ஒவ்வொரு முறையும் மனசு உடையும்- இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து பத்ரிநாத்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், நவம்பர் 30-ம் தேதி தொடங்கவிருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் அணியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் பேசியிருக்கிறார். சஞ்சு சாம்சன் “நான் சஞ்சு சாம்சனுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்திருக்கிறார், அவருடைய ஒருநாள் சராசரி 56 ஆக இருக்கிறது. ஆனாலும் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் என்ன தவறுசெய்தார் என்றும் எனக்குப் புரியவில்லை. ரிஷப் பண்ட் அணியில் இருப்பதற்குக்கூட என்னால் காரணம் புரிந்துகொள்ள முடிகிறது. ரிஷப் பண்ட்டின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் துருவ் ஜூரெல் எந்த அடிப்படையில் அணியில் இருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. பத்ரிநாத் சஞ்சு சாம்சனின் இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். நம்முடைய பெயர் அணியில் இடம்பெறாதா எனப் பார்த்து ஏமாறும் ஒவ்வொரு முறையும் மனசு உடையும்” என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
IND vs SA: பலவீனமான பேட்டிங் வரிசை; பூடகமாக விரக்தியை வெளிப்படுத்தும் கருண் நாயர்!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், அணியில் இடம்பெறாத இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் சமூக வலைத்தளத்தில் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். கருண் நாயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்றார். ஆனால் அதன்பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தனது எக்ஸ் வலைத்தளத்தில், சில கண்டிஷன்கள் (மைதான சூழல்) உங்களுக்கு நன்றாக தெரிந்த உணர்வைக் கொடுக்கும் - ஆனால் அங்கு இல்லாததன் மௌனம் வலியை ஏற்படுத்தும் எனப் பதிவிட்டுள்ளார். Some conditions carry a feel you know by heart — and the silence of not being out there adds its own sting. — Karun Nair (@karun126) November 24, 2025 இதனை அவர் அணியில் எடுக்கப்படாததன் விரக்தியை வெளிப்படுத்தும் பதிவாக கருதுகின்றனர். இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ரஞ்சி டிராபியில் கலக்கி வருகிறார் கருண். கர்நாடகா அணிக்காக அவர் ஆடிய 5 போட்டிகளில், 100-க்கும் அதிகமான சராசரியுடன் 600 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளார். ஆனாலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்படவில்லை. மாறாக, கொல்கத்தாவில் நடந்த டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் 3-வது இடத்தில் பேட்டிங் இறங்கி சோதிக்கப்பட்டார். கவுகாத்தி போட்டியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. Team India கழுத்து வலி காரணமாக கில் விலகியதால் இந்திய பேட்டிங் ஆர்டர் நிலைத்தன்மையற்று பலவீனமாக உள்ளது. சாய் சுதர்சன் மூன்றாவது இடத்திலும், துருவ் ஜுரேல் நான்காவது இடத்திலும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராகத்தான் 2016-ஆம் ஆண்டு, முதல் இன்னிங்ஸில் 400-க்கும் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்தப் பிறகு இந்தியா வெற்றி பெற்றது. சென்னையில் நடந்த அந்தப் போட்டியில் முச்சதம் அடித்து சாதனை படைத்தவர் இளம் கருண் நாயர்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்து தொடரில் நாயருக்குக் குறுகிய காலமே வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தொடரில், பேட்டிங் வரிசையில் அவர் மூன்றாவது இடம் மற்றும் ஆறாவது இடத்திற்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார். முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ-யின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரிடம் கேட்கப்பட்டபோது, அனுபவம் வாய்ந்த அவரிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்த்ததாக ஒப்புக்கொண்டார். கருண் நாயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறியிருக்கும் இந்தச் சூழலில், சாய் சுதர்சன், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களைப் பயன்படுத்தாமல், இந்தத் தொடரில் இந்தியாவின் நிலையைப் பொறுத்து, கருண் நாயர் போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், அது இந்திய அணிக்குச் சிறப்பாக இருந்திருக்குமோ? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்புகின்றனர். ஏனெனில், தற்போது சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக ‘ஒயிட்வாஷ்’ ஆகும் அபாயத்தை இந்தியா எதிர்கொள்வதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பையும் இழக்கும் நிலையில் உள்ளது. Karun Nair: அவரிடம் அதிகமாக எதிர்பார்த்தோம்- விடுவிக்கப்பட்ட கருண் நாயர்; BCCI சொல்லும் காரணமென்ன?
