IND vs USA: எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்- அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்திய அணி இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். இந்த ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. முக்கியமான சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் இந்திய அணியை 13 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் 160 என ஒரு நல்ல இலக்கை தொட்டுவிட்டார்கள். ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். அதையும் நாங்கள் சிறப்பாக கையாண்டோம் என்று நினைக்கிறேன். அமெரிக்க அணி இந்தப் போட்டியில் சில, சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதனை எல்லாம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் பலமான அணியாக திரும்பி வருவோம் என்று தெரிவித்திருக்கிறார்.
'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' - கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!
உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சிராஜ் இல்லை. பும்ரா ஆட முடியாத காரணத்தால் கடைசி நிமிடத்தில்தான் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார். போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி சிராஜ் பேசியிருந்தார். சிராஜ் சிராஜ் பேசியதாவது, 'இந்த T20 உலகக்கோப்பையில் நான் விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக T20 போட்டிகளில் எனக்கு வாய்ப்பே கிடைக்கலை. அதனாலேயே, ‘இந்த வருஷம் நான் இல்ல’ன்னு மனசுக்குள்ளேயே ஏற்றுக்கிட்டேன், 15-ஆம் தேதி ரியல் மாட்ரிட் போட்டி இருந்தது. அதை நேரில் பார்க்க பிளான் போட்டிருந்தேன். அதுக்கப்புறம் ரமலான் வருது… அதுக்கும் சில விஷயங்களை திட்டமிட்டிருந்தேன். ஆனால், கடவுள் எழுதியதை யாரால் மாற்ற முடியும்? “நான் வீட்டில குடும்பத்தோடு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்போ பிட்னெஸ் கோச் அட்ரியன் மெசேஜ் அனுப்பினார். அடுத்த சில நாட்களுக்கான உங்களின் பிளான் என்னவென கேட்டார். நானும் ‘இப்போ ரெஸ்ட் தான்’ன்னு சொன்னேன். அடுத்த நிமிஷமே சூர்யா பாய் கால் பண்ணினார். ‘மியான்… ரெடி ஆகு… பேக்கை எடுத்துக்கிட்டு உடனே வா’ன்னு சொன்னார். முதல்ல ஜோக் தான்னு நினைச்சேன். ஆனா உடனே தேர்வாளர் ஓஜா பாயிடமிருந்தும் கால் வந்தது. அப்போதான் உண்மை புரிஞ்சது. Siraj உலகக்கோப்பை அணியுடன் இணைய விமானத்தில் உட்கார்ந்திருந்தபோதுகூட அது கனவு மாதிரி தான் இருந்தது. ‘நான் உண்மையிலேயே உலகக்கோப்பை விளையாடப் போறேனா?’ன்னு தோணிச்சு. கடந்த ஒரு வருடமாக நடந்ததை நினைச்சா, இது நடக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஆனால், கடவுள் என் விதியை மாற்றிவிட்டார்' என்றார்.
T20: 'இது'தான் என்னை மீண்டும் சூர்யாவாக்கியது! - IND Vs USA வெற்றிக்குப் பின் சூர்யகுமார் யாதவ்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், சூழ்நிலையை கணித்து பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். சூர்யகுமார் யாதவ் இலக்கு நிர்ணயித்த இந்தியா பவர் பிளே முடிவில் இந்திய அணி கடுமையான அழுத்தத்தில் சிக்க, ஸ்கோர் 77/6 என்ற நிலைக்கு சரிந்தது. அந்த நெருக்கடியான தருணத்தில் பொறுப்புடன் விளையாடினார் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ். சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 49 பந்துகளில் 84 ரன்கள் என அபாரமாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். அவரது இன்னிங்ஸின் துணையுடன் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 161/9 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அமெரிக்க அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 'ஆட்டநாயகன்' - சூர்ய குமார் யாதவ் அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்க அணி வீரர்கள், இந்திய அணியின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுக்கடுக்காக விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் மோனாங்க் படேல் உட்பட டாப் ஆர்டர் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பங்களிக்கத் தவறினர். 