SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
...

IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?

உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன? தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சி.எஸ்.கே. அணியின் திட்டம் என்ன? தோனி 2019க்கு முன்பு வரைக்கும் தோனி இந்திய அணியின் போட்டி அட்டவணைகளைப் பொறுத்து இந்திய அணிக்காக ஆடிவிட்டு ஐ.பி.எல்லுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வருவார். 2019க்குப் பிறகு தோனி சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை. Dhoni : '38 வயசுல மேன் ஆப் தி சீரிஸ்...' - தோனியின் அந்த ஆஸ்திரேலிய ருத்ரதாண்டவம் நியாபகமிருக்கிறதா? சென்னை வந்த தோனி அதன்பிறகு எப்போதுமே ஒவ்வொரு சீசனின் போதுமே சரியாக ஒரு மாதம் முன்பாகவே தோனி சென்னைக்கு வந்துவிடுவார். அவரின் வருகையைப் பொறுத்துதான் சென்னை அணியின் பயிற்சி செஷன்களும் திட்டமிடப்படும். ராஞ்சியில் முதற்கட்டமாக சில நாட்கள் பயிற்சி எடுக்கும் தோனி, சென்னையிலும் வந்திறங்கியவுடன் முதல் நாளின் பயிற்சி செஷனிலிருந்தே பயிற்சியையும் தொடங்கிவிடுவார். அதே டெம்ப்ளேட்தான் இந்த முறையும். ருத்துராஜ் கெய்க்வாட் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே மூன்று நாட்களுக்கு முன்பாக தோனி சென்னைக்கு வந்திறங்கிவிட்டார். தோனியை வரவேற்கும் விதத்தில் சென்னை அணியும் ஒரு மாஸான வீடியோவை வெளியிட்டிருந்தது. தோனியுடன் ருத்துராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் உட்பட 10க்கும் மேற்பட்ட வீரர்களும் சென்னை அணியின் முகாமில் இணைந்துவிட்டனர். `தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி ஷூட்டிங் சஞ்சு சாம்சன் போல சர்வதேச அணிகளுக்காக ஆடி வரும் வீரர்களும் உலகக்கோப்பை முடிந்தவுடன் பயிற்சி முகாமில் இணைந்து விடுவார்கள். நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் தோனி சில நாள்களை போட்டோஷூட்டுக்கும் சில நாள்களை விளம்பரப் படங்களின் ஷூட்டுக்கும் எஞ்சியிருக்கும் நாள்களில் ஸ்பான்சர்களுக்காக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் எனத் தகவல் சொல்கின்றனர் சிஎஸ்கே வட்டாரத்தினர். தோனி இம்பாக்ட் ப்ளேயராக தோனி பகல் நேரங்களில் மற்ற கமிட்மெண்ட்களை முடிக்கும் தோனி, மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் நாவலூரில் உள்ள சிஎஸ்கேவின் இன்னொரு மைதானத்தில் முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வரவிருக்கும் சீசனில் தோனி முழுமையாக ஆடமாட்டார். இம்பாக்ட் ப்ளேயராக வேண்டுமானால் வருவார் எனத் தகவல்கள் வருகின்றன. ஆனால், நாவலூர் மைதானத்தில் தோனி மிகத் தீவிரமாக வழக்கம் போல பேட்டிங் பயிற்சியில்தான் ஈடுபட்டு வருகிறார். தோனி எப்படியும் ஒரு நாள் விலகுவார், அதனால்.!- CSK வீரர்கள் தேர்வு குறித்து பயிற்சியாளர் பிளெமிங் ஆக, தோனி என்ன ரோலில் ஆடப் போகிறார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எதுவாக இருந்தாலும் முடிவு தோனி எடுப்பதுதான். சென்னை அணியின் முன்னாள் வீரர்களான அஷ்வினையும் ரெய்னாவையும் பயிற்சியாளர் குழுவில் இணைக்கும் மனநிலையிலும் சென்னை அணியின் நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஷ்வின் புது ஜெர்சியோடு, புது எனர்ஜியோடு கலக்க சென்னை வீரர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை முகாமிலிருந்து அடுத்தடுத்து என்னென்ன அப்டேட்கள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில் என்ன?

