே? உங்களை மாதிரி ஒரு குடும்பத்தில் பிறந்ததால் ஒரே ஆண்டில் துணை முதல்வர் ஆனவர் இல்லை இவர். தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் காலை 4 மணி முதல் ஒவ்வொரு நொடியும் உழைத்து உழைத்து வந்து நிற்பவர்தான் ஆதவ்' என மூச்சு முட்ட ஆதவே கூச்சப்படும் அளவுக்கு ஜல்லியடிக்க, ஆனந்தும் சங்கடப்பட்டு சிரித்துக் கொண்டார். புஸ்ஸி ஆனந்த் அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட் எதிர்பார்க்கும் பாவனை கொண்ட ஒரு பெண்தான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவர் தன் பங்குக்கு ராஜ்மோகனோடு போட்டிப் போட்டு எதுகை மோனையில் பின்னி எடுத்தார். 'இயக்கத்தின் இதயத்துடிப்பு' 'தளபதியின் நிழல்' 'நிர்வாகத்தூண்' 'செயல்புயல்' என ஆனந்தையே வெட்கப்பட வைத்தார். ஆனால், எல்லாமே தவெக நிர்வாகிகள் போஸ்டரில் அடித்து வைத்திருந்ததின் காப்பி! வில்லிவாக்கம் தொகுதிக்கென சிறப்பு வியூகம் எதையும் கற்றுக்கொடுக்கப் போகிறாரோ என நிர்வாகிகள் ஆர்வமாக காத்திருக்க, 'மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் தொகுதியில் 30 ஆண்டுகளாக இருக்கிறார். அதனால் தொகுதி நம்முடைய கோட்டை' என ஒரே போடாக போட்டுவிட்டு கிளம்பினார்.

விகடன் 24 Feb 2026 5:54 pm

`பக்குவமானவர்; அவர் திமுக-வில் இணைந்தால் வரவேற்பேன்!' - ஓபிஎஸ் குறித்து திருமாவளவன்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள். வழக்கமான வாக்குறுதிகள். தி.மு.க ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும்கூட இது தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தி.மு.க-க்கு எதிராக அ.தி.மு.க அறிவித்திருக்கிறது என்கிற புரிதல் மக்களுக்கு இருக்கும். எனவே, தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நிதி நிலைமை இப்படி இருக்கும் பொழுது இலவசம் அறிவித்தால் மாற்றத்தை தேடி மக்கள் செல்ல மாட்டார்களா என்று கேட்கிறீர்கள். இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது விடுதலை சிறுத்தைகள். கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளோம். தி.மு.க மகளிரை மேம்படுத்துவதற்காக உரிமை தொகையாக வழங்குகிறது. சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில், இருக்கிற அல்லது காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டு நிலையில் இருக்கின்ற அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற நிலையில்... அவர்களை மேம்படுத்தும் என்ற நிலையில் அந்த திட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சிகள் வரவேற்றது. திருமாவளவன் இதனால், ஏற்படுகிற நிதிச்சுமை என்பது சமாளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் இந்த நிலைப்பாட்டை தி.மு.க மேற்கொண்டு இருக்கிறது என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் கடுமையாக நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் இந்திய ஒன்றிய அரசு, மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி பங்கீட்டை ஒதுக்காமல் தவிர்த்துக்கூட, தமிழகத்தின் மொத்த உற்பத்தி GDP-யை உயரச் செய்து இருக்கிறது. திமுக அரசு, பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. மீண்டும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு கட்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதியைப் பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது. பார்க்கலாம் எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது எங்களுக்கான பொறுப்பு, கடமை. விமர்சனம் இருக்கலாம். ஆனால், எங்களது கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும். தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காது. தி.மு.க கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் தெரிவித்துள்ளார் என்பது பற்றி கேட்கிறீர்கள். இந்த கேள்விக்கு விஜய் தலைமையான கட்சியினர்தான் பதில் கூறவேண்டும். ஓ.பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர். சகிப்புத்தன்மை உள்ளவர். சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் அவரிடத்தில் உண்டு. விட்டு கொடுத்துப் போகும் இடத்தில் அவர் இருக்கிறார். அ.தி.மு.க-வில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். ஆனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஏன் முன்வரவில்லை என்று விளங்கவில்லை. அவர், தி.மு.க-வில் இணைந்தால் அதை வரவேற்கிறேன் என்றார்.

விகடன் 24 Feb 2026 5:32 pm

`பக்குவமானவர்; அவர் திமுக-வில் இணைந்தால் வரவேற்பேன்!' - ஓபிஎஸ் குறித்து திருமாவளவன்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள். வழக்கமான வாக்குறுதிகள். தி.மு.க ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும்கூட இது தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தி.மு.க-க்கு எதிராக அ.தி.மு.க அறிவித்திருக்கிறது என்கிற புரிதல் மக்களுக்கு இருக்கும். எனவே, தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நிதி நிலைமை இப்படி இருக்கும் பொழுது இலவசம் அறிவித்தால் மாற்றத்தை தேடி மக்கள் செல்ல மாட்டார்களா என்று கேட்கிறீர்கள். இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது விடுதலை சிறுத்தைகள். கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளோம். தி.மு.க மகளிரை மேம்படுத்துவதற்காக உரிமை தொகையாக வழங்குகிறது. சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில், இருக்கிற அல்லது காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டு நிலையில் இருக்கின்ற அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற நிலையில்... அவர்களை மேம்படுத்தும் என்ற நிலையில் அந்த திட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சிகள் வரவேற்றது. திருமாவளவன் இதனால், ஏற்படுகிற நிதிச்சுமை என்பது சமாளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் இந்த நிலைப்பாட்டை தி.மு.க மேற்கொண்டு இருக்கிறது என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் கடுமையாக நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் இந்திய ஒன்றிய அரசு, மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி பங்கீட்டை ஒதுக்காமல் தவிர்த்துக்கூட, தமிழகத்தின் மொத்த உற்பத்தி GDP-யை உயரச் செய்து இருக்கிறது. திமுக அரசு, பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. மீண்டும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு கட்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதியைப் பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது. பார்க்கலாம் எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது எங்களுக்கான பொறுப்பு, கடமை. விமர்சனம் இருக்கலாம். ஆனால், எங்களது கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும். தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காது. தி.மு.க கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் தெரிவித்துள்ளார் என்பது பற்றி கேட்கிறீர்கள். இந்த கேள்விக்கு விஜய் தலைமையான கட்சியினர்தான் பதில் கூறவேண்டும். ஓ.பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர். சகிப்புத்தன்மை உள்ளவர். சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் அவரிடத்தில் உண்டு. விட்டு கொடுத்துப் போகும் இடத்தில் அவர் இருக்கிறார். அ.தி.மு.க-வில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். ஆனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஏன் முன்வரவில்லை என்று விளங்கவில்லை. அவர், தி.மு.க-வில் இணைந்தால் அதை வரவேற்கிறேன் என்றார்.

விகடன் 24 Feb 2026 5:32 pm

`பக்குவமானவர்; அவர் திமுக-வில் இணைந்தால் வரவேற்பேன்!' - ஓபிஎஸ் குறித்து திருமாவளவன்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள். வழக்கமான வாக்குறுதிகள். தி.மு.க ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும்கூட இது தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தி.மு.க-க்கு எதிராக அ.தி.மு.க அறிவித்திருக்கிறது என்கிற புரிதல் மக்களுக்கு இருக்கும். எனவே, தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நிதி நிலைமை இப்படி இருக்கும் பொழுது இலவசம் அறிவித்தால் மாற்றத்தை தேடி மக்கள் செல்ல மாட்டார்களா என்று கேட்கிறீர்கள். இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது விடுதலை சிறுத்தைகள். கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளோம். தி.மு.க மகளிரை மேம்படுத்துவதற்காக உரிமை தொகையாக வழங்குகிறது. சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில், இருக்கிற அல்லது காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டு நிலையில் இருக்கின்ற அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற நிலையில்... அவர்களை மேம்படுத்தும் என்ற நிலையில் அந்த திட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சிகள் வரவேற்றது. திருமாவளவன் இதனால், ஏற்படுகிற நிதிச்சுமை என்பது சமாளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் இந்த நிலைப்பாட்டை தி.மு.க மேற்கொண்டு இருக்கிறது என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் கடுமையாக நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் இந்திய ஒன்றிய அரசு, மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி பங்கீட்டை ஒதுக்காமல் தவிர்த்துக்கூட, தமிழகத்தின் மொத்த உற்பத்தி GDP-யை உயரச் செய்து இருக்கிறது. திமுக அரசு, பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. மீண்டும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு கட்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதியைப் பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது. பார்க்கலாம் எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது எங்களுக்கான பொறுப்பு, கடமை. விமர்சனம் இருக்கலாம். ஆனால், எங்களது கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும். தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காது. தி.மு.க கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் தெரிவித்துள்ளார் என்பது பற்றி கேட்கிறீர்கள். இந்த கேள்விக்கு விஜய் தலைமையான கட்சியினர்தான் பதில் கூறவேண்டும். ஓ.பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர். சகிப்புத்தன்மை உள்ளவர். சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் அவரிடத்தில் உண்டு. விட்டு கொடுத்துப் போகும் இடத்தில் அவர் இருக்கிறார். அ.தி.மு.க-வில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். ஆனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஏன் முன்வரவில்லை என்று விளங்கவில்லை. அவர், தி.மு.க-வில் இணைந்தால் அதை வரவேற்கிறேன் என்றார்.

விகடன் 24 Feb 2026 5:32 pm

சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு; அவதியுறும் பொதுமக்கள்; திமுக எம்.பி-க்கள் கண்டனம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. தினமும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருகின்றனர். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கனிமொழி திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டிருக்கும் பதிவில், நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாள்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது. ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டிருக்கும் பதிவில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் மிகவும் கவலையளிக்கிறது. தமிழச்சி தங்கபாண்டியன் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நம்பிக்கையான மின்சார ரயில் சேவைகளை திடீரென குறைத்தது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் முடிவாகும். இதை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சேவை குறைப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

