Hockey Junior World Cup : மதுரையில் இளையோர் உலகக் கோப்பை - முதல் போட்டியில் அசால்ட் செய்த ஜெர்மனி!
மதுரை, தமிழ்நாடு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 14-வது சர்வதேச ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியை, இந்திய ஹாக்கி பொதுச் செயலாளர் போலா நாத் சிங் தொடங்கிவைத்தார். தமிழக வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி வீரர்களை கை குலுக்கி வரவேற்றார். இரண்டு நாட்டு தேசிய கீதத்துடன் விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியில் முதல் கால் பாதியின் முடிவில் ஜெர்மனி 0 தென் ஆப்பிரிக்கா 0 என இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர். ஆனால் இரண்டாம் கால் பாதி தொடங்கிய சற்று நேரத்தில் முதல் கோலை அடித்து அசத்தியது ஜெர்மனி அணி. பின்பு சற்று தொய்வாக சென்று கொண்டிருந்த போட்டியில், பெனால்டி கார்னரை வழங்கியது தென் ஆப்பிரிக்கா அணி. இதை பயன்படுத்தி தன்னுடைய இரண்டாம் கோலை அடித்து முன்னிலையை தக்கவைத்தது, ஜெர்மனி அணி. இரண்டாம் பாதி தொடங்கி சற்று நேரத்தில், போட்டியின் நான்காவது பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஜெர்மனி அணியின் கேப்டன், கிராண்டர் பால் அணிக்காக மூன்றாவது கோலை அடித்தார். தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கோலாவது அடித்தே தீர வேண்டும் என்ற பதட்டம் இருந்த நிலையில், ஜெர்மனி அணி தன்னுடைய நான்காவது கோலை அடித்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. போட்டியின் இறுதியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி 4-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.
2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்?
டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை அவர்களின் மண்ணில் வீழ்த்துவது, அதிலும் தொடரை வெல்வது இன்றும் கடினம். அதைவிட புளியங்கொம்பு என்னவென்றால், இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்வது. ஆனால், கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு எதிரணிக்கு எளிதான செயலாக இது மாறியிருக்கிறது. India vs South Africa கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவை 3 - 0 என இந்தியாவில் ஒயிட் வாஷ் செய்து சென்றது. தற்போது தென்னாப்பிரிக்கா அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2 - 0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்திருக்கிறது. நியூஸிலாந்துடன் தோற்றபோது இந்தியா அணிக்கு ரோஹித் கேப்டனாக இருந்தார். இப்போது தென்னாப்பிரிக்காவுடன் தோற்றபோது சுப்மன் கில் காயத்தால் வெளியேறியதால் பொறுப்பு கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்தார். ஆனால், இதில் மாறாத ஒரே ஆள் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர்தான். டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை அணியில் எடுக்காமல் ஆல்ரவுண்டர் வேண்டும் என வீரர்கள் தேர்வு விவகாரத்தில் இவரின் தலையீடு முதன்மையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் 9 டெஸ்ட்டில் 5-ல் தோல்வியடைந்திருக்கிறது. இது இவருக்கு முன்பாக பயிற்சியாளர்களாக இருந்த அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோரின் பதவிக்காலத்தில் (7 ஆண்டுகள்) சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்த போட்டிகளின் எண்ணிக்கையை விட ஒன்று அதிகம். சொந்த மண்ணில் இந்தியாவின் இத்தகைய மோசமாக செயல்பாட்டை நுணுக்கமாக ஆராய வேண்டிய கம்பீரோ, ``சாம்பியன்ஸ் டிராபியை வென்றதும் ஆசிய கோப்பையை வென்றதும் இதே கம்பீர்தான் என்று தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்துப் பொறுப்பேற்காமல் தற்பெருமை பேசிக்கொண்டிருக்கிறார். Gautam Gambhir - கவுதம் கம்பீர் இந்த நிலையில்தான் சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி பேசியவை இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 2011-ல் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, அதே ஆண்டில் இங்கிலாந்தில் 4 - 0 என டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது. அதைத்தொடர்ந்து, அதே ஆண்டு இறுதி மற்றும் தொடக்கத்தில் (டிசம்பர், ஜனவரி) ஆஸ்திரேலியாவில் 4 - 0 (கடைசிப் போட்டியில் மட்டும் தோனி ஆடவில்லை) டெஸ்ட் தொடரை இழந்தது. BCCI: சொந்த மண்ணில் ஒரே தோல்வியில் சரிந்த இந்தியாவின் தசாப்த சாதனைகள்; லிஸ்ட் இதோ! அந்தத் தொடரில் பெர்த் மைதானத்தில் 3-வது டெஸ்டில் தோற்று தொடரை இழந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கலந்துகொண்டார். அப்போது, `உங்கள் தலைமையில் வெளிநாட்டில் தொடர்ச்சியாக 7-வது தோல்வியை இந்தியா பதிவு செய்திருக்கிறதே' என்று தோனியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த தோனி , ``தோல்விகளுக்கு என்னை நானே பழி சொல்லிக் கொள்கிறேன். நான்தான் அணியின் கேப்டன். நான்தான் முக்கிய குற்றவாளி. எனவே என்னை நானே பழி சொல்லிக் கொள்கிறேன். நான் பார்த்த வரையில், நிச்சயமாக நாங்கள் சிறப்பாக செயல்படாத மோசமான கட்டங்களில் இது ஒன்று. Dhoni - தோனி இங்கிலாந்தில் நாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும், இங்கு நடந்த 3 போட்டிகளிலும், நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை. ஒரேயொரு முறைதான் 350 ரன்களை அடித்தோம் என்று முழுக்க முழுக்க தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இத்தனைக்கும் அந்த அணியில் சச்சின், டிராவிட், லக்ஷ்மன், சேவாக், ஜாகிர் கான் ஆகிய சீனியர் வீரர்கள் இருந்தனர். கம்பீரும் அந்த அணியில் இருந்தார். இன்னும் 9 போட்டிகள்தான் இருக்கு; WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவதற்கான வழி என்ன? மேலும், அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் தனது பணியை சரியாகச் செய்தாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் தோனி, ``அவர் சிறந்த மனிதர். விளையாட்டைப் பற்றி சிறந்த அறிவைக் கொண்டவர். உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களில் அவரும் ஒருவர். அவர் பயிற்சியாளராக வந்தபிறகுதான் நாங்கள் இரண்டு தொடர்களை இழந்துவிட்டோம் என்று எல்லாப் பழியும் அவர்மீது சொல்வதல்ல. ஏனெனில் இறுதியில் வீரர்கள்தான் களத்தில் விளையாடப்போகிறார்கள் என்று பயிற்சியாளரை நோக்கிய கேள்விக்கும் அவரே முன்னின்றார். Dhoni - Gambhir | தோனி - கம்பீர் தோனியின் இந்த ஸ்பீச்சை ரசிகர்களும், விமர்சகர்களும் தற்போது கம்பீரின் தற்பெருமை பேச்சோடு ஒப்பிட்டு, `அன்று இந்தியா மோசமாக தோற்றபோது கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்றதும் இதே தோனிதான் என்று பெருமை பேசவில்லை. அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் யாரையும் குறை சொல்லவில்லை' என்று கூறி வருகின்றனர். சொந்த மண்ணில் இந்தியாவின் இத்தகைய மோசமான தோல்விக்கு யார் தான் பொறுப்பேற்பது, தோல்வியின்போதும் கம்பீரின் தற்பெருமை அணுகுமுறை எத்தகையது? யார் தான் பதில் சொல்வது? Gautam Gambhir: அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும் - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!
Jemimah Rodrigues: தோழி ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆதரவாக இருக்க - WBBL தொடரிலிருந்து விலகிய ஜெமிமா
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues) நடந்துவரும் 2025 மகளிர் பிக் பேஷ் லீக் (WBBL) சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வந்தார். ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்திற்காக WBBL பிரிஸ்பேன் ஹீட் அணியில் இருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விடுப்பு எடுத்திருந்தார். ஆனால், தற்போது திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த இக்கட்டான சூழலில் தனது தோழிக்கு ஆதரவாக இருக்க அவர் இந்தியாவிலேயே தங்கியிருக்க முடிவெடுத்துள்ளார். Jemimah Rodrigues இதனால் சீசனில் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என பிரிஸ்பேன் ஹீட் அணி உறுதி செய்துள்ளது. நவி மும்பையில் இந்திய மகளிர் அணிக்காக முதல் உலகக் கோப்பையை வென்றதையடுத்து, ரோட்ரிக்ஸ் ஹீட் அணிக்காக விளையாட ஆஸ்திரேலியா சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது சீசனில் பாதியிலேயே அவர் விலகுவது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ரோட்ரிக்ஸ் தனது தோழிக்கு ஆதரவளிக்க இந்தியாவில் தங்கியிருப்பதனால், டபிள்யூ.பி.பி.எல். சீசனின் மீதமுள்ள நான்கு போட்டிகளில் அவர் பங்கேற்காமல் இருக்க ஹீட் அணி ஒப்புக்கொண்டுள்ளது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்மிரிதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு! பலாஷ் முச்சல் - ஸ்மிரிதி மந்தனா ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, திருமண விழாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே ஸ்மிருதியின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மணமகன் பலாஷ் முச்சலுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஸ்மிருதி மந்தனாவின் சொந்த ஊரான மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். ஸ்மிருதியின் தந்தை சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், மாப்பிள்ளை பலாஷ் முச்சல் காய்ச்சல் மற்றும் அசிடிட்டி அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Amol Muzumdar: இந்தியாவுக்காக விளையாடியதில்லை; இன்று பயிற்சியாளராக கோப்பை வென்ற பேசப்படாத ஹீரோ!
