SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

``அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' - தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது கம்பீர் தாக்கு

இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அதிலும், நியூசிலாந்திடம் 3-0 எனவும், தென்னாப்பிரிக்காவிடம் 2-0 எனவும் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. அணித் தேர்வில் கம்பீர் அதிகமாக தலையிடுவதாலும், ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஐ.பி.எல் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்வதாலும், பேட்டிங்கோ பவுலிங்கோ அந்தந்தப் பிரிவின் நிபுணர்களைக் (ஸ்பெஷலிஸ்ட் ப்ளேயர்களை) தேர்வு செய்யாமல் ஆல்-ரௌண்டர்களைத் தேர்வு செய்வதாலும்தான் சொந்த மண்ணில் இவ்வாறு மோசமாக டெஸ்ட் தொடர்களை இழக்க நேர்கிறது என கம்பீருக்கு மீது விமர்சனங்கள் குவிந்தன. கவுதம் கம்பீர் - அஜித் அகர்கார் இத்தகைய விமர்சனங்களுக்கிடையிலும் டெஸ்ட் தோல்விகளுக்கு, “சாம்பியன்ஸ் டிரோபியும், ஆசியக் கோப்பையும் வென்றதும் இதே கம்பீர்தான்” என சம்பந்தமே இல்லாமல் வைட் பால் தொடர்களை ஒப்பிட்டார் கம்பீர். அவர் சொன்னதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அந்த இரண்டு தொடர்களும் துபாயில் நடந்தவை. இவ்வாறான சூழலில்தான் ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், “சொந்த மண்ணில் நமது டெஸ்ட் அணி இவ்வளவு பலவீனமாக இருப்பதை நான் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ரெட் பால் (Red Ball) ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்படாவிட்டால் இதுதான் நடக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா ஒரு ரெட் பால் ஃபார்மட் ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய நேரம் இது” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பார்த் ஜிண்டால் இந்த நிலையில், நேற்று தென்னாப்பிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்ற கையோடு, டெல்லி அணியின் இணை உரிமையாளரைப் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருக்கிறார் கம்பீர். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், “முடிவுகள் (டெஸ்ட் தொடரில்) எங்களுக்கு சாதகமாக வராததால் நிறைய பேச்சுகள் வந்தன. ஆனால் இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் இல்லை (கில்); இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் பேட்டிங் செய்யவில்லை. இதைப் பற்றி யாரும் பேசவில்லை.” `என்னை டார்கெட் பண்ணுங்க, ஆனா அந்த 23 வயது குழந்தையை விட்ருங்க’- ஹர்ஷித் ராணாவுக்காக கொதித்த கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் எந்த சாக்குபோக்கும் கூறாததால், உண்மையை யாரும் பேசக்கூடாது என்று அர்த்தமல்ல. அணி ஒரு மாற்றத்தில் (Transition) இருக்கும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஃபார்ம் பேட்ஸ்மேனான, 7 போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தவரான கேப்டனை இழந்தால் முடிவுகள் கடினமாத்தான் இருக்கும். India Cricket Team Captain Shubman Gill ஏனெனில் ரெட் பால் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லை. யாரும் அதைப் பற்றி பேசவில்லை. பிட்ச் பற்றி என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், கிரிக்கெட்டுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களெல்லாம் சில விஷயங்களைச் சொன்னார்கள். IND vs SA: கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல - ஏபிடி சொல்லும் காரணம் என்ன? ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் (பார்த் ஜிண்டால்) பயிற்சியாளர் பொறுப்பை பிரித்துக் கொடுப்பது பற்றிக் கூறினார். இது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரவர் தங்கள் வரம்புக்குள் இருப்பது நல்லது. நாம் ஒருவரின் வரம்புக்குள் செல்லாதபோது, அவர்களும் நம் வரம்புக்குள் வர எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கம்பீர் - Gautam Gambhir கம்பீரின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, `தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்டில் வெறும் 124 ரன்கள் டார்கெட்டை அடிக்கக் கூட 7 போட்டிகளில் 1,000 ரன்கள் அடித்த கேப்டன்தான் வேண்டுமா? அவர் மட்டும் இந்திய அணியில் வீரரா மற்றவர்கள் எல்லாம் வெறுமனே அணியில் இருக்கிறார்களா?' என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. முன்னதாக, 2018-ல் கொல்கத்தா அணி கம்பீரை ஏலத்தில் விட்டபோது பார்த் ஜிண்டாலின் டெல்லி அணி ரூ. 2.80 கோடிக்கு எடுத்து அணியின் கேப்டனாக்கியது. ஆனால், கம்பீர் தலைமையில் டெல்லி அணி மோசமாக ஆடியதால் பாதியிலேயே தொடரிலிருந்து விலகியதோடு தனது சம்பளத்தையும் கம்பீர் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியா இவ்வாறு மோசமாகத் தோல்வியடையும்போது கேள்வியே எழுப்பக்கூடாது என்பது என்று கம்பீர் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்?