விகடன் 24 Feb 2026 5:20 pm

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனிடையே, பா.ஜ.க கட்சிக்கு முன்னணி இறைச்சி ஏற்றுமதி நிறுவனமான அல்லானா குழுமம் (Allana Group) ரூ.30 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறது என Scroll.in அறிக்கை வெளியிட்டுள்ளது. இர்ஃபான் அல்லானா தலைமையிலான அல்லானா குழுமம் குழுமம், 2024-25 நிதியாண்டில் மட்டும் பா.ஜ.க-வுக்கு ரூ.30 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. சுவாரஸ்யமாக, இதே காலகட்டத்தில் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி 4 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இது 2018-ம் ஆண்டிற்குப் பிறகு எட்டப்பட்ட மிகப்பெரிய சாதனை அளவாகும். பாஜக 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு இளஞ்சிவப்பு புரட்சியை (இறைச்சி ஏற்றுமதி) ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி கடுமையாகச் சாடியிருந்தார். அதே நேரம், மோடி பிரதமராகுவதற்கு முன்பே அல்லானா குழுமம் பா.ஜ.க-வுக்கு நிதியளித்து வந்திருக்கிறது. 2013-14-ம் ஆண்டில் ரூ.2 கோடியை வழங்கியது. 2019-ம் ஆண்டில் அல்லானா குழுமம் ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அந்தக் குழுமத்துடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த இக்கட்டான சூழலில்தான் அல்லானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கத் தொடங்கியது. அதன் அடிப்படையில், 2019-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க-வுக்கு ரூ.2 கோடியையும், சிவசேனாவுக்கு ரூ.5 கோடியையும் வழங்கியிருக்கிறது. அதன் உச்சமாக 2024-25 நிதி ஆண்டில் நன்கொடைத் தொகை 15 மடங்கு அதிகரித்து ரூ.30 கோடியை வழங்கியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் கட்டுப்பாடுகளால் இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி பாதிக்கப்பட்டபோது, எகிப்து மற்றும் மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் புதிய சந்தைகளாக மாறின. எகிப்து தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய மாட்டிறைச்சி சந்தையாக உள்ளது. 2024 அக்டோபர் முதல் அமலுக்கு வந்த 'ஹலால் சான்றிதழ்' தொடர்பான வழிகாட்டுதல்கள், மேற்கு ஆசியா மற்றும் துருக்கி சந்தைகளைக் கைப்பற்ற வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அல்லானா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ரஃபவுசான் அலவி, ``பா.ஜ.க அரசின் கீழ் நிலையான வளர்ச்சிக்கான நேர்மறையான மாற்றங்கள் நடக்கிறது. விக்ஸித் பாரதம்' வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கிற்குத் தங்களது பங்களிப்பை வழங்கு வேண்டும் என விரும்புகிறோம். மேலும், வரி அமைப்பை எளிமைப்படுத்தியிருக்கிறது இந்த அரசு எனக் கருதுகிறோம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்

விகடன் 24 Feb 2026 5:18 pm

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

வே லூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு வெள்ளியால் செய்யப்பட்ட இரட்டை போர் யானைகள் மற்றும் வேலூரின் அடையாளங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற பொற்கோயில் காட்சி மாதிரியை பரிசாக வழங்கினார் வினோத் கண்ணன். அப்போது, வினோத் கண்ணனை அழைத்த விஜய் அவரின் தோள்மீது கைப்போட்டு தட்டிக்கொடுத்தது, அனைவரிடமும் மிகுந்த கவனம் பெற்றது. போர் யானை பரிசுப் பொருளில் வினோத் கண்ணன் பெயருக்குக் கீழே `வேலூர் சட்டமன்றத் தொகுதி’ எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பரிசுப்பொருளை விஜய் கையில் வாங்கியபோது, `இது வெள்ளி யானை மட்டுமல்ல, வேலூரின் வெற்றி யானை’ எனவும் முழங்கினர் த.வெ.க-வினர். விஜய்யுடன் வினோத் கண்ணன் யார் இந்த வினோத் கண்ணன்..? த.வெ.க செயற்குழு உறுப்பினராக கட்சிப் பொறுப்பு வகிக்கும் வினோத் கண்ணன், வரும் சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதி த.வெ.க வேட்பாளராகக் களமிறங்க ஆயத்தமாகியிருக்கிறார். வேலூரில், `ஶ்ரீ மெமன்டோஸ்’ என்கிற பெயரில், விருது கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் விற்பனையகம் நடத்தி வரும் வினோத் கண்ணன், மாவட்டத்தைத் தாண்டி பெங்களூர் வரையிலும் டிராபி பிசினஸில் வேகம் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு மனக்கணக்குப் பயிற்சி அளிக்கும் `அலமா அபாகஸ்’ கல்வி நிறுவனத்தையும் 2009-ல் இருந்து நடத்தி வருகிறார் வினோத் கண்ணன். அவரின் அலமா அபாகஸ் பயிற்சி நிறுவனத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கிக்கொண்டிருக்கிறார் வினோத் கண்ணன். பொற்கோயிலுடன்கூடிய நாராயணி பீடத்தை நிறுவிய மடாதிபதி சக்தி அம்மாவின் ஆசி, அரவணைப்பும் வினோத் கண்ணனுக்கு இருக்கிறது என்கிறார்கள். வணிக நிர்வாகம் சார்ந்த பி.பி.ஏ இளங்கலை பட்டப்படிப்புப் படித்திருக்கும் வினோத் கண்ணனுக்கு எழிலரசி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். அமைச்சர் எ.வ.வேலு தி.மு.க அமைச்சரும், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான எ.வ.வேலு, கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி வேலூர் உட்பட 9 தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய எ.வ.வேலு, `வேலூர் சட்டமன்றத் தொகுதியில் கணிசமாக இருக்கும் முதலியார்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளை நடிகர் விஜய்யின் கட்சி டார்கெட் செய்திருக்கிறது. இதனால், தி.மு.க அடிசறுக்க வாய்ப்பிருக்கிறது’ என்று நிர்வாகிகளை எச்சரித்திருந்தார். எ.வ.வேலு அப்படிச் சொன்னதற்குப் பின்னால் 2 காரணங்கள் இருக்கின்றன. த.வெ.க-வில் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கும் வினோத் கண்ணனும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் தான். பொருளாதாரத்திலும் வலுவாக இருக்கிறார். தி.மு.க தலைமையிடம் `பென்’ டீமும், உளவுத்துறையும் கொடுத்த ரிப்போர்ட்டிலும் வேலூர் தொகுதி த.வெ.க வேட்பாளராக வினோத் கண்ணனின் பெயரே அடிபட்டிருந்தது. இதை மனதில் வைத்தே `சமூக ரீதியான வாக்குகள் சிதறும்’ என வெளிப்படையாகப் போட்டுடைத்திருந்தார் அமைச்சர் எ.வ.வேலு. இந்த நிலையில்தான் வினோத் கண்ணன் வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களப்பணியிலும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். விஜய் நிகழ்ச்சியையொட்டி, கடந்த ஒன்றரை மாதமாக மாவட்ட தலைமையுடன் இணைந்து ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவந்தார். நிகழ்ச்சி நடைபெற்ற 33 ஏக்கர் மைதானமும் கரடு முரடாகத்தான் இருந்தது. அவற்றை ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்து சமன்படுத்திய செலவுகளை ஏற்றுக்கொண்டதோடு, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் குடிநீர் மற்றும் உணவு வழங்கியிருக்கிறார். அதாவது, 6 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் 35 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும் வாங்கிக்கொடுத்திருக்கிறார் வினோத் கண்ணன். வினோத் கண்ணன் சாலை மார்க்கமாக வந்த விஜய்யின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற அகரம்சேரி வரை வரவேற்பு பேனர்களையும், போஸ்டர்களையும் ஒட்டி அமர்க்களப்படுத்தியிருந்தார் வினோத் கண்ணன். இதுபற்றி, அவரிடம் கேட்டபோது, ``இன்று, தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தலைவராக மாறியிருக்கிறார் தலைவர் தளபதி விஜய். அவர் வழியில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற ஆசையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிக்கிறேன். வேலூருக்குத் தளபதி வந்துசென்ற பிறகு அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மக்களிடமும் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. வெற்றி நிச்சயம்’’ என்றார். ____________ வேலூர் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், தேவைகளையும், தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளுக்க உங்கள் மதிப்பீட்டையும் பதிவிட வேண்டுமா? - link-ஐ க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.! Loading…

விகடன் 24 Feb 2026 4:53 pm

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

வே லூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு வெள்ளியால் செய்யப்பட்ட இரட்டை போர் யானைகள் மற்றும் வேலூரின் அடையாளங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற பொற்கோயில் காட்சி மாதிரியை பரிசாக வழங்கினார் வினோத் கண்ணன். அப்போது, வினோத் கண்ணனை அழைத்த விஜய் அவரின் தோள்மீது கைப்போட்டு தட்டிக்கொடுத்தது, அனைவரிடமும் மிகுந்த கவனம் பெற்றது. போர் யானை பரிசுப் பொருளில் வினோத் கண்ணன் பெயருக்குக் கீழே `வேலூர் சட்டமன்றத் தொகுதி’ எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பரிசுப்பொருளை விஜய் கையில் வாங்கியபோது, `இது வெள்ளி யானை மட்டுமல்ல, வேலூரின் வெற்றி யானை’ எனவும் முழங்கினர் த.வெ.க-வினர். விஜய்யுடன் வினோத் கண்ணன் யார் இந்த வினோத் கண்ணன்..? த.வெ.க செயற்குழு உறுப்பினராக கட்சிப் பொறுப்பு வகிக்கும் வினோத் கண்ணன், வரும் சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதி த.வெ.க வேட்பாளராகக் களமிறங்க ஆயத்தமாகியிருக்கிறார். வேலூரில், `ஶ்ரீ மெமன்டோஸ்’ என்கிற பெயரில், விருது கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் விற்பனையகம் நடத்தி வரும் வினோத் கண்ணன், மாவட்டத்தைத் தாண்டி பெங்களூர் வரையிலும் டிராபி பிசினஸில் வேகம் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு மனக்கணக்குப் பயிற்சி அளிக்கும் `அலமா அபாகஸ்’ கல்வி நிறுவனத்தையும் 2009-ல் இருந்து நடத்தி வருகிறார் வினோத் கண்ணன். அவரின் அலமா அபாகஸ் பயிற்சி நிறுவனத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கிக்கொண்டிருக்கிறார் வினோத் கண்ணன். பொற்கோயிலுடன்கூடிய நாராயணி பீடத்தை நிறுவிய மடாதிபதி சக்தி அம்மாவின் ஆசி, அரவணைப்பும் வினோத் கண்ணனுக்கு இருக்கிறது என்கிறார்கள். வணிக நிர்வாகம் சார்ந்த பி.பி.ஏ இளங்கலை பட்டப்படிப்புப் படித்திருக்கும் வினோத் கண்ணனுக்கு எழிலரசி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். அமைச்சர் எ.வ.வேலு தி.மு.க அமைச்சரும், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான எ.வ.வேலு, கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி வேலூர் உட்பட 9 தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய எ.வ.வேலு, `வேலூர் சட்டமன்றத் தொகுதியில் கணிசமாக இருக்கும் முதலியார்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளை நடிகர் விஜய்யின் கட்சி டார்கெட் செய்திருக்கிறது. இதனால், தி.மு.க அடிசறுக்க வாய்ப்பிருக்கிறது’ என்று நிர்வாகிகளை எச்சரித்திருந்தார். எ.வ.வேலு அப்படிச் சொன்னதற்குப் பின்னால் 2 காரணங்கள் இருக்கின்றன. த.வெ.க-வில் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கும் வினோத் கண்ணனும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் தான். பொருளாதாரத்திலும் வலுவாக இருக்கிறார். தி.மு.க தலைமையிடம் `பென்’ டீமும், உளவுத்துறையும் கொடுத்த ரிப்போர்ட்டிலும் வேலூர் தொகுதி த.வெ.க வேட்பாளராக வினோத் கண்ணனின் பெயரே அடிபட்டிருந்தது. இதை மனதில் வைத்தே `சமூக ரீதியான வாக்குகள் சிதறும்’ என வெளிப்படையாகப் போட்டுடைத்திருந்தார் அமைச்சர் எ.வ.வேலு. இந்த நிலையில்தான் வினோத் கண்ணன் வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களப்பணியிலும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். விஜய் நிகழ்ச்சியையொட்டி, கடந்த ஒன்றரை மாதமாக மாவட்ட தலைமையுடன் இணைந்து ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவந்தார். நிகழ்ச்சி நடைபெற்ற 33 ஏக்கர் மைதானமும் கரடு முரடாகத்தான் இருந்தது. அவற்றை ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்து சமன்படுத்திய செலவுகளை ஏற்றுக்கொண்டதோடு, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் குடிநீர் மற்றும் உணவு வழங்கியிருக்கிறார். அதாவது, 6 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் 35 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும் வாங்கிக்கொடுத்திருக்கிறார் வினோத் கண்ணன். வினோத் கண்ணன் சாலை மார்க்கமாக வந்த விஜய்யின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற அகரம்சேரி வரை வரவேற்பு பேனர்களையும், போஸ்டர்களையும் ஒட்டி அமர்க்களப்படுத்தியிருந்தார் வினோத் கண்ணன். இதுபற்றி, அவரிடம் கேட்டபோது, ``இன்று, தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தலைவராக மாறியிருக்கிறார் தலைவர் தளபதி விஜய். அவர் வழியில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற ஆசையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிக்கிறேன். வேலூருக்குத் தளபதி வந்துசென்ற பிறகு அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மக்களிடமும் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. வெற்றி நிச்சயம்’’ என்றார். ____________ வேலூர் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், தேவைகளையும், தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளுக்க உங்கள் மதிப்பீட்டையும் பதிவிட வேண்டுமா? - link-ஐ க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.! Loading…