Snooker விளையாட்டில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த தமிழ்நாட்டு பெண் - யார் இந்த அனுபமா ராமச்சந்திரன்?
ஸ்னூக்கர் விளையாட்டில் IBSF (15-சிவப்பு) உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சில நாள்களாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார் சென்னையை சேர்ந்த அனுபமா ராமச்சந்திரன். இந்தப் பட்டத்தை பெற்ற முதல் இந்திய பெண்மணி என்கிற பெருமையையும் பெற்றுள்ளார் இவர். இவர் ஹாங்காங்கை சேர்ந்த இங் ஆன் யீயை 3-2 வித்தியாசத்தில் இறுதிப்போட்டியில் வீழ்த்தியுள்ளார். அனுபமா ராமச்சந்திரன் இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A யார் இவர்? 23 வயதாகும் அனுபமா ராமச்சந்திரன் சென்னையை சேர்ந்தவர் ஆவார். தனது 13 வயதில் சம்மர் கேம்ப்பின் போது ஸ்னூக்கர் விளையாட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார் இவர். இந்த விளையாட்டில் ஆர்வம் அதிகமாக, 15 வயதில் இருந்து போட்டியில் கலந்துகொள்ள தொடங்கியிருக்கிறார். ஜூனியர் லெவலில் 8 தேசிய ஜூனியர் பட்டங்களை வென்றிருக்கிறார். 2017-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலக ஓபன் 16 வயது உட்பட்ட ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். 2023-ம் ஆண்டு, அமீ கமானியுடன் பெண்கள் ஸ்னூக்கர் உலக கோப்பையை வென்றிருக்கிறார். அதே ஆண்டு, 21 வயது உட்பட்ட பிரிவில் உலக பெண்கள் ஸ்னூக்கர் பட்டத்தை வென்றிருக்கிறார். 2024-ம் ஆண்டு, அமெரிக்க மகளிர் ஓபன் போட்டியில் ரன்னர் அப்பாக வந்திருக்கிறார். இப்போது இவர் ஸ்னூக்கர் விளையாட்டில் IBSF (15-சிவப்பு) உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். இன்னும் பல சாதனைகளை குவிக்க வாழ்த்துகள் அனுபமா! 'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?
40 வயதில் அசால்ட்டாக `பை சைக்கிள் கிக்’ அடித்த ரொனால்டோ; ஆர்பரித்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ
சவூதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கிக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கிய ரொனால்டோ, ரியல் மேட்ரிட் போன்ற அணிகளில் விளையாடி தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சவூதி ப்ரோ லீக்கில் நேற்று (நவ.23) அல் கலீஜ் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ சுழன்று கடினமான பை சைக்கிள் கிக்கை சுலபமாக செய்து கோல் அடித்திருக்கிறார். மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் இதனைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி ஆர்பரித்திருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. மிகவும் கடினமான இந்த கிக்கை, 40 வயதில் சுலபமாக செய்து கால்பந்தின் ஜாம்பவான் என்பதை ரொனால்டோ நிரூபித்திருக்கிறார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த போட்டியில் 39 மற்றும் 42 நிமிடங்களில் கோல் அடித்து அல் நசர் அணி 2-1 என முன்னிலை வகித்து இருந்தது. Cristiano Ronaldo doing this at the age of 40. There’s players at the peak of their game right now who could only dream of doing this. He’s the greatest to ever do it. pic.twitter.com/Vwc9fFQ0BP — RMZZ (@BlancoRMzz) November 23, 2025 தொடர்ந்து 77வது நிமிடத்தில் அந்த அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இறுதியில் ரொனால்டோவின் அபார கோலால், அல் நசர் அணி 4-1 என வெற்றி பெற்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
`அன்று கோலி விக்கெட்; இன்று சதம்' - இந்தியாவுக்கெதிராக ஜொலிக்கும் தமிழன்! Senuran Muthusamy யார்?
