IND vs SA : ``அவர் உண்மையான ‘டீம் மேன்’; எங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்! - கேப்டன் மார்க்ரம்
T20 தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த இந்தியாவை சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்கா. இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பேசுகையில், ``இது ஒரு மிகச் சிறந்த ஆட்டம். இங்கிருந்த முந்தைய ஆடுகளங்களைவிட இன்று இருந்த விக்கெட் முற்றிலும் வேறுபட்டது. அதைக் அணியினர் ஆரம்பத்திலேயே சரியாக கணித்து, தங்கள் திறமைகளை மாற்றி அமைத்து திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றினார்கள். குறிப்பாக பந்துவீச்சு மீது நாங்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறோம். தொடக்கத்தில் கொஞ்சம் சிரமப்பட்டாலும், இன்று அவர்கள் களத்தில் செயலாற்றிய விதம் பாராட்டத்தக்கது. முதலில் சொல்ல வேண்டியது பார்டனர்ஷிப் பற்றிதான். டேவிட் மில்லர் மற்றும் டெவால்டு பிரேவிஸ் இணைந்து அணிக்கு நல்ல நிலைத்தன்மையை தந்தார்கள். ஆட்டத்தை சமநிலைப்படுத்தி, நம்மை போட்டியில் வைத்திருந்தார்கள். கடைசி ஓவர்களில் பந்து கொஞ்சம் ‘ஸ்பாஞ்சி’ போல வந்து வேகமாக பயணித்தது. அதனால் இடைவெளிகளை கண்டுபிடித்து, வேகமாக ஓடி அதிக ரன்களை சேர்ப்பதே திட்டமாக இருந்தது. எதிரணி தொடக்கத்திலும் டெத் ஓவர்களிலும் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் நடு ஓவர்களில் எங்கள் பேட்டிங் தான் முக்கிய ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பீல்டிங்கிலும் நல்ல முயற்சி இருந்தது. இரண்டு கேட்ச் தவ்றவிட்டோம்; ஆனாலும் அது முயற்சி குறைவால் இல்லை. UAEக்கு எதிரான போட்டியில் இருந்த அணியின் ஒருங்கிணைப்பு இன்று அதிகமாக இருந்தது என்பதில் மகிழ்ச்சி. தவறுகள் வரும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதில் பிரச்சனை இல்லை. லுங்கி இங்கிடி எப்போது பந்து வீசினாலும் விக்கெட் எடுக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர். அணிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் உண்மையான ‘டீம் மேன்’ அவர்; தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அடுத்த போட்டி வெஸ்ட் இண்டிஸ் அணியுடன். அவர்கள் ஒரு ஆபத்தான T20 அணி, நல்ல கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இன்று கிடைத்த மகிழ்ச்சியை ரசித்து விட்டு, அதை அப்படியே வைக்கிறோம். 28ஆம் தேதி முழு வேகத்துடன் களமிறங்க வேண்டும். இது எங்களுக்கு மிகப் பெரிய போட்டி. இந்த வெற்றி எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை தரும் என நம்புகிறோம் என்றார். IND vs SA: ஸ்லோ பால் ஆயுதத்தை கையில் எடுத்த தென்னாப்பிரிக்கா; சறுக்கிய இந்திய அணி!
IND vs SA: 'எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை; கம்பேக் கொடுப்போம்'- கேப்டன் சூர்யகுமார் உறுதி
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. அணியின் தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், நாங்கள் முதலில் சிறப்பாகத்தான் பந்து வீசியிருந்தோம். அவர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள். எங்களின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். பவர்ப்ளேயில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ind vs sa match அர்ஶ்தீப் மற்றும் பும்ரா இருவரும் இணைந்து நன்றாகத்தான் பந்து வீசியிருக்கின்றனர். அடுத்தப் போட்டியில் பேட்டிங், பௌலிங், பீல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்கள் எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. எங்களின் ஸ்டைலில் அப்படியேத்தான் ஆடப் போகிறோம். அடுத்தப் போட்டியில் நிச்சயமாக கம்பேக் கொடுப்போம் என நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.
IND vs SA: ஸ்லோ பால் ஆயுதத்தை கையில் எடுத்த தென்னாப்பிரிக்கா; சறுக்கிய இந்திய அணி!
