தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது!- காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி பதிவு
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் தவெகவிற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் தவெகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விசில் சின்னம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது! அனைத்து கட்சிகளும் இப்போது Ready… Set… Go! என்று பதிவிட்டிருக்கிறார். தவெக விஜய் தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானப்போதும், தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
S.P Lakshmanan Interview | TTV தினகரனின் முடிவு; Vijay இனியாவது யோசிக்க வேண்டும்! | Vikatan
`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. செந்தில் பாலாஜி, வேலுமணி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக களமிறங்கியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்று தங்களின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி புள்ளிகள் கரைவேட்டி மாற்றுவது சஜகமானது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது, அதிமுக கோவை முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தது போன்றவற்றால் அதிமுகவில் களேபரம் ஏற்பட்டது. கோவை அடுத்தடுத்து சீனியர் நிர்வாகிகள் திமுக, தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாற்றுக் கட்சிக்கு சென்றவர்கள் மற்றும் ஏற்கனவே அந்தக் கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்கும் அஸைன்மென்டுடன் வேலுமணி களமிறங்கியுள்ளார். கோவை திமுக ஆனைமலை மேற்கு ஒன்றியத்தின் அவைத் தலைவராக இருந்தவர் ஈஸ்வரமூர்த்தி. அவர் அதிருப்தியில் இருந்த நிலையில் தன் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் பகுதி செயலாளராக இருந்த பார்த்திபன், கடந்த மாதம் தவெகவில் இணைந்தார். ஈஸ்வரமூர்த்தி பேரூராட்சி தலைவர் சசிக்குமார் தற்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அதிமுகவில் இணைத்துள்ளனர். மேலும் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர் சசிக்குமார், 8 கவுன்சிலர்களுடன் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மேலும் பல நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க வேலுமணி திட்டமிட்டுள்ளார். அதிமுவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேலுமணி கோவையை தனி அசைன்மென்ட்டாக கையில் எடுத்துள்ளாராம். இதனால் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது என்கிறார்கள். பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி
அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்ன என்பது நன்றாகவே தெரியும். அவருக்குக் கோபம் இருந்தாலும்கூட, மோடியை விட்டுப் போகக்கூடிய மனிதர் அவர் அல்ல. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கசப்பான விஷயங்களை மறந்து.! 2024-ல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்முடன் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) இணைந்த அவர், எப்படி 2026-ல் நம்மை விட்டுச் செல்வார்? சில மனக்கசப்பு காரணமாக தற்காலிகமாக அவர் கூட்டணியில் இருந்து விலகி இருந்திருக்கலாம். அவர் நம்முடன்தான் மீண்டும் இணைவார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்பதற்காக சில கசப்பான விஷயங்களை எல்லாம் மறந்து தினகரன் அண்ணன் கூட்டணிக்கு வந்திருக்கிறார். மிகப்பெரிய விஷயம்... இது அவருக்குக் கடினமான முடிவாகத்தான் இருந்திருக்கும். அவர் எடுத்த முடிவு மிகப்பெரிய விஷயம். இப்படி இருக்கையில் டி.டி.வி.தினகரன் குறித்து எதுவும் தெரியாமல் செல்வப்பெருந்தகை பேச வேண்டாம். மூழ்கிக்கொண்டிருக்கும் அவர்களது கூட்டணியையும், ஆட்சியையும் காப்பாற்றுவது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து பேச அவர் யார்.... ஏன் அவர் பேச வேண்டும்? என்றிருக்கிறார். ஓபிஎஸ் சத்திய சோதனை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவர்.! தொடர்ந்து ஓ.பி.எஸ்., குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஓ.பி.எஸ் அண்ணனைப் பொறுத்தவரை அவர் ஒரு பெரிய தலைவர். நல்ல மனிதர். சத்தியச் சோதனை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவர். தமிழ்நாட்டில் மிக முக்கியமான தலைவர். அரசியலில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். கனிமொழி அக்காவிற்கு என்ன பிரச்னை? தொடர்ந்து சர்ச்சையான ரஹ்மான் கருத்து குறித்த கேள்விக்கு, ரஹ்மான் ஓர் இசை மேதை. தமிழ்நாட்டின் அடையாளம் அவர். எங்கு சென்றாலும் மேடைகளில் தமிழ்தான் பேசுவார். அவர் அளித்த பேட்டியில் சில விஷயங்களை எடுத்து திரித்து அங்கும் இங்கும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. 'ராமாயணா' படத்திற்கு அவர்தான் இசையமைக்கிறார். எல்லாவிதமான படங்களுக்கும் அவர் இசையமைக்கிறார். AR ரஹ்மான் சினிமாத் துறையில் பவர் ஷிஃப்ட் எப்படி மாறி இருக்கிறது என்றுதான் அவர் கூறியிருந்தார். அது அவருடைய கருத்து. பாஜக பின்னணியில் இருக்கிறது என்று அவர் சொல்லவில்லை. அவருடைய ரசிகன் நான். அவர் கருத்து சர்ச்சையான நிலையில் விளக்கம் கொடுத்துவிட்டார். இதில் கனிமொழி அக்காவிற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை என்று பேசியிருக்கிறார்.
`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!
நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ரமேஷைச் சந்தித்து, உரையாடத் தொடங்கினோம். எனக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். தினந்தோறும் சமூகத்தில் நடப்பதைப் பார்க்கும்போது, எனக்குள் ஆத்திரம்தான் எழுந்தது. பக்தியைக் காட்டிலும் அறிவியல்தான் அவசியம் என்பதை உணர்ந்ததால், நடைமுறை வாழ்வில் காந்திய வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பொதுமக்களிடையே பட்டா, உதவித் தொகை, அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டிய அவசியம் குறித்தும், அரசின் சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு நேர்மையான முறையில் பெற வேண்டும் என்பது பற்றியும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அஹிம்சா வழியைத் தேர்ந்தெடுக்கக் காரணம்? காந்தியத்தை இந்திய நாட்டிற்குப் பிரதிபலிக்க வேண்டும், இளைஞர்களிடம் அஹிம்சை உணர்வைப் பரப்ப வேண்டும் என்பதற்காக உடை மாற்றத்திலிருந்து, காந்திய வழியைப் பின்பற்றி வருகிறேன். 2019 வரை சாதாரண கதர் உடையை அணிந்து வந்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் காந்தியைப் போன்று உடை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்தேன். தொடக்கத்தில் எனது குடும்பமும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் இது எத்தனை நாள்களுக்கு என்று கேட்டார்கள்? ஆனால் எனது வைராக்கியம், இன்றுவரை நான் இந்த உடையிலேயே எனது பாதையில் பயணித்து வருகிறேன். 2016 ஆம் ஆண்டு `அஹிம்சா சோஷியலிஸ்ட்' கட்சியைத் தொடங்கினேன். மற்ற கட்சிகள் பெயரளவிற்கு மட்டுமே அஹிம்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அஹிம்சை என்ற இலக்கை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அரசியல் 'சேவை என்பதைத் தாண்டி, வியாபாரமாக' மாறிவிட்டது. எளிய பின்னணியில் இருந்து சமூகத்திற்காக தன்னலமற்று உழைக்கக்கூடிய நபர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும். தேர்தல் நேரத்தில் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி தேர்தலில் ஒரு தத்துவத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாகக் கட்டி இருக்கிறேன். இதுவரையில் எந்த தேர்தலிலும் நான் செலுத்திய வைப்புத் தொகை திரும்பக் கிடைத்ததில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படுவதும் கிடையாது. பல கோடிகள் புழங்கும் இந்த அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் இந்த சமூகத்தில் பிறந்து விட்டோம், இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். எனது இந்தப் பயணத்தில் மக்களிடையே சற்று விழிப்புணர்வு வந்துள்ளது. அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுப்பதும் அவர்கள் லஞ்சம் கேட்டால் எதிர்க்கும் நிலையும் பாமர மக்களிடையே வந்து இருக்கிறது. தேர்தல் பரப்புரையில், `நீங்க என்ன ஜெயிச்சிடுவிங்களா?' என்று மக்களே கேட்பார்கள். `நீங்கள் தனியாக ஓட்டு கேட்கிறீர்கள்? இந்தக் காலத்தில் காந்திய கொள்கைகள் எல்லாம் எடுபடுமா?' எனப் பல கேள்விகளை மக்கள் கேட்பார்கள். தேர்தல் பரப்புரைக்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. வசதியானவர்களும், பணம் கொடுப்பவர்களும், கும்பலாக வருபவர்களும் ஒருபோதும் உங்களுக்காக உழைக்க மாட்டார்கள் என்பதை, தொடர்ந்து மக்களிடம் சொல்லி வருகிறோம். இப்போதிருக்கும் எந்த மக்கள் பிரதிநிதியாவது அதிகாரிகளை நோக்கி லஞ்சம் வாங்கக் கூடாது எனப் பேச தைரியம் இருக்கிறதா? நான் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது. மதிப்புறு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறது. இந்திய யோகா கூட்டமைப்பு சார்பில் எனக்கு கர்மயோகி விருது வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்தான வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டரை லட்சம் கடன் சுமை உள்ளதாகக் குறிப்பிட்டார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எனது குடும்பத்தின் சார்பில் 2 லட்சம் அடங்கிய காசோலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றேன். ஆனால் அதனை வாங்க மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டார். கிராமப்புறங்களில் அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை திறம்பட எடுத்துச் செல்லவும் அரசு அலுவலகங்களில் ஊழல் லஞ்சத்தை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறேன். ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தினத்தின்போது இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் கிராமங்களுக்குச் சென்று கொடியேற்ற வேண்டும். அந்த வகையில் எங்கள் கிராமத்திற்கும் வந்து கொடியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் வாயிலாக மனு ஒன்றை அனுப்பி இருக்கிறேன். தற்கால மாணவர்களிடையே காந்தியும் சென்று சேரவில்லை... அது நிச்சயமாக சென்று சேர வேண்டும். அதனால்தான் இன்று வன்முறை போராட்டங்கள், மதுபோதையில் ஒரு தலைமுறையே சீரழிந்து கொண்டிருக்கிறது. இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டம் இருக்கிறதாமே! ஆம். இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டத்தில்தான் இருக்கிறேன். இந்த சமூக சீரழிவுக்கு ஒரு விதத்தில் சினிமா இயக்குநர்களும் காரணமாக இருக்கிறார்கள். படத்தில் வன்முறைக் காட்சிகளும் ஆபாச சொல்லாடல்களும், போதை காட்சிகளும் சமூகத்தில் நஞ்சைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு பதிலாக நல்ல கருத்துக்களையும் நல்ல அரசியலையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்தச் சமூகத்தை சீர்திருத்தும் வலிமை திரைத்துறைக்கு உண்டு. ஆனால் அதை தவறுதலாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். மனிதனை மனிதன் முதலில் மதிக்க வேண்டும். மதங்கள் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றவர்கள் மீது வெறுப்பைக் கக்குவதற்கு அல்ல. நாட்டில் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்து விட்டால் நாடு நிச்சயம் வல்லரசாக மாறும்... நாட்டில் பசி, வறுமை, பாதி சமூக தீமைகள் ஒழிந்து விடும். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நாமே நினைப்போம்! அதை நோக்கியது தான் எனது இந்தப் பயணம் என்கிறார், காந்தியவாதி ரமேஷ்.
`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!
நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ரமேஷைச் சந்தித்து, உரையாடத் தொடங்கினோம். எனக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். தினந்தோறும் சமூகத்தில் நடப்பதைப் பார்க்கும்போது, எனக்குள் ஆத்திரம்தான் எழுந்தது. பக்தியைக் காட்டிலும் அறிவியல்தான் அவசியம் என்பதை உணர்ந்ததால், நடைமுறை வாழ்வில் காந்திய வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பொதுமக்களிடையே பட்டா, உதவித் தொகை, அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டிய அவசியம் குறித்தும், அரசின் சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு நேர்மையான முறையில் பெற வேண்டும் என்பது பற்றியும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அஹிம்சா வழியைத் தேர்ந்தெடுக்கக் காரணம்? காந்தியத்தை இந்திய நாட்டிற்குப் பிரதிபலிக்க வேண்டும், இளைஞர்களிடம் அஹிம்சை உணர்வைப் பரப்ப வேண்டும் என்பதற்காக உடை மாற்றத்திலிருந்து, காந்திய வழியைப் பின்பற்றி வருகிறேன். 2019 வரை சாதாரண கதர் உடையை அணிந்து வந்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் காந்தியைப் போன்று உடை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்தேன். தொடக்கத்தில் எனது குடும்பமும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் இது எத்தனை நாள்களுக்கு என்று கேட்டார்கள்? ஆனால் எனது வைராக்கியம், இன்றுவரை நான் இந்த உடையிலேயே எனது பாதையில் பயணித்து வருகிறேன். 2016 ஆம் ஆண்டு `அஹிம்சா சோஷியலிஸ்ட்' கட்சியைத் தொடங்கினேன். மற்ற கட்சிகள் பெயரளவிற்கு மட்டுமே அஹிம்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அஹிம்சை என்ற இலக்கை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அரசியல் 'சேவை என்பதைத் தாண்டி, வியாபாரமாக' மாறிவிட்டது. எளிய பின்னணியில் இருந்து சமூகத்திற்காக தன்னலமற்று உழைக்கக்கூடிய நபர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும். தேர்தல் நேரத்தில் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி தேர்தலில் ஒரு தத்துவத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாகக் கட்டி இருக்கிறேன். இதுவரையில் எந்த தேர்தலிலும் நான் செலுத்திய வைப்புத் தொகை திரும்பக் கிடைத்ததில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படுவதும் கிடையாது. பல கோடிகள் புழங்கும் இந்த அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் இந்த சமூகத்தில் பிறந்து விட்டோம், இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். எனது இந்தப் பயணத்தில் மக்களிடையே சற்று விழிப்புணர்வு வந்துள்ளது. அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுப்பதும் அவர்கள் லஞ்சம் கேட்டால் எதிர்க்கும் நிலையும் பாமர மக்களிடையே வந்து இருக்கிறது. தேர்தல் பரப்புரையில், `நீங்க என்ன ஜெயிச்சிடுவிங்களா?' என்று மக்களே கேட்பார்கள். `நீங்கள் தனியாக ஓட்டு கேட்கிறீர்கள்? இந்தக் காலத்தில் காந்திய கொள்கைகள் எல்லாம் எடுபடுமா?' எனப் பல கேள்விகளை மக்கள் கேட்பார்கள். தேர்தல் பரப்புரைக்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. வசதியானவர்களும், பணம் கொடுப்பவர்களும், கும்பலாக வருபவர்களும் ஒருபோதும் உங்களுக்காக உழைக்க மாட்டார்கள் என்பதை, தொடர்ந்து மக்களிடம் சொல்லி வருகிறோம். இப்போதிருக்கும் எந்த மக்கள் பிரதிநிதியாவது அதிகாரிகளை நோக்கி லஞ்சம் வாங்கக் கூடாது எனப் பேச தைரியம் இருக்கிறதா? நான் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது. மதிப்புறு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறது. இந்திய யோகா கூட்டமைப்பு சார்பில் எனக்கு கர்மயோகி விருது வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்தான வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டரை லட்சம் கடன் சுமை உள்ளதாகக் குறிப்பிட்டார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எனது குடும்பத்தின் சார்பில் 2 லட்சம் அடங்கிய காசோலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றேன். ஆனால் அதனை வாங்க மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டார். கிராமப்புறங்களில் அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை திறம்பட எடுத்துச் செல்லவும் அரசு அலுவலகங்களில் ஊழல் லஞ்சத்தை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறேன். ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தினத்தின்போது இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் கிராமங்களுக்குச் சென்று கொடியேற்ற வேண்டும். அந்த வகையில் எங்கள் கிராமத்திற்கும் வந்து கொடியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் வாயிலாக மனு ஒன்றை அனுப்பி இருக்கிறேன். தற்கால மாணவர்களிடையே காந்தியும் சென்று சேரவில்லை... அது நிச்சயமாக சென்று சேர வேண்டும். அதனால்தான் இன்று வன்முறை போராட்டங்கள், மதுபோதையில் ஒரு தலைமுறையே சீரழிந்து கொண்டிருக்கிறது. இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டம் இருக்கிறதாமே! ஆம். இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டத்தில்தான் இருக்கிறேன். இந்த சமூக சீரழிவுக்கு ஒரு விதத்தில் சினிமா இயக்குநர்களும் காரணமாக இருக்கிறார்கள். படத்தில் வன்முறைக் காட்சிகளும் ஆபாச சொல்லாடல்களும், போதை காட்சிகளும் சமூகத்தில் நஞ்சைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு பதிலாக நல்ல கருத்துக்களையும் நல்ல அரசியலையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்தச் சமூகத்தை சீர்திருத்தும் வலிமை திரைத்துறைக்கு உண்டு. ஆனால் அதை தவறுதலாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். மனிதனை மனிதன் முதலில் மதிக்க வேண்டும். மதங்கள் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றவர்கள் மீது வெறுப்பைக் கக்குவதற்கு அல்ல. நாட்டில் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்து விட்டால் நாடு நிச்சயம் வல்லரசாக மாறும்... நாட்டில் பசி, வறுமை, பாதி சமூக தீமைகள் ஒழிந்து விடும். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நாமே நினைப்போம்! அதை நோக்கியது தான் எனது இந்தப் பயணம் என்கிறார், காந்தியவாதி ரமேஷ்.
`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்
ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். பின்னர், `அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதாகவும்' கூறினார். இதையடுத்து தஞ்சாவூரில் இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் தஞ்சாவூர், செங்கிப்பட்டி பகுதியில் வரும் 26ம் தேதி திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இதன் ஒரு பகுதியில் மேடை அமைத்து தன் ஆதராவளர்கள் சுமார் ஆயிரம் பேரை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கிறார் வைத்திலிங்கம். இதற்காக ஆதரவாளர்களிடம் வைத்திலிங்கம், மகன்கள் பிரபு, சண்முகபிரபு, அவரது சம்பந்தி தவமணி ஆகியோர் அழைப்பு கொடுத்து வருகின்ரனர். வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் அவர் திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதை விமர்சனம் செய்தும் வருகின்றனர். வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் நேற்று இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்வதாக கூறியிருந்தார். ஆனால் இன்று குடும்பத்தினர் கூறியதாலும், உடல் நிலையை கவனத்தில் கொண்டும் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆர்.டி.ராமச்சந்திரனின் இந்த முடிவை வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அதிமுகவில் இணைய இருக்கும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரத்தில் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக வலம் வந்த முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகபிரபு, மேலவீதி சாமிநாதன், செல்லத்துரை, பில்லுக்காரத்தெரு ராஜா உள்ளிட்ட 30 பேர் வைத்தி திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதையடுத்து மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைத்து கொள்கின்றனர். இதற்காக இன்று காலையிலேயே சென்னை கிளம்பி விட்டனர். ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம் இதையறிந்த வைத்திலிங்கம் தரப்பு அப்செட் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து சாமிநாதனிடம் பேசினோம், ``எங்களை பொறுத்தவரை மறைந்த ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம். அவருடைய வாழ்நாள் எதிரி திமுக. ஜெயலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கும் காரணம் திமுக தான். அப்படிப்பட்ட திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தது எங்களுக்கு உடன்பாடில்லை. அதிகாரம் வரும் போகும். தன் சுய நலத்திற்காக, தன்னை காப்பாற்றி கொள்ள இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் வைத்திலிங்கம். முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன் என்னை போன்றவர்களிடம் இணைப்பு விழாவில் திமுகவில் இணைவதற்காக அழைத்தார் நாங்கள் மறுத்து விட்டோம். ஒருங்கிணைப்பில் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் அவருடன் இருந்தோம். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. எனவே தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் எடப்பாடி முன்னிலையில் இன்று மாலை 6 மணியளவில் அதிமுகவில் இணைகிறோம் என்றார். `மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?
ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால் - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்திரன். இந்நிலையில், நேற்று மாலை, தனது அரசியல் ஆசான் வைத்திலிங்கம் தி.மு.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து வருகின்ற 26-ம் தேதி தானும் திமுகவில் இணையப் போவதாக, செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், குடும்ப உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவும், எனது உடல்நிலை குறித்த மருத்துவரின் ஆலோசனையின் காரணமாகவும் நான் இன்று மாற்று முடிவை எடுத்திருக்கிறேன். பொது வாழ்க்கையில் இருந்து நான் விலகிக் கொள்ளப் போவதாக முடிவெடுத்திருக்கிறேன். rt ramachandran நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தவறான விஷயம் என்றபோதிலும், என் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பச் சூழ்நிலை, குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தலின் பேரில் என் நிம்மதிக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். நான் இனி எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை. தயவுகூர்ந்து அண்ணன் வைத்திலிங்கம் அவர்களும், என்னோடு இதுவரை பயணித்த தொண்டர்களும் என்னை மன்னித்து, என்னோடு இதுவரை உறுதுணையாக இருந்த கழகத் தொண்டர்கள் அவரவர் விரும்பும் கழகத்தில் இணைந்து பணியாற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இரண்டு விஷயங்கள் என் மனதை மாற்றியன. என்னைப் பெற்றெடுத்த தாய், 'உன் வளர்ப்புத் தாயான ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றுவாயா?' என்று கேட்டார். 'எனக்கு அசிங்கமாக இருக்கு. இதெல்லாம் வேலையா?' என்று என் பெண் கேட்டதும், வேதனை அடைந்தேன். இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. காலையில் வீட்டாரிடம் சொல்லிவிட்டு, இந்த முடிவை அறிவிக்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை
ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால் - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்திரன். இந்நிலையில், நேற்று மாலை, தனது அரசியல் ஆசான் வைத்திலிங்கம் தி.மு.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து வருகின்ற 26-ம் தேதி தானும் திமுகவில் இணையப் போவதாக, செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், குடும்ப உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவும், எனது உடல்நிலை குறித்த மருத்துவரின் ஆலோசனையின் காரணமாகவும் நான் இன்று மாற்று முடிவை எடுத்திருக்கிறேன். பொது வாழ்க்கையில் இருந்து நான் விலகிக் கொள்ளப் போவதாக முடிவெடுத்திருக்கிறேன். rt ramachandran நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தவறான விஷயம் என்றபோதிலும், என் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பச் சூழ்நிலை, குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தலின் பேரில் என் நிம்மதிக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். நான் இனி எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை. தயவுகூர்ந்து அண்ணன் வைத்திலிங்கம் அவர்களும், என்னோடு இதுவரை பயணித்த தொண்டர்களும் என்னை மன்னித்து, என்னோடு இதுவரை உறுதுணையாக இருந்த கழகத் தொண்டர்கள் அவரவர் விரும்பும் கழகத்தில் இணைந்து பணியாற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இரண்டு விஷயங்கள் என் மனதை மாற்றியன. என்னைப் பெற்றெடுத்த தாய், 'உன் வளர்ப்புத் தாயான ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றுவாயா?' என்று கேட்டார். 'எனக்கு அசிங்கமாக இருக்கு. இதெல்லாம் வேலையா?' என்று என் பெண் கேட்டதும், வேதனை அடைந்தேன். இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. காலையில் வீட்டாரிடம் சொல்லிவிட்டு, இந்த முடிவை அறிவிக்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை
நாயுடன் நடைபயிற்சி; விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய ஐ.ஏ.எஸ், டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமனம்!
டெல்லி மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இதற்கு முன்பு டெல்லியில் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளராக இருந்தபோது, நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார். 2022-ம் ஆண்டு தினமும் மாலையில் அங்குள்ள தியாகராஜ் மைதானத்தில் தனது நாயுடன் சஞ்சீவ் கிர்வார் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். சஞ்சீவ் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு இருந்த தடகள வீரர்கள் அனைவரையும் மாலை 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேறும் படி கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தடகள வீரர்கள் வழக்கமாக இரவு 8.30 மணி வரை விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக மாலை 7 மணிக்கே எங்களை மைதானத்தை விட்டு வெளியேறும்படி கூறினர் என்று பயிற்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டினார். ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்த சஞ்சீவ், சில நேரம் நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தடகள வீரர்களுக்கு எந்த வித இடையூறும் செய்தது கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு வீரர்களுக்காக இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்தார். இந்த நாய் சர்ச்சையை தொடர்ந்து சஞ்சீவ் கிர்வாரை மத்திய உள்துறை அமைச்சகம் லடாக்கிற்கு இடமாற்றம் செய்தது. தற்போது டெல்லியில் பா.ஜ.க அரசு பதவியேற்றுள்ள நிலையில் சஞ்சீவ் கிர்வார் டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது டெல்லி மாநகராட்சி கமிஷனராக இருக்கும் அஸ்வனிகுமார் ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாயுடன் நடைபயிற்சி; விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய ஐ.ஏ.எஸ், டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமனம்!
டெல்லி மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இதற்கு முன்பு டெல்லியில் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளராக இருந்தபோது, நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார். 2022-ம் ஆண்டு தினமும் மாலையில் அங்குள்ள தியாகராஜ் மைதானத்தில் தனது நாயுடன் சஞ்சீவ் கிர்வார் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். சஞ்சீவ் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு இருந்த தடகள வீரர்கள் அனைவரையும் மாலை 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேறும் படி கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தடகள வீரர்கள் வழக்கமாக இரவு 8.30 மணி வரை விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக மாலை 7 மணிக்கே எங்களை மைதானத்தை விட்டு வெளியேறும்படி கூறினர் என்று பயிற்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டினார். ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்த சஞ்சீவ், சில நேரம் நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தடகள வீரர்களுக்கு எந்த வித இடையூறும் செய்தது கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு வீரர்களுக்காக இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்தார். இந்த நாய் சர்ச்சையை தொடர்ந்து சஞ்சீவ் கிர்வாரை மத்திய உள்துறை அமைச்சகம் லடாக்கிற்கு இடமாற்றம் செய்தது. தற்போது டெல்லியில் பா.ஜ.க அரசு பதவியேற்றுள்ள நிலையில் சஞ்சீவ் கிர்வார் டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது டெல்லி மாநகராட்சி கமிஷனராக இருக்கும் அஸ்வனிகுமார் ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
TVK : விஜய்யின் தவெக-வுக்கு விசில் சின்னம்; அதிகாரப்பூர்வமாக அறிவித்த தேர்தல் ஆணையம்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. TVK Vijay கடந்த 2024 பிப்ரவரி 2 ஆம் தேதியில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து விக்கிரவாண்டி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மாநாடை நடத்திய விஜய் 2026 தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அங்கீகாரம் பெறாத கட்சிகள் தங்கள் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பச் சின்னங்களாக சில சின்னங்களையும் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும். கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தனி விதிமுறைகள் உள்ளது. TVK VIJAY அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். தவெக தரப்பில் ஆட்டோ, கால்பந்து, கிரிக்கெட் பேட், விசில் போன்ற சின்னங்களை விருப்பச் சின்னங்களாக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்திருந்தனர். அதிலிருந்து இப்போது விசில் சின்னத்தை தவெகவுக்கென தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.
TVK : விஜய்யின் தவெக-வுக்கு விசில் சின்னம்; அதிகாரப்பூர்வமாக அறிவித்த தேர்தல் ஆணையம்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. TVK Vijay கடந்த 2024 பிப்ரவரி 2 ஆம் தேதியில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து விக்கிரவாண்டி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மாநாடை நடத்திய விஜய் 2026 தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அங்கீகாரம் பெறாத கட்சிகள் தங்கள் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பச் சின்னங்களாக சில சின்னங்களையும் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும். கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தனி விதிமுறைகள் உள்ளது. TVK VIJAY அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். தவெக தரப்பில் ஆட்டோ, கால்பந்து, கிரிக்கெட் பேட், விசில் போன்ற சின்னங்களை விருப்பச் சின்னங்களாக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்திருந்தனர். அதிலிருந்து இப்போது விசில் சின்னத்தை தவெகவுக்கென தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.
