Zimbabwe: மக்களிடம் மரியாதையைச் சம்பாதித்ததுதான் எங்களின் பெரிய வெற்றி - கேப்டன் சிக்கந்தர் ராசா
டி20 உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணி வெற்றி பெற்றிருக்கிறது. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜிம்பாப்பே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, நாங்கள் எதிர்காலத்தை நோக்கி கவனத்தைச் செலுத்துகிறோம். கடந்த இரண்டு வாரங்களில் எங்கள் வீரர்கள் காட்டிய முயற்சி மிகப்பெரியது. ஜிம்பாப்பே அணி எங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். நாங்கள் இந்த இடத்திற்கு வருவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மக்களின் மனதை வென்றதும், அவர்களின் மரியாதையைச் சம்பாதித்ததும்தான் எங்களின் பெரிய வெற்றி. நாம் நல்ல கிரிக்கெட் விளையாடுகிறோம் என்றால் டாஸ் எவ்வளவு முக்கியம் என்று வீரர்களிடம் நான் சொல்லியிருக்கிறேன். நேற்றைய ஆட்டத்தில் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தாலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. பேட்டிங் ஆர்டரை நிலைமைக்கு ஏற்ப மாற்றினோம். ஒவ்வொரு முடிவும் திட்டமிட்டதே. இதுவரை தோல்வியே இல்லாமல் சூப்பர் 8-க்கு வந்தது பெருமையாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். SL Vs Zim : 'ஒன் டைம் வொண்டரல்ல!' - மீண்டும் மீண்டும் சாதிக்கும் ஜிம்பாப்வே!
IND v NED : `பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன்; ஆனால்.!' - சிவம் துபே
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் மற்றும் 66 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்த சிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார், ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு சிவம் துபே பேசியதாவது, “இந்த விக்கெட்டில் பேட்டிங் செய்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அந்த நேரத்தை நான் ரசித்தேன். சில சமயங்களில் அழுத்தம் இருந்தது உண்மைதான். குறிப்பாக ஆஃப்-ஸ்பின்னர் எனக்கு நன்றாக பந்துவீசினார். நான்கு டாட் பந்துகள் வந்தன. அது ஒரு நல்ல ஓவராக அமைந்தது. ஆனால் பின்னர் அதை சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. பந்து ஸ்கிட் ஆகியும், லோ ஆகியும் வந்தது. ஒரு பந்து சற்று திரும்பியும் வந்தது. அதனால் ‘அடிக்கலாம்’ என்று நினைத்த நேரத்திலும், அந்த சூழ்நிலை வேறொரு விதமான ஆட்டத்தை கேட்டது. அதனால் அப்போது பொறுமையாக விளையாட வேண்டிய கட்டாயம் இருந்தது. பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன். சிக்ஸர்கள் அடிப்பதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம். ஆனால் இன்றைய போட்டியில் பவுலர்கள் நன்றாக செயல்பட்டனர். அதனால் எல்லா பந்துகளையும் அடிக்க முடியாது. சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் விளையாட நான் என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். நான் அவசரப்படாமல் விளையாடியதற்கு காரணம் இருக்கிறது. எல்லா பவுலர்களும் என்னை எப்படி பந்துவீசப் போகிறார்கள் என்பதைக் குறித்து முன்பே யோசித்திருந்தேன். அவர்கள் யாரும் எனக்கு யார்கர் அல்லது லெங்க்த் பந்துகளை போடமாட்டார்கள். பெரும்பாலும் ஷார்ட் பந்துகள், ஸ்லோவர் பந்துகள்தான் வரும். அதற்கேற்ப நான் தயாராக இருந்தேன். அதனால் சரியான பந்துக்காக காத்திருந்தேன். என் ஆட்டத்தில் தெளிவு இருக்கிறது. கேப்டனும், பயிற்சியாளரும், மிடில் ஓவர்ஸில் நான் களமிறங்கும்போது ஸ்ட்ரைக் ரேட்டை உயரமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது முழுக்க முழுக்க