விகடன் 7 Dec 2025 5:53 pm

``திருமணம்‌ ரத்தாகிவிட்டது'' - முதன்முதலாக‌ மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர்‌ கிரிக்கெட்‌ அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர்‌ பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. ஆனால், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அன்று திருமணம் நடக்கவில்லை. அதே அன்று பலாஷ் முச்சாலுக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இன்ஸ்டா ஸ்டோரி முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின் இதன் பின், இவர்களது திருமணம் நின்றுவிட்டது. இருவரும் பிரிந்துவிட்டனர் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி இருந்தன. ஸ்டோரி இந்த நிலையில், திருமணம்‌ நின்றது குறித்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி மந்தனா. அதில், சில வாரங்களாக, என்னை குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்போது நான் பேச வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். நான் ஒரு பிரைவெட் நபர். என்னுடைய விஷயங்களையும் அப்படி வைக்கவே நினைக்கிறேன். ஆனால், எனது திருமணம் ரத்தாகி விட்டது என்பதை தெளிவாக்க விரும்புகிறேன். ஸ்மிருதி மந்தனா இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள‌ நினைக்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் பிரைவசியையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரையும் ஒரு விஷயம் இயக்குகிறது என்று நான் நம்புகிறேன். அப்படி எனக்கு என்னுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது‌ மிக முக்கியம். எவ்வளவு காலம்‌ முடியுமோ அவ்வளவு காலம் இந்தியாவிற்காக நிறைய விளையாடுவேன். கோப்பைகளை வெல்லுவேன்.‌ இது தான்‌ என்னுடைய லட்சியம் என்று‌ குறிப்பிட்டுள்ளார். 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

