இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது போடாதீர்கள், அது உங்கள் அரசின்.!- தமிழிசைக்கு சு.வெ பதில்
திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என மத்திய அரசு பெயர் சூட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ' இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எங்களது தமிழ் மொழியின் முறையான மொழிபெயர்ப்பை எழுத அறிவுறுத்துங்கள். அதிகாரிகளின் தவறால் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்திருந்தார். தமிழிசை சௌந்தரராஜன் தமிழிசை சௌந்தரராஜனின் கோரிக்கைக்கு எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள். இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது. வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சிஎன்று பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டிருக்கிறார். Loading…
காங்கிரஸ் -ல ஆள் இல்ல! திமுகவோடு 1000 பிரச்னை இருக்கு
காங்கிரஸ் -ல ஆள் இல்ல! திமுகவோடு 1000 பிரச்னை இருக்கு
திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப்பாடி பழனிசாமி
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக நுழைவு வளைவு கட்டப்பட்டது. அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளனர். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்தியில் பெயர் அமைத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து திருச்சியில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். திருச்சி ஜங்சன் இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்க் குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது. எடப்பாடி பழனிசாமி இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா?
திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப்பாடி பழனிசாமி
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக நுழைவு வளைவு கட்டப்பட்டது. அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளனர். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்தியில் பெயர் அமைத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து திருச்சியில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். திருச்சி ஜங்சன் இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்க் குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது. எடப்பாடி பழனிசாமி இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா?
முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன? Explained
முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன? Explained
'புளித்துப் போன காமெடி பண்ணாதீங்க.!'- ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி
திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்தற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.! முதல்வர் ஸ்டாலின் இழிவான செயலில் ஒன்றிய பாஜக அரசு! 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர். குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர். சரியான பாடம் புகட்ட வேண்டும்! ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள். கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்! தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். அண்ணாமலை புளித்துப் போன காமெடி ஸ்டாலினின் இந்தப் பதிவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா? இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்? என்று சாடியிருக்கிறார்.
சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ளது. இந்திய விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலையை தூக்கிட்ட இடமாக பெரும்பாலும் அறியப்படும் சங்ககிரி கோட்டை பற்றிய தகவல் சேகரிக்க அங்கு நேரில் சென்றோம். பழைமையின் புதிர்கள்... சுமார் 1200 ஆண்டுக்கால வரலாறும் சுமார் 1200 அடி உயரத்தின் மேலும் அமைக்கப்பட்டுள்ள கோட்டை இதுவாகும். சங்ககிரி மலையை குடைந்து அங்கிருந்து எடுக்கப்பட்ட பெரிய கற்களைக் கொண்டே அந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது விஜயநகர பேரரசு காலத்தில் கட்டபட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழும் இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னர்களும் முக்கிய இடமாக இதை பயன்படுத்தியுள்ளனர். விஜயநகர- பேரரசு வர்த்தக பாதையாகவும், திப்பு சுல்தான் -படைத்தளமாகவும், ராணுவ துருப்பு பகுதியாகவும் இறுதியில் ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கொங்கு நாட்டின் வரிவசூல் கிடங்காகவும் பயன்படுத்தியுள்ளனர். தண்டனைகளின் கோட்டை பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தக் கோட்டையானது, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான தண்டனை நிறைவேற்றும் பகுதியாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர். உருட்டிவிட்டான் பாறை, தோலுச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை மற்றும் ஆள் இறங்கு குழி என கொடுமையான தண்டனைகள் நிறைந்த கோட்டையாக இருந்துள்ளது. உருட்டிவிட்டான் பாறை:- இந்த தண்டனையில் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயரமான பாறை மீதிருந்து கீழே உருட்டிவிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும். தோலுச்சான் மேடு என்பது கைகள், கால்கள் கட்டப்பட்டு சாட்டையால் முதுகு மற்றும் உடலின் பகுதிகளில் தோல் உரியும் அளவுக்கு சாட்டையடிகள் குற்றத்திற்கு ஏற்ப அளிக்கப்படும். அப்படி என்னதான் உள்ளது... சுமார் 8-க்கும் மேற்பட்ட வாயில்களுடன் கோட்டை அமைப்புகளுடனான நீண்ட தூரம் மலை நடைப்பயணம் இந்த கோட்டையின் சிறப்பாகும். கற்களினால் செதுக்கப்பட்ட படிக்கட்டுகளுடன் செங்குத்தான பல வழிகளை கடந்த பிறகே கோட்டையின் உச்சியை அடைய முடியும். ஆங்காங்கே வாயில்களில் ஓய்வெடுக்க அமருமிடங்கள் மற்றும் சில இடங்களில் மண்டபங்களுடன் இணைந்த வாயில்கள் மேலும் தெப்பக்குளம் மற்றும் சிவன், பெருமாள், அனுமன் கோவில்கள் உள்ளடங்கிய கோட்டையாகும். சாதாரண நபர்கள் சராசரியாக மலையேற 2 மணி நேரமாகும். வயதானவர்கள் இந்த பயணம் தவிர்ப்பது நல்லது. மலையேற்றத்தின் பல பகுதிகளில் புகைப்படத்திற்கான இடங்களும் காணப்படுகிறது. மேலும், சங்ககிரி நகரத்தினையும் காண முடியும். வழியில் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கு நாம் பார்க்க முடியும். மேலும், கற்துண்களில் சிற்ப வேலைப்பாடுகளையும் நம்மால் காணமுடியும். 0காலை 6:00 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை இந்த சங்ககிரி மலைக்கோட்டை மக்கள் பார்வைக்கு இலவசமாக திறக்கப்படுகிறது. நீண்ட தூரம் காடு, மேடு என கடந்த பிறகே உச்சியை அடைய முடியும்.மேலும், இது ஒரு சவாலான நடைப்பயணமாக புதிய நபர்களுக்கு அமையும். அண்மையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க தலைமை செயலகத்தில் முதலைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்த கோட்டைக்கு, பார்வையாளர்களாக வந்த நபர்களிடம் பேசியபோது, ``பிழைமையான அமைப்புகள் அப்படியே நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால்,சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இது அனைவரும் பார்வையிடும் வகையில் மேம்படுத்த வேண்டும். வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டார்கள். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கருணாகரனிடம் பேசியபோது, ``இன்றைய தலைமுறை வரலாற்று பக்கங்களைப் புரட்ட தயங்குகின்றனர். இந்திய விடுதலை போரில் மிக முக்கிய பங்கு வகித்த, நம்முடைய வரலாற்று சின்னங்கள் மற்றும் அதன் வரலாறுகளை இன்றைய தலைமுறைகள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். வரலாறு தெரியாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்பதற்கு இணங்க வரலாற்று சின்னங்கள் மற்றும் அதனை பாதுகாக்க அரசுடன் பொதுமக்கள் கைக்கோக்க வேண்டும். அரசு இந்த வரலாற்று சின்னங்களை மக்கள் பார்வைக்கு எளிதாக்கி மற்றும் பழைமை மாறாமல் பராமரிப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு இந்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார். இந்த சங்ககிரி கோட்டையை அனைத்து மக்களுடம் பார்வையிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையான நவீன ரோப் கார் அமைத்து இந்த வரலாற்று சின்னத்தை மக்கள் பார்வைக்கு அரசு கொண்டு வருமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ளது. இந்திய விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலையை தூக்கிட்ட இடமாக பெரும்பாலும் அறியப்படும் சங்ககிரி கோட்டை பற்றிய தகவல் சேகரிக்க அங்கு நேரில் சென்றோம். பழைமையின் புதிர்கள்... சுமார் 1200 ஆண்டுக்கால வரலாறும் சுமார் 1200 அடி உயரத்தின் மேலும் அமைக்கப்பட்டுள்ள கோட்டை இதுவாகும். சங்ககிரி மலையை குடைந்து அங்கிருந்து எடுக்கப்பட்ட பெரிய கற்களைக் கொண்டே அந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது விஜயநகர பேரரசு காலத்தில் கட்டபட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழும் இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னர்களும் முக்கிய இடமாக இதை பயன்படுத்தியுள்ளனர். விஜயநகர- பேரரசு வர்த்தக பாதையாகவும், திப்பு சுல்தான் -படைத்தளமாகவும், ராணுவ துருப்பு பகுதியாகவும் இறுதியில் ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கொங்கு நாட்டின் வரிவசூல் கிடங்காகவும் பயன்படுத்தியுள்ளனர். தண்டனைகளின் கோட்டை பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தக் கோட்டையானது, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான தண்டனை நிறைவேற்றும் பகுதியாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர். உருட்டிவிட்டான் பாறை, தோலுச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை மற்றும் ஆள் இறங்கு குழி என கொடுமையான தண்டனைகள் நிறைந்த கோட்டையாக இருந்துள்ளது. உருட்டிவிட்டான் பாறை:- இந்த தண்டனையில் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயரமான பாறை மீதிருந்து கீழே உருட்டிவிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும். தோலுச்சான் மேடு என்பது கைகள், கால்கள் கட்டப்பட்டு சாட்டையால் முதுகு மற்றும் உடலின் பகுதிகளில் தோல் உரியும் அளவுக்கு சாட்டையடிகள் குற்றத்திற்கு ஏற்ப அளிக்கப்படும். அப்படி என்னதான் உள்ளது... சுமார் 8-க்கும் மேற்பட்ட வாயில்களுடன் கோட்டை அமைப்புகளுடனான நீண்ட தூரம் மலை நடைப்பயணம் இந்த கோட்டையின் சிறப்பாகும். கற்களினால் செதுக்கப்பட்ட படிக்கட்டுகளுடன் செங்குத்தான பல வழிகளை கடந்த பிறகே கோட்டையின் உச்சியை அடைய முடியும். ஆங்காங்கே வாயில்களில் ஓய்வெடுக்க அமருமிடங்கள் மற்றும் சில இடங்களில் மண்டபங்களுடன் இணைந்த வாயில்கள் மேலும் தெப்பக்குளம் மற்றும் சிவன், பெருமாள், அனுமன் கோவில்கள் உள்ளடங்கிய கோட்டையாகும். சாதாரண நபர்கள் சராசரியாக மலையேற 2 மணி நேரமாகும். வயதானவர்கள் இந்த பயணம் தவிர்ப்பது நல்லது. மலையேற்றத்தின் பல பகுதிகளில் புகைப்படத்திற்கான இடங்களும் காணப்படுகிறது. மேலும், சங்ககிரி நகரத்தினையும் காண முடியும். வழியில் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கு நாம் பார்க்க முடியும். மேலும், கற்துண்களில் சிற்ப வேலைப்பாடுகளையும் நம்மால் காணமுடியும். 0காலை 6:00 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை இந்த சங்ககிரி மலைக்கோட்டை மக்கள் பார்வைக்கு இலவசமாக திறக்கப்படுகிறது. நீண்ட தூரம் காடு, மேடு என கடந்த பிறகே உச்சியை அடைய முடியும்.மேலும், இது ஒரு சவாலான நடைப்பயணமாக புதிய நபர்களுக்கு அமையும். அண்மையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க தலைமை செயலகத்தில் முதலைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்த கோட்டைக்கு, பார்வையாளர்களாக வந்த நபர்களிடம் பேசியபோது, ``பிழைமையான அமைப்புகள் அப்படியே நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால்,சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இது அனைவரும் பார்வையிடும் வகையில் மேம்படுத்த வேண்டும். வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டார்கள். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கருணாகரனிடம் பேசியபோது, ``இன்றைய தலைமுறை வரலாற்று பக்கங்களைப் புரட்ட தயங்குகின்றனர். இந்திய விடுதலை போரில் மிக முக்கிய பங்கு வகித்த, நம்முடைய வரலாற்று சின்னங்கள் மற்றும் அதன் வரலாறுகளை இன்றைய தலைமுறைகள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். வரலாறு தெரியாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்பதற்கு இணங்க வரலாற்று சின்னங்கள் மற்றும் அதனை பாதுகாக்க அரசுடன் பொதுமக்கள் கைக்கோக்க வேண்டும். அரசு இந்த வரலாற்று சின்னங்களை மக்கள் பார்வைக்கு எளிதாக்கி மற்றும் பழைமை மாறாமல் பராமரிப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு இந்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார். இந்த சங்ககிரி கோட்டையை அனைத்து மக்களுடம் பார்வையிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையான நவீன ரோப் கார் அமைத்து இந்த வரலாற்று சின்னத்தை மக்கள் பார்வைக்கு அரசு கொண்டு வருமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
``காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்! - விஜயதரணி பேட்டி
தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி 2024-ம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனிலிருந்து கமலாலயத்திற்கு தாவினார். ஆனால் அப்போது முதல் இப்போது வரை அந்தக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?, பாரதிய ஜனதாவில் சேர்ந்த முடிவு தவறென நினைக்கிறீர்களா? என்பன போன்ற சில கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம். சத்திய மூர்த்தி பவன் ``'கட்சி கொறடா, மூன்று முறை எம்.எல்.ஏ என காங்கிரஸில் பிசியாக இருந்தீங்க. வரும் தேர்தலில் மீண்டும் விளவங்கோடு மக்கள்கிட்ட ஓட்டு கேட்டு போக வாய்ப்பு உள்ளதா? ``கட்சிதான் அதுகுறித்து முடிவெடுக்கும். தொடர்ந்து மக்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே காங்கிரஸ் கட்சியில இருந்து வெளியேறினேன். பா.ஜ.க தலைமைக்கும் இது தெரியும். அதனால தலைவர்கள் முடிவெடுப்பாங்க. அதுக்கு இன்னும் அவகாசம் இருக்கு. கமலாலயம் ``ஆனாலும் பெரிய பொறுப்புகள் எதுவும் பி.ஜே.பி.யில் தரப்பட்டதாகத் தெரியவில்லையே? ``மாநில அளவில் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். இதுவே முக்கியமான பொறுப்புதான். மாவட்டத்தில் நடக்கிற கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கிறாங்க. தவிர எந்தவொரு முக்கிய முடிவுன்னாலும் கருத்து கேக்கறாங்க. இதுக்கு மேல என்ன செய்யணும்? 23 வருஷம், அதாவது என் இளமைப் பருவத்தையெல்லால் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவு செய்தேன். அதுக்குப் பிறகுதன் அங்கீகாரம் தந்தாங்க. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்யணும்னு நான் நினைச்சப்ப இடையூறு தந்தாங்க. அதனாலேயே ஒருகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன். ஆனா அப்படி வெளியேறிய பிறகும் எம்.பி. தேர்தல் சீட்டுக்கு ஆசைப்பட்டுதான் கட்சி மாறினதா வதந்தி பரப்பினாங்க. அது உண்மையில்லை. இங்க வந்து 23 மாதங்கள்தானே ஆகுது. ஆதனால பா.ஜ.க. வில் அங்கீகாரம் கிடைக்கலைங்கிறது நிஜமில்லை. NDA கூட்டணி மாநாடு ``தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கா? ``களம் எங்களுக்குச் சாதகமாகவே இருக்கு. எதிர்க்கட்சி கூட்டணி ஓவர் லோடுல போயிட்டிருக்கு. போற வர்றவங்களையெல்லாம் கூட்டணிக்கு இழுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வாக்கு சதவிகிதமே இல்லைனு நிரூபணமான கட்சிகளைக் கூட கணக்குக்காக சேர்த்திருக்காங்க. காரணம் தோல்வி பயம். எங்க கூட்டணியில எந்தச் சிக்கலும் இல்லை.. வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு. tvk ``காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நீடிக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா? அந்தக் கட்சியில் பல வருடம் இருந்த உங்க அனுபவத்தில் சொல்லுங்களேன். ``காங்கிரஸ் கட்சியில் இன்னைக்கு தேதிக்கு 99 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வேண்டாம்னு சொல்றதா தெரிய வருது. இவங்க சூடு சொரணை உள்ளவர்கள். 1 சதவிகிதம் பேருக்கு அது கிடையாது. அவங்க திமுக அரசுகிட்ட இருந்து சில பல சலுகைகளை அனுபவிச்சுகிட்டு அங்கதான் இருக்கணும்னு சொல்லிட்டு வர்றாங்க. யார் பேச்சை கேக்கணும்கிறதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் தீர்மாணிக்கணும். என்றார். முழுமையான பேட்டியை காண...
``காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்! - விஜயதரணி பேட்டி
தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி 2024-ம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனிலிருந்து கமலாலயத்திற்கு தாவினார். ஆனால் அப்போது முதல் இப்போது வரை அந்தக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?, பாரதிய ஜனதாவில் சேர்ந்த முடிவு தவறென நினைக்கிறீர்களா? என்பன போன்ற சில கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம். சத்திய மூர்த்தி பவன் ``'கட்சி கொறடா, மூன்று முறை எம்.எல்.ஏ என காங்கிரஸில் பிசியாக இருந்தீங்க. வரும் தேர்தலில் மீண்டும் விளவங்கோடு மக்கள்கிட்ட ஓட்டு கேட்டு போக வாய்ப்பு உள்ளதா? ``கட்சிதான் அதுகுறித்து முடிவெடுக்கும். தொடர்ந்து மக்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே காங்கிரஸ் கட்சியில இருந்து வெளியேறினேன். பா.ஜ.க தலைமைக்கும் இது தெரியும். அதனால தலைவர்கள் முடிவெடுப்பாங்க. அதுக்கு இன்னும் அவகாசம் இருக்கு. கமலாலயம் ``ஆனாலும் பெரிய பொறுப்புகள் எதுவும் பி.ஜே.பி.யில் தரப்பட்டதாகத் தெரியவில்லையே? ``மாநில அளவில் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். இதுவே முக்கியமான பொறுப்புதான். மாவட்டத்தில் நடக்கிற கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கிறாங்க. தவிர எந்தவொரு முக்கிய முடிவுன்னாலும் கருத்து கேக்கறாங்க. இதுக்கு மேல என்ன செய்யணும்? 23 வருஷம், அதாவது என் இளமைப் பருவத்தையெல்லால் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவு செய்தேன். அதுக்குப் பிறகுதன் அங்கீகாரம் தந்தாங்க. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்யணும்னு நான் நினைச்சப்ப இடையூறு தந்தாங்க. அதனாலேயே ஒருகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன். ஆனா அப்படி வெளியேறிய பிறகும் எம்.பி. தேர்தல் சீட்டுக்கு ஆசைப்பட்டுதான் கட்சி மாறினதா வதந்தி பரப்பினாங்க. அது உண்மையில்லை. இங்க வந்து 23 மாதங்கள்தானே ஆகுது. ஆதனால பா.ஜ.க. வில் அங்கீகாரம் கிடைக்கலைங்கிறது நிஜமில்லை. NDA கூட்டணி மாநாடு ``தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கா? ``களம் எங்களுக்குச் சாதகமாகவே இருக்கு. எதிர்க்கட்சி கூட்டணி ஓவர் லோடுல போயிட்டிருக்கு. போற வர்றவங்களையெல்லாம் கூட்டணிக்கு இழுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வாக்கு சதவிகிதமே இல்லைனு நிரூபணமான கட்சிகளைக் கூட கணக்குக்காக சேர்த்திருக்காங்க. காரணம் தோல்வி பயம். எங்க கூட்டணியில எந்தச் சிக்கலும் இல்லை.. வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு. tvk ``காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நீடிக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா? அந்தக் கட்சியில் பல வருடம் இருந்த உங்க அனுபவத்தில் சொல்லுங்களேன். ``காங்கிரஸ் கட்சியில் இன்னைக்கு தேதிக்கு 99 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வேண்டாம்னு சொல்றதா தெரிய வருது. இவங்க சூடு சொரணை உள்ளவர்கள். 1 சதவிகிதம் பேருக்கு அது கிடையாது. அவங்க திமுக அரசுகிட்ட இருந்து சில பல சலுகைகளை அனுபவிச்சுகிட்டு அங்கதான் இருக்கணும்னு சொல்லிட்டு வர்றாங்க. யார் பேச்சை கேக்கணும்கிறதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் தீர்மாணிக்கணும். என்றார். முழுமையான பேட்டியை காண...
'இந்த'முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்
ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கான பதிலைப் பல செய்தி அறிக்கைகள் தருகின்றன. அதன் தொகுப்பு இதோ... Financial Times - பல ஆண்டுகளாகவே, ஈரான் முக்கிய தலைவர்களைக் கண்காணிக்கத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிசிடிவி டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அந்த கேமராக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. ஈரான் போர் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold British Daily - அப்படி ஹேக் செய்யப்பட்ட கேமராக்களில் ஒன்று - டெஹ்ரானின் முக்கிய வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கிறது. அந்த டிராபிக் கேமரா வழியாக தான், காமேனி சம்பவம் நடந்த அன்று 'எங்கே இருந்தார்?' என்பதை இஸ்ரேலும், மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA) சரியாக கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. Reuters அறிக்கை படி, இஸ்ரேலின் உளவுத் துறை, சனிக்கிழமை காலை, டெஹ்ரானில் முக்கிய வளாகத்தில் மீட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு தான், அங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, சி.ஐ.ஏ காமேனி அந்தச் சந்திப்பில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது என்று சொல்கிறார்கள். ஆக, சிசிடிவி கேமரா தான் காமேனியின் கொலையில் முக்கிய உளவாளியாக இருந்துள்ளது. 'ஹீரோ' Crude Oil: 'காலத்தே பயிர் செய்' - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே!
'இந்த'முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்
ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கான பதிலைப் பல செய்தி அறிக்கைகள் தருகின்றன. அதன் தொகுப்பு இதோ... Financial Times - பல ஆண்டுகளாகவே, ஈரான் முக்கிய தலைவர்களைக் கண்காணிக்கத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிசிடிவி டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அந்த கேமராக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. ஈரான் போர் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold British Daily - அப்படி ஹேக் செய்யப்பட்ட கேமராக்களில் ஒன்று - டெஹ்ரானின் முக்கிய வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கிறது. அந்த டிராபிக் கேமரா வழியாக தான், காமேனி சம்பவம் நடந்த அன்று 'எங்கே இருந்தார்?' என்பதை இஸ்ரேலும், மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA) சரியாக கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. Reuters அறிக்கை படி, இஸ்ரேலின் உளவுத் துறை, சனிக்கிழமை காலை, டெஹ்ரானில் முக்கிய வளாகத்தில் மீட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு தான், அங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, சி.ஐ.ஏ காமேனி அந்தச் சந்திப்பில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது என்று சொல்கிறார்கள். ஆக, சிசிடிவி கேமரா தான் காமேனியின் கொலையில் முக்கிய உளவாளியாக இருந்துள்ளது. 'ஹீரோ' Crude Oil: 'காலத்தே பயிர் செய்' - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே!
அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்' - நிகிதா பேட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அஜித்குமார் கொலை வழக்கு இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜரானார். நிகிதா இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அசன் முகம்மது நிகிதாவிடம், நகை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க ஆட்சேபனை இருக்கிறதா?' என்றார். அதற்கு நிகிதா, `ஆட்சேபனை ஏதும் இல்லை' என வாய்மொழியாக கூறிய நிலையில் 9ஆம் தேதிக்கு ஆஜராகி எழுத்து மூலமாக அதை கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா பேசும் போது, “ நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது, தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் ஊடகத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள். மதுரை மாவட்ட நீதிமன்றம் நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. அஜித்குமார் மரண வழக்கு மறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு. அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார்” என தெரிவித்துள்ளார். `நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' - மடப்புரம் அஜித்குமாரின் தாயார்
அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்' - நிகிதா பேட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அஜித்குமார் கொலை வழக்கு இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜரானார். நிகிதா இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அசன் முகம்மது நிகிதாவிடம், நகை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க ஆட்சேபனை இருக்கிறதா?' என்றார். அதற்கு நிகிதா, `ஆட்சேபனை ஏதும் இல்லை' என வாய்மொழியாக கூறிய நிலையில் 9ஆம் தேதிக்கு ஆஜராகி எழுத்து மூலமாக அதை கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா பேசும் போது, “ நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது, தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் ஊடகத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள். மதுரை மாவட்ட நீதிமன்றம் நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. அஜித்குமார் மரண வழக்கு மறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு. அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார்” என தெரிவித்துள்ளார். `நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' - மடப்புரம் அஜித்குமாரின் தாயார்
`நிச்சயதார்த்தத்திலும் நீண்ட ஆலோசனை; கார்கே மனதை கரைத்த சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் `டீல்'பின்னணி
“நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் - தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதிக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்கிறார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர். காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது. நேற்று இரவு செல்வபெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாக தொடர்பு கொண்டு முதலில் பேசியிருக்கிறார் சிதம்பரம். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இந்த முறை உள்ளாட்சியில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ம் ஆண்டு மேலும் ஒரு ராஜ்ய சபாவை பெற்றுக்கொள்ளலாம் என்று கார்கேவின் மனதை கரைத்துள்ளார் சிதம்பரம். இறுதியாக கனிமொழியும் சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, “அண்ணன் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம். ராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் தரப்புக்கு தகவலை சொல்லியுள்ளார் கனிமொழி. இன்று அதிகாலை சிதம்பரம் தி.மு.க தரப்பை தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு ராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை ஓ.கே சொல்லிவிட்ட தகவலை சொல்லியுள்ளார். ராகுல், ஸ்டாலின், விஜய், அமித் ஷா அதன்பிறகே இன்றுமாலை அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் வருத்ததில் இருந்த கிரஷ் சோடாங்கரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. தி.மு.க தர உள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த தமிழரான இந்த பெண், மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம்வரும் இவரை ராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள். தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த ரேஸில் குதித்துள்ளார்கள். குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்த ரேஸில் உள்ளார்கள். முடிவு விரைவில் தெரியும்.!
