VIT: வேலூர் காவல்துறை மற்றும் கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்திய கையுந்துப் போட்டி!
வேலூர் மாவட்டக் காவல்துறை மற்றும் வேலூர் மாவட்ட கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் மின்னொளி கையுந்துப் போட்டி வேலூர் காவல்துறை பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ. 50,000, 30,000, 20,000, 10,000 பரிசுத் தொகையுடன் கோப்பை வழங்கப்பட்டது. இதே போன்று பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ. 25,000, 20,000, 15,000, 10,000 பரிசுத் தொகையுடன் கோப்பை வழங்கப்பட்டது. ஜனவரி 19 முதல் நாளன்று துவக்க நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கையுந்துப் பந்து சங்க தலைவரும் விஐடி துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை வகிக்க வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தர்மராஜன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வேலூர் மாவட்ட கையுந்து பந்து சங்க மாவட்ட தலைவர் தியாகசந்தன், செயலாளர் லட்சுமணன், துணைத் தலைவர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை வேலூர் பெருமுகை அணியும், இரண்டாம் இடத்தை சென்னை பனிமலர் அணியும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் அணியும், இரண்டாம் இடத்தை சென்னை செயின்ட் ஜோசப் அணியும் பிடித்தன.
'இந்தியா'தான் காரணமா? T20 உலக கோப்பையில் கலந்துகொள்ளாத வங்கதேசம்; இந்தியா, ICC மீது கடும் சாடல்
வங்கதேசத்தை சேர்ந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதில் இருந்து, இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்து டி-20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. இதில் இந்தியாவில் நடக்கும் வங்கதேச போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றக் கூறி வங்கதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வங்கதேசம்: 24 மணிநேரத்தில் 2 இந்துக்கள் கொலை; தொடரும் பதற்றம்! இதற்கு வங்கதேச வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஃபேன்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பது காரணமாக கூறப்பட்டது. இந்தியாவில் அப்படி ஒன்றும் ஆபத்தில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதனால், வங்கதேச அணி வருகிற டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம். இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறுவதாவது… “நாங்கள் டி-20 உலகக் கோப்பையில் கலந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறோம். எங்களுக்கு இந்தியாவில் நடக்க உள்ள போட்டிகளை இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் மாற்றித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் எங்களுக்கு அச்சுறுத்தல் என்பது உண்மை தான். இதை நாங்கள் யூகத்தின் அடிப்படையில் கூறவில்லை. எங்களுக்கு உலகக் கோப்பை விளையாட வேண்டும்… ஆனால், இந்தியாவில் விளையாடத் தயாராக இல்லை. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தொடர்ந்து பேசுவோம். முஸ்தஃபிசுர் ரஹ்மான் இந்தியா அல்ல; `வங்கதேச மாணவர் தலைவர் கொலைக்குக் காரணம், இவர்கள்தான்!' - போலீஸ் தகவல் முஸ்தஃபிசுர் விஷயம் தனிப்பட்ட விஷயம் அல்ல. இந்தியா தான் அதில் முக்கியமாக முடிவு எடுத்தது. இந்தியாவில் இருந்து போட்டியை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துவிட்டது. உலக கிரிக்கெட்டின் புகழ் இப்போது எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. அதன் புகழ் மங்கிக் கொண்டே போகிறது. அடுத்து கிரிக்கெட் ஒலிம்பிக்ஸிற்கு செல்லப்போகிறது. எங்களைப் போன்ற ஒரு நாடு அதில் கலந்துகொள்ளவில்லை என்றால், அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கு தான் தோல்வி”. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
T20 WC 2026 : உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது.!- மனம் திறந்த ரோஹித்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தொடக்க நாளில் அமெரிக்காவுடன் மோத உள்ளது. இந்நிலையில் ட20 சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் ரோஹித் ஷர்மா வரும் டி20 உலகக்கோப்பையில் தான் விளையாட முடியாதது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். டி 20 உலகக் கோப்பை இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், 2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன். இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது வித்தியாசமாக இருக்கும். எப்போதுமே உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். எனது கேப்டன்ஷிப்பில் பல முறை நடந்துள்ளது. எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் அந்த முடிவு (அணியில் நீக்கம்) ஏன் எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட வீரர்கள் தெரிந்து கொள்வது முக்கியம். ரோஹித் ஷர்மா 2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடரில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர் தேவை என கருதினோம். இதன் காரணமாக ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக தீபக் ஹூடாவை தேர்வு செய்தோம். எங்களைப் பொறுத்தவரை, அணியில் உள்ள 15 வீரர்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பது தான் முக்கியம். உலகக் கோப்பையை நோக்கிச் செல்லும்போது, அதை வெல்வதுதான் ஒரே குறிக்கோள். அதற்கு, உங்களுக்கு வெளிப்படையான உரையாடல்கள் தேவை என்று ரோஹித் ஷர்மா பேசியிருக்கிறார். Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்' - ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள்

27 C