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் ஆட இந்தியா வந்திருக்கிறது. நவம்பர் 14-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் கூட அடிக்காமல் படுதோல்வியடைந்தது. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி (நவம்பர் 22) கவுகாத்தியில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய தென்னாபிரிக்கா அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. சேனுரான் முத்துசாமி அந்த அணியின் ஆல்ரவுண்டர் சேனுரான் முத்துசாமி 25 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் கைல் வெர்ரெய்ன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இவ்வாறிருக்க, நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சேனுரான் முத்துசாமி சதம் அடித்து 206 பந்துகளில் 109 ரன்களுடன் அவுட்டானார். இதுதான் சேனுரான் முத்துசாமிக்கு சர்வதேச கரியரில் முதல் சதமாகும். யார் இந்த சேனுரான் முத்துசாமி? சேனுரான் முத்துசாமி 1994-ல் தென்னாப்பிரிக்காவில் நடால் மாகாணத்தில் உள்ள டர்பனில் இந்திய வம்சாவளி முத்துசாமிக்கும், வாணி மூடேலிக்கும் மகனாகப் பிறந்தார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் தாத்தா பாட்டி, இவர் பிறப்பதற்கு முன்பாகவே தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். சேனுரான் முத்துசாமியின் உறவினர்கள் இன்றும் நாகப்பட்டினத்தில் வசிக்கின்றனர். சேனுரான் முத்துசாமி சேனுரான் முத்துசாமி சிறுவயதாக இருக்கும்போதே அவரின் தந்தை இறந்ததால் தாய் வாணி ஒற்றை ஆளாகக் குடும்பச் சுமை மொத்தத்தையும் ஏற்றுக்கொண்டு அவரை ஆளாக்கினார். கிளிஃப்டன் கல்லூரியில் (Clifton College) படித்த சேனுரான் முத்துசாமி, குவாசுலு-நடால் பல்கலைக்கழகத்தில் (University of KwaZulu-Natal) சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து, மீடியா அண்ட் மார்கெட்டிங்கில் நிபுணத்துவமும் பெற்றார். கல்வியில் கவனம் செலுத்திய அதேவேளையில் பள்ளிப் பருவம் முதலே கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி உள்ளூர் போட்டிகளில் தனக்கான இடத்தை உருவாக்கினார் சேனுரான் முத்துசாமி. The Ashes: முதல் டெஸ்டில் வெற்றிபெற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.17 கோடி நஷ்டம்; காரணம் என்ன? உள்ளூர் போட்டிகளில் 11 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோர் வரை குவாசுலு-நடால் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனாலும் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்த சேனுரான் முத்துசாமிக்கு இறுதியாக 2013-ல் தென்னாப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியிலிருந்து அழைப்பு வந்தது. சேனுரான் முத்துசாமி அதையடுத்து, உள்ளூர் போட்டியில் 2015-16 சீசனில் டால்பின்ஸால் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக ஒப்பந்தம் ஆன சேனுரான் முத்துசாமி, 2016-17 சீசனில் நைட்ஸ் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டியில் டால்பின்ஸால் அணியில் 181 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்தார். ஆனால், அதன் பிறகு அவரின் பேட்டிங் சற்று குறைந்தது. அதேவேளையில் அவரின் சுழற்பந்துவீச்சு மேம்பட்டது. இந்த மாற்றம் அவரை ஆல்ரவுண்டராக வேறொரு கட்டத்துக்கு கொண்டு சென்றது. சேனுரான் முத்துசாமி இதுகுறித்து அவருடைய அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் 2019-ல், ``அவரது பேட்டிங் சற்று குறைந்திருக்கிறது. ஆனால், அவரின் பந்துவீச்சு அடுத்த நிலைக்கு