`நிச்சயதார்த்தத்திலும் நீண்ட ஆலோசனை; கார்கே மனதை கரைத்த சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் `டீல்'பின்னணி
“நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் - தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதிக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்கிறார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர். காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது. நேற்று இரவு செல்வபெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாக தொடர்பு கொண்டு முதலில் பேசியிருக்கிறார் சிதம்பரம். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இந்த முறை உள்ளாட்சியில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ம் ஆண்டு மேலும் ஒரு ராஜ்ய சபாவை பெற்றுக்கொள்ளலாம் என்று கார்கேவின் மனதை கரைத்துள்ளார் சிதம்பரம். இறுதியாக கனிமொழியும் சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, “அண்ணன் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம். ராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் தரப்புக்கு தகவலை சொல்லியுள்ளார் கனிமொழி. இன்று அதிகாலை சிதம்பரம் தி.மு.க தரப்பை தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு ராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை ஓ.கே சொல்லிவிட்ட தகவலை சொல்லியுள்ளார். ராகுல், ஸ்டாலின், விஜய், அமித் ஷா அதன்பிறகே இன்றுமாலை அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் வருத்ததில் இருந்த கிரஷ் சோடாங்கரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. தி.மு.க தர உள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த தமிழரான இந்த பெண், மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம்வரும் இவரை ராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள். தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த ரேஸில் குதித்துள்ளார்கள். குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்த ரேஸில் உள்ளார்கள். முடிவு விரைவில் தெரியும்.!
ஈரான் போர் நீடித்தால் இந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன?!
ஐந்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் மேலும் நீடித்தால் இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்று Quick Points ஆக பார்ப்போம்... வாங்க... > சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 75 டாலர் அளவிற்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இப்போதைக்கு இந்தியாவிடம் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. இந்தப் போர் நீடித்து இந்தியாவில் கச்சா எண்ணெய் குறைபாட்டை எட்டினால், இங்கே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கலாம். ஏற்றுமதி-இறக்குமதி 'ஹீரோ' Crude Oil: 'காலத்தே பயிர் செய்' - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே! > எண்ணெயைத் தவிர்த்து, பிற ஏற்றுமதி, இறக்குமதிகளை இந்தியா ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகத் தான் செய்து வருகிறது. இப்போது அது மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் வணிகம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது நீடித்தால், வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படலாம். > ஈரானில் தான் போர் என்றாலும், வளைகுடா நாடுகளிலும் தாக்குதல் மற்றும் பதற்றம் பரவியுள்ளது. ஆகையால், அங்கே முழுவதுமாகவும், பாதியாகவும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இது இந்திய விமான போக்குவரத்தை பாதித்து வருகிறது. > எண்ணெய் விலை உயர்வு, வணிக பாதிப்பு போன்றவை இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இது சாமானியர்களையும் பாதிக்கும். > இந்தப் பதற்றத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், ஏற்கெனவே இந்திய முதலீட்டுகளை விற்றுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மேலும் தங்களது முதலீடுகளை விற்கலாம். > முக்கியமாக, இந்திய பங்குச்சந்தை பெருமளவு வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி இந்தப் போரை சுற்றி இருப்பதால், இந்த வீழ்ச்சி தொடரலாம். சாபஹார் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold > இந்தியாவின் நிதியுதவி உடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள துறைமுகம் 'சாபஹார் துறைமுகம்'. இந்தத் துறைமுகம் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியைத் தவிர்த்து பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யலாம் என்பது தான் இந்தியாவின் பிளான். ஈரானில் நடந்து வரும் இந்தத் தாக்குதலில் இந்தத் துறைமுகம் பாதிக்கப்பட்டால், நிச்சயம் அது இந்தியாவிற்கு இன்னொரு பெரிய அடியாக இருக்கும். > வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். போர் தொடர்ந்தால் இவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். > மேலும், இவர்களிடம் இருந்து இந்தியாவிற்கு வரும் பணத்திலும் சிக்கல் ஏற்படலாம். 'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?
Thanjavur TVK Vijay full speech | அடுத்த ஜென்மத்தில் விவசாயியா பிறக்கணும்! | தவெக விஜய் | Vikatan
'குஞ்சு பொரித்தவுடன் எத்தனை சீட் என சொல்வோம்!' - அறிவாலயத்தில் கமல் பாணியில் ம.நீ.ம பேச்சுவார்த்தை
திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது. அருணாச்சலம் அக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட நிர்வாகிகள் திமுகவின் குழுவோடு பேசியிருந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் பேசியதாவது, ``திமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும் என தரவுகளோடு ஒப்படைத்தோம். எந்தெந்த தொகுதிகளில் ம.நீ.ம பெர்பார்ம் செய்திருக்கிறது என தொகுதி வாரியாக தரவுகளை கொடுத்தோம். அந்த தரவுகளை திமுகவின் குழு ஆய்வு செய்தது. இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான். நாங்கள் என்ன கேட்டோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. கோழி அடைகாப்பத்தை போல அடைகாத்து வருகிறோம். குஞ்சு பொriக்கும் போது உங்களுக்கே தெரியும்' என்றார். கமல் - Kamal Haasan மக்கள் நீதி மய்யத்தை உதய சூரியன் சின்னத்த்தில் நிற்க திமுக வலியுறுத்துவதாக தெரிகிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்கின்றனர். Loading…
'குஞ்சு பொரித்தவுடன் எத்தனை சீட் என சொல்வோம்!' - அறிவாலயத்தில் கமல் பாணியில் ம.நீ.ம பேச்சுவார்த்தை
திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது. அருணாச்சலம் அக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட நிர்வாகிகள் திமுகவின் குழுவோடு பேசியிருந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் பேசியதாவது, ``திமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும் என தரவுகளோடு ஒப்படைத்தோம். எந்தெந்த தொகுதிகளில் ம.நீ.ம பெர்பார்ம் செய்திருக்கிறது என தொகுதி வாரியாக தரவுகளை கொடுத்தோம். அந்த தரவுகளை திமுகவின் குழு ஆய்வு செய்தது. இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான். நாங்கள் என்ன கேட்டோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. கோழி அடைகாப்பத்தை போல அடைகாத்து வருகிறோம். குஞ்சு பொriக்கும் போது உங்களுக்கே தெரியும்' என்றார். கமல் - Kamal Haasan மக்கள் நீதி மய்யத்தை உதய சூரியன் சின்னத்த்தில் நிற்க திமுக வலியுறுத்துவதாக தெரிகிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்கின்றனர். Loading…
தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!- மாணிக்கம் தாகூர் சூசகம்
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்படி திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. ராகுல் காந்தி, ஸ்டாலின் கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களை விட கட்சி பெரியது. மாணிக்கம் தாகூர் தலைமை முடிவு செய்யும் போது அதனை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி என்று பதிவிட்டிருக்கிறார். இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை தான் சூசகமாக பதிவிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது. Loading…
தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!- மாணிக்கம் தாகூர் சூசகம்
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்படி திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. ராகுல் காந்தி, ஸ்டாலின் கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களை விட கட்சி பெரியது. மாணிக்கம் தாகூர் தலைமை முடிவு செய்யும் போது அதனை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி என்று பதிவிட்டிருக்கிறார். இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை தான் சூசகமாக பதிவிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது. Loading…
`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்' - தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!
ராஜ்ய சபையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் 4 உறுப்பினர்களை பா.ஜ.க தேர்வு செய்ய இருக்கிறது. இது தவிர சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சிகள் தலா ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சிகளால் ஒரு உறுப்பினரை மட்டும் தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சி கூட்டணியில் அந்த ஒரு இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஒரு இடம் தங்களது கட்சிக்கு வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அந்த இடம் தங்களுக்கு வேண்டும் என்று கூறி வந்தது. இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்)வும், காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. மற்றொரு புறம் சரத்பவாருக்கு அப்பதவியை கொடுக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கோரிக்கை விடுத்துள்ளது. சரத்பவார் இது தொடர்பாக சரத் பவார் மகள் சுப்ரியா சுலே உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் இவ்விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாளை வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். இதையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேரடியாக உத்தவ் தாக்கரேயிடம் பேசி இருக்கிறார். தற்போது ராஜ்ய சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் ராஜ்ய சபையில் மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10 சதவீத உறுப்பினர்களை காங்கிரஸ் பெற்று இருக்கவேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்குமா? ராஜ்ய சபையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் காங்கிரஸ் மூத்த எம்.பி.க்களான அபிஷேக் மனு சிங்வி, ரஜ்னி பாட்டீல், பூலோதேவி நேதம், கே.டி.எஸ்.துளசி ஆகியோர் ஓய்வு பெறுவதால், மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் 10 சதவீதத்துக்கும் கீழே போகலாம். ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமானால் காங்கிரஸ் கட்சிக்கு 25 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். உத்தவிடம் உதவ கோரும் காங்கிரஸ் எனவே மகாராஷ்டிராவில் இருந்து தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கவில்லையெனில் ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடும் என்று உத்தவ் தாக்கரேயிடம் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். தேசிய நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்படி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு அடுத்த மாதம் உத்தவ் தாக்கரேயின் சட்டமேலவை உறுப்பினர் பதவி காலியாகிறது. இதில் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க தாங்கள் ஆதரவு கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. காங்கிரஸும் சிவசேனாவும் (உத்தவ்) ஒரு ராஜ்ய சபை இடம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும், உத்தவ் தாக்கரே கட்சி எம்பி சஞ்சய் ராவுத், சரத் பவாரை ஆதரித்துள்ளார். அவர் அளித்த பேட்டிகளில், ``ராஜ்ய சபை தேர்தலில் சரத்பவார் போட்டியிடுவார் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். சரத்பவார் இதில் போட்டியிடுவார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் ராவத் தெரிவித்துள்ளார். அதேசமயம் சிவசேனா(உத்தவ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜ்ய சபைக்கான ஒரு இடத்தை பற்றி கவலை கொண்டு இருப்பதை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராவத், காங்கிரஸ் ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பற்றி கவலைப்படுகிறது. சிவசேனா (உத்தவ்) ராஜ்யசபாவில் அதன் இரண்டு இடங்களைப் பற்றி கவலைப்படுகிறது என்று கூறினார். ஒரு இடத்தை இரண்டு கட்சிகளும் கேட்பதால் உத்தவ் தாக்கரே பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். வரும் 16ம் தேதி இத்தேர்தல் நடைபெறுகிறது.! Loading…
பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா | ‘வாவ்’ வியூகம் 08
பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா ‘வாவ்’ வியூகம் 08 தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் 12.22 லட்சம் பேர் அதிகம் உள்ளனர். முந்தைய காலங்களிலும்கூட பெரும்பாலும் இவ்வாறாக பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்டதாகவே வாக்காளர் பட்டியல் இருந்திருக்கிறது. இந்தியா முழுவதுமே பரவலாக இதே போக்குதான், விதிவிலக்காக வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமிருப்பதைக் காணலாம். இந்த புள்ளிவிவரமே சொல்லும் தேசிய, மாநிலக் கட்சிகள், வளரும், அரும்பும் அரசியல் கட்சிகள் என எல்லாவற்றுக்கும் பெண் வாக்காளர்களை ஈர்ப்பது எவ்வளவு முக்கியமென்பது. பெண்களின் வாக்குகளை வசப்படுத்துவது என்பது அத்தனை எளிதல்ல. அதை அரசியல் களத்தில் லாவகமாக செயல்படுத்தி அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் சாதித்ததையும், தேர்தல் களம் காணாமலேயே கணிசமான அளவில் பெண்கள் அபிமானத்தை சம்பாதித்து வைத்திருக்கும் விஜய் அரசியல் பற்றியும் இனி அலசுவோம். பெண் வாக்காளர்கள் ‘முன்னோடி’ அண்ணா தேர்தல் அரசியலில் பெண் வாக்காளர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களை தக்கவைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அண்ணாவில் இருந்து ஆரம்பிப்பது தமிழக அரசியல் வரலாற்றைப் பொருத்தவரை ஆகப் பொருத்தமானது. அண்ணா முதல்வராவதற்கு முன்னர் தேர்ந்த வாசிப்பாளராக, சிந்தை தெளிவுடன் மேடைகளில் பேசக் கூடியவராக, மொழி ஆளுமை மிக்கவராக இவற்றைக் கொண்டு சமூக நீதி அரசியலை முன்னெடுப்பவராக இருந்தார். அவருடைய எழுத்துகள் அன்றைய காலக்கட்டத்தில் நிலவிய பல்வேறு சமூகப் பிரச்சினைகளை பேசியதோடு அவற்றுக்கான தீர்வை முன்னிறுத்துவதாகவே அமைந்தன. அப்படித்தான் அண்ணாவின் எழுத்துகளில் பெண்களின் முன்னேற்றம் வியாபித்துக் கிடந்தது. பாரதி கண்ட புதுமைப் பெண் போல் அண்ணாவும் தன் வழியில் பெண்கள் புரட்சிக்கு மிகப்பெரிய அடித்தளமிட்டிருக்கிறார். சமூக கட்டுப்பாடுகளை பெண்கள் உடைத்தெறிவது பற்றி அவர் தனது பல கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறார். குடும்பத்தில் மனைவியின் கடமைகள் அவளுக்கு சுமையாவது, மிகுந்த வயது வித்தியாசம் கொண்ட ஆணுக்கு பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பது, கைம்பெண்ணின் பாலியல் உணர்வும் சமூகம் அப்பெண்ணின் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அண்ணா தனது கட்டுரைகளில் ஆழமாகப் பேசியிருக்கிறார். அறிஞர் அண்ணா அரசியல் தளத்தில் பெண்ணுரிமை பற்றிய விவாதங்களும், பெண்கள் முன்னேற்றம் சார்ந்த பார்வைகளும் விரியும் முன்னரே அண்ணா மறைந்துவிட்டார் என்றாலும் கூட, அந்தக் குறுகிய காலத்தில் அவர் , “பெண்களையும் உள்ளடக்கியது தான் திராவிட இயக்கத்தின் சமூக முன்னேற்றப் பார்வை” என்பதை வகுத்துக் கொடுத்துவிட்டுத்தான் மறைந்தார் எனலாம். திமுகவில் அன்னை சத்தியவாணி முத்துவைக் கொள்கை பரப்புச் செயலாளராக்கி அந்தக் காலத்திலேயே கட்சி அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்மாதிரியை ஏற்படுத்தியவர் தான் அண்ணா. 1967 முதல் 1969 வரை தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சியின்போது ஹரிஜன நலன் மற்றும் தகவல் துறை அமைச்சராகப் சத்தியவாணி முத்து பணியாற்றினார். அண்ணாவின் ஆட்சியில் தான் சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பெண்களின் உரிமைகளை அச்சட்டம் பெற்று தந்ததோடு அவர்களின் சுயமரியாதையையும் காப்பாற்றியது. விதவை மணம் புரிந்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அவர் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன. சத்தியவாணி முத்து திமுக ஆட்சியைப் பிடித்தபோது அதன் பின்னணியில் அது முன்னெடுத்த சமூக, மொழிப் போராட்டங்கள்தான் முக்கியமானவையாக இருந்தன. இருந்தாலும், ஆட்சிக்கு வந்தபின்னர் கட்சியோடு, பெண்களின் முன்னேற்றமும் சேர்த்தே வளர்த்தெடுக்கப்பட்டது. அந்தப் பார்வைதான் இன்றுவரை திமுகவில் மகளிர் நலத் திட்டங்கள் வடிவில் வாவ் வியூகங்களாக சுழன்று கொண்டிருக்கிறது. கருணாநிதியின் முன்னெடுப்புகள் பெரியார், அண்ணா வழியில் வந்த கருணாநிதி, முன்னவர்கள் மேடையில் பெண்கள் நலன் சார்ந்து பேசியதையும், அவற்றையும் தாண்டி பெண்களின் வளர்ச்சிக்கு பல திட்டங்களையும் திராவிட இயக்கத்தின் சார்பில் கொண்டுவந்திருக்கிறார். பெண்களின் வாழ்வை மாற்றியமைத்த திட்டங்களில் சில வரலாற்றில் முத்திரை பதித்தவையாகும். பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகேப்பேறு உதவி திட்டம் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். மகளிர் காவல் நிலையங்களை உருவாக்க 1973-ம் ஆண்டு விதை போட்டவர் கருணாநிதி. அடுத்த ஆண்டு, பெண்கள் காவல் துறையில் இணைந்து பயிற்சி பெற்றனர். அவர்களின் முதல் அணிவகுப்பு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் 1992-ல் முதல் மகளிர் காவல் நிலையம் ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைக்கப்பட்டது. 1929 ஆண்டு செங்கல்பட்டில், தந்தை பெரியார் தலைமையில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘நமக்காக ஒருவன் சிறை செல்கிறான் எனில்.!' - தலைவர்களின் சிறைவாசமும் தாக்கமும்! | ‘வாவ்’ வியூகம் 07 பெரியாரின் கனவை 1989-ம் ஆண்டு நிறைவேற்றிக் காட்டினார் கருணாநிதி. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டம் அந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேறியது. அப்போது பேசிய கருணாநிதி “எந்த ஒரு சமூக மறுமலர்ச்சியும், பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் ஏற்படாது” என்று கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது. 1989-ம் ஆண்டு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களையும் சேர்ந்த பெண்களுக்கு ஆரம்பப் பள்ளி முதல் , பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கும் ஈ.வே.ரா. நாகம்மையார் கல்வித்திட்டத்தை கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு என்பதாகும். ஏராளமான பெண்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பணிகளில் சேர்ந்தனர். 1996-ம் ஆண்டு தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்தார் கருணாநிதி. கருணாநிதி இந்தப் பட்டியலை கருணாநிதி ஆட்சிக் காலத்தின் கடைசி காலம் வரை நீட்டித்துக் கொண்டே செல்லலாம். மக்கள் இல்லங்களில் ‘கலைஞர்’ சமூகத்தில் பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம்தான் திமுகவின் ஆரம்ப காலம் தொட்டு மகளிர் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள பெரும் பலமாக இருந்துள்ளது. 2006-ல் திமுக வெளியிட்ட சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் இலவச கேஸ் அடுப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதே தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இன்னொரு முக்கிய அறிவிப்பு இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம். கேஸ் அடுப்பு, இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டங்கள் தமிழகத்தில் பெண்களை வெகுவாகக் கவர்ந்தது. விறகுப் புகையில், மண்ணெண்ணெய் நெடியில் இருந்து பெண்கள் விடுபட்டனர். டிவி பார்க்க அதை வைத்தவர் வீட்டை நம்பியிருக்க வேண்டிய சூழலில் எல்லோர் வீட்டிலும் கலைஞர் வண்ணத் தொலைக்காட்சி ஓட ஆரம்பித்தது. பெண்கள் உரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்களின் தேவை என்றே திமுக தனது தேர்தல் வியூகங்களை வகுத்து வந்திருக்கிறது. திமுக பெருந்தலைகள் ஆரம்ப காலத்தில் மகளிர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, பின்னர் அதன் வாயிலாகவே மகளிர் வாக்குகளை தக்கவைத்தனர். அண்ணாவும் கருணாநிதியும் பெண்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டு, அவர்களின் வாக்குகளையும் வசப்படுத்தி, தேர்தல் களம் என்னும் கிரிக்கெட்டில் ‘க்ளாஸ்’ ஓபனிங் பேட்டிங் செய்ய, அத்தகைய வியூகங்களின் அடுத்தகட்ட பாய்ச்சலைக் காட்டி 2021 களத்தில் வின்னிங் ஷாட் விளாசியது சமீபத்திய வரலாறு. இந்த விஷயத்தில் திமுகவுக்கு சற்றும் சளைத்தது அல்ல அதிமுக. அதற்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவுமே சான்று. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.! (தொடரும்) Loading…
பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா | ‘வாவ்’ வியூகம் 08
பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா ‘வாவ்’ வியூகம் 08 தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் 12.22 லட்சம் பேர் அதிகம் உள்ளனர். முந்தைய காலங்களிலும்கூட பெரும்பாலும் இவ்வாறாக பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்டதாகவே வாக்காளர் பட்டியல் இருந்திருக்கிறது. இந்தியா முழுவதுமே பரவலாக இதே போக்குதான், விதிவிலக்காக வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமிருப்பதைக் காணலாம். இந்த புள்ளிவிவரமே சொல்லும் தேசிய, மாநிலக் கட்சிகள், வளரும், அரும்பும் அரசியல் கட்சிகள் என எல்லாவற்றுக்கும் பெண் வாக்காளர்களை ஈர்ப்பது எவ்வளவு முக்கியமென்பது. பெண்களின் வாக்குகளை வசப்படுத்துவது என்பது அத்தனை எளிதல்ல. அதை அரசியல் களத்தில் லாவகமாக செயல்படுத்தி அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் சாதித்ததையும், தேர்தல் களம் காணாமலேயே கணிசமான அளவில் பெண்கள் அபிமானத்தை சம்பாதித்து வைத்திருக்கும் விஜய் அரசியல் பற்றியும் இனி அலசுவோம். பெண் வாக்காளர்கள் ‘முன்னோடி’ அண்ணா தேர்தல் அரசியலில் பெண் வாக்காளர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களை தக்கவைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அண்ணாவில் இருந்து ஆரம்பிப்பது தமிழக அரசியல் வரலாற்றைப் பொருத்தவரை ஆகப் பொருத்தமானது. அண்ணா முதல்வராவதற்கு முன்னர் தேர்ந்த வாசிப்பாளராக, சிந்தை தெளிவுடன் மேடைகளில் பேசக் கூடியவராக, மொழி ஆளுமை மிக்கவராக இவற்றைக் கொண்டு சமூக நீதி அரசியலை முன்னெடுப்பவராக இருந்தார். அவருடைய எழுத்துகள் அன்றைய காலக்கட்டத்தில் நிலவிய பல்வேறு சமூகப் பிரச்சினைகளை பேசியதோடு அவற்றுக்கான தீர்வை முன்னிறுத்துவதாகவே அமைந்தன. அப்படித்தான் அண்ணாவின் எழுத்துகளில் பெண்களின் முன்னேற்றம் வியாபித்துக் கிடந்தது. பாரதி கண்ட புதுமைப் பெண் போல் அண்ணாவும் தன் வழியில் பெண்கள் புரட்சிக்கு மிகப்பெரிய அடித்தளமிட்டிருக்கிறார். சமூக கட்டுப்பாடுகளை பெண்கள் உடைத்தெறிவது பற்றி அவர் தனது பல கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறார். குடும்பத்தில் மனைவியின் கடமைகள் அவளுக்கு சுமையாவது, மிகுந்த வயது வித்தியாசம் கொண்ட ஆணுக்கு பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பது, கைம்பெண்ணின் பாலியல் உணர்வும் சமூகம் அப்பெண்ணின் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அண்ணா தனது கட்டுரைகளில் ஆழமாகப் பேசியிருக்கிறார். அறிஞர் அண்ணா அரசியல் தளத்தில் பெண்ணுரிமை பற்றிய விவாதங்களும், பெண்கள் முன்னேற்றம் சார்ந்த பார்வைகளும் விரியும் முன்னரே அண்ணா மறைந்துவிட்டார் என்றாலும் கூட, அந்தக் குறுகிய காலத்தில் அவர் , “பெண்களையும் உள்ளடக்கியது தான் திராவிட இயக்கத்தின் சமூக முன்னேற்றப் பார்வை” என்பதை வகுத்துக் கொடுத்துவிட்டுத்தான் மறைந்தார் எனலாம். திமுகவில் அன்னை சத்தியவாணி முத்துவைக் கொள்கை பரப்புச் செயலாளராக்கி அந்தக் காலத்திலேயே கட்சி அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்மாதிரியை ஏற்படுத்தியவர் தான் அண்ணா. 1967 முதல் 1969 வரை தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சியின்போது ஹரிஜன நலன் மற்றும் தகவல் துறை அமைச்சராகப் சத்தியவாணி முத்து பணியாற்றினார். அண்ணாவின் ஆட்சியில் தான் சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பெண்களின் உரிமைகளை அச்சட்டம் பெற்று தந்ததோடு அவர்களின் சுயமரியாதையையும் காப்பாற்றியது. விதவை மணம் புரிந்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அவர் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன. சத்தியவாணி முத்து திமுக ஆட்சியைப் பிடித்தபோது அதன் பின்னணியில் அது முன்னெடுத்த சமூக, மொழிப் போராட்டங்கள்தான் முக்கியமானவையாக இருந்தன. இருந்தாலும், ஆட்சிக்கு வந்தபின்னர் கட்சியோடு, பெண்களின் முன்னேற்றமும் சேர்த்தே வளர்த்தெடுக்கப்பட்டது. அந்தப் பார்வைதான் இன்றுவரை திமுகவில் மகளிர் நலத் திட்டங்கள் வடிவில் வாவ் வியூகங்களாக சுழன்று கொண்டிருக்கிறது. கருணாநிதியின் முன்னெடுப்புகள் பெரியார், அண்ணா வழியில் வந்த கருணாநிதி, முன்னவர்கள் மேடையில் பெண்கள் நலன் சார்ந்து பேசியதையும், அவற்றையும் தாண்டி பெண்களின் வளர்ச்சிக்கு பல திட்டங்களையும் திராவிட இயக்கத்தின் சார்பில் கொண்டுவந்திருக்கிறார். பெண்களின் வாழ்வை மாற்றியமைத்த திட்டங்களில் சில வரலாற்றில் முத்திரை பதித்தவையாகும். பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகேப்பேறு உதவி திட்டம் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். மகளிர் காவல் நிலையங்களை உருவாக்க 1973-ம் ஆண்டு விதை போட்டவர் கருணாநிதி. அடுத்த ஆண்டு, பெண்கள் காவல் துறையில் இணைந்து பயிற்சி பெற்றனர். அவர்களின் முதல் அணிவகுப்பு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் 1992-ல் முதல் மகளிர் காவல் நிலையம் ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைக்கப்பட்டது. 1929 ஆண்டு செங்கல்பட்டில், தந்தை பெரியார் தலைமையில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘நமக்காக ஒருவன் சிறை செல்கிறான் எனில்.!' - தலைவர்களின் சிறைவாசமும் தாக்கமும்! | ‘வாவ்’ வியூகம் 07 பெரியாரின் கனவை 1989-ம் ஆண்டு நிறைவேற்றிக் காட்டினார் கருணாநிதி. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டம் அந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேறியது. அப்போது பேசிய கருணாநிதி “எந்த ஒரு சமூக மறுமலர்ச்சியும், பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் ஏற்படாது” என்று கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது. 1989-ம் ஆண்டு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களையும் சேர்ந்த பெண்களுக்கு ஆரம்பப் பள்ளி முதல் , பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கும் ஈ.வே.ரா. நாகம்மையார் கல்வித்திட்டத்தை கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு என்பதாகும். ஏராளமான பெண்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பணிகளில் சேர்ந்தனர். 1996-ம் ஆண்டு தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்தார் கருணாநிதி. கருணாநிதி இந்தப் பட்டியலை கருணாநிதி ஆட்சிக் காலத்தின் கடைசி காலம் வரை நீட்டித்துக் கொண்டே செல்லலாம். மக்கள் இல்லங்களில் ‘கலைஞர்’ சமூகத்தில் பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம்தான் திமுகவின் ஆரம்ப காலம் தொட்டு மகளிர் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள பெரும் பலமாக இருந்துள்ளது. 2006-ல் திமுக வெளியிட்ட சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் இலவச கேஸ் அடுப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதே தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இன்னொரு முக்கிய அறிவிப்பு இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம். கேஸ் அடுப்பு, இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டங்கள் தமிழகத்தில் பெண்களை வெகுவாகக் கவர்ந்தது. விறகுப் புகையில், மண்ணெண்ணெய் நெடியில் இருந்து பெண்கள் விடுபட்டனர். டிவி பார்க்க அதை வைத்தவர் வீட்டை நம்பியிருக்க வேண்டிய சூழலில் எல்லோர் வீட்டிலும் கலைஞர் வண்ணத் தொலைக்காட்சி ஓட ஆரம்பித்தது. பெண்கள் உரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்களின் தேவை என்றே திமுக தனது தேர்தல் வியூகங்களை வகுத்து வந்திருக்கிறது. திமுக பெருந்தலைகள் ஆரம்ப காலத்தில் மகளிர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, பின்னர் அதன் வாயிலாகவே மகளிர் வாக்குகளை தக்கவைத்தனர். அண்ணாவும் கருணாநிதியும் பெண்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டு, அவர்களின் வாக்குகளையும் வசப்படுத்தி, தேர்தல் களம் என்னும் கிரிக்கெட்டில் ‘க்ளாஸ்’ ஓபனிங் பேட்டிங் செய்ய, அத்தகைய வியூகங்களின் அடுத்தகட்ட பாய்ச்சலைக் காட்டி 2021 களத்தில் வின்னிங் ஷாட் விளாசியது சமீபத்திய வரலாறு. இந்த விஷயத்தில் திமுகவுக்கு சற்றும் சளைத்தது அல்ல அதிமுக. அதற்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவுமே சான்று. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.! (தொடரும்) Loading…
