SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்

சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த நிகழ்ச்சியில் அஜித்பவாரும், சரத்பவாரும் தங்களது குடும்பத்தோடு ஒன்றாகக் கலந்து கொண்டனர். பாராமதியில் முதல் ஏ.ஐ. சென்டர் திறப்பு விழா நடந்தது. இதனை அதானி நிறுவனம் அமைத்துள்ளது. அதனைத் திறந்துவைக்கும் விழாவிற்கு அதானியே தனது மனைவியோடு நேரில் வந்திருந்தார். பாராமதி விமான நிலையத்திற்குச் சிறப்பு விமானத்தில் அதானி தனது மனைவியோடு வந்தபோது அவரை அஜித்பவாரும், சரத்பவாரின் பேரன் ரோஹித் பவாரும் சேர்ந்து வரவேற்றனர். அதானி தம்பதி பின் இருக்கையில் அமர்ந்து வர ரோஹித் பவார் கார் ஓட்டினார். அஜித்பவார் அவர் அருகில் அமர்ந்திருந்தார். பின்னர் நடந்த ஏ.ஐ. சென்டர் திறப்பு விழாவில் சரத்பவாரோடு அவரது மகள் சுப்ரியா சுலேயும் கலந்து கொண்டார். விழாவில் இரண்டு பவார் குடும்பங்களும் முழுமையாகக் கலந்து கொண்டனர். சரத்பவார் - அதானி விழாவில் சுப்ரியா சுலே அதானி மனைவியைக் கௌரவிப்பதாக இருந்தது. ஆனால் சுப்ரியாவே முன்வந்து அஜித்பவார் மனைவி சுனேதிர பவாரிடம் சொல்லி அதானி மனைவி பிரீத்தி அதானியைக் கௌரவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதில் பேசிய சுப்ரியா சுலே, அதானி குடும்பத்திற்கும் பவார் குடும்பத்திற்கும் இடையேயான உறவு 30 ஆண்டு பழமையானது என்று தெரிவித்தார். விழாவில் பேசிய அதானி, சரத்பவாரை தனது வழிகாட்டி என்றும், இந்தியாவின் கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கான சரத்பவாரின் தொலைநோக்கு பார்வை மற்றும் பங்களிப்பு அபரீதமானது என்றும் பாராட்டினார். விழா முடிந்த பிறகு அதானி தம்பதியை சரத்பவார் தனது இல்லத்திற்கு அழைத்துச்சென்றார். அவர்களுடன் அஜித்பவாரும் சென்றார். அவர்கள் அனைவருக்கும் சரத்பவார் தனது இல்லத்தில் விருந்து கொடுத்து கௌரவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு இரண்டு தலைவர்களும் ஒரே நிகழ்ச்சியில் இந்த அளவுக்கு நெருக்கமாக கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார் தேர்தலில் கூட்டு சேர்ந்த பவார் குடும்பம் மகாராஷ்டிரா முழுவதும் வரும் ஜனவரி 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. புனே மாநகராட்சியில் சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் தங்களது கடிகாரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அஜித்பவார் நிபந்தனை விதித்தார். இதை சரத்பவார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது. புனே அருகில் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சித் தேர்தலுக்கு இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் அஜித்பவார் தங்களது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சரத்பவார் கட்சிக்கு நிபந்தனை விதித்தார். ஆனால் அதனை சரத்பவார் ஏற்கவில்லை. இதையடுத்து அஜித்பவார் தனது முடிவில் இருந்து இறங்கி வந்துள்ளார். அஜித்பவார்-சரத்பவார் சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னத்தில் போட்டியிடலாம் என்று அஜித்பவார் தெரிவித்தார். இதையடுத்து இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை துணை முதல்வர் அஜித்பவார் பிம்ப்ரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ''இது நடக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதால் இந்தக் குடும்பம் ஒன்று சேர்ந்திருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். நாங்கள் ஒரு விவசாயி குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறோம். விவசாயம் எங்கள் ஜாதி. மகாராஷ்டிராவின் நலனுக்காக சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றன என்று கூறினார். இத்தேர்தலில் அஜித்பவார், பா.ஜ.கவை ஓரங்கட்டிவிட்டு தனித்து போட்டியிடுகிறார். இதையடுத்து மும்பையில் போட்டியிடும் தங்களது கட்சியின் 37 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அஜித்பவார் வெளியிட்டு இருக்கிறார். மகாராஷ்டிரா: சிதறிய வாக்குகள்; சின்னம் குளறுபடி... சரத்பவார் படுதோல்விக்கு காரணம் என்ன?

விகடன் 29 Dec 2025 12:45 pm

மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்

சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த நிகழ்ச்சியில் அஜித்பவாரும், சரத்பவாரும் தங்களது குடும்பத்தோடு ஒன்றாகக் கலந்து கொண்டனர். பாராமதியில் முதல் ஏ.ஐ. சென்டர் திறப்பு விழா நடந்தது. இதனை அதானி நிறுவனம் அமைத்துள்ளது. அதனைத் திறந்துவைக்கும் விழாவிற்கு அதானியே தனது மனைவியோடு நேரில் வந்திருந்தார். பாராமதி விமான நிலையத்திற்குச் சிறப்பு விமானத்தில் அதானி தனது மனைவியோடு வந்தபோது அவரை அஜித்பவாரும், சரத்பவாரின் பேரன் ரோஹித் பவாரும் சேர்ந்து வரவேற்றனர். அதானி தம்பதி பின் இருக்கையில் அமர்ந்து வர ரோஹித் பவார் கார் ஓட்டினார். அஜித்பவார் அவர் அருகில் அமர்ந்திருந்தார். பின்னர் நடந்த ஏ.ஐ. சென்டர் திறப்பு விழாவில் சரத்பவாரோடு அவரது மகள் சுப்ரியா சுலேயும் கலந்து கொண்டார். விழாவில் இரண்டு பவார் குடும்பங்களும் முழுமையாகக் கலந்து கொண்டனர். சரத்பவார் - அதானி விழாவில் சுப்ரியா சுலே அதானி மனைவியைக் கௌரவிப்பதாக இருந்தது. ஆனால் சுப்ரியாவே முன்வந்து அஜித்பவார் மனைவி சுனேதிர பவாரிடம் சொல்லி அதானி மனைவி பிரீத்தி அதானியைக் கௌரவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதில் பேசிய சுப்ரியா சுலே, அதானி குடும்பத்திற்கும் பவார் குடும்பத்திற்கும் இடையேயான உறவு 30 ஆண்டு பழமையானது என்று தெரிவித்தார். விழாவில் பேசிய அதானி, சரத்பவாரை தனது வழிகாட்டி என்றும், இந்தியாவின் கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கான சரத்பவாரின் தொலைநோக்கு பார்வை மற்றும் பங்களிப்பு அபரீதமானது என்றும் பாராட்டினார். விழா முடிந்த பிறகு அதானி தம்பதியை சரத்பவார் தனது இல்லத்திற்கு அழைத்துச்சென்றார். அவர்களுடன் அஜித்பவாரும் சென்றார். அவர்கள் அனைவருக்கும் சரத்பவார் தனது இல்லத்தில் விருந்து கொடுத்து கௌரவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு இரண்டு தலைவர்களும் ஒரே நிகழ்ச்சியில் இந்த அளவுக்கு நெருக்கமாக கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார் தேர்தலில் கூட்டு சேர்ந்த பவார் குடும்பம் மகாராஷ்டிரா முழுவதும் வரும் ஜனவரி 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. புனே மாநகராட்சியில் சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் தங்களது கடிகாரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அஜித்பவார் நிபந்தனை விதித்தார். இதை சரத்பவார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது. புனே அருகில் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சித் தேர்தலுக்கு இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் அஜித்பவார் தங்களது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சரத்பவார் கட்சிக்கு நிபந்தனை விதித்தார். ஆனால் அதனை சரத்பவார் ஏற்கவில்லை. இதையடுத்து அஜித்பவார் தனது முடிவில் இருந்து இறங்கி வந்துள்ளார். அஜித்பவார்-சரத்பவார் சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னத்தில் போட்டியிடலாம் என்று அஜித்பவார் தெரிவித்தார். இதையடுத்து இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை துணை முதல்வர் அஜித்பவார் பிம்ப்ரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ''இது நடக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதால் இந்தக் குடும்பம் ஒன்று சேர்ந்திருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். நாங்கள் ஒரு விவசாயி குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறோம். விவசாயம் எங்கள் ஜாதி. மகாராஷ்டிராவின் நலனுக்காக சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றன என்று கூறினார். இத்தேர்தலில் அஜித்பவார், பா.ஜ.கவை ஓரங்கட்டிவிட்டு தனித்து போட்டியிடுகிறார். இதையடுத்து மும்பையில் போட்டியிடும் தங்களது கட்சியின் 37 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அஜித்பவார் வெளியிட்டு இருக்கிறார். மகாராஷ்டிரா: சிதறிய வாக்குகள்; சின்னம் குளறுபடி... சரத்பவார் படுதோல்விக்கு காரணம் என்ன?

விகடன் 29 Dec 2025 12:45 pm

பாஜக: நயினார் கான்வாய்க்கு கறுப்புக் கொடி காட்டினாரா அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகி? பின்னணி என்ன?

'தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை தந்திருந்த அவரது வாகனத்தை மறித்து கறுப்புக் கொடி காட்ட முயற்சி செய்ததாக ஊட்டியில் பெண் ஒருவரைப் பிடித்து கூட்டம் முடியும் வரை ஆம்புலன்ஸில் அடைத்து வந்திருக்கிறது காவல்துறை. நயினார் நாகேந்திரன் வருகை இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு பேசினோம், என் பெயர் வைஷாலி பா.ஜ.க - வின் நீண்டகால பெண் நிர்வாகியாக இருந்துவந்தேன். இளைஞர் அணி, மகளிர் அணி போன்ற முக்கிய பதவிகளை வகித்து களத்தில் வேலை செய்துவந்தேன். அண்ணாமலை நற்பணி மன்றத்தில் இணைந்து மாநில அளவில் பொறுப்பைப் பெற்றேன். ஊட்டி: ’இதுக்கு முன்பு இப்படி கேள்விபட்டதே இல்ல’ –யானை நடமாட்டத்தால் ஆச்சர்யத்தில் மக்கள்! இதனால் கோபமடைந்த மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள், நான் வகித்து வந்த விவசாய அணித் தலைவர் பதவியைப் பறித்து என்னை கட்சியை விட்டே நீக்கிவிட்டார்கள். எனக்கு நடந்த இந்த அநீதி குறித்து மாநிலத் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கான்வாயின் போது நயினார் வாகனத்தின் அருகில் சென்றேன். நயினார் நாகேந்திரன் வருகை கறுப்புக் கொடி காட்டினேன், மறியலில் ஈடுபட்டேன் எனக் காவலர்கள் என்னை நெருக்கி மயக்கமடையச் செய்து ஆம்புலன்ஸில் அடைத்து வைத்துவிட்டார்கள். கூட்டம் முடிந்து அனைவரும் கிளம்பியதுமே விடுவித்தார்கள். நான் பா.ஜ.க-வுக்கு எதிரி கிடையாது என்றார். தவெக: அண்ணாமலை கம்முனு இருந்திருந்தால் இந்நேரம் பதவி தொடர்ந்திருக்கும் - அருண்ராஜ்

விகடன் 29 Dec 2025 12:23 pm

இரு குஜராத்தியர்கள் மும்பையை விழுங்கிவிடுவார்கள்– உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மகாராஷ்டிரா முழுவதும் வரும் 15ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இத்தேர்தலுக்காக உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக மும்பை மாடல் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை உத்தவ் தாக்கரே வெளியிட்டார். அதில் பேசிய உத்தவ் தாக்கரே, ''தியாகிகளின் தியாகங்களால் நாம் மும்பையைப் பெற்றோம். ஆனால் நம் கண் முன்னே, அது இரண்டு குஜராத்தி நபர்களால் விழுங்கப்படப் போகிறது. நாம் நமது தனிப்பட்ட லட்சியங்களுக்கு முன்னுரிமை அளித்து, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால், இந்த பிளவை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். உங்களில் யாரும் பிரிந்து செல்லக்கூடாது. ஷிண்டே-பட்னாவிஸ் ராஜ் தாக்கரே தலைமையிலான எம்.என்.எஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்துகொள்வதற்கு சில சமரசங்கள் தேவைப்பட்டன. ஒரு கூட்டணி அல்லது காரியங்கள் எப்போதும் ஒருவரின் விருப்பப்படி நடப்பதில்லை. மகாராஷ்டிராவுக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் நாங்கள் எம்.என்.எஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். ஒரு கூட்டணி அல்லது கூட்டு உருவாகும்போது, ​​​​எல்லாமே நமது விருப்பப்படி 100% நடப்பதில்லை. அதுபோலவே, அவர்களின் விருப்பப்படியும் 100% நடப்பதில்லை. சில இடங்கள் எங்களுடையவைதான், ஆனால் அவற்றை நாங்கள் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. மராத்தியர்களுக்கு வீரத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. நாங்கள் இத்தனை ஆண்டுகளாகப் போராடினோம். மும்பைக்காகவும், ஒன்றுபட்ட மகாராஷ்டிரத்திற்காகவும் நடந்த போராட்டத்தில் பாஜகவுக்கோ அல்லது அப்போதைய ஜனசங்கத்திற்கோ எந்தத் தொடர்பும் இல்லை. குஜராத் மும்பையை விரும்பியது, அதனால் அவர்கள் போராடினார்கள். இன்றுவரை, பாஜக எங்களைப் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறது'' என்று தெரிவித்தார். மும்பையில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 65 முதல் 70 வார்டுகளை உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவிற்கு கொடுத்துள்ளார். இதில் 12 முதல் 15 வார்டுகளில் கடந்த தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றது. ஆனால் இப்போது அந்த கவுன்சிலர்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா அல்லது பா.ஜ.கவிற்கு சென்றுவிட்டனர். இதனால் அந்த வார்டுகளை ராஜ் தாக்கரே கட்சிக்கு உத்தவ் தாக்கரே கொடுத்துவிட்டார். மும்பைக்கு அருகில் உள்ள கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியிலும் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே கட்சிகளிடையே தொகுதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தமுள்ள 122 வார்டுகளில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 68 வார்டுகளிலும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 54 வார்டுகளிலும் போட்டியிட இருக்கின்றன. இங்கு பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இடையேயும் தொகுதி பங்கீடு உறுதியாகி இருக்கிறது. உத்தவ் தாக்கரே கட்சி போன்று ஏக்நாத் ஷிண்டே கட்சியும் இங்கு 68 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். எஞ்சிய 54 வார்டுகளில் பா.ஜ.க போட்டியிடுகிறது. இதற்கு பா.ஜ.கவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பா.ஜ.க தொண்டர்கள் போட்டியிட மிகவும் குறைவான இடங்கள் கிடைத்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மும்பையில் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடியாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. தங்களுக்கு 100 தொகுதிக்கு மேல் வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே நிர்ப்பந்தம் செய்து வருகிறார். ஆனால் 85 முதல் 90 வார்டுகள் மட்டுமே சிவசேனாவிற்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சிவசேனா அமைச்சர் உதய் சாவந்த் தெரிவித்தார். இன்னும் 20 வார்டுகளில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருக்கிறது. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தங்களது இந்திய குடியரசுக்கட்சிக்கு வார்டுகள் ஒதுக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரையும் பா.ஜ.க தலைவர்கள் சந்தித்து பேசியிருக்கின்றனர். வேட்பு மனுதாக்கல் முடிய இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் தாராவியை சேர்ந்த தமிழ் பெண் மஞ்சுளா கதிர்வேல் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விகடன் 29 Dec 2025 9:52 am

திமுகவை சீண்டும் தேசிய காங்கிரஸ்? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் பதில் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனப் பேசப்பட்டது. அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வுக் குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி, அதுவும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், திமுக எம்.பி கனிமொழி,``அ.தி.மு.க ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். இதை மேற்கோள்காட்டி திமுகவை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பிரவின் சக்கரவர்த்தி,``அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010-ம் ஆண்டில், உத்தர பிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, உ.பியை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது. வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கொரோனாவிற்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். ஜோதிமணி பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ``தமிழ்நாட்டை உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் திறமையான நலத்திட்ட விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆனால் உத்தர பிரதேசம், நிறுவனமயமான ஆட்சிக்கு பதிலாக 'புல்டோசர் ராஜ்' மாடலை ஊக்குவித்து, பெரும்பாலான மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளது. கடன் சுமையை அதன் விளைவுகளுடன் சேர்த்தே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தித் திறன், சமூகப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் மனித மூலதனத்தை வலுப்படுத்தும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதி கொள்கைகளும் முக்கியம். தமிழ்நாடு அதிக வரி வருவாயை வழங்கும் மாநிலமாக இருந்தாலும், நிதிப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது. எம்பி சசிகாந்த் செந்தில் ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமாக அதிக நிதியைப் பெறுகின்றன. இயற்கை சீற்றங்களின்போதும், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களின்போதும் கூட, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நியாயமான நிதிகள் மறுக்கப்பட்டு, தாமதப்படுத்தப்பட்டுள்ளன.ஆகவே, நாம் கடன் குறித்து விவாதிப்போம். ஆனால் சரியான பின்னணியுடன். வளர்ச்சி விளைவுகள், தனிநபர் வருமானக் குறியீடுகள், வரிப் பங்களிப்பு மற்றும் நிதிப் பகிர்வு, மற்றும் ஆட்சியின் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்போம். இந்த அளவுகோல்களின்படி, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வெகு தூரத்தில் முன்னணியில் உள்ளது. எனவே நமது தமிழ்நாட்டை தாழ்த்த வேண்டாம். எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், ``கடனளவை மட்டுமே வைத்து ஒரு மாநிலத்தை மதிப்பிடுவது என்பது வெறும் உடலை வைத்து ஒருவரின் உடற்தகுதியை தீர்மாணிப்பது போன்றதாகும். என பதிலளித்திருக்கிறார். காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த' வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!

விகடன் 29 Dec 2025 9:42 am

திமுகவை சீண்டும் தேசிய காங்கிரஸ்? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் பதில் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனப் பேசப்பட்டது. அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வுக் குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி, அதுவும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், திமுக எம்.பி கனிமொழி,``அ.தி.மு.க ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். இதை மேற்கோள்காட்டி திமுகவை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பிரவின் சக்கரவர்த்தி,``அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010-ம் ஆண்டில், உத்தர பிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, உ.பியை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது. வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கொரோனாவிற்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். ஜோதிமணி பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ``தமிழ்நாட்டை உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் திறமையான நலத்திட்ட விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆனால் உத்தர பிரதேசம், நிறுவனமயமான ஆட்சிக்கு பதிலாக 'புல்டோசர் ராஜ்' மாடலை ஊக்குவித்து, பெரும்பாலான மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளது. கடன் சுமையை அதன் விளைவுகளுடன் சேர்த்தே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தித் திறன், சமூகப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் மனித மூலதனத்தை வலுப்படுத்தும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதி கொள்கைகளும் முக்கியம். தமிழ்நாடு அதிக வரி வருவாயை வழங்கும் மாநிலமாக இருந்தாலும், நிதிப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது. எம்பி சசிகாந்த் செந்தில் ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமாக அதிக நிதியைப் பெறுகின்றன. இயற்கை சீற்றங்களின்போதும், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களின்போதும் கூட, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நியாயமான நிதிகள் மறுக்கப்பட்டு, தாமதப்படுத்தப்பட்டுள்ளன.ஆகவே, நாம் கடன் குறித்து விவாதிப்போம். ஆனால் சரியான பின்னணியுடன். வளர்ச்சி விளைவுகள், தனிநபர் வருமானக் குறியீடுகள், வரிப் பங்களிப்பு மற்றும் நிதிப் பகிர்வு, மற்றும் ஆட்சியின் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்போம். இந்த அளவுகோல்களின்படி, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வெகு தூரத்தில் முன்னணியில் உள்ளது. எனவே நமது தமிழ்நாட்டை தாழ்த்த வேண்டாம். எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், ``கடனளவை மட்டுமே வைத்து ஒரு மாநிலத்தை மதிப்பிடுவது என்பது வெறும் உடலை வைத்து ஒருவரின் உடற்தகுதியை தீர்மாணிப்பது போன்றதாகும். என பதிலளித்திருக்கிறார். காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த' வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!