உயர்ந்திருக்கிறது என்று கூறினார். அதே ஆண்டில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணியில் ஆல்ரவுண்டராக சேனுரான் முத்துசாமி இடம்பிடித்தார். World cup : வரலாறு படைத்துள்ளனர், பல தலைமுறை பெண்களை ஊக்குவிக்கும் வெற்றி - Virat Kohli வாழ்த்து சர்வதேச கரியரின் முதல் விக்கெட்டே கோலி! அந்தத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், தனது சர்வதேச கரியரின் விக்கெட் எண்ணிக்கையை கேப்டன் விராட் கோலியை அவுட்டாக்கித் தொடங்கினார். இந்தியாவுக்கெதிராக இந்திய மண்ணில் அதுவும் விராட் கோலியை அவுட்டாக்கியது அவரின் சர்வதேச கரியருக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது. Virat Kohli - விராட் கோலி ஆனாலும், தென்னாப்பிரிக்கா அணியில் கேஷவ் மகாராஜ், ஷம்ஸி ஆகியோரின் இருப்பால் தொடர்ச்சியாக அணியில் அவரால் இடம்பெற முடியவில்லை. 2019-ல் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியில் அறிமுகமானாலும் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டுதான் தென்னாப்பிரிக்கா அணியில் அறிமுகமானார். சேனுரான் முத்துசாமி எப்படி இவரின் சர்வதேச கரியர் இந்திய மண்ணில் பிரபலமாகத் தொடங்கியதோ, அதேபோல அவரின் சர்வதேச கரியரின் முதல் சதம் இந்தியாவில் வந்ததன் மூலம் தன் கரியரில் மேலும் ஒரு சிறப்பான தருணத்தை உருவாக்கியிருக்கிறார். ஓர் இந்திய வம்சாவளியாக, தமிழனாக தென்னாபிரிக்க அணியில் நீண்டகாலம் ஆடி உலக அரங்கில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்க சேனுரான் முத்துசாமிக்கு வாழ்த்துகள்! உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!
Women's Blind T20 World Cup: உலகக்கோப்பை வென்ற பார்வைசவால் கொண்ட இந்தியப் பெண்கள்; ஸ்டாலின் பாராட்டு
நேற்று பார்வை சவால் கொண்ட பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி வாகையைச் சூடியுள்ளது. கொழும்பில் உள்ள பி சாரா ஓவலில் நடந்த இந்தப் போட்டியில் நேபாள அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. டாஸில் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. நேபாள அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 114 ரன் எடுத்து இந்திய அணிக்கு 115 ரன்கள் என இலக்கை நிர்ணயித்தது. வெறும் 12 ஓவர்களில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளுடன் 117 ரன்களைக் குவித்து வெற்றியை கைப்பற்றியது. ஸ்டாலின் வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி? ஸ்டாலின் பதிவு இந்தியப் பெண்கள் அணியின் வெற்றியைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... தைரியம் வழிநடத்தும்போது வரலாறு உருவாகும்! முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற நமது பார்வை சவால் கொண்ட பெண்கள் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு ஒரு ஊக்கமாகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்! என்று பதிவிட்டுள்ளார். இந்த அணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர். வாழ்த்துகள் டீம்! மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்! History rises when courage leads! Warm wishes to our phenomenal Women’s Blind Cricket Team on winning the inaugural T20 World Cup. You stand tall as India’s pride, and an inspiration to the world! https://t.co/n0kVXhZkn5 — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 23, 2025
`மெல்ல நிறைவேறும் கபடிக் கனவு' - சாதிக்கத் துடிக்கும் திருவாரூர் இளைஞர்!
திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தில் AMC கபடி கழகத்தின் சிறந்த ஆல்ரவுண்டராக லோகநாதன் மிக இளையோர் (Sub junior) பிரிவில் தமிழக அணிக்காக தேர்வாகி இருக்கிறார். லோகநாதனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு அவரிடம் பேசத் தொடங்கினோம். ``நான் வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு சிறு வயதிலேயே கபடி விளையாடனும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் என் கனவே கபடி தான். எங்கள் பள்ளியில் எனக்கு பயிற்சியாளராக சுகன் சார் இருந்தார். கபடி மேல எனக்கு இருக்கிற ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக அவர் எனக்கு பல கோணங்களில் உதவினார். எங்களது குடும்பம் ரொம்ப ஏழ்மையானது. எங்க அப்பா ராமநாதன் ஒரு விவசாயி. எங்க அப்பா ஒருவருடைய வருமானம் குடும்பத்திற்கு பத்தாம இருக்கிறதுனால என் அம்மா நிர்மலாவும் கூலி வேலைக்கு போய் தான் என்ன படிக்க வச்சாங்க. என் அண்ணன் ஒரு SDAT வாலிபால் விளையாட்டு வீரர். என் அண்ணனை முன்னோடியாக வைத்தும் எனக்கு விளையாட்டு மேல ஆர்வம் வந்தது. லோகநாதன் என் ஊர் வடுவூர்'ல AMC கபடி கழகம், மேல்பாதி இளைஞர்கள் கபடி விளையாட பயிற்சி கொடுத்தாங்க. அவங்களோட பயிற்சி மூலமா எனக்கு கபடி மேல பெரிய மதிப்பும், மரியாதையும் வந்தது. என் குடும்ப நிலைமையை புரிந்து கொண்ட AMC டீம், என்னை மயிலாடுதுறையில் இருக்கிற SAI விளையாட்டு விடுதியில் சேர்த்து விட்டாங்க. இப்போ அங்கதான் 11ஆம் வகுப்பு படிக்கிறேன். இங்க எனக்கு கோச்சாக R. அரவிந்த் ராஜா அவர்கள் பயிற்சி தர்றாங்க. இவரு மட்டும் இல்லனா நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. நான் செய்கின்ற சிறு தவறையும் அன்பாகச் சொல்லி புரியவச்சு, நான் முன்னேற உதவியா இருக்காங்க. சேலத்தில் நடந்த மாநில அளவிலான கபடி தேர்ச்சி போட்டியில் பங்குபெற்ற, 300 பேரில் 32 பேர் தேர்வாகிருக்காங்க. அதுல நானும் ஒருத்தன், இதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றின்னு நினைக்கிறேன். பிறகு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தில் என்னை செலக்ட் பண்ணாங்க. சேலம் வாலப்பாடியில் 10 நாள்களுக்கு மேல் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழக அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேர்ல நானும் ஒருத்தன். 'நான் ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - இந்திய U18 அணியில் தஞ்சை இளைஞர் அபினேஷ் தமிழ்நாடு சார்பாக ஹரியானால நவம்பர் 27 முதல் 30 வரை நடக்க உள்ள கபடி போட்டியில் விளையாட உள்ளேன். கண்டிப்பாக அங்க நல்லா விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் தமிழக அணிக்கு தேர்வானதற்கு எனக்கு முக்கிய உறுதுணையாக இருந்தது, திருவாரூர் மாவட்டக் கபடி கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்கள். ராஜேந்திரன் ஐயா மட்டும் இல்லை என்றால் நான் கண்டிப்பாக இவ்வளவு உயரத்தை தொட்டிருக்க முடியாது. நான் கஷ்டத்தில் இருக்கும்போது எனக்கு தோள் கொடுத்த தோழமை அவர். இந்த நேரத்தில் ராஜேந்திரன் ஐயாவுக்கு எனது நன்றியைக் கூறுகிறேன். கண்டிப்பாக தமிழக அணியில் வெற்றி பெற்று எங்களது ஊருக்கு மென்மேலும் பெருமை சேர்ப்பேன் எனக் கூறி, மனம் நெகிழ்கிறார்... இன்னும் பல உயரங்களைத் தொட, வாழ்த்துகள் லோகநாதன்!!!