விகடன் 24 Feb 2026 4:53 pm

`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' - ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவ்வப்போது மூச்சுத் திண்றல் ஏற்படுவதும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுமாக, உடல்நலம் தேறி சீராகுவதுமாகவே இருந்தது. இந்த நிலையில், நேற்று அவர் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டதாக தெரிகிறது. உடனே அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நேற்று இரவே முதல்வர் ஸ்டாலின் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது வென்டிலேஷன் முறையில் அவருக்கு சுவாசம் செலுத்தப்படுகிறது என்றத் தகவலும் கிடைத்தது. காலை முதல் திருமாவளவன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்து தோழர் நல்லகண்ணுவின் உடல்நலன் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தோழர் நல்லகண்ணு குறித்து மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், `` நல்லகண்ணு (வயது 101) அவர்கள் நோய்த்தொற்று மற்றும் இணைநோய்களால் (இரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை) பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு மருத்துவத்துறை நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 23.02.2026 அன்று அவருடைய உடல்நிலையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நல்லகண்ணு அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன், 24 மணிநேர தொடர் அதிதீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். எனக் குறிப்பிட்டிருக்கிறது. `மூச்சுத் திணறல்' - நல்லகண்ணு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி!

விகடன் 24 Feb 2026 3:43 pm

'விஜய்க்கு உடம்பு சரியில்லன்னா கூட கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குதான் போவாரு' - கனவை பகிரும் ஆதவ் அர்ஜூனா

தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிர்வாகிகள் மத்தியில் அவர் ஆவேசமாக பேசியிருந்தார். ஆதவ் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு நல்ல மருத்துவமனை இல்லை. ஒரு நல்ல கல்லூரி இல்லை. அரசுப்பள்ளி இல்லை. மழை பெய்யும் போது முழுவதும் சாக்கடை நீர் வருகிறது. வில்லிவாக்கம் கழிவுநீர்வாக்கமாக மாறிவிட்டது. தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகமும் இல்லை. எம்.எல்.ஏவும் இல்லை. பேராசிரியர் அன்பழகனின் பெயரை அவர் பேரன் கெடுத்துக் கொண்டிருக்கிறார். இங்கே திமுகவும் இல்லை. அதிமுகவும் இல்லை. களத்தில் தவெக மட்டுமே இருக்கிறது. 5 வருடத்தில் 6 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். அதில் 2 லட்சம் கோடியை முதல்வரின் குடும்பம் அடித்துவிட்டது. அமைச்சர்கள் 1 லட்சம் கோடியை அடித்துவிட்டனர். 2015 இல் மழை வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட தொகுதி வில்லிவாக்கமே. இன்னமும் இந்த தொகுதி அப்படியே இருக்கிறது. ஆதவ் தலைவர் விஜய் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலையை ஏற்படுத்துவார். 2014 வரைக்கும் மோடியா லேடியா என சவால்விட்டார் ஜெயலலிதா. உண்மையான அதிமுக தவெக பக்கம் வந்துவிட்டது. பாஜகவுக்கு எதிராக தைரியமாக பேசும் இரண்டு தலைவர்கள் ராகுல் காந்தியும் விஜய்யும் மட்டும்தான். ஜனநாயகன் வெளியாக வேண்டிய நேரத்தில் இன்னொரு படம் வெளியானது. அந்தப் படம் ஒருநாள் கூட ஓடவில்லை. மக்கள் தியேட்டருக்கே வரவில்லை. திமுகவின் படத்துக்கு மட்டும் பாஜக எப்படி சான்றிதழ் கொடுக்கிறது? வேலூரில் தலைவர் விஜய் நேற்று கண்கலங்கினார். எம்.ஜி.ஆரும் அரசியல் களத்தில் கண் கலங்கினார். ஜெயலலிதாவும் கண் கலங்கினார். இருவரும் வாழ்நாள் முழுவதும் திமுகவை ஓடவிட்டனர். பிரசார வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில் தலைவர் மக்களை சந்திப்பதை தடுக்கின்றனர். வில்லிவாக்கம் தொகுதிக்குள் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு என வாக்கு கேட்டு வந்தாலும் கதவை திறக்காதீர்கள்' என்றார். Loading…

விகடன் 24 Feb 2026 3:36 pm

'விஜய்க்கு உடம்பு சரியில்லன்னா கூட கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குதான் போவாரு' - கனவை பகிரும் ஆதவ் அர்ஜூனா

தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிர்வாகிகள் மத்தியில் அவர் ஆவேசமாக பேசியிருந்தார். ஆதவ் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு நல்ல மருத்துவமனை இல்லை. ஒரு நல்ல கல்லூரி இல்லை. அரசுப்பள்ளி இல்லை. மழை பெய்யும் போது முழுவதும் சாக்கடை நீர் வருகிறது. வில்லிவாக்கம் கழிவுநீர்வாக்கமாக மாறிவிட்டது. தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகமும் இல்லை. எம்.எல்.ஏவும் இல்லை. பேராசிரியர் அன்பழகனின் பெயரை அவர் பேரன் கெடுத்துக் கொண்டிருக்கிறார். இங்கே திமுகவும் இல்லை. அதிமுகவும் இல்லை. களத்தில் தவெக மட்டுமே இருக்கிறது. 5 வருடத்தில் 6 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். அதில் 2 லட்சம் கோடியை முதல்வரின் குடும்பம் அடித்துவிட்டது. அமைச்சர்கள் 1 லட்சம் கோடியை அடித்துவிட்டனர். 2015 இல் மழை வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட தொகுதி வில்லிவாக்கமே. இன்னமும் இந்த தொகுதி அப்படியே இருக்கிறது. ஆதவ் தலைவர் விஜய் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலையை ஏற்படுத்துவார். 2014 வரைக்கும் மோடியா லேடியா என சவால்விட்டார் ஜெயலலிதா. உண்மையான அதிமுக தவெக பக்கம் வந்துவிட்டது. பாஜகவுக்கு எதிராக தைரியமாக பேசும் இரண்டு தலைவர்கள் ராகுல் காந்தியும் விஜய்யும் மட்டும்தான். ஜனநாயகன் வெளியாக வேண்டிய நேரத்தில் இன்னொரு படம் வெளியானது. அந்தப் படம் ஒருநாள் கூட ஓடவில்லை. மக்கள் தியேட்டருக்கே வரவில்லை. திமுகவின் படத்துக்கு மட்டும் பாஜக எப்படி சான்றிதழ் கொடுக்கிறது? வேலூரில் தலைவர் விஜய் நேற்று கண்கலங்கினார். எம்.ஜி.ஆரும் அரசியல் களத்தில் கண் கலங்கினார். ஜெயலலிதாவும் கண் கலங்கினார். இருவரும் வாழ்நாள் முழுவதும் திமுகவை ஓடவிட்டனர். பிரசார வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில் தலைவர் மக்களை சந்திப்பதை தடுக்கின்றனர். வில்லிவாக்கம் தொகுதிக்குள் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு என வாக்கு கேட்டு வந்தாலும் கதவை திறக்காதீர்கள்' என்றார். Loading…

விகடன் 24 Feb 2026 3:36 pm

மதுரை: `தலைவர்கள் வரும்போது கட்சித் துண்டுகளை சுழற்ற வேண்டும்!'- அதிமுக கண்டிஷன்; தவெகவின் தாக்கமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாட்டில் ரேம்ப் வாக்கில் நடந்து செல்லும்போது, அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சித் துண்டுகளை அவருக்குக் கொடுத்து அதை அணிந்து கொண்டு நடந்த நிகழ்வு டிரெண்டிங் ஆனது. அதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று மதுரையில் நடந்த தி.மு.க-வின் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பொதுக்கூட்ட அரங்கிற்குள் ஸ்டாலின் வந்தபோது நிர்வாகிகளுடன் சேர்ந்து அமைச்சர்களும் கட்சித் துண்டுகளைச் சுழற்றியும், ஸ்டாலினை நோக்கி வீசியும் அவரை வரவேற்றனர். அதுவும் டிரெண்ட் ஆனது. அந்த வரிசையில் தற்போது அ.தி.மு.க-வினரும் இந்த டிரெண்டிற்குள் இணைய இருக்கின்றனர். விஜய் மதுரையில் மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த பொதுக்கூட்டம் குறித்து, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட அ.தி.மு.க சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை எல்லீஸ் நகர்ப் பகுதியில் நடைபெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை புறநகர் அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.  மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசுகையில், ``வருகின்ற 2026 தேர்தலுக்காக மதுரை மண்ணில் பரப்புரை ஆற்ற பிரதமர் மோடியும் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வருகை தரவுள்ளனர். இந்த மதுரை பொதுக்கூட்டம் வெற்றி விழா கூட்டமாக மாற்றவேண்டும். இதில் இரு பெரும் தலைவர்கள் ( மோடி - இபிஎஸ்) பேசக்கூடியவை ஆளுங்கட்சியைக் கலங்கடிக்கச் செய்யும். எனவே தொண்டர்களை கடைசி வரை கூட்டத்தில் அமர வைக்க வேண்டும். அனைவரும் அ.தி.மு.க கட்சித் துண்டை அணிந்து வரவேண்டும். நமது கூட்டணிக் கட்சியினர் வருவார்கள். அவர்கள், அவர்களது கட்சித் துண்டை அணிந்துவருவார்கள். அதேபோல் நாமும் நமது அ.தி.மு.க துண்டை அணிந்துவர வேண்டும். கே.பி.,முனுசாமி அதேபோல் தலைவர்கள் வரும்போது தலைக்கு மேல் துண்டைச் சுழற்றிக் காட்ட வேண்டும். மதுரையில் நடைபெறும் கூட்டம் வெற்றிக் கூட்டமாக நடைபெற வேண்டும்” என்றார்.

