Dhoni: ``தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும்'' - மாணவர்களிடையே பேசிய தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நடந்த மிஷன் பாசிபில் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் தொகுப்பாளர் மணீஷ் பால் மற்றும் நகைச்சுவை நடிகர் கிகு ஷார்தா ஆகியோரும் இணைந்துள்ளனர். குஜராத்தில் தோனி தங்கியிருந்த ஹோட்டல் அறை, அவரது கார் என எல்லாப் பக்கமும் ரசிகர்கள் சூழ்ந்தனர். This night had its own pulse. Maniesh Paul’s fire hosting, Kiku Sharda’s chaos comedy, and Dhoni’s calm magnetism energy kept rising, crowd kept roaring. Mission Possible 2025 felt bigger than a stage. pic.twitter.com/JUYBLDLDiT — Parul University (@ParulUniversity) December 2, 2025 Dhoni பேச்சு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் தோனிக்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் கூச்சலும் கைதட்டலுமாக ஆரவாரம் செய்தனர். கையில் பேட்டுடன் என்ட்ரி கொடுத்த தோனி, மணீஷ் மற்றும் கிகுவுடன் கலந்துரையாடினார். மாணவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிப்பது குறித்து பேசிய அவர், “தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும். அதற்காக நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், ஆனால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது,” என்றார். மேலும், நகைச்சுவையாளருடன் கலகலப்பாக உரையாடி மகிழ்ந்துள்ளார். மாணவர்கள் இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிய அறிவுறுத்தியதுடன், சிறிய தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம் என அறிவுறுத்தினார். அன்பின் மழையில் தல! Dhoni, Maniesh Paul, Kiku Sharda தோனியைப் பார்க்க ஏராளமான மக்கள் போஸ்டர்கள், புகைப்பட ஃப்ரேம்கள் மற்றும் பதாகைகளுடன் வந்ததால், பல்கலைக்கழகம் ரசிகர்களால் நிரம்பியிருந்தது. 2019ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தொடர்ந்து ஐபிஎல்லில் விளையாடி வருகிறார் எம்.எஸ். தோனி. அன்கேப்ட் வீரராக களமிறங்கும் அவருக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிக அன்பைப் பொழிகின்றனர் ரசிகர்கள். தோனியின் மீதான க்ரேஸ் துளியும் குறையவில்லை என்பதற்கு, பல்கலைக்கழகத்தில் நடந்த இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. Siraj: ஒரு மேட்ச்சில் ஹீரோ, அடுத்ததில் ஜீரோ - தோனி சொன்ன அந்த அட்வைஸ்!
Hockey Men's Junior WC: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா; மற்ற 7 அணிகள் எவை?
ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நவம்பர் 28-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் இத்தொடரில் பங்கேற்றுள்ள 24 அணிகள் மொத்தம் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், `பி' குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் இரு லீக் போட்டிகளில் சிலி அணியை 7 - 0 எனவும், ஓமன் அணியை 14 - 0 எனவும் வீழ்த்தியது. ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை - இந்தியா vs சுவிட்சர்லாந்து இந்த நிலையில், லீக் சுற்றின் கடைசி போட்டியாகவும், தனது கடைசி லீக் போட்டியாகவும் மதுரையில் சுவிட்சர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்திய அணியைப் போலவே தனது முதல் இரு லீக் போட்டிகளை வென்ற சுவிட்சர்லாந்து அணி இந்த ஆட்டத்தில் இந்தியாவிடம் தடுமாறியது. ஆட்டத்தின் முதற்பாதியில் 4 - 0 என முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாம் பாதியிலும் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுத்ததோடு கூடுதலாக ஒரு கோல் அடித்து 5 - 0 என வென்றது. தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் மூலம் `பி' குழுவில் முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா. ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை - இந்தியா vs சுவிட்சர்லாந்து நேற்று நடைபெற்ற மற்ற போட்டிகளில், கொரியாவை 3 - 1 என ஆஸ்திரேலியாவும், மலேசியாவை 3 -1 என இங்கிலாந்தும், வங்காளதேசத்தை 3 - 2 என பிரான்ஸும், ஆஸ்திரியாவை 11 - 0 என நெதர்லாந்தும், ஓமனை 2 - 0 என சிலியும், எகிப்தை 10 - 0 பெல்ஜியமும், நமீபியாவை 13 - 0 ஸ்பெயினும் வென்றன. லீக் போட்டிகள் 6 குழுவிலும் முதலிடம் பிடித்த 6 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, `ஏ' குழுவில் முதலிடம் பிடித்த ஜெர்மனி, `பி' குழுவில் முதலிடம் பிடித்த இந்தியா, `சி' குழுவில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா, `டி' குழுவில் முதலிடம் பிடித்த ஸ்பெயின், `இ' குழுவில் முதலிடம் பிடித்த நெதர்லாந்து, `எஃப்' குழுவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் ஆகிய 6 அணிகள் காலிறுத்திச் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. 'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' - இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி மேலும், காலிறுதிச் சுற்றுக்கு காலியாக இருக்கும் 2 இடங்களுக்கு ஒவ்வொரு குழுவிலும் இரண்டாமிடம் பிடித்த அணிகளில் டாப் 2 இரண்டு அணிகள் முன்னேறும். அதன்படி, `சி' குழுவில் இரண்டாமிடம் பிடித்த நியூசிலாந்தும், `டி' குழுவில் இரண்டாமிடம் பிடித்த பெல்ஜியமும் காலிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. இந்த இரு அணிகளுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்த மற்ற நான்கு அணிகளும், ஒவ்வொரு குழுவிலும் மூன்றாமிடம் பிடித்த 6 அணிகளில் டாப் 4 அணிகளும் 9 முதல் 16-ம் இடத்துக்கான போட்டியில் மோதும். இந்திய வீரர்கள் மீதமிருக்கும் 8 அணிகள் 17 முதல் 24-ம் இடத்துக்கான போட்டியில் மோதும். நாளை மறுநாள் (டிசம்பர் 5) சென்னையில் காலிறுதிப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இதில், இந்தியா தனது காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும். இப்போட்டிக்கு முன்பாக ஸ்பெயின் vs நியூசிலாந்து, பிரான்ஸ் vs ஜெர்மனி, நெதர்லாந்து vs அர்ஜென்டினா என 3 காலிறுதிப் போட்டிகள் நடைபெறும். Ind vs SA: அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன் - ரோஹித் குறித்து சுவாரஸ்யம் பகிரும் பவுமா
Messi India Tour: மெஸ்ஸியுடன் மோத தயாராகும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த்; வைரலாகும் பயிற்சி வீடியோ!
தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகும் வகையில், நாள்தோறும் கால்பந்து பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Messi: G.O.A.T India Tour ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள 'G.O.A.T. இந்தியா டூர் 2025' நிகழ்ச்சியின்போது மெஸ்ஸியுடன் முதல்வர் மோதவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த உலகக் கோப்பை சாம்பியன் மெஸ்ஸி, டிசம்பர் 13 முதல் 15 வரை கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் நடக்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் என்கிறது மனோரமா செய்திதளம். CM Revanth Reddy practiced at the MCHRD grounds today as he gears up for the football match against Messi’s team on the 13th. https://t.co/YLWUqIgezj pic.twitter.com/uiONy9Wa1s — Naveena (@TheNaveena) December 1, 2025 பிரபலங்கள் பங்கேற்கும் போட்டிகள் (Celebrity Matches) மற்றும் பல வேடிக்கையான பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் மெஸ்ஸி கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் நான்காவது இந்திய நகரமாக ஹைதராபாத் இணைக்கப்பட்ட நிலையில், தங்கள் மாநிலம் மெஸ்ஸியை வரவேற்கத் தயாராக இருப்பதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார். இதுகுறித்த அவரது பதிவில், டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் 'G.O.A.T.' லியோனல் மெஸ்ஸியை வரவேற்று விருந்தளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த ஜாம்பவானை நம் மண்ணில் காண வேண்டும் என்று கனவு கண்ட ஒவ்வொரு கால்பந்து ரசிகருக்கும், நம் நகரத்துக்கும் இதுவொரு அற்புதமான தருணம் எனக் குறிப்பிட்டிருந்தார். Revanth Reddy Football Practice ஆனால், முதல்வர் ரேவந்த் ஹைதராபாத்தை மட்டும் தயார் செய்யவில்லை, அவரே போட்டிக்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுத்து வருவதுதான் சுவாரஸ்யமான செய்தி. கால்பந்து மைதானத்தில் போட்டிக்குப் பிறகு இளைஞர்களுடன் ரேவந்த் ரெட்டி இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சருக்கான தனது அலுவலக நேரத்திற்குப் பிறகு பயிற்சிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. போட்டியில் முதல்வர் ரேவந்த், தனது சட்டையில் 'எண் 9' (No 9) என்ற எண்ணை அணிவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்தப் போட்டியை 'M10 vs RR 9' (மெஸ்ஸி 10-க்கு எதிராக ரேவந்த் ரெட்டி 9) போர் என்று பரபரப்பாக்கி வருகின்றனர். Ronaldo: `மெஸ்ஸி உங்களை விடச் சிறந்த வீரரா?' - கேள்விக்கு ரொனால்டோவின் அதிரடி பதில்
``ருதுராஜ்க்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அது முட்டாள் தனம்'' - இந்திய அணி தேர்வு குறித்து அஷ்வின்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ. 30) ராஞ்சியில் நடைபெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. Indian Team இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு சரியில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வின் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அஷ்வின், இரண்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால், அது நிர்வாகம் எடுக்கும் ஒரு முட்டாள்தனமான முடிவு. ஏனெனில் எதிர்வரும் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும். அப்படி வாய்ப்பு கொடுத்தாலே, அவர் தன்னுடைய திறனை வெளிப்படுத்த அது ஒரு வாய்ப்பாக இருக்கும். அதை விடுத்து திலக் வர்மாவை சேர்க்கச் சொல்வதெல்லாம் சரியான விஷயமாக எனக்கு தெரியவில்லை. ஹர்திக் பாண்டியா இல்லாத அணியில் நிதிஷ் குமாரை ஏன் சேர்க்கவில்லை என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. இந்த அணியில் நிதிஷ் குமார் இல்லை என்றால், அணியை தேர்வு செய்வதில் ஏதோ தவறு இருக்கிறது என்பதற்குத் தான் அர்த்தம். ஏன் அவரை தேர்வு செய்யவில்லை? ருதுராஜ் ஹர்திக் செய்யும் அதே விஷயத்தை நிதிஷ் குமாராலும் செய்ய முடியும். அவருக்கு தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கினால்தான், அவர் தன்னுடைய திறமையை நிரூபிக்கவும் முடியும், வளர்த்துக் கொள்ளவும் முடியும். இந்த அணியில் நிதிஷ் குமார் இல்லை என்றால், நாம் இத்தகைய தொடருக்கு எந்த மாதிரி அணியை தேர்வு செய்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும், என்று காட்டமாக விமர்சித்துள்ளார். MI vs KKR: அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா
மீண்டும் மீண்டும் தோல்வி; உலகக்கோப்பை தகுதிச்சுறில் சொதப்பிய இந்திய கூடைப்பந்து அணி
FIBA கூடைப்பந்து உலகக்கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆசிய அணிகளுக்கிடையேயான தகுதிச்சுற்றில் நேற்று இந்தியா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதிய போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இந்தப் போட்டியில் 57-81 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. India vs Saudi Arabia ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா, ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களையும் சேர்த்து மொத்தம் 80 அணிகள் தகுதிச்சுற்றில் ஆடுகின்றன. இதில் இந்திய அணி ஆசிய கண்டத்தில் குரூப் D யில் லெபனான், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய அணிகளோடு இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி சவுதி அரேபியாவில் இரு அணிகளும் மோதியிருந்தன. அந்தப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி 75-51 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கேயும் தென்னாப்பிரிக்க அணியே கோலோச்சியது. India vs Saudi Arabia 57-81 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்திய அணிக்கு கிடைத்த 76 பீல்ட் கோல் வாய்ப்புகளில் 22 புள்ளிகளை மட்டுமே இந்திய அணி பெற்றது. அதேநேரத்தில் சவுதி அரேபியா அணி 62 வாய்ப்புகளில் 30 புள்ளிகளை பெற்றிருந்தது.
