SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற கென்ய வீரர் ஷேன் சந்தாரியா | Photo Album

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025

விகடன் 15 Dec 2025 2:38 pm

டாஸ் போடுறது மட்டுமே கேப்டன் வேலை இல்ல - சூர்யகுமார் யாதவ் மீது முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 - 0 என இந்தியாவை தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ் செய்ய, அடுத்த நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 - 1 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா. அதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்தியா வெல்ல, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றது. சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் இன்று (டிசம்பர் 14) இரவு 7 மணியளவில் தர்மசாலாவில் மூன்றாவது போட்டி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாகப் பல வெற்றிகளைக் குவித்து வந்தாலும், அவரின் பேட்டிங் மற்றும் அணியில் மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் களமிறக்கப்படுவது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. கடந்த 20 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட சூர்யகுமார் யாதவ் அடிக்கவில்லை. தான் ஆடிய கடைசி 17 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்து தற்போது தென்னாப்பிரிக்காவுக்கெதிரான டி20 தொடரில் பென்ச்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் சஞ்சு சாம்சனின் ஓப்பனிங் ஸ்லாட்டில் துணைக் கேப்டனாக களமிறக்கப்படும் சுப்மன் கில், கடந்த 17 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அடுத்து, பேட்டிங் ஆர்டரில் திடீரென அக்சர் படேல் ஒன்டவுனில் களமிறக்கப்படுகிறார், ஷிவம் துபே 8-வது இடத்தில் களமிறக்கப்படுகிறார், சூர்யகுமார் யாதவ் ஒன்டவுன், நம்பர் 4 என நினைத்த இடத்தில் இறங்குகிறார். சுப்மன் கில் - சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் ஜோடியைத் தவிர மற்ற யார் எந்த இடத்தில் இறங்குவார்கள் என ஓரளவுக்கு நிலையான பட்டியலே இல்லை. இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளாருமான ஆகாஷ் சோப்ரா, சூர்யகுமாரின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஃபார்மை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் மனசு உடையும்- இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து பத்ரிநாத் தனது யூடியூப் சேனனில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ``நீங்கள்தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஒரு கேப்டனின் வேலை டாஸ் போடுவதும், பந்துவீச்சாளர்களை நிர்வகிப்பதும், வியூகம் வகுப்பது மட்டுமல்ல. முதல் நான்கு இடங்களுக்குள் பேட்டிங் இறங்கினால், ரன் அடிப்பதுதான் உங்களின் முக்கியமான வேலை. கடந்த 17 இன்னிங்ஸ்களில் உங்களின் ஆவரேஜ் 14, ஸ்ட்ரைக் ரேட்டும் அவ்வளவு சிறப்பாக இல்லாவில்லை, ஒரு அரை சதம்கூட அடிக்கவில்லை. வெறும் இரண்டு முறை மட்டுமே 25 ரன்களைக் கடந்துள்ளீர்கள். ஆகாஷ் சோப்ரா சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து சந்தேகம் உள்ளது என்றோ அல்லது அடுத்த உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக அவர் இருக்க மாட்டார் என்றோ நான் சொல்லவில்லை. அதை நான் பரிந்துரைக்கவுமில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் அவர் ரன்கள் எடுக்க வேண்டும். 3-வது அல்லது 4-வது இடத்தில் இறங்கி ரன் அடிக்கவில்லை என்றால், அதுவும் தொடர்ச்சியாக ரன் அடிக்கவில்லை என்றால், உலகக் கோப்பை தொடங்கும் போது அந்த அளவுக்கு நம்பிக்கையுடன் நீங்கள் இருக்க மாட்டீர்கள். எனவே, கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ரன் அடிப்பது முற்றிலும் அவசியம் என்று கூறியிருக்கிறார். `கில் அந்த இடத்துக்குத் தகுதியானவர்!' - சஞ்சு பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார்

விகடன் 15 Dec 2025 7:54 am

Messi Tour of India: நிகழ்ச்சி திட்டமிடலில் AIFF ஈடுபடவில்லை - இந்திய கால்பந்து கூட்டமைப்பு