விகடன் 24 Feb 2026 3:28 pm

தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் - சிரமத்தில் வியாபாரிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் மூன்று கழிவறைகள் கட்டப்பட்டிருந்தும் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை என அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, அங்கு சென்று அப்பகுதி மக்களிடம் இது குறித்து கேட்டறிந்தோம். நம்மிடம் பேசியவர்கள், தஞ்சாவூர்ல மிக பழைமையான மார்கெட் என்றால் அது காமராசர் மார்கெட்தான். இது சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ₹20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் நவீனமயமாக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு புதிய பொலிவுடன் கட்டப்பட்டது. ஆனால், இங்கு ஒன்றுக்கு மூன்று கழிவறைகள் இருந்தும், ஒன்றுகூட இப்போது பயன்பாட்டில் இல்லை.‌ இங்கு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து போகிறார்கள். இங்கு 500-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. காய்கறி, பழக்கடை, பல்பொருள் அங்காடி என அனைத்து கடைகளும் இங்கு இருக்கிறது. இந்த முக்கியமான இடத்தில் பொதுக் கழிவறை இருந்தும் பயன்பாடின்றி இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் மைதானத்தில்தான் இயற்கை உபாதைகளை கழிக்கிறோம். ஆண்கள்கூட எப்படியாவது சமாளித்துக் கொள்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்கள்தான் ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியே கழிவறை இருந்தும், பயன்பாடு இன்றி பூட்டியே இருக்கிறது. புது கழிவறை கட்டி மூன்று ஆண்டுகளாகிறது. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. இப்போது புது கழிவறை முன்புறம் பார்க்கிங் இடமா போச்சு. ஏற்கெனவே இருந்த கழிவறையும் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. நாங்களும் அதிகாரிகளிடம் கழிவறைகளை திறக்கக் கோரிக்கை விடுத்தோம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகள் இவ்வளவு பேர் இங்கு இருக்கிறோம்... அவசரத்துக்கு என்ன செய்வோம்? எங்களோட சிரமம் அதிகாரிகளுக்கு புரியவில்லை. இங்கிருக்கிற கழிவறைகளை உடனடியாக சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

விகடன் 24 Feb 2026 2:49 pm

தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் - சிரமத்தில் வியாபாரிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் மூன்று கழிவறைகள் கட்டப்பட்டிருந்தும் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை என அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, அங்கு சென்று அப்பகுதி மக்களிடம் இது குறித்து கேட்டறிந்தோம். நம்மிடம் பேசியவர்கள், தஞ்சாவூர்ல மிக பழைமையான மார்கெட் என்றால் அது காமராசர் மார்கெட்தான். இது சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ₹20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் நவீனமயமாக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு புதிய பொலிவுடன் கட்டப்பட்டது. ஆனால், இங்கு ஒன்றுக்கு மூன்று கழிவறைகள் இருந்தும், ஒன்றுகூட இப்போது பயன்பாட்டில் இல்லை.‌ இங்கு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து போகிறார்கள். இங்கு 500-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. காய்கறி, பழக்கடை, பல்பொருள் அங்காடி என அனைத்து கடைகளும் இங்கு இருக்கிறது. இந்த முக்கியமான இடத்தில் பொதுக் கழிவறை இருந்தும் பயன்பாடின்றி இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் மைதானத்தில்தான் இயற்கை உபாதைகளை கழிக்கிறோம். ஆண்கள்கூட எப்படியாவது சமாளித்துக் கொள்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்கள்தான் ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியே கழிவறை இருந்தும், பயன்பாடு இன்றி பூட்டியே இருக்கிறது. புது கழிவறை கட்டி மூன்று ஆண்டுகளாகிறது. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. இப்போது புது கழிவறை முன்புறம் பார்க்கிங் இடமா போச்சு. ஏற்கெனவே இருந்த கழிவறையும் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. நாங்களும் அதிகாரிகளிடம் கழிவறைகளை திறக்கக் கோரிக்கை விடுத்தோம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகள் இவ்வளவு பேர் இங்கு இருக்கிறோம்... அவசரத்துக்கு என்ன செய்வோம்? எங்களோட சிரமம் அதிகாரிகளுக்கு புரியவில்லை. இங்கிருக்கிற கழிவறைகளை உடனடியாக சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

விகடன் 24 Feb 2026 2:49 pm

PEN ரிபோர்ட்; உதயநிதியின் கிரீன் சிக்னல்; உற்சாகத்தில் உடுமலை இளைஞரணி - திடீர் விசிட் பின்னணி!

திருப்பூர் மாவட்டத்தில் விஐபி தொகுதியாக கருதப்படும் உடுமலைப்பேட்டைதான் இப்போது, மாவட்ட திமுக-வுக்குள் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. 1996-க்குப் பிறகான 25 ஆண்டுகளில், இந்த தொகுதியில் நடைபெற்ற 5 தேர்தல்களிலும் திமுக ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. இதனால், வரும் 2026 தேர்தலில் எப்படியாவது உடுமலைப்பேட்டை தொகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்பது கட்சித் தலைமையின் உத்தரவு. குறிப்பாக உடுமலைப்பேட்டை தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனை வீழ்த்த வேண்டுமென்றால் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என திமுக தலைமை நினைக்கிறது. உதயநிதி இதற்காக வேட்பாளர் தேர்விலும் கட்சித் தலைமை கறார் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே, உடுமலைப்பேட்டைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம், இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் திறப்பு மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கியது, உயிரிழந்த நிர்வாகிகளின் உருவப் படம் திறப்பு என ஒரு நாள் முழுவதும் உடுமலைப்பேட்டையில் முகாமிட்டிருந்தார். உதயநிதி உடுமலைப்பேட்டை திடீர் விசிட் பின்னணியில் என்ன நடந்துள்ளது என திமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. காங்கேயம், தாராபுரம் மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகள்தான் திமுக-விடம் உள்ளது. இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தது 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதிலும், திமுக-வின் பொருளாளராக இருந்த சாதிக் பாட்ஷாவின் சொந்த ஊரான உடுமலைப்பேட்டை தொகுதியில் 25 ஆண்டுகளாக வெற்றிபெற முடியாததை கெளரவம் சம்பந்தப்பட்ட விசயமாக கட்சித் தலைமை பார்க்கிறது. இதனால், வரும் தேர்தலில் மற்ற தொகுதிகளைவிட உடுமலைப்பேட்டை தொகுதியை மிக மிக கவனமாக கையாள முடிவு செய்துள்ளது. உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம் இதற்காக கடந்த மாதம் உடுமலைப்பேட்டை தொகுதியில் முகாமிட்ட பென் டீம் உட்கட்சி பிரச்னை, யாரை வேட்பாளராக நிறுத்தலாம், வேட்பாளராக நிறுத்துவோர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா? தொகுதிக்குள் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு? போன்றவை குறித்து அலசி ஆராய்ந்து தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. மேலும், உளவுத்துறை தனியாகவும் கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அதில், உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் சுந்தர், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது. உடுமலைப்பேட்டையில் உட்கட்சி பிரச்னை தலைவிரித்து ஆடுவதால், அதிமுக-வை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமென்றால் பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்பதுதான் பென் டீம் மற்றும் உளவுத்துறை ரிப்போட்டாக உள்ளது. அதன்படி பார்த்தால், கட்சிக்காரர்கள் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லாதவரும், உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான வட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமாரைத்தான் தலைமை டிக் அடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. உதயநிதி ஏனென்றால், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் தேர்தலில் ஜெயக்குமாரைத்தான் உதயநிதி அறிவித்தார். ஆனால், சில உட்கட்சிப் பிரச்னையால், ஜெயக்குமார் தோற்கடிக்கப்பட்டார். தனது அணியில் இருக்கும் ஜெயக்குமாருக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென உதயநிதி விரும்புகிறார். அதன் பின்னணியில்தான் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான ஈஸ்வரசாமி அழைப்பை ஏற்று உடுமலைப்பேட்டைக்கு வந்த உதயநிதி, தனது ஆதரவாளர் என்பதைக் காட்டுவதற்காகவும், ஜெயக்குமாரை முன்னிலைப்படுத்துவதற்காகவும் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார். அத்துடன் வரும் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, கணியூரில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில், இதை உறுதிப்படுத்தும் வகையில் இளைஞரணிக்கு வரும் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என சூசகமாக உதயநிதி பேசினார். எதுவாக இருந்தாலும் நாமும் முயற்சித்து பார்ப்போம் என மறுபுறம் உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுசாமி ஆ.ராசா, எ.வ.வேலு மூலமும், ஷியாம் பிரசாத் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதன் மூலமும், அடிவள்ளி முரளி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை மூலமும் சீட் பெற தீவிரமாக முயன்று வருகின்றனர் என்கின்றர் விரிவாக.! Loading…

விகடன் 24 Feb 2026 2:49 pm

PEN ரிபோர்ட்; உதயநிதியின் கிரீன் சிக்னல்; உற்சாகத்தில் உடுமலை இளைஞரணி - திடீர் விசிட் பின்னணி!

திருப்பூர் மாவட்டத்தில் விஐபி தொகுதியாக கருதப்படும் உடுமலைப்பேட்டைதான் இப்போது, மாவட்ட திமுக-வுக்குள் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. 1996-க்குப் பிறகான 25 ஆண்டுகளில், இந்த தொகுதியில் நடைபெற்ற 5 தேர்தல்களிலும் திமுக ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. இதனால், வரும் 2026 தேர்தலில் எப்படியாவது உடுமலைப்பேட்டை தொகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்பது கட்சித் தலைமையின் உத்தரவு. குறிப்பாக உடுமலைப்பேட்டை தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனை வீழ்த்த வேண்டுமென்றால் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என திமுக தலைமை நினைக்கிறது. உதயநிதி இதற்காக வேட்பாளர் தேர்விலும் கட்சித் தலைமை கறார் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே, உடுமலைப்பேட்டைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம், இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் திறப்பு மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கியது, உயிரிழந்த நிர்வாகிகளின் உருவப் படம் திறப்பு என ஒரு நாள் முழுவதும் உடுமலைப்பேட்டையில் முகாமிட்டிருந்தார். உதயநிதி உடுமலைப்பேட்டை திடீர் விசிட் பின்னணியில் என்ன நடந்துள்ளது என திமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. காங்கேயம், தாராபுரம் மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகள்தான் திமுக-விடம் உள்ளது. இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தது 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதிலும், திமுக-வின் பொருளாளராக இருந்த சாதிக் பாட்ஷாவின் சொந்த ஊரான உடுமலைப்பேட்டை தொகுதியில் 25 ஆண்டுகளாக வெற்றிபெற முடியாததை கெளரவம் சம்பந்தப்பட்ட விசயமாக கட்சித் தலைமை பார்க்கிறது. இதனால், வரும் தேர்தலில் மற்ற தொகுதிகளைவிட உடுமலைப்பேட்டை தொகுதியை மிக மிக கவனமாக கையாள முடிவு செய்துள்ளது. உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம் இதற்காக கடந்த மாதம் உடுமலைப்பேட்டை தொகுதியில் முகாமிட்ட பென் டீம் உட்கட்சி பிரச்னை, யாரை வேட்பாளராக நிறுத்தலாம், வேட்பாளராக நிறுத்துவோர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா? தொகுதிக்குள் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு? போன்றவை குறித்து அலசி ஆராய்ந்து தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. மேலும், உளவுத்துறை தனியாகவும் கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அதில், உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் சுந்தர், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது. உடுமலைப்பேட்டையில் உட்கட்சி பிரச்னை தலைவிரித்து ஆடுவதால், அதிமுக-வை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமென்றால் பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்பதுதான் பென் டீம் மற்றும் உளவுத்துறை ரிப்போட்டாக உள்ளது. அதன்படி பார்த்தால், கட்சிக்காரர்கள் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லாதவரும், உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான வட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமாரைத்தான் தலைமை டிக் அடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. உதயநிதி ஏனென்றால், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் தேர்தலில் ஜெயக்குமாரைத்தான் உதயநிதி அறிவித்தார். ஆனால், சில உட்கட்சிப் பிரச்னையால், ஜெயக்குமார் தோற்கடிக்கப்பட்டார். தனது அணியில் இருக்கும் ஜெயக்குமாருக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென உதயநிதி விரும்புகிறார். அதன் பின்னணியில்தான் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான ஈஸ்வரசாமி அழைப்பை ஏற்று உடுமலைப்பேட்டைக்கு வந்த உதயநிதி, தனது ஆதரவாளர் என்பதைக் காட்டுவதற்காகவும், ஜெயக்குமாரை முன்னிலைப்படுத்துவதற்காகவும் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார். அத்துடன் வரும் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, கணியூரில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில், இதை உறுதிப்படுத்தும் வகையில் இளைஞரணிக்கு வரும் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என சூசகமாக உதயநிதி பேசினார். எதுவாக இருந்தாலும் நாமும் முயற்சித்து பார்ப்போம் என மறுபுறம் உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுசாமி ஆ.ராசா, எ.வ.வேலு மூலமும், ஷியாம் பிரசாத் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதன் மூலமும், அடிவள்ளி முரளி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை மூலமும் சீட் பெற தீவிரமாக முயன்று வருகின்றனர் என்கின்றர் விரிவாக.! Loading…

