IND vs ZIM : “ஜிம்பாப்வே ஓட இந்த டெக்னிக் ரொம்ப இம்ப்ரசிவ்-ஆ இருந்துச்சு” - சூர்யகுமார் யாதவ்
சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் நடந்து முடிந்த இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்னர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “அஹமதாபாத் மேட்ச்ல என்ன நடந்துச்சுங்கிறதை நாங்க அதிகமா யோசிக்கல. எங்களோட வீடியோ அனலிஸ்ட் கொடுத்த பாசிட்டிவ் விஷயங்களை வச்சு தெளிவா களமிறங்கினோம். சூர்யகுமார் யாதவ் டாப் ஆர்டர்ல இருந்து ஏழாவது இடம் வரை எல்லாரோட பங்களிப்பும் சிறப்பா இருந்துச்சு. பந்துவீச்சுல இன்னும் கொஞ்சம் கச்சிதமா இருந்திருக்கலாம். அடுத்ததா வெஸ்ட் இண்டீஸ் கூட விளையாடும்போது சின்ன சின்ன தவறுகளை சரி பண்ணிக்குவோம். ஜிம்பாப்வே வீரர்களைப் கண்டிப்பா பாராட்டணும். அவங்க பேட்டிங் அருமையா இருந்துச்சு. பவர் பிளேயை சரியா பயன்படுத்தி, அப்புறம் வேகமா ரன் ஏத்துனது ரொம்ப இம்ப்ரசிவ்-ஆ இருந்துச்சு. இப்போதைக்கு ஒரு நாள் ஓய்வு. அப்புறம் கொல்கத்தா போயி, வெஸ்ட் இண்டீஸ் மேட்சுக்கான பிளானை ரெடி பண்ண வேண்டியதுதான். என்றார். IND vs ZIM : “தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்-ஐ பாத்தீங்களா?” – ஹர்திக் பாண்ட்யா பதில்
IND vs ZIM : “தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்-ஐ பாத்தீங்களா?” – ஹர்திக் பாண்ட்யா பதில்
சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை, இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் முக்கிய பங்களிப்பாக 50 (23) ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா. பின்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றது குறித்து அவர் கூறுகையில், ``மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால், 23 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பது சற்று வித்தியாசமாகவே தோன்றும். ஆனால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது என்று நினைக்கிறேன். Hardik Pandya நான் அதிகமாக பலத்துடன் அடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன் என்று உணர்ந்தேன். அதற்குப் பிறகு ஆட்டத்தின் போக்கில், பந்தை சரியான நேரத்தில் அடித்து சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று உணர்ந்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில், இது ஒரு நல்ல போட்டி. ஏனெனில் என் ரிதத்தை தொடர்ந்து வைத்திருக்க இது உதவியது. கடந்த சில போட்டிகளில் நான் நினைத்தபடி விளையாட முடியாமல் போனது. அதனால் இப்போது மிகவும் திருப்தியாக இருக்கிறேன். என்றார் முன்னதாக நடந்த தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியை பார்த்தீர்களா என்று கேட்டபோது, 'ஆமாம், அந்த போட்டியை நாங்கள் எல்லோரும் கவனித்துக்கொண்டே இருந்தோம். இப்போது முக்கியமானது நல்ல கிரிக்கெட் விளையாடுவது. நிச்சயமாக அந்த போட்டியை கவனித்தோம். ஆனால் அதே நேரத்தில், எங்கள் போட்டி முடிந்தவுடன், இது எங்களுடைய ஆட்டம் என்று முழுக் கவனமும் போட்டியில் செலுத்தினோம். என்றார் Hardik Pandya அவரின் பந்துவீச்சு குறித்து கூறுகையில், 'புதிய பந்துடன் பந்துவீசுவது எனக்கு பிடிக்கும். பந்து ஸ்விங் ஆகிறது. கடவுள் அருள் செய்துள்ளார். இன்ஸ்விங், அவுட்ஸ்விங் – இரண்டையும் வீசும் திறன் எனக்கு உள்ளது. அதனால் எனக்கு இது மிகவும் பிடிக்கும். இதனால் விக்கெட்டுகளை எடுக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும் இருக்கிறது. ஆகவே, மிகவும் திருப்தி என்றார். 'இமாலய இலக்கோடு ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்திய அணி!' - சேப்பாக்கத்தில் சூர்யா & கோவின் ஜாலி சம்பவம்!
