திருவையாறு: சேதமடைந்த சாக்கடை - சாலை; நிலவும் சுகாதார சீர்கேடு; அலட்சியம் தவிர்ப்பார்களா அதிகாரிகள்?
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மேல வீதியில் உள்ள சாக்கடை உடைந்து 8 மாதங்களாகியும் சரி செய்யவில்லை என்று குறைபடும் பொதுமக்கள், அதை உடனடியாகச் சீரமைத்து சுகாதாரத்தை உறுதிசெய்ய கோரிக்கை விடுத்தது வருகிகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், ``இந்தச் சாலையை ஒட்டி அமைஞ்சிருக்க சாக்கடை உடைஞ்சு மாசக்கணக்குல சுகாதார சீர்கேடு நிலவிட்டு இருக்குது. இதைப் பத்தி எட்டு மாசமா நிறைய பேர் கேட்டுட்டுப் போறாங்க. ஆனா யாருமே இதை சரி செய்ய முன் வரவே இல்ல. இங்க 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்குறோம். இந்தச் சாக்கடை ஆரம்பத்திலேயே திறந்த வெளியாகத்தான் இருந்துச்சு. தினமும் இந்தச் சாலையைக் கடக்கும்போது வரும் துர்நாற்றம் மயக்கமே வர்ற மாதிரி இருக்கும். கிட்டத்தட்ட எட்டு மாசமா இந்தச் சாக்கடை இப்படியேதான் கிடக்கு. அதைக்கூட தாங்கிக்கிட்டு இருந்துட்டோம். ஆனா... இப்போ அந்தச் சாக்கடையை ஒட்டி உள்ள சாலையும் உடைஞ்சுட்டே வருது. பாதிக்குப் பாதி உடைஞ்சு போயிருச்சு. குழந்தைகளுக்கும் ஆபத்தான நிலை: இந்தச் சாலை இப்படி இருக்குறதால எங்க குழந்தைகளை தனியாக விடவே பயமா இருக்கு. எங்களுக்கு இதை விட்டா வேற வழியே இல்லை. இந்தச் சாலையைக் கடந்துதான் நாங்க பேருந்து நிலையத்திற்குப் போகணும். இப்படி உடைஞ்சு கிடக்குற சாக்கடை சாலையை கடந்துதான் பிள்ளைங்க பள்ளிக்கூடங்களுக்குப் போயிட்டு வர்றாங்க. தொற்று ஏற்படும் அபாயம்: அதுமட்டுமல்லாம இந்தச் சாக்கடை திறந்த வெளியில் இருக்குறதால, கொசு தொல்லையும், மழை பெய்தால் வர்ற துர்நாற்றமும் நோய் பரவல் பாதிப்பை ஏற்படுத்திடுமோன்னு பிள்ளைகளை வெச்சுட்டு பயந்துகிட்டு இருக்கோம். இது குறித்து எங்க பகுதி கவுன்சிலர் நாகராஜன் கிட்ட கோரிக்கை வெச்சுருக்கோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்குறதா சொல்லிருக்காரு. இனியும் அதிகாரிங்க அலட்சியம் காட்டாம உடனே உரிய நடவடிக்கை எடுக்கணும் என்றனர்.
திருவையாறு: சேதமடைந்த சாக்கடை - சாலை; நிலவும் சுகாதார சீர்கேடு; அலட்சியம் தவிர்ப்பார்களா அதிகாரிகள்?
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மேல வீதியில் உள்ள சாக்கடை உடைந்து 8 மாதங்களாகியும் சரி செய்யவில்லை என்று குறைபடும் பொதுமக்கள், அதை உடனடியாகச் சீரமைத்து சுகாதாரத்தை உறுதிசெய்ய கோரிக்கை விடுத்தது வருகிகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், ``இந்தச் சாலையை ஒட்டி அமைஞ்சிருக்க சாக்கடை உடைஞ்சு மாசக்கணக்குல சுகாதார சீர்கேடு நிலவிட்டு இருக்குது. இதைப் பத்தி எட்டு மாசமா நிறைய பேர் கேட்டுட்டுப் போறாங்க. ஆனா யாருமே இதை சரி செய்ய முன் வரவே இல்ல. இங்க 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்குறோம். இந்தச் சாக்கடை ஆரம்பத்திலேயே திறந்த வெளியாகத்தான் இருந்துச்சு. தினமும் இந்தச் சாலையைக் கடக்கும்போது வரும் துர்நாற்றம் மயக்கமே வர்ற மாதிரி இருக்கும். கிட்டத்தட்ட எட்டு மாசமா இந்தச் சாக்கடை இப்படியேதான் கிடக்கு. அதைக்கூட தாங்கிக்கிட்டு இருந்துட்டோம். ஆனா... இப்போ அந்தச் சாக்கடையை ஒட்டி உள்ள சாலையும் உடைஞ்சுட்டே வருது. பாதிக்குப் பாதி உடைஞ்சு போயிருச்சு. குழந்தைகளுக்கும் ஆபத்தான நிலை: இந்தச் சாலை இப்படி இருக்குறதால எங்க குழந்தைகளை தனியாக விடவே பயமா இருக்கு. எங்களுக்கு இதை விட்டா வேற வழியே இல்லை. இந்தச் சாலையைக் கடந்துதான் நாங்க பேருந்து நிலையத்திற்குப் போகணும். இப்படி உடைஞ்சு கிடக்குற சாக்கடை சாலையை கடந்துதான் பிள்ளைங்க பள்ளிக்கூடங்களுக்குப் போயிட்டு வர்றாங்க. தொற்று ஏற்படும் அபாயம்: அதுமட்டுமல்லாம இந்தச் சாக்கடை திறந்த வெளியில் இருக்குறதால, கொசு தொல்லையும், மழை பெய்தால் வர்ற துர்நாற்றமும் நோய் பரவல் பாதிப்பை ஏற்படுத்திடுமோன்னு பிள்ளைகளை வெச்சுட்டு பயந்துகிட்டு இருக்கோம். இது குறித்து எங்க பகுதி கவுன்சிலர் நாகராஜன் கிட்ட கோரிக்கை வெச்சுருக்கோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்குறதா சொல்லிருக்காரு. இனியும் அதிகாரிங்க அலட்சியம் காட்டாம உடனே உரிய நடவடிக்கை எடுக்கணும் என்றனர்.
`குடும்பத்தை நாசமாக்கியவர்' - பா.ஜ.க எம்.எல்.ஏ-வான மனைவியை விவாகரத்து செய்கிறாரா முலாயம் சிங் மகன்?
சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் இப்போது கட்சிக்குத் தலைமை ஏற்றுள்ளார். மற்றொரு மகனான பிரதீக் யாதவ் அரசியலில் ஈடுபடவில்லை. அவர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியான சாத்னா குப்தாவின் மகனான பிரதீக், அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். அபர்ணா பா.ஜ.க சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் பிரதீக்கிடம் ரூ.5 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் உட்பட ஏராளமான கார்கள் உட்பட பல வசதிகள் இருக்கிறது. இது தவிர லக்னோவில் மிகவும் பிரபலமான ஜிம் ஒன்று இருக்கிறது. அபர்ணா தேர்தலில் போட்டியிட்ட போது தங்களுக்கு ரூ.15 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. பிரதீக் இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருக்கிறார். அவர் தனது பதிவில், ``உறவுகளை அவர் நாசப்படுத்திவிட்டார். அவர் புகழையும் செல்வாக்கையும் தேடுகிறார். விளம்பரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் மீதான அவரது கவனம் குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆத்மாவை நான் பார்த்ததே இல்லை. ஆனால் நான் மனதளவில் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறேன். என் மனைவி எனது நிலை குறித்து அக்கறையின்றி தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறாள். அவள் ஒரு கெட்ட குணம் கொண்டவள். அவளைத் திருமணம் செய்துகொண்டது எனது துரதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய அந்தப் பதிவு வைரலாகி இருக்கிறது. மேலும் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதீக் குற்றச்சாட்டு குறித்து அவரது மனைவியிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. அதோடு பிரதீக் விவாகரத்துக்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளாரா என்பது குறித்தும் தெரியவில்லை. அபர்ணா யாதவ் கடந்த 2022ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.கவில் சேர்ந்தார். 2017ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
`குடும்பத்தை நாசமாக்கியவர்' - பா.ஜ.க எம்.எல்.ஏ-வான மனைவியை விவாகரத்து செய்கிறாரா முலாயம் சிங் மகன்?
சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் இப்போது கட்சிக்குத் தலைமை ஏற்றுள்ளார். மற்றொரு மகனான பிரதீக் யாதவ் அரசியலில் ஈடுபடவில்லை. அவர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியான சாத்னா குப்தாவின் மகனான பிரதீக், அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். அபர்ணா பா.ஜ.க சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் பிரதீக்கிடம் ரூ.5 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் உட்பட ஏராளமான கார்கள் உட்பட பல வசதிகள் இருக்கிறது. இது தவிர லக்னோவில் மிகவும் பிரபலமான ஜிம் ஒன்று இருக்கிறது. அபர்ணா தேர்தலில் போட்டியிட்ட போது தங்களுக்கு ரூ.15 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. பிரதீக் இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருக்கிறார். அவர் தனது பதிவில், ``உறவுகளை அவர் நாசப்படுத்திவிட்டார். அவர் புகழையும் செல்வாக்கையும் தேடுகிறார். விளம்பரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் மீதான அவரது கவனம் குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆத்மாவை நான் பார்த்ததே இல்லை. ஆனால் நான் மனதளவில் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறேன். என் மனைவி எனது நிலை குறித்து அக்கறையின்றி தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறாள். அவள் ஒரு கெட்ட குணம் கொண்டவள். அவளைத் திருமணம் செய்துகொண்டது எனது துரதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய அந்தப் பதிவு வைரலாகி இருக்கிறது. மேலும் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதீக் குற்றச்சாட்டு குறித்து அவரது மனைவியிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. அதோடு பிரதீக் விவாகரத்துக்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளாரா என்பது குறித்தும் தெரியவில்லை. அபர்ணா யாதவ் கடந்த 2022ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.கவில் சேர்ந்தார். 2017ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்!
‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’ கிரீன்லேண்டைப் பிடித்தே தீர வேண்டும் என்கிற கடும் முயற்சியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அவருக்குத் தேவையான ஆதரவை நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தரத் தயாராக இல்லை. இதனால், ட்ரம்ப் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு 10 சதவிகித வரி விதித்துள்ளார். இந்த வரி வரும் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. ஒருவேளை, வரும் ஜூன் மாதத்திற்கு மேலேயும், கிரீன்லேண்ட் பிரச்னை அமெரிக்காவிற்கு சாதகமான நிலையை எட்டவில்லை என்றால், 10 சதவிகித வரி 25 சதவிகித வரியாக அதிகரிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். கிரீன்லேண்ட் உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained கூட்டறிக்கை என்ன சொல்கிறது? இந்த நிலையில், டென்மார்க்கின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வரி அச்சுறுத்தல் டிரான்ஸ் அட்லாண்டிக் பகுதிகளின் உறவைப் பாதிக்கும். நாங்கள் எப்போதும் ஒன்றாக நிற்போம்… எங்களுடைய பதிலும் ஒரே மாதிரி இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டறிக்கை டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளுடையது. ஆக, இந்த நாடுகள் ட்ரம்பின் அச்சுறுத்தலை ஒன்றாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்பது தெரிகிறது. ட்ரம்பிற்கே வரியா? கூடுதலாக, இந்த அனைத்து நாடுகளும் சேர்ந்து அமெரிக்கப் பொருள்களுக்கு 108 பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்க முடிவு செய்துள்ளதாகவும்… அமெரிக்காவின் கம்பெனிகளுக்கு ஐரோப்பிய சந்தைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாகவும் ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் எப்போதுமே தனக்கு எந்தக் காரியம் ஆக வேண்டுமென்றாலும், ட்ரம்ப் ‘வரி’யைக் கையில் எடுத்துக்கொள்கிறார். அதை வைத்தே உலக நாடுகளைப் பயமுறுத்த நினைக்கிறார். அது எப்போதுமே அவருக்குக் கைகொடுக்காது. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained ட்ரம்ப் வரியைக் காட்டி பயமுறுத்துவது குறித்து இன்றைய Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பகிர்ந்துகொண்டதாவது… “வரியைக் காட்டி பயமுறுத்தி தனக்கு தேவையானதைச் சாதித்துக்கொள்ள நினைப்பது தவறான உதாரணம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இந்த மாதிரியான காரியங்கள், நிச்சயமாக சந்தைக்கு அதிர்வுகளைத் தரும். ஆனாலும், ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. இது மிகவும் ஆபத்தானது. ஆம்… இதை அவர் மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருந்தால், பிற நாடுகள் அமெரிக்காவை வர்த்தகத்தில் தனித்துவிடக் கூடலாம். ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா தங்களுக்கென தனி வர்த்தக அமைப்பை அமைத்து வர்த்தகம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். இதை மற்ற நாடுகளும் பின்பற்றலாம். பிறகு, அவர்களுக்குள்ளாகவே வர்த்தகம் செய்ய தொடங்கிவிடுவர். இதனால், அமெரிக்காவின் வர்த்தகம் பாதிக்கலாம்” என்று கூறியிருந்தார். ஏற்கெனவே, சீனா தன்னுடைய ஏற்றுமதிகளை தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் ஆகிய நாடுகளின் சந்தைக்கு மாற்றிவிட்டது. இதை பிற நாடுகளும் பின்பற்றினால், என்ன ஆகும்? அமெரிக்கா வர்த்தக ரீதியாகத் தனித்துவிடப்படலாம். 2025-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்ப் முதன்முதலாக வரியை அறிவித்தபோது, உலக நாடுகள் அதைப் பார்த்த விதமும், பயமும் வேறு. இப்போதிருக்கும் நிலைமை வேறு. இப்போது உலக நாடுகளும், சந்தைகளும் சற்று வரிக்குப் பழகிவிட்டன. அதனால், அவர்கள் தங்களது சந்தைகளை அமெரிக்காவைத் தாண்டி பரப்பத் தொடங்கிவிட்டனர். இது நிச்சயம் அமெரிக்காவிற்குத் தான் பாதிப்பாக முடியும். அதனால், இனி ட்ரம்ப் தனது நகர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா' கனவு | Explained
ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்!
‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’ கிரீன்லேண்டைப் பிடித்தே தீர வேண்டும் என்கிற கடும் முயற்சியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அவருக்குத் தேவையான ஆதரவை நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தரத் தயாராக இல்லை. இதனால், ட்ரம்ப் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு 10 சதவிகித வரி விதித்துள்ளார். இந்த வரி வரும் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. ஒருவேளை, வரும் ஜூன் மாதத்திற்கு மேலேயும், கிரீன்லேண்ட் பிரச்னை அமெரிக்காவிற்கு சாதகமான நிலையை எட்டவில்லை என்றால், 10 சதவிகித வரி 25 சதவிகித வரியாக அதிகரிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். கிரீன்லேண்ட் உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained கூட்டறிக்கை என்ன சொல்கிறது? இந்த நிலையில், டென்மார்க்கின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வரி அச்சுறுத்தல் டிரான்ஸ் அட்லாண்டிக் பகுதிகளின் உறவைப் பாதிக்கும். நாங்கள் எப்போதும் ஒன்றாக நிற்போம்… எங்களுடைய பதிலும் ஒரே மாதிரி இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டறிக்கை டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளுடையது. ஆக, இந்த நாடுகள் ட்ரம்பின் அச்சுறுத்தலை ஒன்றாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்பது தெரிகிறது. ட்ரம்பிற்கே வரியா? கூடுதலாக, இந்த அனைத்து நாடுகளும் சேர்ந்து அமெரிக்கப் பொருள்களுக்கு 108 பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்க முடிவு செய்துள்ளதாகவும்… அமெரிக்காவின் கம்பெனிகளுக்கு ஐரோப்பிய சந்தைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாகவும் ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் எப்போதுமே தனக்கு எந்தக் காரியம் ஆக வேண்டுமென்றாலும், ட்ரம்ப் ‘வரி’யைக் கையில் எடுத்துக்கொள்கிறார். அதை வைத்தே உலக நாடுகளைப் பயமுறுத்த நினைக்கிறார். அது எப்போதுமே அவருக்குக் கைகொடுக்காது. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained ட்ரம்ப் வரியைக் காட்டி பயமுறுத்துவது குறித்து இன்றைய Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பகிர்ந்துகொண்டதாவது… “வரியைக் காட்டி பயமுறுத்தி தனக்கு தேவையானதைச் சாதித்துக்கொள்ள நினைப்பது தவறான உதாரணம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இந்த மாதிரியான காரியங்கள், நிச்சயமாக சந்தைக்கு அதிர்வுகளைத் தரும். ஆனாலும், ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. இது மிகவும் ஆபத்தானது. ஆம்… இதை அவர் மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருந்தால், பிற நாடுகள் அமெரிக்காவை வர்த்தகத்தில் தனித்துவிடக் கூடலாம். ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா தங்களுக்கென தனி வர்த்தக அமைப்பை அமைத்து வர்த்தகம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். இதை மற்ற நாடுகளும் பின்பற்றலாம். பிறகு, அவர்களுக்குள்ளாகவே வர்த்தகம் செய்ய தொடங்கிவிடுவர். இதனால், அமெரிக்காவின் வர்த்தகம் பாதிக்கலாம்” என்று கூறியிருந்தார். ஏற்கெனவே, சீனா தன்னுடைய ஏற்றுமதிகளை தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் ஆகிய நாடுகளின் சந்தைக்கு மாற்றிவிட்டது. இதை பிற நாடுகளும் பின்பற்றினால், என்ன ஆகும்? அமெரிக்கா வர்த்தக ரீதியாகத் தனித்துவிடப்படலாம். 2025-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்ப் முதன்முதலாக வரியை அறிவித்தபோது, உலக நாடுகள் அதைப் பார்த்த விதமும், பயமும் வேறு. இப்போதிருக்கும் நிலைமை வேறு. இப்போது உலக நாடுகளும், சந்தைகளும் சற்று வரிக்குப் பழகிவிட்டன. அதனால், அவர்கள் தங்களது சந்தைகளை அமெரிக்காவைத் தாண்டி பரப்பத் தொடங்கிவிட்டனர். இது நிச்சயம் அமெரிக்காவிற்குத் தான் பாதிப்பாக முடியும். அதனால், இனி ட்ரம்ப் தனது நகர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா' கனவு | Explained
ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் பழனிசாமி ஏன் பதறுகிறார்? - அன்பில் மகேஸ்
2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? பழனிசாமி ஏன் பதறுகிறார்? என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். பழனிசாமி ஏன் பதறுகிறார்? இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றப்படுவதை அவரது பேட்டிகளும் அறிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போது, ’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவது பற்றி சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்’’ என்று சொல்லியிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அரசு ஊழியர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். தேர்தல் நாடகம் ஆட்சியில் இருந்த போது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்வது “அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அருவாளாம்” என்ற பழமொழியைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாகப் பறித்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே 2003-ஆம் ஆண்டில் சிதைத்த அதிமுக, தற்பொழுது அரசு ஊழியர்கள் மீது திடீர் கரிசனம் காட்டுவதே வெறும் தேர்தல் நாடகம்தான் என்பதைக் கூட அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ளமாட்டார்களா என்ன? எடப்பாடி பழனிசாமி அதிமுக ஏன் நிறைவேற்றவில்லை? 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 46-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை 5 ஆண்டுகாலமாக ஏன் நிறைவேற்றவில்லை? அரசு ஊழியர்களின் 23 ஆண்டுக் காலக் கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து அவர்களின் வாழ்வில் வசந்தத்தைத் தந்திருக்கிறார். இப்போது திமுக அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதும் பொறுக்க முடியாமல் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவது பற்றி முடிவு எடுப்போம் என்றெல்லாம் தேன் தடவி பேசுகிறார் பழனிசாமி. ஓய்வூதியத் திட்டம்: மத்திய அரசின் புதிய `மூவ்’ - தமிழக அரசுக்கு அதிகரிக்கிறதா அழுத்தம்?! திமுக அரசு அறிவித்ததும் பொங்கி எழுவது ஏன்? 4 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த போது பழனிசாமி அந்தப் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இப்போது திமுக அரசு அறிவித்ததும் பொங்கி எழுவது ஏன்? பழனிசாமி ஆட்சியில் 2019-ல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை எல்லாம் பட்டியல் போட்டு தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தைவிட அதிகமாக அரசு ஊழியர்கள் வாங்குகிறார்கள் என விளம்பரம் வெளியிட்டு அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்திய பழனிசாமிதான் இப்போது அரசு ஊழியர்கள் மீது போலிப் பாசத்தைக் கொட்டுகிறார். அரசு ஊழியர்கள் போராட்டம் கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலின் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியக் கணக்கீடு என்பது கடைசியாகப் பெற்ற 12 மாத ஊதியத்தின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவிகிதம். ஆனால் தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியக் கணக்கீடு என்பது அரசு ஊழியர் கடைசியாகப் பெற்ற மாதத்தின் அடிப்படை ஊதியத்தில் 50 சதவிகிதம். இந்தக் கணக்கீடுதான் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும் இருந்தது. அதையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கேட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறார். ரூ.3 கோடியுடன் 55 வயதில் ஓய்வு... இப்படி முதலீடு செய்தால் போதும்..! அதிமுக ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? ஒன்றிய அரசின் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியமும், அதன் தொடர்ச்சியாக குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். ஆனால், தமிழ்நாடு அரசின் திட்டத்தில் பணிக்காலம் குறைவாக இருந்தாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 13,000 கோடி ரூபாயை அரசு இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளதுடன், ஆண்டு தோறும் சுமார் 11,000 கோடி ரூபாயைக் கூடுதலாக ஒதுக்கும் என அறிவித்துள்ளது. அன்பில் மகேஷ் ஆட்சியில் இருந்த போது 2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தையே ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பழனிசாமி ஏன் பதறுகிறார்? அன்பில் மகேஷ் சாடியிருக்கிறார். `இது பாதிக்கிணறு தாண்டிய கதை மாதிரிதான்!' - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமும் பின்னணியும்!
சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில்... - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்வது என்ன?
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், சமூக நடைமுறையில் இருந்து சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில் மனதிலிருந்து சாதியை அகற்ற வேண்டும். மோகன் பகவத் கடந்த காலங்களில் சாதி என்பது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது. பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது. இதற்கு முடிவுகட்ட, ஒவ்வொரு மனதிலிருந்தும் சாதியை அகற்ற வேண்டும். இதை நேர்மையாகச் செய்தால், 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் சாதிப் பாகுபாடு ஒழிக்கப்படும். பொதுமக்களின் தனிப்பட்ட குணநலன்களை வளர்ப்பதன் மூலம் சமூகத்திற்கு வலிமையூட்டி, தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம். ஆர்எஸ்எஸ் பெரிய சங்கமாக மாற எப்போதும் விரும்பியதில்லை. சமூகத்தை மேம்படுத்தவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமாகும். Rss எதிர்ப்புகளுக்கு எதிர்வினையாற்றுவதோ, போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவதோ ஆர்எஸ்எஸ் வேலை இல்லை. முற்றிலும் தேசத்தை மையமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் செயல்படும் என்று பேசியிருக்கிறார். RSS 100: ஆர்.எஸ்.எஸ் - இது அரசுசாரா இயக்கமா? அரசியல் திட்டமா?
சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில்... - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்வது என்ன?
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், சமூக நடைமுறையில் இருந்து சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில் மனதிலிருந்து சாதியை அகற்ற வேண்டும். மோகன் பகவத் கடந்த காலங்களில் சாதி என்பது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது. பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது. இதற்கு முடிவுகட்ட, ஒவ்வொரு மனதிலிருந்தும் சாதியை அகற்ற வேண்டும். இதை நேர்மையாகச் செய்தால், 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் சாதிப் பாகுபாடு ஒழிக்கப்படும். பொதுமக்களின் தனிப்பட்ட குணநலன்களை வளர்ப்பதன் மூலம் சமூகத்திற்கு வலிமையூட்டி, தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம். ஆர்எஸ்எஸ் பெரிய சங்கமாக மாற எப்போதும் விரும்பியதில்லை. சமூகத்தை மேம்படுத்தவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமாகும். Rss எதிர்ப்புகளுக்கு எதிர்வினையாற்றுவதோ, போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவதோ ஆர்எஸ்எஸ் வேலை இல்லை. முற்றிலும் தேசத்தை மையமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் செயல்படும் என்று பேசியிருக்கிறார். RSS 100: ஆர்.எஸ்.எஸ் - இது அரசுசாரா இயக்கமா? அரசியல் திட்டமா?
கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2
`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர். கட்டுரையாளர் : பா.முகிலன் `முதல் களம்’ 02 | கருணாநிதி அது 1957 ஆம் ஆண்டின் தொடக்க காலம். இந்தியா சுதந்திரம் அடைந்து ஒரு தசாப்தம் கூட நிறைவடையவில்லை. நாட்டின் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கட்சி என்கிற அடிப்படையில், நாடு முழுவதும் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ஆட்சி அதிகாரமும் காங்கிரஸ் கட்சியிடம்தான். அதில், தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. இத்தகைய அரசியல் சூழ்நிலையில்தான், சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து மார்ச் மாதம் பொதுத் தேர்தல் என்கிற அறிவிப்பு வெளியானது. கருணாநிதி - அண்ணா இன்னொருபுறம், பேரறிஞர் அண்ணா தலைமையில் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் தேர்தலில் முதல் முதலாக களம் இறங்கியது. திமுகவின் சார்பில் 124 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அந்த 124 பேர்களில் திமுகவின் இளம் தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதியும் இடம்பெற்றார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே. தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். கருணாநிதிக்கு காத்திருந்த சவால் அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த குளித்தலை, காவிரி நதிக்கரை வளமும், வறண்ட நிலப்பரப்பும் கலந்த ஒரு பிரம்மாண்ட தொகுதி. குளித்தலை, முசிறி, கரூர், லாலாப்பேட்டை, நங்கவரம், அந்தநல்லூர் என்று பல கிராமங்களையும் நகரங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. காங்கிரஸ் வேட்பாளராக காட்டுப்புத்தூர் தர்மலிங்கமும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர் கே.ஏ. சண்முகமும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், அந்தப் பகுதியில் வலுவான அடித்தளம் மற்றும் மக்களிடையே நன்கு அறிமுகம் கொண்டவர்கள் என்பதால், இவர்களை வெல்வது கருணாநிதிக்கு கடுமையான சவாலாகவே இருந்தது. கலைஞர் கருணாநிதி ஆனாலும், தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னர், திரைத்துறையில் தனது கூர் தீட்டிய வசனங்களால் மக்களை வசீகரித்ததில் கிடைத்த செல்வாக்கும் புகழும், பெரியார் மற்றும் அண்ணாவுடன் பணியாற்றியதில் கிடைத்த அரசியல் களப்பணி அனுபவமும் கருணாநிதியை தைரியம் கொள்ள வைத்தன. தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கினார். மக்களின் கவனத்தை ஈர்க்க, பிரசார உத்தியை மாற்ற வேண்டும் எனத் தீர்மானித்தார். திரைப்படத்துக்கு திரைக்கதை தீட்டியவர் அல்லவா? அந்த அனுபவம் அவருக்கு மிக நன்றாகவே கை கொடுத்தது. தேர்தல் பிரசாரத்தில் புதுமையான உத்திகள் அதுவரை தமிழகத் தேர்தல்களில் கண்டிராத பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். இதில், அவரது முதல் உத்தி - சுவர் ஓவியங்கள். திருவாரூரைச் சேர்ந்த ராஜன் மற்றும் லாலாப்பேட்டையைச் சேர்ந்த ராமலிங்கம் என்கிற இரண்டு ஓவியர்களை வரவழைத்து, சுவர்களை உதயசூரியன் சின்னத்தால் நிரப்பினார். கூடவே “காகிதப் பூ மணக்காது காங்கிரஸ் ஆட்சி இனிக்காது, டாட்டா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்கு பகையாளி என எதுகை மோனையில் அவர் எழுதிக்கொடுத்த பல்வேறு பிரசார வாசகங்கள் மக்களைச் சுண்டி இழுத்தன. சுவர்களில் எழுதப்பட்ட கவிதை நடையிலான அந்த வாசகங்களை மக்கள் கூடிக்கூடி நின்று வாசித்து, அது குறித்து சிலாகித்துப் பேசினர். அடுத்ததாக இன்னொரு புதிய உத்தியையும் கருணாநிதி புகுத்தினார். அதுதான் `டோர் ஸ்லிப்’ எனப்படும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் முறை. இன்று எல்லோரும் பயன்படுத்தும் இந்த முறையை முதலில் கொண்டு வந்தவர் கருணாநிதிதான் என்கிறார்கள் அந்தக் கால அரசியலை அசைபோடுபவர்கள். அதாவது, ஒரு வீட்டில் வாக்கு சேகரிக்கும்போது, அந்த வீட்டின் கதவில், 'எங்கள் ஓட்டு கருணாநிதிக்கே' என்கிற வாசகமும் உதயசூரியன் படமும் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை, திமுகவினர் ஒட்டி விடுவார்கள். அதே போல் வீடுதோறும் காலண்டர்களும் விநியோகமானது. மூன்றாவது உத்திதான் எதிரணியினரையே, குறிப்பாக காங்கிரஸ் கட்சியைக் கதிகலங்க வைத்த உத்தி. அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து, காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் வீடுகளுக்கே சென்று “எனக்கு ஓட்டுப் போடுங்கள்” எனக் கேட்பார் கருணாநிதி. அவரது கார் ஓட்டுநர், கருணாநிதி வாக்கு கேட்டுச் செல்லும் வீடுகளின் கதவில், உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை ஒட்டி வைத்துவிட்டு வருவார். காலையில் எழுந்து பார்க்கும் காங்கிரஸ்காரர்கள் அதிர்ச்சி அடைவார்கள். “என்னய்யா, கருணாநிதி வந்தாரா?” என ஒருவருக்கு ஒருவர் கேட்கத் தொடங்கினார்கள். கூடவே பிரச்சாரத்தில் அண்ணா, எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரும் கை கொடுத்தனர். கலைஞர் கருணாநிதி- அண்ணா பழைய ஃபியட் கார், இட்லி பொட்டலம், டிரங்கால்! பிரசாரத்தில் கருணாநிதி பயன்படுத்திய வாகனம் ஒரு பழைய ஃபியட் கார். அந்தக் காரில், தன்னுடன் ஆறு பேரை அடைத்துக்கொண்டு, தொகுதி முழுவதும் சுற்றிச் சுற்றி சுழன்றடித்தார். இப்போது இருப்பது போன்றெல்லாம் அப்போது உணவு விடுதிகள் அவ்வளவாக கிடையாது. கரூர் மார்க்கெட்டில் எஸ்.வி. சாமியப்பன் என்பவரின் லாரி செட்டில் இருந்த திமுக அலுவலகமே, இரவில் கருணாநிதி உள்ளிட்டோருக்கான தங்குமிடமாக இருந்தது. இரண்டு ரூபாயில் எட்டு இட்லி பொட்டலம் வாங்கி, எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவார்கள். தொலைபேசி அரிது. கரூர் அஞ்சல் நிலையத்துக்கு எதிரே இருந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வரிசையில் நின்றுதான் டிரங்க் கால் மூலம் சென்னைக்குப் பேசி அண்ணாவிடம், தேர்தல் களத்தின் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று தனது அக்காள் மகன் முரசொலி மாறனுக்கு டிரங்கால் போட்டு பேசித்தான் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் கைச்செலவுக்கான பணத்தையும் வரவழைப்பாராம் கருணாநிதி. அந்த நாட்களில் பெரும்பாலான அரசியல் மேடை பேச்சுகள் கடினமான சொற்கள், நீளமான வரலாறு பேசும் பாணியில் இருந்தன. ஆனால், கருணாநிதியின் பிரசாரம் அந்தக் கால அரசியல் கூட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அவர் பேசும்போது , இன்றைய சில தலைவர்கள் பேசுவதைப் போன்ற ‘ஸ்கிரிப்ட் ரீடிங்’ பாணியில் இருந்ததில்லை. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் உள்ளூர் பிரச்னைகளைக் குறிப்பிட்டு, அதற்கான தீர்வுகளை தெளிவாக விளக்கினார். அவரின் பிரசாரத்தில் ஒவ்வொரு கூட்டமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. சில இடங்களில் மேடை தேவைப்படாமல், மரத்தடியில் அல்லது திறந்த வெளியில் கூடிச் சிறிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. அரசியல் உரையை விட சுவைமிகு கதைகள், எடுத்துக்காட்டுகள் மூலம் மக்களைக் கவர்ந்தார். சுருக்கமாக சொல்வதென்றால் அவரது பிரசாரம்,'திமுக வென்றால் இதை மாற்ற முடியும்' என்கிற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துவதாக இருந்தது. காதல் படிக்கட்டுகள் - கலைஞர் கருணாநிதி! குளித்தலையின் கரையோரப் பகுதிகளில் காலை முதல் மாலை வரை நடத்தப்பட்ட கூட்டங்கள் அனைத்திலும் பெண்களும் இளைஞர்களும் அதிகம் கூடினர்.“எழுத்தாளராக இருக்கும்போது நம்ம பிரச்னையை எல்லாம் கதைல எழுதினார்; இப்போ சட்டமன்றத்துலச் சொல்லப் போறாராம்!”—என்கிற ரீதியில் வாக்காளர்களிடம் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மிகுதியானது. அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01 வெற்றிக்கு உதவிய கல்லக்குடி போராட்டம் 1950-களில் நடந்த கல்லக்குடி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்த நிகழ்வு, தமிழக அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. அந்தப் போராட்டக் கதைகள் குளித்தளை பிரச்சாரத்திலும் பேசப்பட்டு, கருணாநிதிக்கான வாக்குகளை அதிகமாக்கியது. கருணாநிதியின் இந்த புதுமையான உத்திகளும் பிரசாரங்களும்தான், குளித்தலை தொகுதியில் அவருக்கான முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்து. கடைசியாக 2016-ல் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதிவரை, தொடர்ந்து 13 தேர்தல்களிலும் மகுடம் சூட வைத்தது. குளித்தலை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதிக்கு 22,785 வாக்குகள் கிடைத்தன. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார் கருணாநிதி. முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் காலடி வைத்த திமுக, தமிழக அரசியலில் ஒரு நீண்ட நெடிய அத்தியாயத்துக்குள் அடியெடுத்து வைத்து, இன்றளவும் எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் மாறிமாறி தமிழர்களிடம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது. கருணாநிதி சட்டமன்றத்தில் அடியெடுத்த பின்னர், கருணாநிதி மேற்கொண்ட நுணுக்கமான அரசியல் அணுகுமுறைகளும், அறிவுக்கூர்மையான வாதங்களும், அவரை திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வேகமாக உயர்த்தி, அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பல முறை ஆட்சிக்கட்டிலிலும், சாகும்வரை திமுக தலைவராகவும் அரியாசனத்தில் அமரவைத்தது. அந்த வகையில், கருணாநிதியின் இத்தகைய நீண்ட அரசியல் பயணத்திற்கான அடித்தளமாக அமைந்தது அவரது குளித்தலை தேர்தல் வெற்றியே! (தொடரும்) அடுத்த வாரம்: எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02
கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2
`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர். கட்டுரையாளர் : பா.முகிலன் `முதல் களம்’ 02 | கருணாநிதி அது 1957 ஆம் ஆண்டின் தொடக்க காலம். இந்தியா சுதந்திரம் அடைந்து ஒரு தசாப்தம் கூட நிறைவடையவில்லை. நாட்டின் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கட்சி என்கிற அடிப்படையில், நாடு முழுவதும் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ஆட்சி அதிகாரமும் காங்கிரஸ் கட்சியிடம்தான். அதில், தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. இத்தகைய அரசியல் சூழ்நிலையில்தான், சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து மார்ச் மாதம் பொதுத் தேர்தல் என்கிற அறிவிப்பு வெளியானது. கருணாநிதி - அண்ணா இன்னொருபுறம், பேரறிஞர் அண்ணா தலைமையில் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் தேர்தலில் முதல் முதலாக களம் இறங்கியது. திமுகவின் சார்பில் 124 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அந்த 124 பேர்களில் திமுகவின் இளம் தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதியும் இடம்பெற்றார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே. தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். கருணாநிதிக்கு காத்திருந்த சவால் அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த குளித்தலை, காவிரி நதிக்கரை வளமும், வறண்ட நிலப்பரப்பும் கலந்த ஒரு பிரம்மாண்ட தொகுதி. குளித்தலை, முசிறி, கரூர், லாலாப்பேட்டை, நங்கவரம், அந்தநல்லூர் என்று பல கிராமங்களையும் நகரங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. காங்கிரஸ் வேட்பாளராக காட்டுப்புத்தூர் தர்மலிங்கமும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர் கே.ஏ. சண்முகமும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், அந்தப் பகுதியில் வலுவான அடித்தளம் மற்றும் மக்களிடையே நன்கு அறிமுகம் கொண்டவர்கள் என்பதால், இவர்களை வெல்வது கருணாநிதிக்கு கடுமையான சவாலாகவே இருந்தது. கலைஞர் கருணாநிதி ஆனாலும், தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னர், திரைத்துறையில் தனது கூர் தீட்டிய வசனங்களால் மக்களை வசீகரித்ததில் கிடைத்த செல்வாக்கும் புகழும், பெரியார் மற்றும் அண்ணாவுடன் பணியாற்றியதில் கிடைத்த அரசியல் களப்பணி அனுபவமும் கருணாநிதியை தைரியம் கொள்ள வைத்தன. தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கினார். மக்களின் கவனத்தை ஈர்க்க, பிரசார உத்தியை மாற்ற வேண்டும் எனத் தீர்மானித்தார். திரைப்படத்துக்கு திரைக்கதை தீட்டியவர் அல்லவா? அந்த அனுபவம் அவருக்கு மிக நன்றாகவே கை கொடுத்தது. தேர்தல் பிரசாரத்தில் புதுமையான உத்திகள் அதுவரை தமிழகத் தேர்தல்களில் கண்டிராத பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். இதில், அவரது முதல் உத்தி - சுவர் ஓவியங்கள். திருவாரூரைச் சேர்ந்த ராஜன் மற்றும் லாலாப்பேட்டையைச் சேர்ந்த ராமலிங்கம் என்கிற இரண்டு ஓவியர்களை வரவழைத்து, சுவர்களை உதயசூரியன் சின்னத்தால் நிரப்பினார். கூடவே “காகிதப் பூ மணக்காது காங்கிரஸ் ஆட்சி இனிக்காது, டாட்டா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்கு பகையாளி என எதுகை மோனையில் அவர் எழுதிக்கொடுத்த பல்வேறு பிரசார வாசகங்கள் மக்களைச் சுண்டி இழுத்தன. சுவர்களில் எழுதப்பட்ட கவிதை நடையிலான அந்த வாசகங்களை மக்கள் கூடிக்கூடி நின்று வாசித்து, அது குறித்து சிலாகித்துப் பேசினர். அடுத்ததாக இன்னொரு புதிய உத்தியையும் கருணாநிதி புகுத்தினார். அதுதான் `டோர் ஸ்லிப்’ எனப்படும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் முறை. இன்று எல்லோரும் பயன்படுத்தும் இந்த முறையை முதலில் கொண்டு வந்தவர் கருணாநிதிதான் என்கிறார்கள் அந்தக் கால அரசியலை அசைபோடுபவர்கள். அதாவது, ஒரு வீட்டில் வாக்கு சேகரிக்கும்போது, அந்த வீட்டின் கதவில், 'எங்கள் ஓட்டு கருணாநிதிக்கே' என்கிற வாசகமும் உதயசூரியன் படமும் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை, திமுகவினர் ஒட்டி விடுவார்கள். அதே போல் வீடுதோறும் காலண்டர்களும் விநியோகமானது. மூன்றாவது உத்திதான் எதிரணியினரையே, குறிப்பாக காங்கிரஸ் கட்சியைக் கதிகலங்க வைத்த உத்தி. அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து, காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் வீடுகளுக்கே சென்று “எனக்கு ஓட்டுப் போடுங்கள்” எனக் கேட்பார் கருணாநிதி. அவரது கார் ஓட்டுநர், கருணாநிதி வாக்கு கேட்டுச் செல்லும் வீடுகளின் கதவில், உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை ஒட்டி வைத்துவிட்டு வருவார். காலையில் எழுந்து பார்க்கும் காங்கிரஸ்காரர்கள் அதிர்ச்சி அடைவார்கள். “என்னய்யா, கருணாநிதி வந்தாரா?” என ஒருவருக்கு ஒருவர் கேட்கத் தொடங்கினார்கள். கூடவே பிரச்சாரத்தில் அண்ணா, எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரும் கை கொடுத்தனர். கலைஞர் கருணாநிதி- அண்ணா பழைய ஃபியட் கார், இட்லி பொட்டலம், டிரங்கால்! பிரசாரத்தில் கருணாநிதி பயன்படுத்திய வாகனம் ஒரு பழைய ஃபியட் கார். அந்தக் காரில், தன்னுடன் ஆறு பேரை அடைத்துக்கொண்டு, தொகுதி முழுவதும் சுற்றிச் சுற்றி சுழன்றடித்தார். இப்போது இருப்பது போன்றெல்லாம் அப்போது உணவு விடுதிகள் அவ்வளவாக கிடையாது. கரூர் மார்க்கெட்டில் எஸ்.வி. சாமியப்பன் என்பவரின் லாரி செட்டில் இருந்த திமுக அலுவலகமே, இரவில் கருணாநிதி உள்ளிட்டோருக்கான தங்குமிடமாக இருந்தது. இரண்டு ரூபாயில் எட்டு இட்லி பொட்டலம் வாங்கி, எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவார்கள். தொலைபேசி அரிது. கரூர் அஞ்சல் நிலையத்துக்கு எதிரே இருந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வரிசையில் நின்றுதான் டிரங்க் கால் மூலம் சென்னைக்குப் பேசி அண்ணாவிடம், தேர்தல் களத்தின் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று தனது அக்காள் மகன் முரசொலி மாறனுக்கு டிரங்கால் போட்டு பேசித்தான் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் கைச்செலவுக்கான பணத்தையும் வரவழைப்பாராம் கருணாநிதி. அந்த நாட்களில் பெரும்பாலான அரசியல் மேடை பேச்சுகள் கடினமான சொற்கள், நீளமான வரலாறு பேசும் பாணியில் இருந்தன. ஆனால், கருணாநிதியின் பிரசாரம் அந்தக் கால அரசியல் கூட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அவர் பேசும்போது , இன்றைய சில தலைவர்கள் பேசுவதைப் போன்ற ‘ஸ்கிரிப்ட் ரீடிங்’ பாணியில் இருந்ததில்லை. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் உள்ளூர் பிரச்னைகளைக் குறிப்பிட்டு, அதற்கான தீர்வுகளை தெளிவாக விளக்கினார். அவரின் பிரசாரத்தில் ஒவ்வொரு கூட்டமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. சில இடங்களில் மேடை தேவைப்படாமல், மரத்தடியில் அல்லது திறந்த வெளியில் கூடிச் சிறிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. அரசியல் உரையை விட சுவைமிகு கதைகள், எடுத்துக்காட்டுகள் மூலம் மக்களைக் கவர்ந்தார். சுருக்கமாக சொல்வதென்றால் அவரது பிரசாரம்,'திமுக வென்றால் இதை மாற்ற முடியும்' என்கிற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துவதாக இருந்தது. காதல் படிக்கட்டுகள் - கலைஞர் கருணாநிதி! குளித்தலையின் கரையோரப் பகுதிகளில் காலை முதல் மாலை வரை நடத்தப்பட்ட கூட்டங்கள் அனைத்திலும் பெண்களும் இளைஞர்களும் அதிகம் கூடினர்.“எழுத்தாளராக இருக்கும்போது நம்ம பிரச்னையை எல்லாம் கதைல எழுதினார்; இப்போ சட்டமன்றத்துலச் சொல்லப் போறாராம்!”—என்கிற ரீதியில் வாக்காளர்களிடம் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மிகுதியானது. அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01 வெற்றிக்கு உதவிய கல்லக்குடி போராட்டம் 1950-களில் நடந்த கல்லக்குடி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்த நிகழ்வு, தமிழக அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. அந்தப் போராட்டக் கதைகள் குளித்தளை பிரச்சாரத்திலும் பேசப்பட்டு, கருணாநிதிக்கான வாக்குகளை அதிகமாக்கியது. கருணாநிதியின் இந்த புதுமையான உத்திகளும் பிரசாரங்களும்தான், குளித்தலை தொகுதியில் அவருக்கான முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்து. கடைசியாக 2016-ல் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதிவரை, தொடர்ந்து 13 தேர்தல்களிலும் மகுடம் சூட வைத்தது. குளித்தலை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதிக்கு 22,785 வாக்குகள் கிடைத்தன. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார் கருணாநிதி. முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் காலடி வைத்த திமுக, தமிழக அரசியலில் ஒரு நீண்ட நெடிய அத்தியாயத்துக்குள் அடியெடுத்து வைத்து, இன்றளவும் எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் மாறிமாறி தமிழர்களிடம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது. கருணாநிதி சட்டமன்றத்தில் அடியெடுத்த பின்னர், கருணாநிதி மேற்கொண்ட நுணுக்கமான அரசியல் அணுகுமுறைகளும், அறிவுக்கூர்மையான வாதங்களும், அவரை திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வேகமாக உயர்த்தி, அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பல முறை ஆட்சிக்கட்டிலிலும், சாகும்வரை திமுக தலைவராகவும் அரியாசனத்தில் அமரவைத்தது. அந்த வகையில், கருணாநிதியின் இத்தகைய நீண்ட அரசியல் பயணத்திற்கான அடித்தளமாக அமைந்தது அவரது குளித்தலை தேர்தல் வெற்றியே! (தொடரும்) அடுத்த வாரம்: எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02
'பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்' - பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சி.பி.எம் சார்பில் ராஜா என்பவர் போட்டியிட்டு இப்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார். இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் இம்மாதம் தொடக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து பேசியிருந்தார். இதை அடுத்து அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகத்துக்கு நேற்றுச் சென்ற ராஜேந்திரன் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ராஜீவ் சந்துரசேகர் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த ராஜேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் பேசுகையில், நீண்ட காலமாக அரசியலில் இருந்த நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக செயல்படவில்லை. எனக்கு நிறைய மன ரீதியான சிரமங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், சி.பி.எம் கிளைக் கமிட்டி இதுவரை என் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தவில்லை. என்னை தொல்லை செய்ய வேண்டாம் என அடிக்கடி கேட்டுக் கொண்டேன். பல சிரமங்களை சகித்துக்கொண்டேன். நான் யாரையும் பா.ஜ.க-வுக்கு இழுக்கவில்லை. நான் சார்ந்திருந்த கட்சிக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன் என்றார். பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல் ஏ ராஜேந்திரனுடன் சி.பி.எம் பிரமுகர் சந்தோஷ், சி.பி.ஐ நிர்வாகி குருநாதன் ஆகியோர் பா.ஜ.க-வில் இணைந்தனர். வரும் 8-ம் தேதி இடுக்கியில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
'பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்' - பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சி.பி.எம் சார்பில் ராஜா என்பவர் போட்டியிட்டு இப்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார். இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் இம்மாதம் தொடக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து பேசியிருந்தார். இதை அடுத்து அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகத்துக்கு நேற்றுச் சென்ற ராஜேந்திரன் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ராஜீவ் சந்துரசேகர் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த ராஜேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் பேசுகையில், நீண்ட காலமாக அரசியலில் இருந்த நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக செயல்படவில்லை. எனக்கு நிறைய மன ரீதியான சிரமங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், சி.பி.எம் கிளைக் கமிட்டி இதுவரை என் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தவில்லை. என்னை தொல்லை செய்ய வேண்டாம் என அடிக்கடி கேட்டுக் கொண்டேன். பல சிரமங்களை சகித்துக்கொண்டேன். நான் யாரையும் பா.ஜ.க-வுக்கு இழுக்கவில்லை. நான் சார்ந்திருந்த கட்சிக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன் என்றார். பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல் ஏ ராஜேந்திரனுடன் சி.பி.எம் பிரமுகர் சந்தோஷ், சி.பி.ஐ நிர்வாகி குருநாதன் ஆகியோர் பா.ஜ.க-வில் இணைந்தனர். வரும் 8-ம் தேதி இடுக்கியில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
Stouffville Tamils’ Association -Tamil Heritage Month Celebration
Tamil Heritage Month Celebration Location: Stouffville District Secondary School,801 Hoover The post Stouffville Tamils’ Association -Tamil Heritage Month Celebration appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .
இலங்கை சிறையில் வாடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்... மீட்கக் கோரி கண்ணீர் சிந்தும் மனைவி
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரபு. இவருக்கு பிரபா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மீனவர் பிரபு கடந்த சில வருடங்களாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரையில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நாள்களில் மருந்து மாத்திரைகளுடனும் சென்றுள்ளார். மேலும் தினமும் தூக்க மாத்திரை உட்கொண்டால்தான் தூங்க கூடிய நிலையிலும் இருந்து வந்துள்ளார். ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க விசைப்படகில் சென்றுள்ளார் பிரபு. அன்று இரவு இவர்களது படகு பாரம்பர்ய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பிரபு உள்ளிட்ட மீனவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி நீதிமன்றத்திற்கு பிரபு அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது மனைவி பிரபாவை செல்போனில் தொடர்பு கொண்ட பிரபு, வழக்கமாக தான் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் சிறையில் அவதியுற்று வருவதாகக் கூறியுள்ளார். திருப்பத்தூர் தொகுதி: அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்து இலங்கை எம்.பி-யின் மாமனாரா? இது குறித்து நம்மிடம் பேசிய பிரபா, ''கடந்த 20 நாள்களாக எனது கணவர் பிரபு இலங்கை சிறையில் இருந்து வருகிறார். மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட அவரை மாதந்தோறும் மதுரையில் உள்ள மனநல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது வழக்கம். மருத்துவர்களின் அறிவுரைப்படி எனது கணவருக்கு தினமும் மருந்து மாத்திரை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 20 நாள்களாக அவர் மருந்து மாத்திரை சாப்பிட முடியாமல் சிறையில் வாடி வருகிறார். இதனால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும், தூக்கம் இல்லாததால் மன அழுத்தம் அதிகமாகி வருவதாகவும் கூறினார். மீனவர் பிரபு மருந்து மாத்திரை இல்லாததால் சரியான உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வரும் அவரது நிலை தற்போது எப்படி உள்ளது என்பதைக் கூட எங்களால் அறிய முடியவில்லை. இந்நிலையில் வரும் 27-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு அவரை அழைத்து வரும் போது அவரது நிலையினை இந்திய தூதரக அதிகாரிகள் நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி அவரை சிறையில் இருந்து மீட்டுத் தர வேண்டும். எனது கணவரின் நிலை குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். எனது கணவரின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாகி அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் அவரை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கண்ணீர் சிந்தினார். மீனவர் படகுகளில் த.வெ.க பெயர் இருந்தால் மானியம் தர மறுப்பது அராஜகம் - திமுக அரசுக்கு விஜய் கண்டனம்
தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளுக்கான Gun Buyback Program விவரங்களை Minister Gary Anandasangaree வெளியிட்டார் The post தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளுக்கான Buyback Program விவரங்களை Minister Gary Anandasangaree வெளியிட்டார் appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .
Sri Lanka மனிதாபிமான வளர்ச்சியில் Canada ஆதரவு – Juanita Nathan, M.P.
Pickering–Brooklin, Ontario Member of Parliament Juanita Nathan -Humanitarian projects across The post Sri Lanka மனிதாபிமான வளர்ச்சியில் Canada ஆதரவு – Juanita Nathan, M.P. appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .
தஞ்சை: கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி; கேள்விக்குறியாகும் கல்வி! - கவனிப்பார்களா?
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூர் அருகே திருமங்கை ஊராட்சி சோழியவிளாகம் கிராமத்தில் காந்தி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்தது. இப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் கட்டடத்திற்கு தர சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளியானது அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 8 மாதங்களாக இயங்கி வந்தது. கோயில் விழா நடத்துதல் போன்ற காரணங்களால் பள்ளியானது சாலையில் நடத்தும் அவநிலையும் ஏற்பட்டுள்ளது. பல அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு தற்போது பள்ளியானது சோழியவிளாகம் சமுதாயக் கூடத்தில் இயங்கி வருகிறது. மேலும், சோழியவிளாகம் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான பால்வாடி மையமும் சிதிலமடைந்த நிலையில், பால்வாடியும் இடிக்கப்பட்டு, கடந்த ஓர் ஆண்டுக்காலமாக 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் பால்வாடியும் சமுதாயக்கூடத்தில் தான் இயங்கி வருகிறது. ஒரு சிறிய அளவிலான கட்டடத்தில் தான் 55-க்கும் மேற்பட்ட மாணவர்களை திணித்து வைத்து கல்வி கற்பிக்கும் சூழ்நிலையானது தற்போது நிலவி உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, எங்க தலைமுறைல உள்ள நெறையா பேரு இந்த ஸ்கூல்ல தான் படிச்சோமே. இப்ப அந்த ஸ்கூலோட கட்டடம் அங்கங்க விரிசல் விட்டு, ரொம்ப மோசமா இருக்கு. மேல உள்ள செவுரு இடிஞ்சி விழுந்துடுச்சி. அதனால, பக்கத்துல உள்ள மாரியம்மன் கோயில்ல ஸ்கூல் நடந்துச்சி. அந்த கோயில் ரொம்ப விஷேசமான கோயில். அப்பப்ப நெறையா பூஜை பண்ணுவாங்க. நெறையா பேருக்கு குல தெய்வம் வேற. அதனால, அந்த கோயில் எப்பவுமே பூச புணஸ்காரன்னு கூட்டமும் சத்தமாகவும் தான் இருக்குமே. இதுனால, பிள்ளைங்களோட படிப்பு வீணாப்போச்சி. ஒரு நாள் கோயில அலசி விட்டதுனால, பசங்க எல்லாம் உட்கார எடம் இல்லாமா, நடு ரோட்ல உட்காந்து பாடம் படிச்சாங்க. அத பாத்த எங்க ஊருல உள்ள எல்லாரும் கலெக்டர் ஆபீஸ்லாம் போயி மனு கொடுத்ததுக்கு அப்பறம், எல்லா அரசு அதிகாரியும் வந்து பாத்துட்டு, ஊருல உள்ள சமுதாயக்கூடத்துல பள்ளிக்கூடத்த நடத்த சொல்லி இருக்காங்க. இந்த ஊரு உள்ள பால்வாடியும் இடிஞ்சதுல அங்க உள்ள பசங்களும் சமுதாயக்கூடத்துல தான் படிக்கிறாங்களே. ஒரு சின்ன ரூம்ல எல்லா பசங்களையும் அடச்சி வச்ச மாறி இருக்கு. அந்த குட்டியோண்டு எடத்துல பால்வாடி பசங்க ஒரு பக்கம், இந்த பசங்க ஒரு பக்கோன்னு உக்காந்து இருக்குறதே பாக்கவே கஷ்டமா இருக்கு. பால்வாடி பசங்க, ஓடி ஆடி வெளையாடுற பசங்க. அவங்களுக்கு இப்ப ஓடி ஆடலாம் எடம் இல்ல. உட்கார மட்டும் தான் எடம் இருக்கே. பால்வாடி பசங்க போடுற சத்ததுல. இந்த ஸ்கூல் புள்ளைங்க எங்க படிக்குதுங்க. பால்வாடில குழந்தைக்கு எல்லாம் கத்துதும்மா படிக்க முடிலம்மா? மிஸ் சொல்றது காதுல விழல்லாம்மன்னு சொல்லுதுங்க? நாங்களும் சீக்கிரம் ஸ்கூல் கட்டிடு வாங்கப்பா கொஞ்ச நாளுதான்னு சொல்லி சமாளிக்கிறோம். இதுல வேற டாய்லெட் மட்டும் தான் இருக்கே. எல்லா சின்ன பசங்களா இருக்குறதுனால, அதுல யூரின் போக தெரியல, எங்க போறதுன்னு தெரியாமா வெட்ட வெளியிலையே போயிடுதுங்க. பாவம் பால்வாடி கொழந்தைக்கும் இதே நெலமதான். பசங்களுக்கு தாகம் எடுத்தா குடிக்கிறதுக்கு தண்ணிக்கூட கெடையாது. தாகம் எடுத்தா அக்கம் பக்கம் வீட்கக்கு போயிதான் குடிக்கனுமே. இதுல அப்பப்ப நர்ஸ் வேற வந்து சொட்டு மருந்து போடுறது, செக்கப் பன்றதுன்னு எல்லாம் இந்த சமதாயக்கூடத்துலே தான் பண்ணுவாங்க. எங்க பிள்ளைகளோட படிப்பு இதுனால ரொம்ப பாதிக்கப்படுது என்றனர் வருத்தத்துடன். தொடர்ந்து பேசியவர்கள், ``இப்ப பள்ளிக்கூடத்த வேதா ராஜி-ஜீன்னு ஒருத்தர்தான் நடத்திட்டு இருக்காரு. அவரு வாங்கி நாளு வருசம் ஆகுது. அவரு இந்த பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துலேயே ஸ்கூல் கட்டனுன்னு இடத்தையும் வாங்கி இருக்காரு. ஆனா, அவரு இப்ப அந்த இடத்துல கட்டமாட்டாராம். அவரு ஸ்கூல் இங்கதான் இருந்துச்சி இங்கதான் கட்டுவன்னு சொல்றாரு. அவரு இந்த இடத்துல கட்டி இந்த இடத்தையும் எடுத்துக்கலான்னு பாக்குறாறு. அவரு அவரோட இடத்துல ஸ்கூல கட்டி நடத்துறதா இருந்தா நடத்தட்டும். இல்ல, அரசே பள்ளிக்கூடத்த கட்டி முழுசா அரசு பள்ளியா மாத்தி அரசே நடத்தட்டும். எங்க புள்ளைங்க படிக்கிறதுக்கு சரியான இடம் இல்லாமா, அவங்க படிக்கிறதே கேள்விக்குறியா ஏனோ தானோன்னு போகுது. சீக்கிரம் எங்க பிள்ளைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்து அவங்களோட அடிப்படை கல்விய இடையூறு இல்லாம கொடுங்க, பால்வாடிதான் இடிஞ்சி போயிட்டுன்னு அப்டே விட்டது எல்லாம் போதும் அந்த பால்வாடியையும் சீக்கிரம் கட்டிக்கொடுத்துடுங்க என்று கூறினர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் வேதா ராஜிடம் பேச முயன்றபோது, `வேலையாக இருக்கிறேன். மீண்டும் அழைக்கிறேன்' என நம் அழைப்பைத் துண்டித்தார். இது குறித்து சோழியவிளாகம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.சி.பி லெனின், காந்தி உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியானது 70 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது இப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்த நிலையில், மாணவர்கள் கிடைக்கும் இடங்களில் கல்வி கற்கும் நிலை உருவாகி, தற்போது ஒரு மாதக் காலமாக சமுதாயக்கூடத்தில் கல்வி பயிலுகின்றனர். ஏ.சி.பி லெனின் இதே சமுதாயக்கூடத்தில் தான் பால்லவாடியும் இயங்கிக்கொண்டிருக்கிறது. 20×30 என்ற சிறிய இடத்திலேயே 55-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை அடைத்து வைத்து பாடம் நடத்தும் அவலநிலையானது உருவாகியுள்ளது. அப்பள்ளியின் தாளாளர் பள்ளியினை அவரின் சொந்த இடத்தில் கட்டித்தர வேண்டும். இல்லையெனில், அரசு அவரின் உரிமத்தை ரத்து செய்து முழுமையாக அரசு பள்ளியாக மாற்றி புதிய பள்ளிக்கூடத்தை விரைவில் கட்டித்தர வேண்டும். அரசா? தாளாளரா என்பதற்கிடையில் மாணவர்களின் ஆரம்பக் கல்வி தத்தளித்துக் கொணடிருக்கிறது. உயர்கல்விதுறை அமைச்சரின் சொந்த தொகுதியிலே பள்ளிக் கட்டடத்திற்கு இடம் இல்லை என்பது வருத்ததிற்குரிய ஒன்றாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் முதல் பல அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்ட போதிலும் தஞ்சையின் கடைசி எல்லை என்பதாலோ என்னவோ இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமலே உள்ளது. அரசு விரைந்து புதிய பள்ளிக்கட்டடத்தினை கட்டிக்கொடுத்து மாணவர்கள் ஆரம்பக் கல்வியை சிறப்பாகப் பெற்றிட வழிவகை செய்ய வேண்டும் என்றார். இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபியிடம் பேசியபோது, ``புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு எஸ்டிமேட் அனுப்பி இருக்கிறோம் எனக் கூறிவிட்டு நம் அழைப்பை துண்டித்து விட்டார். அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, விரைவில் புதிய பள்ளிக் கட்டடம் அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
தஞ்சை: கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி; கேள்விக்குறியாகும் கல்வி! - கவனிப்பார்களா?
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூர் அருகே திருமங்கை ஊராட்சி சோழியவிளாகம் கிராமத்தில் காந்தி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்தது. இப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் கட்டடத்திற்கு தர சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளியானது அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 8 மாதங்களாக இயங்கி வந்தது. கோயில் விழா நடத்துதல் போன்ற காரணங்களால் பள்ளியானது சாலையில் நடத்தும் அவநிலையும் ஏற்பட்டுள்ளது. பல அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு தற்போது பள்ளியானது சோழியவிளாகம் சமுதாயக் கூடத்தில் இயங்கி வருகிறது. மேலும், சோழியவிளாகம் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான பால்வாடி மையமும் சிதிலமடைந்த நிலையில், பால்வாடியும் இடிக்கப்பட்டு, கடந்த ஓர் ஆண்டுக்காலமாக 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் பால்வாடியும் சமுதாயக்கூடத்தில் தான் இயங்கி வருகிறது. ஒரு சிறிய அளவிலான கட்டடத்தில் தான் 55-க்கும் மேற்பட்ட மாணவர்களை திணித்து வைத்து கல்வி கற்பிக்கும் சூழ்நிலையானது தற்போது நிலவி உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, எங்க தலைமுறைல உள்ள நெறையா பேரு இந்த ஸ்கூல்ல தான் படிச்சோமே. இப்ப அந்த ஸ்கூலோட கட்டடம் அங்கங்க விரிசல் விட்டு, ரொம்ப மோசமா இருக்கு. மேல உள்ள செவுரு இடிஞ்சி விழுந்துடுச்சி. அதனால, பக்கத்துல உள்ள மாரியம்மன் கோயில்ல ஸ்கூல் நடந்துச்சி. அந்த கோயில் ரொம்ப விஷேசமான கோயில். அப்பப்ப நெறையா பூஜை பண்ணுவாங்க. நெறையா பேருக்கு குல தெய்வம் வேற. அதனால, அந்த கோயில் எப்பவுமே பூச புணஸ்காரன்னு கூட்டமும் சத்தமாகவும் தான் இருக்குமே. இதுனால, பிள்ளைங்களோட படிப்பு வீணாப்போச்சி. ஒரு நாள் கோயில அலசி விட்டதுனால, பசங்க எல்லாம் உட்கார எடம் இல்லாமா, நடு ரோட்ல உட்காந்து பாடம் படிச்சாங்க. அத பாத்த எங்க ஊருல உள்ள எல்லாரும் கலெக்டர் ஆபீஸ்லாம் போயி மனு கொடுத்ததுக்கு அப்பறம், எல்லா அரசு அதிகாரியும் வந்து பாத்துட்டு, ஊருல உள்ள சமுதாயக்கூடத்துல பள்ளிக்கூடத்த நடத்த சொல்லி இருக்காங்க. இந்த ஊரு உள்ள பால்வாடியும் இடிஞ்சதுல அங்க உள்ள பசங்களும் சமுதாயக்கூடத்துல தான் படிக்கிறாங்களே. ஒரு சின்ன ரூம்ல எல்லா பசங்களையும் அடச்சி வச்ச மாறி இருக்கு. அந்த குட்டியோண்டு எடத்துல பால்வாடி பசங்க ஒரு பக்கம், இந்த பசங்க ஒரு பக்கோன்னு உக்காந்து இருக்குறதே பாக்கவே கஷ்டமா இருக்கு. பால்வாடி பசங்க, ஓடி ஆடி வெளையாடுற பசங்க. அவங்களுக்கு இப்ப ஓடி ஆடலாம் எடம் இல்ல. உட்கார மட்டும் தான் எடம் இருக்கே. பால்வாடி பசங்க போடுற சத்ததுல. இந்த ஸ்கூல் புள்ளைங்க எங்க படிக்குதுங்க. பால்வாடில குழந்தைக்கு எல்லாம் கத்துதும்மா படிக்க முடிலம்மா? மிஸ் சொல்றது காதுல விழல்லாம்மன்னு சொல்லுதுங்க? நாங்களும் சீக்கிரம் ஸ்கூல் கட்டிடு வாங்கப்பா கொஞ்ச நாளுதான்னு சொல்லி சமாளிக்கிறோம். இதுல வேற டாய்லெட் மட்டும் தான் இருக்கே. எல்லா சின்ன பசங்களா இருக்குறதுனால, அதுல யூரின் போக தெரியல, எங்க போறதுன்னு தெரியாமா வெட்ட வெளியிலையே போயிடுதுங்க. பாவம் பால்வாடி கொழந்தைக்கும் இதே நெலமதான். பசங்களுக்கு தாகம் எடுத்தா குடிக்கிறதுக்கு தண்ணிக்கூட கெடையாது. தாகம் எடுத்தா அக்கம் பக்கம் வீட்கக்கு போயிதான் குடிக்கனுமே. இதுல அப்பப்ப நர்ஸ் வேற வந்து சொட்டு மருந்து போடுறது, செக்கப் பன்றதுன்னு எல்லாம் இந்த சமதாயக்கூடத்துலே தான் பண்ணுவாங்க. எங்க பிள்ளைகளோட படிப்பு இதுனால ரொம்ப பாதிக்கப்படுது என்றனர் வருத்தத்துடன். தொடர்ந்து பேசியவர்கள், ``இப்ப பள்ளிக்கூடத்த வேதா ராஜி-ஜீன்னு ஒருத்தர்தான் நடத்திட்டு இருக்காரு. அவரு வாங்கி நாளு வருசம் ஆகுது. அவரு இந்த பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துலேயே ஸ்கூல் கட்டனுன்னு இடத்தையும் வாங்கி இருக்காரு. ஆனா, அவரு இப்ப அந்த இடத்துல கட்டமாட்டாராம். அவரு ஸ்கூல் இங்கதான் இருந்துச்சி இங்கதான் கட்டுவன்னு சொல்றாரு. அவரு இந்த இடத்துல கட்டி இந்த இடத்தையும் எடுத்துக்கலான்னு பாக்குறாறு. அவரு அவரோட இடத்துல ஸ்கூல கட்டி நடத்துறதா இருந்தா நடத்தட்டும். இல்ல, அரசே பள்ளிக்கூடத்த கட்டி முழுசா அரசு பள்ளியா மாத்தி அரசே நடத்தட்டும். எங்க புள்ளைங்க படிக்கிறதுக்கு சரியான இடம் இல்லாமா, அவங்க படிக்கிறதே கேள்விக்குறியா ஏனோ தானோன்னு போகுது. சீக்கிரம் எங்க பிள்ளைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்து அவங்களோட அடிப்படை கல்விய இடையூறு இல்லாம கொடுங்க, பால்வாடிதான் இடிஞ்சி போயிட்டுன்னு அப்டே விட்டது எல்லாம் போதும் அந்த பால்வாடியையும் சீக்கிரம் கட்டிக்கொடுத்துடுங்க என்று கூறினர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் வேதா ராஜிடம் பேச முயன்றபோது, `வேலையாக இருக்கிறேன். மீண்டும் அழைக்கிறேன்' என நம் அழைப்பைத் துண்டித்தார். இது குறித்து சோழியவிளாகம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.சி.பி லெனின், காந்தி உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியானது 70 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது இப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்த நிலையில், மாணவர்கள் கிடைக்கும் இடங்களில் கல்வி கற்கும் நிலை உருவாகி, தற்போது ஒரு மாதக் காலமாக சமுதாயக்கூடத்தில் கல்வி பயிலுகின்றனர். ஏ.சி.பி லெனின் இதே சமுதாயக்கூடத்தில் தான் பால்லவாடியும் இயங்கிக்கொண்டிருக்கிறது. 20×30 என்ற சிறிய இடத்திலேயே 55-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை அடைத்து வைத்து பாடம் நடத்தும் அவலநிலையானது உருவாகியுள்ளது. அப்பள்ளியின் தாளாளர் பள்ளியினை அவரின் சொந்த இடத்தில் கட்டித்தர வேண்டும். இல்லையெனில், அரசு அவரின் உரிமத்தை ரத்து செய்து முழுமையாக அரசு பள்ளியாக மாற்றி புதிய பள்ளிக்கூடத்தை விரைவில் கட்டித்தர வேண்டும். அரசா? தாளாளரா என்பதற்கிடையில் மாணவர்களின் ஆரம்பக் கல்வி தத்தளித்துக் கொணடிருக்கிறது. உயர்கல்விதுறை அமைச்சரின் சொந்த தொகுதியிலே பள்ளிக் கட்டடத்திற்கு இடம் இல்லை என்பது வருத்ததிற்குரிய ஒன்றாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் முதல் பல அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்ட போதிலும் தஞ்சையின் கடைசி எல்லை என்பதாலோ என்னவோ இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமலே உள்ளது. அரசு விரைந்து புதிய பள்ளிக்கட்டடத்தினை கட்டிக்கொடுத்து மாணவர்கள் ஆரம்பக் கல்வியை சிறப்பாகப் பெற்றிட வழிவகை செய்ய வேண்டும் என்றார். இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபியிடம் பேசியபோது, ``புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு எஸ்டிமேட் அனுப்பி இருக்கிறோம் எனக் கூறிவிட்டு நம் அழைப்பை துண்டித்து விட்டார். அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, விரைவில் புதிய பள்ளிக் கட்டடம் அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
TN இருமொழிக் கொள்கையில் இதை கவனிச்சிருக்கீங்களா? | Parliament வடிவமைப்பும் பச்சையப்பன் கல்லூரியும்!
TN இருமொழிக் கொள்கையில் இதை கவனிச்சிருக்கீங்களா? | Parliament வடிவமைப்பும் பச்சையப்பன் கல்லூரியும்!
'மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்' - மனோ தங்கராஜ்
பொதுவுடைமை சிற்பி ப.ஜீவானந்தத்தின் 63-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாகர்கோவிலில் அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்திலும் அனைவரும் சமம் என்ற ஒப்பற்ற சமத்துவக் கோட்பாட்டை இந்தியாவில் ஏற்படுத்தியாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, பொதுவுடைமைச் சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடித்த ஒரு மாபெரும் பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்தான் அமரர் ஜீவா. அவருடைய நினைவு நாளில் மாலையிட்டு மரியாதை செய்து போற்றுகின்ற அதே நேரத்தில், அவரது சமத்துவக் கருத்துக்களை, பொதுவுடைமைக் கருத்துக்களை இந்த நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும், இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய இந்தப் பிரிவினைவாத சக்திகளை அகற்றுவது என்றும் உறுதி ஏற்போம். அ.தி.மு.க தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரையில் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வந்த நேரத்தில், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என்று கூறினார். அப்போது, 'இது ஒரு ஏமாற்று வித்தை, மாநிலத்தில் நமக்கு நிதி இல்லை, இருக்கக்கூடிய நிதியை வைத்துக் கொடுக்கவே முடியாது' என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். ஆனால், தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு முதல்வர் ஸ்டாலின், ஒரு கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி, அற்புதமான திட்டம் என்ற பெயரைப் பெற்றிருக்கின்றார்கள். இந்த நேரத்தில் எங்கள் அறிக்கையில நாங்கள் என்ன சொல்லப் போகிறோம் என்பதை அவர்கள் பாக்காமல், அவசர அவசரமாக ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக மாதம் 2,000 ரூபாய் வழங்குவதாக அவர் கூறியிருக்கிறார். ஜீவானந்தம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது மாதம் 1,000 ரூபாய் கொடுக்கவே முடியாது, நிதி இல்லை என ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது சொன்னீர்கள். நாங்கள் கொடுத்திருக்கிறோம். இப்போது மாநில நிதி நிலைமை சரியாக இருக்கிறது என்று நம்பித்தானே நீங்கள் ரூ.2,000 கொடுப்போம் என அறிவிக்கிறீர்கள். மாநில நிதி நிலைமை சரியாக இருக்கிறது என்ற நம்பிக்கை அ.தி.மு.க-வுக்கு வந்திருப்பதை பாராட்டுகிறேன். அன்றைக்கு நாங்கள் அறிவித்ததைக் கொடுக்க முடியாது என சொன்னார்கள். நாங்கள் அதை முடித்துக் காட்டினோம். நீங்கள் இப்போது அறிவிக்கிறீர்கள் என்றால், இதற்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக்கூடிய இயக்கம் தி.மு.க. அதற்கு வழிகாட்டிய அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. அமைச்சர் மனோ தங்கராஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ந்து கூட்டணி சம்பந்தமான ஒரு சர்ச்சை வந்துகொண்டே இருப்பது பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். நேற்றைய தினம் டெல்லியில் உள்ள கூட்டம் ஓரளவுக்கு அதைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. மக்கள் மத்தியில் அவர்கள் யாரும் கூட்டணிக்கு எதிராகப் பேசக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையைக் கூட அவர்கள் கைவிடுவதாகத்தான் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எது வந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளைச் சுமுகமாகப் பேசி வழிநடத்தக்கூடிய ஆற்றல் உள்ளவர். வருகின்ற காலகட்டங்களிலும் அவர் மிகச் சிறப்பாகக் கூட்டணிக் கட்சிகளை வழிநடத்துவார் என்றார்.
'விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!' - கண்டுகொள்ளாத அரசு?
பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையை நோக்கிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்திருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அமைச்சர் சிவசங்கர் வழக்கமாக திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்களில் குறைந்தபட்சமாக 700 முதல் 800 ரூபாயிலிருந்தே அமர்ந்து செல்லும் வகையிலான டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால், இப்போது அந்த வகை டிக்கெட்டுகள் குறைந்தபட்சமாக சராசரியாக 2500 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டு வருகிறது. படுக்கைவசதியுடன் கூடிய இருக்கைக்கான டிக்கெட் குறைந்தபட்சமாக 3500 ரூபாயிலிருந்து 7500 ரூபாய்க்கும் விற்கபட்டு வருகிறது. அதேமாதிரி, மதுரையிலிருந்து சென்னைக்கான ஆம்னி பஸ்களின் டிக்கெட்டும் குறைந்தபட்சமாக 2500 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு குறைந்தபட்சமாக 1800 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரைக்கும் டிக்கெட் விற்கப்படுகிறது. கோயம்புத்தூரிலிருந்தும் குறைந்தபட்சமாக 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரைக்கும் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. திருநெல்வேலி டு சென்னை இவை வழக்கமான நேரத்திலான கட்டணங்களை விட கிட்டத்தட்ட மூன்று நான்கு மடங்கு அதிகம். இதை வெளிப்படையாக டிக்கெட் புக்கிங் ஆப்களிலேயே தெரிவித்து விற்று வருகின்றனர். இதனால் சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்ப நினைக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆம்னி பஸ் சிவசங்கர் ஆம்னி பேருந்துகள் பொங்கலை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், 'ஆம்னி பஸ்களை கண்காணிக்க சென்னைக்குள் 9 தணிக்கைக் குழுக்களும் மற்ற மாவட்டங்களில் 36 தணிக்கைக் குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கிறது' எனக் கூறியிருந்தார். கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டும் ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை அரசு தடுக்காமல் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்பு அரியலூரில் பேசிய சிவசங்கர், 'கடந்த ஆண்டுகளை விட மக்கள் அதிகளவில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். அரசுப் பேருந்துகளின் சேவை இல்லாத நீண்ட தூர ஊர்களுக்கு போகும் ஆம்னி பஸ்களில் வேண்டுமானால் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படலாம்' எனப் பேசியிருந்தார். மதுரை, திருச்சி, திருநெல்வேலியெல்லாம் அரசுப் பேருந்துகளின் சேவை இல்லாத ஊரா என்ற கேள்வியையும் பயணிகள் முன்வைக்கின்றனர்.
'விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!' - கண்டுகொள்ளாத அரசு?
பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையை நோக்கிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்திருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அமைச்சர் சிவசங்கர் வழக்கமாக திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்களில் குறைந்தபட்சமாக 700 முதல் 800 ரூபாயிலிருந்தே அமர்ந்து செல்லும் வகையிலான டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால், இப்போது அந்த வகை டிக்கெட்டுகள் குறைந்தபட்சமாக சராசரியாக 2500 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டு வருகிறது. படுக்கைவசதியுடன் கூடிய இருக்கைக்கான டிக்கெட் குறைந்தபட்சமாக 3500 ரூபாயிலிருந்து 7500 ரூபாய்க்கும் விற்கபட்டு வருகிறது. அதேமாதிரி, மதுரையிலிருந்து சென்னைக்கான ஆம்னி பஸ்களின் டிக்கெட்டும் குறைந்தபட்சமாக 2500 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு குறைந்தபட்சமாக 1800 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரைக்கும் டிக்கெட் விற்கப்படுகிறது. கோயம்புத்தூரிலிருந்தும் குறைந்தபட்சமாக 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரைக்கும் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. திருநெல்வேலி டு சென்னை இவை வழக்கமான நேரத்திலான கட்டணங்களை விட கிட்டத்தட்ட மூன்று நான்கு மடங்கு அதிகம். இதை வெளிப்படையாக டிக்கெட் புக்கிங் ஆப்களிலேயே தெரிவித்து விற்று வருகின்றனர். இதனால் சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்ப நினைக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆம்னி பஸ் சிவசங்கர் ஆம்னி பேருந்துகள் பொங்கலை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், 'ஆம்னி பஸ்களை கண்காணிக்க சென்னைக்குள் 9 தணிக்கைக் குழுக்களும் மற்ற மாவட்டங்களில் 36 தணிக்கைக் குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கிறது' எனக் கூறியிருந்தார். கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டும் ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை அரசு தடுக்காமல் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்பு அரியலூரில் பேசிய சிவசங்கர், 'கடந்த ஆண்டுகளை விட மக்கள் அதிகளவில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். அரசுப் பேருந்துகளின் சேவை இல்லாத நீண்ட தூர ஊர்களுக்கு போகும் ஆம்னி பஸ்களில் வேண்டுமானால் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படலாம்' எனப் பேசியிருந்தார். மதுரை, திருச்சி, திருநெல்வேலியெல்லாம் அரசுப் பேருந்துகளின் சேவை இல்லாத ஊரா என்ற கேள்வியையும் பயணிகள் முன்வைக்கின்றனர்.
ஈரோடு: எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா; குதிரை சாரட் ஊர்வலம்... மேள தாளத்துடன் உற்சாகம்! - Album
ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள்
ஈரோடு: எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா; குதிரை சாரட் ஊர்வலம்... மேள தாளத்துடன் உற்சாகம்! - Album
ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள்
``எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது - ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரும் அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். இம்மானுவேல் மக்ரோன் தனது எக்ஸ் பக்கத்தில், ``வரி அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மையை உறுதிசெய்யும் வகையில், ஐரோப்பியர்கள் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள். இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு உறுதியுடன் இருக்கிறோம். இந்த அடிப்படையில்தான், கிரீன்லாந்தில் டென்மார்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவப் பயிற்சியில் பங்கேற்க நாங்கள் முடிவு செய்தோம். உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகின் வேறு எந்தவொரு நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது. எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், ``நேட்டோ கூட்டாளிகளின் கூட்டுப் பாதுகாப்பைப் உறுதி செய்யும், நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறு. நிச்சயமாக, இது குறித்து நாங்கள் அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம். பிரான்ஸ் பார்வையில், கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க்கும் கிரீன்லாந்தும்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். என உறுதியான பதிலை கொடுத்திருக்கிறார். வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
``எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது - ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரும் அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். இம்மானுவேல் மக்ரோன் தனது எக்ஸ் பக்கத்தில், ``வரி அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மையை உறுதிசெய்யும் வகையில், ஐரோப்பியர்கள் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள். இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு உறுதியுடன் இருக்கிறோம். இந்த அடிப்படையில்தான், கிரீன்லாந்தில் டென்மார்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவப் பயிற்சியில் பங்கேற்க நாங்கள் முடிவு செய்தோம். உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகின் வேறு எந்தவொரு நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது. எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், ``நேட்டோ கூட்டாளிகளின் கூட்டுப் பாதுகாப்பைப் உறுதி செய்யும், நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறு. நிச்சயமாக, இது குறித்து நாங்கள் அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம். பிரான்ஸ் பார்வையில், கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க்கும் கிரீன்லாந்தும்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். என உறுதியான பதிலை கொடுத்திருக்கிறார். வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
`2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவி வேண்டும்'- ஹோட்டலில் கவுன்சிலர்கள்... பாஜக-விடம் பேரம் பேசும் ஷிண்டே!
மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 89 வார்டுகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. மேயர் தேர்தலில் வெற்றி பெற 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாகும். ஆனால் அந்த அளவுக்கு பா.ஜ.கவிடம் கவுன்சிலர்கள் இல்லை. இதையடுத்து கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே)வின் ஆதரவை பெற வேண்டிய நிலைக்கு பா.ஜ.க தள்ளப்பட்டுள்ளது. சிவசேனா(ஷிண்டே) மும்பை மாநகராட்சி தேர்தலில் 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு கட்சி கவுன்சிலர்களையும் சேர்த்தால் 118 பேரின் ஆதரவு கிடைக்கிறது. இது தவிர தனித்து போட்டியிட்ட அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பட்னாவிஸ் தற்போது தங்களது துணை இல்லாமல் மேயர் பதவியை பா.ஜ.கவால் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஏக்நாத் ஷிண்டே, தங்களது கட்சிக்கு 2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுவும் முதல் 2.5 ஆண்டுகள் தங்களுக்கு வேண்டும் என்றும், அடுத்த 2.5 ஆண்டுகளை பா.ஜ.க எடுத்துக்கொள்ளட்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது கட்சி கவுன்சிலர்கள் அடியோடு பா.ஜ.கவில் சேர்ந்துவிடக்கூடும் என்று என்ற அச்சத்தில் அனைத்து கவுன்சிலர்களையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏக்நாத் ஷிண்டே தங்க வைத்துள்ளார். அவர்களை ஹோட்டலில் தங்க வைத்த பிறகுதான் ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் பேரம் பேச ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் கட்சி கவுன்சிலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக அவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி கொடுக்கப்படுவதாகவும், அதற்காகத்தான் அவர்கள் ஹோட்டலில் தங்கி இருப்பதாக ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா தெரிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ''சிவசேனா கவுன்சிலர்களை எங்கள் பக்கம் இழுக்கும் பேச்சுக்கே இடமில்லை. நான் எங்களது கட்சியின் புனே கவுன்சிலர்களை சந்தித்து பேசியது போல் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி கவுன்சிலர்களை சந்தித்து பேசி இருக்கலாம். மும்பையில் எங்களது கூட்டணியான மஹாயுதியை சேர்ந்த மேயர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் நான், ஏக்நாத் ஷிண்டே மற்றும் இரு கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு எடுக்கப்படும். இதில் எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை''என்று தெரிவித்தார். இது குறித்து சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''மேயரின் பதவிக் காலத்தை 2.5 வருடங்கள் எங்களுக்கு கேட்கிறோம். இது முதல் 2.5 வருடங்களாக இருக்க வேண்டும். பாஜக இரண்டாவது 2.5 வருடங்களை எடுத்துக் கொள்ளலாம். பா.ஜ.க சொந்தமாக மேயர் பதவியை பிடிக்கும் அளவுக்கு இடங்களைப் பெறவில்லை, எனவே அவர்கள் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிலைக்குழுத் தலைவர் பதவி மற்றும் இதர குழுக்களின் தலைவர் பதவிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் வந்த பிறகு அடுத்த வாரம் தான் மேயர் பதவி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 28ம் தேதி மேயர் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் முதல் முறையாக 10 நியமன கவுன்சிலர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். கட்சிகளிடம் இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கைக்கு தக்கபடி நியமன கவுன்சிலர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். பா.ஜ.கவிற்கு 89 கவுன்சிலர்கள் இருப்பதால் அக்கட்சிக்கு அதிகபட்சமாக 4 நியமனக்கவுன்சிலர்கள் கிடைப்பார்கள்
`2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவி வேண்டும்'- ஹோட்டலில் கவுன்சிலர்கள்... பாஜக-விடம் பேரம் பேசும் ஷிண்டே!
மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 89 வார்டுகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. மேயர் தேர்தலில் வெற்றி பெற 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாகும். ஆனால் அந்த அளவுக்கு பா.ஜ.கவிடம் கவுன்சிலர்கள் இல்லை. இதையடுத்து கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே)வின் ஆதரவை பெற வேண்டிய நிலைக்கு பா.ஜ.க தள்ளப்பட்டுள்ளது. சிவசேனா(ஷிண்டே) மும்பை மாநகராட்சி தேர்தலில் 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு கட்சி கவுன்சிலர்களையும் சேர்த்தால் 118 பேரின் ஆதரவு கிடைக்கிறது. இது தவிர தனித்து போட்டியிட்ட அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பட்னாவிஸ் தற்போது தங்களது துணை இல்லாமல் மேயர் பதவியை பா.ஜ.கவால் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஏக்நாத் ஷிண்டே, தங்களது கட்சிக்கு 2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுவும் முதல் 2.5 ஆண்டுகள் தங்களுக்கு வேண்டும் என்றும், அடுத்த 2.5 ஆண்டுகளை பா.ஜ.க எடுத்துக்கொள்ளட்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது கட்சி கவுன்சிலர்கள் அடியோடு பா.ஜ.கவில் சேர்ந்துவிடக்கூடும் என்று என்ற அச்சத்தில் அனைத்து கவுன்சிலர்களையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏக்நாத் ஷிண்டே தங்க வைத்துள்ளார். அவர்களை ஹோட்டலில் தங்க வைத்த பிறகுதான் ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் பேரம் பேச ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் கட்சி கவுன்சிலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக அவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி கொடுக்கப்படுவதாகவும், அதற்காகத்தான் அவர்கள் ஹோட்டலில் தங்கி இருப்பதாக ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா தெரிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ''சிவசேனா கவுன்சிலர்களை எங்கள் பக்கம் இழுக்கும் பேச்சுக்கே இடமில்லை. நான் எங்களது கட்சியின் புனே கவுன்சிலர்களை சந்தித்து பேசியது போல் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி கவுன்சிலர்களை சந்தித்து பேசி இருக்கலாம். மும்பையில் எங்களது கூட்டணியான மஹாயுதியை சேர்ந்த மேயர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் நான், ஏக்நாத் ஷிண்டே மற்றும் இரு கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு எடுக்கப்படும். இதில் எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை''என்று தெரிவித்தார். இது குறித்து சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''மேயரின் பதவிக் காலத்தை 2.5 வருடங்கள் எங்களுக்கு கேட்கிறோம். இது முதல் 2.5 வருடங்களாக இருக்க வேண்டும். பாஜக இரண்டாவது 2.5 வருடங்களை எடுத்துக் கொள்ளலாம். பா.ஜ.க சொந்தமாக மேயர் பதவியை பிடிக்கும் அளவுக்கு இடங்களைப் பெறவில்லை, எனவே அவர்கள் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிலைக்குழுத் தலைவர் பதவி மற்றும் இதர குழுக்களின் தலைவர் பதவிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் வந்த பிறகு அடுத்த வாரம் தான் மேயர் பதவி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 28ம் தேதி மேயர் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் முதல் முறையாக 10 நியமன கவுன்சிலர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். கட்சிகளிடம் இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கைக்கு தக்கபடி நியமன கவுன்சிலர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். பா.ஜ.கவிற்கு 89 கவுன்சிலர்கள் இருப்பதால் அக்கட்சிக்கு அதிகபட்சமாக 4 நியமனக்கவுன்சிலர்கள் கிடைப்பார்கள்
மகா., உள்ளாட்சி தேர்தல்: சரத் பவாரை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிசெய்த அஜித் பவார்
மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளது. புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்படி இருந்தும் இரண்டு மாநகராட்சிகளிலும் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று இரண்டு மாநகராட்சிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இரு தேசியாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து இரு கட்சி தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 5ம் தேதி ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சரத் பவாருடன் அஜித் பவார் ஆலோசனை நடத்தி இருக்கிறார். பாராமதியில் உள்ள சரத் பவார் இல்லத்திற்கு அஜித் பவார் இதற்காக சென்றார். அங்கு சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் ரோஹித் பவார் ஆகியோருடன் அஜித் பவார் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து விவாதித்தார். இறுதியில் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இச்சந்திப்பு குறித்து சுப்ரியா சுலேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பூட்டிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையை எப்படி வெளியில் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அஜித் பவார் மற்றும் சரத் பவார் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து பாராமதியில் நடந்த வேளாண் கண்காட்சிக்கு புறப்பட்டு சென்றனர். இது குறித்து அஜித் பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு,'' வேளாண் கண்காட்சிக்கு சரத் பவார் செல்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்து ஒன்றாக வேளாண் கண்காட்சிக்கு சென்றோம்'' என்றார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். சரத் பவார் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில்,''12 ஜில்லா பரிஷத் மற்றும் 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல்களில் கூட்டணி அமைப்பது குறித்து இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஆலோசித்தனர். சில இடங்களில் நட்புரீதியாக ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் நாங்கள் விவாதித்தோம்'' என்றார்.
SIR: இன்றே கடைசி நாள்... வாக்காளர் பெயர் சேர்க்க உடனே விண்ணப்பியுங்க!
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், முகவரியில்இல்லாதவர்கள் 66.44 லட்சம்பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள் 3.98 லட்சம் பேர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நீக்கப்பட்டவர்களில் இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க அல்லது புதிய பதிவுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் ஆணையம் உயிரிழந்த வாக்காளர்களைத் தவிர்த்துப் பார்த்தால், இன்னும் சுமார் 53.65 லட்சம் பேர் தங்கள் பெயர்களை மீண்டும் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்காவிட்டால், வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜனவரி 18) முடிவடைகிறது. திருத்தப்பணி மேற்கொள்ள வேண்டியவர்கள் இன்று தவறவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால், வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை காப்பாற்றிக் கொள்ள இன்றே தங்களின் வாக்கு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அடுத்த மாதம் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Mumbai-யை கைப்பற்றிய பாஜக - உதவியதா தேர்தல் ஆணையம்? | Imperfect show | Vikatan TV
SIR: இன்றே கடைசி நாள்... வாக்காளர் பெயர் சேர்க்க உடனே விண்ணப்பியுங்க!
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், முகவரியில்இல்லாதவர்கள் 66.44 லட்சம்பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள் 3.98 லட்சம் பேர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நீக்கப்பட்டவர்களில் இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க அல்லது புதிய பதிவுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் ஆணையம் உயிரிழந்த வாக்காளர்களைத் தவிர்த்துப் பார்த்தால், இன்னும் சுமார் 53.65 லட்சம் பேர் தங்கள் பெயர்களை மீண்டும் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்காவிட்டால், வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜனவரி 18) முடிவடைகிறது. திருத்தப்பணி மேற்கொள்ள வேண்டியவர்கள் இன்று தவறவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால், வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை காப்பாற்றிக் கொள்ள இன்றே தங்களின் வாக்கு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அடுத்த மாதம் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Mumbai-யை கைப்பற்றிய பாஜக - உதவியதா தேர்தல் ஆணையம்? | Imperfect show | Vikatan TV
SIR: இன்றே கடைசி நாள்... வாக்காளர் பெயர் சேர்க்க உடனே விண்ணப்பியுங்க!
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், முகவரியில்இல்லாதவர்கள் 66.44 லட்சம்பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள் 3.98 லட்சம் பேர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நீக்கப்பட்டவர்களில் இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க அல்லது புதிய பதிவுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் ஆணையம் உயிரிழந்த வாக்காளர்களைத் தவிர்த்துப் பார்த்தால், இன்னும் சுமார் 53.65 லட்சம் பேர் தங்கள் பெயர்களை மீண்டும் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்காவிட்டால், வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜனவரி 18) முடிவடைகிறது. திருத்தப்பணி மேற்கொள்ள வேண்டியவர்கள் இன்று தவறவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால், வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை காப்பாற்றிக் கொள்ள இன்றே தங்களின் வாக்கு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அடுத்த மாதம் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Mumbai-யை கைப்பற்றிய பாஜக - உதவியதா தேர்தல் ஆணையம்? | Imperfect show | Vikatan TV
வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?
வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?
வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?
காங்கிரஸ்: ``கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என தலைமை வேதனையோடு தெரிவித்தது - செல்வப்பெருந்தகை
டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் உள்ளிட்ட 41க்கும் மேற்பட்டோரிடம் கூட்டாகவும் தனித்தனியாகவும் மல்லிகார்ஜுன கார்கேவும் ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தினர். அதில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கூட்டணி, தொகுதி பங்கீடு, உட்கட்சி மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. செல்வப்பெருந்தகை - ஸ்டாலின் இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், ``தேர்தல் உத்தி தொடர்பாக கட்சியின் கொள்கை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில், ``எங்களுடைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எதிர்க் கட்சி தலைவரும் எல்லோரையும் அழைத்து கருத்துக்களை கேட்டிருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், காரிய கமிட்டி உறுப்பினர்கள், மேனாள் மாநில தலைவர்கள், மேனாள் சட்டமன்ற கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை சொல்லியிருக்கிறார்கள். செல்வப்பெருந்தகை - ஸ்டாலின் பொதுவெளியில் கூட்டணியை பற்றி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். ட்வீட் போடுவது, அறிக்கை கொடுப்பது எனக் கூட்டணிக் குறித்து யாரும் பேசக்கூடாது என மிகவும் வேதனையோடு தெரிவித்தார்கள். எனவே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன முடிவெடுக்கிறதோ அந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பின்பற்றும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்தகை திடீர் அறிக்கை
CBI சம்மன்: Vijay -க்கு 2 Options கொடுக்கும் BJP? | ADMK வாக்குறுதிகள் | DMK TVK | IPS | Vikatan TV
CBI சம்மன்: Vijay -க்கு 2 Options கொடுக்கும் BJP? | ADMK வாக்குறுதிகள் | DMK TVK | IPS | Vikatan TV
Pakistan Saudi Turkey கூட்டுப் படையால் Indiaவுக்கு என்ன ஆபத்து? | Decode
Pakistan Saudi Turkey கூட்டுப் படையால் Indiaவுக்கு என்ன ஆபத்து? | Decode
உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained
இதுவரை எந்த உலக நாடுகளுமே தொடாத உச்சத்தை சீனா தற்போது தொட்டுள்ளது. ஆம்… வர்த்தகத்தில் 1.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு அபரிமிதத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த நாடுமே இவ்வளவு பெரிய அபரிமிதத்தை எட்டியதில்லை. அபரிமிதம் என்றால் என்ன என்கிற கேள்வி எழுகிறதா? சீனா சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும். சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருக்கும். கடந்த ஆண்டில், சீனா இறக்குமதி செய்ததை விட, ஏற்றுமதியை அதிகம் செய்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி கொஞ்சமா பணம் போடுங்க; ஆனா, கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க! - உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை! இந்த விளக்கத்தை எண்களில் பார்க்கலாம். 2025-ம் ஆண்டு, சீனா 3.77 டிரில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இறக்குமதியை 2.58 டிரில்லியனிற்குத் தான் செய்துள்ளது. இந்த இரண்டு கணக்கையும் கழித்துப் பார்த்தால், நமக்கு வரும் பதில் 1.19 டிரில்லியன் டாலர்கள் . 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட, 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 6.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இவை. நெருக்கடி தந்த ட்ரம்ப் இந்த வர்த்தக அபரிமிதத்தை எளிதாக சீனா தொட்டுவிடவில்லை. 2025-ம் ஆண்டில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சீனாவிற்கு அவர் பல நெருக்கடிகளைத் தந்து வந்தார். எந்த நாட்டிற்கும் இல்லாத அளவிற்கு, சீனா மீது பரஸ்பர வரியைப் போட்டு தாக்கினார் ட்ரம்ப். தான் அதிபராக பொறுப்பேற்றதுமே சீனா அமெரிக்காவிற்கு ஃபென்டனைல் ஏற்றுமதி செய்கிறது என்று கூடுதல் 10 சதவிகித வரியை அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தபோது, சீனாவிற்கு எக்கச்சக்கமாக வரியை விதித்தார். ட்ரம்ப் - பரஸ்பர வரி கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில் பதிலுக்கு, சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரியை அதிகரித்தது. இந்த வர்த்தக போரினால், சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 110 சதவிகிதம் வரை வரி விதித்தது. இந்தப் போர் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் தங்களது வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். அதனால், அமெரிக்கா சீனப் பொருள்களுக்கு 30 சதவிகிதம் என வரியைக் குறைத்தது அமெரிக்கா. பின்னர், அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்களுக்கு விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், ட்ரம்ப் சீனாவிற்கு 130 சதவிகித வரி என அறிவித்தார். இப்படி கடந்த ஆண்டு முழுவதுமே, சீனா மீது அமெரிக்கா வரி விதிப்பதும்… பின்னர் விலக்குவதுமாக இருந்தது. பிற நாடுகளுக்கு வரி அமலாவதற்கு ஓரளவு அவகாசம் கொடுக்கப்பட்டாலும், சீனாவிற்கு மட்டும் இந்த வரிகள் கிட்டத்தட்ட உடனடியாக அமலுக்கு வந்தன. இதை 20 – 30 வரிகளில் படித்துவிடுவது எளிதாக இருக்கலாம். இத்தனை வரிகளை ஒரு நாடு தாங்குவது அவ்வளவு எளிதல்ல. ட்ரம்ப் - ஜி ஜின்பிங் Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க! காரணம், 2025-ம் ஆண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனா அமெரிக்காவிற்கு 2.66 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், அமெரிக்காவின் டாப் சப்ளையர் நாடு சீனா. இப்படியொரு சந்தை உள்ள ஒரு நாட்டில் அதிக வரியை சந்திப்பது எந்த நாட்டிற்கும் நெருக்கடியானது. இவற்றைத் தாண்டி, சீனா வர்த்தக அபரிமிதத்தைத் தொட்டுள்ளது பெரும் ஆச்சரியம் தான். ரூட்டை மாற்றிய சீனா இந்த ஆச்சரியத்தைத் தொட, சீனா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. தனது ரூட்டை மாற்றியது அவ்வளவு தான். ட்ரம்பின் வரிகளால், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்தன. இதை சமன் செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்ப நாடுகள், தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியை முன்பை விட கூடுதலாக்கியது. இந்த மாற்றத்தினால், கடந்த நவம்பர் மாதத்திலேயே 1 டிரில்லியன் டாலர் அபரிமிதத்தை சீனா தாண்டியிருக்கிறது. ஆக, இந்த வளர்ச்சி அமெரிக்காவைத் தாண்டி உள்ளது. இந்த வர்த்தக அபரிமிதத்தைத் தொட 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, வர்த்தக அபரிமிதம் என்றால் அதிக உற்பத்தி இருந்திருக்க வேண்டும்... அப்போது தான் ஏற்றுமதி அதிகம் செய்ய முடியும். அதிக உற்பத்தியை ஒரு ஆண்டில் திடீரென செய்துவிட முடியாது. ஆக, சீனா பல ஆண்டுகளாக கட்டி வந்த… கடைப்பிடித்து வந்த தொழில் கொள்கை தான் இப்போதைய இந்த வளர்ச்சிக்குக் காரணம். சீனா வளர வளர தனது உற்பத்தித் திறனையும் அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும் இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி? இரண்டு, 2021-ம் ஆண்டில் சீனா ரியல் எஸ்டேட்டில் பெரும் சறுக்கலைக் கொண்டது. அதுவரை சீனாவின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை பெரும்பங்காற்றியது. ஆம்… சீன மக்கள் வீடுகளை நல்ல முதலீடாக பார்த்து வந்தனர். அதனால், அவர்கள் தங்க ஒரு வீடு, முதலீட்டிற்கு ஒரு அல்லது பல வீடு என்கிற கான்செப்ட்டைப் பின்பற்றி வந்தனர். இதனால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கடன் வாங்கி பல வீடுகளைக் கட்டி குவித்தனர். இதனால், வீடுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. இதனால், மேலும் கடன் வாங்க முடியாமல், டெவலப்பர் நிறுவனங்களால் வீட்டைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஏற்கெனவே வாங்கிய கடனையும் அடைக்க முடியவில்லை. விளைவு, ரியல் எஸ்டேட் துறை சீனாவில் பலத்த சரிவை சந்தித்தது. வீடுகளின் விலையும் சரிந்தன. முதலீடுகளாக வீட்டை வாங்கி போட்டிருந்த சீன மக்களுக்கு இது பெரும் அடி. இதனால், அவர்கள் செலவு செய்வதை பெருமளவு குறைத்தனர். சீனாவின் உள்நாட்டுத் தேவை பலத்த சரிவைக் கண்டது. மக்களின் தேவை குறையும்போது, இறக்குமதி செய்யப்படுவது குறையும். அப்போது, தானாகவே ஏற்றுமதி அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained மூன்றாவது, சீன நாணயமான யுவானின் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கிறது. இது சீனாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய ப்ளஸ். சீனப் பொருள்களை வாங்கும் பிற நாடுகள், குறைந்த மதிப்பைக் கொண்ட யுவானால், குறைவான விலைக்கு வாங்குகிறார்கள். இது பிற நாட்டுப் பொருள்களை வாங்குவதை விட, சீனப் பொருள்களுக்கு மிக குறைந்த விலையே. இதனாலேயே, சீன அரசு மிக கவனமாக யுவானின் விலையை வீழ்ச்சியில் வைத்திருக்கிறது. பிற நாடுகளுக்கு சிக்கல் இதெல்லாம் சரி தான்… சீனாவின் இந்த வர்த்தக அபரிமிதத்தால் பிற நாடுகள் மிகவும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆம்… சீனா இன்னமும் ஏற்றுமதியை அதிகரிக்கும். சீனாவின் பொருள்களின் தரம் பெரும் கேள்விக்குரியது. ஏற்றுமதி அதிகரிப்பதால், உலக மக்களின் கைகளில் கிடைக்கும் பொருள்களின் தரம் கேள்விக்குறி ஆகும். இப்போது உலகமே தொழில்நுட்பத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சீனா பெரும்பாலும் எலெக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சார்ந்த பொருள்களையே ஏற்றுமதி செய்து வருகிறது. தரம் குறையும்போது, விலையும் குறையும். இதனால், பிற நாடுகளில் வேலை இழப்பு, உற்பத்தி குறைவு, பொருளாதாரப் பின்னடைவு ஏற்படலாம். சீனா Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்? பொருளாதார பிரச்னை?! ப்ளூம்பெர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, சீனாவிற்கு வர்த்தகத்தில் அபரிமிதமாக கிடைத்த பணம் சீனாவின் மத்திய வங்கிக்கு போகவில்லையாம். அவை அனைத்தும் சீன முதலீட்டாளர்கள், சீன பணக்காரர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் சும்மா வைத்திருக்கமாட்டார்கள் அல்லவா. அவர்கள் அதை உலக சந்தையில் முதலீடு செய்கிறார்கள். பிற நாடுகளின் பத்திரத்தை வாங்குகிறார்கள். ஒருவேளை, அவர்கள் ஒரேடியாக அந்த முதலீடுகளை விற்றால், உலகப் பொருளாதாரத்தின் நிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு பயங்கரமாக மாறும். உற்பத்தியிலும் சீனாவை நம்பி… பொருளாதாரத்திலும் சீனாவை நம்புவதாக இருந்தால் அது பெரும் பிரச்னை. சீனாவின் வர்த்தக நிலைமையைப் பார்த்தோம். இப்போது இந்தியாவின் வர்த்தக நிலை குறித்து பார்ப்போமா? இந்திய அரசின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு 96.58 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது. 2024-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 88.43 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது. சீன பொருளாதாரத்தையும், இந்திய பொருளாதாரத்தையும் ஒப்பிட முடியாதது தான். ஆனால், இந்திய அரசு இந்த வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை சீக்கிரம் எடுக்க வேண்டும். சீனா ஒவ்வொரு கட்டம் முன்னேறும்போது, இந்தியாவிற்கு ஏதோ ஒரு விதத்தில் சிக்கல். அதை இந்திய அரசு சீக்கிரம் கவனத்தில் கொள்ள வேண்டும். ! வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா' கனவு | Explained
உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained
இதுவரை எந்த உலக நாடுகளுமே தொடாத உச்சத்தை சீனா தற்போது தொட்டுள்ளது. ஆம்… வர்த்தகத்தில் 1.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு அபரிமிதத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த நாடுமே இவ்வளவு பெரிய அபரிமிதத்தை எட்டியதில்லை. அபரிமிதம் என்றால் என்ன என்கிற கேள்வி எழுகிறதா? சீனா சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும். சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருக்கும். கடந்த ஆண்டில், சீனா இறக்குமதி செய்ததை விட, ஏற்றுமதியை அதிகம் செய்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி கொஞ்சமா பணம் போடுங்க; ஆனா, கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க! - உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை! இந்த விளக்கத்தை எண்களில் பார்க்கலாம். 2025-ம் ஆண்டு, சீனா 3.77 டிரில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இறக்குமதியை 2.58 டிரில்லியனிற்குத் தான் செய்துள்ளது. இந்த இரண்டு கணக்கையும் கழித்துப் பார்த்தால், நமக்கு வரும் பதில் 1.19 டிரில்லியன் டாலர்கள் . 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட, 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 6.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இவை. நெருக்கடி தந்த ட்ரம்ப் இந்த வர்த்தக அபரிமிதத்தை எளிதாக சீனா தொட்டுவிடவில்லை. 2025-ம் ஆண்டில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சீனாவிற்கு அவர் பல நெருக்கடிகளைத் தந்து வந்தார். எந்த நாட்டிற்கும் இல்லாத அளவிற்கு, சீனா மீது பரஸ்பர வரியைப் போட்டு தாக்கினார் ட்ரம்ப். தான் அதிபராக பொறுப்பேற்றதுமே சீனா அமெரிக்காவிற்கு ஃபென்டனைல் ஏற்றுமதி செய்கிறது என்று கூடுதல் 10 சதவிகித வரியை அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தபோது, சீனாவிற்கு எக்கச்சக்கமாக வரியை விதித்தார். ட்ரம்ப் - பரஸ்பர வரி கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில் பதிலுக்கு, சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரியை அதிகரித்தது. இந்த வர்த்தக போரினால், சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 110 சதவிகிதம் வரை வரி விதித்தது. இந்தப் போர் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் தங்களது வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். அதனால், அமெரிக்கா சீனப் பொருள்களுக்கு 30 சதவிகிதம் என வரியைக் குறைத்தது அமெரிக்கா. பின்னர், அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்களுக்கு விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், ட்ரம்ப் சீனாவிற்கு 130 சதவிகித வரி என அறிவித்தார். இப்படி கடந்த ஆண்டு முழுவதுமே, சீனா மீது அமெரிக்கா வரி விதிப்பதும்… பின்னர் விலக்குவதுமாக இருந்தது. பிற நாடுகளுக்கு வரி அமலாவதற்கு ஓரளவு அவகாசம் கொடுக்கப்பட்டாலும், சீனாவிற்கு மட்டும் இந்த வரிகள் கிட்டத்தட்ட உடனடியாக அமலுக்கு வந்தன. இதை 20 – 30 வரிகளில் படித்துவிடுவது எளிதாக இருக்கலாம். இத்தனை வரிகளை ஒரு நாடு தாங்குவது அவ்வளவு எளிதல்ல. ட்ரம்ப் - ஜி ஜின்பிங் Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க! காரணம், 2025-ம் ஆண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனா அமெரிக்காவிற்கு 2.66 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், அமெரிக்காவின் டாப் சப்ளையர் நாடு சீனா. இப்படியொரு சந்தை உள்ள ஒரு நாட்டில் அதிக வரியை சந்திப்பது எந்த நாட்டிற்கும் நெருக்கடியானது. இவற்றைத் தாண்டி, சீனா வர்த்தக அபரிமிதத்தைத் தொட்டுள்ளது பெரும் ஆச்சரியம் தான். ரூட்டை மாற்றிய சீனா இந்த ஆச்சரியத்தைத் தொட, சீனா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. தனது ரூட்டை மாற்றியது அவ்வளவு தான். ட்ரம்பின் வரிகளால், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்தன. இதை சமன் செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்ப நாடுகள், தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியை முன்பை விட கூடுதலாக்கியது. இந்த மாற்றத்தினால், கடந்த நவம்பர் மாதத்திலேயே 1 டிரில்லியன் டாலர் அபரிமிதத்தை சீனா தாண்டியிருக்கிறது. ஆக, இந்த வளர்ச்சி அமெரிக்காவைத் தாண்டி உள்ளது. இந்த வர்த்தக அபரிமிதத்தைத் தொட 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, வர்த்தக அபரிமிதம் என்றால் அதிக உற்பத்தி இருந்திருக்க வேண்டும்... அப்போது தான் ஏற்றுமதி அதிகம் செய்ய முடியும். அதிக உற்பத்தியை ஒரு ஆண்டில் திடீரென செய்துவிட முடியாது. ஆக, சீனா பல ஆண்டுகளாக கட்டி வந்த… கடைப்பிடித்து வந்த தொழில் கொள்கை தான் இப்போதைய இந்த வளர்ச்சிக்குக் காரணம். சீனா வளர வளர தனது உற்பத்தித் திறனையும் அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும் இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி? இரண்டு, 2021-ம் ஆண்டில் சீனா ரியல் எஸ்டேட்டில் பெரும் சறுக்கலைக் கொண்டது. அதுவரை சீனாவின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை பெரும்பங்காற்றியது. ஆம்… சீன மக்கள் வீடுகளை நல்ல முதலீடாக பார்த்து வந்தனர். அதனால், அவர்கள் தங்க ஒரு வீடு, முதலீட்டிற்கு ஒரு அல்லது பல வீடு என்கிற கான்செப்ட்டைப் பின்பற்றி வந்தனர். இதனால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கடன் வாங்கி பல வீடுகளைக் கட்டி குவித்தனர். இதனால், வீடுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. இதனால், மேலும் கடன் வாங்க முடியாமல், டெவலப்பர் நிறுவனங்களால் வீட்டைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஏற்கெனவே வாங்கிய கடனையும் அடைக்க முடியவில்லை. விளைவு, ரியல் எஸ்டேட் துறை சீனாவில் பலத்த சரிவை சந்தித்தது. வீடுகளின் விலையும் சரிந்தன. முதலீடுகளாக வீட்டை வாங்கி போட்டிருந்த சீன மக்களுக்கு இது பெரும் அடி. இதனால், அவர்கள் செலவு செய்வதை பெருமளவு குறைத்தனர். சீனாவின் உள்நாட்டுத் தேவை பலத்த சரிவைக் கண்டது. மக்களின் தேவை குறையும்போது, இறக்குமதி செய்யப்படுவது குறையும். அப்போது, தானாகவே ஏற்றுமதி அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained மூன்றாவது, சீன நாணயமான யுவானின் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கிறது. இது சீனாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய ப்ளஸ். சீனப் பொருள்களை வாங்கும் பிற நாடுகள், குறைந்த மதிப்பைக் கொண்ட யுவானால், குறைவான விலைக்கு வாங்குகிறார்கள். இது பிற நாட்டுப் பொருள்களை வாங்குவதை விட, சீனப் பொருள்களுக்கு மிக குறைந்த விலையே. இதனாலேயே, சீன அரசு மிக கவனமாக யுவானின் விலையை வீழ்ச்சியில் வைத்திருக்கிறது. பிற நாடுகளுக்கு சிக்கல் இதெல்லாம் சரி தான்… சீனாவின் இந்த வர்த்தக அபரிமிதத்தால் பிற நாடுகள் மிகவும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆம்… சீனா இன்னமும் ஏற்றுமதியை அதிகரிக்கும். சீனாவின் பொருள்களின் தரம் பெரும் கேள்விக்குரியது. ஏற்றுமதி அதிகரிப்பதால், உலக மக்களின் கைகளில் கிடைக்கும் பொருள்களின் தரம் கேள்விக்குறி ஆகும். இப்போது உலகமே தொழில்நுட்பத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சீனா பெரும்பாலும் எலெக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சார்ந்த பொருள்களையே ஏற்றுமதி செய்து வருகிறது. தரம் குறையும்போது, விலையும் குறையும். இதனால், பிற நாடுகளில் வேலை இழப்பு, உற்பத்தி குறைவு, பொருளாதாரப் பின்னடைவு ஏற்படலாம். சீனா Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்? பொருளாதார பிரச்னை?! ப்ளூம்பெர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, சீனாவிற்கு வர்த்தகத்தில் அபரிமிதமாக கிடைத்த பணம் சீனாவின் மத்திய வங்கிக்கு போகவில்லையாம். அவை அனைத்தும் சீன முதலீட்டாளர்கள், சீன பணக்காரர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் சும்மா வைத்திருக்கமாட்டார்கள் அல்லவா. அவர்கள் அதை உலக சந்தையில் முதலீடு செய்கிறார்கள். பிற நாடுகளின் பத்திரத்தை வாங்குகிறார்கள். ஒருவேளை, அவர்கள் ஒரேடியாக அந்த முதலீடுகளை விற்றால், உலகப் பொருளாதாரத்தின் நிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு பயங்கரமாக மாறும். உற்பத்தியிலும் சீனாவை நம்பி… பொருளாதாரத்திலும் சீனாவை நம்புவதாக இருந்தால் அது பெரும் பிரச்னை. சீனாவின் வர்த்தக நிலைமையைப் பார்த்தோம். இப்போது இந்தியாவின் வர்த்தக நிலை குறித்து பார்ப்போமா? இந்திய அரசின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு 96.58 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது. 2024-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 88.43 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது. சீன பொருளாதாரத்தையும், இந்திய பொருளாதாரத்தையும் ஒப்பிட முடியாதது தான். ஆனால், இந்திய அரசு இந்த வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை சீக்கிரம் எடுக்க வேண்டும். சீனா ஒவ்வொரு கட்டம் முன்னேறும்போது, இந்தியாவிற்கு ஏதோ ஒரு விதத்தில் சிக்கல். அதை இந்திய அரசு சீக்கிரம் கவனத்தில் கொள்ள வேண்டும். ! வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா' கனவு | Explained
'டெல்லி சலோ' : திமுக-வா... தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றே மாதங்கள்தான். தி.மு.க-வே கதி எனக் கார்கே, சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஒரு பக்கம் நிற்க... ஏன் த.வெ.க-வுடன் கைகோக்கக் கூடாது? எனக் கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்பு ரூட் மாற்றுகிறது. இந்தக் குழப்பங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட ஐவர் குழு, 70 தொகுதிகள்... ஆட்சியில் பங்கு! என ஸ்டாலினிடம் தூதுவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி கொளுத்திப் போட்ட பிரவீண் சக்கரவர்த்தி! இதனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஓகே என அனைவரும் நினைத்த நேரத்தில், ராகுலுக்கு நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி திடீரென விஜய்யைச் சந்திக்க, கூட்டணிக்குள் நிலநடுக்கமே ஏற்பட்டது. இது தனிப்பட்ட சந்திப்பு எனத் தலைவர்கள் சமாளிப்பதற்குள், தமிழ்நாடுதான் கடனில் முதலிடம் எனக் கனிமொழியின் பேட்டியை வைத்தே ட்விஸ்ட் கொடுத்தார் பிரவீண். விளைவு? தி.மு.க பாசறையில் புகைச்சல் ஆரம்பமானது. கரூர் எம்.பி ஜோதிமணியோ, சிலரின் சுயநலத்தால் காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது எனச் சீற, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.பி. சூர்யபிரகாசமோ, தமிழக காங்கிரஸை தி.மு.க-வின் அடிமைக்கூடாரமாக மாற்றுகிறார் செல்வப்பெருந்தகை என வெடிவைத்துவிட்டு வெளியேறினார். ஜோதிமணி நிலைமை மோசமாவதை உணர்ந்த மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், அவசர அவசரமாகச் சென்னைக்கு ஓடிவந்து, எங்க கூட்டணி தி.மு.க-வோடுதான். த.வெ.க-வுடன் பேசுவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி என்றார். அதற்குள்ளாக அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது... கூட்டணி ஆட்சிக்கு இடமே இல்லை எனத் தெறிக்கவிட, அதை டெல்லி பார்த்துக்கொள்ளும் எனச் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுக்க... பரபரப்பு பற்றிக்கொண்டது! சி.எம் ரொம்ப அப்செட்! இப்படியான சூழலில்தான் சமீபத்தில் கூடலூர் வந்திருந்தார், ராகுல் காந்தி. அதில் பங்கேற்ற நீலகிரி எம்.பி ஆ.ராசா, உங்க ஆட்கள் பேசுவது கூட்டணிக்கு வேட்டு வைக்கிறது. சி.எம் ரொம்ப அப்செட்! எனச் சொல்ல, ராகுலோ கூலாக, நான் பார்த்துக் கொள்கிறேன் என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டதாக தகவல் வெளியாக பரபரப்பை கிளப்பியது. இப்படி நிலைமை திக் திக்... என இருக்கும் சூழலில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை' எனச் சொல்லிப் பரபரப்பை எகிற வைத்தார். இதற்கிடையில்தான் தமிழக காங்கிரஸாருக்கு டெல்லி அவசர அழைப்பு விடுத்திருக்கிறது. ஆ.ராசா இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், தமிழக காங்கிரஸில் தி.மு.க, த.வெ.க என இரண்டு தரப்பு இருக்கிறது. சமீபத்தில் சச்சின் பைலட் அளித்த பேட்டிக்குப் பின்னால் கூடக் கரூர் எம்.பி ஜோதிமனிதான் இருக்கிறார். இதற்கிடையில் தலைவர் ராகுல் தனியாக எடுத்த சர்வேயில், 'தி.மு.க சரியான மரியாதை கொடுப்பதில்லை. எனவே, த.வெ.க-வுடன் செல்லலாம்' எனப் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். விஜய் இதையடுத்துத்தான் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்பதற்கு அகில இந்திய தலைமை முடிவு செய்தது. அதன்படி இன்று மாலை டெல்லி இந்திரா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் தரும் பதிலையடுத்து ராகுல் கூட்டணிகுறித்த இறுதி முடிவை எடுப்பார். இதற்கிடையில் த.வெ.க-வுடன் செல்லும் முடிவை அகில இந்திய தலைமை எடுத்தால் தனது பதவியை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ராஜினாமா செய்யக்கூடும் என்றனர். இப்படியான நிலையில் காங்கிரஸ் கூடாரம், பரபரப்புடனே காணப்படுகிறது.
'டெல்லி சலோ' : திமுக-வா... தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றே மாதங்கள்தான். தி.மு.க-வே கதி எனக் கார்கே, சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஒரு பக்கம் நிற்க... ஏன் த.வெ.க-வுடன் கைகோக்கக் கூடாது? எனக் கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்பு ரூட் மாற்றுகிறது. இந்தக் குழப்பங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட ஐவர் குழு, 70 தொகுதிகள்... ஆட்சியில் பங்கு! என ஸ்டாலினிடம் தூதுவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி கொளுத்திப் போட்ட பிரவீண் சக்கரவர்த்தி! இதனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஓகே என அனைவரும் நினைத்த நேரத்தில், ராகுலுக்கு நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி திடீரென விஜய்யைச் சந்திக்க, கூட்டணிக்குள் நிலநடுக்கமே ஏற்பட்டது. இது தனிப்பட்ட சந்திப்பு எனத் தலைவர்கள் சமாளிப்பதற்குள், தமிழ்நாடுதான் கடனில் முதலிடம் எனக் கனிமொழியின் பேட்டியை வைத்தே ட்விஸ்ட் கொடுத்தார் பிரவீண். விளைவு? தி.மு.க பாசறையில் புகைச்சல் ஆரம்பமானது. கரூர் எம்.பி ஜோதிமணியோ, சிலரின் சுயநலத்தால் காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது எனச் சீற, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.பி. சூர்யபிரகாசமோ, தமிழக காங்கிரஸை தி.மு.க-வின் அடிமைக்கூடாரமாக மாற்றுகிறார் செல்வப்பெருந்தகை என வெடிவைத்துவிட்டு வெளியேறினார். ஜோதிமணி நிலைமை மோசமாவதை உணர்ந்த மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், அவசர அவசரமாகச் சென்னைக்கு ஓடிவந்து, எங்க கூட்டணி தி.மு.க-வோடுதான். த.வெ.க-வுடன் பேசுவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி என்றார். அதற்குள்ளாக அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது... கூட்டணி ஆட்சிக்கு இடமே இல்லை எனத் தெறிக்கவிட, அதை டெல்லி பார்த்துக்கொள்ளும் எனச் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுக்க... பரபரப்பு பற்றிக்கொண்டது! சி.எம் ரொம்ப அப்செட்! இப்படியான சூழலில்தான் சமீபத்தில் கூடலூர் வந்திருந்தார், ராகுல் காந்தி. அதில் பங்கேற்ற நீலகிரி எம்.பி ஆ.ராசா, உங்க ஆட்கள் பேசுவது கூட்டணிக்கு வேட்டு வைக்கிறது. சி.எம் ரொம்ப அப்செட்! எனச் சொல்ல, ராகுலோ கூலாக, நான் பார்த்துக் கொள்கிறேன் என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டதாக தகவல் வெளியாக பரபரப்பை கிளப்பியது. இப்படி நிலைமை திக் திக்... என இருக்கும் சூழலில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை' எனச் சொல்லிப் பரபரப்பை எகிற வைத்தார். இதற்கிடையில்தான் தமிழக காங்கிரஸாருக்கு டெல்லி அவசர அழைப்பு விடுத்திருக்கிறது. ஆ.ராசா இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், தமிழக காங்கிரஸில் தி.மு.க, த.வெ.க என இரண்டு தரப்பு இருக்கிறது. சமீபத்தில் சச்சின் பைலட் அளித்த பேட்டிக்குப் பின்னால் கூடக் கரூர் எம்.பி ஜோதிமனிதான் இருக்கிறார். இதற்கிடையில் தலைவர் ராகுல் தனியாக எடுத்த சர்வேயில், 'தி.மு.க சரியான மரியாதை கொடுப்பதில்லை. எனவே, த.வெ.க-வுடன் செல்லலாம்' எனப் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். விஜய் இதையடுத்துத்தான் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்பதற்கு அகில இந்திய தலைமை முடிவு செய்தது. அதன்படி இன்று மாலை டெல்லி இந்திரா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் தரும் பதிலையடுத்து ராகுல் கூட்டணிகுறித்த இறுதி முடிவை எடுப்பார். இதற்கிடையில் த.வெ.க-வுடன் செல்லும் முடிவை அகில இந்திய தலைமை எடுத்தால் தனது பதவியை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ராஜினாமா செய்யக்கூடும் என்றனர். இப்படியான நிலையில் காங்கிரஸ் கூடாரம், பரபரப்புடனே காணப்படுகிறது.