`உலக மகாமேதைகளே... நானும் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறேன்..!' - தவெக தலைவர் விஜய் காட்டம்
தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று (புதன்கிழமை - மாா்ச் 4) நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து காரில் செங்கிப்பட்டி வந்தார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. விஜய் vs ஸ்டாலின் சார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், ``வேலூர் நிர்வாகிகள் சந்திப்பில் நான் தான் தமிழ்நாடு என்றுக் கூறியிருந்தேன், தமிழ்நாட்டு மக்களின் ஒரே உண்மையான பிரதிநிதியாக நாம்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே. தமிழ்நாடு vs ஸ்டாலின் சார்... அதாவது விஜய் vs ஸ்டாலின். தவெக தலைவர் விஜய் இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்.. இதில் எப்படி பா.ஜ.க வந்தது எனக் கேள்வி கேட்டிருந்தேன். அதையும், விஜய் பாஜகவுக்காகப் பேசுகிறார் எனத் திரித்துப் பேசினார்கள். நம் சிறுபான்மைச் சகோதரர்களை ஏமாற்றும் வேலை இனி செய்ய முடியாது என்பதைத் தெரிந்து திரித்துப் பேசும் வேலையைச் செய்கிறார்கள். சென்னையில் டெல்லி டெல்லி எனப் பேசுவதும், அடித்தக் கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் அதே டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பதும் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டைக் காப்பது, பிழைக்க வைப்பது திமுக ஸ்டாலின்தான் எனப் பேசுவது வேலைக்கு ஆகாது. இப்போது சிறுவர்கள் கூட ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். TVK:``பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான் - மீண்டும் அதிமுக-வை சீண்டிய தவெக! தமிழ்நாட்டு அணி டெல்லி அணி எனப் பேசுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணி தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசிலை போடுவது சிஎஸ்கே - வரக்கூடிய தேர்தலிலும் விசிலை போடப்போவது டிவிகே. டெல்லி அணி மட்டுமல்லா எல்லா அணியையும் தவெக அடித்து நொறுக்கும். எனக்கும் என் மக்களுக்கும் நடுவில் யாராலும் உள்நுழைய முடியாது. இது ஒரு அம்மா - பையன். அப்பா - மகன், அண்ணன் - தம்பி, அக்கா - தம்பி உறவு. இது மற்றவர்களுக்கு தான் எலக்சன் என்னையும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் எமோஷன். ஊழலற்ற, உண்மையான, சமூக நீதியை நிலை நாட்ட, நம் ஆட்சியை அமைப்பீர்கள் என்ற உறுதி மொழியை நீங்கள் எனக்கு நீங்கள் தர வேண்டும். இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே... உண்மையிலேயே கொடுப்பீர்கள் தானே... இந்த விஜய்யை நம்புகிறீர்கள் தானே... தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டம் நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் பொழுது, நமக்கே அறியாமல் விவசாயிகளுக்கு நன்றி சொல்வோம். எனக்கு அடுத்த ஜென்மத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அப்படி அடுத்த ஜென்மம் இருந்தால் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு விவசாயத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். மற்றவர்களைப் போல நானும் டெல்டாகாரன் தான் என உங்கள் காதுகளில் டால்டா ஊத்துவதற்கு வரவில்லை. விவசாயிகளைப் பற்றித்தான் எனக்கு தெரியாது. அவர்கள் படும் கஷ்டங்கள் எனக்கு நன்றாக தெரியும். என்றார். தொடர்ந்து, ``ஐநா சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நிலத்தடி நீர் திவாலாகப் போகிறது என்ற தகவலை வெளியிட்டிருந்தது. மண்ணையும், மணலையும், மலைகளையும், கனிம வளங்களையும் கொள்ளையடித்தால் என்ன ஆகும்? 'மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் சொன்னதே... 'கனிமவளக் கொள்ளைகளுக்கெல்லாம் மணல் மாஃபியாதான் காரணம்' என மதுரை உயர் நீதிமன்றம் சொன்னதே.. இதையெல்லாம் மறந்துட்டீங்களா? தவெக விஜய் மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவளிப்பதே உங்கள் திமுக அரசு தானே, இதை இல்லை என்று சொல்ல முடியுமா? தண்ணீர், கனிம வளம் மட்டுமல்ல உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாகப் போகிறது. கடன் வாங்கி உங்கள் அரசு கவிழ்ந்து விட்டது. விவசாயிகள் விளைவித்த நெல் மழையில் நனைந்து வீணாகிப்போனதே அதை கவனித்தீர்களா? விவசாயிகள் போராட்டத்தில் உடன் நின்றீர்களா? ஆனால் அவர்கள் போராடினால், குண்டாசில் மட்டும் கைது செய்வீர்கள். இதுதானே உங்கள் சாதனை. பரந்தூர் பிரச்சனையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டின் அனைத்து நதிகளையும் இணைப்போம் என்ற சொன்னவர்கள், அதைச் செய்தார்களா? இவர்கள் எப்பொழுதும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற திட்டங்களை அறிவித்துவிட்டு, தேர்தலில் தோற்றுவிடுவார்கள். அதற்கு பின்பு எங்களுடைய ஆட்சி முடிந்து விட்டதே... என சாக்கு சொல்வார்கள். நம்முடைய ஆட்சி அமைந்ததும் இது போன்ற பெரிய திட்டங்களை உடனே தொடங்கி, அதை ஆட்சி முடிவதற்குள் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வோம். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் உன் கருத்து என்ன என கேட்பார்கள் உலக மகாமேதைகளே ஆர்.ஓ.வி மூலம் தண்ணிக்குள்ளே சென்று அணைகளின் உறுதி தன்மையை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு நானும் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறேன். என்றார். (More Details will Updated here) Loading…
`உலக மகாமேதைகளே... நானும் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறேன்..!' - தவெக தலைவர் விஜய் காட்டம்
தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று (புதன்கிழமை - மாா்ச் 4) நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து காரில் செங்கிப்பட்டி வந்தார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. விஜய் vs ஸ்டாலின் சார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், ``வேலூர் நிர்வாகிகள் சந்திப்பில் நான் தான் தமிழ்நாடு என்றுக் கூறியிருந்தேன், தமிழ்நாட்டு மக்களின் ஒரே உண்மையான பிரதிநிதியாக நாம்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே. தமிழ்நாடு vs ஸ்டாலின் சார்... அதாவது விஜய் vs ஸ்டாலின். தவெக தலைவர் விஜய் இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்.. இதில் எப்படி பா.ஜ.க வந்தது எனக் கேள்வி கேட்டிருந்தேன். அதையும், விஜய் பாஜகவுக்காகப் பேசுகிறார் எனத் திரித்துப் பேசினார்கள். நம் சிறுபான்மைச் சகோதரர்களை ஏமாற்றும் வேலை இனி செய்ய முடியாது என்பதைத் தெரிந்து திரித்துப் பேசும் வேலையைச் செய்கிறார்கள். சென்னையில் டெல்லி டெல்லி எனப் பேசுவதும், அடித்தக் கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் அதே டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பதும் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டைக் காப்பது, பிழைக்க வைப்பது திமுக ஸ்டாலின்தான் எனப் பேசுவது வேலைக்கு ஆகாது. இப்போது சிறுவர்கள் கூட ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். TVK:``பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான் - மீண்டும் அதிமுக-வை சீண்டிய தவெக! தமிழ்நாட்டு அணி டெல்லி அணி எனப் பேசுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணி தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசிலை போடுவது சிஎஸ்கே - வரக்கூடிய தேர்தலிலும் விசிலை போடப்போவது டிவிகே. டெல்லி அணி மட்டுமல்லா எல்லா அணியையும் தவெக அடித்து நொறுக்கும். எனக்கும் என் மக்களுக்கும் நடுவில் யாராலும் உள்நுழைய முடியாது. இது ஒரு அம்மா - பையன். அப்பா - மகன், அண்ணன் - தம்பி, அக்கா - தம்பி உறவு. இது மற்றவர்களுக்கு தான் எலக்சன் என்னையும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் எமோஷன். ஊழலற்ற, உண்மையான, சமூக நீதியை நிலை நாட்ட, நம் ஆட்சியை அமைப்பீர்கள் என்ற உறுதி மொழியை நீங்கள் எனக்கு நீங்கள் தர வேண்டும். இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே... உண்மையிலேயே கொடுப்பீர்கள் தானே... இந்த விஜய்யை நம்புகிறீர்கள் தானே... தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டம் நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் பொழுது, நமக்கே அறியாமல் விவசாயிகளுக்கு நன்றி சொல்வோம். எனக்கு அடுத்த ஜென்மத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அப்படி அடுத்த ஜென்மம் இருந்தால் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு விவசாயத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். மற்றவர்களைப் போல நானும் டெல்டாகாரன் தான் என உங்கள் காதுகளில் டால்டா ஊத்துவதற்கு வரவில்லை. விவசாயிகளைப் பற்றித்தான் எனக்கு தெரியாது. அவர்கள் படும் கஷ்டங்கள் எனக்கு நன்றாக தெரியும். என்றார். தொடர்ந்து, ``ஐநா சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நிலத்தடி நீர் திவாலாகப் போகிறது என்ற தகவலை வெளியிட்டிருந்தது. மண்ணையும், மணலையும், மலைகளையும், கனிம வளங்களையும் கொள்ளையடித்தால் என்ன ஆகும்? 'மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் சொன்னதே... 'கனிமவளக் கொள்ளைகளுக்கெல்லாம் மணல் மாஃபியாதான் காரணம்' என மதுரை உயர் நீதிமன்றம் சொன்னதே.. இதையெல்லாம் மறந்துட்டீங்களா? தவெக விஜய் மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவளிப்பதே உங்கள் திமுக அரசு தானே, இதை இல்லை என்று சொல்ல முடியுமா? தண்ணீர், கனிம வளம் மட்டுமல்ல உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாகப் போகிறது. கடன் வாங்கி உங்கள் அரசு கவிழ்ந்து விட்டது. விவசாயிகள் விளைவித்த நெல் மழையில் நனைந்து வீணாகிப்போனதே அதை கவனித்தீர்களா? விவசாயிகள் போராட்டத்தில் உடன் நின்றீர்களா? ஆனால் அவர்கள் போராடினால், குண்டாசில் மட்டும் கைது செய்வீர்கள். இதுதானே உங்கள் சாதனை. பரந்தூர் பிரச்சனையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டின் அனைத்து நதிகளையும் இணைப்போம் என்ற சொன்னவர்கள், அதைச் செய்தார்களா? இவர்கள் எப்பொழுதும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற திட்டங்களை அறிவித்துவிட்டு, தேர்தலில் தோற்றுவிடுவார்கள். அதற்கு பின்பு எங்களுடைய ஆட்சி முடிந்து விட்டதே... என சாக்கு சொல்வார்கள். நம்முடைய ஆட்சி அமைந்ததும் இது போன்ற பெரிய திட்டங்களை உடனே தொடங்கி, அதை ஆட்சி முடிவதற்குள் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வோம். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் உன் கருத்து என்ன என கேட்பார்கள் உலக மகாமேதைகளே ஆர்.ஓ.வி மூலம் தண்ணிக்குள்ளே சென்று அணைகளின் உறுதி தன்மையை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு நானும் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறேன். என்றார். (More Details will Updated here) Loading…
'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?
வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே - ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில் பரவியுள்ள பதற்றத்தால் கச்சா எண்ணெய் மேலும் மேலும் எகிறும் என்கிற அச்சம். இந்த இரண்டினால் பயப்படும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வேகமாக விற்று வருகின்றனர். இதனால், பங்குச்சந்தையும் சரி... இந்திய ரூபாயின் மதிப்பும் சரி... வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இன்னொரு பக்கம், அமெரிக்காவின் டாலர் வலுவடைந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவில் இருந்து மாற்றி வருகின்றனர். ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold ஏன் கச்சா எண்ணெய் விலை இந்தியாவிற்கு மைனஸ்? உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம். இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வது நிச்சயம் இந்தியாவை சற்று அசைத்துப் பார்க்கும் தான். ஹார்மோஸ் ஜலசந்தி தற்போது மூடப்பட்டிருப்பதால், இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளை கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேட வேண்டும். ஆனால், இந்தியாவிடம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, ஒரு மாதத்தைத் தாண்டியும் போர் நீடித்தால், இந்தியாவிற்கு இது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்தச் சூழல் பாதிக்கும் முக்கிய விஷயங்களில் இந்திய ரூபாய் மதிப்பும் ஒன்று. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் என்ன ஆகும்? இங்கே பணவீக்கம் அதிகரிக்கும். அடுத்ததாக, வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும். இது இரண்டும் நடந்தால் சாமானிய மக்களின் வாழ்க்கைக் கூட பாதிக்கும். அடுத்ததாக, அமெரிக்க டாலர்களில் கடன் வாங்கி இருக்கும் இந்திய நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஏற்கெனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இந்திய முதலீடுகளை விற்றுகொண்டு வருகின்றனர். இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தால், அவர்கள் மேலும் தங்களது முதலீடுகளை வெளியேற்றுவார்கள். இதில் இருக்கும் பாசிட்டிவான விஷயம் என்னவென்றால், ஐ.டி, ஜவுளி போன்ற துறைகள் ஏற்றுமதியில் பலனடையும். இந்திய ரூபாயின் மதிப்பு எப்போது சரியாகலாம்? இந்தப் போர் முடிந்து, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வருவதில் பிரச்னை இல்லை என்கிற சூழல் உருவாகும் போதும்... இந்தியாவில் பணவீக்கம் இல்லை என்கிற நிலை உருவாகும் போதும். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் வீழ்ச்சியை சரிசெய்ய தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துருக்கிறது. ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?
'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?
வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே - ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில் பரவியுள்ள பதற்றத்தால் கச்சா எண்ணெய் மேலும் மேலும் எகிறும் என்கிற அச்சம். இந்த இரண்டினால் பயப்படும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வேகமாக விற்று வருகின்றனர். இதனால், பங்குச்சந்தையும் சரி... இந்திய ரூபாயின் மதிப்பும் சரி... வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இன்னொரு பக்கம், அமெரிக்காவின் டாலர் வலுவடைந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவில் இருந்து மாற்றி வருகின்றனர். ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold ஏன் கச்சா எண்ணெய் விலை இந்தியாவிற்கு மைனஸ்? உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம். இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வது நிச்சயம் இந்தியாவை சற்று அசைத்துப் பார்க்கும் தான். ஹார்மோஸ் ஜலசந்தி தற்போது மூடப்பட்டிருப்பதால், இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளை கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேட வேண்டும். ஆனால், இந்தியாவிடம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, ஒரு மாதத்தைத் தாண்டியும் போர் நீடித்தால், இந்தியாவிற்கு இது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்தச் சூழல் பாதிக்கும் முக்கிய விஷயங்களில் இந்திய ரூபாய் மதிப்பும் ஒன்று. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் என்ன ஆகும்? இங்கே பணவீக்கம் அதிகரிக்கும். அடுத்ததாக, வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும். இது இரண்டும் நடந்தால் சாமானிய மக்களின் வாழ்க்கைக் கூட பாதிக்கும். அடுத்ததாக, அமெரிக்க டாலர்களில் கடன் வாங்கி இருக்கும் இந்திய நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஏற்கெனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இந்திய முதலீடுகளை விற்றுகொண்டு வருகின்றனர். இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தால், அவர்கள் மேலும் தங்களது முதலீடுகளை வெளியேற்றுவார்கள். இதில் இருக்கும் பாசிட்டிவான விஷயம் என்னவென்றால், ஐ.டி, ஜவுளி போன்ற துறைகள் ஏற்றுமதியில் பலனடையும். இந்திய ரூபாயின் மதிப்பு எப்போது சரியாகலாம்? இந்தப் போர் முடிந்து, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வருவதில் பிரச்னை இல்லை என்கிற சூழல் உருவாகும் போதும்... இந்தியாவில் பணவீக்கம் இல்லை என்கிற நிலை உருவாகும் போதும். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் வீழ்ச்சியை சரிசெய்ய தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துருக்கிறது. ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?
மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! - மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி?
ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி அவரது பதவியை ஏற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை மொஜ்தபாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.1969-இல் ஈரானின் மஷாத் நகரில் பிறந்த முஜ்தபா, தனது ஆரம்ப காலத்தை ஈரானின் கடைசி ஷாவான முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராக போராடி வந்த தனது தந்தையின் எழுச்சிக்கு மத்தியில் கழித்தார். 1979-ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியின் மூலம் நாட்டின் தலையெழுத்து மாறியதுடன் புதிய ஆட்சி அதிகாரத்தில் காமேனி குடும்பம் முக்கிய அங்கம் வகித்தது. மொஜ்தபா பின்னர் ஈரானின் மிக முக்கியமான ஷியா ஆன்மீக மையமான கோம் நகரில் உள்ள மதப் பள்ளிகளில் தனது ஆன்மீகப் படிப்பைத் தொடர்ந்தார். இறுதியில் அவர் ஹோஜத்துல் இஸ்லாம் என்ற மதகுரு பதவியை அடைந்தார். அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள 'அயதுல்லா'க்களில் ஒருவராகக் கருதப்படாவிட்டாலும், ஈரானில் தனது தந்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரின் அலுவலகத்தில் படிப்படியாக தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார். தனது இளமைக் காலத்தில், மொஜ்தபா ஈரான் மற்றும் ஈராக் இடையே நடந்த போரில் முக்கிய பங்காற்றினார். இந்த அனுபவம், ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாப்பு படையான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப்படையில் அவருக்கு மிகுந்த தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. மொஜ்தபா நீண்டகாலமாக பழமைவாத பிரிவுகளுடனும், இஸ்லாமியக் குடியரசின் அரசியல் பாதுகாப்புப் படையுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு போரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இருந்த ராணுவத் தொடர்புகளே அவர் ஈரானின் புதிய உயர்ந்த பட்ச தலைவராக வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிலர். பொது மேடைகளில் பேசுவதையோ அல்லது அதிகாரப்பூர்வ பதவிகள் வகிப்பதையோ அவர் தவிர்த்து வந்தாலும், அரசியல் நியமனங்கள், வியூகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அவர் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஈரானின் அரசியலமைப்பின்படி மதகுருமார்கள் அடங்கிய அமைப்பே உயர்ந்த பட்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, இந்த அமைப்பு உடனடியாகக் கூடி மொஜ்தபாவை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரது இந்த நியமனம் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மன்னராட்சிக்கு எதிரான அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு குடியரசு நாட்டில், முன்னாள் உயர்ந்த பட்ச தலைவரின் மகனுக்கே மீண்டும் அந்தப் பதவியை வழங்குவது ஒரு வாரிசு அரசியலாக அமைந்துள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆயதுல்லா அலி காமேனி Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! | In-depth அதேபோல், ஈரானின் மிக உயர்ந்த மத அதிகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான பாரம்பரிய தகுதிகள் மற்றும் மத அறிஞருக்கான அந்தஸ்து அவரிடம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையில், மொஜ்தபா ஒரு முன்னணி பழமைவாத அரசியல்வாதியின் மகளான சஹ்ரா ஹத்தாத் என்பவரை திருமணம் செய்துள்ளார். இது ஈரானின் உயர்மட்ட அதிகார வர்க்கத்தினருடன் அவருக்குள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையிலிருந்து விலக்கியே வைத்துள்ளனர். மொஜ்தபா உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது துல்லியமான சொத்து மதிப்பு குறித்து தெரியவில்லை. அவர் உலகளாவிய ரீதியில் ஒரு சொத்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளதாகவும், பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான நிதியை மேலைநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்
Iran War: Khamenei போட்ட சபதம் - How US Israel Killed Khamenei | Decode | Vikatan
Iran War: Khamenei போட்ட சபதம் - How US Israel Killed Khamenei | Decode | Vikatan
தொடரும் போர் பதற்றம்: ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு?
ஈரான் மீதான போர் உச்சகட்டத்தில் நீடிக்கும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் - அமெரிக்கா ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 36 ஆண்டுகள் நாட்டை ஆண்ட அயதுல்லா கமேனியுடன் அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்தியும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். அயதுல்லா அலி கமேனியின் உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும், அடக்கம் செய்வதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகான நியமிக்கப்பட்ட வாரிசு இல்லை என்பதால், அயதுல்லா அலிரேசா அராஃபி, ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன், தலைமை நீதிபதி கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் ஆகியோர் அடங்கிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஈரானின் இடைக்கால தலைமைத்துவக் குழு, அடுத்த உச்சத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டது. மொஜ்தபா ஹொசைனி கமேனி இஸ்ரேல் - அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் பல துபாய், அபுதாபி, கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளைத் தாக்கின. ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அயதுல்ல அலி கமேனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்க அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் நிபுணர்கள் சபையால் அவர் கமேனியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி?
தொடரும் போர் பதற்றம்: ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு?
ஈரான் மீதான போர் உச்சகட்டத்தில் நீடிக்கும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் - அமெரிக்கா ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 36 ஆண்டுகள் நாட்டை ஆண்ட அயதுல்லா கமேனியுடன் அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்தியும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். அயதுல்லா அலி கமேனியின் உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும், அடக்கம் செய்வதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகான நியமிக்கப்பட்ட வாரிசு இல்லை என்பதால், அயதுல்லா அலிரேசா அராஃபி, ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன், தலைமை நீதிபதி கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் ஆகியோர் அடங்கிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஈரானின் இடைக்கால தலைமைத்துவக் குழு, அடுத்த உச்சத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டது. மொஜ்தபா ஹொசைனி கமேனி இஸ்ரேல் - அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் பல துபாய், அபுதாபி, கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளைத் தாக்கின. ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அயதுல்ல அலி கமேனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்க அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் நிபுணர்கள் சபையால் அவர் கமேனியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி?
