SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

``இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் - ஐரோப்பிய ஆணையத் தலைவர் நெகிழ்ச்சி

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்றனர். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உர்சுலா வான் டெர் லேயன், குடியரசு நிகழ்வின் அரச விருந்தினராக கலந்துகொண்டார். உர்சுலா வான் டெர் லேயன் - மோடி மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் உர்சுலா வான் டெர் லேயன், ``குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்பது எங்கள் வாழ்நாள் பெருமை. வெற்றிகரமான இந்தியா உலகை மேலும் நிலையானதாகவும், செழிப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. இதனால் நாம் அனைவரும் பயனடைகிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்னதாக டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ``வெற்றியடையும் இந்தியா மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும். உலக உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் கால் பங்கைக் கொண்ட, 200 கோடி மக்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட சந்தையை இந்த வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் என்று தெரிவித்திருந்தார். ₹1 கோடி + மாதம் தொடர் வருமானம்: 35–50 வயசுக்காரங்க கலந்துக்க வேண்டிய கட்டணமில்லா SIP–SWP வகுப்பு!

விகடன் 26 Jan 2026 4:57 pm

``இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் - ஐரோப்பிய ஆணையத் தலைவர் நெகிழ்ச்சி

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்றனர். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உர்சுலா வான் டெர் லேயன், குடியரசு நிகழ்வின் அரச விருந்தினராக கலந்துகொண்டார். உர்சுலா வான் டெர் லேயன் - மோடி மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் உர்சுலா வான் டெர் லேயன், ``குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்பது எங்கள் வாழ்நாள் பெருமை. வெற்றிகரமான இந்தியா உலகை மேலும் நிலையானதாகவும், செழிப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. இதனால் நாம் அனைவரும் பயனடைகிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்னதாக டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ``வெற்றியடையும் இந்தியா மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும். உலக உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் கால் பங்கைக் கொண்ட, 200 கோடி மக்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட சந்தையை இந்த வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் என்று தெரிவித்திருந்தார். ₹1 கோடி + மாதம் தொடர் வருமானம்: 35–50 வயசுக்காரங்க கலந்துக்க வேண்டிய கட்டணமில்லா SIP–SWP வகுப்பு!

விகடன் 26 Jan 2026 4:57 pm

திமுக மகளிர் அணி மாநாடு: `ஹாட்பாக்ஸில் பிரியாணி முதல் கூல்ட்ரிங்ஸ் வரை' - பையில் இருந்தது என்ன?

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றுவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு திடலில் போடப்பட்டிருக்கும் நாற்காளிகளில் பை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பையில் சிக்கன் பிரியாணி வைக்கப்பட்ட ஹாட் பாக்ஸ், மேரி கோல்டு, குட் டே பிஸ்கட், பாதுஷா, மிக்சர் காரம், தண்ணீர், மாசா கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. பிரபலங்கள் திரண்ட மகளிர் மாநாடு... உரசல்களை ஒட்டவைத்த தி.மு.க!

விகடன் 26 Jan 2026 4:04 pm

திமுக மகளிர் அணி மாநாடு: `ஹாட்பாக்ஸில் பிரியாணி முதல் கூல்ட்ரிங்ஸ் வரை' - பையில் இருந்தது என்ன?

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றுவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு திடலில் போடப்பட்டிருக்கும் நாற்காளிகளில் பை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பையில் சிக்கன் பிரியாணி வைக்கப்பட்ட ஹாட் பாக்ஸ், மேரி கோல்டு, குட் டே பிஸ்கட், பாதுஷா, மிக்சர் காரம், தண்ணீர், மாசா கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. பிரபலங்கள் திரண்ட மகளிர் மாநாடு... உரசல்களை ஒட்டவைத்த தி.மு.க!

விகடன் 26 Jan 2026 4:04 pm

`சுய மரியாதை முக்கியம்; லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் வைத்திலிங்கம்' - ஸ்டாலின்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது அரசியல் மட்டத்தில் பேசு பொருளானது. இந்நிலையில் இணைப்பு விழாவிற்கான ஏற்பாட்டை வைத்திலிங்கம் செய்தார். தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் இன்று மாலை வெல்லும் தமிழ்ப் பெண்கள் தி.மு.க. டெல்டா மகளிர் மாநாடு நடைபெறுகிறது. அதே பகுதியில் தனியாக பந்தல் அமைத்து இணைப்பு விழாவிற்கான ஏற்பாட்டை செய்தார் வைத்திலிங்கம். சுமார் 12 மணியளவில் மேடையேறினார் முதல்வர் ஸ்டாலின். வைத்திலிங்கம் தலைமையில், ஸ்டாலின் முன்னிலையில் 10,000 மாற்றுக்கட்சியினர் தி.மு.க -வில் இணைந்தனர். இதில் கனிமொழி, நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய வைத்திலிங்கம், ``நமது முதலமைச்சர்  இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற அளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் இன்றைக்கு முதல்வரை மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம், இப்படிப் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இன்றைக்கு இந்த திராவிடத்தைக் கண்டாலே சிலருக்கு மனவேதனை. யாரும் இந்த திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்பதற்கு, இன்றைக்கு நமது முதல்வர் எதற்கும் துணிந்து, 'என்னுடைய உயிர் திராவிடம்தான்' என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எப்போதும் நாம் அவருக்குத் துணையாக இந்த திராவிடத்தைக் காக்கப் பாடுபட வேண்டும். சிபி சக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல் இன்றைக்கு அவர் மடியில் நான் விழுந்திருக்கின்றேன் என்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேச ஆரம்பித்தார். அப்போது எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரனிடம் கனிமொழி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, கனிமொழி அருகில் அமர்ந்திருத்த கே.என்.நேரு, சைகை மூலம், கனிமொழியிடம் முதல்வர் அமர்ந்திருந்த நாற்காலியை காட்டி அதில் அமரச் சொன்னார். மறுத்த கனிமொழியிடம் மீண்டும் சொல்ல முதல்வரை காட்டி அந்த நாற்காலியில் அமர்வதை மறுத்து விட்டார். ஸ்டாலின் பேசியதாவது, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரால் இணைக்கப்பட்ட அனைவரையும் மனதார வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வரும் வழியில் நான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த இணைப்பு விழாவில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்த போது பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது. அதனால் அனுமதி வாங்கி பேசுகிறேன். இது இணைப்பு விழாவா அல்லது மாநாடா என்று நினைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிரிந்தது. சட்டமன்றத்தில் கூட வைத்திலிங்கம் கவலையுடன் தான் இருந்தார். இதனை நான் அப்போதே பார்த்தேன். சுய மரியாதை முக்கியம் என உணர்ந்து தற்போது வைத்திலிங்கம் தி.மு.க.வில் லேட்டாக இணைந்துள்ளார். லேட்டாக இணைந்தாலும் லேட்டஸ்டாக இணைந்து விட்டார். தேர்தல் நெருங்கி விட்டது. நாம் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். மக்களின் பேராதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான். நமது ஆட்சியில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்து விட்டோம். இனி அந்த சாதனையை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை படைக்க போகிறோம். தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

விகடன் 26 Jan 2026 2:13 pm

``விஜய் ஜீரோ மாதிரி... எப்படி அந்த கார்-னு ஒரு கேள்வி இருக்கு - தமிழிசை சௌந்தராஜன்

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பா.ஜ.க மாநில துணை தலைவர்கள் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய கொடி ஏற்றிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ``தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு கொண்டிருப்பதை போல மாய தோற்றத்தை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு எனது வன்மையான கண்டனம். தமிழர்களுக்கு நல்லது நடக்கும்போது முதல்வர் வாழ்த்துவதுகூட கிடையாது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவரானபோதும், தமிழ்நாட்டின் 10 மாவட்ட பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டபோதும் முதல்வராக வாழ்த்தவில்லை. அதனால் அவரது சுயநல நோக்கத்தை, அவரின் ஈகோ அரசியலையும் தமிழகம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தம்பி விஜய்க்கு அனுபவம் இன்னும் போதாது என நினைக்கிறேன். அவர் தனித்து விடப்பட்டதால் அப்படி பேசுகிறாரா என்று எனக்கு தெரியவில்லை. உச்சத்தில் இருந்து வந்திருக்கிறார் என்று சொல்கிறார். 30 வருடம் நடித்து, பெயர், புகழ், பணம் எல்லாம் சேர்த்துவிட்டுதானே வந்திருக்கிறார். ஏதோ தியாகம் செய்வதாகப் பேசிக்கொண்டிருக்கிறார். எனவே, இந்த தேர்தலில் உண்மையிலேயே போட்டி, திமுக கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான். தனி சக்தியாக வருவோம் என்கிறார். அவருடன் வருவதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரு ரூபாய் கூட ஊழல் கரைபடியாதவர் என்கிறார். ஆனால், படத்தின் மூலம் ரூ்.15 கோடி மறைத்த விவகாரம், யார் அந்த சார் என்பது போல எப்படி அந்த கார்? போன்ற கேள்விகள் இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் நான் அப்படி செய்துவிடுவேன் இப்படி செய்துவிடுவேன் எனப் பேசுவதுபோலதான் அவரின் பேச்சைப் பார்க்கிறேன். தவெக விஜய் விஜய் ஒரு ஜீரோ மாதிரி, தனியாக இருந்தால் மதிப்பு கிடையாது. அதே ஜீரோ இன்னொன்றுடன் சேர்ந்தால் மதிப்பு அதிகம். திமுக கூட்டணிலேயே சிக்கல் இருக்கிறது. முதல்வரின் பேச்சில் பதற்றம் இருக்கிறது. என்.டி.ஏ கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். திரைப்படத்திலிருந்து வந்து முதலமைச்சராக வருவது மிக மிக சிரமமான காரியம். அதனால், விஜய் தொண்டர்களின் உழைப்பையும், ரசிகர்களின் உழைப்பையும், அவர்களின் நம்பிக்கையும் வீணாக்கிவிடக்கூடாது. எந்த கூட்டணி வெற்றி பெறுகிறதோ அந்த கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை? - கேள்வி எழுப்பும் தமிழிசை

விகடன் 26 Jan 2026 1:58 pm

”காளை மாடுகூட கன்று போடலாம்; ஆனால், பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது” - கருணாஸ் காட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் ஒரு நடிகர் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும், கூட்டங்களில் திரைப்பட வசனத்தை மேற்கோள்காட்டி பேசி, கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் முதலமைச்சராகதான் வருவேன் என அவர் பேசுவது அவரது பேராசையை காட்டுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவராக ஏன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஏற்றுக் கொள்ளவில்லை? கருணாஸ் அவரை சாதியை வட்டத்துக்குள் சுருக்கிப் பார்க்கிறார்கள். ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய், தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டவில்லை. அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. அதையெல்லாம் அவர் நினைவில் வைத்துப் பேசினால் நன்றாக இருக்கும். விசிலை வாயில் வைத்து ஊதத்தான் முடியும். ஆனால், ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு வீரர் ஒருவர் வேண்டும். ஓடி வெற்றி பெற வேண்டும், அரசியல் அது தேர்தல் களத்தில்தான் தெரியும். பா.ஜ.கவின் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வலையில் விழுந்ததன் விளைவாக ஓ.பி.எஸ் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பா.ஜ.கட்சியை நம்பி தர்ம யுத்தத்தை நடத்தியவர் ஒ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி எப்படி சசிகலாவிற்கு துரோகம் செய்தாரோ , அதேபோல் ஓ.பி.எஸ்-யிடம் இருந்த பலரும் இ.பி.எஸிடம் சென்று விட்டார்கள். முழுக்க முழுக்க பாஜக ஓ.பி.எஸ்-ஐ நம்ப வைத்து கழுத்தை அறுத்திருக்கிறது. கருணாஸ் ஒ.பி.எஸின் நிலைமை இன்றைக்கு மிகவும் கவலைக் குறியதாகவும், வருத்தம் அடையக் கூடியதாகவும் இருக்கிறது. முக்குலத்தோர் சமுதாயத்தை பா.ஜ.க பிளவுபடுத்தி, டி.டி.வி தினகரனை சிறையிலடைத்து, கூட்டணியில் இருந்து  வெளிநடப்பு செய்த அவரை இன்று மீண்டும் கூட்டணில் சேர்க்கப்படுகிறது என்றால், முழுக்க முழுக்க பா.ஜ.கவின் மோசடி வேலை என உலகமே உற்று நோக்குகிறது. 10 நாட்களுக்கு முன் இ.பி.எஸ் பற்றியும், பா.ஜ.கவை பற்றியும் தினகரன் என்னவெல்லாம்  விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் உடனடியாக மறக்க மாட்டார்கள். இ.பி.எஸ் மீது எவ்வளவோ குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வர விட மாட்டேன். எனக் கூறி வந்த  டி.டி.வி தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லை என்று சந்தர்ப்பத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும், சூழ்நிலை கைதியாக பங்காளி சண்டை என கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. கருணாஸ் டி.டி.வி தினகரன் அன்று ஒன்று பேசுகிறார், இன்று ஒன்று பேசுகிறார், நாளை ஒன்று பேசுவார். பா.ஜ.கவின் அரசியல் தீர்மானமே அண்டைய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி  துண்டாக்குவதுதான். அதே முயற்சியைத்தான்  தமிழகத்திலும் எடுக்கிறார்கள். படர்தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பா.ஜ.கவின் தாமரை நாட்டுக்கு நாசம். வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது.” என்றார்.  

விகடன் 26 Jan 2026 12:58 pm

”காளை மாடுகூட கன்று போடலாம்; ஆனால், பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது” - கருணாஸ் காட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் ஒரு நடிகர் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும், கூட்டங்களில் திரைப்பட வசனத்தை மேற்கோள்காட்டி பேசி, கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் முதலமைச்சராகதான் வருவேன் என அவர் பேசுவது அவரது பேராசையை காட்டுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவராக ஏன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஏற்றுக் கொள்ளவில்லை? கருணாஸ் அவரை சாதியை வட்டத்துக்குள் சுருக்கிப் பார்க்கிறார்கள். ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய், தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டவில்லை. அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. அதையெல்லாம் அவர் நினைவில் வைத்துப் பேசினால் நன்றாக இருக்கும். விசிலை வாயில் வைத்து ஊதத்தான் முடியும். ஆனால், ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு வீரர் ஒருவர் வேண்டும். ஓடி வெற்றி பெற வேண்டும், அரசியல் அது தேர்தல் களத்தில்தான் தெரியும். பா.ஜ.கவின் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வலையில் விழுந்ததன் விளைவாக ஓ.பி.எஸ் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பா.ஜ.கட்சியை நம்பி தர்ம யுத்தத்தை நடத்தியவர் ஒ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி எப்படி சசிகலாவிற்கு துரோகம் செய்தாரோ , அதேபோல் ஓ.பி.எஸ்-யிடம் இருந்த பலரும் இ.பி.எஸிடம் சென்று விட்டார்கள். முழுக்க முழுக்க பாஜக ஓ.பி.எஸ்-ஐ நம்ப வைத்து கழுத்தை அறுத்திருக்கிறது. கருணாஸ் ஒ.பி.எஸின் நிலைமை இன்றைக்கு மிகவும் கவலைக் குறியதாகவும், வருத்தம் அடையக் கூடியதாகவும் இருக்கிறது. முக்குலத்தோர் சமுதாயத்தை பா.ஜ.க பிளவுபடுத்தி, டி.டி.வி தினகரனை சிறையிலடைத்து, கூட்டணியில் இருந்து  வெளிநடப்பு செய்த அவரை இன்று மீண்டும் கூட்டணில் சேர்க்கப்படுகிறது என்றால், முழுக்க முழுக்க பா.ஜ.கவின் மோசடி வேலை என உலகமே உற்று நோக்குகிறது. 10 நாட்களுக்கு முன் இ.பி.எஸ் பற்றியும், பா.ஜ.கவை பற்றியும் தினகரன் என்னவெல்லாம்  விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் உடனடியாக மறக்க மாட்டார்கள். இ.பி.எஸ் மீது எவ்வளவோ குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வர விட மாட்டேன். எனக் கூறி வந்த  டி.டி.வி தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லை என்று சந்தர்ப்பத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும், சூழ்நிலை கைதியாக பங்காளி சண்டை என கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. கருணாஸ் டி.டி.வி தினகரன் அன்று ஒன்று பேசுகிறார், இன்று ஒன்று பேசுகிறார், நாளை ஒன்று பேசுவார். பா.ஜ.கவின் அரசியல் தீர்மானமே அண்டைய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி  துண்டாக்குவதுதான். அதே முயற்சியைத்தான்  தமிழகத்திலும் எடுக்கிறார்கள். படர்தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பா.ஜ.கவின் தாமரை நாட்டுக்கு நாசம். வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது.” என்றார்.  

விகடன் 26 Jan 2026 12:58 pm

பத்ம விருதுகள்: ``மம்மூட்டி, மாதவன், ரோஹித் சர்மா - இந்திய அளவில் கவனம் பெற்ற நட்சத்திரங்கள்!

மத்திய அரசு நேற்று 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளில் 131 விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐந்து பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொது வாழ்க்கை, கலை, சினிமா, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களூக்கு இந்த விருது வழங்கப்படும். அதன் அடிப்படையில், நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், மறைந்த மூத்த நடிகர் தர்மேந்திர சிங் தியோல், மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன், கர்நாடக இசை வயலின் கலைஞர் என். ராஜம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ், பிரபல எழுத்தாளர் பி. நாராயணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். பத்ம பூஷண் பட்டியலில் பாடகி அல்கா யாக்னிக், நடிகர் மம்மூட்டி, தொழிலதிபர் உதய் கோடக், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷ்யாரி, மறைந்த விளம்பரத் துறை நிபுணர் பியூஷ் பாண்டே, சமூகத் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். பத்மஸ்ரீ பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர்களான ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா ஆகியோர் விளையாட்டுத் துறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். கலைத் துறைப் பட்டியலில் நடிகர்கள் மாதவன், பிரோசென்ஜித் சாட்டர்ஜி, கர்நாடக இசைப் பாடகி திரிப்தி முகர்ஜி, நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைஞர்களான தருண் பட்டாச்சார்யா, போக்கிலா லெக்தேபி போன்றோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த ஆண்டு விருது பட்டியலில் 19 பெண்கள், 6 வெளிநாட்டினர், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், மறைந்தவர்கள் 16 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பத்ம விருதுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகின்றன. மம்முட்டி நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்முக்கா அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம். நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து. எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தியாவின் உயரிய விருது: தமிழ்நாட்டுக்கு 5 'பத்ம' விருதுகள்; யார் யாருக்கு விருது?

விகடன் 26 Jan 2026 12:49 pm

பத்ம விருதுகள்: ``மம்மூட்டி, மாதவன், ரோஹித் சர்மா - இந்திய அளவில் கவனம் பெற்ற நட்சத்திரங்கள்!

மத்திய அரசு நேற்று 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளில் 131 விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐந்து பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொது வாழ்க்கை, கலை, சினிமா, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களூக்கு இந்த விருது வழங்கப்படும். அதன் அடிப்படையில், நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், மறைந்த மூத்த நடிகர் தர்மேந்திர சிங் தியோல், மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன், கர்நாடக இசை வயலின் கலைஞர் என். ராஜம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ், பிரபல எழுத்தாளர் பி. நாராயணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். பத்ம பூஷண் பட்டியலில் பாடகி அல்கா யாக்னிக், நடிகர் மம்மூட்டி, தொழிலதிபர் உதய் கோடக், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷ்யாரி, மறைந்த விளம்பரத் துறை நிபுணர் பியூஷ் பாண்டே, சமூகத் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். பத்மஸ்ரீ பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர்களான ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா ஆகியோர் விளையாட்டுத் துறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். கலைத் துறைப் பட்டியலில் நடிகர்கள் மாதவன், பிரோசென்ஜித் சாட்டர்ஜி, கர்நாடக இசைப் பாடகி திரிப்தி முகர்ஜி, நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைஞர்களான தருண் பட்டாச்சார்யா, போக்கிலா லெக்தேபி போன்றோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த ஆண்டு விருது பட்டியலில் 19 பெண்கள், 6 வெளிநாட்டினர், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், மறைந்தவர்கள் 16 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பத்ம விருதுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகின்றன. மம்முட்டி நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்முக்கா அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம். நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து. எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தியாவின் உயரிய விருது: தமிழ்நாட்டுக்கு 5 'பத்ம' விருதுகள்; யார் யாருக்கு விருது?

விகடன் 26 Jan 2026 12:49 pm

சீனாவுடன் 'இந்த'ஒப்பந்தம் இல்லை - கார்னி விளக்கம்; ட்ரம்பிற்கு அஞ்சுகிறதா கனடா?

சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி. இந்தச் சந்திப்பிற்கு பிறகு, கனடா மற்றும் சீனா - இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக தடை, வரிப் பிரச்னை ஆகியவைகளைக் குறைக்கும் 'மைல்கல்' வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்நிலையை அடைந்துள்ளோம் என்று கூறினார் கார்னி. 'ஒப்பந்தம்' என்று கார்னி குறிப்பிட்டது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்று பொருள் கொள்ளப்பட்டது. இது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மார்க் கார்னி - ஜி ஜின்பிங் Gold: 2026-ம் ஆண்டின் முதல் மாதத்திலேயே 'இவ்வளவு' ஏற்றம்; சாதாரண மக்கள் ஆகிய 'நான்' என்ன செய்வது? ட்ரம்ப் எச்சரிக்கை இதனால், சீனா உடன் கனடா ஒப்பந்தம் போட்டால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருள்களுக்கும் உடனடியாக 100 சதவிகித வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார் ட்ரம்ப். கார்னி விளக்கம் உடனே, ட்ரம்ப்பின் கூற்றிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார் கார்னி... சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அதிக வரி, வர்த்தக தடைகள் குறித்து தான் பேசியிருக்கிறோம். இது கிட்டத்தட்ட 'பேக்' அடித்தல் என்றே எடுத்துக்கொள்ளலாம். Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன? ஏன்? அமெரிக்க வலைதளத்தின் படி, 2024-ம் ஆண்டு, கனடா தனது தயாரிப்புகளில் நான்கில் மூன்று பங்கு பொருள்களை அமெரிக்காவிற்குத் தான் ஏற்றுமதி செய்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு சந்தையை நிச்சயம் கனடா இழக்க விரும்பாது என்பது தான் இந்தப் 'பேக்'கிற்கான காரணம். வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

விகடன் 26 Jan 2026 12:43 pm

சீனாவுடன் 'இந்த'ஒப்பந்தம் இல்லை - கார்னி விளக்கம்; ட்ரம்பிற்கு அஞ்சுகிறதா கனடா?

சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி. இந்தச் சந்திப்பிற்கு பிறகு, கனடா மற்றும் சீனா - இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக தடை, வரிப் பிரச்னை ஆகியவைகளைக் குறைக்கும் 'மைல்கல்' வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்நிலையை அடைந்துள்ளோம் என்று கூறினார் கார்னி. 'ஒப்பந்தம்' என்று கார்னி குறிப்பிட்டது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்று பொருள் கொள்ளப்பட்டது. இது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மார்க் கார்னி - ஜி ஜின்பிங் Gold: 2026-ம் ஆண்டின் முதல் மாதத்திலேயே 'இவ்வளவு' ஏற்றம்; சாதாரண மக்கள் ஆகிய 'நான்' என்ன செய்வது? ட்ரம்ப் எச்சரிக்கை இதனால், சீனா உடன் கனடா ஒப்பந்தம் போட்டால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருள்களுக்கும் உடனடியாக 100 சதவிகித வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார் ட்ரம்ப். கார்னி விளக்கம் உடனே, ட்ரம்ப்பின் கூற்றிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார் கார்னி... சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அதிக வரி, வர்த்தக தடைகள் குறித்து தான் பேசியிருக்கிறோம். இது கிட்டத்தட்ட 'பேக்' அடித்தல் என்றே எடுத்துக்கொள்ளலாம். Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன? ஏன்? அமெரிக்க வலைதளத்தின் படி, 2024-ம் ஆண்டு, கனடா தனது தயாரிப்புகளில் நான்கில் மூன்று பங்கு பொருள்களை அமெரிக்காவிற்குத் தான் ஏற்றுமதி செய்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு சந்தையை நிச்சயம் கனடா இழக்க விரும்பாது என்பது தான் இந்தப் 'பேக்'கிற்கான காரணம். வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

விகடன் 26 Jan 2026 12:43 pm

”ஒரு கைக்கு 5 விரல்களே போதும்; விஜய்யின் த.வெ.க ஆறாவது விரல்.!”– ராஜேந்திர பாலாஜி கிண்டல்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இதுவரை நடந்து முடிந்த அரசியலில் பார்த்தால் ஒவ்வொரு நேரமும் தி.மு.கவும் படுதோல்வி அடைந்திருக்கிறது, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்தது.  டெபாசிட் இழந்த தி.மு.கவே ஆட்சிக்கு வருகிறபோது, 32 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைத்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார். எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் சொல்லி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அவரது தொண்டர்களால்தான் கொண்டு வர முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமியால்  மட்டுமே தர முடியும். ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க கூட்டணிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் வருவார்கள்.  தனித்து நின்றே வெற்றி பெறுவோம் என த.வெ.க தலைவர் விஜய் கூறுகிறார்.  உழைக்கும்  மனிதனுக்கு 5 விரல்கள்தான் தேவை, 6வது விரல் தேவையில்லை, தமிழகத்திற்கு விஜயின் த.வெ.க 6வது விரலாக உள்ளது.  தேர்தல் களத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளும், தி.மு.கவும் திமுக கூட்டணி கட்சிகளும் மட்டுமே நிற்கும். தேர்தல் அறிவித்தவுடன் மற்ற கட்சிகள் எல்லாம் கரைந்து காணாமல் போய்விடும்” என்றார்.

விகடன் 26 Jan 2026 11:10 am

எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! | முதல் களம் - 03

`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர். கட்டுரையாளர் : பா.முகிலன் `முதல்’ 03 | எம்.ஜி.ஆர் (எ) மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் சில தருணங்கள், வழக்கமான தேர்தல் வெற்றிகளைக் கடந்து, ஒரு தலைமுறையின் பயணத்தை முற்றாக மாற்றிவிடும். மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் — எம்.ஜி.ஆர் அந்த வகையில் ஒற்றை நபராக மட்டுமல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கப்புள்ளியாகவும் மாறினார் எம்.ஜி.ஆர். அவரின் முதல் சட்டமன்றத் தேர்தல் வெற்றி, அவருக்கான வெற்றியாக மட்டுமல்லாது, இருபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியைத் தகர்த்தெறிந்து, திராவிட அரசியலின் உச்சத்தை உருவாக்கிய திமுகவின் மகத்தான வெற்றிக்குத் துணை புரிந்ததாகவும் அமைந்தது. ஆம், 1967-ல் நடைபெற்ற அந்தத் தேர்தலில்தான் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியைப் பிடித்து, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது.  எம்.ஜி.ஆர், கலைஞர் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அண்ணாவை சென்று சந்தித்த இளம் திமுக தலைவர்கள் சிலர், அவருக்கு மாலை அணிவிக்க முயன்றபோது, “இந்தத் தேர்தல் வெற்றிக்காக யாருக்காவது மாலை அணிவிக்க வேண்டுமென்றால், அது எம்.ஜி.ஆருக்குதான்  அணிவிக்கப்பட வேண்டும் என அண்ணா கூறியதாக அப்போது ஒரு பேச்சு உண்டு. அண்ணா அப்படிச் சொன்னது உண்மையோ இல்லையோ, திமுகவின் வரலாற்று வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர், அந்நாளைய தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவரும், பின்னாளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்தவருமான எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட எம்.ஜி. ராமச்சந்திரன் என்பதை திமுகவினரும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள். தமிழ்நாட்டின் அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த 1967 தேர்தலின்போது என்ன நடந்தது, எம்.ஜி.ஆர் திமுகவுக்கு வந்தது எப்படி,  முதன்முதலாக அவர் போட்டியிட்ட தொகுதி எது, அந்தத் தேர்தலில், எம்.ஜி.ஆரால் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்ல முடியாமல் போனது ஏன், பிரசாரத்துக்குச் செல்லாமலேயே அவர் வெற்றி பெற்றது எப்படி, திமுக பெற்ற மாபெரும் வெற்றிக்காக எம்.ஜி.ஆரை அண்ணா சிலாகித்துப் பேசியது ஏன்...? விடைகளைத் தெரிந்துகொள்ள, 1960-களின் ஃப்ளாஷ்பேக்குகளுக்குள் செல்லலாம்.  எம்.ஜி.ஆர் திமுகவின் எழுச்சியும் எம்.ஜி.ஆரின் வருகையும் 1950-களின் இறுதி மற்றும் 1960-களின் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அரசியல் களம், ஓர் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்தது. விலைவாசி உயர்வு, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கான பஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் பண்ணையார்தனமான அரசியல் அணுகுமுறை போன்றவை  காங்கிரஸ் ஆட்சி மீது, மக்களிடையே சோர்வையும் சலிப்பையும் ஏற்படுத்தி இருந்தன. இன்னொருபுறம் இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டுசென்ற திமுகவின் எழுச்சி, உச்சத்தில் இருந்தது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், காங்கிரஸின் அகம்பாவம், சமூக நீதி, தமிழ்மொழி அடையாளம், சாதி–மத பாகுபாடுகளுக்கு எதிரான தத்துவங்கள், மாநில உரிமைகள் சார்ந்த முழக்கங்கள் போன்றவை, மக்களை திமுகவை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்தன. அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், நாவலர் போன்ற சக்திவாய்ந்த பேச்சாளர்களும்  தலைவர்களும், திமுகவுக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார்கள்.  ஆனால், திமுகவுக்கு ஒன்றே ஒன்று மட்டும் இன்னும் ஒரு குறையாகவே இருந்தது. அது - பொதுமக்களின் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடிக்கும் அளவுக்கான பிரபல முகம். அதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நுட்பமாக கண்டு உணர்ந்த கருணாநிதிதான், எம்.ஜி.ஆரை திமுகவுக்கு அழைத்து வந்தார். மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால கறுப்பு வெள்ளை படங்களின் வெற்றிக்கு, கருணாநிதி தீட்டிய திரைக்கதை வசனங்கள் பெரும் பங்களிப்பை அளித்தன. அதன் அடிப்படையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஆழமான நட்பும், தொடர்ச்சியாக இடம் பெற்ற கலந்துரையாடல்களும்தான் எம்.ஜி.ஆரை அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொண்டு, திமுக பக்கம் இழுத்து வந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் அண்ணாவை அசரவைத்த எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கு அந்த வகையில்,எம்.ஜி.ஆர், 1953-லிருந்தே திமுகவின் பிரசாரக் கருவூலமாக வலம் வரத் தொடங்கினார். ஏழைகளின் காப்பாளன், அநீதிக்கு எதிரான போராளி போன்ற அவர் மீதான திரைப்பட பிம்பம் திமுகவின் கொள்கைகளுடன் ஒத்துப்போனது. அவரது பல்வேறு படங்கள் திமுக பிரசாரத்திற்கு உதவின. திமுகவுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டியதில், எம்.ஜி.ஆரின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை அண்ணாவே நேரடியாக கண்டு உணரும் சில சந்தர்ப்பங்களும் அவருக்கு வாய்த்தன.  1964-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு சம்பவம் இது. அண்ணா, தனது கட்சி செயல்வீரர்கள் இருவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்றபோது, காரில் பறக்கும் திமுகவின் கொடியைக் கண்ட சில உள்ளூர்வாசிகள், அந்த வாகனத்தை நிறுத்தினர். காரின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த அவர்கள், வெள்ளைச் சட்டையில் வீற்றிருந்த அண்ணாவைப் பார்த்து, அவர் யார் என்பதை அறியாமலேயே,   “ஐயா… நீங்க எம்.ஜி.ஆர் கட்சியா? எனக் கேட்டுள்ளனர். அண்ணா – எம்ஜிஆரின் அரசியல் ஆசான். அந்த கேள்வி அவரைப் புன்முறுவல் பூக்க வைத்தது. உடன் வந்த செயல்வீரர்களை நோக்கி சிரித்தபடி, “பாருங்க… இதுதான் எம்.ஜி.ஆரின் மக்கள் ஈர்ப்பு சக்தி என அண்ணா பெருமையுடன் கூறியதாக திமுக-வின் வரலாற்று பக்கம் ஒன்று சொல்கிறது.   அடுத்ததாக 1966-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. சென்னை, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் திமுக மாநாட்டு மேடையில் இருந்த எம்ஜிஆர், கட்சிக்காக 3 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். அந்த ஆண்டுகளில் ரூ.3 லட்சம் என்பது “அதிர்ச்சி” அளிக்கும் அளவுக்குப் பெரிய தொகை. ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பின் உரையாற்ற மைக்கைப் பிடித்த அண்ணா, கூட்டம் முழுவதும் கவனமாகக் கேட்டு கொண்டிருக்கும் நிலையில், “எம்ஜிஆர் இந்த மூன்று லட்சத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்ளலாம். எங்களுக்கு அதைவிட முக்கியமானது — இவரால் நமக்கு கிடைக்கப் போகும் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாக்குகள்.” - இந்த இரண்டு நிகழ்வுகளையும், தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆர் உருவாக்கிய பேரலைக்கும், அண்ணா அதனை உணர்ந்து கொண்டிருந்த தொலைநோக்குத் திறனுக்குமான வரலாற்றுப் பதிவுகளாக பார்க்கலாம். எம்.ஜி.ஆர் சுடப்பட்ட எம்.ஜி.ஆர் இத்தகைய சூழலில்தான், 1967-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியாகி, தமிழக அரசியல் களம் பரபரப்பாகியது. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் எம்.ஜி.ஆரும் இடம்பெற்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி சென்னை பரங்கிமலை தொகுதி. பிரசாரம் அனல் பறந்துகொண்டிருந்த நிலையில், தேர்தலுக்கு  ஒரு மாதம் முன்பு, அதாவது ஜனவரி 12 அன்று, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் சென்னை ராமாபுரம்  வீட்டுக்கு, நடிகர் எம்.ஆர். ராதா மற்றும் தயாரிப்பாளர் கே.கே. வாசு வந்தனர். 'பெற்றால்தான் பிள்ளையா' என்கிற திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது தகராறு ஏற்பட்டது. திடீரென எம்.ஆர்.ராதா துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரின் இடது காதருகே இரு முறை சுட்டார். ஒரு குண்டு கழுத்தில் பாய்ந்தது. ராதா தானும் சுட்டுக்கொண்டார். இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எம்.ஜி.ஆரின் குரல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.  செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு முன்பாக திரண்டனர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக்கொள்ள, திரையுலக வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளானது. இன்னொருபுறம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தெருவில் அழுது திரண்டனர். ஊரெங்கும் பதற்றம். கடைகள் மூடப்பட்டன. எம்.ஆர்.ராதாவின் வீடு தாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நலம்பெற வேண்டி அவரது ரசிகர்கள் கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த அன்று மாலையே அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்களும், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு விரைந்தனர். அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தனர். ஆபத்து கட்டத்தை எம்.ஜி.ஆர் தாண்டிவிட்டதாக மருத்துவர் கூறியதைக் கேட்ட பின்னர்தான் அண்ணாவும் அவருடன் வந்திருந்த திமுக இளம் தலைவர்களும் நிம்மதி அடைந்தனர். ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.  எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் வெற்றிக்கு உதவிய எம்.ஜி.ஆரின் மருத்துவமனை புகைப்படம் எம்.ஜி.ஆரால், அவர் போட்டியிடும் பரங்கிமலை தொகுதிக்குக் கூட பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. துப்பாக்கிச் சூடு நிகழ்வு, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே மாபெரும் அனுதாப அலையை உருவாக்கியது. திமுக தலைமையும் இதை திறம்பட பயன்படுத்திக் கொண்டது. கழுத்தில் பேண்டேஜ் கட்டுடன், கைகளைக் கூப்பி வணங்கும் எம்.ஜி.ஆரின் மருத்துவமனை படுக்கை புகைப்படம், தமிழகம் முழுவதும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது. இது எம்.ஜி.ஆர் மீது மட்டுமல்லாது, திமுகவுக்கும் மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி, திமுகவின் தேர்தல் வெற்றிக்கு கூடுதல் பங்களிப்பை அளித்தது. மருத்துவமனையில் படுத்துக்கொண்டே பரங்கிமலை தொகுதியில் 54,106 வாக்குகள் பெற்று, எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் டி.எல். ரகுபதி 26,432 வாக்குகளுடனும், ஜனசங்க வேட்பாளர் கே. காசிநாதன் 613 வாக்குகளுடனும் தோற்றனர். வெற்றி எம்.ஜி.ஆருக்கு மட்டுமா? அண்ணா தலைமையிலான திமுக கூட்டணி, 234 இடங்களில் 179 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் வெறும் 51 இடங்களுடன் தோற்றது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்... இந்தியாவில் முதல்முறையாக ஒரு பிராந்தியக் கட்சி, தேசியக் கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது. காமராஜர், பக்தவத்சலம் போன்ற ஜாம்பவான்கள் தோல்வியைத் தழுவினர்.  `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 சட்டமன்ற உறுப்பினரான எம்.ஜி.ஆர் , பின்னர் அதிமுகவைத் தொடங்கி மூன்று முறை முதலமைச்சரானார். இன்றும் எம்.ஜி.ஆரின் அந்த மருத்துவமனை புகைப்படம்,  1967 தேர்தலின் அரசியல் அடையாளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது! (தொடரும்.!)

விகடன் 26 Jan 2026 10:59 am

எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! | முதல் களம் - 03

`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர். கட்டுரையாளர் : பா.முகிலன் `முதல்’ 03 | எம்.ஜி.ஆர் (எ) மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் சில தருணங்கள், வழக்கமான தேர்தல் வெற்றிகளைக் கடந்து, ஒரு தலைமுறையின் பயணத்தை முற்றாக மாற்றிவிடும். மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் — எம்.ஜி.ஆர் அந்த வகையில் ஒற்றை நபராக மட்டுமல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கப்புள்ளியாகவும் மாறினார் எம்.ஜி.ஆர். அவரின் முதல் சட்டமன்றத் தேர்தல் வெற்றி, அவருக்கான வெற்றியாக மட்டுமல்லாது, இருபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியைத் தகர்த்தெறிந்து, திராவிட அரசியலின் உச்சத்தை உருவாக்கிய திமுகவின் மகத்தான வெற்றிக்குத் துணை புரிந்ததாகவும் அமைந்தது. ஆம், 1967-ல் நடைபெற்ற அந்தத் தேர்தலில்தான் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியைப் பிடித்து, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது.  எம்.ஜி.ஆர், கலைஞர் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அண்ணாவை சென்று சந்தித்த இளம் திமுக தலைவர்கள் சிலர், அவருக்கு மாலை அணிவிக்க முயன்றபோது, “இந்தத் தேர்தல் வெற்றிக்காக யாருக்காவது மாலை அணிவிக்க வேண்டுமென்றால், அது எம்.ஜி.ஆருக்குதான்  அணிவிக்கப்பட வேண்டும் என அண்ணா கூறியதாக அப்போது ஒரு பேச்சு உண்டு. அண்ணா அப்படிச் சொன்னது உண்மையோ இல்லையோ, திமுகவின் வரலாற்று வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர், அந்நாளைய தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவரும், பின்னாளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்தவருமான எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட எம்.ஜி. ராமச்சந்திரன் என்பதை திமுகவினரும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள். தமிழ்நாட்டின் அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த 1967 தேர்தலின்போது என்ன நடந்தது, எம்.ஜி.ஆர் திமுகவுக்கு வந்தது எப்படி,  முதன்முதலாக அவர் போட்டியிட்ட தொகுதி எது, அந்தத் தேர்தலில், எம்.ஜி.ஆரால் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்ல முடியாமல் போனது ஏன், பிரசாரத்துக்குச் செல்லாமலேயே அவர் வெற்றி பெற்றது எப்படி, திமுக பெற்ற மாபெரும் வெற்றிக்காக எம்.ஜி.ஆரை அண்ணா சிலாகித்துப் பேசியது ஏன்...? விடைகளைத் தெரிந்துகொள்ள, 1960-களின் ஃப்ளாஷ்பேக்குகளுக்குள் செல்லலாம்.  எம்.ஜி.ஆர் திமுகவின் எழுச்சியும் எம்.ஜி.ஆரின் வருகையும் 1950-களின் இறுதி மற்றும் 1960-களின் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அரசியல் களம், ஓர் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்தது. விலைவாசி உயர்வு, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கான பஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் பண்ணையார்தனமான அரசியல் அணுகுமுறை போன்றவை  காங்கிரஸ் ஆட்சி மீது, மக்களிடையே சோர்வையும் சலிப்பையும் ஏற்படுத்தி இருந்தன. இன்னொருபுறம் இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டுசென்ற திமுகவின் எழுச்சி, உச்சத்தில் இருந்தது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், காங்கிரஸின் அகம்பாவம், சமூக நீதி, தமிழ்மொழி அடையாளம், சாதி–மத பாகுபாடுகளுக்கு எதிரான தத்துவங்கள், மாநில உரிமைகள் சார்ந்த முழக்கங்கள் போன்றவை, மக்களை திமுகவை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்தன. அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், நாவலர் போன்ற சக்திவாய்ந்த பேச்சாளர்களும்  தலைவர்களும், திமுகவுக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார்கள்.  ஆனால், திமுகவுக்கு ஒன்றே ஒன்று மட்டும் இன்னும் ஒரு குறையாகவே இருந்தது. அது - பொதுமக்களின் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடிக்கும் அளவுக்கான பிரபல முகம். அதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நுட்பமாக கண்டு உணர்ந்த கருணாநிதிதான், எம்.ஜி.ஆரை திமுகவுக்கு அழைத்து வந்தார். மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால கறுப்பு வெள்ளை படங்களின் வெற்றிக்கு, கருணாநிதி தீட்டிய திரைக்கதை வசனங்கள் பெரும் பங்களிப்பை அளித்தன. அதன் அடிப்படையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஆழமான நட்பும், தொடர்ச்சியாக இடம் பெற்ற கலந்துரையாடல்களும்தான் எம்.ஜி.ஆரை அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொண்டு, திமுக பக்கம் இழுத்து வந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் அண்ணாவை அசரவைத்த எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கு அந்த வகையில்,எம்.ஜி.ஆர், 1953-லிருந்தே திமுகவின் பிரசாரக் கருவூலமாக வலம் வரத் தொடங்கினார். ஏழைகளின் காப்பாளன், அநீதிக்கு எதிரான போராளி போன்ற அவர் மீதான திரைப்பட பிம்பம் திமுகவின் கொள்கைகளுடன் ஒத்துப்போனது. அவரது பல்வேறு படங்கள் திமுக பிரசாரத்திற்கு உதவின. திமுகவுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டியதில், எம்.ஜி.ஆரின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை அண்ணாவே நேரடியாக கண்டு உணரும் சில சந்தர்ப்பங்களும் அவருக்கு வாய்த்தன.  1964-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு சம்பவம் இது. அண்ணா, தனது கட்சி செயல்வீரர்கள் இருவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்றபோது, காரில் பறக்கும் திமுகவின் கொடியைக் கண்ட சில உள்ளூர்வாசிகள், அந்த வாகனத்தை நிறுத்தினர். காரின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த அவர்கள், வெள்ளைச் சட்டையில் வீற்றிருந்த அண்ணாவைப் பார்த்து, அவர் யார் என்பதை அறியாமலேயே,   “ஐயா… நீங்க எம்.ஜி.ஆர் கட்சியா? எனக் கேட்டுள்ளனர். அண்ணா – எம்ஜிஆரின் அரசியல் ஆசான். அந்த கேள்வி அவரைப் புன்முறுவல் பூக்க வைத்தது. உடன் வந்த செயல்வீரர்களை நோக்கி சிரித்தபடி, “பாருங்க… இதுதான் எம்.ஜி.ஆரின் மக்கள் ஈர்ப்பு சக்தி என அண்ணா பெருமையுடன் கூறியதாக திமுக-வின் வரலாற்று பக்கம் ஒன்று சொல்கிறது.   அடுத்ததாக 1966-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. சென்னை, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் திமுக மாநாட்டு மேடையில் இருந்த எம்ஜிஆர், கட்சிக்காக 3 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். அந்த ஆண்டுகளில் ரூ.3 லட்சம் என்பது “அதிர்ச்சி” அளிக்கும் அளவுக்குப் பெரிய தொகை. ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பின் உரையாற்ற மைக்கைப் பிடித்த அண்ணா, கூட்டம் முழுவதும் கவனமாகக் கேட்டு கொண்டிருக்கும் நிலையில், “எம்ஜிஆர் இந்த மூன்று லட்சத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்ளலாம். எங்களுக்கு அதைவிட முக்கியமானது — இவரால் நமக்கு கிடைக்கப் போகும் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாக்குகள்.” - இந்த இரண்டு நிகழ்வுகளையும், தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆர் உருவாக்கிய பேரலைக்கும், அண்ணா அதனை உணர்ந்து கொண்டிருந்த தொலைநோக்குத் திறனுக்குமான வரலாற்றுப் பதிவுகளாக பார்க்கலாம். எம்.ஜி.ஆர் சுடப்பட்ட எம்.ஜி.ஆர் இத்தகைய சூழலில்தான், 1967-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியாகி, தமிழக அரசியல் களம் பரபரப்பாகியது. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் எம்.ஜி.ஆரும் இடம்பெற்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி சென்னை பரங்கிமலை தொகுதி. பிரசாரம் அனல் பறந்துகொண்டிருந்த நிலையில், தேர்தலுக்கு  ஒரு மாதம் முன்பு, அதாவது ஜனவரி 12 அன்று, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் சென்னை ராமாபுரம்  வீட்டுக்கு, நடிகர் எம்.ஆர். ராதா மற்றும் தயாரிப்பாளர் கே.கே. வாசு வந்தனர். 'பெற்றால்தான் பிள்ளையா' என்கிற திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது தகராறு ஏற்பட்டது. திடீரென எம்.ஆர்.ராதா துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரின் இடது காதருகே இரு முறை சுட்டார். ஒரு குண்டு கழுத்தில் பாய்ந்தது. ராதா தானும் சுட்டுக்கொண்டார். இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எம்.ஜி.ஆரின் குரல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.  செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு முன்பாக திரண்டனர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக்கொள்ள, திரையுலக வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளானது. இன்னொருபுறம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தெருவில் அழுது திரண்டனர். ஊரெங்கும் பதற்றம். கடைகள் மூடப்பட்டன. எம்.ஆர்.ராதாவின் வீடு தாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நலம்பெற வேண்டி அவரது ரசிகர்கள் கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த அன்று மாலையே அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்களும், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு விரைந்தனர். அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தனர். ஆபத்து கட்டத்தை எம்.ஜி.ஆர் தாண்டிவிட்டதாக மருத்துவர் கூறியதைக் கேட்ட பின்னர்தான் அண்ணாவும் அவருடன் வந்திருந்த திமுக இளம் தலைவர்களும் நிம்மதி அடைந்தனர். ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.  எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் வெற்றிக்கு உதவிய எம்.ஜி.ஆரின் மருத்துவமனை புகைப்படம் எம்.ஜி.ஆரால், அவர் போட்டியிடும் பரங்கிமலை தொகுதிக்குக் கூட பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. துப்பாக்கிச் சூடு நிகழ்வு, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே மாபெரும் அனுதாப அலையை உருவாக்கியது. திமுக தலைமையும் இதை திறம்பட பயன்படுத்திக் கொண்டது. கழுத்தில் பேண்டேஜ் கட்டுடன், கைகளைக் கூப்பி வணங்கும் எம்.ஜி.ஆரின் மருத்துவமனை படுக்கை புகைப்படம், தமிழகம் முழுவதும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது. இது எம்.ஜி.ஆர் மீது மட்டுமல்லாது, திமுகவுக்கும் மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி, திமுகவின் தேர்தல் வெற்றிக்கு கூடுதல் பங்களிப்பை அளித்தது. மருத்துவமனையில் படுத்துக்கொண்டே பரங்கிமலை தொகுதியில் 54,106 வாக்குகள் பெற்று, எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் டி.எல். ரகுபதி 26,432 வாக்குகளுடனும், ஜனசங்க வேட்பாளர் கே. காசிநாதன் 613 வாக்குகளுடனும் தோற்றனர். வெற்றி எம்.ஜி.ஆருக்கு மட்டுமா? அண்ணா தலைமையிலான திமுக கூட்டணி, 234 இடங்களில் 179 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் வெறும் 51 இடங்களுடன் தோற்றது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்... இந்தியாவில் முதல்முறையாக ஒரு பிராந்தியக் கட்சி, தேசியக் கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது. காமராஜர், பக்தவத்சலம் போன்ற ஜாம்பவான்கள் தோல்வியைத் தழுவினர்.  `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 சட்டமன்ற உறுப்பினரான எம்.ஜி.ஆர் , பின்னர் அதிமுகவைத் தொடங்கி மூன்று முறை முதலமைச்சரானார். இன்றும் எம்.ஜி.ஆரின் அந்த மருத்துவமனை புகைப்படம்,  1967 தேர்தலின் அரசியல் அடையாளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது! (தொடரும்.!)