விகடன் 24 Feb 2026 2:49 pm

விஜய்க்காக அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்; தவெக தொண்டர் கைது; இன்ஸ்பெக்டரைக் கண்டித்த டிஐஜி

வே லூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் வந்த விஜய்க்கு வழிநெடுக த.வெ.க தொண்டர்களும், ரசிகர்களும் வரவேற்பு கொடுத்தனர். வெட்டுவாணம் சந்திப்புப் பகுதியில் த.வெ.க-வினர் திரண்டிருந்தபோது, விஜய்யின் அதிதீவிர தொண்டரான ஏழுமலை என்பவர் முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கி சாகசம் செய்தபடி விஜய்க்கு மாலை அணிவிப்பதற்காக வந்திருந்தார். இதற்கு காவல்துறை தரப்பில் இருந்து ஏழுமலை எந்தவித அனுமதியும் பெறவில்லை. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம் இதையடுத்து, த.வெ.க தொண்டர் ஏழுமலை மற்றும் கிரேன் உரிமையாளர் முனிரத்தினம் ஆகிய இருவர் மீதும் பள்ளிகொண்டா போலீஸார் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ததோடு கிரேனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த நிகழ்வின்போது, அங்கு பணியில் இருந்த பாகாயம் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி அவரை `காத்திருப்போர் பட்டியலில்’ வைக்க வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜன் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, டி.ஐ.ஜி முன்பு இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார். பிறகு பணியில் கவனமாக இருக்க அறிவுறுத்தி கண்டித்த டி.ஐ.ஜி தனது நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டாராம். `விதிமுறைகளை மீறிய தவெக-வினர்; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!’ - வேலூர் மாவட்டக் காவல்துறை

விகடன் 24 Feb 2026 2:23 pm

`எந்த பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல்... எங்கள் இலக்கு.!' - தேர்தலில் போட்டியிடாதது குறித்து தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% ஓர் அணியில் திரண்டு உள்ளோம். தீய சக்தி திமுக மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு உள்ளார்கள். யாரோ ஒரு சில பேர் ஒதுங்கி இருப்பவர்கள் விலகி இருப்பவர்கள் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைவார்கள். டி.டி.வி.தினகரன் எங்கள் கூட்டணியில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்... பேசினார்கள். அமமுக மற்றும் அதிமுகவின் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய அளவில் பாஜகவின் தலைமையும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் இணைந்திருக்கிறோம். டி.டி.வி.தினகரன் திமுகவிடம் 35 லிருந்து 40 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்பதோடு. கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள் என்பது எனக்கு வந்த தகவல், அது உண்மை. காங்கிரஸ், திமுக கூட்டணியில் தொடருமா என்பது தெரியவில்லை. தேசிய முஸ்லிம் லீக் காதர் மைதீன் ஏற்கனவே மூன்று தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். தற்போது இரண்டு தொகுதி தருவேன் என்று திமுக சொல்கிறார்கள். இதுபோன்ற நிலைமை எங்கள் கூட்டணியில் இல்லை. அமமுக , அதிமுக கட்சியில் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் கருத்து வேறுபாடுகளை கடந்து ஓர் அணியில் சேர்ந்துள்ளோம். டி.டி.வி.தினகரன் எங்கள் கட்சிக்கான தொகுதி பங்கீடு உடன்பாட்டை பாஜக மற்றும் அதிமுகவோடு பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. காரணம் எந்த ஒரு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. எந்த ஒரு சின்ன மன வருத்தமும் யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு. தொகுதி பங்கீடு சுமூகமாக முடிய வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக கட்சிக்கு தகுதியான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக மூலம் பெறுவோம் டி.டி.வி.தினகரன் பாஜக வலியுறுத்தல் படி அமமுக செயல்பட்டு, அதிமுக கூட்டணியில் நாங்கள் இடங்களை பெற்று வெற்றிகரமாக அமமுக வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள். ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைய வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு என்றார். Loading…

விகடன் 24 Feb 2026 1:40 pm

பீகார்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை; பாஜக கூட்டணி அரசு சொல்லும் காரணம் என்ன?

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி, அம்மாநிலத்தில் சில பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு அம்மாநில அரசு அதிரடித் தடைவிதித்துள்ளது. விஜய் குமார் சின்கா இதுகுறித்து பீகார் மாநில பா.ஜ.க தலைவரும், துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, ``குழந்தைகளிடையே வன்முறைப் போக்குகள் உருவாவதைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இறைச்சி விற்பனையை முறைப்படுத்துவதற்கான அரசின் முயற்சியின் ஒரு பகுதியே இது. யாருடைய உணவுப் பழக்க வழக்கங்களுக்கும் அரசு எதிராக இல்லை. ஆனால், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவோ அல்லது மக்களின் புனிதமான உணர்வுகளைப் புண்படுத்தவோ கூடாது. மக்கள் எவ்விதத் தளர்வும் இன்றி இந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை நடத்திய கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் புதிய முயற்சி பீகாரின் மாறிவரும் தன்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. எனவே, பீகார் நகராட்சி சட்டம் 2007-ன் படி, இறைச்சிக் கடை நடத்துவதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகும். புதிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் வியாபாரப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படும் எனக் காட்டமாகத் தெரிவித்தார். விஜய் குமார் சின்கா இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ``திறந்தவெளியில் இறைச்சி வெட்டுவதும் விற்பனை செய்வதும் மாசுபாட்டை உருவாக்குவதோடு தூய்மை விதிகளுக்கு எதிரானது என இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? ஏனெனில், ஆட்சி செய்வது என்பது தற்போது வெறும் நிர்வாகமாக மட்டும் இல்லாமல், மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எப்படி வாழ வேண்டும் மற்றும் யாருடைய கலாசாரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதைத் தீர்மானிக்கும் கட்டுப்பாடாக மாறி வருகிறது. Mandi IIT: `இறைச்சி சாப்பிடுவதால்தான் நிலச்சரிவு ஏற்படுகிறது!’ - ஐஐடி இயக்குநரின் சர்ச்சைப் பேச்சு பீகாரில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சமூக நல்லிணக்கத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால் நேர்மையாக ஒரு கேள்வியைக் கேட்போம். யாருடைய உணவுப் பழக்கவழக்கங்கள் இங்கே குறிவைக்கப்படுகின்றன? இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் என ஒவ்வொருவருக்கும் வரலாறு, புவியியல் மற்றும் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த தனித்துவமான உணவு மரபுகள் உள்ளன. இந்த உணவு முறைகளை அரசு மறைமுகமாக இழிவுபடுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முற்படும்போது, அது சுகாதாரத்தைப் பற்றியதாக இருப்பதில்லை. மாறாக அது கலாசாரக் கட்டுப்பாடாகவே மாறுகிறது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மொழி, நம்பிக்கை, உடை மற்றும் உணவில் நிலவும் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் வலிமை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனிமனிதத் தேர்விற்கான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. நிர்வாகம் என்பது பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, ஒற்றைத்தன்மையைத் திணிக்கக் கூடாது. பிரித்தாளும் அரசியலைத் தோற்கடிப்பது என்பது பாரதத்தின் ஆன்மாவைப் பாதுகாப்பதாகும். அங்கே ஒரு குடிமகன் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மற்றொருவர் தீர்மானிக்க முடியாது எனக் குறிப்பிட்டிருக்கிறார். இறைச்சி சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் -மராத்தியர் vs குஜராத்தியர் ஆக மாறிய தகராறு; பின்னணி என்ன?

விகடன் 24 Feb 2026 1:09 pm

பீகார்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை; பாஜக கூட்டணி அரசு சொல்லும் காரணம் என்ன?

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி, அம்மாநிலத்தில் சில பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு அம்மாநில அரசு அதிரடித் தடைவிதித்துள்ளது. விஜய் குமார் சின்கா இதுகுறித்து பீகார் மாநில பா.ஜ.க தலைவரும், துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, ``குழந்தைகளிடையே வன்முறைப் போக்குகள் உருவாவதைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இறைச்சி விற்பனையை முறைப்படுத்துவதற்கான அரசின் முயற்சியின் ஒரு பகுதியே இது. யாருடைய உணவுப் பழக்க வழக்கங்களுக்கும் அரசு எதிராக இல்லை. ஆனால், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவோ அல்லது மக்களின் புனிதமான உணர்வுகளைப் புண்படுத்தவோ கூடாது. மக்கள் எவ்விதத் தளர்வும் இன்றி இந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை நடத்திய கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் புதிய முயற்சி பீகாரின் மாறிவரும் தன்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. எனவே, பீகார் நகராட்சி சட்டம் 2007-ன் படி, இறைச்சிக் கடை நடத்துவதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகும். புதிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் வியாபாரப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படும் எனக் காட்டமாகத் தெரிவித்தார். விஜய் குமார் சின்கா இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ``திறந்தவெளியில் இறைச்சி வெட்டுவதும் விற்பனை செய்வதும் மாசுபாட்டை உருவாக்குவதோடு தூய்மை விதிகளுக்கு எதிரானது என இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? ஏனெனில், ஆட்சி செய்வது என்பது தற்போது வெறும் நிர்வாகமாக மட்டும் இல்லாமல், மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எப்படி வாழ வேண்டும் மற்றும் யாருடைய கலாசாரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதைத் தீர்மானிக்கும் கட்டுப்பாடாக மாறி வருகிறது. Mandi IIT: `இறைச்சி சாப்பிடுவதால்தான் நிலச்சரிவு ஏற்படுகிறது!’ - ஐஐடி இயக்குநரின் சர்ச்சைப் பேச்சு பீகாரில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சமூக நல்லிணக்கத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால் நேர்மையாக ஒரு கேள்வியைக் கேட்போம். யாருடைய உணவுப் பழக்கவழக்கங்கள் இங்கே குறிவைக்கப்படுகின்றன? இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் என ஒவ்வொருவருக்கும் வரலாறு, புவியியல் மற்றும் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த தனித்துவமான உணவு மரபுகள் உள்ளன. இந்த உணவு முறைகளை அரசு மறைமுகமாக இழிவுபடுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முற்படும்போது, அது சுகாதாரத்தைப் பற்றியதாக இருப்பதில்லை. மாறாக அது கலாசாரக் கட்டுப்பாடாகவே மாறுகிறது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மொழி, நம்பிக்கை, உடை மற்றும் உணவில் நிலவும் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் வலிமை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனிமனிதத் தேர்விற்கான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. நிர்வாகம் என்பது பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, ஒற்றைத்தன்மையைத் திணிக்கக் கூடாது. பிரித்தாளும் அரசியலைத் தோற்கடிப்பது என்பது பாரதத்தின் ஆன்மாவைப் பாதுகாப்பதாகும். அங்கே ஒரு குடிமகன் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மற்றொருவர் தீர்மானிக்க முடியாது எனக் குறிப்பிட்டிருக்கிறார். இறைச்சி சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் -மராத்தியர் vs குஜராத்தியர் ஆக மாறிய தகராறு; பின்னணி என்ன?