இந்தியாவைப் பார்த்து எதிரணிகள் பயப்படும் காலம் இருந்தது, ஆனால் இப்போது- தினேஷ் கார்த்திக் காட்டம்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளைத் தழுவி வரும் இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ind vs sa match இந்திய மண்ணில் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படுவார்கள். ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் உற்சாகமாக இருக்கிறார்கள். கடந்த 12 மாதங்களில், இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி இருக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டிற்கு மோசமான காலம். உடனடி தீர்விற்கான முடிவுகளை எடுக்கவில்லை என்றால், நிச்சயம் சிக்கல் உருவாகும். எனக்குத் தெரிந்தவரை இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள். இந்த டெஸ்ட் தொடரில் 100 ரன்களுக்கு மேல் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக் ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் 7 பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் விளாசியிருக்கின்றனர். இந்திய அணியால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். திடீரென எப்படி இப்படியான சரிவு ஏற்படும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Gautam Gambhir: அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும் - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!
இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. இதன்மூலம் 0-2 என்ற கணக்கில் தொடரிலும் வொயிட்வாஷ் ஆகியிருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிடம் இப்படி ஒரு தோல்வியை எதிர்கொண்டுள்ளது இந்திய அணி. கேள்விகளை எதிர்கொண்ட Gautam Gambhir இந்த தோல்வியின் விளைவாக பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர். அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு பயிற்சியாளரான ஒரு ஆண்டில் நியூசிலாந்திடம் 0-3, தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என உள்நாட்டில் நடந்த இரண்டு தொடர்களில் வொயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது இந்திய அணி. உள்நாட்டில் இரண்டு வொயிட்வாஷ் தோல்விகளை சந்தித்த ஒரே பயிற்சியாளர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. Gautam Gambhir உள்நாட்டில் நடந்த கடந்த 7 போட்டிகளில் 5ல் இந்தியா தோல்வியைத் தழுவியிருக்கிறது. சொல்லப்போனால் கௌதம் கம்பீர் பொறுப்பேற்றது முதலான 19 போட்டிகளில் 10ல் இந்தியா தோல்வியைச் சந்தித்திருக்கிறது. புதன்கிழமை (நவ. 26) தோல்விக்குப் பிறகு பேசிய கம்பீரிடம் பயிற்சியாளராக அவரது எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதனை பிசிசிஐ-யிடம் தான் கேட்க வேண்டும். நான் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்கும்போது, 'இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை' என்று சொன்னேன். அதையேதான் இன்றும் சொல்கிறேன் எனக் கூறியிருக்கிறார். ஊடகங்கள் தோல்விகளை பெரிதுபடுத்துகின்றனர் ஈடன் கார்டனில் நடந்த முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 124 ரன்களைத் துரத்த முடியாமல் 30 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோது, சுழற்பந்துக்கு சாதகமான பிட்ச் சூழல் காரணமாக கூறப்பட்டது. ஆனால் கவுகாத்தியில் நல்ல பிட்சில் விளையாடியபோதும் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஷாட் தேர்வும், நீண்ட நேரம் விளையாடுவதற்கான பொறுமையின்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேலும் கௌதம் கம்பீர் டெஸ்ட் போட்டிகளுக்காக அறியப்படும் வீரர்களைப் பொருட்படுத்தாமல் ஆல்-ரவுண்டர்களை முன்னிறுத்தியது மோசமான விளைவைக் கொடுத்திருக்கிறது. Team India தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த கம்பீர், ஊடகங்கள் தனது வெற்றிகளைப் புறந்தள்ளிவிட்டு டெஸ்ட் தோல்விகளை மட்டுமே பெரிதுபடுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் ஒருவிஷயத்தை மறந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கிலாந்தில் இளம் அணியுடன் நல்ல முடிவுகளைப் பெற்றுக்கொடுத்த அதே கம்பீர்தான் நான். நீங்கள் மிக விரைவில் மறந்துவிடுவீர்கள். நிறைய பேர் நியூசிலாந்து பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்ற அதே நபர் நான். இது அனுபவம் குறைந்த அணி. நான் முன்பே சொன்னேன்: அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். எனப் பேசியிருக்கிறார். இளம் வீரர்களுக்கு நேரம் தேவை இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 0–3 என்ற கணக்கில் தோல்வியடைவதற்குக் காரணமான பிரச்னைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லையா என்று கேட்கப்பட்டபோது, முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் அதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஆர்.