இந்தியாவின் முதல் சூப்பர் 8 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் தோல்வியை இந்தியா சந்தித்திருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை பிரேவிஸ் – மில்லர் பார்ட்னர்ஷிப் மீட்டெடுத்தது. இருவரும் அடுத்தடுத்து அதிரடியான ஆட்டங்களை விளையாட, 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ind vs sa match இதில் அதிகபட்சமாக பிரேவிஸ் (45), மில்லர் (63), ஸ்டப்ப்ஸ் (44) ரன்கள் எடுத்தனர். இந்தியாவிற்காக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணியின் பேட்டிங் வரிசையை தென்னாப்பிரிக்க அணி ‘ஸ்லோ பால்’ என்ற ஆயுதத்தால் ஆரம்பத்திலேயே சிதைத்தது. பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் இந்திய அணி தடுமாற, தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்கள் பெரும்பாலும் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அந்த சூழலில் பொறுமையாக விளையாடிய சிவம் துபே 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய மற்ற ஆட்டக்காரர்களும் தொடர்ச்சியாக அவுட் ஆக, இந்திய அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணியாக இருந்த இந்தியா, இந்த போட்டியின் மூலம் டி20 வரலாற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இதுவரை இல்லாத மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது. ind vs sa match மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. மறுபுறம், இந்த தொடரில் தோல்வியே காணாத அணியாக சூப்பர் 8-இன் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்க அணி.
முன்னாள் மனைவிக்கு 4 கோடி ரூபாய் காரை பரிசளித்த ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். ஹர்திக் பாண்டியா – நடாஷா கணவன், மனைவியாக இருவரும் பிரிந்தாலும், ஒரு பெற்றோராக தங்களது மகன் அகஸ்தியா வளர்ப்பிலும், நலனிலும் எந்த குறையும் இல்லாமல் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கிற்கும், தனது மகன் அகஸ்தியாவிற்கும் சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான கருப்பு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக கொடுத்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. Hardik Pandya gifted a 4 crore worth Black Defender to his son Agastya Pandya and ex-wife Natasa Stankovic ❤️ - Hardik Pandya taking care of his ex-wife even after the divorce. - Hardik Pandya is truly a gentleman pic.twitter.com/98bH1evA7H — Cricket Central (@CricketCentrl) February 22, 2026
Super 8: ஒரே பிரிவில் டாப் அணிகள்! காரணம் Pre Seeding; அதற்கு காரணம் இந்தியா, பாகிஸ்தான்! இது சரியா?
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுகள் இன்று முதல் தொடங்குகிறது. ஆனால், சூப்பர் 8 இல் க்ரூப்கள் பிரிக்கப்பட்டிருக்கும் விதம் குறித்து சில விவாதங்கள் எழுந்திருக்கிறது. Pre Seeding முறை! க்ரூப் A இல் இருக்கும் ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா என நான்கு அணிகளுமே லீகில் அவரவர் க்ரூப்களில் முதலிடம் வந்தவர்கள். சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் அணிகள் க்ரூப் B இல் நியூசிலாந்து, இலங்கை, இலங்கை, பாகிஸ்தான் இருக்கின்றன. இவையெல்லாம் லீகில் அவரவர் க்ரூப்களில் க்ரூப்களில் இரண்டாம் இடம் பிடித்தவர்கள். இப்படி ஒரு போட்டி அட்டவணையை அமைய காரணம், Pre Seeding முறை தான். முன்பே கொடுக்கும் ரேங்கிங்! உலகக்கோப்பை அட்டவணையை தயார் செய்வதற்கு முன்பாகவே புள்ளிப்பட்டியலின் படி டாப் 8 அணிகளுக்கு X1, X2, X3, X4, Y1, Y2, Y3, Y4 என ஒரு ரேங்கிங்கை கொடுத்து விட்டார்கள். இதன்படிதான் அட்டவணையையே தயாரித்தார்கள். இந்தியாவை வைத்து இதை விளக்கினாலே புரியும். இந்தியாவுக்கு X 1 ரேங்கிங். இந்தியா ஆடும் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்பதற்காக X1 அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஆடும்படியே அட்டவணை வடிவமைத்திருப்பார்கள். அதாவது லீக் போட்டிகளில் இந்திய அணி தனது க்ரூப்பில் இரண்டாமிடம் பிடித்திருந்தாலும், சூப்பர் 8 இல் அவர்கள் க்ரூப் B க்கு சென்றிருக்கமாட்டார்கள். தொடருக்கு முன்பே X1 அணி க்ரூப் A வில்தான் இருக்கும் என்பது முடிவாகிவிட்டது. பாகிஸ்தான் அணி Y3, Y4 அணிகள் அதேமாதிரிதான் பாகிஸ்தானுக்கு Y3 ரேங்கிங். அவர்கள் இந்திய மைதானங்களில் போட்டிகளில் ஆட மாட்டார்கள். இலங்கை உலகக்கோப்பையை நடத்தும் நாடு. அவர்களுக்கு