விகடன் 26 Jan 2026 10:59 am

கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை; தருவது உங்களின் கடமை - சொல்கிறார் விஜய பிரபாகரன்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்தக் கூட்டணி என்று தேமுதிக இதுவரை அறிவிக்காத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய பிரபாகரன், தேமுதிக யாருடன் கூட்டணி சேருவார்கள் என்று மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் இன்று சரிசமமாக உள்ளன. அதற்கு இணையாக சாதி மதம் இல்லாத மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது. விஜய பிரபாகரன் நாங்கள் எந்த கூட்டணிக்கு செல்கிறோமோ, அந்த கூட்டணிதான் வெற்றி பெறும். கடந்த தேர்தலில் 500 முதல் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 60 தொகுதிகளில் அதிமுக தோல்வியைத் தழுவிய தொகுதிகளில் திமுக வெற்றி அடைந்தது. தேமுதிகவிற்கு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இன்றைக்கு 170 தொகுதிகளில் போட்டியிட திமுகவும் அதிமுகவும் நினைக்கிறார்கள். கொள்கை முடிவாக அறிவிக்கிறார்கள். தேமுதிகவுக்கும் அதுபோல் கொள்கை உள்ளன. விஜய பிரபாகரன் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எங்களிடம் 20 முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதனால் கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை. கூடுதல் இடங்கள தருவது உங்களின் கடமை. தேமுதிக முதலமைச்சராக கேட்கவில்லை, உங்களை முதல் அமைச்சராக்கத்தான் இடங்கள் கேட்கிறோம் என்று பேசினார்.

விகடன் 26 Jan 2026 9:05 am

'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!'விசிகவினருக்கு ஆதவ் விளக்கம்

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விடுதலைச் சிறுத்தை கட்சிகள் குறித்து பேசியிருந்தது, விசிகவினர் இடையே அதிருப்தியைக் கிளப்பியிருந்தது. தவெக செயல்வீரர்கள் கூட்டம் OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன? அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள பதிவு... எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு... இன்று நடந்த த.வெ.க செயல்வீரர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்தத்தை என்னிடம் பதிவுசெய்துவருகிறார்கள். அவர்களுடைய வருத்தத்தை மதிப்பதோடு, உரிய விளக்கத்தையும் கொடுப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இன்றைய கூட்டத்தில், நான் சொல்ல வந்த கருத்தை சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாமல் போனதாலேயே இந்தக் குழப்பம். எனவே, இந்தப் பதிவின் வாயிலாக நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறேன். 'அண்ணன்' திருமாவளவன் ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு...’ என்கிற முழக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் அவர்களின் கரங்களில் கிடைக்கும் வரை என் குரல்வளையிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த முழக்கத்தையும் என் குரலையும், ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது’ என நினைக்கும் தி.மு.க தலைமை கடுமையாக ஒடுக்கப் பார்க்கிறது. அவ்வகையிலேயே என் பேச்சும் இன்று அவர்களால் திரித்துவிடப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் நன்கு அறிவார். எனது கல்லூரிக் காலம் முதலே பெருமதிப்பும் மரியாதையும் கொண்டு நான் நேசிக்கும் தலைவர் அவர். ஆதவ் அர்ஜூனா ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி அந்த 20 பேர்... அதை உணர்ந்தவராகவே எப்போதும் நீங்கா அன்புடனும் என்னுடன் உரையாடுகிற உறவாடுகிற தலைவராக அண்ணன் திருமாவளவன் அவர்கள் இருந்துவருகிறார்கள். ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்’ என அண்ணன் திருமாவளவன் அவர்கள் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிவருகிறார். ஆனால் அந்தக் கட்சியிலுள்ள 20 நபர்கள், தி.மு.க-வின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் தி.மு.க-வினராகவே மாறிச் செயல்பட்டுவருகிறார்கள். அப்படி ‘முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்’ என்கிற பொருளில் நான் சொல்ல வந்த கருத்து, ‘வி.சி.க-வில் இருபது நபர்கள் மட்டுமே இருப்பதாக’ நான் பேசிவிட்டதாகப் பொருள் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எனது பேச்சில் சொல்ல வந்த கருத்து முழுமைபெறாமல் போனதால், அது முற்றிலும் தவறான விதத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மிகத் தவறான விதத்தில் எனது பேச்சும் கருத்தும் தி.மு.க சக்திகளால் திரித்துப் பரப்பப்பட்டு வருகிறது. வேங்கைவயல் Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன? வேங்கைவயல் விவகாரத்தை மறக்கமாட்டார்கள் தி.மு.க-வின் இந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, அடிமட்ட வி.சி.க தொண்டர்கள் நன்கு அறிவார்கள். வி.சி.க-வின் கொடிக்கம்பங்களைக்கூட சுதந்திரமான முறையில் நட முடியாத அளவிற்கு, ஆளும் அதிகார மையம் செய்யும் அடக்குமுறையை ஒடுக்குமுறையை அனைவருமே அறிவார்கள். அப்படி தம் உரிமைகளுக்காக நின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி அநியாய வழக்குகளை இந்த அரசு பதிவுசெய்ததை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட; ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே வழக்குப்பதிவு செய்த வஞ்சகத்தை, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள். தம்மைத் தேர்ந்தெடுத்த எளிய மக்களுக்கு இன்றைய அதிகார ஆளும் வர்க்கம் கொடுத்த ‘ஒடுக்குமுறை’ பரிசை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். வாக்கு அரசியலை மட்டுமே மனதில் கொண்டு, இந்த எளிய மக்களை ஆளும் தி.மு.க அதிகார வர்க்கம் சுரண்டுகிறது. தனது வாக்குத் தேவைக்காக மட்டும் வி.சி.க-வின் தோழர்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சி அரசியலையே எப்போதும் தி.மு.க செய்துவந்திருக்கிறது; வருகிறது. அதை மிக அருகிலிருந்து பார்த்து நன்கு அறிந்தவன் நான். அதனாலேயே, வி.சி.க-வுக்குள், தி.மு.க-வின் குரலாகவே ஒலித்துவரும் 20 நபர்கள் குறித்து நான் குறிப்பிட்டுப் பேசினேன். அறிந்த உண்மையைப் பேசினேன். அந்த 20 நபர்கள் கொடுக்கிற தவறான தகவல்களை வைத்தே எங்கள் கட்சி மீதான விமர்சனங்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியோ, நாங்களோ எவ்வித அதிகாரத்திலும் இதுவரை இருந்தது இல்லை. திருமாவளவன் எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்! - அமைச்சர் ரகுபதி விளக்கம் அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்... அந்த மாற்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரமும் நிலைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, இந்த அரசியல் பயணத்தில் களமாடி வருகிறோம். அந்த உண்மை ஒருநாள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குத் தெரியவரும். வி.சி.க இயக்கத்தில் தி.மு.க-வின் குரலாகச் செயல்பட்டு வரும் அந்த 20 நபர்கள் குறித்த உண்மை முகமும் ஒருநாள் உலகிற்குத் தெரியவரும். ஏன்? இப்போது அண்ணனுடன் பயணிக்கும் பலருக்கும் அந்த நபர்களைக் குறித்த உண்மைகள் தெரியுமே! நான் எனது அரசியல் பயணத்தை எந்தக் களத்திலிருந்து எந்த நோக்கத்திற்காகத் துவங்கினேனோ, அந்த நோக்கத்திலிருந்து இதுவரை நான் தடம் மாறவில்லை. ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம்’ என்கிற எனது குரல், அவர்கள் அதிகாரத்தை அடையும் வரை என்னிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நான் எப்போதும் அன்பும், நேசமும் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கு மிக அன்போடு தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். எனது கருத்து, தவறான வகையில் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க செய்து வருகிற அந்தத் திரிப்பு அரசியலுக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த விளக்கப் பதிவு. ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு’ என்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், எப்போதும் எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு... இன்று நடந்த த.வெ.க செயல்வீர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்ததை என்னிடம்… — Aadhav Arjuna (@AadhavArjuna) January 25, 2026

விகடன் 26 Jan 2026 8:18 am

'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!'விசிகவினருக்கு ஆதவ் விளக்கம்

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விடுதலைச் சிறுத்தை கட்சிகள் குறித்து பேசியிருந்தது, விசிகவினர் இடையே அதிருப்தியைக் கிளப்பியிருந்தது. தவெக செயல்வீரர்கள் கூட்டம் OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன? அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள பதிவு... எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு... இன்று நடந்த த.வெ.க செயல்வீரர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்தத்தை என்னிடம் பதிவுசெய்துவருகிறார்கள். அவர்களுடைய வருத்தத்தை மதிப்பதோடு, உரிய விளக்கத்தையும் கொடுப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இன்றைய கூட்டத்தில், நான் சொல்ல வந்த கருத்தை சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாமல் போனதாலேயே இந்தக் குழப்பம். எனவே, இந்தப் பதிவின் வாயிலாக நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறேன். 'அண்ணன்' திருமாவளவன் ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு...’ என்கிற முழக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் அவர்களின் கரங்களில் கிடைக்கும் வரை என் குரல்வளையிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த முழக்கத்தையும் என் குரலையும், ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது’ என நினைக்கும் தி.மு.க தலைமை கடுமையாக ஒடுக்கப் பார்க்கிறது. அவ்வகையிலேயே என் பேச்சும் இன்று அவர்களால் திரித்துவிடப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் நன்கு அறிவார். எனது கல்லூரிக் காலம் முதலே பெருமதிப்பும் மரியாதையும் கொண்டு நான் நேசிக்கும் தலைவர் அவர். ஆதவ் அர்ஜூனா ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி அந்த 20 பேர்... அதை உணர்ந்தவராகவே எப்போதும் நீங்கா அன்புடனும் என்னுடன் உரையாடுகிற உறவாடுகிற தலைவராக அண்ணன் திருமாவளவன் அவர்கள் இருந்துவருகிறார்கள். ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்’ என அண்ணன் திருமாவளவன் அவர்கள் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிவருகிறார். ஆனால் அந்தக் கட்சியிலுள்ள 20 நபர்கள், தி.மு.க-வின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் தி.மு.க-வினராகவே மாறிச் செயல்பட்டுவருகிறார்கள். அப்படி ‘முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்’ என்கிற பொருளில் நான் சொல்ல வந்த கருத்து, ‘வி.சி.க-வில் இருபது நபர்கள் மட்டுமே இருப்பதாக’ நான் பேசிவிட்டதாகப் பொருள் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எனது பேச்சில் சொல்ல வந்த கருத்து முழுமைபெறாமல் போனதால், அது முற்றிலும் தவறான விதத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மிகத் தவறான விதத்தில் எனது பேச்சும் கருத்தும் தி.மு.க சக்திகளால் திரித்துப் பரப்பப்பட்டு வருகிறது. வேங்கைவயல் Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன? வேங்கைவயல் விவகாரத்தை மறக்கமாட்டார்கள் தி.மு.க-வின் இந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, அடிமட்ட வி.சி.க தொண்டர்கள் நன்கு அறிவார்கள். வி.சி.க-வின் கொடிக்கம்பங்களைக்கூட சுதந்திரமான முறையில் நட முடியாத அளவிற்கு, ஆளும் அதிகார மையம் செய்யும் அடக்குமுறையை ஒடுக்குமுறையை அனைவருமே அறிவார்கள். அப்படி தம் உரிமைகளுக்காக நின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி அநியாய வழக்குகளை இந்த அரசு பதிவுசெய்ததை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட; ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே வழக்குப்பதிவு செய்த வஞ்சகத்தை, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள். தம்மைத் தேர்ந்தெடுத்த எளிய மக்களுக்கு இன்றைய அதிகார ஆளும் வர்க்கம் கொடுத்த ‘ஒடுக்குமுறை’ பரிசை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். வாக்கு அரசியலை மட்டுமே மனதில் கொண்டு, இந்த எளிய மக்களை ஆளும் தி.மு.க அதிகார வர்க்கம் சுரண்டுகிறது. தனது வாக்குத் தேவைக்காக மட்டும் வி.சி.க-வின் தோழர்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சி அரசியலையே எப்போதும் தி.மு.க செய்துவந்திருக்கிறது; வருகிறது. அதை மிக அருகிலிருந்து பார்த்து நன்கு அறிந்தவன் நான். அதனாலேயே, வி.சி.க-வுக்குள், தி.மு.க-வின் குரலாகவே ஒலித்துவரும் 20 நபர்கள் குறித்து நான் குறிப்பிட்டுப் பேசினேன். அறிந்த உண்மையைப் பேசினேன். அந்த 20 நபர்கள் கொடுக்கிற தவறான தகவல்களை வைத்தே எங்கள் கட்சி மீதான விமர்சனங்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியோ, நாங்களோ எவ்வித அதிகாரத்திலும் இதுவரை இருந்தது இல்லை. திருமாவளவன் எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்! - அமைச்சர் ரகுபதி விளக்கம் அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்... அந்த மாற்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரமும் நிலைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, இந்த அரசியல் பயணத்தில் களமாடி வருகிறோம். அந்த உண்மை ஒருநாள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குத் தெரியவரும். வி.சி.க இயக்கத்தில் தி.மு.க-வின் குரலாகச் செயல்பட்டு வரும் அந்த 20 நபர்கள் குறித்த உண்மை முகமும் ஒருநாள் உலகிற்குத் தெரியவரும். ஏன்? இப்போது அண்ணனுடன் பயணிக்கும் பலருக்கும் அந்த நபர்களைக் குறித்த உண்மைகள் தெரியுமே! நான் எனது அரசியல் பயணத்தை எந்தக் களத்திலிருந்து எந்த நோக்கத்திற்காகத் துவங்கினேனோ, அந்த நோக்கத்திலிருந்து இதுவரை நான் தடம் மாறவில்லை. ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம்’ என்கிற எனது குரல், அவர்கள் அதிகாரத்தை அடையும் வரை என்னிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நான் எப்போதும் அன்பும், நேசமும் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கு மிக அன்போடு தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். எனது கருத்து, தவறான வகையில் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க செய்து வருகிற அந்தத் திரிப்பு அரசியலுக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த விளக்கப் பதிவு. ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு’ என்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், எப்போதும் எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு... இன்று நடந்த த.வெ.க செயல்வீர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்ததை என்னிடம்… — Aadhav Arjuna (@AadhavArjuna) January 25, 2026

விகடன் 26 Jan 2026 8:18 am

திடீரென வந்த கும்பல்: முதல் மாடியிலிருந்து குதித்து தப்பிய ஜோடி! - உ.பி-யில் தொடரும் அவலம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் இரண்டு மாடி பீசா உணவகம் அமைந்திருக்கிறது. இந்த உணவகத்துக்கு ஒரு தம்பதியினர் வந்துள்ளனர். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த ஒரு வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர், அந்தத் தம்பதியினரைச் சூழ்ந்து கொண்டு அவர்கள் யார், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தம்பதியினரின் அனுமதியின்றி அவர்களைத் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளனர். In UP's Shahjahanpur, a couple jumped from the first floor of an eatery after men from right wing group stormed the premises and began recording video and misbehaving with the couple. The woman sustained grevious injuries due to the fall. pic.twitter.com/Ryrimhyguy — Piyush Rai (@Benarasiyaa) January 25, 2026 இதனால் பதற்றமடைந்த அந்த இருவரும், அந்தச் சூழலை தவிர்க்கவும், அவர்களிடமிருந்து விடுபடவும் முயன்றனர். ஆனால், அதற்கான சூழல் அங்கே இல்லை என்பதால், அச்சம் மிகுதியில், அந்த உணவகத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் கீழே விழுந்த பெண்ணுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வருகிறது. மேலும், குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப் பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில், கடந்த ஜனவரி 13-ம் தேதி இரு மதத்தைச் சேர்ந்த தம்பதியின், சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. In UP's Shahjahanpur, a wedding reception of an interfaith couple was cancelled after right-wing group held protest demanding the cancellation of the event. Family claimed the police requested them to not go ahead with the function. pic.twitter.com/NaEzpXoZtA — Piyush Rai (@Benarasiyaa) January 15, 2026 அப்போதும் இதுபோன்ற சில வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஒரு கும்பல் மண்டபத்திற்குள் புகுந்தது. அவர்கள் இந்தத் திருமணத்தை 'லவ் ஜிகாத்' என்று குற்றம் சாட்டி கோஷமிட்டனர். திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களிடம் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த குண்டர்களின் அத்துமீறிய, அநாகரீக செயலால் அந்த வரவேற்பு நிகழ்ச்சி இடைநிறுத்தம் செய்யப்பட்டது. கடந்த மாத இறுதியில் ஹோட்டலில் நர்சிங் மாணவியின் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் கலந்துகொண்டனர். அப்போது ``லவ் ஜிகாத்’’ நடப்பதாக கூறி ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்த `பஜ்ரங் தள்’ அமைப்பினர், இஸ்லாமிய இளைஞர்களைத் தாக்கினர். இந்த விவகாரமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து பேசிய அந்த மாணவி, ``பிறந்தநாளையே சிதைத்துவிட்டார்கள். என் நண்பர்கள் அனைவரையும் அழைத்தேன். அதில் ஏராளமானோர் இந்துக்கள்; இருவர் மட்டுமே இஸ்லாமியர்கள். லவ் ஜிகாத் இல்லை. வலதுசாரி அமைப்பினர் என் வீடியோக்களை வெட்டி, ஒட்டி பரப்புகின்றனர் எனக்கூறி வேதனை தெரிவித்திருந்தார். புல்டோசர், கன்வர் யாத்திரை, அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றி அசைவ தடை... உ.பி-யில் வளரும் மத அரசியல்!