IND vs SA: களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன்- ஆட்டநாயகன் கோலி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ.30) ராஞ்சியில் நடைபெற்றது. IND vs SA இதில், 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அதிரடி சதமடித்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விராட் கோலி, ஆட்டத்திற்குள் நல்ல மனநிலையுடன் நுழைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. முதல் 20-25 ஓவர்கள் வரை பிட்ச் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. எனவே நான் வேறு எதையும் யோசிக்காமல், மைதானத்துக்கு சென்று பந்தை அடித்தாலே போதும் என்று முடிவு செய்தேன். என்னுடைய கிரிக்கெட் முழுவதும் மனரீதியானது. நான் தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன். அது இப்போது கிரிக்கெட்டுக்காக மட்டுமல்ல, அதுவே என் வாழ்க்கை முறையாகிவிட்டது. இங்குள்ள கண்டிஷனைப் புரிந்து கொள்ள ராஞ்சிக்கு முன்கூட்டியே வந்துவிட்டேன். பகலிலும், இரவிலும் பயிற்சி செய்தேன். போட்டிக்கு முந்தைய நாள் முழு ஓய்வு எடுத்தேன். விராட் கோலி எனக்கு இப்போது 37 வயதாகிறது. அதனால் சோர்வில் இருந்து மீள்வது மிகவும் முக்கியம். நான் எங்கு வந்தாலும், களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன். கடந்த 15-16 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் ஆடிவிட்டேன். வலைப்பயிற்சியில் இடைவேளை இல்லாமல் என்னால் 2 மணி நேரம் பேட்டிங் செய்ய முடிந்தால், என் உடல் தகுதி சரியாக இருக்கிறது என்று அர்த்தம். அனுபவம் இருக்கும்போது, ஃபார்ம் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று உத்வேகமாகப் பேசியிருக்கிறார். IND vs SA: ``பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன், இந்தப் போட்டியில நாங்க கொஞ்சம்.!'' - கே.எல் ராகுல்
Andre Russell: வேறு ஜெர்சியில் என்னைப் பார்ப்பது விசித்திரமாக இருந்தது - IPL-ல் இருந்து ஓய்வு
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த வீரர் ஆண்ட்ரே ரசல். 2012, 13 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரசல், அதன்பிறகு தொடர்ந்து 12 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2026ம் ஆண்டுக்கான சீசனில் ரசலை ஏலத்திற்காக வெளியிட்டது கேகேஆர் அணி நிர்வாகம். இதனால் அவருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிற அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே தனது ஓய்வை அறிவித்துள்ளார். ஆனால் பயிற்சியாளராக கேகேஆரில் தொடர்வதாக தனது புதிய பயணம் குறித்தும் பேசியுள்ளார். Knights Army, presenting your pic.twitter.com/sOLEnEMCva — KolkataKnightRiders (@KKRiders) November 30, 2025 ரசல் பேசியது என்ன? மேலும் ரசல் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மற்ற தொடர்களில் தொடர்ந்து விளையாடப்போவதாகவும் பேசியுள்ளார். ஓய்வு முடிவு பற்றி அவர் வெளியிட்ட வீடியோவில், நான் இந்த முடிவை எடுத்தபோது, இந்த நேரத்தில் இதுதான் சிறந்த முடிவு என்று உணர்ந்தேன் எனக் கூறிய அவர், நான் மங்கிப் போக விரும்பவில்லை, ஒரு லெகசியை விட்டுச் செல்ல விரும்புகிறேன். ரசிகர்கள் 'ஏன்? உங்களிடம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. நீங்கள் இன்னும் சிறிது காலம் ஆடலாம்' என்று கேட்கும்போது ஓய்வு பெறுவது நல்லது, அதற்கு பதிலாக 'ஆம், நீங்கள் அதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்' என்று அவர்கள் சொல்லும் வரை விளையாட வேண்டியதில்லை. எனப் பேசியுள்ளார். கேகேஆரில் சிக்ஸர்கள் அடித்து போட்டிகளையும் மேன் ஆஃப் தி மேட்ச்களையும் வென்ற தருணங்களை நினைவு கூர்ந்தவர் மற்ற ஜெர்சிகளில் தன்னை பார்ப்பது விசித்திரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். View this post on Instagram A post shared by Andre Russell Dre Russ. (@ar12russell) நீங்கள் சமூக