Y4 ரேங்கிங். இந்த இரண்டு அணிகளும் தங்களின் எல்லா போட்டிகளையும் இலங்கையில் மட்டுமே ஆடும். அதனால் சூப்பர் 8 இல் Y3, Y4 ஆடும் ஆட்டங்கள் எல்லாம் முன்னதாகவே இலங்கையில் மட்டுமே நடைபெறும்படி வடிவமைக்கப்பட்டு விட்டது. பறிபோகும் லெவல் ப்ளேயிங் இதில் ஒரு சின்ன சுவாரஸ்யம் மட்டுமே நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு X ரேங்கிங். ஆனால் லீகிலேயே வெளியேறிவிட்டார்கள். அதனால் அந்த X ரேங்கிங் ஜிம்பாப்வேக்கு வழங்கப்பட்டு அவர்கள் சூப்பர் 8 இல் க்ரூப் A வில் இடம்பிடித்துவிட்டார்கள். வழக்கமாக நியாயமாக நடத்த வேண்டுமெனில் சூப்பர் 8 இல் ஒரு க்ரூப்பில் லீகில் முதலிடம் பிடித்த இரண்டு அணிகளும் இரண்டாம் இடம் பிடித்த இரண்டு அணிகளுமே இடம்பெற்றிருக்க வேண்டும். Pre Seeding ஆல் அந்த லெவல் ப்ளேயிங் (Level Playing) தன்மை பறிபோயிருக்கிறது. இந்தியா Vs பாகிஸ்தான் இந்தியா, பாகிஸ்தான் காரணம்! இந்த Pre Seeding க்கு முக்கிய காரணம். இந்தியாவும் பாகிஸ்தானும்தான். இரண்டு நாடுகளின் போட்டிக்கு இருக்கும் வணிகமும் அதன் அரசுகளுக்கிடையே இருக்கும் பகையுமே ஐ.சி.சியை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு முந்தையை தொடர்களிலும் இந்த முறை இருந்திருக்கிறது. வழக்கமாகவே ஐ.சி.சியின் அட்டவணை வலிமையான கிரிக்கெட் போர்டான இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்கும் என ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில கிரிக்கெட் வாரியங்கள் குற்றம்சாட்டியுள்ளன. ஐ.சி.சி அரசியலை தவிர்த்தால்.! கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் லீகில் இந்திய அணி அமெரிக்காவில் எங்கும் பயணிக்காமல் ஒரே மைதானத்தில் 3 போட்டிகளையும் ஆடினார்கள். அதேநேரத்தில் இலங்கை போன்ற அணிகள் ஒவ்வொரு போட்டிக்கும் பல மணி நேரங்கள் பயணித்து கொண்டிருந்தன. இதை இலங்கை வீரர்கள் வெளிப்படையாகவே பேசியிருந்தன. ICC ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியிலோ, இறுதிப்போட்டியிலோ மோதும் நிலை வந்தால் அப்போட்டிகள் இலங்கையில் நடைபெறும். உலகக் கோப்பை தொடர் என்பது, அனைத்து அணிகளுக்கும் சமமான வாய்ப்புகளுடன் நடத்த வேண்டிய தொடர். அதில், வணிகத்தையும் சுற்றியிருக்கும் அரசியலையும் தவிர்த்தால் மட்டுமே ஐ.சி.சி யால் நியாயமான போட்டி அட்டவணைகளை வெளியிட முடியும்.
T20 WC : ``ஜிம்பாப்வே அணியை பாராட்ட வேண்டும்; ஆனால், ஏமாற்றம் எங்களுக்குத்தான்! - மிட்சல் மார்ஷ்
ஆஸ்திரேலிய அணியின் கடைசி லீக் போட்டி, இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 105 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா 9.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து எட்டிப் பிடித்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்தத் தொடரை ஒரு ஆறுதல் வெற்றியுடன் ஆஸ்திரேலியா நிறைவு செய்தது. போட்டிக்கு பின்னர் பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ், ``இப்போது எங்கள் மனதில் இருப்பது ஒன்றுதான் — நாங்கள் தவறவிட்ட அந்த வாய்ப்பு. மற்ற அணிகளைப் போலவே நாங்களும் இந்தத் தொடருக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தயாராகி வந்தோம். ஆனால், எங்களால் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ் ஒன்றில் தோற்றுவிட்டால்..! ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அந்தப் போட்டியைப் போன்ற ஒன்றில் தோற்றுவிட்டால், தானாகவே அழுத்தம் அதிகரித்துவிடும். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள், அதை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். ஆனால், ஏமாற்றம் என்னவோ எங்களுக்குத்தான். ஆடுகளத்தின் தன்மைதான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று நான் நினைக்கவில்லை. கொழும்பு மைதானத்தில் ஆட்டம் மெதுவாகத்தான் (Slow track) இருந்தது, அதற்குத் தயாராகவே வந்திருந்தோம். இருந்தும், கிடைத்த நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்பதுதான் உண்மை. வீரர்களாகவும், ஓர் அணியாகவும் எங்கு முன்னேற வேண்டும் என்பதை நாங்கள் ஆராய்வோம். ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ் தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எப்போதும் உண்டு. இந்த அனுபவத்திலிருந்து இன்னும் வலுவான அணியாக மீண்டு வருவதே எங்கள் நோக்கம்.. எனப் பேசினார். ஆஸ்திரேலியா 450/2; இந்தியா 65-ல் ஆல் அவுட்! - உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து மிட்செல் மார்ஷ்

29 C