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 132/8 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். சூர்யகுமார் யாதவ் வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “கடந்த ஆண்டு முழுவதும் அணிக்காக இன்னிங்ஸை பிடித்து விளையாட முயன்றேன். ஆனால் அது என் வழியில் நடக்கவே இல்லை. ரன்கள் வரவில்லை, நம்பிக்கை சறுக்கிக் கொண்டே இருந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி தொடருக்குப் பிறகு, ‘சரி… இதை விட்டுவிடலாம்’ என்று நினைத்தேன். கிட்டை மூடி வைத்துவிட்டு, குடும்பத்துடன் இரண்டு வாரங்கள் முழுக்க நேரம் கழித்தேன். அந்த ஓய்வே என்னை மீண்டும் சூர்யாவாக்கியது. என்னை மீண்டும் சூர்யாவாக்கியது! புது வருடம் தொடங்கியது. நாக்பூருக்கு வந்ததும் மனநிலை முற்றிலும் மாறியது. ‘இது 180–190 ரன் அடிக்க வேண்டிய மைதானம் இல்லை; 140 போதுமானது’ என்ற எண்ணம் முதல் ஓவரிலிருந்தே மனதில் இருந்தது. 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் விழுந்தபோதும், பதட்டம் வரவில்லை. அந்த தருணத்தில் கௌதி பாய்(கவுதம் கம்பீர்) வந்து சொன்ன ஒரே வார்த்தை தான் எனக்கு தெளிவை கொடுத்தது – ‘கடைசி வரை நின்று விளையாடு. ரன்களை நீ எப்பவும் எடுத்துக்கலாம்.’ சூர்யகுமார் யாதவ் அந்த ஆலோசனையே என் விளையாட்டின் திசையை மாற்றியது. ஒவ்வொரு ஓவராகவும் யார் பந்து வீசப் போகிறார், எத்தனை பந்துகள் மீதம் இருக்கிறது என்பதை கணக்கிட்டு, தேவையற்ற ஆட்டங்களை தவிர்த்தேன். ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்றாலே இந்தப் போட்டி நம்முடையது என்பதில் உறுதியாக இருந்தேன். முக்கியமாக, மும்பை கிரிக்கெட்டில் நான் வளர்ந்தவன். இந்த மாதிரியான விக்கெட்டுகளிலும், மைதானங்களிலும் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அதனால் பிச்சுக்கு எப்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். பொறுமையும் சரியான ஷாட் தேர்வுமே அந்த இன்னிங்ஸின் உயிர். அந்த நம்பிக்கையும், அந்த அமைதியும் தான் இந்த வெற்றிக்கு காரணம்.”
'கெத்து'சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! - முதல் போட்டியை எப்படி வென்றது இந்தியா?
டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டமென்றாலும் போட்டி இந்தியா vs இந்தியா என்பதைப் போன்றே இருந்தது. அமெரிக்க அணியில் அத்தனை இந்தியர்கள். பலருக்கும் மும்பைதான் சொந்த ஊர். வான்கடேவில்தான் கிரிக்கெட்டே பயின்றிருக்கிறார்கள். அதனால்தானா என்னவோ இந்திய அணியை அத்தனை எளிதாக வெல்ல விடவில்லை. இயன்றளவுக்கு சவால் அளித்தார்கள். Ind vs USA இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமாரின் அட்டகாசமான இன்னிங்ஸ் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது. டாஸை அமெரிக்க கேப்டன் மோனாங் படேல்தான் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பிட்ச் கொஞ்சம் மெதுவானதாக தெரிந்ததாலும், போகப் போக காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கும் என்பதாலும் இந்த முடிவை எடுத்திருந்தார். இது மிகச்சரியான திட்டமாகவே இருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 15 ஓவர்களுக்கு திணறவே செய்தது. 'இது 180 ரன்களை எடுப்பதற்கான பிட்ச் இல்லை. இது 140 ரன்களுக்கான பிட்ச். அதை உணர்ந்துதான் கடைசி வரை நின்று ஆடினேன்' என்றார். சூர்யாவின் இந்த புரிதல் இந்திய அணியின் பல பேட்டர்களுக்கும் இல்லை. Ishan Kishan இரண்டாவது ஓவரிலயே அபிஷேக் சர்மா அலிகானின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆனார். கிட்டத்தட்ட பவர்ப்ளே முடியும் வரை இந்திய அணி இந்த பிட்ச் குறித்து சரியாக புரிந்துகொண்டதை போல தெரியவில்லை. எல்லா பேட்டர்களிடமும் ஒருவித வேகமும் அவசரமும் தெரிந்தது. குறிப்பாக, 6 வது ஓவரில் சாக்விக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷான் கிஷான், திலக் வர்மா, சிவம் துபே என எல்லாமே முக்கியமான விக்கெட்டுகள். நல்ல லைன் & லெந்தில் வேகத்தை முழுமையாக குறைத்தும் க்ராஸ் சீமாகவும் சாக்விக் வீசிய பந்துகளை இவர்களால் சரியாக கனெக்ட்டே செய்ய முடியவில்லை. அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். இந்த ஒரு ஓவர் அடுத்த 45 நிமிடங்களுக்கு போட்டி அமெரிக்காவின் கையில் இருக்க காரணமாக அமைந்தது 6 வது ஓவரில்தான் சூர்யகுமார் உள்ளே வந்தார். பவர்ப்ளே முடிகையில் இந்திய அணியின் ஸ்கோர் 46-4. ரிங்கு சிங் நம்பர் 6 இல் வந்தார். ஹர்மீத் சிங், மோசின் என ஸ்பின்னர்கள் கைக்கு பந்து சென்றது. பிட்ச் மெதுவாக இருந்ததால் இருவராலுமே பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. சூர்யாவால் அவரின் வழக்கமான 360* ஷாட்களையும் ஆட முடியவில்லை. ஒரு கட்டத்தில் 22 பந்துகளில் 21 ரன்கள் எனும் நிலையில் சூர்யா இருந்தார். ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஸ்பின்னர்கள் மோசின் மற்றும் ஹர்மித்தின் ஸ்பின்னில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆகினர். ஒரு கட்டத்தில் இந்திய 77-6 என்ற நிலையில் இருந்தது. SKY . 'டி20 உலகக்கோப்பையின் மிகக் குறைந்த ஸ்கோரை இந்திய அணி கடந்துவிட்டது' என்று ஹர்ஷாவும், 'இந்தியாவின் டெயில் எண்டர்களிடம் கிரிக்கெட் பேட் இருக்கிறதா என்றே தெரியவில்லை. வருண் சக்கரவர்த்தியெல்லாம் 33 போட்டிகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்' என்று கவாஸ்கரும் கமெண்ட்ரியில் கிலி ஏற்றிக் கொண்டிருந்தனர். மேட்ச் அப்செட்டை நோக்கி செல்லும் தோற்றம் உண்டானது. ஆனால், அதுவரை கட்டுக்கோப்பாக செய்த அத்தனையையும் கடைசி 5 ஓவர்களில் அமெரிக்க அணி கோட்டைவிட்டது. நீண்ட நேரம் க்ரீஸில் இருந்தது சூர்யாவுக்கு தெம்பை கொடுத்திருந்தது. நிதானமாக பந்தை கடைசி வரை பார்த்து டைம் செய்தார். சிக்சர்கள் பறக்க தொடங்கின. நேத்ராவால்கரை குறிவைத்து அடித்தார். அவர் வீசிய 16 மற்றும் 20 வது ஓவர்களில் தலா 21 ரன்களை அடித்தார். சூர்யாவின் ருத்ரதாண்டவம் 140 யை கடக்கவே சிரமப்படும் என நினைத்த இந்திய அணியை 160+ க்கு எடுத்துச் சென்றது. சூர்யா 49 பந்துகளில் 84 ரன்களை எடுத்திருந்தார். India அமெரிக்காவுக்கு 162 ரன்கள் டார்கெட். நிதானமாக ஆடினால் எட்டக்கூடிய டார்கெட்தான் என்பதால் இந்திய அணியின் மீதே பிரஷர் இருந்தது. ஆனால், பவர்ப்ளேயிலேயே இந்திய அணி ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. சிராஜூம் அர்ஷ்தீப் சிங்கும் டைட்டான லைன் & லெந்தில் வீசி முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். கேப்டன் மோனாங் படேல், கோஸ், முக்காமலா என முக்கிய பேட்டர்கள் காலி. இதன்பிறகு கூட்டணி சேர்ந்த மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி இருவரும்தான் இந்திய அணிக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்தனர். பார்ட்னர்ஷிப்தான் முக்கியம் என்று முடிவு செய்து நின்று ஆடினர். வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் விரித்த வலைகளில் சிக்காமல் திறம்பட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தனர். இருவரும் இணைந்து 58 ரன்களை சேர்த்தனர். இந்த கூட்டணி இன்னும் சில ஓவர்களுக்கு நின்றிருந்தால் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக போயிருக்கும். 12வது ஓவரில் வருணின் பந்தில் மிலிந்த் மிக அஜாக்கிரதையாக ஸ்டம்பிங் ஆனார். இந்த ஸ்டம்பிங் அமெரிக்க அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்கு வித்திட்டது. அக்சர் படேலும் 16 வது ஓவரில் கிருஷ்ணமூர்த்தியையும் ஹர்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். சுபம் என்கிற பேட்டர் மட்டும் கடைசி வரை நின்று சில சிக்சர்களை பறக்கவிட்டு தோல்வியின் தூரத்தை குறைத்துக் கொடுத்தார். Axar இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சூர்யா 'ஆட்டநாயகன்'. 'என்னோட சொந்த ஊரு சொந்த மைதானம். எப்படி ஆடணும்னு எனக்கு தெரியும்' என கெத்தாகவும் பேசியிருந்தார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியை எந்த சிக்கலும் இல்லாமல் வெல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்திருக்கும். இந்தியாவின் எண்ணத்திற்கு மாறாக செயல்பட்டு போட்டியில் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது அமெரிக்கா. இந்தத் தொடரில் எதிர்பாரா ட்விஸ்ட்டுகளை சிறிய அணிகள் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
U19 World Cup : தீபேஷ், அம்ப்ரிஷ்!உலகக்கோப்பை அணியில் ஜொலித்த தமிழ்நாட்டு தங்கங்கள்! - யார் இவர்கள்?
