Ind v Eng : 'பயந்துட்டியா.. உயிரே போயிடுச்சு!' - வெளுத்துக்கட்டிய பெத்தேல்; போராடி வென்ற இந்தியா!
வான்கடேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இமாலய டார்கெட்டை நிர்ணயித்திருந்தது. இங்கிலாந்து வீரர் பெத்தேல் தனது அநாயசமான அதிரடியால் பயம் காட்டினாலும், இந்திய அணி போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது Bethell 254 ரன்கள் டார்கெட் என்பது எப்பேர்பட்ட பேட்டிங் பிட்ச்சாக இருந்தாலும் அசாத்தியமான டார்கெட்தான். அந்த டார்கெட்டை நோக்கி இங்கிலாந்து ஆரம்பத்திலிருந்தே புயல் வேகத்தில் புறப்பட்டது. சால்ட், ப்ரூக், பட்லர் என மூன்று முக்கிய பேட்டர்களின் விக்கெட்டை பவர்ப்ளேக்குள்ளாகவே இங்கிலாந்து இழந்திருந்தாலும், ரன்ரேட்டில் எந்த குறைவும் வைக்காமல் தொடர்ந்து அடித்தே ஆடினர். குறிப்பாக, ஜேக்கப் பெத்தேல் ஒரு முனையில் நின்று கொண்டு இந்திய பௌலர்களை மிரளவிட்டார். வருண் சக்கரவர்த்தியை பெரும்பாலான பேட்டர்களால் எளிதில் சமாளிக்க முடியாது. ஆனால், பெத்தேல் அவர் ஓவரில் அநாயசமாக மூன்று சிக்சர்களை பறக்கவிட்டார். டாம் பேண்டன், வில் ஜாக்ஸ் ஆகியோரும் பெத்தேலுக்கு இணையாக நின்று அடித்து ஆடினார். 7-14 இந்த மிடில் 8 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 104 ரன்களை சேர்த்திருந்தது. அர்ஷ்தீப் சிங் விடாப்பிடியாக ஒயிடாக வீசி வீசி வம்பிழுக்க அதற்கு பேட்டை விட்டு பவுண்டரில் லைனில் அக்சரால் கச்சிதமாக கேட்ச் பிடிக்கப்பட்டு 35 ரன்களில் வில் ஜாக்ஸ் வெளியேறினார். Jacks கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்டது. சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த பெத்தேலும் சாம் கரனும் களத்தில் நின்றனர். பும்ராவுக்கு 2 ஓவர்கள் இருந்தது. 16 வது ஓவரையே அவருக்கு கொடுத்தார் சூர்யா. இந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரியை மட்டும் கொடுத்து 8 ரன்களுக்குள் பும்ரா கட்டுப்படுத்தினார். ஸ்லோயர் ஒன்களை பிரதான ஆயுதமாக பயன்படுத்தினார். அர்ஷ்தீப் சிங் 17 வது ஓவரை வீசினார். அர்ஷ்தீப் டைட்டாக வீச முயன்றும் பெத்தேல் பவுண்டரியும் சிக்சரும் அடித்து ஓவரில் 16 ரன்கள் வர காரணமாக இருந்தார். 18 வது ஓவர் மீண்டும் பும்ராவுக்கு. அவரின் கடைசி ஓவர் இது. டைட்டாக யார்க்கிங் லெந்தில் வீசவே பும்ரா முயன்றார். அது ஒர்க் அவுட்டும் ஆனது. பும்ராவின் இந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவை. 19 வது ஓவரை ஹர்திக் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அடித்து சதத்தை நிறைவு செய்தார் பெத்தேல். அதிரடியாக இந்த ஓவர் ஆரம்பித்திருந்தாலும், யார்க்கிங் லெந்தில் வீச முயன்று நன்றாகவே இந்த ஓவரை வீசி முடித்தார் ஹர்திக். சாம் கரணின் விக்கெட்டும் கிடைத்தது. வெறும் 9 ரன்களை மட்டுமே கொடுத்தார். Bethell . கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை. பெத்தேல் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அக்சர் படேலுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது. அவர்தான் அந்த ஓவரை வீசியிருக்க வேண்டும். ஆனால், சூர்யா துபேவை உள்ளே கொண்டு வந்தார். ஸ்லோவாக வீசப்பட்ட முதல் பந்தையே நேராக லாங் ஆபில் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முயன்றார் பெத்தேல். ஹர்திக்கின் துடிப்பான பீல்டிங்கால் ரன்னை நிறைவு செய்ய முடியாமல் பெத்தேல் ரன் அவுட். ஒட்டுமொத்த வான்கடே மைதானமும் துள்ளிக் குதித்தது. இங்கிலாந்தின் கதை அத்தோடு முடிந்தது. இந்திய அணி வென்றது. மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இறுதிப்போட்டி. நியூசிலாந்து அணி இந்திய ரசிகர்களுக்கு பல அதிர்ச்சிகளை இதற்கு முன் கொடுத்திருக்கிறது. அதெற்கெல்லாம் பதிலடியை இந்தியா கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
'அந்த மேன் ஆப் தி மேட்ச் அவார்டை எடுத்து வைங்க!' - சாம்சன் ருத்ரதாண்டவம்; இந்தியா அபாரம்!
உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் வான்கடேவில் ஆடி வருகின்றன. சாம்சனின் அதிரடியான தொடக்கத்தோடு இந்திய அணி இங்கிலாந்துக்கு இமாலய டார்கெட்டை நிர்ணயித்திருக்கிறது. Ind vs Eng இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக்தான் டாஸை வென்றிருந்தார். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதுவே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. குறிப்பாக, ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் முழுவதையும் சாம்சன் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். சாம்சன் எதாவது ஒரு போட்டியில் மட்டுமே அடிப்பார், மற்ற போட்டிகளில் சொதப்பவே செய்வார். அவரிடம் ஒரு சீரான தன்மை இருக்காது என்கிற விமர்சனம் எப்போதும் உண்டு. வெஸ்ட் இண்டிஸூக்கு எதிரான கடந்த போட்டியில் 97 ரன்களௌ விளாசியிருந்த சாம்சன், இந்தப் போட்டியிலும் அதே பார்மில் அப்படியே தொடர்ந்தார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே புல் ஷாட்டோடு ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து பாசிட்டிவாக தொடங்கினார். அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே வெளியேறினாலும், எந்த சுணக்கமும் இல்லாமல் சாம்சன் அப்படியே அதே வேகத்திலேயே ஆடினார். இஷான் கிஷனும் அவருக்கு ஒத்துழைத்து அதிரடி காட்டினார். சாம்சனை கட்டுப்படுத்த முடியாமல் நான்கு பௌலர்களை ப்ரூக் பவர்ப்ளேயில் பயன்படுத்தியிருந்தார். எந்த வியூகமும் சாம்சனுக்கு எதிராக ஒர்க் அவுட் ஆகவில்லை. இடையில் ஒரு கேட்ச் ட்ராப் வேறு. Samson க்ரீஸை நன்றாக பயன்படுத்தி பின்னங்காலை நன்றாக ஊன்றி ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் ஸ்லோயர் ஒன்களையும் அநாயசமாக சிக்சராக்கினார். சதத்தை நோக்கி நகர்வார் என நினைக்கையில் 89 ரன்களில் வில் ஜாக்ஸின் பந்திலேயே அவுட் ஆகினார். இந்தப் போட்டியிலும் 'ஆட்டநாயகன்' விருதை தட்டிச் செல்லும் பெர்பார்மென்ஸ் இது.. ஆதில் ரஷீத், வில் ஜாக்ஸ் வீசியதால் துபே பிரமோட் ஆகி மேலே ஆட வந்தார். அவரும் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 43 ரன்களை சேர்த்து ரன் அவுட் ஆகியிருந்தார். கடைசியில் திலக் வர்மா ஆர்ச்சரின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட இந்திய அணியின் ஸ்கோர் எகிறியது. கடைசியில் ஹர்திக்கும் சில சிக்சர்களை பறக்கவிட இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை எடுத்தது.இங்கிலாந்தின் பிரதான பௌலரான ஆர்ச்சர் 4 ஓவர்களில் 61 ரன்களை கொடுத்து அடி மேல் அடி வாங்கியிருந்தார். இங்கிலாந்துக்கு 254 ரன்கள் டார்கெட். இமாலய சவாலில் சாதிக்குமா?