விகடன் 26 Jan 2026 7:13 am

அட்டைப்படம்...

அட்டைப்படம்

விகடன் 26 Jan 2026 5:18 am

இந்தியாவின் உயரிய விருது: தமிழ்நாட்டுக்கு 5 'பத்ம'விருதுகள்; யார் யாருக்கு விருது?

குடியரசு தினம் நாளைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இன்று, 2026-ம் ஆண்டிற்கான உயரிய விருதான பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சமூக சேவை, கலை, கலாச்சாரம், கல்வி, பொது விவகாரங்கள் மற்றும் பிற துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மொத்தம் 45 சாதனையாளர்கள் இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நேரில் கௌரவிக்கப்படுவார்கள். புண்ணியமூர்த்தி நடேசன் - ஓதுவார் சுவாமிநாதன் - ஆர். கிருஷ்ணன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் உலகிலேயே மிகப்பெரிய இலவச நூலகத்தை நிறுவிய முன்னாள் பேருந்து நடத்துநர், ஆசியாவின் முதல் தாய்ப்பால் வங்கியைத் தொடங்கிய குழந்தை நல மருத்துவர், அரிய பாரம்பரிய இசைக்கருவியைப் பாதுகாத்து வரும் 90 வயது பழங்குடியின இசைக்கலைஞர் என 45 பேர் இந்த ஆண்டு 'அறியப்படாத நாயகர்கள்' பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம் இசைத்துறையில், குறிப்பாக மிருதங்கக் கலையில் ஆற்றிய சாதனைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இசை மற்றும் பக்திப் பாடல்களைத் தொடர்ந்து வளர்த்து வரும் திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு ஆன்மீகம் மற்றும் கலைத்துறையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர் - பக்தவச்சலம் சிற்பக் கலையில், குறிப்பாக வெண்கலச் சிற்பங்களை வடித்தெடுத்தலில் சேலம் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டரின் பங்களிப்புக்காகவும், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக் கலையைத் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வரும் நீலகிரி ஆர். கிருஷ்ணனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இது தவிர 20 மொழிகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் அரிய கையெழுத்துப் பிரதிகளுடன் மிகப்பெரும் தனியார் 'புஸ்தக மானே' எனும் நூலகத்தை உருவாக்கிய கர்நாடக மாநில அங்கே கவுடாவுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாய்ப்பால் வங்கித் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்திய மும்பை குழந்தை நல மருத்துவர் அர்மிடா பெர்னாண்டஸ் உள்ளிட்ட 45 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலதாமதக் கலைமாமணி விருது! - ஸ்பான்சர்டு பை அமலாக்கத்துறை

விகடன் 25 Jan 2026 7:13 pm

தஞ்சை: ஒன்றரை லட்சம் மகளிர்... நேரு தலைமையில் பரபரக்கும் மாநாடு ஏற்பாடுகள்!

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொள்ள இருப்பதாக சொல்கிறார்கள். டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மகளிர் மாநாடு ஏற்பாட்டில் மகளிர் அணி நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். ஒரு வாக்கு சாவடிக்கு 10 முதல் 15 பெண்கள் வரை அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான வாகன வசதி கட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தலா ஒரு கருப்பு சிவப்பு சேலை, ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ.200 கொடுத்ததாக சொல்கிறார்கள். மாநாட்டு திடலில் அமர்ந்ததும் பெண்களுக்கு பை ஒன்று தருகிறார்கள். இதில் ஹாட்பாக்ஸ், ஸ்வீட், காரம் ஸ்நாக்ஸ் , தண்ணீர் பாட்டில் போன்றவை இருக்கும் என்கிறார்கள். குடியரசு தின விழாவை முடித்து விட்டு சென்னையில் இருந்து தஞ்சாவூர் வருகிறார் முதல்வர் ஸ்டாலின் சுமார் 4 மணியளவில் மேடையேறுவார் என்கிறார்கள். டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு ஸ்டாலின் வரும் போது 50 பெண்கள் தாங்களே புல்லட், 200 பெண்கள் ஸ்கூட்டி ஓட்டியபடி அணிவகுத்து முதல்வர் ஸ்டாலினை அழைத்து வருகின்றனர். ஸ்டாலின் மேடை ஏறும் போது பெண்கள் கோலாட்டம் அடித்து ஆடியபடி வரவேற்பு கொடுக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் ஒன்றரை லட்சம் பெண்கள் மற்றும் குடும்பத்தினரை வாக்குகளாக மாற்ற வேண்டும் என திமுக தலைமை திடமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் சொல்கிறார்கள். இதற்காக பல்லடத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டை விட வெற்றிகரமாக அமையும் வகையில் கூடுதல் சிரத்தை எடுத்து அனைத்து நிர்வாகிகளும் வேலை செய்கின்றனர்.

விகடன் 25 Jan 2026 4:47 pm

தஞ்சை: ஒன்றரை லட்சம் மகளிர்... நேரு தலைமையில் பரபரக்கும் மாநாடு ஏற்பாடுகள்!

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொள்ள இருப்பதாக சொல்கிறார்கள். டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மகளிர் மாநாடு ஏற்பாட்டில் மகளிர் அணி நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். ஒரு வாக்கு சாவடிக்கு 10 முதல் 15 பெண்கள் வரை அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான வாகன வசதி கட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தலா ஒரு கருப்பு சிவப்பு சேலை, ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ.200 கொடுத்ததாக சொல்கிறார்கள். மாநாட்டு திடலில் அமர்ந்ததும் பெண்களுக்கு பை ஒன்று தருகிறார்கள். இதில் ஹாட்பாக்ஸ், ஸ்வீட், காரம் ஸ்நாக்ஸ் , தண்ணீர் பாட்டில் போன்றவை இருக்கும் என்கிறார்கள். குடியரசு தின விழாவை முடித்து விட்டு சென்னையில் இருந்து தஞ்சாவூர் வருகிறார் முதல்வர் ஸ்டாலின் சுமார் 4 மணியளவில் மேடையேறுவார் என்கிறார்கள். டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு ஸ்டாலின் வரும் போது 50 பெண்கள் தாங்களே புல்லட், 200 பெண்கள் ஸ்கூட்டி ஓட்டியபடி அணிவகுத்து முதல்வர் ஸ்டாலினை அழைத்து வருகின்றனர். ஸ்டாலின் மேடை ஏறும் போது பெண்கள் கோலாட்டம் அடித்து ஆடியபடி வரவேற்பு கொடுக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் ஒன்றரை லட்சம் பெண்கள் மற்றும் குடும்பத்தினரை வாக்குகளாக மாற்ற வேண்டும் என திமுக தலைமை திடமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் சொல்கிறார்கள். இதற்காக பல்லடத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டை விட வெற்றிகரமாக அமையும் வகையில் கூடுதல் சிரத்தை எடுத்து அனைத்து நிர்வாகிகளும் வேலை செய்கின்றனர்.

விகடன் 25 Jan 2026 4:47 pm

மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை? - கேள்வி எழுப்பும் தமிழிசை

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து - நடராசன் நினைவிடத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு நிற உடையில் வருகை தந்தார். அங்கு தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 'மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்' என முழக்கமிட்டார். முதல்வர் ஸ்டாலின்: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், ``வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்! 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன். எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன். மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் நீங்கள் அவர்களை சுட்டுக்கொன்ற காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு இந்த வணக்கத்தை செலுத்தினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் ஆன்மாக்கள் தான் ஏற்றுக் கொள்ளுமா? தமிழிசை சௌந்தரராஜன் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை கூப்பிடுவீர்களே இந்த நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களை கூப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளிலேயே ஹிந்தி கற்பிக்கப்படுகிறதே அவை எல்லாம் தமிழ்நாட்டில் இல்லையா? இத்தனை முரண்பாடுகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளுமா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே? இனியும் மொழியை வைத்து நீங்கள் போடும் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்? - எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Jan 2026 3:37 pm

மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை? - கேள்வி எழுப்பும் தமிழிசை

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து - நடராசன் நினைவிடத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு நிற உடையில் வருகை தந்தார். அங்கு தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 'மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்' என முழக்கமிட்டார். முதல்வர் ஸ்டாலின்: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், ``வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்! 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன். எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன். மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் நீங்கள் அவர்களை சுட்டுக்கொன்ற காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு இந்த வணக்கத்தை செலுத்தினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் ஆன்மாக்கள் தான் ஏற்றுக் கொள்ளுமா? தமிழிசை சௌந்தரராஜன் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை கூப்பிடுவீர்களே இந்த நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களை கூப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளிலேயே ஹிந்தி கற்பிக்கப்படுகிறதே அவை எல்லாம் தமிழ்நாட்டில் இல்லையா? இத்தனை முரண்பாடுகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளுமா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே? இனியும் மொழியை வைத்து நீங்கள் போடும் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்? - எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Jan 2026 3:37 pm

கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026

கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026 – பெருந்திரளான பங்கேற்புடன் சிறப்பாக The post கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026 appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 25 Jan 2026 2:42 pm

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நாளை தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடக்கிறது. இதில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைகின்றனர். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. தன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் திமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவினர் வைத்திலிங்கம் மூவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தஞ்சாவூரில் நாளை டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. குடியரசு தினவிழாவை முடித்த பின்னர் தஞ்சாவூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து கிளம்பியதும் நேராக மேடைக்கு வருகிறார் ஸ்டாலின். முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாம். இணைப்பு விழா நடைபெறும் இடம் தனக்கான தனித்துவத்தை காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்தார். தன் விருப்பத்தை செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே ஓகே வாங்கி கொடுத்தாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பத்தாயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கிறார்கள். ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விகடன் 25 Jan 2026 2:31 pm

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நாளை தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடக்கிறது. இதில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைகின்றனர். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. தன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் திமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவினர் வைத்திலிங்கம் மூவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தஞ்சாவூரில் நாளை டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. குடியரசு தினவிழாவை முடித்த பின்னர் தஞ்சாவூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து கிளம்பியதும் நேராக மேடைக்கு வருகிறார் ஸ்டாலின். முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாம். இணைப்பு விழா நடைபெறும் இடம் தனக்கான தனித்துவத்தை காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்தார். தன் விருப்பத்தை செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே ஓகே வாங்கி கொடுத்தாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பத்தாயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கிறார்கள். ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விகடன் 25 Jan 2026 2:31 pm

சுயசார்பு கனடாவை உருவாக்குவோம் - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதமர்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகள் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. ட்ரம்ப் அந்தவகையில் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் வேளாண் பொருட்கள், மின்சார வாகனங்கள் தொடர்பாக சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்நிலையில், சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா அமல்படுத்தினால் கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு பிறகு கனடா பிரதமர் மார்க் கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மார்க் கார்னி அதில் பேசியிருக்கும் அவர், வெளிநாட்டு அச்சுறுத்தலைச் சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம். கனடாவைக் கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுபடுத்த முடியாது. எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். சுயசார்பு கனடாவை உருவாக்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 2:05 pm

'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!

தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை. விஜய் அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்தின் மிக முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன். எதாவது அழுத்தம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? அழுத்தத்துக்கெல்லாம் அடங்கி போற ஆளா நாம? அழுத்தம் மக்கள் மீதுதான் இருக்கிறது. தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் பாஜகவிடம் நேரடியாக சரண்டர் ஆகிவிட்டார்கள். திமுக மறைமுகமாக சரண்டர் ஆகியிருக்கிறது. அவர்களின் வேடம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக கலர் கலர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார் என்கிற அழுத்தத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்கள் நம் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். விஜய் கூட்டணியைப் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யை நம்பி யார் வருவார் என நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஆனால், மக்கள் நம்மை நம்புகிறார்கள். அதனால்தான் கரியரின் உச்சம் என்கிற இடத்தில் என்னை தூக்கி வைத்திருக்கிறார்கள். என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களாக உழைக்க வேண்டும். ஏற்கனவே ஆண்டவர்களை போலவும் ஆள்பவர்களை போலவும் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். தீய சக்தியும் வேண்டாம். ஊழல் சக்தியும் வேண்டாம். இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் சக்தியும் நமக்குதான் இருக்கிறது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அண்டி பிழைக்கவோ அடிமையாகவோ மாறும் எண்ணமே இங்கில்லை. Vijay யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்யக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள். அண்ணா ஆரம்பித்த கட்சியும் அண்ணா பெயர் கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அந்த இரண்டு கட்சிக்கும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம். நாம் அதை அனுமதிக்கக் கூடாது. நடக்கப்போறது ஜனநாயகப் போர். அதை லீட் செய்யப்போகும் தளபதிகள் நீங்கள்தான். உங்களுக்கு விஜய் பிடிக்கும்னா அதை உங்க உழைப்புல காட்டுங்க. நாம அறிவிக்கப்போற வேட்பாளர்களுக்கு உங்களோட முழு ஆதரவையும் கொடுங்க. நட்பு சக்தி இருந்தாலும் இல்லைன்னாலும் நம்மால ஜெயிக்க முடியும்.' என்றார்.

விகடன் 25 Jan 2026 1:52 pm

'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!

தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை. விஜய் அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்தின் மிக முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன். எதாவது அழுத்தம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? அழுத்தத்துக்கெல்லாம் அடங்கி போற ஆளா நாம? அழுத்தம் மக்கள் மீதுதான் இருக்கிறது. தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் பாஜகவிடம் நேரடியாக சரண்டர் ஆகிவிட்டார்கள். திமுக மறைமுகமாக சரண்டர் ஆகியிருக்கிறது. அவர்களின் வேடம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக கலர் கலர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார் என்கிற அழுத்தத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்கள் நம் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். விஜய் கூட்டணியைப் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யை நம்பி யார் வருவார் என நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஆனால், மக்கள் நம்மை நம்புகிறார்கள். அதனால்தான் கரியரின் உச்சம் என்கிற இடத்தில் என்னை தூக்கி வைத்திருக்கிறார்கள். என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களாக உழைக்க வேண்டும். ஏற்கனவே ஆண்டவர்களை போலவும் ஆள்பவர்களை போலவும் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். தீய சக்தியும் வேண்டாம். ஊழல் சக்தியும் வேண்டாம். இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் சக்தியும் நமக்குதான் இருக்கிறது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அண்டி பிழைக்கவோ அடிமையாகவோ மாறும் எண்ணமே இங்கில்லை. Vijay யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்யக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள். அண்ணா ஆரம்பித்த கட்சியும் அண்ணா பெயர் கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அந்த இரண்டு கட்சிக்கும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம். நாம் அதை அனுமதிக்கக் கூடாது. நடக்கப்போறது ஜனநாயகப் போர். அதை லீட் செய்யப்போகும் தளபதிகள் நீங்கள்தான். உங்களுக்கு விஜய் பிடிக்கும்னா அதை உங்க உழைப்புல காட்டுங்க. நாம அறிவிக்கப்போற வேட்பாளர்களுக்கு உங்களோட முழு ஆதரவையும் கொடுங்க. நட்பு சக்தி இருந்தாலும் இல்லைன்னாலும் நம்மால ஜெயிக்க முடியும்.' என்றார்.

விகடன் 25 Jan 2026 1:52 pm

'ஆம் ஆத்மி மாடல்; தவெகவுக்கு 2 கோடி ஓட்டு இருக்கு! - தவெகவின் 'பலே'கணக்கு!

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசியவை. நிர்மல் குமார் அவர் பேசியதாவது, '1977 யைப் போல 2026 லும் ஆட்சிமாற்றம் ஏற்படும். சமீபத்தில் திமுகவுக்காக வேலை செய்பவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், 'உங்களுக்கு (தவெக) எவ்வளவு வாக்கு கிடைக்கும்?' என்றார். 'நீங்களே சொல்லுங்கள். எங்களுக்கு எவ்வளவு வாக்குகள் இருக்கிறது?' என்றேன். அவர், 'வீட்டுக்கு ஒரு வாக்கு இருக்கிறது' என்றார். தமிழ்நாட்டில் 2.25 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளது. வீட்டுக்கு ஒரு ஓட்டு என 2 கோடி வாக்குகள் கிடைத்தாலும் நமக்கு 40% க்கும் மேல் வாக்கு கிடைத்துவிடும். கரூர் சம்பவத்தின் போது தலைவர் தவித்த தவிப்பை எங்களால் மறக்கவே முடியாது. ஒரு நல்லவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். இந்தியாவுக்கே முன்னுதாரணமான அரசாக 2026 இல் ஒரு அரசு அமையும்' என்றார். அருண்ராஜ் கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் பேசியதாவது, ''விசில் எப்போது அடிப்பார்கள். போட்டியில் எதாவது தவறு நடக்கையில்தான் விசில் அடிப்பார்கள். இந்த ஆட்சியில் ஊழல் செய்வது யார்? தவறு செய்வது யார்? இங்கே முதல்வர் ஸ்டாலினே தவறு செய்யத்தான் செய்கிறார்? உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு பொறுப்பு டிஜிபியை கூட அவர் நியமிக்கவில்லையே. தமிழகத்தில் கஞ்சாவே இல்லையென சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகிறார். எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்களும் தவெகவை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால் 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தி விடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் மனதை வென்று ஆட்சியைப் பிடித்தது. டெல்லி மக்களை விட தமிழக மக்களுக்கு அரசியல் அறிவு குறைவா? மக்கள் ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். நம்முடைய செயல்பாடுகளை அவர்களிடம் சரியாக எடுத்துச் சென்றால் வென்றுவிடலாம் என்றார்.

விகடன் 25 Jan 2026 1:26 pm

பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா? - திருமாவளவன் சொன்ன பதில் என்ன?

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் அணியை கூட்டணியில் கொண்டு வர திமுக முயற்சியில் இறங்கி இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் ராமதாஸ் அணி திமுக கூட்டணிக்குள் வந்தால், அதனை விசிக ஏற்குமா? என்ற கேள்வி எழுந்தது. ராமதாஸ் - ஸ்டாலின் ஏற்கெனவே `மதவாதக் கட்சியான பா.ஜ.க-வோடும், சாதியவாதக் கட்சியான பா.ம.க-வுடனும் எந்தவித ஒட்டும் இல்லை உறவும் இல்லை, அவர்களுடன் கூட்டணியும் இல்லை' என்று டிக்ளேர் செய்திருந்தார் திருமாவளவன். இந்நிலையில் இன்று( ஜன.25) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் இருக்கும் அணியில் இடம்பெறப் போவதில்லை என்பதை முடிவு செய்துவிட்டோம். அந்த இரு கட்சிகளும் சாதி மற்றும் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள். பாமகவின் ஓர் அணி மோடி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. திருமாவளவன் ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணிக்குள் இணைப்பது குறித்து திமுக தலைமை முடிவு செய்யும். பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் இன்றும் உறுதியாக இருக்கிறோம் என்று திருமாவளவன் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 1:21 pm

TVK : 'விசில் சின்னத்தை கொடுத்த அதிகாரியே விஜய் ரசிகர்தான்!' - 'அடேங்கப்பா'ஆதவ்!

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. அந்த நிகழ்வில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியவை. விஜய் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'நம்மை வெறும் ரசிகர் மன்றம் சார்ந்தவர்கள் என பொய்பிரசாரம் செய்வார்கள். நம்மிடம் ஒரு கட்டமைப்பு இருக்கிறது. 2300 ஒன்றிய செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கே கட்சியின் கட்டமைப்பு மீது சந்தேகம் இருந்தது. கடந்த நான்கு மாதங்களாக கடினமாக உழைத்து கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். டெல்லிக்கு சிபிஐ விசாரணைக்கு செல்கையில், அண்ணனோடு காரில் சென்றேன். அப்போது வண்டி சிக்னலில் நின்ற போது அங்கிருந்த பெண்கள் ஓடி வந்து அண்ணனை கண்டுகொண்டார்கள். திமுக வீட்டில் நம்முடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். எடப்பாடியின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டிலும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவுடன் ஒரு 20 பேர் மட்டும்தான் இங்கே இருக்கிறார்கள். விசிக மொத்தமும் தவெகவில்தான் இருக்கிறது. ஆதவ் திமுக என்பது திருட்டு திமுக. அவர்கள் நம்மைப் பார்த்து கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். நாங்கள் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராக வைத்திருக்கிறோம். அறிவாலயத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை எங்கே? திருமா அதை கேட்பாரா? உங்களையெல்லாம் அடியாட்களைப் போல திமுக பயன்படுத்துகிறது. மகனை துணை முதல்வர் ஆக்கியதுதான் முதல்வரின் சாதனை. எங்கே பாஜகவை எதிர்க்க வேண்டுமோ நாங்கள் எதிர்ப்போம். 2026 தேர்தல் திமுக வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல். செந்தில் பாலாஜியை 2 நிமிடம் பெரியாரை பற்றி பேசச் சொல்லுங்கள். இங்கேயே தூக்கு மாட்டிக் கொள்கிறேன். நம்மைப் பார்த்து மிரட்டப்படுகிறோம் என்கிறார்கள். மிரட்டுகிறவர்கள்தான் பயந்தவர்கள் என்று அர்த்தம். அமைதியாக இருப்பவர்கள்தான் தைரியமானவர்கள். எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கிய போது கூட்டணியை நம்பி உருவாக்கவில்லை. தாய்க்குலத்தை நம்பி உருவாக்கினார். அப்படித்தான் தலைவரும் கட்சி தொடங்கியிருக்கிறார். ஆதவ் டெல்லி சிபிஐ அலுவலகத்துக்குள் தலைவர் நுழைந்தவுடனேயே 10 பேர் செல்பி எடுக்க ஓடி வந்தார்கள். எல்லா இடத்திலும் அவரின் ஆட்கள் இருக்கிறார்கள். தலைவரை பிடித்த எதோ ஒரு அதிகாரி என்ன பிரச்னை ஆகினாலும் பரவாயில்லை என கையெழுத்து போட்டதால்தான் விசில் சின்னம் கிடைத்திருக்கிறது' என்றார்.