விகடன் 3 Mar 2026 6:59 pm

ஆரம்ப நாட்களிலிருந்தே அவரது வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன்- சஞ்சுவை பாராட்டிய சசி தரூர்

நேற்று முன் தினம் (மார்ச்.1) நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கிய பங்காற்றியிருந்தார். சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தை பலரும் பாராட்டியிருந்தனர். சஞ்சு சாம்சன் இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் சஞ்சு சாம்சனை பாராட்டி இருக்கிறார். சஞ்சு சாம்சனுக்கு 14 வயது இருக்கும் போதிலிருந்தே எனக்குத் தெரியும். திருவனந்தபுரத்தில் அவர் விளையாடிய ஆரம்ப நாட்களிலிருந்தே அவரது வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன். அவரது தொகுதி எம்.பி என்ற முறையிலும், ஒரு தீவிர ரசிகராகவும் அவர் இந்திய அணிக்காக விளையாடுவதைப் பார்ப்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. சஞ்சு எடுத்த 97 ரன்கள் அவரது வாழ்நாளின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று சொல்லலாம். தொடக்கத்திலிருந்தே எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் நேர்த்தியாக விளையாடினார். சசி தரூர் ஒரு சிலர் அணியில் இடம்பெற பேட்டிங் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால் அவரது திறமையை வெளிகாட்ட அவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. வாழ்வா - சாவா போட்டியில் அர்ஜூனன் இலக்கை குறிவைப்பது போல தளராமல் தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகிற்கு அவர் யார் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார் என சஞ்சு சாம்சனை, சசி தரூர் புகழ்ந்திருக்கிறார்.

விகடன் 3 Mar 2026 1:20 pm

மகத்தான சாதனைகள்; ஸ்டார்க் கண்ணீர் - கிரிக்கெட் என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும் அலிஷா ஹீலி!

“இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேசியிருந்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிஷா ஹீலி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அலிஷா ஹீலி கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான அலிஷா ஹீலி, 2010 பிப்ரவரியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த பதினாறு ஆண்டுகளில், இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகள் (2013, 2022), ஆறு ஐசிசி T20 உலகக் கோப்பைகள் (2010, 2012, 2014, 2018, 2020, 2023), மேலும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் என பல சாதனைகளை படைத்துள்ளார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதையும் பெற்றுள்ளார். Australian Cricketer Alyssa Healy விக்கெட் கீப்பர் மொத்தம் 162 T20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிக T20 போட்டிகளில் பங்கேற்ற இரண்டாவது வீராங்கனை ஆவார். அதோடு, T20 கிரிக்கெட்டில் 126 டிஸ்மிஸல்கள் செய்து, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் சேர்த்து அதிக டிஸ்மிஸல்கள் செய்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பெருமைகளைத் தேடி தந்த கடைசி இன்னிங்ஸ் அவரது கடைசி இன்னிங்ஸும் பல பெருமைகளைத் தேடி தந்திருக்கிறது. உலகளவில் 150க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த இரண்டாவது பெண் வீராங்கனை என்ற சாதனை மட்டுமின்றி, இரண்டாவது அதிவேக 150 என்ற சாதனையையும் படைத்தார். மேலும், இந்திய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற பெருமையையும் பெற்றார். மிட்செல் ஸ்டார்க்கின் கண்ணீர் அவரது கணவர் மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய ஆண்கள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர். இந்த கிரிக்கெட் தம்பதியரின் பயணம், அவர்கள் ஒன்பது வயதில் ஒரே அகாடெமியில் விளையாடிய காலத்திலேயே தொடங்கியது. மார்ச் 2020ல், ஆஸ்திரேலியா–தென் ஆப்பிரிக்கா ODI தொடரில் பங்கேற்காமல், தனது மனைவி விளையாடிய T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண ஸ்டார்க் சென்றது, அவர்களுடைய உறவில் உள்ள ஆதரவை வெளிப்படுத்திய தருணமாகும். ஹீலியின் கடைசி ஷாட்டுக்குப் பிறகு, கணவரின் கண்களில் தெரிந்த கண்ணீர் கலந்த பெருமிதம் அதற்கான தொடர்ச்சியாக அமைந்தது. நாளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டு பேட்டிகளில் நகைச்சுவையாக பதிலளிக்கும் பழக்கம் கொண்ட ஹீலி, இந்த தொடரில் இதுவரை ஓய்வு குறித்த கேள்விகளை தவிர்த்துவந்தார். கடைசி போட்டிக்கு முன், “இன்றுதான் ஆஸ்திரேலியாவின் பச்சை-மஞ்சள் அணியுடன் உங்கள் கடைசி நாள் என்று உணர்ந்துவிட்டீர்களா?” என்ற கேள்விக்கு அவர், “இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். அதனால், இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று பதிலளித்தார். அது அவர் எத்தகைய வீராங்கனை என்பதை வெளிப்படுத்தியது. அலிஷா ஹீலியின் சாதனை தான் விளையாடிய காலத்தில் பல சாதனைகளை முறியடித்தும், புதிய சாதனைகளை உருவாக்கியும் விளங்கிய அலிஷா ஹீலி, கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்துவிட்டார் என்பதில் சந்தேகமே இல்லை. அவரின் விடைபெறுதலை மறக்க முடியாததாக மாற்றியது அந்த கடைசி அதிரடி இன்னிங்ஸ் 98 பந்துகளில் 158 ரன்கள். இந்திய அணியின் தோல்வி வேதனையையும் மறக்க வைத்து, அவரை கொண்டாட வைத்த அந்த இன்னிங்ஸ், ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும். An Alyssa Healy century in her final ODI! And no one is prouder than Mitch Starc in the commentary box #AUSvIND pic.twitter.com/Ey27zCbPt2 — 7Cricket (@7Cricket) March 1, 2026