தமிழ்நாட்டில் இருந்தும் இந்திய அணிக்குத் தொடர்ந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சர்வதேச அளவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் தங்களின் முக்கியமான பங்களிப்பை அளித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ் மற்றும் ஆல்ரவுண்டர் R.S. அம்ப்ரிஷ். தீபேஷ் தேவேந்திரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன், தனது அசத்தலான பந்துவீச்சுத் திறமையால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். அதன் பலனாக, தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வாய்ப்பே அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. தீபேஷ் தேவேந்திரன் அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக, இந்திய U-19 அணியின் கதவு திறந்தது. 2025 ஆம் ஆண்டு U-19 ஆசியக் கோப்பை தொடரில் தீபேஷ் விளையாடிய 5 போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தி, தனது பந்துவீச்சுத் திறமையை சர்வதேச அளவிலும் நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து U-19 உலகக்கோப்பை தொடரில் தேர்வான தீபேஷ், தொடர் முழுவதும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 15 விக்கெட்களை கைப்பற்றினார். முக்கிய தருணங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்திய அவரது பந்துவீச்சு, இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றியது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. R.S. அம்ப்ரிஷ் தமிழ்நாட்டின் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் R.S. அம்ப்ரிஷ். 2026 ஆம் ஆண்டுக்கான U-19 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட இவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் அணிக்கு மதிப்பான பங்களிப்பை அளித்தார். இடதுகை பேட்ஸ்மேனாகவும், வலதுகை மிதவேக பந்துவீச்சாளராகவும் விளங்கும் அம்ப்ரிஷ், டாப் மற்றும் நடுவரிசையில் அணியின் தேவைக்கேற்ப விளையாடும் திறன் கொண்டவர். ‘ஹார்ட் லெந்த்’ பந்துகளின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தும் அவரது பந்துவீச்சு, அவரது முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. R.S. அம்ப்ரிஷ் ரஞ்சி டிராபி, TNPL, U-19 இங்கிலாந்து சுற்றுப்பயணம் என தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அம்ப்ரிஷ், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் 12 விக்கெட்களும், 157 ரன்களும் எடுத்தார். குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி, இந்திய வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். இதன் மூலம், தனது திறமையை உலக கிரிக்கெட் அரங்கில் பறைசாற்றினார். இந்த இரு வீரர்களும், தமிழ்நாடு கிரிக்கெட்டின் நாளைய முகங்களாகவும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கைகளாகவும் இருக்க வாழ்த்துகள்.! T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? - ஓர் அலசல்!