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி; மதுரையில் மைதானத்தை திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். வீரர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையிலும் மதுரையிலும் நடத்தப்படவுள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 24 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரை விளையாட்டு மைதான வளாகத்தில் 20 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1500 பேர் அமரும் வகையில் தற்காலிக கேலரி, 500 பேர் அமரும் வகையில் நிரந்தர கேலரி அமைக்கப்பட்டுள்ளது, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை, ஜிம், அவசர மருத்தவ மையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மைதானங்களில் 72 போட்டிகள் நடைபெற உள்ளது. வீரர்களுடன் மதுரையில் நவம்பர் 28 ஆம் தேதி ஜெர்மனி - ரஷ்யாவிற்கு இடையே உலகக் கோப்பைக்கான முதல் போட்டி கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து மதுரை மாவட்ட நிர்வாகம் செய்து வரும் நிலையில், மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மைதானத்தை திறந்து வைத்தார்.
smriti mandana: தீடீரென தந்தைக்கு மாரடைப்பு; இன்று நடக்கவிருந்த ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவருடைய காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், திடீரென அவருடைய திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது . பலாஷ் முச்சல் - ஸ்மிரிதி மந்தனா இன்று காலை ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். உடல்நிலை சீராக இருந்தாலும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். ஸ்ரீனிவாஸும் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை உறுதி செய்த ஸ்மிருதி மந்தனாவின் மேலாளர் மிஷ்ரா, “இன்று காலை ஸ்ரீனிவாஸ் காலை உணவு உண்ணும்போதே உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. சாதாரணமாக இருக்குமென்று கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தோம். ஆனால் நிலைமை மேலும் மோசமானதால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார். ஸ்மிருதி தனது தந்தையுடன் மிகவும் நெருக்கமான பாசப் பிணைப்பு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஸ்மிருதி மந்தனா, இசை அமைப்பாளர் பலாஷ் முச்சல் அப்பா முழுமையாக குணமடையும் வரை திருமணத்தைப் பற்றி யோசிக்க முடியாது என்று அவர் உறுதியாக முடிவெடுத்துவிட்டார். அதன்படி இன்று நடைபெறவிருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களும் அவர் முழுமையாக சரியாகும் வரை மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். நாங்கள் அனைவரும் இந்தச் சூழலில் அதிர்ச்சியில் உள்ளோம். அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
The Ashes: முதல் டெஸ்டில் வெற்றிபெற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.17 கோடி நஷ்டம்; காரணம் என்ன?