விகடன் 29 Dec 2025 9:42 am

ரயில்களின் நேரம் மாற்றம்: எந்த ரயில், எப்போது புறப்படும்? நேர அட்டவணை; முழு விவரம்!

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்குப் பதிலாக 10.40 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்குப் புறப்படும். நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும். எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை. நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 8.50-க்குப் புறப்படும். சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்குப் பதிலாக மதியம் 12.10 மணிக்குப் புறப்படும். செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும். சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம் ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்குப் புறப்படும். தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 9.05 மணிக்குப் புறப்படும். இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாகப் புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை. மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்; AC, Non AC வகுப்புகளுக்கு எவ்வளவு? - இந்திய ரயில்வே அறிவிப்பு

விகடன் 29 Dec 2025 9:06 am

ரயில்களின் நேரம் மாற்றம்: எந்த ரயில், எப்போது புறப்படும்? நேர அட்டவணை; முழு விவரம்!

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்குப் பதிலாக 10.40 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்குப் புறப்படும். நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும். எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்குப் புறப்படும். எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை. நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 8.50-க்குப் புறப்படும். சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்குப் பதிலாக மதியம் 12.10 மணிக்குப் புறப்படும். செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும். சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம் ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்குப் புறப்படும். தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 9.05 மணிக்குப் புறப்படும். இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாகப் புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை. மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்; AC, Non AC வகுப்புகளுக்கு எவ்வளவு? - இந்திய ரயில்வே அறிவிப்பு

விகடன் 29 Dec 2025 9:06 am

100 நாள் வேலைத்திட்டம்: நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? - அழைப்பு விடுக்கும் எல்.முருகன்

'தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை தந்திருந்த அவர், ஏ.டி.சி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று தலைமை உரை நிகழ்த்தியுள்ளார். அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க நிர்வாகியுமான எல்.முருகன் மேடையில் உரை நிகழ்த்தியுள்ளார். ஊட்டி பொதுக்கூட்டம் தொண்டர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன், ஊழல் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க-வை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். இன்னும் இரண்டே மாதங்களில் தி.மு.க வீட்டிற்குப் போகப்போகிறது. ஊழல் என்றாலே தி.மு.க. என்று தான் அர்த்தம். 2ஜி விவகாரத்தில் காற்றிலும் மெகா ஊழல் செய்தது தி.மு.க. நாட்டின் வளர்ச்சிக்காக நான்கு வழி, ஆறு வழிச் சாலைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மோடி அவர்கள் மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தருகிறார். 100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா? - கனிமொழி கேள்வி! ஆனால், மத்திய அரசின் திட்டங்களின் மீது தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்கள் எனப் பிரதமர் மோடி அவர்கள் உயர்த்தியிருக்கிறார். நேரடியாக அவரவர் கணக்குகளில் பணம் செல்லும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. எல்.முருகன் உரை 100 நாள் வேலைத்திட்டத்தில் என்ன குறை இருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க வரவேண்டும். நான் தயாராக இருக்கிறேன். வெறும் அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தை கையில் எடுத்து மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள் என்றார். பாஜக-வுக்கு எதிராக 100 நாள் திட்ட பணியாளர்களை திரட்டி நாடு தழுவிய போராட்டம் - பாலபாரதி

விகடன் 29 Dec 2025 8:29 am

அட்டைப்படம்

விகடன் ப்ளஸ்

விகடன் 29 Dec 2025 7:21 am

தேனியில் மலை போல் சேரும் குப்பைகள்! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

தேனி, அல்லிநகரம் அருகே உள்ள சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகளின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கமாகவே மாறி உள்ளது. அல்லிநகரத்திற்கு அருகில் பாரஸ்ட் ரோட் பகுதியில் ஒரு சிறிய குன்று உள்ளது, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குப்பைகள் எல்லாம் அந்த குன்றின் அடிவாரத்தில் கொட்டுகின்றனர். நகராட்சியினர் இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை சுத்தம் செய்யாததால் சுமார் 100 மீட்டர் தொலைவு வரை குப்பைகள் பரவி கிடக்கிறது. இதனால் அந்த குன்று தற்போது குப்பை மலை போல் காட்சியளிக்கிறது. இந்த குன்றிற்கு பக்கத்திலேயே மழலையார் பள்ளியும், கோவில்களும் இருப்பதால் இதை கடந்து செல்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தேனியில் மலை போல் சேரும் குப்பைகள் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக பொது மக்களிடம் கேட்ட போது, நகராட்சியிலிருந்து தூய்மை பணியாளர்கள் சில முறை மட்டுமே குப்பை வாங்க வருகின்றனர். இதனால் வேறு வழியின்றி இங்கு குப்பைகளை கொட்டுகிறோம். இதனால் கொசுக்கள் தொல்லைதான் அதிகமாகிறது. நகராட்சியிலிருந்து குப்பைகளை வாங்கினாலே இது குறையும் என்றனர் . மழலையர் பள்ளி இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அந்த பகுதியை உடனடியாக சுத்தம் செய்கிறோம். அதோடு தினமும் தூய்மை பணியாளர்களை அனுப்பி குப்பைகளை சேகரிக்க சொல்கிறோம் என்றனர்.

விகடன் 29 Dec 2025 6:20 am

அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி

சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் நாளை ( டிச. 29) நடைபெறவுள்ளது. ராமதாஸ் இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே. மணி, 'அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியிருக்கிறார். அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் வலிமையான மற்றும் தவிர்க்க முடியாத கட்சியாகவும் இருந்த பாமகவை திட்டமிட்டு, சூழ்ச்சியால், அபகரிப்பதற்கும் பிளவுபடுத்துவதற்கும் அன்புமணி மேற்கொண்ட நடவடிக்கையால், ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் அடைந்தார். அன்புமணியின் தூண்டுதலால், சிலர் ராமதாஸின் மனம் புண்படும்படியாகப் பேசினர். தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரமில்லாத கட்சியாக மாறிவிட்டது. ஜி.கே.மணி (File Photo) இந்த நிலையில்தான், மீண்டும் அங்கீகாரமுள்ள கட்சியாக வளர்த்தெடுப்பேன் என்று புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான், ராமதாஸ் பின்னே வலிமையான கட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அன்புமணி பின்னால் விவரம் அறியாமல் சென்ற நிர்வாகிகள் மீண்டும் திரும்பி வருவார்கள். ராமதாஸ் தலைமையில் பாமக அமைக்கும் கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். பாமகவுக்கு அன்புமணி வர வேண்டுமென அனைவரும் விரும்பினோம். சூழ்ச்சியால் பிரிந்து சென்றனர் என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து பேசிய பாமக எம்.எல். ஏ அருள், ராமதாஸுடன் கூட்டணிக்காக 3 கட்சிகள் அழைப்பு விடுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 3 கூட்டணிகளுமே அன்புமணியை நம்பத் தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 28 Dec 2025 2:56 pm

காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த'வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வைப் புகழ்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி பேசுபொருளாகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு அருகில் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ``பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அடிமட்டத் தொண்டர்களை முதலமைச்சர் மற்றும் பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு வளர அனுமதிக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார். திக்விஜய் சிங் அதற்கு அடுத்தப் பதிவுகளில், ``நான் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின் தீவிர எதிர்ப்பாளன் என விளக்கமளித்த போதிலும், அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டேக் செய்து, ``காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தங்களும் அதிகாரப் பரவலாக்கமும் தேவை என்றப் பதிவும் விவாதத்தை சூடுபடுத்தியது. இதற்கிடையில், திக்விஜய் சிங், ``காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நம்பவில்லை. காந்தியின் கொலையாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ள எங்களுக்கு எதுவும் இல்லை. நான் காங்கிரஸில் இருந்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடியுள்ளேன். நான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க சித்தாந்தத்தை எதிர்க்கிறேன். நான் அவர்களின் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானவன் எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவின் உறுப்பினரான பவன் கேரா, ``கோட்சேயின் ஆதரவாளர்கள் காந்தியின் ஆதரவாளர்களாக இருக்க முடியாது என்றார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,``ஆர்.எஸ்.எஸ் என்பது வெறுப்பால் ஆன ஒரு அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் வெறுப்பைப் பரப்புகிறது. அல்-கொய்தாவும் வெறுப்பால் ஆன ஒரு அமைப்புதான். அல்-கொய்தாவும் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. ஆர்.எஸ்.எஸ்-இடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை. அல்-கொய்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை என்றார். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டணியைப் போல காங்கிரஸ் ஒருபோதும் மத அரசியல் செய்வதில்லை. எங்களுக்கு அதிகாரம் குறைவாக இருக்கலாம், ஆனால் எங்கள் முதுகெலும்பு பலவீனமானதல்ல. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மதத்தின் பெயரால் வாக்குகள் கேட்பதில்லை. நாங்கள் மதத்தை நம்புகிறோம், ஆனால் சிலர் மதத்தை அரசியலாக மாற்றிவிட்டனர். பா.ஜ.க-விடம் அதிகாரம் இருக்கிறது, ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஒரு காலத்தில் மூவர்ணக் கொடியையும் வந்தே மாதரத்தையும் கூட ஏற்க மறுத்தவர்கள், இப்போது மக்களின் உரிமைகளை நசுக்குகிறார்கள். நாம் உறுதியாக நின்று இத்தகைய முயற்சிகளை எதிர்க்க வேண்டும், என்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் பைலட்,`` காங்கிரஸ் கட்சிக்குள் எந்த சிக்கலும் இல்லை. இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சியை வழங்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கிறது. நாட்டிற்கு ஒரு வலுவான எதிர்க்கட்சி தேவை. காங்கிரஸுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். அவர்கள் சொல்ல வேண்டியதைச் சொன்னார்கள். கார்கே மற்றும் ராகுலை வலுப்படுத்துவதே எங்கள் ஒரே குறிக்கோள், எனக் கூறினார். சச்சின் பைலட் மற்றொரு மூத்த தலைவரான சுப்ரியா ஸ்ரீநேட், ```ஆர்.எஸ்.எஸ்-ஸிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள்தான் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தியைக் கொன்ற நாதூராம் கோட்சேயின் அமைப்பிடமிருந்து நாங்கள் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றார். மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்