கறிக்கோழி: `40,000 விவசாயிகள், 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதார விவகாரம்'- வெளிநடப்பு செய்த எடப்பாடி
தமிழ்நாட்டில் கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வளர்ப்பு கூலியாக வழங்கி வருகின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் வளர்ப்பு கூலியாக வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. எடப்பாடி பழனிசாமி இதனை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் ஜனவரி 21-ம் தேதி (நேற்று) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தீர்வு எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறை கைது செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப அதிமுக தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி தரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``இன்றைய தினம் சட்டமன்றத்தின் ஜீரோ அவரில் விவசாயிகளின் பிரச்னை குறித்து விவாதிக்க அவைத் தலைவரிடம் அனுமதி கேட்டோம். எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில கறிக்கோழி வளர்ப்பு பண்ணை இருக்கிறது. கறிக்கோழி பண்ணை இதில் சுமார் 40,000 விவசாயிகள் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் தொழிலில் சுமார் 5 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இது ஒரு முக்கிய தொழிலாக கருதப்படுகின்றது. கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ.6.50 வளர்ப்புக் கூலியாக வழங்கப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கோழிக் குஞ்சு வழங்கும் நிறுவனமே தீனி வழங்கினாலும், கோழி பண்ணை செட், தேங்காய் நார், மின்கட்டணம், தண்ணீர் எனப் பலமடங்கு அதன் விலைகள் உயர்ந்துட்டது. இந்த விலை உயர்வால், கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கறிக்கோழி வளர்ப்பு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என, கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஆனால் அரசு அதைக் கண்டுக்கொள்ளவில்லை. அரசு 7.12.2026, 21.1.2026 ஆகிய தேதிகளில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்து, அதை நடத்தவில்லை. சுமார் 40,000 விவசாய குடும்பங்கள், 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் ஒரு பிரச்னையை, அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு தள்ளிப்போடுகிறது. அதன்மூலம் கறிக்கோழி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. இதை ஜீரோ அவரில் பேசக்கொண்டுவந்தும் அனுமதி மறுக்கப்படுகிறது என்றால், எந்த அளவுக்கு இந்த அரசாங்கம் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். அதனால்தான் வெளிநடப்புச் செய்தோம். என்றார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
ஈரோடு: வனத்துக்குள் வழிதவறிய சிறுவர்கள்; களமிறங்கிய வனத்துறை; 5 மணி நேரத்தில் மீட்கப்பட்டது எப்படி?
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொங்காடை மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்ஷன் (6), ராசாத்தி (11) கலைவாணி (12), சிவா (11), சூர்யா (11), தமிழ்ச்செல்வன் (11) மற்றும் மணிகண்டன் (11). இந்த 7 பேரும் அந்தியூர் அருகே கிணத்தடி சோளகா பழங்குடியினர் கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் தங்கிப் படித்து வருகின்றனர். 7 பேரும் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் கடந்த திங்கள்கிழமை பள்ளிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், 6 வயது சிறுவன் தர்ஷன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என அழுததால், மற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் 6 பேரும் சிறுவன் தர்ஷனை அழைத்துக் கொண்டு புதன்கிழமை காலை 6 மணியளவில் பள்ளியில் பாதுகாப்புக்காக இருந்த சமையலரிடம் தெரிவிக்காமல் வனப் பகுதி வழியாக தங்களது சொந்த ஊரான கொங்காடை மலைக் கிராமத்திற்குச் செல்லத் திட்டமிட்டு வனப் பகுதிக்குள் சென்றுள்ளனர். காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் 7 மாணவர்களும் பள்ளியில் இல்லாததை அடுத்து பேருந்து மூலம் ஊருக்குச் சென்று விட்டார்கள் என நினைத்து கொங்காடை மலை கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை இந்நிலையில் வனப்பகுதிக்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுவன் தர்ஷனால் நடக்க முடியாததால், இரண்டு சிறுமிகள் தர்ஷனோடு வனத்துக்குள் இருந்துள்ளனர். மற்ற நான்கு சிறுவர்களும் அருகில் உள்ள காக்கையனூர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் வனப்பகுதிக்குள்ளேயே இருந்துள்ளனர். தொடர்ந்து வெளியே வந்த சிறுவர்கள், வனப்பகுதிக்குள் மூவரும் இருப்பது குறித்து அங்குள்ள கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; புதிய மைல்கல் - வனத்துறை நம்பிக்கை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வெள்ளி திருப்பூர் காவல் நிலையம் போலீஸார் மற்றும் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனப் பகுதிக்குள் போலீஸார் மற்றும் வனத்துறையினர் 5 குழுக்களாகச் சென்று தேடினர். மேலும் ட்ரோன் கேமராக்கள், தெர்மல் ட்ரோன் கேமரா மூலமும் தேடப்பட்டது. சுமார் 5 மணி நேர தேடலுக்குப் பிறகு இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் தர்ஷன் ஆகிய மூன்று பேரும் கோட்டமலை அடிவாரப் பகுதியில் இருந்ததைப் பார்த்த வேட்டைத் தடுப்பு காவலர்கள், மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். வனம் தொடர்ந்து தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்சில் இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, சிறுமிகள் மற்றும் சிறுவனை மீட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மகேஷ், நாகராஜ் மற்றும் ராஜா ஆகிய மூவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். சிறுத்தை, புலி, யானை உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை சுமார் ஐந்து மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மூவரும் பத்திரமாக மீட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? - வனத்துறை விளக்கம்!
மேயர் பதவி: ராஜ்தாக்கரே, சரத் பவாருடன் ஷிண்டே கூட்டணி - மகாராஷ்டிராவில் மாறும் கூட்டணி எல்லைகள்!
மகாராஷ்டிராவில் நடந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கு பிறகு நகராட்சி துணைத்தலைவர், மேயர் பதவியை பிடிக்க பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் மற்ற கட்சிகளின் கவுன்சிலர்களின் ஆதரவை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது. துணை தலைவர் பதவியை பிடிக்க ஆரம்பத்தில் காங்கிரஸ் மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க பெற்றது. அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் திடீரென சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்தனர். காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பா.ஜ.கவில் சேர்ந்தனர். இப்போது இப்பிரச்னை மும்பை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்நிலையில் மும்பை அருகில் உள்ள கல்யான் டோம்பிவலி மாநகராட்சியிலும் மேயர் பதவியை பிடிக்க பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தமுள்ள 122 வார்டுகளில் பா.ஜ.க 50 இடங்களிலும், சிவசேனா 54 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதிலும் மேயர் பதவியை பிடிப்பதில் இரு கட்சிகளிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. சரத்பவார் சிவசேனாவுக்கு 5 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஆதரவு கொடுத்து இருக்கிறது. இங்கு ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இப்போது திடீரென மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்து இருப்பது உத்தவ் தாக்கரேயிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜ் தாக்கரேயின் அனுமதியை பெற்றுத்தான் சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்து இருக்கிறோம் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா முன்னாள் எம்.எல்.ஏ.ராஜு பாட்டீல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சிவசேனா(ஷிண்டே)வுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து கல்யான் சிவசேனா(உத்தவ்) தலைவர் சரத்பாட்டீல் அளித்த பேட்டியில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்தார். உத்தவ் தாக்கரேயின் சிவசேனா இங்கு 11 இடங்களில் வெற்றி பெற்றது. அவர்களில் 4 பேர் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு ஆதரவு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் நான்கு பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உத்தவ் தாக்கரே கட்சி அறிவித்துள்ளது. இது தவிர சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இங்கு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அந்த ஒரு உறுப்பினரும் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே இதனால் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு மேயர் பதவியை பிடிக்கும் அளவுக்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து இருக்கிறது. ஆனால் மேயர் பதவி இம்மாத இறுதியில்தான் நடக்கும். அதுவரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. இதே போன்று மும்பை அருகில் உள்ள மற்றொரு மாநகராட்சியான உல்லாஸ் நகரிலும் மேயர் பதவியை பிடிப்பதற்கான 40 கவுன்சிலர்களின் ஆதரவை ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா பெற்று இருக்கிறது. இங்கு சிவசேனா 36 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கல்யான் டோம்பிவலி மற்றும் உல்லாஸ் நகர் மேயர் பதவி குறித்து முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ் மும்பை திரும்பியதும் முடிவு செய்யப்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் ரவீந்திர சவான் தெரிவித்துள்ளார். மும்பையில் மேயர் பதவியை பிடிக்க துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். ஒரே சின்னத்தில் அஜித்பவார், சரத்பவார் கட்சிகள் போட்டி மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலில் சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடிகாரம் சின்னத்தில் போட்டியிடுவது என்று இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. !
``உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் - கொதிக்கும் பியூஷ் கோயல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று காலை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்றார். அங்கு பா.ஜ.க தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார். அதைத் தொடர்ந்து பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமி இல்லத்திலிருந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் அப்போது, ``தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியின் தலைவர எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அவருடன் காலை உணவு உண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையிலும், தமிழ்நாட்டில் பழனிசாமியின் வழிகாட்டுதலிலும், என்.டி.ஏ கூட்டணி இந்தத் தி.மு.க அரசை முற்றிலுமாகத் தூக்கியெறியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஊழல் நிறைந்த, திறமையற்ற, சமரசம் செய்து கொண்டு, வளர்ச்சிக்கு எதிரான இந்தத் தி.மு.க அரசு, வரவிருக்கும் தேர்தலில் நிச்சயமாகத் தோல்வியடைய போகிறது. எனது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் அனைவரும் வாரிசு அரசியல், ஊழலைத் தவிர, தமிழ்நாட்டின் நலனுக்காகவோ அல்லது முன்னேற்றத்திற்காகவோ திமுக அரசு எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்திருக்கிறார்கள். உள் கட்டமைப்புகள் சிதைந்து வருகின்றன. முறையற்ற நிர்வாகம், ஊழல் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான செயல்பாடுகளே தி.மு.க-வின் அடையாளமாக மாறியுள்ளன. எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோத கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உதயநிதி ஸ்டாலினின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக உயர் நீதிமன்றமும் நேற்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. வெறுப்புப் பேச்சைத் தூண்டியதற்காகவும், மக்களிடையே பிரிவினையை உண்டாக்க முயன்றதற்காகவும் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவிருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இதற்காக ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. `நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு பிரதமரையும், எடப்பாடி பழனிசாமியையும் அ.தி.மு.க தலைமையிலான வலுவான கூட்டணியின் பிற தலைவர்களையும் சந்திக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். வருகிற ஏப்ரல் மாதம் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வரும். அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும். வளர்ச்சியைத் தரும். உள்கட்டமைப்பை மேம்படுத்தும். நல்லாட்சியை வழங்கும். எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டின் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் பணியாற்றுவோம். இதன் மூலம் தமிழ்நாடு மீண்டும் நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு உன்னதமான மாநிலமாக மாறும். தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பெருமையையும் நாங்கள் மீட்டெடுப்போம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் எனத் தெரிவித்திருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
``உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் - கொதிக்கும் பியூஷ் கோயல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று காலை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்றார். அங்கு பா.ஜ.க தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார். அதைத் தொடர்ந்து பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமி இல்லத்திலிருந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் அப்போது, ``தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியின் தலைவர எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அவருடன் காலை உணவு உண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையிலும், தமிழ்நாட்டில் பழனிசாமியின் வழிகாட்டுதலிலும், என்.டி.ஏ கூட்டணி இந்தத் தி.மு.க அரசை முற்றிலுமாகத் தூக்கியெறியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஊழல் நிறைந்த, திறமையற்ற, சமரசம் செய்து கொண்டு, வளர்ச்சிக்கு எதிரான இந்தத் தி.மு.க அரசு, வரவிருக்கும் தேர்தலில் நிச்சயமாகத் தோல்வியடைய போகிறது. எனது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் அனைவரும் வாரிசு அரசியல், ஊழலைத் தவிர, தமிழ்நாட்டின் நலனுக்காகவோ அல்லது முன்னேற்றத்திற்காகவோ திமுக அரசு எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்திருக்கிறார்கள். உள் கட்டமைப்புகள் சிதைந்து வருகின்றன. முறையற்ற நிர்வாகம், ஊழல் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான செயல்பாடுகளே தி.மு.க-வின் அடையாளமாக மாறியுள்ளன. எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோத கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உதயநிதி ஸ்டாலினின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக உயர் நீதிமன்றமும் நேற்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. வெறுப்புப் பேச்சைத் தூண்டியதற்காகவும், மக்களிடையே பிரிவினையை உண்டாக்க முயன்றதற்காகவும் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவிருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இதற்காக ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. `நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு பிரதமரையும், எடப்பாடி பழனிசாமியையும் அ.தி.மு.க தலைமையிலான வலுவான கூட்டணியின் பிற தலைவர்களையும் சந்திக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். வருகிற ஏப்ரல் மாதம் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வரும். அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும். வளர்ச்சியைத் தரும். உள்கட்டமைப்பை மேம்படுத்தும். நல்லாட்சியை வழங்கும். எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டின் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் பணியாற்றுவோம். இதன் மூலம் தமிழ்நாடு மீண்டும் நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு உன்னதமான மாநிலமாக மாறும். தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பெருமையையும் நாங்கள் மீட்டெடுப்போம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் எனத் தெரிவித்திருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
`திமுக-வினரை சந்திக்கக் கூடாது’ காங்கிரஸ் தடை டு `சீட்டே வேண்டாம்' - `பூ’ நடிகை டென்சன் | கழுகார்
- காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்குத் தடை! ``தி.மு.க-வினர் யாரையும் சந்திக்கக் கூடாது!’’ அண்மையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களில், ஏற்கெனவே மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்களில் மூன்று பேருக்கு மட்டுமே மீண்டும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களெல்லாம் புதியவர்கள். சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் மேலிடக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலும், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரின் பரிந்துரையிலும் இந்த மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறதாம். காங்கிரஸ் கடந்த ஜன. 20-ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழுவுக்கு முன்பாக, அனைத்து மாவட்டத் தலைவர்களுக்கும் மெசேஜ் அனுப்பிய ஜோடங்கர், 'காங்கிரஸ் தலைவர்களைத் தவிர, வேறு எந்தக் கட்சிப் பிரமுகரையும் சென்று சந்திக்கக் கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். உள்ளடி வேலைகளில் ஈடுபட்டால், கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என்று எச்சரித்தாராம். செயற்குழுவிலும் அதையே சொல்லியிருக்கிறார். ''மாவட்டத் தலைவர் பதவி கிடைத்தவுடன், லோக்கலில் இருக்கும் அமைச்சர்களைச் சந்தித்து வாழ்த்து பெற சிலர் முடிவெடுத்திருந்தனர். அதைத் தெரிந்துகொண்டுதான் யாரையுமே சந்திக்கக் கூடாது என்று தடைபோட்டுவிட்டார் ஜோடங்கர்'' என்கிறார்கள் கதர்கள். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் நீடிக்கும் நிலையில், ஜோடங்கரின் தடை உத்தரவு கதர்களிடம் பேசுபொருளாகியிருக்கிறது. 'டோஸ்'விட்ட டி.ஜி.பி அலுவலகம்! களத்துக்குச் செல்லாத எஸ்.பி... தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தின் 'விவேகமான' எஸ்.பி., தன் மாவட்டத்துக்குள் பெரிய அளவில் குற்றங்கள் நிகழ்ந்தாலும்கூட, சம்பவ இடத்துக்குச் செல்வது கிடையாதாம். கடந்த பொங்கல் தினத்தன்று அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியாவில் கஞ்சா போதையில் இரட்டைக்கொலைச் சம்பவம் நடந்தது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகப் பொங்கிக்கொண்டிருந்த நிலையிலும், விசாரணை செய்யக்கூட, சம்பவ இடத்துக்குச் செல்லவில்லையாம் அந்த அதிகாரி. தகவலறிந்து, டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து எஸ்.பி-க்குக் கடும் டோஸ் விழுந்திருக்கிறது. டி.ஜி.பி. அலுவலகம் அந்தக் கோபத்தில், 'ஒழுங்கா வேலை பாரு... இல்லைன்னா சஸ்பெண்ட் ஆர்டர் வரும்' என்று தனக்குக்கீழ் பணிபுரிபவர்களை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்துவிட்டாராம் 'விவேகமான' அதிகாரி. 'அவரு வேலை பார்க்காததுக்கு எங்களைத் திட்டுறது எந்த வகையில நியாயம்..?' என்று புலம்பித் தீர்க்கிறார்கள் மாவட்ட காக்கிகள். 'விவேகமான' அதிகாரிமீது 'கறார்' வடமண்டல உச்ச அதிகாரியும் மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதால், விரைவில் ஆக்ஷன் பாயலாம்’ என்கிறார்கள். கடுகடுப்பில் அமலாக்கத்துறை! சுற்றலில்விட்ட வேலூர் காக்கிகள்... சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரளாவைச் சேர்ந்த சி.எம்.சி மருத்துவமனை மருத்துவர் பிளிங்கின் என்பவரின் அறையைச் சோதனை செய்தனர். சோதனையில், அவருடைய அறையிலிருந்து 33 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்திருக்கிறார்கள். அதை எடுத்துக்கொண்டு, வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குப் புகாரளிக்க அமலாக்கத்துறை டீம் சென்றபோது, போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவில் புகாரளிக்கச் சொல்லி அனுப்பிவிட்டார்களாம் காவல் நிலையத்தில் இருந்தவர்கள். அமலாக்கத்துறை போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவினரோ, '``மூன்று கிலோவுக்கு மேல் கஞ்சா இருந்தால்தான் நாங்கள் வழக்கை எடுத்துக்கொள்வோம். நீங்கள் வடக்கு காவல் நிலையத்துக்கே சென்று புகார் சொல்லுங்கள்...’’ என்று வந்த இடத்துக்கே திருப்பி அனுப்பி, சுற்றலில் விட்டிருக்கிறார்கள்ள். மீண்டும் வடக்கு காவல் நிலையத்துக்கு வந்த அமலாக்கத்துறை டீம், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவுசெய்ய வைத்திருக்கிறது. அங்கும் இங்குமாகத் தங்களை அலையவிட்ட வேலூர் காக்கிகள்மீது, பயங்கர கடுப்பில் இருக்கிறதாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பு. மிஸ்டர் கழுகு: தினகரனுக்கு உள்ளடி வேலை... ஒதுக்கப்பட்ட அண்ணாமலை! - டென்ஷனான `பூ’ நடிகை ``எனக்கு சீட்டே வேண்டாம்...’’ வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணிகளைச் சத்தமில்லாமல் செய்ய ஆரம்பித்திருக்கிறதாம் மலர்க் கட்சி. தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் தொகுதிக்கு `பாடி பில்டிங்’ நடிகர், சாத்தூரில் மாநிலத் தலைவர், செங்கல்பட்டில் `பாகவதர்’ என்று இப்போதே பட்டியல் தயாராகிவருகிறதாம். அந்த வரிசையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை `பூ’ நடிகைக்குக் கொடுத்துவிட கட்சிக்குள் சிலர் பேசியிருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் டென்ஷனான `பூ’ நடிகை, '``சின்னவர்கூட மோதவிட்டு என்னைய காலி செய்யலாம்னு பிளான் பண்றாங்க. ஜெயிக்கிற தொகுதியா குடுத்தா போட்டியிடுறேன். இல்லைன்னா, எனக்கு சீட்டே வேண்டாம்...’’ என்று டெல்லியிலுள்ள சீனியர்கள் சிலரிடம் கொதித்துவிட்டாராம். `இன்னும் லிஸ்ட் முடிவாகவில்லை. அதற்குள்ளாக ஏன் அவசரப்படுகிறீர்கள்?’ என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள் அந்த சீனியர்கள். மலர்க் கட்சிக்குள் வந்ததிலிருந்து பெரிதாக அங்கீகாரம் ஏதுமில்லாத வருத்தத்தில் இருக்கும் `பூ’ நடிகைக்கு, இந்த சேப்பாக்கம் தொகுதி விவகாரம் மேலும் அதிருப்தியைக் கூட்டியிருக்கிறதாம். அதிரடிக்கும் சர்வேக்கள்... பரிதவிக்கும் கழகங்கள்… 2026 தேர்தல் யாருக்கு சாதகம்? `டோஸ்’ விட்ட சூரியக் கட்சித் தலைமை! ``இதைச் சொல்றதுக்கு வெட்கமா இல்லையா..?’’ கோட்டை மாவட்டத்தின் சூரியக் கட்சி மாவட்டச் செயலாளர், தன் எல்லைக்கு உட்பட்ட `மலை’ தொகுதியில் போட்டியிடத் தயாராகிக்கொண்டிருந்தார். அதற்காக சர்வேக்களையும் எடுத்திருந்தார். அதில், தொகுதியிலுள்ள இலைக் கட்சியின் `குட்கா மாஜி’க்கு செல்வாக்கு மலைபோல இருப்பதாகவும், `உங்களுக்கு வெற்றி வாய்ப்பு ரொம்பவே குறைவு’ என்றும் ரிசல்ட் வந்ததாம். அரண்டுபோன மாவட்டச் செயலாளர், `மலை’ தொகுதியை விட்டுவிட்டு `கோட்டை’ தொகுதிக்கு அடிபோட்டிருக்கிறார். தன் விருப்பத்தைத் தலைமையிடம் தெரிவிக்கவும், `மாவட்டச் செயலாளராக இருக்குற உங்களாலயே அந்தத் தொகுதியில ஜெயிக்க முடியாதுன்னு சொல்றதுக்கு வெட்கமா இல்லையா... அந்த அளவுக்குத்தான் கட்சியை வளர்த்து வெச்சிருக்கீங்களா..?' என்று கடுகடுத்துவிட்டதாம் தலைமை. அதை எதிர்பார்க்காத மாவட்டச் செயலாளர், `குட்கா மாஜியை எதிர்த்தே களமாடலாமா... இல்லை வேறு ஏதாவது ரூட்டைப் பிடித்து `கோட்டை தொகுதிக்கு முயற்சி செய்யலாமா?' என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறாராம். மிஸ்டர் கழுகு: தினகரனுக்கு உள்ளடி வேலை... ஒதுக்கப்பட்ட அண்ணாமலை!
`திமுக-வினரை சந்திக்கக் கூடாது’ காங்கிரஸ் தடை டு `சீட்டே வேண்டாம்' - `பூ’ நடிகை டென்சன் | கழுகார்
- காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்குத் தடை! ``தி.மு.க-வினர் யாரையும் சந்திக்கக் கூடாது!’’ அண்மையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களில், ஏற்கெனவே மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்களில் மூன்று பேருக்கு மட்டுமே மீண்டும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களெல்லாம் புதியவர்கள். சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் மேலிடக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலும், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரின் பரிந்துரையிலும் இந்த மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறதாம். காங்கிரஸ் கடந்த ஜன. 20-ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழுவுக்கு முன்பாக, அனைத்து மாவட்டத் தலைவர்களுக்கும் மெசேஜ் அனுப்பிய ஜோடங்கர், 'காங்கிரஸ் தலைவர்களைத் தவிர, வேறு எந்தக் கட்சிப் பிரமுகரையும் சென்று சந்திக்கக் கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். உள்ளடி வேலைகளில் ஈடுபட்டால், கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என்று எச்சரித்தாராம். செயற்குழுவிலும் அதையே சொல்லியிருக்கிறார். ''மாவட்டத் தலைவர் பதவி கிடைத்தவுடன், லோக்கலில் இருக்கும் அமைச்சர்களைச் சந்தித்து வாழ்த்து பெற சிலர் முடிவெடுத்திருந்தனர். அதைத் தெரிந்துகொண்டுதான் யாரையுமே சந்திக்கக் கூடாது என்று தடைபோட்டுவிட்டார் ஜோடங்கர்'' என்கிறார்கள் கதர்கள். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் நீடிக்கும் நிலையில், ஜோடங்கரின் தடை உத்தரவு கதர்களிடம் பேசுபொருளாகியிருக்கிறது. 'டோஸ்'விட்ட டி.ஜி.பி அலுவலகம்! களத்துக்குச் செல்லாத எஸ்.பி... தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தின் 'விவேகமான' எஸ்.பி., தன் மாவட்டத்துக்குள் பெரிய அளவில் குற்றங்கள் நிகழ்ந்தாலும்கூட, சம்பவ இடத்துக்குச் செல்வது கிடையாதாம். கடந்த பொங்கல் தினத்தன்று அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியாவில் கஞ்சா போதையில் இரட்டைக்கொலைச் சம்பவம் நடந்தது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகப் பொங்கிக்கொண்டிருந்த நிலையிலும், விசாரணை செய்யக்கூட, சம்பவ இடத்துக்குச் செல்லவில்லையாம் அந்த அதிகாரி. தகவலறிந்து, டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து எஸ்.பி-க்குக் கடும் டோஸ் விழுந்திருக்கிறது. டி.ஜி.பி. அலுவலகம் அந்தக் கோபத்தில், 'ஒழுங்கா வேலை பாரு... இல்லைன்னா சஸ்பெண்ட் ஆர்டர் வரும்' என்று தனக்குக்கீழ் பணிபுரிபவர்களை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்துவிட்டாராம் 'விவேகமான' அதிகாரி. 'அவரு வேலை பார்க்காததுக்கு எங்களைத் திட்டுறது எந்த வகையில நியாயம்..?' என்று புலம்பித் தீர்க்கிறார்கள் மாவட்ட காக்கிகள். 'விவேகமான' அதிகாரிமீது 'கறார்' வடமண்டல உச்ச அதிகாரியும் மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதால், விரைவில் ஆக்ஷன் பாயலாம்’ என்கிறார்கள். கடுகடுப்பில் அமலாக்கத்துறை! சுற்றலில்விட்ட வேலூர் காக்கிகள்... சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரளாவைச் சேர்ந்த சி.எம்.சி மருத்துவமனை மருத்துவர் பிளிங்கின் என்பவரின் அறையைச் சோதனை செய்தனர். சோதனையில், அவருடைய அறையிலிருந்து 33 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்திருக்கிறார்கள். அதை எடுத்துக்கொண்டு, வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குப் புகாரளிக்க அமலாக்கத்துறை டீம் சென்றபோது, போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவில் புகாரளிக்கச் சொல்லி அனுப்பிவிட்டார்களாம் காவல் நிலையத்தில் இருந்தவர்கள். அமலாக்கத்துறை போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவினரோ, '``மூன்று கிலோவுக்கு மேல் கஞ்சா இருந்தால்தான் நாங்கள் வழக்கை எடுத்துக்கொள்வோம். நீங்கள் வடக்கு காவல் நிலையத்துக்கே சென்று புகார் சொல்லுங்கள்...’’ என்று வந்த இடத்துக்கே திருப்பி அனுப்பி, சுற்றலில் விட்டிருக்கிறார்கள்ள். மீண்டும் வடக்கு காவல் நிலையத்துக்கு வந்த அமலாக்கத்துறை டீம், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவுசெய்ய வைத்திருக்கிறது. அங்கும் இங்குமாகத் தங்களை அலையவிட்ட வேலூர் காக்கிகள்மீது, பயங்கர கடுப்பில் இருக்கிறதாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பு. மிஸ்டர் கழுகு: தினகரனுக்கு உள்ளடி வேலை... ஒதுக்கப்பட்ட அண்ணாமலை! - டென்ஷனான `பூ’ நடிகை ``எனக்கு சீட்டே வேண்டாம்...’’ வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணிகளைச் சத்தமில்லாமல் செய்ய ஆரம்பித்திருக்கிறதாம் மலர்க் கட்சி. தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் தொகுதிக்கு `பாடி பில்டிங்’ நடிகர், சாத்தூரில் மாநிலத் தலைவர், செங்கல்பட்டில் `பாகவதர்’ என்று இப்போதே பட்டியல் தயாராகிவருகிறதாம். அந்த வரிசையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை `பூ’ நடிகைக்குக் கொடுத்துவிட கட்சிக்குள் சிலர் பேசியிருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் டென்ஷனான `பூ’ நடிகை, '``சின்னவர்கூட மோதவிட்டு என்னைய காலி செய்யலாம்னு பிளான் பண்றாங்க. ஜெயிக்கிற தொகுதியா குடுத்தா போட்டியிடுறேன். இல்லைன்னா, எனக்கு சீட்டே வேண்டாம்...’’ என்று டெல்லியிலுள்ள சீனியர்கள் சிலரிடம் கொதித்துவிட்டாராம். `இன்னும் லிஸ்ட் முடிவாகவில்லை. அதற்குள்ளாக ஏன் அவசரப்படுகிறீர்கள்?’ என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள் அந்த சீனியர்கள். மலர்க் கட்சிக்குள் வந்ததிலிருந்து பெரிதாக அங்கீகாரம் ஏதுமில்லாத வருத்தத்தில் இருக்கும் `பூ’ நடிகைக்கு, இந்த சேப்பாக்கம் தொகுதி விவகாரம் மேலும் அதிருப்தியைக் கூட்டியிருக்கிறதாம். அதிரடிக்கும் சர்வேக்கள்... பரிதவிக்கும் கழகங்கள்… 2026 தேர்தல் யாருக்கு சாதகம்? `டோஸ்’ விட்ட சூரியக் கட்சித் தலைமை! ``இதைச் சொல்றதுக்கு வெட்கமா இல்லையா..?’’ கோட்டை மாவட்டத்தின் சூரியக் கட்சி மாவட்டச் செயலாளர், தன் எல்லைக்கு உட்பட்ட `மலை’ தொகுதியில் போட்டியிடத் தயாராகிக்கொண்டிருந்தார். அதற்காக சர்வேக்களையும் எடுத்திருந்தார். அதில், தொகுதியிலுள்ள இலைக் கட்சியின் `குட்கா மாஜி’க்கு செல்வாக்கு மலைபோல இருப்பதாகவும், `உங்களுக்கு வெற்றி வாய்ப்பு ரொம்பவே குறைவு’ என்றும் ரிசல்ட் வந்ததாம். அரண்டுபோன மாவட்டச் செயலாளர், `மலை’ தொகுதியை விட்டுவிட்டு `கோட்டை’ தொகுதிக்கு அடிபோட்டிருக்கிறார். தன் விருப்பத்தைத் தலைமையிடம் தெரிவிக்கவும், `மாவட்டச் செயலாளராக இருக்குற உங்களாலயே அந்தத் தொகுதியில ஜெயிக்க முடியாதுன்னு சொல்றதுக்கு வெட்கமா இல்லையா... அந்த அளவுக்குத்தான் கட்சியை வளர்த்து வெச்சிருக்கீங்களா..?' என்று கடுகடுத்துவிட்டதாம் தலைமை. அதை எதிர்பார்க்காத மாவட்டச் செயலாளர், `குட்கா மாஜியை எதிர்த்தே களமாடலாமா... இல்லை வேறு ஏதாவது ரூட்டைப் பிடித்து `கோட்டை தொகுதிக்கு முயற்சி செய்யலாமா?' என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறாராம். மிஸ்டர் கழுகு: தினகரனுக்கு உள்ளடி வேலை... ஒதுக்கப்பட்ட அண்ணாமலை!