விகடன் 24 Feb 2026 1:09 pm

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 - 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது. இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி * பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்படும். * 12 ஆம் வகுப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். * மக்களின் சுமையைக் குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 தரப்படும். * நகரப்பகுதியில் நடைபாதை சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி * மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.8000 இருந்து 12,000 மாக உயர்த்தி வழங்கப்படும். * விசைத்தறி நெசவாளர்களுக்கு 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். Loading…

விகடன் 24 Feb 2026 12:37 pm

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 - 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது. இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி * பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்படும். * 12 ஆம் வகுப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். * மக்களின் சுமையைக் குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 தரப்படும். * நகரப்பகுதியில் நடைபாதை சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி * மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.8000 இருந்து 12,000 மாக உயர்த்தி வழங்கப்படும். * விசைத்தறி நெசவாளர்களுக்கு 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். Loading…

விகடன் 24 Feb 2026 12:37 pm

நெல்லை: “திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” - நயினார் நாகேந்திரன்

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாத சூழல் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட முருக பக்தர்கள் மத்தியில் ஒரு மன வருத்தம் நீடிக்கிறது. எனவே, அந்த மனக்குறையைப் போக்கிடவும் இறைவனை வேண்டிக்கொள்ளவும் விளக்கேற்றும் நிகழ்வினை ஒருங்கிணைத்துள்ளோம். தமிழகமெங்கும் வாழும் முருக பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் குத்துவிளக்கேற்றி ’கந்த சஷ்டி கவசம்’ படிக்க வேண்டுமென்று முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளோம். நயினார் நாகேந்திரன் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடுகள் மின்னல் வேகமா? முயல் வேகமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள்தான் இருக்கிறார்கள். புதிதாக யாரும் சேரவில்லை. தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துக்கள் மறைக்கப்படுகின்றன. அமைச்சர் நேரு உள்ளிட்ட பல அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவின் வழக்குகள் உள்ளன. நீதிமன்றமே சில அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூறியுள்ளது. நயினார் நாகேந்திரன் ஆனால், இந்த அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. பிரதமருக்கு எதிராக தென்காசியில் பேசிய முக்கியத் தலைவரை இதுவரை இந்த அரசு கைது செய்யவில்லை. ஆனால், பா.ஜ.கவினரைச் சிறிய காரணங்களுக்காகக் கூட கைது செய்கிறார்கள். விரைவில் எங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்போம். டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் எங்களுடன் இணைந்தே உள்ளனர். வரும் தேர்தலில் ஒரு பலமான மாற்றத்தை மக்கள் பார்ப்பார்கள்” என்றார். நடிகை குறித்த பேச்சு: `அன்றைக்கு தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது'- நயினார் நாகேந்திரன் வருத்தம்!

விகடன் 24 Feb 2026 12:25 pm

`விதிமுறைகளை மீறிய தவெக-வினர்; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!’ - வேலூர் மாவட்டக் காவல்துறை

வே லூர் அகரம்சேரியில், த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்று முப்பத்தைந்து நிமிடங்கள் பேசினார். அதற்கு முன்னதாக, காவல்துறையினர் அனுமதி கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்தியதாக த.வெ.க பொறுப்பாளர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது குற்றம்சாட்டியிருந்தனர். இந்த நிலையில், த.வெ.க-வினர் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் விதமாக வேலூர் மாவட்டக் காவல்துறை பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. விஜய் அதில், ``த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக மனு அளித்தபோதிலும், பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22-2-2026-ம் தேதி காவல்துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல், மனு அளிக்கப்பட்ட நான்கு நாள்களிலேயே உரிய அனுமதியும் வழங்கப்பட்டது. த.வெ.க கட்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, `காவல்துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதமாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது’ எனக் கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மேலும், த.வெ.க கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4,900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டக் காவல்துறை ஆனால், குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இச்செயலானது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறியதாகும். எனினும், காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விகடன் 24 Feb 2026 11:53 am

`மேடை ஏறலாம், வசனம் பேசலாம்... ஆனால்.!' - விஜய்க்கு வானதி சீனிவாசன் சவால்

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசு அதை நிறைவேற்றாமல் இருக்கிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவினர் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர். வானதி சீனிவாசன் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று பொய்யான காரணங்களை கூறுகிறார்கள். தமிழர்களின் அடையாளங்களை அழிக்கிற விதமாக திராவிட மாடல் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக-வினரின் நோக்கமே இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும், இந்து கோயில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக் கூடாது என்பது தான். அது அவர்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது. ஆன்மிக நம்பிக்கையை எந்த அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முதல்வர் ஸ்டாலின் ஊழல்வாதிகளை மிரட்டி தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். இவ்வளவு பேசும் முதலமைச்சர் அவரது அமைச்சரவையில் உள்ள கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது ஊழலாக தெரியவில்லையா. முதலமைச்சர் தன் அருகில் இருப்பவர்களை பார்த்துவிட்டு பேசினால் நியாயமாக இருக்கும். ஊழல் வழக்கிற்காக பதவியில் இருந்த அமைச்சரை வீட்டிற்கு அனுப்பிய பெருமைக்குரியவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவருக்கு எங்களை பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. விஜய் விஜய் என்னதான் புது புது வார்த்தைகளால் பேசினாலும், அல்டிமேட்டாக திமுகவை வீழ்த்தப் போவது தேஜகூ தான். மேடை ஏறலாம், வசனம் பேசலாம், கூட்டத்தையும் காட்டலாம். ஆனால் திமுகவை வீழ்த்தும் சக்தி எங்களுக்கு தான் இருக்கிறது” என்றார். Loading…

விகடன் 24 Feb 2026 11:29 am

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடக்கத்தில் இந்தத் தடத்தில் நாளொன்றுக்கு 204 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் பணிகளுக்காக இது முதற்கட்டமாக 164 ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பராமரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், ரயில் சேவைகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, தற்போது வெறும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, வழக்கமான சேவையில் பாதியளவு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. Chennai Rail இந்த மாற்றங்கள் எழும்பூர் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்டவை எனத் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மெட்ரோ ரயில், பேருந்து போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு ஏப்ரல் 5 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காகச் சில முக்கிய நிலையங்களுக்கு இடையே 'கட் சர்வீஸ்' ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூர் - பரங்கிமலை, எழும்பூர் - கூடுவாஞ்சேரி, எழும்பூர் - செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறைவான ரயில்களால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து வரும் பயணிகளுக்கு, இந்தச் சேவைக் குறைப்பு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் முடியும் வரை இந்த மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு; `QR code' டிக்கெட் சேவை பாதிப்பு; CMRL அறிவுரை

விகடன் 24 Feb 2026 8:31 am

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடக்கத்தில் இந்தத் தடத்தில் நாளொன்றுக்கு 204 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் பணிகளுக்காக இது முதற்கட்டமாக 164 ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பராமரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், ரயில் சேவைகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, தற்போது வெறும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, வழக்கமான சேவையில் பாதியளவு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. Chennai Rail இந்த மாற்றங்கள் எழும்பூர் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்டவை எனத் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மெட்ரோ ரயில், பேருந்து போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு ஏப்ரல் 5 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காகச் சில முக்கிய நிலையங்களுக்கு இடையே 'கட் சர்வீஸ்' ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூர் - பரங்கிமலை, எழும்பூர் - கூடுவாஞ்சேரி, எழும்பூர் - செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறைவான ரயில்களால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து வரும் பயணிகளுக்கு, இந்தச் சேவைக் குறைப்பு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் முடியும் வரை இந்த மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு; `QR code' டிக்கெட் சேவை பாதிப்பு; CMRL அறிவுரை

விகடன் 24 Feb 2026 8:31 am

`சட்டசபைத் தேர்தலில் கட்டம் யாருக்குச் சாதகம்?' - பாஜக-வுக்கு ஜோதிடம் சொன்ன திமுக!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. இடைக்கால பட்ஜெட்டுடன் நிறைவடைந்த இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரஸ்யங்களும் அரங்கேறி உள்ளது. அப்படி சட்டபேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பா.ஜ.க-வினருக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே நடந்த விவாதம் இப்போது வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.  உடனே தி.மு.க வின் அமைச்சர் சேகர்பாபு எழுந்து, “இதையேத்தான் 2021 ஆம் ஆண்டு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். அந்தக் கட்டத்தை எல்லாம் உடைத்தெறிந்து வியூக வலையை அறுத்தெறிந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அன்றைக்கு கட்டத்திற்கே கட்டத்தைப் போட்டவர். இன்றைக்கு கிரகப் பலன்கள் அனைத்தும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு இருக்கின்றது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், தமிழ்க் கடவுள் முருகன் எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களோடு கைகோத்துக் கொண்டிருக்கின்றார். கிரகங்கள் எதுவும் எங்களைச் செய்யாது. சேகர் பாபு மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு 2026 ஆம் ஆண்டு முதல்வர் நாற்காலியிலே எங்கள் முதல்வர்தான் மீண்டும் அமர்வார். நம்முடைய நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சட்டமன்றத்திற்கு வருவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன” என்று பதிலடி கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரன் தொடர்ந்து தங்கம் தென்னரசு பேசும்போது, “அடிப்படையிலே எனக்கு கிரக நிலையிலேயே நம்பிக்கை இல்லை. இருந்தாலும்கூட மாண்புமிகு உறுப்பினர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு அதிலே நிறைந்த நம்பிக்கை இருக்கக்கூடிய காரணத்தினால் அவருடைய பாணியிலே அதற்கு பதில் சொல்லவேண்டுமென்றால், கிரக நிலையைப் பொறுத்தமட்டிலே உங்களுக்கு அஷ்டமத்திலே சனி இருக்கிறது, எங்களுக்கு ஒன்பதிலே குரு இருக்கிறது” என்று ஜோதிடர் பாணியில் பதில் சொல்ல, உடனே எழுந்த பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “நிதி அமைச்சர் அவர்கள் ஒன்றை ஒத்துக்கொண்டுவிட்டார். நம்பிக்கை இல்லை என்று சொல்லி தினசரி அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அஷ்டமத்தில் சனி என்று சரி-ஆகச் சொல்கிறார். அதாவது அஷ்டமத்தில் சனி இருந்தாலும், எனக்கு குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதை நிதி அமைச்சர் அவர்கள் மறந்துவிட்டார்.” என்று இவரும் பதில் அளிக்க சபையில் சிரிப்பலை எழுந்தது.  இதற்கு தங்கம் தென்னரசு, “நான் அவருக்கு அஷ்டமத்தில் சனி இருக்கிறது என்று சொன்னால், நான் அவருக்கு என்று தனிப்பட்ட வகையிலே சொல்லவில்லை, நான் அரசியல்ரீதியாகவே சொன்னேன். தங்கம் தென்னரசு அதை அவரே ஏற்றுக்கொண்டு இங்கே அதற்கு ஒப்புதல் தருகிறார்.” என்று கூற... மறுபுறம் நயினார் நாகேந்திரன் எழுந்து, “தப்பித்தோம், பிழைத்தோம் என்று அல்ல! நிச்சயமாக இறைவனுடைய பிராப்தம் இருந்தால் நாம் எல்லோரும் இங்கு எதிர்க்கட்சிகளாக அல்லது ஆளுங்கட்சிகளாக சந்திக்கின்ற வாய்ப்பு இருந்தால் இன்னும் சொல்லப்போனால் அதையும்தாண்டி பல்வேறு மனக்கருத்துகள், மன மாட்சிமைகள் இருந்தால்கூட தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்” என்று சொல்லி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜோதிடத்தை நம்பாத பகுத்தறிவு பேசும் தி.மு.க-வும் , ஆன்மிகத்தை தங்கள் அரசியலின் பங்காக கடைபிடித்துவரும் பா.ஜ.க-வும் ஒரே நேரத்தில் இறுதி  சட்டசபை கூட்டத்தில் கலகலப்பாகப் பேசியது வரவேற்கக்கூடிய செய்தியாக இப்போது மாறியுள்ளது. 