அஷ்வின் ஆகியோர் அணியில் இருந்தும் நியூசிலாந்துக்கு எதிரான அந்தத் தொடரில் இந்தியா தோற்றது. இதில், இந்த மூவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. Rishab Pant சுப்மன் கில் தலைமையில் சென்ற இளம் இந்திய அணி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து தொடரைச் சமன் செய்ததோடு, கடந்த மாதம் சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளை 2–0 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆனால், தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்களான தென் ஆப்பிரிக்காவிடம் மிகவும் சோகமான தோல்வியைச் சந்தித்துள்ளது. கம்பீர், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடியது வேறு ஒரு அணி, இந்தக் குழு முற்றிலும் வேறுபட்டது. நீங்கள் அனைவரும் நிறைய கிரிக்கெட்டைப் பற்றி எழுதுகிறீர்கள் – அந்த பேட்டிங் வரிசையில் இருந்த அனுபவத்திற்கும், இந்த வரிசையில் உள்ள அனுபவத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது என அழுத்தமாகக் குறிப்பிட்டார். மேலும், நான் சாக்குபோக்குச் சொல்ல மாட்டேன், சொன்னதும் இல்லை. ஆனால், எங்களது டாப் எட்டு வீரர்களில் நான்கு அல்லது ஐந்து பேர் 15-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியவர்கள். அவர்கள் களத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள், அதுவும் உயர்தரமான அணிக்கு எதிராக விளையாடும்போது அது எளிதான காரியம் இல்லை. அவர்கள் அழுத்தத்தைச் சமாளிக்கவும், தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் நேரம் தேவை என்று வெளிப்படையாகப் பேசினார். டெஸ்ட் போட்டிகளை விளையாடுவது கூட்டுமுயற்சி சுப்மன் கில் கழுத்துவலியால் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அணியை வழிநடத்த நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட், இரண்டு இன்னிங்கிஸிலும் பேட்டிங்கில் சொதப்பியதால் அவரால் திறமையாக கேப்டன் பொறுப்பை கையாளமுடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து கேட்கப்பட்டபோது தனிமனிதர்கள் மீது குற்றம்சுமத்த முடியாது என மறுத்துவிட்டார் கம்பீர். என்னையும் சேர்த்து, எல்லோரிடமிருந்தும் நான் சிறந்ததையே எதிர்பார்க்கிறேன். நான் இங்கே உட்கார்ந்து கொண்டு ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லப் போவதில்லை. நீங்கள் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளை வெல்ல விரும்பினால், ஒவ்வொரு வீரரிடமிருந்தும் உயர்ந்த தரத்தை எதிர்பார்க்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளை வெல்வது என்பது கூட்டு முயற்சி என அறிவுறுத்தினார். சுப்மன் கில்லுக்கு கொடுக்கும் 'அதீத' அங்கீகாரம் - சில கேள்விகள்
IND v SA: அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு - தோல்வி குறித்து ரிஷப் பண்ட்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. indian team இரண்டாவது டெஸ்ட் போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 489 ரன்களும், இந்திய அணி 201 ரன்களும் எடுத்தன. 288 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. IND v SA: `25 ஆண்டுகளுக்குப் பின்.!' - இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா இதன்மூலம், இந்தியாவுக்கு 549 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது தென்னாப்பிரிக்க அணி. இலக்கைத் துரத்திய இந்திய அணி, 5-ம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 140 ரன்களுக்குச் சுருண்டது. south africa team இதன் மூலம் 408 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது தென்னாப்பிரிக்க அணி. இதன்மூலம், 25 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் தொடரை வென்றுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்திருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பண்ட் (இந்தப் போட்டிக்கு மட்டும் கேப்டன்), இந்தத் தோல்வி ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும். இந்தத் தொடரில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு, ஒரு அணியாக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தொடர் முழுவதும் தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. Rishab Pant போட்டியில் சில சமயங்களில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்தோம். ஆனால் அந்த நல்ல தருணங்களை எங்களால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்றாலும், கிரிக்கெட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு செயல்படுவோம் என்று பேசியிருக்கிறார். IND vs SA: பலவீனமான பேட்டிங் வரிசை; பூடகமாக விரக்தியை வெளிப்படுத்தும் கருண் நாயர்!