'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02
தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது குறித்து தான் பார்க்க போகிறேம் `Vote Vibes' தொடரில்..! திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை! Vote Vibes 02 இன்றைய தேதிக்கு தேர்தல் அரசியலில் திமுக ஒரு மாபெரும் சக்தி. ஆனால், 1956 இல் அப்படியொரு சம்பவம் மட்டும் நடந்திடாமல் போயிருந்தால் திமுக தேர்தலிலேயே போட்டியிட்டிருக்க மாட்டார்கள். திமுவை தேர்தல் பாதைக்கு அழைத்து வந்த அந்த சம்பவம் என்ன தெரியுமா? அறிஞர் அண்ணா 1949 செப்டம்பர் 17 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் பெரியாரின் பிறந்தநாளில் திமுக என்கிற கட்சியைத் தொடங்கினார் அண்ணா. 1952 இல் சுதந்திரத்துக்கு பிறகு மதராஸ் மாகாணத்துக்கான முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்திருந்தது. திமுக தோற்றத்துக்குப் பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே அந்த கட்சி போட்டியிடவில்லை. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சிக்கும் காமன்வீல் கட்சிக்கும் திமுக தங்களின் ஆதரவை தெரிவித்தது. 1957 இல் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மதராஸ் மாகாணம் தயாராகி வந்தது. அந்தத் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்கிற குழப்பம் திமுகவுக்குள் நிலவியது. திருச்சி மாநாடு 1956 இல் திருச்சியில் திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு நடந்திருந்தது. அந்த மாநாடு மைதானத்தின் நுழைவு வாயிலில் அண்ணா இரண்டு பெட்டிகளை வைத்தார். திமுக தேர்தலில் போட்டியிடலாம் என நினைப்பவர்கள் ஒரு பெட்டியிலும் போட்டியிட வேண்டாம் என்பவர்கள் ஒரு பெட்டியிலும் வாக்களிக்க வேண்டும் என்றார். மாநாட்டு திடலிலேயே வாக்குகள் எண்ணப்பட்டன. திமுக தேர்தலில் போட்டியிட வேண்டுமென பெருவாரியாக தொண்டர்கள் வாக்களித்தனர். மாநாட்டின் மேடையிலேயே திமுக தேர்தலில் போட்டியிடுமென அண்ணா அறிவித்தார். அண்ணா, கருணாநிதி 1957 இல் நடந்த தேர்தலில் 15 தொகுதிகளில் திமுக வென்றது. காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணாவும் குளித்தலையில் இருந்து கருணாநிதியும் வென்று முதல் முறையாக சட்டமன்றத்துக்கு சென்றார்கள். 1962 தேர்தலில் 50 இடங்களை திமுக வென்றது. எதிர்க்கட்சி அந்தஸ்த்திலும் அமர்கிறது. 1967 தேர்தலில் பெரும்பான்மையாக வென்று ஆட்சியையும் பிடிக்கிறது. அண்ணாதுரை மதராஸ் மாகாணத்தின் முதல்வர் ஆனார். மதராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது. அப்போது இருந்து இப்போது வரைக்கும் தமிழக அரசியல் திமுகவை மையப்படுத்தி இருப்பதற்கும் தேர்தல் அரசியலில் திமுக மாபெரும் சக்தியாக இருப்பதற்கும் 1956 இல் நடந்த திருச்சி மாநாடுதான் மிக முக்கிய காரணம்.! Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்
நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள் - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்
பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்று அப்போது தெரியும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படமும் இடம்பெற்றுள்ளது. பேனரில் இடம்பெற்ற டிடிவி தினகரன் இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காத டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், தினகரன் தலைமறைவாகிவிட்டார் என்று எனக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தயகத்தினால் வீட்டிலேயே இருக்கிறார். சோர்ந்து போய்விட்டார் என்றும் தகவலைப் பரப்புகிறார்கள். ஆனால் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. மனதில் எந்த கணமும் இல்லை. டிடிவி தினகரன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள். அதன்பிறகு உங்களுக்கு கூட்டணி குறித்து தெரிய வரும். நான் ஒரு கூட்டணியில் சேரும்போது அந்தக் கூட்டணிக்கு தலைமைத் தாங்குபவர்கள் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள் - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்
பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்று அப்போது தெரியும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படமும் இடம்பெற்றுள்ளது. பேனரில் இடம்பெற்ற டிடிவி தினகரன் இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காத டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், தினகரன் தலைமறைவாகிவிட்டார் என்று எனக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தயகத்தினால் வீட்டிலேயே இருக்கிறார். சோர்ந்து போய்விட்டார் என்றும் தகவலைப் பரப்புகிறார்கள். ஆனால் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. மனதில் எந்த கணமும் இல்லை. டிடிவி தினகரன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள். அதன்பிறகு உங்களுக்கு கூட்டணி குறித்து தெரிய வரும். நான் ஒரு கூட்டணியில் சேரும்போது அந்தக் கூட்டணிக்கு தலைமைத் தாங்குபவர்கள் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழே உயிரே! | உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு! | மொழிப்போரின் வீர வரலாறு – 4
கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழே உயிரே! - பகுதி 4 1965-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ‘இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தி இருக்கும்’ என்ற சட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. அது ஒரு குடியரசு தினம். அன்றைய தினத்தில் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆகவே, அண்ணாவின் தலைமையில், தி.மு.க-வினர் அவரவர் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க முடிவுசெய்யப்பட்டது. கருமருந்து! 1937-ம் ஆண்டு பள்ளிக்கூடங்களில் கட்டாய இந்தியை ராஜாஜி கொண்டுவந்தபோது, மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டத்துக்கு பெரியார் தலைமை ஏற்ற பிறகு, போராட்டம் வீரியம் பெற்றது. 1960-ளிலும், ஆரம்பத்தில் தமிழறிஞர்களால்தான் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வகுப்பறைகளில் மாணவர்களுக்கு தமிழுணர்வை ஊட்டிய காரணத்தால், அது மிகப்பெரிய போராட்டமாக வடிவம் பெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கான கருமருந்தைத் தயாரித்தது தமிழறிஞர்கள் என்றால், அதில் தீவைத்து வெடிக்கச் செய்தவர்கள் மாணவர்கள். 1960-களில் இந்தி எதிர்ப்புக்கான பரப்புரையைத் தொடங்கியவர்களில் முக்கியமானவர் தமிழறிஞர் கி.இலக்குவனார். 1963-ம் ஆண்டு விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அதற்காக சிறை சென்று திரும்பியிருந்தார் அண்ணா. அப்போது, சீன ஆக்கிரமிப்பு விவகாரம் இந்திய மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில், மதுரை தியாகராசர் கல்லூரியில் உரையாற்ற அழைக்கப்பட்டார் அண்ணா. இந்தி என்ற அரக்கி அந்த மேடையில் பேசிய பேராசிரியர் கி.இலக்குவனார், ‘விலைவாசியைக்கூட சமாளித்துவிடலாம். ஆனால், அதைவிட ஒரு கொடுமை நம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது. அதுதான், இந்தி என்ற அரக்கி. அதை எதிர்த்துப் போராட நாம் தயாராக வேண்டும்’ என்றார். அதைக் குறிப்பிட்டுப் பேசிய அண்ணா, ‘பேராசிரியர் சரியான நேரத்தில் நினைவூட்டியிருக்கிறார். ஆனால், எங்கள் கட்சி ஜனநாயகத் தன்மை கொண்டது. எனவே, கட்சிப் பொதுக்குழுவில் இது பற்றி விவாதித்து முடிவெடுப்போம்’ என்றார். அதைத் தொடர்ந்து, சட்ட நகலை எரித்து ஒரு பிரிவினர் போராடுவது, மற்றொரு பிரிவினர் இந்தி எதிர்ப்புக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வது என்று தி.மு.க முடிவெடுத்தது. அறிஞர் அண்ணா பேராசிரியர் கைது 1965-ம் ஆண்டு, இந்தி வருவதற்கு முன்பே எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள் முடிவுசெய்தனர். மதுரையில் பிப்ரவரி முதல் நாளே மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கி.இலக்குவனார் கைது செய்யப்பட்டார். போராட்டத்தை மீண்டும் தொடங்க முயற்சி செய்வதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், கல்லூரி பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். கல்வித்துறை இயக்குநரிடமிருந்து வந்த கடிதத்தில், கி.இலக்குவனாரின் நடவடிக்கைகள் தவறானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்வர் பக்தவத்சலம்தான் தன்னை பணியிலிருந்து நீக்க வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கி.இலக்குவன் பின்னாளில் தெரிவித்தார். சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் ஐயாயிரம் பேர் கல்லூரியிலிருந்து நகரத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மாணவர் ராஜேந்திரன் உயிரிழந்தார். படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. போராட்டம் தீவிரமடைந்தது. அண்ணாவின் வேண்டுகோள்படி தி.மு.க-வினர் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். அதனால், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டு கோபமடைந்த பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். தேசிய பாதுகாப்புச் சட்டம்! தஞ்சையில் மன்னர் சரபோஜி கல்லூரி, பூண்டி கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கரந்தை தமிழ்க் கல்லூரி, மாயவரம் கல்லூரி என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்காலத்தில் அமைச்சராகவும், சட்டமன்ற சபாநாயகராகவும் இருந்த கா.காளிமுத்துவும், பின்னாளில் திரைப்பட பாடலாசிரியராக இருந்த நா.காமராசனும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது மாணவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும், ‘இந்தித் திணிப்புக்கு எதிராக நாம் தீக்குளிப்போமா’ என்று தங்களுக்குள் ஆலோசித்தனர். அதை அறிந்த சக மாணவர்கள், அவர்களிடம் பேசி மனதை மாற்றியிருக்கிறார்கள். பின்னர், மதுரையில் கா.காளிமுத்து, நா.காமராசன், பா.செயப்பிரகாசம் உள்ளிட்டோர் கட்டாய இந்திக்கான சட்ட நகலை எரித்ததால் கைது செய்யப்பட்டனர். மதுரை வடக்கு மாசி வீதியில் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றபோது, அவர்கள் மீது காங்கிரஸார் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். போராட்டம் மேலும் தீவிரமடைந்ததால், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது அன்றைய காங்கிரஸ் அரசு. அதற்கு முன்பு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அரசியல்வாதிகள்தான் கைது செய்யப்பட்டனர். ஆனால், மொழிப் போராட்டத்தின்போது, தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற கொடுமையான சட்டத்தின் கீழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ராணுவம் வந்தது! கரூர், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது. பேருந்துகளை தீவைத்துக் கொளுத்துவது, தண்டவாளங்களைப் பெயர்த்தெடுப்பது என்று போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. ஆகவே, ராணுவம் வரவழைக்கப்பட்டது. பொள்ளாச்சியில் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அது தொடர்பாக செய்திகள் காங்கிரஸ் அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. 1966-ம் ஆண்டு மே மாதம், ம.நடராசன் முன்முயற்சியில் தஞ்சாவூரில் அகில இந்திய அளவிலான ஒரு மாணவர் மாநாடு நடைபெற்றது. கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அண்ணா, கி.ஆ.பெ.விசுவநாதம், குன்றக்குடி அடிகளார், ஜி.டி.நாயுடு, காயிதே மில்லத், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற அந்த மாநாட்டில், இந்திக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, போராட்ட மையமாக சென்னை பச்சையப்பன் கல்லூரி விளங்கியது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக, பச்சையப்பன் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து, போலீஸார் தடியடி நடத்தினர். அதனால், தமிழகத்தில் மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. முழு கடையடைப்பு, ரயில் நிலையங்கள் முற்றுகை என்று எரிமலையாக மாறியது தமிழ்நாடு. தென் தமிழகத்தில் மாணவர் போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் முன்னிலை வகித்தவர் எல்.கணேசன். மொழிப்போராட்டத்தில் ஆங்காங்கே தலைமை வகித்த தளபதிகளுக்கு இணைப்புப் பாலமாக இருந்தவர் வை.கோபால்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழே உயிரே : `போருக்குத் தயாராகுங்கள்' | மொழிப்போரின் வீர வரலாறு - 1 உயிர் தமிழுக்கு! ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்ற முழக்கத்தை தமிழர்கள் நடைமுறைப்படுத்தினர். 1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு சிறைசென்ற நடராசன், தாளமுத்து ஆகியோர் உயிர்த் தியாகம் செய்தனர். 1964, 1965 காலக்கட்டத்தில் வேறு வடிவத்தில் உயிர்த்தியாக சம்பவங்கள் நிகழ்ந்தன. 1964-ம் ஆண்டு ஜனவரி மாதம். சென்னை மாகாண முதல்வர் பக்தவத்சலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வருகிறார். அவருடைய காலில் விழுந்த ஓர் இளைஞர், ‘இந்தியை நுழையவிடாதீர்கள். தமிழைக் காப்பாற்றங்கள். நீங்களும் தமிழர்தானே..’ என்று கெஞ்சுகிறார். அப்போது பக்தவத்சலம் தன் பாதுகாவலர்களிடம், ‘இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்’ என்று எரிச்சலுடன் உத்தரவிடுகிறார். அந்த இளைஞரின் பின்னணியை காவல்துறை விசாரித்தது. அந்த இளைஞரின் பெயர் சின்னச்சாமி. அவர், அரியலூர் அருகே கீழப்பளுவூரைச் சேர்ந்தவர். அவருக்கு 27 வயது. விவசாயியான அந்த இளைஞர்களுக்கு திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறார்’ என்பதை காவல்துறை அறிந்துகொள்கிறது. சின்னச்சாமி, ஒரு வாரம் கழித்து திருச்சி ரயில் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியவாறு அவர் தீயில் கருகினார். அவர் தன் உயிரை தமிழுக்காக மாய்த்துக்கொண்ட ஜனவரி 25-ம் தேதிதான், ‘மொழிப்போர் தியாகிகள் தினம்’ என்று அனுசரிக்கப்படுகிறது. ‘சின்னச்சாமியைப் போல பத்து தமிழனாவது உயிர்நீத்தால்தான், நம் தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கமும் ஒழியும்’ என்று தன் நண்பர்களிடம் உணர்ச்சிவயப்பட்டு பேசிக்கொண்டிருந்தார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம். இந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுச் சென்ற சிவலிங்கம், தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். கோடம்பாக்கத்தில் சிவலிங்கத்தின் உடலைப் பார்த்து பதறிப்போனார் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அரங்கநாதன். பின்னர், அவரும் தீக்குளித்து உயிரிழந்தார். திருமணமான அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். ‘தமிழுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்’ என்று அண்ணாவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழே உயிரே : `மார்பில் குண்டு பாயட்டும்!' | மொழிப்போரின் வீர வரலாறு - 2 கோவை மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முத்து, பட்டறை ஒன்றில் வேலை பார்த்துவந்தார். அவருக்கு 23 வயது. திடீரென அவர் தீக்குளித்து உயிழந்தார். உடல் தீயில் கருகி, அனத்தியபடி இருந்த அவர் ஒரு வாக்குமூலம் அளித்தார். அதில், ‘தமிழ் மாணவர்கள் தாக்கப்படக்கூடாது. தமிழினம் வாழ வேண்டும்’ என்று குறிப்பிட்டார். புதுக்கோட்டை அருகே கீரனூரைச் சேர்ந்த முத்து, ‘இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்’ என்று முதல்வர் பக்தவத்சலத்துக்கு கடிதம் எழுதிவிட்டு, விஷம் அருந்தி உயிரிழந்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அய்யம்பாளையத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியரான வீரப்பன், தன்னுடைய பள்ளி மாணவர்களை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். ‘தமிழைக் காக்க முயற்சி செய்யுங்கள்’ என்று அண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொண்டார் வீரப்பன். திருச்சியை அடுத்த விராலிமலையைச் சேர்ந்த சண்முகம் மளிகைக்கடையில் வேலை செய்தார். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை நடத்திவந்தார். அவர், அண்ணாவுக்கு ஐந்து கடிதங்கள் எழுதினார். அதில், ‘இந்தப் போராட்டத்துக்காக உயிரைக் கொடுக்கிறோம். தமிழைக் காக்க கடைசிவரை போராடுங்கள்’ என்று எழுதினார். அவர், பூச்சிமருந்தை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்த அவரது உடல், சின்னச்சாமியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. பழைய தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள ஏ.வி.சி கல்லூரி மாணவர் சாரங்கபாணி பி.காம் முதலாமாண்டு படித்துவந்தார். இந்தி எதிர்ப்புப் போரில் தீவிரமாக ஈடுபட்டுவந்த அவர், தீக்குளித்து இறந்தார். 1942-ல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியைவிட, இந்த பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சி மிகத் தீவிரமாக இருந்தது என்று ஆங்கில ஏடுகள் எழுதின. இந்தி எதிர்ப்புப் போராட்டம் சுமார் 60 நாட்கள் நடைபெற்றன. ‘அதில், அரசின் கணக்குப்படி 65 பேர், பத்திரிகைகளின் கணக்குப்படி 150 பேர் இறந்தனர். ஆனால், எங்கள் கணக்குப்படி 500 பேர் உயிரிழந்தனர்’ என்கிறார் மொழிப்போரில் பங்கெடுத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். தாய்மொழியாம் தமிழுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த அந்த மகத்தான தியாகிகளின் குடும்பங்களைத் தேடிச்சென்று நான் சந்தித்தேன். அவர்களின் பரிதாபகரமான நிலையும், அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளும் என்னை உலுக்கியெடுத்தன. அடுத்த பகுதியில் அவற்றை விரிவாகப் பார்ப்போம்.! - அடுத்த பகுதியுடன் முற்றுப்பெறும்! தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’... இங்கிலீஷ் ‘எவர்’ - தமிழனின் வெற்றி! | மொழிப்போரின் வீர வரலாறு – 3
தமிழே உயிரே! | உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு! | மொழிப்போரின் வீர வரலாறு – 4
கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழே உயிரே! - பகுதி 4 1965-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ‘இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தி இருக்கும்’ என்ற சட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. அது ஒரு குடியரசு தினம். அன்றைய தினத்தில் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆகவே, அண்ணாவின் தலைமையில், தி.மு.க-வினர் அவரவர் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க முடிவுசெய்யப்பட்டது. கருமருந்து! 1937-ம் ஆண்டு பள்ளிக்கூடங்களில் கட்டாய இந்தியை ராஜாஜி கொண்டுவந்தபோது, மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டத்துக்கு பெரியார் தலைமை ஏற்ற பிறகு, போராட்டம் வீரியம் பெற்றது. 1960-ளிலும், ஆரம்பத்தில் தமிழறிஞர்களால்தான் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வகுப்பறைகளில் மாணவர்களுக்கு தமிழுணர்வை ஊட்டிய காரணத்தால், அது மிகப்பெரிய போராட்டமாக வடிவம் பெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கான கருமருந்தைத் தயாரித்தது தமிழறிஞர்கள் என்றால், அதில் தீவைத்து வெடிக்கச் செய்தவர்கள் மாணவர்கள். 1960-களில் இந்தி எதிர்ப்புக்கான பரப்புரையைத் தொடங்கியவர்களில் முக்கியமானவர் தமிழறிஞர் கி.இலக்குவனார். 1963-ம் ஆண்டு விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அதற்காக சிறை சென்று திரும்பியிருந்தார் அண்ணா. அப்போது, சீன ஆக்கிரமிப்பு விவகாரம் இந்திய மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில், மதுரை தியாகராசர் கல்லூரியில் உரையாற்ற அழைக்கப்பட்டார் அண்ணா. இந்தி என்ற அரக்கி அந்த மேடையில் பேசிய பேராசிரியர் கி.இலக்குவனார், ‘விலைவாசியைக்கூட சமாளித்துவிடலாம். ஆனால், அதைவிட ஒரு கொடுமை நம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது. அதுதான், இந்தி என்ற அரக்கி. அதை எதிர்த்துப் போராட நாம் தயாராக வேண்டும்’ என்றார். அதைக் குறிப்பிட்டுப் பேசிய அண்ணா, ‘பேராசிரியர் சரியான நேரத்தில் நினைவூட்டியிருக்கிறார். ஆனால், எங்கள் கட்சி ஜனநாயகத் தன்மை கொண்டது. எனவே, கட்சிப் பொதுக்குழுவில் இது பற்றி விவாதித்து முடிவெடுப்போம்’ என்றார். அதைத் தொடர்ந்து, சட்ட நகலை எரித்து ஒரு பிரிவினர் போராடுவது, மற்றொரு பிரிவினர் இந்தி எதிர்ப்புக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வது என்று தி.மு.க முடிவெடுத்தது. அறிஞர் அண்ணா பேராசிரியர் கைது 1965-ம் ஆண்டு, இந்தி வருவதற்கு முன்பே எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள் முடிவுசெய்தனர். மதுரையில் பிப்ரவரி முதல் நாளே மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கி.இலக்குவனார் கைது செய்யப்பட்டார். போராட்டத்தை மீண்டும் தொடங்க முயற்சி செய்வதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், கல்லூரி பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். கல்வித்துறை இயக்குநரிடமிருந்து வந்த கடிதத்தில், கி.இலக்குவனாரின் நடவடிக்கைகள் தவறானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்வர் பக்தவத்சலம்தான் தன்னை பணியிலிருந்து நீக்க வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கி.இலக்குவன் பின்னாளில் தெரிவித்தார். சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் ஐயாயிரம் பேர் கல்லூரியிலிருந்து நகரத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மாணவர் ராஜேந்திரன் உயிரிழந்தார். படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. போராட்டம் தீவிரமடைந்தது. அண்ணாவின் வேண்டுகோள்படி தி.மு.க-வினர் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். அதனால், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டு கோபமடைந்த பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். தேசிய பாதுகாப்புச் சட்டம்! தஞ்சையில் மன்னர் சரபோஜி கல்லூரி, பூண்டி கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கரந்தை தமிழ்க் கல்லூரி, மாயவரம் கல்லூரி என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்காலத்தில் அமைச்சராகவும், சட்டமன்ற சபாநாயகராகவும் இருந்த கா.காளிமுத்துவும், பின்னாளில் திரைப்பட பாடலாசிரியராக இருந்த நா.காமராசனும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது மாணவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும், ‘இந்தித் திணிப்புக்கு எதிராக நாம் தீக்குளிப்போமா’ என்று தங்களுக்குள் ஆலோசித்தனர். அதை அறிந்த சக மாணவர்கள், அவர்களிடம் பேசி மனதை மாற்றியிருக்கிறார்கள். பின்னர், மதுரையில் கா.காளிமுத்து, நா.காமராசன், பா.செயப்பிரகாசம் உள்ளிட்டோர் கட்டாய இந்திக்கான சட்ட நகலை எரித்ததால் கைது செய்யப்பட்டனர். மதுரை வடக்கு மாசி வீதியில் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றபோது, அவர்கள் மீது காங்கிரஸார் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். போராட்டம் மேலும் தீவிரமடைந்ததால், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது அன்றைய காங்கிரஸ் அரசு. அதற்கு முன்பு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அரசியல்வாதிகள்தான் கைது செய்யப்பட்டனர். ஆனால், மொழிப் போராட்டத்தின்போது, தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற கொடுமையான சட்டத்தின் கீழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ராணுவம் வந்தது! கரூர், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது. பேருந்துகளை தீவைத்துக் கொளுத்துவது, தண்டவாளங்களைப் பெயர்த்தெடுப்பது என்று போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. ஆகவே, ராணுவம் வரவழைக்கப்பட்டது. பொள்ளாச்சியில் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அது தொடர்பாக செய்திகள் காங்கிரஸ் அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. 1966-ம் ஆண்டு மே மாதம், ம.நடராசன் முன்முயற்சியில் தஞ்சாவூரில் அகில இந்திய அளவிலான ஒரு மாணவர் மாநாடு நடைபெற்றது. கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அண்ணா, கி.ஆ.பெ.விசுவநாதம், குன்றக்குடி அடிகளார், ஜி.டி.நாயுடு, காயிதே மில்லத், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற அந்த மாநாட்டில், இந்திக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, போராட்ட மையமாக சென்னை பச்சையப்பன் கல்லூரி விளங்கியது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக, பச்சையப்பன் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து, போலீஸார் தடியடி நடத்தினர். அதனால், தமிழகத்தில் மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. முழு கடையடைப்பு, ரயில் நிலையங்கள் முற்றுகை என்று எரிமலையாக மாறியது தமிழ்நாடு. தென் தமிழகத்தில் மாணவர் போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் முன்னிலை வகித்தவர் எல்.கணேசன். மொழிப்போராட்டத்தில் ஆங்காங்கே தலைமை வகித்த தளபதிகளுக்கு இணைப்புப் பாலமாக இருந்தவர் வை.கோபால்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழே உயிரே : `போருக்குத் தயாராகுங்கள்' | மொழிப்போரின் வீர வரலாறு - 1 உயிர் தமிழுக்கு! ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்ற முழக்கத்தை தமிழர்கள் நடைமுறைப்படுத்தினர். 1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு சிறைசென்ற நடராசன், தாளமுத்து ஆகியோர் உயிர்த் தியாகம் செய்தனர். 1964, 1965 காலக்கட்டத்தில் வேறு வடிவத்தில் உயிர்த்தியாக சம்பவங்கள் நிகழ்ந்தன. 1964-ம் ஆண்டு ஜனவரி மாதம். சென்னை மாகாண முதல்வர் பக்தவத்சலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வருகிறார். அவருடைய காலில் விழுந்த ஓர் இளைஞர், ‘இந்தியை நுழையவிடாதீர்கள். தமிழைக் காப்பாற்றங்கள். நீங்களும் தமிழர்தானே..’ என்று கெஞ்சுகிறார். அப்போது பக்தவத்சலம் தன் பாதுகாவலர்களிடம், ‘இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்’ என்று எரிச்சலுடன் உத்தரவிடுகிறார். அந்த இளைஞரின் பின்னணியை காவல்துறை விசாரித்தது. அந்த இளைஞரின் பெயர் சின்னச்சாமி. அவர், அரியலூர் அருகே கீழப்பளுவூரைச் சேர்ந்தவர். அவருக்கு 27 வயது. விவசாயியான அந்த இளைஞர்களுக்கு திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறார்’ என்பதை காவல்துறை அறிந்துகொள்கிறது. சின்னச்சாமி, ஒரு வாரம் கழித்து திருச்சி ரயில் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியவாறு அவர் தீயில் கருகினார். அவர் தன் உயிரை தமிழுக்காக மாய்த்துக்கொண்ட ஜனவரி 25-ம் தேதிதான், ‘மொழிப்போர் தியாகிகள் தினம்’ என்று அனுசரிக்கப்படுகிறது. ‘சின்னச்சாமியைப் போல பத்து தமிழனாவது உயிர்நீத்தால்தான், நம் தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கமும் ஒழியும்’ என்று தன் நண்பர்களிடம் உணர்ச்சிவயப்பட்டு பேசிக்கொண்டிருந்தார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம். இந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுச் சென்ற சிவலிங்கம், தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். கோடம்பாக்கத்தில் சிவலிங்கத்தின் உடலைப் பார்த்து பதறிப்போனார் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அரங்கநாதன். பின்னர், அவரும் தீக்குளித்து உயிரிழந்தார். திருமணமான அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். ‘தமிழுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்’ என்று அண்ணாவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழே உயிரே : `மார்பில் குண்டு பாயட்டும்!' | மொழிப்போரின் வீர வரலாறு - 2 கோவை மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முத்து, பட்டறை ஒன்றில் வேலை பார்த்துவந்தார். அவருக்கு 23 வயது. திடீரென அவர் தீக்குளித்து உயிழந்தார். உடல் தீயில் கருகி, அனத்தியபடி இருந்த அவர் ஒரு வாக்குமூலம் அளித்தார். அதில், ‘தமிழ் மாணவர்கள் தாக்கப்படக்கூடாது. தமிழினம் வாழ வேண்டும்’ என்று குறிப்பிட்டார். புதுக்கோட்டை அருகே கீரனூரைச் சேர்ந்த முத்து, ‘இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்’ என்று முதல்வர் பக்தவத்சலத்துக்கு கடிதம் எழுதிவிட்டு, விஷம் அருந்தி உயிரிழந்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அய்யம்பாளையத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியரான வீரப்பன், தன்னுடைய பள்ளி மாணவர்களை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். ‘தமிழைக் காக்க முயற்சி செய்யுங்கள்’ என்று அண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொண்டார் வீரப்பன். திருச்சியை அடுத்த விராலிமலையைச் சேர்ந்த சண்முகம் மளிகைக்கடையில் வேலை செய்தார். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை நடத்திவந்தார். அவர், அண்ணாவுக்கு ஐந்து கடிதங்கள் எழுதினார். அதில், ‘இந்தப் போராட்டத்துக்காக உயிரைக் கொடுக்கிறோம். தமிழைக் காக்க கடைசிவரை போராடுங்கள்’ என்று எழுதினார். அவர், பூச்சிமருந்தை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்த அவரது உடல், சின்னச்சாமியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. பழைய தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள ஏ.வி.சி கல்லூரி மாணவர் சாரங்கபாணி பி.காம் முதலாமாண்டு படித்துவந்தார். இந்தி எதிர்ப்புப் போரில் தீவிரமாக ஈடுபட்டுவந்த அவர், தீக்குளித்து இறந்தார். 1942-ல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியைவிட, இந்த பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சி மிகத் தீவிரமாக இருந்தது என்று ஆங்கில ஏடுகள் எழுதின. இந்தி எதிர்ப்புப் போராட்டம் சுமார் 60 நாட்கள் நடைபெற்றன. ‘அதில், அரசின் கணக்குப்படி 65 பேர், பத்திரிகைகளின் கணக்குப்படி 150 பேர் இறந்தனர். ஆனால், எங்கள் கணக்குப்படி 500 பேர் உயிரிழந்தனர்’ என்கிறார் மொழிப்போரில் பங்கெடுத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். தாய்மொழியாம் தமிழுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த அந்த மகத்தான தியாகிகளின் குடும்பங்களைத் தேடிச்சென்று நான் சந்தித்தேன். அவர்களின் பரிதாபகரமான நிலையும், அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளும் என்னை உலுக்கியெடுத்தன. அடுத்த பகுதியில் அவற்றை விரிவாகப் பார்ப்போம்.! - அடுத்த பகுதியுடன் முற்றுப்பெறும்! தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’... இங்கிலீஷ் ‘எவர்’ - தமிழனின் வெற்றி! | மொழிப்போரின் வீர வரலாறு – 3
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு; எந்தத் துறையில் பணி?