Greenland அரசியல்: Trump போடும் Business கணக்கு; 3rd World war உருவாகுமா? | Bernard D' Sami
DMK: அழைப்புவிடுத்த அன்பில்; வைத்திலிங்கம் வைத்த டிமாண்ட் | நடந்தது என்ன? | Vikatan
``இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள் - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக செல்வப்பெருந்தகை!
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்தச் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``யாரையும் புண்படுத்தும் எண்ணம் என்னுடைய நோக்கமில்லை. இந்தியனாக இருப்பதை ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம் எனத் தெரிவித்திருந்தார். ஆனாலும், பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் எம்.பி கனிமொழி, ஜோதிமணி, மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா போன்ற பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகையும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், `` இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்திற்கு கண்டனம். உலகளவில் இந்திய இசைக்கு பெருமை சேர்த்தவர், ஆஸ்கர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர், இசை அமைப்பாளர் திரு.ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள். அவருக்கு எதிராக சமீப காலமாக முன்வைக்கப்படும் தேவையற்ற, அடிப்படை அற்ற விமர்சனங்கள் மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கின்றது. பல தசாப்தங்களாக இசையின் மூலம் மனிதநேயம், அமைதி, ஒற்றுமை ஆகிய மதிப்புகளை உலகம் முழுவதும் பரப்பி வரும் திரு.ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. கலைஞர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்;. மேலும், அவர் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று அவர் பதிலளித்துள்ளார். செல்வப் பெருந்தகை இந்நிலையில் அவர் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்துத் தாக்குதல் நடத்துவதும், அவமதிக்கும் வகையிலும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும் ஜனநாயகத்திற்கும், கலாச்சார மரபுகளுக்கும் முற்றிலும் முரணானவை. கலைஞர்களை அவர்களின் படைப்புகளின் அடிப்படையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் அவர்களின் சாதனைகளையும், சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகளையும் புறக்கணித்து, இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை. எனவே, இசை மேதை திரு.ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் இத்தகைய கடுமையான விமர்சனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். கலை, கலாச்சாரம், மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் அனைவரும் இத்தகைய செயல்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பதும் கவலையளிக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு
கேரளா: பினராயி விஜயனை பாஜக கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர்; CPM-ன் பதில் என்ன தெரியுமா?
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சராக ராம்தாஸ் அத்வாலே உள்ளார். இவர் தலைவராக உள்ள ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது. ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று கேரள மாநிலம் கண்ணூருக்குச் சென்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், கேரளாவில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைய வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் சேர்ந்து நின்றால் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். கேரளாவின் வளர்ச்சிக்காகத் தாராளமாக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறலாம். விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் பெரிய பாய்ச்சலை கேரளா அடைய முடியும். பினராயி விஜயன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதால் நீங்கள் பா.ஜ.க-வாக ஆகிவிடமாட்டீர்கள். பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க-வை எதிர்க்கலாம், ஆனால் வளர்ச்சியை எதிர்க்கக் கூடாது. கொள்கை ரீதியாக பா.ஜ.க-வுக்கும், சி.பி.எம் கட்சிக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக கருத்து இருந்தாலும், வளர்ச்சி என்ற முறையில் இந்தப் பாகுபாடு தேவை இல்லை. என்.டி.ஏ-வின் கூட்டணிக் கட்சியாக இடதுசாரிகளை வரவேற்கிறோம். பினராயி விஜயனை கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம் நாட்டில் மட்டும் அல்ல, உலக நாடுகளில் 70 சதவிகிதம் மக்கள் ஆதரவைப் பெற்றவர் பிரதமர் மோடி. குறைந்தபட்ச திட்டத்தின் ஒருபகுதியாக நாட்டின் வளர்ச்சிக்காக சி.பி.எம் தலைமையிலான கேரளத்தின் எல்.டி.எஃப் கூட்டணி என்.டி.ஏ கூட்டணியில் அங்கமாக வேண்டும் என்றார். மத்திய அமைச்சரின் கூட்டணி அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன், கேரள அரசியலைப் பற்றி மத்திய அமைச்சருக்குப் போதுமான புரிதல் இல்லை. கேரள இடதுசாரி இயக்கம் ஒவ்வொரு கட்டத்திலும் போராடித்தான் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக முன்னேறி உள்ளது என்றார். கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது
கேரளா: பினராயி விஜயனை பாஜக கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர்; CPM-ன் பதில் என்ன தெரியுமா?
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சராக ராம்தாஸ் அத்வாலே உள்ளார். இவர் தலைவராக உள்ள ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது. ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று கேரள மாநிலம் கண்ணூருக்குச் சென்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், கேரளாவில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைய வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் சேர்ந்து நின்றால் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். கேரளாவின் வளர்ச்சிக்காகத் தாராளமாக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறலாம். விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் பெரிய பாய்ச்சலை கேரளா அடைய முடியும். பினராயி விஜயன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதால் நீங்கள் பா.ஜ.க-வாக ஆகிவிடமாட்டீர்கள். பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க-வை எதிர்க்கலாம், ஆனால் வளர்ச்சியை எதிர்க்கக் கூடாது. கொள்கை ரீதியாக பா.ஜ.க-வுக்கும், சி.பி.எம் கட்சிக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக கருத்து இருந்தாலும், வளர்ச்சி என்ற முறையில் இந்தப் பாகுபாடு தேவை இல்லை. என்.டி.ஏ-வின் கூட்டணிக் கட்சியாக இடதுசாரிகளை வரவேற்கிறோம். பினராயி விஜயனை கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம் நாட்டில் மட்டும் அல்ல, உலக நாடுகளில் 70 சதவிகிதம் மக்கள் ஆதரவைப் பெற்றவர் பிரதமர் மோடி. குறைந்தபட்ச திட்டத்தின் ஒருபகுதியாக நாட்டின் வளர்ச்சிக்காக சி.பி.எம் தலைமையிலான கேரளத்தின் எல்.டி.எஃப் கூட்டணி என்.டி.ஏ கூட்டணியில் அங்கமாக வேண்டும் என்றார். மத்திய அமைச்சரின் கூட்டணி அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன், கேரள அரசியலைப் பற்றி மத்திய அமைச்சருக்குப் போதுமான புரிதல் இல்லை. கேரள இடதுசாரி இயக்கம் ஒவ்வொரு கட்டத்திலும் போராடித்தான் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக முன்னேறி உள்ளது என்றார். கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது
கோவை: ரூ. 300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பிரமாண்டமான பெரியார் அறிவுலகம் | Photo Album
பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பெரியார் காலாவதியானவரா, காலம் கடந்தவரா? பிறந்ததினப் பகிர்வு
கோவை: ரூ. 300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பிரமாண்டமான பெரியார் அறிவுலகம் | Photo Album
பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பெரியார் அறிவுலகம் பெரியார் காலாவதியானவரா, காலம் கடந்தவரா? பிறந்ததினப் பகிர்வு
OPS: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன் - ஓபிஎஸ் விளக்கம்
தேனி செல்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவரை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வரவேற்றார். தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். ஓபிஎஸ் வைத்தியலிங்கம் தி.மு.க-வில் இணைந்தது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தமிழ்நாடு வரும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை. தி.மு.க-வில் இணைவீர்களா என்று கேட்கிறீர்கள். அதுபற்றி உங்களை அழைத்து கூறுவேன். பொறுமையாக இருங்கள். தொடர்ந்து என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன் என்றார். பின்னர், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து வெல்லமண்டி நடராஜனும் காரில் ஏறி புறப்பட்டார். OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?
``இதற்குப் பிறகும் துணை முதல்வர் பதவியில் இருப்பதா? - உதயநிதி ஸ்டாலினை சாடும் பாஜக
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டு சனாதான ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், `சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. டெங்கு, மலேரியாவைப் போல் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் தமிழ்நாட்டின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் படங்களை பதிவிட்டு, சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். அது தொடர்பாக திருச்சியில் அமித் மால்வியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமித் மாள்வியா மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமித் மால்வியா மீதான வழக்கை நேற்று ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலின் இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``உயர் நீதிமன்றம் அமித் மால்வியாவுக்கு எதிரான தி.மு.க-வின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது மட்டுமல்லாமல், இந்தக் கருத்து தி.மு.க-வின் இந்துக்களுக்கு எதிரான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மரபணுவின் பின்னணியில் இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளது. உயர் நீதிமன்றக் கண்டனத்திற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவரை உடனடியாக துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் இந்த நாட்டின் 80 சதவீத மக்கள்தொகைக்கு எதிராக, அதாவது இந்து சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உதயநிதியின் கருத்து இனப்படுகொலைக்கான அழைப்பு. எனக் குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ்: கண்ணாம்மூச்சி ஆடும் டெல்லி; தமிழ்நாட்டில் பிளான் B - ஸ்கெட்ச் யாருக்கு?!
'தமிழ்நாட்டில் 7, பாஜக ரூட்டில் ஒரு ராஜ்ய சபா சீட்' - விட்டுக்கொடுத்த தினகரனுக்கு டெல்லி `பரிசு'?
'விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' எனச் சொல்லி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான கோபங்களை விட்டுக் கொடுத்து என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வை இணைத்திருக்கிறார் டிடிவி தினகரன். டெல்லியின் பேச்சுக்கு மரியாதைக்கு கொடுத்து கூட்டணிக்கு வந்ததால் அ.ம.மு.க-வுக்கு 'ராஜ்ய சபா சீட்' பரிசாக கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். டிடிவி தினகரன் நம்மிடம் பேசிய அவர்கள், 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினார் டிடிவி தினகரன். '18 சீட் கொடுத்தால் கூட்டணிக்கு வருகிறேன்' என பா.ஜ.க தலைமைக்கு தூதுவிட்டார். பா.ஜ.க முயற்சித்தும்கூட சசிகலா, தினகரன் என யாரும் கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதிக்காட்டியது எடப்பாடி - பன்னீர் தரப்பு. இதனால் அப்செட்டான டிடிவி தினகரன் தே.மு.தி.க உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அவரை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளாததன் விளைவாக அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரிந்து 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவியதோடு ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் இழக்கும் நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு 2026-ல் தி.மு.க-வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்தார் என்றனர். எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரங்கள் குறித்து அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தோம். அதன்பிறகு 2025 ஏப்ரல் மாதம் அ.தி.மு.க என்.டி.ஏ-வுக்குள் வந்தவுடன் 'அ.ம.மு.க கூட்டணியில் இருக்கக்கூடாது' என கருதியது அ.தி.மு.க. எங்களுக்கான முக்கியத்துவம் குறையத்தொடங்கியதும் என்.டி.ஏ-வைவிட்டு விலகினோம். ஆனால் கடந்த மூன்றுமாதமாக எங்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியது டெல்லி. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தினகரன். 'அ.ம.மு.க வேண்டாம்' என முன்பு முரண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக சொன்னார்கள். டெல்லியும் கூட்டணிக்கு வரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து நாங்களும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம். ஆரம்பத்தில் 18 சீட் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. மோடி - அமித் ஷா 10 சீட்டுக்கு மேல் வாய்ப்பில்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியுடன் கலந்தாலோசித்து 7 எம்.எல்.ஏ தொகுதிகளாக ஒப்பந்தமாகியிருக்கிறது. அதோடு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருந்து ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்றனர். கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கினாலும்கூட தனது சொந்த கணக்கிலிருந்து எம்.பி சீட் கொடுத்து அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் இழுத்திருக்கிறது பாஜக என்கிற தகவல் தான் தற்போது அரசியல் மட்டத்தில் ஹாட் டாப்பிக்.!
'தமிழ்நாட்டில் 7, பாஜக ரூட்டில் ஒரு ராஜ்ய சபா சீட்' - விட்டுக்கொடுத்த தினகரனுக்கு டெல்லி `பரிசு'?
'விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' எனச் சொல்லி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான கோபங்களை விட்டுக் கொடுத்து என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வை இணைத்திருக்கிறார் டிடிவி தினகரன். டெல்லியின் பேச்சுக்கு மரியாதைக்கு கொடுத்து கூட்டணிக்கு வந்ததால் அ.ம.மு.க-வுக்கு 'ராஜ்ய சபா சீட்' பரிசாக கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். டிடிவி தினகரன் நம்மிடம் பேசிய அவர்கள், 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினார் டிடிவி தினகரன். '18 சீட் கொடுத்தால் கூட்டணிக்கு வருகிறேன்' என பா.ஜ.க தலைமைக்கு தூதுவிட்டார். பா.ஜ.க முயற்சித்தும்கூட சசிகலா, தினகரன் என யாரும் கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதிக்காட்டியது எடப்பாடி - பன்னீர் தரப்பு. இதனால் அப்செட்டான டிடிவி தினகரன் தே.மு.தி.க உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அவரை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளாததன் விளைவாக அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரிந்து 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவியதோடு ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் இழக்கும் நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு 2026-ல் தி.மு.க-வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்தார் என்றனர். எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரங்கள் குறித்து அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தோம். அதன்பிறகு 2025 ஏப்ரல் மாதம் அ.தி.மு.க என்.டி.ஏ-வுக்குள் வந்தவுடன் 'அ.ம.மு.க கூட்டணியில் இருக்கக்கூடாது' என கருதியது அ.தி.மு.க. எங்களுக்கான முக்கியத்துவம் குறையத்தொடங்கியதும் என்.டி.ஏ-வைவிட்டு விலகினோம். ஆனால் கடந்த மூன்றுமாதமாக எங்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியது டெல்லி. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தினகரன். 'அ.ம.மு.க வேண்டாம்' என முன்பு முரண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக சொன்னார்கள். டெல்லியும் கூட்டணிக்கு வரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து நாங்களும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம். ஆரம்பத்தில் 18 சீட் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. மோடி - அமித் ஷா 10 சீட்டுக்கு மேல் வாய்ப்பில்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியுடன் கலந்தாலோசித்து 7 எம்.எல்.ஏ தொகுதிகளாக ஒப்பந்தமாகியிருக்கிறது. அதோடு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருந்து ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்றனர். கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கினாலும்கூட தனது சொந்த கணக்கிலிருந்து எம்.பி சீட் கொடுத்து அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் இழுத்திருக்கிறது பாஜக என்கிற தகவல் தான் தற்போது அரசியல் மட்டத்தில் ஹாட் டாப்பிக்.!
`வைத்திலிங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்!' - திமுக தட்டி தூக்கிய பின்னணி
திமுகவில் வைத்தி! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வர, இன்னும் ஒருசில வாரங்களே இருக்கின்றன. இந்த நிலையில், ஒவ்வொரு முன்னணி கட்சிகளும் தேர்தல் நேரத்தில் வலுசேர்க்க முக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சியில் இணைக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக இருக்கிறது. அதிலும் ஆளும் திமுக தரப்பு தொடர்ச்சியாக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து பெரிய தலைகள் தூக்கிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் அக்கட்சியில் சேர்ந்திருந்த நிலையில், அடுத்ததாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றவர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த சூழலில் அதே ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான வைத்திலிங்கம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அன்பில் மகேஸ், வைத்திலிங்கம் இந்த இணைப்பு பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து வைத்தியலிங்கத்துக்கு நெருங்கிய வட்டாரத்திலும் அறிவாலய வட்டாரத்திலும் விசாரித்தோம். தவெக-வுக்கு இசைவு காட்டவே இல்லை! ஓ.பி.எஸ அணியிலிருந்து இனி எந்த பயனும் இல்லை. 'தேர்தல் நெருங்கும் நேரத்தில், இப்படி எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது எனக்கு மட்டுமல்ல என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லதல்ல' என்று வைத்திலிங்கம் சொல்லிக்கொண்டே இருந்தார். அதிமுகவில் சேர்வதுவே அவரது பிரதான ஆசையாக இருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற நிலையில் வேறு முடிவு எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. த.வெ.க-விலிருந்து தொடர்ச்சியான அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. அண்ணனின் ஆதரவாளர்களும் த.வெ.க-வில் இணைய வலியுறுத்தினார்கள். ஆனால், அதற்கு என்னவோ அவர் இசைவு காட்டவே இல்லை. `மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி? திமுகவின் அசைன்மெண்ட்! இந்த சூழலில் தான் வைத்திலிங்கத்தின் நெருங்கிய உறவினரான திமுக அமைச்சர் அன்பில் மகேஸ் வைத்தலிங்கத்தைத் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். கூடவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் வைத்திலிங்கத்திடம் பேசினார். `திமுக தரப்பில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நாங்கள் செய்துகொடுக்கிறோம். எங்களுடன் வந்துவிடுங்கள்' என்று சொல்லி இருக்கிறார்கள். பதிலுக்கு வைத்தி, `எனக்கு மட்டுமல்ல என்னைச் சேர்ந்தவர்களுக்கும் சீட், கட்சி பதவி எல்லாம் வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். எல்லா கோரிக்கைகளும் சுமுகமாக முடிய, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்திருக்கிறார். கட்சியில் சேர்ந்திருக்கும் அவருக்கு திமுக தரப்பிலிருந்து புதிய அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள். டெல்டாவை பொறுத்தவரை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே சமபலத்தில் இருக்கின்றன. கடந்த தேர்தலைப் பொறுத்தவரை டி.டி.வி தனித்து போட்டியிட்டதால் அதிமுக வாக்குகள் பிரிந்து அது திமுகவுக்குப் பலமாக அமைந்தது. இப்போது, டி.டி.வி என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். அது அதிமுகவுக்குக் கூடுதல் பலம். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் டெல்டாவை பொறுத்தவரை எந்த கட்சியிலிருந்தாலும் வைத்திலிங்கத்துக்கு என்று ஒரு தனி செல்வாக்கு இருக்கிறது. கூடவே ஆளும் கட்சியின் அதிகாரமும் சேர்ந்துகொள்ள டெல்டாவில் அதிமுக தோல்வியைச் சந்திக்கத் தேவையான அனைத்து வேலைகளையும் இப்போதிலிருந்தே தீவிரமாகப் பார்க்கச் சொல்லியிருக்கிறது திமுக தலைமை. வைத்திலிங்கத்தைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் திமுகவில் இணையவுள்ளனர். கூடவே வரும் 26-ம் தேதி தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெறும் திமுக மகளிரணி டெல்டா மண்டல மாநாடு சமயத்தில் தனது ஆதரவாளர்கள் பலரையும் திமுகவில் இணையவைக்க ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார். திமுக தலைமை ஒரு கணக்குப் போட்டு இவருக்கு வேலைகளைக் கொடுத்ததுபோலவே, கூடுதல் தொகுதிகளில் வேலைபார்த்து திமுகவை வெற்றிபெறவைத்தால் வெயிட்டான அமைச்சர் பதவியை வாங்கிவிடலாம் என்று இப்போதிலிருந்தே அதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக இருக்கிறார் என்றார்கள் விளக்கமாக. `மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?
ம.பி: `பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கக் காரணம்..' - MLA பேச்சால் சர்ச்சை; திக்விஜய் சிங் சொன்ன பதில்
மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்படவர் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை ததியாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பாலியல் வன்கொடுமை பட்டியலினப் பெண்களுக்குதான் அதிகம் நடக்கிறது. அதற்கு காரணம், குறிப்பிட்ட சமூக பெண்களை வல்லுறவு செய்வதால், புனித யாத்திரை சென்றதற்கு சமமான புண்ணியம் கிடைப்பதாக மத நூல் ஒன்று கூறுகிறது. யாத்திரை செல்ல முடியாத பட்சத்தில், புண்ணியத்தை சம்பாதிக்க குறிப்பிட்ட சில ஆண்கள் வல்லுறவு கொள்கிறார்கள். இதுபோன்ற மத நம்பிக்கைகள் வல்லுறவு கொள்ள தூண்டுகின்றன என்றார். இந்த விவகாரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா மேலும், எம்.எல்.ஏ பூல் சிங் பரையா மீது ராகுல் காந்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், ``பூல் சிங் பரையா பேசியது தவறாக சித்தரிக்கப்படுகிறது. பூல் சிங் பரையா கூறியது பட்னா பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் முன்னாள் தலைவரும், பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஹரி மோகன் ஜா எழுதிய ஒரு புத்தகத்திலிருந்துதான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இந்தக் கருத்து நடவடிக்கை எடுக்கத் தகுந்த கருத்து என்றால், அதை எழுதியவர் மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றார். அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! - ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!
ம.பி: `பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கக் காரணம்..' - MLA பேச்சால் சர்ச்சை; திக்விஜய் சிங் சொன்ன பதில்
மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்படவர் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை ததியாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பாலியல் வன்கொடுமை பட்டியலினப் பெண்களுக்குதான் அதிகம் நடக்கிறது. அதற்கு காரணம், குறிப்பிட்ட சமூக பெண்களை வல்லுறவு செய்வதால், புனித யாத்திரை சென்றதற்கு சமமான புண்ணியம் கிடைப்பதாக மத நூல் ஒன்று கூறுகிறது. யாத்திரை செல்ல முடியாத பட்சத்தில், புண்ணியத்தை சம்பாதிக்க குறிப்பிட்ட சில ஆண்கள் வல்லுறவு கொள்கிறார்கள். இதுபோன்ற மத நம்பிக்கைகள் வல்லுறவு கொள்ள தூண்டுகின்றன என்றார். இந்த விவகாரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா மேலும், எம்.எல்.ஏ பூல் சிங் பரையா மீது ராகுல் காந்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், ``பூல் சிங் பரையா பேசியது தவறாக சித்தரிக்கப்படுகிறது. பூல் சிங் பரையா கூறியது பட்னா பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் முன்னாள் தலைவரும், பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஹரி மோகன் ஜா எழுதிய ஒரு புத்தகத்திலிருந்துதான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இந்தக் கருத்து நடவடிக்கை எடுக்கத் தகுந்த கருத்து என்றால், அதை எழுதியவர் மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றார். அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! - ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!
Sasikala: ``திமுகவை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன் - சசிகலா
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை பரபரப்பாக தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க சார்பில் என்.டி.ஏ கூட்டணிக்கான பொறுப்பாளராக தமிழ்நாடு வந்திருக்கும் பியூஸ் கோயல் முன்னிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தார். அவரை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்று வாழ்த்தினார். அதேப் போல ஓ.பி.எஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ-வுமான வைத்திலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுக-வில் இணைந்துகொண்டார். இந்த நிலையில், சசிகலா தன் எக்ஸ் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். வைத்திலிங்கம் - துரதிருஷ்டவசமானது! அவர், ``கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். வைத்திலிங்கம்- சசிகலா- திவாகரன் இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை. அதிமுக என்ற பேரியக்கம் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். ஜெயலலிதா “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்தார்கள். மன்னிக்க முடியாத செயல் ஆனால், இன்றைக்கு தங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக்கொண்டவர்கள் இயக்கத்தை காப்பாற்ற முடியாமல் தோல்வியடைந்து இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஸ்டாலின் இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும். அம்மா அவர்களது ஆட்சி காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் தான் நம்மை தேடி வந்து இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் பயணித்து வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நடப்பது ஏன் என்று அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். நம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு செல்கின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது ஜெயலலிதா காலங்களில் திமுகவினரின் சித்து விளையாட்டுகள், முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து இந்த கட்சி அழிந்துவிடாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடி காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கின்றவைகளை பார்க்கும்பொழுது நம் இருபெரும் தலைவர்கள் இந்த கட்சிக்காக பட்ட துன்பங்கள் தான் நினைவிற்கு வருகிறது. இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது. சசிகலா இந்த மக்கள் விரோத மன்னர் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவது தவிர வேறொன்றுமில்லை. எனது வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்துவிடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் அவர்கள் `திமுக ஒரு தீயசக்தி' என்பதை மக்களிடத்தில் தோலுரித்து காட்டிய அதே கொள்கைப்பிடிப்பினையும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சுயமரியாதையினையும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன். புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள், ஒன்றிணைந்து களம் காண்போம், வென்று காட்டுவோம், எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
Sasikala: ``திமுகவை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன் - சசிகலா
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை பரபரப்பாக தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க சார்பில் என்.டி.ஏ கூட்டணிக்கான பொறுப்பாளராக தமிழ்நாடு வந்திருக்கும் பியூஸ் கோயல் முன்னிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தார். அவரை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்று வாழ்த்தினார். அதேப் போல ஓ.பி.எஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ-வுமான வைத்திலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுக-வில் இணைந்துகொண்டார். இந்த நிலையில், சசிகலா தன் எக்ஸ் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். வைத்திலிங்கம் - துரதிருஷ்டவசமானது! அவர், ``கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். வைத்திலிங்கம்- சசிகலா- திவாகரன் இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை. அதிமுக என்ற பேரியக்கம் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். ஜெயலலிதா “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்தார்கள். மன்னிக்க முடியாத செயல் ஆனால், இன்றைக்கு தங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக்கொண்டவர்கள் இயக்கத்தை காப்பாற்ற முடியாமல் தோல்வியடைந்து இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஸ்டாலின் இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும். அம்மா அவர்களது ஆட்சி காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் தான் நம்மை தேடி வந்து இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் பயணித்து வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நடப்பது ஏன் என்று அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். நம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு செல்கின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது ஜெயலலிதா காலங்களில் திமுகவினரின் சித்து விளையாட்டுகள், முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து இந்த கட்சி அழிந்துவிடாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடி காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கின்றவைகளை பார்க்கும்பொழுது நம் இருபெரும் தலைவர்கள் இந்த கட்சிக்காக பட்ட துன்பங்கள் தான் நினைவிற்கு வருகிறது. இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது. சசிகலா இந்த மக்கள் விரோத மன்னர் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவது தவிர வேறொன்றுமில்லை. எனது வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்துவிடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் அவர்கள் `திமுக ஒரு தீயசக்தி' என்பதை மக்களிடத்தில் தோலுரித்து காட்டிய அதே கொள்கைப்பிடிப்பினையும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சுயமரியாதையினையும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன். புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள், ஒன்றிணைந்து களம் காண்போம், வென்று காட்டுவோம், எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
NDA கூட்டணி: நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம் - வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு டிடிவி தினகரன் நன்றி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமமுக தலைவர் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாகப் போராடியது. ஒருகட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அமமுக-வைப் போட்டியிட வைக்கத் தீர்மானித்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். என்.டி.ஏ கூட்டணி அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமமுக: அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை- TTV தினகரன் சொல்வது என்ன? மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தி.மு.க குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனப் பதிவிட்டிருக்கிறார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
`மாப்பிள்ளை'அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?