ஊடகங்களைப் பார்க்கும்போது, (மற்ற அணிகளின்) வெவ்வேறு ஜெர்சிகளில் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டிருப்பதை நீங்கள் தொடர்ந்து பார்க்கிறீர்கள். ஊதா மற்றும் தங்க நிறத்தைத் தவிர வேறு எந்த நிறத்திலும் என்னைப் பார்ப்பது எனக்கு விசித்திரமாக இருந்தது, அந்த எண்ணங்கள் என் தலையில் ஓடிக்கொண்டே இருந்தன, சில தூக்கமில்லாத இரவுகளுக்கு என்னை இட்டுச் சென்றன. மேலும், எனக்கும் வெங்கி மைசூருக்கும், ஷாருக்கானுக்கும் இடையே நிறைய உரையாடல்கள் நடந்துள்ளன, இது எனது ஐபிஎல் பயணத்தின் மற்றொரு அத்தியாயம் பற்றியது. அவர்கள் எனக்கு அன்பும் மரியாதையும் கொடுத்துள்ளனர், மேலும் நான் மைதானத்தில் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதைப் பாராட்டுகிறார்கள். பழக்கமான ஒரு அமைப்பில் இருப்பது எனக்கு மிகவும் முக்கியம். கொல்கத்தா, நான் திரும்பி வருவேன். 2026 ஆம் ஆண்டில் புதிய பவர் பயிற்சியாளராக KKR ஆதரவு ஊழியர்களில் ஒருவராக இருப்பேன்.எனக் கூறியுள்ளார். Andre Russell ஐபிஎல்லில் 140 போட்டிகள் விளையாடியிருக்கும் ரசல், 174.18 ஸ்ட்ரைக்ரேட்டுடன் 2651 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 123 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐபிஎல்லின் Most Valuable Player விருதை வென்றிருக்கிறார். IND vs SA: கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல - ஏபிடி சொல்லும் காரணம் என்ன?
IND vs SA: கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல - ஏபிடி சொல்லும் காரணம் என்ன?
கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வொயிட் வாஷ் ஆனதைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் தொடரில் விளையாடவிருக்கிறது இந்திய அணி. கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல் இந்திய அணி எதிர்கொண்டு வரும் நிலையற்ற தன்மை, சவால் மிகுந்த போட்டிகளில் தொடர் தோல்வி, பிட்சுக்கு ஏற்ற திட்டம் இல்லாமை, குறிப்பிட்ட வீரர்களுக்கு அதீத முக்கியத்துவம் போன்ற சிக்கல்கள் குறித்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். அஷ்வின், ஏபிடி இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் யூடியூப் சேனலில், கம்பீர் 'உணர்ச்சிப்பூர்வமான' வீரராக இருந்தது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ். அதில், இந்திய தரப்பில் பார்க்கும்போது இது மிகக் கடினம். தலைமைத்துவத்தைப் பொறுத்தவரையில் ஜிஜி (கவுதம் கம்பீர்) எப்படி எனத் தெரியவில்லை. எனக்கு அவரை எமோஷனாலான வீரராகத் தெரியும், ட்ரெஸ்ஸிங் ரூமிலும் அப்படித்தான் என்றால், பொதுவாக ஒரு எமோஷனலான பயிற்சியாளர் இருப்பது நல்லதல்ல. ஆனால் அவர் அந்த மாதிரியான கோச்தான். இதில் சரி, தவறு என்பது கிடையாது. Gautam Gambhir சில வீரர்கள் உடன் விளையாடிய முன்னாள் வீரர்களுடன் சகஜமாக இருப்பார்கள். சில வீரர்கள் இதற்கு முன்பு விளையாடியதில்லை என்றாலும், பயிற்சி அளிப்பதில் பல வருட அனுபவம் உள்ள ஒரு பயிற்சியாளருடன் வசதியாக உணர்வார்கள் எனப் பேசியுள்ளார் ஏபிடி. தொடர்ந்து, நான் ஷுக்ரி (தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்) தலைமையில் விளையாடியதில்லை, இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் கவுதம் கம்பீருடன் இருந்ததில்லை. அதனால் திரைக்குப் பின்னால் உள்ள இயக்கவியல் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வீரருக்கும் இது வித்தியாசமானதாக இருக்கும். கேரி கிர்ஸ்டனின் கீழ் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன்; அவர் ஒரு முன்னாள் வீரர், கவுதம் கம்பீரைப் போலவே இருக்கிறார். முன்னாள் வீரர் ஒருவர் அங்கு இருப்பதைப் பார்க்கும்போது சில வீரர்கள் தன்னம்பிக்கையையும், சௌகரியத்தையும் உணரலாம் என்றும் பேசினார். Gautam Gambhir: அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும் - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!
