SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

WPL 2026: '2வது முறை சாம்பியன்' - RCB சாதனை! தொடரும் டெல்லி அணியின் 'பைனல்'சோகம்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 2026-ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பௌலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் களம் புகுந்த டெல்லி அணிக்கு லிசெல் லீ மற்றும் சஃபாலி வர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. பவர் பிளேயின் கடைசி ஓவரில் சஃபாலி வர்மா ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து லிசெல் லீயும் வெளியேற டெல்லிக்குச் சிறு நெருக்கடி ஏற்பட்டது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதன்பின் களமிறங்கிய லாரா வோல்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்களும், அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் ஹென்றி 35 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. `RCB அணி விற்பனைக்கு.!’ - விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி - அணியின் மதிப்பு தெரியுமா? கடினமான இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு ஜி. ஹாரிஸின் விக்கெட் ஆரம்பத்திலேயே சரிந்தது. எனினும், ஜார்ஜியா வோல் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இணைந்து டெல்லி பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். இருவரும் 165 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஜார்ஜியா வோல் 16-வது ஓவரில் ஆட்டமிழந்த பிறகு, ரிச்சா கோஷ் (6), நதின் டி கிளர்க் (7) மற்றும் ராதா யாதவ் (12) ஆகியோர் சொற்ப ரன்களைச் சேர்த்தனர். கடைசி ஓவரில் பெங்களூரு அணி த்ரில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. டெல்லி மகளிர் கிரிக்கெட் அணி டெல்லியின் 'பைனல்' சோகம்: எட்டாக் கனியான கோப்பை 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட WPL தொடரின் அனைத்து இறுதிப்போட்டிகளுக்கும் முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையைத் டெல்லி கேப்பிடல்ஸ் பெற்றிருந்தாலும், கோப்பையை வெல்வது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது: 2023: மும்பை இந்தியன்ஸிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. 2024: பெங்களூரு அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. 2025: மும்பை இந்தியன்ஸிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. 2026: பெங்களூரு அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. தொடர்ந்து நான்கு முறை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவிய டெல்லி அணியினருக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. பெங்களூரு அணியின் இந்த வெற்றி அந்த அணி ரசிகர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது. RCB-காக வாழ்க்கையை தொலைத்த இளைஞர்: 2022-ல் நடந்த கொலை- துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டர் சொல்வது என்ன?

விகடன் 6 Feb 2026 10:53 am

Dhoni: இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று - டி20 உலகக்கோப்பை குறித்து தோனி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவிருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் கோப்பையை எந்த அணி கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்திருக்கின்றன. indian team இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போதைய இந்திய அணி குறித்து பேசியிருக்கிறார். அதில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் எனக்கு மிகவும் பிடித்த அணி இந்திய அணிதான். சூர்யகுமார் தலைமையிலான தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்கள், அதிக அழுத்தமான சூழல்களைக் கையாண்ட அனுபவம் கொண்ட வீரர்களாக இருக்கின்றனர். இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் தற்போதைய டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியும் ஒன்று என்று தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த நேர்காணலில் பிரபலமடைந்த பிறகும் ஏன் ராஞ்சியில் வசிக்கிறீர்கள் என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, நான் ராஞ்சியை விட்டு சென்றுவிடுவேன். இந்தச் சிறிய நகரத்தில் என்னால் வாழ முடியாது எனச் சீனியர் வீரர் ஒருவர் என்னிடம் பந்தயம் கட்டினார். தோனி அப்போது நான் அவரிடம் ஏன் இந்த ஊரை விட்டு செல்ல வேண்டும்? இங்கு சந்தோஷமாக இருக்கிறேன் என்றேன். அவர் சொல்லி இப்போது 20 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் நான் இன்னும் ராஞ்சியில்தான் இருக்கிறேன். எனக்கு இந்த நகரம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். தோனி எப்படியும் ஒரு நாள் விலகுவார், அதனால்.!- CSK வீரர்கள் தேர்வு குறித்து பயிற்சியாளர் பிளெமிங்

விகடன் 5 Feb 2026 11:52 am

WCT20: வார்ம்-அப் போட்டியில் வலுவை காட்டிய இந்தியா! - உலகக் கோப்பை இந்திய அணி காம்பினேஷன் இது தானா?!