விகடன் 28 Dec 2025 2:54 pm

காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த'வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வைப் புகழ்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி பேசுபொருளாகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு அருகில் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ``பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அடிமட்டத் தொண்டர்களை முதலமைச்சர் மற்றும் பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு வளர அனுமதிக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார். திக்விஜய் சிங் அதற்கு அடுத்தப் பதிவுகளில், ``நான் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின் தீவிர எதிர்ப்பாளன் என விளக்கமளித்த போதிலும், அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டேக் செய்து, ``காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தங்களும் அதிகாரப் பரவலாக்கமும் தேவை என்றப் பதிவும் விவாதத்தை சூடுபடுத்தியது. இதற்கிடையில், திக்விஜய் சிங், ``காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நம்பவில்லை. காந்தியின் கொலையாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ள எங்களுக்கு எதுவும் இல்லை. நான் காங்கிரஸில் இருந்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடியுள்ளேன். நான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க சித்தாந்தத்தை எதிர்க்கிறேன். நான் அவர்களின் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானவன் எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவின் உறுப்பினரான பவன் கேரா, ``கோட்சேயின் ஆதரவாளர்கள் காந்தியின் ஆதரவாளர்களாக இருக்க முடியாது என்றார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,``ஆர்.எஸ்.எஸ் என்பது வெறுப்பால் ஆன ஒரு அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் வெறுப்பைப் பரப்புகிறது. அல்-கொய்தாவும் வெறுப்பால் ஆன ஒரு அமைப்புதான். அல்-கொய்தாவும் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. ஆர்.எஸ்.எஸ்-இடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை. அல்-கொய்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை என்றார். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டணியைப் போல காங்கிரஸ் ஒருபோதும் மத அரசியல் செய்வதில்லை. எங்களுக்கு அதிகாரம் குறைவாக இருக்கலாம், ஆனால் எங்கள் முதுகெலும்பு பலவீனமானதல்ல. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மதத்தின் பெயரால் வாக்குகள் கேட்பதில்லை. நாங்கள் மதத்தை நம்புகிறோம், ஆனால் சிலர் மதத்தை அரசியலாக மாற்றிவிட்டனர். பா.ஜ.க-விடம் அதிகாரம் இருக்கிறது, ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஒரு காலத்தில் மூவர்ணக் கொடியையும் வந்தே மாதரத்தையும் கூட ஏற்க மறுத்தவர்கள், இப்போது மக்களின் உரிமைகளை நசுக்குகிறார்கள். நாம் உறுதியாக நின்று இத்தகைய முயற்சிகளை எதிர்க்க வேண்டும், என்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் பைலட்,`` காங்கிரஸ் கட்சிக்குள் எந்த சிக்கலும் இல்லை. இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சியை வழங்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கிறது. நாட்டிற்கு ஒரு வலுவான எதிர்க்கட்சி தேவை. காங்கிரஸுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். அவர்கள் சொல்ல வேண்டியதைச் சொன்னார்கள். கார்கே மற்றும் ராகுலை வலுப்படுத்துவதே எங்கள் ஒரே குறிக்கோள், எனக் கூறினார். சச்சின் பைலட் மற்றொரு மூத்த தலைவரான சுப்ரியா ஸ்ரீநேட், ```ஆர்.எஸ்.எஸ்-ஸிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள்தான் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தியைக் கொன்ற நாதூராம் கோட்சேயின் அமைப்பிடமிருந்து நாங்கள் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றார். மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்

விகடன் 28 Dec 2025 2:54 pm

100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா? - கனிமொழி கேள்வி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கனிமொழி தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமை வகிக்க, கனிமொழி எம்.பி, அமைச்சர் பி.மூர்த்தி, தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, இப்பகுதியில் இருக்கும் பெண்கள், சகோதரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும் என அமைச்சர் மூர்த்தி சொன்னார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பெண்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது திமுக, பெண்களுக்கு சொத்துரிமை உள்ளது என்பதை செய்து காட்டியது திராவிட மாடல் அரசு, இன்று அதிகமான பெண்களுக்கு வேலை வாய்பு கிடைக்கிறது. ஒரு காலத்தில் பெண் குழந்தை வேண்டாம் என நினைத்தார்கள், பின்பு பெண்கள் படித்தால் என்ன ஆகப்போகிறது என வீட்டிலேயே வைத்திருந்தார்கள். 10 ஆம் வகுப்பு படித்தால் உதவித்தொகை என கலைஞர் அறிவித்தார். அதன் பின்பு பெண்கள் படித்தார்கள், கூடுதலாக 12 ஆம் வகுப்புக்கும் உதவிகள் அறிவிக்கப்பட்டது. நலத்திட்ட விழாவில் இன்று கல்லூரிக்கு சென்று படிக்கும் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், பேருந்திலும் இலவசப் பயணம் என திட்டங்களை கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி என்பது பெருமை. நாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது அன்றைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது 100 நாள் வேலை திட்டம். பாஜக ஆட்சிக்கு வந்த பின் பெண்களுக்கும் வேலை கொடுப்பதில்லை. இன்று மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் பெயரை எடுத்து விட்டார்கள். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வந்த திட்டத்தை இன்று அழிக்க நினைக்கிறார்கள். நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என கேட்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை அழிக்க கொண்டு வரப்பட்ட மசோதாவைப் பற்றி தெரிவாக பதில் சொல்லத் தெரியுமா? எல்லாவற்றையும் மாற்றிடுவவேன் என்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும் சொல்கிறார்கள். ஆனால், கிராமப்புற சகோதரிகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு திட்டத்தை நிறுத்தும் மசோதாவை பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை. இன்று மதக் கலவரத்தை தூண்டி வருகிறார்கள், 100 நாள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு வேலை இல்லாமல் போவதில் அதிகமாக இந்துக்கள்தான் பாதிக்கப்பட போகிறார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டும், அப்போதுதான் இனத்தின் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். 2026-ல் வெற்றியை நிலை நாட்டுவீர்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

விகடன் 28 Dec 2025 1:50 pm

100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா? - கனிமொழி கேள்வி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கனிமொழி தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமை வகிக்க, கனிமொழி எம்.பி, அமைச்சர் பி.மூர்த்தி, தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, இப்பகுதியில் இருக்கும் பெண்கள், சகோதரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும் என அமைச்சர் மூர்த்தி சொன்னார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பெண்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது திமுக, பெண்களுக்கு சொத்துரிமை உள்ளது என்பதை செய்து காட்டியது திராவிட மாடல் அரசு, இன்று அதிகமான பெண்களுக்கு வேலை வாய்பு கிடைக்கிறது. ஒரு காலத்தில் பெண் குழந்தை வேண்டாம் என நினைத்தார்கள், பின்பு பெண்கள் படித்தால் என்ன ஆகப்போகிறது என வீட்டிலேயே வைத்திருந்தார்கள். 10 ஆம் வகுப்பு படித்தால் உதவித்தொகை என கலைஞர் அறிவித்தார். அதன் பின்பு பெண்கள் படித்தார்கள், கூடுதலாக 12 ஆம் வகுப்புக்கும் உதவிகள் அறிவிக்கப்பட்டது. நலத்திட்ட விழாவில் இன்று கல்லூரிக்கு சென்று படிக்கும் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், பேருந்திலும் இலவசப் பயணம் என திட்டங்களை கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி என்பது பெருமை. நாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது அன்றைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது 100 நாள் வேலை திட்டம். பாஜக ஆட்சிக்கு வந்த பின் பெண்களுக்கும் வேலை கொடுப்பதில்லை. இன்று மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் பெயரை எடுத்து விட்டார்கள். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வந்த திட்டத்தை இன்று அழிக்க நினைக்கிறார்கள். நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என கேட்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை அழிக்க கொண்டு வரப்பட்ட மசோதாவைப் பற்றி தெரிவாக பதில் சொல்லத் தெரியுமா? எல்லாவற்றையும் மாற்றிடுவவேன் என்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும் சொல்கிறார்கள். ஆனால், கிராமப்புற சகோதரிகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு திட்டத்தை நிறுத்தும் மசோதாவை பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை. இன்று மதக் கலவரத்தை தூண்டி வருகிறார்கள், 100 நாள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு வேலை இல்லாமல் போவதில் அதிகமாக இந்துக்கள்தான் பாதிக்கப்பட போகிறார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டும், அப்போதுதான் இனத்தின் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். 2026-ல் வெற்றியை நிலை நாட்டுவீர்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