Faf du Plessis: இது கடினமான முடிவு; ஆனால் - 2026 IPL பற்றி ஷாக் கொடுத்த முன்னாள் CSK எல்லைச்சாமி
இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆல் டைம் ஃபைன் அண்ட் பெஸ்ட் வெளிநாட்டு வீரர்களில் தவிர்க்க முடியாதவர் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ். 2011 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டாலும் அந்த சீசன் முழுவதும் பென்ச்சிலேயே உட்காரவைக்கப்பட்டவர், 2012-ல் இறங்கி ஆட வாய்ப்பு கிடைத்ததும் அந்த சீசனில் 398 ரன்கள் அடித்து அசத்தினார். நல்ல தொடக்கம் கொடுத்தும் காயத்தால் அடுத்த சீசனைத் தவறவிட்ட டு பிளெஸ்ஸிஸ், 2014-ல் கம்பேக் கொடுத்து, அதன்பிறகு சி.எஸ்.கே-வின் தவிர்க்க முடியாத வீரராகவே உருவெடுத்துவிட்டார். Dhoni, Faf du Plessis - தோனி, ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் - CSK சூதாட்ட விவகாரத்தால் 2016, 2017 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸுடன் தடைக்குள்ளான சி.எஸ்.கே 2018-ல் திரும்பி வந்து சாம்பியன் பட்டம் சொல்லியடித்தது. அந்த சீசனில், குவாலிஃபயர் 1-ல் ஹைதராபாத் நிர்ணயித்த 140 டார்கெட் நோக்கிய சேஸிங்கில் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் ஓப்பனிங்கில் இறங்கியது முதல் கடைசி வரை நின்று வின்னிங் ஷாட் அடித்து இறுதிப் போட்டிக்கு சென்னையை கொண்டுசென்றதை இன்றும் மறக்க முடியாதது. Ruturaj Gaikwad, Faf du Plessis - ருத்துராஜ் கெய்க்வாட், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் அதைத்தொடர்ந்து 2021-ல் சி.எஸ்.கே சாம்பியன் பட்டம் வென்றதிலும் இவரின் பங்கு அளப்பரியது. குறிப்பிட்டுச் சொன்னால் அந்த சீசனில் 635 ரன்கள் அடித்து ஆரஞ்ச் கேப் வென்ற ருத்துராஜ் கெய்க்வாட்டை விட ஜஸ்ட் 2 ரன்கள்தான் டு பிளெஸ்ஸிஸ் குறைவாக அடித்திருந்தார். `என் RCB ரசிகர்களுக்கு; சின்னசாமி ஸ்டேடியத்தில்...' - நெகிழ்ந்த டூ பிளெஸ்ஸி அப்படியிருந்தும் 2022 சீசனில் சென்னையிலிருந்து கழற்றிவிடப்பட்டார். ஆனால் அதே சீசனில் ஆர்.சி.பி அணியின் கேப்டனாகி அணியை பிளே-ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றார். அதற்கடுத்த சீசனில் டு பிளெஸ்ஸிஸ் தனியாளாகப் போராடி தனது ஐ.பி.எல் கரியரின் பெஸ்ட் சீசனாக 730 ரன்கள் அடித்தார். Kohli, Faf du Plessis - கோலி, ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் ஆனால், ஒரு அணியாக ஆர்.சி.பி ஏமாற்றம் தந்து லீக் சுற்றோடு வெளியேறியது. இருப்பினும், அடுத்த சீசனில் கடைசி 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று சி.எஸ்.கே-வை வெளியேற்றி மீண்டும் டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஆர்.சி.பி. Faf du Plessis - ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் சி.எஸ்.கே-வுக்கெதிரான போட்டியில் மிட்செல் சான்ட்னரின் கேட்ச்சை ஒற்றைக் கையால் அவர் பறந்து பிடித்தது ஐ.பி.எல்லின் பெஸ்ட் கேட்ச் ரகம். ஆனாலும் அந்த சீசனிலும் ஆர்.சி.பி-யால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியவில்லை. அதன்பின்னர் அங்கிருந்தும் கழற்றிவிடப்பட்ட டு பிளெஸ்ஸிஸ் கடந்த சீசனில் டெல்லி அணிக்கு சென்றார். தண்ணீர் பாட்டில்கள் சுமந்த தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸி! அங்கு காயத்தால் பாதி சீசனிலேயே வெளியேறினார். அதன் தொடர்ச்சியாக, 2026 சீசனுக்கான மினி ஏலத்துக்கு முன்பு டெல்லி அணியும் அவரைக் கழற்றிவிட்டது. இந்த நிலையில் டிசம்பர் 16-ம் தேதி துபாயில் ஐ.பி.எல் மினி ஏலம் நடைபெறவிருக்கும் சூழலில், ஏலத்தில் தான் பங்கேற்கப்போவதில்லை என டு பிளெஸ்ஸிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். Preity Zinta, Faf du Plessis - பிரீத்தி ஜிந்தா, ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஐ.பி.எல்லில் 14 சீசன்களுக்குப் பிறகு இந்த வருடம் ஏலத்தில் என் பெயரை பதிவு செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். இது கடினமான முடிவு. என்னுடைய பயணத்தில் மிகப்பெரிய பகுதி ஐ.பி.எல். இங்கே ரசிகர்கள் முன்னிலையில் அற்புதமான அணிகளுடனும், உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடனும் விளையாடியதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. View this post on Instagram இந்தியா எனக்கு நட்பு, பாடங்கள் மற்றும் நிறைய நினைவுகளை கொடுத்திருக்கிறது. அது என்னை ஒரு கிரிக்கெட் வீரராகவும், மனிதராகவும் செதுக்கியது. என்னை ஆதரித்த ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், சக வீரர்களுக்கும், அணி ஊழியர்களுக்கும், அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. உங்களின் ஆதரவு மிகப்பெரியது. ட்ரம்ப்பின் நண்பர் கொலையைத் தொடர்ந்து RCB Ex கேப்டன் எழுப்பிய முக்கிய கேள்வி; என்ன கேட்கிறார்? 