ஈரான் - இஸ்ரேல் போர்: 'நான் வீட்டுக்கு போகணும்'- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் டேரன் சமி
'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் - இஸ்ரேல் போர் இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக, முக்கிய வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. டேரன் சமி விமானப் போக்குவரத்து பாதிப்பால் டி20 உலகக்கோப்பைக்காக இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியினரும், ஜிம்பாப்வே அணியினரும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் 'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி பதிவிட்டிருக்கிறார்.
Finn Allen: `இது சிறிய வெற்றி தான்; ஞாயிற்றுக்கிழமை தான் டார்கெட்' - அதிவேக சதம் அடித்த ஃபின் அலன்
ஈடன் கார்டனில் நடைபெற்ற நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 170 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் 170 என்ற இலக்கை 13வது ஓவரிலேயே அடைந்து, அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் ஃபின் அலன் 100 (33) சதம் விளாசியதுடன், T20 உலகக் கோப்பையில் அதிவேக சதத்தை பதிவு செய்து, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். ஆட்டநாயகன் விருது வென்ற ஃபின் அலன், ``கண்டிப்பாக இது நான் விளையாடிய போட்டிகளிலேயே மிகச் சிறந்தவற்றில் ஒன்றாக இருக்கும். நல்ல நிலைப்பாட்டில் சென்று, அணிக்காக ஒரு சிறந்த செயல்பாட்டை வழங்கவே விரும்பினேன். அது இன்று நடந்தது. நாங்கள் ஆரம்பத்திலேயே அவர்களை அழுத்தத்தில் வைக்க நினைத்தோம். டிம்மி (செய்ஃபர்ட்) அந்த மாதிரி அதிரடியாக ஆடும்போது எனக்கு எளிதாக இருக்கும். நான் அமைதியாக பார்த்துக்கொண்டு, எனக்கு ஏற்ற பந்துகளை மட்டும் தேர்வு செய்து அடிக்க முடிந்தது. அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவும் முயற்சித்தேன். அவர் பேட்டிங் செய்த விதமே எங்களுக்கு ஒரு அதிரடியான தொடக்கத்தை அளித்தது. நாங்கள் வலுவான நிலையை உருவாக்கி, நேராக அடித்து, போட்டியை சீக்கிரம் முடிக்கலாம் என்று நினைத்தோம். NZ vs SA: `ஆரம்பத்திலேயே பறித்துவிட்டார்கள்; இது மோசமான இரவுதான், ஆனால்.! - மார்க்ரம் செமி பைனல் போன்ற பெரிய போட்டியில் போராட்ட மனப்பான்மையுடன் இருப்பது எளிதாக இருக்கும். இது எங்களுக்கு மிக முக்கியமான போட்டி. டிம்மியுடன், ஸ்ட்ரைக்கில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தோம். நேராக பார்த்து, பந்தை வலுவாக அடிக்க வேண்டும் என்பதையே நினைத்தோம். மைதானத்தில் சேர்ந்து விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிட்சின் தன்மைக்கு ஏற்ப தகவமைத்து கொள்வதே முக்கியம். பயிற்சி மிகவும் அவசியம்; பிட்ச் எப்படி செயல்படும் என்பதை உணர உதவும். இதற்கு முன் இந்திய தொடரில் பலர் கருப்பு மண் பிச்சில் விளையாடியிருந்தார்கள். அந்த அனுபவம் எங்களுக்கு உதவியது. இந்த உலகக் கோப்பைக்கு வருவதற்கு முன் அந்த தொடர் எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது. இந்த போட்டியில் இருந்த நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டு, சிறிய வெற்றியை கொண்டாடுவோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஒரு இறுதிப்போட்டி உள்ளது; அதை வெல்ல வேண்டும். அதற்காகவே இப்போது முன்னோக்கி பார்க்கிறோம். என்றார்.