T20 WC: இந்தியா vs பாக் மோதல் டு கரீபியன் மந்திரம் வரை! - ICC டி20 உலகக்கோப்பை வரலாறு - ஓர் பார்வை
டெஸ்ட் மேட்ச், ஒன்டே, போன்ற வடிவங்களைக் கொண்ட கிரிக்கெட்டை கூடுதல் விறுவிறுப்பாகவும் ரசிகர்களின் ரசனை ஆகவும் மாற்றியதும் தான் டி20 கிரிக்கெட். குறைந்த நேரம்… அதிக அதிரடி… ஒவ்வொரு பந்திலும் முடிவு மாறக்கூடிய பரபரப்பு… இதுதான் டி20, அந்த வடிவத்தின் உச்ச மேடைதான் ஐசிசி டி20 உலகக்கோப்பை. 2007-ல் தொடங்கிய இந்த தொடர் இன்று கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய திருவிழாக்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. icc t20 world cup 2007-ல் தொடங்கிய இந்த தொடர், 2026-ல் தனது 10-வது சீசனை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை, இந்தியா - இலங்கை இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பைக்கு முன், கடந்த 10 ஆண்டுகளின் டி20 உலகக்கோப்பை வரலாற்றை நினைவு கூர்வோம். 2007 – முதல் உலகக் கோப்பையே இந்தியா – பாகிஸ்தான் மோதல்! முதல் டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. கிறிஸ் கெயிலின் முதல் டி20 சதம், யுவராஜ் சிங்கின் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள், பௌல்-அவுட் விதி அறிமுகம், இளம் தோனியின் சிறந்த கேப்டன் பொறுப்பு பல விஷயங்கள் பேசப்பட்டன. இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடந்தது. கடைசி ஓவரில் மிஸ்பா உல் ஹக்கின் ஸ்கூப் ஷாட் ஸ்ரீசாந்தின் கைகளில் சிக்க, இந்தியா முதல் டி20 உலக சாம்பியனாக மகுடம் சூடியது. ind vs pak 2009 – இங்கிலாந்தில் பாகிஸ்தான் வெற்றி இரண்டாவது டி20 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி இலங்கை நிர்ணயித்த இலக்கை எளிதாக துரத்தி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. 2010 – இங்கிலாந்தின் முதல் உலக வெற்றி 2010 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. உள்நாட்டில் போர் சூழல் தொடர்ந்தபோதும், ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டி20 உலகக் கோப்பியில் தைரியமான ஆட்டத்தால் உலகக் கவனத்தை ஈர்த்தது. ஆஸ்திரேலியா வழக்கம்போல் உலகக்கோப்பை அரங்கில் தன் கடுமையான முகத்தைக் காட்டி இறுதிப்போட்டியை எட்டியது. இங்கிலாந்தின் முதல் உலக வெற்றி இறுதிப்போட்டியில், அதிரடி பேட்டிங் கொண்ட இங்கிலாந்து அணி, பால் காலிங்வுட், கெவின் பீட்டர்சன் போன்றோரின் அனுபவத்துடன் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பார்படோஸில், இங்கிலாந்து தனது வரலாற்றிலேயே முதல் உலகக் கோப்பையை கைப்பற்றி, டி20 கிரிக்கெட்டில் புதிய சக்தியாக தன்னை நிலைநிறுத்தியது. 2012 – வெஸ்ட் இண்டீஸ் கொண்டாட்டம்! 2012 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தென்னாசிய மண்ணில் (இலங்கை) நடைபெற்றது. சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தாலும், நெட் ரன் ரேட் காரணமாக அரைஇறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான். அரைஇறுதியில், இலங்கை அணி பாகிஸ்தான் பேட்டிங்கை முற்றிலும் சிதைத்து, இலங்கையை தங்கள் சொந்த மண்ணில் நடைபெறும் இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்றது. வெஸ்ட் இண்டீஸ் கொண்டாட்டம் மறுபுறம் அரைஇறுதியில், கிறிஸ் கெய்லின் 41 பந்துகளில் 75 ரன்களுடன் 205 ரன்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியாவை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி ‘கங்கம் ஸ்டைல்’ நடனத்துடன் கொண்டாடிய அந்த தருணம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மறுபிறவியாக உலகம் முழுவதும் பேசப்பட்டது. 2014 – கோலியின் சாதனை… ஆனால் கோப்பை இலங்கைக்கு...! 2014 ஆம் ஆண்டு நடத்த டி20 உலகக்கோப்பையில், அணிகள் எண்ணிக்கை 16 ஆக விரிவாக்கப்பட்டது. இந்தத் தொடரின் அரைஇறுதியில், விராட் கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் குவித்து, வலுவான தென்னாப்பிரிக்க பந்துவீச்சை அடக்கி, இந்தியாவை இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்றார். இறுதிப்போட்டியில், கோலியின் அதிரடி காரணமாக இந்தியா 130 ரன்களை இலக்காக வைத்தது. கோப்பை இலங்கைக்கு...! ஆனால், இலங்கையின் தூண்களான குமார் சங்கக்காரா - மஹேலா ஜெயவர்தனே ஜோடி, 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதியில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விக்குப் பழிதீர்த்து, இலங்கைக்கு முதல் டி20 உலகக் கோப்பையை பெற்றுத் தந்தது. இந்தத் தொடரில் கோலி எடுத்த 319 ரன்கள், இன்றுவரை டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையாகத் திகழ்கிறது. 2016 – கடைசி ஓவரில் கரீபியன் மந்திரம்! 