SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

32    C
...

'தடை விதிக்கப்படும்!'- பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் ஆடும் வீரர்களுக்கு PCB எச்சரிகை

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கடைசி நேரத்தில் புறக்கணித்துவிட்டு, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கச் செல்லும் வெளிநாட்டு வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதே போல பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) மார்ச் 26 ஆம் தேதி தொடங்குகிறது. தசுன் ஷனகா ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்கள் இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெற இருப்பதால் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் லீக்கை தவிர்த்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் இலங்கை அணி வீரர் தசுன் ஷனகா பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சாம் கரணுக்குப் பதிலாக ஆட இணைந்திருக்கிறார். தவிர குடகேஷ் மோட்டி, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஒட்னியல் பார்ட்மேன் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் போன்ற பல வெளிநாட்டு வீரர்களும் தனிப்பட்ட காரணங்களைக் கூறி பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகியிருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் (PCB)மொஹ்சின் நக்வி, பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். ipl vs psl கடந்த ஆண்டு பெஷாவர் சல்மி அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்பின் போஷ், கடைசி நேரத்தில் விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சென்றார். அதற்காக அவருக்கு பிஎஸ்எல் தொடரில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அதே போன்ற கடுமையான நடவடிக்கை இந்த முறையும் எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 23 Mar 2026 1:59 pm

மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம்.!- ராபின் உத்தப்பா சொல்வதென்ன?

எதிர்வரும் தொடரில் மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவதே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. ராபின் உத்தப்பா இந்நிலையில் சிஎஸ்கே குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ராபின் உத்தப்பா, கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுக்காது என்று நான் நினைக்கிறன். தோனியின் நிழலில் இருந்து விலகி ருதுராஜ் ஒரு முழுமையான கேப்டனாக உருவெடுக்க இன்னும் சில ஆண்டுகள் அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். கடந்த 2024 சீசன் முதல் தான் அவர் அணியை வழி நடத்தி வருகிறார். அவர் குறித்து யார் என்ன சொன்னாலும் பிரச்னை இல்லை என்று தனது பாணியில் அவர் அணியை வழிநடத்த வேண்டும். அதன் பிறகு அவரின் கேப்டன்ஷிப் சரியில்லை என்ற எண்ணம் வந்தால் சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம். தோனி எதிர்வரும் தொடரில் மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவதே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம். ஓய்வை நோக்கி பயணிப்பதால் தோனி இந்தமுறை பின்வரிசையிலேயே களமிறங்குவார் என்று ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.

விகடன் 22 Mar 2026 2:04 pm

மகுடம் சூடா மன்னர்கள்: ஐபிஎல் வரலாற்றில் 'ஆரஞ்சு தொப்பி'வெல்லாத 6 ஜாம்பவான்கள்! - யார் தெரியுமா?

ஐபிஎல் என்றாலே சிக்ஸர்களும், சதங்களும் தான் நம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'ஆரஞ்சு தொப்பி', ஒரு பேட்டருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம். விராட் கோலி முதல் கிறிஸ் கெயில் வரை பல வீரர்கள் இதை வென்றுள்ளனர். ஆனால், ஐபிஎல் தொடரின் முகமாகவே கருதப்படும் 6 ஜாம்பவான்கள், பல ஆயிரம் ரன்களைக் குவித்தும் இந்த ஒரு விருதை மட்டும் இதுவரை வென்றதில்லை. அந்தப் பட்டியல் இங்கே... Rohit Sharma ரோஹித் சர்மா  ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பையை முத்தமிட்ட கேப்டன்! ரன் மெஷினாக 7,000 ரன்களைக் கடந்தவர். ஆனால், ஒவ்வொரு சீசனிலும் மற்றவர்கள் ஓடும் ரன் பந்தயத்தில் ரோஹித் ஒரு 'நிதானமான' ஆட்டத்தையே கடைப்பிடித்தார். 2013-ல் இவர் 538 ரன்கள் எடுத்தபோது, மைக் ஹசி 700 ரன்களுக்கு மேல் எடுத்து இவரை முந்திச் சென்றார். 'கோப்பை முக்கியம்' என நினைத்தாரோ என்னவோ, இந்த ஆரஞ்சு தொப்பி மட்டும் இவருக்கு இன்னும் கைகூடவில்லை!  எம்.எஸ். தோனி தோனி ஏன் இதை வெல்லவில்லை என்பதற்குப் பின்னால் ஒரு லாஜிக் இருக்கிறது. அவர் ஒருபோதும் ரன்களுக்காக ஆடியதில்லை, வெற்றிக்காக மட்டுமே ஆடினார். எட்டாவது வரிசையில் இறங்கி வந்து 20 பந்துகளில் 50 ரன்கள் எடுக்கும் ஒருவரால், 600 ரன்களை ஒரு சீசனில் எடுப்பது கடினம். ஒருவேளை 'தல' தோனி ஆரம்பத்திலேயே களம் இறங்கியிருந்தால், இன்று பல ஆரஞ்சு தொப்பிகள் அவர் வீட்டில் இருந்திருக்கும்! தோனி |Dhoni ஏபி டி வில்லியர்ஸ் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் டி வில்லியர்ஸ், ஆர்சிபி அணிக்காகப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டங்களை ஆடியுள்ளார். 2016-ஆம் ஆண்டு இவர் 687 ரன்களைக் குவித்தபோது, அந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வெல்ல இவருக்கு அதிக வாய்ப்பிருந்தது. ஆனால், அதே சீசனில் விராட் கோலி 973 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்ததால், டி வில்லியர்ஸால் அந்த விருதை வெல்ல முடியாமல் போனது. Man of the finals! சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்திலிருந்தே ஒவ்வொரு சீசனிலும் மிகத் துல்லியமாக 400 முதல் 500 ரன்களைக் குவிக்கும் திறன் படைத்தவர். இருப்பினும், கிறிஸ் கெயில் அல்லது டேவிட் வார்னர் போன்ற அதிரடி வீரர்கள் ஒரு சீசனில் 700+ ரன்களைக் கடந்துவிடும்போது, ரெய்னாவால் அந்த உச்சத்தைத் தொட முடியாமல் போனது.  ஷிகர் தவான்  ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர். 2020-ல் 618 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான தவான், 6,700-க்கும் மேற்பட்ட ரன்களுடன் ரன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். 2020 சீசனில் 618 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பிக்கு மிக அருகில் வந்தார். துரதிர்ஷ்டவசமாக, கே.எல். ராகுல் அந்த சீசனில் அவரை விட அதிக ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். Rahane அஜின்க்யா ரஹானே நேர்த்தியான பேட்டிங் மற்றும் தொழில்நுட்பத்திற்குப் பெயர் பெற்ற ரஹானே, ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். 2012 சீசனில் 560 ரன்கள் எடுத்ததே இவரது மிகச்சிறந்த பங்களிப்பாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காகப் பல முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடியும், ஆரஞ்சு தொப்பி இவருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

விகடன் 22 Mar 2026 10:49 am