விகடன் 7 Dec 2025 3:13 pm

IND v SA: தெ.ஆ-வை சுருட்டிய குல்தீப், பிரசித்; `சுட்டிப் பையன்'ஜெஸ்வால் 116* ; தொடரை வென்ற இந்தியா!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா போட்டி வென்றதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கின. அதிலும், டெஸ்ட் தொடரை இழந்ததற்கு ஒருநாள் தொடரை வென்று சரிக்கட்ட வேண்டுமென்ற தீவிரத்தோடு இந்தியா களமிறங்கியது. இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் அதற்கேற்றாற்போலவே, 20 போட்டிகளுக்குப் பிறகு இந்தியா டாஸ் வென்றது. இந்திய கேப்டன் கே.எல். ராகுல் அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மாவை சேர்த்து பவுலிங்கைத் தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்கா அணியில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பின்னர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர். ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் பந்தில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால், கடந்த இரு போட்டிகளாக 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்து வந்த குயின்டன் டி காக், இப்போட்டியில் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கேப்டன் டெம்பா பவுமா அவருக்கு உறுதுணையாக ஆட டி காக் அரைசதமும் அடித்தார், கூடவே இவ்விருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. இந்த நேரத்தில் ஜடேஜா குறுக்கே வந்து பவுமாவின் விக்கெட்டை எடுத்து பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அடுத்த சில ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் பிரீட்ஸ்கே, மார்க்ரமை அவுட்டாக்கினார். Dewald Brevis - Quinton de Kock விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் தனது அதிரடியை நிறுத்தாத டி காக், 80 பந்துகளில் சிக்ஸருடன் சதமடித்தார். ஆனால் சதமடித்த சற்று சில ஓவர்களிலேயே அவரையும் அவுட்டாக்கினார் பிரசித் கிருஷ்ணா. அடுத்து கைகோர்த்த டெவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென் நிதானமாக ஆடத் தொடங்கிய வேகத்தில் அவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் விக்கெட் எடுத்து இன்னிங்ஸை முழுமையாக இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார் குல்தீப் யாதவ். இறுதியாக 48-வது ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா. பிரசித் கிருஷ்ணாவும், குல்தீப் யாதவும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக வெடிக்கும் டி காக்! அதைத்தொடர்ந்து 271 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ரோஹித்தும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்கினர். மிக மிக நிதானமாக ஆடிய இந்தக் கூட்டணி பவர்பிளேவில் விக்கெட் எதுவும் விடாமல் 48 ரன்கள் அடித்தது. பின்னர், ரன் அடிப்பதில் கொஞ்சம் வேகம் கூட்டிய ரோஹித் 54 பந்துகளில் அரைசதமடித்தார். அடுத்த ஓவரிலேயே இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களையும் கடந்த அதே வேளையில், அடிக்கத் தொடங்கிய ஜெய்ஸ்வால் 75 பந்துகளில் அரைசதமடித்தார். Yashasvi Jaiswal - யஷஸ்வி ஜெய்ஸ்வால் 25 ஓவர்களாக இந்த ஜோடி விக்கெட்டும் விடாமல் 150 ரன்களைக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில், கேஷவ் மகாராஜ் ரோஹித்தை அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்தார். ஒன்டவுனில் விராட் கோலி களமிறங்கினார். மறுமுனையில் பவுண்டரி சிக்ஸருமாக விளாசத் தொடங்கிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் சதமடித்தார். தனது முதல் 60 பந்துகளில் வெறும் 36 ரன்கள் மட்டுமே அடித்த ஜெய்ஸ்வால் அடுத்த 50 பந்துகளில் 60+ ரன்கள் அடித்து சதமடித்தார். W.O.W Virat Kohli at his fluent best That's smashed into the stands with some conviction Updates ▶️ https://t.co/HM6zm9o7bm #TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @imVkohli pic.twitter.com/1EdwUbQj66 — BCCI (@BCCI) December 6, 2025 அவரைத்தொடர்ந்து கோலியும் வேகமாக ஆடி 40 பந்துகளில் அரைசதமடித்தார். இறுதியில் 39-வது ஓவரில் கோலியின் பேக் டு பேக் பவுண்டரி மூலம் இந்தியா 271 ரன்களைத் தொட்டு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2 - 1 எனத் தொடரை வென்றது. 116 ரன்கள் அடித்து நாட் அபிட் பேட்ஸ்மேனாகக் கடைசிவரைக் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது வென்றார். இத்தொடரில் இரண்டு சதம், ஒரு அரைசதம் என 302 ரன்கள் குவித்த கோலி தொடர் நாயகன் வென்றார். IND vs SA: நேற்றைய ஆட்டத்தில் 2016-18 ஆம் ஆண்டுகளின் கோலி வெர்ஷனைப் பார்த்தோம் - குல்தீப் யாதவ்