2016 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியா டி20 உலகக் கோப்பையை நடத்தியது. இந்தத் தொடரின் அரைஇறுதியில், கோலி தலைமையிலான இந்திய அணி 193 ரன்கள் என்ற வலுவான இலக்கை உருவாக்கின. ஆனால், லெண்டில் சிம்மன்ஸின் அதிரடி ஆட்டம், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவுகளை சிதைத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்றது. இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டி20 உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றி, ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. கடைசி ஓவரில் கரீபியன் மந்திரம் 2021 -ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் ஐந்தாண்டு இடைவெளிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு ஏழாவது டி20 உலக கோப்பை தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி முதல் முதலாக கோப்பையை கைப்பற்றியது. 2022 – இரண்டாவது முறை சாம்பியனான இங்கிலாந்து ஆஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டிற்கான எட்டாவது உலகக்கோப்பை நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதின. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் வைத்த நடுத்தர இலக்கை ஹாரிஸ் ரஃப் வேகப்பந்துவீச்சால் காத்தது. ஆனால், பென் ஸ்டோக்ஸ் களத்தில் நின்று வரலாற்றை மாற்றினார். அழுத்தமான சூழலில் விளையாடிய அவரது பொறுப்பான பேட்டிங், பாகிஸ்தானின் கனவுகளை உடைத்து, இங்கிலாந்துக்கு இரண்டாவது டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தது. இரண்டாவது முறை சாம்பியனான இங்கிலாந்து 2024 – இந்தியாவின் மறக்க முடியாத மகுடம்! 17 ஆண்டுகளுக்கும், 9 தொடர்களுக்கும் பிறகு, முதன்முறையாக உலகக்கோப்பைத் தொடர் 20 அணிகளாக விரிவாக்கப்பட்டது. இந்தியாவின் மூத்த நட்சத்திரங்கள், தோல்வியே அறியாமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், கடைசி ஓவர் முதல் பந்திலேயே சூர்யா குமார் யாதவ் அசத்தலான கேட்ச் பிடித்ததுடன் உலகக்கோப்பையையும் சேர்த்து பிடித்து இந்தியாவில் உள்ள பல கோடி மக்களின் மனதிலும் இடம்பிடித்தார். சாத்தியமற்றது போல தோன்றிய தருணத்தில் அசத்தலான வெற்றியைப் பெற்று, தென் ஆப்பிரிக்காவின் கனவுகளை சிதைத்த இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியாவின் மறக்க முடியாத மகுடம் அந்த இரவில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் கோப்பையுடன் சேர்ந்து, தங்கள் டி20 பயணத்தையும் சாம்பியன்களாக முடித்தனர். மீண்டும் கோப்பையைக் கைப்பற்றி இந்தியா சாதனைப் படைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் - அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்!
யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார். யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். வைபவ் சூர்யவன்ஷி இதன்பின் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி - ஆரோன் ஜார்ஜ் கூட்டணி ஆடியது. இதில் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே கூட்டணி இணைந்தது. இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை எடுத்து சாதனைப் படைத்திருக்கிறார். ஆட்டத்திற்கு பிறகு வைபவ் சூர்யவன்ஷி பெவிலியன் நோக்கி நடந்த வந்தபோது, ஒட்டுமொத்த இங்கிலாந்து வீரர்களும் அவருக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். அதேபோல் இந்திய அணியின் அத்தனை வீரர்களும் எழுந்து நின்று பாராட்டியிருக்கின்றனர். வைபவ் சூர்யவன்ஷி இளம் வயதில் (14) கிரிக்கெட்டில் மிரளவைக்கும் சூர்யவன்ஷிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது 28.1 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை இந்திய அணி எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
T20 WC: வங்கதேசத்திடம் சொன்னதுபோல் இந்தியாவிடம் ஐசிசி சொல்லுமா? - நாசர் ஹுசைன் கேள்வி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது. முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி வங்கதேச அணி, இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி இலங்கையில் விளையாட அனுமதி கோரியது. விலகிய வங்கதேச அணி ஆனால் ஐசிசி அந்தக் கோரிக்கையை நிராகரிக்க டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி கடைசி நேரத்தில் இந்தத் தொடரில் இருந்து விலகியது. அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வங்கதேச அணி புறக்கணித்த பாகிஸ்தான் இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தது. டி20 உலகக்கோப்பையில் இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் இந்தப் புறக்கணிப்பிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது. T20 WC 2026 : உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது.!