விகடன் 28 Dec 2025 1:50 pm

'தாயுள்ளம் கொண்ட ஆண்மகன் கேப்டன்' - ஆர்.கே.செல்வமணி உருக்கம்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். செல்வமணி அந்தவகையில் விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். திரைப்பட தொழிலாளருக்கு வாழ்க்கை முழுக்க தொண்டாற்றியவர் விஜயகாந்த் சார். படப்பிடிப்பு தளங்களில் எல்லாருக்கும் என்ன உணவோ ...அதுதான் அங்கு வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரோட கிட்டத்தட்ட 30 வருடம் பயணம் செய்திருக்கிறோம். அவரை மாதிரி ஒரு சிறந்த மனிதரைப் பார்த்ததே இல்லை. அவர் தாயுள்ளம் கொண்ட ஒரு ஆண் மகன். ஆர்.கே.செல்வமணி பார்க்க கரடு முரடாகத் தான் தெரிவார். ஆனால் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் பழகக்கூடியவர். இன்று திரைப்படத் துறையில் 50 பேர் இயக்குநராகவும், 75 பேர் தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் சார் தான். 100 ஆண்டுகளைக் கடந்தும் கூட அவர் புகழ் நிலைத்து நிற்கும் என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 28 Dec 2025 12:58 pm

'தாயுள்ளம் கொண்ட ஆண்மகன் கேப்டன்' - ஆர்.கே.செல்வமணி உருக்கம்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். செல்வமணி அந்தவகையில் விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். திரைப்பட தொழிலாளருக்கு வாழ்க்கை முழுக்க தொண்டாற்றியவர் விஜயகாந்த் சார். படப்பிடிப்பு தளங்களில் எல்லாருக்கும் என்ன உணவோ ...அதுதான் அங்கு வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரோட கிட்டத்தட்ட 30 வருடம் பயணம் செய்திருக்கிறோம். அவரை மாதிரி ஒரு சிறந்த மனிதரைப் பார்த்ததே இல்லை. அவர் தாயுள்ளம் கொண்ட ஒரு ஆண் மகன். ஆர்.கே.செல்வமணி பார்க்க கரடு முரடாகத் தான் தெரிவார். ஆனால் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் பழகக்கூடியவர். இன்று திரைப்படத் துறையில் 50 பேர் இயக்குநராகவும், 75 பேர் தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் சார் தான். 100 ஆண்டுகளைக் கடந்தும் கூட அவர் புகழ் நிலைத்து நிற்கும் என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 28 Dec 2025 12:58 pm

விஜயகாந்த்: 2-ம் ஆண்டு நினைவுநாள்; தலைவர்களின் நினைவுக் குறிப்புகள்!

தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தே.மு.தி.க-வினர் குருபூஜையாக இந்த தினத்தை அனுசரித்து வருகின்றனர். தேமுதிக தொண்டர்கள் இருமுடி சுமந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதேபோல் கோடம்பாக்கத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பி-ரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ வேலு உள்ளிட்டோரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் அதைத் தொடர்ந்து, முதலவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து தங்கள் சமுக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். பாமக தலைவர் அன்புமணி,``விஜயகாந்த் நினைவு நாள்: ஆண்டுகள் கடந்தாலும் மனிதநேயத்திற்காக மக்களால் நினைவு கூறப்படுவார்! தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நான் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். தமிழக அரசியலில் மிகவும் வித்தியாசமான மனிதர். குறுகிய காலமே ஆனாலும் அவருடன் பழகிய நாள்கள் மறக்க முடியாதவை. மனித நேயத்தின் சிகரமாக திகழ்ந்தவர். ஆண்டுகள் கடந்தாலும் மனித நேயத்திற்காக என்றென்றும் தமிழ்நாட்டு மக்களால் அவர் நினைவுகூறப்படுவார். எனத் தெரிவித்திருக்கிறார். விஜயகாந்த் - ஸ்டாலின் அதைத் தொடர்ந்து, தவெக கொள்கைப்பரப்புச் செயலாளர் அருண்ராஜ்,``கருப்பு எம்.ஜி.ஆர் என்று மக்களால் கொண்டாடப்பட்டவர்... அரசியல் வியாபாரிகள் மத்தியில் 'அசல்' தங்கமாய் வாழ்ந்தவர்! தவறு கண்டால் பொங்கும் 'கோபம்'... பசி என்று வந்தால் கொடுக்கும் 'குணம்'... அது தான் அவரின் தனித்துவம்! தோழமைக்கு தோழமையாக... துணிச்சலுக்கு துணிச்சலாக... வாழ்ந்து மறைந்த மாமனிதர்!! கள்ளம் கபடமற்ற அந்த வெள்ளை உள்ளத்திற்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். எம்.பி. கனிமொழி, ``எளிமை குன்றாத மனிதராக, திரைத்துறையிலும் அரசியலிலும் துணிவோடு செயல்பட்டவர், தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் அன்பிற்கு பாத்திரமான அவர், எல்லோர் மீதும் அன்புகாட்டும் பண்பாளராக வாழ்ந்தவர். அவரது நினைவுநாளான இன்று, அவரது மக்கள் பணிகளை நினைவு கூர்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார். கனிமொழி எம்.பி பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ``இன்று மரியாதைக்குரிய அண்ணன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாள். அரசியல் நிகழ்வாக இருக்கட்டும் தனிப்பட்ட நிகழ்ச்சியாக இருக்கட்டும் எப்பொழுதும் என்னை வாய் நிறைய தங்கச்சி என்று அழைப்பார்... தன் கட்சி மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாரோ அதேபோல இந்த தங்கச்சி மீதும் பாசம் வைத்திருந்தார். அவர் நினைவு நாளில் அவர் நினைவை போற்றுகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அமமுக தலைவர் டிடிவி தினகரன், ``தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நினைவு தினமான இன்று அவர் ஆற்றிய நற்பணிகளை  நினைவில் வைத்துப் போற்றுவோம். எனத் தெரிவித்திருக்கிறார். Action sequence-ல Vijayakanth மாதிரி இருந்தாரு! - Ponram | Sarathkumar | Kombuseevi Interview

விகடன் 28 Dec 2025 11:58 am

Vijay: 'ஜனநாயகன் NDA வுக்கு வர வேண்டும்!' - விஜய்க்கு தமிழிசை அழைப்பு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டிருக்கிறார். தமிழிசை அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைய வேண்டுமென்று விஜயகாந்த் நினைத்தார். அது நிறைவேற வேண்டும். அவர் பாரத பிரதமர் மோடி மீது மிகுந்த அன்புக் கொண்டவராக இருந்தார். 2014 -ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக கடுமையாக உழைத்தார் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் ஒன்றாக இருக்கவேண்டும். பிரியக்கூடாது என்றே எல்லோரும் கூறுகிறார்கள். விஜய் எங்களோடு வருவதுதான் அவருக்குப் பாதுகாப்பு என்ற நயினாரின் கருத்து யதார்த்தமான உண்மை. ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை என்று தமிழிசை பேசியிருக்கிறார். தமிழிசை விஜயகாந்தின் குருபூஜைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கியமான கட்சித் தலைவர்கள் பலருக்கும் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 28 Dec 2025 10:16 am

Halifax கனடா–உக்ரைன் உயர்மட்ட சந்திப்பு

Halifax கனடா–உக்ரைன் உயர்மட்ட சந்திப்பு: அமைதிக்கான முயற்சிகளை கனடா உறுதிப்படுத்தல் ஹாலிஃபாக்ஸ் நகரில் The post Halifax கனடா–உக்ரைன் உயர்மட்ட சந்திப்பு appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 28 Dec 2025 7:35 am

'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்'டார்கெட்

பாமகவில் தந்தை - மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த நிலையில், ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். போர்... அதில், 'இப்போது பாமகவில் நடந்து வருவது குடும்ப பிரச்னையோ, ஈகோவோ, கோபமோ அல்ல... இது நான் பெற்றெடுத்த இயக்கத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போர். எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்று கடந்த சில நாள்களாக அன்புமணி கும்பல் என்னைப் பற்றி என்னென்னவோ கூறி வருகின்றன... அசிங்கப்படுத்துகின்றன. அன்புமணி, ராமதாஸ் வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் - மத்திய அமைச்சர் H-1B விசா புதிய கட்டுப்பாடு: தொடர்ந்து பேசுவோம் - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன? அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு ஆனால், இந்தக் கட்சியைக் காயப்படுத்தாதீர்கள். இந்தக் கட்சி எனக்கு வந்த சீதனமோ, பரம்பரை சொத்தோ கிடையாது. இது நானாக கட்டிய மக்கள் கோட்டை. இப்போது இந்தக் கட்சி பலவீனமாக நிற்கும்போது பெற்ற வயிறு பற்றி எரிகிறது. நான் என் மகன் அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு. தலைமைப் பண்பு தானாகவும், தியாகத்திலும் வரவேண்டும். அன்புமணிக்கு எம்.பி, மத்திய அமைச்சர் பதவி, ராஜ்யசபா பதவி என பதவிகள் வழங்கினோம். அவருக்கு பொறுப்புகள் தான் வந்தன... பொறுப்புணர்ச்சி அல்ல. உதாரணம் அதற்கு உதாரணம், அன்புமணியின் நாடாளுமன்ற வருகை வெறும் 30% மட்டுமே. விவாதங்களின் போது ஒரு எம்.பி சராசரியாக 79 விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அன்புமணி கலந்துகொண்டது என்னவோ ஏழு. இப்படி எம்.பி பதவியை வீணடித்தது போல, கட்சியில் அவர் செய்ததும் நிறைய இருக்கிறது. ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாமகவிற்கு இன்று அங்கீகாரம் இல்லை. உழைக்க வேண்டிய நேரத்தில் அங்கீகாரம் தேடிக்கொண்டிருந்தது தான் இதற்கு காரணம். அன்புமணி, ராமதாஸ் கட்சி சின்னத்தை மீட்க‌ வேண்டும்! இந்த வயதில் எனக்கு பதவி தேவையில்லை. நான் கட்டிய வீட்டை உங்களுக்காக பாதுகாக்க முன்வந்துள்ளேன். இன்று தலைமைப் பதவியே நீதிமன்றத்தில் நிற்கிறது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் இருந்தால், அந்தக் கட்டடம் எப்படி நிற்கும்? வருகிற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்று கட்சியின் சின்னத்தை மீட்க‌ வேண்டும். பெற்ற அப்பனுக்கே துரோகம் செய்பவர் இந்த இயக்கத்தைப் பின்னர் காப்பாற்றுவாரா என்பதை அன்புமணி பக்கம் இருக்கும் என் தொண்டர்கள் யோசியுங்கள். வயதாகிவிட்டது... இது என் கடைசி யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால், என்‌ கடைசி மூச்சிருக்கும் வரை அறத்துடனும், அன்புடனும்‌ போராடுவேன். இந்த இயக்கத்தைக் காப்பாற்றும் கடைசி வாய்ப்பு இந்தப் பொதுக்கூட்டம் என்று பேசியுள்ளார். முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!