10-வது டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் போட்டிகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இந்தியா – செளத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். சூர்ய குமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் – அபிஷேக் சர்மா இணை, ஆரம்பத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் முடிவடைந்த தொடரில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிலையில், நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. உலகக்கோப்பை தொடருக்கும், இந்தியா இஷான் கிஷன் – அபிஷேக் சர்மா இணையுடனே ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் இடத்துக்கு திலக் வர்மா கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது இஷான் கிஷன் 20 பந்துகளில் 53 ரன்களும், அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 24 ரன்களும் எடுத்துத் தங்களது விக்கெட்டுகளை ரிட்டையர் அவுட் மூலம் துறந்தனர். இது பயிற்சி ஆட்டம் என்பதால், அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அம்முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ், வேகமான ரன் சேர்ப்பின் மூலம் இந்திய அணியின் ரன் ரேட்டை 10-க்கு மேல் கொண்டு சென்றனர். திலக் வர்மா 45 ரன்களில் அவுட் ஆன நிலையில், அடுத்த சில ஓவர்களிலேயே சூர்யகுமார் யாதவ் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அக்சார் பட்டேல் 35 ரன்களும், ரிங்கு சிங் 16 ரன்களும் சேர்த்தனர். இஷான் கிஷன் கடைசி இரண்டு ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா விளையாடிய 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த அதிரடி ஆட்டத்தின் மூலம், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்து, செளத்ஆப்பிரிக்கா அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி... 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய செளத் ஆப்பிரிக்கா அணி, முதல் ஓவரிலேயே லிண்டே விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பந்தில் இழந்தது. அதன்பின் மார்க்ரம் – ரிக்கெல்டன் இணை அணியை மீட்டெடுக்க முயன்றது. 6-வது ஓவரில் மார்க்ரம் ரிட்டையர் அவுட் மூலம் வெளியேறினார். அர்ஷ்தீப் சிங் அதனைத் தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களிடம் தொடர்ந்து விக்கெட்களை இழந்த செளத் ஆப்பிரிக்கா அணி, ஸ்டப்ஸ் மற்றும் ஜான்சன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் போராடியது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்த செளத் ஆப்பிரிக்கா அணி, 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. சில மாற்றங்கள் இருக்கலாம்: அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து தொடரில் ஆடிய இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்பதை பயிற்சி ஆட்டம் காட்டியுள்ளது. இஷான் கிஷன்(1) - அபிஷேக்(2) ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் திலக் வர்மா(3) அல்லது கேப்டன் சூர்ய குமார் யாதவ்(4) ஆகியோர் தேவையை பொறுத்து களமிறங்குவார்கள். அவர்களை தொடர்ந்து, பாண்ட்யா(5), துபே(6), ரிங்கு சிங்(7), அக்ஷர் படேல்(8) முதலியோர் களமிறங்குவார்கள். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் பும்ரா(9), அர்ஷ்தீப் சிங்(10) வேக கூட்டணியை பாண்ட்யா உதவியுடன் செய்வார்கள். அக்ஷர் படேலுடன் கூடுதலாக ஒரு ஸ்பின்னர்(11) அணியில் சேர்க்கப்படுவார். அதில் தான் இந்திய அணி கடும் சவாலை சந்திக்க கூடும். வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து கூடுதல் ஸ்பின்னர்களுடன் போக வேண்டிய நிலை ஏற்பட்டால், தூபேவுக்கு பதில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் என இருவரையும் களத்துக்கு கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது. உங்க பிளேயின் லெவனை கமென்ட்டில் பதிவிடுங்கள் மக்களே..!

விகடன் 5 Feb 2026 9:51 am