- மனம் திறந்த ரோஹித் கேள்வி எழுப்பிய நாசர் ஹுசைன் இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான நாசர் ஹுசைன் ஐசிசியின் செயல் குறித்து பேசியிருக்கிறார். வங்கதேசம் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததை நான் வரவேற்கிறேன். அவர்கள் தங்கள் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்காகக் குரல் கொடுத்தனர். அதேபோல, வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் களமிறங்கியிருப்பதையும் நான் வரவேற்கிறேன். நாசர் ஹுசைன் அரசியல் தலையீடு வாடிக்கையாகிவிட்டது 'போதும் இந்த அரசியல்' என்று யாராவது ஒரு கட்டத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும். முன்பு விதிவிலக்காக இருந்த அரசியல் தலையீடு இப்போது வாடிக்கையாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுப்பதையும், கோப்பையை வாங்க மறுப்பதையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. கிரிக்கெட் நாடுகளை இணைக்க வேண்டும், பிரிக்கக் கூடாது. Dhoni: இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று - டி20 உலகக்கோப்பை குறித்து தோனி ஐசிசி அவர்களைத் தொடரிலிருந்து நீக்கியிருக்குமா? ஒருவேளை இந்தியா இதே கோரிக்கையை வைத்திருந்தால் ஐசிசி என்ன செய்திருக்கும்? ஒரு தொடருக்கு ஒரு மாதம் முன்பு, 'எங்கள் அரசு அனுமதி மறுக்கிறது; நாங்கள் அந்த நாட்டில் விளையாட மாட்டோம்' என்று இந்தியா கூறியிருந்தால், ஐசிசி அவர்களை தொடரிலிருந்து நீக்கியிருக்குமா? விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். ஐசிசி வங்கதேசத்தையும், பாகிஸ்தானையும், இந்தியாவையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இந்தியாவிடம் பணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்க வேண்டும். தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை நசுக்கினால், கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிடும் என்று பேசியிருக்கிறார்.
WPL 2026: '2வது முறை சாம்பியன்' - RCB சாதனை! தொடரும் டெல்லி அணியின் 'பைனல்'சோகம்
மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 2026-ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பௌலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் களம் புகுந்த டெல்லி அணிக்கு லிசெல் லீ மற்றும் சஃபாலி வர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. பவர் பிளேயின் கடைசி ஓவரில் சஃபாலி வர்மா ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து லிசெல் லீயும் வெளியேற டெல்லிக்குச் சிறு நெருக்கடி ஏற்பட்டது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதன்பின் களமிறங்கிய லாரா வோல்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்களும், அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் ஹென்றி 35 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. `RCB அணி விற்பனைக்கு.!’ - விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி - அணியின் மதிப்பு தெரியுமா? கடினமான இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு ஜி. ஹாரிஸின் விக்கெட் ஆரம்பத்திலேயே சரிந்தது. எனினும், ஜார்ஜியா வோல் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இணைந்து டெல்லி பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். இருவரும் 165 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஜார்ஜியா வோல் 16-வது ஓவரில் ஆட்டமிழந்த பிறகு, ரிச்சா கோஷ் (6), நதின் டி கிளர்க் (7) மற்றும் ராதா யாதவ் (12) ஆகியோர் சொற்ப ரன்களைச் சேர்த்தனர். கடைசி ஓவரில் பெங்களூரு அணி த்ரில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. டெல்லி மகளிர் கிரிக்கெட் அணி டெல்லியின் 'பைனல்' சோகம்: எட்டாக் கனியான கோப்பை 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட WPL தொடரின் அனைத்து இறுதிப்போட்டிகளுக்கும் முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையைத் டெல்லி கேப்பிடல்ஸ் பெற்றிருந்தாலும், கோப்பையை வெல்வது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது: 2023: மும்பை இந்தியன்ஸிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. 2024: பெங்களூரு அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. 2025: மும்பை இந்தியன்ஸிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. 2026: பெங்களூரு அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. தொடர்ந்து நான்கு முறை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவிய டெல்லி அணியினருக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. பெங்களூரு அணியின் இந்த வெற்றி அந்த அணி ரசிகர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது. RCB-காக வாழ்க்கையை தொலைத்த இளைஞர்: 2022-ல் நடந்த கொலை- துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டர் சொல்வது என்ன?