NZ vs SA: `ஆரம்பத்திலேயே பறித்துவிட்டார்கள்; இது மோசமான இரவுதான், ஆனால்.! - மார்க்ரம்
நேற்று ஈடன் கார்டன்-ல் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,நியூசிலாந்து அணி 170 என்ற ஸ்கோரை 13 வது ஓவரிலேயே அடைந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை தோல்வியே சந்திக்காமல் இருந்த தென்னாப்பிரிக்கா அணி செமி பைனலில் ஏற்பட்ட இந்த தோல்வியால் தொடரிலிருந்தே வெளியேறியது. இதனால் T20 உலகக் கோப்பை மீண்டும் ஒரு எட்டாத கனியாகவே மாறியுள்ளது அந்த அணிக்கு. தோல்விக்கு பின்னர் தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம், ``அவர்கள் ஆரம்ப ஓவர்களில் மிகவும் நன்றாக பந்து வீசினர். பந்து சரியாக பேட்டுக்கு வரவில்லை. சில பந்துகள் மந்தமாக நின்று வந்தது; அதனால் ரன்கள் எடுக்க மிகவும் கடினமாகியது. அந்த அழுத்தத்தில் விக்கெட்டுகள் விழுந்தது. எனவே அவர்களின் பந்து வீச்சு அணிக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். பேட்டிங்கிலும், யாராவது ஒருவர் ஃபின் அலென் போன்ற பெரிய இன்னிங்ஸ் விளையாடினால், ஃபீல்டிங் அணி போட்டியில் இருந்து நழுவி விடும். 170 ரன்கள் அடைந்தது நல்ல முயற்சிதான். இந்த இலக்குதான் நாங்கள் இன்னும் போட்டியில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை வைத்திருந்தது. ஆனால் T20 கிரிக்கெட் பொறுத்தவரை, பவர் பிளே ஓவர்களை எந்த அணி சரியாக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவர். அதேபோல்தான் நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆடினார்கள். ஃபின் அலெனின் இன்னிங்ஸுக்கும், டிம் செய்ஃபர்டின் இன்னிங்ஸுக்கும் பெரிய பாராட்டு. அவர்கள் ஆரம்பத்திலேயே போட்டியை எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள். இன்று எங்களுக்கு ஒரு மோசமான நாள் தான். எப்படியாவது 190 வரை கொண்டு சென்றிருந்தால், போட்டியில் இருந்திருக்கலாம். இதைப் பற்றி குழுவாக ஆய்வு செய்வோம். முடிவால் நிச்சயமாக ஏமாற்றம். ஆனால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்த அணியைப் பற்றி பெருமை உள்ளது. இது ஒரு துரதிர்ஷ்டமான இரவு மட்டுமே. அணியாகவும், தனிநபர்களாகவும் முன்னேற முயற்சிப்போம். அது எதிர்காலத்தில் நமக்கு நல்ல பலன் தரும். மீண்டும் சொல்கிறேன், மிகுந்த ஏமாற்றம். ஆனால் அதனால் நாங்கள் இன்னும் வலிமையாகி, அடுத்த முறையில் சிறப்பாக திரும்புவோம். என்றார். அமெரிக்கா அடித்த அலாரம் - கோப்பையைத் தக்கவைக்கும் முதல் அணியாக மாற இந்தியா என்ன செய்யவேண்டும்?
IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?
உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன? தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சி.எஸ்.கே. அணியின் திட்டம் என்ன? தோனி 2019க்கு முன்பு வரைக்கும் தோனி இந்திய அணியின் போட்டி அட்டவணைகளைப் பொறுத்து இந்திய அணிக்காக ஆடிவிட்டு ஐ.பி.எல்லுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வருவார். 2019க்குப் பிறகு தோனி சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை. Dhoni : '38 வயசுல மேன் ஆப் தி சீரிஸ்...' - தோனியின் அந்த ஆஸ்திரேலிய ருத்ரதாண்டவம் நியாபகமிருக்கிறதா? சென்னை வந்த தோனி அதன்பிறகு எப்போதுமே ஒவ்வொரு சீசனின் போதுமே சரியாக ஒரு மாதம் முன்பாகவே தோனி சென்னைக்கு வந்துவிடுவார். அவரின் வருகையைப் பொறுத்துதான் சென்னை அணியின் பயிற்சி செஷன்களும் திட்டமிடப்படும். ராஞ்சியில் முதற்கட்டமாக சில நாட்கள் பயிற்சி எடுக்கும் தோனி, சென்னையிலும் வந்திறங்கியவுடன் முதல் நாளின் பயிற்சி செஷனிலிருந்தே பயிற்சியையும் தொடங்கிவிடுவார். அதே டெம்ப்ளேட்தான் இந்த முறையும். ருத்துராஜ் கெய்க்வாட் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே மூன்று நாட்களுக்கு முன்பாக தோனி சென்னைக்கு வந்திறங்கிவிட்டார். தோனியை வரவேற்கும் விதத்தில் சென்னை அணியும் ஒரு மாஸான வீடியோவை வெளியிட்டிருந்தது. தோனியுடன் ருத்துராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் உட்பட 10க்கும் மேற்பட்ட வீரர்களும் சென்னை அணியின் முகாமில் இணைந்துவிட்டனர். `தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி ஷூட்டிங் சஞ்சு சாம்சன் போல சர்வதேச அணிகளுக்காக ஆடி வரும் வீரர்களும் உலகக்கோப்பை முடிந்தவுடன் பயிற்சி முகாமில் இணைந்து விடுவார்கள். நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் தோனி சில நாள்களை போட்டோஷூட்டுக்கும் சில நாள்களை விளம்பரப் படங்களின் ஷூட்டுக்கும் எஞ்சியிருக்கும் நாள்களில் ஸ்பான்சர்களுக்காக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் எனத் தகவல் சொல்கின்றனர் சிஎஸ்கே வட்டாரத்தினர். தோனி இம்பாக்ட் ப்ளேயராக தோனி பகல் நேரங்களில் மற்ற கமிட்மெண்ட்களை முடிக்கும் தோனி, மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் நாவலூரில் உள்ள சிஎஸ்கேவின் இன்னொரு மைதானத்தில் முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வரவிருக்கும் சீசனில் தோனி முழுமையாக ஆடமாட்டார். இம்பாக்ட் ப்ளேயராக வேண்டுமானால் வருவார் எனத் தகவல்கள் வருகின்றன. ஆனால், நாவலூர் மைதானத்தில் தோனி மிகத் தீவிரமாக வழக்கம் போல பேட்டிங் பயிற்சியில்தான் ஈடுபட்டு வருகிறார். தோனி எப்படியும் ஒரு நாள் விலகுவார், அதனால்.!- CSK வீரர்கள் தேர்வு குறித்து பயிற்சியாளர் பிளெமிங் ஆக, தோனி என்ன ரோலில் ஆடப் போகிறார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எதுவாக இருந்தாலும் முடிவு தோனி எடுப்பதுதான். சென்னை அணியின் முன்னாள் வீரர்களான அஷ்வினையும் ரெய்னாவையும் பயிற்சியாளர் குழுவில் இணைக்கும் மனநிலையிலும் சென்னை அணியின் நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஷ்வின் புது ஜெர்சியோடு, புது எனர்ஜியோடு கலக்க சென்னை வீரர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை முகாமிலிருந்து அடுத்தடுத்து என்னென்ன அப்டேட்கள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில் என்ன?
மகத்தான சாதனைகள்; ஸ்டார்க் கண்ணீர் - கிரிக்கெட் என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும் அலிஷா ஹீலி!
“இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேசியிருந்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிஷா ஹீலி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அலிஷா ஹீலி கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான அலிஷா ஹீலி, 2010 பிப்ரவரியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த பதினாறு ஆண்டுகளில், இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகள் (2013, 2022), ஆறு ஐசிசி T20 உலகக் கோப்பைகள் (2010, 2012, 2014, 2018, 2020, 2023), மேலும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் என பல சாதனைகளை படைத்துள்ளார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதையும் பெற்றுள்ளார். Australian Cricketer Alyssa Healy விக்கெட் கீப்பர் மொத்தம் 162 T20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிக T20 போட்டிகளில் பங்கேற்ற இரண்டாவது வீராங்கனை ஆவார். அதோடு, T20 கிரிக்கெட்டில் 126 டிஸ்மிஸல்கள் செய்து, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் சேர்த்து அதிக டிஸ்மிஸல்கள் செய்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பெருமைகளைத் தேடி தந்த கடைசி இன்னிங்ஸ் அவரது கடைசி இன்னிங்ஸும் பல பெருமைகளைத் தேடி தந்திருக்கிறது. உலகளவில் 150க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த இரண்டாவது பெண் வீராங்கனை என்ற சாதனை மட்டுமின்றி, இரண்டாவது அதிவேக 150 என்ற சாதனையையும் படைத்தார். மேலும், இந்திய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற பெருமையையும் பெற்றார். மிட்செல் ஸ்டார்க்கின் கண்ணீர் அவரது கணவர் மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய ஆண்கள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர். இந்த கிரிக்கெட் தம்பதியரின் பயணம், அவர்கள் ஒன்பது வயதில் ஒரே அகாடெமியில் விளையாடிய காலத்திலேயே தொடங்கியது. மார்ச் 2020ல், ஆஸ்திரேலியா–தென் ஆப்பிரிக்கா ODI தொடரில் பங்கேற்காமல், தனது மனைவி விளையாடிய T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண ஸ்டார்க் சென்றது, அவர்களுடைய உறவில் உள்ள ஆதரவை வெளிப்படுத்திய தருணமாகும். ஹீலியின் கடைசி ஷாட்டுக்குப் பிறகு, கணவரின் கண்களில் தெரிந்த கண்ணீர் கலந்த பெருமிதம் அதற்கான தொடர்ச்சியாக அமைந்தது. நாளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டு பேட்டிகளில் நகைச்சுவையாக பதிலளிக்கும் பழக்கம் கொண்ட ஹீலி, இந்த தொடரில் இதுவரை ஓய்வு குறித்த கேள்விகளை தவிர்த்துவந்தார். கடைசி போட்டிக்கு முன், “இன்றுதான் ஆஸ்திரேலியாவின் பச்சை-மஞ்சள் அணியுடன் உங்கள் கடைசி நாள் என்று உணர்ந்துவிட்டீர்களா?” என்ற கேள்விக்கு அவர், “இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். அதனால், இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று பதிலளித்தார். அது அவர் எத்தகைய வீராங்கனை என்பதை வெளிப்படுத்தியது. அலிஷா ஹீலியின் சாதனை தான் விளையாடிய காலத்தில் பல சாதனைகளை முறியடித்தும், புதிய சாதனைகளை உருவாக்கியும் விளங்கிய அலிஷா ஹீலி, கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்துவிட்டார் என்பதில் சந்தேகமே இல்லை. அவரின் விடைபெறுதலை மறக்க முடியாததாக மாற்றியது அந்த கடைசி அதிரடி இன்னிங்ஸ் 98 பந்துகளில் 158 ரன்கள். இந்திய அணியின் தோல்வி வேதனையையும் மறக்க வைத்து, அவரை கொண்டாட வைத்த அந்த இன்னிங்ஸ், ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும். An Alyssa Healy century in her final ODI! And no one is prouder than Mitch Starc in the commentary box #AUSvIND pic.twitter.com/Ey27zCbPt2 — 7Cricket (@7Cricket) March 1, 2026
``சஞ்சு சாம்சனின் 97 ரன்களுக்கு இணையானது, துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும்! - கோச் கம்பீர்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். இருப்பினும், ஆட்டத்தின் 19-வது ஓவரில் சிவம் துபே அடித்த இரண்டு முக்கியமான பவுண்டரிகள் மிகவும் முக்கியமானவை. என்னைப் பொறுத்தவரை, சிவம் துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும் சஞ்சுவின் 97 ரன்களுக்கு இணையானவை. அவர் அந்த பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றால், சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி யாரும் இப்போது பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள் சஞ்சு சாம்சன் பல ஆண்டுகளாக நாம் குறிப்பிட்ட சில வீரர்களின் பங்களிப்பைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். ஆனால் இது ஒரு கூட்டு முயற்சி சார்ந்த விளையாட்டு. பெரிய ரன்கள் எடுப்பவர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவார்கள். ஆனால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சிறிய பங்களிப்புகளே மிக முக்கியமானவை. எனது பயிற்சி காலம் முழுவதும் இதே அணுகுமுறை தொடரும். என்றார், சிவம் துபே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் கம்பீரின் கருத்தையே வழிமொழிந்தார் : ``கடைசி ஓவர்களில் 8-9 ரன்கள் எடுப்பது சில நேரங்களில் கடினமாகிவிடும், அந்த அழுத்தத்தைக் குறைத்தது சிவம் துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகள்தான் இன்னும் இலக்கை சுலபமாக்கியது. என்று அவர் பாராட்டினார். சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்த அதே வேளையில், கிரிக்கெட் என்பது தனிநபர் சாதனை அல்ல, அது ஒரு கூட்டு முயற்சி என்பதை கம்பீர் மற்றும் பும்ரா இந்த பேட்டியின் மூலம் வலியுறுத்தியுள்ளனர். 'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' - உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!