விகடன் 27 Dec 2025 6:03 pm

'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்'டார்கெட்

பாமகவில் தந்தை - மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த நிலையில், ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். போர்... அதில், 'இப்போது பாமகவில் நடந்து வருவது குடும்ப பிரச்னையோ, ஈகோவோ, கோபமோ அல்ல... இது நான் பெற்றெடுத்த இயக்கத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போர். எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்று கடந்த சில நாள்களாக அன்புமணி கும்பல் என்னைப் பற்றி என்னென்னவோ கூறி வருகின்றன... அசிங்கப்படுத்துகின்றன. அன்புமணி, ராமதாஸ் வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் - மத்திய அமைச்சர் H-1B விசா புதிய கட்டுப்பாடு: தொடர்ந்து பேசுவோம் - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன? அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு ஆனால், இந்தக் கட்சியைக் காயப்படுத்தாதீர்கள். இந்தக் கட்சி எனக்கு வந்த சீதனமோ, பரம்பரை சொத்தோ கிடையாது. இது நானாக கட்டிய மக்கள் கோட்டை. இப்போது இந்தக் கட்சி பலவீனமாக நிற்கும்போது பெற்ற வயிறு பற்றி எரிகிறது. நான் என் மகன் அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு. தலைமைப் பண்பு தானாகவும், தியாகத்திலும் வரவேண்டும். அன்புமணிக்கு எம்.பி, மத்திய அமைச்சர் பதவி, ராஜ்யசபா பதவி என பதவிகள் வழங்கினோம். அவருக்கு பொறுப்புகள் தான் வந்தன... பொறுப்புணர்ச்சி அல்ல. உதாரணம் அதற்கு உதாரணம், அன்புமணியின் நாடாளுமன்ற வருகை வெறும் 30% மட்டுமே. விவாதங்களின் போது ஒரு எம்.பி சராசரியாக 79 விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அன்புமணி கலந்துகொண்டது என்னவோ ஏழு. இப்படி எம்.பி பதவியை வீணடித்தது போல, கட்சியில் அவர் செய்ததும் நிறைய இருக்கிறது. ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாமகவிற்கு இன்று அங்கீகாரம் இல்லை. உழைக்க வேண்டிய நேரத்தில் அங்கீகாரம் தேடிக்கொண்டிருந்தது தான் இதற்கு காரணம். அன்புமணி, ராமதாஸ் கட்சி சின்னத்தை மீட்க‌ வேண்டும்! இந்த வயதில் எனக்கு பதவி தேவையில்லை. நான் கட்டிய வீட்டை உங்களுக்காக பாதுகாக்க முன்வந்துள்ளேன். இன்று தலைமைப் பதவியே நீதிமன்றத்தில் நிற்கிறது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் இருந்தால், அந்தக் கட்டடம் எப்படி நிற்கும்? வருகிற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்று கட்சியின் சின்னத்தை மீட்க‌ வேண்டும். பெற்ற அப்பனுக்கே துரோகம் செய்பவர் இந்த இயக்கத்தைப் பின்னர் காப்பாற்றுவாரா என்பதை அன்புமணி பக்கம் இருக்கும் என் தொண்டர்கள் யோசியுங்கள். வயதாகிவிட்டது... இது என் கடைசி யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால், என்‌ கடைசி மூச்சிருக்கும் வரை அறத்துடனும், அன்புடனும்‌ போராடுவேன். இந்த இயக்கத்தைக் காப்பாற்றும் கடைசி வாய்ப்பு இந்தப் பொதுக்கூட்டம் என்று பேசியுள்ளார். முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!

விகடன் 27 Dec 2025 6:03 pm

தவெக-விற்குச் செல்ல செங்கோட்டையனை நான் தூண்டிவிட்டேனா? - டிடிவி தினகரன் சொல்வது என்ன?

அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். டிடிவி தினகரன் அப்போது, அரசியல் ரீதியாக எது நடந்தாலும் என்னையும், அமமுக-வையும் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். நான் தூண்டிவிட்டுதான் தவெகவிற்கு செங்கோட்டையன் சென்றதாகச் சொல்கிறார்கள், ஓபிஎஸ் எந்த முடிவெடுத்தாலும் நான்தான் தூண்டிவிடுவதாக வதந்தியைப் பரப்புகிறார்கள். ஓபிஎஸ் முடிவெடுத்துவிட்டார், டிடிவி தினகரன் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் சிலர் கேட்கிறார்கள். அமமுக என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். எங்கள் கட்சியிலுள்ள தகுதியான வேட்பாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கின்ற கூட்டணிக்குத்தான் நாங்கள் செல்வோம். திமுக கூட்டணியில் 7 ஆண்டுகளாக உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு அறிவித்துவிட்டார்களா? நாங்கள் புதிதாக ஒரு கூட்டணியில் செல்லவிருக்கிறோம் என்றால் எத்தனை தொகுதிகள் என்று பேசிய பிறகுதான் கூட்டணிக்குச் செல்ல முடியும். தமிழ்நாட்டில் தற்போது கூட்டணிகளுக்குத் தலைமை வகிக்கும் கட்சிகளும், புதிதாக கூட்டணியை உருவாக்க நினைக்கும் கட்சிகளும் நாங்கள் அவர்களது கூட்டணிக்கு வர வேண்டும் எனப் பேசிவருவது உண்மை, ஆனால் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் வரவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்துகிறார். அது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. டெல்லிக்குச் சென்று விட்டு வந்தாலோ, தலைவர்களைச் சந்தித்தாலோ எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். நாங்கள் எந்த முடிவாக இருந்தாலும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்வோம். ஊடகங்கள் எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும் உங்கள் ஆசைக்கு நாங்கள் முடிவெடுக்க மாட்டோம். நான் பெங்களூரிலிருந்து டெல்லி சென்று பாஜக தலைவர்களைச் சந்தித்ததாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மையல்ல. பழைய கூட்டணியில் உள்ளவர்கள் கூட்டணிக்காக என்னிடம் பேசுவது உண்மை. ஆனால் நான் யாரையும் சந்திக்கவில்லை. எந்த அழுத்தமும் எனக்கு இல்லை. கூட்டணிக்கான யாருடைய அழைப்பையும் நிராகரிக்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுகிறேனா இல்லையா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. 2024 தேர்தலில் எப்படியோ திமுக-வுக்கு மக்கள் வாக்களித்து விட்டார்கள். திமுக கொடுத்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இந்த முறை திமுகவுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள் என்றார். ஆண்டிப்பட்டி தொகுதியைக் குறி வைக்கும் அமமுக; NDA கூட்டணியில் நாங்களா? - கொதிக்கும் டிடிவி தினகரன்

விகடன் 27 Dec 2025 5:21 pm

`தமிழ்நாட்டின்மீது வெறுப்புணர்ச்சி; பாஜக ஆதரவாளர்களே, ஒன்றிய அரசை கழுவி ஊற்றுகிறார்கள்!’ - ஸ்டாலின்