14 வருடம் என்பது மிக நீண்ட காலம். இதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு. நிச்சயமாக இதோடு நான் விடைபெறப்போவது இல்லை. நீங்கள் மீண்டும் என்னை பார்ப்பீர்கள். புதிய சவாலாக, வரவிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட நான் முடிவெடுத்திருக்கிறேன். Faf du Plessis - ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் இது எனக்கு மிகவும் உற்சாகமான அடுத்த நகர்வு. புதிதாக ஒன்றை அனுபவிக்கவும், ஒரு வீரராக அடுத்த கட்டத்துக்கு செல்லவும் இது எனக்கு ஒரு வாய்ப்பு. புதிய நாடு, புதிய சுற்றுச்சூழல், புதிய சவால். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன் என்று டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்திருக்கிறார். ஐ.பி.எல்லில் பெங்களூரு, டெல்லி ஆகிய அணிகளில் ஆடியிருந்தாலும் இன்றும் சென்னை அணியின் எல்லைச் சாமி என ரசிகர்கள் கொண்டாடும் டு பிளெஸ்ஸிஸுக்கு இப்போது 41 வயது, 2027 சீசனில் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகம்தான். எனினும் அவரின் ஃபிட்னஸ் இந்த வயதிலும் பிரமிக்கத்தக்கதாக இருப்பதால் அவரின் வார்த்தையை நம்பி 2027-ல் அவரை எதிர்பார்ப்போம்! Ashes: எங்களை மோசம் என்றுகூட சொல்லுங்கள்; ஆனால் ஆணவம் - இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்
ஆண் பிள்ளைகளை கோலி, ரோஹித் ஆக்க விரும்பும் பெற்றோர் பெண் பிள்ளைகளை அப்படி விரும்புவதில்லை - ஜெய்ஷா
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் 1973 முதல் கால் நூற்றாண்டுக்கும் மேலாக WCAI எனும் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின்னர், 2005-ல் இந்திய மகளிர் அணி முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அடுத்தாண்டு முதல் பி.சி.சி.ஐ இந்திய மகளிர் கிரிக்கெட்டையும் சேர்த்து நிர்வகிக்கத் தொடங்கியது. ஆனாலும் இந்திய அணியில் வீரர்களுக்கு அதிக சம்பளமும், வீராங்கனைகளுக்கு மிகக் குறைவான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2019-ல் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பி.சி.சி.ஐ செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு 2022 அக்டோபரில் இந்திய அணியில் வீரர்கள், வீராங்கனைகள் இருபாலருக்கும் சம ஊதியத்தைக் கொண்டுவந்தார். அவருக்கு முன்பாக முதல் நாடாக அதே ஆண்டில் ஜூலை மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐந்தாண்டு ஒப்பந்தம் அடிப்படையில் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சம ஊதியத்தைக் கொண்டுவந்தது. இன்று வரை இந்த இரண்டு கிரிக்கெட் வாரியங்கள் மட்டுமே இருபாலருக்கும் சம ஊதியத்தை அளிக்கின்றன. பி.சி.சி.ஐ-யில் இப்படியொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவந்த ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கிறார். இந்த நிலையில், பி.சி.சி.ஐ செயலாளராகத் தான் எடுத்த முடிவுகளில் தனக்குப் பிடித்த முடிவுகள் எவை என்று ஜெய் ஷா பேசியிருக்கிறார். நேற்று தனியார் ஊடகமான CNN News18 ஜெய் ஷாவுக்கு '2025-ம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருது' வழங்கி கௌரவித்தது. Jay Shah - ஜெய் ஷா இந்நிகழ்ச்சியில், முதல்முறையாக இந்தியாவை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்ற முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ், இந்தியாவுக்கு முதல்முறையாக உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மட்களையும் சேர்த்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இந்த விருதை ஜெய் ஷா அர்ப்பணித்தார். Amol Muzumdar: இந்தியாவுக்காக விளையாடியதில்லை; இன்று பயிற்சியாளராக கோப்பை வென்ற பேசப்படாத ஹீரோ! அதைத்தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய ஜெய் ஷா , ``2019 அக்டோபர் 23-ம் தேதி பி.சி.சி.ஐ செயலாளராக நான் பொறுப்பேற்றேன். அன்றிலிருந்து 2024 டிசம்பர் 1-ம் தேதி வரையில் நாங்கள் நிறைய முடிவுகளை எடுத்தோம், நிறைய சாதனைகள் படைத்தோம். உள்ளூர் போட்டிகள் கட்டமைப்பை வலுப்படுத்தினோம். சம ஊதியத்தைக் கொண்டு வந்தோம். மகளிர் ஐ.பி.எல் (WPL) தொடங்கினோம். எந்தச் சர்ச்சையும் இல்லாமல் ரூ. 