விகடன் 6 Dec 2025 9:49 pm

ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக வெடிக்கும் டி காக்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. 20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மா உள்ளே வந்தார். தென்னாப்பிரிக்காவில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். Quinton de Kock - குயின்டன் டி காக் பின்னர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல் போட்டியில் டக் அவுட் ஆன ரிக்கல்டன் இப்போட்டியில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால், முதல் இரு போட்டிகளில் 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்த டி காக், இப்போட்டியில் அப்படியே அதற்கு நேர்மாறாக ஆடத் தொடங்கினார். கேப்டன் டெம்பா பவுமா சப்போர்ட் இன்னிங்ஸ் ஆட மறுமுனையில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் கடந்தார் டி காக். இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தபோது பவுமா அவுட்டானார். இருப்பினும் தனது ஆட்டத்தை நிறுத்தாத டி காக், 80 பந்துகளில் சிக்ஸருடன் சதமடித்தார். இது டி காக் ஓய்வைத் (Retirement) திரும்பப் பெற்று வந்த பிறகு தனது 6-வது போட்டியில் அடிக்கும் இரண்டாவது சதம். 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த டி காக், கடந்த செப்டம்பரில் தனது ஓய்வைத் திரும்பப் பெற்றுக்கொண்டு நவம்பரில் பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கினார். Quinton de Kock - குயின்டன் டி காக் அந்தத் தொடரில் 3 போட்டிகளிலும் இரண்டு அரைசதம், ஒரு சதம் என ODI கரியரில் தனது இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாகத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் ஒற்றை இலக்கத்தை தாண்டாமல் அவுட்டாகி வந்த டி காக் இன்றைய போட்டியில் சதமடித்து 106 ரன்களில் அவுட்டானார். இந்த சதத்துடன் சச்சின், ரோஹித் ஆகியோரின் சாதனைகளைச் சமன்செய்ததோடு மேலும் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். Hockey Men's Junior WC: திக் திக் கடைசி நிமிடங்கள்; பெல்ஜியமை வென்று அரையிறுதிக்குள் சென்ற இந்தியா! சாதனைப் பட்டியல்! * ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்களாக, தலா 7 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் (UAE), சயீத் அன்வர் (UAE), ஏபி டிவில்லியர்ஸ் (இந்தியா), ரோஹித் சர்மா (இங்கிலாந்து) ஆகியோர் இருந்த நிலையில், டி காக் இன்று இந்தியாவில் அடித்த 7-வது சதத்தின் மூலம் மேற்குறிப்பிட்டவர்களின் சாதனையை சமன் செய்திருக்கிறார். * ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் அணிக்கெதிராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தலா 6 சதங்களுடன் கில்கிறிஸ்ட் (இலங்கை), சங்ககாரா (இந்தியா) ஆகியோர் முதலிடத்தில் இருந்த நிலையில், அவர்களை டி காக் ஓவர்டேக் செய்து முதலிடத்துக்கு வந்திருக்கிறார். Quinton de Kock - குயின்டன் டி காக் * ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கெதிராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை டி காக் சமன் செய்திருக்கிறார். ஆனால், சனத் ஜெயசூர்யா இந்தியாவுக்கெதிராக 89 ஒருநாள் போட்டிகள் ஆடியிருக்கிறார். டி காக் இந்தியாவுக்கெதிராக வெறும் 23 போட்டிகள்தான் ஆடியிருக்கிறார். * ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா 23 சதங்களுடன் 10 வருடங்களாகத் தனியாளாக முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் டி காக் இன்று தனது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் 23-வது சதத்தை அடித்து சங்ககாராவின் சாதனையை சமன் செய்திருக்கிறார். கிரிக்கெட் போட்டியில் முட்டிபோடாத விவகாரம் ... வருத்தம் தெரிவித்த குவின்டன் டிகாக்... மாற்றம் ஏன்?

விகடன் 6 Dec 2025 7:49 pm

Hockey Men's Junior WC: திக் திக் கடைசி நிமிடங்கள்; பெல்ஜியமை வென்று அரையிறுதிக்குள் சென்ற இந்தியா!