EPS டெல்லி சென்றது ஏன்? | BJP விஜயதரணி Interview
EPS டெல்லி சென்றது ஏன்? | BJP விஜயதரணி Interview
Kharge -வை கைகாட்டிய Sonia - களமிறங்கிய ப.சிதம்பரம் - DMK Congress கூட்டணி அப்டேட்ஸ் | ADMK BJP
தருமபுரி: விவாத நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட திமுக - அதிமுக நிர்வாகிகள்! - முகம் சுழித்த பொதுமக்கள்!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தருமபுரியில் விவாத நிகழ்ச்சியை கடந்த 2 ஆம் தேதி இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. கலவரமான நிகழ்ச்சி இதில் தருமபுரி திமுக எம்.பி ஆ.மணி, முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன், நாதக மாநில ஒருஙகிணைப்பாளர் சந்தோஷ்குமார் உள்ளிடடோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் வந்திருந்தனர். தருமபுரி மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிரபார்க்கும் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள், பழைய பேருந்து நிலையம் மாற்றப்பட்ட விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எம்.பி மணி, அன்பழகன் எம்.எல்.ஏ பதில் அளித்தனர். கே.பி.அன்பழகன் அதுமட்டுமின்றி தங்கள் கட்சி ஆட்சி காலத்தை புகழ்ந்து பேசியதோடு மாறி மாறி விமர்சனத்தையும் வைத்து பேசியதால் வந்திருந்த இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் சத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தனர். 'மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது காவிரி உபரி நீர்த் திட்டம் கொண்டுவரப்படும்' என்று அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் பேசும்போது, திமுக எம்.பி மணி குறுக்கிட்டுப்பேச, அதற்கு அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டபடி பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீச ஆரம்பித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த தருமபுரி எஸ்.பி தொடர்ந்து திமுகவினரும் சத்தம் எழுப்பி சேர்களை தூக்கி வீச அந்த இடமே கூச்சல், குழப்பத்துடன் போர்க்களம் போலானது. இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டாலும், இரண்டு தரப்பையும் போலீசாரால் அமைதிபடுத்த முடியவில்லை. தகவல் தெரிந்து தருமபுரி எஸ்.பி மகேஸ்வரன் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியவர், இரண்டு கட்சியினரிடமும் கலைந்து செல்ல உத்தரவிட்டார். ஆனால் யாரும் செல்லாமல் அங்கேயே நின்றவர்கள், ஒருவழியாக 9 மணிக்கு மேல்தான் கலந்து சென்றனர். தருமபுரி எம்.பி ஆ.மணி விவாத நிகழ்ச்சியில் ஆக்கப்பூர்வமாக பேசாமல் பொறுமை இல்லாமல் இரண்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Loading…
'தேர்தல்ல போட்டி போட விருப்பமில்லங்க!' - ட்விஸ்ட் கொடுக்கும் தவெகவின் 'ஒரே'கூட்டணி கட்சி?
விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா என்கிற வாதம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தவெகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. முஸ்தபா தேர்தலில் போட்டியிடாமல் இருக்க அந்த கட்சித் தலைவர் முஸ்தபா சொல்லும் காரணம்தான் தவெகவினருக்கு 'ஷாக்' கொடுத்திருக்கிறது. தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடந்த பிப்ரவரியில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தது. ஆனந்தையும் ஆதவ்வையும் சந்தித்து தங்களின் ஆதரவை முஸ்தபா தெரிவித்திருந்தார். தவெகவும் முஸ்தபாவை அரவணைத்துக் கொண்டது. எல்லா மேடையிலும் முஸ்தபாவுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. தங்களை நம்பி வந்த ஒரே கட்சி என்பதால் தவெகவின் தலைமையும் முஸ்தபாவை முக்கிய இடத்தில் வைத்திருந்தது. விஜய் தவெகவுக்காக பல டிவி விவாதங்களிலும் வரிந்து கட்டிக் கொண்டு பேசும் வாய்ப்பையும் தலைமை அவருக்கு கொடுத்தது. பெரிய கட்சிகளிடம் கூட்டணி கட்சிகள் அதிக சீட்களை கேட்டு அரசியல் களத்தை தகிக்க விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், முஸ்தபாவும் தவெக தலைமையிடம் அதிக சீட்டுகளை கேட்டு நெருக்கிக் கொண்டிருப்பார் என நினைத்தோம். கூட்டணியில் ஒரே ஒரு கட்சிதான் இருக்கிறது என்பதால் முஸ்தபா கேட்கும் இடத்தை தவெக கொடுக்கும் என்றும் தோன்றியது. இதே எண்ணத்தோடு பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம். 'அவரு உஷாரான ஆளுங்க. அவருக்கு எலெக்சன்ல போட்டி போடுற எண்ணமே இல்ல...' என அதிர்ச்சி கொடுக்கின்றனர் தவெகவினர். `என்னணே சொல்றீங்க' என மேற்படி விசாரிக்கையில், 'முஸ்தபா மிக தெளிவாக இருக்கிறார். இந்தத் தேர்தலில் தவெகவால் என்ன செய்ய முடியும்? ஆட்சியைப் பிடித்து விடமுடியுமா என்கிறார். அதிகபட்சம் 10-15% வாக்குகளை வாங்குவீர்கள். இதற்காக கூட்டணி சீட்டுகளை வாங்கிக் கொண்டு போய் நான் செலவு செய்து தோற்பேன் என்று தெரிந்தே தோற்பதா? அது முட்டாள்த்தனமாக இருக்கும். அதனால் என் கட்சி போட்டியிடவில்லை. யாருக்காவது சீட் வேண்டுமான்றால் சொல்லுங்கள் தலைமையிடம் பேசி நல்லபடியாக முடித்து தருகிறேன் என இளநீர் வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அவர் பேசுவதைப் பார்த்தால் பாசிட்டிவாக இருக்கும் எங்களுக்கு கூட கிலியாக இருக்கிறது' என வருந்துகின்றனர் பனையூரின் முக்கிய நிர்வாகிகள். முஸ்தபா உடனடியாக முஸ்தபாவை தொடர்புகொண்டு விஷயத்தை கேட்டோம் நான்கைந்து விநாடிகள் யோசித்துவிட்டு, 'தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைத்தவுடன் பேசுவோம்' என்றார். 'அலர்ட்' ஆறுமுகமாக இருக்கிறாரே! Loading…
'அண்ணியார் ஆப்சென்ட்; சுதீஷுடன் ராஜ்ய சபா சீட் மட்டும் ஒப்பந்தம்!' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?
திமுகவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்த தேமுதிக, இன்று இரவு 8:30 மணியளவில் திமுகவுடன் ராஜ்ய சபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. சுதீஷ் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் கிடைக்காததால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. NDA, திமுக என இரண்டு பக்கமும் பேசி வந்த தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. திமுகவிடம் 4 ராஜ்ய சபா சீட்கள் இருக்கிறது. ராஜ்ய சபா சீட்டுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5 ஆம் தேதியே கடைசி நாள். அதனால் தேமுதிகவுக்கு உத்தரவாதம் அளித்தபடியே இன்று இரவு 8:30 மணியளவில் முதலமைச்சர் முன்னிலையில் தேமுதிகவின் சுதீஷ் ராஜ்ய சபாவுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டார். செல்வப்பெருந்தகை மகளின் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு அங்கிருந்தபடியே அறிவாலயத்துக்கு நேரில் வந்து ஒப்பந்தத்தை முடித்திருக்கின்றனர். ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகியிருப்பது ராஜ்ய சபா ஒப்பந்தம் மட்டுமே. சட்டமன்ற தேர்தலுக்கான இடங்கள் பற்றிய ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியூரில் இருப்பதால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அவர் வந்தவுடன் அடுத்த சில நாட்களில் தேமுதிகவுடன் சட்டமன்றத்துக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்கின்றனர்.
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும். இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது. எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களுக்குக் கையிருப்பு தற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத 'அபராத' வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும். Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும். இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது. எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களுக்குக் கையிருப்பு தற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத 'அபராத' வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும். Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?
Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?
ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து பதிவில் இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளதாவது... ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் படி, டெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைமை வளாகத்திற்குள் (பிரதமர் அலுவலகம் இருக்கும் வளாகம்) இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தி உள்ளோம். கமேனி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! அதில் அதிபர் அலுவலகம் மற்றும் உச்சத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டடத்தின் மீது ஏராளமான வெடிமருந்துகள் வீசப்பட்டன என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்ததால்தான், தற்போது ஈரான் மிகப்பெரிய அளவில் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் தலைமையின் மீது குறிவைப்பது இந்தப் போரை மீண்டும் அதிக பதற்றமாக்கலாம் என்று கூறப்படுகிறது. חיל-האוויר בהכוונה מדויקת של אמ״ן, תקף במהלך הלילה מבני שלטון ביטחוניים בתוך מתחם ההנהגה של משטר הטרור האיראני בלב טהרן. בתקיפת המתחם, הוטלו חימושים רבים על לשכת הנשיאות ומבנה המועצה העליונה לביטחון לאומי. בנוסף, הותקף מתחם ההתכנסות של הפורום הבכיר ביותר של המשטר, האחראי על… pic.twitter.com/8Ffur9wvd8 — Israeli Air Force (@IAFsite) March 3, 2026
Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?
ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து பதிவில் இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளதாவது... ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் படி, டெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைமை வளாகத்திற்குள் (பிரதமர் அலுவலகம் இருக்கும் வளாகம்) இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தி உள்ளோம். கமேனி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! அதில் அதிபர் அலுவலகம் மற்றும் உச்சத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டடத்தின் மீது ஏராளமான வெடிமருந்துகள் வீசப்பட்டன என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்ததால்தான், தற்போது ஈரான் மிகப்பெரிய அளவில் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் தலைமையின் மீது குறிவைப்பது இந்தப் போரை மீண்டும் அதிக பதற்றமாக்கலாம் என்று கூறப்படுகிறது. חיל-האוויר בהכוונה מדויקת של אמ״ן, תקף במהלך הלילה מבני שלטון ביטחוניים בתוך מתחם ההנהגה של משטר הטרור האיראני בלב טהרן. בתקיפת המתחם, הוטלו חימושים רבים על לשכת הנשיאות ומבנה המועצה העליונה לביטחון לאומי. בנוסף, הותקף מתחם ההתכנסות של הפורום הבכיר ביותר של המשטר, האחראי על… pic.twitter.com/8Ffur9wvd8 — Israeli Air Force (@IAFsite) March 3, 2026
விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை
திமுக - காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். பதைபதைத்துப் போய் ப.சிதம்பரம், சித்தரஞ்சன் சாலையைச் சுற்றிவர சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மகிழ்வைக் கொடுத்த ஒரு அறிவிப்புதான் காரணமென்பதே இந்த அரசியலாட்டத்தின் பெரும் சுவாரஸ்யம். சித்தரஞ்சன் சாலையில் ப.சிதம்பரம் திமுக - காங்கிரஸ் இடையேயான பஞ்சாயத்து கடந்த அக்டோபர் - நவம்பரிலேயே புகைய ஆரம்பித்துவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி மேல் பேட்டியாகக் கொடுத்து கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மாணிக்கம் தாகூரும் கோதாவில் இறங்கத் தயாராகியிருந்தார். காங்கிரஸ், விஜய்யுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் தீயாகப் பரவி வந்தது. அந்தச் சமயத்தில்தான் நவம்பர் 22 ஆம் தேதி ஒரு சனிக்கிழமையில் காலை 7:43 க்கு ப.சி ஒரு ட்வீட்டைப் பதிவிட்டிருந்தார். 'தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் 'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்' என்பதுதான் அந்த ட்வீட். சிதம்பரம் ட்வீட் அடுத்த சில மணி நேரங்களில் டெல்லியிலிருந்து அறிவிப்பு வந்தது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அறிவிக்கப்பட்டது. எந்தப் புகைச்சல் முடிவுக்கு வரும் எனப் ப.சி மனப்பூர்வமாக நம்பினாரோ அந்தப் புகைச்சலை மேலும் கொளுந்து விட்டு எரிய வைத்தார் கிரிஷ் சோடங்கர். அமைச்சரவையில் பங்கு, அதிக சீட்டுகள் என மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் பேசியதற்குத் துணையாக நின்றார் சோடங்கர். அறிவாலயத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு டெல்லி போய் 'திமுக கொடுக்கும் 25 சீட்டுகளுக்கெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது' என்றார். ஸ்டாலின், சோடங்கர் என்கிற பெயரைக் கேட்டாலே எரிச்சலடையும் நிலையை ஏற்படுத்தினார். திமுக - காங். இடையிலான விரிசலை இன்னும் அதிகப்படுத்தினார். அரசல் புரசல் வதந்திக்கெல்லாம் முடிவுகட்டி கூட்டணியைச் சுமுகமாகக் கொண்டு செல்ல உதவுமெனப் ப.சி நினைத்த அதே குழுதான், இன்றைக்கு அவரை சித்தரஞ்சன் சாலையை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓட வைத்திருக்கிறது. அரசியல் கற்பனைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை ப.சி இன்னொரு முறை உணர்ந்திருப்பார். CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?
விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை
திமுக - காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். பதைபதைத்துப் போய் ப.சிதம்பரம், சித்தரஞ்சன் சாலையைச் சுற்றிவர சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மகிழ்வைக் கொடுத்த ஒரு அறிவிப்புதான் காரணமென்பதே இந்த அரசியலாட்டத்தின் பெரும் சுவாரஸ்யம். சித்தரஞ்சன் சாலையில் ப.சிதம்பரம் திமுக - காங்கிரஸ் இடையேயான பஞ்சாயத்து கடந்த அக்டோபர் - நவம்பரிலேயே புகைய ஆரம்பித்துவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி மேல் பேட்டியாகக் கொடுத்து கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மாணிக்கம் தாகூரும் கோதாவில் இறங்கத் தயாராகியிருந்தார். காங்கிரஸ், விஜய்யுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் தீயாகப் பரவி வந்தது. அந்தச் சமயத்தில்தான் நவம்பர் 22 ஆம் தேதி ஒரு சனிக்கிழமையில் காலை 7:43 க்கு ப.சி ஒரு ட்வீட்டைப் பதிவிட்டிருந்தார். 'தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் 'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்' என்பதுதான் அந்த ட்வீட். சிதம்பரம் ட்வீட் அடுத்த சில மணி நேரங்களில் டெல்லியிலிருந்து அறிவிப்பு வந்தது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அறிவிக்கப்பட்டது. எந்தப் புகைச்சல் முடிவுக்கு வரும் எனப் ப.சி மனப்பூர்வமாக நம்பினாரோ அந்தப் புகைச்சலை மேலும் கொளுந்து விட்டு எரிய வைத்தார் கிரிஷ் சோடங்கர். அமைச்சரவையில் பங்கு, அதிக சீட்டுகள் என மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் பேசியதற்குத் துணையாக நின்றார் சோடங்கர். அறிவாலயத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு டெல்லி போய் 'திமுக கொடுக்கும் 25 சீட்டுகளுக்கெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது' என்றார். ஸ்டாலின், சோடங்கர் என்கிற பெயரைக் கேட்டாலே எரிச்சலடையும் நிலையை ஏற்படுத்தினார். திமுக - காங். இடையிலான விரிசலை இன்னும் அதிகப்படுத்தினார். அரசல் புரசல் வதந்திக்கெல்லாம் முடிவுகட்டி கூட்டணியைச் சுமுகமாகக் கொண்டு செல்ல உதவுமெனப் ப.சி நினைத்த அதே குழுதான், இன்றைக்கு அவரை சித்தரஞ்சன் சாலையை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓட வைத்திருக்கிறது. அரசியல் கற்பனைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை ப.சி இன்னொரு முறை உணர்ந்திருப்பார். CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?
TVK - Congress கூட்டணி? DMK மீது கோபம் ஏன்? - மனம் திறக்கும் ஆதவ் அர்ஜுனா | விகடன் மேடை Teaser #1
”விமர்சித்தவர்களையும் அரவணைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்”- ஸ்டாலினுக்கு கார்த்தி சிதம்பரம் பாராட்டு
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அ.தி.மு.க முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. ஒரு பெரிய கட்சி, நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் அடையாளம் சின்னம். அ.தி.மு.க.,வை நான் குறைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களிடம், முன்பு இருந்த ஆளுமை இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அவர்களை நாடித்தான் எல்லா அரசியல் கட்சிகளும் வந்து சந்தித்து கூட்டணி அமைத்தனர். அ.தி.மு.க-வின் தலைமையின் கீழ்தான் தேர்தலைச் சந்தித்தார்கள். ஆனால், இன்று அவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து என்றால் கூடவும், முடிவெடுக்க வேண்டும் என்றால் கூட டெல்லிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.க-வை நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க இருக்கிறது. இதனை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். கார்த்தி சிதம்பரம் எல்லா கட்சிகளு்ம் தங்களைப் பெருமையாவும், துாக்கி உயர்த்திப் பேசுவது தமிழக அரசியலில் வாடிக்கைதான். ஒன்பது முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், த.வெ.க-வில் சேர்ந்த நிலையில், அந்தக் கட்சியோட பெருமைகளை அவர் பேச வேண்டிய நிலையில் உள்ளார். த.வெ.க., முழுமையான அரசியல் கட்சியாக மாறினதா என்றால், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது ஒரு ரசிகர் மன்றம் போலத்தான் நடக்கிறது. த.வெ.க-வில் உத்தரவு போட்டு, கட்டுப்படுத்தும் வடிவம் கிடையாது. ஒரு மாவட்டத் தலைவரோ, செயலாளரோ அவர் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய அமைப்பு இல்லை. ‘தன்மான’ காங்கிரஸ்... தவிக்கும் ஸ்டாலின்... குஷியில் விஜய்! விஜய் ஒரு பெரிய நடிகர், அவருக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களின் ஓட்டுகள் எல்லாம் சீட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். அரசியல் கட்சி தொடங்கி கோட்டையில் கொடி ஏற்றுவது என்பது நீண்ட பயணம். இதற்கு பல்வேறு காரணிகளைப் பின்பற்ற வேண்டும். ஓ.பி.எஸ்., தி.மு.க-வில் இணைந்தது முதல்வர் ஸ்டாலினின் சாதுர்யமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது தேர்தலைச் சந்திக்க, ஒரு பெரிய கூட்டணியை அமைப்பதுதான் வெற்றிகரமான அரசியலாக இருக்கும். அதிலும் ஆளும்கட்சியாக இருக்கும்போது ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள ஒரு பெரிய கூட்டணி தேவையாக இருக்கும். அதை ஸ்டாலின் ரொம்ப சாதுர்யமாகவும், தன்னை விமர்சனம் செய்தவர்களைக் கூட பெரிய மனது செய்து, அரவணைத்து ஒரு பெரிய கூட்டணியை அமைத்துள்ளது அவருக்குக் கிடைத்த வெற்றி. கார்த்திக் சிதம்பரம் எல்லா கட்சிக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். 234 தொகுதிதான் உள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணியில் உள்ளார்கள். எனவே கிவ் அண்ட் டேக் பாலிசில் ஒரு புரிதல் வரும் என நம்புறேன். அமெரிக்கா இன்னொரு நாடு மீது போர் தொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏகாதிபத்திய மனப்பான்மையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈ ரான் மக்களுக்காக எனது அனுதாபம் இருக்கு. அவர்கள் இந்தப் போரில் மட்டும் அல்ல, உள்நாட்டிலேயே அங்குள்ள மக்கள் நசுக்கப்பட்டார்கள். விலைவாசிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 7,000 பேர் இறந்துள்ளனர். அது அந்த நாட்டின் அரசாங்கம் செய்த கொடூரம். நான் என்றைக்கும் தலிபானுக்கோ, அயதுல்லாவுக்கோ வக்காலத்து வாங்க மாட்டேன் எனத் தான் சொன்னேன். அமெரிக்கா நடத்தும் போரை நியாயப்படுத்தவில்லை. ஈரான் அரசின் கொடுமையைப் படிக்க வேண்டும். வரும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளி்ல் போட்டியிட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் இடத்தில் தி.மு.க உள்ளது. ஒவ்வொரு கட்சியுடன் பேசி அவர்கள் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இரண்டு கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சசிகலா பற்றி பேசினால் பெரிய தாக்கம் இருக்காது. அவர்களின் நேரம் எல்லாம் முடிந்து விட்டது. அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்தவர்கள் அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க.,வுக்குச் சென்று விட்டார்கள். த.வெ.க கூட்டத்திற்கு அனைவரும் பத்திரமாக வந்துவிட்டு செல்ல வேண்டும், மின்கம்பத்தில் ஏறாதீர்கள் என்றார். கூட்டணி... சதி... ‘கை’! நழுவுகிறதா... கழுவுகிறதா?
”விமர்சித்தவர்களையும் அரவணைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்”- ஸ்டாலினுக்கு கார்த்தி சிதம்பரம் பாராட்டு
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அ.தி.மு.க முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. ஒரு பெரிய கட்சி, நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் அடையாளம் சின்னம். அ.தி.மு.க.,வை நான் குறைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களிடம், முன்பு இருந்த ஆளுமை இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அவர்களை நாடித்தான் எல்லா அரசியல் கட்சிகளும் வந்து சந்தித்து கூட்டணி அமைத்தனர். அ.தி.மு.க-வின் தலைமையின் கீழ்தான் தேர்தலைச் சந்தித்தார்கள். ஆனால், இன்று அவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து என்றால் கூடவும், முடிவெடுக்க வேண்டும் என்றால் கூட டெல்லிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.க-வை நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க இருக்கிறது. இதனை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். கார்த்தி சிதம்பரம் எல்லா கட்சிகளு்ம் தங்களைப் பெருமையாவும், துாக்கி உயர்த்திப் பேசுவது தமிழக அரசியலில் வாடிக்கைதான். ஒன்பது முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், த.வெ.க-வில் சேர்ந்த நிலையில், அந்தக் கட்சியோட பெருமைகளை அவர் பேச வேண்டிய நிலையில் உள்ளார். த.வெ.க., முழுமையான அரசியல் கட்சியாக மாறினதா என்றால், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது ஒரு ரசிகர் மன்றம் போலத்தான் நடக்கிறது. த.வெ.க-வில் உத்தரவு போட்டு, கட்டுப்படுத்தும் வடிவம் கிடையாது. ஒரு மாவட்டத் தலைவரோ, செயலாளரோ அவர் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய அமைப்பு இல்லை. ‘தன்மான’ காங்கிரஸ்... தவிக்கும் ஸ்டாலின்... குஷியில் விஜய்! விஜய் ஒரு பெரிய நடிகர், அவருக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களின் ஓட்டுகள் எல்லாம் சீட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். அரசியல் கட்சி தொடங்கி கோட்டையில் கொடி ஏற்றுவது என்பது நீண்ட பயணம். இதற்கு பல்வேறு காரணிகளைப் பின்பற்ற வேண்டும். ஓ.பி.எஸ்., தி.மு.க-வில் இணைந்தது முதல்வர் ஸ்டாலினின் சாதுர்யமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது தேர்தலைச் சந்திக்க, ஒரு பெரிய கூட்டணியை அமைப்பதுதான் வெற்றிகரமான அரசியலாக இருக்கும். அதிலும் ஆளும்கட்சியாக இருக்கும்போது ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள ஒரு பெரிய கூட்டணி தேவையாக இருக்கும். அதை ஸ்டாலின் ரொம்ப சாதுர்யமாகவும், தன்னை விமர்சனம் செய்தவர்களைக் கூட பெரிய மனது செய்து, அரவணைத்து ஒரு பெரிய கூட்டணியை அமைத்துள்ளது அவருக்குக் கிடைத்த வெற்றி. கார்த்திக் சிதம்பரம் எல்லா கட்சிக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். 234 தொகுதிதான் உள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணியில் உள்ளார்கள். எனவே கிவ் அண்ட் டேக் பாலிசில் ஒரு புரிதல் வரும் என நம்புறேன். அமெரிக்கா இன்னொரு நாடு மீது போர் தொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏகாதிபத்திய மனப்பான்மையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈ ரான் மக்களுக்காக எனது அனுதாபம் இருக்கு. அவர்கள் இந்தப் போரில் மட்டும் அல்ல, உள்நாட்டிலேயே அங்குள்ள மக்கள் நசுக்கப்பட்டார்கள். விலைவாசிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 7,000 பேர் இறந்துள்ளனர். அது அந்த நாட்டின் அரசாங்கம் செய்த கொடூரம். நான் என்றைக்கும் தலிபானுக்கோ, அயதுல்லாவுக்கோ வக்காலத்து வாங்க மாட்டேன் எனத் தான் சொன்னேன். அமெரிக்கா நடத்தும் போரை நியாயப்படுத்தவில்லை. ஈரான் அரசின் கொடுமையைப் படிக்க வேண்டும். வரும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளி்ல் போட்டியிட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் இடத்தில் தி.மு.க உள்ளது. ஒவ்வொரு கட்சியுடன் பேசி அவர்கள் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இரண்டு கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சசிகலா பற்றி பேசினால் பெரிய தாக்கம் இருக்காது. அவர்களின் நேரம் எல்லாம் முடிந்து விட்டது. அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்தவர்கள் அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க.,வுக்குச் சென்று விட்டார்கள். த.வெ.க கூட்டத்திற்கு அனைவரும் பத்திரமாக வந்துவிட்டு செல்ல வேண்டும், மின்கம்பத்தில் ஏறாதீர்கள் என்றார். கூட்டணி... சதி... ‘கை’! நழுவுகிறதா... கழுவுகிறதா?
மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி'சேர்க்கும் ஃபார்முலா!