வைத்திலிங்கம் திமுக-வில் இணையப்போவதாக பேசப்பட்டதை, அவரே உண்மையாக்கியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் வைத்திலிங்கம் கார் அறிவாலயம் நோக்கி சென்றது. ``அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை, அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார். அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இனைந்திருக்கிறேன். தேர்தல் வருவதால் சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ்ஸை விட்டு விலகி வந்துள்ளேன். எனக்கு தனிப்பட்ட முறையில் அதிமுக-வில் இருந்து அழைப்பு வந்தது. அதை நான் நிராகரித்து விட்டேன். தஞ்சாவூரில் இணைப்பு விழா நடக்க உள்ளது என முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு தெரிவித்துள்ளார் வைத்திலிங்கம். அன்பில் மகேஸ், வைத்திலிங்கம் வைத்திலிங்கம் சேர்வது முடிவான பின்னரும், அது அரசியல் களத்தில் பேசு பொருளாக ஆக வேண்டும் என்பதற்காக வைத்திலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்களும் திமுக-வில் இணைவதை தாமதப்படுத்தி வந்தனர். இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியை இறுதி செய்ய பாஜகவின் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்திருக்கும் இந்த நாளில், இணைப்பை செய்திருக்கிறார்கள். அன்பில் போட்ட ஸ்கெட்ச் ; செந்தில் பாலாஜி அழுத்தம்! அன்பில் போட்ட ஸ்கெட்ச்சுக்கு, செந்தில் பாலாஜி அழுத்தம் கொடுக்க டெல்டாவின் முகமாக அறியப்பட்ட வைத்திலிஙம் விக்கெட் தற்போது திமுகவிற்குள் விழுந்திருக்கிறது. என்ன நடந்தது, ஏன் வைத்திலிங்கம் தி.மு.க-விற்கு சென்றார் என டெல்டா அரசியலில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து டெல்டா மாவட்டங்களில் அரசியல் தெரிந்த சிலரிடம் பேசினோம், ``வைத்திலிங்கம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வருவதற்கு பேசப்பட்டது. தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் நின்று வந்த வைத்திலிங்கம் கூட்டணியில் சீட் பெற்றும் மாற்று சின்னத்தில் நிற்பதை விரும்பவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. சில காரணங்களால் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், வைத்திலிஙத்திற்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு நீடித்தது. ஒ பன்னீர் செல்வம் அதிருப்தியில் இருக்கும் வைத்திலிங்கத்தை தவெக-வுக்கு இழுப்பதற்கு செங்கோட்டையன் முயன்றார். உங்கள் கண்ட்ரோலில் சில மாவட்டங்களை தருகிறோம் என்றெல்லாம் பேசப்பட்டது. கிட்டதட்ட செங்கோட்டையன் அழைப்பை ஏற்கும் மனநிலையில் வைத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஜனநாயகன் படப்பிரச்னை, சிபிஐ விசாரணை போன்றவற்றால் விஜயிடமிருந்து சிக்னல் வருவதற்கு தாமதமானது. மறுபக்கம், வைத்திலிங்கமும் அமைச்சர் அன்பில் மகேஸ் மனைவியும் நெருங்கிய உறவினர்கள். நிகழ்ச்சிகளில் வைத்திலிங்கம், அன்பில் மகேஸை பார்த்தால் மாப்பிள்ளை என்று தான் அன்பிலை அழைப்பாராம். தீவிர அதிமுக விசுவாசி டு திமுக இந்த உறவை பாலமாக்கி வைத்தியை திமுக-வுக்கு இழுப்பதற்கான முயற்சியை அன்பில் மகேஸ் மேற்கொண்டார். அதற்கான தேவையும் இருந்ததாக சொல்கிறார்கள். தஞ்சாவூரில் குறிப்பாக ஒரத்தநாட்டில் ஆளுமை மிக்க நிர்வாகிகள் திமுகவில் இல்லை என தலைமை கருதியது. வைத்திலிங்கம் மூலம் இதை சரி செய்வதற்கே அவருக்கு வலை விரிக்கப்பட்டதாம். தஞ்சாவூரில் விவசாயிகளை திரட்டி விழா எடுத்த வைத்திலிங்கம், `பொன்னியின் செல்வி' என்ற பட்டத்தை ஜெயலலிதாவிற்கு வழங்கினார். அந்த அளவிற்கு ஜெயலலிதா விசுவாசியாக இருந்தார். ஒரு முறை சட்டமன்ற விவாதத்தில் ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்தார். அந்த சமயத்தில் பேராவூரணியில் நடந்த கூட்டம் ஒன்றில், வைத்திலிங்கத்திற்கு சவால் விட்டார் ஸ்டாலின். தீவிர அதிமுக விசுவாசியாக இருந்தவர் வைத்தி. வைத்திலிங்கம் இவை திமுக-வுக்கு சென்றால் தனக்கு சங்கடத்தை உருவாக்கும் என கருதியவர் மனக்குழப்பத்தில் இருந்தார். அப்போது, செந்தில் பாலாஜி, `ஒரு வேளை நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்று தேர்தலில் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ-வாகத்தான் இருப்பீர்கள், எங்க பக்கம் வாங்க அமைச்சர் தருகிறோம். முதல்வரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்' என அவர் மனதை கரைத்துள்ளார். அதன் பிறகு வைத்திலிங்கத்தை சந்தித்த அன்பில் மகேஸ், போன் மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் வைத்தியை பேச வைத்து தயக்கத்தை போக்கியுள்ளார். அப்போது, ``அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வளவு மரியாதை தருகிறோம் என்பது தங்களுக்கு தெரியும், நீங்கள் தைரியமாக வாருங்கள், உங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றாராம். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்! அதன் பிறகே திமுகவில் இணையும் முடிவை தீர்க்கமாக எடுத்தாராம். கடந்த பத்து நாட்களாக திரைமறைவில் நடந்தவை இன்று பொதுவெளியில் அரங்கேறியுள்ளது. தன் மகன் பிரபு உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவி, ஒரத்தநாடு தொகுதியில் சீட், ஆட்சி அமைத்தால் அமைச்சர் என பல்வேறு டிமாண்ட் வைத்தி தரப்பில் வைக்கப்பட்டதாம். இதற்கு திமுக தலைமை ஓகே சொன்னதாம். ஆனாலும் வைத்தி இணைவது முதல்கட்ட நிர்வாகிகள் பலருக்கே தெரியாமல் ரகசியமாக வைத்திருந்துள்ளனர் திமுக தலைமை. நேற்று இரவு தான் முக்கிய நிர்வாகிகளுக்கு சொல்லியுள்ளனர். நல்ல நேரத்திற்குள் இணைய வேண்டும் என விரும்பியதால் காலை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அறிவாலயம் வந்து விட்டார்களாம். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆனால் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் அறிவாலயம் செல்வதற்கு தாமதமாகி விட்டதாம். ஸ்டாலின் காத்திருக்கிறார் என அவருக்கு தகவல் சொல்லப்பட்டதும் அரக்க பரக்க ஓடியவர் ட்ராபிக்கில் சிக்கி கொண்டேன் என தாமதத்திற்கு காரணம் சொன்னாராம் சந்திரசேகரன். இணைப்பு வைபவம் முடிந்ததும் தன் ஆதரவாளர்களை தஞ்சாவூரில் நடைபெறும் இணைப்பு விழாவில் சேர்ப்பதற்கான பணிகளில் மூழ்கி விட்டார் வைத்தி என்கிறார்கள். 'எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... அறிவாலயம் போகும் வைத்திலிங்கம்?' - உச்சக்கட்ட பரபரப்பில் டெல்டா! ``வைத்தி எடுத்திருக்கும் முடிவால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சொல்லப்போனால் எங்களுக்கு ரூட் கிளியர் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்கள் அதிமுகவினர். வைத்திலிங்கம் திமுக-விற்கு சென்றதை விரும்பாத ஆதரவாளர்களை மீண்டும் அதிமுகவில் இழுப்பதற்கான பணிகள் நடக்கிறது. தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடப்பதற்கு முன் அவரது ஆதரவாளர்கள் பலரை அதிமுகவில் இணைத்து வைத்திக்கு அதிர்ச்சி தரக்குடிய நிகழ்வை நிகழ்த்துவதற்காக எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார் என்கிறார்கள்.!
அதை செந்தில் பாலாஜி நிரூபித்தால், அரசியலை விட்டு விலகி விடுகிறேன் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழகச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி, தி.மு.க அரசுதான் கதவணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததாகப் பேசி வருகிறார். அ.தி.மு.க அரசு திட்டத்தை அறிவித்தவுடன் ரூ. 420 நிதியை ஒதுக்கீடு செய்தது. தி.மு.க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது என்று செந்தில் பாலாஜி நிரூபித்தால், தமிழக அரசியலை விட்டு நான் விலகி விடுகிறேன். தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேசுவதெல்லாம் பொய்யாக உள்ளது. அதனை மக்கள் நம்ப மாட்டார்கள் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராகி விட்டார்கள் என்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும், யார் யாருடன் போட்டி என தெரியும் - விஜய்க்கு செந்தில் பாலாஜி பதில்
``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இரண்டு முக்கியக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் தீவிரமாக களமாடி வருகின்றனர். அதிமுக எடப்பாடி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என மூன்றாக உடைந்ததிலிருந்து, துரோகி எனக் மூன்று தரப்பும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். என்.டி.ஏ கூட்டணி எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இணையமாட்டேன் எனப் பேட்டியளித்திருந்தார் டிடிவி தினகரன். துரோகிகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டோம் என டிடிவி, ஓ.பி.எஸ் குறித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டிடிவி-யை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாக போராடியது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் வென்ற நிலையில், மற்றொரு திட்டத்தோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நெருங்கியது தேசிய பா.ஜ.க தலைமை. அதன்படி, எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் அமுமுக-வை போட்டியிட வைத்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டு, சம்மதிக்க வைத்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ``தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனப் பதிவிட்டிருக்கிறார். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!
``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இரண்டு முக்கியக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் தீவிரமாக களமாடி வருகின்றனர். அதிமுக எடப்பாடி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என மூன்றாக உடைந்ததிலிருந்து, துரோகி எனக் மூன்று தரப்பும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். என்.டி.ஏ கூட்டணி எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இணையமாட்டேன் எனப் பேட்டியளித்திருந்தார் டிடிவி தினகரன். துரோகிகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டோம் என டிடிவி, ஓ.பி.எஸ் குறித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டிடிவி-யை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாக போராடியது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் வென்ற நிலையில், மற்றொரு திட்டத்தோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நெருங்கியது தேசிய பா.ஜ.க தலைமை. அதன்படி, எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் அமுமுக-வை போட்டியிட வைத்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டு, சம்மதிக்க வைத்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ``தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனப் பதிவிட்டிருக்கிறார். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!
'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்
என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். டிடிவி பியூஸ் கோயல் பேசியதாவது, ``தனிப்பட்ட முறையில் தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஊழல் நிறைந்த நிர்வாக திறனற்ற திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக ஒரு குடும்பமாக செயல்படுவோம். ஆன்டி இந்தியா கூட்டணியை தோற்கடிப்போம் ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்' என்றார். NDA டிடிவி தினகரன் பேசுகையில், 'மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை' என்றார்.
'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்
என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். டிடிவி பியூஸ் கோயல் பேசியதாவது, ``தனிப்பட்ட முறையில் தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஊழல் நிறைந்த நிர்வாக திறனற்ற திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக ஒரு குடும்பமாக செயல்படுவோம். ஆன்டி இந்தியா கூட்டணியை தோற்கடிப்போம் ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்' என்றார். NDA டிடிவி தினகரன் பேசுகையில், 'மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை' என்றார்.
Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?
முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... ட்ரம்ப் 'அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்' என கடுமையாக அடம்பிடிக்கிறார். அமெரிக்காவின் 'பாதுகாப்பு' மட்டும் ட்ரம்பின் இந்த அடத்திற்கு காரணம் அல்ல. ட்ரம்பிற்கு ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்? கிரீன்லேண்டின் இருப்பிடமும்... கிரீன்லேண்டில் இருக்கும் இருப்பும் இதற்கு முக்கிய காரணம். புரியவில்லையா...? அதாவது கிரீன்லேண்ட் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு நடுவில் உள்ளது. கிரீன்லேண்ட் ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! அதனால், கிரீன்லேண்டைப் பிடித்தால், அமெரிக்காவில் இருந்து வெளியே செல்லும் வர்த்தக பொருள்கள், அமெரிக்காவிற்குள் வரும் வர்த்தக பொருள்கள் என அனைத்திற்கும் அந்த நாடு ஈசியான பாதையாக இருக்கும். இதன் மூலம் கால நேரத்தையும், செலவுகளையும் அதிகம் குறைக்கலாம். இன்னொன்று, அங்கு லித்தியம், நியோடைமியம் போன்ற கனிம பொருள்கள் கொட்டி கிடக்கின்றன. இவை ஸ்மார்ட் போன், எலெக்ட்ரிக் வாகனங்கள்... போன்ற இன்றைய அப்-டு-டேட் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்கா கைப்பற்றுவதால் உற்பத்தி மற்றும் வணிகத்தில் லாபம் பெறலாம். அடுத்தது, கிரீன்லேண்டில் எண்ணெய் வளம் உள்ளது. ஏற்கெனவே, வெனிசுலாவை ட்ரம்ப் எண்ணெய் வளத்திற்காக தான் பிடித்துள்ளார் என்பது உலகம் அறிந்த ரகசியம். அப்போது, அவர் கிரீன்லேண்டை விட்டு வைக்க வாய்ப்பே இல்லை. கடைசியாக... ஆனால், முக்கியமாக... ட்ரம்ப் அரசியல்வாதி என்பதை தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு பிசினஸ்மேன். கிரீன்லேண்டை அவர் ஒரு 'பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக' பார்க்கிறார். கிரீன்லேண்டை அடைவது மூலம் அமெரிக்காவை இன்னும் பெரிதாக்கலாம். அங்கேயும் முதலீடுகளைக் குவிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். இத்தனை ப்ளஸ்கள் கொட்டி உள்ள கிரீன்லேண்டை ட்ரம்ப் 'மிஸ்' செய்வாரா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. NATO ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth கிரீன்லேண்டை விட்டுத்தராத நாடுகள்..! தற்போது டென்மார்க்கிற்கு கீழ் உள்ளது கிரீன்லேண்ட். டென்மார்க் கிரீன்லேண்டை விட்டுத் தருவதாக இல்லை. கிரீன்லேண்ட் தாங்கள் தனி நாடாக இயங்கவே விரும்புகிறது. அதனால், நேட்டோ நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ட்ரம்பின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றனர். இவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் 1-ம் தேதியில் இருந்து, நேட்டோ நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளின் மீது 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார். வரும் ஜூனுக்கு பின்னும், இவர்கள் இழுத்தடித்து கொண்டிருந்தால், இந்த வரி 25 சதவிகிதமாக உயரும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால், இந்த நாடுகளும் விட்டுத் தருவதாக இல்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று, இந்த விஷயத்தைக் கையாள்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், நேட்டோ மற்றும் ஐரோப்ப நாடுகள் இணைந்து அமெரிக்காவின் மீது வரி விதிக்கவும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ட்ரம்ப் கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன? ட்ரம்ப் பகிர்ந்த புகைப்படம் இந்த நிலையில் தான், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், கிரீன்லேண்டில் ட்ரம்ப் அமெரிக்க கொடியை நடுவது போலவும். கிரீன்லேண்ட் - அமெரிக்காவின் பிராந்தியம், 2026 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில், ட்ரம்புடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க் ரூபியோவும் இருக்கிறார்கள். Davos அஜென்டா தற்போது டாவோஸில் உலக பொருளாதார மன்றம் நடைபெற்று வருகிறது. இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ட்ரம்பும் கலந்துகொள்ள இன்று சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை தாண்டி, அங்கு வந்துள்ள உலகத் தலைவர்களிடம் கிரீன்லேண்ட் குறித்து பேச வேண்டும் என்பது ட்ரம்பின் முக்கிய அஜென்டா என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். 'இது எதுவரை போகும்?' என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.! வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained
`லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணை, மனைவியாக அங்கீகரிக்க உரிமை' - மதுரை ஐகோர்ட் உத்தரவு சொல்வதென்ன?
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். இருவருடைய காதலையும் பெற்றோர்கள் ஏற்று கொள்ளவில்லை. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இதையடுத்து பெண் மாயமானதாக பெண்ணின் தந்தை புகாரளித்ததால் பெண்ணை அவரின் வீட்டில் ஒப்படைத்தார் பிரபாகரன். கலப்புத் திருமணம் செய்துகொண்டால், இருவரையும் கொன்றுவிடுவோம் என பிரபாகரனின் உறவினர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பிரபாகரன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் உறவு வைத்து விட்டு ஏமாற்றியதாக பிரபாகரன் மீது அந்த பெண் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி கூறியதாவது, “மனுதாரர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் ஏமாற்றியுள்ளார். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறார். லிவ் இன் ரிலேஷன்ஷிப் தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென்று பெண்களின் குணநலன்களைக் குற்றம்சாட்டி வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீர்வாக அமையாத போது, ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது. பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவு கொண்டதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறி மறுத்து விட்டார். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்னையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. நீதிமன்றம் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனைவியாக அங்கீகரிக்கப்பட உரிமை உண்டு. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதற்காக அவர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிய வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.
OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது. அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கம். அதிமுகவின் சீனியர், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என அதிமுகவின் மிக முக்கியமானவராக இருந்தவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா Vs ஓ.பன்னீர்செல்வம் என்கிற நிலை வந்தபோது, இவர் ஓ.பி.எஸ்ஸை டிக் செய்தார். வைத்திலிங்கம் ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி பின்னர் ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்தபோதும், ஓ.பி.எஸ்ஸிற்குத் தூணாகவே நின்றார். இ.பி.எஸ், ஓ.பி.எஸிக்குத் தலைமைச் சண்டை வந்து இருவரும் பிரிய, அப்போது ஓ.பி.எஸ்ஸுடனேயே தொடர்ந்தார். ஆனால், இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார் வைத்திலிங்கம். இன்று காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் இவர். அடுத்தது, அறிவாலயம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்துள்ளார். அதன் பின், அவர் பேசியதாவது... அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவது சிறப்பானதாக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செய்து வருகிறார் முதலமைச்சர். அதிமுகவில் இருந்து விலகினாலும், அண்ணா தோற்றுவித்த தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன். தேர்தல் விரைவில் வருகிறது. முடிவுகளைச் சீக்கிரம் எடுக்க வேண்டும். ஆனால், அது கால தாமதமானது. அதனால், ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE அதிமுக சுதந்திரமாகச் செயல்படவில்லை. சர்வாதிகரமாகச் செயல்படுகிறது. ஓ.பி.எஸ் திமுகவில் இணைவாரா என்பது குறித்து அவரைத்தான் கேட்க வேண்டும். என்னைத் தனிப்பட்ட முறையில், அதிமுகவில் இணைய அழைத்தார்கள். ஆனால், அதிமுக ஒட்டுமொத்தமாக ஒன்றாக இணைந்தால்தான், அதிமுகவில் சேருவேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு இப்போது தேவை திமுக என்று பேசியுள்ளார். மருது அழகுராஜ், அன்வார் ராஜா, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் வரிசையில் தற்போது வைத்திலிங்கம். அடுத்து யாரோ?
தூத்துக்குடி தொகுதி: முட்டிமோதும் நிர்வாகிகள்; கூட்டணி முடிவில் அதிமுக? - ஜாலியில் அமைச்சர் தரப்பு!
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், கடந்த தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். தூத்துக்குடி தி.மு.கவின் முகமாகவும், மக்கள் மத்தியில் நன்கு பரிட்சியமானவர் என்பதால் வரும் தேர்தலில் மீண்டும் தி.மு.க சார்பில் மீண்டும் கீதா ஜீவனே போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் உள்ளுர் உடன்பிறப்புகள். அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி தொகுதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளும் அடங்குவதால், அமைச்சரின் தம்பியும் மாநகராட்சி மேயருமான ஜெகனின் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், மாநகராட்சிக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு உள்ளிட்டவைகளும் கீதாஜீவனுக்கு ப்ளஸ்ஸாக பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., த.மா.கா., ஐ.ஜே.கே., புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கூட்டணியை உறுதி செய்துள்ளன. அ.தி.மு.க சார்பில் இத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் நேர்காணலும் நடந்து முடிந்துள்ளது. முந்தைய தேர்தலில், தி.மு.க வேட்பாளரான கீதா ஜீவனுக்கு எதிராக இத்தொகுதியில் அ.தி.மு.கவின் கூட்டணிக்கட்சியான த.மா.கா சார்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவரான எஸ்.டி.ஆர் விஜயசீலன் போட்டியிட்டார். ஆனால், இம்முறை தி.மு.க.,.வுக்கு எதிராக அ.தி.மு.கவே போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனராம். தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.கவில் வலுவான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். செல்லப்பாண்டியன் ஆனால், இவருக்கு தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் சவாலாகவே உள்ளனர். இந்த சவாலை அவரால் எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் சுதாகர், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ஆர். ரமேஷ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூ மணி, சுகந்தன் மற்றும் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிவசாமி வேலுமணி உள்ளிட்டோரும் சீட்டுக்காக காய் நகர்த்தி வருகின்றனர். இவர்களில், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், சுதாகர், பிரபு, ஆண்ட்ரூமணி, சிவசாமி வேலுமணி ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. செல்லப்பாண்டியனுக்கு சீட் கொடுத்தால் சண்முகநாதனின் ஆதரவாளர்கள், வெற்றிக்காக எந்த அளவிற்கு களப்பணி ஆற்றுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், சண்முகநாதன் தனது ஆதரவாளரை களமிறக்கவும் முயன்று வருகிறார். சண்முகநாதன் அதே நேரத்தில் செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களும் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், வேட்பாளரை தேர்வு செய்வதில் தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் கடந்த முறை போல கூட்டணிக்கட்சிகளான பா.ஜ.க அல்லது த.மா.காவிற்கு ஒதுக்கிவிடலாமா எனவும் யோசிக்கிறார்களாம். அதிமுக கூட்டணியில் நிலவும் இந்த குழப்பங்களில், திமுக நிர்வாகிகள் தொகுதியில் ஜாலியாக வலம் வருகிறார்களாம்.!
`துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02
(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம் .) ‘வாவ்’ வியூகம் - 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும் தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் வகுக்கும் வியூகங்கள் பல ரகங்கள். ஆனால், சில நேரங்களில் ‘அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகத் தான் இருக்குது’ என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நிகழும் சில சம்பவங்கள் ஒரு கட்சிக்கு லாபகரமாக மாறும். அதுவும் குறிப்பாக சில களேபரங்களோ, சில அசம்பவிதங்களோ தேர்தல் முடிவுகளைத் திருப்பிப் போடும் தீர்ப்புகளைத் தந்த வரலாறு தமிழக அரசியலில் உண்டு. அப்படியாக அனுதாப அலைகளால் மாறிப் போன திமுக, அதிமுகவுக்கான மக்கள் தீர்ப்பு பற்றிய குவிக் ஃப்ளேஷ்பேக் இது... துப்பாக்கியால் ஒரு திருப்புமுனை.! 1967 தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திருக்கவிருந்தது. அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் படு பிஸியாக இருந்தன. பிப்ரவரியில் தேர்தல் நடத்த அட்டவணை வெளியாகியிருந்தது. ஜனவரியில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக சிறப்பு மாநாட்டில் எம்ஜிஆர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நிதியாக ரூ.1 லட்சத்தை வழங்குவதாக அவர் மேடையில் அறிவித்தார். அதற்கு மேடையில் அண்ணா ஒரு சுவாரஸ்ய பதிலளித்து ஒரு கோரிக்கையையும் முன்வைத்தார். “எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கும் பணம் போன்றது. எங்கும் போய்விடாது” என்று அண்ணா பேச, கரகோஷம் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து அண்ணா, “இந்தத் தேர்தலுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அவர் முகத்துக்கே முப்பதாயிரம் வாக்குகள் விழும்” என்றார். எம்ஜிஆர் - அண்ணா ஜனவரி 1, 2 தேதிகளில் ஒரு பிரம்மாண்டக் கூட்டம் மூலம் திமுக மாஸ் காட்ட ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் ஒரு பிரச்சார நிகழ்ச்சி நடந்தது. அதில் பெரியார் கலந்து கொண்டார். அப்போது, அண்ணா, எம்ஜிஆரை பெரியார் விமர்சித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அதே மேடையில் உரையாற்றிய எம்.ஆர்.ராதாவும், கோபம் தெறிக்க எம்ஜிஆரை விமர்சித்ததாக தகவல். தொடர்ந்து நடந்த ஒரு சம்பவம்தான் தமிழக அரசியல் வரலாற்றின் இன்னொரு திருப்புமுனை. ஆம், 1967 ஜனவரி 12 - தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றைய தினம்தான் எம்ஜிஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. அதன்பின்னர் சிகிச்சை, விசாரணை, கைது, வழக்கு என நடந்ததெல்லாம் இன்று நீட்டி எழுதினால் ஒரு ஓடிடி சீரிஸுக்கான கதை ஆகிவிடும். அந்த அளவுக்கு அதன் பின்னணியில் பல விவரங்கள், சூட்சமங்கள் உண்டு. அதுவும் குறிப்பாக எம்ஆர் ராதா எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், ‘எம்ஜிஆரை சுட்டதேன்?’ என்பது தொடர்பாக இருக்கும் விவரங்கள் மட்டுமே அத்தனை நுணுக்கமானவை. அந்தத் துப்பாக்கிச் சூட்டால் தமிழகம் முழுவதும் பரபரப்பு பற்றிக்கொள்ள, மருத்துவமனையில் இருந்தபடி எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தார். அவர் மருத்துவமனையில் கழுத்தில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டராக திமுக மாநிலம் முழுவதும் ஒட்டியது. எம்ஜிஆர் அந்தத் தேர்தலில் செயின்ட் தாமஸ் தொகுதியில் போட்டியிட்டார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்... மருத்துவமனையில் இருந்ததால் எம்ஜிஆர் தொகுதிக்கு நேரில் பிரச்சாரத்துக்கு வரவே இல்லை. ஆனால், அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார். இந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் எம்ஜிஆர் சுடப்பட்டதால் உருவான அனுதாப அலையும். இதையெல்லாம் விட மிக முக்கியமானது, 1967-க்குப் பின்னர் காங்கிரஸால் தமிழகத்தில் இதுவரை ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. கூட்டணியில்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1967 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு என தனித்த உத்திகள் இருந்திருக்கலாம். இந்தி திணிப்பு போன்ற பிரச்சினைகளால் அதிருப்தி அலையும் கூட இருந்திருக்கலாம். அதில் மிக முக்கிய பங்காற்றியது, எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை. திமுகவுக்கு அன்று வெற்றியைத் தேடித்தந்தது மட்டுமல்ல, எம்ஜிஆரின் அரசியலுக்கு மிகப் பெரிய அடித்தளம் இட்டதும் அந்த அனுதாப அலை என்றால் அது மிகையாகாது. கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 1980 தேர்தலும் எம்ஜிஆர் வென்ற இதயங்களும்..! 1977-ல் அதிமுக முதன்முதலில் ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் முதல்வரானார். அந்த ஆட்சி 1982 வரை நீடித்திருக்க வேண்டும். ஆனால், 1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி தமிழகத்தில் ஆட்சிக் கலைப்புக்கு வழிகோலியது. தமிழ்நாட்டுடன் சேர்த்து 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆர் முதல்வரான பின்னர் இட ஒதுக்கீட்டுக்கான ‘கிரீமீ லேயர்’ முறையை அறிமுகப்படுத்தியிருந்தார். அதாவது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற அவர்களது பெற்றோரின் வருட வருவாய் ரூ.9000-க்குள் இருக்க வேண்டுமென அறிவித்தார். இதற்கு திமுக, தி.க கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தமிழக அரசியலில் இது பெரிய விவகாரமாகவும் உருவெடுத்தது. இதை முன்வைத்து திமுக செய்த பிரச்சாரம் 1980 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது எனலாம். அந்தத் தேர்தலில் திமுக - இந்திரா காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கூட்டணி போட்டியிட்டது. திமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. 1980 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி எம்ஜிஆருக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது. அதன்பின்னர் மாநிலத்தில் அவர் கொண்டுவந்த சில நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவந்தார். அதில் ஒன்றுதான் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான கிரீமி லேயர் வருமான வரம்பு நீக்கம். இந்த ஒரு திருத்தத்தால் உருகிப்போய் தி.க, எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்தது. கூடவே, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம் தனது ஆட்சி கலைக்கப்பட்டது சதியென்று மக்கள் மத்தியில் பதியவைத்தார். விளைவு, எம்ஜிஆர் மக்கள் இதயங்களை வென்றார். அது தேர்தலில் பிரதிபலித்தது. அதிமுக தனித்து 129 இடங்களில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் 32 இடங்களைக் கைப்பற்றின. எம்.ஜி.ஆர் எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை, திமுகவை ஆட்சி அரியணையில் அமர்த்திய காரணங்களுள் ஒன்றாக இருக்க, ‘துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன்’ என்று எம்ஜிஆர் முன்னெடுத்த பிரச்சாரப் பேரலை அனுதாப அலையாக மாறி மீண்டும் 1980-ல் எம்ஜிஆரை ஆட்சியில் அமர்த்தியது. மக்கள் தங்கள் தலைவன் வாடினாலும் வாக்களிப்பார்கள், அவன் உரிமைக் குரல் எழுப்பினாலும் வாக்களிப்பார்கள். இது வாக்களிப்பியலில் ஒரு ‘டிசைன்’. அடுத்தடுத்த அனுதாப அலைகள்..! மத்தியிலும், ஒரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஒரு மிகப் பெரிய அனுதாப அலை வீசியது என்றால், அது 1984-ம் ஆண்டு தான். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி இந்திரா காந்தி படுகொலை நடந்தது. அப்போது ராஜீவ் காந்தி உடனடியாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவர் தனது பலத்தை நிரூபிக்க விரும்பியதால், நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 414 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காந்தி என்ற மிகப் பெரிய ஆளுமை அவரது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட அனுதாப அலை, ராஜீவ் காந்திக்கு மக்கள் அங்கீகாரத்தைத் தந்தது. 1984 நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது, எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அப்போது தமிழகத்திலும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டுமென்று அதிமுக முக்கியப் புள்ளிகள் விரும்ப, அப்போது அதிமுகவுடன் நட்பு பாராட்டிய ராஜீவ் காந்திக்கு தகவல் சென்றது. ராஜீவ் காந்தியும் அதற்கு ஆவன செய்ய, ஆட்சி கலைக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவிட்டார். முதல்வர் மாநிலத்தில் இல்லாதபோது, வேறு ஏதும் சட்டம், ஒழுங்கு இல்லாத போது ஆட்சி கலைக்கப்பட்டதற்காக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.ஜி.ஆர் ஆனால், எல்லாவற்றையும் மீறி தமிழக சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. 1984 டிசம்பர் 24-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக - காங்கிரஸ் கட்சி இடையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சையிலிருந்த எம்ஜிஆர் இந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இன்றைக்கு மட்டும் விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை. எல்லாக் காலத்திலும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கு 1984 தமிழகத் தேர்தலும் ஒரு வரலாற்று சாட்சி. காரணம், எம்ஜிஆருக்காக வேட்புமனு அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இருந்தபோதும் எம்ஜிஆரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றிருந்தது. எங்கே ஒர்க் அவுட் ஆனது அனுதாப அலை? எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் மட்டுமே அனுதாப அலை மேலோங்கிவிடவில்லை. எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பின. அதன் வீரியத்தைப் புரிந்துகொண்ட அதிமுக, எம்ஜிஆரைப் பற்றிய ஒரு வீடியோவை அமெரிக்காவில் உருவாக்கி, தமிழகத் திரையரங்குகளில் திரையிட்டது. அந்த ஆவணப்படத்துக்கு தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணித்தது போல ‘வெற்றித் திருமகன்’ என்று பெயரிடப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ, பல பிரிண்டுகள் போடப்பட்டு திரையிட்டப்பட்டது. நம் சம காலத்தில் ஜெயலலிதா டிவி பார்ப்பது போல் நாம் பார்த்த ஃபோட்டோக்களைப் போல் அன்று திரையரங்குகளில் காட்டப்பட்ட வீடியோவில், எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் அமர்ந்திருப்பது, உணவு அருந்துவது, இரட்டை இலையைக் காண்பிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்ற காட்சிகள் நாடாளுமன்றம் மற்றும் தமிழகத் தேர்தல் டிசம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 19-ம் தேதி எம்ஜிஆருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அது வெற்றிகரமாகவே நடந்தது. ஒரு பக்கம் இந்திரா காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை, மறுபக்கம் எம்ஜிஆர் சிகிச்சையில் இருப்பதால் எழுந்த அனுதாப அலை. இரண்டும் சேர்ந்து அனுதாப சுனாமியாகி மத்தியிலும், மாநிலத்திலும் அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தந்தது. அதை கிட்டத்தட்ட எல்லோரும் கணித்தே இருந்தனர். ஆனால், ‘அனுதாப அலை’களை வாக்குகளாக அறுவடை செய்ய முடியாத அரசியல் குழப்பங்களும் சொதப்பல்களும் கூட தமிழக அரசியலில் அரங்கேறியிருக்கின்றன. அதற்கும் சாட்சியாக நிற்கிறது அதிமுக. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். (வியூகங்கள் தொடரும்.!) அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01
`துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02
(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம் .) ‘வாவ்’ வியூகம் - 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும் தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் வகுக்கும் வியூகங்கள் பல ரகங்கள். ஆனால், சில நேரங்களில் ‘அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகத் தான் இருக்குது’ என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நிகழும் சில சம்பவங்கள் ஒரு கட்சிக்கு லாபகரமாக மாறும். அதுவும் குறிப்பாக சில களேபரங்களோ, சில அசம்பவிதங்களோ தேர்தல் முடிவுகளைத் திருப்பிப் போடும் தீர்ப்புகளைத் தந்த வரலாறு தமிழக அரசியலில் உண்டு. அப்படியாக அனுதாப அலைகளால் மாறிப் போன திமுக, அதிமுகவுக்கான மக்கள் தீர்ப்பு பற்றிய குவிக் ஃப்ளேஷ்பேக் இது... துப்பாக்கியால் ஒரு திருப்புமுனை.! 1967 தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திருக்கவிருந்தது. அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் படு பிஸியாக இருந்தன. பிப்ரவரியில் தேர்தல் நடத்த அட்டவணை வெளியாகியிருந்தது. ஜனவரியில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக சிறப்பு மாநாட்டில் எம்ஜிஆர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நிதியாக ரூ.1 லட்சத்தை வழங்குவதாக அவர் மேடையில் அறிவித்தார். அதற்கு மேடையில் அண்ணா ஒரு சுவாரஸ்ய பதிலளித்து ஒரு கோரிக்கையையும் முன்வைத்தார். “எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கும் பணம் போன்றது. எங்கும் போய்விடாது” என்று அண்ணா பேச, கரகோஷம் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து அண்ணா, “இந்தத் தேர்தலுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அவர் முகத்துக்கே முப்பதாயிரம் வாக்குகள் விழும்” என்றார். எம்ஜிஆர் - அண்ணா ஜனவரி 1, 2 தேதிகளில் ஒரு பிரம்மாண்டக் கூட்டம் மூலம் திமுக மாஸ் காட்ட ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் ஒரு பிரச்சார நிகழ்ச்சி நடந்தது. அதில் பெரியார் கலந்து கொண்டார். அப்போது, அண்ணா, எம்ஜிஆரை பெரியார் விமர்சித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அதே மேடையில் உரையாற்றிய எம்.ஆர்.ராதாவும், கோபம் தெறிக்க எம்ஜிஆரை விமர்சித்ததாக தகவல். தொடர்ந்து நடந்த ஒரு சம்பவம்தான் தமிழக அரசியல் வரலாற்றின் இன்னொரு திருப்புமுனை. ஆம், 1967 ஜனவரி 12 - தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றைய தினம்தான் எம்ஜிஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. அதன்பின்னர் சிகிச்சை, விசாரணை, கைது, வழக்கு என நடந்ததெல்லாம் இன்று நீட்டி எழுதினால் ஒரு ஓடிடி சீரிஸுக்கான கதை ஆகிவிடும். அந்த அளவுக்கு அதன் பின்னணியில் பல விவரங்கள், சூட்சமங்கள் உண்டு. அதுவும் குறிப்பாக எம்ஆர் ராதா எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், ‘எம்ஜிஆரை சுட்டதேன்?’ என்பது தொடர்பாக இருக்கும் விவரங்கள் மட்டுமே அத்தனை நுணுக்கமானவை. அந்தத் துப்பாக்கிச் சூட்டால் தமிழகம் முழுவதும் பரபரப்பு பற்றிக்கொள்ள, மருத்துவமனையில் இருந்தபடி எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தார். அவர் மருத்துவமனையில் கழுத்தில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டராக திமுக மாநிலம் முழுவதும் ஒட்டியது. எம்ஜிஆர் அந்தத் தேர்தலில் செயின்ட் தாமஸ் தொகுதியில் போட்டியிட்டார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்... மருத்துவமனையில் இருந்ததால் எம்ஜிஆர் தொகுதிக்கு நேரில் பிரச்சாரத்துக்கு வரவே இல்லை. ஆனால், அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார். இந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் எம்ஜிஆர் சுடப்பட்டதால் உருவான அனுதாப அலையும். இதையெல்லாம் விட மிக முக்கியமானது, 1967-க்குப் பின்னர் காங்கிரஸால் தமிழகத்தில் இதுவரை ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. கூட்டணியில்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1967 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு என தனித்த உத்திகள் இருந்திருக்கலாம். இந்தி திணிப்பு போன்ற பிரச்சினைகளால் அதிருப்தி அலையும் கூட இருந்திருக்கலாம். அதில் மிக முக்கிய பங்காற்றியது, எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை. திமுகவுக்கு அன்று வெற்றியைத் தேடித்தந்தது மட்டுமல்ல, எம்ஜிஆரின் அரசியலுக்கு மிகப் பெரிய அடித்தளம் இட்டதும் அந்த அனுதாப அலை என்றால் அது மிகையாகாது. கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 1980 தேர்தலும் எம்ஜிஆர் வென்ற இதயங்களும்..! 1977-ல் அதிமுக முதன்முதலில் ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் முதல்வரானார். அந்த ஆட்சி 1982 வரை நீடித்திருக்க வேண்டும். ஆனால், 1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி தமிழகத்தில் ஆட்சிக் கலைப்புக்கு வழிகோலியது. தமிழ்நாட்டுடன் சேர்த்து 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆர் முதல்வரான பின்னர் இட ஒதுக்கீட்டுக்கான ‘கிரீமீ லேயர்’ முறையை அறிமுகப்படுத்தியிருந்தார். அதாவது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற அவர்களது பெற்றோரின் வருட வருவாய் ரூ.9000-க்குள் இருக்க வேண்டுமென அறிவித்தார். இதற்கு திமுக, தி.க கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தமிழக அரசியலில் இது பெரிய விவகாரமாகவும் உருவெடுத்தது. இதை முன்வைத்து திமுக செய்த பிரச்சாரம் 1980 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது எனலாம். அந்தத் தேர்தலில் திமுக - இந்திரா காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கூட்டணி போட்டியிட்டது. திமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. 1980 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி எம்ஜிஆருக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது. அதன்பின்னர் மாநிலத்தில் அவர் கொண்டுவந்த சில நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவந்தார். அதில் ஒன்றுதான் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான கிரீமி லேயர் வருமான வரம்பு நீக்கம். இந்த ஒரு திருத்தத்தால் உருகிப்போய் தி.க, எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்தது. கூடவே, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம் தனது ஆட்சி கலைக்கப்பட்டது சதியென்று மக்கள் மத்தியில் பதியவைத்தார். விளைவு, எம்ஜிஆர் மக்கள் இதயங்களை வென்றார். அது தேர்தலில் பிரதிபலித்தது. அதிமுக தனித்து 129 இடங்களில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் 32 இடங்களைக் கைப்பற்றின. எம்.ஜி.ஆர் எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை, திமுகவை ஆட்சி அரியணையில் அமர்த்திய காரணங்களுள் ஒன்றாக இருக்க, ‘துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன்’ என்று எம்ஜிஆர் முன்னெடுத்த பிரச்சாரப் பேரலை அனுதாப அலையாக மாறி மீண்டும் 1980-ல் எம்ஜிஆரை ஆட்சியில் அமர்த்தியது. மக்கள் தங்கள் தலைவன் வாடினாலும் வாக்களிப்பார்கள், அவன் உரிமைக் குரல் எழுப்பினாலும் வாக்களிப்பார்கள். இது வாக்களிப்பியலில் ஒரு ‘டிசைன்’. அடுத்தடுத்த அனுதாப அலைகள்..! மத்தியிலும், ஒரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஒரு மிகப் பெரிய அனுதாப அலை வீசியது என்றால், அது 1984-ம் ஆண்டு தான். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி இந்திரா காந்தி படுகொலை நடந்தது. அப்போது ராஜீவ் காந்தி உடனடியாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவர் தனது பலத்தை நிரூபிக்க விரும்பியதால், நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 414 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காந்தி என்ற மிகப் பெரிய ஆளுமை அவரது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட அனுதாப அலை, ராஜீவ் காந்திக்கு மக்கள் அங்கீகாரத்தைத் தந்தது. 1984 நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது, எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அப்போது தமிழகத்திலும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டுமென்று அதிமுக முக்கியப் புள்ளிகள் விரும்ப, அப்போது அதிமுகவுடன் நட்பு பாராட்டிய ராஜீவ் காந்திக்கு தகவல் சென்றது. ராஜீவ் காந்தியும் அதற்கு ஆவன செய்ய, ஆட்சி கலைக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவிட்டார். முதல்வர் மாநிலத்தில் இல்லாதபோது, வேறு ஏதும் சட்டம், ஒழுங்கு இல்லாத போது ஆட்சி கலைக்கப்பட்டதற்காக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.ஜி.ஆர் ஆனால், எல்லாவற்றையும் மீறி தமிழக சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. 1984 டிசம்பர் 24-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக - காங்கிரஸ் கட்சி இடையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சையிலிருந்த எம்ஜிஆர் இந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இன்றைக்கு மட்டும் விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை. எல்லாக் காலத்திலும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கு 1984 தமிழகத் தேர்தலும் ஒரு வரலாற்று சாட்சி. காரணம், எம்ஜிஆருக்காக வேட்புமனு அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இருந்தபோதும் எம்ஜிஆரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றிருந்தது. எங்கே ஒர்க் அவுட் ஆனது அனுதாப அலை? எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் மட்டுமே அனுதாப அலை மேலோங்கிவிடவில்லை. எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பின. அதன் வீரியத்தைப் புரிந்துகொண்ட அதிமுக, எம்ஜிஆரைப் பற்றிய ஒரு வீடியோவை அமெரிக்காவில் உருவாக்கி, தமிழகத் திரையரங்குகளில் திரையிட்டது. அந்த ஆவணப்படத்துக்கு தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணித்தது போல ‘வெற்றித் திருமகன்’ என்று பெயரிடப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ, பல பிரிண்டுகள் போடப்பட்டு திரையிட்டப்பட்டது. நம் சம காலத்தில் ஜெயலலிதா டிவி பார்ப்பது போல் நாம் பார்த்த ஃபோட்டோக்களைப் போல் அன்று திரையரங்குகளில் காட்டப்பட்ட வீடியோவில், எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் அமர்ந்திருப்பது, உணவு அருந்துவது, இரட்டை இலையைக் காண்பிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்ற காட்சிகள் நாடாளுமன்றம் மற்றும் தமிழகத் தேர்தல் டிசம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 19-ம் தேதி எம்ஜிஆருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அது வெற்றிகரமாகவே நடந்தது. ஒரு பக்கம் இந்திரா காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை, மறுபக்கம் எம்ஜிஆர் சிகிச்சையில் இருப்பதால் எழுந்த அனுதாப அலை. இரண்டும் சேர்ந்து அனுதாப சுனாமியாகி மத்தியிலும், மாநிலத்திலும் அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தந்தது. அதை கிட்டத்தட்ட எல்லோரும் கணித்தே இருந்தனர். ஆனால், ‘அனுதாப அலை’களை வாக்குகளாக அறுவடை செய்ய முடியாத அரசியல் குழப்பங்களும் சொதப்பல்களும் கூட தமிழக அரசியலில் அரங்கேறியிருக்கின்றன. அதற்கும் சாட்சியாக நிற்கிறது அதிமுக. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். (வியூகங்கள் தொடரும்.!) அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01
`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!
என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன் அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கூடி பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி, 'இன்னா செய்தாரை ஒறுத்தல் என பொதுக்குழுவிலேயே பேசியிருந்தேன். விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. கட்சியின் நலனையும் தமிழ்நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அம்மாவின் ஆட்சி அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். பியூஸ் கோயலை சந்தித்தப் பிறகு இன்னும் விரிவாக பேசுகிறேன்' என்றார். டி.டி.வி. தினகரன் இன்னும் சில நிமிடங்களில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறார் டிடிவி. பிரதமர் மோடி 23 ஆம் தேதி தமிழகம் வரும் சூழலில் வேகவேகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது பாஜக.
`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!
என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன் அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கூடி பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி, 'இன்னா செய்தாரை ஒறுத்தல் என பொதுக்குழுவிலேயே பேசியிருந்தேன். விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. கட்சியின் நலனையும் தமிழ்நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அம்மாவின் ஆட்சி அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். பியூஸ் கோயலை சந்தித்தப் பிறகு இன்னும் விரிவாக பேசுகிறேன்' என்றார். டி.டி.வி. தினகரன் இன்னும் சில நிமிடங்களில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறார் டிடிவி. பிரதமர் மோடி 23 ஆம் தேதி தமிழகம் வரும் சூழலில் வேகவேகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது பாஜக.
Jana Nayagan தேர்தலுக்கு முன்பு வெளிவருமா? | NDA கூட்டணியை உறுதிசெய்த TTV?| | STALIN RN RAVI DMK
”ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக பயணித்து சினிமா போலாம், ஊர் சுற்றலாம்!” - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க மேற்கு மாவட்டம் மற்றும் மகளிரணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டுப் பேசினார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் சொல்லி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அவரது தொண்டர்களால்தான் கொண்டு வர முடியும். அ.தி.மு.க., 5 அற்புதமான தேர்தல் அறிக்கைகளை கொண்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றவுடன், அனைத்து ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கிலும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்ற திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடுவார். கருப்பு அட்டை, சிகப்பு அட்டை, சீனி அட்டை என்ற பாகுபாடே இல்லாமல் ரேசன் அட்டை இருந்தால் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். டெல்லியில் அ.தி.மு.க வைத்துள்ள கூட்டணியால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியும். மகளிருக்கு மட்டும் தற்போது இலவசப் பேருந்து பயணத்திட்டம் உள்ளது. பிரிந்த குடும்பங்களை சேர்க்கும் வகையில் இலவசப் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இனிமேல் ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசப் பேருந்துகளில் பயணித்து சினிமாவிற்கு செல்லலாம். ஊர் சுற்றலாம். ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அனைத்தும் அவரது சுய சிந்தனையில் உதித்த திட்டங்கள். யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை அவரால் மட்டுமே தர முடியும். அ.தி.மு.க கூட்டணிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பங்கேற்கும் மேடையில் கூட்டணியில் எத்தனை கட்சிகள் மேடை ஏறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லோரும் துப்பாக்கி போல் ஓரணியில்தான் நிற்போம்” என்றார். தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம்
”ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக பயணித்து சினிமா போலாம், ஊர் சுற்றலாம்!” - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க மேற்கு மாவட்டம் மற்றும் மகளிரணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டுப் பேசினார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் சொல்லி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அவரது தொண்டர்களால்தான் கொண்டு வர முடியும். அ.தி.மு.க., 5 அற்புதமான தேர்தல் அறிக்கைகளை கொண்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றவுடன், அனைத்து ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கிலும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்ற திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடுவார். கருப்பு அட்டை, சிகப்பு அட்டை, சீனி அட்டை என்ற பாகுபாடே இல்லாமல் ரேசன் அட்டை இருந்தால் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். டெல்லியில் அ.தி.மு.க வைத்துள்ள கூட்டணியால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியும். மகளிருக்கு மட்டும் தற்போது இலவசப் பேருந்து பயணத்திட்டம் உள்ளது. பிரிந்த குடும்பங்களை சேர்க்கும் வகையில் இலவசப் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இனிமேல் ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசப் பேருந்துகளில் பயணித்து சினிமாவிற்கு செல்லலாம். ஊர் சுற்றலாம். ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அனைத்தும் அவரது சுய சிந்தனையில் உதித்த திட்டங்கள். யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை அவரால் மட்டுமே தர முடியும். அ.தி.மு.க கூட்டணிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பங்கேற்கும் மேடையில் கூட்டணியில் எத்தனை கட்சிகள் மேடை ஏறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லோரும் துப்பாக்கி போல் ஓரணியில்தான் நிற்போம்” என்றார். தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம்
Greenlandக்காக EU உடன் மோதும் Trump - காத்திருக்கும் ஆபத்து என்ன? | Trade War | Decode
ஹோட்டலிலிருந்து வீடு திரும்பிய சிவசேனா கவுன்சிலர்கள்; மேயர் பதவிக்கு டெல்லியில் பேச்சுவார்த்தை!
மும்பை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இப்போது மேயர் பதவியைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. தங்களுக்கு 2.5 ஆண்டுகள் மேயர் பதவியைக் கொடுக்கவேண்டும் என்று சிவசேனா கூறி வருகிறது. ஆனால் மேயர் பதவியைப் பகிர்ந்து கொள்ள பா.ஜ.க தயாராக இல்லை. இதையடுத்து சிவசேனா கவுன்சிலர்களை பா.ஜ.க அடியோடு தன் வசம் எடுத்துக்கொள்ளும் அபாயம் இருந்தது. எனவே தனது கட்சி கவுன்சிலர்களை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த சில நாட்களாகத் தங்க வைத்திருந்தார். தற்போது பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளிநாடு சென்று இருக்கிறார். அவர் வந்த பிறகுதான் மேயர் பதவி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடையும். பட்னாவிஸ்-ஷிண்டே பட்னாவிஸ் வரும் 24ம் தேதிதான் மும்பை திரும்புகிறார். எனவே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்த கவுன்சிலர்கள் அனைவரும் அவர்களது வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில், ''பா.ஜ.க மற்றும் சிவசேனா கவுன்சிலர்களின் மொபைல் போன்களை ஒட்டுக்கேட்டு அவர்களை பா.ஜ.க தங்களது கண்காணிப்பில் வைத்திருக்கிறது. முதல் முறையாக மேயர் பதவி டெல்லியில் முடிவு செய்யப்படுகிறது'' என்று தெரிவித்தார். அதேசமயம் சிவசேனா மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மும்பை மேயர் பதவி தொடர்பாக டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் 100வது பிறந்தநாளையொட்டி இந்த ஆண்டு தங்களுக்கு மேயர் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். டெல்லியில் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் ஷெவாலேயைச் சந்தித்து பேசினார். மேயர் பதவி கிடைக்கவில்லையெனில் நிலைக்குழுத் தலைவர் பதவியையாவது கொடுங்கள் என்று சிவசேனா கோரி வருகிறது. மேயர் பதவியை விட நிலைக்குழுத் தலைவர் பதவி அதிக அதிகாரம் கொண்டது ஆகும். மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி
ஹோட்டலிலிருந்து வீடு திரும்பிய சிவசேனா கவுன்சிலர்கள்; மேயர் பதவிக்கு டெல்லியில் பேச்சுவார்த்தை!
மும்பை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இப்போது மேயர் பதவியைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. தங்களுக்கு 2.5 ஆண்டுகள் மேயர் பதவியைக் கொடுக்கவேண்டும் என்று சிவசேனா கூறி வருகிறது. ஆனால் மேயர் பதவியைப் பகிர்ந்து கொள்ள பா.ஜ.க தயாராக இல்லை. இதையடுத்து சிவசேனா கவுன்சிலர்களை பா.ஜ.க அடியோடு தன் வசம் எடுத்துக்கொள்ளும் அபாயம் இருந்தது. எனவே தனது கட்சி கவுன்சிலர்களை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த சில நாட்களாகத் தங்க வைத்திருந்தார். தற்போது பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளிநாடு சென்று இருக்கிறார். அவர் வந்த பிறகுதான் மேயர் பதவி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடையும். பட்னாவிஸ்-ஷிண்டே பட்னாவிஸ் வரும் 24ம் தேதிதான் மும்பை திரும்புகிறார். எனவே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்த கவுன்சிலர்கள் அனைவரும் அவர்களது வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில், ''பா.ஜ.க மற்றும் சிவசேனா கவுன்சிலர்களின் மொபைல் போன்களை ஒட்டுக்கேட்டு அவர்களை பா.ஜ.க தங்களது கண்காணிப்பில் வைத்திருக்கிறது. முதல் முறையாக மேயர் பதவி டெல்லியில் முடிவு செய்யப்படுகிறது'' என்று தெரிவித்தார். அதேசமயம் சிவசேனா மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மும்பை மேயர் பதவி தொடர்பாக டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் 100வது பிறந்தநாளையொட்டி இந்த ஆண்டு தங்களுக்கு மேயர் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். டெல்லியில் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் ஷெவாலேயைச் சந்தித்து பேசினார். மேயர் பதவி கிடைக்கவில்லையெனில் நிலைக்குழுத் தலைவர் பதவியையாவது கொடுங்கள் என்று சிவசேனா கோரி வருகிறது. மேயர் பதவியை விட நிலைக்குழுத் தலைவர் பதவி அதிக அதிகாரம் கொண்டது ஆகும். மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி
'எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... அறிவாலயம் போகும் வைத்திலிங்கம்?' - உச்சக்கட்ட பரபரப்பில் டெல்டா!