IND v SA: `25 ஆண்டுகளுக்குப் பின்.!' - இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல்போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. indian team இரண்டாவது டெஸ்ட் போட்டி அஸ்ஸாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 489, இந்திய அணி 201 ரன் எடுத்தன. 288 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இந்தியாவுக்கு 549 ரன் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது தென்னாப்ரிக்க அணி. இலக்கை துரத்திய இந்திய அணி, 5-ம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 140 ரன்களுக்குச் சுருண்டது. south africa team இதன் மூலம் 408 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது தென்னாப்பிரிக்க அணி. இதன்மூலம், 25 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் தொடரை வென்றுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.
Smriti Mandhana: பலாஷ் முச்சல் குறித்து பரவும் தகவல்; UnFollow செய்த ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் திருமணம் நடைபெற இருந்தது. இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்ததை ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். ஆனால் ஸ்மிரிதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. Smriti Mandhana இதனைத்தொடர்ந்து பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. உண்மையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் திருமணம் நின்றதா? என்ற கேள்வி எழுந்தநிலையில் பலாஷ் முச்சல் ஒரு பெண்ணுடன் சாட் (chat) செய்த ஸ்கிரீன்ஷாட்டும் இணையத்தில் வைரலானது. இதனிடையே ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்துப் பதிவுகளையும் நீக்கினார். அவரது திருமண முன்மொழிவு வீடியோ, நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் சங்கீத் படங்கள் என அனைத்தையும் நீக்கியிருந்த அவர் தற்போது பலாஷ் முச்சலை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோவும் செய்திருக்கிறார். ஸ்மிருதி மந்தனா என்ன நடந்தது என்பதை சம்பந்தபட்டவர்கள் கூறினால் தான் என்ன நடந்தது என்பது தெரிய வரும்.
2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது போட்டி அட்டவணை!
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நடப்பு சாம்பியன் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இலங்கையும் இணைந்து அடுத்தாண்டு (2026) டி20 உலகக் கோப்பைத் தொடரை நடத்துகின்றன. இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட ஐ.சி.சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மேலும், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த ஆண்டு மகளிர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பையின் விளம்பர தூதராக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் ஒருவர் உலகக் கோப்பை தொடரின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. A two-time @t20worldcup champion, a record-setter across T20 World Cups and now the tournament ambassador for ICC Men's #T20WorldCup 2026 The one and only Rohit Sharma pic.twitter.com/iAoBJKoAC0 — ICC (@ICC) November 25, 2025 அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட அட்டவணையின்படி இந்தியாவில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியம், கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியம், மும்பை வான்கடே ஸ்டேடியம், சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆகிய 5 மைதானங்களில் போட்டி நடைபெறும். இலங்கையில் கண்டி பல்லேகலே ஸ்டேடியம், கொழும்புவில் ஆர். பிரேமதாச ஸ்டேடியம் மற்றும் எஸ்.எஸ்.சி ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் நடைபெறும். Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்' - ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குரூப் A-யில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா (USA) ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில், மார்ச்சில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தங்கள் நாட்டுக்கு வராததால் இனி இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு ஐ.சி.