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை தொடங்கியிருக்கிறது. சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த மாடுபிடி வீரருக்கு கார், போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் தங்கக் காசு பரிசுகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு விழாவை நேரில் சென்று பார்வையிட சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டு ரசித்த மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிச் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்த வழிவகை செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Mandaadi: ஜல்லிக்கட்டு எப்படியோ, அப்படித்தான் பாய்மரப் படகு போட்டியும் - இயக்குநர் வெற்றிமாறன்
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு; எந்தத் துறையில் பணி?
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை தொடங்கியிருக்கிறது. சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த மாடுபிடி வீரருக்கு கார், போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் தங்கக் காசு பரிசுகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு விழாவை நேரில் சென்று பார்வையிட சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டு ரசித்த மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிச் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்த வழிவகை செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Mandaadi: ஜல்லிக்கட்டு எப்படியோ, அப்படித்தான் பாய்மரப் படகு போட்டியும் - இயக்குநர் வெற்றிமாறன்
அதிமுக: 'பெண்களுக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்' - அதிரடி வாக்குறுதிகள்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். EPS அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள், ' குலவிளக்கு திட்டத்தின்படி அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாத மாதம் 2000 ரூபாய் அளிக்கப்படும். *நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம் . *அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் கிராமம் நகர்ப்புறங்களில் குடியிருக்க வீடு இல்லாதவர்கள் அரசே நிலம் வாங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். *ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலினத்தவர்களில் மகன், மகள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கையில் வீடு கட்டி கொடுக்கப்படும். EPS *நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நூற்றைம்பது நாட்களாக விரிவுபடுத்தப்படும். *5 லட்சம் மகளிருக்கு 25000 ரூபாய் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும். எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்தநாளான இன்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01
கட்டுரையாளர்: கப்பிகுளம் ஜெ.பிரபாகர் அரசியல் ஆடுபுலி 1 - 1977 தேர்தல் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்... திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக வாய்ப்புள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை அதிமுகவின் சார்பாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது கட்சியை திமுகவுடன் இணைக்கப் போகிறார். இது போன்ற செய்திகள் அரசியல் பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் நடக்குமா?, இது சாத்தியமா? என்று நாமும் ஆச்சர்யத்தில் மூழ்கி இருப்போம். ஆனால் , அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் எதுவும் சாத்தியம். ஆட்சி அதிகாரம், பதவி கிடைத்திட, கொள்கை கோட்பாடுகள் ஓரங்கட்டி வைக்கப்பட்ட சான்றுகள் கடந்த கால அரசியலில் ஏராளம் கிடைக்கின்றன. அரசியல் ஆடுபுலி காங்கிரஸை எதிர்த்து தொடங்கிய திமுக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆர், திமுக – அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் தேர்தல் அரசியலில் பல திருப்பங்களை உண்டாக்கியுள்ளன. கூட்டணிக் கணக்குப் போட்டு தேர்தல் கணக்கில் கோட்டை விட்ட தேசியக் கட்சிகள், 1977 தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் தலைதூக்கவே முடியவில்லை. தேசியக் கட்சிகளை ஓடவிட்டு பெரும் திருப்பத்தைத் தந்த தேர்தல் 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல்! தமிழக அரசியலில் முக்கியத் தலைவர்களாக இருந்த, மூதறிஞர் ராஜாஜி 1972-ம் ஆண்டு மறைந்தார். ஈ.வெ.ரா.பெரியார் 1973-ம் ஆண்டு மறைந்தார். பெருந்தலைவர் காமராஜர் 1975-ம் ஆண்டில் மறைந்தார். பேரறிஞர் அண்ணா 1969ஆம் ஆண்டிலேயே மறைந்திருந்தார். பெரும் ஆளுமைகள் இல்லாத அரசியல் வெற்றிடத்தை, கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் நிரப்பியிருந்தனர். அப்படியான சூழ்நிலையில்தான், இந்திய அரசியலைப் புரட்டிப் போட்ட நெருக்கடி நிலையைக் கடந்து, 1977இல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. நெருக்கடி நிலை காலத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி 1976-ம் ஆண்டு கலைக்கப்பட்டதால், 1977இல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெற்றது. அரசியல் ஆடுபுலி இந்திரா காந்தியை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் எதிர்கட்சிகளோடு கூட்டணி சேர்ந்தது. பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சிகள் ஸ்தாபன காங்கிரசோடு இணைந்து ஜனதா கட்சியாக மாறின. ஜனநாயக காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டது. 1977 மார்ச் 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், திமுக, ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் எதிரெதிராகப் போட்டியிட்டார்கள். அதிமுக கூட்டணியில் அதிமுக 18, இந்திரா காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களில் வென்றனர். திமுக கூட்டணியில் திமுக 1, ஜனதா (ஸ்தாபன காங்கிரஸ்) 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. தேர்தல் நேரத்தில் வெளியான சர்காரியா கமிஷனின் இடைக்கால அறிக்கையும், புதிதாக கட்சி தொடங்கிய எம்ஜிஆரின் செல்வாக்கும் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கான காரணங்களாக கூறப்பட்டது. வடமாநிலங்களில் நெருக்கடி நிலைக்கு எதிரான ஜனதா கூட்டணி பெருவெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருந்தது. ஆனாலும், ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். தென் மாநிலங்களில் செல்வாக்கோடு இருப்பதாக காங்கிரஸ் நினைத்துக் கொண்டது. தன்னால்தான் காங்கிரசும் வெற்றி பெற்றது என்று எம்ஜிஆர் எண்ணினார். மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை உண்டாக்கின. அதனால், 1977 ஜூன் 12 மற்றும் 14 ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் கூட்டணிகள் சிதறிப்போயின. எம்.ஜி.ஆர் - கருணாநிதி திமுக அணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக பக்கம் தாவியது. அதிமுக அணியில் இருந்த இந்திரா காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. திமுக அணியில் இருந்த ஜனதா கட்சியும் தனித்தே களம் கண்டது. மத்தியில், மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்றதால், ஜனதா கூட்டணியை பகைத்துக் கொள்ள வேண்டாமென, காங்கிரஸ் கட்சியை எம்ஜிஆர் கழட்டி விட்டதாக கூறுவார்கள். திமுகவுக்கு ஒரு எம்பி மட்டுமே இருந்த நிலையில், ஜனதா கட்சி 3 எம்பிக்களை வென்று இருந்தது, மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்ததாலும் திமுக கூட்டணி வேண்டாமென ஜனதா கட்சி தவிர்த்துவிட்டது. திமுகவோடு இருந்தால் வெற்றி கிடைக்காது என்பதைக் கணித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக பக்கம் ஒதுங்கிய நிலையில், அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்கும், கட்சித் தொடங்கியது முதல் துணையாக இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டுச் சேர்ந்து விட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக, ஜனதா கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி உருவானது. கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக, பாலசுப்பிரமணியம் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பி.கே.மூக்கையாத்தேவர் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, கே.எம்.காதர் முகைதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சி ஒரு கூட்டணியாக இருந்தனர். மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துடன், மணலி கந்தசாமி, ஏ.கே.சுப்பையா ஆகியோர் தலைமையிலான தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கூட்டணியில் இருந்தது. கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் திமுகவை ஆதரித்தது. ஜி.கருப்பையா மூப்பனார் தலைமையிலான இந்திரா காங்கிரஸ், கல்யாணசுந்தரம் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. பழைய காங்கிரஸ் என்றழைக்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் உடன், பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவான கூட்டணியே ஜனதா கட்சி என்பதால், மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சி நம்பிக்கையோடு தமிழகத்தில் தனித்து களம் கண்டது. எம்.ஜி.ஆர் அதிமுகவும், காங்கிரஸும் திமுகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்கு சேகரித்தனர். திமுகவும், ஜனதாவும் காங்கிரசுக்கு எதிராக, நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி பரப்புரை செய்தார்கள். காங்கிரஸ் மீது நெருக்கடி நிலை, மிசா சட்டத்தில் தலைவர்கள் கைது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும், திமுக மீது எம்ஜிஆரும், கம்யூனிஸ்டுகளும் எடுத்து வைத்த ஊழல் புகார்களும், கருணாநிதிக்குப் பின்னர் மு.க.முத்து வருகை என்கிற வாரிசு அரசியல் பிரச்னைகளும் 1977 தேர்தலில் பிரதானமாக பேசப்பட்டது. நெருக்கடி நிலையில் கைதான திமுகவினர் மீதான அனுதாபத்தை விட, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் மீதான அனுதாபம் கிராமப்புறங்களில் அதிகளவு எதிரொலித்தது. அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01 மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. தாரமங்கலம் தொகுதியில் 19 வாக்குகள், திருமயம் தொகுதி 57 வாக்குகள், உதகமண்டலம் 129 வாக்குகள், கூடலூர் தொகுதி 129 வாக்குகள், மேலூர் தொகுதி 156 வாக்குகள், நாகர்கோவில் தொகுதி 193 வாக்குகள், நாங்குநேரி தொகுதி 204 வாக்குகள், காரைக்குடி தொகுதி 240 வாக்குகள், சங்கரன்கோவில் தொகுதி 337 வாக்குகள், கோவில்பட்டி தொகுதி 397 வாக்குகள், திருப்பத்தூர் தொகுதி 341 வாக்குகள், ஆத்தூர் தொகுதி 347 வாக்குகள், தாம்பரம் தொகுதி 426 வாக்குகள் என்று 103 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்த வாக்கு வித்தியாசம், வெறும் ஐயாயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே இருந்தன. காங்கிரஸ் முதன்முதலாக சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்ட எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, 30.37 சதவீத வாக்குகளைப் பெற்று, 130 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆளுங்கட்சியாக இருந்து கலைக்கப்பட்ட கருணாநிதி தலைமையிலான திமுக 24.89 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் 48 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஜனதா கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தன (16.66% வாக்குகள்), தேசியக் கட்சியான காங்கிரஸ் 27 இடங்களை மட்டுமே பிடித்து, 17.51 சதவீத வாக்குகளுடன் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழக அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக இரு கட்சிகளின் கூட்டணியே முதல் இரண்டு இடங்களை வெல்ல முடிகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர், தமிழ்நாட்டு அரசியலில், தேசியக் கட்சியான காங்கிரஸும், திராவிடக் கட்சியான திமுகவும் எதிரும் புதிருமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல். 1952 தேர்தல் முதல் தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தேர்தல் களம் 1977 தேர்தலுக்குப் பின்னர் மாநிலக் கட்சிகளின் வசம் வந்தது. இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்தோம் என்று பெருமை பாராட்டிய இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்துதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவானது. (தொடரும்) தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01
1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01
கட்டுரையாளர்: கப்பிகுளம் ஜெ.பிரபாகர் அரசியல் ஆடுபுலி 1 - 1977 தேர்தல் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்... திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக வாய்ப்புள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை அதிமுகவின் சார்பாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது கட்சியை திமுகவுடன் இணைக்கப் போகிறார். இது போன்ற செய்திகள் அரசியல் பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் நடக்குமா?, இது சாத்தியமா? என்று நாமும் ஆச்சர்யத்தில் மூழ்கி இருப்போம். ஆனால் , அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் எதுவும் சாத்தியம். ஆட்சி அதிகாரம், பதவி கிடைத்திட, கொள்கை கோட்பாடுகள் ஓரங்கட்டி வைக்கப்பட்ட சான்றுகள் கடந்த கால அரசியலில் ஏராளம் கிடைக்கின்றன. அரசியல் ஆடுபுலி காங்கிரஸை எதிர்த்து தொடங்கிய திமுக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆர், திமுக – அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் தேர்தல் அரசியலில் பல திருப்பங்களை உண்டாக்கியுள்ளன. கூட்டணிக் கணக்குப் போட்டு தேர்தல் கணக்கில் கோட்டை விட்ட தேசியக் கட்சிகள், 1977 தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் தலைதூக்கவே முடியவில்லை. தேசியக் கட்சிகளை ஓடவிட்டு பெரும் திருப்பத்தைத் தந்த தேர்தல் 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல்! தமிழக அரசியலில் முக்கியத் தலைவர்களாக இருந்த, மூதறிஞர் ராஜாஜி 1972-ம் ஆண்டு மறைந்தார். ஈ.வெ.ரா.பெரியார் 1973-ம் ஆண்டு மறைந்தார். பெருந்தலைவர் காமராஜர் 1975-ம் ஆண்டில் மறைந்தார். பேரறிஞர் அண்ணா 1969ஆம் ஆண்டிலேயே மறைந்திருந்தார். பெரும் ஆளுமைகள் இல்லாத அரசியல் வெற்றிடத்தை, கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் நிரப்பியிருந்தனர். அப்படியான சூழ்நிலையில்தான், இந்திய அரசியலைப் புரட்டிப் போட்ட நெருக்கடி நிலையைக் கடந்து, 1977இல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. நெருக்கடி நிலை காலத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி 1976-ம் ஆண்டு கலைக்கப்பட்டதால், 1977இல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெற்றது. அரசியல் ஆடுபுலி இந்திரா காந்தியை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் எதிர்கட்சிகளோடு கூட்டணி சேர்ந்தது. பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சிகள் ஸ்தாபன காங்கிரசோடு இணைந்து ஜனதா கட்சியாக மாறின. ஜனநாயக காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டது. 1977 மார்ச் 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், திமுக, ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் எதிரெதிராகப் போட்டியிட்டார்கள். அதிமுக கூட்டணியில் அதிமுக 18, இந்திரா காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களில் வென்றனர். திமுக கூட்டணியில் திமுக 1, ஜனதா (ஸ்தாபன காங்கிரஸ்) 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. தேர்தல் நேரத்தில் வெளியான சர்காரியா கமிஷனின் இடைக்கால அறிக்கையும், புதிதாக கட்சி தொடங்கிய எம்ஜிஆரின் செல்வாக்கும் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கான காரணங்களாக கூறப்பட்டது. வடமாநிலங்களில் நெருக்கடி நிலைக்கு எதிரான ஜனதா கூட்டணி பெருவெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருந்தது. ஆனாலும், ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். தென் மாநிலங்களில் செல்வாக்கோடு இருப்பதாக காங்கிரஸ் நினைத்துக் கொண்டது. தன்னால்தான் காங்கிரசும் வெற்றி பெற்றது என்று எம்ஜிஆர் எண்ணினார். மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை உண்டாக்கின. அதனால், 1977 ஜூன் 12 மற்றும் 14 ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் கூட்டணிகள் சிதறிப்போயின. எம்.ஜி.ஆர் - கருணாநிதி திமுக அணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக பக்கம் தாவியது. அதிமுக அணியில் இருந்த இந்திரா காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. திமுக அணியில் இருந்த ஜனதா கட்சியும் தனித்தே களம் கண்டது. மத்தியில், மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்றதால், ஜனதா கூட்டணியை பகைத்துக் கொள்ள வேண்டாமென, காங்கிரஸ் கட்சியை எம்ஜிஆர் கழட்டி விட்டதாக கூறுவார்கள். திமுகவுக்கு ஒரு எம்பி மட்டுமே இருந்த நிலையில், ஜனதா கட்சி 3 எம்பிக்களை வென்று இருந்தது, மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்ததாலும் திமுக கூட்டணி வேண்டாமென ஜனதா கட்சி தவிர்த்துவிட்டது. திமுகவோடு இருந்தால் வெற்றி கிடைக்காது என்பதைக் கணித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக பக்கம் ஒதுங்கிய நிலையில், அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்கும், கட்சித் தொடங்கியது முதல் துணையாக இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டுச் சேர்ந்து விட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக, ஜனதா கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி உருவானது. கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக, பாலசுப்பிரமணியம் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பி.கே.மூக்கையாத்தேவர் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, கே.எம்.காதர் முகைதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சி ஒரு கூட்டணியாக இருந்தனர். மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துடன், மணலி கந்தசாமி, ஏ.கே.சுப்பையா ஆகியோர் தலைமையிலான தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கூட்டணியில் இருந்தது. கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் திமுகவை ஆதரித்தது. ஜி.கருப்பையா மூப்பனார் தலைமையிலான இந்திரா காங்கிரஸ், கல்யாணசுந்தரம் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. பழைய காங்கிரஸ் என்றழைக்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் உடன், பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவான கூட்டணியே ஜனதா கட்சி என்பதால், மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சி நம்பிக்கையோடு தமிழகத்தில் தனித்து களம் கண்டது. எம்.ஜி.ஆர் அதிமுகவும், காங்கிரஸும் திமுகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்கு சேகரித்தனர். திமுகவும், ஜனதாவும் காங்கிரசுக்கு எதிராக, நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி பரப்புரை செய்தார்கள். காங்கிரஸ் மீது நெருக்கடி நிலை, மிசா சட்டத்தில் தலைவர்கள் கைது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும், திமுக மீது எம்ஜிஆரும், கம்யூனிஸ்டுகளும் எடுத்து வைத்த ஊழல் புகார்களும், கருணாநிதிக்குப் பின்னர் மு.க.முத்து வருகை என்கிற வாரிசு அரசியல் பிரச்னைகளும் 1977 தேர்தலில் பிரதானமாக பேசப்பட்டது. நெருக்கடி நிலையில் கைதான திமுகவினர் மீதான அனுதாபத்தை விட, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் மீதான அனுதாபம் கிராமப்புறங்களில் அதிகளவு எதிரொலித்தது. அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01 மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. தாரமங்கலம் தொகுதியில் 19 வாக்குகள், திருமயம் தொகுதி 57 வாக்குகள், உதகமண்டலம் 129 வாக்குகள், கூடலூர் தொகுதி 129 வாக்குகள், மேலூர் தொகுதி 156 வாக்குகள், நாகர்கோவில் தொகுதி 193 வாக்குகள், நாங்குநேரி தொகுதி 204 வாக்குகள், காரைக்குடி தொகுதி 240 வாக்குகள், சங்கரன்கோவில் தொகுதி 337 வாக்குகள், கோவில்பட்டி தொகுதி 397 வாக்குகள், திருப்பத்தூர் தொகுதி 341 வாக்குகள், ஆத்தூர் தொகுதி 347 வாக்குகள், தாம்பரம் தொகுதி 426 வாக்குகள் என்று 103 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்த வாக்கு வித்தியாசம், வெறும் ஐயாயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே இருந்தன. காங்கிரஸ் முதன்முதலாக சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்ட எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, 30.37 சதவீத வாக்குகளைப் பெற்று, 130 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆளுங்கட்சியாக இருந்து கலைக்கப்பட்ட கருணாநிதி தலைமையிலான திமுக 24.89 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் 48 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஜனதா கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தன (16.66% வாக்குகள்), தேசியக் கட்சியான காங்கிரஸ் 27 இடங்களை மட்டுமே பிடித்து, 17.51 சதவீத வாக்குகளுடன் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழக அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக இரு கட்சிகளின் கூட்டணியே முதல் இரண்டு இடங்களை வெல்ல முடிகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர், தமிழ்நாட்டு அரசியலில், தேசியக் கட்சியான காங்கிரஸும், திராவிடக் கட்சியான திமுகவும் எதிரும் புதிருமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல். 1952 தேர்தல் முதல் தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தேர்தல் களம் 1977 தேர்தலுக்குப் பின்னர் மாநிலக் கட்சிகளின் வசம் வந்தது. இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்தோம் என்று பெருமை பாராட்டிய இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்துதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவானது. (தொடரும்) தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01
மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்!
மும்பை மாநகராட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகள் கழித்து ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணியால் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியை தாக்கரே சகோதரர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. சிவசேனா(உத்தவ்) 65 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த தேர்தலில் 84 இடங்களில் வெற்றி பெற்றது. ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மான் சேனாவும் எதிர்பார்த்த அளவு தேர்தலில் வெற்றி பெறவில்லை. இத்தேர்தலில் மராத்தியர்களை குறிவைத்து தாக்கரே சகோதரர்கள் தேர்தலை சந்தித்தனர். தாக்கரே சகோதரர்கள் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும் இடங்களில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. ஆனால் இத்தேர்தல் முடிவுகளில் மராத்தியர்கள் தாக்கரே சகோதரர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். தாக்கரே சகோதரர்களால் மும்பையை தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் மராத்தியர்களை தக்கவைத்துக்கொண்டனர். மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் தாதர், மாகிம், ஒர்லி, தீந்தோஷி, பாண்டூப், விக்ரோலி, பாந்த்ரா கிழக்கு போன்ற பகுதியில் தாக்கரே சகோதரர்களின் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் மேற்கு மும்பையில் உள்ள மராத்தியர்கள் தாக்கரே சகோதரர்களை கைவிட்டுள்ளனர். மாநகராட்சி தேர்தல் வாழ்வா சாவா போராட்டம் என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டு இருந்தார். சிவசேனா(உத்தவ்) மும்பையில் 163 இடங்களிலும், நவநிர்மான் சேனா 53 இடங்களிலும் போட்டியிட்டன. இத்தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் இரண்டு பேர் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து வெற்றி பெற்று இருக்கின்றனர். மும்பையில் சிவசேனாவின் செல்வாக்கு என்ன என்பதை மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஏற்கனவே வெளிப்படுத்தின. ஆனால், மாநகராட்சி தேர்தல் மிகவும் கடுமையாக இருந்தது. உண்மையான சேனா எது என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்திருந்தது. தாக்கரேக்கள் இந்த முறை இணைந்து போட்டியிட்டார்கள். எனவே, தாக்கரே முத்திரைக்கு இது ஒரு உண்மையான சோதனையாக அமைந்தது. இச்சோதனையில் தாக்கரே சகோதரர்களால் மராத்தியர்களை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. தோல்வியை தழுவிய வாரிசுகள் சிவசேனா(ஷிண்டே) 90 இடங்களிலேயே போட்டியிட்டது. ஷிண்டேவின் சேனா தலைவர்களின் வாரிசுகளுக்கு அதிக அளவில் சீட் கொடுத்து இருந்தது. தற்போது மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் / எம்பிக்கள் குடும்ப உறுப்பினர்கள் 8 பேருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு இருந்தது. முன்னாள் எம்பி ராகுல் ஷெவாலேவின் மைத்துனி வைஷாலி நயன் ஷேவாலே வார்டு 183வது வார்டிலும், முன்னாள் எம்எல்ஏ சதா சர்வான்கரின் மகன் சமாதான் மற்றும் மகள் பிரியா முறையே 194 மற்றும் 191 (ஒர்லி, மாகிம்)வது வார்டிலும், குர்லா எம்எல்ஏ மங்கேஷ் குடால்கரின் மகன் ஜெய் குடால்கர் (கே) 169வது வார்டிலும் போட்டியிட்டனர். சேனா எம்.பி ரவீந்திர வாய்கரின் மகள் தீப்தி வாய்கர்-போட்னிஸ் வார்டு 73ல் (ஜோகேஸ்வரி) போட்டியிட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் தோற்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் ரவீந்திர வாய்கரின் மனைவி போட்டியிட்டார். அவரும் தோல்வியை தழுவினார். இதேபோல், பாண்டூப் எம்எல்ஏ அசோக் பாட்டீலின் மகன் ரூபேஷ் பாட்டீல் 113வது வார்டில் போட்டியிட்டார். முன்னாள் கவுன்சிலர் தீபக் ஹண்டேவின் மனைவி அஷ்வினி ஹண்டேவுக்கு 128 (காட்கோபர்)வது வார்டில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் தோல்வி அடைந்தனர். உத்தவ் தாக்கரேயிடமிருந்து பிரிந்து சென்ற முன்னாள் கவுன்சிலர்கள் பலரும் தோல்வியை தழுவினர். மும்பையில் முஸ்லிம் வேட்பாளர்கள் 31 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகமானோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோவண்டி பகுதியில் சமாஜ்வாடி கட்சியிடம் இருந்த அனைத்து வார்டுகளையும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பிடித்துள்ளது.
மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்!