சூழ்நிலையைப் பொறுத்தது. இன்று நான் வந்த நேரத்தில் உடனடியாக ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தும் சூழ்நிலை இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் ‘இது சரியான நேரம்’ என்று உணர்ந்தபோது, அங்கிருந்து ஆட்டத்தை மாற்றினேன். என் பந்துவீச்சு பற்றி சொன்னால், அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அதன் பலனும் இப்போது கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது டி20 கிரிக்கெட். சில சமயம் அடிப்பீர்கள், சில சமயம் அடிபடுவீர்கள். அதே நேரத்தில் விக்கெட்டுகளும் கிடைக்கும். அதுதான் இந்த விளையாட்டின் தன்மை.” என்றார். IND VS NED: `இந்த வெற்றியில்கூட நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம்' - கேப்டன் சூர்யா குமார் யாதவ்
IND VS NED: `இந்த வெற்றியில்கூட நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம்' - கேப்டன் சூர்யா குமார் யாதவ்
நெதர்லாந்து அணியுடனான கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லீக் சுற்றில் தோல்வியே காணாத அணியாக இந்தியா, சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “டாஸ் ஜெயித்ததும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எங்களின் திட்டம். அதன்படி 190 ரன்கள் சேர்த்தோம். பின்னர் பந்துவீச்சுக்கு வந்தபோது சற்று பனி இருந்தது. அது பவுலர்களுக்கு சவாலாக இருந்தாலும், முடிவில் இந்த வெற்றி எங்களுக்கு முழு திருப்தியை அளிக்கிறது. பனி இருக்கும் நிலையிலும் முதலில் பேட்டிங் செய்ததில் மகிழ்ச்சிதான். அடுத்த போட்டியிலும் இதே மாதிரியான சூழ்நிலை இருக்கலாம். ஆரம்பத்தில் சற்று மெதுவாக தொடங்கினாலும், மிடில் ஓவர்ஸில் விக்கெட் எப்படி நடக்கிறது என்பதை பேட்ஸ்மேன்கள் புரிந்து கொண்டு பொறுப்புடன் ஆட வேண்டும். அதன்பிறகு ஹார்திக், சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என ‘ஃபினிஷ்’ செய்ய தேவையான ஃபயர்பவர் எங்களிடம் இருக்கிறது. துபே பற்றி... துபே பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த இன்னிங்ஸ் அவருக்கு கிடைக்க வேண்டிய ஒன்று. நியூசிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அவர் அருமையாக ஆடினார். அப்போது ஆட்டநாயகன் விருது கை நழுவியது. ஆனால் இன்றைய போட்டியில் மிடில் ஓவர்ஸில் அவர் ஆடிய விதம், அனைவரின் அழுத்தத்தையும் குறைத்தது. இந்த விக்கெட்டில் 190 ரன்கள் என்பது உண்மையிலேயே நல்ல ஸ்கோர். ‘அனைத்து பெட்டிகளும் டிக் ஆனதா?’ என்று கேட்டால், பெரும்பாலான விஷயங்கள் சரியாக நடந்திருக்கலாம். ஆனாலும், வெற்றி பெற்ற போட்டியில்கூட கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கும். நாளை ஓய்வு எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி குழுவாக பேசுவோம். இனிய தலைவலி பந்துவீச்சு ஆப்ஷன்கள் அதிகமாக இருப்பது ஒரு இனிய தலைவலிதான். மிடில் ஓவர்ஸில் அபிஷேக் சர்மா, ஹார்டிக், துபே என பலர் இருக்கிறார்கள். விக்கெட் எதை கேட்டாலும், அந்த நாளுக்கு ஏற்றார் போல சில ஓவர்கள் போட அவர்கள் உதவுவார்கள். என் ஃபார்ம் பற்றிப் பேசினால், அனைத்தும் சரியான திசையில் போகிறது. முக்கியமாக, ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பங்களிப்பு கொடுக்கிறார்கள். அதுதான் எனக்கு வேண்டும் – சிறிய சிறிய கூட்டணிகள். போட்டி இறுக்கமாக இருக்கும் நேரத்தில் ஒருவர் சிறப்பாக ஆடினாலும், நல்ல ஸ்கோருக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியம்.” என்றார்.
T20 : 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றுடன் வெளியேறிய ஆஸ்திரேலியா - சாம்பியன் அணி வீழ்ந்தது எங்கே?