விகடன் 3 Mar 2026 12:30 pm

``சஞ்சு சாம்சனின் 97 ரன்களுக்கு இணையானது, துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும்! - கோச் கம்பீர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். இருப்பினும், ஆட்டத்தின் 19-வது ஓவரில் சிவம் துபே அடித்த இரண்டு முக்கியமான பவுண்டரிகள் மிகவும் முக்கியமானவை. என்னைப் பொறுத்தவரை, சிவம் துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும் சஞ்சுவின் 97 ரன்களுக்கு இணையானவை. அவர் அந்த பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றால், சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி யாரும் இப்போது பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள் சஞ்சு சாம்சன் பல ஆண்டுகளாக நாம் குறிப்பிட்ட சில வீரர்களின் பங்களிப்பைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். ஆனால் இது ஒரு கூட்டு முயற்சி சார்ந்த விளையாட்டு. பெரிய ரன்கள் எடுப்பவர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவார்கள். ஆனால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சிறிய பங்களிப்புகளே மிக முக்கியமானவை. எனது பயிற்சி காலம் முழுவதும் இதே அணுகுமுறை தொடரும். என்றார், சிவம் துபே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் கம்பீரின் கருத்தையே வழிமொழிந்தார் : ``கடைசி ஓவர்களில் 8-9 ரன்கள் எடுப்பது சில நேரங்களில் கடினமாகிவிடும், அந்த அழுத்தத்தைக் குறைத்தது சிவம் துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகள்தான் இன்னும் இலக்கை சுலபமாக்கியது. என்று அவர் பாராட்டினார். சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்த அதே வேளையில், கிரிக்கெட் என்பது தனிநபர் சாதனை அல்ல, அது ஒரு கூட்டு முயற்சி என்பதை கம்பீர் மற்றும் பும்ரா இந்த பேட்டியின் மூலம் வலியுறுத்தியுள்ளனர். 'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' - உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!

விகடன் 3 Mar 2026 11:54 am

T20 WC: வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு?

டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றின் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. PAK vs SL match இதில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ICC T20 WC 2026: `நாங்க `Minnows' கிடையாது!' - சரித்திரம் படைத்த சிறிய அணிகள்! எதிர்காலம் என்ன? இந்நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்றபோதே வாரியம் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. pakistan players முக்கியத் தொடர்களில் தொடர்ந்து பாகிஸ்தான் அணி சொதப்பி வருவதால், வீரர்களுக்கு இந்தப் பெரிய தொகையை அபராதமாக விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விகடன் 2 Mar 2026 2:05 pm