நண்பா, ஒரு நிமிஷம் உண்மையைச் சொல்லுங்கள்... காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கோ, பிசினஸுக்கோ போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன உதறல் இருக்கிறதா? முப்பது வயசு வரைக்கும் லைஃப் ஜாலியாத்தான் போச்சு. ஆனா இப்போ சம்பளம் வருது, வந்த வேகத்துல இஎம்ஐ (EMI), ஸ்கூல் ஃபீஸ், கிரெடிட் கார்டு பில்லுனு காணாம போகுது. நாளைக்கு ஏதாவது மெடிக்கல் எமர்ஜென்சியோ, இல்லை வேலையில ஒரு சிக்கல் வந்தாலோ நம்ம குடும்பத்தை யாரு காப்பாத்துவா? இது உங்கள் மனக்குரல் மட்டுமல்ல; புதுச்சேரியில் இன்று 35 வயதைக் கடந்த நடுத்தர வர்க்கத்து ஆண்களின் மிகப்பெரிய பயம் இதுதான். நமக்குத் தெரியாமலேயே மாறும் வாழ்க்கை! முன்பெல்லாம் சம்பாதிப்பதில் பாதியைச் சேமித்தார்கள். இன்று நமது லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. நம்மையும் அறியாமல் செலவுகள் கழுத்தை நெரிக்கின்றன. இதற்கு நடுவில், AI வந்தா என் வேலை அடுத்த 5 வருஷத்துக்கு இருக்குமா? என்ற பயம் வேறு. நாளுக்கு நாள் எகிறும் விலைவாசியால், உங்கள் குழந்தையின் காலேஜ் படிப்புக்கு இன்னும் பத்து வருடத்தில் பல லட்சங்கள் தேவைப்படும். Counting Money நாம் முழிப்பதற்குள், உலகமே மாறிவிட்டது! நீங்கள் பணக் கவலையில் தூங்காமல் இருக்கும் இதே நேரத்தில்தான், ஒரு கூட்டம் சத்தமே இல்லாமல் தங்கள் குடும்பத்துக்கான சொத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இது சும்மா இல்லை, கடந்த ஜனவரி 2026-ல் வெளியான AMFI டேட்டாவைப் பாருங்கள்: இந்தியர்கள் மாதாந்திரம் செய்யும் SIP முதலீடு மட்டும் ₹31,000 கோடியைத் தாண்டிவிட்டது! ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மதிப்பு ₹81 லட்சம் கோடியை எட்டிவிட்டது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பேங்க்ல போட்டா பணம் வளராது என்பதைப் புரிந்துகொண்ட ஸ்மார்ட்டான மக்கள், பங்குச்சந்தையின் லாபத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள். நீங்கள் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? ரிஸ்க் இல்லாமல் 1 கோடி சேர்க்கும் அந்த 'சீக்ரெட்' ஃபார்முலா! எனக்குப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாலே பயம் பாஸ் என்கிறீர்களா? உங்களுக்கான சூப்பர் சாய்ஸ்தான் 'மல்டி அசெட் ஃபண்ட்' (Multi Asset Fund). இது ஒரு ஆல்ரவுண்டர் போல! உங்கள் பணத்தை வெறும் ஷேர் மார்க்கெட்டில் மட்டும் போடாமல், தங்கம் (Gold) மற்றும் பாதுகாப்பான கடன் பத்திரங்கள் (Debt) என மூன்றிலும் பிரித்து முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் கொஞ்சம் சரிந்தாலும், தங்கம் உங்களைக் காப்பாற்றி லாபத்தைக் கொடுத்துவிடும். டென்ஷனே இல்லாத பாதுகாப்பான முதலீடு இது! கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்! ஒரு பிரத்யேக கால்குலேஷன்: (இதை யாரும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள்) மாதம் வெறும் ₹12,000-ஐ ஒரு மல்டி அசெட் ஃபண்டில் SIP செய்யுங்கள். அத்தோடு, வருஷத்துக்கு ஒருமுறை உங்களுக்கு வரும் போனஸ் அல்லது இன்சென்டிவ் தொகையில் இருந்து ஒரு ₹50,000-ஐ மட்டும் கூடுதலாக (Top-up) அதே ஃபண்டில் போடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்தால், சராசரியாக 12% லாபம் வந்தால்கூட, 15 வருடங்களில் உங்கள் கையில் ₹1 கோடியே 1 லட்சம் பிரமாண்டமாகச் சேர்ந்திருக்கும்! இதில் நீங்கள் போட்ட மொத்த பணமே வெறும் 25 லட்சம்தான். மீதமுள்ள 75 லட்சமும் உங்கள் பணம் உங்களுக்காக உழைத்துக் கொடுத்த லாபம்! INvestor planning his investment 1 கோடி கையில் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்... ஒரு கோடி ரூபாய் உங்கள் பேங்கில் இருந்தால், இந்த மாசம் சம்பளம் வரலனா குடும்பம் என்ன ஆகும்? என்ற பயம் இருக்காது. ஆபீஸில் பாஸ் அதிக வேலை வாங்கினால், தைரியமாக வேலையை விட்டுவிட்டு உங்களுக்குப் பிடித்த பிசினஸைச் செய்யலாம். உங்கள் பிள்ளைகள் கேட்கும் கல்வியை, பணத்தைப் பற்றிச் சிந்திக்காமலேயே கொடுக்கலாம். புதுச்சேரியின் அமைதியான காற்றில், எவ்விதப் பண டென்ஷனும் இல்லாமல் ஒரு ராஜாவைப் போல வாழலாம். Labham Webinar march 04 2026 இந்தச் சுதந்திரத்தை உங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க நீங்கள் தயாரா? மல்டி அசெட் ஃபண்ட்னா என்ன? எந்த ஃபண்ட் பாதுகாப்பானது? இந்த 1 கோடி பிளானை எப்படிச் சரியாக ஆரம்பிப்பது? எல்லாவற்றையும் மிக எளிமையாக, நேரடியாகக் கற்றுக்கொள்ள ஒரு பிரத்யேக வாய்ப்பு இதோ! தலைப்பு: ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள் குறித்த ஆன்லைன் வகுப்பு (இது புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு வகுப்பாகும்) நாள்: மார்ச் 04, 2026, புதன் நேரம்: மாலை 07 மணி - இந்திய நேரம் பேச்சாளர்: ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர் 60 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் ஏதுமில்லை. முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-mar04-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar04_2026 (குறிப்பு: உங்கள் வாழ்க்கையின் அடுத்த 15 வருடங்களை நிம்மதியாக மாற்றப்போகும் மிக முக்கியமான 90 நிமிடங்கள் இது. இடங்கள் மிகவும் குறைவு, இப்போதே பதிவு செய்யுங்கள்!) 50+ வயதா? அசல் குறையாமல் மாதம் ₹28000 'பென்ஷன்' தரும் ₹50 லட்சத்துக்கான ஃபார்முலா!
மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி'சேர்க்கும் ஃபார்முலா!
நண்பா, ஒரு நிமிஷம் உண்மையைச் சொல்லுங்கள்... காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கோ, பிசினஸுக்கோ போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன உதறல் இருக்கிறதா? முப்பது வயசு வரைக்கும் லைஃப் ஜாலியாத்தான் போச்சு. ஆனா இப்போ சம்பளம் வருது, வந்த வேகத்துல இஎம்ஐ (EMI), ஸ்கூல் ஃபீஸ், கிரெடிட் கார்டு பில்லுனு காணாம போகுது. நாளைக்கு ஏதாவது மெடிக்கல் எமர்ஜென்சியோ, இல்லை வேலையில ஒரு சிக்கல் வந்தாலோ நம்ம குடும்பத்தை யாரு காப்பாத்துவா? இது உங்கள் மனக்குரல் மட்டுமல்ல; புதுச்சேரியில் இன்று 35 வயதைக் கடந்த நடுத்தர வர்க்கத்து ஆண்களின் மிகப்பெரிய பயம் இதுதான். நமக்குத் தெரியாமலேயே மாறும் வாழ்க்கை! முன்பெல்லாம் சம்பாதிப்பதில் பாதியைச் சேமித்தார்கள். இன்று நமது லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. நம்மையும் அறியாமல் செலவுகள் கழுத்தை நெரிக்கின்றன. இதற்கு நடுவில், AI வந்தா என் வேலை அடுத்த 5 வருஷத்துக்கு இருக்குமா? என்ற பயம் வேறு. நாளுக்கு நாள் எகிறும் விலைவாசியால், உங்கள் குழந்தையின் காலேஜ் படிப்புக்கு இன்னும் பத்து வருடத்தில் பல லட்சங்கள் தேவைப்படும். Counting Money நாம் முழிப்பதற்குள், உலகமே மாறிவிட்டது! நீங்கள் பணக் கவலையில் தூங்காமல் இருக்கும் இதே நேரத்தில்தான், ஒரு கூட்டம் சத்தமே இல்லாமல் தங்கள் குடும்பத்துக்கான சொத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இது சும்மா இல்லை, கடந்த ஜனவரி 2026-ல் வெளியான AMFI டேட்டாவைப் பாருங்கள்: இந்தியர்கள் மாதாந்திரம் செய்யும் SIP முதலீடு மட்டும் ₹31,000 கோடியைத் தாண்டிவிட்டது! ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மதிப்பு ₹81 லட்சம் கோடியை எட்டிவிட்டது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பேங்க்ல போட்டா பணம் வளராது என்பதைப் புரிந்துகொண்ட ஸ்மார்ட்டான மக்கள், பங்குச்சந்தையின் லாபத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள். நீங்கள் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? ரிஸ்க் இல்லாமல் 1 கோடி சேர்க்கும் அந்த 'சீக்ரெட்' ஃபார்முலா! எனக்குப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாலே பயம் பாஸ் என்கிறீர்களா? உங்களுக்கான சூப்பர் சாய்ஸ்தான் 'மல்டி அசெட் ஃபண்ட்' (Multi Asset Fund). இது ஒரு ஆல்ரவுண்டர் போல! உங்கள் பணத்தை வெறும் ஷேர் மார்க்கெட்டில் மட்டும் போடாமல், தங்கம் (Gold) மற்றும் பாதுகாப்பான கடன் பத்திரங்கள் (Debt) என மூன்றிலும் பிரித்து முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் கொஞ்சம் சரிந்தாலும், தங்கம் உங்களைக் காப்பாற்றி லாபத்தைக் கொடுத்துவிடும். டென்ஷனே இல்லாத பாதுகாப்பான முதலீடு இது! கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்! ஒரு பிரத்யேக கால்குலேஷன்: (இதை யாரும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள்) மாதம் வெறும் ₹12,000-ஐ ஒரு மல்டி அசெட் ஃபண்டில் SIP செய்யுங்கள். அத்தோடு, வருஷத்துக்கு ஒருமுறை உங்களுக்கு வரும் போனஸ் அல்லது இன்சென்டிவ் தொகையில் இருந்து ஒரு ₹50,000-ஐ மட்டும் கூடுதலாக (Top-up) அதே ஃபண்டில் போடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்தால், சராசரியாக 12% லாபம் வந்தால்கூட, 15 வருடங்களில் உங்கள் கையில் ₹1 கோடியே 1 லட்சம் பிரமாண்டமாகச் சேர்ந்திருக்கும்! இதில் நீங்கள் போட்ட மொத்த பணமே வெறும் 25 லட்சம்தான். மீதமுள்ள 75 லட்சமும் உங்கள் பணம் உங்களுக்காக உழைத்துக் கொடுத்த லாபம்! INvestor planning his investment 1 கோடி கையில் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்... ஒரு கோடி ரூபாய் உங்கள் பேங்கில் இருந்தால், இந்த மாசம் சம்பளம் வரலனா குடும்பம் என்ன ஆகும்? என்ற பயம் இருக்காது. ஆபீஸில் பாஸ் அதிக வேலை வாங்கினால், தைரியமாக வேலையை விட்டுவிட்டு உங்களுக்குப் பிடித்த பிசினஸைச் செய்யலாம். உங்கள் பிள்ளைகள் கேட்கும் கல்வியை, பணத்தைப் பற்றிச் சிந்திக்காமலேயே கொடுக்கலாம். புதுச்சேரியின் அமைதியான காற்றில், எவ்விதப் பண டென்ஷனும் இல்லாமல் ஒரு ராஜாவைப் போல வாழலாம். Labham Webinar march 04 2026 இந்தச் சுதந்திரத்தை உங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க நீங்கள் தயாரா? மல்டி அசெட் ஃபண்ட்னா என்ன? எந்த ஃபண்ட் பாதுகாப்பானது? இந்த 1 கோடி பிளானை எப்படிச் சரியாக ஆரம்பிப்பது? எல்லாவற்றையும் மிக எளிமையாக, நேரடியாகக் கற்றுக்கொள்ள ஒரு பிரத்யேக வாய்ப்பு இதோ! தலைப்பு: ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள் குறித்த ஆன்லைன் வகுப்பு (இது புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு வகுப்பாகும்) நாள்: மார்ச் 04, 2026, புதன் நேரம்: மாலை 07 மணி - இந்திய நேரம் பேச்சாளர்: ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர் 60 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் ஏதுமில்லை. முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-mar04-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar04_2026 (குறிப்பு: உங்கள் வாழ்க்கையின் அடுத்த 15 வருடங்களை நிம்மதியாக மாற்றப்போகும் மிக முக்கியமான 90 நிமிடங்கள் இது. இடங்கள் மிகவும் குறைவு, இப்போதே பதிவு செய்யுங்கள்!) 50+ வயதா? அசல் குறையாமல் மாதம் ₹28000 'பென்ஷன்' தரும் ₹50 லட்சத்துக்கான ஃபார்முலா!
ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது... இந்தப் போர் நான்கு - ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார். ட்ரம்ப் - நெதன்யாகு Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தந்துள்ள பேட்டியில், இதே கேள்விக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளதாவது... இது எல்லையில்லாத போராகச் செல்லாது. இது மிக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இந்தப் போர் சில நாள்கள் எடுக்கலாம்... ஆனால், ஆண்டுகளுக்கு தொடராது. ஆனால், இப்போது ஈரான் தீவிரமாக அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலையும் பதிலடியாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான' காமேனியின் மரணம்!
ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது... இந்தப் போர் நான்கு - ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார். ட்ரம்ப் - நெதன்யாகு Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தந்துள்ள பேட்டியில், இதே கேள்விக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளதாவது... இது எல்லையில்லாத போராகச் செல்லாது. இது மிக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இந்தப் போர் சில நாள்கள் எடுக்கலாம்... ஆனால், ஆண்டுகளுக்கு தொடராது. ஆனால், இப்போது ஈரான் தீவிரமாக அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலையும் பதிலடியாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான' காமேனியின் மரணம்!
'வன்முறையற்ற, சமூக பிளவுகளற்ற தமிழகத்தை உருவாக்குங்கள்' - தமிழக அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நாங்குநேரி கொலைகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மாரி செல்வராஜ் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் டேக் செய்திருக்கிறார். Loading…
விருகம்பாக்கத்தை கேட்கும் பிரேமலதா; திமுக MLA-வான மகனுக்காக எடப்பாடியை சந்தித்தாரா விக்கிரமராஜா?
சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் தந்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவருமான விக்கிரமராஜா, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வியாபாரிகளின் கோரிக்கைகளை மனுவாக அளித்திருப்பது அரசியல் ஏரியாவில் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பலம் பொருந்திய அமைப்பாக இருந்த போது மறைந்த த. வெள்ளையன், விக்கிரமராஜா இருவருமே அதன் நிர்வாகிகளாக இருந்தனர். அந்தக் காலத்தில், த. வெள்ளையன் அதிமுக அனுதாபியாக இருப்பதாக கருதிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, விக்கிரமராஜா வெள்ளையனிடமிருந்து பிரிந்து 'வணிகர் சங்கங்களின் பேரமைப்பு' என தனிச் சங்கத்தை உருவாக்கியதாகப் பேசப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 'கருணாநிதியே வியாபாரிகள் சங்கத்தை உடைத்தார்' என பகிரங்கமாகவே பேசியிருக்கும் காணொலிகளை இப்போதும் காணலாம். தனிச் சங்கம் கண்ட பிறகு தொடர்ந்து திமூக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு. ஏ.எம். விக்கிரமராஜா ஒவ்வொரு வருடமும் வணிகர் தினமான மே 5 ம் தேதி திமுகவைச் சேர்ந்தவர்களையே அழைத்து மாநாடுகள் நடத்தி வந்திருக்கிறார் விக்கிரமராஜா. இந்த நிலையில்தான் 2021 சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அவரது மகன் பிரபாகர் ராஜா. விக்கிரமராஜா என்றாலே திமுக சார்பு என்கிற ஒரு பார்வை இருக்கும் பட்சத்தில் தற்போது, அதுவும் தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்திருப்பதால் இந்தச் சந்திப்பு சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. 'இப்ப விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ வாக இருக்கிறவருக்கு திரும்பவும் திமுகவுல சீட் தருவாங்களானு தெரியலை. ஏன்னா விருகம்பாக்கம் தொகுதியை புதுசா கூட்டணிக்கு வந்திருக்கிற தேமுதிக கேக்கறதா சொல்றாங்க. விஜயகாந்த் வீடு இருக்கும் தொகுதிங்கிறதால் தொகுதி அவங்களுக்குப் போகவும் வாய்ப்பு இருக்கு. அதனால திமுக மேல விக்ரமராஜா குடும்பத்துக்கு அதிருப்தி. பிரபாகர் ராஜா வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு வியபாரிகள் மத்தியில நல்ல செல்வாக்கு இருக்குங்கிறதால, வியாபாரிகள் ஓட்டு தொடர்ந்து திமுகவுக்கு வேணுமா வேண்டாமானு நீங்களே முடிவு செய்துக்கோங்க'னு ஆளுங்கட்சிக்கு ஒரு அலெர்ட்னு இதைச் சொல்லலாம்' என இந்தச் சந்திப்பை வைத்த பலவாறு தகவல்கள் கிளம்ப, விக்ரமராஜாவையே தொடர்பு கொண்டு பேசினோம். ''தேர்தல் நேரம் வந்தா அரசியல் கட்சிகளின் தலைவர்களை வரிசையாப் போய்ச் சந்திக்கறது வியாபாரிகள் சங்கங்கள் ஆரம்பத்துல இருந்தே செய்து வர்ற ஒரு வழக்கம்தான். எங்களுக்கு இருக்கிற பிரச்னைகளைப் பட்டியலிட்டு அவங்ககிட்டத் தருகிற பட்சத்தில் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் அவற்றை இடம்பெறச் செய்வாங்கங்கிற நம்பிக்கைதான். அப்படி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றால் ஜெயிச்ச பிறகு அவங்ககிட்ட போய் 'சொன்னபடி செய்யுங்க'னு கேக்கலாமில்லையா, அதான். வணிகர் சங்கங்கள் இப்ப தனித்தனியாப் போய் எல்லாரையும் சந்திக்க வேண்டிய அவசியமில்ல. ஏன்னா ரெண்டு பெரிய கட்சிகளுடன் தான் மத்த எல்லாக் கட்சிகளும் கூட்டணியில இருக்காங்க. அதனால்தான் முதல்வரைச் சந்திச்சுட்டு அப்படியே எடப்பாடி பழனிசாமியையும் சந்திச்சோம். மத்தபடி இதுல எந்த அரசியலும் இல்லை. என் மகன் திமுக எம்.எல்.ஏ. வா இருக்கலாம். ஆனா எங்க சங்கத்துல சாதி, மத, அரசியல் வேறுபாடுகளுக்கு இடமே இல்லை. நாங்க எப்பவுமே வியாபாரிகள் கட்சிதான்'' என்கிறார் அவர். Loading…
விருகம்பாக்கத்தை கேட்கும் பிரேமலதா; திமுக MLA-வான மகனுக்காக எடப்பாடியை சந்தித்தாரா விக்கிரமராஜா?
சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் தந்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவருமான விக்கிரமராஜா, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வியாபாரிகளின் கோரிக்கைகளை மனுவாக அளித்திருப்பது அரசியல் ஏரியாவில் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பலம் பொருந்திய அமைப்பாக இருந்த போது மறைந்த த. வெள்ளையன், விக்கிரமராஜா இருவருமே அதன் நிர்வாகிகளாக இருந்தனர். அந்தக் காலத்தில், த. வெள்ளையன் அதிமுக அனுதாபியாக இருப்பதாக கருதிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, விக்கிரமராஜா வெள்ளையனிடமிருந்து பிரிந்து 'வணிகர் சங்கங்களின் பேரமைப்பு' என தனிச் சங்கத்தை உருவாக்கியதாகப் பேசப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 'கருணாநிதியே வியாபாரிகள் சங்கத்தை உடைத்தார்' என பகிரங்கமாகவே பேசியிருக்கும் காணொலிகளை இப்போதும் காணலாம். தனிச் சங்கம் கண்ட பிறகு தொடர்ந்து திமூக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு. ஏ.எம். விக்கிரமராஜா ஒவ்வொரு வருடமும் வணிகர் தினமான மே 5 ம் தேதி திமுகவைச் சேர்ந்தவர்களையே அழைத்து மாநாடுகள் நடத்தி வந்திருக்கிறார் விக்கிரமராஜா. இந்த நிலையில்தான் 2021 சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அவரது மகன் பிரபாகர் ராஜா. விக்கிரமராஜா என்றாலே திமுக சார்பு என்கிற ஒரு பார்வை இருக்கும் பட்சத்தில் தற்போது, அதுவும் தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்திருப்பதால் இந்தச் சந்திப்பு சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. 'இப்ப விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ வாக இருக்கிறவருக்கு திரும்பவும் திமுகவுல சீட் தருவாங்களானு தெரியலை. ஏன்னா விருகம்பாக்கம் தொகுதியை புதுசா கூட்டணிக்கு வந்திருக்கிற தேமுதிக கேக்கறதா சொல்றாங்க. விஜயகாந்த் வீடு இருக்கும் தொகுதிங்கிறதால் தொகுதி அவங்களுக்குப் போகவும் வாய்ப்பு இருக்கு. அதனால திமுக மேல விக்ரமராஜா குடும்பத்துக்கு அதிருப்தி. பிரபாகர் ராஜா வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு வியபாரிகள் மத்தியில நல்ல செல்வாக்கு இருக்குங்கிறதால, வியாபாரிகள் ஓட்டு தொடர்ந்து திமுகவுக்கு வேணுமா வேண்டாமானு நீங்களே முடிவு செய்துக்கோங்க'னு ஆளுங்கட்சிக்கு ஒரு அலெர்ட்னு இதைச் சொல்லலாம்' என இந்தச் சந்திப்பை வைத்த பலவாறு தகவல்கள் கிளம்ப, விக்ரமராஜாவையே தொடர்பு கொண்டு பேசினோம். ''தேர்தல் நேரம் வந்தா அரசியல் கட்சிகளின் தலைவர்களை வரிசையாப் போய்ச் சந்திக்கறது வியாபாரிகள் சங்கங்கள் ஆரம்பத்துல இருந்தே செய்து வர்ற ஒரு வழக்கம்தான். எங்களுக்கு இருக்கிற பிரச்னைகளைப் பட்டியலிட்டு அவங்ககிட்டத் தருகிற பட்சத்தில் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் அவற்றை இடம்பெறச் செய்வாங்கங்கிற நம்பிக்கைதான். அப்படி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றால் ஜெயிச்ச பிறகு அவங்ககிட்ட போய் 'சொன்னபடி செய்யுங்க'னு கேக்கலாமில்லையா, அதான். வணிகர் சங்கங்கள் இப்ப தனித்தனியாப் போய் எல்லாரையும் சந்திக்க வேண்டிய அவசியமில்ல. ஏன்னா ரெண்டு பெரிய கட்சிகளுடன் தான் மத்த எல்லாக் கட்சிகளும் கூட்டணியில இருக்காங்க. அதனால்தான் முதல்வரைச் சந்திச்சுட்டு அப்படியே எடப்பாடி பழனிசாமியையும் சந்திச்சோம். மத்தபடி இதுல எந்த அரசியலும் இல்லை. என் மகன் திமுக எம்.எல்.ஏ. வா இருக்கலாம். ஆனா எங்க சங்கத்துல சாதி, மத, அரசியல் வேறுபாடுகளுக்கு இடமே இல்லை. நாங்க எப்பவுமே வியாபாரிகள் கட்சிதான்'' என்கிறார் அவர். Loading…
ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இத்தாக்குதலுக்குத் தேவைக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திடீரென மூடிவிட்டது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும். காத்துக் கிடக்கும் 700 கப்பல்கள் தற்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு இருப்பதால் ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை கப்பலில் எடுத்துச்செல்ல முடியாது. தற்போது ஈரான் இந்த வழித்தடத்தை மூடிவிட்டது. தடையை மீறி ஏதாவது கப்பல் இந்த வழித்தடம் வழியாகச் சென்றால் கப்பலுக்குத் தீவைப்போம் என்று ஈரான் மிரட்டி இருக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியில் நூற்றுக்கணக்கான டேங்கர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தி இந்த வழித்தடத்தை ஈரான் அடியோடு மூடவில்லை. கடந்த ஒன்றாம் தேதி இந்த வழியாக மூன்று டேங்கர் கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. இரண்டாம் தேதி ஒரு டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பல் மட்டும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி இருக்கின்றன. ஈரானைச் சேராத எந்தக் கப்பலும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தவில்லை. சுமார் 706 டேங்கர் கப்பல்கள் நீரிணையைச் சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன. பாரசீக வளைகுடாப் பகுதியில் (Persian Gulf) மட்டும் 26 கப்பல்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்? ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகள் கடுமையான உயர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த காப்பீட்டுத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. முன்னணி கடல்சார் காப்பீட்டு நிறுவனங்கள், வளைகுடாப் பகுதிக்குள் நுழையும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. காப்பீடு கிடைக்கும் கப்பல்களுக்குக்கூட, காப்பீட்டு பிரீமியம் 50 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கப்பலின் மதிப்பில் 0.2% ஆக இருந்த கட்டணம் இப்போது 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாடகைக் கட்டணம் அதிகரிப்பு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் கப்பல்களின் வாடகைக் கட்டணமும் அதிகரித்து இருக்கிறது. கடக்கும் அபாயம் நேரடியாக போக்குவரத்துச் செலவுகளில் பிரதிபலிக்கிறது. பிரமாண்ட எண்ணெய் டேங்கர்களுக்கான தினசரி வாடகை 2 லட்சம் டாலரை நெருங்கியுள்ளது. இது 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும். பெரிய நிறுவனங்கள் அவசரகால போர் அபாயக் கூடுதல் கட்டணங்களை (War-risk surcharges) விதித்துள்ளன. ஒரு கன்டெய்னருக்கு 1500 முதல் 3800 டாலர் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வளைகுடாப் பகுதியைத் தவிர்க்க, கப்பல்கள் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகச் செல்லத் திட்டமிடுகின்றன. இதனால் பயண நேரம் 10 முதல் 14 நாட்கள் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் பெருமளவு உயரும். கச்சா எண்ணெய் 2 வாரத்திற்கு மட்டுமே எல்.பி.ஜி. கையிருப்பு வளைகுடா கச்சா எண்ணெய்யை மட்டும் பெரிதும் நம்பி இருக்கும் இந்தியா மற்றும் சீனா இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது குறித்தும், ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது. வரத்து குறைவது தொடரும்பட்சத்தில் எல்பிஜி வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா தனக்குத் தேவையான எல்பிஜியில் 80-85% இறக்குமதி செய்கிறது. அவை மொத்தமாக வளைகுடா உற்பத்தியாளர்களிடமிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. புதிய சரக்குகள் நிறுத்தப்பட்டால், தற்போதைய இருக்கும் கையிருப்பு இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லாதது உலகளவு: அமெரிக்கா வசூலித்த 135 பில்லியன் டாலர் - திருப்பிக் கொடுப்பாரா ட்ரம்ப்?
ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இத்தாக்குதலுக்குத் தேவைக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திடீரென மூடிவிட்டது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும். காத்துக் கிடக்கும் 700 கப்பல்கள் தற்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு இருப்பதால் ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை கப்பலில் எடுத்துச்செல்ல முடியாது. தற்போது ஈரான் இந்த வழித்தடத்தை மூடிவிட்டது. தடையை மீறி ஏதாவது கப்பல் இந்த வழித்தடம் வழியாகச் சென்றால் கப்பலுக்குத் தீவைப்போம் என்று ஈரான் மிரட்டி இருக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியில் நூற்றுக்கணக்கான டேங்கர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தி இந்த வழித்தடத்தை ஈரான் அடியோடு மூடவில்லை. கடந்த ஒன்றாம் தேதி இந்த வழியாக மூன்று டேங்கர் கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. இரண்டாம் தேதி ஒரு டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பல் மட்டும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி இருக்கின்றன. ஈரானைச் சேராத எந்தக் கப்பலும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தவில்லை. சுமார் 706 டேங்கர் கப்பல்கள் நீரிணையைச் சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன. பாரசீக வளைகுடாப் பகுதியில் (Persian Gulf) மட்டும் 26 கப்பல்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்? ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகள் கடுமையான உயர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த காப்பீட்டுத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. முன்னணி கடல்சார் காப்பீட்டு நிறுவனங்கள், வளைகுடாப் பகுதிக்குள் நுழையும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. காப்பீடு கிடைக்கும் கப்பல்களுக்குக்கூட, காப்பீட்டு பிரீமியம் 50 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கப்பலின் மதிப்பில் 0.2% ஆக இருந்த கட்டணம் இப்போது 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாடகைக் கட்டணம் அதிகரிப்பு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் கப்பல்களின் வாடகைக் கட்டணமும் அதிகரித்து இருக்கிறது. கடக்கும் அபாயம் நேரடியாக போக்குவரத்துச் செலவுகளில் பிரதிபலிக்கிறது. பிரமாண்ட எண்ணெய் டேங்கர்களுக்கான தினசரி வாடகை 2 லட்சம் டாலரை நெருங்கியுள்ளது. இது 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும். பெரிய நிறுவனங்கள் அவசரகால போர் அபாயக் கூடுதல் கட்டணங்களை (War-risk surcharges) விதித்துள்ளன. ஒரு கன்டெய்னருக்கு 1500 முதல் 3800 டாலர் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வளைகுடாப் பகுதியைத் தவிர்க்க, கப்பல்கள் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகச் செல்லத் திட்டமிடுகின்றன. இதனால் பயண நேரம் 10 முதல் 14 நாட்கள் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் பெருமளவு உயரும். கச்சா எண்ணெய் 2 வாரத்திற்கு மட்டுமே எல்.பி.ஜி. கையிருப்பு வளைகுடா கச்சா எண்ணெய்யை மட்டும் பெரிதும் நம்பி இருக்கும் இந்தியா மற்றும் சீனா இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது குறித்தும், ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது. வரத்து குறைவது தொடரும்பட்சத்தில் எல்பிஜி வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா தனக்குத் தேவையான எல்பிஜியில் 80-85% இறக்குமதி செய்கிறது. அவை மொத்தமாக வளைகுடா உற்பத்தியாளர்களிடமிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. புதிய சரக்குகள் நிறுத்தப்பட்டால், தற்போதைய இருக்கும் கையிருப்பு இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லாதது உலகளவு: அமெரிக்கா வசூலித்த 135 பில்லியன் டாலர் - திருப்பிக் கொடுப்பாரா ட்ரம்ப்?
விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! - உற்சாகம், அப்செட் - டெல்டா பரபர
விஜய் தஞ்சை விஜயம்! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறார். சமீபத்தில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பை முடிந்திருந்த நிலையில், வரும் மார்ச் 4-ம் தேதி தஞ்சை மாவட்டம் அய்யாசாமி படியில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தவுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வருமோ வராதோ என்ற குழப்பம் தொடங்கி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார் விஜய். விஜய் இந்த சூழலில் தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. நிர்வாகிகள் சந்திப்புக்கான அனுமதிகள் கோரப்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தஞ்சை த.வெ.க-வினர் முழு வீச்சில் செய்துவருகிறார்கள். விஜய் தஞ்சை வருகை ஒருபுறமிருக்க, அதற்கு அடுத்த தினம் தஞ்சை மகாராஜா மகாலில் அமைச்சர் அன்பில் மகேஸின் அக்கா மகள் திருமணம் நடைபெறவுள்ளது. அப்செட்டில் அன்பில் தர ப்பு? இந்த விவகாரம் குறித்து தஞ்சை திமுக வட்டாரத்தில் பேசியபோது, இந்த திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட திமுகவின் மொத்த அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் அனைவருமே வருவார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகளை அன்பில் தரப்பு தடபுடலாக நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், 4-ம் தேதி விஜய் தஞ்சை வருவதால் வரவேற்பு பேனர், கொடி தொடங்கி எந்த ஏற்பாடுகளையும் பெரும் பிரமாண்டமாக செய்ய முடியாத நிலை உள்ளது. திருமண அழைப்பிதழ் தேர்தல் நேரத்தில் தலைவர்கள் எங்கு சென்றாலும், நிர்வாகிகள் வரவேற்பு, மாவட்டம் முழுவதும் பேனர், கொடி அலங்கார வளைவுகள் என அமர்க்களம் செய்து விடுவார்கள். ஆனால், அன்பில் தரப்பு முதல்வர், துணை முதல்வர் என இருவரும் தங்களின் இல்ல விழாவுக்கு வருகை தந்தாலும், இன்னும் வரவேற்பு ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்ய முடியவில்லையாம். காரணம், கூட்டத்துக்கு வரும் த.வெ.க-வினர் அவற்றைச் சேதப்படுத்தக்கூடும், அல்லது, வைக்கப்பட்டிருக்கும் பேனர், கொடிகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்க கூடும். தேர்தல் நேரத்தில் தேவையில்லாத எந்த எதிர் விமர்சனங்களும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறது அன்பில் தரப்பு. விஜய் வந்து செல்லும் அதே 4-ம் தேதி மாலை நடைபெறவுள்ள நிச்சயதார்த்த ஏற்பாடுகளைக் கூட விஜய் வந்து சென்ற பிறகு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்களாம். என்றார்கள் விரிவாக.
விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! - உற்சாகம், அப்செட் - டெல்டா பரபர
விஜய் தஞ்சை விஜயம்! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறார். சமீபத்தில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பை முடிந்திருந்த நிலையில், வரும் மார்ச் 4-ம் தேதி தஞ்சை மாவட்டம் அய்யாசாமி படியில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தவுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வருமோ வராதோ என்ற குழப்பம் தொடங்கி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார் விஜய். விஜய் இந்த சூழலில் தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. நிர்வாகிகள் சந்திப்புக்கான அனுமதிகள் கோரப்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தஞ்சை த.வெ.க-வினர் முழு வீச்சில் செய்துவருகிறார்கள். விஜய் தஞ்சை வருகை ஒருபுறமிருக்க, அதற்கு அடுத்த தினம் தஞ்சை மகாராஜா மகாலில் அமைச்சர் அன்பில் மகேஸின் அக்கா மகள் திருமணம் நடைபெறவுள்ளது. அப்செட்டில் அன்பில் தர ப்பு? இந்த விவகாரம் குறித்து தஞ்சை திமுக வட்டாரத்தில் பேசியபோது, இந்த திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட திமுகவின் மொத்த அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் அனைவருமே வருவார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகளை அன்பில் தரப்பு தடபுடலாக நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், 4-ம் தேதி விஜய் தஞ்சை வருவதால் வரவேற்பு பேனர், கொடி தொடங்கி எந்த ஏற்பாடுகளையும் பெரும் பிரமாண்டமாக செய்ய முடியாத நிலை உள்ளது. திருமண அழைப்பிதழ் தேர்தல் நேரத்தில் தலைவர்கள் எங்கு சென்றாலும், நிர்வாகிகள் வரவேற்பு, மாவட்டம் முழுவதும் பேனர், கொடி அலங்கார வளைவுகள் என அமர்க்களம் செய்து விடுவார்கள். ஆனால், அன்பில் தரப்பு முதல்வர், துணை முதல்வர் என இருவரும் தங்களின் இல்ல விழாவுக்கு வருகை தந்தாலும், இன்னும் வரவேற்பு ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்ய முடியவில்லையாம். காரணம், கூட்டத்துக்கு வரும் த.வெ.க-வினர் அவற்றைச் சேதப்படுத்தக்கூடும், அல்லது, வைக்கப்பட்டிருக்கும் பேனர், கொடிகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்க கூடும். தேர்தல் நேரத்தில் தேவையில்லாத எந்த எதிர் விமர்சனங்களும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறது அன்பில் தரப்பு. விஜய் வந்து செல்லும் அதே 4-ம் தேதி மாலை நடைபெறவுள்ள நிச்சயதார்த்த ஏற்பாடுகளைக் கூட விஜய் வந்து சென்ற பிறகு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்களாம். என்றார்கள் விரிவாக.
``ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல - கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!
ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறது. இந்தப் போர் தொடங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் சென்றிருந்த பிரதமர் மோடி இஸ்ரேலையும், நெதன்யகுவையும் வானளாவப் புகழ்ந்திருந்தார். நேற்று நெதன்யாகு செய்தியாளர்களைச் சந்தித்தபோதுகூட , ``இந்தியா எங்கள் தரப்பில் இருப்பதற்கு நன்றி. பிரதமர் மோடி என் நெருங்கிய நண்பர் எனப் பேசியிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அயதுல்லா கமேனி உலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான்... அதில், ``மார்ச் 1-ம் தேதி இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, எந்த அறிவிப்பும் இல்லாமல் இறையாண்மைக் கொண்ட நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதும், பதவியில் இருக்கும் ஒரு நாட்டுத் தலைவரைக் கொல்வதும், அந்த நாட்டின் முழு சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அழிப்பதற்குச் சமம். இது ஐ.நா.சபையின் பிரிவு 2(4) விதிகளின் இதயத்தையே தாக்குவது போன்றது. உலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான் நாடுகள் ஓரளவிற்காவது கட்டுப்பட்டு நடக்கின்றன. ஒரு பெரிய தவறு நடக்கும்போது, இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு அதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தால், அந்தத் தவறு சரியானது (Normal) என்று ஆகிவிடும். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை உருவானால், சர்வதேச அளவில் ஒழுங்குமுறை கெட்டுப்போகும். இந்தக் கொலை நடப்பதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். காசாவில் நடக்கும் போரில் பல்லாயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதால் உலகமே இஸ்ரேல் மீது கோபத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில், பிரதமர் இஸ்ரேல் பிரதமரைச் சந்தித்தது, தனது முழு ஆதரவைத் தெரிவித்தது, இந்தியா எப்போதும் கடைப்பிடிக்கும் அமைதி மற்றும் மனிதநேயம் என்ற கொள்கைக்கு எதிராக இருக்கிறது. ட்ரம்ப் - நெதன்யாகு மோடியின் ஒருதலைபட்சம்: பிரதமர் மோடி அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலைப் புறக்கணித்துவிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஈரான் நடத்திய பழிவாங்கும் தாக்குதலை மட்டும் கண்டித்தது ஒருதலைப்பட்சமானது. உலக வரைபடத்தில் தெற்குப் பகுதியில் உள்ள வளரும் நாடுகள் (Global South), மற்றும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இந்தியாவுடன் இருக்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால், இந்தியா மட்டும் இந்தப் படுகொலை குறித்து மௌனமான போக்கைக் கடைப்பிடிப்பது, நமது நீண்டகால நண்பர்களிடமிருந்து நாம் விலகிச் செல்வதைக் காட்டுகிறது. 'இந்தியாவுக்கு தார்மீகத் தெளிவு இல்லை. எது சரி, எது தவறு என்று சொல்வதில் குழப்பம் இருக்கிறது' என்று மற்ற நாடுகள் நினைக்கக்கூடும். ஒரு பெரிய தவறு நடக்கும்போது நாம் அதை எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அந்தத் தவறை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். இது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். காங்கிரஸின் நிலைபாடு: இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது. ஈரானுக்குள் புகுந்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளையும், திட்டமிட்ட படுகொலைகளையும் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற செயல்கள் ஒரு சிறிய போரை உலகப் போராக மாற்றும் ஆபத்து கொண்டவை. எனவே, இந்த விவகாரத்தில் ஈரானின் தலைவர் அயதுல்லா கமேனி மறைவுக்கு இரங்கள் தெரிவித்துகொள்கிறோம். brics brazil 2025 இந்தியா உலக அரங்கில் இன்றுவரை மதிக்கப்படுவதற்கு மூன்று முக்கிய கொள்கைகளே காரணம். எல்லா நாடுகளுக்கும் சமமான மரியாதை உண்டு என்ற இறையாண்மை சமத்துவம், ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கை வரையறை. எந்தப் பிரச்சனையையும் போர் மூலம் அல்லாமல் பேச்சின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு. ஆனால், இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது இந்தியா அமைதியாக இருப்பது, நம்முடைய இந்த அடிப்படைக் கொள்கைகளையே நாம் கைவிடுவது போல இல்லையா? வாஜ்பாய் உதாரணம்: தற்போதைய பாஜக அரசுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நடவடிக்கையே உதாரணம். 2001-ல் வாஜ்பாய் ஈரானுக்கு சென்று, இந்தியாவும் ஈரானும் வரலாற்று ரீதியாக எவ்வளவு நெருக்கமான நண்பர்கள் என்பதை உறுதிப்படுத்தினார். அன்று உங்கள் வாஜ்பாய் மதித்த அந்த நீண்டகால நட்பை, இன்று அதே கட்சியைச் சேர்ந்த தற்போதைய அரசு ஏன் மதிக்கத் தவறிவிட்டது? மோடி - சோனியா காந்தி இந்தியா தன்னை 'உலகத் தெற்கு' (Global South - வளரும் நாடுகள்) நாடுகளின் தலைவராகக் கருதுகிறது. இன்று ஒரு நாடு அநியாயமாகத் தாக்கப்படும்போது, கொள்கைக்காக இந்தியா குரல் கொடுக்கத் தயங்கினால், நாளை இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை வரும்போது மற்ற நாடுகள் எப்படி இந்தியாவை ஆதரிப்பார்கள்? இன்றைய மௌனம், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் நம்பகத்தன்மையை (Credibility) அழித்துவிடும். எனவே, இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க வேண்டும். இந்தப் போர் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம். எனவே, நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்தே ஆக வேண்டும். அமைதி, அகிம்சை, நீதி உலகமே ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பது வெறும் மேடைப் பேச்சிற்கான முழக்கம் கிடையாது. நீதி மற்றும் அமைதிக்காகக் குரல் கொடுப்பது கடினமாக இருந்தாலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளை எதிர்க்க வேண்டி இருந்தாலும், இந்தியா தனது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா வெறும் தெற்காசியாவின் பெரிய அண்ணனாக மட்டும் இருக்க விரும்பவில்லை; மாறாக உலகிற்கே ஒரு மனசாட்சிக் காவலராக இருக்கவே நீண்டகாலமாக முயன்று வருகிறது. அமைதி, அகிம்சை மற்றும் நீதிக்காக இந்தியா எப்போதும் பேசும் என்ற நம்பிக்கை உலக நாடுகளுக்கு உண்டு. அந்த மரியாதையையும் அந்தஸ்தையும் நாம் தக்கவைக்க வேண்டுமென்றால், இப்போது நடக்கும் அநீதிக்கு எதிராகத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை இந்தியா அறிவிக்க வேண்டும். ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பார்வை!
``ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல - கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!
ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறது. இந்தப் போர் தொடங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் சென்றிருந்த பிரதமர் மோடி இஸ்ரேலையும், நெதன்யகுவையும் வானளாவப் புகழ்ந்திருந்தார். நேற்று நெதன்யாகு செய்தியாளர்களைச் சந்தித்தபோதுகூட , ``இந்தியா எங்கள் தரப்பில் இருப்பதற்கு நன்றி. பிரதமர் மோடி என் நெருங்கிய நண்பர் எனப் பேசியிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அயதுல்லா கமேனி உலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான்... அதில், ``மார்ச் 1-ம் தேதி இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, எந்த அறிவிப்பும் இல்லாமல் இறையாண்மைக் கொண்ட நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதும், பதவியில் இருக்கும் ஒரு நாட்டுத் தலைவரைக் கொல்வதும், அந்த நாட்டின் முழு சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அழிப்பதற்குச் சமம். இது ஐ.நா.சபையின் பிரிவு 2(4) விதிகளின் இதயத்தையே தாக்குவது போன்றது. உலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான் நாடுகள் ஓரளவிற்காவது கட்டுப்பட்டு நடக்கின்றன. ஒரு பெரிய தவறு நடக்கும்போது, இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு அதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தால், அந்தத் தவறு சரியானது (Normal) என்று ஆகிவிடும். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை உருவானால், சர்வதேச அளவில் ஒழுங்குமுறை கெட்டுப்போகும். இந்தக் கொலை நடப்பதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். காசாவில் நடக்கும் போரில் பல்லாயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதால் உலகமே இஸ்ரேல் மீது கோபத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில், பிரதமர் இஸ்ரேல் பிரதமரைச் சந்தித்தது, தனது முழு ஆதரவைத் தெரிவித்தது, இந்தியா எப்போதும் கடைப்பிடிக்கும் அமைதி மற்றும் மனிதநேயம் என்ற கொள்கைக்கு எதிராக இருக்கிறது. ட்ரம்ப் - நெதன்யாகு மோடியின் ஒருதலைபட்சம்: பிரதமர் மோடி அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலைப் புறக்கணித்துவிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஈரான் நடத்திய பழிவாங்கும் தாக்குதலை மட்டும் கண்டித்தது ஒருதலைப்பட்சமானது. உலக வரைபடத்தில் தெற்குப் பகுதியில் உள்ள வளரும் நாடுகள் (Global South), மற்றும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இந்தியாவுடன் இருக்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால், இந்தியா மட்டும் இந்தப் படுகொலை குறித்து மௌனமான போக்கைக் கடைப்பிடிப்பது, நமது நீண்டகால நண்பர்களிடமிருந்து நாம் விலகிச் செல்வதைக் காட்டுகிறது. 'இந்தியாவுக்கு தார்மீகத் தெளிவு இல்லை. எது சரி, எது தவறு என்று சொல்வதில் குழப்பம் இருக்கிறது' என்று மற்ற நாடுகள் நினைக்கக்கூடும். ஒரு பெரிய தவறு நடக்கும்போது நாம் அதை எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அந்தத் தவறை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். இது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். காங்கிரஸின் நிலைபாடு: இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது. ஈரானுக்குள் புகுந்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளையும், திட்டமிட்ட படுகொலைகளையும் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற செயல்கள் ஒரு சிறிய போரை உலகப் போராக மாற்றும் ஆபத்து கொண்டவை. எனவே, இந்த விவகாரத்தில் ஈரானின் தலைவர் அயதுல்லா கமேனி மறைவுக்கு இரங்கள் தெரிவித்துகொள்கிறோம். brics brazil 2025 இந்தியா உலக அரங்கில் இன்றுவரை மதிக்கப்படுவதற்கு மூன்று முக்கிய கொள்கைகளே காரணம். எல்லா நாடுகளுக்கும் சமமான மரியாதை உண்டு என்ற இறையாண்மை சமத்துவம், ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கை வரையறை. எந்தப் பிரச்சனையையும் போர் மூலம் அல்லாமல் பேச்சின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு. ஆனால், இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது இந்தியா அமைதியாக இருப்பது, நம்முடைய இந்த அடிப்படைக் கொள்கைகளையே நாம் கைவிடுவது போல இல்லையா? வாஜ்பாய் உதாரணம்: தற்போதைய பாஜக அரசுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நடவடிக்கையே உதாரணம். 2001-ல் வாஜ்பாய் ஈரானுக்கு சென்று, இந்தியாவும் ஈரானும் வரலாற்று ரீதியாக எவ்வளவு நெருக்கமான நண்பர்கள் என்பதை உறுதிப்படுத்தினார். அன்று உங்கள் வாஜ்பாய் மதித்த அந்த நீண்டகால நட்பை, இன்று அதே கட்சியைச் சேர்ந்த தற்போதைய அரசு ஏன் மதிக்கத் தவறிவிட்டது? மோடி - சோனியா காந்தி இந்தியா தன்னை 'உலகத் தெற்கு' (Global South - வளரும் நாடுகள்) நாடுகளின் தலைவராகக் கருதுகிறது. இன்று ஒரு நாடு அநியாயமாகத் தாக்கப்படும்போது, கொள்கைக்காக இந்தியா குரல் கொடுக்கத் தயங்கினால், நாளை இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை வரும்போது மற்ற நாடுகள் எப்படி இந்தியாவை ஆதரிப்பார்கள்? இன்றைய மௌனம், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் நம்பகத்தன்மையை (Credibility) அழித்துவிடும். எனவே, இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க வேண்டும். இந்தப் போர் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம். எனவே, நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்தே ஆக வேண்டும். அமைதி, அகிம்சை, நீதி உலகமே ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பது வெறும் மேடைப் பேச்சிற்கான முழக்கம் கிடையாது. நீதி மற்றும் அமைதிக்காகக் குரல் கொடுப்பது கடினமாக இருந்தாலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளை எதிர்க்க வேண்டி இருந்தாலும், இந்தியா தனது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா வெறும் தெற்காசியாவின் பெரிய அண்ணனாக மட்டும் இருக்க விரும்பவில்லை; மாறாக உலகிற்கே ஒரு மனசாட்சிக் காவலராக இருக்கவே நீண்டகாலமாக முயன்று வருகிறது. அமைதி, அகிம்சை மற்றும் நீதிக்காக இந்தியா எப்போதும் பேசும் என்ற நம்பிக்கை உலக நாடுகளுக்கு உண்டு. அந்த மரியாதையையும் அந்தஸ்தையும் நாம் தக்கவைக்க வேண்டுமென்றால், இப்போது நடக்கும் அநீதிக்கு எதிராகத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை இந்தியா அறிவிக்க வேண்டும். ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பார்வை!