T20 WC: வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு?
டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றின் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. PAK vs SL match இதில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ICC T20 WC 2026: `நாங்க `Minnows' கிடையாது!' - சரித்திரம் படைத்த சிறிய அணிகள்! எதிர்காலம் என்ன? இந்நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்றபோதே வாரியம் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. pakistan players முக்கியத் தொடர்களில் தொடர்ந்து பாகிஸ்தான் அணி சொதப்பி வருவதால், வீரர்களுக்கு இந்தப் பெரிய தொகையை அபராதமாக விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
IND vs WI: வயிற்றுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி இருக்கும்; ஆனா.! - சூர்யா குமார் யாதவ்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான Do or Die மேட்சில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் 196 என்ற இமாலய இலக்கை துரத்தி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்திருக்கிறது இந்திய அணி. இந்த வெற்றி குறித்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேசுகையில் ``நிச்சயமா இது ஒரு அருமையான உணர்வு. இந்த போட்டி காலிறுதி ஆட்டம் மாதிரி தான் இருந்தது. அந்த அழுத்தமான சூழ்நிலையில், எங்கள் வீரர்கள் காட்டிய மனஉறுதியே பெரிய விஷயம். எல்லாரும் திட்டமிட்டபடியே பத்துவீசியதாக நான் நினைக்கிறேன். 200 ரன்கள், இந்த மைதானத்தில் எப்போதும் சேஸ் பண்ணக்கூடிய நல்ல ஸ்கோர் தான். மைதானத்தில் இருந்த பனி காரணமா பந்து பேட்டுக்கு கொஞ்சம் எளிதாக வந்தது. அதனால் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு போகணும்னு தான் எங்களோட திட்டம். ஒரு அணியாக இங்க இருப்பதில் ரொம்ப சந்தோஷம். முதல் போட்டியிலிருந்து நாங்க விளையாடிய விதத்தைப் பார்த்தா, மும்பைக்குப் போக தகுதி இருக்குன்னு நினைக்கிறேன். ஆனா இப்போ அதைப்பத்தி யோசிக்க மாட்டோம். பிளைட் எடுத்து மும்பை போவோம், அங்க போயி என்ன பண்ணணும்னு பார்க்கலாம். மக்களிடம் எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும். ஆனால் அதே நேரம், மைதானத்தில் அணியாக என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். எங்கள் வீரர்களிடம் இதையே தான் சொன்னேன். ஆம், அழுத்தம் இருக்கும், மைதானத்திற்கு வரும் எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும், வீட்டில் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஆட்டம் வரும்போது, நீங்கள் மேலும் தைரியமாக இருக்க வேண்டும், உங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும். அழுத்தத்தில் நேர்மறையாக இருக்க வேண்டும். அதை நாங்கள் நன்றாகவே செய்தோம் என நினைகிறேன். நெருக்கடி இருக்கும், வயிற்றுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி ஒரு பதட்டம் இருக்கும். ஆனா அந்த உணர்வுகளை நாம் எப்படி கையாளுறன்னு தான் முக்கியம். நாம் இந்தியாவில் விளையாடுகிறோம். சொந்த மண்ணில் சொந்த அணி விளையாடுகிறது. அதிக அழுத்தம் இருக்கும்தான். ஆனால் அதை எப்படி புரிந்துகொள்கிறோம், எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம். என்றார், 'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' - உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!

27 C