IND vs WI: வயிற்றுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி இருக்கும்; ஆனா.! - சூர்யா குமார் யாதவ்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான Do or Die மேட்சில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் 196 என்ற இமாலய இலக்கை துரத்தி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்திருக்கிறது இந்திய அணி. இந்த வெற்றி குறித்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேசுகையில் ``நிச்சயமா இது ஒரு அருமையான உணர்வு. இந்த போட்டி காலிறுதி ஆட்டம் மாதிரி தான் இருந்தது. அந்த அழுத்தமான சூழ்நிலையில், எங்கள் வீரர்கள் காட்டிய மனஉறுதியே பெரிய விஷயம். எல்லாரும் திட்டமிட்டபடியே பத்துவீசியதாக நான் நினைக்கிறேன். 200 ரன்கள், இந்த மைதானத்தில் எப்போதும் சேஸ் பண்ணக்கூடிய நல்ல ஸ்கோர் தான். மைதானத்தில் இருந்த பனி காரணமா பந்து பேட்டுக்கு கொஞ்சம் எளிதாக வந்தது. அதனால் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு போகணும்னு தான் எங்களோட திட்டம். ஒரு அணியாக இங்க இருப்பதில் ரொம்ப சந்தோஷம். முதல் போட்டியிலிருந்து நாங்க விளையாடிய விதத்தைப் பார்த்தா, மும்பைக்குப் போக தகுதி இருக்குன்னு நினைக்கிறேன். ஆனா இப்போ அதைப்பத்தி யோசிக்க மாட்டோம். பிளைட் எடுத்து மும்பை போவோம், அங்க போயி என்ன பண்ணணும்னு பார்க்கலாம். மக்களிடம் எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும். ஆனால் அதே நேரம், மைதானத்தில் அணியாக என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். எங்கள் வீரர்களிடம் இதையே தான் சொன்னேன். ஆம், அழுத்தம் இருக்கும், மைதானத்திற்கு வரும் எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும், வீட்டில் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஆட்டம் வரும்போது, நீங்கள் மேலும் தைரியமாக இருக்க வேண்டும், உங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும். அழுத்தத்தில் நேர்மறையாக இருக்க வேண்டும். அதை நாங்கள் நன்றாகவே செய்தோம் என நினைகிறேன். நெருக்கடி இருக்கும், வயிற்றுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி ஒரு பதட்டம் இருக்கும். ஆனா அந்த உணர்வுகளை நாம் எப்படி கையாளுறன்னு தான் முக்கியம். நாம் இந்தியாவில் விளையாடுகிறோம். சொந்த மண்ணில் சொந்த அணி விளையாடுகிறது. அதிக அழுத்தம் இருக்கும்தான். ஆனால் அதை எப்படி புரிந்துகொள்கிறோம், எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம். என்றார், 'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' - உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!

விகடன் 2 Mar 2026 1:14 pm

'மாஸ் காட்டிய சேட்டன்; அரையிறுதியில் இந்தியா!' - போராடி வீழ்ந்த கரீபியர்கள்!