Rinku Singh: 'ஏழ்மையை வென்று மகனை கிரிக்கெட்டராக்கிய தந்தை' - ரிங்குவின் தந்தை புற்றுநோயால் மரணம்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். இவரின் தந்தை கான்சந்த் சிங் LPG சிலிண்டர் டெலிவரி செய்தவர். கடின உழைப்பால் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து உயர்ந்த ரிங்கு சிங், 2018-19 ரஞ்சி டிராபியில் உத்தரப் பிரதேசத்திற்காக விளையாடி பிரபலமானார். 2023 ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக குஜராத் டைட்டன்ஸிற்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 தொடர்ச்சியான சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இந்த நிலையில், ரிங்கு சிங்கின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். ரிங்கு சிங் - கான்சந்த் சிங் இதற்கிடையில் தந்தையின் கிரிட்டிக்கலான நிலையைக் கேள்விப்பட்ட ரிங்கு சிங், சென்னையில் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 'சூப்பர் 8' போட்டிக்கு முன்னதாக அணியிலிருந்து தற்காலிகமாக விலகினார். பின்னர் அவர் மீண்டும் அணியில் இணைந்த போதிலும், நேற்றைய ஆட்டத்தில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில்தான் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, இந்த வார தொடக்கத்தில் மோசமடைந்ததை அடுத்து அவர் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். ரிங்கு சிங்கின் தந்தையின் மரணத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ``எனது இதயப்பூர்வமான எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ரிங்கு சிங்கின் குடும்பத்தினருடன் இருக்கும் என இரங்கல் தெரிவித்துள்ளார். Rinku Singh: நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரை மணக்கும் ரிங்கு சிங் - யார் அந்த ப்ரியா சரோஜ்?
'இமாலய இலக்கோடு ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்திய அணி!' - சேப்பாக்கத்தில் சூர்யா &கோவின் ஜாலி சம்பவம்!
சேப்பாக்கத்தில் நடந்த உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வே வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்திருக்கிறது இந்திய அணி. Ind vs Zim இந்திய அணி கடந்த போட்டியில் மிக மோசமாக பேட்டிங் ஆடி வீழ்ந்திருக்கிறது. இந்தியாவின் வீக்னஸ் மீது அட்டாக்கை தொடுக்கும் வகையில் டாஸை வென்று முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா. இந்திய அணியின் லெவனில் வாஷிங்டன் சுந்தர் வெளியே அமர சாம்சன் உள்ளே வந்திருந்தார். சாம்சனும் அபிஷேக்கும் ஓப்பனர்கள். சாம்சன் இருந்ததால் ஆரம்பத்திலேயே ஸ்பின்னை கொண்டு வராமல் தவிர்த்தது ஜிம்பாப்வே. எந்த பலனும் இல்லை. இந்திய அணி அட்டாக் மோடில் வெளுத்தெடுத்தது. சாம்சன் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு 15 பந்துகளில் 24 ரன்களை எடுத்து முசரபாணியின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். நம்பர் 3 இல் இஷன் கிஷன் வந்தார். அபிஷேக் சர்மா அதிரடியை விடவில்லை. எவன்ஸ், நகரவா பந்துகளில் தொடர்ந்து சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு சேப்பாக்க ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்ப்ளேயில் மட்டும் இந்திய அணி 80 ரன்களை சேர்த்திருந்தது. பவர்ப்ளே முடிந்ததும் ராசாவும் பென்னட்டும் பந்தை கையிலெடுத்தனர். ஸ்பின்னர்களுக்கு எதிராக கொஞ்சம் பார்த்து ஆடும் முடிவை எடுத்தது இந்திய இணை. அடுத்த நான்கு ஓவர்களுக்கு ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்தனர். Hardik இதற்கு மேலும் பொறுமை காட்டினால் ஜிம்பாப்வேயின் கை ஓங்கும் எனும் சமயத்தில் இருவரும் ஸ்பின்னர்களையும் அட்டாக் செய்தனர். ஆப் சைடில் பீல்டை டைட்டாக வைத்து பேட்டருக்கு வெளியே பந்து திரும்பும்படி சமயோஜிதமாக வீசிக்கொண்டிருந்தார் ராசா. Against the Spin ஆக அடிக்க கொஞ்சம் சிரமம் இருந்தாலும் இஷான் கிஷன் கடுமையாக முயன்று பவுண்டரிகளை விரட்டினார். 24 பந்துகளில் 38 ரன்களை எடுத்த இஷான் ராசாவின் பந்திலேயே அவுட்டும் ஆனார். அபிஷேக் அரைசதத்தை கடந்து மபோசாவின் பந்தில் அவுட் ஆனார். டச்சில் இருந்த பேட்டர்கள் அவுட் ஆனதால் இந்திய அணியின் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 5 ஓவர்களை திலக் வர்மாவும் ஹர்திக் பாண்ட்யாவும் கையிலெடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை சேர்த்தது இந்திய அணி. ஹர்திக்கும் திலக்கும் யார்க்கிங் லெந்த் பந்துகளையும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் ஜிம்பாப்வே வேகங்கள் வீசினர். எதுவும் இருவரையும் கட்டுப்படுத்தவில்லை. சிக்சர்கள் சரளமாக பறந்தன. திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்களையும் ஹர்திக் 23 பந்துகளில் 50 ரன்களையும் சேர்த்திருந்தனர். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை எடுத்தது. India ஜிம்பாப்வேவுக்கு 257 என்கிற இமாலய டார்கெட். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடந்த போட்டியிலும் ஜிம்பாப்வேவுக்கு இப்படியொரு டார்கெட்தான். ஆனால், அவசரப்பட்டு ஆடி 18 வது ஓவரில் 147 ரன்களிலேயே ஆல் அவுட் ஆகியிருப்பர். வெல்ல வேண்டும் என்பதை விட கடந்த போட்டியில் செய்த தவறுகளை இந்தப் போட்டியில் செய்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே ஜிம்பாப்வே கவனமாக இருந்தது. பவர்ப்ளேயில் விக்கெட்டை விடவே இல்லை. ஆனால், 44 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர். ஓப்பனர்கள் மருமனியும் பென்னட்டும் நின்று ஆடியிருந்தனர். பவர்ப்ளேக்கு பிறகு வேகமெடுக்க நினைத்தனர். ஆனால், அப்போதே ரன்ரேட் 15 க்கு மேல் சென்றுவிட்டது. மருமனி அக்சர் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார். ராசாவும் பென்னட்டும் முடிந்தளவுக்கு அதிரடியாக ஆடி தோல்வி வித்தியாசத்தை குறைக்க நினைத்தனர். சிவம் துபேவின் ஒரே ஓவரில் 26 ரன்களெல்லாம் வந்தது. ஆனால், எட்ட வேண்டிய ஸ்கோர் இமாலயம் என்பதால் இதெல்லாம் போதவில்லை. ராசா அர்ஷ்தீப் சிங்கின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பென்னட் கடைசி வரை நின்று 97 ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு இது போதவில்லை. இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி இன்னும் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான அடுத்த போட்டியும் இந்தியாவுக்கு Do or Die போட்டிதான்.
T 20 WC: பிரகாசமாகும் இந்தியாவின் செமி ஃபைனல் வாய்ப்பு; அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க அணி!
அகமதாபாத்தில் இன்று (பிப். 26) நடைபெற்ற முக்கியமான சூப்பர் 8 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் அவர்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். இந்தப் போட்டி இந்தியாவின் செமி ஃபைனல் வாய்ப்பையும் தீர்மானிக்கும் வகையில் இருந்ததால், இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இது பார்க்கப்பட்டது. SA VS WI டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கிங் மற்றும் ஹோப் களமிறங்கி, ஆட்டத்தின் முதல் இரண்டு ஓவர்களில் 29 ரன்களை எடுத்துக் கொண்டு அதிரடியாக தொடங்கினர். ஆனால் அந்த வேகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கில், தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்திற்கு சிக்கி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். 11 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் ரொமாரியோ ஷெபார்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் இணைந்து பொறுப்பான கூட்டணியை அமைத்தனர். தேவையான நேரத்தில் ரன்களை சேர்த்த இந்த ஜோடி, 89 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 140 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகும் நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 176/8 என்ற ஸ்கோருக்கு உயர்த்தினர். இதில் அதிகபட்சமாக ஹோல்டர் – 49 ரன்கள், ஷெபார்ட் – 52 ரன்கள் எடுத்திருந்தனர். தென்னாப்பிரிக்க அணி 177 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்டும் நோக்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, கேப்டன் ஏய்டன் மார்க்ரத்தின் 82 (46) என்ற அதிரடி ஆட்டத்தின் உதவியுடன், ஒரே ஒரு விக்கெட் இழப்பிற்கு 16.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, முதல் அணியாக செமி ஃபைனலில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்தது. 82 ரன்கள் குவித்த மார்க்ரம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் செமி ஃபைனல் வாய்ப்பு மேலும் பிரகாசமாகியுள்ளது. ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்ததன் காரணமாக இந்தியாவின் நெட் ரன் ரேட் மைனஸில் இருந்த நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் இருந்தது. ஜிம்பாப்வே அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற அபார வெற்றியால் பிளஸில் இருந்த ரன் ரேட், தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம் சரிந்துள்ளது. இந்திய அணி இப்போது இந்தியா தனது அடுத்த இரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்றால், ரன் ரேட் கணக்குகளைப் பொருட்படுத்தாமல் நேரடியாக செமி ஃபைனலுக்கு முன்னேற முடியும். தற்போது இந்தியா தனது இரண்டாவது சூப்பர் 8 போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது.
