T20 WC: வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு?
டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றின் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. PAK vs SL match இதில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ICC T20 WC 2026: `நாங்க `Minnows' கிடையாது!' - சரித்திரம் படைத்த சிறிய அணிகள்! எதிர்காலம் என்ன? இந்நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்றபோதே வாரியம் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. pakistan players முக்கியத் தொடர்களில் தொடர்ந்து பாகிஸ்தான் அணி சொதப்பி வருவதால், வீரர்களுக்கு இந்தப் பெரிய தொகையை அபராதமாக விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
IND vs WI: வயிற்றுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி இருக்கும்; ஆனா.! - சூர்யா குமார் யாதவ்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான Do or Die மேட்சில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் 196 என்ற இமாலய இலக்கை துரத்தி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்திருக்கிறது இந்திய அணி. இந்த வெற்றி குறித்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேசுகையில் ``நிச்சயமா இது ஒரு அருமையான உணர்வு. இந்த போட்டி காலிறுதி ஆட்டம் மாதிரி தான் இருந்தது. அந்த அழுத்தமான சூழ்நிலையில், எங்கள் வீரர்கள் காட்டிய மனஉறுதியே பெரிய விஷயம். எல்லாரும் திட்டமிட்டபடியே பத்துவீசியதாக நான் நினைக்கிறேன். 200 ரன்கள், இந்த மைதானத்தில் எப்போதும் சேஸ் பண்ணக்கூடிய நல்ல ஸ்கோர் தான். மைதானத்தில் இருந்த பனி காரணமா பந்து பேட்டுக்கு கொஞ்சம் எளிதாக வந்தது. அதனால் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு போகணும்னு தான் எங்களோட திட்டம். ஒரு அணியாக இங்க இருப்பதில் ரொம்ப சந்தோஷம். முதல் போட்டியிலிருந்து நாங்க விளையாடிய விதத்தைப் பார்த்தா, மும்பைக்குப் போக தகுதி இருக்குன்னு நினைக்கிறேன். ஆனா இப்போ அதைப்பத்தி யோசிக்க மாட்டோம். பிளைட் எடுத்து மும்பை போவோம், அங்க போயி என்ன பண்ணணும்னு பார்க்கலாம். மக்களிடம் எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும். ஆனால் அதே நேரம், மைதானத்தில் அணியாக என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். எங்கள் வீரர்களிடம் இதையே தான் சொன்னேன். ஆம், அழுத்தம் இருக்கும், மைதானத்திற்கு வரும் எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும், வீட்டில் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஆட்டம் வரும்போது, நீங்கள் மேலும் தைரியமாக இருக்க வேண்டும், உங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும். அழுத்தத்தில் நேர்மறையாக இருக்க வேண்டும். அதை நாங்கள் நன்றாகவே செய்தோம் என நினைகிறேன். நெருக்கடி இருக்கும், வயிற்றுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி ஒரு பதட்டம் இருக்கும். ஆனா அந்த உணர்வுகளை நாம் எப்படி கையாளுறன்னு தான் முக்கியம். நாம் இந்தியாவில் விளையாடுகிறோம். சொந்த மண்ணில் சொந்த அணி விளையாடுகிறது. அதிக அழுத்தம் இருக்கும்தான். ஆனால் அதை எப்படி புரிந்துகொள்கிறோம், எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம். என்றார், 'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' - உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!
