பாக். வீரர் ஒப்பந்தம்; பற்றி எரியும் சர்ச்சை - காவ்யா மாறனை சீண்டிய லலித் மோடி! - பின்னனி என்ன?
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட 'தி ஹண்ட்ரட் லீக்' போட்டிகள் பிரிட்டனில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ், லண்டன் ஸ்பிரிட், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ், ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபயர் உள்ளிட்ட 8 அணிகள் இருக்கின்றன. 'தி ஹண்ட்ரட் லீக்' தி ஹண்ட்ரட் லீக் ஏலம் இதில், நான்கு அணிகளை இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்குகளை வைத்துள்ளனர். ஜூலை மாதம் இந்தத் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் வீரர்களுக்கான ஏலம் மார்ச் 12 ஆம் தேதி லண்டனின் பிகாட்லி லைட்ஸில் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் அணிக்காக உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் டேனில் வெட்டோரி உள்ளிட்டோர் ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இந்த அணிக்கு கேப்டனாக ஹாரி ப்ரூக் செயல்பட்டு வருகிறார். அப்ரார் அகமது இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதை 1.90 லட்சம் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ.2.34 கோடி) ஏலத்தில் வாங்கியது. 27 வயதான அப்ரார் அகமது, கடந்த 2024 ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 38 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 52 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை. அப்ரார் அகமது #BoycottSunrisers - நெட்டிசன்கள் மேலும், 2009 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் சன்ரைசர்ஸ் அணி தரப்பில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதை ஏலத்தில் ஒப்பந்தம் செய்ததற்கு எதிராக இந்தியாவில் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் அப்ரார் அகமது கடந்த காலங்களில் இந்திய ராணுவம் மற்றும் விங் கமாண்டர் அபிநந்தன் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார் என்று குறிப்பிட்டு #ShameOnSRH, #BoycottSunrisers போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக காவியா மாறனுக்கு எதிராக கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். தொடர்ந்து சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யபட்டது. ராஜிவ் சுக்லா கருத்து இந்த விமர்சனங்கள் குறித்து பேசியிருந்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா, “அது எங்கள் அதிகார வரம்பில் கீழ் இல்லை. அதை வெளிநாட்டு லீக் கிரிக்கெட்டில் அவர்கள் செய்துள்ளனர். அதில் நாங்கள் எதுவும் செய்வதற்கு இல்லை. அதனால் அது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார். டேனியல் வெட்டோரி டேனியல் வெட்டோரி விளக்கம் அப்ரார் அகமதின் தேர்வு குறித்து பேசிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, அப்ரார் அகமதின் பந்து வீச்சில் நிறைய நுணுக்கங்கள் இருந்தன. சர்வதேச அணிகளில் இருந்து பல சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் எங்களின் முன்னுரிமையாக அப்ரார் அகமது தான் இருந்தார் என்று கூறியிருந்தார். சுனில் கவாஸ்கர் விமர்சனம் இதனைத்தொடர்ந்து தான் அப்ரார் அகமதுவின் ஒப்பந்தம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியிருந்தார். “பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை, இறுதியில் வருமானவரி மூலம் அந்நாட்டு அரசாங்கத்துக்குச் செல்கிறது. அந்தப் பணம், ஆயுதங்களை வாங்குவதற்கு வழிவகை செய்கிறது. பாகிஸ்தான் வீரர்களுக்குக் கொடுக்கப்படும் தொகையானது மறைமுகமாக இந்திய வீரர்கள் மற்றும் பொதுமக்களின் மரணத்திற்கு பங்களிக்கிறது. கவாஸ்கர் உயிர்களைவிட முக்கியமானதா? 'தி ஹண்ட்ரட்' அணியின் பயிற்சியாளரான நியூசிலாந்தைச் சேர்ந்த வெட்டோரிக்கு இந்த நிலைப்பாடு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம் என்றாலும், இந்திய உரிமையாளர்கள் இந்நிலையைப் புரிந்துகொண்டு பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும். வேறு எந்த நாடும் விளையாடாத ஒரு தொடரில் வெற்றி பெறுவது, இந்திய உயிர்களைவிட முக்கியமானதா?” என கடுமையாகச் சாடியிருந்தார். காவியா மாறனை சாடிய லலித் மோடி இந்நிலையில் தற்போது அப்ரார் அகமதுவை ஒப்பந்தம் செய்த விவகாரத்தில், ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி காவியா மாறனை சாடியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மக்கள் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் நிலையில், ஒரு பாகிஸ்தான் வீரருக்காக 2.34 கோடி ரூபாய் முதலீடு செய்வதா? ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குவது எப்படி, பொதுமக்களின் பார்வையை எப்படி கையாளுவது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று காவியா மாறனை சாடியிருக்கிறார். லலித் மோடி அப்ரார் அகமது விளையாடுவாரா? தொடர்ந்து சமூக வலைதளங்களில் அப்ரார் அகமதை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அணி நிர்வாகம் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவும் இல்லை. அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுதொடர்பாக அளிக்கவில்லை. வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இத்தொடரில் அப்ரார் அகமது விளையாடுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