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கியது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியை, ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய முக்கிய பவுலர்கள் இல்லாதபோதும் தனி ஒருவராக சாய்த்தார் மிட்செல் ஸ்டார்க். Australia vs English - Ashes 33 ஓவர்களில் வெறும் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து, வார்னர் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் யாரை ஓப்பனிங் இறக்கினாலும் கிளிக் ஆகாததால் ஓப்பனிங்கில் அவரையே ஒரங்கட்டிவிட்டு அறிமுக வீரர் நேதன் மெக்ஸ்வீனி மற்றும் மார்னஸ் லபுஷேனை இறக்கினார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். ஆனால், இந்த முறையும் ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமே, முதல் ஓவரிலேயே மெக்ஸ்வீனி டக் அவுட் ஆனார். அங்கிருந்து சரிவர ஆஸ்திரேலியா இங்கிலாந்தை விட மோசமாக ஆடி முதல் நாள் முடிவில் 39 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஷஸ் தொடரின் கடந்த 100 வருட வரலாற்றில் முதல் முறையாக முதல் நாளிலேயே 19 விக்கெட்டுகள் வீழ்ந்த போட்டியாக இது அமைந்தது. அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் 132 ரன்களில் 10-வது விக்கெட்டையும் ஆஸ்திரேலியா இழந்தது. அதைத்தொடர்ந்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸைப் போலவே அதிரடியாக ஆட முயன்று 35 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் ஓப்பனிங் செட் ஆகாததை உணர்ந்த ஸ்மித் லபுஷேனுக்குப் பதில் டிராவிஸ் ஹெட் டை ஓப்பனிங்கில் அனுப்பினார். Australia vs England - Ashes ஹெட் அதிரடியாக ஆடி 69 பந்துகளில் சதமடிக்க, ஒன் டவுனில் நிதானமாக லபுஷேன் அரைசதமடிக்க 28 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா. முழுமையாக இரண்டு நாள் கூட இல்லாமல் போட்டி முடிவுக்கு வந்தது. ஐந்து நாள் டெஸ்ட் போட்டி முழுமையாக இரண்டு நாள்களுக்குள் முடிந்தது விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குள் டெஸ்ட் போட்டி முடிந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு அந்நாட்டு டாலர் மதிப்பில் சுமார் 3 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17.35 கோடி ரூபாய் ஆகும்.
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசை அமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமண கொண்டாட்டம் | Photo Album
கிரிக்கெட்டுக்கும் சாம்பலுக்கும் என்ன தொடர்பு?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு ஆஷஸ் தொடர் என்று பெயர். இந்த தொடரை வென்ற நாடு ஆஷஸ் கோப்பையை தட்டிச் சென்றதாக அறிவிக்கப்படுவர். கிரிக்கெட்டுக்கும், சாம்பலுக்கும் என்ன தொடர்பு. ஏன் இந்த கிரிக்கெட் போட்டி சாம்பல் போட்டி என்று சொல்லப்படுகிறது? அது என்ன சாம்பல் கோப்பை? உலகில் 12 நாடுகள், ஐந்து நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தகுதி பெற்றிருக்கின்றன. நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர் பெரும்பாலான ரசிகர்களை ஈர்க்கும் வல்லமை உடையது. மேலும் இந்த இரு தொடர்களும் அந்தந்த நாட்டின் தேசிய உணர்வைத் தூண்டுவதுடன், பலரையும் கிரிக்கெட் மைதானத்திற்கு வரவழைக்கும் வல்லமையை உடையது. ஆஷஸ் 1877 முதல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஐந்து நாள் கிரிக்கெட் விளையாடி வருகின்றன. 1882ஆம் வருடம், இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனை, “ஸ்போர்டிங்க் டைம்ஸ்” என்ற பத்திரிகைக்கு எழுதிய பத்திரிகையாளர் ரெஜினால்ட் ஷர்லி ப்ரூக்ஸ், இங்க்லிஷ் கிரிக்கெட் ஆகஸ்ட் 29 அன்று இறந்து விட்டதாகவும், அதனுடைய சாம்பல் ஆஸ்திரேலியாவிற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் நகைச்சுவையாக இரங்கல் செய்தி எழுதினார். இது பரவலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. 