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா என்றாலே ஒரு மிரட்டலான அணி என்ற பிம்பம் உண்டு. ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அந்த அணி, சமீபகாலமாக டி20 போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி வருகிறது. ஆஸ்திரேலிய அணி அந்தவகையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலிய அணியின் இந்த சறுக்கலுக்கு காரணம் என்ன? முக்கிய வீரர்கள் அணியில் இல்லாதது..! ஆஸ்திரேலிய அணியின் பலமே அவர்களின் வேகப்பந்து வீச்சுதான். ஆனால் இந்த முறை பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியதும், மிட்செல் ஸ்டார்க் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அனுபவமில்லாத பந்துவீச்சு வரிசையுடன் களம் இறங்கியது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனம். aus vs zim ஜிம்பாவேவிடம் கண்ட அதிர்ச்சி தோல்வி இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சிக்கு விதை போட்டது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிதான். கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிறிய அணியான ஜிம்பாப்வே 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 170. ஆனால் பவர்ப்ளேவில் 4 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதுவே அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைத்து தொடரின் விளிம்பிற்குத் தள்ளியது. மிடில் ஆர்டர் பேட்டிங் சரிவு இலங்கைக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் எடுத்து ஒரு கட்டத்தில் வலுவாக இருந்தது. ஆனால் அதன் பிறகு 77 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் (10 விக்கெட்டுகள்) இழந்து தவித்தது. மிட்செல் மார்ஷ் அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் கொடுத்த அதிரடித் தொடக்கத்தை மிடில் ஆர்டர் பேட்டர்கள் பயன்படுத்தத் தவறினர். தவிர கிளென் மேக்ஸ்வெல் போன்ற சீனியர் வீரர்கள் ரன் எடுக்கத் திணறியது அணிக்கு பின்னடைவாகியது. பதும் நிசாங்காவின் விஸ்வரூபம் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்தாலும், இலங்கை வீரர் பதும் நிசாங்கா வெறும் 52 பந்துகளில் சதம் விளாசி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். ஆசிய ஆடுகளங்களில் போதிய அனுபவம் இல்லாத ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களால் இலங்கை பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பதும் நிசாங்கா துரதிர்ஷ்டவசமான மழை ஆஸ்திரேலியாவின் கடைசி நம்பிக்கை, அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்தப் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது. இதனால் ஜிம்பாப்வேக்கு ஒரு புள்ளி வழங்கப்பட, அவர்கள் 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றனர். ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வமாக டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறி ஏமாற்றத்துடன் நாடு திரும்பி இருக்கிறது.!
BBL: சென்னை சேப்பாக்கத்தில் பிக் பேஷ் தொடர்? ஆஸ்திரேலியாவின் திட்டம் என்ன?
ஐபிஎல் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட T20 லீக் தொடர் பிக் பேஷ். ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக ரசிகர்களால் ரசிகப்படும் தொடராகவும் இது இருக்கிறது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி தண்டர், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் என மொத்தம் 8 அணிகள் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன. பிக் பேஷ் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தத் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2026- 2027 ஆம் ஆண்டிற்கான பிக் பேஷ் தொடரின் முதல் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வணிக செயல்பாடு தலைமை அதிகாரி உள்ளிட்ட சிலர் இந்தியா வந்து, சென்னையில் தொடக்கப் போட்டியை நடத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் பிக்பேஷ் தொடருக்கான பார்வையாளர்களை அதிகரிக்கும் விதத்தில் இந்த முன்னெடுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்ய நினைப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஆடாத போட்டிகளிலும் சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பி மைதானம் வந்து போட்டியை ரசிக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தின் பரிசீலனையில் சென்னை சேப்பாக்கம் முன்னணியில் உள்ளதாம்.
T20 WC: முதல் சுற்றிலேயே வெளியேறியது ஆஸ்திரேலியா! - சறுக்கியது எங்கே?
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறி இருக்கிறது. கிரிக்கெட் உலகின் 'அசைக்க முடியாத ஜாம்பவான்' என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய அணிக்கு, இந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் ஏமாற்றமாக அமைந்துவிட்டது. தொடரின் ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்த மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தற்போது முதல் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சறுக்கியது எங்கே? தொடரின் ஆரம்பத்திலேயே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சந்தித்த தோல்விதான் அந்த அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். இரண்டாவது போட்டியில் அயார்லாந்து அணியிடம் வெற்றி பெற்றிருந்தாலும் ஆஸ்திரேலிய அணி அடுத்து வாழ்வா-சாவா என்ற நிலையில் இலங்கையை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் குவித்தும் பந்துவீச்சில் கோட்டை விட்டது. பதும் நிசாங்காவின் அதிரடி சதத்தால் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெளியேறிய ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால், அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவை வீழ்த்த வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்தது. ஆனால், இன்று இலங்கையில் நடந்த அந்தப் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. மழைக் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்குத் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. வெறும் 2 புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி காரணங்கள் என்ன? முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியது ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மற்றொரு அனுபவ வீரர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடாததும் அணியின் பந்துவீச்சை பலவீனப்படுத்தியது. கடந்த 2021-ல் டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, இந்த முறை சூப்பர்-8 சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறுவது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
`ஆஸ்திரேலியாவை சிதறடித்த `அசல்'சம்பவக்காரன்' - யார் இந்த பதும் நிசாங்கா?