அமைச்சர் நேரு மீது FIR பதிவு செய்யாத வழக்கு - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும், வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், வழக்குப் பதிவு செய்யக்கோரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார். இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
`` ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..! - சீமான் எச்சரிக்கை
இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிகை விடுத்திருக்கிறார். வெட்கக்கேடானது! இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக 'கேரளா ஸ்டோரி-2' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடிய நிலையில், தற்போது ‘கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தையும் திமுக அரசு தமிழ்நாடு முழுதும் திரையிட அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது. தி கேரளா ஸ்டோரி 2 சினிமா எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. உலகம் முழுவதும் அவரவருக்கென்று ஒரு மதக் கோட்பாடு இருக்கிறது. ஒரு நாட்டிற்குள்ளேயே பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அவை அனைத்தையும் நாம் ஏற்கின்றோம், மதிக்கின்றோம். மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். அதில் தலையிடவோ, இழிவுப்படுத்தவோ அரசு உட்பட எவருக்கும் உரிமையில்லை. ‘உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழி விடு’ என்பது தான் நாம் ஏற்க வேண்டிய மாந்தநேய கோட்பாடு. மாறாக இந்நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழும் இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை தவறாகக் காட்டி வெறுப்பு நஞ்சினை விதைப்பதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அவர்கள் எதைச் சாதிப்பார்கள்? சாதியும், மதயும் எப்படி ஒரு நாட்டில் அரசியலாகும்?. பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால், ஒழுக்கமும், பண்பாடும் இருக்காது. அதேபோன்று சாதி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால் அந்த நாட்டில் மனிதம் என்பதே மரித்துபோய், மக்களுக்கானசேவை என்பதே இல்லாமல் போகும். நாட்டின் குடிகளுக்குள் பகை ஏற்பட்டால் தீர்த்து வைத்து, சமாதானம் ஏற்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களே, சாதி, மதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் எதைச் சாதிப்பார்கள்? மதத்தைப் பார்ப்பவர்கள் மனிதத்தை எப்படிப் பார்ப்பார்கள்? படிக்கத் தரமான கல்வி இல்லை, குடிக்கத் தூய குடிநீர் இல்லை, தலைநகரிலேயே தூய காற்று இல்லை. அனைத்து இயற்கை வளங்களையும் சுரண்டி தின்றுவிட்டு அதுபற்றியெல்லாம் எந்தக் கேள்வியும் எழுந்துவிடாது, மக்களின் கண்ணை மறைப்பதற்காகவே, தொடர்ச்சியாகச் சாதிப்போதை, மதப்போதை, சாராயப்போதை, இதைப்போன்று திரைபோதையும் பின்புலத்திலிருந்து ஆட்சியாளர்களால் மக்களுக்குள் ஏற்றப்படுகிறது. மதப்பிரிவினையை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பாஜக ஆளும் மாநில அரசுகள் வரி தள்ளுபடி செய்து ஊக்கப்படுத்துவதும், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் அதியுயர் அமைச்சர்களே ஆதரித்து விளம்பரம் செய்வதும், விருது கொடுப்பதும் நாட்டின் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் சிதைக்கவே வழிவகுக்கும். தி கேரளா ஸ்டோரி 2 சினிமா பாஜக அரசு இந்தியா முழுக்கத் தடை செய்தது ஏன்? இசுலாமிய பெருமக்களை இழிவுப்படுத்தும் வழக்கமான குற்றக்காட்சிகளையும் தாண்டி, ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் கட்டாய மதமாற்றம், லவ்ஜிகாத், கூட்டுப்பாலியல், மாட்டுக்கறி திணிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் இசுலாமிய மத அடையாளங்களை இணைத்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. * இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்காதவற்றைக் குரூர கற்பனையில் திரைப்படமாக எடுப்பவர்களின் நோக்கம்தான் என்ன? அதே போன்று நிகழ்வுகள் நடந்து நாட்டில் மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்பதா? நடக்காதவற்றைத் திரைப்படமாக எடுப்பவர்களுக்கு, நம் கண்முன்னே நடைபெற்ற மணிப்பூர் கலவரத்தையும், குஜராத் கலவரத்தையும் திரைப்படமாக எடுக்கும் துணிச்சல் உண்டா? குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தைப் பிபிசி நிறுவனம் எடுத்தபோது அதைத் திரையிட பாஜக அரசு இந்தியா முழுக்கத் தடை செய்தது ஏன்? * ஆட்சியாளர்களின் சூழ்ச்சி.! 'காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘புர்கா’ ‘கேரளா ஸ்டோரி1’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படமும் இஸ்லாமிய மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் திட்டமிட்டு இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இது மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் உள்நோக்கமுடையது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மத மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளி கூண்டில் ஏற்றும் காட்சிப்படுத்தல்கள் மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியவை. படைப்புச்சுதந்திரத்தைவிட முக்கியமானது இந்த நாட்டு மக்களின் உணர்வும், உரிமையும், ஒற்றுமையும், ஒருமைப்பாடுமாகும். அதைச் சீர்குலைக்கும் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கலை மனங்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மனிதர்களைத் துண்டாடுவதாக இருக்கக்கூடாது. இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த கடந்த 12 ஆண்டுகளில் இசுலாமியர்களையும், இசுலாமிய மார்க்கத்தையும் இழிவுப்படுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவருவது எதேச்சையானதல்ல. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சியாகவே தோன்றுகிறது. சீமான் கிறிஸ்தவ மக்களை இழிவுப்படுத்துவது ஏன்? இந்த அளவிற்கு மதவெறுப்பையும், மனித வெறுப்பையும் கடைபிடிக்கும் எவரும் கிறித்துவ, இசுலாமிய நாடுகளோடு தொழில், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளைத் துண்டிக்க வேண்டுமென்று இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவார்களா? உலகம் முழுவதும் சுற்றிவந்து ஒவ்வொரு கிறித்துவ, இசுலாமிய நாடாக ஓடோடிச் சென்று நட்பு பாராட்டும் நாட்டின் பிரதமர் மோடி அவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவார்களா? மோடி அரசு இசுலாமிய நாடுகளுக்கு மாட்டுக்கறியை ஏற்றமதிசெய்து, எரிபொருளை இறக்குமதி செய்வதை எதிர்த்து என்றைக்காவது போராட்டம் நடத்தியதுண்டா? இசுலாமிய – கிறித்துவ நாடுகளுடன் வணிகம், தொழில், இராணுவம் என்று ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இங்கு வாழும் இசுலாமிய, கிறிஸ்தவ மக்களை இழிவுப்படுத்துவது ஏன்? திமுக அரசு அனுமதிப்பது ஏன்? 'கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைத் திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்று திமுக அரசிற்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா? இல்லையா? அதன்பிறகும் ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைக் காவல்துறை பாதுகாப்புடன் வெளியிட அனுமதித்திருப்பது ஏன்? தமிழ்நாட்டை உண்மையிலேயே ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா?. இசுலாத்தையும், இசுலாமிய பெருமக்களையும் இழிவுப்படுத்தும் ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தை தடை செய்யக் கேரள மாநில அரசு நீதிமன்றம்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தும் நிலையில், அத்திரைப்படத்தைக் காவல்துறை பாதுகாப்புடன் தமிழ்நாடு முழுதும் திரையிட திமுக அரசு அனுமதிப்பது ஏன்? இது குறித்து, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள இசுலாமிய அமைப்புகள் இதுவரை வாய்த் திறவாமல் கள்ள அமைதிகாப்பது ஏன்? ஓரிரு சட்டமன்ற இடங்களுக்காக ஒட்டுமொத்த இசுலாமிய மக்களின் உரிமையையும் அடகு வைத்துவிட்டீர்களா? கிறித்துவ மதக் கோட்பாட்டை இழிவுப்படுத்திய டாவின்சி கோட் திரைப்படத்தை ஐயா கருணாநிதி அவர்களும், இசுலாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்த விசுவரூபம் திரைப்படத்தை அம்மையார் ஜெயலலிதா அவர்களும் தமிழ்நாட்டில் திரையிட தடைவிதித்த வரலாற்றைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தி கேரளா ஸ்டோரி தடுத்து நிறுத்த வேண்டும் ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்துத் தமிழ்நாடு அரசு ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதையும் மீறி இத்திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு திரையிட அனுமதித்தால், எப்படி ‘கேரளா ஸ்டோரி1’ திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி போராடி தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தியதோ, அப்படி ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுத் திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு, நாங்கள் வைக்கும் வேண்டுகோள் மதக்கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தைத் தங்கள் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். என் அன்புச்சொந்தங்கள் குறிப்பாக நாம் தமிழர் கட்சி உறவுகள் இத்திரைப்படத்தை முற்று முழுதாகப் புறக்கணிப்பதோடு, திரைப்படம் திரையிடப்படாமல் பெருந்திரளாகத் திரண்டு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறேன் என்று சீமான் பதிவிட்டிருக்கிறார்.
திருவாரூரில் போட்டியிடும் உதயநிதி? | DMK, ADMK, TVK யார் யாருக்கு சீட்டு? |TN Elections 360 updates
திருவாரூரில் போட்டியிடும் உதயநிதி? | DMK, ADMK, TVK யார் யாருக்கு சீட்டு? |TN Elections 360 updates
`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' - ராகுலை சரிகட்டிய கார்கே? - ப.சிதம்பரம் போடும் `2028'கணக்கு!
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற தகவல் கூட கசிகிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கு பிரதான காரணமாக இருப்பது தொகுதி எண்ணிக்கையே. இதை சரிகட்டவே இப்போது இரண்டு தரப்பிலும் வேகமாக பேச்சுக்கள் நடக்கிறது. எண்ணிக்கையை காரணம் காட்டி கூட்டணியை உடைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பு ராகுலுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளனர். ராகுல் காந்தி இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் கூட்டணி விசயங்களை கார்க்கே பார்த்துக்கொள்ளட்டும் என ராகுல் முடிவெடுத்துள்ளார். சோனியா, கார்க்கே இவர்களுடன் இப்போது சிதம்பரம் ஆகியோர் கூட்டணியை இறுதி செய்யும் வகையில் காய் நகர்த்தி வருகிறார்கள். 39 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கறார் காட்டி வந்த நிலையில், தற்போது 31 இடங்களை வாங்கிக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் தற்போது ரெடி செய்ய உள்ள லிஸ்டில் 31 தொகுதிகளே இருக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர். அதே நேரம் ராகுல் காந்தி 36 இடங்களை கேளுங்கள் என்று சொல்லியதற்கு, எண்ணிக்கையில் கறார் காட்ட வேண்டாம் என கார்க்கே சொல்லியுள்ளாராம். சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி? மற்றொருபுறம், தி.மு.க தரப்பில் 25 தொகுதிகள் என்கிற எண்ணிக்கையை சற்று அதிகரிக்கும் மூடில் உள்ளார்கள். அதவாது 27 அல்லது 28 சட்டமன்ற தொகுதிகளை இறுதி செய்யலாம் என தி.மு.க முடிவெடுத்துள்ளது. அதே போல் ராஜ்யசபாவில் ஒரு இடத்தையும் ஒதுக்க முன்வந்துள்ளார்கள். இன்று மாலைக்குள் இதை இறுதி செய்ய வேண்டும் என சிதம்பரத்திடம் கறாராக சொல்லியுள்ளார் ஸ்டாலின். ஸ்டாலின் - சிதம்பரம் காங்கிரஸ் தரப்பில் எம்.எல்.ஏ சீட்டை குறைத்துக்கொண்டு ராஜ்யசபாவில் மேலும் இடத்தை கேட்கலாம். 2028-ல் சிதம்பரம் உள்ளிட்ட சிலரின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. அப்போது, ஒரு இடத்தை தி.மு.க விட்டு தரட்டும் என்று சொல்லியுள்ளார்கள். அதையும் சிதம்பரம் நாசூக்காக தி.மு.க விடம் சொல்லியுள்ளார். சிதம்பரம் நகர்த்திய இந்த அரசியல் நகர்வு தான் இறுதியில் காங்கிரஸ் - தி.மு.க இடையே இணக்கத்திற்கு காரணமாக இருக்கபோகிறது என்றே தெரிகிறது.! Loading…
`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' - ராகுலை சரிகட்டிய கார்கே? - ப.சிதம்பரம் போடும் `2028'கணக்கு!
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற தகவல் கூட கசிகிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கு பிரதான காரணமாக இருப்பது தொகுதி எண்ணிக்கையே. இதை சரிகட்டவே இப்போது இரண்டு தரப்பிலும் வேகமாக பேச்சுக்கள் நடக்கிறது. எண்ணிக்கையை காரணம் காட்டி கூட்டணியை உடைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பு ராகுலுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளனர். ராகுல் காந்தி இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் கூட்டணி விசயங்களை கார்க்கே பார்த்துக்கொள்ளட்டும் என ராகுல் முடிவெடுத்துள்ளார். சோனியா, கார்க்கே இவர்களுடன் இப்போது சிதம்பரம் ஆகியோர் கூட்டணியை இறுதி செய்யும் வகையில் காய் நகர்த்தி வருகிறார்கள். 39 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கறார் காட்டி வந்த நிலையில், தற்போது 31 இடங்களை வாங்கிக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் தற்போது ரெடி செய்ய உள்ள லிஸ்டில் 31 தொகுதிகளே இருக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர். அதே நேரம் ராகுல் காந்தி 36 இடங்களை கேளுங்கள் என்று சொல்லியதற்கு, எண்ணிக்கையில் கறார் காட்ட வேண்டாம் என கார்க்கே சொல்லியுள்ளாராம். சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி? மற்றொருபுறம், தி.மு.க தரப்பில் 25 தொகுதிகள் என்கிற எண்ணிக்கையை சற்று அதிகரிக்கும் மூடில் உள்ளார்கள். அதவாது 27 அல்லது 28 சட்டமன்ற தொகுதிகளை இறுதி செய்யலாம் என தி.மு.க முடிவெடுத்துள்ளது. அதே போல் ராஜ்யசபாவில் ஒரு இடத்தையும் ஒதுக்க முன்வந்துள்ளார்கள். இன்று மாலைக்குள் இதை இறுதி செய்ய வேண்டும் என சிதம்பரத்திடம் கறாராக சொல்லியுள்ளார் ஸ்டாலின். ஸ்டாலின் - சிதம்பரம் காங்கிரஸ் தரப்பில் எம்.எல்.ஏ சீட்டை குறைத்துக்கொண்டு ராஜ்யசபாவில் மேலும் இடத்தை கேட்கலாம். 2028-ல் சிதம்பரம் உள்ளிட்ட சிலரின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. அப்போது, ஒரு இடத்தை தி.மு.க விட்டு தரட்டும் என்று சொல்லியுள்ளார்கள். அதையும் சிதம்பரம் நாசூக்காக தி.மு.க விடம் சொல்லியுள்ளார். சிதம்பரம் நகர்த்திய இந்த அரசியல் நகர்வு தான் இறுதியில் காங்கிரஸ் - தி.மு.க இடையே இணக்கத்திற்கு காரணமாக இருக்கபோகிறது என்றே தெரிகிறது.! Loading…
'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை
திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வரும் நிலையில் ப.சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் முதல்வரை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணிக்கு ECR இல் மகளின் நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில் இன்னமும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவிப்பில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் செல்வபெருந்தகை. திமுக - காங் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு முடிவை நோக்கி க்ளைமாக்ஸை எட்டிக் கொண்டிருக்கிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்று மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை கூறுமாறு காங்கிரஸூக்கு திமுக கெடு விதித்திருந்தது. திமுக காங்கிரஸூக்கு 27-28 சீட்கள் வரை கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால், காங்கிரஸின் டெல்லி தலைமை 39 சீட்கள் வரையும் எதிர்பார்க்கிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுக்காமலே உள்ளது. திமுக உடனான கூட்டணி குறித்து காங்கிரஸின் உள்ளாகவே இரண்டுவிதமான கருத்துகள் நிலவி வருகிறது. செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் போன்றோர் திமுக உடன் கூட்டணி செல்லவே விரும்புகின்றனர். இந்நிலையில்தான், திமுக விதித்த கெடு நாளான இன்று காலை 11:40 மணியளவில் சிதம்பரத்தின் வீட்டில் செல்வப்பெருந்தகையும் அவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். ப.சிதம்பரம் முதல்வரை சந்திக்க மதியம் 12:30 மணிக்கு அப்பாய்ண்மெண்டும் வாங்கப்பட்டிருந்தது. 12:25 மணியளவில் ஆலோசனையை முடித்துவிட்டு சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் சித்தரஞ்சன் சாலைக்கு கிளம்பினர். 12:40 மணிக்கு முதல்வரின் வீட்டை அடைந்த இருவரும் அரைமணி நேரத்துக்கும் மேலாக முதல்வருடன் ஆலோசித்து வருகின்றனர். சித்தரஞ்சன் சாலை செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் ECR இல் ஒரு மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் நடக்கவிருக்கிறது. மகளின் நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் 2 மணி நேரமே இருக்கும் நிலையில் செல்வப்பெருந்தகை அங்குமிங்கும் அலைந்து திமுக - காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார். Loading…
'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை
திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வரும் நிலையில் ப.சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் முதல்வரை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணிக்கு ECR இல் மகளின் நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில் இன்னமும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவிப்பில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் செல்வபெருந்தகை. திமுக - காங் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு முடிவை நோக்கி க்ளைமாக்ஸை எட்டிக் கொண்டிருக்கிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்று மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை கூறுமாறு காங்கிரஸூக்கு திமுக கெடு விதித்திருந்தது. திமுக காங்கிரஸூக்கு 27-28 சீட்கள் வரை கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால், காங்கிரஸின் டெல்லி தலைமை 39 சீட்கள் வரையும் எதிர்பார்க்கிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுக்காமலே உள்ளது. திமுக உடனான கூட்டணி குறித்து காங்கிரஸின் உள்ளாகவே இரண்டுவிதமான கருத்துகள் நிலவி வருகிறது. செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் போன்றோர் திமுக உடன் கூட்டணி செல்லவே விரும்புகின்றனர். இந்நிலையில்தான், திமுக விதித்த கெடு நாளான இன்று காலை 11:40 மணியளவில் சிதம்பரத்தின் வீட்டில் செல்வப்பெருந்தகையும் அவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். ப.சிதம்பரம் முதல்வரை சந்திக்க மதியம் 12:30 மணிக்கு அப்பாய்ண்மெண்டும் வாங்கப்பட்டிருந்தது. 12:25 மணியளவில் ஆலோசனையை முடித்துவிட்டு சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் சித்தரஞ்சன் சாலைக்கு கிளம்பினர். 12:40 மணிக்கு முதல்வரின் வீட்டை அடைந்த இருவரும் அரைமணி நேரத்துக்கும் மேலாக முதல்வருடன் ஆலோசித்து வருகின்றனர். சித்தரஞ்சன் சாலை செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் ECR இல் ஒரு மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் நடக்கவிருக்கிறது. மகளின் நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் 2 மணி நேரமே இருக்கும் நிலையில் செல்வப்பெருந்தகை அங்குமிங்கும் அலைந்து திமுக - காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார். Loading…
லாரி லாரியாக இறங்கும் டிரம்கள் - கோவை தொண்டாமுத்தூரில் அடுத்த பரிசை இறக்கிய வேலுமணி!
கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. கோவையில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. கோவையில் அதிமுகவின் வெற்றியை வேலுமணி தன்னுடைய கௌரவ பிரச்னையாகவே பார்க்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் வேலுமணி தான் சிறை செல்வார் என 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் மு.க ஸ்டாலின் கூறினார். அந்தளவுக்கு கோவையில் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு பல்வேறு வியூகங்களை திமுக வகுத்தது. அது கைக் கொடுக்காததால் செந்தில் பாலாஜியை கோவை திமுக பொறுப்பாளராக களமிறக்கியது. உள்ளாட்சி தேர்தலில் பரிசு மழைகளை இறக்கி அவர் திமுகவுக்கு வெற்றியை தேடி தந்தார். கோவை அதிமுக பரிசு பொருள்கள் சட்டமன்ற தேர்தலிலும் செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வந்த நிலையில், வேலுமணி அவரை ஓவர்டேக் செய்து களத்தில் வேகம் காட்டி வருகிறார். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக பரிசுகளை இறக்கியது. தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் வேட்டி, சட்டை, சேலை, ஹாட் பாக்ஸ், ஃபிளாஷ்க், குடை, தட்டு உள்ளிட்ட பொருள்களை பரிசாக வழங்கினார். அந்தப் பொருள்கள் கொடுத்த சில நாள்களிலேயே தொண்டாமுத்தூர் தொகுதியில் மேலும் சில பரிசுகளை கொடுத்து வேலுமணி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். டிரம் தொண்டாமுத்தூர் மக்களுக்கு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டிரம்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வேலுமணியின் இந்த நகர்வு திமுக மற்றும் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசியபோது, “தொண்டாமுத்தூர் தொகுதியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தில் சுமார் 25,000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மட்டும் தான் டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக லாரிகள் மூலமாக டிரம்கள் கொண்டு வரப்படுகின்றன. லாரி லாரியாக டிரம் அந்தந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து காலை 6-8 மணிக்குள் டிரம்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பட்டியலின மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்தில் தான் டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் பல சர்ப்ரைஸ் பரிசுகள் இறங்க வாய்ப்புள்ளது” என்றனர். Loading…
சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்'மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?
காங்கிரஸ் - தி.மு.க இடையே நிலவி வந்த சிக்கலுக்கு, சிதம்பரம் வழியாக முடிவு எடுக்கபட்டுவிட்டது என்கிற தகவலை காங்கிரஸ் வட்டாரத்தினர் சிலர் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டாலினுக்கு தான் சொல்லி விரும்பிய மெசேஜை சிதம்பரம் மூலம் சொல்லியிருக்கிறார் சோனியா என்கிறார்கள் அவர்கள். டெல்லியில் நேற்று இரவு சோனியாவின் இல்லத்தில் கார்கே, ராகுல், சோனியா, வேணுகோபால் உள்ளிட்டவர்கள் தமிழக காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் நிலவும் குழப்பான சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்துள்ளார்கள். இந்த ஆலோசனைக்கு முன்பாக தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தி.மு.க நம்மை கூட்டணியில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை” என்கிற ரீதியில் வேணுகோபாலிடம் கருத்து சொல்லியுள்ளார். சோனியா - கார்கே - ராகுல் இதனால் தி.மு.க வுடன் கூட்டணி இருக்காது என்று இருந்த நிலையில், தி.மு.க வினர் மார்ச் 3-ம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்த முடிவை அறிவியுங்கள் என்று காங்கிரஸ் தலைமைக்கு சொல்லியுள்ளது. மற்றொருபுறம் தி.மு.க வின் மூத்த தலைவர் டி.ஆர் பாலு, தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் தமிழகத்தில் உள்ள நிலவரம் பற்றியும், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்க வேண்டிய அவசியம் குறித்த விசயங்களையும் சோனியாவின் காதுக்கு நேற்றே கொண்டு போய் சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரத்தை மட்டும் தனியாக தனது இல்லத்துக்கு அழைத்து தமிழக நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அப்போது தான் சிதம்பரம், “தேவையில்லாமல் நாம் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்த பார்க்கிறார்கள். நம்பகமான கூட்டணியை நாம் கைவிட கூடாது” என்று சொல்லியுள்ளார். சோனியா காந்தியும் தி.மு.க-வுடன் கூட்டணியை தொடரவே விரும்பியுள்ளார். “கடந்த முறையை விட கூடுதல் இடங்களை கொஞ்சம் கொடுக்க சொல்லுங்கள், கூட்டணி தொடர்பான முழு அதிகாரத்தையும் கார்கே வசம் ஒப்படைத்துவிட்டோம்” இந்த மெசேஜை ஸ்டாலினிடம் நேரடியாக சொல்லிவிடுங்கள் என்று சொல்லியுள்ளார். மல்லிகார்ஜுன கார்கே - சோனியா காந்தி தி.மு.கவுடன் கூட்டணியை தொடர சோனியா காந்தி விரும்புவதை புரிந்துக்கொண்ட சிதம்பரம், மார்ச் 3-ம் தேதி அதிகாலையே டெல்லியிலிருந்து கிளம்பிவிட்டார். தான் முதல்வர் இல்லத்திற்கு வரும் தகவலை செல்வபெருந்தகை மூலம் முதல்வருக்கு தெரியப்படுத்திவிட்டார். ஏற்கனவே கார்க்கே, தி.மு.க கூட்டணி ஆதரவாளராக இருக்கும் நிலையில், கூட்டணி முடிவை இனி அவரே எடுப்பார் என்று டெல்லி தலைமை அறிவிக்க உள்ளது. அதன்படி இன்று மாலை அதிகாரபூர்வமாக தி.மு.க பேச்சுவார்த்தை குழுவை காங்கிரஸ் குழு சந்தித்து எண்ணிக்கை மற்றும் ராஜ்யசபா இடங்களையும் உறுதி செய்ய உள்ளது என்கிறார்கள். சிதம்பரம் இந்த விவகாரத்தை கையில் எடுத்தபோதே தி.மு.க தரப்பு உற்சாகமாகிவிட்டது. சிதம்பரம் சிக்கல் இல்லாமல் இந்த விவகாரத்தை முடித்துவிடுவார் என்கிறார்கள். முதல்வர் சந்திப்பு, கூட்டணி குழு பேச்சுவார்த்தை என அடுத்தடுத்து தி.மு,க -காங்கிரஸ் கூட்டணி சுமுகமான பாதையில் பயணிக்க தயாராகிவிட்டது என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர். சிதம்பரத்தின் முயற்சி கைகொடுக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.! Loading…
சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்'மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?
காங்கிரஸ் - தி.மு.க இடையே நிலவி வந்த சிக்கலுக்கு, சிதம்பரம் வழியாக முடிவு எடுக்கபட்டுவிட்டது என்கிற தகவலை காங்கிரஸ் வட்டாரத்தினர் சிலர் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டாலினுக்கு தான் சொல்லி விரும்பிய மெசேஜை சிதம்பரம் மூலம் சொல்லியிருக்கிறார் சோனியா என்கிறார்கள் அவர்கள். டெல்லியில் நேற்று இரவு சோனியாவின் இல்லத்தில் கார்கே, ராகுல், சோனியா, வேணுகோபால் உள்ளிட்டவர்கள் தமிழக காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் நிலவும் குழப்பான சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்துள்ளார்கள். இந்த ஆலோசனைக்கு முன்பாக தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தி.மு.க நம்மை கூட்டணியில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை” என்கிற ரீதியில் வேணுகோபாலிடம் கருத்து சொல்லியுள்ளார். சோனியா - கார்கே - ராகுல் இதனால் தி.மு.க வுடன் கூட்டணி இருக்காது என்று இருந்த நிலையில், தி.மு.க வினர் மார்ச் 3-ம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்த முடிவை அறிவியுங்கள் என்று காங்கிரஸ் தலைமைக்கு சொல்லியுள்ளது. மற்றொருபுறம் தி.மு.க வின் மூத்த தலைவர் டி.ஆர் பாலு, தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் தமிழகத்தில் உள்ள நிலவரம் பற்றியும், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்க வேண்டிய அவசியம் குறித்த விசயங்களையும் சோனியாவின் காதுக்கு நேற்றே கொண்டு போய் சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரத்தை மட்டும் தனியாக தனது இல்லத்துக்கு அழைத்து தமிழக நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அப்போது தான் சிதம்பரம், “தேவையில்லாமல் நாம் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்த பார்க்கிறார்கள். நம்பகமான கூட்டணியை நாம் கைவிட கூடாது” என்று சொல்லியுள்ளார். சோனியா காந்தியும் தி.மு.க-வுடன் கூட்டணியை தொடரவே விரும்பியுள்ளார். “கடந்த முறையை விட கூடுதல் இடங்களை கொஞ்சம் கொடுக்க சொல்லுங்கள், கூட்டணி தொடர்பான முழு அதிகாரத்தையும் கார்கே வசம் ஒப்படைத்துவிட்டோம்” இந்த மெசேஜை ஸ்டாலினிடம் நேரடியாக சொல்லிவிடுங்கள் என்று சொல்லியுள்ளார். மல்லிகார்ஜுன கார்கே - சோனியா காந்தி தி.மு.கவுடன் கூட்டணியை தொடர சோனியா காந்தி விரும்புவதை புரிந்துக்கொண்ட சிதம்பரம், மார்ச் 3-ம் தேதி அதிகாலையே டெல்லியிலிருந்து கிளம்பிவிட்டார். தான் முதல்வர் இல்லத்திற்கு வரும் தகவலை செல்வபெருந்தகை மூலம் முதல்வருக்கு தெரியப்படுத்திவிட்டார். ஏற்கனவே கார்க்கே, தி.மு.க கூட்டணி ஆதரவாளராக இருக்கும் நிலையில், கூட்டணி முடிவை இனி அவரே எடுப்பார் என்று டெல்லி தலைமை அறிவிக்க உள்ளது. அதன்படி இன்று மாலை அதிகாரபூர்வமாக தி.மு.க பேச்சுவார்த்தை குழுவை காங்கிரஸ் குழு சந்தித்து எண்ணிக்கை மற்றும் ராஜ்யசபா இடங்களையும் உறுதி செய்ய உள்ளது என்கிறார்கள். சிதம்பரம் இந்த விவகாரத்தை கையில் எடுத்தபோதே தி.மு.க தரப்பு உற்சாகமாகிவிட்டது. சிதம்பரம் சிக்கல் இல்லாமல் இந்த விவகாரத்தை முடித்துவிடுவார் என்கிறார்கள். முதல்வர் சந்திப்பு, கூட்டணி குழு பேச்சுவார்த்தை என அடுத்தடுத்து தி.மு,க -காங்கிரஸ் கூட்டணி சுமுகமான பாதையில் பயணிக்க தயாராகிவிட்டது என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர். சிதம்பரத்தின் முயற்சி கைகொடுக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.! Loading…
`உறுதியாகாத கூட்டணி' - காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.கவினர்!