விகடன் 25 Jan 2026 1:18 pm

தமிழே உயிரே! |அரியணை ஏறியதா தமிழ்?|மொழிப்போரின் வீர வரலாறு – 5

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழே உயிரே! - பகுதி 5 தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவ தில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ? என்று பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது உணர்ச்சிமிகு வார்த்தைகளை நாமும் வழிமொழிகிறோம்.  தமிழுக்காக உயிரை நீத்தவர்களுக்கு என்றுமே மரணமில்லை. தமிழாகவே  அவர்கள் வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம் ஆட்சியையே மாற்றியது! தமிழகத்தில் நடைபெற்ற ‘மொழிப்போர்’, ஆட்சியையே புரட்டிப்போட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி என்ற அடையாளத்துடன் இந்தியா முழுவதும் வியாபித்திருந்த காங்கிரஸ் கட்சி மமதையோடு இருந்தது. அதனால்தான், இங்கு வந்து இந்தியைத் திணித்தது. இந்திக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போரை தமிழர்கள் நடத்தினார்கள். அந்தச் சூழலில்தான், தமிழகம் 1967-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் என்ற ஆலமத்தைச் சாய்ப்பதற்கு, மொழிப்போரில் ஈடுபட்ட வீரர்படை களமிறங்கியது. காமராஜர் மிகப்பெரிய தலைவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவான அவர், ‘நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்’ என்று கூறினார். ஆனால், என்ன நடந்தது? மொழிப்போரை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவரான மாணவர் பெ.சீனிவாசனிடம் விருதுநகரில் தோற்றுப்போனார் காமராஜர். காமாஜரே தோற்றுவிட்டார் என்றால், மற்ற காங்கிரஸாரின் கதி? ஸ்ரீபெரும்புதூரில் முதல்வர் பக்தவத்சலம் தோற்றார். மேலூரில் எளிமையின் சிகரமாக விளங்கிய அமைச்சர் கக்கன் தோல்வியடைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான கிருஷ்ணசாமி தோற்றுப்போனார். சி.சுப்பிரமணியம் தோற்றார். ஆர்.வெங்கட்ராமன் தோற்றார். விருத்தாசலத்தில் போட்டியிட்ட பூவராகவனைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் தோற்றுப்போனார்கள். கருணாநிதி - அண்ணா பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெற்றது. அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது என்றால், அதற்கு இந்தித் திணிப்பு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அண்ணா, தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு, இன்றுவரை காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த நிலைக்கு காரணமாக இருந்தவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த தியாகிகள். தங்களின் உயிருக்கு இணையாக நேசித்த தாய்மொழிக்காக உயிரையே தியாகம் செய்த அந்த தியாகிகளின் குடும்பங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக நேரில் சென்றேன். அப்போது நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகிய 12 தியாகிகளின் குடும்பங்களைப் பற்றிய நிலையை அறிந்துகொள்ளும்  வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.   தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த இரா.சண்முகத்தின் ஊரான விராலிமலைக்குச் சென்றேன். சண்முகத்தின் அண்ணன் இரா.மாணிக்கத்தைச் சந்தித்தேன். மொழிப்போரில் உயிரிந்தோரின் குடும்பங்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்கி, அதை நடத்திவருகிறார் இரா.மாணிக்கம். எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் மன்றத்தினர்! தன்னுடைய தம்பியைப் பற்றியும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது பற்றியும் விரிவாக என்னிடம் இரா.மாணிக்கம் பேசினார். ‘நாங்கள் மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். என் தம்பி சண்முகம் 11.08.1943-ல் பிறந்தார். 5-ம் வகுப்புவரை படித்தார். குடும்பச் சூழல் காரணமாக, நானும் தம்பியும் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தோம். திராவிட நாடு, குடியரசு, விடுதலை ஆகிய பத்திரிகைகள் இங்கு வரும். அவற்றை நாங்கள் தொடர்ந்து வாசிப்போம். நானும், தம்பியும் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தைத் தொடங்கி, அதை நடத்திவந்தோம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதிலிருந்து நானும் தம்பியும் அதில் கலந்துகொள்வோம். தம்பி சண்முகம் தலையை மொட்டையடித்து, இந்திக்கு கொள்ளி வைக்கும் போராட்டத்தை நடத்தினார். அதுவரை இந்திக்கு எதிராக ஐந்து பேர் தீக்குளித்து உயிர் துறந்திருந்தனர். எங்கள் ஊரில் கடையடைப்பு நடத்த என் தம்பி முடிவுசெய்தார். ஆனால், கடையடைப்பு நடத்த வியாபாரிகள் மறுத்துவிட்டனர். அந்த நேரத்தில், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், போராட்டத்தைக் கைவிடுமாறு அண்ணா கேட்டுக்கொண்டார். அதனால், என் தம்பிக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எனக்கு ஒரு கடிதம், அண்ணாவுக்கு ஒரு கடிதம், ஆசிரியர் மூர்த்திக்கு ஒரு கடிதம் என மூன்று கடிதங்களை எழுதிவைத்து, அவற்றை ஆசிரியர் மூர்த்தியிடம் கொடுத்திருக்கிறார். ஆசிரியர் மூர்த்தி தன் வீட்டில் போய் தனக்கான கடிதத்தைப் பிரித்து வாசித்திருக்கிறார். உடனே, பதறியடித்துக்கொண்டு போய் பார்த்தபோது, என் தம்பி விஷம் அருந்தி ஒரு மரத்தடியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை ஆசிரியர் மூர்த்தி மருத்துவமனையில் சேர்த்தார். அந்த நிலையில், ‘தமிழுக்காக மீண்டும் ஒருவன் உயிர் துறந்தான் என்று தெரிந்தால், தமிழகம் மீண்டும் போராடத் தொடங்கும்’ என்று தம்பி சண்முகம் கூறினார். அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தமிழுக்காக என் தம்பி உயிரையே கொடுத்தார்” என்று வேதனையுடன் சொல்லி முடித்தார் இரா.மாணிக்கம். மொழிப்போர் தியாகிகள் அமைப்பின் தலைவராக இரா.மாணிக்கம் இருப்பதால், மற்ற தியாகிகளின் உறவினர்களை விராலிமலைக்கு வரவழைத்திருந்தார். அவர்களுடனும் பேசினேன். அவர்களின் குடும்ப நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது. திருச்சியில் அடக்கம் செய்யப்பட்ட கீழப்பழுவூர் சின்னச்சாமியின் நினைவிடத்துக்குச் சென்றேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இரண்டாம்தர குடிமக்களா? சென்னை விருகம்பாக்கத்தில் தியாகி அரங்கநாதன் வீட்டுக்குச் சென்று, அவருடைய மகன் அமுதவாணனைச் சந்தித்தேன். தன் தந்தை எப்படி மொழிக்காக உயிரைத் தியாகம் செய்தார் என்பதை விரிவாக என்னிடம் கூறினார். இந்தித் திணிப்பை எரித்துப்பொசுக்கிய விருகம்பாக்கம் அரங்கநாதன்! “என்னுடைய அப்பா, அண்ணாவின் சொற்பொழிவுகள் எங்கு நடந்தாலும், அங்கு சென்றுவிடுவார். கட்டாய இந்தி காரணமாக தமிழக மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படுகிறார்கள் என்று அவர் மிகவும் ஆதங்கப்பட்டார். இது குறித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, 1965-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி, தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். அப்போது எனக்கு ஏழு வயது. என்னுடைய தம்பி ஆறு மாத கைக்குழந்தை. ’குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்று என் தாயிடம் சொல்லிவிட்டு உறங்கச் சென்ற தந்தை, அதிகாலையில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அப்போது, ‘இந்தி ஒழிக… தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டிருக்கிறார். என் தந்தை தீக்குளித்ததால் அதிர்ச்சியடைந்த என் தாயாருக்கு மனநலம் பாதித்துவிட்டது” என்றார். அந்தக் குடும்பத்தின் சூழலைப் பார்த்தபோது மிகுந்த வேதனையாக இருந்தது. எந்த பலனும் இல்லை! மொழிக்காக உயிரையே தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் பெரிய உதவிகள் எதுவுமில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. விராலிமலை சண்முகத்தின் அண்ணன் மாணிக்கம் நம்மிடம் வேதனையுடன் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். தமிழ்நாடு அரசு |TNPSC வேலைவாய்ப்பு “மொழிப்போர் தியாகிகளுக்கு மாதம் நூறு ரூபாய் உதவித்தொகை அளிப்பதாக 1987-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், அது எங்களுக்கு கிடைக்கவில்லை. மொழிப்போரில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்தவர்களுக்கு மட்டும்தான் உதவித்தொகையைத் தருவோம் என்று அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவிப்பு வந்ததைக் கேள்விப்பட்டு, அதிகாரிகளிடம் போய்க் கேட்டோம். அதற்கு, மொழிக்காக உயிர்த்தியாம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சொல்லிவிட்டார்கள். என்ன கொடுமை என்றால், மொழிக்காக உயிர்நீத்த 12 பேரில், மூன்று பேர் மட்டுமே திருமணம் ஆனவர்கள். அந்த மூன்று பேரின் வாரிசுகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னுரிமை. மற்ற ஒன்பது பேர் திருமணம் ஆகாதவர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடையாதாம். எனவே, இவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம்’ என்று சொன்னார். மொழியுணர்வைப் புரிந்துகொள்ளாத காங்கிரஸ் கட்சி, தன் ஆட்சியையே விலையாகக் கொடுத்தது. தன் தவறான செயலுக்கான தண்டனையை இன்றுவரை காங்கிரஸ் அனுபவித்துவிருகிறது.  மொழி உணர்வையும், இன உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் ஒருபோதும் அடக்கிவைக்க முடியாது. அப்படி அடக்கினால், அது பெருநெருப்பாக வெடித்துக்கிளம்பும் என்பதற்கு முத்துக்குமார், செங்கொடி உயிரிழப்புகள் சமீபத்திய சான்று. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரியணை ஏறியதா தமிழ்? ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாடு. அதை அடக்க முயன்றபோது,  மெரினா கடற்கரையில் தொடங்கி தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக வெடித்த போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே மாற்றியெழுத வைத்தது. இதை ஆட்சியாளர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. மொழிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் பெயர்களை அரசுக் கட்டடத்துக்கும், பாலத்துக்கும் பெயர் சூட்டி தமிழக அரசு கவுரவித்திருக்கிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த தியாகிகளின் குடும்பங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆட்சியாளர்கள் அக்கறையோடு பார்க்க வேண்டும். நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் குடும்பம் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறது? இதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மூலக்கொத்தளத்தில் நடராசன், தாளமுத்து நினைவிடங்களை ரூ.34 லட்சம் செலவில் புதுப்பித்திருக்கிறது. அதை முதல்வர் ஸ்டாலின் சென்று திறந்துவைத்து தியாகிகளுக்கு மரியாதை செய்திருக்கிறார். வரவேற்கத்தக்க நடவடிக்கை. அதைப்போல, அந்த தியாகிகளின் குடும்பங்களின் நிலையையும் அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்பதே தமிழ்ச்சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழ்நாடு மேலும், தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர், திராவிடம் பேசுபவர்களை அரியணையில் ஏற்றியது. ஆனால், உரிய முறையில் ஆட்சி மொழியாக அரியணையில் தமிழ் ஏறியிருக்கிறதா? என்து மிகப்பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக, தமிழுக்காகப் போராடியவர்களின் நெஞ்சில் நீங்காத கேள்வியாக இன்னமும் இது இருக்கிறது. (நிறைவுற்றது) ஜனவரி 25- இன்று மொழிப்பேர் தியாகிகள் தினம்

விகடன் 25 Jan 2026 12:27 pm

'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கடைசி டிசம்பர் விழாவில் பேசிய விஜய். அதன்பிறகு கிட்டத்தட்ட 38 நாட்களுக்கு விஜய் மௌனமாக இருந்தார். விஜய் இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கியமான கட்டத்தில் நடக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் NDA கூட்டணியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் பேசியதாவது, 'இங்கே எல்லார் கையிலும் விசில் வைத்திருக்கிறீர்கள். நாளை காவலர்கள், நடத்துனர்கள் கூட விசில் வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள். இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு கூட்டம். தலைக்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டி வந்திருந்தார்கள். அவர்கள் திமுகவை வீழ்த்துவோம் என்றார்கள். ஒருவரும் கைத்தட்டவில்லை. திமுகவை வீழ்த்தும் சக்தி நம் தலைவருக்குதான் உண்டு. 10 கட்சி கூட்டணி 15 கூட்டணியையெல்லாம் முறியடிக்கும் சக்தி தலைவருக்குதான் உண்டு. செங்கோட்டையன் இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத புகழ் நம் தலைவருக்கு இருக்கிறது. 1000 கோடி வருவாயை வேண்டாமென்று கூறிவிட்டு அவர் மக்களுக்காக வந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஓட்டு இருக்கிறது. திமுகக்காரர்களின் வீட்டு ஓட்டு கூட நமக்குதான் இருக்கிறது.அந்த இரு கட்சிகளிலும் இருப்பவர்கள் தலைவர்களே அல்ல. நம்முடைய தலைவரை முதல்வராக்க வேண்டுமென மக்கள் சூளுரைத்திருக்கின்றனர். எந்த சக்தியாலும் நம்மை இனி தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய சின்னம் விசில் சின்னம். தூங்குகிறவர்களின் காதுகளில் விசில் அடித்து விடாதீர்கள். முதியவர்களின் முன்னால் விசில் அடித்துவிடாதீர்கள். வாக்கு கிடைக்காமல் போய்விடும்' என்றார்.

விகடன் 25 Jan 2026 11:51 am

'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கடைசி டிசம்பர் விழாவில் பேசிய விஜய். அதன்பிறகு கிட்டத்தட்ட 38 நாட்களுக்கு விஜய் மௌனமாக இருந்தார். விஜய் இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கியமான கட்டத்தில் நடக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் NDA கூட்டணியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் பேசியதாவது, 'இங்கே எல்லார் கையிலும் விசில் வைத்திருக்கிறீர்கள். நாளை காவலர்கள், நடத்துனர்கள் கூட விசில் வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள். இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு கூட்டம். தலைக்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டி வந்திருந்தார்கள். அவர்கள் திமுகவை வீழ்த்துவோம் என்றார்கள். ஒருவரும் கைத்தட்டவில்லை. திமுகவை வீழ்த்தும் சக்தி நம் தலைவருக்குதான் உண்டு. 10 கட்சி கூட்டணி 15 கூட்டணியையெல்லாம் முறியடிக்கும் சக்தி தலைவருக்குதான் உண்டு. செங்கோட்டையன் இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத புகழ் நம் தலைவருக்கு இருக்கிறது. 1000 கோடி வருவாயை வேண்டாமென்று கூறிவிட்டு அவர் மக்களுக்காக வந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஓட்டு இருக்கிறது. திமுகக்காரர்களின் வீட்டு ஓட்டு கூட நமக்குதான் இருக்கிறது.அந்த இரு கட்சிகளிலும் இருப்பவர்கள் தலைவர்களே அல்ல. நம்முடைய தலைவரை முதல்வராக்க வேண்டுமென மக்கள் சூளுரைத்திருக்கின்றனர். எந்த சக்தியாலும் நம்மை இனி தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய சின்னம் விசில் சின்னம். தூங்குகிறவர்களின் காதுகளில் விசில் அடித்து விடாதீர்கள். முதியவர்களின் முன்னால் விசில் அடித்துவிடாதீர்கள். வாக்கு கிடைக்காமல் போய்விடும்' என்றார்.

விகடன் 25 Jan 2026 11:51 am

காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்? - எடப்பாடி பழனிசாமி

மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி வெள்ளைக்காளி என்பவரை நேற்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சென்னைக்கு புழல் சிறையில் அவரை அடைப்பதற்காக வாகனத்தில் போலீஸார் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, இரண்டு கார்களில் வந்த மர்மம் கும்பல், போலீஸாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, கைதி வெள்ளகாளியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது. அதைத் தடுக்க முயன்ற போலீஸ் வாகன ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வெள்ளகாளி கொலை முயற்சி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தின் மீது ஒரு மர்மக் கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இவ்வளவுக் கொடிய தாக்குதலை நடத்தும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை விசாரணைக்காக அழைத்து செல்லும் போது அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் வந்து தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அதைத் தடுக்க முடியாத அளவுக்கு உளவுத்துறையும், நெடுஞ்சாலை சுற்றுக்காவலும் செயலிழந்து விட்டனவா? திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே கொலை, கொள்ளை, குண்டுவீச்சு, காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்து விட்டன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாத அளவுக்கு திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது. நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை. செயல்படாத திமுக அரசு இனியும் நீடிக்கக் கூடாது. அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள். எனப் பதிவிட்டிருக்கிறார். தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், ``காவலர்கள் பாதுகாப்பையும் களவாடிய திமுக அரசு! பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே பிரபல ரவுடியை அழைத்து வந்த காவலர்கள் இருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி! துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது சீருடை அணிந்த காவலர்கள் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தைப் பேரழிவில் நிறுத்தியுள்ள கேடுகெட்ட ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே? சமூக வலைதளத்தில் மட்டும் களமாடி, மக்கள் பாதுகாப்பைக் களவாடும் ஆட்சியை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை வன்முறைக் களமாகவும் ரவுடிகளின் கூடாரமாகவும் மாற்றிய அறிவாலய ஆட்சி தமிழக மக்களால் அழித்தொழிக்கப்படும் நாள் தொலைவில் இல்லை! எனக் குறிப்பிட்டிருக்கிரார். எடப்பாடி - டிடிவி - அண்ணாமலை; மனக்கசப்புகள் மறந்து மேடையேறி கரம்கோர்த்த NDA தலைவர்கள்! - Photo Album

விகடன் 25 Jan 2026 10:29 am

எங்களுக்கு விசில் தேவையில்லை; குக்கர் விசில் இருக்கிறது- தமிழிசை சௌந்தரராஜன்

“எங்களுக்கு விசில் தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பல கட்சிகள் இணைய உள்ளன’’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் நேற்று ( ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம், தவெக என்டிஏ கூட்டணிக்கு வருமா? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதா? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் அதற்கு பதிலளித்த அவர், சி.பி.ஐ விஜய்யை டெல்லிக்கு வரவைத்தது விசாரணைக்காகத் தான். அவரை என்டிஏ கூட்டணிக்கு வர வைப்பதற்காக இல்லை. தேர்தலைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக எப்போது வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம். இப்போது எங்கள் கூட்டணிக்கு விசில் (தவெக) தேவையில்லை . எங்கள் கூட்டணியில் ஏற்கனவே விசில் (அமமுகவின் குக்கர் சின்னம்) இருக்கிறது. எங்கள் கூட்டணியில் அமமுக உள்ளது. அவர்களின் குக்கர் சின்னத்திலும் விசில் இருக்கிறது. விசில் சின்னம் அதுவே எங்கள் கூட்டணிக்கு போதும். அதனால், எங்களுக்கு விசில் சின்னம் தேவையில்லை. இனி மேலும் எங்கள் கூட்டணிக்கு பலக் கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் கூட்டணி உறுதியானக் கூட்டணியாகத் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 9:32 am

எங்களுக்கு விசில் தேவையில்லை; குக்கர் விசில் இருக்கிறது- தமிழிசை சௌந்தரராஜன்

“எங்களுக்கு விசில் தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பல கட்சிகள் இணைய உள்ளன’’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் நேற்று ( ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம், தவெக என்டிஏ கூட்டணிக்கு வருமா? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதா? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் அதற்கு பதிலளித்த அவர், சி.பி.ஐ விஜய்யை டெல்லிக்கு வரவைத்தது விசாரணைக்காகத் தான். அவரை என்டிஏ கூட்டணிக்கு வர வைப்பதற்காக இல்லை. தேர்தலைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக எப்போது வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம். இப்போது எங்கள் கூட்டணிக்கு விசில் (தவெக) தேவையில்லை . எங்கள் கூட்டணியில் ஏற்கனவே விசில் (அமமுகவின் குக்கர் சின்னம்) இருக்கிறது. எங்கள் கூட்டணியில் அமமுக உள்ளது. அவர்களின் குக்கர் சின்னத்திலும் விசில் இருக்கிறது. விசில் சின்னம் அதுவே எங்கள் கூட்டணிக்கு போதும். அதனால், எங்களுக்கு விசில் சின்னம் தேவையில்லை. இனி மேலும் எங்கள் கூட்டணிக்கு பலக் கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் கூட்டணி உறுதியானக் கூட்டணியாகத் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 9:32 am

T 20 World Cup: வங்கதேச அணியைத் தொடர்ந்து பாகிஸ்தானும் விலகுகிறதா?- PCB தலைவர் அளித்த பதில் என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. இப்போட்டிகளுக்கான அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேச அணி விலகியது. வங்கதேச அணி அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் அணி தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியது. அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக்கு குழு இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐசிசி இந்நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, வங்கதேசத்திற்கு ஐசிசி அநியாயம் செய்துள்ளது. ஐசிசி கூட்டத்திலும் நான் இதையேதான் சொன்னேன். ஒரு அணி எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள். ஆனால் மற்றொரு அணி அதைசெய்தால் அதற்கு அனுமதி கிடையாது. அதனால்தான் நாங்கள் வங்கதேச அணியின் பக்கம் நிற்கிறோம், அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் ஒரு முக்கியமான அணி, அவர்களுக்கு இப்படியான ஒரு அநீதியைச் செய்யக்கூடாது. வங்கதேசத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகுமா? என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 8:59 am

T 20 World Cup: வங்கதேச அணியைத் தொடர்ந்து பாகிஸ்தானும் விலகுகிறதா?- PCB தலைவர் அளித்த பதில் என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. இப்போட்டிகளுக்கான அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேச அணி விலகியது. வங்கதேச அணி அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் அணி தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியது. அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக்கு குழு இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐசிசி இந்நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, வங்கதேசத்திற்கு ஐசிசி அநியாயம் செய்துள்ளது. ஐசிசி கூட்டத்திலும் நான் இதையேதான் சொன்னேன். ஒரு அணி எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள். ஆனால் மற்றொரு அணி அதைசெய்தால் அதற்கு அனுமதி கிடையாது. அதனால்தான் நாங்கள் வங்கதேச அணியின் பக்கம் நிற்கிறோம், அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் ஒரு முக்கியமான அணி, அவர்களுக்கு இப்படியான ஒரு அநீதியைச் செய்யக்கூடாது. வங்கதேசத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகுமா? என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 8:59 am

'மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு' - சென்னை உயர் நீதிமன்றம்

மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, பேறுகால விடுப்பு தொடர்பான தமிழக அரசின் அடிப்படை விதியில் மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது எனக் கூறி, மனுதாரருக்கு உரிய பணப்பலன்களுடன் ஓராண்டுக்கு விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இனிமேல் பேறு கால விடுப்பு கோரி வழக்குகள் வராத வகையில் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் அறிவுறுத்தி இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.