50,000 கோடி மதிப்பிலான ஒளிபரப்பு உரிமைகளை விற்றோம். அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய கிரிக்கெட் அகாடமியை அமைத்தோம். பெர்த், கேப் டவுன், சிட்னி, லார்ட்ஸ் போன்ற அனைத்து வகையான பிட்ச்களும் இங்கு பயிற்சிக்காக உள்ளன. Jay Shah - ஜெய் ஷா ஆனால், இவற்றில் எனக்கு பிடித்தவை சம ஊதியம் கொண்டு வந்ததும், மகளிர் ஐ.பி.எல் ஆரம்பித்ததும்தான். அதன் பலனைச் சமீபத்தில் பார்த்தோம் (மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வென்றது). ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் அவரது அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். அனைவரின் இதயங்களையும் நீங்கள் வென்றுவிட்டீர்கள். மேலும், ஆண்கள் வெற்றி பெற அழுத்தம் ஏற்படுத்தியிருக்கிறீர்கள். பெற்றோர் தங்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தால் அதில் ஆண் பிள்ளைகள் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா போன்று உருவாக்க விரும்புகிறார்கள். ஆனால், பெண் பிள்ளைகளை ஹர்மன்பிரீத் கவுராகவோ அல்லது ஸ்மிருதி மந்தனாவாகவோ உருவாக்க விரும்புவதில்லை. நாங்கள் சம ஊதியம் கொண்டுவந்துவிட்டதால் இனி பெற்றோர் தங்களின் பெண் பிள்ளைகளை ஹர்மன்பிரீத் கவுராகவோ அல்லது ஸ்மிருதி மந்தனாவாகவோ உருவாக்குவார்கள் என்று கூறினார். ``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க - வைரலாகும் மிதாலி ராஜ் பேட்டி
Ashes: எங்களை மோசம் என்றுகூட சொல்லுங்கள்; ஆனால் ஆணவம் - இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்
கிரிக்கெட் உலகில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய தொடராகக் கருதப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் 21-ம் தேதி தொடங்கியது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் இல்லாததால் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் முதல் நாளிலேயே ஆஷஸ் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் முதல்முறையாக 19 விக்கெட்டுகள் வீழ்ந்தன. அடுத்த நாளில் போட்டியே முடிவுக்கு வந்தது. பென் ஸ்டோக்ஸ் - ஸ்டீவ் ஸ்மித் மொத்தமாக இரண்டு நாள்களுக்குள் போட்டி முடிந்ததால் ரூ. 17 கோடி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு இழப்பு ஏற்படும் சூழல் உருவானது. அதற்கு மேல் பிட்ச் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இன்னொரு பக்கம் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீதும் விமர்சனங்கள் குவிந்தன. `நிதானமாக நிலைத்து ஆடுவதுதான் டெஸ்ட் போட்டியின் சிறப்பு. ஆனால் அதிரடியாக ஆட வேண்டும் என்ற ஸ்டோக்ஸின் ஆணவத்தால் இங்கிலாந்து கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது' என்று ஸ்டோக்ஸ் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. Ben Stokes: Phoenix from the Ashes: மனநலம் குறித்த ஓர் ஆரோக்கியமான உரையாடல்! ஆவணப்படம் சொல்வது என்ன? அதேசமயம், இன்னும் 4 டெஸ்ட் போட்டிகள் இத்தொடரில் மீதமிருப்பதால், ஸ்டோக்ஸ் மீண்டு வந்து 25 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்தை ஆஷஸ் தொடரை வெல்ல வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அவர் மீது படர்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டி டிசம்பர் 4-ம் தேதி பிரிஸ்பெனிலுள்ள கப்பா மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் முதல் டெஸ்ட்டில் தோற்றதால் தன்மீது விழுந்த விமர்சனங்கள் தொடர்பாக ஸ்டோக்ஸ் மவுனம் கலைத்திருக்கிறார். இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டோக்ஸ் , ``எங்களை மோசம் என்றுகூட சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி சொல்லிக்கொள்ளுங்கள். நாங்கள் எதிர்பார்த்த டெஸ்ட் போட்டி அமையவில்லை. அப்போட்டியில் சில கட்டங்களில் நாங்கள் முன்னிலையில் இருந்தோம். ஆனால், ஆணவம் என்று சொல்வது கொஞ்சம் அதிகம். இருந்தாலும் பரவாயில்லை, மென்மையானதுடன் கடினமானதையும் நாங்கள் எடுத்துக்கொள்வோம். மோசம் என்று சொன்னால்கூட ஓரளவுக்குப் பரவாயில்லை, ஆனால் ஆணவம் என்று சொன்னால் அது அவ்வளவு உறுதியாக எனக்குத் தெரியவில்லை என்று கூறினார். கடைசியாக 2015-ல் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற 4 தொடர்களில் ஒரு தொடரைக்கூட கைப்பற்றவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடரை ஆஸ்திரேலியா வென்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற 2 தொடர் டிரா ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. என் ஊதியத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு வழங்க விரும்புகிறேன்!- பென் ஸ்டோக்ஸ்
மதுரையில் Hockey Junior WC: இங்கிலாந்து vs நெதர்லாந்து - `விறு விறு போட்டி'இறுதியில் வென்றது யார்?