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தநிலையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற சில தொகுதிகளை கேட்டு தி.மு.க-வினர் காயை நகர்த்தி வருகின்றனர். அதில் சென்னை வேளச்சேரி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு தி.மு.க-வினர் பலர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். வேளச்சேரி, ஸ்ரீவைகுண்டம்.. சென்னை வேளச்சேரி தொகுதி, கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைப் போல தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றார். இந்த இரண்டு தொகுதிகளையும் தி.மு.க-வினர் கேட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதுதவிர காங்கிரஸ் வெற்றி பெற்ற மற்ற தொகுதிகளையும் தி.மு.க-வினர் கேட்டிருக்கிறார்கள். அசன் மவுலானா எம்.எல..ஏ வேளச்சேரி சென்னை வேளச்சேரி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானாவும் தொகுதியை எட்டிப்பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தத் தொகுதி குறித்து உளவுத்துறையும் தி.மு.கவும் நடத்திய சர்வேயில் சில முக்கிய தகவல் வந்திருக்கிறது. அதில் தொகுதியில் உள்ள பிரச்னைகள், தற்போதைய வெற்றி வாய்ப்பு குறித்தும் கிடைத்த தகவல் அடிப்படையில் இந்தத் தடவை கூட்டணி அமைந்தாலும் வேளச்சேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டாம் என் மனநிலையில் தி.மு.க தலைமை இருப்பதாக தகவல் உள்ளது. அதனால் தி.மு.க இளைஞரணி, வேளச்சேரி தொகுதியை கேட்டு கட்சித் தலைமையிடம் காயை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் வேளச்சேரி தொகுதி தி.மு.கவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் துணை முதல்வர் உதயநிதியின் ஆசியோடு இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயலுக்கு சீட் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. தவெக தலைவர் விஜய், இந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியினரும் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க-வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான அசோக் இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்ரீவைகுண்டம் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியையும் தி.மு.கவினர் கேட்டு கட்சித் தலைமையில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில், 7 தடவை காங்கிரஸும் 5 தடவை அ.தி.மு.கவும் மூன்று தடவை தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கோட்டையாகவே இந்தத் தொகுதி பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. அதிக தடவை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார். இவர் சென்னையில் வசிப்பதால் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு தொகுதி மக்களின் குறைகளையும் அவர் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதி முழுவதும் பரவலாக கேட்க முடிகிறது. இதை அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், தனக்கு சாதகமாக்கியதோடு தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தி.மு.க கூட்டணியில் இந்தத் தடவை எந்தக்கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள தி.மு.க-வினரில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ இந்தத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க கூடாது என தி.மு.க-வினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மண்டல பொறுப்பாளரான எம்.பி கனிமொழியிடமும், மாவட்டச் செயலாளரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடமும் தி.மு.க-வினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் தொகுதியில் தி.மு.க-வினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், ``இந்தத் தொகுதியை பொறுத்தவரை 40 சதவிகிதத்துக்கு மேல் நாடார்களின் ஓட்டுக்கள் உள்ளன. அதனால்தான் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே எல்லா கட்சியிலும் வேட்பாளர்களாக நிறுத்துவதுண்டு. அதற்கு அடுத்தப்படியாக பிள்ளைமார்கள், பட்டியல் சமூகத்தினர், தேவர் சமூகத்தினர் இருக்கிறார்கள். பிற சமூகத்தினர் பரவலாக தொகுதி முழுவதும் உள்ளனர். நாடார் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர் சண்முகநாதனுக்கு சரியான போட்டியாளரை இந்தத் தேர்தலில் களமிறக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தொகுதியை மன்னின் மைந்தனும் உள்ளூரிலேயே குடியிருக்கும் தி.மு.கவைச் சேர்ந்தவரை வேட்பாளராக கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். தூத்துக்குடி எம்.பியும் தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழியின் ஆதரவாளராக இருக்கும் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் தலைமை பொதுக் குழு உறுப்பினராக இருக்கும் சொர்ணகுமார் சீட் கேட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இவர், மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் குட் புக்கில் இருக்கிறார். இவரைத் தவிர சங்கர், பிரம்மசக்தி உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள் என்றனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை இந்தத் தடவையும் கேட்டுள்ளோம். நாங்கள் வெற்றி பெற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெளியூர் எம்.எல்.ஏ என்ற பிம்பத்தை கூட்டணி கட்சியைச் சேர்ந்த தி.மு.கவைச் சேர்ந்த சிலர் ஏற்படுத்தி அந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க காயை நகர்த்தி வருகின்றனர். கனிமொழி எம்.பி இந்தத் தொகுதி காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் யார் என்பது பெரிய விஷயமல்ல. காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பட்ட செல்வாக்கு இந்தத் தொகுதியில் இருப்பதால் நிச்சயம் கை சின்னம் வெற்றி பெறும். தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளை நாங்கள் கேட்டால் அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதைப்போலதான் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தி.மு.க-வினர் கேட்பது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றனர். இதற்கிடையில் இந்தத் தொகுதியில் நடிகர் விஜயின் த.வெ.க சார்பில் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ டேவிட் செல்வின் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொகுதியில் ஏற்கெனவே தனிப்பட்ட செல்வாக்கை வைத்திருக்கும் டேவிட் செல்வின், போட்டியிட்டால் விசில் சத்தம் அங்கு கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. Loading…
`உறுதியாகாத கூட்டணி' - காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.கவினர்!
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தநிலையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற சில தொகுதிகளை கேட்டு தி.மு.க-வினர் காயை நகர்த்தி வருகின்றனர். அதில் சென்னை வேளச்சேரி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு தி.மு.க-வினர் பலர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். வேளச்சேரி, ஸ்ரீவைகுண்டம்.. சென்னை வேளச்சேரி தொகுதி, கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைப் போல தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றார். இந்த இரண்டு தொகுதிகளையும் தி.மு.க-வினர் கேட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதுதவிர காங்கிரஸ் வெற்றி பெற்ற மற்ற தொகுதிகளையும் தி.மு.க-வினர் கேட்டிருக்கிறார்கள். அசன் மவுலானா எம்.எல..ஏ வேளச்சேரி சென்னை வேளச்சேரி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானாவும் தொகுதியை எட்டிப்பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தத் தொகுதி குறித்து உளவுத்துறையும் தி.மு.கவும் நடத்திய சர்வேயில் சில முக்கிய தகவல் வந்திருக்கிறது. அதில் தொகுதியில் உள்ள பிரச்னைகள், தற்போதைய வெற்றி வாய்ப்பு குறித்தும் கிடைத்த தகவல் அடிப்படையில் இந்தத் தடவை கூட்டணி அமைந்தாலும் வேளச்சேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டாம் என் மனநிலையில் தி.மு.க தலைமை இருப்பதாக தகவல் உள்ளது. அதனால் தி.மு.க இளைஞரணி, வேளச்சேரி தொகுதியை கேட்டு கட்சித் தலைமையிடம் காயை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் வேளச்சேரி தொகுதி தி.மு.கவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் துணை முதல்வர் உதயநிதியின் ஆசியோடு இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயலுக்கு சீட் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. தவெக தலைவர் விஜய், இந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியினரும் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க-வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான அசோக் இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்ரீவைகுண்டம் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியையும் தி.மு.கவினர் கேட்டு கட்சித் தலைமையில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில், 7 தடவை காங்கிரஸும் 5 தடவை அ.தி.மு.கவும் மூன்று தடவை தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கோட்டையாகவே இந்தத் தொகுதி பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. அதிக தடவை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார். இவர் சென்னையில் வசிப்பதால் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு தொகுதி மக்களின் குறைகளையும் அவர் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதி முழுவதும் பரவலாக கேட்க முடிகிறது. இதை அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், தனக்கு சாதகமாக்கியதோடு தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தி.மு.க கூட்டணியில் இந்தத் தடவை எந்தக்கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள தி.மு.க-வினரில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ இந்தத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க கூடாது என தி.மு.க-வினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மண்டல பொறுப்பாளரான எம்.பி கனிமொழியிடமும், மாவட்டச் செயலாளரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடமும் தி.மு.க-வினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் தொகுதியில் தி.மு.க-வினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், ``இந்தத் தொகுதியை பொறுத்தவரை 40 சதவிகிதத்துக்கு மேல் நாடார்களின் ஓட்டுக்கள் உள்ளன. அதனால்தான் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே எல்லா கட்சியிலும் வேட்பாளர்களாக நிறுத்துவதுண்டு. அதற்கு அடுத்தப்படியாக பிள்ளைமார்கள், பட்டியல் சமூகத்தினர், தேவர் சமூகத்தினர் இருக்கிறார்கள். பிற சமூகத்தினர் பரவலாக தொகுதி முழுவதும் உள்ளனர். நாடார் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர் சண்முகநாதனுக்கு சரியான போட்டியாளரை இந்தத் தேர்தலில் களமிறக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தொகுதியை மன்னின் மைந்தனும் உள்ளூரிலேயே குடியிருக்கும் தி.மு.கவைச் சேர்ந்தவரை வேட்பாளராக கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். தூத்துக்குடி எம்.பியும் தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழியின் ஆதரவாளராக இருக்கும் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் தலைமை பொதுக் குழு உறுப்பினராக இருக்கும் சொர்ணகுமார் சீட் கேட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இவர், மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் குட் புக்கில் இருக்கிறார். இவரைத் தவிர சங்கர், பிரம்மசக்தி உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள் என்றனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை இந்தத் தடவையும் கேட்டுள்ளோம். நாங்கள் வெற்றி பெற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெளியூர் எம்.எல்.ஏ என்ற பிம்பத்தை கூட்டணி கட்சியைச் சேர்ந்த தி.மு.கவைச் சேர்ந்த சிலர் ஏற்படுத்தி அந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க காயை நகர்த்தி வருகின்றனர். கனிமொழி எம்.பி இந்தத் தொகுதி காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் யார் என்பது பெரிய விஷயமல்ல. காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பட்ட செல்வாக்கு இந்தத் தொகுதியில் இருப்பதால் நிச்சயம் கை சின்னம் வெற்றி பெறும். தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளை நாங்கள் கேட்டால் அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதைப்போலதான் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தி.மு.க-வினர் கேட்பது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றனர். இதற்கிடையில் இந்தத் தொகுதியில் நடிகர் விஜயின் த.வெ.க சார்பில் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ டேவிட் செல்வின் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொகுதியில் ஏற்கெனவே தனிப்பட்ட செல்வாக்கை வைத்திருக்கும் டேவிட் செல்வின், போட்டியிட்டால் விசில் சத்தம் அங்கு கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. Loading…
Iran War - ஏவுகணைகளால் அடித்து நொறுக்கும் ஈரான் - Middle East-ல் என்ன நடக்கிறது? | Decode
Iran War - ஏவுகணைகளால் அடித்து நொறுக்கும் ஈரான் - Middle East-ல் என்ன நடக்கிறது? | Decode
'திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப.சிதம்பரம்?'என்னவாகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி?
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர் இழுபறி நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்டாலின் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே தொடர் இழுபறி நிலவி வருகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி இருதரப்பும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருந்தனர். அதிக சீட்டுகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் விடாப்பிடியாக இருப்பதால் இருதரப்புக்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. திமுக கொடுக்கும் 25 இடங்களையெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது என கிரிஷ் சோடங்கர் டெல்லியில் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில், மார்ச் 3 ஆம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை தெரிவிக்குமாறு திமுக தரப்பு காங்கிரஸிடம் கறாராக கூறியிருந்தது. கூட்டணிக்குள் புகைச்சல் நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் இன்று மாலை நடக்கவிருக்கிறது. அதற்கும் முதல்வரும் ப.சிதம்பரமும் ஒன்றாக செல்ல வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வருவது இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரம் இறுதிக்கட்ட பரபரப்பில் உழன்று கொண்டிருக்கிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இதனிடையே, முதல்வரை சிதம்பரம் சந்திக்க இருக்கும் சூழலில், செல்வப்பெருந்தகை சிதம்பரம் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS
Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS
Long war-க்கு தயாராகும் Iran - USA-வால் சமாளிக்க முடியுமா? - Prof Bernard D' Samy Interview Israel
Long war-க்கு தயாராகும் Iran - USA-வால் சமாளிக்க முடியுமா? - Prof Bernard D' Samy Interview Israel
நாங்குநேரி கொடூரம்: 'சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?'- இபிஎஸ் கண்டனம்
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். எடப்பாடி பழனிசாமி இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள். இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள். இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது? தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது. எடப்பாடி பழனிசாமி வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது. பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டிருக்கிறார்.
நாங்குநேரி கொடூரம்: 'சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?'- இபிஎஸ் கண்டனம்
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். எடப்பாடி பழனிசாமி இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள். இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள். இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது? தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது. எடப்பாடி பழனிசாமி வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது. பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டிருக்கிறார்.
நாங்குநேரி கொடூரம்: 'சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?'- இபிஎஸ் கண்டனம்
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். எடப்பாடி பழனிசாமி இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள். இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள். இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது? தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது. எடப்பாடி பழனிசாமி வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது. பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டிருக்கிறார்.
அடாவடி இலங்கை ராணுவம்; அச்சத்தில் தமிழ் மக்கள்.! - கச்சத்தீவில் இருந்து நேரடி ரிப்போர்ட்
தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி முதல் தவெக தலைவர் விஜய் வரை கச்சத்தீவு அரசியலை பேசி வருகிறார்கள். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. கச்சத்தீவு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்தத் திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்தாண்டு இந்தியாவில் இருந்து 3,996 பக்தர்கள், இலங்கையில் இருந்து சுமார் 7,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் என மொத்தம் 12,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுவாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் சராசரியாக 6,000 - 7,000 பக்தர்கள் தான் கலந்து கொள்வார்கள். கச்சத்தீவு கச்சத்தீவு வரலாற்றிலேயே அதிக பக்தர்கள் கலந்துகொள்வது இதுதான் முதல்முறை. இந்தியாவில் கச்சத்தீவு அரசியல் பரபரக்க தொடங்கியுள்ளதால், இந்தாண்டு திருவிழா மூலம் இலங்கை அழுத்தமான செய்தியை அனுப்பியுள்ளது. கச்சத்தீவு எல்லையை சுற்றி வழக்கம் போல இலங்கை கொடி நடப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் படகுகளில் இந்திய நாட்டின் கொடி இருக்கும். இந்த முறை ஒரு படகில் கூட இந்திய கொடி இல்லை. கச்சத்தீவு கச்சத்தீவு திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசும் நிதி வழங்குகிறது. அதன்படி இந்தாண்டும் ரூ.1 கோடி நிதி பங்களித்துள்ளது. ஆனாலும் நட்புணர்வின் அடிப்படையில் கூட இந்தியா கொடி எங்கும் இடம் பெறவில்லை. கச்சத்தீவு இந்தியா வசம் இருந்தபோது அந்தோணியார் திருவிழாவுக்கு பெரும்பாலும் நம் நாட்டு பக்தர்கள் தான் அதிகம் செல்வார்கள். இலங்கை வசம் சென்ற பிறகு இரண்டு நாடுகளில் இருந்தும் சரி சமமாக பக்தர்கள் பங்கேற்று வந்தனர். முதல்முறையாக இலங்கையில் இருந்து அதிக பக்தர்களுக்கு அதிகளவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு சிங்கள பக்தர்களும் அதிகளவு வந்திருந்தனர். அந்தோணியார் ஆலயத்தில் ஆரம்பத்தில் இருந்து தமிழ் மொழியில் மட்டுமே கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக சிங்கள மொழியிலும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியர்களை உள்ளே அனுமதிப்பதில் தொடங்கி, கச்சத்தீவில் இருந்து புறப்படும் வரை எல்லாவற்றிலும் இலங்கை ராணுவம் ஒடுக்கு முறையை கையாண்டது. கச்சத்தீவு இலங்கை தூதரகத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்புதல் பெற்று சென்ற பெரும்பாலான செய்தியாளர்களை, தங்களுக்கு வழங்கிய பட்டியலில் உங்கள் பெயர் இல்லை. அனுமதிக்க முடியாது என அவர்களின் ராணுவம் பல மணி நேரம் காக்க வைத்தனர். சாமானிய மக்களிடம் அவர்களின் அதிகாரத்தை இன்னும் அதிகமாகவே செலுத்தினார்கள். இந்திய பக்தர்கள் உள்ளே செல்லும்போது தொடங்கி, அங்கிருந்து புறப்படும் வரை பல வகையில் இலங்கை ராணுவத்தின் அடக்குமுறையை எதிர் கொண்டனர். பக்தர்களை முட்டித்தள்ளி, அடிக்கவும் பாய்ந்தனர். கச்சத்தீவு இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் கச்சத்தீவு வரும் எண்ணத்தையே மக்கள் விட்டுவிடுவார்கள் என்று பலரும் நேரடியாக தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தி சென்றனர். “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. யாராலும் மீட்க முடியாது” என இலங்கை அமைச்சர் ராமலிங்கம் திட்டவட்டமாக கூறினார். கச்சத்தீவு உரிமையில் இரண்டு நாடுகள் இடையே அரசியல் இருந்தாலும், தங்கள் தொப்புகள் கொடி உறவுகளை சந்தித்து அன்பைப் பரிமாறும் ஒரு நிகழ்வாகவும் இதை இரு நாட்டு பக்தர்கள் பார்கின்றனர். கச்சத்தீவிற்குள் நுழைவதற்கு முன்பே, இலங்கை தமிழ் இளைஞர்கள் சிலர் தங்கள் விசைப்படகில் தவெக கொடியை காண்பித்து ஆரவாரம் செய்தனர். கச்சத்தீவு தவெக கொடி “தமிழ்நாடு தேர்தல் நிலவரம் எப்படி, விஜய் சாதிப்பாரா” என இலங்கை தமிழர்களும், “புதிய அதிபர் வந்த பிறகு அமைதி திரும்பியுள்ளதா, நிலைமை எப்படி இருக்கிறது’ என இந்திய தமிழர்களும் நலம் விசாரித்து கொண்டனர். கச்சத்தீவில் சந்திக்கும் மக்கள் தங்களின் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு அவ்வபோது பேசவும் செய்வார்கள். திருவிழாவுக்கு வரும் முன்பு இந்தியாவில் தங்களுக்கு தேவையான பொருள்கள் குறித்து இலங்கை தமிழர்களும், இலங்கையில் தங்களுக்கு தேவையானது குறித்து நம்மவர்களும் சொல்வார்கள். கச்சத்தீவு தமிழ்நாட்டில் தயாரிக்கும் கடலை மிட்டாய் என்றால் இலங்கை தமிழர்களுக்கு உயிர். இந்தியர்கள் என தெரிந்தாலே, “கச்சா அல்வா (கடலை மிட்டாய்) இருக்கா அண்ணா” என்று கேட்பார்கள். அதேபோல இங்கிருந்து லுங்கி, உடைகள் ஆகியவற்றை விரும்பி கேட்பார்கள். தமிழ்நாட்டில் இருந்து கச்சத்தீவு செல்லும் பெரும்பாலானோரின் பைகளில் கடலை மிட்டாய் மற்றும் லுங்கிகளை காணலாம். இலங்கையில் தயாரிக்கும் ராணி சோப் மிகவும் பிரபலம். கச்சத்தீவு அந்த சோப், தேங்காய் எண்ணெய், பிஸ்கட் ஆகியவற்றை அங்கிருந்து இலங்கை தமிழர்கள் எடுத்து வருவார்கள். திருவிழாவில் பண்டமாற்றம் நடக்கும். கூடவே இருவரும் எடுத்து வரும் உணவையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வார்கள். இந்த முறையும் அந்த அன்புப் பரிமாற்றம் நிகழ்ந்தது. ஏற்கெனவே இரண்டு நாட்டு மீனவர் பிரச்னை ஆறாத ரணமாக உள்ளது. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை, இந்தியாவின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு நடுவே தமிழ்நாட்டு மீனவர்கள் தினம் தினம் சிக்கி தவிக்கிறார்கள். இலங்கை தமிழ் மீனவர்களின் கோரிக்கைகளையும் பேசி தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கச்சத்தீவு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிலும் இந்திய பக்தர்களின் வருகையை படிப்படியாக குறைத்து, இலங்கை மக்களை மட்டுமே வைத்து நடத்தும் எண்ணம் இலங்கை அரசுக்கு வந்துள்ளதாகவே நம் பக்தர்கள் அச்சப்படுகிறார்கள் கச்சத்தீவு வெறும் அரசியல் களம் இல்லை. அது தமிழ் மக்களிடம் பிரிக்க முடியாத பிணைப்பு என்பதை உணர்ந்து 2 நாட்டு அரசுகள் செயல்பட வேண்டும். Loading…
நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - விஜய் கேள்வி!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய அந்த கும்பல், அவர்களது வாகனத்தையும் பறித்துச் சென்றது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்தக் கும்பல் நாங்குநேரி பெரும்பத்துக் கிராமத்திற்குச் சென்றது. அங்கு ஒரு டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய அந்தக் கும்பல், பீதியடைந்து ஓடிய மக்களை விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவத்தில் வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர். தவெக தலைவர் விஜய் இது தொடர்பாக காவல்துறை 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? தவெக விஜய் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி. எனக் குறிப்பிட்டிருக்கிறார். அழிவுக் காலத்தின் அழிச்சாட்டிய புத்தி... கருத்துப்படத்துக்கு உறுத்துக்கட்டளையா?
நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - விஜய் கேள்வி!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய அந்த கும்பல், அவர்களது வாகனத்தையும் பறித்துச் சென்றது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்தக் கும்பல் நாங்குநேரி பெரும்பத்துக் கிராமத்திற்குச் சென்றது. அங்கு ஒரு டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய அந்தக் கும்பல், பீதியடைந்து ஓடிய மக்களை விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவத்தில் வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர். தவெக தலைவர் விஜய் இது தொடர்பாக காவல்துறை 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? தவெக விஜய் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி. எனக் குறிப்பிட்டிருக்கிறார். அழிவுக் காலத்தின் அழிச்சாட்டிய புத்தி... கருத்துப்படத்துக்கு உறுத்துக்கட்டளையா?
Iran - America: ``4-5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இன்று அதிகாலை ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் வானில் வட்டமிட்டதாகவும் ஏஎஃப்பி (AFP) செய்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எகிப்து முதல் மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அந்தந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் இந்தப் போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ``இந்தப் போரின் நோக்கம் ஈரானின் ஏவுகணைகள், கடற்படை மற்றும் அணுசக்தித் திட்டங்களை அழிப்பதே தவிர, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவது அல்ல. நாங்கள் 4 முதல் 5 வாரங்கள் வரை போரைத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் தேவைப்பட்டால் நீண்ட காலம் போரிடும் திறன் எங்களிடம் உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தப் போர் குறித்து பேசும்போது, ``இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததை அறிந்த பின்னரே அமெரிக்கா இந்தப் போரில் இணைந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்தை அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மூத்த அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர், ``இஸ்ரேலின் அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் அமெரிக்கா போரில் இறங்கியிருப்பது, இதுவரை கண்டிராத ஒரு ஆபத்தான சூழல் என்று கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்
Iran - America: ``4-5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இன்று அதிகாலை ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் வானில் வட்டமிட்டதாகவும் ஏஎஃப்பி (AFP) செய்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எகிப்து முதல் மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அந்தந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் இந்தப் போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ``இந்தப் போரின் நோக்கம் ஈரானின் ஏவுகணைகள், கடற்படை மற்றும் அணுசக்தித் திட்டங்களை அழிப்பதே தவிர, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவது அல்ல. நாங்கள் 4 முதல் 5 வாரங்கள் வரை போரைத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் தேவைப்பட்டால் நீண்ட காலம் போரிடும் திறன் எங்களிடம் உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தப் போர் குறித்து பேசும்போது, ``இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததை அறிந்த பின்னரே அமெரிக்கா இந்தப் போரில் இணைந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்தை அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மூத்த அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர், ``இஸ்ரேலின் அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் அமெரிக்கா போரில் இறங்கியிருப்பது, இதுவரை கண்டிராத ஒரு ஆபத்தான சூழல் என்று கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

31 C