விகடன் 24 Jan 2026 8:34 pm

'மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு' - சென்னை உயர் நீதிமன்றம்

மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, பேறுகால விடுப்பு தொடர்பான தமிழக அரசின் அடிப்படை விதியில் மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது எனக் கூறி, மனுதாரருக்கு உரிய பணப்பலன்களுடன் ஓராண்டுக்கு விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இனிமேல் பேறு கால விடுப்பு கோரி வழக்குகள் வராத வகையில் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் அறிவுறுத்தி இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.

விகடன் 24 Jan 2026 8:34 pm

”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்” - மாணிக்கம் தாகூர்

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார்.  தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை கட்டி  முடிக்கப்படவில்லை.  மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் வரவிடவில்லை. ஓசூர் விமான நிலையமும், மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கமும் வரவில்லை. மாணிக்கம் தாகூர் கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார்.  தமிழர்களை துன்புறுத்துவது மட்டும்தான் அவரது வேலை. சி.பி.ஐ, வருமான வரித்துறை கடுமையாக வேலைபார்த்து 13 நாட்களில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டிவந்துவிட்டனர். சி.பி.ஐ,  வருமான வரித்துறையின் முழுநேரப் பணியே  என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கும் பணிதான். ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்த பெருமை இந்த இரண்டு துறையையேச் சேரும். நூறுநாள் வேலை உறுதிச்சட்டம் நிறுத்தப்பட்டதால் 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்துவிட்டார்.  பெரும் பணக்காரர்களுக்கான அரசியல் என்பதை மோடி மீண்டும் நிருபித்துள்ளார். கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து தி.மு.கவும், காங்கிரஸும் குரல் கொடுத்து வருகிறது. வரலாற்றை மாற்றுவதும், புத்தகத்தில் முகலாய மன்னர்களை வில்லனாக காட்டுவதுதான் பா.ஜ.கவின் வேலை. மாணிக்கம் தாகூர் சிவகங்கைச் சீமையை மீட்க வீரமங்கை ராணி வேலுநாச்சியாருக்கு, ஹைதர்அலி உதவி செய்த வரலாற்றைக் காட்ட மாட்டார்கள்.  இஸ்லாமியர்களும் இந்துக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை.  எடப்பாடி பழனிசாமி ஆட்சி வந்தால் இந்த கொள்கை மாறிவிடும்,  ஆனால். வருவதற்கு வாய்ப்பு இல்லை. தலைவர்களை மிரட்டி உட்கார வைக்க முடியும். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க் கட்சி என்பது என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைக்காது” என்றார்.

விகடன் 24 Jan 2026 7:31 pm

”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்” - மாணிக்கம் தாகூர்

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார்.  தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை கட்டி  முடிக்கப்படவில்லை.  மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் வரவிடவில்லை. ஓசூர் விமான நிலையமும், மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கமும் வரவில்லை. மாணிக்கம் தாகூர் கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார்.  தமிழர்களை துன்புறுத்துவது மட்டும்தான் அவரது வேலை. சி.பி.ஐ, வருமான வரித்துறை கடுமையாக வேலைபார்த்து 13 நாட்களில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டிவந்துவிட்டனர். சி.பி.ஐ,  வருமான வரித்துறையின் முழுநேரப் பணியே  என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கும் பணிதான். ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்த பெருமை இந்த இரண்டு துறையையேச் சேரும். நூறுநாள் வேலை உறுதிச்சட்டம் நிறுத்தப்பட்டதால் 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்துவிட்டார்.  பெரும் பணக்காரர்களுக்கான அரசியல் என்பதை மோடி மீண்டும் நிருபித்துள்ளார். கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து தி.மு.கவும், காங்கிரஸும் குரல் கொடுத்து வருகிறது. வரலாற்றை மாற்றுவதும், புத்தகத்தில் முகலாய மன்னர்களை வில்லனாக காட்டுவதுதான் பா.ஜ.கவின் வேலை. மாணிக்கம் தாகூர் சிவகங்கைச் சீமையை மீட்க வீரமங்கை ராணி வேலுநாச்சியாருக்கு, ஹைதர்அலி உதவி செய்த வரலாற்றைக் காட்ட மாட்டார்கள்.  இஸ்லாமியர்களும் இந்துக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை.  எடப்பாடி பழனிசாமி ஆட்சி வந்தால் இந்த கொள்கை மாறிவிடும்,  ஆனால். வருவதற்கு வாய்ப்பு இல்லை. தலைவர்களை மிரட்டி உட்கார வைக்க முடியும். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க் கட்சி என்பது என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைக்காது” என்றார்.

விகடன் 24 Jan 2026 7:31 pm

”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்” - மாணிக்கம் தாகூர்

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார்.  தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை கட்டி  முடிக்கப்படவில்லை.  மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் வரவிடவில்லை. ஓசூர் விமான நிலையமும், மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கமும் வரவில்லை. மாணிக்கம் தாகூர் கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார்.  தமிழர்களை துன்புறுத்துவது மட்டும்தான் அவரது வேலை. சி.பி.ஐ, வருமான வரித்துறை கடுமையாக வேலைபார்த்து 13 நாட்களில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டிவந்துவிட்டனர். சி.பி.ஐ,  வருமான வரித்துறையின் முழுநேரப் பணியே  என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கும் பணிதான். ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்த பெருமை இந்த இரண்டு துறையையேச் சேரும். நூறுநாள் வேலை உறுதிச்சட்டம் நிறுத்தப்பட்டதால் 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்துவிட்டார்.  பெரும் பணக்காரர்களுக்கான அரசியல் என்பதை மோடி மீண்டும் நிருபித்துள்ளார். கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து தி.மு.கவும், காங்கிரஸும் குரல் கொடுத்து வருகிறது. வரலாற்றை மாற்றுவதும், புத்தகத்தில் முகலாய மன்னர்களை வில்லனாக காட்டுவதுதான் பா.ஜ.கவின் வேலை. மாணிக்கம் தாகூர் சிவகங்கைச் சீமையை மீட்க வீரமங்கை ராணி வேலுநாச்சியாருக்கு, ஹைதர்அலி உதவி செய்த வரலாற்றைக் காட்ட மாட்டார்கள்.  இஸ்லாமியர்களும் இந்துக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை.  எடப்பாடி பழனிசாமி ஆட்சி வந்தால் இந்த கொள்கை மாறிவிடும்,  ஆனால். வருவதற்கு வாய்ப்பு இல்லை. தலைவர்களை மிரட்டி உட்கார வைக்க முடியும். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க் கட்சி என்பது என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைக்காது” என்றார்.

விகடன் 24 Jan 2026 7:31 pm

“50% நல்லது நடந்துள்ளது; 50% நல்லது நடக்க வேண்டியதுள்ளது - திமுக ஆட்சி குறித்து பிரேமலதா

தூத்துக்குடியில்  தே.மு.தி.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில்  கலந்து கொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் விமானத்தில் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளின் மீதும் அனைத்து தலைவர்களின் மீதும் சி.பி.ஐ வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, லஞ்ச ஊழல் வழக்கு போன்ற எல்லா வழக்குகளும் நிலுவையில்  உள்ளது. இதை வைத்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் மிரட்டி பணிய வைக்கிறார்கள்.   தே.மு.தி.க., வரும் 2026-ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறப்போவது உறுதி. பிரேமலதா  தே.மு.தி.க.,  யாருடன் கூட்டணி அமைக்கிறதோ அவர்கள்தான்  தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ  நம் கட்சிக்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டி காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் என் கையில் கொடுத்திருக்கிறார் சரியான நேரத்தில் அறிவிப்பேன். கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது. வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கபட இருக்கிறது.  பிரதமர், அவருடைய கூட்டணிக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்றிருக்கிறார்.  அது குறித்து நான் ஒன்னும் சொல்ல முடியாது. விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வருவது பா.ஜ.க-வா அல்லது தேர்தலுக்காக அரசியலுக்காக செய்கிறார்களா, படத்தில் ஏதேனும் இருக்கிறதா என்று  அத்திரைப்படத்தின் ஹீரோவான விஜய்தான் பதில் சொல்ல வேண்டும். ஸ்டாலின் சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன். விஜய்யை கூப்பிட்டு பிரஸ் மீட் நடத்த வேண்டும். நான் ஆவலோடு இருக்கிறேன். தி.மு.க., கடந்த 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. தி.மு.கவின் ஆட்சியால் 50% நல்லதும் நடந்திருக்கிறது. 50% நடக்க வேண்டியதும் இருக்கிறது” என்றார்.

விகடன் 24 Jan 2026 7:25 pm

“50% நல்லது நடந்துள்ளது; 50% நல்லது நடக்க வேண்டியதுள்ளது - திமுக ஆட்சி குறித்து பிரேமலதா

தூத்துக்குடியில்  தே.மு.தி.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில்  கலந்து கொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் விமானத்தில் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளின் மீதும் அனைத்து தலைவர்களின் மீதும் சி.பி.ஐ வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, லஞ்ச ஊழல் வழக்கு போன்ற எல்லா வழக்குகளும் நிலுவையில்  உள்ளது. இதை வைத்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் மிரட்டி பணிய வைக்கிறார்கள்.   தே.மு.தி.க., வரும் 2026-ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறப்போவது உறுதி. பிரேமலதா  தே.மு.தி.க.,  யாருடன் கூட்டணி அமைக்கிறதோ அவர்கள்தான்  தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ  நம் கட்சிக்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டி காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் என் கையில் கொடுத்திருக்கிறார் சரியான நேரத்தில் அறிவிப்பேன். கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது. வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கபட இருக்கிறது.  பிரதமர், அவருடைய கூட்டணிக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்றிருக்கிறார்.  அது குறித்து நான் ஒன்னும் சொல்ல முடியாது. விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வருவது பா.ஜ.க-வா அல்லது தேர்தலுக்காக அரசியலுக்காக செய்கிறார்களா, படத்தில் ஏதேனும் இருக்கிறதா என்று  அத்திரைப்படத்தின் ஹீரோவான விஜய்தான் பதில் சொல்ல வேண்டும். ஸ்டாலின் சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன். விஜய்யை கூப்பிட்டு பிரஸ் மீட் நடத்த வேண்டும். நான் ஆவலோடு இருக்கிறேன். தி.மு.க., கடந்த 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. தி.மு.கவின் ஆட்சியால் 50% நல்லதும் நடந்திருக்கிறது. 50% நடக்க வேண்டியதும் இருக்கிறது” என்றார்.

விகடன் 24 Jan 2026 7:25 pm

தேனி ஏலக்காய் மாலை; நல்லி பட்டு சால்வை - பிரதமருக்காக தயாரான எடப்பாடி; மோடி சொன்ன மெசேஜ்!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்ந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தோளில் ஓங்கி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை மோடி வெளிப்படுத்தியதும்தான், தமிழக அரசியல் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பிரதமரை வரவேற்பதற்காக, ஒருவாரத்துக்கு முன்பாகவே தயாராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், முதலில், இந்தப் பொதுக்கூட்டம் மதுரையில் நடத்துவதாகத்தான் ஏற்பாடானது. அதற்காக, மதுரை பாண்டிக் கோயில் அருகே இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் உச்சத்தில் இருந்ததால், 'மதுரை வரை பிரதமர் வந்துவிட்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்லவில்லை என்றால் சங்கடமாகிவிடும். சென்னையிலேயே நடத்திக் கொள்ளலாம்' என்று பா.ஜ.க சீனியர்கள் வலியுறுத்தினர். அதன்பின்னரே, சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாகின. பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக மூன்று இடங்கள் பார்க்கப்பட்டு, மதுராந்தகம் அருகேயுள்ள 30 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தோம். அ.தி.மு.க-வைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், மரகதம் குமரவேல் உள்ளிட்டோர்தான் அதற்கானப் பணிகளை விரைவாகச் செய்து முடித்தனர். பொதுக்கூட்டத்திற்கு நாள் குறித்தபோதே, 'இது தேசிய ஜனநாயகக் கூட்டணியோட பொதுக்கூட்டமாக இருந்தாலும், அ.தி.மு.க பொதுக்கூட்டம் மாதிரிதான் நம்ம ஆட்கள் திரண்டு வரணும்...' என்று உத்தரவு போட்டுவிட்டார் எடப்பாடி. அதற்கேற்ப, வடமாவட்டங்களிலுள்ள நிர்வாகிகளுக்கெல்லாம் அறிவுறுத்தல் சென்றது. பிரதமர் மோடியை மேடையில் கெளரவிப்பதற்காக, தேனியிலிருந்து சிறப்பு ஏலக்காய் மாலையை வரவழைத்தார். அ.தி.மு.க ஐ.டி விங்கின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யனிடம், 'பிரதமர் சாமியார் மாதிரிப்பா... விரதமெல்லாம் கடுமையாக இருக்கிறவரு. ஏ கிரேடு ஏலக்காய் மாலையாக பார்த்து வாங்குங்க..' என்று ஸ்டிக்ட்டாகச் சொல்லிவிட்டார். நல்லி சில்க்ஸிலிருந்து நயமான பச்சை பட்டு சால்வையும் ரெடி செய்யப்பட்டது. மதுராந்தகம் ஹெலிபேடில் பிரதமரை வரவேற்ற எடப்பாடி, மேடைக்கு பின்புறம் அமைக்கப்பட்டிருந்த ஓய்வறையில், சுமார் பத்து நிமிடங்கள் சில நிர்வாகிகளுடன் பிரதமரைச் சந்தித்துப் பேசினார். அதன்பின்னரே மேடைக்கு இருவரும் வந்தனர். 'கூட்டம் நல்லா திரண்டிருக்கே...' என்று பிரதமர் கேட்க, 'உங்களுக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க. தி.மு.க-வைப் பத்தி நீங்க என்ன பேசப் போறீங்கனு கேட்க மக்கள் ஆர்வமாக இருக்காங்க..' என்று ஆங்கிலத்தில் எடப்பாடி சொல்ல, இருவரும் கலகலத்தனர். கூட்டத்தை முன்னின்று நடத்தியது பா.ஜ.க தான் என்றாலும்கூட, வடமாவட்டங்களிலுள்ள அ.தி.மு.க நிர்வாகிகளெல்லாம், ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலிருந்தும் தலா ஐந்தாயிரம் பேரை பொதுக்கூட்டத்திற்கு திரட்டி வந்தனர். பொதுக்கூட்ட மேடையிலேயே டி.டி.வி.தினகரனை அருகே அழைத்து, 'இந்தக் கூட்டணியில் நீங்கள் இணைந்ததற்கு சந்தோஷப்படுகிறேன். உங்களுக்கு உரிய மரியாதை கூட்டணியில் நிச்சயம் அளிக்கப்படும்' என்று வாழ்த்தினார் மோடி. கூட்டம் முடிந்து புறப்படுவதற்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் தங்கமணியை அருகே அழைத்து, அவரது முதுகில் செல்லமாக மோடி அடித்தது பலரது புருவங்களையும் உயர்த்தியது. 2017-லில் தொடங்கி, பா.ஜ.க கூட்டணியைவிட்டு அ.தி.மு.க வெளியேறியது வரையில், டெல்லியுடன் நல்ல இணக்கமாக இருந்தவர் தங்கமணி. அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில் துறை ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பிரதமருடன் நேரில் பேசியிருக்கிறார். அந்த அறிமுகத்தில்தான், அவரது முதுகில் செல்லமாக அடித்து வாழ்த்தினார் மோடி... என்றனர் விரிவாக. மதுராந்தகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக, இன்னும் நான்கு மாதங்கள்தான்... நீங்கள் முதல்வராக பதவியேற்கும் விழாவில் நான் நிச்சயம் கலந்துக்கொள்வேன். அதற்கேற்ப எல்லோரும் உழையுங்கள்... என்று எடப்பாடியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறாராம் மோடி.

விகடன் 24 Jan 2026 7:09 pm

தேமுதிக: எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம் - கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. பிப்ரவரி 20க்குப் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை நிச்சயமாக அமைப்போம் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன என்று அவர்களும் அறிவிக்கவில்லை. இன்னும் பல கட்சிகள் அங்கு சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். NDA கூட்டணி எதுவுமே முடிவாகவில்லை, அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்தக் கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார் கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி

விகடன் 24 Jan 2026 2:13 pm

தேமுதிக: எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம் - கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. பிப்ரவரி 20க்குப் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை நிச்சயமாக அமைப்போம் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன என்று அவர்களும் அறிவிக்கவில்லை. இன்னும் பல கட்சிகள் அங்கு சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். NDA கூட்டணி எதுவுமே முடிவாகவில்லை, அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்தக் கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார் கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி

விகடன் 24 Jan 2026 2:13 pm

கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! - இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?

முதல் களம் - 02 காங்கிரஸை கதிகலங்க வைத்த கருணாநிதியின் உத்தி முதல் களம் - 2 | கருணாநிதி தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Link: கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2 கூட்டணி சர்க்கஸ் 2 வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! வைகோ | கூட்டணி சர்க்கஸ் 2 வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? Link : 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 ஆங்காரிகளின் கதை 02 தொட்டிச்சியம்மை கதை! பூலியூரில் தொட்டிச்சியம்மன், கருப்பசாமி கோவில் ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்க? ஏன் எங்களை கொன்னாங்க?ன்னு கேள்வி கேட்டுருக்கு சாமி ரெண்டும். இவ ரெண்டு பேரும் பதில் சொல்ல முடியாம அழுதிருக்காவ. நீங்க ரெண்டுபேரும் தான் எங்க குலசாமி உங்களுக்கு கோவில் எடுத்து கும்பிடுதோம்ன்னு கையெடுத்து கும்பிட்டுருக்காவ. அதுக்கப்புறந்தான் தொட்டியம்மையும் கருப்பசாமியும் உங்க வாரிசுகளை நாங்க காப்போம்ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கு. Link : ஆங்காரிகளின் கதை 02: ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல என்ன செஞ்சிங்க?' - தொட்டிச்சியம்மை கதை! ‘வாவ்’ வியூகம் 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! எம்ஜிஆர் | ‘வாவ்’ வியூகம் ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச  தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. Link: `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 அணை ஓசை 02 `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' அணை ஓசை - மேட்டூர் அணை மக்களைக் காக்க ஒரு பெரிய அணை அவசியமென அனைவரும் உணர்ந்தனர். அந்தத் தேவைக்கான பதிலாக வந்தார் பிரிட்டிஷ் பொறியாளர் ஆர்தர் காட்டன். அவரது கனவு — “நீரைத் தாங்கும் எஃகு கோட்டை”. அதன் உருவமே, பின்பு தமிழகத்தின் உயிர்நாடியாக மாறிய “மேட்டூர் அணை”. Link: அணை ஓசை: காவிரி பெருவெள்ளமும் வறட்சியும்... ஒரே கனவு - `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' | பகுதி 02 நினைவுச் சுவடுகள் 2 ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! நினைவுச் சுவடுகள் | ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. Link: நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! அரசியல் ஆடுபுலி 02 நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு அரசியல் ஆடுபுலி எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. Link : நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02 Vote Vibes Link : 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3 Link: ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

விகடன் 24 Jan 2026 1:54 pm

கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! - இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?