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்கவராக டெல்டா அதிமுக-வில் வலம் வந்தவர். சோழமண்டல தளபதி என்றே இவரை அதிமுகவினர் அழைத்தனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தொடர்ந்தார். பின்னர் டி.டி.வி.தினகரன் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை உருவானது. தினகரன் தரப்பு, எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தது. அப்போது வைத்திலிங்கம் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெல்லமண்டி நடராஜன் உட்பட பத்துக்கு மேற்பட்டவர்களை தினகரன் பக்கம் செல்லவிடாமல் தடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் வராமல் அரணாக இருந்தார். வைத்திலிங்கம் இதைதொடர்ந்து தி.மு.க ஆட்சி அமைந்தது. அதிமுகவிற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதைக் கடுமையாக எதிர்த்த நிலையில் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி. ஓபன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து வெளியேறி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கி, கட்சியை நிர்வகிக்க இரட்டை தலைமை வேண்டும் என்றும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் கூறி வந்தனர். எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து வந்த வைத்திலிங்கம் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தினார். '2025 டிசம்பருக்குள் ஒருங்கிணைப்பு நிகழ்ந்து விடும். அது நடந்தால் மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்' என்றார். இந்நிலையில் உடல்நிலை சிகிச்சை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வைத்திலிங்கம் வெளியில் தலைகாட்டுவதைக் குறைத்து கொண்டார். அவர் திமுக-வில் இணையப்போவதாக வந்த செய்திகளை அவரது தரப்பு மறுத்தது. சமீபத்தில், நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் உரிமை மீட்புக் குழு, உரிமை மீட்புக் கழகம் என மாற்றப்பட்டது. அதில் கூட ஒருங்கிணைப்பு கருத்தை முன் வைத்த வைத்தவைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இந்தச் சூழலில் சென்னையில் இருந்த வைத்திலிங்கம் பொங்கல் பண்டிக்கைக்கு தஞ்சாவூர் வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த அவரை அவரது ஆதரவாளர்கள் சந்தித்தனர். பொங்கல் அன்று சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் இருந்தவரை திமுக நிர்வாகிகள் சிலர் சந்தித்து பொங்கல் வாழ்த்து சொன்னார்கள். இது அரசியல் வட்டத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. வைத்திலிங்கம் திமுகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இந்த முறை வைத்திலிங்கம் தரப்பு மற்றும் அவரது உதவியாளரான ராஜா உள்ளிட்ட யாரும் இதை ஆணித்தரமாக மறுக்கவில்லை. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம் இந்நிலையில், மறைந்த எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவில் தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்..ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாட்டை வைத்தி செய்தார். அவருடைய ஆதரவாளர்களை இதற்கு வரச்சொல்லி தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஊரில் இருந்தும் வைத்திலிங்கம் மாலையிடச் செல்லாமல் தவிர்த்தார். அவரது ஆதரவாளர்கள் மட்டும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இது அரசியல் மட்டத்தில் உற்று கவனிக்கப்பட வைத்தி திமுகவிற்குள் அடைக்கலமாவது உறுதியாகி விட்டது என்றனர். ஒரத்தநாடு இந்தச் சூழலில் வைத்தி உடனடியாக சென்னை கிளம்பினார். வைத்தியைச் சுற்றி இருப்பவர்கள் யாருடைய போனையும் எடுக்கவில்லை. அவரது மூத்த மகன் பிரபு நாங்கள் திமுகவிற்குச் செல்ல மாட்டோம், லோக்கலில் எங்களுக்கு எதிர்ப்பு அரசியல் செய்யக்கூடியவரால் இது போன்ற வதந்தி கிளப்பி விடப்படுகிறது என்றார். திமுகவில் சேரும் தகவல் வெளியில் கசிந்து விட்டால் வெளிப்படையாகச் சேரும் போது போதிய கவனமும், பரபரப்பும் கிடைக்காமல் போய்விடும் என்பதால் மறுத்து வந்தனர். இந்நிலையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைவது உறுதி என்கிறார்கள். இன்று காலை 11.30 மணியளவில் சபாநாயகர் முன்னிலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார். இதைதொடர்ந்து அறிவாலயம் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகச் சொல்லப்படுதால் டெல்டா அரசியல் பரபரனு தகிக்கிறது. ஏற்கனேவே சொல்லிவிட்டேனே... அவங்களுக்கு இடமில்லை!- அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி திட்டவட்டம் இது குறித்து சிலரிடம் பேசினோம், ''திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட செயலாளராக இருந்து கட்சியைக் கட்டு கோப்பாக வைத்திருந்தார். மறைந்த முதல்வர் கருணாநிதியால் சோழமண்டல தளபதி என அழைக்கப்பட்டவர் கோ.சி.மணி. வயது மூப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அவர் மாவட்ட செயலாளர் பதவில் இருந்து எடுக்கப்பட்டார். அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஒருங்கிணைந்த தஞ்சாவூரில் மாவட்ட செயலாளர் ஆனார். சில காரணங்களால் ஸ்டாலினின் குட்புக்கில் பழநிமாணிக்கத்தால் இடம் பெற முடியவில்லை. கோ.சி.மணிக்குப் பிறகு டெல்டாவில் பெயர் சொல்ல கூடிய வகையில் யாரும் வளரவில்லை. தஞ்சாவூரில் ஆளுமையான நிர்வாகி திமுகவில் இல்லாததால் உட்கட்சி பூசல் அதிகரிப்பதாக தலைமை கருதியது. சீனியரான துரை.சந்திரசேகரன் கமிஷன் வாங்குவதை தவிர நமக்கு எதுக்கு வம்புனு எதிலும் பட்டும்படாமலும் ஒதுங்கி நிற்பார். இதனால் ஒரு வெற்றிடம் இருப்பதாக தலைமை கருதியது. இந்தச் சூழலில் வைத்திலிங்கத்தை திமுகவிற்குள் இழுக்க அமைச்சர் அன்பில் மகேஸ் மூலம் தூண்டில் போடப்பட்டது. அன்பில் மகேஸ் மனைவியின் ஊரும் தெலுங்கன்கடிக்காடு என்பதாலும், ஏற்கனவே இவர்கள் உறவினர்கள் என்பதாலும் இந்த மூவ் ஈசியாக அமைந்தது. “கோஷ்டிப்பூசலில் திணறும் டெல்டா அ.தி.மு.க...” - சரிவிலிருந்து மீட்பாரா எடப்பாடி! சாதரணமாக இருந்த என்னை உச்சாணி கொம்பில் உட்கார வைத்தவர் அம்மா ஜெயலலிதா, அவரது விசுவாசியான என்னால் எப்படி திமுகவிற்கு வர முடியும் எனக் கேட்டு தவிர்த்திருக்கிறார் வைத்தி. அப்போது, செந்தில்பாலாஜியும் வந்துருங்கண்ணே உங்களுக்கான மரியாதை தரப்படும் எனச் சொன்னது அவரை யோசிக்க வைத்தது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் தரப்புக்கு கட்சியில் இடம் இல்லைனு திட்டவட்டமாக கூறியது வைத்தியைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஒரத்தநாடு தொகுதியில் 2021ல் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வருகிறார் வைத்தி. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டது இப்படியே போனால் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் என நினைத்தார். எம்.பி தேர்தலில் ஓ.பி.எஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டதை போன்ற நிலையையும் அவர் விரும்பவில்லை. வைத்திலிங்கம் இதனால் அன்பில் மகேஸ் வீசிய வலையில் சிக்கி விட்டார். தனக்கு மட்டும் நல்லது நடந்தால் போதாது, தன்னையே நம்பியிருக்கும் தீவிர விசுவாசிகளான வெல்லமண்டி நடராஜன், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன், தஞ்சாவூரில் முன்னாள் துணை மேயர் மணிகண்டன், சண்முகபிரபு, சாமிநாதன், செல்லத்துரை, நாஞ்சிக்கோட்டை சத்தியராஜ் ஆகியோருக்கும் எதவாது செய்ய வேண்டும் என நினைத்தார். முதலில் திமுகவில் சேர்வதைத் தப்பான முடிவுண்ணே, நாம் பேசாம அமைதியாக இருந்துடலாம் என்று பலரும் சொல்லியுள்ளனர். 'நானும் குழப்பமான மனநிலையில்தான் இருந்தேன். ஆனால் நம்மை தூசியாக நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும், எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது நடக்கும். அரசியலில் இதெல்லாம் சகஜம்' என அவர்களைச் சமாதானம் செய்திருக்கிறார் வைத்தி. 'மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்' - மனோ தங்கராஜ் இதில் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன், நாஞ்சில் சத்தியராஜ் உள்ளிட்டோர் வைத்தியுடன் செல்வதற்குச் சம்மதித்து விட்டதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் அதிமுகவில் இணைய பேசி வருகின்றனர். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர், வரும் தேர்தலில் தனக்கு மற்றும் தன்னை சேர்ந்தவர்களுக்கு என மூன்று சீட் கேட்டிருக்கிறார். வைத்தியின் வருகையை அமைச்சர் கே.என்.நேரு தரப்பு எதிர்த்துள்ளது. வெல்லமண்டி நடராஜனுக்கு மவுசு இல்லாத பட்சத்தில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனத் தலைமையிடம் கேட்டுள்ளனர். அவர்களைச் சமாதானம் செய்த தலைமை, வைத்தியிடம் உங்களுக்கு சீட், அமைச்சர் பதவி தருவதாகக் கூறி டீல் பேசி முடிக்கப்பட்டதாம். அண்ணா அறிவாலயம் இன்று காலை 11.30 மணியளவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வைத்திலிங்கம் அதன் பிறகு அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அவருடன் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோரும் செல்ல இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேற்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்த பிறகு மத்திய மாவட்ட செயலாளரான துரை.சந்திரசேகரன், எம்.பி முரசொலி உள்ளிட்டோரை திரும்பி வரச்சொல்லி திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வர பாதியில் மீண்டும் சென்னை திரும்பி விட்டனர். இதனால் வைத்தி அறிவாலயத்தில் அடைக்கலமாவது உறுதி என்றனர். `நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு
'எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... அறிவாலயம் போகும் வைத்திலிங்கம்?' - உச்சக்கட்ட பரபரப்பில் டெல்டா!
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்கவராக டெல்டா அதிமுக-வில் வலம் வந்தவர். சோழமண்டல தளபதி என்றே இவரை அதிமுகவினர் அழைத்தனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தொடர்ந்தார். பின்னர் டி.டி.வி.தினகரன் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை உருவானது. தினகரன் தரப்பு, எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தது. அப்போது வைத்திலிங்கம் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெல்லமண்டி நடராஜன் உட்பட பத்துக்கு மேற்பட்டவர்களை தினகரன் பக்கம் செல்லவிடாமல் தடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் வராமல் அரணாக இருந்தார். வைத்திலிங்கம் இதைதொடர்ந்து தி.மு.க ஆட்சி அமைந்தது. அதிமுகவிற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதைக் கடுமையாக எதிர்த்த நிலையில் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி. ஓபன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து வெளியேறி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கி, கட்சியை நிர்வகிக்க இரட்டை தலைமை வேண்டும் என்றும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் கூறி வந்தனர். எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து வந்த வைத்திலிங்கம் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தினார். '2025 டிசம்பருக்குள் ஒருங்கிணைப்பு நிகழ்ந்து விடும். அது நடந்தால் மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்' என்றார். இந்நிலையில் உடல்நிலை சிகிச்சை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வைத்திலிங்கம் வெளியில் தலைகாட்டுவதைக் குறைத்து கொண்டார். அவர் திமுக-வில் இணையப்போவதாக வந்த செய்திகளை அவரது தரப்பு மறுத்தது. சமீபத்தில், நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் உரிமை மீட்புக் குழு, உரிமை மீட்புக் கழகம் என மாற்றப்பட்டது. அதில் கூட ஒருங்கிணைப்பு கருத்தை முன் வைத்த வைத்தவைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இந்தச் சூழலில் சென்னையில் இருந்த வைத்திலிங்கம் பொங்கல் பண்டிக்கைக்கு தஞ்சாவூர் வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த அவரை அவரது ஆதரவாளர்கள் சந்தித்தனர். பொங்கல் அன்று சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் இருந்தவரை திமுக நிர்வாகிகள் சிலர் சந்தித்து பொங்கல் வாழ்த்து சொன்னார்கள். இது அரசியல் வட்டத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. வைத்திலிங்கம் திமுகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இந்த முறை வைத்திலிங்கம் தரப்பு மற்றும் அவரது உதவியாளரான ராஜா உள்ளிட்ட யாரும் இதை ஆணித்தரமாக மறுக்கவில்லை. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம் இந்நிலையில், மறைந்த எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவில் தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்..ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாட்டை வைத்தி செய்தார். அவருடைய ஆதரவாளர்களை இதற்கு வரச்சொல்லி தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஊரில் இருந்தும் வைத்திலிங்கம் மாலையிடச் செல்லாமல் தவிர்த்தார். அவரது ஆதரவாளர்கள் மட்டும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இது அரசியல் மட்டத்தில் உற்று கவனிக்கப்பட வைத்தி திமுகவிற்குள் அடைக்கலமாவது உறுதியாகி விட்டது என்றனர். ஒரத்தநாடு இந்தச் சூழலில் வைத்தி உடனடியாக சென்னை கிளம்பினார். வைத்தியைச் சுற்றி இருப்பவர்கள் யாருடைய போனையும் எடுக்கவில்லை. அவரது மூத்த மகன் பிரபு நாங்கள் திமுகவிற்குச் செல்ல மாட்டோம், லோக்கலில் எங்களுக்கு எதிர்ப்பு அரசியல் செய்யக்கூடியவரால் இது போன்ற வதந்தி கிளப்பி விடப்படுகிறது என்றார். திமுகவில் சேரும் தகவல் வெளியில் கசிந்து விட்டால் வெளிப்படையாகச் சேரும் போது போதிய கவனமும், பரபரப்பும் கிடைக்காமல் போய்விடும் என்பதால் மறுத்து வந்தனர். இந்நிலையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைவது உறுதி என்கிறார்கள். இன்று காலை 11.30 மணியளவில் சபாநாயகர் முன்னிலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார். இதைதொடர்ந்து அறிவாலயம் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகச் சொல்லப்படுதால் டெல்டா அரசியல் பரபரனு தகிக்கிறது. ஏற்கனேவே சொல்லிவிட்டேனே... அவங்களுக்கு இடமில்லை!- அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி திட்டவட்டம் இது குறித்து சிலரிடம் பேசினோம், ''திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட செயலாளராக இருந்து கட்சியைக் கட்டு கோப்பாக வைத்திருந்தார். மறைந்த முதல்வர் கருணாநிதியால் சோழமண்டல தளபதி என அழைக்கப்பட்டவர் கோ.சி.மணி. வயது மூப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அவர் மாவட்ட செயலாளர் பதவில் இருந்து எடுக்கப்பட்டார். அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஒருங்கிணைந்த தஞ்சாவூரில் மாவட்ட செயலாளர் ஆனார். சில காரணங்களால் ஸ்டாலினின் குட்புக்கில் பழநிமாணிக்கத்தால் இடம் பெற முடியவில்லை. கோ.சி.மணிக்குப் பிறகு டெல்டாவில் பெயர் சொல்ல கூடிய வகையில் யாரும் வளரவில்லை. தஞ்சாவூரில் ஆளுமையான நிர்வாகி திமுகவில் இல்லாததால் உட்கட்சி பூசல் அதிகரிப்பதாக தலைமை கருதியது. சீனியரான துரை.சந்திரசேகரன் கமிஷன் வாங்குவதை தவிர நமக்கு எதுக்கு வம்புனு எதிலும் பட்டும்படாமலும் ஒதுங்கி நிற்பார். இதனால் ஒரு வெற்றிடம் இருப்பதாக தலைமை கருதியது. இந்தச் சூழலில் வைத்திலிங்கத்தை திமுகவிற்குள் இழுக்க அமைச்சர் அன்பில் மகேஸ் மூலம் தூண்டில் போடப்பட்டது. அன்பில் மகேஸ் மனைவியின் ஊரும் தெலுங்கன்கடிக்காடு என்பதாலும், ஏற்கனவே இவர்கள் உறவினர்கள் என்பதாலும் இந்த மூவ் ஈசியாக அமைந்தது. “கோஷ்டிப்பூசலில் திணறும் டெல்டா அ.தி.மு.க...” - சரிவிலிருந்து மீட்பாரா எடப்பாடி! சாதரணமாக இருந்த என்னை உச்சாணி கொம்பில் உட்கார வைத்தவர் அம்மா ஜெயலலிதா, அவரது விசுவாசியான என்னால் எப்படி திமுகவிற்கு வர முடியும் எனக் கேட்டு தவிர்த்திருக்கிறார் வைத்தி. அப்போது, செந்தில்பாலாஜியும் வந்துருங்கண்ணே உங்களுக்கான மரியாதை தரப்படும் எனச் சொன்னது அவரை யோசிக்க வைத்தது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் தரப்புக்கு கட்சியில் இடம் இல்லைனு திட்டவட்டமாக கூறியது வைத்தியைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஒரத்தநாடு தொகுதியில் 2021ல் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வருகிறார் வைத்தி. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டது இப்படியே போனால் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் என நினைத்தார். எம்.பி தேர்தலில் ஓ.பி.எஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டதை போன்ற நிலையையும் அவர் விரும்பவில்லை. வைத்திலிங்கம் இதனால் அன்பில் மகேஸ் வீசிய வலையில் சிக்கி விட்டார். தனக்கு மட்டும் நல்லது நடந்தால் போதாது, தன்னையே நம்பியிருக்கும் தீவிர விசுவாசிகளான வெல்லமண்டி நடராஜன், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன், தஞ்சாவூரில் முன்னாள் துணை மேயர் மணிகண்டன், சண்முகபிரபு, சாமிநாதன், செல்லத்துரை, நாஞ்சிக்கோட்டை சத்தியராஜ் ஆகியோருக்கும் எதவாது செய்ய வேண்டும் என நினைத்தார். முதலில் திமுகவில் சேர்வதைத் தப்பான முடிவுண்ணே, நாம் பேசாம அமைதியாக இருந்துடலாம் என்று பலரும் சொல்லியுள்ளனர். 'நானும் குழப்பமான மனநிலையில்தான் இருந்தேன். ஆனால் நம்மை தூசியாக நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும், எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது நடக்கும். அரசியலில் இதெல்லாம் சகஜம்' என அவர்களைச் சமாதானம் செய்திருக்கிறார் வைத்தி. 'மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்' - மனோ தங்கராஜ் இதில் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன், நாஞ்சில் சத்தியராஜ் உள்ளிட்டோர் வைத்தியுடன் செல்வதற்குச் சம்மதித்து விட்டதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் அதிமுகவில் இணைய பேசி வருகின்றனர். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர், வரும் தேர்தலில் தனக்கு மற்றும் தன்னை சேர்ந்தவர்களுக்கு என மூன்று சீட் கேட்டிருக்கிறார். வைத்தியின் வருகையை அமைச்சர் கே.என்.நேரு தரப்பு எதிர்த்துள்ளது. வெல்லமண்டி நடராஜனுக்கு மவுசு இல்லாத பட்சத்தில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனத் தலைமையிடம் கேட்டுள்ளனர். அவர்களைச் சமாதானம் செய்த தலைமை, வைத்தியிடம் உங்களுக்கு சீட், அமைச்சர் பதவி தருவதாகக் கூறி டீல் பேசி முடிக்கப்பட்டதாம். அண்ணா அறிவாலயம் இன்று காலை 11.30 மணியளவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வைத்திலிங்கம் அதன் பிறகு அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அவருடன் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோரும் செல்ல இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேற்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்த பிறகு மத்திய மாவட்ட செயலாளரான துரை.சந்திரசேகரன், எம்.பி முரசொலி உள்ளிட்டோரை திரும்பி வரச்சொல்லி திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வர பாதியில் மீண்டும் சென்னை திரும்பி விட்டனர். இதனால் வைத்தி அறிவாலயத்தில் அடைக்கலமாவது உறுதி என்றனர். `நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு
CBI விசாரணை, வதந்திகள்! TVK பதில் பேசாதது ஏன்? | Journalist Sivapriyan Interview | Vikatan TV
``ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி
இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதற்கு தி.மு.க-வினர் கடுப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``சட்டமன்றத்தில் இருந்து 3-ஆவது ஆண்டாக உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ரவி. மோதல் போக்கு காரணமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரைச் சட்டப்பேரவைக்கு அழைக்காத நிகழ்வுகள் நடைபெற்றன. ஆளுநர் ரவி பொய்களின் தோரணம் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை பொய்களின் தோரணம். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தொடர்ச்சியான அவருடைய சட்டமன்ற உரைகளைப் பார்த்தாலே அரசியல் செய்யத்தான் வந்திருக்கிறார் என்பது புரியும். ஆளுநர் ரவி 2022-ஆம் ஆண்டு ஆளுநர் ரவி எந்தச் சண்டித்தனமும் செய்யவில்லை. அதன்பிறகுதான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார். 2023-ஆம் ஆண்டு உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை. மக்கள் அறிவார்கள்! 2024-ஆம் ஆண்டு உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது. தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனப் புதுக்கதை எழுதினார் ஆளுநர் ரவி. உரையை வாசிக்காமல் அமர்ந்தார். 2025-ஆம் ஆண்டு முந்தைய ஆண்டில் கூறிய அதே காரணத்தை மீண்டும். எழுப்பி, அவையிலிருந்து உரையை வாசிக்காமல் போனார். இப்போதும் அதே பல்லவிதான். அதற்கு காரணம் என்ன? என்பதை மக்கள் அறிவார்கள். பிரதமர் மோடி பங்கேற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற போது தேசிய கீதம் பாடப்படவில்லை. அப்போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை? பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். ஆளுநர் அவர்களே.. அரசியல் செய்வதாக இருந்தால் மக்கள் பவனுக்குள் இருந்து செய்யாமல், கமலாலயத்திற்குச் சென்று செய்யுங்கள். ராஜ்பவன் பெயரை மக்கள் பவன் என மாற்றினால் மட்டும் போதுமா? பெரும்பான்மை மக்களின் குரலை எதிரொலிக்க வேண்டாமா? ’அரசியலமைப்பு கடமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது’ என்கிறது ஆளுநர் மாளிகை. மாநில அரசின் உரையைத்தான் ஆளுநர்கள் படிக்க வேண்டும் என்பதும் அரசியலமைப்பு கடமைதான். அதனை அலட்சியம் செய்துவிட்டு, அரசியலமைப்பு பற்றியெல்லாம் பாடம் எடுக்க ஆளுநருக்கு அருகதை இல்லை. ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிடுகிறது என்றால், ஒன்றியத்தில் இருந்து ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ வரிசையில் ஆளுநர் பதவியையும் பயன்படுத்தி பாஜக அல்லாத மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அபத்தங்களும், அவதூறுகளும், அரைகுறைத்தனமும் கொண்ட ஆளுநர் ரவியின் அறிக்கை அவருக்குத் தமிழ்நாட்டின் மீது இருக்கும் வெறுப்பு முற்றிப் போய்விட்டிருப்பதையே காட்டுகிறது. ஸ்டாலின் - ஆளுநர் ரவி உச்சநீதிமன்றத்தால் பல்வேறு நேரங்களில் அரசியலமைப்புக்கு விரோதமாகச் செயல்படுகிறார் எனக் குட்டு வாங்கிய பெருமைக்குரியவர் இந்தியாவிலேயே ஆளுநர் ரவி மட்டும்தான். இந்தியா முழுவதும் பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்றத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் ஆளுநர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் ஆளுநர் உரை எனும் நடைமுறையை நீக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சூளுரைத்துள்ளார்; இனி இந்தக் குரல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒலிக்கும், ஆளுநர்களின் அத்துமீறலை ஒழிக்கும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்! - அமைச்சர் ரகுபதி விளக்கம்
திருப்பரங்குன்றம் : அவர்களுக்கு அரசியலில் இடமில்லை.! - பாஜக தலைவராக பதவியேற்ற நிதின் நபின்
பாஜக-வின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிதின் நபின் இன்று (ஜன.20) பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற உடனேயே தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பேசியிருக்கிறார். பிரதமருக்கு நன்றி! பதவி ஏற்ற பிறகு பேசிய நிதின் நபின், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்கு இவ்வளவு உயரிய பதவி கிடைப்பதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்கி உள்ளீர்கள். இதற்காக உங்கள் முன் தலைவணங்குகிறேன். பிரதமருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி, நிதின் நபின் நீங்கள் நாட்டிற்கு சேவை செய்வதற்கு அயராது பாடுபடுவதை நாங்கள் சாதாரண தொண்டராக இருந்து கவனித்து வருகிறோம். இன்றைய தருணம் எனக்கு ஒரு உறுதிப்பாட்டின் தருணம். இன்று நான் பதவி மட்டும் ஏற்கவில்லை. கட்சியின் சித்தாந்தம், மரபுகள் மற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த தருணத்தில் எனது மூத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பரங்குன்றம் விவகாரம் சமீபத்தில் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்ததை நாம் பார்த்தோம். இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்களை எதிர்க்கட்சிகள் செய்வதை பார்த்து வருகிறோம். நீதிபதியை பதவி நீக்கம் செய்ய அவர்கள் முயற்சித்தனர். சோமநாதர் பெருமையை பற்றி பேசும் போதும், அதனை திருவிழாவாக பெருமையுடன் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் தூண் அரசியலில் இடம் இல்லை... இத்தகைய மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
ஜனநாயகன்: தணிக்கை வாரியம் vs தயாரிப்பு நிறுவனம் - இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன?
நடிகர் விஜய்-ன் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக சென்சார் சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்சார் போர்டு தரப்பில், ``படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு முடிவு செய்தது குறித்து பட நிறுவனத்துக்கு ஜனவரி 5-ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. 6-ம் தேதி சான்று கோரி பட நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல், மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யாத நிலையில், மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. #CBFC மேலும், ``14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது இடைக்கால முடிவு. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் சென்சார் சான்று வழங்கக் கோரமுடியாது. இதற்கிடையில் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. ``படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்து பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ``ஜனநாயகன் வழக்கைப் பொறுத்தவரை, இந்த படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து வாரிய தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இல்லாவிட்டால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும். படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய 20 நாட்களில் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பின் மூன்று நாட்களில் அந்த குழு படம் பார்க்க வேண்டும். மறு ஆய்வு குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என சென்சார் போர்டு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஜனநாயகன் தொடர்ந்து பட தயாதிப்பு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ``படம் 9 ம் தேதி வெளியிட முடிவு செய்ததால் அவசர வழக்காக விசாரிக்க தனி நீதிபதி முன் முறையிடப்பட்டது. படத்துக்கு எதிரான புகார் தங்களுக்கு வழங்கப்படவில்லை. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டது அதுசம்பந்தமான உத்தரவு வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தார். ``படத்தை பார்வையிட்ட குழுவினர், படத்தை பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும். மாறாக வீட்டுக்கு சென்று விட்டு நான்கு நாட்களுக்கு பின் புகார் அளிக்க முடியாது. சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளையே நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்ட காட்சிகள் முன்னதாகவே நீக்கப்பட்டு விட்டன. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் இரண்டு நாட்களில் சான்று வழங்க வேண்டும் என, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ``தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த அன்றே மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் தரவில்லை. ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் ஓடிடி தளம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் ``விசாரணையின் போது, சென்சார் போர்டு தங்கள் நடவடிக்கைக்கு ஆதரவாக பதிலை எடுத்து வைக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. திரைப்படம் என்பது வணிகம் எனும் போது தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், ``ஏற்கனவே 22 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. படம் ரிலிஸ் தேதி அறிவிக்க சான்று பெறும் வரை காத்திருக்கும் நடைமுறை இங்கு இல்லை. பாலிவுட்டிலும் படங்கள் வெளியீட்டு தேதி சான்று பெறும் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். ஜனநாயகன்: `அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு' - தள்ளிப்போகும் ஜனநாயகன் ரிலீஸ்? | Live Updates
ஜனநாயகன்: தணிக்கை வாரியம் vs தயாரிப்பு நிறுவனம் - இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன?
நடிகர் விஜய்-ன் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக சென்சார் சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்சார் போர்டு தரப்பில், ``படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு முடிவு செய்தது குறித்து பட நிறுவனத்துக்கு ஜனவரி 5-ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. 6-ம் தேதி சான்று கோரி பட நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல், மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யாத நிலையில், மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. #CBFC மேலும், ``14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது இடைக்கால முடிவு. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் சென்சார் சான்று வழங்கக் கோரமுடியாது. இதற்கிடையில் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. ``படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்து பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ``ஜனநாயகன் வழக்கைப் பொறுத்தவரை, இந்த படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து வாரிய தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இல்லாவிட்டால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும். படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய 20 நாட்களில் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பின் மூன்று நாட்களில் அந்த குழு படம் பார்க்க வேண்டும். மறு ஆய்வு குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என சென்சார் போர்டு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஜனநாயகன் தொடர்ந்து பட தயாதிப்பு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ``படம் 9 ம் தேதி வெளியிட முடிவு செய்ததால் அவசர வழக்காக விசாரிக்க தனி நீதிபதி முன் முறையிடப்பட்டது. படத்துக்கு எதிரான புகார் தங்களுக்கு வழங்கப்படவில்லை. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டது அதுசம்பந்தமான உத்தரவு வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தார். ``படத்தை பார்வையிட்ட குழுவினர், படத்தை பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும். மாறாக வீட்டுக்கு சென்று விட்டு நான்கு நாட்களுக்கு பின் புகார் அளிக்க முடியாது. சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளையே நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்ட காட்சிகள் முன்னதாகவே நீக்கப்பட்டு விட்டன. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் இரண்டு நாட்களில் சான்று வழங்க வேண்டும் என, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ``தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த அன்றே மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் தரவில்லை. ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் ஓடிடி தளம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் ``விசாரணையின் போது, சென்சார் போர்டு தங்கள் நடவடிக்கைக்கு ஆதரவாக பதிலை எடுத்து வைக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. திரைப்படம் என்பது வணிகம் எனும் போது தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், ``ஏற்கனவே 22 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. படம் ரிலிஸ் தேதி அறிவிக்க சான்று பெறும் வரை காத்திருக்கும் நடைமுறை இங்கு இல்லை. பாலிவுட்டிலும் படங்கள் வெளியீட்டு தேதி சான்று பெறும் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். ஜனநாயகன்: `அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு' - தள்ளிப்போகும் ஜனநாயகன் ரிலீஸ்? | Live Updates
`இனி என் தலைவர் நிதின் நபின்'எனக் கூறும் பிரதமர் மோடி; 45வது வயதில் பாஜக தலைவர்! - யார் இவர்?