Dhoni: இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று - டி20 உலகக்கோப்பை குறித்து தோனி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவிருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் கோப்பையை எந்த அணி கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்திருக்கின்றன. indian team இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போதைய இந்திய அணி குறித்து பேசியிருக்கிறார். அதில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் எனக்கு மிகவும் பிடித்த அணி இந்திய அணிதான். சூர்யகுமார் தலைமையிலான தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்கள், அதிக அழுத்தமான சூழல்களைக் கையாண்ட அனுபவம் கொண்ட வீரர்களாக இருக்கின்றனர். இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் தற்போதைய டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியும் ஒன்று என்று தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த நேர்காணலில் பிரபலமடைந்த பிறகும் ஏன் ராஞ்சியில் வசிக்கிறீர்கள் என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, நான் ராஞ்சியை விட்டு சென்றுவிடுவேன். இந்தச் சிறிய நகரத்தில் என்னால் வாழ முடியாது எனச் சீனியர் வீரர் ஒருவர் என்னிடம் பந்தயம் கட்டினார். தோனி அப்போது நான் அவரிடம் ஏன் இந்த ஊரை விட்டு செல்ல வேண்டும்? இங்கு சந்தோஷமாக இருக்கிறேன் என்றேன். அவர் சொல்லி இப்போது 20 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் நான் இன்னும் ராஞ்சியில்தான் இருக்கிறேன். எனக்கு இந்த நகரம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். தோனி எப்படியும் ஒரு நாள் விலகுவார், அதனால்.!- CSK வீரர்கள் தேர்வு குறித்து பயிற்சியாளர் பிளெமிங்
WCT20: வார்ம்-அப் போட்டியில் வலுவை காட்டிய இந்தியா! - உலகக் கோப்பை இந்திய அணி காம்பினேஷன் இது தானா?!
10-வது டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் போட்டிகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இந்தியா – செளத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். சூர்ய குமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் – அபிஷேக் சர்மா இணை, ஆரம்பத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் முடிவடைந்த தொடரில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிலையில், நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. உலகக்கோப்பை தொடருக்கும், இந்தியா இஷான் கிஷன் – அபிஷேக் சர்மா இணையுடனே ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் இடத்துக்கு திலக் வர்மா கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது இஷான் கிஷன் 20 பந்துகளில் 53 ரன்களும், அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 24 ரன்களும் எடுத்துத் தங்களது விக்கெட்டுகளை ரிட்டையர் அவுட் மூலம் துறந்தனர். இது பயிற்சி ஆட்டம் என்பதால், அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அம்முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ், வேகமான ரன் சேர்ப்பின் மூலம் இந்திய அணியின் ரன் ரேட்டை 10-க்கு மேல் கொண்டு சென்றனர். திலக் வர்மா 45 ரன்களில் அவுட் ஆன நிலையில், அடுத்த சில ஓவர்களிலேயே சூர்யகுமார் யாதவ் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அக்சார் பட்டேல் 35 ரன்களும், ரிங்கு சிங் 16 ரன்களும் சேர்த்தனர். இஷான் கிஷன் கடைசி இரண்டு ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா விளையாடிய 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த அதிரடி ஆட்டத்தின் மூலம், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்து, செளத்ஆப்பிரிக்கா அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி... 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய செளத் ஆப்பிரிக்கா அணி, முதல் ஓவரிலேயே லிண்டே விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பந்தில் இழந்தது. அதன்பின் மார்க்ரம் – ரிக்கெல்டன் இணை அணியை மீட்டெடுக்க முயன்றது. 6-வது ஓவரில் மார்க்ரம் ரிட்டையர் அவுட் மூலம் வெளியேறினார். அர்ஷ்தீப் சிங் அதனைத் தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களிடம் தொடர்ந்து விக்கெட்களை இழந்த செளத் ஆப்பிரிக்கா அணி, ஸ்டப்ஸ் மற்றும் ஜான்சன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் போராடியது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்த செளத் ஆப்பிரிக்கா அணி, 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. சில மாற்றங்கள் இருக்கலாம்: அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து தொடரில் ஆடிய இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்பதை பயிற்சி ஆட்டம் காட்டியுள்ளது. இஷான் கிஷன்(1) - அபிஷேக்(2) ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் திலக் வர்மா(3) அல்லது கேப்டன் சூர்ய குமார் யாதவ்(4) ஆகியோர் தேவையை பொறுத்து களமிறங்குவார்கள். அவர்களை தொடர்ந்து, பாண்ட்யா(5), துபே(6), ரிங்கு சிங்(7), அக்ஷர் படேல்(8) முதலியோர் களமிறங்குவார்கள். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் பும்ரா(9), அர்ஷ்தீப் சிங்(10) வேக கூட்டணியை பாண்ட்யா உதவியுடன் செய்வார்கள். அக்ஷர் படேலுடன் கூடுதலாக ஒரு ஸ்பின்னர்(11) அணியில் சேர்க்கப்படுவார். அதில் தான் இந்திய அணி கடும் சவாலை சந்திக்க கூடும். வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து கூடுதல் ஸ்பின்னர்களுடன் போக வேண்டிய நிலை ஏற்பட்டால், தூபேவுக்கு பதில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் என இருவரையும் களத்துக்கு கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது. உங்க பிளேயின் லெவனை கமென்ட்டில் பதிவிடுங்கள் மக்களே..!

22 C