'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' - உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் ஆகியிருக்கிறார் சாம்சன். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி உலகக்கோப்பையின் அரையிறுதிக்குள்ளும் நுழைந்திருக்கிறது. போட்டிக்குப் பிறகு அவர் பேசியவை Samson சாம்சன் பேசியதாவது, 'கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான். என்னுடைய பயணம் எப்போதும் தனிச்சிறப்பு கொண்டது. நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தது. ‘என்னால முடியுமா? நான் இந்த இடத்துக்கு வர முடியுமா?’ன்னு என்னையே நான் சந்தேகப்பட்ட தருணங்களும் நிறைய இருந்திருக்கு. ஆனா நம்பிக்கையை விடல. இன்று எனக்கு ஆசீர்வாதம் தந்த கடவுளுக்கு நன்றி. இந்த ஃபார்மாட்டை நான் நீண்ட காலமா விளையாடி வரேன். IPL இல் 10–12 வருஷமா விளையாடி இருக்கேன். இந்திய அணியில கடந்த 10 வருஷமா இருக்கேன். பல போட்டிகளில் விளையாடல, ஆனா டக்அவுட்-ல இருந்து பார்த்து நிறைய கத்துக்கிட்டேன். விராட் கோலி, ரோஹித் சர்மா மாதிரி பெரிய வீரர்கள் எப்படி விளையாடுறாங்க? எப்படி ஆட்டத்தை முடிக்கிறாங்க, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தங்கள் ஆட்டத்தை எப்படி மாற்றுறாங்கன்னு கவனிச்சு கத்துக்கிட்டேன். Samson அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. நான் நேரடியாக 50–60 போட்டிகள் தான் விளையாடி இருப்பேன். ஆனா 100க்கும் மேலான போட்டிகளை பார்த்திருக்கேன். இது என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த நாட்களில் ஒன்று. பந்தை மட்டும் பார்த்தேன்,என்னோட திறமையை நம்பினேன். அவ்வளவுதான்' என்றார்.
'மாஸ் காட்டிய சேட்டன்; அரையிறுதியில் இந்தியா!' - போராடி வீழ்ந்த கரீபியர்கள்!
'எங்கக்கிட்ட 11 ஆபத்தான ப்ளேயர்ஸ் இருக்காங்க' என பிரஸ்மீட்டில் பேசியிருந்தார் டேரன் சமி. அந்த அபாயமானவர்கள் கொடுத்த சவாலை திறம்பட எதிர்கொண்டு ஈடன் கார்டனில் சாதித்திருக்கிறது இந்திய அணி. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடி இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்து சென்றிருக்கிறார் சாம்சன். இந்திய அணி எப்படி வென்றது? Toss இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துவிட்டார். சாய் ஹோப்பும், ரஸ்டன் சேஸூம் ஓப்பனிங் இறங்கியிருந்தார்கள். இந்திய அணிக்கு முதல் சில ஓவர்களில் எதுவுமே சரியாக அமையவில்லை. அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது ஓவரிலேயே ஒரு எளிமையான ரன் அவுட் வாய்ப்பை வருண் சக்கரவர்த்தி மிஸ் செய்திருந்தார். அதேமாதிரி, பும்ரா வீசிய 5 வது ஓவரில் சேஸூக்கு அபிஷேக் சர்மா மிக எளிதான ஒரு கேட்ச்சை கோட்டவிட்டார். வெஸ்ட் இண்டீஸின் அதிரடியான பேட்டிங் டெப்த்க்கு பவர்ப்ளேயில் விக்கெட்டே விடாமல் இருப்பது பெரும் பலமாக மாறிவிடும் ஆபத்து உண்டு. ஆனால், இந்திய அணி மிடில் ஓவர்களில் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தது வரிசையாக விக்கெட்டுகளையும் எடுத்தது. கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்த ஹோப்பை 32 ரன்களில் ஒரு கூக்ளியில் போல்டாக்கினார் வருண் சக்கரவர்த்தி. Varun பும்ரா வீசிய 12 வது ஓவர் கேம் சேஞ்சராக இருந்தது. ஏனெனில், ஹெட்மயர் வந்த வேகத்தில் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து 12 பந்துகளில் 27 ரன்களை அடித்து வைத்திருந்தார். ஹெட்மயர் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்தத் தொடரில் 205 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். அதனால் ஸ்பின்னருக்கு கொடுக்காமல் பும்ராவை இடையில் கொண்டு வந்தார் சூர்யா. ஓவர் தி விக்கெட்டில் வந்த பும்ரா டைட்டான லைனில் வீசி ஹெட்மயரை எட்ஜ் எடுத்தார். அதே ஓவரில் செட்டில் ஆகியிருந்த சேஸையும் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸின் வேகம் குறைந்தது. 