தி ருவண்ணாமலை, மலப்பாம்பாடி கலைஞர் திடலில், ரூ.2,095 கோடியில் முடிவுற்ற 314 பணிகளைத் திறந்துவைத்தல், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பேசுகையில், ``திராவிட மாடல் அரசு அமைந்து நான்கரை ஆண்டுகள் ஆகிறது. இந்த நான்கரை ஆண்டுகளில், நாடே போற்றுகின்ற ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். இந்த மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சேத்துப்பட்டு வட்டம் ஏந்தல் கிராமத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 37 ஏக்கரில், புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும். கலசப்பாக்கம் வட்டம், பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.5 கோடியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். புதிதாக தொடங்கப்பட்டிருக்கக்கூடிய செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். வந்தவாசி வட்டம், கீழ்சீசமங்கலம் கிராமத்தில் 2.02 ஹெக்டேர் பரப்பளவில் வீரிய ஒட்டு ரக குழித்தட்டு காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்கும் வகையில், புதிய உயர் தொழில்நுட்ப நாற்றாங்கல் ரூ.1 கோடியில் அமைக்கப்படும். இதன் மூலம் கீழ்சீசமங்கலம் மற்றும் அதன் பக்கத்திலிருக்கிற அனைத்து கிராம விவசாயிகளும் பயனடையப் போகிறார்கள். திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை, உழவர் நலத்துறையின் திட்டங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், தரமான இடுபொருள்கள் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து சேவைகளையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்று பயனடையும் விதமாக, திருவண்ணாமலை மாவட்டம் மழையூரில் ரூ.3.94 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்களின் உயர்விளைச்சல் ரக சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை விவசாயிகளுக்கு காலத்தே வழங்கிட, 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையம் ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். ஒட்டுமொத்த நாடே திரும்பி பார்க்கக்கூடிய வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். அதுவும் எப்படிப்பட்ட நிலையில் இருந்து யோசித்து பாருங்கள். ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜி.எஸ்.டி-யால் வரி உரிமை இல்லை. நமக்கு வர வேண்டிய நிதியையும் தரவில்லை. குடைச்சல் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிற ஆளுநர் ஒருவரும் உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படக்கூடிய துரோகிகள். துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து, சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அத்தனை சவால்களையும் முறியடித்து நாம் முன்னேறி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். இந்த வளர்ச்சி தான் பலரின் கண்களை கூச செய்கிறது; வயிறு எரிகிறது. அதனால்தான் தமிழ்நாட்டுக்கு எப்படியாவது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். பொறுப்புள்ள ஒன்றிய அமைச்சர், பொறுப்புகளில் இருப்பவர்களும்கூட வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள். தமிழ்நாட்டின் மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால், அதன் மூலமாக வடமாநிலங்களில் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது நடப்பதில்லை. `தமிழ்நாட்டை பற்றி இப்படி பேசுகிறார்களே?’ என்று வடமாநில யூடியூபர்கள் தேடிப் பார்த்து, தமிழ்நாட்டின் தனித்தன்மையை, சாதனை திட்டங்களை, பொருளாதார வளர்ச்சியை தெரிந்துக்கொண்டு நமக்கு ஆதரவாக வீடியோக்களைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். எந்த மேப் எடுத்தாலும், இந்தியாவின் தெற்குப் பகுதி வளமாக இருப்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பா.ஜ.க ஆதரவாளர்களே, இந்த ஒன்றிய அரசை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனால் கலந்த பெட்ரோல், தலைநகர் டெல்லியை மூச்சுத்திணற வைக்கக்கூடிய மாசடைந்த காற்று, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, பா.ஜ.க அரசுகள் கட்டுகிற கட்டடங்கள், மேம்பாலங்கள் எல்லாம் கொஞ்ச நாளிலேயே இடிந்து விழுகிறது. இத்தனை நாள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியில் சொல்லவும் முடியாமல் இருந்த பா.ஜ.க-வினரே இதையெல்லாம் பார்த்து புலம்பத் தொடங்கிவிட்டார்கள். திராவிட மாடல் அரசு மீதும் சிலப்பேர் விமர்சனம் வைப்பார்கள். அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறதா? என்று பார்த்து, சரிசெய்கிற முதலமைச்சர் தான், உங்கள் நம்பிக்கைக்குரிய இந்த ஸ்டாலின். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு, எந்த கோரிக்கையும் கண்டுகொள்வதில்லை; எந்த விமர்சனத்தையும் நியாயத்தோடு பார்ப்பதில்லை. திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு `மூடுவிழா’ நடத்தியிருக்கிறது. வறுமையை ஒழிப்பதிலும், கிராம மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதிலும் இந்த திட்டம் பெரிய சாதனைப் படைத்தது. ஆனால், அந்த திட்டத்தில் காந்தியின் பெயரை எடுத்துவிட்டார்கள். 100 நாள் வேலை, மக்கள் உரிமை என்று இருந்ததையும் எடுத்துவிட்டார்கள். இதை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாம் தான் போராடிக்கொண்டிருக்கிறோம். தன்னை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதை எதிர்த்து குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல் ஆதரித்து பேசிக்கொண்டிருக்கிறார். இப்படியாக ஒன்றிய பா.ஜ.க-வின் கொடுங்கோல் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு கூஜா தூக்கக்கூடிய அ.தி.மு.க அடிமைகளும் நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள். அவர்களின் எந்த பொய்யையும் மக்களாகிய நீங்கள் நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் `திராவிட மாடல் 2.O’ அமைப்பது உறுதி, உறுதி என்று தொடர்ந்து உரக்கச் சொல்கிறேன். சொன்ன திட்டங்களைவிட அதிகமான அளவு சொல்லாத முத்திரைத் திட்டங்களையும் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாடு நம்பர் ஒன்னாகத் தொடர நீங்கள் உதவ வேண்டும்’’ என்றார்.

விகடன் 27 Dec 2025 5:17 pm

மீண்டும் அதிமுகவில் இணைந்த வேலுமணியின் நிழல் - பின்னணி என்ன?

கோவை அரசியல் களத்தில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்க முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அவரின் களப்பணி அதிமுகவுக்கு மிகப்பெரிய பிளஸ். வேலுமணி சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கோவை அதிமுக சீனியர் நிர்வாகிகள் திமுக மற்றும் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில்  கோவை அதிமுக முக்கிய நிர்வாகியாக இருந்து, பிறகு விலகிய சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். வேலுமணியின் நிழலாகவும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராகவும் சந்திரசேகர் இருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அதில் டெண்டர், கமிஷன் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை டீல் செய்தவர். கோவை வடக்கு தொகுதியை குறிவைத்து பணியாற்றினார். சந்திரசேகர் இவரின் மனைவி ஷர்மிளாவை கோவை மாநகராட்சி மேயராக்க முயற்சி செய்தார். நாளடைவில் சந்திரசேகரின் செயல்பாடுகளில் ஏராளமான புகார்கள் எழுந்தது. கட்சி, நிதி உள்ளிட்டவற்றில் அவர் வேலுமணியை மீறி செயல்பட்டதாக புகார் எழுந்தது. சந்திரசேகரை தன் தம்பி என்று அடையாளப்படுத்திய வேலுமணி, அவரை ஒதுக்கி வைத்தார். கட்சியில் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சந்திரசேகர், கடந்த ஏப்ரல் மாதம் அதிமுகவில் இருந்து விலகினார். தொடர்ந்து அவர் திமுக அல்லது பாஜகவில் இணைய போகிறார் என்று கூறப்பட்டது. வேலுமணியுடன் சந்திரசேகர் ஆனால் அதற்கான முயற்சிகள் கைகூடவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் சந்திரசேகர் மீண்டும் வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை அதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, “கடந்த சில ஆண்டுகளாகவே சந்திரசேகருக்கான பவரை வேலுமணி பறித்துவிட்டார். அதிமுகவில் தனக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்துதான் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அதிமுக – பாஜக கூட்டணியால், அவரால் பாஜகவில் இணைய முடியவில்லை. சந்திரசேகர் திமுகவிலும் அவரை ஏற்கவில்லை. தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்பதை சந்திரசேகர் உணர்ந்தார். இதனால் மீண்டும் அதிமுகவில் இணைய வேலுமணிக்கு தூதுவிட்டார். அவரை கட்சியில் இணைக்க வேலுமணிக்கு விருப்பம் இல்லை. அதேநேரத்தில் வேலுமணியின் ரகசியங்களையும் சந்திரசேகர் நன்கறிவார். அவர் மூலம் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பளித்து விட கூடாது என்பதற்காக அவரை இணைத்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே அவர் மீண்டும் ஆக்டிவாக தொடங்கியுள்ளார். விரைவில் கோவை வடக்கு தொகுதிக்கு விருப்ப மனு அளிக்கவுள்ளார். வேலுமணி இருப்பினும் வேலுமணிக்கு ஒருமுறை ஒருவர் மீது தவறான பிம்பம் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க மாட்டார். அதனால் அதிமுகவில் அவரின் இரண்டாவது இன்னிங்ஸில் பழைய செல்வாக்கு,  கிடைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.” என்றனர்.

விகடன் 27 Dec 2025 5:09 pm

``விவசாயி வேடமிட்டு, விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள்!’’ - விமர்சித்த ஸ்டாலின்

