IND vs PAK: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் வீடியோ! - நடந்தது என்ன?
2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதை வாங்கி இருக்கிறார். indian team இதனிடையே நேற்றையப் போட்டியின்போது மைதானத்தில் வைத்து ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்தப் போட்டியின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அப்போது பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் நின்றிருந்த குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க முயன்றார். IND vs PAK: அவர்களை அதிகம் ஓட வைக்க முயன்றேன்; அது நன்றாக வேலை செய்தது - ஆட்டநாயகன் இஷான் கிஷன் கையில் வந்து விழுந்த பந்தை அவர் தவறவிட்டதோடு, அது எல்லைக்கோட்டைத் தாண்டி சிக்ஸருக்கும் சென்றது. இதைப் பார்த்த ஹர்திக் பாண்டியா மைதானத்தில் தனது நிதானத்தை இழந்து குல்தீப்பிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியா வெற்றி பெற்ற பிறகும் ஹர்திக் பாண்டியாவின் கோபம் தணியவில்லை. ஹர்திக் பாண்டியா - குல்தீப் யாதவ் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் நேரத்திலும் ஹர்திக் பாண்டியா மீண்டும் குல்தீப் யாதவிடம் சென்று ஆவேசமாகப் பேசும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. Here is video of Hardik Pandya & Surya Kumar Yadav angry on Kuldeep Yadav #INDvsPAK #T20WorldCup pic.twitter.com/BsGCCprKNc — cricketkayudh (@cricketkayudh) February 15, 2026
IND vs PAK: அவர்களை அதிகம் ஓட வைக்க முயன்றேன்; அது நன்றாக வேலை செய்தது - ஆட்டநாயகன் இஷான் கிஷன்
2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதை வாங்கி இருக்கிறார். அதன் பிறகு இஷான் கிஷன், தொடக்கத்தில் ஆடுகளம் அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் சில நேரங்களில், நாம் என்ன விளையாட வேண்டும், எந்த ஷாட்கள் நமக்குப் பொருந்தும் என்பதை நம்பி விளையாட வேண்டியது அவசியம். indian team அதனால் என் பலத்தை மட்டுமே கவனத்தில் வைத்து, எளிமையாக விளையாடினேன். பந்தைக் கவனமாக பார்த்து, பீல்டுக்கு ஏற்றாற்போல் ஷாட்களை தேர்வு செய்தேன். அவர்களை அதிகம் ஓட வைக்க முயன்றேன். அது எனக்கு நன்றாக வேலை செய்தது. சமீப காலமாக நிறைய உழைத்திருக்கிறேன். அதனால் பந்து வீச்சாளர்கள் நான் விரும்பும் இடத்திற்கே பந்து வீச வேண்டிய சூழ்நிலை உருவாகும். மைதானம் பெரியதாக இருந்ததால், இடைவெளிகளும் அதிகம். அதனால் இடைவெளிகளை நோக்கி அடிப்பதே என் நோக்கம். விக்கெட் சுலபமாக இல்லாததால், குறைந்தது இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 160–170 ரன்கள் எடுத்தாலே அது நல்ல இலக்கு என்று நினைத்தேன். அதுமட்டுமல்லாமல் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போதும் சிறப்பான ஒன்று. நமக்கு மட்டுமல்ல, நம் நாட்டுக்கே. இஷான் கிஷன் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அவர்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். சரியான ஷாட்களை தேர்வு செய்து விளையாடினோம். பாகிஸ்தானை வீழ்த்திய இந்த வெற்றி, தொடரின் மீதம் இருக்கும் போட்டிகளுக்கு எங்களுக்கு பெரும் நம்பிக்கையை தரும். இந்த வெற்றியைத் தொடர்ந்து பெற முயற்சிப்போம். மொத்தத்தில் இந்த போட்டியை நாங்கள் வென்றத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று பேசியிருக்கிறார்.
IND vs PAK: 'இஷான் கிஷனின் ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனை' - கேப்டன் சூர்யகுமார் யாதவ்
2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ இந்த வெற்றி முழுக்க முழுக்க இந்தியாவுக்கானது. நாங்கள் விளையாட நினைத்த அதே விதமான கிரிக்கெட்டையே இந்தப் போட்டியிலும் விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த முடிவு என்று நினைத்தோம். indian team ஆட்டம் தொடங்கியதும் 0/1 என்ற நிலையில், யாரோ ஒருவர் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இஷான் கிஷன் சற்று வித்தியாசமாக, ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனையுடன் விளையாடினார். அவர் அந்த பொறுப்பை எடுத்த விதம் உண்மையிலேயே அசாதாரணமானது. முதலில் பேட்டிங் செய்யும் போது ஆடுகளத்தை கணிப்பது சற்று கடினம். இரவில் பனி (Dew) இருக்கும் அளவு, பிச்சின் நடத்தை எல்லாம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இருந்தாலும், நாங்கள் எடுத்த ஸ்கோர், தேவையான ரண்களை விட சுமார் 15 ரன்கள் அதிகம் என்று உணர்ந்தோம். 155 இருந்தால்கூட அது கடினமான போட்டியாக மாறியிருக்கும். ind vs pak பந்து வீச்சில் அனைவரும் தங்களது பங்கினை சிறப்பாக செய்தது மிகவும் சந்தோஷம். ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தார்கள். இப்போது நாங்கள் ஒரு அணியாக ஒன்றாகச் சேர்ந்து இந்த வெற்றியை கொண்டாடுவோம். அதன் பிறகு அகமதாபாத் செல்லும் பயணத்தின் போது, அடுத்த போட்டிகளைப் பற்றி யோசிப்போம்” என்று பேசியிருக்கிறார்.
Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்பு மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. Ind vs pak ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என நினைத்தால், ஒன் சைடு ஆட்டமாக இந்தியாவுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது இந்தப் போட்டி. இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்க்கு பதிலாக குல்தீப் யாதவ்வும் களமிறங்கினர். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்ததால், தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அபிஷேக் பின்னர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, போட்டியின் போக்கை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சில விக்கெட்களை இழந்தாலும், இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு டார்கெட் 176. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய பாகிஸ்தான் அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே சரவெடியாக தாக்கினர். முதல் 6 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய அணி, போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தியது. பொறுப்புடன் விளையாடி வந்த பாகிஸ்தான் வீரர் உஸ்மானும் 44 ரன்களில் ஆட்டமிழக்க அந்த தருணத்திலேயே, பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. இந்தியா அடுத்தடுத்து இந்தியாவின் வேகத்திலும் சுழலிலும் சிக்கி, பாகிஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர், வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 77 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! - புதிய கேப்டன் ரியான் பராக் - அறிவிப்பை வெளியிட்ட RR
ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், Rajasthan Royals அணி இன்று தங்களின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக் (Riyan Parag) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் மாதம் நடைபெற்ற டிரேடிங் செயல்பாடுகளில், ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் (Sanju Samson) சென்னை அணிக்கு சென்றதும், சென்னை அணியின் அனுபவ வீரர் ஜடேஜா (Ravindra Jadeja) ராஜஸ்தான் அணியில் இணைந்ததும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனால், “ஜடேஜாவே புதிய கேப்டன் ஆகலாம்” என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பரவலாக இருந்தது. ஆனால், அந்த எல்லா கணிப்புகளையும் பின்னுக்கு தள்ளி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட அறிவிப்பில், ரியான் பராக் புதிய கேப்டன் என உறுதி செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை ஐபிஎல் தொடரில் 84 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக், மொத்தமாக 1,566 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 அரைசதங்களும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 141.85 ஆக இருப்பது, அவரின் அதிரடி பேட்டிங்குக்கு சின்ன சாம்பிள். இளம் வயதில் கிடைத்துள்ள இந்த கேப்டன் பொறுப்பு, அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் – இதுவரை கேப்டன்கள் பட்டியல் ஷேன் வார்னே ராகுல் டிராவிட ஷேன் வாட்சன் ஸ்டீவ் ஸ்மித் சஞ்சு சாம்சன் இந்தப் பட்டியலில் இப்போது ரியான் பராக் இணைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் ரசிகர்கள் மத்தியில் “இளம் கேப்டன் – புதிய யுகம்” என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
T20 WC: ஆஸ்திரேலியா ஆல் அவுட்; சம்பவம் செய்த ஜிம்பாப்வே! - கொழும்புவில் என்ன நடந்தது?
கொழும்புவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருக்கிறது ஜிம்பாப்வே அணி. Zimbabwe டாஸை ஆஸ்திரேலிய அணியே வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. கொழும்பு மைதானம் கொஞ்சம் மெதுவான மைதானம். சராசரி ஸ்கோரே 150-160 க்குள்ளாகத்தான் இருக்கும். இதை புரிந்து வைத்துக் கொண்டு ஜிம்பாப்வே அணி கால்குலேட்டிவாக ஆடியிருந்தது. பென்னட்டும் மருமணியும் ஓப்பனர்கள். 160 மார்க்கை எட்டினால் போதும் என்கிற மனநிலையில் நிதானமாக ஆடினர். பவர்ப்ளேக்குள் ஆஸ்திரேலிய அணி வார்சூயிஸ், மேக்ஸ்வெல், நேதன் எல்லீஸ் என 5 பௌலர்களை பயன்படுத்தியது. ஆனாலும் விக்கெட் கிடைக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 61 ரன்களை சேர்த்தது. மருமணி அவுட் ஆனவுடன் ரியான் பர்ல் உள்ளே வந்தார். அடுத்ததாக ராசா. எல்லாருமே நிலைமையையும் சூழலையும் உணர்ந்து சௌகரியமாக ஒரு டார்க்கெட்டை எட்ட வேண்டும் என்கிற மனநிலையுடனேயே ஆடினர். விளைவு, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்களை எட்டியது. பென்னட் அரைசதத்தை அடித்திருந்தார். Zimbabwe ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 170. பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது ஆஸ்திரேலியா. முசரபாணியும் எவன்ஸூம் விக்கெட் வேட்டை நடத்தினர். கீரனும் டிம் டேவிட்டும் டக் அவுட் ஆகினர். ஆஸ்திரேலிய அணி 29-4 என தடுமாறியது. இதன்பிறகு கூட்டணி சேர்ந்த ரென்சாவும் மேக்ஸ்வெல்லும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 77 ரன்களை சேர்த்தனர். ஆனால், இவர்களாலும் ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. ஜிம்பாப்வேயின் ஸ்பின்னர்கள் சுழல் ஜாலம் நடத்தினர். வேகப்பந்து வீச்சாளர்கள் நக்கிள் பால் போன்ற வேரியேஷன்களில் கலக்கினர். மேக்ஸ்வெல் 31ரன்களில் பர்லின் பந்தில் போல்டாகினார். கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு 56 ரன்கள் தேவை. 5 விக்கெட்டுகள் கையில் இருந்தது. ஆனால், இந்த 5 ஓவர்களை மசகட்சா, முசரபாணி, க்ரீமர் போன்றோர் லாவகமாக வீச, ஜிம்பாப்வேயின் பீல்டிங்கும் தீவிரமாக இருந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வென்றது. 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையிலும் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

30 C