200 யை எட்டுவது சந்தேகமானது. India ஆனால், ஹோல்டரும் பவலும் கடைசியில் அதிரடி காட்டி சவாலான ஸ்கோருக்கு அழைத்து சென்றனர். அர்ஷ்தீப் சிங் வீசிய 16 வது ஓவரில் மட்டும் 24 ரன்களை சேர்க்க காரணமாக இருந்தார் பவல். வருண் வீசிய அடுத்த ஓவரில் ஹோல்டர் சிக்சர் பவுண்டரியோடு 14 ரன்களை சேர்க்க உதவினார். பெரிய ஓவர்களுக்கு நடுவே அர்ஷ்தீப் வீசிய 19 வது ஓவர் இந்திய அணிக்கு ஆசுவாசத்தை கொடுத்தது. இரண்டு ஹார்ட் ஹிட்டர்கள் க்ரீஸில் இருந்தும் அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே வந்தது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்களை சேர்த்திருந்தது. இந்திய அணிக்கு 196 ரன்கள் டார்கெட். டி20 உலகக்கோப்பைகளில் இந்திய அணி சேஸ் செய்த அதிகபட்ச டார்கெட்டே 173 தான். அதனாலயே இந்த டார்கெட் ரொம்பவே பெரிதாக தெரிந்தது. அதற்கேற்ப வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அபிஷேக்குகாக ஸ்பின்னரான அகீல் ஹொசனை வைத்து ஆரம்பித்தது வெஸ்ட் இண்டீஸ். முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. அகீல் ஹொசைன் வீசிய 3 வது ஓவரில் ஸ்ட்ரைக்கை எடுத்துக் கொண்டு பவுண்டரி சிக்சர் என விளாசி 17 ரன்களை சேர்த்தார் சாம்சன். அதன்பிறகும் பேட்டை சுழற்றி அவுட்டாகி சென்றார் அபிஷேக். Samson இஷான் கிஷன் ஹோல்டரின் குட் லெந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று நேராக டீப் லெக்கில் கேட்ச் ஆனார். பவர்ப்ளேயில் இந்திய அணி 53-2 என இருந்தது. மிடில் ஓவர்களில் சாம்சன் சேஸை அழகாக முன்னெடுத்து சென்றார். ஓவருக்கு ஓவர் பவுண்டரியோ சிக்சரோ அடித்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ரன்ரேட் பிரஷரை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். சூர்யா கொஞ்சம் சப்போர்ட் செய்துவிட்டு சமார் ஜோசப்பின் பந்தில் அவுட் ஆனார். திலக் வர்மா அதிரடியாக 15 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து சாம்சனுக்கு அழுத்தம் ஏறாமல் உதவி ஹோல்டரின் பந்தில் அவுட் ஆனார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதமும் அதிகமானது. வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் தடுமாறினர். ஹோல்டர் ஹர்திக்கின் கேட்ச்சையெல்லாம் ட்ராப் செய்தார். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணிக்கு 17 ரன்கள் தேவை எனும் சூழல். இந்திய அணி எளிதில் வெல்லும் என நினைக்கையில் சமார் ஜோசப்பின் பந்தில் ஹர்திக் ஹோல்டரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்தியா மீதும் அழுத்தம் ஏறியது. சிவம் துபே வந்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து டாட். சமார் ஜோசப்பின் யார்க்கர்களை துபே சரியாக இடைவெளியில் கனெக்ட் செய்தார். இன்னொரு பவுண்டரி. விளைவு, கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவை. சாம்சனும் களத்தில் நின்றார். ரொமாரியோ ஷெப்பர்ட் கடைசி ஓவரை வீசினார். யார்க்கராக இறக்க நினைத்தார். நன்றாக செட்டில் ஆகியிருந்த சாம்சன் எந்த பதட்டமும் இல்லாமல் ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் பறக்கவிட்டு முதல் இரண்டு பந்துகளிலேயே போட்டியை முடித்துவிட்டார். சாம்சன் 97 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். Samson இப்படி ஒரு இன்னிங்ஸ்தான் முக்கியமான கட்டத்தில் சாம்சனிடமிருந்து வராமலே இருந்தது. அதனாலேயே எப்போதுமே அவர் முதல் ஆப்சனாக இருந்ததே இல்லை. ஆனால், இந்த முறை இந்திய அணிக்கு தேவைப்பட்ட தருணத்தில் பொறுப்பை சுமந்து ஆடி ஆட்டநாயகனாக மாறி நிற்கிறார். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. அரையிறுதியில் மும்பையில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

31 C