விகடன் 23 Feb 2026 7:46 pm

`சட்டசபைத் தேர்தலில் கட்டம் யாருக்குச் சாதகம்?' - பாஜக-வுக்கு ஜோதிடம் சொன்ன திமுக!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. இடைக்கால பட்ஜெட்டுடன் நிறைவடைந்த இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரஸ்யங்களும் அரங்கேறி உள்ளது. அப்படி சட்டபேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பா.ஜ.க-வினருக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே நடந்த விவாதம் இப்போது வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.  சட்டமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசும்போது, ``இந்த ஆட்சியினுடைய இறுதி கட்டம் என்று பேசியிருக்கிறார். இதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்கும்போது, “இது ஆட்சியினுடைய இறுதி அல்ல, எதிர்காலத்தின் உறுதி” என்று சொன்னார். இந்த விவாதத்தில் பங்கேற்ற பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “என்னைப் பொறுத்தமட்டிலும் காலங்கள் செய்யாததை கிரகங்கள் செய்யும். அந்தக் கிரகங்கள் இப்போது யார் பக்கத்தில் இருக்கிறது என்று தெரியாது. நேற்று அங்கு இருந்தவர்கள் இன்று இங்கு இருக்கிறார்கள். இன்று இங்கு இருப்பவர்கள் நாளைக்கு அங்கு வரலாம். எல்லாம் இறைவனுடைய தீர்ப்பு, மக்களுடைய தீர்ப்பு” என்று பதில் அளித்தார்.  உடனே தி.மு.க வின் அமைச்சர் சேகர்பாபு எழுந்து, “இதையேத்தான் 2021 ஆம் ஆண்டு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். அந்தக் கட்டத்தை எல்லாம் உடைத்தெறிந்து வியூக வலையை அறுத்தெறிந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அன்றைக்கு கட்டத்திற்கே கட்டத்தைப் போட்டவர். இன்றைக்கு கிரகப் பலன்கள் அனைத்தும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு இருக்கின்றது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், தமிழ்க் கடவுள் முருகன் எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களோடு கைகோத்துக் கொண்டிருக்கின்றார். கிரகங்கள் எதுவும் எங்களைச் செய்யாது. சேகர் பாபு மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு 2026 ஆம் ஆண்டு முதல்வர் நாற்காலியிலே எங்கள் முதல்வர்தான் மீண்டும் அமர்வார். நம்முடைய நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சட்டமன்றத்திற்கு வருவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன” என்று பதிலடி கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரன் தொடர்ந்து தங்கம் தென்னரசு பேசும்போது, “அடிப்படையிலே எனக்கு கிரக நிலையிலேயே நம்பிக்கை இல்லை. இருந்தாலும்கூட மாண்புமிகு உறுப்பினர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு அதிலே நிறைந்த நம்பிக்கை இருக்கக்கூடிய காரணத்தினால் அவருடைய பாணியிலே அதற்கு பதில் சொல்லவேண்டுமென்றால், கிரக நிலையைப் பொறுத்தமட்டிலே உங்களுக்கு அஷ்டமத்திலே சனி இருக்கிறது, எங்களுக்கு ஒன்பதிலே குரு இருக்கிறது” என்று ஜோதிடர் பாணியில் பதில் சொல்ல, உடனே எழுந்த பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “நிதி அமைச்சர் அவர்கள் ஒன்றை ஒத்துக்கொண்டுவிட்டார். நம்பிக்கை இல்லை என்று சொல்லி தினசரி அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அஷ்டமத்தில் சனி என்று சரி-ஆகச் சொல்கிறார். அதாவது அஷ்டமத்தில் சனி இருந்தாலும், எனக்கு குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதை நிதி அமைச்சர் அவர்கள் மறந்துவிட்டார்.” என்று இவரும் பதில் அளிக்க சபையில் சிரிப்பலை எழுந்தது.  இதற்கு தங்கம் தென்னரசு, “நான் அவருக்கு அஷ்டமத்தில் சனி இருக்கிறது என்று சொன்னால், நான் அவருக்கு என்று தனிப்பட்ட வகையிலே சொல்லவில்லை, நான் அரசியல்ரீதியாகவே சொன்னேன். தங்கம் தென்னரசு அதை அவரே ஏற்றுக்கொண்டு இங்கே அதற்கு ஒப்புதல் தருகிறார்.” என்று கூற... மறுபுறம் நயினார் நாகேந்திரன் எழுந்து, “தப்பித்தோம், பிழைத்தோம் என்று அல்ல! நிச்சயமாக இறைவனுடைய பிராப்தம் இருந்தால் நாம் எல்லோரும் இங்கு எதிர்க்கட்சிகளாக அல்லது ஆளுங்கட்சிகளாக சந்திக்கின்ற வாய்ப்பு இருந்தால் இன்னும் சொல்லப்போனால் அதையும்தாண்டி பல்வேறு மனக்கருத்துகள், மன மாட்சிமைகள் இருந்தால்கூட தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்” என்று சொல்லி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜோதிடத்தை நம்பாத பகுத்தறிவு பேசும் தி.மு.க-வும் , ஆன்மிகத்தை தங்கள் அரசியலின் பங்காக கடைபிடித்துவரும் பா.ஜ.க-வும் ஒரே நேரத்தில் இறுதி  சட்டசபை கூட்டத்தில் கலகலப்பாகப் பேசியது வரவேற்கக்கூடிய செய்தியாக இப்போது மாறியுள்ளது. 

விகடன் 23 Feb 2026 7:46 pm

கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !

தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள்

விகடன் 23 Feb 2026 5:45 pm

கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !

தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள்

விகடன் 23 Feb 2026 5:45 pm

``திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்! - அறநிலையத்துறை

திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு விழா  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் பொறுப்பேற்றது முதல் 22.02.2026 வரை, 20 முதல் 400 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4,332 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. திருப்பணி 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 29,479 திருப்பணிகளுள் ரூ.4,346 கோடி மதிப்பீட்டிலான 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் நன்கொடையாளர் நிதி மூலம் ரூ.2,000.87 கோடி மதிப்பீட்டில் 12,220 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு அகற்றுதல் / நிலங்கள் அளவீடு திராவிட நாயகர் ஆட்சியில், 1,055 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ .8,436.31 கோடி மதிப்பிலான 8,107.03 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நவீன ரோவர் கருவிகள் (DGPS) மூலம் 2,38,060.24 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1,50,221 எல்லைக் கற்கள் நடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் திருக்கோயில்களில் திருப்பணி  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணி  கிராமப்புறத் திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் திருப்பணி ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் திட்டத்தில், அரசு நிதி ரூ.425 கோடி, திருக்கோயில் நிதி, நன்கொடையாளர் நிதி, பொதுநலநிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 88 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன. பெருந்திட்ட வரைவுப் பணி (Master Plan) திருச்செந்தூர், சமயபுரம், இராமேஸ்வரம், பழநி, அழகர்கோவில், மருதமலை, திருவேற்காடு, பெரியபாளையம், சிறுவாபுரி உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் பெருந்திட்ட வரைவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கம்பிவட ஊர்திகள் மற்றும் மின்தூக்கிகள் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயிலில் ரூ.20.30 கோடி செலவிலும், கரூர் மாவட்டம், அய்யர்மலை, அருள்மிகு இரத்தனகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.9.10 கோடி செலவிலும், கம்பிவட ஊர்திகளும், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.5.20 கோடி செலவில் மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளன. பழனி மலை மற்றும் இடும்பன் மலை இடையே ரூ.90 கோடி மதிப்பீட்டிலும், அனுவாவியில் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், திருநீர்மலையில் ரூ.19.60 கோடி மதிப்பீட்டிலும், திருக்கழுக்குன்றத்தில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டிலும், திருப்பரங்குன்றம் அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.32.18 கோடி மதிப்பீட்டிலும் கம்பி வட ஊர்திகளும், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் : 2 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 12 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 14 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ.120 கோடி செலவிடப்படுவதோடு, சுமார் 3.65 கோடி பக்தர்கள் பயன்பெறுகின்றனர். தங்க முதலீட்டுத் திட்டம் இருக்கன்குடி, பெரியபாளையம், சமயபுரம், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 21 திருக்கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு 1,074 கிலோ 123 கிராம் தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டு வட்டியாக 17 கோடியே 81 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் திருக்கோயில்களுக்கு வருமானம் கிடைக்கிறது. ஆன்மிகப் பயணம் 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9.94 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.40,000-லிருந்து ரூ.1 இலட்சமாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.10,000-லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்குச் 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை மற்றும் பட்டு வேட்டி உட்பட ரூ.70,000/- மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருக்கோயில்களின் சார்பாக 2,800 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ .335 கோடியில் ஒருகால பூசை திட்டம் ஒருகால பூசை கூடச் செய்திட முடியாத, நிதிவசதி இல்லாத 12,959 திருக்கோயில்களுக்கான வைப்பு நிதி தலாரூ.1 இலட்சத்திலிருந்து, ரூ. 2 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், 5,041 திருக்கோயில்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டன. தற்போது ஒருகால பூஜைத் திட்டத்திலுள்ள 19,000 திருக்கோயில்களுக்கும் வைப்பு நிதி ரூ.2.50 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்திற்காக மட்டும் இதுவரை ரூ. 335 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஒருகால பூசை திட்டத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஊக்கத் தொகை ரூ.1,500/–ஆக உயர்த்தப்பட்டு 19,000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 1,500 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.  19,000 ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூசை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடுதல் திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணம், கட்டடக்கலை, கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டு; மேலும் 300 நூல்கள் மறுபதிப்பு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி மற்றும் பெண் ஓதுவார்கள் நியமனம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உன்னத திட்டமாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்படி, 29 பேர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி நியமனம் செய்யப்பட்ட 46 ஓதுவார்களில் 12 ஓதுவார்கள் பெண்கள் ஆகும். நாள் முழுவதும் பிரசாதம் இவ்வரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 30 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2024 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. யுனெஸ்கோ விருது தஞ்சை மாவட்டம், கும்பகோணம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டடக் கலையினைப் பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் திருக்கோயிலைப் புனரமைத்தற்காக கலாச்சாரப் பாரம்பரிய யுனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்கு கற்கோயில் அய்யன் திருவள்ளுவரைப் போற்றும் வகையில் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணி ரூ.19.17 கோடியில் கற்கோயிலாகக் கட்டப்பட்டு வருகிறது. தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் நாகை மாவட்டம். வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அருள்மிகு ஒளவையார் திருக்கோயிலில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு இவ்வரசு பொறுப்பேற்ற பின் திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்கள் உள்பட 294 திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 விழுக்காடு பங்குத் தொகையாக வழங்கப்படுகிறது. 14 போற்றி நூல்களை பதிப்பிக்கச் செய்து மேலும் வலு சேர்த்துள்ளது. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலைகளை நிறுவுதல் கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ. 110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம், அடிப்படை வசதிகளுடன் அருங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதியதாக 184 அடி உயர முருகன் சிலையும், ஈரோடு மாவட்டம், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக 180 அடி உயர முருகன் சிலையும், இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், குமரகிரி, திமிரி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் புதியதாக 114 அடி உயர முருகன் சிலையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுக்கும் பணி திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடற்கரை பரப்பினை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் பொருட்டும், புனித நீராடும் பக்தர்களின் நலன் கருதியும், நீர்வளத்துறையின் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு மூலம், ரூ.15 கோடி அரசு நிதி மற்றும் ரூ.15 கோடி திருக்கோயில் நிதி ஆக மொத்தம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பணியாளர் நியமனங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி ஆணையர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 பேர் உட்பட, 944 பேருக்கும், நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் 946 அலுவலர்களுக்கும், கருணை அடிப்படையில் 34 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,351 பணியாளர்கள் பணிவரன்முறைப்படுத்தப்பட்டுள்ளனர். திருக்கோயில் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அர்ச்சர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடைகள் மற்றும் சீருடைகள், ரூ.221 கோடி மதிப்பீட்டில் 616 குடியிருப்புகள், திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 ஆகவும் உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை, குடும்ப நலநிதி ரூ.4 இலட்சமாக உயர்வு, ஆண்டிற்கு ஒருமுறை முழு உடற் பரிசோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வள்ளலார் முப்பெரும் விழா & அனைத்துலக வள்ளலார் மாநாடு ரூ. 3.25 கோடி அரசு நிதியில் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு, ஓராண்டு காலம் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், வடலூரில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் வகையில் 15.02.2026 அன்று சென்னை, கீழ்ப்பாக்கத்தில், அனைத்துலக வள்ளலார் மாநாடு வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை திட்டங்களுக்கு அரசு நிதி : மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதியாக ரூ.1,187.83 கோடி வழங்கப்பட்டுள்ளது.