மும்பை மாநகராட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகள் கழித்து ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணியால் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியை தாக்கரே சகோதரர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. சிவசேனா(உத்தவ்) 65 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த தேர்தலில் 84 இடங்களில் வெற்றி பெற்றது. ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மான் சேனாவும் எதிர்பார்த்த அளவு தேர்தலில் வெற்றி பெறவில்லை. இத்தேர்தலில் மராத்தியர்களை குறிவைத்து தாக்கரே சகோதரர்கள் தேர்தலை சந்தித்தனர். தாக்கரே சகோதரர்கள் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும் இடங்களில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. ஆனால் இத்தேர்தல் முடிவுகளில் மராத்தியர்கள் தாக்கரே சகோதரர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். தாக்கரே சகோதரர்களால் மும்பையை தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் மராத்தியர்களை தக்கவைத்துக்கொண்டனர். மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் தாதர், மாகிம், ஒர்லி, தீந்தோஷி, பாண்டூப், விக்ரோலி, பாந்த்ரா கிழக்கு போன்ற பகுதியில் தாக்கரே சகோதரர்களின் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் மேற்கு மும்பையில் உள்ள மராத்தியர்கள் தாக்கரே சகோதரர்களை கைவிட்டுள்ளனர். மாநகராட்சி தேர்தல் வாழ்வா சாவா போராட்டம் என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டு இருந்தார். சிவசேனா(உத்தவ்) மும்பையில் 163 இடங்களிலும், நவநிர்மான் சேனா 53 இடங்களிலும் போட்டியிட்டன. இத்தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் இரண்டு பேர் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து வெற்றி பெற்று இருக்கின்றனர். மும்பையில் சிவசேனாவின் செல்வாக்கு என்ன என்பதை மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஏற்கனவே வெளிப்படுத்தின. ஆனால், மாநகராட்சி தேர்தல் மிகவும் கடுமையாக இருந்தது. உண்மையான சேனா எது என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்திருந்தது. தாக்கரேக்கள் இந்த முறை இணைந்து போட்டியிட்டார்கள். எனவே, தாக்கரே முத்திரைக்கு இது ஒரு உண்மையான சோதனையாக அமைந்தது. இச்சோதனையில் தாக்கரே சகோதரர்களால் மராத்தியர்களை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. தோல்வியை தழுவிய வாரிசுகள் சிவசேனா(ஷிண்டே) 90 இடங்களிலேயே போட்டியிட்டது. ஷிண்டேவின் சேனா தலைவர்களின் வாரிசுகளுக்கு அதிக அளவில் சீட் கொடுத்து இருந்தது. தற்போது மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் / எம்பிக்கள் குடும்ப உறுப்பினர்கள் 8 பேருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு இருந்தது. முன்னாள் எம்பி ராகுல் ஷெவாலேவின் மைத்துனி வைஷாலி நயன் ஷேவாலே வார்டு 183வது வார்டிலும், முன்னாள் எம்எல்ஏ சதா சர்வான்கரின் மகன் சமாதான் மற்றும் மகள் பிரியா முறையே 194 மற்றும் 191 (ஒர்லி, மாகிம்)வது வார்டிலும், குர்லா எம்எல்ஏ மங்கேஷ் குடால்கரின் மகன் ஜெய் குடால்கர் (கே) 169வது வார்டிலும் போட்டியிட்டனர். சேனா எம்.பி ரவீந்திர வாய்கரின் மகள் தீப்தி வாய்கர்-போட்னிஸ் வார்டு 73ல் (ஜோகேஸ்வரி) போட்டியிட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் தோற்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் ரவீந்திர வாய்கரின் மனைவி போட்டியிட்டார். அவரும் தோல்வியை தழுவினார். இதேபோல், பாண்டூப் எம்எல்ஏ அசோக் பாட்டீலின் மகன் ரூபேஷ் பாட்டீல் 113வது வார்டில் போட்டியிட்டார். முன்னாள் கவுன்சிலர் தீபக் ஹண்டேவின் மனைவி அஷ்வினி ஹண்டேவுக்கு 128 (காட்கோபர்)வது வார்டில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் தோல்வி அடைந்தனர். உத்தவ் தாக்கரேயிடமிருந்து பிரிந்து சென்ற முன்னாள் கவுன்சிலர்கள் பலரும் தோல்வியை தழுவினர். மும்பையில் முஸ்லிம் வேட்பாளர்கள் 31 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகமானோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோவண்டி பகுதியில் சமாஜ்வாடி கட்சியிடம் இருந்த அனைத்து வார்டுகளையும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பிடித்துள்ளது.
`பந்தக்கால் ஊன்றிய அதிமுக; பொருமலில் பாஜக முதல் சிக்கலில் கதர் கட்சி தலைமை வரை' | கழுகார் அப்டேட்ஸ்
உறுமும் சிறுத்தைக் கட்சியினர்! தட்டிக்கொடுக்கும் மாண்புமிகுக்கள்... வரும் தேர்தலில் யாருக்கு சீட் அளிப்பது என்ற முடிவுக்கு, சிறுத்தைக் கட்சியின் தலைமை இதுவரையில் வரவில்லை. ஆனால், அந்த கட்சியின் எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொள்ளும் சூரியக்கட்சி மாண்புமிகுக்கள் சிலர், 'இந்த முறையும் உங்களுக்கே சீட்... நீங்க தேர்தல் வேலையைப் பாருங்க...' என்று தட்டிக் கொடுக்கிறார்களாம். இந்த தகவலறிந்த சிறுத்தைக் கட்சியின் சீனியர் உறுப்பினர்கள் சிலர், தங்கள் பகுதிகளில் செல்வாக்காக உள்ள மாண்புமிகுக்களை தொடர்புகொண்டு, சீட் பெற ஆதரவு கேட்கிறார்களாம். அண்ணா அறிவாலயம் இதனால், சீட் எதிர்பார்ப்பில் இருக்கும் இதர நிர்வாகிகள் மத்தியில் கடும் கொதிப்பு உருவாகியிருக்கிறது. ''எங்கள் கட்சியில் யாருக்கு சீட் என்பதை, எங்கள் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். அறிவாலய அமைச்சர்கள் எப்படி முடிவு செய்யலாம்... இதை ஆரம்பத்திலேயே தலைவர் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், 'மாண்புமிகுக்கள் பார்த்து ஓகே சொல்லும் நபருக்குத்தான் தலைவர் சீட் கொடுக்கிறார்' என்ற பெயர் உருவாகிவிடும்...'' என்று உறுமுகிறார்கள். சிக்கலில் கதர் கட்சி தலைமை! புகாரளித்த 20 மாவட்டத் தலைவர்கள்... ஏற்கெனவே, கதர்க் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மீது, 'ஆளும் கட்சிக்கு அதிகமாக ஜால்ரா போடுகிறார்; கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்...' என்று தொடங்கி, பி.எஸ்.பி கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் வரை, ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்குத் பறந்துகொண்டே தான் இருந்தன. இந்தச் சூழலில், புது புகாரும் புகையைக் கிளப்புகிறதாம். சமீபத்தில் 'திருச்சிக்காரர்' தரப்பு தலைநகரில் நடத்திய பொங்கல் விழாவில், தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் ஆதரவாளர்கள் செய்த அடாவடியை யாரும் ரசிக்கவில்லையாம். தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளரானவர் வழியாக டெல்லிக்கு, சில வீடியோ ஆதாரங்களைத் தட்டிவிட்டிருக்கிறார்கள். 'இதேநிலை தொடர்ந்தால் கட்சி கரைசேராது...' என்று சுமார் 20 மாவட்டத் தலைவர்கள் கோரஸ் பாடியிருக்கிறார்கள். இவ்விவகாரம் சீரியஸாகியுள்ள நிலையில், 'கதர் கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை' என்கின்றன பவன் வட்டாரங்கள். நெருப்புத்துறையில் வசூல் வேட்டை! லட்டுகளை உருட்டும் 'பெருமாள்' அதிகாரி... நெருப்புத் துறையின் உச்ச அதிகாரியாக இருப்பவர், தனக்குக் கீழ் பணிபுரியும் 'பெருமாள்' பெயர் கொண்ட அதிகாரியைக் கண்மூடித்தனமாக நம்புகிறாராம். அதை லாகவமாகப் பயன்படுத்திக்கொண்டு, உச்ச அதிகாரியின் பெயரைச் சொல்லி, லைசென்ஸ் வழங்கும் விவகாரத்தில் பல 'லட்டுகளை' வாங்கிக் குவிக்கிறாராம் 'பெருமாள்' அதிகாரி. அவருடைய வசூல் வேட்டை தெரியாமல், நீட்டிய இடத்திலெல்லாம் உச்ச அதிகாரி கையெழுத்துப் போடுவதால், 'ரிட்டயர்டு ஆகப்போகும் கடைசி நேரத்தில் ஏதாவது சிக்கலில் சிக்கிக் கொள்ளப் போகிறார்...' என்று 'உச்' கொட்டுகிறார்கள் நெருப்பு துறையில் பணிபுரிபவர்கள். பொருமலில் பாஜக! பந்தக்கால் ஊன்றிய அதிமுக வரும் ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, பிரமாண்ட மாநாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகளும் தொடங்கியிருக்கின்றன. பந்தக்கால் நடும் நிகழ்வுக்கு, பா.ஜ.க-வினரை அழைக்காமல் அ.தி.மு.க-வினரே தன்னிச்சையாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருப்பதுதான் கூட்டணிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. ' மோடி, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில், கூட்டணிக்குத் தலைமை அ.தி.மு.க-தான் என்றாலும், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்காமல் எப்படி பந்தக்கால் ஊன்றலாம்... டெல்லியில், பிரதமருடன் பொங்கல் விழாவில் நயினார் நாகேந்திரன் இருக்கும் நேரமாகப் பார்த்து, கமுக்கமாக பந்தக்காலை ஊன்றிவிட்டார்கள் அ.தி.மு.க-வினர்' என்று பொருமுகிறது கமலாலய வட்டாரம். நயினாரை வைத்து மீண்டும் ஒரு பந்தக்கால் ஊன்றுவதற்கு திட்டமிடப்பட்டதாம். தேவையற்ற சர்ச்சைகள் எழும் என்பதால், அந்தத் திட்டத்திற்கு தடைபோட்டுவிட்டதாம் டெல்லி. கழுகார் பதில்கள்! முட்டிமோதும் மத்தியசென்னை புள்ளி! உதவிக்கு சம்மதித்த மடம்... சமீபத்தில், கடவுள் தேசத்தைச் சேர்ந்த ஆன்மிக மடத்தின் நிர்வாகிகளை, மலர்க்கட்சி பிரமுகர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள். தேர்தலையொட்டி பெரும் 'உதவிகள்' பேசப்பட, 'ஆட்சி மாறினால் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் கட்டுவதற்கு இலவசமாக நிலம் ஒதுக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன் உதவிக்கு சம்மதித்திருக்கிறதாம் அந்த மடம். இதில் பஞ்சாயத்தே, மடத்தின் உதவிகளைக் யார் கையாள்வது என்பதில்தான் வெடித்திருக்கிறது. மத்திய சென்னையிலுள்ள மலர்க்கட்சியின் முக்கியப் புள்ளி, 'நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்று கையைத் தூக்குகிறாராம். அவர் முன்னாள் ஆளுநரின் ஆள் என்பதால், பொறுப்பை ஒப்படைக்கத் தயங்குகிறாராம் மலர்க்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். 'இந்த உதவிகளை கையாண்டாலே போதும், பெரியளவில் பலனடைந்துவிடலாம்' என்று கணக்குப் போட்டு, டெல்லி மக்கள் பிரதிநிதி மற்றும் முன்னாள் 'பெல்' மாஜியின் ரூட்டில் சிபாரிசுக்காக முட்டிமோதுகிறாராம் அந்த முக்கியப் புள்ளி. மோடி வருகை... “யார் யார் மேடையில்..?” - டிக் டிக் டிக் தே.ஜ கூட்டணி!
`பந்தக்கால் ஊன்றிய அதிமுக; பொருமலில் பாஜக முதல் சிக்கலில் கதர் கட்சி தலைமை வரை' | கழுகார் அப்டேட்ஸ்
உறுமும் சிறுத்தைக் கட்சியினர்! தட்டிக்கொடுக்கும் மாண்புமிகுக்கள்... வரும் தேர்தலில் யாருக்கு சீட் அளிப்பது என்ற முடிவுக்கு, சிறுத்தைக் கட்சியின் தலைமை இதுவரையில் வரவில்லை. ஆனால், அந்த கட்சியின் எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொள்ளும் சூரியக்கட்சி மாண்புமிகுக்கள் சிலர், 'இந்த முறையும் உங்களுக்கே சீட்... நீங்க தேர்தல் வேலையைப் பாருங்க...' என்று தட்டிக் கொடுக்கிறார்களாம். இந்த தகவலறிந்த சிறுத்தைக் கட்சியின் சீனியர் உறுப்பினர்கள் சிலர், தங்கள் பகுதிகளில் செல்வாக்காக உள்ள மாண்புமிகுக்களை தொடர்புகொண்டு, சீட் பெற ஆதரவு கேட்கிறார்களாம். அண்ணா அறிவாலயம் இதனால், சீட் எதிர்பார்ப்பில் இருக்கும் இதர நிர்வாகிகள் மத்தியில் கடும் கொதிப்பு உருவாகியிருக்கிறது. ''எங்கள் கட்சியில் யாருக்கு சீட் என்பதை, எங்கள் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். அறிவாலய அமைச்சர்கள் எப்படி முடிவு செய்யலாம்... இதை ஆரம்பத்திலேயே தலைவர் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், 'மாண்புமிகுக்கள் பார்த்து ஓகே சொல்லும் நபருக்குத்தான் தலைவர் சீட் கொடுக்கிறார்' என்ற பெயர் உருவாகிவிடும்...'' என்று உறுமுகிறார்கள். சிக்கலில் கதர் கட்சி தலைமை! புகாரளித்த 20 மாவட்டத் தலைவர்கள்... ஏற்கெனவே, கதர்க் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மீது, 'ஆளும் கட்சிக்கு அதிகமாக ஜால்ரா போடுகிறார்; கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்...' என்று தொடங்கி, பி.எஸ்.பி கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் வரை, ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்குத் பறந்துகொண்டே தான் இருந்தன. இந்தச் சூழலில், புது புகாரும் புகையைக் கிளப்புகிறதாம். சமீபத்தில் 'திருச்சிக்காரர்' தரப்பு தலைநகரில் நடத்திய பொங்கல் விழாவில், தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் ஆதரவாளர்கள் செய்த அடாவடியை யாரும் ரசிக்கவில்லையாம். தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளரானவர் வழியாக டெல்லிக்கு, சில வீடியோ ஆதாரங்களைத் தட்டிவிட்டிருக்கிறார்கள். 'இதேநிலை தொடர்ந்தால் கட்சி கரைசேராது...' என்று சுமார் 20 மாவட்டத் தலைவர்கள் கோரஸ் பாடியிருக்கிறார்கள். இவ்விவகாரம் சீரியஸாகியுள்ள நிலையில், 'கதர் கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை' என்கின்றன பவன் வட்டாரங்கள். நெருப்புத்துறையில் வசூல் வேட்டை! லட்டுகளை உருட்டும் 'பெருமாள்' அதிகாரி... நெருப்புத் துறையின் உச்ச அதிகாரியாக இருப்பவர், தனக்குக் கீழ் பணிபுரியும் 'பெருமாள்' பெயர் கொண்ட அதிகாரியைக் கண்மூடித்தனமாக நம்புகிறாராம். அதை லாகவமாகப் பயன்படுத்திக்கொண்டு, உச்ச அதிகாரியின் பெயரைச் சொல்லி, லைசென்ஸ் வழங்கும் விவகாரத்தில் பல 'லட்டுகளை' வாங்கிக் குவிக்கிறாராம் 'பெருமாள்' அதிகாரி. அவருடைய வசூல் வேட்டை தெரியாமல், நீட்டிய இடத்திலெல்லாம் உச்ச அதிகாரி கையெழுத்துப் போடுவதால், 'ரிட்டயர்டு ஆகப்போகும் கடைசி நேரத்தில் ஏதாவது சிக்கலில் சிக்கிக் கொள்ளப் போகிறார்...' என்று 'உச்' கொட்டுகிறார்கள் நெருப்பு துறையில் பணிபுரிபவர்கள். பொருமலில் பாஜக! பந்தக்கால் ஊன்றிய அதிமுக வரும் ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, பிரமாண்ட மாநாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகளும் தொடங்கியிருக்கின்றன. பந்தக்கால் நடும் நிகழ்வுக்கு, பா.ஜ.க-வினரை அழைக்காமல் அ.தி.மு.க-வினரே தன்னிச்சையாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருப்பதுதான் கூட்டணிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. ' மோடி, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில், கூட்டணிக்குத் தலைமை அ.தி.மு.க-தான் என்றாலும், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்காமல் எப்படி பந்தக்கால் ஊன்றலாம்... டெல்லியில், பிரதமருடன் பொங்கல் விழாவில் நயினார் நாகேந்திரன் இருக்கும் நேரமாகப் பார்த்து, கமுக்கமாக பந்தக்காலை ஊன்றிவிட்டார்கள் அ.தி.மு.க-வினர்' என்று பொருமுகிறது கமலாலய வட்டாரம். நயினாரை வைத்து மீண்டும் ஒரு பந்தக்கால் ஊன்றுவதற்கு திட்டமிடப்பட்டதாம். தேவையற்ற சர்ச்சைகள் எழும் என்பதால், அந்தத் திட்டத்திற்கு தடைபோட்டுவிட்டதாம் டெல்லி. கழுகார் பதில்கள்! முட்டிமோதும் மத்தியசென்னை புள்ளி! உதவிக்கு சம்மதித்த மடம்... சமீபத்தில், கடவுள் தேசத்தைச் சேர்ந்த ஆன்மிக மடத்தின் நிர்வாகிகளை, மலர்க்கட்சி பிரமுகர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள். தேர்தலையொட்டி பெரும் 'உதவிகள்' பேசப்பட, 'ஆட்சி மாறினால் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் கட்டுவதற்கு இலவசமாக நிலம் ஒதுக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன் உதவிக்கு சம்மதித்திருக்கிறதாம் அந்த மடம். இதில் பஞ்சாயத்தே, மடத்தின் உதவிகளைக் யார் கையாள்வது என்பதில்தான் வெடித்திருக்கிறது. மத்திய சென்னையிலுள்ள மலர்க்கட்சியின் முக்கியப் புள்ளி, 'நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்று கையைத் தூக்குகிறாராம். அவர் முன்னாள் ஆளுநரின் ஆள் என்பதால், பொறுப்பை ஒப்படைக்கத் தயங்குகிறாராம் மலர்க்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். 'இந்த உதவிகளை கையாண்டாலே போதும், பெரியளவில் பலனடைந்துவிடலாம்' என்று கணக்குப் போட்டு, டெல்லி மக்கள் பிரதிநிதி மற்றும் முன்னாள் 'பெல்' மாஜியின் ரூட்டில் சிபாரிசுக்காக முட்டிமோதுகிறாராம் அந்த முக்கியப் புள்ளி. மோடி வருகை... “யார் யார் மேடையில்..?” - டிக் டிக் டிக் தே.ஜ கூட்டணி!
10 ஆண்டுகால ஸ்கெட்ச்: ஷிண்டே உதவியோடு ஒரே கல்லில் தாக்கரே, பவார் பிராண்டை காலி செய்த பா.ஜ.க!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நேற்று முன்தினம் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி பிடித்துள்ளது. மும்பையை எப்படியும் தனித்து பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 227 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் 89 வார்டில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இத்தேர்தலில் மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் இருந்த 8 மாநகராட்சிகளில் 6 மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது. மும்பையை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால் அவர்களது முயற்சி பலனலிக்கவில்லை. சரத்பவார் மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சியை பா.ஜ.கவும், அதன் கூட்டணி கட்சியும் சேர்ந்து பிடித்துள்ளன. 50 ஆண்டு பிராண்ட உடைத்த பா.ஜ.க மகாராஷ்டிரா அரசியலில் தாக்கரே மற்றும் பவார் பிராண்ட் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால் அந்த இரு சக்திகளை அழிக்க பா.ஜ.க முதல் கட்டமாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உதவியோடு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்தது. இதற்காக பா.ஜ.க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உழைத்தது. அதோடு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னம் மற்றும் பெயர்களை வைத்திருந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரை பா.ஜ.க தங்களது கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. இது தாக்கரே மற்றும் பவார் பிராண்டை அடியோடு ஒழிக்க பா.ஜ.கவிற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. இப்போது இத்தேர்தலில் பா.ஜ.க எதிர்பார்த்தது போன்று மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதுமே பவார் பிராண்ட் தோல்வியை சந்தித்துள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதிலும் அஜித் பவார் கட்சி தனித்து போட்டியிட்டது. இதே போன்று சரத் பவார் கட்சியும் தனித்து போட்டியிட்டது. இரண்டு பேருமே படுதோல்வியை சந்தித்துள்ளனர். இதே போன்று ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு சொர்ப்ப இடங்களை கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் பா.ஜ.க போட்டியிட்டது. அதுவும் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிடும் இடங்களில் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு இடங்களை பா.ஜ.க ஒதுக்கியது. இதனால் சிவசேனா அனுதாபிகள் எது உண்மையான சிவசேனா என்ற குழப்பத்திற்கு வந்தனர். கடந்த 50 ஆண்டுகளாக தாக்கரே பிராண்ட் மராத்தியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தது. இதே போன்று சரத் பவார் மாநிலம் முழுவதும் குறிப்பாக மேற்கு மகாராஷ்டிராவில் சிறந்து விளங்கும் கூட்டுறவு துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அஜித்பவார்-சரத்பவார் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் பிளவுபடுவதற்கு முன்பே, மேற்கு மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக விளங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், வங்கிகள் மற்றும் பால் சங்கங்களில் பா.ஜ.க ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. பவாரின் பல விசுவாசிகளும், கூட்டுறவுத் துறையின் மீது ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் தலைவர்களும் கூட பா.ஜ.க.வுக்கு மாறினர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. இப்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு ஒன்றாக சேர வேண்டிய நிலைக்கு தள்ளி இருக்கிறது. அஜித் பவாரும், சரத் பவாரும் புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. பா.ஜ.க நினைத்தால் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும் என்பதை அஜித் பவார் புரிந்து கொள்ள தொடங்கி இருப்பதாகவும், எனவேதான் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது கட்சியோடு இணைக்க அஜித்பவார் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அஜித் பவாரால் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியை பிடித்துள்ளது.
10 ஆண்டுகால ஸ்கெட்ச்: ஷிண்டே உதவியோடு ஒரே கல்லில் தாக்கரே, பவார் பிராண்டை காலி செய்த பா.ஜ.க!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நேற்று முன்தினம் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி பிடித்துள்ளது. மும்பையை எப்படியும் தனித்து பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 227 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் 89 வார்டில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இத்தேர்தலில் மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் இருந்த 8 மாநகராட்சிகளில் 6 மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது. மும்பையை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால் அவர்களது முயற்சி பலனலிக்கவில்லை. சரத்பவார் மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சியை பா.ஜ.கவும், அதன் கூட்டணி கட்சியும் சேர்ந்து பிடித்துள்ளன. 50 ஆண்டு பிராண்ட உடைத்த பா.ஜ.க மகாராஷ்டிரா அரசியலில் தாக்கரே மற்றும் பவார் பிராண்ட் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால் அந்த இரு சக்திகளை அழிக்க பா.ஜ.க முதல் கட்டமாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உதவியோடு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்தது. இதற்காக பா.ஜ.க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உழைத்தது. அதோடு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னம் மற்றும் பெயர்களை வைத்திருந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரை பா.ஜ.க தங்களது கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. இது தாக்கரே மற்றும் பவார் பிராண்டை அடியோடு ஒழிக்க பா.ஜ.கவிற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. இப்போது இத்தேர்தலில் பா.ஜ.க எதிர்பார்த்தது போன்று மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதுமே பவார் பிராண்ட் தோல்வியை சந்தித்துள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதிலும் அஜித் பவார் கட்சி தனித்து போட்டியிட்டது. இதே போன்று சரத் பவார் கட்சியும் தனித்து போட்டியிட்டது. இரண்டு பேருமே படுதோல்வியை சந்தித்துள்ளனர். இதே போன்று ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு சொர்ப்ப இடங்களை கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் பா.ஜ.க போட்டியிட்டது. அதுவும் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிடும் இடங்களில் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு இடங்களை பா.ஜ.க ஒதுக்கியது. இதனால் சிவசேனா அனுதாபிகள் எது உண்மையான சிவசேனா என்ற குழப்பத்திற்கு வந்தனர். கடந்த 50 ஆண்டுகளாக தாக்கரே பிராண்ட் மராத்தியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தது. இதே போன்று சரத் பவார் மாநிலம் முழுவதும் குறிப்பாக மேற்கு மகாராஷ்டிராவில் சிறந்து விளங்கும் கூட்டுறவு துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அஜித்பவார்-சரத்பவார் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் பிளவுபடுவதற்கு முன்பே, மேற்கு மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக விளங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், வங்கிகள் மற்றும் பால் சங்கங்களில் பா.ஜ.க ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. பவாரின் பல விசுவாசிகளும், கூட்டுறவுத் துறையின் மீது ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் தலைவர்களும் கூட பா.ஜ.க.வுக்கு மாறினர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. இப்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு ஒன்றாக சேர வேண்டிய நிலைக்கு தள்ளி இருக்கிறது. அஜித் பவாரும், சரத் பவாரும் புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. பா.ஜ.க நினைத்தால் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும் என்பதை அஜித் பவார் புரிந்து கொள்ள தொடங்கி இருப்பதாகவும், எனவேதான் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது கட்சியோடு இணைக்க அஜித்பவார் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அஜித் பவாரால் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியை பிடித்துள்ளது.

29 C