பா.ஜ.கவின் புதிய தேசிய தலைவராக இன்று பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இப்பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ``உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.கவிற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட கட்சியின் முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனி நிதின் நபின் தான் எனது தலைவர். நான் சாதாரண கட்சி தொண்டன்''என்று தெரிவித்தார். 45 வயதில் பா.ஜ.கவுக்கு தலைவராக நிதின் நபின் பா.ஜ.கவில் தலைவர் பதவியை ஏற்ற இளம் தலைவர் என்ற பெயரை பெறுகிறார். இந்த ஆண்டு தமிழ் நாடு உட்பட முக்கிய மாநில சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் நிதின் நபின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் நிதின் நபின் பா.ஜ.க வின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கட்சி தலைவர் பதவிக்கு நிதின் நபின் தவிர்த்து வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. நிதின் நபினுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதரவு கொடுத்தனர். கட்சியின் 12-வது தலைவராக பதவியேற்றுள்ள நிதின் நபின் பீகாரில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார். 2006-ம் ஆண்டு நபின் கிஷோர் காலமானதை தொடர்ந்து நிதின் நபின் அரசியலுக்கு வந்தார். தனது தந்தையின் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் கட்சியில் 20 ஆண்டு அனுபவம் கொண்டவர். அதோடு கட்சியின் மூத்த தலைவர்களை அனுசரித்து செல்லகூடியவர். மேலும் நிதின் சத்தீஷ்கர் உட்பட சில மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்து பா.ஜ.கவை வெற்றி பெறவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
`6.6% டு 7.3%: நினைத்ததை விட வேகமாக வளரும் இந்தியாவின் GDP; ஆனாலும் ஒரு சிக்கல்' - IMF அறிக்கை
2025-26 நிதியாண்டின் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்தது சர்வதேச நாணய நிதியம். அந்தக் கணிப்பை இப்போது 7.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது அந்த அமைப்பு. சர்வதேச நாணய நிதியத்தின், 2026-ம் ஆண்டின் ஜனவரி உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை கூறுவதாவது... இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நினைத்ததை விட, மூன்றாவது காலாண்டில் அதிகமாக இருந்தது. நான்காவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி இன்னும் வலுவாக இருந்து வருகிறது. சர்வதேச நாணய நிதியம் | IMF ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth ஆனாலும், வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் தற்காலிக காரணிகள் மட்டுப்பட்டால், இந்த வளர்ச்சி 6.4 சதவிகிதமாக 2026-27 ஆண்டில் குறையலாம் உலக அளவிலான வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், அது நிலையாக தொடரும். 2026-ம் ஆண்டு 3.3 சதவிகித வளர்ச்சியையும், 2027-ம் ஆண்டு 3.2 சதவிகித வளர்ச்சியும் இருக்கும். உலக அளவிலான வளர்ச்சியை தற்போது வர்த்தக கொள்கைகளில் நடக்கும் மாற்றங்கள் குறைக்கின்றன. ஆனாலும், தென் அமெரிக்கா மற்றும் ஆசியா தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐயில் முதலீடு செய்வதால், வளர்ச்சி வேகத்தின் குறைவு சமன் செய்யப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பும், மத்திய அரசின் கணிப்பும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. 2025 - 26 நிதியாண்டின் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE
`6.6% டு 7.3%: நினைத்ததை விட வேகமாக வளரும் இந்தியாவின் GDP; ஆனாலும் ஒரு சிக்கல்' - IMF அறிக்கை
2025-26 நிதியாண்டின் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்தது சர்வதேச நாணய நிதியம். அந்தக் கணிப்பை இப்போது 7.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது அந்த அமைப்பு. சர்வதேச நாணய நிதியத்தின், 2026-ம் ஆண்டின் ஜனவரி உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை கூறுவதாவது... இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நினைத்ததை விட, மூன்றாவது காலாண்டில் அதிகமாக இருந்தது. நான்காவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி இன்னும் வலுவாக இருந்து வருகிறது. சர்வதேச நாணய நிதியம் | IMF ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth ஆனாலும், வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் தற்காலிக காரணிகள் மட்டுப்பட்டால், இந்த வளர்ச்சி 6.4 சதவிகிதமாக 2026-27 ஆண்டில் குறையலாம் உலக அளவிலான வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், அது நிலையாக தொடரும். 2026-ம் ஆண்டு 3.3 சதவிகித வளர்ச்சியையும், 2027-ம் ஆண்டு 3.2 சதவிகித வளர்ச்சியும் இருக்கும். உலக அளவிலான வளர்ச்சியை தற்போது வர்த்தக கொள்கைகளில் நடக்கும் மாற்றங்கள் குறைக்கின்றன. ஆனாலும், தென் அமெரிக்கா மற்றும் ஆசியா தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐயில் முதலீடு செய்வதால், வளர்ச்சி வேகத்தின் குறைவு சமன் செய்யப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பும், மத்திய அரசின் கணிப்பும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. 2025 - 26 நிதியாண்டின் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE
ஷிண்டேயுடன் கருத்துவேறுபாடு, உத்தவுடன் பேச்சு? - மும்பை மேயர் பதவியும் சூடுபிடிக்கும் அரசியலும்!
மும்பை மாநகராட்சிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. ஆனால் மும்பையில் மேயர் பதவியை பிடிக்க 114 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இரு கட்சிகளும் சேர்ந்து மும்பை மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த இருக்கின்றன. ஆனால் மேயர் பதவியை தங்களது கட்சியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 65 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் மும்பையில் மேயர் பதவியை பிடிக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவையாக இருக்கிறது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கவுன்சிலர்கள் உத்தவ் தாக்கரே கட்சிக்கு சென்றுவிடக்கூடும் என்ற அச்சம் ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஏற்பட்டு இருக்கிறது. உத்தவ் தாக்கரே எனவே தனது கட்சி கவுன்சிலர்கள் அனைவரையும் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த சில நாள்களாக தங்க வைத்து ஏக்நாத் ஷிண்டே பாதுகாத்து வருகிறார். அவர்கள் ஹோட்டலை விட்டு எப்போது வருவார்கள் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை. உத்தவுடன் பட்னாவிஸ் பேச்சுவார்த்தையா? ஏக்நாத் ஷிண்டே மேயர் பதவியை தங்களது கட்சிக்கு 2.5 ஆண்டுகள் கொடுக்க வேண்டும் என்று கோரி வருகிறார். எனவே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மேயர் பதவி தொடர்பாக உத்தவ் தாக்கரேயுடன் மொபைல் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''உத்தவ் தாக்கரேயுடன் நான் போனில் பேசியதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. அது ஒரு வதந்தி. அதோடு சிவசேனா(ஷிண்டே) மேயர் பதவியில் 2.5 ஆண்டுகள் கேட்பதாக வந்த செய்தியிலும் உண்மை இல்லை. அதுவும் ஒரு வதந்தியாகும். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்தித்தோம். நான் மும்பை திரும்பியவுடன் யார் மேயர் என்பது குறித்து முடிவு செய்யப்படும். மேயர் பதவி அல்லது வேறு எந்த பதவி தொடர்பாகவும் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. மும்பையில் 3 எஞ்சின் அரசு பதவியேற்க இருக்கிறது. அதற்குத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர். மும்பை, புனேயில் கட்டமைப்பு திட்டங்கள் முழு வேகத்தில் அமல்படுத்தப்படும். அதோடு மும்பை அருகில் 3-வது மும்பை உருவாக்கப்படும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இது குறித்து கூறுகையில், ''மும்பை மேயர் பதவி தொடர்பாக பா.ஜ.க-வுடன் கருத்து வேறுபாடு இல்லை'' என்றார். வரும் 23-ம் தேதிக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டே டெல்லி செல்கிறார். டெல்லியில் பா.ஜ.க தலைவர்களை சந்தித்து இப்பிரச்னைக்கு தீர்வு காண இருக்கிறார். ஏக்நாத் ஷிண்டே மும்பையில் மேயர் தேர்தல் வரும் 31ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு முன்பு வரும் 22ம் தேதி மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சி மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. இதில் மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும். மும்பை மேயர் பதவி எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் பா.ஜ.கவில் அந்த பிரிவை சேர்ந்த யாரும் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஏக்நாத் ஷிண்டே கட்சியிலும் யாரும் வெற்றி பெறவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து இரண்டு பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். இதனால் மகாராஷ்டிரா களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது.
தேனி: யார் தற்குறி? - பேனர் சண்டையில் திமுக - தவெக; மோதல் பதற்றம்; பேனர் அகற்றம்; என்ன நடந்தது?
தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் ஐந்தாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் தனது வார்டில் உள்ள வினோபாஜி காலனியில் சாலை அமைப்பதற்காக பேரூராட்சியிலிருந்து நிதி பெற்று சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். 'சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர்க் கல்வாய்களைச் சரி செய்து உயர்த்திக் கட்டி விட்டு அதன் பிறகு சாலை போடுங்கள்' எனத் தவெக கட்சியினர் கவுன்சிலரிடம் கேட்டுள்ளனர். பேனர் சண்டையில் தவெக - திமுக கட்சியினர் இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் சார்பில் அந்தப் பகுதியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டது. அதில், கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைகள் தரமாக அமைக்கப்படும். இதில் சில தற்குறிகள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள், குறைகள் இருந்தால் கவுன்சிலர் ஆகிய என்னிடம் கூற வேண்டும் எனத் தன்னுடைய தொலைபேசி எண்ணுடன் வினோபாஜி காலனி பகுதியில் பேனர் வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் அந்தப் பேனருக்கு அருகாமையில், கேள்வி கேட்டால் ஓட்டு போட்ட மக்களை தற்குறி எனக் கூறுவதா? எனக் குறிப்பிட்டு திமுக கவுன்சிலர் வெளியிட்ட புகைப்படத்திற்கு உண்மை புகைப்படமாகச் சில புகைப்படங்களை வைத்து, மக்களை முடிவு செய்வீர். யார் தற்குறி தவெகவா? தீய எண்ணம் கொண்ட? குறிப்பிட்டு பேனர் வைத்துள்ளனர். பேனர் சண்டையில் தவெக - திமுக கட்சியினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போடி தாலுகா காவல்துறையினர் இரவோடு இரவாக இரு பேனர்களையும் அகற்றினர். மேலும் அப்பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படாத வகையில் இரவு ரோந்து பணியிலும் பாதுகாப்புப் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 'டெல்லி சலோ' : திமுக-வா... தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!
ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று இன்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதன் பின், 'ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது... தேசிய கீதத்திற்கு மரியாதை தரவில்லை' என்று தமிழ்நாடு அரசின் மீது நீண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது ஆளுநர் மாளிகை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், இன்றைய தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு. அப்போது அவர் கூறியதாவது... ஜனநாயக முறைப்படி, ஆளுநரை நேரில் சந்தித்து அழைத்தோம். இன்று அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆளுநர் உரையை வாசியுங்கள் என்று கூறியது தவறில்லையே. சபையின் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நாங்கள் நடந்தோம். சபையின் மாண்பை மதிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆர்.என்.ரவி 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தயார் செய்து தரும் உரையைத்தான் ஜனாதிபதி படிக்கிறார். அப்படித்தான் இங்கேயும் தமிழ்நாடு அரசு தயார் செய்து தரும் உரையைப் படிக்கச் சொல்லிக் கேட்கிறோம். ஆக, நாடாளுமன்றத்தில் என்ன தவறு நடக்கிறதோ, இங்கேயும் அதே தவறுதான் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் இப்படி வெளியேற முடியுமா? ஒருவர் பேசும்போது, இன்னொருவர் குறுக்கிடக்கூடாது என்று மைக் ஆஃப் செய்யப்படும். அப்படி நான் பேசும்போது, ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம். 'Humble request' என்றுதான் அவரிடம் உரையை வாசிக்கச் சொல்லிக் கேட்டேன். ஆனாலும், அவர் வாசிக்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எப்போதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்... இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த மரபு எப்போதுமே மாறாது என்று பேசியுள்ளார். `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம்
ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று இன்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதன் பின், 'ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது... தேசிய கீதத்திற்கு மரியாதை தரவில்லை' என்று தமிழ்நாடு அரசின் மீது நீண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது ஆளுநர் மாளிகை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், இன்றைய தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு. அப்போது அவர் கூறியதாவது... ஜனநாயக முறைப்படி, ஆளுநரை நேரில் சந்தித்து அழைத்தோம். இன்று அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆளுநர் உரையை வாசியுங்கள் என்று கூறியது தவறில்லையே. சபையின் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நாங்கள் நடந்தோம். சபையின் மாண்பை மதிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆர்.என்.ரவி 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தயார் செய்து தரும் உரையைத்தான் ஜனாதிபதி படிக்கிறார். அப்படித்தான் இங்கேயும் தமிழ்நாடு அரசு தயார் செய்து தரும் உரையைப் படிக்கச் சொல்லிக் கேட்கிறோம். ஆக, நாடாளுமன்றத்தில் என்ன தவறு நடக்கிறதோ, இங்கேயும் அதே தவறுதான் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் இப்படி வெளியேற முடியுமா? ஒருவர் பேசும்போது, இன்னொருவர் குறுக்கிடக்கூடாது என்று மைக் ஆஃப் செய்யப்படும். அப்படி நான் பேசும்போது, ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம். 'Humble request' என்றுதான் அவரிடம் உரையை வாசிக்கச் சொல்லிக் கேட்டேன். ஆனாலும், அவர் வாசிக்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எப்போதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்... இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த மரபு எப்போதுமே மாறாது என்று பேசியுள்ளார். `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம்
சட்டசபை: ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க சட்டத் திருத்தம்” - முதல்வர் ஸ்டாலின் அதிரடி
இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதற்கு திமுகவினர் கடுப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆளுநர் அவர்கள் உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தைக் கொண்டு வந்து உரை ஆற்றியிருக்கிறார். ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநரின் செயல் பதவிக்கு அழகல்ல... மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் ஒரு முறை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையிலிருந்து வெளியே சென்றுள்ளார்; வெளியே என்று சொல்வதைவிட, வெளியேறிச் சென்றிருக்கிறார். ஆளுநரின் செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல. இந்திய அரசமைப்புச் சட்டம் Article 176-ன்படி, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழுமையாகப் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் ஆளுநர் தனது சொந்த கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கோ அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து தெரிவிக்கும் Article 176-ல், தெளிவுரைகளைக் கேட்பதற்கு வழிவகை செய்யப்படவில்லை. இருப்பினும் நாம் அவர் அவ்வாறு சில விளக்கங்களைக் குறிப்பிட்டு அரசுக்கு நேற்று கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவருக்கு அதற்கான பதிலும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் வேண்டுமென்றே அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயலைச் செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பர்யத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை, அதன் மாட்சிமையை அவமதிக்கும் செயலாகும் என்றே நான் கருதுகிறேன். 10-4-2023 அன்று இதே பேரவையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கே நான் நினைவுகூர விரும்புகிறேன். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியபோதிலும், அதை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழிமொழிந்தபோதிலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம் முதல்வர் ஸ்டாலின் மிகவும் வருத்தத்திற்குரியது! அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை; இந்த அரசும் தவறியதில்லை என்று அன்றைக்கு நான் எடுத்துரைத்தேன். அந்தக் கொள்கையையொட்டியே நான் ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க ஆணையிட்டேன். எனினும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஏற்கெனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்நாடு சட்டமன்றம், எட்டரைக் கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற மாமன்றம். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். மக்களுடைய பேராதரவோடு, பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்பவராக இருக்க வேண்டும். அதைத்தான் அரசமைப்புச் சட்டமும் அந்தப் பதவி வகிப்பவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் நம்முடைய ஆளுநர் அவர்கள் அதற்கு மாறாகச் செயல்படுகிறார். மாநில நிர்வாகத்தை முடக்கவும், பொது மேடைகளில் அரசியல் பேசியும் அவதூறு பரப்பிவருகிறார். அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். எனினும், அத்தகைய ஒரு முயற்சியை இங்கும் செய்ய அவர் முனைவது ஏற்புடையதல்ல. நூற்றாண்டு விழா கொண்டாடி, சீரோடும், சிறப்போடும் இயங்குகின்ற இப்பேரவையின் புகழ் மங்கிடாத வகையில் பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழித்தடத்தினைப் பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வரலாற்றுப் பெருமை கொண்ட இப்பேரவையின் மாண்பினைப் பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ள காரணத்தால், கீழ்க்காணும் தீர்மானத்தை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் இசைவோடு, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, முன்மொழிந்திட அனுமதி கோருகிறேன். (பேரவைத் தலைவரால் அனுமதி வழங்கப்பட்டது.) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏற்கெனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சென்றுள்ளதை இப்பேரவை ஏற்கவில்லை. மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே மாண்புமிகு ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்டதாக இப்பேரவைக் கருதுகிறது. அவ்வாறே அவைக் குறிப்பில் நடவடிக்கைக் குறிப்புகள் இடம் பெறலாம். மேலும், மரபுவழி நிகழ்வுகள், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பெறவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம், அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் இடம் பெறலாம் என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாடி பழனிசாமி சட்டமன்றம் முரண்டு பிடிக்கும் ஆளுநர் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தச் சட்டமன்றத்தின் மாண்பைக் காத்து, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தந்த மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டுதோறும் அரசின் சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும், அதனை முறையாக வாசிக்காமல் ஆளுநர் அவர்கள் முரண்டு பிடிப்பதும் தொடர்ந்து வருவது நல்லதல்ல. ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடைஞ்சலாக இருந்து இப்படி செயல்படுவது இங்கு மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஒரு நாள் செய்தியாக இதனைக் கடந்துவிட முடியாது. ஆண்டின் தொடக்கத்தில் அரசின் கொள்கை அறிக்கையை ஆளுநர் அவர்கள் முறையாக வாசிப்பது நடைமுறை. அந்த நடைமுறையை ஒருவர் தொடர்ந்து மீறும்போது அதுபோன்ற விதிகளை எதற்காக வைத்திருக்க வேண்டுமென்ற கேள்வி சாதாரணமாகவே அனைவரின் மனதிலும் எழும். எனவே, ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்ற உறுதியையும் இந்த மாமன்றத்தில் அறிவிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
சட்டசபை: ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க சட்டத் திருத்தம்” - முதல்வர் ஸ்டாலின் அதிரடி
இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதற்கு திமுகவினர் கடுப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆளுநர் அவர்கள் உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தைக் கொண்டு வந்து உரை ஆற்றியிருக்கிறார். ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநரின் செயல் பதவிக்கு அழகல்ல... மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் ஒரு முறை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையிலிருந்து வெளியே சென்றுள்ளார்; வெளியே என்று சொல்வதைவிட, வெளியேறிச் சென்றிருக்கிறார். ஆளுநரின் செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல. இந்திய அரசமைப்புச் சட்டம் Article 176-ன்படி, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழுமையாகப் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் ஆளுநர் தனது சொந்த கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கோ அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து தெரிவிக்கும் Article 176-ல், தெளிவுரைகளைக் கேட்பதற்கு வழிவகை செய்யப்படவில்லை. இருப்பினும் நாம் அவர் அவ்வாறு சில விளக்கங்களைக் குறிப்பிட்டு அரசுக்கு நேற்று கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவருக்கு அதற்கான பதிலும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் வேண்டுமென்றே அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயலைச் செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பர்யத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை, அதன் மாட்சிமையை அவமதிக்கும் செயலாகும் என்றே நான் கருதுகிறேன். 10-4-2023 அன்று இதே பேரவையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கே நான் நினைவுகூர விரும்புகிறேன். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியபோதிலும், அதை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழிமொழிந்தபோதிலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம் முதல்வர் ஸ்டாலின் மிகவும் வருத்தத்திற்குரியது! அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை; இந்த அரசும் தவறியதில்லை என்று அன்றைக்கு நான் எடுத்துரைத்தேன். அந்தக் கொள்கையையொட்டியே நான் ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க ஆணையிட்டேன். எனினும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஏற்கெனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்நாடு சட்டமன்றம், எட்டரைக் கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற மாமன்றம். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். மக்களுடைய பேராதரவோடு, பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்பவராக இருக்க வேண்டும். அதைத்தான் அரசமைப்புச் சட்டமும் அந்தப் பதவி வகிப்பவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் நம்முடைய ஆளுநர் அவர்கள் அதற்கு மாறாகச் செயல்படுகிறார். மாநில நிர்வாகத்தை முடக்கவும், பொது மேடைகளில் அரசியல் பேசியும் அவதூறு பரப்பிவருகிறார். அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். எனினும், அத்தகைய ஒரு முயற்சியை இங்கும் செய்ய அவர் முனைவது ஏற்புடையதல்ல. நூற்றாண்டு விழா கொண்டாடி, சீரோடும், சிறப்போடும் இயங்குகின்ற இப்பேரவையின் புகழ் மங்கிடாத வகையில் பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழித்தடத்தினைப் பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வரலாற்றுப் பெருமை கொண்ட இப்பேரவையின் மாண்பினைப் பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ள காரணத்தால், கீழ்க்காணும் தீர்மானத்தை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் இசைவோடு, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, முன்மொழிந்திட அனுமதி கோருகிறேன். (பேரவைத் தலைவரால் அனுமதி வழங்கப்பட்டது.) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏற்கெனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சென்றுள்ளதை இப்பேரவை ஏற்கவில்லை. மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே மாண்புமிகு ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்டதாக இப்பேரவைக் கருதுகிறது. அவ்வாறே அவைக் குறிப்பில் நடவடிக்கைக் குறிப்புகள் இடம் பெறலாம். மேலும், மரபுவழி நிகழ்வுகள், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பெறவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம், அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் இடம் பெறலாம் என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாடி பழனிசாமி சட்டமன்றம் முரண்டு பிடிக்கும் ஆளுநர் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தச் சட்டமன்றத்தின் மாண்பைக் காத்து, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தந்த மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டுதோறும் அரசின் சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும், அதனை முறையாக வாசிக்காமல் ஆளுநர் அவர்கள் முரண்டு பிடிப்பதும் தொடர்ந்து வருவது நல்லதல்ல. ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடைஞ்சலாக இருந்து இப்படி செயல்படுவது இங்கு மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஒரு நாள் செய்தியாக இதனைக் கடந்துவிட முடியாது. ஆண்டின் தொடக்கத்தில் அரசின் கொள்கை அறிக்கையை ஆளுநர் அவர்கள் முறையாக வாசிப்பது நடைமுறை. அந்த நடைமுறையை ஒருவர் தொடர்ந்து மீறும்போது அதுபோன்ற விதிகளை எதற்காக வைத்திருக்க வேண்டுமென்ற கேள்வி சாதாரணமாகவே அனைவரின் மனதிலும் எழும். எனவே, ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்ற உறுதியையும் இந்த மாமன்றத்தில் அறிவிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்! - அமைச்சர் ரகுபதி விளக்கம்
'தேசிய கீதம் பாடப்படவில்லை... மைக் ஆஃப் செய்யப்பட்டது... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை... பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று ஏகப்பட்ட காரணங்களைக் கூறி தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், ஆளுநரின் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடுத்த விளக்கம்... சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆர்.என்.ரவி 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபுப்படி, கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படும். இதை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆனால், ஆளுநர் ஆரம்பத்திலேயே தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறினார். அவர் சட்டமன்றத்தில் ஏதேனும் பிரச்னையைக் கிளப்ப முடியுமா என்று பார்த்தார். ஆனால், அது முடியவில்லை. அதனால், இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்தார். ஆளுநர் உரையைப் படிக்கக் கூறி, எவ்வளவு தாழ்ந்து போய் கேட்க முடியுமோ, அவ்வளவு தாழ்ந்து சபாநாயகர் கேட்டுப்பார்த்தார். ஆனால், ஆளுநர் வாசிக்காமல் வெளியேறிவிட்டார். மீடியா, பிற கட்சிகள் என அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம் - எந்த மைக் ஆஃப் செய்யப்பட்டது? அது சுத்தமான புளுகு. ஆளுநரை ஆளுநர் உரை பேசத் தான் அழைத்தோமே தவிர... மைக்கை ஆஃப் செய்ய அழைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் கூறாத குற்றச்சாட்டுகளைக் கூட ஆளுநர் கூறுகிறார். ஆர்.என்.ரவி - அப்பாவு `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம் தமிழ்நாடு அரசின் முதலீட்டுத் தகவல் தவறு என்று கூறுகிறார். மத்திய அரசு தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.9 சதவிகிதமாக உள்ளது என்று கூறியிருக்கிறது. முதலீடு, வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி 11.9 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியும்? ஆளுநர் வெளியேறிய உடனேயே ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளிவருகிறது என்றால், அது முன்னரே தயாரிக்கப்பட்டது தான். அதில் எங்களுக்கு கவலை இல்லை. தமிழ்நாட்டில் பெண்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு வழங்கப்படுகிறது. போதைப்பொருள் உற்பத்தி தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகத்தின் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. பெண்கள் அதிகம் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு. பிற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் பன்மடங்கு கல்வி வளர்ச்சி உள்ளது தற்கொலைக்கு பல காரணங்கள் உண்டு. அதற்கு அரசு காரணமாக முடியாது. ஆனால், அதை தடுக்க அரசு உதவி செய்து வருகிறது என விளக்கம் அளித்தார்.
எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்! - அமைச்சர் ரகுபதி விளக்கம்
'தேசிய கீதம் பாடப்படவில்லை... மைக் ஆஃப் செய்யப்பட்டது... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை... பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று ஏகப்பட்ட காரணங்களைக் கூறி தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், ஆளுநரின் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடுத்த விளக்கம்... சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆர்.என்.ரவி 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபுப்படி, கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படும். இதை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆனால், ஆளுநர் ஆரம்பத்திலேயே தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறினார். அவர் சட்டமன்றத்தில் ஏதேனும் பிரச்னையைக் கிளப்ப முடியுமா என்று பார்த்தார். ஆனால், அது முடியவில்லை. அதனால், இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்தார். ஆளுநர் உரையைப் படிக்கக் கூறி, எவ்வளவு தாழ்ந்து போய் கேட்க முடியுமோ, அவ்வளவு தாழ்ந்து சபாநாயகர் கேட்டுப்பார்த்தார். ஆனால், ஆளுநர் வாசிக்காமல் வெளியேறிவிட்டார். மீடியா, பிற கட்சிகள் என அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம் - எந்த மைக் ஆஃப் செய்யப்பட்டது? அது சுத்தமான புளுகு. ஆளுநரை ஆளுநர் உரை பேசத் தான் அழைத்தோமே தவிர... மைக்கை ஆஃப் செய்ய அழைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் கூறாத குற்றச்சாட்டுகளைக் கூட ஆளுநர் கூறுகிறார். ஆர்.என்.ரவி - அப்பாவு `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம் தமிழ்நாடு அரசின் முதலீட்டுத் தகவல் தவறு என்று கூறுகிறார். மத்திய அரசு தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.9 சதவிகிதமாக உள்ளது என்று கூறியிருக்கிறது. முதலீடு, வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி 11.9 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியும்? ஆளுநர் வெளியேறிய உடனேயே ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளிவருகிறது என்றால், அது முன்னரே தயாரிக்கப்பட்டது தான். அதில் எங்களுக்கு கவலை இல்லை. தமிழ்நாட்டில் பெண்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு வழங்கப்படுகிறது. போதைப்பொருள் உற்பத்தி தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகத்தின் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. பெண்கள் அதிகம் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு. பிற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் பன்மடங்கு கல்வி வளர்ச்சி உள்ளது தற்கொலைக்கு பல காரணங்கள் உண்டு. அதற்கு அரசு காரணமாக முடியாது. ஆனால், அதை தடுக்க அரசு உதவி செய்து வருகிறது என விளக்கம் அளித்தார்.
தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம்
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.19) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, அதிமுகவை அடிமைக் கட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். அதிமுக அடிமைக் கட்சியாக இருந்தால் கடந்த மக்களவைத் தேர்தலில் எப்படி தனித்துப் போட்டியிட்டிருக்க முடியும்? வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும். எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை ஆனால் அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும். தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி. ஆட்சிக்காக கூட்டணி இல்லை. தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை இதுவரை விரும்பியது இல்லை. இனியும் விரும்ப மாட்டார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே அதிமுகவின் கொள்கை என்று பேசியிருக்கிறார். மோடியின் தமிழக வருகை; மேடையேறப் போகும் கட்சிகள் எவை? - என்.டி.ஏ கூட்டணிக்கு அழுத்தமா?