விகடன் 23 Feb 2026 5:05 pm

``திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்! - அறநிலையத்துறை

திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு விழா  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் பொறுப்பேற்றது முதல் 22.02.2026 வரை, 20 முதல் 400 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4,332 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. திருப்பணி 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 29,479 திருப்பணிகளுள் ரூ.4,346 கோடி மதிப்பீட்டிலான 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் நன்கொடையாளர் நிதி மூலம் ரூ.2,000.87 கோடி மதிப்பீட்டில் 12,220 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு அகற்றுதல் / நிலங்கள் அளவீடு திராவிட நாயகர் ஆட்சியில், 1,055 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ .8,436.31 கோடி மதிப்பிலான 8,107.03 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நவீன ரோவர் கருவிகள் (DGPS) மூலம் 2,38,060.24 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1,50,221 எல்லைக் கற்கள் நடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் திருக்கோயில்களில் திருப்பணி  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணி  கிராமப்புறத் திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் திருப்பணி ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் திட்டத்தில், அரசு நிதி ரூ.425 கோடி, திருக்கோயில் நிதி, நன்கொடையாளர் நிதி, பொதுநலநிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 88 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன. பெருந்திட்ட வரைவுப் பணி (Master Plan) திருச்செந்தூர், சமயபுரம், இராமேஸ்வரம், பழநி, அழகர்கோவில், மருதமலை, திருவேற்காடு, பெரியபாளையம், சிறுவாபுரி உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் பெருந்திட்ட வரைவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கம்பிவட ஊர்திகள் மற்றும் மின்தூக்கிகள் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயிலில் ரூ.20.30 கோடி செலவிலும், கரூர் மாவட்டம், அய்யர்மலை, அருள்மிகு இரத்தனகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.9.10 கோடி செலவிலும், கம்பிவட ஊர்திகளும், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.5.20 கோடி செலவில் மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளன. பழனி மலை மற்றும் இடும்பன் மலை இடையே ரூ.90 கோடி மதிப்பீட்டிலும், அனுவாவியில் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், திருநீர்மலையில் ரூ.19.60 கோடி மதிப்பீட்டிலும், திருக்கழுக்குன்றத்தில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டிலும், திருப்பரங்குன்றம் அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.32.18 கோடி மதிப்பீட்டிலும் கம்பி வட ஊர்திகளும், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் : 2 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 12 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 14 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ.120 கோடி செலவிடப்படுவதோடு, சுமார் 3.65 கோடி பக்தர்கள் பயன்பெறுகின்றனர். தங்க முதலீட்டுத் திட்டம் இருக்கன்குடி, பெரியபாளையம், சமயபுரம், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 21 திருக்கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு 1,074 கிலோ 123 கிராம் தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டு வட்டியாக 17 கோடியே 81 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் திருக்கோயில்களுக்கு வருமானம் கிடைக்கிறது. ஆன்மிகப் பயணம் 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9.94 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.40,000-லிருந்து ரூ.1 இலட்சமாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.10,000-லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்குச் 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை மற்றும் பட்டு வேட்டி உட்பட ரூ.70,000/- மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருக்கோயில்களின் சார்பாக 2,800 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ .335 கோடியில் ஒருகால பூசை திட்டம் ஒருகால பூசை கூடச் செய்திட முடியாத, நிதிவசதி இல்லாத 12,959 திருக்கோயில்களுக்கான வைப்பு நிதி தலாரூ.1 இலட்சத்திலிருந்து, ரூ. 2 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், 5,041 திருக்கோயில்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டன. தற்போது ஒருகால பூஜைத் திட்டத்திலுள்ள 19,000 திருக்கோயில்களுக்கும் வைப்பு நிதி ரூ.2.50 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்திற்காக மட்டும் இதுவரை ரூ. 335 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஒருகால பூசை திட்டத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஊக்கத் தொகை ரூ.1,500/–ஆக உயர்த்தப்பட்டு 19,000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 1,500 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.  19,000 ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூசை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடுதல் திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணம், கட்டடக்கலை, கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டு; மேலும் 300 நூல்கள் மறுபதிப்பு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி மற்றும் பெண் ஓதுவார்கள் நியமனம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உன்னத திட்டமாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்படி, 29 பேர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி நியமனம் செய்யப்பட்ட 46 ஓதுவார்களில் 12 ஓதுவார்கள் பெண்கள் ஆகும். நாள் முழுவதும் பிரசாதம் இவ்வரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 30 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2024 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. யுனெஸ்கோ விருது தஞ்சை மாவட்டம், கும்பகோணம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டடக் கலையினைப் பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் திருக்கோயிலைப் புனரமைத்தற்காக கலாச்சாரப் பாரம்பரிய யுனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்கு கற்கோயில் அய்யன் திருவள்ளுவரைப் போற்றும் வகையில் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணி ரூ.19.17 கோடியில் கற்கோயிலாகக் கட்டப்பட்டு வருகிறது. தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் நாகை மாவட்டம். வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அருள்மிகு ஒளவையார் திருக்கோயிலில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு இவ்வரசு பொறுப்பேற்ற பின் திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்கள் உள்பட 294 திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 விழுக்காடு பங்குத் தொகையாக வழங்கப்படுகிறது. 14 போற்றி நூல்களை பதிப்பிக்கச் செய்து மேலும் வலு சேர்த்துள்ளது. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலைகளை நிறுவுதல் கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ. 110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம், அடிப்படை வசதிகளுடன் அருங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதியதாக 184 அடி உயர முருகன் சிலையும், ஈரோடு மாவட்டம், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக 180 அடி உயர முருகன் சிலையும், இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், குமரகிரி, திமிரி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் புதியதாக 114 அடி உயர முருகன் சிலையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுக்கும் பணி திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடற்கரை பரப்பினை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் பொருட்டும், புனித நீராடும் பக்தர்களின் நலன் கருதியும், நீர்வளத்துறையின் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு மூலம், ரூ.15 கோடி அரசு நிதி மற்றும் ரூ.15 கோடி திருக்கோயில் நிதி ஆக மொத்தம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பணியாளர் நியமனங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி ஆணையர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 பேர் உட்பட, 944 பேருக்கும், நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் 946 அலுவலர்களுக்கும், கருணை அடிப்படையில் 34 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,351 பணியாளர்கள் பணிவரன்முறைப்படுத்தப்பட்டுள்ளனர். திருக்கோயில் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அர்ச்சர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடைகள் மற்றும் சீருடைகள், ரூ.221 கோடி மதிப்பீட்டில் 616 குடியிருப்புகள், திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 ஆகவும் உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை, குடும்ப நலநிதி ரூ.4 இலட்சமாக உயர்வு, ஆண்டிற்கு ஒருமுறை முழு உடற் பரிசோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வள்ளலார் முப்பெரும் விழா & அனைத்துலக வள்ளலார் மாநாடு ரூ. 3.25 கோடி அரசு நிதியில் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு, ஓராண்டு காலம் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், வடலூரில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் வகையில் 15.02.2026 அன்று சென்னை, கீழ்ப்பாக்கத்தில், அனைத்துலக வள்ளலார் மாநாடு வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை திட்டங்களுக்கு அரசு நிதி : மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதியாக ரூ.1,187.83 கோடி வழங்கப்பட்டுள்ளது.

விகடன் 23 Feb 2026 5:05 pm

SIR: வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி?!

கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் அந்த வகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது. இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925 பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617 SIRக்கு பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம். https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலத்தை பதிவு செய்து தேடலாம். அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து பெயர் இருப்பதை அறியலாம். வாக்காளர் பட்டியல் திருத்தம் மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம். பெயர் இருந்தால் ‘View Details’ பகுதியில் முழு விவரங்களை காண முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விகடன் 23 Feb 2026 4:50 pm

SIR: வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி?!

கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் அந்த வகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது. இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925 பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617 SIRக்கு பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம். https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலத்தை பதிவு செய்து தேடலாம். அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து பெயர் இருப்பதை அறியலாம். வாக்காளர் பட்டியல் திருத்தம் மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம். பெயர் இருந்தால் ‘View Details’ பகுதியில் முழு விவரங்களை காண முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விகடன் 23 Feb 2026 4:50 pm

உதயநிதி கலந்துகொண்ட மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் - Photo Album

மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம்

விகடன் 23 Feb 2026 4:47 pm