SL vs NZ: எதிர்மறையான சூழலை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்- கேப்டன் தசுன் ஷனகா வேண்டுகோள்
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று ( பிப். 25) இலங்கை அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நிறைய நேரங்களில் நாம் காண்பதும் கேட்பதும் எதிர்மறையான விஷயங்களாகவே இருக்கின்றன. SL vs NZ எதிர்மறையான சூழல் கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் எவ்வளவுதான் நேர்மறையாக (positive) இருக்க முயன்றாலும், வெளியே எதிர்மறையான சூழலே நிலவுகிறது. இது இலங்கை கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய இழப்பு. நமக்கு இருக்கும் ஒரே விளையாட்டு இதுதான், இதை நம்மால் பாதுகாக்க முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை. அரசாங்கத்திடம் அவர் விடுத்த வேண்டுகோள் ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்? ஆம், நாங்கள் உலகக்கோப்பையில் தோற்றுவிட்டோம், அதற்கான காரணங்களும் எங்களுக்குத் தெரியும். எல்லோருக்கும் கவலைகள் உண்டு. அதைப்பற்றி பேசி சரி செய்வதை விட, எதிர்மறை எண்ணங்கள்தான் முன்னுக்கு வருகின்றன. நாங்கள் விளையாடிவிட்டுச் சென்றுவிடுவோம், ஆனால் வருங்காலத்தில் வரப்போகும் வீரர்களுக்காக, அவர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த (எதிர்மறை விமர்சனங்களை) நிறுத்த முடிந்தால் அது அவர்களுக்கு நல்லது. தசுன் ஷனகா ரசிகர்களிடம் மன்னிப்பு அணி எப்போதும் சிறப்பாக செயல்படவே முயற்சி செய்கிறது. அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எங்களால் நியாயம் செய்ய முடியவில்லை. ரசிகர்களுக்கு நாங்கள் கொடுக்க நினைத்ததைக் கொடுக்க முடியாமல் போனதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று பேசியிருக்கிறார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக சஞ்சு சாம்சன் ஆடுவாரா? - என்ன சொல்கிறார் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர்!
உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். கோடக் அவர் பேசியதாவது, 'கடந்த ஆட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் விளையாடியதிலேயே மிகவும் மோசமான ஒன்று. இந்த உலகக் கோப்பையில் எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடவில்லை. அதற்காக ஆடுகளத்தைக் (Pitch) குறை சொல்ல முடியாது. எதிரணிக்கு ஏற்றவாறு நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயிடம் தோற்றது எங்களுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. என்றவர், அபிஷேக் சர்மா குறித்த கேள்விக்கு, ``ஒரு வீரரைப் பற்றி மட்டும் அதிகம் சிந்திப்பது எனக்குப் பிடிக்காது, அது அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். அவர் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். விரைவில் அவர் ஒரு பெரிய ஸ்கோரை எடுப்பார். சஞ்சு சாம்சன் & ரிங்கு சிங் குறித்து பேசிய அவர், ``சஞ்சு எப்போதும் போலவே இயல்பாக விளையாடுவார். அவரை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரிங்கு சிங்கும் மீண்டும் அணியில் இணைவார் என நம்புகிறோம். பத்திரிகையாளர் சந்திப்பு குல்தீப் யாதவ் குறித்த கேள்விக்கு, ``டி20 போட்டிகளில் 8-வது வீரர் வரை பேட்டிங் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அனைவரும் சிறந்த வீரர்கள்தான், ஆனால் 11 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இந்தியாவில் உலகக் கோப்பை நடப்பது ஓர் அழுத்தம் தான். கவலை மற்றும் பதற்றத்தை கையாள்வது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை நேர்மறையாக அணுக வேண்டும். எங்கள் விளையாடும் முறையை (Template) திடீரென மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். நாளை முதல் மீண்டும் ஒரு நல்ல உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு வெற்றியைத் தேடித்தந்த அதே பாணியில் தான் தொடர்ந்து விளையாடுவோம் என்றார்.

27 C