தமிழ்நாட்டில் நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரானது காலிறுதிச் சுற்றை எட்டியிருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவில் 6 குழுக்களில் முதலிடம் பிடித்த 6 அணிகள் மற்றும் இரண்டாமிடம் பிடித்த 6 அணிகளில் டாப் 2 அணிகள் என ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை இதில், ஸ்பெயின் vs நியூசிலாந்து போட்டியில் வெல்லும் அணியும், இந்தியா vs பெல்ஜியம் போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதும். அதேபோல், பிரான்ஸ் vs ஜெர்மனி போட்டியில் வெல்லும் அணியும், நெதர்லாந்து vs அர்ஜென்டினா போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதும். இந்த நிலையில், சென்னையில் இன்று பிற்பகல் முதல் காலிறுதிப் போட்டிகள் தொடங்கின. மதியம் 12:30 மணிக்கு ஆரம்பித்த முதல் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினும், நியூசிலாந்தும் மோதின. இப்போட்டியில் ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் அணி 4 - 3 என நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்தது. Bruno Avila hits the target just in time!! ⏰ Spain are through to the semi-finals of the FIH Hockey Men’s Junior World Cup Tamil Nadu 2025 winning 4-3, thanks to Avila’s buzzer beating effort! Stream all the matches live on https://t.co/udLVbj7zoI #Hockey #RisingStars … pic.twitter.com/z7cYJEgxXv — International Hockey Federation (@FIH_Hockey) December 5, 2025 அதைத்தொடர்ந்து, 3 மணியளவில் தொடங்கிய பிரான்ஸ் vs ஜெர்மனி காலிறுதிப் போட்டியில் இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் தலா 2 கோல் அடித்தன. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. Jasper Ditzer with another stunner! #Risingstars Germany overcame the French challenge to progress to the semis of the FIH Hockey Men's Junior World Cup Tamil Nadu 2025. Stream all the matches LIVE on https://t.co/71D0pOq2OG #Hockey pic.twitter.com/lwqKErHPE8 — International Hockey Federation (@FIH_Hockey) December 5, 2025 அதில் பிரான்ஸ் தனது முதல் 4 வாய்ப்புகளில் 1 கோல் மட்டுமே அடித்தது. மறுமுனையில் ஜெர்மனி தனது முதல் 4 வாய்ப்புகளில் 3 கோல் அடித்து வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் நெதர்லாந்து vs அர்ஜென்டினா காலிறுதிப் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் அர்ஜென்டினா 1 - 0 நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' - இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி பின்னர் கடைசி காலிறுதிப் போட்டியாக இரவு 8 மணிக்கு இந்தியா vs பெல்ஜியம் போட்டி தொடங்கியது. போட்டியின் 12-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தது. அடுத்த 30 நிமிடங்களுக்கு கோல் போட முடியாமல் பின்தங்கிய நிலையில் இந்தியா போராடிக்கொண்டிருந்த வேளையில், கேப்டன் ரோஹித் 44-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். அடுத்த 3-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஷர்தானந்த் திவாரி ஒரு கோல் அடித்தார். 2 - 1 என இந்தியா முன்னிலையுடன் ஆடிவந்த நிலையில், பெல்ஜியம் வீரர் ரோஜ் நாதன் ஆட்டத்தின் கடைசி ஒரு நிமிடத்துக்கு கோல் அடித்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் போட்டி 2 - 2 என சமநிலை ஆனதால் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. Hockey Men's Junior WC - India vs Belgium அதில் பெல்ஜியம் தனது முதல் வாய்ப்பிலேயே கோல், இந்தியா தனது முதல் வாய்ப்பில் கோல் அடிக்கத் தவறியது. ஆனால், ரிவ்யூவில் இந்திய வீரர் பந்தை அடிப்பதற்கு முன்பாகவே கோல் கீப்பர் நகர்ந்ததால் இந்தியாவுக்கு முதல் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அதில் இந்திய வீரர் கோல் அடித்தார். அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது வாய்ப்புகளில் இரு அணிகளும் கோல் அடித்தன. நான்காவது வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்காத தவற, கடைசி வாய்ப்பிலும் பெல்ஜியம் கோல் அடிக்கத் தவறியது. இந்த சூழலில் 3 - 3 என இரு அணிகளும் இருக்க, இந்தியா தனது கடைசி வாய்ப்பில் கோல் அடித்து 4 - 3 என வென்று அரையிறுதிக்குச் சென்றது. பெனால்ட்டி ஷூட் அவுட்டில் பெல்ஜியத்தின் இரு வாய்ப்புகளை முறியடித்த இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். வரும் ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 7) நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில், ஸ்பெயினை இந்தியாவும், ஜெர்மனியை அர்ஜென்டினாவும் எதிர்கொள்ளவிருக்கின்றன. மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album

விகடன் 5 Dec 2025 10:35 pm

மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album

ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள். ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்

விகடன் 5 Dec 2025 7:57 pm