முதல் களம் - 02 காங்கிரஸை கதிகலங்க வைத்த கருணாநிதியின் உத்தி முதல் களம் - 2 | கருணாநிதி தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Link: கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2 கூட்டணி சர்க்கஸ் 2 வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! வைகோ | கூட்டணி சர்க்கஸ் 2 வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? Link : 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 ஆங்காரிகளின் கதை 02 தொட்டிச்சியம்மை கதை! பூலியூரில் தொட்டிச்சியம்மன், கருப்பசாமி கோவில் ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்க? ஏன் எங்களை கொன்னாங்க?ன்னு கேள்வி கேட்டுருக்கு சாமி ரெண்டும். இவ ரெண்டு பேரும் பதில் சொல்ல முடியாம அழுதிருக்காவ. நீங்க ரெண்டுபேரும் தான் எங்க குலசாமி உங்களுக்கு கோவில் எடுத்து கும்பிடுதோம்ன்னு கையெடுத்து கும்பிட்டுருக்காவ. அதுக்கப்புறந்தான் தொட்டியம்மையும் கருப்பசாமியும் உங்க வாரிசுகளை நாங்க காப்போம்ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கு. Link : ஆங்காரிகளின் கதை 02: ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல என்ன செஞ்சிங்க?' - தொட்டிச்சியம்மை கதை! ‘வாவ்’ வியூகம் 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! எம்ஜிஆர் | ‘வாவ்’ வியூகம் ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச  தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. Link: `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 அணை ஓசை 02 `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' அணை ஓசை - மேட்டூர் அணை மக்களைக் காக்க ஒரு பெரிய அணை அவசியமென அனைவரும் உணர்ந்தனர். அந்தத் தேவைக்கான பதிலாக வந்தார் பிரிட்டிஷ் பொறியாளர் ஆர்தர் காட்டன். அவரது கனவு — “நீரைத் தாங்கும் எஃகு கோட்டை”. அதன் உருவமே, பின்பு தமிழகத்தின் உயிர்நாடியாக மாறிய “மேட்டூர் அணை”. Link: அணை ஓசை: காவிரி பெருவெள்ளமும் வறட்சியும்... ஒரே கனவு - `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' | பகுதி 02 நினைவுச் சுவடுகள் 2 ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! நினைவுச் சுவடுகள் | ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. Link: நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! அரசியல் ஆடுபுலி 02 நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு அரசியல் ஆடுபுலி எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. Link : நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02 Vote Vibes Link : 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3 Link: ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

விகடன் 24 Jan 2026 1:54 pm

OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, ஓ.பி.எஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். அதேபோல் குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது இந்தப் பட்டியலில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் எம். பி ஆர்.தர்மரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் சேகர் பாபு எம்பி தர்மர் இன்று (ஜன.24) மாலை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் நிலையில்தான் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறாரா? ஓபிஎஸ் என்ற பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விகடன் 24 Jan 2026 1:07 pm

OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, ஓ.பி.எஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். அதேபோல் குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது இந்தப் பட்டியலில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் எம். பி ஆர்.தர்மரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் சேகர் பாபு எம்பி தர்மர் இன்று (ஜன.24) மாலை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் நிலையில்தான் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறாரா? ஓபிஎஸ் என்ற பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விகடன் 24 Jan 2026 1:07 pm

'அதட்டல் வேலுமணி; தங்கமணிக்கு தனி கவனிப்பு; சங்கடத்தில் அதிமுகவினர்?' - NDA கூட்டம் ஹைலைட்ஸ்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் NDA வின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அணிவகுத்த இந்த பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான மற்றும் கவனிக்கத்தக்க சம்பவங்கள் இங்கே. NDA பொதுக்கூட்டம் டிடிவியின் இறுக்கத்தைப் போக்கிய எஸ்.பி.வேலுமணி! சில வாரங்களுக்கு முன்பு வரை டிடிவி தினகரன் எடப்பாடிக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார். எடப்பாடியை துரோகி என்றார். அவரோடு கூட்டணி செல்வதற்கு `தூக்கு மாட்டி தொங்கலாம்' எனுமளவுக்கு ஆவேசப்பட்டிருந்தார். ஆனால் சூழ்நிலைகள் அவரை என்.டி.ஏ பக்கமாக தள்ளிவிட்டன. அப்போதும் கூட அதிமுகவை தவிர்த்து பாஜகவின் பியூஸ் கோயல் வழியாகத்தான் கூட்டணிக்குள் வந்தார். டிடிவியை வரவேற்று எடப்பாடி ட்வீட் போட்டார். டிடிவி அதற்கு நன்றி சொன்னார். பழையதையெல்லாம் மறந்து விட்டுக் கொடுக்கிறோம் என்றார். ஆனாலும், டிடிவி எடப்பாடியையும் அதிமுகவினரையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தருணம் எப்படியிருக்கும் என்கிற ஆர்வம் அனைவருக்குமே இருந்தது. அது நேற்று நடந்திருந்தது. பொதுக்கூட்டம் மதியம் 2:45 மணிக்கு தொடங்கியிருந்தது. டிடிவி - நயினார் நாகேந்திரன் டிடிவியை முன்னதாகவே மதியம் 2:26 மணியளவிலேயே நயினார் நாகேந்திரன் மேடைக்கு அழைத்து வந்து முதல் வரிசையில் உட்கார வைத்துவிட்டார். அவர் வந்த சில நிமிடங்களிலேயே தங்கமணியும் சி.வி.சண்முகமும் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு இரண்டாவது வரிசையில் டிடிவிக்கு நேராக பின்னால் இருக்கை. டிடிவி அமர்ந்திருப்பதை பார்த்தும் அவரிடம் கைகுலுக்குவதை இருவரும் தவிர்த்தனர். டிடிவியும் எதோ பேப்பரை படிப்பதை போல அவர்களை பார்ப்பதை தவிர்த்தார். அவர் கொஞ்சம் தர்மசங்கடமாக உணரவே பாஜகவின் சுதாகர் ரெட்டியும் அர்ஜூன் ராமும் அடுத்தடுத்து டிடிவியிடம் வந்து உட்கார்ந்து பேச்சு கொடுத்தனர். TTV - EPS அடுத்த சில நிமிடங்களில் எஸ்.பி.வேலுமணி மேடையேறினார். அவருக்கு டிடிவி அமர்ந்திருந்த முதல் வரிசையில் கடைசி இருக்கை. டிடிவியை கடந்து செல்கையில் அவரிடம் கைகுலுக்கி புன்முருவல் செய்து சென்றார் எஸ்.பி.வேலுமணி. அதன்பிறகுதான் டிடிவி கொஞ்சம் இலகுவானார். சில நிமிடங்களில் மேடையேறிய எடப்பாடி பழனிசாமியும் டிடிவிக்கு கைகுலுக்கி வரவேற்றார். நயினார் நாகேந்திரன் உடனடியாக எடப்பாடியையும் டிடிவியையும் மேடைக்கு முன்பாக அழைத்து கூட்டத்தினர் முன்பு கைகளை உயர்த்தினார். பின்னர் இருவரும் அம்மாவின் தொண்டர்களாக இணைந்திருக்கிறோம் என பத்திரிகையாளர்களை சந்தித்தும் பேசிவிட்டனர். மட்டையாய் மடங்கி கே.பி.முனுசாமி: அதிமுகவின் சீனிரான கே.பி.முனுசாமி ஒரு டோஸ் கூடுதலாகவே மோடி புகழ் பாடினார். அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே 'ஏரி காத்த ராமர் புகழ் கொண்ட மதுராந்தகத்தில் நடக்கும் பொதுக்கூட்டம்' என பாஜகவுக்கு ஏற்ற டோனில்தான் தொடங்கினார். இந்தியாவின் விஸ்வகுரு, உலகமே போற்றும் அரசியல் தலைவர் என அடுக்கடுக்காக மோடி புகழ் பாடினார். முனுசாமி பேசிக்கொண்டிருந்த போதுதான் மோடியும் மேடைக்கு என்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வினோஜ்.பி.செல்வம் முனுசாமியிடம் துண்டு சீட்டை காண்பித்த பிறகும் சில நிமிடங்களுக்கு மோடி புகழ் பாடிவிட்டுதான் அவரின் இருக்கைக்கு சென்றார். கே.பி.முனுசாமி நிகழ்ச்சி முடிந்த பிறகும் முதல் வரிசையின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த முனுசாமி மோடியை நோக்கி வந்து போயஸ் கார்டனில் ஜெயலலிலதாவிடம் வணக்கம் வைக்கும் பொசிஷனில் சாஷ்டாங்கமாக வணக்கம் வைத்து சென்றார். 'அண்ணன் பெர்பார்மென்ஸ் ஓவரா இருக்கே..' என கூட்டத்திலிருந்து சில ரரக்களே முணுமுணுத்துக் கொண்டனர். தங்கமணிக்கு தனி கவனிப்பு: முன்னாள் அமைச்சர் தங்கமணி இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார். ஒரு அதிமுகக்காரர், ஒரு பாஜகக்காரர் என அனைத்துக்கட்சியினரும் கலந்து அமர்ந்திருக்கும்படியே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கமணிக்கு பக்கத்தில் எச்.ராஜா, அவர் பக்கத்தில் சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் என அமர்ந்திருந்தனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிய மோடி கிளம்புகையில் மேடையிலிருந்த முக்கிய தலைவர்களுக்கு கைகொடுத்து விடைபெற்றார். தங்கமணி மற்ற எல்லாருக்கும் சம்பிரதாயமாக கைகொடுத்து நகர்ந்தவர், தங்கமணியை பார்த்தவுடன் புன்னகைத்து தோளில் தட்டிக் கொடுத்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுதான் நகர்ந்தார். பிரதமரின் தனி கவனிப்பில் தங்கமணி குஷியாகிவிட்டார். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக! காவல்துறையின் கட்டுப்பாடும் பாஜகவின் கோபமும்! பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் தமிழக காவல்துறையும் பிரதமரின் பாதுகாப்புப் படையும் ஸ்பாட்டை முழுமையாக கட்டுப்பாட்டி எடுத்திருந்தனர். கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சோதனைகளால் தொண்டர்கள் கூட்டம் உள்ளே வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் எல்.முருகன் அப்செட் ஆகிவிட்டார். கூட்டம் தொடங்க சில நிமிடங்களே இருந்த போதும் மேடைக்கு முன்பிருந்து விஐபி பிரிவு இருக்கைகள் நிரம்பவில்லை. பாஜக விஜபி பாஸ் இல்லையென்றாலும் வருகிற தொண்டர்களை விஐபி இருக்கைகளில் அமர வையுங்கள்' என மைக்கில் போலீசாரிடம் கூறினர். விஐபிக்களுக்கு மட்டும்தான் பாஸ் எனக்கூறி லிஸ்ட்டெல்லாம் கொடுத்துவிட்டு, இப்போது அவர்கள் விருப்பத்துக்கு எல்லாரையும் அனுமதிக்க சொல்கிறார்கள். மேடையின் முன் பகுதி சென்சிட்டிவான பகுதி அங்கே எப்படி எல்லாரையும் அனுமதிக்க முடியும்?' என காவல்துறையினர் குறைபட்டுக் கொண்டனர். திடீரென எஸ்.பி.வேலுமணியும் மைக்கை வாங்கி, 'அங்க யாருங்க இன்ஸ்பெக்டரு. சொன்னா செய்ய மாட்டீங்களா. ஏன் அவ்வளவு கூட்டத்தை நிறுத்தி வச்சிருக்கீங்க. உடனே உள்ள அனுப்புங்க' என அதட்டும் தொனியில் பேசினார். இன்னொரு பக்கம் பாரிவேந்தரின் கார் நெருக்கடியில் சிக்கி பொதுக்கூட்டத்துக்கு வர முடியாமலேயே திரும்பினார். அவரும் தன் பங்குக்கு காவல்துறையின் மேல் குற்றஞ்சாட்டினார். அசௌகரியமான அதிமுகவினர்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் என அழைத்துவிட்டு, பாஜக தங்களின் கொள்கை சார்ந்த கோஷங்களை எழுப்பியதால் கூட்டத்திலிருந்த அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் கொஞ்சம் அசௌகரியமாகினர். கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 'எல்லாரும் சேர்ந்து கோஷம் போடலாமா..' எனக் கேட்டு, 'பாரத் மாதா கி ஜே..' 'வந்தே மாதரம்' 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை மேடையிலிருந்து எழுப்ப பாஜக தொண்டர்கள் துண்டை சுழற்றி உற்சாகமாக பதில் கோஷம் எழுப்பினர். வளர்மதி இடையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர்கள்தான் சங்கடத்தில் நெளிந்தனர். இடையில் வளர்மதி திடீரென மேடைக்கு வந்து, 'புரட்சித் தலைவர்...புரட்சித் தலைவி...' என பதில் கோஷம் போட்டார். அதில்தான் அதிமுகவினர் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர் நயினார் நாகேந்திரன் மேடையில் பேசுகையிலும் 'ஹமாரா மோடி சர்க்கார்...' என்றும் 'ஜெய் ஸ்ரீராம்' என்றும் முழங்கினார். இதையும் மேடையிலிருந்த அதிமுக தலைகள் ரசிக்கவில்லை. கூட்டம் முடிகையில் மீண்டும் பாரத் மாதா கி ஜே கோஷம் எழுப்பப்பட்டது. அண்ணாமலை, நயினார், வானதி என பாஜக தலைகள் எல்லாம் உற்சாகமாக கோஷம் போட எடப்பாடியும் டிடிவியும் முதல் வரிசையில் பல்லை கடித்துக் கொண்டு நின்றனர்.! `இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

விகடன் 24 Jan 2026 12:35 pm

தேசபக்தி பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் அவருடைய உரையைப் படிக்காமல் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஸ்டாலின் 5-ஆம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிக்கல்கள் மிகுந்த சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்தமர்ந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் கவலையும் எங்களுக்கு இருந்தது. ஒன்றிய பாஜக அரசின் செயல்களால்தான் கவலையில் இருந்தேன். ஆனால், இப்போது தமிழகம் அத்தனை துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ரூ. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விடியல் பயணத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் 60,000 ரூபாய் சேமித்துள்ளனர். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. அரசு பொறுப்பேற்று, 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. MK Stalin ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார். அவரின் செயல் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. நாட்டின் மீது அளவற்ற மரியாதை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடமெடுக்க வேண்டாம். சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல. சோதனைகளைக் கடந்து வென்றவர் நான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் எனப் பேசியிருக்கிறார். ``ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி

விகடன் 24 Jan 2026 11:48 am

தேசபக்தி பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் அவருடைய உரையைப் படிக்காமல் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஸ்டாலின் 5-ஆம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிக்கல்கள் மிகுந்த சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்தமர்ந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் கவலையும் எங்களுக்கு இருந்தது. ஒன்றிய பாஜக அரசின் செயல்களால்தான் கவலையில் இருந்தேன். ஆனால், இப்போது தமிழகம் அத்தனை துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ரூ. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விடியல் பயணத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் 60,000 ரூபாய் சேமித்துள்ளனர். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. அரசு பொறுப்பேற்று, 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. MK Stalin ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார். அவரின் செயல் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. நாட்டின் மீது அளவற்ற மரியாதை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடமெடுக்க வேண்டாம். சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல. சோதனைகளைக் கடந்து வென்றவர் நான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் எனப் பேசியிருக்கிறார். ``ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி

விகடன் 24 Jan 2026 11:48 am

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு மருத்துவ விசாரணை அறிக்கை வழங்க CBI மறுப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரம் தாண்டி அவர்கள் நடத்தி வந்த செல்போன் கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் 9 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியின் விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு, சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ”சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் விசாரணை அறிக்கையில், தந்தையும் மகனும் போலீஸார் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் நீண்ட நேரம் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இருவருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிருடன் இருந்திருப்பார்கள். இதனால் எங்கள் மீது இ.பி.கோ 302-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சரியல்ல. இதனை நிரூபிக்க விசாரணை அறிக்கை நகல் வழங்கிட வேண்டும். சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில் சாத்தான்குளம் அந்த அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் வழக்குகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அந்த விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். மனுவை நீதிபதி என்.மாலா விசாரித்தார். சி.பி.ஐ தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் கோரும் ஆவணங்களை வைத்து அவர் வழக்கில் எந்த விதமாகவும் வாதிட முடியாது. எனவே மனுதாரருக்கு விசாரணை அறிக்கையின் நகல் வழங்க முடியாது” எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர், ”மனுதாரரின் விசாரணை அறிக்கை நகல் பெறும் முன்பே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தலாம். விசாரணை அறிக்கை நகல் கிடைத்த பிறகுதான் விசாரணை நடத்த முடியுமா?” என நீதிபதி மாலா கேள்வி எழுப்பினார். பின்னர், சி.பி.ஐ தரப்பில், “தந்தை, மகன் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிகையில் மருத்துவத்துறை இணை இயக்குநரின் விசாரணை பற்றி குறிப்பிடவில்லை. சாத்தான்குளம் காவல் நிலையம் இதனால், விசாரணை அறிக்கையின் நகல் கேட்க வேண்டியதில்லை. சட்டப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மாலா, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்குத் தள்ளி வைத்தார். இந்த நிலையில், “இந்த வழக்கினை எப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கைதானவர்கள் முயற்சிக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிட பல விதங்களில் தடை போடுகிறார்கள்” என ஜெயராஜின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். சாத்தான்குளம் கொலை வழக்கு: ``மேலும் அவகாசம் கேட்பது ஏன்?'' - CBI பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

விகடன் 24 Jan 2026 11:14 am

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு மருத்துவ விசாரணை அறிக்கை வழங்க CBI மறுப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரம் தாண்டி அவர்கள் நடத்தி வந்த செல்போன் கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் 9 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியின் விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு, சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ”சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் விசாரணை அறிக்கையில், தந்தையும் மகனும் போலீஸார் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் நீண்ட நேரம் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இருவருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிருடன் இருந்திருப்பார்கள். இதனால் எங்கள் மீது இ.பி.கோ 302-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சரியல்ல. இதனை நிரூபிக்க விசாரணை அறிக்கை நகல் வழங்கிட வேண்டும். சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில் சாத்தான்குளம் அந்த அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் வழக்குகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அந்த விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். மனுவை நீதிபதி என்.மாலா விசாரித்தார். சி.பி.ஐ தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் கோரும் ஆவணங்களை வைத்து அவர் வழக்கில் எந்த விதமாகவும் வாதிட முடியாது. எனவே மனுதாரருக்கு விசாரணை அறிக்கையின் நகல் வழங்க முடியாது” எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர், ”மனுதாரரின் விசாரணை அறிக்கை நகல் பெறும் முன்பே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தலாம். விசாரணை அறிக்கை நகல் கிடைத்த பிறகுதான் விசாரணை நடத்த முடியுமா?” என நீதிபதி மாலா கேள்வி எழுப்பினார். பின்னர், சி.பி.ஐ தரப்பில், “தந்தை, மகன் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிகையில் மருத்துவத்துறை இணை இயக்குநரின் விசாரணை பற்றி குறிப்பிடவில்லை. சாத்தான்குளம் காவல் நிலையம் இதனால், விசாரணை அறிக்கையின் நகல் கேட்க வேண்டியதில்லை. சட்டப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மாலா, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்குத் தள்ளி வைத்தார். இந்த நிலையில், “இந்த வழக்கினை எப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கைதானவர்கள் முயற்சிக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிட பல விதங்களில் தடை போடுகிறார்கள்” என ஜெயராஜின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். சாத்தான்குளம் கொலை வழக்கு: ``மேலும் அவகாசம் கேட்பது ஏன்?'' - CBI பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