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட கொல்கத்தா நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) இன்று (சனிக்கிழமை) கவலை தெரிவித்துள்ளது. Messi Tour of India மெஸ்ஸியைக் காண நுழைவுச்சீட்டுக்கு ரூ.4,000 முதல் ரூ.12,000 வரை கட்டணம் செலுத்தி, கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் குவிந்த சுமார் 50,000 பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். சிலர் கள்ளச்சந்தையில் ரூ.20,000 வரைக்கூட கொடுத்து வாங்கியிருந்தனர். Kolkata, West Bengal: Angry fans vandalise the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event A fan of star footballer Lionel Messi said, "Absolutely terrible event. He came for just 10 minutes. All the leaders and ministers surrounded him. We couldn't see… pic.twitter.com/a3RsbEFmTi — ANI (@ANI) December 13, 2025 ஆனால் மைதானத்தில் அரசியல்வாதிகள், விவிஐபிக்கள் (VVIPs), பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மெஸ்ஸியைச் சுற்றிக் கூடி நின்று, அவசர அவசரமாக செல்ஃபிகள் எடுத்ததால் அவர் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமார்ந்தனர். AIFF விளக்கம் இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) வெளியிட்ட அறிக்கையில், உலகக் கால்பந்து நட்சத்திரங்களான லியோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட விவேகானந்தா யூபா பாரதி கிரிங்கன் மைதானத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஆழ்ந்த கவலை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. Kolkata Salt Lake Stadium chaos: Fans angry over Messi’s 10-minute appearance, poor event management, and unmet promises, say emotions, time, and money wasted. pic.twitter.com/2V477aKnWn — Ihtisham Ul Haq (@iihtishamm) December 13, 2025 மேலும், இது ஒரு தனியார் பி.ஆர். ஏஜென்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. இந்த நிகழ்வின் அமைப்பு, திட்டமிடல் அல்லது செயலாக்கம் என எந்தவொரு செயலிலும் AIFF ஈடுபடவில்லை. மேலும், நிகழ்வு பற்றிய விவரங்கள் AIFF-க்குத் தெரிவிக்கப்படவில்லை. கூட்டமைப்பிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும் AIFF மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. மைதானத்தை நாசமாக்கிய ரசிகர்கள் மெஸ்ஸியை காண முடியாததால் ஆவேசமடைந்த ரசிகர்கள், விளையாட்டு மைதானங்களுக்குள் பாட்டில்களை வீச ஆரம்பித்தபோதுதான் குழப்பம் தொடங்கியது. மைதானத்துக்குள் உணவுப் பொட்டலங்கள் உட்பட இதுபோன்ற பொருட்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிறிது நேரத்திலேயே, ஆத்திரமடைந்த ரசிகர்கள் நாற்காலிகளைப் பிடுங்கி வீசத் தொடங்கினர். மைதானத்தின் தரைப்பகுதி மற்றும் செயற்கை ஓடுபாதையில் ஃபைபர் கிளாஸ் இருக்கைகள் உடைந்து கிடந்தன. மெஸ்ஸிக்காகவும், முதலமைச்சர் பிரிவுக்காகவும் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பந்தல்களும் கிழித்து எறியப்பட்டன. போலீசார் தலையிடுவதற்கு முன்பு, அவற்றின் சில பகுதிகளில் தீ வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல நுழைவு வாயில்கள் சேதப்படுத்தப்பட்டன. வீரர்கள் சுரங்கப்பாதையின் கூரை தாக்கப்பட்டது. சுவரொட்டிகளும் கிழிக்கப்பட்டன. Ronaldo: `மெஸ்ஸி உங்களை விடச் சிறந்த வீரரா?' - கேள்விக்கு ரொனால்டோவின் அதிரடி பதில்

விகடன் 13 Dec 2025 10:35 pm

'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Messi `GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (டிச. 13)இந்தியா வந்தார். விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்திருத்திருந்தனர். பிறகு கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்துக்கு இன்று (டிச. 13) காலை 11.15 மணியளவில் சென்றார். சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண தலா ரூ. 5,000 முதல் ரூ. 25,000 கட்டணமும் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சிறிது நேரத்திலேயே அங்கிருந்து சென்றிருக்கிறார். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை. Kolkata அவரைச் சரியாக பார்க்கக் கூட முடியவில்லை என்று கோபமடைந்த ரசிகர்கள் பொருட்களை எறிந்தும், மைதானத்திற்குள் புகுந்து ஏற்பாடுகளை சேதப்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இன்று சால்ட் லேக் மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மைதானத்திற்கு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க கூடியிருந்தனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். Lionel Messi: 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த மெஸ்ஸி; மூன்று நாள் பயணத்திட்டம் இதுதான்!

விகடன் 13 Dec 2025 2:39 pm