'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2
கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தால் செம ரகளையாக இருக்கும். அதற்காகவே ஸ்பெசலாக வருகிறது 'கூட்டணி சர்க்கஸ்' - கட்சிகளின் கூட்டணி கலாட்டாக்கள்!' வைகோ 'கூட்டணி சர்க்கஸ்' - பகுதி 02 'கலைஞர் அவர்களே! உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர் சொன்னார். மக்கள் நம்பினார்கள். தூக்கியெறிந்தார்கள். இப்போது மீண்டும் உங்கள் மீது நான் குற்றச்சாட்டு சொல்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்களின் கண்ணீரில், ரத்தத்தில் கிடைத்த ஆஸ்திகளை குடும்ப சொத்தாக்கி தொண்டனுக்கே துரோகம் செய்து கட்சிக்குள்ளேயே நீங்கள் ஊழல் செய்துவிட்டீர்கள் என்பதற்குப் பிறகு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அருகதையும் கிடையாது. நீங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டீர்கள்' திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு மதிமுகவை தொடங்கிய சமயத்தில் நடந்த எழுச்சிப் பேரணியில் வைகோ பேசியவை இவை. vaiko அதே வைகோதான் இப்போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தி மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய வேண்டுமென பிரசாரம் செய்து வருகிறார். சீறிய வைகோ வைகோ ஆகச்சிறந்த நாடாளுமன்றவாதி. ராஜிவ் காந்தியையே நடுங்க வைத்தவர். திமுக தொண்டர்கள் மத்தியில் வைகோவுக்கென தனி செல்வாக்கு உருவாகியிருந்தது. இப்படியொரு சமயத்தில்தான் வைகோவுக்கு ஆதரவாக விடுதலைப் புலிகள் கருணாநிதியை கொல்ல திட்டமிட்டிருப்பதாக ஒரு கடிதத்தை தமிழக அரசின் தலைமைச் செயலர் எழுதுகிறார். அதை பொதுவெளியில் போட்டுடைக்கிறார் கருணாநிதி. 'எங்கே தன் மகனுக்கு இடையூறாக இந்த வைகோ இருந்துவிடுவானோ என்கிற அச்சத்தில் துரோகி பட்டம் சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றுகிறார்' என வைகோ சீறினார். வைகோ உதயமான மதிமுக! வைகோவுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 9 மாவட்டச் செயலாளர்கள் உடன் நின்றனர். 5 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தீக்குளித்தனர். வைகோ திமுக தனக்குதான் சொந்தமென தேர்தல் ஆணையத்துக்கு ஓலை அனுப்பினார். முடிவு அனுகூலம் அளிக்கவில்லை. 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டினார். மதிமுக என்கிற கட்சி உதயமானது. திமுகவையும் அதன் வாரிசு அரசியலையும் எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி, அப்போது ஆட்சியில் ஆட்சியிலிருந்த அதிமுகவை கடுமையாக எதிர்க்கத் தொடங்கிய கட்சி, பின்னாளில் அந்த இரண்டு கட்சிகளுடனுமே மாறி மாறி கூட்டணி வைத்தது பெரும் சோகம். கூட்டணி குருமாக்கள் மதிமுகவை தொடங்கிய பிறகு 1996 இல் முதல் தேர்தலை சந்திக்கிறார் வைகோ. அப்போது திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டையும் ஜனதா கட்சியையும் சேர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைக்கிறார். மதிமுக 177 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வைகோவுக்கு கிடைத்திருந்த வரவேற்புக்கும் அவர் செய்த ஆக்டிவ் அரசியலுக்கும் சில தொகுதிகளிலாவது மதிமுக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட மதிமுக வெல்லவில்லை. 6% வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன்பிறகுதான் வைகோ கூட்டணி குருமாக்களை கிண்ட தொடங்கினார். கருணாநிதி - வைகோ 'திமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததே இல்லையா? 2004 வரை அவர்களுடன் கூட்டணியிலிருந்து அமைச்சர் பதவியெல்லாம் அனுபவித்தீர்களே' என எடப்பாடி திமுகவை நோக்கி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி செல்வதில் திமுகவுக்கே முன்னோடி மதிமுகதான். வைகோ வாஜ்பாயின் நண்பர். 90 களின் கடைசியில் பாஜக ஆட்சி அமைத்த போது மதிமுக அவர்களுடன் தான் கூட்டணி வைத்திருந்தது. பாஜகவுக்கான ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டு ஆட்சி கவிழ்ந்த போதும் வைகோ வாஜ்பாய் பக்கமே நின்றார். அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியவுடன் திமுக பாஜக கூட்டணியில் வந்து சேர்ந்தது. 'திமுக இருக்கும் கூட்டணியில் போய் மதிமுக சேரவில்லை. மதிமுக இருக்கும் கூட்டணியில்தான் திமுக வந்து தஞ்சம் அடைகிறது' என லாஜிக் பிடித்துப் பேசினார் வைகோ. வைகோ ட்விஸ்ட் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - பாஜக கூட்டணியில் நான்கு இடங்களில் போட்டியிட்டு நான்கிலும் வெல்கிறது மதிமுக. இதே கூட்டணி அப்படியே 2001 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வைகோ ட்விஸ்ட் கொடுத்தார். திமுகவுக்கும் மதிமுகவுக்கும் தொகுதி உடன்பாடு எட்டப்படாமலே இருந்தது. 'மதிமுக தொண்டர்கள் திமுகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை' எனக்கூறி அறிவாலயத்துக்கு எதிராக பேசினார். மேலும், திமுக - பாஜக கூட்டணியில் பாஜக நிற்கும் தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளிலெல்லாம் வேட்பாளர்களை நிறுத்தினார். 211 தொகுதிகளில் போட்டியிட்டார். மாபெரும் தோல்வி. திமுகவும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. அதிமுக ஆட்சி அமைந்தது. வைகோ, ஜெயலலிதா மதிமுக தொண்டர்களை காரணம் காட்டி திமுக கூட்டணிக்கு நோ சொன்ன வைகோ அடுத்த மூன்றே ஆண்டுகளில் பெரிய யூடர்னாக போட்டார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோவை பொடாவில் சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம். கருணாநிதி வைகோவை சிறைக்கு நேரில் சென்று பார்த்து தேற்றினார். வைகோ பிணையில் வெளிவந்த சமயத்தில் 2004 நாடாளுமன்றத் தேர்தல். அப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் கரம் கோர்க்கிறார். இதே கூட்டணி 2006 சட்டமன்றத் தேர்தலில் தொடருமென நினைத்த போதுதான் கருணாநிதிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார் வைகோ. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஜூனியர் விகடனுக்கு பேட்டி கொடுத்த வைகோவின் தாயார், 'எத்தனை கோடி கொடுத்தாலும் அதிமுகவுடன் சேரமாட்டான்' என உறுதியாகக் கூறினார். திருச்சி மாநாட்டில் வைகோவின் கட் அவுட்டையும் வைத்துக் கொண்டு காத்திருந்தார் கருணாநிதி. இடது பக்க இண்டிகேட்டரை போட்டு விட்டு வலதுபக்கமாக காரை திருப்பி போயஸ்கார்டனுக்கு வண்டியை விட்டார் வைகோ. வைகோவின் உயிர்மூச்சான ஈழத்தை பற்றி பேசியதற்காக பொடாவில் தள்ளிய ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்த அந்த சம்பவம், அவர் மீதான நம்பகத்தன்மையின் மீது பெரிய கேள்வியை எழுப்பியது. வைகோ தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவே நினைத்தார் கருணாநிதி. அதிமுக கூட்டணியில் 35 சீட்டுகளை வாங்கியது மதிமுக. அதிமுக அந்தத் தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்தது. மதிமுகவும் ஒற்றை இலக்கத்திலேயே வென்றது. வைகோ, ஜெயலலிதா 2006-11 காலக்கட்டத்தில் ஈழப்போர் விவகாரம் பற்றியெறிந்து கொண்டிருந்தது. திமுகவுக்கு எதிராக காத்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் வைகோ. இதனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே தொடர்கிறார். நான்கு இடங்கள் மதிமுகவுக்கு. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. விருதுநகரில் வைகோவே தோற்றார். 2011 சட்டமன்றத் தேர்தல் வருகிறது. தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள் என பலரையும் சேர்த்துக் கொண்டு அதிமுக தேர்தலை எதிர்கொள்ள தயாரானது. மதிமுக இந்த முறையும் 20+ சீட்டுகளை எதிர்பார்த்தது. ஜெயலலிதா வைகோவுக்கு 12 சீட்டுகளுக்கு மேல் கொடுக்க விரும்பவில்லை. கௌரவக் குறைச்சலாக உணர்ந்த வைகோ தேர்தலையே புறக்கணித்தார். மோடிக்கு உற்ற நண்பர் எப்படி வாஜ்பாய்க்கு தோளோடு தோளாக நின்றாரோ அதேபோல மோடிக்கும் வைகோ உற்ற நண்பராக இருந்தார். மோடியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே வைகோதான். 2014 தேர்தலில் என்.டி.ஏவில் ஐக்கியமாகி 7 சீட்டுகளை பெற்றார். பாஜகவுக்காகவும் மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். இந்திய அளவில் பாஜக கோலோச்சினாலும் தமிழகத்தில் சோபிக்கவில்லை. பாஜகவும் தோற்றது. மதிமுகவும் தோற்றது. மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து கூட்டணியிலிருந்து வெளியேறினார். மோடி - வைகோ அப்படி வெளியே வந்தவர் கையிலெடுத்த பெரிய ப்ராஜெக்ட்தான் 'மக்கள் நலக் கூட்டணி'. கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக என அத்தனைக் கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் இணைத்தார். தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்ற கருணாநிதியின் கனவை மீண்டும் உடைத்தார். மூழ்கப் போகும் படகென தெரிந்தே சவாரிக்கு ஏற்பாடு செய்ததைப் போல, கடைசி நிமிடத்தில் வைகோ போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். இந்தத் தேர்தல் சமயத்தில்தான் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார் வைகோ. 'நமக்கு நாமே என பட்டாபிஷேகம் செய்ய துடித்துக் கொண்டு காத்திருக்கிறார் ஸ்டாலின். அவர் எதற்கும் தகுதியற்றவர். எதற்கும் லாயக்கற்றவர்' என ஸ்டாலினின் இமேஜை இயன்றளவுக்கு டேமேஜ் செய்தார் வைகோ. அடுத்த இரண்டே ஆண்டுகளில் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த, திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்ற வண்டியை அறிவாலயம் பக்கமாக திருப்பிவிட்டார். 2019, 2021, 2024 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திமுக கூட்டணியில் தொடர்ந்து நிற்கிறது மதிமுக. இதுவே பெரிய சாதனைதான். மக்களின் விருப்பத்துக்கு மாறான கூட்டணியை சரியாக தேர்வு செய்வது, திரில்லர் படங்களைப் போல தேர்தல் நெருக்கத்தில் க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுப்பது, நேற்றுப் பேசியதை அப்படியே மறந்துவிட்டு மீண்டும் புதிதாக தங்கள் வசதிக்கேற்ப அரசியல் கோடுகளை கிழித்துக் கொள்வது என மதிமுகவும் வைகோவும் தமிழக அரசியலில் நிறைய ரகளைகளை செய்திருக்கின்றனர். வைகோ வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? (தொடரும்) அடுத்த வாரம் இன்னொரு கட்சி, தலைவரின் கூட்டணி குருமாக்களை பார்க்கலாம்!
`காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு'ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இதுவரை ஒரு ஆண்டு கூட, அவர் ஆளுநர் உரையை முழுமையாகப் படித்ததில்லை. இதனால் இந்த முறையும் ஆளுநர் உரை மீது எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆர்.என்.ரவி கேட்டுள்ளார். ஆனால், மரபுப்படி, தமிழ்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதால், ஆளுநர் வெளியேறியுள்ளார் என முதற்கட்டமாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் ஆளுநர் ரவி வெளியேறியதற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், ஆளுநர் சட்டமன்றத்தில் அரசின் உரையை வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள்: 1- ஆளுநரின் மைக் தொடர்ந்து அணைக்கப்பட்டது மற்றும் அவர் பேச அனுமதிக்கப்படவில்லை; 2- உரையில் ஆதாரமற்ற பல கூற்றுகள் மற்றும் தவறான அறிக்கைகள் உள்ளன. மக்களைத் தொந்தரவு செய்யும் பல முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 3- மாநிலம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டுத் தரவுகள் தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்கு குறைவான ஈர்ப்பு உள்ளதாக மாறி வருவதைக் காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாடு, மாநிலங்களில், நேரடி வெளிநாட்டு முதலீட்டில் நான்காவது பெரிய பெறுநராக இருந்தது. இன்று அது ஆறாவது இடத்தில் இருக்க போராடுகிறது. 4- பெண்கள் பாதுகாப்பு பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. POCSO பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 55% அதிகரிப்பும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் 33% அதிகரிப்பும் கவலையளிக்கிறது; 5- போதைப்பொருள் மற்றும் போதை மருந்துகளின் பரவலான பரவல் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை வழக்குகளில் கூர்மையான அதிகரிப்பு மிகவும் கவலையான விஷயம். ஒரு வருடத்தில் போதைப்பொருள் பாவனை காரணமாக 2000 (இரண்டாயிரம்) பேர், பெரும்பாலும் இளைஞர்கள், தற்கொலை செய்து கொண்டனர். இது நமது எதிர்காலத்தை கடுமையாக ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது சாதாரணமாக புறக்கணிக்கப்படுகிறது. 'மைக் off செய்யப்பட்டது; பேச அனுமதிக்கவில்லை' - ஆளுநர் மாளிகை| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE 6- தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஆனால், இது முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. 7- நமது மாநிலத்தில் ஒரு வருடத்தில் சுமார் 20,000 (இருபதாயிரம்) பேர் தற்கொலை செய்து கொண்டனர் - ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 65 தற்கொலைகள். நாட்டில் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு அபாயகரமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலை தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் இது அரசுக்கு கவலையாக தெரியவில்லை. இது புறக்கணிக்கப்படுகிறது. 8- கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவு மற்றும் கல்வி நிறுவனங்களில் பரவலான தவறான நிர்வாகம் நமது இளைஞர்களின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கிறது. 50% க்கும் அதிகமான ஆசிரியர் பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன, விருந்தினர் ஆசிரியர்கள் எல்லா இடங்களிலும் அமைதியின்றி உள்ளனர். நமது இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். இது அரசுக்கு கவலையாக தெரியவில்லை மற்றும் பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றம் 9- பல ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாததால் பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் செயலிழந்துள்ளன. அவை நேரடியாக அரசின் சிறப்பு அதிகாரிகளின் கீழ் உள்ளன. கோடிக்கணக்கான மக்களுக்கு அடிமட்ட ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்பின் எழுத்துக்கும் உணர்வுக்கும் எதிரானது. மக்கள் கிராம பஞ்சாயத்துகளை மீட்டெடுப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இது உரையில் குறிப்பிடப்படவில்லை. 10- மாநிலத்தில் பல ஆயிரம் கோவில்கள் அறங்காவலர் குழு இல்லாமல் நேரடியாக மாநில அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. மில்லியன் கணக்கான பக்தர்கள் கோவில்களின் தவறான நிர்வாகத்தால் ஆழமாக காயப்பட்டு விரக்தியடைந்துள்ளனர். பண்டைய கோவில்களை மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கியமான உத்தரவுகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் கண்மூடித்தனமாக புறக்கணிக்கப்படுகின்றன; 11- தொழிற்சாலைகளை நடத்துவதற்கான காணக்கூடிய மற்றும் கண்ணுக்குத் தெரியாத செலவுகள் காரணமாக MSME துறைகள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. அவை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய துறையாகும். இருப்பினும், நாட்டில் 55 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட MSMEகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியம் இருந்தபோதிலும் சுமார் 4 மில்லியன் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை பிற மாநிலங்களில் அமைக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது; 12- கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் கீழ்நிலை ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி உள்ளது. அவர்கள் அமைதியின்றி மற்றும் விரக்தியடைந்துள்ளனர். அவர்களின் உண்மையான குறைகளை தீர்ப்பதற்கான வழிகள் குறிப்பிடப்படவில்லை; 13- தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தேதி குறித்த BJP; ஜன 23-க்குள் NDA கூட்டணியில் ட்விஸ்ட்? | TVK VIJAY CBI | DMK ADMK | IPS Vikatan
தேதி குறித்த BJP; ஜன 23-க்குள் NDA கூட்டணியில் ட்விஸ்ட்? | TVK VIJAY CBI | DMK ADMK | IPS Vikatan
'மைக் off செய்யப்பட்டது; பேச அனுமதிக்கவில்லை' - ஆளுநர் மாளிகை| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE
தமிழ்நாட்டில் சட்டமன்ற ஒழுங்கு பிரச்னையா? தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று ஆளுநர் உரையில் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளியேறியது. சட்ட ஒழுங்கு பிரச்னை விஷயத்தை ஆளுநர் மாளிகையும் தங்களது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது... தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. போக்சோ பாலியல் வன்கொடுமைகள் 55 சதவிகிதம் உயர்ந்துள்ளது... பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் 33 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில், கிட்டத்தட்ட 2,000 இளைஞர்கள் போதை மருந்து பழக்கத்தால் தற்கொலை செய்துள்ளனர். போதை மருந்து பழக்கம் பள்ளி மாணவர்களுக்கும் பரவியுள்ளது. தலித்துகள் மற்றும் தலித் பெண்களுக்கான எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 20,000 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளனர். ஒரு நாளுக்கு 65 எனும் விதம் தற்கொலைகள் நடக்கின்றன. இது மிக பயங்கரமானது. தமிழ்நாடு 'இந்தியாவின் தற்கொலை நகரமாக' மாறியுள்ளது. ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகை என்ன சொல்கிறது? ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது.... ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான பல தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. Reasons why Governor declined reading the Govt speech in the Assembly: 1- Governor’s Mike was repeatedly switched off and he was not allowed to speak; 2- The speech contains numerous unsubstantiated claims and misleading statements. Several crucial issues troubling the people… pic.twitter.com/EebC7wDJHg — LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) January 20, 2026 ஆர்.என்.ரவி ஏன் வெளியேறினார்? தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆர்.என்.ரவி கேட்டுள்ளார். ஆனால், மரபுப்படி, தமிழ்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதால், ஆளுநர் வெளியேறியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் வெளியேறினார் தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். கூட்டத்தொடர் தொடங்கியது! தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருக்கின்றனர். இன்று தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இதுவரை ஒரு ஆண்டு கூட, அவர் ஆளுநர் உரையை முழுமையாகப் படித்ததில்லை. இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இன்று ஆர்.என்.ரவி என்ன செய்யப்போகிறார் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'மைக் off செய்யப்பட்டது; பேச அனுமதிக்கவில்லை' - ஆளுநர் மாளிகை| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE
தமிழ்நாட்டில் சட்டமன்ற ஒழுங்கு பிரச்னையா? தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று ஆளுநர் உரையில் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளியேறியது. சட்ட ஒழுங்கு பிரச்னை விஷயத்தை ஆளுநர் மாளிகையும் தங்களது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது... தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. போக்சோ பாலியல் வன்கொடுமைகள் 55 சதவிகிதம் உயர்ந்துள்ளது... பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் 33 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில், கிட்டத்தட்ட 2,000 இளைஞர்கள் போதை மருந்து பழக்கத்தால் தற்கொலை செய்துள்ளனர். போதை மருந்து பழக்கம் பள்ளி மாணவர்களுக்கும் பரவியுள்ளது. தலித்துகள் மற்றும் தலித் பெண்களுக்கான எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 20,000 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளனர். ஒரு நாளுக்கு 65 எனும் விதம் தற்கொலைகள் நடக்கின்றன. இது மிக பயங்கரமானது. தமிழ்நாடு 'இந்தியாவின் தற்கொலை நகரமாக' மாறியுள்ளது. ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகை என்ன சொல்கிறது? ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது.... ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது. அவர் பேச அனுமதிக்கவில்லை. ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான பல தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. Reasons why Governor declined reading the Govt speech in the Assembly: 1- Governor’s Mike was repeatedly switched off and he was not allowed to speak; 2- The speech contains numerous unsubstantiated claims and misleading statements. Several crucial issues troubling the people… pic.twitter.com/EebC7wDJHg — LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) January 20, 2026 ஆர்.என்.ரவி ஏன் வெளியேறினார்? தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆர்.என்.ரவி கேட்டுள்ளார். ஆனால், மரபுப்படி, தமிழ்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதால், ஆளுநர் வெளியேறியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் வெளியேறினார் தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். கூட்டத்தொடர் தொடங்கியது! தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருக்கின்றனர். இன்று தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இதுவரை ஒரு ஆண்டு கூட, அவர் ஆளுநர் உரையை முழுமையாகப் படித்ததில்லை. இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இன்று ஆர்.என்.ரவி என்ன செய்யப்போகிறார் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி குடியரசு தின விழா: விவிஐபியாகப் பங்கேற்கும் தேனி பளியர் பழங்குடியினத் தம்பதி; காரணம் என்ன?
இந்திய நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியினரை அழைத்து அவர்களைக் கெளவரப்படுத்து வருகிறது மத்திய அரசு. அந்த வகையில், தேனி மாவட்டம் சேர்ந்த பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன் மற்றும் அவரது மனைவி கனகா ஆகியோரை விவிஜபி பிரிவின் கீழ் முதன்மை சிறப்பு அழைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 25 ஆண்டு கால சமூக பணி பெரியகுளம் அருகே உள்ள சொக்கன் அலை கிராமத்தைச் சேர்ந்தவர் பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன். இவருடைய மனைவி கனகா அங்கன்வாடியில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கண்ணன்தான் அவருடைய சமூகத்திலேயே முதல் முதலாக உயர்நிலைப்பள்ளி வரை சென்று படித்தவர். மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுக்க வந்தபோது தன்னைப் போலவே மற்றவர்களும் கல்வி கற்க வேண்டும் என நினைத்த கண்ணன் தன்னுடைய 17 வயதில் சமூகப்பணி செய்ய தொடங்கியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனைமலைத் தொடர்களில் வசிக்கும் புலையர் மற்றும் இரவாளர், முதுவர் பழங்குடி மக்கள் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்தே சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி படிக்க வைத்து பலரையும் அரசுப் பணிகளில் சேர்வதற்கு உத்வேகமாக இருந்துள்ளார். ஒரு பழங்குடி கிராமத்தின் தாகம் தீர்ந்த கதை! கண்ணன் மேலும் பழங்குடியின விவசாயிகளுக்குத் தேவையான பொருட்கள், அரசு மானியங்களைப் பெற்றுத் தருதல், மின்சார வசதி இல்லாத வீடுகளுக்குச் சூரியசக்தி விளக்குகளை ஏற்பாடு செய்தல் மற்றும் கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார். வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை நேரிடையாக மக்களுடன் சந்தித்து, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை உரிமைகளைத் தனது மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார். பழங்குடி மக்களுக்கு உதவிகளை வழங்கிய போது. இவர்களுடைய சமூகப்பணியைக் கெளரவிக்கும் விதமாக, வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க விவிஐபியாக அழைத்துள்ளது மத்திய அரசு. ``பழங்குடி மக்கள் எதுனாலும் என்கிட்ட கேட்கிற நம்பிக்கையை சம்பாதிச்சிருக்கேன்!” - `மலைமகன்' சதிஷ்
காசாவை மீட்கும் முயற்சி; ட்ரம்பின் 'அமைதி வாரியம்'; மெலோனி முதல் மோடி வரை; யார் யாருக்கு அழைப்பு?
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பகுதியை ராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக உயர்மட்ட 'அமைதி வாரியம் - Board Of Peace' என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்த அமைதி வாரியம் மூன்று கட்டமைப்புகளாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 1. நிதி திரட்டுதல், முதலீடு, பிராந்திய உறவுகளைக் கவனிக்கும் பொருப்பை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குழு கவனிக்கும். ட்ரம்ப் இந்த முதல் அமைப்பில் அமெரிக்காவின் செல்வாக்குமிக்க நபர்களும், உலகளாவிய நிதி நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். மேலும், இந்த அமைப்பில் சர்வதேச பிரதிநிதியாக முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், காசாவின் பொதுச் சேவைகளைக் கண்காணிக்கப் போகும் தேசியக் குழுவிற்குப் பாலஸ்தீனிய அதிகார சபையின் முன்னாள் துணை அமைச்சர் அலி ஷாத் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. தொழிற்நுட்ப வல்லுநர் குழு காசாவின் அன்றாட சிவில் நிர்வாகத்தைக் கவனிக்கும். இந்தப் பொறுப்புகளில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 3. ஆலோசனை மற்றும் வழிகாட்டும் அமைப்பாக 'காசா நிர்வாக வாரியம்' செயல்படும் எனத் திட்டமிடப்பட்டு, அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு மனிதாபிமான உதவிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது. காசா இந்த வாரியத்தில் மத்திய கிழக்கு நாடுகளான கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியின் அமைச்சர்கள், தூதர்கள், ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக், அதன் தூதர் நிக்கோலே மிலாடெனோவ், இஸ்ரேலிய கோடீஸ்வரர் யாகிர் கபாய் உள்ளிட்ட வணிகப் பிரமுகர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். எனவே, இந்த அமைதி வாரியத்தில் இணைந்து கொள்வதற்கு உலகின் பல்வேறு நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் இந்தியாவும் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. இது தொடர்பாக அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ``காசாவிற்கு நீடித்த அமைதியைக் கொண்டுவரும் இந்த முயற்சியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதில் பெருமை கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் சேர்த்து, துருக்கி அதிபர் எர்டோகன், இத்தாலி பிரதமர் மெலோனி, எகிப்து அதிபர் அல்-சிசி மற்றும் ஜோர்டான் மன்னர் உள்ளிட்ட பல தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது காசா விவகாரத்தில் ஒரு சர்வதேச கூட்டுப் பொறுப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. காசா மக்கள் ஒருவேளை இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் காசா பகுதி ஒரு புதிய பொருளாதார மையமாக மாற்றப்படும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது. எனினும், அங்குள்ள ஆயுதக் குழுக்களைக் களைவதும், மீண்டும் போர்ப் பதற்றம் உருவாகாமல் தடுப்பதும் இந்த வாரியத்தின் முன் உள்ள மிகப்பெரிய சவால் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ``எனக்கு நோபல் பரிசு தரவில்லை... அதனால் 'அமைதி' பேச்சுக்கே இடமில்லை – வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!
காசாவை மீட்கும் முயற்சி; ட்ரம்பின் 'அமைதி வாரியம்'; மெலோனி முதல் மோடி வரை; யார் யாருக்கு அழைப்பு?
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பகுதியை ராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக உயர்மட்ட 'அமைதி வாரியம் - Board Of Peace' என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்த அமைதி வாரியம் மூன்று கட்டமைப்புகளாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 1. நிதி திரட்டுதல், முதலீடு, பிராந்திய உறவுகளைக் கவனிக்கும் பொருப்பை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குழு கவனிக்கும். ட்ரம்ப் இந்த முதல் அமைப்பில் அமெரிக்காவின் செல்வாக்குமிக்க நபர்களும், உலகளாவிய நிதி நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். மேலும், இந்த அமைப்பில் சர்வதேச பிரதிநிதியாக முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், காசாவின் பொதுச் சேவைகளைக் கண்காணிக்கப் போகும் தேசியக் குழுவிற்குப் பாலஸ்தீனிய அதிகார சபையின் முன்னாள் துணை அமைச்சர் அலி ஷாத் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. தொழிற்நுட்ப வல்லுநர் குழு காசாவின் அன்றாட சிவில் நிர்வாகத்தைக் கவனிக்கும். இந்தப் பொறுப்புகளில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 3. ஆலோசனை மற்றும் வழிகாட்டும் அமைப்பாக 'காசா நிர்வாக வாரியம்' செயல்படும் எனத் திட்டமிடப்பட்டு, அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு மனிதாபிமான உதவிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது. காசா இந்த வாரியத்தில் மத்திய கிழக்கு நாடுகளான கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியின் அமைச்சர்கள், தூதர்கள், ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக், அதன் தூதர் நிக்கோலே மிலாடெனோவ், இஸ்ரேலிய கோடீஸ்வரர் யாகிர் கபாய் உள்ளிட்ட வணிகப் பிரமுகர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். எனவே, இந்த அமைதி வாரியத்தில் இணைந்து கொள்வதற்கு உலகின் பல்வேறு நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் இந்தியாவும் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. இது தொடர்பாக அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ``காசாவிற்கு நீடித்த அமைதியைக் கொண்டுவரும் இந்த முயற்சியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதில் பெருமை கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் சேர்த்து, துருக்கி அதிபர் எர்டோகன், இத்தாலி பிரதமர் மெலோனி, எகிப்து அதிபர் அல்-சிசி மற்றும் ஜோர்டான் மன்னர் உள்ளிட்ட பல தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது காசா விவகாரத்தில் ஒரு சர்வதேச கூட்டுப் பொறுப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. காசா மக்கள் ஒருவேளை இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் காசா பகுதி ஒரு புதிய பொருளாதார மையமாக மாற்றப்படும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது. எனினும், அங்குள்ள ஆயுதக் குழுக்களைக் களைவதும், மீண்டும் போர்ப் பதற்றம் உருவாகாமல் தடுப்பதும் இந்த வாரியத்தின் முன் உள்ள மிகப்பெரிய சவால் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ``எனக்கு நோபல் பரிசு தரவில்லை... அதனால் 'அமைதி' பேச்சுக்கே இடமில்லை – வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!

28 C