'எங்கக்கிட்ட 11 ஆபத்தான ப்ளேயர்ஸ் இருக்காங்க' என பிரஸ்மீட்டில் பேசியிருந்தார் டேரன் சமி. அந்த அபாயமானவர்கள் கொடுத்த சவாலை திறம்பட எதிர்கொண்டு ஈடன் கார்டனில் சாதித்திருக்கிறது இந்திய அணி. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடி இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்து சென்றிருக்கிறார் சாம்சன். இந்திய அணி எப்படி வென்றது? Toss இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துவிட்டார். சாய் ஹோப்பும், ரஸ்டன் சேஸூம் ஓப்பனிங் இறங்கியிருந்தார்கள். இந்திய அணிக்கு முதல் சில ஓவர்களில் எதுவுமே சரியாக அமையவில்லை. அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது ஓவரிலேயே ஒரு எளிமையான ரன் அவுட் வாய்ப்பை வருண் சக்கரவர்த்தி மிஸ் செய்திருந்தார். அதேமாதிரி, பும்ரா வீசிய 5 வது ஓவரில் சேஸூக்கு அபிஷேக் சர்மா மிக எளிதான ஒரு கேட்ச்சை கோட்டவிட்டார். வெஸ்ட் இண்டீஸின் அதிரடியான பேட்டிங் டெப்த்க்கு பவர்ப்ளேயில் விக்கெட்டே விடாமல் இருப்பது பெரும் பலமாக மாறிவிடும் ஆபத்து உண்டு. ஆனால், இந்திய அணி மிடில் ஓவர்களில் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தது வரிசையாக விக்கெட்டுகளையும் எடுத்தது. கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்த ஹோப்பை 32 ரன்களில் ஒரு கூக்ளியில் போல்டாக்கினார் வருண் சக்கரவர்த்தி. Varun பும்ரா வீசிய 12 வது ஓவர் கேம் சேஞ்சராக இருந்தது. ஏனெனில், ஹெட்மயர் வந்த வேகத்தில் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து 12 பந்துகளில் 27 ரன்களை அடித்து வைத்திருந்தார். ஹெட்மயர் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்தத் தொடரில் 205 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். அதனால் ஸ்பின்னருக்கு கொடுக்காமல் பும்ராவை இடையில் கொண்டு வந்தார் சூர்யா. ஓவர் தி விக்கெட்டில் வந்த பும்ரா டைட்டான லைனில் வீசி ஹெட்மயரை எட்ஜ் எடுத்தார். அதே ஓவரில் செட்டில் ஆகியிருந்த சேஸையும் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸின் வேகம் குறைந்தது. 200 யை எட்டுவது சந்தேகமானது. India ஆனால், ஹோல்டரும் பவலும் கடைசியில் அதிரடி காட்டி சவாலான ஸ்கோருக்கு அழைத்து சென்றனர். அர்ஷ்தீப் சிங் வீசிய 16 வது ஓவரில் மட்டும் 24 ரன்களை சேர்க்க காரணமாக இருந்தார் பவல். வருண் வீசிய அடுத்த ஓவரில் ஹோல்டர் சிக்சர் பவுண்டரியோடு 14 ரன்களை சேர்க்க உதவினார். பெரிய ஓவர்களுக்கு நடுவே அர்ஷ்தீப் வீசிய 19 வது ஓவர் இந்திய அணிக்கு ஆசுவாசத்தை கொடுத்தது. இரண்டு ஹார்ட் ஹிட்டர்கள் க்ரீஸில் இருந்தும் அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே வந்தது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்களை சேர்த்திருந்தது. இந்திய அணிக்கு 196 ரன்கள் டார்கெட். டி20 உலகக்கோப்பைகளில் இந்திய அணி சேஸ் செய்த அதிகபட்ச டார்கெட்டே 173 தான். அதனாலயே இந்த டார்கெட் ரொம்பவே பெரிதாக தெரிந்தது. அதற்கேற்ப வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அபிஷேக்குகாக ஸ்பின்னரான அகீல் ஹொசனை வைத்து ஆரம்பித்தது வெஸ்ட் இண்டீஸ். முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. அகீல் ஹொசைன் வீசிய 3 வது ஓவரில் ஸ்ட்ரைக்கை எடுத்துக் கொண்டு பவுண்டரி சிக்சர் என விளாசி 17 ரன்களை சேர்த்தார் சாம்சன். அதன்பிறகும் பேட்டை சுழற்றி அவுட்டாகி சென்றார் அபிஷேக். Samson இஷான் கிஷன் ஹோல்டரின் குட் லெந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று நேராக டீப் லெக்கில் கேட்ச் ஆனார். பவர்ப்ளேயில் இந்திய அணி 53-2 என இருந்தது. மிடில் ஓவர்களில் சாம்சன் சேஸை அழகாக முன்னெடுத்து சென்றார். ஓவருக்கு ஓவர் பவுண்டரியோ சிக்சரோ அடித்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ரன்ரேட் பிரஷரை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். சூர்யா கொஞ்சம் சப்போர்ட் செய்துவிட்டு சமார் ஜோசப்பின் பந்தில் அவுட் ஆனார். திலக் வர்மா அதிரடியாக 15 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து சாம்சனுக்கு அழுத்தம் ஏறாமல் உதவி ஹோல்டரின் பந்தில் அவுட் ஆனார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதமும் அதிகமானது. வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் தடுமாறினர். ஹோல்டர் ஹர்திக்கின் கேட்ச்சையெல்லாம் ட்ராப் செய்தார். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணிக்கு 17 ரன்கள் தேவை எனும் சூழல். இந்திய அணி எளிதில் வெல்லும் என நினைக்கையில் சமார் ஜோசப்பின் பந்தில் ஹர்திக் ஹோல்டரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்தியா மீதும் அழுத்தம் ஏறியது. சிவம் துபே வந்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து டாட். சமார் ஜோசப்பின் யார்க்கர்களை துபே சரியாக இடைவெளியில் கனெக்ட் செய்தார். இன்னொரு பவுண்டரி. விளைவு, கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவை. சாம்சனும் களத்தில் நின்றார். ரொமாரியோ ஷெப்பர்ட் கடைசி ஓவரை வீசினார். யார்க்கராக இறக்க நினைத்தார். நன்றாக செட்டில் ஆகியிருந்த சாம்சன் எந்த பதட்டமும் இல்லாமல் ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் பறக்கவிட்டு முதல் இரண்டு பந்துகளிலேயே போட்டியை முடித்துவிட்டார். சாம்சன் 97 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். Samson இப்படி ஒரு இன்னிங்ஸ்தான் முக்கியமான கட்டத்தில் சாம்சனிடமிருந்து வராமலே இருந்தது. அதனாலேயே எப்போதுமே அவர் முதல் ஆப்சனாக இருந்ததே இல்லை. ஆனால், இந்த முறை இந்திய அணிக்கு தேவைப்பட்ட தருணத்தில் பொறுப்பை சுமந்து ஆடி ஆட்டநாயகனாக மாறி நிற்கிறார். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. அரையிறுதியில் மும்பையில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

விகடன் 1 Mar 2026 11:11 pm