``கம்பீர் நினைத்தால், நானும், விராட், ரோஹித்தும் விலகுவது தப்பில்லை - அஷ்வின் ஓப்பன் டாக்
கடந்த 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவே, ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவித்த ஓய்வு முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனில் கும்ப்ளேவின் (619 விக்கெட்டுகள்) சாதனையை முறியடிக்க வாய்ப்பிருந்தும், 537 விக்கெட்டுகளுடன் அஷ்வின் ஏன் திடீரென விடைபெற்றார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த 'RevSportz Conclave' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அஷ்வின், ``பெர்த் டெஸ்டில் ஜடேஜாவும் நானும் முதன்மை ஸ்பின்னர்களாக இருந்தோம். ஆனால் வாஷிங்டன் சுந்தர் விளையாடிய விதம் மற்றும் அடுத்தடுத்த போட்டிகளில் நான் அணியில் சேர்க்கப்படுவதும், பிறகு நீக்கப்படுவதுமாக இருந்த சூழல், 'எனது காலம் முடிந்துவிட்டது' என்பதை எனக்கு உணர்த்தியது. R.Ashwin மற்றொருவர் அந்த இடத்தைப் பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றால், அவருக்கு அந்த இடத்தையும் நேரத்தையும் நான் கொடுத்தே ஆக வேண்டும். கௌதம் மீது யாருக்காவது வருத்தம் இருக்க வேண்டும் என்றால், அது எனக்குத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவரது பயிற்சியின் கீழ் வந்த இரண்டாவது அல்லது மூன்றாவது தொடரிலேயே நான் வெளியேற வேண்டியிருந்தது. ஆனால், ஒரு பயிற்சியாளராக அணிக்கு எது சிறந்தது என்பதை முடிவெடுக்கும் முழு உரிமை அவருக்கு உண்டு. கம்பீரின் திட்டத்தில் நானோ அல்லது விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா ஆகியோருக்கு இடம் இல்லை என்று அவர் கருதினால், அதில் தவறு ஏதுமில்லை. அவர் தனது கடமையைச் செய்கிறார். அந்த நேரத்தில் எனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம், அது மனித இயல்பு. ஆனால், அந்த உணர்ச்சிகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், கம்பீரின் திட்டத்தில் எனக்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. நம் நாட்டில் கிடைக்கும் புகழால் நாம் வீழ்த்த முடியாதவர்கள் என்று நினைத்துக் கொள்கிறோம், ஆனால் அது உண்மையல்ல. கௌதம் கம்பீர் எனது ஈகோவைத் தள்ளி வைத்துவிட்டு எதார்த்தத்தைப் புரிந்துகொண்டேன். என் தந்தை எனது நலனில் அக்கறை கொண்டவர். நான் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியபோது அவர் ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்தார். ஆனால், நான் வீட்டில் இருக்கும்போது சக வீரர்களைப் பற்றித் தவறாகப் பேச வேண்டாம் என்று அவரிடம் பலமுறை சண்டையிட்டுள்ளேன். என்றார்.
IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த சஞ்சு சாம்சன்
2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார். சஞ்சு சாம்சன் இந்நிலையில் PTI- க்கு பேட்டி அளித்திருக்கும் சஞ்சு சாம்சன், ஐபிஎலில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினேன். தற்போது முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக விளையாடும்போது எனக்கு எந்த ஒரு எமோஷனலும் இருக்காது என நினைக்கிறேன். ஏனென்றால் அந்த ஆட்டம் வெற்றியாளர்களைத் தீர்மானிக்க போகிறது. ஆனால் போட்டிக்கு முன்பும், பின்பும் ராஜஸ்தான் அணியின் வீரர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் எமோஷன்ஸ் இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு நபருக்கும் ஓர் அணியில் குறிப்பிட்ட நேரம் அமையும். எனக்கான நேரம் வந்துவிட்டதால், சிஎஸ்கே அணி நோக்கி வந்துவிட்டேன். அந்த அணியில் என்னுடன் விளையாடிய நிறைய இளம் வீரர்கள் இருக்கின்றனர். சஞ்சு சாம்சன் அவர்கள் மீது எனக்கு அன்பும், மரியாதையும் இருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணியுடன் எனது பயணத்தைத் தொடங்க இருக்கிறேன். சிஎஸ்கே ரசிகர்கள் அவர்களுள் ஒருவனாக என்னை நினைப்பார்கள் என்று நம்புகிறேன். என்னால் முடிந்த வரை சிஎஸ்கேவிற்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.

30 C