சி தொடரிலும் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துவிட்டதால், பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது குரூப் B-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. குரூப் C-யில் வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. குரூப் D-யில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இந்த நான்கு குழுக்களில் இடம்பெற்றிருக்கும் அணிகள் தங்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு லீக் போட்டியில் ஆட வேண்டும். இந்த லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளும் தலா 4 அணிகள் என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். அதில், லீக் சுற்றைப் போலவே ஒவ்வொரு அணியும் தங்களது குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் ஆட வேண்டும். சூப்பர் 8 சுற்று முடிவில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் 4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா - இந்தியாவின் அதிகபட்ச சேசிங் என்ன? அரையிறுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்ற இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், லீக் சுற்று போட்டிகள் பிப்ரவரி 7 முதல் 20 வரையிலும், சூப்பர் 8 சுற்று போட்டிகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரையிலும், அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி மார்ச் 8-ம் தேதியும் நடைபெறும். மார்ச் 4-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அல்லது இலங்கை முன்னேறினால் அப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். அவ்வாறு அந்த இரு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை எனில் அப்போட்டி கொல்கத்தாவில் நடத்தப்படும். மார்ச் 5 அரையிறுதிப் போட்டி மும்பையில் நடத்தப்படும். அதேபோல், இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும்பட்சத்தில் அப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லையெனில் அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறும். 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஆடும் லீக் போட்டிகள் லீக் சுற்றில் இந்தியா பிப்ரவரி 7-ம் தேதி அமெரிக்காவையும் (மும்பை), 12-ம் தேதி நமீபியாவையும் (டெல்லி), 15-ம் தேதி பாகிஸ்தானையும் (கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியம்), 18-ம் தேதி நெதர்லாந்தையும் (அகமதாபாத்) எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் சென்னையில் இந்தியாவுக்கு ஒரு போட்டியும் இல்லை. ஆனால், லீக் சுற்றில் மொத்தமாக 6 போட்டிகள், சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டி என மொத்தம் 7 போட்டிகள் சென்னையில் நடைபெறும். கடைசியாக 2016-ல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறி அரையிறுதியில் வெஸ்ட் இன்டீஸிடம் தோல்வியடைந்ததும், இறுதிப் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. `அன்று கோலி விக்கெட்; இன்று சதம்' - இந்தியாவுக்கெதிராக ஜொலிக்கும் தமிழன்! Senuran Muthusamy யார்?
INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா - இந்தியாவின் அதிகபட்ச சேசிங் என்ன?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டைக் கூட அடிக்க முடியாமல் இந்தியா படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் போட்டியும் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 14 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால், பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஹார்மர் - பவுமா இத்தகைய சூழலில் நவம்பர் 22-ம் தேதி கவுகாத்தியில் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. 25 ஆண்டுகளாக (கடைசியாக 1999-2000ல் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா) சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இழக்காத இந்தியா, அந்த லெகஸியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற கட்டாயத்தோடு, இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்யும் நெருக்கடியில் ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கியது. இந்தியாவுக்கு மட்டும் பொய்யாகிப் போன கணிப்பு டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இந்திய வம்சாவளி தமிழர் சேனுரான் முத்துசாமி தனது சர்வதேச கரியரின் முதல் சதத்தை இப்போட்டியில் அடித்தார். முதல் டெஸ்ட்டில் இரண்டு அணிகளுமே ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்கள் அடிக்காத நிலையில், இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 489 அடித்ததால் பிட்ச் நல்ல பேட்டிங் ட்ராக்காகத் தெரிந்தது. Senuran Muthusamy - சேனுரான் முத்துசாமி ஆனால், அந்தக் கணிப்பு இந்தியாவுக்கு மட்டும் பொய்யாகிப் போனது. 201 ரன்களில் இந்தியா ஆல் அவுட். மார்கோ யான்சென் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணியில் அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 134 பந்துகள் எதிர்கொண்டார். 