மதுரை, தமிழ்நாடு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 14வது சர்வதேச ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது நாள் முதல் போட்டி மிதமான மழையுடன் தொடங்கியது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கிய இப்போட்டியில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதின. முதல் கால் பாதி தொடங்கிய சற்று நேரத்தில் நெதர்லாந்து அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார் லேன்ட் யான். நெதர்லாந்து அணியின் அட்டகாசமான டிஃபென்ஸ், இங்கிலாந்து அணியை சிறிது நிலை குலையச் செய்தாலும், ஆட்டத்தின் முதல் பெனால்டி கார்னரை வழங்கியது நெதர்லாந்து அணி. Hockey Junior WC இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னுடைய அணிக்காக முதல் கோலை அடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்தார் இங்கிலாந்து அணியின் ட்ரேஸி கேடன். நெதர்லாந்து அணி 1, இங்கிலாந்து அணி 1 என்ற கணக்கில் முதல் கால் பாதி முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கால் பாதி தொடங்கிய பின், ஆட்டத்தின் வேகம் குறைந்து கொண்டே வர, சரியாக நான்காவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் கேப்டன் வீன் காஸ்பர் தன் அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார். பின்பு கோல் அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து இருந்த நிலையில் அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார் ரோய்டன் மைக்கேல். இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடி 2-2 என்ற கணக்கில் முதல் பாதியை நிறைவு செய்தனர். மூன்றாம் கால் பாதி தொடங்கி, சரியாக ஆறாவது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக்கை வழங்கியது இங்கிலாந்து அணி. இதை கனகச்சிதமாகப் பயன்படுத்தி நெதர்லாந்து அணிக்காக மூன்றாவது கோலை அடித்தார் வோல்பர்ட் யோப்பே. மூன்றாவது கால் பாதியின் முடிவில் நெதர்லாந்து 3, இங்கிலாந்து 2 என்ற கணக்கில் இருந்தனர். நான்காவது கால் பாதியின் பதினொன்றாம் நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்காக நான்காவது கோலை அடித்தார் லேன்ட் யான். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக அடுத்த அரை நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கான மூன்றாவது கோலை விளாசி ரசிகர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கினார் ஃப்லெச்சர் ஜார்ஜ். Hockey Junior WC Hockey Junior WC Hockey Junior WC Hockey Junior WC Hockey Junior WC Hockey Junior WC Hockey Junior WC இங்கிலாந்து அணி அடுத்த கோலை அடித்துவிடுமோ என்ற அச்சத்தில் விளையாடிய நெதர்லாந்து அணிக்கு, எதிர்பாராத விதமாக பெனால்டி கார்னர் கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னுடைய ஐந்தாவது கோலை அடித்து போட்டியில் தங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைத்து 5-3 என்ற கணக்கில் போட்டியில் வாகை சூடியது நெதர்லாந்து அணி.
சென்னையில் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை: சிலி அணியை பந்தாடிய இந்திய அணி! | A Photo Highlights
Junior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை Junior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை Junior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை Junior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை Junior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை Junior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை Junior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை
Junior Hockey WC: ஹாக்கி உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் இந்திய அணி அபாரம்; பந்தாடப்பட்ட சிலி அணி!
ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை நேற்று தமிழகத்தில் தொடங்கியது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரையில் நடைபெறும் இத்தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்கேற்றிருக்கின்றன. அவை 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டி என மொத்தம் 3 லீக் போட்டிகளில் ஆடும். இந்தியா vs சிலி - ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை குரூப் A - கனடா, ஜெர்மனி, அயர்லாந்து, தென்னாப்பிரிக்க குரூப் B - சிலி, இந்தியா, ஓமன், ஸ்விட்சர்லாந்து குரூப் C - அர்ஜென்டினா, சீனா, நியூசிலாந்து, ஜப்பான் குரூப் D - பெல்ஜியம், எகிப்து, ஸ்பெயின், நமீபியா குரூப் E - ஆஸ்திரியா, இங்கிலாந்து, மலேசியா, நெதர்லாந்து குருப் F - ஆஸ்திரேலியா, வங்காளதேசம், கொரியா, பிரான்ஸ் அனைத்து போட்டிகளும் மதுரை சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் மற்றும் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியம் ஆகிய இரண்டு மைதானங்களில் நடைபெறும். முதல் நாளான நேற்று மதுரையில் நடைபெற்ற தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி 4 - 0 என தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் கனடாவை 3 - 4 என அயர்லாந்தும், ஜப்பானை 1 - 4 என அர்ஜென்டினாவும், எகிப்தை 0 - 8 என ஸ்பெயினும், சீனாவை 3 - 5 என நியூசிலாந்தும், நமீபியாவை 1 - 12 என பெல்ஜியமும், ஸ்விட்சர்லாந்தை 0 - 4 என ஓமனும் வீழ்த்தின. இந்தியா vs சிலி - ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை நேற்று கடைசிப் போட்டியாக சென்னையில் இந்திய அணியும் சிலி அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய வீரர்கள் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் 7 - 0 என மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தனர். இந்திய அணியில் ரோஷன் குஜுர், தில்ராஜ் சிங் ஆகியோர் தலா 2 கோல்களும், அஜீத் யாதவ், அனுமோல் எக்கா, கேப்டன் ரோஹித் ஆகியோர் தலா ஒரு கோலும் போட்டனர். இந்தியா vs சிலி - ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை இந்திய அணி இன்னும் தனக்கிருக்கும் இரண்டு லீக் போட்டிகளில் இன்று ஓமன் அணியையும், டிசம்பர் 2-ம் தேதி ஸ்விட்சர்லாந்து அணியையும் எதிர்கொள்ளவிருக்கிறது. இந்திய அணி 2001 மற்றும் 2016 என இரண்டு முறை ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Chennai : '24 நாடுகள், கோலாகல கொண்டாட்டம், தொடங்கியது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி! - Photo Album

24 C