1883 ஆம் வருடம், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றது. அப்போது இங்கிலாந்து அணித் தலைவர் இவோ ப்ளிக், “சாம்பலைத் திரும்ப கொண்டு வருவோம்” என்று சூளுரைத்துச் சென்றார். இந்த தொடரில் இங்கிலாந்து, மூன்று போட்டிகளில் இரண்டை வென்று, தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் பயன்படுத்திய பெயில்ஸ்களை எரித்து அதனை நான்கு அங்குல உயரமுள்ள டெரகோட்டா கலசத்தில் நிரப்பி, இங்கிலாந்து அணிக்கு பரிசளித்தனர், இங்கிலாந்து அணித் தலைவர் இவோ ப்ளிக்கின் வருங்கால மனைவி ஃப்ளோரன்ஸ் மோர்பி மற்றும் விக்டோரியாவைச் சேர்ந்த சில பெண்கள். இந்த கலசத்தில் இருப்பது எரிக்கப்பட்ட கிரிக்கெட் பந்தினுடைய சாம்பல் என்றும் சொல்லப்படுகிறது. இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் சூதாட்டமா... புதிய சர்ச்சை! இது முதலாக இரு அணிகளும் மோதுகின்ற டெஸ்ட் தொடர் “ஆஷஸ்” என்ற பெயர் பெற்றது. ஆஷஸ் தொடரில் இரு அணிகளும் இது வரை 345 போட்டிகளில் விளையாடி உள்ளன. இவற்றில் 142 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இங்கிலாந்து 110 முறை கோப்பையை வெல்ல, 93 போட்டிகள் வெற்றி, தோல்வியின்றி முடிந்தன. சாம்பல் நிரப்பப்ட்ட டெரகோட்டா கலசம், பழமையான ஆஷஸ் கோப்பை என்று அறியப்படுகிறது. இந்த கோப்பை, லண்டனில் உள்ள 'மார்லேபோன்' கிரிக்கெட் கிளப் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக உள்ளது. 1998-99 வருடத்திலிருந்து, கிறிஸ்டலில் செய்யப்பட்ட ஆஷஸ் கோப்பை, வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படுகிறது. தற்போது ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசம் உள்ளது. சாம்பலை வென்று, ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். -கே.என்.சுவாமிநாதன், சென்னை
Ashes: டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதம்!; 104 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளில் முடிந்தப் போட்டி!
104 வருடங்களுக்குப் பிறகு ஆஷஸ் போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவடைந்திருக்கிறது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றிப் பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 74-வது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் பெர்த் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்காமல் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். Australia vs England - Ashes அதிகபட்சமாக, ஆலி போப் 46 ரன்களும், ஹாரி ப்ரூக் 52 ரன்களும் எடுத்திருந்தார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி. 13 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் மொத்தமாக 7 விக்கெட்களை வீழ்த்தினார். பிறகு பேட்டிங்கிற்கு வந்த ஆஸ்திரேலியா அணியின் பேட்டர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 123 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது. முதல் நாளில் மொத்தமாக 19 விக்கெட்டுகள் விழுந்தன. இத்தனை வருட ஆஷஸ் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் நாளில் 19 விக்கெட்கள் விழுவது இது முதல் முறை. இரண்டாவது நாளில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா அணி. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்கள் அடித்திருந்தார். அதிரடியாக பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸிற்கு பேட்டிங் வந்த இங்கிலாந்து அணியின் பேட்டர்களுக்கு சறுக்கலே தொடர்ந்தது. அடுத்தடுத்து பேட்டர்கள் ஆட்டமிழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். Australia vs England - Ashes பிறகு 205 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் பேட்டர்கள் 28 ஓவரிலேயே டார்கெட்டை எட்டி வெற்றியைத் தொட்டனர். ஓப்பனிங் வந்த டிராவிஸ் ஹெட் 123 ரன்களும், லபுஷேன் 51 ரன்களும் அடித்து இரண்டாவது நாளிலேயே போட்டியை முடித்து வைத்தனர். 69 பந்துகளில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆஷஸ் வரலாற்றில் அதிவேக சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.பாஸ்ட் பவுலர்களுக்கு இந்த பிட்ச் சாதகமாக அமைய இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி அதை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது. இந்தப் போட்டியில், ஸ்டார்க் மட்டும் மொத்தமாக 10 விக்கெட்களை எடுத்திருக்கிறார்.

30 C