டி20 உலகக்கோப்பைத் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இலங்கை வீரர் பதும் நிசாங்கா 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களை பறக்கவிட்டு சதமடித்து இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறார். பதும் நிசாங்கா அதுமட்டுமின்றி ஜெயவர்த்தனேவிற்கு பிறகு இலங்கை டி20 உலகக்கோப்பையில் சதமடித்த 2- வது வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார். இளம் வயதில் சாதனை படைத்த பதும் நிசாங்காவை பலரும் பாராட்டி வருகின்றனர். யார் இந்த பதும் நிசாங்கா? இலங்கையில் உள்ள கல்லே(Galle) என்ற இடத்தில் பிறந்த பதும் நிசாங்கா (27) எளிய பின்னணியில் இருந்து வந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். போதிய வசதிகள் இல்லாத சமயத்தில் கடற்கரை மணலில் பயிற்சி பெற்று தனது பேட்டிங் திறமையை நிசாங்கா வளர்த்துக்கொண்டிருக்கிறார். இலங்கை அணியில் இடம்பெறுவதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பதும் நிசாங்கா 2024-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 210 ரன்கள் எடுத்து, ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்போது டி20 உலகக்கோப்பையிலும் சதத்தை அடித்து அசத்தியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அணி தடுமாறிய போது, அந்த அணியைத் தாங்கிப் பிடித்த ஒரு தூணாக நிசாங்கா இருந்திருக்கிறார். எவ்வளவு அழுத்தமான சூழலிலும் பதற்றப்படாமல் ஆடுவது இவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது.!
SL vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு அடி மேல் அடி... முதல் சுற்றோடு வெளியேறுகிறதா?
ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளின் உலக கோப்பை போட்டி, இலங்கையின் Pallekele International Cricket Stadium மைதானத்தில் நடந்து முடிந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, இந்தப் போட்டியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று குரூப் B-யில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மாறாக, இந்தத் தோல்வியால் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி, மைதானத்தின் நிலையை கணித்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கமே அமோகமாக அமைந்தது. ஓப்பனர்களாக களமிறங்கிய Travis Head (56) – Mitchell Marsh (54) ஜோடி, அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பில்லாமல் 104/0 என்ற வலுவான நிலையில் அணியை கொண்டு சென்றது. ஆனால் அதன் பிறகு காட்சியே மாறியது. இலங்கை அணியின் அசத்தலான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. முதல் 50 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா, அடுத்த 70 பந்துகளில் 77 ரன்கள் மட்டுமே எடுத்து 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நிசாங்கா சதம்… இலங்கை கொண்டாட்டம் 182 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, 2-வது ஓவரிலேயே பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு களத்தில் நிலைத்த Kusal Mendis மற்றும் Pathum Nissanka ஜோடி, தேவையான நேரங்களில் ரன்களைத் தேடி தேடி அடித்து ஆட்டத்தை இலங்கை பக்கம் திருப்பியது. இருவரும் அரைசதம் கடந்தனர். 105 ரன்கள் இருந்த நிலையில், 13-வது ஓவரில் மெண்டிஸ் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு முழுக் கவனமும் நிசாங்காவின் பேட்டிங்கில்தான். இந்த வருட T20 தொடரின் முதல் சதத்தை பதிவு செய்த நிசாங்கா, 100 (52 பந்துகள்) என அதிரடியாக விளையாடினார். இதன் மூலம் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றி, சூப்பர் 8 சுற்றில் தங்களுக்கான இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் அதிரடி காட்டிய நிசாங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவின் கணக்கு என்ன? இனி ஆஸ்திரேலியா சூப்பர் 8-க்கு தகுதி பெற வேண்டுமெனில், ஜிம்பாப்வே அணியின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே அமையும். ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ள ஜிம்பாப்வே, 4 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலே, குரூப் B-யில் இரண்டாவது அணியாக ஜிம்பாப்வே தகுதி பெறும் சூழல் உருவாகியுள்ளது. ஜாம்பவான் அணியாக, வலுவான அணியான ஆஸ்திரேலியா முதல் சுற்றுடன் வெளியேறுவதற்கான சூழலே தற்பொழுது நிலவுகிறது என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

31 C