விகடன் 24 Jan 2026 11:14 am

நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02

1980 தேர்தல் அரசியல் ஆடுபுலி 02 நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது. திரைத்துறையில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அரசியலில் தனக்கு பிரதான எதிரியாக கருணாநிதியை எதிர்கொண்டார். தினம் தினம் விமர்சனம், எதிர்கருத்துகள் என்று எம்ஜிஆரின் வாழ்க்கையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக மாறிப்போனது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்திடும் சம்பவமாக நடந்ததுதான் அதிமுக – திமுக இணைப்பு பேச்சுவார்த்தை. அரசியலில் மனநிம்மதியும், மனநிறைவோடு மக்கள் நலத்திட்டங்களில் முழு கவனத்தை செலுத்தவும் அதிமுக – திமுக இணைப்பு உதவிடும் என்று நம்பினார் எம்ஜிஆர். கருணாநிதி - எம்.ஜி.ஆர் அதிமுக – திமுக இணைப்பு முயற்சிக்கு வித்திட்டது தேசிய அரசியல் தான். இந்திய விடுதலைக்குப் பின்னர் நீண்டகாலம் காங்கிரஸ் கட்சியே, மத்திய அரசாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நெருக்கடி நிலைக்குப் பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்தது. இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலைக்கு எதிராக இந்திய அரசியலில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட திமுக தலைவர் கருணாநிதி முயற்சி செய்தார். ஸ்தாபன காங்கிரஸ் அசோக் மேத்தா, ஜனசங்கம் அடல் பிகாரி வாஜ்பாய், பாரதிய லோக் தளம் பிலு மோடி, கிருஷ்ணகாந்த், சோசலிஸ்ட் கட்சி பிஜூ பட்நாயக் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 1976 டிசம்பர் 15 அன்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஜனதா கட்சி உருவானது. 1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஜனதா கட்சி கூட்டணி தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்டது. ஆனால், அதிமுக – காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்றுப்போனது. இந்திய அளவில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனாலும் பல கட்சி கூட்டணியின் குழப்பத்தால், பின்னர் காங்கிரஸ் ஆதரவோடு சரண்சிங் பிரதமர் ஆனார். ஆனாலும் அவரது தலைமையிலான ஆட்சியும் நீடிக்கவில்லை.  மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கத் தயாரானது இந்தியா. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில், அதிமுகவின் சார்பாக பாலா பழனூர், சத்தியவாணி முத்து இரண்டு மத்திய அமைச்சர்கள் பங்கேற்று இருந்தனர். ஜனதா கூட்டணியா? காங்கிரஸ் உடன் கூட்டணியா? என்கிற குழப்பம் எம்ஜிஆருக்கு இருந்தது. அக்காலகட்டத்தில் தான், ”அதிமுக – திமுக கூட்டு வரக்கூடாது என்பதல்ல” – என்று செய்தியாளர் சந்திப்பில் எம்ஜிஆர் பேசினார். ”திமுக – இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விடவில்லை” - என்று கருணாநிதி பேசினார். அதாவது திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு கருணாநிதிக்கு எதிராக கட்சி தொடங்கிய எம்ஜிஆர் எல்லாவற்றையும் மறந்து திமுகவுடன் கூட்டு சேர்ந்தால் என்ன என்கிற மனநிலையில் பேட்டி கொடுக்கிறார். காங்கிரஸுக்கு எதிராக கட்சி தொடங்கி, நெருக்கடி நிலையில் விழுப்புண்களின் காயம் கூட ஆறாத நிலையில், இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டு வைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி கருணாநிதி யோசிக்கிறார். இந்திரா - கருணாநிதி கூட்டணி தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் இந்தக் கருத்துகள் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கியது. இதற்குப் பின்னால் தேசிய அரசியல் இருந்தது. எம்ஜிஆர் ராஜகுமாரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த போது, அந்தப் படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. 1945இல் ராஜகுமாரி படத்தின் போது தொடங்கிய நட்பு, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம், புதுமைபித்தன், அரசிளங்குமரி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் கருணாநிதி வசனத்தைப் பேசி எம்ஜிஆர் நடித்தார். கோயம்புத்தூரில் ஒரே வீட்டில் தங்கியிருந்து கலைத்துறையில் பணியாற்றினர். அரசியலிலும் பேரறிஞர் அண்ணா தலைமையில் கருணாநிதியும், எம்ஜிஆரும் இணைந்து செயல்பட்டனர். 1969இல் கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் முக்கியப் பங்கு வகித்தார் என்றும் சொல்வார்கள். ஆனால், 1970களுக்குப் பிறகு கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிற்பாடு கருத்து மோதலாக மாறி, 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், கடல் நீரோட்டத்தில் ஆழ்கடல் நீரோட்டம் போன்று கருணாநிதி, எம்ஜிஆர் இடையிலான கடந்த கால நட்பு நினைவுகளாக ஓடிக்கொண்டிருந்தது. ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4 தேசிய அளவில் காங்கிரஸுக்கு எதிராக வலிமையான அணியை உருவாக்க சில தலைவர்கள் விரும்பினார்கள். காங்கிரஸை எதிர்க்க தமிழ்நாட்டில் திமுகவையும், அதிமுகவையும் ஒன்று சேர்க்க முயற்சித்தார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்ஜிஆர் டெல்லி சென்ற நேரம், 1979 செப்டம்பர் 6 அன்று, காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியை சந்திக்க இருப்பதாக சொன்னார்கள். ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. காலையில் பிரதமர் சரண்சிங் சந்திப்பு முடிந்த பின்பு, எம்ஜிஆர் உடன் மத்திய அமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக் சந்தித்து பேசினார். அதே நாளில் பிஜூ பட்நாயக், சென்னையிலிருந்த கருணாநிதி உடனும் தொலைபேசியில் உரையாடினார். திமுக, அதிமுக இணைப்பிற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கின. 1979 செப்டம்பர் 12 அன்று சென்னைக்கு வந்த பிஜூ பட்நாயக் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கருணாநிதி - பிஜு பட்நாயக் - எம்.ஜி.ஆர் 1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும். 2. திமுகவிற்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. 3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும். 4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை. 5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம். 6. எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். ஆகிய நிபந்தனைகள் திமுகவின் சார்பில் வைக்கப்பட்டது.  'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 அன்றே எம்ஜிஆரின் தியாகராயநகர் இல்லத்தில் பிஜூ பட்நாயக் சந்தித்து, கருணாநிதி சொன்ன திமுகவின் நிபந்தனைகளை எடுத்துக் கூறினார். இரண்டு தலைவர்கள் உடனடியாக சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைகள் நடைபெற்றன. அதிமுக நிர்வாகிகளையும் எம்ஜிஆர் அழைத்துப் பேசினார். 1979 செப்டம்பர் 13 அன்று சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பு பிஜூ பட்நாயக் முன்னிலையில் நடைபெற்றது. திமுகவின் சார்பில் பேராசிரியர் அன்பழகன், அதிமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கருணாநிதியும், எம்ஜிஆரும் தனி அறையில் சந்தித்து பேசிக்கொண்டார்கள். எம்.ஜி.ஆர் - கருணாநிதி 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01 திமுக – அதிமுக இணைப்பு உறுதியானதும், பிஜூபட்நாயக் முன்னிலையில் கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் செய்தியாளர் சந்திப்பும் நடத்தினார்கள். ஆனால், பிஜூ பட்நாயக் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும், பூரிப்பும் ஓரிரு நாள் கூட நீடிக்கவில்லை. கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பிற்கு மறுநாள் 1979 செப்டம்பர் 14 அன்று வேலூர் அதிமுக பொதுக்கூட்டத்தில், எம்ஜிஆர் முன்னிலையில் திமுகவையும் கருணாநிதியையும் தாக்கி அதிமுக தலைவர்கள் பேசினர். எம்ஜிஆர் அவர்களைத் தடுக்கவும் இல்லை. அதிமுக, திமுக இணைப்பு பற்றியும் பேசவில்லை. இது திமுக தலைவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கிவிட்டது.  சென்னையிலிருந்து வேலூருக்கு எம்ஜிஆருடன் காரில் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆரை தனியாக சந்தித்த காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் உள்ளிட்டோர் திமுக – அதிமுக இணைப்பைத் தடுத்து விட்டதாக பின்னாட்களில் பேசப்பட்டது.  Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் அடுத்து வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதிமுக – ஜனதா கூட்டணி, காங்கிரஸ் அணி, திமுக அணி என்று மூன்று பிரிவாக தமிழக அரசியல் சூழ்நிலை இருந்தது. எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தவரும், இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவருமான ஸ்டீபன், திமுகவின் முரசொலி மாறனை டெல்லியில் சந்தித்து பேசினார். டெல்லியிலிருந்து கருணாநிதிக்கு அழைப்பு வந்தது, 1979 செப்டம்பர் 15 அன்று டெல்லி இந்திரா காந்தி இல்லத்தில், தென்னரசு, ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் கருணாநிதி, இந்திராவை சந்தித்துப் பேசினார்.  இந்திரா காந்தி, கருணாநிதி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு 17 தொகுதி, காங்கிரஸுக்கு 22 தொகுதி என்று உடன்பாடு ஏற்பட்டது. 1979 அக்டோபர் 1 அன்று சென்னை கடற்கரையில் இந்திரா காந்தியும், கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றினர். `நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக..!' என்று முழங்கினார் கருணாநிதி. நெருக்கடி நிலை சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தார் இந்திரா காந்தி.  1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கோடு இருந்த, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி தோற்றுப்போனது. சிவகாசி, கோபிசெட்டிப்பாளையம் இரு தொகுதிகளைத் தவிர அனைத்து  இடங்களிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வென்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். ! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்) 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

விகடன் 24 Jan 2026 10:53 am

நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02

1980 தேர்தல் அரசியல் ஆடுபுலி 02 நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது. திரைத்துறையில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அரசியலில் தனக்கு பிரதான எதிரியாக கருணாநிதியை எதிர்கொண்டார். தினம் தினம் விமர்சனம், எதிர்கருத்துகள் என்று எம்ஜிஆரின் வாழ்க்கையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக மாறிப்போனது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்திடும் சம்பவமாக நடந்ததுதான் அதிமுக – திமுக இணைப்பு பேச்சுவார்த்தை. அரசியலில் மனநிம்மதியும், மனநிறைவோடு மக்கள் நலத்திட்டங்களில் முழு கவனத்தை செலுத்தவும் அதிமுக – திமுக இணைப்பு உதவிடும் என்று நம்பினார் எம்ஜிஆர். கருணாநிதி - எம்.ஜி.ஆர் அதிமுக – திமுக இணைப்பு முயற்சிக்கு வித்திட்டது தேசிய அரசியல் தான். இந்திய விடுதலைக்குப் பின்னர் நீண்டகாலம் காங்கிரஸ் கட்சியே, மத்திய அரசாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நெருக்கடி நிலைக்குப் பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்தது. இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலைக்கு எதிராக இந்திய அரசியலில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட திமுக தலைவர் கருணாநிதி முயற்சி செய்தார். ஸ்தாபன காங்கிரஸ் அசோக் மேத்தா, ஜனசங்கம் அடல் பிகாரி வாஜ்பாய், பாரதிய லோக் தளம் பிலு மோடி, கிருஷ்ணகாந்த், சோசலிஸ்ட் கட்சி பிஜூ பட்நாயக் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 1976 டிசம்பர் 15 அன்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஜனதா கட்சி உருவானது. 1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஜனதா கட்சி கூட்டணி தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்டது. ஆனால், அதிமுக – காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்றுப்போனது. இந்திய அளவில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனாலும் பல கட்சி கூட்டணியின் குழப்பத்தால், பின்னர் காங்கிரஸ் ஆதரவோடு சரண்சிங் பிரதமர் ஆனார். ஆனாலும் அவரது தலைமையிலான ஆட்சியும் நீடிக்கவில்லை.  மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கத் தயாரானது இந்தியா. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில், அதிமுகவின் சார்பாக பாலா பழனூர், சத்தியவாணி முத்து இரண்டு மத்திய அமைச்சர்கள் பங்கேற்று இருந்தனர். ஜனதா கூட்டணியா? காங்கிரஸ் உடன் கூட்டணியா? என்கிற குழப்பம் எம்ஜிஆருக்கு இருந்தது. அக்காலகட்டத்தில் தான், ”அதிமுக – திமுக கூட்டு வரக்கூடாது என்பதல்ல” – என்று செய்தியாளர் சந்திப்பில் எம்ஜிஆர் பேசினார். ”திமுக – இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விடவில்லை” - என்று கருணாநிதி பேசினார். அதாவது திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு கருணாநிதிக்கு எதிராக கட்சி தொடங்கிய எம்ஜிஆர் எல்லாவற்றையும் மறந்து திமுகவுடன் கூட்டு சேர்ந்தால் என்ன என்கிற மனநிலையில் பேட்டி கொடுக்கிறார். காங்கிரஸுக்கு எதிராக கட்சி தொடங்கி, நெருக்கடி நிலையில் விழுப்புண்களின் காயம் கூட ஆறாத நிலையில், இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டு வைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி கருணாநிதி யோசிக்கிறார். இந்திரா - கருணாநிதி கூட்டணி தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் இந்தக் கருத்துகள் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கியது. இதற்குப் பின்னால் தேசிய அரசியல் இருந்தது. எம்ஜிஆர் ராஜகுமாரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த போது, அந்தப் படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. 1945இல் ராஜகுமாரி படத்தின் போது தொடங்கிய நட்பு, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம், புதுமைபித்தன், அரசிளங்குமரி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் கருணாநிதி வசனத்தைப் பேசி எம்ஜிஆர் நடித்தார். கோயம்புத்தூரில் ஒரே வீட்டில் தங்கியிருந்து கலைத்துறையில் பணியாற்றினர். அரசியலிலும் பேரறிஞர் அண்ணா தலைமையில் கருணாநிதியும், எம்ஜிஆரும் இணைந்து செயல்பட்டனர். 1969இல் கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் முக்கியப் பங்கு வகித்தார் என்றும் சொல்வார்கள். ஆனால், 1970களுக்குப் பிறகு கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிற்பாடு கருத்து மோதலாக மாறி, 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், கடல் நீரோட்டத்தில் ஆழ்கடல் நீரோட்டம் போன்று கருணாநிதி, எம்ஜிஆர் இடையிலான கடந்த கால நட்பு நினைவுகளாக ஓடிக்கொண்டிருந்தது. ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4 தேசிய அளவில் காங்கிரஸுக்கு எதிராக வலிமையான அணியை உருவாக்க சில தலைவர்கள் விரும்பினார்கள். காங்கிரஸை எதிர்க்க தமிழ்நாட்டில் திமுகவையும், அதிமுகவையும் ஒன்று சேர்க்க முயற்சித்தார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்ஜிஆர் டெல்லி சென்ற நேரம், 1979 செப்டம்பர் 6 அன்று, காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியை சந்திக்க இருப்பதாக சொன்னார்கள். ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. காலையில் பிரதமர் சரண்சிங் சந்திப்பு முடிந்த பின்பு, எம்ஜிஆர் உடன் மத்திய அமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக் சந்தித்து பேசினார். அதே நாளில் பிஜூ பட்நாயக், சென்னையிலிருந்த கருணாநிதி உடனும் தொலைபேசியில் உரையாடினார். திமுக, அதிமுக இணைப்பிற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கின. 1979 செப்டம்பர் 12 அன்று சென்னைக்கு வந்த பிஜூ பட்நாயக் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கருணாநிதி - பிஜு பட்நாயக் - எம்.ஜி.ஆர் 1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும். 2. திமுகவிற்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. 3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும். 4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை. 5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம். 6. எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். ஆகிய நிபந்தனைகள் திமுகவின் சார்பில் வைக்கப்பட்டது.  'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 அன்றே எம்ஜிஆரின் தியாகராயநகர் இல்லத்தில் பிஜூ பட்நாயக் சந்தித்து, கருணாநிதி சொன்ன திமுகவின் நிபந்தனைகளை எடுத்துக் கூறினார். இரண்டு தலைவர்கள் உடனடியாக சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைகள் நடைபெற்றன. அதிமுக நிர்வாகிகளையும் எம்ஜிஆர் அழைத்துப் பேசினார். 1979 செப்டம்பர் 13 அன்று சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பு பிஜூ பட்நாயக் முன்னிலையில் நடைபெற்றது. திமுகவின் சார்பில் பேராசிரியர் அன்பழகன், அதிமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கருணாநிதியும், எம்ஜிஆரும் தனி அறையில் சந்தித்து பேசிக்கொண்டார்கள். எம்.ஜி.ஆர் - கருணாநிதி 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01 திமுக – அதிமுக இணைப்பு உறுதியானதும், பிஜூபட்நாயக் முன்னிலையில் கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் செய்தியாளர் சந்திப்பும் நடத்தினார்கள். ஆனால், பிஜூ பட்நாயக் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும், பூரிப்பும் ஓரிரு நாள் கூட நீடிக்கவில்லை. கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பிற்கு மறுநாள் 1979 செப்டம்பர் 14 அன்று வேலூர் அதிமுக பொதுக்கூட்டத்தில், எம்ஜிஆர் முன்னிலையில் திமுகவையும் கருணாநிதியையும் தாக்கி அதிமுக தலைவர்கள் பேசினர். எம்ஜிஆர் அவர்களைத் தடுக்கவும் இல்லை. அதிமுக, திமுக இணைப்பு பற்றியும் பேசவில்லை. இது திமுக தலைவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கிவிட்டது.  சென்னையிலிருந்து வேலூருக்கு எம்ஜிஆருடன் காரில் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆரை தனியாக சந்தித்த காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் உள்ளிட்டோர் திமுக – அதிமுக இணைப்பைத் தடுத்து விட்டதாக பின்னாட்களில் பேசப்பட்டது.  Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் அடுத்து வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதிமுக – ஜனதா கூட்டணி, காங்கிரஸ் அணி, திமுக அணி என்று மூன்று பிரிவாக தமிழக அரசியல் சூழ்நிலை இருந்தது. எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தவரும், இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவருமான ஸ்டீபன், திமுகவின் முரசொலி மாறனை டெல்லியில் சந்தித்து பேசினார். டெல்லியிலிருந்து கருணாநிதிக்கு அழைப்பு வந்தது, 1979 செப்டம்பர் 15 அன்று டெல்லி இந்திரா காந்தி இல்லத்தில், தென்னரசு, ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் கருணாநிதி, இந்திராவை சந்தித்துப் பேசினார்.  இந்திரா காந்தி, கருணாநிதி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு 17 தொகுதி, காங்கிரஸுக்கு 22 தொகுதி என்று உடன்பாடு ஏற்பட்டது. 1979 அக்டோபர் 1 அன்று சென்னை கடற்கரையில் இந்திரா காந்தியும், கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றினர். `நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக..!' என்று முழங்கினார் கருணாநிதி. நெருக்கடி நிலை சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தார் இந்திரா காந்தி.  1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கோடு இருந்த, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி தோற்றுப்போனது. சிவகாசி, கோபிசெட்டிப்பாளையம் இரு தொகுதிகளைத் தவிர அனைத்து  இடங்களிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வென்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். ! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்) 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

விகடன் 24 Jan 2026 10:53 am

தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் கமலின் ம.நீ.ம! - நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் அங்கீகாரம் பெறாத சில கட்சிகள், மாநிலம் முழுவதும் பொதுச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையதித்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் அந்தவகையில் விஜய்யின் தவெகவிற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. ம.நீ.ம.வுக்கும் திமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.24) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. ஸ்டாலின், கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், எதிர்வரும் தேர்தலில் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவது மற்றும் களப்பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, 'டார்ச் லைட்' சின்னத்திலேயே தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விகடன் 24 Jan 2026 10:36 am

தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் கமலின் ம.நீ.ம! - நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் அங்கீகாரம் பெறாத சில கட்சிகள், மாநிலம் முழுவதும் பொதுச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையதித்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் அந்தவகையில் விஜய்யின் தவெகவிற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. ம.நீ.ம.வுக்கும் திமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.24) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. ஸ்டாலின், கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், எதிர்வரும் தேர்தலில் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவது மற்றும் களப்பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, 'டார்ச் லைட்' சின்னத்திலேயே தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விகடன் 24 Jan 2026 10:36 am

சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் - பிரதமர் மோடி கேரண்டி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ருத் பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். பின்னர் திருவனந்தபுரம் புத்தரிகண்ட மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றிய வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் 2026 சட்டசபைத் தேர்தல் பிரசாரம் தொடக்க விழா ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், கட்சிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த திருவனந்தபுரத்தை நாட்டின் முன்மாதிரி நகரமாக உருவாக்குவோம். அதற்காக மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். மக்கள் பா.ஜ.க-வை நம்பத் தொடங்கியுள்ளதற்கு தலைநகரில் கிடைத்த வெற்றியே சாட்சி. மாறாதது இனி மாறும். மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஏற்பட்ட மாற்றம் கேரளாவிலும் ஏற்படும். பி.எம் ஸ்ரீ திட்டத்தை நிராகரித்ததன் மூலம் ஏழைக் குழந்தைகள் சிறந்த பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளது இடதுசாரி அரசு. கேரளாவில் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளின் வழிமுறைகள் ஒன்றேதான். ஊழலும், வகுப்புவாதமும் 100 சதவிகிதம் உள்ளன. வெளிப்படைத்தன்மையும், வளர்ச்சியும் பூஜ்ஜியமாக உள்ளன. திருவனந்தபுரம் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி காங்கிரஸ் பழைய காங்கிரஸ் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) என்பது முஸ்லிம் மாவோயிஸ்ட் காங்கிரஸ் (எம்.எம்.சி) என மாறிவிட்டது. முஸ்லிம் லீக்கை விட வகுப்புவாதமும், மாவோயிஸ்டுகளை விட அராஜகமும் அவர்களின் அடையாளமாகிவிட்டன. காங்கிரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பா.ஜ.க அடிப்படை வசதிகளைப் பெருக்கி லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. கேரளாவில் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்களும், அம்ருத் பாரத் ரயில்களும் கேரளாவுக்குக் கிடைத்துள்ளன. கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன? கேரளம் வளருவதற்கான ஒரு எடுத்துக்காட்டு விழிஞ்ஞம் துறைமுகம். துறைமுகத்தை நான் திறந்து வைத்த 6 மாதங்களில் 150 பெரிய கப்பல்களும், 3 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்பட்டுள்ளன. கூடுதல் வேலைவாய்ப்பு ஏற்படுவதன் மூலம் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கேரளாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது ஊழல். கூட்டுறவு வங்கி மோசடி மூலம் சாதாரண மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துள்ளன இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அந்தப் பணம் திரும்பப்பெற்றுத்தரப்படும். திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு சபரிமலை ஐயப்ப சுவாமி மீது பக்தியும் நம்பிக்கையும் உள்ளன. ஆனால் சபரிமலையின் நம்பிக்கையையும், பாரம்பர்யத்தையும் இல்லாமல் ஆக்குவதற்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தியது இடதுசாரி அரசு. இப்போது சபரிமலையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றை நான் தெளிவுபடுத்துகிறேன். பா.ஜ.க கேரளாவில் ஆட்சி அமைக்கும். ஆட்சிக்கு வந்ததும் சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்ததாக இப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதுதான் மோடியின் கேரண்டி என்றார். நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும் - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

விகடன் 24 Jan 2026 10:01 am

இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக, பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் இணைந்துகொண்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை. அம்மாவின்(ஜெயலலிதா) பிள்ளைகள் நாங்கள். எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. அமித்ஷா 2021-லேயே எங்களோடு கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது நடக்கவில்லை. 2026-ல் மீண்டும் கூட்டணியில் இணைய அமித்ஷா என்னிடம் பேசும்போது பழனிசாமியும், நானும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டார். இரண்டு பேரும் ஒப்புதல் அளித்துதான் கூட்டணி உருவாகியிருக்கிறது. டிடிவி தினகரன் தற்போது எடப்பாடி பழனிசாமியும், நானும் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். இரண்டு பேரும் ஒன்றாகப் பிரசாரத்திற்குச் செல்வோம். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வராமல் விடமாட்டோம். அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று பேசியிருக்கிறார். நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம் - டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்

விகடன் 24 Jan 2026 8:32 am

நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம் - டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இச்சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருப்பதால் என்டிஏ கூட்டணி பலம்பெற்றிருக்கிறது. தமிழகத்தில் வலிமையான கூட்டணி எங்களுடையதுதான். நானும்-டிடிவி தினகரனும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் அம்மா (ஜெயலலிதா) வளர்த்த பிள்ளைகள். ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், நாங்கள் ஒன்றாக எப்போது இணைந்தோமோ.. அப்போதே அனைத்தையும் மறந்துவிட்டோம். டிடிவி தினகரன் இனி அம்மா விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்ற வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பேசியிருக்கிறார். பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது; முழு மனதோடு வந்திருக்கிறோம்- NDA கூட்டத்தில் டிடிவி பேசியது என்ன?

விகடன் 24 Jan 2026 8:10 am

மதுரை: பள்ளி வளாகத்தில் தேர்தல் திருவிழா; மாணவர்களுக்கு விழிப்புணர்வு | Photo Album

மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!

விகடன் 24 Jan 2026 6:13 am

மதுரை: பள்ளி வளாகத்தில் தேர்தல் திருவிழா; மாணவர்களுக்கு விழிப்புணர்வு | Photo Album

மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!

விகடன் 24 Jan 2026 6:13 am