தி ருவண்ணாமலையில் இன்றைய தினம், வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசுகையில், ``நிலத்தில் நீரை பாய்ச்சியும், உடலில் ஓடும் செந்நீரை வேர்வையாக சிந்தியும், உலகத்தை பசுமாக்கி ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிற விவசாயிகளுடன் இருக்கும்போது, சிந்தனையும் செயல்களும் பசுமையாகிறது. இந்த வேளாண் கண்காட்சியையும், கருத்தரங்கையும் தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் நம்முடைய திராவிட மாடல் அரசு முன்னோடியாக இருக்கிறது. இந்த ஓராண்டில் மட்டும் மூன்றாவது வேளாண் கண்காட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். பொதுவாக, `உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்று சொல்வார்கள். `நாற்று நட்டு அறுவடை செய்யும்வரை ஒரு விவசாயிக்கு பிரசவ வேதனை’ என்றும் சொல்வார்கள். பாடுபடுகிற விவசாயிக்கு இயற்கையும், மண்ணும் கைகொடுத்தால்தான் மகசூல் சரியாக இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. பலமணிநேர வேலைகளை சிலமணி துளிகளிலும், பலநூறுபேர் செய்யக்கூடிய வேலைகளை சில இயந்திரங்கள் செய்யும் அளவுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. இந்த வளர்ச்சி, விவசாயிகளின் கைகளிலும் வந்துசேர்ந்தால்தான் அது உண்மையான வளர்ச்சியாக மாறும். அப்படியிருக்கும்போது, இந்த தொழில்நுட்பங்களை தேடி விவசாயிகள் அலையக்கூடாது என்பதால்தான் உங்களைத் தேடிவந்து வேளாண் கண்காட்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த கண்காட்சியில் ஏராளமான ஸ்டால்கள் அமைத்திருக்கிறார்கள். உயர் விளைச்சலைத் தரக்கூடிய புதிய பயிர் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், அறுவடைக்குப் பிறகு தேவைப்படக்கூடிய மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டு நுட்பங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, உணவுப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு நுட்பங்கள், பயிர்க்கடன், பயிர் காப்பீடு, வேளாண் ஏற்றுமதி என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி, நீங்கள் இங்கே தெரிந்துக்கொள்ளலாம். நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, `வேளாண்மைத்துறை’ பெயரை `வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என்று மாற்றினோம். சிலர் பெயர்களை இஷ்டத்துக்கு மாற்றுவார்கள். ஆனால், விவசாயிகளை தவிக்கவிட்டு, நடுத்தெருவில் போராட விட்டுவிடுவார்கள். இன்னும் சிலர் விவசாயி வேடம் போட்டுக்கொண்டு அரசியல் செய்வார்கள். ஆனால், விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள். நம்முடைய திராவிட மாடல் அரசில், விவசாயிகளுடைய நலனும் வளர்ச்சியும்தான் முக்கியம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நினைத்தோம். அதற்காக, வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் போட ஆரம்பித்தோம். இதுவரைக்கும் ஏராளமான திட்டங்களை அறிவித்து, 5 அக்ரி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறோம். இந்த 5 அக்ரி பட்ஜெட்டையும் சேர்த்து, விவசாயிகளுக்காக ஒதுக்கியிருக்கிற நிதி, `ஒரு லட்சத்து தொண்ணூற்று நான்காயிரம் கோடி ரூபாய்’. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முந்தைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் கைவிட்ட 125 உழவர் சந்தைகளை நவீன வசதிகளுடன் புனரமைத்ததோடு, 14 உழவர் சந்தைகளையும் நாம் அமைத்திருக்கிறோம். பனை மேம்பாட்டு இயக்கம், உழவர் செயலி, இ-வாடகை செயலி என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, இந்த மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்பு வழங்காமல் நான் போய்விட முடியுமா? முடியாது!திருவண்ணாமலை விற்பனைக் குழுவில், வாடகை கட்டடத்தில் இயங்கும் பெரணமல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு புதிதாக 500 மெட்ரிக் டன் கொண்ட சிறப்பு கிடங்கு, அலுவலகத்துடன்கூடிய பரிவர்த்தனை குடோன் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வறை ரூ.3 கோடியில் நிறுவப்படும். வேளாண் விளைப்பொருள்களை உலர்த்தி, சுத்தப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக திருவண்ணாமலை விற்பனைக் குழு கட்டுப்பாட்டில் செயல்படும் சேத்துப்பட்டு, போளூர், வந்தவாசி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய உலர் களங்கள் அமைக்கப்படும்’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விகடன் 27 Dec 2025 3:40 pm

சென்னை: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம்!

சீமான் சீமான் சீமான் சீமான் சீமான்

விகடன் 27 Dec 2025 3:33 pm

சென்னை: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம்!

சீமான் சீமான் சீமான் சீமான் சீமான்

விகடன் 27 Dec 2025 3:33 pm

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்

மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. அதே சமயம் இதே கூட்டணியில் இருக்கும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மும்பையில் தனித்துப் போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஆனால் புனேயில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இரண்டு நாட்களாகக் குழப்பம் நிலவி வந்தது. அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. பட்னாவிஸ் மற்றும் ஷிண்டே இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையில் சரத்பவார் கட்சிக்கு 35 இடங்கள் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் அந்த வேட்பாளர்கள் தங்களது கடிகாரச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அஜித்பவார் கறார் காட்டினார். இதையடுத்து கூட்டணி வேண்டாம் என்று சரத்பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதையடுத்து நேற்று இரவு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நீடித்தது. இதில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணி புனேயில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிரா: மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும் - ராஜ் தாக்கரே அதோடு தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் மூன்று கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. புனே மட்டுமல்லாது மும்பையில் சிவசேனா(ஷிண்டே) மற்றும் பா.ஜ.க இடையே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சிவசேனாவிற்கு 87 இடங்கள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. ஆனால் தங்களுக்கு 100க்கும் அதிகமான இடங்கள் வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் பா.ஜ.க தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. இதையடுத்து இரு கட்சித் தலைவர்களும் மீண்டும் ஒருமுறை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். மும்பை மட்டுமல்லாது கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியிலும் இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருக்கிறது. வரும் 31ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். சரத் பவார் (Sharad Pawar) எதிர்க்கட்சிகள் இப்போது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தால் ஆளும் கூட்டணிக் கட்சிகள் அந்த வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிடும் என்று அச்சம் அடைந்துள்ளன. எனவே கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. சில இடங்களில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாவிட்டாலும் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநகராட்சி : உறவுகளால் இணைந்த தாக்கரே, பவார்களால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்!

விகடன் 27 Dec 2025 3:11 pm

BJPவுடன் இருந்தபோதுதான் எந்தக் கல்லூரியில் ராமர் Engineering படித்தார் எனக் கலைஞர் கேட்டார்-திருமா

பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலைப் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை பா.ஜ.க-விற்கு விதித்துதான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்தக் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் எனக் கேட்டார் கலைஞர் என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்குச் சிதறிக் கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில் தி.மு.க கூட்டணியை வீழ்த்துவோம் என அன்புமணி ராமதாஸ் கூறுவது நகைப்புக்குரியது. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலைப் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை பா.ஜ.க-விற்கு விதித்துதான் கலைஞர் கூட்டணி வைத்தார். thirumavalvan பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்தபோதுதான் ராமர் எந்தக் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் எனக் கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது அ.தி.மு.க-வினர் பா.ஜ.க-வின் கருத்தியல் அடிமையாகிவிட்டார்கள் என்றார். விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் - திருமாவளவன் விமர்சனம்

விகடன் 27 Dec 2025 1:00 pm

'வெட்கமா இல்லையா திமுக அரசே?' - கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்; குண்டுக்கட்டாக கைது!

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 140 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே கூடி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பிராட்வேயின் குறளகம் அருகே இருந்து தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று முதல்வரிடம் மனு கொடுக்கப் போவதாக அறிவித்தனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காலை முதலே காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். உயர்நீதிமன்றத்தை சுற்றியிருக்கும் குறளகம், ஹைரோடு, NSC போஸ் ரோடு ஆகியவற்றில் வெவ்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குழுக்களாக பிரிந்து போராடினர். இதை எதிர்பார்க்காத காவல்துறையினர் தடுமாறிப் போயினர். 'நர்ஸூங்க மட்டும் கேட்ட உடனேயே வேலை கொடுக்குறீங்க. நாங்க இத்தனை நாளா தெருல இறங்கி போராடுறோமே உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா. சாதி பார்த்து ஒதுக்குறீங்களா? குப்பை அள்ளுறவங்கதானேன்னு குப்பையா தூக்கி போடுறீங்களா?' என தூய்மைப் பணியாளர்கள் கோஷம் எழுப்பி கொந்தளித்தனர். கிட்டத்தட்ட 35 பேருந்துகளில் பெண் தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றனர் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி பேசுகையில், '140 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். மாநகராட்சி சார்பில் யாருமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. செவிலியர்கள் போராடியவுடன் அவர்களுக்கு பணி நிரந்தரம் கொடுக்கிறார்கள். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இத்தனை நாட்கள் போராடியும் எந்த தீர்வும் இல்லை. அடுத்தக்கட்டமாக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் வீட்டை நோக்கி போராட்டத்தை முன்னெடுப்போம். எங்களுக்கு தீர்வை கொடுக்கமால் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தினால், சென்னையில் குறைந்தபட்சம் 10 இடங்களிலாவது போராட்டம் நடத்துவோம். ராம்கி நிறுவனம் சம்பாதிப்பதற்காக ஏழைகளை நசுக்குவதா? பெண்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வீதியில் இறங்கி போராடி குண்டுக்கட்டாக கைது செய்யப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்துக்கு வெட்கமாக இல்லையா?' என்றார்.

விகடன் 27 Dec 2025 12:47 pm

'வெட்கமா இல்லையா திமுக அரசே?' - கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்; குண்டுக்கட்டாக கைது!

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 140 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே கூடி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பிராட்வேயின் குறளகம் அருகே இருந்து தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று முதல்வரிடம் மனு கொடுக்கப் போவதாக அறிவித்தனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காலை முதலே காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். உயர்நீதிமன்றத்தை சுற்றியிருக்கும் குறளகம், ஹைரோடு, NSC போஸ் ரோடு ஆகியவற்றில் வெவ்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குழுக்களாக பிரிந்து போராடினர். இதை எதிர்பார்க்காத காவல்துறையினர் தடுமாறிப் போயினர். 'நர்ஸூங்க மட்டும் கேட்ட உடனேயே வேலை கொடுக்குறீங்க. நாங்க இத்தனை நாளா தெருல இறங்கி போராடுறோமே உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா. சாதி பார்த்து ஒதுக்குறீங்களா? குப்பை அள்ளுறவங்கதானேன்னு குப்பையா தூக்கி போடுறீங்களா?' என தூய்மைப் பணியாளர்கள் கோஷம் எழுப்பி கொந்தளித்தனர். கிட்டத்தட்ட 35 பேருந்துகளில் பெண் தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றனர் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி பேசுகையில், '140 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். மாநகராட்சி சார்பில் யாருமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. செவிலியர்கள் போராடியவுடன் அவர்களுக்கு பணி நிரந்தரம் கொடுக்கிறார்கள். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இத்தனை நாட்கள் போராடியும் எந்த தீர்வும் இல்லை. அடுத்தக்கட்டமாக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் வீட்டை நோக்கி போராட்டத்தை முன்னெடுப்போம். எங்களுக்கு தீர்வை கொடுக்கமால் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தினால், சென்னையில் குறைந்தபட்சம் 10 இடங்களிலாவது போராட்டம் நடத்துவோம். ராம்கி நிறுவனம் சம்பாதிப்பதற்காக ஏழைகளை நசுக்குவதா? பெண்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வீதியில் இறங்கி போராடி குண்டுக்கட்டாக கைது செய்யப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்துக்கு வெட்கமாக இல்லையா?' என்றார்.

விகடன் 27 Dec 2025 12:47 pm