288 ரன்கள் முன்னிலையில் இருந்தபோதும் இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா ஃபாலோ-ஆன் தராமல் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிய அதே ட்ராக்கில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் அசால்ட்டாக ரன்கள் குவிக்கத் தொடங்கினர். நான்காம் நாளான இன்று சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் துரதிர்ஷ்டவசமாக 94 ரன்களில் அவுட்டானதும் தென்னாபிரிக்கா 260 ரன்னில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்து இந்தியாவுக்கு 549 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தது. `அன்று கோலி விக்கெட்; இன்று சதம்' - இந்தியாவுக்கெதிராக ஜொலிக்கும் தமிழன்! Senuran Muthusamy யார்? டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச டார்கெட் 418 தான். அதுவும் 2003-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிராக வெஸ்ட் இண்டீஸ் சேஸ் செய்தது. அதேபோல், டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிகரமாக சேஸ் செய்த டார்கெட் 406. அதுவும் 1976-ல் வெஸ்ட் இண்டீஸுக்கெதிராக அந்நாட்டு மண்ணில். சொந்த மண்ணில் இந்தியாவின் வெற்றிகரமாக சேஸிங் 2008-ல் சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கெதிராக அடிக்கப்பட்ட 387 டார்கெட்தான். இந்திய கிரிக்கெட் அணி ஆசிய மண்ணில் இதுவரை எந்தவொரு அணியும் 400+ ரன்கள் டார்கெட்டை சேஸ் செய்ததில்லை. அதிகபட்சமாக 2021-ல் வங்காளதேசத்தில் 395 ரன்கள் டார்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் சேஸ் செய்தது. எனவே, 549 ரன்கள் என்ற டார்கெட்டை எட்டுவது இந்தியாவுக்கு மிக மிகக் கடினமான ஒன்று. இதற்கு முன்பு 2004-ல் நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலியா 504 ரன்களை இந்தியாவுக்கு டார்கெட்டாக நிர்ணயித்தது. அப்போட்டியில் 342 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. Gambhir: என்னுடைய கோச்சிங் கரியரில் அந்தத் தோல்வியை என்னால் மறக்கவே முடியாது - மனம் திறந்த கம்பீர் வரலாறு படைக்குமா அல்லது வரலாற்றுத் தோல்வியடையுமா? இப்போது இந்திய மண்ணில் இரண்டாவது முறையாக 500 ரன்களுக்கு மேல் இந்தியாவுக்கு டார்கெட் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்போதே நான்காம் நாள் முடிவில் 27 ரன்களுக்கு ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்துவிட்டது. இரண்டாவது விக்கெட்டுக்கு நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட குல்தீப் யாதவும், சாய் சுதர்சனும் களத்தில் நிற்கின்றனர். கைவசம் 8 விக்கெட்டுகள் வைத்திருக்கும் இந்தியா வெற்றிபெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். ரிஷப் பண்ட் - ஜடேஜா கடைசி நாளான நாளை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடிப்பது இந்தியாவுக்கு கிட்டதட்ட முடியாத காரியம். நாளை முழுவதும் இந்தியா பேட்டிங் செய்து ஆல் அவுட் ஆகாமல் போட்டியை டிரா செய்தாலே பெரிய விஷயம்தான். எனவே, நாளை 549 ரன்கள் டார்கெட் சேஸ் செய்யப்பட்டால் அது இந்தியாவுக்கு வரலாறு, அப்படியில்லாமல் போட்டி டிரா ஆனாலோ அல்லது இந்தியா தோற்றாலோ அது 25 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர் வென்றதாக தென்னாப்பிரிக்காவுக்கு வரலாறு. யார் சாதனை படைக்கப்போகிறார்கள் என்பதை நாளை பார்க்கலாம். கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு சொந்த மண்ணில் படுமோசமாகச் செயல்படும் இந்திய அணியின் செயல்பாடு குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.! Gautam Gambhir: இந்திய அணியின் மோசமான கோச்? கம்பீர் மீது ரசிகர்கள் அதிருப்தி!
ஒவ்வொரு முறையும் மனசு உடையும்- இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து பத்ரிநாத்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், நவம்பர் 30-ம் தேதி தொடங்கவிருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் அணியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் பேசியிருக்கிறார். சஞ்சு சாம்சன் “நான் சஞ்சு சாம்சனுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்திருக்கிறார், அவருடைய ஒருநாள் சராசரி 56 ஆக இருக்கிறது. ஆனாலும் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் என்ன தவறுசெய்தார் என்றும் எனக்குப் புரியவில்லை. ரிஷப் பண்ட் அணியில் இருப்பதற்குக்கூட என்னால் காரணம் புரிந்துகொள்ள முடிகிறது. ரிஷப் பண்ட்டின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் துருவ் ஜூரெல் எந்த அடிப்படையில் அணியில் இருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. பத்ரிநாத் சஞ்சு சாம்சனின் இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். நம்முடைய பெயர் அணியில் இடம்பெறாதா எனப் பார்த்து ஏமாறும் ஒவ்வொரு முறையும் மனசு உடையும்” என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

28 C